Monday, May 26, 2025
முகப்பு பதிவு பக்கம் 348

நூல் அறிமுகம் : தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 1946 – 1951

ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்குட்பட்ட தெலுங்கானா பகுதியில் நிலவிய கோரமான கொத்தடிமைத்தனத்தை எதிர்த்து, அனைத்து உழைப்பாளி மக்களும், கைவினைஞர்களும் நிலப்பிரபுக்களுக்கு இலவச உழைப்பைத் தரவேண்டுமென்று அடிமை நிலையில் வைக்கப்பட்டதை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் ஆயுதமேந்தி தலைமை தாங்கிப் போராடி பல இலட்சக்கணக்கான மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து சுதந்திர மனிதர்களாகப் பிரகடனம் செய்த எழுச்சியே தெலுங்கானா ஆயுத எழுச்சி.

இப்போராட்டத்தின் வீரஞ்செறிந்த நிகழ்வுகளை, புரியப்பட்ட அற்புதத் தியாகங்களை, அதன் சாதனைகளை இந்நூல் சுருக்கமாக விவரிக்கிறது.

வீரஞ்செறிந்த இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்கி வழிநடத்திய தோழர் பி. சுந்தரைய்யா இந்நூலைத் தன் அனுபவங்களின் வாயிலாக விவரித்திருக்கிறார். ஒரு காலகட்டத்து மக்கள் போராட்டத்துக்கான ஆவணம் இது. (நூலின் அறிமுகப் பகுதியிலிருந்து)

… சரித்திரப் பிரசித்தி பெற்ற தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியானது இதர வேறெந்த விஷயத்தையும்விட, விவசாயப் புரட்சி என்ற பிரச்சனையை முன்னுக்குத்தள்ளியது. காலஞ்சென்ற வினோபா பாவேயின் பூதான இயக்கம் என்றழைக்கப்பட்ட இயக்கமும், இந்தியா முழுவதிலும் பல மாநில சட்டமன்றங்களில் கொண்டுவரப்பட்ட விவசாயச் சட்டங்களும், இந்த தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியின் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அணைப்பதற்காகச் செய்யப்பட்ட ஒருவகை முயற்சியேயாகும்.

இந்தப் புகழ்மிகு தெலுங்கானா போராட்டமானது இந்தியா முழுவதிலுமிருந்த நூற்றுக்கணக்கான மன்னராட்சி மாநிலங்களின் செயல்பாட்டுக்கு மரண அடியைக் கொடுத்ததோடு, இந்திய ஒன்றியத்தில் மொழிவழி அடிப்படையில் மாநிலங்களை மாற்றியமைப்பதற்கு வழிவகுத்தது. (நூலிலிருந்து பக்.9 – 10)

இந்த வீரஞ்செறிந்த விவசாயிகள் எழுச்சியின் ஒட்டுமொத்த விபரத்தை சுருக்கமாகக் கூறுவோம். இது போர்க்குணமிக்க தெலுங்கானா விவசாயிகளிடமிருந்தும் இந்த வெகுஜன விவசாயிகள் எழுச்சிக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் விசாலாந்திரா மாநிலக்கிளையிடமிருந்தும் பெரும் தியாகங்களைப் பெற்றது. கம்யூனிஸ்ட்களும் விவசாயப் போராளிகளும் 4 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் ஊழியர்களும், மக்கள் போராளிகளும் 3 முதல் 4 வருட காலம் வரையில் பாதுகாப்பு முகாம்களிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டனர்; 50 ஆயிரம் பேர் அவ்வப்பொழுது போலீஸ், இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். சித்ரவதை செய்யப்பட்டனர். தொடர்ந்து வாரக் கணக்கில், மாதக் கணக்கில் பயமுறுத்தப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்த பல இலட்சக்கணக்கான மக்கள் போலீஸ், இராணுவ சோதனை வேட்டைகளுக்கும் கொடூரமான தடியடி தாக்குதலுக்கும் ஆட்படுத்தப்பட்டனர். இத்தகைய இராணுவ, போலீஸ் வேட்டைகளின் பொழுது இலட்சக்கணக்கான ரூபாய்கள் பெறுமானமுள்ள சொத்துக்களை மக்கள் இழந்தனர்; இவைகள், ஒன்று கொள்ளையடிக்கப்பட்டன. அல்லது அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்; அவர்கள் அனைத்து வித அவமானங்களுக்கும், இழிவுகளுக்கும் ஆளாயினர்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், ஆரம்பத்தில் நிஜாம் மற்றும் அவனுடைய ஆயுதமேந்திய ரசாக்கர் குண்டர்களின் தாக்குதலுக்கும், அதைத் தொடர்ந்து மத்திய அரசாங்கம், ஹைதராபாத் மாநில அரசாங்கம் ஆகியவைகளின் போலீஸ், இராணுவ வன்முறை வெறியாட்டத்திற்கும் முழு ஐந்து வருட காலத்திற்கும் இந்தப் பிராந்தியம் முழுவதும் இலக்காயிருந்தது. போலீஸ் நடவடிக்கைகளுக்குப் பின்னர், இந்த இயக்கத்தை வன்முறை மூலம் ஒடுக்குவதற்காகவும், சிதறிப்போன நிலப்பிரபுத்துவ ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் கொண்ட பலமான இராணுவப் படை அனுப்பப்பட்டது. அதிகாரபூர்வமற்ற சில மதிப்பீடுகளின்படி 1947-48-ம் ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற, யுத்தத்தில் இந்திய அரசாங்கம் செலவிட்ட அளவுக்கு பணம், செல்வாதாரங்களை அன்று ஹைதராபாத்தில் இந்திய அரசாங்கம் செலவிட்டது.

உண்மையில், விவசாயிகள் எழுச்சியின் பெருமைமிகு சாதனைகள், ஆதாயங்கள் என்ற பூரிப்புக்கு சாதனைகள் ஆகிய இதனுடைய மறுபுறத்தைக் காணவில்லையென்றால் இந்த சித்திரம் முழுமையடையாது. இந்தப் போராட்ட காலத்தில் 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களிலிருந்த விவசாய மக்கள் சுமாராக 30 இலட்சம் பேர் (பெரும்பாலும் நலகொண்டா, வாரங்கல், கம்மம் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள) போராடும் கிராமப் பஞ்சாயத்துக்கள் என்ற அடிப்படையில் கிராம இராஜ்யத்தை உருவாக்குவதில் வெற்றியடைந்தனர்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

இத்தகைய கிராமங்களிலிருந்த வெறுக்கப்பட்ட நிலப்பிரபுக்கள் கிராமப்புறப் பகுதிகளில் நிஜாம் எதேச்சதிகாரத்தின் கிராமப்புறத் தூண்களாக இருந்தவர்கள் தங்களுடைய கோட்டைகள் போன்ற வீடுகளிலிருந்தும், நிலங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர்; அவர்களுடைய நிலங்கள் விவசாய மக்களால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டன. மக்கள் கமிட்டிகளின் வழிகாட்டுதல்களின்கீழ் பத்து இலட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடையே மறு வினியோகம் செய்யப்பட்டன. அனைத்து நில வெளியேற்றங்களும் தடுக்கப்பட்டது; கட்டாய உழைப்புச் சேவை என்பது ஒழிக்கப்பட்டது. கொள்ளை இலாப, அதீத கந்துவட்டி வீதங்கள் என்பது மிகப்பெருமளவு குறைக்கப்பட்டது அல்லது ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்தப்பட்டது. விவசாயத் தொழிலாளிகளின் தினசரிக் கூலி என்பது அதிரிக்கப்பட்டது என்பதுடன் குறைந்தபட்ச கூலி என்பது அமலாக்கப்பட்டது. (நூலிலிருந்து பக். 16 – 17)

நூல்:தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)
ஆசிரியர்: பி. சுந்தரைய்யா
தமிழில்: என். ராமகிருஷ்ணன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com
இணையம்:thamizhbooks.com

பக்கங்கள்: 192
விலை: ரூ 120.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: panuval |nhm

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277


இதையும் பாருங்க…

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ’வசந்தத்தின் இடி முழக்கம்’ பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பாடல் !

வந்தால் ‘வலி’ யுறுத்துவோம் ! – கேலிச்சித்திரம்

வந்தால் ‘வலி’ யுறுத்துவோம் ! 

ன் முதுகுல சவாரி செய்யுங்க எஜமான்.. உங்களுக்கு வலிக்காம பாத்துக்குறோம்…

ADMK - BJP Election

கேலிச்சித்திரம் : முஹம்மது சர்தார்


இதையும் பாருங்க…

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி

மதுரை மாநகரின் நீர் இருப்பும் ! நம் உடலின் இன்சுலின் சுரப்பும் !

பொதுவாக ஒரு சராசரி தமிழர் தனது 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் நீரிழிவு தனக்கிருப்பதை அறிந்து கொள்கிறார். ஆக, மீதம் இருக்கும் தனது வாழ்நாளை நீரிழிவோடு தான் அவர் கழிக்க நேரிடுகிறது.

இதில் பலருக்கும் பின்வரும் நான் சொல்லும் வழக்கம் பொருந்தும் என்று நினைக்கிறேன்:

  • முதல் ஐந்து வருடம் : ஒரு மாத்திரை சாப்பிட்டாலே சர்க்கரை அளவுகள் குறைந்து நார்மலாக இருக்கும்.
  • அடுத்த ஐந்து வருடம் : இன்னும் சிறிது அதிகமாக சர்க்கரை அளவுகளை குறைக்க கூடிய மாத்திரைகள் தேவைப்படும்.
  • அதற்கடுத்த ஐந்து வருடம் : இரண்டு மூன்று மாத்திரைகள் எடுத்தாலும் சர்க்கரை அளவுகள் கட்டுப்பட மறுக்கும்.
  • இன்னும் சில வருடங்கள் சென்றால் : எதற்கும் சர்க்கரை கட்டுப்படாமல், இன்சுலின் ஊசி போட்டால் தான் சரி வரும் என்ற நிலை வரும்.

கடைசி காலத்தில் அந்த இன்சுலினும் வேலைக்கு ஆகாமல்.. எதைப் போட்டாலும் சர்க்கரை அளவுகள் தாறுமாறாக இருக்கும் சூழலை காண முடிகிறது.

இது ஏன் ?

இந்த காட்சியை நமது மதுரை மாநகரின் தண்ணீர் வளத்தை கொண்டு கூறுகிறேன். கதையை கேளுங்கள் ;

வைகையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம். படம் – இணையத்திலிருந்து

மதுரை மாநகரில் எனது தாத்தாவும் பாட்டியும் குடியேறி வீடு கட்டியபோது ( 1960 -களின் கடைசியில்) அங்கு அவர்களுக்கு வீட்டிலேயே 20 அடி கிணறில் நல்ல சுத்தமான தண்ணீர் கிடைத்து வந்தது. அக்கம்பக்கம் இருக்கும் பல வீடுகளில் இருப்பவர்களுக்கும் அந்த கிணற்றின் வழி நல்ல குடிநீர் கிடைத்து வந்திருக்கிறது.

எனது தந்தைக்கு திருமணம் ஆன புதிதில் அந்த கிணறு வற்றிப்போனது,
வற்றிய கிணறு மண் கொண்டு அடைக்கப்பட்டது. ( 1980 -களின் கடைசியில்)
ஆனால் போர் போட்டால் நூறு அடியில் தண்ணீர் கிடைத்தது.

1990 மற்றும் 2000 காலங்களில் தண்ணீர் அளவு குறைந்து கொண்டே வந்து ஐநூறு அடி போட்டால் தான் தண்ணீர் கிடைக்கும் அதுவும் உப்பு நீரே கிடைத்தது.

அதே மதுரையில் உப்பு தண்ணீர் பெற போர் போட்டால் சுமார் ஆயிரம் அடி போட்டாலும் தண்ணீர் இல்லை காற்று தான் வருகிறது.

காரணம் என்ன ?

எனது தாத்தா காலத்தில் இப்போது இருக்கும் அளவு மதுரையில் ஜனத்தொகை இல்லை. ஜன நெருக்கடி இல்லை, இத்தனை பேர் தங்கள் வீடுகளில் போர் போடவில்லை. மதுரைக்கு தண்ணீர் தரும் கண்மாய்கள் அனைத்தும் நீர் நிரம்பி உயிர்ப்புடன் இருந்தன.

இன்று நிலை எப்படி இருக்கிறது ?

மதுரையின் ஜன நெருக்கடி மிக மிக அதிகமாகிவிட்டது. தண்ணீர் நிரம்பிய கண்மாய்கள் யாவும் ப்ளாட்டுகளாக்கப்பட்டு ஹவுசிங் போர்டுகளாக மாறிவிட்டன. அவற்றிற்கு தண்ணீர் தந்த கால்வாய்கள் யாவும் முகவரி இழந்து நிற்கதியாய் நிற்கின்றன.

இந்த காட்சியை நமது உடலுடன் ஒப்பீடு செய்யுங்கள் ஒருவர் அவரது உடலுக்கு தேவையானதை விட அதிகமாக மாவுச்சத்தை உண்டு கொண்டே இருக்கிறார்.
அந்த மாவுச்சத்தை செரிமானம் செய்ய இன்சுலினும் சுரந்து கொண்டே இருக்கிறது
ஒரு கட்டத்தில் அவர் நீரிழிவு நோயாளியாகிறார்.

படிக்க:
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ குழந்தையின்மை சிகிச்சையும் பார்ட்னர்ஷிப்பும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ஏன் நீரிழிவு நோயாளி ஆனார் ? 

அவரது உடலால் அவர் உண்ணும் மாவுச்சத்தை செரிமானம் செய்யும் அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய இயலவில்லை. மேலும் அவருக்கு சுரக்கும் சிறிதளவு இன்சுலினும் சரியாக வேலை செய்யவில்லை .

அவருக்கு இன்சுலினை சரியாக வேலை செய்ய வைக்கும் மாத்திரைகள் தரப்படுகின்றன. கொஞ்ச நாள் சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் அவர் மாவுச்சத்தை அதிகமாக உண்பதை நிறுத்திய அல்லது குறைந்த பாடில்லை. மேலும் அவரது உடல் இன்சுலின் சுரப்பை குறைக்கிறது.

சர்க்கரை அளவுகள் மீண்டும் கட்டுக்குள் வரமாட்டேன் என்கிறது. தற்போது உடலின் இன்சுலினை அதிகப்படுத்தும் மாத்திரைகள் தரப்படுகின்றன. உடல் தன்னால் இயன்ற அளவு முழுத்திறனுடன் இன்சுலினை உற்பத்தி செய்து உண்ணும் மாவுச்சத்தை செரிமானம் செய்கிறது.

தற்போதும் அவர் மூன்று வேளையும் மாவுச்சத்து நிரம்பிய உணவுகளை தான் உண்டு வருகிறார். கணையத்தை சக்கையாக பிழியுமட்டும் பிழிந்து இன்சுலின் சுரந்து சுரந்து ஒரு கட்டத்தில் இன்சுலின் சுரப்பு நின்று விடுகிறது.

தற்போது தான் அந்த நோயாளிக்கு புத்தி வருகிறது. காரணம் தன் உடலில் இன்சுலின் இல்லாததால் மருத்துவர் இன்சுலினை வெளியில் இருந்து போடச்சொல்லும் நிலை வந்துவிட்டது.

தற்போது இதே விசயத்தை மதுரையுடன் ஒப்பிடுங்கள்

1970-களில் குறைவாக இருந்த ஜன நெருக்கடி சர்க்கரை நோயாளி குறைவாக மாவுச்சத்து எடுத்து வந்ததற்கு ஒப்பாகும். அந்த கால மக்களுக்கு தண்ணீர் மிக எளிதாக கிடைத்து வந்தது இன்சுலின் சுரப்பு நன்றாக இருக்கும் நோயாளிக்கு சமம்.

1980-களில் ஜன நெருக்கடி கூடியதால் தண்ணீர் பஞ்சம் ஏற்படத் தொடங்கியது
இன்சுலின் சுரப்பு குறைவதற்கு ஒப்பாகும்.

2000-களில் அனைத்து கண்மாய்களும் வரண்டு தண்ணீர் சுத்தமாக இல்லாமல் போனது இன்சுலின் சுரப்பு கிட்டத்தட்ட இல்லாமல் போனதற்கு ஒப்பாகும். தற்போது ஆயிரம் அடி போட்டாலும் பல இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இது உடல் இன்சுலினை சுத்தமாக சுரப்பதை நிறுத்தியதற்கு சமம். வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறட்சி காலங்களில் வெளியில் இருந்து வண்டிகளில் தண்ணீர் கொடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

ஆகவே , கதை கூறும் கருத்து யாதெனில் தண்ணீரை திறம்பட சேமித்து, தண்ணீர் தரும் கண்மாய்களை அடைக்காமல் ப்ளாட்டுகள் போடாமல் இருந்திருந்தால், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் மதுரை இருந்திருக்கும். அதுபோலவே
நீரிழிவு வந்தது என்று தெரிந்த நாளில் இருந்தாவது மாவுச்சத்தை குறைத்து உண்டு வந்திருந்தால், தற்போது இன்சுலின் சுத்தமாக சுரப்பது நின்று … வெளியில் இருந்து இன்சுலின் போடும் நிலையும் வந்திருக்காது அல்லவா…

தண்ணீரையும் இன்சுலினையும் சிக்கனமாக உபயோகிப்போம்!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

கொடிய வலியும் கடும் பசியும் ! உண்மை மனிதனின் கதை 5

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 5

வ்வோர் அடி எடுத்து வைக்கையிலும் கொடியவலி உண்டாயிற்று. அதை உணராதிருக்கும் பொருட்டு, தனது பாதையைப் பற்றி சிந்திப்பதும் கணக்கிடுவதுமாகக் கவனத்தை வேறுபுறம் திருப்பத் தொடங்கினான். ஒரு நாளுக்குப் பத்து, பன்னிரண்டு கிலோ மீட்டர் நடந்தால் மூன்று அல்லது அதிகமாய் போனால் நான்கு நாட்களில் தன்னவர்களிடம் சேர்ந்துவிடலாம் என்று எண்ணமிட்டான்.

அப்படியானால், நல்லது! இப்பொழுது பத்து, பன்னிரெண்டு கிலோ மீட்டர் நடப்பது என்றால் என்ன அர்த்தம்? ஆகவே, பத்து கிலோ மீட்டர் என்பது இரண்டாயிரம் காலடிகள். ஒவ்வொரு ஐநூறு, அறுநூறு அடிகளுக்கும் பின்புறம் நின்று இளைப்பாற வேண்டியிருக்கும் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இது பெரிய தொலைவுதான்…

முந்தைய நாள், பாதையின் தூரத்தைக் குறைப்பதற்காக அலெக்ஸேய் ஒரு யுக்தி செய்தான்: பைன் மரம், அடிக்கட்டை, வழியிலிருந்த செடி என்று எதையேனும் புலப்படும் பொருளை இலக்காக வைத்துக்கொண்டு, இளைப்பாறும் இடத்திற்குச் செல்வதுபோல அதை நோக்கி முன்னேறினான். இப்போதோ அவன் இவற்றை எல்லாம் எண்களில் மொழி பெயர்த்தான். காலடிகளின் எண்ணிக்கையாக மாற்றினான். இளைப்பாறும் இடங்களுக்கு இடையே உள்ள தூரத்தை ஆயிரம் அடிகளாக, அதாவது அரைக் கிலோமீட்டராக வைத்துக் கொள்ள நிச்சயித்தான். இளைப்பாறுவதையும் நேரக் கணக்கில், ஐந்து நிமிடங்களுக்கு மேற்படாமல் வைத்துக் கொள்வது என்று முடிவு செய்தான். பொழுது புலர்வதிலிருந்து பொழுது சாய்வதற்குள், சிரமத்துடன்தான் என்றாலும் அவன் பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து விடுவான் என்று இந்தக் கணக்குக் காட்டியது.

ஆனால் முதல் ஆயிரம் அடிகள் நடப்பதற்கு அவன் என்ன பாடுபட்டுவிட்டான்! வலியை உணராதிருக்கும் பொருட்டு அடிகளை எண்ணுவதில் தன் கவனத்தை திருப்ப முயன்றான். ஆனால் ஐநூறு அடிகள் நடந்த பின் எண்ணிக்கையை குழப்பவும் பொய்யாக எண்ணவும் தொடங்கினான். எரியும், குத்திக் குடையும் வலியைத் தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்கவே அவனால் முடியவில்லை. ஆயினும் இந்த ஆயிரம் அடிகளை அவன் நடந்து தீர்த்தான். உட்காருவதற்குத் திராணி இல்லாமையினால் வெண்பனியில் முகங்குப்புற விழுந்து பனிப் புறணியை ஆர்வத்துடன் நக்கலானான். நெற்றியையும் இரத்த ஓட்டத்தால் விண்விண்ணென்று தெறித்த கன்னப் பொருத்துக்களையும் வெண்பனியில் அழுத்தினான். அதன் சில்லென்ற ஸ்பரிசத்தால் வருணனைக்கெட்டாத இன்பத்தை அனுபவித்தான்.

உறைந்துபோய்ச் சப்பென்றிருந்த கொழுப்புத் துண்டை வாயில் போட்டுக் கொண்டான். அதைச் சுவைக்காமலேயே விழுங்க விரும்பினான். ஆனால் கொழுப்பு இளகி விட்டது. அதன் ருசியை வாயில் உணர்ந்தான். உடனே அவனுக்கு அகாத பசி எடுத்தது. டப்பாவிலிருந்து மேலும் இறைச்சியை எடுக்க உண்டான ஆசையைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு, எதையாவது விழுங்க வேண்டும் என்பதற்காக வெண்பனியைத் தின்னத் தொடங்கினான்.

அப்புறம் திடுக்கிட்டுக் கடிகாரத்தைப் பார்த்தான். வினாடி முள் ஐந்தாவது நிமிடத்தின் கடைசிக் கண்களைக் கடந்து கொண்டிருந்தது. அது தன் வட்டத்தைச் சுற்றி முடித்ததும் ஏதோ பயங்கரம் நிகழ்ந்து தீரும் என்பது போலப் பேரச்சத்துடன் அதை நோக்கினான். “அறுபது” என்ற எண்ணை அது தொட்டதுமே துள்ளி எழுந்து வலியால் முனகிவிட்டு மேலே நடந்தான்.

நடுப்பகலுக்குள் இம்மாதிரி நான்கு தொலைவுகளை அவன் கடந்து விட்டான். அப்படியே வழி நடுவே வெண்பனியில் உட்கார்ந்தான். அநேகமாகக் கைக்கு எட்டும் தூரத்தில் கிடந்தது பெரிய பிர்ச் அடிமரம். அதுவரை போகக்கூட அவனிடம் வலுவில்லை. தோட்களை கூனியவாறு, எதைப் பற்றியும் நினைக்காமல், எதையும் பார்க்கவோ கேட்கவோ செய்யாமல், பசியைக் கூட உணராமல் நெடுநேரம் உட்கார்ந்திருந்தான்.

படிக்க:
போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

பின்பு பெருமூச்சு விட்டு, சில வெண்பனி உருண்டைகளை வாயில் போட்டுக் கொண்டான். உடலைப் பிணித்த மரமரப்பை உதறிப் போக்கிக் கொண்டு, பையிலிருந்து துருவேறிய டப்பியை எடுத்தான், அதைக் கட்டாரியால் திறந்தான். உறைந்துபோய்ச் சப்பென்றிருந்த கொழுப்புத் துண்டை வாயில் போட்டுக் கொண்டான். அதைச் சுவைக்காமலேயே விழுங்க விரும்பினான். ஆனால் கொழுப்பு இளகி விட்டது. அதன் ருசியை வாயில் உணர்ந்தான். உடனே அவனுக்கு அகாத பசி எடுத்தது. டப்பாவிலிருந்து மேலும் இறைச்சியை எடுக்க உண்டான ஆசையைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு, எதையாவது விழுங்க வேண்டும் என்பதற்காக வெண்பனியைத் தின்னத் தொடங்கினான்.

மறுபடி பயணம் தொடங்குமுன் அலெக்ஸேய், ஜூனிப்பர் புதரிலிருந்து இரண்டு கொம்புகளை வெட்டி எடுத்துக் கொண்டான். அவற்றைத் தாங்கலாக ஊன்றிக்கொண்டு நடந்தான். ஆனால் நடப்பது மணிக்கு மணி அதிகக் கடினமாகிக் கொண்டு போயிற்று.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

இந்த செய்தியை நீங்கள்தான் அனுப்பினீர்களா என்பதை என்னால் நம்ப முடியவில்லை !

1

மோடி ஆதரவாளரான என் நண்பருக்கு ஒரு கடிதம் !

டந்த பல மாதங்களாக இந்தக் கடிதத்தை எழுத விரும்பினேன். மக்களவைத் தேர்தல் வரவிருக்கிற நிலையில், இதை எழுதுவது கட்டாயம் என நினைக்கிறேன்.

பதினைந்து ஆண்டுகளாக நாம் ஒருவரையொருவர் அறிவோம்.  இது நீண்ட காலம்தான். நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள், நான் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.  நாம் இருவரும் எண்ண முடியாத அளவுக்கு தேநீர் கோப்பைகளையும் நீண்ட மணி நேரங்களையும் வாழ்க்கை குறித்தும் பேரண்டம் குறித்தும், ஏன் அனைத்தையும் பற்றியுமே பேசியிருக்கிறோம். நீங்கள் உங்களுடைய குடும்ப விழாக்களுக்கு அழைத்திருக்கிறீர்கள். நான் எங்களுடைய குடும்ப விழாக்களுக்கு உங்களை அழைத்திருக்கிறேன்.  எனது மகிழ்ச்சியும் துக்கத்திலும் நீங்கள் பங்கெடுத்தீர்கள். அதுபோலவே நானும்!

இந்தக் கடிதம் எழுதுவதற்கு அத்தனை எளிதானது அல்ல, ஆனபோது, தேவையாக இருப்பதால் எழுதுகிறேன்…

ஓராண்டுக்கு முன், நீங்களும் நினைவில் வைத்திருக்கலாம். ‘கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் நாட்டை எப்படி கொள்ளையடித்தது’ என்பது பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் அனுப்பத் தொடங்கினீர்கள். யோகா, தியானம், நேர்மறை சிந்தனை, நட்பு போன்றவற்றுடன் இந்த குறுஞ்செய்திகளையும் எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தீர்கள். வழக்கமாக எனக்கு வரும் காப்பி – பேஸ்ட் குறுஞ்செய்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. அப்படி பதில் அனுப்புவதை அனுப்புகிறவர்களும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள்.

அதன் பிறகு, நரேந்திர மோடியின் அரசு எத்தனை அற்புதமானது என்கிற தொடர் செய்திகளை அனுப்பத் தொடங்கினீர்கள். எனது நினைவு சரியென்றால், அதற்கெல்லாம், சிரிப்பை பதிலாக அனுப்பியிருக்கிறேன். அனைவருக்கும் தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் இருக்கும். உங்களுடைய கருத்து உங்களிடம், என்னுடைய கருத்து என்னிடம்.  வாழு வாழ விடு, இதைத்தான் நான் நம்புகிறேன்.

அதன் பிறகு, மற்றொரு தொடர் குறுஞ்செய்திகளை எனக்கு அனுப்பத் தொடங்கினீர்கள். இது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிறுத்தியது. ‘இந்தியா நல்ல நிலைக்கு வர முசுலீம்கள்தான் பெரும் தடையாக இருக்கிறார்கள்’ என்பதைப் போன்ற வாட்ஸப் செய்திகள் அவை.  இதை நீங்கள்தான் அனுப்பினீர்களா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் போனிலிருந்து விளையாட்டுக்காக யாராவது ரசிக்க முடியாத இத்தகைய செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்களா என்றுகூட உங்களிடம் கேட்டேன். நீங்கள் தீவிரமாக அப்படி ஏதும் இல்லை என மறுத்தீர்கள். இதையெல்லாம் நான்தான் அனுப்பினேன் என்றீர்கள்.

அதன்பிறகு, முசுலீம் எத்தனை ஆபத்தானவர்கள் என்பதையும் அவர்கள் எப்படி இந்தியாவுக்கு வலிகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கடுமையான மொழியில் விவரிக்கும் பெரிய செய்தி ஒன்றை அனுப்பினீர்கள்.  அந்தக் கட்டத்தில், நான் வெடித்து உங்களிடம் ஒன்றைக் கேட்டேன்.  “நீங்கள் எப்போதும் படித்துக் கொண்டிருந்த நூல்கள் என்னவாயின? ஆன்மீகத்தை, அமைதியை, நேர்மறை சிந்தனையை சொன்ன புத்தகங்கள் எங்கே?” என்றதற்கு, நீங்கள் சொன்னீர்கள், “ஆன்மீகம் வேறுபட்டது. நாம் எப்போதும் நடைமுறைச் சார்ந்து இருக்க வேண்டும்.” என்று.

இந்த பதிலால் கவலையுற்ற நான், தொலைபேசியைத் துண்டித்துவிட்டு பணிக்குச் சென்று விட்டேன். ஆனால், நீங்கள் சொன்ன பதில் என்னை தொந்திரவு செய்துகொண்டே இருந்தது.

அதன் பின், சில நாட்களுக்கு நீங்கள் தொடர்ந்து தினமும் வீடியோக்களையும் செய்திகளையும் அனுப்பிக் கொண்டிருந்தீர்கள். அவை அனைத்தும் பாஜகவும் மோடியுமே இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள் என்பதைக் கூறின.  அவர்களால் ‘முசுலீம் பிரச்சினை’யை தீர்க்க முடியும் எனவும் அந்தச் செய்திகள் வலியுறுத்தின.

அதாவது, உங்களுடைய கருத்தை என்னை ஏற்க வைக்கும் திட்டத்தோடு இருப்பதைப் போன்ற தோற்றத்தை அவை அளித்தன. நான் திரும்பத் திரும்ப இது தவறானது, சரியானதல்ல, மோசமானது, ஒருவரை மோசமாக சித்தரிப்பது சரியல்ல, அதையும் கடந்து நாம் அவர்களை சக மனிதர்களாக கருதுவதே இப்போதைய தேவை என்பதைச் சொன்னேன்.

ஆனால், அது வேலை செய்யவில்லை. ஒரு கட்டத்தில் இத்தகைய வெறுப்பு நிறைந்த, அவதூறு செய்திகளை அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு நமது நட்பு கரைந்துபோகத் தொடங்கியது. நாம் இருவரும் சந்திக்க நேரும்போது, அமைதியாக நலம் விசாரித்துவிட்டு கடந்து சென்றோம். நம் இருவருக்குள் இருந்தவை மாறிவிட்டன. இதை நான் நல்லதாக உணரவில்லை.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா

நம் இருவருடைய பொது நண்பர்களும் அரசியலை நட்புக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டாம் என்றார்கள். அந்த ஆலோசனைக்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள் என எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும் நான் நட்பை மதிக்கிறவன் என்று. ஆனால், நல்ல நட்பு பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாகக் கூடியது. இதை நீங்கள் ஏற்பீர்கள் இல்லையா? ஒரு சமூகத்தையே மோசமாக சித்தரிப்பதில் எந்தத் தவறும் இல்லையென நீங்கள் கருதினால், நாம் எப்படி நல்ல நண்பர்களாக இருக்க முடியும்? இது உண்மையான கேள்வி, வாய்சவால் அல்ல…

இப்போது ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்… உங்களுக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் நான் வந்து நிற்பேன். அனைத்தையும் கடந்து நாம் 15 ஆண்டுகளாக நட்பில் இருக்கிறோம். நான் சிறந்த முறையில் இருக்கவே விரும்புகிறேன். ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரே மாதிரியான எண்ணத்துடனும் திறந்த மனதுடனும் நாம் பழகியதைப் போல இருக்க முடியுமா எனத் தெரியவில்லை.  அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை.

இப்போது நாம், பெரிய அளவில் அரசியல் விவாதத்துக்குள் இறங்குவோம்.  நீங்கள் மனப்பூர்வமாக ஆதரிக்கும் கட்சி மற்றும் தலைவர் குறித்து நான் ஏராளமான கேள்விகளை கேட்க நினைக்கிறேன்.  நாட்டின் பொருளாதார நிலைமை குறித்தும், ஐந்தாண்டுகளில் குறையாத விவசாயிகளின் தற்கொலைகள் குறித்தும், கங்கை நதியை தூய்மையாக்குவதாக மோடி வாக்குறுதி அளித்த பின்னர் மேலும் அது சீர்கெட்டுள்ளது குறித்தும் 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை குறித்தும், பிரமாண்டமான வீணான சிலைகள் குறித்தும், சமூக ஊடகங்களில் அவதூறு செய்கிறவர்களை மோடி பின் தொடர்வது குறித்தும் நான் ஏராளமாக கேட்க விரும்புகிறேன்.

ஆனால், இப்போதைக்கு இந்தக் கேள்விகளை ஒத்திவைத்து விட்டு, மூன்றே மூன்று கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.

1 கிறித்துவர்கள் மற்றும் முசுலீம்களை இரண்டாம் தர குடிமக்களாக முன்நிறுத்தி, பாஜக – ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்பை திருத்தி இந்து ராஷ்டிரமாக மாற்ற விரும்புவதை நீங்கள் ஏற்கிறீர்களா?

2 சமூக ஊடகங்களிலும் தெருக்களிலும் முசுலீம்களை குறிவைத்து தாக்குவதும் அடித்துக் கொல்வதும் உங்களுக்கு சரியாகப் படுகிறதா?

3 மேலும், இதுபோன்ற ஒரு நாட்டில் உங்களுடைய குழந்தைகளை வளர்க்க விரும்புகிறீர்களா?

இந்த கேள்விகளுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற தெளிவான பதிலைக் கூற முடியும். இந்தக் கேள்விகளுக்கு என்னுடைய ஆணித்தரமான பதில் ‘இல்லை’ என்பதே. உங்களுடைய பதில் என்ன?

தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் உங்களிடமிருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திடமிருந்தும் இந்தக் கேள்விகளுக்கான பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்.

ரோஹித் குமார்
(நேர்மறை உளவியல் பின்னணியில் பணியாற்றும் கல்வியாளர்)


தமிழாக்கம்: அனிதா
நன்றி
:the wire

தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்

தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர் – பீட்டர் துரைராஜ்

“Foot Soldier of the Constitution- A Memoir’ என்ற நூலை Left word Books வெளியிட்டுள்ளது. தீஸ்தா செதால்வாட் எழுதிய இந்த நூலின் தமிழாக்கத்தை ‘நினைவோடை – அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ச. வீரமணி – தஞ்சை ரமேஷ் மொழிபெயர்த்து உள்ளனர்.

தீஸ்தா செதால்வாட்டின் கொள்ளுதாத்தா ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டையரை குறுக்கு விசாரணை செய்தவர். இவருடைய தாத்தா எம்.சி செதால்வாட் இந்திய அரசாங்கத்தின் முதல் அரசு வழக்கறிஞர். ஒரு அரசு வழக்கறிஞர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். இவருடைய நடவடிக்கையால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி (முந்த்ரா ஊழல்) செய்த செயல்கள் விமர்சிக்கப்பட்டன. இவருடைய அப்பா (அடுல் செதால்வாட்), பால்தாக்கரே மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தாக்கல் செய்தவர். இப்படிபட்ட பாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர்தான் தீஸ்தா செதால்வாட். இந்த நூலில் இவருடைய தன்வரலாறு (அவை சாகசங்கள்) எழுதப்பட்டுள்ளது. ‘வங்காள தேசத்தில் எல்லைகளைத் தாண்டி அச்சமின்றி பாயும் ஓர் ஆறு’ என்பதுதான் இவருடைய பெயர்காரணம்.

இவருடைய நினைவுக் குறிப்புகள் என்பது ஒவ்வொரு குடிமகனோடும் தொடர்பு கொண்டவை. இவர் எழுதியது முதலில் இந்தியா டுடே – இதழில், அவருடைய 14 ம் வயதில், வாசகர் கடிதம் பகுதியில் வெளியாகிறது; பின்னர் கல்லூரி மலரில் வெளியாகிறது. தி டெய்லி, பிசினஸ் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றி இருக்கிறார். அதனால்தானோ என்னவோ இந்த நூல் செறிவாக இருந்தாலும் படிக்க எளிதாக இருக்கிறது; வார்த்தைகள் வீணடிக்கப்படவில்லை.

1984- ம் ஆண்டு இந்திரா காந்தி இறந்த போது 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்பட்டு இருந்தால் 1993-ல் மும்பை கலவரம் நடைபெற்றிருக்காது. அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருந்தால் 2002 குஜராத் கலவரங்கள் நடைபெற்று இருக்காது. நமது நாட்டிலுள்ள அரசு இயந்திரங்கள், சிறுபான்மை ஆணையம், மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள் போன்ற அமைப்புகளின் ‘திறன்’ இது போன்ற சமயங்களில்தான் தெரியவருகின்றன. குடிமக்களை பாதுகாப்பதில் இந்த அமைப்புகள் ஆற்றியுள்ள பங்கு என்ன? குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் இந்த அமைப்புகளின் திறன் எத்தகையது? இது குறித்த பார்வையை இந்த நூலைப்படிப்பதன் மூலம் ஒருவர் பெற இயலும்.

ராஜஸ்தான் வறட்சி, சீக்கியர் படுகொலை என இவரது செயல்பாட்டில் ஆரம்பம் முதலே ஒரு தொடர்ச்சி தெரிகிறது. மும்பைக் கலவரம் குறித்தும், குஜராத் கலவரம் குறித்தும் இவர் கொடுக்கும் சித்திரம் வித்தியாசமானது. இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். ‘நீதிமன்றத் தீர்ப்புகளின் மீது சிறுநீரை கழிப்பேன்’ என்று கூறிய பால்தாக்கரே மீது அரசு எடுக்கவில்லை. இவருடைய தந்தை அடுல் பொதுநல வழக்கு தாக்கல் செய்கிறார். நீதிமன்றம் அவரை விடுவிக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக பால்தாக்கரே சொல்லுவதை முதல் பக்கத்தில் வெளியிடும் பத்திரிகைகள் இருக்கும்போது ஜனநாயகத்தை பாதுகாப்பது எப்படி? ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் அளித்த பரிந்துரைகளை காங்கிரஸ் அரசும் அமலாக்கவில்லை. இதனால் நமது ஜனநாயக அமைப்புகளின் தோல்வி வெளிப்படவில்லையா?

கோத்ரா ரயில் சம்பவத்தினால்தான் பிப்ரவரி 28-ல் 2002-ல் குஜராத் கலவரம் தன்னெழுச்சியாக நடந்தது என்று சொல்லப்படுகிறது. அப்படி இல்லை என்று நிரூபிக்கிறது இந்த நூல். 2001 -ல் குஜராத் மாநில இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தவுடன் கொண்டு வரப்பட்டவர்தான் நரேந்திர மோடி. 2002 -க்கு முன்னரே ‘முஸ்லிம் மாணவர்கள் ரம்ஜான், பக்ரீத் போன்ற நாட்களில் தேர்வு எழுத வேண்டி இருந்தது’. ‘போரா, கோஜா பிரிவு முஸ்லீம்களின் வர்த்தகத் துறை வெற்றியினால் பொறாமை உருவானது.  பொறுப்பு ஏற்றுக் கொள்ளாத, பெயரிடப்படாத , விஷத்தை கக்கும் துண்டறிக்கைகள் மூலம் தொடர்ந்து இனப்பகை கட்டமைக்கப்பட்டு வந்தது. முஸ்லிம்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில்தான் வசிக்க முடியும் என்ற தற்காப்பு மனநிலைக்கு வந்து விட்டனர். சமையல் எரிவாயு வன்முறையாளர்களுக்கு எப்படி கிடைத்தது. முஸ்லிம்கள் தங்கியிருந்த இடங்கள் எப்படி துல்லியமாக தாக்கப்பட்டன என்ற விபரங்களை எந்த விசாரணை அமைப்புகளும் கண்டு கொள்ள வில்லை. குஜராத் வன்முறைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் குறிப்பிட்டுக் காரண காரியங்களை விளக்கி விசாரிக்கச் சொல்லுகிறார்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள அதிகாரிகள் எப்படி குஜராத் அரசிடம் இருந்து இலட்சக் கணக்கில் பணப்பலன்களை பெற்றனர். எப்படி குற்றவாளிகளை தப்பிக்க விட்டனர். ஆவணங்களை, தொலைபேசித் தகவல்களை கண்டுகொள்ளாமல் விட்டனர். குற்றவாளிகளை விட , உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ‘ஆர்.கே .ராகவன்கள்’ போன்ற அதிகாரிகள் மீதுதான் நமக்கு கோபம் வருகிறது.

இவையெல்லாம் ஏதோ குஜராத்தில் மட்டும் நடக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம். இதுதான் மற்ற இடங்களிலும் நடக்கும்.

குஜராத் கலவரம். (கோப்புப் படம்)

பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட தீஸ்தா எடுத்து வைத்த முயற்சிகளுக்கு இந்த சமூகம் அவரைக் கோவில் கட்டி கும்பிட வேண்டும். எவ்வளவு அவதூறுகள். வழக்குகள். உயிரைப் பணயம் வைத்து அவர் செய்த பல விஷயங்களை அரசியல்கட்சிகள் கூட செய்யவில்லை. இவை அனைத்தும் இந்த நூலில் விவரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் மோடி பிரதமராகிறார். விட்டுவிடுமா அரசாங்கம். இவரையும் , இவரது கணவரையும் பண மோசடி வழக்கில் கைது செய்ய முனைப்பு காட்டுகிறது. அவரை கைது செய்ய முனைந்த தருணங்களுக்கும், அவர் பாதிக்கப்பட்டோர் சார்பாக தாக்கல் செய்த வழக்குகள் விசாரணைக்கு வந்த சமயங்களுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறார். அரசு எத்தகைய இழிசெயல்களில் ஈடுபட்டு இவரை அவதூறு செய்கிறது என்பதை சொல்லுகிறார்.

தன் கணவர் ஜாவித்தோடு இணைந்து வெளியிட்டு வரும் ‘கம்யூனலிசம் கம்பாட் இதழ் பற்றியும் இந்த நூல் சொல்லுகிறது. தான் வளர்ந்த சூழல், தன்னை உருவாக்கிய ஆளுமைகள் பற்றி ‘வேர்கள்’ அத்தியாயத்தில் கூறுகிறார்.

இவருடைய முயற்சியானால்தான் சட்ட மன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் அமைச்சரான மாயா கோட்னானி, பஜ்ரங் தளத்தைச் சார்ந்த பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் தண்டிக்கப்பட்டு உள்ளனர். (எந்தக் கொடுங் குற்றத்திற்கும் இவர்கள் மரண தண்டனை கோரவில்லை)

இதில் சம்மந்தப்பட்ட மற்ற குற்றவாளிகள் தப்பி இருக்கலாம்; அதிகாரத்தை அடைந்து இருக்கலாம். ஆனால், தீஸ்தா செதால்வாட் நடத்திக் கொண்டு இருப்பது ஒரு நெடிய போராட்டம். அது நிவாரண முகாமில் உள்ளவர்களுக்கு ரேஷன் வாங்கித் தருவதாக இருந்தாலும் சரி; மற்ற அமைப்புகளை நீதி கேட்கும் நெடும் போராட்டத்தில் ஈடுபடுத்துவதாக இருந்தாலும் சரி; இந்த நூல் ஒரு வகையில் இதிகாசமே . ராஜூ ராமச்சந்திரன், இந்திரா ஜெய்சிங், வி.ஆர்.கிருஷ்ண அய்யர், நீதிபதி எச்.சுரேஷ் ,ஜாகிரா ஷேக், மிகிர் தேசாய் போன்ற பலரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

படிக்க:
தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்
தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !

குடிமக்களின் உயிர் ,உடமைகளை பாதுகாத்தற்காகவே இடமாற்றம், பதவி உயர்வு, ஓய்வூதியம் என பல வழிகளில் இன்னல்களைச் சந்தித்த அதிகாரிகள்; அதற்கு நேர் விரோதமான மற்றொரு வகை அதிகாரிகள், அவர்கள் அடைந்த பலன்கள் எல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளன.

ஜனநாயகத்தை வலிமைப் படுத்துவதில் இந்த நூல் முக்கியப் பங்காற்றும். பாரதி புத்தகாலயம் ஒரு முக்கியமான அரசியல் கடமையை நிறைவேற்றி இருக்கிறது. இது ஒரு முக்கியமான கையேடு என்பதில் ஐயமில்லை.

  • வெளியீடு – பாரதி புத்தகாலயம்
  • பக்கம் – 231
  • விலை: ரூ.200
  • இணையத்தில் வாங்க : thamizh books


கட்டுரையாளர்: பீட்டர் துரைராஜ்
நன்றி : The times tamil

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா

எச்.ராஜாவை எனக்கு ஏன் பிடித்திருக்கிறது?

மிழிசை, பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றவர்கள் போல எச்.ராஜாவுக்கு நடிக்கத் தெரியாது. மிகவும் இயல்பானவர். பாசிச பா.ஜ.க-வின் உண்மையான கோரமுகத்தை கொஞ்சமும் குன்றாமல் காட்டக்கூடிய வல்லமை படைத்தவர்.

பா.ஜ.வின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன? என்பதெல்லாம் எச்.ராஜா மூலம், அப்படியே வெளிப்படுவதால்தான் பா.ஜ.கவைக் குறித்த உண்மைகளை இன்றைய இளைய சமுதாயம் அறிந்து கொள்ளமுடிகிறது. மக்கள் வெறுக்கவும் செய்கிறார்கள். இப்படி, எச்.ராஜா பாஜக-வின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாலேயே மாநிலத்தலைவர் பதவியில் அமரவைக்கப்படவில்லை.

எச். ராஜா போன்றவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவை. இப்படிப்பட்டவர்கள், பா.ஜ.கவில் இருப்பதாலேயே பா.ஜ.க. என்ன மாதிரியான கட்சி என்பது நமக்கு நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர், அவராகவே இருப்பதால்தான் எனக்கு அவரை பிடித்திருக்கிறது.

எச்.ராஜாவைவிட ஆபத்தானர்கள் யாரென்றால், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள்தான். காரணம், தாமரையானது இரட்டை இலை, மாம்பழம், முரசு வடிவத்தில் வந்து வாக்கு சேகரிக்கின்றது. “தாமரை மலரவே மலராது” என்று சொல்லிக்கொண்டு, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓட்டுபோட்டால் நீங்கள் தமிழகத்தில் தாமரையை மலர வைக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

படிக்க:
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

பா.ஜ.கவுடன் கூட்டணிவைத்து தாமரையை மலர வைத்துக்கொண்டிருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களைவிட பா.ஜவுக்குள் இருந்துகொண்டு தாமரையை ஆசிட் ஊற்றி அழுக வைத்துக்கொண்டிருக்கும் எச்.ராஜாவை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

மறுபடியும் சொல்றேன். பட்… உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா!!! 🙂 🙂

முகநூலில் : Vini Sharpana


இதையும் பாருங்க …
ஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால ! கோவன் அதிரடி பாடல் !

நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

1

நாடார்கள் வரலாறு – கறுப்பா? காவியா? என்ற இந்த புத்தகம் மிக முக்கியமான ஒரு வரலாற்றுச் சூழலில் வெளிவந்திருக்கிறது. காவி கார்ப்பரேட் பயங்கரவாதம் நாட்டை சூழ்ந்து வரும் நிலையில் முந்தைய வரலாற்றுக் காலங்களில் காவியை எதிர்த்து உழைக்கும் மக்கள் நடத்திய பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தின் சுருக்கத்தை இந்த நூல் முன்வைக்கிறது.

இந்த நூலை  படிப்பதன் மூலம், நடைமுறையில் நாடார் சமூக மக்கள் வரலாறு கறுப்பா காவியா என்று கேள்வி எழுப்பும் தேவை இப்போது இருக்கிறதா? தென்தமிழக இந்து நாடார் மக்கள் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி முன்னேறியது என்பது தங்களை ஒடுக்கிய இந்துமதத்தை எதிர்த்து சண்டையிட்டு மையத்திற்கு வந்தார்களா? இல்லை தனக்கு மேலே உள்ள சாதிகளின் பொருளாதாரத்தோடு போட்டியிட்டு மையத்திற்கு வந்தார்களா? திராவிட இயக்கம் ஆலய நுழைவை அரசியல் இயக்கமாக எடுப்பதற்கு முன் 1897-ம் ஆண்டில் நடந்த கமுதி ஆலய நுழைவுப் போராட்டம், அதற்கும் முந்தைய திருச்சுழி கோவில் நுழைவுப் போராட்டம் ஆகியவைதான் தமிழ்நாட்டில் முதல் ஆலய நுழைவுப் போராட்டங்களா? ஆகிய கேள்விகளுக்கு பதில்களை அறியலாம்.

மேலும் நாடார்கள் சமூக ரீதியாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் தென் தமிழகத்தின் இதர சாதி மக்களுக்கும் இது எப்படி பொருந்தும், தோள் சீலை போராட்டம், திருச்சுழி கோவில் நுழைவு போராட்டம், விவேகானந்தருக்கு புரவலராக இருந்த பாஸ்கர சேதுபதியின் பார்ப்பனிய ஒடுக்குமுறை ஆகியவற்றையும் அறியலாம். பார்ப்பனிய கொடுங்கோன்மையிலிருந்து விடுபடுவதற்கு நாடார்கள் இதர சாதி மக்கள் கிறித்த மதத்திற்கு மதம் மாறியது, அய்யா வைகுண்டநாதரின் சுயமரியாதை வழிபாட்டுப் போராட்டம் ஆகியவற்றையும் அறியலாம்.

நாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா? அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா? என்றால் அதை அம்மக்களுக்கு மட்டுமல்ல சூத்திர பஞ்சம சாதி மக்கள் அனைவருக்கும் இவ்வரலாற்றை கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

நூல்: நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ?
நூலாசிரியர்: வழக்கறிஞர் தி. லஜபதிராய்

பக்கம்: 140
விலை: ரூ. 100

Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)

100.00Read more

Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)


Paypal மூலம்-வெளிநாடு: 5$ (தபால் கட்டணம் சேர்த்து)


தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered Book post)  முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும்.

வெளிநாட்டிற்கு Airmail – வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும்.

 

ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம் | பாகம் – 5


காட்சி – 8
இடம் : விருந்து மண்டபம்
உறுப்பினர்கள் : சிட்னீஸ், சிவாஜி, சர்தார்கள், நடனமாது.

(நடனம் நடக்கிறது. ஆசனங்கள் வரிசையாகப் போடப்பட்டிருக்கின்றன. முகப்பில் பெரிய ஆசனம். சிட்னீஸ் உலவியப்படி இருக்க சர்தார்கள் வருகின்றனர்.)

சிட்னீஸ் : வாருங்கள் வாருங்கள் மராட்டிய சர்தார்களே வந்து அமருங்கள். உங்கள் வருகையை மாவீரன் சிவாஜி ” மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சர்தார் – 1 : சந்தோஷம் விருந்தை இந்த மண்டபத்திலேயே நடத்திவிட உத்தேசமா?

சிட்னீஸ் : ஆமாம்! அந்தப் பெரிய மண்டபத்தை ஆயுதக் காட்சிச் சாலையாக்கிவிட்டார்.

சர்தார் – 2 : இருவரிசைகள் உள்ளன. சரி, அதோ ஒரு ஆசனம் இருக்கிறதே, முகப்பில் தனியாக. அது ஏன்? அது யாருக்கு?

சிட்னீஸ் : அந்த ஆசனத்தில்தான். அஞ்சா நெஞ்சன் சிவாஜி அமரப் போகிறார்.

சர்தார் – 1 : அமரட்டும். ஆனால், அந்த ஆசனம் இருவரிசைகளிலேயே ஏதேனும் ஒன்றோடு சேர்த்துப் போடப்படாமல் தனியாக, இரு வரிசைக்கும் மேலாக, உயரமாகப் போடப்படுவானேன்?

சிட்னீஸ் : விருந்துக்கு அவர் தலைமை தாங்குபவர் என்ற முறையிலே, இது போல் அமைத்தோம்.

சர்தார் – 1 : அதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.

சர்தார் – 2 : இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் விருந்துக்கு வரச் சம்மதித்திருக்கமாட்டோம்.

சர்தார் – 1 : ஏன் இப்படி எங்களை வரவழைத்து அவமானம் செய்ய வேண்டும்?

சிட்னீஸ் : அவமானமா? இந்த ஆசன அமைப்பு முறையா உங்களை அவமானம் செய்கிறது?

சர்தார் – 1 : மானாபிமானம் விஷயமாய், மகானுபவரே! எங்களுக்குக் கொஞ்சம் அக்கறை உண்டு. அவ்வளவுதான்.

சிட்னீஸ் : மராட்டியத்தை வாழ்விக்க வந்த மாவீரனின் பேச்சுக்கு மறு பேச்சு பேசி அறியாத மராட்டிய சர்தார்களா, இப்படி ஆட்சேபனை கூறுவது?

சர்தார் – 2 : ‘போ, இந்தக் களத்துக்கு; தாக்கு, அந்தப் படையை! அதன் அளவைப் பற்றி அத்தவேண்டாம். தாண்டும் அந்த அகழியை’ என்று அவர் கட்டளையிட்டபோது ஏன் என்று கேட்டதில்லை. ஆகுமோ என்று யோசித்ததில்லை. சாம்ராஜ்யம் சிருஷ்டிக்க வேண்டும் என்ற ஒரே ஆர்வத்தால். ஆனால் சிட்னீஸ் சாம்ராஜ்யம் தர்ம சூன்ய ராஜ்யமாக இருக்கவுமா சம்மதிக்க முடியும்?

சர்தார் – 1 : மிக மிக சாமான்யர்களுக்கும் விளங்கக் கூடிய கலாச்சாரத்தையே மறந்து விட்டார்களே இப்போதே. அவர் எங்கள் நெஞ்சுக்கு உரம் ஊட்டியவர்தான். ஆனால் எமது குலத்துக்குமா நஞ்சு ஊட்ட இடம் தரவேண்டும்?

சர்தார் – 2 : சிவாஜி வீரர், தீரர், தியாகி, தேசோத்தாரகர். எல்லாம் சரி. ஆனால், அவர் உயர்ந்த ஜாதியினரல்ல. குடியானவர் குலம். பிரபு, கோர்பாதி, நிம்பால்கர், சவாந்து போன்ற உயர்குல மக்கள் கூடியுள்ள இந்த இடத்திலே அவர் தலைமை வகிப்பது முறையாகாது. குலதர்மத்துக்கு இது தகாது.

சர்தார் – 1 : விருந்துக்குத் தலைமை தாங்க, அந்த உயர்ந்த ஆசனத்தில் அவர் அமர்வதற்கு நாங்கள் சம்மதித்தால், எங்கள் குலங்களை விட அவர் பிறந்த குலம் மேலானது என்று நாங்கள் ஒத்துக் கொண்டதாக அல்லவா அர்த்தப்படும்?

சர்தார் – 2 : அது எங்ஙனம் சாத்தியப்படும்? எப்படி அதை ஒப்புக் கொள்ள முடியும்? நாங்கள் அனைவரும் சிவாஜியினுடைய வீரத்தை ஒத்துக் கொள்கிறோம். போரிலே அவர் புலி; ஆட்சேபிப்பார் இல்லை. அவருக்காக வாள் ஏந்தி வையகத்தின் கோடி வரை சென்று போரிடவும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எங்கள் குலத்தைவிட அவர் பிறந்த குலம் மேலானது என்று ஏற்றுக் கொள்ள முடியாது நான்.

சர்தார் – 1 : நானும் தான்!

சர்தார் – 2 : நானும் தான்!

(சிட்னீஸ் கோபமும் சோகமும் கொண்டு)

சிட்னீஸ் : முடிவான பேச்சா இது?

சர்தார் – 1 : ஆமாம்! ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம். குலதர்மத்தை இழக்க மாட்டோம். இது விருந்தல்ல ; விஷமூட்டுமிடம். எங்களுக்கு இங்கு வேலையில்லை.

(எல்லோரும் போகின்றனர். சிட்னீஸ் கோபத்தோடு தட்டுகளை வீசி எறிகிறான்)

சிட்னீஸ் : விருந்து மண்டபம் விவாத மண்டபமாகிவிட்டது. குதூகலிக்க வேண்டிய கூடத்திலே, கோபமும், கொந்தளிப்பும், மூண்டன. சிவாஜியின் வீர உருவம்.

(சிவாஜி அப்போது சிட்னீஸ் அறியாவண்ணம் பின்புறமாக வந்து சிட்னீஸ் பேசுவதைச் சோகமாகக் கேட்டல்)

அவருடைய வெற்றிகள் . அவர் உருவாக்கிய புதிய மராட்டியம் எதுவுமே அந்தச் சர்தார்களின் கண்களுக்குத் தெரியவில்லை. அவர்களுடைய குலம் மட்டுமே தெரிகிறது. குலபேதமெனும் தேள் கொட்டிய குரங்குகள். விருந்து மண்டபத்திலே இந்த விபரீதம் நேரிட்டது தெரிந்தால் வீரத்தலைவன் விசாரத்தில் ஆழ்ந்து போவாரே.

(சிவாஜி வர, அவர் முன் மண்டியிடுகிறான்)

சிவாஜி விசாரம் எழாமல் இருக்க முடியுமா சிட்னீஸ்? எவ்வளவு அரும்பாடு பட்டிருக்கிறோம், சோர்ந்து கிடந்த ” மராட்டியத்துக்குப் புத்துயிர் அளிக்க, விமோசனமில்லை. விடுதலை இல்லை என்று எண்ணி ஏங்கிக் கிடந்த நாட்டிலே, விட்டுக்கோர் வீரனைக் கூட்டினோம். விரோதிகளை முறியடித்தோம். வெற்றி மேல் வெற்றி பெற்றபோது எந்த சர்தார்கள் நம் கண் காட்டிய வழி செல்லக் காத்து கிடந்தனரோ அவர்களே அல்லவா இன்று விதண்டாவாதம் பேசுகின்றனர். நண்பா! விருந்து மண்டபத்திலே நடந்த விவாதத்தை நான் சற்று தொலைவிலிருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். விருந்து மண்டபத்திலே விஷப்புகையை மூட்டி விட்டனர். வீரன் தான், ஆனால் குலம் என்று கேட்கின்றனர். நிம்பார்க்கார் குலமாம்! கோர்பாத்குலமாம் – சவாந்து குலமாம்! இவைகளெல்லாம் நான் களத்திலே கடும் போரிடக் கிளம்பிய போது எங்கே போயின? குடியானவனுக்கு விடுதலைப் போரை நடத்த அனுமதியிருந்தது. ஒரு குடியானவனுக்கு விடுதலைப் போரை நடத்த அனுமதி இருந்தது. ஆனால் ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது. இந்த நிலையில் நாடு இருக்கிறது.

படிக்க:
ஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் அறிக்கை
நாடார் வரலாறு கறுப்பா…? காவியா…?

சிட்னீஸ் : வீரத் தலைவனே! விசாரத்தை விடுங்கள். அவர்களின் விதண்டா வாதத்தை முறியடிக்க முடியாமலா போகும், மலைகளைத் தூளாக்கிய நம்மால் ?

சிவாஜி : வீரம் பேசுகிறாய் சிட்னீஸ்? விஷத்தைக் கக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். பார்த்தாயே? நீதானே பார்த்தாய்?

சிட்னீஸ் : பார்த்தேன்; சிந்தித்தேன்; ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

சிவாஜி : என்ன?

சிட்னீஸ் : மராட்டிய மண்டலம் உருவாகி விட்டது. புதிய ஜீவன் ஏற்பட்டுவிட்டது. எனினும் தாங்கள் மட்டும் இன்னும் பழைய சிவாஜியாகவே இருக்கிறீர்கள். அதனால் தான் பழமையில் படிந்து போயுள்ள அந்த சர்தார்கள், குலதர்மம் பேசுகிறார்கள். அவர்களிடம் கோபித்துப் பயனில்லை. வாதாடியும் பயனில்லை. அவர்கள் புண்ணிய ஏடுகளை பொதி பொதியாகக் கொண்டு வந்து கொட்டுவர், தமது கட்சிக்கு ஆதரவு தேட. ஆகவே அஞ்சா நெஞ்சனே! தாங்கள் மகுடா பிஷேகம் செய்துக் கொண்டு மகாராஜாவாகிவிட வேண்டும்.

(சிவாஜியின் முகத்திலே லேசான மலர்ச்சி ஏற்படுகிறது)

மகாராஜா ஆன உடனே நிம்பால்கரும், கோர்பாது, சவாந்தும், பிரபுவும், காயஸ்தரும், பிறரும் சகல குலத்தவரும் தாமாகவே தங்களை மேலான குலம் என்று ஏற்றுக் கொள்வர். ஏனெனில் மகிடாபிஷேகமானால், தாங்கள் மாகராஜாவாகிறீர். க்ஷத்திரியர் ஆகிவிடுகிறீர். க்ஷத்திரிய குலமானதும், மற்ற குலத்தவர் ஒரு குறையும் கூறுவதற்கில்லை. இதுதான் சரியான வழி. இன்றைய சம்பவம் காட்டும் பாடம்.

சிவாஜி : பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும்!

சிட்னீஸ் : ஆமாம்! குலப்பெருமை பேசுவோரின் கொட்டத்தை அடக்க அதுதான் வழி. தடை கூறாது எனக்கு அனுமதி தாருங்கள். பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாட்டைச் செய்கிறேன். பரத மண்டலமே பூரிப்படையும்; வம்பர்களின் வாய் தானாக அடையும்.

சிவாஜி : உன் யோசனைப்படியே செய்வோம். பலருக்கும் இந்த அபிலாஷை இருக்கிறது.

சிட்னீஸ் : செய்தி கேட்டதும் மராட்டியமே துள்ளி எழும் மகிழ்ச்சியால். நான் சென்று அந்தக் காரியத்தைக் கவனிக்கிறேன்.

(சிட்னீஸ் மகிழ்ச்சியுடன் ஒடுகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை
பகுதி 2 :
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !
பகுதி 3 : யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் ?

பகுதி 4 : என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே !

பொள்ளாச்சி கொடூரம் : விருத்தாசலம் முற்றுகை | திருவள்ளூரில் பகத்சிங் நினைவு நாள் கூட்டம் !

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் கொடூரத்திற்கு காரணமான குற்றவாளிகளை பாதுகாத்து வரும் துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனையும் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் பாண்டியராஜனையும் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும்; உயர்நீதிமன்ற நீதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் இவ்வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விருத்தாச்சலம் பகுதி மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்டு கட்சி, சி.பி.எம். விடுதலை, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சார் ஆட்சியர் பிரசாந்த் அவர்களை சந்தித்து மனு கொடுத்ததோடு, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம்.


மார்ச் 23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளில் காவி பாசிசத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் திருவள்ளூர் –   டி ஐ மெட்டல் ஃபார்மிங் ஆலையில் வாயில் கூட்டம் நடைபெற்றது.

பு.ஜ.தொ.மு. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் ச.மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலை வாயில் கூட்டத்தில், சங்கத்தின் சிறப்புத் தலைவரும் பு.ஜ.தொ.மு.வின் மாநில பொருளாளருமான தோழர் பா. விஜய குமார் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், தேர்தல் பாதையில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதையும் நாம் ஏன் பகத்சிங் பாதையில் செல்ல வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார். 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு அரசியல் முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக சங்க பொருளாளர் தோழர் சரவணன் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.

படிக்க:
நாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை ? | வழக்கறிஞர் லஜபதிராய் நேர்காணல்
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?


தகவல்:
பு.ஜ.தொ.மு.,
திருவள்ளுவர் மேற்கு மாவட்டம்.

இலங்கை : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைவரும் இணைந்து எதிர்ப்போம் !

புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி அழைப்பு 

மது நியாயமான உரிமைகளுக்காகவும் ஜனநாயக அடிப்படையிலான கோரிக்கைகளுக்காகவும் குரல் எழுப்பிப் போராடுகின்ற அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக, ஜனநாயக விரும்பிகளை அச்சுறுத்தும் வகையில் இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) கொண்டுவரப்படுகிறது.

ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் பாதுகாத்து வருவதாக உரத்துக் கூறிக் கொண்டே ரணில் தலைமையிலான இன்றைய அரசாங்கம் மிக மோசமான காட்டுச் சட்டமாகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முன் நிற்கிறது.

படிக்க:
இலங்கை புத்தளம் : சிங்கப்பூரின் குப்பை மேடா ?
இலங்கையை ஊழல் – போதை தேசமாக மாற்றிய ஆட்சியாளர்கள் !

போலீசாருக்கும் ஆயுதப் படையினருக்கும் அவர்களது விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்றவாறான பரந்த பொருள் கோடல்களை இச்சட்டத்தின் விதிகள் வழங்குகின்றன. தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கு இறங்கி, நீதி நியாயம் கேட்கும் எவரையும் இச்சட்டத்தின் மூலம் இருபது வருடச் சிறைத்தண்டனை வரை தண்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இச்சட்ட மூலத்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் தேசிய இனங்களும் ஒன்றிணைந்து எதிர்த்து, அதனை மீளப் பெறுவதற்கு வலியுறுத்த வேண்டும் என இந்த அறிக்கையானது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா செந்திவேல் அவர்கள் வெளியிடப்பட்டு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1979-ம் ஆண்டில் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் (PTA) கொண்டுவந்தது. கடந்த நாற்பது வருடங்களில் அக்கொடூர சட்டத்தினால், மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெறப் போராடிய தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டனர். இன்றும் நூற்றுக்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் அச்சட்டத்தின் கீழ் நீண்ட பல வருடங்களாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, இன்றைய ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மும்முரம் காட்டி நிற்கிறது. இத்தகைய ஒடுக்குமுறைச் சட்டத்தினைப் பொறுத்தவரையில், அரசாங்கத்திற்கு தமது ஆதரவுக் கரங்களை உயர்த்தி வரும் தமிழ், முஸ்லீம், மலையகப் பாராளுமன்றக் கட்சிகள் எத்தகைய நிலைபாட்டினை எடுக்கப் போகின்றன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்காட்டுமிராண்டிச் சட்டத்தை ஆதரிக்கப் போகிறதா? அதே போன்று மலையகத்தின் கட்சிகளும் முஸ்லீம் கட்சிகளும் தமது மக்களுக்குத் தமது புற முதுகுகளைக் காட்டித் துரோகமிழைக்கப் போகின்றனவா?

படிக்க :
நாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை ? | வழக்கறிஞர் லஜபதிராய் நேர்காணல்
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

எனவே, தத்தமது கோரிக்கைகளுக்காகப் போராடிவரும் தொழிலாளர்களும் ஏனைய உழைக்கும் மக்களும் மாணவர்களும் இளைஞர்களும், தமது நியாயமான உரிமைகளுக்காகப் போராடி வரும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களும் ஒன்றிணைந்து “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (CTA) கொண்டு வருவதை நிறுத்து” என உரத்துக் குரல் கொடுத்துப் போராடுவது அவசியமாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் :
புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி,
இலங்கை

நாடார்கள் வரலாறு கறுப்பு என்றால் காவிக்கு என்ன வேலை ? | வழக்கறிஞர் லஜபதிராய் நேர்காணல்

நாடார் வரலாறு கறுப்பா? காவியா? – நூல் வெளியீட்டு விழாவுக்காக கடந்த மார்ச் 22, 2019 அன்று சென்னை வந்திருந்த வழக்கறிஞர் லஜபதி ராய் அவர்களிடம் இந்நூல் உருவான வாரலாறு குறித்தும் இந்த நூல் பேசும் வரலாறு குறித்தும் எடுக்கப்பட்ட நேர்காணல் !

கேள்வி : நாடார்கள் வரலாறு – கருப்பா? காவியா? என்ற இந்த புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டிய அவசியம் என்ன? அதற்கான சமூகக் காரணம் என்ன?

கேள்வி : நடைமுறையில் நாடார் சமூக மக்கள் காவியா என்று கேள்வி எழுப்பும் தேவை இப்போது இருக்கிறதா?

கேள்வி : தென் தமிழக இந்து நாடார் மக்கள் மறக்க நினைக்கும் வரலாறு இது என்கிறீர்கள். அம்மக்கள் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி முன்னேறியது என்பது தங்களை ஒடுக்கிய இந்துமதத்தை எதிர்த்து சண்டையிட்டு மையத்திற்கு வந்தார்களா? இல்லை தனக்கு மேலே உள்ள சாதிகளின் பொருளாதாரத்தோடு போட்டியிட்டு மையத்திற்கு வந்தார்களா?

கேள்வி : திராவிட இயக்கம் ஆலய நுழைவை அரசியல் இயக்கமாக எடுப்பதற்கு முன் 1897-ம் ஆண்டில் நடந்த கமுதி ஆலய நுழைவுப் போராட்டத்தை நூலில் குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டில் அதுதான் முதல் ஆலய நுழைவுப் போராட்டமா?

கேள்வி : இந்துமதத்தில் நாடார் மக்கள் விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி நகர்ந்த அதே 1900 கால கட்டத்திலேயே, தமக்கு கீழ் இருந்த சாதிகளை ஒடுக்குவதும் நடந்திருக்கிறது. உங்கள் புத்தகத்திலேயே அதற்கான ஆதாரம் இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் பள்ளர், பறையர் குழந்தைகளை விடமாட்டோம்னு சொல்லி நாடார்கள் பிரச்சினை செய்வதையும் அதை எதிர்த்து, அதே நாடார்களில் ஒருவர் பேசுவதையும் பதிவு செய்திருக்கிறீர்கள். தான் ஒடுக்கப்படுவதில் இருந்து விடுபடுகிற ஒரு சமூகம் அதே கால கட்டத்தில் ஒடுக்குவதையும் சேர்த்தே செய்கிறது. இந்த முரண்பாட்டை எப்படி புரிந்து கொள்வது?

கேள்வி : இந்த நூலிற்கு நீங்கள் பல்வேறு ஆய்வு நூல்களை பயன்படுத்தி இருக்கிறீர்கள். நாடார்கள் சமூக ரீதியாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் தென் தமிழகத்தின் இதர சாதி மக்களின் சமூக வாழ்க்கை எப்படி இருந்தது? குறிப்பாக மறவர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் இன மக்களும் ஒடுக்கப்பட்டிருந்தார்களா? அவர்களின் சமூக வாழ்க்கை எப்படி இருந்தது?

கேள்வி : தோள் சீலை அணிவதை ஒரு போராட்டமாக நடத்திய சூழ்நிலையில், நாடார் பெண்கள் இழிவாக நடத்தப்பட்ட அந்த சமயத்தில் இம்மக்கள் இப்படி இழிவாக நடத்தப்படுகிறார்களே என மற்ற சாதியினர் யாரும் பரிந்து பேசினார்களா? அந்த போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்களா? அப்படி ஒரு சூழல் இருந்ததா?

கேள்வி : சிவகாசி கலவரத்தின் போது அருந்ததியர் இளைஞர்கள் உதவிக்கு வந்ததாகச் சொல்கிறீர்கள். இன்னும் பல இடங்களில் இதர தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் நாடர்களுடன் தோள் கொடுத்து நின்ற சம்பவங்களும் இந்த நூலில் குறிப்பிடப்படுகிறது. அப்படி ஒரு இணக்கத்தை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் நடத்திய வழிமுறைகள் என்ன?

கேள்வி : நாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா? அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா?

கேள்வி : நாடார் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த வரலாறு இந்த நூலில் இருக்கிறது. ஆனால் அது அவர்களுடைய வரலாறு மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும்தான் என்று நூலில் ஒரு பெரிய சாதி பட்டியலைக் கூறுகிறீர்கள். அது குறித்து விளக்க இயலுமா?

நேர்காணல் : வினவு செய்தியாளர்

பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

1

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையனை நேர்காணல் செய்கிறார் பத்திரிகையாளர் மு.வி. நந்தினி ! நேர்காணலின் இரண்டாம் பகுதி இது.

இதில் கொங்கு பகுதியின் சமூக பொருளாதார அரசியல் பின்னணி குறித்து தோழர் மருதையன் விரிவாக விளக்குகிறார். ஈமு கோழி பெயரில் ஏமாற்றுவதும் சொந்த சாதிப் பெண்களை பாலியல் பண்டமாக பயன்படுத்துவதும் எப்படி ஒரே மனநிலையில் வெளிப்படுகிறது என்பதை விளக்குகிறார். மேலும் ஆதிக்க சாதி சங்கங்கள், இந்துமதவெறி அமைப்புகள் எவையும் பொள்ளாச்சி கொடூரம் குறித்து எந்த வினையும் ஆற்றவில்லை. அதன் மர்மம் குறித்தும் பேசுகிறார்.

இறுதியாக பெண்கள் இணையத்தையே பயன்படுத்தாமல் இருந்தால் பாதுகாப்பாக இருந்து விடலாம் எனும் கருத்தின் அபத்தத்தை விரிவாக விளக்குகிறார். எனில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது எப்படி, குற்றவாளிகளை யார் தண்டிப்பது என்பதையும் விளக்குகிறார்.

பாருங்கள், பகிருங்கள்!

இரண்டாம் பாகம்:

முதல் பாகம்:

என் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் ? – ஒரு ஆசிரியரின் எதிர்பார்ப்பு !

2

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 2

அமனஷ்வீலி

பூர்வாங்க அறிமுகம்

ன் குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை நான் கையோடு வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையுடனும் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவர்களின் புகைப்படங்களை எடுக்கிறேன். அவற்றை மேசை மீது வரிசையாக வைக்கிறேன். இதோ என் வகுப்பு!

பறவைகளின் கீதமும் கணீரென்ற சிரிப்பும் என் காதுகளில் ஒலிக்கின்றன. என்ன இது? குழந்தைகளின் சத்தமா? இதை சத்தம் என்று சொல்ல முடியாது. குழந்தைகளின் இந்த சத்தத்தில், இன்னிசைக் குழுவின் வாத்தியங்கள் சுருதி கூட்டப்படுவதை ஒத்த ஒலிகளைக் கேட்க ஆசிரியனுக்கே உரிய காது வேண்டும், எதிர்கால வாழ்க்கை எனும் சிம்பனி இசையை ரசித்த உணர்வு அப்போது ஏற்படும்.

பறவைகள் சத்தம் போடுகின்றன, கூச்சலிடுகின்றன என்று நாம் கூறுவதில்லை அல்லவா. அவை பாடுவதாக ஏன் நமக்குத் தோன்ற வேண்டும்? பாடுவதைத் தவிர அவற்றிற்கு வேறு கவலைகள் கிடையாதா? அதேபோல்தான் குழந்தைகளாலும் சத்தம் போட முடியாது. பள்ளியில் நிறைந்திருக்கும் அந்த குழந்தைகளின் விசேஷ ஒலியைச் சித்தரிக்க நான் அறிந்த வார்த்தைகளிலேயே “ஷிரியாமூலி” என்ற ஜார்ஜிய சொல்தான் மிகப் பொருத்தமானதென எனக்குத் தோன்றுகிறது. இது பறவைகள், குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான ஒலிக் கலவையை குறிக்கிறது. மனிதர்களின் சாதாரணமான பேச்சொலியை குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான, உற்சாகமான சத்தத்திலிருந்து பிரிப்பதற்காக நம் முன்னோர்கள் இச்சொல்லைக் கண்டுபிடித்தனர்.

பறவைகள் சத்தம் போடுகின்றன, கூச்சலிடுகின்றன என்று நாம் கூறுவதில்லை அல்லவா. அவை பாடுவதாக ஏன் நமக்குத் தோன்ற வேண்டும்? பாடுவதைத் தவிர அவற்றிற்கு வேறு கவலைகள் கிடையாதா? அதேபோல்தான் குழந்தைகளாலும் சத்தம் போட முடியாது.

என்னுடைய முப்பத்தாறு குழந்தைகளின் புகைப்படங்களை நான் பார்க்கிறேன், என் காதுகளில் வாத்தியங்கள் சுருதி கூட்டுகின்றன, இந்த இசையை, இந்தக் குழந்தைகளின் “ஷிரியாமூலியை” எப்போது கேட்போம் மனது துடிக்கிறது.

”ஷிரியாமூலியை” என்னால் புரிந்து கொள்ள முடிகிறது; குழந்தைகளின் மீதான என் அன்பிற்கு இதுதான் நிரூபணம்; சிம்பனி இசைக்கு முன் இவ்வாறாக வாத்தியங்கள் சுருதி கூட்டப்படுவது, இந்த குழந்தைகளின் ”ஷிரியாமூலி” என் காதுகளுக்கு இனிமையாக உள்ளதால் நானே கல்வி கற்பவனாக, வளர்க்கப்படுபவனாக மாற முடியும். நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் அது உங்கள் விஷயம், என்னால் இப்படிக் கூற முடியும்:

குழந்தைகளின் ”ஷிரியாமூலி” யாருக்குப் பிடித்துள்ளதோ அவருக்கு ஆசிரியர் தொழிலின் மீது நாட்டம் உண்டு, இதன் மீது யார் தீவிர ஆர்வம் காட்டுகிறாரோ அவர் தன் தொழில் ரீதியான மகிழ்ச்சியை அடைவார்.

எப்படிப்பட்ட அழகிய குழந்தைகள், எவ்வளவு புன்சிரிப்புகள்! பள்ளி துவங்கும் முன் தம் மகிழ்ச்சியை காட்டிக் கொள்வதற்காக மட்டுமா இவர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்?

குழந்தைகளே, நீங்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றீர்கள்? உங்களுடைய புன்முறுவல்கள் ஒரு மகிழ்ச்சி கலந்த பதட்டத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன. நீங்கள் உங்கள் ஆசிரியரின்பால் பெரிதும் தாராளமாய் இருக்கின்றீர்கள், ஆசிரியரை நம்புகின்றீர்கள். நீங்கள் இன்னமும் என்னைப் பார்த்ததுகூட இல்லை. அதற்குள் இவ்வளவு அழகாக புன்முறுவல் பூக்கின்றீர்கள், மிகவும் நம்பிக்கையுடன் என்னை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?

பல்வேறு விஞ்ஞானங்களை நான் உங்களுக்குச் சொல்லித் தர வேண்டுமா? நான் கொடியவனாக, கண்டிப்பானவனாக இருந்து, ஒவ்வொரு செய்கைக்கும் தண்டித்து, உங்களைப் பார்த்துக் கத்தினால் என்ன செய்வீர்கள்? எப்படியிருந்தாலும் நீங்கள் விஞ்ஞானத்தின் மீது அக்கறை காட்டுவீர்களா? இல்லை, இது இப்படி நடக்காது என்று எனக்கு நிச்சயம் தெரியும். ஆசிரியரையும் ஆசிரியரின் விஞ்ஞானத்தையும் அவரது ஞானத்தையும் நல் விருப்பங்களையும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். சரி, உங்களுடைய புன்முறுவல்களின் பொருள்தான் என்ன? இவற்றிலிருந்து நான் என்ன முடிவிற்கு வருவது?

“நாங்கள் பிறந்ததிலிருந்தே நல்லவர்கள், எங்களைக் கொடியவர்களாக ஆக்காதீர்கள்!”
உங்களில் யாருக்கு இப்படிச் சொல்ல துணிவுள்ளது? அஞ்ச வேண்டாம், ஒளிவு மறைவின்றி சொல்லுங்கள்.

என் கரத்தில் கிடைத்த முதல் புகைப்படத்தை எடுக்கிறேன். என்னைப் பார்த்து சிரிக்கும் அச்சிறுமியின் புகைப்படத்தின் பின் ”தேயா” என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இம் முகத்தை நினைவில் வைத்து, நாளை இச்சிறுமியை பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டும். ஒருவேளை நீ இப்படிச் சொல்லியிருப்பாயோ?

இன்னொரு புகைப்படத்தை எடுக்கிறேன். ”கோச்சா” என்று அதன் பின் எழுதப்பட்டுள்ளது. என்ன சுருட்டையான தலைமுடி. முடியை வெட்டுமாறு நான் பெற்றோர்களிடம் சொல்லப் போவதில்லை. அப்படியே இருக்கட்டும். இதிலென்ன தப்பு? கோச்சா கணீரென சிரிக்கிறான். ”பார், நான் நாளை உன்னை முப்பத்தாறு குழந்தைகளின் மத்தியில் அடையாளம் கண்டு கொள்வேன். நீ வம்புக்கிழுக்கும் குணமுள்ளவனா? முரண்டு பண்ணமாட்டாயே?”

“நியா” என்று அடுத்த புகைப்படத்தின் பின் எழுதப்பட்டுள்ளது. அவள் புன்முறுவல் பூக்கிறாள், இல்லையில்லை, சிரிக்கிறாள், முன் பற்களில் ஒன்றுகூட இல்லாதது எனக்கு நன்கு தெரிகிறது. பல ஒலிகளை சரியானபடி உச்சரிப்பது அவளுக்கு அனேகமாக கடினமாக இருக்கும். ஆனால் வேறு எந்தக் குழந்தையும் இவளை கேலி செய்ய நான் விட மாட்டேன். அதற்குள் பற்கள் முளைத்து விடும். ”நியா, நீ கோள் சொல்ல மாட்டாயே? ஒருவர் மீது ஒருவர் கோள் சொல்வது நம் வகுப்பில் கூடவே கூடாது. இதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”

அச்சிறுவனுக்கு சற்றே நீண்ட தாடை. கண்கள் கூர்மையானவை, ஏதோ கள்ள சிந்தனை, ஒரு கண்டிப்பான புன்சிரிப்பு. ”சாஷா” என்று பின்புறம் எழுதப்பட்டிருந்தது. இரு இரு, நீ அந்த சாஷாவா? நீ பிறக்கும் முன்னரே உன் தாய் உன்னை எந்த பள்ளியில் சேர்ப்பது என்று முடிவு செய்தாள். ஆறு ஆண்டுகளுக்கு முன் உன் தாயை நான் வேலை விஷயமாகச் சந்தித்தேன். அப்போது என் ஆசிரியர் பயிற்சி நோக்கங்களைப் பற்றி, குழந்தைகளுடனான என் வேலையைப் பற்றிக் கூறினேன். “நான் என் குழந்தையை உங்கள் வகுப்பிற்கு அனுப்புவேன்” என்று அவள் அப்போது கூறினாள். நீ நன்கு அறிமுகமானவன். ஆனால் நாளை முதன் முதலாக நாம் கைகுலுக்கிக் கொள்வோம்.

”போன்தோ”. சற்றே தலையை சாய்த்தபடி, களங்கமற்ற புன்முறுவல். “எங்களை கொடியவர்களாக ஆக்காதீர்கள் என்று ஒருவேளை நீதான் என்னை கேட்டாயோ? சரி, நீ உண்மையில் அன்பானவனா? மிட்டாயை இன்னொருவனுடன் பகிர்ந்து கொள்வாயா? தோழிக்கு விட்டுக்கொடுப்பாயா? பலவீனமானவனைப் பாதுகாப்பாயா? மிக்க நன்று!”

இது யார்? ”ஏல்லா”. சற்றே குண்டான சிறுமி. ஆனால், அவள் சிரிக்கிறாளா, கவிதை படிக்கும் தருணத்தில் புகைப்படக்காரர் படமெடுத்துள்ளாரா என்று புரியவில்லை. ”ஏல்லா, உனக்கு நிறைய கவிதைகள் தெரியுமா? பத்து வரை எண்ணத் தெரியுமா? படிக்கத் தெரியுமா? இவையெல்லாம் உனக்குத் தெரிந்தால் நான் உன்னுடன் என்ன செய்வது? பள்ளியின் மீதான ஆர்வம் போகாமலிருக்க வேறு விஷயங்களைச் சொல்லித்தரவா? சரி, பார்ப்போம்.”

குழந்தைகளே, நீங்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றீர்கள்? உங்களுடைய புன்முறுவல்கள் ஒரு மகிழ்ச்சி கலந்த பதட்டத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன. நீங்கள் உங்கள் ஆசிரியரின்பால் பெரிதும் தாராளமாய் இருக்கின்றீர்கள், ஆசிரியரை நம்புகின்றீர்கள். நீங்கள் இன்னமும் என்னைப் பார்த்ததுகூட இல்லை. அதற்குள் இவ்வளவு அழகாக புன்முறுவல் பூக்கின்றீர்கள், மிகவும் நம்பிக்கையுடன் என்னை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?

குழந்தைகளை இருக்கைகளில் அமர்த்துவதைப் போன்றே புகைப்படங்களை வரிசையாக வைக்கிறேன். கீகா, அனேகமாக நீ உயரமானவன் என்று நினைக்கிறேன். லேலாவும் உயரமானவள். இவர்களைக் கடைசி மேசையில் உட்கார வைக்கலாம். மாரிக்கா முதல் வரிசையில் இடது புறமாக உட்காரட்டும். விக்டரை ஜன்னலருகே உட்கார வைப்பேன்… என் மேசையில் வகுப்பறையின் காட்சி நிழலாடுகிறது. நான் கரும்பலகையருகே நிற்கிறேன். இன்னமும் என்ன வேண்டும்?

”குழந்தைகளே, நீங்களனைவரும் நல்லவர்கள் என்று நீங்களா என்னிடம் சொன்னீர்கள்?” நான் என்னுள்ளேயே கேட்டுக் கொள்கிறேன்.

”ஆமாம்” என்று என் காதுகளில் ஒருமித்த பதில் ஒலித்ததைப் போலிருந்தது.
”குழந்தைகளே, உங்களைக் கொடியவர்களாக மாற்ற வேண்டாம் என்று நீங்களா என்னை கேட்டுக் கொண்டீர்கள்?”

”ஆமாம்… ஆமாம்!”

வகுப்பு எப்படி அமையும் என்பதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது எல்லா முகங்களையும் பெயர்களையும் இன்னொரு முறை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். இது, அனேகமாக மாக்தாவாக இருக்க வேண்டும். புகைப்படத்தைத் திருப்புகிறேன். சரிதான்…. இது தாத்தோ. இல்லை, தப்பு, இது தேன்கோ. தாத்தோ இதோ… சரி பார்க்கிறேன். சரி… இது தேக்கா… இது…

என் குழந்தைகள் அனேகமாக இந்நேரம் உறங்குவார்கள். நேரமாகி விட்டது. ஆனால் அவர்களுக்கு உறக்கம் வருமா? நாளை செப்டெம்பர் 1-ஆம் தேதியாக இருக்கையில் அவர்களால் அமைதியாக உறங்க முடியுமா! ஒருவேளை பெரியவர்கள் அனைவரும் -அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி – காலையில் விழிப்பு வராமல் உறங்கி விட்டால் என்ன செய்வது! குழந்தைகளை யார் எழுப்புவது? முதல் வகுப்பைத் தவறவிட்டு விடலாமே. தாமதமாக செல்லக்கூடாது. அதிகாலையில் விழிக்காமல் இருப்பதை விட தூங்காமலே இருப்பது நல்லது. இது விளையாட்டா என்ன! ஆறு வயதுக் குழந்தை பள்ளிக்குச் செல்லப் போகிறான்! அப்பாவும் அம்மாவும் அவனை உறங்கச் சொல்லுகின்றனர், கடிகாரங்களில் விழிப்பு மணியை சரி செய்கின்றனர்….

படிக்க:
எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி
புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !

ஒவ்வொரு வருங்காலப் பள்ளி மாணவனுக்கும் நான் ஒரு வாரம் முன் அனுப்பிய வாழ்த்துக் கடிதங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமென எண்ணுகிறேன். அம்மாவையோ அப்பாவையோ, தாத்தாவையோ பாட்டியையோ இதைப் படித்துக் காட்டுமாறு பன்முறை அவர்கள் நச்சரித்திருப்பார்கள். நான் எழுதியது இதுதான்:

அன்புள்ள….. வணக்கம்.

நான் உன் ஆசிரியர். என் பெயர் ஷல்வா அலெக்சாந்தரவிச். நீ பள்ளிக்குச் செல்லப்போகிறாய், பெரியவனாகி விட்டாய். வாழ்த்துக்கள்.

நீயும் நானும் நல்ல நண்பர்களாவோம், வகுப்பில் உள்ள அனைவருடனும் நீ நட்புக் கொள்வாய் என்று நம்புகிறேன். உன் வகுப்பில் எவ்வளவு சக தோழர்கள் தெரியுமா? முப்பத்தைந்து பேர்கள். நம் பள்ளிக் கட்டிடம் பெரியது, நான்கு மாடிகள், இடைவழிகள் எல்லாம் உள்ளன. நீதான் பெரியவன் அல்லவா, எனவே நீயேதான் உன் வகுப்பைக் கண்டுபிடிக்க வேண்டும். எப்படிக் கண்டுபிடிப்பது என்று நினைவில் வைத்துக்கொள். சிவப்பு நிற அம்புக் குறிகள் இருக்கும். அவற்றைப் பின் தொடர்ந்து வந்தால் உன் வகுப்புக்கு வரலாம். வகுப்பறையின் கதவில் பறவையின் படம் வரையப்பட்டிருக்கும். வழிதெரியாவிடில் கவலைப்படாதே, இடைவெளிகளில் நிற்கும் பயனீர்கள் கண்டிப்பாக உனக்கு உதவி புரிவார்கள்.

உன்னுடன் அறிமுகம் செய்து கொள்ள வகுப்பறையில் உனக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன்.

– ஆசிரியர்.

பல குழந்தைகளின் தலையணை அடியில் இந்தக் கடிதங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க வேண்டுமா என்ன? வண்ணத்தாளில் அவனுக்கென்றே எழுதப்பட்டு பள்ளியிலிருந்து, முதல் ஆசிரியரிடமிருந்தல்லவா இக்கடிதம் வந்துள்ளது!

இந்த முதல் ஆசிரியர் எப்படிப்பட்டவர்?

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

மறைமலையடிகள் (1899) திரு.வி.க (1908) முதல்முதலாக எழுதி மறக்கப்பட்ட நூல்கள்

0

ண்பர்களே….

பொ. வேல்சாமி
  தமிழில் பெயர்பெற்ற ஆளுமைகளான மறைமலையடிகள், திரு.வி.க. போன்றவர்கள் முதல்முதலாக எழுதிய நூல்களான “வேதாந்த மதவிசாரம்”, ”கதிரைவேற்பிள்ளை சரித்திரம்” என்ற நூல்களை மறுபதிப்பு எதுவும் செய்யாமல் தமிழகம் மறக்கும்படி விட்டனர். அதற்கான முக்கியமான காரணம் பின்னர் வந்த காலத்தில் அவர்கள் கொண்டிருந்த கருத்துகளை பெருமளவில் மாற்றிக் கொண்டதுதான். இந்த மாற்றத்திற்கு இடையூறு வரும் என்று கருதி தங்கள் நூல்களை தாங்களே மறக்கும்படி விட்டனர்.

இன்றைய கணிணி யுகம் எல்லா வகையான நூல்களையும் நம்முடைய கைகளில் தவழ விடும் பண்பு கொண்டதாக மாறி விட்டது. எனவே, அந்த மறைக்கப்பட்ட நூல்களை நாம் இன்று தரவிறக்கம் செய்து படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நண்பர்கள் படிப்பதற்காக மேற்குறிப்பிட்ட இரண்டு நூல்களின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

குறிப்பு 1

சமஸ்கிருதமும் தமிழும் பிரிக்கமுடியாத உறவுகொண்ட மொழிகள் என்ற கருத்தினைக் கொண்டிருந்த பெரும்பான்மையான தமிழ்ப் புலவர்களைப் போலவே தானும் சிந்தித்த காலத்தில் மறைமலையடிகள் ”வேதாந்த மதவிசாரம்” என்ற நூலை எழுதுகின்றார். இந்நூலில் வடமொழி நூல்களின் கருத்துக்களை முற்றிலும் ஏற்றுக்கொண்டு சைவம் பற்றிய தனது கருத்தினை அடிகளார் கூறுகின்றார். பின்வந்த காலங்களில் தான் முன்னர் கொண்டிருந்த கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களைக் கொண்டவராக மாற்றம் அடைகின்றார். இதனால் வேதாசலம் என்ற தன்னுடைய பெற்றோர் வைத்த பெயரை மறைமலை என்று மாற்றிக் கொள்கின்றார். இந்த மாற்றத்திற்கு பிறகு தன்னுடைய முந்தைய நூல்களைப் பற்றி அடிகள் எதுவும் குறிப்பிடவில்லை.

நூலை தரவிறக்க : வேதாந்த மதவிசாரம்

குறிப்பு 2

திரு.வி.க. வின் ஆசிரியர் கதிரைவேற்பிள்ளை. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். இவர் வெளியி்ட்ட மிகப் பெரிய “தமிழ் அகராதி”யில் வேளாளர் என்ற சொல்லுக்கு “சூத்திரர்“ என்ற பொருளையும் எழுதி விட்டார். இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறியது “பிரபஞ்சமித்திரன்” “பூலோக நண்பன்” இரண்டு பத்திரிகைகளில் கடுமையான கொடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தின் முடிவில் கதிரைவேற்பிள்ளையை கொலை செய்துவிடும் அளவிற்கு எதிராளிகள் துணிந்து விட்டதாக மறைமலையடிகள் திரு.வி.க.விடம் கூறியிருக்கிறார். அடுத்தக்கட்டமாக கதிரைவேற்பிள்ளையை போன்று உருவத்தைச் செய்து அதனை சுடுகாட்டில் எரித்து அவர் இறந்துவிட்டதாகவும் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தார்கள். இது அவதூறு வழக்காக மாறியது. அந்த வழக்கில் திரு.வி.க.வும் சாட்சி சொல்கிறார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் போது ஒரு பகுதியாக அருட்பா மருட்பா பிரச்சனையும் வருகின்றது. தனியாக அதுபோன்று எந்தவொரு பிரச்சனையும் நடைபெறவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் தன்னுடைய ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடுகின்றார்.

நூலை தரவிறக்க : கதிரைவேற்பிள்ளை – சரித்திரம்

கதிரைவேற்பிள்ளையின் மறைவிற்கு பிறகு அவருடைய எதிராளிகளாக இருந்தவர்கள் திரு.வி.க.வின் நண்பர்களாக மாறிவிட்டனர். இதனால் பழைய நினைவுகளைத் தூண்டுகின்ற அந்த நூலை திரு.வி.க. தன் வாழ்நாளில் மறுபதிப்பு செய்யவில்லை. 1968 இல் இலங்கையில் இருந்து இந்நூல் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி