இந்துத்துவ சாதி-மத வெறியை ஊட்டி வட மாநிலங்களில் வெகு விரைவாக வளர்ந்து விட்ட ஆர்.எஸ்.எஸ். – பாஜக, தமிழகத்தில் மட்டும் இன்னும் வளரமுடியவில்லை. அதற்காக மக்களிடம் இருக்கும் இயல்பான கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை தனது பக்கம் இழுத்துக் கொள்ள கோவிலை ஒரு களமாகப் பயன்படுத்த முடிவு செய்த சங்க பரிவாரத்திற்கு, தமிழகத்தில் அரசு சார்பில் இந்து அறநிலையத் துறையின் கையில் கோவில்கள் இருப்பது மிகப்பெரும் சிக்கலாக இருந்தது. அதனை முறியடிக்க “கோவில்களை மீட்போம்” என்ற பெயரில் ஒரு இயக்கம் எடுத்து நடத்தி வருகிறது. இது ஒரு சதித்திட்டமென்பது ஊரறியும்.
இது நடந்து கொண்டிருக்கும்போதே, திடீரென தாமிரபரணி புஷ்கரம் என்று 160 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் விழா என இல்லாத ஒன்றை களமிறக்கியது சங்கபரிவாரம். அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, அத்தி வரதரைக் களமிறக்கினார்கள். இந்திய அளவில் மிகப்பெரிய விளம்பரங்கள் செய்து, அத்திவரதர் நிகழ்வு மூலம் தமிழக பக்தர்களையும் தன் பக்கம் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அடுத்ததாக, 24-07-2019 அன்று முதல் வைகைப் பெருவிழா என்ற பெயரில், சாமியார்கள் மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளது, ஆர்.எஸ்.எஸ்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது, இசுலாமியர்களும், கிருத்தவர்களும் அவ்விழாவை தமது சொந்த ஊரின் விழாவாகக் கொண்டாடுவதும், கோரிப்பாளையம் தர்காவின் சந்தனக் கூடு திருவிழாவில் இந்துக்கள் கலந்து கொள்வதும் மதுரை நகரின் இயல்பான மரபு.
அந்த மரபைக் காப்பாற்ற, சங்க பரிவாரத்தின் சதிகளை முறியடிக்க #SaveVAIGAIFromRSS என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் இருக்குமாறு செய்துள்ளனர் தமிழ் மக்கள். அதன் தொகுப்பை கீழே தருகிறோம்.
*****
தாமிரபரணியைத் தொடா்ந்து வைகை பெரு விழா என்ற பெயாில் அகில பாரத துறவியா்கள் சங்கம் ஜுலை 12 முதல் ஆகஸ்டு 25 வரை மதுரையில் மாநாடு நடத்த உள்ளது.
வைகை நதியின் பெயரில் மதவாத அரசியலை நுழைத்து மதுரை மக்களை பிளவுபடுத்தும் முயற்சி இது. நதி என்பது மக்களின் சொத்து. அதை மத அடிப்படைவாதிகள் துறவியா்கள், ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது.
ஏற்கனவே வைகை சுற்று சூழல் சீா்கேட்டால் மாசுபட்டு நாசமாகிக் கிடக்கையில், அகில பாரத துறவியா்கள் சங்கம் நடத்தும் மாநாடு அதை மேலும் நாசமாக்கவே உதவும். அதோடு அது மதசாா்பின்மைக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கருத்துக்கும் எதிரானது என்பதால் துறவியா்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது, என்று மக்கள் உாிமை பாதுகாப்புமையம், மக்கள் சிவில் உாிமைக்கழகம், திராவிடர் கழகம், திமுக வழக்கறிஞா் அணி, சமநீதி வழக்கறிஞா்கள் சங்கம், உள்ளிட்ட பல அமைப்பினரும் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
ஆனந்த் :
எலேய் மதுரக்காரன்டான்னு சவுண்டு வுட்டா பத்தாதுடே. இந்த அரடவுசர் பயலுக உள்ள வரவே உடாம போராடுங்கடே, என் மதுர மக்கா. மதுர வீரன் சாமியும், கருப்பனும், முருகனும் சூலாயியும், முனியாண்டியும் அய்யனாரும் ஆத்தா மீனாட்சியும் நம்மள காரித்துப்புவாங்கடே. #SaveVAIGAIfromRSS
பாண்டியன் பெரியையா பொறியாளன் :
கங்கை நதியை மாசு படுத்தியவர்கள் இப்போது வைகை நோக்கி வருகிறார்கள். தமிழ் நதியால் பயிர் விளையும். காவி நதியால் உயிர் பிரியும். எச்சரிக்கை தமிழர்களே! #SaveVAIGAIfromRSS
ரவிசங்கர் :
சமத்துவ விழாவான மதுரை சித்திரை திருவிழாவை சனாதன விழாவாக மாற்றும் முயற்சியில் வைகை மாதா விழா, வைகை பெருவிழா என்னும் புது வடிவம் கொடுத்து RSS காவிகும்பல் மாற்ற முயற்சிகிறது. #SaveVAIGAIfromRSS
வெங்கட் :
RSS நடத்தும் வைகை பெருவிழாவிற்கு தயவு செய்து அனுமதி கொடுக்காதீர்கள், ஏனென்றால் இவர்கள் கங்கையை சுத்தமா வச்சிக்கிட்ட லட்சணம் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு தெரியும். #SaveVAIGAIfromRSS
கிசான் :
வைகையில் மட்டுமல்ல, இது காவிரி, தாமிரபரணி ஆறுகளிலும் நடக்கிறது. ஆகையால அனைத்து நதிகளையும் ஆர்.எஸ்.எஸ்-இடமிருந்து காப்பாற்றுங்கள் ! #SaveVAIGAIfromRSS
உதயகுமார்:
இயற்கை வளங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. அதை மதத்தின் பெயரால் கைப்பற்றி மூடத்தனத்தைப் பரப்பி மக்களை காட்டுமிராண்டிகளாக மாற்றும் முயற்சியில் RSS இறங்கியிருக்கிறது.#SaveVAIGAIfromRSS #savevaigai
இங்கர்சால் சே :
செல்லூர் ராஜீ போன்ற விஞ்ஞானிகளிடம் இருந்து காப்பாற்றப்பட்ட மதுரை சங்கீகளினால் அசிக்கப்பட போகிறது.. #SaveVAIGAIfromRSS
மதுரை மன்னன்:
இதுதான் வைகை… இதுதான் மதுரை… இதுதான் தமிழ்நாடு…. பூஜை பண்றேன்னு கண்ட குப்பைகளையும் கொண்டுவந்து கொட்டாம இருந்தாலே போதும் #SaveVaigai
தமிழை விரும்பும் தேவன் :
ஐயர்வால்…. வந்தோமா தட்ல விழுந்த அஞ்சு… பத்த பொறுக்குனோமானு போகனும்….. 40 வருசத்துக்கு முன்னாடி இந்து இஸ்லாமியர் வேறுபாடே கிடையாது… உங்க பரதேசி கூட்டம் வந்த பின்னாடி தான் பிரிச்சு வச்சு விளையாட பாக்குறீங்க….. இதெல்லாம் புரியும் போது தெரியும்… #SaveVAIGAIfromRSS
கவிதா :
வைகை எங்களது (தமிழர்களின்) கலாச்சாரப் பாரம்பரியத்தின் அடையாளம். நாங்கள் இந்தக் காவிக் கும்பல் எங்களது கலாச்சாரத்தை சீரழிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். #SaveVAIGAIfromRSS
ராஜ் :
தமிழர்கள் பாசிசத்திற்கும், சங்கியிசத்திற்கும் எதிரானாவர்கள். நாங்கள் ஒருபோதும் இந்துத்துவக் கும்பல் எங்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதை அனுமதிக்கமாட்டோம். கங்கை ஆற்றை காவிகள் அசுத்தப்படுத்தியதிப் போல எங்கள் (வைகை) ஆற்றை அவர்கள் அசுத்தப்படுத்த அனுமதியோம். #SaveVAIGAIfromRSS
தமிழ்நந்தி :
சிவனாக நினைத்து கொண்டு மண்டை ஓடு எலும்பு துண்டுகளோடு சுற்றும் அகோரி! இதுவும் ஒரு வித மூளை பிசகின உதாரணம். கடைசி வரை சிவனையும் காணமுடியாத ஊனக் கண்ணோடு செத்துப் போவது இந்த அகோரிகள் இயல்பு! வடமாநிலங்களுக்கே உரிய சிவன் சாபம் இது! #SaveVAIGAIfromRSS
தமிழ்பித்தன் :
அழகர் இறங்கும் ஆற்றில் அகோரிகளுக்கு என்ன வேலை???? #GetOutRSs #SaveVAIGAIfromRSS
பிரபாகரன் குருசாமி :
ஆடிப்பெருக்கு எந்த ஆற்றுக்கு தொடர்புகொண்ட திருவிழா என்றுகூட தெரியாத இந்த RSS தீவிரவாதிகளிடம் இருந்து வைகை நதியையும் தமிழ் பண்பாட்டையும்காப்பாற்ற வேண்டும். #SaveVAIGAIfromRSS
ஸ்டாலின் ஈ.பி
தமிழுக்கும் தமிழருக்கும் தொடர்பில்லாத காவிகள் நம் தமிழரின் தொன்மையான சொத்துக்களுள் ஒன்றான வைகையை மாசுபடுத்த அனுமதிக்கலாமா? அவர்கள் காவி வர்ணம் பூச நம் வைகை என்ன வாரனாசியா? வடக்கானே உங்கள் கலாச்சாரம் உங்களோடு. எங்கள் வைகை எங்களோடு. ஆதலால் நீ ஓடு #SaveVAIGAIfromRSS
கவிதா :
நாங்கள் வைகையை இப்படிக் காண விரும்பவில்லை. #SaveVAIGAIfromRSS
அஷோக் குமார் தவமணி :
காலங்காலமாக, தமிழர்கள் தங்களது குலதெய்வங்களுக்கு கால்நடைகளை பலி கொடுத்து, தங்களது குல வாரிசுகளுக்கு அதனைக் கறி செய்து பகிர்ந்து உண்பர். தற்போது இந்த வழக்கம் ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பலால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது., நாம் அவர்களை வைகைத் திருவிழாவை நடத்த அனுமதித்தோம் என்றால், அவர்கள் நாளை இவ்வழக்கத்தை (கெடா வெட்டும்) நிறுத்தச் சொல்லி நமக்கு உத்தரவிடுவார்கள். #SaveVAIGAIfromRSS
விவேகானந்தன் :
காவி பாஜக வைகை நதியை தேசிய நிர்க் கொள்கையின் கீழ் தனியார்மயப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதன் மீதான விவாதத்தைத் திசை திருப்ப, தற்போது காவிக் கும்பல் வைகை திருவிழாவை நடத்தவிருக்கிறது.#SaveVAIGAIfromRSS
அருண் காளிராஜா :
கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்தைக் குறித்து நினைவுபடுத்திப் பாருங்கள். நமது அன்பிற்குரிய சுயமோகி மோடி தனது பெயர் பொறித்த உடுப்பை ஏலத்தில் விட்டு அத்தொகையையும் கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு தானமளித்தார். ஏதாவது ஒரு சங்கியாவது தைரியமிருந்தால், இன்றுவரைக்கு என்ன முன்னேற்றம் நடந்திருக்கிறது எனச் சொல்லட்டும். பின்னர் வைகை திருவிழாவுக்கு வரட்டும்.
வேடிக்கை பார்ப்பவன் :
இந்துத்துவக் குண்டர்களே ! தமிழ் மண்ணை விட்டு வெளியேறுங்கள்! #SaveVAIGAIfromRSS
அசோக் குமார் தவமணி :
மதுரை மதச்சார்பின்மையின் மண். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா அமைதியான முறையில், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைதியை அழித்து விநாயகர் ஊர்வலத்தைப் போல நிலைமையை மோசமாக்க நினைக்கிறது. #SaveVAIGAIfromRSS
பிரபு விஜயன் :
வைகை ஆறு மதச்சார்பின்மையின் அடையாளம். வைகையில் தமிழ்ச் சமூகத்தால் நடத்தப்படும் சித்திரைத் திருவிழா பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களையும் ஒருங்கிணைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் தற்போது மதக் கலவரங்களைத் தூண்டும் நோக்குடன் வைகை பெருவிழா மற்றும் முட்டாள்தனமான பிற பசுப் பாதுகாப்பு மாநாடுகள் நடத்தவிருக்கிறது. #SaveVAIGAIfromRSS
ஸ்ரீசந்தர் :
ஆர்.எஸ்.எஸ். கும்பல் கங்கை நதியை அழித்தது போல நமது வைகை நதியையும் நமது தமிழ் பாரம்பரியத்தையும், வைகைப் பெருவிழா என்னும் பெயரில் அழிக்கத் திட்டமிடுகிறது. #SaveVAIGAIfromRSS
சபரி ராம்:
நியூட்ரினோ திட்டத்தை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமல்படுத்துவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் வைகையின் ஊற்றுமூலத்தை அழித்துவிட்டு, இங்கு வைகைப் பெருவிழாவை மதுரையில் நடத்தவிருக்கிறது. தமிழர்களாகிய நாங்கள், வைகையை காவிமயமாக்குவதன் மூலம் இப்பிரச்சினையை திசைதிருப்ப ஆர்.எஸ்.எஸ் போடும் இந்த தூண்டிலில் நாங்கள் சிக்க மாட்டோம். #SaveVAIGAIfromRSS
அசோக் குமார் தவமணி :
வைகை ஆற்றங்கரையில் இருக்கும் 2500 ஆண்டு பழமை வாய்ந்த கீழடி அகழ்வாய்வில் எந்த ஒரு மதத்தின் குறியீடுகளும், மதம் சம்பந்தப்பட்ட பொருட்களும் கிடைக்கவில்லை. தங்களது சித்தாந்தத்தை தமிழகத்தில் நிலைநாட்ட முடியாத கையறுநிலையில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கடுப்படைந்திருக்கிறது. அவர்கள் தற்போது அதனை அழிக்க வருகிறார்கள். #SaveVAIGAIfromRSS
சாமானியனின் சவுக்கு:
#SaveVAIGAIfromRSS மதுரை அழகர் மீனாட்சிக்கு போட்டியாக காவிக்கும்பல்களின் வைகைமாதாவா..? விரட்டியடிப்போம் வைகைகரையிலிருந்து காவிகளை.. #SaveVAIGAIfromRSS
பிரபு :
ஜுனிதா :
என்னடா இதெல்லாம்? வைகையை காக்க நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பேசவோ இல்ல வைகை தாய் பெற்றெடுத்த கீழடி நாகரிகத்தை பற்றி பேசவோ ஒரு நிகழ்வு கூட நிகழ்ச்சி நிரல்ல காணோம். #savevaigaifromRSS
அப்துல் பஷீத் :
நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டுவந்து வைகை நீர்த்தேக்கத்தை உடைக்கத் துடிக்கும் காவி கும்பல் வைகைக்கு விழா நடத்துகிறதாம். தமிழரின் வரலாற்றுப் பெருவிழாவான சித்திரைத் திருவிழாவை, வைகையின் வரலாற்றை காவிமயப்படுத்த 12 நாள் வைகைப் பெருவிழாவை காவிகள் துவக்கியுள்ளனர். #SaveVAIGAIfromRSS
நா. தனசேகரன் :
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனை கடிப்பது போல் நம்மை அழிக்கத் துடிக்கிறவன் தற்போது வைகையை துண்டாட துடிக்கிறான்.! வைகை நதி நாகரிகம் தான் தமிழனுக்கு கிடைத்த பெரும் சொத்து.! அதை தொடுவதற்கு டெல்லி காரனுக்கு என்னடா உரிமையுள்ளது.! வைகையை சூறையாட துடிக்கும் காவி #SaveVAIGAIfromRSS
அசோக்குமார் தவமணி :
வைகை நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்த நாகரீகம். இவ்விரண்டும் திராவிட நாகரீங்களாக அடையாளங் காணப்பட்டதை ஆரிய இந்துத்துவவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். வைகை நாகரீகத்தை ஒழித்துக்கட்டி பண்டைய தமிழ் வரலாற்றை திருப்பி எழுத மதுரைக்கு வருகிறது. #SaveVAIGAIfromRSS
பிரபு :
அரவிந்தன் :
ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து மனிதனை கடிப்பது போல் நம்மை அழித்தாள துடிக்கிறவன் தற்போது வைகையை துண்டாட துடிக்கிறான்.! வைகை நதி நாகரிகம் தான் தமிழனுக்கு கிடைத்த பெரும் சொத்து.! அதை தொடுவதற்கு டெல்லி காரனுக்கு என்னடா உரிமையுள்ளது.!வைகையை சூறையாட துடிக்கும் காவி #SaveVAIGAIfromRSS
ஸ்ரீதர் :
முல்லை பெரியாறு பிரச்சினைக்கு அத்தி வரதரை போல் மறைந்து இருந்த சங்கி கூட்டத்துக்கு இப்போ வைகைல என்ன வேலை?? #SaveVaigaiFromRSS
ஹைதம் :
அவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) மதம் மற்றும் கலாச்சாரத்தின் பெயரால் கங்கையை அசுத்தப்படுத்திவிட்டனர். இப்போது வைகையைக் குறி வைக்கின்றனர். சங்கிகள் நமது நதிகளை அழித்துவிட அனுமதிக்காதீர்கள்.. #SaveVAIGAIfromRSS
இசை :
வைகைக்கும் இந்த மதவாத காட்டுமிராண்டி கும்பலுக்கும் என்ன தொடர்பு? இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு தமிழகத்தை RSS தீவிரவாதிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறார் முதலமைச்சர் @EPSTamilNadu தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள எத்தனை பேக்கரி டீலிங்குகள்! #SaveVAIGAIfromRSS
சாமானியனின் சவுக்கு :
இந்த வருடம் இல்லை என்றாலும் இன்னும் இரண்டு வருடங்களில் வைகை நதியை இந்த கும்பல் ஆக்கிரமிக்கும் இதை கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு கொடுறமாக இருக்கிறது என்று இதை செய்லபடுத்த தான் வைகை பெருவிழா என இந்துதுவ விழா நடத்துகிறது #SaveVaigaiFromRSS
ஜெய்குமார் :
வைகைப் பெருவிழாவா? வைகைக்கு மூடுவிழாவா? நேற்று தாமிரபரணியில் புஷ்கரம்.. இன்று வைகைக்கு பெருவிழாவாம். தமிழர்களின் வரலாற்றை காவிகும்பல் திருட நினைக்கிறது. முறியடிப்போம். #SaveVAIGAIfromRSS
வெங்கட் :
மதுரைக்கார இஸ்லாமியரும் கூடி சேர்ந்து கொண்டாடுற அழகர் திருவிழாதான் ‘வைகை பெருவிழா’. வயித்துலயிருந்த இஸ்லாமிய சிசுவயும் வயித்தக் கிழிச்சு கொன்ன வடநாட்டு காட்டுமிராண்டி சாமியார் கூட்டம் நடத்தனும் நினைக்குறது ‘காட்டுமிராண்டி பெருவிழா’. #SaveVAIGAIfromRSS
மனோ கிட்டு:
வைகையை அழிக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதிகொடுத்துவிட்டு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் மூலம் வைகையை குறுக்கி இருபுறமும் சாலை அமைக்கவிட்டுவிட்டு ஆர்எஸ்எஸ் கும்பல் வைகைப்பெருவிழா கொண்டாடுவது நாடகமே.. #savevaigaifromRSS
எரிசினக் கொற்றவை :
காவிரி அனில் அகர்வாலுக்கு, தாமிரபரணி கொக்ககோலாவிற்கு, வகையை யாருக்கு விற்க வைகை பெருவிழான்னு ஏமாத்துற? #SaveVAIGAIfromRSS
அசோக் குமார் தவமணி :
பிரிட்டிஷாரின் காலை நக்கியவர்களே (சங்கிகளே), தமிழ்தேசத்தை விட்டு விலகிநில்லுங்கள்… #SaveVAIGAIfromRSS
சரண் குமார் :
காவிக் கும்பல் மிகச் சிறப்பாக தனது திட்டங்களைச் செயல்படுத்து வருகிறது. தமிழக அரசும் அதற்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது. முதலில் தாமிரபரணி புஷ்கரம், அடுத்து அத்திவரதர், தற்போது வைகைப் பெருவிழா. #SaveVAIGAIfromRSS
கார்த்திக் :
இந்துத்துவக் குண்டர்களே, தமிழ் மண்ணை விட்டு வெளியேருங்கள் ! #SaveVAIGAIfromRSS
உங்கள் கார்த்திக் :
வைகை என் ஆறு.. அந்தியனே வெளியேறு.. #SaveVaigaiFromRSS

தொகுப்பு : நந்தன்