ரஞ்சனா நாச்சியார் பேசியது புரட்சியா? புஸ்வானமா? | தோழர் ரவி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ரஞ்சனா நாச்சியார் பேசியது புரட்சியா? புஸ்வானமா? | தோழர் ரவி
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

நவம்பர் 7, 1917 ரசியாவில் பாட்டாளி வர்க்க ஆட்சி மலர்ந்த நாள். பூமிப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கில் உழைக்கும் மக்கள் ஆட்சி நிறுவப்பட்ட நாள். ஏகாதிபத்தியம் காகிதப் புலியென நிரூபித்துக் காட்டி, ஒடுக்கப்பட்ட நாடுகளின் – மக்களின் மனங்களில் புரட்சிக் கனலை மூட்டிய நாள். முதலாளித்துவ சகாப்தம் முடிந்து, சோசலிச சகாப்தம் தொடங்கி விட்டதை உலகறிய பறைசாற்றிய நாள். ரசியாவில் முதல் சோசலிச அரசு உதித்த அந்த நவம்பர் புரட்சிக்கு தற்போது 107-வது பிறந்தநாள்.
முதல் உலகப்போருக்குப் பிறகு ஏகாதிபத்திய நாடுகளில் கூட வறுமையும், வேலையின்மையும் தலைவிரித்தாடியபோது அவற்றின் வாடை கூட இல்லாமல் சோசலிச ரசியா மண்ணுலக சொர்க்கமாக மலர்ந்தது. கொள்ளைச் சுரண்டலும், கொடூர அடக்குமுறையும் முதலாளித்துவ நாடுகளில் தலைவிரித்தாடிய போது அச்சுரண்டல் அமைப்பை ஒழித்து பாட்டாளிகளையே நாட்டின் எஜமானர்களாக்கி ஜனநாயகத்தை நிலைநாட்டி வளர்த்தது சோசலிசம்.
ரசியப் புரட்சியின் சாதனைகள்:
படிக்க: அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
ரசியப் புரட்சியின் தாக்கம் உலகெங்கும் விடுதலைப் போராட்டங்களில் பிரதிபலித்தது. அது இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கங்கள்
இப்படி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே ஒரு புரட்சியை தற்காலிகமாக தடுக்க பல்வேறு வழிகளில் சட்டத்திருத்தங்கள், சலுகைகளை வழங்கி மக்கள் நல அரசு என்ற முகமூடியை முதலாளித்துவம் அணிந்து கொண்டது.
ஏகாதிபத்திய சுரண்டல், கொள்ளை, சீரழிவுகளுக்கு எதிராக சமத்துவம், மனிதநேயம், பொதுநலம் என உழைப்பின் உன்னதத்தை, பாட்டாளி வர்க்க புரட்சிகர கலாச்சாரத்தை சோசலிச ரசியா உலகிற்கு வழங்கியது.
ஆனால் ஏகாதிபத்திய முதலாளித்துவம் இத்தனை ஆண்டுகளில் இந்த உலகிற்கு வழங்கியுள்ளது என்ன? போர்கள், இனப்படுகொலைகள், பஞ்சம், பட்டினி, வேலையின்மை, ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு, வரைமுறையற்ற இயற்கைச் சுரண்டல், பேரழிவுகள், கொடிய தொற்றுநோய்கள், பாலியல் கலாச்சார சீரழிவுகள் என்று நாம் வாழும் இந்த உலகையே அழிவுநிலைக்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளது ஏகாதிபத்திய முதலாளித்துவம்.
இன்று அமெரிக்க ஏகாதிபத்திய பயங்கரவாதம் தனது லாபவெறி, ஆதிக்கவெறி நோக்கத்திற்காக உலகம் முழுக்க போர்களைத் தூண்டி விடுகிறது. தனது ஏவல்நாய் இஸ்ரேலின் மூலம் பாலஸ்தீனத்தில் நடத்திக் கொண்டிருக்கும் இன அழிப்புப்போர் ஆயிரக்கணக்கில் பாலஸ்தீன மக்களை அன்றாடம் கொலை செய்து கொண்டிருக்கிறது.
ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, உக்ரைன் என அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தூண்டி விடப்பட்ட போர்களின் கொலைப்பட்டியல் தொடர்கிறது.
உலக மக்கள் தொகையில் 240 கோடி பேர், அதாவது 29.6 சதவிகிதம் பேருக்கு தங்களுக்கு தேவையான சரியான உணவைப் பெற முடியவில்லை. 78.3 கோடி பேர் பட்டினியால் வாடுகின்றனர். ஐந்து வயதிற்குட்பட்ட 14.8 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏகாதிபத்திய நாடுகளிலேயே பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதற்காக ஆயிரக்கணக்கான உணவு வங்கிகள் திறக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. முதலாளித்துவத்தின் சொர்க்கங்களில் ஒன்றாக வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்தில் மட்டுமே 40 லட்சம் பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். இதுதான் நிரந்தரமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டு திணறும் உலக முதலாளித்துவத்தின் யோக்கியதை.
படிக்க: பாரிஸ் கம்யூனின் புரட்சிப்பாதையில் பீடுநடைபோடுவோம்!
இன்னொரு பக்கம் உலகின் பொருளாதாரம் விரல் விட்டு எண்ணக்கூடிய நிதி மூலதனக் ஆதிக்க கும்பலின் கைகளில் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.
தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் மூலம் ஏகாதிபத்திய சுரண்டலின் பிடியில் வலுவாகச் சிக்க வைக்கப்பட்டுள்ள இந்தியாவிலோ ஆர்.எஸ்.எஸ், பிஜேபி – அம்பானி, அதானி பாசிச கும்பல் உழைக்கும் மக்கள் மீது கொடூர சுரண்டலையும், அடக்குமுறைகளையும் ஏவி விட்டுள்ளது.
உழைக்கும் மக்களின் மீது கார்ப்பரேட் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கேற்ப சர்வாதிகாரமான முறையில் நூற்றுக்கணக்கான சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக 44 தொழிலாளர் சட்டங்களையும் செல்லாக் காசாக்கி, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீது ஒரு போரை ஏவியுள்ளனர்.
ஒரு பக்கம் பட்டினிக் குறியீட்டில் 111-வது இடத்தில் மோசமான நிலையில் இருக்கும் இந்தியாவில்தான் அதானியும், அம்பானியும் உலகப் பணக்காரர் வரிசையில் இடம்பிடிக்கிறார்கள். 22 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியாவில்தான் பாசிச மோடி அரசு கடந்த ஒன்பதரை ஆண்டுக் காலத்தில் 25 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் லாபத்தை மொத்தமாக விழுங்கியிருக்கிறது. இன்னொரு பக்கம் கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட எல்லாத் துறைகளையும் தனியார்மயமாக்குவதன் மூலம் தங்குதடையின்றி மக்களை கொள்ளையடிப்பதற்கு ஏற்ப மொத்தக் கட்டமைப்பும் மாற்றப்பட்டுள்ளது.
நாட்டின் முதுகெலும்பு என அழைக்கப்படும் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படாமல் விவசாயத்துறையில் அதானியின் சாம்ராஜ்யம் விரிவுபடுத்தப்படுகிறது.
பெட்ரோல் மீது 57 சதவிகித வரி, ஒரு மாதத்திற்கு 1.75 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, மக்கள் நலத்திட்டங்களுக்கு அடியோடு மானிய வெட்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வரிச்சலுகை என இந்திய அரசு கார்ப்பரேட்டுகளின் அரசுதான் என மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக மக்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றுகின்றனர். செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர், மக்கள்.
இன்னொரு பக்கம் தலித் மக்கள் மீதான சாதிவெறியாட்டம், தீண்டாமை, சிறுபான்மையினர் மீதான கும்பல் படுகொலைகள், கலவரங்கள் ஆகியன காவி பாசிச கும்பலால் திட்டமிடப்பட்டு தீவிரமாக நடத்தப்படுகின்றன. மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியாவை இந்த காவி பாசிஸ்டுகள் மாற்றிக் கொண்டிருக்கி்ன்றனர்.
கார்ப்பரேட்டுகளின் அடியாட்கள்தான் இவர்கள் என அம்பலப்பட்டு நிற்கும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி – அம்பானி, அதானி பாசிச கும்பலை வீழ்த்துவதற்கான மக்கள் எழுச்சியை நாம் உடனடியாக கட்டியமைக்க வேண்டும். அதன் மூலம் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்க வேண்டும். இதுதான் உண்மையான தீர்வு.
![]()
தோழர் பரசுராமன்,
பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, 24/KRI,
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்,
97880 11784
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தற்குறி மட்டுமல்ல சமூக விரோதி TTF!
உயிரழிப்பு காரணமானவன் தலைவனா?
TTF வாசனை வெளுத்து வாங்கிய மருது
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பள்ளி சிறுவர்களுக்கு PARAKH தேர்வு எதற்கு?
கேள்வியெழுப்பும் ஆசிரியர் உமா மகேஸ்வரி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததிலிருந்தே அந்நிலத்தின் மக்களைக் கொன்றொழித்து வருகிறது, இஸ்ரேலிய யூத இனவெறி அரசு. தற்போது, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் என்பது ஒரு இன அழிப்பின் உச்சம். காசா துண்டு நிலத்தில் சிறைப்படுத்தப்பட்ட மக்களின் மீது குண்டுகளைவீசி கொத்துக் கொத்தாக கொன்று வருகிறது இஸ்ரேல். கட்டிடக் குவியல்கள், இடிபாடுகளிடையே சிக்கி தனித்தனி பாகங்களாக எடுக்கப்படும் சடலங்கள், நிராதரவாகப்படும் குழந்தைகள், சுதந்திரத்தை விரும்பும் எஞ்சிய பாலஸ்தீனக் குழந்தைகள்… பாலஸ்தீனத்தினத்தின் மீதான கொடூரம் நெஞ்சை உலுக்குகிறது.
பாலஸ்தீனத்தின் மீது, உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்கா மற்றும் அதன் ஏவல்நாயான இஸ்ரேல் நடத்தும் இந்த காட்டுமிராண்டித்தனமான இன அழிப்புப் போரை உலகமே கண்டிக்கிறது. உலகெங்கும், சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் ஒலித்தாலும், பாலஸ்தீனத்தின் இந்த நிலைக்குக் காரணம் ஹமாஸ் கடந்த அக்டோபரில் தொடுத்த தாக்குதல்தான் என்று கூறி, பாலஸ்தீன சுதந்திர வேட்கையின் எதிர் நடவடிக்கையையும், இஸ்ரேலின் இன அழிப்பையும் சமப்படுத்திப் பார்க்கின்ற பார்வை இருக்கத்தான் செய்கிறது. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போர் என்பது இன்று தொடங்கியதல்ல. அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.
காசா மீது போரை நடத்திக் கொண்டிருக்கும் போதே, காசாவிற்கான தண்ணீர், மின்விநியோகம், எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை நிறுத்தியது; பாதுகாப்புப் பகுதி என்று அறிவித்த தெற்கு பகுதியிலும் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது; அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவது ஆகியன ஒரு இன அழிப்பின் உச்சத்தைக் குறிக்கிறது.
படிக்க: என் குரல் கேட்கலையா… | காசா | சிவப்பு அலை பாடல்
தற்போது மட்டுமல்ல, பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அம்மக்கள் மீது ஒரு அறிவிக்கப்படாத இன அழிப்புப் போரை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.
பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் என்பது சிறுவிவசாயமும், மீன்பிடித்தலும்தான். இஸ்ரேலின் அநீதியான கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது.
காசா என்பதே ஒரு துண்டு நிலம்தான். அந்த நிலத்தின் வாழும் மக்களின் விவசாய நிலங்களில் 35 சதவீதத்தை தடைசெய்யப்பட்ட பகுதியாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இப்பகுதியில், நிலம் வைத்திருக்கின்ற 113,000 சிறுவிவசாயிகள் அந்த நிலத்தைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
“பாலஸ்தீனிய மக்களுக்கு தங்கள் வாழ்க்கை, நிலம் மற்றும் இறையாண்மைக்கான உரிமை உண்டு” (The Palestinian people have a right to their lives, land and sovereignty) என்ற தலைப்பில் வெளியான ஆய்வறிக்கை, இஸ்ரேலின் வாழ்வாதார அழிப்பை அம்பலப்படுத்துகிறது.
பாலஸ்தீனியர்களின் விவசாய நிலத்தில் 90 சதவீதம் ஜோர்டானை ஒட்டியுள்ள மேற்குகரையில்தான் இருக்கிறது. 1993 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையில் ஒஸ்லோ ஒப்பந்தம் போடப்பட்டத்திலிருந்தே, இந்த மேற்குகரை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இங்குள்ள நிலத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ள 76 கேட்களில், 12 கேட்கள் வழியாக மட்டுமே தினமும் விவசாயிகள் சென்று வர முடியும்.
அதுமட்டுமின்றி, மேற்கு கரையில் உள்ள நீராதாரங்களை இஸ்ரேல் தன்னுடையக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. 1982 ஆம் ஆண்டிலிருந்தே, நீருக்காக இஸ்ரேலை நம்பியிருக்கின்றனர் பாலஸ்தீனியர்கள். பாலஸ்தீனியர்களுக்கு வழங்கும் நீரைவிட மேற்குகரையில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆறுமடங்கு நீரை அதிகமாக இஸ்ரேல் வழங்குகிறது என்பதும், ஒருவருக்கு 20 லிட்டர் எனுமளவிற்கே பாலஸ்தீனிய மக்களுக்கு நீர் வழங்கப்படுகிறது என்பதும் அம்பலமாகியிருக்கிறது.
படிக்க: இஸ்ரேல் நர வேட்டை — ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல்!
மேலும், கிணறுகள் அமைப்பது, மழைநீர் சேகரிக்கின்ற உரிமையையும் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு மறுக்கிறது. அத்தகையக் கட்டுமானங்களை இஸ்ரேலிய இராணுவம் அடிக்கடி அழிக்கவும் செய்கிறது. இதனால் குடிநீருக்காகக்கூட இஸ்ரேலிடம் கையேந்த வேண்டியிருக்கிறது பாலஸ்தீனம். குடிநீருக்கே இப்படியென்றால், விவசாயத்திற்கான நீரின் நிலை குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அவ்வாறு விவசாயம் நடைபெற்றாலும் அதை இஸ்ரேல் விடுவதுமில்லை. விதைகளுக்காகவும், உரங்களுக்காகவும் இஸ்ரேலை நம்பியிருப்பதால், இந்திய விவசாயிகளைப் போலவே பாலஸ்தீன விவசாயிகளும் கடனிலும், வறுமையிலும் உழல்கின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், அறுவடைக் காலங்களில், காசாவை நோக்கிக் காற்றடிக்கும் பொழுதெல்லாம், பயிர் அழிப்பு விமானங்கள் மூலம் கிளைபோசேட் என்ற களைக்கொல்லியை அடிக்கிறது இஸ்ரேல். இவ்வாறு, வானிலிருந்து களைக் கொல்லிகளை அடித்ததனால், பாலஸ்தீனத்தில் கடந்த 2020 ஜனவரியில் மட்டும் 281 ஹெக்டேர் பயிர்கள் அழிக்கப்பட்டன. இதனால் நேரடியாக 350 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த கிளைபோசேட் என்ற களைக் கொல்லியானது, உலக சுகாதார நிறுவனத்தால், புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என்று அறிவிக்கப்பட்டதாகும். அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் விலங்களிலும், மனிதர்கள் மீதும் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகளவிலான கிளைபோசேட் புற்றுநோயை உருவாக்குகிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த களைக் கொல்லியானது, தாவரங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்சைம்களை நேரடியாகத் தாக்குவதாகும். இந்த கிளைபோசேட் மற்றும் அதன் சேர்மானங்கள், நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த கிளைபோசேட்டானது, உடலின் இரத்த ஓட்டத்தைப் பாதிப்படையச் செய்து உடலில் உள்ள திசுக்களைக் கொல்கிறது (நெக்ரோசிஸ்) என்று கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஒரு செல் உயிரியிலிருந்து பல செல் உயிரிவரை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய கிளைபோசேட்டை பாலஸ்தீனத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது, இஸ்ரேல்.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக, பாலஸ்தீனிய மக்களின் வாழ்வுடன், பண்பாட்டுடனும் கலந்தது மீன்பிடித் தொழில். சர்வதேச சட்டத்தின்படி, பாலஸ்தீனத்திற்கு கடலில் 60 நாட்டிகல் மைல் வரை இறையாண்மை உரிமை இருக்கிறது. ஆனால், பாலஸ்தீனியர்களுக்கு 6 நாட்டிகல் மைல் வரை செல்லத்தான் அனுமதிக்கிறது இஸ்ரேல்; காசாவின் சில பகுதிகளில் 3 நாட்டிகல் மைல் வரை செல்ல மட்டுமே அனுமதிக்கிறது. அதுவும், இஸ்ரேலிய அரசால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மீன்பிடிக்கச் செல்ல முடியும். இந்த எல்லையைத் தாண்டும் பாலஸ்தீன மீனவர்களை இஸ்ரேலிய அரசு சிறைப்படுத்துகிறது அல்லது சுட்டுக் கொல்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் நிலைதான் பாலஸ்தீனியர்களுக்கும். இதனால், 35,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்குச் சேரவேண்டிய, காசாவில் இருந்து 13 நாட்டிகல் மைல் தொலைவில் கிடைக்கின்ற, இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை இஸ்ரேல் அபகரித்து வருகிறது.
இதுதவிர, போருக்கு முன்பிருந்தே பாலஸ்தீன மக்களிடையே வேலைவாய்ப்பின்மை 45 சதவிகிதமாக இருக்கிறது. அவர்களின் வாழ்க்கை, பாலஸ்தீனத்திலிருந்து வெளியே சென்று பிறநாடுகளில் உழைப்பவர்களையும், ஐ.நா. உதவிகளையும் நம்பியே இருக்கிறது.
ஆகவே, இஸ்ரேலை இன அழிப்புக் குற்றவாளியாக்கித் தனிமைப்படுத்துவதும், இஸ்ரேல் ஆக்கிரமித்த நிலங்களை பாலஸ்தீனியர்களுக்கு மீட்டுக்கொடுப்பதும், சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்குவதுமே பாலஸ்தீன மக்களுக்கான நீதியாகும்.
நன்றி: Countercurrents
![]()
அப்பு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

என் குரல் கேட்கலையா… | காசா | ம.க.இ.க சிவப்பு அலை கலைக் குழுவின் புதிய பாடல்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
நவம்பர் – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.20
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் ₹15 இலட்சம் இலஞ்சம் வாங்கியதற்காக இராஜஸ்தான் இலஞ்ச ஒழிப்புத் துறையால் (Rajasthan Anti-Corruption Bureau) நேற்று (நவம்பர் 2) கைது செய்யப்பட்டுள்ளார்.
இராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவல் கிஷோர் மீனா (Naval Kishore Meena) மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கூட்டாளி பாபுலால் மீனா இராஜஸ்தானில் ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவ்விருவரும் இணைந்து இம்பால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஏலச்சீட்டு (சிட்ஃபண்ட்) மோசடி வழக்கு ஒன்றை தீர்த்து வைக்க ₹17 இலட்சம் இலஞ்சம் கேட்டுள்ளனர். கேட்ட இலஞ்சத்தை கொடுக்கவில்லை என்றால் அவரது சொத்துகளை வழக்கில் இணைத்து முடக்கி விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நபர் இராஜஸ்தான் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.
படிக்க: ED உதவி இயக்குநர் மீது CBI வழக்கு!
₹17 இலட்சம் இலஞ்சம் கேட்ட அதிகாரிகளிடம் ₹15 லட்சத்தை மட்டும் வழங்குவதாக பேரம் பேசப்பட்டது. அந்த ₹ 15 இலட்சத்தினை நவல் கிஷோர் மீனா, பாபுலால் மீனா பெற்றபோது இராஜஸ்தான் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்விருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ED officials in Rajasthan caught taking bribe, red-handed
A team of ACB officers cracked down on two ED inspectors accepting 15 lakh bribe to stop a case from being filed in a chit fund matter. ED officials identified as Naval Kishore Meena, Babulal Meena & associates arrested pic.twitter.com/TvszoLv01R
— Nabila Jamal (@nabilajamal_) November 2, 2023
பாசிச மோடி அரசால் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் (PMLA) மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்கியது. சிபிஐ (CBI), வருமான வரித்துறை ஆகியவற்றைத் தனது ஏவல் நாயாகப் பயன்படுத்தி வந்த மோடி அரசு, மேலே குறிப்பிட்ட சட்டத் திருத்தத்திற்குப் பின் அமலாக்கத்துறையைத் தனது பிரதான ஏவல் நாயாகப் பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் மீது அதை ஏவி அவர்களை முடக்கும் வேலையைச் செய்து வருகிறது.
இராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 25-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அங்கு அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வந்தன. கடந்த 30-ம் தேதி மட்டும் 30 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இலஞ்சம் வாங்கியதற்காக அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது அத்துறையின் யோக்கியதையை மக்கள் முன்பு அம்பலப்படுத்தியுள்ளது.
![]()
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

என் குரல் கேட்கலையா… | காசா | ம.க.இ.க சிவப்பு அலை கலைக் குழுவின் புதிய பாடல் | Teaser
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட கீழ்க்கரை மேல்கரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் அதிகார வர்க்கம்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாகத்தான் மதுரையில் இருந்து ராமநாதபுரம் ராமேஸ்வரம் வரை செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நான்கு வழிச்சாலை வருவதற்கு முன்பாக மானாமதுரையில் இரண்டு பேருந்து நிறுத்தங்கள் இருந்தன. மதுரையில் இருந்து வரும்போது அண்ணா சிலை பைபாஸ் ரோடு பேருந்து நிறுத்தமும் அதன் பிறகு புதிய பேருந்து நிலையத்திற்கும் சென்று பஸ்கள் நிறுத்தி செல்லப்படுவது வழக்கம். இரண்டு பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் ஒரு கிலோ மீட்டருக்கும் சற்று கூடுதலான தொலைவு உள்ளது. அண்ணா சிலை பைபாஸ் ரோட்டில் உள்ள நிறுத்தத்தால் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். இந்த பேருந்து நிறுத்தத்தை நம்பியே மானாமதுரையின் சரி பாதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் இருந்தனர்.
இதன் பிறகு நான்கு வழிச்சாலை வந்தது. புதிய பேருந்து நிலையத்திற்கும் அண்ணா சிலை பைபாஸ் ரோட்டிற்குமிடையில் உள்ள ரயில்வே கேட்டை கடப்பதற்கு நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதன் பிறகு இந்த அண்ணா சிலை பைபாஸ் நிறுத்தம் என்பதை ஊருக்கு வெளியில் பாலம் தொடங்கும் இடத்திற்கு (ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு இருக்கும்) பேருந்து நிறுத்தத்தை மாற்றினார்கள். இதனால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக அவர்கள் நிறுத்தும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக மக்கள் நடந்தே செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடப்பதற்கு ஏதுவான இடமாகவும் இது உள்ளது. நடந்து வரும் பாதைகளில் தெருவிளக்குகள் இல்லை வைகை ஆற்றின் ஓரப்பகுதியான இப்படிப்பட்ட சிக்கலான ஒரு இடத்தில் மக்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள்.
படிக்க: கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்
பேருந்துகள் நிற்காமல் போனால் மானாமதுரையின் புது பஸ் ஸ்டாண்ட் என சொல்லக்கூடிய பேருந்து நிலையத்தில் தான் இறங்க முடியும். அங்கிருந்து பேருந்துகளில் சுற்றி வருவதற்கும் ஆட்டோக்களில் வருவதற்குமே மக்கள் அதிகமான சிரமப்பட வேண்டி உள்ளது. இதன் அடிப்படையில் தான், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அண்ணாசாலை பாலத்தின் கீழ் பேருந்துகள் நிறுத்தி செல்ல வேண்டும் என்பது முன்வைக்கப்படுகிறது.
இது சம்பந்தமான கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் நடத்தப்பட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், இன்னும் போக்குவரத்து துறை அதிகாரிகள் முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை 25 இடங்களுக்கு மனு அளிக்கப்பட்டது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய பெரும்பான்மையான பேருந்துகள் கும்பகோணம் கோட்டம் போக்குவரத்து கழகத்தின் கீழ் வருவதால் அங்கு உள்ள இயக்குனர்கள் தான் முக்கியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் சார்பில் பேருந்துகள் அனைத்தும் மானாமதுரை அண்ணா சிலை பைபாஸ் பாலத்தின் கீழ் நின்று செல்ல உத்தரவிட்டனர்.
ஒரு வாரம் மட்டுமே பேருந்துகள் கீழே நின்று சென்றன; அதன் பிறகு நிற்காமல் தொடர்ந்து பாலத்தின் மேல் புறத்திலேயே சென்று கொண்டிருந்தன. இதை அதிகாரிகளிடம் முறையிட்டு கேட்டபோது நிறுத்தாத ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது புகார் தெரிவியுங்கள் என்றார்கள். ஆனால் அதன் பிறகு நிற்காத பேருந்துகள் குறித்து புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மக்களின் கோரிக்கைகளை அவமதித்து வருகின்றனர்.
படிக்க: தொடரும் நீட் படுகொலைகள்! | வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!
அதன் பிறகு 16.10.2023 அன்று மீண்டும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகு கள ஆய்வு என்ற பெயரில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வந்தனர். இந்த இடத்தில் பேருந்து நிறுத்தினால் உயிர்ப்பலி ஏற்படும் என்று சம்பந்தமில்லாமல் ஒரு பெரிய குண்டை போட்டனர். எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு பதில் இல்லை. அசம்பாவிதங்களும் வழிப்பறிகளும் நடந்தால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா எனக் கேட்டாலும் பதில் இல்லை. மீண்டும் நீங்கள் மனு கொடுங்கள் என சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்.
மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கேட்டால் மாதக்கணக்கில் அலையவிடும் இந்த அதிகாரிகள், பணம் படைத்தவர்களிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் எப்படி வாலாட்டுகிறார்கள் என்பதை நாம் தினமும் பார்த்துதான் வருகிறோம்.
மானாமதுரை சிப்காட்-இன் அருகில் கொன்னக்குளம் என்ற ரயில்வே நிலையம் உள்ளது. அது அமைக்கப்பட்டதே சிப்காட்டில் அமைந்துள்ள வீடியோகான் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்காகத் தான். கார்ப்பரேட் நலனில் விழுந்து விழுந்து அக்கறை காட்டும் இந்த அரசுதான் ஒரு சாதாரண பேருந்து நிறுத்தத்திற்கு கூட மக்களை அலைக்கழிக்கிறது. இப்படிப்பட்ட அதிகாரிகளை பதவியில் இருந்து இறக்குவதற்கு மக்களுக்கு அதிகாரம் இருக்குமானால் மக்களுக்கு அடங்கிப் போவார்கள் தானே. ஆதலால் மக்களாகிய நாம் களத்திற்கு வந்து குரல் எழுப்புவோம்; நமது உரிமைகளை வென்றெடுப்போம்.
![]()
களச்செய்தியாளர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

வெளிநடப்பு செய்த இந்தியா || ஐநா போட்ட தீர்மானம் || உண்மையை உடைக்கும் தோழர் அமிர்தா
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

புதிய ஜனநாயகத்தின் நவம்பர் – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அழகான சிவப்பு ரோஜாக்களுடன்
புன்னகை பூக்கும் பாதைகளினூடே
காசா பிள்ளைகளை பெறுகிறது
அதன் குழந்தைகள் அதிகாலைப் பனியில்
உலாவிக் கொண்டிருக்கிறார்கள்
காசா மீண்டும் கருவுற்றிருக்கிறது
ஆனால்
காசாவின் கருவுக்கல்லவா
சதிகாரர்கள் குறி வைத்திருக்கிறார்கள்
காசாவின் தாய்மார்கள் எல்லாம்
கதி கலங்கிப் போயிருக்கிறார்கள்
ரத்தம் வழிந்த
கைகளின் ஊடாக
குழந்தைகள் மீது
போர்வைகளைப் போர்த்துகிறார்கள்
ஆனால் சிலரோ
ராக்கெட்டுகளை அல்லவா
அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்
இவர்களின் பாசாங்குத்தனத்தால்
தாய்மார்களின் செவிப்பறைகள்
கிழிந்து போயிருக்கின்றன
ஆனாலும் நீதி
ஆடையின்றி அம்மணமாய்
உலாவிக் கொண்டிருக்கிறது
எங்களுக்கு ஏன் என்று புரியவில்லை
உங்களது பெரும் வெறுப்பால்
எமது இமைகள் மேகமாய்
கண்ணீரைப் பொழிந்து கொண்டிருக்கின்றனவே
அது ஏனென்று எங்களுக்குப் புரியவில்லை
எமது ஒவ்வொரு குழந்தையையும்
மரணம் திருடிக் கொண்டு செல்வதேனென
எங்களுக்குப் புரியவில்லை
இந்த கும்மிருட்டிலே நான்
ஒளியின் புள்ளியை எங்கே தேடுவேன்?
எங்களது குடும்பங்கள்
சிலுவையிலிடப்பட்டிருக்கின்றனவே!
இதோ கருணையற்ற மனிதர்கள்
பளபளக்கும் காலணிகளோடு
தேநீரை உறிஞ்சியபடி
அவர்களின் விடுமுறை நாள் இலக்குகளை
விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்
இரத்த ஆறு வற்றாமல் இருக்க
ஆயுதங்கள் தேவை என்கிறார்கள்
இரத்த கரைகள்
ஏன்
உலர மறுக்கின்றன
என்பது எங்களுக்குப்
புரியவில்லை
எங்களது படகை மூழ்கடிக்க
உங்கள் கடலில் இன்னும்
எத்தனை அலைகள் இருக்கின்றன
என் துடுப்புகள் கவலைகளால்
வேதனையுற்றுக் கொண்டிருக்கின்றன
மனிதநேய கரையை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
சோர்ந்து விட்டோம்
எங்கள் இதயங்கள்
சிதைந்து போய்விட்டன
தாய்மாரின் கண்ணீர் உப்பினால்
எமது காயங்கள் பற்றி எரிகின்றன
எங்களின் நுரையீரல்கள்
காற்றால் நிரம்பியிருக்கவில்லை
தோட்டாக்களாலும்
வெண் பாஸ்பரசாலும்
கருகும் தசைகளின் வாசனையாலும்
எங்கள் நுரையீரல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது
என்பதை நீர் அறிவீரோ ?
எம் குழந்தைகளின் சுவடுகளைத்தான்
நாங்கள் கட்டியணைத்துக் கொண்டிருக்கிறோம்
இங்கே ஒருபோதும்
பட்டங்கள் பறப்பதில்லை
என்பதை தாங்கள் அறிவீரோ?
குப்பைக் குவியல்களில்
குழந்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்
விளையாட்டுத் திடல்களில் ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
எம் குழந்தைகளின் நினைவுகளை
தினந்தினம்
வெற்றுப்படுக்கையை முத்தமிட்டு கொண்டிருக்கிறோம்
தினந்தவறாமல்
பள்ளிக்கூடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறோம்
அதன் வாயில்களில்
காத்துக் கொண்டிருக்கிறோம்
கொஞ்சம் நேரம் கொடுங்கள் எங்களுக்கு
எம் பிள்ளைகள் தவறானவர்கள் அல்லர்
என்பதை நிரூபிப்பதற்கு
நாங்கள்
மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறோம் மன்றாடுகிறோம்
தயவு செய்து
கொஞ்சம் நேரம் கொடுங்கள்
உங்களுக்கு கண்டன அறிக்கை எழுதுவதற்காகவாவது
எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள்
காணாமல் போன பிள்ளைகளை
மறந்து போவதற்காகவாவது கொஞ்சம் நேரம் கொடுங்கள்
எப்போதும் நிறைந்து கிடக்கும் அந்தப் பிணவறை
கொஞ்ச நேரமாவது
காலியாக இருக்கட்டும்
அதற்காகவாவது கொஞ்சம் நேரம் கொடுங்கள்
அடுத்த குழந்தையை புதைப்பதற்காகவாவது
கொஞ்சம் நேரம் கொடுங்கள்
என் கொட்டடிச்சிறையை சுத்தம் செய்ய வேண்டும்
அதற்காகவாவது கொஞ்சம் நேரம் கொடுங்கள்
உங்கள் நரகத்தை அகற்றுவதற்காகவாவது
கொஞ்சம் நேரம் கொடுங்கள்
நாங்கள்
அழுவதற்கும்
புலம்புவதற்கும்
கண்ணீர் விடுவதற்குமாவது
கொஞ்சம் நேரம் கொடுங்கள்
இன்னொன்றையும் தெரிந்து கொள்வீராக
நாங்கள்தான் காசாவின் தாய்மார்கள்.
– இக்பால் தமிமீ (Iqbal Tamimi)
![]()
தமிழில்: தோழர் மருது
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களை தொடர்ந்து 25-வது நாளாக இஸ்ரேலிய ராணுவம் தாக்கி வருகிறது. தற்போது வரை 8,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி (Daniel Hagari) பாலஸ்தீன மக்களை காசாவின் தெற்கே உள்ள ‘பாதுகாப்பான பகுதிக்கு’ செல்லுமாறு கூறினார். அவ்வாறு கூறிவிட்டு காசாவின் தெற்கு எல்லை நகரமான ரஃபாவில் கூட இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது.
காசாவின் தெற்கு பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து என எவ்வித அடிப்படை வசதியும் வழங்கப்படவில்லை. எந்நேரம் வேண்டுமானாலும் குண்டு விழலாம் என்ற அச்சத்திலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பாலஸ்தீன மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சால் அடையாளம் தெரியாமல் சிதைந்து போன ரஃபா நகரம் (Rafah)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாலஸ்தீன காசா பிராந்தியத்தின் மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இப்போரை உடனடியாக நிறுத்தி அமைதியை நிலைநாட்டக் கோரியும், பாலஸ்தீன மக்களுக்குக் குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கக் கோரியும் ஐ.நா. மன்றம் அக்டோபர் 28-ஆம் தேதியன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது.
இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகள் எதிர்த்தன. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 120 நாடுகள் ஆதரித்தன. இந்தியா, இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி முதலான 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
இவ்வாறு வாக்கெடுப்பைப் புறக்கணித்ததன் மூலம் மோடி அரசானது, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மறைமுகமாகத் தனது ஆதரவை நிரூபித்துக் காட்டி, பாலஸ்தீன மக்களின் முதுகில் குத்தியுள்ளது. ஐ.நா. மன்றமும் அதன் தீர்மானங்களும் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டதல்ல என்ற போதிலும், இத்தகைய காகிதத் தீர்மானத்திற்குக் கூட ஆதரவு தெரிவிக்காமல், பாசிச மோடி கும்பல் பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்துள்ளது.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியன்று பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலைத் தொடங்கியவுடனேயே, இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இஸ்ரேலிடமிருந்து, தொலைபேசியை வேவு பார்க்கும் “பெகாசஸ்” எனும் மென்பொருளை வாங்கி இந்திய மக்களைக் கண்காணிப்பது, இஸ்ரேலிடமிருந்து பெருமளவில் ஆயுத இறக்குமதி செய்வது, இஸ்ரேலிலுள்ள “ஹைஃபா” துறைமுகத்தை வாங்கியுள்ள இந்திய கார்ப்பரேட் முதலாளி அதானியின் நலனைப் பாதுகாக்க இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதத்தை ஆதரிப்பது, இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளைக் கொண்ட “ஐ2யு2” (I2U2 -INDIA,ISREAL,UAE,US) எனப்படும் “குவாட்” போன்றதொரு கூட்டணியை மேற்காசியாவில் நிறுவத் துடிக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை ஆதரிப்பது என்பதாக பாசிச மோடி கும்பலின் கொள்கை அமைந்துள்ளது.
படிக்க: பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!
இருப்பினும், இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதப் போரை எதிர்த்து உலகின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தெழுந்து, பாலஸ்தீனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த மோடி அரசுக்கு எதிராக சர்வதேச அரங்கில் கண்டனங்கள் பெருகத் தொடங்கியது. உடனே வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை மூலமாகவும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் முகமது அப்பாசுடனான தொலைபேசி உரையாடலின் மூலமாகவும் சமாளிப்பு முயற்சிகளை பாசிச மோடி அரசு மேற்கொண்டது. ஆனால், இவையனைத்தும் வெறும் நாடகம் என்பதை, ஐ.நா. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததன் மூலம் மோடி அரசு நிரூபித்துக் காட்டிவிட்டது.
ஏற்கெனவே தனது காவி – கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்களால் இந்திய மக்களிடம் அம்பலப்பட்டுப் போயுள்ள பாசிச மோடி கும்பல், இப்போது உலக அரங்கிலும் அம்பலப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை சாதகமாக்கிக் கொண்டு இப்பாசிச கும்பலை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியசைக் கட்டியமைப்பதற்கான போராட்டத்தை இந்திய உழைக்கும் மக்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இத்தகைய குடியரசுதான், இனவெறி பயங்கரவாத இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு, அமெரிக்காவுக்கு வால்பிடித்துச் செல்லும் இந்தியாவின் கேடுகெட்ட வெளியுறவுக் கொள்கைக்கு முடிவு கட்டும்.
யூத இனவெறிபிடித்த இஸ்ரேலை பயங்கரவாத நாடாக அறிவித்து, அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் ரத்து செய்! போரை நிறுத்தி, பாலஸ்தீன மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளைச் செய்! – என இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அனைத்து நாடுகளின் ஆளும் கும்பல்களுக்கு எதிராகப் போராடுவதென்பது அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமை; நம் கடமை.
![]()
தலையங்கம்,
புதிய ஜனநாயகம்
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
