பகத்சிங்காய் பிறந்திடு – மார்ச் 23, பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுநாள்
பிறந்தால்
உன்னைப் போல
பிறக்க வேண்டும்.
இறந்தாலும்
உன்னைப் போல
இறக்க வேண்டும்.
பிறப்பின் நோக்கமும்
இறப்பின் நோக்கமும்
பிரிக்கவியலாத
மானுடப்
படி மலர்ச்சி நீ!
வாழ்வின் பின்னால்
ஒளிந்துக் கொண்டு
நியாயம் தேடவில்லை.
சாவின் பின்னால்
மறைந்து கொண்டு
அனுதாபம் தேடவில்லை,
அரசியல் தேடினாய்.
மனித இளமையின்
புதிய உணர்ச்சி நீ!
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப் போட்டுவிட்டது. இச்ச்சம்பவத்தில் குற்றவாளிகளில் ஒருவன் வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறான். போலீசோ, தாமாக முன் வந்து விளக்கம் கொடுக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற போலீசும், ஆளும் அதிமுக அரசும் செய்யும் முயற்சிகள் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையனை நேர்காணல் காண்கிறார் பத்திரிகையாளர் மு.வி. நந்தினி !
1. அந்த மூன்று நாள்கள் தீட்டாக இருக்கும் பெண்கள் புனிதமற்றவர்கள். அவர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.
2. கிறிஸ்தவர், முஸ்லீம் முதலான இந்தியாவில் இருக்கும் தகுதியற்ற சிறுபான்மையினர் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.
3. கீழான சாதியான சூத்திரர்கள் வாக்களித்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் அவர்கள் எங்களுக்கு வாக்களிப்பதை தவிர்க்கவும்.
4.இடஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்பதால் 69 சதவீத இடஒதுக்கீட்டில் பயனடையும் இந்துக்கள் எங்களுக்கு தீட்டானவர்கள், அவர்கள் எங்களுக்கு வாக்களிக்களிப்பது தடை செய்யப்படுகிறது.
5. மீத்தேன், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றை எதிர்க்கும் விவசாய தீவிரவாதிகளின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
7. ஒக்கி புயலின்போது ஏன் ராணுவத்தை அனுப்பவில்லை, கஜா புயலுக்கு ஏன் நிதியுதவி செய்யவில்லை என்று கேட்கும் ஆன்டி இன்டியன்ஸின் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
8. ஐந்து ரூபாய் கறுப்புப்பணத்தை மீட்க ஐயாயிரம் கோடி செலவு செய்வதா என்று கணக்கு கேட்கும் கபடதாரிகள் வாக்களிக்க தேவையில்லை.
9. வெளிநாட்டில் பதுக்கிய கறுப்புப்பணம் எங்கே, வங்கியில் போடுவதாகச் சொன்ன 15 லட்சம் எங்கே என்று அம்புலிமாமா கதைகளை நம்பி, இப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் அற்ப பதர்களின் வாக்குகளை பிஜேபி நிராகரிக்கிறது.
10. பெட்ரோல், டீசல் விலை உயர்வை பாரதத்தின் வளர்ச்சியாகப் பார்க்காத எட்டப்பர்களின் வாக்கு செல்லா வாக்காகவே கணக்கிடப்படும்.
11. கியாஸ் கட்டண உயர்வை கேள்வி கேட்பதா? உங்கள் வாக்கு உளுத்துப் போகட்டும்.
12.மாட்டுக்கறி வைத்திருந்ததாகக்கூறி அப்பாவிகளை அடிக்காத, கொலை செய்யாத எந்தவொரு நீச சக்தியின் வாக்கும் பிஜேபிக்கு ஏற்புடையதல்ல.
13. வெடித்த குண்டின் புகை அடங்கும் முன், குண்டின் எடையை துல்லியமாகச் சொன்ன பிஜேபியை சந்தேகிக்கும் ராமன்களின் வாக்குகள் (‘தலைவரே, ராமன் நம்ம பிராப்பர்ட்டி, அது தெரியாம இழுத்து விடறீங்களே?’ ‘ராவணன்னு சொல்லட்டா?’ ‘ராவணன் எப்ப ஓய் சொந்த பொண்டாட்டியை சந்தேகிச்சான்?’ ‘அப்ப என்னதான் ஓய் சொல்றது?’ ‘சொந்த பொண்டாட்டியை சந்தேகிச்சவனை கடவுள்னு சொன்னா இந்த மாதிரி பிரச்சனை வரத்தான் செய்யும்.’ ‘நீரு முட்டுக் குடுக்கிறவன் சொந்த பொண்டாட்டியை பொண்டாட்டின்னே சொல்லாம விலக்கி வச்சவன்தானே.’ ‘உண்மையை சொல்லாதேயும், கங்கையைவிட நாறுதா இல்லியா?’) அதாகப்பட்டது ராம விரோதிகளின் வாக்குகள் செல்லா வாக்காக கணக்கிடப்படும்.
15. அதாகப்பட்டது எவன் எங்களுக்கு ஓட்டுப் போடலைன்னாலும், டிஜிட்டல் ஓட்டுப் பதிவு எங்களை பாதுகாக்கும் என்பதைக் கூறிக் கொண்டு… ஜெய்ஹிந்த், பாரத்மாதாகி ஜே.
பகத்சிங்கின் சிறைக் குறிப்புகள் என்னும் இந்நூல், பொதுவாக புரட்சிக்காரர் என அறியப்பட்டுள்ள பகத்சிங், சிறந்த சிந்தனையாளரும், ஆழ்ந்த படிப்பாளியும் ஆவார் என்பதை பிரகடனம் செய்கிறது.
… பகத்சிங்கின் சிறைக் குறிப்புகளையும், எழுத்துக்களையும் அளப்பரிய முயற்சிகள் செய்து சேகரித்த… சமன்லாலின் கடும் முயற்சியின் விளைவாக தொகுக்கப்பட்ட பகத்சிங் மற்றும் அவரது சக தோழர்களின் மனுக்கள், கோரிக்கைகள், சிறைப் போராட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்த சிறை ஆவணங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன …
இந்த சிறை ஆவணங்கள், சிறைக்குள்ளிருந்து கொண்டே அன்றைய சட்டரீதியான முறையில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தங்களுடைய லட்சியங்களுக்காகப் போராடினார்கள் என்பதை எடுத்துரைப்பதுடன் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் தனது சட்டங்களைத் தாமே மீறி அவர்களின் உரிமைகளை ஒடுக்கியது என்பதையும் அம்பலப்படுத்துகின்றன.
…சோசலிஸம்தான் மக்களுக்கான இறுதியான லட்சியமாக இருக்க முடியும். அதுதான் மக்களின் உரிமைகளுக்கும், வாழ்க்கைக்கும் பாதுகாப்பு அரணாகவும் வழிகாட்டியாகவும் இருக்க முடியும் என்ற உறுதியான முடிவுக்கு காலப் போக்கில் வந்தவர். அவரது இந்தச் சிந்தனைப் போக்குகள் அவரது சிறைக்குறிப்புகளிலும் இழையோடுவதை பார்க்க முடியும். மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டு ஈடுபாடு கொண்டிருந்த பகத்சிங், தாம் தூக்குக் கயிற்றை சந்திப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு கூட, தோழர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் நூலைப் படித்ததன் மூலம் ஒரு புரட்சிக்காரனின் கடைசி சந்திப்போடு புரட்சிக்காரராகிய பகத்சிங் தூக்குக் கயிற்றை எதிர் கொள்கிறார்.
… இந்தப் பின்னணியில் பகத்சிங்கின் சிறைக் குறிப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பகத்சிங் தாம் சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். அந்நூல்கள் ஒவ்வொன்றின் மையக்கருத்தை அல்லது நோக்கத்தை ரத்தினச் சுருக்கமாக ஒரு 400 பக்க நோட்டில் எழுதி வைத்தார். மேலும், அந்நூல்கள் பலவற்றின் உள்ளடக்கங்களை அவற்றின் ஆசிரியர்களின் வார்த்தைகளிலும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், அவர் படித்த நூல்கள் பலவற்றிலிருந்து எளிய தகவல்களையும் அரிய தகவல்களையும் தமது சிறைக் குறிப்புகளில் குறித்துள்ளார். மிக முக்கியமான நூல்களின் உள்ளடக்கத்தை ரத்தினச் சுருக்கமாக தெரிவித்துள்ளார். உதாரணமாக மார்க்சிய மூலவர்களில் ஒருவரான ஏங்கல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற பெரும் நூலின் உள்ளடக்கத்தை சில பக்கங்களில் சித்தரிக்கிறார். பகத்சிங்கின் ஆழ்ந்த அறிவுப் புலமையின் பின்னணியில் தாம் படித்த புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விதம் குறிப்பாக இளைஞர்கள் புத்தகங்களை வாசிப்பதற்கான ஆர்வத்தை அளிப்பதாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும். சமூக மாற்றங்களுக்கான அறிவு ஞானங்களை பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ற லட்சிய நோக்கத்திற்கு இளைய தலைமுறையினருக்கு பகத்சிங் வழிகாட்டியாகத் திகழ்கிறார். இந்திய வரலாற்றில் முக்கியமான காலக் கட்டத்தை புரிந்து கொள்வதிலும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். (நூலின் பதிப்புரையிலிருந்து)
அவரது அரசியல் மற்றும் அறிவு வளர்ச்சியில் ஒரு முக்கியமான காரணியாக இருந்தது லாகூரில் உள்ள துவாரகா தாஸ் நூலகமாகும்; 1920-களின் மத்தியப் பகுதியில் அது மார்க்சிய நூல்களைப் பெறத் தொடங்கியிருந்தது. அப்போது மனிதகுல விடுதலைக்கான ஒரு முழுமையான தத்துவத்தை அவர் தேடிக் கொண்டிருந்தார் என்பது தெளிவு. அது அவரை மார்க்சியத்திடம் இட்டுச் சென்றது. பஞ்சாபின் கத்தார் புரட்சியாளர்கள் இந்தத் தேடலுக்கு உதவினர். கீர்த்தி என்கிற அவர்களது பஞ்சாபி இதழில் அவர் தொடர்ந்து எழுதினார். வகுப்புவாதமும் தீர்வுகளும், தீண்டாமைப் பிரச்சனை; மதமும் நமது விடுதலைப் போராட்டமும்’ உள்பட பல்வேறு பொருள்கள் குறித்து அவர் எழுதினார்.
1928-ம் ஆண்டு வாக்கில் பஞ்சாபில் சுக்தேவ், பகவதிச்சரன் வோரா மற்றும் ஐக்கிய மாகாணத்தில் சிவ வர்மா, ஜெய்தேவ் கபூர் ஆகியோருடன் சேர்ந்து உண்மையிலேயே புரட்சிகரமான ஒரு கட்சிக்கு சோஷலிசத் திட்டம் இருக்க வேண்டும் என்கிற முடிவிற்கு பகத்சிங் வரத் தொடங்கியிருந்தார். அது எப்படி இருக்கும் என்பது குறித்து தெளிவுபடுத்துவதற்காக 1928-ம் ஆண்டு செப்டம்பர் 8, 9 தேதிகளில் டெல்லியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரோஷா கோட்லாவில் எச்ஆர்ஏ அமைப்பின் மத்தியக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. அங்கு நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் பகத்சிங் கூறிய ஆலோசனையின்படி எச்.ஆர்.ஏ. தன்னுடைய பெயருடன் ‘சோஷலிஸ்ட்’ என்கிற சொல்லை சேர்த்து ‘இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு அமைப்பு ஆனது. சந்திரசேகர் ஆசாத் மிக அதிகமாகப் படித்தவர் இல்லை. ஆயினும் பகத்சிங்கை அவர் முழுமையாக நம்பியதால் இதற்கு அவரது ஒப்புதலும் இருந்தது.
1970-களின் தொடக்கத்தில் இந்திரா காந்தி சோஷலிஸ்டாக மாறினார் என்று கூறப்படுவதைப் போல, எச்ஆர்ஏ அமைப்பின் பெயருடன் சோஷலிஸ்ட் என்கிற சொல் சேர்த்துக் கொள்ளப்பட்டதானது மக்களைக் கவர்வதற்காகவோ அல்லது அலங்காரச் சொல்லாகவோ சேர்க்கப்படவில்லை. ஆனால், இந்திய இளைஞர்களின் மிகவும் முன்னேறிய பகுதியினரில் உண்மையாகவும், பண்பளவிலும் ஏற்பட்ட மாற்றத்தை இது குறித்தது. (நூலிலிருந்து பக்.11-12)
மாடர்ன் ரிவீவ்யூ பத்திரிகையின் ஆசிரியர் இன்குலாப் ஜிந்தாபாத் என்கிற முழக்கத்தைப் பரிகசித்தபோது பகத்சிங்கும், தத்தாவும் 1929-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி தி டிரிபியூன்’ பத்திரிகையில் வெளியான அவர்களது கடிதம் ஒன்றில் பதில் அளித்தனர்.
‘புரட்சி என்றால் கண்டிப்பாக ரத்தம் சிந்தப்பட வேண்டும் என்று பொருளல்ல. அது வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாச்சாரமல்ல. சில இயக்கங்களில் அவை முக்கிய பாத்திரம் வகிக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்தக் காரணத்தினாலேயே அவையே ஒரு இயக்கமாக ஆகிவிடுவதில்லை. கலகம் என்பது புரட்சியல்ல. இறுதியில் அது புரட்சிக்கு இட்டுச் செல்லலாம். ‘அந்த சொற்றொடரில் புரட்சி என்கிற சொல் ஓர் உணர்வு, நல்ல மாற்றத்திற்கான ஒரு பெருவிருப்பம் என்கிற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக மக்கள் ஏற்கனவே நிலை பெற்றுவிட்ட சமூக அமைப்பிற்குப் பழகிவிடுகிறார்கள். மாற்றம் என்கிற சொல்லைக் கேட்டாலேயே நடுங்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாகப் புரட்சிகர உணர்வை ஊட்ட வேண்டியிருக்கிறது. இல்லை எனில் சீர்கேடு மேலோங்கி மொத்த மனிதகுலமும் பிற்போக்கு சக்திகளால் தவறாக வழிநடத்தப்படும். அத்தகைய ஒரு நிலைமை மனிதகுல முன்னேற்றத்தில் தேக்கத்தை ஏற்படுத்தி அதை முடக்கிப் போட்டுவிடும். மனித குலத்தின் முன்னோக்கிய பீடுநடையைத் தடுப்பதற்குத் தேவையான பலத்தை பிற்போக்கு சக்திகள் பெறாத வண்ணம் மனிதகுலத்தின் ஆன்மாவெங்கும் புரட்சிகர உணர்வு எப்போதும் பரவியிருக்க வேண்டும். பழைய அமைப்பு, மாற வேண்டும்; புதிய அமைப்பிற்கு இடமளிக்க வேண்டும். ஒரு ‘நல்ல’ அமைப்பு உலகைக் கெடுத்து விடாமல் இருக்கும் வண்ணம் எப்போதும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; இந்த அர்த்தத்தில்தான் ‘புரட்சி வாழ்க’ என்ற முழக்கத்தை நாங்கள் எழுப்புகிறோம். (நூலிலிருந்து பக்.20-21)
ராஜகுரு, சுக்தேவ் பகத்சிங் ஆகியோரை தூக்கிலிட்டது நீதிமன்றம் நிகழ்த்திய படுகொலையேயன்றி வேறில்லை. அதுவும் காலனிய அரசு அச்சத்தால் படபடத்த அவசர கதியில் செய்யப்பட்ட படுகொலைகள். மறுநாள் காலையில் அந்த மூன்று புரட்சியாளர்களும் தூக்கிலிடப்படுவார்கள் என்று அஞ்சிய நவ்ஜவான் பாரத் சபா மார்ச் 23-ம் தேதி லாகூரில் பெரும் பேரணி நடத்தியது. மக்கள் கூட்டம் சிறைக்கு வருவதற்கு முந்திக் கொள்வதற்காக பிரிட்டிஷ் அதிகாரிகள் 22-ம் தேதி மாலை 7 மணிக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்று தீர்மானித்தனர்.
மரண தண்டனைகள் அதிகாலையில்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற சர்வதேச விதிக்கு மாறாக அரசு அப்படி தீர்மானித்தது. புரட்சியாளர்களின் உடல்கள் அவசர அவசரமாக துண்டு துண்டாக வெட்டப்பட்டன. சாக்குப் பைகளுக்குள் போட்டு கட்டப்பட்டன. சிறையின் பின்வாசல் வழியாக சட்லஜ் நதிக்கரைக்குக் கடத்திச் செல்லப்பட்டன. அங்கு அவை எரித்து, அழிக்கப்பட்டன. புரட்சியாளர்களின் குடும்பத்தினர், தோழர்கள், மற்றும் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் கொடுக்கின்ற முறையான இறுதி மரியாதை அல்லது இறுதிச் சடங்குகளைப் பெறுகின்ற கெளரவமும் அனுமதிக்கப்படவில்லை . (நூலிலிருந்து பக்-26)
நூல்:பகத்சிங் சிறைக் குறிப்புகள் சிறைக்குறிப்புகள் தொகுப்பு: பூபேந்திர ஹூஜா தமிழில்: சா. தேவதாஸ் ஆவணத் தொகுப்பு மற்றும் அடிக்குறிப்புகள்: சமன்லால் தமிழில் : அசோகன் முத்துசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. தொலைபேசி: 044 – 24332424, 24332924. மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com இணையம்:thamizhbooks.com
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 3
டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும்
வி.இ.லெனின்
டால்ஸ்டாய் ஆளும் வர்க்கங்கள் பற்றிய கண்டனத்தை பிரம்மாண்ட வலுவுடன் நேர்மையுடன் தொடுத்தார். முழுமையான தெளிவுடன் நவீன சமூக அமைப்பு நிலைபெற்று வருகிற சமயபீடம், நீதிமன்றங்கள், ராணுவம் “சட்டபூர்வ” திருமணம், பூர்ஷூவா விஞ்ஞானம் போன்ற அமைப்புகளின் உள்போலித் தனத்தை அம்பலப்படுத்தினார்.
ஆனால், அவரது சித்தாந்தம் நவீன சமுதாய அமைப்பிற்குப் புதைக்குழி தோண்டும் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கை, பணி, போராட்டம் இவற்றுக்கு முற்றிலும் முரண்பாடாக இருந்தது.
நவீன வாழ்வின் எஜமானர்களை ஏற்கெனவே வெறுக்கிற ஆனால் அவர்களை எதிர்த்துப் புத்திபூர்வமான முரணற்ற முழுமையான தவிர்க்க முடியாத போராட்டத்திற்கு இன்னும் முன்னேறியிராத ரஷ்யாவின் லட்சோப லட்ச வெகுஜனங்கள் அவரது குரலில் பேசினார்கள்.
மகத்தான ரஷ்யப் புரட்சியின் வரலாறும் விளைவும் வர்க்க போதமுள்ள சோஷலிசத் தொழிலாளி வர்க்கத்திற்கும், பழைய ஆட்சியின் பூரணமான ஆதரவாளர்களுக்கும் இடையே வெகுஜனங்கள் இருத்தலைக் காட்டியது. பிரதானமாயும் விவசாயிகளைக் கொண்ட இந்த வெகுஜனப் பகுதி, பழமையின்பால் தமக்குள்ள மிகப் பெரிய பகைமை எத்துணை என்பதையும், நவீன ஆட்சியின் கொடுமைகளை எத்துணைக் கடுமையாக அனுபவித்தன என்பதையும், அவற்றை ஒழித்துக் கட்டி, மேலும் சிறப்பான வாழ்க்கையினை நாடவும் அவர்களிடை இயல்பாகவே உள்ள ஆர்வம் எத்துணைப் பெரிதாக இருக்கிறது என்பதையும் புரட்சியில் காட்டியது.
எனினும், அதே சமயம் புரட்சியில் இந்த வெகுஜனப் பகுதி தனது பகைமை விஷயத்தில் போதிய அளவு அரசியல் போதம் பெற்றிருக்கவில்லை, போராட்டத்தில் முரணற்றதாக விளங்கவில்லை. மேலும் சிறப்பான வாழ்வு பற்றிய அதன் தேட்டம் குறுகிய எல்லைகளுக்குள் கட்டுப்பட்டதாக இருந்தது என்பதையும் காட்டியது.
இந்த மாபெரும் மனிதக் கடல் தனது அடியாழம் வரையில் கிளர்ச்சியுற்றிருந்தது. அதன் பலவீனங்களும் திண்மையான அம்சங்களும் எதுவாக இருப்பினும் அவை டால்ஸ்டாயின் சித்தாந்தத்தில் பிரதிபலித்தன.
டால்ஸ்டாயின் இலக்கிய நூல்களைப் படிப்பதின் மூலம் ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் தனது விரோதிகளை மேலும் நன்றாக அறிந்து கொள்ளும். ஆனால், டால்ஸ்டாயின் சித்தாந்தத்தைப் பரிசீலிக்கும்போது ரஷ்ய மக்கள் அனைவரும் தமது சொந்த பலவீனம், தமது விடுதலை லட்சியத்தை முடிவுவரையில் நிறைவேற்ற அனுமதிக்காத பலவீனம், எங்கே கிடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். முன்னேறிச் செல்வதற்கு இதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.
டால்ஸ்டாயை ஓர் “உலக மனச்சாட்சி’’ என்றும் “வாழ்க்கையின் போதகர்” என்றும் பிரகடனம் செய்வோர்களால் இந்த முன்னேற்றம் தடைப்படுகிறது. டால்ஸ்டாய் சிந்தாந்தத்தின் புரட்சி எதிர்ப்பு அம்சங்களைப் பயன்படுத்தும் விருப்பத்தால் மிதவாதிகள் திட்டமிட்டுப் பரப்புகிற பொய் இதுவாகும். டால்ஸ்டாயினை “ஒரு வாழ்க்கையின் போதகர்” எனப்படும் பொய்யினை மிதவாதிகளைத் தொடர்ந்து ஒருசில முன்னாள் சமூக ஜனநாயகவாதிகளும் திரும்பக் கூறுகிறார்கள்.
ஒரு மேம்பட்ட வாழ்க்கையினை வென்று பெறுவது டால்ஸ்டாயிடமிருந்ததன்று – மாறாக, டால்ஸ்டாய் வெறுத்த பழைய உலகினை அழிக்கும் ஆற்றல் படைத்த வர்க்கத்திடமிருந்தே பெற முடியும். அதன் முக்கியத்துவத்தை டால்ஸ்டாய் புரிந்து கொள்ளவில்லை. அந்த வர்க்கம் தொழிலாளி வர்க்கமாகும்.
– லெனின் டிசம்பர் 1, 1910-ல் எழுதியது
தொகுப்பு நூல்கள் பாகம் 16, பக்கம் 353 – 54
நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின் தமிழாக்கம்: கே.ராமநாதன் ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ 1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.
புலிட்சர் விருது பெற்ற புகைப்படக் கலைஞரான யானிஸ் பெராக்கீஸ் 02.03.2019 அன்று புற்றுநோயால் மறைந்தார்.
ஒரு புகைப்படக் கலைஞனுடைய பணி எத்தகையதாய் இருக்க வேண்டும் என்பதற்கு யானிஸ் பெராக்கீஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் நம் முன் வாழ்ந்து சென்றுள்ளார்.
58 வயதான யானிஸ் பெராக்கீஸ் சுமார் 30 வருடங்களாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 1960-ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் பிறந்த இவர், ஒரு தனியார் பள்ளியில் புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார். அப்போதிருந்தே புகைப்படக் கலையில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்திருக்கிறார்.
யானிஸ் பெராக்கீஸ்
1987-ம் ஆண்டு ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த பிறகு தன் உயிரையும் பொருட்படுத்தாமல், உலகின் பல்வேறு இடங்களில் நடந்த அடக்குமுறைகளையும், மனித உரிமை மீறல்களையும், இயற்கைச் சீற்றங்களையும் புகைப்படம் பிடித்துள்ளார்.
இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கிரீஸ் நாட்டின் வெளிநாட்டு பத்திரிகைகள் சங்கம், “இந்தத் தலைமுறையின் குறிப்பிடத்தக்க புகைப்படக் கலைஞர்களில் யானிசும் ஒருவர். இவருடைய புகைப்படங்களின் சிறப்பு என்னவென்றால், ஒரு புகைப்படத்தைப் பார்க்கும் போது அதில் புதைந்து கிடக்கும் அவலங்கள் நம் கண்முன்னே வந்துநிற்கும்” என்று கூறுகிறது.
ஆப்கானிஸ்தானில் நடந்த அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர், செசன்யா நாட்டில் நடந்த பயங்கரவாத நிகழ்வுகள், காஷ்மீரில் நடந்த பூகம்பம், எகிப்து நாட்டில் 2011-ம் ஆண்டு நடந்த அரச பயங்கரவாதத்திற்கெதிரான பேரெழுச்சி போன்ற இடங்களுக்குச் சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார். இவரின் அசட்டுத் துணிச்சலைக் கண்டு எதிரிகளும் கூட இவர் மீது மரியாதை வைத்திருந்தனர்.
2000-ம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனி-ல் போராளிக் குழுவினர் நடத்திய தாக்குதலில் இருந்து தன் சக ஃபோட்டோகிராபருடன் காயம்பட்டு மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். துரதிஷ்டவசமாக மற்ற இரு கலைஞர்கள் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
ஐரோப்பாவில் அகதிகளின் நிலை குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் 2016-ம் ஆண்டு இவருக்கு புலிட்சர் விருதைப் பெற்றுத் தந்தன. கிரீஸ் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் சிரிய நாட்டு அகதி ஒருவர் தன் மகளை முத்தமிட்டபடியே சூறாவளிக்காற்றுடன் கூடிய மழையில் தூக்கிச்செல்லும் காட்சி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும்.
இந்தப் படம் குறித்து யானிஸ் கூறுகையில் “உலகில் பல வெற்றிக் கதாநாயகர்கள் உள்ளனர். சினிமாவில் காண்பதைப்போல் இவர் ஸ்பைடர்மேன் ஹீரோவாக இல்லை; மாறாக கந்தலான பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கருப்பு அங்கியையே அணிந்திருந்தார். என்னைப் பொருத்தவரை தந்தை என்பதற்கு இதைவிட வேறு ஒரு தகுதியான நபரைப் பார்க்கமுடியாது” என்றார்.
30 வருடங்கள் இவருடன் இணைந்து வேலை செய்த தயாரிப்பாளரான வாசிலிஸ் என்பவர் கூறுகையில் ‘ சூறாவளிக் காற்று போல சுழன்று சுழன்று இரவு பகல் பாராமல் உழைப்பார்; பல அரிய புகைப்படங்களை உயிரைப் பணயம் வைத்துப் பிடிக்கவும் தயங்க மாட்டார்’.
உலகத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளார். இப்படியொரு விசயம் நடந்ததே எனக்குத் தெரியாதே என யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதே தன்னுடைய புகைப்படங்களின் குறிக்கோள் எனக்கூறிய யானிஸ், அதற்காகவே வாழ்ந்து மடிந்துள்ளார்.
சிரிய நாட்டு அகதி ஒருவர் தன் மகளை முத்தமிட்டபடியே சூறாவளிக்காற்றுடன் கூடிய மழையில் தூக்கிச்செல்லும் காட்சி
குர்தீஸ் இன அகதிகள் ரொட்டித்துண்டுகளுக்காகக் கையேந்தி நிற்கும் காட்சி – ஏப்ரல் 5, 1991
துப்பாக்கி ஏந்தி நிற்கும் அமெரிக்கக் கப்பற்படை வீரர்களை நோக்கி தன் குழந்தையைத் தூக்கிச் செல்லும் அல்பேனியர்.
சிரிய நாட்டு அகதி ஒருவர் துருக்கி வழியாகயிலிருந்து கிரீஸ் நாட்டில் ஒரு தீவில் தன்னுடைய பிஞ்சுக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு தோனியிலிருந்து இறங்குகிறார்.
லிபிய நாட்டில் போராளிகள் எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க ஓடுகின்றனர் – ஏப்ரல் 21, 2011.
சோமாலிய நாட்டில் மீட்புப் பணி ஊழியர் ஒருவர் இறந்த குழந்தை ஒன்றைப் புதைப்பதற்காக எடுத்துச்செல்கிறார் – டிசம்பர் 15, 1992.
ஏதென்ஸ் நகரத் தொழிலாளிகளின் 24 மணி நேர போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகள் வெடித்ததில் சிக்கிக்கொண்ட காவலர்கள் – செப்டம்பர் 26, 2012.
குரோஷிய நாட்டுச் சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முசுலீம் அகதிகள் எலும்பும் தோலுமாய் மதிய உணவிற்காக ஏங்கி நிற்கும் காட்சி – செப்டம்பர் 10, 1993
போலீசிடம் கெஞ்சி நிற்கும் அகதிகள், தங்களை கிரீஸ் நாட்டு எல்லை வழியாகக் கடந்து செல்ல அனுமதிக்கக் கோரும் காட்சி – செப்டம்பர் 10, 2015.
துருக்கி நாட்டில் அரச பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடும் இளைஞர் ஒருவர் கண்டெயினர் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக உதவி கோரி கத்தும் காட்சி
செசன்ய நாட்டுப் போராளிகள் வான்வழித் தாக்குதலுக்கு அஞ்சி ஓடி ஒளியும் காட்சி – ஜனவரி 9, 1995.
நானும் காவலாளிதான் என மார்தட்டி வீராப்பாக நாடாளுமன்றத்தில் பேசினார் மோடி. அம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு அவர் என்றைக்குமே காவலாளிதான் என்பதில் யாருக்கேனும் ஐயமிருக்குமா, என்ன?
ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் மோடியை ‘வைத்துச்’ செய்யும் ‘தேஷ விரோதிகள்’, தற்போது மோடியின் #mainbhichowkidar என்ற டிவிட்டர் அலப்பறைக்குப் பிறகு இன்னும் பல விதங்களில் மீம்களும் வீடியோக்களும் போட்டு கலாய்த்துவிட்டனர் நெட்டிசன்கள் ..
எங்க ஊரு சவுக்கிதார் மோடி என்ன செய்கிறார் என்று பார்ப்போமா ?
சில நாட்களுக்கு முன்னால் ஒரு நண்பர் இன்பாக்சில் வந்தார். தான் ஐடிஐ (தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனம்) ஒன்றில் ஆசிரியப்பணி செய்வதாக அறிமுகம் செய்து கொண்டார். கல்வி நிதிக்கு உதவ முடியுமா என்று கேட்டார். விவரம் அனுப்புங்கள், யோசிப்போம் என்று பதிலளித்தேன். சுமார் பத்து மாணவர்களின் ஒரு பட்டியலை அனுப்பினார். ஒவ்வொரு மாணவனின் பெயருக்கும் நேராக, ரூபாய் 2000 அல்லது 2500 அல்லது 3000, பெற்றோர் இல்லை / அப்பா இல்லை / குடிகாரத் தந்தை போன்ற விவரங்களை எழுதியிருந்தார்.
என்ன இது பொத்தாம்பொதுவாக எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டு தொலைபேசியில் உரையாடினேன். அப்போது தெரிய வந்த விவரம் இதுதான் :
“ஐடிஐக்கு படிக்க வருகிறவர்கள் பெரும்பாலும் ஏழைகள்தான். பத்தாவது அல்லது ப்ளஸ் டூவுடன் மேற்கல்வி கற்க முடியாதவர்கள், சில மாதங்கள் மட்டுமே பயிற்சி பெற்று, சம்பாதித்து குடும்பத்துக்கு ஆதரவளிக்க நினைப்பவர்கள்தான் ஐடிஐக்கு வருவார்கள்.
சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏழை மாணவர்கள் பலர் வருகிறார்கள். அது தனியார் ஐடிஐ. அரசு கட்டணம் செலுத்தி விடுகிறது என்றாலும், அவர்களில் பலர் மதியம் சாப்பிடக்கூட ஏதுமில்லாமல் பட்டினி கிடப்பார்கள். மதிய வகுப்புகளும் முடிந்து வீடு போக வேண்டும்.
சிலர் இரண்டு பஸ் மாறி வர வேண்டியிருக்கும். ஆனால், குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு பஸ்சுக்கு மட்டுமே பாஸ் கிடைக்கும். அதனால் வீட்டிலிருந்து 3-4 கிமீ நடந்து வந்து, பஸ் பிடித்து ஐடிஐ வந்து விட்டு, பஸ்சிலிருந்து இறங்கியபிறகு மீண்டும் நடந்து கிராமத்துக்குப் போக வேண்டும். பட்டினி வயிற்றோடு எப்படி இதெல்லாம் சாத்தியம்…”
மாதிரிப்படம்
பேசப்பேச உள்ளுக்குள் கலங்கியது. அதே நேரத்தில், கல்விநிதி என்பது கல்லூரிக் கட்டணம் போன்ற திட்டமான செலவுகளுக்கு மட்டுமே நாம் வழங்கி வருகிறோம் என்பதும் நினைவில் வந்தது. கல்லூரிக் கட்டணத்துக்கு நிதியுதவி செய்தபிறகு, கட்டிய ரசீதின் நகலை வாங்கி வைக்க முடியும். எந்தக் கணக்குக்கும் உட்படாத செலவை எப்படிச் செய்வது? நண்பர்களுக்கு எப்படி கணக்குக் காட்டுவது? அதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா ? நடந்து வரும் பையனுக்கு சைக்கிள் வாங்கித் தரலாமா? இதுபோல ஏதாவது யோசித்துவிட்டு, மீண்டும் வாருங்கள். நிச்சயமாக உதவி செய்வோம் என்றேன்.
அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மதியம் சாப்பிடும்போதெல்லாம் பட்டினி கிடக்கும் மாணவர்களின் நினைவாகவே இருந்தது. சக மாணவர்கள் சாப்பிடும்போது தான் மட்டும் சாப்பிடாமல் இருப்பது, சாப்பிட ஏதும் இல்லாமல் இருப்பது எப்படிப்பட்ட சோதனை என்பதை நன்றாகவே அறிவேன். வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளி இருந்தால், நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வருகிறேன் என்று டிராமா காட்டிவிட்டு, வீடு போய் ஒரு செம்புத் தண்ணீர் குடித்துவிட்டு வந்து விடலாம். ஆனால் பள்ளி தூரமாக இருந்தால்…?
***
பாபாஜான் (அப்பா) ஒருமுறை சந்தைக்குப் போயிருந்தபோது, வழியில் பசி மயக்கத்தில் இருந்த வெளியூர் இளைஞன் ஒருவனைப் பார்த்தார். பரிதாபப்பட்டு, அவனை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். அவனுக்கு பசியாற சோறு போட்டு, படுக்க இடமும் பாயும் தலையணையும் கொடுத்தார். வீடு சிறியது என்பதால் திண்ணையில் படுக்க வைத்தார். அவன் பிழைப்புக்கு என்ன வழி செய்யலாம் என்று இரவு முழுக்க யோசித்துக்கொண்டிருந்தார்.
விடிந்து பார்த்தால், அவன் பாபாஜானின் சைக்கிளை திருடிக்கொண்டு போய்விட்டான். ஊர் எல்லைக்குப் போவதற்குள் ஒரு போலீஸ்காரர் பார்த்து விட்டார். அது சின்ன கிராமம் என்பதால், சைக்கிளைப் பார்த்ததுமே அது யாருடைய சைக்கிள் என்று புரிந்து விட்டது. அவனை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.
பாபாஜான் என்ன செய்தார் தெரியுமா? ‘பாவம் இளைஞன், பிழைத்துப் போகட்டும், அவன் மீது கேஸ் எதுவும் போடவேண்டாம்’ என்று சைக்கிளை மட்டும் வாங்கிக்கொண்டு அவனைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
***
பங்களாபுதூர், தூக்கநாயக்கன் பாளையத்தில் அப்பா ஆசிரியராகப் பணியாற்றியபோது நடந்த இந்தக் கதை அக்கா சொல்லித்தான் எனக்குத் தெரியும். அக்கா எழுதிய ‘அன்புள்ள அனீஸ்’ புத்தகத்திலும் இது இடம்பெற்றிருக்கிறது. நான் அப்போது பிறக்கவில்லை, அல்லது கைக்குழந்தை. அதன்பிறகு வெள்ளகோவில் சென்று பிறகு மடத்துக்குளத்தில் நிரந்தரமாகி விட்டோம். மடத்துக்குளத்துக்கு வந்த பிறகு எங்களிடம் ஒருகாலத்திலும் சைக்கிள் இருக்கவில்லை.
மடத்துக்குளத்தில் வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளி இருந்ததால் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்து விட்டுப்போவார் அப்பா. சில காலம் கழித்து ஒன்றரை மைல் மேற்கே கட்டிடம் கட்டப்பட்டு, பள்ளி அங்கே போய்விட்டது. (உடுமலையில் எம்.எல்.ஏ-வாக இருந்தவனும் என் வகுப்பின் சகமாணவனுமான மணிவாசகத்தின் தாத்தா இலவசமாகக் கொடுத்த இடத்தில்தான் பள்ளி கட்டப்பட்டது.)
நாங்கள் வெள்ளகோவிலில் இருந்த வரையில் பெரிய அளவுக்கு பட்டினியோ வறுமையோ அனுபவித்ததாக நினைவில்லை. ஆனால் மடத்துக்குளத்தில், மடக்கு சேர்கூட இருக்கவில்லை. ஒரு டியூப்லைட்கூட இருக்கவில்லை. ஃபேன் கிடையாது. ரேடியோ அல்லது டிரான்சிஸ்டர் கிடையாது. இந்த நிலையில் சைக்கிளுக்கு வழி ஏது?
நடந்தே சென்று நடந்தே திரும்புவோம். அது பெரிய விஷயமில்லைதான். பல நூறுபேர் ஊர்வலம்போல வெகுதூரத்திலிருந்தும் நடந்தே பள்ளிக்கு வந்து போவதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் மதியங்கள்தான் சோதனை. தினமும் மதியம் டிபன் கட்டிக்கொண்டு போக வழியிருக்காது. என்னைப்போன்ற மாணவர்களுக்கு பெரிய சோதனை இல்லை. சக மாணவனின் சைக்கிள் வாங்கிக்கொண்டு வீடுபோய் திரும்பலாம். அல்லது எல்லாருமாகச் சேர்ந்து இருந்ததை பகிர்ந்தும் தின்னலாம்.
ஆனால் அப்பா…? டீச்சர்ஸ் ரூமில் மற்றவர்கள் சாப்பிடும்போது சும்மா உட்காரவும் முடியாது. டிபன் கட்டிக்கொண்டுவர வழியில்லை என்பது சக ஆசிரியர்களுக்குத் தெரிந்தே இருக்கும் என்றாலும் சாப்பிடாமல் ரூமில் உட்கார்ந்திருக்க முடியாது. வயிறு சரியில்லை என்று தினமும் பொய் சொல்ல முடியாது.
மதிய உணவு இடைவேளைக்குள் வீட்டுக்கு நடந்து வந்து திரும்பிச் செல்லவும் முடியாது. மேகாற்று வீசும் மாதங்களில் கிழக்கே போவது மிக எளிது. சைக்கிளில் உட்கார்ந்தால் போதும், காற்றே தள்ளிக்கொண்டுபோய் சேர்த்துவிடும். ஆனால் திரும்பிவரும்போது காற்றை எதிர்த்து பெடல் மிதித்து, மேடேற முடியாதபோது சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்து நாக்கு வறண்டுபோய் பள்ளிக்கு வந்து சேர்வதைவிட, சாப்பிடப் போகாமலே இருக்கலாம்.
அப்படியே போவதாக இருந்தாலும், சக ஆசிரியர்களிடம் தினமும் சைக்கிள் இரவல் கேட்பதும் தர்மசங்கடமான நிலை. மாணவர்களிடம் சில நாட்களில் இரவல் கேட்டு வாங்கிச் செல்லலாம். அதிலும் யாராவது என் சைக்கிள்ல காத்துப் போயிடுச்சு சார் என்று சொல்லி விட்டால் அதன் பொருளே வேறு. யாரிடம் இரவல் கேட்கலாம் என்று யோசிப்பதும்கூட அவலமான நிலைமைதான். அப்படியே வீட்டுக்குப் போனாலும் அங்கே சாப்பிட ஏதாவது இருக்குமா என்பதும் நிச்சயமில்லைதான். சில நாட்கள் ஸ்கூலை ஒட்டி சாலையின் மறுபக்கம் சின்னதாய் டீக்கடை வைத்திருந்த பியூன் கடையில் வடையும் டீயும் சாப்பிட்டு விட்டு வருவார்.
மேலே சொன்ன ஐடிஐ மாணவர்களின் மதிய உணவு விஷயம் கடந்தகால நினைவுகளை தோண்டிக் கிளறிப் போட்டுவிட்டது.
58 வயதில் ஓய்வுபெற்று அடுத்த இரண்டே ஆண்டுகள்தான் இருந்தார். 60 வயதில் விடைபெற்றுக்கொண்டார். 12-3-1979. இன்றோடு நாற்பது ஆண்டுகள் கழிந்து விட்டன.
அவருடைய மூன்றே மூன்று புகைப்படங்கள்தான் உண்டு. ஒன்று, இந்த குரூப் போட்டோ. மற்றொன்று, பென்ஷனுக்காக அம்மாவுடன் எடுத்த படம். கடைசி ஓரிரண்டு ஆண்டுகளில் தாடி வைத்திருந்தார். இருந்தாலும் தாடி வைத்த முகம் எனக்கு நினைவில் இருப்பதில்லை. யோசித்துப் பார்க்கிறேன்… இப்போது அப்பாவின் ஜாடை ரொம்பவே எனக்கு வந்துவிட்டது போலத் தெரிகிறது.
இத்தனை வறுமைக்கு இடையிலும் கம்பீரத்தை விடாதிருந்தவர் அப்பா. என்ன இருந்ததோ இல்லையோ, பிள்ளைகளுக்குக் கல்வியைத் தரத் தவறவில்லை. மகள்களை பர்தாக்களுக்குள் அடைக்கவில்லை. அதன் பயனை இப்போதும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
அன்று எதுவும் இல்லாதிருந்தோம். அப்பா இருந்தார். இன்று எல்லாம் இருக்கிறது. அப்பாதான் இல்லை.
***
அந்த ஐடிஐ ஆசிரியரும் இந்தப் பதிவைப் படிப்பார், அடுத்து என்ன செய்யலாம் எனத் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
பிரதமர் மோதியின் ட்விட்டர் அக்கவுண்டிலிருந்து #mainbhichowkidar (நானும் காவலன்) ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதாவது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து, ஏழ்மையிலிருந்து, அழுக்கிலிருந்து, ஊழலில் இருந்து காப்பாற்ற மேலே சொன்ன ஹாஷ்டாகுடன் நாம் டிவிட்டரில் பதிவுசெய்ய வேண்டுமாம்.
இந்த ஹாஷ்டாகுடன் பலரும் (பெரும்பாலும் ஐ.டி. விங் ஆட்கள்தான்) பிரதமரின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டை tag செய்து காலை முதல் டிவிட்டரில் பதிவிட்டு வந்தனர். பிற்பகலுக்கு மேல் யாருக்கு அந்த யோசனை தோன்றியதெனத் தெரியவில்லை.
யாரெல்லாம் அந்த ஹாஷ்டாகுடன், பிரதமரை Tag செய்கிறார்களோ அவர்களுக்கு தானியங்கி முறையில், “your participation makes the #mainbhiChowkidar movement stronger” என பதில் அனுப்ப முடிவுசெய்தனர்.
ஆனால், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவர்கள் கற்பனைகூட செய்திருக்கவில்லை.
உடனடியாக நாட்டைவிட்டு ஓடிப்போன நீரவ் மோடியின் கற்பனை அக்கவுண்டிலிருந்து (கேலிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட அக்கவுண்ட்) மோடியின் அக்கவுண்டை tag செய்து #mainbhichowkidar என்ற ஹாஷ்டாகுடன் எதையோ எழுதிவைக்க, அதற்கும் மேலேபடி பிரதமரின் அக்கவுண்டிலிருந்து பதில் வந்தது.
இது மட்டுமல்ல, மோடியையும் பாஜக-வையும் கடுமையாக விமர்சிக்கும் பலரும் இந்த ஹாஷ்டாகுடன் பிரதமரை டாக் செய்து கன்னாபின்னாவென திட்டிவைக்க, அவர்களுக்கும் அன்புடன் பதில் வந்தது.
அவ்வளவுதான், ட்விட்டர் உலகில் ஓட்டித் தீர்த்துவிட்டார்கள். காவலனாக இருக்கச் சொல்லி நீரவ் மோடியை பிரதமரின் ட்விட்டரிலிருந்து கேட்டிருக்கிறார்களா என ஒமர் அப்துல்லாவும் சீரியஸாக கேள்வியெழுப்ப, என்ன செய்வதென தெரியாமல், அம்மாதிரி ட்வீட்களையெல்லாம் டெலீட் செய்து வருகிறார்கள்.
1 of 2
காங்கிரஸ் கட்சி, தனது ட்விட்டர் பதிவில் “மோதி தனது நண்பர்களுக்கு நன்றி சொல்கிறார்” என்று இதைக் கடுமையாகக் கேலிசெய்திருக்கிறது. உடனே பாஜக அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், என் பள்ளி நண்பர்கள் என்னைத் திட்டுவதுபோல திட்டிவைத்திருக்கிறார்கள்..
தர்மன் : என்னங்கா கேவலமாகப் பேசறிங்க. என் மகன் இப்ப சிவாஜி மகாராஜா பட்டாளத்திலே சேர்ந்து ஊர் நாடெல்லாம் சுத்தி வரான்லே. அவன் சொல்லித்தான் ஊர் க்ஷேமங்கள் தெரியுது. நான் என்னத்தக் கண்டேனுங்க. நான் உண்டு. ஏர் உண்டுன்னு இருக்கிறவன் தானுங்களே.
கேசவப்பட்டர் : அது சரிடா தர்மா! உன் மகன் பட்டாளத்திலேயா இருக்கான்?
தர்மன் : ஆமாங்க!
பாலச்சந்திரப்பட்டர் : கர்மம் யாரை விட்டது?
தர்மன் : ஏன் அப்படிச் சொல்றீங்க? அவன் பட்டாளத்திலே சேர்ந்து மராட்டிய ராஜ்யத்தை கீர்த்தி உள்ளதாக்கி வர்றான். நல்ல காரியந்தானே நடக்குது.
கேசவப்பட்டர் : என்ன மகா நல்ல காரியம்? ஏண்டா தர்மா! தேச சேவை, ராஜ சேவை, வீரம் என்று என்னதான் பெயர் வேண்டுமானாலும் வைக்கட்டும்; சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே… இல்லேன்னு சொல்லுவியா?
தர்மன் : அது சரிங்க!
கேசவப்பட்டர் : என்ன சரி! இல்லெ தர்மா! யோசித்துப் பேசு. நம்ம ராஜ்யம். நம்ம ராஜா, நம்ம கீர்த்தி இதெல்லாம் இருக்கட்டும் ஒரு புறம். சண்டேன்னா அங்கே மனுஷாளை மனுஷாள் மிருகங்கள் போல எதிர்த்துண்டு சாக அடிக்கிற காரியந்தானே நடக்கிறது. இல்லேம்பியா?
தர்மன் : ஆமா! எவ்வளவோ பேரு மடிஞ்சு போறாங்க.
கேசவப்பட்டர் : அப்படின்னா அது கொலைதானே?
தர்மன் : கொலைன்னாலும் நோக்கம் பாருங்க. அது . நல்லதுதானே.
கேசவப்பட்டர் : நோக்கம் இருக்கட்டும்டா தர்மா. கொலை நடக்கிறதா இல்லையா?
தர்மன் : ஆமாங்க!
கேசவப்பட்டர் : உன் மகன் பட்டாளத்திலே சேர்ந்து, இந்தப் படுகொலையிலே சம்பந்தப்பட்டிருக்கிறான். ஆகையினால் பாவ மூட்டையை உன் குடும்பத்துக்குச் சேர்த்திருக்கிறான். நான் சொல்றேன்னு வருத்தப்படாதே. தர்மா! நீ எவ்வளவோ நல்லவன். இருந்தாலும் உன் மகனாலே உனக்கு நரகவாசம் சம்பவிக்கும்.
பாலச்சந்திரப்பட்டர் : ஏன், ஒய்! பிரமாதமாகப் பேசுகிறீரே! அதே சாஸ்திரத்திலே, அதே சாபத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லியிருக்கே.
கேசவப்பட்டர் : யார் இல்லேன்னா? ஏன் ஒய் நேக்கு அது தெரியாதுன்னு நினைத்தீரோ? நான் என்ன சாஸ்திரத்தை சாங்கோபங்கமாகத் தெரியாதவனா? இல்லை; என்ன உமது நினைப்பு? ஒய்! நான் சாமான்யாளிடம் சிட்சை கேட்டவனல்ல ஒய்! சாட்சாத் காகப்பட்டரிடம் பாடம் கேட்டவனாக்கும்.
பாலச்சந்திரப்பட்டர் : ஓய், கேசவப்பட்டர் சும்மா பேசாதேயும். நீர், மட்டுந்தானா காகப்பட்டரிடம் பாடம் கேட்டது. அவரிடம் பிரதம சிஷ்யராக இருப்பவர் யார் ? தெரியுமோ நோக்கு சொல்லும் பார்ப்போம்?
கேசவப்பட்டர் : இது தெரியாதோ? ரங்கு பட்டர்.
பாலச்சந்திரப்பட்டர் : அந்த ரங்குபட்டர் யார் தெரியுமோ?
கேசவப்பட்டர் : என்ன ஒய் இது? ரங்கு பட்டர் யார் என்றால் காகப்பட்டரின் சிஷ்யர்.
பாலச்சந்திரப்பட்டர் : ரங்கு பட்டர் காகப்பட்டரின் சிஷ்யர். காகப்பட்டர் ரங்கு பட்டரின் குரு. இது தெரியாமதான் கேட்டேனாக்கும். ரங்கு பட்டர் யார் என்று கேட்கிறேன் ஒய்!
கேசவப்பட்டர் : யார்? நீர்தான் சொல்லுமே…
பாலச்சந்திரப்பட்டர் : போகட்டும், என் அத்தை தெரியுமோ நோக்கு ?
கேசவப்பட்டர் : நோக்கு ரெண்டு பேருண்டே அத்தைமார். நீர் – யாரைக் கேட்கிறீர்?
பாலச்சந்திரப்பட்டர் : சிகப்பா ஒல்லியா இருப்பாள் ஒரு அத்தை.
கேசவப்பட்டர் : கொஞ்சம் வாயாடுதல்…
பாலச்சந்திரப்பட்டர் : ஒய் வாயாடுதல் இல்லை அவள். அவ எதிரே சொல்லியிருந்தா தெரிஞ்சு இருக்கும் உம் பாடு. அவளுடைய பெயர் அலமு . நான் சொல்றது அவ இல்லை. இன்னொரு அத்தை. கரப்பா நெட்டையா இருப்பாள். காமுண்ணு பெயர். அவ ஆத்துக்காரருக்கு ரங்கு பட்டர் நேர் தம்பிங்காணும்.
கேசவப்பட்டர் : அப்படிச் சொல்லும் ஒய்! ஒரு நாள் ரங்கு பட்டர் தூக்கத்திலே பிதற்ற ஆரம்பித்தார். காமு, காமுண்ணு கூவிக்கிட்டிருந்தார். கங்குபட்டர் கூட கோவிச்சிண்டு
என்னடா உளறிண்டிருக்கேன்னு கேட்டான்.
தர்மன் : என்னங்க இது. சாஸ்திரம் பிராயச்சித்தம்னு ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டிங்களே?
கேசவப்பட்டர் : போயிடலேடா தர்மா. சாஸ்திரத்திலே சொல்லியிருக்கிற பிராயச்சித்தப்படி உன் மகன் யுத்தத்திலே செய்திருக்கிற பாப கிருத்தியங்களுக்கு ஒரு சுத்தி ஹோமம் செய்தால் நோக்கு விமோசனம் உண்டு.
தர்மன் : செலவு நிறைய ஆகுமோ?
கேசவப்பட்டர் : பிரமாதமா ஆகாது. ஒரு அறநூறு வராகன் பிடிக்கும்.
தர்மன் : அடேயப்பா! ஆறு நூறு. அவ்வளவு ஏது எங்கிட்டே?
கேசவப்பட்டர் : தர்மா. அரை நூறு. அதாவது, ஐம்பது வராகன். ஆறு நூறு இல்லே.
பாலச்சந்திரப்பட்டர் : கேசவப்பட்டரே! உம்ம மூளை வரவர வரண்டுண்டே போறது. நாமெ ரெண்டு பேரும் நாளைக்கு அடுத்த கிராமத்திலே சிரார்த்தத்துக்குப் போகணுமே, அது கவனமில்லாமெ, நாளைக்கு ஹோமம்ணு சொன்னீரே?
கேசவப்பட்டர் : அடடா நான் மறந்தே போனேன். நல்ல வேளையா நோக்காவது கவனம் வந்ததே.
பாலச்சந்திரப்பட்டர் : வரவேதான் கரிநாள்னு ஒரு போடு போட்டேன். வாரும் போகலாம். (போகிறார்கள்)
♠ ♠ ♠
காட்சி – 7 இடம் : வீதி உறுப்பினர்கள் : சாந்தாஜி, பாலாஜி.
(சாந்தாஜியும், பாலாஜியும், எதிர் எதிரே வந்து சந்திக்கின்றனர்.)
பாலாஜி : நமஸ்காரம், சாந்தாஜி , நமஸ்காரம்.
சாந்தாஜி : நமஸ்கார். நமஸ்கார்… (போகிறார்)
பாலாஜி : ஏது சாந்தாஜி கோபமாக இருக்கிறீர்கள்?
சாந்தாஜி : (கோபத்துடன்) நான் கோபமாக இருப்பதாக யார் சொன்னார்கள்? அந்தப் பயல்தான் சொல்லியிருப்பான். சந்திரமோகன்தானே சொன்னான்?
பாலாஜி : ஆமாம் என்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன்.
சாந்தாஜி : மகா யோக்கியன் போல் உன்னிடம் பஞ்சாயத்துக்கு வந்துவிட்டானா? அவன் யோக்கியதையைப் பார் நான் கிளிப்பிள்ளைக்குச் சொல்லுவதைப் போல் சொல்லுகிறேன். அடே, சுந்தர் என் பேச்சைக் கேளடா. இந்து என் ஒரே மகள். குழந்தையை நான் கண்ணைப் போல் காப்பாற்றுகிறேன். அவள் எப்படியோ உன்னிடம் மயங்கிவிட்டாள். நீ இந்தச் சண்டைக்கு மட்டும் போகாதே. நீ அவளைக் கல்யாணம் செய்து கொண்டு வீட்டோடு இரு என்று கெஞ்சுகிறேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? வீரத்தைப் பழிக்காதே. நாட்டுக்கு நான் அடிமை. என் நாயகியும் நாட்டுக்குப் பணிப்பெண்’ – என்று எதிர்த்துப் பேசினான். ஏழு லட்சம் வராகன் இருக்கிறது என்னிடம் அவன் என்னை எதிர்த்துப் பேசுகிறான்.
பாலாஜி : பேச்சோடு விட்டானேன்னு சந்தோஷப்படுங்க சாந்தாஜி. அவன் மகா கெட்டவன் ..
சாந்தாஜி : அவனா அவன் கெட்டவனில்லையே. அவனுக்கு ‘தேசம், தேசம்’ என்று ஒரே பைத்தியம். அது தவிர அவனிடம் குறையே கிடையாது. என்ன செய்வதென்று
தெரியவில்லை .
பாலாஜி : ஏன் தெரியவில்லை ? இந்துமதிக்கு வேறு ஒரு ஆள் பார்க்க வேண்டியதுதான். மகாராஷ்டிரத்திலே மாப்பிள்ளைக்கா பஞ்சம்?
சாந்தாஜி : மகாராஷ்டிரத்திலே ஒரே ஒரு சந்திரமோகன்தானே கிடைப்பான்.
பாலாஜி: தங்களுக்கு மோகன் மீது பற்று என்று சொல்லுங்கள்!
சாந்தாஜி : இல்லையென்றால்தான் தொல்லையில்லையே? விரட்டி
விட்டிருப்பேனே. அவன் இந்துவின் நெஞ்சிலேயும் புகுந்து கொண்டான். என் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு விட்டான்.
பாலாஜி : புத்தி சொல்லிப் பார்ப்பதுதானே?
சாந்தாஜி : நான் ஏதாவது பேச ஆரம்பித்தால் அவன் அகோரக் கூச்சல் போட்டு அடக்கிவிடுகிறான்.
பாலாஜி : ஒரு யோசனை! இந்தக் காதல் இருக்கிறதே, அது ஒரு மாதிரியான வெறி வேறு ஒருவர் அந்தக் காதலைத் தட்டிப் பறித்து விடுவார்கள் என்று தோன்றினால் போதும், காதல் பித்துக் கொண்டவர்கள் காலடியில் விழுந்தாவது காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வார்கள்.
பாலாஜி : அப்படிப்பட்டவனை நம்பித்தான் இந்தக் காரியத்தில் இறங்க வேண்டும். எப்படி நடந்து கொள்வது என்று நான் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். என் தந்திரத்தைப் பாரும். ஒரு வாரத்தில் அவனைக் காதலன் வேஷத்தில் உமது மாளிகைக்கு அனுப்பி வைக்கிறேன். ம்… செலவுக்கு மட்டும்… (பணத்தை மடியிலிருந்து எடுத்து )
சாந்தாஜி : ஒரு சல்லிகூடத் தர முடியாது. இந்த இருநூறு வராகனுக்குமேல்.
பாலாஜி : இதிலேயே முடித்து வைக்கிறேன். வெற்றி கிடைத்ததும் தாங்களாகவே இனாம் தராமலா போகப் போகிறீர்கள்.
மார்க்ஸ் பிறந்தார் – 25 (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
10. மேதையின் அருகில் மற்றொரு மேதை – 2
மார்க்ஸ் கூருணர்ச்சி உடையவர். எனினும் தன்னைக் காட்டிலும் எங்கெல்சைப் பற்றிய விமர்சனமே அவரை அதிகமாகப் பாதித்தது.
கூலிப் பத்திரிகையாளர்களின் தாக்குதலை அவர் அமைதியோடு சகித்துக் கொள்வார், அவற்றுக்குப் பதில் எழுத விரும்பமாட்டார். ஆனால் அது எங்கெல்சின் கெளரவத்தைப் பற்றிய பிரச்சினையாக இருந்தால் மார்க்ஸ் தயவு தாட்சண்ணியமின்றி நடந்து கொள்வார். அவர் உடனே சண்டைக்குக் கிளம்பிவிடுவார்.
1850-இல் முல்லர் – டெல்லெரிங் என்ற பெயர் கொண்ட யாரோ ஒருவர் தொழிலாளர் சங்கத்துக்கு எங்கெல்சை அவதூறு செய்து கடிதம் எழுதிய பொழுது மார்க்ஸ் ஆவேசமடைந்தார். தன்னுடைய ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த நபருக்குப் பின்வருமாறு எழுதினார்:
“நீங்கள் நேற்று தொழிலாளர் சங்கத்துக்கு எழுதிய கடிதத்திற்காக என்னுடன் சண்டைக்கு வரும்படி நான் உங்களுக்குச் சவால் விடுவேன் அதாவது எங்கெல்சைக் கேவலமான முறையில் அவதூறு செய்த பிறகு உங்களால் இன்னும் திருப்தியளிக்க முடியுமானால். உங்களுடைய அற்பமான அக்கறைகளை, உங்களுடைய பொறாமையை, உங்களுடைய அதிருப்தியுற்ற அகம்பாவத்தை, உங்களுடைய மாபெரும் மேதையை உலகம் அங்கீகரிக்கவில்லை என்ற அதிருப்தியில் ஊறிய ஆத்திரத்தை நீங்கள் புரட்சிகரமான வெறி என்ற போலித்தனமான முகமூடிக்குப் பின்னால் இதுவரை வெற்றிகரமாக மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த முகமூடியைக் கிழித்தெறிவதற்கு உங்களை வேறொரு களத்தில் சந்திக்கின்ற வாய்ப்பை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்…..”(6)
மார்க்சின் கெளரவத்தைப் பாதுகாக்கின்ற பிரச்சினை என்றால் எங்கெல்சும் இதைப் போலவே நடந்து கொள்வார். அ. லோரியா என்ற கொச்சையான பொருளியலாளர் மூலதனத்தின் கருத்துக்களைத் திரித்துக் கூறுவதை விசேஷமாகச் செய்து கொண்டிருந்தார். எங்கெல்ஸ் அவரை ஆத்திரத்தோடு கண்டனம் செய்தார்.
“கார்ல் மார்க்சைப் பற்றி உங்களுடைய கட்டுரை வந்து சேர்ந்தது. அவருடைய போதனையைப் பற்றி மிகவும் கூர்மையான முறையில் விமர்சனம் செய்வதற்கும் அதைத் தவறாகப் புரிந்து கொள்வதற்கும் கூட உங்களுக்கு உரிமையுண்டு. அவருடைய வாழ்க்கையைப் புனைகதை மாதிரி மாற்றிக் கூறுவதற்கும் உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் என்னுடைய காலஞ்சென்ற நண்பருடைய குணத்தை அவதூறு செய்வதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது, அப்படிச் செய்வதற்கு நான் யாரையும் அனுமதிக்கமாட்டேன்…..”(7)
எங்கெல்ஸ் லண்டனுக்குச் செல்கின்ற பொழுது இரு நண்பர்களும் நேரடியாகச் சந்தித்துக் கொள்வார்கள், மார்க்ஸ் குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். மார்க்சின் பெண் மக்கள் எங்கெல்சை சித்தப்பா என்று அழைப்பார்கள். எங்கெல்ஸ் தன்னலமின்றிப் பல வருடங்கள் உதவி செய்திருக்காவிட்டால் மார்க்சுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்பதைச் சொல்வது கடினம். அவர் தன்னுடைய நண்பரின் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய சொந்த விஞ்ஞான அக்கறைகளை ஒதுக்கி வைத்தார். மார்க்ஸ் இதை நினைத்து எப்பொழுதுமே வருத்தமடைவார்.
1867 ஆகஸ்ட் 16-ம் தேதியன்று அதிகாலையில் இரண்டு மணிக்கு மார்க்ஸ் மூலதனத்தின் முதல் தொகுதியின் அச்சுப்படிகளைத் திருத்தி முடித்தார். உடனே எங்கெல்சுக்குக் கடிதம் எழுதினார்: “இந்தத் தொகுதியின் வேலை முடிந்துவிட்டது. உங்கள் உதவியினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உங்களுடைய தியாகம் இல்லையென்றால் மூன்று தொகுதிகளையும் எழுதுவதற்கு அவசியமான ஏராளமான வேலையை என்னால் ஒருபோதும் செய்து முடித்திருக்க இயலாது. நன்றிப் பெருக்குடன் உங்களை நெஞ்சாரத் தழுவுகிறேன்.”(8)
ஆனால் எங்கெல்ஸ் ஒருபோதும் தன்னுடைய விதியைப் பற்றிப் புகார் செய்யவில்லை, வருத்தமடையவில்லை. அவர் தன்னுடைய அலுவலகத்தில் உற்சாகமாக வேலை செய்தார். உலகத்திலேயே அந்த வேலைதான் சிறப்பானது என்று தெரிவிப்பதைப் போல அமைதியாக வாழ்ந்தார்.
எங்கெல்ஸ் உண்மையில் எப்படிப்பட்ட வேதனையை அனுபவித்தார் என்பதை எலியனோர் மார்க்ஸ்-ஏவ்லிங் எழுதியுள்ள நினைவுக் கட்டுரையின் பின்வரும் பகுதியிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எங்கெல்சின் “கடுந்தண்டனை” முடிவுக்கு வந்து கொண்டிருந்த பொழுது அந்த அம்மையார் எங்கெல்ஸ் வீட்டுக்கு செல்வதுண்டு.
“அன்று காலையில் அவர் கடைசித் தடவையாக அலுவலகத்துக்குப் புறப்பட்ட பொழுது ‘கடைசித் தடவை!’ என்று சொல்லிக் கொண்டு காலணிகளை அணிந்த நேரத்தில் அவர் முகத்திலிருந்த பிரகாசத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
“அதற்குச் சில மணிநேரத்துக்குப் பிறகு நாங்கள் அவரை எதிர்பார்த்துக் கொண்டு வாயிலில் காத்திருந்தோம். வீட்டுக்கு எதிரிலிருந்த சிறிய வயிலைக் கடந்து அவர் வந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவர் கைத்தடியைக் காற்றில் சுழற்றிக் கொண்டும் பாடிக் கொண்டும் முகத்தில் பரவசத்துடன் வந்து கொண்டிருந்தார். நாங்கள் விருந்துக்கு ஏற்பாடுகளைச் செய்தோம். ஷாம்பேன் மது அருந்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.”
’’அன்று அதைப் புரிந்து கொள்ள முடியாத சின்னப் பெண்ணாக நான் இருந்தேன். இன்று அதை நினைத்துப் பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.”(9)
அதே தினத்தில் எங்கெல்ஸ் தன்னுடைய தாயாருக்குப் பின்வருமாறு எழுதினார். “நான் முற்றிலும் வேறு மனிதனாகிவிட்டேன், என் வயதில் பத்து வருடங்கள் குறைந்துவிட்டன.”(10)
எங்கெல்சிடம் நிறைந்திருந்த உற்சாகமும் உயிர்த்துடிப்பும் ஆற்றலும் தெளிவும் பாசமும் அவரை எல்லோரும் மிகவும் விரும்புகின்ற மனிதராக்கின. மார்க்சின் ஹாம்பர்க் பதிப்பாளர் எழுதிய கடிதம் ஒருநாள் மார்க்சுக்குக் கிடைத்தது. எங்கெல்ஸ் அவரைச் சந்தித்ததாகவும் தான் இதுவரையிலும் சந்தித்தவர்களில் அவர் மிகவும் சிறந்த பண்புடையவர் என்றும் அவர் எழுதியிருந்தார்.
மார்க்ஸ் கடிதத்தைப் படிப்பதை நிறுத்தி விட்டுப் பெருமிதத்தோடு கூறினார்: “பிரெட் (எங்கெல்ஸ் – பர்) எவ்வளவு அறிவாளியோ அவ்வளவு இனிமையானவர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத நபரை நான் பார்க்க விரும்புகிறேன்.”(11)
மார்க்சைப் போலவே எங்கெல்சிடமும் அதிகமான நகைச்சுவை உணர்ச்சி இருந்தது. அந்நிய நாட்டில் வாழ்க்கையின் துன்பங்களைச் சகித்துக் கொள்வதற்கு அது உதவியது.
மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதமொன்றில் தனக்கு நோய் ஏற்பட்ட பொழுது பட்ட கஷ்டங்களை வர்ணித்தார், ஆனால் மற்ற சந்தர்ப்பங்கள் எப்படி இருந்தாலும் நம்முடைய நட்பு எவ்வளவு மாபெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பதை முன்னெப்போதையும் காட்டிலும் மிகவும் அதிகமாக உணர்ந்ததாகவும் வேறு எந்த உறவையும் இவ்வளவு உயர்வானதாகத் தான் மதிக்கவில்லை என்றும் எழுதினார்.
எங்கெல்ஸ் தான் மிகவும் வெறுத்த வர்த்தக நுகத்தடியைத் தூக்கியெறிந்த பிறகு லண்டனுக்குச் சென்று மார்க்சின் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டில் குடியேறினார். நண்பர்கள் அநேகமாக நாள்தோறும் சந்தித்துக் கொண்டனர். எங்கெல்ஸ் பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்த இலக்கியப்படைப்புத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகின்ற வேலையில் இப்பொழுது கடுமையாக உழைத்தார்.
இயற்கை விஞ்ஞானங்களின் சாதனைகளை இயக்கவியல் ரீதியில் ஒன்றிணைக்கின்ற மாபெரும் திட்டம் அவற்றில் முக்கியமான ஒன்றாகும். 1878-இல் அவர் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு வெளியாயிற்று. இப்புத்தகம் தத்துவஞானம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானத் துறைகளில் மிகவும் முக்கியமான பிரச்சினைகளை ஆராய்கிறது என்று லெனின் எழுதினார்.
அவர் பூர்வீக சமூகத்தின் வரலாற்றையும் ஆராய்ந்தார். அவர் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற புத்தகம் 1884-இல் வெளியிடப்பட்டது.
எங்கெல்ஸ் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதுடன் கட்சி, அமைப்பு ரீதியான வேலைகளிலும் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டார். அவர் அகிலத்தின் பொதுக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பல நாடுகளுக்குத் தொடர்புச் செயலாளராக இருக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எங்கெல்ஸ் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் புரட்சிகரப் போராட்டத்தின் செய்முறை நோக்கங்களுக்குத் தகவமைப்பதற்கு எப்பொழுதும் முயற்சி செய்பவர். ஆகவே அவர் எதிர்காலத்தை முன்னறிந்து ஸ்லாவ் மொழிகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.
மார்க்சும் எங்கெல்சும் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வெற்றிகளைத் தம் காலத்திலேயே கண்டார்கள். ஒவ்வொரு வெற்றியையும் தம்முடைய சொந்த வெற்றியாகக் கொண்டாடினார்கள். ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பொழுது எங்கெல்ஸ் முதுமைப் பருவத்திலிருந்தார். எனினும் அந்தச் சமயத்தில் தன்னுடைய வீட்டில் பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அவர் வீட்டில் விருந்து தயாரித்தார் (எங்கெல்ஸ் “சுவையான உணவு தயாரிக்கக் கூடியவர்”), விசேஷமான ஜெர்மன் பீர் ஒரு மிடா வாங்கினார், தன்னுடைய நெருங்கிய நண்பர்களை அழைத்தார் என்று எட்வார்டு ஏவ்லிங் எழுதினார்.
“ஜெனரல்” ஒவ்வொரு தந்தியையும் பிரித்து அதன் வாசகத்தை உரக்கப் படித்தார்: “அது வெற்றி (தேர்தலில் சமூக-ஜனநாயகவாதிகளுக்கு – ஆசிரியர்) என்றால் நாங்கள் குடித்தோம். அது தோல்வி என்றாலும் நாங்கள் குடித்தோம்.”(12)
மார்க்ஸ் மரணமடைந்த பிறகு எங்கெல்ஸ் சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவரானார். அவரே முழுப் பொறுப்பையும் வகித்தபோதிலும் அவர் முன்பிருந்த மாதிரியே அடக்கமானவராக, ஆர்ப்பாட்டமில்லாதவராக இருந்தார். “என்னுடைய காலஞ்சென்ற சமகாலத்தவர்களுக்கு, எல்லோரையும் காட்டிலும் மார்க்சுக்குக் கிடைக்க வேண்டிய கெளரவம் கடைசியாக எஞ்சியவன் என்ற முறையில் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விதி முடிவு செய்திருக்கிறது”(13) என்று எங்கெல்ஸ் ஒரு சமயத்தில் கூறினார். எனக்குக் கிடைத்திருக்கும் கெளரவத்துக்குத் தகுதியுடையவன் என்று காட்டிக் கொள்வதற்காக எதிர்காலத்திலாவது பாட்டாளி வர்க்கத்தினுடைய சேவையில் என்னுடைய எஞ்சிய வாழ்க்கை முழுவதையும் கழிப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
மார்க்சும் எங்கெல்சும் தமது வாழ்க்கையின் இறுதியில் ருஷ்யா மீது கவனத்தைத் திருப்பினார்கள். எங்கெல்ஸ் பிளெஹானவ், ஸ்குலிச், லபாதின் மற்றும் இதரர்களான சிறந்த ருஷ்ய சோஷலிஸ்டுகளுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார்.
எங்கெல்ஸ் ருஷ்யப் புரட்சியாளர்களுடன் உரையாடுகின்ற பொழுது அவர்கள் மார்க்சின் எழுத்துக்களை மேற்கோள் காட்டினால் மட்டும் போதாது, அவர்களுடைய நிலையிலிருந்தால் மார்க்ஸ் எப்படிச் சிந்தித்திருப்பாரோ அப்படிச் சிந்திக்க முயல வேண்டும் என்று கூறினார். அப்படிச் செய்தால்தான் “மார்க்சியவாதி” என்ற சொல்லை உபயோகிப்பதற்குத் தகுதியுண்டு என்று அவர் நம்பினார். ருஷ்யாவில் ஏற்படப் போகின்ற புரட்சி உலக கம்யூனிஸ்ட் இயக்கம் முழுவதின் விதியில் மாபெரும் பாத்திரத்தை வகிக்கும் என்று அவர் கருதினார். அந்தக் கருத்து சரியாயிற்று.
தான் தேர்ந்தெடுத்த பாதை சரியானது, தானும் மார்க்சும் அனைத்துச் சக்தியையும் அர்ப்பணித்த இலட்சியத்துக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பிய எங்கெல்ஸ் வாழ்க்கையை மிகவும் நேசித்தது நியாயமானதே. அவர் ஏராளமான சுமைகளைத் தாங்கியபோதிலும் அவருடைய வாழ்க்கை அவரைப் போலவே ஒருங்கிணைந்ததாக, அழகு மிக்கதாகப் பொலிந்தது.
மார்க்ஸ் மரணமடைந்த பிறகு மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை முடிப்பது அவருடைய முக்கியமான பணியாயிற்று. அவர் எழுதிக் கொண்டிருந்த இயற்கையின் இயக்க இயல் என்ற புத்தகம் தொடர்பான வேலைகளை நிறுத்தி விட்டு – அந்தப் புத்தகம் முடிக்கப்படவே இல்லை – தன்னுடைய நண்பரின் புத்தகத்தைப் பிரசுரத்துக்குத் தயாரிக்கின்ற வேலையைத் தொடங்கினார். அவர் இந்த மாபெரும் பணியைத் தன்னுடைய மரணத்துக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் முடித்தார். அவருடைய ஆராய்ச்சியில் எப்பொழுதும் இருக்கின்ற கடும் உழைப்பு, கறாரான கவனம், பூரணத்துவம் இந்தப் பணியிலும் இருந்தன.
ஆகவே மூலதனம் இரண்டு மேதைகளின் சாதனையாகும். மனிதகுலம் இத்தகைய ஆன்மிக சக்தியைக் கொண்ட ஒரு நூலை, அதன் பிற்கால கதிப்போக்கு முழுவதிலும் மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கின்ற நூலை ஒருபோதும் அறிந்ததில்லை.
*****
மூலதனம் எப்படி, எந்த நிலைமைகளில் எழுதப்பட்டது என்பது இப்பொழுது நமக்குத் தெரியுமாதலால், இந்த மிகச் சிறப்பான புத்தகத்தைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் எழுதுவோம். கலப்பற்ற பொருளாதாரப் பிரச்சினைகளே ஒதுக்கிவிட்டு புதிய, உண்மையிலேயே விஞ்ஞான ரீதியான உலகக் கண்ணோட்டத்தின், இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத் தத்துவஞானத்தின் மிக முழுமையான வடிவமாக இப்புத்தகம் எப்படி இருக்கிறது என்பதை அறிய முயலுவோம்.
குறிப்புகள்:
(6) Marx, Engels, Werke, Bd. 27, Berlin, 1965, S. 526.
(7) Marx, Engels, Werke, Bd.36, S. 19.
(8) Marx, Engels,Selected Correspondence, p. 18.
(9) Reminiscences of Marx and Engels, pp. 185-86.
(10) Marx, Engels, Werke, Bd. 32, Berlin, 1965, S. 167.
(11) Reminiscences of Marx and Engels, p. 91.
(12) Reminiscences of Marx and Engels, p. 316.
(13) Marx, Engels, Werke, Bd. 37, Berlin, 1967, S. 513.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார் நூல் ஆசிரியர் :ஹென்ரி வோல்கவ் தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ. வெளியீடு :முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே) 1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்) பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பயிலும் இளங்கலை விலங்கியல் துறையை சேர்ந்த 7 மாணவர்களை, மார்ச் – 19 அன்று நடைபெற்ற வேதியியல் செய்முறைத் தேர்வை எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இந்த 7 மாணவர்களும் செய்முறைத் தேர்வுக்கான கட்டணம் ரூ. 2080 கட்டவில்லை என்பதற்காக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுள் பெரும்பாலோனோர் கூலித்தொழிலாளர்கள் வீட்டுப் பிள்ளைகளும் ஏழை மாணவர்களும்தான். தங்களது குடும்பச் சூழல்களைத் தாண்டி கல்லூரிக்கு வருவதே பெரும்பாடாக இருக்கும் சூழலில், செய்முறைத்தேர்வுக் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக தடுத்து நிறுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் பல்கலைக்கழக விதிகளிலோ, கல்லூரியின் விதிமுறைகளிலோ அத்தகைய உரிமையை கல்லூரி நிர்வாகத்திற்கு வழங்கப்படவில்லை என்றும் மாணவர்கள் வாதிட்டனர்.
இது ஏழு மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினையில்லை என்பதை உணர்ந்த சக மாணவர்கள் செய்முறைத்தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக திரண்டனர். மார்ச்-20 அன்று கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.
மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தை அலட்சியப்படுத்தியது கல்லூரி நிர்வாகம். இந்நிலையில் மதியம் 12.30 மணியளவில் கல்லூரிக்கு வந்த முதல்வரை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஏழு மாணவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் வகுப்புகளுக்குத் திரும்புவதில்லை என்று உறுதியாக அறிவித்தனர்.
1 of 3
மாணவர்களின் உறுதியான போராட்டத்தையடுத்து, துறை பேராசியர்களுடன் கலந்து பேசிய கல்லூரி முதல்வர், ”சிறப்புப் பிரிவில் 7 மாணவர்களும் செய்முறைத் தேர்வில் பங்கேற்க ஆவண செய்வதாக” உறுதியளித்தார். இதனையடுத்து உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர்.
”கல்விக்கட்டணம் செலுத்த முடியாத நிலை என்பது அந்த ஏழு மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; அது சமூகப் பிரச்சினை. நிர்வாகம் கெடுவிதிக்கும் நாட்களுக்குள் 2080 ரூபாய் கட்டவில்லையென்பதற்காக அவர்களின் கல்வி பெறும் உரிமையைப் பறிக்கும் செயலை அனுமதிக்க முடியாது” என்பதில் உறுதியாய் நின்று வென்றும் காட்டியிருக்கின்றனர், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்கள்.
தகவல்: திருச்சி. தொடர்புக்கு: 99431 76246.
♦ ♦ ♦
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து கடந்த இருநாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஒதுக்கீடு செய்யாத மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராகவும்; இக்கல்வி உதவித்தொகையைப் பெற்றுதருவதற்காக எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாத கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
முதல்தலைமுறை பட்டதாரி மாணவர்களான இவர்கள், இக்கல்வி உதவித்தொகையின் ஆதரவில்தான் கல்லூரி பயின்று வருகின்றனர். எதிர்வரும் பருவத்தேர்வுக்கான தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்குரிய காலக்கெடு முடிவடையும் தருவாயில் கல்வி உதவித்தொகை கிடைக்க ஆவண செய்தால் மட்டுமே தங்களால் கல்வியைத் தொடர முடியும் என்ற நிலையில் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர் இக்கல்லூரி மாணவர்கள்.
முதல்நாள் மாணவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த கல்லூரி நிர்வாகம் மறுநாளான மார்ச்-20 அன்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ”இரண்டுநாளில் கல்வி உதவித்தொகை வந்துவிடும். அதற்கு நான் பொறுப்பு. போராட்டதைக் கைவிடுங்கள்” என்றார் கல்லூரி (பொறுப்பு) முதல்வர்.
”இத்தனை நாள் செய்யாததை, இந்த இரண்டு நாளில் எவ்வாறு செய்து முடிப்பீர்கள்? அதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கேள்வியெழுப்பியதோடு, ” கல்வி உதவித்தொகை எப்போது கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கெடு தேதியை தள்ளி வைக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தனர்.
மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்த கல்லூரி (பொறுப்பு) முதல்வர், வெறுமனே தமது வெற்று வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.
”கல்வி உதவித்தொகை உடன் கிடைக்க வழி செய்ய வேண்டும்; அல்லது, கல்வி உதவித்தொகை கிடைக்கும் வரையில் பருவத்தேர்வுக்கான கட்டணம் செலுத்துவதற்கான கெடு தேதியை தள்ளி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் உறுதியான போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
1 of 4
எஸ்.சி. – எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பல ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் அவலம், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல. தமிழகமெங்கும் உள்ள கல்லூரிகளின் நிலை இதுதான்.
பல ஆண்டுகளாக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத செய்திகளும் அதற்கெதிரான மாணவர்களின் போராட்டங்களும், மக்கள் விரோத மோடி – எடப்பாடி அரசுகளின் வெற்றுச் சவடால் விளம்பரங்களின் இரைச்சலில் கவனம் பெறாமலே கடந்து போகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளின் வெனீசு நகரம் என்றழைக்கப்படும் பஸ்ரா நகரம் தெற்கு ஈராக்கில் அமைந்துள்ளது. நதிகள், கால்வாய்கள் மற்றும் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் அமையப்பெற்ற இந்நகரம் இப்போது திறந்தவெளி குப்பைக்கிடங்காக மாறி மிக மோசமானதொரு சுகாதாரச் சீர்கேட்டை எதிர்கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 1,18,000 பேர், காற்று மற்றும் நீர் மாசுபாட்டால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் நெருப்புக் காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை மோசமடைவதைக் கண்டு கொதித்தெழுந்த இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழலைக் கட்டுப்படுத்தத் தவறி, சுகாதாரமான குடிநீர் தராத அரசைக் கண்டித்து போராட்டங்களை வீதியில் நடத்தி வருகின்றனர்.
டைப்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகும் ஷாட்-அல்-அராப் நதிதான் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்ரா நகரின் மத்தியப்பகுதியில் ஓடும் இந்த நதியில் உப்புத்தன்மை சற்று அதிகமாக இருக்கும் நிலையில் வேதிப்பொருட்களும், நச்சுக்கழிவுகளும் கலப்பதால் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளது.
முகம் கழுவுவதற்குக் கூட லாயக்கற்றுப் போயிருக்கும் இந்த நதியில், மீன்களும், நண்டுகளும் செத்து மடிகின்றன. சுற்றுச்சூழல் மாறுபாட்டுக்குள்ளாகி ஒரு பேரழிவு நெருங்கி வரும் அபாயம் நிலவுகிறது என்கிறார் பஸ்ரா பல்கலைக்கழகத்தின் காற்று மற்றும் நீர் மாசுபாட்டு நிபுணர் செளக்ரி-அல்-ஹசான்.
ஈராக்கின் வளமான நகரங்களில் ஒன்றான பஸ்ரா, எண்ணெய் வளத்திற்குப் புகழ்பெற்றது. ஆனால் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் பணம் எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை என புலம்புகின்றனர் பொதுமக்கள்.
நோயால் பாதிக்கப்படும் மக்கள் சில சமயங்களில் மருத்துவரைப் பார்க்க மிகவும் அச்சப்படுகின்றனர். ஒரு வேளை மருத்துவ சோதனையின் போது புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டு கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம்தான் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வதைத் தடுக்கிறது என்கிறார் 27 வயதான சமூக ஆர்வலர் அலி காசிம்.
ஆகஸ்டு 2017-ம் ஆண்டு ஷாட்-அல்-அராப் நதியில் கட்டிமுடிக்கப்பட்ட இத்தாலியன் மேம்பாலம். விவசாயம் அழிக்கப்பட்டு, குப்பைகளும், கழிவுகளும் இந்த நதியில் கொட்டப்படுவதால் உப்புநீர் பின்வாங்கி டைப்ரிஸ், யூப்ரடீஸ் நதிகளையும் பாழ்படுத்தி, கால்நடைகள், மீன் வளம் ஆகியவற்றை அழித்து வருகிறது
கடந்த சில மாதங்களில் மட்டும் 1,18,000 பேர் மாசு கலந்த நீரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அல்-அஷார் கால்வாயின் அவல நிலை.
அல்-அஷார் கால்வாயின் அவல நிலை. ஷாட்-அல்-அராப் நதியிலிருந்து பிரிந்து பஸ்ராவின் பழைய நகரப்பகுதியில் வலம்வந்த நதி இன்று குப்பைக்கூளங்களின் புகலிடமாய் மாறிவிட்டது.
ஈராக்கின் எண்ணெய் வளமிக்க நகரங்களில் ஒன்றான பஸ்ராவினால் கிடைக்கும் வருமானம் எங்கு செல்கிறதென்றே தெரியவில்லை; ஆனால் நோய்கள் மட்டும்தான் பிரதிபலனாகின்றன என்கின்றனர் நகரவாசிகள்
அப்துல் கரீம், காசிம் சதுக்கம்
காசிம் சதுக்கத்தில் அமர்ந்திருக்கும் நபர் அப்துல் கரீம். இங்குதான் அடிப்படை வசதிகள் கோரியும், ஊழலை ஒழித்து வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராடிய 20 இளைஞர்கள் ஈராக்கிய அரசால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்களின் புகைப்படங்கள் சதுக்கத்தைச் சுற்றி தொங்கவிடப்பட்டுள்ளன.
வளைகுடாப் பகுதியிலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீன்கள். பஸ்ரா நகரத்து நதிகள் போன்று இந்தக் கடல் பாழ்படுத்தப்படவில்லை எனவே மீன்கள் கிடைப்பது எளிதாகிறது.
ஷானாஷீல் உணவு விடுதி
ஷானாஷீல் என்றழைக்கப்படும் பஸ்ரா நகரத்தின் பாரம்பரியமிக்க ஹோட்டலை எதிர்நோக்கியிருக்கும் கால்வாய் ஒன்று. இசுலாமிய, கிறித்தவ, யூத பெரும் பணக்காரர்கள் வசித்து வந்த பகுதி இது.
அல்-அஷார் கால்வாயின் பழைய படம்
இதே கால்வாயின் பழைய தோற்றம் – ஷாட்-அல்-அராப் நதியிலிருந்து பிரிந்து பஸ்ரா நகரத்தின் ஊடாகச் செல்லும் கால்வாய் ஒன்றின் பழைய படம்.
2016-ம் ஆண்டு யுனெஸ்கோவால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மெசபடோமிய சதுப்பு நிலங்கள். வசந்தத்தின் புகலிடமாக இருந்த இடத்தில் இன்று வாழ முடியாத சூழ்நிலை நிலவுவதால் நிறைய பேர் குடிபெயர்ந்து விட்டனர். ஹூசேன் மட்டும் மீன்பிடி, சுற்றுலா என இன்னமும் இங்கேயே வாழ்ந்து வருகிறார்.
ஹூசேனின் மகனும், உறவினரின் பிள்ளையும் படகில் விளையாடுகின்றனர். இவர்கள் பள்ளியில் படிக்கின்றனர். ஆனால் பல குழந்தைகள் படிப்பை நிறுத்திவிட்டனர்.
இன்னொரு நபர் தன்னுடைய இரு மகன்களுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்கோதை ஆலடி அருணா, எழுத்தாளர் சம்பத் சீனிவாசன், டாக்டர் அ. ரங்கநாதன் மற்றும் வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் நிறம் கருப்புதான் ! – பூங்கோதை ஆலடி அருணா :
ஜாதியை ஒழிக்க கலப்புத் திருமணம் ஒன்றுதான் வழி ! – எழுத்தாளர் சம்பத் சீனிவாசன், டாக்டர் அ. ரங்கநாதன் மற்றும் வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை :