குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து வரும் சூழலில் தமிழகத்திலும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சென்னை பல்கலை மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கி தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் மாணவர்களின் போராட்டத்தை தடுப்பதை நோக்கமாகக் கொண்டே ஜன-2 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
கோவை:
கோவை – அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் :
1 of 2
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து நடைபெறுகின்றன. இதன் தொடர் விளைவாக கோவையில் கோவை அரசு சட்டக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், மற்றும் பிஎஸ்ஜி கலைக் கல்லூரி ஆகியவற்றில் கடந்த டிசம்பர்-18, 19 ஆகிய தேதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநரின் வாகனத்தை வழிமறித்த கோவை பாரதியார் பல்கலை மாணவர்கள் :
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் வருகையின்போது மாணவர்கள், அவரது வாகனத்தை வழிமறித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
PSG கலைக்கல்லூரி மாணவர்கள் :
1 of 2
கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் :
கோவை அரசு சட்டக்கல்லூரியில் பல்கலைக்கழக தேர்வு நடைபெற்றிருக்கும் வேளையில் மாணவர்கள் தங்களது தேர்வுகளை புறக்கணித்து குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் :
1 of 4
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டிச-22 அன்று கோவை காந்திபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் :
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் :
டிசம்பர்-19 அன்று கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கும் நிலையில் அதனை சரிசெய்வதற்கான உருப்படியான முயற்சிகள் எடுக்க முன்வராத மோடி அரசு, அவசரகதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என்று கேள்வியெழுப்பியும்; மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த முயலும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதியை அம்பலப்படுத்தியும் கல்லூரி மாணவர்களிடையே புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் உரையாற்றினர்.
கும்பகோணம் வழக்கறிஞர்கள் :
கும்பகோணம் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பாக, வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கடந்த டிசம்பர்-20 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் குருமூர்த்தி, கருணாமூர்த்தி, மகேந்திரன் ஐயப்பன் நிம்மதி, ரமேஷ்குமார், சிவராஜ் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பலரும் பங்கேற்றனர். கருப்புச்சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என்றனர்.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் தேசிய குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முற்போக்கு வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து வழக்கறிஞர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 3
பட்டமளிப்புவிழா போராட்டம் காத்திருந்த அமைச்சர்
பல நாட்கள் துணை வேந்தருக்காகக் காத்திருந்த மாணவர்கள் இவர் பங்கேற்க இருந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை இவரைச் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாகக் கருதினார்கள். ஜே.என்.யூ தொடங்கி முதல் இரண்டு ஆண்டுகளிலேயே பட்டமளிப்பு விழா கைவிடப்பட்டது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக, கல்வியில் பட்டம் என்பது அதை கொண்டாடுவதில் இல்லை. கற்ற கல்வியால் நாட்டிற்கும் சமுகத்திற்கும் ஆற்றும் பணி வெறும் காகிதமான பட்டத்தைவிடச் சிறந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
அதுபோல் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறுவோருக்குப் பதக்கம் கொடுத்துக் கொண்டாடும் பழக்கமும் ஜே.என்.யூ-வில் இல்லை. ஒவ்வொருவருடைய சமூக, குடும்ப, பொருளாதார சூழ்நிலை, பள்ளிப் பருவ வாய்ப்புகள் அவர்கள் தங்கள் உயர்கல்வியில் அடையும் தரத்தையும் நிர்ணயிக்கின்றது. இந்நிலையில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கொண்டு மாணவர்களைத் தரம் பிரித்து கொண்டாடுவது சரியாகாது என்ற கருத்தும் நிலவிவந்தது.
இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தற்போதைய துணைவேந்தர் பட்டமளிப்பு விழாவை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்ததோடு மட்டும்மல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதைப் பெரும் கேலிக்கூத்தாகவும் கொண்டாடினார். இதுவரை மாணவரை சந்திக்காத துணைவேந்தர், மாணவர்களின் போராட்டத்திற்குப் பயந்து, இந்தாண்டு பட்டமளிப்பு விழாவை ஜே.என்.யூ-வுக்கு அருகாமையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மன்றம் (all india council for technical education) கலைஅரங்கில் நடத்தினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் போன்றோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
ஜே.என்.யூ பட்டமளிப்பு விழாவில் மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். (இடது), துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு (நடு)
துணைவேந்தரைச் சந்திப்பதற்காக மாணவர்கள் இந்த அரங்கை முற்றுகையிடும் நடை பயணத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனை அறிந்த நிர்வாகம் முன்கூட்டியே காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததனால், பல நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு ஆங்காங்கு தடுப்பு அரண்களும் போடப்பட்டிருந்தன. பல்கலைக்கழத்தைவிட்டு அமைதியாக வெளிவந்த மாணவர்களை அதன் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இத்தடைகளைத்தாண்டி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்புவிழா நடைபெறும் இடத்திற்கு வந்தபோது திரு.வெங்கையாநாயுடு தன் உரையை முடித்துக்கொண்டு ஏற்கெனவே விடைபெற்று இருந்தார். துணைவேந்தரும் அமைச்சரும் உள்ளிருந்தார்கள்.
பட்டம் வாங்கச் சென்ற முன்னாள் மாணவர்களும் உள்ளுக்குள்ளேயே தம் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். வெளிவர முடியாத சூழ்நிலையால், பல மணிநேரங்களுக்குப் பிறகு, காவலர்கள் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். துணைவேந்தர் தாம் மாணவர்களுடன் பேசத் தயாராக இல்லை என்று கூறியபோதிலும், அமைச்சர் மாணவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தை நடத்தி அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறியதால், அவர் அரங்கைவிட்டு வெளியே செல்ல முடிந்தது. அதன்பின், பலமணிநேரம் காத்திருந்த துணைவேந்தர், மாணவர்கள் அசந்து இருந்த நேரத்தில் காவலர் துணையுடன் ஓடி மறைந்தார். இது நடந்தது நவம்பர் மாதம் 11-ம் தேதி (2019) .
பாராளுமன்றம் நோக்கி நெடும் நடைபயணம்
இதன்பின், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக முழு ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தனர். இதுவரை மாணவர்கள் வழக்கமான வகுப்புகளை மட்டும் புறக்கணித்தனர், ஆனால் வகுப்புகள் வகுப்பறைகளுக்கு வெளியே நடைபெற்றன. வீட்டில் எழுதவேண்டிய கட்டுரைகள் போன்றவை ஈமெயில் மூலம் சமர்ப்பிக்கப்பட்டன. பெரும்பாலும் அனைத்துக் கல்வி தொடர்பான வேலைகளும் நடைபெற்றன. ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் அறிவித்தபிறகு இவை அனைத்தும் நிறுத்தப்பட்டன. துறை அலுவலகங்கள், ஆசிரியர்களின் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில், நடப்பு பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியதால், மாணவர் அமைப்பு நாடாளுமன்றம் நோக்கிய நடைபயணத்திற்கு அழைப்பு விடுத்தது. என்றும் இல்லாத அளவிற்கு, பல்லாயிரம் மணவர்கள் கலந்துக்கொண்ட இந்தப் போராட்டம் காவலர்களின் காட்டுமிராண்டித்தனமான தடியடியுடன் நிறைவுக்கு வந்தது. ஆனால், ஜே.என்.யூ மாணவர்கள் கொண்டிருந்த உறுதியை, தியாகத்தை பார்த்து நாடே வியந்தது.
முன்புபோல், பலகட்ட காவல்துறை அரண்களைத் தாண்டி ஜேஎன்யுவுக்கும் பராளுமன்றத்திற்கும் இடையில் உள்ள ஜோர்பாக் என்ற இடம்வரை, மாணவர்கள் அமைதியாகச் சென்றடைந்தனர். அதற்குமேல் நகர முடியாத நிலையில் அங்கே அமர்ந்து போரட்டத்தைத் தொடர்ந்தனர். பெரும்பாலான மணவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். இதை அடுத்து சுமார் இரவு 8 மணிவாக்கில் காவல் துறையினர் மாணவர்கள் கூடியிருந்த வீதியின் தெருவிளக்கை அணைத்துவிட்டு தடியடியில் ஈடுபட்டுக் கூட்டத்தை கலைத்தனர்.
இதில் உடல் ஊனமுற்ற, பார்வையற்ற மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். தொலைக்காட்சி ஊடகங்கள் இக்காட்சிகளை உலகம் முழுதும் எடுத்துச்சென்ற அதே வேளையில், அவற்றுள் சில இது தேசத்துரோகிகளின் போராட்டமென பொய்யுரை பரப்பின. இது நடந்தது நவம்பர் மாதம் 18-ம் தேதி (2019)
இருகுழுக்கள் வெவ்வேறு பரிந்துரைகள்
இதுவரை ஜேஎன்யூவில் நடைபெறும் இத்தகைய போராட்டங்களை ஒருசில மாணவர்கள் ஏற்படுத்தும் கூச்சல் என்று ட்விட்டர் மூலம் நாட்டிற்கு தெரிவித்துவந்த துணைவேந்தரின் கருத்தை இந்த நெடும் நடைபயணம் பொய்யென நிருபித்தது. இதன்பின், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஜேஎன்யூ கல்விக் கட்டணப் பிரச்சினையை விசாரித்து முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு முன்னாள் பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர், வி.எஸ்.சவுகான் தலைமையில் ஒரு உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தது.
இக்குழு, முதன்முறையாக ஒரு முறையான கலந்தாலோசனையை மேற்கொண்டு, மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர் அமைப்பின் பிரதிநிதிகள் , ஜேஎன்யூ நிர்வாகத்தில் இருப்போர் போன்றோருடன் சந்தித்து அவர்களது கருத்துக்களைப் பெற்றது. வழக்கம்போல் துணைவேந்தர் இக்குழுவையும் சந்திக்க மறுப்புத் தெரிவித்துவிட்டார்.
உயர்மட்டக்குழு விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு, இக்குழுவின் பரிந்துரைகள் தமக்குச் சாதகமாக இருக்காது என அறிந்துக்கொண்ட நிர்வாகம், தம் ஆதரவாளர்களைக் கொண்டு மற்றொரு விசாரணைக் குழுவை அமைத்து ஒரு நாளில் தன் முடிவைத் தரவேண்டும் என வேண்டியது. மாணவர் அமைப்புடன் எவ்விதப் பேச்சு வார்த்தையும் இல்லாமல் வெறும் பெயரளவில் சிலரிடம் கருத்துக்கேட்டு முன்பு அறிவிக்கப்பட்ட திருத்திய கட்டணத்தில் நலிவடைந்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குக் கட்டணச் சலுகைகள் வழங்குமாறு இக்குழு பரிந்துரைத்தது. மாணவர்கள் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கோரி இக்குழுவின் பரிந்துரைகளை நிராகரித்தனர்.
இதற்கிடையில் அரசு அமைத்த உயர்மட்டகுழு தன் அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால், இந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. சில செய்தித் தாள்கள் இக்குழு கல்வி மற்றும் விடுதி கட்டணங்களைத் திருத்தியதில் ஜேஎன்யூ நிர்வாகம் சரியான முறைகளைப் பின்பற்றவில்லை எனவும், எனவே கல்விக் கட்டண உயர்வு திரும்பிப் பெறப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இதன்பின், மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த அறிக்கையை வெளியிடக் கோரி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு முன்பு இருவேறு போராட்டங்களை மேற்கொண்டனர். மாணவர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த அமைச்சகச் செயலர், ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்கவில்லை. இதற்கிடையில் திரு. தொல் திருமாவளவன், டாக்டர். ரவிக்குமார் உட்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டி அமைச்சகத்திற்கு வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.
இன்றைய நிலையில் மாணவர்களின் கோரிக்கை கீழ்கண்டவையாக இருக்கின்றன.
உயர்மட்டக்குழு அறிக்கையை வெளியிட வேண்டும்.
கல்விக் கட்டண உயர்வு மற்றும் புது விடுதி நெறிகள் முற்றிலுமாக கைவிடப்பட்டு, பின் முறையான நடைமுறைகளைப் பின்பற்றி இவை திருத்தப்பட்வேண்டும்.
இதுவரை மாணவர் அமைப்பு பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்ட பல்வெறு குழுக்களில் பங்கேற்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று ஜே.என்.யூ மாணவர் அமைப்பை அங்கீகரிக்கவேண்டும்.
சமூகத்தில் நலிவடைந்தோரின் நலனுக்கு எதிராக இருக்கும் புதியக் கல்வி கொள்கையைக் கைவிடவேண்டும்.
நாட்டின் அனைவருக்கும் தரமான, எளிதில், குறைந்த செலவில் கிடைக்ககூடிய வகையில் பொதுக் கல்வி நிறுவனங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
கல்வியைத் தனியார் மயமாக்குதல் கைவிடப்படவேண்டும்.
ஜே.என்.யூ அது இதுவரை பேணிப்போற்றி வந்த விழுமியங்களுடன் பாதுகாக்கப்படல் வேண்டும்.
அதுபொருட்டு, ஜேஎன்யு-வை அழித்தொழிக்க நினைக்கும் இந்தத் துணைவேந்தர் பதிவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், மாணவர்கள் முழுத் தீவிரத்துடன் தம் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நிர்வாகக் கட்டிடம் மற்றும் நூல்நிலையம் இவற்றைத் தவிர்த்து ஏனைய கட்டிடங்களில் நுழைய ஆசிரியர்கள் உட்பட எவருக்கும் அனுமதி இல்லை. இந்தக் கடும் குளிரிலும், ஒவ்வொரு கட்டிடத்தின் நுழைவாயில்களிலும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுழற்சி முறையில் அமைதியாக அமர்ந்துள்ளனர். இரவில் அங்கேயே படுத்துறங்குகின்றனர். மேலும், டிசம்பர் 4-ம் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கி மறுநாள் கலை 7.30 மணிவரை நடைபெற்ற ஒரு நீண்ட பொதுக்குழுக் கூட்டத்தில் போரட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும், இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்ல மாணவர் அமைப்புக்கு முழு உரிமையையும் வழங்குவதாகவும் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.
இத்தோடு, பல்கலைக் கழகத்தின் வேந்தரான ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஒரு புதிய நடைப் பயணத்திற்காக 8-12-2019-க்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தின் விளைவு என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உலகப்போராட்டம்; ஒன்றிணையும் மாணவர் அமைப்புகள்
ஜே.என்.யூ மாணவர்களின் இந்தப் போரட்டம் உலகமெங்கும் பொதுக்கல்வி நிறுவனங்களைக் காக்கும் பொருட்டும், கல்விக் கட்டண உயர்வு, குறைந்த செலவிலான விடுதி வசதி, மற்றும் கல்வி வியபாராமாக்கப்படுதல் போன்றவற்றிற்கு எதிர்ப்பாக ஒலிக்கும் மாணவர்களின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும்.
ஜேஎன்யூவில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்ற இதே காலகட்டத்தில் பாகிஸ்தானும் ஒரு பெரும் மாணவர் புரட்சியை எதிர்கொண்டதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஹாங்காங்கில் நடைபெறும் சனநாயகத்திற்கான புரட்சியில் மாணவர்கள் முன்நிற்கின்றார்கள். இதுபோன்று, பல்வேறு நாடுகளிலிருந்தும் அண்மைக் காலங்களில் மாணவர் போராட்டம் குறித்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்தியாவில், ஜேஎன்யூ மாணவர்களுக்கு ஆதரவாக வெவ்வேறு பல்கலைக்கழகம், மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களைச் ( IITs) சார்ந்த மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டெல்லி தொழில் நுட்ப நிறுவனத்தில் 10 மடங்கிற்குமேல் உயர்த்த இருந்த கல்விக் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இன்று கல்விக் கட்டணம் என்பது ஏழை பணக்காரர் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரு பெரும் சுமையாக உள்ளது. மக்கள் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்காதவரை, அரசு கல்வியை வியபாரமாகத்தான் விற்பனை செய்ய முயற்சிக்கும்.
புரட்சியில் கரையும் பொன்விழா – கனவென நிற்கும் சமத்துவ உலகு
இந்த மாணவப் புரட்சி வெடித்திருக்கும் இந்த ஆண்டு ஜே.என்.யூ வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு. இது இந்தப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு. பொன்விழா ஆண்டைக் கொண்டாட ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறு திட்டங்களைக் கொண்டிருந்தனர். மாணவர் அமைப்பு, ஆசிரியர் அமைப்பு, மற்றும் ஜேஎன்யு நிர்வாகம் தனக்கான நிகழ்வுகளை திட்டமிட்டிருந்தன. குறிப்பாக, ஜேஎன்யூ நிர்வாகம் பொன்விழாவை ஜேஎன்யூ இதுவரை நடந்த பாதையி்லிருந்து ஒரு புதிய பாதையை, இந்துத்துவ பாதையைக் குறிப்பதைப்போல் சில நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. விவேகானந்தர் சிலை ஒன்று நிர்வாகக் கட்டிடத்திற்கு எதிரில் கட்டப்பட்டு இதுவரை மூடியே வைக்கப்பட்டுள்ளது. ஜேஎன்யூ இணையதளத்தில் உள்ள பொன்விழாக் கொண்டாட்டப் பட்டியலில் சிலவற்றைத் தவிர மற்றவை ஏதும் நிகழ்த்தப்படவில்லை.
மாறாக, ஜேஎன்யூ மாணவர்கள், ஜேஎன்யூ-வுக்கே உரித்தான முறையில் இதை ஒரு புரட்சி ஆண்டாக மாற்றியுள்ளார்கள். கடந்த ஒரு மாதமாக ஜேஎன்யு பற்றியும் இந்தப் பல்கலைக்கழகம் கடந்துவந்த பாதையைப் பற்றியும், இதன் சமூகத்திற்கான, தேசத்திற்கான பங்களிப்பைப் பற்றியும் தொடர்ந்து செய்தி தாள்களிலும், இதழ்களிலும் கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. இது இந்தப் பொன்விழா ஆண்டில் ஜேஎன்யூ பற்றிய நினைவுகள் மீண்டும் பொதுபுத்திக்கு கொண்டுவர உதவி செய்துள்ளன.
இந்தப் போராட்டம் இத்தோடு நின்றுவிடப் போவதில்லை என்றே தோன்றுகின்றது. நிர்வாகம் பல்வேறு அடக்குமுறைக்கான ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றது. பல மாணவர்களின் கல்வி வேலைவாய்ப்புகள் இதன்மூலம் பாதிக்கப்படலாம். ஆனால், இம்மாணவர்கள் காட்டும் உற்சாகமும், துணிவும், சமூகத்தைப்பற்றிய ஆழ்ந்த புரிதலும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றைப் பார்க்கும்போது 1960-களில் இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ முயன்றோர் எதிர்பார்த்த சனநாயகம், சமத்துவம், அறிவியல் பார்வை இவற்றைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த இந்தியச் சமூகத்திற்கான கனவு இன்றும் வீழ்ந்துவிடவில்லை என்றே தோன்றுகின்றது. மாணவர்களின் கண்களில் தெரியும் ஒளி இதை உறுதிபடுத்துகின்றது.
ஒருபக்கம் ஒழுக்கம், கற்பு, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் என்று பாடம் எடுக்கிறோம். மறுபக்கம் தினசரி செய்தித்தாள்களில் குழந்தைகளையும் வன்புணர்வு செய்கிறார்கள், பெண்களை மானபங்கப்பபடுத்தி தீயிட்டு கொளுத்திவிடுகிறார்கள். எய்ட்ஸ் நோயில் இந்தியா தான் முதலிடம். இவை கூறும் செய்தி தான் என்ன?
நம் குழந்தைகளுக்கு பாலுறவு சார்ந்த கல்வியை நாம் முறையாக பயிற்றுவிப்பதில்லை.
நமது உடலில் ஜீரண மண்டலம் இருக்கிறது, சுவாச மண்டலம் இருக்கிறது,
நரம்பு மண்டலம் இருக்கிறது. எலும்புகளும் தசைகளும் இணைந்து நம் உடலை இன்னதென்று கண்டுகொள்ளுமாறு நிற்கச்செய்கிறது.
ஆனால் இந்த இனப்பெருக்க உறுப்புகள் எதற்காக இருக்கின்றன ? என்ற கேள்வி வளரும் ஒவ்வொரு வளர்இளம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லாமல் இல்லை.
எனக்கு பதினொன்றாம்; பனிரெண்டாம் வகுப்பு எடுத்த ஆசிரியர் விலங்கியலில் வந்த இந்த பாடங்களை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று ஸ்கிப் செய்து விட்டார். சமூகத்தில் ஒரே ஒருவரிடம் இருந்து கூட இது குறித்த சரியான பார்வை தருமாறு ஒரு கட்டுரையையோ ஒரு பேச்சையோ நான் கேட்டு வளர்ந்ததில்லை.
ஒரு பெண் பூப்பெய்துவாள், மாதா மாதம் மாதவிடாய் காண்பாள்
ஆனால் ஏன் அவளுக்கு மாதவிடாய் வருகிறது என்று கேட்டால் தெரியாது. மேலும் மாதவிடாய் காலத்தில் தன் நலன் எப்படி பேசுவது என்று தெரியாமல் 90% தமிழக வளர்இளம் பெண்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்படும் போது நாம் இன்னும் எத்தனை பின் தங்கியிருக்கிறோம் என்பது தெளிவாகிறது.
வளர்இளம் பருவத்தில்
பல கனவுகள் பூக்கும்.
புலரா வானில்
பல வண்ணங்களை தீட்டும் கதிரவனைப்போல
மலரா வயதில் பல எண்ணங்களை தீட்டும் மனது.
கிட்டத்தட்ட அதே நேரத்தில் தான் தங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை நல்லமுறையில் கடந்து வரும் நிகழ்வுகளும் நடக்கும்.
ஒரு குழந்தை பிறந்த மூன்று வயது வரை தன் பாலினம் அறியாது. பிறகு தன் பாலின வேறுபாட்டை உணர ஆரம்பிக்கும். தனக்கு இருப்பது போல் அடுத்த பாலினத்திடம் இல்லை என்பதையும், அடுத்த பாலினத்தில் இல்லாதது நமக்கு இருக்கிறது என்றும் சமூகம் அதற்கு முறையாக கற்றுக்கொடுப்பதற்கு முன்னமே, சினிமா மூலமும்
அதில் காட்டப்படும் அதீத மசாலா பூசப்பட்ட காட்சிகள் மூலமும்
ஓ.. எதிர் பாலினம் என்றால் இப்படித்தான் போல..
சினிமா ஹீரோயின் போல கொஞ்சம் அரை லூசாக இருந்தா தான் பசங்களுக்கு புடிக்கும் போல..
சைஸ் ஜீரோ தான் நல்லது போல..
இந்த க்ரீம் தடவுனா தான் கொஞ்சம் அழகா இருக்கும் போல..
என்று வளர்இளம் பெண்கள் நினைப்பார்கள்.
வளர் இளம் பையன்களும் மீசை அரும்பாத வயதில் கூட தங்களை பெண்களிடம் எப்படி அழகாக முன்னிறுத்துவது என்று சிந்திப்பார்கள். இயற்கையாக ஹார்மோன் மாற்றங்களால் பரு வந்தால்.. அதைக்கூட சில பெண்கள் தங்களை பார்ப்பதால் தான் வருகிறது என்று எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள்.
கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லா ஏதோ ஒரு உருண்டை உருள்வது போல உணர்வார்கள்.
ஒரு சக வயது பெண் பார்த்து சிரித்தால்
உலகை மறப்பார்கள்
பேசிவிட்டாலோ ஊன் உறக்கம் துறப்பார்கள்
சிறகுகள் கூட்டி வானில் பறப்பார்கள்
உண்மையில் வளர்இளம் பெண்கள் தாங்கள் பூப்பெய்தும் வரை பெண்ணுறுப்பு குறித்து அறிவதில்லை. அறிந்து கொள்ளவும் முடியாது. சொல்லித்தர ஆள் இல்லை என்பதே முக்கியமான விசயம் இங்கு.
ஏன் காயமே ஏற்படாமல் உதிரம் வருகிறது?
காரணமே இன்றி மார்பகம் வளர்கிறது?
சுருக்கமே இல்லாத முகத்தில் ஏன் பருக்கள் வருகின்றன?
இதுவரை நண்பனாக இருந்தவனிடம் இருந்து தாய் தூரமாக இருக்க சொல்கிறாளே?
தந்தை அருகிலே படுத்த என்னை ஏன் திடீரென தாய் தன் அருகில் படுக்க கட்டளையிடுகிறாள்?
சக தோழிகளுக்கும் இதே உணர்வு வருகிறதா?
இந்த வழியாக தான் குழந்தை வருமா? அத்தனை பெரிய தலை எப்படி இந்த சிறிய ஓட்டை வழியாக வரும்?
இறைவா.. என்னை ஏன் பெண்ணாக படைத்தாய்?
இப்படி பல கேள்விகள் எழும்.
பெண்களுக்காவது பூப்பெய்திய நாளில் இருந்து தாய் தனக்கு தெரிந்ததை கூறிவருவார். அது சரியா தவறா விடுங்கள். ஒரு ப்ரைமரி செக்ஸ் கல்வி அங்கு தாயிடம் இருந்து கிடைக்கும் .
ஆனால் வளர் இளம் ஆண்களுக்கோ அதுகூட இல்லை.
நேற்று வரை சுருங்கிக்கிடந்த உறுப்பு ஏன் திடீரென இத்தனை வேகமாக வளர்கிறது.?
ஏன் மீசை முளைக்கிறது?
ஏன் சக பெண் தோழிகளை பார்க்கும் போது திடீரென்று ஆசை துளிர்க்கிறது?
ஏன் விடியா காலையில் குறியில் இருந்து வெண்ணிற நீர் வடிகிறது? இது நோயா?
எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா? சக நண்பர்களுக்கும் நடக்கிறதா?
இதில் எந்த கேள்விக்கும் ஆண்களுக்கு விடையே கிடைக்காது.
தங்களுக்குள்ளேயே ஃபேண்டசைஸ் செய்வார்கள். அதனால் ஒரு தியரி உருவாகும். அது சரியோ பொய்யோ நம்புவார்கள். இப்படியாக ஒரு மாய உலகில் வாழ்வார்கள்.
மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 02
அக்காக்கிய் எப்போது, எந்தத் தேதியில் துறையில் சேர்ந்தான், யார் அவனை நியமித்தார்கள் என்பதையெல்லாம் யாரும் நினைவு கூர முடியவில்லை. எத்தனையோ இயக்குநர்களும் வேறு பலவகை அதிகாரிகளும் வந்து போய்விட்டார்கள், ஆனால் அவன் மட்டும் அதே இடத்தில், அதே நிலைமையில், அதே வேலையில், அதாவது நகலெடுக்கும் எழுத்தன் வேலையில், இருந்து வந்தான். எழுத்தன் உடுப்பும் தலையில் வழுக்கையுமாக, இந்த வேலைக்கு முற்றிலும் தயாராகவே அவன் பிறந்திருக்க வேண்டும் என்று நாளடைவில் எல்லாருமே எண்ணத் தொடங்கி விட்டார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். துறையில் அவன்மீது யாரும் எவ்வித மரியாதையும் காட்டுவதில்லை. அவன் கடந்து செல்கையில் காவலாட்கள் எழுந்து நிற்பதுதான் கிடையாதென்றால் அவனை ஏறிட்டுப் பார்ப்பது கூட இல்லை – எதோ சாதாரண ஈயொன்று எதிர்பார்ப்பு அறை வழியாகப் பறந்து சென்றது போல. மேலதிகாரிகள் அவனிடம் ஒரே கண்டிப்புடன் இருந்தார்கள். உதவித் தலைமை எழுத்தன் ஒருவன் எதாவது காகிதத்தைக் கொண்டுவந்து, “கொஞ்சம் நகலெடுங்க” என்றோ, “இதோ பாருங்க, அருமையான, சுவையான விவகாரம்” என்றோ, நல்ல ஒழுங்குமுறைகளுள்ள அதிகார நிறுவனங்களில் வழங்குவது போல வேறு எதேனுமோ மகிழ்ச்சியாகச் சொல்லக்கூடச் செய்யாமல் அவன் மூக்குக்கு அடியில் நுழைப்பான்.
அவனோ, காகிதத்தை மட்டுமே நோக்கியவனாக, அதை வைத்தவன் யார், அதை வைப்பதற்கு அவனுக்கு உரிமையுண்டா என்று பார்க்காமலே அதை வாங்கிக்கொள்வான். உடனேயே அதற்கு நகலெழுதத் தொடங்கி விடுவான். இளம் எழுத்தர்கள், தங்கள் புத்திக்கு எட்டினமட்டில் அவனைப் பரிகசித்து எள்ளி நகையாடுவார்கள். அவனைப் பற்றிக் கற்பனை செய்த பலவிதக் கதைகளை அவன் முகத்துக்கு எதிரே சொல்லுவார்கள். அவனுடைய வீட்டுச் சொந்தக்காரியான எழுபது வயதுக் கிழவியைப் பற்றிக் கிண்டல் செய்வார்கள்; அவள் அவனை அடிப்பதாகக் கதைப்பார்கள்; அவளை எப்போது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்று கேட்பார்கள். கிழிந்த காகிதத் துணுக்குகளை அவன் தலைமேல் உதிர்த்து, வெண்பனி பெய்கிறது என்பார்கள்.
அக்காக்கிய் அக்காக்கியெவிச் தனக்கெதிரே எவருமே இல்லை என்பது போல, ஒரு வார்த்தை கூடப் பதில் பேசாமல் காரியத்தில் முனைந்திருப்பான். இவற்றால் அவன் வேலைக்குக் குந்தகம் ஏற்படுவதும் கிடையாது. இந்தக் குறும்புகளும் கிண்டல்களும் நடந்து கொண்டிருக்கையில் அவன் நகலில் ஒரு பிழை கூட நேர்வதில்லை. பரிகாசம் பொறுக்க முடியாதபடி போய் விட்டால், யாராவது அவன் தோளுக்கடியில் இடித்துத் தள்ளி வேலையில் ஈடுபடவிடாமல் இடையூறு செய்தால் மட்டுமே அவன், “விடுங்க, ஐயா! ஏன் தொந்தரவு செய்றீங்க?” என்பான். அந்தச் சொற்களிலும் அவை வெளிப்படும் குரலிலும் ஏதோ விசித்திரமாகத் தொனிக்கும். இரக்கம் உண்டாக்கும்படி அதில் எதோ ஒலிக்கும். துறையில் புதிதாக வேலைக்கு அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் மற்றவர்களின் உதாரணத்தைப் பின்பற்றி அக்காக்கிய் அக்காக்கியெவிச்சைப் பரிகசிக்கத் தொடங்கியவன், அவன் சாந்தமாகக் கூறிய சொற்களைக் கேட்டதும் நெஞ்சில் ஈட்டி பாய்ந்து விட்டது போலச் சட்டென்று நிலைத்து நின்று விட்டான்; அது முதல் அவன் கண்களுக்கு எல்லாமே மாறிவிட்டன போலவும், எல்லாம் வேறு வடிவில் தென்பட்டன போலவும் தோன்றின. ஒழுங்கானவர்கள், கண்ணியவான்கள் எனக் கருதி அவன் அறிமுகம் செய்து கொண்டிருந்த நண்பர்களிடமிருந்து இனந்தெரியாத சக்தி ஒன்று அவனை உந்தித் தள்ளி வேறாக ஒதுக்கிவிட்டது.
இதற்கு அப்புறமும் வெகுகாலம் வரை, மிகச் சந்தோஷமான கணங்களில் கூட, குள்ள வடிவமும் வழுக்கைத் தலையுமான எழுத்தனின் உருவம், “விடுங்க, ஐயா! என் தொந்தரவு செய்றீங்க?” என்று கூறுவது போல அவனுக்குக் கற்பனையுண்டாகும், சோகம் ததும்பும் இச்சொற்களிலேயே “நான் உன் சகோதரனல்லவா?” என்ற அருத்தமும் ஒலிக்கும். பாவம், அந்த இளைஞன் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொள்வான். மனிதனிடம் மனித இயல்பற்ற தன்மை எவ்வளவு இருக்கிறது; மிகமிகப் பண்பட்ட, கண்ணியமான நடையுடைபாவனைகளுக்குள்ளும் – அட கடவுளே! பெருந்தன்மைவாய்ந்தவன், கௌரவமுள்ளவன் என உயர் சமூகத்தினரால் மதிக்கப்படுபவனுக்குள் கூட – விலங்கியல்பு கொண்ட முரட்டுத்தனம் எவ்வளவு மறைந்திருக்கிறது என்பதைக் கண்டு வாழ்க்கையில் எத்தனையோ தரம் அவன் பதைபதைப்பான்….
அக்காக்கிய் போல வேலைக்காகவே வாழ்ந்தவனைக் காண்பது அரிதே. அவன் ஊக்கமாக வேலை செய்தான் என்றால் போதாது. இல்லை, அவன் காதலுடன் உழைத்தான். இங்கே, நகல் எழுதும் இந்த வேலையில், அவனுக்கு வண்ண வேறுபாடுகள் கொண்ட மகிழ்ச்சி பொங்கும் ஏதோ ஓர் உலகம் தென்பட்டது போலும். அவன் அனுபவித்த இன்பம் முகத்தில் மிளிர்ந்தது. சில எழுத்துக்கள் அவனுக்குச் சிறப்பாக உவப்பானவை. அவற்றை எழுதுகையில் அவனுக்குக் களிப்பு கட்டுமீறிப் பெருகும்: புன்னகைப்பான், கண் சிமிட்டுவான், உதடுகளால் உச்சரிப்பான். அவனுடைய பேனா வரையும் ஒவ்வொரு எழுத்தையும் அவன் முகத்திலே படித்துவிடலாம் போல தோன்றும்.
அவனது ஊக்கத்தின் அளவிற்கேற்ப அவனுக்கு பரிசளிப்பதாக இருந்தால் அவன் தானே விழும்படி அரசாங்க ஆலோசகர் பதவி வரை எட்டியிருப்பான்; ஆனால் சக எழுத்தர்கள் கிண்டல் செய்தது போல அவனுக்கு கிடைத்தது எல்லாம் கோட்டு மார்பில் உலோகப் பட்டயமும் மூலநோயும் தான். ஆனாலும் ஒருவருமே அவனை கவனிக்கவில்லை என்று சொல்ல முடியாது. மிக உதார குணம் வாய்ந்த இயக்குனர் ஒருவன் அவனது நீண்டகால ஊழியத்துக்கு பரிசளிக்கும் நோக்கத்துடன் வழக்கமான நகல் எழுதும் வேலையை விட அதிக பொறுப்புள்ள வேலை அவனுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான்; அதாவது ஏற்கனவே தீர்ந்து போன விவகாரம் ஒன்றைப்பற்றி வேறு துறைக்கு அறிக்கை தயாரிக்கும் வேலை அவனிடம் ஒப்படைக்கப்பட்டது; தஸ்தாவேஜின் தலைப்பை மாற்றுவதும் சில வினைச்சொற்களை தன்னிலைக்கு பதில் படர்க்கையில் எழுதுவது மட்டுமே அவன் செய்ய வேண்டியிருந்த வேலை. ஆனால், இந்தக் காரியத்தைச் செய்வதில் ஏற்பட்ட சிரமத்தால் அவன் உடலெல்லாம் ஒரேயடியாக வேர்த்துக் கொட்ட நெற்றியை மறுபடி மறுபடி தடவிக் கொண்டிருந்துவிட்டு கடைசியில், “என்னால் முடியாது. ஏதாவது நகல் எழுதுவதற்கு கொடுங்கள்” என சொல்லிவிட்டான். நகல் எழுதும் இந்த வேலைக்கு புறம்பாக அவன் வரையில் எதுவுமே இருக்கவில்லை போலப்பட்டது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
அயோத்தி – காஷ்மீர் – சபரிமலை – தேசிய குடிமக்கள் பதிவேடு பறிக்கப்படும் மனித உரிமைகள் – தகர்க்கப்படும் அரசியல் சட்டம்.
நாள் : 22.12.2019, ஞாயிறு, காலை 10.30 மணி. இடம் : நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கம். (சோகோ அறக்கட்டளை), கே.கே. நகர், மதுரை.
தலைமை :
பேராசிரியர் அ. சீநிவாசன்,
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.
கருத்தாளர்கள் :
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
திரு ஆளூர் ஷாநவாஸ்,
மாநில துணைப் பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.
நன்றியுரை :
திரு ம. லயனல் அந்தோணி ராஜ்,
செயலாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.
நூலரங்கம் :
கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை.
♦♦♦
மாற்றுக் கருத்து சொல்லும் அறிவுத்துறையினர், போராடும் மக்கள், அரசியல் சட்டத்தின் ஆட்சி கோருவோரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில், தேசிய புலனாய்வு முகமை மூலம் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கிறது மோடி – அமித்ஷா அரசு. பார்ப்பனியத்தை எதிர்த்தால் கவுரி லங்கேஷ், கல்புர்கி போல சுட்டுத் தள்ளுகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்கிறது.
எனினும், வீழ்த்த முடியாத சக்தி அல்ல பாஜக. வரலாறு மாபெரும் சர்வாதிகாரிகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துள்ளது.
சனாதனத்தை வீழ்த்தி, சட்டத்தின் ஆட்சியை உருவாக்கும் சமரை பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம்! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை காப்போம்!
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை.
தொடர்புக்கு : 73393 26807.
பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினிரஜினி அரசியலுக்கு வருவேன் எனக் கூறியபோதும் பலர், அவர் அரசியலுக்கு வருவார் என்பதை நம்பத் தயாராக இல்லை. தான் நடிக்கும் படங்களின் வெளியீடுகளின்போது மட்டும் அரசியல் பேசுவதன் மூலம், படங்களை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார் அவ்வளவே, அவர் அரசியலுக்கு வரவே மாட்டார் என விளக்கமும் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், தான் அரசியலுக்கு வருவதற்கு தக்கத் தருணம் வந்துவிட்டதை ரஜினி உணர்ந்தே இருக்கிறார். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்களின் இறப்புக்குப் பின் அதற்கான தயாரிப்பு வேலைகளில் அவர் வெகுஜாக்கிரதையாக ஈடுபட்டுவருகிறார்.
பெருமளவில் ரஜினியின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது என்பதும் வெளிப்படையானவை. சமீப காலமாக டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உருவாகியிருக்கும் ரஜினியின் படை , அவர்களை விமர்சிப்பவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறது. ரஜினி வெகு விரைவில் அரசியலில் இறங்க இருக்கிறார் என்பதற்கான முன் தயாரிப்புகளை அடையாளம் காட்டுகின்றன மேற்கண்டவை.
ஆனாலும், ரஜினியின் அரசியல், தமிழகத்தின் அரசியலோடு ஒத்துப் போகுமா என்பது முக்கியமானதொரு கேள்வி. ரஜினியும் ரஜினியை ஆதரிப்பவர்களும் ஆராய மறுக்கும் கேள்வி இது.
முதலில் ரஜினியின் அரசியல் என்னவென்று பார்ப்போம். தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தபோது, ‘உங்களுடைய அரசியல் எப்படிப்பட்டது?’ என செய்தியாளர்கள் ரஜினியிடம் கேட்டனர். ரஜினி சொன்ன பதில் ‘ஆன்மீக அரசியல்’. அவர் அப்படி சொன்ன அடுத்த நாள், இந்து சமயம் சார்ந்த ஒரு மடத்துக்குச் சென்று வந்தார். அதாவது தன்னுடைய அரசியல் ‘இந்து ஆன்மீக அரசியல்’ என பட்டவர்த்தனமாக அறிவித்தார் ரஜினி.
‘இந்துத்துவம்’, ‘காவி’ ஆகிய வார்த்தைகள் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘தேச விரோத’ சொற்கள். இந்த வார்த்தைகளை உச்சரிக்கும், உச்சரித்த அரசியல்வாதிகள் சட்டமன்ற தொகுதி தேர்தலில்கூட வெல்ல முடியாது. அத்திவரதரை தரிசிக்க முண்டியடித்துக் கொண்டு சென்ற அதே ஆன்மிக நாட்டம் கொண்ட மக்கள்தான், ஆன்மீகத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களையும் நிராகரிக்கிறார்கள் என்பதை ’ஆன்மீக அரசியல்’ கனவு காண்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, ரஜினி அதை உணர்வாரா என்பது கேள்விக்குறியானதே..!
ரஜினி தன்னுடைய ஆன்மீக அரசியலில் பிடிவாதமாக இருப்பதைப் போன்றே, மக்கள் போராட்டங்களை அவர் அணுகும்விதமும் தமிழக மக்களின் உணர்வுகளிலிருந்து பாரதூரமாக விலகியிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் திரள் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். அந்த சமயத்தில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பிய ரஜினி, “தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டது மக்கள் கிடையாது, சமூக விரோதிகள் தான். இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா விஷக்கிருமிகளை அடக்கி வைத்திருந்தார். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர்” என்றார்.
ஆயிரக்கணக்கான மக்கள் தன்னுணர்வோடு கலந்துகொண்ட போராட்டத்தை, மக்கள் தலைவராக வரத்துடிக்கும் ஒரு நபர் ‘சமூக விரோதிகள்’, ‘விசக்கிருமிகள்’ என கொச்சைப் படுத்தினார். தூத்துக்குடி மக்கள் வெகுண்டெழுந்தார், ரஜினியை இனி தங்கள் மண்ணில் அனுமதிக்கப்போவதில்லை என்றார்கள். ஆனாலும், ரஜினி தன் அரசியலில் பிடிவாதமாகவே தொடர்ந்தார்; தொடர்கிறார்.
அடுத்தது காஷ்மீர் பிரச்சினையை கையிலெடுத்தது பாஜக அரசு. ‘இந்து தேசியம்’ என்ற தங்களுடைய நீண்ட கால இலக்கின் அடிப்படையில் பாஜக அரசு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. காஷ்மீரில் வீட்டுக்கு வீடு இராணுவத்தை நிறுத்தி, தகவல் தொடர்புகளை துண்டித்து, வெகுஜென அரசியல்வாதிகளை சிறை வைத்து தன்னுடைய ராஜ்ஜிய கனவை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறது பாஜக அரசு.
காஷ்மீரை திறந்த வெளி சிறைச் சாலையாக மாற்றிவிட்டு, அம்மக்களின் உணர்வுகளை கேட்டறியாமல் திணிக்கப்பட்ட முடிவை ரஜினி ஆதரிக்கிறார். காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட தமிழக மக்கள், திமுக உள்ளிட்ட பெரும்பாலான தமிழக வெகுஜென அரசியல் கட்சிகள் அரசின் முடிவை எதிர்க்கிறார்கள். மீண்டும் ரஜினியும் தமிழக மக்களும் எதிரெதிர் திசையில் நிற்கிறார்கள்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினி, பாஜக அரசின் முடிவைப் புகழ்ந்து தள்ளினார்.
“உங்களின் மிஷன் காஷ்மீர் ஆபரேஷன் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறேன். இதுகுறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகச்சிறப்பு. அமித் ஷா யார் என்பதை மக்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். அதுகுறித்து நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்” என ரஜினி பேசியது சர்ச்சையானது; ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
தமிழகத்தில் பாஜகவின் அரசியலை புகழ்ந்து யார் பேசினாலும் பேசுகிறவர்களை மக்கள் ஒதுக்கிவிடுவர். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, நாற்பது ஆண்டு காலம் தங்களை மகிழ்வித்த ரஜினியும் விலக்கல்ல. மக்களின் உணர்வோடு பல்வேறு சமயங்களில் முரண்பட்டு நின்ற ரஜினியை, காஷ்மீர் குறித்த பேச்சின் மூலமாக மேலும் சற்று தள்ளி வைத்தனர். சமூக ஊடகங்களில் ரஜினிக்கு கிடைத்த எதிர்ப்பே அதற்கு சாட்சி!
அதோடு விட்டாரா என்றால், இல்லை. விளக்கமளிக்கிறேன் என்கிற பெயரில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளில் கல்லெறிந்துவிட்டுப் போனார் ரஜினி.
“காஷ்மீர் மிகப்பெரிய விஷயம்; அது நம் நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய விஷயம். அந்த காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் ஒரு தாய் வீடாக இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் இந்தியாவில் ஊடுருவ அது ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது. அதை நம் கைப்பிடியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ராஜதந்திரத்துடன், முதலில் 144 தடை உத்தரவு போட்டு, பிரச்சினை செய்பவர்களை வீட்டுக்காவலில் வைத்து, என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்லாமல், பெரும்பான்மை இல்லாத ராஜ்யசபாவில் சட்டத்தைக் கொண்டுவந்து அமல்படுத்தியிருக்கின்றனர். இது அருமையான ராஜதந்திரம். தயவுசெய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசியல் ஆக்க வேண்டும் என புரிந்துகொள்ள வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மிஞ்சும் அளவுக்கு பாஜக அரசின் நடவடிக்கை வக்காலத்து வாங்கினார் அவர்.
சுயாட்சி, தன்னாட்சி, மாநில சுய உரிமை இதெல்லாம்தான் தமிழக மக்களின் உணர்வு. நூறாண்டு கால தமிழக அரசியல் இந்த உணர்வின் மீது கட்டப்பட்டதே. இந்த உணர்வுகளை அடித்து நொறுக்கும் எவரையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மோடியுடன் தனிப்பட்ட முறையில் நட்பாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மோடி பிரதமர் வேட்பாளராக நின்றபோது ஏன் அவருடன் கூட்டணி அமைக்கவில்லை? ஜெயலலிதாவுக்கு மக்களின் உணர்வுகள் தெரியும். மோடியை, பாஜகவை முன்னிறுத்தினால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். திமுக நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிக்கண்டதும் இதே உணர்வின் அடிப்படையில்தான்.
ஏன் புதிய அரசியல்வாதி கமலும்கூட தமிழரின் உணர்வை தெரிந்து வைத்திருக்கிறாரே? ரஜினியைப் போல் அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டாமல், பாஜகவின் அடாவடி திட்டங்களை விமர்சிக்கும் விஜய் சேதுபதி, சித்தார்த் போன்ற நடிகர்களுக்கு இருக்கும் துணிவும் பொறுப்பும்கூட இந்த ஆன்மீக பெரியவருக்கு இல்லை.
இப்போது, இந்து ராஷ்டிர கனவுடன் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்திருக்கிறது பாஜக. அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது. மதத்தின் பெயரால் மக்களை ஒரு இனப்படுகொலைக்குத் தயார்படுத்தும் இவற்றை எதிர்த்து தன்னெழுச்சியாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. போராடும் மக்களை ஒடுக்க துப்பாக்கி குண்டுகள் பாய்கின்றன. கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களை இரக்கமில்லாமல் அடித்து விரட்டுகிறார்கள் அமித் ஷாவின் ஏவலர்கள்.
போராட்டங்கள் வலுவடைந்திருக்கும் நிலையில், “எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” பாஜகவின் குரலை அமைதி விரும்பி வேசம் கட்டி கருத்து கூறியிருக்கிறார் ரஜினி.
அமைதி வழியில் வளாகத்துக்குள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துகொண்டிருந்த ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை மாணவர்களை ஈவு இரக்கமில்லாமல் அடித்து உதைத்தது டெல்லி போலீசு. நூலகமெங்கும் இரத்தக்கறை! அதைக் கண்டுதான் மாணவர் சமூகம் வெகுண்டெழுந்தது. அப்போது ரஜினி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். மாணவர்கள் அடிவாங்கியது அவருடைய மனதிற்கு வேதனை அளிக்கவில்லை. சமூகம் கொந்தளிக்கும்போது அதிகாரத்துக்கு கால் பிடித்துவிடும் அவருடைய கேடுகெட்ட ஆன்மீக ஆன்மா விழித்தெழுந்துகொள்கிறது.
ரஜினி பாஜகவின் குரலாக ஒலிப்பதன் பின்னணி என்ன? ரஜினியின் ‘இந்துத்துவ ஆன்மீக ஈடுபாடு’ம் அவற்றை அவர் நடிக்கும் படங்களில் திணிப்பதும், மட்டுமல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ‘பார்ப்பன இந்து மத’த்தின் மேன்மைகளை எடுத்துச் சொல்வதும் பாஜகவினருக்கு நெருக்கத்தை உண்டாக்குகிறது.
இப்போது அல்ல, நீண்ட காலமாகவே ரஜினி, இந்துத்துவ அரசியலுக்கு தோதான ஆளாகவே பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்பினரும் பார்த்து வந்துள்ளனர். ரஜினிக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் இந்து முன்னணி அவரை காத்து நின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரும் சோ விட்ட அரசியல் (தரகர்) பணியைத் தொடர்பவருமான குருமூர்த்தி ‘பாஜகவும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும்’ என ரஜினி உள்ள மேடையிலேயே இணைப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
முழுக்க முழுக்க எதிர்ப்பு நிலையிலேயே தங்களை வைத்திருக்கும் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடிக்க பாஜக பல வகையிலும் திட்டமிடுகிறது. சினிமா செல்வாக்குள்ள, தங்களுடைய ‘கொளுகை’களுக்கு ஒத்துப்போகும் ரஜினி போன்ற பிம்பத்தின் பின்னால் வளரலாம் என்பது அவர்களுடைய நீண்ட காலத் திட்டம்.
ரஜினியின் ‘கொளுகை’கள் காவிமயமானவை; தமிழக மக்களின் எண்ணங்களுக்கு, வாழ்வியலுக்கு எதிரானவை. இதை அவர் உணர்ந்திருந்தாலும் தன்னுடைய சித்தாந்தத்திலிருந்து அவர் ஒருபோதும் கீழே இறங்கியதில்லை. தமிழகத்தின் மத எதிர்ப்பு அரசியலை எதிர்கொள்ள அவருக்குப் போதிய மன தைரியம் இல்லை என்பதோடு அது வெற்றி பெறவும் செய்யாது என்பதை அறிந்திருக்கிறார். அவருடைய இத்தனை ஆண்டுகால தயக்கமே இதை உணர்த்தக்கூடியதுதான். ஆனாலும், பாஜகவுக்கு இது பொருட்டில்லை.
ரஜினி என்பது பாஜகவுக்கு ஒரு முகமதிப்பு மட்டுமே. பணபலத்தைப் பற்றியோ, ஆள் பலத்தைப் பற்றியோ ரஜினி கவலைகொள்ளத் தேவையில்லை; அதை பாஜக கவனித்துக்கொள்ளும். பாஜகவுக்குத் தேவை தங்களுடைய சித்தாந்தத்தைத் தாங்கிச் செல்லும் ஒரு முகம். அந்தப் பணிக்கு ரஜினி கச்சிதமாகப் பொருந்துவார் என அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசிக்கும் நடிகர் ரஜினிகாந்த், தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாதவராகவே இருக்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ரஜினியின் சிந்தனை பள்ளியான காவி, இந்துத்துவ அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அவர்களின் அரசியல் வார்ப்பு அப்படிப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 130 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்சியை வளர்க்கத்தான் ரஜினி களமிறங்கப் போகிறார். உங்களுடைய ஆன்மீக அரசியலுக்கு பாடம் கற்பிக்க தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள், வாருங்கள் ரஜினி.
“இந்த நிலம் என்னுடையது; ஆனால், நான் இந்த நிலத்திற்குரிய உரியவன் அல்ல!” – இந்த வரிகள், வங்க – அசாமிய முசுலிமான காஸி நீல் என்ற இளம் கவிஞனுடையது. அவனது வலி மிகுந்த இந்த வரிகள் இன்று, குடியுரிமைச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த பிறகு, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும் குடியேறி, இந்தியக் குடிமக்களாகவே மாறிவிட்ட வங்கதேச முசுலிம்களின் அவலத்தை, எதிர்கால அச்சத்தைப் பிரதிபலிப்பதாக மாறிவிட்டது.
1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் இந்திய நாட்டில் பிறந்த அனைவரும் இந்தியக் குடியுரிமை பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. பிரிவினையின்போதும், அதன் பின்னரும் குடிபெயர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதற்கும்கூட மதம் வரையறையாக வைக்கப்படவில்லை.
அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பவர்களை வெளியேற்றும் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, “இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்” எனக் குடியுரிமைச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டு, 1987-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
2004-ல் வாஜ்பாயி ஆட்சியில் இந்த நிபந்தனை மேலும் கடுமையாக்கப்பட்டது. குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பதோடு, மற்றவர் சட்டவிரோதக் குடியேறியாக இருக்கக் கூடாது என அச்சட்டம் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தம் இந்தியாவில் குடியேறியிருக்கும் வங்கதேச முசுலிம்களையும், அவர்களது வாரிசுகளையும் ஒதுக்கி, சட்டவிரோத ஊடுருவல் பேர்வழிகளாகக் காட்டும் உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது.
மோடியின் ஆட்சியில் தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத் திருத்தமோ, மிகவும் வெளிப்படையாகவே இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முசுலிம்களை மட்டும் தனிமைப்படுத்தி, ஒதுக்குகிறது.
“பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து எவ்வித ஆவணங்களுமின்றி, டிசம்பர் 31, 2014 முன்பாக இந்தியாவில் குடியேறியிருக்கும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதக் கூடாது. மேலும், அவர்கள் மீது கடவுச்சீட்டுச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால், அவ்வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” எனக் குறிப்பிடுகிறது, அத்திருத்தம்.
மேலும், இச்சட்டத் திருத்தத்திற்கு முன்பு இந்தியாவில் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இந்தியாவில் பதினொரு ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. ஆனால், மோடி கொண்டுவந்திருக்கும் இச்சட்டம் குறிப்பிட்ட இந்த ஆறு மதத்தினருக்கு அக்காலக்கெடுவை ஐந்து ஆண்டுகளாகக் குறைத்துவிட்டிருக்கிறது.
இச்சட்டத் திருத்தம் இந்துக்களுக்குத் தனிச் சலுகை அளிக்கும் விதத்தில் கொண்டுவரப்படவில்லை எனக் காட்டுவதற்காகவே, அந்நிய மதமென ஆர்.எஸ்.எஸ். கும்பலால் கூறப்படும் கிறித்தவம் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும், இச்சட்டத் திருத்தத்தில் ஆறு மதங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதனின் உள்நோக்கம், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறியிருக்கும் வங்கமொழி பேசும் இந்துக்களுக்கு உடனடியாகக் குடியுரிமை வழங்குவதுதான்.
வங்க தேசத்திலிருந்து இந்தியாவில் குடியேறியிருக்கும் முசுலிம்கள் இந்தியக் குடியுரிமை பெற பலவிதமான ஆவணங்களைக் காட்டித் தாங்கள் சட்டவிரோதக் குடியேறிகள் இல்லை என நிரூபிக்க வேண்டியிருக்கும் நிலையில், வங்கமொழி பேசும் இந்துக்கள் எந்தவொரு ஆவணமும் இன்றி, தமது மத அடையாளம் ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு குடியுரிமை பெறுவதற்கு இச்சட்டத் திருத்தம் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.
பாபர் மசூதி நிலத்தை இந்துத் தரப்பிற்கு வாரிக் கொடுக்க மத நம்பிக்கை; இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க மத அடையாளம் – இதன் பிறகும் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என நம்புவதற்கு ஏதாவது பொருளுண்டா?
துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் அல்லது அத்தகைய அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கும் மதச் சிறுபான்மையினர் என்ற மனிதாபிமான அடிப்படையில்தான் ஆறு மதத்தினருக்குக் குடியுரிமை வழங்கச் சலுகை அளிக்கப்பட்டிருப்பதாக மோடி அரசு கூறினாலும், மோடி அரசு நிறைவேற்றியிருக்கும் திருத்தத்தில் மதச் சிறுபான்மையினர் என்றோ, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பவர்கள் என்றோ குறிப்பிடப்படவில்லை. அச்சட்டத் திருத்தம் மத அடையாளத்தை மட்டுமே பேசுகிறது.
பாகிஸ்தானில் இந்துக்களைவிட, அஹமதியா முசுலீம்கள்தான் கொடூரமான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் மதச் சிறுபான்மையினர். பர்மிய இராணுவம் ரோஹிங்யா முசுலிம்கள் மீது இனப் படுகொலை நடத்தியிருப்பது உலகெங்கிலுமே அம்பலமாகியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் இனப் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர்.
இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுக் கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தம் யூதர்களுக்கு இசுரேல் போல, இந்துக்களுக்கு இந்தியா என்பதை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப, இச்சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகள், வரம்புகளை எதிர்காலத்தில் மாற்றும் அதிகாரத்தையும் மைய அரசிற்கு அளித்தே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
“இந்துக்கள் அல்லாதவர்கள், எந்தவொரு உரிமையினையும் சலுகையினையும் கோராமல், இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்து இந்த நாட்டில் வாழலாம்” என ஆர்.எஸ்.எஸ்.- சித்தாந்த குரு கோல்வால்கர் கூறியிருப்பதற்கு ஏற்ப, இந்து இந்தியாவை உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்.- இறுதி நோக்கம். அதனை நோக்கிச் செல்லும் திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அடுத்த அடிதான் இந்தச் சட்டத் திருத்தம்.
நாடெங்கும் குடிமக்கள் பதிவேட்டினை நடைமுறைப்படுத்தப் போவதாக அமித் ஷா அறிவித்திருப்பதையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க முடியும்.
அதேசமயம், இச்சட்டத் திருத்தத்தின் உடனடி நோக்கம் அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறாமல், சட்டவிரோதக் குடியேறிகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் வங்கமொழி பேசும் இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி அம்மாநிலத்தில் இந்து வாக்குவங்கியை உருவாக்கிப் பராமரிப்பதுதான்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அசாம் மாநிலத் தலைநகர் கவுஹாத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
“மார்ச் 21, 1974-க்கு பிறகு அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அனைவரையும், மத வேறுபாடின்றி வெளியேற்ற வேண்டும்” என்பதுதான் அசாம் மக்களின் கோரிக்கை. ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் போடப்பட்ட அசாம் ஒப்பந்தமும் அதனைத்தான் கோருகிறது.
ஆனால், மோடி அரசோ அந்த ஒப்பந்தத்தைச் சிதைக்கும் நோக்கில் அசாம் மாநிலத்தில் குடியேறியிருக்கும் வங்கமொழி பேசும் இந்துக்களுக்குச் சலுகை அளிக்கும் விதத்தில் இச்சட்டத் திருத்தத்தை உருவாக்கியிருக்கிறது. மேலும், அசாம் ஒப்பந்தத்தில் விதிக்கப்படிருந்த காலக்கெடுவையும் இந்துக்களுக்கு மட்டும் டிச.31, 2014 என நைச்சியமாக மாற்றியமைத்துவிட்டது.
இச்சட்டத் திருத்தம் வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தாது என மோடி அரசு விளக்கம் அளித்தாலும், அச்சமாதானத்தை அசாமியர்கள் யாரும் நம்பவில்லை. இச்சட்டத் திருத்தத்துக்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம் திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் எனப் பரவி வருகிறது.
இந்திய அரசு என்பது இந்து அரசுதான் என்பதை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சட்டபூர்வமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது, மோடி அரசு. அயோத்தி, காஷ்மீர் விவகாரங்களும் இந்த நடவடிக்கையும் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே எதிரானவை என்று கருதிக் கொண்டிருப்போர், இது ஓர் பேரழிவின் தொடக்கம் என்பதை விரைவிலேயே அனுபவித்து உணர்ந்து கொள்வார்கள்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
இந்துத்துவ பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையில் சிறப்பு வழக்கறிஞராக, இந்துத்துவ கும்பலை எதிர்த்து போராடி வருபவர் வழக்கறிஞர் பாலன்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்த அவரது ஆங்கில பேட்டியை தமிழாக்கம் செய்து இங்கே கொடுக்கிறோம். பாருங்கள்… பகிருங்கள்…
இந்திய மக்களாகிய நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்க்கிறோம். ஏனெனில், இது ஆர்.எஸ்.எஸ்.-ன் அகண்ட பாரத திட்டத்தின் ஒரு பகுதி. அவர்கள் வகுப்புவாத அரசியலின் மூலம் மக்களைப் பிரிக்க நினைக்கிறார்கள்.
முதலில் அவர்கள் இஸ்லாமியர்களைக் குறிவைக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்கள் தலித்துகளையும் குறிவைக்கிறார்கள். பின்னர், கம்யூனிஸ்ட்டுகள், தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியினரைக் குறிவைப்பார்கள்.
இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது முட்டாள்தனமான திட்டம். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், 1935-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டுவந்த நூரம்பர்க் சட்டங்களுக்கு நிகரானது. பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதே இதன் மொத்த நோக்கமாகும். தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5% மட்டும்தான் இருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு தொழில்துறையும் முடங்கியுள்ளது. வேலைவாய்ப்பு எங்கும் இல்லை. ஆகவே இது மக்களை திசை திருப்பும் வேலை.
இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வேண்டுமெனில் சுமார் ரூ. 6 இலட்சம் கோடி தேவைப்படும். அசாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த அரசாங்கம் 1,500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. மொத்த மக்களும் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவழித்துள்ளனர். இப்போது முதல் கேள்வி என்னவென்றால், இத்திட்டத்தை இந்தியா முழுவதும் 130 கோடி மக்களுக்கும் அமல்படுத்தினால் எவ்வளவு செலவாகும் ?
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. சட்டத்துக்கு முன்னர் அனைவரும் சமம் என்ற அடிப்படைக்கு எதிரானது. இச்சட்டம் முசுலீம்களை விலக்குகிறது. இந்தியாவைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரை ஏற்றுக் கொள்வதாகக் கூறுகின்றனர். எனில் பர்மாவில் பவுத்தர்கள்கால் துன்புறுத்தப்படும் சிறுபான்மையின மக்களாகிய ரோகிங்கிய மக்களை ஏன் சேர்த்துக் கொள்ளமுடியாது என்கிறார்கள் ?
அனைத்து நாடுகளில் இருந்தும் இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மத, சாதி, இன பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம்.
அவர்கள் 6 மதங்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாகச் சொல்கிறார்கள். புத்த மதம், ஜைன மதம், பார்சி, சீக்கிய மதம், இந்து மதம், கிறுத்துவ மத மக்களை அனுமதிப்பதாகக் கூறுகிறார்கள். கிறுத்துவ மக்கள் வெகு குறைவானோரே.
மொத்தத்தில் அவர்கள் முசுலீம்களை மட்டும் ஒதுக்குகிறார்கள். இது பாஜக ஆர்.எஸ்.எஸ்.-ன் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.
இது ஏற்றுக் கொள்ள முடியாதது. அரசின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நமது அரசியல்சாசனத்தைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதே தேசப்பற்று நடவடிக்கை. அரசியல் சாசனத்தை சிதைப்பது நம்பிக்கை துரோகிகளின் வேலை.
கேள்வி :“தேசிய குடிமக்கள் பதிவேடு” நடைமுறைப்படுத்தப்பட்டால் முசுலீம்கள் பயம்கொள்ள பல விசயங்கள் இருக்கின்றன. ஆனால் அது ஆவணங்கள் அற்ற அனைத்து இந்தியக் குடிமக்களையும் பாதிக்கும் அல்லவா ? இதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் ? இது எவ்வாறு முசுலீம் அல்லாதவர்களைப் பாதிக்கும் ?
பதில் : எனது பிறப்புரிமையை இவர்கள் எப்படி ஆவணங்களோடு சம்பந்தப்படுத்த முடியும் ? இது கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட சுமார் 42 கோடி தொழிலாளர்களை நேரடியாகப் பாதிக்கும். அவர்களுக்கு வீடு கிடையாது. நிலையான இடத்தில் வேலை கிடையாது. அவர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மூன்று மாதம் கர்நாடகா, 3 மாதம் ஆந்திரா, 3 மாதம் மும்பை என ஒவ்வொருமுறையும் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும் ?
அர்ஜுன் சென் குப்தா கமிட்டி அறிக்கையின் படி 84 கோடி பேர் ஒரு இடத்தில் 28 நாட்களுக்கு மேல் இருப்பதில்லை. இவர்களிடம் எந்த ஆவணங்களும் இருக்காது. ஆகவே இந்த தேசிய குடிமக்கள் பதிவேடும், குடியுரிமை திருத்தச சட்டமும் இந்துக்களுக்கும் எதிரானது.
கேள்வி :சரி, இப்படி தங்களது ஓட்டுவங்கியான இந்துக்களுக்கே எதிரானதை பாஜக ஏன் நடைமுறைப்படுத்துகிறது ?
பதில் : அவர்கள் சோறில்லை என்று கேட்டால், இவர்கள் இராமஜென்ம பூமியில் இராமன் கோவில் கட்டுவதாகக் கூறுகிறார்கள். மக்கள் நேரடியாக சொர்க்கத்திற்குச் செல்வது குறித்துப் பேசுகிறார்கள்.
கேள்வி :இதை எப்படி எதிர்க்கப் போகிறீர்கள் ?
பதில் : மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமைதியான வழியில், அமைதியற்ற வழியில் என தொடர்ந்து போராடுகிறார்கள். பல்வேறு போராட்ட வடிவங்களை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களது போராட்டங்கள் விரிவடைந்து செல்கின்றன. மொத்த நாடே பற்றி எரிகிறது. இது இன்னும் பரவும்.
ஆனால் அமித்ஷா இதற்கு இறங்கிவருவது போல் தெரியவில்லை. “நீ போராடு, நாங்கள் சட்டத்தை அமல்படுத்துவோம்” என்கிறார். இது அமித்ஷாவுக்கும் மக்களுக்கும் இடையிலான சவால்.
கேள்வி :உங்களது இறுதி கோரிக்கை என்ன ?
பதில் : தேசிய குடிமக்கள் பதிவேட்டை விரட்டியடிக்க வேண்டும். குடியுரிமை திருத்த மசோதாவையும் சட்டத்தையும் விரட்டியடிக்க வேண்டும்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மக்கள் தன்னிச்சையாக நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். துணை இராணுவம், போலீசு, ஊரடங்கு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளை ஆளும் அரசு ஏவினாலும் போராட்டத்தின் வீரியத்தை அவர்களால் குலைக்க முடியவில்லை.
மோடி – ஷாவின் பாசிச சட்டத்துக்கு எதிராகவும் இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்கும் பொருட்டும் வெவ்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர். அதன் தொகுப்பு இங்கே…
என்னுடைய ஹிஜாப் அல்லது ”ஹிஜாபுடன் கூடிய நெற்றி போட்டு”… எது உங்களை பாதிக்கிறது?
மும்பையில் நடந்த போராட்டத்தின் போது உரிமைக்காக பதாகை ஏந்திவந்திருந்த பெருந்திரளான மக்கள்
பாசிசம் அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது !‘நான் முசுலீம்; இந்து; பவுத்தர்; சீக்கியர்; கிறித்துவர்; ஜெயின்; மொத்தத்தில் நான் இந்தியர்.‘மேரி கிரைசிஸ், ஹேப்பி நியூ ஃபியர்’ (நிறைய பிரச்சினைகளுடன் புதிய பயமுறுத்தல்)
துப்பாக்கியல்ல, புத்தகங்கள். வன்முறை அல்ல கலாச்சாரம். நான் ஜாமியா மாணவர்களுடன் அவர்களுக்காக நிற்கிறேன்.தேநீர் செய்யுங்கள்; போரை அல்ல.மோடி – ஷா-வுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!பாசிஸ்டுகளும் (மோடி அமித்ஷா) கோபக்காரர்களும் (போராட்டக்காரர்கள்)கேளாத செவிகள் கேட்க வேண்டுமெனில் சத்தம் மிக அதிகமாகத்தான் இருக்க வேண்டும் – பகத் சிங்மோடி – ஷா – போய் அரசியலமைப்பைப் படியுங்கள்!பிழை 404 – இந்து ராஷ்டிரம் காணப்படவில்லை(காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைக் கடந்து) இயல்பு நிலை இப்போது டெல்லியை எட்டியுள்ளது.பாசிசத்தை முடக்குங்கள்; இணையத்தை அல்ல.அவர்கள் எங்களைப் பிரித்தால் நாங்கள் பல்கிப் பெருகுவோம்.உங்கள் துப்பாக்கியைவிட எங்கள் குரல் வலிமையானதுஎன்னுடைய உடை முசுலீமை போன்றது, நெற்றி இந்துவைப் போன்றது; என்னுடைய கழுத்து கிறித்துவன் எனக் காட்டுகிறது. ஆனால், நான் ஒரு மனிதன்நான் ஒரு ஜெர்மானியர், (NRC, CAA அனுமதித்தால்) நிச்சயம் உங்கள் எதிர்கால சந்ததியினர் உங்கள் மீது உமிழ்வார்கள்.
மார்க்சியம் லெனினியம் பற்றிக் கூறும் “மார்க்சியத்தின் அடிப்படைகள்” என்னும் சிறு தொகுதியில் 11 கட்டுரைகள் உள்ளன … 70 ஆண்டுகள் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் வழிகாட்டியாக, புது வாழ்க்கையின் பேரொளியாக இயங்கி வந்த சோவியத் நாடு சிதைந்து 15 (2006-இல் இந்நூல் வெளியானது) ஆண்டுகள் ஆகின்றன. அந்நிகழ்ச்சிக்குப் பின் மார்க்சியத்தின் எதிர்காலமே கேள்விக்குறியானது. மார்க்சியம் ஓர் அறிவியல். அறிவியலுக்கு அழிவில்லை ; வாழும், வளரும், வெற்றிபெறும் என்பது உறுதி.
விலங்கு நிலையிலிருந்து பிரிந்த மனிதன் மட்டுமே தன் உழைப்பால் பல சாதனைகளைப் படைத்து வரலாற்றை உருவாக்கினான். வார்ரோ என்னும் ரோமானிய அறிஞர் கருவிகள் மூவகை ; முதலாவது பேசக்கூடியவை, இரண்டாவது பேச முடியாதவை, மூன்றாவது ஊமை. இவற்றுள் முதல் வகை சார்ந்தவன் மனிதன். இரண்டாம் வகை சார்ந்தவை பிற உயிரினங்கள், மூன்றாவது வண்டி போன்றவை என்றார். இவற்றுள் மனிதனே தன் உழைப்பால் இவ்வுலகில் காணும் செயற்கைப் பொருள்கள் செல்வங்கள் அனைத்தையும் படைத்தான். இப்படைப்பு நிகழ்ச்சிகளில் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டவன் இந்த உழைப்பாளியே. இந்த உழைப்பாளியேதான் குடும்பம், அரசு, சமூக உறவுகளை உருவாக்குவதில் பங்குபெற்றவன். பொருள் உற்பத்தி படைப்பில்-அதில் உள்ள உற்பத்தி உறவுகளில் மையமானவன்.
வஞ்சகம், சூழ்ச்சி, சுரண்டல் என்னும் தீங்குகளை எதிர்த்துச் சமத்துவத்துக்காக நீண்ட நெடுங்காலமாக மனிதன் போராடி வந்துள்ளான். ஒவ்வொரு நாட்டிலும் கலகங்கள் பல, எழுச்சிகள் பல, கிளர்ச்சிகள் பல, புரட்சிகள் பல, வெற்றிகள் சில, தோல்விகள் பல. வெற்றிகள் சிலவாயினும் அவையே சமூக மாற்றத்திற்கு வித்திட்டன. தோல்விகள் உரமாயின. வரலாறு தந்த படிப்பினைகளின் மேலெழுந்த அறிவியல்தான் மார்க்சியம்.
தந்த படிப்பினைகளின் மேலெழுந்த அறிவியல்தான் மார்க்சியம் மார்க்சியம் தோற்றது எனில் வரலாறு தோற்றது என்பது பொருள் மார்க்சியம் ஏலாது என்றால் மனிதன் மனிதனாகக் கருதப்படுவதற்குத் தகுதியற்றவன் என்பது பொருள். இந்தப் பின்புலத்தில் இக்கட்டுரைகள் பயிலப்படுதல் வேண்டும். ஏறத்தாழ மார்க்சியம் பற்றிய எல்லா அடிப்படை வினாக்களுக்கும் இக்கட்டுரைகள் விடை தருகின்றன.
மார்க்சியம் மாய்ந்துவிட்டது எனத் தம்பட்டம் அடிக்கப்படும் இந்நேரத்தில் தனியார் மயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கை சூறாவளியாகச் சுழன்று அடித்து வரும் இந்நேரத்தில் மார்க்சியம் எதிர் நிற்குமா என்னும் ஐயப்பாடு பலருக்கு இயல்பாக எழும். இப்புதிய பொருளாதாரக் கொள்கையும் உலக முதலாளித்துவத்தின் நீட்சியே என்னும் உண்மையறியப்பட்டால் மார்க்சியத்தின் மெய்ம்மையும் அதன் தேவையும் உணரப்படும். இந்த மன உறுதியை அளிப்பனவாகவே இக்கட்டுரைகள் அமைகின்றன. குறிப்பாக இதுவரை மார்க்சியம் அறியாதவருக்கு அதனை அறிவிக்கும். அறிந்தவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை நீக்கி அறிவு தெளிவிக்கும் இத்தொகுதியை வெளியிடுவதில் என்.சி.பி.எச் பெருமிதம் கொள்கிறது. (நூலின் பதிப்புரையிலிருந்து…)
இந்நூலில், உபரி மதிப்பு என்றால் என்ன? தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன? தொழிலாளி வர்க்கம் என்றால் என்ன? இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்றால் என்ன? முதலாளித்துவம் என்றால் என்ன? அந்நியமாதல் என்றால் என்ன? ஏகாதிபத்தியம் என்றால் என்ன? வர்க்கப் போராட்டம் என்பது என்ன? பெண்களின் மீதான ஒடுக்குமுறை தவிர்க்க முடியாததா? முதலாளித்து வர்க்கம் என்றால் என்ன? சோசலிசம் என்றால் என்ன? புரட்சி என்றால் என்ன? ஆகிய அடிப்படையான 12 கேள்விகளே உட்தலைப்புகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன?
ஒடுக்குமுறையும் சுரண்டலும் முதலாளித்துவத்தின் அடிப்படை அம்சங்கள். தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. முதலாளித்துவ உடைமையாளர்களோ உழைப்போரால் உருவாக்கப்படும் உற்பத்திப் பொருள்களிலிருந்து லாபங்களைப் பெறுகின்றனர். இதுவே பொருளாதாரச் சுரண்டலின் சாராம்சமாகும். ஏறத்தாழ ஒவ்வொரு தொழிலாளியும், ‘சுரண்டல்’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துவதில்லையென்றாலும் கூட, அது பற்றி அறியாமலில்லை. முதலாளித்துவத்தின் கீழ் அனைத்துத் தொழிலாளர்களும் – அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பது முக்கியமல்ல உடைமையாளர்களால் சுரண்டப்படுகிறார்கள். தொழிலாளர்களால் உருவாக்கப்படும் செல்வம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சில வங்கியாளர்களிடமும் உடைமையாளர்களிடமும் ஒப்படைக்கப்படுகிறது. முதலாளித்துவ சமுதாயங்களில் அனைத்துச் சட்டங்களும் இந்த ஏற்றத்தாழ்வை வலியுறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன.
மேலும் கூடுதலாக, வர்க்க சமுதாயம் முதலாளித்துவத்தை வரையறுக்கக்கூடிய பொருளாதாரச் சுரண்டலுக்கும் அப்பால் செல்லும் ஒரு தனிச்சிறப்பான ஒடுக்குமுறைகளின் வலைப்பின்னலை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் ஒடுக்குமுறை மற்றும் ஒரு பாலின உறவு, இரு இனங்களுக்கிடையே அல்லது பல்வேறு இனங்களுக்கு இடையிலான பாலின உறவுகளை எதிர்த்த பாலியல் அடிப்படையிலான ஒடுக்கு முறை ஆகியவை இருக்கின்றன.
முதலாளித்துவத்தின் கீழ் தனிவகைப்பட்ட ஒடுக்குமுறைகளின் முக்கியமான வடிவங்களில் ஒன்றாக தேசிய ஒடுக்குமுறை – தேசிய இனத்தின் அடிப்படையில் அவ்வின மக்கள் அனைவரையும் சுரண்டுவது இருக்கிறது. ஒடுக்கப்பட்ட தேசங்களின் பொருளாதாரங்கள் மற்றும் அரசியல் ஆகியவற்றின் மீது மிகவும் பலம் வாய்ந்த ஏகாதிபத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிறபோது, சர்வதேச அரங்கில் இது பரவலாக அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் சொத்துடைமையாளர்களும் பெரிய வங்கிகளாலும் கூட்டிணைவுக் குழுமங்களாலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிற ஏகாதிபத்திய வல்லரசுகளாலும் கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர். (நூலிலிருந்து பக்.7-8)
நூல் : மார்க்சியத்தின் அடிப்படைகள் ஆசிரியர் : நிழல்வண்ணன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098. தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410 மின்னஞ்சல் : info@ncbh.in
மோடி- அமித்ஷா கும்பல் கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும்; அந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடிய ஜாமியா மிலியா, ஜே.என்.யு., அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் டிச-19 அன்று தமிழகம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
இஸ்லாமியர்கள்ஈழத்தமிழர்களைதனிமைப்படுத்தும்குடியுரிமைதிருத்தச்சட்டத்தைநிராகரிப்போம் ! ♦டெல்லிமாணவர்கள்மீதானகொடூரதாக்குதலைவன்மையாககண்டிக்கிறோம் ! ♦பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.-ன்காவிபாசிசத்திற்குஎதிராகபோராட்டத்தீபரவட்டும் ! – என்ற மைய முழக்கத்தின் கீழ் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் போலீசின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
நாட்டை நாலாய் பிளந்து போட்டு
கார்ப்பரேட்டுக்கு விற்கத் துடிக்கும்
மோடியும் – அமித்ஷாவும்
இந்திய தேச பக்தர்களா?
கூறுபோட்டு விற்றுத் தின்ன
இந்தியா ஒன்றும் அமித் ஷாவின்
அப்பன் வீட்டுச் சொத்து இல்லை.
நாட்டை இந்து ராஷ்டிரம் ஆக்கும்
ஆர் எஸ்எஸ் சதித் திட்டத்தை
வீதியில் நின்று முறியடிப்போம்! – என்பது உள்ளிட்ட முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் எழுப்பினர்.
திருச்சி:
மதுரை :
பெரியார் கட்டபொம்மன் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை வகித்தார். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி தோழர் சினேகா ; சிவகங்கை மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
விருத்தாசலம் :
விருத்தாசலம், பாலக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
விழுப்புரம் :
விழுப்புரம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கும்பகோணம் :
தஞ்சை மண்டல மக்கள் அதிகாரம் சார்பில், குடந்தையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், தஞ்சை – மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சண்முகசுந்தரம்; தஞ்சை – மாவட்ட ஒருங்கினைப்பார் தோழர் தேவா உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி :
தருமபுரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்களை, தருமபுரி B1 இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வாடா, போடா என ஒருமையிலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியும் வலுக்கட்டாயமாக கைது செய்தார்.
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு: 99623 66321.
அடிக்கடி பேருந்துகளில் பல மணிநேரங்கள் தொலைதூரப்பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ?
மகிழ்வுந்தில் வீக்கெண்ட் சில நூறு கிலோமீட்டர்கள் லாங் ட்ரைவ் செல்பவரா நீங்கள்?
தொலைதூர விமானப்பயணங்களின் மூலம் காலை நியூயார்க்கில் காபி
மாலை டோக்கியோவில் டின்னர் சாப்பிடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்?
குடும்பத்தைக்காக்க வருமானத்துக்காக சரக்கு லாரிகளை மாநிலம் விட்டு மாநிலம் ஓட்டும் லாரி ஓட்டுநர்கள் / அரசு விரைவுப்போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்கள் / தனியார் மொஃபசல் பேருந்து ஓட்டுனர்கள்
இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கானது தான்.
சமீபத்தில் புது டெல்லியை சேர்ந்த சவுரப் சர்மா எனும் முப்பது வயது இளைஞர்
வீக்கெண்ட் ஜாலி ட்ரைவாக ரிசிகேஷில் இருந்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார்
இவரது வண்டி ஒரு ஆட்டோமேட்டிக் வண்டி ஆதலால் இடது காலுக்கு வேலை இல்லை. வழக்கமான கியர் வண்டியில் இடது கால் க்ளட்ச்சில் எப்போதும் கால் இருக்க வேண்டும். ஆனால் ஆட்டோமேட்டிக்கில் ப்ரேக் ஆக்சிலேட்டர் இரண்டும் வலது காலால் இயக்கினால் போதும்.
மேலும் விலையுயர்ந்த கார்களில் “cruise” மோட் என்று இருக்கும். நாம் நெடுஞ்சாலையை அடைந்தவுடன் அடைய வேண்டிய வேகத்தை அடைந்து விட்டு க்ரூஸ் போட்டு விடலாம்.
இப்போது வலது காலுக்கும் வேலை இருக்காது.
சரி விசயத்துக்கு வருவோம். இந்த தம்பி சுமார் எட்டு மணிநேரம் நான் ஸ்டாப்பாக வண்டியை செலுத்தி தனது அலுவலகத்தை அடைந்துள்ளார்.
கூடவே நன்றாக டைட்டாக இருக்கும் படியான சாக்குத்துணியால் ஆன பேண்ட்டை அணிந்துள்ளார். என்னது சாக்குதுணியா? என்று கேட்காதீர்கள். நாம் உபயோகிக்கும் ஜீன்ஸ் பேண்ட் உருவாக்கப்படும் டெனிம் வகை துணி – சாக்குத்துணி தானே.
நமது சீதோஸ்ன நிலைக்கு சற்றும் பொருந்தாது என்றாலும் நாம் ஃபேசனுக்காக ரோசத்தை விடும் கூட்டமன்றோ?
இந்த ஜீன்ஸ்னால தான் உங்க விந்தணு குறையுதுடா… குழந்தை பாக்கியம் இல்லாம சந்ததி தழைக்காம.. சந்தி சிரிச்சுபோகுதுடா.. பேராண்டிகளா.. வேணாம்டா பேராண்டிகளா.. என்று டிவியில் வரும் சேலம் தாத்தா போன்று கூறினாலும் யூத்துகள் விடவதாக இல்லை.
சரி… இந்த டைட் டெனிம் பேண்ட் போட்டுக்கொண்டு எட்டு மணிநேரம் வண்டியை ஓட்டிக்கொண்டு போன அவருக்கு இடது கனுக்காலில் நன்றாக வலி இருந்துள்ளது.
முதல் அறிகுறிகளை புறக்கணிப்பது இந்திய நோயாளி கண்டிப்பாக கடைபிடிக்கும் எழுதப்படாத சட்டமன்றோ..?
தம்பியும் அந்த வலியை புறக்கணித்து இரண்டு நாட்கள் அலுவலகம் செல்கிறார். அங்கும் குத்த வைத்தபடியே பணி செய்யும் வொய்ட் காலர் வேலை தான்.
வலி அதிகமாகியிருக்கிறது. இரண்டாவது நாள் அலுவலகத்தில் நண்பர்களுடன் இருக்கும் போது தீடீரென்று கண்ணைக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறது.
இதை Black outs என்கிறோம். கூடவே மூச்சிரைப்பும் படபடப்பும் பிறகு மூர்ச்சை நிலைக்கு சென்று விட்டார்.
கொஞ்ச நேரம் கழித்து நினைவு வந்தாலும் மீண்டும் மயக்கத்துக்கு செல்ல, ஆபத்தில் உதவுபவர்கள் தானே நண்பர்கள். உடனே இவரை பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அங்கே நாடித்துடிப்பு மிக குறைவாக இருக்கவே இதயத்துடிப்பையும் சுவாசத்தையும் மீட்கும் நவீன மருத்துவத்துறையின் பிரம்மாஸ்திரமான cardio pulmonary resuscitation-ஐ செய்து உடலை விட்டு பிரிந்து சென்ற உயிரை மீண்டும் பிடித்து இழுத்து வந்து இரண்டுக்கும் கால்கட்டு போட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
இதெல்லாம் சரி.. இப்ப அவருக்கு என்ன தான் நடந்துச்சு.. அத சொல்லுங்க டாக்டர்..
நானும் வாரக்கடைசில சென்னைல இருந்து வண்டிய கெளப்பி நான்ஸ்டாப்பா மதுரைக்கு கார் ஓட்டிட்டு போய்ட்ருக்கேன், என்று நமது ஐடி துறை சகோதரர்கள் பதுறுவதும் அவர்கள் இதயத்துடிப்பு லபக்கு டபுக்கு என்று இங்கு வரை கேட்கிறது.
சொல்கிறேன் ..
ஒரு மனுசன் இவ்வளவு நேரம் தான் படுத்துருக்கணும்.. இவ்வளவு நேரம் தான் காலை தொங்க போட்டு வச்சுருக்கணும்.. இவ்வளவு நேரம் தான் தொடர்ந்து உக்கார்ந்துருக்கணும்னு விதி இருக்கு.
சாதாரண சிசேரியன் செய்தாலும் மருத்துவர் பிள்ளை பெற்ற அந்த பச்சை உடம்புக்காரியை வலியே இருந்தாலும் பரவாயில்லை எழுந்து நடந்தே ஆகணும் என்று வற்புறுத்துவது எதனால்?
காரணம் இருக்கிறது… நாம ஒரே இடத்தில் பல மணிநேரம் எந்த அசைவும் கொடுக்காம கால்கள தொங்க போட்டோ? அல்லது நீட்டியோ வைத்திருந்தால் நமது கால்களில் இருக்கும் ரத்த ஓட்டம் மொதுவாகும். மேலும் காலில் இருந்து மேலே செல்ல வேண்டிய ரத்தத்தில் சுழற்சியும் குறையும். இதனால் stasis எனும் ரத்த ஓட்ட மந்த நிலை ஏற்படும்.
இதனால் நமது கால்களில் உள்ள ஆழத்தில் இருக்கும் சிறைகளில் Deep vein thrombosis என்ற பிரச்சனை வரும். அதாவது அந்த சிறைகளில் ரத்தம் கட்டியாக மாறிவிடும்.
இந்த ரத்தக்கட்டி நாம் அடுத்து எழுந்து நடக்கும் போது நமது காலின் சிறைகள் வழியாக பயணித்து inferior vena ceva எனும் பெரிய சிறைதனில் நுழைந்து
இதயத்தில் உள்ள வலப்பக்க மேல்புற அறையான Right atrium அடைந்து அங்கிருந்து right ventricle வழியாக நுரையீரலுக்கு பம்ப் செய்யப்பட்டு நுரையீரலின் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதை pulmonary embolism என்கிறோம்.
இது போய் மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தினால் அது பக்க வாதம் (stroke) வரவழைக்கும். இதை thrombo embolic stroke என்கிறோம். இதய ரத்த நாளங்களை அடைத்தால் அதற்கு பெயர் myocardial infarction.
ஏன் சார்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு ஒரு லாங்க் ட்ரைவ்ல நான்ஸ்டாப்பா ஓட்டி புது வொயஃப் கிட்ட சீன் போடலாம்னு பாத்தா… அதுலயும் இப்டி பயம்புருத்துறீங்களே? என்று கேட்கிறீர்களா
என்ன செய்வது?
நம் உடலின் இயற்கை அப்படி. நாம் நடந்து நடந்தே பழக்கப்பட்ட பிராணிகள். நாம் நடப்பதை நிறுத்தினால் மரணம் வரப்போகிறது என்று அர்த்தம். நமது கால்களின் கணுக்கால் பகுதியில் Soleus எனும் பிரத்யேகமான தசை உள்ளது. இதை இன்னொரு இதயம் என்றே அழைக்கலாம் . நாங்கள் இதை peripheral heart என்று செல்லமாக அழைக்கிறோம்.
இதன் வேலை கால்களில் ரத்த ஓட்டத்தை ஒரு இடத்தில் நிற்க விடாமல் ரத்த கட்டிகள் உருவாகிவிடாமல் இருக்க ஒரு விநாடிக்கு 9.8 மீட்டர் என்ற அளவில் இழுக்கும் பவர்ஃபுல் புவிஈர்ப்பு சக்தியை எதிர்த்து ரத்தத்தை பம்ப் செய்கிறது.
இது ஏறக்குறைய நம் அந்த கால அடிகுழாய் போன்று வேலை செய்கிறது.
ஒரு பக்கமாக ரத்தத்தை மேலே ஏற்றிவிட்டு, கீழே ரத்தம் இறங்காமல் பார்த்துகொள்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சோலியஸ் தசை கூட
நீரிழிவு, உடல் பருமன், முதுமை போன்றவைகளால் வலுகுறைகிறது.
கால்களுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தை நாம் டைட்டான பெல்ட்/ டைட்டான சாக்குத்துணி பேண்ட் அணிந்து தடுத்தால் என்ன நடக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
1. வீக்கெண்ட் ட்ரிப் நிச்சயம் தேவை. லாங்க் ட்ரைவும் ஓகே. ஆனால் நான் ஸ்டாப்பாக பல மணிநேரம் பயணிக்க வேண்டியதில்லை. நம்மை நம்பி தானே நெடுஞ்சாலையோர டீக்கடைகள் இருக்கின்றன. இறங்கி இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும் ஒரு சாயா அடிக்கலாம் அல்லது சிறுநீர் கழிக்கலாம். இப்படி நின்று நிதானமாக செல்வது தான் நல்லது. நம் கூட பயணிக்கும் அனைவரும் ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் இறங்கி இரண்டு நிமிடம் நடந்து விட்டு பிறகு வந்து காரில் ஏறுவது சிறந்தது.
2. எந்த நெடுந்தூரப்பயணத்திற்கும் டெனிம் துணிகள் அணிய தகுதியானைவை அல்ல. பருத்தி துணிகள் சிறந்தவை. அளவுக்கு பொருந்தாத டைட் ஜீன்ஸ்கள் வேண்டாம். பேலியோவுக்கு மாறினால் அந்த டைட் ஜீன்ஸ்களும் லூசாக வாய்ப்பு உண்டு 😃
3. முதியோர் / நீரிழிவு நோயர்கள் / ரத்த அழுத்தம் இருந்து மாத்திரை எடுப்பவர்கள்
பேருந்துகளில் நெடுந்தூர பயணங்களில் இருக்கும் போது கட்டாயம் வண்டி நிற்கும் போது ஏறி இறங்குவது நல்லது. இடை நில்லாப்பேருந்தாக இருந்தால் குறைந்தபட்சம் எழுந்து கொஞ்ச நேரம் நின்று உட்காரலாம் அல்லது கால்களை தையல் மிசின் அமுக்குவது போல அமர்ந்த படியே செய்யலாம். இது கால்களின் ரத்த ஓட்டம் மந்தமாகாமல் தடுக்கும்.
4. லாரி ஓட்டுநர்கள்/ தொலை தூர வாகன ஓட்டிகள் கட்டாயம் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வண்டியை நிறுத்தி விட்டு ஒரு கிலோமீட்டராவது நடந்து விட்டு வண்டியில் ஏற வேண்டும். என்னை சந்திக்கும் பல பேருந்து ஓட்டுனர்களுக்கு நீரிழிவு / ரத்த கொதிப்பு இருக்கிறது.
5. விமானங்களில் நெடுந்தொலைவு பயணப்படும் மக்கள் வண்டி சீட் பெல்ட் அணியத்தேவையில்லாத உயரத்தை அடைந்ததும் கட்டாயம் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து சிறுநீர் வராவிட்டாலும் பரவாயில்லை. ஃப்ளைட்டில் டாய்லெட் எப்படி இருக்கிறது என்று பார்க்கவாவது எழுந்து நடங்கள்.
ஏர் ஹோஸ்டஸ் அம்மணிகள் என்ன நினைப்பார்களோ? அருகில் இருக்கும் கோட் சூட் போட்ட அங்கிள் என்ன நினைப்பாரோ? என்றெல்லாம் சங்கோஜப்படாதீர்கள்.
6. இதயத்தில் வால்வு ஆபரேசன் செய்யப்பட்டு அடைப்பு நீக்கம் / செயற்கை வால்வு பொருத்தப்பட்டவர்களுக்கு ரத்தம் உறையாமல் தடுக்க அசிட்ரோம் போன்ற மாத்திரைகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும். பயணத்தின் போது அந்த மாத்திரையை மறந்து விடாதீர்கள் சொந்தங்களே.
7. வீட்டில் நடக்கவே இயலாத நிலையில் இருக்கும் முதியோர் இருப்பார்கள். அவர்களுக்கு முழங்கால் முட்டிப்பகுதியில் காலை அவ்வப்போது மடக்கி நீட்டும் பிசியோதெரபி செய்ய வேண்டும். தையல் மிசினை அமுக்குவது போன்ற எக்சர்சைஸ் செய்ய வேண்டும்.
8. முதியவர்கள் / கர்ப்பிணிகள் / வேரிகோஸ் வெய்ன் பிரச்சனை இருப்பவர்கள் கால்களில் கம்ப்ரசன் ஸ்டாக்கிங்க்ஸ் அணிந்து கொண்டு பயணம் செய்யலாம்
9. கட்டாயம் தொலை தூரப்பயணத்தின் போது தண்ணீர் போதுமான அளவு அருந்த மறக்கக்கூடாது. காரணம் நீரிழப்பு ரத்தத்தை எளிதில் உறைய வைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் குடித்தால் யூரின் போக வேண்டி வரும் என்று முக்கியமாக பெண்கள் சரியாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அவர்களுக்கானது இந்த எச்சரிக்கை.
10. எந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும் சரி.. மருத்துவர் எழுந்து நடக்க சொல்லிவிட்டால் நடக்க வேண்டும். எத்தனை வலித்தாலும் பரவாயில்லை. எழுந்து நடக்க வேண்டும் எழுந்து நடக்கும் வரை தான் நாம் வாழ்கிறோம்.
நடை நின்று விட்டால்
ஒன்று நாம் அதை நெருங்கி விட்டோம்
அல்லது
அது நம்மை நெருங்கி விட்டது
என்று அர்த்தம்
பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி!
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 16 (இறுதி)
பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்புகளை ஆரம்பிப்பதை ஏதோ மூன்றாண்டு ஆரம்பக் கல்வி முறை சரிப்பட்டு வராததால், நான்காண்டு ஆரம்பக் கல்விக்குத் திரும்பி வருவதாகக் கருதக் கூடாது. இதை மூன்றாண்டு ஆரம்பக் கல்வியாகவும் (ஒவ்வொரு வகுப்பிலும் வயது வரம்பு ஓராண்டு குறைக்கப்பட்டுள்ளது) கருதக்கூடாது. உண்மையில் பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பு கல்வி முறையில் குணாம்ச ரீதியான மாற்றத்திற்கு வழிகோல வேண்டும். இது பிந்தைய வகுப்புகளுடன் ஒரே தொடர்ச்சியாக விளங்க வேண்டும்; அதே சமயம் குழந்தைகளின் விசேஷ வயதின் காரணமாக விசேஷ கடமைகளை ஏற்க வேண்டும், அதாவது மாணவன் எனும் சிக்கலான வேலைக்கு குழந்தையை மனவியல், தார்மீக, சமூக ரீதியாக, மூளை வளர்ச்சி ரீதியாக தயார்படுத்த வேண்டும். இந்த அம்சங்களும் ஆறு வயதுக் குழந்தைகளுடனான எனது பணியின் அடிப்படையாகத் திகழ்ந்தன.
பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பை அமல்படுத்துவதால் ஆரம்ப வகுப்புகளில் ஐந்து நாள் கல்வி வாரத்தை நிறைவேற்றுவது சாத்தியமாகிறது. ஐந்து நாள் கல்வி என்றால் வெறுமனே பாட நேரத்தைக் குறைக்க வேண்டுமென்றோ, இவற்றை ஐந்து நாட்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்க வேண்டுமென்றோ பொருளாகாது. ஐந்து நாள் கல்வி வாரத்தில் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரும் தரம் உயர வேண்டும். ஐந்து நாள் வாரம் என்பது கல்வி – வளர்ப்பு போக்கு, பாடத்திட்டங்கள், பாடநூல்கள், முறையியல் அம்சங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டின் விளைவாக இருக்க வேண்டும். பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் ஒருவேளை ஐந்து நாள் வாரத்தை அமல்படுத்துவதால் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கலாம்.
ஆனால் கல்வி – வளர்ப்புப் போக்கை குணாம்ச ரீதியாக மேம்படுத்தாமல் இருந்தால், பிந்தைய வகுப்புகளில் ஆசிரியருக்கு நேரம் பற்றாக்குறையாக இருக்கையில் குழந்தைகளின் தயாரிப்பு மட்டத்தை உரிய அளவில் வைப்பது கடினமானதாக இருக்கும். அதே சமயம் குடும்ப வளர்ப்பின் பயன் தன்மையை எப்படி மேம்படுத்துவது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். பெற்றோர்களுக்கு சில அடிப்படை விஷயங்களை சொல்லித் தருவதோடு கூட மேல் வகுப்பு மாணவர்கள் மற்றும் விசேஷ தொழில் நுட்பக் கல்லூரி, உயர் கல்விக்கூட மாணவர்கள் ஆகியோருக்குக் குடும்ப வளர்ப்பு அடிப்படைகளைச் சொல்லித் தருவது சிறந்ததாய் இருக்கும். இந்த ஞானத்திற்குச் சமுதாய முக்கியத்துவம் உண்டு. இதை நாடு தழுவிய அளவில் இளைஞர்களுக்கு ஊட்ட வேண்டும். இரண்டு நாள் விடுமுறையின் போது குழந்தைகளின் ஓய்வு, உழைப்பு, பொழுது போக்கிற்குச் சமுதாய ரீதியாக ஏற்பாடு செய்யும் பிரச்சினையும் தோன்றுகிறது.
பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் கல்வி போதனை எவ்வளவு வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பது வகுப்பறையில் உள்ள ஆசன இருக்கைகளைப் பெரிதும் பொறுத்துள்ளது. மற்ற சாதனங்கள், கருவிகளோடு சேர்ந்து இவையும் – கல்வி முறையின் இயல்பான அங்கமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் பன்முக வளர்ச்சிக்கு ஆசிரியருக்கு உதவ வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆரம்ப வகுப்புகளில் விசேஷ ஆசன இருக்கைகள் பிரச்சினை ஸ்தல விஷயமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆரம்ப வகுப்பிலும் (பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பு உட்பட) ஒரு சில நவீன, போதனை முறைக்கு ஏற்ற வசதியான கரும்பலகைகள், ஆசிரியருக்கு வசதியான மேசை, குழந்தைகளுக்குத் தனித்தனி சிறு அலமாரிகள் முதலியன தேவை.
டெஸ்க்குகள்? பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை நான்காண்டுகளுக்கு குழந்தை ஒரே டெஸ்கில் – அதுவும் முதலில் இதன் கால்கள் ஆடும், பின் இதன் மீது சாய வேண்டும் – உட்கார வேண்டும் என்பதை சகித்துக் கொள்ள இயலுமா? குழந்தைகளின் உயரத்திற்கேற்ப டெஸ்குகளைப் போடவும், வேறு வேலைகளின் போது இவற்றை மடித்து வைத்து இடமேற்படுத்தவும் என்னால் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? இந்த டெஸ்குகளை மேடைகளை அமைக்க, வீடுகள், கப்பல்களைக் கட்டி விளையாட குழந்தைகளால் பயன்படுத்த முடியும் என்றால் பள்ளி வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானதாக, உணர்ச்சிகரமானதாக மாறும்?
பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் எப்படி செயல்பட வேண்டும் என்பது சம்பந்தமாக என் அனுபவம் பத்து கேள்விகளை என் முன் வைத்துள்ளது. இவற்றிற்கு என்னால் உறுதியாக ”வேண்டாம்” (“முடியாது”, “இல்லை”) என்றோ ”ஆம்” (”முடியும்”, “அவசியம்”) என்றோ பதில் சொல்ல முடியும்.
பின்வரும் கேள்விகளுக்கு நான் எதிர்மறையில் பதில் அளிப்பேன்:
முதல் வகுப்புப் பணியின் அனுபவத்தை மாற்றமின்றி அப்படியே பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் பயன்படுத்தலாமா? – கூடாது.
ஆசிரியரின் கட்டளைகள், ஏவல்களை உடனடியாக நிறைவேற்றுமாறு குழந்தைகளைக் கட்டாயப்படுத்தலாமா? – கூடாது.
கட்டாய வீட்டுப் பாடங்களைக் குழந்தைகளுக்குத் தரலாமா? – கூடாது.
குழந்தைகளுக்கு மதிப்பெண்களைப் போடலாமா? – கூடாது.
வகுப்பில் யார் மற்றவரை விட நன்றாகப் படிக்கின்றனர் என்று சொல்லலாமா? – கூடாது.
வகுப்பில் குழந்தைகள் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார வேண்டும் என்று கோரலாமா? – கூடாது.
குழந்தை வகுப்புக்குக் கொண்டு வந்த விளையாட்டு சாமானைப் பிடுங்கலாமா? – கூடாது.
குழந்தையைப் பெயில் செய்யலாமா? – கூடாது.
சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டுமென குழந்தைகளிடம் சொல்லலாமா? – கூடாது.
ஆறு வயதாக 2-3 மாதங்கள் உள்ள குழந்தைகளை பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாமா? – கூடாது.
பின்வரும் கேள்விகளுக்கு ‘ஆம்” என்று பதில் தருவேன்:
பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பிற்கு விசேஷ முறை வேண்டுமா?– ஆம்.
நர்சரிப் பள்ளியில் மூத்த வயது குழந்தை வளர்ப்புப் பணியில் கிடைத்த அனுபவத்தை பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் பயன்படுத்தலாமா? – ஆம்.
பாடங்களைப் படிப்பதில் குழந்தைகள் ஆசிரியரை விஞ்ச அவர்களுக்கு ஊக்கம் தரலாமா?– ஆம்.
குழந்தைகள் கண்டுபிடித்து, திருத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர் வேண்டுமென்றே தப்பு செய்யலாமா? – ஆம்.
குழந்தைகளுடனான பணியில் ஆசிரியர் கலைத் திறமையை வெளிப்படுத்த வேண்டுமா? – ஆம்.
குழந்தைகள் சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு விதமான வேலைகளைத் தரலாமா? – ஆம்.
குழந்தைகளின் சுய வேலையை அதிகப்படுத்த வேண்டுமா? – ஆம்.
குழந்தைகள் பாடங்களை மதிப்பிட வேண்டுமா? – ஆம்.
குழந்தைகளைப் பற்றிய சான்றிதழ்களைப் பெற்றோர்களுக்கு வழங்க வேண்டுமா, குழந்தைகளின் வேலைகள் அடங்கிய பாக்கெட்டுகளைத் தயாரிக்க வேண்டுமா? – ஆம்.
பெற்றோர்களுக்கான வெளிப்படையான பாடங்களை நடத்த வேண்டுமா? – ஆம்.
இந்த “ஆமாம்”, ‘கூடாது” எனும் பதில்களையும் குழந்தைகளுடனான வேலையின் போது தோன்றக் கூடிய இது போன்ற பிறவற்றையும் எனது கருத்துப்படி மிக முக்கியமான, ஒரே சரியான ஆசிரியரியல் நிலையிலிருந்து பெறுகிறேன். இதையே இனியும் தொடர்ந்து பின்பற்றுவேன்:
குழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும், இவர்களை இப்படி நேசிக்க, இந்த நேசத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டுமென இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளி நாளையும் ஒவ்வொரு பாடவேளையையும் ஆசிரியர் குழந்தைகளுக்கான பரிசாக யோசித்துச் செயல்பட வேண்டும். குழந்தை, ஆசிரியருடன் ஒவ்வொரு முறை கலந்து பழகும் போதும் இது மகிழ்ச்சியையும் எதிர்கால நம்பிக்கையையும் அவன் மனதில் ஊட்டவேண்டும்.
இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த மோடி அமித்ஷா கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் நாடெங்கிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்லி ஜாமியா மிலியா பல்கலை தொடங்கி சென்னை பல்கலை வரையில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
டெல்லி ஜாமியா மிலியா, JNU, அலிகார் பல்கலையில் போராடிய மாணவர்கள் மீது மிருகத்தனமாக தாக்குதலை போலீசு கட்டவிழ்த்துவிட்டிருந்த நிலையிலும் இப்போராட்டங்கள் தொடர்கின்றன என்பது இங்கே கவனிக்கத்தக்கது. சென்னை பல்கலையில் இரண்டு நாட்களுக்கு மேலாக உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாக பல்கலைக்கு ஜன-2 வரை விடுமுறை அறிவித்திருப்பதோடு, விடுதி மாணவர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.
சமூக அக்கறையின்றி வாட்சப் – பேஸ்புக்கில் மூழ்கி கிடப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறது, மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் தன்னெழுச்சியான போராட்டங்கள்.
கடலூர், பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக தங்களது கல்லூரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
முதல்நாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் :
”ஜாமியா மிலியா, JNU, அலிகார் பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய போலீஸ், ராணுவத்தை கண்டித்தும்; ஈழத்தமிழர்களை, இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும்; பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக முன்வைத்துள்ளனர்.
♦ ♦ ♦
”குடியுரிமை திருத்த சட்டத்தை நிராகரிப்போம்” என்ற அறைகூவல் விடுத்து டிச-19 அன்று முதல் கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மற்றும் கோவை பகுதிகள்.
♦ ♦ ♦
மோடி அரசின் CAB-ஐ எதிர்த்து விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்!
இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் தேசிய குடியுரிமை சட்டம் கொண்டுவந்த மோடி அமித்ஷா அரசுக்கு எதிராக போராடிய டெல்லி ஜாமியா மிலியா, JNU, அலிகார் பல்கலைக்கழகம் என நாடு முழுக்க போராடக்கூடிய மாணவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய போலீஸ், ராணுவத்தை கண்டித்தும்.
ஈழத்தமிழர்களை, இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் இந்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். எனவும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று (19.12.2019) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
CAB சட்டத்தை மோடி அரசு வாபஸ் பெறாவிட்டால் போராட்டங்களை மாணவர்கள் நாங்கள் தொடர்ந்து நடத்துவோம் என, மோடி எடப்பாடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
1 of 3
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
♦ ♦ ♦
திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் 19.12.19 தேதி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் !
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், ஜாமியா, அலிகார் மற்றும் ஜே.என்.யூ பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும். மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம் : 91593 51158.
பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா!
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2019
1. குடியுரிமைச் சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல்! இந்திய அரசு என்பது இந்து அரசுதான் என்பதை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சட்டபூர்வமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது, மோடி அரசு. 2. பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா!
பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் அளிக்கப்பட்டிருப்பதைப் போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது. 3. அயோத்தி, இராம ஜென்மபூமி: வரலாறும் புனைசுருட்டும்
அயோத்தியில் இராமர் வழிபாடு அனாதிகாலந்தொட்டே இருந்து வரவில்லை. 12ஆம் நூற்றாண்டில்தான் அவ்வழிபாடு அயோத்தியில் வேர்விடத் தொடங்கியது. 4. ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை!
பாபர் மசூதிக்குக் கீழேதான் இராமன் பிறந்தான் என்பது ஆர்.எஸ்.எஸ்., தனது அரசியல் நோக்கங்களுக்காக இந்துக்களிடம் திணித்த விஷக் கருத்தேயொழிய, அது மத நம்பிக்கை கிடையாது. 5. பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம். 6. பாபர் மசூதி ராம ஜென்மபூமி: பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்! பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்த டி.என். ஜா – வின் நேர்காணல். 7. மசூதிக்கு அடியில் கோயில்: மூலக்கதை ஆர்.எஸ்.எஸ். திரைக்கதை தொல்லியல் துறை! 2003 தொல்லியல் துறை அளித்த இந்த அறிக்கையும், அதன் அடிப்படையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் ஏன் தவறானவை என்று சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பில் ஆய்வை மேற்கொண்ட சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகிய இரு தொல்லியல் ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். 8. பாபர் மசூதி இடிப்பு வழக்கு: மறுக்கப்படும் நீதி!
ஒன்றல்ல, இரண்டல்ல; இருபத்தேழு ஆண்டுகளாக பாபர் மசூதி இடிப்பு வழக்கு
நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்படுவதை நீதி மறுக்கப்படுவதாகக் கூற முடியாதா? 9. சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்
சட்ட வரம்புகளை மீறியும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் சபரிமலைத் தீர்ப்பை முடக்கிப் போட்டுவிட்டது, உச்ச நீதிமன்றம். 10. அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா!
அதானி குழுமத்திற்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்காக பழவேற்காடு பகுதி அழிக்கப்பட்டால், அது சென்னையின் அழிவைத் துரிதப்படுத்தும். 11. ஒப்பந்த சாகுபடிச் சட்டம்: விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி!
விளைபொருட்களுக்கு உத்தரவாதமான விலையை இச்சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவதாகக் கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வீழ்த்துகிறது, தமிழக அரசு. 12. பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு: அமெரிக்காவின் நாட்டாமை!
அதிபர் ஈவா மொரேலஸ் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கொள்ளைக்கு முட்டுக்கட்டை போட்டதாலேயே, அவரது ஆட்சியைச் சதிசெய்து கவிழ்த்துவிட்டது, அமெரிக்கா. 13. சிலியின் வசந்தம்! மக்கள் விரோத அரசைப் பணிய வைக்க எப்படிப் போராட வேண்டும், எதை நோக்கிப் போராட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது சிலி மக்களின் எழுச்சி. 14. பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : முடிவல்ல, தொடக்கம்!
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024