தடியை முன்னே ஊன்றுவதும் அதன் மேல் மோவாயை அழுத்திக்கொண்டு கால்களை அதனருகே இழுப்பதுமாக இன்னும் இரண்டு சாட்கள் அவன் வெண்பனிப்பாதையில் தளர் நடை போட்டான். பாதங்கள் மரத்துப் போய்விட்டன. அவை எதையும் உணரவில்லை. ஆனால், ஒவ்வோர் அடி வைப்பிலும் உடல் சுரீரென்று வலித்தது. பசியின் கொடுந்தொல்லை அடங்கி விட்டது. வயிற்றில் இசிவும் குடல்வலியும் நின்றுவிட்டது. வெற்றான இரைப்பை கட்டியாகிவிட்டது போலவும் பாங்கின்றி புரண்டு உள்உறுப்புகள் எல்லாவற்றையும் நசுக்குவது போலவும் ஊமை நோவு நிலையாக ஏற்படலாயிற்று.
அலெக்ஸேய் இளைப்பாறும்போது இளம் பைன்மரப் பட்டைகளைக் கட்டாரியால் உரித்து, அவற்றையும் பிர்ச், லின்டன் ஆகிய மரங்களின் இலை மொக்குகளையும் மென்மையான பாசியையும் உணவாகக் கொண்டான். வெண்பனிக்கு அடியிலிருந்து பாசியைத் தோண்டி எடுத்து இராத்தங்கலின் போது கொதிநீரில் வேகவைப்பான். வெண்பனி உருகிய இடங்களில் சிவப்பு பில்பெரிப் புதர்களின் மெருகேறிய இலைகளை சேகரித்து அவற்றால் “தேநீர் தயாரித்துப் பருகுவது அவனுக்கு மிக்க இன்பம் அளிக்கும். சூடான நீர் உடலுக்கு வெப்பம் ஊட்டி, வயிறு நிறைந்துவிட்டது போன்ற பிரமையைக் கூட உண்டாக்கும். புகை நெடியும் புல் வாடையும் வீசிய அந்தச் சுடு கஷாயத்தைப் பருகி அலெக்ஸேய் எப்படியோ முழு அமைதி அடைவான். இப்போது வழி அவ்வளவு முடிவற்றதாகவும் அச்சுறுத்துவதாகவும் அவனுக்குத் தோன்றியது.
ஆறாவது இரவை அவன் கிளைகள் பரந்த பிர் மர விதானத்தின் அடியில் மீண்டும் கழித்தான். அருகே இருந்த கீல் நிறைந்த பழைய அடிக் கட்டையைச் சுற்றி நெருப்பு மூட்டினான். இந்த அடிக்கட்டை இரவு முழுவதும் கணகணவென்று எரிய வேண்டும் என்று அவன் கணக்கிட்டான். இன்னும் இருட்டவில்லை. பிர்மர உச்சியில் ஓடிச் சாடியது கண்ணுக்குத் தெரியாத அணில். அது கூம்புக் கனிகளைக் கறவித் தோலுரித்தது. வெற்றென பிய்ந்த கூம்புக்கனிகளை அவ்வப்போது கீழே எறிந்தது. அலெக்ஸேயின் மனத்தினாலோ உணவைப் பற்றிய சிந்தனை இப்போது நிலையாகக் குடிகொண்டிருந்தது. எனவே கூம்புக் கனிகளில் அணிலுக்கு என்ன கிடைக்கிறது என்று அறிய அவனுக்கு ஆவல் உண்டாயிற்று. ஒரு கூம்புக் கனியை எடுத்து, கடிபடாத செதில் ஒன்றைப் பிய்த்து அகற்றினான். செதிலுக்கு அடியில் ஒற்றைச் சிறகுள்ள, தினை அளவான விதை இருக்கக்கண்டான். செடார் மரத்தின் மிகச்சிறு கொட்டை போலிருந்தது அது. பற்களுக்கு இடையில் அதை வைத்து நசுக்கினான். செடார் எண்ணெயின் இனிய மணம் வாயில் உண்டாயிற்று.
செதில்கள் விரியாத சில பச்சைப் பிர் கூம்புக்கனிகளைச் சுற்றிலுமிருந்து உடனேயே பொறுக்கிச் சேர்த்து, அவற்றை நெருப்பிற்கு அருகே போட்டு, கிளைகளை நெருப்பில் செருகினான் அலெக்ஸேய். கூம்புக்கனிகளின் செதில் பிரிந்தும் அவற்றிலிருந்து விதைகளைக் குலுக்கி எடுத்தான், உள்ளங் கைகளால் தேய்த்து அவற்றின் சிறகுகளை ஊதிப் போக்கினான், சிறு விதைகளை வாயில் போட்டுக் கொண்டான்.
நெருப்பில் இன்னும் சில கிளைகளைப் போட்டுவிட்டு, பிர் கூம்புக்கனிகளை மறுபடி சேகரிப்பதில் முனைந்தான். செடார் எண்ணெயின் மணம் நெடுங்காலமாக அவன் மறந்திருந்த குழந்தை பருவக் காட்சியை அவன் நினைவில் எழுப்பியது…
பழக்கமான பொருள்களால் செம்மை நிறைந்த சிறு அறை. தொங்கும் விளக்கிற்கு அடியே மேஜை. அம்மா உற்சவ உடை அணிந்து சர்ச்சிலிருந்து திரும்பியவள், பெட்டியிலிருந்து காகிதப் பொட்டலத்தை எடுத்து, செடார் கொட்டைகளைத் தட்டில் கொட்டுகிறாள். குடும்பத்தினர் – அம்மா, பாட்டி, இரு அண்ணன்கள், கடைக் குட்டி அலெக்ஸேய் – எல்லோரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்து கொள்கிறார்கள் கொண்டாட்ட தின்பண்டமான கொட்டைகளை உடைக்கும் சடங்கு தொடங்குகிறது…
காடு இரைந்தது. முகத்தில் வெக்கை அடித்தது. ஆனால் முதுகுப் புறமிருந்து வந்தது முள்ளாய்க் குத்தும் குளிர். இருளில் கோட்டான் கூவிற்று, நரிகள் கத்தின… பிரம்மாண்டமான இந்த அடர் காட்டில் அவன் தன்னந்தனியன்.
காடு இரைந்தது. முகத்தில் வெக்கை அடித்தது. ஆனால் முதுகுப் புறமிருந்து வந்தது முள்ளாய்க் குத்தும் குளிர். இருளில் கோட்டான் கூவிற்று, நரிகள் கத்தின. நெருப்பின் பக்கத்தில் அணையும் தருவாயில் கண்சிமிட்டிக் கொண்டிருந்த கங்குகளைச் சிந்தனையுடன் நோக்கியவாறு முடங்கியிருந்தான் பட்டினியான, நோயுற்ற, களைப்பால் செத்துச் சாவடைந்த மனிதன். பிரம்மாண்டமான இந்த அடர் காட்டில் அவன் தன்னந்தனியன். இருளில் அவன் முன்னே கண்டுகொள்ளமுடியாத, எதிர்பாராத ஆபத்துக்களும் சோதனைகளும் நிறைந்த பாதை.
“பரவாயில்லை , பரவாயில்லை, எல்லாம் நலமே முடியும்!” என்று திடீரெனச் சொன்னான் இந்த மனிதன். தனது ஏதோ பழைய நினைவால் தூண்டப்பட்டு வெடிப்புக்கண்ட உதடுகளால் அவன் புன்னகைத்தது நெருப்பின் கடைசிச் செவ்வொளிர் தென்பட்டது.
தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுவேலா மீது அமெரிக்கா எந்நேரத்திலும் இராணுவத் தாக்குதல் தொடுக்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது. வெனிசுவேலாவிலிருந்து தனது தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றது மட்டுமின்றி, அந்நாட்டுக்குச் சென்றுள்ள அமெரிக்கக் குடிமக்களை வெனிசுவேலாவை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தியிருக்கிறது, டிரம்ப் அரசு.
அமெரிக்காவின் ஓய்வு பெற்ற மூத்த இராணுவ அதிகாரிகள் பலர் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து டிரம்புக்கு ஏப்ரல் 4-ம் தேதியன்று பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கின்றனர். “அமெரிக்கா நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்குதல் தொடுக்குமானால், வெனிசுவேலா அடிபணியாது என்றும் ஆக்கிரமிப்பை எதிர்த்து சுமார் 2,35,000 பேரைக் கொண்ட வெனிசுவேலா இராணுவமும், சுமார் 16 இலட்சம் பேர்களைக் கொண்ட குடிமக்கள் இராணுவமும் விடாப்பிடியாகப் போரிடும்” என்றும் நோம் சோம்ஸ்கி உள்ளிட்ட அறிஞர்கள் அமெரிக்க அரசை எச்சரித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
வெனிசுவேலா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் திணித்துவரும் மறைமுகப் போரை எதிர்த்து ஐ.நா. சபையின் தலைமைச் செயலகம் முன்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
ஏப்ரல் 7-ம் தேதியன்று, “ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்! தந்தையர் நாட்டைக் காத்து நிற்போம்!” என்ற முழக்கத்தினை முன்வைத்து வெனிசுவேலா அதிபர் மதுரோவின் தலைமையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் தலைநகர் காரகாஸில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கின்ற ஒரே காரணத்துக்காக வெனிசுவேலா, கியூபா, நிகராகுவா ஆகிய நாடுகளைத் தீமையின் முக்கூட்டு என்று முத்திரை குத்தித் தாக்குதல் தொடுப்பதற்காகவே பொய்க் குற்றச்சாட்டுகளைப் புனைந்து வருகிறது அமெரிக்க அரசு.
கடந்த சில மாதங்களாகவே, சீர்குலைவு நடவடிக்கைகள் மூலம் மின்சாரம், தண்ணீரையும்; பொருளாதாரத் தடை மூலம் உணவு, மருந்துகளையும் தடுத்து வெனிசுவேலா மக்களைப் பட்டினிபோட்டுப் பணிய வைக்க முயலுகிறது, டிரம்ப் அரசு. அடிபணிய மறுத்துப் போராடுகிறார்கள் வெனிசுவேலாவின் வீரப்புதல்வர்கள்.
*****
கடந்த மார்ச் 7-ம் தேதி வெனிசுவேலாவில் பரவலாக மின்சாரத் தடை ஏற்பட்டது. நாடெங்கும் மின் பகிர்மான வலைப்பின்னலும், பகிர்மான நிலையங்களும் அரச எதிர்ப்பு வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுச் செயலிழந்தன. மின்சாரம் தடைபட்டிருப்பதால், குடிநீர் விநியோகமும் பரவலாகப் பாதிக்கப்பட்டது. தவித்த வாய்க்குத் தண்ணீரின்றி, இருளில் பரிதவித்துக் கிடக்கும் அந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது அமெரிக்கா. நிவாரண டிரக்குகளை உள்ளே நுழைய அனுமதிக்காமல், எல்லையிலேயே தடுத்து நிறுத்திய வெனிசுவேலா மக்கள், டிரக்கில் இருந்த நிவாரணப் பொருள் பெட்டிகளைத் திறந்து சோதனையிட்டனர். அவற்றில் கம்பிச்சுருள்களும் சுள்ளாணிகளுமே இருந்தன.
பட்டினி கிடந்தாலும் பணிய மறுக்கின்ற காரணத்தினால் அம்மக்களுக்கு அமெரிக்கா வழங்கிய பரிசு அது. அமெரிக்காவின் இந்த ஆத்திரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், வெனிசுவேலாவின் அரசியல் சூழலைப் புரிந்து கொள்வது அவசியம்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவரும் வெனிசுவேலா மக்களின் அன்பிற்குரிய மறைந்த அதிபருமான ஹியூகோ சாவேஸ்.
1999-ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை வெனிசுவேலாவை ஆட்சி செய்து வந்த ஹியூகோ சாவேஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தார். இடதுசாரி அரசியல், பொலிவேரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் ஆகியவற்றை முன்நிறுத்திய சாவேஸ், ஒரு மக்கள் நல அரசாக வெனிசுவேலாவை மறுநிர்மாணம் செய்தார். சாவேசின் நடவடிக்கைகள், அதுவரை வெனிசுவேலாவில் சர்வ சுதந்திரமாக அமெரிக்கா நடத்தி வந்த கார்ப்பரேட் சுரண்டல்களுக்குத் தடையாக நின்றன.
உலகிலேயே மிக அதிகமான நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசுவேலா. அதனை விழுங்குவதே அமெரிக்காவின் நோக்கம். ஆனால், அந்த நோக்கம் நிறைவேறவில்லை. வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் தேசியமயமாக்கப்பட்டதுடன், சில அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களும் சாவேஸால் தேசியமயமாக்கப்பட்டன. கைவிடப்பட்ட ஆலைகளைத் தொழிலாளர்களே ஏற்று நடத்துவது, மக்கள் கம்யூன் என ஹியூகோ சாவேசின் காலத்தில் நிகழ்ந்த சில பரிசோதனைகள் வெற்றி பெற்றன. ஹியூகோவின் சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்க ஆதிக்க எதிர்ப்பை மையமாகக் கொண்டிருந்தது, மக்களின் ஆதரவையும் பெற்றது.
வெனிசுவேலாவின் முன்னுதாரணம் அமெரிக்காவின் இலத்தீன் அமெரிக்க ஆதிக்கத்துக்குப் பெரும் சவாலாக இருக்கவே, தனது ஆட்சிக்காலம் முழுவதும் எதிர்ப்புரட்சிகளையும், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளையும் சாவேஸ் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2013-ம் ஆண்டு சாவேஸ் மறைந்ததையடுத்து, அவரது கட்சியைச் சேர்ந்த நிகோலஸ் மதுரோ ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். வெனிசுவேலாவின் பொருளாதாரம் எண்ணெய் வளத்தை நம்பி இருந்த சூழலில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகளைச் செயற்கையாக வீழ்ச்சியடைய வைத்தது அமெரிக்கா. இதன் விளைவாக வெனிசுவேலா மட்டுமின்றி, ரஷ்யாவும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுவரும் வெனிசுவேலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ.
ஒருபுறம் பொருளாதாரத் தடைகள், எண்ணெய் வர்த்தகத்திற்குக் கட்டுப்பாடு என வெனிசுவேலாவின் பொருளாதாரத்தை நசுக்கிய அமெரிக்கா, மறுபுறம் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளையும் அரங்கேற்றி வந்தது. இந்தச் சூழலில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட நிகோலஸ் மதுரோ, மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரோவுக்கு எதிரான, தனக்கு ஆதரவான அரசியல் கட்சிகளை வைத்து வெனிசுவேலாவின் தேர்தல் முறைப்படி நடக்கவில்லை என உள்ளூரில் பெரும் கலவரங்களைத் தூண்ட முயற்சித்தது அமெரிக்கா. எனினும், அம்முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இதற்கிடையே வெனிசுவேலாவில் “ஜனநாயகம்” படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் கடந்த பல மாதங்களாகச் சர்வதேச ஊடகங்கள் அமெரிக்காவின் குரலில் ஊளையிடத் தொடங்கின. வெனிசுவேலா மக்கள் பசி, பட்டினியில் வாடுவதாகவும், நிகோலஸ் மதுரோ அரசியல் படுகொலைகள் செய்வதாகவும், எதிர்ப்பாளர்கள் உயிரோடு கொளுத்தப்படுவதாகவும், இன்னும் இது போல் ஏராளமான பொய்ச் செய்திகளைச் சர்வதேச முதலாளித்துவ ஊடகங்களின் வாயிலாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது, அமெரிக்கா.
இந்த நிகழ்ச்சிப் போக்குகளின் வரிசையில் கடந்த ஜனவரி மாதம் ஜூவான் கௌடியோ என்பவரைத் தற்காலிக அதிபராக அறிவிக்கச் செய்தது, அமெரிக்கா. வெனிசுவேலா நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரான ஜூவான் கௌடியோ, அமெரிக்க ஆதரவாளராவார். இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் ஜூவானோ, அவர் சார்ந்திருக்கும் “வெகுஜனங்களின் விருப்பம்” (Popular will) என்கிற கட்சியோ அதிபர் பதவிக்கு மதுரோவுடன் மோதவில்லை என்பதோடு, அவ்வாறு மோதும் அளவுக்கு மக்கள் ஆதரவு கொண்ட கட்சியும் அல்ல, அது. தன்னைத் தானே அதிபராக ஜூவான் அறிவித்துக் கொள்ளும் வரை அவர் வெனிசுவேலாவின் அரசியல் அரங்கில் பிரபலமாக அறியப்பட்டவரும் அல்ல.
அமெரிக்காவால் சட்டவிரோதமான முறையில் வெனிசுவேலா அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜூவான் கௌடியோ.
ஜூவான் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டவுடனே, அவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது, அமெரிக்கா. அத்துடன், “இங்கிலாந்து வங்கி”யில் (Bank of England) வெனிசுவேலா அரசு வைத்திருந்த சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தையும் பறித்துக் கொண்டது. அமெரிக்க வங்கிகளில் இருந்த வெனிசுவேலாவுக்குச் சொந்தமான சுமார் முப்பது பில்லியன் டாலரையும் அபகரித்துக் கொண்ட அமெரிக்கா, இவ்வாறு களவாடிய பணத்தை வெனிசுவேலாவில் தனது கைக்கூலிகளாகச் செயல்படும் எதிர்கட்சிகளுக்கு வாரி வழங்கியது.
இப்படி வெனிசுவேலா மக்களின் சொந்தப் பணத்தைக் கொண்டே அந்நாட்டில் தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றி வருகிறது, அமெரிக்கா. வெனிசுவேலாவின் கூரி நகரில் அமைந்துள்ள “சிமோன் பொலிவார் நீர்மின் நிலையத்தில்” அமெரிக்க ஆதரவுக் கூலிப் படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறார், அந்நாட்டின் துணை அதிபர் ஜோர்ஜி ரோட்ரிக்ஸ்.
ஒரு பக்கம் பொருளாதாரத் தடைகளின் மூலமும், இன்னொரு பக்கம் உள்ளூர் குற்றக் கும்பல்களின் மூலமும் வெனிசுவேலாவின் கழுத்தை நெறிக்கும் அமெரிக்கா, தனது ஆதரவு பெற்ற கூலிப் படையினர் நிகழ்த்தும் வன்முறைகளின் காணொளிகளை சர்வதேச ஊடகங்களில் பரவச் செய்து, அவற்றை மதுரோவின் ஆதரவாளர்கள் செய்வதாகப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் வெனிசுவேலாவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் ரசியா, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனது தொழில்நுட்ப வல்லுனர்களையும், இராணுவ அதிகாரிகளையும், இரண்டு விமானப்படை விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளது. இதற்கெதிராக அமெரிக்கா போட்ட கூச்சல்களை ரசியா கண்டு கொள்ளவில்லை. வெனிசுவேலாவில் கணிசமான அளவு முதலீடு செய்துள்ள சீனா, சில தினங்களுக்கு முன் தனது இராணுவத்தினரையும் அனுப்பியிருக்கிறது. ஏறக்குறைய சிரியாவின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது வெனிசுவேலா.
வெனிசுவேலா இழைத்த ஒரே குற்றம், அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் ஏகபோகச் சுரண்டலைத் தடுத்ததும், அதன் மேலாதிக்கத்தை எதிர்த்து நின்றதும் மட்டுமே. இத்தனைக்கும் அந்த நாடு ஒரு முழுமையான சோசலிசப் பொருளாதாரத்தை மேற்கொள்ளவும் இல்லை. எண்ணெய் வர்த்தகத்தில் காலங்காலமாகச் சுரண்டி வந்த அமெரிக்க மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, எண்ணெய் வயல்களைத் தேசியமயமாக்கினார் சாவேஸ். எண்ணெய் வர்த்தகத்தில் கிடைத்த பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு திருப்பிவிட்டார்.
எண்ணெய் வர்த்தகம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளே முழுமையாக அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. உணவு உற்பத்தி, ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை, ஊடகங்கள் மற்றும் சில உற்பத்தித் துறைகளில் இன்றும் தனியார் மூலதனம் செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளது; இவற்றில் அந்நிய முதலீடும் அனுமதிக்கப்படுகின்றது. சொல்லப்போனால், உணவு உற்பத்தி தனியாரிடம் இருக்கின்ற காரணத்தினால்தான், உணவுப் பொருட்கள் பதுக்கப்பட்டுச் செயற்கையாகப் பஞ்சம் ஏற்படுத்தப்படுகின்றது.
வெனிசுவேலாவில் செயல்படும் தனியார் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் அனைத்துமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரச்சார சாதனங்கள்தான். அவை அரசுக்கெதிரான செய்திகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போதிலும், தடை செய்யப்பட வில்லை.
இதுமட்டுமல்ல. வெனிசுவேலாவின் உயிர் ஆதாரமான கச்சா எண்ணெய் வணிகத்தைத் தடுத்து, அந்நாட்டைப் பொருளாதாரரீதியில் திவாலாக்கும் பொருட்டு, அந்நாட்டுடன் பொருளாதார உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என உலக நாடுகளை அச்சுறுத்தித் தடுத்திருக்கிறது, அமெரிக்கா. கடந்த பிப்ரவரி மாதம் வரை வெனிசுவேலாவின் முதன்மையான எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா இருந்து வந்தது. தற்போது மோடி அரசு அமெரிக்காவின் உத்தர வுக்கு அடிபணிந்து, இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தி விட்டது.
*****
அமெரிக்காவின் பன்முனைத் தாக்குதல்களை வெனிசுவேலா மக்கள் எதிர்கொள்ளும் முறை ஒரு கவிதை. வெனிசுவேலாவில் அமைதியற்ற சூழல் நிலவுவதாக அமெரிக்கா பரப்பிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை நேரில் சென்று சோதித்தறிந்துள்ளார் பத்திரிகையாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான ஈவா பார்லெட். கொலம்பிய எல்லையில் நிலவிய சிறிய அளவிலான பதற்றத்தையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக அரச எதிர்ப்புக் கூலிப் படையினர் நிகழ்த்தும் வன்முறைகளையும் தவிர்த்துப் பெரும்பாலும் வெனிசுவேலாவில் அமைதியே நிலவுவதாகப் பதிவு செய்கிறார் ஈவா.
வெனிசுவேலாவின் உண்மை நிலை குறித்து உலகுக்கு உணர்த்தும் நோக்கில் கட்டுரைகளை எழுதிவரும் பத்திரிக்கையாளர் ஈவா பார்லெட்.
அமெரிக்க ஆதரவு உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கிலித் தொடர் சூப்பர் மார்கெட் முதலாளிகள் பதுக்கலில் ஈடுபட்டுச் செயற்கையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்த முனைந்துள்ள நிலையில், அரசு மக்கள் கூட்டுறவுகள் மூலம் உணவுப்பொருள் விநியோகத்தைத் துரிதப்படுத்தி வருகின்றது. ஊடகங்கள் மதுரோவுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள் பெருமளவில் அவருக்கு ஆதரவான ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர்.
சுமார் பத்து இலட்சம் மக்கள் தொகை கொண்ட ஃபேப்ரீசியோ ஒஜேடா (Fabricio Ojeda) என்கிற கம்யூன் சுயேச்சையாக உணவு உற்பத்தியில் ஈடுபடுவதுடன், உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களைச் சந்தை விலையில் இருந்து 30-40 சதவீதம் குறைந்த விலையில் விற்று வருகின்றது. மக்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் கலெக்டிவோஸ் (Colectivos) எனப்படும் சமூகக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மின் தடையினால் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை மையமாக ஒரே இடத்தில் சேமிப்பது, உணவுப் பொருள் விநியோகம், தண்ணீர் விநியோகம் என அத்தியாவசியப் பொருட்களை இந்த கலெக்டிவோஸ் குழு ஒருங்கிணைக்கிறது.
பத்திரிகையாளர் ஈவாவுக்கு பேட்டியளித்துள்ள கம்யூன் தலைவர் ஒருவர், “நாங்கள் உணவுப்பொருள் உற்பத்தியில் சுயசார்புத் தன்மையை அடைய முயற்சித்து வருகிறோம். எங்கள் மேல் தொடுக்கப்பட்டுள்ள பொருளாதாரப் போருக்கு எதிராக இதைத்தானே செய்ய முடியும்” எனக் குறிப்பிடுகிறார். பல்வேறு தரப்பு மக்களும் அமெரிக்காவின் பொருளாதாரப் போர் தங்களுக்குப் புதிதில்லை எனவும், ஒவ்வொரு முறை தங்கள் நாடு அமெரிக்காவால் பொருளாதார நெருக்கடிக்குள் திட்டமிட்டு தள்ளிவிடப்படும் போதும், அதை அமைதியுடன் எதிர்கொள்ளப் பழகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலாச்சாரம் வெனிசுவேலா மக்களின் உணர்வுகளில் மிக அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. அவர்கள் சோறைவிடச் சுரணை முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர். எனவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அமைதியுடனும் உறுதியுடனும் தீரத்தோடும் எதிர்த்து நிற்கிறார்கள்.
*****
ஆப்கான், ஈராக் போன்ற நாடுகளில் தலையிடுவதற்கான நியாயத்தை அல்கொய்தாவும் பின்லேடனும் சில நூறு அமெரிக்க உயிர்களும் இரட்டை கோபுரத் தகர்ப்பும் அமெரிக்காவுக்கு வழங்கின. சிரியாவில் தலையிட ஏ.கே. 47 துப்பாக்கி தரித்த சிலரின் மரணங்கள் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டது. வெனிசுவேலாவில் அதன் தகிடுதத்தங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. உள்நாட்டுக் கலகம், வன்முறை, மதுரோவுக்கு எதிரான மக்கள் எழுச்சி என்று சர்வதேச ஊடகங்களில்தான் அமெரிக்காவால் பொய்ப்பிரச்சாரம் செய்ய முடிகிறதே தவிர, வெனிசுவேலாவுக்குள் எந்தச் சலசலப்பையும் உருவாக்க முடியவில்லை.
வெனிசுவேலாவில் மீண்டும் அமெரிக்க மேலாதிக்கத்தைத் திணிக்க முயன்றுவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
வெனிசுவேலா தலைநகரில் மதுரோ எதிர்ப்பாளர்களின் ஆர்ப்பாட்டம் என்று உலக முழுவதும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு நேரில் சென்றிருந்த ஈவா பார்லெட், அதைப் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கிறார். பத்துப் பதினைந்து பேர் முழக்கம்கூட எழுப்பத் திராணியில்லாமல் சாலையில் நிற்கின்றனர். அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலோ இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக கருப்பின, கலப்பின உழைக்கும் மக்கள் திரண்டு நின்று முழங்குகிறார்கள்.
வெனிசுவேலா நமக்கு இரண்டு செய்திகளைச் சொல்கிறது. புதிய தாராளவாதக் கொள்கைகளை மறுத்தும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்தும் சுயசார்பாக நிற்கும் நாடுகளும் மக்களும் எத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது முதல் செய்தி.
ஆகப் பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக இருப்பினும், அந்த அரசு, அந்நாட்டு மக்களின் விருப்பப்படித் தனது பொருளாதார அரசியல் கொள்கைகளை வகுக்க விரும்பினால், ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போருக்கு தயாராக வேண்டும் என்பதும் அதற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும் என்பதும் இரண்டாவது செய்தி.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
சாதி ஆணவ வெறியாட்டங்கள் மீண்டும் தலை தூக்குகின்றன. ஆதிக்க சாதிச் சங்கங்கள், கட்சிகள் தங்களின் ஓட்டரசியலில் வாக்குப் பொறுக்குவதற்காக சாதிய வன்முறைகளைத் தூண்டி விடுகின்றன.
இதன் ஒரு வெளிப்பாடுதான் பாமக சாதி வெறியர்களும் இந்து முன்னணி பொறுக்கிகளும் இணைந்து நடத்திய சமீபத்திய பொன்பரப்பி வன்முறை !
கடந்த 1997-ம் ஆண்டு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், “ஆண்ட பரம்பரையா? அடிமைப் பரம்பரையா?” என்ற பாடல் ஒலித்தகடு வெளியிடப்பட்டது. அப்பாடல்கள் ஒவ்வொன்றும் அன்றுமுதல் இன்றுவரை ஆதிக்கச் சாதித் திமிரை நார்நாராய் கிழித்தெறிகின்றன.
தலைநகர் தில்லியைக் குறித்து நாம் அறிந்திருப்பது சொற்பமே. குடியரசு தினங்களின் போது அந்த அகன்ற சாலையில் பவனி வரும் படைவரிசைகள், திரைப்படங்களில் பார்த்திருக்கும் காந்தி குல்லாய் வைத்த அரசியல்வாதிகளும், அவர்கள் பயணிக்கும் சிவப்பு விளக்கு வைத்த அம்பாசிடர் கார்களும்… இது ஒரு சித்திரம். மற்றபடி அங்கே சென்று வருபவர்களோ, “வெயில் காலத்தில் தகிக்கும், குளிர் காலத்தில் உறைந்து போகும்” என்பது போல் சொல்லக் கேட்டிருப்போம்.
தில்லியின் வாழ்க்கை எப்படியிருக்கும் ?
அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்க, உழைக்கும் மக்களின் வாழ்க்கையைக் குறித்து நாம் மிகச் சொற்பமாகவே வாசித்திருப்போம். தி வயர் இணையதளத்தில் வெளியாகி இருக்கும் இந்தக் கட்டுரை ( ‘At Night, Our Verandah Turns Into a Bedroom’: Life in Delhi’s Working-Class Settlement ) நமக்கு ஒரு புதிய சித்திரத்தை வழங்குகின்றது. தெற்கு தில்லியின் தக்ஷின்புரியைச் சேர்ந்த இக்ஷிதா என்கிற பெண் எழுதியுள்ள நூலின் ஒரு பகுதி இது. இந்தக் கட்டுரையில் அவர் தனது வீட்டை வருணிக்கிறார். அந்த வருணனையின் ஊடாக தங்கள் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நமக்கு விளங்க வைக்கிறார்.
வயர் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கம் இனி.
***
இரவு ஒன்பது மணி. நான் என் வீட்டில் கட்டிலின் மீது அமர்ந்துள்ளேன். எனக்கு நேர் எதிரே உள்ளது வாயிற் கதவு. கதவு பிங்க் நிறம்; சுவர்கள் நீல நிறம். எனக்கு இடது புறம் உள்ள சுவரில் துர்கா மாதாவின் பெரிய படம் ஒன்று தொங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக உள்ள சுவரில் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் படங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த சுவருக்கு பக்கத்திலேயே இரண்டு அலமாரிகள். ஒன்றில் பாட்டியின் பொருட்களும் மற்றொன்றில் அம்மாவின் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அலமாரிகளுக்கு பக்கத்தில் படுதாக்களால் மூடப்பட்ட நான்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பெட்டிகளுக்கு பக்கத்திலேயே ஒரு குளிர்சாதனப் பெட்டி. பெட்டிகளுக்கு மேலும், குளிர்சாதனப் பெட்டியின் மேலும், அலமாரிகளின் மேலும் சில சில்லறைப் பொருட்கள். இவையனைத்தும் பூக்கள் அச்சிடப்பட்ட திரைச்சீலையால் மறைக்கப்பட்டிருக்கிறது. நான் அமர்ந்திருக்கும் கட்டிலை அடுத்து ஒரு வெள்ளை நிற மேசை உள்ளது. அதன் மேல் தான் எங்கள் பள்ளிப் பொதிகளை வைப்போம்.
கட்டிலின் மற்றொரு பக்கம் பிங்க் நிற விரிப்பால் மூடப்பட்ட தையல் இயந்திரம் உள்ளது. பாட்டி தனது சாய்வு நாற்காலியை கட்டிலுக்கு பக்கத்தில் தான் வைத்திருப்பாள். அப்படி வைத்திருக்கும் போது வாயிற்கதவை முழுவதுமாக திறக்க முடியாது; இடித்துக் கொள்ளும்.
எனக்கு நேர் எதிரே உள்ள சுவரில் மூன்று அடுக்கு கொண்ட அலமாரி ஒன்று உள்ளது. அதில் கீழ்ப்புறத்தில் இருக்கும் அடுக்கில் தான் காஸ் அடுப்பு உள்ளது. அது கொஞ்சம் அகலமான அடுக்கு. அதில் மசாலாப் பொருட்கள் போட்டு வைக்கும் இரண்டு கூடைகளும் திணித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேல் இருக்கும் அடுக்குகளில் சமயல் பாத்திரங்கள் இருக்கின்றன. அதில் ஒரு அடுக்கில் சற்றே பெரிய பாத்திரங்கள்.
அந்த அலமாரிக்கு கீழே காஸ் சிலிண்டர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பக்கத்திலேயே அரிசி போட்டு வைக்கும் அண்டா ஒன்று. அந்த அலமாரிக்கு பக்கத்திலேயே தண்ணீர் கேன் உள்ளது. இந்த அலமாரியின் மேலிருந்து முதல் அடுக்கில் சமைத்த பண்டங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதே அடுக்கில் பெரிய பொரிக்கான் சட்டிகளும் இருக்கும். எப்போதாவது விருந்தாளிகள் வந்தால் மட்டும் அவற்றைப் பயன்படுத்துவோம். மற்ற நேரங்களில் அவை வெறும் காட்சிப் பொருட்கள் தாம். அதே அறையில்தான் சமையல் செய்வது, சமைத்த பாத்திரங்களைக் கழுவுவது எல்லாம்.
வாயிற்கதவுக்கு வெளியே பாத்ரூம் ஒன்று உள்ளது. யாராவது பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தால் பாத்ரூமிற்குச் செல்ல முடியாது. அதில் கழிவறையும், குளியலறையும் ஒன்றுதான். கழிவறையைப் பயன்படுத்துவதில் சிக்கல் இல்லை; ஆனால் குளிக்க வேண்டும் என்றால் கழிவறைக் கோப்பையின் மீது நிற்க வேண்டும். அந்த அறையில் ஒரே ஒரு சிறிய பக்கெட் தான் இருக்கும். பெரிய பக்கெட்டுக்கோ மற்றும் ஒரு பக்கெட்டுக்கோ அந்த அறையினுள் இடம் இருக்காது.
பாத்ரூமின் கதவு உட்புறமாக திறக்கும்; வாயிற்கதவு வெளிப்புறமாக திறக்கும். இரண்டு ஜன்னல்கள் உள்ளன ஒன்று வாயிற்கதவுக்கு மேல் மற்றொன்று கழிவறையின் உள் இருக்கும் சிறிய ஜன்னல். கழிவறையின் வழியே தான் காற்றோட்டம் வந்தாக வேண்டும். கழிவறைக் கதவறை மூடி விட்டால் வீட்டினுள் காற்றோட்டம் இருக்காது.
இரவு நேரங்களில் இந்த ஒரே தாழ்வாரம்தான் (வராண்டா) படுக்கை அறையாகவும் மாறும்.
இரவு எல்லோரும் சாப்பிட்ட பின், அம்மா ஒரு பெரிய தரை விரிப்பை விரிப்பாள். அறையின் தரை பல இடங்களில் பெயர்ந்து இருக்கும். அலமாரியின் கீழ் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் பெரிய தரை விரிப்பை அம்மாவால் முழுவதுமாக விரிக்க முடியாது. அதன் ஓரங்களை மடித்து சுருட்டிக் கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியை தையல் இயந்திரத்தின் கீழ் சொருகிக் கொள்ள வேண்டும்.
இனி நாங்கள் இந்த அறையை படுப்பதற்கோ தொலைக்காட்சி பார்ப்பதற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். பாட்டிக்கு கட்டில். எங்கள் மூவருக்கும் தரை. இரவு நான் புரண்டு படுத்து காலை நீட்டினால் தையல் இயந்திரத்தில் இடிக்கும். முதலில் இதனால் எனக்கு விழிப்பு வந்து விடும். பின்னர் சுருண்டு படுக்க பழகிக் கொண்டேன். ஒரு முறை அம்மா தூங்கும் போது காலை நீட்டி இருக்கிறாள். அவளது கால் அலமாரிக்கு கீழே சிக்கிக் கொண்டது. அவளால் இழுக்க முடியவில்லை. பின் நாங்கள் எல்லாம் சேர்ந்து அவளது காலை வெளியே இழுத்தோம். அப்போது நாங்கள் எங்கள் அம்மாவைப் பார்த்து சிரித்தது நினைவில் உள்ளது. அதன்பின் அவள் எச்சரிக்கையாக தூங்கப் பழகிக் கொண்டாள். நாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை.
எங்களது இளைய சகோதரன் எங்கள் மூவரோடுதான் உறங்குவான். இப்போது அவன் வளர்ந்து விட்டான். என்றாலும், வேறு வழியின்றி நெருக்கியடித்து தூங்க பழகிக் கொண்டோம். எப்போதாவது எங்கள் அத்தை வீட்டிற்கு வந்தால் நாங்கள் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு தூங்கச் சென்று விடுவோம்.
எங்கள் வீட்டில் இருக்கும் கட்டில் பாட்டிக்குத் தான் என்றாலும், அப்பா வரும் போது அவருக்குக் கொடுத்து விடுவோம். அவர் இரவு பாத்ரூமிற்கு செல்ல வேண்டுமென்றால் அவரது ஒரு காலை எனது தலையனையின் மீது வைத்து மற்றொரு காலால் இடையில் இருக்கும் போர்வைகளை நகர்த்தி வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதெல்லாம் நான் விழித்துக் கொள்வேன்.
ஒரு முறை நாங்கள் எல்லாம் கட்டிலின் மீது அமர்ந்து தொலைக்காட்சியின் குலாம் சீரியலை பார்த்துக் கொண்டிருந்தோம். கட்டிலின் மீது சாய்ந்து கொண்டே கீழே அமர்ந்திருந்த என் இளைய சகோதரி அமிஷா நகம் வெட்டிக் கொண்டிருந்தாள். அலமாரியின் மீது சாய்ந்து அமர்ந்திருந்த பாட்டி தனது தலை முக்காடை சரி செய்து கொண்டிருந்தாள்.
சீரியல் முடிந்த பின் அம்மா எழுந்து வெளியே சென்று பார்த்து விட்டு கதவுகளை அடைத்தாள். பின் எரிந்து கொண்டிருந்த குழல் விளக்கை அணைத்தாள். அரை இருளில் ஆழ்ந்தது. எல்லோரும் உறங்கச் செல்லும் முன் அம்மா கடைசியாகச் சொன்னாள் “காலை சீக்கிரம் எழுப்பி விடுங்கள். நீரு மேடம் என்னை சீக்கிரம் வரச் சொல்லி இருக்கிறார்” அத்துடன் அறை அமைதியானது; அந்த நாளும் முடிவுற்றது.
கட்டுரையாளர் :இக்ஷிதா தமிழாக்கம் : சாக்கியன்
நன்றி : தி வயர்
தீவிரவாத இந்து தேசியவாதத்தை கூர்மையாக்கும் சங்பரிவாரத்தின் பின்னணியில் ஐந்தாண்டுகளாக எதேச்சதிகார ஆட்சியை நடத்தி வரும் நரேந்திர மோடி அரசு, மதச்சார்பற்ற-பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியா என்கிற கருத்தாக்கத்தை பலவிதங்களிலும் தீவிரமாக சவால் விடுத்துவருகிறது.
தனது ஆட்சியில் ‘பொருளாதார வளர்ச்சி’ இருக்கும் என வாக்குறுதி அளித்திருந்த மோடியின் ஆட்சியில் நாற்பதாண்டுகளில் இல்லாத கடுமையான வேலையில்லாத் திண்டாட்டமும் தேக்கமடைந்த வளர்ச்சியும் மட்டுமே மிஞ்சியதை இப்போது கண்டுவருகிறோம். ஆனால், எதேச்சதிகார ஆதரவு அலையில் மிதந்துகொண்டிருக்கும் பாஜகவை அசைக்குமா என்பது தெரியவில்லை.
செயல்பாட்டாளர், ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தனின் Reason என்ற சமீபத்திய ஆவணப்படம் தரும் ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, ஒரு தேர்தல் தோல்வியால் பாஜகவின் இந்துத்துவ அணிவகுப்பை நிறுத்திவிட முடியாது என்பது தெரிகிறது.
சமீப ஆண்டுகளாக இந்துத்துவத்தின் வளர்ச்சியை அதன் ரத்தம் தோய்ந்த பக்கங்களிலிருந்து ஐந்தாண்டு கால உருவாக்கத்தில், எட்டு பிரிவுகளாக விவரிக்கிறது இந்த ஆவணப்படம். பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோரின் படுகொலைகளையும் அவற்றின் பின்னணியில் தீவிரவாத இந்து அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் பங்கையும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் முசுலீம்கள் மற்றும் தலித்துகள் மீதான வன்முறை தாக்குதல்களையும் சாதிய ஒடுக்குமுறை காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலாவின் தற்கொலை, இன்னும் ஏராளமான சிறியதும் பெரியதுமான தற்போது இந்தியா எதிர்கொண்டுள்ள வன்முறைகளைப் பற்றிப் பேசுகிறது இந்த ஆவணப்படம்.
இந்த வன்முறைகள் இந்தியாவின் கூட்டு மனசாட்சியின் மீது செலுத்திய தாக்கத்தை இந்த ஆவணப்படம் தேடுகிறது. இந்துத்துவம் மற்றும் இந்து தேசியவாதம் மக்களிடமும் அரசிடமும் ஆழமாக ஊடுருவி உள்ளன. இதை ஒரே ஒரு தேர்தலால் அழித்துவிட முடியும் என்பதை கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் இந்தப் படத்தின் கரு குறித்து பேசும்போது, பட்வர்த்தன் இப்படி சொன்னார் : “மனிதநேயம் இல்லாதவரைக்கூட இந்தப் படம் அசைத்துவிடும். இது சிறப்பான படமாக்கலால் அல்ல, இதில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் உண்மையானவை; துயரமானவை”.
ஆனந்த் பட்வர்த்தன்: பிரிட்டீஷ் காலனியாளர்களின் ‘பிரித்தாளும்’ கொள்கையை ஒட்டி இன்று உருவாகியுள்ள மத ரீதியிலான பிளவு குறித்த தடயங்களை தேடுகிறது ‘விவேக் அல்லது ரீசன்’. சுதந்திரத்துக்குப் பின், ஏகாதிபத்திய பிரிட்டீஷ்-க்கு பதிலாக மற்றொரு வல்லரசான அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்தது. அது ஆப்கானிஸ்தானில் சோவியத்தின் தாக்கத்தை எதிர்த்து அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் இசுலாமிய ஜிகாதிகளை உருவாக்கியது.
இதன் மேற்பரப்பை மட்டுமே விவரிக்கிற இந்தப் படம், இந்தியா மற்றும் பாகிஸ்தான், இந்துகள் மற்றும் முசுலீம்கள் உண்மையில் எங்கோ உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி நடக்கின்றன. இப்போது, இங்கே நடந்துகொண்டிருப்பவற்றுக்கு நாம் பொறுப்பல்ல என சொல்லவில்லை. எனவே, இந்தப் படத்தின் முதன்மையான கவனம், இந்தியாவில் பாசிசத்தின் எழுச்சியை சொல்வதும் பாசிசத்துடனான மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களின் போர் குறித்ததுமாகும்.
கேள்வி: நீங்கள்ஏராளமானகோபம்கொண்டஆண்களைஇந்தப்படத்தில்நேர்கண்டிருக்கிறீர்கள். வர்ணனையாளர்அவர்களை ‘புயல்துருப்புகள்’ என்கிறார். அவர்கள்பார்ப்பனியத்தால்வேலையற்றவர்க்கமாககாட்டப்பட்டவர்கள். புயல்துருப்புஎன்போர்யார்? அவர்களின்லட்சியங்கள்நோக்கங்கள்என்ன?
ஆனந்த் பட்வர்த்தன்: படத்தில் சொல்லப்பட்டது இதுதான், “இன்று பார்ப்பனியம் தேசிய கொடியை போர்த்திக்கொண்டிருக்கிறது, புயல் துருப்புகள் அதனால் கைவிடப்பட்டவர்கள், வேலையில்லாமல் ஆக்கப்பட்டவர்கள்”.
ஆனந்த் பட்வர்தன்
இந்தப் படத்தின் தொடக்கத்தில் பகுத்தறிவாளர் தோழர் பன்சாரே, பார்ப்பனராக பிறந்தவருக்கும் பார்ப்பனிய சித்தாந்தத்துக்கும் உள்ள வேறுபாட்டை சொல்லியிருப்பார். பார்ப்பனர் தன்னுடைய பிறப்பின் அடிப்படையிலிருந்து வெளிவரலாம். ஆனால், பார்ப்பனிய சித்தாந்தம் என்பது விசத்தன்மையுள்ள மேலாதிக்க நோய். பன்சாரே அதை தொற்றுநோய் என்கிறார்.
ஹைதரபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த ரோஹித் வெமுலாவின் தூண்டப்பட்ட தற்கொலைக்குப் பிறகு, ஒன்றிணைந்த தலித் மற்றும் இடதுசாரி இயக்க இளைஞர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த இளைஞர் நச்சுத்தனமான இந்துத்துவ துஷ்பிரயோகத்தை செய்கிறார். இந்த வலதுசாரி புயல்துருப்புகள் வலுக்கட்டாயமாக தேசியக் கொடியை போர்த்திக்கொள்கின்றன. இவர்களுடைய தாய் அமைப்பு 1947-ல் இதே கொடியை எதிர்த்து, காவி இந்து கொடிதான் வேண்டும் என்று பிடிவாதமாக நின்றது.
அவர்களுடன் நடந்த விவாதத்தில், காந்தியை கொன்றவர்கள் குறித்த அவர்களுடைய உண்மையான அறிதல் என்பது அவர்கள் மழுங்கடிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. நம்முடைய கல்வி அமைப்பு வர்க்க உணர்வுடனே உள்ளது. அதே நேரத்தில் வேலை சாதியைச் சேர்ந்த பெருவாரியான இளைஞர்களை இயந்திரத்தனமாக உருவாக்கித் தள்ளுகிறது. இவர்களுடைய ஒரே லட்சியம் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதும் தனிப்பட்ட ஆடம்பர நுகர்வு வாழ்வை வாழ வேண்டும் என்பதுவுமே ஆகும். மற்றவர்கள் இழப்பின் மீதும்கூட இதை பெறவே அவர்கள் விரும்புகிறார்கள்.
சிறந்த உலகத்துக்கான காரணம், மனிதநேயம் மற்றும் சில கொள்கைகளுக்கு நம் கல்வி அமைப்பில் இடமில்லை. எந்த விலை கொடுத்தாவது வெற்றியை பெற வேண்டும். இளைஞர்கள் கனவென்பது, கல்வி வளாகங்களில் உறுதி செய்யப்படும் வேலை வாய்ப்பிலும் அலுவலங்களில் சேர்வது குறித்தும்தான். நம்முடைய முன்மாதிரி திருபாய் அம்பானிதான், கன்னையா குமாரோ, ஜிக்னேஷ் மேவானியோ அல்லது மேதா பட்கரோ அல்ல. ஏனென்றால் சிந்தனை குறித்தோ விமர்சனம் குறித்தோ பரிவுணர்வு குறித்தோ எந்தவித உரையாடல் இங்கே இல்லை. இந்த அமைப்பு படித்தவர்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், அவர்கள் அறிவற்ற, நோக்கமற்ற, வேலை வாய்ப்பு பெற முடியாத உள்ளே தங்களுடைய எதிர்காலம் குறித்து சோகத்தாலும் கோபத்தாலும் அலைகழிக்கப்பட்ட இளைஞர்களாக இருக்கிறார்கள்- அதாவது மிகச் சிறப்பான புயல் துருப்புகள்.
கேள்வி: இந்துத்துவம்குறித்தஉங்களுடையமுதல்படம் ‘ராமின்பெயரால்– Ram Ke Naam‘. 1992-ம்ஆண்டுபாபர்மசூதிஇடிக்கப்படுவதற்குசற்றுமுன்னதாகவெளியானது. அப்போதிலிருந்துஇந்துத்துவஇயக்கம்எப்படிபரிணாமம்அடைந்திருக்கிறது?
ஆனந்த் பட்வர்த்தன்: இந்து அடிப்படைவாதம் வளர்ந்துவருவதையும் அது நிலைகெட்டு ஓடிக்கொண்டிருப்பதையும் அதை கட்டுப்படுத்தாவிட்டால் மதச்சார்ப்பற்ற கலாச்சாரத்தால் அதை எதிர்கொள்ளாவிட்டால் பெரும் விபரீதம் நடக்கும் என்பதை அரசுக்கும் இந்திய மக்களுக்கும் சொல்வதாக ராம் கி நாம் இருந்தது.
இந்த எச்சரிக்கையை கேட்பதற்கு பதிலாக, ‘மதச்சார்பற்ற’ அரசுகள் தூர்தர்ஷனில் அதை ஒளிபரப்ப விடாமல் தடுத்தனர். ஐந்தாண்டுகால சட்ட போராட்டத்துக்குப் பிறகு, முதன்மையான நேரத்தில் அதை அரசு ஊடகம் ஒளிப்பரப்பியது. நம்முடைய மதச்சார்பற்ற அரசு, ராம் கி நாம்-ஐ ஒளிபரப்புவதற்கு பதிலாக ராமாயண டிவி சீரியலை ஒளிபரப்பி, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் விளம்பரப்படுத்தினார்கள்.
1990 -ல் தொடங்கப்பட்டது, பொருளாதார தாராளவாதத்துடன் தற்செயலாக இணைந்தது அல்ல. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கலவையான பொருளாதாரமாக இருந்த நேருவிய பொருளாதாரம், முற்றிலும் சந்தை பொருளாதாரமாக மாறியது, உண்மையில் இது இந்தியாவின் சதையினை கடிக்கத் தொடங்கியது. ஆம், சுதந்திரத்துக்கு பிறகான ஆரம்ப கட்டத்தைக் காட்டிலும் இன்றைய இந்தியா, சிறுபான்மையினர் மீது மிகுந்த வெறுப்பை உமிழ்கிறது. வெறுமனே பாலிவுட் படங்களைப் பாருங்கள், கடந்த பத்தாண்டுகளில் நடந்திருக்கும் மாற்றங்களை உணர்வீர்கள்.
ஆனந்த் பட்வர்த்தன்: பல சனாதானிகள் பிடிபட்டார்கள். ஆனால், இந்துத்துவ வழக்கறிஞர்களின் துணையோடு அவர்கள் வெளியே வந்தார்கள். 2002 முதல் 2008 வரை தொடர் குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் இந்த உண்மை பொருந்தும். இந்துத்துவ தீவிரவாதிகளை சிறையில் வைத்திருக்க முகாந்திரம் இல்லை என அரசியல் வர்க்கம் நினைக்கிறது. உறுதியான ஆதாரங்கள், பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலங்கள் இருந்தபோதும்கூட, அவர்களுடைய ஆழ்மனதில், அதை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.
இந்த குறுங்குழுக்களுக்கும் அவர்களுடைய தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கும் உள்ள கருத்தியல் தொடர்பு வெளிப்படையானது. உண்மை என்னவெனில், இந்த அமைப்புகள் ஒருபோதும் தடை செய்யப்படாது. என்ன நடந்தாலும் அவர்கள் ஆதரவை ருசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கேள்வி: மும்பைதாக்குதலின்போதுஉயிரிழந்தமும்பைதீவிரவாததடுப்புபிரிவின்தலைவர்ஹேமந்த்கார்கரேகுறித்துமுக்கியமானபகுதிஒன்றுபடத்தில்வருகிறது. நவம்பர்26-ம்தேதிநடந்ததுப்பாக்கிச்சூட்டில்அவர்பலியானது, அவரைகொல்லும்வகையில்திட்டமிடப்பட்டசதியாகஇருக்கலாம்எனஇந்தப்பகுதிஉறுதியாகசொல்கிறது. ஏனென்றால்அவர்இந்தியாவில்நடந்தபல்வேறுதீவிரவாததாக்குதலில்இந்துத்துவஅமைப்புகளுக்குஉள்ளதொடர்புகுறித்துவிசாரித்துவந்தார். ஆனால், இதுஆவணப்படம்குறித்தசெய்திகளில்ஊடகங்களின்கவனத்தைபெறவில்லை. படத்தின்மிகமுக்கியமானபகுதியேஇதுதான். இதுகுறித்துவிவரிக்கமுடியுமா? இதுஏன்ஊடகங்களின்கவனம்பெறவில்லை?
ஆனந்த் பட்வர்த்தன்: கார்கரே-வின் மரணம் என்பது ஒரு பொறியாக இருக்கலாம் என நீதிமன்ற விசாரணைகளிலிருந்து ஏராளமான ஆதாரங்கள் இந்த விசயத்தில் மலை போல் குவிந்துள்ளன. ஆனால் அவை மூடி மறைக்கப்பட்டன. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல நூல்கள் இதுகுறித்து எழுதப்பட்டுள்ளன.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.எம். முசரீஃப் (இவர் Who Killed Karkare? : The Real Face of Terrorism in India, 26/11: Why Judiciary Also Failed என இரு நூல்களை எழுதியிருக்கிறார்) எழுதிய நூலும் அடங்கும். இந்த ஆதாரங்களுக்கு என்னால் நீதி பெற்று தரமுடியாது எனினும் பார்வையாளர்கள் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். முரண்பட்ட, நம்பமுடியாத விசயங்கள் நம் நாட்டில் நடக்கின்றன. உள்ளூரில் வளர்க்கப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் வெளிநாட்டு சக்திகள் கைகோர்த்துக்கொண்டு, நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுகின்றன. அவர்களுக்கு இந்திய குடிமக்களின் நிலைமை குறித்தோ பாதுகாப்பு குறித்தோ யாதொரு அக்கறையும் இல்லை.
கேள்வி: உனாவில்நடந்ததாக்குதல்மற்றும்வெமுலாவில்மரணத்துக்குபின்தலித்மக்கள்வெகுண்டெழுந்ததைஇந்தப்படம்சொல்லியிருக்கிறது. இந்தஒட்டுமொத்தநிகழ்வுகளுக்கிடையேஇதுமட்டுமேநம்பிக்கைக்குரியகணமாகஉள்ளது. ஆனால், தலித்எழுச்சிஎன்பதுபெரும்பாலும்மதசார்பற்றஉயர்சாதிகருத்திலிருந்துவேறுபட்டதாகவேஉள்ளது. ஆனால், இதை புறந்தள்ளும்விதமாக இந்தப் படத்தில் பகுத்தறிவுக்கு எதிரான நம்பிக்கையாக நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது?
ஆனந்த் பட்வர்த்தன்: சில நேரங்களில் மதசார்ப்பற்ற, உயர்சாதி கருத்தாடல்கள், தலித் கோபத்தை அபரிகரிக்கும்விதமாக முடிந்துவிடுகிறது என்ற புகார் உண்மையானது. ஆனால், வாய் அசைப்பிற்கும் இணக்கத்தை சொல்வதற்கு உள்ள வேறுபாட்டை நாம் உணர வேண்டும். சாதியை விமர்சிக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் ஒரே சாயத்தை பூசுவது, இணக்கம் என்ற கருத்தாக்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
மனிதர்கள் இதைவிட அதிக திறன் உடையவர்கள் என்பதை அங்கீரிக்காமல் எல்லோரும் தங்களுடைய பிறப்பின் அடையாளத்துக்காக போராடுகிறவர்களாக இருக்கும்போது, சாதியை எப்படி ஒழிக்க முடியும்? அந்த விசயத்துக்காகத்தான் பகுத்தறிவாளர்களும் மனிதநேயர்களும் படத்தில் காட்டியதுபோல் துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அவர்கள் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பார்ப்பனிய இந்துத்துவத்தை எதிர்த்து மடிந்தார்கள்.
என்னுடைய பணியைப் பற்றி தவறான கருத்துள்ளவர்களை நான் பாராட்டுகிறேன். ஆமாம். நான் சாதிய சிறப்புரிமையில் ஆணாக பிறந்தவன். சாதி மற்றும் பாலின வன்முறை குறித்து கேள்வி எழுப்புவதை இது தடுக்கிறதா? இது ஒருவகையான அமில பரிசோதனை; இது யார் செய்த பணி என்பதைவிட, இது மக்களுக்கு பயனுள்ள பணி, இது மொத்த சமூகத்தைப் பற்றியது; சமூகத்துக்கானது.
ஆனந்த் பட்வர்த்தன்: கன்னையா சிபிஐ-யில் இருக்கிறார். மேவானி சுயேட்சை; காங்கிரசுடன் தற்காலிகமாக கூட்டு வைத்திருந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சா சிங் போல பல இளைஞர்கள் படத்தில் உள்ளார். தற்போது இவர் சமாஜ்வாதி கட்சியில் உள்ளார். ஷெக்லா ரஷீத் காஷ்மீரில் புதிய கட்சியுடன் உள்ளார். வெமுலாவின் நண்பர்கள் அம்பேத்கர் மாணவர் சங்கத்துடன் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார்கள். அவர்கள் தற்போதுள்ள கட்சிகளில் சேர்ந்தாலும், அவர்கள் நிச்சயம், என்னுடைய கருத்து இது, தங்களுடைய தனிப்பட்ட மதசார்பின்மை, ஜனநாயகம் என்ற பார்வையில் உண்மையாக இருப்பார்கள்.
ஆனந்த் பட்வர்த்தன்: நான் இந்த ஆபத்தை தனிப்பட்டதாக எடுத்துக்கொள்வதில்லை. நாம் எல்லோரும் ஆபத்தில் இருக்கிறோம். பாசிச எழுச்சியின் சாட்சிகளாக உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ ஆபத்தில் இருக்கிறோம். உரக்க பேசுவதால் உங்களுக்கு உடல் அளவில் ஆபத்தை உண்டாக்கலாம் அல்லது உண்டாக்காமலும் இருக்கலாம். ஆனால் உரக்க பேசாமல் இருப்பது உங்கள் ஆன்மாவை நிச்சயம் கொன்றுவிடும்.
கேள்வி: நான்குமணிநேரஆவணப்படம்என்பதால்பார்ப்பதுகடினமாகஉள்ளது. நீங்கள்‘காரணத்தின்’ பக்கம்நின்றால்அதுஉங்களைபாதிக்கும். ஒருவர் ‘நம்பிக்கை’யின்பக்கம்நின்றால்அதுஉங்களைபுண்படுத்தக்கூடும். இந்தப்படம்எத்தகையபார்வையாளர்களுக்கானது? வலதைஎதிர்கொள்ளும்வகையில்சராசரிஇந்தியரிடம்சேர்க்கும்விருப்பம்உங்களுக்கு இருக்கிறதா; அல்லதுஎதிர்காலசந்ததியினருக்கானவெறுமனேஒருவரலாற்றுஆவணமாகஇதுஇருக்கவேண்டும்எனநினைக்கிறீர்களா?
ஆனந்த் பட்வர்த்தன்: மனிதநேயம் குறைவாக உள்ளவர்களைகூட இது, அசைக்கும் என நம்புகிறேன். இந்தப் படம் சிறப்பான படம் என்பதால் அல்ல, இதில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்து உண்மையானவை; துயரமானவை. நாம் விழித்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டால் இந்த துயரம் நிறுத்தப்படும். இதை இங்கேயே இப்போதே காணவேண்டும். அல்லது எதிர்கால சந்ததியே இல்லாமல் போகும் – வெறுமனே கரப்பான் பூச்சிகள்தான் அணுகதிர் வீச்சில் உயிர்வாழக்கூடும். நான் தீவிரமாகத்தான் கேட்கிறேன்… நாம் அணு போரை தவிர்த்தாலும்கூட அமித் ஷா, நரேந்திர மோடி, அஜித் தோவல், மசூர் அசாத் மற்றும் ஹபீஸ் சயது போன்றோர் சர்வாதிகாரம் செலுத்தும் உலகம் வாழத் தகுதியானதுதானா?
நேர்காணல் : விஷ்வக் தமிழாக்கம் : அனிதா நன்றி : கேரவன்
இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் வெனிசுலா நாட்டில், மக்கள் இதுவரை தண்ணீர் பிரச்சினையையே பார்த்திராத நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை நொறுங்கி அரசு உறுப்புக்கள் சிதைந்து கிடப்பதால் குடிக்கத் தண்ணீரின்றி தவித்துவருகின்றனர்.
மின் விநியோக நிலையங்கள் கடந்த சில மாதங்களாக திரும்பத்திரும்ப பழுதடைந்து வருவதாலும், சரிசெய்ய முடியாத நிலை நிலவுவதாலும், குடிநீரேற்றும் இயந்திரங்கள் செயல்படமுடியாமல் இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவுகிறது.
மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக நிலவும் நெருக்கடி நிலையை, வெனிசுலா மக்கள் துணிவுடன் எதிர்கொண்டு வருகின்றனர். தண்ணீரைத் தேடி அலைந்து திரிந்து, மலைப்பகுதிகளில் வழியும் நீர், பழுதடைந்த குழாய்களில் வரும் நீர், அரசாங்க லாரிகளின் மூலம் கிடைக்கும் தண்ணீர், தலைநகர் கராகஸ்-இல் ஓடும் குவைரே நதியில் வழிகின்ற தண்ணீர் என நீர் எங்கு கிடைத்தாலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல, இயற்கை தண்ணீரை அள்ளிக்கொடுத்தாலும், நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை இவர்களை அலைகழித்து வருகிறது.
நாட்டில் ஏழ்மையான பகுதிகளில் வசித்துவரும் மக்கள்கூட பல வருடங்களாக தண்ணீர் தட்டுப்பாட்டைப் பார்த்திராத நிலையில், இப்போது தண்ணீர் பிரச்சினையால் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
மலைப்பகுதியிலிருந்து வழியும் சுத்தமான நீரைப் பிடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன். கடுமையான மனப்புழுக்கத்திலிருக்கிறேன் ஆனால் சமாளிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்கிறார் லூயிஸ்.
70 வயதான முதியவர் கார்மென் கூறும்போது ‘இன்று நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். காரணம் என் வயதல்ல, தண்ணீர் தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு இவையெல்லாம் சேர்ந்து என்னை முடக்கி வைத்துவிட்டன.’ உலகின் மிகப்பெரிய சேரிப்பகுதிகளில் ஒன்றான பிட்டாரே என்ற இடத்தில் இவர் வசித்து வருகிறார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகள் மின் நிலையங்களை இயங்கவிடாமல் முடக்கிவைத்ததுதான் பிரதான காரணம் என்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஜுவன் குவைடா ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறமையின்மையே இதற்குக் காரணம் என்கிறார். குவைடா அமெரிக்காவின் ஆசிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் கராகஸ்-ல் மட்டும் ஒரு நொடிக்கு 20,000 லிட்டர் தண்ணீர் தேவை இருக்கும் நிலையில், மின் பகிர்வு நிலையங்களை இயங்கவிடாமல் தடுக்கின்றன அமெரிக்க ஆதரவு பெற்ற எதிர்க்கட்சிகள். ஏற்கெனவே நிலவிவரும் அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற சூழ்நிலையில் தண்ணீர் பிரச்சினையும் சேர்ந்திருப்பது மக்களை மேலும் மன உளைச்சலில் தள்ளியுள்ளது.
தலைநகர் கராகஸ்-ல் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருவதைக் கண்டித்து போராடும் மக்கள்.
கடந்த ஒரு மாதமாகவே தண்ணீர் சிக்கலை எதிர்கொண்டு வருகிறோம். நெருக்கடி நிலைக்கு முன்பே தண்ணீர் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது – யொலாண்டா.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெனிசுலா மக்களின் மேல் அடுத்த இடியாக தண்ணீர் பிரச்சினையும் சேர்ந்து கொண்டுள்ளது.
நீரின்றி வாழப் பழகு என்பது தான் இப்போது வெனிசுலா மக்களுக்கான நியதியாகிவிட்டது. கடும் போராட்டத்திற்குப் பிறகுதான் இங்கு தண்ணீர் கிடைக்கிறது.
27 வருடங்களாக தண்ணீரை வீட்டிற்கு வெளியிலிருந்துதான் எடுத்து வருகிறேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் என் நிலைதான் என்கிறார் இந்தப் பெண்.
இது நாள் வரை என் வீட்டில் தண்ணீர் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. ஒரு மாத காலமாகத் தண்ணீரின்றி தவித்துவருகிறேன் – கார்மென் – வயது 74.
தண்ணீர் கிடைக்கும் போது அதைக் கவனமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் வெனிசுலா மக்கள்.
உடல்நலம் பாதிக்கப்பட்டவன் நான். கடந்த 18 நாட்களாக தண்ணீரின்றி அவதிப்பட்டேன். மலை உச்சியில் வசிக்கும் நான் வீட்டில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில், கீழிறங்கி வந்து தண்ணீர் பிடித்துச்செல்ல வேண்டும் – ஜூலியோ – வயது 65.
காலை 7 மணியிலிருந்து தண்ணீர் பிடிக்க ஆரம்பிப்பேன். கடந்த இரு மாதங்களாகத் தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். என் வீட்டில் மொத்தம் 7 பேர், கழிவறை, சமையலறை மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் அத்தியாவசிய தேவையாயுள்ளது – ஜுவன் – வயது 41
எங்கள் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. எல்லா வளங்களும் இருந்தாலும், எதையும் அனுபவிக்க முடியாத நிலைதான் உள்ளது. அமெரிக்கா உட்பட ஆதிக்க நாடுகள் எங்களைச் சுரண்டி அழிப்பதை கேட்க நாதியற்றுக் கிடக்கிறோம் – அசேல் பட்டியாஸ் – வயது 44.
கிடைக்கும் சொற்ப தண்ணீரும் சுத்தமானதாக இல்லை.
கட்டுரையாளர் : Elizabeth Melimopoulos தமிழாக்கம்: வரதன் நன்றி: aljazeera
தியாகத் தோழர்கள் ரோசா லுக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் ! பாசிச அபாயத்தை முன்னுணர்ந்து முறியடிப்போம்!!
ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ரோசா லுக்சம்பர்கும் கார்ல் லீப்னெக்டும் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் நூற்றாண்டையொட்டி, அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் ஆர்ப்பாட்டங்களைக் கம்யூனிஸ்டு கட்சிகள் நடத்தி வருகின்றன.
முதல் உலகப் போரின் முடிவில் ஜெர்மனியில் நடைபெற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தளகர்த்தர்களாக இருவரும் செயல்பட்டு வந்ததால், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி அரசின் இராணுவத்தால் இவ்விருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
போலந்து நாட்டில் பிறந்த ரோசா லுக்சம்பர்க், தனது 15 வயதில் போலந்து பாட்டாளி வர்க்கக் கட்சியின் உறுப்பினரானார். கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதால், 18 வயதில் தலைமறைவாகி, ஸ்வீடன் நாட்டிற்குத் தப்பிச்சென்றார். ஜூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து முனைவர் பட்டம் பெற்றார். போலந்து மற்றும் லித்துவேனிய சமூக ஜனநாயகக் கட்சியைத் தோற்றுவித்தார். 28 வயதில் ஜெர்மனிக்கு வந்த லுக்சம்பர்க் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரானார்.
கார்ல் லீப்னெக்ட், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான வில்ஹெல்ம் லீப்னெக்ட்டின் மகன். முதல் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் (1914-இல்) ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் போர்ச் செலவுகளுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சக்கரவர்த்திக்கு ஆதரவாக வாக்களித்தபோதும், கட்சி உறுப்பினரான கார்ல் லீப்னெக்ட் மட்டும் அதற்கு எதிராக வாக்களித்தார்.
அதைத் தொடர்ந்து, ரோசா லுக்சம்பர்க்கும், லீப்னெக்ட்டும், கிளாரா ஜெட்கினுடன் இணைந்து சர்வதேசியவாதிகள் என்ற குழுவைத் தொடங்கினர். அதன் மூலம் சமூக ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்ததுடன், போர் எதிர்ப்புப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டனர். இதுவே பின்னர் ஸ்பார்ட்டகஸ் குழு என்ற பெயரில் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான புரட்சியை முன்னெடுத்தது.
முதல் உலகப் போரின் முடிவில் ரஷ்யா மட்டுமல்ல, ஜெர்மனியும் புரட்சியின் விளிம்பில் இருந்தது. கீல் நகரில் 40,000 ஜெர்மன் கப்பல்படை மாலுமிகளும், இராணுவ வீரர்களும் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் புரட்சிகர அலை ஓங்கி அடித்தது. கீல், ஹம்பர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஜெர்மனியின் சக்கரவர்த்தி நாட்டைவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்.
புரட்சிகரத் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும் கார்ல் லீபனெக்ட் (1918 – கோப்புப் படம்)
இந்த மாபெரும் மக்கள் எழுச்சியின் பின்னால், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருந்த ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அதன் நிறுவனர்களான ரோசா லக்ங்ம்பர்க்கும், கார்ல் லீப்னெக்ட்டும் அப்புரட்சியின் தலைவர்களாகச் செயல்பட்டார்கள். அதே சமயம் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியோ, முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் எழுச்சியை நசுக்குவதற்கு வேலைசெய்தது. இதற்கென “ப்ரீடு கார்ப்ஸ்” என்ற பெயரில் முன்னாள் இராணுவத்தினரைக் கொண்ட ஒரு படை உருவாக்கப்பட்டது.
1919-ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று ரோசா லுக்சம்பர்க்கும், கார்ல் லீப்னெக்டும் ப்ரீடு கார்ப்ஸ் படையினரால் பெர்லினில் கைது செய்யப்பட்டனர். ரோசா லுக்சம்பர்க் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே லீப்னெக்டும் இராணுவத்தால் ஒரு பூங்காவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலைக்குப் பிறகு ஜெர்மனியில் முன்னேறிக் கொண்டிருந்த பாட்டாளி வர்க்கப் புரட்சி கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது. பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு சமூக ஜனநாயகவாதிகள் இழைத்த துரோகம், பின்னாளில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வர அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. லுக்சம்பர்க்-லீப்னெக்ட் படுகொலையில் முக்கிய பங்காற்றியவர்கள் அனைவரும் பின்னர் ஹிட்லரின் கூட்டாளிகளாக வலம் வந்தனர். புரட்சியாளர்களை ஒழிக்க சமூக ஜனநாயகவாதிகள் உருவாக்கிய ப்ரீடு கார்ப்ஸ் படைதான் பின்னாளில் ஹிட்லரின் கொலைப்படை எஸ்.எஸ். ஆக உருவெடுத்தது.
இந்த ஜெர்மன் அனுபவத்தோடு இந்தியாவின் அனுபவத்தை ஒப்பிடும்போது ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்ப்பதாகக் கூறிவரும் காங்கிரசு உள்ளிட்ட மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளும், போலி கம்யூனிசக் கட்சிகளும் மிதவாத நடைமுறையைக் கொண்டிருப்பதைப் பயன்படுத்திக்கொண்டுதான், ஆர்.எஸ்.எஸ். இன்று அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னைச் சமரசமின்றி எதிர்த்துப் போராடத் துணிந்த கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்ட அறிவுத்துறையினரைப் படுகொலை செய்கிறது அல்லது சிறையில் தள்ளுகிறது.
இப்பாசிசக் கும்பலை தேர்தல்கள் மூலம் மிதவாத ஓட்டுக்கட்சிகளே முறியடித்துவிடுவார்கள் என இன்னமும் நாம் நம்பினோம் என்றால், ஆர்.எஸ்.எஸ். கார்ப்பரேட் இந்து ராஷ்டிரத்தை எதிர்வரும் ஆண்டுகளில் எளிதாகவே நிறுவிவிடும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 01-அ
பள்ளி உன்னுடையது…
இன்னும் ஒரு மணிநேரம் கழித்துதான் வகுப்புகள் ஆரம்பமாகும். பரிசோதனை ரீதியான தயாரிப்பு வகுப்பின் கதவருகே நான் இரண்டு பெற்றோர்களையும் ஐந்து குழந்தைகளையும் கண்டேன். வகுப்பறையின் கதவு திறந்திருந்த போதிலும் அறையினுள் யாரும் இல்லாததால் அவர்கள் உள்ளே நுழையத் துணியவில்லை. என் நினைவில் மூன்று புகைப்படங்கள் பளிச்சிடுகின்றன.
”வணக்கம்!” என்று அனைவரையும் பார்த்து நான் சொல்கிறேன். ”ஏன் நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வந்தீர்கள்?”
குழந்தைகள் பேசாமல் நிற்கின்றனர். நான்தான் அவர்களின் முதல் ஆசிரியர் என்று அவர்களுக்கு இன்னமும் தெரியாது.
”உன் பெயர் கீகா, இல்லையா?” சிறுவனுக்கு வியப்பு. ”ஆமாம்… உங்களுக்கு எப்படித் தெரியும்?”
”வணக்கம், கீகா!” அச்சிறுவன் நீட்டிய சிறு கையை இறுகப் பற்றிக் குலுக்குகிறேன்.
”நீ மாரிக்கா!.. இல்லையா, வணக்கம்!”
அவளது சிறு கையை மென்மையாகப் பற்றுகிறேன். அது மென்மையானது, மெல்லியது. சின்னஞ்சிறு பெண்ணாக காட்சி தருகிறாள். அவளுக்கு வயதென்ன?
“வணக்கம், ஏல்லா!” என்று மூன்றாவது சிறுமியைப் பார்த்துக் கூறுகிறேன். புகைப்படத்திலிருந்ததைப் போன்றே இவள் குண்டாக இருக்கிறாள். ஏல்லா புன்முறுவல் பூத்தபடியே தன் குண்டு கரத்தை நீட்டுகிறாள்.
”உங்களுக்குத் தெரியுமா, என் மகள் மிகவும் புத்திசாலி… அவளுக்குப் படிக்கத் தெரியும், நூறு வரை எண்ணத் தெரியும், பல கவிதைகள் தெரியும். இவள் நன்கு வளர்ச்சியடைந்தவள்… இசை பயிலுகிறாள்…. நல்ல திறமையானவள், உங்கள் வகுப்பிற்கு ஏற்றவள். இவளைக் கொண்டு எவ்வளவு பரிசோதனை வேண்டுமானாலும் செய்யுங்கள், எல்லாவற்றையும் தாங்கிக் கொள்வாள்…”
”உங்களை எனக்கு நினைவில் இல்லையே” என்று எஞ்சியிருந்த ஒரு சிறுவனையும் சிறுமியையும் பார்த்துக் கூறுகிறேன்.
”குழந்தையைப் பரிசோதனை வகுப்பில் சேர்த்துக்கொள்ளக் கோரும் விண்ணப்பத்தை எங்களால் உரிய நேரத்தில் தர இயலவில்லை. எனவே ஆசிரியருக்காகக் காத்திருக்கின்றோம்!”
நான் என்ன செய்வது? சட்டப்படி வகுப்பில் 25 பேர்கள் மட்டுமே இருக்க வேண்டும். என்னிடமோ ஏற்கெனவே 36 பேர்கள் உள்ளனர்.
”பள்ளியில் உள்ள கல்விப் பிரிவின் தலைமை அதிகாரியை சென்று பாருங்களேன்.”
பெற்றோர்கள் வருத்தப்பட்டனர்.
”நாங்கள் அவரை ஏற்கெனவே சந்தித்து விட்டோம். உங்கள் வகுப்பில் சேருவது நீங்களே தீர்மானிக்க வேண்டிய விசயம் என்றார்.”
சங்கடத்துடன் விளக்கத் துவங்குகிறேன்.
”தயவுசெய்து நான் சொல்வதை சரிவரப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் கண்டிப்பாக இச்சிறுமியையும் சிறுவனையும் சேர்த்துக் கொள்வோம். ஆனால் வகுப்பில் இடம் இல்லையே என்ன செய்ய!”
”ஓரிருவர் கூடவோ குறைவாகவோ இருந்தால் என்ன?”
”இல்லையில்லை, இது எங்களுக்கு ஒரு பெரிய விசயம்.”
”நீங்கள் யார்?” சிறுவனின் தாயார் கேட்கிறார்.
”நான்… நான் இந்த வகுப்பின் ஆசிரியர்.”
இரண்டு தாயார்களும் வியப்படைந்தனர். சிறுமியின் தாயார் வற்புறுத்துகிறார்:
”உங்களுக்குத் தெரியுமா, என் மகள் மிகவும் புத்திசாலி… அவளுக்குப் படிக்கத் தெரியும், நூறு வரை எண்ணத் தெரியும், பல கவிதைகள் தெரியும். இவள் நன்கு வளர்ச்சியடைந்தவள்… இசை பயிலுகிறாள்…. நல்ல திறமையானவள், உங்கள் வகுப்பிற்கு ஏற்றவள். இவளைக் கொண்டு எவ்வளவு பரிசோதனை வேண்டுமானாலும் செய்யுங்கள், எல்லாவற்றையும் தாங்கிக் கொள்வாள்…”
இந்த அம்மாவிற்கு நான் என்ன சொல்வது என்று யாராவது ஆலோசனை சொல்லுங்களேன்! குழந்தைக்கு நூறு வரை எண்ணத் தெரிந்ததும், ஒரு சில கவிதைகளை குழந்தை மனப்பாடம் செய்ததும், நன்கு படிக்கத் தெரிந்ததும் அவன் திறமையானவன், மேதை என்று ஏன் பல தாய்மார்கள் எண்ணுகின்றனர்?
நிச்சயமாக, மேதா விலாசம் மிக்க குழந்தைகள் இருக்கின்றனர், உங்கள் குழந்தை எல்லோரையும் போல் சாதாரணமானவனா, அல்லது திறமைமிக்கவனா, மேதாவிலாசமுள்ளவனா என்று கேட்டால் பெரும்பாலான தாய்மார்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி ”என் குழந்தை திறமைமிக்கவன், மேதை!” என்றுதான் பதில் சொல்வார்களென என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒருவேளை இந்த அழகிய சிறுமி பிறப்பிலேயே அசாதாரணத் திறமையுடன் பிறந்திருக்கலாம், நம் நாட்களில் இத்தகைய குழந்தைகள் மேன்மேலும் அதிகரித்து வருகின்றனர். நான் விஷயத்தின் இன்னொரு அம்சத்தை அவருக்கு விளக்க முற்படுகிறேன்:
”விசேச திறமைகளையுடைய குழந்தைகளை நாங்கள் சேர்த்துக் கொள்வதில்லை! மற்ற தயாரிப்பு வகுப்புகளைப் போன்றே இவ்வகுப்பில் உள்ளவர்களும் சாதாரணமானவர்கள். ஆனால் வகுப்பில் இடமில்லையே…”
அத்தாய் தொடருகிறார்:
”அமைச்சகத்தின் சிபாரிசை வேண்டுமானால் கொண்டு வருகிறேன்…. ஒரு விதிவிலக்காக…”
வகுப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் மனநிலையை மோசமாக்கிக் கொள்ளாமலிருக்கப் பொறுமையாக இருக்க வேண்டும். எவ்வித சிபாரிசுகளும் தேவையில்லை என்றும் தலைமை அதிகாரியைச் சந்தித்து குழந்தைகளை வேறு வகுப்பில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்குமாறும் இரண்டு தாய்மார்களுக்கும் விளக்குகிறேன்.
தீமா தன் தாயின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட மறுக்கிறான். விக்டரும் அம்மா இல்லாமல் வகுப்பறையினுள் நுழைய மறுத்து விடுகிறான். சரி, அம்மாக்களும் வகுப்பறையினுள்ளேயே உட்கார்ந்திருக்கட்டும்.
தாய்மார்கள் இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை: என் வகுப்பில்தான் அவர்களின் குழந்தைகளை சேர்க்க வேண்டுமாம். நினைத்ததைச் சாதிக்க வேண்டுமென்ற உறுதியோடு அவர்கள் கிளம்பிச் செல்லுகின்றனர். குழந்தைகளுக்கு நான் பார்வையாலேயே விடை தருகிறேன். சிறுவன் என் மீது வைத்த பார்வையை அகற்றவேயில்லை. அவன் கண்களில் நீர் ததும்புகிறது. அவன் திடீரெனக் கையை உதறிக் கொண்டு என்னை நோக்கி ஓடி வருகிறான், என் முழங்காலைப் பிடித்துக் கொண்டு கேவியபடியே கூறுகிறான்:
”மாமா, என்னைத் துரத்தாதீர்கள்… நான் ஒழுங்காகப் படிப்பேன்…”
நான் சிறுவனைத் தூக்குகிறேன். ”அழாதே, நீ ஆண் பிள்ளையல்லவா!” என்றேன். அவன் அழுகையை நிறுத்தவில்லை. ”பள்ளிக்கூடம் உன்னுடையது, நான் எப்படி உன்னை பள்ளியிலிருந்து விரட்ட முடியும்!… சரி, வா வகுப்பிற்குப் போகலாம்!…”
தனக்கே உரித்தான திறந்த மனதுடன், நெஞ்சார சிறுவன் ஆசிரியரின் மனதைத் தொடும்படி கூறும் வார்த்தைகள் எந்த ஒரு சிபாரிசையும்விட வலிமையானவை.
நான் அந்த ஐவரையும் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறேன், வகுப்பறையை அவர்களுக்குச் சுற்றிக் காண்பிக்கிறேன், பூச்செடிகளுக்குத் தண்ணீர் விடவும் ஜன்னல்களைத் திறக்கவும் அவர்கள் எனக்கு உதவுகின்றனர். தனித்தனியாகவும் பெற்றோர்களுடனும் வரும் மற்ற குழந்தைகளும் படிப்படியாக இவ்வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
”தாத்தோ, வணக்கம்!”
தாத்தோவிற்கு ஒரே வியப்பு.
”மாயா, வணக்கம்!”
மாயாவிற்கு ஆச்சரியம்.
”கோத்தே, வணக்கம்!”
கோத்தேவிற்கும் வியப்புத் தாளவில்லை.
”நீக்கா, வணக்கம்!”
நீக்காவிற்கு என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
”எனக்கு உன் பெயர் மறந்து விட்டது, ஞாபகப்படுத்து.”
”கியோர்கி!”
”கியோர்கி, வணக்கம்!…”
அனைவரின் கரங்களையும் பற்றிக் குலுக்குகிறேன், கண் பார்வையிலேயே அவர்களின் உயரங்களைக் கணித்து அதற்கேற்றபடி உட்கார வைக்கிறேன்.
தீமாவைக் கூட்டி வந்தார்கள். இச்சிறுவன் சற்றே மனச் சோர்வானவன்.
”தீமா, வணக்கம்!” என்று கூறியபடியே கையை நீட்டுகிறேன்.
அவன் கரத்தை நீட்டவில்லை. தன் கணவன் வெளி நாட்டில் வேலை செய்ததாகவும் அங்கு இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாயும், குழந்தைகள், முன் பின் அறிமுகமில்லாதவர்களுடன் சிறுவனுக்குப் பழக்கமில்லை என்றும், அவனுக்கு நண்பர்கள் மிகக் குறைவாகவே இருந்ததாயும் தாய் விளக்குகிறாள்.
தீமா தன் தாயின் கரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட மறுக்கிறான். விக்டரும் அம்மா இல்லாமல் வகுப்பறையினுள் நுழைய மறுத்து விடுகிறான். சரி, அம்மாக்களும் வகுப்பறையினுள்ளேயே உட்கார்ந்திருக்கட்டும்.
அதிகாரத் தோரணையுடைய ஒரு பெண்மணி திடீரென அறையினுள் நுழைந்து தன் மகனை என் வகுப்பிற்கு மாற்றப் போவதாக அறிவிக்கிறாள். இது இயலாது என்று நான் விளக்க முற்படுகிறேன்.
”ஆனால், இப்போதுதான் நீங்கள் இரண்டு குழந்தைகளை இவ்வகுப்பில் சேர்த்தீர்களே!” என்று அவள் கோபத்தோடு கூறுகிறாள்.
வகுப்பில் இடமில்லை என்பதைக் காட்டி அமைதியாக, சன்னமான குரலில் நான் தரும் விளக்கங்களில் திருப்தியடையாத அப்பெண்மணி அமைச்சகத்தில் முறையீடு செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு வெளியேறுகிறாள்.
பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களையும், வெறியூட்டி தூண்டி விட்ட பா.ம.க தலைமையையும் கைது செய்!
சாதி-மத வெறிக் கருத்துகளைப் பரப்பி, கலவரங்களைத் தூண்டிவிடும் அமைப்புகளைத் தடை செய்!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 25.04.2019 வியாழன்,
நேரம் : மாலை 5.30 மணி,
இடம் : குறத்தெரு, உறையூர், திருச்சி.
தலைமை:
தோழர் ஞா. ராஜா,
ஒருங்கிணைப்பாளர், திருச்சி.
சிறப்புரை:
தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.
மற்றும் பிற அரசியல் கட்சியினர், ஜனநாயக சக்திகள் உரையாற்றுகின்றனர்.
தமிழக அரசே!
பானைக்கு வாக்களித்த தலித் மக்களை பாதுகாக்கத் தவறிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்!
பாதிக்கப்பட்ட பொன்பரப்பி தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கு!
தமிழக மக்களே!
ஆளை மாற்றும் தேர்தலால் அகன்று விடாது சாதி வெறி!
அரசுக் கட்டமைப்பை மாற்றுவதொன்றே சாதி வெறியை வீழ்த்தும் வழி!
பொன்பரப்பி வன்கொடுமைக் குற்றத்துக்கு மருத்துவர் ராமதாசே முழுப்பொறுப்பு !
பொன்பரப்பி தாக்குதல் என்பது பா.ம.க-வின் சாதிவெறி அரசியலும், பா.ஜ.க-வின் இந்து மதவெறி அரசியலும் கூட்டுச் சேர்ந்து தலித் மக்களுக்கு எதிராக நடத்தியிருக்கும் வன்முறை. இது காட்டுமிராண்டித்தனத்திற்கும் நாகரீக சமூகத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்.
நமது சமூகத்தின் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்துபவை சாதி-மதவெறி அமைப்புகள்தானே தவிர, இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல, இது ஜனநாயகமும் அல்ல என்பதையே இந்த சாதிவெறித் தாக்குதல் தெளிவாக நிரூபிக்கிறது. தேர்தல் ஆணையம், காவல்துறை உள்ளிட்ட யாரும் இந்த தாக்குதலைத் தடுக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை . இவர்கள் அனைவருமே சாதிவெறியர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது நாம் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவனை ஆதரிக்கக் கூடாது என பிள்ளை, வன்னியர், செட்டியார், பார்ப்பனர், நாயுடு என பிற ஆதிக்க சாதியினர் அனைவர் மத்தியிலும் பிரச்சாரம் நடந்திருக்கிறது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, சாதி உணர்வை மனதில் வைத்து பானை சின்னத்தை புறக்கணித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு தீண்டாமை வெறியைத் தூண்டியிருக்கின்றனர். இந்த தேர்தல் ஜனநாயகத்தின் யோக்கியதை இதுதான்.
சிதம்பரம் நகரத்திலேயே நடைபெற்ற இந்த பிரச்சாரத்துக்கும், பொன்பரப்பி கிராமத்தில் பா.ம.க.-வினர் கையில் ஆயுங்களுடன் இந்து முன்னணி உடன் சேர்ந்து கொண்டு நடத்தியிருக்கும் தாக்குதலுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. இது வெறும் பொருட்சேதம் குறித்த பிரச்சினை அல்ல, ஜனநாயகம் என்பது பெயரளவில் கூட இருக்கக் கூடாது என்பதுதான் இந்த தாக்குதல் மூலம் சாதி-மத வெறியர்கள் நமக்குக் கூறும் செய்தி. அனைத்து மக்களும் அமைதியாக வாழமுடியாமல் சாதி மத வெறி கருத்துக்களை விதைத்து அதன் மூலம் பாசிச அதிகாரத்தை அரசிலும் சமூகத்திலும் வேரூன்ற செய்வதுதான் இத்தகைய தாக்குதல்களின் நோக்கம்.
இசுலாமிய, கிறுஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இந்துக்களிடம் மதவெறியைத் தூண்டி அதை தனது அரசியல் ஆதாயத்துக்காக பாரதிய ஜனதா கட்சி எப்படி பயன்படுத்திக் கொள்கிறதோ, அதே சூத்திரத்தை பயன்படுத்தி தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின் மூலம் சாதிவெறியைத் தூண்டி பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் ஆதாயமடைகிறது. தேசியக் கட்சியான மதவெறி பாஜகவும், மாநிலக் கட்சியான சாதிவெறி பாமகவும் இணையும் புள்ளி இதுவே! இந்த அடிப்படையில்தான் அந்த கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட இயற்கைக் கூட்டணி அது!
தீண்டாமை என்பது தலித் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினை அல்ல, சாதி இந்து சமூகம் இழைக்கின்ற குற்றச்செயல். இதில் தேர்தல் கட்சிகளும், பெரும்பான்மை சமூகத்தினரும் அமைதியாக இருப்பதும், பா.ம.க. இந்து முன்னணியைக் கண்டிக்காமல் இருப்பதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாக முடியும்.
இது பொன்பரப்பி தலித் மக்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை!
கொலை மிரட்டல் விடுத்து, கும்பலாக நமது வீட்டை அடித்து நொறுக்கினால், நாம் என்ன நீதியை அரசிடம், சமூகத்திடம் கோருவோமோ அந்த நீதி பொன்பரப்பி மக்களுக்கு கிடைப்பதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும்!
தகவல் : மக்கள் அதிகாரம் திருச்சி மண்டலம், திருச்சி – 94454 75157 . மணப்பாறை – 98431 30911. கரூர் – 97913 01097.
அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிடுறோம். இன்னைக்குதான் முஸ்லீம்னு பிரிக்கிறாங்க !
சென்னை குமணன்சாவடியிலிருந்து மாங்காடு செல்லும் வழியில் உள்ள ஆதம்பாய் பீஃப் பிரியாணிக்கடையின் வாடிக்கையாளர் ஒருவரிடம், பாஜக ஆட்சிக்கு வந்து மாட்டுக்கறிக்கு தடை விதித்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டோம்.
தான் மாட்டுக்கறி சாப்பிடத் தொடங்கிய வரலாறையும், மாட்டுக்கறியின் மகத்துவத்தையும், இன்று பாஜகவால் திட்டமிட்டு புகுத்தப்படும் மதவாதம் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் ஓட்டுநர் சங்கர்.
மார்க்ஸ் பிறந்தார் – 28 – இறுதி பகுதி (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
முடிவுரை
அவருடைய பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும்! – பிரெடெரிக் எங்கெல்ஸ்(1)
ஜென்னி மார்க்ஸ் மரணமடைந்து ஒரு வருடத்துக்குப் பிறகு, 1883 மார்ச் 14-ம் தேதியன்று கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை”(2) என்று எங்கெல்ஸ் எழுதினார்.
மார்க்சின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருடைய இலட்சியம், அவருடைய கருத்துக்கள் மனிதகுலத்துக்குப் பெரு நிதியாகும். அதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூற இயலாது.
லண்டனில் உள்ள காரல் மார்க்சின் நினைவிடம்.
மனிதகுலக் கலாச்சாரத்தின் மொத்த வரலாற்றிலுமே மார்க்சியத்துடன் எந்த அளவிலாவது ஒப்பிடக் கூடிய ஒரு நிகழ்வு ஏற்பட்டதில்லை. அது வரையிலும் தத்துவஞானிகள் உருவாக்கிய தத்துவங்கள் ஒரு சிறு குழுவின் உடைமையாக மட்டுமே இருந்தன. அத்தத்துவங்கள் யதார்த்தத்தின் தனித்தனியான அம்சங்களை விளக்கின, அல்லது உலகத்தைக் கருத்தியலாக எடுத்துக்காட்டின.
அவர்கள் தமது உறுதியான நம்பிக்கைகளுக்கு ஏற்ப இதுவரையிலும் உலகத்திலிருந்த எல்லாவற்றையும் விளக்க முற்பட்டார்கள். தாங்கள் கூறுவதே முடிந்த முடிவு, மற்றவர்கள் இவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இத்தத்துவ ஞானிகளின் ஊகங்கள் எத்தகைய சாயலைக் கொண்டிருந்தாலும் வரலாற்று உணர்வின்மையும் வறட்டுக் கோட்பாட்டுவாத அணுகுமுறையும் அவை அனைத்துக்கும் பொதுவான குறைபாடுகளாகும்.
இச்சிந்தனையாளர்களின் தத்துவங்கள் யதார்த்தத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இயக்கவியல் விதிகளுக்கு ஏற்ப வாழ்க்கை தடுக்க முடியாதபடி முன்னேறிக் கொண்டிருந்த பொழுது உலகத்தை வெல்லப் போகின்றன என்று எதிர்பார்த்த கோட்பாடுகள், தோன்றிய உடனே காலாவதியாகிவிட்டன.
“தத்துவம் என் நண்பரே நரை கண்டது, வாழ்க்கை எனும் கற்பகத்தரு பசுமையானது!” (கேதே ஃபாவுஸ்டு)
இது கேதேயின் மணிமொழி. யதார்த்தத்தின் மெய்விவரங்களை, யதார்த்தத்தின் தற்காலிக நிகழ்வின் ஏதாவதொரு அம்சத்தைப் பிரதிபலிக்காமல் யதார்த்தத்தின் மெய்யான வளர்ச்சியை, அதன் நிரந்தரமான, தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் பிரதிபலிக்கின்ற தத்துவம் தோன்றிய பொழுது இந்த மணிமொழி தன்னுடைய உறுதியான தன்மையை இழந்தது.
கண்களை மூடியிருந்த துணிகள் அகற்றப்பட்டன, வறட்டுக் கோட்பாட்டுச் சிந்தனையின் தப்பெண்ணங்கள் கைவிடப்பட்டன. முதன்முறையாக உலகம், விசும்பிலும் காலத்திலும் அதன் நிரந்தரமான வளர்ச்சியின் பல்தொகுதி மற்றும் முரண்பாடுகள் அனைத்துடனும் துல்லியமாக அப்படியே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. இத்தத்துவத்தின்படி இயற்கையின் வளர்ச்சியின் ஆக உயர்ந்த கட்டமாக மனித சமூகம் தோன்றுகிறது, திட்டவட்டமான, அறியப்படக் கூடிய இயற்கை – வரலாற்று விதிகளின் அடிப்படையில் அது முன்னேற்றமடைகிறது.
யதார்த்தத்தை அறிகின்ற முறையியலின் நோக்கிலிருந்து மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக வரையறுப்பதென்றால் அதன் முரணில்லாத வறட்டுச் சூத்திரவாத எதிர்ப்பையும் முரணில்லாத வரலாற்றுணர்வையுமே குறிப்பிட வேண்டும்.
மார்க்சியத்தின் இந்தச் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்சும் எங்கெல்சும் இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றைப் பற்றித் தங்களுடைய கருத்துக்களின் அமைப்பை முழுமையாக விளக்குகின்ற நூல்களை, “மார்க்சியத்தைப் பற்றிய வினாவிடை” நூல்களை எழுதவில்லையே என்று வியப்படைகிறார்கள். அவர்களில் சிலர் இத்தகைய “வினாவிடை நூல்களை” எழுதுவதற்கு முயற்சியும் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியின் பலன் கொச்சையான மார்க்சியமே.
ஏனென்றால் மார்க்சியம் என்பது எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்கெனவே தயாரித்த பதில்களைத் தருகின்ற தத்துவமல்ல, பிரபஞ்சத்தைப் பற்றிய தத்துவ ரீதியான மாதிரிப்படிவமல்ல, “கட்டாயமான” வரலாற்றுத் திட்டமல்ல. நிரந்தரமான வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உட்படுகின்ற ஒன்றை அறிகின்ற முறையே மார்க்சியம். அது சமூக உறவுகளைப் புரட்சிகரமாகத் திருத்தியமைக்கும் செயல்திட்டம், அத்தகைய சீரமைப்புப் போராட்டத்துக்கு அது ஆயுதம்.
மார்க்சுக்கு முன்பே கூட மனிதனுடைய அறிவு பல இயற்கை நிகழ்வுகளையும் விதிகளையும் விஞ்ஞானரீதியாக விளக்கியிருக்கிறது; ஆனால் சமூக உறவுகளின் துறையில் கடந்தகாலச் சிந்தனையாளர்கள் இருட்டில் அலைந்து கொண்டிருந்தார்கள். எல்லாச் சமூக நிகழ்வுகளையும் முற்றும் விளக்கிக் கூற முடியும் என்ற பொய்யான கோரிக்கைகளை மார்க்சியம் நிராகரித்தது. ஆனால் அவற்றை ஆராய்வதற்கு நம்பகமான, சரியான வழியைக் காட்டியது.
ஆகவே சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி முதன்முறையாக முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் அமைக்கப்பட்டது. மனிதகுலத்தின் வரலாற்றில் புரட்சிகரமான கொந்தளிப்புக்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன; ஆனால் மார்க்சுக்கு முன்பு உண்மையிலேயே புரட்சிகரமான உலகக் கண்ணோட்டம் என்பது கிடையாது. இப்பொழுது பெருந்திரளான மக்களின் புரட்சிகரமான இயக்கமும் புரட்சிகரமான சிந்தனையும் ஒன்றாகச் சேர்ந்தன. மார்க்சியம் வரலாற்றின் “உந்துவிசையாக” மாறி, அதனை வேகப்படுத்தியது.
மார்க்சியக் கருத்துக்கள் பரவிய வேகத்தைப் பற்றி வியப்படையாதிருக்க இயலாது. கம்யூனிஸ்டு அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் ‘கம்யூனிஸ்டு சங்கத்தில்’ சில டஜன் உறுப்பினர்கள் இருந்தார்கள். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதல் வெகுஜன, போர்க்குணமிக்க அமைப்பாகிய சர்வதேசத் தொழிலாளர் சங்கம் 1864-ல் நிறுவப்பட்டது. கம்யூனிசம் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச இயக்கமாக மாறத் தொடங்கியது. 1871-ல் பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடத்திய புரட்சிகரமான போராட்டத்தின் மூலம் கம்யூனிசக் கருத்துக்களை அமுலாக்குகின்ற முதல் வீரமிக்க முயற்சியைச் செய்தது. அது ஏற்படுத்திய பாரிஸ் கம்யூன் மூன்று மாத காலம் நீடித்தது.
முதலாவது அகிலத்தின் குழந்தையான பாரிஸ் கம்யூனின் அனுபவத்தைப் பொதுமைப்படுத்திய மார்க்ஸ் அதை ஒரு புதிய ரகத்தைச் சேர்ந்த அரசாக, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக, உழைப்பின் பொருளாதார விடுதலை தொடங்கக் கூடிய ஒரே அரசியல் வடிவமாகக் கண்டார். உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது பாட்டாளி வர்க்க அரசின் கடமை என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். கம்யூன் அதிகாரவர்க்க உணர்ச்சியை வேரோடு அகற்றுவதை, எல்லா அரசு ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளையும் பெருந்திரளான மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதை, கம்யூன் தன்னுடைய நடவடிக்கைகளுக்குப் பெருந்திரளான உழைக்கும் மக்களை ஆதாரமாகக் கொள்வதை மார்க்ஸ் வரவேற்றார்.
மார்க்சும் எங்கெல்சும் தங்களுடைய வாழ்க்கையின் இறுதியில் உலகப் புரட்சிகர இயக்கத்தின் கேந்திரமாக மாறிக் கொண்டிருந்த ருஷ்யாவை நோக்கி மென்மேலும் அதிகமான கவனத்தைச் செலுத்தினார்கள் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். மார்க்சின் மூலதனம் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நாடு ருஷ்யா. பாட்டாளி வர்க்கம் வெற்றியடைந்த முதல் நாடும் ருஷ்யாவே.
ஐரோப்பிய வரலாற்றில் புதிய திருப்புமுனை ருஷ்யாவில் நடைபெறுகின்ற சம்பவங்களுடன் இணைந்திருக்கும் என்று மார்க்ஸ் ஸோர்கேக்கு எழுதினார். “ருஷ்யாவிலுள்ள நிலைமைகளைப் பற்றி அதிகாரபூர்வமல்லாத மற்றும் அதிகாரபூர்வமான ஆவணங்களை (இவை வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடியவை, பீட்டர்ஸ்பர்கிலிருக்கும் நண்பர்கள் மூலம் இவை எனக்குக் கிடைத்தன) நான் ஆராய்ந்திருப்பதன் அடிப்படையில் ருஷ்யா ஒரு மாபெரும் கொந்தளிப்பின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது, அதற்குரிய எல்லாக் கூறுகளும் தயாரிக்கப்பட்டுவிட்டன எனக் குறிப்பிடுவேன்”(3) என்று மார்க்ஸ் எழுதினார்.
ருஷ்ய சமூகத்தின் அதிகாரபூர்வமான பகுதிகள் அனைத்தும் பொருளாதார மற்றும் அறிவுரீதியாக முற்றிலும் நசிவு நிலையில் இருக்கின்றன என்று எழுதிய மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: “இதுகாறும் எதிர்ப்புரட்சியின் உடைக்கப்படாத அரணாகவும் சேமப்படையாகவும் இருந்து வந்திருக்கும் கிழக்கில் இம்முறை புரட்சி தொடங்குகிறது.”(4)
ருஷ்யப் புரட்சியைப் பார்க்கின்றவரை தான் உயிரோடிருக்க இயலும் என்று மார்க்ஸ் நம்பினார். பாட்டாளி வர்க்க வெற்றிகள் ஏற்படப் போகின்ற தருணத்தையும் அவை எவ்வளவு அண்மையில் இருக்கின்றன என்பதைப் பற்றியும் மதிப்பிடுங்கால் மார்க்சும் எங்கெல்சும் சற்றுத் தவறு செய்திருக்கலாம். ஆனால் இத்தவறுகள் புரட்சியைத் “துரிதப்படுத்த வேண்டும்” என்ற எண்ணத்தினால் ஏற்படவில்லை. அத்தகைய பிளான்கிவாத அணுகுமுறை அவர்களுக்கு முற்றிலும் அந்நியமாகும். “இத்தகைய தவறுகள், புரட்சிகரச் சிந்தனை மேதைகள் செய்த தவறுகள்…. அதிகாரபூர்வமான மிதவாதத்தின் அலுத்துப்போன அறிவைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக மேன்மையானவை, மகத்தானவை, வரலாற்று ரீதியில் அதிகமான பயனுள்ளவை, உண்மையானவை”(5) என்று லெனின் முற்றிலும் சரியாக மதிப்பிட்டார்.
விளதிமிர் இலியிச் லெனின் (உலியானவ்) சிறுவயது புகைப்படம்.
மார்க்ஸ் மரணமடைந்த வருடத்தில் நெடுந்தொலைவுக்கு அப்பால், ஸிம்பீர்ஸ்க் என்ற ருஷ்ய நகரத்தில் விளாதிமிர் உலியானவ் என்ற பதின்மூன்று வயதுப் பள்ளி மாணவன் ஏற்கெனவே புரட்சிகர ஜனநாயக நூல்களைப் படிக்கத் தொடங்கியிருந்தான். அவன் பதினைந்தாம் வயதில் மார்க்சின் மூலதனத்தைப் படித்து முடித்தான். அவன் சீக்கிரத்தில் ருஷ்யாவில் மார்க்சியத்தை எழுச்சியுடன் பரப்புவோனாகவும் புரட்சிகரத் தொழிலாளர் கட்சியின் அமைப்பாளனாகவும் மாறினான்.
மார்க்சியக் கருத்துக்களைப் படைப்புத் தன்மையுடன் வளர்ப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஒரு புதிய சகாப்தம், அதே சமயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையிலும் கம்யூனிஸ்டு அறிக்கையில் எடுத்துக் கூறப்பட்ட புதிய உலகத்தை நிர்மாணிப்பதிலும் புதிய சகாப்தம் விளதிமிர் இலியிச் லெனின் (உலியானவ்) பெயருடன் இணைந்திருக்கிறது.
19-ம் நூற்றாண்டு விஞ்ஞானக் கம்யூனிசத்தின் தத்துவம் பிறந்த நூற்றாண்டு என்றால் 20-ம் நூற்றாண்டு ஒரு புதிய சமூகத்தின், “பரிபூரணமான மனிதாபிமானம் என்ற கம்யூனிச சமூகத்தை” நிர்மாணித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் குடும்பம் பிறந்த நூற்றாண்டாகும்.
நமது யுகத்தில் சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல. சோவியத் யூனியனைச் சுற்றித் திரண்டிருக்கின்ற பல நாடுகளில் சோஷலிசம் யதார்த்தமாகிவிட்டது. அங்கே ஒரு புதிய சமூகம் உருவாக்கப்பட்டது. அந்தச் சமூகத்தில் சுரண்டலும் சமூக ஏற்றத்தாழ்வும் மனிதனுடைய தகுதியைக் குறைக்கின்ற எல்லா வடிவங்களும் ஒழிக்கப்பட்டுவிட்டன. அங்கே நெருக்கடிகள் இல்லாத பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது, உழைக்கும் மக்களின் பொருளாயத சுபிட்சம் தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது, அதனைத் தொடர்ந்து அவர்களுடைய கலாச்சார நிலையும் ஆன்மிக வளமும் அதிகரிக்கின்றன. அங்கே விஞ்ஞான, மார்க்சிய-லெனினிய உலகக் கண்ணோட்டத்தை வழிகாட்டியாகக் கொண்ட உழைக்கும் மக்கள் சமூக நிகழ்வுப் போக்குகள் அனைத்தையும் தாமே இயக்குகிறார்கள். தனிமனிதனுடைய சர்வாம்ச, வரம்பற்ற வளர்ச்சியே, “முன்பே முடிவு செய்யப்பட்ட மட்டங்களுக்குச் சம்பந்தமில்லாமல் அனைத்து மனித சக்திகளின்”(6) வளர்ச்சியே அந்தச் சமூகத்தின் குறிக்கோளாக இருக்கிறது.
சோஷலிச நாடுகளின் வளர்ச்சி, பலத்தின் முன்னேற்றம், அவை பின்பற்றுகின்ற சமாதானம் மற்றும் பதட்டத்தணிவுக் கொள்கைகளின் ஆக்கபூர்வமான விளைவு மனிதகுலத்தின் சமூக முன்னேற்றத்தின், உலகப் புரட்சிகர நிகழ்வுப் போக்கின் முக்கியமான போக்காக இருக்கின்றன. ஏகாதிபத்தியம், ஏகபோகங்கள், காலனியாதிக்க எச்சமிச்சங்கள் ஆகியவற்றை எதிர்த்து சமாதானம், தேசிய சுதந்திரம் மற்றும் சோஷலிசத்துக்காக நடைபெறும் போராட்டத்தில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் மக்கள் மென்மேலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்போராட்டத்தில் அவர்களுடைய பாதையில் ஒளி பாய்ச்சுவது மார்க்சிய-லெனினியத் தத்துவமே. முதலாளிவர்க்க சித்தாந்திகள் மார்க்சியத்தை “மறுப்பதற்கும்” “அழிப்பதற்கும்” தங்கள் முழுச் சக்தியையும் தொடர்ந்து செலவிடுகிறார்கள். அவர்கள் மார்க்சியத்துக்குப் பதிலாக இன்றைய அற்பவாதிகள் விரும்புகின்ற வேறு தத்துவங்களை நிறுவுவதற்கு முயற்சி செய்கிறார்கள்; விஞ்ஞான சோஷலிசத்துக்குப் பதிலாக மார்க்சும் எங்கெல்சும் தம் காலத்தில் கூர்மையாகக் கிண்டல் செய்த “மிதவாத சோஷலிசத்தை” நிறுவப் பாடுபடுகிறார்கள்.
இம்முயற்சிகள் அனைத்தும் வீணாகி வருவதை நாம் பார்க்க முடியும். மார்க்ஸ் சுட்டிக்காட்டிய திசையில் வரலாறு தடுக்க முடியாதபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகக் கம்யூனிஸ்டு இயக்கம் மென்மேலும் வலிமையடைந்து கொண்டிருக்கிறது.
நம் காலத்தில் சமூக மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகமான வேகத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாபெரும் முக்கியத்துவத்தைக் கொண்ட புதிய அரசியல் சம்பவங்களும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் நடைபெறுவதைப் பற்றிப் படிக்கிறோம். சமூக முன்னேற்றத்துடன் இணைந்து மார்க்சியத் தத்துவமும் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அது புதிய உண்மைகளைப் பொதுமைப்படுத்தி உலகத்துக்குப் புதிய வானங்களைக் காட்டுகிறது. தத்துவஞானமும் சமூக ஆராய்ச்சியும் தங்களுடைய சாதனைகளைப் பற்றித் திருப்தி கொண்டு வெகுஜன எளிமையை நோக்கமாகக் கொண்டால் அவை வறட்டுச் சூத்திரவாத, கோட்பாட்டுவாதப் படுகுழியில் விழுந்து விடும்.
மார்க்சிய-லெனினியம் வாழ்க்கையை விட்டு விலகுவதில்லை, குறுங்குழுவாதக் கோட்பாட்டின் வரையரைக்குள் தன்னை அடைத்துக் கொள்வதில்லை. மனிதகுலத்தின் மொத்தக் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பொதுமைப்படுத்தி விமர்சன ரீதியில் புத்தாக்கம் செய்வதை அடிப்படையாக கொண்ட மார்க்சியம் மனிதகுல மேதைகளின் மகத்தான சாதனைகளைத் தன்வயமாக்கிக் கொண்டு மேலும் வளர்ச்சி அடைகிறது.
மார்க்சின் துணிவு மிக்க, படைப்பாற்றலுடைய, புதியனவற்றைத் தேடுகின்ற சிந்தனை இன்றைய உலகத்தில் வாழ்கிறது, தொடர்ந்து போராடுகிறது. அது விஞ்ஞானி, தத்துவஞானி, அரசியல்வாதி ஆகியோரது பணியில் பங்கெடுக்கிறது. வாழ்க்கையிலும் சமூகப் போராட்டத்திலும் ஒவ்வொரு நபரும் தனக்குரிய இடத்தைப் பெறுவதற்கு அது உதவி செய்கிறது. அது சமூகத்திலிருந்து எல்லாவிதமான கசடுகளையும் அகற்றுவதற்கு, மனித குலத்தினருக்கு துன்பங்களையும் யுத்தங்களையும் வறுமையையும் பசியையும் அநீதியையும் ஒழிப்பதற்கு உதவி செய்கிறது.
இந்த பூமியில் மனிதனுடைய மாபெரும் தகுதிகளுக்கேற்ற சிறப்பான வாழ்க்கையை அமைப்பதற்கு அது உதவி செய்கிறது.
குறிப்புகள்:
(1) Karl Marx and friedrick Engles, SelectedWorks in 3 volumes, Vol. 3, Moscow,1976, p. 163. (2) Marx, Engles, Selected correspondence, p. 340. (3) Marx, Engles, Selected correspondence, p. 289 (4) Ibid. (5) V. I. Lenin, Collected Works, Vol.12, p. 378. (6) Karl Marx, Grundrisse der Kritik der Politischen Okonomie, Dietz Verlag, Berlin, 1953, s. 387.
– முற்றும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார் நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ் தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ. வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986-ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் கடையின் புதிய முகவரி கீழே) 1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்) பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
மைய அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சென்ற மார்ச் மாதம் 16-ம் தேதி வரை சம்பளம் தரப்படவில்லை என்று நாளிதழ்களில் வந்த செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்.
இது மட்டுமின்றி 54,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் அனுப்பப்படுவார்கள் என்றும் செய்தி வெளியாகியிருக்கிறது. “விருப்ப ஓய்வில் போய்விடுவதே நல்லது” என்ற கருத்தை ஊழியர்களிடம் உருவாக்குவதற்காகத்தான் சம்பளம் திட்டமிட்டே தாமதப்படுத்தப்பட்டிருக்கும் என்ற ஐயம் இப்போது எழுகிறது.
மேலும், பி.எஸ்.என்.எல்-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மூன்று மாதங்களாகக் கூலி வழங்கப்படவில்லை. மின்கட்டணம் செலுத்தப்படாததால், மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுப் பல கிராமப்புற தொலைபேசி நிலையங்களின் கோபுரங்கள் (டவர்கள்) இயங்கவில்லை. இவையனைத்தும் பி.எஸ்.என்.எல். மூடப்படுவதற்கான அறிகுறிகள்.
வர்தா புயலில் சென்னை மாநகரின் அத்தனை செல்பேசி சேவைகளும் செயலிழந்தபோது பி.எஸ்.என்.எல். மட்டுமே வேலை செய்தது. பழுதான செல்பேசி கோபுரங்களைச் செப்பனிட்டு, முறையான சேவையை விரைந்து மீட்டதும் பி.எஸ்.என்.எல்.தான். காரணம், அந்த ஊழியர்களது உழைப்பு என்பது ஒரு பகுதி உண்மை. முதன்மையான காரணம் என்ன? இலாப நோக்கில் செயல்படும் கார்ப்பரேசனாக மாற்றப்பட்ட போதிலும்கூட, இலாப நோக்கம் கருதாமல் ஒரு அத்தியாவசிய சேவை என்ற அடிப்படையில் மக்களுக்கு விரைந்து சேவையை சீர்செய்து அளிக்க வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். கருதியது. ஏனெனில், பி.எஸ்.என்.எல். பொதுத்துறை நிறுவனம்.
தனியார் செல்பேசி நிறுவனங்கள் எதுவும் அவ்வாறு கருதவில்லை. புயலில் பழுதான உபகரணங்களைக் காட்டிக் காப்பீட்டு நிறுவனங்களிடம் காசு வாங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனரேயன்றி, பழுதை நீக்க அவர்கள் முயற்சிக்கவில்லை. வாடிக்கையாளர் நலன், அத்தியாவசிய சேவை என எதுவாக இருந்தாலும், அவை அனைத்தைக் காட்டிலும் முதன்மையானது கம்பெனியின் இலாபம் என்பதே அவர்களது அணுகுமுறை.
54,000 ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பும் மோடி அரசின் முடிவை எதிர்த்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் – தொழிலாளர்கள் தலைநகர் டெல்லியில் கூடி நடத்திய ஆர்ப்பாட்டம்.
தனியார் சேவைக்கும் பொதுத்துறை சேவைக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை ஒவ்வொரு புயல் வெள்ளத்தின் போதும் பார்க்கலாம். தொலைபேசித்துறை மட்டுமல்ல, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட எல்லா அத்தியாவசிய துறைகள் விசயத்திலும் இந்த வேறுபாட்டை நாம் காணலாம்.
ஆகவே, பி.எஸ்.என்.எல். மூடப்படுவது என்பதை அதில் பணிபுரியும் 1,76,000 ஊழியர்களின் பிரச்சனை என்று யாராவது இன்னமும் கருதிக் கொண்டிருந்தால், விழித்துக் கொள்ளுங்கள், இது மக்களின் தகவல் தொடர்பு குறித்த பிரச்சினை.
*****
பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏன் நட்டத்தில் நடக்கிறது? “மற்ற தனியார் செல்பேசி நிறுவனங்களைக் காட்டிலும் இங்கே ஊழியர் எண்ணிக்கை அதிகம். அதுதான் நட்டத்துக்கு முதல் காரணம்” என்று அரசு கூறுகின்றது. “பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஒரேயடியாக இழுத்து மூடிவிட்டால் என்ன?” என்பது குறித்து கருத்துக் கூறுமாறு அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மைக் கல்விக் கழகத்திடம் ஒரு வருடத்திற்கு முன்பே – ஏப்ரல் 2018 – இல் கேட்டிருக்கிறது மோடி அரசு.
பி.எஸ்.என்.எல். நட்டத்திற்குக் காரணம் ஊழியர்களின் எண்ணிக்கைதான் என்று சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கம்பம் நட்டு, கம்பி இழுத்து, பூமிக்கு அடியில் கம்பிவடம் பதித்து, நாடு முழுவதும் மைக்ரோ வேவ் கோபுரங்கள் அமைத்துத் தொலைபேசி வலைப்பின்னலை தமது உழைப்பின் மூலம் உருவாக்கியவர்கள் தொழிலாளர்கள். கிரகாம் பெல்லின் தொலைபேசி முதல் இன்றைய செல்பேசி வரைத் தகவல் தொழில்நுட்பம் கடந்து வந்திருக்கும் பாதை நெடியது. பி.எஸ்.என்.எல். – இன் நவீன காப்பர் மற்றும் கண்ணாடி இழை கேபிள் வலைப் பின்னல் போன்றவையெல்லாம் மூன்றரை இலட்சம் ஊழியர்களின் கால் நூற்றாண்டு உழைப்பில் உருவானவையாகும்.
இவை அனைத்தையும் உருவாக்கிய ஊழியர்களை இப்போது தேவையற்றவர்கள் என்று கூறும் கண்ணோட்டம், வயது முதிர்ந்த பெற்றோரைச் சுமை என்று வீட்டைவிட்டுத் துரத்தும் சுயநல, அயோக்கியத்தனத்துக்கு நிகரானது.
*****
தகவல் தொழில்நுட்பத் துறையில் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சியின் சமீபத்திய கட்டத்தில் வந்தவைதான் செல்பேசிகள். இந்த செல்பேசி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானவுடன், அந்தச் சேவையை அரசுத்துறையே அளித்திருக்க முடியும் என்ற போதிலும், பி.எஸ்.என்.எல். அதில் நுழைவதற்கு வாஜ்பாயி அரசு தடை விதித்தது. செல்பேசி கோபுரங்களைக்கூடத் தனியார் நிறுவனங்கள் தம் சொந்த செலவில் அமைத்துக் கொள்ளவில்லை. பி.எஸ்.என்.எல்.-இன் வலைப்பின்னலையும் மைக்ரோவேவ் டவர்களையும் தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கொடுக்குமாறு அரசு கட்டாயப்படுத்திக் கொடுக்க வைத்தது.
பிரதமர் நரேந்திர மோடி ஜியோவின் விளம்பர மாடலா? மோடியின் படம் அச்சிடப்பட்ட ஜியோ நிறுவனத்தின் விளம்பரம்.
அலைக்கற்றையை அரசாங்கம் வழங்கியது; கோபுரங்கள், அரசு தொலைபேசி நிறுவனத்துக்குச் சொந்தமானவை; மூலதனம், அரசுத்துறை வங்கிகளிடம் கடனாகக் கிடைத்தது. இதுதான் தனியார் தொழில்முனைவோர் இந்தத் “துறையை உருவாக்கிய” கதை. “இதற்குப் பதிலாக அரசே இந்தச் சேவையை நடத்தியிருக்கலாமே” என்ற கேள்விக்கு ஒரே பதில் – தனியார்மயம் – தாராளமயம் என்ற கொள்கை. இல்லை, கொள்ளை!
தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின்படி அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதால், அரசு தொலைபேசித்துறையின் சந்தையைத் திட்டமிட்டுப் பிடுங்கித் தனியாருக்கு தரப்பட்டது. தனியார் நிறுவனங்கள் இந்த தொழிலுக்குப் புதியவர்கள் என்ற காரணத்தினால், ஏகபோகமாக இருந்த அரசு தொலைபேசித்துறையின் கை-கால்கள் அரசாலேயே கட்டிப்போடப்பட்டன. அதன் பின்னர் தனியார் முதலாளிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.
இப்படி ஏகபோகமாக இருந்த அரசுத்துறைக்கும் புதிதாக வந்த தனியார் துறைக்கும் இடையிலான “நடுவர்” என்ற பெயரில்தான் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைக்கப்பட்டது. அரசுத்துறையை ஒழித்துக் கட்டுவதுதான் இந்த ஒழுங்குமுறை ஆணையங்கள் அனைத்துக்கும் இடப்பட்ட பணி. அந்த வேலையை டிராய் செவ்வனே செய்தது.
நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் உலகச்சந்தையில் கிடைத்த போதிலும், தனியார் நிறுவனங்கள் வாங்கும் தொழில்நுட்பங்களை வாங்க பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. மொத்த செல்பேசி சந்தையையும் தனியார் முதலாளிகள் கைப்பற்றும் வரை, 2ஜி, 3ஜி தொழில்நுட்பங்களை பி.எஸ்.என்.எல். பயன்படுத்துவதை டிராய் தடுத்தது.
“4ஜி வாடிக்கையாளர்கள் 35 கோடிப் பேர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 3.5 கோடி சந்தாதாரர்களை எங்களால் ஈர்க்க முடியும். 4ஜி பயன்படுத்த அனுமதி தாருங்கள்” என்று பி.எஸ்.என்.எல்., அரசிடம் வேண்டுகோள் வைத்தும் பயனில்லை. இதற்காகத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்தன. ஆனால் “தனியார் மூலம் மக்களுக்கு 4ஜி சேவை போதுமான அளவு கிடைத்துவிட்டதால், இனி பி.எஸ்.என்.எல்.-க்கு 4ஜி தொழில்நுட்பத்தை அனுமதிக்கத் தேவையில்லை” என நிதி ஆயோக் தடுத்துவிட்டது. நாளை தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு மாறும்போது, 4ஜி தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல்.-இன் தலையில் கட்டப்படும் என்று நம்பலாம்.
உலகில் இருக்கின்ற காலாவதியான தொழில்நுட்பங்களையெல்லாம் வாங்குமாறு அரசால் கட்டாயப்படுத்தப்பட்டதன் விளைவாக, பி.எஸ்.என்.எல்.-க்குப் பொருட்செலவு ஏற்பட்டது மட்டுமல்ல, சேவைத்தரம் குறைந்து வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்லுமாறு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களுக்கு தனியார் நிறுவனங்கள் சேவை அளிப்பதில்லை. பி.எஸ்.என்.எல். தான் இப்போதும் சேவைஅளிக்கிறது. வெள்ளம் , புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களிலும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NDMA) தகவல் தொடர்பை மீட்கும் பொறுப்பை பி.எஸ்.என்.எல். -இடம்தான் ஒப்படைத்து வருகிறது.
42.11 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட வோடோபோனிடமோ, 34.18 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட ஏர் டெல்லிடமோ, இன்று அனைவரையும் மிக வேகமாகப் புறம்தள்ளி மொத்தச் சந்தையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவிடமோ இந்தப் பணிகளை அரசு கொடுப்பதில்லை. 11.38 கோடி சந்தாதாரர்களுடன் தள்ளாடிக் கொண்டி ருக்கும் பி.எஸ்.என்.எல்.- இன் தலையில்தான் இலாபமற்ற சேவைகள் அனைத்தும் கட்டப்படுகின்றன.
இப்படியாக 100% தொலைபேசி சேவையை அளித்து வந்த பி.எஸ்.என்.எல்., சுமார் இருபதே ஆண்டுகளுக்குள் அடிமாட்டின் நிலைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. “அடிமாட்டுக்கு அனுப்பி விட்டால் என்ன?” என்று கேட்கிறது “கோ ரட்சக்” மோடியின் அரசு. அடிமாட்டை வாங்குவதற்குத் தனியார் முதலாளிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஏனென்றால், தொலைபேசித்துறை மற்றும் பி.எஸ்.என்.எல்.-இன் வசம் பல இலட்சம் கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிலங்கள், கட்டிடங்கள் உள்ளன. நாடு முழுவதும் பரவியிருக்கும் கோபுரங்கள் உள்ளன. இந்தக் கோபுரங்களை பி.எஸ்.என்.எல். இடமிருந்து பிரித்து “டவர் கார்ப்பரேசன்” என்று தனியொரு நிறுவனத்தை உருவாக்கி அதனிடம் ஒப்படைத்து விட்டால், பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகளில் 51 விழுக்காட்டை மட்டும் கைப்பற்றி விட்டால், மொத்த நிறுவனத்தையும் அப்படியே விழுங்கி விடலாம் என்பது தனியார் நிறுவனங்களின் ஆசை.
இப்படித்தான் நல்ல இலாபத்தில் இயங்கிவந்த வெளிநாடுகளுக்கான தொலைபேசி சேவையைப் பிரித்து, “விதேஷ் சஞ்சார் நிகாம்” என்ற அமைப்பை உருவாக்கி, அதனை டாடாவிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தது வாஜ்பாயி அரசு. இப்படித் தொலைபேசித்துறையைக் கசாப்பு போட்டு விற்பதைத் தொடங்கி வைத்தவர் வாஜ்பாயி என்றால், அதனை முடித்து வைக்கும் பொறுப்பை மோடி ஏற்றிருக்கிறார்.
*****
தனியார்மய நடவடிக்கைகள் பிற துறைகளை ஒப்பிடும்போது, மிக வேகமாக அமல்படுத்தப்பட்டது, தொலைத்தொடர்பு துறையில்தான். இந்த நிலையிலும் பி.எஸ்.என்.எல்., 11.38 கோடி சந்தாதாரர்களைத் தக்கவைத்து, தொலைத்தொடர்பு சந்தையின் மொத்த வருவாயில் 6 சதவீதத்தை ஈட்டிவருகிறது. சேவையிலும் வருவாயிலும் இந்தியாவிலேயே கேரள பி.எஸ்.என்.எல். முதல் இடத்தில் உள்ளது.
4ஜி தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல்.-க்குத் தரப்படவில்லை என்றாலும், அதற்கு இணையான தரத்தில் செல்போன் சேவையும், வை மாக்ஸ் டேட்டா சேவையும் கேரள பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. அங்கே தனியார் நிறுவனங்களால் கேரள பி.எஸ்.என்.எல்-க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மற்ற மாநிலங்களிலெல்லாம் சம்பள பாக்கி வைக்கப்பட்ட போதும், கேரளத்தில் மட்டும் உரிய தேதியில் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கப்பட்டு விட்டது. கேரள மக்களின் பொதுத்துறை மீதான நம்பிக்கையும், பி.எஸ்.என்.எல்.- ஐப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார்மயப்படுத்தும் சதிகளை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் – லுதியானா நகரில் நடந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
“2017-18-இல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் மார்ஷல் ஆன்டனி லியோ என்ற பொது மேலாளரின் பதவிக் காலத்தில், 90 ஆயிரம் தரை வழித்தட இணைப்புகள் அதிகரித்திருக்கின்றன. அது மட்டுமல்ல, 27 இலட்சம் புதிய செல்போன் இணைப்புகளுடன் தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. பஞ்சாப் இரண்டாம் இடத்தில் உள்ளது” என்கின்றன சங்கங்கள்.
பி.எஸ்.என்.எல். அழியும் நிலையில் கடைசி இடத்தில் இருக்கும் மாநிலம் மோடியின் குஜராத். தொலைபேசித்துறை மட்டுமல்ல, அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகிய அனைத்திலும் கடைசி இடத்தில் இருப்பது இந்துத்துவத்தின் சோதனைச்சாலையான குஜராத்தான்.
மற்ற எல்லாத் துறைகளிலும் நடப்பதைப் போலவே, பொதுத்துறை அதிகாரிகள்தான் பொதுத்துறையை அழிப்பதற்கு கோடரிக் காம்புகளாகத் தனியார் முதலாளிகளுக்குப் பயன்பட்டிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு தரம் கெட்ட கருவிகளைக் கொள்முதல் செய்து அரசு சேவையைச் சீர்குலைப்பது, பணி ஓய்வு பெற்ற பின் தனியார் நிறுவனத்தின் உயர் பதவியில் அமர்ந்து கொண்டு அரசுத்துறையை அழிக்க அவர்களுக்கு ஆலோசனை கூறுவது என இவர்களுடைய குற்றப்பட்டியல் மிக நீளமானது.
மாறாக, பி.எஸ்.என்.எல். காவு கொடுக்கப்படுவதை எதிர்த்த அதிகாரிகள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். மத்திய தொலைத் தொடர்புத்துறை செயலராக இருந்த ஜே.எஸ்.தீபக் 2017-இல் திடீரென்று அந்தப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டது இதற்கொரு சான்று.
டேட்டாவுக்காக என்று பெறப்பட்ட அலைக்கற்றை உரிமத்தைக் குரல் அழைப்புகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம், சந்தையில் திடீரென்று ஒரு விலை வீழ்ச்சியை ஏற்படுத்தி மொத்த வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் இழுப்பதற்கு அம்பானி முயற்சி செய்ததும், அம்பானியின் ஜியோ விளம்பரத் தூதராகவே மோடி செயல்பட்டதும் நாம் அறிந்த கதை. இந்த முறைகேட்டை டிராய் ஆதரித்தது.
“அம்பானிக்கு ஆதரவாக டிராய் எடுத்திருக்கும் முடிவின் விளைவாக, மற்ற தனியார் தொலைபேசி நிறுவனங்கள் நட்டத்துக்குத் தள்ளப்பட்டு, அவர்களுக்குப் பல்லாயிரம் கோடி கடன் கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கிகள்தான் அந்த நட்டத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்” என்று டிராயைக் கண்டித்துக் கடிதம் எழுதினார் தீபக்.
அதேபோல, ஜியோவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று காரணம் கூறி மற்ற எல்லா நிறுவனங்களுக்கும் தண்டத்தொகை விதித்தது டிராய். இது ஒருதலைப்பட்சமானது என்றும் இத்தகைய அதிகாரமே டிராய்க்கு கிடையாது என்றும் ஆட்சே பித்தார் தீபக். விளைவு, அவர் பணி நிமித்தம் ஐரோப்பா சென்றிருந்த நிலையில், அந்தப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார்.
பி.எஸ்.என்.எல். இன்று எதிர்நோக்கும் அழிவு என்பது அதன் அழிவு மட்டுமல்ல. இந்தியாவின் மொத்தத் தகவல் தொழில்நுட்பச் சந்தையும் அம்பானியின் ஏகபோகமாக மாறவிருப்பதற்குக் கூறப்படும் கட்டியம். இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் பற்றிய மொத்தத் தரவுகளையும் அம்பானி என்ற ஒரு முதலாளியின் தனிச்சொத்தாக மாற்றவிருக்கிறது மோடியின் இந்து ராஷ்டிரம்.
இன்று பி.எஸ்.என்.எல்.-ன் சந்தை சுருக்கப்பட்டுவிட்டது. ஊழியர் எண்ணிக்கையும் 3.5 இலட்சத்திலிருந்து 1.7 இலட்சமாக குறைந்து, இப்போது அதிலும் 54,000 பேர் விருப்ப ஓய்வில் அனுப்பப்படவிருக்கின்றனர்.
அரசுத் துறையாக இருந்த தொலைபேசித்துறையை “கார்ப்பரேசன்” ஆக்கியபோது, “தனியார்மயம் தவிர்க்கவியலாதது. ஊழியர்களின் வேலையையும் ஊதிய உயர்வையும் போனசையும் பாதுகாத்துக் கொள்வதை மட்டும்தான் நாம் செய்ய முடியும்” என்ற கருத்தைத் தொழிற்சங்கத் தலைமைகள் பிரச்சாரம் செய்தன. ஊழியர்களும் அதற்குப் பலியானார்கள்.
“அரசுத்துறைகள் ஒழிந்து தனியார் துறை வந்தால், அரசு ஊழியர்களின் ஆணவமும் மெத்தனமும் ஒழிந்து, மக்களுக்குத் தரமான சேவை கிடைக்கும்” என்று பிரச்சாரம் செய்தது ஆளும் வர்க்கம். மக்களும் அதற்குப் பலியானார்கள்.
இன்று பல இலட்சம் கோடி மதிப்புள்ள பொதுமக்களின் சொத்தான தொலைபேசித்துறையும், ஊழியர்களின் வேலையும், அவர்களுடைய எதிர்கால ஓய்வூதியமும், மக்களுடைய அடிப்படைத் தேவையான தொலைபேசி சேவையும் பலிபீடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
கையில் வெட்டரிவாளோடு நிற்கிறது பூசாரியான மோடி அரசு. பலி கொள்ளவிருக்கும் கடவுள் எதுவென்று சொல்லவும் வேண்டுமா?
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
சிவபெருமானின் சாதி “முதலியாரா”.. ? ஆம் “முதலியார்”தான் என்கிறது திருக்கோவையாருக்கான பழைய உரை.
நண்பர்களே….
ஏசுநாதர் ஒரு யூதர் என்பது யாவரும் அறிந்தது. சிவபெருமான் முதலியார் என்பதை நாம் அறிவோமா? மாணிக்கவாசகர் எழுதிய திருக்கோவையாருக்கு இரண்டு உரைகள் உள்ளன. ஒன்று “பேராசிரியர்” எழுதியது. மற்றொன்று ஆசிரியர் பெயர் தெரியாதது. எனவே அதனை பழைய உரை என்பார்கள். அந்த பழைய உரையில் 6 இடங்களில் சிவபெருமான் முதலியார் என்று குறிக்கப்படுகின்றார். இந்த பழைய உரை சுமார் 500, 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
1 of 9
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
குறிப்பு:
தருமபுரம் ஆதினம் வெளியிட்டுள்ள பன்னிரு திருமறை தொகுதிகளில் எட்டாம் திருமறையான திருவாசகமும் திருக்கோவையாரும் இரண்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருக்கோவையாரில் பேராசிரியர் உரையும் பழைய உரையும் அச்சிடப்பட்டுள்ளதாக முதல் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் நூலின் எந்த இடத்திலும் இந்த பழைய உரை அச்சிடப்படவில்லை. எனவே அந்த நூலை கையில் வைத்துள்ள நண்பர்கள் இந்த பகுதிகள் இடம்பெறவில்லை என்று நினைக்க வேண்டாம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூலில் இந்தப் பகுதிகள் உள்ளன. அந்நூலின் இணைப்பையும் உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18-4-2019 அன்று திட்டமிட்டு பாமக, இந்து முன்னணி காலிகளால் சாதிக் கலவரம் நடத்தப்பட்டது.
இக்கலவரத்தை தலைமை தாங்கியவர்கள் இந்து முன்னணி மற்றும் பா.ம.க-வைச் சேர்ந்த வன்னிய சாதிவெறியர்களான இராஜசேகர், பழனிவேல், சுப்ரமணியன், சொக்கன், பழனிச்சாமி, மதி, சத்தியசீலன், குமார், பாஸ்கர், வெற்றி, சரவணன்… ஆகியோருடன் உள்ளுர் மற்றும் வெளியூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாதிவெறியர்கள் பொன்பரப்பி காலணி பகுதியை தாக்கியுள்ளனர்.
தாக்குவதற்கு இரும்புக் கம்பிகள், பெரிய சவுக்கு மர உருட்டுக் கட்டைகள், கருங்கல், ஜல்லி என தயாரிப்புகளுடன் வந்துள்ளனர். இக்கும்பல் வெறி கொண்டு தாக்கியதில் 20 -க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 13 -பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், 2 -பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இக்கலவரத்தை முன்னின்று நடத்தியது இந்து மதவெறி, ஆதிக்கசாதி வெறியர்கள் மட்டுமல்ல இவர்களைப் பாதுகாக்கும் போலீசும்தான். இவர்களால்தான் திட்டமிட்டு சாதிக் கலவரம் நடத்தபட்டுள்ளது.
பொன்பரப்பி கிராமம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது. இங்கு R.S.S., B.J.P -யின் இந்து மதவெறி பாசிசத்தை எதிர்கொண்டு களத்தில் நிற்கும் விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுவது இந்து முன்னணிகாரர்களுக்கு பொறுக்கவில்லை. தனது வெறியைத் தீர்க்க சாதியை முன்னிறுத்தி வன்னியர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
வாக்குசாவடியில் 1:00 மணிக்கு தொடங்கிய கலவரம் 3:00 மணிவரை நீண்டுள்ளது அதனால், பொன்பரப்பி காலனிபகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த அச்சத்தோடு அலறிஅடித்து கொண்டு ஓடியுள்ளனர் 100 -க்கும் மேற்பட்ட இந்து முன்னணி காலிகள், அவர்களை விடாது தெருக்களில் விரட்டி விரட்டி கற்களைக் கொண்டும், கட்டையாலும் தாக்கியதில் பலபேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களைச் சென்று பார்த்து விசாரித்தபோது இதற்குமுன் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை என்றும், “கடந்த காலங்களில் வன்னியர் பகுதி இளைஞர்களுக்கும் எங்கள் பகுதி இளைஞர்களுக்கும் கூட சச்சரவுகள் எல்லாம் வந்திருக்கிறது. ஆனால் இப்படி பெரிய பாதிப்பு இருக்காது, ஊருக்கு வெளியில் வைத்து பேசித் தீர்த்துக் கொள்வோம்.” என்றும் கூறுகின்றனர்.
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஆனால் இச்சம்பவம் அப்படி நடக்கவில்லை. பாமக, இந்து முன்னணியைச் சேர்ந்த குண்டர்கள் திட்டமிட்டு ஊருக்குள் புகுந்து, கொலைவெறியோடு தாக்கியிருக்கின்றனர். கலவரக்காரர்கள் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் குண்டுகளைக் கொண்டு அப்பகுதி மக்களின் வாகனங்களை எரித்துள்ளனர். வீட்டிற்குள் குண்டுகளை வீசியுள்ளனர்.
“பறத்தேவிடியா பசங்களா உங்களுக்கு என்னடா… இவ்வளவு திமிராடா? எங்களுக்கு எதிரா பானைக்கு ஓட்டு போடுவிங்களாடா ?” என்று மரக் கட்டையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கினார்கள்.
பானை சின்னம் வரையப்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். பா.ம.க, அதிமுக, இந்துமுன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த குண்டர்கள் சேர்ந்துதான் இக்கலவரத்தை நிகழ்தியுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காவல்துறைக்கு தகவல்கொடுத்தும், மிகவும் அலட்சியமாக 2½ மணிநேரத்திற்குப் பின்னர்தான் கலவரம் நடந்த இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர்.
இதிலிருந்து இக்கலவரம் போலீசின் துணையோடுதான் நடந்துள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. இவர்கள் சொல்லக்கூடிய துணை ராணுவம், போலீசு, தேர்தல் ஆணையம் இவை எல்லாம் எங்கே போனது? தேர்தல், ஜனநாயகம் என்ற பெயரில் இந்த அரசு எதற்காக இருக்கிறது ? மக்களைப் பாதுகாக்கவா? காவிகுண்டர்களுக்கு காவல் நிற்கவா ?
செய்தி : மக்கள் அதிகாரம், விருத்தாசலம் வட்டம், கடலூர் மண்டலம். தொடர்புக்கு : 97912 86994