Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 348

குடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை ! இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி !

0

‘வளர்ச்சி’க்கு ’உதாரணமான’ குஜராத்தில் மின்சாரம், சாலை, தண்ணீர் வசதியில்லாமல் தவிக்கும் மக்கள் !

குஜராத் சமீபமாக வரலாறு காணாத அளவுக்கு வறட்சியை சந்தித்து வருகிறது. 2018-ம் ஆண்டு பெய்த தென் மேற்கு பருவ மழையின் அளவு சராசரி அளவில் வெறும் 76% மட்டுமே அம்மாநிலம் பெற்றிருக்கிறது.

ஊடக கவனத்துக்கு அப்பால், குஜராத்தின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மின்சாரம், சாலை வசதிகளற்ற கட்ச் பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறது தி வயர் இணையதளம். வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக காட்டப்படும் குஜராத் மாடலின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது இந்தக் கட்டுரை.

*****

ட்ச் பகுதியின் தொலைதூரத்தில் உள்ள கடுமையான நிலப்பகுதியான தோர்டோ-வை, ‘அசாதாரண வளர்ச்சி’ என்பதற்கு ‘மாதிரி கிராமமாக’ அந்த கிராம மக்கள் காட்டிக் கொள்கிறார்கள். கட்ச் பகுதியின் பிரசித்தி மிக்க வெள்ளை பாலைவனத்தில் வருடம்தோறும் நடக்கும் ‘ரான் உத்சவ்’ என்ற நான்கு மாத குளிர்கால விழாவைக் கொண்டாடுவதால் இப்பெருமையைப் பெற்றதாக இந்த கிராமம் கூறுகிறது.

முதல்முறை குஜராத்தின் முதலமைச்சராக பதவி ஏற்ற நரேந்திர மோடி, 2005-ம் ஆண்டின் போது இந்தத் திருவிழாவை அறிமுகப்படுத்தினார். இப்போது ஆண்டுதோறும் இரண்டு லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த விழாவில் கலந்துகொள்ள வருகிறார்கள். இந்த விழாவுக்கான எண்ணம், வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தியது அனைத்தையும் செய்தது தானேதான் என மோடி கூறுகிறார்.

பாலைவனத்தின் நடுவே போடப்படும் ஆடம்பர கொட்டகைகளில் தண்ணீர், குளிர்சாதன வசதி மற்றும் வெப்பமூட்டிகளும் கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்ட தரைப்பகுதியும் துணி மாற்றும் அறைகளும் தனிப்பட்ட உணவு உண்ணும் பகுதிகளும், ‘ஆடம்பர’ கழிப்பறைகளும் செய்து தரப்படுகின்றன.

உணவுகளும் பானங்களையும் கோர்ட்யார்டு மெரியாட் என்ற பிரபல நட்சத்திர விடுதி செய்து தருகிறது. தோர்டோவில் உள்ள இந்தக் கொட்டகை நகரத்தில் பாரா கிளைடிங், ஏடிவி பைக் ரைடிங், நீச்சல் குளம், ஸ்பா, வில் வித்தை போன்ற மற்ற வசதிகளோடு, சில நேரம் மழை நடனம் ஆடவும் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது.

இந்த தோர்டோவிலிருந்து மண் பாதையின் வழியாக நடந்து 15 கி.மீ. தள்ளி வந்தால் ஆயிரம் பேர் வசிக்கும் இரண்டு குக்கிராமங்கள் வருகின்றன. பாலைவனக் கொட்டகை வாழ்க்கையிலிருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது இவர்களுடைய வாழ்க்கை. ஏப்ரல் 23-ம் தேதி வாக்களிக்கப்போகும் இவர்கள், மின்சாரத்துக்காகவும் சாலைக்காகவும் தண்ணீருக்காகவும் வாக்களிக்க இருக்கிறார்கள்.

படிக்க:
வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
♦ நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் !

பூஜ் பகுதியின் வடக்குப் பிராந்தியமான பானியின் பிதாரா வந்த் மற்றும் நானா பிதாரா என்ற இந்த கிராமங்களில் மேற்கண்ட எந்த வசதியும் இல்லை. அருகில் இருக்கும் சாலையை அடைய அவர்கள் 10 கி.மீ. பயணித்தாக வேண்டும். 7 கி.மீ. நடந்து தங்களுடைய மொபைல் போன்களுக்கு இந்த ஊர்வாசிகள் சார்ஜ் ஏற்றிக்கொண்டு வருகிறார்கள். தண்ணீருக்காக அரசு விநியோகிக்கும் டேங்கரை நம்பியிருக்கிறார்கள். அதுவும் வராத நாட்களில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் குழி பறித்து அதில் சேகரிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை பயன்படுத்துகிறார்கள்.

தண்ணீருக்காக ஆங்காங்கே தோண்டப்பட்டிருக்கும் குழிகள்.

“நிலநடுக்கம் வந்த பிறகு தோர்டோ முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. பூஜ்-ல் இல்லாத வசதிகள்கூட அங்கே உள்ளன. ஆனால், எங்கள் கிராமத்தில் எதுவும் இல்லை” என்கிறார் அப்துல் கரீம். தண்ணீருக்காக ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டுள்ள, அந்த இடத்துக்கு நடந்து செல்லும் அவர், “இதோ இங்கிருந்துதான் நாங்கள் குடிக்க தண்ணீர் எடுக்கிறோம்” என கைக்காட்டுகிறார்.

கட்ச் பகுதியில் உள்ள மேய்ச்சல் சமூகமான மால்தாரிக்கள், தண்ணீரை சேமிக்க பாரம்பரியமாக ‘விர்தா’ எனப்படும் இந்த முறையை ஆயிரம் ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் குழிகளில் மழைக்காலங்களில் சேரும் தண்ணீர், நிலத்தடியில் உள்ள உப்பு நீருக்கு மேலே ஒரு படலமாக சேகரமாகிறது. ஆரம்பத்தில் சுவையாக இருந்த இந்த நீர், நாளடைவில் பருவ மாற்றம் காரணமாக குறைந்துபோனதோடு, கருப்பு நிறமாகவும் மாறிவிட்டது.

அப்பகுதி கிராம மக்கள் பருகும் குடிநீர்.

“இப்போது இந்த தண்ணீர் உப்பு கரிக்கிறது. ஏனெனில் இந்த வருடம் மழை குறைவாகவே பெய்தது” என்கிறார் கரீம். கடந்த முப்பது ஆண்டுகளில் காணாத வறட்சியை குஜராத் சந்தித்து வருகிறது என்பதும், கட்ச் பகுதிதான் அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. முப்பது ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் 26% மட்டுமே மழையளவு பதிவாகியிருக்கிறது இந்தப் பகுதியில்.

“பிப்ரவரி மாதம் கொஞ்சமாக மழை பெய்தது. அதனால்தான் சிறிதளவாவது நல்ல தண்ணீர் இங்கே உள்ளது” என்கிற கரீம், தனது 6 வயது மகனின் துணையுடன் தண்ணீர் சேகரிப்பதாக சொல்கிறார். இந்தத் தண்ணீர் பார்ப்பதற்கு பச்சை கலந்த கருப்பு நிறமாகவும் சுவையில் கரிப்பாகவும் உள்ளது.

இந்தப் பகுதிக்கு குடிநீர் குழாய் வசதி செய்து தரப்படாத நிலையில், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை விநியோகிக்கிறது அரசு. ஆனால், அந்த விநியோகமும் முறையாக செய்யப்படுவதில்லை.

“ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு ஒருமுறைதான் டாங்கர் லாரிகள் வரும். சில நேரங்கள் இன்னும் தாமதமாகும். சில நேரங்களில் சாலை வசதி இல்லாததால் டேங்கர் சிக்கிக்கொள்ளும்.” என்கிறார் பிதாரா வந்த் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான முகமது காசிம். கட்ச் பகுதியின் துணை ஆட்சியரான நியாஸ் பதான் இதை மறுக்கிறார். “தண்ணீர் தேவை என்று கேட்டால் அதே நாளில் டேங்கர் லாரிகளை அனுப்பி வைக்கிறோம்” என்கிறார் இவர்.

பாலைவனத்திலிருந்து இந்த குக்கிராமங்களுக்குச் செல்லும் பாதைகள், வாகன இயக்கத்தின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. குறுகி, சமதளமற்ற, உப்பு சதுப்பு நிலத்தின் தாக்கம் காரணமாக வழுக்கும் தன்மையுடன் உள்ளன, இந்தப் பாதைகள்.

“இத்தகைய நிலப்பரப்பில் செல்லக்கூடிய ‘பொலிரோ’ போன்ற வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும்” என்கிறார் காசிம். துணை ஆட்சியரோ கட்சின் பெரும்பாலான கிராமங்கள் இணைக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அனைத்து கிராமங்களும் சாலைகளால் இணைக்கப்பட்டுவிடும் என்றும் கூறுகிறார்.

மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள ஒரே வாகனம் பொலிரோ மட்டும்தான்.

இந்த இரண்டு கிராமங்களிலும் தலா ஒரு பொலிரோ உள்ளது. இவற்றை அனைவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். “இங்கிருந்து அருகே உள்ள கிராமங்களுக்கு பாலை எடுத்துச் சென்று விற்க இந்த வாகனத்தைத்தான் பயன்படுத்துகிறோம்” என்கிறார் காசிம்.

சுமார் 50 கி.மீ. தொலைவில் அருகில் இருக்கும் காவ்டா மற்றும் தயாபர் கிராமங்களைக்காட்டிலும் மிகவும் அருகில் இருக்கும் தார்டோவின் மக்கள் தொகை 500 மட்டுமே.

படிக்க:
மோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது ?
♦ சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !

கோதுமை-கம்பு மாவு அரைக்கவும், செல்போன்களை சார்ஜ் ஏற்றவுமே தங்களுக்கு மின்சாரம் அவசியமாகத் தேவை என்கிறார் காசிம். ஆனால், துணை ஆட்சியர் கட்ச் பகுதிகளுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சிலர் வீடுகளுக்கு இணைப்புக் கொடுக்க விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார். ”மின்சாரம் வந்திருப்பதற்கான அறிகுறிகள் எதையுமே காணோம்” என தெரிவித்தபோது, “மீண்டும் உறுதிபடுத்திக்கொண்டு தெரிவிக்கிறேன்; சரி செய்கிறேன்” என்கிறார்.

முகமது காசீம் மற்றும் உமேஷ்

2001-ம் ஆண்டு நடந்த நிலநடுக்கத்தில் பிதாரா கிராமத்தில் இருந்த தங்களுடைய வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு குடியிருப்பு பகுதிகள் உண்டாக்கப்பட்டதாக கூறுகிறார் காசிம்.

கட்ச் பகுதியில் இதுபோன்ற குடியிருப்புகள் உருவாவது வழக்கமானதுதான் என்கிறார் பங்கஜ் ஜோஷி என்ற தன்னார்வலர். நாடோடிகளால் இதுபோன்ற குடியிருப்புகள் அவ்வப்போது உருவாவதால் அவர்களை கண்காணிப்பது கடினமாக உள்ளதாக கட்ச் மாவட்ட ஆட்சியர் ரம்யா மோகன் தெரிவிக்கிறார்.

ஆசியாவின் மிகச்சிறந்த புல்வெளிப் பிரதேசமாக 2500 சதுர கிலோமீட்டர்களில் பரந்து விரிந்திருந்த பூஜ்-ன் வடக்குப் பகுதியான பன்னி, இப்போது சீரழிவைக் கண்டு வருகிறது. இந்தப் பகுதியில் மட்டும் 110 புதிய குடியிருப்புகள் உள்ளன என்கிறார் ஒரு மூத்த அரசு அதிகாரி. இதில் உள்ளடங்கிய பகுதிகளாக பிதாரா வந்தும், நானா பிதாராவும் உள்ளன. இந்தக் குடியிருப்புகள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள் எதுவும் கிடைக்க பெறாதநிலையில், சில குடியிருப்புகளில் தண்ணீர், சாலை, மின்சார வசதிகள் எதுவும் இல்லை என்பதை நிர்வாகம் ஒப்புக்கொள்கிறது.

ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, கட்சில் உள்ள 918 வருவாய் கிராமங்களில் 11 கிராமங்களில் மின்சாரம் இல்லை. 49 கிராமங்களில் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் குறைவாகவே மின்சாரம் கிடைக்கிறது. 50% குறைவான வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் வசதி உள்ளது. 57 கிராமங்கள் மட்டுமே அனைத்து பருவநிலைக்கும் தாங்கும் சாலை வசதிகளைக் கொண்டுள்ளன என்கிறது அந்த அறிக்கை.

இது வருவாய் கிராமங்களுக்கான அறிக்கையே தவிர, குக்கிராமங்களுக்கான நிலவரம் அல்ல.

பிதாரா வந்த் மற்றும் நானா பிதாராவாசிகள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இந்த நிலைமை மாறும் என நம்புகிறார்கள்.

சாஜன் உசைன்

1996-ம் ஆண்டு முதல் பாஜக இந்தத் தொகுதியை கைப்பற்றி வருகிறது. தற்போதைய எம்பி ஆன வினோத் சவ்டா, காங்கிரஸ் வேட்பாளரைவிட இரண்டரை லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், ஒருமுறைகூட இவரைப் பார்த்ததில்லை என்கிறார் சாஜன் உசைன். “அவரை விடுங்கள். தற்போது பிரதமராக உள்ளாரே… நரேந்திர மோடி, அவர் 12 ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக இருந்தார். தன்னுடைய இதயத்தில் கட்ச் -க்கு சிறப்பான இடம் உள்ளதாக சொல்லிக்கொண்ட இவர், எங்களுக்கு என்ன செய்தார்?” என கேள்வி எழுப்புகிறார்.

“இப்போதும்கூட மோடி டோர்தோ-வுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது வருகிறார். ஆனால், ரான் உத்சவு-க்கு மட்டுமே செல்கிறார். ஏன் அவர் இங்கே வருவதில்லை? இங்கே சாலை இல்லை; மின்சாரம் இல்லை; தண்ணீர் இல்லை. டோர்தோவில் அனைத்தும் உள்ளது” என சிரிக்கிறார் அப்துல் கரீம்.

“இந்த அடிப்படை வசதிகளை செய்துதருவது யாருடைய வேலை? இது மோடியின் வேலை இல்லையா? அவருடைய வேலையை அவர் செய்யவில்லை என்றால், ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும்” என வினவுகிறார் காசிம்.


கட்டுரையாளர் : கபீர் அகர்வால்
தமிழாக்கம் : அனிதா
நன்றி : தி வயர் 

வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !

0

தேர்தலில் வெல்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல துணிந்துள்ளது இந்துத்துவக் கும்பல். ஒருபக்கம் தனது ‘கூட்டணிக் கட்சியான’ தேர்தல் கமிஷனின் துணை கொண்டு தேர்தல் தேதியை தன் விருப்பத்திற்கு அறிவிக்கச் செய்த பாஜக, தனக்கு வாக்களிக்காத பிரிவு மக்களின் வாக்குரிமையை திட்டமிட்டே பறித்துள்ளது. வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கான மக்களின் குடியுரிமையையே பறித்த பாஜக, கன்னியாகுமரி தொகுதியில் தனது கூட்டாளியின் துணையோடு ஏறத்தாழ ஒரு லட்சம் மீனவர்களின் வாக்குரிமையைப் பறித்துள்ளது.

ஒருபுறம் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் மேல் தனது இணைய மற்றும் ஊடக கூலிப் பட்டாளங்களை ஏவி விட்டு அவர்கள் மீது அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பாஜக, தனது வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் தாகூரை களமிறக்கி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பிரக்யா சிங் தாகூரை அறியாதவர்கள் இருக்க முடியாது.

2008-ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்டு தற்போது உடல்நிலையைக் காரணம் காட்டி வெளி வந்துள்ளவர் பிரக்யா சிங். மாலேகானில் மசூதி ஒன்றின் அருகில் இந்துத்துவக் கும்பல் வைத்த குண்டு, வெடித்ததில் ஆறு பேர் பலியாகி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரக்யா சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆர்.எஸ்.எஸ்-உடன் நெருங்கிய தொடர்புடைய அபினவ் பாரத் என்கிற இந்துத்துவ பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய மற்றொரு கொடூரத் தாக்குதல், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பாகும். அதில் 68 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங்கின் மீதான வழக்கு, மோடி அதிகாரத்திற்கு வந்தபின் திட்டமிட்டே நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை, நடந்த குற்றத்தில் பிரக்யா சிங்கிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்து அவர் மீதான வழக்கை முடித்து விடக் கோரியது. முக்கியமான சாட்சிகள் திடீரென பிறழ் சாட்சிகளாகினர். எனினும், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் பிரக்யா சிங்கின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது  உள்ளிட்ட சந்தர்ப்ப சாட்சியங்கள் அவருக்கு எதிராக இருப்பதால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க மறுத்துவிட்டது விசாரணை நீதிமன்றம்.

தற்போது காங்கிரசின் சார்பில் போபால் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள திக்விஜய் சிங்குக்கு எதிராக பிரக்யா சிங்கை களமிறக்கியுள்ளது பாஜக. திக்விஜய் சிங் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஓட்டு அரசியலின் அரங்கில் கட்சிகளின் சார்பில் கிரிமினல்கள் வேட்பாளர்களாவதோ, ஓட்டரசியல் கட்சிகளே முழுக்க கிரிமினல்மயமாகி வருவதோ புதிய போக்கு அல்ல. பாரதிய ஜனதா ஓட்டரசியல் கிரிமினல் கலாச்சாரத்தை பயங்கரவாதத்திற்கு வளர்த்துள்ளது.

படிக்க:
பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் !
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”

பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் தன்னை பயங்கரவாதத்திற்கு எதிரானவராக முன்னிறுத்திக் கொண்டு பேசி வரும் நிலையில், அவரது கட்சியே ஒரு பயங்கரவாதிக்கு சீட்டு கொடுத்திருப்பதைக் கண்டு வட இந்திய பத்திரிகைகள் திகைத்துப் போய் எழுதி வருகின்றன. இந்துத்துவக் கும்பலைப் பொறுத்தவரை “இந்து குண்டு” என்பது அக்காரவடிசல் போன்ற ‘நம்மாத்துப் பலகாரம்’. அதே நேரம் நீங்கள் மாட்டிறைச்சி உண்பவராக இருந்து, உங்கள் வீட்டின் குளிர் சாதனப் பெட்டியில் அதை சேமித்து வைத்தீர்கள் என்றால் நீங்கள்தான் பயங்கரவாதி; அந்த  மாட்டுக்கறிதான் பேரழிவை உண்டாக்கும் ஆயுதம். இது நாக்பூரில் எழுதப்பட்ட இருபத்தோராம் நூற்றாண்டின் மனு நீதி.

ஒருவேளை நம் ஆல்பர்பஸ் சேஷூ மாமாக்கள் “குற்றம் இன்னும் ருசுபிக்கப் படலியோன்னோ. ருசுப்பிச்சாத்தானே குற்றவாளி?” என்று நமக்குப் பாடம் எடுக்க வருவார்கள். ஆனால், எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு இதே ஊபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களுக்கு ஏதாவது ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் இதே வாய்கள் என்ன பேசும் என்பது நமக்குத் தெரியும். ‘லெட்டர் டூ எடிட்டரில்’ துவங்கி தினமலர் முகப்பு செய்தி வரை களமிறங்கி குடுமி அவிழக் கூத்தாடியிருப்பார்கள்.

எனினும், சம்ஜௌதாவில் வெடித்ததும், ஹைதராபாத்தில் வெடித்ததும், மாலேகானில் வெடித்ததும் “இந்து குண்டு” என்பதால் அதை பாசத்தோடு அள்ளி அணைத்து கோவணத்தில் முடிந்து வைத்துக் கொண்டுள்ளனர். அவாள்களின் தெரிவு செய்யும் சுதந்திரத்தில் நாம் தலையிடுவதற்கில்லை. என்றாலும், தேர்தல் அரசியல் மற்றும் இந்திய ஜனநாயகம் என்கிற புழுத்து நாறும் பிணத்தின் யோக்கியதையை பாரதிய ஜனதாவைத் தவிற இந்தளவுக்கு துல்லியமாக மக்களுக்கு எடுத்துரைக்கும் ஆற்றல் அதன் சகபாடி காங்கிரசுக்கே இல்லை என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

பிரக்யா சிங்கை களமிறக்கி இருப்பதன் மூலம் பாஜக நமக்கு ஏராளமான செய்திகளைச் சொல்லியுள்ளது. அவற்றில் பிரதானமானது, இந்துத்துவ கும்பல் நிகழ்த்தும் பயங்கரவாதச் செயல்கள்  “காவி ஜிகாத்” எனும் புனித காரியம். அதில் ஈடுபடுபவர்களுக்கு இறந்த பின் சொர்க்கத்தில் எவையெல்லாம் கிடைக்கப் போகிறதோ இல்லையோ; வாழும் காலத்தில் எம்.பி அல்லது எம்.எல்.ஏ சீட்டு கிடைக்கும். இரண்டாவதாக, வாஜ்பாயில் துவங்கி அத்வானி, மோடி, யோகி ஆதித்யநாத், பிரக்யா சிங் என அவர்களிடம் உள்ள தலைவர்களின் வரிசை நாம் கவனத்தில் கொள்ளத் தக்கது. வரிசையில் வரும் ஒவ்வொருவரும் தனக்கு முந்தையவர்களை விட எத்தர்களாக இருப்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, இப்படிப் பச்சையாக ஒரு பயங்கரவாதியை வேட்பாளராக அறிவித்த பின்னும் அது அரசியல் அரங்கில் கண்டனத்திற்குரிய ஒன்றாக கருதப்படாமல் இருப்பதும், ஊடகங்கள் மௌனமாக இருப்பதும், “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்கிற பாணியில் பொதுபுத்தி பக்குவப்படுத்தப்பட்டிருப்பதும் நம் கவனத்திற்குரியது. இந்திய சமூகத்தின் மனசாட்சிக்குள் இந்துத்துவம் ஊடுருவத் துவங்கி இருப்பதன் ஆரம்ப அறிகுறி இதுதான். இந்து பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் போதாமையை இது சுட்டிக் காட்டுகிறது.

இனியும் ஒரு தேர்தலின் மூலம் மட்டுமே இந்து பாசிசத்தை முறியடித்து விட முடியும் என்றா கருதுகிறீர்கள்?


– சாக்கியன்
செய்தி ஆதாரம் : தி வயர்

நமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 11


காட்சி : 16

இடம் : ஆஸ்ரமம்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு, கேசவப்பட்டர், பாலச்சந்தரர்.

(காகப்பட்டர் சுவடியைப் பிரித்துப் பார்த்து விட்டுப் பிறகு)

காகப்பட்டர் : டே ரங்கு! இங்கே வாடா!

ரங்கு : ஸ்வாமி கூப்பிட்டேளா?

காகப்பட்டர் : ஆமாண்டா முன்பு உனக்கு ஒரு பைத்தியக்காரச் சந்தேகம் மனதை குடைஞ்சிண்டிருந்துதே.

ரங்கு : அதுவா ஸ்வாமி? தங்களுடைய வியாக்யானத்தைக் கேட்ட பிறகு சந்தேகம் பஞ்சு பஞ்சாய்ப் பறந்தே போச்சு.

காகப்பட்டர் : போய்விட்டதல்லவா? அப்படிப்பட்ட மேன்மையான, மகிமையான வாழ்வு நம்முடையது என்பதைத் தெரிந்து கொள்ளாதவா நம்ம குலத்திலே அத்தி பூத்தது போலத் தான். உன் போல மண்டுகள் அதிகம் கிடையாதுடா.

ரங்கு : ஸ்வாமி! அடிக்கடி மண்டூ, மண்டூண்ணு என்னைச் சொல்லி …

காகப்பட்டர் : கேலி செய்கிறேனேன்னு கோபமா? பைத்தியக்காரா! உன் மேலே உள்ள அபாரமான ஆசையினாலே அது போலச் சொல்றேண்டா. வேறொண்ணுமில்லே. அது சரி! நம்ம சாஸ்திராதிகளைப் படிக்கிறியே, அது புரியறதோ நோக்கு.

ரங்கு : என்ன ஸ்வாமி இது? சாட்சாத் காகப் பட்டருடைய பிரதம சீடனாக இருக்கேன். என்னைப் போய் சாஸ்திரம் புரியறதான்னு கேட்கறதுன்னா..

காகப்பட்டர் : மத்தவா கேட்டா சொல்லுடா இதை இப்ப கேட்கறது நானல்லவோ. சாஸ்திராதிகள் புரியறதோ?

ரங்கு : ஆஹா ! நன்னா புரியறது. மத்தவாளுக்குப் புரியவைக்கவும் முடியறது.

காகப்பட்டர் : சம்சயங்கள் ஏற்பட்டால் விளக்க முடியுமோ?

ரங்கு : ஏதோ எனக்குத் தெரிந்த அளவிலே…

காகப்பட்டர் : சரி பதி பக்தியின்னா அதற்கு என்னடா பொருள் ?

ரங்கு : தன்னுடைய பதியிடம் பக்திப் பூர்வமாக நடந்து கொள்வது என்று பொருள்.

காகப்பட்டர் : அதுதானே?

ரங்கு : ஆமாம் ஸ்வாமி! அதுதான்! ஏதேனும் விசேஷமான பொருள் உண்டோ ஒரு சமயம் ?

காகப்பட்டர் : பதிபக்தி தன்னுடைய புருஷனிடம் மாறாத குறையாத பக்தியுடன் நடந்து கொள்வதுதான். இதோ பார். துரோபதைக்குப் பதிகள் ஐவர். பதிபக்தி தத்துவத்தின்படி துரோபதை ஐவருக்கும் கட்டுப்பட்டு – பய பக்தியுடன் விஸ்வாசதோடு நடந்து கொள்ள வேண்டும் அல்லவா !

ரங்கு : ஆமாம்

சதுப்பு நிலத்திலே நடந்து செல்பவனுக்குக் காலிலே திடம் இல்லாவிட்டால் என்ன ஆகும். அது போலத்தான். நமது சாஸ்திர புராணாதிகளிலே உள்ள சம்சயங்களைப் போக்க நமக்குத் தெரியாவிட்டால் நமது பாடும் ….

காகப்பட்டர் : இப்படி ஒரு சம்பவம் நேரிட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசித்துப்பார். தர்மன் தன்னோடு தேவாலயம் வரும்படி அழைக்கிறான்; அர்ச்சுனனோ ஆரணங்கே! ஆடிப்பாடி மகிழலாம் வா , நந்தவனத்துக்கு என்று அழைக்கிறான்; பீமனோ அருமையான காய்கறிகளைக் கொண்டு வந்து எதிரே கொட்டி விட்டு, பதிசொல் கடவாத பாவாய்! உடனே சமைத்துப்போடு , அகோரமான பசி எனக்கு என்று வற்புறுத்துகிறான். நகுலன் நாட்டியம் பார்க்கக் கூப்பிடுகிறான். சகாதேவன் சொக்கட்டான் ஆடக் கூப்பிடுகிறான் என்று வைத்துக் கொள். துரோபதை பதிபக்தியைக் காப்பாற்றியாக வேண்டும். பதிகளோ ஐவர் . என்னடா செய்வது?

ரங்கு : சிக்கலாக இருக்கே ஸ்வாமி !

காகப்பட்டர் : என்னடா செய்யலாம். ஒரு புருஷனை மணந்து கொண்ட நிலையிலே உத்தமிகள் மொத்தக் கஷ்டப்படுவதைப் பார்க்கிறோம். துரோபதைக்கோ..

ரங்கு : ஐவர் கணவர். அவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியம் செய்யச் சொல்லி தேவியை அழைக்கிறா.

காகப்பட்டர் : இதிலே துரோபதை பாரபட்சம் காட்டக் கூடாது.

ரங்கு : ஆமாம் பதி பக்தி கெட்டுவிடும்.

காகப்பட்டர் : தன் பர்த்தாவிலே யாருடைய பேச்சையும் தட்டி நடக்கக் கூடாது.

ரங்கு : ஆமாம் கஷ்டமாய் இருக்கே ஸ்வாமி?

காகப்பட்டர் : என்னடா இது! இவ்வளவு காலத்திற்குப் பிறகு, இந்தச் சம்பவத்தைக் காதாலே நீ கேட்கற போதே கலக்கமடையறே. அந்தப் புண்ணியவதி இப்படிப்பட்ட சிக்கல்களை எவ்வளவோ வாழ்க்கையில் கண்டிருப்பா? எல்லாவற்றையும் சமாளித்தாக வேண்டும்.

ரங்கு : ஆமாம் எப்படி முடிந்தது?

காகப்பட்டர் : நீயே யோசித்துச் சொல் புத்தி தீட்சண்யம் இருக்க வேணுமடா. ரங்கு! சதுப்பு நிலத்திலே நடந்து செல்பவனுக்குக் காலிலே திடம் இல்லாவிட்டால் என்ன ஆகும். அது போலத்தான். நமது சாஸ்திர புராணாதிகளிலே உள்ள சம்சயங்களைப் போக்க நமக்குத் தெரியாவிட்டால் நமது பாடும் ….

படிக்க:
நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் !
பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !

ரங்கு : ஆமாம் ஸ்வாமி! திண்டாட்டமாத்தான் இருக்கும்.

காகப்பட்டர் : எவனாவது ஒரு விதண்டாவாதி, நான் கேட்ட இதே கேள்வியை உன்னைக் கேட்கிறான் என்று வைத்துக் கொள்.

ரங்கு : கேட்பா ஸ்வாமி கேட்பா. இப்பவே பலபேர் கேட்டுண்டுதான் இருக்கா.

காகப்பட்டர் : நீ என்ன பதில் சொல்வே?

ரங்கு : நானா?

காகப்பட்டர் : ஆமாம்? பதில் சொல்லாது ஊமையாகி விடுவாயோ?
உன்னை யார் பிறகு மதிப்பா ?

ரங்கு : குருதேவா! நமது புராண சாஸ்திரங்களை நிறைய கரைத்துக் குடித்தவன் என்று கர்வம் கொண்டிருந்தேன். நிஜமாச் சொல்றேன்….. என்னாலே நீங்க கேட்ட சம்சயத்துக்குச் சமாதானம் கூறச் சக்தியில்லே .

காகப்பட்டர் : ஐவருக்கும் பத்தினி பதிபக்தியும் தவறக் கூடாது.

ரங்கு : ஆமாம்! பழச் சாறும் பருக வேணும்; பழமும் கெடக்கூடாது என்பது போல சிக்கலாக இருக்கே.

காகப்பட்டர் : பைத்தியக்காரா இப்படிப்பட்ட சிக்கலான சமயத்திலே துரோபதை ‘ஏ’ கண்ணா உன்னையன்றி வேறு கதி ஏது. என் கற்பும் கெடலாகாது; ஐவருக்கும் மனம் கோணலாகாது என் செய்வேன் என்று பஜித்தாள். அந்த சமயத்திலே கோபால கிருஷ்ணன் குழலை ராதையின் கிரகத்திலே வைத்து விட்டு , ருக்மணியின் இல்லம் வந்திருக்க, ருக்மணி, நாதா தங்களுடைய மதுரமான குழலைக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்துகிற சமயம் பரந்தாமன் சிரித்தார். சிரித்துவிட்டு, கீழே கிடந்த மலரை எடுத்து ஐந்து பாகமாக்கி ஆகாயத்திலே வீசினார். உடனே ஐயனின் அற்புதத்தை என்னென்பது? தருமருடன் தேவாலயம் செல்ல துரோபதை அர்சுனனுடன் நந்தவனத்தில் துரோபதை. பீமனுடன் சமையலறையில் துரோபதை. சகாதேவனுடன் துரோபதை. இவ்விதமாக ஐந்து பேருடனும் ஏக காலத்திலே துரோபதை சென்ற அற்புதம் நிகழ்ந்தது.

ரங்கு : ஆஹா, அருமை அருமை குருதேவர்.

காகப்பட்டர் : பதிபக்தியும் நிலைத்தது; சிக்கலும் தீர்ந்தது அல்லவா?

ரங்கு : ஆமாம்

காகப்பட்டர் : எப்படி ?

ரங்கு : கண்ணன் அருள்!

காகப்பட்டர் : புத்திக்கூர்மை வேண்டுமடா புத்தி தீட்சண்யம் வேண்டும். நமது புராணதிகளிலே ஏதேனும் சந்தேகம் எவனுக்கேனும் பிறந்தால், உடனே புத்தி தீட்சண்யத்தை உபயோகித்து, இப்போது நான் சொன்னது போல ஒரு விளக்கக் கதை கட்ட வேண்டும். உடனே தயங்காமல்.

ரங்கு : ஸ்வாமி! இது தாங்கள் கட்டிய கதைதானா?

காகப்பட்டர் : ஆமாம்! கட்டப்படாதோ? என்னடா இது? வியாசர் பாரதம் செய்தார். நான் துரோபதம் எனும் புதிய காவியத்தைச் செய்து காட்டினேன். தவறோ?

ரங்கு : தவறோ, சரியோ ஸ்வாமி. பிரமாதமா இருக்கு வியாக்யானம். விசித்திரமானதா இருக்கு..

காகப்பட்டர் : நமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அனந்தம். அவைகளிலே ஏதேனும் எவருக்கேனும் சந்தேகங்கள் ஏற்பட்டு பழிச்சு பேசினா, ரங்கு! அவாளிடம் வீணான விவாதம் பேசிண்டிருக்கப்படாது. ஆண்டவனுடைய லீலைகள், விசித்திரம் அனந்தம். சாமான்யாளாகிய நம்மால் அவைகளின் முழு உண்மையை, ரகசியத்தின் மகிமையைத் தெரிந்துக் கொள்வது முடியாத காரியம் என்று சொன்னால்
தீர்ந்தது.

ரங்கு : ஆமாம்! புண்ணிய ஏடுகளைச் சந்தேகிப்பது பாபம் என்பதிலே பாமரனுக்கு நம்பிக்கை இருக்கிற வரையிலே . ..

காகப்பட்டர் : நமது யோகத்துக்கு ஈடாக வேறெதுவும் இராது !

ரங்கு : ஸ்வாமி! யாரோ வரா. நம்மவா போலயிருக்கு. யாரா இருக்கும்?

(கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர் வருதல், காகப்பட்டரிடம் ஒலையைத் தர, அதைப் படித்தான பிறகு…)

காகப்பட்டர் : மராட்டிய மண்டலத்து மறையோர்களே! மட்டற்ற மகிழ்ச்சி உமது தூதால் எனக்கு உண்டாகிறது.

கேசவப்பட்டர் : நாங்கள் வந்திருக்கும் காரியத்தைப் பற்றியல்ல ஸ்வாமி நாங்கள் மகிழ்வது; எப்படியோ ஒன்று, தங்களைத் தரிசிக்கும் பாக்யம் கிடைத்ததே, தன்யாளானோமே என்பதைப் பற்றியே பரம சந்தோஷம் எங்களுக்கு.

பாலச்சந்திரப் பட்டர் : ஆரியகுலத் தலைவரின் ஆஸ்ரமத்தைக் கண்டு தரிசிக்கும் பாக்யம் கிடைக்கவில்லையே என்று ஆயாசப்படும் ஆரிய சோதராள் மராட்டிய மண்டலத்திலே அனந்தம்.

காகப்பட்டர் : அப்படியா? மெத்த சந்தோஷம்.

கேசவப்பட்டர் : ஸ்வாமி! எங்கு பார்த்தாலும் அகாரியாளுடைய செல்வாக்கே பரவிண்டு இருக்கும் இந்தச் சமயத்திலே, அகாரியாளுடைய ராஜ்யங்களே தலை தூக்கிண்டு ஆடும் இந்தக் காலத்திலே, புனிதமான கங்கைக் கரையிலே, கைலாயமோ, வைகுந்தமோ என்று யாவரும் வியந்து கூறத்தக்க வகையிலே இந்த மகோன்னதமான ஆஸ்ரமத்தை அமைத்துண்டு ஆரிய தர்மத்தை அழியாது பாதுகாத்து வரும் தங்களைக் கலியுக பிரம்மா என்றே நாங்களெல்லாம் கொண்டாடுகிறோம்.

காகப்பட்டர் : நமக்குள்ளாகவோ இவ்வளவு புகழ்ந்து கொள்வது? நாம் ஒரே குலம், ஒரே சதை, ஒரே ரத்தம்.

கேசவப்பட்டர் : அப்படி சொல்லிவிடலாமோ? ஆரிய குலம்தான் நாங்களும், இன்னும் அநேகர். ஆனால் என்ன கெதியில் இருக்கிறோம் மராட்டிய மண்டலத்திலே? எமக்கு மதிப்பு உண்டோ ! மார் தட்றா ! மராட்டிய ராஜ்யம் ஸ்தாபித்தாளாம். அவாளுடைய வீரத்தால்தான் விடுதலை கிடைத்ததாம்.

பாலச்சந்திரப் பட்டர் : விதண்டாவாதிகள் நமது சாஸ்திரத்தைக் கேலி செய்றா.

காகப்பட்டர் : அப்படியா அவ்வளவு மூடுபனியா அங்கு? அஞ்ச வேண்டாம், அங்குள்ள அஞ்ஞானத்தைப் போக்குவோம். மேலும் கேசவப்பட்டரே தாங்கள் கொண்டு வந்துள்ளது ஓலை அழைப்பு அல்லவா? ரங்கு நம்மை அழைக்கிறார்கள், மராட்டிய மண்டலத்துக்கு வந்து போகும்படி.

ரங்கு : நம்மையா ஸ்வாமி உபன்யாசங்க புரியவா?

மராட்டிய மண்டலத்துக்கு சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்வது பாப காரியம். நான் அதற்குச் சம்மதிக்க முடியாது. வரமுடியாது என்று கூறிவிடும்.

காகப்பட்டர் : அசடே அதற்கல்ல. மராட்டிய மண்டல மாவீரன் சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்ள வேணுமாம். அதனை நடத்திக் கொடுக்கும்படி நம்மை அழைக்கிறாளடா.

ரங்கு : நம்மை காசியிலிருந்து மராட்டியத்துக்கு! தங்கள் கீர்த்தி, குருஜீ அவ்வளவு தூரம் பரவி இருக்கிறதா?

கேசவப்பட்டர் : கொஞ்சம் தீர்க்கமாக யோசிக்கணும். இது விஷயமா ஆனந்தப்படுறதும் பெருமையா நினைக்கிறதும் மட்டும் போதாது.

காகப்பட்டர் : டே, ரங்கு பேசாம இருடா… பெரியவா சூட்சமம் இல்லாம பேசமாட்டா.

கேசவப்பட்டர் : மராட்டியத்துக்கு இப்ப உங்களை அழைக்கிறதிலே ஒரு சூட்சமம் இருக்கத்தான் செய்கிறது. சிவாஜி மாவீரன் சந்தேகமில்லே. இருந்தாலும் நாமோ வில் வீரன் ஸ்ரீராமச்சந்திரன் காலம் முதற்கொண்டே ஏன், அதற்கு முன்னாலே இருந்தே கெளரவிக்கப்பட்ட குலம்.

காகப்பட்டர் : ஆமாம் அதிலே என்ன சந்தேகம். யுகயுகமாக நிலைத்து நிற்கும் உண்மையல்லவோ அது!

கேசவப்பட்டர் : அப்படித்தான் ஐதீகம். ஆமாம், மராட்டியத்திலே எமக்கு இப்போ மதிப்பு கிடையாது.

காகப்பட்டர் : அப்படியா?

கேசவப்பட்டர் : ஆமாம் சில பேர் நாம் ஆதிக்கம் செலுத்துவது கூடாதுங்கறா! ஏன் என்றால் யுத்தத்திலே சேர முடியாதவான்னு கேலியும் பேசறா.

காகப்பட்டர் : அப்படிப்பட்ட அஞ்ஞானிகளும் அங்கே இருந்திண்டிருக்காளோ?

ரங்கு : தாங்கள் போனால் சூரியனைக் கண்ட பனி போல் அஞ்ஞானிகள் இருக்குமிடம் தெரியாம போயிடுவா.

கேசவப்பட்டர் : மராட்டிய வீரர்களிலே ஒரு தந்திரசாலி தான் எங்களைத் தூது அனுப்பியவன். பெயர் சிட்னீஸ். காயஸ்தகுலம் அவன். எப்படியாவது காகப்பட்டரை வரவழைக்க வேண்டுமென்று திட்டம் போட்டவன்.

காகப்பட்டர் : ஏன்?

கேசவப்பட்டர் : சிவாஜியின் பட்டாபிஷேகம் தாங்கள் வராவிட்டால் நடைபெறாதே.

காகப்பட்டர் : எதிர்ப்போ ?

கேசவப்பட்டர் : ஆமாம்.

காகப்பட்டர் : பக்கத்து அரசனோ ?

கேசவப்பட்டர் : இல்லை, உள் நாட்டிலே நாங்கள்தான் எதிர்த்தோம். சிவாஜி சூத்திரன். அவன் எப்படி க்ஷத்திரிய தர்மப்படி ஜொலிக்க ஆசைப்படலாம்? சாஸ்திரம் சம்மதிக்குமோ? வேத விதிப்படியா? என்றெல்லாம் எதிர்த்தோம்.

காகப்பட்டர் : ஓகோ! இந்த ஓலையிலே அது பற்றி ஒன்றையும் காணோமே?

கேசவப்பட்டர் : எப்படி இருக்கும்? நாங்கள் தான் எதிர்த்தோம். எங்களையே தூது அனுப்பிவிட்டான். அந்த தந்திரசாலி. தங்கள் சம்மதம் கிடைத்து விட்டால் எங்கள் எதிர்ப்புகளை மட்டம் தட்டிவிடலாம் என்ற நினைப்பு.

காகப்பட்டர் : அப்படிப்பட்ட ஆசாமியா? ரங்கு கொண்டுவா ஏடு.

ரங்கு : ஸ்வாமி நாம் போயி நம்மளவாளுக்கு வேண்டிய சகாயம் செய்து… .. .

படிக்க:
ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !
நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !

காகப்பட்டர் : மண்டு மராட்டியத்துக்கு நாம ஏண்டா போகணும்? கேசவப்பட்ரே! விஷயம் விளங்கிவிட்டது. மராட்டிய மண்டலத்துக்கு சிவாஜி மகுடாபிஷேகம் செய்து கொள்வது பாப காரியம். நான் அதற்குச் சம்மதிக்க முடியாது. வரமுடியாது என்று கூறிவிடும்.

கேசவப்பட்டர் : ஓலையே அது போலத் தீட்டினால் …

காகப்பட்டர் : ஆகா! தருகிறேன். கொண்டு போய் வீசும், அவன் முகத்திலே! நமது ஆசியும் ஆதரவும் இல்லாமல் என்ன செய்ய முடியும்.

கேசவப்பட்டர் : அதுமட்டுமில்லை. ஸ்வாமி காகப்பட்டரே, ”முடியாது, பட்டாபிஷேகம் பாப காரியம்” என்று சொல்லி விட்டார் என்பது தெரிந்தால்..

காகப்பட்டர் : பிறகு அவன் பட்டம் சூட்டிக் கொள்ள முடியவே முடியாது.

கேசவப்பட்டர் : பரத கண்டமே அவனைப் பாபி என்று சபிக்கும்.

காகப்பட்டர் : படட்டும்…. ஆரியர்களை அலட்சியப்படுத்தும் அஞ்ஞானிகள் தெரிந்து கொள்ளட்டும் நமது ஆதிபத்தியத்தை! ஒலை தயாரானதும் நீர் புறப்படலாம். இதற்குள் டேய், ரங்கு அவாளுக்குப் பாலும், பழமும் கொடு, சிரமப்பரிகாரம் செய்து கொள்ளட்டும்.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

தோழர் லெனின் 150 வது பிறந்தநாளில் பாசிசத்தை வீழ்த்த கடலூர் புமாஇமு சூளுரை !

0

டலூர், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக கடந்த 22.04.2019 அன்று, உலக பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 150 -வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கார்ப்பரேட் – காவி கும்பலுக்கு எதிராகவும், லெனின் பாதையில் புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரள்வோம் என முழக்கங்களும் எழுப்பப்பட்டது.

லெனின் அவர்களின் சாதனைகளை விரிவாகப் பேசியும், இந்திய அரசின் தோல்வியையும், தேர்தல் ஆணையம் மோடி – அமித்ஷா கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதையும், மீண்டும் கார்ப்பரேட் – காவி கும்பல் மோடி பிஜேபி பாசிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்த துடிப்பதையும் விலக்கி தோழர் வெங்கடேஸ்வரன் உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

புமாஇமு மாவட்ட செயலாளர் தோழர் மா.மணியரசன் அவர்களும் இந்திய அரசு வரி என்ற பெயரில் மக்களை ஒட்டச் சுரண்டுவதையும், சிறுபான்மை இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்குவதையும், இந்த அரசு கட்டமைப்பு முழுவதும் கார்ப்பரேட் – காவிகளுக்காகவும் செயல்படுவதை விளக்கி உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மாணவர்கள், பெண்கள் உழைக்கும் மக்கள் கலந்துகொண்டனர். அருகாமையில் இருந்த உழைக்கும் மக்களுக்கும், வணிகர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர்.

தோழர் லெனின் 150வது பிறந்தநாள் நிகழ்வு – புஜதொமு திருவள்ளூர் !

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனினின் 150-வது பிறந்த நாளை உயர்த்திப் பிடிக்கும் வகையில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக 22.04.2019 அன்று காலை 6 மணி முதல் மாவட்ட கிளை/இணைப்புச் சங்க ஆலை வாயில்களில் ஆசான் லெனின் படம் வைத்து ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

கும்மிடிப்பூண்டி SRF, மெட்ராஸ் ஹைட்ராலிக் ஹோஸ், கோவிந்தராஜ் முதலியார் அண்டு சன்ஸ் ஆகிய ஆலைகளின் வாயில்களில் மாவட்ட செயலாளர் தோழர் விகேந்தர், ஆசான் லெனின் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

லைட்விண்ட் ஸ்ரீராம் ஆலை வாயிலில் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் ராஜேஷ் கொடியேற்றி உரையாற்றினார்.

கெமின் ஆலைவாயிலில் மாவட்ட துணைத்தலைவர் தோழர் அரிநாதன் உரையாற்றினார்.

படிக்க:
வீழா திமிர் எங்கள் விளாதிமிர் ! | துரை சண்முகம்
♦ தமிழகமெங்கும் தோழர் லெனின் பிறந்த நாள் விழா !

ஓரன் ஹைட்ரோ கார்பன் ஆலை வாயிலில் மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி சுதேஷ்குமார் படம் திறந்து உரையாற்றினார்.

ஹெரென்க்னெக்ஸ்ட் இந்தியா பிரைவேட் லிட், ஆலை வாயிலில் மாநில துணைத்தலைவர் தோழர் இரா. சதீஷ் கொடியேற்றி உரையாற்றினார்.

மணலி SRF ஆலை வாயிலில் அந்தக் கிளையின் இணைச்செயலாளர் தோழர் வெங்கடேசன் தலைமையில் ஆசான் லெனின் படம் வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பந்தல் அமைத்து மாவட்ட செயலர் தோழர் விகேந்தர் தலைமையில் லெனின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கலந்துகொண்டு ஆசானின் உருவப்படத்தை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றினார் . இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் மத்தியில்;

  • வளர்ச்சி என்ற பெயரில் தரகு முதலாளிகள் – ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக நாட்டை சூறையாடுவதை முறியடிப்போம் !
  • சாதி – மத – இன வேறுபாடுகளைக் களைவோம், வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
  • ஆசான் லெனின் காட்டிய வழியில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம் !
  • முதலாளிகளின் லாப வெறிக்காக கட்டவிழ்த்து விடப்படும் பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரள்வோம் !
    – ஆகிய முழக்கங்களை விளக்கும் விதமாக உரை நிகழ்த்தப்பட்டது.

*****

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக இணைப்பு சங்கமான டி.ஐ மெட்டல் பார்மிங் ஆலையில் காலை 7.30 மணி அளவில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 150 வது பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆசான் லெனின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கூட்டத்தை டி.ஐ. மெட்டல் பார்மிங் சங்கத்தின் தலைவர் தோழர் மகேஷ் குமார் தலைமையேற்று நடத்தினார்.

சிறப்புரை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில பொருளாளர், சங்கத்தின் சிறப்பு தலைவருமான தோழர் பா.விஜயகுமார் உரையாற்றினார். இதில் இன்று தொழிலாளி வர்க்கம் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் மேலும் இன்றைய சமூகத்தில் நடக்கும் பல்வேறு அடக்குமுறைகள் இவற்றை விளக்கினார்.

மேலும் லெனின் ரஷ்யாவில் பாட்டாளிகள் தலைமையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சோஷலிச சமூகத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். அதேபோல் நாம் இங்கு ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கி புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம், என்பதை விளக்கினார்.

இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் கனகராஜ் நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் பகுதி மக்களையும் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து, தோழர் லெனின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் தோழர் லெனின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும் தொழிலாளர்கள் அவர்களுடைய அனுபவத்திலிருந்து தோழர் லெனின் இன்று ஏன் நமக்கு அவசியம் என்பதை உரையாற்றினார்கள். திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தலைவர் தோழர் மா.சரவணன் அவர்கள் உரையாற்றும்பொழுது இன்றைய சமூக கட்டமைப்புகள் முழுவதும் தோற்றுப் போய் மக்களை ஆள அருகதை இழந்து போய் இருக்கின்றது. இதை மாற்ற வேண்டும் என்றால் நாம் மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம் தான் நமக்கு விடிவு என்பதை விளக்கி பேசினார். கூட்டத்தில் பகுதிவாழ் உழைக்கும் மக்களும் தொழிலாளர்களும் 30 பேர் வரை கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,
தொடர்புக்கு : 94444 61480

பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !

மீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் வாக்குப் பதிவின்போது, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் பாமக சாதி வெறி கும்பல், தலித் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கியது.

இந்து முன்னணியும் பாமகவும் சேர்ந்து சாதிவெறியை தீர்த்துக்கொள்ளும் களமாக தேர்தல் பிரச்சினையை திட்டமிட்டு மாற்றினர். வீடுகளை அடித்து நொறுக்கியதோடு, குழந்தைகள், முதியவர்களை அடித்துள்ளது இந்த கும்பல். இந்த சம்பவம் குறித்து முகநூலில் எழுதப்பட்ட சில பதிவுகளின் தொகுப்பு இங்கே…

கலையரசன்

பொன்ப‌ர‌ப்பி கிராம‌த்தில் சாதிவெறி வ‌ன்முறை : த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் க‌ள்ள‌ மௌன‌ம்.

ஒரு கால‌த்தில் ந‌க்ச‌லைட்டுகளுட‌ன் இருந்து பிரிந்து சென்ற, தமிழரசன் போன்றோர் த‌னித் த‌மிழ் நாடு காண்ப‌த‌ற்காக‌ ஆயுத‌ப்போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ பொன்ப‌ர‌ப்பி கிராம‌த்தில், இந்த‌ சாதிவெறிக் கல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்துள்ள‌மை குறிப்பிட‌த்த‌க்க‌து. இந்த‌ ச‌ம்ப‌வ‌மான‌து, ஆளும் வ‌ர்க்க‌ம் ம‌க்க‌ளை பிரிப்ப‌த‌ற்கு, ஓட்ட‌ர‌சிய‌ல் எந்த‌ள‌வு ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கிற‌து என்ப‌தை எடுத்துக் காட்டியுள்ள‌து.

இத‌ற்காக‌த் தானே தேர்த‌ல்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌? ச‌முதாய‌த்தில் எந்த‌ மாற்ற‌மும் வ‌ந்து விட‌க்கூடாது என்ப‌தில் ஆட்சியாள‌ர்க‌ள் குறியாக‌ இருக்கிறார்க‌ள். இத‌ற்குள் ஓட்டுப் போட்டு விட்டு “ஒரு விர‌ல் புர‌ட்சி” செய்து விட்ட‌தாக‌ கூறும் சில‌ர‌து அல‌ப்ப‌றைக‌ள் எரிச்ச‌ல் ஊட்டுகின்ற‌ன‌.

தேர்த‌ல் முடிந்த‌ பின்ன‌ர், பாம‌க‌ க‌ட்சியை சேர்ந்த சாதிவெறிக் காடைய‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ ஒரு க‌ட்சிக்கு வாக்க‌ளித்த‌ ம‌க்க‌ளின் வீடுக‌ளை பார்த்து தாக்கியுள்ள‌ன‌ர். இது க‌ட்சி அர‌சிய‌லும் சாதிய‌வாத‌மும் எப்ப‌டி ஒன்றுட‌ன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ள‌து என்ப‌தை எடுத்துக் காட்டுகின்ற‌து.

த‌மிழின‌ ஒற்றுமையைக் குலைக்கும் இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை, நாம் த‌மிழ‌ர் போன்ற‌ தீவிர‌ த‌மிழ்த்தேசிய‌ம் பேசும் க‌ட்சிக‌ள் எதுவும் க‌ண்டுகொள்ள‌வில்லை. இத‌ற்குள் தாம் ம‌ட்டுமே த‌மிழ‌ரின் மான‌ம் காப்ப‌தாக‌ அடிக்கும் வாய்ச் ச‌வ‌டால்க‌ளுக்கு ம‌ட்டும் குறைச்ச‌ல் இல்லை. த‌ன‌க்குள்ளே ஒரு ச‌மூக‌த்தை சாதியின் பெய‌ரால் ஒடுக்கும் ஓர் இன‌ம் எப்ப‌டி விடுத‌லை பெறும்?

இங்கே வேடிக்கை என்ன‌வெனில், தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ ச‌மூக‌த்தின் க‌ட்சித் த‌லைவ‌ரும், தாக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மூக‌த்தை பிர‌திநிதித்துவ‌ப் ப‌டுத்தும் க‌ட்சித் த‌லைவ‌ரும், முன்ன‌ர் ஒரே மேடையில் தோன்றி த‌மிழ்த்தேசிய‌ம் பேசிய‌வ‌ர்க‌ள் தான். புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் நாடுக‌ளுக்கும் சென்று, பிர‌பாக‌ர‌ன் ப‌ட‌த்தை ஏந்தி, புலிச் சின்ன‌ம் பொறித்த‌ சால்வை போர்த்தி, த‌மிழீழ‌த்தை ஆத‌ரித்து அன‌ல் ப‌ற‌க்க‌ பேசிய‌வ‌ர்க‌ள்தான். அன்று அவ‌ர்க‌ளைக் கூப்பிட்டு பேச்சுக்க‌ளை கேட்டு ம‌கிழ்ந்த‌ ஈழ‌த்து புலி ஆத‌ர‌வாள‌ர் ஒருவ‌ர் கூட‌ இந்த‌ சாதிவெறி வ‌ன்முறையைக் க‌ண்டிக்க‌வில்லை.

த‌மிழின‌ம் த‌ன‌க்குள் இருக்கும் பிரிவினைக‌ளை பூசி மெழுகி விட்டு, “த‌மிழ‌ர் ஒற்றுமை” ப‌ற்றிப் பேசுவ‌தும் இன்னொரு அட‌க்குமுறைதான்.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன்

மகிழ்நன் பா.ம

கம்யூனிஸ்டுகள் தங்களுடைய பல்வேறு தியாகத்தின் மூலம் சாதி கடந்து சாதித்து காட்டிய வர்க்க ஒற்றுமையை சிதைத்த ராமதாஸ் வகையறாக்களை “பிற்படுத்தப்பட்டவர்களின் காவலர்” என்று வரையறை செய்த சமூக நீதி புண்ணாக்குகள்…

பெரும் கதையாடல் எல்லாம் தவறு என்று சாதி, சாதியாக மக்களை மேலும், மேலும் பிளவுப்படுத்த ஆளும் வர்க்கத்திற்கு துணை போன அயோக்கியர்கள்… இவர்களைக் கண்டறிந்து அரசியல் தளத்தில் தனிமைப்படுத்துங்கள்…

இவனுக இன்னும், முற்போக்காளர்கள் கதாபாத்திரத்தை எந்த மன்னிப்பும் கேட்காம ஆத்த விடாம, அவனுக பர்னிச்சர உடைங்க. அதோடு, பொன் பரப்பியில் நடந்திருக்கும் சம்பவம், இந்து முன்னணி, பாமக கும்பல் பரப்பி வரும் விசத்தின் அடையாளம். அந்த கும்பல் முறியடிக்கப்பட வேண்டும்..

ஒட்டு மொத்த வன்னியர்களே சாதி வெறியர்கள், அவர்களில் எவரொருவரும் திருமாவுக்கு வாக்களிக்கவில்லை என்ற முடிவுக்கு தள்ளும்படியாக எழுதும் கிறுக்கர்களை புறந்தள்ளுங்கள். எனக்குத் தெரிந்தே ஏராளமான வன்னியர்கள் திருமாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

ராமதாஸ் வகையறா பதவி வெறி பிடித்த தரகர்களை, ஜனநாயக பண்போடு இருக்கும் வன்னிய சாதி உழைக்கும் மக்களோடு சேர்ந்துதான் முறியடிக்க முடியும்.

ஒட்டுமொத்தமாக ஒரு சாதி முற்றாக வெறி பிடித்ததென்றும், மற்ற சாதியில் புனிதர்கள் இருப்பதாக கட்டமைப்பதையும் நிறுத்துங்கள்.

அதேபோல, வன்னியர் சாதியை சார்ந்த ஜனநாயக சக்திகள், பொத்தாம் பொதுவாக கண்டன குரல்களை எழுப்பாமல், நான் சாதியால் வன்னியர்தான்… ஆனால், எனக்கு சாதிவெறியாட்டத்திலோ, ராமதாஸ் குடும்பத்தின் பதவி வெறியாட்டத்திலோ உடன்பாடில்லை என்று வெளிப்படையாக பதிவிடுங்கள்.

அப்பொழுதுதான்… இந்த தரகர்களை தேர்தலுக்கு அப்பாலும் வீழ்த்த முடியும்.

பாரதி தம்பி

சாதி வெறியின் பொலிவு தென்படும் இந்த முகங்களில் பொருளாதார மினுக்குகள் எதையும் காண முடியவில்லை. கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் சாதிப் பெருமிதத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனா, தலைக்கு நாலு கேஸ் போட்டு நாலஞ்சு வருஷம் கோர்ட்டுக்கும் ஸ்டேஷனுக்கும் அலையவிட்டா, வக்காலத்து போடக்கூட சாதிக்காரன் வரமாட்டான். செத்தால் மாலையுடன் வரும் உன்னுடைய சாதி சங்கமும், கட்சியும், வாழ வழியில்லாமல் நடுரோட்டில் நிற்கும்போது பச்சைத் தண்ணீர் கூடத் தராது.

ஜீவகன்

பட்டியலினக் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு, குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் கூட தாக்கப்படுகையில் யார் பக்கம் நின்று பேசுவது என, ஜாதி இந்து முற்போக்குகள் தடுமாறிப் போகின்றனர்.

இவ்வளவுக்கும் ஊர்த்தெரு குடியிருப்பு சேதமாயிருக்காது. ஒருவர் கூட அடிபட்டிருக்க மாட்டார்கள். ஆனாலும், நட்ட நடுவில் நின்று கருத்துச் சொல்லி விட துடியாய்த் துடிப்பார்கள்.

ஊடகங்களுக்கு பிரச்சினையில்லை. இருதரப்பு மோதல் என்று தான் அவை முதலில் செய்தி போடும்.

ஆனால், இந்த நோஞ்சான் முற்போக்குகளின் நிலைமை பரிதாபமானது. தாம் பேசி வந்த ஜாதி/மத அடிப்படைவாத எதிர்ப்பின் வழி நின்று, இந்துத்துவா + பாமக அபாயகரக் கூட்டணியை இந்நேரத்தில் விமர்சிக்க முடியாது.

காரணம், தம் அமைப்புகளில் உள்ள ஜாதி இந்துக்களின் மனம் கோணாமல் பார்த்துக் கொள்வதில் அத்தனை கவனம். அவர்களுடன் முரண்பட்டால் பிழைப்புச் சிக்கல் வந்து விடும். அதே வேளை, முற்போக்கு அடையாள இமேஜையும் விட்டுக் கொடுக்க முடியாது. எனவே, விசிக-வும் பாமக-வும் ஒன்றுதான் என, நட்டநடுவில் நின்று நிறுவிட முயற்சிக்கின்றனர்.

இவர்கள்தான் தேர்தலில் அமமுக, மநீம, நாதக போன்றவற்றை ஆதரிப்போர் ஒருவகையில் பாஜக வெற்றிக்குத் துணை போவதாக எழுதியவர்கள்.

இப்போது, பொன்பரப்பியை வெறும் கட்சித் தகராறு என்று சுருக்குகையில், அது சனாதனத்திற்குச் சாதகமாவதை அறியாதவர்கள் போல காட்சி தருகின்றனர். இப்படி திருகுதாளம் அடிப்பவர்களிடம்… குறிப்பாக இடதுசாரி முகமூடிகளிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது. மூடிக்கொண்டு அமரவும்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பார்ப்பன அடிமையாய், சத்திரியன் என்கிற போர்வையில் சூத்திரனாய் இருப்பது கூடத் தெரிந்துகொள்ளாமல், ‘பறப்பயலுகளா’ என்பதில் இருக்கிற சாதி வெறி வன்மம் ஒழியாமல் இந்த சமூகத்தில் வன்னியர்களுக்கு சாதி வெறியர்கள் என்கிற பட்டம் ஒழியப் போவதே இல்லை.

சுடரொளி வேல்

பொன்பரப்பி சாதியத் தாக்குதலில் சிறுவர்களும் கூட ஈடுபட்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. வெறியர்களாகவும் மடையர்களாகவும் மூடர்களாகவும் ஒரு கூட்டத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது சாதி. ஒருபுறம் சாதிய உணர்வோடு ஒரு அறிவற்ற சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் சாதியற்ற அறிவார்ந்த சமூகத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

மகேந்திரன் கீழாமத்தூர்

சமூகத்தின் ஒழிக்கப்படவேண்டிய விஷம் டாக்டர் ராமதாசும், அவர் வளர்த்து வைத்திருக்கும் சாதி வெறி பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும். வளர்ந்து வரும் தமிழக ஆர்.எஸ்.எஸ் வன்னியர் சங்கம். பாட்டாளி மக்கள் கட்சி.

இரா. முருகவேள்

“வன்னிய இளைஞர்கள் நக்ஸலைட்டுகள் ஆகாமல் நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம்” என்று காடுவெட்டி குரு ஒருமுறை கூறினார். தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் நக்ஸலைட் வேட்டை நடைபெற்ற போது போலீஸ் கிராமத்து இளைஞர்களிடம் வன்னிய இளைஞர் சங்கத்தில் சேரும்படி அறிவுறுத்தியது என்று Mohanasundara kali போன்ற மூத்த தோழர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தமிழரசன் கொல்லப்பட்ட பின்பு அந்த இயக்கத்தை முன்னெடுத்த தோழர்களுடன் காடுவெட்டி குருவுக்கு இருந்த பகைமை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அடிப்படையில் அனைத்து பொதுவுடமை இயக்கங்களுக்கும் எதிரானது பாமக. பாமகவின் அடிப்படையே உழைக்கும் மக்கள் இணைந்து நிற்பதையும், போராடுவதையும் தடுப்பதுதான்.

பாமக-வுக்கும் பாஜகவுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் பாரதிய ஜனதா கட்சி எல்லாவிதமான முற்போக்கு, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய இயக்கங்களின் மீதான தனது விரோதத்தை ஒருபோதும் மறைப்பதில்லை. ஆனால் டாக்டர் ராமதாஸ் “நானும் ஒரு நக்சலைட்தான்” என்று கட்டுரை எழுதுவார்.

மனநல மருத்துவர் ஷாலினி

நான் ஒரு மருத்துவராய் இருப்பதில் எனக்கு எந்த பெருமையும் எப்போதும் இருந்ததில்லை. மருத்துவம் என்பது அதிலும் குறிப்பாக மனநல மருத்துவம் என்பது நிறைய சோகம் நிறைந்த பணி. இந்த நோய்களே இல்லாமல் இருந்திருக்க கூடாதா?! என்று எண்ணும் அளவிற்கு பல விதமான மனித துயரங்களை தினமும் பார்க்க வேண்டிய பணி. இதில் பெருமை எங்கிருந்து வரும்?!

ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மருத்துவராய் இருப்பதில் எனக்கு பெருமை வந்து சேர்ந்தது….. நீதி கட்சியை துவக்கிய நடேசனாரும், டி .எம். நாயர் அவர்களும் மருத்துவர்கள் என்று அறிந்த அன்றிலிருந்து நானும் அவர்கள் வகையறா, அதே கல்லூரி என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஆனால், என் கல்லூரியில் தான் மரு. அன்புமணி ராமதாஸும் படித்தார். அவர் மட்டும் ஏன் இப்படி ஜாதி வெறியர்களை இன்னும் அடக்காமல் இருக்கிறார் என்று நினைக்கும் போது, கல்லூரி அல்ல, முக்கியம். கற்றவைதான் முக்கியம் என்றே தோன்றுகிறது.

படிக்க:
தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !
♦ பாமக – வை ஏத்தி விட்ட பின் நவீனத்துவ பச்சோந்திகள் !

ராஜ் தேவ்

தமிழக அரசாங்கம் சாதி/மத வெறியர்களுக்கு வழங்கும் தைரியம் அசாத்தியமானது. தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன; கும்பல் வன்முறைக்கு தலித் மக்கள் இலக்காகின்றனர். இந்த தேர்தலை முன்னிட்டு சாதி/மத வெறி கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு இந்த தாக்குதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

தந்தை பெரியார் சிலைகள் குறைந்த கால இடைவெளியில் இரண்டு இடங்களில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது பொன்பரப்பியில் தலித் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுடன் சாதி/மத வெறிக் கட்சிகளான பா.ஜ.கவும், பா.ம.கவும் வெளிப்படையான கூட்டு சேர்ந்திருப்பது புது வகை அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த அபாய நிலையை புரிந்து கொண்டு நாமும் கூட்டு சேர்ந்து இயங்க வேண்டும். ஆனால் இதற்கு ஊறு விளைவிக்கும் ரஞ்சித்ஸ்ட்களின் பதிவுகள் கவலை ஊட்டுகின்றன. வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்று பொதுவாக பேசுவதிலும் பயனில்லை.

சாதி/மத உணர்வு என்பது மக்களின் மனங்களில் காய்ந்த சருகுகளாக எப்போதுமிருப்பது. அதை பற்ற வைக்கும் அயோக்கியத்தனத்துக்கு எதிராக ஒன்றிணைவதே நம் முன் உள்ள பெருங்கடமை. அதன் மூலம் சாதி/மத வெறியாட்டங்களுக்கெதிராக பூஜ்ய சகிப்பை கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசின் பண்புநலனாக மாற்றும் போராட்டங்கள் வேண்டும்.

வேந்தன். இல

முற்போக்கு சிந்தனை புரிதல் உள்ள மக்களைக் கூட ஜாதிவெறி கட்சி தன் சுயலாபத்துக்காக ஜாதிவெறியை கிளப்பி பிளவை கூர்மைபடுத்துகிறது. தலித் மக்களின் மீது வன்முறையை ஏவுகிறது.

அன்று தோழர் அப்பு – பாலனின் நாயக்கன் கொட்டாய்.. இன்று தோழர் தமிழரசனின் பொன்பரப்பி.

பொன்பரப்பி மீதான தாக்குதல் காணொளி அங்குள்ள பெண்கள் குழந்தைகள், முதியோர் ஆகியோரின் மீதான பதற்றத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பாதுகாப்பு தரவேண்டிய அரசு பாமக-வின் இந்த செயலை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதின் மூலம்தான் ஒரு ஜாதிவெறியை ஊக்குவிக்கும் அரசு என்று நமக்கு உணர்த்துகிறது. பானையை உடைத்தால் பாமகவுக்கு லாபம்.. வன்னிய சொந்தங்களே பாமகவின் ஜாதிவெறிக்கு பலியாகாதீர்கள். காடுவெட்டி குருவுக்கே அந்த நிலையென்றால் நீங்கள் எம்மாத்திரம்?

கருப்பு நீலகண்டன்

வலுத்த இடத்தில் தாக்குதலை நடத்தும் ராமதாஸ் அன்புமணி போன்ற ஜாதிவெறியன்களை இனி எங்கு பார்த்தாலும் கேரோ செய்து வெளியேற்றும் போராட்டங்களை நாம் கையில் எடுத்தால் என்ன?

ஜாதிவெறியோடு உலாவும் எந்த விலங்கும் இனி பொதுவில் இயங்கவோ புழங்கவோ முழங்கவோ முடியாது என்கிற போராட்டங்களையும் நிர்பந்தங்களை நாம் முன்னெடுத்தால் நமது சமூகத்திற்கு நல்லது.

ஆனால் கண்டிப்பாக இதில் தலித்துகளை முன்னே தள்ளிவிடாது முற்றமுழுக்க ஜனநாயக சக்திகள் முன்னின்று நடத்தவேண்டிய போராட்டம்.

நறுமுகை தேவி

இந்தப் புகைப்படம் நெஞ்சை அறுக்கிறது.அந்தப் பாட்டி கையெடுத்துக் கும்பிட்டு விட்டு விடச் சொல்வது போல் இருக்கிறது. வாசல் முழுக்க உடைந்த மண்பானை ஓடுகளின் சில்லுகள்.

பக்கத்தில் சுவரில் ஒரு மனிதரின் நிழல் தெரிகிறது.அந்த நிழல் தாக்க வருவது போலொரு உடல்மொழியைக் கொண்டிருக்கிறது. அந்த நிழல் மனிதனிடம்தான்  பாட்டி இறைஞ்சுகிறாரா?

படிக்க:
மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !
♦ ‘நல்ல’ மாற்றம்! ‘நல்ல’ முன்னேற்றம்! அன்புமணி ராமதாஸ்!

கொண்டல்சாமி

தோழர் திருமாவளவன் அவர்களின் முக்கியமான பேட்டியை ஏனோ பெரும்பாலான ஊடகங்கள் வெளியிடவில்லை.

அந்த பேட்டியில் அவர் தெளிவாக சில விசயங்களை சொல்லுகிறார். பொன்பரப்பி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக வன்னியர்களுக்குள் இந்து முன்னணி புகுந்து கொண்டு சாதிவெறியை மேலும் தீவிரமாக்குகிறது. இப்போது நடந்த தாக்குதலை நடத்தியதும் இந்து முன்னணிதான். ஆகவே இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டுமென்று பேட்டி கொடுத்திருந்தார்.

தென்மாவட்டங்களை குட்டிசுவராக்கிய இந்த இந்துத்துவ கும்பல்கள் இப்போது வட மாவட்டங்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்து விட்டது. அதுவும் தமிழரசன் மண்ணிலிருந்து என்பதுதான் பெருத்த சோகம்.

இராமதாஸ் அவர்களே உங்களின் சுயநலத்திற்காக நீங்கள் ஊட்டி வளர்த்த சாதிவெறி இன்று உங்களை தாண்டி மதவெறி கும்பலிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அது உங்களையும் ஒரு நாள் பதம் பார்க்கும் அப்போது உங்களை சுற்றி ஒருவரும் இருக்கமாட்டார்கள்/ இருக்கவும் கூடாது.

என் கவலையெல்லாம் இதையெல்லாம் தாண்டி அப்பாவி வன்னிய மக்களை நினைத்துதான். இத்தனை காலமும் இராமதாஸ் அவர்களின் சுயநலத்திற்காக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த அந்த சமூகம், இனி இராமதாசை விட நூறு மடங்கு கொடிய பாசிசவாதிகளான இந்துத்துவ கும்பல்களிடம் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடப்போகிறதோ தெரியவில்லை?

தொகுப்பு :

கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !

தேர்தல் வாக்குறுதிகள் : உண்மையும் பொய்யும் !

ஓட்டுக்கட்சிகளின் கல்விசார்ந்த வாக்குறுதிகள் அனைத்தும் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !

17 -வது மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பண்டிகைக் கால விற்பனைக்காக நகைக் கடைகள் தள்ளுபடிகளை அறிவிப்பதைப் போல ஓட்டுக் கட்சிகளோ மக்களிடம் பல வண்ணமயமான வாக்குறுதிகளை வீசி வருகின்றனர்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி, சிபிம், சிபிஐ, லிபரேசன் ஆகிய கட்சிகள் பல வாக்குறுதிகளை முன்வைத்திருந்தாலும் அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் ஒருசில வாக்குறுதிகள் பொதுவாகவே உள்ளன. விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான சலுகைகள் ஆகியவைகளை குறிப்பாக சொல்லலாம்.

பிஜேபி-யின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் கடந்த ஐந்தாண்டுகளின் நீடிப்பாகவே உள்ளது. மூகமூடிகள் ஏதுமில்லாமல் வெளிப்படையாகவே ஏகாதிபத்திய மற்றும் தரகு முதலாளிகள் ஆதரவு என்றிருப்பதால் அதனைக் கணக்கில் கொள்ளவில்லை.

கல்விக்கடனை தள்ளுபடி செய்யவேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் ஆகியவை திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ளவை. காங்கிரசோ நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, பொதுப்பட்டியலிலிருந்து பள்ளிக் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது (உயர்க்கல்வி பொதுப்பட்டியலிலேயே இருக்கும்) கல்விக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை (Gross Enrollment Ratio-GER) 25.8%-லிருந்து 40%-மாக உயர்த்துவது போன்றவைகளை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது.

எந்த கட்சியும் தங்களுடைய ஐந்து வருட ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கேள்வி கேட்பதற்கான எந்த சட்டப்பூர்வமான வழிமுறைகளும் குடிமக்களுக்கு இல்லை. இருந்தாலும் கடவுள் நம்பிக்கையை போல கட்சிகளின் வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்கள். ஊடகங்களும் நம்பவைக்கும் வேலையை செய்கின்றன. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறை என்ன? அவற்றை நிறைவேற்றுவதற்கான உண்மையான அதிகாரம் ஆட்சியாளர்களுக்கோ / நாடாளுமன்றத்திற்கோ உள்ளதா? வாக்குறுதிகளுக்குள் ஒழிந்துள்ள வர்க்க நலன் என்ன? என்பது பற்றியான விவாத்திற்குள் யாரும் செல்வதில்லை.

படிக்க:
பாஜக தேர்தல் அறிக்கை 2019 : கலாய்க்கும் நெட்டிசன்கள் | #sanghifesto
♦ வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் !

உதாரணமாக கல்விக்கடன் தள்ளுபடியை எடுத்துக்கொள்வோம். ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி 2018 நிதியாண்டில் (மார்ச் 2018 வரை) ரூ. 82,600 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையானவை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் வழங்கப்பட்டவை. மொத்த கல்விக்கடனில் 20 சதவிகிதக் கடன் தமிழ்நாட்டில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கல்விக்கடன் வழங்கப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவர் தமிழ்நாட்டை சார்ந்தவர். அதேவேளையில் கல்விக்கடனை திருப்பி செலுத்தாதவர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் உள்ளனர். மொத்த கல்வி வாராக்கடனில் 36% வாராக்கடன் தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மட்டும் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 17,000 கோடி ரூபாய் கல்வி வாராக்கடன் உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை அரசு தள்ளுபடி செய்யவேண்டியிருக்கும். இத்தொகை கடந்த நான்கு ஆண்டுகள் உயர்கல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை விட அதிகமாகும்.

ஆண்டு உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு(கோடியில்) கல்வி – வாராக்கடன்   (கோடியில்)
2015-16 3696.2 4777
2016-17 3679.01 5191
2017-18 3680 6434

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 2015-16 லிருந்து 2017-18 உயர்கல்விக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதி மற்றும் கல்வி வாராக்கடன் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் உருவான கல்வி வாராக்கடன்களின் மொத்த மதிப்பு 16,402 கோடி ரூபாய். மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் வாராக்கடன்களின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலையின்மை காரணமாக வரும் ஆண்டுகளில் வாராக்கடனின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பது உண்மை.

இக்கல்விக் கடன்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொறியியல், மருத்துவம், நர்ஸிங், மேலாண்மை போன்ற படிப்பிற்கான கல்வி கட்டணங்களை செலுத்துவதற்காக பெறப்பட்டவை. இந்த 17,000 கோடி வாராக்கடனில் பெரும்பான்மை பகுதி தனியார் கல்வி முதலைகளின் பைகளுக்கே சென்றுள்ளது. மேலும் கடனை தள்ளுபடி செய்வதன் மூலம் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை பொது மக்களின் சேமிப்பு பணத்தைக் கொண்டு ஈடுகட்டுவார்கள்.

இந்நிதியை கொண்டு 60 -க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த அரசுக்கல்லூரிகளை (பொறியியல், மருத்துவம், கலைக்கல்லூரிகள்) உருவாக்கியிருக்க முடியும். ஆனால் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் புதிய அரசு கல்லூரிகள் ஆரம்பிப்பதைப் பற்றி பேசவில்லை கல்விக் கடன் தள்ளுபடி பற்றியே பேசுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் GER தற்போதுள்ள 25.8% லிருந்து 40% உயர்த்தப் போவதாக கூறியுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் 40% மாணவர் சேர்க்கை எவ்வாறு அடையப் போகிறார்கள் என்பதை பற்றிய விளக்கங்கள் சொல்லப்படவில்லை.

2017-18-ம் ஆண்டிற்கான அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பின் படி 3.66 கோடி பேர் உயர்கல்வி படிக்கின்றனர். இது 18-23 வயதிற்குட்பட்ட இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையில் 25.8% ஆகும். அதாவது 100 இளைஞர்களில் 26 பேர் மட்டுமே கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இதன் அளவை 40 ஆக உயர்த்துவதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இவ்வாறு அதிகரிப்பதற்கு, 2017-18 கணக்கின் படி, ஏற்கெனவே உள்ள எண்ணிக்கையை விட 2.01 கோடி இளைஞர்கள் உயர்கல்வியில் புதியதாக சேர்க்க வேண்டும். அதற்காக 5,000 -க்கும் மேற்பட்ட புதிய கல்லூரிகளையும் அதற்கான உள்கட்டுமான வசதிகளையும் தகுதிவாய்ந்த பேராசிரியர்களையும் உருவாக்க வேண்டும்.

எவ்வாறு இதனை உருவாக்கப்போகிறார்கள்? இதற்கான பணம் எங்கிருந்து வரபோகிறது? 5000 கல்லூரிகளும் அரசு கல்லூரிகளா? அல்லது தனியார் கல்லூரிகளா? போன்ற எந்தக் கேள்விகளுக்கும் பதில் கிடையாது. ஆனால் பிஜேபி, காங்கிரஸின் கடந்த கால ஆட்சியிலிருந்து இதற்கானப் பதிலை ஓரளவிற்கு ஊகிக்க முடியும்.

ஆண்டு பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் GER% தனியாரின் பங்கு %
2000-01 256 12806 12.59 (2004-05)  25
2011-12 642 34852 20.08 70
2017-18 903 39050 25.8 78

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து, 2004-05 ல் 12.6% உள்ள GER 2017-18 ல் 25.8% ஆக அதிகரித்துள்ளது. கூடவே உயர்கல்வியில் தனியார்மயத்தின் அளவும் 25% லிருந்து 78% அதிகரித்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் உயர்கல்வித்துறையில் தனியார்மயத்தின் பங்களிப்பு மிக அதிகமாக வளர்ந்துள்ளதையே இது காட்டுகிறது. உலகவர்த்தகக் கழகத்தின் காட், காட்ஸ் – ஒப்பந்தங்களின் வழிகாட்டுதல் படியே கல்வி சார்ந்த கொள்கை முடிவுகளை இந்திய அரசு எடுத்துவருகிறது.

படிக்க:
உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
♦ நூல் அறிமுகம் : கல்வி – சந்தைக்கான சரக்கல்ல

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், UGC, AICTE, MCI போன்ற அமைப்புகளும் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமான திட்டங்களை அமல்படுத்துகின்றன. அதன் விளைவாகவே கடந்த 18 ஆண்டுகளில் 50% அளவிற்கு தனியார் கல்லூரிகள் பெருகியுள்ளன. தற்போது காங்கிரஸ் உறுதியளித்துள்ள 40% GER என்பதும் பல ஆயிரக்கணக்கான புதிய தனியார் சுயநிதி கல்லூரிகளை அனுமதிப்பதன் மூலமே சாத்தியமாக்க முடியும் அல்லது மோடி அரசு அமல்படுத்திய இணையவழி பாடங்கள் மூலம் (Massive Open Online Courses – MOOCs) உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்த முடியும்.

SWAYAM, NPTEL ஆகியவை இந்திய அரசு நடத்துகிற MOOCs. பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இணைய வழியில் பட்டப்படிப்புகள் (online degrees) வழங்குவதற்கான ஒப்புதலை சில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கியுள்ளது. MOOCs வாயிலாக பட்டம் பெறுவதற்கு ஆசிரியர்களோ, ஆய்வகங்களோ, கட்டிடங்களோ தேவையில்லை. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடங்களை இணையத்தின் வாயிலாக மாணவர்களுக்கு கொடுத்தால் போதும். தேர்வும் இணையத்தின் வழியே நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம், தேர்வுக்கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூல் செய்யப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் மேலும் கொள்ளையடிப்பதற்கான வழிமுறையை மோடி அரசு உருவாக்கியுள்ளது எனக் கூறலாம். தற்போது NEET, JEE தேர்வுகளுக்கான பயிற்சி கூட இணையவழியில் வந்துவிட்டது. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுமென தேர்தல் வாக்குறுதிகள் கூறுகின்றன. கல்வித்துறையில் நெருக்கடிகளுக்கு காரணம் தனியார்மயம் தான்.

ஆனால் கட்சிகளோ கொள்கையளவில் தனியார்மயத்தை ஒப்புகொண்டே வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். இவை நம்மை மேலும் கடனாளிகளாகவும் வேலையில்லாதவர்களாகவும் ஆக்குமே ஒழிய அனைவருக்கும் தரமான கல்வியை ஒருபோதும் தராது. கல்வி மட்டுமல்ல விவசாயம் சார்ந்த வாக்குறுதிகளும் இதே தன்மையிலானவைதான். இதை விரிவாக பார்ப்போம்.

(தொடரும்)

உதவிய தரவுகள் :

– அருண் கார்த்திக், சங்கர்

உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !

ங்கிக் கடன்களைக் கட்ட முடியாமலும் திவாலாகிப் போகும் நிலையிலும் இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நரேந்திர மோடி அரசு பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டிய அதேசமயத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களை விரைவாக வசூலிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்து பல தனியார் முதலாளிகளின் வயிற்றில் பாலை வார்த்தது, உச்சநீதி மன்றம்.

2,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிவிட்டு, கடன் தவணைகளை முறையாகக் கட்டத் தவறிவரும் நிறுவனங்களுக்கு, தவணை தவறிய நாளில் இருந்து 180 நாட்கள் அவகாசம் கொடுத்து, வங்கிகள் அக்கடன் தவணைகளை வசூலிக்க வேண்டும். அக்கால அவகாசத்திற்குள் நிலுவையிலுள்ள தவணைகளைக் கட்டத் தவறும் நிறுவனங்களைப் புதிய திவால் சட்டத்தின் கீழ் வங்கிகள் ஏலத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை. இந்தச் சுற்றறிக்கைக்கு எதிராகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல கார்ப்பரேட் குழுமங்கள் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில்தான் வங்கிக் கடன்களைக் கட்டாமல் இழுத்தடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பொதுத்துறை வங்கிகள் 70 நிறுவனங்களுக்குக் கொடுத்திருந்த 3.8 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கடன்களை வசூலிப்பதற்கு எடுத்துவந்த நடவடிக்கைகளை, இத்தீர்ப்பால் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த 3.8 இலட்சம் கோடி ரூபாய் கடனில் 2 இலட்சம் கோடி ரூபாய் கடன் 34 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாகும்.

“ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கைக்கு மைய அரசின் ஒப்புதல் பெறப்படவில்லை. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனதற்கு இந்த 70 நிறுவனங்களுக்கும் வெவ்வேறு விதமான காரணங்கள், சூழ்நிலைகள் உள்ளன. குறிப்பாக, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமது கடன்களைச் செலுத்த முடியாமல் போனதற்கு அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்டுப் பல காரணங்கள் உள்ளன. இவ்வாறிருக்கையில் பொத்தாம்பொதுவாக சுற்றறிக்கை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் கிடையாது” எனக் குறிப்பிட்டு அச்சுற்றறிக்கையை ரத்து செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம்.

படிக்க :
♦ ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி
♦ அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !

இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்டதற்காகவும், வாராக் கடன்களை மறுசீரமைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை காட்டக்கூடாதென உத்தரவிட்டதற்காவும்தான் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலுக்கு நெருக்கடி கொடுத்து, அவரைத் தாமே பதவி விலக வைத்தது, மோடி அரசு.

இப்படிப்பட்ட கார்ப்பரேட் கைக்கூலி அரசிடமிருந்து இந்தச் சுற்றறிக்கைக்கு அனுமதி பெறச் சொல்வது என்பது, காமுகனிடம் சிக்கிக்கொண்ட இளம்பெண் அவனிடம் கெஞ்சிக் கூத்தாடித் தப்பிக்க யோசனை சொல்வதற்கு ஒப்பானது.

உர்ஜித் படேல்

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளால் நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்துபோகும்படி கைவிடப்படுவதைக் கண்டும் காணாதது போல நடந்துவரும் நீதியரசர்கள், அரசின் கொள்கை முடிவுகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் துன்பப்படக்கூடாது எனக் கண்ணீர் உகுக்கிறார்கள்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வறட்சி பாதித்திருக்கும் சூழ்நிலையையும் மீறி, விவசாயக் கடன்களையும், கல்விக் கடன்களையும் வசூலிக்க முயலும் வங்கி அதிகாரிகளின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்துங்கள் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.

அந்தக் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்கக்கூட நாதியில்லை. ஆனால், மின் உற்பத்தி நிறு வனங்களின் கடினமான சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என வங்கிகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள் நீதிபதிகள்.

முதலாளிகளுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல்தான் கடன்களை வசூலிக்க வேண்டும் என்றால், வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இதனைத்தான் மோடி அரசு விரும்புகிறது. இதனை நோக்கித்தான் வங்கிகளைத் தள்ளிவிட்டிருக்கிறது, உச்சநீதி மன்றம்.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

இலங்கை குண்டுவெடிப்பு

22

கலையரசன்
  இல‌ங்கையில் இன்று (21.04.2019) ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண்டுவெடிப்புக‌ளில் 290 பேர் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆயிர‌க்க‌ண‌க்கில் காய‌ம‌டைந்தோர் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஏராள‌மானோர் இன‌, ம‌த‌ பேத‌ம் க‌ட‌ந்து குருதிக் கொடை வ‌ழ‌ங்க‌ முன்வ‌ந்துள்ள‌ன‌ர்.

இல‌ங்கை ம‌க்க‌ள் அனைவ‌ரையும் ஒன்று திர‌ட்டியுள்ள‌ இந்த‌ த‌ருண‌த்தில், வ‌த‌ந்திக‌ளை கிள‌ப்பி பிரிவினையை தூண்டும் தீய‌ ச‌க்திக‌ள் குறித்தும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும். அர‌ச‌ கைக்கூலிக‌ளான‌ இந்த‌ தீய‌ச‌க்திக‌ள் இல‌ங்கையில் ஒரு பாஸிச‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியைக் கொண்டு வ‌ருவ‌தை நோக்க‌மாக‌க் கொண்டுள்ள‌ன‌.

இந்த‌ நிமிட‌ம் வ‌ரையில் எந்த‌ இய‌க்க‌மும் தாக்குத‌லுக்கு உரிமை கோர‌வில்லை. அதே நேர‌ம் அர‌சும் யாரையும் குற்ற‌ம் சாட்ட‌வில்லை. ஆனால், அங்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை வைத்துப் பார்க்கும் பொழுது, இது ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து.

தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள், இத‌னால் ஏற்ப‌ட‌க் கூடிய‌ பின் விளைவுக‌ளை ஆராய்ந்து, த‌ம‌து இல‌க்குக‌ளைத் தெரிவு செய்துள்ள‌ன‌ர்.

1) குண்டுவெடிப்பில் ப‌லியான‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் க‌த்தோலிக்க‌ கிறிஸ்த‌வ‌ர்கள். த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் இதில் அட‌ங்குவார்க‌ள். ஈஸ்ட‌ர் நாள் விசேட‌ பூஜை என்ப‌தால் பெருந்தொகையின‌ர் ப‌லியாகியுள்ள‌ன‌ர்.

2) கொழும்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு என்று ஒரே நேர‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் குண்டுக‌ள் வெடித்துள்ள‌ன‌. ச‌ரியான‌ திட்ட‌மிட‌ல், ஆட்ப‌ல‌ம், ஆயுத‌ ப‌ல‌ம், நிதி போன்ற‌ வ‌ள‌ங்க‌ள் இல்லாம‌ல் இது சாத்திய‌மில்லை.

3) மேற்க‌த்திய‌ ப‌ண‌க்கார‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து த‌ங்கும் ஐந்து ந‌ட்ச‌த்திர‌ ஹொட்டேல்க‌ளில் குண்டுக‌ள் வெடித்து ப‌ல‌ வெளிநாட்ட‌வ‌ரும் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அத‌னால் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தின், குறிப்பாக‌ மேற்க‌த்திய‌ நாட்ட‌வ‌ரின் க‌வ‌ன‌த்தை இல‌ங்கையின் ப‌க்க‌ம் ஈர்த்துள்ள‌து.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ இலங்கை : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைவரும் இணைந்து எதிர்ப்போம் !

இந்த‌ குண்டுவெடிப்புக‌ளின் நேர‌டி விளைவுக‌ளைப் பார்த்தால், இத‌னால் ஆதாய‌ம‌டைவோர் யார் என அறிய‌லாம்.

♦ சிறில‌ங்கா குண்டுவெடிப்பின் எதிரொலியாக‌ நாளை ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரில் தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளின் ஆர்ப்பாட்ட‌ம் ஒன்று அறிவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. நெத‌ர்லாந்தில் உள்ள‌ அனைத்து தேவால‌ய‌ங்க‌ளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ வேண்டுமென‌ கோரிக்கை விடுக்கின்ற‌ன‌ர். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி இஸ்லாமிய‌ வெறுப்புப் பிர‌ச்சார‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. பிற‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளிலும் இதே பாணியிலான‌ போக்குக‌ள் தென்ப‌டுகின்ற‌ன‌.

♦ இல‌ங்கையில் போர் முடிந்து, க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டுக‌ளாக‌ ஒரு துப்பாக்கிச் சூடு கூட‌ ந‌ட‌க்காம‌ல் அமைதியாக‌ இருந்த‌ கால‌த்தில் மீண்டும் இந்த‌ப் ப‌டுகொலைக‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌. அண்மைக் கால‌த்தில் அர‌சு கொண்டு வ‌ந்த‌ புதிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ எதிர்ப்பு ச‌ட்ட‌த்திற்கு க‌டும் எதிர்ப்பு கிள‌ம்பி இருந்த‌து. இனிமேல் அதை ந‌டைமுறைப்ப‌டுத்த எந்த‌த் த‌டையும் இல்லை.

♦ இல‌ங்கையில் மீண்டும் ஒரு போர்ச் சூழ‌ல் தோன்றினால், அது இந்தியாவையும் பாதிக்கும். டொமினோ க‌ட்டைக‌ள் விழுவ‌து மாதிரி தெற்காசிய‌ நாடுக‌ள் நீண்ட‌ நெடும் போர்க‌ளுக்குள் த‌ள்ள‌ப் ப‌ட‌லாம். ம‌த்திய‌ கிழ‌க்கிலும் அமைதியாக‌ இருந்த‌ நாடுக‌ளில் திடீர் போர்க‌ள் உருவான‌ வ‌ர‌லாற்றை நாம் ஏற்கென‌வே க‌ண்டுள்ளோம்.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

வீழா திமிர் எங்கள் விளாதிமிர் ! | துரை சண்முகம்

சிவப்பை உயர்த்திப்பிடி லெனினை உணர்ந்து படி!

(ஏப்ரல் – 22 தோழர் லெனின் பிறந்தநாள்)

வீழா திமிர்
எங்கள் விளாதிமிர் !

மனிதப் பேரன்பின்
உலக இதயம்
எனின்,
அது லெனின் !

மார்க்சிய நாகரிகத்தின்
அறிவியல் தொடர்ச்சி
எங்கள் லெனின்.

உலகைப் பொதுமையாக்கும்
ஒவ்வொரு மகிழ்ச்சியிலும்
லெனின் பிறக்கிறார்,
உலகை அருமையாக்கும்
ஒவ்வொரு இயற்கை
மலர்ச்சியிலும்
லெனின் சிரிக்கிறார்.

தழுவிச் செல்லும் தருணத்தில்
புதிய சூழலை உணர வைக்கும்
மென்காற்றின் மெய்ப்பொருள்
எங்கள் லெனின்.

நழுவி விழும் வேகத்திலும்
நிலத்தில் உணர்வூட்டும்
அருவியின் பயன் மொழி
எங்கள் லெனின்.

என்ன ஒரு துல்லியம்!
என்ன ஒரு ஒத்திசைவு!
காற்றில் அடங்கா
புரட்சியின் இசையூற்று
எங்கள் லெனின்.

என்ன ஒரு கூர்மை
என்ன ஒரு ஓர்மை
சொற்களில் அடங்கா
மானுடப் புத்துணர்வின்
இயங்கியல் கவிதை
எங்கள் லெனின்.

இன்னும்
முன்னூறு ஆண்டுகளானாலும்
மனிதத் துயரங்களுக்கு
மாற்று காண வக்கில்லாதது
முதலாளித்துவம்

வெறும்
இருபதே ஆண்டுகளில்
மனித குலத்திற்கே
பாட்டாளி வர்க்க பலத்துடன்
மகிழ்ச்சிகுரிய
புது உலகை படைத்துக்காட்டியவர்
எங்கள் லெனின்.

புரட்சி எனும்
அருங்கலையின்
பெருவிசை
எங்கள் லெனின்…
பற்றிக்கொண்டது
பாட்டாளி வர்க்கம்
இனி விட்டு விலகாது,
கம்யூனிசமே… வெல்லும்!

உலகின் நாடி நரம்பெங்கும்
சிவப்பு.
உழைக்கும் வர்க்கத்தின்
ஒவ்வொரு களத்திலும்
திமிறி எழும்
எங்கள் லெனின் உவப்பு!

சிலைகளை சிதைக்கலாம்,
சிதைக்க சிதைக்க
சிவப்பே பெருகும்..
மறைக்க மறைக்க
மார்க்சிய – லெனினியம் பரவும்…

வெட்டிப் பிளந்துள்ளம்
தொட்டுப் பார்ப்பினும்
அங்கே
எட்டிப் பார்ப்பது
எங்கள் லெனினே!

தட்டிப் பறித்து
தத்துவப் புரட்டுகள் செய்யினும்
அதையும்
எட்டி உதைத்து
மீண்டும் எழுவது லெனினே!

உதிரம் மட்டுமல்ல
உலகின் விடியல் சிவப்புதான்
இதை உணர்த்தும் திசையெனில்
அது லெனின்.

எங்கள் லெனின்,
புரட்சிக்கு குறைவாக
வேறெதையும் விரும்பாதவர்
பொதுமை நலமன்றி
வேறெதற்கும் இணங்காதவர்.
லெனின்
அடிமையாய் வாழ
யாரையும் அனுமதிக்காதவர்
புரட்சியின் வழியன்றி
பிரிதொன்றும் படியாதவர்!

லெனின்
உறங்குவதில்லை
நம்மையும்
உறங்க விடுவதில்லை

புரட்சியின்
ஒவ்வொரு துடிப்பிலும்
உழைக்கும் வர்க்கத்தின் ஒவ்வொரு விழிப்பிலும்
மானுட விடியலின்
பெருங்காதல் அவரானவர்.

விழிப்போடிருப்போம்
லெனினைக் கற்போம்
கம்யூனிசம் படைப்போம்!

துரை. சண்முகம்


இதையும் பாருங்க:

இளைஞர்களிடம் அதிகரித்து வரும் அரசியல் ஆர்வம் | துரை சண்முகம்

பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் – புஜதொமு கண்டனம்

தேதி : 21.4.2019

பத்திரிகைச் செய்தி

 

பொன்பரப்பி வன்கொடுமைக் குற்றத்துக்கு மருத்துவர் ராமதாசே முழுப்பொறுப்பு!

பொன்பரப்பி தாக்குதல் என்பது பா.ம.க-வின் சாதிவெறி அரசியலும், பா.ஜ.க-வின் இந்து மதவெறி அரசியலும் கூட்டுச் சேர்ந்து தலித் மக்களுக்கு எதிராக நடத்தியிருக்கும் வன்முறை. இது காட்டுமிராண்டிதனத்திற்கும் நாகரீக சமூகத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்.

நமது சமூகத்தின் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்துபவை சாதி-மதவெறி அமைப்புகள்தானே தவிர, இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல,  இது ஜனநாயகமும் அல்ல என்பதையே இந்த சாதிவெறித் தாக்குதல் தெளிவாக நிரூபிக்கிறது. தேர்தல் ஆணையம், காவல்துறை உள்ளிட்ட யாரும் இந்த தாக்குதலைத் தடுக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இவர்கள் அனைவருமே சாதிவெறியர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது நாம் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவனை ஆதரிக்கக் கூடாது என பிள்ளை, வன்னியர், செட்டியார், பார்ப்பனர், நாயுடு என பிற ஆதிக்க சாதியினர் அனைவர் மத்தியிலும் பிரச்சாரம் நடந்திருக்கிறது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, சாதி உணர்வை மனதில் வைத்து பானை சின்னத்தை புறக்கணித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு தீண்டாமை வெறியைத் தூண்டியிருக்கின்றனர். இந்த தேர்தல் ஜனநாயகத்தின் யோக்கியதை இதுதான்.

சிதம்பரம் நகரத்திலேயே நடைபெற்ற இந்த பிரச்சாரத்துக்கும், பொன்பரப்பி கிராமத்தில் பா.ம.க.-வினர் கையில் ஆயுங்களுடன் இந்து முன்னணி உடன் சேர்ந்து கொண்டு நடத்தியிருக்கும் தாக்குதலுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. இது வெறும் பொருட்சேதம் குறித்த  பிரச்சினை அல்ல, ஜனநாயகம் என்பது பெயரளவில் கூட இருக்கக் கூடாது என்பதுதான் இந்த தாக்குதல் மூலம் சாதி-மத வெறியர்கள் நமக்குக் கூறும் செய்தி. அனைத்து மக்களும் அமைதியாக வாழமுடியாமல் சாதி மத வெறி கருத்துக்களை விதைத்து அதன் மூலம் பாசிச அதிகாரத்தை அரசிலும் சமூகத்திலும் வேரூன்ற செய்வதுதான் இத்தகைய தாக்குதல்களின் நோக்கம்.

தீண்டாமை என்பது தலித் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினை அல்ல, சாதி இந்து சமூகம் இழைக்கின்ற குற்றச்செயல். இதில் தேர்தல் கட்சிகளும், பெரும்பான்மை சமூகத்தினரும் அமைதியாக இருப்பதும், பா.ம.க. – இந்து முன்னணியைக் கண்டிக்காமல் இருப்பதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாக முடியும்.

இது பொன்பரப்பி தலித் மக்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை. கொலை மிரட்டல் விடுத்து, கும்பலாக நமது வீட்டை அடித்து நொறுக்கினால், நாம் என்ன நீதியை அரசிடம், சமூகத்திடம் கோருவோமோ அந்த நீதி பொன்பரப்பி மக்களுக்கு கிடைப்பதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும்.

தமிழக அரசே!

  • தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களையும், வெறியூட்டி தூண்டி விட்ட பா.ம.க தலைமையையும் கைது செய் !
  • சாதி-மத வெறிக் கருத்துகளைப் பரப்பி, கலவரங்களைத் தூண்டிவிடும் அமைப்புகளைத் தடை செய்!
  • பானைக்கு வாக்களித்த தலித் மக்களை பாதுகாக்கத் தவறிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்!
  • ஆளை மாற்றும் தேர்தலால் அகன்று விடாது சாதி வெறி!
  • அரசுக் கட்டமைப்பை மாற்றுவதொன்றே சாதி வெறியை வீழ்த்தும் வழி!

பொன்பரப்பி வன்கொடுமையை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சுவரொட்டிகள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இவண்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்கள் அதிகாரம்.


புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

பத்திரிகைச் செய்தி

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் வன்னிய சாதி வெறியர்கள் கும்பலாக தலித் மக்கள் குடியிருப்பில் புகுந்து, அவர்களை தாக்கியும், உடைமைகளை சேதப்படுத்தியும் உள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர். குடியிருப்புகள், உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. சாதிவெறியர்களின் இந்த தாக்குதல்களை படம்பிடித்த நியுஸ் 18 நிருபர் கலைவாணன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

திட்டமிட்ட இந்த வன்னிய சாதிவெறித் தாக்குதலை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கிடவும், தாக்குதல் நடத்திய வன்னிய சாதி வெறியர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.

முன்னதாக, வாக்குச்சாவடி அருகிலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சின்னமான பானையை உடைத்து அக்கட்சியினரை வெறியேற்றியுள்ளது சாதிவெறி பிடித்த கும்பல். தொடர்ந்து விசி கட்சியினர் பாமகவை சேர்ந்த ஒருவரைத் தாக்க, இதற்காகவே காத்திருந்த வன்னிய சாதிவெறி கும்பல் அருகில் இருந்த காலனிக்குள் புகுந்து தலித் மக்களையும் அவர்களின் உடைமைகளையும் வேட்டையாடியுள்ளது. நடந்த வன்முறை வெறியாட்டத்தை அரசியில் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டு பலரும் கண்டித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று மருத்துவமனையில் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

தலித் மக்கள் மீதான இந்த வன்முறை, எதோ ஒரு கும்பலால் குடிபோதையில் எதேச்சையாக நிகத்தப்பட்டதல்ல. வன்னிய சாதி வெறியர்களால் நேரம் பார்த்துக் காத்திருந்து, அவர்களின் கோபத்தை தூண்டி, வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல். தேர்தல் அறிவித்த பின்னர் பாமக, அதிமுக, பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது முதலாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் மீது தீவிரமான அதிருப்தி நிலவத் துவங்கியது. சொந்த சாதி, கட்சித் தொண்டர்களே காறித்துப்பி, கட்சியிலிருந்தே வெளியேறும் நிகழ்வுகள் தொடர்ந்தது. ஒருபுறம் பணம் பதவி சுகம், மறுபுறம் சொந்தக் கட்சியிலேயே அம்பலப்பட்டு நிற்கும் தலைமை. இதிலிருந்தெல்லாம் தன்னை விடுவித்துக் கொண்டு இழந்த செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டுமெனில் சாதிவெறியைத் தூண்டுவதைத் தவிர்த்து பாமகவினருக்கு வேறு எதும் வழியில்லை என்பதை உணர்ந்ததன் பின்னணியில்தான், இந்தச் சாதிய வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இசுலாமிய, கிறுஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் ‘இந்துக்களின்’ மதவெறியைத் தூண்டி அதை தனது அரசியல் ஆதாயத்துக்காக பாரதிய ஜனதா கட்சி எப்படி பயன்படுத்திக் கொள்கிறதோ, அதே சூத்திரத்தை பயன்படுத்தி தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின் மூலன் சாதிவெறியைத் தூண்டி பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் ஆதாயமடைகிறது. தேசியக் கட்சியான மதவெறி பாஜகவும், மாநிலக் கட்சியான சாதிவெறி பாமகவும் இணையும் புள்ளி இதுவே! இந்த அடிப்படையில்தான் அந்த கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட இயற்கைக் கூட்டணி அது! சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேர்தல் அரசியல் பாதை நிச்சயம் தீர்வல்ல!

திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலைக் கண்டித்து ஜனநாயக முற்போக்குவாதிகள் குரல் கொடுக்க வேண்டும். வன்னிய சாதி வெறியை அம்பலப்படுத்த வேண்டும். இன்னும் குறிப்பாக ஆதிக்க சாதியில் உள்ள ஜனநாயகவாதிகள் தாங்களாகவே முன்வந்து இந்த வன்முறையை கண்டிக்க வேண்டும். இந்த வன்முறையை எதிர்த்து போராடுபவர்களுடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி களத்தில் நிற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு : 9444442374

கல்வியைத் திணிக்கும்போது அதன்பால் ஈர்ப்பு வராது !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பகுதி-01

எதிர்கால மனிதன்

“செப்டெம்பர் 1-ம் தேதி பள்ளிக்கு வந்து குழந்தைகளைச் சந்திக்கும் போது நான் சாகா வரம் பெற்றவள் என்று தோன்றுகிறது” என என் தோழியும் சக ஊழியருமான தினாதீன் மிஹைலவ்னா கிலாஷ்வீலி கூறினார். உண்மையில், ஆசிரியரால் தன் மாணவர்களின் மனதில் அன்பை ஊட்டி மனித நலன்களின்பால் இவர்களது இதயம் அக்கறை காட்டும்படி செய்ய முடிந்தால், சாகாவரம் பெறும் உரிமை இவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று நான் அப்போது நினைத்தேன். உண்மையான ஆசிரியர்கள் இறப்பதில்லை, இவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகளில் கரைந்து அவர்களை உயர்ந்த லட்சியங்களை உடைய நபர்களாக மாற்றுகின்றனர்.

இன்று செப்டெம்பர் 1-ம் தேதி, நான் பெருமிதம் அடைகிறேன். 20-ம் நூற்றாண்டின் 80-ம் ஆண்டுகளின் சோவியத் ஆசிரியர் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; நாளைய தினத்தைப் பற்றிய கற்பனையை குழந்தைகளின் மனதில் மூட்டி விட்டு, நாளைய வாழ்க்கையின் தெளிந்த, ஒளிமயமான, மகிழ்ச்சிகரமான ஓடையை இன்றைய தினத்தின் மகிழ்ச்சியிலும் முயற்சிகளிலும் திறந்து விடுவதற்காக இவர் வந்துள்ளார் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

படிக்க :
♦ ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !
♦ ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு !

அதிகாலையில் நான் பள்ளிக்குக் கிளம்புகிறேன். பள்ளி என் வீட்டிற்கு அருகாமையில் உள்ளது. இன்று கால் நடையாகச் செல்வதே நல்லது. முதலில், இன்னமும் நேரமுள்ளது, இரண்டாவதாக, சிறிது சிந்திக்க வேண்டியுள்ளது.

நான் குழந்தைகளைப் பார்த்ததும் முதன் முதலாக உச்சரிக்க வேண்டிய சொற்கள் எவை? ”குழந்தைகளே, வணக்கம்!” என்று சொல்ல வேண்டுமென்பது நான் நீண்ட காலத்திற்கு முன்னரே கண்டுபிடித்த விஷயம். 170 பாட நாட்கள் என் வகுப்பில் உண்டு. ஒவ்வொரு நாளும் காலையில் வகுப்பறையில் நுழையும் போது ”குழந்தைகளே, வணக்கம்!” என்று சொல்வேன்.

”வணக்கம்” எனும் சொல்லை இரக்கமாக அல்லது அன்பை வெளிப்படுத்தும் முறையில் ஒருவரிடம் சொல்லிப் பாருங்கள், வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட்ட ஒரே சொல் மனிதர்களின் உறவை எப்படி மாற்றுகிறது என்று நீங்கள் உணருவீர்கள்.

வெறும் வார்த்தைகள் ஒருபுறமிருக்க, நான் எப்படி இவற்றைச் சொல்லுகிறேன், என் முகபாவம் எப்படியுள்ளது என்பது முக்கியமானது. என் குரல் அன்பானதாக, கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும். என் முகபாவம் குரலுக்கேற்றபடி இருக்க வேண்டும். எல்லாம் புரியும்படி இருந்தாலும் நடைமுறையில் எல்லாமே இது போல் நடக்கிறதென்று நான் நம்பவில்லை. சில சமயங்களில் மிகக் கறாராக, காரியரீதியில் என் குரல் ஒலிக்கும், சில சமயம் மிதமிஞ்சிய உற்சாகத்துடன் ஒலிக்கும், சில நேரங்களிலோ ஏனோ தானோவென்று இருக்கும் (இதை ஒப்புக்கொள்ளக்கூட வெட்கப்படுகிறேன்). இந்த சமயங்களில் எனக்குத் திருப்தி இருக்காது.

முகமன் கூறும் சாதாரண வார்த்தைகளை உச்சரிப்பது சம்பந்தமாக வெறுமனே மண்டையை போட்டுக் குழப்பிக் கொள்வது ஒருவேளை அவசியமில்லையோ? ஒருவேளை இதில் ஆசிரியரின் பிரச்சினை எதுவுமே இல்லையோ? ”குழந்தைகளே, வணக்கம்!” என்று நான் அன்றாடம் எப்படிக் கூறுகிறேன் என்பது அவர்களுக்கு முக்கியமில்லையோ! ஒருமுறை இப்படிப்பட்டதொரு சம்பவம் நிகழ்ந்தது. நான் நடத்திய ஒரு வகுப்பிற்கு 15 ஆசிரியர்கள் வந்திருந்தனர்.

மேற்கூறியவாறு முகமன் கூறி நான் பாடத்தை துவக்கினேன், நான் விரும்பிய விசேசமான வகையில் இவ்வார்த்தைகளை உச்சரித்ததை உணர மகிழ்ச்சியாக இருந்தது. பாடம் முடிந்ததும் நான் ஒவ்வொருவரையும் அணுகி “குழந்தைகளே, வணக்கம்! என்பதை நான் எப்படிக் கூறினேன் கவனித்தீர்களா? இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டேன். அவர்களால் ஒன்றுமே கூற இயலவில்லை, நான் என்ன சொன்னேன் என்பதைக் கூட சரிவர நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. ”சாதாரண முகமன், இதிலென்ன விசேசம்?…” என்று அவர்கள் புரியாமல் கேட்டார்கள். முகமன் கூறுவதில் உள்ள விசேசமான – கவர்ச்சிகரமான, அன்பான, மன உற்சாகத்தை அதிகப்படுத்தக் கூடிய, மகிழ்ச்சிகரமான தொனியை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் முறையாகப் பயிற்றுவிக்க முடியாதா என்ன? என்று நான் ஆச்சரியப்பட்டேன். ”வணக்கம்” எனும் சொல்லை இரக்கமாக அல்லது அன்பை வெளிப்படுத்தும் முறையில் ஒருவரிடம் சொல்லிப் பாருங்கள், வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட்ட ஒரே சொல் மனிதர்களின் உறவை எப்படி மாற்றுகிறது என்று நீங்கள் உணருவீர்கள்.

“குழந்தைகளே, வணக்கம்!” என்று எப்படி முகமன் கூறுவது எனும் பிரச்சினை ஒரு தீவிரமான ஆசிரியர் பிரச்சினையாகும். என்னைப் பொறுத்தமட்டில் எப்போது இதை எப்படி, எந்த முக பாவத்தோடு சொல்லுவது என்பது முக்கியமாகும். ஏனெனில் எனக்கு இப்படிப்பட்டதொரு உறுதி மொழி உண்டு:

குழந்தைகளின் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்த நான் விரும்பினால் நான் இதை மிகச் சிறந்த வடிவங்களில் செய்ய வேண்டும்.

தெருவில் போகும்போது நான் இதைப் பயிற்சி செய்ய முயலுகிறேன். ”குழந்தைகளே, வணக்கம்!” என்று முறுமுறுத்தபடியே இந்த முறுமுறுப்பைக் கேட்கிறேன். என் முன் குழந்தைகள், யாருமில்லாததால்தான் இது சரியாக வரவில்லை போலும். இவர்களைக் கற்பனை செய்து கொள்ள வேண்டும்: இதோ என் வகுப்பு, நான் இதில் நுழைகிறேன், குழந்தைகள் என்னை ஆர்வத்துடன் பார்க்கின்றனர், நான் அனைவரையும் பார்த்துப் புன்முறுவல் பூத்தபடியே ”குழந்தைகளே, வணக்கம்!” என்கிறேன். அது சரி, இந்த வழிப்போக்கர் ஏன் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்?…

முதல் பாடவேளையின் போது நான் என்ன செய்யப் போகிறேன்? ஒருவேளை இதுவும் பிரச்சினை அல்லவோ?

முதல் பாடவேளையின் போதும், பிந்தைய பாடங்களின் போதும் படிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் மக்களின் வாழ்க்கையில் ஞானத்தின் அவசியம் பற்றியும் நான் குழந்தைகளுக்கு ஒன்றும் சொல்லப் போவதில்லை. பள்ளியிலும் வகுப்பிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை அவர்களுக்குச் சொல்லித் தரப் போவதில்லை. இப்போதுதான் பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளுக்குப் படிப்பின் முக்கியத்துவம், ஞானத்தின் அவசியம் பற்றிச் சொல்வது தேவையில்லை. இதைப் பற்றிப் பொதுவில் சொல்வதே அவசியமா? சமுதாய வாழ்வில் ஞானம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் தெட்டத் தெளிவாக இருக்கையில் இதை-அதுவும் ஆறு வயதுக் குழந்தைகளின் மத்தியில்-சந்தேகத்திற்கு உள்ளாக்க வேண்டுமா என்ன? கல்வி கற்க வரும்படி அவர்களுக்கு அறைகூவல் விடவேண்டாம், தம் இயல்பினாலேயே அவர்கள் கல்வியின் பால் ஈர்க்கப்படுகின்றனர். அவர்கள் மீது கல்வியைத் திணித்து, அதே சமயம் ”இது அவசியம்” என்று வற்புறுத்தும்போது இந்த ஈர்ப்புச் சக்தி பாதிக்கப்படும்.

கல்வி கற்க வரும்படி அவர்களுக்கு அறைகூவல் விடவேண்டாம், தம் இயல்பினாலேயே அவர்கள் கல்வியின் பால் ஈர்க்கப்படுகின்றனர். அவர்கள் மீது கல்வியைத் திணித்து, அதே சமயம் ”இது அவசியம்” என்று வற்புறுத்தும்போது இந்த ஈர்ப்புச் சக்தி பாதிக்கப்படும்.

பள்ளியிலும் வகுப்பிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பொறுத்தமட்டிலும் இப்பேச்சு எதைச் செய்யக் கூடாது, கடமைகள் என்ன என்ற பட்டியலுடன் முடியும்; மறுநாள் குழந்தை பள்ளிக்கு வராமலிருக்கத் தயங்கமாட்டான். எனது மாணவன் ஒவ்வொருவனும் தன் வயதையொத்த மாணவர்களின் மத்தியில் பழகும்போது எப்படிப் பழகுவது என்பதையும், சமுதாயத்தில் தன் நடத்தை முறைகளையும் தானே முடிவு செய்ய வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். தானே என்று நான் சொல்லும்போது நான் கடைப்பிடிக்கும் போதனா முறையை நான் குறிப்பிடுகிறேன்; இது சுயமான தார்மிக, அழகியல் முடிவுகளுக்கு குழந்தையை இட்டுச் செல்லும்.

சரி, அப்படியெனில், முதல் பாடவேளையின் போது நான் எதைப் பற்றிப் பேசுவேன்? என் பெயரைக் கூறுவேன், அவர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலோடு காத்திருந்ததாகச் சொல்லுவேன். பின்னர், அவர்களும் பாடம் படிக்கத் துடிப்பதால், ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காது உடனடியாக விசயத்திற்கு வருவோம். பாடத்தின் இறுதியில் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொள்ளுமாறு முன்மொழிவேன். கடைசி பாடவேளையின் போது பின்வரும் கேள்விகளைக் கேட்பேன்: “உங்களில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்று என்ன முக்கிய சம்பவம் நடந்தது? பள்ளியில் உங்களை என்ன விசயங்கள் எதிர்நோக்கியுள்ளன?” இக்கடைசிக் கேள்வியை நான் கேட்டதும், பல்லாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் என் நெஞ்சில் நிழலாடும்; அப்போது ஒரு ஆறு வயதுச் சிறுவன் தன்னிடத்திலிருந்து துள்ளி எழுந்து உற்சாகமாக, கருத்தாழத்தோடு “பெரிய, மிகப் பெரிய விசயங்கள் எதிர்நோக்கியுள்ளன!..” என்று பதில் சொன்னான்.

படிக்க:
மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை
50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு!

என் சிந்தனைகள் அறுபடுகின்றன. திபிலிசி நகரில் உள்ள 1-வது எண் பள்ளியின் மூன்றாவது மாடிக்கு நான் ஏறிச் செல்கிறேன். அங்குதான் என் அறை உள்ளது. எனது ஆறு வயதுக் குழந்தைகள் அருகேயுள்ள வகுப்பறையில் உட்கார்ந்து படிப்பார்கள், மகிழ்வார்கள், கும்மாளம் அடிப்பார்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !

மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.72,000/- நிதியுதவி வழங்கும் அறிவிப்பை காங்கிரசு கட்சி வெளியிட்டவுடனேயே, “அது எப்படி சாத்தியம்? அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது? இதனால் நாட்டின் நிதிப்  பற்றாக்குறை அதிகரித்துவிடாதா?” என்றெல்லாம் பா.ஜ.க.வும், வலதுசாரி பொருளாதார நிபுணர்களும் மூக்கைச் சிந்தத் தொடங்கிய அதேசமயத்தில்தான், ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஏறத்தாழ 10,000 கோடி ரூபாயைச் சுளையாகத் தூக்கிக் கொடுத்தது, பா.ஜ.க. அரசு.

அத்தனியார் நிறுவனத்தின் பெயர் ஜெட் ஏர்வேஸ். அந்நிய நிறுவனம் என வரையறுப்பதற்குத் தகுதியான ஜெட் ஏர்வேஸுக்கு இவ்வளவு பெரிய தொகையை அரசாங்க மொய்யாகத் தூக்கிக்கொடுத்த கயவர்கள், இல்லையில்லை, காவலாளிகள் நரேந்திர மோடியும் அருண் ஜேட்லியும். மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் இந்தச் சுமையை சுமந்து கொண்டிருப்பவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் : அபுதாபியைச் சேர்ந்த எதிஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் ஹோகன் (இடது) மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியரான நரேஷ் கோயல்.

பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் வாராக் கடன் பிரச்சினையால் ஏற்கெனவே பெரும் நட்டங்களைச் சந்தித்துவரும் வேளையில், ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு, ஒன்றல்ல,  இரண்டல்ல, 10,000 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்கலாமா என  எந்தவொரு பொருளாதார நிபுணனும் கேள்வி எழுப்பவில்லை.

ஏழைகளுக்கு நிதியுதவியோ, மானிய உதவியோ அளிக்கும்போதெல்லாம் நிதிப் பற்றாக்குறை என்ற பூச்சாண்டியைக் காட்டிப்  பயமுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் நிபுணர் கும்பல், கார்ப்பரேட் நிறுவனத்திற்குப் படையல் இடப்பட்ட இந்தக் கறி விருந்தை கண்ணை மூடிக்கொண்டு வரவேற்றிருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏறத்தாழ 8,400 கோடி ரூபாய் அளவிற்குக் கடன்களைத்  திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. அதற்குரிய வட்டியைக்கூடக்  கட்டமுடியாமல் அந்நிறுவனம் திவால் நிலையை நோக்கிச் சென்று  கொண்டிருந்தது. கடன் தவணைகளை முறையாகச் செலுத்தத் தவறும்  நிறுவனங்களை வாராக் கடன் நிறுவனங்களாக வரையறுத்து, திவால் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து, அந்நிறுவனங்களை ஏலத்தில் விற்று வங்கிகள் தமது கடன் நிலுவைகளை வசூலித்துக் கொள்ளலாம் எனக்  கூறுகிறது, புதிய திவால் சட்டம்.

இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தவரே மோடிதான். இப்புதிய திவால் சட்டத்தால் வங்கிகளின் வாராக்  கடனெல்லாம் வசூலாகிவிடும் எனத் தம்பட்டம் அடித்துவருவதும் பா.ஜ.க. அரசுதான். ஆனால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவராமல் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறது, மோடி-அருண் ஜேட்லி கும்பல்.

இதுவொருபுறமிக்க, ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தனது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அந்நிய நாடுகளுக்குக் கடத்தியது குறித்தெல்லாம் பிரதமர் அலுவலகமே ஒரு விசாரணையை நடத்தி வந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அக்குற்றச்சாட்டுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஜெட் ஏர்வேஸுக்கு வங்கிப் பணத்தைத் தூக்கிக் கொடுத்திருக்கிறார்,  காவலாளி மோடி.

ஜெட் ஏர்வேஸுக்குச் சட்டவிரோதமாக அளிக்கப் பட்டிருக்கும் இந்தச் சலுகையை மோசடி, ஊழல் எனக் குற்றஞ்சுமத்த முடியும். ஆனால், ஒவ்வொரு குற்றவாளியும் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு துயரக் கதையைச் சொல்லுவது போல, மோடி கும்பலும் சட்டத்தை மீறி அளிக்கப்பட்ட இந்தச் சலுகையை நியாயப்படுத்த தொழிலாளர் நலன் என்ற முகமூடியை மாட்டிக் கொண்டது.

பழைய திருடனும் புதுத் திருடனும் : விஜய் மல்லையாவுடன் நரேஷ் கோயல்.

ஜெட் ஏர்வேஸைத் திவாலாக அனுமதித்தால், அதனை நம்பியிருக்கும் 16,000 பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், அந்நிறுவனத்திற்குக் கடன்கொடுத்த ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட வங்கிகளையே அந்நிறுவனத்தைத் தத்தெடுக்கக் கட்டளையிட்டு, அந்நிறுவனத்தில் மேலும் 1,500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடும் செய்ய வைத்து, அந்நிறுவனத்தை பா.ஜ.க. அரசு காப்பாற்றியிருப்பதாக ஒரு உருக்கமான கதையைப் புனைந்து  உலவவிட்டிருக்கிறது, மோடியின் கைக்கூலி கும்பல்.

காவலாளி மோடியின் இந்தக் கருணையால் நேர்ந்த  விளைவு என்ன? பொதுத்துறை வங்கிகள் ஜெட் ஏர்வேஸுக்குக் கொடுத்த கடன்கள் இப்பொழுது பங்குகளாக மாற்றப்பட்டு, அவ்வங்கிகளின் தலையில் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இப்பொழுது  ஜெட் ஏர்வேஸின் பெரும்பான்மையான பங்குதாரர்கள், அதாவது முதலாளிகள் ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள்தான். வங்கித் தொழில் செய்து வரும் வங்கி நிர்வாகிகள் இப்பொழுது ஜெட் ஏர் வேஸை இயக்கி, அதனை இலாபத்தில் நடக்க வைத்து, அதன் பின்னர் தமது கைவசமுள்ள பங்குகள் மற்றும் புதிதாகப் போட்ட முதலீடு, ஆக மொத்தம் 10,000 கோடி ரூபாயை வேறு முதலீட்டாளர்களுக்கு விற்றுத் தமது கடன்களையும் வட்டியையும் ஈடுகட்டிக் கொள்ள வேண்டும்.

வங்கிக் கடனைத் திருப்பித் தராமல் நாமம் போட்ட  விஜய் மல்லையாவையும், நிரவ் மோடியையும் வெளிநாடுகளுக்குத்  தப்ப வைத்து, அவர்களை மோடி கும்பல் காப்பாற்றினாலும், இன்னொருபுறத்தில், “தப்பி ஓடிய அந்த மோசடியாளர்களை விட்டேனா  பார்!” என்று நாடகமாடவும் வேண்டியிருந்தது. அவர்களும்கூட  வெளிநாடுகளில் வழக்கு, வாய்தா எனத் தொல்லைகளைச் சந்திக்க  வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட தொந்தரவுகள் எதுவும் நேர்ந்துவிடாமல், மிகச் சாதுர்யமாக ஜெட் ஏர்வேஸின் முதன்மைப் பங்குதாரர்களான நரேஷ் கோயலையும், எதிஹாட் நிறுவனத்தையும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து காப்பாற்றிவிட்டார், காவலாளி மோடி.

படிக்க:
♦ கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி
♦ நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !

வெளிநாட்டு வாழ் இந்தியரான நரேஷ் கோயலும்  அபுதாபியைச் சேர்ந்த எதிஹாட் நிறுவனமும் இப்பொழுது ஜெட்  ஏர்வேஸில் சிறுபான்மை பங்குதாரர்களாகிவிட்டனர். மேலும், நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸின் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.  அவரது மனைவி அனிதா கோயல் இயக்குநர் குழுமத்திலிருந்து விலகி விட்டார். இவையெல்லாம் தண்டனையா, தியாகமா அல்லது  இரண்டும் கலந்ததா?

வங்கிக் கடனை வாங்கிப் போட்ட நரேஷ் கோயல் இலண்டனில் ஹாயாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருக்க, கடன் கொடுத்த வங்கிகளோ புதிய முதலீட்டாளர்களை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கின்றன.

***

விமான எரிபொருள் விலை உயர்வும், அத்துறையில் நடந்துவரும்  கழுத்தறுப்புப் போட்டியும்தான் ஜெட் ஏர்வேஸை நட்டத்தில் தள்ளிவிட்டுவிட்டதாகவும், இல்லையென்றால் நரேஷ் கோயலைப் போல யோக்கியமான முதலாளியைப் பார்க்கவே முடியாதென்றும் கூறி, நரேஷ் கோயலைக் கடனைத் திருப்பிச் செலுத்தாத குற்றத்திலிருந்து காப்பாற்றிவிடத் துடிக்கிறார்கள், பொருளாதார நிபுணர்கள்.

ஜெட் ஏர்வேஸ் மீது நிதிக் கையாடல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், ஜெட் ஏர்வேஸ் நட்டமடைந்ததற்கு நிபுணர்கள் கூறும் காரணம் நம்பத்தகுந்ததாக இல்லை. எனினும், இத்தகைய பாரதூரமான நிலையை எதிர்கொண்டது நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் மட்டும்தானா?

ஜெட் ஏர்வேஸைப் பொதுத்துறை வங்கிகளின் தலைமையில் கட்டிய ‘காவலாளிகள்’ நரேந்திர மோடி மற்றும் அருண் ஜேட்லி.

நரேந்திர மோடி அரசு  ஏவிவிட்ட எரிபொருள் விலை உயர்வாலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையாலும், ஆட்கொல்லி மிருகம் போன்ற ஜி.எஸ்.டி. வரி  விதிப்பாலும் ஆயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் அழிவிற்குள் தள்ளப்பட்ட போதெல்லாம் மோடிக்கும் சரி, இந்த நிபுணர்  கூட்டத்திற்கும் சரி இரக்கம் கசிந்ததேயில்லையே! மாறாக, சந்தையின்  ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என வக்கணை  பேசியவர்கள், பாதிக்கப்பட்டிருப்பது கார்ப்பரேட் முதலாளி என்றவுடன் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார்கள்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் பல்லாயிரக் கணக்கான சிறுதொழில்களும் விவசாயிகளும் அழிவின் விளிம்பில்  நிறுத்தப்பட்டபோது, அவர்களுக்கெல்லாம் நிதியுதவியோ, கடனோ,  நிவாரணமோ அளிக்க மறுத்த மோடி, நாடெங்குமுள்ள விரைவுச்  சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் குத்தகை எடுத்திருந்த  கார்ப்பரேட் நிறுவனங்கள் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் நட்டமடைகின்றன என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அந்நிறுவனங்களுக்கு நட்ட ஈடு அளிக்க உத்தரவிட்டார். ஏழை பங்காளன் என்றும், டீ வித்தவன் என்றும், காவலாளி என்றும் வேடம் போட்டுத்  திரியும் மோடியின் உண்மை முகம் இது.

16,000 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜெட் ஏர்வேஸைக் கைதூக்கிவிட்டாராம் மோடி!  யாரிடம் காது குத்துகிறார்கள் இவர்கள்? இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர்  இந்தியா நிறுவனங்களை ஒன்றாக இணைத்தபோது, நூற்றுக்கணக்கான பணியாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் உருவானதே,  அப்பொழுது வராத கருணை, இப்பொழுது வந்ததன் காரணம் என்ன? பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைச் சேர்ந்த ஐம்பதாயிரத்துக்கும்  மேற்பட்ட தொழிலாளர்களுக்குக் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு  அனுப்பத் திட்டமிட்டு வரும் மோடி அரசு, ஜெட் ஏர்வேஸ் பணியாளர்கள் மீது மட்டும் கருணை காட்டுவதன் இரகசியம் என்ன?

விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தைப் பறித்து, அவர்களின் எதிர்காலத்தைச் சூனியமாக்கி எட்டுவழிச் சாலை அமைக்கத் துடித்தவர்கள், ஜெட் ஏர்வேஸ் பணியாளர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை காட்டவேண்டிய அவசியம் என்ன? பன்னாட்டு மூலதனத்தின்  நலன்களுக்காக 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கில் போட பரிந்துரைத்த பா.ஜ.க., நிரந்தர வேலைவாய்ப்பு என்பதே இருக்கக்கூடாது  என்ற நோக்கில் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்திவரும் மோடி அரசு, ஜெட் ஏர்வேஸ் பணியாளர்களின் பணிப் பாதுகாப்புப் பற்றிக் கவலை கொள்கிறதாம், அதனை நாம் நம்ப வேண்டுமாம்!

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் அபரிதமான வரிச் சலுகைகளும், மானியங்களும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற சாக்குபோக்குகளைக் கொண்டு நியாயப்படுத்தப்படுவதைப் போல, தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு அரசுப் பணத்தை மொய்யாக எழுத பயிர்க் காப்பீடு,  மருத்துவக் காப்பீடு திட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதைப் போல, ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயலையும் எதிஹாட் நிறுவனத்தையும் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து காப்பாற்ற பணியாளர்களின் எதிர்காலம் என்ற சாக்கைக் காட்டுகிறார்கள்.

“பொது நலன் கருதி எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான முடிவு இது” எனக் கூறிப் பொதுத்துறை வங்கிகளைப் பாராட்டியிருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அது என்ன பொதுநலன்? ஜெட் ஏர்வேஸைத் திவாலாக அனுமதித்திருந்தால், விமான பயணக் கட்டணங்கள் அதிகமாகி, பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியிருப்பார்களாம். பொதுத்துறை வங்கிகளின் முடிவு அந்த துரதிருஷ்டமான நிலைமை உருவாகாமல் தடுத்துவிட்டதாம்.

படிக்க:
♦ ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !
♦ மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !

ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பயணம் செய்யும் ரயில் கட்டணங்களைப் பகற்கொள்ளை அளவிற்கு உயர்த்தி வரும் மோடி அரசு, மேட்டுக்குடி மற்றும் கார்ப்பரேட் கும்பலுக்கு  மலிவான விமானப் பயணம் கிடைப்பதற்குப் பொதுப்பணத்தை  வாரியிறைக்கிறது. அதேசமயம், ஏழை, நடுத்தர மக்களிடம், “உரிய கட்டணம் செலுத்தித்தான் சேவைகளைப் பெற வேண்டும். எதையும்  இலவசமாகத் தர முடியாது” என உபதேசிக்கிறது.

மோடி ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகளுக்காகப் பொதுப் பணம் சூறையாடப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. ஜெட் ஏர்வேஸுக்கு முன்பாக, ஐ.எல். எஃப். அண்ட் எஸ். என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் திவாலாகும் அபாயத்தில் சிக்கியிருந்தபோது, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பணம்  அந்நிறுவனத்தில் கொட்டப்பட்டது. வாராக் கடன் பிரச்சினையால் திவாலாகிப் போன ஐ.டி.பி.ஐ. வங்கியை ஆயுள் காப்பீட்டு நிறுவனம்தான் மூலதனத்தைப் போட்டுக் காப்பாற்றியது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 2,41,000 கோடி ரூபாய் பெறுமான வாராக் கடன்களைப் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக  நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்திருக்கிறது.

மோடி அரசு பதவியேற்றபோது 2,19,000 கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன், அவரது நான்கு ஆண்டு கால ஆட்சியின் முடிவில், அதாவது மார்ச் 2018-இல் 8,97,000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்த வாராக் கடன் சுமையைச் சமாளிக்கப் பொதுத்துறை வங்கிகள் தமது இலாபத்திலிருந்து 6,67,001 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளன.

புதிய திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்ததன் மூலம் பொதுத்துறை வங்கிகள் அடைந்துள்ள நட்டம் 84,585 கோடி ரூபாய்.

இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கெல்லாம் அப்பால், கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக, கடந்த ஐந்தாண்டுகளில் மைய அரசிற்கு  ஏற்பட்ட வருவாய் இழப்பு (revenue foregone) ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாய். அரசின் இழப்பு, முதலாளிகளுக்கு வரவு!

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட்  நிறுவனங்களைத் திவால் சட்டத்தின் கீழ் ஏலத்தில் விடவேண்டும்  என்றும் அந்நிறுவனங்களின் கடன்களை மறுசீரமைப்பு செய்யக்கூடாதென்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் திரும்பப் பெறக்  கோரிய மோடி அரசு, அவரைக் கட்டாயப்படுத்திப் பதவிவிலக வைத்தது.

அவர் வெளியேற்றப்பட்ட பிறகு, மோடியின் பண மதிப்பழிப்பு நடவடிக்கையைப் பலவாறாக முட்டுக்கொடுத்துவந்த சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். சக்திகாந்த தாஸின் நிர்வாகத்தின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களை மறுசீரமைப்பதையும் தாண்டி, திவாலாகக்கூடிய நிறுவனங்களைப் பொதுத்துறை வங்கிகளின் தலையில் சுமத்தும் திருப்பணி  தொடங்கப்பட்டிருப்பதை ஜெட் ஏர்வேஸ் விவகாரம் எடுத்துக் காட்டுகிறது.

நட்டத்தில் இயங்கிவரும் அல்லது திவாலாகக்கூடிய நிலையில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டப்படுவது ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்தில் நல்ல இலாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மிக வேகமாகத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில் மட்டும் 85,000 கோடி ரூபாய் அளவிற்குப் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன என்றும், இது இலக்கை மிஞ்சிய சாதனையென்றும் ஆனந்தக் கூத்தாடி அறிக்கைவிட்டிருக்கிறார், அருண் ஜேட்லி.

நாட்டின் பொதுச் சொத்துக்களை, பொதுப் பணத்தைத் தனியார் முதலாளிகளுக்குப் பங்கு போட்டு பிரித்துக் கொடுக்கும் பா.ஜ.க. தலைவர்கள், தங்களைக் காவலாளிகள் எனத் தமக்குத்தாமே அடை மொழி போட்டு அழைத்துக் கொள்கிறார்கள். மோடியின் ஆட்சியில் திருடர்கள் காவலாளியாகிவிட்டார்கள்; எனவே, திருட்டு சட்டபூர்வமாகிவிட்டது. பொதுப் பணத்தைத் திருடுவது சட்டபூர்வமாகிவிட்டதால், ஊழலும் ஒழிக்கப்பட்டுவிட்டது!

ஆர்.ஆர்.டி.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?

சிரிசேன, ஓடியாடித் திரியும் ஐந்து வயது சுட்டிப்பையன். நல்ல புத்திசாலி, அது போலவே மிகவும் குறும்புக்காரன். வழமையாக போய் வருகின்ற அவனது மொன்ரிஸரியிலே (மழலையர் பள்ளி) ஒருநாள் திடீரென மயங்கி விழுகிறான்.  அதனால் அவனை உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கின்றார்கள்.

அனுமதிக்கப்பட்ட நேரம் முதல் அவனுக்கு வலிப்பு (seizures)  வரத் தொடங்குகிறது. அந்த வலிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டும் அதனை நிறுத்த முடியவில்லை. பல மணிநேர அயராத போராட்டத்திற்குப் பின் நான்கு வகை வலிப்பு நிவாரணிகளை இரத்தம் வழியாக செலுத்தி அந்த வலிப்பு நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

இப்படி எல்லா முயற்சிகள் செய்தும், இரண்டு நாட்கள் கடந்தும் அந்த துடிதுடிப்பான பையன் எழுந்திருக்கவேயில்லை, பேசவுமில்லை, கதைக்கவுமில்லை. ஒரு ஜடமாக  கட்டிலோடு ஆகிவிட்டான். இது என்னவாயிருக்கும் எதனால் வந்தது என்று வைத்தியர்கள் எல்லாம் மூளையை பிழிந்து விவாதித்து கொண்டிருக்கும் பொழுது அவனது  MRI, EEG போன்ற பரிசோதனை முடிவுகளும் வந்து கொண்டிருந்தன. எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். ஏனெனில் இவைகள்  எல்லாமே  எப்போதோ எங்கோ கேள்விப்பட்ட ஒரு நோயின் அறிகுறிகளை சுட்டி நின்றன.

அது தான்  Subacute Sclerosing Panencephalitis (SSPE)  எனப்படும்  ஒரு வகை மூளை அழற்சி நோய். இதனால் மூளை வெகுவாக பாதிக்கப்பட்டு மெதுவாக அழிந்தும் வருகிறது.  இனி இவன் எழுந்து நடப்பான், பேசுவான்  என்பதெல்லாம் சந்தேகமே.

இது என்ன நோய்?  எதனால் ஏற்பட்டது? என்ற காரணங்களை தெரிந்து கொள்ள ஆவலாய்  இருக்கும், உங்களுக்கு.  இந்த நோய் அச்சிறுவனுக்கு  ஏற்படக் காரணம் ஒன்பது மாதத்தில் போட வேண்டிய ஒரு தடுப்பூசி (வக்சீன்)  போடாததுதான் என்றால் ஆச்சரியமாக  இருக்கிறதல்லவா.?  சிறுவர்களுக்கு பொதுவாக ஏற்படுகின்ற மீசல்ஸ் Measles  எனப்படும் தட்டம்மை நோயின் தாக்குதலிற்கு பின்னால் மிக  நீண்ட காலத்திற்குப் பின் சுமார் நான்கு, ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெகு அரிதாக வருகிற  பாரிய தீர்க்க முடியாத சிக்கலான விளைவுதான் (complication) இந்த SSPE. இது ஒரு கொடிய நோய் நிலை, அதி பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

இதன் மூலம் முற்றாக மூளை அழற்சி  ஏற்பட்டு அந்த குழந்தை நடக்க முடியாமல்,  எழும்ப முடியாமல் அப்படியே ஒரு ஜடமாக மாறிவிடுவதும் அதன்பின் தீர்க்க இயலாத நிலையில் உயிரிழந்து விடுவதும்தான், இதில் உள்ள ஆகப்பெரிய ஆபத்தாக  இருக்கிறது. இன்றைய தேதி வரை இந்த நோய்க்கு எந்த விதமான குணப்படுத்தும் மருந்துகளும் கிடையாது என்பதுதான் மற்றுமொரு கவலையான விஷயம். ஆனால் இந்த நோய் வராமல் தடுப்பதற்கு ஒரே ஒரு உபாயம் உண்டு. அதுதான் மீசல்ஸ்  வராமல் தடுப்பது என்ற நம்பிக்கை ஊட்டும் செய்தி. இந்த மீசல்ஸ் வராமல் தடுப்பதற்கான மிகச்சிறந்த ஒரே வழி மீசல்ஸ் அல்லது MMR எனும் தடுப்பூசியை உரியகாலத்தில் போட்டுக்கொள்வது மாத்திரமே.

படிக்க:
தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
♦ நவீன மருத்துவம் எப்படி சரியானது ? | மருத்துவர் அர்சத் அகமத்

இன்றைக்கு சுமார்  ஐந்து வருடங்களுக்கு முன் இலங்கை முழுவதும் இந்த நோய் பரவியது. அதற்கு காரணம் இலங்கையில் அந்த மீசல்ஸ் வக்சீன் ஏற்றுவதில் ஏற்பட்ட ஒரு சிறு தாமதமும் குளறுபடியும் அதனால் ஏற்பட்ட வக்சீன் தட்டுப்பாடுமாக அறியப்படுகிறது. மீசல்ஸ் எனப்படும் இந்த நோய் இலங்கையிலே மிகவும் அரிதாகவே காணப்பட்ட ஒரு நோய்.

நான் மருத்துவ பீடத்தில் இருந்த காலத்திலோ அல்லது பயிற்சி வைத்தியராக ஆரம்பத்தில் இருந்த காலத்திலோ இந்த நோயை இலங்கையிலே கண்டது கிடையாது.  அப்பொழுது மீசல்ஸ் என்ற இந்த நோயின் இலட்சணங்களை நாங்கள் புத்தகங்களில் படங்களாக போட்டோக்களாகத்தான் பார்த்திருக்கிறோம். எங்களது மருத்துவ  ஆசிரியர்கள், விஷேட நிபணர்கள் தாங்கள் வைத்தியர்களாக இருந்த ஆரம்ப காலங்களில்  இந்த நோய்களை கண்டதாகவும், அதன்பின்னர் 1984-ம் ஆண்டில்  இந்த நோய்க்கான வக்சின் அறிமுகப்படுத்திய பின்னர் இது முற்றாக மறைந்து விட்டதாகவும் படிப்பித்தது இன்றும் ஞாபகம் இருக்கின்றது.

ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன், 2011-ம் ஆண்டின் இறுதிப்பகுதியில்  இலங்கையின் தடுப்பூசித் திட்டத்தில் ஏற்பட்ட ஒரு சிறு மாற்றத்தின் காரணமாக இந்த measles வக்சீனுக்கு நாட்டிலே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பிறந்த ஆறு மாதம் முதல் ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த மீசல்ஸ் நோய் பரவத் தொடங்கியது. அதுதான் எனது வயதையொத்த வைத்தியர்கள் எல்லாம் முதன்முதலில் மீசல்ஸ் நோயை கண்களால் கண்ட காலப் பகுதியாகவும் இருக்கிறது. அப்பொழுது வைத்தியசாலையின் சிறுவர் வார்டுகள் எல்லாம் மீசல்ஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளால் நிரம்பியிருந்தது.

பிள்ளைகளில் மீசல்ஸ் தாக்கம் என்றால் என்ன ? அது எப்படி ஏற்படுகிறது ? அந்த நோய் தாக்கத்தினால் ஏற்படும் நோய் இலட்சணங்கள் எப்படிப்பட்டது  என்று மருத்துவ புத்தகங்களில் படித்தவைகளையும், கண்டவைகளையும் கண்கூடாகக் கண்டு இது உண்மை, நிதர்சனம் என்பதை ஆகர்ஷிக்க கூடியதாக இருந்ததும் அந்த காலப்பகுதியில்தான். அந்தக் நேரத்தில் எங்களது மூத்த வைத்திய நிபணர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒரு விஷயத்தைச் சொல்லி வைத்தார்கள்.

அதுதான், இன்னும் நான்கைந்து வருடங்களில் இந்த நோயின் அடுத்த நிலையான இந்த SSPE-ஐ நாம் இலங்கையில் சில வேளைகளில் காணக்கூடியதாக இருக்கும் என்று. அந்த ஆருடம் இப்போது உண்மையாகி இருக்கிறது. இந்த வருடத்தில் மாத்திரம் நாங்கள் இதுவரை மூன்று SSPE நோயாளிகளைக் கண்டிருக்கிறோம். அதில் இருவர்  உயிரிழந்து விட்டனர்,  மற்றய மூன்றாவது பிள்ளை இன்றோ நாளையோ என உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் கட்டிலோடு முடங்கிக் கிடக்கிறது .(முழு நாட்டிலும் இதன் தொகை இதை விட பலமடங்காக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்க)

தடுப்பூசிகள் எனப்படும் வக்சீன்கள்  உண்மையிலயே இவ்வாறான தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் என்பதை நான் முதன்முதலில் கண்கூடாக கண்டது இந்த மீசல்ஸ் வக்சீனூடாகத்தான். 2012, 2013-ல் இலங்கை அரசு உடனடியாக வெளிநாடுகளில் இருந்து இந்த தடுப்பூசியை வரவழைத்து குழந்தைகளுக்கு கொடுத்ததன் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த மீஸல்ஸ் முற்றாகவே இல்லாமல் போனது. வக்சீன்கள் நோய்களைக் கட்டுப்படுத்தும், அதன் நன்மைகள் பற்பல என நிறையவே படித்திருந்தாலும், நிறைய விஞ்ஞான ரீதியான கட்டுரைகளை, புள்ளி விவரங்களை வாசித்திருந்தாலும் இவைகள் எல்லாம் எவ்வளவு உண்மை என்பதை விளங்கி கொள்ள  இந்த அனுபவம் ஒரு மிகச்சிறந்ததொரு முத்தாய்ப்பாக இருந்தது.

படிக்க:
50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !
♦ பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

வக்சீன்களால் கட்டுப்படுத்தப்படக்கூடிய இதுபோன்ற பல்வேறு நோய்கள் காணப்படுகின்றன. இவைகள் இன்றைய மருத்துவப் புத்தகங்களில், பாடங்களில் மட்டுமே காணப்படுகின்ற நோய்களாக இருக்கின்றன. இந்நோய்களால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கூட நான் எனது வாழ்நாளில் கண்டது கிடையாது.

கால்கள் இரண்டும் ஊனமாகிவிடுகின்ற, நடக்கமுடியாமல் போகின்ற போலியோ எனப்படுகின்ற நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைக் கூட கண்டது கிடையாது. போலியோ வக்சீன் கொடுப்பதன் காரணமாக அது இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. அது போல பிறந்த குழந்தைகளில் ஏற்படுகின்ற டெடனஸ் (Neonatal Tetanus) எனப்படும் வலிப்பு நோய். பால் குடிப்பதற்கு கூட வாயை திறக்க முடியாமல் இரும்புக் கட்டை போல் குழந்தைகளை ஆக்கி விடுகின்ற இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கூட இப்பொழுது இலங்கையில் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் விசர்நாய்க் கடியினால்  ஏற்படுகின்ற கொடிய நோயாகிய றேபிஸ் (Rabies ) எனப்படுகின்ற நாய் வெறி நோய். நாய் போலவே குரைத்து நாய்போலவே செத்து விடுகின்ற அந்த கொடிய பயங்கரமான நோய். அதனால் பாதிக்கப்பட்ட ஒருவரைக்கூட இது வரை நான் கண்டது கிடையாது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ள மிகச்சிறந்த தடுப்பூசி திட்டம் (Extented Programme of Immunisation). இந்த திட்டத்தின் மூலமாக இவ்வாறான நோய்கள் நம்மை விட்டும் நமது சந்ததிகளை விட்டும் தூரமாகி இருக்கின்றன.

ஆனால் நாம் பல்லாண்டு முயற்சியில், பெரும் பொருட்செலவில், மனித உழைப்பில்  கட்டிக்காத்துவந்த இந்த நோய் தடுப்பு முறைமைகள் பாரிசாலன், ஹீலர்பாஸ்கர், பின்னூரி போன்ற வக்சீன் போத்தல்கள் கருப்பா வெள்ளையா என்று கூட தெரியாத,  அடிப்படை விஞ்ஞானம் தெரியாத இவர்களினால் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதுதான் விந்தையாக  இருக்கிறது.

ஒரு ஆறு மாத காலத்தில் நாட்டில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாட்டின் தாக்கம் எவ்வளவு பெரிய விலையை செலுத்தி இருக்கிறது என்பதற்கு மேலே கூறிய சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டு. அதன் விளைவுகளை, அந்த சாதாரண நோயின் கொடிய  விளைவுகளை இப்பொழுது நாங்கள் கண்டு கொண்டிருக்கிறோம்.

சில வேளைகளில் நீங்கள் சொல்லலாம் சில டொக்டர்மார் (Doctor), ஏன் விஞ்ஞானிகள் கூட வக்சீனுக்கு (Vaccine) எதிராக இருக்கிறார்கள் என்று. உண்மைதான் எந்த ஒரு கருத்திற்கும் இரண்டு கருத்துக்கள் இருப்பது என்பது இந்த உலக நியதி. மனிதன் நிலவில் கால் வைத்தது உண்மையா ? இல்லை ஏமாற்றும் பொய்யா ? பூமி உருண்டையா? இல்லை தட்டையா? இலுமினாட்டிகள் உண்டா? இல்லையா? செப்டம்பர் 11 திகதிய வர்த்தகக் கட்டிடத் தாக்குதலை செய்தது ஒசாமாவா? அமெரிக்காவா?

இப்படி இரண்டு பக்கத்திற்கும் நியாயமான கருத்துக்கள், இரண்டு பக்கதிற்கும் ஆதாரமான தரவுகள் என்பன இன்டர்நெட் முழுக்க பரவிக்கிடக்கின்றன. அதுதான் மனித இயல்பு. இது பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள உண்மை (truth) , உண்மைக்குப் பின்னாலுள்ள உண்மை (post truth) என்பவை பற்றிய புரிதல் அவசியமாக இருக்கிறது. அது போலத்தான் இந்த வக்சீன் பற்றிய எதிர்ப்பு வாதங்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆக அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள், அதில் இது இருக்கிறது, அது இருக்கிறது… என்ற கதைகளை எல்லாம் விட்டுவிட்டு  இது பற்றி நடுநிலையாக சிந்திப்பதற்கு ஒவ்வொரு பெற்றோரும் முன் வரவேண்டும். தடுப்பூசிகள் மிகவும்  பாதுகாப்பானவை. அதுபோல் மிகவும் வினைத்திறனானவை, நோய்களைக் கட்டுப்படுத்த வல்லவை என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். தடுப்பூசிகள், அதன் உருவாக்கம், வரலாறு, அது தொழிற்படும்முறை பற்றி தேவைப்படுவோர் நிறையவே வாசித்து விளங்கிக் கொள்ளலாம். (வேண்டுமானால் இது பற்றி தெளிவாக இன்னுமொரு பதிவில் கலந்துரையாடலாம்.)

உண்மையில்  நீங்கள் வக்சீன் எதிர்ப்புக் (Anti Vaccine ) கொள்கை உள்ளவராக இருந்தால் பின்வரும் வினாக்களுக்கு உங்களிடம் விடை இருக்கிறதா என்பதை உள்ளத்தை தொட்டு கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் தடுப்பூசி கொடுக்காமல் விடுவதால் உங்கள் குழந்தையின் வாழ்க்கையை, எதிர்காலத்தை நீங்கள்தானே  கேள்விக்கு உட்படுத்துகிறீர்கள்.

ஒரு நாள் உங்கள் ஆண்மகன் குழந்தைப்பேறு இல்லாமல் தவிக்கின்ற போது அவனுக்கு சிறு பிராயத்தில் ஏற்பட்ட மம்ஸ் (mumps) எனப்படுகின்ற கூகைக்கட்டு நோய்தான் தனது விந்தணு உற்பத்தியை தடை செய்திருக்கிறது என்று தெரியவந்து,  ஏன் எனக்கு MMR வக்சீன் போடவில்லை என அவன் கேட்டால் அவனிடம் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் ?

அதுபோல் ஒரு பெண் குழந்தை பெரியவளாகி திருமணம் செய்து வாழுகிறபோது தன் வயிற்றில் உருவாகும் குழந்தை ரூபல்லா நோய்தாக்கத்தினால் உடல் அவயங்களை இழந்து, இதயத்தில் துளை ஏற்பட்டு, பார்வைகள் குருடாகிப் பிறக்கப் போவதை அறிந்து ஏன் எனக்கு ருபெல்லா வக்சீன் போடவில்லை என்று கேட்டால் அந்த மகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

விசர் நாய்க்கடி பட்டு உங்கள் உறவினர்களில் ஒருவர் நாய் போல் குரைத்து கொண்டிருப்பதை பார்த்து ஏன் அவருக்கு ரேபிஸ் வக்சீன் (ARV) கொடுக்கவில்லையா என்று யாரும் கேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ?

இப்படி பதில் சொல்ல வேண்டிய நிறைய கேள்விகள்  இருக்கின்றன.
இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இருந்தால், நீங்கள் உறுதியான பதில்களை வைத்திருந்தால் நீங்கள் தாராளமாக தடுப்பூசிகளை கொடுக்காது விடலாம். அல்லது வக்சீன் எதிர்ப்பாளராக இருக்கலாம். இதற்கெல்லாம் பதில் இல்லை என்றால் பேசாமல் வக்சீனை போட்டு விட்டு நடையை கட்டுவதுதான் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

வக்சீன் கொடுக்கமறுத்த அமெரிக்க, தாய்லாந்து பெற்றோரரினால் இப்பொழுது  அந்த பிரதேசத்தில் பரவிவரும் நோய் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் இதை வாசிக்க முடியும்.

-மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL)
Senior Registrar in Peadiatrics, 
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka

50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !

1

மோடி அரசின் மிக மோசமான சீரழிவு அறிவிப்பான பணமதிப்பழிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து ஏராளமான ஆய்வுகள் வந்தபடியே உள்ளன. சமீபத்தில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் 50 லட்சம் மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2000 – 2010-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 2018 -ம் ஆண்டில் வேலையிழப்பு 6% அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை படிப்படியாக உயர்ந்து மோடியின் சர்வாதிகார அறிவிப்பு வந்த 2016-க்கு பின் அது உச்சத்தை எட்டியதாக ஆய்வு கூறுகிறது. ‘இந்தியாவின் பணி நிலைமை 2019’ என்ற அந்த அறிக்கை, இந்தியாவின் பணி மற்றும் தொழிலாளர் நிலைமை ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில், 20-24 வயது வரையான நகர்ப்புற ஆண் மற்றும் பெண்கள், ஊரக ஆண் மற்றும் பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை மிகவும் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த பி. சி. மோகனன், அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஜே. மீனாட்சி ஆகியோர், வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரத்தை தொடர்புடைய அமைச்சகம் வெளியிட மறுப்பதாகக் கூறி, தங்களுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் 65 மில்லியன் (6.5 கோடி) இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் என ஊடகங்களில் கசிந்த அந்த ஆய்வறிக்கை சொன்னது.

நாட்டின்  வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை குறித்து இதுவரை வெளிவந்த புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகளை பகுப்பாய்வு செய்துள்ளது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு.

படிக்க:
மோடி அரசின் புள்ளிவிவர மோசடி ! எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரிகள் விலகல் !
தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !

“கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் தொழிலாளர் சந்தை கடுமையான நெருக்கடியில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் கவனிக்கத்தக்க நான்கு அம்சங்கள்:

  1. எந்த புள்ளிவிவரத்தை ஆராய்ந்தாலும் 2011-ம் ஆண்டுக்குப் பின், பொதுவாக வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
  2. இளைஞர்களில் அதிகம் படித்தவர்கள் பணியில்லாமல் இருக்கிறார்கள்.
  3. இந்த காலக்கட்டத்தில் குறைவாக படித்தவர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள், வேலை வாய்ப்பு குறைக்கப்பட்டிருக்கிறது.
  4. ஆண்களைவிட, பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளது. மேலும், இதனால் தொழிலாளர் ஆற்றல் பங்களிப்பும் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

இந்தியாவின் பணியாற்றும் வயதுள்ள, அதாவது 15-க்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டு 950.8 மில்லியனாகவும்(95.08 கோடி) 2018-ல் அது 983.1 மில்லியனாகவும் (98.31 கோடி) உயர்ந்துள்ளது.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம் பரவலான பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வின் படி, 3.5 மில்லியன் வேலை இழப்புகள் இதனால் ஏற்பட்டன. தொழிலாளர் ஆற்றல் இழப்பு 15 மில்லியனாகவும் குறைந்தது. நான்காண்டுகளைக் காட்டிலும் வளர்ச்சி 6.7% சரிந்தது. பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின்பர் ரூ. 500, 1000 நோட்டுக்களை மாற்றும் பொருட்டு 100-க்கும் அதிகமான மக்கள் இறந்தார்கள். அதே ஆண்டு அக்டோபரில் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஏற்றுமதி 1.2% குறைந்தது என ரிசர்வ் வங்கியின் இணையதளம் கூறுகிறது.

பணக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட பல ஆயிரக்கணக்கான பணி இழப்புகளை ஏற்படுத்தியது பணமதிப்பு நீக்கம். ஒப்பந்த தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ரியல் எஸ்டேட் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. சந்தைகளில் தேவை குறைவு காரணமாக வண்டிகளில் நிரப்பப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி குப்பைக்குச் சென்றன. விலை குறைந்ததோடு, விவசாயிகளையும் அது பாதித்தது.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் வங்கிக் கடன் வளர்ச்சி டிசம்பர் 23, 2016-ன் முடிவில் 5.1% வீழ்ச்சி கண்டதாக சொன்னது. கடன் பெறுவதும் தேவையும் குறைந்த நிலையில், இது 60 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும்.

பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் சிறு மற்றும் குறு தொழில்கள் இன்னமும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.  சமீபத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் இந்த நிறுவனங்களின் கடன் நிலுவைத் தொகை 2018-ம் ஆண்டு இரட்டிப்பாகியுள்ளதாக கூறுகிறது. 2017-ம் ஆண்டு கடன் நிலுவை ரூ. 8,249 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டு ரூ. 16,118 கோடியாக உயர்ந்துள்ளது.

“பண கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட துறைகள் பெரிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமும் பணி ஆற்றலில் 80 சதவீதமும் பங்காற்றுகின்றன. இந்திய சுதந்திரத்துக்குப் பின், இந்தத் துறைகள்  இப்படிப்பட்ட கொள்கை அமலாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என பணமதிப்பு நீக்கம் குறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் மைத்திரீஷ் கட்டக் தெரிவிக்கிறார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், பணி வாய்ப்பு உருவாக்கத்தில் முக்கியமான பங்காற்றுகின்றன. அதுபோல ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைக்கும் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் அவற்றை நம்பியுள்ள வர்த்தகமும் கடந்த நான்கரை ஆண்டுகளில் வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பை சந்தித்துள்ளதாக அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் புள்ளிவிவரம் சொல்கிறது.  இந்தத் தொழில்களின் நிலையை அபாய கட்டத்தில் இருப்பதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. குறு தொழில்களில் 32% வேலை இழப்பும், சிறு தொழில்களில் 35% வேலை இழப்பும், நடுத்தர தொழில்களில் 24% வேலை இழப்பும் ஏற்பட்டிருப்பதாக 34,000 மாதிரிகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது தையல் கூடங்கள், தீக்குச்சி, பிளாஸ்டிக், பட்டாசு, வண்ணம் ஏற்றுதல், பதனிடும் நிலையங்கள், சில்லறை வேலை மற்றும் அச்சு நிறுவனம் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களைத்தான் அதிகமாக பாதித்துள்ளது.

படிக்க:
பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா | அம்பலப்படுத்தும் காங்கிரஸ்
♦ பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் !

கட்டுமான தொழிலாளர்களின் சுகாதாரம், கல்வி, உணவு நுகர்வு உள்ளடக்கிய பலவற்றில் பணமதிப்பு நீக்கம் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை பணத்தாள் பொருளாதாரத்தை முதன்மையாகக் கொண்ட வேளாண் தொழிற்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது!  விவசாயிகளால் விதைகளை வாங்க முடியவில்லை. தினசரி பரிவர்த்தனைகள் செய்யவேண்டிய நிலையில் இருந்த அவர்கள், விரைவில் கெட்டுப் போகக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஏற்படும் இழப்புகளை தடுக்க முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்ற நிலைக்குழு அளித்த நிதிநிலை அறிக்கையில் பணமதிப்பு நீக்கம் விவசாயிகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியதாக வேளாண் துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டது.

“லட்சக்கணக்கான விவசாயிகள் போதிய பணத்தை பெறமுடியாமல் குளிர்கால சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உரங்கள் வாங்க முடியாமல் போனது. பெரும் விவசாயிகளும்கூட தங்களுடைய விவசாய தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதிலும் விதை மற்றும் உரங்களை பெறுவதிலும் பிரச்சினைகளை சந்தித்தனர்” என அந்த அறிக்கை சொன்னது. “இந்தியாவின் 263 மில்லியன் விவசாயிகள் பணத்தாள் பொருளாதாரத்தை நம்பியுள்ளனர்” எனவும் பாராளுமன்ற நிதி நிலை அறிக்கை கூறியது.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, அனைத்து பயிர்களின் விலையும் வீழ்ச்சியைக் கண்டது. பல காய்கறிகளின் விலைகள் கடுமையாக வீழ்ந்ததால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தெருக்களில் கொட்டிவிட்டுச் சென்றனர். அடுத்த பருவத்திலும்கூட, ஒரு முழு ஆண்டே கடந்துவிட்ட பிறகும்கூட விலை நிலவரம் சரிசெய்யப்படவில்லை. அமைப்புசாரா துறை முழுவதுமே வீழ்ச்சி கண்டது.

மாபெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம், மோடி மற்றும் அவர் சார்ந்த பாஜக-வினர் லாபம் பெறுவதற்காகவே கொண்டுவரப்பட்டிருக்கிறது. தன்னுடைய மோசடி அறிவிப்பு குறித்து, தேர்தல் பிரச்சார மேடைகளில் மோடி மறந்தும்கூட உச்சரிப்பதில்லை. இத்தனை பேரழிவுகளை நிகழ்த்திவிட்டு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம், தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வோம் என்கிறார்கள் பாஜக-வினர்.

ஒருபக்கம் பெருமுதலாளிகளுக்கு நாட்டின் வளங்களை துடைத்து கொடுப்பது, இன்னொரு பக்கம் மக்களை வாட்டும் பணமதிப்பு நீக்கம் போன்ற சர்வாதிகார அறிவிப்புகள். இவற்றையெல்லாம் மறக்கடிக்க தேசியவாதம், பெரும்பான்மைவாத போதையைத் தூவி வாக்கு கேட்கிறது பாசிச பாஜக.


-அனிதா
செய்தி ஆதாரம் : நியூஸ்18, பிசினஸ் ஸ்டாண்டர்டு, த வயர்