பன்னாட்டு முதலாளிகளே வாருங்கள், உங்கள் விருப்பம் போல தமிழகத்தையும் தமிழக மக்களையும் கொள்ளையடித்துச் செல்லுங்கள் என்று அறைகூவியழைத்து, பார்ப்பன பாசிஸ்டுக்கே உரித்தான அருவருக்கத்தக்க சுயவிளம்பரத்துடன் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்ற ஒரு ஆபாசக் கூத்தை அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடத்தியிருக்கிறார்.
சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு : தமிழகத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்க பாசிச ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க சுயவிளம்பரக் கூத்து.
ஏற்கெனவே பல மாநில அரசுகள் இத்தகைய மாநாடுகளை நடத்தியுள்ளபோதிலும், நாலாந்தர நடிகைக்கே உரித்தான ‘அறிவுக்கூர்மையுடன்’, ஆபாசக் குத்தாட்டங்களுடன் இம்மாநாட்டில் முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுத்து ஜெயலலிதா வரவேற்றுள்ளார். தனது இச்சாதனையை அங்கீகரித்து, தன்னைப் போற்றிப் புகழ வேண்டுமென்ற வக்கிரத்துடன், மின்னணு தொழில்நுட்பத்தில் பறக்கும் குதிரை ஜெயலலிதா காலில் மண்டியிடுவது போன்ற காட்சியைத் தனது அடிமைகளைக் கொண்டு ஏற்பாடு செய்து ரசித்துப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
உலகெங்கும் சுற்றி ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை பிரதமர் மோடி கொண்டுவந்தார் என்றால், உள்ளூரில் இருந்துகொண்டே ஜெயலலிதா 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டுவந்துவிட்டதாகவும், மோடியைவிட லேடிதான் டாப் என்றும் அவரது துதிபாடிகள் மார்தட்டுகின்றனர். இம்மாநாட்டையொட்டி தற்போது ஆரவாரமாக அறிவிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் என்ற புள்ளிவிவரக் கணக்கு அடிமைகளால் நடத்தப்பட்ட இன்னுமொரு கேலிக் கூத்து. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 என்பதை வைத்து 24,2 என்று வருமாறு இத்தொகையை நிர்ணயித்துள்ளனர்.
ஆனால், கடந்த 2008-ம் ஆண்டிலிருந்தே அமெரிக்க – ஐரோப்பிய பொருளாதாரங்கள் தேக்கத்திலும் நெருக்கடியிலும் சிக்கி, சந்தை வற்றிப்போய் அந்நாடுகளின் ஏகபோக ஆளும் வர்க்கமே தடுமாறிக் கொண்டிருக்கும்போது, அந்நாடுகளின் ஏகபோக முதலாளிகள் தமிழகத்தில் வந்து முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது கேழ்வரகில் நெய்வடிந்த கதைதான்.
ஏற்கெனவே காங்கிரசு கூட்டணி ஆட்சியை விஞ்சும் வகையில் தொழிலாளர் சட்டத் திருத்தம், காடுகளையும் கனிமவளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகள் தடையின்றிச் சுரண்டுவதற்கேற்ப சுற்றுச்சூழல் விதிகள் திருத்தம், வங்கி, காப்பீடுதுறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்குத் தாராள அனுமதி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகைள் – என இந்தியாவைத் தாரைவார்த்துக் கொடுப்பதாக மோடி கும்பல் உலகமெங்கும் சுற்றி கூவிக்கூவி அழைத்த போதிலும், எதிர்பார்த்தபடி அந்நிய முதலீடுகள் வரவில்லை. மோடி கும்பலால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” திட்டமே புஸ்வாணமாகி நிற்கும்போது, மோடி கும்பலையே விஞ்சிவிட்டதாக மாய்மாலம் செய்கிறது ஜெ.கும்பல்.
எல்லாவற்றுக்கும் மேலாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் வரும், ஆனா வராது கதைதான். புரிந்துணர்வுதானே தவிர, உடனே யாரும் முதலீடு செய்யப் போவதில்லை. ஏன் முதலீடு செய்யவில்லை என்று யாரும் கேட்கவும் முடியாது. செயலாக்கத்துக்கு வருமா என்று யாருக்கும் தெரியாது. ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளில் ஜெயா ஆட்சியில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்று பார்த்தாலே இதன் யோக்கியதை விளங்கிவிடும்.
2011-ல் தமிழகத்தில் 73,298 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக ஜெ. அரசு அறிவித்தது. ஆனால், அவற்றில் வெறும் 238 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெறும் 0.3 சதவீதம்தான்.
2012-ல் 12 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்கப்படவுள்ளதாகவும் பிரம்மாண்ட அறிவிப்பு செய்தது ஜெ. கும்பல். அப்புறம் அந்த அறிவிப்பு காற்றோடு கலந்துவிட்டது.
ஏற்கெனவே தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்ட பெரும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்தான் நோக்கியாவும் ஹூண்டாயும். சென்னை அருகே இருங்காட்டுக் கோட்டை பகுதியில் விவசாய நிலங்களைப் பறித்து, தடையற்ற மின்சாரத்துடன் வரிச்சலுகைகளை வாரியிறைத்தும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளையும் பறித்தும் கொண்டுவரப்பட்ட இந்நிறுவனங்களால் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை. ஏரிகள்-குளங்களை ஆக்கிரமித்தும், கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழலை நாசமாக்கியும் வரும் இத்தகைய அந்நிய முதலீட்டாளர்களால் பேரழிவுகளும் பகற்கொள்ளையும்தான் நடந்திருக்கிறது.
நோக்கியா, பி.ஒய்.டி. போன்ற நிறுவனங்களின் சட்டவிரோதக் கதவடைப்பால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இன்னும் பல சிப்காட் தொழிற்பேட்டைகளில் எவ்வித உரிமையுமின்றி, தொழிலாளர்கள் சட்டவிரோதமாகக் கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றிப் பணியாற்ற வைப்பதன் மூலம் பலர் படுகாயமடைந்து உடல் உறுப்புகளை இழந்து நிற்கும் கொடுமையும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நோக்கியா இயங்கிய 8 ஆண்டுகளில் பல ஆயிரம் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக வைத்து சுரண்டிக் கொழுத்ததோடு, வரி ஏய்ப்பு செய்து பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டிக் கொண்டது. பிறகு சட்டவிரோதமாக ஆலையை மூடி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்தது. இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்பட்ட அந்நிய முதலீட்டின் மகிமை.
நோக்கியாவுக்கு முன்னதாக 2013-ல் மோட்டரோலா தனது சூறையாடலை முடித்துக் கொண்டு தனது நிறுவனத்தை மூடிவிட்டது. சென்னையில் தனது பிரிவை மூடிவிட்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம், தனது ஆலையின் விரிவாக்கத்தை உ.பி. குஜராத் மற்றும் ஆந்திராவுக்கு மாற்றத் தீர்மானித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனமும், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனமும் மூடப்படும் நிலையில் உள்ளன. தமிழ்நாடு பெட்ரோப்ராடக்ஸ் நிறுவனம், திருச்சி டிஸ்டிலரீஸ் நிறுவனம், தூத்துக்குடி அல்கலின் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஆகியன ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன. இவற்றின் விளைவாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கின்றனர்.
தமிழகத்தைச் சூறையாடுவதற்காக கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு கதவை அகலத் திறந்துவிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் கொள்வதைப் போலத்தான், அன்றைய தமிழக முதல்வரான கருணாநிதி, தமிகத்தின் தொழில்வளர்ச்சி – வேலைவாய்ப்புக்காக நான்தான் நோக்கியாவைக் கொண்டுவந்தேன் என்று மார்தட்டிக் கொண்டார். நோக்கியாவால் தமிழத்துக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதைப் பற்றி வாய்திறக்க மறுக்கும் கருணாநிதி, கடந்த நான்காண்டு காலமாக நன்றாகத் தூங்கிவிட்டு இப்போது திடீரென சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி ஒரு நாடகத்தை நடத்துவதாக ஜெ. கும்பலைச் சாடுகிறார்.
தமிழகத்தைச் சூறையாடும் இத்தகைய பேரழிவுப் பாதையைத்தான் எல்லா ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நியாயப்படுத்தி வருகின்றன. ஏதோ ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மையால்தான் அந்நிய முதலீடுகள் வராததைப் போலவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதைவிட இன்னும் அதிகமாக அந்நிய முதலீடுகளை கொண்டுவந்து தமிழகத்தை வளப்படுத்தப் போவதாகவும் ஜெயா ஆட்சிக்கு எதிராகப் புழுதி அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
தமிழக வழக்கறிஞர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் ஒரு போர் தொடுத்திருக்கிறது. தங்களது ஊழல் முறைகேடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்கறிஞர்களைக் களையெடுப்பதன் வாயிலாக கேள்விக்கிடமற்ற சர்வாதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதே நீதிபதிகளின் நோக்கம்.
நீதித்துறைக்கு எதிராகப் பேசுவதற்கு ஓட்டுக்கட்சிகள் தயங்குகின்றன. பார்ப்பன ஊடகங்களோ பக்க வாத்தியம் வாசிக்கின்றன. வழக்கறிஞர்களுக்கு எதிராக சதித்தனமாக எப்படிக் காய் நகர்த்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள கடந்த சில நாட்களில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் அறிந்து கொள்வது அவசியம். எனவே, நாள் வாரியாக அந்த விவரங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம்.
***
ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி அளித்த தீர்ப்பில் போலீசின் வசூல் வேட்டைக்குச் சாதகமாக உத்தரவுகளை அளித்த நீதிபதி கிருபாகரன்
ஜூலை-1 ஆம் தேதி முதல் பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்றும், தவறுவோரின் உரிமம் மட்டுமின்றி வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இது சட்டவிரோதமான தீர்ப்பு என்று விமரிசித்து போராடிய மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், செயலர் மீது நீதிமன்றத்தை அவமதித்ததாக உயர்நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியது. இதற்கெதிராக மதுரை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்
24.8.2015 – சுமுகமாக பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று தலைமை நீதிபதி கூறியதை நம்பி சென்னை வந்த இருவரையும் நீதிபதிகள் அவமானப்படுத்தினர். வழக்கை விசாரிக்கப்போவதாகவும் சமரச தீர்வு கிடையாது என்றும் கூறினர்.
10.09.2015 – அன்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மதுரையில் நீதித்துறை ஊழலுக்கு எதிராகப் பேரணி நடத்தி, ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டனர்.
14.09.2015 – தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக் கோரி தலைமை நீதிபதியின் கோர்ட்டில் வழக்கறிஞர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களுமாக 12 பேர், வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர். அன்று மாலை கைது செய்து சிறை வைக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தைக் காரணம் காட்டி தலைமை நீதிபதி கவுல் தானே முன்வந்து ஒரு ரிட் மனுவை எடுத்துக் கொண்டார். ஒரு போலீசு உதவி ஆணையர் வழக்கறிஞர்களுக்கு எதிராகத் தெரிவித்த, சில புகார்களை அதில் தொகுத்திருந்தார்.
“நீதிபதிகள் தைரியமாக நீதி வழங்க முடியாத சூழல் நீதிமன்றத்தில் நிலவுவதாகவும், எனவே நீதிபதிகளைப் பாதுகாப்பதற்கு, மத்திய தொழில்படை வர வேண்டும்” என்றும் கூறி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பினார்.
15.09.2015 – 16-ம் தேதியன்று நடைபெறவுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை திரைமறைவில்தான் நடத்தப்படும் என்றுநீதிபதிகள் அறிவிக்கவே, இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
திரை மறைவு விசாரணை ரத்து என்ற முடிவு இரவு 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. இருப்பினும் பாதுகாப்புக்கு போலீசு குவிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகிறது.
16.09.2015 – காலை 10.00 மணிக்கு மதுரை வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை கோரி கவர்னரிடம் மனு கொடுக்கின்றனர்.
அன்று மதியம் போலீசு படை வழக்கறிஞர்களைத் தடுக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், சங்கரசுப்பு ஆகியோர் விசாரணையைப் புறக்கணிக்கின்றனர். போலீசு தடையை எதிர்த்து சென்னை வழக்கறிஞர்களின் போராட்டம்.
நீதிபதி கிருபாகரனின் தீர்ப்பு சட்டவிரோதமானது என்ற உண்மையை எடுத்துக் கூறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்தித்து வரும் மதுரை மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ் (இடது) மற்றும் செயலர் ஏ.கே.ராமசாமி.
திரு ஏ.கே.ராமசாமியிடம் விசாரணை துவங்கியவுடன், ஏற்கெனவே நீதிபதிகளால் உள்ளே அழைத்து வரப்பட்டிருந்த வழக்கறிஞர்களான அணுகுண்டு ஆறுமுகம், பொன்னுச்சாமி ஆகியோர் மதுரை ஊழல் எதிர்ப்புப் பேரணி நீதிபதிகளை அவமதித்ததாக புகைப்படங்களைக் காட்டினர். உடனே நீதிபதிகள் ஹெல்மெட் வழக்கை விட்டுவிட்டு, இதனை விசாரிக்கத் தொடங்குகின்றனர். இதனை ஏ.கே.ராமசாமி ஆட்சேபிக்கிறார். சிறைக்கு அனுப்ப வேண்டி வரும் என்று நீதிபதிகள் அவரை மிரட்டுகின்றனர்.
17.09.2015 – ஊடகங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் கலகம் செய்ததாகச் சித்தரிக்கின்றன. ஊழல் நீதிபதிகள் மீது விசாரணை கோரி ஆளுநரிடம் தரப்பட்ட மனு தொடர்பான செய்தியை இருட்டடிப்பு செய்கின்றன.
18.09.2015 – எந்தெந்த மதுரை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பட்டியலுடன் இரு நீதிபதிகள் மதுரையிலிருந்து சென்னை சென்று தலைமை நீதிபதியைச் சந்திக்கின்றனர்.
“போராடிய வழக்கறிஞர்களை உடனே நீக்கு, மத்திய போலீசு படையை உடனே அனுப்பு” என்று “தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம்” என்ற புரோக்கர் சங்கத் தலைவர் பிரபாகரன் கடிதம் அனுப்புகிறார்.
21.09.2015 -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையிலான மோதல் தொடர்பான வழக்கை விசாரிக்க எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி தத்து, போராடும் வழக்கறிஞர்களை அவதூறு செய்தது மட்டுமின்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலைத் தூண்டுகிறார்.
வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய பார் கவுன்சில் தமிழக பார் கவுன்சிலுக்குக் கடிதம் எழுதுகிறது.
அடுத்த சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்கறிஞர்கள் பட்டியலைத் தமிழக பார் கவுன்சிலும் உயர்நீதிமன்றமும் அனைத்திந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்புகின்றன.
22.09.2015 – தமிழக பார் கவுன்சிலின் அதிகாரத்தை நிராகரிக்கும் வகையில் 14 மதுரை வழக்கறிஞர்களை விசாரணை இல்லாமல் நேரடியாகவே இடைநீக்கம் செய்துவிட்டு, விசாரணை கர்நாடகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில்.
மதுரை வழக்கறிஞர் சங்கத்தைக் காலி செயுமாறு சென்னை உயர்நீதி மன்றப் பதிவாளர் உத்தரவிடுகிறார்.
24.09.2015 – தமிழ்நாடு பார் கவுன்சில் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. “நீதித்துறையையோ, போலீசையோ எந்த ஒரு வழக்கறிஞரும் விமரிசித்துக் கூட்டம் நடத்தக்கூடாது, துண்டறிக்கை வெளியிடக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பார் கவுன்சில் தலைவர் செல்வம் அறிவிக்கிறார்.
25.09.2015 – வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஆஜராகத் தவறினால், விசாரணை நீதிமன்றமானது வக்கீல் குறித்த புகாரை நேரடியாக அனைத்திந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிடுகிறார்.
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வளாகத்திற்கு உள்ளேயோ வெளியேயோ கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. சுவரொட்டி, துண்டறிக்கை, பானர் உள்ளிட்ட எல்லா விதமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது” என்ற சட்ட விரோதமான பாசிச அறிவிப்பை உயர்நீதிமன்றம் வெளியிடுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உள்நோக்கத்தோடும், வன்மத்தோடும் நடத்தி வரும் நீதிபதிகள் சி.டி.செல்வம் (இடது) மற்றும் தமிழ்வாணன்.
28.09.2015 – திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட, 1000 வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் நடந்தது. சில வழக்கறிஞர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்காக வழக்கறிஞர் சங்கத்தை இழுத்து மூட உத்தரவிடலாமெனில், நீதிபதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பல நிலுவையில் உள்ளதால் நீதிமன்றங்களையும் இழுத்து மூட வேண்டியிருக்கும் என்றும் நீதிபதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள் ரத்து செயப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
30.09.2015 – இந்தியாவிலேயே முதன் முறையாக நீதிமன்றத்திற்கு வெளியே அகலத்திரையை வைத்து நீதிமன்ற அவமதிப்பு விசாரணை ஒளிபரப்பானது. அவமதிப்புவழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.
_________________________________ புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________
காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரின் நிலை இன்றோ அல்லது நாளையோ என்ற அபாயக் கட்டத்தைத் தொட்டு நிற்கிறது. காவிரித் தண்ணீரை நம்பி வெள்ளாமையில் இறங்கிய விவசாயிகள், இன்று லாரித் தண்ணீரை வயலில் பாய்ச்சி பயிர்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நிலைமை கைமீறிப் போக் கொண்டிருக்கும் வேளையில்தான், மைய அரசு தனது கும்பகர்ண தூக்கத்திலிருந்து எழுந்து டெல்லியில் கடந்த செப்டம்பர் 28 அன்று காவிரி கண்காணிப்புக் குழுவைக் கூட்டியது. கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது நல்ல சேதி கிடைக்காதா என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்திருந்தபொழுது, “கர்நாடகா மாநிலத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கான தண்ணீரே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது” என அக்கூட்டத்தில் கர்நாடகா அரசு இரக்கமின்றி மமதையோடு அறிவித்து, அவர்களின் தலையில் நெருப்பை வாரிக்கொட்டிவிட்டது.
கர்நாடகா அரசு கூறுவது அப்பட்டமான, அடுக்கமாட்டாத பொய். கர்நாடகாவிலுள்ள காவிரி அணைகளில் உள்ள தண்ணீரின் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையின் அளவு ஆகியவை குறித்து வெளிவந்திருக்கும் புள்ளிவிவரங்களே, கர்நாடகா காங்கிரசு அரசு தீய எண்ணத்தோடு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது என்பதையும் தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடக் கூடாது என்ற அடாவடித்தனமான முடிவோடு அது செயல்படுவதையும் நிரூபிக்கின்றன.
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என்ற நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இத்தீர்ப்பை கர்நாடகா அரசு ஒருநாளும் மதித்து நடந்து கொண்டதேயில்லை. இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு நிர்பந்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மைய அரசோ இந்த விசயத்தில் கர்நாடகாவின் கூட்டாளியாகவே செயல்பட்டு வருகிறது. இதோடு, நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு அமைப்பதைத் திட்டமிட்டே புறக்கணித்து வருகிறது. காவிரியில் புதிய அணைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ள கர்நாடகாவின் முயற்சிகளைத் தடுப்பது போல நடிக்கிறது. கர்நாடக மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரசு ஆட்சி நடந்தாலும் சரி, பா.ஜ.க. ஆட்சி நடந்தாலும் சரி தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதில் இவ்விரண்டு கட்சிகளும் ஒற்றுமையாகவே நடந்து வருகின்றன.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு இணையானது. ஹெல்மெட் அணிவது தொடர்பான தீர்ப்பை விமர்சித்த வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து, அவர்களின் கவுனைக் கழட்ட வைக்கும் நீதிமன்றங்கள், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கழிப்பறை காகிதம் போல கசக்கிப் போட்ட கர்நாடகா அரசின், மைய அரசின் அடாவடித்தனத்தைக் கேள்விக்குள்ளாக்க மறுக்கின்றன. ஒரு சட்டத்தின் தகுதியைப் பெற்றுள்ள நடுவர் மன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பிலுள்ள கர்நாடகா மாநில அரசு, மைய அரசு, நீதிமன்றங்கள் அனைத்தும் அதனை நடைமுறைப்படுத்த மறுக்கும் எதிர்நிலையை எடுத்துள்ள அயோக்கியத்தனத்தைத் தமிழகம் எதிர்கொண்டு நிற்கிறது.
குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த பூமியில் இன்று ஒரு போகம், டெல்டா விவசாயிகளின் உயிர் நாடியான சம்பா பயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலைமைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது. ஒருபுறம் பாரம்பரிய பெருமை கொண்ட விவசாயத்திற்கு கர்நாடகா அரசு வேட்டு வைக்கிறதென்றால், இன்னொருபுறமோ டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் மீத்தேன் எடுக்கும் திட்டங்களைக் கொண்டுவந்து தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைச் சுடுகாட்ட முயலுகிறது, மைய அரசு. ஆற்று மணல், தாதுமணல், கிரானைட் கொள்ளைகள் ஏற்படுத்தியிருக்கும் அழிவைவிடப் பன்மடங்கு பேரழிவைக் கொண்ட திட்டமிது. இந்த இரட்டை தாக்குதலை எதிர்த்து டெல்டா விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் ஈட்டி முனையாக எழுந்து நிற்பது எப்போது?
_________________________________ புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________
மரியாதையான வட்டார வழக்கிற்காக நினைவு கூறப்படும் கொங்கு மண்டலத்திற்கு மற்றொரு குரூர முகமும் இருக்கிறது. அதுதான், கவுண்டர் சாதி முகம்.
தமிழகத்திலேயே மிகக் கடுமையான சாதிய புறக்கணிப்பும் அடக்குமுறையும் இருக்கும் பகுதி. தமிழகத்திலேயே மிக வலுவான சாதிய பொருளாதார அரசியல் அதிகார வர்க்க அடித்தளம் கொண்ட சாதியாக கவுண்டர் சாதி இருக்கிறது. தலித்திய அமைப்புகளும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்குமளவுக்கு கூட இங்கே இல்லை.
இத்தகைய சூழலில் இந்த ஆதிக்க சாதி உணர்வுக்கு அரசியல் வடிவம் கொடுக்கும் சில அமைப்புகளில் சற்றே பெரிய அமைப்புதான் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி.
இத்தகைய ஒரு ஆகப்பிற்போக்கான அமைப்பு “கலாச்சாரம் காப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியாவில் ஒரு மாவட்ட மாநாடை 27-09-2015 ஞாயிறு அன்று நடத்தியது.
இரண்டு மாதங்களாக சுவரெழுத்து கடைசி ஒரு வாரத்தில் சுவரொட்டி நகரெங்கும் பிளக்ஸ் பேனர்கள் கொடி என ஏகத்திற்கும் விளம்பரம் செய்திருந்தார்கள். ஆதிக்க சாதி வெறி காக்கப் போகும் கலாச்சாரத்தை அறிய கொடிசியா சென்றோம்.
சாதிக் கட்சி தலைவர்களுக்கு முன் நிபந்தனை சாதிப் பெருமிதத்திற்கு நிகரான முட்டாள் தனம் என்பதை ஈ.ஆர்.ஈஸ்வரன் பல தொலைக்காட்சி விவாதங்களில் தெளிவுற விளக்கியுள்ளார்.
“சாதிய சாக்கடைகள் பலவாகும். அவை கலக்கும் மையக் கடலே ஆர்.எஸ்.எஸ் ஆகும்” என்ற புதுமொழிக்கிணங்க, ஈஸ்வரன், இந்த விநாயகர் சதுர்த்தி அன்று மேட்டுப் பாளையத்தில் இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் சிறப்புரை நல்கியுள்ளார். இதே இந்து முன்னணி மற்றும் இங்கிருக்கும் இந்து அமைப்புகளின் அணிகளில் கணிசமானோர் அருந்ததிய சமூக இளைஞர்களே. கோவைக் கலவரத்தில் சிறை சென்றவர்களில் 90 சதம் அவர்களே. கலவரத்திற்கு தலித்துக்களையும் களவாணித்தனத்திற்கு ஆதிக்க சாதிகளையும் பயன்படுத்துவது பார்ப்பனியத்தின் தந்திரம்.
அவ்வகையில் கொடிசியாவில் நடந்த இந்த மாநாட்டிற்கும் (மாநாடே ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா தான் என்ற போதிலும்) ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளையும் பி.ஜே.பி, இந்து முன்னணி நிர்வாகிகளையும் அழைத்து மேடையில் அமர வைத்திருந்தார். ஆக ஆதிக்க சாதியும், ஆர்.எஸ்.எஸ் மும் கள்ள உறவை விடுத்து நேரடி உறவிலேயே இறங்கி வெகு நாட்களாயிற்று.
மூன்று மணிக்கு மாநாட்டுத் திடலை அடைந்த பொது பொது மக்களில் ஒருவர் கூட இல்லை. ER Boys என டிசர்ட் அணிந்த இளைஞர்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டிருந்தனர். மாநாட்டுத் திடலை சுற்றிலும் ஏராளமான பிளக்ஸ் பேனர்களில் ஈஸ்வரன் இளித்துக் கொண்டிருந்தார். அதிலும் தலைமைச் செயலக பின்னணியில் தலையை சாய்த்த படி அவர் இருக்கும் பிளக்ஸ் ஜெயாவின் கண்ணிற்கு கொண்டு செல்லப்பட்டால் சுளுக்கு உறுதி. இதில் ஈசன் படை எனவும் ஒரு குரூப் சுற்றிக் கொண்டிருந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ரோட்டில் இருந்து மாநாட்டுத் திடலுக்கு திரும்பும் வழியில் தீரன் சின்னமலையின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. காலனியாதிக்கத்தை எதிர்த்து சமரசமில்லாமல் போராடிய இந்த மாவீரனை சாதிய அடையாளமாக்கி அரசியல் செய்யும் யுவராஜ் முதல் இன்ன பிற ஆட்களை என்ன பிறவி எனக் கொள்வது. அதிலும் சின்னமலையை புகழ்ந்து விட்டு, ஆர்.எஸ்.எஸ் வெறியர்களுடன் சேர்ந்து கொண்டு திப்புவை இகழும் ஈஸ்வரனை விட இழி பிறவி யாரும் இல்லை என்றே கொள்ளலாம்.
மாநாட்டுப் பந்தலுக்கு திரும்புவோம்.
தலித் இளைஞர்கள் குழு ஒன்றை அழைத்து வந்திருந்தனர் (மத்தளம்) ஜமாப் அடிக்க. அவர்களுக்கும் ஈசன் படை என்ற டிசர்ட்டை அவர்கள் போட்டிருந்த சட்டைக்கு மேல் அணிவித்து நிறுத்தியிருந்தார்கள். இங்கு பெரும்பாலும் ஜமாப் அடிப்பது தலித்துகளாகவும் ஆடுவது கவுண்டர்களாகவும் இருக்கும்.
ஈசன் படை
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
“நம்மால் முடியும்”
இளைஞர் அணி தள்ளாடியபடி வந்து நின்றது. அப்போதே மழை தூறத் துவங்கியிருந்தது. மேடையில் வேறு ஆண்கள் கும்மியடித்துக் கொண்டிருந்தனர். அடடே, கொங்கு நாட்டின் பழம்பெரும் கலையென்று சற்று அருகே சென்று பார்த்தால்,
தன்னானே தன்னானே.. தன்னானே… அண்ணன் ஈஸ்வரன் புகழ் தன்னானே… என்று பாடிக்கொண்டிருந்தார்கள்.
மழை வேகம் பிடித்துக் கொண்டது. அனைவரும் கலைந்து சென்று ஆங்காங்கே கிடைக்கும் நிழல்களில் பதுங்கிக் கொண்டனர். கூட்டம் என்று சொல்லிக்கொள்ள சேர்ந்திருந்த நூறு பேரும் சேர்களை தலைக்கு பிடித்துக் கொண்டு பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்கள். இவர்களும் ஒரு 1 மணி நேரம் பார்த்தார்கள் மழை விடுவதாயில்லை. இதெல்லாம் ஒரு மழையா…? எனக் கூறியவாறு
முடியும் முடியும் ! நம்மால் முடியும் !
என முழக்கம் போட்டும் பார்த்தார்கள். கொங்கு சிங்கங்கள் எவையும் மழையில் நனைவதற்கு தயாராக இல்லை.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பிறகு ஒரு வழியாக மழையின் வேகம் குறைந்தது. உடனடியாக ஐந்தாறு டான்ஸ் பாய்ஸை மேடையில் ஏற்றி விட்டனர். சினிமா பாடல் மெட்டுக்களில் ஈஸ்வரனை ஆபாசமான புகழ் மொழிகளுடன் பாடல்கள் ஒலிக்க அதற்கு அந்த டான்ஸ் பாய்ஸ் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 17,000 ரூபாயம் ஒன்பது நிமிட நடனத்துக்கு. மேடை, மேடைப் பின்னணி, அலங்காரங்கள் இன்ன பிறவெல்லாம் ஆர்கே ஈவண்ட்ஸ் என்ற ஒப்பந்த முறை ஒருங்கிணைப்புக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். கொடிசியா வாடகை, இந்த ஏற்பாடுகள் விளம்பரங்கள் என எல்லாவற்றையும் பார்க்கையில் தோராயமாக அரைக் கோடிக்கும் மேல் செலவு செய்திருப்பார்கள் எனத் தெரிகிறது.
டான்ஸ் பாய்ஸ் ஆட்டம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பெண்கள் கும்மி
ஜமாப் டான்ஸ்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அடுத்து, பெண்கள் சிறிது நேரம் கும்மியடித்தனர். பின்னர் ஜமாப் அணியினரை மேடையில் ஏற்றி அடிக்க வைத்தனர். கூட்டத்தை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தனர். இதில் இடையிடையில் அண்ணன் ஈஸ்வரன் வந்துகொண்டிருக்கிறார் என ரன்னிங் கமெண்ட்ரி வேறு.
ஈஸ்வரன் என்ட்ரி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஈஸ்வரன் ஐந்தே கால் மணி வாக்கில் 3 நபர்களை அழைத்துக் கொண்டு கையை மேலே தூக்கி காட்டியவாறே வந்தார். இந்த கூட்டத்திற்கென மலேஷியாவில் இருந்து வந்திருக்கிறார்களாம். ஈஸ்வரன் வந்தவுடன் அவருக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக கூறி புதிதாக ஒரு ஜமாப் குழுவினரை மேடையேற்றினர். அறிவிப்பாளர், நம்ம பசங்க அடிச்சி நம்ம பொண்ணுக ஆடும் ஜமாப் என அறிவித்தார். அது முடிந்த பின்னர், கொ.ம.தே.க நிர்வாகிகள், கவுண்டர் சங்க நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி பி.ஜெ.பி நிர்வாகிகள் என அனைவரும் மேடையேறி மாநாட்டை துவக்கினர்.
சரவணம்பட்டி கௌமார மடாலய சிரவை ஆதீனம் அருளுரை
பல்வேறு பகுதிச் செயலாளர்களாக பேசத் துவங்கிய சுமார் 10 பேரின் பேச்சுக்களும் “கலாச்சாரம் காப்போம்” என்ற தலைப்பின் கீழ் கோவையில் ரோடு சரி இல்லை. தொழில் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டுமென்று ஈஸ்வரனிடமும் அரசிடமும் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர். சரவணம்பட்டி கௌமார மடாலய சிரவை ஆதீனம் அருளுரை என்கிற பெயரில் மதமாற்ற தடை சட்டம் வேண்டும் மத வெறியை துவக்கி வைத்தார்.
மலேஷியாவில் முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் கேவியாஸ்.
மலேசிய மங்குனிகளில் மூன்றில் இருவர் மட்டுமே பேசினர். அதில் ஒருவர் மலேஷியாவில் முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் கேவியாஸ். “இங்கிருந்து போன கொங்கு இனம் நாங்க. மலேஷியாவில் நாங்க நல்லா பெருமையோட வாழ்கிறோம். அடுத்த வருடம் மலேஷியாவில் ஒரு கொங்கு மாநாட்டை போடுகிறோம். அதற்கு உலகக் கொங்கு மக்கள் வர வேண்டும்” என பேசினார். பேசாத நபர்தான் மலேசியாவின் இளம் தொழிலதிபர் பிரக்தீஸ் குமாராம். கொங்கு மண்ணின் மைந்தாராம் எப்போது நிதி கேட்டாலும் அள்ளிக் கொடுப்பார் எனவும் கூறினார்கள்.
மேடையில் ஈஸ்வரனின் வலது புறம் இந்த தொழிலதிபர்களும் இடது புறம் கவுண்டர் சங்க தலைவர்களும் அமர்ந்திருந்தனர். ஈஸ்வரன் கட்சியின் கட்டுமானம் இவர்களை வைத்து தான் இருக்கிறது.
ஈஸ்வரன்
இறுதியாக, ஈஸ்வரன் மைக் பிடித்தார். எடுத்த எடுப்பிலேயே, மலேசியாவின் ரப்பர் தோட்டத்துக்கு பிழைக்கச் சென்று அப்போதே நேதாஜியின் படையில் பணியாற்றிய வீரர்களின் வாரிசுகள் இந்த மலேசியா காரர்கள் என ஆரம்பித்தார்.
‘பயபுள்ள வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா’ என நினைப்பார்களோ என்று நினைத்தாரோ என்னவோ அடுத்ததாக, கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் அது வேண்டும் இது வேண்டும் என ஒரு லிஸ்ட் வாசித்தார். கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் அவர்கள் யார் என்றால் அந்நிய சக்திகள் என சாதிவெறியை ஆரம்பித்து வைத்தார்.
‘நடுநிலை’ பத்திரிகை
இடையில் அண்ணனின் கொங்கு நாடு என்ற ‘நடுநிலை’ பத்திரிகையை அனைவருக்கும் இலவச விநியோகம் செய்து கொண்டிருந்தனர் ஈசன் படையினர்.
“நான் 10 நாளைக்கு முன்னாடி அமெரிக்கா போனது எல்லோருக்கும் தெரியும். அங்கு ஐநா அலுவலகத்தில் ஒரு வாசகம் இருந்தது, கற்பழிப்புகளை தடுப்பது பற்றி. அந்த வாசகத்திற்கு ஒரு தென்னிந்தியப் பெண்ணின் படத்தை போட்டிருக்கிறார்கள். என்ன அநியாயம். அங்கு ஒரு அமெரிக்கப் பெண்ணின் படத்தை போட வேண்டியது தானே. இதையெல்லாம் பார்க்கையில் எனக்கு வேதனையாக இருக்கிறது.” என்று வன்புணர்ச்சியின் கொடுமையை வெளியே தெரியவிடக்கூடாது என்று உறுமினார்.
அடுத்து, “ஜவுளித் தொழில் பாதிக்குது, 1970 விவசாயிகள் போராட்டம், கொங்கு மக்களுக்கு அரசு வேலை வேண்டும், அவினாசி அத்திக்கடவு காளிங்க ராயன் வாய்க்கால், உலக முதலீட்டாளர் மாநாடு, கொங்கு மண்ணில் மாவோயிஸ்டுகளா என ஈஸ்வரன் சாதி-மதவெறிக்கு இடையில் பல்வேறு ‘நலத்திட்டங்கள்’ குறித்து கவலைப்பட்டார்.
வெட்டி சாதிப் பெருமிதத்தை ஊட்டி ஒரு பெரும் முட்டாள் கும்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரன்
ஒரு வழியாக பேச வேண்டியதை யெல்லாம் பேசி முடித்து கொங்கு நாட்டை காக்க அனைவரும் ஜாதி மதம் பார்க்காமல் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாநாட்டை முடித்து வைத்தார்.
மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகளும் வி.வி.ஐ.பி வரிசையில் அமர்ந்திருந்த பணக்கார கவுண்டர்களும் மேடையை முற்றுகையிட்டிருந்த ஆடி போன்ற கார்களில் கிளம்ப அடுத்தடுத்த வரிசைகளில் அமர்ந்திருந்தவர்கள் டூவீலர் ஸ்டாண்டையும் தாங்கள் வந்த பஸ் இருக்கும் ஸ்டாண்டுகளையும் நோக்கி நடக்கத் துவங்கினர்.
இப்படியாக வெறும் வெட்டி சாதிப் பெருமிதத்தை ஊட்டி ஒரு பெரும் முட்டாள் கும்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரன். திராவிட இயக்கங்களின் வளர்ச்சியால் மட்டுப்பட்டிருந்த சாதிய மத இயக்கங்கள் அ.தி.மு.க என்ற சீரழிவின் சின்னம் துவங்கிய பின்னர் சற்று வேகமாக தமிழகத்தில் வளரத் துவங்கின. தமிழகத்தில் துவண்டு கிடந்த சாதியத்தை உயிர்ப்பித்ததில் ராமதாஸ் போன்றவர்கள் முன்னோடிகள்.
பெரியாரையும் பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழகத்தின் மரபையும் கண்டு பயந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் சாதியத்தால் இங்கு ஊடுருவி பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை ஊடறுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அந்தந்த வட்டார ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் உதவுகின்றன. இந்துமதவெறியின் இயல்பான கூட்டாளியாக ஆதிக்க சாதி இருப்பதில் ஆச்சரியமில்லை.
இந்துமதவெறியின் இயல்பான கூட்டாளியாக ஆதிக்க சாதி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இளவரசன், கோகுல்ராஜ் என்று தலித் இளைஞர்களின் தலைகள் பகிரங்கமாக வெட்டப்படும் சூழ்நிலையில், பயங்கரவாதி யுவராஜ் போன்ற சாதிவெறியர்கள் அரசு, ஊடகங்கள், போலிசால கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆதிக்க சாதிவெறியை முறியடிப்பது அவசியம். இதில் “தமிழ் இந்து” உள்ளிட்டு பல்வேறு ஊடகங்கள் ஈஸ்வரன் கட்சி மாநாட்டை வரவேற்று எழுதுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்-இன் கலாச்சாரம் மதவெறி என்றால், ஈஸ்வரன் கட்சியின் கலாச்சாரம் சாதிவெறி. இந்தக் கலாச்சாரத்தைக் காக்கத்தான் இவர்கள் மாநாடு போடுகிறார்கள். பணம் வசூலிக்கிறார்கள். தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள். இப்படி பகிரங்கமாகவே கிரிமினல்கள் பொதுவாழ்க்கையில் கலந்து கொள்வது இந்தியாவைத் தவிர வேறு எங்கு நடக்கும்?
ஆவுடையார்கோவிலில் 29-09-2015-ம் தேதி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சாளர்களில் பெரும்பாலானோர் காவல்துறையின் அயோக்கியத்தனத்தையும், டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய பச்சையப்பா கல்லூரி மாணவ – மாணவிகளை தாக்கியும், டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மக்கள் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்தும் பேசினார்கள்.
ஆவுடையார்கோவிலில் காவல் ஆய்வாளராக உள்ள பிரேம் ஆனந்த், சினிமா பாணியில் வரும் விறைத்த போலீசாக தனக்கு கீழ் வேலை பார்க்கும் காவலர்களிடம் காட்டி வந்தார். மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டத்தின் மூலம் அவரது பிம்பம் கலைய தொடங்கியதால், ஆத்திரம் அடைந்து பிரேம் ஆனந்த் மற்றும் காவலர் மாரிமுத்து மக்கள் அதிகார தோழர்கள் MSK பழனி, இந்தியன் பழனி ஆகியோர் தனியாக இருந்தபோது சீருடை அணியாமல் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு தோழர்களைப் பார்த்து “கோத்தா, கொம்மா, ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா” என்று பேசி ரௌவுடித்தனம் செய்ததை ஏற்கனவே வினவில் “ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகார தோழர்கள் மீது இன்ஸ்பெக்டர் காட்டிய வீரம்” என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.
போலீஸ் தாக்குதல் குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பிய கடிதம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இதனைத் தொடார்ந்து தோழர்கள், ஆவுடையார்கோவில் அம்பாள்புரம், கீழவீதி, ஒக்கூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை தயார் செய்து வருகின்றனார். இதனால் ஆவுடையார்கோவில் காவல்நிலையத்தில் எஸ்.பி சி.ஐ.டி யாக இருக்கும் ராஜாராம், ஆய்வாளார் பிரேம் ஆனந்த், மாரிமுத்துவைப் போன்று முரடர்களாக நடக்காமல் நரித்தனமான சில சதி வேலைகளில் ஈடுபட்டார்.
தோழர்களின் வீடுகளுக்கு ரகசியமாக சென்று அவர்கள் பெற்றோர்களை சந்தித்து தோழர்களின் எதிர்கால வாழ்க்கையின் மீது அதீத அக்கறை கொண்டவர் போல் நடித்து, “மக்கள் அதிகாரம் அமைப்பு அரசுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்பு அதில் உங்கள் பிள்ளைகள் இருந்தால், அரசு வேலை கிடைக்காது” என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெற்றோர்கள், “அமைப்பில் சேராமல் சும்மா இருந்தால் அரசு வேலை கிடைத்துவிடுமா?” என்று எதிர்கேள்வியை கேட்டுள்ளனார்.
அதற்கு ராஜாராம் புத்திசாலித்தனமாக, “TNPSC, IAS, IPS தேர்வுகளை எழுதுவதற்கு தாம் இலவசமாக பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்வதாக” சொல்லியுள்ளார்.
ராஜாராமின் நோக்கத்தை புரிந்தவர்கள், “அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் செல்லுங்கள்” என கூறியுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசவந்த பேச்சாளார்களையும், ஆர்ப்பாட்டத்தில் பேசவேண்டாமென மூளைச்சலவை செய்துள்ளார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்நிலையில் பிரேம் ஆனந்த், மாரிமுத்து ஆகிய போலீஸ்காரர்கள் மக்கள் அதிகாரத் தோழர்களை மீண்டும் வீடுகளுக்கு சென்று விசாரணை என்ற பெயரில் தோழர்களைப் பற்றி மக்களுக்கு பீதியை ஏற்படுத்த முயற்சித்து வந்ததால், ஆவுடையார்கோவில் மக்கள் அதிகாரம் சார்பில் காவல் ஆய்வாளரர் பிரேம் ஆனந்த், காவலர் மாரிமுத்து ஆகியோரின் சட்ட விரோத செயல்களை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, கரூர், ஒக்கூர் போன்ற இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டன.
இதனை மக்கள் ஆங்காங்கே நின்று பரபரப்பாக பார்க்க தொடங்கியவுடன் பீதி அடைந்த போலீசு மக்கள் படிக்கும்போதே பகல் நேரத்தில் போஸ்டர்களை கிழித்து மக்களிடம் அம்பலப்பட்டுப் போனார்கள். பின்னர் 12-10-2015 அன்று மக்கள அதிகார மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர்கள் மாரிமுத்து, தனியரசு, மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் ஜீவா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மணிமாறன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சோர்ந்த வழக்கறிஞர்கள் இராமலிங்கம், அலாவுதீன் மற்றும் ஆவுடையார்கோவில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து ஆவுடையார் கோவிலில் உள்ள அம்பாள்புரம், கீழவீதி மற்றும் ஒக்கூர் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லியும் ரௌடித்தனம் செய்த ஆய்வாளர் பிரேம்ஆனந்த், காவலர் மாரிமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை கோரியும் நேரில் சென்று முறையிடச் சென்றார்கள்.
ஆனால் தோழர்கள் ஒருமணி நேரமாக கலெக்டரைச் சந்திக்க கேட்டும் அனுமதி வழங்கப்படாததால் “கலெக்டர், மக்கள் அதிகார தோழர்களைச் சந்திக்காமல் அறையைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கமாட்டோம்” என்று அறிவித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அனைத்து மீடியாக்களும் படம் பிடிக்க தொடங்கிவிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகார வார்க்கம் தோழர்கள் கலெக்டரை சந்தித்து பேச உடனே அனுமதி வழங்கினர்.
மக்கள் அதிகாரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதைக் குறித்த பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அப்பொழுது டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லியும், ஆவுடையார்கோவில் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், காவலர் மாரிமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதற்கு உடனே மாவட்ட ஆட்சித் தலைவர் அறந்தாங்கி வருவாய் வட்ட கோட்டாட்சியரை அழைத்து போலீசுக்கு எதிரான புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்தார். அதனைத் தொடார்ந்து கலெக்டர் அலுவலக போராட்டம் கைவிடப்பட்டது.
மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுக்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தற்பொழுது காவலர் மாரிமுத்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்திலிருந்து பணி மாற்றம் செய்து விராலிமலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
டாஸ்மாக் கடைகளை நிபந்தனையின்றி மூடவேண்டும், மூடாவிட்டால் நாங்கள் மக்களை திரட்டி மூடுவோம் என அறிவித்து ஆவுடையார்கோவில் மக்கள் அதிகார தோழார்கள் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், காவலர் மாரிமுத்து, SP CID ராஜாராம் ஆகியோரின் சதிகள், மிரட்டல்கள் மற்றும் அதிகார மமதைகளை உடைத்து அடுத்த கட்ட போரட்டத்திற்கு தயராகி கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் ”போலீசால் பொய் வழக்கு போட்டு சிறையில் தான் அடைக்கமுடியும், மக்களுக்காக அதனை எதிர்கொள்ள, தோழரர்கள் தயாராக இருக்கிறோம்” எனக் கூறி போலீசின் தார்மீக பலத்தை ஆவுடையார்கோவிலில் இழக்கச் செய்து வருகிறார்கள்.
தகவல்
மக்கள் அதிகாரம்,
ஆவுடையாரர்கோவில் பகுதி, புதுக்கோட்டை மாவட்டம்.
காவல் துறையில் படுகொலை
நீதித் துறையில் படுகொலை
வேளாண்மை துறையில் படுகொலை
கனிம வளத்துறையில் படுகொலை
கல்வித் துறையில் படுகொலை
தோற்றுப்போச்சு! தோற்றுப்போச்சு
அரசமைப்பே தோற்றுப் போச்சு
நாட்டையும், மக்களையும் பாதுகாக்க
அதிகாரத்தை கையிலெடுப்போம்!
என்ற முழக்கங்களோடு கடலூரைச் சேர்ந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் மரணத்தின் பின்னணியை அம்பலப்படுத்தி கடலூரில் பிரச்சார இயக்கமும், 09-10-2015 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தை பொறுத்தவரையில், ஆரம்பம் முதலே எல்லாக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுவது, நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறுவது என்றளவில் மட்டுமே வினையாற்றினார்கள். ஒரு இளம்பெண் அதிகாரி நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு கொங்கு வேளாளர் சாதியைச் சேர்ந்த கல்வி முதலாளிகள், சாதி வெறியர்கள், ரவுடிகள், கொலைகாரர்களின் கொட்டத்தை அடக்கி வைக்கப் போராடிக் கொண்டிருந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சார்ந்த தலித் சமூகத்தில் பிறந்த பொறியியல் மாணவர் கோகுல் ராஜ், சாதி மாறி நட்பு வைத்த ஒரே காரணத்திற்காக கொங்கு வேளாள சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் நடந்தது.
சம்பவத்தில் முதல் குற்றவாளி வாட்சப் யுவராஜ்
இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளி பயங்கரவாதி யுவராஜ். இவரை பிடிக்கும் பொறுப்பும் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பும் விஷ்ணுபிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு முன்பாக ஆயில் மில் முதலாளி ஜெகந்நாதன் கொலை வழக்கிலும், யுவராஜூக்கும், கூலிப்படைத் தலைவன் கொலைகாரன் பேச்சி முத்துவுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து இந்த வழக்கின் விசாரணையும் விஷ்ணு பிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்கண்ட இரு வழக்குகளிலும் மேலதிகாரிகளின் உத்தரவினால் (ஐ.ஜி.பி சங்கர், எஸ்.பி செந்தில்குமார், எஸ்.பி ராஜ்) தவறான குற்றவாளிகளைக் கைது செய்து வழக்கை முடித்துவிட வேண்டும் என்ற உத்தரவை ஏற்க மறுத்து ஆரம்ப முதலே அவர்களோடு டி.எஸ்.பி விஷ்ணு பிரியா போராடியதை கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி, வழக்குரைஞர் மாளவியாவின் பேட்டியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
முடிவாக காவல் துறையிலும், அதற்கு வெளியிலும் உள்ள அரசியல், கிரிமினல்கள், சாதிவெறிக் கிரிமினல்களின் கூட்டுச்சதியே இந்த மரணத்தில் மேலாதிக்கம் செலுத்துகிறது என்பதுதான் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை. சட்டம், நீதி, நேர்மை எல்லாம் எங்கள் மசுருக்கு சமம் என்று சவால் விட்டு இருக்கிறார்கள் இந்த முக்கூட்டு கிரிமினல்கள்.
உள்ளுர் ஆளும்கட்சி சாதிவெறியர்கள், அரசியல் கிரிமினல்களின் கைக்கூலிகளாக அதிகார வர்க்க கிரிமினல் எஸ்.பி செந்தில்குமார், ஐ.ஜி.பி சங்கரிடமும், எஸ்.பி விஷ்ணு பிரியாவுடன் ஏற்பட்ட மோதல்களையும், லஞ்சம் வாங்க மறுப்பதையும் பேசியுள்ளார். இவை மட்டும் அல்லாமல் கல்லாக் கட்டும் பேர்வழிகளான ஐ.ஜி.பி சங்கர், எஸ்.பி செந்தில்குமார் இருவருக்கும் மாதாமாதம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து தரவேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டு இருக்கின்றனர்.
விஷ்ணுபிரியா தூக்கு தொடர்பாக காவல்துறையை கண்டித்து கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
இதை ஏற்க மறுத்து முரண்பட்ட வேளையில் காவல் துறையால் நடத்தப்படும் பல அதிகாரிகளின் கூட்டத்திலும், போலீசு வாக்கி டாக்கியிலும் “நீ போலிசு வேலைக்கே தகுதியில்லை” என்று மரியாதைக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளனர், இந்த காக்கி கிரிமினல்கள். இப்படிப்பட்ட அதிகாரவர்க்க கிரிமினல்களின் அடக்குமுறையால் தான் காவல் துறையிலேயே 250-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக புள்ளி விவரம் தருகிறது தமிழ்நாடு காவல்துறை.
விஷ்ணு பிரியாவின் வீட்டுக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன், கனிமொழி, வைகோ உள்ளிட்ட பலரும் பொதுவில் ஆறுதல் கூறுவது, கண்டனம் தெரிவிப்பது என்றதோடு நிறுத்திக் கொண்டனர். விஷ்ணு பிரியாவின் மரணத்திற்கு பின்புலமாக செயல்பட்ட சாதி வெறியர்கள், அதிகார வர்க்க கிரிமினல்களை ஒரு வார்த்தை கூட விமர்சித்து பேசவில்லை.
காவல்துறை மட்டுமல்ல உள்துறை செயலர் ஞானதேசிகனின் உறவினர்களும், வேளாண்மைத்துறை பொறியாளர் முத்துக்குமார சாமியின் தற்கொலை, கிரானைட் கொள்ளை விவகாரத்தில் சட்ட ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ் இந்த அரசை, போலீசை நம்பாமல் சுடுகாட்டிலேயே படுத்துறங்கி செத்த பிணத்தின் மண்டை ஓடுகளிலும், எலும்புக் கூடுகளிலும், நீதியையும், ஆதாரங்களையும் தேடி கொண்டிருக்கிறார்.
இந்த அரசுக் கட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது என்று எமது மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அரசுக்கு உள்ளேயே இருந்து உயர்பொறுப்பில் உள்ளவர்களே வாழ்வா? சாவா? என்று போராடி கொண்டிருக்கின்றனர்.
ஆம், இது தனிப்பட்ட முத்துக்குமார சாமி, விஷ்ணு பிரியா, சகாயம் ஆகியோரின் தனிப்பட்ட விவகாரம் அல்ல அரசுக்குள்ளும், அரசுக்கு வெளியேயும் உள்ள நேர்மையாளவர்களுக்கும், நேர்மையற்ற மக்கள் விரோதிகளுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.
காவல்துறை, நீதித்துறை, கல்வித்துறை, கனிம வளத்துறை, மருத்துவத் துறை என அரசின் அனைத்து கட்டுமானத் துறைகளும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதிலாக சிதைக்கப்பட்டு அதிகார வர்க்க குற்ற கிரிமினல்களின் கையில் சிக்கி சீரழிந்துள்ளதோடு மட்டும் அல்லாமல் தோற்றுப்போய் மக்களுக்கே எதிரான நிறுவனங்களாக மாறிப் போனதன் விளைவே விஷ்ணுபிரியாவின் இறப்பு என்பதை விளக்கியும், இதற்குத் தீர்வு மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதே என்று விளக்கியும் நகரம் எங்கும் வீடு வீடாகவும், பேருந்துகளிலும் எமது மக்கள் அதிகார தோழர்கள் பிரச்சாரம் செய்தனர்.
09-10-2015 அன்று காலையில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை வழக்குரைஞர் சங்கத்தலைவர் வேலுகுபேந்திரன் பேசுகையில், “மக்களை பாதுகாக்கத்தான் அரசு. அது மக்களுக்காகத்தான் செயல்பட வேண்டும். அந்த மக்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக் கொள்ள எந்த ஆயுதத்தையும் எடுததுக் கொள்ளலாம் என்று சட்டமே சொல்கிறது. அரசே இனி உன்னால் முடியாது. நாட்டை ஆளப்போவது மக்கள் அதிகாரமே” என்று முடித்தார்.
மக்கள் வாழ்வதாரப் பாதுகாப்பு இயக்கத்தின் லோகபரணி பேசுகையில், “விஷ்ணுபிரியாவுக்கு காதலன் யார்? கோயில் குருக்களா, வக்கீல் மாளவியாவா? என்று ஆள்செட்டப் செய்யும் மாமாவாக மட்டுமே சி.பி.சி.ஐ.டி போலிசும், அரசும் செயல்படுகிறது. ஒரு நேர்மையான அதிகாரியை இழந்துவிட்டோமே என்ற வருத்தம் அரசுக்கு துளிகூட இல்லை. கடந்த 7 ஆண்டுகளாய் சாயப்பட்டறையை தடுக்க போராடி வருகிறோம். எங்கள் அனுபவத்தில் ஒரு நேர்மையான அதிகாரியை கூட பார்க்க முடியவில்லை” என்றார்.
வெண்புறா பொது நல பேரவை தலைவர் குமார் பேசுகையில், “இனி மனுகொடுப்பது, மண்டியிடுவது தேவையில்லை. நிலைமைகள் கைமீறி போகும்போது சட்டமன்றம், தலைமை செயலகம், கவர்னர் அலுவலகம் என்று முற்றுகையிட்டு போராடுவதுதான் தீர்வை நோக்கி இட்டுச் செல்லும்” என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநில இணைச்செயலர் மதிசேகர் பேசுகையில், “அதிகாரிகளும், அமைச்சர்களும், ரவுடிகளும் கூட்டு சேர்ந்து தமிழகத்தை கிரிமினல் மயமாக்கி வருகின்றனர். யார் குற்றவாளியோ அவனிடமே மனுகொடுக்கும் அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது” என்று அம்பலப்படுத்தினார்.
இறுதியில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, “இந்த அரசின் அனைத்து கட்டுமானங்களும் மக்களைப் பாதுகாக்க வக்கற்று தோற்றுப்போனது மட்டுமல்ல, தன்னை பாதுகாக்கும் அதிகாரியை கூட பாதுகாக்கும் தகுதியிழந்ததன் விளைவுதான் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணமும், முத்துக்குமாரசாமி தற்கொலையும், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் போராட்டமும் நிரூபிக்கின்றன.
இந்த அரசானது ஒரு பழுதடைந்த வாகனம். இதில் மனுகொடுப்பது என்பது உடைந்த பாகங்களை மட்டும் மாற்றுவதற்கு ஒப்பானது. கட்சி மாற்றி ஓட்டு போடுவது என்பது டிரைவரை மாற்றுவதற்கு ஒப்பானது. இங்கு காரும், கார் டிரைவரும், அது போகும் சாலையும் மோசமாக இருக்கும்போது பயணங்கள் எப்படி நல்லமுறையில் போக முடியும். எனவே பயணிகளாகிய அதாவது மக்களாகிய நாம் நம்மை ஆளத் தகுதியற்ற இந்த அரசக்கட்டமைப்பையும், அதில் உள்ள காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அதிகார வர்க்க கிரிமினல் கும்பலையும் கேள்விக்குள்ளாக்கி மக்கள் அதிகாரத்தை நிறுவுவதே நமது உடனடிக்கடமை” என்று முடித்தார்.
குறிப்பு:
டி.எஸ்.பி தூக்கிட்டதாக சொல்லப்படும் சம்பவத்துக்கு வருவோம். 16-ம் தேதி உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு, சம்வத்தன்று காலையில் திருச்செங்கோட்டில் போக்குவரத்துக் காவலருக்கும், பள்ளி ஆசிரியருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் போலிசு ஆசிரியரை அடித்த சம்பவத்தில் ஏற்பட்ட சாலை மறியல் மற்றும் வினாயகர் சிலை ஊர்வலத்தின் பாதுகாப்பு என்று இருவேலைகளையும் முடித்து விட்டு 2.48 மணிவரை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கீழக்கரை டி.எஸ்.பி-யும், தன் தோழியுமான மகேஸ்வரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் நாமக்கல் எஸ்.பி செந்தில் குமாரிடமிருந்து போன் அழைப்பு வந்துள்ளது.
இதற்குப் பின் 3.00 மணிவாக்கில் மகேஸ்வரி மீண்டும் தொடர்பு கொள்ளும்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின் 5 மணிக்கு விஷ்ணு பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தொலைக்காட்சி செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார் மகேஸ்வரி.
5.00 மணிக்கு வேலைக்கு சென்ற வீட்டு வேலைக்காரம்மா ஜன்னல் வழியே பார்த்த பின்தான் தெரியும் என்கிறது போலிசு.
இதிலிருந்து நமக்கு எழும் கேள்விகள்
சம்பவ இடத்தின் கூரை 12 அடிக்கும் அதிக உயரத்தில் உள்ளது. இந்த நீண்ட இடைவெளியில் குண்டான டி.எஸ்.பி எப்படி துப்பட்டாவை மாட்டியிருக்க முடியும்?
இந்த வளாகத்திற்குள் போலிசு தவிர மற்ற நபர்கள் யாரும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாது.
மிகக் குறுகிய நேரத்தில் 9 அல்லது 12 அல்லது 15 பக்க கடிதங்கள் எழுத வாய்ப்பே இல்லை.
நேரில் வந்த எஸ்.பி செந்தில்குமார் ஒரு உயர் அதிகாரி தற்கொலை செய்து கொண்டதை நீதித்துறை அதிகாரம் கொண்ட டெபுடி தாசில்தார், அல்லது மாஜிஸ்ரேட் முன்னிலையில் தான் அறையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற சட்ட நடைமுறை கடைபிடிக்கப்படாமல் தான் மட்டுமே ஆய்வு செய்ததன் நோக்கம் என்ன?
தமிழீழ விடுதலைக்கான புலிகளின் ஆயுதப் போரைப் போலவே, ஈழ இறுதிப் போரில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பது, ஈழத்தின் திறந்தவெளியில் சிறைப்பட்டுக் கிடக்கும் அகதிகளை விடுவிப்பது, ஒரு பொதுவாக்கெடுப்பு மூலம் தமிழீழத்தைப் பெறுவது முதலானவற்றை அமெரிக்க வல்லரசின் தலைமையில் சர்வதேச சமூகத்தைக் கொண்டு சாதிப்பது என்ற இனவாதிகளின் உத்திகளும் சோகமான முடிவுகளை எட்டியிருக்கின்றன.
வவுனியா மாணிக்ஃபார்ம் முகாமில் தமிழ் அகதிகள் (கோப்புப் படம் இணையத்திலிருந்து)
ஈழச் சிக்கலுக்குச் சர்வதேச சமூகம் மூலமான தீர்வுகளுக்குச் சாதகமாக அமெரிக்க வல்லரசின் நிலைப்பாடுகள் இருக்கும் என்று இனவாதிகள் கற்பிதம் கொண்டிருந்ததும் பொய்த்துப் போனது. சீனா – ராஜபக்சே கூட்டுக்கு எதிராக அரசியல் காய்களை நகர்த்தினால், சீன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தால், அமெரிக்க வல்லரசு மட்டுமல்ல, இந்திய வட்டார வல்லரசுகூட ஈழச் சிக்கலில் தமக்குத் துணை நிற்கும் என்று உலகின் மாபெரும் அரசியல் சிந்தனையாளர் என்று தாம் போற்றிய பிரபாகரனைப் போலவே இனவாதிகள் நம்பினர். அவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பாராட்டும் அவரது தூதருக்கு நன்றியும் செலுத்தினார்கள். ஆனால், இனவாதிகளின் உத்திகள் எல்லாம் வெறுங்கனவாய்ப் போயின.
இனப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பது போன்ற அமெரிக்க நாடகங்கள் எல்லாம் தனது விசுவாசிகளான சிறீசேனா – ரணில் கும்பல் ஆட்சியைப் பிடிப்பது வரைதான் நீடித்திருந்தன. இப்போது ஈழத் தமிழினத்துக்கு எதிராக இலங்கையின் சிங்கள இனவெறி அரசே முன்மொழிந்தவாறு அமெரிக்க வல்லரசு கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா, சீனா உட்பட சர்வதேச சமூகம் முழுவதும் கைகோர்த்துக் கொண்டு, அக்டோபர் முதலன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளன.
முந்தைய தீர்மானங்களில் இடம் பெற்றிருந்த சர்வதேச நீதி விசாரணை கிடையாது; இனப் படுகொலைகள், போர்க் குற்றங்கள் போன்ற சொற்களும் நீக்கப்பட்டு, விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு இரண்டினதும் மனித உரிமை மீறல்களை இலங்கையின் சட்ட முறைமைகளுக்குட்பட்டு, அந்நாட்டு நீதி அதிகாரிகளின் விசாரணையின் கீழ் நடத்தப்படும். அச்சமயம் இலங்கை அரசின், காமென்வெல்த் நாடுகள் போன்றவற்றின் நீதிபதிகள், சட்ட வழக்குரைஞர்கள் உடனிருப்பார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தீர்மானத்தின் அமலாக்கம் பரிசீலிக்கப்படும். இவை தவிர, ஈழத்தின் திறந்தவெளிச் சிறைகளில்/முகாம்களில் வதியும் அகதிகள் விடுதலை, இராணுவ வெளியேற்றம், பறிக்கப்பட்ட நிலங்கள் ஒப்படைப்பு மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவை குறித்த பேச்சுக்கள் எதுவும் கிடையாது.
என்றாலும் அந்தத் தீர்மானத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு ஆளும் தமிழ்தேசக் கூட்டமைப்பின் பிரமுகர்கள் தனித்தனியான முறையில் கூறிவருகிறார்கள். ஆனால், அந்தத் தீர்மானத்தின் மீது வடக்கின் அதிகாரபூர்வ ஆட்சியாளர்களோ ஒப்புக்கு அதிருப்தியும் அவநம்பிக்கையும் தெரிவித்தாலும், மாற்றுத் தீர்வு எதையும் முன்வைக்கவில்லை.
அந்தத் தீர்மானத்தைத் தமிழகக் கட்சிகள் அனைத்தும் நிராகரித்து, அதற்கு எதிராக ஓட்டளிக்குமாறு இந்திய அரசைக் கோரி ஒருமனதாகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின. அதைக் கழிப்பறைக் காகித அளவுக்குக்கூட இந்திய அரசு மதிக்கவில்லை. கடனுக்குத் தீர்மானம் நிறைவேற்றியதோடு கண்டன அறிக்கை தவிர, வேறு எதையும் அக்கட்சிகள் செய்யவில்லை. தமிழக இனவாதக் குழுக்கள் சடங்குத்தனமான அடையாளப் போரட்டங்களுக்கு மேல் எதுவும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. ஈழத் தமிழினம் ஆளும் சிங்கள இனவெறிக்கு எதிராகத் தமது இனவுரிமைக் கோரிக்கைகளோடு, இலங்கையின் உழைக்கும் மக்களோடு வர்க்கரீதியில் இணைந்து நீண்டகால நோக்கில் ஜனநாயகத்துக்காகப் புரட்சி வழியில் போராடுவதுதான் ஈழச் சிக்கலுக்குத் தீர்வாகும்.
_________________________________ புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________
மணல் கொள்ளையனைப் பாதுகாக்க திருப்பாற்கடல், அத்திபட்டு ஊர்களை சூறையாடிய ஆர்.டி.ஓ, தாசில்தார், போலீசு
மக்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் பாதுகாக்கத்தான் அரசு என்ற கதையெல்லாம் காலாவதியாகிப் போய்விட்டது என்பதற்கு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள திருப்பாற்கடல், அத்திப்பட்டு ஆகிய ஊர்களில் வேலூர் மாவட்ட அரசு நிர்வாகம் நடத்திய அட்டூழியம், அரசு நம்மை ஆளும் தகுதியை இழந்து விட்டதை சாட்சியாக நம்முன் நிறுத்தியுள்ளது.
பாலாற்று மணல் கடந்த பல ஆண்டுகளாக மணல் மாஃபியாக்களால் சூறையாடப்பட்டு வருகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அப்படி சூறையாடப்பட்ட இடங்களில் எல்லாம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் மணல் கொள்ளையை தடுக்க போராடியுள்ளனர். அந்த போராட்டங்களை எல்லாம் ஒடுக்கி மணல் மாஃபியாக்களுக்கு துணை நின்றது மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார், வி.ஏ.ஓ, ஊர் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர்தான் என்பதும் வெட்ட வெளிச்சமான உண்மை. இதன் தொடர்ச்சியாக திருப்பாற்கடல், அத்திப்பட்டு ஆகிய இரண்டு கிராமங்களில் கடந்த மூன்று வருடங்களாக அனுமதியின்றி சட்டவிரோதமாக மணற்கொள்ளை நடைபெற்று வருகின்றது.
காவேரிப்பாக்கம் பேருராட்சி தலைவராக ஜெயா கட்சியின் குலக்கொழுந்து சாராய மணி. இவரின் குலத் தொழிலே சாராயம் காய்ச்சுவது. தற்போது இதை ஜெயா செய்து வருவதால் தனது தொழிலை விட்டுக் கொடுத்துவிட்டு அதைவிட அதிக வருவாய் வரும் மணலை கொள்ளையடித்து வருகின்றார். தி.மு.க.வைச் சேர்ந்த பாஸ்கரன், மணி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட சாராய வியாபாரி முருகன், ஜெயா கட்சியின் கவுன்சிலர் குட்டா என்ற சுந்தர் ஆகிய இந்த கிரிமினல் கும்பல்தான் மணல் கொள்ளையை கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வருகின்றது. இதற்கு இடையூறு இல்லாமல் பாதுகாக்கும் முக்கியமான வேலையை , வேலூர் மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார், போலீசு என்ற மொத்த அரசு நிர்வாகமும் செய்து வருகின்றனர்.
இங்கு மணல் கொள்ளையடிக்கும் டிராக்டர்களை ஓட்டுபவர்கள் அனைவரும் லைசன்ஸ் இல்லாத சிறுவர்கள். இவர்கள் எப்போதும் குடிபோதையில்தான் டிராக்டர் ஓட்டுவார்கள். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் போக 1 குவாட்டரும் பிரியாணி பொட்டலம் வழங்கப்படும். மணல் அள்ளிக் கொண்டு நிலை தடுமாறி ஊருக்குள் செல்லும் இந்த டிராக்டர்களால் ஒவ்வொரு நொடியும் விபத்தை எதிர்நோக்கி அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் திருப்பாற்கடல், அத்திப்பட்டு கிராம மக்கள்.
மக்கள் போராட்டம் – “தாசில்தார், ஆர்.டி.ஓ வராமல் டிராக்டரை எடுக்க அனுமதிக்க முடியாது”.
இந்நிலையில் 09.10.2015 அன்று நள்ளிரவு 1 மணிக்கு மணல் ஏற்றிக் கொண்டு தள்ளாடி வந்த டிராக்டர் மின்கம்பத்தில் மோதி மின்கம்பத்தை சாய்த்து டிராக்டர் குப்புற கவிழ்ந்தது. இதன் மூலம் 10 கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது.
திருப்பாற்கடல் முழுவதும் தறி ஓட்டும் தொழில் செய்து வரும் மக்கள் மற்றும் சுற்றுப்பட்ட கிராம மக்கள் சம்பவம் நடந்த இடத்தில் கூடிவிட்டனர். உடனே அங்கு வந்த காவேரிப்பாக்கம் போலீசு ஆய்வாளர் சந்திரசேகரன் உடனே ஜே.சி.பி-ஐ வரவழைத்து விடிவதற்குள் டிராக்டரை எடுத்து, சம்பவம் நடந்ததே தெரியாமல் செய்துவிட வேண்டும் என முயற்சி செய்தார்.
மக்கள் விடவில்லை. “தாசில்தார், ஆர்.டி.ஓ வராமல் டிராக்டரை எடுக்க அனுமதிக்க முடியாது” என்றனர்.
பொழுது விடிந்தது. காலை 8 மணிக்கு ஊருக்கு வந்த அரசு பேருந்தை மக்கள் சிறை பிடித்தனர். “ஆர்.டி.ஓ, தாசில்தார் வராமல் பேருந்து போகாது” என்றனர்.
உடனே 1 மணி நேரத்தில் தாசில்தார் குணசேகரன், ஆர்.டி.ஓ முருகேசன் வந்தனர். தாசில்தார் சேர் எடுத்துப் போட்டு உட்கார்ந்தார். 5 மணி நேரத்துக்கு மேல் கால் கடுக்க காத்து நின்ற மக்கள் தாசில்தாரை சேரில் உட்கார அனுமதிக்கவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகாளக நடந்துவரும் மணற் கொள்ளையை தடுக்க பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தாசில்தாரை மக்கள் நாக்கை பிடுங்கும் அளவு கேள்விகளை கேட்டனர்.
ஒருவர் “மனசாட்சியை தொட்டு சொல் எவ்வளவு மாமூல் வாங்குற” என்று கேட்டார். உணர்ச்சிவசப்பட்ட தாசில்தார் “நான் மட்டுமா வாங்குறேன், எல்லாரும்தான் வாங்குறாங்க” என்றார்.
ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி, தாசில்தார் என அதிகார தாழ்வாரங்கள் அனைத்தும் அங்கு வந்துவிட்டன. பேருந்தை விடுவிக்க கோரினர்.
“ஸ்பீடு பிரேக் உடனே போட வேண்டும், மின்சாரம் வர உடனே ஏற்பாடு செய்ய வேண்டும், இனி மணல் கொள்ள நடக்க கூடாது” என்ற கோரிக்கைகளை முன் வைத்து எழுத்துபூர்வமாக எழுதி கேட்டனர், மக்கள்.
உடனே ஆர்.டி.ஓ, “நீங்கள் போலீசில் மணல் திருடியவர்கள் மீது புகார் கொடுத்துவிட்டு வாருங்கள் நான் எழுதி தருகிறேன்” என்றார்.
அருகில் இருந்த டி.எஸ்.பி, “இங்கு எத்தனை டிராக்டர் மணல் திருடப்படுகிறது, யார் திருடுகிறார்கள் என்று எங்க போலீசுக்கு தெரியும் நாங்க அரஸ்ட் பண்றோம். சிறை பிடித்த பஸ்ஸை விடுங்கள்” என்று கூறியதை நம்பிய மக்கள் சிறை பிடித்த பேருந்தை விடுவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சென்ற ஒரு சில நிமிடங்களில் அங்கு வந்து இறங்கிய 100-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசு ஊருக்குள் புகுந்து வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், கழனிக்கு சென்று கொண்டிருந்தவர்கள், கடையில் நின்று கொண்டு இருந்தவர்கள் என அனைவரையும் வெறித்தனமாக அடித்து உதைத்து ஊரையே சூறையாடியது.
டி.எஸ்.பி தலைமையில் 40 பேரை கைது செய்து அடித்து இழுத்து சென்ற போலீசு, காவேரிப்பாக்கம் போலீசு ஸ்டேசனில் வைத்து போலீசு புடைசூழ கைது செய்யப்பட்ட 40 பேரையும் தனித்தனியாக அழைத்து மிரட்டி இனி போராட மாட்டேன் என்று சொன்னவர்களை வெளியே விட்டுவிட்டு போராடியது சரிதான் என்று கூறிய 20 பேரை மட்டும் தனியாக பிரித்து வைத்து கொடூரமாக அடித்துள்ளனர்.
போலீஸ் காட்டுமிராண்டித்தனம்
விவேகானந்தன் என்ற போராட்ட முன்னணியாளரை தனி அறையில் அடைத்து அரக்கோணம் ஆய்வாளர் துரைப்பாண்டியன் என்பவரை வரவழைத்து, துரைப்பாண்டி, டி.எஸ்.பி மற்றும் சில போலீசார் விவேகானந்தனை தரையில் கால் நீட்டி உட்கார வைத்து தடியால் பாதத்தில் தாக்கியுள்ளனர். பாதம் மரத்து போனவுடன் பாதம் முதல் கால் முட்டி வரை தடியால் கொடூரமாக தாக்கி ரத்தம் வழிய வழிய அடித்துள்ளனர்.
இரவு 8 மணிக்கு அனைவரையும் நீதிபதியிடம் ஆஜர் படுத்தியுள்ளனர். நீதிபதியிடம் அடித்து வீங்கி போன கால்களை ரத்த காயத்துடன் விவேகானந்தன் காட்டியுள்ளார்.
உடனே போலீசைப் பார்த்து, “காவேரிப்பாக்கம் போலீசு எப்போதும் இப்படிதான் நடந்து கொள்கின்றார்கள்” என்று சின்ன குழந்தை தவறு செய்த மாதிரி செல்லமாக திட்டிய நீதிபதி அனைவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
“எந்தத் தவறும் செய்யாத எங்களை போலீசு பிடித்து வந்துள்ளது” என்று கைதானவர்கள் கூறியதை காதில் வாங்காத நீதிபதி அனைவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
வாலாஜாபாத் மருத்துவமனைக்கு அழைத்து சென்று எந்தவிதமான சிகிச்சையும் அளிக்காமல் பெயரளவில் வைத்தியம் பார்த்ததாக கணக்கு காட்டி, வேலூர் மத்திய சிறையில் 20 பேரையும் அடைத்துள்ளனர்.
சிறையில் அடைப்பதற்கு முன்பு வேனில் வைத்து விவேகானந்தனை, “அடித்ததை வெளியில் சொன்னால் உன்னை ரவுடி லிஸ்டில் கொண்டு வந்து விடுவேன்” என்று டி.எஸ்.பி மதிவாணன் மிரட்டியுள்ளார்.
மணற் கொள்ளையை தடுக்க வேண்டிய ஆர்.டி.ஓ, தாசில்தார், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டி போலீசு, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டும், மணற்கொள்ளையன் கொடுக்கும் லஞ்சப் பணத்திற்கு வேலை செய்கின்றனர். கிரிமினல்களை பாதுகாக்கும் இந்த குற்ற கும்பல்தான் நம்மை ஆட்சி செய்கிறது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. அரசு மக்களை ஆள்வதற்கான தகுதியை இழந்து விட்டதற்கு மேலும் ஒரு உதாரணமாக இந்த சம்பவம் உள்ளது.
மக்கள் போராட்டங்களை ஒடுக்குமுறையில் தடுக்க முடியாது
ஏரிப்புறக்கரை, அதிராம்பட்டினம் நகரம், கிழக்கு கடற்கரை சாலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடு
“டாஸ்மாக் கடை அருகில் போராட்டம் நடத்தினால், கடை மீது கல் வீசுவார்கள். கடையை மக்கள் தாக்குவார்கள்.” – காவல்துறை.
என்ற கோரிக்கையை முன் வைத்து அதிரை நகரம், பட்டுக்கோட்டை நகரம், மதுக்கூர், முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, ஏரிப்புறக்கரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பிரசுரம் வினியோகித்தும், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாகவும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இரண்டு மாத காலமாக தொடர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இறுதியாக 15-10-2015 அன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டனர். அதற்கு, “டாஸ்மாக் கடை அருகில் போராட்டம் நடத்தினால், கடை மீது கல் வீசுவார்கள். கடையை மக்கள் தாக்குவார்கள். எனவே டாஸ்மாக் கடை இருக்கும் இடத்தில் உங்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக அதிரை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பட்டம் நடத்துங்கள்” என்று அனுமதி அளித்தனர்.
பெண்கள் முன்வந்து தாலிக் கயிற்றை காண்பித்து “வெறும் கயிறுதாங்க கிடக்குது, இந்த டாஸ்மாக்கால” என்று குமுறினர் – பிரச்சாரத்தில்
குறிப்பாக, முக்கிய சாலையான கிழக்குக் கடற்கரை சாலையில் பல்வேறு விபத்துகள் நடக்கின்றன. இரண்டு முக்கிய கல்லூரிகள், கோவில், மசூதி, சர்ச், மற்றும் குடியிருப்பு அருகில் இயங்கும் இந்தக் கடையை அகற்ற வலியுறுத்தி மக்களிடம் சென்றபோது நல்ல வரவேற்பு இருந்தது. பெண்கள் முன்வந்து தாலிக் கயிற்றை காண்பித்து “வெறும் கயிறுதாங்க கிடக்குது, இந்த டாஸ்மாக்கால” என்று குமுறினர். கடையை மூட வருகிறோம் என்றனர்.
பலர் டாஸ்மாக் கடை அருகிலேயே இறந்து கிடந்துள்ளனர்.
தோழர்கள், “அதிகாரிகளை நம்பி நமது வாழ்க்கையை காப்பாற்றவும், டாஸ்மாக்கையையும் மூட முடியாது. மக்கள் அதிகாரத்தால்தான் டாஸ்மாக்கை மூட முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று பிரச்சாரம் செய்தனர்.
கடை அருகில் போராட்டம் நடத்தினால் மக்கள் திரளாக வருவார்கள் என்று உணர்ந்த காவல்துறை வேறு இடத்தில் அனுமதி கொடுத்தது.
ஆர்ப்பாட்டம், மக்கள் அதிகாரம் தோழர் நடராஜன் தலைமையில் அதிரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கிராமங்களில் இருந்து பெண்கள், கிராம கமிட்டி தலைவர்கள், பெரும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். சமூக ஆர்வலர்கள், கிராம கமிட்டி தலைவர்கள், சி.பி.ஐ, வி.சி.கட்சி, தி.மு.க, ம.தி.மு.க, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உழைக்கும் மக்கள் கட்சி போன்ற அமைப்பினரும், தமிழ்தேச கூட்டமைப்பு தோழர் இராமசாமி, தமிழக மக்கள் விடுதலை இயக்கம் பொதுச்செயலர் தோழர் தங்க குமரவேல், மக்கள் அதிகாரம் மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து ஆகியோர் கண்டனை உரையாற்றினர்.
“டாஸ்மாக் கடை அருகில் பார் வைத்துள்ளது, அரசு. 24 மணி நேரமும் டாஸ்மாக் சாராயத்தை பல இடங்களில் விற்பது அ.தி.மு.க.தான். டாஸ்மாக்கை மூடினால் அ.தி.மு.க கலைந்து விடும்.
கள்ளச்சாராயம் விற்றால் மக்களே தண்டனை வழங்க வேண்டும். கள்ளச் சாராயத்திற்கு துணை போகும் காவல்துறையை அம்பலப்படுத்துவது மூலமும், நாம் மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்கவும், நீதித்துறை போலீஸ், அதிகார வர்க்கம், அரசியல் கட்சிகள் போன்ற இத்துப் போன அமைப்புகளுக்கு மாற்று மக்கள் அதிகாரமே என்று நிறுவவும் வேண்டும்” என்று தோழர் காளியப்பன் உரையாற்றினார்.
1. நீதித்துறை ஊழலை வீதிக்கு இழுத்த மதுரை வழக்கறிஞர் போராட்டம்!
2. ஈழப் போர்க்குற்ற விசாரணை: தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்
3. டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா ‘தற்கொலை’ : குற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு!
குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொறுப்பில் உள்ள போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளும், ஆட்சியாளர்களும் குற்றவாளிகளின் காவலர்களாகச் செயல்படுகிறார்கள்.
4. வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறை : நடந்தது என்ன?
5. நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!!
ஊழலும், பார்ப்பன பாசிசமும் கைகோர்த்து நிற்கும் இந்திய நீதித்துறை, வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கே எதிரியாகப் பரிணமித்து நிற்கிறது.
6. எம்.எம்.கல்புர்கி கொலை: இந்துமதவெறி – ஆதிக்க சாதிவெறிக் கூட்டணியின் அட்டூழியம்
முற்போக்கு சமூக சிந்தனையாளர்களை ஒடுக்கி, ஒழித்துக் கட்டும் பயங்கரவாதச் செயல்களில் இந்து மதவெறி அமைப்புகளும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களும் இயற்கை கூட்டாளிகளாகச் செயல்படுகின்றன.
7. சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு : ஜெயா வழங்கிய “மானாடா.. மயிலாட…”
அந்நிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதையே மோடியை விஞ்சிய சாதனையாகக் காட்டி சுயவிளம்பரக் கூத்தை வக்கிரமாக நடத்தியுள்ளது ஜெ. கும்பல்.
8. 2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.
9. வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம்
ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.
10. அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
11. சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி!
சிரியாவில் அதிபர் அல் அசாத் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்க தனது கைக்கூலிகள் மூலம் நடத்திவரும் அநீதியான போர்தான் இலட்சக்கணக்கான சிரிய மக்களை அகதிகளாகத் துரத்துகிறது.
என்ற முழக்கத்தின் கீழ் கருவேப்பிலங்குறிச்சியில், விவசாயிகள் சங்கத் தலைவர் A நந்தகுமார் தலைமையில் மக்கள் அதிகாரம் சார்பாக அக்டோபர் 7, 2015 அன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவர் தனது தலைமை உரையில் “டாஸ்மாக்கை மூடுவதற்காக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்துள்ளோம். கிராமப் புற சூழலே சீரழிந்துள்ளது, மேலப்பாளையூர் கிராமத்திலே டாஸ்மாக் கடையை மூட சொல்லி ஊர் மக்கள் சார்பாக போராட்டம் நடத்தினோம். அந்த டாஸ்மாக் கடையை சேல்ஸ்மேன் முன்னதாகவே மூடிவிட்டு சென்று விட்டான். மீண்டும் அக்கடையை திறக்கக் கூடாது என்று ஊர்மக்கள் சார்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாகவும் போராட்டம் நடத்தினோம்.
அந்தக் கடையில் ஆளே இல்லை. ஆனால் போலீசார் எங்கள் மீது 307 பொய் வழக்கு பதிவு செய்தனர். போராட்டம் நடத்த ஒவ்வொரு மக்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் போராட்டம் நடத்தியதால் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
நாங்கள் சிறைக்கு போனதும் எங்களை ஒரு அக்யூஸ்ட்டை போல நடத்தினர். நாங்கள் சிறைக்குள் உணவு உண்ணமாட்டோம் எனக் கூறினோம். காரணம் கடை எங்கள் ஊரில் இருக்கக் கூடாது. வருவாய் அதிகாரிகள் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினோம். தாசில்தார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். எங்கள் கோரிக்கையை கூறினோம், டாஸ்மாக் மூடினோம்” என்று பேசினார்.
மக்கள் அதிகாரம், விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தனது கண்டன உரையில், “காவனூர் கடையை மூடச் சொல்லிதான் இந்த ஆர்ப்பாட்டம். டாஸ்மாக்கை பற்றி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் போராட்டம் நின்று போகும் என்று நினைத்தனர். ஆனால் அடுத்த 10 நிமிடத்தில் கோயம்புத்தூர், விருத்தாசலம், திருச்சி, விழுப்புரம் போன்ற இடங்களில் போராட்டம் பற்றி படர்ந்தது. மது பாட்டிலை உடைத்தனர், சாணியால் அடித்தனர், மலத்தால் அடித்தனர், தக்காளியால் அடித்தனர், முட்டையால் அடித்தனர். ஆகவே மக்கள் போராட்டத்தை அடக்கு முறையால் தடுக்க முடியாது என்ற நிரூபித்து காட்டினார் மக்கள்.” என்று குறிப்பிட்டார்.
கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இளங்கோவன் பேசும் போது, “டாஸ்மாக் இருப்பதால் குடிக்கத் தூண்டுகிறது. இதே போல ஊரில் 100 பேருக்கு 98 பேர் குடிக்கின்றனர். 2- பேர் குடிக்காதவர். ஆனால் டாஸ்மாக்கை மூட 100% மக்களிடையே ஆதரவு உள்ளது. ஆனால் இதை யார்? மூடுவது, எப்படி மூடுவது எப்பொழுது, மூடுவது என்ற நிலை உள்ளது. அனைவரும் வீதிக்கு இறங்கி போராடினால் நம்மால் மூட முடியும்.” என்று பேசினார்.
கச்சிராயநத்தத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம் விதவை மந்திரகுமாரி பேசியது “டாஸ்மாக்கினால் எங்கள் ஊரில் 105 பேர் விதவைகள். அதில் 80 பேர் இளம் விதவைகள். நாங்கள் அனைவரும் டாஸ்மாக்கு எதிராக போராடி எங்கள் ஊரிலுள்ள கடையை 2 கி.மீ துரம் அகற்றி வைத்தோம்.
எங்களைப் போல உள்ள பெண்கள் இளம் விதவையாக தாலியறுக்குது அரசாங்கம். ஆனா தாலிக்கு தங்கம் கொடுக்குதாம். குடும்பத்தலைவர் செத்தா ஈமச்சடங்குக்கு ரூ 2500 பணம் கொடுக்கிறது, ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்கா கல்வி கொடுக்க வக்கில்ல; எங்களுக்கு வேலை கொடுக்க துப்பில்ல.
போராட்டம் நடத்தினால் தப்பா! நாங்க ரோட்டில் நடந்தா சகுனத் தடை, நாங்க எதாவது கேட்டா வாய் ரொம்ப வளர்ந்துடுச்சின்னு சொல்லுராங்க. இப்போ தேர்தலுக்கு வராங்க. இதுக்கு முன்னாடி யாரும் வரல. இந்த அரசியல்வாதிங்கள நம்பாதிங்க. இவங்க நமக்கு ஒன்றும் செய்ய மாட்டாங்க. அதனால் மக்கள் அதிகாரம் மூலம் போராடுவதற்கு வாங்க.”
T.பாவழங்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிறு தொண்டநாயனார், மருங்கூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜகோபால் இருவரும் காவல்துறை சிறையிலும், வெளியிலும் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைப்பற்றி பேசினர்.
விருத்தாசலம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் அருகதை இழந்த அரசு கட்டமைப்பு பற்றியும் மக்களை ஆள தகுதி இழந்ததையும் தெளிவாக விளக்கி மக்கள் மத்தியில் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினர்
விருத்தாசலம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன், “இது வரை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மக்களுக்காக நடத்திய போராட்டங்களையும் (உதாரணமாக தில்லை கோவில் போராட்டம்) டாஸ்மாக் போராட்டத்தில் காவல் துறையின் நடவடிக்கைக்கு அஞ்சாமலும், உளவு பிரிவு போலிசாருக்கு சவால் விட்டும் நாங்கள் மக்களுக்கு ஆதரவாக போராடியதால் எங்களை மக்கள் நம்புகின்றனர். சமச்சீர் கல்வி போராட்டம், மணல் கொள்ளை போராட்டம், முத்துகுமார் இறுதி ஊர்வல போராட்டம் இந்த போராட்டங்களின் சி.டி-களை காவல்துறையினர் கட்டாயம் குடும்பத்தோடு பார்க்க வேண்டும் அப்பொழுது தான் எங்களை பற்றி தெரியும்.” என்று பேசினார்.
தோழர் ராஜு வழக்கறிஞர், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு
கட்டமைப்பு நெருக்கடி பற்றி:
சட்டத்தை மதிக்காத அதிகாரவர்க்கம் பற்றியும், மாஃபியாக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கூலிப்படையாக செயல்படும் காவல் துறையைப் பற்றியும் விளக்கி, அரசு எந்திரம் துருப்பிடித்து, மக்கிப் போய், மக்களுக்கு உபயோக மற்றதாக மாறிவிட்டது. இதனை அடித்து வீ‘ழ்த்தி மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
காவனூர் டாஸ்மாக்கையும் கருவேப்பிலங்குறிச்சி டாஸ்மாக்கையும் இழுத்து மூடவும், பாழடைந்த பவழங்குடி ரோட்டை போடவும் மக்கள் அதிகார அமைப்பின் ஆதரவோடு அணிதிரண்டு போராடி 15 நாள் கைதாகி சிறை செல்ல இப்பகுதி மக்கள் பெயர் கொடுத்தால் இன்னும் 24 to 48 மணி நேரத்திற்குள் டாஸ்மாக்கை மூடி இந்த ரோட்டையும் போட்டுகாட்டுகிறோம் என்று மக்களின் சார்பாக அரசுக்கு சவால் விடுத்தார். விருத்தாசலம் மக்கள் அனைவரும் போராட்டத்திற்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிறைக்கு உங்கள் ஊரில் உள்ளவர்கள் சென்று வந்துள்ளார்கள் அவர்களிடம் சிறை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வீட்டிற்கு ரூ 100 வரியாக கொடுத்து உதவுங்கள்.
அரசியல்கட்சிகளைஅம்பலப்படுத்துதல்:
தமிழகத்தில் மிகப் பெரிய தி.மு.க, பா.ம.க, வி.சி.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிகப்படியான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு உங்கள் பலத்தால் முதலில் டாஸ்மாக் கடையை மூடிக்காட்ட வேண்டியதுதானே? ஏன் மூடவில்லை?
ஏன் சாலை போடவில்லை? ஏன் நோட்டீஸ் கொடுப்பதோடு போராட்டத்தை நிறுத்திக்கொள்கிறீர்கள்?
மக்களுக்காக பாடுபடுவேன் என்று கூறுகிற நீங்கள் செருப்பாக தேய்கிறேன் என்று கூறுகிற நீங்கள் மக்களுக்காக போராடி டாஸ்மாக்கை மூடி சிறைக்கு செல்வதுதானே! ஏன் சிறைக்கு செல்ல தயங்குகிறீர்கள்?
நீங்கள் தான் மிகப் பெரிய கட்சியாச்சே மக்கள் மத்தியில் மக்கள் நலனுக்காக சிறை செல்ல தயாரா? தயார் என்று கூறுங்கள், நாங்கள் ஓட்டுபோடுவது பற்றி யோசிக்கிறோம்.
அன்புமணி சொல்கிறார் எனக்கு ஓட்டு போட்டு முதல்வராக்குங்கள், முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறுகிறார். வடிவேலு படத்திலே ஒரு காமெடியில் மலையை யாராவது தூக்க முடியுமா என கேள்விக்கு நீங்கள் அதைத் தூக்கி தோளில் வைத்தால் நான் தூக்கிச் செல்கிறேன் என்று ஒருவர் கூறுவார். அதைப் போல ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து முதல்வராக்கினால் அவர் மதுவிலக்கை அறிவிப்பாராம். இது எப்போ நடப்பது? ஆகையால் தான் சொல்கிறோம் ஓட்டுக் கட்சிகளை நம்பி பலனில்லை.
மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம்தான் இதனை சாத்தியமாக்க முடியும். போராட வக்கில்கள் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் நாம் இறங்கி போராடினால் தான் ரோடை போட முடியும். நெல், கரும்புக்கு விலை உயர்த்த முடியும். நாம் நிம்மதியாக ஊரில் வாழ முடியும்.
ஆர்ப்பாட்டத்தின்விளைவு:
நாம் இந்த கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டம் என்று என்று அறிவித்திருந்ததால் மாலை 3 மணிக்கு கருவேப்பிலங்குறிச்சி பஸ்டாப்புக்கு அருகில் இருந்த டாஸ்மாக்கை மூடிவிட்டனர். சூப்பர்வைசரும் சேல்ஸ்மேன் அடுத்து காவனூரில் உள்ள டாஸ்மாக்கை மூடினர். மக்கள் அதிகாரத்தின் மேல் உள்ள அரசின் அச்சம் வெளிப்பட்டது. நம் முழக்கத்தை பார்த்து மிரண்டு போய் நின்றது இந்த அதிகார வர்க்கம்.
ஆர்பாட்டத்தினால்டாஸ்மாக்கின்பாதுகாப்புநிலை:
நம் ஆர்ப்பாட்டத்தினால் முன்பு டாஸ்மாக் காவலில் இருந்த 2 போலிஸ் மாறி தற்பொழுது 5 காவல் நிலையங்களிலிருந்து போலிசார் குவிக்கப்பட்டனர்.
அது மட்டுமல்லாமல் உளவு பிரிவு போலிசார் 1. விருத்தாசலம் 2.கம்மாபுரம் 3. மங்கலம்பேட்டை 4. ஜெயங்கொண்டம் 5.கருவேப்பிலங்குறிச்சி போன்ற பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். இவர்கள் உளவு பார்த்தனர். திருமணத்திற்கு வீடியோ எடுப்பதை போல வீடியோ காட்சி பதிவு செய்தனர்
ஆனால் காவல்துறை அதிகாரிகள் பலர் “மூடு டாஸ்மாக்கை” பிரச்சாரத்தின் போது அதிகளவில் அவர்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்கள் கூறும் கருத்து
“எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையால் தான் அதிக பிரச்சினை வருது. அத மூடுங்க. அப்பதான் பிரச்சினை இல்லாமலிருக்கும். நாங்க யூனிபார்ம்ல இருக்கிருதனால் எங்களால் மூட முடியாது. நீங்களாவது மூடுங்க சார், ரொம்ப நல்லது”
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகார அமைப்பின் தோழர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கருவேப்பிலங்குறிச்சி பஸ்டாப் அருகில் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கு எடுத்து கொண்டனர். குறிப்பாக பெண் தோழர் மந்திரகுமாரி பேசுவதைக் கண்டு அதிகப்படியான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்,
குறிப்பாக அ.தி.மு.க பிரமுகர்கள் இருவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் சாராய வியாபாரி சசி ஜெயகும்பால கண்டித்து பேசும்போது ஒரு அ.தி.மு.க பிரமுகர் ஆர்ப்பாட்டத்திலிருந்து மற்றொரு அ.தி.மு.க வினரை வெளியே வரும்படி அழைத்தார். ஆனால் அவர் ஆர்ப்பாட்டத்தை விட்டு வரமறுத்தார்.
ஆளும் அருகதையற்ற நீதித்துறைக்கு மாற்று…? மக்கள் அதிகாரமே!
என்ற தலைப்பில் தஞ்சாவூரில் 11-10-2015 அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை மக்கள் அதிகார அமைப்பின் உறுப்பினா் தோழா் அருள் துவக்கி வைத்தாா். மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளா் தோழா் தா்மரஜ் உரையாற்றினாா். மக்கள் அதிகாரத்தின் மாநில தலைமைக் குழு உறுப்பினா் தோழா் காளியப்பன் சிறப்புரையாற்றினாா்.
இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவினா் கலை நிகழ்ச்சி நடத்தினா். மக்கள் அதிகார அமைப்பின் உறுப்பினா் தோழா் தேவா நன்றி உரை வழங்கினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் மக்கள் அதிகாரம், தஞ்சை
3. தருமபுரி
“மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் 12-10-2015 அன்று தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாள்: 29-09-2015 நேரம்: மாலை 5.00 மணி
இடம்: ராஜா தியேட்டர் சிக்னல் அருகில், புதுச்சேரி
ஆதிக்க சாதி வெறியர்களை பாதுகாக்கும் போலிசுக்கும் நீதி மன்றத்திற்கும் மக்களை பாதுகாக்கும் அருகதை கிடையாது!
என்ற முழக்கத்தின் கீழ் நடந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரம் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா. சுதாகர் தலைமைதாங்கி நடத்தினார்.
“இந்த அரசின் போலிசு எந்திரம் தன்னுடைய துறையில் ஒரு உயர்பதவி வகிக்கக்கூடிய டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவைக்கூட இந்த மண்ணில் வாழ வைக்க முடியவில்லை”
அவர் பேசும் போது “இந்த அரசின் போலிசு எந்திரம் தன்னுடைய துறையில் ஒரு உயர்பதவி வகிக்கக்கூடிய டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவைக்கூட இந்த மண்ணில் வாழ வைக்க முடிய வில்லை. ஆகவே இந்த போலிசு ஆதிக்கச்சாதி வெறியர்களின் அடியாட்படையானதன் விளைவுதான் இந்தக் கொலை! நேர்மையான அதிகாரி நேர்மையாக வழக்கினை விசாரித்தால் கூட கொலை செய்யப்படுவார் எனும் நிலைதான் தமிழகத்தில் நடக்கிறது. எனவே ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் போலிசினையும் நீதிமன்றத்தையும் நம்பி பயனில்லை. யுவராஜ்-காவல் துறை உயரதிகாரி செந்தில்குமார் போன்ற சாதி வெறியர்களை மக்கள் மன்றத்தில் விசாரணை செய்து மக்களே நேரடியாக இவர்களை தண்டித்து அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம் தான் சாதி வெறி கொலைகளை தடுக்க முடியும்” என தனது தலைமை உரையில் விளக்கி பேசினார்.
இவரைத் தொடர்ந்து கண்டன உரையாற்றிய புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் தோழர் சோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் பேசும் போது, “இந்தக் கட்டமைப்பு செயலிழந்து போய்விட்டது. மத்தியில் மோடியாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவாகவும் இருந்தாலும் சரி, புதுவையில் ரங்கசாமியாக இருந்தாலும் சரி டாஸ்மாக் பிரச்சனையில் மதுவுக்கு விலக்கு தர முடியாது என்கின்றனர். புதுவையில் என்.ஆர் அரசு மதுவிலக்கு கொண்டுவருவதற்கு சுற்றுலா தலங்களை விரிவாக்குவதன் மூலம் மதுவை குறைக்க ஏற்பாடு செய்வேன் என அறிக்கை கொடுக்கிறார் இது மக்களை மூடராக்கும் செயல்” என ரங்கசாமியை கண்டித்து பேசினார்.
“மத்தியில் மோடியாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவாகவும் இருந்தாலும் சரி, புதுவையில் ரங்கசாமியாக இருந்தாலும் சரி டாஸ்மாக் பிரச்சனையில் மதுவுக்கு விலக்கு தர முடியாது என்கின்றனர்”
மேலும், “ஓட்டுக்கட்சிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் இவர்கள் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் சேவையை முக்கியமாக எடுத்து செயயக்கூடியவர்களாக அதிக அளவில் வளர்ந்துள்ளனர். இதுதான் இன்றைய உழைக்கும் மக்களுடைய பிரச்சனையாக இருக்கிறது. காவல் துறை மக்களை காக்கும் வேலைக்காக தொடங்கப்பட்டது என்றால் அதனுடைய வேலையை செய்யாமல் எதிராக மாறியுள்ளது, நீதி மன்றமும் அதே நிலையில் தான் உள்ளது.
சட்டங்களை உருவாக்கி காக்க வேண்டியவர்களே நிலையை அரசு கட்டுமானம் மீறிவிட்டது எனவேதான் இந்த மக்கள் அதிகாரத்தினர் “இருக்கும் இந்த அரசு கட்டமைப்பு தோல்வி அடைந்து விட்டது, எனவே மாற்று அதிகார அமைப்பு வேண்டும்” என முன் வைக்கின்றனர். எனவே மக்களே அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் எனச் சொல்வது சரியானதுதான் அந்த அடிப்படையில் மக்கள் அதிகாரம் வெல்லட்டும்! புரட்சி வெல்லட்டும்! இவர்களை வாழ்த்துகிறேன்” என தனது கண்டன உரையை முடித்தார்.
இவருக்கு அடுத்ததாக கண்டனவுரையாற்றிய புதுவை மாநில பெரியார் திராவிட விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் கோகுல் காந்தி நாத்
“சிதம்பரத்தில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் 300 பவுன் நகையினை திரும்பவும் கொள்ளைக்காரனிடம் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் இவரே எடுத்துக்கொண்டு பதவி உயர்வு பெற்று அந்தமானுக்கு சென்றவர்தான் புதுச்சேரி எஸ்.எஸ்.பி.சந்திரன்”
“அதிகாரிங்க அரசியல்வாதிகள் சாதியின் பெயரால் கொலைகள் செய்கின்றனர். இதற்கு ஏதும் தெரியாத இளைஞர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். இதுதான் புதுவையில் அதிகமாக நடந்து வருகின்றது. சிதம்பரத்தில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் 300 பவுன் நகையினை திரும்பவும் கொள்ளைக்காரனிடம் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் இவரே எடுத்துக்கொண்டு பதவி உயர்வு பெற்று அந்தமானுக்கு சென்றவர்தான் புதுச்சேரி எஸ்.எஸ்.பி.சந்திரன். இவருக்கு புதுவையில் அவர் பணியை பாராட்டி விருது கொடுத்தனர். இந்த வெட்கக்கேடு இங்குதான் நடக்கிறது” என போலிசை அம்பலபடுத்தினார்.
மேலும் நீதிமன்றத்தை பற்றி, “சென்னை உயர்நீதி மன்றத்தை சார்ந்த நீதிபதிகள் புதுச்சேரியில் உள்ள ஓட்டளுக்கு வந்து மது மங்கையுடன் கூத்தடித்துவிட்டு செல்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளூர் சாதி ஆதிக்க ஓட்டுக்கட்சிகள் தலைவர்கள் செய்து கொடுத்து மாமா வேலை பார்க்கின்றனர். இப்படித்தான் இருக்கு காவல்துறையும், நீதித்துறையும்.
“காவல் துறை செய்யும் மக்கள் விரோத செயலை தடுக்கனும்னா இவங்க சொல்லும் மக்கள் அதிகாரமே சரி என ஏற்றுக்கொண்டு இவர்கள் செய்யும் அனைத்து போராட்டத்திலும் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்”
சாதி சங்கத்தின் தலைவர்கள்தான் பல கட்சியின் தலைவர்களாக உள்ளனர். இவர்கள் எப்படி மக்களுக்கு ஜனநாயகத்தின் உரிமைகளை வழங்க முடியும். பல்வேறு சினிமா படங்களை பார்த்து இளைஞர்கள் உடலை உறுதிபடுத்திக்கொண்டும் ஆசையினை வளர்த்துக்கொண்டு போலிசு வேலைக்கு வந்தால் பக்கோடா கடைகாரனிடமும், பானிபூரி காரனிடமும், ரூபாய் பத்தை மாமுல் வாங்கச்சொல்லி கற்றுக்கொடுக்கிறது இந்த காவல் துறை.”
இப்படி பல ஆதாரங்களை அமபலப்படுத்தி, “காவல் துறை செய்யும் மக்கள் விரோத செயலை தடுக்கனும்னா இவங்க சொல்லும் மக்கள் அதிகாரமே சரி என ஏற்றுக்கொண்டு இவர்கள் செய்யும் அனைத்து போராட்டத்திலும் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்” என்று சொல்லி தனது கண்டனவுரையை முடித்தார்.
இறுதியாக உரையாற்றிய மக்கள் அதிகாரம் புதுவை மாநில தோழர் கு.செல்வம் பேசிய போது சாதியின் கொலைவெறியை அம்பலப்படுத்தி பேசி, “இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கும் அரசு கட்டமைப்பை தகர்க்காமல் சாதியை ஒழிக்க முடியாது. கொலைகளை தடுக்க முடியாது” எனவும் “இந்தக் குற்றவாளிகளை தண்டிக்க மக்கள் அதிகாரமே தீர்வு” என தனது கண்டனவுரையை முடித்தார்.
அடுத்ததாக இந்த ஆர்ப்பாட்டம் நடக்க மக்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தி நிறைவு செய்தார் புதுவை மாநில மக்கள் அதிகாரம் தோழர் க. பாலகிருஷ்ணன்.
பெருகி வரும் சாலை விபத்துகளை குறைக்கவும், முறைகேடாக உரிமம் பெறுவதை தடுக்கவும் எனக் கூறி மோடி அரசு புதிய சட்டதிருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
விபத்து ஏற்படுத்துவோர்க்கு கடுமையான தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுமாம்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் ஓட்டுநர்கள் கடும் தண்டனைக்குள்ளாவார்கள் எனக் கூறுகிறது இந்த சட்டதிருத்தம். ஆகவே, மக்கள் நலன் கருதி, இந்த சட்டதிருத்தம் அமலுக்கு வர உள்ளது என்று சமூக ஆர்வலர்கள், நுகர்வோர் அமைப்பினர் போன்ற அட்டைக் கத்திகள் மோடியின் இந்த அறிவிப்பை கொண்டாடுகின்றனர். போக்குவரத்து சட்டத்தில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க-வினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால் நடக்கப் போவதோ வேறு.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறது என்பதை சுட்டிக் காட்டும் அரசு, ஒரு முறை சாலை விதியை மீறினால் தனது சொந்த செலவில் இரண்டு தமிழ் செய்தித் தாள்களில், ஒரு ஆங்கிலச் செய்தித் தாளில் புகைப்படத்துடன் நான் தவறு செய்தவன், என்று தன்னை விளம்பரம் செய்து அம்பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அடுத்த முறை தவறு செய்பவர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படுமாம்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு தண்டனை வழங்கும் அரசு, குடிக்க காரணமான டாஸ்மாக்கையோ அனுமதித்த அரசையோ கேள்விக்குள்ளாக்கவில்லையே ஏன்? தெருவிற்கு தெரு சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை என்பதை இந்த சட்டத் திருத்தம் பேசவில்லை.
சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் ஓட்டுனர் 50,000 அபராதம் கட்டி விட்டு ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். இவை புதிய சட்டத் திருத்தத்தின் விதிகளாகும்.
மேலும், இதுவரை ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளவர்களில் 50% பேர் முறையான உரிமம் பெற்றவர்கள் இல்லை எனவும் மோடி அரசு கண்டுபிடித்துள்ளது. முறைகேடாக உரிமம் பெறுகிறார்கள் என்ற அடுத்த குற்றச்சாட்டை சொல்கிறது அரசு. இதனால் உரிமத்தை புதிதாக தரப் போகிறதாம்.
இதுவரை உரிமம் பெற்றது செல்லாது என்றும் அறிவிக்கிறது அரசு. புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற 9 மாதம் பயிற்சியளிக்கப்பட்டு 3 மாதம் சோதனை செய்யப்பட்டு அதன்பிறகு உரிமம் வழங்கப்படும். தற்பொழுது பயிற்சி பெற ஆகும் செலவை விட இதற்கு பல மடங்கு அதிகம் செலவாகும். இதற்கென்று தனிப்படிப்பும், தனியார் கல்லூரிகளும் எதிர்காலத்தில் வர உள்ளன.
தற்போது இருக்கும் டிரைவிங் ஸ்கூல் முறை ஒழிக்கப்படும். புதிய சட்டத்தின்படி டிரைவிங் ஸ்கூல் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்க வேண்டும். மருத்துவ சோதனைக் கூடம், பணிமனை (ஒர்க் ஷாப்) போன்றவை இங்கு இருக்க வேண்டும். இதற்கு மூலதனம் அதிகம் தேவைப்படும். எனவே, வாகனத் தயாரிப்பில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே நடத்த வேண்டும். இதன்மூலம், நாடு முழுவதும் இத்தொழிலைச் சார்ந்து பிழைத்து வந்தவர்களின் வாழ்க்கை அழியும்.
முறைகேடாக, உரிமம் பெற்றதாக கூறும் ஓட்டுனர்களுக்கு இது போன்று கடுமையாக நடவடிக்கை எடுக்க உள்ள அரசு இத்தகைய தவறுக்கு காரணமாக இருந்த ஆர்.டி.ஓ உள்ளிட்ட போக்குவரத்து துறையினருக்கு என்ன தண்டனை என்பதை சட்டத்தில் கூறவில்லை..
ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு மூடு விழா!
இதுவரை ஆர்.டி.ஓ அலுவலகம் மூலம் பெறப்பட்டு வந்த ஓட்டுனர் உரிமம், தகுதிச் சான்று, பர்மிட் வழங்குதல், வாகனம் பதிவு செய்தல் போன்ற அனைத்து விதமான பணிகளும் இனிமேல் சேப்டி அதாரிட்டி, ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் அதாரிட்டி போன்ற பல பெயர்களில் கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்கான கட்டணங்களையும் பல மடங்கு உயர்த்தி கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கும். இதில் அரசு இனிமேல் தலையிட முடியாது.
வாகன உதிரி பாகம் விற்பனை, வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக் பெயின்டிங் போன்ற சிறு குறு மற்றும் சுய தொழில்கள் அழியும். எந்த ஒரு வாகனத்திற்கும் உதிரி பாகங்கள் வாங்க வேண்டுமென்றால், எந்த கம்பெனியின் வாகனமோ அந்தக் கம்பெனி உதிரி பாகங்களைத்தான் வாங்கி பயன்படுத்த வேண்டும் என புதிய சட்டம் சொல்கிறது. இதன் விளைவாக வாகனங்களின் உதிரி பாகங்களை மட்டுமே தயாரிப்பதற்கென்றே உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அதை விற்பனை செய்யும் கடைகளும் அழியும்.
வாகனங்கள் பழுது நீக்கும் (சர்வீஸ்) என்பது பல தனித்தனி சிறு, குறு தொழில்களை உள்ளடக்கியதாகும். பெயின்டிங், வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக் என சுயமாக தொழில் செய்து இதன் மூலம் பிழைத்து வருபவர் பல லட்சம் பேர். பழுதடைந்த பொருட்களை புதுப்பித்தும், பழுது நீக்கியும் பயன்படுத்துதல் என்பது பெரிய அளவில் நடக்கிறது. புதிய சட்டத்தின்படி ஆட்டோ, கார், பேருந்து இனி இங்கு சர்வீஸ் செய்ய முடியாது. மாறாக, அந்தந்த கம்பெனி சர்வீஸ் சென்டரில்தான் சர்வீஸ் ஒர்க் செய்ய வேண்டும். அனைவருக்கும் வேலை தர வக்கற்ற அரசு சுயமாக தொழில் செய்து பிழைத்து வரும் லட்சக்கணக்கானவர்கள் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடப் போகிறது. நான் என்ன செய்யப் போகிறோம்? இவை அனைத்தும் சாலை விபத்துக்களை தடுக்க அரசு கொண்டு வரும் திட்டம் என்று நாம் நம்ப வேண்டும் என்கிறார் மோடி.
ஆணையங்களின் வழியாக கார்ப்பரேட்டுகளின் அதிகாரம்
தற்போது நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் பெர்மிட் காலம் முடிந்தவுடன் மீண்டும் புதுப்பிக்க முடியாது. இப்படி பர்மிட் பறிக்கப்பட்ட வாகனங்களை இரும்பு கடைக்குத்தான் போட முடியும். இனி பர்மிட் வழங்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. நேஷனல் டிரான்ஸ்போர்ட் அதாரிட்டி என்ற பெயரில் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டு நாட்டின் அனைத்து போக்குவரத்து வழித்தடங்களையும் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஏலம் விடும். இதில், பன்னாட்டு கம்பெனிகளும் பங்கேற்கும். உள்ளூர் முதலாளிகள் அவர்களுடன் போட்டி போட்டு ஏலத்தில் வெற்றி கொள்ள முடியாது.
இலாபம் தரும் வழித்தடங்களில் மட்டும்தான் இந்த பேருந்துகள் இயக்கப்படும். கிராமங்களுக்கான போக்குவரத்து ஒழிக்கப்படும். இதைவிட கொடுமை இது போன்ற பிரச்சனைகளால் ஒட்டு மொத்த போக்குவரத்து துறையையே கலைத்து விட்டு தனியார் வசம் ஒப்படைக்கப் போகிறதாம். இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், போக்குவரத்தை சரிசெய்ய துப்பு கிடையாதாம். உலக முதலாளிகள் வந்து சாலை விபத்தையும், போக்குவரத்தையும் தடுக்கப் போகிறார்களாம். இதுதான் மோடி கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் யோக்கியதையாகும். இது தேசத்தை பாதுகாக்கும் தேசபக்தன் செய்யும் வேலையா? அல்லது தேசத்தை அடகு வைக்கும் தேசத் துரோகி செய்யும் வேலையா?
போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி பாசிசத்தை சட்டமாக்கும் மோடி!
போக்குவரத்தும் அதைச் சார்ந்த தொழில்களும் நாடு முழுவதும் பரந்து விரிந்த வலைப்பின்னலைக் கொண்டது. அரசுக்கு கோடிகளை வருவாயாக ஈட்டித் தருவதாகும்! இதை கார்ப்பரேட் கம்பெனிகள் கைப்பற்றி கொள்ளையடிக்கும் அதே நேரத்தில் இதைச் சார்ந்து பிழைத்து வரும் சிறு, குறு முதலாளிகள் மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படப் போகிறது. எனவே, இரண்டு பக்கமும் மாபெரும் அழிவை உருவாக்கப் போகிறது சாலை பாதுகாப்பு மசோதா 2015.
தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் தொழிலாளிகளின் உரிமை பறிக்கப்பட உள்ளது. பொதுத்துறை வங்கி, இன்சூரன்ஸ், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதன் மூலம் மக்களின் பணம் சூறையாடப்படப் போகிறது. உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தெருவோர சிற்றுண்டிக் கடைகள், சிறிய உணவு விடுதிகள் ஒழிக்கப்படப் போகிறது. நிலப்பறிப்பு சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் விவசாய நிலங்களை அழித்து விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளப் போகிறது மோடியின் அரசு.
மொத்த நாட்டின் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரமான விவசாயம், சிறு குறு தொழில்கள், தொழிலாளர் உரிமைகள், பொதுச்சொத்துக்கள் என்ற அனைத்தையும் பறித்து, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் டாடா, அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகள் கொள்ளையடிக்க சட்டப்படியே வழிவகுத்து கொடுத்துப் பாருங்கள்! இதுதான் தேசத்தின் வளர்ச்சி என்று கொக்கரிக்கிறது மோடி அரசு.
கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல், வறுமை, வேலையின்மை, வேலை பறிப்பு, சுற்றுச் சூழல் சீர்கேடு, அதிகார முறைகேடுகள் என்ற மொத்த சமுதாயமும் மக்கள் வாழத் தகுதியற்றதாய் மாறிப் போய் நம்மை அச்சுறுத்தி வருகின்றன. இதில் எதையும் தடுப்பதற்கு வக்கற்று போய் நிற்கிறது அரசு. பெயரளவிலான ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி பாசிசத்தை சட்டபூர்வமாக்கி வருகிறது, மோடி அரசு.
ஆளத் தகுதியற்றதாய் மாறிப்போன அரசுக் கட்டமைப்பு
அரசு, தான் உருவாக்கிய சட்டத்தின்படியே ஆட்சி செய்வதற்கு தகுதியற்றதாய் மாறிப் போய் விட்டது. இந்த அரசும் அதன் கட்டுமான உறுப்புகளும் இனி நம்மை பாதுகாக்காது என உணர்ந்து கொண்ட மக்கள் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக, மீத்தேன் திட்டத்திற்கு எதிராக என பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி எதிரிகளை நேருக்கு நேர் களத்தில் நின்று போராடுகின்ற மக்களின் திசைவழியில் நாம் அனைவரும் போராட வேண்டும். ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்தி விட்டு மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும்.
இதன் பொருட்டு,
சாலை போக்குவரத்து மசோதா திருத்தம்! சாலை விபத்தைத் தடுக்க வாகன ஓட்டுனர்களை பட்டினி போட்டு கொல்வது மோடியின் புதிய நீதி!
என்ற தலைப்பில் 12-10-2015 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கோத்தகிரி ஜான்சன் ஸ்குயரில் இருந்து பேரணியாகச் சென்று ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவல் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் – வாகனப்பிரிவு கோத்தகிரி தொடர்புக்கு : 9047453204
மதுரை வழக்கறிஞர்கள் 14 பேர் தற்காலிக நீக்கம்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் விசாரணையின் நேரடி ஒளிபரப்பு; மதுரை மாவட்ட வழக்கறிஞர்களைச் சங்க கட்டிடத்திலிருந்து வெளியேற்றும் உத்தரவு; 2000 தமிழக வழக்கறிஞர்களை வெளியேற்றுவேன் என்று அனைத்திந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ராவின் மிரட்டல் – நீதித்துறை அபாயகரமான வேகத்தில் பாசிசமயமாகி வருவதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
வழக்கறிஞர்கள் பி.தர்மராஜ், ஏ.கே.ராமசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்துவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து வழக்கறிஞர்கள் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்.
அடக்குமுறைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் உரிமையும் வழக்கறிஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. “தமிழகம் முழுவதும் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயோ வெளியேயோ, துண்டறிக்கை, சுவரொட்டி, பேனர், ஆர்ப்பாட்டம் – ஊர்வலம், கூட்டங்கள் எதுவும் கூடாது” என்று தடையாணை பிறப்பித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர்.
“மதுரை உயர்நீதிமன்றக் கிளையை கொஞ்ச காலத்துக்கு மூடிவிட்டால் என்ன” என்ற கருத்தையும் போகிறபோக்கில் வெளியிட்டிருக்கிறார் ஒரு நீதிபதி. போராடும் தொழிலாளிகளை பட்டினி போட்டுக் கொல்ல, ஆலையை கதவடைப்பு செய்கின்ற ஒரு முதலாளியைப் போல, நீதிமன்றத்தை தங்கள் பூர்வீகச் சொத்தாகவும், வழக்கறிஞர்களை அங்கே கூலிக்கு அமர்த்தப் பட்டிருக்கும் அடிமைகளாகவும் கருதுகிறார்கள் நீதிபதிகள்.
ஒரு விதத்தில் முதலாளிகள், நீதிபதிகளைக் காட்டிலும் ஜனநாயகவாதிகளாகத் தெரிகிறார்கள். வேலை நிறுத்தம் செய்யும் காலங்களில் கூட தொழிற்சங்க கட்டிடத்தை காலி செய்ய வேண்டும் என்றோ, துண்டறிக்கை விநியோகிக்கக் கூடாது என்றோ தொழிலாளிகளுக்கு அவர்கள் உத்தரவு பிறப்பித்து விடுவதில்லை. இந்த நீதி ‘அரசர்’ களிடமிருந்து மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவது எப்படி என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.
“இது நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர் சமூகத்துக்கும் இடையிலான பிரச்சினை அல்ல என்றும் ஒரு சில வழக்கறிஞர்கள்தான் பிரச்சினைக்கு உரியவர்கள்” என்றும் ஒருபுறம் சொல்லிக் கொண்டே, இன்னொரு புறம் அனைவரையும் அச்சுறுத்துகிறார்கள் நீதிபதிகள். உயர்நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரையில் தமிழகத்தின் வழக்கறிஞர்கள் அனைவரையும் தாங்கள் நீதிபதிகளின் அடிமைகள்தான் என்று ஒப்புக்கொண்டு மண்டியிடவைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என்பது தெளிவாகி விட்டது.
நீதித்துறை ஊழலையும், அதன் சர்வாதிகாரப் போக்கையும் கண்டித்து திருச்சி வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடத்தப்பட்ட கூட்டம்.
வயதில் மூத்த வழக்கறிஞர்களிடம் நேற்று வரை மரியாதையாகப் பேசிக்கொண்டிருந்த இளம் மாஜிஸ்டிரேட்டுகளிடம் திடீரென்று ஒரு திமிர்த்தனம் துளிர்த்திருப்பதாகக் கூறுகிறார்கள் வழக்கறிஞர்கள். இந்தத் திமிரை இப்போதே ஒடுக்காவிட்டால், சட்டம் – நெறிமுறை அனைத்தையும் மூட்டை கட்டி விட்டு நடுவர்களெல்லாம் நாட்டாமைகளாகி விடுவார்கள். வழக்கறிஞர்களை சொம்பு தூக்க வைத்துவிடுவார்கள்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையே அப்படித்தான் நடந்திருக்கிறது. கட்டாய ஹெல்மெட் தீர்ப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிராகத்தான் அவமதிப்பு வழக்கு. ஆனால், ஏ.கே.ராமசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விகளோ ஊழல் எதிர்ப்புப் பேரணி பற்றியவை. பண்ணையார்கள் விவசாயிகளை நடத்துவதைப் போல அந்த முதியவரை ஒன்றரை மணி நேரம் நிற்க வைத்தே கேள்வி கேட்டிருக்கிறார்கள். திரைமறைவு விசாரணை என்று ஒருநாள் உத்தரவு போடுகிறார்கள். அடுத்த வாய்தாவில் விசாரணையைத் திரையில் ஒளிபரப்புகிறார்கள். நீதிபதி வைத்ததுதான் சட்டம். நெறிகளுக்கும் மரபுகளுக்கும் மரத்தடி பஞ்சாயத்தில் இருக்கும் மதிப்பு கூட உயர்நீதிமன்றத்தில் இல்லை என்பது கடந்த சில நாட்களில் தெளிவாகிவிட்டது.
‘சட்டத்தின் ஆட்சி’யை சமாதிக்கு அனுப்புவதில் நீதியரசர்கள் காட்டி வரும் இந்த அசாதாரணமான வேகத்துக்கு முக்கியக் காரணம் மதுரை வழக்கறிஞர்களின் ஊழல் எதிர்ப்புப் பேரணி. எத்தனை பெரிய ஊழல் செய்தாலும் தங்களைப் பதவியிலிருந்து இறக்க “இம்பீச்மென்ட்” தீர்மானத்தை தவிர வேறு வழிகிடையாது என்று இறுமாந்திருந்த நீதியரசர்களை இந்தப் பேரணி அச்சுறுத்தியிருக்கிறது.
காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
நீதித்துறையில் ஊழல் என்பது இதுவரை கேள்விப்படாத குற்றச்சாட்டு அல்ல. இதை பல உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் நீதிபதிகளின் சதவீதம் ஐம்பதா, அறுபதா என்று தீர்மானிப்பதில்தான் இவர்களிடையே வேறுபாடு. “கூடியிருக்கும் பெண்களில் பாதிப்பேர் நடத்தை கெட்டவர்கள்” என்று யாரேனும் பேசினால், “பொதுவாகச் சேறடிக்காதே, குறிப்பாகச் சொல்” என்று கூறி சொன்னவனை அந்த இடத்திலேயே செருப்பால் அடிப்பார்கள் பெண்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இதுநாள்வரை அப்படியெல்லாம் கோவப்பட்டதே இல்லை. மதுரைப் பேரணி குறிப்பான உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை வெளியிட்டதாலும், அடுத்தடுத்து வெளியிடப்போவதாக அறிவித்ததாலும்தான் இது நீதிபதிகள் சமூகத்தின் மானப் பிரச்சினையாகி விட்டது.
ஊழலை மட்டுமல்ல, ஒரு நீதிபதியின் கார்ப்பரேட் சார்பு அல்லது சாதி-மதச் சார்பு தீர்ப்புகளையும் கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற நிலை உருவாவது நீதிக்கு நல்லதாக இருக்கலாம். நீதிபதிகளுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் நல்லதல்லவே! அதனால்தான் எல்லாத் துறைகளையும் சேர்ந்த ஆளும் வர்க்கப் பூசாரிகளும் கொதிப்படைந்து விட்டனர்.
காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
கருவறையின் புனிதம் சந்தேகத்துக்குள்ளாவது குறித்து அதிகம் கவலைப்படுபவர் தேவநாத குருக்களாகத்தானே இருக்க முடியும்! சென்னை உயர்நீதிமன்றத்தின் புனிதப் பாரம்பரியம் குறித்து பொளந்து கட்டினார் தலைமை நீதிபதி தத்து. நீதிபதி கர்ணனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கில், (அது நீதிபதிகள் சிலருக்கிடையிலான ஊழல் உள்குத்து தொடர்பான வழக்கு) சம்மந்தமே இல்லாமல் தமிழக வழக்கறிஞர்களுக்கு எதிராகச் சாமியாடினார். சொல்லி வைத்தாற்போல தமிழக வழக்கறிஞர்கள் தரம் கெட்டுப் போனதைப் பற்றி ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன.
தமிழக வழக்கறிஞர்கள் மீதான இந்த ‘அனைத்திந்திய வன்மத்துக்கு’ மதுரை ஊழல் எதிர்ப்புப் பேரணி மட்டுமே காரணம் அல்ல. தமிழக வழக்கறிஞர்கள் சமூக அரசியல் பிரச்சினைகளுக்காகப் போராடுவதில் இந்தியாவிலேயே முன்னணியில் இருப்பவர்கள். காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், மூவர் தூக்கு, இந்தி சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு, சாதி மதவெறி எதிர்ப்பு போராட்டங்கள் மட்டுமின்றி, நீதித்துறை சார்ந்த பிரச்சினைகளான உரிமையியல் சட்டத்திருத்தம், குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களிலும் இந்தியாவிலேயே முன்னணிப் பாத்திரம் ஆற்றியவர்கள். ஊழல் நீதிபதி சுபாஷண் ரெட்டியை தமது போராட்டத்தின் மூலம் விரட்டியவர்களும், ஜெ வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி தத்துவின் மீது குடியரசுத் தலைவரிடம் வெளிப்படையாகக் கையெழுத்திட்டு (800 பேர்) புகார் கொடுத்தவர்களும் தமிழக வழக்கறிஞர்கள்தான்.
தமிழக வழக்கறிஞர்களை எதிர்ப்பவர்கள் பல வகையினர். வழக்கறிஞர்கள் அரசியல் சமூக விவகாரங்களில் தலையிடுவதை இழிவானதாகக் கருதும் பிழைப்புவாதிகள், இந்தி பேச மறுக்கின்ற தமிழ்நாட்டை இன்னொரு காஷ்மீராக கருதும் வட இந்தியர்கள், சுயமரியாதை, திராவிட இயக்கம், பொதுவுடைமை போன்ற சொற்களைக் கேட்டாலே ஒவ்வாமைக்கு ஆட்படும் பார்ப்பனியர்கள், பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட சாதியினர் கோர்ட்டுக்குள் நுழைந்ததனால் வக்கீல் தொழிலுக்குரிய மாண்பே கெட்டுவிட்டதாகப் புழுங்கும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள், எந்த விவரமும் தெரியாமல் போராட்டமே தப்பு என்று பேசும் கலாம் ரசிகர்கள், இத்தனை நஞ்சுகளுக்கும் தேன் சேர்த்து மக்களின் நாக்கில் தடவும் ஊடகவியலாளர்கள் – என இந்தப் பொதுக்கருத்தைப் பல கைகளும் வனைந்து உருவாக்குகின்றன.
“யாகுப் மேமன் தூக்கிலிடப்படாமல் தடுக்க நள்ளிரவில் கூட நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் போராடினோம். இதுவே சென்னையாக இருந்தால், மூவர் தூக்கிற்கு செய்தது போல நீங்கள் நீதிமன்றத்தில் கலகம் செய்திருப்பீர்கள்” என்று சென்னை வழக்கறிஞரிடம் அவரது டில்லி நண்பர் ஒருவர் சமீபத்தில் கருத்து கூறினாராம். இந்தக் கருத்து நடுத்தர வர்க்க சிந்தனைக்கு ஒரு வகை மாதிரி.
உண்மையில், மதச்சார்பற்ற சக்திகள் நாடெங்கும் ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தால் யாகுப் மேமனின் தூக்குத்தண்டனையை ஒருவேளை நிறுத்தியிருக்கலாம். அப்படி போராடியிருந்தால் இந்து மனச்சாட்சியை திருப்திப் படுத்துவதற்காக கொலை செய்யப்பட்ட அப்சல் குருவின் தண்டனையைக் கூட நம்மால் நிறுத்த முடிந்திருக்கலாம். சட்டத்தை மட்டும் நம்பி இருந்திருந்தால் மூவர் தூக்கை நீதிமன்றம் ரத்து செய்திருக்காது என்பதே உண்மை.
சட்டம், நெறி, மரபு ஆகியவற்றை அதன் காவலர்களான நீதிபதிகளும், அரசும், போலீசும் அன்றாடம் மீறிக் கொண்டிருக்கும்போது நாம் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் டில்லி நண்பரைப் போன்றோரிடத்தில் நாம் எழுப்பும் கேள்வி. தலித் படுகொலைக் குற்றவாளிகள் விடுதலை முதல் குஜராத் குற்றவாளிகள் விடுதலை வரை, சல்மான் கான் ஜாமீன் முதல் ஜெயலலிதா ஜாமீன் வரை எண்ணற்ற சான்றுகள் சட்டத்தின் ஆட்சி தோற்றுவிட்டதைப் பறைசாற்றுகின்றன. இருப்பினும் தாங்களே மதிக்காத சட்டத்துக்கும் நெறிமுறைக்கும் கட்டுப்படுமாறு நம்மை மிரட்டுகிறார்களே, இதற்குப் பணிவது வீரமாகுமா என்று கூட நாம் கேட்கவில்லை, அறிவுடைமை ஆகுமா என்று யாரேனும் சொல்லட்டும்.
தத்துவுக்கு எதிராக ஆதாரபூர்வமாக முன்னாள் நீதிபதி கட்ஜு ஊழல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். “என்னை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அசிங்கப்படுத்திய உச்ச நீதிமன்றம், சாந்தி பூஷண் கொடுத்த ஊழல் நீதிபதிகள் பட்டியல் அடங்கிய உறையை ஏன் பிரிக்க மறுக்கிறது?” என்று என்.டி.டி.வி-யில் கேள்வி எழுப்புகிறார் அலைக்கற்றை தீர்ப்பு புகழ் கங்குலி. நீதிபதிகளுக்கு எதிராக வீதிக்குப் போனது தவறு என்று கூறுவோர் இதற்கு பதில் சொல்லட்டும்.
ஊழலை ஒழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதும், இந்தியாவிலேயே முன்மாதிரியானது என்று அழைக்கப்படுவதுமான கர்நாடகா லோக் ஆயுக்தா பதவியில் நியமிக்கப்பட்டார் ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.பாஸ்கர் ராவ். அவருடைய மகன் அஸ்வின், “அப்பாவிடம் சொல்லி ஊழல் வழக்கு போடுவேன்” என்று மிரட்டியே 200 கோடி வசூலித்திருக்கிறான். ஒரே ஒரு தைரியசாலி இதை அம்பலமாக்கியதன் விளைவாக இப்போது சிறையில் இருக்கிறான்.
உச்சநீதி மன்ற நீதிபதிகளின் ஊழலை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய உச்சநீதி மன்ற மூத்த வழக்குரைஞர் சாந்தி பூஷண் (இடது) மற்றும் உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.
“விசாரணை முடிந்து என் மகன் குற்றவாளி என்று தீர்ப்பு வரட்டும். ராஜினாமாவைப் பற்றி அப்புறம் யோசிப்போம்” என்று தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கிறார், நீதிபதி பாஸ்கர் ராவ். குற்றவாளி என்று யாரேனும் ஒரு குன்ஹா தீர்ப்பளித்தாலும், இன்னொரு குமாரசாமி சிக்காமலா போய்விடுவார் என்பது நீதிபதியின் நம்பிக்கை.
ஊழலுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று மதுரை வழக்கறிஞர்களை மடக்கும் சட்ட வல்லுநர்கள், நீதிபதி பாஸ்கர் ராவை சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்க வழி சொல்ல வேண்டும்.
சட்டம் நெறிமுறைகள் அனைத்தும் மதிப்பிழந்து போய்க்கொண்டிருக்க, நொறுங்கிச் சரிந்து கொண்டிருக்கும் இந்த அரசமைப்பின் அங்கமான நீதிபதிகள், அதாவது பாஸ்கர் ராவின் சகோதர நீதிபதிகள், தாங்கள் வழக்கறிஞர்களால் அவமதிக்கப்பட்டு விட்டதாகவும் நீதிமன்றத்தின் மாண்பு கெட்டு விட்டதாகவும் கதறுகிறார்கள். ஒரு நாலாந்தர தெலுங்குப் படத்தின் நகைச்சுவைக் காட்சியைக் காட்டிலும் இது அருவெறுப்பானதாகத் தெரியவில்லையா?
“தமிழை வழக்காடு மொழியாக்கு” என்ற அட்டையைப் பிடித்துக் கொண்டு பத்து பேர் நீதிமன்ற அறையில் அமர்ந்தவுடனே, “எங்களால் நீதி வழங்கும்போது பாதுகாப்பாக உணர முடியவில்லை” என்கிறார் தலைமை நீதிபதி. நீதியரசர்களின் தீர்ப்புகளால் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டின் மக்களல்லவா?
மலை தொலைந்தது, விளைநிலம் பள்ளத்தாக்கானது, கண்மாய் காணாமல் போனது, கடலின் நிறம் மாறியது, நரபலி நடந்தது, புற்றுநோய் பரவியது, பல்லாயிரம் நோக்கியா தொழிலாளிகள் வீதியில் வீசப்பட்டனர் – இந்தப் பாதகங்கள் எதிலும் தமது தசம பாகத்தை எந்த நீதியரசரும் பெற்றுக் கொள்ளவில்லையா? நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒழுக்கம் பற்றி உரையாற்றி அது ஊடகங்களில் வெளிவருவதையும் உத்திரவாதம் செய்து கொள்ளும் சகோதர நீதிபதிகள் பதில் சொல்லட்டும். மேற்படி தசமபாக நீதியரசர்களின் பாதுகாப்புக்கு குறைவேதும் ஏற்படவில்லையே!
தாங்கள் ஏன் பாதுகாப்பாக உணரவில்லை என்பதை தனது உத்தரவில் விளக்கியிருக்கிறார் தலைமை நீதிபதி கவுல். “வழக்கறிஞர்கள் மதுபாட்டிலோடு வருகிறார்கள், பெண் போலீசை கிண்டல் செய்கிறார்கள், கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள், நீதிமன்ற வளாகத்தில் கிரிக்கெட் ஆடுகிறார்கள், போலீசு மீது பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள், நீதிமன்றங்களில் ஊர்வலம், போராட்டம் நடத்துகிறார்கள், யோகா வகுப்பு நடத்த விடாமல் தடுக்கிறார்கள், மாட்டுக்கறி, மட்டன், கோழிக்கறி சாப்பிடுகிறார்கள்” – என்று ஒரு போலீசு உதவி ஆணையர் சொன்னாராம்.
“அப்படியானால் ஏன் ஒரு எப்.ஐ.ஆர் கூடப் போடவில்லை” என்று தலைமை நீதிபதிக்கு கேட்கத் தோன்றவில்லை. ஏனென்றால், “நான் சொல்லவில்லை அவரே சொன்னார்” என்று கூறுவதற்கு தலைமை நீதிபதிக்கு ஒரு ஆதாரம் மட்டுமே தேவைப்பட்டது. அதை போலீசு அதிகாரி வழங்கிவிட்டார். கறி, சாராயம் மற்றும் காலித்தனங்களின் வரிசையில் தமிழும், ஹெல்மெட் எதிர்ப்பும், ஊழல் எதிர்ப்பும் கொண்டு வரப்பட்டு விட்டன.
கவுல் கோரிய மத்தியப் படை மட்டும்தான் வரவில்லை. அதற்குப் பதிலாக, மாநில பார் கவுன்சிலின் அதிகாரத்தை அனைத்திந்திய கவுன்சில் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக் கொண்டு விட்டது. அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவு டில்லிக்கு வழங்கும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கும் நீட்டிக்கப்பட்டு விட்டது.
மதுரை வழக்கறிஞர்கள் 14 பேரை நேரடியாக டில்லியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து விட்டு, எதிர்ப்போரையெல்லாம் வெளியேற்றுவேன் என்று கொக்கரிக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில்.
இது வெறும் நீதித்துறை சர்வாதிகாரம் அல்ல. பார்ப்பன பாசிச சர்வாதிகாரம். மோடி அரசின் கீழ் அதிகார வர்க்கம், ராணுவம், கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்துத்துவ சக்திகளால் நிரப்பப்படுவதைப் போல நீதித்துறையிலும் நடக்கிறது. அதன் அறிகுறிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகின்றன.
தாத்ரியில் மாட்டுக்கறி தின்றதாக குற்றம் சாட்டி ஒரு முஸ்லிமை அடித்தே கொல்லலாம் என்றால், இங்கே மத்தியப் படை கொண்டு வருவதை அவசியமாக்கும் குற்றமாக மாட்டுக்கறி காட்டப்படுகிறது. தபோல்கர், பன்சாரே, கல்புர்கி போன்ற பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகளைக் கொன்றொழிக்கும் பணியில் சனாதன் சன்ஸ்தா என்ற பார்ப்பன பயங்கரவாதக் குழு ஈடுபட்டதைப் போல, இங்கேயும் அத்தகைய வழக்கறிஞர்களைத் தேடிக் களையெடுக்கும் நீதிபதிகளின் சனாதன் சன்ஸ்தா ஓசைப்படாமல் இயங்குகிறது.
சுயமரியாதைத் திருமணத்தை சட்டத்தை கொல்லைப்புறம் வழியே முடக்க முயலும் தீர்ப்பு, தி.க.-வின் தாலி அகற்றும் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடை, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை பழிவாங்குவதற்காக போடப்பட்ட பொய்வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது, ஒன்றேகால் கோடி பணத்தை ஏமாற்றி ஏப்பம் விட்ட ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் என்ற ஸ்ரீரங்கம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு டெபாசிட்டே இல்லாமல் முன்ஜாமீன் வழங்குவது, மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் மறுப்பதை நியாயப்படுத்த சிறையில் வாடும் ஏழைக் கைதிகளின் நிலையை ஒப்பிடுவது, அதே நேரத்தில் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பு.மா.இ.மு மாணவனை ஜாமீனில் விடுவதற்கு 50,000 ரூபாய் அபராதம் கட்டச் சொல்வது, யோகா வகுப்பு என்ற பெயரில் ஜக்கி வாசுதேவை உள்ளே கொண்டு வருவது, புரோக்கர் பிரபாகரனின் வழக்கறிஞர் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவது, சாதி ரீதியான சங்கங்களை வழக்கறிஞர்கள் மத்தியில் உருவாக்கி, கையாளாகப் பயன்படுத்திக் கொண்டே, வழக்கறிஞர்கள் சாதி ரீதியாக இயங்குவதாகவும் குற்றம் சாட்டுவது, விசுவ இந்து பரிசத் – பாஜக தலைவர்களுடன் இழைந்து கொண்டே அறத்தின் வீழ்ச்சி குறித்து கவலை தெரிவிப்பது – என இந்த நீதிபதிகளின் சனாதன் சன்ஸ்தா எல்லாக் கோணங்களிலும் வேலை செய்து வருகிறது.
மிஸ்ராக்கள், கவுல்கள், பாண்டேக்கள், சாதிப்பட்டத்தை போட்டுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் மதறாஸ் மாகாணத்தின் ஐயர்கள் ஆகிய அனைவரும் இதில் கூட்டு சேர்ந்திருக்கின்றனர்.
தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC) அமைக்கப்பட்டவுடன், காலியாக இருக்கும் சுமார் 300 உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் காக்கி அரை நிஜார்களை அமர வைப்பதே இவர்களின் திட்டம். அதனை எதிர்த்து நிற்கக் கூடிய வழக்கறிஞர்களைக் களையெடுக்கும் வேலைதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் இது நடத்தப்படுகிறது.
அரசியல், போலீசு, அதிகாரவர்க்கம், ஊடகத்துறை, மருத்துவத்துறை, நீதித்துறை போன்ற சமூகத்தின் எல்லாத்துறைகளிலும் கிரிமினல்கள் செல்வாக்கு செலுத்துவதை மறைத்து விட்டு, வழக்கறிஞர் சமூகத்தை மட்டும் கிரிமினல்களாகச் சித்தரிக்கும் சதியில் பார்ப்பனப் பாசிசக் கும்பல் ஈடுபட்டிருக்கிறது. தினமணி தலையங்கமே இதற்குச் சான்று.
வழக்கறிஞர் தொழிலில் கிரிமினல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள்தான் ஊழல் நீதிபதிகளின் கூட்டாளிகள், தரகர்கள். இன்னும் ரியல் எஸ்டேட் சொத்து அபகரிப்பு, ரவுடித்தனங்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள், கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் மீதெல்லாம் பார் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. இத்தகையோர் பார் கவுன்சில் பதவிகளை அலங்கரிக்கிறார்கள்.
பி.ஆர்.பழனிச்சாமி, வைகுந்தராசன் முதல் அனைத்து மக்கள் விரோதிகளும் பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பதை சட்டப்படி சாத்தியமாக்கி கொடுத்தவர்கள் சாதி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் திரட்டப்பட்ட வழக்கறிஞர் குமபலும் ஊழல் நீதிபதிகளும்தான். இவர்களை எதிர்த்து தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய நேர்மையான வழக்கறிஞர்கள்தான் இன்று பழி வாங்கப்பட்டிருக்கின்றனர்.
“நான் மட்டுமே பதிவிரதை” என்று மார்பில் போர்டு மாட்டிக்கொண்டிருக்கும் நீதிபதிகளின் தலைமையில், கிரானைட், தாதுமணல் வழக்குகளில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதிகள் ஓரணியாகத் திரண்டிருக்கிறார்கள். தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கே ஜனநாயக உரிமைகளை மறுக்க வேண்டும் என்பது பார்ப்பன பாசிசத்தின் தேவை. ஊழல் நீதிபதிகளின் தேவையும் அத்தகையதுதான்.
“ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் குற்றம் சாட்டுபவர்களையும் சாட்சிகளையும் குற்றவாளிகளாக்கி சிறையில் வைக்க வேண்டும். பிறகு அவர்களைக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் ஊழல் ஒழிப்புக்கு பார்ப்பன பாசிசம் வகுத்திருக்கும் தருமம். வியாபம் ஊழல்தான் இந்த தருமத்தை விளக்கும் இதிகாசம்.
பார்ப்பன பாசிசமும் ஊழலும் பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அணி நீதித்துறையின் தேசிய ஜனநாயக முன்னணி. அதாவது இவர்கள் வழக்கறிஞர்களின் எதிரிகள் மட்டுமல்லர், தமிழ்ச்சமூகத்தின் எதிரிகள் என்பதே நாம் கண்டடைந்திருக்கும் உண்மை. ஆகவே இனிமேலும் இதனை வழக்கறிஞர் போராட்டம் என்று சுருக்கி அடையாளப் படுத்துவது பொருத்தமற்றது.
இந்தோ-ஆங்கில எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான நயன்தாரா சகல் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப கொடுத்துள்ளார். இந்திய சமூகத்துக்கு இந்துத்துவத்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து, சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலைக்கு நீதி மறுப்பு, தாத்ரியில் பசு மாட்டிறைச்சி உண்டார் என்று குற்றம் சுமத்தி முஸ்லிம் ஒருவரை அடித்துக் கொன்றது, இந்த பிரச்சினைகளில் மோடி சாதிக்கும் கள்ள மவுனம், மோடியின் அமைச்சர்கள் தவணை முறையில் கக்கி வரும் மதவாத விடம், எழுத்தாளர்களுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளின் போது சாகித்திய அகாடமி கடைபிடிக்கும் புதிர் மவுனம் ஆகியவற்றை கேள்வி கேட்டிருக்கிறார், சகல். ‘சீரழிக்கப்படும் இந்தியா’ என்று தலைப்பிட்டு எழுதிய திறந்த மடலில் தனது நடவடிக்கை, “இந்துத்துவத்துடன் முரண்பட்டதால் கொல்லப்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகின்ற மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.
இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி
‘Rich Like Us’ என்ற ஆங்கில நாவலுக்காக செகல் 1986-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதை பெற்றார். அவருடைய வயது இப்போது 88. நயன்தாரா சகலை தொடர்ந்து இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி அவர்களும் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப அளித்துள்ளார். நயன்தாரா சகலின் கருத்துக்களை அப்படியே வழிமொழிந்துள்ளார். லலித் கலா அகாடமியின் தலைமை பொறுப்பை அசோக் வாஜ்பாயி முன்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லட்சக்கணக்கானோர் மத்தியில் உரையாற்ற முடிகின்ற பிரதமரால் எழுத்தாளர்கள் கொல்லப்படும் போதும், அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்படும் போதும், அமைச்சர்கள் தகாத வார்த்தைகளை வெளியிடும் போதும் ஏன் அவற்றை கண்டித்து பேச முடியவில்லை’ என்று கேட்கிறார். சாகித்திய அகாடமியின் மவுனத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார், அசோக் வாஜ்பாயி.
இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ்
கன்னட மொழியின் சிந்தனையாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்ட போது சாகித்திய அகாடமி விருதை முதன்முதலில் திரும்ப கொடுத்தவர் இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ். தனக்கு வழங்கப்பட்டிருந்த பொன்னாடை, பதக்கம், ஒரு லட்ச ரூபாய் என அனைத்தையும் சாகித்திய அகாடமிக்கு நேரில் சென்று கொடுத்து விட்டு வந்தார். ”ஒரு விருதை தந்து விட்டு எழுத்தாளர்களை மறந்து விடுகிறது, சாகித்தியஅகாடமி. ஒரு கொலை நடக்கும் போது ஒரு ஆறுதல் வார்த்தை கூட தெரிவிக்க முன்வராத சாகித்திய அகாடமியின் விருது எதற்கு” என்று கேட்டார், உதய் பிரகாஷ். கல்புர்கி கொலை குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆவதை கண்டித்து ஆறு இளம் கன்னட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக ஆறழு சாகித்திய அகாடமி’ விருதை திரும்ப அளித்தனர். வீரண்ண மடிவளர், சதீஷ் ஜாவரே கவுடா, சங்கமேஷ் மீனாசனகை, ஹனுமந்த் ஹலிகெரி, ஸ்ரீதேவி ஆளூர் மற்றும் சிதானந்த் சாலி ஆகியோர் அக்டோபர் 3-ம் தேதியன்று கன்னட சாகித்திய பரிசத்துக்கு சென்று தங்கள் விருதுகளை திரும்பக் கொடுத்தனர்.
இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர்கள் – கல்புர்கி, தாபோல்கர், பன்சாரே
கன்னட மொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சந்திரசேகர் பட்டீல் தனக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் பம்பா விருதை இதே காரணத்துக்காக திரும்ப கொடுத்தார். கல்புர்கி மற்றும் முகமது அக்லாக்கின் ஓலம் இந்திய அளவில் எழுத்தாளர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. படைப்பு அவஸ்தையை மீறிய ஒரு வலியை அவர்கள் பகிர்கிறார்கள். நயன்தாரா சகலின் எழுத்துக்கள் மேல்தட்டு வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுபவை. எனினும் அவரால் தாத்ரியின் அடித்தட்டு முஸ்லிம் ஒருவர் சந்தித்த பிரச்சினைக்கு எதிர்வினையாற்ற முடிகிறது. ஆனால், இதற்கு மாறான நிலை தமிழக எழுத்து சூழலில் நிலவுகிறது.
அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், வைரமுத்து, நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன், திலகவதி, ஜோ டி க்ரூஸ், பிரபஞ்சன், பொன்னீலன் என்று ஒவ்வொரு வருடமும் சாகித்திய அகாடமி விருது வாங்கியோரின் பெரும் பட்டியல் இருக்கிறது. சாகித்திய அகாடமி விருது வாங்காத எழுத்தாளர்கள் சிலர், கண்டனங்களையாவது பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை அதே சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ? தாத்ரியின் ஓலம் தமிழகத்தில் உள்வாங்க நாதியற்று அலைகிறது. அது ஒவ்வொரு கணமும் இவர்கள் கல்நெஞ்சில் மோதி செல்ல வேண்டும்.
தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோரின் அரசியல் கண்ணோட்டத்தை வகை பிரிப்பது எளிது. அவர்கள் இரண்டு வகையை மட்டுமே சேர்ந்தவர்கள் — முதல் வகையினர் இந்துத்துவவாதிகள். இரண்டாம் வகையினர் பிழைப்புவாதிகள். வைரமுத்து, ஜோ டி க்ரூஸ் ஆகியோர்களின் தேய்மானம் பிழைப்புவாதம் இந்துத்துவத்துடன் கலக்கும் புள்ளியை சுட்டுகிறது.
எழுத்தாளர்களின் அரசியல் ஆதரவை எதிர்பார்த்து தனது முதிய வயதில் காத்திருக்கிறார் நயன்தாரா செகல். தமிழ் எழுத்தாளர்களோ தங்கள் விருதுகளை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதவெறியர்களோ அடுத்த குறியை தீர்மானித்து கொண்டிருக்கிறார்கள்.