Sunday, August 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 279

சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய  ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை

சென்னை கோயம்பேடு, பேருந்து நிலையம், பூ, பழம், காய்கறி மார்கெட்டுக்கு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் சரக்குப் பெட்டகமும் கூட. சிறு குறுந்தொழில்களின் நாடித்துடிப்பு சீராக இயங்க மக்களுக்குத் தேவையான உயிர்காக்கும் பண்டங்களை தன்னகத்தே கொண்டதுதான் கோயம்பேடு.

இங்கு இந்தியாவின் எல்லா எல்லைகளிலிருந்தும் வந்து குவியும் சரக்கு லாரிகள். இந்த லாரிகள் கொண்டுவரும் சரக்குகளை வாங்கி, மொத்த வியாபாரிகளிடம் ஒப்படைக்கும் டிரான்ஸ்போர்ட் அலுவலகங்கள், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் ஏதோ விபத்தில் உயிர் தப்பியவர்கள் போல் மிரட்சியுடன் நம்முடன் உரையாடினார்கள்.

***

நவீன்குமார், மேலாளர், டெக்சிட்டீஸ் சர்வீஸ்

பகலில் டெக்சிட்டீஸ் மேனேஜர், இரவில் இட்லி கடை ஓனர். ரெண்டு வேல பார்க்குறதுனாலதான், ஒடம்பு முடியாத அம்மா அப்பாவ காப்பாத்த முடியுது.

இங்கு வெளி மாநிலங்களிலிருந்து லாரிகளில் வரும் சரக்குகளை தமிழ்நாட்டின் வெளி, உள் நகரங்களுக்கும் மாவட்டத் தலைநகரங்களுக்கும் பிரித்தனுப்பும் வேலைகளை நாங்கள் செய்கிறோம்.

அழுகும் பொருட்கள், அழுகா பொருட்கள் எனத் தரம் பிரிக்கப்படும் இந்த வணிகம் முழுவதுமாக பல மாதங்கள் கடனிலும் நம்பிக்கையிலும்தான் நடந்து கொண்டிருக்கிறது. இங்கு நம்பிக்கைதான் சொத்து. நட்டம் ஏற்பட்டால்கூட எழுந்து விடுவார்கள். ஆனால், வியாபாரத்தில் நம்பிக்கையிழந்தால் மொத்தமாக இடிந்து போய்விடுவார்கள்.

ஜி.எஸ்.டி, டிமானிஸ்டேசன் இரண்டும் சரக்கு வர்த்தகத்தில் பெரும் இடிபோல் இறங்கி விட்டது. அதிலிருந்து மீளவே முடியவில்லை. அதனால் சரக்கு ஆங்காங்கே தேங்கி சுழற்சி இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. 10 லாரி சரக்கு வரும் இடத்தில் 3 லாரிகள் கூட வருவதில்லை. கடன் வர்த்தகமே செய்ய முடியாமல் போய்விட்டது. அப்படி கடன் கொடுத்தாலும் திரும்பி வருவதில்லை. நெருக்கடி முற்றி வியாபாரத்தில் சந்தேகம், நம்பிக்கையின்மை பெருகி விட்டது. பணச் சுழற்சி இல்லை என்கிறார்கள் எங்கள் முதலாளிகள்.

தரம் பிரித்து பல இடங்களுக்கு அனுப்ப காத்திருக்கும் சரக்கு பொருட்கள்.

சரக்கு இருப்பு வைக்கும் குடோன்களுக்கு வாடகை கொடுக்க முடியாமல் இப்போது மூடிக் கொண்டிருக்கிறார்கள். சொல்வதற்கே சங்கடமாக இருக்கிறது. டிரான்ஸ்போர்ட் சர்வீசில் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் ஒழுங்காகக்கூட கொடுப்பதில்லை. 4 மாதங்களுக்குப் பிறகு, 2 மாதங்களுக்கான சம்பளத்தைத் தருகிறார்கள். நெருக்கிக் கேட்டால், “வேறு வழியில்லை, வேலையிலிருந்து நின்று விடு” என்கிறார்கள்.

இந்த வியாபாரத்தில் இப்போது புதுத் தொல்லை வேறு. ஃபாஸ்டேக் அட்டையை நாங்கள் ஜி.எஸ்.டி கொண்டு வந்ததிலிருந்தே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படியும் சரக்கு உரிய நேரத்தில் போய்ச் சேர்வதில்லை. ஃபாஸ்டேக் அட்டையால் பயணத்தில் எந்த முன்னேற்றமும்  இல்லை. காரணம் லாரியில் இந்த அட்டையை ஒட்டி அனுப்பினால், அதை சென்சார் செய்ய டோல்கேட்டில் கேமராக்கள் இல்லை; பெயருக்கு 1, 2 டிராக்கில் சென்சார் கேமரா பொருத்திவிட்டு மற்றவற்றில் பணம் கையால் செலுத்தி ரசீது தருகிறார்கள்.

படிக்க:
♦ அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை
♦ லாரி தொழிலை அழிக்கும் மோடி அரசு – நேர்காணல்

இதனால், எந்த டிராக்கில் கேமரா இருக்கிறது எனத் தெரியாமல் டிரைவர்கள் தடுமாறுகிறார்கள். கடைசியில் ஹேன்ட் டிவைஸ் சென்சாரை எடுத்துக் கொண்டு இங்குமங்கும் ஓடி ஒட்டியுள்ள அட்டையை ஸ்கேன் செய்கிறார்கள். அதன் பிறகே லாரியை அனுப்புகிறார்கள். அந்த ஹேன்ட் டிவைஸ் கூட ஒன்றிரண்டுதான் வைத்துள்ளார்கள்; போதுமானதாக இல்லை. டோல்கேட் ஊழியர்கள், ஒரு ஹேன்ட் டிவைசை வைத்துக்கொண்டு இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் ஓடும் கொடுமையும் நடக்கிறது.

சலிப்படைந்த டிரைவர்கள் இதைத் தட்டிக் கேட்டால், ஊழியர்கள் சண்டைக்கு வருகிறார்கள்; போலீசை ஏவி மிரட்டுகிறார்கள். சமயத்தில்  அடிக்கவும் செய்கிறார்கள்.

சரக்கு வாகனங்களைப் பாதுகாக்க, பராமரிக்க ஏராளமான நடத்தை விதிகளை சுங்கச் சாவடிகள் பின்பற்ற வேண்டும். அதில் ஒரு சதவீதம் கூட அவர்கள் செய்வதில்லை. நெடுஞ்சாலைகளில் பழுதுபட்ட லாரிகளை நிறுத்த டிரைவர்கள் ஓய்வெடுக்க, தங்க வசதிகள் செய்து தரும் பொறுப்பு சுங்கச் சாவடிகளுக்கு உண்டு என்று ஏட்டில் மட்டுமே உள்ளது.

இதில் வரும் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் முதலாளிகள் சலிப்படைந்து சரக்கு வாகனத்தையே குறைத்து வருகிறார்கள். இதனால் சரக்குகளை ஒழுங்காக விநியோகிக்காமல் அந்தந்த இடத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. சரக்கு விற்று முதல் கைக்கு வராமல் தொழிலே முடங்கிப் போய்கிடக்கிறது. தற்காலிகமாக பேருந்துகளில் முடிந்தளவு சரக்குகளை அனுப்பும் மாற்று வழிகளை பின்பற்றுகிறார்கள்.

வாரநாட்களில் சரக்கு பொருட்களை நம்பி தான் பல ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன. (சரக்குகள் பதிவு செய்யும் அலுவலகங்கள்.)

தனியார் ஆம்னி பஸ்களில் வாரத்துக்கு வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் மட்டுமே சீட்டுகள் ஃபுல் ஆகும். மற்ற நாட்களில் இம்மாதிரி சரக்குகளை ஏற்றித்தான் டீசல் செலவுகளைச் சமாளிக்கிறார்கள். இதற்காகவே இப்போது ஆம்னி பஸ் முதலாளிகள் வால்வா வண்டிகளைக் குறைத்துவிட்டு சீட் வண்டிகளை அதிகமாக்குகிறார்கள். பயணிகள் இருக்கைகளுக்கு இணையாக சரக்கு வைப்பதற்கு கீழே இடம் ஒதுக்கி பாடி கட்டுகிறார்கள் என்றார்.

அவரை இடைமறித்த நாம், “ஆம்னி பஸ் முதலாளிகளின் வருமானம் குறைந்து விட்டதாகக் கூறுவதை ஏற்க முடியவில்லை. ஒவ்வொரு புது அரசாங்கத்திடம் முதலில் கப்பம் ஒப்படைப்பது இந்த ஆம்னி பஸ் முதலாளிகள்தான். குறுக்கு வழியில் ஆயிரம் கோடி சம்பாதிக்கத்தானே இப்படி செய்கிறார்கள்?” என்றோம்.

உடனே அவர், “எல்லா முதலாளிகளும் அவ்வாறு வசதியானவர்கள் இல்லை. 10 சதவீத முதலாளிகள்தான் இந்த கப்பம் கட்டும் வேலையைச் செய்கிறார்கள். அவர்கள் வேறொரு தொழிலை செய்துகொண்டு, கூடுதலாக பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, எஸ்.ஆர்.எம், பர்வீன், கே.பி.என்…” என்றார்.

படிக்க:
♦ மோடியின் ஜி.எஸ்.டி போனஸ் – முடங்கியது லாரி – உயர்கிறது விலைவாசி
♦ நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்

நாம் அவரிடம் விடைபெறும்போது அவர் கூறியது நம்மை நெகிழ வைத்தது.

பி.இ படித்துவிட்டு, எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அழுக்குமூட்டைகளுக்கு மத்தியில் இருக்கிறீர்களே? என்றதற்கு…

இந்த வேலையை நான் விரும்பித்தான் செய்கிறேன். சொல்லப்போனா இது எனக்கு சவுகரியமாகவும் இருக்கு. என் அம்மா, அப்பா இருவரும் சுகர் பேசன்ட். அவர்களால் வேலை செய்ய முடியாது. அவர்களுக்கு மருத்துவமும் பார்க்க வேண்டும். அதனால், இந்த வேலை செய்துகொண்டே இரவில் தள்ளுவண்டி டிபன் கடை வியாபாரமும் செய்கிறேன். சொந்தக் காலில் நிற்பதால் சந்தோசமாக இருக்கிறேன் என்று சிரித்தார்.

***

ஆனந்த், கனரக வாகன ஓட்டுநர்

தொழில் வியாபாரம் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் டிரைவர் தொழில். இதுக்கு ஃபாரின்ல நல்ல மதிப்பு இருக்குறதா சொல்றாங்க. ஆனா, இங்கே யாரும் எங்கள மதிக்கிறதில்லை. டிராபிக்குல வண்டி ஓட்டுறதவிட டிராபிக் போலீசை சமாளிக்கிறதுதான் எங்களுக்கு பெரும் கஷ்டமா இருக்கு. நாங்க அடக்கமா பேசுனாகூட அசிங்க அசிங்கமாக திட்டி அனுப்புவாங்க.

இந்த லட்சணத்துல ஃபாஸ்டேக்குன்னு புது அட்டை வேற வண்டியில ஒட்டிட்டாணுங்க. அந்த அட்டையக்கூட ஒழுங்கா சென்சார் பண்ண முடியாம எங்கள டார்ச்சர் பண்றாங்க. கேமரா எங்கே இருக்குன்னு பார்த்து இன்ஞ் இன்ஞ்சா வண்டிய நகர்த்தணுமாம். பொம்பளங்க நெத்தியில பொட்டு வைக்கிற மாதிரி, கேமரா முன்னாடி வண்டிய ஒட்ட வைக்கவா முடியும்?

இனிமே, நாங்க பூலோகத்தில் இல்ல, பரலோகத்தில்தான் வண்டி ஓட்ட முடியும் என்றார் விரக்தியுடன்.

சரக்குகள் பதிவு செய்யும் அலுவலகங்கள்.

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

தெவிட்டத் தெவிட்ட நகலெழுதித் தீர்க்கும் எழுத்தன் !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 03

க்காக்கிய் தன் உடையைப் பற்றி அவன் சிந்தித்ததே கிடையாது. அலுவலக உடுப்பு பச்சை வண்ணம் போய் ஏதோ செம்மை படிந்த மாவு நிறமாயிருந்தது. கழுத்துப் பட்டை மிகக் குட்டையாக இருந்தபடியால் அவன் கழுத்து உண்மையில் நீளமாய் இல்லாவிடினும் காலருக்கு வெளியே துருத்திக் கொண்டு இருப்பது போல் தோன்றியது.

அவனுடைய உடுப்பில் வைக்கோல் துரும்போ, நூலோ எதுவோ ஒன்று எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும். தெருவில் நடக்கும்போது ஜன்னல் வழியே குப்பை வெளியே கொட்டப்படும் சமயம் பார்த்து அதற்கு அடியாக செல்லும் தனித் திறமை அவனிடம் இருந்தததாகையால் முலாம் பழத் தோல்களோ, அவை போன்ற வேறு குப்பையோ எப்போதும் அவன் தொப்பியின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும். தெருவில் நாள்தோறும் என்னதான் நடக்கிறது என்று வாழ்வில் ஒரு தரமாவது அவன் கவனித்ததே கிடையாது. இந்த விஷயத்தில் அவன் தனது சகோதர எழுத்தர்களுக்கு முற்றிலும் மாறாக இருந்தான்: அவர்களோ வீதி விவகாரங்களில் நாட்டம் செலுத்துவதில் நிபுணர்கள் என்பதை யாவரும் அறிவர். எதிர் நடைபாதையில் செல்லும் எவனுடைய காற்சட்டை வடிவார் நெகிழ்ந்து விட்டது என்று கூட எதிர் நடைபாதையில் இருந்தபடியே கூர் விழிகளால் நோட்டங் கண்டு மர்மப் புன்னகை புரிபவர்கள் அல்லவா அவர்கள்!

அக்காக்கிய் எதையேனும் பார்த்தால் கூட அதில் அவன் கண்டதெல்லாம் ஒரே மாதிரியான வீச்சுடன் தான் எழுதிய கச்சிதமான வரிகளை மட்டுமே; எங்கிருந்தோ வந்த குதிரையின் முகம் அவன் தோள் மீது படிந்து அவன் கன்னத்தின் மேல் நாசித்துவாரங்கள் வழியே புயல் வீசினால் தான் அவனுக்கு உணர்ச்சி வரும் – தான் இருப்பது வரியின் நடுவிலல்ல, தெருவின் மத்தியில் என்று.

வீடு திரும்பியதுமே உணவு மேசையருகே உட்கார்ந்து முட்டைக்கோஸ் சூப்பை மடக்குமடக்கென்று பருகிவிட்டு, மாட்டிறைச்சித் துண்டை வெங்காயத்துடன், அது எப்படி ருசிக்கிறது என்று கவனிக்காமலே, அந்த வேளையில் ஆண்டவன் அனுப்பிய ஈக்கள், மற்றவை எல்லாவற்றோடும் சேர்த்து மென்று விழுங்கிவிடுவான். வயிறு நிறைந்தாற் போலப் பட்டதுமே எழுந்து, மைக்கூட்டை எடுத்துவந்து, அலுவலகத்திலிருந்து தான் வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கும் ஆவணங்களை நகல் எடுக்கத் தொடங்குவான். நகலெடுப்பதற்குப் பத்திரங்கள் எதுவுமில்லாமல் தீர்ந்து போய்விட்டால், தனது சொந்த இன்பத்துக்காக, தன்னிடம் வைத்துக்கொள்ளும் பொருட்டு அதிகப்படி நகல் ஒன்று எழுதிக்கொள்வான்; நடை அழகினால் இல்லாவிடினும் யாரேனும் புதிய, அல்லது முக்கியமான நபருக்கு முகவரி எழுதப்பட்டிருக்கும் காரணத்தால் பத்திரம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலோ, கேட்கவே வேண்டியதில்லை.

பீட்டர்ஸ்பர்க் நகரின் சாம்பல் நிற வானம் ஒரேயடியாகக் கருண்டு போயிருக்கும்; அரசாங்க அலுவலர்கள் அனைவரும் தத்தம் சம்பளத்துக்கும் சுவைக்கும் எற்ப வயிறார உண்டு தீர்ந்திருப்பார்கள்; துறையில் பேனாக்களை ஓட்டி முடிந்து, ஓட்ட சாட்டங்களெல்லாம் ஓய்ந்து, தவிர்க்க முடியாத சொந்தக்காரியங்களும் பிறரது அலுவல்களும், களைப்பறியாத மனிதன் தானாக விரும்பித் தேவைக்கும் மேலாகவே தன்மேல் சுமத்திக்கொள்ளும் வேறு பலவும் முடிவடைந்தபின் எல்லாரும் இளைப்பாறியிருப்பார்கள்; எல்லா எழுத்தர்களும் மீதியிருக்கும் ஓய்வு நேரத்தை முடிந்தவரை குதூகலமாகக் கழிக்க விரைந்து கொண்டிருப்பார்கள் – அதிக உற்சாகமுள்ள ஒருவன் நாடகமன்றம் செல்வான், மற்றொருவன் பெண்களின் தொப்பிகளைக் கண்டு களிப்பதற்காக வீதியில் உலாவப் போவான், வேறொருவன் சிறு எழுத்தனது மண்டலத்தின் விண்மீனாகச் சுடரும் அழகிய கன்னிக்குப் பாராட்டுரை பகர்வதில் பொழுதை வீணடிப்பதற்காக விருந்துக் கொண்டாட்டத்திற்கு செல்வான், நான்காமவன் (பத்துக்கு ஒன்பது பேர் செய்வது போலவே) மூன்றாம் மாடியிலோ நான்காம் மாடியிலோ இரண்டு அறைகளும் சிறு நடை அல்லது சமையலறையும் கொண்ட – சாப்பிடாமலிருப்பது, நகர்ப்புறப் பயணங்களை நிறுத்தி வைப்பது போன்ற எத்தனையோ தியாகங்களை விலையாகச் செலுத்திப் பெற்ற விளக்கு அல்லது வேறு பொருள்களால் நாகரிகப் பாவனையில் அலங்கரிக்கப்பட்ட – வீட்டில் வசிக்கும் சக எழுத்தன் எவனையாவது காணச் செல்வான்.

சுருங்கக் கூறின் எல்லா எழுத்தர்களும் தங்கள் நண்பர்களின் சிறு சிறு வீடுகளில் பரவி, கிளாசுகளில் தேநீரை உறிஞ்சுவதும், ஒரு காசு விலையுள்ள ரொட்டிகளைக் கறவுவதும், நீண்ட சுங்கான்களிலிருந்து புகையை இழுப்பதுமாக உற்சாகம் கரைபுரளச் சீட்டாடிக்கொண்டும், சீட்டுக்களைக் கலைத்துப் போடும் சமயத்தில் உயர் சமூகத்தினரைப் பற்றி அவதூறாக அரட்டையடிப்பதும் (ருஷ்யனால் தான் உயர் சமூகத்தை விட்டுவிட்டு ஒரு கணங்கூட இருக்க முடியாதே), பேசுவதற்கு வேறொன்றுமில்லாவிட்டால், கோட்டைத் தலைவனிடம் யாரோ வந்து பால்கோனெட்டி என்னும் சிற்பி அமைத்த முதல் பீட்டர் சக்கரவர்த்தியின் நினைவுச் சிலையிலுள்ள குதிரையின் வால் செதுக்கப்பட்டுவிட்டது என்று சொன்ன பழைய கதையைப் பன்னியுரைப்பதுமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டுமிருப்பார்கள். ஒரு வார்த்தையில் சொன்னால் எல்லாரும் உல்லாசமாயிருக்க முயன்று கொண்டிருப்பார்கள்; ஆனால் அந்த வேளையில் கூட அக்காக்கிய் எவ்வித இன்பத்தையும் நாடுவது கிடையாது. மாலைக் களியாட்டம் எதிலும் அவனைக் கண்டதாக எவனும் சொல்ல முடியாது.

தெவிட்டத் தெவிட்ட நகலெழுதித் தீர்ந்தபின்பு, அவன் படுக்கையில் படுத்து, மறுநாள் வரவிருக்கும் இன்பத்தைப் பற்றிய நினைப்பாலேயே முகம் முறுவலால் மலர, நாளை ஆண்டவன் நகலெழுதுவதற்கு எதை அனுப்புவானோ எனச் சிந்தித்தபடியே உறங்கிப் போவான். ஆண்டுக்கு நானூறு ரூபிள் சம்பளத்தில் தனது விதியில் திருப்தியுடன் இருக்க முடிந்த இம்மனிதனின் வாழ்க்கை இவ்வாறு அமைதியாகக் கழிந்தது; பட்டம்பெற்ற ஆலோசகர்கள் மட்டுமல்ல, அந்தரங்க, செயல்முறை, ராஜசபை முதலிய பல்வேறு வகை ஆலோசகர்கள் வாழ்விலும், எவருக்கும் ஆலோசனை கூறாமலும் எவரது ஆலோசனையையும் ஏற்காமலும் இருப்பவர்களின் வாழ்விலுங்கூட மொய்க்கும் பலவித விபத்துக்கள் நேராமலிருந்தால் இந்த வாழ்க்கை கனிந்த முதுமைப் பருவம் வரை இவ்வாறே கழிந்திருக்கலாம்.

பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆண்டுக்கு நானூறு ரூபிள்களோ, ஏறக்குறைய அதே தொகையோ சம்பளம் வாங்குபவர்கள் எல்லாருக்கும் பெரிய எதிரி ஒன்று உண்டு. அது வேறு எதுவுமன்று, நமது வடக்கத்தியக் கூதல் தான் – அது உடம்புக்கு நல்லது என்று சிலர் சொன்ன போதிலும். காலை ஒன்பது மணிக்கு, அலுவலகம் செல்லும் அரசாங்க ஊழியர்களால் தெருக்கள் நிறைந்திருக்கும் வேளை பார்த்து அது விதி விலக்கின்றி எல்லா மூக்குகளையும் வலிமையாகச் சுரீர் சுரீர் என்று நிமிட்டுகிற நிமிட்டில் அப்பாவி எழுத்தர்கள் மூக்குகளை எங்கே வைத்துக்கொள்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். மிக உயர் பதவி வகிப்பவர்களுக்குக் கூடக் கடுங்குளிர் காரணமாக நெற்றிப் பொட்டு விண்விண்ணென்று தெறித்து, கண்களில் நீர் நிறைந்து வழியும் அந்நேரத்தில் பாவம், பட்டம்பெற்ற ஆலோசகர்கள் சில சமயம் முற்றிலும் தற்காப்பற்றவர்கள் ஆகிவிடுவார்கள். மெல்லிய, நைந்த மேல்கோட்டுகளுடன் முடிந்த வரை வேகமாக ஓடி, ஐந்தாறு தெருக்களைக் கடந்து அலுவலகம் சேர்ந்ததும், வழியிலே உறைந்து போன வேலைத் திறமையும் இயற்கைத் திறன்களும் மீண்டும் குளிர் நீங்கிக் கதகதப்படையும் வரை தலைவாயிலில் கால்களைத் தொப்புத் தொப்பென்று அடித்துச் சூடேற்றிக் கொள்வது தான் அவர்களைக் காக்கும் ஒரேவழி.

படிக்க:
பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !
இந்திய ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மன் மாணவரின் கல்வி முடக்கம் !

வீட்டிலிருந்து அலுவலகம் வரையுள்ள சட்டபூர்வமான தூரத்தை எவ்வளவுதான் விரைவாக ஓடிக் கடக்க முயன்றாலும், தனது முதுகுத்தண்டும் தோள்களும் கடுங்குளிரால் ஒரேயடியாக நொந்து விறைத்துப் போவதை அக்காக்கிய் சிறிது காலமாக உணரலானான். இது தன் மேல் கோட்டின் குற்றமாயிருக்கலாமோ என்ற எண்ணம் முடிவில் அவன் மனத்தில் எழுந்தது. வீட்டிலே அதை நன்றாக ஆராய்ந்து பார்த்தவன், இரண்டு மூன்று இடங்களில், அதாவது முதுகிலும் தோள் பட்டைகளிலும் அது வலை வலையாக நெய்த நார்த்துணி போல ஆகியிருந்ததைக் கண்டான்; குளிர் தாராளமாக உட்புகும் அளவுக்கு மேல் துணி நைந்திருந்தது; உள் துணியோ இழை இழையாகப் பிரிந்து போயிருந்தது.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் ! காணொளி

குடியுரிமை திருத்த சட்டம், சபரிமலை தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஆகியவற்றை பற்றி மதுரையில் கடந்த டிச-22 அன்று நடைபெற்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16ஆம் ஆண்டு விழா கூட்டத்தில்,  வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆற்றிய உரைகளின் காணொளி!

CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் !
– வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

யார் ஒருவர் பாதிக்கப்பட்டு ஒரு நாட்டுக்கு வந்தாலும் அவர்களுக்கு அகதி அந்தஸ்து தருவதும், அவர்களுக்கு குடியுரிமை தருவதும்தான் ஐநா-வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை!

இஸ்லாமியர்கள் வரக்கூடாது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ், பிஜேபி வைத்திருக்கும் காரணம் என்ன? ஈழத்தமிழர்கள் வரக்கூடாது என்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் காரணம் என்ன? மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும் ஒருவரை புறக்கணித்தால் அது தீண்டாமைதான் ! எனவே தீண்டாமை குற்றத்தின் கீழ், மோடியும் அமித்ஷாவும் இந்த சட்டத்திற்கு வாக்களித்த அனைத்து எம்.பிக்களும் கைதுசெய்யப்பட வேண்டும்.

முஸ்லீம்களை ஒழித்துக் கட்டவே தேசிய குடிமக்கள் பதிவேடு !
– ஆளூர் ஷாநவாஸ் 

மோடி அரசு அறிவித்திருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு முசுலீம்களை இந்தியாவில் இருந்து ஒழித்துக் கட்டி ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றவே ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம் என்பதை அம்பலப்படுத்துகிறார் ஆளூர் ஷாநவாஸ்..

பாருங்கள் ! பகிருங்கள் !

ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !

“பாபர் மசூதி வளாகத்தில் ராமபிரான் அவதரித்தார்” என்ற கருத்து 18 நூற்றாண்டின் மத்தியில்தான், அதாவது, 1850 பின்தான் உருவாக்கப்பட்டு, இந்துக்களிடம் பரப்பப்பட்டது.  அப்பொழுதும்கூட, மசூதியின் மையக் குவிமாடத்திற்குக் கீழேதான் ராமன் பிறந்தார்” என எந்தவொரு இந்து சாதுக்கள் பிரிவும் கூறவில்லை.

ராம ஜென்மபூமி என்ற இந்தக் கட்டுக்கதையும் மத நம்பிக்கையின்பாற்பட்டு உருவாக்கப்படவில்லை. அதற்கொரு அரசியல் காரணம் இருந்தது. 1850 பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக முதல் வட இந்திய சுதந்திரப் போர் கருக்கொண்டு உருவாகி வந்தது. காலனிய ஆட்சிக்கு எதிரான களத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக ஒன்று திரண்டு நின்றனர். இந்த ஒற்றுமையின், காலனி ஆட்சி எதிர்ப்பின் மையமாக அயோத்தியை உள்ளடக்கியிருந்த அவத் மாகாணம் திகழ்ந்தது. இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டிய உடனடித் தேவையும் நீண்டகால நோக்கமும் ஆங்கிலேய அரசுக்கு இருந்ததோடு, நவாப் வாஜித் அலி ஷா என்ற முஸ்லிம் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்த அவத் மாகாணத்தை பிரிட்டிஷ் அரசு தனது சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டுவரவும் முயன்று வந்தது.

அவத் மாகாண நவாப் வாஜித் அலி ஷா.

இச்சூழ்நிலையில்தான் 1855 அயோத்தியில் இந்து கலவரம் ஏற்பட்டு, அதில் 75 முஸ்லிம்களும் 11 இந்துக்களும் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தைத் தொடர்ந்து அவத் நவாப் வாஜித் அலி ஷா நியமித்த கமிட்டியின் விசாரணையில், ”பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அவ்விடத்தில் இந்துக் கோவில் இருந்ததாக எந்தவொரு இந்துவும் கோரவில்லை. அது போல பாபர் மசூதிக்கு அருகே அமைந்திருந்த அனுமன் கோவிலுக்குக் கீழே மசூதி இருந்ததாக எந்தவொரு முசுலீமும் கோரவில்லை.”

இக்கலவரம் நடந்து முடிந்த அடுத்த ஆண்டு, 1856 வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அவத் மாகாணத்தை இணைத்துக் கொண்ட பிரிட்டிஷ் காலனி அரசு, இந்த இணைப்பிற்கு இந்து கலவரத்தையும் சாக்காகப் பயன்படுத்திக் கொண்டது. இந்த வலுக்கட்டாயமான இணைப்புக்கு நவாப் வாஜித் அலி ஷாவின் இரண்டாவது மனைவி பேகம் ஹஸ்ரத் மஹல் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவந்ததோடு, 1857 வெடித்த முதல் வட இந்திய சுதந்திரப் போரில் தீவிரமாகப் பங்கெடுத்தும் கொண்டார். அதே சமயம், பாபர் மசூதி வளாகத்தினுள் இருந்த அனுமன் கோட்டையில் தங்கியிருந்த மகந்துகளோ ஆங்கிலேய அரசுக்குத் துணை நின்றனர்.

1855 நடந்த கலவரம், ஆங்கிலேய காலனி அரசு அவத் மாகாணத்தை இணைத்துக் கொண்டது, 1857 வெடித்த முதல் வட இந்திய சுதந்திரப் போராட்டம் ஆகிய சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டுதான், பாபர் மசூதியின் தென்கிழக்கே, அவ்வளாகத்தில் ராம்சபுத்ரா என்றொரு சிறிய மேடையை இராமநந்தி பைராகிகள் உருவாக்கியதோடு, அங்குதான் ராமபிரான் பிறந்ததாகக் கூறத் தொடங்கினர்.

பேகம் ஹஸரத் மஹல்.

இம்மேடை கட்டப்பட்டதை முஸ்லிம்கள் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்த போதும், ஆங்கிலேய அரசு பாபர் மசூதியையும், அதன் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த ராம் சபுத்ராவையும் ஒரு தடுப்புச் சுவரின் மூலம் இரண்டாகப் பிரித்து, வளாகத்தின் உட்புறப் பகுதியில் அமைந்திருந்த மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும், வெளிப்புறப் பகுதியில் அமைந்திருந்த ராம் சபுத்ராவில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதித்தது.

1885 ராம் சபுத்ராவை நிர்வகித்து வந்த நிர்மோகி அகாராவின் தலைமை பூசாரி மஹந்த் ரகுபர் தாஸ், ”அயோத்தியில் அமைந்திருக்கும் சபுத்ரா ஜென்மபூமியில் ஒரு கோவிலைக் கட்டிக் கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும், இதனை முஸ்லிம்கள் தடுக்கக் கூடாது” எனக் கோரி உரிமையியல் வழக்கொன்றைத் தொடுத்தார். இந்த வழக்கு டிசம்பர் 1885 முதல் நவம்பர் 1886 வரை ஆங்கிலேய அரசின் மூன்று நீதிபதிகளால் அடுத்தடுத்து விசாரிக்கப்பட்டு, கோவில் கட்டும் கோரிக்கை மறுக்கப்பட்டது. எனினும், இவ்விசாரணைகளில் ராம் சபுத்ராதான் இராமர் பிறந்த இடமாகக் கூறப்பட்டதே தவிர, ஒரு முறைகூட மசூதி இராமர் பிறந்த இடமாகக் கூறப்படவில்லை.

உரிமையியல் வழக்குகளில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஏற்றுக் கொள்வது என்பதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் நிலை. அந்த வகையில் இந்திய அரசியல் சட்டத்தின்படி இந்த வழக்கு ஏற்கெனவே விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்று. எனினும், 22.12.1949 அன்று நள்ளிரவில் பாபர் மசூதியினுள் கள்ளத்தனமாகக் குழந்தை இராமர் சிலையை வைத்து இப்பிரச்சினையை மீண்டும் தொடங்கி வைத்தது, இந்து மதவெறிக் கும்பல்.

1857 வெடித்த முதல் வட இந்திய சுதந்திரப் போர் குறித்த சித்திரம். (கோப்புப் படம்)

சிலை கள்ளத்தனமாக வைக்கப்பட்ட சமயத்தில் ஃபைசாபாத் மாவட்ட ஆட்சியராகவும் மாவட்ட நீதிபதியாகவும் இருந்த கே.கே.கே.நாயர் இந்து மகாசபையோடு நெருக்கமாக இருந்து, இச்சதிச் செயலை நிறைவேற்றிக் கொடுத்தார். கள்ளத்தனமாக வைக்கப்பட்ட சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கு முட்டுக்கட்டையாகச் செயல்பட்ட அவர், 29.12.1949 அன்று நிர்வாக ஆணையொன்றை வெளியிட்டு பாபர் மசூதி வளாகத்தை ஜப்தி செய்தார். இதன் மூலம் மசூதியைக் கோவிலாக்கினார் கே.கே.கே.நாயர்.

16.01.1950 அன்று இந்து மகா சபையின் ஃபைசாபாத் கிளைச் செயலராக இருந்த கோபால் சிங் விஷாரத் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கும் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந்தான் என்ற அடிப்படையில் நிலத்தின் உரிமையைக் கோரவில்லை. மாறாக, கள்ளத்தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையை வழிபடத் தன்னை அனுமதிக்க வேண்டும்; பிரதிவாதிகள் (அரசும், முஸ்லிம்களும்) சிலைகளை அகற்ற முடியாதவாறு நிலையான தடையாணை பிறப்பிக்க வேண்டும்” என்றுதான் கோரியிருந்தார். இவ்வழக்கில் விஷாரத் கோரியவாறு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்தது, ஃபைசாபாத் உரிமையியல் நீதிமன்றம். இதனைத் தொடர்ந்துதான் முஸ்லிம்கள் பாபர் மசூதியில் தொழுகை நடத்துவதைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். (அயோத்தி: இருண்ட இரவு, பக்.135, 150)

குழந்தை இராமன் சிலையை மசூதிக்குள் வைக்கும் திட்டத்திற்கு உதவிய அன்றைய ஃபைஸாபாத் மாவட்ட நீதிபதி கே.கே.கே. நாயர்.

இந்நிலையில் 1959 பாபர் மசூதி அமைந்துள்ள 1500 சதுர கெஜம் அளவிலான நிலத்தின் மீது உரிமை கோரி, நிர்மோகி அகாரா வழக்கில் இணைகிறது. இது அனுபவ பாத்தியதை அடிப்படையில் சொத்தின் மீது உரிமை கோரிய ஒரு சிவில் வழக்கு மட்டுமே. அந்த இடம் இராமன் பிறந்த இடம், மத நம்பிக்கை என்ற வாதங்களெல்லாம் நிர்மோகி அகாராவின் மனுவில் கிடையாது. இதற்கு எதிராக வேறு வழியில்லாமல் சன்னி வக்ஃபு வாரியம் 1961 இல் எதிர் மனு தாக்கல் செய்கிறது.

அடுத்த இருபது ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத் தாழ்வாரத்திலேயே தூசிபடிந்து கிடக்க, 1980 பிற்பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க. இந்த சிவில் வழக்கை இந்து மதவெறி அரசியலாக மடைமாற்றியது. பா.ஜ.க.வின் இம்முயற்சிக்கு அடிக்கொள்ளியாகச் செயல்பட்டது காங்கிரசு.

இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாக, 1984 ஏப்ரலில் அவரது தலைமையில் இருந்த காங்கிரசு அரசு, மசூதியில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இராமர் சிலையை இந்துக்கள் வழிபடுவதற்காக பூட்டப்பட்டிருந்த அம்மசூதியைத் திறந்துவிடும் முடிவை எடுத்தது. அதற்கு எதிர்வினையாக 1984 ஏப்ரலில் நடந்த விசுவ இந்து பரிசத்தின் மாநாட்டில் அயோத்தி, காசி, மதுரா ஆகிய மூன்று இடங்களிலுள்ள மசூதியை அகற்ற வேண்டுமெனத் தீர்மானம் இயற்றப்பட்டதோடு, 1984 செப்டம்பரில் பாபர் மசூதியை அகற்றக் கோரும் ரத யாத்திரையைத் தொடங்கியது, வி.இ.ப. 1984 அக்டோபரில் இந்திரா காந்தி  சுட்டுக் கொல்லப்பட, இராமஜென்ம பூமி இயக்கத்தை விசுவ இந்து பரிசத் கைவிட நேர்ந்தது. (பிரண்ட்லைன், டிச.6, 2019, பக்.9)

இந்து மகாசபை ஃபைசாபாத் கிளைச் செயலராக இருந்த கோபால் சிங் விஷாரத்.

1986 வயது முதிர்ந்த முஸ்லிம் பெண்மணி ஷா பானுவின் ஜீவனாம்சக் கோரிக்கை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அப்பெண்மணிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்க, ராஜீவ் காந்தி அரசு நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி அத்தீர்ப்பை ரத்து செய்தது. இதனைச் சாக்காக வைத்து, ராஜீவ் காந்தி அரசு முஸ்லிம்களைத் தாஜா செய்வதாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்ய, ராஜீவ் காந்தி அரசு பாபர் மசூதியின் பூட்டைத் திறந்துவிட்டு இந்துக்களை வழிபாடு செய்துகொள்ள அனுமதித்தது. இதற்கு இந்த வழக்கில் ஃபைசாபாத் நீதிபதி பாண்டே கொடுத்த உத்தரவைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது காங்கிரசு அரசு.

இதனைத் தொடர்ந்து இராம ஜென்மபூமி பிரச்சினையை அரசியல் ரீதியில் அறுவடை செய்வதற்கான இயக்கத்தை பாரதிய ஜனதா நாடெங்கும் கட்டத்தொடங்கியது. 1989 தேர்தலுக்குச் சில நாட்கள் முன் பாபர் மசூதி வளாகத்தில் இராமன் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூசை நடத்த சங்கபரிவாரத்தை அனுமதித்தது ராஜீவ் அரசு.

ராம ஜென்மபூமி பிரச்சினை கருக்கொண்டு உருவான காலக்கட்டம் காலனியக் கட்டம் என்றால், அப்பிரச்சினையை சங்கப் பரிவார அமைப்புகள் தீவிரமாகக் கையில் எடுத்த காலக்கட்டம், இந்தியாவில் புதிய தாராளவாதக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலக்கட்டமாகும்.

பா.ஜ.க. கும்பலுக்குத் துணைபோன தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் பி.பி.லால்.

எனினும், மூல வழக்கைப் பொருத்தவரை, இராமன் பிறந்த இடம் என்ற அடிப்படையில் பாபர் மசூதி நிலத்தின் மீது உரிமை கோரும் மனு” எதுவும் 1989 வரை தாக்கல் செய்யப்படவில்லை. வெறும் உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடத்தைச் சட்டரீதியில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த வழக்கைக் கொண்டு வருவதன் மூலம்தான் சட்டப்படியே இதனைக் கைப்பற்ற முடியும் என்ற சூட்சுமம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வாலுக்கு மட்டுமே அன்று புரிந்திருந்தது.

நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனே, குழந்தை இராமனையே மனுதாரர் ஆக்கி, குழந்தை இராமனின் நெருங்கிய நண்பர், காப்பாளர் என்ற முறையில் 1989 இல் மேற்கூறிய வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார், அவர். அடுத்த சில ஆண்டுகளில் தேவகி நந்தன் அகர்வால் இறந்து விடவே, அவருக்குப் பதிலாக ‘ராமனின் நண்பனாக திரிலோக்நாத் பாண்டே என்பவர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். திரிலோக்நாத் பாண்டே விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொருபுறத்தில், கோவிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதென்ற ஆர்.எஸ்.எஸ். பொய்ப் பிரச்சாரத்தை உண்மையைப் போலக் காட்டும் மோசடித்தனமான தொல்லியல் ஆய்வுகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக, இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த முன்னாள் இயக்குநர் பி.பி.லால், மசூதியின் கீழே சிதிலமடைந்த தூண்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, சில புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்தப் பின்னணியில்தான் ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் நடந்துவந்த மூலவழக்கு 1989 ஜூலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் 2010 தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி வளாகத்தின் மீது உரிமை கோரிய நிர்மோகி அகாரா, சன்னி வாரியத்தின் மனுக்கள் காலவரம்பைத் தாண்டி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எனக் கூறித் தள்ளுபடி செய்தது. எனினும், அந்நிலத்தை குழந்தை ராமர், சன்னி வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய மூன்று மனுதாரர்களுக்கும் இடையே மூன்றாகப் பங்கிட்டுத் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பின்படி, பாபர் மசூதி இருந்த நிலப்பகுதி இராமர் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தை இராமருக்கும், ராம்சபுத்ரா அமைந்திருந்த பகுதி நிர்மோகி அகாராவுக்கும், எஞ்சிய நிலப்பகுதி சன்னி வாரியத்திற்கும் ஒதுக்கப்பட்டது.

இத்தீர்ப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ”1500 சதுர கெஜ நிலத்தை மூன்றாகப் பிரித்துக் கொடுப்பது யாரையும் திருப்திப்படுத்தாது, அமைதியை ஏற்படுத்தவும் உதவாது” எனக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், அந்நிலத்தைக் குழந்தை இராமர் தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறது. சங்கப் பரிவாரத்தைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் அமைதியை ஏற்படுத்த முடியும்” என்பதுதான் இத்தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் செய்தி.

முத்து

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !

ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 2

முதல் பாகம்  படிக்க

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 10,000 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கேள்விப்படும் போது கூடவே  ஜனநாயகம் என்றால் என்ன என்கிற கேள்வியும் உடன் எழுகிறது?

தங்களது நிலத்தைப் பாதுகாக்க அரசமைப்புச் சட்டத்தைப் பிரயோகித்ததற்காக தாங்கள் வேட்டையாடப்படுவதாக ஜார்கண்ட் முண்டா பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.

இந்திய ஜனநாயகத்தின் நிலை குறித்து இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த தொடரின் இரண்டாவது பகுதி இது. முதல் பகுதியை படிக்க இங்கே அழுத்தவும்

***

ரியானா மற்றும் மகாராஷ்ட்டிராவைத் தொடர்ந்து நவம்பர் 30 -இல் தொடங்கி ஐந்து கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ஜார்கண்ட் மாநிலத்திற்கு நாங்கள் பயணமானோம். மாநிலத் தலைநகரான ராஞ்சியிலிருந்து ஒரு மணி நேர பயண தூரம் கொண்ட குந்த்தி மாவட்டத்திலுள்ள ஆதிவாசி கிராமங்களில் பத்தல்கடி இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது குறித்த விவாதங்களை மேற்கொண்டுள்ளன. பத்தல்கடி என்பது அடிக்கல் நாட்டுவதைக் குறிப்பதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளை குந்த்தி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நிறுவுவதற்கான இயக்கம் 2017 -இல் தொடங்கப்பட்டது. இந்திய அரசமைப்பின் ஐந்தாவது அட்டவணை ஆதிவாசி பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் விவரத்தை அந்தக் கற்பலகைகள் மேற்கோள் காட்டுகின்றன.

ஆதிவாசிகளின் கோரிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குகளை பதிவு செய்தது ஜார்கண்ட் காவல்துறை :

ஜூன் 2017 மற்றும் ஜூலை 2018-க்கு இடையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ஸ்க்ரால் இணையதளம் ஆய்வு செய்த போது, பொது ஒழுங்கை சீர்குலைத்ததாக 11,200 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

14 முதல் தகவல் அறிக்கைகளில் உள்ள குற்றச்சாட்டுகளில் 10,000 பேர் மீது இந்திய தன்டணைச் சட்டம், பிரிவு 121A இன் கீழ் தேசத் துரோக வழக்கு என்பது முக்கிய அம்சமாகும். அரசின் மீது அதிருப்பதி கொள்கிற எந்த ஒரு நபரையும் வாழ்நாள் சிறைவைக்க இந்தச் சட்டப் பிரிவு வழி வகை செய்கிறது.

இந்த 10,000 ஆதிவாசிகள் குந்த்தி மக்கள் தொகையில் 2 சதவிகிதத்தினர் ஆவர். பத்தல்கடி ஆதரவாளர்கள் மீது 19 முதல் தகவல் அறிக்கைகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், தேசத் துரோக வழக்கின் கீழ் வருபவர்கள் மேலும் அதிகமாகவே இருக்கும் என்பதே உண்மை.

19 முதல் தகவல் அறிக்கைகளில் 132 பேரின் பெயர்கள் பல்வேறு முதல் தகவல் அறிக்கைகளில் இடம் பெற்றுள்ளன. குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் 43 பேர் கிராமத் தலைவர்கள். மற்றவர்கள் அடையாளம் தெரியாதவர்கள். இதனால் தங்களையும் இந்த வழக்குகளில் சேர்த்து விடுவார்களோ என கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.

குந்த்தி மாவட்டம் இரண்டு வரலாற்று நாயகர்களுக்கு பெயர் போனது. ஆங்கிலேயருக்கு எதிராக கலகம் செய்து 1900 -இல் தனது 25-வது வயதில் படுகொலை செய்யப்பட்ட பிர்சா முண்டா என்பவர் ஒருவர்.

1928 ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்தியா தங்கம் வெல்லக் காரணமாக இருந்த, அனைவரையும் கவர்ந்த ஹாக்கி வீரர் ஜெய்பால் சிங் முண்டா மற்றொருவர். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய போது அரசமைப்புச் சபையில் ஆதிவாசிகளுக்காக குரல் கொடுத்தவர் இவர்.

தங்களது நிலத்தைப் பாதுகாக்க அரசமைப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியதற்காக எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் தாங்கள் வேட்டையாடப் படுவதாகக் கூறுகின்றனர் ஆதிவாசிகள்.

இந்த கட்டுரைக்காக நாங்கள் நேர்காணல் கண்ட பத்து பேர் இந்த வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் அல்லது தண்டனை அனுபவித்தவர்கள்.

படிக்க:
அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !
♦ தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !

பிர்சா முண்டா : எனது பெயர் பிர்சா முண்டா. உண்மை பிர்சா முண்டா அல்ல.  (சிரித்துக் கொண்டே)

ஒரு நகைச்சுவையை தெறிக்கவிட்டு தனது பற்கள் தெரிய சிரித்தபடியே அங்கு வருகிறார் வெண்மையான கண்களையுடைய 79 வயதான, பாண்ட்ரா கிராமத் தலைவர். இவரது மண் குடிசைக்கு வெளியே எங்களைக் கண்டதும் இவர் தனது தோளிலிருந்த தண்ணீர்க் குடங்களை தரையிலே வைத்து விட்டு, தன்மீதான தேசத் துரோக வழக்கு பற்றி விவரிக்க அங்கு வந்து உட்காருகிறார். பக்கத்து வீடுகளிலிருந்து நெகிழி நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு ஒரு மரத்தடியில் வட்ட வடிவமாக போடப்பட்டன. ஆண்கள் அடங்கிய ஒரு சிறு குழுவினர் விவாதத்தில் பங்கேற்கின்றனர்.

ஜார்கண்டின் குந்த்தி மாவட்டத்தில் தேசத் துரோகத்திற்காக பதிவு செய்யப்பட்ட 43 கிராம நாட்டாமைகளில் பாந்த்ரா கிராமத்தின் தலைவரான பிர்சா முண்டாவும் ஒருவர்.

சுப்ரியா சர்மா : உங்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளது என்பது உங்களுக்கு எபபொழுது தெரிய வந்தது?

பிர்சா முண்டா : ஓராண்டுக்கு முன்பு. கிராமத் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படுவதாக கேள்விப்பட்டேன். என் மீதும் வழக்கு உள்ளதாக சிலர் சொன்னார்கள்.

அவர் மீது ஒரு வழக்கல்ல, மூன்று வழக்கு என்பதை ஸ்க்ரால் உறுதி செய்தது. முதல் வழக்கு 2017-இல், மற்ற இரண்டும் 2018-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளிலும் தேசத் துரோகக் குற்றச்சாட்டும் அடங்கி உள்ளது.

சுப்ரியா சர்மா : தேசத் துரோகம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளீர்களா?

பிர்சா முண்டா : இதுவரை கேள்விப்பட்டதில்லை.

இது புரட்சிகர காலத்திய தங்கள் தலைவரின்  பெயரைத் தேடிச் செல்வதற்காக அல்ல. தங்களது மூதாதையரான பிர்சா முண்டாவின் மரபுகளை நீர்த்துப் போகச் செய்வதால் எழுந்த அச்சத்தின் விளைவே இந்த பத்தல்கடி இயக்கம்.

வெள்ளையரை எதிர்த்துப் போராடிய தங்களது மூதாதையரான பிர்சா முண்டா இறந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிவாசிகளின் நில உரிமையைக் காக்க “சோட்டாநாக்பூர் நிலக் குத்தகைச் சட்டம் 1908” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை நீர்த்துப் போக பாராதிய ஜனதா கட்சி 2016 -இல் மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் பத்தல்கடி இயக்கத்திற்கான அடிப்படையாகும், என்பதை 20 வயதைக் கடந்த ஒரு இளைஞன் விவரிக்கிறார். தற்செயலாக அவரது பெயரும் பிர்சா முண்டா என அமைந்து விட்டது.

பிர்சா முண்டா, இளையர் : சோட்டநாக்பூர் நிலக் குத்தகைச் சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்களுக்கு எதிராக அக்டோபர் 2016 -இல் ராஞ்சியில் நடைபெறவிருந்த பேரணியில் பங்கேற்க நாங்கள் சென்று கொண்டிருந்த போது, காவல்துறை மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு ஆதிவாசி கொல்லப்பட்டதாக அறிந்தோம். எங்களது உரிமைகளைக் கேட்க ஒரு பேரணிகூட நடத்தமுடியாத இந்த ஜனநாயகத்தில்; நாங்கள் கிராமங்களிலேயே இருந்து இந்திய அரசமைப்பின் ஐந்தாவது அட்டவணை வழங்கி உள்ள உரிமைகளை அறிவிப்பதே சிறந்ததென்று கருதினோம்.

மார் 3, 2017 அன்று பாந்த்ரா கிராமத்தில் இந்திய அரசமைப்பு செதுக்கப்பட்ட பச்சை நிறத்திலான கல்வெட்டு நிறுவப்பட்டது.

சாம்தி கிராமத்தைச் சேர்ந்த மங்கள் முண்டாவும், பாந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த மாகி துட்டியும் பத்தல்கடி இயக்கத்திற்கான உந்துவிசையை விவரிக்கின்றனர்.

மங்கள் முண்டா : சோட்டாநாக்பூர் நிலக் குத்தகைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பெரிய கம்பெனிகளுக்கு நிலத்தை அளிக்கப் போவதாக பத்திரிகைகளில் படித்துத் தெரிந்து கொண்டோம். கிரேட்டர் ராஞ்சி என்ற பெயரில் புதிய தலைநகரை உருவாக்க இங்கிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள சுக்ரு கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மகி துட்டி : வலுக்கட்டாயமாக, கிராம சமைபயின் ஒப்புதலைப் பெறாமல்…

மங்கள் முண்டா : கற்பலகைகளை நிறுவுவது எங்களது மூதாதையர் பின்பற்றிய பழைய மரபு. பிறப்பு முதல் இறப்பு வரையிலான விவரங்களை கற்களில் குறித்து வைப்பது வழக்கம். அதனால் இந்திய அரசியல் சட்டம், ஐந்தாவது அட்டவணை வழங்கி உள்ள எங்களது உரிமைகளை கற்களைக் கொண்டு ஏன் வெளிப்படுத்தக் கூடாது என நினைத்தோம்?

2012 ஆம் ஆண்டு மாவட்டத் தலைநகரங்களில் நகர்ப்புற ஆதிவாசி அறிவுத்துறையினர் ஏற்பாடு செய்த கூட்டங்களில் தங்களில் ஒரு சிலர் கலந்து கொள்ளாதவரை இந்திய அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியது என்கின்றனர் பாந்த்ரா கிராமவாசிகள். ஷிப்பிங் கார்பரேசன் ஆப் இந்தியா என்கிற நிறுவனத்தில மேலாளராகப் பணியாற்றும் விஜய் குமார் என்பவர் தலைமையிலான அறிவுத் துறையினர் 1938 -இல் ஜெய்பால் சிங் முண்டா உருவாக்கிய ஆதிவாசி மகாசபா என்கிற அமைப்புக்கு புத்துயிர் கொடுத்தனர். பத்தல்கடி இயக்கத்தின் மூளையாக இவர்கள் இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது காவல் துறை. அரசமைப்பை கற்பலகைகளில் பதிப்பது தங்களது முடிவுதானேயன்றி தங்களது தலைவர்களது யோசனையல்ல என்கின்றனர் பாந்த்ரா கிராம மக்கள்.

சம்பர் துட்தி : ஒரு மரப்பலகை நீண்ட நாள் தாங்காது அல்லது மங்கி விடும். ஆனால் கல் நீண்ட நாள் நீடிக்கும். கற்களில் எழுதிய பிறகு சட்ட வல்லுநர்களையும் தலைவர்களையும் கலந்தாலோசித்த போது இது சிறந்த முறை என்றனர்.

படிக்க:
காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
♦ தயாராகிவிட்டது ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம் !

பாந்த்ராவின் கல்வெட்டு என்ன சொல்கிறது?

இந்திய அரசமைப்பின் நான்கு பிரிவுகளை கீழ்கண்ட சொற்களில் அவை பிரதிபலிக்கின்றன.

  • இந்திய அரசியல் சட்டம் பிரிவு 13(3)(a)இன்படி, மரபு அல்லது பாரம்பரியம்தான் சட்டத்தின் உந்து சக்தி, அதுவே அரசமைப்பின் பலம்.
  • இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(5)இன்படி, பட்டியல் மாவட்டங்கள் அல்லது பகுதிகளில் (scheduled districts or areas) வெளி ஆட்கள் அல்லது வழக்கத்திற்கு மாறான நபர்கள் நடமாடவோ, குடியிருக்கவோ, நிலைபெறவோ மற்றும் சுற்றி வரவோ அனுமதி கிடையாது.
  • பட்டியல் பகுதிகளில் வெளி ஆட்கள் வணிகம் செய்வதை, வர்த்தகம் அல்லது வேறு வகையிலான வேலை வாய்ப்புகளில் ஈடுடுவதை இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(6) தடை செய்கிறது.
  • இந்திய அரசியல் சட்டம் பிரிவு 244(1)(b), பாரா 5(1) இன்கீழ் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்தால் இயற்றப்படும் எந்த ஒரு சட்டமும் பட்டியல் பகுதிகளுக்கு பொருந்தாது.

மேற்கண்ட வாசகங்கள் இந்திய அரசியல் சட்டத்தின் நேரடிப் பிரதிகள் அல்ல என்றாலும் குந்த்தி ஆதிவாசிகள் அதற்கு மேற்கண்டவாறு விளக்கம் தருகின்றனர் என்பது தெரிகிறது.

உதாரணமாக, பட்டியல் பகுதிகளில் அதாவது ஆதிவாசிகள் பெருமளவில் இருக்கின்ற பகுதிகளில் அந்நியர்கள் நேரடியாக நுழைவதை அரசியல் சட்டப் பிரிவு 19(5) தடை செய்யவில்லை. மாறாக, பழங்குடி மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் வெளியாட்கள் சுதந்திரமாக பிரவேசிக்க, வசிக்க, வர்த்தகம் மற்றும் தொழில் செய்ய கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களைக் கொண்ட வர மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதைத்தான் அரசியல் சட்டப் பிரிவு 19(5) சொல்கிறது.

பழங்குடி ஆலோசனைக் குழுவை கலந்தாலோசித்து பிறகு பட்டியல் பகுதிகள் தொடர்பாக நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றம் இயற்றும் சட்டங்கள் செல்லாது என மாநில ஆளுநர் அறிவிப்பதற்கு அரசியல் சட்டப் பிரிவு 244(1) அனுமதி அளிக்கிறது. பழங்குடி ஆலோசனைக் குழுவை கலந்தாலோசித்த பிறகு மாநில ஆளுநர் அறிவித்தால் மட்டுமே பொதுவான சட்டங்களை பட்டியல் பகுதிகளில் பிரயோகிக்க முடியும் என குந்த்தி ஆதிவாசிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

மேற்கண்ட அரசியல் சட்டப் பிரிவுகளை இந்திய நீதி மன்றங்கள் விரிவாக ஆய்வு செய்து, பழங்குடி மக்களின் பண்பாடு மற்றும் சுயாட்சித் தன்மையை பாதுகாக்கவே அரசமைப்பு முற்படுகிறது என்பதை புகழ் பெற்ற 1997 சமந்தா தீர்ப்பு மற்றும் இதர பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிப்படுத்தி உள்ளன.

ஆனால் கல்வெட்டுகள் அமைப்பதை, ஒரு குறுகிய நோக்கில் அணுகுகிறது ஜார்கண்ட மாநில அரசு. பல கிராமங்கள் பாந்த்ராவைத் தொடர்கின்ற சூழலில், ஆதிவாசிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்குப் பதிலாக அவர்கள் மீது வழக்குகளைத் தொடுத்து வருகிறது.

பாந்த்ராவுக்கு அருகிலேயே உள்ள கான்கி கிராமத்தில், காவல்துறைக்கும் ஆதிவாசிகளுக்குமிடையில் ஏற்பட்ட உரசலைத் தொடர்ந்து, ஜூன் 22, 2017 அன்று பல முதல் தகவல் அறிக்கைகள் முதல் முறையாக ஒரு கொத்தாக பதிவு செய்யப்பட்டன.

மங்கல் முண்டா (இடது) சாம்தி கிராமத்தில் வசிப்பவர், சும்பர் சிங் துட்டி (வலது) பாந்த்ரா கிராமத்தில் வசித்து வருகிறார்.

மாகி துட்டி : கிராமத்தைப் பாதுகாக்க உயரமான மூங்கில் தடுப்புத் தளங்களை கிராம வாசிகள் கட்டமைக்கின்றனர். பிற்பகலில் வந்த காவலர்கள் அது குறித்து கேள்விகளை எழுப்பினர். மாலையில் மற்றொரு போலீஸ் அணி தங்களது பலத்தைக் காட்டிக் கொண்டு வந்ததோடு மூன்று ஆதிவாசிகளைத் தாக்குகிறது. இது குறித்து சிலர் எச்சரிக்கை மணியை ஒலிக்க, அருகாமை கிராமங்களிலிருந்து மக்கள் அவ்விடத்தில் கூடுகின்றனர். வழக்கமாக கிராம சபை காலையில்தான் கூடும் என்பதால் காவலர்கள் அங்கேயே தங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஆனால், காவல்துறை தரப்பு கருத்து வேறாக உள்ளது. சமூக விரோத சக்திகள் சிலர் சாலைகளைத் தடுத்து அவ்வழியாக சரலைக் கற்கள் மற்றும் கஞ்சா பயிரிடுவோரை ஏற்றிச் செல்லும் வாகனங்களை மறித்து வரி வசூலிப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், கான்கி கிராமத்திற்கு காவல்துறை சென்றதாக ஜூன் 25, 2017 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கிறது. மாலையில் பெரும்படையுடன் சென்ற காவல்துறை, மூங்கில் தடுப்புத் தளங்களை உடைத்தெறிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கழிகள் மற்றும் மரபு ஆயுதங்களைக் கொண்டு காவல் துறையினரைத் தாக்குகின்றனர்.

அக்கிராமத்திற்குச் சென்ற பத்தல்கடி இயக்கத் தலைவர்கள் 500 -க்கும் மேற்பட்டோரை மேலும் போராடத் தூண்டியதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. இரவு 8.30 மணி அளவில் காவல்துறை கூடுதல் பொது இயக்குநர் (ADGP) தலைமையில் ஆயுதாங்கிய பெரும்படை ஒன்று ராஞ்சியிலிருந்து வந்ததாகவும், ஆனால் ஆதிவாசிகள் அவர்களை சிறை பிடித்து கேள்விக் கணைகளைத் தொடுத்து பின்னர் காலையில் விடுவித்ததாகவும் அந்த முதல் தகவல் அறிக்கை சொல்கிறது.

எனினும் தாங்கள் பலாத்காரத்தை பயன்படுத்தவில்லை என மறுக்கிறது காவல்துறை. பெரும் போலீஸ் படை ஒன்றை கிராமவாசிகள் சிறைபிடிப்பது எப்படி சாத்தியம் என்கிற கேள்விதான் எமக்கு எழுந்தது?

படிக்க:
வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி
♦ இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் பதக்கங்கள் !

மாகி துட்டி : காவல் அதிகாரிகள் அவர்களாகத்தான் கிராமத்தில் தங்கினர். ஒரு நட்பு ரீதியான குறிப்போடுதான் அவர்கள் காலையில் கிராமத்தை விட்டுச் சென்றனர். அவர்களை கிராம மக்கள் சிறை பிடித்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இரண்டு நாட்கள் கழித்துதான் கேள்விப்பட்டோம்.

ஜூன் 24, 2017 சம்பவத்தைத் தொடர்ந்து, பட்டியல் பகுதி என்ற பெயரில் அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தியதாக பத்தல்கடி தலைவர்கள் மீது குற்றம் சுமத்தி மற்றொரு முதல் தகல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் டஜன் கணக்கான கிராமங்களில் கற்பலகைகளை நிறுவி இந்திய அரசமைப்பு குறித்த தவறான புரிதலை ஏற்படுத்துவதோடு, அன்றாட நிர்வாக வேலைகளைத் தடுக்கும் வகையில் அப்பாவி மக்களைத் தூண்டி வருவது, அப்பகுதியில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்குகின்றனர் என்கிறது அந்த முதல் தகவல் அறிக்கை.

சம்பர் துட்டி : நாங்கள் கல்லில் எழுதி உள்ளது அரசமைப்புக்கு குறித்து தவறான விளக்கம் என்றால் எது சரியான புரிதல் என்பதை அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும். எது சரியான விளக்கம் என நாங்கள் கேட்ட போது அரசு அதிகாரிகள் மௌனம் சாதிக்கின்றனர்.

முதல் தகவல் அறிக்கை பாந்த்ரா வாசிகளுக்கு பேரதிர்ச்சியாய் வந்தது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டதே என்பதில் நம்பிக்கையுடன் இருந்ததால், மார்ச் மாதத்தில் தங்கள் கிராமத்தில் நடைபெற்ற பத்தல்கடி விழா குறித்து வட்டார அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தனர். (அதன் நகல் ஸ்க்ரால்.இன் வசம் இருக்கிறது).

முதல் தகவல் அறிக்கையின் நகல்.

உள்ளூர் காவல் நிலையத்திற்குத் தலைமை தாங்கும் காவல்துறை அதிகாரிகூட விழாவில் கலந்து கொண்டதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். இருப்பினும், ஜூன் 2017 -இல், அதே அதிகாரிகள் கிராம மக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ஆரம்ப முதல் தகவல் அறிக்கைகள் இரண்டிலுமே தேசத்துரோக குற்றச்சாட்டு பதியப்படவில்லை, ஆனால் பாந்த்ரா மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள், சும்பர் சிங் துட்டி மற்றும் மங்கள் முண்டா உட்பட சிலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். தேசத்துரோக குற்றச்சாட்டு முதல் தகவல் அறிக்கையில் பின்னர் சேர்க்கப்பட்டதா அல்லது வேறு வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

2018 ஆம் ஆண்டில், இருவரும் பத்து மாத சிறைவாசம், முதலில் குந்த்தி மாவட்டத்திலும், பின்னர் 170 கி.மீ தூரத்தில் உள்ள போகாரோவிலும் கழித்தனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

மங்கள் முண்டா : தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகிற அளவுக்கு நாங்கள் என்ன செய்திருக்க முடியும் என்று யோசித்து வருகிறோம். என்ன செயல்கள் தேசத்துரோகச் செயல்கள் ஆகின்றன, அது தற்பொழுதும் எங்களுக்குத் தெரியாது.

சுப்ரியா சர்மா : காவல் அதிகாரியோ அல்லது நீதிபதியோ இதை உங்களுக்கு விளக்கினரா?

மங்கள் முண்டா : நாங்கள் எந்த ஒரு நீதிபதி முன்பும் ஆஜர்படுத்தப்படவில்லை.

பாந்த்ராவில் உள்ள விகாஸ் துட்டி மற்றும் பால்கோபிந்த் டிர்கி ஆகியோரின் வீடுகளிலும் காவல்துறையினர் தேடுதல் மற்றும் பறிமுதல் செயல்களை மேற்கொண்டனர். இதற்காக, எர்த்மூவர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர்களது வீடுகள் முற்றிலும் தரை மட்டமாக்கப்பட்டன.

ஒரு தேடுதல் நடவடிக்கைக்கு ஏன் இத்தகைய கடுமையான நடவடிக்கை தேவை என்பது உட்பட எட்டு கேள்விகளை பட்டியலிட்ட ஸ்க்ரால் மின்னஞ்சலுக்கு ஜார்க்கண்ட் காவல்துறை பதிலளிக்கவில்லை. தொலைபேசியில் பேசிய குந்த்தியின் காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர், சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

டிர்கியின் இளம் மருமகள், தனது தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த தனிப்பட்ட உடைமைகள் உட்பட அவர்களது உடைமைகள் அனைத்தையும் போலீசார் எடுத்துச் சென்றதாகக் கூறினார்.

சிதைக்கப்பட்ட பால்கோபிந்த் டிர்கியின் வீட்டின் கூரை. வீட்டை தரைமட்டமாக்குவதற்கு ஜே.சி.பி இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குந்த்தி மாவட்டத்தின் மூன்று தொகுதிகளான குந்த்தி, முர்ஹு, ஆர்கி ஆகிய இடங்களில் கிராமங்களுக்கு பதல்கடி இயக்கம் பரவியதால், ஆயிரக்கணக்கான ஆதிவாசிகளை தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உட்படுத்தி மேலும் பல வழக்குகளைத் தொடுத்தது காவல்துறை. முதல் தகவல் அறிக்கையின் சில பகுதிகள் இங்கே:

குந்த்தி காவல் நிலையத்தில் பிப்ரவரி 2, 2018 அன்று தாக்கல் செய்யப்பட்ட FIR : 17/18

… குடியரசு தினம் மற்றும் ஆகஸ்ட் 15 போன்ற தேசிய விழாக்களிலும், மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களிலும் பங்கேற்க வேண்டாம் என ஆதிவாசி கிராமத் தலைவர்கள் இந்திய அரசின் அசோகச் சின்ன முத்திரையுடன் கூடிய உத்தரவுகளை மக்களுக்கு பிறப்பித்து வருகின்றனர். இராவணன் மற்றும் மகிசாசுரன் ஆகியோரை பேயாக சித்தரித்து அவர்களது உருவ பொம்மைகளை எரிப்பதை நிறுத்த இந்துக்களுக்கு இவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

முர்ஹு காவல் நிலையத்தில் பிப்ரவரி 9, 2018 அன்று தாக்கல் செய்யப்பட்ட FIR: 11/18..

…அரசாங்கத்தின் ஊழியர்களும் அதிகாரிகளும் தங்கள் கடமைகளைச் செய்ய கிராமங்களுக்குச் செல்லும்போது, ஆதிவாசி கிராமத் தலைவர்கள் அரசியலமைப்புக்கு விரோதமான கேள்விகளைக் கேட்கின்றனர். இந்த வழியில், மேற்கூறிய ஆதிவாசி அமைப்பின் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிராக ஜனநாயக விரோத, அரசாங்க விரோத மற்றும் தேசவிரோத செயல்கள் மற்றும் சமூக ஒற்றுமைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார்கள்.

குந்த்தி காவல் நிலையத்தில் மார்ச் 3, 2018 அன்று தாக்கல் செய்யப்பட்ட FIR: 33/18

பதல்கடி இயக்கத்தின் தலைவர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டவர்கள்… அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்க்கவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தவும், காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் கிராமத்திற்குள் நுழைவதைத் தடுக்கவும், அரசாங்க மானியங்களை நிராகரிக்கவும் மக்களைக் கேட்டுக்கொள்ள ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்கின்றனர். தேசத்துக்கும் ஜனநாயக அமைப்புக்கும் எதிராக ஆத்திரமூட்டும் வகையில் உரையாற்றுகின்றனர்.

…ஒரு அங்குல நிலம் கூட அரசுக்குச் சொந்தமில்லை எனவும், நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் ஆதிவாசிகள், எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டவிரோதமானவை என்றும் அரசாங்கத்திற்கு, நிர்வாகத்திற்கு, இராமாயணத்திற்கு, கீதை, மகாபாரதத்திற்கு எதிராக ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் பதல்கடியின் தலைவர்கள் ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்தினர்…

இந்தச் செயல்கள் எப்படி தேசத்துரோகமாகும் என விளக்குமாறு ஸ்க்ரோல்.இன் காவல்துறையிடம் கேட்ட போது போலீசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

(தொடரும்)

தொடரின் மற்ற பாகங்களுக்கு :


கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
தமிழாக்கம் :
ஊரான்
நன்றி : ஸ்க்ரால்.

பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா !

லக வரலாற்றில் போர்க்களங்களுக்கு அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான் சில மாபெரும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன.”

– மௌலானா அபுல் கலாம் ஆசாத்.

ந்து உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி நில உரிமை மேல்முறையீட்டு வழக்கில் அளித்திருக்கும் தீர்ப்பை மேற்கண்ட கூற்றோடு பொருத்திப் பார்க்காமல் இருக்கமுடியாது. இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது இந்திய முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்ட போர் எனக் கொண்டால், அந்த அநீதிக்கு எள்ளளவிலும் குறைந்ததல்ல உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இத்தீர்ப்பு.

முடிவாக, பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பும், அம்மசூதி கட்டப்பட்ட பிறகும், அம்மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் பகவான் ராமன் பிறந்தான் என்பதுதான் இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருவதோடு, அந்த நம்பிக்கை ஆவணங்கள் மற்றும் வாய்மொழி சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காணப்படும் இணைப்பின் இறுதிப் பத்தியில் ஆணித்தரமாகக் கூறப்பட்டிருக்கிறது. இம்முடிவிற்கும் ராம ஜென்மபூமி குறித்த ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களுக்கும் இடையே யாரும் வேறுபாடு காண முடியுமா?

பாபர் மசூதி நில வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்: (இடமிருந்து வலமாக) அப்துல் நஸீர், எஸ்.ஏ.பாப்டே, ரஞ்சன் கோகோய், டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன்.

தீர்ப்பின் இணைப்பு மட்டுமல்ல, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த ஒருமனதான தீர்ப்பும்கூட ராமனின் பிறப்பு குறித்த இந்துக்களின் நம்பிக்கை என ஆர்.எஸ்.எஸ். கூறிவரும் கருத்தை அடிநாதமாகக் கொண்டுதான் அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஒரு ‘மதச்சார்பற்ற குடியரசின் உச்ச நீதிமன்றம் பார்ப்பன மத நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இத்தீர்ப்பை அளித்திருப்பதாகப் பளிச்செனத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கிரிமினல் வழக்குகளில் சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிக்கு அளித்து விடுதலை செய்யும் சட்ட நடைமுறை இருப்பதைப் போல, சிவில் வழக்குகளில் மனுதாரரும் எதிர் மனுதாரரும் முன்வைக்கும் ஆதாரங்களுள் ஒரு தரப்பு ஆதாரத்திற்கு அனுகூலத்தையும் (balance of probabilities) கூடுதல் முக்கியத்துவத்தையும் (preponderence of probabilites) அளித்துத் தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறை உள்ளது. சட்டப்படியான இந்தக் கொல்லைப்புற வழியையும் இந்து மத நம்பிக்கை, புராணங்கள், வரலாறு, தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றையும் தேவைக்கேற்ப நைச்சியமாகப் பயன்படுத்திக் கொண்டு பாபர் மசூதி வளாக நிலத்தின் மீதான பாத்தியதையைக் குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

ஓரவஞ்சனை நிறைந்த விசாரணை

உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்த மேல்முறையீட்டு வழக்கில் நிர்மோகி அகாரா, சன்னி வாரியம் மற்றும் குழந்தை ராமர் (ராம் லல்லா விராஜ்மான்) ஆகிய மூன்று தரப்புகள்தான் முக்கிய வழக்காடிகள். இவர்களுள் நிர்மோகி அகாராவை, அத்தரப்பு ஃபைசாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூல வழக்கில் இணைந்து கொள்ள கால வரம்பைத் தாண்டி மனு செய்திருக்கிறது; குழந்தை ராமரின் பூசாரியாக இருந்து வருவதாக நிர்மோகி அகாரா உரிமை கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு அத்தரப்பை வழக்கிலிருந்து தள்ளுபடி செய்துவிட்டனர் நீதிபதிகள்.

1900- பாபர் மசூதியின் தோற்றம் (இடது) மற்றும் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு.

சன்னி வாரியத்தின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பினும், 1528 கட்டப்பட்ட பாபர் மசூதியில், அம்மசூதி கட்டப்பட்ட ஆண்டு தொடங்கி 1857 ஆண்டு வரையிலும் அயோத்தி முஸ்லிம்கள் அம்மசூதியில் தொழுகை நடத்தியதற்கான ஆதாரங்களைத் தரவில்லை, அம்மூன்று நூற்றாண்டுகளும் அம்மசூதி முஸ்லிம்களின் முழுமையான அனுபோக உரிமையின் கீழ் இருந்து வந்ததை நிரூபிக்கவில்லை” என்ற காரணங்களைக் கூறி, பாபர் மசூதி வளாகத்தை சன்னி வாரியத்திடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.

எஞ்சி நின்ற இந்துத் தரப்பான குழந்தை ராமரிடம் பாபர் மசூதி வளாக நிலத்தை ஒப்படைப்பதற்கு, பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் நம்பிக்கைக்கு” அப்பால், உச்ச நீதிமன்றத்திற்கு வேறு எந்தவொரு சான்றும் தேவையாக இருக்கவில்லை.

இவ்வழக்கின் ஒரு மனுதாரரான இந்து மகாசபை, முகம்மது நபி கூறிச் சென்ற மரபுகளின் (ஹதித்)படி பாபர் மசூதி அமையவில்லை. எனவே, அதுவொரு மசூதியில்லை” என வாதாடியதை ஏற்றுக்கொள்ள மறுத்து, அது மசூதிதான் என ஏற்றுக்கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். மசூதி என ஏற்றுக்கொண்ட பிறகு, அங்கே 1857 முன்பாகத் தொழுகை நடந்ததா எனக் கேள்வி எழுப்புவது அபத்தமானது.

மேலும், பாபர் மசூதி அமைந்திருந்த அயோத்தி, 1857 முன்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த அவத் மாகாணத்தின் அங்கமாக இருந்துவந்தது. ஆங்கிலேய காலனி அரசு அவத் மாகாணத்தை இணைத்துக் கொள்ளும் முன்பு வரை அம்மாகாணம் முஸ்லிம் மன்னர்களால்தான் ஆளப்பட்டு வந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் 1857 முன்பாக அம்மசூதியில் தொழுகை நடந்ததா எனக் குதர்க்கவாதிகளால் மட்டுமே கேள்வி எழுப்ப முடியும்.

1857 நடந்த முதல் வட இந்திய சுதந்திரப் போரில் அவத் மாகாணத்தில் ஏராளமான ஆவணங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறியாத ஒன்றல்ல. எனினும், இப்பாதகமான நிலைமையையும் மீறி, பாபர் மசூதிக்கு மன்னர் பாபர் அறுபது ரூபாய் நிதியுதவி அளித்ததற்கான சான்றையும், அது போலவே பிரிட்டிஷ் அரசும் சன்னி வாரியத்திடம் நிதியுதவி அளித்து வந்ததற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, சன்னி வாரியம். நிதியுதவி மசூதியின் பராமரிப்புக்கு அளிக்கப்பட்ட ஒன்றே தவிர, அது நில உரிமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது” எனக் கூறி இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.

பாபர் மசூதியை இடிப்பதற்காக அதன் மீது ஏறி நின்று வெறிக் கூச்சலிடும் சங்கப் பரிவாரக் கும்பல்.

1528 தொழுகை நடக்கவில்லை எனக் கூறப்படும் மசூதிக்கு எந்த ஆட்சியாளராவது பராமரிப்பு நிதி அளிப்பார்களா?”  இச்சாதாரண கேள்வி இந்து மத நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்த நீதிபதிகளின் மனச்சான்றிடம் எழும்பாதது ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல!

அயோத்தி முஸ்லிம்கள், பாபர் மசூதியில் 329 ஆண்டுகள் தொழுகை நடத்தி வந்ததற்கான ஆவணங்களை முஸ்லிம் தரப்பிடம் கறாராகக் கேட்ட உச்ச நீதிமன்றம், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, திரேதா யுகத்தில் ராமன் பிறந்தான் என்பதற்கு நிரூபணமாகக் கூறியிருக்கும் சான்று, இந்துக்களின் நம்பிக்கை.

“பாபர் மசூதியின் மைய கோபுரத்தை நோக்கி இந்துக்கள் வணங்கி வந்திருக்கிறார்கள்.”

“பாபர் மசூதியைச் சுற்றி வலம் வந்து வணங்கி வந்திருக்கின்றனர்.”

“பாபர் மசூதியையும் ராம் சபுத்ராவையும் பிரிக்க ஆங்கிலேயே ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் அருகே நின்று, பாபர் மசூதியை நோக்கி வணங்கியிருக்கிறார்கள்.”

“ஸ்கந்த புராணம், ராமசரித மானஸ் ஆகிய இந்து மத நூல்களில் ராமன் அயோத்தியில்தான் பிறந்தான் எனக் குறிப்புகள் உள்ளன.”

“டிஃபேன்தாலர், மார்டின் ஆகிய வெளிநாட்டுப் பயணிகள், தமது பயணக் குறிப்புகளில் அயோத்தியில் ராமன் பிறந்த இடத்தில் வழிபாடு நடந்ததாகக் குறிப்பிடுள்ளனர்.”

என  இந்நம்பிக்கைக்கு ஆதாரமாகப் புராணங்களையும், வாய்வழிச் செய்திகளையும், வெளிநாட்டுப் பயணிகள் போகிற போக்கில் கூறியவற்றையும் ஏற்றுக்கொண்டு, பகுத்தறிவுக்குப் புறம்பான, அறிவு நாணயமற்ற, ஒருதலைப்பட்சமான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.

வரலாற்றைத் திரித்த தீர்ப்பு

ஆங்கிலேயக் காலனி அரசு 1856 அவத் மாகாணத்தை இணைத்துக்கொண்ட பிறகு, பாபர் மசூதி வளாகத்தில், மசூதியையும், ராம் சபுத்ராவையும் பிரிக்குமொரு தடுப்புச் சுவரை அமைத்தது. இத்தடுப்புச் சுவரை அமைப்பதற்கு அயோத்தியில் 1855 இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் காரணமாகப் பயன்படுத்திக் கொண்டது ஆங்கிலேய அரசு. முதல் வட இந்திய சுதந்திரப் போருக்கு இரண்டு ஆண்டுகள் முன் இக்கலவரம் நடைபெற்றிருக்கிறது. இந்து, முஸ்லிம் மோதலைத் தோற்றுவிப்பது கும்பினி ஆதிக்கத்துக்கே பயன்பட்டிருக்க முடியும் என்ற கோணத்திலும் இந்தப் பிரச்சினையின் அவதார நோக்கத்தை நாம் பரிசீலிக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்ட தற்காலிக இராமர் கோயில்.

1855 கலவரம், அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் ஆகிய நிகழ்வுகளின் பிறகுதான், பாபர் மசூதியின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த ராம் சபுத்ராவில் இந்துக்கள் வழிபாடுகளையும் திருவிழாக்களையும் தொடர்ந்து நடத்தத் தொடங்கினர். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ 1855 நடந்த இந்து மோதலையும், அதன் விளைவாக அமைக்கப்பட்ட அத்தடுப்புச் சுவரையும் இந்துக்கள் பாபர் மசூதியினுள் வழிபாடு நடத்தும் தமது உரிமையை நிலைநாட்டும் முயற்சியாகத் தீர்ப்பில் சித்தரித்து வரலாற்றையே வளைத்துள்ளனர்.

முதலாவதாக, 1855 இந்து இடையே நடந்த கலவரம் ராம ஜென்ம பூமிக்காக நடைபெறவில்லை. இக்கலவரம் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து நிர்மோகி அகாரா ராம் சபுத்ராவில் கோவில் கட்டிக்கொள்ள தம்மை அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கிலும் ராம் சபுத்ராவைத்தான் ராமர் பிறந்த இடமாகக் கூறியதேயொழிய, பாபர் மசூதியை அல்ல.

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, இந்துக்கள் அத்தடுப்புச் சுவரின் அருகே நின்றுகொண்டு, பாபர் மசூதியின் மையக் கோபுரத்தை நோக்கி, ( மசூதியின் மையக் கோபுரத்தைத் தீர்ப்பில் கர்ப்பக் கிரகம் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.) வணங்கி வந்தனர்” என வாய்வழிச் செய்திகள் கூறுவதைக் காட்டி, இந்துக்களின் இந்நடவடிக்கை, அம்மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான்” என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு என்றும், மசூதியில் தமது உரிமையை நிலைநாட்டும் இந்துக்களின் முயற்சியென்றும் புது விளக்கம் அளித்திருக்கின்றனர். மேலும், 1857 முன்பாக பாபர் மசூதி அயோத்தி முஸ்லிம்களின் முழு அனுபவப் பாத்தியதையின் கீழ் இல்லை, இந்துக்கள் மசூதியினுள் சென்று வழிபாடு நடத்தியிருக்கின்றனர் என்பதையும் இவை காட்டுவதாகப் பொழிப்புரை எழுதியுள்ளனர்.

பாபர் மசூதி வளாகம் தடுப்புச் சுவர் மூலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ராம் சபுத்ரா அமைந்திருந்த வெளிப்புறப் பகுதி இந்துக்களின் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. அதில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை. அதேசமயம், வளாகத்தின் உட்புறப் பகுதியில் அமைந்திருந்த பாபர் மசூதியிலும் தமது உரிமையை நிலைநாட்டத் தொடர்ந்து முயன்று வந்தனர்” எனக் கூறுகிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

தேவகி நந்தன் அகர்வால்.

இந்துக்கள் வெளிப்புறப் பகுதியில் இருந்தபடியே மசூதியின் மையக் குவிமாடத்தை நோக்கி வணங்கி வந்தார்கள், பாபர் மசூதியைச் சுற்றி வலம் வந்து வணங்கினார்கள், தடுப்புச் சுவர் அருகே நின்றுகொண்டு பாபர் மசூதியை நோக்கி வணங்கினார்கள்” எனப் பட்டியல் இடும் நீதிபதிகள், இவற்றையெல்லாம் பாபர் மசூதியின் மீது தமக்குள்ள உரிமையை நிலைநாட்டும் இந்துக்களின் முயற்சிகளாகச் சித்தரித்துள்ளனர்.

இந்துக்கள் கடைப்பிடித்து வந்ததாகக் கூறப்படும் இந்த வழிபாடுகளுக்கு அப்பால், 1930 மசூதியின் குவிமாடத்தை இந்துக்கள் சேதப்படுத்தியது, 1949 மசூதியினுள் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டது உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகளையும் இந்துக்களின் முயற்சியாகச் சித்தரிக்கிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இந்த அடாவடித்தனங்களை ஒருபுறம் சட்டவிரோதச் செயல் எனத் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் நீதிபதிகள், இன்னொருபுறத்தில் இச்சட்டவிரோதச் செயல்களை இந்துக்களின் முயற்சியாகச் சித்தரிப்பது மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் மோசடியாகும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வாதப்படிப் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ். காலிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிரிமினல் குற்றத்தையும்கூட இந்துக்களின் முயற்சியாகக் கூறமுடியும். தீர்ப்பின் இம்மோசடியின் காரணமாகத்தான், பாபர் மசூதியை இடித்த முதன்மைக் குற்றவாளியான அத்வானி, தீர்ப்பு வெளிவந்தவுடனேயே, மசூதி குறித்த தனது நிலைப்பாடு சரியானது” என நிரூபிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

1855 அயோத்தியில் இந்து  முஸ்லிம் கலவரத்தையடுத்து, அப்பொழுது அவத் மாகாணத்தின் மன்னனாக இருந்த நவாப் வாஜித் அலி ஷா, அக்கலவரம் தொடர்பாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமரசத்தின் காரணமாகவே நிர்மோகி அகாரா பிரிவினர் ராம் சபுத்ராவை வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும், இந்துக்களின் வழிபாட்டில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை எனக் கூறுவதோ அப்பட்டமான பொய், வரலாற்றுத் திரிபு.

1949 பாபர் மசூதி வளாகத்திற்குள் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட
குழந்தை இராமன் சிலை.

நிர்மோகி அகாராக்கள் மசூதியின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு நிரந்தரமான மேடையை அமைத்து வழிபாடு நடத்தத் தொடங்கியது குறித்து பாபர் மசூதியில் தொழுகை நடத்திவைத்து வந்த மௌல்வி முகமது அஸ்கர் 30.11.1858 அன்று காலனிய நீதிமன்றத்திடம் புகாராகத் தெரிவித்திருக்கிறார். மேலும், 1860, 1877, 1883, 1884 ஆண்டுகளிலும் இந்துக்களின் வழிபாடு குறித்துப் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. (அயோத்தி: இருண்ட இரவு, பக்.90) இவையெல்லாம் ராம் சபுத்ரா பகுதியில் தமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முஸ்லிம்கள் எடுத்த முயற்சிகளாக நீதிபதிகளின் காவி காமாலைக் கண்களுக்குத் தெரியவில்லை.

அப்படியே அவர்கள் தலையீடு செய்யவில்லை எனக் கொண்டால், அது அயோத்தி முஸ்லிம்களின் பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும்தான் எடுத்துக்காட்டுகிறது. ஒருபுறம் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் முஸ்லிம்களின் இப்பெருந்தன்மையை நன்றியறிதலோடு அங்கீகரிக்கவில்லை என்பதோடு, முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை என்ற பொய்யைச் சொல்லி முஸ்லிம்களின் சொத்தான பாபர் மசூதி வளாக நிலத்தைக் கயமைத்தனமாக அபகரித்துக் கொண்டிருக்கிறது.

மேலும், 1857 பின் மசூதியின் வெளிப்புறப் பகுதியில் இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமைதான் வழங்கப்பட்டது. அந்த வழிபாட்டு உரிமையை சொத்தின் மீதான உரிமையாக கிரிமினல்தனமான முறையில் மடைமாற்றிவிட்டது, உச்ச நீதிமன்றம்.

அரசியல் சாசனத்தின் இந்து ஆன்மா

வெறும் உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து மசூதியைச் சட்டரீதியில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த வழக்கைக் கொண்டு வருவதன் மூலம்தான் சட்டப்படியே இதனைக் கைப்பற்ற முடியும் என்ற சூட்சுமம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த தேவகி நந்தன் அகர்வாலுக்கு மட்டுமே புரிந்திருந்தது.

உரிமையியல் சட்ட விதி 32 இந்துக் கோயிலின் கடவுள் சிலை சட்டரீதியான ஒரு நபராகவும், நிரந்தரமான மைனராகவும் கருதப்படுகிறது. ஒரு சிலை என்ற முறையிலும் மைனர் என்ற முறையிலும் அது தானே தனக்காகப் பேசும் ஆற்றலற்றது என்பதால், ஒரு காப்பாளர், அறங்காவலர் அல்லது பக்தர் மூலமாக மற்றவர்கள் மீது வழக்கு தொடுக்கும் உரிமையைக் கடவுள் சிலை பெற்றிருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் இந்துக் கடவுளுக்கு வழங்கியிருக்கும் இந்த உரிமை இசுலாமிய, கிறித்தவ கடவுளர்களுக்கோ பிற மதக் கடவுளர்களுக்கோ கிடையாது. சட்டரீதியான இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டுதான் இந்த நில உரிமை வழக்கில் முதலில் தேவகி நந்தன் அகர்வாலும், அவர் இறந்த பிறகு விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த திரிலோகி நாத் பாண்டேயும் குழந்தை ராமரின் காப்பாளர் என்ற பெயரில் இணைந்து கொண்டனர்.

கடவுள் சிலை நிரந்தரமான மைனர் என்ற சட்டத் தகுதியைப் பெற்றிருப்பதால், உரிமையியல் வழக்கில் விதிக்கப்படும் கால வரம்பு என்பது கடவுளுக்குக் கிடையாது. இந்த அடிப்படையில்தான், 1949 எழுந்த பிரச்சினைக்கு 1989 இல் இராமபிரானின் சார்பில் தேவகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த மனுவை அனுமதிக்கத்தக்கதாக உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இந்துக் கடவுள் பெற்றிருக்கும் இந்தச் சிறப்புரிமையை அரசியல் சட்டத்தின் 25, 26 பிரிவுகள் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை ராமனின் சிலை கள்ளத்தனமாக மசூதியினுள் வைக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, அப்படிக் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட சிலைக்கு இறைத்தன்மையை வழங்க முடியாது; சுயம்புவாகத் தோன்றிய கடவுளர்க்குத்தான் சட்டபூர்வத் தகுதியை வழங்க முடியுமேயொழிய குழந்தை ராமருக்கு வழங்க முடியாது” என சன்னி வாரியத்தின் சார்பாக வழக்காடிய மூத்த வழக்குரைஞர் ராஜிவ் தவான் மறுப்புத் தெரிவித்ததை, பக்தனின் நம்பிக்கையில் குறுக்கிட முடியாது என்ற காரணத்தைக் கூறி உச்ச நீதிமன்றம் புறக்கணித்துவிட்டது.

மசூதி சட்டவிரோதமானது, கோவிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டியிருக்கிறார்கள், ராம ஜென்மபூமி என்ற நிலப்பகுதியே சட்டபூர்வ நபர்” எனக் குழந்தை ராமரின் தரப்பில் வாதிடப்பட்டு, நிலத்தின் மீதான உரிமை கோரப்பட்டது. இம்மூன்று வாதங்களையுமே நிராகரித்திருக்கும் உச்ச நீதிமன்றம், நிலத்தின் மீது குழந்தை ராமர் தரப்பு உரிமை கோருவதையும் நிராகரித்திருக்க வேண்டும். ஆனால், இத்தர்க்க நியாயத்திற்கு முரணாக, பாபர் மசூதியின் மைய மாடத்தின் நேர் கீழேதான் ராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நிலத்தை குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறது.

இந்த நம்பிக்கைக்குச் சட்டப்படியான அங்கீகாரம் அளிக்கும் பொருட்டு, சட்டத்தின் சந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாபர் மசூதி கட்டப்பட்ட 1528-ம் ஆண்டு தொடங்கி 1857 முடியவுள்ள காலக்கட்டத்தில் அதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியதற்கான சாட்சியங்கள் எதுவுமில்லை. அதேசமயம், 1857 முன்பே பாபர் மசூதியில் ராமரை இந்துக்கள் வழிபட்டு வந்ததற்கு டிஃபேன்தாலர், மார்டின் ஆகியோரின் பயணக் குறிப்புகள் உள்ளிட்டுப் பல சான்றுகள் உள்ளன என எடுத்துக்காட்டி, அவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்தும் (preponderence of probabilites);

இராமர் கோயில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிசத் அடுக்கி வைத்திருக்கும் தூண்கள்.

1857-க்கு பின், ராம் சபுத்ரா, சீதாவின் சமையலறை ஆகியவை அமைந்திருந்த பாபர் மசூதி வளாகத்தின் வெளிப்புறப் பகுதி இந்துக்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை. அதேபொழுதில் 1857-க்கு பின் பாபர் மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திவந்தபோதும், ராமனின் பிறப்பிடம் என்ற நம்பிக்கையில் பாபர் மசூதியில் தமது உரிமையை நிலைநாட்ட இந்துக்கள் தொடர்ந்து முயன்று வந்துள்ளனர் என்ற அடிப்படையில் அதற்குக் கூடுதல் அனுகூலம் (balance of probabilites) அளித்தும் பாபர் மசூதி வளாகத்தைக் குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

சட்டப்படியான இந்த அனுகூலத்தையும், முக்கியத்துவத்தையும் இந்து தரப்புக்கு அளிப்பதற்கு மத நம்பிக்கை, புராணங்கள், வெளிநாட்டுப் பயணக் குறிப்புகள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றைத் தமது நோக்கத்திற்கு ஏற்ப நைச்சியமாகப் பயன்படுத்திக்கொண்ட நீதிபதிகள், முஸ்லிம்கள் தரப்பில் நின்று சன்னி வாரியம் அளித்த பல சான்றுகளை மட்டையடியாக மறுத்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். அடியாட்படை

இந்தத் தீர்ப்பு வேறுவிதமாக, அதாவது முஸ்லிம்களுக்குச் சாதகமாக வருவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது என்பதை பாபர் மசூதி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் கடந்த கால  அணுகுமுறையில் இருந்தே யாரும் புரிந்துகொள்ள முடியும்.

கோவிலை அங்கேயே கட்டுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகள் இந்து மதவெறியைத் தூண்டிவருவதை அறிந்திருந்தும், 1992, டிசம்பரில் பாபர் மசூதி வளாகம் அருகே பூமி பூஜை செய்வதற்கு சங்கப் பரிவாரக் கும்பலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அக்கும்பலோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திட்டமிட்டபடி பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதோடு, அந்த இடிபாடுகளின் மீதே குழந்தை ராமருக்கு ஒரு தற்காலிகக் கோவிலையும் அமைத்தது.

பாபர் மசூதிக்குள் குழந்தை ராமர் சிலைக் கள்ளத்தனமாக வைக்கப்பட்டதை ஃபைசாபாத் மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது என்றால், மசூதியை இடித்துவிட்டு அமைக்கப்பட்ட அத்தற்காலிகக் கோவிலுக்கு அங்கீகாரம் அளித்தது, உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய பாபர் மசூதி இறுதித் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு கட்சிகள் சார்பில் கோவையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அப்பொழுது இருந்த காங்கிரசு அரசு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டமொன்றை இயற்றியது. இந்தியா சுதந்திரமடைந்த 1947 எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எந் தெந்த மதத்தினருக்குச் சொந்தமாக இருந்ததோ, அதனை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது என அச்சட்டம் கூறினாலும், இந்து மதவெறிக் கும்பலின் ராம ஜென்மபூமி அரசியலுக்குச் சாதகமாக, அதில் பாபர் மசூதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்தச் சட்டத்திற்கும் அதில் அளிக்கப்பட்ட விதி விலக்கிற்கும் உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

பாபர் மசூதி வளாக நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அந்நடவடிக்கைச் சரியா, தவறா எனத் தீர்ப்புக் கூறுவதற்கு அப்பாலும் சென்று, இசுலாம் மதத்தைப் பின்பற்றுவதற்கும் தொழுகை நடத்துவதற்கும் மசூதி என்பது அவசியமான ஒன்றல்ல. முஸ்லிம்கள் திறந்தவெளியில்கூடத் தொழுகை நடத்தலாம்” என அத்தீர்ப்பில் குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம்.

பாபர் மசூதி நில உரிமை மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, மசூதி குறித்து உச்ச நீதிமன்றம் கூறியிருந்த இந்தக் கருத்தை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென முஸ்லிம் தரப்பினர் வாதிட்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இதற்கு நேர்எதிராக, இந்து மதம் குறித்து சங்கப் பரிவார அமைப்புக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்துத்துவா அல்லது இந்துயிசம் என்பது மதம் என்ற குறுகிய பொருள் கொண்டதல்ல, அது இந்திய வாழ்க்கை முறை” என இந்து மத உணர்வைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது குறித்த வழக்கொன்றில் குறிப்பிட்டது, உச்ச நீதிமன்றம்.

1992 ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அப்பொழுதிருந்த நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த மைய அரசு, அவ்விடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தவும், அவ்வாராய்ச்சியின் முடிவுப்படி அந்த இடத்தின் உரிமை யாருக்கு எனத் தீர்மானிக்கவும் முடிவு செய்து, இது பற்றிக் கருத்துக் கூறுமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றம் இவ்விடயத்தில் கருத்துக்கூற மறுத்துவிட்டது. எனினும், 2003 அலகாபாத் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தை அணுகாமலேயே, தன் விருப்பப்படி பாபர் மசூதி வளாகத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட்டது. தானே சம்மதம் தெரிவிக்காத அந்த அகழாய்வு முடிவுகளைத்தான் ஆதாரமாக உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

பாபர் மசூதி மேல்முறையீட்டு வழக்கை எடுத்துக் கொண்டால், அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது மட்டும்தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னிருந்த கேள்வி. ஆனால், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளோ அந்த வரம்பையும் தாண்டி, மைய அரசு மூன்று மாதங்களுக்குள் ஓர் அறக்கட்டளையை அமைத்து, அதனிடம் நிலத்தை ஒப்படைத்து, கோவில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! அச்சுநூல்
மோடியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ! என்ன செய்யப் போகிறோம் ? PRPC 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! – செய்தி | படங்கள்

ராமர் பிறந்த இடத்தில் மசூதியா?” என்ற பொய்யைச் சொல்லித்தான் மசூதியை இடித்தது ஆர்.எஸ்.எஸ். அங்குதான் ராமன் பிறந்தான்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளித்து, அந்த நிலத்தில் கோவிலை கட்டச் சொல்லித் தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பொய்ப் பிரச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கிவிட்டது உச்ச நீதிமன்றம்.

அயோத்தியில் ராமர் கோவில், 370 ரத்து செய்வது, ஒரே சிவில் சட்டம்  இந்த மூன்றும்தான் ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க.வின் உயிராதாரமான திட்டங்கள்.

இவற்றுள் ராமர் கோவில் திட்டத்தை உச்ச நீதிமன்றமே நிறைவேற்றிக் கொடுத்துவிட்டது.

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு ஒரே சிவில் சட்டம் என்பதல்ல ஆர்.எஸ்.எஸ்.  இன் நோக்கம். முஸ்லிம்களுக்குத் தனிச்சலுகை வழங்கும் சிவில் சட்டங்களை ஒழிப்பதுதான் அதனின் எண்ணம். முத்தலாக் மணமுறிவு முறையைச் சட்டவிரோதமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த சிவில் விவகாரத்தைக் கிரிமினல் குற்றமாக்கிவிட்டது, மோடி அரசு.

அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 370 செயலற்றதாக்கியிருக்கும் மோடி அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்துவருகிறது. இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களிடமிருந்து பாபர் மசூதி நிலத்தை அபகரித்துவிட்ட உச்ச நீதிமன்றம், காஷ்மீர் மக்களிடமிருந்து 370 பிரிவு அபகரிக்கப்பட்ட நடவடிக்கையைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் நியாயப்படுத்திவிடாதா என்ன?

இவை மட்டுமின்றி, தேசியக் குடியுரிமைப் பதிவேடு வழக்கு, ரஃபேல் ஊழல் வழக்கு, நீதிபதி லோயாவின் சந்தேகத்திற்குரிய மரணம் குறித்த வழக்கு, மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு குறித்த வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த மீளாய்வு எனப் பல்வேறு வழக்குகளிலும் பா.ஜ.க.விற்குச் சாதகமாகவே உச்ச நீதிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இத்தீர்ப்பு ஒருமனதாக அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பினும், தீர்ப்பை எழுதிய நீதிபதி யார் என்ற விவரம் மறைக்கப்பட்டு, நீதிமன்ற மரபு மீறப்பட்டிருக்கிறது. மேலும், இந்து மத நம்பிக்கைகளைக் கொண்டாடும் தீர்ப்பின் இணைப்பை எழுதிய நீதிபதியின் பெயரும் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. இவை, தீர்ப்பு மண்டபத்தில் எழுதப்பட்டு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டிருக்கிறதா என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

இந்திராவின் அவசர நிலைக்கால ஆட்சிக்குத் துணை நின்ற குற்றத்தை இழைத்த உச்ச நீதிமன்றம், இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க.வின் இந்து ராஷ்டிர கனவை நிறைவேற்றிக் கொடுக்கும் அடியாட்படையாகச் செயல்படுகிறது. ராமன் பிறப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியிருக்கும் பொய்மையின் அடிப்படையில் அளிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு அதனை உறுதிப்படுத்துகிறது.

செல்வம்.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

ஆடம் ஸ்மித் : ஸ்காட்லாந்து அறிஞர் | பொருளாதாரம் கற்போம் – 49

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 49

ஸ்காட்லாந்து 

அ.அனிக்கின்

டம் ஸ்மித் ஸ்காட்லாந்துக்காரர்; அதற்கும் மேலாக அவர் அழுத்தமான தேசிய குணாம்சத்தைப் பெற்றிருந்த எடுத்துக்காட்டான ஸ்காட்லாந்துக்காரர் என்பவற்றைப் புரிந்து கொண்டால்தான் அவருடைய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பது அடிக்கடி சொல்லப்படுகிற கருத்தாகும்.

பிரெஞ்சு எழுத்தாளரான ஆந்திரே மொருவா பெனிசிலின் மருந்தைக் கண்டு பிடித்தவரும் மற்றொரு மாபெரும் ஸ்காட்லாந்துக்காரருமான அலெக்சாந்தர் பிளெமிங்கைப் பற்றித் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலைப் பின்வரும் சொற்களோடு ஆரம்பிக்கிறார்: ”ஸ்காட்லாந்துக்காரர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல, அவ்வாறு நினைப்பது தவறாகும்.” கடுமையான உழைப்பு, சிக்கனம், கருமித்தனம் ஸ்காட்லாந்தினரின் தேசிய குணங்களின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஸ்காட்லாந்துக்காரர்கள் நிதானமானவர்கள், அதிகமாகப் பேசமாட்டார்கள், காரியத்தில் குறியாக இருப்பவர்கள், சூக்குமமான விஷயங்களை விவாதிக்கக் கூடியவர்கள், ‘தத்துவச் சிந்தனையில்” லயித்திருப்பவர்கள் என்றும் கருதப்படுகிறது.

ஸ்காட்லாந்துக்காரர்களின் தேசிய குணாம்சங்களைப் பற்றி இப்படிப்பட்ட அலுத்துப்போன வர்ணனை எந்த அளவுக்கு உண்மையானது என்பது முக்கியமல்ல. ஆனால் ஸ்மித்தையும் அவருடைய கருத்துக்களின் தனிவகையான தன்மையையும் புரிந்து கொள்வதற்கு அவருடைய வாழ்நாளின் போது ஸ்காட்லாந்து மற்றும் அந்த நாட்டு மக்களின் நிலையை விளக்குவது முக்கியமாகும்.

1707 -ம் வருடத்தில் இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் இணைக்கின்ற மசோதா சட்டமாயிற்று. அந்தச் சட்டம் இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலுமிருந்த முதலாளிகள், வணிகர்கள், பணக்கார விவசாயிகளுக்கு நன்மை செய்தது; அவர்களுடைய செல்வாக்கும் இந்த சமயத்தில் கணிசமாக உயர்ந்தது. இரு நாடுகளுக்கும் இடையே இருந்த சுங்கத் தடைகள் அகற்றப்பட்டன, இங்கிலாந்தில் ஸ்காட்லாந்துக் கால்நடைகளின் விற்பனை அதிகரித்தது, அமெரிக்காவிலிருந்த ஆங்கிலக் குடியேற்றங்களோடு வர்த்தகம் செய்கின்ற வாய்ப்பு கிளாஸ்கோ நகரத்தைச் சேர்ந்த வணிகர்களுக்குக் கிடைத்தது. இந்தக் காரணங்களுக்காக ஸ்காட்டிஷ் முதலாளிகள் தங்களுடைய தேசபக்தியை ஓரளவுக்குக் குறைத்துக் கொள்வதற்குத் தயாராக இருந்தார்கள்; ஏனென்றால் ‘யுனைட்டெட் கிங்டம்’ என்ற புதிய கூட்டில் ஸ்காட்லாந்துக்கு இரண்டாம் நிலைப் பாத்திரமே இருக்க வேண்டும்.

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து இணைவை குறிக்கும் கொடி.

ஆனால் இதற்கு மாறாக, ஸ்காட்டிஷ் நிலப்பிரபு மேன் மக்களில் பெரும் பகுதியினர் இந்தக் கூட்டை எதிர்த்தார்கள். ஸ்காட்லாந்தின் மலைப் பகுதிகளில் இன்னும் பழைய இனக் குழு அமைப்பின் எச்சங்களோடு நிலப்பிரபுத்துவ அமைப்பில் வாழ்ந்து கொண்டிருந்த விசுவாசமும் வீர உணர்ச்சியும் கொண்ட மக்களின் உதவியோடு அவர்கள் சில தடவைகள் கலகம் செய்தார்கள். ஸ்காட்லாந்தில் பொருளாதார ரீதியில் அதிகமான வளர்ச்சியடைந்த கீழ்ப் பிரதேச மக்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. எனவே அவர்கள் ஆரம்பித்த கலகம் ஒவ்வொரு தடவையும் தோல்வியில் முடிந்தது.

இணைப்புக்குப் பிறகு ஸ்காட்லாந்தின் பொருளாதார வளர்ச்சி வேகமாக முன்னேறியது; எனினும் சில துறைகள் இங்கிலாந்தின் போட்டியினால் பாதிக்கப்பட்டன, நிலப்பிரபுத்துவ மரபின் எச்சங்களால் வேறு சில துறைகள் பாதிக்கப்பட் டன. கிளாஸ்கோ நகரமும் துறைமுகமும் குறிப்பிடத்தக்க வகையில் வேகமாக வளர்ச்சியடைந்தன; துறைமுகத்தைச் சுற்றி வளர்ச்சியடைந்த தொழில் துறை பிரதேசம் ஏற்பட்டது. கிராமங்களிலும் மேல் நிலப்பகுதிகளிலுமிருந்து கிடைத்த மலிவான உழைப்பும் ஸ்காட்லாந்திலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட விரிவடைந்த சந்தைகளும் தொழில் துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தன. பெரும் நிலவுடைமையாளர்களும் பணக்காரக் குத்தகைக்காரர்களும் விவசாய முறைகளில் அபிவிருத்திகளைச் செய்யத் தொடங்கினர். இணைப்பு ஏற்பட்ட 1707ம் வருடத்துக்கும் நாடுகளின் செல்வம் வெளியிடப்பட்ட 1776ம் வருடத்துக்கும் இடையிலுள்ள எழுபது வருடங்களில் ஸ்காட்லாந்து கணிசமான அளவுக்கு மாறிவிட்டது.

படிக்க:
இந்திய ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மன் மாணவரின் கல்வி முடக்கம் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டம் !

பொருளாதார முன்னேற்றம் அநேகமாக ஸ்காட்டிஷ் கீழ்நிலப் பகுதிகளில் மட்டுமே ஏற்பட்டிருந்தது என்பது உண்மையே. இங்கே, கெர்க்கால்டி, கிளா ஸ்கோ, எடின்பரோ என்ற முக்கோணப் பகுதிக்கு இடையில் தான் அநேகமாக ஸ்மித்தின் வாழ்க்கை முழுவதுமே கழிந்தது .

ஸ்மித் தன்னுடைய சிந்தனையின் முதிர்ச்சியை அடைந்த சமயத்தில் ஸ்காட்லாந்தின் தலைவிதியை இங்கிலாந்தோடு பிரிக்க முடியாத வகையில் பொருளாதாரம் பிணைத்துவிட்டது. ஒன்றுபட்ட முதலாளித்துவ தேசியம் உருவாகிவிட்டது. எல்லாவற்றையுமே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, “நாட்டின் செல்வம்” ஆகிய இனங்களின் வழியாகப் பார்த்த ஸ்மித்துக்கு இது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அவரைப் பொறுத்தவரையிலும், ஸ்காட்டிஷ் தேசபக்தி என்பது அறிவிற் சிறந்த மற்ற ஸ்காட்லாந்துக்காரர்களைப் போலவே – உணர்ச்சி ரீதியான, ”கலாச்சார” வடிவத்தை அடைந்தது, அரசியல் வடிவம் பெறவில்லை.

சமூக வாழ்க்கையிலும் அறிவுத் துறையின் மீதும் திருச்சபை மற்றும் மதத்தின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. பல்கலைக்கழகங்களின் மீது கொண்டிருந்த ஆதிக்கத்தைத் திருச்சபை இழந்து விட்டது. ஸ்காட்லாந்திலிருந்த பல்கலைக்கழகங்கள் அவற்றின் சுதந்திரமான சிந்தனை உணர்ச்சியிலும் மதத்துறை சாராத விஞ்ஞானங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்திலும் செய்முறையை வலியுறுத்தியதிலும் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழகங்களிலிருந்து வேறுபட்டிருந்தன. இவைகளைப் பொறுத்த வரையிலும் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் -ஸ்மித் படித்ததும் பிறகு ஆசிரியராகப் பணியாற்றியதும் இங்கு தான்- தனிச் சிறப்போடு விளங்கியது. நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்தவரான ஜேம்ஸ் வாட்டும் நவீன இரசாயனத்தை நிறுவியோரில் ஒருவரான ஜோசப் பிளாக்கும் அங்கே அவரோடு பணி புரிந்துவந்ததோடு அவருக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.

கிளாஸ்கோ பல்கலைக்கழகம்

18-ம் நூற்றாண்டின் ஐம்பதுக்களில் ஸ்காட்லாந்தில் கலாச்சாரப் பேரெழுச்சிக் கட்டம் தொடங்கியது; விஞ்ஞானம், கலை ஆகியவற்றின் பல்வேறு துறைகளில் அதைக்காண முடியும். சின்னஞ் சிறிய ஸ்காட்லாந்து ஐம்பது வருட காலத்தில் உற்பத்தி செய்த மாபெரும் அறிஞர்களின் பட்டியல் மிகச் சிறப்பானதாகும். நாம் முன்னர் குறிப்பிட்ட அறிஞர்களைத் தவிர, அந்தப் பட்டியலில் பொருளியலாளர் ஜேம்ஸ் ஸ்டுவர்ட், தத்துவஞானி டேவிட் ஹியூம், வரலாற்றாசிரியர் வில்லியம் இராபர்ட்சன், சமூகவியல் அறிஞரும் பொருளியலாளருமான ஆடம் பெர்குசன் ஆகியோர் அதில் அடங்குவர். புவிஇயல் வல்லுநரான ஜேம்ஸ் ஹட்டன், புகழ்மிக்க மருத்துவ நிபுணரான வில்லியம் ஹன்டர், கட்டிடக்கலை நிபுணரான இராபர்ட் ஆடம் ஆகியோருடன் ஸ்மித் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். இவர்களுடைய செல்வாக்கும் இவர்கள் எழுதிய நூல்களின் தாக்கமும் ஸ்காட்லாந்து மற்றும் பிரிட்டிஷ் தீவுகளின் எல்லைகளுக்கு அப்பால் வெகுதூரம் பரவின.

இத்தகைய சூழ்நிலையில் ஆடம் ஸ்மித்தினுடைய மேதை வளர்ச்சி அடைந்தது. அவர் ஸ்காட்லாந்தின் கலாச்சாரத்தை மட்டும் ஈர்த்துக் கொள்ளவில்லை என்பது இயற்கையே. அவர் கலப்பற்ற ஸ்காட்லாந்தியத் தாக்கங்களுக்கு உட்பட்டதைப் போலவே ஆங்கில விஞ்ஞானம், கலாச்சாரம் – குறிப்பாக ஆங்கிலத் தத்துவஞான மற்றும் பொருளாதாரச் சிந்தனை – ஆகியவற்றின் தாக்கங்களாலும் உருவாக்கப்பட்டார்.

செய்முறை நோக்கத்தைக் கொண்டு பார்க்கும் பொழுது, அவருடைய புத்தகம் முழுவதுமே “யுனைட்டெட் கிங்டமின்”, லண்டன் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் மீது ஒரு குறிப்பிட்ட (வாணிப ஊக்கக் கொள்கைக்கு எதிரான) தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கடைசியாக அவர் மீது ஏற்பட்டிருந்த மற்றொரு வகையான தாக்கத்தையும் குறிப்பிட வேண்டும். அது பிரெஞ்சுத் தாக்கமாகும். மேரி ஸ்டுவர்ட்டின் காலத்திலிருந்து பிரான்சோடு மரபுவழிப்பட்ட இணைப்புக்களைத் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கும் ஸ்காட்லாந்தில் பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் தாக்கம் இங்கிலாந்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. மொன்டெஸ்க்யூ, வால்டேரின் புத்தகங்களை ஸ்மித் நன்கு படித்திருந்தார்; ருஸ்ஸோவின் ஆரம்ப காலப் புத்தகங்களையும் கலைக்களஞ்சியவாதிகளின் ஆரம்பகால வெளியீடுகளையும் அவர் அதிகமான உற்சாகத்தோடு வரவேற்றார்.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

தொல்.திருமாவளவன் | மதம் | ஸ்டெர்லைட் வழக்கு | அரபுலகம் | கேள்வி – பதில் !

கேள்வி : இன்றைய அரசியல் தலைவர்களில் முனைவர் தொல்.திருமாவளவன் ஆளுமையும், அறிவாற்றலும் மகத்தானது அப்படியிருக்க ஊடகங்களாலும், நாளேடுகளாலும் எது அவரை மறைக்கடிக்கப்படுகிறது?

வேல்முருகன் சுப்பிரமணியன்

ன்புள்ள வேல்முருகன் சுப்பிரமணியன்,

நீங்கள் சொல்வது போல அவர் ஊடகங்களால் மறைக்கப்படுவது இல்லையே! தொண்ணூறுகளில் தமிழ் இந்தியா டுடே, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற இதழ்களின் அட்டைப் படத்தில் அவரது நேர்காணல்கள் இடம்பெற்றன. விசிக ஒரு அரசியல் கட்சியாக துவங்கிய பின்னர் ஊடகங்கள் அவரை தொடர்ந்து கவனம் கொடுத்து வெளியிடுகின்றன.

செய்தித் தொலைக்காட்சிகளிலும் அவரது நேர்காணல்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களிலும் பொதுவானவர்களால் அவர் மதிக்கப்படுகின்ற ஒரு தலைவராகவே இருக்கிறார்.

இவையெல்லாம் நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் சாத்தியமில்லை. அப்போது இருந்த தலித் கட்சிகளின் தலைவர்களெல்லாம் ஊடகங்களால் தனிச்சிறப்பாக கவனிக்கப்படுவதில்லை.

பொதுவாகவும் ஒரு சீர்திருத்த முறையிலும் நடக்கும் பொருளாதார வளர்ச்சி, கொடியங்குளம் போன்று ஆதிக்க சாதி எதிர்ப்பு போராட்டங்களின் பங்களிப்பு காரணமாக இந்த மாற்றம் நடந்திருக்கிறது. அதே நேரம் தேர்தல் அரசியல் வெளியில் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தனியாகவோ தீர்மானகரமாகவோ செல்வாக்கு செலுத்த இயலாத நிலை காரணமாக உங்களுக்கு அப்படித் தோன்றலாம்.

சமூக ரீதியில் பார்ப்பனியத்தின் சாதிக் கட்டுமானம் அனைத்து துறைகளிலும் செல்வாக்கு செலுத்தும் போது அது வாக்கு வங்கி அரசியலில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. வாக்கு வங்கி அரசியல் மூலம் சாதி தீண்டாமை பிரச்சினைகளை தீர்க்க இயலாது என்பதன் பின்னாலும் திருமாவளவனின் வரம்புகள் அடங்கிப் போய்விடுகின்றன. சமூகத்தைப் புரட்டிப் போடுகின்ற போராட்டம் நடக்காதவரை இத்தகைய சாதி ரீதியான பாகுபாடுகள் ஏதோ ஒரு வகையில் இருக்கவே செய்யும்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !
♦ வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !

♦ ♦ ♦

கேள்வி : மனிதனுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பௌத்தம், மற்றும் பல மதங்கள் இருக்கும் போது, மிருகங்களும், பறவைகளும் எந்த மதம்???

ஜெ. ஜெகதீசன்

ன்புள்ள ஜெகதீசன்,

கடவுளும், மதங்களுமே மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் போது விலங்கு – பறவைகளுக்கான ‘மதங்களை’ மனிதர்கள்தான் ஒதுக்க வேண்டும். சமாதானத்தின் குறியீடாக புறாக்களை நாம்தான் பயன்படுத்துகிறோம்.

ஆனால் புறாக்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்க வாய்ப்பில்லையே! போலவே மனித சமூக வளர்ச்சியில் ஆதி காலத்தில் இனக்குழுக்களாக இருந்த மக்கள் தத்தமது குலத்தின் அடையாளமாய் தமது பகுதியில் தம் வாழ்வோடு பிணைந்தும் அதிகமிருந்தும் திகழ்ந்த விலங்கு, பறவைகளை வைத்துக் கொண்டனர்.

அவற்றை தெய்வமாக கற்பித்தும் வணங்கினர். இந்து மதத்தில் சேவல், பெருச்சாளி, மயில், பசு, புலி, சிங்கம், நந்தி போன்றவை தெய்வங்களின் வாகனமாய் மாறியதும் அப்படித்தான்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : ஸ்டெர்லைட் ஆலையைத்தான் தமிழக அரசு மூடி விட்டதே… அப்புறம் ஏன் வழக்கு நடக்கிறது?

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

தமிழக அரசு மூடியது சட்ட விரோதமென வேதாந்தா உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வை ஒட்டி மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாகவும் நீதிமன்றங்களின் இடையூறு இன்றியும் மூடுவதற்கு தமிழக அரசு இங்கே தாமிர உற்பத்திக்கு இடமில்லை என்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இல்லையேல் வேதாந்தா சுலபமாக நீதிமன்றத்தில் வென்று விட்டு ஆலையை திரும்பவும் திறக்க முயற்சிக்கும். தற்போது அந்த திசையில்தான் வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. அடிமை எடப்பாடி அரசு அப்படி ஒரு கொள்கை முடிவு எடுக்காது. எடுக்க வைக்கவேண்டியது போராடும் தமிழக – தூத்துக்குடி மக்களின் கடமை!

நன்றி!

படிக்க:
கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி
♦ இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்

♦ ♦ ♦

கேள்வி : அரபு நாடான கத்தாரில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

பொதுவாக இங்கு (அனைத்து அரபு நாடுகள்) குடியுரிமை உள்ள அரபு நாட்டவா்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் அளவுக்கு வசதியாக வச்சுருக்காங்க.

நாட்டின் நிர்வாகமும் சீா் கெடாமல் இருக்கு. தப்பு பண்ணகூடாதுன்னு ஒரு பயம் இருக்கு.

ஒரு வேளை இங்க பிரச்சனை இருந்தாலும் நமக்கு தெரியாத மாதிரி பாத்துக்குறாங்களா?

இந்த மாதிரி நம்ம (இந்தியா) ஜனநாயக நாட்ல இல்ல.

இது ஜனநாயகத்தின் தோல்வியா இல்ல மன்னராட்சியின் வெற்றியா?

இதனால தான் உலகம் முழுவதும் வலது சாரி சிந்தனை சரியா இருக்கும்னு தோணுதா.

இது மனித நேயத்துக்கு விரோதமானதா ?

அப்டினா சிறுபான்மை மக்கள் எங்க போவாங்க?

சீனா இடது சாரி. அவுங்க பொருளாதாரம் பிரச்சனை இல்லாம தான இருக்கு…

பொன்ராஜ்

ன்புள்ள பொன்ராஜ்,

இருபதாம் நூற்றாண்டில் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, எண்ணெய் பொருளாதாரம் வந்து விட்டது. அதன் செல்வத் திளைப்பில் அனைத்து வளைகுடா நாடுகளும் செழிக்கின்றன. அந்த செழிப்பின் வலிமை கொண்டு ஆளும் ஷேக்குகள் தத்தமது நாட்டின் மக்களுக்கு கொஞ்சக் கிள்ளிக் கொடுக்கின்றனர். அதுவே பெரிய சலுகையாக, போதுமான வசதியாக இருக்கிறது.

மாதிரிப் படம்

வளைகுடா நாடுகளில் நம்மைப் போன்ற ஏழை நாடுகளின் மக்களே அனைத்து துறைகளிலும் பணியாட்களாக இருக்கின்றனர். வளைகுடா மண்ணின் மைந்தர்கள் அதற்கு மேற்பட்ட வேலைகளில் இருக்கின்றனர். ஆளும் ஷேக்குகள் ஆண்டைகள் என்றால், ஆளப்படும் அரபு மக்கள் சூபர்வைசர்கள், பணிக்கு வந்த வெளிநாட்டு மக்களோ கூலி அடிமைகள்…!

வளைகுடா நாடுகளில் பலவற்றில் மன்னாராட்சி நீடிப்பதற்கு அமெரிக்காவின் ஆசியும், வர்த்தக நலனும் முக்கிய காரணம். எண்ணெய் பொருளாதாரம் முழுவதும் அமெரிக்க பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஜனநாயகத்தை மறுத்து விட்டு ஆட்சி நடத்தும் ஷேக்குகளை அமெரிக்கா எப்போதும் கைவிடாமல் ஆதரித்து வருகிறது.

மறுபுறம் தமது உள்நாட்டு மக்களிடம் இஸ்லாமிய ஆட்சி, ஷரியத் சட்டங்கள் என்று மதவாதத்தை கிளறிவிட்டும் மன்னர்கள் தத்தமது ஆண்டைத்தன ஆட்சியை தொடர்கின்றனர். இந்த வகாபியிசத்தின் முன்னிலைப்படுத்தலுக்கும் அமெரிக்காவே காரணமாக இருக்கிறது.

நீங்கள் பணிபுரியும் கத்தார் நாட்டில் 2022-ம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்க இருக்கிறது. இதற்காக தனிநகரையே உருவாக்கி வருகிறது கத்தார். இதற்கான கட்டிட இதர அடிக்கட்டுமான வேலைகளுக்காக ஆசிய ஏழை நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான தொழிலாளிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் கொடிய பணிச்சுமை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர் அதாவது இறந்து போயுள்ளனர்.

ஐம்பது டிகிரி வெப்பத்தில் 12 முதல் 15 மணி நேரம் வேலை செய்யும் இத்தொழிலாளிகளின் நிலைமை ஒரு கொத்தடிமையைப் போன்றது. வேலையை விட்டு ஓட முயன்றால் சிறை. இது குறித்த விரிவான கட்டுரையை இணைப்பில் படிக்கவும்.

இந்த நிலைமை அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் பொருந்தும். அதே கத்தாரில் நீங்கள் பணிபுரிந்தாலும் இந்த அடிமை உலகம் உங்களது கண்களில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது இந்தியா ஏழை நாடாக இருந்தாலும் இங்கே ஏழைகளுக்கு குரல் கொடுக்கும் குறைந்தபட்ச உரிமையையாவது இங்குள்ள பெயரளவு ஜனநாயகம் வழங்குகிறது. அங்கே அது கூட இல்லை!

எனவே அங்குள்ள குடிமக்களுக்கு இருக்கும் சலுகைகள் சுரண்டலிலிருந்து கிடைக்கும் கழிவுத் தொகை. அங்கிருக்கும் கறாரான நீதி நிர்வாகம் கூலித் தொழிலாளிகளை கொல்வதற்கும் ஒடுக்குவதற்கும் பயன்படுகிறது. இந்த நிர்வாகத்தின் மீதான பயம் பணிக்குச் சென்ற ஏழைத் தொழிலாளிகளின் ஏதுமற்ற அவலநிலையின் காரணமாக நிலவுகிறது.

அரபுலகில் இருக்கும் வலது சாரி மன்னராட்சிகளும், அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் வலதுசாரி ஜனநாயக ஆட்சிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. முன்னது அரசன், அரசு சார்பில் இருக்கும் நேரடி சர்வாதிகாரம். பின்னது சட்டம், ஜனநாயகத்தின் பெயரில் திகழும் மறைமுக சர்வாதிகாரம். இன்றைக்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் போராடி வருவது போல அரபுலகில் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு அங்குள்ளவர்களும் சரி, சென்றவர்களும் சரி போராடி விட முடியாது.

சீனா குறித்து ஏற்கனவே பதிலளித்துள்ளோம். அதையும் பாருங்கள்!

கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்

0
நா. வானமாமலை

ந்திய வரலாறு என்பது வேத – புராண – இதிகாசங்களின் வரலாறு என்று கூக்குரலிட்டு வருகிறது இந்துத்துவக் கும்பல். உண்மை வரலாற்றைத் திரித்து புராண இதிகாச கட்டுக்கதைகளை வரலாறாக மாற்றுவதற்காகவே வரலாறு, கல்வித்துறை துவங்கி கலைத்துறை வரையில் சங்க பரிவாரத்தினரை தலைமைப் பொறுப்பில் அமர வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக.

இத்தகைய காவி இருள் அடர்ந்திருக்கும் இன்றைய சூழலில், இந்த இருளை அகற்ற இன்று நம் கையில் போர்வாளாய் ஏந்த வேண்டிய கருத்தாயுதத்தை அம்பேத்கரும், பெரியாரும் வகுத்துத் தந்துள்ளனர். அவர்கள் மட்டுமின்றி இந்துத்துவவாதிகளின் பொய்யையும் புரட்டையும் அம்பலப்படுத்தும் விதமாக இந்திய சமூகத்தை வரலாற்றுரீதியாக ஆய்ந்து இந்துத்துவவாதிகளின், மனுவாதிகளின் பொய்யையும் புரட்டையும் பல்வேறு ஆய்வாளர்கள் தகர்த்தெறிந்துள்ளனர். அத்தகைய வரலாற்று ஆய்வாளர்களுல் முக்கியமானவர் பேராசிரியர் நா. வானமாமலை.

பண்டைய இந்தியாவின் நாத்திக மரபையும், பார்ப்பனியத்துக்கு எதிராக அது நடத்தி வந்த போரையும் மார்க்சிய ஒளியில் அன்றைய சமூக நிலைமைகளோடு இயைந்து இந்நூலில் விளக்கியுள்ளார், நா. வானமாமலை.

மார்க்சியப் பேரறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் “Indian Atheism” எனும் நூலில் இந்திய நாத்திக மரபு குறித்து அவர் எழுதியுள்ளவற்றில் அவர் விளக்காமல் விடுபட்ட பல்வேறு கூறுகளை மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் கூற்றுக்களை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளதாக இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் வானமாமலை.

பெரியாரின் 46-வது நினைவு நாளான இன்று இந்தத் தொடர் துவங்குவது தற்செயலான நிகழ்வாக இருந்தாலும், இந்துத்துவக் காரிருளை நீக்கவல்ல பேராயுதம் என்ற வகையில் இயல்பாகவே பொருந்தி வந்திருக்கிறது இந்நாள் !

ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களில் இந்தத் தொடர் வெளியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் !

தொடர்ந்து ஆதரவு தாருங்கள் !

நன்றி !

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 01

1. இந்தியத் தத்துவச் சிந்தனை முழுவதும் கடவுள் கொள்கையா?

”இந்தியாவின் தத்துவ சிந்தனை ஆன்மீக வாதத்தை, கடவுள் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது” என்ற நம்பிக்கையை கட்டுப்பாடாகப் பல தத்துவவாதிகளும், ஜகத் குருக்களும், புராணப் பிரசங்கிகளும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உதாரணமாக எஸ். ராதாகிருஷ்ணன் (1) தமது இந்திய தத்துவம் என்னும் நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்: “இந்திய தத்துவம் ஆன்மீகவயமானது. அதன் உள்ளார்ந்த ஆன்மீக வலிமைதான், காலத்தை வென்று, வரலாற்றில் தோன்றிய ஆபத்துக்களை மீறி இந்தியா நிலைத்து நிற்பதற்குக் காரணம். ஆன்மீக நோக்கு தான் இந்திய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. இந்திய மனத்தின் திடகாத்திரமான ஆன்மீக சிந்தனைதான் அதன் பண்பாட்டையும், தத்துவத்தையும் வழிப்படுத்துகிறது. ஜீவான்ம, பரமான்ம ஐக்கியத்திற்கான சிந்தனைகளும், முயற்சிகளுமே ஆன்மீக நோக்குகளின் செயல்பாட்டு வெற்றிக்குக் காரணமாகும்.”

பேராசிரியர் நா. வானமாமலை

“இந்த ஆன்மீகச் சிந்தனையே, மே நாட்டு விமர்சன அறிவியல், பொருள்முதல்வாதச் சிந்தனைகளுக்கு முரண்பட்டு நிற்கிறது. அந்தராத்மாவின் குரலாக இந்தியச் சிந்தனை இருப்பும், வளர்ச்சியும் அடைந்துள்ளது. மே நாட்டுச் சிந்தனை விஞ்ஞானம், தருக்கம், மனிதாபிமானம் ஆகிய கருத்துக்களில் அழுத்தம் கொடுக்கிறது. இவையாவும் ‘மனத்தின்’ செயல்கள். மனத்தைவிட ஆழ்ந்த ஓருண்மை ‘ஆன்மா’. இதைப் பகுத்தறிவினாலோ, தருக்கங்களாலோ அறிய முடியாது. உள்ளுணர்வினால் தான் உணர முடியும். இந்துக்களுக்கு தத்துவக் கட்டமைப்பு என்பது உள்ளுணர்வு, அந்தராத்மாவின் செயல்களின் விளைவே. பகுத்தறிவினால் ஆன்மாவை அறிய முடியாது. இதனால்தான் இந்து தத்துவங்களைத் ’தரிசனங்கள்’ என்று அழைக்கிறோம். கடவுளை அறிவதென்பது அவராகவே ஆகிவிடுவதுதான். புற உலகிற்கு இச்செயலில் தொடர்பு எதுவும் இல்லை. மே நாட்டு அறிஞர்கள் விமர்சன அறிவைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கிழக்கத்திய ஞானிகள் படைப்பாக்கமுள்ள உள்ளுணர்வையே சார்ந்து நிற்கிறார்கள்.”

இவ்வாறு தருக்க முறைகளையும், அறிவியல் ஆராய்ச்சியையும் முக்கியமற்றவை என்று ஒதுக்கிவிட்டு, நிலையான, உண்மையான வாழ்க்கைக்கு கடவுளை நம்பி அவராகவே ஆகும் முயற்சியை மேற்கொள்ளுமாறு இந்திய தத்துவங்கள் போதிக்கின்றன என்று எஸ். ராதாகிருஷ்ணன் எழுதுகிறார். “இந்தியத் தத்துவங்கள் அனைத்து வாழ்க்கையின் மகத்தான உண்மையான கடவுளை (“One great fact of life God”) அறிவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.” “உபநிஷதங்களில் இலைமறை காயாகக் கூறப்பட்ட இந்த மகத்தான உண்மையை, பின்னர் தோன்றிய தத்துவங்களெல்லாம் விளக்கிக் கூறுவனவே. ஆன்மா கடவுள் பற்றிய சிந்தனையின் விளக்கவுரையாகவே பிற்கால இந்த தத்துவங்கள் விளங்குகின்றன.”

ராதாகிருஷ்ணன் எழுத்துக்களில் இருந்து இவ்வளவு விரிவாக மேற்கோள் கொடுக்க வேண்டியதன் அவசியம், அவர் எல்லா ஆன்மீகவாதிகளின் பிரதிநிதியாக மிக அழுத்தமாக அவருடைய கருத்தைச் சொல்லுகிறார் என்பதனால் தான்.

இக்கருத்து மிகவும் தைரியமாகவே வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஆன்மீகவாதத்தின் மீது ராதாகிருஷ்ணன் கொண்டுள்ள வலுவான பிடிப்பு அவரைத் தம் கருத்துக்களைப் பயமில்லாமல் சொல்ல வைக்கிறது. ஏனெனில் தைத்திரிய உபநிஷதம் பின்வருமாறு கூறுகிறது:

“பிரம்மத்தின் ஆனந்தத்தை அறிந்தவன் எக்காலத்தும் பயப்பட மாட்டான்.” இதை நம்புகிறவர் அல்லவா ராதாகிருஷ்ணன்?

இக்கூற்றுக்கு இந்திய தத்துவங்களில் ஆதாரம் ஏதாவது ராதாகிருஷ்ணன் தருகிறாரா? இல்லையே!

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.

ராதாகிருஷ்ணன் சிலாகித்துப் பேசும் ‘உள்ளுணர்வு’ பற்றி குமரில்லப்பட்டர் எள்ளி நகையாடுகிறார். இவர் ஆதிசங்கரரின் குருவென்று கருதப்படுகிறார். இவரது காலம் 6-ம் நூற்றாண்டு. ராதாகிருஷ்ணனது ‘ஆன்மீகம்’, ‘கடவுள்’, உள்ளுணர்வு’ என்ற கருத்துக்கள் இந்தியத் தத்துவங்களில் ஒரு சிறுபான்மையினரின் கொள்கைகளே. சிந்தனை உலகிலேயே மிகவும் சிறப்பான தருக்கவாதத்தில் ‘கடவுள் இன்மை’க் கொள்கையை இந்திய தத்துவங்களில் பெரும்பாலானவை பேசுகின்றன.

இவ்வாறு நான் சொலவது திகைப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால் நான் சொல்வதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ‘கடவுள் இன்மை’க் கொள்கையைத் தான் தற்காலத்தில் ‘நாத்திகம்’ என்றழைக்கிறோம். இக்கொள்கை இந்தியத் தத்துவ வரலாற்றில் மிகவும் பழமையானது. நடுக்காலத்தில் கூட இக்கொள்கைக்காகப் போராடிய போராளிகள் இருந்தார்கள்.

வேதங்களை நம்பாமல், அவற்றை மறுத்துப் பேசியவர்களைப் பற்றி அந்நூல்களிலேயே சான்றுகள் உள்ளன. இவர்களை நாத்திகர் என வேதங்களை நம்பியவர்கள் அழைத்தார்கள். இவர்களை வேதப்பாடல்களை இயற்றிய கவிகள் ‘விதண்டாவாதிகள்’ என அழைத்தார்கள். ராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்கள் இவர்களைப் பற்றியப் பேசுகின்றன. அவை சாருவாகர், லோகாயதர், பூதவாதிகள் என்று இவர்களைக் குறிப்பிடும். இவர்கள் முரணற்ற நாத்திகவாதக் கொள்கையைக் கடைப்பிடித்தவர்கள். சாங்கியவர்கள் ‘பிரக்ருதி பிரதானம்’ என்ற கொள்கையுடையவர்கள். பிரக்ருதி என்ற பொருளில் இருந்துதான் அதன் இயக்க வளர்ச்சியால் புத்தி, சித்தம் முதலிய மனம் தொடர்பான இயல்புகள் தோன்றின என்று சாங்கியவாதிகள் நம்பினார்கள். அவர்களுடைய பண்டைத் தத்துவத்தில் படைப்பாளி என்ற கடவுளுக்கு இடம் கிடையாது. பொருளின் இயற்கையால் தான் உலகம் இயங்கி பரிணாம மாற்றம் அடைகிறது என்ற கருத்துத்தான் இருந்தது. இக்கொள்கைக்கு கடவுள் இல்லாத சாங்கியம் என்று பிற்கால ‘கடவுள் உண்டு’ என்று கூறிய தத்துவவாதிகள் பெயரிட்டழைத்தனர். அவர்கள் சாங்கியத்தில் கடவுளைப் புகுத்தி யேஸ்வரசாங்கியம் (கடவுளோடு கூடிய சாங்கியம்) என்றவோர் தத்துவத்தைப் படைத்தார்கள். பழமையான (பூர்வ) சாங்கியத்தில் கடவுள் கருத்து இல்லை. ஒரு தற்காலத் தத்துவாசிரியர் கூறுகிறார்: “புற உலகும், அக உலகும், பிரக்ருதி (பொருள்) என்ற வஸ்துவின் பரிணாம வளர்ச்சியின் விளைவுகளாகும், இச்செயல் தொடருக்கு பிரக்ருதிக்கு வெளியேயுள்ள எந்த சக்தியும் தேவை இல்லை.” எனவே சாங்கியம் பொருள் முதல்வாத அடிப்படையில் நாத்திகத்தைக் கொள்கையாகக் கொண்டிருந்தது.

ஆதி சங்கரர்

பண்டைய மீமாம்சகர்கள் இந்திய ஆன்மீகவாதத்தின் பரம விரோதிகள். பூர்வ மீமாம்சகர்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள யக்ஞங்களை ஆதரிப்பவர்கள். இவை இனக்குழு சமுதாயத்தில் தோன்றிய மந்திர , மதச் சடங்குகள். மதச் சடங்குகளில் பல்வேறு தேவர்களை அவர்கள் வழிபட்டார்கள். ஒவ்வொரு யக்ஞத்திற்கும் ஒரு அதி தேவதை உண்டு. அவர்கள் அக்னி, வருணன், இந்திரன், வசுக்கள், வாயு முதலிய இயற்கைச் சக்திகள். இச்சக்திகளை மனித உருவம் கொடுத்து, படிமங்கள் இன்றியே அவர்கள் வழிபட்டார்கள். ‘ஒருவனே தேவன்’ என்ற கடவுள் கொள்கை அவர்களுடைய சிந்தனையில் இல்லை. பிற்காலத்தில் இனக்குழுக்கள் அழிக்கப்பட்டு, அரசுகள் தோற்றம் கொள்கிற காலத்தில் அரசர்களுக்காக யாகங்கள் செய்து, அரசர்களது புகழை வளர்க்க இவர்கள் புரோகிதர்களாக மாறினார்கள். அப்பொழுதும் பல தெய்வ வணக்கத்தை மேற்கொண்டு கடவுளை எதிர்த்தார்கள். இவர்களே பூர்வ மீமாம்சகர்கள். இவர்களுடைய கருத்துக்கள் வளர்ச்சியடைந்த நாத்திக சிந்தனையாகும்.

நியாய வைசேஷிகர்களுடைய நிலை சந்தேகத்துக்கு இடம் தருவது.

பௌத்தம் கடவுளையும் ஆன்மாவையும் மறுத்தது. ஜைனர்களுடைய கொள்கை சந்தேகமானது. எனினும் அவர்கள் தங்கள் சமயத்தைப் போதித்த 23 தீர்த்தங்கரர்களின் அறிவையே தெய்வமாகக் கருதினார்கள்.

படிக்க:
தயாராகிவிட்டது ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம் !
சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!

எனவே இந்திய நாத்திகம் பல்வேறு கொள்கைகளையுடைய பலவிதமான சமயக் கொள்கைகளை உடையவர்களோடு நேச உறவு கொண்டிருந்தது. இதிலிருந்துதான் அதன் பலவீனம் தோன்றுகிறது.

ஆனால் இந்திய நாத்திகர்களது பொதுவான தருக்கம் இதுதான். தவறான தருக்க முறைகளால் தான் ‘கடவுள்’ என்ற கருத்தையடைய முடியும். கடவுள் என்ற கொள்கை பொய்யான ஒரு நம்பிக்கையை நிஜம் என்று கருதுவது தான். இந்தப் பொய்யை, பொய் என்று நிரூபிப்பதே இந்திய நாத்திகத்தின் கடமையாக இருந்தது.

கடவுள் இல்லையென்றால், கடவுள் என்ற பேரின் மீது தோன்றி வளர்ந்துள்ள, அடிமரம், கிளைகள் போன்ற வேறு நம்பிக்கைகளையும் உதறித்தள்ளியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடவுள் என்ற ஒரே ஒரு நம்பிக்கையைப் பொய் என்று நிரூபிப்பதிலேயே அவர்களது சிந்தனை முயற்சி யெல்லாம் குவிக்கப்பட்டிருந்தது. வேறு நம்பிக்கைகளான, நரகம், சுவர்க்கம், விதி என்பனவற்றை அவர்கள் மறுக்கவில்லை. இதற்கு ஒரு உதாரணம், கடவுளை மறுத்த மஹாயான பௌத்த விகாரைகளின் (பௌத்த மடங்களில்) சுவர்களில் பற்பல பேய்கள், பிசாசுகள், ஆவிகள், சிறு தெய்வங்கள், புத்தர்கள் ஆகியவற்றின் சிலைகளைக் காணலாம். இந்த மடங்களில் வாழ்ந்த பௌத்த பிட்சுக்கள் தாம், கடவுளை மறுக்கிற மிகவும் சிக்கலான தருக்க வாதங்களை உருவாக்கினார்கள்.

நாத்திகத்தை ஒப்புக்கொள்கிற தத்துவவாதிகளின் நோக்கங்கள் வெவ்வேறாயிருக்கலாம். ஆனால் ‘கடவுள் இல்லை’ என்பதற்கு அவர்கள் காட்டும் தருக்கவாதங்களில் ஒற்றுமை இருந்தது. பல கோணங்களில் தத்துவ சிந்தனையில் வேற்றுமை வெளிப்பட்ட போதிலும் நாத்திகம் மிகவும் திருப்தியளிக்கும் கருத்தாக இந்திய தத்துவவாதிகளுக்குத் தெரிந்திருக்கிறது. மூன்று கேள்விகளுக்கு நாத்திகமே சரியான விளக்கம் தருவதாக இந்தியத் தத்துவவாதிகள் கருதினர்.

1) ஒப்புக்கொள்ளப்பட்ட தருக்க முறைகள் பெற்றாலாவது கடவுள் உண்டு என்று நிரூபிக்க முடியுமா?

2) புற உலகின் தோற்றத்தை விளக்க கடவுள் உண்டு என்ற கொள்கை அவசியந்தானா?

3) மனித கதியை விளக்கவும், மனிதச் செயல்களை அறியவும், உலகை நெறிப்படுத்தும் ஓர் சக்தியை அவதானிப்பது அவசியமா?

இக்கேள்விகளுக்கு விடையளிக்க முயன்ற தத்துவவாதிகள் கடவுள் என்னும் கருத்தை நிராகரிக்கும்படியான நிலைமைக்குச் சென்றார்கள். இந்தியத் தத்துவங்களில் பல இக்கேள்விகளை வேறு பிரச்சினைகளோடு குழப்பாமல், தெளிவாகத் தருக்க முறைகளாலேயே விடைகாண முயன்றன. தங்கள் வேறு கொள்கைகளோடு தொடர்புபடுத்தாமல் இக்கேள்விகளுக்கு தருக்க ரீதியாக விடைகாண முயன்றார்கள். கடவுள் நம்பிக்கையை அதன் சுயமான மதிப்பில் அவர்கள் ஆராய்ந்தார்கள். இக்கேள்விகளுக்கு பதில்களைத் தருக்க இயலிலேயே கண்டார்கள்.

பௌத்தம்.

பலவகை முரண்பாடுகள் வாய்ந்த இந்திய தத்துவங்களில், மேலே சொன்ன கவனத்தில் தான் ஒரு ஒருங்கமைப்பும், ஒரே விதமான சிந்தனைப் போக்கும் தோன்றியது. உலக கண்ணோட்டத்தில் வேறுபட்ட பல தத்துவங்கள், கடவுள் என்ற கருத்தை மட்டும் தருக்க ரீதியாக ஆராய்ந்ததால் தான், கடவுள் என்ற கருத்துக்கு எதிரான வாதங்கள் கூட ஒரே விதமாக உள்ளன.

இந்தியத் தத்துவவாதிகளில் மிகப் பலர் நாத்திகக் கொள்கையைக் கொண்டவர்கள். அவர்களுடைய தத்துவத் திறன் உலகிலேயே மிகச் சிறந்தது. உலக நாத்திக இலக்கியத்தில் இந்திய தத்துவத்தின் பங்கு மிக முக்கியமானது. இன்று கூட இந்திய நாத்திகவாதிகளின் தருக்க ரீதியான வாதங்களுக்கு கடவுள்வாதிகள் பதில் சொல்லுவது மிகவும் கடினம்.

அப்படியானால் மிகச் சிறந்த தத்துவவாதிகளும், தருக்க நிபுணர்களும் நாத்திகவாதிகளாயிருந்தும், இந்தியாவில் நாத்திகம் பரவவில்லையே, ஏன்? வேதகாலம் முதல் பெரியார் காலம் வரை தொடர்ச்சியான நாத்திகவாதம் இந்தியாவில் வழங்கி வந்திருந்தும் இங்கு மக்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருப்பது ஏன்?

இதன் காரணத்தை தத்துவ வேலிக்கு அப்பால் சென்று காணவேண்டும். கடவுள் நம்பிக்கைக்கு உணவு அளிக்கும் அடிப்படை எது? இக்கேள்விக்குப் பதிலளிக்க மார்க்ஸின் சிந்தனை உதவுகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

1. இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவராக இருந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

……………………………………………………………………………………………….. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

0
கதறி அழும் முகம்மது சுலைமானின் தாயார்.

‘எங்கள் குழந்தைகளை ஏன் கொல்கிறீர்கள் ?’

போலீசின் தடி ரஃபீக் அகமது (55) தலையின் மீது விழுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், அவர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் “தயவு செய்து வீட்டிற்கு அமைதியாகச் செல்லுங்கள். கற்களை எறியாதீர்கள்” என ஒலிபெருக்கியில் கேட்டுக்கொண்டார். டிசம்பர் 20-ம் தேதி, நண்பகல் 1.30 மணியளவில் உத்தர பிரதேசத்தின் நெக்தார் நகரத்தின் அருகே இது நடந்தது.

முறையீடு தேவையற்றது என்று நினைத்தாலும் அவர் அப்படி செய்தார். அப்பகுதியில் கூட்டம் பெரியளவில் இருந்தது. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முறையான போராட்டக் கூட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. முசுலீம் பெரும்பான்மை கொண்ட இந்த நகரத்தில் சுமார் 100 குடியிருப்பாளர்கள் உள்ளூர் மசூதியில் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை செய்ய நைசா சாராயின் பாதைகளில் கூடியதாக அகமது கூறுகிறார்.

நைசா சராய் பகுதியில் உள்ள மசூதி.

அந்த ஊரில் நன்கு அறியப்பட்ட நகராட்சி ஒப்பந்தக்காரரான அகமதுவிடம், ஒரு காவல்துறை அதிகாரி, அவர் தொழுகைக்குப் பிறகு வெளியேறும்போது, அவரை பகிரங்கமாக அறிவிக்கச் சொன்னார். எனவே, அதை அறிவித்தார்.

அதன்பிறகு, சாதாரண உடைகளில் கைகளில் தடியுடன் தன் அருகில் நின்ற காவலரின் மீது அவருடைய பார்வை படுகிறது. “சாதாரண உடைகளில் உள்ள இவர்கள் யார்?” என அந்த அதிகாரியைப் பார்த்து கேட்கிறார் அகமது. அந்த அதிகாரியிடமிருந்து பதில் இல்லை.

ஒரு கணம் கழித்து, பாதையில் நடக்க ஆரம்பித்ததும் முதல் கண்ணீர் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. பிறகு, அகமதுவின் தலையில் ஒரு அடி விழுகிறது. வலிதாங்காமல் தலையில் கைவைக்கும்போது, கைகளில் இரத்தம் பிசுபிசுக்கிறது.

“அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்கிற அகமது “யாரும் கற்களை வீசவில்லை; ஆனாலும் போலீசு தடியடியில் இறங்கியது” என்கிறார்.

மேற்கு உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சுமார் 50,000 மக்கள் தொகை கொண்ட நெஹ்தாரில், முக்கால்வாசி பேர் முசுலீம்கள். இந்த மாதம் மோடி அரசாங்கத்தின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்புக்கள் வெடித்ததில் இந்தியாவில் எங்கும் போலீசு நடத்திய அராஜகத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது இந்த பிராந்தியத்தில்தான்.

படிக்க:
ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !
♦ மோடியின் குடியுரிமை சட்டத்துக்கு இந்து தமிழ் திசையின் மானங்கெட்ட ஜிஞ்சக்கு ஜிஞ்சா !

டிசம்பர் 11-ம் தேதி நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம், மூன்று நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கான இந்திய குடியுரிமைக்கு விரைவான பாதையை வழங்குகிறது. குடியுரிமைக்கான ஒரு மத சோதனையை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பை மீறுவதாக பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘சட்டவிரோதமாக குடியேறியவர்களை’ அடையாளம் காண இந்தியாவில் உள்ள அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தி தேசிய குடிமக்களின் பதிவேட்டை தயார் செய்யப்போவதாக பலமுறை அச்சுறுத்தியதால் மில்லியன்கணக்கான இந்திய முசுலீம்கள் பயம் கொண்டனர். இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று கூறி, இது முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறினார்.

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் 24 பேர் கொல்லப்பட்ட பின், அவர்களில் 17 பேர் உத்தரபிரதேசத்தில் மட்டும் பலியான பின், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி இந்த நடைமுறையாக்கல் பற்றி முழுமையாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை  என்று அறிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் மட்டும் மிக அதிகமான உயிரிழப்புகளை ஏன் ஏற்பட்டன?

அரசியல் அனுமதி பெற்ற போலீசு வன்முறை, நெக்தார் நகரத்தில் உள்ள முஸ்லிம்கள் மீது ஏவப்பட்டது. புல்லட் காயங்களால் இரண்டு இளைஞர்கள் இறந்தனர். இரண்டு இளைஞர்கள் நகர மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், பலர் அச்சத்தால் நகரத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

“நாங்கள் போராடக்கூட இல்லாதபோது இது நடந்தது” என்கிறார் மொகமது சையது. இறந்துபோன இவருடைய தந்தை ரஷீது அகமது 17 ஆண்டுகளாக நெக்தாரின் தலைவராக இருந்தவர். “இந்த ஊரில் ஒரே ஒரு எதிர்ப்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்”

நைசா சாராயின் பல குடியிருப்பாளர்கள் ரபீக் அகமது சொன்னதை எதிரொலித்தனர். அவசியமே இல்லாமல் தடியடி தொடங்கியதாக அவர்கள் கூறினர். இதற்கு சாதாரண உடையில் இருந்த ஆண்கள், போலீசின் நண்பர்கள் எனப்படுவோர் முன்னிலை வகித்தனர். அவர்கள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் உறுப்பினர்கள் என யூகிக்கிறார்கள்.

தடியடி தொடங்கியதும் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அதன்பின் துப்பாக்கிகள் வெடிக்கத்தொடங்கின. போலீசு இதை வழக்கம்போல மறுக்கிறது. ஆனாலும், ‘அவர்கள் ஒருவர், அல்லது இருவரை கொல்லுங்கள்’ என துப்பாக்கியால் சுடும் போலீசு வெறித்தனமாகப் பேசுவது வீடியோவாக பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பின்னர், காவல்துறையினர் வீடுகளுக்குள் நுழைந்ததாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். ஒரு வீடியோ காட்சியில் ஒரு முதியவர் போலீசு வாகனத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதும் போலீஸ்காரர்கள் லத்திகளையும் கைத்துப்பாக்கியையும் வைத்திருப்பது தெரிகிறது. அந்த குழப்பமான சூழல் துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தால் நிறுத்தப்படுகிறது.

போலீசால் இழுத்துச்செல்லப்பட்ட அந்த முதியவர் ஷம்சுதீன் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். “அவரால் இனி நடக்க முடியாது; யாராவது ஒருவரின் ஆதரவால் மட்டுமே நடக்க முடியும்” என்று அவரது சகோதரர் சிராஜுதீன் கூறுகிறார். “போலீசார் பலவந்தமாக அவருடைய வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கதவைத் திறக்க உதைக்கும்போது, கைப்பிடியை உடைத்தனர்.” அந்த அடையாளம் இன்னும் கதவுகளில் உள்ளது.

“மசூதிக்கு அடுத்ததாக அவருடைய வீடு இருப்பதால்தான் அவர்கள் குறிவைத்துள்ளனர்” என்று அவரது சகோதரர் கூறினார். ஷம்சுதீனின் மனைவியும் குழந்தைகளும் பக்கத்து வீடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். எனவே, காவல்துறையினர் அவரை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பது குடும்பத்தினருக்குத் தெரியாது.

போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்ட சம்சுதீன் வீட்டுக்கதவு சேதப்படுத்தப்பட்டுள்ள படம். உள்படம் – அவரது சகோதரர் சிராஜுதின்.

நூறு மீட்டர் தொலைவில், நைசா சராயில் மற்றொரு வீடு பூட்டப்பட்டது. முகமது ஹசீனை போலீசு அழைத்துச் சென்றபின், அவரது மனைவி ஊரை விட்டு வெளியேறியதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். “அவர் உண்மையில் போலீசாரின் கால்களைப் பிடித்து தன் கணவனை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கெஞ்சியிருக்கிறார், ஆனால் அவர்கள் கேட்கவில்லை” என ஒரு பக்கத்து வீட்டுக்காரர் கூறுகிறார்.

மற்றொரு சம்பவத்தில், ஒரு இளம் பெண்ணும் அவரது தாயும் காவல்துறையினர் தங்கள் வீட்டைத் தாக்கி, சமையலறைக்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்ததாக கூறுகின்றனர். டிவியை அடித்து நொறுக்கியுள்ளனர், மின் விசிறியை வளைத்துள்ளனர், தங்கள் வீட்டின் புனரமைப்பிற்காக அவர்கள் சேமித்த ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். 60 வயதான ஜரீனா கதுன், “நாங்கள் கைக்கட்டி நின்றிருந்தபோதும் அவர்கள் எங்களை அடித்தார்கள்” என குரல் உடைந்து கூறினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அதன்பின், அவருடைய மகனை அழைத்துச் சென்றிருக்கிறது போலீசு. “அண்ணனை அழைத்துச் செல்வதாக இருந்தாலும் ஏன் எங்கள் வீட்டை நொறுக்க வேண்டும்? எங்களுடைய பணத்தை திருட வேண்டும்” எனக் கேட்கிறார் ஜரீனாவின் மகள்.

இதேபோன்ற சம்பவத்தை மற்றொரு இளம்பெண்ணும் பகிர்ந்துகொண்டார். கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த போலீசு கேஸ் சிலிண்டரின் இணைப்பு குழாயை வெட்டிவிட்டு வீட்டை எரிப்போம் என மிரட்டியிருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வீட்டிலிருக்கும் ஆண்கள் போலீசால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் குடும்பத்தினரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. போலீசாரிடம் இதுகுறித்து கேட்கும்போது, காணாமல் போனவர்கள் குறித்து புகார் அளிக்கச் சொல்லுங்கள் என ஸ்க்ரால் இணையதளத்தின் நிருபரிடம் கூறியுள்ளனர்.

இரத்தக் களறியாக்கப்பட்ட அப்பகுதி  – துப்பாக்கி சூட்டில் பலியான அனாஸ் (உள்படம்)

வெள்ளிக்கிழமை, தனது 7 மாதக் குழந்தைக்கு பால் வாங்கச் சென்ற 21 வயதான அனாஸ் உசைனின் கண்களை துளைத்துக்கொண்டு சென்றுள்ளது போலீசு குண்டு ஒன்று. அனாஸ் உசைன் அப்பகுதியைச் சேராதவர். சம்பவ இடத்தைக் கடந்து சென்றவருக்குத்தான் இந்த துயரம் நேர்ந்துள்ளது.

அதுபோல, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குப் படித்துக்கொண்டிருந்த, வீட்டை வீட்டு அதிகம் வெளியில் போகாத முகமது சுலைமான் (20), தொழுகைக்குச் சென்றுவிட்டு ஒரு கடைக்கு அருகே நின்றிருந்தபோது போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். போலீசு அவரை அழைத்துச் சென்றதை பலர் பார்த்துள்ளனர்.

சில மணி நேரம் கழித்து அவரது உடல் அருகே இருந்த குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவருடைய வயிற்றை துளைத்த குண்டு, முதுகின் வழியே வெளியேறியிருக்கிறது. சுலைமானின் உடலைக்கூட தர மறுத்திருக்கிறது போலீசு.

சிவில் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருந்த சுலைமான் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். (புகைப்படத்தில் இடது பக்கம் நிற்பவர்)

“முதலமைச்சருக்கோ, பிரதமருக்கோ குழந்தைகள் இருக்கிறார்களா? அப்படியெனில் அவர்கள் எங்கள் குழந்தைகளை வாழ விடமாட்டார்கள் என பொருளாகிறதா? எங்கள் குழந்தைகளை அவர்கள் ஏன் கொல்கிறார்கள்?” எனக் கேட்கிறார் சுலைமானின் தந்தை ஜாஹிர் உசைன்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட இப்படியான சம்பவங்கள் நடக்கவில்லை என்கிறார் இந்தப் பகுதியில் நீண்ட காலமாக வசித்துக்கொண்டிருக்கும் முகமது சமி.

“முஸ்லிம்கள் மீது வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒரு மனிதராக மாநில முதல்வரே இருக்கும்போது, வேறு எதை எதிர்பார்க்க முடியும்?” என்கிறார் ஒரு நடுத்தர வயது மனிதர்.

கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதாக போலீசு வயர்லெஸில் கூறும் ஆடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்தக் குரல் உள்ளூர் போலீசு அதிகாரியுடையது என்று குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

‘நான் மக்களை பாதுகாப்பவன்’ என என்னதான் கூவிக்கூவி அறிவித்தாலும் இந்துத்துவ காவிகளின் பாசிச திட்டத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது உ.பி.யில் நடந்த இந்தக் கொலைகள்.

அனாஸ் ஹுசைனின் உறவினர் ஸ்க்ரால் நிருபருக்கு அளித்த பேட்டி :

எங்களுக்கு நீதி வேண்டும் ! – போலீசால் கொல்லப்பட்ட சுலைமானின் சகோதரி :


செய்திக் கட்டுரை: சுப்ரியா சர்மா.
அனிதா
செய்தி ஆதாரம் : ஸ்க்ரால்.

நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்

லகின் எல்லா நாடுகளிலும் அரசதிகாரம் உருவான போது அதனை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களும் உருவாகும். இதுவே உலக வரலாறு காட்டும் உண்மையாகும். அரசதிகாரம் மக்களை ஒடுக்கிய காலங்களில் அதனை நியாயப்படுத்தும் சாத்திரங்களும் எழுதப்படும். பெரும்பாலான மக்கள் எழுத்தறிவற்றவர்களாக வாழும் காலங்களில் எழுதப்பட்ட சாத்திரங்கள் அவர்களது சிந்தனைத் திறனை அடிமைப்படுத்தி தாங்கள் அடிமையென்று தங்களையே ஏற்கச் செய்யும் இந்தியத் துணைக் கண்டத்தில் அவ்வாறு உருவான சித்தாந்தத்தைத் தான் நாம் பார்ப்பனியம் என்று அழைக்கின்றோம். பார்ப்பனியம் என்பது ஒரு கருத்தியல் வன்முறையாகும். பிறப்பின் வழியாகவே ஏனைய மக்கள் திரள்களை இழிந்தவர்கள் என்று அது அடையாளம் காட்டுவதையே நாம் வன்முறை என்கிறோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் அறத்தினைப் பார்ப்பனியம் ஒரு போதும் ஏற்க இயலாது. பிறப்பினால் பார்ப்பனர் ஆனவர்கள் இன்னமும் தங்களை ஆகமேல்சாதி என்றே உணருகின்றனர். நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் மறுபக்கமானது மற்றவர்கள் இழிந்தவர்கள் என்பதாகும். நாடு விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுக் காலமான பின்னரும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இந்த உணர்வினை வெளிப்படுத்த அவர்கள் தயங்குவதில்லை.

தங்களுக்கு மட்டுமே உரிய வடமொழி, வேதம் ஆகியன அறிவார்ந்த விவாதங்களுக்கு அப்பாற்பட்டன என்பதும் வட்டார மொழிகளை நிராகரித்து சமஸ்கிருதத்தை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதும் கோயில்களின் தலைமையும், மற்ற சாதியாரின் சடங்கியல் தலைமையும் தங்களுக்கேயுரியன எனச் சாதிப்பதும் பார்ப்பனியத்தின் வேசங்களாகும்.

ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும்.

அண்மைக் காலமாக காஞ்சி சங்கராச்சாரியாரும் அவரைக் கொண்டு கலாச்சார அரசியல் நடத்துபவர்களும் இந்து என்ற கூட்டுக்குள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். கிறித்தவரல்லாத, இசுலாமியரல்லாத எல்லா மக்களுக்கும் இவரே ஆன்மீகத்தலைவர் என்பது போல அவருக்கு ‘முடிசூட்டி’ பெருந்திரளான தமிழர்களை ஏமாற்ற முற்படுகின்றனர். அவர்களது மாயாவாத சித்தாந்தம் எல்லா அரசியல், சமூக அதிகாரங்களையும் மீண்டும் பார்ப்பனிய வன்முறை வலைக்குள் கொண்டு வரப்பார்க்கின்றது. சைவம், வைணவம், நாட்டார் தெய்வங்கள் ஆகிய அனைத்தையும் பார்ப்பனியம் தின்று தீர்க்கப் பார்க்கிறது. இந்தச் சூழ்நிலையில் சமூக வரலாற்றுக் கல்வி ஒன்றே நம்மைக் காப்பாற்றும்.

நூலாசிரியர் தொ.பரமசிவன்.

பிறப்பு வழிப்பட்ட பார்ப்பனியத்தினை மட்டும் எதிர்ப்பதில்லை இந்த வெளியீட்டின் நோக்கம். பார்ப்பனியக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட பார்ப்பனர் அல்லாதவர்களும் மறுப்புக்குரியவர்கள். ஆராய்ச்சியாளர்கள் இவர்களைப் புதிய பார்ப்பனர்கள் (Neo-Brahmins) என அழைக்கின்றனர். நிகழ்காலத்தில் எல்லாவகையான ஊடகங்களையும் பார்ப்பனியக்கருத்தியல் தனதாக்கிக் கொண்டது. பார்ப்பனியம் என்பது ஒரு பண்பாட்டு வல்லாண்மை என்ற கருத்தை முன் வைத்தே இந்த வெளியீடு உண்மையான சனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கின்றது. (நூலின் முன்னுரையிலிருந்து…)

பார்ப்பன எதிர்ப்புணர்வும் சீர்திருத்த உணர்வும் கொண்ட அறிஞர்களும் செயல் வீரர்களும் இந்தியாவில் பல முறை தோன்றியுள்ளனர். புத்தர் தொடங்கி பூலே வரை இவர்களது எண்ணிக்கை ஏராளம். அவர்களில் யாரும் பெறாத வெற்றியைப் பெரியார் மாத்திரமே பெற்றார். அதுவும் தம் வாழ்க்கையிலேயே பெற்றார். … தூங்காமை, கல்வி (பட்டறிவு), துணிவுடைமை அனைத்துக்கும் மேலாகத் தன்னலமின்மை ஆகிய பண்புகள் பெரியாரை மாமனிதராக ஆக்கின. (நூலிலிருந்து பக்.30-31)

படிக்க:
தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !
சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !

பார்ப்பனியம் எங்கே இருக்கிறது, அது செத்துப் போய்விட்டது’, பார்ப்பனர்கள் மாறிப் போய்விட்டார்கள்’, இப்படியொரு வாதத்தைப் பார்ப்பனரல்லாத படித்த நண்பர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம். இவர்கள் இந்த முடிவுக்கு எப்படி வந்தனர்? வேறு எப்படி? வழக்கம் போல பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டுத்தான்.

பூணூல், குடுமி, பஞ்சகச்சம் வைத்துக்கட்டுதல், தீண்டாமை, புலால் உண்ணாமை முதலிய பழக்கங்களை பார்ப்பனர்கள் விட்டுவிட்டார்கள் என்பது உண்மைதான். இவையெல்லாம் பார்ப்பனியத்தின் முகம் மட்டுமே. எவையெல்லாம் பார்ப்பனியத்தின் உயிர் என்பதனைக் கீழ்க்காணுமாறு அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். ஏனென்றால் பார்ப்பனியம் என்பது வெளி ஆச்சாரம் மட்டுமல்ல. அது கருத்தியல் (ideology) ஆகும். அது மட்டுமன்று, அது பார்ப்பனரல்லாதார் மீதான ஒடுக்குமுறைக் கருத்தியலும் ஆகும்.

தமிழ்நாடு பார்ப்பனர்1. பிறவியினால் ஒருவனை மேல், கீழ் என அடையாளம் காணுவது, நினைப்பது, காட்டுவது.

2. கடுமையான உடல் உழைப்புள்ள தொழில்களைத் தாழ்வாக எண்ணுவது, உடல் உழைப்புத் தொழில்களைத் தவிர்ப்பது.

3. ஒவ்வொருவரையும் குலத் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தி அதிலிருந்து வெளியே வராமல் இருக்கச் செய்வது. வெகுஜனப் பத்திரிக்கைகளில் வரும் பார்ப்பனக் கருத்தாக்கங்களை நம்பி அவற்றினைப் பிரச்சாரம் செய்வது (குறிப்பாக சங்கராச்சாரியார், அஹிம்சை, கணபதி ஹோமம், இந்து மதம் முதலிய சொற்களில் நம்பிக்கை வைப்பது).

பார்ப்பனியம் நேற்று வரை வேதத்தின் புனிதம், புராணக் கதைகள், சடங்குகள் ஆசாரங்கள் ஆகியவற்றின் மூலம் தனக்கு வேண்டிய கருத்துக்களை மற்றவர்கள் மூளைக்குள் திணித்தது. இன்றும் அதே கருத்தாக்கங்களை மறைமுகமாகப் பத்திரிகைகள் மூலம் மற்றவர்கள் மூளையில் திணித்து வருகிறது.

மேற்குறித்த வகையான கருத்துக்களை அறிந்தே கடைப்பிடித்தும். ஏமாறும் தமிழர்களை நாம் பார்ப்பன அடிவருடிகள் என்று அழைப்பதே பொருத்தமானது. இவர்கள் பார்ப்பனியம் என்ற ஒடுக்குமுறைக் கருத்தியலுக்குப் பலியாகிப் போனவர்கள்.  (நூலிலிருந்து பக்.35)

நூல் : இதுதான் பார்ப்பனியம்
ஆசிரியர் : தொ. பரமசிவன்

வெளியீடு : மணி பதிப்பகம்,
29-அ, யாதவர் கீழத்தெரு,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627 002.
தொலைபேசி எண் : 0462 – 2560083

பக்கங்கள்: 40
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் பகுதி கரிமேடு. காங்கிரிட் காடுகள் என்றழைக்கப்படும் சென்னை மாநகரத்தின் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குத் தேவையான செங்கற்களை சப்ளை செய்யும் முதன்மைப் பகுதி.

70 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளை அதிபர்களையும் நான்காம் தலைமுறை வியாபாரிகளையும் உருவாக்கிய இடம். தற்போதைய கட்டுமானங்கள் ஹாலோ பிளாக் கட்டிடங்களுக்கு மாறிவிட்டதாலும், ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குப் பிறகு ரியல் எஸ்டேட் மற்றும் சிறு குறுந் தொழில்கள் நசிந்து போனதால் கட்டுமானப் பணிகள் குறைந்து, வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டு, மேலும் பொருளாதார தேக்கத்தில் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.

செங்கல் சூளை நேரடி வியாபாரம் படுத்து விட்டதால், தள்ளுவண்டி காய்கறி வியாபாரம் போல், சாலையோரங்களில் செங்கற்களைக் காட்சிப்படுத்துகின்றனர். தேவைப்படுவோர் வாங்கிச் செல்ல, எப்போதும் தயார் நிலையில் செங்கற்களுடன் லாரியில் காத்திருக்கின்றனர். இப்படி வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருந்தத் தொழிலாளர்களில் சங்கர் நம்மிடம் பேசும்போது,

சங்கர்

“இப்போ இருக்குற கோயம்பேடு பஸ் நிலையம், பக்கத்தில் இருக்குற காய்கறி மார்கெட், மெட்ரோ ஸ்டேசன் எல்லாம் செங்கற் சூளைகளாக இருந்த இடங்கள். அப்படியே 20 கி.மீ நீளத்திற்கு திருமழிசை வரை நூற்றுக்கணக்கான சூளைகள் ஆண்டுதோறும் எரிந்து கொண்டிருக்கும். 13 லட்சம் பச்சைக் கற்களை ஒரு சுற்றில் வேகவைத்து வெளித்தள்ளும் பிரம்மாண்டமான சூளைகள் இங்கு பல இருந்தன. இவை காலப்போக்கில் அழிந்துவிட்டன. இப்போது செங்கல் தேவையென்றால் சென்னையை விட்டு 150 கி.மீ தூரம் சென்றால்தான் வாங்க முடியும். இங்கு மிச்சமிருந்த சூளை முதலாளிகளும் ஆந்திர எல்லையோரம் போய்விட்டார்கள்.

குறைந்தது ஒரு சூளைக்கு 15 ஏக்கர் நிலம் தேவை. இந்த இடத்தில் 50 ஏக்கர் பரப்பளவுடைய பெரிய சூளைகளெல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. நூறு அடி சிமிழ் (புகைப்போக்கி) கொண்ட ஒரு சூளைக்கு 16 கட்டைகள் (அறை) இருக்கும். ஒரு கட்டையில் 80 ஆயிரம் கற்கள் வரை வேகும்.

பல நூறு தொழிலாளர்களைக் கொண்டு பச்சைக் கற்களை அறுத்து வெயிலில் உலர வைத்து சூளையில் வைப்பார்கள். இப்போது ஒரு செங்கலின் விலை ரூ.7.30 லிருந்து 7.80 வரை போகிறது. முக்கால் அடி நீளமும் 4 இன்ஞ் அகலமும் 2 கிலோ எடையும் இருந்தால், அது தரமான செங்கல். அதிலும் பல இரகங்கள் உண்டு. மண் வளத்தைப் பொருத்து செம்பருத்திப் பூ நிறத்தில் சிறந்த கல்லும், உப்பேறிய மண்ணில் வெளுத்துப்போன கல்லும் கிடைக்கும்.

இந்த இடத்தில் ஒன்று முதல் 3 வண்டிகள் வரை வியாபாரம் செய்யும் முதலாளிகள் இருக்கிறார்கள். இங்கு சராசரியாக 40 லாரிகள் வரை தயாராக நிற்கும். ஒரு லாரிக்கு எடை எண்ணிக்கையைப் பொருத்து 3 முதல் 5 தொழிலாளர்கள் வரை தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். 3,000 கற்களை அடுக்கும் லாரியிலிருந்து 12 ஆயிரம் கற்களை அடுக்கும் டிம்பர் வரை இங்கு உண்டு.

படிக்க :
♦ கை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு…! பிச்சை எடுக்க வச்சிடாத..!”
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

லாரி முதலாளிகள் ஒரு கல்லை 6 ரூபாய்க்கு வாங்கி, 7.30க்கு விற்கிறார்கள். சராசரியாக கல்லுக்கு 1லிருந்து 1.50 வரை விற்பார்கள். காரணம், எடுத்து வரும் வண்டிக்கான டீசல் செலவு, வண்டித் தேய்மானம், லேபர் கூலி இப்படி போக முதலாளிக்கு கல்லுக்கு 30 காசு நிற்கும். அதற்கு முன் 50 காசு வரை லாபம் பார்த்தார்கள். இப்போது லாபம் வேண்டாம், வண்டி வாடகை வந்தால் போதும் என்று வந்த விலைக்கே விற்கிறார்கள். அப்படியும் வியாபாரம் இல்லை. ஒரு லாரி கல் ஓட சமயத்தில் 2 நாள்கூட ஆகும். அப்போது மேல் செலவு இரட்டிப்பாகி நஷ்டம் ஏற்படும். இதனால் பல முதலாளிகள் தொழிலை விட்டே போய் விட்டார்கள். இதை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பாடு பெரும் திண்டாட்டமாகி விட்டது.

எப்போதும் தயார் நிலையில் இருக்கும் லாரிகள்.

விற்கும் வரை லாரியிலேயே காத்திருப்போம். அதுவரை கைச்செலவு, சாப்பாட்டுச் செலவுக்கு அட்வான்சாக வாங்குவதால், மொத்தத்தில் கூலி குறைவாகத்தான் கிடைக்கும். சில நேரம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் லாரிக்கு கீழேயே சுருண்டு படுத்துக் கிடப்போம்.

மழைக்காலம் வந்தால் இன்னும் கொடுமை. ஒதுங்கி நிற்க இடம் இருக்காது. டீ குடிக்க காசு இருக்காது. வெடவெடன்னு குளிரு வேற. இப்படித்தான் எங்க பொழப்பு போகுது. நகரத்தில் இருக்கிறோம். ஆனால், நரகத்தில் வாழ்கிறோம்.

***

பெருமாள், லாரி ஓட்டுநர்

பெருமாள், லாரி ஓட்டுநர்

டிரைவர் வேலை, வருமானம், வாழ்க்கைப் பற்றிய நம்முடைய கேள்விக்கு எரிச்சல் அடைந்தார்.

என்ன செய்யிறது கடன் வாங்கி, கடன் வாங்கி காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. போற நிலைமைய பார்த்தா, வாங்குன கடன்காரங்களுக்கு பதில் சொல்லவே முடியல. மானத்துக்குப் பயந்து கடைசியா தூக்கு மாட்டிக்கொள்ள வேண்டியதுதான் என்றார், 35 வயதே நிரம்பிய இளம் தொழிலாளி.

அங்கிருந்த தொழிலாளிகள் பலரும், தங்கள் குழந்தைகளுக்கு கஞ்சிகூட ஊற்ற முடியல, அதுக்கே கடன் வாங்க வேண்டிய நிலைமையை எண்ணி உடைந்துப் போகிறார்கள். ரேசன் அரிசி சோத்தக்கூட நிம்மதியாக சாப்பிட முடியவில்லை என்று நம்மிடம் முறையிடுகிறார்கள்.

***

லாரி பார்கிங் கட்டணம் வசூலிப்பவர்

லாரி பார்கிங் கட்டணம் வசூலிப்பவர்

கட்டுமானப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிற சந்தை மாதிரி. எல்லா பொருட்களையும் லாரியில் வைத்துக் கொண்டு வெயிட் பண்ணுவார்கள். வாடிக்கையாளர்கள் வந்தால் வீட்டிற்கே சென்று சப்ளை செய்வார்கள். 24 மணி நேரமும் இங்கு வந்து பொருட்களை வாங்கலாம்.

கம்பி, எம்சான்ட் மணல், பல இரக செங்கற்கல் மற்றும் அதற்குத் தேவையான லேபர்களும் இங்கு கிடைப்பார்கள். பிளெம்பர், கொத்தனார், எலெக்ட்ரீஷியன், டைல்ஸ் பதிப்பவர் என அனைவரும் இங்கு வந்து காத்திருப்பார்கள். வீட்டிற்குச் சென்றாலும் ஃபோன் பண்ணி கூப்பிட்டால் அடுத்த நிமிடம் வந்து நிற்பார்கள்.

இங்கு வந்து நிற்கும் லாரிகளுக்கான பார்க்கிங் கட்டணம் நாளுக்கு ரூ. 100. முன்பெல்லாம் அதிக நேரம் நிற்காது. எப்போதும் ஓட்டத்தில் இருக்கும். ஒரு நாளைக்கு 3 லோடுகூட அடிப்பார்கள். ஆனால், இப்போது 1 லோடுக்கு 3 நாட்கள் கூட சீந்துவார் இல்லாமல் காத்திருக்கிறார்கள்.

வண்டிக்கான பார்க்கிங் பணம் கூட கொடுக்க முடியாமல் கடன் வைக்கிறார்கள். அவங்க முறையா கொடுத்தாத்தான் எங்களுக்கும் வாழ்க்கை, இல்லேன்னா திண்டாட்டம்தான். பக்கத்தில் கோயம்பேடு காய்மார்கெட் இருப்பதால், அந்த லாரிகளும் இங்கே நிறுத்துவாங்க, ஏதோ சமாளிக்கிறோம். வேலை செய்யிற தொழிலாளிகளையும் கொறை சொல்ல முடியாது, பணம் இருந்தால் டீ, டிபன் என எல்லாம் வாங்கித் தருவார்கள். இப்போது அவர்களே நொந்து போய் கிடக்கிறார்கள், என்ன செய்ய? என்கிறார் சகத் தொழிலாளியாக.

படிக்க :
♦ என் உருவ பொம்மையை எரியுங்கள் ! பாசிச மோடியின் நீலிக் கண்ணீர் | கேலிச்சித்திரம்
♦ மோடியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ! என்ன செய்யப் போகிறோம் ? PRPC 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! – செய்தி | படங்கள்

***

இரவு பகல் பாராமல், வாடிக்கையாளர் கூப்பிடும் நேரத்திற்கு செல்ல வேண்டுமானால், கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

சென்னை நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள செங்கல், மணல் லாரிகள்.

விழுப்புரம் அருகில் உள்ள கிராமத்திலிருந்து சென்னையில் தங்கி வேலை செய்யும் தொழிலாளி அய்யனார்.

வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகள்..

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

தீண்டாமை முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட தருமபுரி காவக்காடு கிராமம் !

மீபத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் பேசப்பட்ட பஞ்சமி நில விவகாரம் தமிழகத்தில் விவாதத்தைக் கிளப்பியது. திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டிருப்பதாக வெடியைக் கொளுத்திப்போட்டார் பா.ம.க. ராமதாஸ். அவை குறித்த வாதப் பிரதிவாதங்கள் பேசப்பட்டு அடங்கியும்போனது. ஆனால், தமிழகமெங்கும் பஞ்சமி நில மீட்புக்கான போராட்டமோ, தாழ்த்தப்பட்ட சாதி சங்கங்கள் மட்டுமே பேசக்கூடிய, நிலத்தை இழந்து பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மட்டுமே நின்று மல்லுக்கட்டக்கூடிய தனிநபர் பிரச்சினையாக சுருக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை.

இதற்கு ஓர் எடுப்பான உதாரணம்தான், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கெண்டையனஅள்ளி காவக்காடு கிராமத்தில் நடைபெற்றுவரும் பஞ்சமி நிலமீட்புக்கான போராட்டம். இக்கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கென வழங்கப்பட்டிருந்த பஞ்சமி நிலத்தை முறைகேடாக அபகரித்துக்கொண்டதோடு, அந்நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்து அக்கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையையே முடக்கியிருக்கின்றனர், ஆதிக்க சாதிவெறியர்கள். முரசொலி அலுவலகம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆதாரங்களை அள்ளிப்போட்டு, மீடியாக்களில் மல்லுக்கட்டிய பா.ம.க. ராமதாசுவின் வன்னிய சொந்தங்கள்தான் காவக்காடு கிராமத்தில் பஞ்சமி நிலத்தை அபகரித்திருக்கிறார்கள்.

ஜேம்ஸ் ஹென்றி அப்பெர்லெய் த்ரெமென்ஹீர். 1891-ல் செங்கல்பட்டு ஆட்சியராக பணியாற்றிய சமயத்தில், பஞ்சமி நில சட்டத்திற்கான முன்வரைவை முன்வைத்தவர்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த 1892-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் பஞ்சமி நில சட்டம். இச்சட்டத்தின்படி, அரசின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. இந்நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்யலாம், வீடு கட்டி வசிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு யாரிடமும் விற்கவோ, அடமானம் வைக்கவோ குத்தகைக்கு விடவோ முடியாது. பத்தாண்டுகளுக்கு பிறகு விற்கவோ, அடமானம் வைக்கவோ குத்தகைக்குவிடவோ விரும்பினால், தாழ்த்தப்பட்ட பிரிவினர் (பட்டியல் சாதியினர்) என அரசால் வரையறுக்கப்பட்டுள்ள சாதியினரிடம் மட்டும்தான் பரிவர்த்தனைகளை செய்துகொள்ள முடியும் என்கிறது இச்சட்டம். இதனை மீறி வேறு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு நிலவுரிமை மாற்றப்பட்டால், அம்மாற்றம் செல்லாது என்றும் நட்டஈடின்றி அந்நிலங்களை கையகப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது என்கிறது, இச்சட்டம். 1950-க்கு பிறகும் இதே நிலை தொடர்ந்ததோடு மட்டுமின்றி, மேலும் விரிவுபடுத்தப்பட்டு சேரிநத்தம், வெட்டியான் மானியம், பூமிதானம், ஜமீன் ஒழிப்பு  உள்ளிட்ட 14-பிரிவுகளின் கீழ் நிலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  இவ்வாறு விநியோகிக்கப்பட்ட நிலங்கள், வருவாய்த்துறையினரின் பதிவேடுகளில் AD (Adi Dravidar) Condition Land என்ற வகையில் தொடர்ந்து பராமரித்து வந்திருக்கின்றனர். காலப்போக்கில், இவ்வகையின் கீழ் விநியோகிக்கப்பட்ட நிலங்கள் வருவாய்த்துறை அதிகாரிகள், பத்திர பதிவுத்துறை அதிகாரிகளின் துணையோடு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களின் கைகளுக்கு பட்டா மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய முறைகேடுதான், கெண்டையனஅள்ளி காவக்காடு கிராமத்திலும் நடைபெற்றிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இக்கிராமத்தில் கொடுவாளன் என்கிற சின்ன பையன் என்பவருக்கு சர்வே எண்.187 இல் 10.18 ஏக்கர் நிலம் பஞ்சமி நில வகையின் கீழ் வழங்கப்பட்டிருக்கிறது. தமக்கு பாத்தியப்பட்ட அந்நிலத்தில் அவர் குடிசையொன்றை அமைத்து அங்கேயே விவசாயமும் செய்து வந்திருக்கிறார்.

பஞ்சமி நிலம் என்ற வகைப் பிரிவில் அமைந்துள்ள இந்நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் செட்டியார் வருவாய்த்துறை அதிகாரிகளை சரிகட்டி தமது பெயரில் (1991-இல்) போலியான பட்டா பெற்றுள்ளார். பின்னர், இவரிடமிருந்து வன்னிய சாதியைச் சேர்ந்த சாராய வியாபாரி – குமாரசாமி என்பவரின் பெயருக்கு பட்டா மாற்றப்பட்டிருக்கிறது.

சின்ன பையன் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து ஆண்டு அனுபவித்து வந்த பஞ்சமி நிலத்துக்கு வன்னிய சாதியைச் சேர்ந்த குமாரசாமி உரிமை கோரியதோடு மட்டுமன்றி, ரவுடிகளை வைத்து அக்குடும்பத்தாரை அப்புறப்படுத்தவும் முயற்சித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் தாக்கி கொலைமிரட்டல் விடுப்பதும்; பாத்திரங்களை வீசியெறிந்து அராஜகம் செய்வதும்; இதன் உச்சகட்டமாக குடிசைக்கு தீவைப்பதும் என சாராய வியாபாரி – குமாரசாமி வகையறா தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், 26. 10.1991 -இல் சின்ன பையன் இறந்த பிறகு, அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்த சமாதியையும் அடித்து நொறுக்கியதோடு, மண்ணில் புதைந்திருந்த சின்ன பையனின் எலும்புக்கூட்டையும் தோண்டியெடுத்து வீசியெறிந்துள்ளார், குமாரசாமி.

குமாரசாமி கும்பலின் தொடர் வன்முறைகளை எதிர்கொள்ள முடியாமல், ”நிலம் போனாலும் போய்த்தொலையட்டும் உயிரையாவது காப்பாற்றிக்கொள்வோம்” என்று, 2015-ஆம் ஆண்டு வாக்கில், அக்கிராமத்தை விட்டே இடம்பெயர்ந்து, மேட்டூர் வீரக்கல் பகுதிக்கு சென்றுவிட்டனர், சின்ன பையனின் குடும்பத்தினர்.

அவர்களை விரட்டிவிட்ட கையோடு, சின்னப் பையனுக்குச் சொந்தமான நிலத்தை மட்டுமின்றி அவரது நிலத்தையொட்டி அமைந்திருந்த பொதுப்பயன்பாட்டிற்கான பாதையையும் மறித்து வேலி அமைத்துள்ளார், குமாரசாமி.

குமாரசாமி உரிமை கோரும் அந்த 10 சென்ட் இடம் சின்ன பையனுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம்தான் என்ற போதிலும், அவரது நிலத்தின் ஒரு பகுதியின் வழியாகத்தான் மலை கிராமமான மெச்சேரியிலிருந்து பென்னாகரம் செல்லும் பிரதான சாலைக்கு செல்ல முடியும். மேலும், ஆடு – மாடுகளை மேய்ச்சலுக்காக மலைப்பகுதிக்கு ஓட்டிச்செல்வதற்கும்; விவசாய வேலை கிடைக்காத நாட்களில் மலைப்பகுதியில் விறகு பொறுக்க போவதற்கும் சின்ன பையனுக்குச் சொந்தமான நிலத்தையொட்டிய பொதுப்பாதையைக் கடந்துதான் அக்கிராம மக்கள் செல்ல வேண்டும். வருவாய்த்துறை பதிவேடுகளில் ஊர் பொதுப்பயன்பாட்டிற்கான பாதை என்றுதான் பதிவாகியிருக்கிறது.

ஏற்கெனவே, குமாரசாமியின் தொடர் அட்டூழியங்களால் ஆத்திரமுற்றிருந்த கிராம மக்கள், தாங்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையையும் மறித்து வேலி அமைக்கப்பட்டதை எதிர்த்து தட்டிக்கேட்டுள்ளனர்.

அநீதியைத் தட்டிக்கேட்ட மக்கள் மீதே பொய்வழக்குப் போட்டதோடு, முன்னின்று போராடிய ஆண்கள் சிலரை குறிவைத்து நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர், பென்னாகரம் பெரும்பாலை போலீசார். ஆதிக்க சாதிப்பற்றோடு, நேற்றுவரை சாராயம் காய்ச்சி வந்த குமாரசாமியுடன் போலீசாருக்கு இருந்த தொழில் பற்றும் சேர்ந்து வினையாற்றியது. குமாரசாமியின் கூலிப்படையாகவே செயல்பட்டது, பெரும்பாலை போலீசு. அக்கிராம மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் இன்றுவரை எதிர்கொண்டு வருகின்றனர். ஏறத்தாழ 35 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக நீடித்து வருகிறது.

அன்றாடம் பள்ளிச் செல்லும் பிள்ளைகளும், மலையிலிருந்து விறகு பொறுக்கித் தலைச்சுமையாய் சுமந்து வரும் மக்களும், ஆத்திர அவசரத்துக்கு மெயின்ரோட்டுக்குக்கூட சென்றுவர முடியாமல் அக்கிராம மக்கள் அனுபவித்துவரும் சித்திரவதைகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.

விவசாய வேலையுமின்றி, ஆடு – மாடு மேய்ச்சல் தொழிலும் குறைந்து போனதாலும், மலைப்பகுதிக்கு விறகு சேகரிப்பது ஏறத்தாழ நின்று போனதாலும், பிழைப்புக்காக மாவட்டம் விட்டு மாவட்டமாக புலம்பெயரும் கூலித்தொழிலாளிகளாக மாறிவிட்டதாலும் பொதுப்பாதைக்கான போராட்டத்தை தொடருவதில் கிராம மக்களின் ஆர்வம் குறைந்து போனது. வருவாய்த்துறை அதிகாரிகளையும் போலீசையும் தமது கைக்குள் போட்டுக்கொண்டு, அடாவடி செய்துவரும் குமாரசாமி கும்பலை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது என்று அக்கிராம மக்கள் விரக்தியடைந்து காலப்போக்கில், பின்வாங்கினர். நிலவுரிமைக்கான போராட்டத்தில் பொய்வழக்கை எதிர்கொண்ட சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, இன்றுவரை எதிர்த்து நிற்கின்றனர்.

படிக்க:
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

வன்னிய சாதியைச் சேர்ந்த குமாரசாமி என்ற தனிநபருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சின்னபையன் என்ற தனிநபர்களுக்கிடையிலான நிலப்பிரச்சினையாக இதனை சுருக்கி பார்த்துவிட முடியாது.

மண்ணில் புதைக்கப்பட்ட எலும்புக்கூட்டைக்கூட விடாமல் எடுத்துவீசியிருப்பது அப்பட்டமான சாதிவெறியன்றி வேறென்ன? அடங்கிக்கிடக்க வேண்டிய தாழ்த்தப்பட்ட சாதியினர், உரிமையென்று தட்டிக்கேட்பதைச் சகிக்க முடியாமல்தானே போலீசு நிலையத்தில் வைத்து நிர்வாணப்படுத்தப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கின்றனர். குமாரசாமியின் பார்வையிலிருந்து, தான் உரிமை கொண்டாடும் நிலத்தில் வேலி அமைத்திருப்பதாக வாதிடக்கூடும். உண்மையில், தனது நிலத்தைச் சுற்றி போடப்பட்ட வேலியாக மட்டும் அது இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையே முடக்கிப்போட்டிருக்கும் தீண்டாமை வேலி அது.

2015-ம் ஆண்டு முதலாக, இக்கிராம மக்களின் நிலவுரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள். மேலும், இக்கிராம மக்களின் போராட்டத்தை அறிந்த பஞ்சமி நில மீட்புக்கான போராட்டத்தை முன்னெடுத்துவரும் நாகர்சேனை அமைப்பின் தலைவர் அருங்குணம் விநாயகம் அவர்கள் இக்கிராம மக்களை நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளார். பஞ்சமி நிலமீட்பு தொடர்பாக இவர் தொடர்ந்த வழக்கில்தான், கடந்த 2015-ல் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச் செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முதன்மைச் செயலர் அடங்கிய பஞ்சமர் நிலமீட்பு மத்தியக் குழுவை அமைக்க வேண்டுமென்றும் அக்குழு ஆறுமாதகாலத்திற்குள் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் உத்திரவிட்டிருந்தது.

அருங்குணம் விநாயகம் அவர்களின் முன்முயற்சியினால்,  கெண்டையனஹள்ளி கிராமம் மற்றும் பாலக்கோடு  சிடி பட்டம் கிராமம் உள்ளிட்ட  கிராமங்களைச் சேர்ந்த மக்களை அணிதிரட்டி, கடந்த டிசம்பர்-16 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டிருக்கின்றனர். மக்கள் அதிகாரம் தோழர்களும் உடன் சென்றனர்.

பஞ்சமி  நிலங்களை  மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களிடம் வழங்க கோரியும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி  நிலங்களை கிராம நிர்வாக அதிகாரியின் மூலம் நில கணக்கு எடுத்து பஞ்சமி  நிலமீட்பு  மத்திய குழுவிற்கு அனுப்பி வைக்க ஆவண செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

”பஞ்சமி நிலங்களை  மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களிடம் வழங்கு! தாழ்த்தப்பட்ட மக்களின் பொது வழியைத் தடுக்கும் தீண்டாமை முள்வேலியை அகற்று! நிலத்தை அபகரித்து தீண்டாமை கம்பி முள்வேலியை அமைத்த ஆதிக்க ஜாதி வெறியன் குமாரசாமி மற்றும் அவனுக்கு துணை போகின்ற அனைத்து ஜாதி வெறியர்களையும்  மற்றும் அதிகாரிகளையும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!” என்ற கண்டன முழக்கம் காவக்காடு கிராமத்திற்கானது மட்டுமல்ல!

– பு.ஜ செய்தியாளர்,
தருமபுரி.

என் உருவ பொம்மையை எரியுங்கள் ! பாசிச மோடியின் நீலிக் கண்ணீர் | கேலிச்சித்திரம்

2019
என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம்! – மோடி.

2012
2002 கோத்ரா ரயில் எரிப்பு – முஸ்லிம்கள் படுகொலையில் என் மீது தவறு இருப்பதாக தெரியவந்தால் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள். – மோடி ஆவேச பேச்சு.

2016
தலித்துக்கள் மீதான கும்பல் படுகொலையில் ”என்னை தாக்குங்க; தலித்துகளை விட்டு விடுங்க” – மோடி ஆவேச பேச்சு.

படிக்க:
ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !
பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !