“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்கோதை ஆலடி அருணா, எழுத்தாளர் சம்பத் சீனிவாசன், டாக்டர் அ. ரங்கநாதன் மற்றும் வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் நிறம் கருப்புதான் ! – பூங்கோதை ஆலடி அருணா :
ஜாதியை ஒழிக்க கலப்புத் திருமணம் ஒன்றுதான் வழி ! – எழுத்தாளர் சம்பத் சீனிவாசன், டாக்டர் அ. ரங்கநாதன் மற்றும் வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை :
மனிதர்கள் பல்வேறு சூழல்கள், கலாச்சாரங்கள் நாடுகள், தேசங்கள் என பிரிந்து இருந்தாலும் சில தேவைகள், ரசனைகள் அவர்களை ஒன்றிணைக்கிறது. அதற்கு மிகச் சிறந்ததொரு சாதாரண உதாரணம் நாளிதழ்கள், பத்திரிகைகள் படிப்பது, இலக்கியங்கள் ரசிப்பது, சஞ்சிகைகள் வாசிப்பது. இவற்றுள் ஒருசில புகழ்பெற்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் தேச வர்த்தமான எல்லைகளைக் கடந்து பல்வேறு தரபட்ட மக்களாலும் விரும்பி வாசிக்கப்படும் ஜனரஞ்சமானவையாக இருக்கிறன.
இவைகள் சாதாரண படித்த பொது வாசகர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்படுபவை. அதுபோன்று உலக அளவில் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகக்கூடியவை. ஆனால் குறிப்பிட்ட ஒரு வாசகர் வட்டத்தை, துறைசார் படித்த மட்டத்தை நோக்காகக் கொண்டு வெளியிடப்படும் சில அறிவுசார் சஞ்சிகைகளும் உலக அளவில் பிரசித்தம் வாய்ந்தவை. இவைகள் ஆய்வுபூர்வமான, மற்றும் ஆழமான வாசிப்புக்களை கொண்டவர்களை மாத்திரமே இலக்காக கொண்டவை.
தமிழ் இலக்கிய வாசகர்களுக்காக வெளியிடப்படும் கனதி மிகு ஆக்கங்களை கொண்ட கணையாழி. கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவர்களுக்கு கட்டுரைகள் தாங்கிய IEEE. விஞ்ஞான ஆராய்ச்சி, அது தொடர்புடைய ஆய்வுகளை கொண்ட, இதில் தமது ஒரு கட்டுரை வெளிவருவது தான் தமது பிறவிப்பயன் என ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் போற்றுகின்ற நேச்சர் (NATURE) போன்றவை இவற்றிற்கான சில எடுத்துக்காட்டுகள். அதே போன்று மருத்துவத்துறையிலும் ஓர் இதழ் உள்ளது. அதுதான் த லான்செட் The Lancet. இது உலகின் பழமையான, மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்தது என அறியப்பட்ட பொது மருத்துவ (General Medicine) இதழ்களில் ஒன்றாகும். இதன் அண்மைய பிரதி நமக்கு அதிர்ச்சி தரும் ஆய்வொன்றைத் தாங்கி வந்திருக்கிறது.
சமீபத்திய பத்தாண்டுகளில் தெற்காசியாவில் அதாவது பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சனையாக 2-ம் வகை நீரிழிவு (Type 2 Diabetes ) வேகமாக வளர்ந்திருக்கிறது என்ற பீடிகையுடன் அந்த கட்டுரை தொடங்குகிறது.
“இந்த நவீன காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம், தொழில்மயமாக்கல், நகர்ப்புறமயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றுடன் தொடர்புடைய பெரிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பன இவ்வாறான தொற்றா நோய்கள்(non communicable) அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாக இனம் காணப்பட்டிருக்கின்றன” என்று தொடர்ந்து செல்லும் கட்டுரை போகப்போக வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றுகிறது.
இதில் :
ஊட்டச்சத்துமிக்க உணவுகளின்( nutritious food) பாவனையின் அளவும் தரமும் குறைதல்.
உடற்பயிற்சி (Exercise), உடல் உழைப்பு (Physical labor) குறைதல்.
அதிகரித்து வரும் சோம்பேறித்தனமான வாழ்கை முறை, தொழில்தன்மை. (Sedentary lifestyle and Non active working environment).
உடற்பருமன் , உடல்நிறை அதிகரிப்பு ஆகியவை இந்த நாடுகளில் 2-ம் வகை நீரிழிவு மற்றும் அது தொடர்புடைய நோய்கள் அதிகரிப்பதற்கான ஆபத்து மிக்க காரணிகளாக அடையாளப்படுத்திக் கட்டப்பட்டுள்ளன.
2017-ம் ஆண்டில் நேபாளம் முதல் இந்தியா வரை 4% முதல் 8% வரையில் (அண்ணளவாக பத்துப் பேரில் ஒருவர்) நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாக சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி இந்த நோயின் பரவ(ம்ப)லை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
அதே நேரத்தில் நேபாளத்தில் 16.7 சதவிகிதம் பேர் (நூற்றுக்கு பதினாறு பேரும் ) இலங்கையில் 26.1% ஆனோர் (நூற்றுக்கு இருபத்தாறு பேரும் )அதிகமான உடல் பருமனைக் கொண்டவர்களாக மாறி இருக்கின்றனர் என்பது நாம் கவனம் செலுத்த தவறிய ஒரு நோயாகவே மாறி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் குழந்தைகள், இளம்பருவ வாலிபர்கள் மற்றும் பெண்களில் அதிகரித்துவரும் அதிக உடற்பருமன் விகிதம் (obesity or BMI) இந்த 2-ம் வகை நீரிழிவு நோய்த்தாக்க அபாயத்திற்கு வழிவகுக்கின்ற மிகப்பெரும் காரணியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
மேற் கூறியவைகள் எல்லாமே தவிர்க்க கூடிய, மாற்றம் செய்யக்கூடிய காரணிகள் (Modifiable Risk Factors) தான் என்பது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நாம் யாரும் தப்ப முடியாத, மாற்றம் செய்ய முடியாத(Non modifiable risk factor ), நம்மோடு ஒட்டிப் பிறந்த, நமது உடலமைப்பின் (body composition) மூலமாக வரக்கூடிய ஆபத்து தான் நாம் அதிகம் பயம் கொள்ள வேண்டிய, முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காரணியாக இருக்கிறது. அது தான் the south Asian phenotype அதாவது தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர் என்கிற காரணி. (அரபிகள், வெள்ளைக்காரர்கள் எல்லாம் நம்மை விட எவ்வளவோ அதிகமாக சாப்பிடுகின்றனர் ஆனால் அவர்களுக்கு இந்த மாதிரி வருத்தம் எல்லாம் வருவதில்லையே என்ற உங்களின் அங்கலாய்ப்பிற்கும் இதுதான் காரணம்.)
பிற இன குழுக்கள், பிற நாட்டு மக்களை காட்டிலும் தென் ஆசிய மக்களுக்கு இந்த 2ம் வகை நீரிழிவு பெரும்பாலும் இளவயதில் வருவதற்கும், மிக சிக்கலான நிலமைகள் உதாரணமாக சிறுநீரகக் கோளாறு (kidney failure ), மாரடைப்பு (heart attack ), ஆறாத நாட்பட்ட புண்களினால் கை, கால் வெட்டி அகற்றப்படுதல் (limb amputation ) போன்றவை விரைவாக ஏற்படுவதற்கும் இந்த உடல் அமைப்பு (body composition) தான் ஆபத்துமிக்க காரணியாக அடிக்கோடிடப்பட்டிருக்கிறது. இதனால் தென் ஆசிய மக்கள் இது தொடர்பில் மிக கரிசனத்துடன் இருக்க வேண்டும் என அந்த ஆய்வறிக்கை பரிந்துரை செய்கிறது. அது போல இந்த உகந்த ஒரு உடல் அமைப்பு காரணமாக இந்த நோய் தெற்காசியர்களிடம் அதிகரித்து செல்வதனால் தீவிரமாக நோய் தடுப்பு இலக்குகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்த கட்டுரை முற்றுப்பெறுகிறது.
ஆக மொத்தத்தில் இந்த இரண்டாம் வகை நீரிழிவு நம் எல்லோருக்கும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்கனவே நமது உடம்பில் இருக்கின்றன. நாம் தெற்காசியாவில் பிறந்தது ஒன்றே போதும் நாம் ஒவ்வொருவரும் இந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய காரணி.
அப்படியானால் என்ன செய்வது? நமக்கு முன்னால் சில தெரிவுகள் இருக்கின்றன. அவைகளை கவனமாக கையாள்வது தான் இதிலிருந்து தப்பிப்பதற்கான புத்திசாலித்தனமான வழிமுறையாக இருக்கும். மாற்றக் கூடிய காரணிகளை (modifiable risk factors) முறையாக கட்டுப்படுத்தி வைப்பதில் நாம் இன்று அடைகின்ற வெற்றி தான் நாளைய நோயற்ற வாழ்க்கைக்கான அஸ்திவாரமாக அமையும்.
இதற்காக இன்றிலிருந்து சிறுவர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள், தாய்மார்கள் உட்பட வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் நமது உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள முயற்சிப்போம். ஆரோக்கிய சத்துணவுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ள பழகுவோம். உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் பேணுவதற்கு உறுதி கொள்வோம். அதிக உடல் பருமன் உள்ளவர்கள் தங்களது உயரத்திற்கு ஏற்றவாறு உடல் எடையை குறைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்வோம்.
அதே போன்று நமது வாழ்க்கை முறைகளை முற்றாக மாற்றுவோம், ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரிரு கிலோமீட்டர்களாவது நடந்து செல்ல பழகுவோம். தொடரான உடற்பயிற்சிகள் செய்வதற்கு முயற்சி செய்வோம். ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது உடல் வியர்க்கும் அளவுக்கு ஏதாவது வீட்டு வேலைகளையோ அல்லது வேறு எந்த வகையான வேலைகளையோ செய்வதற்கு பழகிக்கொள்வோம்.
நமக்கு முன்னாலே உள்ள மிகச் சிறந்த தெரிவு இவைகள் மட்டும்தான். நாம் கொஞ்சம் சிரத்தை எடுத்து இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றால் இன்னும் சில மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ நாமும் இந்த கொடிய நீரிழிவு நோயினால் பாதிக்கப் படப்போவது வெள்ளிடை மலை. நம் மொத்த எதிர்கால சமூகமும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
பின்குறிப்பு :
“நீரிழிவு என்ற நோயே கிடையாது, அவ்வாறு கூறுவது ஒரு பொய்; வைத்தியர்கள் மற்றும் மருந்து கம்பெனிகள் தங்கள் வியாபாரத்திற்காக சொல்லுகின்ற ஒரு மோசடி” என்று நம்புகின்ற, சொல்லுகின்ற கூகுள் விஞ்சானிகள், பேஸ்புக் போராளிகள், வாட்ஸ்-அப் சயாரிகள் யாராவது இருப்பீர்கள் என்றால் நீங்களும் இந்த முறைகளை பயன்படுத்தி உங்களை தற்காத்துக் கொள்ள எந்த தடைகளும் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.
நீரிழிவு நோயை ஒரு மாதத்தில் முற்றாக குணப்படுத்துகிறேன் பேர்வழி இதோ மருந்துகள், இந்த கசாயத்தை, இந்த தண்ணியை குடியுங்கள்; இந்த வல்லப்பட்டை, இந்த கொட்டையை சாப்பிடுங்கள் என்று கண்டதையெல்லாம் பகிரும் (share ) அறிவுசீவிகள் ஒரே ஒரு நீரிழிவு நோயாளியை முற்றாக குணப்படுத்திக் காட்டுங்கள். அடுத்த வருட மருத்துவம், இரசாயனவியல் போன்றவற்றிக்கான இரண்டு நோபல் பரிசுகளும் உங்களுக்குதான்.
மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL) Senior Registrar in Peadiatrics, Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka
கடந்த 06-12-2018 அன்று இந்து தமிழ் நாளிதழில் வெளியான, “தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் : நவீனக் கொத்தடிமைகளா?” என்ற கட்டுரை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கிடையில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அந்தக் கட்டுரையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (AICTE) விதிகளுக்குப் புறம்பாக தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களிடம் சான்றிதழ்களைப் பிணையாக வாங்கி வைத்துக்கொண்டதையும், வேறு பணிக்குச் செல்வதன் நிமித்தம் உதவிப் பேராசிரியர் ஒருவர் தனது அசல் சான்றிதழ்களைத் திரும்பக் கேட்டபோது, கல்லூரி நிர்வாகம் கொடுக்க மறுத்து அவரை அலைக்கழித்ததையும், விளைவாக அவர் தற்கொலை செய்துகொண்டதையும் கட்டுரை ஆசிரியர் பதிவுசெய்திருந்தார்.
தவிர, மற்றொரு பொறியியல் கல்லூரியில் ஊதியத்தைக் காரணமின்றிக் குறைத்தல்; முறையான காரணமும் முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்தல்; பணியிலிருந்து விலகிக்கொள்ள விரும்புவோருக்குச் சான்றிதழ்களை வழங்காமல் அலைக்கழித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக தனது சகபாடி ஆசிரியர்கள் சகிதம் போராட்டத்தில் இறங்கிய பேராசிரியர் ஒருவரை குண்டர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி அவர் உயிருக்குப் போராடி பின்னர் உயிர் பிழைத்ததையும் அவர் பதிவுசெய்திருந்தார்.
இந்தக் கட்டுரை பிரசுரமாகி சிறிது நாள்களிலேயே அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பணியில் சேரும் ஆசிரியர்கள் / ஆசிரியர் அல்லாதோரின் அசல் சான்றிதழ்களைத் தக்கவைத்துக்கொள்வது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும், தொடர் அறிவுறுத்தல்களுக்குப் பிறகும் அத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் பொறியியல் கல்லூரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தவிர, ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரிக்கும் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற முத்திரையுடன் சான்றிதழ்களைத் திருப்பி ஒப்படைக்குமாறு AICTE கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததாகவும் வேறொரு தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் வாயிலாகத் தனிப்பட்ட முறையில் நான் அறிந்துகொண்டேன். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது?
கள யதார்த்தம் AICTE-க்குத் தெரியுமோ இல்லையோ மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். எல்லா தனியார் பொறியியல் கல்லூரிகளும் இந்தக் கறாரான விதிமுறையைப் பின்பற்றி ஒழுகுகின்றனவா? தங்கள் போக்கை அவை மாற்றிக்கொண்டனவா?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் தோராயமாக இரண்டு ஆண்டுகள் உதவிப் பேராசிரியராக நான் பணியாற்றிவந்தேன். கடந்த ஜனவரி 22 அன்று எனது பணியை நான் ராஜினாமா செய்தேன். நான் பணியில் சேருகிற சமயம், புதிதாய் பணியில் சேர வரும் ஏனைய நபர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களைப் பிணையாக வாங்கி வைத்துக்கொள்வதுபோல எனது சான்றிதழ்களையும் பிணையாகக் கேட்டார்கள். அப்பொழுதெல்லாம் இது சட்டவிரோதம், விதி மீறல், AICTE-ன் நியதிகளுக்குப் புறம்பானது என்பது எங்களுக்கு, குறைந்தபட்சம் புதிதாக இந்தப் பணியில் சேர்ந்த எனக்கு, தெரியாது. மாறாக, இவை எல்லாம் AICTE-ன் விதிமுறைகளுள் ஒன்றுதானோ என்கிற எண்ணமே என்னுள் நிழலாடியது. பணியில் சேர்ந்து வெகு நாள்கள் கழித்தே கல்லூரி நிர்வாகத்தின் இந்தச் செயல் அப்பட்டமான விதிமீறல் என்பதும், பணியில் இருப்பவர்கள் திடுதிப்பென்று ராஜினாமா செய்துவிடக் கூடாது, வேறு பணிகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் கைக்கொள்ளும் உத்தி என்பதும் தெரியவந்தது.
ஏதேனும் பேராசிரியர்கள் தன்னிச்சையாக வேலையைவிட்டு நின்றுவிட வேண்டுமென்றோ இதைவிட மேம்பட்ட பணிகளுக்கான நேர்காணல்களில் கலந்துகொள்ள வேண்டுமென்றோ விரும்பி, தங்கள் அசல் சான்றிதழ்களைத் திரும்பக் கேட்டால் மூன்று மாதச் சம்பளத்தைப் பகரமாக அவர்கள் ஒப்படைத்தாக வேண்டிய அவலநிலை இங்கே.
2019 ஜனவரி 22 அன்று எனது ராஜினாமா கடிதத்தை கேக்றான் மேக்றான் கல்லூரி நிர்வாகத்திடம் சமர்ப்பித்தேன். சேர்மேனின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அடுத்தகட்ட முறைமைகளைக் கூற முடியும் என்றார் நிர்வாக அலுவலர் (AO). காத்திருந்தேன். ஒரு வாரம் கழித்து, ஒப்புதல் கிடைத்துவிட்டது என்றார். சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு ஏனைய முறைமைகளையும் நேரில் வந்து முடித்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். இல்லை, மூன்று மாதச் சம்பளத்தை நீங்கள் கொடுத்தாக வேண்டும் என்றார். இதில் ஏதேனும் சலுகைப் பெற்றுக்கொள்ள விழைந்தால் சேர்மேனைத்தான் நீங்கள் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்றார்.
மூன்று நாள்கள் கழித்து, சேர்மேனைச் சந்தித்துப் பேசுவதற்காக கல்லூரி சென்றேன். அவரது அறை முன்பு காத்திருந்தேன். தனிப்பட்ட உதவியாளர் உள்ளே சென்று விவரத்தைக் கூறினார். இப்பொழுது அதற்கெல்லாம் நேரமில்லை, அவரைக் அகடமிக் டைரக்டரைச் சென்று சந்திக்கச் சொல்லுங்கள் என்று கூறி உதவியாளரை அனுப்பினார். அகடமிக் டைரக்டரைச் சந்தித்து விவரத்தைக் கூறினேன்.
கடின உழைப்பினூடாக நாங்கள் பெற்றுக்கொண்ட சான்றிதழ்களை மீண்டும் கேட்டால், மூன்று மாதச் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் என்கிறீர்களே, எங்கள் சான்றிதழ் எங்கள் உரிமை இல்லையா என்றேன். நீங்கள் கொடுக்கும் சம்பளம் எங்களைப் போன்றவர்களின் அன்றாடத் தேவைகளுக்கே சரியாய்ப் போய்விடுகிறது. அதுவும், என்போன்ற சாமானியர்களுக்கு மூன்று மாதச் சம்பளம் என்பது மிகப் பெரிய தொகை, அதை உங்களுக்குத் தந்துவிட்டால் எங்கள் குடும்பத்தை யார் கவனிப்பது என்று கேட்டேன். அவர், ‘இது நிர்வாக விதிமுறை சார், இதற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்’ என்றார்.
சார், ஓரிரு மாதங்கள் முன்புதான், ஆசிரியர்களின் சான்றிதழ்களைப் பிணையாக வாங்கி வைத்துக்கொள்வது விதிமீறல், தண்டனைக்கு உரிய குற்றம் என்ற கறாரான எச்சரிக்கை அறிவிக்கை ஒன்றை AICTE வெளியிட்டிருக்கிறது. அதையும் மீறி சான்றிதழ்களை இப்படி திருப்பித் தர மறுப்பதும், மூன்று மாதச் சம்பளத்தைப் பகரமாகக் கேட்டு அலைக்கழிப்பதும் சட்டவிரோதம் இல்லையா, விதிமீறல் இல்லையா என்றேன்.
இதையெல்லாம் நீங்கள் சேர்மேனிடம்தான் சார் பேச வேண்டும் என்றார். மீண்டும் சேர்மேனைப் பார்ப்பதற்காக அவர் அறைக்குச் சென்றேன். வெளியில் காத்திருந்தேன். பார்க்க முடியாது, அகடமிக் டைரக்டர் வழியாகத்தான் வர வேண்டும் என்கிற சமிக்ஞை வந்தது. மீண்டும் அக்கெடமிக் டைரக்டரைச் சென்று பார்த்தேன். நடந்ததைக் கூறினேன். இதற்கு என்னதான் சார் வழி என்று கேட்டேன்.
சேர்மேன் ஒருமுறை கூறிவிட்டார் அல்லவா, மூன்று மாதச் சம்பளம் வைத்தால்தான் சான்றிதழ் என்று. இதுகுறித்து திரும்பத் திரும்ப அவரிடம் சென்று பேசிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் வேண்டுமானால், ‘சம்பளத் தொகையைக் கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறேன் …’ என்று இன்னொரு கடிதம் ஒன்றை எழுதி கல்லூரி முதல்வரிடம் (Principal) கொடுங்கள். அவர் வழியாகச் சம்பிரதாயமாகவே வரட்டும். கடிதத்தில் உள்ள உங்கள் கோரிக்கையை வைத்து வேண்டுமானால் சேர்மேன் சாரிடம் பேசிப் பார்க்கலாம், என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்றார்.
அவ்வாறே கல்லூரி முதல்வரிடம் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்தேன். கடிதம் சேர்மேனின் பார்வைக்குச் சென்று அவர் பதில் கூறினால் அலுவலகத்திலிருந்து உங்களுக்குத் தெரியப்படுத்துவார்கள் என்றார் முதல்வர்.
பத்து நாள்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை. ஏறக்குறைய பன்னிரண்டு நாள்கள் கழித்து இதுகுறித்து கேட்பதற்காக நிர்வாக அலுவலரை (AO) அலைபேசியில் அழைத்தேன். சார் இது கிரிடிகல் சிட்டுவேஷன். மறுபடியும் சேர்மேன் சாரிடம் இதுகுறித்து எதுவும் கேட்க முடியாது. நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். சேர்மேன் சார் என்னைப் பார்க்க மறுக்கிறார்; அகடமிக் டைரக்டர்தான் கடிதம் கொடுங்கள், இப்போதைக்கு வேறு வழியில்லை என்றார் என்று சொன்னேன். சரி சார், நான் இந்தக் கடிதத்தை அவரிடமே ஒப்படைத்துவிடுகிறேன். அவர் சேர்மேனிடம் எடுத்துச் செல்லட்டும். ஏதேனும் மறுமொழி வந்தால் தெரியப்படுத்துகிறேன் என்றார். காத்திருந்தேன்.
ராஜினாமா கடிதம் கொடுத்து அன்றுடன் 23 நாள்கள் கழிந்துவிட்டிருந்தன. எனது முந்தைய உதவிப் பேராசிரியர் பணியிடத்தில் இன்னொருவரையும் நியமித்துவிட்டாயிற்று. ஆனால், எனது சான்றிதழ்களை இன்னமும் கொடுத்தபாடு இல்லை.
ராஜினாமா செய்து ஏறக்குறைய ஒரு மாதகாலம் நெருங்கிவிட்டிருந்த நிலையில் AO திரும்பக் கூப்பிடுவார் என்று காத்திருந்தேன். கூப்பிடவில்லை. இந்நிலையில் அகடமிக் டைரக்டரை கடந்த பிப்ரவரி 19-ம் தேதியன்று அலைபேசியில் விளித்தேன். சான்றிதழ்களைத் திருப்பித் தருவதுகுறித்து கேட்டேன். சேர்மேன் சார் நல்ல மூடில் இருக்கும்போதுதான் சார் இந்த விவகாரத்தை எடுத்துச் சொல்ல முடியும் என்றார். அதுவரைக்குமெல்லாம் என்னால் எப்படி சார் காத்திருக்க முடியும். நானும் வேறு வேலை தேட வேண்டியிருக்கிறது. சான்றிதழ்கள் இல்லாமல் எதைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை. குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். தவிர, எனது ஐந்துநாள் சம்பளத்தைவேறு எந்தக் காரணமும் இல்லாமல் பிடித்தம் செய்திருக்கிறார்கள். அதுவும் எனக்கு வேண்டும். சேர்மேன் சார் முடிவாக என்னதான் சொல்கிறார் என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள் சார் என்றேன். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கொள்ளுங்கள் சார், சேர்மேனின் மறுமொழி என்ன என்பதை அதற்குள் தெரியப்படுத்துகிறேன் என்றார்.
ஒரு வாரம் கழித்து, அதாவது 26 பிப்ரவரி அன்று, தொடர்புகொண்டேன். தெளிவான பதில் இல்லை. தொடர்ந்துவந்த நாள்களில் இரண்டு, மூன்று முறை அலைபேசியில் அழைத்துப் பார்த்துவிட்டேன். அழைப்பைச் சட்டைசெய்தாரில்லை. இறுதியாக, வேறு வழி தெரியாமல், சான்றிதழ்கள் கிடைக்குமா கிடைக்காதா என்று தெளிவான ஒரு பதிலைச் சொல்லுமாறு அவரது வாட்சப் நம்பரில் குரல் தகவல் (Voice Message) ஒன்றைப் பதிவிட்டேன், ஆக்கபூர்வ மறுமொழியை எதிர்பார்த்தவனாக. பதிவிட்டு ஐந்து நாள்கள் ஆகியும் எந்த மறுமொழியும் இல்லை.
ராஜினாமா செய்ததிலிருந்து அன்றுவரை, ஏறக்குறைய முப்பத்தாறு நாள்களில், சான்றிதழ்களை வாங்குவது பற்றிப் பேச மூன்று முறை கல்லூரிக்குப் போய்வந்திருந்தேன். மூன்று முறையுமே எனது அலைச்சல் வீணாய்ப் போனதுதான் மிச்சம். தவிர, அலைபேசி, வாட்சப் உரையாடல்கள் இத்யாதி.
கொத்தடிமைகளா , பேராசிரியர்கள் ?
1 of 2
நோட்டீஸ் கொடுத்து 'ஆள்' பிடிக்க தெருவில் நிறுத்தப்படும் பேராசிரியர்கள்.
தனியார் கல்லூரியின் விளம்பர போஸ்டர் ஒட்டும் பேராசிரியர்கள்.
நேரமும் நாள்களும் விரயமாகிக்கொண்டிருந்தன. பேச்சுவார்த்தைகளைக் கொண்டு எந்தப் பலனும் இல்லை. எஞ்சியிருந்தவையெல்லாம் மன அழுத்தமும் அலைக்கழிப்புகளும் மட்டும்தான்.
இப்படிப்பட்டவர்களிடம் நமது உரிமைகளைக் கேட்க வேண்டிய முறையில்தான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். முதல் கட்டமாக, “கேக்றான் மேக்றான் பொறியியல் கல்லூரி: சான்றிதழ்களுக்காக ஆசிரியர்களை அலைக்கழிக்கும் படலம், நீதி கிடைக்குமா?!” என்ற தலைப்பில், எனது அலைக்கழிப்பு அனுபவங்களை எல்லாம் ஒரு கட்டுரையாக எழுதி எனது வலைப்பூவில் பதிவிட்டேன். சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வாட்சப்பில், அதிவேகமாகப் பரவிய அந்தக் கட்டுரையும் அதில் இருந்த உண்மைகளும் கல்லூரி நிர்வாகத்தின் சுயரூபம் அதில் தோலுரிக்கப்பட்டிருந்த விதமும் கேக்றான் மேக்றான் பொறியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு அவப்பெயரையும் நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கக்கூடும். உடனடியாக வந்து அசல் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்கள். சான்றிதழ்களைக் கொடுத்துவிடுகிறோம், பகரமாக உங்கள் வலைப்பூவில் நீங்கள் பதிவிட்டிருக்கும் கட்டுரையை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு கட்டுரையை அகற்றினேன்.
என்றாலும், அது என்னுடைய பிரச்சினை மட்டுமல்ல; பொதுப் பிரச்சினை; தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்களின் பிரச்சினை. கடந்த ஆண்டு சென்னையில் சம்பவித்த – கட்டுரையின் ஆரம்பப் பத்திகளில் நான் கோடிகாட்டியிருக்கும் – துணைப் பேராசிரியர் வசந்தவாணனின் தற்கொலைச் சமபவத்தை நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். கல்லூரி நிர்வாகம் அசல் சான்றிதழ்களை உரிய நேரத்தில் கொடுக்க மறுத்து அலைக்கழித்ததன் விளைவே அந்தத் தற்கொலை. அவ்வகையில், பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் ஏதோ ஒரு வகையில், பல்வேறு தருணங்களில் அனுபவித்துவருகிற அலைக்கழிப்பின் ஒரு பரிமாணத்தையே எனது அலைக்கழிப்பினூடாக அந்தக் கட்டுரையில் நான் பதிவுசெய்திருந்தேன். அதைத்தான் தேவைக்கேற்ப செப்பம்செய்து இந்தக் கட்டுரையிலும் பதிவுசெய்திருக்கிறேன்.
(கோப்புப் படம்)
எனக்கு ஏறக்குறைய ஒரு மாதம் முன்பு ராஜினாமா கடிதம் கொடுத்த எனது சகபாடி ஆசிரியைக்கும், எனக்கு மூன்று மாதங்கள் முன்பு ராஜினாமா கடிதம் கொடுத்த பிறிதொரு ஆசிரியருக்கும், ஒன்பது மாதங்கள் முன்பு ராஜினாமா செய்த இன்னொரு ஆசிரியைக்கும், எனக்குப் பிறகு ராஜினாமா செய்த மற்றுமொரு ஆசிரியைக்கும் காரணமே இல்லாமல் ஒரு மாதச் சம்பளத்தைப் பிடித்தம் செய்திருக்கிறார்கள். சான்றிதழ்களுக்காகப் பணம் கேட்டு அலைக்கழிக்கும் விதிமீறல் ஒரு புறம் இருக்கட்டும், எந்தக் காரணமும் இல்லாமல் வேலை பார்த்ததற்கான ஒரு மாதச் சம்பளத்தைப் பிடித்திருக்கிறீர்களே எதற்காக என்று கேட்டால் பதில் வராது. மிஞ்சிப்போனால் இது சேர்மேன் சார் உத்தரவு, அதை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று ஒரே வாக்கியத்தில் முடித்துக்கொள்வார்கள். உண்மையோ பொய்யோ இதைக் கேட்பவர்கள் நம்பியாக வேண்டும். இதுதான் அவர்களின் யதேச்சதிகாரக் கொள்கை.
அரசாங்க பணிகளுக்கான நேர்காணல்களுக்குச் செல்வதற்காக தங்கள் அசல் சான்றிதழ்களை நிர்வாகம் சொல்லும் தொகையைச் செலுத்தி மீளப் பெற்றுக்கொள்வதற்கும், திருப்பி அவற்றை ஒப்படைக்கும் நேரத்தில் பிணையாக அவர்கள் கொடுத்த தொகையை மீண்டும் வாங்கிக்கொள்வதற்கும் எவ்வளவு தூரம் எனது சகபாடி ஊழியர்கள் அலைக்கழிந்திருக்கிறார்கள் என்பதை எனது பணிக் காலத்தில் பலமுறை நான் பார்த்திருக்கிறேன்.
சாமானியர்கள், சமூகப் படிநிலையில் கடைநிலையில் இருப்பவர்கள் எத்தனையோ பேர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாக, உதவிப் பேராசிரியர்களாகப் பணியில் இருக்கின்றனர். பிணையாக வாங்கி வைத்துக்கொண்ட அவர்களது சான்றிதழ்களை மீண்டும் அவர்களிடம் கொடுப்பதற்காக இரண்டு மாதச் சம்பளத்தைத் தா, மூன்று மாதச் சம்பளத்தைத் தா, ஐந்தாயிரத்தைக் கொடு, பத்தாயிரத்தைக் கொடு என்று கேட்டால் வாழ்வாதாரத்துக்கான மாற்றுமுறை குறித்தெல்லாம் யோசிக்க முடியாமல், மேம்பட்ட, அரசாங்கப் பணிகளிலெல்லாம் சேர இயலாமல் கையறுநிலைக்குத் தள்ளப்படும் அத்தகையோரின் தற்கொலைச் சம்பவங்கள் இனிவரும் நாள்களிலும் தொடராது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
குறிப்பு: விவகாரத்தில் தொடர்புடைய கல்லூரியின் அசல் பெயரைத் தவிர்த்திருக்கிறேன். பகரமாக ‘கேக்றான் மேக்றான்’ என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
”எத்தனையோ கதைய சினிமாவுல, டி.வி.யில் பார்க்கிறோம். புத்தகத்தில் படிக்கிறோம். ஆனால், நாம பார்க்க முடியாத கதைகள் நாட்டில எவ்வளோ இருக்கு தெரியுங்களா?..” அன்றாட வாழ்வில் எதிர்படும் சம்பவங்களை கதைபோல விவரிக்கிறார் தோழர் துரை சண்முகம். ”கதைபோல தோணும்… ஆனா கதையுமில்ல” என்ற பகுதியில் தொடர்ந்து உரையாடவிருக்கிறார்…
இந்தப் பதிவில், தனக்காக உழைத்து உழைத்து ஓய்ந்து போன ஒரு மாட்டை தனது குடும்பத்தில் ஒரு உறவாகக் கருதும் ஒரு விவசாயிக்கும் அவரது பட்டணத்து மகனுக்கும் இடையிலான உறவை, இந்த சமூகம் எதிர்கொண்டுவரும் அவல நிலையை ஒரு கதை போல விவரிக்கிறார் தோழர் துரை சண்முகம் … காணொளியைக் காண …
ஒரு புகைப்படக் கலைஞராக தான் பிறந்த மண்ணின் அழகை ஆவணப்படுத்தும் அதே நேரத்தில், தன்னுடைய தாய் மண் எதிர்கொள்ளும் அபாயங்களையும் ஆவணப்படுத்துகிறார் டோர் டுவோர்டா.
இயற்கையின் கொடைகளால் சூழப்பட்ட பைன் மரக்காடுகள் அதில் வாழும் பறவைகள், மலைகளின் ஊடாகத் தவழ்ந்து வரும் இதமான காற்று போன்றவற்றுக்கும், தங்களுக்கும் இடையேயான நீண்ட உறவு இருப்பதாக எண்ணுகிறார்.
சுவீடன் நாட்டின் வடக்கு பகுதியில் லாப்லேண்ட் மாகாணத்தில் உலகப் பாரம்பரிய சின்னங்களைப் பெற்றுள்ள ரண்டிஜார் என்ற நகரத்தில் வசித்து வருகிறார் டோர் டுவோர்டா. தலைமுறை தலைமுறையாய் சாமி பழங்குடியினர் வசித்து வந்த பூர்வீக நிலங்களும் இதே நகரத்தில்தான் உள்ளது.
தொடக்கத்தில் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்து பிறகு வேட்டைத் தொழிலுக்கு மாறி, இறுதியாக கலைமான்கள் வளர்ப்பதையே பிரதான தொழிலாக மாற்றிக்கொண்டுள்ளனர் சாமி பழங்குடியினர்.
தான் ஒரு புகைப்படக் கலைஞராக இருப்பதால், தன்னைச் சுற்றியுள்ள மலைகள், அருவிகளைப் புகைப்படங்கள் எடுத்து வைப்பது, குறிப்பாக சில நூறு வருடங்கள் பழமை வாய்ந்த க்விக்ஜாக்ச் என்ற கிராமத்தில் உள்ள பைன் மரக்காடுகளைப் படம்பிடிப்பதென்றால் டோருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இந்தக் காடு கலைமான், கரடி, லிங்க்ஸ் எனப்படும் காட்டுப்பூனை, கடமான் போன்ற பல்வேறு உயிரினங்களின் புகலிடமாக இருக்கிறது.
இந்தப் பகுதியில் ஒவ்வொரு முறை நுழையும்போதும், ஒரு பிரம்மாண்டமான தேவாலயம் ஒன்றில் முதல் முறையாக நுழைந்தபோது ஏற்பட்ட அனுபவம் கிடைக்கும். அவ்வளவு அழகான, பிரம்மாண்டமான காடு இது என்கிறார் டோர்.
நாங்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்கிறோம். மீன், பெர்ரி பழங்கள், இறைச்சி போன்றவற்றை நாங்கள் சந்தையில் வாங்கியதேயில்லை. எனக்குத் தேவையான ஆற்றலனைத்தையும் இயற்கையே கொடுக்கிறது. இப்படி வாழ்க்கையானது இயற்கையுடன் ஒன்றிப்போகும் நிகழ்வு தான் என்னைப் பொருத்தவரை மிக முக்கியமான ஒன்று என எண்ணுகிறேன் என்கிறார் டோர்.
ஒரு புகைப்படக் கலைஞனாகத் தன் குடும்பம் இயற்கையால் அரவணைக்கப்பட்டு வருவதையும், இயற்கை மீது தான் கொண்ட காதலையும், ஆவணப்படுத்த நினைக்கிறார். ஏனென்றால் இவையனைத்தும் ஒரு மாபெரும் பேரிடரை நோக்கிக் காத்திருக்கின்றன.
கலைமான் மேய்ச்சல்குழுவினர் பனியால் உறைந்துகிடக்கும் ராட்னாவ்ரே ஏரியைக் கடந்து காலோக் என்ற இடத்தை நோக்கிச் செல்கின்றனர். 51 வகையான சாமி பழங்குடியினர் தங்களுடைய கலைமான்களுடன் மேய்ச்சலுக்காக இடம் மாறிச் செல்கின்றனர்.
இயற்கையில் எழில் வனப்பு எப்படி சுற்றுலாப் பயணிகளை, சாமி பழங்குடியினரின் பூர்வீக பகுதிகளைச் சுண்டியிழுக்கிறதோ அதேபோன்று கார்ப்பரேட் பெரு நிறுவனங்களையும் தன்பால் ஈர்க்கிறது. எப்படி நியாம்கிரி மலையை போஸ்கோ நிறுவனம் குறிவைத்ததோ அதையொத்த ஒரு நிகழ்வும்தான் டோரின் பூர்வீக நிலத்திலும் நடக்கிறது. சாமி பழங்குடிகளின் பூர்வீக நிலங்களில் தாது வளங்களை வெட்டியெடுக்க சுவீடன் நாட்டு அரசு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.
2006-ம் பிரிட்டனைச் சேர்ந்த பியோவுல்ஃப் மைனிங் பி.எல்.சி என்ற நிறுவனத்திடம், சாமி பழங்குடியினர் வசித்துவரும் மலைக்குன்றுகளில் கனிமவளங்கள் இருக்கின்றனவா என சோதித்தறியும் உரிமம் தரப்பட்டது. யாக்மாக் என்ற சிறு நகரத்திலிருந்து 50 கிமீ தொலைவில் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை தான் சாமி பழங்குடியினரை இரு தரப்பாகப் பிரித்துவிட்டது. ஒருபுறம் வளர்ச்சி வேலைவாய்ப்பு என்ற உத்திரவாதம் கிடைத்தாலும் மறுபுறத்தில் காடுகள் சூறையாடப்பட்டு அரியவகை உயிரினங்கள் அழியக்கூடிய அச்சுறுத்தலும் இருப்பதுதான் இப்பகுதியில் வசிக்கும் மக்களை இரு பிரிவாகப் பிரித்துள்ளது.
டோர் இயற்கை வளங்களைப் பாதுகாக்கப் போராடிவரும் குழுவில் இணைந்துள்ளார். தான் சார்ந்த சாமி பழங்குடியினக் குடும்பத்தின் இயற்பெயரான டுவோர்டா என்ற பெயரையே ஒரு அமைப்பாக்கியுள்ளார். சுரங்க வேலைகளைத் தடுத்து நிறுத்துவதே தன்னுடைய பிரதான நோக்கமென்றும் அதற்காகத் தன்னுடைய உயிரையும் துறக்கத் தயார் என்றும் கூறுகிறார் டோர்.
டோர் டுவோர்டா
காலோக் பகுதியில் மேற்கொள்ளப்படும் மாபெரும் சுரங்கப் பணிகளுக்கெதிராக 2006-ம் ஆண்டு முதல் போராடி வரும் டோர்
வடக்கு சுவீடனின் அய்ட்டிக் பகுதியில் அமைந்துள்ள பெரிய தங்க மற்றும் செம்புச் சுரங்கம். 2013-ல் 13-ஆக இருந்த சுரங்கங்களின் எண்ணிக்கையை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 27-ஆக அதிகரிக்க முயற்சித்து வருவதாக சுவீடன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இயற்கையின் நளினம் சிதைக்கப்பட்டு வருகிறது, எங்கு பார்த்தாலும் வெடிச்சத்தம்தான் என்கிறார் டோர்.
பிரிட்டிஷ் நிறுவனமான பியோவுல்ஃப் மைனிங் பிஎல்சி ஆய்வு மேற்கொண்டிருக்கும் இடத்திற்கருகில் சாமி இனக்குழுவினருடன், சமூக ஆர்வலர்களும் முகாமிட்டுள்ளனர்.
2013-ல் நடந்த போராட்டத்தின் போது தாக்குதலுக்குள்ளான இளைஞரை அப்புறப்படுத்தும் போலீசு. இதுவரை ஆறுமுறை தாங்கள் போலிசை எதிர்த்து நிற்க வேண்டியிருந்தது என்கிறார்.
ஜார்ஜ் ஸ்டென்பெர்க், பாரம்பரிய சாமி பாடகரான இவர் ஜாய்க்கர் என்றும் அழைக்கப்படுகிறார். சுற்றுலா வழிகாட்டியாக இருப்பது, மேடை நிகழ்ச்சிகள் நடத்துவது இந்த முகாமில் தங்கியிருப்பவர்களுக்குப் பரிச்சயமானது என்கிறார் டோர்.
ரண்டிஜார் ஏரி – பாழ்படுத்தப்படாத நிலங்களைப் பயன்படுத்துவதென்பது சாமி இனத்தின் கலாச்சாரத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். நிலம் சாமி இனத்தினரின் கைகளில் இருக்கும்போது, அங்கே கனிமச்சுரங்கம், காற்றாலை போன்ற எதுவுமே இருக்கமுடியாது என்கிறார் டோர்.
சுரங்கக் கம்பெனி தற்காலிகமாக வாபஸ் பெற்றாலும், 2017-ல் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் மேலும் ஒரு ஆய்வுப்பணியை மேற்கொண்டிருப்பதாகக் கூறுகிறது.
டோரின் மகள் ஆஸ்டிரிட்
டோரின் மகள் ஆஸ்டிரிட், அய்ட்டிக் பகுதியில் கழிவுகளை வெளியேற்றும் குட்டை ஒன்றில் நிற்கிறாள். அவள் அனுபவிக்கப்போகும் இயற்கைச் செல்வங்கள் இப்படி பாழ்பட்டுக் கிடக்கிறதே என்பதுதான் எனது பிரதான கவலை என்கிறார் டோரி.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களை தேர்தல் பரபரப்புகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழகம் முழுக்க மாணவர்கள் இளைஞர்கள் தங்களது போராட்டத்தின் வீரியம் குறையாது தொடர்ந்து வருகின்றனர்.
*****
கோவையில்…
பொள்ளாச்சி பாலியல் வெறியாட்டத்தைக் கண்டித்து போராடிய கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 167 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து, கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் 19.03.2019 அன்று உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து கல்லூரி மாணவர்களே !
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்போம்!
கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான பொய் வழக்கு, அடக்குமுறையை முறியடிப்போம்!
இரவிலும் இடையறாது தொடர்ந்த உள்ளிருப்புப் போராட்டம்:
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை.
*****
பொள்ளாச்சி பாலியல் வன்முறை குற்றவாளிகளை தூக்கிலிடு ! ஆபாச இணையதளங்களை தடை செய்… ! என்ற முழக்கத்தை முன்வைத்து 19.03.2019 அன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் சென்னை பாரீஸ் கார்னர் அருகில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இம்மாணவர்களைக் கைது செய்த போலீசு, அவர்களை ரிமாண்ட் செய்யப் போவதாக மிரட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் இவ்விவகாரம் பரவியது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை விடுவித்தது போலீசு.
1 of 4
பொள்ளாச்சி பாலியல் வன்முறை குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி சென்னையில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.
மார்ச்-08 வெள்ளிக்கிழமையன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பூங்கோதை ஆலடி அருணா, சம்பத் சீனிவாசன், ச.ராஜசேகர், சுப.உதயகுமார், இயக்குனர் அமீர், கா.பிரபு ராஜதுரை, அ.மார்க்ஸ், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
இப்பதிவில் நூலாசிரியர் வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோரின் பேச்சு காணொளியாக இடம்பெறுகிறது. ஏனைய கருத்துரையாளர்களின் காணொளிகள் அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்.
”நாடார்கள் வரலாறு கருப்பா? காவியா? – வழக்கறிஞர் லஜபதிராய் :
சாதி மதம் தெரியாமத் தானே வளர்ந்தோம் – இயக்குநர் அமீர் :
மோடியின் ஆட்சியில் மேல்தட்டுவர்க்கத்தின் செலவழிக்கும் திறன் மட்டும்தான்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறதாம் !
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பொருளாதாரம் சிக்கி சின்னாபின்னமானது. தொழிற்சாலை உற்பத்தி மிக மோசமான நிலைக்குப் போனது. முதலீடுகள் குறைந்தன, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவது கடந்த 45 ஆண்டுகாலத்தில் சந்தித்திராத வீழ்ச்சியை சந்தித்தது. கைவிடப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது.
இந்திய பொருளாதாரத்தின் பன்முகப்பட்ட வழிகளும் வீழ்ச்சியைக் கண்டுகொண்டிருக்க, ஒரே ஒரு வழியில் மட்டும் இந்தியப் பொருளாதாரம் ஏறுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அது மேல்தட்டு வர்க்கத்தின் நுகர்வு பொருளாதாரம்!
உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்துக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றால், அவர் இந்திய நுகர்வோருக்கும் தன்னுடைய அரசாங்கத்தின் செலவழிப்புக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறது குவார்ட்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை.
“கடந்த சில வருடங்களாக தனிநபர்களின் இறுதி நுகர்வு செலவழிப்பும் அரசின் இறுதி நுகர்வு செலவழிப்பும் இந்திய பொருளாதாரத்தின் முதன்மையான வளர்ச்சி இயக்கிகளாக உள்ளன” என இந்த ஆண்டு வெளியான இந்திய தரவரிசை மற்றும் ஆய்வு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து எவரும் குறைகூறவில்லை என்றாலும், சுவற்றில் விழுந்த விரிசல்கள் இந்த அறிக்கையின் வாயிலாக வெளிப்படையாக தெரியத் துவங்கியுள்ளன.
விமானப்போக்குவரத்து:
இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறை வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து உலகின் வேகமாக வளர்ந்துவரும் சந்தையாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த இடத்தை பெற்றுள்ளது. உண்மையில், 2025-ம் ஆண்டில் விமானப் போக்குவரத்தில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்திருக்கும்.
என்றாலும், இதில் எச்சரிக்கைகளும் உள்ளன. கச்சா எண்ணை விலை, ரூபாயின் மதிப்பு வீழ்வது, தீவிர போட்டி ஆகியவை இந்த சந்தையில் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம்.
கடந்த சில மாதங்களாக இந்தியாவின் மூத்த தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், வான்வழியில் பறக்க திணறிக் கொண்டிருக்கிறது. சந்தை மதிப்பீட்டைப் பொறுத்தவரை முன்னணியில் இருக்கும் விமான நிறுவனமான இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்துக் கொண்டிருப்பதை கடந்த சில காலாண்டு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வாகனங்கள்:
விமானப் போக்குவரத்தைப் போன்றே வாகன போக்குவரத்து துறையும் உள்ளது. 2021-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய மூன்றாவது பயணிகள் வாகன சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என இலண்டனைச் சேர்ந்த சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்தத் துறையின் வளர்ச்சி சமதளத்தை நோக்கியே உள்ளது. 2016-ம் ஆண்டின் பணமதிப்பு நீக்கமும், 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. அமலாக்கமும் 2017 ஏப்ரலிலிருந்து கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கான மாசு உமிழ்வு கட்டுப்பாடு நெறிமுறைகளும் இந்தத் துறையை பாதித்தன.
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களான மாருதி சுசூகி, அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் தங்களுடைய நிகர இலாபம் குறைந்துள்ளதாக அறிவித்தது. அதே காலாண்டில் இந்தத் துறையின் மற்றொரு முக்கிய நிறுவனமான டாடா மோட்டார்சும் நிகர இலாபம் குறைந்துள்ளதை அறிவித்தது. கொள்கை நெறிமுறைகளில் மாற்றம், அதிகப்படியான எரிபொருள் விலை, ஓலா – உபேர் போன்றவற்றின் வருகை இந்தத் துறையை இழப்பை நோக்கித் தள்ளியது.
இரண்டு இலக்கங்களில் வளர்ச்சி பெற்றிருந்த இந்தத் துறை இப்போது 10%-க்கு கீழே குறையும் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
ஸ்மார்ட்போன்களின்விற்பனை:
இந்தியர்கள் மின்னணு சாதனங்களை வாங்கிக் குவிப்பதில் அதீத ஆர்வமுடையவர்கள். உலகில் விற்பனையாகும் பத்தில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்குபவர் இந்தியராக உள்ளார். கடந்த ஆண்டு இந்தத் துறையின் வளர்ச்சி 14.5%-ஆக இருந்தது. 142.3 அலகுகள் அனுப்பப்பட்டன.
ஆனால், இதனால் இந்திய நிறுவனங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. சீன போன் தயாரிப்பாளர்களான ஷிமோகி, விவோ, அப்போ, ஹூவாய் போன்ற நிறுவனங்கள்தான் பெரும் பயனைப் பெற்றன. சிறப்பான விலை, சலுகைகள் மூலம் சீன நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தன.
தொலைத் தொடர்பு சேவை வழங்கும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., உள்பட பல தனியார் நிறுவனங்களும் இந்தியாவின் பணக்கார மனிதரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவால் பாதிக்கப்பட்டன. 2018-ம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 90 ஆயிரம் பணியாளர்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். கடுமையான போட்டி, குறைந்த விலை போன்றவை இந்தத் துறையை வீழ்த்தின.
இணையவணிகம்:
இந்தியர்கள் மளிகை பொருட்களிலிருந்து நகைகள் வரை ஆன்லைனில் பெற விரும்புகிறார்கள். விளைவாக, மொத்த விற்பனை மதிப்பு (சந்தையில் விற்பனையாகும் பொருட்களின் மொத்த மதிப்பு) அதிவேகமாக அதிகரித்து வருகிறது.
இந்திய இணைய வணிகத்தின் விற்பனை தற்போதைய மதிப்பு 38.5 பில்லியன் டாலர்கள் ஆகும். 2020 மார்சுக்குள் இந்த மதிப்பு 125 பில்லியன் டாலரிலிருந்து 150 பில்லியன் டாலருக்குள் உயரும் என கணிப்பு ஒன்று சொல்கிறது. ஆனால், கொள்கை நெறிமுறைகளில் மாற்றம் ஏற்படும்போது இதுவும் கூட மாறக்கூடும்.
புதிய இணைய வணிக நெறிமுறை சில்லறை வணிகர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அது பெரிய அடியாக இருக்கும். புதிய நேரடி அந்நிய முதலீட்டு நெறிகளின் விளைவாக, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டின் நட்டம் 35 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இதுநிலையானதுதானா?
தொழிற்சாலை மற்றும் முதலீடுகளின் வளர்ச்சி என்கிற துணையுடன் நுகர்வாலும் அரசின் செலவழிப்பாலும் நிகழும் பொருளாதார வளர்ச்சியே ஆரோக்கியமானது. “நுகர்வால் நிகழும் வளர்ச்சி, எதிர்காலத்தில் தேக்கத்தை சந்திக்கக்கூடும். ஏனெனில், திறனை உருவாக்குவதற்கான வரம்புகளும் கடன் சுமைகளால் குறிப்பாக குடும்பங்களில் உள்ள கடன் சுமைகளால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளாலும் அது தேக்கத்தை சந்திக்கக்கூடும்”என 2017-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.
மிகப்பெரிய நுகர்வு சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி தவிர்க்க முடியாதது. ஆனால், அது முழுமையான வளர்ச்சியுடன் கூடியதாக இல்லாதபோது பிரச்சினைக்குரியதாகிறது என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
உண்மையில் 2030-ம் ஆண்டு இந்தியாவின் நுகர்வு நான்கு மடங்காக அதிகரித்திருக்கும் என உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கை கூறியது. “அப்போது அது இந்த உலகின் இளம் நாடாக இருக்கும். ஒரு பில்லியனுக்கும் அதிகமான இணைய இணைப்பு பெற்ற வீடுகளைக் கொண்ட நாடாகவும் அது இருக்கும். புதிய இந்தியாவின் நுகர்வோர் பணக்காரர்களாக இருப்பார்கள்; பணத்தை செலவழிக்க விரும்புகிறவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய முன்னோடிகளைப் போல் அல்லாமல் ஒரு குறிப்பிட்ட தேர்வை விரும்புகிறவர்களாக அவர்கள் இருப்பார்கள்” என அந்த அறிக்கை கூறியது.
அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, மிகப் பெரும் நுகர்வு சந்தை என்பது உண்மைதான். ஆனால், மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் பறிபோன வேலைவாய்ப்புகள், பணிக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள், நலிவடைந்த தொழில்துறை, அழிந்துபோன சிறுதொழில்துறை, அதிகரித்து வரும் தனியார்மயம் இவை யாவும் பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளியவை. இவற்றை சரிசெய்யாமல், நுகர்வு பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்குமானால், அது மிகப் பெரும் சமூக சீர்கேட்டைத்தான் உருவாக்கும். அதுகுறித்து எந்த பொருளாதார நிபுணர்களும் கவலைப்படுவதில்லை.
சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு முன் இலைகளின் சருகுகளும் குச்சிகளும் கொட்டிக் கிடக்கின்றன. மரங்களும் புதர்களும் பராமரிப்பின்றி மண்டிக் கிடக்கின்றன. அங்கே பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள். சிலர் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள், சிலர் குளித்துக் கொண்டிருக்கிறார்கள், சிலர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
யாருமே சும்மா உட்கார்ந்திருக்கவில்லை, ஏதோ ஒரு வேலையை – ஒவ்வொருவரும் நிதானமாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். இரவில் அங்கு சென்றிருந்தால் நிச்சயம் பயம் நம்மைத் தொற்றியிருக்கும். ஆனால், இப்போது பகல் 12 மணி. அது மாதவரம் பால் பண்ணை வளாகம்.
அங்கு இருந்தவர்கள் யாரும் பார்த்துப் பழக்கப்பட்ட முகங்கள் இல்லை. வட இந்தியர்கள் போல் (நமக்கு வடக்கே உள்ளவர்கள் அனைவரையும் அப்படித்தானே அழைக்கிறோம்) தெரிந்தார்கள்.
யார் அவர்கள்? தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.
நீண்ட நாட்களாக திறக்கப்படாத வாயிற்கதவு. அந்த வளாகத்தைப் பாதுகாக்க ஒரு காவலாளி. “நீங்க தமிழா?” என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்தோம். இவர்களிடம் எப்படி பேச்சு கொடுப்பது? யோசித்துக் கொண்டிருக்கும்போதே வேன் ஒன்று உள்ளே நுழைந்தது. வேன் ஓட்டுநரிடம் விசாரித்தோம்.
“இவர்கள் மெட்ரோ ரயில் வேலைக்காக ரோடு அமைத்தல், மண் பரிசோதித்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். தற்போது தசரா பண்டிகைக்கு (அது முடிந்து 4 மாதங்கள் ஆகிறது) ஊருக்குச் செல்ல இருக்கிறார்கள்” என்று தனக்குத் தெரிந்த ஹிந்தி மூலம் நமக்கு மொழி பெயர்த்தார். தொழிலாளிகளிடம் பேசுவதற்கு மொழி ஒரு தடையா என்ன?
மத்திய பிரதேசம் சிங்ரோலி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் கும்ஹியா (Kumhia). ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இங்கு வாழ்கிறார்கள். விவசாயத்தில் பின்தங்கியுள்ள இக்கிராம மக்களில் சரிபாதி பேர் ஆதிவாசிகள். ஊரில் வேலை இல்லை. போதிய படிப்பறிவு இல்லை (45 சதவீதத்திற்கும் குறைவு). ஆகையால், எங்கேனும் சென்று ஏதேனும் ஒரு வேலையை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி விடலாம் என்று எண்ணி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
தற்போது, காங்கிரசு கைப்பற்றியிருக்கும் மத்திய பிரதேசத்தை இதற்கு முன்பு கிட்டத்தட்ட 14 வருடங்கள் (டிசம்.2003-லிருந்து டிசம்.2018 வரை) பாஜக-வே ஆண்டு வந்தது. மோடியின் ‘வல்லரசு’ இந்தியாவில் ஒரு கிராமத்தின் மொத்த இளைஞர்களையும் பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்குத் துரத்தியிருப்பது பாஜக-வின் மிகப்பெரிய ‘சாதனை’தான்.
இந்தக் குழுவில் உள்ள அனில் நம்மிடம் பேசும்போது,
தொழிலாளி அனில், பி.ஏ. (ஹிந்தி)
“கும்ஹியா கிராமத்தச் சேர்ந்த 22 பேர் இங்கே இருக்கோம். சீகான்ல காண்டிராக்ட் வேல. (SECON – பெட்ரோல் மற்றும் எரிவாயு போன்றவற்றை எடுத்துச் செல்ல பூமிக்கடியில் ராட்சத குழாய்களை பதிக்கும் பன்னாட்டுக் கம்பெனி) மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பள்ளம் தோண்டி மண்ணெடுத்து சோதனைக்கு அனுப்புறதுதான் நாங்க செய்யிற வேல.
எனக்கு மனைவியும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. என்னோட குடும்பத்த அண்ணன்தான் பாத்துக்கிறாரு. அவரு ஒரு தனியார் பள்ளியில ஐயாயிரம் சம்பளத்துக்கு ஆசிரியரா வேலை செய்யிறாரு. நானும் பி.ஏ ஹிந்தி படிச்சிருக்கேன். ஆனா வேலையேதும் கெடக்கல. அதனால இங்கே வந்துட்டேன்.
ஒரு நாளைக்கு 300 ரூபா சம்பளம். எட்டு மணி நேரம் வேலை. மூணு வேளை சாப்பாடு. அப்புறம் வேலை செய்யிற எடத்துலயே கொட்டகை போட்டு தங்க ஏற்பாடும் செஞ்சிருக்காங்க. வேலை முடிஞ்சதும் அப்படியே ஒரு துண்ட விரிச்சு, அங்கேயே தூங்கிடுவோம்” – என்றார்.
தொழிலாளி திலீப்
பேசிக்கொண்டிருக்கும்போதே இளைஞன் திலீப் ஓடி வந்தான். படிய வாரப்பட்ட முடியை மீண்டும் சரி செய்தான். கேமராவைப் பார்த்து புன்னகைத்தான். அவன் மட்டுமல்ல, அங்கிருந்த தொழிலாளர்கள் பலரும் அப்படித்தான், ஏதோவொரு இனம்புரியா மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார்கள்.
அடுத்த மூன்று வேளைக்கான சப்பாத்தி தயாராகி விட்டது. ரயிலைப் பிடிக்க இன்னும் இரண்டு மணிநேரம்தான் இருக்கிறது. பத்து நாட்கள் விடுமுறை. ஹோலிப் பண்டிகை. மகிழ்ச்சி வராமலா இருக்கும்! பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தாலும், கும்ஹியா கிராமத்தின் மண் வாசனை இவர்களது மனங்களை வாரி எடுத்திருக்க வேண்டும்.
ஊருக்குச் செல்லவிருக்கும் மத்தியப் பிரதேசத் தொழிலாளர்கள், தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள சீகான் (பன்னாட்டு நிறுவனம்) ஒதுக்கித் தந்திருக்கும் ‘ஓய்வு’ வளாகம்.
மோடியின் ‘தூய்மை இந்தியா’ மக்களுக்குத்தான்; கார்ப்பரேட் நிறுவனங்கள் மதிக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன?
வீண் அரட்டையில்லை, எவ்வித ஓய்வுமில்லை. சொந்த வேலையையும் பொது வேலைகளையும் திட்டமிட்டாற்போல செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள்.
தொழிலாளரும் இயந்திரமும் ஒன்றுதானோ. பயன்பாடு இல்லாததால் குப்பைகளுக்கிடையே நிறுத்தப்பட்டிருக்கும் குழிவெட்டும் இயந்திரம்.
இந்த ரீதியில் மாலை வரை அவன் முன்னே சென்றான். அலெக்ஸேயின் பின்புறம் எங்கோ அஸ்தமிக்கும் சூரியனின் வெப்பமற்ற மாலைச் செங்கதிர் பைன் மர முடிகள் மீது தழல் ஒளி வீசின. காட்டில் மங்கலின் சாம்பல் நிறம் மேலும் அடரலாயிற்று. அந்த வேளையில், பாதைக்கு அருகே, ஜூனிப்பர் புதர்கள் மண்டிய பள்ளத்தாக்கில் அலெக்ஸேயிக்குப் புலனாயிற்று ஒரு காட்சி. அது அவனுடைய முடி சிலிர்த்தது.
இங்கே, பக்கத்தில் எங்கோ சண்டை நடந்திருந்தது. ஜுனிப்பர் புதர் அடர்ந்த பள்ளத்தாக்கில் மருத்துவப் பாசறை இருந்திருக்க வேண்டும். காயமடைந்தவர்கள் இங்கு எடுத்துவரப் பட்டு ஊசியிலைத் தலையணைகள் மீது கிடத்தப்பட்டார்கள். புதர்ப் பந்தர்களுக்கு இடையில் முன்போலவே வரிசைகளாகப் படுத்திருந்தார்கள் அவர்கள். வெண்பனியால் பாதி மூடப்பட்டும் எங்கும் வெண்பனி தூவப்பட்டும் காட்சியளித்தார்கள். அவர்கள் இறந்தது காயங்களினால் அல்ல என்பது முதல் பார்வையிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது. லாவகமான கத்தி வீச்சால் எவனோ அவர்கள் அனைவரது குரல்வளையும் அறுத்துத் துண்டித்திருந்தான். தங்களுக்குப்பின்னே என்ன நடக்கிறது என்று பார்க்க முயல்பவர்கள் போலத் தலைகள் வெகு தூரம் பின் சாய்த்தவாறு ஒரே பாங்கில் கிடந்தார்கள். இந்தப் பயங்கரக் காட்சியின் மர்மம் உடனேயே துலங்கிவிட்டது. ஒரு பைன் மரத்தின் அடியில், வெண்பணி மூடியிருந்த சோவியத் படை வீரனது உடல் அருகே , அவனுடைய தலையைத் தன் மடி மீது வைத்தவாறு இடுப்புவரை பனியில் புதைந்து உட்கார்ந்திருந்தாள் ஒரு மருத்துவத்தாதி. சிறிய, நொய்ந்த இளம் பெண் அவள். காதுகளை மூடும் மென்மயிர்த் தோல் தொப்பியின் நாடாக்களை மோவாயின் அடியில் கட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய தோள் பட்டைகளுக்கு நடுவே துருத்திக் கொண்டிருந்த மெருகினால் பளபளக்கும் கத்திப்பிடி.
லாவகமான கத்தி வீச்சால் எவனோ அவர்கள் அனைவரது குரல்வளையும் அறுத்துத் துண்டித்திருந்தான். தங்களுக்குப்பின்னே என்ன நடக்கிறது என்று பார்க்க முயல்பவர்கள் போலத் தலைகள் வெகு தூரம் பின் சாய்த்தவாறு ஒரே பாங்கில் கிடந்தார்கள்.
எஸ்.எஸ் படையின் கறுப்புச் சீருடையை அணிந்த ஒரு பாசிஸ்டும், தலையில் இரத்தக் கறைபடிந்த பட்டித் துணிக்கட்டு போட்டிருந்த ருஷ்யப் படை வீரனும் ஒருவர் குரல்வளையை ஒருவர் பற்றி நெறித்தவாறு இறுதியான மரணப் போராட்ட நிலையில் உறைந்து கிடந்தார்கள். கறுப்புச் சீருடை அணிந்த பாசிஸ்டு காயமடைந்தவர்களைத் தன் கத்தியால் அறுத்துக் கொன்றான், மருத்துவத் தாதியின் முதுகில் குத்தினான், அவனால் கொல்லப்படாத ஒருவன் அக்கணமே அவனைப் பிடித்து, அணையும் தறுவாயிலிருந்த தன் உயிரின் எஞ்சிய வலியை எல்லாம் திரட்டி, பகைவனின் குரல்வளையை நெரித்திருந்த விரல்களில் செலுத்தினான் என்பதை எல்லாம் அலெக்ஸேய் உடனே புரிந்துக்கொன்டான்.
காயமுற்ற வீரனைத் தன் உடலால் அரவணைத்துக் காக்கும் நொய்ந்த இளம்பெண்ணையும், அகன்ற முழங்கால் முடிகள் கொண்ட பழைய கித்தான் பூட்சுகள் அணிந்த அவனுடைய கால்களின் அருகே ஒருவரையொருவர் இறுகப் பற்றியவாறு கிடந்த கொலைகாரன், பழி தீர்ப்பவன் ஆகிய இவ்விருவரையும் வெண்பனிப்புயல் அதே நிலையில் அடக்கம் செய்துவிட்டிருந்தது. மெரேஸ்யெவ் சில வினாடிகள் பிரமித்துப் போய் நின்றான். அப்புறம் மருத்துவத்தாதியின் அருகே தத்திச் சென்று அவள் உடலிலிருந்து கத்தியை உருவினான். அது எஸ்.எஸ். படையினருக்குரிய கத்தி. பண்டைய ஜெர்மானிய வாளின் வடிவில் செய்யப்பட்டிருந்தது. அதன் கருங்காலிக் கைப்பிடியில் எஸ்.எஸ். படையின் சின்னம் வெள்ளியால் பொறிக்கப்பட்டிருந்தது. து றுவேறிய அலகில் Alles fur Deutch land (எல்லாம் ஜெர்மனிக்கே) என்ற இந்த வாசகம் இன்னும் தெளிவாயிருந்தது. அலெக்ஸேய் வெண்பனியைத் தோண்டி முடமுடத்ததுப் பனிக்கட்டி படிந்திருந்த கூடாரத்துணியை எடுத்து மருத்துவத்தாதியின் உடலை அதனால் கவனத்துடன் போர்த்தி அதற்கு மேல் சில பைன் மரக்கிளைகளை வைத்தான்…
எஸ்.எஸ் படையின் கறுப்புச் சீருடையை அணிந்த ஒரு பாசிஸ்டும், தலையில் இரத்தக் கறைபடிந்த பட்டித் துணிக்கட்டு போட்டிருந்த ருஷ்யப் படை வீரனும் ஒருவர் குரல்வளையை ஒருவர் பற்றி நெறித்தவாறு இறுதியான மரணப் போராட்ட நிலையில் உறைந்து கிடந்தார்கள்.
இதை எல்லாம் அவன் செய்வதற்குள் இருட்டாகிவிட்டது. மேற்கே அந்தியொளி மரங்களுக்கிடையே மறைந்தது. குளிர் நிறைந்த அடர் இருள் பள்ளத்தாக்கில் சூழ்ந்தது.
வோல்காப் பிரதேச ஸ்தெப்பியில் உள்ள கமிஷின் என்னும் இடத்தில் பிறந்த நகரவாசி அலெக்ஸேய், காட்டு விவகாரங்களுக்குப் பழக்கப்படாதவன். எனவே, இரவு தங்க இடவசதி செய்து கொள்வதையையும் நெருப்பு மூட்டுவதையும் பற்றி அவன் உரிய நேரத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. இப்போதோ காரிருள் சூழ்ந்துவிட்டது. அடிபட்டு நொறுங்கிய அவன் பாதங்கள் உழைத்துச் சோர்ந்து தாங்க முடியாதபடி வலித்தன. இந்த நிலையில் விறகுத்தேடச் செல்வதற்கு அவனுக்கு இயலவில்லை. பைன் மரக்கன்றுகள் அடர்ந்தப் புதருக்குள் நுழைந்து, மரத்தின் அடியில் குந்தி, கைகளால் முட்டைகட்டிக் கொண்டு, முழங்கால்களில் முகத்தை புதைத்தவாறு உருண்டைப் போல முடங்கிவிட்டான். தனது மூக்கினால் வெப்பம் ஊட்டப்பட்டு, தொடங்கிய இயக்கமற்ற நிம்மதியை ஆர்வத்துடன் அனுபவித்தவாறு அசைவற்றிருந்தான்.
ரிவால்வர் சுடுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் காட்டில் கழித்த அந்த முதல் இரவில் அலெக்ஸேயால் அதைக் கையாள முடிந்திருக்குமா என்பது சந்தேகந்தான். கற்சிலை போன்று அசைவின்றி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் அவன். பார்வை புகமுடியாத அடர் இருள் அவனைச் சுற்றி நெருக்கமாகக் குவிந்திருந்து. பைன் மரங்களின் ஒரு சீரான ஓசை, பாதைக்கு அருகே எங்கோ முனகிக் கொண்டிருந்த கோட்டானின் கத்தல், தொலைவில் ஓநாய்கள் இட்ட ஊளை ஆகியவை போன்ற, காட்டுக்கு இயல்பான ஒலிகள் அதில் நிறைந்திருந்தன. இவ்வொலிகளில் எதையுமே அலெக்ஸேய் கேட்கவில்லை.
ஆனால் காலையில், ஏதோ அதிர்ச்சியில் போல அவன் சட்டென விழித்துக்கொண்டான். சாம்பல் நிற வைகறை அப்போது தான் புலரத் தொடங்கியிருந்தது. அருகிலிருந்த மரங்கள் மட்டுமே குளிர்காலப் பனிமூட்டத்திலிருந்து தெளிவற்ற நிழலுருக்களாக வெளித்திருந்தன. அலெக்ஸேய் விழித்ததும் தனக்கு நேர்ந்ததையும் தான் இருக்கும் இடத்தையும் நினைவுப்படுத்திக் கொண்டான். காட்டில் தான் உரிய கவனமின்றிக் கழித்த இரவை அப்போது எண்ணித் திகிலடைந்தான். ஈரக்குளிர் அவனது விமானி உடையின் “பேய்த் தோலையும்” மென் மயிரையும் துளைத்துக்கொண்டு எலும்புகள் வரை ஊடுருவி விட்டது. உடம்பு கட்டிலடங்காமல் விடவிடத்தது. ஆனால் எல்லாவற்றிலும் கோரமாக இருந்தன கால்கள். இப்போது, வெறுமே இருக்கையில் கூட, அவை முன்னிலும் கடுமையாக வலித்தன. எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணியபோது அவனுக்கு பகீர் என்றது. ஆனால் முந்தின நாள் பூட்சுக்களைக் கழற்றியது போன்றே திட உறுதியுடன் சடக்கென எழுந்து நின்றான் அவன். நேரம் விலைமிக்கதாக இருந்தது.
அலெக்ஸேயைப் பீடித்திருந்த எல்லாத் துன்பங்களுடனும் சேர்ந்து கொண்டது பசி. முந்தைய நாள் கூடாரத் துணியால் மருத்துவத்தாதியின் உடலைப் போர்த்து மூடும் போதே அவளருகே செஞ்சிலுவை அடையாளமிட்ட தார்ச் சீலைப் பையை அவன் கவனித்திருந்தான். ஏதோ ஒரு விலங்கு ஏற்கனவே அங்கே மணியம் பண்ணியிருந்தது. கறவிய துளைகளின் அருகில் வெண்பனி மேல் துணுக்குகள் சிதறிக்கிடந்தன. முந்தின நாள் அலெக்ஸேய் இதை அனேகமாகக் கவனிக்கவில்லை. இன்று அவன் அந்தப் பையை எடுத்தான். அதில் சில போர்க்கள முதலுதவிப் பாக்கெட்டுகளும் பதனிட்ட இறைச்சி டப்பா ஒன்றும் இருந்தன. ரொட்டியோ ரஸ்க்குகளோ பையில் இருந்ததாகத் தோன்றியது. ஆனால் பறவைகளோ விலங்குகளோ அந்த உணவைத் தின்று தீர்த்துவிட்டன. டப்பாவையையும் மருந்துப் பட்டித் துணிகளையும் விமானி உடையின் பைகளில் திணித்துக் கொண்டான். இளம்பெண்ணின் கால்களிலிருந்து காற்றால் பரத்தி ஒதுக்கப்பட்டிருந்த கூடாரத் துணியைச் சரிப்படுத்தினான். மரக்கிளைகளின் வலைப்பின்னலுக்குப் பின்னே இளஞ்சிவப்பாக ஒளிர்ந்த கிழக்கு திசையில் மெதுவாக நகரலானான்.
அவனிடம் இப்போது ஒரு கிலோ கிராம் பதனிட்ட இறைச்சி கொண்ட டப்பி இருந்தது. நாள்தோறும் ஒரு முறை, நடுப்பகலில் சாப்பிடுவது என்று அவன் தீர்மானித்தான்.
இந்த வார வாசகர் புகைப்படத் தலைப்பு – கோடையும் தண்ணீரும் !
வந்து விட்டது கோடை காலம். கூடவே தண்ணீர் பிரச்சினையும். சென்ற வருடம் மழைப் பொழிவும் குறைவு. கூடவே நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. சென்னையின் பாதி அல்லது முக்கால் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை இப்போதே துவங்கி விட்டது. வசதியுள்ள அடுக்கக வீடுகளில் லாரிகள் மூலம் நீர் நிரப்பிக் கொள்கிறார்கள். வசதியில்லாதவர்கள் இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்துகிறார்கள்.
சென்னை நகர் முழுவதும் குடிநீர் லாரிகளின் போக்குவரத்து அதிகரித்திருக்கின்றது. மாநகராட்சி லாரிகளைத் தாண்டி தனியார் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் கிரமமாக சென்று குடிநீரை குடத்திற்கே விற்கிறார்கள். மற்ற மாவட்டங்களைப் பொறுத்த வரை குடிநீர் பிரச்சினை என்பது ஒரு நிரந்தர ஏற்பாடாகி விட்டது. அனைத்து இடங்களிலும் உள்ளூராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தண்ணீருக்காக நமது மக்கள் இக்கோடையில் மிகுந்த நேரம் செலவழிக்க வேண்டும். அலுவல் பணி, உறக்கம், பொழுது போக்கு போக குடிநீருக்காக மட்டும் குறைந்தது 2 மணிநேரம் செலவழிக்க வேண்டும். பெண்கள் என்றால் இன்னும் ஓரிரு மணிநேரங்கள் சேரும்.
ஒருவரே
பல படங்களையும் அனுப்பலாம்.
படங்களை தெளிவாகவும், விவரங்களோடும் அனுப்புங்கள்.
ஏனோ தானோவென்று அனுப்ப வேண்டாம்.
சில நண்பர்கள்
சிரத்தை எடுத்து
அழகுற அனுப்புகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
பிளாஸ்டிக் தடை காரணமாக 2 ரூபாய் தண்ணீர் பாக்கெட் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் அரை லிட்டர் பாட்டில் 7 ரூபாய்க்கு கிடைக்கிறது. குடிநீர் கேன்களின் போக்குவரத்து வழக்கம் போல அதிகரித்து வருகிறது. கேன்களே குடிநீரின் ஆதாரம் என்றாகிவிட்டது. இதிலும் வசதியுள்ளவர்கள் ஆர்.ஓ. சுத்திகரிப்பு எந்திரத்தை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
கோடைகாலம் என்பதால் பழச்சாறு நிறுவனங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன. சோடா மற்றும் குளிர்பானத் துறையில் உள்ளூர் சிறு முதலாளிகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கோடையில் துவக்கப்படுவது வழக்கம். ஜி.எஸ்.டி கண்டத்தை மீறி அவர்களுக்கு ஓரளவேனும் இலாபம் கிடைக்குமா?
ஆம். தண்ணீர், குடிநீர், லாரிகள், கேன்கள், பாட்டில்கள், மக்கள், குழாய் என நீர் சார்ந்த எதையும் நீங்கள் புகைப்படம் எடுக்கலாம். ஏப்ரல் 10 வரை அனுப்பலாம். தெரிவு செய்யப்படும் படங்கள் அவ்வப்போது வெளியிடப்படும்.
படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 10.04.2019 மின்னஞ்சல் முகவரி: vinavu@gmail.com வாட்ஸ்அப் எண்:(91) 97100 82506
புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், நாள், அது குறித்த விவரங்கள் கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்! தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும் வெளியிடப்படும். காத்திருக்கிறோம். நன்றி!
நட்புடன்
வினவு
புகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:
♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.
♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எடுக்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.
♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.
♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.
♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.
♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.
♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.
♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இருப்பது சிறப்பு.
♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.
♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.
♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.
♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் மிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).
புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
நூலாசிரியர் மாட் விக்டோரியா பார்லோ கனடாவைச் சேர்ந்தவர். 2008-2009 தண்ணீரின் அரசியல், சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பரிமாணங்களை கையிலெடுத்து இந்த உலகத்தின் தண்ணீர் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்படுவதற்கு எதிராக போராடிவருபவர்.
இவரது Blue covenant என்ற புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம்தான் இந்நூல். இப்புத்தகத்தில், இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவைகள் எவ்வாறு இருந்தன, அவைகளின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர்நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங்களில் செய்ய வேண்டியது என்ன என்று ஒரு பரந்த வெளியில் இருந்து இந்தப் புத்தகத்தை வழங்கியுள்ளார் பார்லோ. (நூலிலிருந்து பக்.5-6)
ஒரு பக்கம் வலிமை மிக்க தனியார் நிறுவனங்கள் மற்றும், சர்வதேச நீர் மற்றும் உணவு கழகங்கள், குறிப்பாக முதல் உலகப் போர் அரசுகள், உலக வங்கி, சர்வதேச நிதியகம், உலக வாணிப அமைப்பு, உலக நீர் கவுன்சில் போன்ற சர்வதேச அமைப்புகளின் சொந்த நலம், இந்த சக்திகளுக்கு தண்ணீர் என்பது வெளிச்சந்தையில் விற்று வியாபாரம் பண்ணக்கூடிய ஒரு பொருள். இவர்கள் தண்ணீரின் மீதான தனியார் கட்டுப்பாட்டை அதிகப்படுத்த ஒரு விரிவான உட்கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். மற்றும் இவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக செயலாற்றுகிறார்கள். அவர்களின் கதை இங்கே சொல்லப்படுகிறது.
இன்னொரு புறம், சூழலியலாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், உள்ளூர் ஆண் மற்றும் பெண்கள், சிறிய உழைப்பாளிகள் மற்றும் தொழிலாளிகள், ஆயிரக்கணக்கான அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட போராளிகள். இவர்கள் தங்களது நீராதாரத்தின் மீதான கட்டுப்பாட்டிற்காக தண்ணீருக்கான நீதி கோரும் இயக்கம் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் என்பது மனித இனம் மற்றும் அனைத்திற்குமான பாரம்பரியச்சொத்து என்று நம்புகிறார்கள். மேலும், ஒரு பொதுச்சொத்தை தனி நபரின் சுய நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது மற்றும் கட்டணம் செலுத்த கொடுக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அந்த சொத்தை மறுக்கவும் முடியாது என்றும் இந்த இயக்கத்தினர் நம்புகின்றனர். (நூலிலிருந்து பக்.14)
1989 -ம் ஆண்டு தாட்சர் பிரிட்டன் அரசுக்கு சொந்தமான பிராந்திய நீர் அமைப்புகளை தனியார்மயமாக்கினார். இவைகள் அடிமாட்டு விலையில் விற்கப்பட்டன. ஆன்-கிறிஸ்டின் ஹோலண்ட் (Ann-Christin Holland), தங்களுடைய The Water Business என்ற புத்தகத்தில் குறிப்பிடுவது போல் இந்த விற்பனையில் கலாச்சார மற்றும் இயற்கையின் சொத்துக்களும் சேர்ந்தே விற்கப்பட்டன என்கிறார்கள். இதை வாங்கிய தனியார் நிறுவனங்கள் கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பின் சொந்தக்காரர்களானார்கள். இருபது வருடங்களுக்கு எந்த போட்டியும் இல்லாமல் செயல்பட அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அவர்கள் விரும்பிய கட்டணத்தை வசூலித்துக் கொள்ளவும், தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கவும், அவர்களால் எவ்வளவு இலாபம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு இலாபம் சம்பாதிப்பதற்குமான சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள்; தண்ணீர் கட்டணம் கடுமையாக உயர்ந்தது; தனியார்மயமாக்கப்பட்ட பத்தாண்டுகளில் வரிக்கு முந்திய இலாபம் 147 சதவீதம் உயர்ந்தது. தண்ணீருக்கான கட்டணத்தை செலுத்த முடியாத இலட்சக்கணக்கான மக்களுக்கு தண்ணீர் சேவை நிறுத்தப்பட்டது…
இங்கிலாந்தில் தண்ணீரை தனியார்மயமாக்கியது தோல்வி என்பது தெளிவாக தெரிந்தாலும், இந்த அமைப்புமுறைதான் தென்கோளப்பகுதி வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தண்ணீரை தனியார்மயமாக்கியதில் உள்ள அனுபவத்தை வைத்துக்கொண்டு தாட்சர், சர்வதேச தனியார் சந்தையில் குதிப்பதற்காக சூயஸ், வியோலியா உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களுக்கு உதவிகள் செய்தார். குறிப்பாக தேம்ஸ் நதியின் தண்ணீரை சொல்லலாம். இந்நதியின் நீரை ஜெர்மன் நாட்டின் பகாசுர நிறுவனமான RWE 2002 ஆம் ஆண்டு வாங்கியது. RWE உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார்ப்பரேட் தண்ணீர் நிறுவனம் ஆகும். (நூலிலிருந்து பக்.63-64)
உலகவங்கியில் நடப்பது…
முதல் உலக நாடுகளே உலக வங்கியைக் கட்டுப்படுத்துகின்றன. இந்நாடுகள் தாங்கள் முதலீடு செய்திருக்கின்ற தொகைக்கேற்ப ஓட்டுரிமையைப் பெற்றுள்ளன. அதற்கேற்ப, ஏழை நாடுகளுக்கு கடனாக வழங்கப்படுகிற 20 பில்லியன் அமெரிக்க டாலரை பெறப்போவது யார், அதைப்பெற அந்நாடுகள் ஒத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் என்னென்ன என்பதை முடிவெடுப்பதில் அமெரிக்கா (இதனைத் தொடர்ந்து ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஃப்ரான்ஸ்) ஆதிக்கம் செலுத்துகிறது. தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 3 பில்லியன் அமெரிக்க டாலராகும். வடகோள கார்ப்பரேட் நிறுவனங்கள் தென்கோளப் பகுதியில் சந்தைகளைத் திறக்க உலக வங்கி தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதுதான் தலையாய குறிக்கோள் என்று உலக வங்கியின் குறிப்பு ஒன்று கூறுகிறது. (அமெரிக்கா தனது பங்களிப்பாக கொடுக்கும் ஒவ்வொரு டாலருக்கும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் 1.30 டாலர் அளவிற்கு ஒப்பந்தங்களாகப் பெறுகின்றன என்று நிதித்துறை உயர் அதிகாரி ஒருவர் கிண்டலாக கூறியுள்ளார்)
1993 -ம் ஆண்டுக்கு முந்திய வருடங்களிலிருந்தே உலக வங்கி தண்ணீர் தனியார்மயமாக்கத்தை ஊக்குவித்து வந்தது. அதே வருடம் நீர் ஆதாரங்கள் மேலாண்மை (Water Resource Management) குறித்த திட்டக் குறிப்பை ஏற்றுக்கொண்டது. இக்குறிப்பு ஏழை நாடுகள் தண்ணீர் சேவைகளுக்காக கட்டணம் செலுத்த “விருப்பம் இல்லாமல்” இருக்கின்றன என்று கூறியது. மேலும் தண்ணீர் என்பது திறன் வாய்ந்த, நிதி ஒழுங்கு சார்ந்த, முழு உற்பத்திச் செலவையும் மீட்டுவிடக்கூடிய ஒரு பண்டமென்றும் அந்த அறிக்கை கூறியது. (முதலீட்டுத் தொகையை மீட்டுக் கொள்வதற்காக தன் கட்டணத்தை கடுமையாக உயர்த்துவதோடு மட்டுமல்ல, முதலீட்டாளர்கள் இலாபம் சம்பாதிக்க கட்டணத்தை ஏற்றுகின்ற ஒரு திட்டம்தான் இது.) 1990-2006 -ம் ஆண்டுகளுக்கு இடை பொதுத்திட்டங்களுக்கான கடன் வசதி தனியார் திட்டங்களுக்குச் சாதகமாக தள்ளுபடி செய்யப்பட்டன. உலக வங்கி வளரும் நாடுகளில் 300-க்கு மேற்பட்ட குடிநீர் சார்ந்த திட்டங்களுக்கு நிதி உதவி செய்துள்ளது.
தண்ணீரை தனியார்மயமாக்குவதில் அடிப்படையில் மூன்று வகைகள் உள்ளன. சலுகை அடிப்படையிலான (Concession) ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய உரிமம் வழங்கப்படும். இவர்கள் இலாபம் பெற நுகர்வோர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்றனர். புதிய குழாய்கள் அமைத்தல், வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து முதலீட்டுத் திட்டங்களுக்கும் இந்த நிறுவனங்கள் பொறுப்பு. பிரிட்டிஷ் மாதிரி தனியார்மயம் என்பது இந்த சலுகை அடிப்படையிலான ஒப்பந்தம் ஆகும். ஆனால், இந்தியாவில் தீவிர சலுகை அடிப்படையிலான (Extreme Concession) ஒப்பந்தம் பின்பற்றப்படுகிறது. இதில் ஆறுகள் முற்றிலும் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றன. இதை தனியார்கள் அரசின் தலையீடு இல்லாமல் இலாபத்திற்காக நடத்துகிறார்கள். இருக்கின்ற தளவாடங்களைப் புதுப்பிப்பதற்கும், பழுது பார்ப்பதற்கான முதலீடுகளைச் செய்வதற்கும் தண்ணீரை வினியோகிப்பதற்கும் நிறுவனத்தைப் பொறுப்பாக்கும் ஒப்பந்தம் இது. ஆனால், புதிய முதலீட்டுக்கு அங்கு உள்ள அரசுதான் பொறுப்பு. மேலாண்மை ஒப்பந்தம் (Management) என்பதில் தனியார் நிறுவனம் தண்ணீர் சேவையை நிர்வாகம் செய்வதே அதன் பொறுப்பு. எந்த முதலீட்டையும் செய்யாது.
உலக மேம்பாட்டு இயக்கம் குறிப்பிடுவதுபோல் பொதுச் சொத்துக்களை முழுவதும் தனியாருக்கு விற்பனை செய்யும்போது மட்டுமே உலக வங்கி தனியார்மயமாக்கம் என்ற பதத்தை பயன்படுத்துகிறது. மேலாண்மை ஒப்பந்தங்கள், குத்தகைகள் போன்ற பெரும்பாலான திட்டங்களை விவரிக்க அரசு மற்றும் தனியார் பங்களிப்பு அல்லது தனியார் துறை பங்களிப்பு போன்ற குறைந்தளவிலான அரசியல் தன்மை கொண்ட பதங்களையே உலக வங்கி பயன்படுத்துகிறது. பங்களிப்பு என்பது சரிசமமான பொறுப்பும் மற்றும் ஜனநாயகத் தொனியும் கொண்டது. ஆனால், தனியார் நிறுவனங்களின் இலாபம் அடங்கியுள்ளதால் இந்த ஒப்பந்தங்கள் தனியார்மயமாக்கல் என்றே அழைக்கப்படுகின்றன. மக்கள் இவர்களின் “உற்பத்திப்பொருளுக்கு பணம் கொடுக்கவில்லையென்றால் சேவை துண்டிப்பைப் பெற வேண்டும். இவர்கள் உறுதியளித்ததற்கு மாறாக சேவைக் குறைபாடு இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது; மாற்று வழிகள் இல்லை. ஆனால், இக்கார்ப்பரேட்கள் தங்களது இலாபம் குறைய ஆரம்பித்து விட்டது என்று உணர்ந்தார்களானால் ஒப்பந்தத்தை விட்டுவிட்டு கிளம்பிவிடுவார்கள். (நூலிலிருந்து பக்.65-67)
நூல்:நீராதிபத்தியம் (சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும்) ஆசிரியர்: மாட் விக்டோரியா பார்லோ (Maude Victoria Barlow) தமிழில்: சா. சுரேஷ்
வெளியீடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002. தொலைபேசி: 04259 – 226012, 98650 05084. மின்னஞ்சல்:ethirveliyedu@gmail.com இணையம்:ethirveliyedu.in
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
கலையரசன்9 நவம்பர் 1918, “ஜெர்மன் சோஷலிசக் குடியரசு” பிரகடனம் செய்யப்பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஜெர்மன் தேசியக் கொடி இறக்கப்பட்டு, செங்கொடி ஏற்றப்பட்டது. அந்த நகரங்களில் “Räte” எனும் தொழிலாளர் மன்றங்கள் (ரஷ்யாவில் சோவியத் மாதிரி) உருவாகி இருந்தன.
நீங்கள் இந்த வரலாற்றுத் தகவல்களை இதற்கு முன்னர் கேள்விப்பட்டிரா விட்டால் ஆச்சரியப்படாதீர்கள். புதிய தலைமுறை ஜெர்மனியர்களுக்கு கூடத் தெரியவிடாமல் மூடி மறைக்கப்படுகிறது. ஜெர்மனியில் கம்யூனிசப் புரட்சி நடந்தது என்ற தகவலே பலருக்கு புதிதாக இருக்கலாம். அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்திருந்தாலும், முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும் அப்படியான தகவல்களை இருட்டடிப்பு செய்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.
நவம்பர் 1918, முதலாம் உலகப்போரில் தோல்வியடைந்த காரணத்தால், ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வந்த ஜெர்மன் இராணுவம், அப்போது தேசத்தின் எல்லையை பாதுகாப்பதற்கான தற்காப்புப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்நாட்டில் உணவுப் பற்றாக்குறை காரணமாக மக்கள் பசியால் வாடிக்கொண்டிருந்தார்கள். பெரும்பான்மை ஜெர்மன் மக்கள் போரை விரும்பவில்லை. பசி, பட்டினியால் வாடிய மக்களிடம் தேசியப் பெருமிதம், இனவுணர்வு எதுவும் செல்லுபடியாகவில்லை. அதனால், அன்றைய ஜெர்மனி முழுவதும் போருக்கு எதிரான குரல்களே அதிகமாக கேட்டன.
4.11.1918, வட ஜெர்மனியின் துறைமுக நகரமான ‘கீல்” (Kiel) பதற்றமாக காட்சியளித்தது. சுமார் ஐயாயிரம் பேர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களின் கைகளில் செங்கொடிகள் பறந்தன. “சமாதானமும் உணவும் வேண்டும்!”, “அப்பாவிகளை விடுதலை செய்!” போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் காணப்பட்டன. அவர்கள் கீல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தமது தோழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வடக்கே உள்ள கீல் நகரை அண்டிய சர்வதேச கடல் பகுதியில், பிரிட்டிஷ் கடற்படையும், ஜெர்மன் கடற்படையும் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அந்தப் போரில் ஜெர்மனிக்கு தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும், பிரிட்டிஷ் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஜெர்மன் தளபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மாலுமிகள் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தனர். ஊரில் தமது உறவுகள் பசியால் வாடிக் கொண்டிருக்கையில், தாம் இங்கே போரிடுவது யாருக்காக என்று குமுறினார்கள்.
தளபதிகளின் உத்தரவுக்கு கீழ்ப்பட மறுத்த மாலுமிகள், இயந்திரங்களை நிறுத்தி, கப்பல்களை கரைக்கு கொண்டு வந்தனர். கலகம் செய்த குற்றச்சாட்டில், 47 மாலுமிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப்பட்ட மாலுமிகளின் விடுதலையை வலியுறுத்தி, சக மாலுமிகள் மட்டுமல்லாது கப்பல் கட்டும் தளத்தில் இருந்த தொழிலாளர்களும் சேர்ந்து போராடினார்கள்.
தெருக்களில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சோஷலிச அரசியல் ஆர்வலர்கள் அனல் பறக்கப் பேசினார்கள். அவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியான USPD உறுப்பினர்களாக இருந்தனர். சிறையில் இருந்த 47 மாலுமிகளை விடுதலை செய்வதற்காக, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கடற்படை முகாமை நோக்கி அணிவகுத்து சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய கடற்படை அதிகாரி, கூட்டத்தை கலைப்பதற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார். அந்த சம்பவத்தில் எட்டுப்பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
ஜெர்மனியில் கம்யூனிசப் புரட்சி நடந்தது என்ற தகவலே பலருக்கு புதிதாக இருக்கலாம். அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்திருந்தாலும், முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும் அப்படியான தகவல்களை இருட்டடிப்பு செய்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.
புரட்சியில் முதல் களப்பலியான தோழர்களின் மரணத்தைக் கண்டு புரட்சியாளர்கள் பின்வாங்கவில்லை. மாலுமிகள் இன்னும் பல போர்க் கப்பல்களின் கட்டுப்பாட்டை கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிறு ஆயுதங்களைக் கைப்பற்றினார்கள். அந்த ஆயுதங்களை கொண்டு கீல் நகரில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியங்கள் கொள்ளையிடப்பட்டன. ஒரு சில மணிநேரங்களில் கீல் நகரம் முழுவதும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. முன்பு துப்பாக்கிப் பிரயோகம் செய்து தடுத்த கடற்படை முகாம் அதிகாரி, வேறு வழியின்றி சிறை வைத்திருந்த மாலுமிகளை விடுதலை செய்தார்.
அப்போது சமூக ஜனநாயகக் கட்சி தான் ஜெர்மன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சோஷலிச குறிக்கோள் கொண்ட பாட்டாளி வர்க்கக் கட்சியாக ஆரம்பிக்கப் பட்ட சமூக ஜனநாயகக் கட்சி (SPD), புரட்சி நடந்த நேரத்தில் கொள்கையற்ற முதலாளித்துவ அரசியல் கட்சியாக சீரழிந்து போயிருந்தது. லெனின் அவர்களை “திருத்தல்வாதிகள்” என்று குறிப்பிட்டு பேசினார்.
SPD எப்போதோ தனது கொள்கையை கைவிட்டு விட்டு, சாதாரண அரசியல் கட்சியாகி ஜெர்மன் தேசியத்தை ஆதரித்தது. “தாய்நாட்டை பாதுகாக்கும் போருக்கு” முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது. “ஏகாதிபத்திய போரை ஆதரிப்பது சோஷலிசக் கொள்கைக்கு முரணானது” என்று கூறி போரை எதிர்த்த கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். “நான் இங்கே ஜெர்மானியர்களை மட்டுமே பார்க்கிறேன், கட்சிகளை அல்ல.” என்று சக்கரவர்த்தியால் புகழப்படும் அளவிற்கு, சமூக ஜனநாயக் கட்சி ஆளும் வர்க்கத்திற்கு முண்டு கொடுத்து வந்தது.
ஜெர்மன் அதிகார வர்க்கத்துடன் ஒத்தோடிய சமூக ஜனநாயக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நொஸ்கே, கீல் நகர புரட்சியை அடக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். நொஸ்கே ஒரு முதலாளித்துவ ஆளும் வர்க்க கைக்கூலி என்ற உண்மையை அறியாத தொழிலாளர்கள், அவரை வரவேற்று தோளில் தூக்கி வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதே நொஸ்கே தான் புரட்சியை காட்டிக் கொடுத்து, தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடப் போகிறார் என்ற உண்மையை, அன்றைய தினம் தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை.
ஆரம்பத்தில் தொழிலாளர்கள் பக்கம் நிற்பதைப் போன்று நடித்த நொஸ்கே, புரட்சியை நீர்த்துப் போக வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். “பிரிட்டன் படையெடுக்கும் அபாயம்” இருப்பதாக பயமுறுத்தி, மாலுமிகளை மீண்டும் போர்முனைக்கு அனுப்பும் வகையில் உரையாற்றினார். நொஸ்கேயின் துரோகம் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால், அது கீல் நகரில் மட்டுமே சாத்தியமானது. யாரும் எதிர்பாராதவாறு அடுத்த சில நாட்களில் கடலை அண்டிய பிற நகரங்களுக்கும் புரட்சி பரவிவிட்டது.
5 நவம்பர், லுய்பேக் (Lübeck) நகரம் புரட்சிகர மாலுமிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 6 நவம்பர், குக்ஸ்ஹாவன் (Cuxhaven), பிறேமன் (Bremen), அத்துடன் ஜெர்மனியின் மிகப் பெரிய துறைமுக நகரமான ஹம்பேர்க் (Hamburg) ஆகிய நகரங்கள் தொழிலாளர் சோவியத்துகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டன. ஹம்பேர்க் நகரத்தின் பிராந்திய பத்திரிகை “செங்கொடி” என பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.
புரட்சிகர மாலுமிகளின் கட்டுப்பாட்டின் கீழ் லுய்பேக் (Lübeck) நகரம்.
அடுத்து வந்த சில நாட்களில் இன்னும் பல வட – மத்திய ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்களும், படையினரும் கிளர்ந்தெழுந்து அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றினார்கள். தொழிற்சாலைகளும் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அங்கெல்லாம் தொழிலாளர் மன்றங்கள் (சோவியத்) ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டின. 8 நவம்பர், மேற்கு ஜெர்மன் நகரமான கெல்ன் (ஆங்கிலத்தில்: Cologne) வரை புரட்சி பரவி விட்டது. அதையடுத்து பிராங்க்பெர்ட், மியூனிச், லைப்சிக், மக்டபூர்க் ஆகிய பிற நகரங்களும் புரட்சியாளர்களின் வசமாகின. 9 நவம்பர், ரயில் வண்டிகளில் செங்கொடி ஏந்திய தொழிலாளர்கள் தலைநகர் பெர்லினை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
9.11.1918, பெர்லின் நகரம். ஜெர்மன் புரட்சிக்கு தலைமை தாங்கிய நாயகனை காண்பதற்காக மக்கள் வெள்ளம் கூடி இருந்தது. நகர மத்தியில் இருந்த பெருந்தெரு ஒன்றில், கனரக வாகனம் ஒன்றின் பின்பகுதி பெட்டி மேடை போன்று மாற்றப்பட்டிருந்தது. அதில் தாவி ஏறிய மனிதர் “புதிய ஜெர்மனி உருவாகி விட்டது” என்று முழங்கினார். அவர் பெயர் கார்ல் லீப்னெக்ட். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர்களில் ஒருவர். “சோஷலிசம் வாழ்க, சர்வதேச பாட்டாளிவர்க்கம் வாழ்க!” கார்ல் லீப்னெக்ட் முழக்கமிட்டதும், ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.
“புதிய ஜெர்மனி உருவாகி விட்டது” என்று முழங்கும் கார்ல் லீப்னெக்ட்.
கார்ல் லீப்னெக்ட், இரண்டரை வருடங்களுக்கு முன்னர் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர். அன்று அவர் உறுப்பினராக இருந்த சமூக ஜனநாயகக் கட்சி தான் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. லீப்னெக்ட் மட்டுமல்ல, ரோசா லக்சம்பேர்க், இன்னும் பல கட்சி உறுப்பினர்களும் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சிறைக் கைதிகளாக இருந்த காலத்தில், “சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சி” (USPD) பெயரில் இயங்கினார்கள்.
9 நவம்பர் 1918-ம் ஆண்டு, “ஜெர்மன் சோஷலிசக் குடியரசு” பிரகடனம் செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர் கார்ல் லீப்னெக்ட், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். உண்மையிலேயே அன்று ஜெர்மனியில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, அரசு இல்லாத வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. இந்த குழப்பகரமான சூழ்நிலையில் இரண்டு அறிவிப்புகள் வந்தன. ஒன்று, கம்யூனிஸ்டுகளின் “சோஷலிச ஜெர்மன் குடியரசு”. மற்றது, சமூக ஜனநாயகவாதிகளின் “சுதந்திர ஜெர்மன் குடியரசு”.
ஜெர்மன் சோஷலிசக் குடியரசு.
சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பிரீட்ரிஷ் எபேர்ட் (Friedrich Ebert), பிலிப் ஷைடேமன் (Philipp Scheidemann) இருவரும் சேர்ந்து இடைக்கால அரசை பொறுப்பேற்பதாக ஜெர்மன் பாராளுமன்றத்தில் அறிவித்தனர். ஜெர்மனியில் “போல்ஷ்விக் தீவிரவாதம்” வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்தனர். அந்த நேரம், கார்ல் லீப்னெக்ட் போன்ற கம்யூனிஸ்டுகள் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் “ஸ்பார்ட்டசிஸ்ட் குழு” என்ற பெயரில் இயங்கி வந்தனர். அவர்களுக்கு ரஷ்யாவிலிருந்து லெனினின் போல்ஷெவிக் கட்சியினர் ஆதரவளித்து வந்தனர்.
அடுத்து வந்த இரண்டு மாதங்களும் பெர்லின் நகரில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன. வன்முறையும், கலவரமும் நாளாந்த நிகழ்வுகளாகின. பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. வீதிகளில் தடையரண்கள் போட்டு, கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. அங்கு ஆயுதமேந்திய புரட்சியாளர்கள் காவல் கடமையில் ஈடுபட்டனர். ஜெர்மனியில் உள்நாட்டுப்போர், அதாவது வர்க்கப்போர் நிதர்சனமானது.
புரட்சியாளர்களில் பெரும்பாலானோர் ஸ்பார்ட்டசிஸ்ட் குழுவை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் நடைமுறையில் உள்ள அரசை தூக்கியெறிந்து விட்டு பாட்டாளி வர்க்க அரசை கொண்டு வருவதை குறிக்கோளாக கொண்டிருந்தனர். ஆனால், அது ரஷ்யாவில் நடந்ததைப் போன்று இருக்காது என்றனர். (அதாவது, இடைக்கால அரசை ஆயுதமுனையில் தூக்கியெறிய விரும்பவில்லை.) அவர்களுடன் முரண்பட்ட மாற்றுக் கருத்தாளர்களும் இருந்தனர். அனேகமாக, போரை முடிவுக்கு கொண்டு வருதல், பஞ்சத்தை போக்குதல் போன்ற உடனடி கோரிக்கைகளின் அடிப்படையில்தான் அவர்கள் ஒன்று சேர்ந்திருந்தனர்.
இடமிருந்து : ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட்.
இதே நேரத்தில், பாராளுமன்றத்திற்குள்ளும் முரண்பாடுகள் வெடித்தன. சமூக ஜனநாயகக் கட்சியினர் “போல்ஷ்விக் தீவிரவாதத்தை” ஏற்றுக் கொள்ள முடியாது என்று விடாப்பிடியாக நின்றனர். டிசம்பர் மாதக் கடைசியில், பாராளுமன்ற அரசியலில் இருந்து வெளியேறிய கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் போன்றோர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை (KPD) ஸ்தாபித்தனர். அவர்கள் அடிமட்ட மக்கள் திரளில் இருந்து சோஷலிசப்புரட்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அறிவித்தனர். “சோஷலிசத்திற்கான போராட்டம் மக்களால் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் முதலாளிக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டமாக நடக்க வேண்டும்.” என்ற அறைகூவலுக்கு மக்கள் அணிதிரண்டனர். நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. பெர்லின் நகரில் பல இடங்களில் துப்பாக்கிச் சமர்கள் நடந்தன.
1919-ம் ஆண்டு தொடக்கத்தில், ஜெர்மனியிலும் புரட்சி வெடித்து அது விரைவில் சோஷலிச நாடாகும் வாய்ப்புகள் தென்பட்டன. சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்ற அரசாங்கத்தால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. சமூக ஜனநாயகத் தலைவர்கள் இராணுவ அதிகாரிகளின் உதவியை நாடினார்கள். மேல்தட்டு மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்த தீவிர தேசியவாதிகளான இராணுவ அதிகாரிகள் தமது இருப்புக் குறித்து அச்சமடைந்திருந்தனர். புரட்சி வென்றால் அவர்களது தலைகளும் உருளும் என்று தெரிந்து வைத்திருந்தனர்.
பிரைகொர்ப்ஸ் (Freikorps) கூலிப்படை.
பிரைகொர்ப்ஸ் (Freikorps) எனப்படும் தேசியவெறி கொண்ட கூலிப்படை இராணுவம் பெர்லினுக்கு வரவழைக்கப்பட்டது. அவர்கள் ஆயுதமேந்திய புரட்சியாளர்களுடன் மோதினார்கள். கடுமையான துப்பாக்கிச் சமருக்குப் பின்னர் தொழிற்சாலைகள், அரச கட்டிடங்களில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். செங்கொடிகள் கிழித்தெறியப் பட்டன. இருப்பினும், பல கட்டிடங்களில் மறைந்திருந்த புரட்சியாளர்கள் சினைப்பர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால், பெர்லின் நகரம் முழுவதும் யுத்தகளமாக காட்சியளித்தது.
10-13 மார்ச், புரட்சியாளர்களின் கோட்டையாக கருதப்பட்ட கிழக்கு பெர்லின் பகுதியை பிரைகொர்ப்ஸ் படையினர் சுற்றி வளைத்தனர். சில அற்பக் காரணங்களுக்காகக் கூட பொது மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு அரசாங்க அலுவலகத்தில் மாதக் கணக்காக கிடைக்காத சம்பளப் பணத்தை கேட்டு தகராறு செய்த முப்பது மாலுமிகள், சுவரில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். பெர்லின் நகரில் மட்டும் ஒரு வாரத்திற்குள் குறைந்தது பத்தாயிரம் பேரளவில் படுகொலை செய்யப் பட்டனர். புரட்சியாளர்கள் மட்டுமல்லாது, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், ஆதரவு தெரிவித்த மக்களும் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஏற்கனவே, 15 ஜனவரி 1919 அன்று, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இருவரும் பிரைகொர்ப்ஸ் படையினரால் கடத்தப்பட்டு, சில மணிநேரங்களின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் கம்யூனிஸ்ட் கட்சி சிதறிப் போனது. தொழிலாளர்களின் புரட்சிக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுத்த சக்தி முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. இதனால், பெர்லினில் மட்டுமல்லாது ஜெர்மனி முழுவதும் புரட்சி நசுக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் பெருமூச்சு விட்டது. இருப்பினும், கம்யூனிஸ்டுகள் ஓயவில்லை. அவர்கள் தோற்கடிக்கப்படவுமில்லை. தலைநகரை தவிர்த்து, ஜெர்மனியின் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் தொடர்ந்தது.
மிக விரைவில், சமூக ஜனநாயக கட்சி அரசாங்கம் தனது முட்டாள்தனமான செயலுக்கு அல்லது துரோகத்திற்கு விலை கொடுக்க வேண்டிய காலம் வந்தது. 1920-ம் ஆண்டு, பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரின் ஆயுதங்களை களையப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரைகொர்ப்ஸ் படையினர் பெர்லின் நகரில் ஒரு சதிப்புரட்சியை நடத்தினார்கள். இதனால், ஜெர்மன் அரசாங்கம் தெற்கே உள்ள ஸ்டுட்கார்ட் நகருக்கு இடம் பெயர்ந்தது.
சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் வீழ்ந்ததும், அந்த வெற்றிடத்தை பயன்படுத்தி கம்யூனிஸ்டுகள் மீண்டும் தலையெடுத்தனர். அவர்களது அறைகூவலை ஏற்று, பன்னிரண்டு மில்லியன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யுமளவிற்கு, அப்போதும் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக இருந்தது. அதே நேரம், ரோசா லக்சம்பேர்க் போன்ற லெனினுடன் கொள்கை முரண்பாடு கொண்ட தலைவர்களின் மறைவுக்குப் பின்னர், ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி வேறுவழியின்றி ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் தலைமைத்துவ வழிகாட்டலின் கீழ் வந்தது. லெனினிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.
ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை என்ற உண்மை வலதுசாரி அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. நிலைமை இப்படியே நீடித்தால், இன்னும் சில வருடங்களில் ரஷ்ய போல்ஷ்விக்குகளின் உதவியுடன், ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். அன்று கம்யூனிச அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற வலதுசாரி அரசியல்வாதிகளில் ஒருவர் தான் அடோல்ப் ஹிட்லர். இராணுவத்திற்குள் இருந்த வலதுசாரிகளும், முன்பு புரட்சியை நசுக்கிய பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரும் ஹிட்லரை ஆதரித்தார்கள்.
இதற்குப் பிறகு நடந்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், மர்மமான முறையில் பாராளுமன்ற கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. அந்த சம்பவத்திற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் என்று பழிபோடப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் பிற்காலத்தில் தடுப்பு முகாம்களில் நச்சுப் புகை அடித்துக் கொல்லப்பட்டனர்.
நாஜி சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, பல்லாயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் சோவியத் யூனியன், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா என்று பல நாடுகளுக்கும் அகதிகளாக சென்று அரசியல் தஞ்சம் கோரினார்கள். குறிப்பாக, சோவியத் யூனியனுக்கு அகதிகளாக சென்றவர்கள் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் திரும்பி வந்தனர். பலர் ஏற்கனவே சோவியத் செம்படையில் சேர்ந்து நாஜிப் படையினருக்கு எதிராக போரிட்டிருந்தனர். அந்த ஜெர்மன் அகதிகள் தான் சோஷலிச கிழக்கு ஜெர்மனிக்கு (DDR) அடித்தளம் இட்டனர்.
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம் | பாகம் – 3
காட்சி – 5 இடம் : நந்தவனம் உறுப்பினர்கள் : சாந்தாஜி, இந்து, மோகன்
(இந்துமதி மாலை தொடுத்துக் கொண்டிருக்கிறாள். சாந்தாஜி வந்து…)
சாந்தாஜி : இந்து இன்னும் மாலை முடியவில்லையா?
இந்து : இதோ, முடிந்து விட்டதப்பா.
(மாலையைத் தருகிறாள். சாந்தாஜி மாலையைப் பார்த்து விட்டு …)
சாந்தாஜி : என்ன இந்து மாலையில் மலரைவிட தழைதான் அதிகமிருக்கிறது. தேவனுக்கு இப்படியாமா மாலை சூட்டுவது?
இந்து : அப்பா நீங்கள் தினம் தினம் தேவனை தரிசிக்கிறீர்களே தவிர அவருடைய திவ்யமான குணத்தை தெரிந்து கொள்ளவில்லையே. பக்தியோடு பச்சை ஓலையை மாலையாகச் சமர்ப்பித்தாலும் பகவானுக்கு அதுவே பாரிஜாதமாயிருக்கும்.
சாந்தாஜி : ஆமாம் பேசத் தெரிந்து கொண்டாய். என்ன இருந்தாலும், இந்து கோவிலுக்குக் கொண்டு போகிற மாலை இப்படி இருக்கக் கூடாது.
இந்து : ஆமாம் கோவிலிலேயே இருந்து விடப்போகிறது, நீங்கள் தேவனுக்கு என்று மாலையைத் தருகிறீர்கள். நீங்கள் தரும் போதே பட்டாச்சாரி அதைத் தன்னுடைய தேவதாசிக்குத் தர தீர்மானிக்கிறான்.
சாந்தாஜி : துஷ்டப் பெண்ணடி நீ!
இந்து : உம்… அப்பா! மாலையைத் தரும்போது தேவனிடம் சொல்லுங்கள். இது, இந்து தயாரித்தது என்று. ஆமாம்! நீங்கள் சொன்னால் எங்கே அவர் காதில் விழப்போகிறது. அர்ச்சகருடைய அபசுரத்தைக் கேட்டு கேட்டு காது செவிடாகி எவ்வளவோ நாளாகிவிட்டது. (என்று கூறிவிட்டு ஓடுகிறாள். இன்னொரு மாலை கீழே விழுகிறது.)
சாந்தாஜி: இந்து இந்த மாலை ஏது : இவ்வளவு கள்ளியாகிவிட்டாயா? நல்ல மாலையை ஒளித்து வைத்து விட்டு, இலையை மாலையாக்கி இறைவனுக்குத் தருகிறாய்! ஏன் இந்த மாலையை ஒளித்து வைத்தாய்?
(இந்து மெளனமாயிருக்கிறாள்)
பதில் சொல்! யாருக்கு இந்த மாலை? யாருக்காக இந்த மாலை சொல்லு?
(சந்திரமோகன் வருகிறான். இந்த வெட்கத்துடன் தலைகுனிகிறாள். சாந்தாஜி அதைக் கவனியாமல் )
தேவனுக்கு மாலை தயாரிக்க சொன்னால் நீ இப்படி திருட்டுத்தனமா செய்கிறாய்? தேவனுக்குத் தழை! யாருக்கு இந்த மாலை? சொல்லு…
மோகன் : எனக்காக…
(சாந்தாஜி திடுக்கிட்டுத் திரும்பிக் கோபமாக)
சாந்தாஜி : என்ன! எனக்காக மாலை என்றா சொல்கிறாய்?
(மோகன் பயந்தவன் போல் பாசாங்கு செய்து)
மோகன் : மாலையா? எனக்காக? ஏன்?
சாந்தாஜி : என்னடா மோகன் என்னிடமா வேடிக்கை செய்கிறாய். நான் யாருக்கு மாலை என்று இந்துவைக் கேட்டால், நீ எனக்காக என்று சொல்லிவிட்டு…
மோகன் : ஓ.. அதுவா? நான் மாலை எனக்காக என்று சொல்லவில்லையே. எனக்காகத் தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான் சுந்தர், அதற்காக வந்தேன் என்று சொல்ல ஆரம்பித்தேன்.
(சாந்தாஜி மாலையை அவனிடம் வீசி எறிந்து)
சாந்தாஜி : இந்தா! நீ கேட்டாயோ இல்லையோ! இந்து இந்த மாலையை உனக்காகத்தான் தயாரித்திருப்பாள். நான் தேவனுக்கு மாலை தயாரிக்கச் சொன்னால்…
(மோகன் மாலை அணிந்து கொள்ள, இந்த அவனை வணங்குகிறாள். சாந்தாஜி பார்த்து விடுகிறார். மோகன் அப்படியே பாம்பு போல கையை ஆட்டுகிறான்)
என்னடா மோகன் கையை ஆட்டுகிறாய்?
மோகன் : பாம்பாட்டம் காட்டுகிறேன்.
சாந்தாஜி : பாம்பாட்டமல்ல; நீங்கள் இரண்டு பேரும் வரவர, குரங்காட்டம் ஆடுகிறீர்கள்.
இந்து : அப்பா! பாதி ராமாயணமே அது தானே.
(இந்துவை அடிக்க சாந்தாஜி ஓடுகிறார். இந்து ஓடிவிடுகிறாள். சாந்தாஜி சிரித்துக் கொண்டே)
சாந்தாஜி : இந்து மகா குறும்புக்காரி. அவள் அம்மாவும் அப்படித்தான். சரி, சந்திரமோகன்! உன்னை ஏன் வரச் சொன்னேன் தெரியுமா?
மோகன் : தெரியாதே
சாந்தாஜி : தெரிந்துக் கொள். இனி இந்துவை நீ பார்க்கக்கூடாது. அவளைப்பற்றி நினைக்கவும் கூடாது.
(மோகன் திகைத்து, பிறகு விளையாடுகிறார் என்று எண்ணி )
மோகன் : கனவிலே அவள் வந்தால்…?
சாந்தாஜி : அது கனவாகவே போகும்!
(மோகன் பயந்து)
மோகன் : தாங்கள் என்ன பேசுகிறீர்கள்?
சாந்தாஜி : பேசுவது புரியாத நிலை பிறந்து விட்டது உனக்கு… புரியும்படி சொல்லுகிறேன் கேள்! நீயும் இந்துவும்
மோகன் : நானும் இந்துவும் கண்ணும் ஒளியும் போல.
சாந்தாஜி : பேசுவது நான் மோகன்… சகுந்தலையிடம் பேசும் துஷ்யந்தனாக இராதே இந்துவை நீ கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டேன்.
மோகன் : ஏன்?
சாந்தாஜி : அவளுடைய தகப்பனாக நானிருப்பதால்
மோகன் : குமரியைக் கொடுமை செய்வது தந்தையின் கடமைகளிலே ஒன்றா?
சாந்தாஜி : கடமைகள் எனக்கு மறந்து போகாததால் தான் என் மகளை … அவளை ரட்சிக்கக்கூடிய ஒருவனுக்குத் தாரமாக்கத் தீர்மானித்து விட்டேன்! உனக்கு எதற்கப்பா மனைவி … மக்கள். குடும்பம்? எதுவும் உனக்கு வேண்டியதில்லை நீ வீரன் மகா வீரன் போர் வீரன் போர் வீரனுக்கு மனைவி எதற்கப்பா?
மோகன் : மராட்டிய மண்டலத்திலேயே யாரும் பேசாத மொழி பேசுகிறீரே! நான் போர் வீரன் என்பதற்காகவா எங்கள் புனிதக் காதலை தடை செய்கிறீர்கள்? தாங்கள் பூஜிக்கும் ராமன் ஓர் போர்வீரன்.
சாந்தாஜி : நான் மட்டும் ஜனகனாக இருந்திருந்தால்; ராமனுக்குச் சீதையைக் கொடுத்திருக்கவே மாட்டேன். போர் வீரனை மணந்து கொண்டதால் ஜானகி கண்ட பலன் என்ன? ஆரண்யவாசம் இராவணனிடம் சிறைவாசம்! கர்ப்பிணியாகவே கானகவாசம். பிறகு பாதாளப் பிரவேசம். இதுதானே? இது தெரிந்துதான் சொல்கிறேன். இந்துவை உனக்குக் கல்யாணம் செய்து தர முடியாது என்று.
மோகன் : விசித்திரமான பேச்சாக இருக்கிறதே! – வீரர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருந்துவிட வேண்டுமா? கோழைகளுக்குத்தான் கோமளவல்லிகள் வேண்டுமா? தங்கள் சித்தாந்தமே எனக்குப் புரியவில்லையே.
(மோகன் அருகே சென்று, தோள் மீது கை வைத்து அமைதியாக)
சாந்தாஜி : மோகன் கிழவன் நான். என் கிளி இந்து. அடேயப்பா! நீ சதா போர், போர் என்று போர்க்களத்திலேயே திரிய வேண்டும் என்கிறாயே. அவளை நான் உனக்குத் தந்துவிட்டு ஒவ்வொரு கணமும் உயிர் வேதனை அடைய வேண்டுமா?… நீயே சொல்லு! போர் வீரனுடைய வாழ்க்கை ஆபத்து நிறைந்தது. பயங்கரமானது. அவள், இந்து, பூங்கொடி நீ புயல் காற்று. அவள் மெழுகு ; நீ அனல் …
மோகன் : அவள் மலர்; நான் மந்தி. அதையும் கூறிவிடுமே.
சாந்தாஜி : கோபிக்காதே மோகன் நீ மந்தியா? மந்தகாசமான முகம். மராட்டிய தேஜஸ் உடையவன். இந்துவுக்கேற்ற இளவரசன் எல்லாம் சரிதான். ஆனால் நீ போரிடப் போய்விடுவாயே அதை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகிறதே.
மோகன் : வீணான பயம் வேண்டாம். நான் போர் வீரன் என்று தெரிந்த பிறகுதான் இந்து என்னைக் காதலித்தாள். அவளுடைய சுகத்திலே தங்களுக்கு அக்கரை இல்லையா? போர் வீரன் என்ற பட்டம் புகழின் சின்னம். அதைப் பெற எத்தனையோ குடும்பங்கள் தவம் கிடக்கின்றன.
சாந்தாஜி : என்னமோ, அப்பா உன் சொல் என் செவி புகாது. இந்துவின் தகப்பன் வீட்டோடு – குடும்பத்தோடு, சுத்தி கட்டாரி தூக்காத கண்யமாக வாழும் ஒரு மருமகனைத் தேடுகிறேன். அவ்வளவுதான் தெரியும் எனக்குப் பேச . நான் சொல்வதைக் கேளடா மோகன். சண்டாளத் தொழிலடா இந்தச் சண்டை போடும் தொழில், கொலை வேலை! ரத்தக்கறை படிந்த கையால் இந்த ரதியைத் தொடலாமா? போனது போகட்டும். அவளைத் தொட்டுத் தாலி கட்டிய பிறகாவது நீ இந்தத் தொழிலை விட்டு விடுகிறேன் என்று சத்தியம் செய்.
மோகன் : எந்தத் தொழிலை ?
சாந்தாஜி : பட்டாளத்து வேலையை.
மோகன் : அதுதான் தொழிலா? என் கடமை மராட்டிய வாலிபன் மராட்டியப் படையிலே சேர்ந்து பணியாற்றுவது, தொழிலல்ல; அவன் பிறப்புரிமை. நாட்டுத் தொண்டு ; ராஜ சேவை, தேசபக்தி.
சாந்தாஜி : அப்படியென்றால் இந்துவிடம் உனக்கிருக்கும் அன்பு வெறும் வேஷம். அவளுக்காக நீ வாளைத் துறந்து விடக் கூடாதா என்ன?
மோகன் : மராட்டிய நாட்டிலே இப்படி ஒரு முதியவர் இருப்பது தெரிந்தால் சிவாஜி ரத்தக் கண்ணீர் சொரிவார்.
சாந்தாஜி : சொரிவார் சொரிவார் ஜீஜி பாயின் கண்களிலே. ரத்தக் கண்ணீர் சொரிந்ததை அவர் அறியார். என் போன்ற ஏக்கங்கொண்ட கிழவர்களின் கண்ணீரையும் அவர் பார்த்ததில்லை .
மோகன் : நல்ல வேளையாகப் பார்த்ததில்லை. எதிரியின் வாள் உண்டாக்கிய காயத்திலிருந்து ஒழுகும் ரத்தத்தைத் துடைக்கவும் நேரமின்றி போரிட்ட வீரர்களையே அவர் பார்த்தார். இந்துமதியைக் கேளுங்கள், வாளை நான் அவளுக்காகத் துறந்துவிட வேண்டுமா என்று?
(சாந்தாஜி மகிழ்ச்சியுடன் இந்துமதியைக் கூப்பிட, அவள் வீரன் உடையை அணிந்து வருகிறாள், மோகன் சிரிக்க..) (கோபத்தோடு)
சாந்தாஜி : இந்து ! இது என்ன கோலம் போ, உள்ளே .
மோகன் : மராட்டிய மாதாவின் போர்க்கோலம் அது.
சாந்தாஜி : போதும்! நீயும் போ இருவரும் சேர்ந்து எனக்குப் பைத்தியம் உண்டாகும்படி செய்து விடுவீர்கள் போலிருக்கிறது …. மோகன் போ நான் கோவிலுக்குப் போகவேண்டும் நாளைக்கு வா நாளைக்கு வேண்டாம்; நான்கு நாள் பொறுத்து வா வேண்டாம்; நீ வரவே வேண்டாம். என் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.
இந்து : அப்பா!
சாந்தாஜி : ஆமாம் யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும்?
மோகன் : சாந்தாஜி இந்துமதி உமது மகள். நீர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டவள். நான் நாட்டு விடுதலைப் படையில் ஓர் வீரன். நீ வீரத்தைப் பழித்துப் பேசிக் கொண்டிருப்பதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்துமதியின் பேரழகுக்காக நான் பேடியாகி விட வேண்டுமென்று எண்ணாதீர். அவளை எனக்குத் தாரமாக்கினால் என் மாளிகையில் வசிப்பாள். எங்கள் காதலை உணராமல் அவளை வேறு யாருக்கேனும் திருமணம் செய்து கொடுத்தால், இந்து என் மாளிகையில் உலவ முடியாது. அப்போதும் என் மன மாளிகையில் வேறு மங்கை உலவமாட்டாள். நான் வருகிறேன். (கோபமாகப் போகிறான்.)
நம் சமூகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினைகள் நம்மைக் கடந்து செல்கின்றன. அதில் பெண் சார்ந்த பாலியல் வன்முறைகள் கடக்க முடியாத ஒன்றாகின்றன. பெண் என்ற ஒரே காரணத்தாலேயே அவள் மேல் விழும் தாக்குதல்கள் இச்சமுகத்தின் தற்போதைய சீழ்பிடித்த நிலையை தெளிவாகக் காட்டுகிறது. இன்றைய சூழலில் போலீசு, ஊடகம் என அனைத்தும் பெண்ணின் உடலை சந்தைப் பொருளாக்கி தமது இறையாக்கியிருக்கின்றன.
நான் எனது பள்ளிக் கல்வி முதல் முதுகலைப்பட்டம் வரை மகளிர் கல்வி நிறுவனங்களில்தான் படித்து முடித்தேன். கல்லூரி முடித்து விட்டு இச்சமுகத்தை எதிர் கொள்வதில் பெரும் தயக்கமும், பயமும் எப்போதும் என்னில் உண்டு; அது இன்றுவரையிலும் தொடர்கிறது. ஆண் என்பவன் வேற்றுக்கிரகவாசி போன்று பலமுறை தோன்றியதுண்டு. இது வாழ்க்கையில் எனது விருப்பத்தை நான் தேர்வு செய்ய முடியாதவாறு என்னை முடக்கியது. கல்லூரியில் கூட எனக்கு பிடித்த துறையை எடுக்காமல் ஏதோ ஒரு துறையை எடுத்து படித்து ஆசிரியர் ஆகிவிட்டேன்.
ஆனால், இப்போதும் நினைப்பது உண்டு. என்னுடைய வாழ்க்கையில் ஆண் சகாக்கள் என்பதையே சமூக இயக்கங்கள்தான் அறிமுகம் செய்தன. ஆனால், அப்போதும் கூட இடைவெளி தேவை என கருதும் சாதாரணப் பெண்ணாகவே இருந்தேன். ஆண், பெண் என இருபாலருமின்றி அனைத்து உயிர்களுக்கும் இவ்வுலகம் சமமானதுதான். ஆனால் இச்சமூகம் அப்படி கட்டமைக்கப்படவில்லை. இச்சமுகத்தின் நான் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளில் எப்போதுமே எனது அண்ணன் அல்லது அப்பாவைச் சார்ந்தே கடந்து செல்கிறேன். இப்படி எல்லா நேரங்களிலும் பிறரை சார்ந்து பயணிப்பது மிகவும் கடினமானது.
அதாவது, “உன்னை போன்றுதான் நானும் ஆனால், நான் ஒரு பெண் என்பதால் என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்றுதான் கற்பிக்கப்படுகிறது. இந்த கற்பிதங்கள் பெண்களுக்கு மட்டுமே. ஆணின் நுகர்வு பொருளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்கப் பழகிக் கொடுத்த இச்சமூகம் இப்படித்தான் இயங்கும். பெண்ணின் உடலை ஒரு பொருளாய் உணரும் யாரும் மனித, மிருக இனத்தில் சேர்ந்தவர் இல்லை.
ஒருமுறை டில்லி சென்று இருந்தேன். வேலை முடிந்து ரயில் ஏற டில்லி ஸ்டேஷனில் இரவு 11.30 மணிக்கு தனி பெண்ணாய் நின்று கொண்டிருந்தேன். இப்போதும் நினைக்கையில் அவ்வளவு பயம். முதல்முறை தனியாக செய்த பயணம் அது. என்னைச் சுற்றிலும் குடும்பத்துடன் யாரும் தென்படவில்லை. தனிமையில் நிற்கையில் ஒருவன் இடையூறு செய்தவாரே நின்று கொண்டிருந்தான். அப்போது ரயில் இன்னும் இரண்டு மணிநேரம் தாமதம் என குறுஞ்செய்தி. கையில் பெரிய கனத்துடன் பையை வைத்துக்கொண்டு பயணிகள் ஓய்வறைக்குச் செல்ல சுமை தூக்குபவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். யாரும் தென்படவில்லை. போலீசும் இல்லை.
நேரம் செல்லச் செல்ல பயம் அதிகரித்தது. என்ன செய்ய என்றும் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் வந்துவிடக்கூடாது; அழக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டேயிருந்தேன். பேசக்கூட வாயில் வார்த்தைகள் இல்லை. அருகில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் டெல்லியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காக படுத்துக் கொண்டிருந்தனர். இரவு மணி 1.30 இருக்கும். அந்த என்.எஸ்.எஸ். மாணவர்களை எழுப்பி விட்டு இந்தியில் பிரச்சினையை சொன்னேன். அவர்கள் இடையூறு செய்த நபரை தட்டிக் கேட்டு அங்கிருந்து விரட்டி விட்டனர். இதை ஏன் சொல்கிறேனெனில், ”ஒரு பெண்ணாக தனியே செல்லக்கூடாது” என என்னையே மிரட்டுகிறது என் உடல். அது ஆண்களின் ஆயுதங்களாக மாறி எங்களையே கொலை செய்கிறது. இங்கு தவறு ஏதேனும் நிகழ்ந்தால் ஒரு பெண்ணாய் பல கேள்விகள் என்னை நோக்கியே பாய்ந்திருக்கும்.
இங்கு ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல. எனக்கு தெரிந்த சகாக்கள் பலர் பெண்ணை புரிதலுடன் பார்க்கத் தெரிந்தவர்கள். டில்லி இரயில்வே ஸ்டேஷனில் முன் பின் தெரியாத அந்த உறவுகள் உதவி செய்து என்னை நெகிழ வைத்தன. இங்கு ஆண் பெண் குறித்த புரிதலுடன் பிள்ளைகளை வளர்க்க மறந்து விட்டோம். ஆணை நெடிலாகவும், பெண்களை குறிலாக வளர்த்து வரும் சமூகம்தான், பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களின் மீதான தாக்குதலுக்கான அடிப்படை. இங்கே பாதிக்கப்பட்ட பெண்ணை சாடும் சமூகம் அதற்கான காரணத்தை அறிய முயல்வதில்லை. இப்போதுதான் கிராமத்துப் பெண்கள் வெளியே வருகின்றனர். அதற்குள் இப்படிப்பட்ட விசயங்கள் பெண்களை பாதுகாப்பு என்ற பெயரில் இருளுக்குள் வைத்திடும்.
பெண் என்பவள் அன்பு, நம்பிக்கை, பாசம் இவற்றை எதிர்பார்த்து காதல் கொள்கிறாள். ஒரு பெண் ஒருவனுடன் செல்ல அவன் அதை பயன்படுத்தி வல்லுணர்வு செய்வான் எனில் அவனைத்தான் சமூகம் தூற்ற வேண்டும். ஆனால் இங்கு பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். அதனை வைத்து ஊடகங்களும் பணம் சம்பாதிக்கின்றன. இந்தியா போன்ற நாடுகள்தான் கலாச்சாரம் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு மறுபுறம் AIDS-ல் முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டுதான் ஆசிபா என்ற 12 வயது சிறுமியின் மீதான பாலியல் வன்முறை நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் தேசிய குற்றவியல் ஆவண மையம் (National Crime Record Bureau) வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2017-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் மீதான தாக்குதல் 82 சதவிதம் அதிகரித்துள்ளது என்கிறது. இதில் 95% தெரிந்தவர்கள் மூலமே நடக்கிறது என்கிறது ஆய்வு. ஒரு பக்கம் பெண்கள் தெய்வம் என்ற போலித்தனத்தைக் கற்பித்துக் கொண்டே மறுபுறம் பெண்கள் மீது பாலியல் வன்முறையைச் செலுத்துகிறது இச்சமூகம். நாம் இன்று இதை சரி செய்ய வேண்டிய தருவாயில் நின்று கொண்டிருக்கிறோம். இதை சரி செய்ய கடுமையான சட்டங்கள் மட்டும் போதாது. மாறாக சமூகத்தில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வும் அவசியம் தேவை. சரி செய்ய பயணிப்போம் மாற்றங்களை நோக்கி …