20 தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து 15.04.2015 அன்று திருவண்ணாமலை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
20 தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து 15.04.2015 அன்று திருவண்ணாமலை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் சரவணன் “ஆந்திர துப்பாக்கி சூட்டை கண்டித்து மாநிலம் முழுக்க எங்களது அமைப்பும் புரட்சிகர அமைப்புகளும் போராடிவரும் நிலைமையில் மாபெரும் எதிர்க்கட்சிகள் என்று சொல்லக்கூடிய தி.மு.க,தே.மு.தி.க, பா.ம.க, வி.சி, காங்கிரஸ், பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைவரும் வெறும் அறிக்கை விடுவதோடும், நிவாரணம் வழங்குவதோடும் நிறுத்திக்கொண்டனர். ஓ.பி யோ சந்திர பாபுவுக்கு கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார். கடிதம் எழுதுவதில் கலைஞரையே மிஞ்சிவிட்டார். ஆக, இதுதான் கட்சிகளின் நிலைப்பாடு.
அனைவரும் வெறும் அறிக்கை விடுவதும் நிவாரணம் வழங்குவதோடும் நிறுத்திக்கொண்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்தபோது அ.தி.மு.க தொண்டர்கள் பேருந்தை எரித்தும், கடைகளை உடைத்தும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர்கள் இப்போது எங்கே போய்விட்டார்கள்? ஊழல் அம்மாவுக்காக ஊரையே கொளுத்திய நீங்கள் அப்பாவி தமிழர்களை கொல்லும்போது ஏன் அமைதியா இருக்கீங்க?
பா.ம.க.வைச் சேர்ந்த ராமதாஸ் பிணத்தில் கூட சாதி பார்த்து, சாதிக்காக மட்டும் பேசுறார். ராமதாசை கைது செய்த போது பஸ்சை கொளுத்திய நீங்கள் உங்களது வீரத்தை இப்போது காட்ட வேண்டியது தானே?
சாதாரண தரைக்கடை வியாபாரி தள்ளு வண்டி வியாபாரியிடம் உழைக்கும் மக்களிடமும் உங்களது சட்டத்தையும், வீரத்தையும் காட்டும் அரசாங்கம், போலீசு, ‘பல லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாது’ என்று பகிரங்கமாக அறிவிக்கும் கிங் பிஷர் முதலாளி விஜய் மல்லய்யாவை கைது செய்ய திராணி இருக்கிறதா? காடுகள், மலைகள், ஆறுகள் என இயற்கை வளங்கள் தனியார்மய கொள்கையால்தான் சுரண்டப்படுகின்றன அதற்கு இந்த போலீசு, இராணுவம், நீதிமன்றம் உள்ளிட்ட அணைத்து அரச கட்டமைப்பும் துணை நிற்கிறது. இதை முறியடிக்க தனித் தனியாக போராடாமல் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மற்றும் புரட்சிகர அமைப்புகளோடு இணைந்து போராடுவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்” என்று உரையாற்றினார்.
காடுகள், மலைகள், ஆறுகள் என இயற்கை வளங்கள் தனியார்மய கொள்கையால்தான் சுரண்டப்படுகின்றன அதற்கு இந்த போலீசு, இராணுவம், நீதிமன்றம் உள்ளிட்ட அணைத்து அரச கட்டமைப்பும் துணை நிற்கிறது.
விழுப்புரம் மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இணைச் செயலாளர் தோழர். இரஞ்சித் “இது அரசின் பச்சைப் படுகொலை என்பது மட்டும் அல்ல. இது அரச பயங்கரவாதம். மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தராத இந்த அரசு, தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக் கொன்று விட்டு லட்சம் லட்சம் என்று நிவாரண தொகையும், கணவனை இழந்த மனைவிக்கு வேலைவாய்ப்பு என்றும் கூறி இந்த அநியாயங்களை மூடி மறைக்கிறது.
மக்களின் அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்திடாத அரசை பயங்கரவாத அரசு என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? மேலும், நாடு முழுவதும் இயற்கை வளங்களை தனியார் முதலாளிகளின் லாபவெறிக்காக தூக்கி கொடுத்துவிட்டு அதைத் தவறு என தட்டிகேட்கும் மக்களை போலிசை ஏவி விட்டு அடிக்கிறது இந்த அரசு.
இப்படுகொலையை கண்டித்து எமது அமைப்புகள் தமிழகம் முழுக்க போராடிவருவதை தடுத்து நிறுத்த எங்களை சிறைவைத்தது போலீசு. இந்த அட்டூழியங்களை எல்லாம் தட்டி கேட்க வேண்டும் என்றால் மக்கள் அதிகாரத்திற்கான கமிட்டிகளை அமைத்து போராடுவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்” என்று உரையாற்றினார்.
வழக்கறிஞர் அஸ்ரப் பாஷா “இது திட்டமிட்ட படுகொலை தான் என்பது உறுதியாகிவிட்டது. இரு மாநிலங்களுக்குள் இவ்வளவு பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் மத்திய அமைச்சர்களோ, மோடியோ இதுவரை இந்த பிரச்சனையைப் பற்றி பேசவில்லை. மோடியோ வெளிநாடு பயணம் என்று சொல்லி ஊர் சுற்றுவதில் மன்மோகன் சிங்கையே மிஞ்சிவிட்டார். உழைக்கும் ஏழை எளிய மக்கள் உண்ணும் மாட்டுக்கறியை தடை செய்ய மாடு வெட்ட தடை சட்டம் போடும் அரசு 20 தொழிலாளர்களை சுட்டு கூறு போட்டிருக்கான், இதற்கு ஏன் தடை சட்டம் போடவில்லை? தி.க.வின் தாலி அறுக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் காலிகளே இங்கு 20 இந்து பெண்களின் தாலி அறுந்து போச்சே, இப்ப எங்கடா போனீங்க?” என்று பேசினார்.
தி.க. வின் தாலி அறுக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் காலிகளே இங்கு 20 இந்து பெண்களின் தாலி அறுந்து போச்சே இப்ப எங்கடா போனீங்க?
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் தோழர் கண்ணன் “சந்திர பாபு நாயுடுவின் நேரடி தலைமையில் இந்தப் படுகொலை நடந்துள்ளது. இது திட்டமிட்ட படுகொலைதான். இதற்குக் காரணமான ஆந்திர மாநில டி.ஐ.ஜி காந்தாராவ் உள்ளிட்ட போலிசு கும்பலை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், எங்களது அமைப்பின் சார்பாக துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்கையில் அங்கு மரம் வெட்டியதற்கான தடயங்கள் ஏதுமில்லை. அதுபோல மரம் வெட்டும்போது போலிசு துப்பாக்கியோடு வரும்போது தப்பியோடத்தான் நினைப்பார்களே ஒழிய எதிர்த்து தாக்கமாட்டார்கள். அப்படி ஓடும்போது முதுகில் தான் சுட்டிருக்க முடியும். மாறாக மார்பிலும், வயிற்றிலும், நெஞ்சிலும் சுடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இது திட்டமிட்ட படுகொலைதான் என்று தெரிகிறது.
சென்ற வருடம் சென்னையில் பதினோரு மாடி கட்டிடம் விழுந்து ஆந்திர தொழிலாளி இறந்து போனபோது சந்திர பாபு நாயுடு எல்லை தாண்டி தனி விமானம் மூலம் வந்து பார்த்துவிட்டு போனார்; பின்பு நிவாரணம் கொடுத்தார். ஆனால் இப்படி ஒரு படுகொலை நடந்துள்ளபோதும் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நமது மக்களை வந்து பார்க்க நேரமில்லாமல் இருக்கிறார். மக்களை பாதுகாக்க வேண்டிய இந்த அரசு, போலீசு, ராணுவம், நீதி மன்றம் என அனைத்தும் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இனிமேலும் இந்த அரசை நம்பி ஏமாறாமல் வீதிக்கு வீதி மக்கள் அதிகாரத்துக்கான மையங்களை கட்டியமைத்து போராடுவதன் மூலம் தான் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று பேசினார்.
இந்த அரசை நம்பி ஏமாறாமல் வீதிக்கு வீதி மக்கள் அதிகாரத்துக்கான மையங்களை கட்டியமைத்து போராடுவதன் மூலம் தான் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இறுதியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சுந்தர் நன்றி கூறினார்.
பேருந்து பிரச்சாரத்தில் மக்கள் நம்மை பார்த்து நீங்கள் மட்டும்தான் உண்மையான குற்றவாளி யார் என்றும் அவர்களை எப்படி தண்டிப்பது என்றும் சொல்றீங்க என்று பாராட்டினர். அனைவருமே மனமுவந்து நிதி கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.
[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
ஆர்ப்பாட்ட முழக்கம்
கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !
தமிழக தொழிலாளர்கள் 20 பேரை
நாயைப்போல சுட்டுக்கொன்ற….
ஆந்திர அரசின் பயங்கர வாதத்தை
வன்மையாக கண்டிக்கின்றோம்
படுகொலை! படுகொலை !
சமூக நீதி வேஷம் போட்ட
சந்திர பாபு நாயுடுவின்
பச்சையான படுகொலை…
டிஸ்மிஸ் செய் ! டிஸ்மிஸ் செய் !
சொந்த அரசியல் காரணங்களுக்காக
ராமச்சந்திர ரெட்டிக்கு நெருக்கடி தர…
20 கூலி தொழிலாளர்களை
கொன்று வீசிய நாயுடு அரசை
டிஸ்மிஸ் செய் ! டிஸ்மிஸ் செய் !
கைது செய்! சிறையிலடை !
ஆந்திர மாநில டி.ஐ.ஜி
காந்தாராவ் உள்ளிட்ட
போலீசு அதிகாரிகளை
கைது செய்! சிறையிலடை !
தில் இருக்கா! தில் இருக்கா !
கூலித் தொழிலாளிகளை
சுட்டுக்கொன்ற ஆந்திர அரசே
செம்மரக் கடத்தல் கொல்லையன்கள்
ராமசந்திர ரெட்டி
கிஷோர் குமார் ரெட்டி உள்ளிட்ட
ஆந்திர தமிழக மாபியாக்களை
சுட்டுக்கொல்ல தில் இருக்கா !
தாலி பற்றி பேசியதற்கு
குண்டு வீசி வெறியாட்டம் போட்ட
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி காலிகளே
20 இந்து தாலியை அறுத்துட்டான்
எங்கடா ஓடி ஒளிஞ்சிங்க
எவன் மசுர புடுங்குறீங்க…
நிராகரிப்போம் ! நிராகரிப்போம் !
ஆந்திர அரசின் படுகொலையை
தெலுங்கு இனவெறி என்று சுருக்கி
மக்களை கொன்று வரும் …
நெருங்கி வரும் அரச பயங்கரவாதத்தை
மூடி மறைக்கின்ற…
தமிழ் தேசிய கள்ளர்களை
நிராகரிப்போம் ! நிராகரிப்போம் !
இயற்கை வளத்தை சூறையாட
நாட்டையே கொள்ளையடிக்க
சாதி மத இனம் கடந்து
ஓட்டுப் பொறுக்கிகள் ஓரணி !
உழைக்கும் மக்களே நமக்கெதற்கு
ஒன்றுக்கும் பயன்படாத
சாதி மத லாவணி……
ஒன்று படுவோம்! ஒன்று படுவோம் !
உழைக்கும் வர்க்கமாய் ஒன்று படுவோம்….
முறியடிப்போம்! முறியடிப்போம் !
நாளுக்கு நாள் பெருகிவரும்
அரசின் பயங்கர வாதத்தை
முறியடிப்போம் ! முறியடிப்போம் !
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம் !
இயற்கை வளங்களை பாதுகாக்க
வீதிக்கு வீதி ஊருக்கு ஊர்…
மக்கள் அதிகார மன்றங்களை
வீரஞ்செறிந்த போராட்டங்களை
கட்டியமைப்போம் ! கட்டியமைப்போம் !
வெல்லட்டும் ! வெல்லட்டும் !
ஆந்திர அரசின்
பச்சை படுகொலைக்கு எதிரான
தமிழக மக்களின் போராட்டம்
வெல்லட்டும் ! வெல்லட்டும் !
தகவல் : மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் திருவண்ணாமலை மாவட்ட கிளை
விழுப்புரம்அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்ள குழந்தைகள் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 பச்சிளம் குழந்தைகள் நேற்று முன்தினம் காலை 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து இறந்தன. ஏற்கெனவே, 4 குழந்தைகள் இறந்த நிலையில் மேலும் 3 குழந்தைகள் இறந்ததால் இரண்டு நாளில் குழந்தைகளின் உயிரிழப்பு 7ஆக உயர்ந்தது.
சிங்கப்பூருக்கு பிழைப்பு தேடி சென்ற ஒவ்வொருவருக்கும் தனிபட்ட காரணங்கள் இருந்தாலும் தமிழர்களில் பல பேருக்கு ஒற்றுமையான ஒரு காரணம் தங்கச்சி என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் பாசத்திற்குரிய சென்டிமெண்டாக இருக்கும் இந்த தங்கச்சி விவகாரம் நிஜத்தில் பொறுப்பான அண்ணன்களின் இளமையை கேட்கும் தண்டனை எனலாம். சீர், வரதட்சணை, முறை என்று ஒன்றும் குறைவைக்க கூடாது என்றால் சிங்கப்பூருக்கு வண்டி ஏற வேண்டும். அப்படி சென்றவர்களில் ஒருவர் தனபால்.
பொறுப்பான அண்ணன்களின் இளமையை கேட்கும் தண்டனை.
தினமும் அரைப் பட்டினி வயிற்றோடு பாடுபட்டு இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து கரை சேர்த்த களைப்பில் பெற்றோர்கள் இருந்தனர். மீதமுள்ள கடைக்குட்டி பெண் கல்யாணத்திற்காவது மகன் பொறுப்பேற்க மாட்டானா என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. பட்டப்படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் சோர்ந்து போன தனபாலும் இறுதியில் கைக்கெட்டும் சொர்க்கமான சிங்கப்பூருக்கு சென்றார்.
இவ்வளவு வறுமையிலும் அவர் பட்டப்படிப்பை முடித்தது எப்படி? பகுதி நேரமாக வேலை செய்து படிப்புக்கான செலவு தேவைகளை ஏற்பாடு செய்து கொண்டார். இத்தகைய பொறுப்புணர்வே அவரை சிங்கப்பூரை நோக்கியும் ஓட வைத்தது.
எதிரே நின்ற தங்கைக்காக சிங்கப்பூர் சென்று ஏழு வருட கட்டிட தொழிலாளியாக பணி முடித்து பிறகு ஊர் திரும்பி தங்கைக்கு மட்டுமல்ல தானும் மணமுடித்து மனைவி குழந்தையுடன் வாழ்கிறார். இனி சிங்கப்பூர் அனுபவம் குறித்து அவரே பேசுகிறார்.
எப்ப சிங்கப்பூர் போனீங்க?
“1998-இல் சிங்கப்பூர் போனேன். ரெண்டு வருசத்துக்கு ஒருவாட்டி விடுமுறைக்கு ஊருக்கு வந்து போவேன். 2005-ல நிரந்தரமா வந்துட்டேன்.”
விமான டிக்கெட்டுலேருந்து பொட்டி ஜட்டி வரைக்கும் எல்லாம் ஆச்சு ரெண்டு லட்சத்துக்கு.
இரண்டு வருசத்துக்கு ஒரு தடவதான் விடுமுறையா?
“வருசத்துக்கு ஒரு தடவ விடுமுறை உண்டு. வந்து போகலாம். ஆனா ஒரு வருசத்துக்கு ஒரு தடவ விசாவ புதுப்பிக்கணும். அதுக்கும், வந்து போகும் செலவு கணக்கும் பாத்தா நம்ம சம்பாத்தியத்துக்கு கட்டுபடியாகாது.”
நீங்க சிங்கப்பூர் போக எவ்வளவு செலவாச்சு?
“சிங்கப்பூருக்கு போன செலவு அத்தனைக்கும் கடன்தான். ஏஜெண்டுக்கு மட்டும் 1,65,000. விமான டிக்கெட்டுலேருந்து பொட்டி ஜட்டி வரைக்கும் எல்லாம் ஆச்சு ரெண்டு லட்சத்துக்கு.”
எவ்வளவு சம்பளம்?
“தினக்கூலிதான். படிச்சிட்டு நல்ல அட்மிசன் லெவல்ல வேலை பாத்தா மாதச் சம்பளம் மதிப்பு எல்லாம் இருக்கும். தொழிலாளியா போனா எல்லா துன்பமும் பட்டாகணும். வேலை நேரம் போக ஓவர் டைம் பாத்தாத்தான் சம்பளம் கொஞ்சமாவது கட்டுப்படியாகும். அதுவும் நாம நெனச்சா மாதிரி பாக்க முடியாது. மேனேஜருக்கு வேண்டியவனுக்கும், வேலை சுறுசுறுப்பா செய்றவனுக்கும் தான் ஓவர் டைம் கெடைக்கும். வேலை நெருக்கடியா இருந்தாத்தான் மத்தவனுக்கும் ஓ.டி. கிடைக்கும். அப்ப நமக்கு உடம்பு சரி இல்லாம இருந்தாலும் செய்ய முடியாதுன்னு சொல்ல முடியாது. இதையெல்லாம் கூட்டி கழிச்சு பாத்தா 15,000 முதல் 20,000 வரை இந்திய பணம் மாதம் கிடைக்கும்”
எத்தன வருசத்துல கடன அடைச்சிங்க?
ஏ.சி சம்மந்தமான வேலையின்னு இடைத்தரகர் சொல்லிதான் போனேன். ஆனா தொடப்பத்த கையில கொடுத்து பூச்சுப்பூசும் போது விழுவுற சிமெண்ட்ட கூட்டுன்னு சொன்னானுங்க.
“குடும்பத்துல வேற செலவு இல்லன்னா ஒரு வருசத்துல கடனை அடைச்சிருப்பேன். போன மறுவருசமே தங்கச்சி கல்யாணம் வந்துருச்சு. நல்ல மாப்பிள்ளை விட்டா கிடைக்காதுன்னு வீட்ல ஒரே புலம்பல். சிங்கப்பூர்ல இருக்குற நம்பிக்கையில தங்கச்சிக்காக வட்டிக்கி வாங்கும்படியா போச்சு.”
மொத்தமா கடன் எவ்வளவு வாங்கினிங்க? வட்டியோட சேத்து எவ்வளவு அடைச்சிங்க?
“சிங்கப்பூர் போறதுக்கு வட்டிக்கு பணமா 50,000-ம். சொந்தக்காரங்க அஞ்சு பேருகிட்ட நகையா வாங்கி அடகு வச்சுட்டு அதுல 1,50,000-ம் புரட்டிட்டு போனேன். யாருக்கு நகைங்க அவசரமா தேவைப்படுதோ அவுங்களுக்கு முதல்ல திருப்பிக் கொடுத்தேன். தங்கச்சி கல்யாணத்துக்கு நகையோடோ சேத்து 2 லட்சம் கடன் வாங்குனேன். மொத்தம் நாலு லட்சம் கடனுக்கு வட்டி மட்டும் 2 லட்சம் கிட்டக்க வந்துருச்சு. அஞ்சு வருசத்துல அசல் வட்டின்னு ஆறு லட்ச சொச்சம் அடைச்சேன்.”
நீங்க என்ன படிச்சிருக்கிங்க?
“நான் பி.எஸ்.சி முடிச்சிட்டு ஒரு சில டிப்ளம்பா கோர்ஸ்சும் முடிச்சேன். அதுல ஒண்ணுதான் ஏ.சி சர்வீஸ் பத்தினது. சிங்கப்பூர்ல கட்டிட தொழில்தான் முதன்மையானது. அதுல ஏ.சி சம்மந்தமான வேலையின்னு இடைத்தரகர் சொல்லிதான் போனேன். ஆனா தொடப்பத்த கையில கொடுத்து பூச்சுப்பூசும் போது விழுவுற சிமெண்ட்ட கூட்டுன்னு சொன்னானுங்க. ஏன்னு வாய தொறந்தா ஊருக்கு அனுப்பிடுவானுங்கன்னு மட்டும் புரிஞ்சுச்சு. கடனா, தொடப்பமான்னு பாத்தா தொடப்பந்தான் செயிச்சுச்சு.”
படிச்ச உங்கள கூட்ட சொன்னப்ப உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?
“நீங்க கேக்குற அளவுக்கு எனக்கு ஒன்னும் பாதிப்பா இல்லைங்க. நான் பள்ளிக்கூடம் படிக்கும் போதே கல்லு கடைக்கி வேலைக்கி போவேன். மரம் ஏறுவேன். கல்லூரி முடிஞ்சதும் பைனான்ஸ்காரங்களுக்கு கணக்கு எழுதுவேன். தண்டல் வசூலுக்கும் போவேன். அப்படி, எந்த வேலையா இருந்தா என்ன நமக்குத் தேவை காசு.”
கடைசி வரைக்கும் ஏ.சி சம்மந்தமான வேலை கிடைக்கவே இல்லையா?
“நான் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டிங்க போலருக்கே. இதுலயும் பல ப்ரோமோசன் கெடைச்சுது. ஒரு நாள் பெயிண்ட் அடிச்ச தொழிலாளி ஊருக்கு போயிட்டாருன்னு என்ன அடிக்க சொன்னானுங்க. அடிச்சேன். பரவாயில்லையே அவனவிட நீ கீழ ஒழுகாம நீட்டா ஆடிக்கிறியே நீயே அடின்னானுங்க.
நீயும் நானும் இங்க ஒரே இனம்தான். எம்மேல கோபம் வேண்டாம். ஒன்னோட வேலையை தட்டி பறிச்சிட்டதா நினைக்காதே.
நாலு வருச்ம கழிச்சு வேறொரு கம்பனி. அங்க போனதும் “ஏற்கனவே என்ன வேலை செஞ்சுருக்க” அப்படின்னானுங்க. “சிமெண்டு கூட்டுனேன்”னு சொன்னேன். அப்படியா “சரி மரம் வேலை நடக்கும் போது விழும் தூள்கள கூட்டுன்”னு திரும்பவும் தொடப்பத்த கையில கொடுத்துட்டானுங்க.
கொஞ்ச நாள் பொறுத்து ஆசாரி வேலை செஞ்ச தாய்லாந்து நாட்டுக்காரர் ஊருக்கு போய்ட்டார். என்ன மரம் அறுக்கச் சொன்னானுங்க. தாய்லாந்து ஆசாரி படிக்காத ஆள். அவருக்கு அளவு எடுத்து எழுதிக் கொடுக்க ஒரு உதவியாளர் இருந்தாரு. எனக்கு அது தேவைப்படல. நானே அளவு குறிச்சு வேகமாவும் வெட்டி தள்ளிட்டேன். ஒடனே அந்த வேலையை எனக்கு குடுத்துட்டானுங்க.”
திரும்பி வந்த தாய்லாந்துக்காரர் என்ன விரோதி மாதிரி பாத்தாரு. இங்க வாடாப்பான்னு கூப்புட்டு நீயும் நானும் இங்க ஒரே இனம்தான். எம்மேல கோபம் வேண்டாம். ஒன்னோட வேலையை தட்டி பறிச்சிட்டதா நினைக்காதே இத விட எனக்கு பெருக்குறதுதான் ஈசி. ஓனருட்ட சொல்லி எனக்கு பெருக்குற வேலையையே வாங்கி குடுத்துருன்னு சொல்லி நட்பானேன். ஓனரு ஒத்துக்க மாட்டேன்னுட்டான்.”
எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும்.
“ஒரு மண்ணும் கிடையாது. அதே கூலிதான் ஒரு பத்து பைசா கூட அதிகம் தர மாட்டாங்க. மொத்தமா அவங்க எடுத்த குத்தகை மிஷினுங்கதான் தொழிலாளிங்க. எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும். நமக்கு வாய் தொறக்குற வாய்ப்பெல்லாம் கிடையாது.
ஒரு ஓனரு ஒரு கட்டிடத்தையே காண்ட்ராக்ட் எடுத்துருப்பான். இல்ல ஒரு சில வேலைகளை மட்டும் எடுத்துருப்பான். நாம எந்த முதலாளிகிட்ட வேலை பாக்குறோமோ அவனோடோ காண்ட்ராக்ட் முடிஞ்சு போச்சுன்னா அடுத்து அவன் வேலை குடுக்குற வரைக்கும் சும்மாதான் இருக்கனும். அதிகப்படியான நாள் இழுத்துட்டு போச்சுன்னா சில பேர் சாப்பாட்டுக்கு காசு தருவாங்க. இல்லன்னா அதுவும் நாமதான் பாத்துக்கனும்.”
இதுதான் வேலையின்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டு வேற வேலையை கொடுத்து தரகர்கள் ஏமாத்துறாங்களா?
“அரசாங்க வேலையின்னு கூட்டிட்டு போயியா ஏமாத்துறாங்க. அப்படியெல்லாம் கிடையாதுங்க. சிங்கப்பூருல கட்டுமான நிறுவனம்தான் அதிகம். கட்டுமான பணிக்குதான் வேலைக்குன்னு கூட்டிட்டு போறாங்க அதுல இருக்குற கொத்தனார், ஆசாரி, பிளம்பிங்கு, ஒயரிங்கு, சென்ட்ரிங்கு எல்லாந்தான் அத்துபடி அதுல ஏதாவது ஒரு வேலைதான், இதுல என்ன ஏமாத்தறது.”
வெளிநாடு, விமானப் பயணம்னு ஒரு கவர்ச்சிய ஏற்படுத்துச்சுன்னு சொல்லலாம்.
இவ்வளவு சிரமம் இருந்தும் ஏன் சிங்கப்பூரை நாடி போறாங்க?
“இந்த பகுதியில 90-கள்ல சிங்கப்பூர் போறது ஒரு ஃபேசனாவே இருந்துச்சு. பள்ளி இறுதியாண்டுல கோட்டை விட்டவங்க, கல்லூரி படிப்ப பாதியில விட்ட இளைஞர்கள் விவசாய வேலை பாக்காம வெட்டியா சுத்தறத தடுக்க நினைச்சுதான் சிங்கப்பூர் அனுப்புனாங்க. திரும்பி வரமுடியாமல் கஸ்டத்த உணர்வாங்கன்னு பெத்தவங்க நினச்சாங்க. பசங்களுக்கும் வெளிநாடு, விமானப் பயணம்னு ஒரு கவர்ச்சிய ஏற்படுத்துச்சுன்னு சொல்லலாம். அதனாலதான் திருவாரூரு, தஞ்சாவூரு, பட்டுக்கோட்டை ஆட்கள் அதிகம்”
சிங்கப்பூர் அனுபவத்துல எது முக்கியம்?
“ஊர்ல இருக்கும் போது சாராய வியாபாரிங்க கூட பழக்கம் இருந்தும் கூட குடிக்காமதான் இருந்தேன். அப்டிபட்ட என்னை குடிகானா ஆக்குன பெருமை சிங்கப்பூரையே சாரும்.”
சிங்கப்பூர் பற்றிய உங்கள் கருத்து என்ன?
எந்த வளமும் இல்லாத ஒரு தீவுதான் சிங்கப்பூர். அத்தியாவசிய தேவைக்குக் கூட ஒரு பிடி தானியம் பயிரிட முடியாது
“எந்த வளமும் இல்லாத ஒரு தீவுதான் சிங்கப்பூர். அத்தியாவசிய தேவைக்குக் கூட ஒரு பிடி தானியம் பயிரிட முடியாது. ஆனா கடந்து போகும் மந்த நாட்டவர்கள் இளைப்பாரும் ஒரு இடமா அமைச்சதுதான் அதன் சிறப்பு. அதை பயன்படுத்தி எந்த வகையில முன்னேத்திக்கலான்னு புத்திசாலித்தனமா செயல் பட்டுருக்காங்க.”
உங்களைப் போல உழைப்பாளியின் இரத்தத்தை உறிஞ்சிதானே இந்த சிறப்பெல்லாம்?
“இது ஏதோ சிங்கப்பூர்ல மட்டும் நடக்கறது மாறி பேசிரிங்க. எங்கயுமே உழைக்கிறவங்களுக்கு இதுதானே கதி.”
சிங்கப்பூர் போனதுல தங்கச்சி கல்யானம் செஞ்சிங்க வேற என்ன பொருளாதாரத்துல முன்னேற்றம்னு சொல்லுங்க?
“ஆறு லட்சம் கடன அடைச்சது போக, ஒரு ஏக்கருக்கு குறைவா நிலம் வாங்கினேன். இதையும் சேத்தா சிங்கப்பூர் போயி நான் சம்பாதிச்சது என்ன ஒரு ஏழு லட்சம் வரும். கடன் போக இந்த நிலந்தான் இப்ப மிச்சம். இதை ஊர்ல இருக்கும் போது குத்தகைக்கு எடுத்தே சம்பாதிச்சிருப்பேன். அப்டி பாத்தா சிங்கப்பூர்ல நான் அடைஞ்ச வருமானத்தையும் சந்தோசத்தையும் விட ஊருலேயே இருந்துருந்தா நல்லா சம்பாரிச்சி சிறப்பா வந்துருப்பேன். என்ன ஒன்னு, கொஞ்ச நாள் அதிகம் ஆகும் அவ்ளவுதான். எல்லா வசதியும் இருந்து மொதல் போட்டு சிங்கப்பூர் போறவங்க கொஞ்சம் காசு பாக்கலாம். வட்டிக்கி கடன்பட்டு லேபரா போயி குடும்பத்துல A to Z-வரைக்கும் நாமதான் நல்லது கெட்டது பாக்கனும்ணு சிங்கப்பூரு ஓடுனா கணக்குதான் வரும். வசதி வராது.”
நீங்க சிங்கப்பூர் போயி கடைசியில என்னதான் சம்பாதீச்சிங்க?
நீங்க சிங்கப்பூர் போயி கடைசியில என்னதான் சம்பாதீச்சிங்க?
– சரசம்மா
(ஊர், பெயர் அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)
_________________________________
சிங்கப்பூரில் ஓரளவு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்பவர்களே அதன் அருமை பெருமை பற்றி அளந்து விடுகிறார்கள். அங்கே கடுமுழைப்புடன் வேலை செய்யும் தொழிலாளிகள் மீதான சுரண்ட்லை இவர்கள் வசதியாக மறைத்து விடுகிறார்கள்.
சிங்கப்பூர் சுரண்டல் என்பது ஒரு விசச்சூழல். ஒன்றில் மாட்டிக் கொண்டால் அதன் தொடர் விளைவாக முழுச்சுற்று முடித்து கையில் ஒன்றுமில்லாமல்தான் வரவேண்டும். அதற்குள் சிங்கப்பூர் பொருளாதாரம் ஒரு தொழிலாளியின் ஆகச் சிறப்பான இளைமைப் பருவ உழைப்பை திருடி விடும்.
இந்த சுரண்டலுக்கு அடிநாதமாக இருப்பது சிங்கப்பூர் பற்றிய கதைகள்தாம். அந்தக் கதைகளை நம்பி தொழிலாளிகள் கடன் வாங்கி செல்கிறார்கள். சென்ற பிறகு அந்த கனவு மறைந்து கடனை அடைப்பதற்காக கிடைக்கும் தொழிலை செய்ய வேண்டியிருக்கிறது. ஓவர்டைம் என்பது இங்கே ஒரு தொழிலாளியின் விருப்பத்திலிருந்து தீர்மானிக்கப்படுவதில்லை. முதலாளி சொன்னால் செய்ய வேண்டும். அதே போன்று வேலை இல்லை என்றால் தானே தனது செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும். வேலை இருக்கும் போது தொழிலாளியை தங்க வைத்து, சோறு போட்டு வேலை வாங்கும் வேலையை கம்பெனியே செய்து விடும்.
இந்த மாறுபாடு ஏன்? இங்கே உதிரிப்பாட்டாளிகளை தங்க வைத்து நேரம் காலம் பார்க்காமல் வேலை வாங்கும் அதே உத்திதான் சிங்கப்பூரிலும். இன்னும் மருத்துவம், விடுமுறை, பொதுவான உரிமைகள் எதுவும் ஒரு தொழிலாளிக்கு கிடையாது. வேண்டுமென்றால் அதிக பணம் செலவழிக்க வேண்டும். இருப்பினும் சிங்கப்பூர் கம்பெனியின் நிறுவன முதலாளி மரணத்தின் போது மன்னார்குடியில் மலர் அஞ்சலி போடவில்லையா என்று சிலர் கேட்கலாம். அடிமைகளாக இருக்கும் போது ஆண்டைகளுக்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கத்தான் செய்யும். அது அடிமைத்தனத்திலிருந்து வரும் அவலம். அதற்காக பரிதாபப்படலாமே ஒழிய பெருமைப்படமுடியாது.
ஆகவேதான் சிங்கப்பூர் சென்று ஆறு, ஏழு வருடம் வேலை பார்த்து திரும்பும் ஒரு தொழிலாளிக்கு கடைசியில் ஏதும் மிஞ்சுவதில்லை. ஆனால் அவரிடமிருந்து எடுக்கப்பட்ட உழைப்பை வைத்து சிங்கப்பூர் முதலாளிகள் தங்களது வங்கி கணக்கை கூட்டிக் கொள்வார்கள்.
வீட்டு வேலை செய்யும் பெண்கள், தினக்கூலிகளாய் வாழும் தொழிலாளிகளின் கதைகளை இது வரை பார்த்து விட்டோம். அடுத்த பகுதியில் சிங்கப்பூரில் கொடிகட்டும் விபச்சாரம், சூதாட்டம், மற்றும் தொழிலாளிகளின் சமூக வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.
பட்ஜெட் வெளியான ஒரு சில நாட்களிலேயே, ரயில் நிலைய நடைமேடை கட்டணத்தை ஐந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாயாக உயர்த்தப் போவதாக அறிவித்தது, மோடி அரசு. மேலும், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாகச் சேரும் திருவிழா நேரங்களில் இக்கட்டணத்தை அதிகாரிகள் தமது மனம்போனபடி ஏற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் கூட்டம் அதிகமாகவுள்ள நாட்களில் நடக்கும் கள்ள டிக்கெட் வியாபாரத்தை, மோடி அரசு ரயில் நிலையங்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறது.
இப்படியுமா பொதுமக்களைக் கொள்ளையடிக்கத் துணிவார்கள் என நீங்கள் எண்ணினால், மோடியோ அதற்கும் மேலேயும் போய் இந்திய மக்களை அதிர வைக்கிறார். ஆட்சியில் அமர்ந்தவுடன் அவரது அரசு அறிவித்த பிரீமியம் ரயில் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதன்படி, பிரீமியம் ரயில் கிளம்புவதற்கான நேரம் நெருங்க நெருங்க, அதற்கு டிக்கெட் கேட்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த ரயில்களின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துகொண்டே போகும். திருவிழா காலங்களில் ஆம்னி பஸ் முதலாளிகள் அடிக்கும் சட்டவிரோதக் கொள்ளைகூட இந்தளவிற்கு வக்கிரமாக இருப்பதில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெ விலை சரிந்தபோதெல்லாம் மோடி அரசு அதன் மீது விதிக்கப்படும் கலால் வரியை அடுத்தடுத்து உயர்த்திக் கொண்டே போனது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலையும் டீசலையும் அவற்றின் அடக்கவிலையைவிடப் பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து வாங்கித் தீர வேண்டிய கட்டாயத்திற்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டார்கள். இந்த கலால் வரி உயர்வின் மூலம் மட்டும் பட்ஜெட்டிற்கு முன்பாகவே பொதுமக்களிடமிருந்து மோடி அரசு கொள்ளையடித்த தொகை ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்.
பட்ஜெட்டிலோ ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது நான்கு ரூபாய் அளவிற்குச் சாலை மேம்பாட்டு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட் வெளியான அன்றிரவே ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் கட்டண உயர்வு, வரி உயர்வு இவற்றின் மூலம் மட்டுமே இந்த ஆண்டு மைய அரசிற்குக் கிடைக்கவுள்ள கூடுதல் வருவாய் 50,000 கோடி ரூபாய். இதற்கு அப்பால் கடந்த ஆண்டில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு வழங்கப்பட்ட மானியம் 60,000 கோடி ரூபாயில் 30,000 கோடி ரூபாயை ஒரே சொடுக்கில் இந்த பட்ஜெட்டில் வெட்டி, அச்சுமையையும் மக்களின் மீது ஏற்றிவைத்துவிட்டது.
வரிக்கு மேல் வரி விதித்து விவசாயிகளையும் பொதுமக்களையும் கசக்கிப் பிழிவதில் வரலாற்றில் இழிபுகழ் பெற்ற சக்கரவர்த்திகளையும் மன்னர்களையும் பாளையக்காரர்களையும் விஞ்சி நிற்கிறது, மோடி அரசு. ஊரறிந்த, உலகறிந்த கார்ப்பரேட் விசுவாசியான ப.சிதம்பரம்கூட இக்கொள்ளையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், இது ஏழைகளின் நலனைக் கருத்தில் கொள்ளாத, பெரு நிறுவனங்களுக்கும் வரி செலுத்துபவர்களுக்கும் சாதகமான பட்ஜெட்” என விமர்சித்திருக்கிறார். இந்த பட்ஜெட் ஏழைகளின் நலன்களைப் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டது என்பது மட்டுமல்ல, உள்நாட்டு தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய நிறுவனங்கள், புதுப் பணக்காரர்கள் ஆகியோரை மேலும் கொழுக்க வைப்பதற்காக மக்களின் தாலியை அறுத்திருக்கிறார், மோடி.
அடுத்த ஆண்டு பணவீக்கம் 5% சதவீதம் முதல் 6% சதவீதம் வரை இருக்கும் என வைத்துக்கொண்டால், சமூகப் பாதுகாப்புத் துறைகளில் அரசின் செலவுகள் 6% அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், மோடி அரசோ உணவு, உரம் மற்றும் எரிபொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் 10% சதவீதம் வரை வெட்டியிருப்பதோடு, சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியிலும் கணிசமாகக் கைவைத்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தை நலத் திட்டங்களுக்கு கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி 18,588 கோடி ரூபாய். அது இந்த பட்ஜெட்டில் 10,382 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 1,963 கோடியிலிருந்து 1,767 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 39,238 கோடியிலிருந்து 33,150 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அனைவருக்குக் கல்வி இயக்கத் திட்டத்திற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்பொழுது 22 சதவீத நிதி வெட்டப்பட்டு, 22,000 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் இருநூறு ரூபாய் வழங்கும் தேசிய சமூக உதவித் திட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
உழைக்கும் மக்களின், நடுத்தர வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கும் மோடி, அதனை காப்பீடு நிறுவனங்களின் கையில் ஒப்படைத்து, அவற்றின் வருவாயையும் இலாபத்தையும் உத்தரவாதப்படுத்தியிருக்கிறார். இன்னொருபுறமோ, அடிக்கட்டுமானத் திட்டங்களை காண்டிராக்டு எடுத்துச்செய்யும் முதலாளிகள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைக் களைவதை அரசின் பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார். இந்த அரசு யாருக்காக வேலை செய்கிறது, யாருடைய நலனில் அக்கறை செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.
கட்டண உயர்வு, மானிய வெட்டு மட்டுமல்ல, மக்களின் மீது வரி விதிப்பதிலும் மோடி அரசு வக்கிரமான எல்லையைத் தொட்டிருப்பதை சேவை வரி உயர்வு எடுத்துக் காட்டுகிறது. தூய்மை இந்தியா என்ற பெயரில் நடந்துவரும் கூத்தைத் தொடருவதற்கும் மக்கள் மீது சேவை வரியைத் திணித்துள்ள மோடி அரசு, கார்ப்பரேட் சாமியார்கள் நடத்தும் யோகா வகுப்புகளுக்கு வரியை ரத்து செய்திருக்கிறது. செல்வந்தர்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 1,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள செல்வ வரி நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மக்கள் மீது சுமத்தப்படும் மறைமுக வரிகளான சேவை வரி, சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றை உயர்த்தியதன் மூலம் மக்களிடமிருந்து 23,383 கோடி ரூபாயைக் கூடுதலாகக் கறந்துள்ள மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் புதுப் பணக்காரர்களுக்கும் 8,315 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது.
இந்த 8,315 கோடி ரூபாய் வரிச் சலுகை என்பது வெளியே தெரியும் முகடுதான். கட்டுக்கட்டான பட்ஜெட் கோப்புகளின் உள்ளே முதலாளி வர்க்கத்திற்கும் புதுப் பணக்காரர்களுக்கும் அளிக்கப்படும் பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகள் மறைந்துள்ளன என்பதே உண்மை. இக்கும்பல் வெளிநாடுகளிலிருந்து நாய்க்குட்டிகளை இறக்குமதி செய்துகொள்வதற்குக்கூட 250 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை அனுபவிக்கின்றனர்.
மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குக் குறைவாக நிதி ஒதுக்கிவிட்டு (34,699 கோடி ரூபாய்), “நாங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்கும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதில்லை” என எகத்தாளமாகப் பதில் அளித்துள்ள மோடி அரசு, மாலை நேர விருந்துகளில் அழகுப் பதுமைகளாகச் சுற்றி வரும் புதுப் பணக்கார சோம்பேறிக் கூட்டத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து தங்க, வைர நகைகளை இறக்குமதி செய்து கொள்வதற்காக 75,000 கோடி ரூபாய் சுங்க வரிச் சலுகை அளித்திருக்கிறது. இந்த 75,000 கோடி ரூபாய் வரிச் சலுகையை அனுபவிக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுள், மோடிக்கு பத்து இலட்ச ரூபாய் கோட்டு-சூட்டைப் பரிசளித்த கார்ப் நிறுவனமும் அடங்கும்.
இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள், புதுப் பணக்காரர்கள் ஆகியோரின் நலனை முன்னிறுத்தி அளிக்கப்பட்டுள்ள சுங்க வரி, கலால் வரி மற்றும் கார்ப்பரேட் வரிச் சலுகைகளால் இந்த ஆண்டு மைய அரசிற்கு ஏற்படும் வருமான இழப்பு 5,48,451 கோடி ரூபாய். கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள இழப்பு ஏறத்தாழ 42 இலட்சம் கோடி ரூபாய். அக்கும்பலுக்கு அளிக்கப்படும் இந்த அசாதாரணமான வரிச்சலுகைகள்தான் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றன.
இந்த வரிச் சலுகைகளை ஒழித்துக் கட்டாமல் பற்றாக்குறையை ஈடு செய்ய முடியாது. ஆனால், மோடி அரசோ ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமான வரிச் சலுகைகளைத் துண்டுதுண்டாக அளிப்பதற்குப் பதிலாக, அவற்றின் மீது விதிக்கப்படும் வரியை 30% சதவீதத்திலிருந்து 25% சதவீதமாகக் குறைக்கப் போவதாக அறிவித்து, வரிச் சலுகைகளை நிரந்தரமாக்கிவிட முடிவு செய்திருக்கிறது.
எட்டு சதவீதத்திற்கு மேலான பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பது என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான மூலதனம் நிதியாகவும், வங்கிக் கடனாகவும் வாரி வழங்கப்படுகிறது. அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து கடன்களைத் திரட்டிக் கொள்ள அரசே உத்தரவாதம் அளிக்கிறது. அவர்களின் இலாபத்தை உத்தரவாதப்படுத்துவதற்காகப் பழைய சட்டங்கள் கைவிடப்படுகின்றன அல்லது திருத்தப்படுகின்றன.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நெருக்கடிகளின் சுமையைத் தாங்கும் இடிதாங்கிகளாக மக்கள் நிறுத்தப்படுகின்றனர். பட்ஜெட் பற்றாக்குறையை ஈடு செய்ய உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் வெட்டப்படுகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி குறைக்கப்படுகிறது. மக்களின் வரிப் பணத்தால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் நிதி முதலாளிகளுக்கு விற்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் வாராக் கடனைச் சுமக்குமாறு தள்ளப்படுகின்றன.
இந்திய ஆளுங்கும்பல் தனியார்மயம்-தாராளமயத்தைத் தொடங்கி வைத்தபொழுது, “இனி தொழிற்துறையை தனியார் முதலாளிகள் கவனித்துக் கொள்வார்கள்; சமூக நலத் திட்டங்களை அரசு கவனித்துக் கொள்ளும்” என்ற மயக்கு வார்த்தைகளை அள்ளிவீசியது. ஆனால், நடைமுறையிலோ மக்கள் போராடிப் பெற்ற அனைத்துவிதமான சலுகைகளையும், உரிமைகளையும் பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் படையல் போடும் பூசாரியாக அரசு மாறி நிற்பதைத்தான் பார்க்கிறோம். அதாவது, முதலாளி வர்க்கம் அரசின் அரவணைப்பிலும் சலுகையிலும் பாதுகாப்பிலும் காலந்தள்ளுவது முன்னைக் காட்டிலும் இப்பொழுது மிகவும் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் தனியார்மயம்-தாராளமயம் பெரும் தோல்வியைத் தழுவிவிட்டது என்பது மட்டுமல்ல, அந்த வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், தூக்கியெறியாமல் மக்களுக்கு விடிவு காலம் இல்லை என்பதும் நிரூபணமாகிவிட்டது.
மோடி அரசின் 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, “எட்டு சதவீத வளர்ச்சியைச் சாதிக்கக்கூடிய புத்திசாலித்தனமான, புதுமையான, ஆக்கபூர்வமான பட்ஜெட்” என இந்தியத் தரகு முதலாளிகளும், ஊடகங்களும் புல்லரித்துப் போய் புகழ்ந்துள்ளன. “இந்தியாவில் அபரித வளமாக உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், தொழிற்சாலைகள் வர வேண்டும். தொழிற்சாலைகள் வர வேண்டுமென்றால் சாலை, ரயில் போக்குவரத்து, விமான சேவைகள், மின் நிலையங்கள் அடங்கிய அடிக்கட்டுமானத் துறையில் காணப்படும் தேக்கத்தை உடைக்க வேண்டும்” என்ற உபாயத்தோடு மோடி அரசு தமது பட்ஜெட்டைத் தயாரித்திருப்பதாகத் தரகு முதலாளிகளும் ஊடகங்களும் பட்ஜெட்டைப் பிரித்து மேந்து, அதில் புதைந்துள்ள வளர்ச்சியின் இரகசியத்தைக் கண்டுபிடித்துக் கூறி வருகின்றனர்.
“இதென்னடா, கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கும் கதையாக மோடியின் உபாயம் இருக்கிறது” என வாசகர்கள் கருதலாம். அப்படி “சீப்பாக” மோடியின் புத்திசாலித்தனத்தை யாரும் எடை போட்டு விடக்கூடாது என்பதற்காகவே, “இந்த பட்ஜெட்டைப் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் பொருளாதார ஞானம் இருக்க வேண்டும்” என தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர்வாள் “சீரியசாக” தலையங்கம் தீட்டி, சாதாரண வாசகர்களைத் திகிலடைய வைக்கிறார். அய்யர்வாள் குறிப்பிடும் இந்தப் பொருளாதார ஞானம் எப்படிபட்டது தெரியுமா?
“கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரியை அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருப்பதை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அதீதமான சலுகை என வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்ற கணக்கில் விமர்சிக்கிறார்கள். ஆனால், இது சலுகையல்ல” எனக் குறிப்பிடும் வைத்தியநாத அய்யர் உள்ளிட்ட பொருளாதார புலிகள், “ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரி அதிகமாக இருக்கிறது. வரி அதிகமாக இருப்பதால்தான் வரி ஏய்ப்பும் அதிகமாக நடைபெறுகிறது. வரியைக் குறைத்துவிட்டால் வரி ஏய்ப்பும் குறைந்துவிடும் எனக் கணக்கு போட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. மேலும், வரி குறைவாக இருந்தால்தான், முதலீடு அதிகமாக வந்து வேலைவாய்ப்பும் பெருகும்” என வாதிட்டு ‘ஞானசூன்யங்களுக்கு’ விளக்கியுள்ளனர்.
வரியே இல்லாவிட்டால் வரி ஏய்ப்பே இருக்காது என்பதை இந்தப் புலிகள் அடுத்த முறை நமக்கு விளங்க வைக்கக்கூடும். அதனால்தான் என்னவோ, கார்ப்பரேட் நிறுவனங்களும் பன்னாட்டு ஏகபோக குழுமங்களும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதைக் கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது தடுப்பதற்காக முந்தைய காங்கிரசு ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பொது வரிஏய்ப்பு தடுப்புச் சட்டத்தை (General Anti Avoidance Rules) இந்த பட்ஜெட்டிலும் அமலுக்குக் கொண்டுவராமல், அதனை நடைமுறைப்படுத்துவதை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திப் போட்டிருப்பதாக அறிவித்துவிட்டது, மோடி அரசு.
பொதுப் பணத்தை, நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்களை, பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் படையல் போடுவதன் வழியாக ‘வளர்ச்சியை’க் கொண்டுவருவதுதான் குஜராத் மாடல். இதனை இந்த பட்ஜெட் வழியாக நாடு முழுவதும் காங்கிரசை விஞ்சிய வெறியோடு நடைமுறைப்படுத்தத் துணிந்திருக்கிறார், மோடி. இந்த பட்ஜெட், அடிக்கட்டுமானத் துறை வளர்ச்சி எனத் திரும்ப திரும்ப பேசுவதை நாட்டின் பொதுச் சொத்துக்களுக்கு நேரவுள்ள கேடு என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.
மோடி அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த வருமான வரிச் சலுகையின் மதிப்பு மட்டும் 62,399 கோடி ரூபாய். இதோடு, சுங்க வரி மற்றும் கலால் வரிகளில் அளிக்கப்பட்ட சலுகைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், கடந்த ஆண்டு மைய அரசுக்கு ஏற்பட்ட வரி இழப்பு 5,48,451 கோடி ரூபாய். அரசுக்குச் சேர்ந்திருக்க வேண்டிய இந்தப் பிரம்மாண்டமான தொகையில் பெரும்பகுதியைச் சுருட்டிக் கொண்டவர்கள் இந்தியத் தரகு முதலாளிகள், பன்னாட்டு ஏகபோக முதலாளிகள் மற்றும் புதுப் பணக்காரர்கள்தான். 5,48,451 கோடி ரூபாய் பெறுமான இவ்வரிச் சலுகைகள் இந்த பட்ஜெட்டிலும் தொடர்கின்றன. ஆனாலும், இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் அடிக்கட்டுமானத் துறையில் முதலீடு செய்வதற்குத் தமது பணப்பெட்டியைத் திறந்து வைக்கவில்லை. அந்தப் பொறுப்பையும் மோடி அரசே தனது கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மட்டும் மக்களின் வரிப் பணத்திலிருந்து 70,000 கோடி ரூபாய் அடிக்கட்டுமானத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டங்களில் அரசின் கூட்டாளியாக பங்கேற்கும் தனியார் முதலாளிகளுக்கு குறைந்த வட்டியில் நீண்ட காலக் கடன்களை அளிப்பதற்காக 20,000 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய முதலீட்டு நிதியமொன்றை உருவாக்கப் போவதாகவும் பட்ஜெட்டில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அடிக்கட்டுமான திட்டங்கள் அனைத்தையும் அரசு – தனியார் கூட்டின் (Public – Private Partnership) வழியாகத்தான் நிறைவேற்ற வேண்டும்; அதன் வழியாகத்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற கொள்கையில் மன்மோகன் சிங்குக்கும் மோடிக்கும் இடையே கடுகளவுகூட வேறுபாடு கிடையாது. எனினும், இத்திட்டங்களுக்கான தேவையான நிதியை, கடனை ஏற்பாடு செய்து கொடுப்பதோடு அரசு ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் இடர்ப்பாடுகள், சவால்கள் அனைத்தையும் அரசுதான் பொறுப்பேற்றுச் சமாளிக்க வேண்டும் என பட்ஜெட்டில் அறிவித்து, காங்கிரசையும் விஞ்சி நிற்கிறார் மோடி.
இந்தப் பொறுப்பினை நிறைவேற்றும் நோக்கில்தான், விவசாயிகளின் சம்மதமின்றி அவர்களின் நிலங்களை அபகரித்துக் கொள்ள வசதியாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. இதனின் தொடர்ச்சியாக காண்டிராக்டு சட்டத்திலும் திருத்தங்களைச் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது. மேலும், அடிக்கட்டுமானத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவது என்ற போர்வையில் அதில் பங்கேற்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் அனுமதிகளைப் பெறுவதற்குக் காத்திருக்கத் தேவையில்லை என்ற விதத்தில் அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களில் புதிய நடைமுறையைப் புகுத்தப் போவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவில் தயாரிப்போம்” (மேக் இன் இந்தியா) திட்டம் மூலம் இந்தியாவை உலகின் உற்பத்தி மற்றும் தொழில் கேந்திரமாக மாற்றப் போவதாகச் சவால் அடித்து வருகிறார், நரேந்திர மோடி. ஆனால், அவரது பட்ஜெட்டோ, தொழிலே தொடங்காமல், பெரிய முதலீடும் செய்யாமல், நிலம், நிலக்கரி உள்ளிட்ட இந்தியாவின் வளங்களைக் கேட்பாரற்றுக் கொள்ளையடிக்கும் வாப்பை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதாவது, “மேக் இன் இந்தியா” என்ற முகமூடி கிழிந்து, “லூட் இந்தியா” (Loot India இந்தியாவைக் கொள்ளையடிப்போம்) என்ற உண்மை அம்பலத்திற்கு வந்துவிட்டது.
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கி.மீ. தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைப்பது, ஒரு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவது, ஒரு இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து மெகா மின் திட்டங்களை அமைப்பது, நகர்ப்புறங்களில் 2 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் நான்கு கோடி வீடுகளும் கட்டிக் கொடுப்பது என்பவை யாவும் பி.பி.பி. வழியாகத்தான் நிறைவேற்றப்படும் என்பதால், பொதுப் பணத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பெரும் கறி விருந்து படைக்க மோடி அரசு தயாராகி விட்டது என்றே கூறலாம்.
லஞ்சத்தை தட்டிக்கேட்டால் அரசு ஊழியர் வேலையைத் தடுக்கும் குற்றமாம்! உசிலை நகராட்சி, காவல்துறை, நீதித்துறைகளின் புதிய இலக்கணம்!
கடந்த 10-04-2015-ம் தேதி உசிலை பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி துணைச்செயலாளர் தோழர் சந்திரபோஸ் மற்றும் தோழர்கள் பாண்டி, ரவி, முருகன், ஆண்டவர், ஆசை, திருமுருகன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நகராட்சி ஆணையாளரிடம் குடிநீர் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைக்குச் சென்றனர்.
நகராட்சி ஆணையர் உசிலையில் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.
‘ஆணையர் ரொம்ப கறாரானவர், குடிநீர் இணைப்புக்கு அரசு கட்டணம் ரூ 3,500- என்றால் இவர் ரூ 30,000- மட்டுமே கேட்பார்’.
ஆரோக்கியசாமின்னு பேர் வச்சிருப்பான் ஆரோக்கியமே இருக்காது! லட்சுமி-ன்னு பேரு இருக்கும் ஏழ்மைக்கு எடுத்துக்காட்டா இருக்கும். சரஸ்வதி-ன்னு பேரு இருக்கும் படிப்பு வராது. கோடீஸ்வரன்னு பேர் இருக்கும் ஆயிரத்தக்கூட கண்ணுல பார்த்திருக்க மாட்டான்.
அது மாதிரி உசிலை நகர்மன்றத்தலைவி பேரு பஞ்சம்மா. இவங்க பதவிக்கு வந்த உடனே பஞ்சம்னா என்ன? அப்படிங்கற மாதிரி காரென்ன? வீடென்ன? சொத்தென்ன? அப்படி செல்வச்செழிப்பு.
பழைய சரஸ்வதி சபதம் திரைப்படத்தில கே.ஆர்.விஜயா பிச்சைக்காரியாக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்கறப்போ, யானை மாலை போட்டு நாட்டுக்கு ராணியாகி அது பண்ற அளப்பற, அதிகாரம்…
அதுமாதிரி ஒத்த டீ யார் வாங்கி தருவா என உசிலம்பட்டி தாலுகா ஆபீஸ் முன்னாடி தொன்னாந்து கிடந்த பஞ்சம்மாளை உசிலம்பட்டி மக்கள் பெரும்பாலானோருக்கு தெரியும். அந்த பஞ்சம்மா இன்னைக்கு பதவி வந்ததும்…இது பண்ற அளப்பற, அதிகாரம்…
எருமை மாட்டுக்கு சாப்பிடுற இடம் தெரியுமா? இல்ல கக்கா(ஆய்) போற இடம் தான் தெரியுமா? எங்க புல் கெடந்தாலும் தின்னும். அதுமாதிரி இந்த நகர் மன்ற தலைவிக்கு காசு எப்படி வந்தாலும் சரிதான்.
இதுக்கு நகராட்சி ஆணையாளரும் உடந்தை. இவரு பேரு நம்ம மக்களுக்கான விடுதலை வீரன் மருதுவின் பேரு. ஆனா மருது எதிர்த்து நின்ற ஆங்கிலேயர் மாதிரி உழைக்கும் மக்கள் பணத்தை திங்க அப்படி ஆசைப்படுறாரு.
இவருகிட்ட போய் (அதாங்க பஞ்சம்மாவோட சொம்பு ஆணையரு) குடிதண்ணீர் இணைப்பு பத்தி கேட்டா… புதிய குடிநீர் இணைப்பு சீனியாரிட்டி படிதான் கொடுப்பாராம். நல்ல விசயம். ஆனா அரசு நிர்ணயித்த ரூ 3,500-க்குப் பதில் ரூ 30,000- கொடுத்தா நீங்கதான் சீனியாரிட்டி.
குடிநீர் இணைப்புக்கு மனுகொடுத்து 7 நாளில் இணைப்பு வழங்க அரசு விதி. ஆனா ரூ 3,500- மட்டும்தான் கட்டுவேன்னு நீங்க ஒத்த கால்ல நின்னா 7 வருஷம் ஆனாலும் இணைப்பு தரமாட்டாராம். “உங்களுக்கு என்ன தெரியுமோ பார்த்துக்கோங்க” என கறாரா சொல்லிப்புட்டாரு.
அப்ப அவரு முகத்துலதான் என்ன ஒரு தேஜஸ் பொலிவு. ஊருப்பய துட்ட தின்னு வாழ்றவனுக்கு பூரா முகம் என்னவோ பொலிவாத்தான் இருக்குது.
அப்புறம் தோழர்களின் வாக்குவாதம், நகராட்சி முற்றுகையைத் தொடர்ந்து, தப்பித்து ஓடிய ஆணையர் டவுன் ஸ்டேசனில் டி.எஸ்.பி-யை வரச்செய்து வேலையை தடுப்பதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தோழர் ரவி மீது புகார் கொடுத்தார்.
டி.எஸ்.பி.சரவணக்குமார் மிருக வைத்தியத்துக்கு வாத்தியாராவோ, டாக்டராவோ இருந்தாராம். இடையில பரீட்சை எழுதி, ‘இந்தப் பதவில நல்லா கல்லாக் கட்டலாம், அதிகாரம் பண்ணலாம்’ என இந்தத் தொழிலுக்கு வந்தவராம்.
இவரு ஆதிக்க சாதியினரின் விமலாதேவி படுகொலையில் சில லகரங்கள் கல்லாகட்டி. ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாய் வலம் வந்து தலித் மக்கள் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள், பேனர் வைக்க என அனைத்திலும் அனுமதி மறுப்பவர். இவர ஏற்கனவே வி.வி,மு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டங்களில் அம்பலப்பட்டுள்ளார்.
அதனால் மெகா கடுப்பில் இருந்த இவரும் தோழர் ரவி கொடுத்த புகார் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு ரவிமேல் மட்டும் வழக்கு பதிவு செய்தார், அரசு ஊழியர் வேலையை தடுப்பதாக.
ஆணையர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வர கூடியிருந்த மீதி தோழர்கள், “கைதுசெய்! கைதுசெய்! லஞ்சம் வாங்கும் ஆணையரை கைதுசெய்!” என முழக்கமிட்டு முற்றுகையிட்டனர்.
அப்போது ஆணையர் முகத்தில் தேஜஸ் பொலிவு எல்லாம் இல்ல. முகத்துல மலத்தை கரைச்சு ஊத்துன மாதிரி சவக்களையோடு பேயறைந்தது போல பேசாம.. நின்றார். உடனே, போலீசார் ஆணையருக்கு அபயம் அளித்து தோழர்களை கைது செய்தனர்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் டி.எஸ்.பி-யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உச்சநீதி மன்ற உத்தரவுப்படி எதிர் மனுதாரரின் மனுவையும் ஏற்று நீங்கள் ஆணையைர் மீது வழக்குப் பதிவு செய்வதுதானே சரி” எனக்கேட்க, “அதெல்லாம் முடியாது கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள்” என நகராட்சி ஆணையருக்கு சாதகமாக நடந்து கொண்டார் டி.எஸ்.பி.
நீதிமன்றத்தில் தோழர்களை ஆஜர்படுத்திய போது ம.உ.பா.மைய வழக்கறிஞர் நடராஜன், நீதிபதியிடம், “ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை பெறும் வழக்குகளில் சிறைச்சாலையில் அடைக்க வேண்டியதில்லை, வெளியில் விடலாம் என உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது” என வாதிட்டார். “வெளியில் விடாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்” என்றார்.
“காவல்துறை மீது வழக்கு தொடருங்கள்” என்றார் நீதிபதி.
“நீதித்துறை மீதும் வழக்குத் தொடரலாம்” என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது என்றார் நடராஜன்.
“வழக்கு தொடருங்கள். எதிர் கொள்வேன்” என்ற நீதிபதி சட்டத்தை மதிக்காமல் தோழர்களை சிறைக்கு அனுப்புவதே நோக்கமாக வாதத்தை நிராகரித்தார். தோழர்கள் சிறைக்கு செல்வது உறுதியானது.
ஆம்!
இனப்படுகொலை செய்தவர் பிரதமர்!
மக்கள் சொத்தை கொள்ளையடித்து முதல்வரை பின்னிருந்து இயக்குபவர் மக்கள் முதல்வர் அம்மா!
ஆதிக்கசாதிக்கு மட்டுமே வக்காலத்து வாங்குபவர் உசிலை எம்எல்ஏ!
அப்புறம் நீதிபதி மட்டும் எந்த பக்கம் நிக்க முடியும்.
இதைத் தொடர்ந்து
பிழைப்புக்காக ஆந்திரமாநிலம் சென்ற 20 தமிழக கூலித் தொழிலாளர்களை நரவேட்டையாடிய ஆந்திரபோலீசைக் கண்டித்தும்!
உசிலம்பட்டியில் குடிநீர் இணைப்பு கேட்டதற்காக 8 விவிமு தோழர்கள் மீது பொய் வழக்கு போட்ட தமிழக போலீசைக் கண்டித்தும்!
ஒட்டுமொத்த அரசும் தன் கடமையை செய்ய மறுக்கிறது மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறிவருகிறது என்பதை வலியுறுத்தி 11.04.2015-ம் தேதியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைவகித்த உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி தனது உரையில்…
“மிகப்பெரிய அளவில் நடக்கின்ற இயற்கை வளக்கொள்ளையின் மோதலில் பலிகடாவாக ஆக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரையும் திருட்டுத்தனமான தொழிலுக்கு தள்ளிய பிழைப்புக்கு வழிகாட்டாதது தமிழகஅரசு. இதைத் திட்டமிட்டு நடத்தியது ஆந்திர போலீசும், சந்திரபாபுநாயுடு அரசும்தான். இந்தப் படுகொலை என்பது மக்களை ஆளத் தகுதியிழந்த அரசு, ஆளும்வர்க்கத்தின் வெளிப்பாடாகத்தான் நாம் பார்க்க வேண்டும்,
அடிப்படை வசதிகளுள் ஒன்றான குடிநீரை மக்களுக்கு வழங்க வக்கில்லாத உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் மருது, குடிநீர் இணைப்புக் கேட்டு சென்ற எமது தோழர்கள் 8 பேர் மீது டி.எஸ்.பி.சரவணக்குமார் உதவியுடன் கொலைமிரட்டல், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் பொய்வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியுள்ளார்.
பொதுமக்களுடன் சேர்ந்து, “லஞ்சம் கொடுக்க முடியாது நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் உடனடியாக இணைப்பு வழங்குங்கள், உங்களுடைய கடைமையை நிறைவேற்றுங்கள்” என்று பலமுறை சென்று நேர்மையாக கேட்டதற்கு பணிசெய்ய மறுத்த ஆணையாளர் திட்டமிட்டு முறைகேடு செய்து விட்டு, “நாங்கள் இப்படித்தான்” என்று திமிராக நடந்து கொள்கிறார்.
லஞ்சம் வாங்கி வேலைபார்ப்பவனும் பொண்டாட்டியை கூட்டிக்கொடுத்து காசு பார்ப்பவனும் ஒன்றுதான். இந்த ஈனச்செயலை உழைக்கும் வர்க்கத்தினரும் மக்களும் வி.வி.மு தோழர்களும் செய்யமுடியாது. ‘லஞ்சம் வாங்கித்தான் வேலைபார்ப்போம்’ என்றால் நாங்கள் லஞ்சம் கொடுக்கமுடியாது. இனிமேல் உசிலம்பட்டியில் லஞ்சம் என்று கேட்டால் செருப்படிதான் கொடுப்போம்”
தோழர் தென்னரசு தனது உரையில்…
“ஒரு ஊரில் ஆடு திருடிய வழக்கில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. பின்பு அந்த வழக்கிற்கு விசாரணை செலவுக்கு ரூ. 25,000- கேட்டது போலீசு. ஆடு விலையே அவ்வளவு போகாது என்று தெரிந்து புகார் செய்தவரே சமரசமாகி பின் வாங்கினாலும் ரூ 25,000- கேட்டு நிர்ப்பந்திக்கும் போலீசின் புத்திதான் ஆந்திராவில் 20 பேரை கொலைசெய்த என்கவுண்டர் போலீசின் புத்தி.
ஒரு பிரச்சனைக்கு இரு பிரிவினரிடமும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றமே சொல்லி இருந்தும் இந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி.சரவணக்குமார், ஆணையாளருக்கு எதிராக எமது தோழர்கள் கொடுத்த புகாரை பதிய மறுக்கிறார். சட்டத்தை மீறுபவர்கள் யார் என்று மக்களே தெரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கான அதிகாரத்தை படைப்போம், ஒன்றிணைவோம்”
தேனி மாவட்ட வி.வி.மு செயலாளர் தோழர் மோகன் தனது உரையில்…
“செம்மரத்தை வெட்டி கப்பலிலும், விமானத்திலும் ஏற்றி காவல்துறையின் கண்காணிப்பில் கடத்தப்படுகிறது. கணக்கு காட்டுவதற்காக குறைந்த மரங்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை பிடித்து கணக்கு காட்டி விட்டு மற்ற வாகனங்களை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது. உழைக்கும் மக்களை பலிகடாவாக்கும் செயல்தான் இந்த போலிஎன்கவுண்டர்.
காந்தா ராவே! கூலிக்கு வந்த தொழிலாளர்களிடம் பாயும் உன் தோட்டாக்கள், குற்றத்திற்கு காரணமான அமைச்சர்கள், மாபியாக்கள் மார்பில் தோட்டாக்கள் பாயுமா? கொள்ளைக்காரர்களை தப்பிக்க விட்டு கூலிக்கு வந்தவர்களை பலியாக்குவது அப்பாவி உழைப்பாளிகளுக்குச் செய்யும் துரோகம்.
இந்த துரோகச் செயலை கண்டிக்காமல் ஹனிபா இறந்த துக்க நிகழ்ச்சிக்கு கண்ணீர்விடும் கருணாநிதி இதைப்பற்றி அழுத்தம் கொடுப்பதே இல்லை. கொள்ளைக்காரி ஜெயா இது பற்றி வாய்திறப்பதே இல்லை.
பிறகு ஏன் தி.மு.க., அ.தி.மு.க பின்னால் செல்லவேண்டும்? மக்களே சிந்திக்கவேண்டும்!
இந்த நடவடிக்கைகளுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்”
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்ட செயலாளர் லயனல் அந்தோனிராஜ் தனது உரையில்…
“கூலி தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்டதில் போலீசு, எங்களை கற்களாலும் கத்தி கோடாரியாலும் தாக்க வந்த்தால் சுடநேர்ந்த்து என்று கூறுவது மோசடி.
உளவியல் ரீதியாக கற்களை கத்தியை கோடாரியை வைத்திருப்பவன் 200 மீட்டர் துரம் நின்று சுடக்கூடிய துப்பாக்கியை எதிர்த்து எப்படி சண்டையிட முடியும்? எப்படி துணிந்து வருவார்கள்? போலீசின் திரைக்கதையை அப்படியே வாந்தி எடுத்திருக்கின்றன பத்திரிகைகள். ஒரு சில பத்திரிகைகள் துணிந்து அம்பலப்படுத்தி உள்ளது பாராட்டுக்குரியது.
வனத்துறைக்கு செம்மர மதிப்பு தெரியும். கூலித்தொழிலாளிக்கு கூலி வாங்கி வேலை செய்வதை தவிர இதன் மதிப்பு, விற்பது, லாபம் பார்ப்பது எதுவும் தெரியாது. அனைத்தையும் செய்வது அரசும், வனத்துறையும், ஆளும் வர்க்க மாபியாக்களும்தான். மாபியாக்களின் பிரச்சனையில் பேருந்தில் பயணம் செய்த அப்பாவி கூலித்தொழிலாளர்களை அரசியல் லாபத்திற்காக குறிப்பாக இயற்கை வளக் கொள்ளையை பங்கு போடுவதில் சந்திரபாபு நாயுடு என்ற நாயுடு ஆதிக்க சாதிக்கும், ஒய்.எஸ்.ரெட்டி என்ற ரெட்டி ஆதிக்க சாதிக்கும் நடந்த அதிகார பகிர்வில் ரெட்டியை பணிய வைக்க நடந்த திட்டமிட்ட படுகொலை.
இத்தகைய படுகொலைகள் இங்கு மட்டுமல்ல. எல்லாத்துறைகளிலும் ஜனநாயக விரோதமாக நடக்கிறது. கிரானைட் கொள்ளை பிஆர்பி, தாதுமணல்கொள்ளை, வைகுண்டராஜன், ஆற்றுமணல்கொள்ளை என்று இயற்கையை வரைமுறையற்று கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு எதிராக நாம் ஒன்று திரண்டு போராடி ஆளத்தகுதியிழந்த அரசுக்கு எதிராக மாற்று அதிகாரத்தை நிறுவும்போது சரியான தீர்வு வரும்.
உச்சநீதி மன்றத்தின் உத்தரவை மதிக்காத உசிலை டிஎஸ்பி சரவணக்குமார் நகராட்சி ஆணையாளர் லஞ்ச ஊழலாளியுடன் இணைந்து பொய் வழக்கு போட்டு 8 தோழர்களை சிறையிலிட்டது லஞ்சத்திற்கு துணைபோவது என்பதோடு ஜனநாயகப் படுகொலை.
இந்த டி.எஸ்.பி வெட்னரி டாக்டர் ஆக இருந்து வந்தவர். ஒரு வேளை டாக்டராகவே இருந்திருந்தால் பல கால்நடைகளை படுகொலை செய்திருப்பார்” என்று தனது உரையை முடித்தார்.
15-04-2015-ம் தேதி அன்று வழக்கறிஞர்கள் சிறை சென்ற 8 தோழர்களை ஜாமீனில் எடுத்தார்கள். 16-04-2015ம் தேதியில் சிறைசென்ற 8 வி.வி.மு தோழர்களும் விடுவிக்கப்பட்டார்கள்.
என்னவோ நெருப்பை பொட்டலம் கட்டி வச்சுட்டா…தோழர்களை சிறைக்கு அனுப்பி்ட்டா…இது முடிவல்ல ஆரம்பம்.
இனி புதிய உற்சாகத்தோடு நகராட்சியின் லஞ்சத்திற்கு எதிராய் வீறு கொண்டெழுவோம்!
இரக்கமற்ற கொடூரர்கள், போலீஸ் சீருடை அணிந்த மிருகங்கள், வழக்கிலிருந்து தப்பிக்கும் வழி தெரிந்தவர்கள் – இவை புதுச்சேரி போலீசார் ஆறு பேரின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் கூறியுள்ள கருத்துக்கள்.
14 வயது பள்ளிச் சிறுமிகளை வன்புணர்ச்சிக்குள்ளாக்கி, அவர்களை விபச்சாரத்திலும் தள்ளிய கொடூர மிருகங்கள்.
14 வயது பள்ளிச் சிறுமிகளை வன்புணர்ச்சிக்குள்ளாக்கி, அவர்களை விபச்சாரத்திலும் தள்ளிய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், கான்ஸ்டபிள்கள்தான் அந்தக் குற்றவாளிகள். இவர்கள் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதமே சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டனர். ஆனால் கடந்த 6 மாதங்களாக இவர்களைப் பிடிக்க முடியவில்லையென்று கதையளந்து வந்தது புதுவை போலீசு. தற்போது நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் மறுக்கவே, வேறு வழியின்றி இவர்களைத் தலைமறைவுக் குற்றவாளிகள் என்று அறிவித்து, பிடித்துக் கொடுக்கும் பொதுமக்களுக்கு பரிசு என்றும் அறிவித்திருக்கிறது, இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி.
சென்ற ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியன்று, புதுச்சேரியில் 14 வயதான இரண்டு மாணவிகள், தங்களை ஒரு கும்பல் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளியிருப்பதாகக் கூறி, குழந்தைகள் ஹெல்ப்லைன் என்ற அமைப்பிடம் தஞ்சம் புகுந்தனர். போலீசு அதிகாரிகளும் விபச்சாரத் தரகர்களும் அடங்கிய ஒரு கும்பல், தங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, வல்லுறவு கொண்டு அதனை வீடியோ எடுத்து, இணையத்தில் பரப்புவோமென மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதுடன், சக மாணவிகளையும் அழைத்து வரவைத்து, அவர்களையும் விபச்சாரத்தில் தள்ளியிருப்பதாகப் புகார் செய்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு குழந்தையும் பிறந்து அது காப்பகத்தில் இருக்கிறது.
இப்புகார் மீது போலீசு நடவடிக்கை எடுக்காததால், மகளிர் நலத்துறையிடம் அச்சிறுமிகள் புகார் செய்தனர். பின்னர் பல்வேறு அமைப்புகள் போராடின. வேறுவழியின்றி சி.பி. சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. யோக்கிய சிகாமணிகளாக சித்தரிக்கப்படும் சி.பி.சி.ஐ.டி. போலீசோ, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 15 போலீசாரின் குற்றங்களை மறைத்து, அவர்கள் விபச்சாரக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்று மட்டும் வழக்குப் பதிவு செய்தது. 15 போலீசாரின் புகைப்படங்களைச் சிறுமிகளிடம் காட்டியதாகவும், தங்களை வல்லுறவு செய்த போலீசார் என்று அவர்களில் யாரையும் அச்சிறுமிகள் அடையாளம் காட்டவில்லையென்றும் சொல்லி, குற்றவாளிகளைத் தப்பவைக்க முயன்றது. இதனை நிராகரித்த உயர்நீதிமன்றம், அடையாள அணிவகுப்பு நடத்துமாறு உத்தரவிட்டது. பிறகு, 8 போலீசாரை அச்சிறுமிகள் அடையாளம் காட்டினர். இவர்களில் 6 பேர்தான் இப்போது தலைமறைவாம்!
ஆறு பேரில் ஒருவனான ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ராஜாராமன், அந்தியூர் விஜயா வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, பின்னர் மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டவன். போலீசின் குற்றத்தை போலீசே விசாரிக்கும் இந்த நாடகத்தில் நாளை இவர்களும் விடுவிக்கப்படலாம்.
கோவையில் ஒரு மார்வாடி சிறுமியை வல்லுறவு செய்து கொன்ற ஓட்டுனருக்கு என்கவுன்டர் என்றால், இந்தக் காவல் நாய்களை என்ன செய்வது? நினைக்கவே நெஞ்சு நடுங்கும் குற்றத்தைக் கூசாமல் செய்திருக்கும் அருவருக்கத்தக்க இந்த விசப்பூச்சிகளை என்றைக்கு நசுக்குவது? கிரிமினல்களின் பிறப்பிடமான போலீசு நிலையத்தைக் காவல் நிலையம் என்றும், காக்கி உடைக் கிரிமினல்களைச் சட்டம் – ஒழுங்கின் காவலர்களென்றும், இன்னமும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்களே, அத்தகைய குற்றக் கூட்டாளிகளை என்ன செய்வது?
______________________________ புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________
இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புடைய கிரானைட் கொள்ளையை விசாரித்து வரும் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயம்
சகாயம் : அதிகார வர்க்க சட்டவாதப் போலி போர்வீரன்!
மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் எனப்படும் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புடைய கிரானைட் கொள்ளையை விசாரித்து வரும் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயத்துக்கு இரண்டாவது கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுவும் வழக்கம்போல ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது கொலை மிரட்டல் வழக்கு என்னவானது என்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை. சகாயத்தைக் கிரானைட் கொள்ளைக் குற்றவாளிகள் கொலை செய்ய முயலுவதாக திருச்சி சிறைக் கைதிகள் பேசிக்கொண்டதாக அவரது குடும்பத்திற்குத் தகவல் கிடைத்ததாகவும், முறைப்படி அரசிடம் அவருக்குப் பாதுகாப்புக் கோரியதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கெல்லாம் அஞ்சாமல் அவர் துணிச்சலாகத் தனது கடமையில் கண்ணாகப் பணியாற்றுவதைப் போன்ற தோற்றம் முதலாளிய ஊடகங்களால் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், சகாயமோ கத்திமேல் நடப்பவரைப்போல “சர்க்கஸ்” காட்டுகிறார். அவர் இப்படிச் செய்வது “அஞ்சாத துணிச்சல்” என்று சொல்வதா, இல்லை அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற முட்டாள்தனமென்று சொல்வதா? விரைவிலேயே தெரிந்துவிடும்!
இதையே வேறு கோணத்திலும் பார்க்கலாம். நெல்லையில் வேளாண்துறை அதிகாரி மற்றும் வட்டாட்சியர் ஆகிய இருவர் அடுத்தடுத்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். கர்நாடகா, கோலாரில் அரசு நிர்வாகப் பணி அதிகாரி மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். கேரளாவில் இன்னொரு அதிகாரி இரு மகன்களோடு கொல்லப்பட்டார். பீகாரில் ஊழலுக்கு எதிராகப் போராடிய பொறியாளர்கள் மஞ்சுநாத் சண்முகம், சத்யேந்திர துபே ஆகியோர் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். குஜராத், ராஜஸ்தான், மராட்டியத்தில் தகவலறியும் சட்டத்தின் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டுவர முயன்ற சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் சிலரும் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இவையெல்லாம் ஒருசில எடுத்துக்காட்டுகள்தாம். உ.பி., ம.பி., அரியானாவையும் ஆந்திராவையும் சேர்த்தால் இன்னும் பல கொலைகள், தற்கொலைகள் நடந்துள்ளன. எல்லாம் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களால் (மஃபியாக்களால்), கூலிப்படைகளை வைத்து நடத்தப்பட்டவை. தமிழ்நாடு இதற்கு விதிவிலக்கு அல்ல. பாலாறு, காவிரி, தாமிரபரணி மணற்பரப்புகளில் களப் பலியானவர்களைப் பார்த்தாலே இந்த உண்மை புரியும்.
இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களின் கட்டுப்பாட்டுக்குள், ஆதிக்கத்தின் கீழ் அரசு நிர்வாகம் முழுவதும் போய்விட்டது.
சகாயம் எந்த முறைகேடுகள் மீது விசாரணை நடத்துகிறாரோ அவற்றைச் செய்தவர்கள், அவர்களின் அரசியல் கூட்டாளிகள், அவர்களின் கிரிமினல் குற்றப் பின்னணிகள் பற்றிய உண்மைகள் அரசியல் அறிந்த யாரும் அறியாத இரகசியங்கள் அல்ல. மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் மட்டுமல்ல; நாடு முழுவதுமுள்ள நிலம், கடல், ஆறு, காடுகள், மலைகளில் குவிந்துள்ள கனிமங்கள், தாதுப் பொருட்கள், எரிபொருட்கள் போன்ற பொதுமக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களின் கட்டுப்பாட்டுக்குள், ஆதிக்கத்தின் கீழ் அரசு நிர்வாகம் முழுவதும் போய்விட்டது. இந்தக் கொள்ளைகளுக்குப் பாதுகாப்பாகவும் அவற்றை எதிர்த்துத் தன்னெழுச்சியாகப் போராடும் மக்களை ஒடுக்குவதாகவும் அரசுக் கட்டமைப்பு முழுவதும் மாறிவிட்டது.
நாட்டின் இந்த உண்மை நிலைமைகளோடு, சகாயம் விசாரணையில் இருந்து தொகுக்கப்பட்டிருக்கும் பின்வரும் செய்திகளைப் பொருத்திப் பாருங்கள்:
பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்களின் மோசடிக்கு மூல காரணமே அதிகாரிகள்தான் என மக்கள் பலரும் சகாயத்திடம் குற்றம்சாட்டினர். பணியில் இருக்கும் வருவாய்த் துறையினர் ஆவணங்களைத் திருத்தவும், கிரானைட் கற்களை வெட்டிப் பாதுகாக்கவும் துணை போகின்றனர். பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் வருவாய்த் துறை, டாமின் அதிகாரிகள் பி.ஆர்.பி. நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்து விடுகின்றனர். எப்படியெல்லாம் அரசு நிலத்தை மோசடி செய்யலாம் என இவர்கள்தான் பி.ஆர்.பி.க்கே யோசனை கூறுகின்றனர். அரசு நிலத்தை வளைத்துப் போடுவது எப்படி, அரசுக்கு தெரியாமல் மோசடியாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது எப்படி என கிரானைட் கொள்ளைக்கு அனைத்து வழிகளிலும் இந்த அதிகாரிகள்தான் உதவியுள்ளனர். 2012-ம் ஆண்டுவரை இதை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றனர்.
கீழையூர் அருகே ரெங்கசாமிபுரம் என்ற கிராமத்தைத் தடம் தெரியாமல் அழித்துவிட்டு, அந்த இடத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக கிடைத்த புகாரின் பேரில் அங்கு சென்று சகாயம் ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்கள் சகாயத்திடம் கூறும்போது, கிரானைட் நிறுவனங்களுக்கு நாங்கள் விரும்பி நிலங்களை கொடுக்கவில்லை. மிரட்டியதால் வேறு வழியின்றி கொடுத்துவிட்டோம். தர மறுத்தவர்களின் நிலங்களில் கற்களைக் கொட்டினர். குளங்களுக்கு நீர் செல்லும் வாய்க்கால், பாசனக் கிணறுகளிலும் மண்ணைப்போட்டு மூடிவிட்டனர். இதுபற்றி நாங்கள் அளித்த புகாரை காவல், வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த அழிவுக்கு அரசு அதிகாரிகள்தான் முக்கிய காரணம். மேலூர் தாலுகா அலுவலகத்தில் பி.ஆர்.பி. குடும்பத்தினர் பெயரில் நிலப்பட்டா மாறிவிட்டால், அதை முழுமையாகப் பாதுகாப்பது அதிகாரிகள்தான் என கிராமத்தினர் சரமாரியாக குற்றம் சாட்டியதை சகாயம் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்தப் பகுதியில் அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள் ஓய்வுக்குப் பின் கிரானைட் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து விட்டனர். எனவே அதிகாரிகள் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நீதிமன்றத்தில் இது பற்றிய விவரங்களை சமர்ப்பிப்பதாக அவர்களிடம் சகாயம் உறுதியளித்தார்.
கிரானைட் கொள்ளை குறித்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தும் சகாயம்.
கிரானைட் முறைகேடு குறித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் விசாரணையை உளவுத்துறை போலீஸார் உன்னிப்பாக கவனித்து மேலிடத்துக்கு உடனுக்குடன் தகவல் அளித்து வருகின்றனர். மதுரையில் முதற்கட்ட விசாரணைக்கு வந்தபோது ரயிலில் அவசரப் பிரிவில் இருக்கை ஒதுக்கீடு பெற்றுத்தரவில்லை என்றும், மதுரையில் அவர் தங்கியிருந்த அறையில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், குவாரி அதிபர்களின் ஏஜெண்டுகள் விசாரணையை கண்காணிப்பதாகவும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சகாயம் மதுரையில் இறங்குவது முதல் திரும்பிச் செல்வது வரை அவரின் நடவடிக்கைகளை உளவுத்துறையினர் முழுமையாகக் கண்காணித்தனர். புகார் விவரம், அதை அளிப்பவர்களின் பின்னணி, சகாயத்தை சந்திப்பவர்கள், விசாரணைக்கு வந்து செல்லும் அதிகாரிகள், விசாரணையில் தெரிவிக்கும் தகவல்கள், அரசியல் கட்சியினர் சந்திப்பு உள்பட அனைத்து விவரங்களையும் உளவுத்துறையினர் சேகரிக்கின்றனர். இதற்காக 2 முதல் 4 உளவுப்பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டனர். குவாரிக்கு சகாயம் நேரடி ஆய்வு செய்யச் சென்ற இடங்களில் எல்லாம் உளவுத்துறையினர் கண்காணித்தனர். இவர்கள் சேகரிக்கும் தகவல்களை உடனுக்குடன் மேலிட அதிகாரிகளுக்குத் தெரிவித்தபடி இருந்தனர். இத்துடன் வருவாய்த் துறை, பொதுப்பணி, தொல்லியல், சுரங்கம் என பல்வேறு துறை அலுவலர்களும் சகாயம் விசாரணை குறித்த தகவல்களைத் தங்கள் உயரதிகாரிகளுக்குப் புள்ளி விவரங்களுடன் தெரிவித்து வருகின்றனர். அந்தந்த துறை மாவட்ட அதிகாரிகள் மூலம் துறையின் தலைமையிடத்து அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்படுகிறது.
சகாயத்திடம் பொதுமக்கள் புகார் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், பி.ஆர்.பி. தரப்பில் இருந்து வேவு பார்த்த சூப்பர்வைசர் கண்ணன், பொதுமக்களிடமும் சகாயத்திடமும் சண்டைக்கு வந்தார். குரலை உயர்த்திப் பொதுமக்கள் சொல்லும் குறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை செய்து வந்தவரை சகாயம், “உங்களிடம் நான் எதுவும் பேசவில்லை. நீங்கள் எதுவாக இருந்தாலும் முறைப்படி புகாராக எழுதி உங்கள் தரப்பு விவரத்தைச் சொல்லுங்க” என்று சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.
“சகாயம் சார்கிட்ட புகார் கொடுத்துட்டு வந்திருக்கேன். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கு” என்று புகார் கொடுத்தவர்களில் ஒருவர் சொன்னார். “இது வெறும் மலைகள் இல்லை. நாம் வாழ்ந்த வரலாற்றின் ஆவணம். அதை எப்படி அழிக்க மனசு வரும்” என்று வருத்தப்பட்டு சகாயம் பேசினார். அந்த நேரத்தில் மழைத் தூறல் ஆரம்பிக்க சகாயம் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பணியைத் தொடர்ந்தார். சகாயத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் கிரானைட் மாஃபியாக்கள், அதை முடக்கக் காத்திருக்கின்றனர். நீதிமன்றமும், மக்கள் மன்றமும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையில் சகாயத்தின் பயணம் தொடர்கிறது!”
சகாயம் விசாரணையிலிருந்து தொகுக்கப்பட்ட இந்த செய்திகளை நாட்டின் நிலைமைகளோடு பொருத்திப் பார்க்கும்போது ஒரு உண்மை தெளிவாகத் தெரிகிறது. சகாயம் கத்திமேல் நடப்பவரைப்போல “சர்க்கஸ்” தான் காட்டுகிறார்; அவர் இப்படிச் செய்வது “அஞ்சாத துணிச்சல்” என்று சொல்லமுடியாது; அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று நம்பும் “அவரது முயற்சிகள் முட்டாள்தனம்” என்றுதான் இப்போதைக்குச் சொல்லமுடியும்.
கிரானைட் நிறுவனங்களின் மோசடிகளுக்கு மூல காரணமே அதிகாரிகளும் போலீசும்தான்.
சகாயத்தின் கண் முன்பாகவே புகார் கொடுக்க வந்தவர்களை கிரானைட் நிறுவன சூப்பர்வைசர் மிரட்டுகிறார்; சுதந்திரமாகவும் பயமின்றியும் புகார்கள் பெறவும் விசாரணை அதிகாரி முயலவில்லை. குற்றவாளிகளின் அடியாளிடம் மென்மையாகப் பேசுகிறார்.
சகாயத்தின் விசாரணையை உளவுத்துறை போலீஸார், வருவாய்த் துறை, பொதுப்பணி, தொல்லியல், சுரங்கம் – எனப் பல்வேறு துறை அலுவலர்களும் குவாரி அதிபர்களின் ஏஜெண்டுகளும் சகாயம் விசாரணை குறித்த தகவல்களைத் திரட்டித் தமது மேலிடங்களுக்கு அனுப்புகின்றனர்.
மேலும், சகாயம் தனது விசாரணையை மட்டுமின்றி, குற்றவாளிகளைத் தண்டிப்பதையும் இந்த அதிகார வர்க்கத்தையும் நீதிமன்றத்தையும் கொண்டு செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்.
இதன் மூலம் அதிகார வர்க்க சட்டவாதத்துடன் நின்றுகொண்டு இன்னொரு போலிப் போர்வீரன் என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்பதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. கனிமவளக் கொள்ளைகளுக்குத் துணைநிற்கும், பாதுகாக்கும் அரசு அதிகார அமைப்புக்குள்ளேயே நின்று கொண்டு அதனைவைத்தே குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும் என்று சகாயம் நம்புகிறார். அந்த முயற்சியில் தன்னோடு ஒத்துழைக்காத அதிகாரிகளைப் பார்த்து, “ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் ஆசிரியரிடம் பெயரெழுதிக்கொடுத்து விடுவேன்” என்று எச்சரிக்கை விடுக்கும் தோரணையில் “நீதிமன்றத்திடம் அறிக்கை கொடுத்து விடுவேன்” என்று பணிவோடு மிரட்டுகிறார்.
சகாயம் குறித்தும், அவரது விசாரணை குறித்தும் உருவாக்கப்படும் பிரமைகள்.
ஆனால், சகாயம் போன்ற இன்னொரு சட்டவாதப் போர்வீரனாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு சகாயத்துக்குச் (தமிழ் தி இந்து நாளிதழில்) சில கேள்விகள் எழுப்பியுள்ளார். அதில், முக்கியமாக நீதிமன்றங்களின் ஒத்துழைப்போடுதான் கிரானைட் கொள்ளைகளே நடந்திருக்கின்றன; அதையும் சகாயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். சகாயமோ இதைக் கவனத்தில் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியிடம் காலில் விழாத குறையாக அதிகாரிகளும் நீதிபதிகளும் நடந்து கொள்கிறார்கள். அந்தக் குற்றவாளிஅரசின் எல்லா முறைகேடுகளையும் கண்டும் காணாமல் இருப்பதோடு, அவற்றுக்கு எதிராக நியாயம் கோரிப் போடப்படும் வழக்குகளைக் அடியில்போட்டு உட்கார்ந்து கொள்ளும் இந்த நீதிமன்றங்களிடமே நீதி-நியாயம் கிடைக்கும் என்று நம்பச்சொல்லுகிறார்.
“வேறென்ன செய்ய முடியும்? வேறு மாற்று ஒன்றுமே இல்லாதபோது, சகாயம் – ஏதோ அத்திபூத்தாற் போன்று ஒரு நேர்மையான, துணிச்சலான அரசு நிர்வாகப் பணி அதிகாரி வாய்த்திருக்கிறார். முறைகேடுகளை எதிர்த்துப் போராடும் அவரது நற்பணிக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், எல்லோரையும் எல்லாவற்றையும் குறைசொல்லுவதைப் போல சகாயத்தையும் விமர்சிக்கலாமா?” என்ற கேள்வியை நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதார சிக்கலைப் புரிந்துகொள்ளாத அரசிலற்றவர்கள் எழுப்புகிறார்கள். அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை சகாயம் போன்ற தனிநபர்களின் தனிப்பட்ட நேர்மை, துணிச்சல் அல்ல. சகாயம் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்தவர் அல்ல. அரசு நிர்வாகப் பணி தேர்வில் வெற்றிபெற்று, அதற்கான முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர். அரசு நிர்வாகப் பணியின் சூட்சுமங்களையும் அதன் இன்றைய போக்குகளையும் கற்றுத் தேர்ந்தவர். தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதை அவரது சொந்த அனுபவங்களே உணர்த்தியிருக்கும். இருந்தாலும் அவ்வாறானதொரு நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார் என்றுதான் விமர்சிக்கிறோம்.
நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைக்கு எதிராக தமது சொந்த பலத்தால், மாபெரும் மக்கள் எழுச்சியும் புரட்சியுமில்லாமல் தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வு காண முடியாது. ஆனால், அவ்வாறான மாற்றுப் பாதையை கையிலெடுக்கும் நேர்மையும் துணிவுமில்லாத பல குட்டி முதலாளிய அரசியல் குழுக்களும், அறிவுஜீவிகளும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் அவ்வப்போது சகாயம், உதயகுமாரன், கேஜரிவால் போன்ற தலைமையை முன்னிறுத்தி தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகாணும் வழிமுறையின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைக்கச்சொல்லுகிறார்கள். அவசியமான, சரியான பாதையையும் தீர்வையும் நோக்கிச் சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டுவதற்குத் துணிவு கொள்வதற்குப் பதிலாக, ஒன்றுமில்லாததற்கு இதையாவது ஆதரிப்போம் என்ற மாயையில் மக்களை ஆழ்த்துகிறார்கள்.
சாதி என்பது புனிதம் – தீட்டு குறித்த நம்பிக்கை மட்டுமல்ல, இத்தகைய நம்பிக்கைகளின் துணை கொண்டு சமூக மேலாதிக்கத்தை நியாயப்படுத்திக் கொள்ளும் ஒரு ஏற்பாடு. அந்த ஏற்பாட்டின் மூலமாக சமூகத்தின் மீது கட்டாயமாக வேலைப் பிரிவினையைத் திணிக்கும் ஒரு விதி. அந்த விதியின் பெயரில் உற்பத்தி சாதனங்கள் மீதான உடைமையையும், அரசியல் அதிகாரத்தையும் தம் வசம் வைத்துக் கொள்வதற்கு ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம்.
“நான் பிறவி அறிவாளி. எனது வாழ்க்கையை இட ஒதுக்கீடு சீர்குலைத்து விட்டது” என்ற ஆதிக்க சாதி திமிர் பிடித்த பதாகைகளோடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).
தேர்தல் ஜனநாயகத்தின் மூலமும் தொழில்மயமாக்கம் மற்றும் நகரமயமாக்கத்தின் மூலமும் சாதி என்ற நிறுவனத்தின் ஆதிக்கத்தை ஒழித்துவிட முடியும் என்பது இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோரின் கருத்து. இட ஒதுக்கீடு மற்றும் தேர்தல் வெற்றிகளின் மூலம் சாதி ஆதிக்கத்தை ஒழித்துவிட முடியும் என்பன போன்ற பல நம்பிக்கைகள் இதிலிருந்ததுதான் வளர்கின்றன.
இதனை ஜனநாயக அரசமைப்பு என்று நம்பிக் கொண்டிருப்பவர்களும் கூட, இந்த ஜனநாயக அரசு இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்தி விடவில்லை என்பதையும், சாதி உள்ளிட்ட ஜனநாயக விரோத நிறுவனங்களைப் புதுப்புது வடிவங்களில் வலுப்பெறவே செய்திருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு ஒப்புக் கொள்பவர்கள் அனைவரும் ஒத்த கருத்துள்ளவர்களோ, ஒரே முகாமைச் சேர்ந்தவர்களோ அல்ல.
தாழ்த்தப்பட்ட மக்களைப் பொருத்தவரை, தமக்கெதிரான சாதி ஆதிக்க வன்கொடுமைகள் காரணமாகவும், மதச் சிறுபான்மையினர் தமக்கெதிரான இந்துவெறித் தாக்குதல்கள் காரணமாகவும் இந்த ஜனநாயகத்தின் மீது நியாயமாகவே நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.
பார்ப்பன, பனியா, ஆதிக்க சாதியினரோ இட ஒதுக்கீட்டின் காரணமாகத் தமக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், பிறப்பின் அடிப்படையில் சலுகை வழங்கப்படும் இந்த நாட்டில் தகுதி-திறமைக்கு மதிப்பில்லை என்றும், சாதி அரசியலின் மூலம் தங்களது ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதாகவும் புலம்புகிறார்கள். இதன் காரணமாகத்தான் தங்களைப் போன்ற திறமைசாலிகள் அமெரிக்காவுக்கு ஓடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள்.
பிறப்பின் அடிப்படையில் சொத்துடைமை, கல்வி, சமூக அதிகாரம் உள்ளிட்ட பலவற்றையும் வாரிசுரிமையாகப் பெற்று அனுபவித்துக் கொண்டே, சாதி என்ற நிறுவனத்தின் பயனைத் எள்ளளவும் அனுபவிக்காதவர்கள் போலவும், சாதி அடையாளத்தைத் துறந்தவர்கள் போலவும் இவர்கள் பாவனை செய்கிறார்கள். இவர்களது முகவிலாசத்தை அம்பலப்படுத்தும் வகையிலான விவரங்களை, அண்மையில் எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை தருகிறது. (Caste and Power Elite in Allahabad, Ankita Agarwal, Jean Dreze, Aashish Gupta, EPW, Feb 7, 2015)
இந்தக் கட்டுரை உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் அதிகாரமும் செல்வாக்கும் மிக்க பதவிகளில் உள்ள 1852 நபர்களுடைய பெயர்களைத் திரட்டி, அவர்கள் எந்தெந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வு செய்திருக்கிறது. அலகாபாத் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நீதிமன்றங்கள், தொழிற்சங்கங்கள், தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் பதவியிலிருப்பவர்கள் யார் யார் என்பதை இக்கட்டுரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது.
உ.பி. மக்கள் தொகையில் 21% மட்டுமே உள்ள முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த ஆண்கள்தான் 75% பதவிகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. இந்த 21% க்குள்ளும், வெறும் 12% மட்டுமே உள்ள பார்ப்பன, காயஸ்தா சாதியினர்தான் 50% பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
அரசுப் பதவிகளில் மட்டுமல்ல, அலகாபாத் நகரில் உள்ள தன்னார்வக் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் 80%, பார் அசோசியேசனின் தலைமையில் 90% பேர் முன்னேறிய சாதியினர்தான் இருக்கின்றனர். பிரஸ் கிளப்பின் நிர்வாகிகளோ 100% பார்ப்பன மற்றும் காயஸ்தா சாதியினர் என்கிறது இந்த ஆய்வு. விளம்பர நிறுவன உரிமையாளர்கள் 55%, மருத்துவர்கள் 39%, மாணவர் சங்கத் தலைவர்கள் 54%, போலீசு அதிகாரிகள் 58%, ஐ.ஐ.டி. ஆசிரியர்கள் 56%, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 75%, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் 58% என்று நீள்கிறது இந்தப் பட்டியல்.
உயர் பதவிகளில் மட்டுமல்ல, வேலைவாய்ப்பு உத்திரவாதமும், நல்ல சம்பளமும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர், செக்யூரிட்டி போன்ற அதிகத் திறமை தேவைப்படாத பணிகளிலும் முன்னேறிய சாதியினர் 36% இருக்கின்றனர் என்றும், அதேநேரத்தில், கடைநிலை ஊழியர்களிலேயே கடுமையான உடலுழைப்பைக் கோருகின்ற வேலைகளில் இவர்களைக் காண முடிவதில்லை என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.
உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை அங்கே தம் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டதைப் பயன்படுத்தாதவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டும்தான். மற்ற ஆதிக்க சாதியினர் அனைவரும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டத்தை மிகவும் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, சாதிப் பட்டத்தை பயன்படுத்தாதவர் என்றாலே, அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று கருதும் நிலையே சமூகத்தில் நிலவுகிறது.
ஆனால், உத்தர பிரதேசமாக இருக்கட்டும் அல்லது பெரியார் இயக்கத்தின் காரணமாக சாதி வால் துண்டிக்கப்பட்ட தமிழகமாக இருக்கட்டும்; முன்னேறிய சாதியினரைப் பொருத்தவரை அவர்களெல்லோரும் தம்மைச் சாதி பாராட்டாதவர்கள் என்றே கூறிக்கொள்கிறார்கள். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் இவர்கள், சாதியைச் சொல்லி சலுகை பெற விரும்பாதவர்களாகவும் தங்களை சித்தரித்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் அதிகாரமும் செல்வாக்கும் மிக்க பதவிகளையும் பெருமளவில் கைப்பற்றிக் கொள்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது?
மற்ற சாதிகளில் தகுதியான நபர்கள் குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று அவர்கள் உடனே இதற்கு விளக்கமளிப்பார்கள். உண்மை அப்படியில்லை. உ.பி. மாநிலத்தின் பட்டதாரிகளில் 50% பேர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் முஸ்லிம்கள். இருந்த போதிலும் வேலைவாய்ப்பில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம், அவர்களுடைய பின்தங்கிய சமூகப் பின்புலமோ, தகுதிக்குறைவோ அல்ல. மாறாக, அவர்களை உள்ளே நுழைய விடாமல் மவுனமான முறையில் முன்னேறிய சாதியினர் காட்டும் எதிர்ப்பு.
ஏற்கெனவே அதிகாரமிக்க பதவிகளில் நிரம்பியிருக்கும் முன்னேறிய சாதியினர், ஒடுக்கப்பட்ட சாதியினரைத் தங்கள் உலகத்துக்குள் அவ்வளவு சுலபமாக அனுமதித்து விடுவதில்லை. தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கிறார்கள் என்று மட்டும் இதனை நாம் புரிந்து கொள்ளக் கூடாது. தங்களது ஆதிக்கம் தொடருவதை உத்திரவாதம் செய்து கொள்வதன் வழியாக, இந்தப் படிநிலைச் சாதி அமைப்பு குலைந்து விடாமல் பாதுகாக்கிறார்கள்.
இதனைச் சாதிப்பது முன்னேறிய சாதியினரின் சாதி ரீதியான வலைப்பின்னல். இத்தகைய சாதி அபிமானம் என்பது முன்னேறிய சாதியினருக்கு மட்டும் உரியதல்ல என்பது உண்மைதான். எனினும், ஏற்கெனவே சமூக ஆதிக்கத்தில் இருக்கும் சாதிகள் என்ற முறையில், தமது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் இவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். இந்த வலைப்பின்னல் நவீன சமுதாயத்துக்கு ஏற்ற வடிவில், சாதிச் சங்கம், கூட்டுறவு, வங்கிகள், டிரஸ்டுகள் போன்ற வடிவங்களில் இருக்கிறது.
பல சந்தர்ப்பங்களில் இது அமைப்பு என்ற ஒன்றே தனியாகத் தேவைப்படாத சுயசாதி அபிமான உள்ளுணர்வாக இருப்பதால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டைப் போல இதனை வெளிப்படையாக அடையாளம் காண முடியாது.
இந்த வலைப்பின்னலின் மூலம் முன்னேறிய சாதியினர் தங்களுடைய ஆட்களுக்கு வழங்கிக் கொள்ளும் இட ஒதுக்கீடு, ஒருவகை சங்கேத மொழியினால் ஆனது. சட்டபூர்வமான இட ஒதுக்கீட்டு ஏற்பாடு எதுவுமின்றி, தாங்கள் வகிக்கின்ற பதவி மற்றும் அதிகாரத்தின் துணையைக் கொண்டே தமது சாதியின் ஆதிக்கத்தை இவர்கள் தக்க வைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்கேற்ற, பல சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான வழிமுறைகளை இவர்கள் ஒரு கலையாகவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
மார்ச் 2011-ல் மைய அரசு வெளியிட்டுள்ள விவரப்படி, மைய அரசின் துறைச் செயலாளர்கள் 149 பேரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஒருவர்கூடக் கிடையாது. பழங்குடியினத்தவர் 2 பேர். கூடுதல் செயலர்கள் 108 பேரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர் தலா 2 பேர் மட்டும்தான்.
நாடு முழுவதும் உள்ள மையப் பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 43.5% நிரப்பப்படவில்லை. சட்டப்படி இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் அரசு வேலைவாய்ப்புகளிலேயே இதனை அவர்களால் சாதிக்க முடிகிறது என்றால், தனியார் துறையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
தனியார் நிறுவனங்களில் பதவியிலிருக்கும் முன்னேறிய சாதியினர், வேலைக்கான விண்ணப்பப் படிவங்களிலிருந்தே விண்ணப்பிக்கும் நபரின் சாதியைத் தெரிந்து கொள்ள முடிவதால், மற்றவர்களுக்கு அங்கேயே கதவு மூடப்பட்டு விடுகிறது. தனியார் நிறுவனங்களில் கடைநிலை ஊழியர் அல்லாத மற்ற வேலைகளுக்கு தலித் மற்றும் முஸ்லிம்கள் விண்ணப்பித்தால் அதற்குப் பதிலே வருவதில்லை என்று கூறுகிறது இந்த ஆய்வு. உ.பி.யில் மட்டுமல்ல, ஏறத்தாழ நாடு முழுவதுமே இதுதான் நிலைமை.
உ.பி.யை விட்டுத் தள்ளுவோம். இந்தியாவின் 40 பெரிய ஊடக நிறுவனங்கள் ஒன்றில்கூட, குறிப்பிட்டு சொல்லத்தக்க பதவி எதிலும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் கூடக் கிடையாது. 71% பதவிகளில் இருப்பவர்கள் பார்ப்பனர் உள்ளிட்ட முன்னேறிய சாதியினர்தான் என்கிறது 2006-ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.
ஆனால், உ.பி. அரசுப் பணிகளிலேயே துப்புரவுத் தொழிலாளிகளில் 40% தாழ்த்தப்பட்டவர்கள். மலம் அள்ளுவோர் 100% தாழ்த்தப்பட்டவர்கள். அலகாபாத் நகரின் ரிக்சா ஓட்டிகளில் 50% தாழ்த்தப்பட்டவர்கள். மாநகராட்சியில் இறந்து போன விலங்குகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்போர் 100% பேர் “டோம்” என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர். டோம் என்பது சாதியின் பெயராக மட்டுமின்றி, அந்தப் பணியாளர்களுக்குரிய பெயராகவே அங்கே புழங்கப்படுகிறது.
அதாவது, செத்த மாட்டைத் தூக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே செய்யவேண்டிய தொழில் என்று மிகவும் இயல்பாக இந்த ஜனநாயக சமூகத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
போலோ விளையாட்டை ராஜ்புத் சாதிக்காரர்களைத் தவிர, பிறர் விளையாடக்கூடாது என்று அந்தச் சாதியைச் சேர்ந்த தனது பள்ளி நண்பர்கள் இயல்பாகவே கருதிக் கொண்டிருந்தனர் என்றும், தன்னை விளையாட அனுமதிக்கவில்லை என்றும் ராஜஸ்தானில் தான் பெற்ற அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஒரு பத்திரிகையாளர். 2008- ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் 11 உறுப்பினர்களில் 7 பேர் பார்ப்பனர்களாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியபோது, அது தற்செயலானது என்று அலட்சியமாகப் பதிலளித்தார் தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர். அவரும் ஒரு பார்ப்பனர் என்பது இன்னொரு தற்செயல் நிகழ்வு.
இயல்பானவை அல்லது தற்செயலானவை என்று கருதப்படுவனவற்றின் பட்டியல் இதோடு முடியவில்லை. 2012-ம் ஆண்டில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் முதல் 46 கோடீசுவர தொழிலதிபர்களில், 28 பேர் பனியா, மார்வாரி சாதிகளைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பார்சி, சிந்தி, பார்ப்பனர்கள். ஒரு சிலர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். முஸ்லிம் ஒருவர். தாழ்த்தப்பட்டோர் யாரும் இல்லை. இந்தியாவின் முதல் பத்து கோடீசுவரர்களில் 8 பேர் பனியாக்கள்.
தனியார்துறை, பொதுத்துறை ஆகிய இரண்டையும் சேர்ந்த முதல் 1000 இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுடைய மொத்த இயக்குநர்களின் (போர்டு உறுப்பினர்களின்) எண்ணிக்கை 9052. இவர்களில் பார்ப்பனர்கள் 4037, வைசியர்கள் 4167, சத்திரியர்கள் 43, பிறர் 137, பிற்படுத்தப்பட்டோர் 346, தாழ்த்தப்பட்டோர் 319 பேர். அதாவது 93% பேர் முன்னேறிய சாதியினர்.
கார்ப்பரேட் நிறுவனங்களை நிர்வாகம் செய்வதற்கு நியமிக்கப்படும் தொழில்முறை இயக்குநர்களிலும் ஆகப் பெரும்பான்மையினர் பார்ப்பனர்களாகவும் பனியாக்களாகவும் இருப்பதை வாரிசுரிமை, தற்செயல், திறமை என்பன போன்ற பல சொற்கள் மூலம் அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், சாதியை ஒரு மூடுண்ட வர்க்கமாக அவர்கள் பேணுகிறார்கள் என்பதே உண்மை.
தரகு முதலாளிகளாகவும், அதிகார வர்க்கமாகவும் தங்கள் சாதிக்காரர்களே தொடர்ந்து நீடிக்கும்போது மட்டும்தான், தமது வர்க்க நலனையும் ஆதிக்கத்தையும், (அதாவது தேசிய நலனை) பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர்களுடைய உள்ளுணர்ச்சியே அவர்களுக்குச் சோல்கிறது. அர்ச்சகனாகப் பார்ப்பான் மட்டுமே இருக்க வேண்டும் என்பது தங்களுடைய நலனுக்காக செய்யப்பட்ட ஏற்பாடல்ல, கோயிலின் நலன் கருதியும் சமூகத்தின் நலன் கருதியும் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு என்று பார்ப்பனர்கள் கூறும் விளக்கத்தைப் போன்றதுதான் இது.
இது புரிந்து கொள்ளக் கடினமான விடயமல்ல. தாங்கள் வாடகைக்குக் குடியிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில், ஒரு தாழ்த்தப்பட்டவரோ முஸ்லிமோ குடியமர்ந்து விடக்கூடாது என்று எண்ணும் ஆதிக்க சாதி மனோபாவம், தனது அலுவலகத்தில் தனக்குச் சமமான ஒரு பதவியில் அவர்கள் அமர்வதை சகித்துக் கொள்ளுமா? தன்னுடைய தொழிலில் ஒரு பங்குதாரராகவோ, இயக்குநர் குழுமத்தில் ஒரு இயக்குநராகவோ அவர்களைச் சேர்த்துக் கொள்ளுமா?
இந்தச் சாதிய மனோபாவம் பழமைவாதக் கட்டுப்பெட்டித்தனமல்ல. தமது வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு பார்ப்பன, பனியா ஆதிக்க சக்திகள் நடத்தும் அழுகுணி ஆட்டம். இட ஒதுக்கீட்டுக் கொள்கை தவறு என்றும், தகுதி – திறமை – போட்டி அடிப்படையிலான சந்தைப் பொருளாதாரம்தான் வேலை வாய்ப்புகளைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் சமூகத்துக்கு உபதேசம் செய்யும் இந்த யோக்கியர்கள், எல்லா இடங்களிலும் புழக்கடை வழியாகத் தம் சாதிக்காரனை நுழைத்து போட்டியையும் திறமையையும் முறியடிக்கிறார்கள்.
சமத்துவம் கிடையாது, சமூகம் முழுமைக்கும் பொதுவான ஒரு நீதியோ விதியோ கிடையாது – என்பதுதான் சாதியமைப்பின் விதி. ஜனநாயக விழுமியங்களின்படி இது ஒரு முறைகேடு, ஊழல். அந்த வகையில் தொழில்துறை, அதிகார வர்க்கம், ஊடகங்கள் உள்ளிட்ட அரசியல் பொருளாதார சமூக நிறுவனங்கள் அனைத்தையும் ஆதிக்க சாதியினர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதென்பதுதான் இந்த சமூக அமைப்பின் முதற் பெரும் ஊழல்.
சவுதாலாவுக்கு ஒரு நீதி, ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி என்ற அயோக்கியத்தனமும், குஜராத் கொலையாளிகள் விடுவிக்கப்படுவதும், மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஊடகங்கள் காவடி எடுப்பதும், உச்சநீதி மன்றம் முதல் ஊடகங்கள் வரை சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பனத் தரகன் செல்வாக்கு செலுத்துவதும், இந்த நாட்டையே அம்பானி, அதானி தேசமாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் எதிர்ப்பின்றி நிறைவேறுவதற்கும் அடிப்படையாக அமையும் ஊழல் இதுதான்.
43 ஆண்டுகளுக்கு முன்பு “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்” என இயற்றப்பட்ட தமிழக அரசின் சட்டம் செல்லும் என 1972-ல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி பார்ப்பனர்கள் வாரிசுரிமைப்படி அர்ச்சகர் பணி நியமனம் கேட்பது ஒழிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவு இன்றளவும் செல்லாக்காசாக இருக்கிறது.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக இன்றளவும் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2006–ல் தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் 1972 தீர்ப்பை வைத்தே முடக்கி தடை உத்தரவு பிறப்பித்தது. பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் சார்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், 2009 முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது.
கடந்த வாரம் முதல் அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை நடந்து வருகிறது. விரைவி்ல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.
அர்ச்சகர் வழக்கின் இறுதி விசாரணை விரைவி்ல் முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்க வாய்ப்பு உள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு தெரிவிக்கும் மதுரை சிவாச்சாரியர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் பராசரன் தன் சொந்த வழக்காக இன்று வரை நடத்தி வருகிறார்.
“சிவாச்சாரியார்கள் இல்லை என்றால் கோவிலுக்கு போவதை நிறுத்தி விடுவேன். கருவறையில் பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டு விடும். தெய்வீக சக்தியை இழந்து விடும்.கோவிலின் புனிதம் கெட்டு விடும்.
காலம் காலமாக பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை, மரபுகளை மாற்றக்கூடாது. இவை இந்து மதத்தின் ஆணி வேர். இவையெல்லாம் பார்ப்பனர்களின் மத உரிமை, அதில் அரசு தலையிடக்கூடாது. 1972 –ல் அர்ச்சகர் நியமனத்தில் ஆகமத்தை பின்பற்றுவோம் என, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் வாக்குறுதி அளித்தார். இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என அவசரச் சட்டம் இயற்றியதுடன், அது காலாவதியான பின்பும் அரசாணை மூலம் நிற வேற்ற முயலுகிறார்கள். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார் பராசரன்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் (கோப்புப் படம்)
1972 சேசம்மாள் தீர்ப்பில் உள்ள ஆகமம் பற்றிய கட்டுக்கதைகளை ஆதாரமாக வைத்து இன்றும் ஆணித்தரமாக வாதிடுகிறார், பராசரன். உச்ச நீிதிமன்றமும் அதை நிராகரிக்காமல் கரிசனத்தோடு கேட்கிறது.
அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஙர் பி.பி. ராவ் “எதிர்காலத்தில் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக இன்றே வழக்கு தொடுக்க முடியாது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நாங்கள் பணியமர்த்தினால் இவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்! அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், செல்லா நிலையாகும். அர்ச்சகர் பணி நியமனம் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இட ஒதுக்கீடு அடிப்படையில் அதற்கு உரிய தகுதி உள்ள மாணவர்களை பொதுக் கோவிலில் நியமிப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமை ஆகும்.
1972–ல் சேசம்மாள் வழக்கு தீர்ப்பின்படி கருவறையில் தீணடாமையை ஒழிக்க வாரிசுரிமை அரச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டது. பிற சாதியினரை அர்ச்சகராக நியமித்தால் சிவாச்சாரியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
தாங்கள் தனி வகையறா என்றால் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிரூபிக்கட்டும். சைவக் கோவில்களுக்கு உரிய பாடத்திட்டம் பயிற்சி, தகுதி, வைணவக் கோவில்களுக்கு உரிய பாடத்திட்டம், பயிற்சி, தகுதி இதில் சாதி பாகுபாடு இல்லை.
அரசு வேலை வாய்ப்பில் சாதி, மத, இன வேறுபாடும் இல்லை. அரசியலமைப்பு சட்டம் சரத்து 16-ன்படி அனைவருக்கும் சமவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அர்ச்சகராக வேண்டும். பிறர் வருவதை தடுப்பது’ என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்துக்கள் அனைவரும் சமம், அனைத்து சாதியினரும் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதை ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வும் உறுதி செய்தது. இதன் மூலம் ஆலயத்தீண்டாமை ஒழிக்கப்பட்டது. அது போல் கருவறைத் தீண்டாமையை ஒழிக்க அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணியமர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளது” என வாதிட்டார். இன்றும் தொடர்ந்து வாதிட உள்ளார்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் (கோப்புப் படம்)
அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அரங்கநாதன், சடகோபன் சார்பில் மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வேஸ், மற்றும் வழக்கறிஞர் கோவலின் பூங்குன்றன் ஆகியோர் வாதிட உள்ளனர்.
மாணவர்கள் தரப்பில் ”பார்ப்பனரை தவிர பிற சாதியினர் சாமியை தொட்டால் கருவறை தீட்டாகிவிடும் என்பது கட்டுக்கதை. பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தையும் வருமானத்தையும் நிலைநாட்டிக் கொள்ளவே பிற சாதியினர் அர்ச்சகராவதை எதிர்க்கின்றனர். தீட்டுப்பட்டுவிடும் என்பது அரசியலமைப்பு சட்டப்படி தீண்டாமை குறற்ம்.
1972–ல் பரம்பரை வாரிசுரிமைப்படி பார்பப்னர்கள் மட்டுமே அர்ச்சகர் என்பதை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் போடப்பட்டது. அச்சட்டம் செல்லும் எனக் கூறியதை ஒதுக்கி விட்டு, அதில் கூறப்பட்டுள்ள ஆகமம் தொடர்பான கருத்துக்களை, ஆன்மிகம் தொடர்பான விபரங்களை திரித்தும், பிரித்தும், பித்தலாட்டமாக நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றனர். 43 வருடங்களுக்கும் பிறகும் எங்களைத் தவிர யாரும் அர்ச்சகராகக் கூடாது என எதிர்க்கின்றனர். அர்ச்சகர்களுக்கு உரிய தகுதி அனைத்தும் பெற்று உரிய சான்றிதழ் பெற்றும் பிறப்பில் பிராமணர் இல்லை என்பதற்காக பணி நியமனம் கூடாது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
“இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது” – அர்ச்சகர் மாணவர்கள்
அனைத்து பொதுக்கோவில்களிலும் உரிய தகுதியுடையவர்களை அர்ச்சகராக நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. பிறப்பால், தனி வகையறா என எதிர்க்க முடியாது. இன்றும் வர்ணாசிரமத்தை முன் வைத்து வாதிடுவதை ஏற்க முடியாது” என வாதிட உள்ளோம்.
கோத்தகிரி வனங்களையும் மக்களையும் பாதுகாக்கும் கூட்டமைப்பின் சார்பில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி திங்கள் கிழமை கோத்தகிரி டானிங்டனிலிருந்து துவங்கி பேரணியாகச் சென்று, கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அன்று முழு கடையடைப்பு அழைப்பு விடப்பட்டு, வாகனங்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதிகள் காட்டேஜாகவும் ரிசார்ட்டாகவும் மாறிக் கொண்டிருக்க, பாதுகாக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளோ கடத்தல் தொழிலில் பிஸியாக இருக்கின்றனர். வனத்தில் வாழ வாய்ப்பில்லாத விலங்குகள் ஊருக்குள் நுழையத் துவங்குகின்றன. தினசரிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது குறித்த செய்தி வாரம் இரு முறையேனும் தவறாமல் வெளியாகின்றது.
சமீபத்தில், கோத்தகிரியில் கரடி தாக்கி பெண் இறந்த செய்தி மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. அடிக்கடி நிகழும் உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழும் மக்கள் எழுச்சிகள் என நீலமலையே ஒரு அசாதாரணமான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
மக்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் வனத்தையும் காக்க துப்பில்லாமல் நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் செல்லுமிடமெல்லாம் மக்களிடம் அவமானப்பட்டு நிவாரணம் கொடுத்துவிட்டு வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் இதர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து, பெருகி வரும் வன விலங்குகள் தாக்குதலுக்கெதிராகவும், நீலமலை மக்களின் நிரந்தர பாதுகாப்பின்மைக்கு முடிவு கட்டவும் எடுத்திருக்கும் அவதாரம் வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு.
பெருகி வரும் வன விலங்குகள் தாக்குதலுக்கெதிராகவும், நீலமலை மக்களின் நிரந்தர பாதுகாப்பின்மைக்கு முடிவு கட்டவும் எடுத்திருக்கும் அவதாரம் வனத்தையும் மக்களையும் பாதுகாக்கும் மக்கள் கூட்டமைப்பு.
கடந்த மாதம் 23-ம் தேதி அனைத்து ஜனநாயக சக்திகள் கட்சிகளை இணைத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் ஏப்ரல் 13-ம் தேதி பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு, கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதேன முடிவு செய்து செயலில் இறங்கினோம். சுமார் 15,000 துண்டு பிரசுரங்களுடன் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விரிவான பிரச்சாரத்தை கொண்டு சென்றோம். மலைகளின் அரசி எங்களை வாரி அணைத்துக் கொண்டாள்.
இந்தப் போராட்டத்தின் வடிவமும் வளர்ச்சியும் மக்கள் என்னும் மகத்தான சக்தியினால் கட்டமைக்கப்பட்டன.
சங்கத்தின் சார்பில் ஊர்த் தலைவர்களுக்கு கொடுத்த அழைப்புக் கடிதத்துக்கு, “எங்கள் ஊர் சார்பில் எப்போதும் உங்களுக்கு ஆதரவு” என பதில் கடிதம் கொடுத்து நிதியும் கொடுத்துதவிய ஆடுபெட்டு கிராம மக்கள் முதல் வீடு வீடாக இந்த போராட்டத்துக்கு வசூல் செய்து கொடுத்த தவிட்டு மேடு, குண்டூர் காலனி, அளக்கரை இவை போக பேருந்து பிரச்சாரத்திலும் பெருவாரியாக நிதியளித்த பொது மக்கள் என இந்தப் போராட்டத்தின் வடிவமும் வளர்ச்சியும் மக்கள் என்னும் மகத்தான சக்தியினால் கட்டமைக்கப்பட்டன. செல்லும் இடமெங்கும் கூட்டமைப்புக்கு ஆதரவு அற்புதமாக இருந்தது.
படுகர், தோடர் இவை போக இன்னும் பல பழங்குடி மக்கள், மலையாளிகள், இலங்கை மலையகத்திலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் என பல பிரிவுகளாக நீலகிரியில் வாழ்கின்றனர். மலைகளில் பூத்த முகடான கோத்தகிரியில் இம்மக்களை கோர்த்து நிறுத்தியது தான் போராட்டத்தின் வெற்றி. ஆக கோத்தகிரி எனும் இடம் மலைகளை மட்டுமல்ல மக்களையும் இணைக்கும் சக்தியாக மாறியது.
ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களை அச்சத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தனர் காவல் துறையினர்.
கோத்தகிரி டானிங்டன்-ல் ஏற்ற இறக்கத்தை அளக்கும் விதமாக நீண்டிருந்த மக்கள் அணியை உற்சாகமூட்டும் விதமாக பேசி குளிர்காற்றை கிழிக்கும் முழக்கங்களுடன் பேரணிக்கு கூட்டமைப்பின் தலைவர் தோழர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களை அச்சத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தனர் காவல் துறையினர். தேயிலை தோட்ட குறு விவசாயிகள் பலரும் விடுப்பு கொடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சக தொழிலாளியுடன் உரிமை மீட்க முழக்கத் தட்டி ஏந்தியவாறு புன்னகையுடன் நடந்து வருவது…
கனவான்களின் சர்க்கரை அளவை சமப்படுத்த கொழுந்துத் தேயிலைகளாய் தேடித் தேடி பறித்த கைகள் இன்று தம் சக தொழிலாளியுடன் உரிமை மீட்க முழக்கத் தட்டி ஏந்தியவாறு புன்னகையுடன் நடந்து வருவது… விவரிக்கவியலா கவிதை.
கூட்டமைப்பைச் சேர்ந்த திரு பூவரசன் பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணி காமராஜர் சதுக்கத்தை அடைந்த போது தன்னைக் காக்க வந்த மக்களுடன் மகிழ்வோடு இணைந்து கொண்டது இயற்கை, மழையின் வடிவில். அதனையும் அழைத்துக் கொண்டு பெண்களும் குழந்தைகளும் இடைவிடாத முழக்கங்களுடன் முன் நகர்ந்தனர். மழைக்காக ஒதுங்கிய கூரையின் கீழ்ப்புறத்தையும் தற்காலிக ஆர்ப்பாட்ட அரங்காய் மாற்றினார்கள் தோழர்கள்.
தன்னைக் காக்க வந்த மக்களுடன் மகிழ்வோடு இணைந்து கொண்டது இயற்கை, மழையின் வடிவில்.
கோத்தகிரியின் தினசரி சந்தை நிலை கொண்டிருக்கும் குறுகிய சந்துகளினூடேயும் ஆர்ப்பாட்டமாய் சென்ற பேரணி கோத்தகிரி பேருந்து நிலையத்தை தாண்டுகையில் இன்னும் ஆவேசமான முழக்கங்களுடன் முன்னேறியது. கிட்டத்தட்ட முழுச் சாலையையும் விழுங்கி நகர்ந்த பேரணியை கட்டுப்படுத்த முடியாத போலீசார், தோழர் ஆனந்தராஜிடம், “சார்., ரெண்டு ரோடுமே பிளாக் ஆகியிருக்கு; பிளீஸ் சார் ஒத்துழைப்பு கொடுங்க…. இல்ல உங்களுக்கு இஷ்டம்னா பண்ணுங்க….” என கெஞ்சல் தொனிக்கு மாறினர்.
ஆவேசமான முழக்கங்களுடன் முன்னேறியது, பேரணி.
இறுதியில் ஜீப் திடலுக்கு வந்து சேர்ந்த போது மழை வேகம் பிடித்திருந்தது; புதியதொரு போராட்ட அனுபவத்தை பெற்ற மக்களது உணர்வும்தான். ஆங்காங்கே கிடைத்த பிளக்ஸ் பேனர் குடை தார்பாய்களுடன் மேடையின் முன்னே தயாராயினர்.
முதலாவதாக கண்டன உரையாற்றிய தோழர் ஆனந்தராஜின் பேச்சு முதலில் கடையடைப்புக்கு ஒத்துக் கொண்டு பின்னர், காவல் துறையின் பேச்சை கேட்டு நயவஞ்சகமாக கடையடைப்பை தடுத்த வணிகர் சங்க தலைவர்களை தோலுரித்தது. இவர்கள் காவல் துறையுடன் கடத்தல் தொழிலில் ஒரு ஒத்திசைவுடன் செயல்படுவதே இதற்கு காரணம். அதைத் தொடர்ந்த அவரது பேச்சு மக்களது உற்சாகத்துக்கு உரம் சேர்ப்பது போல அமைந்திருந்தது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிய தோழர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி கூறி தன் உரையை முடித்தார்.
அவரைத் தொடர்ந்து கண்டன உரையாற்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் சிவசாமி, இதே பிரச்சினையையொட்டியதொரு போராட்டத்திற்கு தான் சில ஆண்டுகளுக்கு முன் கோத்தகிரி வந்ததை நினைவு கூர்ந்தார். வனவிலங்கு பிரச்சினை தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பதையும் செயலற்ற அரசுக் கட்டமைப்பையும் போராட்டத்தின் அவசியத்தையும் பேசினார். 70’களில் தமிழக விவசாயிகளை சிலிர்த்தெழச் செய்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி தளபதியாக விளங்கிய டாக்டர் சிவசாமி தனது மருத்துவர் தொழிலை விடுத்து களப்பணியாற்ற மாறியவர். இவரைப் போன்ற மூத்த அனுபவசாலிகளே இன்று அரசையும் அதிகார மட்டங்களையும் புரிந்து கொண்டிருப்பது நல்ல விசயம்.
அவரையடுத்து பேசிய இரா. பூவரசன், சத்திய சீலன், வழக்கறிஞர் விஜயன் மற்றும் இன்ன பிற தோழர்களது உரைகள் அனைத்தும் மக்களை மழையினின்றும் நகர விடாமல் கட்டிப் போட்டது.
இறுதியில் திரு.ராஜா நன்றியுரை நல்கினார்.
ஜீப் திடலுக்கு வந்து சேர்ந்த போது மழை வேகம் பிடித்திருந்தது;
கோரிக்கைகள்:
தமிழக அரசே
1. பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நிலங்களையும் நட்ட ஈடு இன்றி பறிமுதல் செய்! அவற்றை மீண்டும் வனமாக்கு!
2. நீலகிரி மாவட்டம் முழுவதும் இனி புதிய காட்டேஜ் கட்டவும், உல்லாச பங்களா கட்டவும் அனுமதி வழங்காதே. ஏற்கனவே, அனுமதி இன்றியும், அனுமதிக்கு மீறியும் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தள்ளு!
3. நீலகிரி மாவட்டத்தில் எங்கும் நீண்ட வேலிகள், மின்வேலிகள் அமைக்க தடைச்சட்டம் இயற்று! ஏற்கனவே போடப்பட்ட வேலிகளை உடனே அகற்ற ஆணையிடு!
4. மனிதர்களை தாக்கும் வன விலங்குகளை திருப்பித் தாக்கும் விதத்தில் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை மாற்றி அமை!
5. விவசாயத்தை நாசம் செய்யும் விலங்குகளை பிடித்து வனங்களில் விட வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கு!
ஆங்காங்கே கிடைத்த பிளக்ஸ் பேனர் குடை தார்பாய்களுடன் மேடையின் முன்னே தயாராயினர்.
6. வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து விட்டபடியால் வனத்துறை வாரா வாரம் அனைத்து கிராமங்களிலும் ஆய்வு செய்து கூணடு வைப்பது, வனவிலங்குகளை கண்காணிப்பது போன்ற வேலைகளை செய்!
7. வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ 10 இலட்சம் நிவாரணமும், உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ 10 இலட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை, மருத்துவமனையில் உள்ளவாகளுக்கு மருத்துவம், குடும்ப பராமரிப்புக்கு ரூ 3 இலட்சம் வழங்கு! சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று!
9. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிப்பு அதிகரிக்கும் அதே வேளையில் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. மக்கள் தொகை பெருக்கம், சுற்றுலா பயணிகள் அதிகரிப்பது போன்ற விசயங்களை மையப்படுத்தி கோத்தகிரி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்து!
10. வன விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள மக்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கு!
செய்தி, புகைப்படங்கள்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை.
மோடி ஆட்சி அமைத்த பிறகு அதிகரித்து வரும் பார்ப்பன தாக்குதல்களின் ஒரு பகுதியாக புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பவிருந்த தாலி பற்றிய விவாதத்தை டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு மூலமும், மிரட்டல்கள் மூலமும் தடுத்து நிறுத்தியிருந்தனர் இந்துத்துவ ரவுடிகள். இந்தச் சூழலில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று, பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்வு மற்றும் மாட்டுக்கறி விருந்து நடத்தத் திட்டமிட்டிருந்தது திராவிடர் கழகம்.
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்வு மற்றும் மாட்டுக்கறி விருந்து.
ஏப்ரல் 13 அன்று இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது சென்னை மாநகர காவல் துறை. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றது திராவிடர் கழகம். விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன் வேப்பேரி உதவி ஆணையரின் ஆணைக்குத் தடை விதித்து திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் விழாவுக்கு அனுமதி கொடுத்ததோடு, காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஆணை பிறப்பித்தார்.
ஏப்ரல் 14 அன்று அதிகாலை 7 மணிக்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி ஆரம்பமானது.
நீதிமன்ற அனுமதியின்படி சென்னை பெரியார் திடலில் ஏப்ரல் 14 அன்று அதிகாலை 7 மணிக்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி ஆரம்பமானது. 21 பெண்கள் தங்களின் கழுத்தில் பெண்ணடிமைச் சின்னமாகத் தொங்கிக் கொண்டிருந்த தாலியைக் கத்தரித்து அகற்றினார்கள். பெரியாரின் பிரச்சாரம் இன்னமும் வீரியமாக தமிழ் நாட்டில் நிலைகொண்டுள்ளது என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது.
பெரியாரின் பிரச்சாரம் இன்னமும் வீரியமாக தமிழ் நாட்டில் நிலைகொண்டுள்ளது.
இந்து மதவெறியர்களால் காவல்துறை, நீதிமன்றம் என அலைக்கழிக்கப்பட்டு போராடிப் பெற்ற இந்த நிகழ்ச்சியை, அதிகாலையிலேயே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு போட்டு தடுக்க முயற்சி நடந்தது. இந்த முறை இந்துமதவெறி அமைப்புகளுக்குப் பதிலாக, ‘நானொரு பாப்பாத்தி’ என்று அறிவித்துக் கொண்ட ‘மக்களின் முதல்வர்’ ஜெயாவின் பினாமி அரசே இந்த நிகழ்ச்சிக்குத் தடை கோரியது.
‘மக்களின் முதல்வர்’ ஜெயாவின் பினாமி அரசே இந்த நிகழ்ச்சிக்குத் தடை கோரியது.
வேப்பேரி காவல்துறை உதவி ஆணையர் சார்பில் நீதிபதிகள் எஸ்.கே. அக்னி ஹோத்திரி, திரு எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் காலை 8 மணிக்கே மேல் முறையீடு செய்தனர். பொதுமக்களின் நலன் சார்ந்த எத்தனையோ வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்யாமல் மாதக்கணக்கில் இழுத்தடிக்கும் அரசு இதற்கு இவ்வளவு அவசரம் காட்டியதில் இருந்தே அதன் பார்ப்பன பாசத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
பெரியார் திடல் வாயிலில் செஞ்சட்டையுடன் பு.மா.இ.மு தோழர்கள்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக சுமார் 50 தோழர்கள் பெரியார் திடலின் முகப்பில் இருந்து உள்ளரங்கம் வரை நிகழ்ச்சி முடியும் வரை பாதுகாப்பாக அணிவகுத்து நின்றனர்
நீதிபதிகள் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே பெரியார் திடலுக்குள் நுழைந்த காவல்துறை, நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கேட்டது. ‘தடையாணையைக் கொண்டுவரும் வரை நிகழ்ச்சியை நிறுத்த முடியா’தென மறுத்து, தாலி அகற்றும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டது, திராவிடர் கழகம். எல்லாம் முடிந்தபின்னர் அக்னி ஹோத்திரி, வேணுகோபால் அமர்வு நிகழ்ச்சிக்குத் தடை விதித்தது. இவ்வாறு முகத்தில் கரியைப் பூசிக்கொண்ட ஜெயா அரசின் காவல்துறை, இதற்கு பழி தீர்க்க வன்மம் கொண்டிருந்தது.
நிகழ்ச்சியில் இந்து மதவெறிக் கும்பல் புகுந்து இடையூறு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் தி.க இளைஞர்கள் தயாராகவே இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, தாலி புனிதமானது என்ற மூடத்தனத்தை தகர்த்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இந்து மதவெறிக் கும்பல் புகுந்து இடையூறு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் தி.க இளைஞர்கள் தயாராகவே இருந்தனர்.
இந்துவெறி அமைப்பின் புரசைவாக்கம் பகுதி குண்டர்கள் சிலர் நோட்டம் பார்க்க வந்தனர்; சிவப்புச் சட்டைகளைக் கண்டபின் அங்கு வராமல் ஓட்டம் பிடித்தனர்.
இந்துவெறிக் கும்பலை எதிர்கொள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக சுமார் 50 தோழர்கள் பெரியார் திடலின் முகப்பில் இருந்து உள்ளரங்கம் வரை நிகழ்ச்சி முடியும் வரை பாதுகாப்பாக அணிவகுத்து நின்றனர். சந்தேகத்துக்கிடமான நபர்கள், தோழர்களால் தடுக்கப்பட்டனர். முற்பகலில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில் பெரியார் திடல் அமைந்திருக்கும் ஈ.வெ.கி.சம்பத் சாலையில், இந்துவெறி அமைப்பின் புரசைவாக்கம் பகுதி குண்டர்கள் சிலர் நோட்டம் பார்க்க வந்தனர்; சிவப்புச் சட்டைகளைக் கண்டபின் அங்கு வராமல் ஓட்டம் பிடித்தனர்.
சிவசேனா குண்டர்களை ஏவிவிட்ட காவல்துறை, அக்கும்பல் பெரியார் திடலை முற்றுகையிட போதுமான அளவு ஒத்துழைப்பு தந்தது.
பிற்பகலில், தி.க உள்ளிட்ட திராவிட இயக்கத்தினரும், பு.மா.இ.மு. தோழர்களும் கலைந்து சென்ற பின்னர், சுமார் 3 மணியளவில் சிவசேனா குண்டர்களை ஏவிவிட்ட காவல்துறை, அக்கும்பல் பெரியார் திடலை முற்றுகையிட போதுமான அளவு ஒத்துழைப்பு தந்தது. சாணிப்பால், சுத்தியல், பெரியார், வீரமணி ஆகியோரின் படங்களோடு வந்த 15 பேர் கும்பலை பெரியார் திடலில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை வர அனுமதித்தது, காவல்துறை.
‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று கூக்குரல் போட்ட அக்கும்பல் பெரியாரை ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி முன்னேறியது. தங்களின் கோரிக்கைக்காக முற்றுகைப் போராட்டம் நடத்தும் முற்போக்காளர்களையும், புரட்சியாளர்களையும், ஊர்வலம் தொடங்கும் முன்பே கைது செய்வதை வழக்கமாக்க் கொண்டுள்ள, காவல்துறை சிவசேனா குண்டர்களை 100 மீட்டர் தொலைவு வரை அனுமதித்த்தில் இருந்தே அவர்களின் இந்து மதவெறி சார்பு தெளிவாகத் தெரிந்தது.
சிவசேனைக் கும்பல் வருவதை அறிந்து கொதித்துப் போன தி.க. தொண்டர்கள், திடலுக்கு வெளியே வந்து சிவசேனையினரை நோக்கிப் பாய்ந்து தாக்கத் தொடங்கினர்.
சிவசேனைக் கும்பல் வருவதை அறிந்து கொதித்துப் போன தி.க. தொண்டர்கள், திடலுக்கு வெளியே வந்து சிவசேனையினரை நோக்கிப் பாய்ந்து தாக்கத் தொடங்கினர். சிவசேனா கும்பல் திருப்பித் தாக்கியது. தி.க தொண்டர்கள், கையில் கிடைத்தவற்றைக் கொண்டு 4 சிவசேனா தொண்டர்களை சாத்தத் தொடங்கவே அந்த ‘வீரர்’களின் ‘பாரத் மாதா கீ ஜெய்’ கோஷம், ‘அய்யோ..அடிக்கிறான்..கொல்றான்’ என மாறி, தப்பித்து ஓட்டம் பிடித்தனர். இச்சமயத்தில் சிவசேனையினரைப் பாதுகாத்து நின்ற போலீசு, கருப்புச் சட்டை அணிந்தவர்களைக் குறிவைத்துத் தாக்கியது. சுற்றி வளைத்து தி.க.வினர் 5 பேரின் மண்டையைக் குறிபார்த்து பூண் போட்ட தடியால் மிகக் கடுமையாகத் தாக்கியது. இதில் தி.க பொதுச்செயலாளர் ஒரத்த நாடு குணசேகரன், மற்றும் இளவரசு, சுரேஷ் உள்ளிட்ட 4 தொண்டர்கள் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய தொண்டர்களையும் தடியடி நடத்தி விரட்டி விட்டு சிவசேனையினர் 15 பேரைக் கைது செய்துள்ளனர்.
பெரியார் திடலைத் தாக்கும் நோக்கத்தோடு வந்த அக்கும்பல் விட்டுவிட்டுச் சென்ற ஆட்டோவில் இருந்து வெங்காய வெடிகள் (தடை செய்யப்பட்டவை) கைப்பற்றப்பட்டன.
பெரியாரின் தொண்டர்களிடம், அரசு பற்றி இருந்து வந்த பிரேமையை வேப்பேரி போலீசின் குண்டாந்தடி கலைத்து விட்டது.
இதன் பின்னரும் பாசிஸ்டுகள் தாக்க மீண்டும் வரக்கூடும் என்ற தகவல் பரவியதை அடுத்து தி.க., தந்தை பெரியார் தி.க, தி.வி.க, பு.மா.இ.மு அமைப்புகளின் தொண்டர்கள் மாலை 7 வரை பெரியார் திடலில் குழுமி நின்று எதிர்கொள்ளச் சரியான தயாரிப்போடு இருந்தனர். ஆனால் தயாரிப்பினைப் பயன்படுத்த வாய்ப்பினை வழங்காமல், பாசிஸ்டுகள் அப்பகுதிக்கே வராமல் இருந்து விட்டனர். கூடியவிரைவில் இதைச் செய்யும் வாய்ப்பு வரும். பாசிஸ்டுகளின் ‘அய்யோ’ ‘அம்மா’ கதறலின் ஒலி காற்றில் நிறைந்திருக்கும்.
போலீசும் சிவசேனை கும்பலும் திட்டமிட்டு நடத்தியுள்ள இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்துவெறிக் கும்பலுக்கு பதிலாக அரசே மேல் முறையீடு செய்துள்ளதன் மூலம், ‘மக்கள்’ முதல்வரின் பினாமி அரசு இன்னொரு பா.ஜ.க.தான் என்பது அம்பலமாகியுள்ளது. இதனைக் கூட அறுதியிட்டு சொல்லத் துணிவில்லாமல், தி.க தலைவரோ, ‘இந்தத் தடை விதிப்பு, சில பேரை அம்பலப்படுத்தியிருக்கிறது. சில பேருடைய உருவத்தை வெளியில் காட்டியிருக்கிறது’ என்று அடக்கி வாசிக்கிறார். ஆனால் பெரியாரின் தொண்டர்களிடம், அரசு பற்றி இருந்து வந்த பிரேமையை வேப்பேரி போலீசின் குண்டாந்தடி கலைத்து விட்டது.
சட்ட வரம்புக்குள்ளேயே பாசிஸ்டுகளை ஜெயித்துவிட முடியும் என வீரமணி பலமுறை சொன்னாலும் களத்தில் இறங்கினால்தான் இந்தக் காலிகளை அடித்து விரட்ட முடியும் என்று அனுபவத்தில் தி.க தொண்டர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
‘நாங்கள் தடையை மீறவில்லை. தடை போட்டது சரியா? இல்லையா? என்று சட்டப்படி பரிகாரம் தேடுவோம்’ என்று சட்ட வரம்புக்குள்ளேயே பாசிஸ்டுகளை ஜெயித்துவிட முடியும் என வீரமணி பலமுறை சொன்னாலும் களத்தில் இறங்கினால்தான் இந்தக் காலிகளை அடித்து விரட்ட முடியும் என்று அனுபவத்தில் தி.க தொண்டர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். அவர்களது, இந்த வீரம் செறிந்த தாக்குதலைப் பாராட்டுகிறோம்.
“பெரியார் திடல் தனியார் இடமானாலும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அது பொது இடம். இதனால் இதற்கு காவல்துறை அனுமதி கட்டாயம் தேவை” – நீதிமன்றம்.
‘தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படும்’ என்பது அண்ணாதுரை காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகின்ற வசனம். ஆனால் பெரியாரின் இயக்கத்தின் மீது இந்து மதவெறியர்கள் நேரடி தாக்குதல் நடத்திய பின்னரும், தி.மு.க எனும் துப்பாக்கிக் குழலில் இருந்து சத்தம் ஏதும் இல்லை. இதனை சுட்டிக்காட்டி ‘தி.மு.கவை அழைத்து அவர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தலாமே’ என்று வினவியபோது தி.க தலைவர் ஒருவர், ‘அதெல்லாம் சும்மா. இன்னைக்கு நடந்த நிகழ்ச்சிக்கு கூட அவங்க வரலை. அவங்களுக்கு கொள்கையாவது ஒண்ணாவது’ என்று ஆத்திரத்துடன் பதில் தந்தார்.
பெரியாரின் இயக்கத்தின் மீது இந்து மதவெறியர்கள் நேரடி தாக்குதல் நடத்திய பின்னரும், தி.மு.க எனும் துப்பாக்கிக் குழலில் இருந்து சத்தம் ஏதும் இல்லை.
விழாவுக்கு தடைபோடும் நீதி மன்றம், தாலியின் புனிதத்தையோ, மாட்டுக்கறி விருந்தையோ பற்றி விவாதிப்பதை கவனமாகத் தவிர்த்து விட்டு, “பெரியார் திடல் தனியார் இடமானாலும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அது பொது இடம். இதனால் இதற்கு காவல்துறை அனுமதி கட்டாயம் தேவை” என்றும் வாதிட்டுள்ளது. இதை முன்னுதாரணமாக்கி இனிமேல் அரங்கக் கூட்டம் மட்டுமல்ல, முற்போக்குத் திருமணம் செய்யக் கூட காவல் நிலையம் அலைய வைக்கும் சதி இதில் உள்ளது. இதனை எதிர்த்து முறியடித்தாக வேண்டும்.
தி.க.வின் நிகழ்ச்சியைக் கண்டித்து அரசு பேருந்துகளை இந்து வெறியர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர்.
தி.க.வின் நிகழ்ச்சியைக் கண்டித்து அரசுப் பேருந்துகளை இந்து வெறியர்கள் கல்வீசித் தாக்கியுள்ளனர். வீரமணியின் வீடு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தி.க தலைமை அலுவலகம் மீது தாக்கும் நோக்கில் தடை செய்யப்பட்ட வெடிகளைக் கொண்டு வந்துள்ளனர். இச்செயல்களில் ஈடுபட்ட சிவசேனா உள்ளிட்ட இந்துமதவெறி அமைப்புகளை அரசு தடை செய்ய வேண்டும். இத்தாக்குதலில் ஈடுபட்ட சிவசேனா குண்டர்களை, குண்டர் தடைச் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்.
எதிரியும் அரசும் சட்டத்தை மதிக்காதபோது நாம் மட்டும் ஏன் சட்டத்தை மதித்துக் கொண்டும் அதனால் உதை வாங்கிக் கொண்டும் இருக்க வேண்டும்?
மாறாக, காவல்துறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த திராவிடர் கழகத்தினரை கைது செய்திருக்கிறது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை பார்க்கச் சென்றவர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பிணையில் வராத பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். திராவிடர் விடுதலை கழகம் நடத்தும் நிகழ்ச்சிக்கான அனுமதி கடிதத்தில் நிகழ்ச்சியில் அசைவ உணவு பரிமாறக் கூடாது என்று நிபந்தனை போட்டிருக்கிறது காவல்துறை. பார்ப்பனத் தாய் ஜெயாவின் ஆட்சியில் மாட்டுக் கறிக்கு மட்டுமில்லை அசைவ உணவுக்கே மறைமுக தடை அமலுக்கு வருகிறது.
ஏறி வந்து தாக்கத் தொடங்கி விட்டது, இந்து வெறி பாசிசம். இனிமேலுமாவது, ‘சட்டப்படியே எதிர்கொள்வோம்’ என்ற மயக்கத்தில் இருந்து பெரியார் தொண்டர்கள் விடுபட வேண்டும். எதிரியும் அரசும் சட்டத்தை மதிக்காதபோது நாம் மட்டும் ஏன் சட்டத்தை மதித்துக் கொண்டும் அதனால் உதை வாங்கிக் கொண்டும் இருக்க வேண்டும்? டஜன் கணக்கிலான பாசிச அமைப்புகள் ஒத்த நோக்கோடு செயல்படும்போது, நமது பொது எதிரியை எதிர்த்து முறியடிக்க பெரியார் தொண்டர்களும், முற்போக்காளர்களும், புரட்சிகர சக்திகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்.
தோழமையுடன்,
அ.முகுந்தன், தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.
செம்மரம் வெட்டிகடத்தியதாக கூறி கொலை செய்யப்பட்ட 20 தொழிலாளிகளில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 7 பேர் தர்மபுரி மாவட்டத்தையும், ஒருவர் சேலம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இதில் தருமபுரி மாவட்ட கிராமங்களுக்கு சென்று சேகரித்த நேரடி செய்தி அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தோம். இன்று திருவண்ணாமலை கிராமங்களின் மக்கள் கருத்தை தொகுத்து தருகிறோம்
– வினவு
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழனி,மூர்த்தி,முருகன்,பெருமாள்,முனுசாமி,சசிகுமார்,மகேந்திரன்,வெள்ளிமுத்து,கோவிந்தசாமி,ராஜேந்திரன்,சின்னசாமி,பன்னீர்செல்வம் ஆகியோரின் குடும்பங்களை சந்திப்பதற்காக அவர்களின் கிராமங்களுக்கு சென்றோம்.
கொலை செய்யப்பட்ட தொழிலாளிகளில் முதல் 7 பேர் கண்ணமங்கலம் எனும் சிறு நகரத்திற்கு அருகில் உள்ள காளசமுத்திரம்,முருகபாடி,புதூர்காந்திநகர்,படவேடு ஆகிய நான்கு கிராமங்களை சேர்ந்தவர்கள். அடுத்த 5 பேர் ஜவ்வாது மலையில் இருக்கும் மேல்குப்சானூர் என்கிற மலை கிராமத்தை சேர்ந்தவர்கள். கண்ணமங்கலத்திலிருந்து இக்கிராமம் 35 கிலோ மீட்டர் தொலைவில் ஜவ்வாது மலையின் உச்சியில் இருக்கிறது.
இக்கிராமங்கள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் கண்ணமங்கலத்திலிருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் வேலூர் தான் அருகில் இருக்கும் பெரிய நகரம். முதல் நான்கு கிராமங்களிலும் மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இதர தமிழக கிராமங்கள் போல விவசாயம் வறண்டு போயிருக்கிறது. எனவே, ஊருக்கு பாதி பேர் சென்னை, பெங்களூர், திருப்பூர் போன்ற நகரங்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். இதில் சமவெளி பகுதி மக்களில் பெரும்பான்மையினர் வன்னியர்கள்.
பழனி, காளசமுத்திரம்.
பழனிக்கு வயது 35. பி.எட் பட்டதாரி, தற்காலிகமாக ஒரு தனியார் பள்ளியில் சில மாதங்கள் ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார். திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. நாற்பது நாளில் ஒரு கைக்குழந்தை இருக்கிறது.
வீட்டில் பழனியின் துணைவியார் இல்லை. அன்று அப்பகுதிக்கு அன்புமணி ராமதாஸ் வந்ததால் இறந்தவர்களின் மனைவிமார்களும், தாய் தந்தையும் அங்கே சென்றுவிட்டிருந்தனர். வீட்டில் பழனியின் தம்பி மனைவியும், அத்தையும் இருந்தனர். அவர்களிடம் பேசினோம். பெரும்பாலான கேள்விகளுக்கு பழனியின் தம்பி மனைவியே பதிலளித்தார்.
“வெட்டி வெட்டி துண்டு துண்டா மூஞ்ச கூட பாக்க முடியாத மாரி அநியாயமா கொல பண்ணிட்டீங்க”
“நூல் வாங்க கண்ணமங்கலத்துக்கு போறதா சொல்லிட்டு போனவரு அன்னைக்கு வரல. அடுத்த நாள் காலயிலயும் வரல. அப்புறம் செவ்வாக்கிழமை நைட்டு போலீசுக்காரங்க வந்து போட்டோவ காட்டி இதுபோலன்னு சொன்னாங்க, அதுல மூஞ்சி கூட சரியாத் தெரியல, போட்ருந்த துணிய வச்சு எங்க மாமியார் தான் அது என் புள்ளைன்னு அடையாளம் காட்னாங்க. பொழைக்கிறதுக்கு அவர் டெய்லர் கடை வச்சிருந்தாரு.
கொஞ்ச நாள் டீச்சர் வேலைக்கும் போய்க்கிட்ருந்தாரு, சம்பளம் பத்தலைன்னு முழுசா டெய்லர் வேலையே செய்ய ஆரம்பிச்சுட்டாரு. கண்ணமங்கலம், வேலூரு தாண்டி வேற எங்கையும் போக மாட்டாரு. அதுவும் கொழந்த பொறந்ததிலிருந்து எங்கையும் போறதில்ல.
வெட்டி வெட்டி துண்டு துண்டா மூஞ்ச கூட பாக்க முடியாத மாரி அநியாயமா கொல பண்ணிட்டீங்க. இன்னைக்கு புருசனை இழந்து நிக்கும் அந்த பொண்ணுக்கும் அதோட குழந்தைக்கும் இந்த அரசாங்கம் தான் பதில் சொல்லணும்.”
மூர்த்தி,முருகப்பாடி.
வீட்டில் துணைவியார் இல்லை, மாமியார் இருந்தார். மூர்த்திக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது, எட்டு மாத கைக்குழந்தை இருக்கிறது.
“குத்தி, சுட்டு கொன்னுப்புட்டு அப்புறம் போட்டோவ வந்து காட்டுறீங்களே அய்யா, இது நியாயமா !” – கொல்லப்பட்ட தொழிலாளி மூர்த்தியின் மாமியார்.
“கூலி வேலைக்கு போறேன் மறுநா வந்துடுறேன்னுதாம்பா சொல்லின்னு போனான். அவன் வேலைக்கு போயி அவன் குடும்பத்த மட்டுமில்ல, எங்க குடும்பத்தையும் காப்பாத்தினு இருந்தான்.
கல்யாண சப்ளையர் வேலைக்கு அப்பப்ப போவான், புரோக்கருங்க எல்லாத்தையும் ஒரு எடத்துக்கு அழைச்சினு வந்து அங்கிருந்து ஒவ்வொரு மண்டபத்துக்கா பிரிச்சி அனுப்புவாங்க.
மரம் வெட்டவும் போகல எதுக்கும் போகலப்பா, அந்த மாதிரி வேலை எல்லாம் அவனுக்கு தெரியாது. ஊருக்குள்ள வேணுமின்னா நீயே விஜாரிச்சி பாத்துக்க. கட்டட வேலைக்கு போவான், சப்ளையர் வேலைக்கு போவான் அவ்வளவு தான்.
மரம் வெட்ட போனான்னு சொன்னா இந்த போலீசு புடிச்ச எடத்துலயே எங்களுக்கு தகவல் சொல்ல வேண்டியது தானே, ஏன் சொல்லல ? குத்தி, சுட்டு கொன்னுப்புட்டு அப்புறம் போட்டோவ வந்து காட்டுறீங்களே அய்யா, இது நியாயமா !
எனக்கு பசங்க இல்லப்பா, ரெண்டும் பொம்பள புள்ளைங்க, வீட்டுக்காரர் இல்ல. சொந்தம்னு சொல்லிக்கவும் யாரும் இல்ல.
வேல செய்ய மாமனார் மாமியாருக்கு தெறம் இல்ல, அம்மாவுக்கும் தெறம் இல்லையேன்னு பூவை இழந்து, பொட்ட இழந்து, சாப்புடாம கொள்ளாம இருக்க எம் பொண்ணு சொல்லிச் சொல்லி அழுவுது. எங்களுக்கு கேக்கிறதுக்குன்னு யாரும் இல்ல, இனி நான் வேலைக்கு போய் ஒழைச்சா தான் சோறு. எங்களுக்கு வேற கல்லு, மாத்துக்கல்லு மறுகல்லா இருக்குது. எம்புள்ளைக்கு 18 வயசுதாம்பா ஆவுது. இந்த வயசுலயே ஆம்பளைய எழந்து கைக்கொழந்தையோட நிக்கிது.
முதியோர் பணத்தை வச்சு நான் ஏதோ காலம் ஓட்டிகினு இருந்தேன் இனி என்ன செய்யப் போறமோ?”
முனுசாமி, முருகபாடி.
வீட்டில் முனுசாமியின் துனைவியார் இல்லை. அக்கா சுலோச்சனா இருந்தார். முனுசாமிக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு பையனும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன.
“திங்ககிழமை ரேசன் கடைக்கு போயி அரிசி எல்லாம் வாங்கி வச்சிட்டு வேலைக்கு போறேன்னு சொல்லின்னு தாம்பா போயிருக்கான். சப்ளையர் வேல, மேஸ்திரி வேலைக்கு தான் போவான். மரம் வெட்ற வேலைக்கெல்லாம் போனதில்ல. அந்த வேல இல்லாத நாள்ல விவசாய வேலய பாத்துக்குவான்
மரம் வெட்னதாவே கூட இருக்கட்டும், நீ டவுட்டு பட்டு தானே இட்னு போன ? இட்னு போயி அரெஸ்ட் பண்ணி டேசன்ல வைக்க வேண்டியது தானே, 10 வருசம் கூட தண்டனை கொடு. அப்படி பண்ணாம ஏன் கொலபாதகம் பண்றீங்க ?
எங்களுக்கு வந்த கெதி உங்களுக்கு வராதா, ஏன்டா இப்படி பண்றீங்க ? மரம் வெட்ட போனாங்க புடிச்சோம்னு சொல்றீங்களே, திங்க கிழம ராவு போனா கூட நைட்டுக்குள்ள எத்தன கட்டைய வெட்டிருக்க முடியும், நீயே சொல்லுப்பா ?
இவனுங்களுக்கு ஏத்த தண்டனையை வாங்கி குடுங்க, தூக்கு ஆர்டர் போடுங்க. அப்ப தான் எங்க மனசு திருப்தியா இருக்கும். எவ்வளவு பணம் காசு கொடுத்தாலும் என் தம்பிக்கு ஈடாகாது. இன்னைக்கு அவன் பொண்டாட்டி மொட்டையா நிக்கிது. யாரு இனி புள்ளை குட்டிங்களை காப்பாத்துறது ?
பாடிய வீட்ல கொண்டு வந்து வச்சிருக்கோம் கொழந்தைங்க கேக்குது, யாரும்மா இது எதுக்காக இவ்வளவு பேரு நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க ? அப்பா எப்பம்மா வருவாரு, எங்களுக்கு அப்பா வேனும்னு கேக்குது. நாங்க என்ன பதில் சொல்றது ? அப்பாவ வேணும்னு கேக்குற குழந்தைகளுக்கு எங்க போய்ப்பா நாங்க அப்பாவ வாங்கித்தர்றது?” (கண்ணீர் விட்டு கதறுகிறார்.)
மகேந்திரன், புதூர் காந்தி நகர்.
வீட்டில் மகேந்திரனின் அம்மா இல்லை. தாத்தா பாட்டி இருந்தனர். மகேந்திரன் 22 வயது இளைஞர். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு போலீசு வேலைக்கு முயற்சி செய்தவர்.
“என் கொயந்தைய இப்படி பண்ணவனுங்களை துண்டு துண்டா வெட்டி எடுக்கனும், கை கால வாங்கனும். இல்லன்னா தூக்கு தண்டனை கொடுக்கனும்”- கொல்லப்பட்ட தொழிலாளி மகேந்திரனின் தாத்தா, பாட்டி
“கம்பி கட்ற வேலைக்கு போவான், சப்ளையர் வேலைக்கு போவான். யாரும் கூட்னு போமாட்டாங்கப்பா அவனே பூடுவான். சனிக்கெழம வருவான், ஞாயத்துகெழம இருப்பான், திங்க கெழ கெளம்பி பூடுவான். பத்து நாளு, ஒரு வாரம்னு போய் வருவான். வந்தா ஐயாயிரம் ஆராயிரம்னு எடுத்துனு வருவான்.
அவன் மரம் வெட்ற வேலைக்கே போகல சாமி, அதெல்லாம் அவனுக்குத் தெரியாது. எவனோ இப்டி கூட்னு போய் கொன்னுட்டானுங்க. கட்ட வெட்ட போனா போன எடத்துலயே இல்ல புடிக்கணும், அப்புடியா பண்ணாங்க, பஸ்ல போனவங்கள புட்சி இய்த்தாந்து கொன்ருக்கானுங்க. என் கொயந்தைய இப்படி பண்ணவனுங்களை துண்டு துண்டா வெட்டி எடுக்கனும், கை கால வாங்கனும். இல்லன்னா தூக்கு தண்டனை கொடுக்கனும்”.
இறந்தவர்களின் குடும்பத்தினர் பா.ம.க அன்புமணியை சந்தித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அங்கே இருந்த மகேந்திரனின் அம்மாவிடம் பேசினோம். அழுது அழுது தொண்டை கட்டி போயிருந்தது அவருக்கு.
“மெட்ராசுக்கு பிளம்பர் வேலைக்கு போறதா சொல்லிட்டுதாம்பா போனான். அறியாத பசங்கள எதுக்கு புட்ச்சின்னு போனானுங்கன்னு தெர்ல. புட்சின்னு போய் இப்படி கொலைபாதகம் பண்ணி வச்சிருக்கானுங்கோ.
அன்னிக்கு என்ன நடந்துச்சோ ஏது நடந்துச்சோ, எவன் கூட்னு போனானோ தெர்லப்பா. இவனுக்கு பிளம்பர் வேலைதாம்பா தெரியும், அதுக்காக தான் மெட்ராசு, பாண்டிச்சேரின்னு போவான். மரம் வெட்ற வேலைக்கெல்லாம் அவன் போனதில்ல.
மகேந்திரனின் சிதிலமடைந்த வீடு.
எனக்கு மூணு பசங்க, இவன் ரெண்டாவது பையன். எம் புள்ளைய நெனச்சி நெனச்சி எனக்கு வேதனையா இருக்குப்பா, எப்புடி செதைச்சி வச்சிருக்கானுங்க எம்புள்ளைய. படத்த பாக்க முடியலப்பா எனக்கு, என் பையன கொடூரமா வெட்டி வச்சிருக்கானுங்க. என் பையன் எப்படி செத்தானோ அது போல அதை பண்ணவனுங்களும் துடிதுடிச்சு சாகணும்”.
சசிக்குமார், படவேடு.
சசிக்குமாருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஒரு குழந்தைக்கு நான்கு வயது, இன்னொரு குழந்தைக்கு இரண்டு வயது. அவருடைய மனைவி முனியம்மா பேசினார்.
“எனக்கு கல்யாணம் ஆனாதுலயிருந்து அவர் கூலி வேலைக்கு தான் சார் போறாரு. அன்னிக்கு திருத்தணிக்கு பெயிண்ட் வேலைக்கு போறதா சொல்லிட்டு தான் போனாரு. போய் ஒரு நாளாச்சுங்கிறதால புள்ளைங்க அப்பாகிட்ட பேசணும்னு சொன்னிச்சுங்கோ, அதனால போன் பண்ணேன். ரிங்கு போனதேங்காட்டி யாரும் எடுக்கல, அப்புறம் போலீசுக்காரங்க வந்த பிறகு தான் இந்த மாதிரி நடந்துச்சுன்னு தெரியும்.
“அவரை மூஞ்சில எல்லாம் சுட்ருக்காங்க, கத்திய வச்சு சித்ரவதை பண்ணியிருக்காங்க. இனி நான் மட்டும் இருந்து என்னா பண்ணப் போறேன்” – கொல்லப்பட்ட தொழிலாளி சசிகுமாரின் மனைவி முனியம்மா.
மரம் வெட்டப் போனதா சொல்றது பொய், அந்த வேலைக்கெல்லாம் அவர் போனதில்லை, அந்த வேலையே அவருக்குத் தெரியாது. உங்களுக்கு சந்தேகம் இருந்தா அவரோட செல்போன்ல யாரோட நெம்பர் இருக்குன்னு பார்க்கச் சொல்லுங்க. பெயிண்டிங் வேலை செய்றவங்க நெம்பர் தான் இருக்கும். அவரை மூஞ்சில எல்லாம் சுட்ருக்காங்க, கத்திய வச்சு சித்ரவதை பண்ணியிருக்காங்க. இனி நான் மட்டும் இருந்து என்னா பண்ணப் போறேன். எங்களுக்குக் கஞ்சி ஊத்தி காப்பாத்துன ஆம்படையானே போய்ட்டாங்க.
பெருமாள்,படவேடு.
பெருமாளுக்கு மூன்று குழந்தைகள். 12, 14 வயதில் இரு பெண் குழந்தைகளும், 9 வயதில் ஒரு பையனும் உள்ளனர். அவருடைய மனைவி செல்வி பேசும் போது..
“என் குழந்தைங்க அப்பா எங்கே, அப்பா எங்கேன்னு ? ராத்திரிலே அழுவுதுங்க நான் என்ன பதில் சொல்றது சார் ?” – கொல்லப்பட்ட தொழிலாளி பெருமாளின் மனைவி செல்வி மற்றும் குழந்தைகள்
“கேரளாவுக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு. கலவை கலக்குறது, மேஸ்திரி வேலை, கல்யாணத்துல சப்ளையர் வேலைக்குன்னு எல்லா வேலைக்கும் போவாரு.
எனக்கு ஒண்ணுமே புர்ல, பஸ்ல போம்போதே புட்சினு போய் இப்படில்லாம் பண்ணிருக்காங்க அதுக்கு என்ன காரணம்னு தெர்ல, எம் பொண்ணு ஒரு நாளைக்கு எவ்வளவு கூலினு கேட்டதுக்குக் கூட, 400 ரூபான்னு சொல்லிட்டுதான் போயிருக்காரு.
இப்படி ஆனப்புறம் தான் இவங்க இவங்கல்லாம் போய்ருக்காங்கன்னே எங்களுக்கு தெர்து. இவங்கள மட்டும் தனிய ஏன் இய்த்துனு போகணும் ? அதுக்கு முன்னடி பின்னாடி வர்ற பஸ்ச சேத்து மடக்க வேண்டியது தானே ? புடிச்சப்புறம் ஒனக்கு யார் இருக்காங்க, எந்த ஊர்னு எல்லாத்தையும் கேட்டு எங்களுக்கு தகவல் சொல்லியிருக்கலாம் இல்ல, அப்படி பண்ணாம எல்லாத்தையும் பிளான் பன்னி புட்சினு போய் சுட்டு கொன்னிருக்காங்க.
என் குழந்தைங்க அப்பா எங்கே, அப்பா எங்கேன்னு ? ராத்திரிலே அழுவுதுங்க நான் என்ன பதில் சொல்றது சார் ? எதிர்காலமே கேள்விக்குறியா இருக்கு, கொஞ்சம் நெலம் இருக்கு. ஆனா தண்ணி இல்ல, எங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்கு. அர்சாங்கம் தான் எங்களுக்கு உதவி பன்னனும். எங்க வீட்டுக்காரங்கள கொன்னவனுங்கள வேலையிலிருந்து டிஸ்மிஸ் பண்ணணும், எங்க குடும்பம் இன்னிக்கு அநாதையா நிக்கிற மாதிரி அவங்களும் அநாதையா நிக்கணும். நாங்க எப்படி இந்த செய்தியை எல்லாம் பாத்து துடிக்கிறமோ அந்த மாதிரி அவங்க குடும்பத்துல உள்ளவங்களும் துடிக்கணும்.”
முருகன், படவேடு.
முருகனுக்கு ஹேமலதா (18) குமுதா (13) என்கிற இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றன. அவருடைய மனைவி தஞ்சையம்மாள் கூறும் போது…
“மரம் வெட்டி சம்பாதிக்கிறதா இருந்தா நாங்க ஏன் ஊரான் வீட்ல குடியிருக்க போறோம்.” – கொலைசெய்யப்பட்ட தொழிலாளி முருகனின் மகள்கள் குமுதா, ஹேமலதா மற்றும் மனைவி தஞ்சையம்மாள்
“பெயிண்ட் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு, போனா எப்பவுமே ரெண்டு நாள் மூனு நாளைக்கு தங்கி வேலையை முடிச்சிட்டு தான் வருவாரு. இந்த தடவயும் அப்படி தான் ரெண்டு மூனு நாளாகும்னு சொல்லிட்டு போனாரு.
நாங்க ஊரான் வீட்ல வாடகைக்கு குடியிருக்கோம், அன்னாடம் சம்பாதிச்சாதான் சோறு. மரம் வெட்டி சம்பாதிக்கிறதா இருந்தா நாங்க ஏன் ஊரான் வீட்ல குடியிருக்க போறோம். எங்க புள்ளைங்க கவர்மெண்டு ஸ்கூல்ல தான் படிகுது. அப்படி சம்பாதிச்சிருந்தா நாங்க ஏன் இந்த நெலமையில இருக்கப்போறோம் ?
அவங்களும் ஒரு தாய் வயித்துல பொறந்தவங்கதான? எங்க ஆம்படையானுக்கு நடந்த மாதிரி கொடும யாருக்கும் நடந்திருக்காது. நாங்க என்ன கஷ்ட்டத்தை அனுபவிக்கிறமோ அந்த கஷ்டத்தை அவங்க குடும்பமும் அனுபவிக்கனும், நாங்க எப்படி எங்க தாலிங்களை அறுகுறமோ அந்த மாதிரி அவங்களும் அறுக்கனும்.”
மகள் ஹேமலதா: “இனிமே எங்கம்மா எங்களை எப்படி காப்பாத்துவாங்க சார் ? அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னாலும், எங்களுக்கு ஒடம்பு சரியில்லைன்னாலும் எப்படி மருத்துவம் பாப்பாங்க, என் தங்கச்சியை எப்படி படிக்க வைப்பாங்க. எங்கப்பா இருந்திருந்தா எப்படியாவது எங்களை கவனிச்சிப்பாரு எங்கம்மாவ வேலைக்கு போகவிடமாட்டாரு. இப்ப எங்க அப்பாவ கொன்னுட்டாங்க அவங்களா இனிமே எங்களுக்கு சோறுப்போடுவாங்க, வைத்தியம் பாப்பாங்க? எங்கம்மாவுக்கு அரசாங்க வேலை வேணும்.”
ஊர் மக்களின் கருத்து
வேலு,ஆட்டோ ஓட்டுனர், கண்ணமங்கலம்:
“தி.மலை மாவட்டம் வறட்சி மாவட்டம்னு அறிவிச்சிட்டாங்க, மழை பேஞ்சா கொஞ்ச நாளைக்கு விவசாயம் நடக்கும். கூலி வேலைக்கு 20 வயசிலிருந்து 50 வயசு வரைக்கும் பெங்களுரு, சென்னை, கேரளான்னு வெளியூருக்கு போறாங்க. கூலிக்கு மரம் வெட்ட போனவங்க, பெரிய பில்டிங் வாங்கணும், அத வாங்கணும், இத வாங்கணும்னு போகல. வயித்துப் பொழப்புக்கு தான் போயிருக்காங்க, உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சி தான் போயிருக்காங்க.
ஏழுமலை,ஆட்டோ டிரைவர், கண்ணமங்கலம்:
“இது கண்டிப்பா தப்பான தொழில்தான். ஆனா நமக்கு எது உண்மைன்னு தெரியலையே. அதனால என்ன நடந்துச்சின்னு சரியா சொல்ல முடியல. இங்கிருந்து வெளியூருக்கு வேலைக்கு போனதுக்கு காரணம் வறட்சி தான். பெங்களூர்க்கு தான் நிறைய பேர் போறாங்க, நிறைய பேர் கேரளாவுக்கும் போறாங்க.
அழகர்சாமி,ஆட்டோ ஓட்டுனர், கண்ணமங்கலம்.
“கொல்லப்பட்ட எல்லோரும் கூலிக்கு மரம் வெட்ட போனவங்க தான் சார். ஆட்டோல சவாரி ஏர்றவங்க பேசிக்கும் போது இத பத்தி பல விசயங்களை கேள்விப்பட்டிருக்கேன். இந்த வேலைக்காக ஆந்திர அரசு பஸ் ரெண்டு நேரடியா அழகர்சேனைங்கிற ஊருக்குள்ளயே வந்து ஆளுங்களை ஏத்திட்டு போனதா சொல்றாங்க. திருவண்ணாமலை To திருப்பதி போற ஆந்திர பஸ் முழுக்க மரம் வெட்றவங்கள ஏத்திக்கிட்டு பஸ் ஃபுல்லாகிடுச்சுன்னு வண்டியை எடுத்துட்டு போறதாவும் சொல்றாங்க. இந்த பிரசினையில் ஆந்திர வனத்துறை ஆளுங்கதான் முக்கிய ஏஜெண்டா கூட்டிட்டு போறாங்க.”
பரமசிவம், தேநீர் கடை,காட்டுக்காநல்லூர்.
“வயித்துப்பாட்டுக்காக போனவங்களை தான் இப்படி கொன்னிருக்கானுங்க. இதுல எல்லா அரசியல் கட்சிக்காரனுக்கும் தொடர்பு இருக்கு. இந்த பக்கம் உள்ளவங்களுக்கு இதுல ஒன்னும் அனுபவம் இல்ல, மலை கிராமத்து மக்களுக்கு தான் மரம் வெட்றதுல நல்ல அனுபவம் இருக்கு”.
நூறு நாள் வேலை செய்துகொண்டிருந்தசண்முகம், வசந்தா, கலைவாணி, வனிதா, தமிழ்செல்வி:
“இந்த ஊர்க்காரங்க யாரும் மரம் வெட்ற வேலைக்கு போகலைங்க, எல்லாம் கூலி வேலைக்கு போனவங்க. அப்படி போனவங்கள தான் மரம் வெட்ட போனாங்கன்னு புடிச்சின்னு போய் கொன்னுட்டாங்க.
பத்து பதினைஞ்சு வருசமா எங்களுக்கு எந்த வருமானமுமில்லைங்க, விவசாயம் பண்ண முடியல. தண்ணி இல்லாம பயிர் எல்லாம் காயிது. விவசாயம் பண்றதே கொறஞ்சு போச்சு. ஊருக்கு பாதி பேரு மெட்ராஸ், பெங்களூருன்னு போயிட்டாங்க.”
தனசேகர், காளசமுத்திரம்:
“வேலை இல்லாததுதாங்க இதுக்கு முக்கிய காரணம். மேலும் தவறான தொழில் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. அவங்களை பொறுத்த வரை மரம் வெட்ட போறோம். எந்த மரம் என்றெல்லாம் தெரியாது, அங்க போன பிறகு தான் தெரியுது. அதோட பணத்தை முன்கூட்டியே வங்கிட்டோம். வாங்கிய பணத்துக்கு வெட்டிட்டு வருவோம்னும் நினைக்கிறாங்க”.
தயாளன், காளசமுத்திரம்:
“நூல் வாங்க போறேன்னு சொல்லிட்டு கண்ணமங்கலம் போனவனை தூக்கின்னு போய் கொன்னுட்டானுங்க. கற்பழிக்கிறவனுக்கெல்லாம் தண்டனை தர துப்பில்ல, பொழப்புக்காக போனவங்கள சுட்டு தள்ளியிருக்கானுங்க. மரத்தை வெட்டும் போதுனா கூட பரவால்லைங்க பஸ்ல இருந்து புடிச்சுட்டு போய் சுட்ருக்கானுங்க. அவங்க பண்ணது தப்புனா தண்டனை கொடுத்திருக்கலாம் மரத்துக்கு இருக்க பாதுகாப்பு கூட மனுஷனுக்கு இல்ல”.
மணி, விவசாயி, காளசமுத்திரம்:
“இப்ப வேலைக்கு போனவங்களும், இதுக்கு முன்னடி மரம் வெட்ட போயி அரெஸ்ட் ஆகி ஜெயில்ல இருக்கவங்களும் மரம் வெட்ட கூலிக்கு போனவங்க தான் சார். அவங்களுக்கும் மரக்கடத்தலுக்கும் சம்பந்தமே இல்ல. பக்கத்துல பள்ளக்கொல்லைன்னு ஒரு ஊரு இருக்கு அங்கே ஜெகநாதன்னு ஒருத்தன் இருந்தான், எனக்கு தெரிஞ்சு அவன் தான் இங்கே இருந்த பெரிய ஏஜெண்ட். இவங்களை வேலைக்கு இட்டுன்னு போறது வர்றது எல்லாத்தையும் பன்னது அவன் தான்.
இந்த தொழிலுக்கு முன்னாடி சாராயம் காய்ச்சினிருந்தான். மரம் வெட்றதுக்கு ஆளுங்களை கூட்டிட்டு போய் புரோக்கர் வேலை பார்த்து கோடிக்கணக்குல சம்பாதிச்சிட்டு இப்ப தொழிலை விட்டே தலைமறைவாயிட்டான். அப்ப பா.ம.க வுல இருந்தான் இப்ப எங்க இருக்கான்னு தெரியல, இப்பயும் கட்சியோட தொடர்பு இருக்கலாம்”.
செந்தில்,ஆசிரியர்,காளசமுத்திரம்:
“ஜவ்வாது மலை கீழ்கனைவாயூர் மலைகிராமத்தில் உள்ள அரசு பள்ளியில தான் ஆசிரியரா இருக்கேன். ஊர்ல உள்ள எல்லோரையும் இந்த வேலைக்கு போறவங்கன்னு சொல்ல முடியாதுங்க அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு சிலர் போய்டுறாங்க. நாங்கூட பசங்ககிட்ட, ஏண்ட இப்படி போய் மாட்டிக்கனும் இந்த வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லுங்கடான்னு சொல்லுவேன். சொல்றோம் சார்ம்பாங்க.
எப்படி கூட்னு போனாங்க யார் கூட்னு போனாங்கங்கிற டீட்டெய்ல் எல்லாம் தெரியல. அவங்க மரம் வெட்ட போகல கூலி வேலைக்கு தான் போனாங்கன்னும் பேசிக்கிறாங்க. எது உண்மை எது பொய்னு தெரியல.
யார் ஏஜென்ட்னு தெரியாது, அது மரம் வெட்ட போற எல்லோருக்கும் கூட தெரியாது, ஊர்ல இருந்து எல்லோரையும் கூட்னு போற அந்த டீம்ல இருக்க ஒருத்தருக்கு மட்டும் தான் ஏஜென்டோட லிங்க் இருக்கும். அவருக்கு மத்தவங்களை விட கொஞ்சம் கூடுதலா கமிஷன் கிடைக்கும்.
ஜவ்வாது மலையில 6 பஞ்சாயத்துல 300 குக்கிராமங்கள் இருக்கு. இதுல தோராயமா 30,000 பேர் வாழ்றாங்க. இங்கிருந்து தான் அதிகம் பேர் மரம் வெட்ட போறாங்க. காரணம் விவசாயத்தை தவிர வேறு வேலை இல்ல, அதோட மரம் வெட்றதுல அவங்களுக்கு நல்ல திறமையும் இருக்கதால போறாங்க.
இதுல பிடிபட்டு சிறைக்கு போனவங்க அதிகம். பலர் இன்னும் சிறையிலேயே இருக்காங்க அதனால அவங்க குழந்தைங்க ரொம்ப பாதிக்கப்படுறாங்க. இப்படி பாதிக்கப்பட்டவங்களோட குழந்தைங்க பள்ளிக்கூடத்துக்கு வர்றதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு மாதிரி அப்செட்டாவே இருப்பாங்க.
சிறைக்கு போய்ட்டு வெளியே வந்தவங்க பெரும்பாலும் திரும்ப அந்த வேலைக்கு போறதே இல்ல தவறை உணர்ந்து பிறகு குடும்பத்தோடு கேரளாவிற்கோ கர்நாடகாவிற்கோ சென்று விடுகின்றனர். இதனால ஒவ்வொரு வருசமும் மாணவர்கள் சேர்க்கை குறைஞ்சிட்டே வருது”.
_______________________________
காளசமுத்திரம் உள்ளிட்ட மேற்கண்ட கிராமங்களில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வெட்டுவதில் கைதேர்ந்தவர்கள் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக தான் இப்பகுதியிலிருந்து சிலர் மரம் வெட்டச்செல்வதாக கூறுகின்றனர்.
இங்கு வசிக்க கூடிய பெரும்பாலான மக்கள் வன்னியர்கள். இவர்கள் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என்று சிறு அளவில் தான் நிலம் வைத்திருக்கின்றனர். வெகுசிலர் தான் ஐந்து ஏக்கர் வைத்திருக்கின்றனர். தண்ணீர் இல்லாததால் பெரும்பாலும் நெல் பயிரிடுவதில்லை. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக கரும்பும், வாழையுமே பயிரிடுகின்றனர். கரும்புக்கும் தண்ணீர் தேவை தான், ஆனால் தண்ணீரை அளவாக விடுகிறோம் என்கின்றனர். எனினும் இந்த விவசாயமும் விவசாயிகளுக்கு கைகொடுப்பதில்லை.
சமீப ஆண்டுகளில் இங்குள்ளவர்கள் குடும்பத்தோடு சென்னைக்கும், பெங்களூருக்கும் கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். ஊரில் பாதி பேர் வெளியூர்களில் தான் உள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பங்கள் அனைத்தையும் சந்தித்து விட்டு ஜவ்வாது மலையை நோக்கி பயணமானோம். கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் அங்குள்ள மேல் குப்சானூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர்கள். மலைகிராமத்தை சென்றடைந்த போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை இரவு நேரத்தில் தான் சந்தித்தோம்.
சின்னசாமியின் மனைவி மலர், மேல்குப்சானூர்:
“என் பேரு மலருங்க, எங்க வீட்டுக்காரர் பேரு சின்னசாமி. அவரு கூலி வேலைக்கு கேரளாவுக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு. அதுக்கு மரம் வெட்டற வேலையெல்லாம் தெரியாது. யார் கூட்டிட்டுப் போனாங்கன்னு தெரியல.
“கூலி மட்டும்தான் சார் கண்ணுல பார்ப்போம். யாரு கூட்டிட்டுப் போறாங்க, எங்க போறாங்க அதெல்லாம் எங்ககிட்ட சொல்லமாட்டாங்க.” – கொலை செய்யப்பட்ட தொழிலாளி சின்னசாமியின் மனைவி மலர்
கல்லு ஒடைக்க, குருமொளகு பறிக்க, காப்பி தோட்டங்களுக்கு வேலைக்காக கேரளாவுக்கு போவாரு, கூலி வேலைக்கு போனாதான் கஞ்சி சார். பத்து நாள், ஒரு மாசம் இருந்துட்டு 1000, 2000 வாங்கிக்கிட்டு வருவாரு. கூலி மட்டும்தான் சார் கண்ணுல பார்ப்போம். யாரு கூட்டிட்டுப் போறாங்க, எங்க போறாங்க அதெல்லாம் எங்ககிட்ட சொல்லமாட்டாங்க.
பத்து வருசமா இந்த வேலை தான் செய்ஞ்சிக்கிட்டு இருக்காரு. இதுவரைக்கும் மரம் வெட்ற வேலைக்கு போனதில்ல. எனக்கு இரண்டு குழந்தைங்க. சின்ன பையன் முருகனுக்கு 7 வயசு. பெரிய பொண்ணுக்கு 20 வயசு. ஆந்திர அரசாங்கம் பொய் சொல்லுது.”
ராஜேந்திரன் மனைவி நதியா:
ராஜேந்திரனுக்கு 30 வயது, நதியாவுக்கு 20 வயது. திருமணமாகி 9 மாதங்கள் தான் ஆகின்றன. நதியா இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறார்.
“அவருக்கு கண்ணுல பூ விழுந்துருச்சி அதனால நைட்டானா கண்ணு தெரியாது” – கொலை செய்யப்பட்ட தொழிலாளி ராஜேந்திரனின் மனைவி நதியா (வெள்ளை ஷால் போட்டிருப்பவர்)
“அவரு மரம் வெட்டவெல்லாம் போகலீங்க, கூலி வேலைக்கு போறேன்னுட்டு தான் போனாரு. அவருக்கு கண்ணுல பூ விழுந்துருச்சி அதனால நைட்டானா கண்ணு தெரியாது”.
நதியாவின் சின்னம்மா:
“இவங்க ரெண்டு பேருக்கும் அம்மா அப்பா இல்லைங்க. ராஜேந்திரனுக்கு கண்ணு தெரியததனால தான் இவ்வளவு காலமா கல்யாணம் ஆகாம இருந்துச்சு. அப்புறம் இதுங்க ரெண்டுமே பேசி கல்யாணம் பன்னிக்கிச்சுங்க.
ஊருக்குள்ள யாரும் மரம் வெட்ற வேலைக்கு போறது இல்லைங்க, எல்லாம் கூலி வேலைக்கும், கேரளாவுக்கும் தான் போவாங்க.”
கோவிந்தசாமி மனைவி முத்தம்மா:
“மெட்ராசுக்கு கூலி வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு” என்றார். இவருக்கு வெள்ளையன் (13) சித்தமரம் (12) திரிஷா (5) சாமி (3) ஆகிய நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். நான்கு பேரையும் எப்படி வச்சு காப்பாத்த போறேனோ என்று அழுதுகொண்டே கூறினார்.
வெள்ளிமுத்து அத்தை சின்னபுள்ளை:
வெள்ளிமுத்துக்கு 22 வயது. வாய் பேச முடியதவர், காதும் கேட்காது. எட்டு வயது குழந்தையாக இருக்கும் போது அம்மா அப்பா இருவரும் இறந்துவிட்டனர். அதன் பிறகு இவரை எடுத்து வளர்த்தது அத்தை சின்னபுள்ளை தான்.
“மேஸ்திரி வேலைக்கு மெட்ராசுக்கு போறேன்னு சொல்லிட்டு போனாம்பா.” – கொலை செய்யப்பட்ட தொழிலாளி வெள்ளிமுத்துவின் அத்தை சின்னப்பிள்ளை மற்றும் தம்பி
“மேஸ்திரி வேலைக்கு மெட்ராசுக்கு போறேன்னு சொல்லிட்டு போனாம்பா. மரம் வெட்ற வேலை எல்லாம் அவனுக்கு தெரியாது, அந்த வேலைக்கெல்லாம் இதுவரைக்கும் போனதில்ல”.
பிரபாகரன், மேல் குப்சானூர்:
வேலூரில் எம்.ஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
“எங்களுக்கும் தமிழ் தான் சார் தாய்மொழி, ஆனா அதை பேசுறது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். இங்க இருக்கிற குழந்தைங்க எல்லாம் அதிகம் படிக்கறதில்ல. வேலூருக்கு போனா கூட எப்படி திரும்பி வர்றதுன்னு தெரியாத மக்கள் எங்க மக்கள். அப்படி போய் ஊருக்கு வர்ற வழி தெரியாதவங்கள யாராவது கூட்டிட்டு வந்து விடுவாங்க.
கூலி வேலைக்கு கூட்டிட்டு போய்ட்டு, நிறைய வேலை வாங்கிட்டு கம்மியான கூலி கொடுத்து ஏமாத்துவாங்க. எஜென்டுகள்லாம் எங்க இருந்து வர்றாங்கன்னு தெரியாது. ஏலகிரி மலை, ஜவ்வாது மலை ஆட்கள் எல்லாரும் சேர்ந்து வேலை செய்வாங்க.
கட்டிட வேலைக்கும் பெயிண்டிங் வேலைக்கும் தான் கூலிக்கு போவாங்க. வாரத்துக்கு ஒருமுறை வந்து வீட்டு செலவுக்கு பணம் கொடுத்துட்டு மறுபடியும் கிளம்பிடுவாங்க. அவங்க எடுத்துடுட்டு வரும் கூலிக்காக குடும்பமே காத்திருந்து, காய்கறி வாங்கி சோறு ஆக்குவாங்க. ஊருக்கு உள்ளயே யாரும் மரம் வெட்ட மாட்டாங்க. கூட்டிட்டு போனவங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது. மரம் வெட்ட யாரு எங்கிருந்து போறாங்கனு தெரியாது, ஆந்திரா மரம் வெட்றதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
ஒரு மாசம் ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்துட்டு போவாங்க. மழை இல்லாதததால விவசாயம் செய்ய முடியல. கேரளாவுக்கும், மெட்ராசுக்கும், பெங்களூருக்கும், திருப்பூருக்கும், பவானிக்கும் தான் கூலி வேலைக்கு போவாங்க.
மலையில ஃபாரஸ்ட்காரங்க ஆடு, மாடு மேய்க்க கூடாதுன்னு தடை போடுறாங்க, மீறி மேய்ச்சா அபராதம் போடுறாங்க, ஆட்டை மடக்கி வச்சிக்கிறாங்க.
______________
ஜவ்வாது மலை சென்னையிலிருந்து 170 கி.மீ. தொலைவிலுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும். இம்மலைத்தொடர் திருவண்ணாமலை வேலூர் மாவட்ட எல்லைகளை உள்ளடக்கி கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த மலையிலும் இதே போன்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள சேர்வராயன் மலை, கல்வரயன் மலை, கொல்லி மலை, பச்சை மலை, ஏலகிரி மலை, சித்தேரி மலை ஆகிய மலைப்பகுதிகளிலும் வசித்து வரும் பழங்குடி மக்கள் மலையாளக் கவுண்டர்கள் என்றும் மலையாளிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்
முருகப்பாடி கிராமத்தின் வறண்டு போன கிணறு.
ஜவ்வாது மலையிலுள்ள 230 கிராமங்களில், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். சமவெளி பகுதிகளில் இருப்பதை போன்று ஊர்கள் அடுத்தடுத்ததாக இல்லை. குறைந்தது 3 கி.மீட்டலிருந்து 10 கி.மீ இடைவெளியில் இம்மலைக்கிராமங்கள் அமைந்திருக்கின்றன.
முருகப்பாடி கிராமம்
மலையாளிகள் என்றால் மலையை ஆள்பவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்று இவர்களின் வாழ்கை அதற்கு நேரெதிரானதாக மாறியுள்ளது. மறுகாலனியாக்க கொள்கைகள் எங்கோ ஒரு மலையின் மீதிருக்கும் இந்த மக்களையும் விட்டு வைக்கவில்லை. இயற்கையை நம்பி வாழும் இவர்களுக்கு விவசாயம் தான் ஒரே தொழில். அதுவும் மழையை நம்பியே இருக்கிறது. பெரும்பாலான மக்களிடம் உள்ள நிலம் வீட்டில் உள்ள தோட்டத்தின் அளவிற்கே இருக்கிறது. ஒன்றிரண்டு ஏக்கர் வைத்திருப்பவர்கள் மிக மிக சொற்பமானவர்கள். இந்நிலங்களில் பெரும்பாலும், கேழ்வரகு, சாமை திணை போன்ற பயிர்களை ஒருபோகம் விளைவிக்கின்றனர்.
நிலத்தை விட்டு பிரியாத இம்மக்களை உலகமயமாக்கல் நகரங்களை நோக்கி வீசி எறிந்திருக்கிறது. தொடர் வறட்சியும் விவசாய நிலத்தை விட்டே இம்மக்களை விரட்டியடிக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் பாதிக்கு பாதி பேர் வெளியூர்களுக்கு சென்றிருக்கின்றனர் பெரும்பாலும் கேரளாவிற்கு குறுமிளகு, காபி கொட்டை பறிக்கவும், சென்னை பெங்களூர் போன்ற நகரங்களுக்கு கட்டிட வேலைகளுக்கும், பெயிண்டிங் வேலைகளுக்கும் செல்கின்றனர். இவற்றுக்கும் ஏஜெண்டுகள் மூலமே செல்கின்றனர். வேலைக்குச் செல்பவர்கள் அவ்வப்போது கொண்டு வரும் அற்பக் கூலியை வைத்துத்தான் மொத்த குடும்பமும் உயிர் வாழ்கிறது.
மாடுகள் மேய பசும்புல் வெளி இல்லாததாலும், போதிய தீவனம் போடப்படாததாலும் இம்மக்களின் கால்நடைகள் மெலிந்து காணப்படுகின்றன. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஓட்டுப் பொறுக்கிகள் அனைவரும் மலையின் இயற்கை வளங்களையும் அதன் மூலாதாரங்களையும் சூறையாடி மலைகளை சூன்ய பிரதேசமாக மாற்றிவிட்டார்கள்.
மலைகிராமம் மேல்குப்சானூரில் இப்போதுதான் ரோடு போடுவதற்கு கல் போட்டிருக்கிறார்கள்.
80% பழங்குடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். 70% சதவீதத்துக்கும் மேலானோர் கல்வியறிவு அற்றவர்கள். 100% சதவீதப் பழங்குடிப் பெண்கள் இரத்தச் சோகைக்கு ஆட்பட்டுள்ளனர். 70% சதவீத குழந்தைகள் பிறக்கும்போதே எடைக்குறைந்து 2.5 கிலோவுக்கும் குறைவான எடையில் பிறக்கின்றன. கர்ப்பகாலத்தில் பழங்குடி பெண்கள் குறைந்தபட்சம் எடைக்கும் குறைவான எடையிலேயே உள்ளனர், இதனால் பிரசவம் என்பது அவர்களுக்கு மறுபிறப்பாக இருக்கிறது.
கொல்லப்பட்ட ஐந்து பேரின் உடல்களையும் இம்மக்கள் உடனடியாக சென்று வாங்கவில்லை. ஏனென்றால் இதற்கு முன்பு கைது செய்யப்ப்பட்ட, கொலைசெய்யப்பட்ட சிலரின் உறவினர்கள் என்று சென்றவர்கள் மீதும் வழக்கு போட்டு உள்ளே தள்ளியிருக்கிறது ஆந்திர அரசு. எனவே இந்த மக்கள் தற்போது யாரையும் நம்பத் தயாராக இல்லை. அனைவரைக் கண்டும் அஞ்சுகிறார்கள். தங்களுக்கு மரம் வெட்டவே தெரியாது, பிற கூலி வேலைகளுக்குத்தான் செல்கிறோம் என்கின்றனர். இவர்களை மரம் வெட்ட அழைத்துச் செல்லும் எஜென்டுகள் யார், உள்ளூரில் அவர்களோடு தொடர்பில் இருப்பவர்கள் யார் யார், ஏற்கெனவே சிறைக்குச் சென்று வழக்கை முடித்துக்கொண்டு வெளியே வந்திருப்பவர்கள் யார் யார் என்று எதற்கும் பதில் தெரியவில்லை. அவர்கள் கூறுவதெல்லாம் எங்களுக்கு மரம் வெட்ட தெரியாது. நாங்கள் அந்த வேலைக்கே போனதில்லை என்று மட்டும்.
இதே போன்று தான் சமவெளி பகுதியிலுள்ள ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கூறினர். இவர்கள் அனைவரும் நிரந்தர வேலை இன்றி பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றனர். மழை பெய்யும் போது கொஞ்சம் விவசாயம், முகூர்த்த நாட்களில் கல்யாண வேலை, கல் உடைக்கும் வேலை, பெயிண்டிங் வேலை, நகரங்களில் சில நாட்களுக்கு கட்டிட வேலைகள், தோட்ட வேலைகள் என்று பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றனர்.
மேல்குப்சானூர் கிராமத்திற்கு போகும் வழியில் ஒரு அஞ்சலி பிளக்ஸ் மரத்தில் தொங்குகிறது!
ஒரு வேலை ஒரே வாழ்க்கை என்றில்லாமல் கிடைக்கும் அத்தனை வேலைகளையும் செய்கின்றனர். கையில் காசிருக்கும் போது தடபுடலாக செலவு செய்வது காசு காலியான பிறகு மீண்டும் வேலைக்கு செல்வது என்று நிலையான ஒரு வேலையோ வாழ்க்கையோ இல்லாமல் இருக்கும் இவர்களை வர்க்கத்தில் உதிரி பாட்டாளிகள் என்றழைக்கலாம். கொஞ்சம் அதிகமாக காசு கிடைக்கிறது என்றால் உதிரிகள் எதற்கும் துணிவார்கள். அந்த வகையில் ஒரு சில நாட்கள் மரம் வெட்டினால் சில ஆயிரங்களை பார்க்க முடியும் என்பதால் இந்த வேலைக்கு சென்றிருக்கலாம்.
விவசாயம் பொய்த்து போய் வானத்தை பார்த்துக்கொண்டிருந்த இம்மக்களின் காடு பற்றிய அறிவையும், மரம் வெட்டும் திறமையையும், நகர வாசிகளின் சூதுகளை அறியாத வெள்ளேந்தித்தனத்தையும் அறிந்து கொண்ட சமூகவிரோதிகள், அண்டை மாநிலங்களுக்கு நல்ல சம்பளத்துக்கு அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தைகளை கூறி சில பல ஆயிரங்களை முன் பணமாக கொடுத்து தமது சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இதில் சகல ஓட்டுக்கட்சி தலைவர்களும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இவர்களோடு அரசு அதிகாரிகளும், போலீசும் கள்ளக் கூட்டு வைத்திருக்கிறது. இவர்களை இவ்வாறு தான் செம்மரக் கடத்தலில் ஈடுபடுத்தியுள்ளனர். ஓரிரு முறை சென்றவர்கள் இதில் நல்ல வருமானம் வருகிறதே என்று மீண்டும் மீண்டும் போகத் துவங்கியுள்ளனர்.
பா.ம.க அன்புமணி ராமதாஸ், வேட்டைகிரிபாளையத்திற்கு வந்த போது ஒரு காட்சி.
இது தவறு என்று அந்த மக்களுக்கு தெரியாதா? தெரியும். தவறு என்று தெரிந்தும், உயிருக்கு ஆபத்தான வேலை என்று அறிந்தும் தான் இவ்வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். விவசாயம் பொய்த்துப் போனதும், வேலையின்மையுமே பிரதான காரணமாக இருக்கிறது.
செம்மரக்கடத்தலில் முக்கிய குற்றவாளிகளாக இருப்பது மாஃபியா கும்பலும், ஓட்டுக்கட்சிகளும் மட்டுமல்ல, வனத்தை பாதுகாப்பதற்காக இருக்கும் வனத்துறையே இவர்களுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கும் முக்கிய குற்றவாளியாக இருக்கிறது. ஆந்திர வனத்துறை தான் தொழிலாளிகளை கூட்டிச் செல்லும் முக்கியமான ஏஜென்ட் என்கிறார்கள் மக்கள். வனத்துறையின் ஒப்புதல் இல்லாமல் செம்மரக் கடத்தல் நடைபெற வாய்பே இல்லை.
இதில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வயிற்றுப்பாட்டுக்காக, கொஞ்சம் கூடுதல் கூலி கிடைக்கிறதே என்பதற்காக சென்ற அப்பாவி ஏழை விவசாயிகள், மற்றும் பழங்குகளாவர். விவசாயத்தின் அழிவும் அதன் காரணமாக மோசமாகி வரும் தமது வாழ்நிலைமையுமே அவர்களை இதை நோக்கி தள்ளியிருக்கிறது.
இருப்பினும் இவை எதுவும் கொலைகார ஆந்திர போலீசின் செயலை நியாயமாக்கிவிடாது. பிறந்த ஊரில் வாழ முடியாமல் ஆக்கியிருக்கும் இந்த சமூக அமைப்புத்தான் இவர்களை இறக்கமின்றி கொல்லப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. ஏழைகள் என்பதால் இவர்களை எந்த வேலைக்கும், எந்த அபாயத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.
செம்மரத்தில் செய்யப்பட்ட வரவேற்பறை நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு முதலாளிகள் தமது தொழிலை பேசுவதற்கும், முதலாளிகளின் மனைவிமார்கள் செம்மரத்தில் செய்யப்பட்ட பிள்ளையாரை பூஜை செய்து வணங்குவதற்கும் இத்தகைய இரக்கமற்ற நரபலிகள் தேவைப்படுகிறது.
தமக்கு இழைக்கப்பட்ட கொடூரமான அநீதிக்கு நீதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் 28 ஆண்டுகளாகக் காத்திருந்து, அதற்காகப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு, அதற்காகப் போராடி வந்தவர்களை எள்ளிநகையாடும் விதத்தில் இன்னொரு அநீதி இழைக்கப்படும்பொழுது, அத்துயரத்தை எந்தவொரு வார்த்தையாலும் எடுத்துச் சொல்ல முடியாது. 1987-ல் நடந்த ஹாசிம்புரா முசுலீம் படுகொலை வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த இந்து மதவெறி பிடித்த போலீசு மிருகங்கள் அனைவரையும் விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அநீதியானது மட்டுமல்ல, நீதிமன்றங்கள் உள்ளிட்டு அரசு இயந்திரத்தின் அனைத்துக் கூறுகளும் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிசத்தின் கைக்கூலியாகச் செயல்படுவதன் அடையாளமும் ஆகும்.
படுகொலைக்கு முன்பு : ஹாசிம்புராவைச் சேர்ந்த முசுலீம்களை, தமது வீடுகளிலிருந்து இராணுவச் சிப்பாய்களால் துப்பாக்கி முனையில் இழுத்து வரப்பட்டு, சாலையில் கைகளைத் தூக்கியவாறு உட்கார வைக்கப்பட்டுள்ள பயங்கர காட்சிகள்.
உ.பி. மாநிலம் மீரட் நகரில் உள்ள ஹாசிம்புராவில் நடந்த முசுலீம் படுகொலையை மோடியின் குஜராத்தில் நடந்த முசுலீம் பெருந்திரள் படுகொலையின் முன்னோடி எனலாம். போலீசு, இராணுவம் உள்ளிட்ட மொத்த அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ்ஸாக மாறி நடத்திய படுகொலை இது. இப்படுகொலையின் தொடக்கப்புள்ளியாக இரண்டு சம்பவங்கள் அமைந்தன.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷா பானு என்ற வயதான, கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட தாய், ஜீவனாம்சம் தரக்கோரி தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் அவருக்குச் சாதகமான தீர்ப்பை ஏப்ரல் 1985-ல் அளித்தது. இத்தீர்ப்பைத் தமது மதக் கோட்பாடுகளின் மீதான தாக்குலாக முசுலீம் அடிப்படைவாத சக்திகள் ஊதிப் பெருக்கவே, அப்பொழுது ராஜீவ் காந்தி தலைமையில் இருந்த காங்கிரசு அரசு, உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் விதத்திலான சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தயாரானது. இச்சட்டம் 1986 மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே, பாபர் மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை அவ்வளாகத்தினுள் சென்று வழிபடுவதற்கு இந்துக்களை அனுமதிக்குமாறு உத்தரவிட்ட பைசலாபாத் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, 1986 பிப்ரவரியில் பாபர் மசூதி வளாகம் திறந்துவிடப்பட்டது.
இந்து மதவெறி கொண்ட பிரதேச ஆயுதப்படை போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களுடன் முசுலீம் தாய்மார்கள் (கோப்புப் படம்)
இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்து, முசுலீம் மதவெறி அரசியல் செழித்து வளர்வதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. குறிப்பாக, வெகுகாலமாகப் பூட்டப்பட்டுக் கிடந்த பாபர் மசூதி வளாகத்தை ராமர் வழிபாட்டுக்காகத் திறந்துவிட்ட நிகழ்வு, ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பலுக்குத் தமது நிகழ்ச்சிநிரலை மேலும் வன்மத்தோடு எடுத்துச் செல்வதற்கு உந்து விசையாகப் பயன்பட்டது. அக்கும்பல் இந்தி பேசும் வடமாநிலங்களில், “அறம் காப்போம், ஆலயம் காப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து, ஊர்வலங்களையும், ரத யாத்திரைகளையும் நடத்தி, எந்நேரத்திலும் இந்து-முசுலீம் கலவரம் வெடிக்கலாம் என்ற முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தது.
இச்சூழ்நிலையில்தான் உ.பி. மாநிலத்திலுள்ள மீரட் நகரில் 1987 ஏப்ரல், மே மாதங்களில் இந்து-முசுலீம்களிடையே அடுத்தடுத்து மோதல்களும், கலவரங்களும் நடந்தன. அதில் இரு தரப்பிலும் சொத்துக்களுக்கும், தொழில்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டதோடு, கணிசமான உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன. உ.பி.யை ஆண்டு வந்த காங்கிரசு அரசு ஒருபுறம் இம்மோதலில் குளிர்காய்ந்துகொண்டே, இன்னொருபுறம் இந்து மதவெறிக்குச் சார்பாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டது. அச்சமயத்தில் மீரட் நகரையும் உள்ளடக்கிய காசியாபாத் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராக இருந்த விபூதி நாராயண் ராய் இப்படுகொலை பற்றி நினைவுகூர்கையில், “போலீசு மற்றும் பிரதேச ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்களுள் பெரும்பாலோர் இந்துக்களாக இருந்ததோடு, அவர்கள் அனைவரும் கலவரத்திற்குக் காரணம் முசுலீம்கள்தான் என்று நம்பினர். மீரட் மினி பாகிஸ்தானாக மாறிவிட்டதென்றும், முசுலீம்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டியது அவசியமானது என்றும் அவர்கள் கருதி வந்ததாக”க் குறிப்பிட்டிருக்கிறார். பிரதேச ஆயுதப்படை போலீசு ஹாசிம்புராவைச் சேர்ந்த 42 முசுலீம்களைச் சுட்டுப் படுகொலை செய்ததற்கு அடிப்படையாக இருந்தது இந்து மதவெறிதான் என்பதற்கு விபூதி நாராயணின் இந்த வாக்குமூலத்திற்கு அப்பால் வேறு சான்றுகள் தேவையில்லை.
1987, மே 22 அன்று மீரட் நகரில் முசுலீம்கள் நெருக்கமாக வாழ்ந்துவந்த ஹாசிம்புரா பகுதியைச் சுற்றிவளைத்த பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த 41 ஆவது பாட்டாலியன் பிரிவு, முசுலீம்கள் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியேறுமாறும், தவறினால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்றும் உத்தரவிட்டது. வீட்டைவிட்டு வெளியேறிய ஆண்,பெண், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் நடுத்தெருவில் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டனர். காலியாக இருந்த வீடுகளினுள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்திய ஆயுதப் படை போலீசார் வீட்டினுள் இருந்த உடமைகளைச் சேதப்படுத்தியதோடு, பணம், நகைகளைக் கொள்ளையடித்தனர். துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட முசுலீம்களுள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் தனியாகவும் இளவயது முசுலீம்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டனர். இளவயது முசுலீம்களுள் 42 பேர் பிரதேச ஆயுதப் படை போலீசாரால் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டனர். இன்னுமொரு 324 பேர் அருகிலுள்ள போலீசு நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குண்டடிபட்ட தடயத்தைக் காட்டும் முகமது உஸ்மான்.
சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, கடத்திச் செல்லப்பட்ட 42 பேரில் ஒரு பகுதியினர் முராத் நகரில் உள்ள மேல்கங்கை கால்வாய் பகுதியில் நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக் கொல்லப்பட்டு, அவர்களின் சடலங்கள் அக்கால்வாயில் வீசியெறியப்பட்டன. மற்றொரு பகுதியினர் மகான்பூர் பகுதியில் உள்ள ஹிண்டன் கால்வாய் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டு வீசியெறியப்பட்டனர். இதே சமயத்தில் போலீசு நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட 324 பேரும் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, மீரட் மற்றும் ஃபதேகர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் தாக்கப்பட்டதில் ஐந்து முசுலீம்கள் ஃபதேகர் சிறையிலேயே மரணமடைந்தனர். மேலும், மலியானா என்ற கிராமத்தில் பிரதேச ஆயுதப் படை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டனர்.
முராத் நகர் மேல்கங்கை கால்வாய் கரையிலும் ஹிண்டன் கால்வாய் கரையிலும் சுடப்பட்ட 42 பேரில் ஆறு பேர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர். இவர்களுள் நால்வர் முராத் நகர் போலீசு நிலையத்திலும், இருவர் இணைப்புச் சாலை போலீசு நிலையத்திலும் கொடுத்த புகாரையடுத்துதான் இப்படுகொலை சம்பவம் அம்பலத்திற்கு வந்தது. எனினும், படுகொலை நடந்த சமயத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசும், அதற்குப் பின் வந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி அரசுகளும் 36 அப்பாவி முசுலீம்களை பச்சைப் படுகொலை செய்த போலீசாரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதில்தான் குறியாக நடந்துகொண்டன.
இப்படுகொலை நடந்த இரண்டாவது நாளே உ.பி. மாநில அரசின் சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணையைத் தொடங்கிவிட்டாலும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டு 60 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தமது விசாரணையில் குற்றவாளிகளாக அடையாளம் காட்டியிருந்தாலும், உ.பி. மாநில அரசு 19 கீழ்நிலை போலீசார் மீது மட்டுமே வழக்கு தொடர அனுமதியளித்தது. இவர்களுள் 16 பேர் மீதுதான் கொலைக்குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன. எனினும், இந்த 19 பேரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படவில்லை. மாறாக, அவர்களுக்குப் பதவி உயர்வுகள் தடையின்றி வழங்கப்பட்டன.
அரசு பயங்கரவாத குற்றவாளிகளை விடுதலை செய்த தீர்ப்பைக் கண்டித்துத் தன்னார்வ அமைப்புகள் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
1996-ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உ.பி. மாநில காசியாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கியபோதும், இக்குற்றவாளிகளுள் ஒருவர்கூட அந்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றத்தில் புளுகியது, உ.பி மாநில அரசு. மேலும், இப்படுகொலை குறித்த தடயங்கள் ஒவ்வொன்றும் – படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் தொடங்கி, முதல் தகவல் அறிக்கைகள் உள்ளிட்டு அனைத்தும் அழிக்கப்பட்டன அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டன.
இந்நிலையில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடிவந்த ஹாசிம்புரா பாதுகாப்பு கமிட்டி, “இந்த வழக்கு காசியாபாத்தில் நடந்தால் நீதி கிடைக்காது; எனவே, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்” என்று கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததை யடுத்து, இவ்வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. 2002-ல் வழக்கு மாற்றப்பட்ட சமயத்தில் முக்கிய சாட்சியங்களுள் பெரும்பாலோர் இறந்துவிட்டிருந்தனர். முக்கிய தடயங்களும் அழிக்கப்பட்டிருந்தன. டெல்லி நீதிமன்றத்திலும் பதின்மூன்று ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில், “சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிகளுக்கு அளித்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து” தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
“ஹாசிம்புராவைச் சேர்ந்த 42 முசுலீம்கள் பிரதேச ஆயுதப் படை வேனில் கடத்திச் செல்லப்பட்டது உண்மை. அம்முசுலீம்களுள் 36 பேர் ஆயுதப் படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதும் உண்மை” என ஒப்புக்கொண்டுள்ள நீதிமன்றம், “குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்கள்தான் அந்தப் படுகொலையைச் செய்தார்கள் என்பதை அரசு தரப்பும் சாட்சியங்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை” எனக் கூறி குற்றவாளிகளை விடுதலை செய்திருக்கிறது.
படுகொலையைச் செய்தது பிரதேச ஆயுதப் படைதான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், “அப்படையைச் சேர்ந்த வேறு யார் இப்படுகொலையைச் செய்தது? உண்மையான குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் அரசு அவர்களைப் பாதுகாப்பது ஏன்?” என்ற கேள்விகளை எழுப்ப வாய்ப்பிருந்தும் அவற்றை உள்நோக்கத்தோடு புறக்கணித்துவிட்டது. மாறாக, தப்பிப் பிழைத்தவர்கள் அளித்த சாட்சியங்களில் காணப்படும் குறைபாடுகளைப் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்து, அவற்றை வஞ்சகமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது.
பிரதேச ஆயுதப் படை போலீசார், தமது அடையாளத்தை மறைக்கும்படி தலைக்கவசம் அணிந்துகொண்டுதான் இப்படுகொலையைச் செய்துள்ளனர். இப்படுகொலையில் தப்பிப் பிழைத்து சாட்சியம் அளித்தவர்கள், தாம் துப்பாக்கியின் முன் நிறுத்தப்பட்டபொழுது உயிர் பயத்திலும் பதற்றத்திலும் போலீசாரின் அடையாளத்தை கவனித்திருக்க மாட்டார்கள். அப்படியே கவனித்திருத்தாலும், படுகொலை நடந்து இருபது ஆண்டுகள் கழித்து குற்றவாளிகளை அச்சுப்பிசகாமல் அடையாளம் காட்டுவது அசாத்தியமானது. மேலும், வழக்கின் முக்கியமான தடயங்கள் அனைத்தும் அரசால் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட நிலையில் நீதிமன்றம் சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டு குற்றவாளிகளைத் தண்டித்திருக்க முடியும். ஆனால், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டது, சாட்சியங்கள் குற்றவாளிகளைச் சந்தேகத்திற்கிடமின்றி அடையாளம் காட்டத் தவறியது – என ஒவ்வொன்றையும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக்கித் தீர்ப்பு அளித்திருக்கிறது, டெல்லி நீதிமன்றம்.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்சல் குருவைத் தண்டிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லாதபோதும், சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காக அவருக்குத் தூக்கு தண்டனையை உறுதி செய்தது, உச்சநீதி மன்றம். இந்த வழக்கிலோ பாதிக்கப்பட்ட முசுலீம்களின், 28 ஆண்டுகளாக நீதிமன்றத்தை நம்பியிருந்தவர்களின் மன உணர்வுகளை நீதிமன்றம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு ஒரு நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் என்ற நியாய உணர்வுக்கு பதிலாக, குற்றவாளிகளைத் தப்ப வைக்க வேண்டும் என்ற காவி உணர்வோடு நீதிமன்றமும் செயல்பட்டிருப்பதை இத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.
கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளில் நாடெங்கும் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் போலீசாரால் எவ்வித ஆதாரமுமின்றித் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலை வழக்குகளுள் ஒருசில, நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஹாசிம்புரா குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருப்பது போலீசார் இந்து மதவெறியோடு நடத்திவரும் படுகொலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆசிர்வாதமேயாகும்.
பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சித் தடைச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க. மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. மாட்டை வெட்டினால் மகாராட்டிரத்தில் 5 ஆண்டு சிறை, மத்திய பிரதேசத்தில் 7 ஆண்டுகள், அரியானாவில் 10 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை. மாட்டை விற்கும் விவசாயி தொடங்கி, வாங்குபவர், லாரி டிரைவர், வெட்டுபவர், சமைப்பவர், சாப்பிடுபவர் உள்ளிட்ட அனைவரும் இச்சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றவாளிகள். மாட்டுக்கறி வைத்திருப்பதாகவோ, சாப்பிடுவதாகவோ சந்தேகப்பட்டால் ஒரு போலீசு ஏட்டுகூட வீடு புகுந்து சோதனை செய்யலாம்.
“குடும்பத்திற்கே சோறு போட முடியாத நிலையில், நாங்கள் பசுக்களை எப்படி பராமரிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்து விவசாயி சதீஷ் சோலங்கி.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி கொலைக்குற்றமாக இருந்தாலும் ஒருவர் குற்றவாளி என்று போலீசு தான் நிரூபிக்க வேண்டும். ஆனால், மாட்டைக் கொன்றதாகவோ தின்றதாகவோ நீங்கள் கைது செய்யப்பட்டால், நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளாதவரை நீங்கள் குற்றவாளிதான் என்கின்றன, ம.பி, மகாராட்டிரா, டில்லி மாநில சட்டங்கள்.
மாட்டிறைச்சியை முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கம். எனவேதான் அம்மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நோக்கத்துடன் இச்சட்டம் இன்னொரு பொடா சட்டமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருபுறம், இந்து மதத்தினர் பசுவைப் புனிதமாக கருதுவது குறித்துப் பல புனைகதைகளை சங்கப் பரிவாரம் பரப்பிவந்த போதிலும், மத உணர்வைப் புண்படுத்துவதால் மாடு வெட்டுவதைத் தடை செய்வதாக இச்சட்டம் கூறவில்லை. கால்நடைச் செல்வத்தைப் பாதுகாப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு அவசியம் என்று மதச்சார்பற்ற மொழியில் தந்திரமாகப் பேசுகின்ற, அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாடு பிரிவு 48-ன் கீழ்தான் இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இது பார்ப்பனியத்தின் கபட வேடத்துக்கு இன்னொரு சான்று.
இசுலாமியர் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர்தான் மாட்டுக்கறி தின்னும் பழக்கமே இந்துக்கள் மத்தியில் பரவியது என்பது சங்கப் பரிவாரம் பரப்பி வரும் முக்கியமான கட்டுக்கதை. கிறித்தவமும் இசுலாமும் தோன்றுவதற்கு 1500 ஆண்டுகள் முன்னதாகவே, மாடுகளை யாகத்தில் பலியிடுவதும் புரோகிதப் பார்ப்பனர்கள் அவற்றை உண்டு கொழுப்பதும் எல்லை மீறிய அளவில் நடந்துள்ளன. ரிக் வேதத்தில் தொடங்கி இராமாயணம் வரையிலான பலவற்றிலும் பார்ப்பனர்கள் பசு மாமிசம் தின்றது பலவிதமாக விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது. இதனை அம்பேத்கர், டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா முதலான ஆவாளர்கள் ஆதாரங்களுடன் அம்பலமாக்கியிருக்கின்றனர். விவேகானந்தரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
சொல்லப்போனால், அன்றைய விவசாய சமூகத்தின் மக்கள், பலியிடுதலை நிராகரித்த பவுத்தத்தையும், கொல்லாமையை வலியுறுத்திய சமணத்தையும் தழுவுவதற்கு, பார்ப்பனர்களின் மாடு தின்னும் வெறியும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தி, தங்களுடைய சமூக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமானால், மாட்டுக்கறியைத் தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் கவிச்சியை வெறுத்தார்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு.
இவையெல்லாம் நாம் கூறும் வரலாற்று விளக்கங்கள் மட்டுமல்ல, வேள்விகளில் பசுமாடுகளைப் பலியிடுவதும் சாப்பிடுவதும் சாத்திரப்படியும் சம்பிரதாயப்படியும் அவசியமானது என்று வலியுறுத்தி, செத்துப்போன சங்கராச்சாரி வழங்கியுள்ள அருளுரைகளை 1993-ல் ஆனந்தவிகடன் நூல் தொகுப்பாகவே வெளியிட்டிருக்கிறது. எனவே, கோமாதாவைக் கொல்வது இந்து மதத்தின் வழிபாட்டுரிமை.
பா.ஜ.க.வின் பசு வதைத் தடைச் சட்டங்களால், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25, பார்ப்பனர்களுக்கு வழங்கியிருக்கும் மாடு வெட்டும் உரிமையைப் பறிக்க முடியாது என்பதே உண்மை. இந்தச் சட்டத்தினால், கறிக்கடை பாயையும், கறி தின்னும் சூத்திர, தலித், பழங்குடி மக்களையும்தான் கைது செய்ய முடியும். இதில் யாருக்காவது சந்தேகமிருந்தால், கருவறைத் தீண்டாமை பார்ப்பனர்களின் மத உரிமை என்று உச்சநீதி மன்றத்தில் வாதாடிவரும் மூத்த வழக்குரைஞர் பராசரனிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்.
மாட்டுக்கறி தடைச் சட்டத்திற்கு எதிராக முசுலீம்கள், தாழ்த்தப்பட்டோர், ஏழைகள் உள்ளிட்ட பல பிரிவினரும் இணைந்து மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
பசுவின் புனிதம் என்பது வடிகட்டிய பொய். இது குறித்த கருத்து பார்ப்பன மதத்திலேயே சுமார் 8-ம் நூற்றாண்டு வாக்கில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஆய்வுரித்துத் தின்னும் புலையர் என்று கூறித் தீண்டாமையை நிலைநாட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கருத்து, பிற்காலத்தில் விடுதலைப் போராட்டத்தை பார்ப்பன இந்து தேசியமாகத் திரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் திலகர் அறிமுகப்படுத்திய விநாயகர் ஊர்வலத்தைப் போலவே இதுவும் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியல் துருப்புச்சீட்டு. அவ்வளவே.
கலவரத்தைத் தூண்டும் கருவியாக அயோத்திப் பிரச்சினை அரங்கிற்கு வருவதற்கு முன்பு வரையில் இராமன் இருந்த இடத்தில், மாடுதான் இருந்து வந்தது. கோயில் வாசலில் கோமாதாவை வெட்டி விட்டார்கள் முஸ்லிம்கள் என்ற வதந்தியைப் பரப்பித்தான், நூற்றுக்கணக்கில் கலவரம் நடத்தி அப்பாவி முஸ்லிம்களை வெட்டியிருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். காலிகள்.
கோயில் வழிபாட்டை ஆக்கிரமித்துக் கொண்டதாக இருக்கட்டும், புலால் உணவைத் துறந்ததாக இருக்கட்டும், குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எவற்றையெல்லாம் தனது மேலாதிக்க நோக்கத்துக்குப் பார்ப்பனியம் பயன்படுத்திக் கொண்டதோ, அவற்றையெல்லாம், சமூகத்தின் இலட்சியப் பண்பாடாக அது சித்தரித்து வந்திருக்கிறது. அந்த வகையில் புலால் உணவை மறுக்கின்ற பார்ப்பன-பனியா பண்பாட்டை இந்துக்கள் அனைவரின் பொதுப்பண்பாடாக காட்ட தற்போது முனைந்திருக்கிறது. 2003-ல் ஜெயலலிதா கொண்டுவந்த கிடா வெட்டு தடைச்சட்டமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
மதன் அபோத் என்ற இந்து முதலாளி டெல்லியில் நடத்திவரும் மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனம் – எம்.கே.ஆர் ஃப்ரோசன் ஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்.
இருப்பினும், ஆகப் பெரும்பான்மையான மக்கள் புலால் உண்பவர்கள் என்பது மறுக்கவியலாத உண்மை. மாட்டுக்கறியோ ஏழைகளின் மலிவான மாமிச உணவு. இந்தியாவின் புலால் உற்பத்தி ஆண்டுக்கு 63 லட்சம் டன். இதில் 40 இலட்சம் டன் மாட்டுக்கறிதான். 22 லட்சம் டன் இந்தியாவில் உண்ணப்படுகிறது. 18 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வட கிழக்கிந்திய மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு எவ்வித தடையும் கிடையாது. கேரளா, தமிழ்நாடு, மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் பயன்படாதவை என்று சான்றளிக்கப்பட்ட பசுக்களை வெட்டலாம். ஆந்திரா, பீகார், ஒரிசா, கோவா, கர்நாடகா மாநிலங்களில் காளைகளை வெட்டலாம். இப்படி பலவிதமாக சட்டம் இருக்கக் காரணமே, சிறுபான்மை மதத்தினர் மட்டுமின்றி, தலித் மக்கள், பழங்குடியினர், பல மாநிலங்களில் சாதி இந்துக்கள் உள்ளிட்டோர் மாட்டுக்கறி உண்பதுதான்.
இருந்த போதிலும், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் கணிசமானவர்கள் இசுலாமியர்கள் என்பதால் அச்சமூகத்தைப் பொருளாதார ரீதியில் சீர்குலைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் வக்கிர நோக்கம் இச்சட்டத்தைக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால், இச்சட்டம் முஸ்லிம்களைப் பாதிப்பதைக் காட்டிலும் அதிகமாக விவசாயிகளையும் தலித் மக்களையும் ஏழைகளையும்தான் பாதிக்கிறது.
“பெண்டாட்டி பிள்ளைக்கே சோறு போட முடியாமல் தவிக்கும் நாங்கள் பால் சுரக்காத, உழவுக்குப் பயன்படாத மாட்டைப் பராமரிக்க நாளொன்றுக்கு 200 ரூபாய் எப்படி செலவு செய்வோம்? பயன்படாத மாட்டை விற்றால்தான் புதிய மாடு வாங்க முடியும். விற்பது குற்றம் என்றால், இனி மாடே வேண்டாம் என்று தலை முழுகிவிட வேண்டியதுதான்” என்று குமுறுகிறார்கள் மகாராட்டிரா விவசாயிகள்.
பா.ஜ.க. கும்பல் புளுகுவதைப் போல மாட்டுக்கறி விற்பனையின் காரணமாக மாடுகளின் எண்ணிக்கை குறையவில்லை. 2012-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2007-ல் இருந்ததைக் காட்டிலும் மாடுகளின் எண்ணிக்கை 7.16% அதிகரித்திருக்கிறது. இந்த தடைச் சட்டத்தின் காரணமாக, பால் மாடுகளையும் உழவு மாடுகளையும் வைத்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகள் இனி மாடு வளர்ப்பது கட்டுப்படியாகாது என்று முடிவு செய்தால், அதன் விளைவுதான் மோசமாக இருக்கப்போகிறது. பயன்பாடில்லாமல் போன குதிரைகள் காலப்போக்கில் அருகிப் போனதைப் போல, பல்வேறு ரகங்களைச் சேர்ந்த நாட்டு மாடுகள் நிரந்தரமாக அழிந்துவிடும்.
இன்று பால் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது இந்தியா. கூட்டுறவு பால் உற்பத்தி அமைப்பான அமுல் நிறுவனத்தை குஜராத்தில் உருவாக்கிய குரியனுக்கு இதில் முக்கியப் பங்குண்டு. பசுவதைத் தடைச்சட்டம் பால்மாடு வைத்திருக்கும் விவசாயிகளை அழித்துவிடும் என்று சங்கராச்சாரியிடமே சென்று வாதாடியவர் குரியன். விளைநிலத்திலிருந்து விவசாயியை விரட்டி விட்டு, கார்ப்பரேட் விவசாயத்துக்கு கால்கோள் இடுவதைப் போல, பால் உற்பத்தியிலிருந்தும் விவசாயியை விரட்டுவது, இந்த சட்டத்தின் பின்புலத்தில் மோடி போட்டிருக்கும் திட்டமாக இருக்கக் கூடும்
உலகில் மாட்டுக்கறி (எருமை மாடு) ஏற்றுமதியில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் முன்னணி மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்கள் ஆறில் நான்கின் முதலாளிகள் இந்துக்கள். அவற்றில் மும்பையை தலைமையிடமாக கொண்ட இரண்டு நிறுவனங்கள், அல் கபீர், அரேபியன் எக்ஸ்போர்ட் என்று இசுலாமியப் பெயர்களைச் சூட்டிக் கொண்டிருப்பதை முஸ்லிம் மிர்ரர் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது. நிறவெறி பிடித்த பார்ப்பனியம், பசு மாமிச ஏற்றுமதிக்குத்தான் தடை விதித்திருக்கிறது. எருமைக்கறி ஏற்றுமதியை அனுமதித்திருக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு கோ மாமிசத்தையும் எருமைக்கறி என்று லேபில் ஒட்டி ஏற்றுமதி செய்கிறார்கள் மேற்படி ஹிந்து ஏற்றுமதியாளர்கள். பத்திரிகையாளர் வீர் சங்வி இதனை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
அதேபோல, மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் குஜராத். மாட்டுக்கறி தடை செய்யப்பட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலோ பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மாட்டுக்கறிக்கு நட்சத்திர விடுதிகளில் தடை இல்லையாம். ஏனென்றால், அது இறக்குமதி செய்யப்பட்ட கோமாமிசமாம். ஏற்றுமதிக்கும் தடை இல்லை, இறக்குமதிக்கும் தடை இல்லை. உள்நாட்டு உபயோகத்துக்குத்தான் தடை!
காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தைப் பிளவுபடுத்த பசுவதையைப் பயன்படுத்திக் கொண்ட பார்ப்பனியம், இன்று மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப எடுத்திருக்கும் புதுப்பிறவி இது. வலக்கரத்தில் கோமியம், இடக்கரத்தில் ஹாம்பர்கர்! கேலிக்கூத்துதான். ஆனால், இதனை வீழ்த்தத் தவறினால் குஜராத்தைப் போன்றதொரு ஊழிக்கூத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.