Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 804

சமச்சீர் புத்தகங்களை வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!!

நாளை செவ்வாய்கிக்கிழமை பாசிச ஜெயாவின் தமிழக அரசாங்கம் தொடுத்துள்ள சமச்சீர்கல்வியை முடக்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதற்காக நாடறிந்த பிரபலமான வழக்கறிஞர்களை அமர்த்தி கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தமிழக அரசு வழக்காடுகிறது. இத்துடன் தனியார் பள்ளி முதலாளிகளும் பல்வேறு பிரபல வழக்கறிஞர்களை சேர்த்துக் கொண்டு வாதாடுகின்றனர்.

கடந்த இருமாதங்களாக நீதிமன்றத்திலும், மக்கள் அரங்கிலும் எமது அமைப்புகள் சமச்சீர்கல்வியை அமல்படுத்துமாறு போராடி வருகின்றன. அதன் அங்கமாக இன்று முதல் தமிழகமெங்கும் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்குமாறு வேலை நிறுத்தமும், போராட்டமும் செய்து வருகின்றனர்.

இரு மாதங்களாக பள்ளி மாணவர்களின் படிப்பு பாழாகி வருவதையும், அதற்கு காரணமாக பாசிச ஜெயாவை அம்பலப்படுத்தியும், உடனே புத்தகங்களை வழங்குமாறும் மாணவர்களிடையே பு.மா.இ.மு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தக் கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை 25.07.2011 காலை  10.30 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கல்லூரியில் திரண்ட மாணவர்களின் முன் இந்தப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி பு.மா.இ.மு தோழர்கள் விளக்கிப் பேசினர். இதையறிந்த பல்வேறு பேராசிரியர்கள் மனமுவந்து மாணவர்களை போராட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். வாழ்த்தும் தெரிவித்தனர்.

பின்னர் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கல்லூரியின் முன் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அணிதிரண்டு மறியல் செய்தனர். கிட்டத்தட்ட அரைமணிநேரம் சாலை முடக்கப்பட்டது. சில மாணவர்கள் நிறுத்தப்பட்ட வாகனங்கள், பேருந்துகளில் ஏறி இந்தப் போராட்டத்தின் அவசியத்தை விளக்கினர். அதன் பின்னர் பொதுமக்களும் இந்தப் போராட்டத்தை ஆதரித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

பின்னர் போலீசு வந்து செய்வதறியாது திகைத்து நின்றது. பிறகு மறியலை முடித்துக் கொண்டு கல்லூரி வளாகத்தின் முன்னர் வெகுநேரம் முழக்கமிட்டவாறு மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இங்கே அதன் வீடியோவை இணைத்திருக்கிறோம். பள்ளி மாணவருக்கான நியாயத்தை உணர்ந்து கல்லூரி மாணவர்கள் இப்படி போராடத் துணிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இந்தத்தீ தமிழகமெங்கும் பரவட்டும். பாசிச ஜெயாவின் ஆணவம் ஒழியட்டும். தனியார் பள்ளி முதலாளிகளின் கொட்டம் அழியட்டும்.

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது.  இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.

வழக்கு நிதி தாரீர்
[paypal-donation purpose=”Donation for Samacheer Kalvi Campaign”]

இணையம் மூலம் பாதுகாப்பாக நன்கொடை அளிக்கும் வகையில் பேபால் (PAYPAL) வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம் “DONATE” பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஆண்டவனின் வறுமையா? ஆலயக் கொள்ளைக்கு உரிமையா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 7

மசூதிசர்ச் போன்றவற்றின் சொத்துக்கள் கிறித்தவ, முசுலீம் மதத்தினர் வசமே உள்ளது. ஆனால், இந்துக் கோவில்களின் சொத்துக்களை மட்டும் அரசு வைத்திருக்கிறது. கோவிலுக்காக பக்தர்கள் செலுத்தும் வருவாயை அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் செலவழிக்கிறார்கள். வெளிநாட்டுப் பணத்தின் உதவியால் மசூதிகளும், சர்ச்சுகளும் புதிது புதிதாகத் தோன்றும்போது, இந்துக்களின் கோவில்கள் மட்டும் பூசைக்குக்கூட வழியில்லாமல் தவிக்கின்றன. எனவே கோவில் சொத்துக்களை மீண்டும் இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும். இந்துக் கோவில்கள், மடங்கள், ஆசிரமங்கள் அனைத்திற்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

இந்து முன்னணியின் மேடைகளில் இராம.கோபாலன் தவறாமல் முன்வைக்கும் ஒரு முழக்கம்.

ஈரேழு பதினாலு உலகங்களைப் படைத்த கடவுளுக்கு, மனிதன் விளைநிலங்களைப் பட்டா போட்டுத் தருவதும், அதை வைத்து கடவுள் கஞ்சி குடிப்பதும் எத்தகைய வேடிக்கை! பக்தர்கள் சிந்திக்கட்டும். அப்படி கடவுளர்களுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்தில் மதப் பாகுபாடு இருப்பது பற்றித்தான் இந்து முன்னணி முறையிடுகிறது.

சொத்துக்ளுக்கு மதங்களில்லை

மதங்களுக்குரிய சொத்துக்களை அந்தந்த மதத்தைச் சார்ந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களும் அளித்திருக்கின்றனர். மசூதிகள், தர்ஹாக்களின் சொத்துக்கள் நவாப்புகள், குறுநில இந்து மன்னர்களால் கொடுக்கப்பட்டன. கிறித்தவ நிறுவனங்களுக்குரிய சொத்துக்கள், இந்து மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் தரப்பட்டவை. இந்துக் கோவில்களுக்கு நகையும், நிலமும் இந்து, முசுலீம் மன்னர்களால் அளிக்கப்பட்டன. விளைநிலங்ளில் கணிசமான அளவும், பல ஆயிரக்கணக்கான கிராமங்களின் வருவாயும் – அதாவது கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் – பல்வேறு மன்னர்களால் பெரும் கோவில்களுக்குக் கொடுக்கப்பட்டன. இந்து மதவெறியர்களால், இசுலாமிய மத வெறியராகச் சித்தரிக்கப்படும் மொகலாய மன்னரான அவுரங்கசீப், பல இந்துக் கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மானியம் அளித்ததைப் புள்ளி விவரங்களுடன் வரலாறு தெரிவிக்கின்றது.

கோவில் கொள்ளை நிறுத்தப்பட்ட வரலாறு

இந்திய உழைக்கும் மக்களின் உழைப்பில் உருவான கோவில் சொத்துக்களை அறங்காவலர் என்ற பெயரில் பார்ப்பன ‘மேல்’ சாதியினர்தான் பல நூறு ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளையடிக்கப்படும் கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க, 1930களில் நீதிக்கட்சி ஆட்சியின்போது அரசு சார்பிலான இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அப்போதுதான் பல கோவில்களின் வருவாய் எவ்வளவு அதிகமென்பதும், இதுநாள்வரை அவை கொள்ளை போன கதையும் வெளி உலகிற்குத் தெரிய வந்தது.

அதுவும் தமிழ்நாடு, மற்றும் கேரளாவில் மட்டும்தான் அரசு அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டு கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டதே ஒழிய, ஏனைய மாநிலங்களில் இன்றளவும் கொள்ளை தொடருகின்றது. இங்கும் கூட அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கூடவே பரம்பரை அறங்காவலர்கள் என்ற பெயரில் முன்னாள் மன்னர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், பார்ப்பன ‘மேல்’ சாதியினர் முந்தையக் கொள்ளையை முடிந்தவரை தொடரத்தான் செய்கின்றனர்.

மேலும் கோவில் சொத்துக்களுக்கு நிகராக சங்கர மடங்கள், திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை, குன்றக்குடி போன்ற ஆதீனங்களுக்கும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இம்மடங்களுக்கு காசி முதல் கன்னியாகுமரி வரை நூற்றுக்கணக்கான கிளை மடங்களும், பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்களும், பல நகரங்களில் கட்டிடங்களும் சொந்தமாக உள்ளன. பார்ப்பன ‘மேல்’சாதியினர் அனுபவித்து வரும் இச்சொத்துக்களை இன்றுவரை அரசு எடுக்கவில்லை என்பது முக்கியம். நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து இம்மடங்கள் மட்டும் விலக்குப் பெற்றுள்ளன. ‘ஊழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற இந்திய விவசாயிகளின் உயிராதாரமான போராட்டத்தை இத்தகைய மத நிறுவன்களுக்கு எதிராகவும் நடத்த வேண்டியிருக்கிறது.

மக்கள் பணத்தை வீணடிப்பது யார்?

அரசாங்கம் இந்துக் கோவில்களின் வருவாயை எடுத்துப் பொதுநலத்திட்டங்களுக்குச் செலவழிக்கிறது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; உண்மையும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் அப்படித்தான் செலவழிக்கப்பட வேண்டும் என்கிறோம். மாறாக தேர்த்திருவிழா, மகாமகம், கும்பமேளா, குடமுழுக்கு போன்ற விழாக்களுக்கும் காசி, பத்ரிநாத்,அமர்நாத் போன்ற யாத்திரைகளுக்கும், இப்போது இந்து முன்னணியின் விநாயகர் ஊர்வலத்துக்கும் அரசாங்கம்தான் பொதுப்பணத்தை அள்ளி வீசுகிறது. பாதுகாப்பு, சுகாதாரம், விபத்துக்களுக்கான நட்ட ஈடு என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் கொட்டப்படுவதைத் தடை செய்வதுதான் சரியானது.

பக்தியில் பிழைப்புவாதம்

பல கோவில்களில் பூசைக்கே வழியில்லாமல் போனதற்கு பக்தர்களின் புறக்கணிப்புத்தான் காரணமே ஒழிய அரசாங்கம் அல்ல. திருப்பதி, சபரிமலை, பழனி, திருச்செந்தூர் போன்ற பணக்கார சாமிகளுக்கு அள்ளி வழங்கும் பக்தர்கள், வௌவால் குடியிருக்கும் பல கோவில்களுக்கு எட்டிப் பார்ப்பதில்லை. இறைவழிப்பாட்டிலும் பிழைப்புவாதம் வந்து விட்டதற்கு அரசாங்கமோ, சிறுபான்மை மக்களோ என்ன செய்ய முடியும்? மேலும் கோவில் நிலங்கள், கடைகளுக்குரிய குத்தகைவாடகை பாக்கியை வைத்திருப்பவர்கள் பட்டை போட்ட இந்து பக்தர்கள்தான், நாத்திகம் பேசுபவர்கள் அல்ல என்று முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகனே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இன்னும் சமீபகாலமாக அறநிலையத்துறையின் பூசாரிகள் – கோவில் ஊழியர்கள், தங்களை அரசு ஊழியராக்கவும், ஊதிய உயர்வுக்காகவும் போராடி வருகிறார்கள்.  வேலை நிறுத்தம் செய்து இறைவனையே பட்டினி போடவும் துணிந்து விட்டார்கள் அர்ச்சகர்கள். அறநிலையத்துறையை ஒழித்து, தனியார் இந்துக்களிடம்தான் கோவில்களை ஒப்படைக்க வேண்டும என்று அவர்களிடம் இந்து முன்னணி தெரிவிக்கட்டுமே! கோவிலையே இடித்து விடுவார்கள்.

மசூதி, சர்ச் இவற்றின் சொத்து மட்டும் அம்மதங்களைச் சேர்ந்தவர்களிடம் இருக்கலாமா என்ற கேள்விக்கு ‘கூடாது‘ என்பதுதான் நமது பதில். அங்கும் ஒரு பிரிவு மேட்டுக்குடியினர்தான் சொத்துக்களைச் சுகபோகமாக அனுபவித்து வருகின்றனர். எனவே எம்மதமாக இருந்தாலும், அவற்றின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து மக்கள் உடைமை ஆக்க வேண்டும்; இறைவனைச் சொந்தக் காலில் நிற்கச் செய்ய வேண்டும் என்கிறோம்.

மதக் கம்பெனிகள் கோரும் வரிவிலக்கு

பிரேமானந்தா, சாயிபாபா, மேல் மருவத்தூர், ஆனந்த மார்க்கம், அமிர்தானந்தமாயி, சின்மயானந்தா, சித்பவானந்தா, ரமண மகரிஷி, யோகிராம் சூரத் குமார், ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்த கேந்திரா, சங்கர மடங்கள், சைவ ஆதீனங்கள் இன்னபிற இந்துமதக் கம்பெனிகள் அனைத்திற்கும் வருமான வரிவிலக்கு வேண்டுமென இந்து முன்னணி கோருகிறது. ஏற்கனவே இக்கம்பெனிகளுக்கு முறையான வரியோ, சோதனையோ கிடையாது; விலக்கு மட்டும் உண்டு. ஹவாலா, அரசியல் தரகு, கல்வி – மருத்துவ வியாபாரம், கற்பழிப்புக்கள், கொலைகள் போன்ற தொழில்களைச் க்ஷேமமாக நடத்திவரும் இவர்கள் அனைவருக்கும் வரிபோடுமளவுக்கு வருமானமோ, சொத்துக்களோ இருக்கக்கூடாது என்கிறோம்.

தமது வாழ்க்கைத் துன்பத்திலிருந்து சுரண்டுபவர்களை ஓரளவிற்கேனும் தெரிந்துகொள்ளும் மக்கள், மத நிறுவனங்கள் கொள்ளையிடுவதை மட்டும் நேரடியாக உணருவதில்லை. அன்றைய புராதன மதங்கள் அனைத்தும் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களைப் போன்று வேர் விட்டிருப்பதும் அதனால்தான். ஆக மத நிறுவனங்கள், மடங்கள், அறக்கட்டளைகள், ஆசிரமங்கள் அனைத்தும் கொள்ளையிடுவதற்கான முகமூடிகள்தான்.

நில உச்சவரம்பு, வருமானவரி, சொத்துவரி, கேளிக்கை வரி ஆகியவை மதமல்லாத நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் பொருந்தும். இதிலிருந்து ஏமாற்றுவதற்காக பலர் சொத்துக்களை கடவுள் பெயரில் மாற்றி கணக்கு காட்டாமல் அனுபவித்து வருகிறார்கள். எனவே மேற்கண்ட வரிகள் எதுவும் மத நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று உறுதியாக அறிவித்தால் என்ன நடக்கும்?

ரிலையன்ஸ் முருகன், டாடா கணபதி, ஃபோர்டு துர்க்கை, டி.வி.எஸ். பார்த்தசாரதி, ஸ்பிக் அனுமான் என்று எல்லாக் கம்பெனிகளும் கடவுள் பெயரில் அறக்கட்டளை உருவாக்கி ஜாம் ஜாம் என்று கொள்ளையடிப்பார்கள்.

– தொடரும்

____________________________________________________________

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!

10

மாணவர்களே பாடநூலைக் கேளுங்கள்!
விநியோகிக்க மறுத்தால் வீதிக்கு வாருங்கள்!
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி!
போராட்டமே மாணவர்களின் கல்வி!

இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி ! போராட்டமே மாணவர்களின் கல்வி !

சமச்சீர் பாடநூல்களை ஜூலை 22 ஆம் தேதிக்குள் விநியோகித்து முடித்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கிவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழக அரசு விநியோகிக்கவில்லை. சமச்சீர் நூல்களை விநியோகிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கேட்டது.

“சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி சமச்சீர் பாட நூல்களை உடனே விநியோகிப்பதுடன், வகுப்புகளைத் தொடங்குவதற்கும் தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்; ஆகஸ்டு 2 ஆம் தேதிக்குள் புத்தக விநியோகத்தை முடித்து விட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் ஜூலை 21 ஆம் தேதியன்று உத்தரவிட்டது. தமிழக அரசோ இந்தக் கணம் வரை மாணவர்களுக்கு பாடநூல்களைக் கொடுக்கவில்லை.

பாடநூல்களை அடுக்கி வைத்திருக்கும் டி.இ.ஓ அலுவலகத்தின் வாசலிலேயே அமர்ந்து “எங்களுக்கு பாடநூலைக் கொடு” என்று விருத்தாசலம் மேனிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அதற்கும் அரசு அசையவில்லை. உச்சநீதி மன்றத்தின் உத்தரவைக் காட்டினாலும், எங்களுக்கு அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள்.

“ஜூலை 26 அன்று டில்லி உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடங்குகிறது. தீர்ப்பு அரசுக்கு சாதகமாகவும் அமையக் கூடும். முடிவு தெரிவதற்கு முன்னால் அவசரப்பட்டு சமச்சீர் புத்தகங்களை விநியோகிக்க வேண்டாம் என்று அம்மா எண்ணியிருப்பார்” என்று விளக்கம் கூறினார் ஒரு அதிமுக அல்லக்கை.

அம்மாவின் சிந்தனை குறித்த அல்லக்கையின் கணிப்பில் தவறேதும் இல்லை. ஆனால் தான் செய்யவிருப்பது என்ன என்ற உண்மையை அம்மா, உள்ளது உள்ளபடியே நீதிமன்றத்தில் ஏன் உரைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை.

“மை லார்ட், கேஸ் முடியும்வரை நாங்கள் புத்தகங்களை கொடுப்பதாக இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படையாக அறிவிக்காமல், “விநியோகிப்பதற்கு அவகாசம் வேண்டும்” என்று அங்கே ஏன் பொய்யுரைக்க வேண்டும்? இங்கே புத்தக கட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் வாசலில் உட்கார்ந்து “புத்தகத்தைக் கொடு” என்று கேட்கும் பள்ளி மாணவர்களை, போலீசை வைத்து ஏன் துரத்த வேண்டும்?

அம்மாவின் கணக்குப்படி தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வருவதாகவே இருக்கட்டும். அதற்கு முன்னால் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு என்ன? அவர்கள் அவற்றைப் புரட்டிப் பார்த்து விட்டால் இந்த தேசத்துக்கோ அல்லது மாணவர் சமூகத்துக்கோ ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்து என்ன?

அம்மா நியமித்த வல்லுநர்கள் கூட சமச்சீர் பாடப்புத்தகங்கள் “தரமானதாக இல்லை” என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். படத்தை ரிலீஸ் செய்! படம் தரமா, தரமில்லையா என்பதை மாணவர்கள் தீர்மானிப்பார்கள். படச்சுருளை மாணவர்களின் கண்ணிலேயே காட்டாமல் பெட்டியிலேயே பூட்டி வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டுவதற்கு, அது என்ன “மாமனாரின் இன்ப லீலைகள்” சினிமாவா?

அந்தப் புத்தகங்களை மாணவர்களின் கண்ணில் காட்டுவதற்கே அம்மாவின் அரசாங்கம் ஏன் அஞ்சி நடுங்குகிறது? இணைய தளத்திலிருந்து அவற்றை ஏன் அவசர அவசரமாக அப்புறப்படுத்துகிறது? “சமச்சீர் கல்வி என்ற வார்த்தையையே ஆசிரியர்கள் உச்சரிக்க கூடாது” என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் சுற்ற்றிக்கை அனுப்பி மிரட்டுவது ஏன்?

அது சமச்சீர் புத்தகமா, இல்லை, சரோஜாதேவி புத்தகமா?

தரமில்லை என்பது இந்த அரசாங்கத்தின் கருத்து. அதுவே அறுதி உண்மை அல்ல. சமச்சீர் புத்தகங்கள் தரமா தரமில்லையா என்று வல்லுநர் படித்துப் பார்ப்பார், நீதிபதி படித்துப் பார்ப்பார், எவன் வேண்டுமானாலும் பார்ப்பான், மாணவர்கள் மட்டும் அந்தப் புதுப் பாடநூல்களை ஆசையாகத் தொட்டு..முகர்ந்து பார்க்கக் கூடாதா?

அந்த நூலைத் தொட்டாலே மாணவர்களுடைய தரம் வீழ்ந்து விடுமா?

தரமில்லாத ஒரு ரூவா அரிசிச் சோற்றைத் தின்று, தரமில்லாத அரசுப் பேருந்துகளில் தொங்கி, தரமில்லாத அரசுப்பள்ளிகளில் படிக்கும் “தரமில்லாத” ஏழை மாணவர்கள், அந்த தரமில்லாத பாடநூல்களை ஒரு முறை புரட்டித்தான் பார்க்கட்டுமே! என்ன கெட்டுவிடும்?

ஒருவேளை உச்ச நீதிமன்றம் அம்மாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து விட்டால், 200 கோடி செலவு செய்து அம்மா அச்சடித்து வைத்திருக்கும் பழைய பாடத்திட்ட நூல்களையும் மாணவர்களிடம் விநியோகிக்கட்டும்!

“இனிமேல் இதுதான் பாடநூல். ஏற்கெனவே கொடுத்த சமச்சீர் பாடநூல்களை எடைக்குப் போட்டுவிடுங்கள்” என்று மாணவர்களிடம் அறிவிக்கட்டும்! அதில் என்ன நட்டம்? எல்லா புத்தகத்தையும் மொத்தமாக அரசாங்கமே பழைய பேப்பருக்குப் போடுவதற்குப் பதிலாக, தனித்தனியாக மாணவர்கள் போடப்போகிறார்கள். மேற்படி பழைய பேப்பர் விற்பனையில் கிடைக்கக்கூடிய வருவாயை அரசு இழக்க நேரிடும் என்பதைத் தவிர வேறென்ன நட்டம்?

“சமச்சீர் பாடநூல்கள் தரமற்றவை, அவை கருணாநிதியின் குடும்ப விளம்பரங்கள்” என்ற அம்மாவின் கூற்று உண்மையாயின், அந்தப் புத்தகங்களை மாணவர்களுக்கு படிக்கத் தருவதன் மூலம் தானே கருணாநிதியின் முகத்திரையைக் கிழிக்க முடியும்?

“கருணாநிதியின் முகத்திரையை மாணவர்களிடம் கிழித்துக் காட்டிய பிறகு, புத்தகங்களையெல்லாம் கிழித்து தீ வைத்துக் கொளுத்த வேண்டும்” என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டால், அவர்கள் என்ன மறுக்கவா போகிறார்கள்? வள்ளுவனின் முகத்திலேயே பசை தடவிக் காகிதம் ஒட்டக் கூசாத அந்தக் கைகள், கொளுத்துவதற்கா தயங்கும்?

சமச்சீர் பாட நூல்களைப் பற்றி அவர்கள் செய்து வரும் பிரச்சாரம் மிகைப்படுத்தப்பட்ட பொய்ப் பிரச்சாரம். அந்த நூல்கள் விநியோகிக்கப்பட்டு, அவற்றை மாணவர்கள் புரட்டிப் படித்து விட்டால், மாணவர்கள் அவற்றை விரும்பத் தொடங்கிவிடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறது.

அரசைப் பொருத்தவரை இது வெறும் பாடநூல் பிரச்சினை மட்டும் அல்ல. அந்தப் பாடநூல்களை மாணவர்கள் கையில் கொடுத்து விட்டால், “அம்மா கொடுத்த புத்தகமா, அய்யா கொடுத்த புத்தகமா எது சிறந்த பாடநூல்?” என்ற விவாதம் தவிர்க்க இயலாமல் தொடங்கி விடும். மாணவர்களின் முடிவு அம்மாவுக்கு சாதகமாக இருக்காது என்றும் அரசு அஞ்சுகிறது.

“அம்மா அய்யா ” பிரச்சினையோடும் இந்த விவகாரம் முடிந்து விடாது. எந்தப் பாடநூல் நன்றாக இருக்கிறது, ஏன் நன்றாக இருக்கிறது என்று யோசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் கருத்து தெரிவிப்பதற்கும் மாணவர்களுக்கு உரிமை வழங்குவது என்பது, புலிக்கு ரத்த வாடை காட்டுவதற்கு நிகரானது என்று அஞ்சுகின்றன அரசும் ஆளும் வர்க்கமும்.

பாடநூல் பற்றியும், பாடத்திட்டம் பற்றியும் விவாதிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றுவிட்டால் –

தரம், பாடத்திட்டம், பயிற்று முறை ஆகியவையெல்லாம் மாணவர்களும் பெற்றோரும் கருத்துக் கூறமுடியாத, அவர்களுடைய புத்திக்கு எட்டாத பிரம்ம ரகஸ்யங்கள் போலவும், அவற்றைப் பற்றி ஒப்பீனியன் ஷொல்லணுமானால் அவாள் மிஸஸ் ஒய்.ஜி.பி யாகவோ, மிஸ்டர் சோ ராமஸ்வாமியாகவோ இருந்தாகவேண்டும் என்றும் அவர்கள் டெவலப் பண்ணி வைத்திருக்கும் கதைகளும், கொடுத்து வரும் பில்டப்புகளும் உடைந்து விடும் என்பது இந்தக் கும்பலின் அச்சம்.

அதனால்தான் 1.25 கோடி மாணவர்களின் தலைவிதியோடு சம்மந்தப்பட்ட சமச்சீர் பாடநூல்களை மக்கள் மன்றத்தில் திறந்து காட்ட இந்த அரசு மறுக்கிறது. உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றுகிறது. ஆசிரியர்களை மிரட்டுகிறது. அறிவைப் பூட்டி வைத்து காவலுக்கு ஆயுத போலீசை நிறுத்தி வைக்கிறது.

 இந்த அரசு
தனியார் கல்விக் கொள்ளையர்களின் புரவலன்.
மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் கூட்டாளி.
இலவசக் கல்வியின் எதிரி.

“பாடநூலைக் கொடுக்க முடியாது” என்று மறுக்கும் அரசுக்கு,
“பள்ளிக்குச் செல்” என்று ஆணையிடும் உரிமை கிடையாது!

“வா” என்றால் வருவதற்கும், “போ” என்றால் போவதற்கும்
ஆடு மாடுகள் அல்ல மாணவர்கள்;

இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!

சமச்சீர் கல்வியை முடக்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்து,
சமச்சீர் பாடநூல்களை விநியோகிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு விட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது.

பாடநூல்களை விநியோகிக்காமல் மாணவர் சமுதாயத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த அரசை திங்களன்றே (ஜூலை 25) வீதிக்கு இழுப்போம்!
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!

____________________________________________________________

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது.  இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.

வழக்கு நிதி தாரீர்
[paypal-donation purpose=”Donation for Samacheer Kalvi Campaign”]

இணையம் மூலம் பாதுகாப்பாக நன்கொடை அளிக்கும் வகையில் பேபால் (PAYPAL) வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம் “DONATE” பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு – நிதி தாரீர்!

26

சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வழங்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். எனினும், “சமச்சீர் பாடநூல்களை ஜூலை 22 க்குள் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்” என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை காலநீட்டிப்பு பெற்றிருக்கிறது தமிழக அரசு. இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அச்சிட்டுத் தயார் நிலையில் உள்ள நூல்களை விநியோகிப்பதற்கு எதற்கு கால நீட்டிப்பு? நடைமுறையில் இந்தக் “காலநீட்டிப்பு” பெறுவதன் நோக்கம் இறுதித் தீர்ப்பு வரும்வரை புத்தகங்களை விநியோகிக்காமல் தடுப்பதுதான்.  மாணவர்களையும் ஆசிரியர்களையும் “இதோ.. ..அதோ” என்று இரண்டு மாதங்களாக அலைக்கழித்து வருகிறது ஜெ அரசு. இதே காரியத்தை கருணாநிதி செய்திருந்தால் சோ, வாசந்தி, வைத்தியநாதன், எச்.ராஜா, தா.பாண்டியன் முதலான “தமிழர்கள்” தம் நாக்காலேயே நெம்பி ஆட்சியைக் கவிழ்த்திருப்பார்கள். மேற்படி அயோக்கியத்தனத்தை செய்துவருபவர் புரட்ச்சித்தலைவி என்பதால், இவர்களுடைய நாக்கு அம்மாவின் பொற்பாதங்களை சுவைத்துக் கொண்டிருக்கிறது.

நம் கண் முன்னால் 1.25 கோடி மாணவர்களை உருட்டிப் பந்தாடுகிறார் புரட்சித்தலைவி. பள்ளிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஒருவேளை ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைக்காக பத்து நாட்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தால், மாணவர்கள் அவர்களை ஆதரித்துப் போராடியிருந்தால் – என்ன நடந்திருக்கும்? 2 இலட்சம் அரசு ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கிறதா? அதுதான் நடந்திருக்கும்.

தமிழக மக்களைத் தனது *@# க்குச் சமமாகத்தான் ஜெ மதிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் சான்றுகள் தேவையில்லை. நீதித்துறையின் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பு, மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பைக் காட்டிலும் ஒரு *@# கூடுதலாக இருக்கலாம். அவ்வளவே.

சமச்சீர் பாடப்புத்தகங்கள் தரமானவைதானா என்று கமிட்டி போட்டு ஆராய்ந்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அம்மா போட்ட கமிட்டி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போதே, 2002 பாடத்திட்டத்தின் அடிப்படையிலா பாடநூல்களை அச்சடிக்கச் சொல்லிவிட்டார் புரட்சித்தலைவி. இது குறித்த செய்தி நாளேடுகளிலும் வந்துவிட்டது. “இப்படி செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?” என்று குமுறினார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. “எந்தப் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்று ஐயா உத்தரவு பிறப்பித்தாலும், அடுத்த கணமே கொடுத்துவிடவேண்டும் என்பதற்காகத்தான் அதையும் அடிக்கிறோம் மை லார்ட்” என்று நீதபதிக்கு பதில் சொன்னார் அரசு வழக்குரைஞர். இது எப்படி இருக்கு?

“அனாவசியமாக இன்னொரு 200 கோடி செலவு வேண்டாம். சமச்சீர் பாடத்தை இந்த ஆண்டுக்கு கொடுத்து விடுங்கள். அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம்” என்று நீதிமன்றம் சொல்லிவிடக்கூடுமோ என்று அம்மாவுக்கு ஒரு ஐயம். அதனால்தான் இந்த குறுக்கு வழி, தீர்ப்பு வருவதற்கு முன்னரே இன்னொரு 200 கோடியையும் செலவு செய்யச் சொல்லிவிட்டார். நீதிமன்றத்தை உப்பு மூட்டை மேல் படுக்கப் போட்டு வீக்கம் வெளியில் தெரியாதபடி அடிப்பது என்பது இதுதான். இதை மற்றவர்கள் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு. அம்மா செய்தால் அதற்குப் பெயர் துணிச்சல்.

உயர்நீதி மன்றத் தீர்ப்பு வந்தவுடனே கல்வித்துறை செயலர், அட்வகேட் ஜெனரல், அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் டெல்லிக்கு பறந்து விட்டனர். “மனு தாக்கல் செய்யும் நேரம் ராகு காலம் எமகண்டமாக இருக்க்கூடாது. வழக்கிற்கு வழங்கப்படும் வரிசை எண்ணின் கூட்டல் தொகை 9 ஆக இருக்க வேண்டும்”. என்ற இரண்டு முக்கியமான லா பாயிண்டுகளை பின்பற்றுவதில் புரட்சித் தலைவியின் போர்ப்படைத் தளபதிகள் கவனமாக இருந்தனர்.

வெயிட் காட்டுவதன் மூலமாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற முடியும் என்பதனால், இந்தியாவின் சட்டத்துறை சூப்பர் ஸ்டார்களாக அறியப்படும் வழக்குரைஞர்கள்  பலரையும் விலைக்கு வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சுபரீம் கோர்ட்டில் இறக்கி விட்டிருந்தார் அம்மா. அரசியல் சட்ட வழக்குரைஞர் பி.பி.ராவ், முகுல் ரோகத்கி, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார் என்று ஒரு வழக்குரைஞர் படை அரசின் சார்பாக இறக்கப்பட்டிருந்த்து. ரோஹிந்தன் நாரிமன், ஆர்யமா சுந்தரம், ராஜீவ் தவான் உள்ளிட்ட இன்னொரு வழக்குரைஞர் படையைக் களத்தில் இறக்கியிருந்தனர் மெட்ரிகுலேசன் பள்ளி முதலாளிகள். இவர்களுடைய கூட்டமே நீதிமன்ற அறையில் பாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது,

ஒரு முறை நாறைகாலியை விட்டு எழும்புவதற்கே சில இலட்சங்களை கட்டணமாக வசூலிக்கும் மேற்குறிப்பிட்ட வழக்குரைஞர்கள், நேற்று நெடுநேரம் கால் நோக நின்றபடியே தடையாணை கேட்டு மன்றாடினர். எனினும் நீதிமன்றம் தடையாணை கொடுக்க மறுத்தது. “தடையாணை தராவிட்டாலும் அவகாசமாவது கொடுங்கள். சமச்சீர் பாடத்திட்ட நூல்களை 22 ஆம் தேதிக்குள் விநியோகிக்க இயலாது” என்று கூறி, ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை அவகாசம் கோரினர்.

தயார் நிலையில் கிடங்குகளில் தூங்கும் நூல்களை எடுத்து விநியோகிப்பதற்கு எதற்கு கூடுதல் அவகாசம்? இருப்பினும், “அவ்ளோ பெரிய்ய வக்கீலுங்க, இவ்ளோ தூரம் ப்ரஸ் பண்ணி கேட்பதன் காரணமாக”, மேற்கொண்டு ஒரு பத்து நாட்களைப் போட்டுக் கொடுத்தது உச்ச நீதிமன்றம். நூல்களை விநியோகிப்பதற்கு என்று கூறி ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை அவகாசம் பெற்ற ஜெ அரசு, இந்த அவகாசத்தை “நூல்களை விநியோகிக்காமல் மாணவர்களை இழுத்தடிப்பதற்கான அவகாசமாக” பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதையும், இரண்டு மாதங்களாக மாணவர்களைத் தெருவில் நிறுத்தியிருப்பதையும் ஜெ வின் தனிப்பட்ட குணாதிசயத்தின் விளைவாக மட்டுமே பலர் காண்கின்றனர். இப்பிரச்சினையைப் பொருத்தமட்டில் அது ஒரு அம்சம் மட்டுமே.

மேட்டுக்குடி வர்க்க மாணவர்களுக்கும், உழைக்கும் வர்க்க மாணவர்களுக்கும் பொதுவானதாக ஒரு பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கேட்டவுடனேயே, காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியது போலப் பலர் துடிக்கின்றனர். மேட்டுக்குடி வர்க்கத்தினர், உயர் நடுத்தர வர்க்கத்தினர், மெட்ரிக் பள்ளி கொள்ளையர்கள், பார்ப்பனிய-புதிய தாராளவாத சித்தாந்தக் குஞ்சுகள் போன்ற பலரும் இதில் அடக்கம். ஜெயலலிதா அவர்களுடைய பிரதிநிதி. எனவே, ஜெயலலிதா இதில் காட்டும் மூர்க்கத்தனம் என்பது, சர்ச் பார்க், டான் பாஸ்கோ, பத்மா சேஷாத்ரி, டி.ஏ.வி உள்ளிட்ட மேட்டுக்குடி வர்க்கத்தின் கண்ணோட்டத்திலும் குணாதிசயத்திலும் விளைந்ததாகும். அம்மையார் பிடிவாத குணம் கொண்ட ஒரு பாசிஸ்டாக இருப்பது மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கு கிட்டிய ஒரு கூடுதல் வரப்பிரசாதம்.

மெட்ரிக் பள்ளித் தொழிலதிபர்கள் கருத்து ரீதியாக ஜெயலலிதாவுக்கு ஆதரவு தருவது மட்டுமின்றி, கோடிகளை வாரி இரைத்து உச்ச நீதிமன்றத்தில் நட்சத்திர வழக்குரைஞர்களையும் நிறுத்தியிருக்கிறார்கள். கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு பெரும் கூட்டம் அரசாங்க செலவில் டெல்லியில் தங்கியிருந்து வாதிடவிருக்கும் வழக்குரைஞர்களுக்கு தேவையான அனைத்தையும் திரட்டிக் கொடுப்பதுடன், சாதகமான தீர்ப்பை வாங்குவதற்கான எல்லாவிதமான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறது.

பாடத்திட்டம் தரமில்லை என்று வல்லுநர் குழுவை வைத்து நிரூபிக்கும் முயற்சி உயர்நீதி மன்றத்தில் தோற்றுவிட்டது. “அரசு இயற்றிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்த்தன் மூலம், சட்டமன்றத்தின் அதிகார எல்லைக்குள் உயர்நீதிமன்றம் வரம்புமீறித் தலையிட்டுள்ளது” என்று இதனை ஒரு அரசியல் சட்டச் சிக்கலாக மாற்றி திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் இறங்கக்கூடும்.

எதிர்த் தரப்பில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருக்கும் வழக்குரைஞர்களின் எண்ணிக்கை மற்றும் “வலிமை”யை ஒப்பிடும்போது, நமது தரப்பு (அதாவது சமச்சீர் பாடத்திட்டத்துக்காக வாதிடுவோரின் தரப்பு) வழக்குரைஞர்களின் எண்ணிக்கை குறைவு என்பதுடன், பலவீனமாகவும் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் பலம் பலவீனத்தை தீர்மானிப்பதில் பணமே முக்கியப் பாத்திரமாற்றுகிறது என்பதை விளக்கத்தேவையில்லை.

இவ்வழக்கைப் பொருத்தவரை முதலில் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதி மன்றத்திலும், அதன் பின்னர் வல்லுநர் குழு அறிக்கை தொடர்பாக மீண்டும் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு நடத்தியிருக்கிறோம். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்கள் ஊதியமில்லாமல்தான் இதற்க்காக உழைக்கிறார்கள் என்ற போதிலும், பிரபலமான மூத்த வழக்குரைஞர்களை அமர்த்திக் கொள்ளும்போது அவர்களுக்குரிய கட்டணத்தைக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டுமானால் அதற்கு இங்கிருந்து ஒரு வழக்குரைஞர் குழுவே டெல்லி சென்று, மனுவையும், வாதுரைகளையும் தயாரிப்பதுடன், நாம் அமர்த்திக் கொள்ளும் மூத்த வழக்குரைஞர்களுக்கு வழக்கின் சாரத்தை விளக்கிப் புரியவைக்கவும் வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல அவ்வப்போது அவர்கள் கேட்கும் ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் விளக்கமளிப்பதற்காக, வழக்கு முடியும் வரை அங்கே இருக்கவும் வேண்டியிருக்கிறது.

டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிக் கொண்டு, தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக மக்கள் பணத்தை கோடிக் கணக்கில் வாரியிரைத்து இந்த வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறது ஜெ அரசு. அது மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட வரிப்பணம்.

இதுவரை சமச்சீர் கல்வி இரத்துக்கு எதிராக எமது அமைப்புகளின் சார்பில் தமிழகமெங்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் உழைக்கும் மக்களிடமிருந்து பெறப்பட்ட நண்கொடையால்தான் சாத்தியமாயின. பிரச்சார இயக்கம், ஆர்பாட்டங்கள், மெட்ரிக் கல்விக் கொள்ளையர்களுக்கு எதிரான பல முற்றுகைப் போராட்டங்கள், சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்ற அரங்கக்கூட்டங்கள், உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்குகள் என்று கடந்த 2 மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது இப்போராட்டம்.

இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும்.  இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம். தற்போதைய நிதித் தேவை குறைந்த பட்சம் 3 இலட்சம் ரூபாய்

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது. எனவே உங்கள் நன்கொடையை விரைந்து அனுப்பவும். நாம் வென்றே தீரவேண்டும் என்ற வேட்கை, நீங்கள் வழங்கவிருக்கும் நன்கொடையின் தொகையைத் தீர்மானிக்கட்டும்.

வழக்கு நிதி தாரீர் !

வெஸ்டர்ன் யூனியன் (WESTERN UNION) மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் KANNAIYAN RAMADOSS என்ற பெயருக்கு பணம் அனுப்பி விட்டு விவரங்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் உரிய இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

சமச்சீர்கல்வி நூல்களை வழங்கு ! பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம் !

சமச்சீர்கல்வி நூல்களை வழங்கு ! பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம் !

விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை – 22.7.2011 காலை மாணவர்கள் மத்தியில் நமது பெற்றோர் சங்கம் சார்பில் “சமச்சீர் பாட புத்தகத்தை வாங்கிய பிறகு வகுப்புக்குச் செல்லுங்கள். அதுவரை வகுப்பை புறக்கணியுங்கள்,” என்று பேசினோம். உடனே தலைமையாசிரியர் மாணவர்களை அடித்து மிரட்டி உள்ளே தள்ளி கதவை சாத்திவிட்டார்.

எனினும் 100க்கும் மேல் திரண்ட மாணவர்கள் உள்ளே சென்றாலும் அங்கிருந்து எங்களுக்கு கையை ஆட்டி வந்துவிடுகிறோம் என்று உற்சாகப்படுத்தினர். தொடர்நது வந்து கொண்டிருந்த மாணவர்களிடம் நாம் பேசியபொது வகுப்பின் இடைவெளையில் வந்துவிடுகிறோம் என்று கூறி சென்றனர். இடைவெளையின் பொது அனைத்து வாசல்களையும் ஆசிரியர்கள் மூடிவிட்டனர். அசராத மாணவ சிங்கங்கள் சிலர் மதில் சுவர் ஏறி குதித்து வெளியெ வந்து  மதிய உணவு இடைவெளியின் போது வந்துவிடுகிறோம் என்றுஎங்களிடம் தகவல் தந்தனர்.

சொன்னபடி மதியம் 1 மணியளவில் 50-ல் தொடங்கிய மாணவர்களின் எண்ணிக்கை சிறிது நேரத்தில் 200-ஐ தாண்டியது. நாம் கொடுத்த முழக்கம் மாணவர்களின் முழக்கமாக விண்னை எட்டியது. இது கேள்விப்பட்டு வந்த ஜெயா அரசின் செல்லப்பிள்ளையான காவல்துறை மாணவப் பிள்ளைகளைப் பார்த்து செய்வதறியாது திகைத்து நின்றது. மாணவர்களின் புத்தகம் வேண்டும் என்ற ஆர்வம் முழக்கமாக காட்டற்று வெள்ளமாக கரைபுரண்டது. இதை எதிர்பாராத எங்களுக்கே மாணவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

தன்னெழுச்சியாக மாணர்களே பேருந்தை மறித்து முழக்கம் இட்டு ஆரவாரம் செய்தனர். நாம் அவர்களை முறைப்படுத்தி மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றோம். பொதுமக்களும், வியாபாரிகளும் அணிதிரண்டு வேடிக்கை பார்த்தனர். தாங்கள் செய்யவேண்டிய போராட்டத்தை மாணவர்களே முன்னின்று செய்வதை வியந்து போற்றினர். முற்றுகை போராட்டம் சூடுபிடித்த பிறகு தாசில்தார், காவல்துறை அதிகாரிகள் வந்தனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

 

“பேச்சுவார்த்தைக்கு செவிசாய்க்காமல் போராட்டத்தை முழக்கங்களுடன் நடத்தலாமா” என்று அதிகாரிகள் கேட்டதற்கு ” புத்தகம் வாங்கிதான் பள்ளி செல்லவெண்டும். அது இல்லாமல் அங்கு போய் என்ன செய்யப்போகிறொம்” என்று எதிர் கேள்வி கெட்டனர். சமச்சீர் பாடத்தின் தரத்தை பற்றியும் காசு உள்ளவனுக்கு ஒரு கல்வி, ஏழைக்கு ஒரு கல்வி என்ற கல்வி தீண்டாமைக்காகதான் தங்களுக்கு புத்தகம் வழங்கப்படாமல் இருக்கிறது என்பதை எளிதாகப் புரிந்து கொண்டனர். பள்ளியில் ஆசியர்களின் அத்துமீறல்களை நம்மிடம் புகாராக கொட்டி தீர்ததனர்.

“குடிநீர் குழாயில் புழு வருகிறது என்றும், சத்துணவில் முட்டை போடுவதில்லை, பஸ் தாமதமாக வந்தாலும் வாத்தியார் எங்களை அடிக்கிறார், புத்தகம் இல்லாமலேயே படிக்கவில்லை என்று அடிக்கிறார், என்றெல்லாம் ஈட்டியாக துளைத்தார்கள். தாசில்தாரை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரை பார்த்து இவையனைத்தும் சரி செய்ய வெண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். திங்கள் கிழமை மாணவர்களுடன் பெரும்  மாவட்டகல்வி அலுவலகத்தை முற்றுகையிடுவொம் என்று உற்சாகத்துடன் கூறி சென்றனர் அந்த மாணவர்கள்.

அரசின் கல்வித் திட்டங்களாகட்டும், இல்லை மக்கள நல திட்டங்களாகட்டும் இவை எதுவும் மக்கள் விழிப்புணர்வின்றி அமலுக்கு வராது. சமச்சீர் கல்விக்கான நூல்களை உடனடியாக வழங்க வேண்டுமென்று தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் போராட ஆரம்பித்தால் அதுதான் பாசிச ஜெயாவின் திமிரை அடக்குவதற்கான மருந்தாக செயல்படும். விருத்தாசலத்தில் ஆரம்பித்த இந்த நெருப்பு மாநிலம் முழுவதும் பரவட்டும். சமச்சீர் கல்வி உரிமையை மக்கள் நிலைநாட்டுவதற்கு மாணவர்கள்தான் போராட வேண்டும். போராடுவார்கள்!

முற்றுகை போராட்ட முழக்கங்கள்:

  • மாணவர்களே! புத்தகம் வழங்கிய பிறகு பள்ளிக்கு செல்லுங்கள், புத்தகம் இல்லா பள்ளி எதற்கு?
  • தமிழக அரசே! தமிழக அரசே! புத்தகம் வழங்கு புத்தகம் வழங்கு!சமச்சீர் புத்தகத்தை உடனே வழங்கு!
  •  மாணவர்களே, மாணவர்களே! வகுப்பு எதற்கு, வகுப்பு எதற்கு! புத்தகம் இல்லா வகுப்பு எதற்கு!
  • புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்! புத்தகமில்லா வகுப்புகளை புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
  • ஆசிரியர்களே, ஆசிரியர்களே! அடைக்காதீர், அடைக்காதீர், புத்தகமில்லா வகுப்புகளில் மாணவர்களை அடைக்காதீர்!
  • ஆசிரியர்களே, ஆசிரியர்களே! அச்சம் தவிர்! அச்சம் தவிர்! நெஞ்சம் நிமிர், நெஞ்சம் நிமிர்!
  • மாணவர்களே, மாணவர்களே! பள்ளி செல்வோம்! பள்ளி செல்வோம், புத்தகத்துடன் பள்ளி செல்வோம்!
  • தமிழக அரசே, தமிழக அரசே! அமல்படுத்து, அமல்படுத்து! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்து! புத்தகம் வழங்கு, புத்தகம் வழங்கு! சமச்சீர் புத்தகத்தை உடனே வழங்கு!
  • புறக்கணிப்போம், புறக்கணிப்போம்! புத்தகங்கள் கிடைக்கும் வரை வகுப்புகளை புறக்கணிப்போம்!
  • மாணவர்களே, மாணவர்களே! வாருங்கள், வாருங்கள்! வகுப்புகளை விட்டு வெளியே வாருங்கள்!
  • பள்ளிக்குச் செல்வோம், பள்ளிக்குச் செல்வோம், புத்தகத்துடன் பள்ளிக்குச் செல்வோம்!

___________________________________________________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாசலம்

____________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வி – கார்டூன்ஸ்!

8

சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி  சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மக்கள் கலை இலக்கியக் கழக ஓவியர் முகிலனின் கார்டூன்களில் சில….

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

சமச்சீர் கல்வி கார்டூன்ஸ்

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

க்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை உடனடியாக அமுல் படுத்தக் கோரி கடந்த இருமாதங்களாக மக்கள் மன்றத்தில் போராடி வருகின்றனர். சென்னையில் டிபிஐ முற்றுகை மற்றும் ஜெயா கொடுப்பாவி எரிப்பு, உயர்நீதிமன்ற முற்றுகை மற்றும் தனியார் கல்வி முதலாளிகளின் அறிக்கை எரிப்பு, எனப் பல போர்க்குண மிக்க போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்க் கிழமை (18-07.11) சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை 22-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் புரட்சிகர அமைப்புகள் போராடி உயர்நீதி மன்றத்தின் வாயிலிருந்து பிடுங்கிய தீர்ப்பு என்றால் அது மிகையல்ல.

களத்திலே நின்று போராடிய  பு.மா.இ.மு, ம.க.இ.க. அமைப்புகள் கருத்துக்களை, உரிமைகளை மக்களிடத்திலே கொண்டு செல்லும் விதமாக அரங்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அரும்பாக்கம் புதிய புபு மஹாலில் காலை 9 மணிக்கு தரைத்தளத்தில் ஓவியக் கண்காட்சி தொடங்கியது. தோழர் முகிலன் ஓவியங்கள் வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கெதிரான போர் வாளாய் சுழன்றன. ஜெயா குரங்கு கையில் கிடைத்த பூமாலை, கல்வியை பறிக்கும் தனியார் பள்ளி முதலாளிகள், தனியார் பள்ளிகளை காக்கும் போயசு பள்ளி கல்வித்துறை, அரசு போன்ற ஓவியங்கள் பார்வையயாளர்களை ஈர்த்தன.

காலை பத்து மணிக்கு நிகழ்ச்சி முறைப்படி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது. தலைமையுரையாற்றிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் “தாழ்த்தப்பட்ட -பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியை மறுத்த மனு நீதி திரும்புகிறது. காசில்லையேல் கல்வி இல்லை, யார் அதிகம் நன்கொடை தருகிறார்களோ அவர்களை மட்டும் பள்ளிகள் சேர்த்துக்கொள்கின்றன. வியாபாரமாக கல்வி மாறிவிட்ட நிலையில் சமச்சீர் பொதுபாடத்திட்டத்தினை அமுல்படுத்து என்ற சீர்திருத்த நடவடிக்கைக்களுக்கே கூட புரட்சிகர அமைப்புகள் போராட வேண்டியிருக்கிறது. ஜனநாயகம் உள்ளதாக கூறப்படும் இந்நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா?இது ஒட்டுமொத்தக் கல்வியும் வியாபாரமான பிரச்சினை என்றும் அதற்கெதிராக போராட வேண்டும்” என கூறினார்.

பின்னர் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்தக் கோரி சிறை சென்ற பு.மா.இ.மு தோழர்களுக்கு பாராட்டுக்களும் பரிசுகளும்(நூல்கள்) வழங்கப்பட்டன.

அடுத்ததாக”ஏன் சமச்சீர் கல்வி வேண்டும்” என்ற தலைப்பில் தமிழகத்தின் மூத்தகல்வியாளர் திரு. எஸ்.எஸ்.ராஜகோபாலன் அவர்கள் உரையாற்றினார். அதில் “1.2 கோடி மாணவர்களின் மீது தமிழக அரசுக்கு உள்ள அலட்சியமே மேல் முறையீடு செய்யவுள்ள ஜெயா அரசின் செயல் நிரூபிக்கிறது. கடந்த 1.5 மாதமாக எந்த வகுப்பிலும் பாடங்கள் நடக்கவில்லை. அதை நீங்கள் தான் மாற்ற வேண்டும். உலகில் ஏற்பட்ட சமூக மாற்றங்களே கல்வி முறையை மாற்றியிருக்கின்றன. ஆக சமூகத்தைப் பற்றிய கல்வி கொடுக்கப்பட வேண்டும். சாதிமுறை ஒழிக்கப்படவில்லை அது  நீடிக்கிறது.  அதுதான் சமூகத்தில் பரவிக்கிடக்கிறது. அதை அகற்ற வேண்டுமெனில் பகுத்தறிவு கல்வி கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். சுயசிந்தனையை, பகுத்தறிவை வளர்த்து சமூக மாற்றத்தில் பங்குகொள்ள சமச்சீர் கல்வி அவசியம்” என்றார்.

அடுத்ததாக, கல்வி கார்ப்பரேடமயம் என்பது உலகமயம் உருவாக்கும் புதிய பார்ப்பனீயம் என்ற தலைப்பில் ம.க.இ.க மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் உரையாற்றினார். “சமச்சீர் பாடத்திட்டத்திற்காக எந்த ஓட்டுக்கட்சியும்  போராடவில்லை மாறாக பு.மா.இ.மு போராடியதன் விளைவாகவே நேற்றையத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அடிபட்ட மிருகம் போல அரசு தனது வெறியாட்டத்தை தொடங்கினாலும் நாம் உறுதியாக போராடவேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் 1.2 லட்சம் கோடி எனில் கல்வியை தனியார் ஆக்குவதால் ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி முதலாளிகளின் லாபவேட்டையாக அமைகிறது.”

“காட்ஸ் ஒப்பந்தம் மூலம் தண்ணீர், உணவு, மருத்துவம், கல்வி என அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டன. ஆதலால் காசில்லாதவனுக்கு கல்வி மறுக்கப்படுகின்றது. அதையே தமிழக அரசு வழக்கறிஞர் “பணம் கொடுத்துப் படிப்பது உரிமை”என்றும்,அமைச்சர் ” உலகமயமாக்கலை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஏற்ற கல்வி” என்றும்  கூறுகிறார்கள். ஆனால் 97.5 கட்டாஃப் மார்க் வாங்கிய ஏழைத்தொழிலாளியின் மகள் மேற்கொண்டு படிக்க முடியாமலிருப்பதும், 50 லட்சம் தரமுடிந்ததால் மட்டும் டாக்டராகும் மாணவனையும் உள்ளடக்கிய இக்கல்வி முறை அதாவது காசிருந்தால் கல்வி என்ற இம்முறை ஒழிக்கப்படவேண்டும். கல்விக்கு, அதை அளிப்பதில் சமூக நோக்கம் இல்லையேல் ஏற்றத்தாழ்வுகள் நீங்காது. ஆனால் இப்போது கல்வி கையிலிருக்கும் பணத்தை பொருத்து வழங்கப்படுகின்றது.”

“19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தகுதிக்கேற்ற கல்வி வழங்கிய அம்முறையை இப்போது உலகமயம் நமக்கு வழங்குகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு மாணவனையும் 50 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் காரர்களாக்கி வெளியில் தள்ளுகிறது அக்கல்வி முறை. இது கல்வி வியாபாரமானதின் விளைவு. உற்பத்தி தேவைக்கானதுதான் கல்வி என்ற சமூக நோக்கத்தை அழித்து வணிகமயமாக, உழைக்கின்ற மிருகமாக மனிதனை மாற்றுவதுதான் ஜெயா அரசின் திட்டம். இதை முறியடிக்க மக்களைத்திரட்டி போராட வேண்டும்” என்று கூறினார்.

இறுதியாக கட்டாய-இலவசக் கல்வி தருவது அரசின் கடமை, கல்வி தனியார்மயம் என்பது ஏழைகள் மீதான வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றிய ம.உ.பா.மை-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி.ராஜூ “கல்வி தனியார்மயத்தால்,கட்டணக்கொள்ளளையால் அனைத்து மக்களும் ஏன் காவல்துறையினர் உட்பட அனைவரும் பாதித்துள்ளனர்”  என்றும் கடலூர் மாவட்டத்தில் ம.உ.பா.மை மற்றும் பொற்றோர் சங்கம் போராடிய போராட்ட அனுபவங்களை கூறினார்.

“மேலும் கள்ளச்சாராய விற்பனை போல் அங்கீகாரம் வாங்கி, வாங்காமல் பள்ளிகள் புற்றீசல் போல பெருகி மக்களை கொள்ளையடித்து வருகின்றன. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை, உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி போராடியதற்காக பு.மா.இ.மு கடலூர் தோழா;கள் கைது செய்யப்பட்டதையும் அதில் 16 வயது தோழர் 20 நாட்கள் சிறையில் இருக்க வைக்கப்பட்டதையும் கூறினார். தனியார் பள்ளிகளுக்கெதிரான போராட்டம் ஏனைய தனியார்மய கொள்ளைகளுக்கெதிரான போராட்டம் அதில் நாம் போராடி வெற்றி பெறுவோம் என்றும் சமச்சீர் பாடத்திட்ட போராட்டத் தீயை அணையாமல் காத்து நிற்கும் பெருமை ம.உ.பா.மை மற்றும் பு.மா.இ.மு வையே சாரும்” என்றார்.

இந்நிகழ்சியில் சுமார் 1000த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்ட நிகழ்ச்சியில் அரங்கம் நிரம்பி வழிந்தது. மாணவர்களும், பொற்றோர்களும் மற்றும் பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, ம.க.இ.க, பெ.வி.மு தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியின் இடையிடையே புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டன.   இறுதியாக முறைப்படி சர்வதேசியகீதம் இசைக்கப்பட்டபின் நிகழ்ச்சி நிறைவுற்றது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
_________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

ஒய்யாரக் கொண்டையான தமிழினவாதத்தின் உள்ளே இருப்பது என்ன?

இந்திய அரசின் அனுமார்களால் மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது ஈழம். மிச்சமிருக்கும் தமிழ் மக்களையும் முள்வேலிக்குள் வைத்து சிறுகச் சிறுக கொலை செய்து கொண்டிருக்கிறது சிங்கள இனவெறி அரசு.

சொல்லில் அடங்காத துயரக்கதைகளைக் கொண்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் நிலைமை. கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற பெயரில் ஆக்கிரமிப்புக்கு சர்வே எடுக்கவும், ஆட்காட்டிகளை உருவாக்கவும் இராணுவத்தை அனுப்பி வைத்திருக்கிறது இந்திய அரசு.

புலிகள் இயக்கத்தை ஒழித்துக் கட்டவும், சிங்கள இனவெறி அரசின் வெற்றியை உறுதி செய்யவும் இந்திய மேலாதிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவர் மத்தியிலும் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கோபம் யாரை நோக்கித் திருப்பப்பட வேண்டும்? இந்தப் படுகொலைக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த காங்கிரசு அரசை, அதற்குத் துணை நின்ற தி.மு.க.வை, நம்பவைத்துக் கழுத்தறுத்த அ.தி.மு.க.வை, பச்சோந்தி வேடம் போட்ட பாரதிய ஜனதாவை.. இன்ன பிறரை நோக்கித் திரும்ப வேண்டும்.

இவர்கள் மீதெல்லாம் நம்பிக்கை வைக்குமாறு 1983இல் தொடங்கி நேற்று வரை தமிழக மக்களையும், ஈழத்தமிழ் மக்களையும், புலிகளையும் தவறாக வழிநடத்திப் படுகுழியில் இறக்கியவர்கள் யாரோ அவர்கள் மீது கோபம் வர வேண்டும். மாறாக, தமிழ் தேசியம் பேசுவோர் இந்த இலக்கைத் திசை திருப் பி, மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களுக்கு எதிரான கோபத்தைத் தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு “இன உணர்வை’ ஊட்டும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

“தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனும் மலையாளிகள் என்பதனால்தான் இந்திய அரசைத் தவறாக வழிநடத்தி விட்டார்கள்” என்று கூறி இந்திய மேலாதிக்க எதிர்ப்பை மலையாளி எதிர்ப்பாக மாற்றுகிறார்கள். இதன் மூலம் இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களுக்கு மறைமுகமாக நற்சான்றிதழ் கொடுக்கின்றார்கள். அதிகாரிகள் மலையாளிகள் என்றால், அமைச்சர்கள் தமிழர்களாக இருந்தார்களே அதற்கென்ன சொல்கிறார்கள்?

ப.சிதம்பரத்தில் தொடங்கி, தி.மு.க. அமைச்சர்கள், கடைசி நேர விற்பனையை முடித்துக் கொண்டு கல்லா கட்டிய பாமக ஆகிய தமிழர்கள் அங்கே மட்டைக்கு நாலாய் கிழித்தது என்ன? தமிழர்கள் அமைச்சர்களாக இருந்ததனால் தான் ஈழத்தமிழனுக்கு இந்த கதி என்று சொல்லாமல், இவர்களை சந்தர்ப்பவாதிகள், பதவிப் பித்தர்கள் என்று தனிநபர்களாக விமரிசித்து விட்டு, நாராயணன் முதல் டீக்கடை நாயர் வரை என்று அங்கே மட்டும் ஒரு இனத்துக்கு எதிராக நஞ்சு கக்குவது ஏன்?

கொழும்புக்குப் பறந்து போய் இந்தியாவின் மேலாதிக்கத்தைப் பற்ற வைக்கும் சிவசங்கர் மேனனும், பாதித் தூக்கத்தில் எழுந்து பாய்லர் அடுப்பைப் பற்ற வைக்கும் டீக்கடை மலையாளியும் ஒரே வர்க்கமா? இல்லை இங்கே தமிழர்கள் டீக்கடை வைக்கக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? மாற்றான் தோட்டத்து மல்லிகை புகழ் சரவணபவன் தமிழ் முதலாளி, மேசை துடைப்பதற்கு தமிழர் அல்லாத மாற்றாரை, நேபாளிப் பையன்களை வைத்திருக்கின்றாரே, அதென்ன தமிழரின் பெருந்தன்மையா? குறைந்த கூலிக்கு ஆள் தேடும் உழைப்புச் சுரண்ட லா?

தமிழனுக்கு ஒன்று என்றால் கேட்க நாதியில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் இனவாதிகள். பிற இன மக்களைக் குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா? நாமக்கல் தவிட்டெண்ணெய் ஆலையில் தீ விபத்தில் கருகிச் செத்தார்கள் பீகார் தொழிலாளிகள். மலையாளி டீக்கடைக்காரரைப் பார்த்து காயும் தமிழினவாதிகள், கருகிய பீகார் தொழிலாளிகளின் உழைப்பில் பணம் கொழிக்கும் தமிழ் முதலாளியைக் கண்டு காய்வதில்லையே, இது தமிழின உணர்வா, அல்லது முதலாளித்துவ வர்க்க உணர்வா? ஆதிக்க வர்க்கம் மட்டுமல்ல,

ஆதிக்க சாதித்தன்மையும் தமிழினவாதத்தின் உள்ளடக்கமாக உள்ளது. டீக்கடையில் மலையாளி, உணவு விடுதி யில் கன்னடன், உயர் பதவியில் தெலுங்கன், பிற இனத்தான் என்று ஒவ்வொரு துறைக்கும் லிஸ்ட் வைத்துக் கொண்டு சோற்றுக் கையால் சொடுக்கு போடும் இந்தப் பேர்வழிகள் பீ அள்ளும் தெலுங்கன் லிஸ்டை பீச்சங்கையால் கூடக் காட்டுவதில்லையே! “தமிழன் பீயை தெலுங்கன் அள்ளலாமா?” என்று ஆர்ப்பரிப்பதில்லையே! கக்கூசுக்குள் மட்டும் முக்காமல் முனகாமல் தமிழினவாதம் பக்காவாக வெளியேறும் மர்மமென்ன?

பிற இனமக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினர் காலந்தோறும் மலம் அள்ளுவதைக் கூசாமல் ஏற்கும் இனவாதத்தால், டீ போடுவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாதாம்! இனவாதத்திற்குள் ஒளிந் திருக்கும் சாதியக் கண்ணோட்டத்தை, திருப்பூரில் உலகத் தமிழின மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த ஒரு தோழர் மேடையிலேயே சுட்டிக்காட்டிப் பேச, தமிழ்ச் சான்றோர் விருது வாங்க வந்திருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற முதலாளித் தமிழரின் மனம் நோகுமென்றும், இது அநாகரிகமென்றும் அங்கேயே மாவீரன் நெடுமாறன் பேசிய தோழரைக் கண்டித்தது மறக்க முடியாத தமிழ்தேசிய நினைவல்லவா?

தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி? தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடை யாது என்ற நிலை இருக்கும் போது, இதை நேர்மையாகப் பரிசீலித்து, நேர்மறையில் ஆதிக்க வர்க்க, சாதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், தமிழின ஓர்மைக்கும் போராடுவதுதான் நேர்மையானது. அதை விடுத்து பிற மாநில, தேசிய இன மக்களைத் தமிழின வளர்ச்சிக்குத் தடையாகவும், பகையாகவும் காட்டிக் கொடுப்பது என்பது ஆளும்வர்க்கத்தின் ஐந்தாம் படை வேலை.

எப்படி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பாரதிய ஜனதா கும்பல் சாதியப் பிளவுகளைக் கடந்து இந்துக்களை ஒன்றுதிரட்ட முடியாதென்பதால், முசுலீமையும் கிறித்தவரையும் எதிரியாகக் காட்டி மதவெறிக்கு ஆள் பிடிக்கிறதோ, அதே போல தமிழின ஓர்மைக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளை எதிர்த்துப் போராடும் நேர்மையில்லாத இனவாதிகள் பிற தேசிய இன மக்களை எதிரியாகக் காட்டியே தமிழின ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

ஈழத் தமிழன் செத்ததற்கு வடநாட்டு தலித் கேட்டானா என்கிறார் மணியரசன். இங்கிருக்கும் தமிழன் (தலித்) செத்ததற்கு சக தமிழர்கள் என்ன செய்தார்கள்? செந்தட்டி தலித் படுகொலைக்கு தமிழகம் குமுறியதா? கயர்லாஞ்சிக்கு முற்றுகை உண்டா?

பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சினையில் ஆதிக்க சாதிவெறியைக் கடைபிடிக்கும் சாதிக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நிர்ப்பந் தத்தை ம.க.இ.க முன்வைத்தவுடனேயே.. ஆகா இது மறைமுகப் பார்ப்பனியம் என்கிறார் மணியரசன். பார்ப்பன தேசிய நாயகன் ராமனை தமிழ் பழங்குடி கடவுள் என்று அவர் கொண்டாடுவதும், பார்ப்பன இந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் ஒரு அம்சமான சாதியமைப்பு முறையை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் பேசுவதும் நேர்முகப் பார்ப்பனியம் அல்லவா?!

இந்த லட்சணத்தில் வடநாட்டு தலித் மாயாவதி போன்றவர்கள் இந்தியா என்பதை ஏற்றதன் மூலம் பார்ப்பனியத்தை ஏற்று விட்டார்கள்.. எனவே இனி தமிழன் யாரையும் நம்பிப் பயனில்லை. உலகெங்கும் உள்ள தமிழன் தானே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. .. வா.. வா.. தமிழ் நாட்டு விடுதலைக்கு தயாராவோம் என்று துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் மணியரசன்.

இங்கிருக்கும் தனிச்சுடுகாடு, தனிக்குவளை, தனிக்கோவில், உள்ளிட்டவைகளைத் தகர்க்க கொங்கு வேளாளக் கவுண்டர்களையும், தேவரையும், இன்ன பிற ஆதிக்கசாதி வெறியையும் அகற்றுவோம் வா! அதுவே தமிழ் தேசியக் கடமைக்கு முதற்படி என்று வீதியில் இறங்கத் தயாராக இல்லாமல், வடக்கு முதல் தெற்கு வரை இந்திய தேசியமாகக் காட்சியளிக்கும் சாதிவெறியைத் தகர்க்காமல் பிற தேசிய இன மக்களைப் பகையாகக் காட்டி தமிழ்த் தேசியத்தைக் கட்டித் தூக்குவதற்காக சாதிப் பூணூலையே இனமாகத் திரிப்பதற்கு இவர்கள் படாதபாடு படுகிறார்கள்.

“தமிழன் வாழாத நாடில்லை.. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..” என்பது இவர்களுடைய முத்திரை முழக்கம். மலையாளிக்கும், தெலுங்கனுக்கும், மராத்தியனுக்கும் எல்லா தேசிய இனமக்களுக்கும் தனித்தனியாக ஒரு நாடு இருப்பது போலவும், தமிழனுக்குத்தான் தனிநாடு தரவில்லை போலவும் என்ன ஒரு பம்மாத்து? இந்தியாவின் எல்லா இனங்களின் மீதும் தான் இந்து தேசிய ஒடுக்குமுறை இருக்கிறது, சுய நிர்ணய உரிமை இல்லை. தமிழன் மட்டுமா, பல்வேறு இன மக்களும் தான் இந்தியா முழுவதும், ஏன் இந்தியாவைத் தாண்டியும் எல்லாத் திசைகளிலும் நாடோடிகளாகப் பிழைப்பு தேடி ஓடுகிறார்கள்.

பீகார், ஒரிசா தொழிலாளிகள் தமிழகத்திலும், தமிழர்கள் மகாராஷ்டிரா கடலை மிட்டாய் கம்பெனிகளிலும், ஆந்திரா, பெங்களூரு குவாரிகளிலும், நேபாளிகள் கொட்டாம்பட்டியிலும், ஆசிய நாட்டு மக்கள் வளைகுடாவிலும் என இனம் கடந்து, எல்லை கடந்து மக்களை விரட்டுகிறது மூலதனம். உலகமயமாக்கத்தால் விவசாயமும் உள்ளூர் தொழில்களும் அழிக்கப்பட்டு உழைக்கும் மக்கள் விசிறியடிக்கப்படுவது தமிழனுக்கு மட்டுமா நடக்கின்றது? இந்த நிலைமையை மாற்ற, யதார்த்தத்தில் வர்க்கமாக மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, “தமிழா.. தமிழா” என்ற தனியாவர்த்தனம் வாசித்து என்ன பயன்?

“வந்தாரை வாழவைத்த தமிழ்நாடு இது! இன்று தமிழன் கூலிவேலைக்கு கேரளா போகின்றான்” சொந்த மண்ணில் வாழ முடியாமல் பிழைப்பு தேடி ஓடும்படி தமிழகத்தை விட்டு அவனைப் பிடித்துத் தள்ளியது யாரோ அவர்களை எதிர்த்தல்லவா போராட வேண்டும்? யார் பிடித்துத் தள்ளியது? மலையாளியா, கன்னடனா? கேரளா எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குப் போகும் தேனி மாவட்ட விவசாயிகளைக் கேட்டுப் பாருங்கள். “இங்கேயை விட அங்கே கூலி அதிகம், தொழிற்சங்கம் இருப்பதால் ஏதாவது ஒன்று என்றால் தட்டிக் கேட்கிறார்கள், மரியாதை இருக்கிறது” என்று எதார்த்தமாக அவர்களுடைய அனுபவத்தை விளக்குவார்கள். இந்த உழைப்பாளித் தமிழர்களெல்லாம் இனத்துரோகிகளா?

வந்த தொழிலாளிகளையெல்லாம் எந்த மாநிலத்து முதலாளியும் கசக்கிப் பிழிவதுதான் உண்மை. சென்னை பாலம் கட்டும் வேலைகளிலும் வடசென்னை கனரகத் தொழில்களிலும் வாட்டி வதைக்கப்பட்டு, உயிரையும் இழக்கும் நிலை தான் வடநாட்டுத் தொழிலாளர்களுக்கு. இதே நிலைதான் வேறு மாநிலம், நாடுகளுக்குப் பிழைக்கப் போகும் தமிழ்த் தொழிலாளிகளுக்கும்!

“வந்தாரையெல்லாம் வாழ வைத்தது தமிழகம்” என்று வசனம் வேறு! படையெடுத்து வந்த மன்னர்களையும், பார்ப்பனர்களையும் ஆதிக்க சாதிகளையும் அவர்களது கலாச்சாரத்தையும் பன்னாட்டு மூலதனத்தையும் வாழ வைத்துவிட்டு இந்த மானக்கேட்டை பெருந்தன்மை போல சித்தரித்துக் கொள்கிறார்கள். அன்றைய மன்னர்கள் மட்டுமா, இன்றைய கல்வி வள்ளல்களும் கூடத்தான் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில் தமிழர்களை மட்டுமே சேர்க்காமல், எல்லா இனத்துக்காரனுக்கும், வெளிநாட்டாருக்கும் தாராளமாக சீட்டு கொடுக்கிறார்களே, இது வந்தாரை வாழ வைக்கும் பண்பா, அல்லது “வந்தவரை’ இலாபம் என்று பணத்தை அள்ளும் வணிகமா? கல்விக் கொள்ளைக்கு வட நாட்டு மாணவர்களை தமிழ் முதலாளி வளைத்துப் பிடிப்பதில் வெளிப்படுவது வர்க்கமா? இனமா?

சுரண்டும் முதலாளி தமிழனாய் இருந்தால் புரவலர் என்று பல்லைக் காட்டுவது, சுரண்டப்படும் தொழிலாளி வேறு இனம் என்பதால் பல்லைக் கடிப்பது இதுதான் தமிழ்த்தேசிய குடி நாயகப் பண்போ?

தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், நாம் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண் டும். அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும். தமிழன் அன்று கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான்.. என்று ஊரை அடித்து உலையில் போட்டதைப் பெருமையாகப் போற்றுகிறார்கள். யவனப் பெண்களை அடிமையாக வாங்கி அரண்மனை, அந்தப்புரங்களில் “கொண்டி மகளிர்’ ஆக்கியதை எண்ணிப் புளகாங்கிக்கிறார்கள்.

“பேராற்றல், பெரும்படை, வாள்வீச்சு, வேல்வீச்சு எல்லாமிருந்தும், ஏங்க பின்னே தமிழன் ஆட்சி வீழ்ந்தது?” என்று கேட்டால், “பார்ப்பான் பொம்பளையக் காட்டி மயக்கிட்டான்’ என்று பதிலளிக்கிறார்கள் “ஆம்பிள சிங்கம்தான்.. ஆனா பொம்பள விசயத்துல வீக்கு!” என்பது போல. மன்னர்கள் என்றழைக்கப்படும் இத்தகைய திருடர்களையும் பொறுக்கிகளையும் இனப்பெருமையின் நாயகர்களாகச் சித்தரிப்பவர்களிடமிருந்து ஒரு முற்போக்கான இன விடுதலையை எதிர்பார்க்க முடியுமா?

வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களை அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை. அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் மன்னராட்சி மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சுயேச்சையான முதலாளித்துவம் இந்தியாவில் வளரவில்லை.

ஆங்கிலக் காலனியாதிக்கவாதிகளால் மேலிருந்து திணிக்கப்பட்ட முதலாளித்துவ அரசு வடிவமும், வெள்ளையனுக்குத் துணை நின்ற தரகு முதலாளித்துவ வர்க்கமும், அவர்களுடைய இந்து தேசியமும் எந்த இனத்திலும் ஜனநாயகப்பூர்வமான இன உணர்வைத் தோற்றுவிக்கவில்லை. இதனை இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கிறது என்பதே உண்மை. அதன் எதிரிகளான ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடாமல், மலையாளி.. கன்னடன் என்று இனவெறியைத் தூண்டி விடுவதுதான் இவர்களது அரசியலாக இருக்கிறது.

தமிழினம் தனது உரிமைகளை ஒடுக்கும் அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், பிற தேசிய இன மக்களிடம் தங்களது நியாயத்தை வலியுறுத்தி அய்க்கியப்படுவதன் மூலமுமே தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும். “இதைச் செய்யத் தவறுவதுடன் மலையாளி, கன்னடன், தெலுங்கன் என்று மக்களுக்கு இடையிலான பிளவையும், பிரிவையும் அதிகப்படுத்துவது ஆளும் வர்க்கத்துக்கு உதவுவதாகும்” என்று நாம் கூறினால், உடனே, “தமிழன்னா இளிச்சவாயனாடா! பட்டத்து யானையை அவுத்து விடுங்கடா” என்று ஆர்ப்பரிக்கிறார்கள். எப்போது வாயைத் திறந்தாலும் “அவன் மலையாளி, இவன் கன்னடன், அதோ பாரு தெலுங்கன்” என்று உசுப்பேற்றி விட்டு அடிவாங்கும் போது மட்டும் “அவன் கேட்டானா? இவன் கேட்டானா?” என்று பேசுவதில் அர்த்தமுள்ளதா?

இன்னும் ஒருபடி மேலே போய், “ராஜ் தாக்கரே பாணிதான் சரி. அவன் பீகாரிகளை அடிச்சு துரத்தியது மாதிரி இங்கேயும் நடக்க வேண்டும்” என்கிறார்கள். இந்த மனநிலை ஒரு குட்டி பாசிசம் இல்லையா? மும்பைக்குப் பிழைக்க வரும் பீகார் தொழிலாளிகளை பிய்த்து உதறும் சண்டியர் ராஜ் தாக்கரே யார்? பால் தாக்கரேக்கு போட்டியாக முகேஷ் அம்பானியால் வளர்த்து விடப்படும் ஏவல் நாய். குஜராத்திலிருந்து வந்த பனியாவும், இந்தியாவையே கொள்ளையடிக்கும் தரகு முதலாளியுமான அம்பானியை அனுமதித்து விட்டு, அவனிட ம் காசும் வாங்கிக்கொண்டு குரைக்கும் இந்தப் பிராணி, மராத்திய இனவுணர்வின் எடுத்துக்காட்டா, தரகு முதலாளியின் கைக்கூலியா? ராஜ் தாக்கரேயைப் பார்த்துப் புல்லரிக்கும் இவர்களுக்கு வட்டாள் நாகராஜுவப் பார்த்தும் புல்லரிக்குமா?

ராஜ் தாக்கரேயும், வட்டாள் நாகராஜுவும் ஒரு வகையில் யோக்கியர்கள். தங்களைப் பச்சையான ஆளும்வர்க்க இனவெறியர்களாக மட்டும்தான் அவர்கள் அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் படத்தை வைத்துக் கொண்டு தங்களைப் பொதுவுடைமைக் கட்சி என்று கூறிக்கொள்வதில்லை. வர்க்க அரசியலுக்கு நேர் எதிரான இனவாத அரசியலைப் பேசிக்கொண்டே, பொதுவுடைமைக் கட்சி போல பம்மாத்துப் பண்ணும் இந்த வேலையைத்தான் இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன செய்கின்றது.

இடதுசாரி வேடமிட்ட இந்த இனவாதிகளுக்கு ஈழம் உட்பட எந்த ஒரு விவாதத்திலும், நாம் வர்க்கம் என்று சொன்னா எரிச்சல் வருகிறது. ஈழ விடுதலையை நசுக்குவதில் இந்திய அரசின் வர்க்கநலன் இருக்கிறது என்றால், இது போகாத ஊருக்கு வழி என்று நம்மைப் புறம் பேசி விட்டு, ஈழ விடுதலையை வாங்கிவர இவர்கள் போகும் வழி கடைசியில் போயஸ் கார்டனில் போய் முடிகிறது. ஈழமாக இருக்கட்டும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினையாக இருக்கட்டும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் நம்மைப் போல உரிமைகள் மறுக்கப்படும், ஒட்டச் சுரண்ட ப்படும் பிற தேசிய இன மக்களையும் விலக்காத தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தின் நீர் உரிமையைப் பிடுங்கும் பிற மாநில அரசுகள், அரசியல் நோக்கத்துக்காக இனவுணர்வை விசிறி விட்டாலும், அந்தத் தண்ணீரை மக்களுக்கு வாரி வழங்குவதில்லை.

மாறாக அந்த மாநில தொழில் முதலைகளும், பன்னாட்டுக் கம்பெனிகளுமே இதனை உறிஞ்சுகிறார்கள் என்பது எதார்த்தம். இங்கே சென்னைக் குடிநீருக்கு என்று கொண்டுவரப்படும் வீராணம் தண்ணீர் ஐ.டி பார்க்குகளுக்கும், புதிய பணக்கார சாடிலைட் நகரங்களுக்கும் திருப்பி விடப்படுவதைப் போலத்தான்.

வர்க்க ஒடுக்குமுறையின் மருவிய வடிவமாக இன ஒடுக்குமுறை வெளிப்படுவதை இனவாதிகள் அங்கீகரிப்பதில்லை. பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்தின் கொலைக்கருவியாக உள்ள இந்த அரசை, ஏகாதிபத்திய அடிமைத்தளையை அழித்தொழிக்கும் பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டத்தையும் அவர்கள் ஏற்பதில்லை. அதனால்தான், ஒபாமாவிடம் பூங்கொத்து தந்தோ, ஜெயலலிதா, அத்வானியின் காது கடித்தோ இன விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம், பார்ப்பன மதவெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டாமல், “போதையில் கொஞ்சுவானாம், சுதி இறங்குனா புள்ளையப் போட்டு அடிப்பானாம்” என்ற கதையாக, ஒரு மூச்சு பழம்பெருமையும் சவடாலும் பேசுகிறார்கள், பிறகு ” தமிழனுக்கு சூடு இல்லை, சொரணையில்லை” என்று வசை பாடத் தொடங்குகிறார்கள்.

______________________________________________

· பரிதி, புதிய கலாச்சாரம் – செப்டம்பர் 2009
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !

The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !

டெர்மினேட்டர்களாகவும், ராம்போக்களாகவும் அவதரித்து தீயவர்களோடு சண்டையிட்டு உலகை மாபெரும் அபாயத்திலிருந்து அமெரிக்கர்கள் காப்பாற்றுவதாக வரும் ஹாலிவுட் திரைப்படங்களின் இடையே எதார்த்த வாழ்க்கையின் கதைகளைச் சொல்லும் படங்களும் அபூர்வமாக வருவதுண்டு. அவ்வாறான ஒரு படம் தான் 2008–இல் வெளியான ’தி ரெஸ்லர்’(THE WRESTLER).

நரம்புகள் தளர்ந்து, இரத்தத்தின் வேகம் குறைந்து, வயோதிகத்தின் வாயிலில் நிற்கும் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரனின் வாழ்க்கையைப் பேசும் அக்கதையின் நாயகன் ராண்டி. வில்லன் இல்லாத இத்திரைக்கதையில் சூட்சுமமான எதிர்நாயகன் ஒருவனும் உண்டு. பிரமாண்டமான அமெரிக்கப் பொழுதுபோக்குத் தொழில் எனும் அந்த வில்லன் தனது நாயகர்களைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் வலியை இந்தத் திரைப்படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

நிஜ உலகில் நமக்குக் கடும் ஆச்சரியத்தை உண்டாக்கும் எத்தனையோ அம்சங்களின் மறுபக்கத்தை, நம்மிடம் இருந்து மறைக்கப்படும் பக்கத்தை வெள்ளித்திரையின் வெளிச்சத்தில் காட்டுகிறது ’தி ரெஸ்லர்’. அதற்கு முன் ரெஸ்லர் திரைப்படத்தின் கதைச் சுருக்கத்தை பார்ப்போம்.

The Wrestler 2008
Director: Darren Aronofsky
Writer: Robert D. Siegel
Stars: Mickey Rourke, Marisa Tomei and Evan Rachel Wood

ராண்டி என்கிற ரோபின் ராம்ஸின்ஸ்கி எண்பதுகளில் நட்சத்திரமாய் விளங்கிய தொழில்முறை மல்யுத்த வீரன். இருபது வருடங்களும் இளமைத் துடிப்பும் வழிந்து ரத்தம் சுண்டிப் போன பின் இப்போது அவன் ஒரு பல்பொருள் அங்காடியின் வேலை செய்து அன்றாட ஜீவனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் பழைய வாழ்க்கையையும், இரசிகர்களின் ஆரவாரத்தையும், அது கொடுத்த புகழ் போதையையும் மறக்க முடியாத அவன் வார இறுதி நாட்களில் சிறு நகரமொன்றின் சிறிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் பங்கு கொள்கிறான்.

ஒரு கட்டத்தில் அவனது ஒப்பந்ததாரர்கள் அவன் புகழுடன் இருந்த காலத்தில் மல்யுத்த மேடைகளில் அவனது பிரதான  எதிரியாக இருந்த அயதுல்லா கொமேனி என்பவனோடு ஒரு போட்டியை ஏற்பாடு செய்கிறார்கள். இளமை தொலைந்து உடல் தளர்ந்து போன நிலையில் இருக்கும் ரேண்டி, இந்தப் போட்டிக்காக தனது உடலை ஊக்க மருந்துகளின் துணையோடு தயாரிக்கிறான். ஆனால் அந்தப் போட்டிக்கு முன் உடலில் செலுத்திய ஊக்கமருந்துகளின் விளைவாக அவனுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

அதன் பின் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ளும் ராண்டி, இனிமேலும் மல்யுத்தப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்வது தற்கொலைக்கு ஒப்பானது என்று மருத்துவர்கள் தெரிவித்து விடுகிறார்கள். நட்சத்திரமாய் மிளிர்ந்து ஒளி வீசிய அவனது கடந்தகாலப் பெருமைகளோடு நிகழ்கால எதார்த்தம் முரண்படுகிறது – அதன் முடிவில் எதார்த்த நிலைமைகளே ஜெயிக்கிறது. ராண்டி தனது வார இறுதி நாட்களில் ஒரு அங்காடியில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிக்குச் சேர்கிறான்.

மல்யுத்த மேடையின் ஒளிவெள்ளமும், இரசிகர்களின் ஆரவாரமும் புடைசூழ வாழ்ந்த ராண்டி முதன்முறையாக தனித்து விடப்படுகிறான். கதையில் அவனுக்கு ஒரு தோழியும் இருக்கிறாள். ஸ்ட்ரிப் க்ளப் எனப்படும் உடலைக் காட்டி முக்கால் நிர்வாணத்தோடு நடனமாடுபவளாய் ஒரு பாரில்  பணிபுரியும் அவளும் ரேண்டியைப் போலவே நடுத்தர வயதின் வாயிலில் நிற்பவள் தான். உடல் தளர்ந்து தனிமையில் வாடும் ராண்டிக்கு அவளின் நட்பு  ஆறுதலாய் இருக்கிறது. அவளது யோசனையின் பேரில் முன்பு அவனால் கைவிடப்பட்ட  ஒரே மகளைச் சந்தித்து மீண்டும் தனது உறவைப் புதுப்பிக்கிறான் ராண்டி.

ஒரு கட்டத்தில் தனது பழைய வாழ்க்கையை மறக்க முடியாத ராண்டி தனது மல்யுத்த நண்பர்களைத் தேடிப் போகிறான். அங்கே போதை மருந்து உட்கொள்ளும் அவன், மகளைச் சந்திக்க வருவதாகச் சொன்ன நேரத்தில்  சந்திக்கத் தவறி விடுகிறான். தனது பதின்ம வயதுகளில் தந்தைப் பாசத்திற்காக ஏங்கிய அந்தப் பெண், மீண்டும் சிறிதாய் துளிர்விடத் துவங்கிய அந்த நம்பிக்கை முளையிலேயே கருகியதால் ஏமாற்றமடைகிறாள். ராண்டியைப் புறக்கணிக்கிறாள்.

இதற்கிடையே நடனமாடும் பெண் தோழியிடம் தன் காதலை வெளியிடுகிறான், ராண்டி. ஒரு விடலைச் சிறுவனுக்குத் தாயான அவளோ முதலில் அதை மறுக்கிறாள். காதலும் மறுக்கப்பட்டு மகளும் புறக்கணித்து விடும் சூழலில் கடுமையாக ஏமாற்றமடையும் ராண்டி, சொந்த வாழ்க்கையின் உறவுகள் தனக்கு ஒட்டாது என்று முடிவு செய்கிறான். தனது வாழ்வும், சாவும் மல்யுத்த மைதானத்தில் என்று தீர்மானிக்கிறான். தற்கொலைக்கு ஒப்பான ஒரு முடிவை எடுக்கிறான். மீண்டும் ஒரு போட்டியில் கலந்து கொள்கிறான். அது அயதுல்லா கொமேனி எனும் வீரனுடன் முன்பு திட்டமிடப்பட்ட போட்டி.

அந்தப் போட்டியின் துவக்கத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உரையை நிகழ்த்தும் ராண்டி, தன்னை இத்தனை ஆண்டுகளாக ரசித்து ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறான். தனது உலகம் இதுதானென்று அறிவிக்கிறான். போட்டி துவங்குகிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்ட இதயம் போட்டியின் முரட்டுத்தனங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. ஊசியாய்க் குத்தும் வலியால் தடுமாறும் ராண்டி, ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தில், இரசிகர்களின் ஆரவாரத்தோடு (அயதுல்லா பெயர் ஈரானோடு சம்பந்தப்பட்டதால் ரசிகர்கள் யு.எஸ்.ஏ என்று கத்துகிறார்கள்) தட்டுத்தடுமாறி பக்கவாட்டுத் தடுப்பின் மீதேறி தனது எதிரியின் மேல் பாய்கிறான்.. அதோடு திரைப்படம் முடிகிறது.

The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !

மல்யுத்தம்: விளையாட்டா, வெறியா?

ற்காப்பு நடவடிக்கை அல்லது சண்டை என்பது எப்போது விளையாட்டாகிறது – எப்போது கலையாகிறது? உடலின் இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட லயத்தில் தொடர்ச்சியாக இயங்கும் போது உண்டாகும் நளினம் உடற்தசைகளோடு ஊறி, உடலையும் மனதையும் ஒரு பக்குவத்திற்குக் கொண்டு வந்து ஒரே நேர் கோட்டில் நிறுத்துகிறது. அப்போது அதன் உள்ளடக்கமாய் இருக்கும் வன்முறை என்பது இயல்பாகவே உதிர்ந்து, ஒரு கலையாகப் பரிணமிக்கிறது. இதுவே ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட, பாதுகாப்போடு நடக்கும் போது விளையாட்டாகிறது.

கலை எனும் அம்சத்தில் புறவயமாயுள்ள சமூக உலகின் சவால்களுக்கு ஒருவனின் அகநிலைமைகளைத் தயாரிக்கிறது – விளையாட்டு எனும் அம்சத்தில் புற உலகின் அழுத்தங்களில் இருந்து கண நேர விடுதலையையும், உடலுக்கும் மனதுக்குமான புத்துணர்வையும் அளிக்கிறது. பல ஆண்டு தொடர் பயிற்சிகளின் ஊடாக ஒருவனுக்குக் கிடைக்கும் ஆற்றல் புறநிலையில் மனிதர்களின் மீதான அன்பாக மிளிர்கிறது.

அதே கலை வணிகமாகவும், இலாபமீட்டும் தொழிலாகவும் மாறும்போது அது தன்னோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் உண்டாக்கும் விளைவுகளைத் தான் ரெஸ்லர் திரைப்படம் நேர்மையாகக் காட்சிப்படுத்துகிறது. வீரன் ஒருவனுடன் ராண்டி மோதும் காட்சியைக் காணும் நமக்கு நரகலைக் கண்டது போல் அருவெறுப்புத் தோன்றக் கூடும். கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் வைத்துத் தாக்கிக் கொள்கிறார்கள். அந்த வீரன் ஸ்டாப்லரின் சிறிய ஊசிகளைக் கொண்டு ரேண்டியின் உடலெங்கும் குத்துகிறான். சுற்றியிருக்கும் இரசிகர்களோ கத்தி வெறியேற்றுகிறார்கள்.அந்த அரங்கத்திலிருந்த இரசிகர்களின் தேசியவெறியை மேலும் தூண்டி, தன்மேல் ஒரு பரிதாபத்தைச் சம்பாதித்துக்கொள்ள ரேண்டி தன் உடலில் காயங்களை தானே உண்டாக்கிக் கொள்கிறான்.

The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !மல்யுத்தம் என்பது விளையாட்டு என்பதைக் கடந்து தொழிலாகவும், அதிலும் குறிப்பாகக் கேளிக்கைத் தொழிலாகவும் இருப்பதன் இரகசியம் இந்த இரத்த இரசிகர்களின் வக்கிர ரசனையின் அடிப்படையில் தான் இருக்கிறது. WWE, TCW, TNA போன்ற கார்ப்பரேட் மல்யுத்தக் கேளிக்கை நிறுவனங்கள் அந்த இரசனையை மேலும் மேலும் வெறியேற்றிப் பயன்படுத்திக் கொள்கின்றன. காசுக்கு ஏற்ற தோசை என்பது போல் அதிக வலியையும், வேதனையையும் தன் உடல் மேல் ஏற்றுக் கொள்பவரே திறன்மிக்க வீரராக இரசிகர்களால் போற்றப்படுகிறார்.

மேடைகளில் காட்டும் வெறித்தனம் மட்டுமே போதாது என்பதால், இக்கேளிக்கை விளையாட்டை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வீரர்களிடையே நடக்கும் மோதல்களுக்கு நாடகம் போல ஒரு கதைப் பின்னணியையும் உருவாக்குகின்றன. அதற்காகவே ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் போல் கதை எழுதவென்றே தனிப்பிரிவையும் கூட சம்பளம் கொடுத்துப் பராமரிக்கின்றன. உதாரணமாக, எதார்த்த உலகில் அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் போல் சித்தரிக்கப்படும் மல்யுத்த வீரர்கள் வில்லன்களாகவும், அமெரிக்க வீரர்கள் நல்லவர்கள் போலவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

இவ்வகையில் தான் சாமானிய விளையாட்டு ரசிகர்களான அமெரிக்கர்களைக் கூட போதை தலைக்கேறிய வெறியர்களாக திட்டமிட்டு மாற்றுகிறார்கள். பே பெர் வ்யூவ் எனப்படும் காசு கொடுத்து மல்யுத்தப் போட்டிகளைக் காண்பவர்கள் மூலம் கிடைக்கும் வருமானமே இந்த பில்லியன் டாலர் தொழிலில் பிரதானமானது எனும் செய்தியிலிருந்தே இது சராசரி அமெரிக்கர்களிடையே எந்தளவுக்கு செல்வாக்குச் செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சுமார் ஐந்தாயிரம் கோடிகளைக் குவிக்கும் இத்தொழிலில் விற்பனை செய்யப்படும் பண்டம் வெறித்தனமும், மிருகத்தனமும். அமெரிக்காவில் மட்டுமல்ல – அதை நுகர்வது உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் இரசிகர் பட்டாளம் என்பது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அது தான் உண்மை. அமெரிக்காவின் மேலாதிக்க அரசியல் நலனுக்கேற்ற விதத்தில் இத்தகைய கேளிக்கைத் தொழில்கள் உலகெங்கும் தமது சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்திருக்கின்றன.

The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !

ரத்தம்.. மேலும் ரத்தம்… மேலும் மேலும் ரத்தம்..!

அமெரிக்காவில் மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான தொழில்முறை மல்யுத்த வீரர்களும், தொழில் முறை பாடிபில்டிங் வீரர்களும் அனபாலிக் ஸ்டிராய்டுகளின் பயன்பாட்டினால் மரணமடைந்துள்ளனர். இது மட்டுமல்லாமல், தங்கள் உடலின் மேல் தாங்களே வலிந்து திணித்துக் கொள்ளும் வலியைப் போக்க அதீதமான வலி நிவாரணி மருந்துகளையும் உட்கொள்கிறார்கள். 2004–ஆம் ஆண்டு யு.எஸ்.ஏ டுடே எடுத்த நேர்காணலில் தான் நாளொன்றுக்கு 200 வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வதாக ஸ்காட் லெவி என்ற வீரர் தெரிவிக்கிறார்.

போதை மருந்துகளாலும், ஊக்க மருந்துகளாலும் செத்துப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் நம் நாயகன் ராண்டியைப் போலவே நடுத்தர வயதினர் அல்லது நடுத்தர வயதைக் கடந்தவர்கள். உடலின் ஒத்துழைப்பு விடைபெற்றுச் செல்லும் காலகட்டத்தில் நுகர்வோர்களான ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய மருந்துகளின் துணையின்றி வேறு வழியில்லை. வயோதிகத்தின் எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு ஒரு சராசரி வாழ்க்கையை இவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் பல்பொருள் அங்காடியில் வேலைக்குச் செல்ல முயலும் ராண்டிக்கு ஒவ்வொரு கணமும் மல்யுத்த மேடையின் ஜொலிக்கும் ஒளி வெள்ளமும், ஆரவாரிக்கும் ரசிகர்களின் கூச்சலும் காதுகளுக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இறுதிக்காட்சியில் ராண்டி தற்கொலைக்கு ஒப்பான அந்த முடிவை எடுக்க பழைய வாழ்வின் மீதான ஏக்கம் ஒரு காரணம் என்றால், இன்னொரு புறம் ரசிகர்களும் காரணம். இது ஒருவிதமான கையறு நிலை. தானே உருவாக்கிக் கொண்ட மரணக்குழி.

விளையாட்டு என்பது தொழிலாக மாற்றப்பட்டு விட்ட நிலையில், அதன் நுகர்வோரின் சந்தையின் முன் ரகரகமான வகையினங்களைக் கடைபரப்ப வேண்டிய தேவை எழுகிறது. அமெச்சூர் மல்யுத்தத்தில் ஒரு வீரரின் தொழில் நுணுக்கமும், அறிவாற்றலும் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்றால், இங்கே மனித இயல்பைத் தாண்டிய அசுர பலம் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கிறது. ஒரு வீரன் எத்தனை அடி வாங்குகிறான், எத்தனை ரத்தம் சிந்துகிறான், அந்த வலியையும் தாண்டி எப்படி ஜெயிக்கிறான் என்பதில் இருந்தே அவன் தனது வாடிக்கையாளர்களான ரசிகர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு மனித உடலின் சாத்தியங்களையெல்லாம் கடந்த ஒரு வலிமையும், கொடூரத்தனமும் தேவைப்படுகிறது. இயல்பான மனித உடலால் அது சாத்தியப்படாது என்கிற நிலையில் தான் போதை மருந்துகளை வீரர்கள் நாடுகிறார்கள். பார்வையாளர்களின் மன வக்கிரங்களை ஆற்றுப்படுத்த மேடையிலேயே இரத்தம் சிந்திக் காட்ட வேண்டும். இதற்காக கையுறைகளுக்குள் சிறிய பிளேடுகளை மறைத்து வைத்துக் கொண்டு தங்கள் முகங்களைத் தாங்களே கீறி இரத்தம் சொட்டச் சொட்ட மேடையில் நிற்கும் மல்யுத்த வீரனை வெறியுடன் கூடிய ரசிகர் கூட்டம் ஆரவாரித்துப் போற்றுகிறது. படத்தில் ராண்டியும் இந்த உத்தியைக் கையாள்கிறான்.

பண்டைய ரோம நாகரீகத்தில் கிளாடியேட்டர்கள் எனப்படும் அடிமைகளை ஒருவரோடு ஒருவர் மோத விட்டு அவர்கள் மடிந்து விழுவதைக் கண்டு ரசிக்கும் காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தின் நவீன வடிவம் தான் தொழில்முறை மல்யுத்தம். அன்றைய ரோம கிளாடியேட்டர்களின் கதை ஓரிரு போட்டிகளில் முடிந்து விடும். வலியும், வேதனையும் கண நேர அவஸ்தை தான். ஆனால், தொழில்முறை மல்யுத்த வீரர்கள் சுலபத்தில் இறந்து விடுவதில்லை. இந்த நரக வேதனையையும் மரணவஸ்தையையும் தங்களோடு சுமந்து திரிகிறார்கள் – தமது சுற்றாத்தாருக்கும் அதையே பரிசளிக்கிறார்கள்.

The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !
க்ரிஸ் பென்னுவா

க்ரிஸ் பென்னுவா தொண்ணூறுகளிலும், இரண்டாயிரங்களின் மத்தியப் பகுதி வரையிலும் கூட மல்யுத்த மேடைகளைக் கலக்கிய கனேடிய வீரர். ஒவ்வொரு போட்டியிலும் அவரது இறுதித் தாக்குதலான கிரிப்லர் க்ராஸ் பேஸ் எனும் பாய்ச்சலுக்கு மயங்காதவர் கிடையாது. அதீதமான ஊக்க மருந்துகளை உட்கொண்டதால் மூளை பாதிக்கப்பட்ட பென்னோய்ட், 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராண்டியின் வாழ்வுக்கும், பென்னுவாவின் வாழ்வுக்கும் சாராம்சத்தில் வேறுபாடு ஏதுமில்லை. பென்னுவா தனது மனைவியையும் குழந்தைகளையும் நேரடியாகக் கொன்றார் என்றால், ரேண்டி தனது மகளுக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய பாசத்தை அளிக்காமல் புறக்கணித்து உளவியல் ரீதியில் கொல்கிறார்.  பென்னுவாவின்  தற்கொலையும் ரேண்டி மீண்டும் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்வதும் கூட சாராம்சத்தில் ஒன்றே தான்.

ரெஸ்லர் திரைப்படத்தைப் பார்த்த பிரபல மல்யுத்த வீரரான ரவுடி ரோடி பைப்பர் கதறி அழுதிருக்கிறார். இவ்விளையாட்டுக்காகவும், ரசிகர்களின் அன்பைப் பெறுவதற்காகவும் தன்னைப் போன்ற நூற்றுக்கணக்கானவர்கள் செய்த தியாகங்களை இத்திரைப்படம் தனக்கு நினைவூட்டியதாகப் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.  தான் பிரபலமாயிருந்த காலத்தில் தனது உணவே பெயின் கில்லர் மாத்திரைகளாக இருந்ததையும், அதிலிருந்து விடுபட தான் போராடிய அந்த நினைவுகளும் இந்தத் திரைப்படத்தைக் காணும் போது வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அவருக்கு நினைவில் வராத இன்னொரு அம்சமும் உள்ளது. திரைப்படத்தின் இறுதியில் ராண்டியின் உரை படத்தின் ரசிகர்களிடம் உண்டாக்க விரும்பும் அனுதாப உணர்ச்சியாகட்டும், ரவுடி ரோடி பைப்பரின் அழுகையாகட்டும் ஒரே தளத்தில் தான் நிற்கிறது. அது தன்னலமிக்க ‘தியாக’த்தைக் குறித்து அவர்களே கொண்டிருக்கும் சுய கழிவிரக்கம் தான். எதார்த்தத்தில் ஆயிரக்கணக்கான மல்யுத்த வீரர்களையும், பாடி பில்டர்களையும், அமெரிக்க கால்பந்து வீரர்களையும் ஸ்டிராய்டுகளை நோக்கியும் பிற போதை வஸ்துக்களை நோக்கியும் தள்ளியது அவர்களது தியாகம் அல்ல. அது இத்தொழிலின் நுகர்வோரான ரசிகர்களின் வெறிகொண்ட விருப்பமும், இதை நடத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப வெறியும் தான்.

படம் நெடுக அரூபமாய் உலாவந்து ராண்டியோடு வினையும், எதிர்வினையும் புரியும் அவனது எதிர்நாயகன் இவ்விரு அம்சங்கள் தான். திரைப்படத்திலும் சரி எதார்த்தத்திலும் சரி, தொழில்முறை மல்யுத்த வீரர்கள் தோற்றுப்போய் தாங்கள் வாழ்வை இழப்பது இவைகளிடம் தான். ஆனால், அந்த அடிமைத்தனத்தைத் தியாகமாகவே அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ரோடி பைப்பரின் கண்ணீர் சொல்லும் செய்தி அது தான். அதனால் தான் இறுதிக் காட்சிகளில்  தனது அறியாமையையும், அடிமைத்தனத்தையும் தியாகமாக நினைத்துக் கொண்டு ராண்டி நிகழ்த்தும் அந்த உரை நமக்குள் கண்ணீரைக் கோரவில்லை – பரிதாபத்தைக் கோருகிறது.

பண்டைய க்ளாடியேட்டர்கள் ஒருவகையில் இந்த முதலாளித்துவ க்ளாடியேட்டர்களினின்றும் உணர்வுத் தளத்தில் மேம்பட்டவர்களாயிருந்தார்கள். தாம் அடிமைகள் என்கிற குறைந்தபட்சப் புரிதல் அவர்களுக்கு இருந்ததாலேயே பின்னர் விடுதலை என்பதை நோக்கிய அவர்களின் முன்னேற்றம் சாத்தியமானது. ஆனால், இவர்களோ தங்களது எதிரி  யாரென்று கூடத் தெரியாமல் நிழலோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை வாசகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும். தொலைக்காட்சியில் அமெரிக்க மல்யுத்தப் போட்டிகளுக்கு அடிமையாகி இருக்கும் நமது சிறார்களை எப்படி மீட்க முடியும் என்பதைக் கற்பதற்காகவாவது அனைவரும் இந்தப் படத்தைக் காண வேண்டும். வீரனை மெல்லக் கொன்றும், ரசிகனை விரைவாக வெறியனாகவும் மாற்றும் இந்த கேளிக்கைத் தொழிலின் இருண்ட பக்கங்களை இந்தத் திரைப்படம் காட்டுகிறது. அது காட்டத் தவறிய அரசியலை நாம் கண்டுபிடிப்பதற்கும் அதுவே உதவி செய்கிறது.
__________________________________________________________

– தமிழரசன், புதிய கலாச்சாரம் – ஜூலை, 2011
____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

வெடிக்கக் காத்திருக்கும் குருநானக் கல்லூரி – நேரடி ரிப்போர்ட் !

18

யற்கை தனது மடியில் வைத்து தாலாட்டும் குரூநானக் கல்லூரி கான்கிரீட் காடான சென்னையின் ஓர் ஆச்சரியம். செழித்து, கிளைத்து நிற்கும் ஆலமரங்களை கட்டியணைக்க இருபது பேர் வேண்டும். மரக்கிளைகளிலிருந்து மலைப்பாம்புகளைப் போல நமது தலைக்கு மேலே சற்றே உயரத்தில் நெளிந்து தொங்கும் ஆழ விழுதுகளை கடந்து செல்வது பரவசமூட்டும்.

மூப்பின் அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டும் தான் என்பது போல கூன் இன்றி உயர்ந்து நிற்கின்றன பழமையான பனை மரங்கள். வேப்ப மரங்கள், அசோக மரங்கள் மற்றும் காட்டு மரங்களின் வரிசை நாம் உள்ளே நடந்து செல்கையில் அணிவகுத்து மரியாதை செய்கின்றன. வேகத்துடன் மேலெழுந்து பிறகு குடை விரித்து நிழல் தரும் மரங்கள் எப்போதும் மாறாத நேசத்துடனே அதனை செய்கின்றன. மரக்கிளைகள் ஒன்றுடன் ஒன்று உரசியும், ஊடுருவியும், பின்னிப்பிணைந்திருக்கும் காட்சி நம்மை கிளர்ச்சியுற செய்யும். ஒரு பெரு மழையில் குளிக்கும் இந்த மரங்களும், செடிகளும் இலைகள் ஒடுங்கி நாணுவது பார்ப்போரை வெட்கத்துக்கு உள்ளாக்கும்.

வகுப்புகள் போரடிக்கும் போது மாணவர்களும், மாணவிகளும் தியேட்டர் வாசல்களை விடவும் அதிகம் விரும்புவது கல்லூரி வளாகத்தை தான். ரொமாண்டிக் கவிஞர்களுக்கு இங்கு பஞ்சமில்லை. கல்லூரி ஆண்டு மலரில் அவர்களின் கவிப் பூக்கள் கொட்டி கிடக்கின்றன. ஜன்னல் கம்பிகளிலும், மரக்கிளைகளிலும் தொங்கியவாறு உரையாடும் குரங்குகள் இங்குள்ள பேராசிரியர்களை விடவும் மாணவர்களுக்கு அதிகம் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது மிகையல்ல. பறவைகளின் ஒலியால் எப்போதும் விழித்திருக்கிறது குருநானக் வனம்.

மைனாரிட்டி நிறுவனமான இந்த கல்லூரியை நிர்வகிப்பவர்கள் சீக்கியர்கள். 1971 -இல் தொடங்கப்பட்ட இக்கல்லூரிக்கான நிலத்தை அப்போதைய கருணாநிதி அரசு, கிண்டி ராஜ்பவன் அமைந்துள்ள காடு பரப்பிலிருந்து இருபது ஏக்கர் நிலத்தை பிரித்து அளித்துள்ளது. மாலை நேர கல்லூரி 1981 -இல் தொடங்கப்பட்டது. அரசு உதவியுடன் ஷிப்ட் 1 (காலை கல்லூரி) இயங்குகிறது. ஷிப்ட் 2 முழுக்க முழுக்க சுயநிதி கல்லூரியாக இயங்குகிறது.

இக்கல்லூரியின் நிர்வாக பொறுப்பில் தலைவராக மஞ்சீத் சிங் கில் என்பவரும் செயலாளராக மஞ்சீத் சிங் நய்யார் என்பவரும் உள்ளனர், இக்கல்லூரியின் முதல்வராக மெர்லின் மொரைஸ் என்ற பெண்மணி உள்ளார். இவர் முதல்வரான கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது.

கல்லூரியின் முதல்வராக மெர்லின் பொறுப்பேற்பதற்கு முன்னர் முதல்வராக இருந்தவர், இவரது கணவர், ஜான் மொரைஸ். கணவனின் ஓய்விற்கு பின்னர் இப்பதவியை மெர்லின் பெறக்கூடாது என்பதற்காக இக்கல்லூரியில் உள்ள பார்ப்பன பேராசிரியர்கள் லாபி தீவிரமாக முயன்றது. சிறிது காலம் பொறுப்பு முதல்வராக பார்ப்பனரான ராகவன் நியமிக்கப்பட்டார். மாணவர்களின் கல்வி கட்டண முறைகேடுகள் சம்பந்தமாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது குறித்த செய்தி ஒன்று அப்போது ‘நக்கீரனில்’  வெளியானது.

ஷிப்ட் 2 என்பது நிர்வாகத்திற்கு பொன் முட்டையிடும் வாத்து. இதன் பொறுப்பில் இருந்தவர் ரவிக்குமார் என்ற பார்ப்பனர். மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பணம் நிர்வாகத்தின் கல்லாவுக்கு செல்வதற்கு முன்னர் அது சிலரால் பதுக்கப்படுவதை உணர்ந்தது, நிர்வாகம். தமக்கு பணம் சிந்தாமல், சிதறாமல் வருவதற்கு ஓர் விசுவாச கைக்கூலியின் அவசியத்தை உணர்ந்தது. அந்த தேவையை பூர்த்தி செய்த மெர்லினை இப்போது  முதல்வராக செயல்பட அனுமதித்துள்ளது.

பெண் என்ற அனுதாபத்தை முதலில் பெற்ற மெர்லின் மொரைஸ் முதல்வரானதை அங்கு பணிபுரியும் பெரும்பான்மை ஆசிரியர்கள் பெரிதும் வரவேற்றார்கள். ஆண் பேராசிரியர்களின் சதிகளை முறியடித்து வென்றதாக ஓர் பிம்பத்தை மெர்லின் மொரைஸ் உருவாக்கினார். கல்லூரி முதல்வர் என்ற முறையில் தமது உரிமைகளுக்கு துணையாக இருப்பார் என்று அப்பாவித்தனமாக பலரும் நம்பினர். மேய்ப்பனை அண்ணாந்து பார்க்கும் ஆட்டுக் குட்டிகளை போல அவரின் கருணைக்காக ஏங்கினர், ஆசிரியர்கள்.

ஜெயலலிதா முதல்வராக வரும் போது முதல் கையெழுத்து மட்டும் ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்வது போல இருக்கும். அது போல மெர்லின் மொரைசும் இங்கு பணி புரியும் நிர்வாக நிலை ஆசிரியர்களுக்கு ஒரு சிறிய அளவிலான ஊதிய உயர்வை பெற்றுத் தந்தார். பிறகு கொஞ்ச நாட்களிலேயே தனது சுய ரூபத்தை காட்டத் தொடங்கினார்.

துறை தலைவர்களை கலந்தாலோசிக்காமல் புதிய விரிவுரையாளர்களை நியமிப்பது; தனக்கு பிடிக்காத ஆசிரியர்களை பழி வாங்குவது; ஸ்கூல் பாணியில் மாணவர்களை அசெம்ப்ளி என்று கூட்டுவது; ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது; இரக்கமற்ற முறையில் மாணவர்கள் பிரச்சினைகளை கையாள்வது; அற உணர்வின்றி ஆசிரியர்களை பிழிவது என்று கேள்வி முறையின்றி தொடர்கிறது இவரது அட்டகாசம்.

இது போக மாலை நேர கல்லூரி மாணவர்களையும், ஆசிரியர்களையும் வதைக்க ஆபிரகாம் தேவகுமார் என்றொரு ரிட்டையர்ட் நபர் கல்லூரி கல்வி இயக்குனகரத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். ஒரு கல்வியாளருக்குரிய எந்த பண்பும் அற்ற இவர் மெர்லின் மொரைசுக்கு ஒரு அல்லக்கை போல செயல்படுகிறார். மாணவர்களை கெட்ட வார்த்தைகளால் ஏசுகிறார். ஆசிரியர்களை ஒருமையில் அழைக்கிறார். ஒரு மொக்கை ஆசாமி இந்த ஆபிரகாம் தேவகுமார் என்பதை மாணவர்கள் அவருடைய முதல் உரையிலே புரிந்து கொண்டார்கள். ஒரு பஜனை மடத்தை நிர்வகிக்க தகுதியான நபரை கல்லூரிக்கு இயக்குனர் பொறுப்பில் நியமித்திருப்பது, உயர்கல்வி துறையின் சீரழிவு.

உயர்கல்வின் நோக்கம் அறிவுச்சமூகத்தை படைப்பது என்று யுனெஸ்கோ வரையறுத்துள்ளது. ஆபிரகாம் தேவகுமாருக்கு பதில் குரு நானக் வனத்தில் வாழும் ஒரு மூத்த குரங்கை அந்த பொறுப்புக்கு நியமித்திருக்கலாம் என்று மாணவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த கல்லூரியை ஆரம்பித்த நிறுவனர்கள் தொலை நோக்கு பார்வையுடன் (vision) செயல்பட்டிருக்கிறார்கள். சிறந்த பேராசிரியர்கள் இங்கு பணியாற்றி உள்ளார்கள். அவர்களில் அநேகர் ஓய்வு பெற்று விட்டார்கள்.

இப்போதிருக்கிற நிர்வாகம், கல்லூரி முதல்வர், கல்லூரியின் புதிய இயக்குனர் ஆகியோர் இந்த சிறப்பு வாய்ந்த கல்லூரியை ஒரு பணம் பிடுங்கும் மெட்ரிக்குலேசன் பள்ளியாக சிறுத்து போக வைத்துள்ளார்கள். தமது இந்த கொள்ளை நோக்கத்துக்கு தோதாக ஆசிரியர்களை வேலை வாங்குகிறார்கள். நிவாகத்திடம் நல்ல பெயர் வாங்க மாணவர்கள் மீது உச்சகட்ட வன்முறையை பிரயோகிக்கிறார்கள் இந்த பேராசிரியர்கள்.

வகுப்பு இல்லாத நேரத்திலும் கிரவுண்டில் மாணவர்களை பார்த்தால் ID கார்டுகளை பறிப்பது, பைக் சாவியை வாங்கி வைத்துக் கொள்வது, வகுப்புக்கு கொஞ்சம் லேட்டாக வந்தாலே மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்குவது, தனியாகக் கூடி நிற்கும் மாணவர்களை அழைத்து வாயை ஊத செய்வது, மரத்தடியில் மாணவர்கள் உட்காருவதை கண்டால்  துரத்தியடிப்பது, மொபைல் போனை பார்த்த மாத்திரத்திலே பிடுங்குவது என்று சினிமா தாதாக்களைப் போல செயல்படுகிறார்கள். மாணவர்களோடு மாணவிகள் பேசுவதை கண்டால் ‘சிவ சேனையாக’ மாறி விடுவார்கள். அம்மா அப்பாவை அழைத்து வந்தாலொழிய நிம்மதியடைய மாட்டார்கள்.

வகுப்பறையில் தூங்கும் மாணவனை வெளியே துரத்தும் ஆசிரியனே அம்மாணவன் முந்தின இரவு தூங்கினானா? என்று விசாரித்து அறியும் பொறுமை உண்டா?

ஐந்து நிமிடம் லேட்டாக வந்தால் ‘ஆப்சென்ட்’ போடும் ஆசிரியனே குருநானக் கல்லூரி நிறுத்தத்தில் நிற்காமல் போகும் பேருந்துகள் குறித்து ஏதேனும் தெரியுமா?

கிரவுண்டில் கூட விசிலடித்தால் கன்னத்தில் அறையும் ஆசிரியனே நீங்கள் என்ன ‘ஆக்ச்போர்டிலும், கேம்பிரிட்ஜிலும்’ படித்து வந்தவர்களா? உங்கள் கல்லூரி வாழ்க்கையின் யோக்கியதையை கொஞ்சம் சொல்ல முடியுமா?

மாணவர்களை சர்வசாதாரணமாக பொறுக்கி என்றும், ராஸ்கல் என்றும் அழைக்கும் ஆசிரியனே உங்கள் வீட்டு டார்லிங்குகளை அப்படித்தான் அழைக்கிறீர்களா?

பழைமையான அரசு கல்லூரிகள், அரசு உதவி பெரும் கல்லூரிகளுக்கு என்று ஒரு பண்பு உள்ளது. வேடந்தாங்கலுக்கு  வரும் பறவைகளின் குதூகலத்துடன் இங்கு கல்வி கற்க வருகிறார்கள் மாணவர்கள். ஒரு சுதந்திர மனநிலையில் மாணவர்கள் இங்கு கற்பதால், ஆளுமை மிக்கவர்களாக வெளியே செல்கிறார்கள். பால்யத்தின், கல்லூரி வாழ்வில், ஆண்-பெண் உறவு நிலையில் ஒரு முழுமையை அவர்கள் பெறுவதால் உளவியல் ரீதியாக ஆரோக்கியமானவர்களாக அதன் பிறகு இருக்க வாய்ப்புண்டு. கிரிக்கட், பில்லியர்ட்ஸ், கைப்பந்து, தடகளம் போன்றவற்றில் மாநில, தேசிய  அளவிலான வீரர்கள் இந்த கல்லூரியில் உண்டு. இந்த திறப்புகள் அனைத்தையும் அடைத்து, அவர்களை சிறைப்படுத்தி, முடமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது நிர்வாகம் மற்றும் கல்லூரி முதல்வர், ஆசிரியர்களின் தற்போதைய அணுகுமுறை.

இப்படி இந்த கல்லூரியின் மதிப்பை, மாணவர்கள், ஆசிரியர்களின் மகிழ்ச்சியை, அவர்களுக்கிடையேயிருந்த நல்லுறவை சிதைத்த நிர்வாகம் இன்னொன்றையும் செய்தது. அது கல்வி கட்டண கொள்ளை சம்பந்தமான புதிய அறிவிப்பு. கம்ப்யூட்டர் பாடப்பிரிவுகளுக்கு ரூ. 25000 , பி.காம், பி,பி,ஏ., பாடப்பிரிவுகலூகு 16000 , காட்சி ஊடகவியல், எலக்ட்ரானிக் communications பிரிவிற்கு 45000 மும் வருடம் வசூலிக்கிறார்கள். கடந்த வருடம் வரை இரண்டு தவணைகளாக கட்டி வந்த வருட கல்விக் கட்டணத்தை ஒரே தவணையாக கட்ட வேண்டும் என்று அறிவித்தார் கல்லூரி முதல்வர்.

உயர் கல்வி பெறும் முதல் தலைமுறை மாணவர்களை கொண்ட அடித்தட்டு மக்கள் பிரிவினர் பெரும்பான்மையாக படிக்கும் இக்கல்லூரியில் இந்த புதிய கட்டண அறிவிப்பு ஏற்படுத்தும் சிரமத்தை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. ஒய்யாரமாக பைபிளை ஏந்தி செல்லும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர் கல்லூரி முதல்வர். அவருக்கு தெரிந்த பைபிள் கதாப்பாத்திரத்துடன் ஒப்பிட வேண்டுமானால் பழைய ஏற்பாடு காலத்து எகிப்திய மன்னன் பரர்வோ-வுடன் அவரை ஒப்பிடலாம். இந்த பொம்பிளை பரவோவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இஸ்ரவேல் ஜனங்கள், இங்குள்ள மாணவர்களும், நிர்வாக நிலை ஆசிரியர்களும்.

உரிமைகளை விட்டுக் கொடுத்து, சுயமரியாதையை இழந்து வேண்டுமானால் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் இருக்கலாம். ஆனால் மாணவர்களால் அப்படி இருக்க முடியாது. ஜூலை ஆறாம் தேதி ஸ்டிரைக் என்று அறிவித்தார்கள். அதன்படி ஐந்தாம் தேதி கல்லூரியில் போஸ்டர் ஓட்டினார்கள். அவற்றை எஸ்டேட் ஆபீசரான ஒரு சிங் சுரண்டி அப்புறப்படுத்தியுள்ளான். ஸ்டிரைக் நாளன்று, பெரிய அளவுக்கு போலீசைக் குவித்து பீதியூட்டியும், ஆசிரியப் போலீஸ்களை வைத்து மிரட்டியும் இப்போராட்டத்தை நீர்த்து போக செய்தது நிர்வாகம்.

அதே நேரத்தில், மாணவர்களின் ஒருங்கிணைவை கண்டு உள்ளுக்குள் பயந்த போன நிர்வாகம், கல்வி கட்டணத்தை செலுத்த ஆகஸ்ட் மாதம் வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. ஒரு போராட்ட அறிவிப்பின் பலனே இதுவென்றால், ஒரு முழுப் போராட்டத்தின் பலன் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள், குருநானக் கல்லூரி மாணவர்கள்.

அந்த சிந்தனை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களால் உரமூட்டப்பட்டு விரைவில் வெடிக்கும். குருநானக் கல்லூரியின் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும். ஒரு பெரும் புயலுக்கு காத்திருக்கிறது குருநானக் கல்லூரி.

_________________________________________________________

வினவு செய்தியாளர்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர்கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பு! பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி!

96

சமச்சீர் கல்வி - நாடகம்

சமச்சீர் கல்வி – பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்துமாறு அம்மாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “வலது இடது போலி கம்யூனிஸ்டுகளின் பேராதரவுடன் சட்டமன்றத்தில் அம்மா நிறைவேற்றிய சட்டத்திருத்தமும் செல்லத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாகப்பதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பின் முழு விவரம் இன்று மாலைதான் கிடைக்கும்.

தமிழகத்தின் காவல் தெய்வம், தங்கத்தாரகை, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மூன்றாவது முறையாக முதல்வராக அமர்ந்து, முதல் முறையாக நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முதன் முதலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கே முட்டுக்கட்டை போட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.

அம்மா உச்சநீதிமன்றம் போகிறார். ஒரு தலைப்பட்சமாக இடைக்காலத் தடை உத்தரவு எதையும் கொடுத்துவிடாமல் தடுக்கும் பொருட்டு, கேவியட் மனு தாக்கல் செய்வதற்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் உச்ச நீதிமன்றம் போகிறது.

உயர்நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் நவநீதி கிருஷ்ணனும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவும் முன்வைத்த வாதங்கள் உப்புசப்பற்றவை. அவர்கள் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு உள்ள இறையாண்மை மிக்க அதிகாரம் குறித்துத்தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்கள். தமிழ் மாணவர்களின் முடியைத் திருத்தி குடுமி வைப்பதற்கோ, அல்லது மொட்டை அடிப்பதற்கோ அம்மாவுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதெனினும், ஒரு கோடி மாணவர்களுக்கும் இந்த ஆண்டே, இந்தக் கணமே மொட்டை அடித்தாக வேண்டும் என்ற சட்டத் திருத்தத்துக்கான நியாயத்தை விளக்கவில்லை.

அம்மா வின் கோபம், அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனை நோக்கித் திரும்புமே தவிர, பத்மா ஸேஷாத்ரி பள்ளியின் தாளாளர் ஸ்ரீமதி ஒய்.ஜி.பார்த்தஸாரதி, டி.ஏ.வி ஸ்கூல் என்று அறியப்படும் தயானந்தா ஆங்கிலோ வேதிக் ஸ்கூலின் தாளாளர், ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் அம்மையார் ஆகியோரை நோக்கித் திரும்பாது. அம்மா வை மூக்கறுபட வைத்தவர்கள் இவாள்தான். பொதுப்பாடத்திட்டத்தைப் பார்த்து கெக்கெக்கே என்று சிரித்த அக்ரகாரத்து அறிவுஜீவிகளும், ஆங்கிலக் குஞ்சுகளும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தங்களது தரப்பு வாதங்களைப் படித்துப் பார்ப்பார்களேயானால், தங்கள் முகத்தில் தாங்களே காறித்துப்பிக்கொள்ள வேண்டிய நியாயம் குறித்து அவர்கள் புரிந்து கொள்ள இயலும்.

வாதங்களின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று கொண்டால், தற்போதைய உயர்நீதி மன்றத் தீர்ப்பினை “நாம் எதிர்பார்த்த்துதான்’ என்று சொல்ல்லாம். நீதிமன்றங்களின் எதார்த்தநிலையைக் கணக்கில் கொண்டு கூறுவதாயின் இந்த தீர்ப்பு அவ்வப்போது நிகழும் அதிசயங்களில் ஒன்று.

இந்த வழக்குக்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்கள் பலர் உழைத்திருக்கின்றனர். வழக்குரைஞர் மோகன், புருஷோத்தமன் ஆகியோர் வாதிட்டிருக்கின்றனர். சமச்சீர் பாடத்திட்டக் குழவின் உறுப்பினரான கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்களிடமிருந்து வாக்குமூலம் ஒன்றையும் பெற்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தாக்கல் செய்தது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் சார்பில் வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத், திருமதி மனோன்மணி அவர்கள் சார்பில் வழக்குரைஞர் விடுதலை ஆகியோர் இவ்வழக்கில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கின்றனர்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் மார்க்சிஸ்டு கட்சியின் சார்பாளர் என்ற போதிலும் அக்கட்சியின் நெறியற்ற, சந்தரப்பவாத நடைமுறையை நிராகரித்து இறுதிவரை உறுதியாக நின்று போராடியிருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது. சமச்சீர் கல்விக்காக இவரும், இந்திய மாணவர் சங்கமும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, மார்க்சிஸ்டு, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைமைகள் அம்மாவின் குலக்கல்வித் திட்டத்துக்கு “ஓ” போட்டுக் கொண்டிருக்கின்றனர். சொரணையுள்ளவர்கள் வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து தாங்களாகவே வெளியேறிவிடுவார்களா அல்லது அன்புச் சகோதரி அவர்கள், இவர்களையெல்லாம் “நமது எம்ஜிஆர்” நாளேட்டில் கட்டம் கட்டி வெளியேற்றும் காலம் வரை காத்திருப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு தமிழகத்தில் ஜெ அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், வல்லுநர் குழுவின் அறிக்கை எரிப்பு, அம்மா வின் கொடும்பாவி எரிப்பு எனப் பல்வேறு வடிவங்களில் போராடியதும் சிறை சென்றதும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்தான். மக்களின் வரவேற்பையும், அதிமுகவினருடனான மோதலையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு கடந்த இரு மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன இந்த பிரச்சாரங்கள்.

இப்போராட்டத்துக்கு இணையாக மெட்ரிக் பள்ளிகளின் நன்கொடைக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்களும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. மெட்ரிக் மோகத்துக்கு ஆட்பட்ட பெற்றோரை, அந்தக் கொள்ளையர்களிடமிருந்து மீட்பதற்காகப் போராடுவதுடன், அவர்களை சமச்சீர் கல்வியை ஆதரித்தும், கல்வி தனியார்மயத்தை எதிர்த்தும் போராட வைத்திருக்கிறோம்.

000000000000000000000000000000000

போன வாரம் பேருந்து ஒன்றில் ஜெ அரசின் சமச்சீர் கல்வி ஒழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ஒரு ம.க.இ.க தோழர். “டேய்.. அம்மா ஆட்சியைப் பத்தி பேசாதே” என்று வெயிட்டாக வந்த்து ஒரு குரல். அதைக் காதில் வாங்காமல் அந்த தோழர் தனது பேச்சைத் தொடர்ந்தார். “டேய் பேசாதேங்கிறேன்ல” என்று குரலுக்கு ஏற்ற வெயிட்டுடன் எழுந்து நின்றது ஒரு கரை வேட்டி. “நான் என் கருத்தை சொல்றேன். நீங்க உங்க கருத்தை சொல்லுங்க. எது சரின்னு சனங்க முடிவு பண்ணட்டும்” என்று அந்தத் தோழர் மிகவும் நாகரீகமாகப் பதிலளித்தார்.

“டேய்.. நிறுத்துடான்னா…” என்று சொல்லி கையை ஓங்கிய கரை வேட்டியின் கை ஓங்கியபடி நின்றது. “னா..” என்ற குரல் முடியாமல் “ஆ” என்று தொடர்ந்தது. கரை வேட்டியின் கண்ணாடி தெறித்து கீழே விழுந்திருந்தது. “யோவ், இறங்கிப் போய்யா” “தம்பி தொலையிறான் விடுங்க” என்று தலையிட்டார்கள் பயணிகள். கரை வேட்டி தப்பித்த்து.

என்ன இருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற்று செயித்த கட்சியல்லவா? கேப் இல்லாம ரெண்டாவது அடிய அடிக்கப்படாது.

_____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஆன்மீக வல்லரசு!

ஆன்மீக வல்லரசு

ண்மையில் இது ஒரு பொற்காலம்தான். சாயிபாபா உயிரோடு இருந்தபோது கக்கிய தங்க லிங்கங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தங்கத்தை பாபா இறந்தபின் அவருடைய தனியறையான யஜுர்வேத மந்திரம் கக்கிக் கொண்டே இருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிலவறையிலிருந்து இதுவரை எடுக்கப்பட்ட தங்கம், வைரங்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள். இல்லை, 5 இலட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்படக் காத்திருக்கின்றன.

இந்தியாவின் முதற்பெரும் கோடீசுவரனான முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை ரத்தன் டாடா பிடித்து விட்டார் என்று சமீபத்தில்தான் செய்தி வெளிவந்தது. ஆன்மீக உலகிலும் அதிரடி மாற்றம்.  இந்தியாவிலேயே மிகப்பெரும் கோடீசுவரர் என்ற இடத்தை நெடுங்காலமாகக் கைப்பற்றி வைத்திருந்த திருப்பதி ஏழுமலையானை வீழ்த்தி அந்த இடத்தைப் பிடித்து விட்டார் பத்மமநாபசாமி. ஏழுமலையானின் சொத்து மதிப்பு 40,000 கோடிதானாம். பத்மநாபசாமியின் இன்றைய நிலவறைச் சொத்து மதிப்பு நிலவரமே ஒரு இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது. திருமாலைத் தோற்கடித்தவரும் திருமாலே என்பதனால் வைணவர்கள் ஆறுதல் கொள்ளலாம்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை, உலகப் பணக்கார மனிதர்களின் பட்டியலோடு உலகப் பணக்காரக் கடவுளர்களின் பட்டியலையும் வெளியிடுமானால் ஆன்மீக உலகின் அசைக்க முடியாத வல்லரசு இந்தியாதான் என்ற உண்மையை உலகம் புரிந்து கொள்ளும். நிற்க. மீண்டும் நாம் பத்மநாபசாமி கோவிலுக்கே வருவோம்.

சீரங்கத்து அரங்கநாதனைப் போலவே, பாம்புப் படுக்கையின் மீதில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பத்மநாபசாமியின் கோவிலுக்குக் கீழே, கல் அறைகள் என்று அழைக்கப்படும் ஆறு நிலவறைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. காற்றோட்டமில்லாத இந்தப் பொந்துகளின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களை வெளியே எடுத்து, அவற்றைப் பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தப் புதையல் வேட்டை நடந்து வருகின்றது.

சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மகாவிஷ்ணுவின் தங்கச்சிலை, தங்கத்தினால் செய்யப்பட்டு வைரக் கற்கள் பதிக்கப்பட்ட இரண்டு தேங்காய் மூடிகள், பத்தரை கிலோ எடையுள்ள 18 அடி நீள மார்புச் சங்கிலி, 36 கிலோ எடையுள்ள தங்கத் திரை, தங்க அங்கி, 500 கிலோ தங்கப் பாளங்கள், தங்கத்தில் வில் அம்பு, வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தட்டுகள், பல நூறு கிலோ எடையுள்ள தங்க மணிகள், நகைகள், கிழக்கிந்தியக் கம்பெனியின் தங்கக் காசுகள், நெப்போலியனின் தங்கக் காசுகள், ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஆன்ட்வெர்ப் நகரின் வைரங்கள் ..

தங்கம், வைரம் என்ற முறையில் இவற்றின் சந்தை மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் வருவதாகவும், புராதனக் கலைப்பொருட்கள் என்ற வகையில் மதிப்பிட்டால், இவற்றின் மதிப்பு பத்து இலட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கலாம் என்றும் கூறுகின்றன பத்திரிகைகள். நிலவறைக்குள் தங்கம் இருக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதன் அளவுதான் யாரும் எதிர்பாராதது. இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்பட வேண்டும். அவற்றைத் திறப்பதற்கு முன் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்கிறது போலீசு.

கோவிலைச் சுற்றிலும் நெருக்கமாக வீடுகள் இருப்பதுடன், பூமிக்கு அடியில் இரண்டரை அடி நீள அகலத்தில் பழங்காலத்து பாதாள சாக்கடை ஒன்று இருப்பதால், அந்த பாதாள சாக்கடை வழியாக யாரேனும் நிலவறைகளுக்குள் புகுந்து தங்கச் சுரங்கத்தைக் கொள்ளையடிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சுகிறது போலீசு. எனவே, பத்மநாப சாமி கோவிலுக்கு அருகில் குடியிருக்க நேர்ந்த துர்ப்பாக்கியசாலிகள் அனைவரும் போலீசின் கண்காணிப்புக்கு உரியவர்கள் ஆகி விட்டார்கள்.

ஒரு இலட்சம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள இந்தத் தங்கப் புதையல் எப்படி வந்தது? மன்னர்களின் ஆடை ஆபரணங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், அவர்களது சொத்துகள் ஆகிய அனைத்தும் மக்களின் ரத்தத்தை வரியாகப் பிழிந்து எடுக்கப்பட்டவைதான் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. பார்ப்பனக் கொடுங்கோன்மையின் வரலாற்று உதாரணமாக இருந்த கேரளத்தில், விவசாயிகள் எவ்வளவு இரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டனர் என்ற உண்மையைக் கடந்த நூற்றாண்டின் மாப்ளா விவசாயிகள் போராட்டம் வெளிக்கொணர்ந்தது. இன்று பத்மநாபசாமி கோவிலின் தங்கப்புதையலும், வைர நகைகளும் அந்தச் சுரண்டலின் ஆபாசமான நிரூபணமாக மின்னுகின்றன.

ஆன்மீக வல்லரசு

ஸ்விஸ் வங்கிகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்றவை இல்லாத அந்தக் காலத்தில் கோவில்கள்தான் மன்னர்கள் தமது செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்கான பெட்டகங்களாக  இருந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவ சாதிய சமூகத்தின் அதிகாரமும், அரசு அதிகாரமும் கோவில் வழியாகவே செலுத்தப்பட்ட காரணத்தினால், கோவில்கள் அறிவிக்கப்படாத அரசு கஜானாக்களாகவே இருந்திருக்கின்றன. ஆகையினால்தான் இராசராச சோழன் முதல் கஜினி முகமது வரையிலான மன்னர்கள் அனைவரும் தாங்கள் ஆக்கிரமிக்கும் நாட்டில் உள்ள கோவில்களைக் குறிவைத்துக் கொள்ளையிட்டிருக்கிறார்கள். தங்கத்தைக் கோவிலுக்குப் பதிலாகச் சுடுகாட்டில் புதைத்து வைப்பது மரபாக இருந்திருந்தால், கஜினி முகமதுவும் சோமநாதபுரத்தின் கோவிலுக்குப் பதிலாக அந்த ஊரின் சுடுகாட்டைத்தான் சூறையாடியிருப்பான்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் இந்த அளவுக்குத் தங்கம் சேர்ந்ததற்குச் சில குறிப்பான காரணங்களும் உள்ளன. அன்று ஐரோப்பாவுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்த செம்பகச்சேரி, கோட்டயம், கொச்சி ஆகிய நாடுகள் திருவிதாங்கூரைக் காட்டிலும் பன்மடங்கு செல்வ வளம் மிக்கவையாக இருந்தன. 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னனாக இருந்த மார்த்தாண்ட வர்மா, இந்த நாடுகளின் மீது படையெடுத்து அந்நாடுகளின் செல்வத்தைக் கொள்ளையிட்டிருக்கிறான். இவையன்றி மன்னன் விதிக்கும் அபராதங்கள் அனைத்தும் கோவிலின் பெயரில் தங்கமாக வசூலிக்கப்பட்டதால் அவையும்,  வணிகர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குச் செலுத்திய காணிக்கைகளும் தங்கமாகச் சேர்ந்திருக்கின்றன.

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கட்டபொம்மன், மருது முதலானவர்களும், மைசூரில் திப்புவும் ஆங்கிலேயனை எதிர்த்து நின்றபோது, கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானமும், தமிழகத்தில் ஆற்காட்டு நவாபும் கும்பினியின் கைக்கூலிகளாக இருந்தனர். கும்பினியின் எடுபிடியாக இருந்த திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக திப்பு படையெடுத்த போது, கேரளத்தின் வடபகுதியில் இருந்த குறுநில மன்னர்கள் பலரும் தமது பொக்கிஷங்களைத் திருவிதாங்கூர் மன்னனிடம் கொடுத்துப் பதுக்கி வைத்திருக்கின்றனர். இதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன என்று கூறும் கேரளத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்  கோபாலகிருஷ்ணன், இந்த நிலவறைகள் எல்லாம் அப்போதுதான் தோண்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சியது மட்டுமல்ல, அரச குடும்பங்களுக்குள் வழக்கமாக நடக்கும் அரண்மனைச் சதிகளும், உள்குத்துகளும் கூட இப்படி தங்கத்தைப் புதைத்து வைக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.

அவ்வாறின்றி, ஆன்மீக அடிப்பொடிகள் சித்தரிப்பதைப் போல இவையெல்லாம் கடவுளுக்கு வந்த காணிக்கைகள் அல்ல. ஒரு வாதத்துக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் அதற்குக் கணக்கும் இல்லை, யார் கொடுத்த காணிக்கை என்பதற்கான விவரமும் இல்லை. கோவிலில் மணி அடிப்பவனுக்கும், சமையற்காரனுக்கும், விளக்கு போடுபவனுக்கும் ஆண்டுக்கு எவ்வளவு கலம் நெல் அளிக்க வேண்டும் என்பதைக் கல்வெட்டில் செதுக்கி வைக்கும் அளவுக்கு ‘யோக்கியர்களான’ மன்னர் பரம்பரையினர், பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ‘காணிக்கைகளை’ புதைத்து வைத்திருப்பது பற்றி ஒரு துண்டுச் சீட்டில் கூட எழுதி வைக்காததற்கு வேறு என்ன காரணம்?

இந்தப் புதையல் அனைத்தையும் மக்கள் நலனுக்கும், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், கேரள பகுத்தறிவாளர் சங்கத்தை சேர்ந்த காலநாதன், வரலாற்றாய்வாளர் செரியன் போன்றோர் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்டவுடனே ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் காலிகள்  நள்ளிரவில் காலநாதன் வீட்டைக் கல்லெறிந்து தாக்கியுள்ளனர்.

“தற்போது எடுக்கப்பட்டுள்ள நகைகள் எல்லாம் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது காஞ்சிபுரத்து யோக்கியர் ஜெயேந்திரனின் கருத்து. “அவை தொல்லியல் துறைக்குச் சொந்தம்” என்பது கே.என். பணிக்கர் போன்றோரின் கருத்து. “மாநில அரசுக்குச் சொந்தம்” என்பது வேறு சிலர் கருத்து. “அனைத்தும் பகவான் பத்மநாப ஸ்வாமிக்கே சொந்தம்” என்பது மாநில முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து.

“பகவான் பத்மநாபஸ்வாமியும், அவருடைய கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது தற்போதைய திருவிதாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. அது வெறும் கருத்து அல்ல. இந்தக் கோவிலும், அதன் சொத்துக்களும் மக்களுக்குச் சொந்தமா அல்லது மன்னர் குடும்பத்துக்குச் சொந்தமா என்பது உச்சநீதி மன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கு. இந்த வழக்கின் அங்கமாகத்தான் தற்போதைய புதையல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது என்பதால் மேற்கூறிய கேள்விக்கான விடையைப் புரிந்துகொள்வதற்கு இவ்வழக்கு பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியம்.

ஆன்மீக வல்லரசு

1947 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு மன்னருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில், கேரளத்தின் மற்ற கோவில்களெல்லாம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், பத்மநாபசாமி கோயில் மட்டும் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை உத்திரவாதம் செய்து கொண்டார் திருவிதாங்கூர் மன்னர். பத்மநாபசுவாமியின் மீது மட்டும் மன்னர் கொண்டிருந்த அளவுகடந்த பக்திக்குக் காரணம் என்ன என்பது அப்போது புரியவில்லையெனினும் இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

‘இந்துக் கோவில், இந்து மன்னர், இந்துப் புதையல்’ என்று சங்க பரிவாரத்தின் அமைப்புகள் தற்போது கூச்சல் எழுப்புகின்றனர். . கிறித்தவர்கள், முஸ்லிம்களிடத்திலிருந்தும் திருவிதாங்கூர் மன்னர் பிடுங்கிய வரிதான் தங்கப் பொக்கிஷமாக மின்னிக் கொண்டிருக்கிறது.  எனினும், இந்தப் பொக்கிஷத்தை என்ன செய்வது என்பது பற்றி கிறித்தவர்களோ முஸ்லிம்களோ கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர் இந்து வெறியர்கள். அவர்களது அபிமான திருவிதாங்கூர் மன்னரும், திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் அகண்ட பாரதத்திலிருந்து திருவிதாங்கூரைத் துண்டாடவும், அதன் பின் பாகிஸ்தானுடன் கூட்டணி சேரவும் முயன்றார்கள் என்ற வரலாற்று உண்மை அரை டவுசர் அம்பிகள் பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1947 இல் மேற்படி இந்து மன்னரும், அவருடைய திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் திருவிதாங்கூரை (கேரளத்தை) தனிநாடாக அறிவித்து பிரிந்து போவதற்கே முயன்றனர். அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படும் மோனோசைட் எனும் தாது திருவிதாங்கூர் கடற்கரையில் நிறைந்திருந்ததால் திருவிதாங்கூரைத் தனிநாடாக்கி விட்டால், அதனைப் பிரிட்டன் மட்டும் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்று பிரிட்டிஷ் அமைச்சர்களும், சி.பி. ராமசாமி ஐயரும் சேர்ந்து இரகசியத் திட்டம் தீட்டினர். பாகிஸ்தானும் திருவிதாங்கூரும் தனியே நட்புறவு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று ஜூன், 1947 இல் ஜின்னாவுக்குக் கடிதம் எழுதினார் சி.பி. ராமசாமி ஐயர். ஜூலை 1947 இல் தனிநாடாகச் செல்லப்போவதாக மவுண்ட்பாட்டனிடம் ராமசாமி ஐயர் அறிவிக்கவும் செய்தார். ஆனால் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான புன்னப்புரா வயலார் விவசாயிகள் எழுச்சியும், சமஸ்தானம் முழுவதும் மன்னராட்சிக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் மன்னருடைய தனிநாட்டுக் கனவில் மண் அள்ளிப் போட்டன. (ஆதாரம், தி இந்து, 25.5.2008)

இதுதான் ‘இந்துப் பொக்கிஷத்தை’ச் சுருட்டிக்கொண்டு போவதற்கு ‘இந்து மன்னன்’ செய்த சதியின் கதை. சமஸ்தான மன்னர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி இந்திய யூனியனுன் இணைத்த இரும்பு மனிதர் சர்தார் படேல், திருவிதாங்கூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில், பத்மநாபசாமி கோவில் திருவாங்கூர் மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார்.

1991 இல் பலராம வர்மா இறந்தபின் அவரது தம்பியான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அடுத்த வாரிசு என்ற முறையில் கோவிலின் மீது உரிமை கோரியதுடன், கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் தனிச்சொத்துக்கள் என்றும் கூறினார். இதனை எதிர்த்து கோவிலின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்ற வழக்குரைஞர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் (உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா) 31.1.2011 அன்று கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு (நீதிபதிகள்: ராமச்சந்திரன் நாயர், சுரேந்திர மோகன்) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் கீழ்வருமாறு:

“சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991 இல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோயிலின் மீது உரிமை கோர முடியாது.

பத்மநாபசாமி கோவில் என்பது மன்னர் குடும்பத்தின் தனிச்சொத்து அல்ல. அவ்வாறு தனிச்சொத்தாக இருந்திருப்பின் திருவிதாங்கூர்-இந்திய யூனியன் இணைப்பு ஒப்பந்தத்தில் இது குறித்த ஒரு ஷரத்தினைச் சேர்க்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.
கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.

தற்போது மார்த்தாண்ட வர்மா என்ற தனிநபர் பத்மநாபசாமி கோவிலை நிர்வகித்து வருவதைச் சட்டப்படி சரியானது என்று மாநில அரசு கருதுகிறதா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதிலே சொல்லவில்லை. கோவில் நல்லபடியாக நிர்வகிக்கப் படுவதாகவும், அதில் தலையிட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் மாநில அரசு பதிலளித்திருக்கிறது. கேரளத்தில் தனியார்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் குறித்த அரசின் நிலை பொதுமக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை.

ஏராளமான தனியார் கோவில்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அவர்களது சொத்துக்கள் எல்லாம் மக்களும், பக்தர்களும் செலுத்திய காணிக்கைகளே. மத நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பணம் திரட்டும்போது, அவை மக்களுக்குக் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும். கடவுளின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரக் கடமையாகி விட்டது என்று கருதுகிறோம். கடவுள் அல்லது நம்பிக்கையின் பெயரால் திரட்டப்படும் பணத்தைத் தனிநபர்கள் அல்லது அறங்காவலர் குழுக்களின் தனிப்பட்ட நலனுக்குத் திருப்பி விடுவதை அனுமதிப்பது என்பது, மதம், நம்பிக்கை ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்வதை அனுமதிப்பதாகும். இதனை அரசு அனுமதிக்கிறதா என்பதே கேள்வி. இவ்விசயத்தில் மாநில அரசின் அணுகுமுறை  பக்தர்களின் நலனையோ, மக்களின் நலனையோ பிரதிபலிப்பதாக இல்லை.

எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அவ்வாறு மாநில அரசால் நியமிக்கப்படுகின்ற கோவில் நிர்வாகியின் மேற்பார்வையில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பொக்கிஷங்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான, நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கோவில் வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அங்கே அவையனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.”

மேற்கூறிய தீர்ப்பில் கேரள உயர்நீதி மன்றம் மாநில அரசு என்று குறிப்பிட்டு விமரிசிப்பது மார்க்சிஸ்டு கட்சி அரசைத்தான். மே.வங்கத்தில் தரகு முதலாளி டாடாவுக்கு ஆதரவாக புத்ததேவ் பட்டாச்சார்யா. கேரளத்தில் திருவிதாங்கூர் மன்னனுக்கு ஆதரவாக அச்சுதானந்தன்! கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னரிடமே இருக்கட்டும் என்று கூறிய மார்க்சிஸ்டு கட்சி அரசு, அதனை மறுத்து உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அந்தத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது. மூன்று மாதங்களுக்குள் கோவிலை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனவரி 31, 2011 இல் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அச்சுதானந்தன் அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

விளைவு, மார்த்தாண்ட வர்மா உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, மேற்கூறிய உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் வாங்கி விட்டார். கோவிலை மாநில அரசு மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை பெற்றதன் மூலம், கோவிலின் நிர்வாகத்தை மார்த்தாண்ட வர்மா தன்னுடைய கைகளில் வைத்திருக்கிறார். சுரங்க அறையிலிருந்து பொக்கிஷங்களை எடுத்துப் பட்டியலிடுவதற்கு மட்டும் உச்சநீதி மன்றம் ஒரு குழுவை நியமித்திருக்கின்றது.

பொக்கிஷங்கள் மக்களுக்குத்தான் சொந்தம் என்பதை நாம் அரசியல் ரீதியாகக் கூறுகிறோம். சட்டப்படி அது அரசுக்குத்தான் சொந்தம் என்று தனது தீர்ப்பில் விளக்கியிருக்கிறது கேரள உயர்நீதி மன்றம்.

ஆனால் பொக்கிஷங்களும், கோவிலும் தனக்குச் சொந்தம் என்பது மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. சங்கராச்சாரியின் கருத்தும் அதுதான். “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடக் கூடாது” என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கருத்து. “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். கோவில் நிர்வாகம் மன்னனுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடத் தேவையில்லை” என்பது மார்க்சிஸ்டுகளின் கருத்து. “பொக்கிஷம் பத்மநாபசுவாமிக்கு சொந்தம்” என்பது காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து. இவர்கள் எல்லோரது கருத்தும் சாராம்சத்தில் ஒரே கருத்துதான்.

யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்று எந்தவித விவரத்தையும் காட்டாமல், ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்துக் கொண்டு, கேட்டால் பகவானுக்கு வந்த காணிக்கை என்கிறார்கள். காணிக்கைக்குக் கணக்கு எழுதி வைக்கக் கூடாது என்று பகவான் சொன்னாரா, அல்லது பக்தன் சொன்னானா? கணக்கில் வராத பணத்தைத்தானே கருப்புப் பணம் என்று அழைக்கிறார்கள்?

தங்க லிங்கம் எடுக்கும் சாயி பாபாதிருவிதாங்கூரின் பாதாள அறையிலிருந்து மட்டுமல்ல, புட்டபர்த்தியிலுள்ள பாபாவின் தனியறையான யஜுர்வேத மந்திரத்திலிருந்தும் தங்கமும் வைரமும், கட்டு கட்டாகப் பணமும், காசோலைகளும் வருகின்றன. தனியறையில் படுத்து ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக காணிக்கைகளை ஆராயக் காரணம் என்ன? பெண்டாட்டி, பிள்ளை இல்லாத பாபா யாருக்காக காணிக்கைப் பணத்தை தனியறையில் ஒதுக்கி வைத்தார்? வந்த காணிக்கைகளை அறங்காவலர் குழுவிடம் கொடுத்து ரசீது போடாமல், கோடிக்கணக்கான ரூபாயை ஏன் தன்னுடைய தனியறையில் பதுக்கி வைத்துக் கொண்டார் என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பவில்லை. பத்திரிகைகளும் எழுப்பவில்லை. பக்தர்களுக்கும் அது உரைக்கவில்லை.

அலைக்கற்றை ஊழலில் ஈட்டிய கணக்கில் வராத காசை சோதனை போட்டுப் பிடிக்கும் வருமான வரித்துறையோ, சி.பி.ஐ யோ பாபாவின் அறையைச் சோதனை போடவில்லை. ஒருவேளை கலைஞர் டிவிக்கு பதிலாக ‘கலைஞர் கோவில்’ என்றொரு ஆன்மீகக் கம்பெனியைத் தொடங்கி, அக்கோவிலின் உண்டியலில் 200 கோடி ரூபாயை காணிக்கையாக வரவு வைத்திருந்தால், கணக்கே கொடுக்காமல் பணத்தையும் காப்பாற்றி, கனிமொழியையும் கூட காப்பாற்றியிருக்கலாமோ?

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களுக்குச் சொந்தமாக்குவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம். கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கு வெளிநாட்டுக்கு ஓடுவதும், கே மேன் ஐலாண்ட், மொரிஷியஸ் போன்ற தீவுகளைத் தேடுவதும் மேற்கத்திய சிந்தனை முறையில் உதித்த வழிமுறைகள். பாரம்பரிய மிக்க நமது பாரத மரபில் இதற்கான பல வழிமுறைகள் ஏற்கெனவே உருவாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் தொன்மையானது திருவிதாங்கூர் நிலவறை. நவீனமானது பாபாவின் யஜூர்வேத மந்திரம். இவை எந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பிடிக்கும் சிக்காதவை.

ஏனென்றால் இவை ஆன்மீக உரிமைகள் என்ற இரும்புப் பெட்டகத்தினால் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் பௌதீகத் திருட்டுச் சொத்துகள். தற்போது தோண்டியெடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் தொல்லியல் மதிப்பு மிக்க செல்வங்கள் அல்ல. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் தங்கத்தின் வடிவிலான பணம். அவ்வளவே. அவை இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரிமையான சொத்து. அவர்களுடைய முன்னோர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட செல்வம்; சுரண்டப்பட்ட உழைப்பு.

திருவிதாங்கூர் அரசாட்சி கீழ் விவசாயிகள் மீதும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மீதும் நம்பூதிரிகளும், நாயர்களும் இழைத்த கொடுமைகளையும், அவ்வரசாட்சியின் கீழ் மக்களுடைய அவலமான வாழ்நிலையையும், ஆங்கிலேயனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நம் நாட்டு மக்களுக்கு அந்த மன்னர் பரம்பரை இழைத்த துரோகத்தையும் காட்சிப்படுத்தி, இரத்தம் தோய்ந்த அந்த வரலாற்றின் பின்புலத்தில், கண்டெடுக்கப்பட்ட இந்த ஒரு இலட்சம் கோடிப் புதையலைப் பார்வைக்கு வைக்க வேண்டும்.

அப்போதுதான் இந்தப் புதையல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் காட்டிலும், யாரிடமிருந்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையின் முக்கியத்துவம் நிலைநிறுத்தப்படும்.

_________________________________________________________________

-மருதையன், புதிய கலாச்சாரம் -ஜூலை, 2011
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி? – அரங்கக் கூட்டம் !

வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்!
இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!!

அரங்கக் கூட்டம்

19.07.2011, செவ்வாய்க்கிழமை, காலை 9.00 மணி

நியூ G.G. மஹால், MMDA பஸ் டெப்போ பின்புறம், அரும்பாக்கம், சென்னை

தொடர்புக்கு – 94451 12675

————————————

நிகழ்ச்சி நிரல்

தலைமை

தோழர். த.கணேசன்,  மாநில அமைப்பாளர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

உரை நிகழ்த்துவோர் 

ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி?

திரு. ச.சீ. இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சமச்சீர் கல்விக்குழு உறுப்பினர்

கல்வி கார்ப்பரேட்மயம் என்பது உலகமயம் உருவாக்கும் புதிய பார்ப்பனியம்

தோழர். மருதையன், பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

கட்டாய இலவசக் கல்வி தருவது அரசின் கடமை! கல்வி தனியார்மயம் என்பது ஏழைகள் மீதான வன்கொடுமை!

தோழர். சீ. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

அனைவரும் வருக !

__________________________________________________________________________

தொடர்புக்கு

வ. கார்த்திகேயன்.
41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95, http://rsyf.wordpress.com

வினவு – (91) 97100 82506

__________________________________________________________________________

தமிழக அரசே!

கட்டணக் கொள்கையை ஒழித்துக் கட்டு!
அனைத்துத் தனியார் கல்வி
நிறுவனங்களையும் அரசுடைமையாக்கு!

அரசுப் பள்ளிகளில் போதுமான
ஆசிரியர்களை நியமி!

அடிப்படைக் கட்டுமான வசதிகளைச்
செய்து கொடு!

சமச்சீர் கல்வியை அனைவருக்கும்
கட்டாயமாக – இலவசமாக வழங்கு!

அரசுப் பள்ளிகளில்
படித்த மாணவர்களுக்கு மட்டும்
உயர்கல்விப் படிப்புகளுக்கு அனுமதி கொடு!

அரசுக் கல்வி நிறுவனங்களில்
படித்தவர்களுக்கே
அரசு வேலை என்று ஆணையிடு!

உழைக்கும் மக்களே!

மனித மாண்பை மேம்படுத்தும்
கல்வியை ஒரு பண்டமாக்கி,
மக்களைக் கொள்ளையடிக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்கு,
அடிமைகளை உருவாக்கும்
தனியார்மய – உலகமயக் கல்விக் கொள்கைக்குக்
கல்லறை கட்டுவோம்!

ஆங்கிலவழிப் பயிற்சி – தரமான கல்வி
என்ற போர்வையில் புகுத்தப்படும்
புதிய பார்ப்பனியக் கல்விமுறையைத்
தூக்கியெறிவோம்!

பெற்றோர்களே!

10-வது மற்றும் +2 தேர்வுகளில்
சாதனை நிகழ்த்துவது
தனியார் பள்ளிகளை விட
அரசுப் பள்ளிகளே!

ஆங்கிலவழிப் பயிற்சி – தரமான கல்வி
என்ற மோகத்திற்குப் பலியாகி,
குழந்தைகளை பிராய்லர் கோழி போல்
வளர்க்கும் கல்வி வியாபாரிகளிடம்
சிக்கிச் சீரழியாதீர்!

அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பெருமக்களே!

மாணவர்களுக்கு முறையாகக்
கற்றுக் கொடுப்பதில்லை,
ஒழுக்கமாக வளர்ப்பதில்லை என்று
அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும்
கேவலப்படுத்திக் கொச்சைப்படுத்தும்
தனியார் பள்ளி முதலாளிகளுக்கு
எதிராக அணிதிரள்வீர்!

தனியார் பள்ளி ஆசிரியர்களே!

அற்பச் சம்பளம் கொடுத்து
உங்களைக் கொத்தடிமைகளைப் போல
நடத்துவதோடு, கல்விக் கொள்ளைக்குக்
கருவியாகப் பயன்படுத்தும்
தனியார் பள்ளி வியாபாரிகளுக்கு
எதிராக சங்கமாகத் திரண்டு போராடுவீர்!

__________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

குண்டுகள் ஏன் வெடிக்கின்றன?

268

குண்டு வெடிப்புமாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன. உற்றாரைப் பலிகொடுத்த உறவினரின் சோகம் பத்திரிகைகளில் படிமங்களாக, குண்டுவெடித்த இடங்களை வழக்கமாக பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்களின் பயணமாக, வெடித்த இடத்தில் பதட்டமாக இருக்கும் வாழ்க்கை வெடிக்காத இடங்களில் சகஜமாக, அடுத்த பரபரப்புச் செய்திகள் வரும்வரை குண்டு வெடிப்பை தொலைக்காட்சிப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் அலைவரிசைகள், விளம்பர இடைவெளிகளில் மகிழ்ச்சியாக, மொத்தத்தில் நாடு வழமையாகவே இயங்குகிறது. முன்புபோல நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வலிமையினை இப்போது அடிக்கடி வெடிக்கும் குண்டுகள் இழந்துவிட்டன. பொழுதுபோக்குகளில் மையம் கொள்ளும் இன்றைய நுகர்வுக் கலாச்சார வாழ்க்கை சமூக நிகழ்வுகளை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்குத் திறமையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. குண்டுகள் வெடிப்பதற்குப் பிந்தைய விளைவுகளின்பால் அனுதாபமோ, வெடிப்பதற்கு முந்தைய அரசியலின்பால் கவனமோ அற்றுப்போய்விட்டதனால் இப்போது குண்டுகள் மலிவாக வெடிக்கின்றன. எனினும் குண்டுகள் வெடிப்பதற்குக் காரணம்தான் என்ன?

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனாதைப் பிணங்களை சடங்குக்காக அறுத்து நீதிமன்றத்திற்காகப் பதிவு செய்து யாரும் கோருபவர் இல்லாமல் எரிக்கப்படுவது போல குண்டு வெடிப்பின் அலசல்கள் அரசியல் அரங்கிலும், ஊடகவெளியிலும் உயிரின்றி பேசப்படுகின்றன. அண்ணாசாலையில் தொழிலாளி ஊர்வலம் சென்றால் அதைப் போக்குவரத்திற்கு இடையூறு என்று இந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் நடுத்தரவர்க்க அறிவாளிகள் போல குண்டுவெடிப்பைத் தடுப்பதற்கு பலரும் ஆலோசனைகளை இலவசமாக வழங்குகின்றனர். போலீசின் அலட்சியம், உளவுத்துறையின் குறைபாடு, பலவீனமான மத்திய அரசு, குண்டு வைப்பவர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்காதது, பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் சதிகளை முறியடிக்காதது என்று நீளும் இந்தப்பட்டியல் ஆத்திச்சூடி அறஞ்செய விரும்பு போல மக்களிடம் மனப்பாடமாய் இறக்கப்பட்டிருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தையை தூக்கத்தில் எழுப்பி தீவிரவாதத்திற்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் கூட அழகாய் ஒப்புவிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் குண்டு வெடிப்பு நிகழ்கிறுது என்றாலும் இது தேசத்திற்கெதிரான போர் என்று முழங்கும் அத்வானி பொடா போன்ற கடுமையான சட்டங்களை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிறார். புரட்சித் தலைவியும் அதனை வழிமொழிகிறார். ஈழத்தமிழர்களை ஆயுள்தண்டனை கைதிகளாக முகாம்களில் அடைத்து கண்காணிப்பது போல வங்கதேச அகதிகளை கண்காணிக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது தினமணி. நாடாளுமன்றத் தாக்குதலுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி அப்சல்குருவை இன்னும் தூக்கில் போடாதது தீவிரவாதிகளுக்கு குளிர் விடச்செய்திருக்கிறது என்கிறார் ஒரு தலைவர். உதட்டளவிலோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, உள்ளத்தில் இருக்கும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பினாலோ பேசப்படும் இந்த போதனைகளால் குண்டுகள் அழிந்துவிடுமா?

குண்டுகள் இந்த வெற்றுப்பேச்சினை சட்டை செய்வதில்லை. ஓரிடத்தில் குண்டுவெடிப்பது ஏதோ தீபாவளி பட்டாசு வெடிப்பது போல, ஹாலிவுட் படத்தில் நிகழ்வது போல அவ்வளவு சுலபமில்லை. அதிரடிக்காட்சிகளை நொறுக்குத்தீனியாக மனதில் பதியவைத்திருக்கும் திரைப்பட-தொலைக்காட்சி உணர்ச்சி, உண்மைக்கும் கற்பனைக்குமான வேறுபாட்டை, நிஜத்தின் வலியை உணர்த்துவதில்லை. உண்மையில் குண்டு வைப்பதற்கு இரும்பு மனம் கொண்ட நபர்கள், அதுவும் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலுடன், பிடிபட்டால் போலீசின் சித்திரவதைக்கும், நீதிமன்றத்தின் மரணதண்டனைக்கும் பயப்படாத நெஞ்சுரத்துடன் வேண்டும். இந்த மன உறுதியை வைத்து இவர்கள் வாழ்க்கை முழுவதும் கொள்கைக்காக களமிறங்குபவர்கள் என்று பொருளல்ல. இது குறிப்பிட்ட சமூகக் காரணத்தால் கணநேரத்தில் வந்துபோகும் சாகச உணர்வு. குறிப்பிட்ட நடவடிக்கையின் காலம் வரைக்கும் மனதில் இருக்கும் தற்கால உறுதியால் நினைத்ததை முடிக்கும் வல்லமையினை இவர்கள் பெறுகிறார்கள். அதே சமயம் இவற்றை தனிநபராக இருந்து மட்டும் செய்ய முடியாது. இரகசியமாய் பணம் திரட்டுவது, பொருட்களை சேகரிப்பது, தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வது, ஆயுதங்களை சோதித்தறிவது, இரகசிய இடங்களை உருவாக்குவது, எல்லாவற்றுக்கும் உதவி செய்யும் ஆதரவாளர்களை அணிசேர்ப்பது வரை பல தயாரிப்புகள் வேண்டும். இலட்சியத்தின்பால் இருக்கும் உறுதியுடன் கூடவே அப்பாவி மக்களை கொல்லுவது குறித்த இரக்கமின்மையும் கணிசமாக வேண்டும். ஆனாலும் சங்கபரிவாரங்களால் அடுத்த பிரதமராக முன்னிறுத்தப்படும் அத்வானி இரும்புக் கரம் கொண்டு குண்டுகளை அடக்கமுடியுமென வன்மையாக எடுத்துரைக்கிறார். அதன்படி குண்டுகளை அடக்க முடியுமா?

அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே பொடா சட்டமும், அதில் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுவதும், வங்கதேச ஏழை அகதிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விரட்டப்படுதும், இசுலாமிய அமைப்புகள் பல தடைசெய்யப்பட்டதும் என ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனையோ செய்து பார்த்தும் குண்டுகள் மறையவில்லையே! சொல்லப்போனால் இந்த இரும்புக்கர நடவடிக்கைகள் குண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. எனில் இந்த சட்டதிட்டங்களை தகர்த்தெறியும் வலிமையினை குண்டுகள் எங்கிருந்து பெற்றன?

குண்டுகள் அந்த வலிமையினை வரலாற்றின் அநீதியிலிருந்து பெற்றுக்கொண்டன. குண்டுகளினுள் பொதியப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களின் வீரியத்தினைவிட சமகால வரலாற்றின் வீரியம் அதிகமானது. குண்டுகள் தன்னளவில் இயல்பாக வெடித்துவிடுவதில்லை. கூர்ந்து நோக்கினால் அவை வரலாற்றின் விளைபொருட்கள்! 1992 பம்பாய் கலவரத்திற்கு பிந்தையதுதான் 1993 பம்பாய் குண்டுவெடிப்பு! 2002 குஜராத் கலவரத்திற்கு பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு! 1996 கோவை கலவரத்திற்கு பிந்தையதுதான் 1999 கோவை குண்டுவெடிப்பு! இந்த சங்கிலித் தொடர் நிகழ்வின் தீர்மானிக்கும் கண்ணியாக கலவரங்கள் இருக்கின்றது. இருதரப்பார் அடித்துக்கொள்வதுதான் கலவரம் என்பதன் இலக்கணமாக இருக்கும்போது அவற்றைக் கலவரங்கள் என அழைப்பது பொருத்தமற்றது. சரியாகச் சொல்வதானால் அவை இந்துமதவெறியர்களால் தொடுக்கப்பட்ட போர்! இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை! இவற்றின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டால் குண்டுகளின் தோற்றுவாயை அறிந்து கொள்ள இயலுமா?

நிச்சயம் முடியும். 91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது. அதன் உச்சம் பம்பாய் கலவரமாக வெடித்தது. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே தனது சாம்னா பத்திரிகையின் மூலம் இசுலாமிய மக்களை அடித்து விரட்டுமாறு கட்சிக் குண்டர்களுக்கு ஆணையிட்டார். போலீசு உதவியுடன் இசுலாமிய குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டன. இந்த உண்மைகளை எடுத்துக்கூறி குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை இன்றைக்கு குப்பைத்தொட்டியி்ல் தூங்குகிறது. ஒரு வேளை நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களைக் கொன்ற சிவசேனா வெறியர்களை தண்டித்திருந்தால் பின்னர் பம்பாயில் குண்டுகள் வெடிக்காமலே போயிருக்கலாம். ஆனால் ஒருவேளை என்ற சொல்லை வரலாற்றை பரீசீலிப்பதற்கு பயன்படுத்தலாமே ஒழிய வரலாற்றை மாற்றிப்போட்டு கற்பனை செய்வதற்கு இடம் கிடையாது. இன்று பம்பாய் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களில் பல அப்பாவிகள் நிரபராதியாக பல வருடங்களாக சிறையில் கழித்தார்கள். எனினும் பம்பாய் கலவரக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பதோடு வழக்கே நடைபெறவில்லை. கலவரங்களுக்கு சலுகை! குண்டுகளுக்கு தண்டனை! எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும். 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நரோடா பாட்டியாவின் சவக்கிடங்கு, கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்ட காட்சி, பெஸ்ட் பேக்கரியின் 17பேரை உயிரோடு எரித்த சம்பவம், இரத்தக் கவிச்சி அடிக்கும் வெறியுடன் இந்து மதவெறியர்கள் சம்பவங்களை குதூகலத்துடன் தெகல்காவின் கேமராவில் வருணித்த ஆதாரம், முடிவில்லா குஜராத்தின் இனப்படுகொலைப் படிமங்கள் உணர்ச்சியுள்ள எவருக்கும் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. ஆனால் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்காக, செய்யாத குற்றத்திற்காக பல அப்பாவி முசுலீம்கள் சிறையில் வாடும்போது இனப்படுகொலை செய்த இந்து மதவெறிக் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். குண்டுகள் செய்யும் இரகசிய ஏற்பாடுகளெல்லாம் இந்து மதவெறியர்களுக்கு தேவையில்லை. குஜராத்தில் அவர்கள் நடத்திய நரவேட்டைக்கான துப்பாக்கிகள், குண்டுகள், ஆயுதங்கள், எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாக இறங்கின. குண்டுகளின் ஏற்பாடுகளை சதிகள் எனப்பார்க்கும் பொதுப்புத்தி இந்துமதவெறியர்களின் ஏற்பாடுகளை கலவரங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாகப் பார்க்கின்றது. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

கோவையில் காவலர் செல்வராசு கொலைசெய்யப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட முசுலீம் மக்கள் கொலைசெய்யப்பட்டு பல கோடி மதிப்பிலான இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோவை சங்கபரிவார ரவுடிகளை கைது செய்து தண்டிக்க முடியாத இந்த சமூக அமைப்பு கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து தண்டித்திருக்கிறது. அதிலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பல வருடங்களை சிறையில் கழித்து விட்டு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குற்றமின்றி தண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு மனைவியையும், குழந்தைகளையும் நிர்க்கதியில் தவிக்கவிட்டு வாழ்வைத் தொலைத்திருக்கும் இந்த சாதரண மனிதர்களுக்கு இந்த சமூக அமைப்பின் மேல் எத்தனை பெரிய கோபம் இருக்கும்? இவர்கள் எவரும் படித்து வசதியாக வாழும் நடுத்தரவர்க்கத்தினரோ, இசுலாமிய மதத்தின் பால் ஆழ்ந்தபிடிப்போ, வெறியோ, இந்துக்களின் மீது விரோதமோ கொண்டவர்கள் அல்லர். இவர்களின் நெஞ்சில் வஞ்சினத்தை ஏற்றுவதற்கு ஐ.எஸ்.ஐ தேவையில்லை. அது உண்மையுமில்லை. இரக்கமற்று தனிமைப்படுத்தும் சமூகத்தின் காரணத்தால் இந்த இளைஞர்களின் அவலம் குண்டுகளாக பரிமாணம் கொள்கின்றன. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?

இந்து மதவெறியர்கள் இந்தியாவில் நடத்தியிருக்கும் கலவரங்களில் பதிவு செய்திருக்கும் கொலைக்கணக்கும், பொருள் இழப்பும் அளவில் குண்டுகளை விட பலநூறு மடங்கு அதிகம்தான். ஆனால் அவை பொதுவில் தீவிரவாதிகள் செய்த குற்றமென்று மதிப்பிடப்படுவதில்லை. பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சிறு கும்பலான சங்கபரிவாரம் செய்யும் அநீதிக்கான அங்கீகாரம் பெரும்பான்மையின் மவுனத்தில் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் எல்லா இந்துக்களும் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடி மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மவுனம் அநீதியை மறுக்கவில்லை. அதுவே அநீதியின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் விளைவால் உண்மையான தீவிரவாதிகளான இந்துமதவெறியர்கள் பொது அங்கீகாரத்துடன் எல்லாக் கட்சிகளைப்போல ஒரு கட்சியாக இயங்குகிறார்கள். சமூகநீதி, திராவிடம் பேசும் எல்லா கட்சிகளும் இந்து மதவெறியர்களுடன் தேர்தல் கூட்டணி வைப்பது முதல் அரசில் பங்கேற்பது வரை முரணின்றி செய்கின்றன. இந்தியாவின் பொதுவாழ்வில் இந்து மதவெறியர்கள் அதிகாரத்துடன் ஆணவமாக நடந்து கொள்வதற்கு இத்தனை சலுகைகள் இருக்கும்போது குண்டுகளுக்கான முயற்சிகள் எங்கோ இரகசியமாக நடந்து கொண்டுதானே இருக்கும்?

குண்டுகள் உருவாதற்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டு குண்டுகள் மட்டும் வேண்டாம் என்று நினைப்பதி்ல் பயனொன்றும் இல்லை. இந்திய அரசியல் அரங்கில் இந்துமதவெறிச் சக்திகள் கறுவருக்கப்படாதவரை குண்டுகளையும் கருவறுக்க முடியாது. மதசார்பாற்ற அரசியல் அதன் உண்மையான பொருளில் அமலுக்கு வராதவரை குண்டுகள் வந்து கொண்டே இருக்கும். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வெல்லும்வரை குண்டுகள் தோல்வி அடையப்போவதில்லை. ஆகையால் குண்டுகளை நாம் நியாயப்படுத்துகிறோமா?

குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி. அதாவது இந்துமதவெறியர்களின் கோரப்பிடியிலிருந்து இசுலாமிய மக்களை பாதுகாப்பதில் குண்டுகள் தோல்வியடைவதோடு உண்மையில் பாதுகாப்பின்மையைத்தான் அதிகப்படுத்தியிருக்கின்றன. குண்டுகளின் முக்கியமான விளைவுகளே இந்துமதவெறியை வலுப்படுத்துவதும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துவதும்தான். தற்போதைய குண்டுவெடிப்புகளில் கூட இந்துமதவெறியர்கள் எவரும் சாகவில்லை என்பதோடு அப்பாவி உழைக்கும் மக்கள்தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிர்கால குண்டுவெடிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாநகரங்களில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசு உழைக்கும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இப்படி குண்டுகள் வெடித்தால் நிச்சயமாக கொல்லப்பட இருக்கின்ற உழைக்கும் மக்கள்தான் உண்மையில் பார்ப்பன இந்துமதவெறியால் ஏற்கனவே அடிமைகளாக நடத்தப்படுவர்களாகவும், வர்க்க ரீதியில் இந்துமதவெறியர்களை வீழ்த்துவதற்கான சக்தியாகவும் இருக்கின்றனர். குண்டுகள் இந்த மக்களைத்தான் இந்துமதவெறியர்களின் கைகளில் எளிதாக மாற்றித் தருகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் வாழ்க்கைப் போராட்டத்தால் கவலையில் உழன்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களை இரக்கமின்றி கொல்லும் குண்டுகளில் பாசிச மனமும் கலந்திருக்கிறது. மறுபுறம் தமது எதிர்வரிசையில் எல்லாப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்கும் வேலையையும் குண்டுகள் அடி முட்டாள்தனமாக செய்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க குண்டுகளால் இசுலாமிய மக்களுக்கு என்ன பாதிப்பு?

ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும் எண்ணிறந்த பாதிப்புகளை இசுலாமிய மக்கள்தான் எதிர்கொள்கின்றனர். குண்டுகளின் அரசியலுக்கு கடுகளவும் தொடர்பில்லாத அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் இருப்பதும், இசுலாமிய மக்கள் அனைவரையும் பொதுச்சமூகம் தீவிரவாதிகளாக பார்ப்பதும், இதன் தொடர் விளைவாக இசுலாமிய மக்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை, கல்வி இல்லை, வேலை இல்லை மொத்தத்தில் மதிப்பு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்படுகிறது. இதையே இந்துமதவெறியர்கள் பிரச்சாரத்தின் மூலம் செய்வதை குண்டுகள் தமது வெடிப்பின் மூலம் செய்கின்றன. யாரை எதிர்த்து உருவனதோ அவர்களுடன் எதிர்மறையில் ஒன்றுபடுவதுதான் குண்டுகளின் தர்க்கரீதியான முடிவு. வெடிமருந்தின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் குண்டுகள் வெகுஜன அரசியல் நடவடிக்களுக்காக பொறுமையுடன் ஈடுபடுவதில்லை. பொறுமையிழந்து அவசர அவசரமாக வெடிக்கும் குண்டுகள் நீண்டகால நோக்கில் இசுலாமிய மக்களைத்தான் காவு கேட்கின்றன. குண்டுகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் என்ன தொடர்பு?

குண்டுகளின் தோற்றுவாயை சமூக நிலைமைகளே தோற்றுவிக்கின்றன என்ற போதிலும் குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குண்டுகள் தாம் இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கும் புனிதப்போரில் ஈடுபட்டிருப்பதாக நம்புகின்றன. இதை பல இசுலாமிய சமுதாயப் பெரியோர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் குண்டுகள் தாம்தான் உண்மையான இசுலாமியர்கள் என்று கற்பித்துக் கொள்கின்றன. ஆனால் உலக வரலாறு நெடுகிலும் இந்தக் கற்பிதம் பொய்யென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இசுலாமிய மதம் ஒரு தீர்வாக அமைய முடியாது. கூடவே உலகில் இசுலாமிய மதத்தை உண்மையாக பின்பற்றும் நாடு எதுவும் கிடையாது, அப்படி இருக்கவும் முடியாது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை. இசுலாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பாக்கிஸ்தானில் சன்னி, ஷியா பிரிவுகளிடையே மசூதியில் குண்டு வைத்துக் கொல்லும் அளவுக்கு பிளவு இருப்பதும், ஷரியத்தின் சட்டதிட்டங்களை கறாராக பின்பற்றும் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் விசுவாசிகளாக இருப்பதும், ஏழை இசுலாமிய மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்த பணஉதவி செய்யும் அரபு ஷேக்குகள் தனிப்பட்ட வாழ்வில் களிவெறியாட்ட பொறுக்கிகளாக இருப்பதும் இந்த உண்மைகளை எடுத்தியம்பும். ஆனால் குண்டுகள் இந்த யதார்த்த்த்தை மறுப்பதுடன் கற்பனையான மத உலகை சித்தரித்துக்கொண்டு வாழ முயல்கின்றன. எனில் குண்டுகளின் எதிர்காலம் என்ன?

எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது. சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.

ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது. அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது. இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.

__________________________________________________________________________________

அகமதாபாத் குண்டு வெடிப்பை தொடர்ந்து  29/07/2009 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை
__________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

மும்பை 26/11

விவசாயிகள் மீது தடியடி : ஜெ’வின் பேயாட்சி!

விவசாயிகளின் மீது தடியடி - ஜெயலலிதாவின் பேயாட்சி
விவசாயிகளின் மீது தடியடி - ஜெயலலிதாவின் பேயாட்சி

திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் விளையும் நெல்லை விற்பனை செய்யப் போதுமான அளவிற்கு நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையங்கள் அம்மாவட்டங்களில் திறக்கப்படுவ தில்லை. இதனால், அம்மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வேறு வழியின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாகத்தான் நெல்லை விற்று வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல்லுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை கிடைக்காது. வியாபாரிகள் கூட்டணி கட்டிக்கொண்டு தீர்மானித்துச் சொல்லும் விலையில்தான் நெல் மூட்டைகளை விற்க முடியும். சட்டபூர்வமாக நடந்துவரும் இந்தக் கொள்ளையை விவசாயிகள் தட்டிக் கேட்க முயன்றால், போலீசின் குண்டாந்தடியும் பொய் வழக்கும்தான் அவர்கள் மீது பாயும். இந்த அநியாயம்தான் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விழுப்புரத்திலும் நடந்தது.

விழுப்புரம் நகரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினமும் ஏறத்தாழ 2,000 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த ஜூன் 2 அன்று வழக்கத்தைவிட அதிகமாக நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல் 750 ரூபாயிலிருந்து 825 ரூபாய் வரை விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அன்று 75 கிலோ மூட்டைக்கு ரக வாரியாக 360 ரூபாய் முதல் 639 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் அறிவித்தனர்.

தவிட்டின் விலையைவிட நெல்லின் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதைக் கேட்ட விவசாயிகள் கொதித்துப் போனார்கள். நெல் மூட்டைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அதிகாரிகளும் வியாபாரிகளும் கூட்டணி கட்டிக் கொண்டு தம்மிடம் பகற் கொள்ளை அடிக்க முயலுவதைப் புரிந்து கொண்ட விவசாயிகள், நெல்லுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். உள்ளூர் போலீசு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் வந்திறங்கிய போலீசு பட்டாளம், பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதற்கு முயலாமல், விவசாயிகளை அடித்துத் துரத்தியது.

விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் நெல்லை, வியாபாரிகள் அதிகாரிகள் துணையோடு நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடிக்கும் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார், விவசாயிகள் விழிப்பு உணர்வு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன். “திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ 30 இலட்சம் டன் நெல்லை வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்கின்றனர். சராசரியாக ஒரு குவிண்டாலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட 200 ரூபாய் குறைவாக விலை வைத்தாலே, விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக’’க் கூறுகிறார், அவர். விவசாயிகளுக்கு ஏற்படும் இந்த இழப்பு வியாபாரிகளுக்குக் கொள்ளை இலாபமாக, அதிகாரிகளுக்கு இலஞ்சமாகப் போய்ச் சேருகிறது.

ஜெயா பதவியேற்றவுடனேயே, “விவசாய உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து, விவசாயத்தில் மகத்தான மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக” அறிவித்தார். ஆனால், விழுப்புரத்தில் நெல்லுக்கு நியாயமான விலை கோரி போராடிய ‘குற்றத்திற்காக’ ஆறு விவசாயிகள் மீது பொய்வழக்குப் போட்டு சிறையில் தள்ளியிருக்கிறது, அவரது அரசு.
விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர், “இது ஒன்னும் பழைய காலம் இல்லடா” எனச் சொல்லி அடித்தாராம். ஆம், இது இருண்ட காலம் அத்தியாயம்3 அல்லவா!

_________________________________

புதிய ஜனநாயகம் – ஜூலை 2011
_________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்