லாக்டவுன் காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலர் தோழர் பா.பாலகிருஷ்ணன் அவர்களிடம் நடத்திய நேர்காணல்.

ஊரடங்கு முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரியம் வாயிலாக மாதமொன்றுக்கு ஆயிரம் வீதம், நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் சொல்லப்பட்டதே, அவை எந்தளவுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது?
தமிழகம் முழுவதும் 2,65,000 ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 96,000 பேர். இதில் முறைசாரா ஓட்டுநர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோர்கள் வெறும் 2,400 பேர்தான். அதிலும் முறையாகப் புதுப்பித்திருப்பவர்கள் 929 பேர் மட்டுமே. அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் நிதியுதவியைப் பெறும் தகுதியுடையோர் இவர்கள் மட்டும்தான். இந்த 929 பேருக்கும்கூட பல்வேறு நடைமுறை சிக்கல்களின் காரணமாக முழுமையாக போய்ச்சேரவில்லை என்பதுதான் உண்மை.
சென்னையில் 96,000 ஆட்டோ ஓட்டுநர்களில் 929 பேர்தான் முறையாகப் பதிவு செய்திருக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கிறதே? ஏன் மற்றவர்கள் பதிவு செய்யதில்லை?
ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் தவிர, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு விவரம் ஆகியவை உள்ளிட்ட ஏழு வகையான ஆவணங்களைக் கொண்டுதான் நலவாரியத்தில் ஒருவர் தன்னை உறுப்பினராக பதிவு செய்துகொள்ள முடியும். இதில்தான் சிக்கலே இருக்கிறது. ஓட்டுநர் உரிமம் ஒரு முகவரியில் இருக்கும், ரேஷன் கார்டு வாங்கியபோது ஒரு வாடகை வீட்டில் குடியிருந்திருப்பார். ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தபோது வேறு ஒரு வாடகை வீட்டில் குடியிருந்திருப்பார். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய மூன்றும் ஒரே முகவரியில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஓட்டுநர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
வழக்கமான நாட்களிலேயே, இப்படி எல்லாத்தையும் மாத்தனும்னா தாலுகா ஆபிசுக்கு போயி எழுதி கொடுத்து மாத்தணும். பொழப்பை விட்டுட்டு இதுக்காக அலைஞ்சி வாங்க முடியாது. இதைவிட, இப்படி மெனக்கெட்டு பதிவு செய்தாலும் இதனால் தனக்கு பைசா காசு பிரயோசனமில்லை என ஆட்டோ ஓட்டுநர்கள் கருதுவதும் ஒரு முக்கிய காரணம்.
முன்பு ஆண்டுக்கொருமுறை புதுப்பிக்க வேண்டுமென்ற நிலையில், தற்போது அதனை ஐந்தாண்டுக்கு ஒருமுறை என மாற்றியிருக்கிறார்கள். அப்படியிருந்தும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஓட்டுநர் உரிமம், பேட்ஜை மட்டும் வைத்து நலவாரியத்தில் பதிவு செய்வதையும் புதுப்பிக்கும் நடைமுறையையும் எளிமையாக்கப்பட வேண்டும். அரசிடம் இதை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.
இக்கட்டான நேரத்திலும், நலவாரியத்தில் பதிவு செய்திருந்தால்தான் நிவாரணம் என்று நிபந்தனை விதிப்பது எவ்வகையில் நியாயம்?
உண்மைதான், அரசு அப்படித்தானே சொல்கிறது. நலவாரியத்தில் உறுப்பினராக இருந்தால்தான் நிவாரணம் கிடைக்கும் என்று நிபந்தனை விதிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. முடிதிருத்தும் தொழிலாளிகள், நெசவாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை என்றாலும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. அதுபோல, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி ஷேர் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் என பொதுப்போக்குவரத்துக்கான வாகனத்தை இயக்குவதற்கான பேட்ஜ் பெற்றவர்கள் தமிழகம் முழுவதும் 16 இலட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய முழு விவரம் அந்தந்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருக்கிறது. ஆதார் கார்டு, தொலைபேசி எண், கை ரேகை என அனைத்தையும் பதிவு செய்துதான் இவற்றையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். ஆதாருடன் இணைக்கப்பட்டு கணிணி மயமாக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், நாடு முழுவதுமே ஒரு நபர் ஒரு ஓட்டுநர் உரிமம்தான் வைத்திருக்க முடியும். அவரது கையெழுத்து முதற்கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலக ரெக்கார்டுகளில் பதிவாகியிருக்கிறது. இதை வைத்தே மிக எளிமையாக ஓட்டுநர்களுக்கான நிவாரணங்களை அரசு வழங்க முடியும். இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
நலவாரியங்களின் செயல்பாடுகளைப் பற்றி உங்களது கருத்து என்ன? உங்கள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அதில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கிறார்கள்தானே?
நலவாரியத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள் போன்றோர் மட்டுமின்றி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது சரிதான். ஆனாலும், ஆலோசணைக் கூட்டங்களை அவர்கள்தானே கூட்ட வேண்டும். நாங்கள் எத்தனைமுறை வலியுறுத்தினாலும், போர்டு மீட்டிங்கை கூட்டுவதில்லை. இன்னொன்று, பெரும்பாலும் அந்தந்த நல வாரியங்களில் அந்தந்தத் துறை சார்ந்த நபர்கள் இடம்பெறுவதில்லை. அதனால் அந்த வலி அவர்களுக்கு புரிவதில்லை. நலவாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்குள்ள உரிமைகள் – கடமைகள் அரசு தரப்பில் செய்யவேண்டியது என்ன என்பது குறித்தெல்லாம் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், சிஸ்டம் சரியாக இருக்கிறது; ஆனால், அவை எல்லாம் பேப்பரில் மட்டும்தான் இருக்கிறது.

புதிய வாகனத்திற்கான பதிவு, எஃப்.சி. கட்டணம் உள்ளிட்டு வாகனம் தொடர்பாக அரசு தரப்பில் வசூலிக்கப்படும் வரிகள் அனைத்திலிருந்தும் 1 முதல் 3 சதவீதம் வரையில் வாரியத்திற்கு போகிறது. இந்தத் தொகையே பல நூறு கோடி ரூபாய் அதன் இருப்பாக இருக்கிறது. இதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை, உதவிகளை செய்ய முடியும். ஆனால், இப்படி ஒரு நலவாரியம் செயல்படுவதையே அரசு விரும்பவில்லை.
குறிப்பாக, நலவாரியத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை. இதன் காரணமாகவே குளறுபடிகள் நடக்கிறது. வேலை நடப்பதில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும்பாலும் பள்ளி படிப்பை முடித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் அணுகும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.
லாக்டவுனுக்குப் பிறகான காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?
நிலைமை சீராக எப்படியும் ஒரு வருடம் ஆகும். அதுவரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பல சிக்கல்களை சமாளித்தாக வேண்டும். லாக்டவுன் காலத்தில் எஃப்.சி. முடிந்த வண்டிகள் நிறைய இருக்கும். அந்த வண்டிக்கெல்லாம் எஃப்.சி. எடுத்தாக வேண்டும். எஃப்.சி. செய்யாமல் ஆட்டோவை இயக்க அனுமதி என்று நாங்கள் கோரிக்கை வைக்க முடியாது; பயணிகளின் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தியாக வேண்டுமல்லவா?
ஆனால், எஃப்.சி.க்கான அனைத்துவித கட்டணத்தையும் அரசால் ரத்து செய்ய முடியும். வண்டியை பழுதுபார்த்து முழுத்தகுதியோடு கொண்டுவருவதை வேண்டுமானால் ஆட்டோ ஓட்டுநரின் கடமையாக்கலாம். அதற்கு ஆகும் செலவுக்குக்கூட அரசு குறைந்தபட்சம் 20,000 வட்டியில்லா கடனாக வழங்க வேண்டும். ஆட்டோ டிரைவருக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை. பெரும்பாலும் சேட்டுக்களிடம்தான் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் இதில் நீடிக்க முடியாமல் வேறு தொழிலுக்கு போக நேரிடும் அவலம் இருக்கிறது. கடும் சிரமத்திற்கு அப்பால் ஆட்டோவோடு ரோட்டுக்கு வந்தாலும், இதுவரை ஆட்டோவை நம்பிவந்த வாடிக்கையாளர்கள் பழையபடி வருவார்களா என்பதற்கு உத்திரவாதமில்லை.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான், ஆட்டோ ஓட்டுநர்களின் பிரதானமான வாடிக்கையாளர்கள். பொதுவாக, பொருளாதார ரீதியில் நடுத்தர மக்களை மூன்று வகையாகப் பிரிக்கிறோம். அதாவது, மேல்நிலை, இடைநிலை, கீழ்நிலை வர்க்கம். இதில், மத்திய தர வர்க்கத்திலேயே மேல்நிலையில் இருப்பவர்கள் கால்டாக்ஸியின் வாடிக்கையாளர்கள்; இடைநிலை – நடுத்தர வர்க்கம்தான் ஆட்டோவில் செல்பவர்கள்; மத்திய தர வர்க்கத்திலேயே கீழ்நிலையில் இருப்போர் ஷேர் ஆட்டோவின் வாடிக்கையாளர்கள்.
இதுவரை பொதுப் போக்குவரத்துக்கு ஆட்டோவைப் பயன்படுத்தி வந்த அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த லாக்டவுனில் பாதிப்படைந்திருக்கிறார்கள். மனைவி வேலையை இழந்திருப்பார்; சம்பளக்குறைப்பு நடந்திருக்கும். இப்படி பலவகைகளில் இதுவரை கிடைத்து வந்த வருமானத்தில் துண்டு விழும்போது, வழக்கமான செலவுகளை குறைத்துத்தான் ஆகவேண்டும். அவ்வாறு அவர்கள் குறைக்க வேண்டும் என நினைத்தால் முதலில் ஆட்டோவில் ஏன் போக வேண்டும், ஷேர் ஆட்டோ அல்லது பேருந்தில் பயணிக்கலாம் என்றுதான் முடிவெடுப்பார்கள். இந்த நிலைமை, ஆட்டோ ஓட்டுநர்களை கண்டிப்பாக பாதிக்கும்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் எனக் கோருகிறீர்கள்?
முதலில், ஆட்டோ ஒன்றுக்கு பயணிகள் இருவரை ஏற்ற அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிக்க முடியாது என்றால், லாக்டவுன் முடிவுக்கு வரும் வரையில் குடும்பம் ஒன்றுக்கு 7,500/- நிவாரணம் வழங்க வேண்டும். எஃப்.சி.யின் பொழுது வசூலிக்கப்படும் வரிகள் உள்ளிட்ட அனைத்துவிதமான கட்டணங்கள் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும். எஃப்.சி.க்கு வாகனத்தை சீர்படுத்த 20,000 ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்க வேண்டும். இவைதான் இப்போதைய உடனடி கோரிக்கைகள்.

அடுத்து, சென்னையில் மட்டும் 96,000 ஆட்டோக்கள் ஓடுகிறது. ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 2 லிட்டர் பெட்ரோல் தினமும் போடுகிறார்கள் என்றால்கூட, பெட்ரோல் – டீசல் – காஸ் மூலமாக வரியாக மட்டுமே சரிபாதியை அரசுக்கு செலுத்திவருகிறார்கள். தனக்கு வரிவருவாய்க்கு ஆதாரமான ஆட்டோ ஓட்டுநர்களை குறைந்தபட்சம் ஒரு நுகர்வோன் என்ற அளவிலாவது அரசு பார்க்கிறதா?
அண்ணாச்சி கடையில் பொருள் வாங்கப்போனால், கூட வந்த சிறுவர்களுக்கு பொட்டுக்கடலையோ கற்கண்டையோ கொடுப்பார்கள். இத்தகைய ஒரு பண்பாட்டை ஒரு பேரிடர்க் காலத்தில்கூட முதலாளிகளிடம் பார்க்க முடிவதில்லை. சமூகப் பொறுப்பிலிருந்து, ஆட்டோ தொடர்பான உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களை விலக்கிக் கொள்கிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் அவன் உற்பத்தி செய்த ஆட்டோவை வாங்குவதால்தான் அவன் அந்த தொழிலில் இலாபத்தை ஈட்ட முடிகிறது. ஆகையால், கிடைக்கும் இலாபத்திலிருந்து குறைந்தபட்சம் 1% நலவாரியத்திற்கு வழங்க வேண்டும்; அரசு இதை சட்டமாக்க வேண்டும். அவன் முதலீட்டில் ஒன்றும் பங்கு கேட்கவில்லை. இலாபத்திலிருந்து மிகச் சொற்பமாக 1% ஒதுக்கினாலே, கோடிக்கணக்கான ரூபாய் நலவாரியத்திற்கு கிடைக்கும். அதிலிருந்து ஆட்டோ தொழிலாளர்களின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.
ஆட்டோ ஓட்டுபவனை சொந்த தொழில் செய்பவனாகப் பார்ப்பதே தவறு. அவன் என்ன குடும்பத்துக்காகவா வண்டி ஓட்டுகிறான். பேருந்துகளைப் போல பொதுப்போக்குவரத்திற்கான வாகனத்தைத்தானே ஓட்டுகிறான். பேருந்து ஓட்டுநருக்கு இருப்பதைப்போல இவனுக்கு மட்டும் ஏன் இ.எஸ்.ஐ., பி.எஃப். உரிமைகள் மறுக்கப்பட வேண்டும்?
ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், டாடா மேஜிக் ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் என பலரின் நிலையும் பரிதாபகரமானதாகத்தான் இருக்கிறது. காலாண்டு வரியைக் கட்டச் சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள். கட்டவில்லையென்றால் பர்மிட் ரெனிவல் ஆகாது. காலாண்டு வரியை தள்ளிவைப்பதல்ல, முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வந்தாலும், அதன்மீதான வரியைக் கூட்டிவருகிறது அரசு. இதனைக் கைவிட்டு, சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இவற்றையெல்லாம் அரசு செய்தால்தான் குறைந்தபட்சம் ஆட்டோ தொழிலாளி மீண்டு வருவான்.




பொதுவாகவே கம்யூனிசம் என்றாலே முதலாளித்துவத்துக்கு பற்றிக் கொண்டு வரும்.. இவர்கள் பேசுவது கிட்டத்தட்ட கம்யூனிசம் மாதிரி இருக்கிறது என்கிறார்கள்.. இதை extreme and far left movements என்று brand செய்ய ட்ரம்ப் அரசு முயன்று வருகிறது.




உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார நெருக்கடியில், கொரோனா கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதே வேளையில் முதலாளித்துவம் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார வீழ்ச்சியின் பழிபாவத்தைத் தன் மீது ஏற்றுக் கொண்டுள்ளது கொரோனா. “எரியும் வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம்” என்ற வகையில்தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.







புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான “ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்”, கிண்டி ரயில் நிலையம் (மேற்கு) பகுதியின் பொருளாளராக இருப்பவர் ஜெயராமன் கூறும்போது. ”முன்னெல்லாம் ஸ்டாண்டுக்கு வந்தா எப்படியும் 600 ரூபாய்க்கு வண்டி ஓட்டிரலாம்னு நம்பிக்கை இருந்துச்சி. டெய்லி வீட்டுக்கு 300 ரூபாய கொடுத்துட்டு, வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு, கைச்செலவுக்கு 100 ரூபாய எடுத்துட்டு, சங்க வேலை பார்க்க கிளம்பிவிடுவேன். ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம், தொழிலாளர்களை சந்திக்கிறதுனு அரசியல் வேலை செய்வேன். இருக்கிற நிலைமையில அதையெல்லாம் தொடர முடியுமானு அச்சமா இருக்கு” என்கிறார்.

நிரஞ்சன் தக்லேவின் கருத்துப்படி, “15 நாட்களுக்கு ஒருமுறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது. அதாவது அவர் சிறையில் தண்டனை அனுபவித்தக் காலத்தில் அவரது எடை 14 பவுண்டுகள் அதிகரித்திருந்தது. ”

மார்ச் 26-ஆம் தேதி மத்திய பள்ளிக் கல்விக் குழு (CBSE Central Board of Secondary Education) தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 23,000 பள்ளிகளுக்கு “Lockdown-A Golden Opportunity for Education” என்று தலைப்பிட்டு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் மாணவர்கள் கல்வி இணையதளங்களை (Online Education Platform) பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் ஆசிரியர்கள் இணையவழியில் பாடம் எடுப்பதற்கு தேவையான திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசின் CBSE பள்ளிகளான கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பணிபுரியும் 35,000 ஆசிரியர்களுக்கு இணையவழியாக வகுப்பு நடத்துவது, பற்றிய பயிற்சி வகுப்புகளை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. மத்திய அரசு மேற்கண்ட அறிவிப்புகளை கரோனா நெருக்கடி காலத்திற்கானதாக கூறிக்கொண்டாலும் அத்திட்டத்தின் நோக்கம் அதன் விளைவுகள் பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் தீங்கானதாகும்.
உலகளவில் கல்வி தொழில்நுட்பச் (EduTech) சந்தையில் செய்யப்பட்டுள்ள முதலீடு 18.66 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 2025-க்குள் 350 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலோ கல்விதொழில்நுட்பச் (EduTech) சந்தையின் மதிப்பு 2021-ல் 1.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கூகுள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. கரோனா ஊரடங்கு இந்த மதிப்பீடுகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட BYJU’S உலகிலேயே அதிக மதிப்புள்ள கல்வி தொழில்நுட்ப நிறுவனமாகும்.
இணையவழி பட்டப் படிப்பிறக்கான மத்திய அரசின் அனுமதி, 25 சதவிகித படிப்புகளை online முறையில் வழங்குவதற்கான UGC-ன் வழிகாட்டுதல், GER-ஐ 50 சதவிகிதமாக உயர்த்துவது என்ற தேசிய கல்விக் கொள்கையின் இலக்கு ஆகியவை இந்திய கல்வி சந்தையானது குறிப்பாக உயர் கல்வியானது இணையவழி கற்பித்தல் முறையை (Online Education Mode) நோக்கி நகர்கிறது என்று கூறலாம். இணைய கல்வித் தளங்கள் – மென்பொருள் / தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என்ற ஒரு சிறு குழுவின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும். அச்சிறு குழுவே ஒட்டுமொத்த கல்வியையும் கட்டுப்படுத்துகின்ற பிரதான சக்தியாக இருக்கும். இவர்கள் தரமான கல்வி என்ற போர்வையில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்-மாணவர்-பள்ளி கல்லூரி கட்டமைப்பை சிதைப்பதுடன் மொத்த கல்வியையுமே கட்டுப்படுத்துவதின் வாயிலாக தடையற்ற கொள்ளைக்கு முயற்சிக்கின்றனர். இதற்கு தோதாக இணையதளக் கல்வியின் வாயிலாக பட்டப்படிப்புகளை வழங்குவதற்கான திட்டத்தை தேசியக் கல்விக்கொள்கை பரிந்துரைத்திருந்தது. உடனே தேசிய தரப் பட்டியலில் (NIRF) முதல் 100 இடங்களில் உள்ள கல்லூரிகள் இணையதள வழி பட்டப்படிப்புகளை வழங்கலாம் என 2020 பட்ஜெட்டில் நியமைச்சர் அறிவித்தார். கூடவே உயர்கல்வியில் அந்நிய நேரடி முதலீடும் (FDI), Extra Commercial Borrowing (ECB)-யும் அனுமதிப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.


பொதுவாகத் தனித்தனியாகக் (Solitary Phase) குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்போதுதான் அவை ஆபத்தான அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.
ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அவை தாமாகவே தமது முந்தைய solitary phase ஐ அடைந்து மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இந்த Locust swarm எனப்படும் அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை.
ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் வலசையை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் அவர்கள் தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார்.
நூற்றுக்கணக்கான நண்பர்கள் எங்களை அலைபேசியில் அழைத்தனர், அவர்கள் வரவர ராவின் குடும்பத்திற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
இரவு அவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்க தொடர்பு கொண்டால் அவளே தொலைபேசியில் –
தொழில் செய்வதை எளிமையாக்குவது மற்றும் நிறுவனங்கள், ஆலைகள், சுரங்கங்களின் விரிவாக்கத்தை எளிமைப்படுத்தும் விதமாகவும் இந்த புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020 கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
சுற்றுச்சூழலியல் நடைமுறையில், பொதுமக்கள் கருத்துக் கேட்பு, ஆலோசனை ஆகியவை அனைத்தும் அதன் ஒருங்கிணைந்த பாகமாகும். இது பகுதி மக்களுக்கும், பங்குதாரர்களுக்கும் அத்திட்டத்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து தங்களது அக்கறையைக் காட்டவும், குரலை எழுப்பவும் உரிமை வழங்குகிறது. சட்டத்தில் இந்த வழிமுறைகள் இருக்கும்போதே கார்ப்பரேட் நிறுவனஙக்ள் அதனை மீறிச் செயல்படுகின்றன. இந்த புதிய வரைவு பல்வேறு திட்டங்களுக்கு இத்தகைய ஒப்புதல் எதையும் நிறுவனங்கள் பெறத் தேவையில்லை என்று கூறுகிறது.
கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை இத்தனை ஆண்டுகாலம் குறைந்த கூலி கொடுத்து சுரண்டிக் கொழுத்த முதலாளிகளும், கமிசன் வாங்கிய ஒப்பந்தக்காரர்களும் கைவிட்ட நிலையில், அரசின் நிவாரணமோ உணவோ கிடைக்காதததால், உயிரைப் பணயம் வைத்து வேகாத வெயிலில் சொந்த கிராமங்களை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளார்கள்.
இதையெல்லாம் மீறி, 8 மணி நேரத்துக்கு மேல் உழைக்க மறுத்தாலோ, உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டாலோ, முதலாளியின் அனுமதியின்றி சிறுநீர் கழிக்கச் சென்றாலோ அவை தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படும். இதற்காக, வேலைநீக்கம் என்ற பழைய பாணியில் முதலாளிகள் நடந்து கொள்வார்கள் என்று நாம் கருதக் கூடாது; உரிமை கேட்ட தொழிலாளியைக் கட்டிவைத்து அடிப்பது அல்லது போலீசை வைத்து தாக்குவது, சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறைகளைத்தான் இனி எதிர்பார்க்க நேரிடும்.
“14 வயதுக்கு மேற்பட்டவர்கள் உரிமம் இல்லாமல் பிச்சையெடுத்தால், யாரும் அவர்களை ஈராண்டு காலத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் அவர்களுக்கு கடும் கசையடி தந்து, இடது காதில் சூட்டுக்குறி பொறிக்க வேண்டும். மீண்டும் குற்றம் புரிந்தால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களானால், யாரும் அவர்களை ஈராண்டு காலத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் மரண தண்டனை கிடைக்கும். மூன்றாவது முறை குற்றம் புரிந்தால், கடுங்குற்றவாளிகளாகக் கருதி கருணை காட்டாமல் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும்.”

