Sunday, May 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 345

பாலியல் குற்றவாளி பேராசிரியருக்கு பிணை வழங்காதே – கரூர் மாணவர்கள் போராட்டம் !

0

ரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான பொருளியல் துறை தலைவர் இளங்கோவனின் பிணை மனு தள்ளுபடி செய்தது மாவட்ட அமர்வு நீதிமன்றம்.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேராசிரியர் இளங்கோவனுக்கு பிணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு 01.04.2019 அன்று விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் இளங்கோவனுக்கு பிணை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முருகேசன், இ.ஜெகதீசன் மற்றும் ஆதரவான வழக்கறிஞர்கள் ஆஜராகி கடந்த 7 ஆண்டுகளாக கல்லூரியில் படிக்கும் முன்னாள் இன்னாள் மாணவிகளுக்கு பேராசிரியர் இளங்கோவன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது; மதிப்பெண்ணை வைத்து மிரட்டி மாணவிகளை தன் விருப்பத்திற்கு அடிபணிய வைத்தது உள்ளிட்ட உண்மைகளை வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். மாணவர்களின் உறுதியான போராட்டம் மற்றும் வழக்கறிஞர்களின் வாதத்தின் காரணமாக பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார், நீதிபதி.

படிக்க:
பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !
குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,

அரசு கலைக்கல்லூரி, கரூர்.

அரசியல் பொருளாதாரத்தின் தந்தை சர் வில்லியம் பெட்டி | பொருளாதாரம் கற்போம் – 14

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 14

அத்தியாயம் மூன்று : பாராட்டுக்குரிய சர் வில்லியம் பெட்டி
அ.அனிக்கின்

லக்கியத்திலும் விஞ்ஞானத்திலும் மாபெரும் புதுமைகளை ஏற்படுத்திய ஷேக்ஸ்பியரும் பேக்கனும் தாமஸ் மானுக்கு சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். அரசியல் பொருளாதாரத்தில் இது போன்ற புதுமைகளை ஏற்படுத்திய வில்லியம் பெட்டி இவர்களுக்கு ஒரு தலைமுறைக் காலத்துக்குப் பிறகு தோன்றினார்.

இவர்களுக்கு இடைக்காலத்தில் புதிய, 17-ம் நூற்றாண்டு பிறந்த பொழுது தோன்றிப் புகழ்பெற்றவர்கள் இராணுவத்தினரும் மத குருக்களுமே. நடுத்தர முதலாளிகளின் தலைவரும் வீர புருஷருமான ஓலிவெர் கிராம்வெல், அவரைக் காட்டிலும் அதிகத் தீவிரமான இடதுசாரிக் கொள்கையுடையவரும் அவரோடு அரசியலில் போட்டியிட்டவருமான ஜான் லில்பர்ன் ஆகியோர் வலது கையில் வாளும் இடது கையில் பைபிள் நூலும் வைத்துக் கொண்டு போர் புரிந்தார்கள். பதினேழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல், சமூகப் புரட்சி அன்றைய வரலாற்று நிலைமைகளினால் மதத் தன்மையை மேற்கொண்டது. அது பரிசுத்தவாதத்தின் எளிமையான, கண்டிப்பான உடையை அணிந்து கொண்டது.

கிராம் வெல்லின் ஆட்சிக் காலத்திலேயே முதலாளி வர்க்கம் தனது புரட்சிகரமான வேகத்தைச் செலவழித்து ஓய்ந்து விட்டது. 1660-ம் வருடத்தில் அது புதிய மேன்மக்களோடு கூட்டணி சேர்ந்து ஸ்டுவர்ட் மரபை மறுபடியும் பதவிக்குக் கொண்டு வந்தது. கொலை செய்யப்பட்ட அரசரின் மகன் இரண்டாம் சார்ல்ஸ் என்ற பெயரில் அரியணையில் அமர்ந்தார். ஆனால் முடியாட்சி முன்பு இருந்தது போல இனிமேல் இருக்க முடியவில்லை; புரட்சி வீண் போகவில்லை. பழைய நிலப்பிரபுத்துவ மேன்மக்களுக்குப் பாதகமான வகையில் முதலாளிகள் தங்களுடைய நிலையைப் பலப் படுத்திக் கொண்டனர்.

வில்லியம் பெட்டி

புரட்சியின் இருபது வருடங்களில் (1641-1660) ஒரு புதிய தலைமுறை – தோன்றி வளர்ச்சியடைந்திருந்தது. புரட்சி அவர்களுடைய சிந்தனையை அதிகமாக -ஆனால் வெவ்வேறுவிதமாக பாதித்திருந்தது. அரசியலும் மதமும் (அவை பிரிக்க முடியாதபடி இணைந்திருந்தன) குறிப்பிட்ட அளவுக்கு ஒதுக்கப்பட்டன. நாற்பதுக்களிலும் ஐம்பதுகளிலும் இளைஞர்களாக இருந்தவர்கள் பைபிள் புத்தகத்தை அறிவின் முக்கியமான பிறப்பிடமாகக் காட்டுகின்ற மதத்தன்மை கொண்ட வாதங்களைக் கேட்டு அலுத்துப் போனார்கள். அவர்கள் புரட்சியிலிருந்து வித்தியாசமான ஒன்றை அடைந்திருந்தார்கள். அது முதலாளித்துவ சுதந்திரம், பகுத்தறிவு, முன்னேற்றம் என்பதாகும். விஞ்ஞானத்தில் மிகச் சிறந்த திறமையுடைய சிலர் வானத்தில் நட்சத்திரக் கூட்டத்தைப் போலத் தோன்றி ஒளி வீசினார்கள். இவர்களில் முதன்மையானவர்கள் பெளதிக விஞ்ஞானி ராபர்ட் பாயில், தத்துவஞானி ஜான் லாக், கடைசியாக மாபெரும் ஐசக் நியூட்டன் ஆகியோராவர்.

இந்தத் தலைமுறையையும் மக்கள் குழுவையும் சேர்ந்தவர் வில்லியம் பெட்டி. அவர் காலத்திய அறிஞர்களில் பெட்டி கெளரவமான இடத்தைப் பெற்றிருக்கிறார். மார்க்ஸ் குறிப்பிட்டது போல, இந்த ஆங்கில கனவான் அரசியல் பொருளாதாரத்தின் தந்தை. புள்ளியியலைக் கண்டுபிடித்தவர் அவர்தான் என்றும் சொல்லலாம்.

நூற்றாண்டுகளைக் கடந்து புகழோடு விளங்கும் பெட்டி

விஞ்ஞானத்தின் வரலாற்றில் சிலர் மறக்கப்படுவதும் பிற்காலத்தில் அவர்களுக்குப் புத்துயிர் கொடுக்கப்படுவதும் உண்டு. இப்படிப்பட்டவர்களில் ஒருவர் ரிச்சர்ட் கான்டில் லாக். இவர் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர். சிறப்பு மிக்க பொருளாதார நிபுணர்களான பிரான்சுவா கெனே, ஜேம்ஸ் ஸ்டுவர்ட், ஆடம் ஸ்மித் ஆகியோர் இவரிடமிருந்து அதிகமாகக் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். இவரை அநேகமாக முற்றிலும் மறந்து விட்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் இவரை மறுபடியும் புதிதாகக் கண்டுபிடித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஹெர்மன் ஹென்ரிஹ் கோஸ்ஸென் என்பவர் 1854-ம் வருடத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அது எவ்விதமான கவனத்தையும் பெறவில்லை. எனவே ஏமாற்றமடைந்த ஆசிரியர், நான்கு வருடங்களுக்குப் பிறகு கடைகளிலிருந்து தமது புத்தகங்களைத் திரும்பப் பெற்று அநேகமாக தமது முதல் பதிப்பு முழுவதையும் அழித்துவிட்டார். இதற்கு இருபது வருடங்களுக்குப் பிறகு ஜெவோன்ஸ் தற்செயலாக அதன் பிரதி ஒன்றைப் பார்த்தார்.

ஹெர்மன் ஹென்ரிஹ் கோஸ்ஸென் வெளியிட்ட நூலை வரலாற்றின் பக்கத்தில் மீட்ட வில்லியம் ஸ்டேன்லி ஜெவோன்ஸ்

கோஸ்ஸென் மரணமடைந்து பல வருடங்களாகி விட்டன. ஆனால் ஜெவோன்ஸ் அவரைப் ”புதிய அரசியல் பொருளாதாரத்தைக்” கண்டுபிடித்தவர் என்று பாராட்டினார். இன்று பொருளாதாரப் பண்டங்களின் பயன்பாடு பற்றிய இனத்தோடு – அக நிலையான, உளவியல் கருத்து நிலையிலிருந்து சம்பந்தப்பட்ட கோஸ்ஸென் விதிகள் அரசியல் பொருளாதாரம் பற்றிய எந்த முதலாளித்துவப் பாடபுத்தகத்திலும் வரலாற்றிலும் கணிசமான இடத்தைப் பெற்றிருக்கின்றன.

பெட்டியை மறுபடியும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர் தம்முடைய காலத்திலேயே புகழ் அடைந்திருந்தார். ஆடம் ஸ்மித்துக்கு அவருடைய கருத்துக்கள் தெரிந்திருந்தன. ”பதினேழாம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவர் சர் வில்லியம் பெட்டி” என்று மாக்குலோஹ் 1845-ம் வருடத்தில் எழுதினார். உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை நிறுவியர் பெட்டி என்று கூடச் சொன்னார்; அவருக்கும் ரிக்கார்டோவுக்கும் ஒரு நேர்கோடான வளர்ச்சியைக் காட்டினார்.

எனினும் மார்க்ஸ் மட்டுமே வில்லியம் பெட்டியை விஞ்ஞானத்துக்காக முழுமையாகக் கண்டுபிடித்தார். மார்க்ஸ் ஒரு புதிய அரசியல் பொருளாதாரத்தைப் படைத்து அந்த விஞ்ஞான வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சினார்; அதன் மூலம் இந்தச் சிறப்புமிக்க ஆங்கிலேயர் அதில் வகிக்கின்ற உண்மையான இடத்தையும் விளக்கினார். கண்ணால் பார்க்கக்கூடிய பொருளாதார நிகழ்வுகளை மட்டும் ஆராய்ந்து அவற்றை வர்ணிப்பதோடு நின்றுவிடாமல் முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்விதிகளைப் பகுத்தாய்வு செய்து அதன் வளர்ச்சி விதியைத் தேடிய மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் தந்தை பெட்டி என்று கூறலாம். பெட்டி மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் கைகளில் இந்த விஞ்ஞானம் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கும் சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவதற்கும் ஏற்ற கருவியாக மாறியது.

பெட்டியின் குறிப்பிடத்தக்க, அசாதாரணமான ஆளுமை மார்க்சையும் எங்கெல்சையும் அதிகமாகக் கவர்ந்தது. ”பெட்டி தன்னை ஒரு புதிய விஞ்ஞானத்தின் ஸ்தாபகராகக் கருதுகிறார்…”, ” அவருடைய துணிச்சல் நிறைந்த மேதாவிலாசம்…”, ”மிகவும் தனித்தன்மையான நகைச்சுவை உணர்ச்சி . அவருடைய எழுத்துக்களில் நிரம்பியிருக் கிறது…”,(1) ”இந்தத் தவறிலும் கூட மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது.”(2) “அளவில் சிறிய தென்றபோதிலும் கருத்திலும் உள்ளடக்கத்திலும் இது தலை சிறந்த சாதனையாகும்”. மார்க்ஸ் தாம் எழுதிய பல புத்தகங்களில் எழுதியுள்ள மேற்கூறிய கருத்துக்கள் ”பொருளாதார ஆராய்ச்சியில் மிக அதிகமான தற்சிந்தனையும் சிறப்பும் கொண்ட”(3) பெட்டியைப் பற்றி அவருடைய அணுகுமுறையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

படிக்க:
♦ பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
♦ கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

பெட்டியின் எழுத்துக்களுக்கு ஏற்பட்ட கதி அசதாரணமானதாகும். மாக்குலோஹ் ஒரு விசித்திரமான அம்சத்தைச் சுட்டிக்காட்டினார். பெட்டி வகித்த பாத்திரம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தபோதிலும் அவருடைய புத்தகங்கள் ஒருபோதும் முழுமையாக வெளியிடப்படவில்லை; பழைய அரை குறையான பதிப்புக்களாகவே அவை இருந்தன. 19 -ம் நூற்றாண்டின் மத்தியிலேயே அவை அபூர்வமாகக் கிடைக்கக் கூடிய புத்தகங்களாகவே கருதப்பட்டன.

மாக்குலோஹ் பெட்டி பற்றிய தம்முடைய குறிப்பில் தமது எளிய பணிவான நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்:

“பெட்டியின் சொத்துக்களையும் அவருடைய திறமையையும் மரபுரிமையாகப் பெற்றிருக்கும் அவருடைய சிறந்த வாரிசுகள், அவருடைய புத்தகங்களுக்கு முழுமையான பதிப்பு வெளியிடுவதைக் காட்டிலும் அவருக்குச் சிறந்த நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த முடியாது.”

எனினும் பெட்டியின் “சிறந்த வாரிசுகளான” ஷெல் பர்ன் மற்றும் லான் ஸ்டௌன் பிரபுக்கள் ஒரு எளிய கைவினைஞரின் மகனாகப் பிறந்து பணமும் புகழும் சேர்த்து (அவை எல்லாமே நியாயமான வழிகளில் தான் என்று சொல்ல முடியாது), ஒரு சமீபத்திய வாழ்க்கை வரலாற்றாசிரியர் சொல்வதைப் போல, ”பகட்டான, ஓரளவுக்குச் சந்தேகிக்கப்பட வேண்டிய பெயரைக் கொண்டிருந்த தங்கள் முன்னோரைப் பொதுவாக எல்லோருடைய காட்சிக்கும் வைப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. – பெட்டியின் வாரிசுகளுக்கு இரண்டு நூற்றாண்டுக் காலம் இந்த அம்சம் பெரிதாகத் தெரிந்ததே தவிர, அவருடைய எழுத்துக்களின் விஞ்ஞான, வரலாற்று மதிப்பு முக்கியமானதாகத் தெரியவில்லை. 19-ம் நூற்றாண்டின் கடைசியில் தான் பெட்டியின் பொருளாதார நூல்களின் முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதே சமயத்தில் அவருடைய சந்ததியினர் ஒருவர் அவரது வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டார்.

பெட்டியின் அரசியல் கருத்துக்களையும், அவருடைய சமூக, விஞ்ஞானப் பணிகளையும், அவர் காலத்திய மாபெரும் விஞ்ஞானிகளோடு அவருடைய உறவுகளைப் பற்றியும் இன்று நமக்குத் தெளிவான விவரங்கள் கிடைத்துள்ளன. அவருடைய வாழ்க்கையைப் பற்றி அதிகமான செய்திகள் இன்று தெரிய வந்துள்ளன. மாபெரும் மனிதர்களின் உருவப்படங்களைப் பொறுத்தவரை அவற்றைத் திருத்திக் காட்டுவது அவசியமல்ல; அவர்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் பூசிமெழுகுவதும் தேவையல்ல. இது வில்லியம் பெட்டிக்கு முழுமையாகப் பொருந்தும். மனித குல வரலாற்றில் அவர் ஒரு பெரிய ஐரிஷ் நிலவுடைமையாளராக, முன்யோசனை நிறைந்த (அவர் எப்பொழுதுமே வெற்றியடைந்த தாக ஒரு போதும் சொல்ல முடியாது) அரசவையாளராக அவர் நிலைத்திருக்க மாட்டார்; சமூகத்தைப் பற்றிய விஞ்ஞானத்தில் புதிய பாதைகளைத் திறந்து விட்ட, துணிச்சலான சிந்தனையாளர் என்ற முறையில் தான் அவர் புகழ் நிலைத்திருக்கும்.

மார்க்சியவாதிகள் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் ஸ்தாபகர் என்று தான் பெட்டி யைப் பற்றி முதன்மையாக நினைப்பார்கள். பெட்டி ஒரு மாபெரும் மேதை, குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்டவர் என்பதை முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் அங்கீகரித்தாலும், அவரை ஸ்மித், ரிக்கார்டோ, மார்க்ஸ் ஆகியோரின் முன்னோடி என்று ஒத்துக் கொள்வதில்லை. ஆராய்ச்சியில் புள்ளியியல் முறையை உருவாக்கியவர் என்ற அளவில் தான் இந்த விஞ்ஞானத்தில் அவருக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

பெட்டியின் எழுத்துக்களில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் (அல்லது பொது முறையிலாவது மதிப்பைப் பற்றிய கருதுகோள்) இல்லை; மதிப்பிடத்தக்க கூலித் தத்துவம் இல்லை; எனவே அவர் உபரி மதிப்பைப் புரிந்து கொண்டிருக்கக் கூடிய பிரச்சினையே ஏற்படவில்லை என்று ஷூம்பீட்டர் எழுதுகிறார். “பொருளாதார விஞ்ஞானத்தின் ஸ்தாபகர் பெட்டி என்று மார்க்ஸ் பிறப்பித்த ஆணையே”(4) அவர் புகழுக்குக் காரணம்; வேறு சில முதலாளித்துவ அறிஞர்களும் அவரைப் பாராட்டியிருக்கின்றனர் – இது தான் இன்னொரு காரணம்; இந்த அறிஞர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாதவர்கள் என்று ஷூம்பீட்டர் கோடி காட்டுகிறார்.

முதலாளித்துவ அறிஞர்களால் எழுதப்பட்ட பல புத்தகங்கள் பெட்டி வாணிப ஊக்கக் கொள்கையை விளக்கியவர் என்று மட்டுமே காட்டுகின்றன. அந்தத் தரப்பினரில் அவர் அதிகமான திறமையும் வளர்ச்சியும் கொண்டவராக இருந்திருக்கலாம்; ஆனால் அதற்கு மேல் எந்தப் புகழுக்கும் உரியவரல்ல. புள்ளியியல் முறையைக் கண்டுபிடித்ததைத் தவிர வரிவிதிப்பு, சுங்கவரி போன்ற தனிப்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அவர் விளக்கியதாக அவரை அதிகபட்சமாகப் பாராட்டுவதுண்டு.

நவீன முதலாளித்துவ விஞ்ஞானத்தில் இந்தக் கருத்தே கோலோச்சுவதாகச் சொல்ல முடியாது. மற்ற கருத்துக்களும் உண்டு; பொருளாதார விஞ்ஞானத்துக்குப் பெட்டி ஆற்றிய பாத்திரம் இன்னும் அதிகமான வரலாற்றுப் பின்புலத்தில் சரியாக கணிக்கப்படுவதும் உண்டு. எனினும் ஷூம்பீட்டர் கருத்து பிரதானமான அணுகுமுறையைக் காட்டுகிறது; இது தற்செயலாக ஏற்பட்டதல்ல.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:

(1) K. Marx, A Contribution to the Critique of Political Economy, Moscow, 1970, pp. 52,53.

(2) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மா ஸ்கோ , 1979, பக்கம் 403 பார்க்க .

(3) Ibid.

(4) J. Schumpeter, History of Economic Analysis, N.-Y., 1955, p. 210.

கேள்விகள்:

1.இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரும், அறிவியலில் பேக்கனும் ஏற்படுத்திய மாபெரும் புதுமைகள் எவை?

2. “பதினேழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல், சமூகப் புரட்சி அன்றைய வரலாற்று நிலைமைகளினால் மதத் தன்மையை மேற்கொண்டது.” – காரணம் என்ன?

3. பெட்டியை “இந்த ஆங்கில கனவான் அரசியல் பொருளாதாரத்தின் தந்தை” என்று கார்ல் மார்க்ஸ் பாராட்டுவதற்கு காரணம் என்ன?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

ஐரோப்பியர் பார்வையில் தமிழர்கள் தரங்கெட்டவர்களா… ? | பொ . வேல்சாமி

தமிழர்கள் தரங்கெட்டவர்களா… ? – சீகன்பால்கு (1682-1719)

ண்பர்களே….

16, 17-ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பிய அறிஞர்களும் பாதிரியார்களும் தமிழ் மக்களை ஆப்பிரிக்க – அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினரைப் போன்று நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் என்றுதான் நினைத்தனர். ஆனால் தமிழ்மொழியையும் நம்முடைய திருக்குறள், தொல்காப்பியம், நன்னூல், சிந்தாமணி போன்ற நூல்களை அறிந்து கொண்ட பின்னர் ஐரோப்பியர்களாகிய நாம் நினைத்ததைப் போல தமிழர்கள் தரமற்ற காட்டுமிராண்டிகள் அல்லர் என்ற முடிவுக்கு வந்தனர்.

இப்படி அவர்களுடைய எண்ணத்தை மாற்றியது பழந்தமிழ் நூல்களும் தமிழ்நாட்டுக் கலைகளும்தான் என்பதை அவர்களால் எழுதப்பட்ட பல குறிப்புகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் ஒரு குறிப்பிடத்தகுந்த குறிப்பு தரங்கம்பாடியில் இருந்த சீகன்பால்கு-வால் எழுதப்பட்டது.

இந்தியாவிற்கு முதன்முதலாக வந்த பிராட்டஸ்டன்டு கிறிஸ்தவர் சீகன்பால்கு. பைபிளை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்தவரும் இவர்தான். இவர் அன்று தொகுத்து வைத்த பல தமிழ் நூல்களைப் பற்றிய குறிப்புகள் ஜெர்மனியில் இன்றும் உள்ளன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழர்களின் மேன்மையை உலகறிய செய்த தமிழ்மொழியையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் இன்றைய தமிழ் மக்கள் புறக்கணித்து வருவது மிகவும் இரங்கத்தக்கது. ஏனெனில் ஐரோப்பியர்களால் மனித மிருகங்கள் என்று கருதப்பட்ட தமிழர்களை மனிதர்கள்தான் என்று அடையாளம் காட்டியது நம்முடைய சிறப்புமிக்க தமிழ்நூல்கள்தான் என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. அதாவது நம்மை சிந்திக்கும் மனிதர்களாக அடையாளம் காட்டிய தமிழும் தமிழ் நூல்களும் இன்று நம்மால் புறக்கணிக்கப்படுவது என்பது நாம் மனிதத் தன்மையை இழந்து கொண்டு வருகிறமோ என்ற ஐயத்தை சிந்திப்பவர்களுக்கு ஏற்படுத்தவில்லையா?

குறிப்பு :
சீகன்பால்கு எழுதிய குறிப்பை படமாகக் கொடுத்துள்ளேன். மற்றும் சீசன்பால்கு வாழ்க்கை வரலாறு பற்றிய சிறு நூலை நண்பர்கள் படிப்பதற்கு வசதியாக தரவிறக்கம் செய்து கொள்ளும் இணைப்பையும் கொடுத்துள்ளேன். 

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !

4

“எங்களுடைய மூன்று அடுக்கு வீடு கட்டி முடிக்கப்பட்டபோது,  கட்டிடத்தின் உயரமான இடத்தில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என தீர்மானித்தோம்” என்கிறார் முகமது சஜீத். கடந்த ஹோலி பண்டிகையின்போது இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டவர் இவர். அன்றைய தாக்குதலில் கை உடைந்துபோய் கட்டுபோட்டு அவரால், இன்னமும் சரியாக நிற்க முடியவில்லை, தலையில் அடித்த அடியால் இன்னமும் மயக்கம் வருவதுபோன்ற நிலையிலே இருப்பதாகச் சொல்கிறார்.

கை முறிந்த நிலையில் முகமது சஜீத்

“ஆனாலும், அவர்கள் பாகிஸ்தானுக்கு போ என்கிறார்கள். நாங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு போக வேண்டும்? இது எங்களுடைய நாடு; இதை நாங்கள் நேசிக்கிறோம். இருந்தபோதும், பாருங்கள் அவர்கள் எங்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று”.

குருகிராமின் விளிம்பில் உள்ள பூப் சிங் நகரில் சஜீத்தின் வீடு உள்ளது.  இந்துத்துவ கும்பலால் உடைக்கப்பட்ட கண்ணாடி சில்லுகளை அந்த வீடு முழுவதும் பார்க்க முடிந்தது. இரத்தத் துளிகளின் சுவடுகள் இன்னமும் தரையில் இருந்தன. கும்பல் தாக்குதலின் அதிர்ச்சி அந்தக் குடும்பத்தினரின் முகத்தில் உறைந்து போயிருந்தது. பலர் இன்னமும் கால், தலை, கழுத்து போன்ற பகுதிகளில் கட்டுப்போட்டு படுக்கையில் படுத்திருந்தனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்குக்கூட வெளியே போகத் தயாராக இல்லை.

சஜீத்தின் மூத்த சகோதரர் தொடர்ந்து அழுதபடியே இருந்தார். “எங்கள் குடும்பத்துக்கு என்ன ஆகும் என தெரியவில்லை. எப்படி என் குடும்பத்தை காப்பாற்றுவேன்?” என அழுகிறார்.

மீண்டும் தேசியக் கொடியை பறக்கவிட்டது குறித்த பேச்சு எழுந்தது. சஜீத் சொன்னார், “நாங்கள் எங்களுடைய நாட்டுப் பற்றை நிரூபிப்பதற்காக கொடியை ஏற்றவில்லை. அது எங்களுடைய விருப்பம், வீட்டின் மிக உயர்ந்த இடத்தில் பறக்க விடவேண்டும் என்பது எங்களுடைய இதயத்தில் இருந்து எழுந்தது”.

“நாங்கள் எங்களுடைய நாட்டுப் பற்றை நிரூபிப்பதற்காக கொடியை ஏற்றவில்லை. அது எங்களுடைய விருப்பம், வீட்டின் மிக உயர்ந்த இடத்தில் பறக்க விடவேண்டும் என்பது எங்களுடைய இதயத்தில் இருந்து எழுந்தது”

குருகிராமிலிருந்து 70 கி.மீ. தள்ளியிருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பக்பாட் அருகே உள்ள பாஞ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்களில் ஒருவர் சஜீத். அவர்களுக்கென்று எந்த நிலமும் சொந்தமில்லை. எனவே அவர்களுக்கு வேலை அவசியத் தேவையாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களில் ஒருவர் அப்போதைய நகரமயமாகி வந்த, தொழிற்சாலைப் பகுதியான குர்கானுக்கு வேலை தேடியும், சிறப்பான வாழ்க்கையைத் தேடியும் வந்தார்.  கேஸ் அடுப்பு பழுது பார்க்கும் பணியை அவர் தேடிக்கொண்டார். வாய்ப்புகள் பெருகவே, தன்னுடைய சகோதரர்களை ஒருவர் பின் ஒருவராக இங்கே அழைத்துக் கொண்டார். அவர்களுடைய மகன்களும் இங்கே வந்தார்கள்.

பகுதியளவில் உடல் குறைபாடுடைய அவருடைய மூத்த சகோதரரும் இங்கே வந்துவிட்டார். அவர் வீட்டிலேயே இருந்துகொண்டு, குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு அவர்களை பள்ளிக்கு அழைத்து போவார். சில நேரங்களில் அவர்களுடைய கடையிலும் அமர்ந்திருப்பார். அவர்களுடைய பணியை எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மரச் சாமான்களை பழுது நீக்குதல் வரை நீட்டித்தார்கள். 2006-ம் ஆண்டு ஊரில் இருந்த மொத்த குடும்பத்தையும் இங்கே அழைத்து, குர்கானின் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் குடியமர்த்தினார்கள்.

2015-ம் ஆண்டு தன்னுடைய விவசாய நிலத்தை வீட்டுமனையாக்கிய போட்சி என்பவரிடமிருந்து சஜீத் வீடு கட்ட நிலத்தை வாங்கினார். அந்த கிராமத்தில் இவர்கள் கட்டிய மூன்று அடுக்கு வீடு மெச்சக்கூடியதாக இருந்தது.  இது அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியிருக்கலாம், அதுதான் இந்த தாக்குதலுக்கு காரணமாயிருக்கும் என தற்போது இவர்கள் கருதுகிறார்கள்.

மார்ச் 21-ம் தேதி ஹோலி பண்டிகையின் போது, நான்கு சகோதரர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகள் சஜீத்தின் வீட்டில் கூடினார்கள்.  பெண்கள் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள், பெண் குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தார்கள், பையன்கள் வெளியே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் மூன்று வயது, ஐந்து வயது குழந்தைகளும் அடக்கம்.

கதறி அழும் சஜீத்தின் மூத்த சகோதரர்.

திடீரென்று, மூன்று இருசக்கர வாகனங்களில் முகத்தில் வண்ணங்களை பூசிய ஒன்பது நபர்கள் அங்கே வந்தார்கள். அவர்கள் வெளியே விளையாடிக்கொண்டிருந்த பையன்களை கேலி செய்தார்கள். அவர்களை முல்லாக்கள் என அழைத்து வம்பிழுத்தார்கள். ‘பாகிஸ்தானுக்கு போ’ என்றார்கள். அவர்களிடம் மூத்த பையன் விவாதம் செய்தான். அவனை இந்த கும்பல் சூழ்ந்துகொண்டது. பயந்துபோன பையன்கள், இனி இங்கே விளையாட மாட்டோம் என கெஞ்சினார்கள்.

உடனடியாக அங்கிருந்து கிளம்பிய பையன்கள் வீட்டுக்குப் போய், கதவை அடைத்துக் கொண்டார்கள்.

அரை மணி நேரம் கழித்து, கைகளில் கட்டையுடன் ஒரு கும்பலாக திரண்டு வந்து வீட்டை சூழ்ந்துகொண்டது.  ‘பாகிஸ்தானுக்கு போ’ என கத்த ஆரம்பித்தது அந்த கும்பல். சிலர் கத்தி, ஈட்டியுடனும் சில ஹாக்கி மட்டையுடனும் ஒருவர் துப்பாக்கியுடனும் வந்திருந்தனர். அவர்கள் வீட்டின் மீது கற்களால் தாக்கத் தொடங்கினர். வீட்டின் முன்புறம் இருந்த பெரிய கண்ணாடி கதவை உடைத்தனர். கண்ணாடியை உடைத்து உள்ளே வர ஆரம்பித்தனர்.

அந்தக் குடும்பம் கதற ஆரம்பித்த நிலையில், ஆண்களை கட்டையால் தாக்கத் தொடங்கிய அந்த கும்பல். வயதான பெண் ஒருவர் அந்த கும்பலின் காலில் விழுந்து ஆண்களை விட்டு விடும்படி கெஞ்சினார்கள். கத்தியைக் காட்டி, அந்தப் பெண்களை கன்னத்தில் அறைந்தார்கள். அலமாரியில் ஒளிந்துகொண்ட ஆறு வயது சிறுமியை பிடித்த அவர்கள், அந்தக் குழந்தையை கொடூரமாக அடித்தார்கள். ஒன்றரை வயது குழந்தையின் தலையை கட்டிலில் மோதி அடித்தார்கள். அந்தக் கூட்டுக்குடும்பத்தின் பெரும்பாலானவர்கள் கீழ்தளத்தில் இருந்த இரும்பு கதவுக்குள் ஒளிந்துகொண்டார்கள். அந்த கும்பல் அதை உடைக்க முயற்சித்து உள்ளே வந்தது. பிறகு, பார்த்தவரையெல்லாம் அடித்தது. ஒருவரை அடித்து ஜன்னலிலிருந்து வெளியே தூக்கி எறிந்தது.

தாக்கப்படும் இசுலாமிய குடும்பம்.

உடல் குறைபாடுடைய சகோதரர், குழந்தைகள் சிலரை அழைத்துக்கொண்டு இரண்டாம் தளத்தில் இருந்த வராந்தாவில் ஒளிந்துகொண்டார்.  தனிஷ்டா என்ற பதின்பருவ பெண், அந்த நேரத்தில் சமயோஜிதமாகவும் தைரியமாகவும் செயல்பட்டு, இந்த கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை செல்போனில் படம் பிடித்தார். அதுதான் இந்தக் கொடூரமான கும்பல் வன்முறை வெளியே தெரிய காரணமாக அமைந்தது.

இந்த குடும்பத்தையும் அது காப்பாற்றியுள்ளதோடு, தங்களுடைய பாதிப்புகளை உலகத்துக்கு காட்டவும் அது உதவியது. இரண்டாம் தளத்தில் இருந்த இரும்பு கதவை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆனாலும் தனிஷ்டா வன்முறையை படமாக்கிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.  துணிவுமிக்க அந்தப் பெண், கேமராவை மறைத்து வைத்தார். அவர்களை மிரட்டியதோடு, அவரை நோக்கி சுடவும் செய்திருக்கிறார்கள்.

தனிஷ்டா படம் பிடித்ததாலேயே அந்த கும்பல் அந்தக் குடும்பத்தினரை கொல்லாமல் விட்டிருக்கிறது. அடுத்த 15 நிமிடங்களில் அந்த கும்பல் இடத்தை காலி செய்திருக்கிறது. “இரண்டரை நிமிட வீடியோவைத்தான் நீங்கள் பார்த்தீர்கள், அதுவே பார்ப்பதற்கு உங்களுக்கு பயங்கரமாக இருக்கும்” என்கிறார் வீட்டில் உள்ள ஒருவர். “அனுபவித்த எங்களுக்கு இது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்”.

இதையெல்லாம் அண்டை வீட்டார் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த குடும்பத்தை காப்பாற்றும் விதமாக எவரும் அந்த கும்பலை தடுத்து நிறுத்தவில்லை. “அவர்கள் ஏழைகள். அவர்களும் பயந்திருக்கலாம்” என்கிறார் சஜீத்.  அருகில் வசிக்கும் சிலர், பக்கத்தில் வசிப்பவர்களும் கும்பலுடன் சேர்ந்து வீட்டின் மீது கல்லெறிந்ததாக கூறுகின்றனர்.

குடும்பத்தினர் காவல் உதவி மையத்தை அழைத்ததோடு, இருவர் எட்டு கி.மீ. தள்ளியிருக்கும் காவல் நிலையத்துக்கும் சென்றனர். ஆனாலும் கும்பல் கிளம்பிச் சென்ற ஒன்றரை மணி நேரம் கழித்துதான் போலீசு அங்கே வந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட பிரச்சினை என்றுதான் ஆரம்பக்கட்டத்தில் இந்தத் தாக்குதலை போலீசு அணுகியிருக்கிறது. இது ஒரு வெறுப்பு குற்றம் என வீடியோ ஆதாரம் சொன்னது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட இரண்டாவது வீடியோவில், நீண்ட இரும்பு கம்பி மற்றும் கட்டைகளுடன் அக்கும்பல் வீட்டை சூழ்ந்துகொண்டது. இந்த தாக்குதல் குருகிராமில் மதக்கலவர சூழலை உருவாக்க திட்டமிடப்பட்டது என்பதை அது வெளிப்படுத்தியது.

எலும்புகள் உடைக்கப்பட்ட நிலையில், கழுத்து திருகப்பட்ட நிலையில் காயம்பட்ட ஆண்களை போலீசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது. ஒரே ஒருவர் மட்டும் ஆறு நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால், பலர் இன்னமும் வலியுடன் வீட்டில் அவதிபட்டு வருவதை பார்க்க முடிந்தது.

இது மதரீதியிலான தாக்குதல் அல்ல, கிரிக்கெட்டால் வந்த பிரச்சினை என்பதைக் காட்டும்வகையில் இந்த முசுலீம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களை அடித்தார்கள் என காட்டுவதற்காக, கலவர கும்பலைச் சேர்ந்த சிலர் வேண்டுமென்றே மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாக வதந்திகள் பரவிக்கொண்டிருப்பதாக இந்த குடும்பம் சொல்கிறது.

இந்த குடும்பத்தின் உறவினர்கள் சிலர், இந்த இடத்தை விட்டு, முசுலீம்கள் சூழ்ந்த தங்களுடைய கிராமத்துக்கே திரும்பி விடும்படி சொல்லியிருக்கிறார்கள்.  அங்கே ஒரு வேலையும் இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு நின்றுவிடுவார்கள். ஆனாலும் முசுலீம்களுடன் வசிப்பது பாதுகாப்பானது என கருதுகிறது இந்த குடும்பம். இந்த வீட்டை விற்கவும் இவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

“எங்களுக்கு நீதி கிடைத்தால், நாங்கள் ஏன் இந்த இடத்தை விட்டு போகப்போகிறோம்? இது எங்களுடைய நாடு. எங்களுக்கு இங்கே வாழவும் பணியாற்றவும் எங்களுடைய எதிர்காலத்தை உருவாக்கவும் எங்களுக்கு உரிமை உள்ளது. எங்களை ஒரு கும்பல் பயமுறுத்த முடியாது. நாங்கள் இங்கே எங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வந்தோம். நாங்கள் இங்கிருந்து வெளியேற மாட்டோம்” என்கிறார் சஜீத்.

சில நாட்கள் கழித்து, இந்த முசுலீம் குடும்பத்தில் உள்ள இருவர் மீது குற்ற வழக்கு பதிந்திருக்கிறது போலீசு. இந்த கும்பல் வெறியாட்டத்தை தலைமையேற்று நடத்திய ராஜேந்திரா என்பவன், இந்த இருவரும் தன்னை தலையிலும் வயிற்றிலும் அடித்ததாக சொல்லியிருக்கிறான்.  அடிபட்டவர்கள் மீதே வழக்கு போட்ட போலீசு தங்களுடைய ‘கடமை’யை ஆற்றியிருப்பதாக கூறுகிறது.

கும்பல் கொலைகள் குறித்து நாங்கள் விசாரித்து அறிந்த அனைத்து வழக்குகளிலும் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீதே வழக்குப் பதிவது என்பது படுமோசமான ஒரே மாதிரியான முறையாக இருக்கிறது. மாட்டை வெட்டினார்கள் என்றும், விலங்குகளை கொடுமைப்படுத்தினார்கள் என்றும் மோசமாக வண்டி ஓட்டினார் என்றும்கூட பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலும்கூட அடைக்கப்பட்டார்கள்.

எனவே, பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு போராடுவதற்கு பதிலாக, தங்களை தாங்களே இந்த வழக்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சில நேரம் போலீசும் கிராமத்தின் பெரிய மனிதர்களும், நீதிமன்றத்துக்கு வெளியேயான ‘சமரசத்திற்கும்’ ஆளாக வேண்டியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர் தன்னை அடித்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை என சொல்வார்; எனவே, போலீசு அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியாமல் கைவிடும்.

இதே போன்ற இழிவான உத்தி குருகிராமிலும் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் புதிய இந்தியாவின் புதிய நீதி!

இந்தக் குடும்பம் நீதிமன்றம் செல்லவும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. அவர்கள் உடைந்து போயிருக்கிறார்கள். குருகிராமில் தொடர்ந்து வாழ்வது என்கிற அவர்களது தீர்மானம் பலவீனமடையலாம். அவர்கள் இந்த இடத்தை விட்டுப் போவது, வருந்தத்தக்க முடிவாக அமையலாம். வேறுபட்ட மத நம்பிக்கை உடையவர்கள் ஒருங்கிணைந்து நட்புடனும் நம்பிக்கை, மரியாதையுடனும் வாழ்வதே இந்தியா என்கிற கருத்தாக்கம். அதன் மீது செலுத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் இது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் அரங்கேறிய கும்பல் வெறியாட்டத்தை, முசுலீம் படுகொலையை நாடு முழுவதும் நடத்திப் பார்க்க இந்துத்துவ கும்பல் திட்டமிடுகிறது. யாருக்கோ நடக்கிறதென பொது சமூகம் கையைக் கட்டி வேடிக்கை பார்த்தால், நாளை இந்த கும்பல் வன்முறை நம் மீதும் திரும்பும் ஆபத்து இருக்கிறது.

https://youtu.be/RwsEV_GdI30


கட்டுரையாளர் : Harsh Mander
தமிழாக்கம் : அனிதா

நன்றி: Scroll

கருத்துக் கணிப்பு : பாஜக-வின் நம்பர் ஒன் அடிமையாக போட்டி போடும் கட்சி எது ?

பாஜக-விடம் நல்ல பெயர் எடுப்பதற்கு அதிமுக, பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டி போடுகிறார்கள். ஒருவேளை மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டால் ஏதாச்சும் மந்திரி-கிந்திரி பதவி கிடைத்து பிழைப்பை ஓட்டலாமே என்பது அந்தப் போட்டியின் அடிநாதம். செல்லுமிடமெல்லாம் மத்தியில் ஆண்ட மோடி ஆட்சியின் வேதனைகளை சாதனைகளாகச் சொல்லி “மோடி எங்கள் டாடி” என்றெல்லாம் ’படுத்தி’ எடுக்கின்றன இக்கட்சிகள்.

இன்றைய கேள்வி:
பாஜக-வின் நம்பர் ஒன் அடிமையாக போட்டி போடும் கட்சி எது?
♦ அதிமுக
♦ பாமக
♦ தேமுதிக
♦ புதிய தமிழகம்
♦ அனைத்தும்

டிவிட்டரில் வாக்களிக்க:

யூ-டியூப் :

வாக்களிக்க இங்கு அழுத்தவும்

சென்னை : மக்கள் அதிகாரம் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்! என்ற அரசியல் முழக்கத்தின்கீழ் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் பத்தாயிரக்கானோர் கலந்த கொண்ட மிக பெரிய மாநாடு பொதுமக்களிடையே நல்ல ஆதரவை பெற்றது. அதன் தொடர்ச்சியாக அந்த மாநாட்டின் அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 30-ம் தேதி சென்னை தி.நகரிலுள்ள முத்துரங்கன் சாலையில் நடைபெற்றது. இந்த விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு சுமார் ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தை, மக்கள் அதிகாரம் அமைப்பின் சேத்துப்பட்டு பகுதி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். “பல தடைகள்மீறி இந்த பொதுக்கூட்டத்தை இன்று நடத்திக் கொண்டிருக்கிறோம். கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் என்கின்ற மாநாட்டின் முழக்கத்தை தொடர் இயக்கமாக தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

தோழர் புவனேஸ்வரன்.

ஜனநாயக சக்திகள், முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரின் குரல்வளையை நசுக்குகிறது கார்ப்பரேட் – காவி பாசிசம். இதனை எதிர்க்கவில்லை என்றால் பாசிசம் நம் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிடும். தற்போதுள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் இந்த கட்டமைப்பினுள் தீர்வு இல்லை. ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராடுவதே தீர்வு” என தலைமை உரையில் பேசினார்.

தோழர் சி. ராஜூ.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், சி. ராஜூ அவர்கள், “கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்” என்ற முழக்கத்தை தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு செல்கிறோம். நாம் எப்படிப்பட்ட எதிரியோடு மோதவிருக்கிறோம், எப்படிப்பட்ட எதிரியை எதிர்த்துப் போராடப் போகிறோம் என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பிறகு இப்பொழுதுதான் சென்னையில் கூட்டம் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. மக்கள் அதிகாரம் தேர்தலில் நிற்கலாம் என்கின்றனர். தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வந்தால் பள்ளிக்கூட கட்டணம் குறையுமா, மருத்துவ செலவு, மின்சார கட்டணம், வீட்டு வாடகை, விலைவாசி குறையுமா? விவசாயி, தொழிலாளி, சிறுகுறு வியாபாரிகளின் பிரச்சினை தீருமா? எந்த மாற்றம் நம் வாழ்க்கையில் வரும்? மக்களின் அன்றாட பிரச்சினைக்கு இந்த அரசு கட்டமைப்பில் எந்தத் தீர்வுமில்லை; ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் தோற்று திவாலாகிவிட்டது. இப்படியிருக்கையில் மக்கள் அதிகாரம் மட்டும் எப்படி தேர்தலில் நின்று பிரச்சினைகளை தீர்க்க முடியும். ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் மக்கள்தான் எஜமானர்கள், அப்படிப்பட்ட மக்களிடம்தான் அதிகாரம் இருக்க வேண்டும்” என்றும்; “பேருந்து ஒன்று பழுதடைந்துவிட்டது என்றால் அந்த பேருந்தைதான் மாற்றவேண்டுமேயன்றி ஓட்டுநரை மாற்றுவதால் எந்தப் பயனுமில்லை” என்று தன் சிறப்புரையை முடித்தார்.

தோழர் திலகவதி.

அடுத்ததாக மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர் திலகவதி அவர்கள், கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் மாநாட்டு பிரச்சாரத்தின்போது மக்கள் அதிகாரம் அமைப்பு சந்தித்த இன்னல்களையும், பிரச்சாரத்திற்கு தடையாக இருந்த காவல்துறையை, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை, மக்களுடனும் இதர ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து எப்படி எதிர்த்து நின்று வென்றனர் என்று விளக்கினார்.

தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார்.

திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்கள், “பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்த ஐந்தாண்டுகளில், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்துள்ளது. மக்களுக்கு எதிராக இருக்கும் இந்த கார்ப்பரேட் – காவியை எதிர்த்தால் ஆண்டி இந்தியன், தேசத்துரோகி என முத்திரைக் குத்துகிறது. இந்த மண்ணை மதவெறி மண்ணாக மாற்றத் துடிக்கும் மதவெறி கும்பலையும், சாதிவெறி கும்பலையும் நாம் அனைவரும் கரம் கோர்த்து எதிர்த்து நிற்கவேண்டிய தருணம் இது” என்றார்.

தோழர் சி.மகேந்திரன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான சி.மகேந்திரன் அவர்கள், “மக்கள் அதிகாரம் அமைப்பு காவி பாசிசத்தின் அபாயத்தை தமிழகம் முழுவதிலும் கொண்டு சென்று, வீரம் செரிந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது. வெறிப்பிடித்த இந்த காவி பாசிசத்தை விரட்ட தேர்தலை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒன்றிணைய வேண்டும். கொள்கை மாறுபாடு, சித்தார்ந்த வேறுபாடு இருந்தாலும் பாசிசத்தை எதிர்க்கும் போராட்டக்களத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்புடன் ஒன்றுப்பட்டு நிற்கும்” என்றார்.

தோழர் தியாகு.

உரிமைத் தமிழ் தேசத்தின் ஆசிரியர் தியாகு அவர்கள், “இந்த அரசு பெரும் குழுமங்களின் நலன்களை காக்கும் அரசு. 10% பணக்காரர்களின் சொத்து மதிப்பு 75%  மக்களின் சொத்து மதிப்பிற்கு சமம். இந்த தேர்தலில் தேனீர் கடைக்காரரோ அல்லது ஒரு தொழிலாளியோ போட்டியிட்டு வெல்ல முடியுமா? ஜனநாயகம் என்பது பணநாயகமாக மாறிவிட்ட போது இதிலே எப்படி எங்களை போட்டியிட சொல்கிறீர்கள். இந்திய பாசிசத்தின் இரட்டை முகங்கள் ஒன்று நரேந்திர மோடி, மற்றொன்று ராகுல் காந்தி, அதாவது பி.ஜே.பி.யும் காங்கிரசும். திருச்சி மாநாட்டில் அருந்ததிராய் அவர்கள் மிக அழகாக சொன்னார், 80-களில் இரண்டு பூட்டுகள் திறக்கப்பட்டது ஒன்று பாபர் மசூதியின் பூட்டு மற்றொன்று இந்திய சந்தைக்கான பூட்டு. வேலையிழந்தவர்களுக்கு வேலை கொடுக்கும் கொள்கையோ, அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை கொடுக்கும் கொள்கையோ இந்த அரசு வைத்திருக்கவில்லை. மாறாக, பெரும் குழுமங்கள் வளர்ப்பதற்காகதான் கொள்கை வைத்திருக்கிறது. அதே கொள்கையை வைத்திருக்கும் மற்ற கட்சிகளுக்கு எப்படி ஓட்டுப் போட்டு நம் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்” என்றார்.

தோழர் மருதையன்.

இறுதியாக, சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலர் மருதையன் அவர்கள், “கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்” என்ற மக்கள் அதிகாரத்தின் மாநாட்டை பல தடைகளையும், அடக்குமுறைகளையும் கடந்து திருச்சி நகரில் பெருந்திரளான மக்களும் தோழர்களும் கூடியிருக்க வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. எதிர்த்து நில் என்ற இந்த முழக்கம் யாருக்கு போய் சேர்ந்ததோ இல்லையோ நிச்சயமாக எதிரிகளுக்குப் போய் சேர்ந்திருக்கிறது. பிரச்சாரத்தின்போது பல்வேறு இடங்களில் அவர்கள் ஏற்படுத்திய தடைகள், பிரச்சாரம் செய்த தோழர்களுக்கு எதிராக அவர்கள் தொடுத்த தாக்குதல்கள் இவை மக்கள் அதிகாரம் அமைப்பிற்கும் தோழர்களுக்கும் வழங்கப்பட்ட சான்றிதழ்கள், என்றும், பெரிய கட்சிகள், ஆளும் கட்சிகள், இலட்சக்கணக்கான உறுப்பினர்களை வைத்திருப்பதாகச் சொல்லக்கூடிய கட்சிகள் இவர்களை கண்டு பார்ப்பன பாசிஸ்டுகள் அஞ்சவில்லை. சிறிய இயக்கம், அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் Fringe Element என்று சொல்லக் கூடியவர்களைக் கண்டு பாசிஸ்டுகள் அஞ்சுகிறார்கள். இந்த முழக்கம் தமிழக மக்களிடையே செல்வாக்கு பெற்றுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். அதன் விளைவாகத் தான் இந்தத் தாக்குதல். என்றார். எதிர்த்து நில் என்ற இந்த முழக்கத்தை இந்த அரசு கட்டமைப்பிற்குள் மாற்ற முடியாது. மக்களை போராடுபவர்களாக, போராடும் சிந்தனையுடையவர்களாக மாற்றியமைப்பதன் மூலமே சாத்தியம். வெறுமனே வாக்குச் சீட்டு மாற்றிவிடாது, என்றார்.

விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு இடையிடையே நடந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடல்கள் பாடப்பட்டது.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை – மண்டலம்.


இதையும் பாருங்க …

தருமபுரி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்க அரங்கக் கூட்டத்திற்கு தடை !

பேச்சுரிமை, கருத்துரிமை போராடுகிற உரிமை எல்லாம் சட்டப்படியே ஜனநாயக உரிமை என்று பீற்றிக் கொள்ளும் இந்த அரசமைப்பில் ஒரு அரங்கத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு கூட பல போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

தருமபுரியில், “கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் !” என்ற தலைப்பில் மார்ச் – 31 அன்று அரங்கக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி தேர்தல் அதிகாரியிடம் கடந்த மார்ச் 18-ம் தேதி மனு கொடுத்தோம். அரசு அதிகாரிகளோ 27-ம் தேதி பதில் மனு கொடுத்தனர். அதில் போலீசாரை அணுகுமாறு தெரிவித்தனர். அதன்படி தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளரை அணுகினோம். அங்கிருந்த ஆய்வாளர் ”நீங்கள் நடத்திக் கொள்ளுங்கள்” என்று வாய்மொழியாக தெரிவித்தார். ”பதிலை எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும்” என்று கூறினோம். ”அது தேவையில்லை நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி விடுகிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து கூட்ட வேலைகளை செய்து வந்தோம். அனுமதி இல்லை என்று கடைசி வரையில் தேர்தல் ஆணையமோ, போலீசோ தெரிவிக்காமல் கூட்டம் நடத்துவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக வந்து அனுமதி இல்லை என மண்டப நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார் போலீசு ஆய்வாளர்.

தருமபுரி பெரியார் மன்றம் எதிரில் தடையை கண்டித்து கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.

”இது ஜனநாயக உரிமை பறிப்பு” என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தோம். தருமபுரி தேர்தல் நடத்தும் அலுவலர் ”தேர்தல் முடிந்த பிறகு வாருங்கள் அனுமதி தருகிறோம்” என்றார். ”ஏன் எங்களுக்கு ஜனநாயக உரிமை இல்லையா? நீங்கள் ஏன் சட்டப்பூர்வமாக நடக்க மறுக்கிறீர்கள்?” என்றதற்கு ”எனது வாய் கட்டப்பட்டு இருக்கிறது” என்றார்.

”உங்கள் வாய் கட்டியே இருக்கட்டும் எங்கள் வாயை ஏன் கட்டுறீங்க?” என்று கேட்டதற்கு திமிராக ”இவ்வளவு தான் பதில் சொல்ல முடியும்” என்று பதிலளித்தார். ”எங்களுக்கு ஜனநாயக உரிமை என்பது நீங்கள் போடும் பிச்சையல்ல” என்று கூறியதும் உடனே, ”போலீசை கூப்பிடு” என்றார் தேர்தல் அதிகாரி

படிக்க:
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

தேர்தல் அதிகாரி, போலீசாரை தொடர்பு கொள்ளச் சொல்வதும், போலீசார் தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ளச் சொல்வதுமாக அலைக்கழித்தனர். தலைவர் சிலைக்கு மறைப்பு கட்டுவதுத் தொடங்கி, அங்கு போகாதே இங்கு வராதே, அதை செய்யக் கூடாது, இதனை பேசக்கூடாது என்று எண்ணற்ற உத்தரவுகளைப் போட்டு ஆட்டு வியாபாரிகூட ஆட்டை விற்க முடியாத நிலையை உருவாக்கிவிட்டு, ஜனநாயகத்தைப் பாதுகாக்கத்தான் இதைச் செய்வதாக தெரிவிக்கிறார். ஜனநாயகம் என்பது என்ன? அதனை ஒரு குடிமகனுக்கு எப்படி வழங்க வேண்டும் என்பதைப் பற்றி சட்டம் ஒன்றை சொல்கிறது, அரசு அதிகாரிகள் ஒன்றை நடைமுறைபடுத்துகிறார்கள்.

ஆட்டு வியாபாரியை வழி மறித்து கணக்கு கேட்கும் அதிகாரிகள், ஓட்டுக் கட்சிகள் தினந்தோறும் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் மக்களுக்கு பண வினியோகம் செய்து வருவதைத் தடுப்பதில்லையே. சொல்லப் போனால் அதிகாரிகளும் போலீசும் இந்த செயலை பாதுகாத்து வருகின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மை. இவர்களைப் போன்ற ஜனநாயாக விரோதிகளை அம்பலப்படுத்தி பேசிவிடுவார்கள் என்பதாலேயே மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை.

ஒரு அரங்கக் கூட்டத்தை நடத்துவதற்கு தாம் பொறுப்பில்லை எனக் கைகழுவும் அதிகாரிகள், ஜனநாயக ஆட்சி என்ற பெயரில் போலீசின் ஆட்சியைத்தான் நடத்துகிறார்கள்.

ஜனநாயகத்தைக் காப்பதற்காகவே நடத்தப்படுவதாக சொல்லப்படும் தேர்தலை நடத்துகின்ற தேர்தல் ஆணையத்திடம் ஒரு அரங்கக் கூட்டத்துக்கான கருத்துச் சுதந்திரம் படும்பாடே, இந்தக் கட்டமைப்பின் தோல்விக்கு உதாரணம்!


தகவல்:
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு: 9790138614.


இதையும் பாருங்க …

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும்

 

சிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 6


காட்சி – 9
இடம் : வீதி
உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், வீரர்கள்.

கேசவப்பட்டர் : ஒய் ஒய்! வாரும் இப்படி… காலம் எவ்வளவு தலைகீழா மாறிண்டு போறது பார்த்தீரோ?

பாலச்சந்திரப்பட்டர் : என்ன! நேக்குப் புரியல்லையே?

கேசவப்பட்டர் : வேதம், சாஸ்திரம், ஆச்சாரம், அனுஷ்டானம், நேமம், நிஷ்டை எல்லாம் பாழ். பாழாகிப் போச்சுங்காணும். தலையை வெளியே நீட்ட முடியாது போலிருக்கு இனி.

பாலச்சந்திரப்பட்டர் : ஏன் ஒய்! விஷயத்தை விளக்கமா, சாவதானாமா, சாந்தமா சொல்லுமே! வறட்டுக் கூச்சல் போட்டுண்டே இருக்கறேள்?

கேசவப்பட்டர் : ஆமாம், ஒய்! இனி நம்ம வேத சத்தமே இந்த மராட்டிய மண்டலத்துக்கு வறட்டுக் கூச்சலாகத்தான் தோணப் போறது. தலைக்குத் தீம்பு வர்றது . தெரியாமெ, சாஸ்திரம் அழிக்கப்படுகிறது. அறியாமெ அவாள் அவாள் வயிறு நெறைஞ்சா போதும்னு இருந்தா என்ன ஆறது ஒய்? நம்ம குலம், கோத்திரம், பூர்வபெருமை சகலமும் பாழகிறது சர்வேஸ்வரா!

பாலச்சந்திரப்பட்டர் : ஆத்திரமாப் பேசினா ஆயாசமாத்தான் இருக்கும். நிதானமாய்ப் பேசும் ஒய்!

கேசவப்பட்டர் : முடியலை ஒய் நிசமாச் சொல்றேன். மனது பதறிண்டு இருக்கு. பதறாமலிருக்குமோ, மகாபாவம் நடக்க இருக்கும் போது நமக்குத் தெரியறது. தெரிந்தும் நாம் அதைத் தடுக்காமல் இருக்கிறதுண்ணா , ஒண்ணு , நாம் மரக்கட்டேண்ணு அர்த்தம். அல்லது நாமும் அந்தப் பாவத்துக்குச் சம்மதிக்கிற சண்டாளர்கள்ணு அர்த்தம். சம்மதிக்குமோ மனசு? சம்மதிக்குமோண்ணு கேக்கறேன்.

பாலச்சந்திரப்பட்டர் : சம்மதிக்காது! சாஸ்திரம் அழிக்கப்படுவதைப் பார்த்துண்டு, சகிச்சிண்டு இருக்கத்தான் முடியாது.

கேசவப்பட்டர் : முடியாதுண்ணு சொல்லிண்டு மூக்காலே அழுதுண்டிருந்தா போதுமா?

பாலச்சந்திரப்பட்டர் : வேறே என்ன செய்யிறது? என்ன செய்ய முடியும் நம்மாலே..?

கேசவப்பட்டர் : மண்டு மண்டு! ஏன் ஒய் முடியாது? ஏன் முடியாதுண்ணு கேக்கறேன்.

பாலச்சந்திரப்பட்டர் : சும்மா இரும் ஒய்! இது என்ன மாடா போ. மரமா போ, பூச்சியா போ, புழுவாய் போ-ன்னு சாபங் கொடுக்கிற காலமா? இல்லே. நம்ம கையிலே அக்கினி இருக்குண்ணு சொன்னா ஊரார் கேட்டு பயப்படற காலமா? காலத்தை அறிஞ்சுண்டு பேசும். கர்ச்சனை செய்யணும்னா சிங்கமா இருக்க வேணுமோ?

கேசவப்பட்டர் : காலத்தை அறிஞ்சிண்டு மட்டுமில்லெ ஒய் காலம். இன்னும் வரவர எவ்வளவு கெட்டுப் போகப் போறதுண்ணும் தெரிஞ்சுண்டுதான் பேசறேன்.

(வீரர்கள் கொடி ஏந்தி முழக்கத்துடன் வருதல்)

அடே கொஞ்சம் நில்லு! என்ன, ஒரே கூச்சல் போட்டுண்டு போறேளே. என்ன விசேஷம்?

வீரன் : மகாராஷ்டிர வீரன், மாவீரத் தலைவன் சிவாஜி மகாராஜாவுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறப்போவது உங்களுக்குத் தெரியாதா?

கேசவப்பட்டர் : ஆமாம்! கேள்விப்பட்டோம். என்ன அதுக்கு?

வீரன் : பட்டாபிஷேகத்தன்று சிவாஜி பவனி வருவதற்காக பாஞ்சாலத்திலிருந்து தருவிக்கப்பட்ட பஞ்சகல்யாணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறது. நாங்கள் போகிறோம். சிவாஜி மகாராஜாவுக்கு … ஜே.

கேசவப்பட்டர் : எவ்வளவு துணிச்சல் இந்த சிவாஜிக்கு இவன் என்ன குலம்? இவன் குலத்துக்கு சாஸ்திரம் என்னவிதமான தருமத்தைக் கூறியிருக்கிறது, என்பதைத் துளிகூட யோசிக்காமப்படிக்கு, இவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறானாமே. அடுக்குமோ! சாஸ்திரம் சம்மதிக்குமோ?

(எதிரே மோரோபந்த் வருகிறார்)

பாலச்சந்திரப்பட்டர் : ஒய்! அதோ மோரோபந்த் வருகிறார். அவரிடம் கூறுவோம்.

கேசவப்பட்டர் : எந்த மோரோபந்த்?

பாலச்சந்திரப்பட்டர் : நம்மவர்தான் ஓய்!

கேசவப்பட்டர் : நம்ம குலந்தான். ஆனால், அவர் இப்போ சிவாஜியினிடமல்லவா வேலை செய்துண்டிருக்கிறார்? முதன் மந்திரி ஸ்தானமல்லவோ வகிச்சிண்டிருக்கிறார். அவர் சிவாஜியின் சார்பாகத்தான் பேசுவார். அவன் பட்டாபிஷேகம் செய்து கொள்வது சாஸ்திர சம்மதமான காரியம்ணு பேசுவார்.

பாலச்சந்திரப்பட்டர் : அசட்டுத்தனமான முடிவுக்கு அவசரப்பட்டு வராதீர். மோரோபந்த் சிவாஜியிடம் பெரிய உத்தியோகம் பார்த்துண்டு வருபவரானாலும், நம்ம அவர் குலம். நம்மவா எங்கே இருந்தாலும் குல ஆச்சாரத்தையும், அவர் அந்த ஆச்சாரத்துக்கு ஆதாரமாய் இருக்கிற சாஸ்திரத்தையும் ஒருநாளும் அழிஞ்சு போகப் பாத்திண்டிருக்க மாட்டா. வேணுமானாப் பாரும். அதோ, அவரே வந்துவிட்டார். வரணும். வரணும்

மோரோபந்த் : ராம் ராம் என்ன பாலச்சந்திரப்பட்டர் வாள் . ஓகோ! கேசவப்பட்டர்? ஆமாம், என்ன கோபமாகப் பேச்சுக்குரல் கேட்டதே?

கேசவப்பட்டர் : பேச்சுக் குரல்தானே? இனி அதிக நாளைக்கு இராது. நிர்ச்சந்தடியாகிவிடும். ஸ்மசான சந்தடி இருக்கும். கவலைப்பட வேண்டாம்.

மோரோபந்த் : என்ன, கேசவப்பட்டர்! ஏதோ வெறுப்படைந்தவர் போலப் பேசறேளே?

கேசவப்பட்டர் : வெறுப்பில்லை ஸ்வாமி, வெறுப்பில்லை! வேதனை தாங்க முடியாத வேதனை. வேதம் நாசமாகிறது. வேதியர்கள் வகுத்த விதிமுறைகள் நாசமாகின்றன. சாஸ்திரம் அழிகிறது; தர்மம் அழிகிறது, வேதனை இல்லாமலிருக்குமோ?

மோரோபந்த் : எதைக் குறித்துப் பேசுகிறீர், இவ்வளவு ஆக்ரோஷத்தோடு?

கேசவப்பட்டர் : ஆக்ரோஷமா? இதுவா? மோரோபந்த்! மோரோபந்து நீர் ஞானசூன்யரல்ல. நமது குலதர்மம், குலப்பெருமை அறியாதவரலல்ல.

மோரோபந்த் : அறிந்திருக்கிறேன். அதனால் என்ன ஸ்வாமி, அடேடே! அதைச் சொல்கிறீர்களா?

கேசவப்பட்டர் : அதென்ன ஸ்வாமி, அவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறீர், சர்வ நாசம் சம்பவிக்கும் காரியமல்லவா அது. சிவாஜி என்ன குலம்? அந்தக் குலத்துக்கு என்ன கடமை? க்ஷத்திரிய குலமல்லவா அரசாளலாம். ராஜ்யாபிஷேகம் உண்டு.

மோரோபந்த் : க்ஷத்திரியனுக்குத்தான் சிவாஜி முயற்சிக்கிறான்.

கேசவப்பட்டர் : நீர் பார்த்துக் கொண்டு இருக்கிறீர். மார்பிலே முப்பிரியும் இருக்கிறது. அறிந்து பயன்? செந்தாமரை நிறைந்த தடாகத்திலே முரட்டு எருதுகள் இறங்கி தாமரையைத் துவம்சம் செய்வதைப் பார்த்தும், அதைத் தடுக்காமல் இருந்து கொண்டே, தாமரையின் அழகு நேக்கு நன்னா தெரியுமேன்னு பேசிண்டிருந்தா போதுமா? புத்திமான் செய்கிற காரியமா இது?

மோரோபந்த் : நீர் எதைக் குறிப்பிடுகிறீர்?

கேசவப்பட்டர் : உம்ம கண் எதிரிலேயே நம்ம சாஸ்திரம் – நாசமாவதைத்தான் குறிப்பிடுறேன். சிவாஜி பட்டாபிஷேகம் செய்துக் கொள்ளப் போறானாமே?

மோரோபந்த் : பைத்தியக்காரர் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பேன்? நேக்கு தெரியாதா, வேதாச்சாரம் கெடக்கூடாது என்கிற விஷயம்.

கேசவப்பட்டர் : அப்படியானா தடுத்தீரோ?

மோரோபந்த் : கண்டிப்பாக பட்டாபிஷேகத்தை சாஸ்திர விதிப்படி செய்துக் கொள்வது மகாபாவம். அந்தப் பாவகாரியத்துக்கு நான் உடந்தையாய் இருக்க முடியாது. தடுத்தே தீருவேன். எதிர்த்தே தீருவேன் என்று தெளிவாக, தீர்மானமாகக் கூறியாகிவிட்டது.

பாலச்சந்திரப்பட்டர் : பார்த்தீரா, ஒய்… நான் சொன்னேனல்லவா. (கேசவப்பட்டர் மேரோவைத் தழுவி)

கேசவப்பட்டர் : க்ஷமிக்கணும் ஸ்வாமிகளே! ஆத்திரமாகப் பேசிவிட்டேன். தங்கள் குலப்பெருமையை உணராமல். தடுத்தீரோ? ஆரிய குல ரட்சகர் நீர். வேதாகம பாதுகாவலர் நீர்.

மோரோபந்த் : இது கலிகாலம். கலிகால தருமப்படி இப்போது பூலோகத்திலே க்ஷத்திரிய குலமே கிடையாது என்று கூறினேன்.

கேசவப்பட்டர் : ஆதாரம் என்ன கூறினீர்?

மோரோபந்த் : ஏன், அந்தக் காலத்திலேயே பரசுராமர் க்ஷத்திரியப் பூண்டையே அழித்து விட்டாரே . க்ஷத்திரியர் ஏது இப்போது என்று கேட்டேன். சிவாஜிக்குப் பட்டம் சூட்டுவது என்பதற்கு எந்த சனாதனியும் சம்மதிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆகையாலே ஆத்திரப்பட்டு ஏதேதோ கூவிண்டிருக்க வேண்டாம். நமது ஆரிய சோதராளிடம் பேசி இது விஷயமாக, அனைவரையும், ஒன்று திரட்டும். சிவாஜி சம்மதம் கேட்டு அனுப்புவான். முடியாது’ என்று ஒரேயடியாய்க் கூறிவிடும்.

படிக்க:
முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை வாழ்த்தி ஆற்றிய உரை !
மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

கேசவப்பட்டர் : ஆஹா! இப்போதே கிளம்புகிறேன்! நம்ம சோதராளிடம் சொல்கிறேன் விஷயத்தை. சூட்சமமா இரண்டொரு வார்த்தை சொன்னாக்கூட புரிந்து கொள்வாளே நம்மளவா.

மோரோபந்த் : செய்யும் ஸ்வாமி! முதலில் போய் அந்தக் காரியத்தைச் செய்யும். நான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்.

கேசவப்பட்டர் : மனம் நிம்மதியாச்சு. மனுமாந்தாதா கால ஏற்பாடு சாமான்யமா? நான் வர்ரேன். வாரும் ஒய், பாலச்சந்திரப்பட்டர் சந்திரரே வாரும், போய்க் காரியத்தைக் கவனிப்போம்.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை
பகுதி 2 :
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !
பகுதி 3 : யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் ?

பகுதி 4 : என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே !
பகுதி 5 :
ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது !

புதுச்சேரி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்!
திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி!

02.04.2019 செவ்வாய், மாலை 5 மணி
சுதேசி மில் எதிரில், புதுச்சேரி.

தலைமை:

தோழர் சாந்தகுமார்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

உரை:

தோழர் மங்கையர் செல்வம்,
அமைப்பாளர்,
மீனவர் விடுதலை வேங்கை,
புதுச்சேரி.

தோழர் தீனா,
அமைப்பாளர்,
பெரியார் சிந்தனையாளர் இயக்கம்,
புதுச்சேரி.

தோழர் முருகானந்தம்,
பொதுச் செயலாளர்,
மனித உரிமைகள் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்,
புதுச்சேரி.

தோழர் மருது,
தலைமை குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

சிறப்புரை:

தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

நன்றியுரை:

தோழர் EK சங்கர்,
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

ம.க.இ.க. கலைநிகழ்ச்சி நடைபெறும்.

அனைவரும் வாரீர் !


மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி,
தொடர்புக்கு: 87542 05589.


இதையும் பாருங்க …

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் – கோவன் பாடல்

மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! மக்கள் கருத்து

கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும்? – மக்கள் கருத்து

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் | புதிய பாடல் வெளியீடு

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த “தாமரை மலர்ந்தே தீரும்” பாடல், ரீ-ரிக்கார்டிங்கோடு காணொளி வடிவில் உங்கள் பார்வைக்கு …

பாடல் வரிகள் :

மலர்ந்தே தீரும்  …
தாமரை மலர்ந்தே தீரும் … (மலர்ந்தே தீரும்  …)

காவிரி வறண்டாலும்
கம்மா குளம் வத்தினாலும்

ஆறு புள்ளி கோலத்திலே
அக்கா வீட்டு வாசலிலே…  (மலர்ந்தே தீரும் …)

அதிமுக தோளு மேல
அஞ்சி சீட்டு தாண்ட முடியல
இதுல
நாற்பதும் மலருதாம்
நல்லா வருது சொல்ல முடியல (மலர்ந்தே தீரும் …)

மோடி சொன்ன பதினஞ்சி லட்சம்
அக்கவுண்டுல ஏறிடுச்சி
வருசத்துக்கு இரண்டு கோடி
வேலையும் வந்துருச்சி …

ஸ்கில்லு இந்தியா
மோடி பாலிசி …
ஆனா
பக்கோடா விக்க சொன்னாரு
பி.இ படிச்சி …

பணமதிப்பு அழிப்பாலே
குஜராத்தே புட்டுகிச்சி …
மோடி சொன்ன ஜி.எஸ்.டி
திருப்பூரும் செத்துருச்சி …

தறி உசுரு பிரிஞ்சிருச்சி
சிறு தொழிலும் அழிஞ்சிருச்சி
தாமரைய வச்சிசெய்யப் போறாங்க
நோட்டா மேல குந்தவச்சி …  (மலர்ந்தே தீரும்  …)

டெல்டா மாவட்டமே
புயலடிச்சி சாஞ்சிருச்சி…
ஸ்டெர்லைட்டுக்காக
பதிமூனு உசுரு போயிடுச்சி …

அப்போ எட்டிப் பாக்கல
மோடி எதுவும் சொல்லல …
அவர் ரொம்ப பிஸி
அம்பானி வீட்டு கல்யாணத்துல! (மலர்ந்தே தீரும் …)

மலர்ந்தே தீரும்
தாமரை மலர்ந்தே தீரும்
ஊரு தாலிய அறுத்தாவது
வளர்ந்தே தீரும் …

பாடல்:

பாடல், இசை : ம.க.இ.க கலைக்குழு
ஆக்கம் : வினவு

பாருங்கள் ! பகிருங்கள் !

கொள்ளையர்கள் தப்பும் போது நமது சௌகிதார் என்ன செய்தார் ?

0
கண்களை இருக்க மூடிக்கொண்ட காவல்காரார்

கிரீன்பீஸ், இந்தியா அமைப்பை சேர்ந்த பிரியா பிள்ளை 2015, ஜனவரி 11 அன்று இலண்டன் செல்ல இருந்த நிலையில் டெல்லி விமானநிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர் செய்த குற்றம் என்ன?

இந்திய நாட்டின் தேசிய நலனுக்கு கேடு விளைவிக்கும்படியாக இங்கிலாந்து பழங்குடி மக்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவிடம் (All-Party Parliamentary Group for Tribal Peoples) வாக்குமூலம் கொடுக்க திட்டமிட்டிருந்தார் என்று மோடி அரசு குற்றம் சாட்டியது.

ஆனால் மோடி அரசு இங்கே சொன்னது யாருடைய தேசிய நலன்?

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடிகளின் வாழிடத்தில் நிலக்கரியை தோண்ட அனுமதி பெற்ற விதேசி எஸ்ஸார் குழுமம் மற்றும் சுதேசி ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டல்கோ நிறுவனங்களின் நலன் தான்.

அதற்கடுத்த ஆண்டில் மே 9-ம் தேதி பழங்குடிகள் உரிமை செயற்பாட்டாளரான கிளாட்சன் டங்டங் (Gladson Dungdung) லண்டன் செல்லவிருந்த பயணம் தடுக்கப்பட்டது. சசெக்ஸ் பல்கலைக் கழகத்தில் (University of Sussex) ‘சுற்றுச்சூழல் வரலாறு மற்றும் தெற்காசிய அரசியல்’ என்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார்.

நன்றி : NEWS CLICK

இந்த இரண்டு சம்பவங்களிலும் வெளிநாடு செல்லவிருந்த இச்செயற்பாட்டாளர்களை கட்டுப்படுத்துவதற்கு அருவருக்கத்தக்க எச்சரிக்கையை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. அவர்களது குற்றங்கள் அதிகபட்சம் அவர்களது பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும், அதே மோடி அரசாங்கம் பெரும் பொருளாதார குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பித்து வெளியேறுவதை தடுக்கவில்லை.

மோடி அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புலனாய்வு நிறுவனத்திடம் ‘சாராய’ விஜய மல்லையாவிற்கு எதிராக ‘கவன ஈர்ப்பு சுற்றறிக்கை’ இருந்த போதிலும் இலண்டனுக்கு அவர் தப்பி செல்வதற்கு உதவி செய்தது. மல்லையாவுக்கு மட்டுமே நடந்திருந்தால் ஏதோ கண்ணசந்த நேரத்தில் கொள்ளையன் தப்பி விட்டான் என்று கருத நமக்கு இடமிருக்கும். ஆனால் தொடர்ந்து நீரவ் மோடி, மெகுல் சொக்சி, நிதின் சண்டேசரா மற்றும் இன்னபிற குற்றவாளிகள் என இப்பட்டியல் நீளுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 27 பொருளாதார கொள்ளையர்கள் முதலீட்டாளர்களது பணத்தையும் பொதுமக்களது வரிப்பணத்தையும் ‘ஆட்டைய போட்டு’ வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கின்றனர்.

படிக்க:
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
♦ மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…

இந்த கொள்ளையர்கள் மோடியின் பார்வையில் தான் தப்பி சென்றுள்ளனர். மாட்சிமை தாங்கிய இந்திய அரசின் வல்லமை அவர்களது திட்டங்களை தடுக்கவில்லை. அறிவுடை மாந்தர் எவருக்கும் இச்சம்பவங்கள் எளிதில் செரிக்காது.

இப்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார கொள்ளையர்கள் தப்பி செல்லுவதை வேடிக்கை பார்த்த மோடி தற்போது ‘மெயின் பிச் சௌகிதார்’ என்ற முழக்கத்தை கையிலெடுத்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘சௌகிதார்’ என்ற தம்பட்டதை சேர்க்கும் அந்த கண நேரத்திற்குள்ளேயே அவரது அடிப்பொடிகளும் ‘சௌகிதார்’ ஆகி விட்டார்கள். 27 கொள்ளையர்கள் தப்பியதை வேடிக்கை பார்த்த பின்னரும் புளகாங்கிதத்துடன் தன்னை ‘சௌகிதார்’ என்று அழைத்துக் கொள்வதை என்ன சொல்ல?

வாங்கிய ஆயிரக்கணக்கான கோடி கடனை செலுத்தாத பெரும் கொள்ளையர்களின் பட்டியல் ஒன்றை 2015, பிப்ரவரி 4 அன்று ஒன்றிய அரசாங்கத்தின் அலுவலகத்திற்கு முன்னாள் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் அனுப்பியிருந்தார். இதுவரை அதன் மீது ஒரு நடவடிக்கை கூட இல்லை. மைய தகவல் ஆணையத்தின் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்கு பின்னரும் ரிசர்வ் வங்கியும் தலைமை அமைச்சர் அலுவலகமும் அவர்களது பெயர்களை வெளியிடவில்லை. பா.ஜ.க.-வின் மூத்த தலைவரும் பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி கடுமையான கண்டனங்களை அதற்கு பதிவு செய்திருந்தார்.

நீரவ் மோடியின் பொருளாதார குற்றங்கள் குறித்து விசில் ப்ளோயர் எஸ்.வி.ஹரி பிரசாத்தும் தலைமை அமைச்சர் அலுவலகத்திற்கு எச்சரிக்கை செய்திருந்தார். அவரது முறையீட்டிற்கு பதிலும் கிடைத்தது. இந்தியாவின் தேசிய நலன் என்பது பொதுமக்களின் நலன் தான் என்று மோடி அரசாங்கம் கருதாயிருக்குமானால் நீரவ் மோடி தப்பியிருக்க முடியாது.

மோடி அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கினால் 2-ஜி குற்றம் சாட்டப்பட்டவர்கள்,  அனைவரும் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதரங்களுக்காக ஏழு ஆண்டுகள் வீணாகிவிட்டதாக நீதியரசர் கடுமையாக கண்டனம் செய்திருந்தார். இன்றும் தன்னை ‘சௌகிதார்’ என்று அழைத்து கொள்ளும் நெஞ்சுரம் மோடிக்கு இருப்பது தான் முரண்நகை.

கண்களை இருக்க மூடிக்கொண்ட காவல்காரார்

இந்தியாவின் வெளிப்படைத்தன்மைக்கு சிறப்பான பங்களிப்பை தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI Act) செய்திருக்கிறது. அதன் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கும் ஒரு கல்லை கூட மோடி இதுவரை புடுங்கவில்லை. மோடி அலுவலகம் பொதுவாக சொல்வதானால் மோடி அரசாங்கம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பகைமையுடனே பார்க்கிறது என்பதை என்னுடைய தனிப்பட்ட அனுபவம் சொல்கிறது. 2015-ம் ஆண்டில் தலைமை அமைச்சரை சந்திக்க யாரெல்லாம் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள் மேலும் அப்படி சந்திப்பதற்கு என்ன விதிகள் இருக்கின்றன என்று நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் தலைமை அமைச்சர் அலுவலகம் என்னுடைய கோரிக்கையை பரிகாசிக்கத்தக்க காரணங்களுக்காக நிராகரித்திருந்தது.

மேலும் தலைமை அமைச்சர் அலுவலகத்திற்கும் இன்னும் பிற அமைச்சர்கள் அலுவலகங்களுக்கும் நான் அனுப்பிய பல்வேறு கோரிக்கைகள் நியாயமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டன. இது மட்டுமல்ல குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக ஊழல் தடுப்பு சட்டத்தையும் மோடி அரசாங்கம் திருத்தியிருக்கிறது.

படிக்க:
உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?
♦ பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?

பதான்கோட், உரி மற்றும் புல்வாமா தாக்குதல்கள் எப்படி நடந்தன என்று கேட்பதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறதா? கொஞ்சம் எச்சரிக்கையுடன் நம்முடைய சுய தம்பட்ட சௌகிதார் இருந்திருந்தால் உரி தாக்குதலுக்கு பிறகான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தேவையிருந்திருக்காது.

சௌகிதாரிடம் கேட்பதற்கு ஏரளமான கேள்விகள் நம்மிடம் இருக்கின்றன. அதே நேரத்தில் அவரது இயலாமை குறித்த எண்ணிறந்த கதைகளும் நம் முன்னே இருக்கின்றன. ஆனால் இங்கே மிகவும் கேலிக்கூத்தானது என்னவென்றால் சௌகிதாரோடு சேர்ந்து அவரது கறை படிந்த சகாக்களும் கட்சி நபர்களும் கூட சௌகிதார் என்று சுய சுயதம்பட்டம் அடித்து கொண்டதுதான்.

சான்றாக திரிணாமுல் காங்கிரசில் இருந்து பா.ஜ.க-வில் சேர்ந்த முகுல் ராயை எடுத்துக் கொள்வோம். அவர் பிரபலமான சாரதா ஊழலில் முதன்மை குற்றவாளி. மேலும் சமீபத்தில் TMC கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கொலையில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவரும் தன்னை சௌகிதார் என்று ட்விட்டரில் சொல்லிக்கொள்கிறார். மேலும் பாலியல் குற்றங்களுக்காக சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜெ அக்பரும் கூட தம்மை சௌகிதார் என்றே அழைத்துக்கொள்கிறார் – காவலாளிகள் என்று சுய தம்மட்டம் அடித்து கொள்பவர்களின் யோக்கியதையை இவர்களின் கதைகள் நமக்கு பறைசாற்றுகின்றன அல்லவா.


கட்டுரையாளர் : Rohit Kumar
தமிழாக்கம் : சுகுமார்

நன்றி: The Wire


இதையும் பாருங்க :
எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா?
அதுபோல் நீங்களும் பாதுகாப்பானவர்களா?

சம்பவம் 1

ஷாணி, 16 வயது பள்ளி செல்லும் மாணவி,  மிகவும் துடிதுடிப்பானவள், கெட்டிக்காரி. அதுபோல் பேரழகி.  பள்ளி செல்லும் இளவல்களின் மங்காத பேசு பொருள். பணக்கார வீட்டு செல்லப் பிள்ளை. பெற்றோர் இருவரும் மிகப்பெரும் நிறுவனங்களில் 6 இலக்கங்களில் சம்பளம் வாங்குகிற பெரும்புள்ளிகள். இதனால் அவள்  போகின்ற வருகின்ற வழிகளெல்லாம் வாலிபக் கூட்டம். இந்தத் தொல்லைகளை தவிர்ப்பதற்காக அவள் பயணிப்பதற்கென்றே ஒரு சொகுசு கார். அதற்கென்று  தனியான ஒரு நம்பிக்கையான,  மிக நம்பிக்கையான டிரைவர்.

இப்படியாக மிகவும் பாதுகாப்பான சூழலில் வளர்ந்து வந்த அந்தப் பெண்பிள்ளை  ஒருநாள் வயிற்று  வலியால் அவதிப்படுகிறாள்.  உடனே  மருத்துவமனைக்கு எடுத்து வரப்படுகிறாள். வைத்திய பரிசோதனைகளின் போது  அவளது வயிற்றில் இரண்டு மாத சிசு வளர்வது கண்டுபிடிக்கப்படுகின்றது. இந்த செய்தியை கேள்வியுற்ற பெற்றோர்கள் இருவருமே மயங்கி விழுந்து விடுகின்றனர்.  கதை  போல் இருந்தாலும் இது உண்மை. கடைசியிலே அந்த குழந்தைக்கு காரணம் அவள் அங்கிள்,  அங்கிள் என்று  அன்போடு அழைக்கின்ற, பெற்றவர்களாலும் மற்றவர்களாலும் நம்பிக்கையானவர், மிக நம்பிக்கையானவர் என முத்திரை குத்தப்பட்ட வாகன சாரதிதான் (Driver) என்பது தெளிவாகின்றது.

சம்பவம் 2

ஐந்து வயதுள்ள சின்மயி, மிகவும் அமைதியான சுபாவம் உள்ளவள். எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் மிகுந்த  ஆரோக்கியமுடன் வளர்ந்து வருகின்ற  ஓர் சிறுமி. ஒரு சில வாரங்களாக அவளின் நடத்தையில்  பல்வேறுபட்ட மாற்றங்கள். வழமை போல் அமைதியாக இல்லை. எடுத்ததற்கெல்லாம் அழுகிறாள், முரண்டுபிடிக்கிறாள்,  ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது, முறையாக  தூங்குவது கிடையாது. முன்னரைப் போல் சிரித்த முகம்  இல்லாமல் சோர்ந்து போய் விடுகிறாள்.

இப்படி சில வாரங்களாக இருந்தவள் ஒருநாள் திடீர் திடீரென காரணமில்லாமல் சிரிப்பதும் அழுவதும் இடை இடையே  தனியே கதைப்பதுமாக, மொத்தமாக ஒரு பைத்தியத்தின் உருவமாக மாறி விடுகிறாள். இப்பொழுது வைத்தியத்திற்காக அனுமதிக்கப்படுகிறாள்.  பல்வேறு  பரிசோதனைகளை செய்துகொண்டு போகின்றபோது, அவள் வீட்டிற்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதற்காக வருகின்ற ஐம்பது வயது ஆசிரியரினால் முந்தைய ஒரு மாதமாக தொடர் பாலியல்ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டது உறுதிப்படுத்தப்படுகின்றது. இதனால்  ஏற்பட்ட மனப் பிறழ்வே இவ்வாறான நிலைமைக்குக் காரணம்  எனவும்  கண்டறியப்படுகிறது.

சம்பவம் 3

முராசில் 13 வயது பள்ளி மாணவன். அடிக்கடி வயிற்று நோவு, மலச்சிக்கல் மற்றும் சிறுநீரில் கிருமித் தொற்று என வைத்தியத்திற்காக வருகின்ற ஒரு பையன்.  தொடர்ச்சியான பரிசோதனைகளின் போது பெரிதாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் கடைசியாக ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக ஒரு வைத்திய பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவனுக்கு சிபிலிசு எனும் பாலியல் நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்படுகின்றது.  அதற்கு காரணம் அவனது ஆசிரியர்தான்  என்பதும்  இறுதியிலேயே தெரியவருகிறது.

(மூன்று சம்வவங்களில் வரும் பெயர்கள் மட்டுமே கற்பனை என்பதை கருத்தில் கொள்க)

இவைகளெல்லாம் கடந்த இருவாரங்களில் நான் சந்தித்த  பல்வேறுபட்ட பாலியல் துஷ்பிரயோகங்களின் ஆழ அகலத்தை தெளிவுபடுத்துகின்ற  ஒரு குறுக்கு வெட்டுமுகம் மட்டுமே.

பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக மருத்துவ பீடத்தில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில் சட்ட மருத்துவத்திலும், சிறுவர் மருத்துவத்திலும்   படித்தபோது இவைகள் எல்லாம் இங்கே நடக்கின்றதா இதுவெல்லாம் சாத்தியமா என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். இவைகள் எல்லாம் எங்கோ உலகின் ஒரு மூலையில் வெள்ளைக்காரர்களால் செய்யப்படும் அல்லது கதைகளில் மட்டுமே சாத்தியமாயிருக்கின்ற செயல்கள் என்று  உறுதியாக நம்பியவர்களின் தலைவன்.

அதன்பின் பயிற்சி வைத்தியராக மற்றும்  சிறு பிள்ளை வைத்தியராக, பயிற்சி வைத்திய நிபுணராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றிய காலப்பகுதிகளில் நான் கண்டு, கேட்டு பெற்ற அனுபவங்களின் மூலம் இந்த எண்ணம் தலைகீழாக மாறிவிட்டுருக்கின்றது.  இன்னும் சொல்லப்போனால் நான்  கேட்பவைகளை,  பார்ப்பவைகளை எல்லாம் நீங்கள்  அறிவீர்கள்  என்றால்  குறைவாகவே சிரிப்பீர்கள் அதிகம்  அழுவீர்கள்.

பொதுவாக சிறுவர் துஷ்பிரயோகமானது பல்வேறு வடிவங்களில் நடைபெறுகிறது. இது உடலியல் ரீதியான துஷ்பிரயோகம் (Physical abuse), உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் (Psychological abuse), பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் (Sexual abuse), உணர்வு ரீதியான துஷ்பிரயோகம் (Emotional abuse) , புறக்கணிப்பு ரீதியிலான துஷ்பிரயோகம் (Neglect) எனப் பல்வேறு கோணங்களில் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது. இதில்  பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்திருப்பது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவுள்ளது.

மத குருமாரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுவர்கள், ஆசிரியர்களினால், ஆலோசகர்களினால் பலாத்காரங்களுக்கு உள்ளாகும் மாணவர்கள், வைத்தியரினால் பாலியல் இம்சைக்கு உள்ளாகும் நோயாளிச் சிறுவர்கள், தந்தையினால் வன்புணர்வுக்கு ஆளாகும் மகள், அண்ணனினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் தங்கை, மாமாவினால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மருமகள் என்று துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் சம்பவங்கள் தினமும் நடந்தேறுவதை நீங்களும்  ஊடகச் செய்திகள் மூலம் அறிந்துதான் இருப்பீர்கள்.

ஆனால் மார்க்கம் பேசுபவர்களாலும், மார்க்கம் போதிக்க பாடசாலைகள் நடத்துபவர்களாலும், இந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடருவது மட்டுமல்லாமல்  சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கவும், உண்மையை மறைக்கவும், இந்த இயக்க பக்தர்களும்,  நிர்வாகிகளும், அமைப்புகளும், ஏன்  ஊர் பெரியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முண்டியிடுவதை பார்க்கும்போது மட்டுமே இந்த சிறுவர் துஷ்பிரயோகம் வியாபித்திருக்கும் விஸ்தீரணங்களை (பரப்புகளை) புரிந்து கொள்ள முடிகிறது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெற காரணமென்ன?, துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?, எத்தகையவர்களால் துஷ்பிரயோகம் ஏற்படுகிறது? துஷ்பிரயோகச் செயற்பாடுகளிலிருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம்? அதற்கான முறையான பொறிமுறைகள் எவை ? ஆகியவை உள்ளிட்ட கேள்விகளுக்கான பூரண அறிவைப் பெறுவது மிக  அவசியமாகும். இவை குறித்த முறையான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கிராமம் மற்றும் நகரந்தோறும் முன்னெடுக்கப்படுவது முக்கியமாகும். இவைகள் எல்லாவற்றையும்  இப்பத்தியில் எழுவது நடைமுறை சாத்தியமற்றது  எனினும்  ஒரே ஒரு அடிப்படையை புரிந்து கொண்டால் இவைகளை தடுத்துக் கொள்ள முடியும்.

பாலியல் விடயத்தில் யாரையும் எடுத்த எடுப்பில் நம்பிவிடலாகாது என்பதுதான் அந்த  அடிப்படை. ஒருவர் எவ்வளவு நல்லவராகவும் நம்பிக்கையானவராகவும் இருக்கலாம் அது போல் உங்களுக்கு தெரியாத நிலையில் அவர் கெட்டவராகவும் இருக்கலாம். நல்லது,  கெட்டது  என்ற  இரண்டு குணங்களும் ஒரே மனிதனிடம் ஒரே நேரத்தில் இருக்கலாம்.  யாரும் 100% நல்லவர் கிடையாது.  சந்தர்ப்பம், சூழல்  என்பவைகள் தான் நல்லவர், கெட்டவர் என்பதைத் தீர்மானிக்கிறது.

சிம்பிளாக சொல்வதென்றால் ஒருவரின் நெட் ப்ரவுசிங் ஹிஸ்ட்ரி (internet browsing history) இன்னும் ஒருவருக்குத் தெரியாத வரைக்கும் அவர் நல்லவர்தான் என்பது இன்றைய உலகில் உள்ள நல்ல மனிதனுக்கான அளவுகோலாக இருக்கிறது. இந்த ஒன்றை புரிந்து கொண்டால் பெரும்பாலான சிறுவர் துஷ்பிரயோகங்களிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும். இன்னும் ஒரு படி மேலே சென்றால், இவர்கள் நமது உறவினர்கள், நன்றாக நம்முடன் பழகுபவர்கள், சாதுவான மனிதர்கள் என்று சொல்லும் எல்லா நல்ல மனிதர்கள் மீதும், அயலார், ரியுசன் மாஸ்டர் (Tuition Master), ஓதிக்கொடுக்கும் ஹஸரத், சமய குருக்கள் என  இப்படியாக ஆள் வேறுபாடு  இன்றி  எல்லோர் மீதும் எமது கவனக் குவிப்பு  அவசியமாகின்றது.

அதே போன்று தன் உறவுக்காரர், அல்லது அயல் வீட்டார், அல்லது நண்பர்கள்  என எவராவது கொஞ்சம் மேலதிகமாக, சந்தேகப்படும்படியாக பிள்ளைகளுடன்  குலாவும் போது, தூக்கி அணைத்து முத்தமிடும் போது, விழிப்பாகச் செயல்படுதல் எதிர்காலத்தில் ஏற்படும் இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க உதவியாக இருக்கும்.

பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறுவர்களை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்கான  உபாயங்களாக இருக்கின்றன. உறவினர் வீடு, அயலவர் வீடு, நண்பர் வீடு என அழைப்பிற்கோ அல்லது தமது தேவையின் நிமித்தமோ, ஆண் பிள்ளையையோ அல்லது பெண் பிள்ளையையோ இரவை கழிப்பதற்காக அல்லது உறங்கச் செல்வதற்காக எக்காரணம் கண்டும் அனுமதிக்காமல் இருப்பதே உசிதமானது. அதேசமயம் வீட்டில் இடம்பெறும் விசேட வைபவங்களின் போது அல்லது   பிறவீடுகளில்  நடக்கும் வைபவங்களின் போது  தம் பிள்ளைகள்  மீது அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

பிள்ளைகளுக்கு  பிறர் வழங்கும் அன்பளிப்புகள் (டொபி, சொக்லட், விளையாட்டுப் பொருட்கள்) மீது கணிப்பாக இருத்தல் வேண்டும் அதே போன்று  இவற்றைப் பெற்றோரின் அனுமதி இன்றி பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற கண்டிப்புடனும் விளக்கத்துடனும் குழந்தைகளை  வளர்க்க வேண்டும். அதற்கு மேலதிகமாக குழந்தைகளுக்கு எங்கு, யாரால், என்ன நிகழ்ந்தாலும் முதலாவது பெற்றோரிடம் விஷேடமாக தாயிடம் கூறக் கூடிய வகையில் பெற்றோர் குறிப்பாக தாய் – பிள்ளை உறவு நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஏற்கெனவே நன்றாக பழகிய உறவினர், நண்பர், அயலார் தம் வீட்டிற்கு வந்ததும் அவர்களைக் காணப் பிடிக்காது ஒளிந்து கொண்டால் அல்லது பயந்தால், அல்லது அழுதால் அவர்களின் சிறு விளையாட்டுப் பேச்சுக்கும் ஆத்திரம் கொண்டால் அதன் அர்த்தம் அவர்கள் மூலம் விரும்பாததொன்றை பிள்ளை சந்தித்துள்ளது, பிள்ளை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள  கூடியவர்களாக பெற்றோர் இருக்க  வேண்டும்.

படிக்க:
ஆதிக்க சாதிவெறி – பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் | முகிலன் கேலிச்சித்திரங்கள்
பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

ஆக மொத்தத்தில் எந்தப் பொந்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது  என்ற கிராமிய  தத்துவத்தை   தெரிந்து கொண்டால் குறைந்த பட்சம் அவதானமாகவாவது  இருப்பதுதான் துஷ்பிரயோகங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான உரிய வழியாக தென்படுகிறது.  இது கு‌றி‌த்த அறிவைப் பெற்று அதற்கேற்ப  செயற்படுவது காலத்தின் தேவையாகவும் உள்ளது. அவ்வாறு செயற்படும் போதுதான், வளரும்  பிள்ளைகளை இவ்வாறான ஆபத்துகளில் இருந்து  பாதுகாக்க முடியும்.

இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா என்று அது போல்  இப்பொழுது சொல்லுங்கள் நீங்களும் பாதுகாப்பானவர்களா என்று…

மருத்துவர் பி.எம். அர்சத் அகமத், MBBS(RUH) MD PEAD (COL),
Senior Registrar in Peadiatrics,
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka

மார்க்சின் தர்க்கவியல் என்ன ? | மார்க்ஸ் பிறந்தார் – 26

மார்க்ஸ் பிறந்தார் – 26
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

11. “மூலதனத்தின்தத்துவஞானம்

“மார்க்ஸ் தனக்குப் பின்னால் ஒரு தர்க்கவியலை (கொட்டை எழுத்துக்களில்) விட்டுச் செல்லவில்லை என்றாலும் அவர் மூலதனத்தின் தர்க்கவியலை விட்டுச் சென்றிருக்கிறார்… மார்க்ஸ் மூலதனத்தில் ஒரே விஞ்ஞானத்துக்கு தர்க்கவியலை, இயக்கவியலை மற்றும் ஹெகலிடம் மதிப்புள்ளதாக இருந்த ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு அதை மேலும் வளர்த்துச் சென்ற பொருள் முதல்வாதத்தின் அறிவுத் தத்துவத்தை (மூன்று சொற்கள் அவசியமல்ல, அது ஒரே பொருள் குறித்ததே) கையாண்டார்.” வி. இ. லெனின்(1)

மூலதனத்தின் தத்துவஞானம் என்ற தலைப்பு விசித்திரமான சொற்றொடராகத் தோன்றலாம். மூலதனம் முதலாளித்துவச் சமூகத்தில் பொருளாதார உறவுகளைப் பற்றிய ஆராய்ச்சி என்பது நமக்குத் தெரியும். சில மேற்கத்திய அறிஞர்கள் மூலதனத்தில் எந்தத் தத்துவஞானமும் இல்லை, மார்க்சும் ஒரு தத்துவஞானி அல்ல என்று மறுப்புரைக்கிறார்கள். ஒரு தத்துவஞானி என்பவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களின் அமைப்பு குறித்து விசேஷமான தத்துவஞான நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

மார்க்ஸ் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதவில்லை. அவர் எந்தவொரு இடத்திலும் தத்துவஞானக் “கோட்பாட்டை” விசேஷமாக விளக்கவில்லை. எனினும் அவரே தலைசிறந்த தத்துவஞானியாக இருக்கிறார். மார்க்சின் தத்துவஞானம் – இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் – அவர் எழுதிய எல்லா நூல்களிலும் விளக்கப்படுகிறது. அத்தத்துவ ஞானத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய எந்த நூலைப் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவருடைய வாழ்க்கையின் முக்கியமான சாதனையாகிய மூலதனத்தைப் படியுங்கள் என்பதே சரியான பதிலாகும்.

சென்ற நூற்றாண்டின் கடைசியில் ருஷ்ய மிதவாதப் பிரமுகரும் சமூகவியலாளருமான நி. மிஹயிலோவ்ஸ்கிக்கு லெனின் தந்த பதில் இதுவே. மிஹயிலோவ்ஸ்கி மார்க்சியத்தை மறுத்து எழுதிய கட்டுரைகளில் ஒன்றில் இக்கேள்வியைக் கேட்டிருந்தார்: “மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை எந்த நூலில் எடுத்துக் கூறியிருக்கிறார்?” இக்கேள்விக்கு அவரே உடனடியாகக் கண்டுபிடிப்பவரின் சுயதிருப்தியோடு, அப்படி எந்த நூலையும் மார்க்ஸ் எழுதவில்லை, மார்க்சிய இலக்கியம் முழுவதிலுமே அப்படி எந்த நூலும் இல்லை என்று பதிலளித்தார்.

“மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை விளக்கிக் கூறாத நூல் ஒன்றுண்டா?” என்று லெனின் மிகச் சரியாக மறுப்புத் தெரிவித்தார். மார்க்ஸ் தனக்கு முந்திய சமூகவியலிலிருந்து, அதாவது சமூகத்தைப் பற்றிய போதனைகள் மற்றும் தத்துவங்களிலிருந்து அடிப்படையாகவே வித்தியாசமான ஒன்றைப் படைத்த காரணத்தினால் முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் மார்க்சிடம் சமூக வளர்ச்சி பற்றிய தத்துவஞானத்தைக் காணத் தவறுகிறார்கள் என்று லெனின் எடுத்துக் காட்டினார்.(2)

அக்காலத்திய முதலாளித்துவ அறிவுஜீவிகளின் வட்டாரங்களில் கெளரவம் நிறைந்த, மரியாதைக்குரிய சமூகவியலாளர் என்பவர், பொதுவாக சமூகம் என்றால் என்ன, அதன் நோக்கமும் சாரமும் எவை, “மனித இயல்புக்குப்” பொருந்துகின்ற சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பவற்றைப் போன்ற “கருத்தாழமிக்க பிரச்சினைகளை” விவாதித்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இச்சமூகவியலாளர்கள் இன்றைய அமைப்பு இயற்கைக்கு முரணானது, “மனித இயல்புக்கும்” நீதிக் கோட்பாடுகளுக்கும் பொருந்தாமலிருக்கிறது என்ற உண்மையைப் பற்றித் தங்களது மனப்பூர்வமான ஆத்திரத்தை வெளியிட்டு தார்மிக செல்வாக்கைப் பெற்று அநேகமாகப் புரட்சிக்காரர்களாகக் கூடத் தோன்றியிருக்கலாம்.

மார்க்சுக்கு முந்திய சமூகவியலாளர்கள் சமூகத்தின் நிகழ்வுப் போக்குகளை ஆழமாகப் பார்க்கத் தவறியதுடன் அவற்றை அந்தக் கணத்தில் நடைபெறும் சம்பவங்களின் ஒளியில் பார்த்தார்கள். சமூக உலகம் அரசர்கள், சக்கரவர்த்திகளின் முடிவுகளினால் இயக்கப்படுகிறது, சம்பவங்களின் வளர்ச்சி அவர்களுடைய சித்தத்தையும் பொதுமக்களிடம் தாக்கம் செலுத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் முற்றிலும் சார்ந்திருக்கிறது என்று நினைத்தார்கள்.

படிக்க:
போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
♦ நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?

இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டால் வரலாறு என்பது வலிமைமிக்க தலைவர்களின் உணர்ச்சிகளின் போராட்டத்தைச் சார்ந்திருக்கின்ற சம்பவங்கள், நிகழ்வுப் போக்குகள் மற்றும் மெய்விவரங்களின் கதம்பக் குவியலாகத் தோன்றும்; இக்கதம்பக் குவியலில் முக்கியமான நிகழ்வுகளை முக்கியத்துவமில்லாத நிகழ்வுகளிலிருந்து, அதிகச் சிறப்பானவற்றை குறைவான சிறப்புடையவற்றிலிருந்து ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியாது; இதில் எவ்விதமான விதிகளையும் பார்க்க முடியாது, சமூக வளர்ச்சிக்குப் பின்னே இருக்கின்ற பொறியமைவைப் புரிந்து கொள்ள முடியாது, அல்லது அவற்றின் மீது தாக்கம் செலுத்துவது எப்படி என்பதையும் அறிய முடியாது.

இவையனைத்தும் சமூகவியலில் அகநிலைவாதம், கருத்துமுதல்வாதம். பண்டைக்காலத் தத்துவஞானத்தில் இயற்கையைப் பற்றிய கருத்துக்களில் கருத்துமுதல்வாதம் தொடங்கிய வினாடியிலிருந்தே தீவிரமான எதிர்ப்பு (அதாவது பொருள்முதல்வாதிகள்) இருந்தது என்றால் சமூகத்தைப் பற்றிய கருத்துக்களில் கருத்து முதல்வாதம் மார்க்ஸ் காலம் வரையிலும் ஆட்சி செலுத்தியது.

மார்க்ஸ்தான் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பொருள்முதல்வாதக் கருத்தை முதலில் கையாண்டவர். இது அவருடைய மேதாவிலாசத்தைக் காட்டுகிறது என்றார் லெனின். உணர்ச்சிகளும் கருத்துக்களும் நலன்களும் காரணமல்ல, அவை விளைவே, மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற மிகவும் ஆழமான காரணத்தின் விளைவு என்று மார்க்ஸ் கண்டார். எந்த ஒரு மனிதனுடைய ஏதாவதொரு கருத்து அல்லது நோக்கம் அவனுடைய சமூக வாழ்க்கையினால், சமூகத்தில் அவனுடைய நிலைமையினால் நிர்ணயிக்கப்படுகிறது.

கருத்துக்கள் முதிர்ச்சியடைந்த சமூகத் தேவைகளைச் சந்திக்க முடியுமானால், அவை சமூகத்தின் பெரும்பான்மையினரது நலன்களை, முதலாவதாகவும் முதன்மையாகவும் பொருளாயத நலன்களை வெளியிட முடியுமானால், அவை பெருந்திரளான மக்களை ஆட்கொண்டால் அப்பொழுது அவை சமூக வளர்ச்சியில் தாக்கம் செலுத்த முடியும்.

உதாரணமாக, பிரெஞ்சு முடியாட்சி 18-ம் நூற்றாண்டின் கடைசியில் வீழ்ச்சியடைந்தது ஏன்? பதினாறாம் லுயீ இந்த அல்லது அந்தத் தவறைச் செய்தது (அதுவும் கூட முக்கியமாக இருந்தபோதிலும்) அதற்குக் காரணமல்ல; எதேச்சாதிகார ஆட்சியும் நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளும் நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன, முதலாளித்துவம் மற்றும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தன, அந்த வர்க்கம் ஏற்கெனவே பொருளாதார சக்தியைக் கொண்டிருந்தது, ஆனால் அரசியல் அதிகாரம் இல்லாமலிருந்தது என்பவை அதற்குக் காரணமாகும்.

மனித உணர்விலிருந்து சுதந்திரமான முறையில் வளர்ச்சியடைகின்ற சமூக உறவுகள் கடைசியில் அவ்வக்காலத்திய சித்தாந்த, அரசியல், சட்டவியல் அமைப்புகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாகப் பார்க்குங்கால் கருத்துக்களின் வளர்ச்சி சமூக-பொருளாதார நிகழ்வுப் போக்குகளின் வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறதே தவிர அதன் எதிர்மறையை அல்ல. அப்படியானால் சமூக உறவுகள் பொருளாயதமானவை, புறநிலையானவை என்பது இதன் பொருளாகும்! மார்க்சுக்கு முந்திய சிந்தனையாளர்கள் அடையத் தவறிய முடிவு இதுவே.

ஆனால் சமூக உறவுகள் மிகவும் பலவிதமாக இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தோன்றுபவை; அவை உற்பத்தி உறவுகள் எனப்படும். அவை முதலாவதாகவும் முதன்மையாகவும் உற்பத்தி செய்பவருக்கும் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளருக்கும், அதாவது அடிமைக்கும் அடிமை உடைமையாளருக்கும், பண்னையடிமைக்கும் நிலப்பிரபுத்துவ நிலவுடைமையாளருக்கும், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் உள்ள உறவுகள்.

இந்த மூன்று உறவுகளும் சுரண்டல் உறவுகளின் வடிவங்கள். இவற்றுக்கு இடையிலுள்ள அடிப்படையான வேறுபாட்டை எளிதில் காண முடியும். ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவு என்ற முறையில் ஒன்று மற்றொன்றாக இயற்கையாக வளர்ச்சியடைந்த மூன்று சமூக-பொருளாதார அமைப்புகளையும் நாம் எடுத்துக் கொள்வோம்.

சமூக வளர்ச்சி இயற்கையான வரலாற்று நிகழ்வுப் போக்கு, அது மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற ஆனால் அறியப்படக் கூடிய விதிகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று மார்க்ஸ் கண்டார்.

இக்கருத்துக்கள் அனைத்தையும் மார்க்சிய மூலவர்கள் மிக முந்திய காலமான 1840-கள் மற்றும் 1850-களிலேயே கூறினார்கள். ஆனால் மூலதனத்துக்கு முன்பு இவை விஞ்ஞான ஆதாரத்தைக் கொண்டிருந்தாலும் வெறும் கருதுகோள் என்ற அளவிலேதான் இருந்தன என்று லெனின் கூறினார். “மூலதனம் எழுதப்பட்ட பிறகு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வெறும் கருதுகோளாக இனியும் இல்லை, அது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மையாயிற்று;”(3) சமூகவியல் விஞ்ஞானமாக மாறியது.

மூலதனம் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை உருவாக்குவதிலும் அதை நிறுவுவதிலும் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது ஏன்? ஏனென்றால் மார்க்ஸ் சமூகம் எப்படி அமைக்கப்படுகிறது என்ற ஊக முறையான பொது விவாதங்களுடன் தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை, அவர் முதலாளித்துவ அமைப்பை உதாரணமாகக் கொண்டு அதன் செயல்முறை மற்றும் வளர்ச்சிப் பொறியமைவை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தார். ஆகவே வாசகர் இந்த அமைப்பு முழுவதையும் அதன் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற பல்தொகுதியான இயக்கவியல், முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்கங்களின் முரணியல்பு, தொழிலாளியைச் சுரண்டுவதற்கு முதலாளியின் உரிமையைப் பாதுகாக்கின்ற அரசியல், சட்டவியல் மற்றும் சித்தாந்த அமைப்புகளையும் ஒரு வாழ்கின்ற தொகுதியாகக் காண்கிறார்.

நிலப்பிரபுத்துவம் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவத்துக்கு வழி விட்டதைப் போலப் பிந்தியதும் அதன் வளர்ச்சியின் புறநிலையான விதிகளின் விளைவாகத் தன்னுடைய சொந்த அழிவை நோக்கி, ஒரு வர்க்கமில்லாத சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை மார்க்ஸ் மறுக்க முடியாத தர்க்கவியலின் மூலம் நிரூபித்தார்.

“ஏகபோக மூலதனம், அதனுடனும் அதன் கீழும் தோன்றியதும் வளர்ச்சியடைந்ததுமான உற்பத்தி முறைக்குத் தளையாக மாறுகிறது. உற்பத்திச் சாதனங்களை ஒருமுனைப்படுத்துவதும் உழைப்பு சமூகமயமாதலும் எந்த அளவுக்கு முனைப்படைகின்றன என்றால் அவை முதலாளித்துவ மேலோட்டுக்கு முற்றிலும் முரணானதாகின்றன. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமைக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது, உடைமை பறித்தோர் உடைமை பறிக்கப்படுகின்றனர்.”(4)

படிக்க:
தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்
♦ மூலதனத்தின் தத்துவஞானம் !

கம்யூனிஸ்ட் சமூகம் கனவுகாண்பவர்களின் கற்பனாவாத இலட்சியமல்ல, பொருளாதார வாழ்க்கையின் மொத்த இயக்கமுமே அதை நோக்கிச் செலுத்தப்படுகிறது என்பதைச் சந்தேகமில்லாதபடி மார்க்ஸ் விளக்குகிறார். மூலதனம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியலின் வளர்ச்சியை, எல்லா உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைக் கட்டுப்பாடில்லாமல் துரிதப்படுத்துவதன் மூலம் ஒரு புதிய சமூகத்தின், ஒரு புதிய சமூக-பொருளாதார அமைப்பின் பொருளாயத முன்நிபந்தனைகளைத் தயாரிக்கிறது. மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினரைச் சுரண்டப்படுகின்ற கூலித் தொழிலாளர்களாக மாற்றி, பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களை ஒன்றுசேர்த்து, பழைய சமூகத்தின் அடிமை விலங்குகளை நொறுக்கக் கூடிய, அதைப் புனரமைப்பதைத் தொடங்கக் கூடிய புரட்சிகர சக்தியை மூலதனம் தயாரிக்கிறது.

உழைப்பாளர்கள் அனைத்துப் பொருளாயத மற்றும் ஆன்மிக செல்வத்துக்கு உடைமையாளர்களாக இருக்கின்ற, மனிதன் சமூக உற்பத்திக்குச் சாதனமாக இல்லாமல் அவனே மிக உயர்ந்த மதிப்பாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்ற, ஒவ்வொருவருடைய சுதந்திரமான, பல்துறையான வளர்ச்சி எல்லோருடைய சுதந்திரமான வளர்ச்சிக்கும் நிபந்தனையாக இருக்கின்ற சமூகமே கம்யூனிஸ்ட் சமூகமாகும்.

மார்க்ஸ் இந்தப் புதிய சமூகத்தின் உருவரையை கற்பனாவாதச் சுவடு இல்லாமல், எதிர்காலத்தில் “பொற்காலம்” என்ற இலட்சியச் சித்திரத்தை மனம் போனபடி வரைவதற்கு மிகச் சிறிதளவு கூட முயற்சி செய்யாமல் தயாரித்தார். கம்யூனிசத்தை வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாதபடிச் செய்கின்ற போக்குகளையும் விதிகளையும் அவர் தர்க்கவியல் ஆராய்ச்சியின் வன்மையோடு வெளிப்படுத்துகிறார், பாட்டாளி வர்க்கப் புரட்சி, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் புதிய சமூகத்துக்குச் செல்கின்ற உண்மையான வழியை எடுத்துக்காட்டுகிறார். இப்படி முதலாளித்துவ உற்பத்தியைப் பற்றிக் கடுமுயற்சி கொண்ட பொருளாதார ஆராய்ச்சியின் போக்கில் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளைத் தயாரிக்கிறார். அது போல மூலதனம் மார்க்சியத் தத்துவஞானத்தின் உட்கருவான இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை உள்ளடக்கியிருக்கிறது.

இயக்கவியல்-பொருள்முதல்வாத முறை விசேஷமான சொற்களில் வர்ணிக்கப்படவில்லை, அது செய்முறையில், முதலாளித்துவச் சமூகத்தின் பொருளாதாரத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்குச் செய்முறையில் கையாளப்படுவதன் மூலம் தரப்படுகிறது. மார்க்ஸ் இந்த முறையை எப்படி உபயோகித்தார், எப்படிக் கையாண்டார் என்பதை மூலதனத்தை ஆராய்வதன் மூலம் அறிய முடியும். ஆகவே சமூகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்த இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை ஒருவர் எப்படிக் கையாள முடியும், எப்படிக் கையாள வேண்டும், தத்துவச் சிந்தனையில் இந்த வன்மையான கருவியைக் கையாளுவதில் எப்படி முழுத் திறமையைப் பெற முடியும் என்பனவற்றை மூலதனத்தின் வாசகர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

குறிப்புகள்:

(1)V.I.Lenin, collected works, Vol. 38, p. 319.
(2)V.I.Lenin, collected works, Vol. 1, p. 143.
(3)Ibid., p.142.
(4)Karl marx, capital, vol. 1, Moscow, 1974, p. 715.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய 25 பாகங்களை படிக்க:

மார்க்ஸ் பிறந்தார் வரலாற்றுத் தொடர்

முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை வாழ்த்தி ஆற்றிய உரை !

0

லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 5

முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை
வாழ்த்தி ஆற்றிய உரை (1919 மே, 6)

வி.இ.லெனின்
தோழர்களே, முதியோர் கல்வி பற்றிய காங்கிரசுக்கு எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு முன்னால் பேசிய தோழர் லுனாசார்ஸ்கி போன்று இந்த விஷயத்தில் ஆழமாக ஆராய்ச்சி செய்து நான் உரையாற்ற வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கமாட்டீர்கள். அவர் இந்த விஷயத்தை நன்கறிந்தவர்; அதோடு சிறப்பாக ஆராய்ந்தும் இருக்கிறார். என்னைப் பொருத்தவரை ஒருசில வாழ்த்துரைகளையும், உங்கள் பணி சம்பந்தமாக மக்கள் கமிசார்களின் கவுன்சிலில் விவாதித்தபோது எழுந்த சிந்தனைகளையும், கருத்துகளையும் எடுத்துக்கூறுவதுடன் அமைகிறேன்.

முதியோர் கல்வித்துறையில் கடந்த 18 மாதங்களாக ஏற்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றம் சோவியத்தின் செயல்பாடுகள் வேறு எதிலும் ஏற்பட்டதில்லை என்பது நிச்சயம். இந்தத் துறையில் நீங்களும் நானும் பணியாற்றுவது, வேறு துறைகளைவிட எளிதாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் பணியில் நாம் பழைய தடைகளையும், பழைய முட்டுக்கட்டைகளையும் அகற்றிவிட்டோம். அறிவு வேண்டும், இலவசக் கல்வியும், சுதந்திரமான வளர்ச்சியும் வேண்டும் என்று பெரும்பாலான தொழிலாளர்களும், விவசாயிகளும் கோருகிறார்கள். அவர்களின் மிகப்பெரும் கோரிக்கைகளை நிறைவு செய்ய சிலபல செய்வது எளிதாக உள்ளது. ஏனெனில் பொதுமக்களின் வலிமைமிக்க நிர்பந்தத்தால் அவர்களின் பாதையில் குறுக்கே நின்ற புற முட்டுக்கட்டைகளை எளிதாக அகற்ற முடிகிறது.

படிக்க :
♦ பேராசிரியர் சாய்பாபா …!
மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

நம்மை ஏகாதிபத்தியப் போருடன் பிணைத்து அந்தப் போரின் விளைவாக ஏற்பட்ட அளப்பரிய சுமையைத் தாங்குமாறு ரஷ்யாமீது திணித்த, வரலாற்றுரீதியான பூர்ஷுவா அமைப்புகளையும் ஒழிக்க முடிந்தது. இருந்தபோதிலும் வெகுஜனங்களுக்கு மறுபோதனை அளிப்பதும், கல்வியை ஸ்தாபன ரீதியாக ஏற்பாடு செய்வதும், அறிவைப் பரப்புவதும் அறியாமை மரபுகளை பத்தாம்பசலிப் போக்கை, காட்டுமிராண்டித் தன்மையை, மிருகத்தனத்தை ஒழிப்பதும் மிகவும் கடுமையான பணி என்பதை உணர்ந்தோம். இந்தத் துறையில் முற்றிலும் வேறுபட்ட முறைகளைக் கையாண்டு போராட்டம் நடத்தவேண்டும்.

இந்த விஷயத்தில் மக்களின் தலைமைப் பகுதிகள் நீண்டகால வெற்றிகளையும் உறுதியான முறையான செல்வாக்கையும் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இந்தச் செல்வாக்கிற்கு மக்கள் சுயவிருப்புடன் தலைவணங்குவர். ஆனால் நாம் நம்மால் இயன்ற அளவு பணிபுரியாத குற்றத்துக்கு ஆளாகி உள்ளோம். முதியோர் கல்வியைப் பரப்புவதற்கான முதல் நடவடிக்கைகளை எடுக்கும்போது நாம் இரு தடைகளோடு மோத வேண்டியுள்ளது. முதியோர் பழைய கட்டுப்பாடுகள் மரபுகளைத் துறந்த சுதந்திரமான கல்வியை வரவேற்கிறார்கள் . இந்த இரு தடைகளும் பழைய முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து வழிவழி வந்தவை. அந்த அமைப்பு இன்னும் நம்மைத் தொத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான பந்தங்கள் சங்கிலிகளால் நம்மைக் கீழே இழுத்துக் கொண்டு வருகின்றது.

முதலாவது: பெருந்தொகையாக இருக்கும் பூர்ஷுவா படிப்பாளிகள் உள்ளனர். அவர்கள் தமது சொந்த தத்துவ இயல் கலாச்சாரக் கொள்கைகளைச் சோதனை செய்வதற்கு இந்தப் புது வடிவிலான தொழிலாளர் விவசாயிகளின் கல்வி அமைப்புகளை வசதியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவற்றில் அவர்கள் மிகவும் அபத்தமான கற்பனையான பொருத்தமற்ற கருத்துகளை புதிய கருத்துகள் பாட்டாளி வர்க்கக் கலை கலாச்சாரம் என்று புகழ்ந்து புகுத்துகின்றனர்.(114) இது இயல்பே, ஆரம்ப நாள்களில் இதை மன்னித்தும் விடலாம். ஒரு விரிவான இயக்கத்தை இதற்காகக் குறை கூறலாகாது. ஆனால் நாள் பல செல்லச் செல்ல நாம் இவற்றை ஒழிக்க முயல வேண்டும்; அப்பணியில் நாம் வெற்றி காண்போம்.

இரண்டாவது : தடையும் முதலாளித்துவத்திலிருந்து மரபாக ஏற்பட்டதே. குட்டி பூர்ஷுவா உழைக்கும் மக்களின் விரிவான பகுதிகள் தமது அறிவுத் தாகத்தால் பழைய அமைப்பைத் தகர்த்தெறிந்தனர். ஆனால், ஸ்தாபன இயல்புள்ள வேறு எதையும் நிறுவுவதற்கான யோசனை அவர்களிடம் இல்லை. படித்த நபர்களை ஒன்றுதிரட்டவும் நூல்நிலையத் துறையை உருவாக்கவும் மக்கள் கமிசார் கவுன்சிலில் விவாதித்தபோது இதைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, சுருக்கமான அந்த விவாதத்திலிருந்தே இந்தத் துறையில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். வாழ்த்துரை கூறும்போது குறைகளை எடுத்துச் சொல்வது வழக்கமல்ல என்பது உண்மையே, ஆனால் நீங்கள் அந்த பொது வழக்க நிலையிலிருந்து விடுபட்டவர்கள் என்று நம்புகிறேன்.

எனவே வருத்தம் தரும் சில கருத்துகளை நான் எடுத்துக்கூறும்பட்சத்தில் நீங்கள் அதிருப்தி அடையமாட்டீர்கள் என்று நம்புகிறேன். படித்த நபர்களை ஒன்றுதிரட்டும் பிரச்சினையை நாம் எழுப்பியபோது, பூர்ஷ்வா புரட்சியின் வரையறையிலிருந்து உடனடியாகத் தோன்றாமலேயே, நமது புரட்சி மகத்தான வெற்றியடைந்தது பெரிய சாதனையாகக் காட்சியளித்தது. இது அப்போதிருந்த சக்திகளுக்கு வளர்ச்சியடைவதற்கான சுதந்திரத்தை அளித்தது. ஆனால் அப்போதிருந்த சக்திகள் குட்டி பூர்ஷுவாக்களே. அவர்களது குறிக்கோள் அனைவருக்கும் அவனவன் அவனவனுக்கே கடவுள் என்ற சாபக் கேடான முதலாளித்துவ கோஷமாகவே இருந்தது. இது கோல்சக் பூர்ஷுவா சக்திகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த இடமளித்தது.

எழுத்தறியாத மக்களுக்குக் கல்வி போதிக்க நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பரிசீலித்தால் நாம் மிகச் சிறிய அளவே பணியாற்றி உள்ளோம் என்ற முடிவுக்கு வருவோம். தொழிலாளி வர்க்கச் சக்திகள் ஸ்தாபன ரீதியாகத் திரட்டுவது இந்தத் துறையிலான நமது கடமை என்பதை நாம் உணர வேண்டும். இது வெறும் காகிதத்தளவில் நின்றுவிடக்கூடிய சொல்லடுக்கு அன்று. மாறாக மக்கள் மிக அவசரமாகத் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்பதும், ஒவ்வொரு படித்த நபரும் படிக்காத பலருக்குக் கல்வி போதிப்பதும், தனது கடமை என்று கட்டாயப்படுத்துவதும் நமது பொறுப்பாகும். இதைத்தான் நமது ஆணை கூறுகிறது.(115) ஆனால் இந்தத் துறையில் எதுவுமே செய்யப்படவில்லை.

மக்கள் கமிசார் கவுன்சிலில் இன்னொரு பிரச்சினை, அதாவது நூல்நிலையங்கள் பற்றிய பிரச்சினை வந்தபோது தொழில் துறையில் பின் தங்கி நிற்கும் நிலை காரணமாக மிகச் சில புத்தகங்களே இருப்பது பிரதானக்குறை என்று தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குறைகள் இருப்பது உண்மையே. நம்மிடம் எரிபொருள் இல்லை, நமது தொழிற்சாலைகள் செயலற்றுக் கிடக்கின்றன. நம்மிடம் உள்ள காகிதம் மிகக் குறைவு. எனவே நூல்களை வெளியிட முடியாது. இவையாவும் உண்மை. ஆனால் இருக்கும் நூல்களை  நாம் ஒன்றுதிரட்ட முடியவில்லை என்பதும் உண்மை. இந்த இடத்தில் நாம் ஒரு விவசாயியின் பாமரத்தன்மையால் செயலற்ற தன்மையால் பாதிக்கப்படுகின்றோம், ஒரு விவசாயி ஒரு நிலப்பிரபுவின் நூல்நிலையத்தை உடைக்கும் பொழுது தன்னிடமுள்ள புத்தகத்தை எவராவது எடுத்துக் கொண்டுபோய் விடுவார்கள் என்று அஞ்சுகிறார்.

காரணம் வெறுக்கத்தகாத அரசாங்க உடைமையைத் தொழிலாளர் விவசாயிகளின் பொதுவான உடைமையை நியாயமாகப் பங்கீடு செய்வதை அவன் அறியான். இதற்கு அறியாமையில் கிடக்கும் விவசாயிகளைக் குறை கூறுதல் சரியன்று. புரட்சியின் வளர்ச்சியைப் பொருத்தவரை அது முற்றிலும் நியாயமானதே! அதோடு அது ஒரு தவிர்க்கவொண்ணாத கட்டமும் ஆகும். விவசாயிகள் நூல் நிலையங்களைக் கைப்பற்றி அவற்றை ஒளித்து வைத்திருக்கலாம், அவர்களுக்கு வேறு எதுவும் செய்யத் தெரியாது. ஏனெனில் ரஷ்யாவிலுள்ள எல்லா நூல்நிலையங்களையும் ஒன்றிணைத்தால் படிக்க விழையும் ஒவ்வொருவருக்கும் தேவையான நூல்கள் கிடைக்கும்.

படிக்காதவர்களுக்குக் கல்வி கற்பிக்க முடியும் என்பதை அவர்கள் அறியார். தற்போது நாம் ஸ்தாபனக் குலைவு, குழப்பம், மோசமான வாரியப் பூசல்கள் ஆகியவற்றின் மீத மிச்சங்களை எதிர்த்துப் போராட வேண்டும், இதுவே நமது பிரதான கடமை. எழுத்தறிவின்மையைப் போக்கப் படித்தவர்களை ஒன்று திரட்டுவது உடனடிக் கடமை. ஏற்கெனவே உள்ள புத்தகங்களைப் பயன்படுத்தி நாடெங்கும் பரவலாக நூல்நிலையங்களை நிறுவ வேண்டும், உள்ள புத்தகங்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும், போட்டி அமைப்புகள் இன்றி தனியே ஒருமுகப்படுத்தப்பெற்ற திட்டமிட்ட அமைப்பை நிறுவ வேண்டும். இந்தச் சிறிய விஷயம், நமது புரட்சியின் அடிப்படையான கடமைகளில் ஒன்றைப் பிரதிபலிக்கிறது.

இந்தக் கடமையை நிறைவேற்றத் தவறினால், ரஷ்யக் குழப்பம், திறமையின்மை ஆகியவற்றை அகற்றி அந்த இடத்தில் உண்மையிலேயே முறையான ஒருமுகப்பட்ட அமைப்பை நிறுவுவதில் தவறினால், இந்தப் புரட்சி பூர்ஷுவா புரட்சியாகவே இருக்கும். ஏனெனில் கம்யூனிஸத்தை நோக்கி அணி வகுத்துச் செல்லும் தொழிலாளி வர்க்கப் புரட்சியின் பிரதான சிறப்பு அம்சம் இந்த ஸ்தாபனமே. பூர்ஷுவாக்களைப் பொருத்தவரை அவர்கள் விரும்பியது பழைய அமைப்பை உடைத்து, விவசாயப் பண்ணைகள் வளர்வதற்குச் சுதந்திரமளித்து, முந்திய புரட்சிகளைப் போல மீண்டும் முதலாளித்துவத்தை நிலைநாட்டுவதேயாகும்.

நாம் நம்மைக் கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைத்துக் கொள்கிறோம். எனவே புறத்தடைகளை அகற்றி பழைய அமைப்புகளைத் தகர்த்துவிட்ட இன்று நாம் மகத்துவம் மிக்க உண்மையான தொழிலாளி வர்க்கப் புரட்சியின் முதற்கடமையான இலட்சோப இலட்சம் மக்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டுவதில் இறங்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் துறையில் நாம் பெற்றுள்ள பதினெட்டு மாத அனுபவம் கலாச்சாரமற்ற நிலை, அறியாமை, அநாகரிகம் போன்று இதுகாறும் நம்மை வாட்டி வந்த நிலையிலிருந்து சரியான பாதைக்கும் வெற்றிக்கும் அழைத்துச் செல்லவேண்டும். (புயல் போன்ற கையொலி)

◊ பிராவ்தா இதழ்96-ல் வெளியிடப்பட்டது. (மே 7, 1919)
◊ தொகுப்பு நூல்கள், பாகம் 29, பக். 335-38.

அடிக்குறிப்புகள்:

114:    புரேலெத்கல்த் (தொழிலாளி வர்க்கக் கலாச்சார அமைப்பு என்று சொல்லப்படுவதன் உறுப்பினர்களால் தொழிலாளி வர்க்கக் கலாச்சாரம் என்பதன் பெயரால் பரப்பப்படும் மார்க்சிய – விரோத கருத்துகளை லெனின் குறிப்பிடுகிறார். புரோலெத்கல்த் உறுப்பினர்கள் உண்மையில் கடந்த காலத்தின் கலாச்சார பிதுரார்ஜிதத்தை மறுத்தனர். தம்மைத்தாமே எதார்த்தத்திலிருந்து முறித்துக்கொண்டு ”பரிசோதனைக் கூட முறையின்” மூலமாக ஒரு விசேஷ தொழிலாளி வர்க்கக் கலாச்சாரத்தை உண்டு பண்ண முயற்சித்தனர். மார்க்சியத்திற்கு உதட்டளவில் ஆதரவு தெரிவித்த பிரதான புரோலியத் கல்டின் சித்தாந்தவாதியான போக்தோனோவ், தன் நோக்கு கருத்து முதல்வாதத்திற்கும் மார்க்சியத்திற்கும் ஆதரவளித்தார். அதன் பலஅமைப்புகளின் தலைமையாக விளங்கிய பூர்ஷூவா அறிவுத்துறையினருடன் கூடவே, சோவியத் அரசின் கலாச்சார வளர்ச்சியை உண்மையில் ஊக்குவிக்க விரும்பிய இளம் தொழிலாளிகளும் அதில் இருந்தனர். புரோலெத் கல்ட் அமைப்புகள் 1919-ல் புகழ் பெற்று விளங்கின ; ஆனால் இருபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அவை சீரழியத் தொடங்கி 1932-ல் மறைந்துவிட்டன.

”தொழிலாளி வர்க்க கலாச்சாரம்” குறித்த தமது நகர் தீர்மானத்திலும், இதர பல நூல்களிலும் லெனின் புரோலெத்கல்டின் தவறான கோட்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

115:    1918 டிசம்பர் 10-ல் மக்கள் கமிசார் அவையினால் பிறப்பிக்கப்பட்டு, டிசம்பர் 12 இஸ்வெஸ்தியா இதழ் 272-ல் வெளியிடப்பட்ட ”படித்தவர்களை ஒன்று திரட்டி சோவியத் அமைப்பின் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்வது” குறித்த ஓர் ஆணையை இது குறிப்பிடுகிறது. சகல எழுதப்படிக்கத் தெரிந்தவர்களையும் பதிவு செய்வது என்றும் அவர்களைக் குழுக்களாக அமைப்பதற்காக அவர்களிடையேயிருந்து பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்றும் இந்தக் குழுக்களை, ”முதலில், சர்க்கார் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இரண்டாவதாக, பொதுவாக மக்கட் தொகையினர் முழுமைக்கும் அரசியல் கல்வி அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும்” என்றும் இந்த ஆணை முன் மொழிந்தது.

நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின்
தமிழாக்கம்: கே.ராமநாதன்
ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ
1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.

இதன் முந்தைய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்
விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்

டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின்
லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் ! | லெனின்

தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

நாள்: 31-3-2019

ந்திய மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, செயலிழந்து வரும் அரசுக் கட்டுமான அமைப்புகள் அனைத்தின் மீதும் மக்கள் அடியோடு நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதனால்தான் “யார் ஆட்சிக்கு வந்தாலும், எதுவும் செய்துவிட முடியாது.“ என்கிறார்கள்.

சமூக ஒழுக்கம், சமூக நியதி, ஆக்கப்பூர்வமான திட்டங்கள், நேர்மறைக் கொள்கைகளுக்குப் பதிலாக வெறும் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் மோசடிகள், கிரிமினல்மயமாதல் தாம் அவர்களிடம் உள்ளன. கிரிமினல் குற்றக் கும்பல்கள் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் கார்ப்பரேட் தரகு முதலாளிகள் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு, சிவில் சமூகத்தின் மீது ஏறி மிதித்து, முற்றும் முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.

பயங்கரவாத, பிரிவினைவாத, பீதி கிளப்பப்பட்டு மக்களுக்கு எதிராகக் கடுமையான பெருந்திரள் கண்காணிப்பும், அடக்குமுறைகளும் ஏவி விடப்படுகின்றன. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், அதிகார வர்க்க இலஞ்ச ஊழல் அத்துமீறல்கள், போலீசு அக்கிரமங்கள் அராஜகங்கள், நீதித்துறை முறைகேடுகள், ஊழல்கள், அவற்றின் பிற சமூகவிரோத குற்றங்கள், மொத்த அரசமைப்பும், சமூகமும் கடும் நெருக்கடியில், சிக்கி நொறுங்கி சரிந்து வருவதை குறிக்கின்றன. பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அவற்றை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியவில்லை.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் அடங்கிய புதிய தாராளவாதக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், சமூக ஒழுக்கம், சமூகப் பொறுப்பு போன்றவற்றைப் பேசுவதெல்லாம் முட்டாள்தனம் என்ற கருத்து பரப்பப்படுகிறது. சுயநலம், இலாபவெறி, நுகர்பொருள் மோகம், வரைமுறையற்ற இன்பநாட்டம், சொகுசு வாழ்க்கை, தனிமனிதப் பேராசை பாலியல் வக்கிரங்கள், போதை வாழ்க்கை, கிரிமினல் குற்றக் கும்பல் வாழ்க்கை, சாதி மதவெறி போன்ற சமூகக் குற்றங்கள் ஆகியவை பன்மடங்கு பெருகி விட்டன. கொலை, கொள்ளை, வழிப்பறி ஆள்கடத்தல், கூலிக்குக் கொலை ஆகிய சமூக விரோதக் கிரிமினல் குற்றங்களையே ஒரு முறையான தொழிலாகக் கொண்ட விலங்குகள் வாழும் காடு போல நாடும், சமூகமும் மாறி வருகிறது.

அரசே தனது வருவாய்க்குரிய வழிமுறையாக, இலக்கு வைத்து சாராய வியாபாரம் நடத்தி, மக்களை குடிகாரர்களாக்கி வருகிறது. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், நிச்சயமற்ற உதிரித்தனமான தொழில்கள் (புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவாக உதிரித்தனமான தொழில்கள் அதிகரித்து வந்தன)  ஆகியவை காரணமாக 15-25 வயது வாலிபர்களில் கணிசமான பேர் குடிகாரர்களாக, காமாந்தகர்களாக, கூலிப்படையினர்களாக மாறிவருகின்றனர். இதனால் சமூக விரோதக் குற்றங்கள் ஏராளமாக வெடிக்கின்றன. சமூக விழுமியங்கள் சீரழிவதும் சமூகக் கட்டுமானங்கள் நொறுங்கிப் போவதும்  பெருமளவு நடக்கின்றன. இவையெல்லாம் சுனாமி போல சிவில் சமூகத்தை சூழ்ந்து, சர்வ நாசமாக்கி வருகின்றன. இந்த நிலைமைகளைக் கண்டு அலறும் எதிர்க் கட்சிகளும்  ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தினரும் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போய்  விட்டதாகக்கூறி போலீசையும் பெருந்திரள் கண்காணிப்பையும்  அதிகரிக்கக் கோருகின்றனர். உண்மையில் இது, ஒரு கன்னத்தில் அறையும் ஒடுக்குமுறை அரசிடமும் ஆட்சியாளர்களிடமும் மறு கன்னத்தைக் காட்டுவதாகும்.

இந்த நிலைமை எதைக் காட்டுகின்றது? நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும்  தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிக மிக அசாதாரணமான  நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது.

அரசுக் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றவில்லை. அவை, திவாலாகி, தோற்றுப்போய், நிலை குலைந்து, எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்டன. நாட்டிலுள்ள அரசுக் கட்டுமான அமைப்புக்கள் அனைத்தும், மேலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சீரழிந்து சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டன. ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே நாட்டுக்கும், மக்களுக்கும் வேண்டாத சுமையாகிப் போய்விட்டது. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்?

நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஓர் உச்ச நிலையை எட்டிவிட்டது. மீள முடியாத இத்தகைய நெருக்கடிக்குள் நமது நாட்டைத் தள்ளியுள்ள அரசும், ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கங்களும், அரசு அதிகாரத்தில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டன. அவற்றால் தங்களுக்கிடையிலான  முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் கூடத் தீர்வுகாண முடியவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தராத, மக்களின் உரிமைகளை மறுக்கும், மக்களின் எதிரிகளுக்கு சேவை செய்கின்ற அவை, அதிகாரத்தில் நீடிக்கும் அருகதையற்றவை. இவற்றை நமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத் தட்டிக் கேட்கவும், அவர்களின் அதிகாரத்துக்கு சவால் விடவும் மக்கள் ஒன்று திரள வேண்டும்.

படிக்க:
தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?
தேர்தல் : எத்தனை முறை ஏமாறுவீர்கள் ?

நாட்டின் எல்லாச் சிக்கல்களுக்கும், கட்டமைப்பு  நெருக்கடிக்கும் தீர்வாக, அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான, உண்மையில் ஜனநாயகத் தன்மையுடைய மாற்று அரசுக் கட்டமைப்பை நிறுவிக்கொள்ள வேண்டும். மக்களே அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, அதற்குப் பொருத்தமான ஒரு பொது அமைப்பைக் கட்டி, பொது முழக்கங்களை வகுத்து, பொது இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் புதிய, சரியான, அவசியமான, அரசியல் கடமையாகும்.

அதை விட்டுத் தனித்தனிச் சிக்கல்களுக்குத் தனித்தனித் தீர்வுகளையும் கோரிக்கைகளையும் முழக்கங்களையும் முன்வைத்து, தனித்தனி இயக்கங்களுக்கும் மக்கள் திரண்டால் போதாது. ஆகவே, எல்லாச் சிக்கல்களுக்குமான, கட்டமைப்பு நெருக்கடிக்குமான தீர்வின் தொடக்கமாக, மக்களே அதிகாரத்தை கைப்பற்றும் இயக்கமாக “மக்கள் அதிகாரம்” என்ற புதிய, சரியான, அவசியமான, அரசியல் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளில் மக்களின் பொறுப்பும் மக்களின் கடமையுமாக இருக்கிறது.

தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு அதிகார வர்க்க – போலீசு நிர்வாக அமைப்புக்கும் மாற்றாக அவற்றுக்கு வெளியே, நேரடியாக மக்கள் பங்கேற்கும் அதிகார, நிர்வாக அரசியல் அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும். மக்களுக்காக யாரோ சிலர் அரசு நிர்வாகம் உட்பட ஏதாவது நல்லது செய்வார்கள் என்று பொறுப்புக்களை ஒப்படைக்க முடியாது. மக்களே நேரடியாக அரசு நிர்வாகத்தை நடத்தவும், அதை மக்களே கண்காணித்து தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் முறைகள் வேண்டும்.

அதிகாரம் பற்றிய பிரச்சினை – அது யாரிடம் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அது மக்களிடம்தான் இருக்க வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம். இது ஒரு புதிய அரசியல், தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும், அரசு அதிகார வர்க்க – போலீசு நிர்வாக அமைப்புக்கும் – வெளியே, உருவாக்கப்பட வேண்டிய புதிய புரட்சிகர அரசியல்.

அரசியல் கட்டமைப்பு நெருக்கடியால் எழும் பிரச்சினைகளுக்கு தேர்தலை இன்னமும் ஒரு தீர்வாக ஆட்சியாளர்கள் நம்பச் சொல்கிறார்கள். யாரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்று பேசுகிறார்கள். ஆனால், தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தேர்தல் தீர்வு அல்ல.

தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கு ஏற்ற வகையில் நடத்தப்படும் சுரண்டலும் ஒடுக்குமுறையும்தான் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், அதுவே தேசபக்தி என்ற சித்தாந்தம்தான் இந்த அமைப்பில் கோலோச்சுகிறது. எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் தனிவுடைமையை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் நாட்டை மறுகாலனியாக்கும் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் சேவை செய்பவைதான்.

எனவே, இப்படிப்பட்ட கட்டமைப்புக்குள் நமக்கான தீர்வு கிடையாது. கட்டமைப்புக்கு வெளியில்தான் தீர்வு இருக்கிறது. கட்சிகளை மாற்றுவதால் தீர்வு வராது. கட்டமைப்பையே மாற்றுவதுதான் தீர்வு. தற்போதுள்ள அரசியல் கட்டமைப்புக்கு வெளியே, முற்றிலும் வேறான மாற்று அரசியல் கட்டமைப்புதான் நாட்டுக்குத் தேவை. ஒரு மாபெரும் புரட்சியின், ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் நிறுவப்படும் மக்கள் அதிகாரம்தான் அதற்கு தீர்வுகாணமுடியும், என்கிறோம் நாம்.

போலீசு, நீதித்துறை, அதிகார வர்க்கம், ஊடகங்கள், கட்சிகள் என அனைத்து துறைகளிலும், தனது ஆட்களை புகுத்தி பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு ஏற்ப, இந்தக் கட்டுமானங்களை தனக்கேற்ற வகையில் மாற்ற வெறித்தனத்துடன் செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ். கார்ப்பரேட் காவி பாசிச சக்திகள். இந்த அபாயத்தை எதிர்ப்பதாக சொல்லும் காங்கிரசு பாதி இந்துத்துவாவாக – மிதவாத இந்துத்துவாவாக உள்ளது. இத்தகைய பாசிச அபாயத்தை முறியடிக்க வேண்டுமானால் அவர்களை முந்திக் கொண்டு நமக்கான மக்கள் அதிகாரக் கட்டமைப்பை நிறுவுவது அவசர அவசியப் பணியாக நம்முன்னே உள்ளது.

கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல,
கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு,
தோற்றுப்போய், ஆள அருகதையற்ற
இன்றுள்ள
அரசு கட்டமைப்பை அகற்றுவோம்!
மக்கள் அதிகாரம் கட்டமைப்போம்!


தோழமையுடன்,
சி.ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.