ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !
ஜிக்னேஷ் மேவானி கைது !
டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்
டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள், கடைகள் கடந்த ஏப்ரல் 20 அன்று இடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் டெல்லி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் பல வீடுகள், கடைகளை சட்டவிரோதமாக இடித்துள்ளது.
இது தேர்தல் ஜனநாகத்திற்கு விரோதனாது என்ற வகையில் கார்டூனிஸ்டு சதீஷ் ஆச்சாரியா கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நன்றி : கார்டூனிஸ்ட் சதீஸ் ஆச்சாரியா
***
அதேபோல், டெல்லியில் முஸ்லீம் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துக்கும் வகையில் கார்டூனிஸ்ட் அலோக் மோடி அரசின் மேக்கின் இந்தியா திட்டம் முஸ்லிம் மக்களின் வீடுகளை இடிக்கும் புல்டோசராக உருமாறியுள்ளது என்றவகையில் கார்டூன் வெளியிட்டுள்ளார்.
நன்றி : கார்டூனிஸ்ட் அலோக்
பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்? – தோழர் லெனின்
பொதுவுடைமைவாதப் பத்திரிகை கட்சியால் சோர்வின்றி பேரூக்கத்துடன் வளர்க்கப்பட வேண்டும். கட்சியின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாத எந்தப் பத்திரிகையும் பொதுவுடைமைவாதப் பத்திரிகை என்று அங்கீகரிக்கப்படலாகாது.
கூடுதலான பத்திரிகைகளைப் பெற்றிருப்பதைக் காட்டிலும் சிறந்த, தரமான பத்திரிகைகளைப் பெற்றிருக்க கட்சி கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் தரமானதொரு மையப் பத்திரிகையை – சாத்தியமானால் தினசரிப் பத்திரிகையைப் பெற்றிருக்க வேண்டும்.
முதலாளித்துவப் பத்திரிகைகளைப் போல, ஏன், “சோசலிஸ்ட்” பத்திரிகையைப் போல, பொதுவுடைமைப் பத்திரிகையானது முதலாளித்துவ நிறுவனமாக இருக்கக் கூடாது. முதலாளித்துவக் கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்திலிருந்தும் நமது பத்திரிகை சுயேட்சையானதாக இருக்க வேண்டும். சட்டபூர்வமான மக்கள்திரள் கட்சிகள் நமது பத்திரிகை இருப்பதைத் தெரிந்து கொள்ள சாத்தியமாக்குகின்ற வகையில் தேர்ச்சியான விளம்பர ஏற்பாடுகள் அவசியம். ஆனால், இது எந்த விதத்திலும் நமது பத்திரிகை பெரிய விளம்பரதாரர்களைச் சார்ந்திருப்பதாக இருக்கக் கூடாது. மாறாக, சமூகப் பிரச்சினைகள் அனைத்திலுமான இதன் பாட்டாளி வர்க்க நோக்கு, இதற்கு மக்கள்திரள் கட்சிகள் அனைத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொது மக்களின் பரபரப்பான அல்லது பொழுதுபோக்கான விருப்பங்களை நிறைவு செய்வதாக நமது பத்திரிகைகள் இருக்கக் கூடாது. “மதிப்புக்குரியதாக” ஆகும் முயற்சியில் அவை குட்டி முதலாளித்துவ எழுத்தாளர்கள் அல்லது பத்திரிகை நிபுணர்களின் விமர்சனங்களுக்குப் பணிந்துவிடக் கூடாது.
படிக்க :
♦ மத்தியக் கமிட்டியும் அரசியல் தலைமைக் குழுவும் | லெனின்
♦ கட்சி அமைப்பில் இரகசியத் தன்மையின் அவசியம் பற்றி | லெனின்
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் போராடும் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி அக்கறை கொள்வதைப் பொதுவுடைமைவாதப் பத்திரிகை முதன்மையானதாக எடுத்துக்கொள்ள வெண்டும். பத்திரிகையானது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மிகச் சிறந்த கிளர்ச்சியாளனாகவும் தலையாயப் பிரச்சாரகனாகவும் விளங்க வேண்டும்.
கட்சி உறுப்பினர்களுடைய நடவடிக்கைகளின் மதிப்பிடற்கரிய அனைத்து அனுபவங்களையும் சேகரித்து அவற்றைத் தோழர்களுக்கு எடுத்துக் காட்டி இந்த அனுவபங்களைக் கொண்டு பொதுவுடைமைவாத வேலைமுறையைத் தொடர்ச்சியாக மாற்றி முன்னேற்றத்தைக் கொண்டுவருவது நமது பத்திரிகையின் நோக்கமாகும். இவ்வாறு நமது புரட்சி வேலையின் மிகச் சிறந்த அமைப்பாளனாக பத்திரிகை விளங்கும்.
பொதுவுடைமைவாதப் பத்திரிகையின், குறிப்பாக நமது பிரதான பத்திரிகையின் அனைத்தும் தழுவிய நிறுவன வேலையின் மூலம்தான், நிச்சயமான இந்த நோக்கத்தினைக் கொண்டுதான், நாம் ஜனநாயக மத்தியத்துவத்தை நிறுவுவதும், பொதுவுடைமைக் கட்சியின் வேலைகளில் சிறப்பான பகிர்ந்தளித்தலைச் செய்வதும் முடியும். இவ்வாறுதான் பத்திரிகையானது, தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முடியும்.
ஒரு பொதுவுடைமைவாதப் பத்திரிகையை நிறுவுவது
பொதுவுடைமைவாதப் பத்திரிகை ஒரு பொதுவுடைமைவாத நிறுவனமாக ஆக முயற்சிக்க வேண்டும். அது ஒரு பாட்டாளி வர்க்கப் போரிடும் நிறுவனமாக இருக்க வேண்டும். பொதுவுடைமைவாதப் பத்திரிகையானது புரட்சிகரத் தொழிலாளர்களின், பத்திரிகைக்குத் தொடர்ச்சியாகப் படைப்புகளைத் தரும் எழுத்தாளர்கள் அனைவரின், ஆசிரியர்களின், அச்சுக் கோர்ப்பவர்களின், அச்சிடுபவர்களின், விநியோகிப்பவர்களின், உள்ளூர் விசயங்களைச் சேகரித்து பத்திரிகைக்குத் தந்து அவற்றைப் பற்றி பத்திரிகைகளில் விவாதிப்பவர்களின், பத்திரிகைக்காக நாள்தோறும் ஊக்கமாகப் பிரச்சாரம் செய்பவர்களின், இன்னும் பத்திரிகையோடு தொடர்புடையோரின் கூட்டு முயற்சியில் இயங்கும் நிறுவனமாகும். ஒரு பத்திரிகையை உண்மையான போரிடும் நிறுவனமாக, பொதுவுடைமையாளர்களின் பலமிக்க கூட்டு நிறுவனமாக மாற்றுவதற்கு பல நடைமுறை ரீதியிலான நடவடிக்கைகள் தேவை.
ஒரு பொதுவுடைமைவாதி தனது பத்திரிகையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதற்காக அவர் வேலை செய்யவும், தியாகங்கள் புரியவும் வேண்டும். பத்திரிகை அவரது அன்றாட ஆயுதமாகும். சிறப்பாகப் பயன்படுத்துவதற்குத் தகுதியுடையதாக்க அதை நாள்தோறும் உறுதிப்படுத்தவும், கூர்மைப்படுத்தவும் வேண்டும். பொதுவுடைமைவாதப் பத்திரிகை நிலைத்திருக்க வேண்டுமானால், அதற்குத் தொடர்ச்சியாக அதிக அளவிலான பொருள் மற்றும் நிதியைத் தியாகம் செய்ய வேண்டும். அதன் வளர்ச்சி மற்றும் செழுமைக்கான சாதனங்கள் கட்சி உறுப்பினர்களான அணிகளிடமிருந்து இடையறாது அளிக்கப்பட வேண்டும். பத்திரிகையானது, உறுதியான நிறுவனமாக நிறுவப்படும் நிலைமைக்கு, சட்டபூர்வ மக்கள்திரள் கட்சிகளில் போதுமான எண்ணிக்கையில் பிரதிகள் விற்கப்பட்டு பொதுவுடைமை இயக்கத்திற்கு அதுவே ஒரு பலமிக்க ஆதரவு சக்தியாக வளரும் நிலையை அடையும்வரை இவ்வாறு கீழிருந்து ஆதரவு பெறுவது நீடிக்கும்.
ஒருவர் பத்திரிகையின் ஊக்கமான சந்தா சேகரிப்பவராகவும் அதற்காகப் பிரச்சாரம் செய்பவராகவும் இருப்பது மட்டும் போதாது. அதற்கு படைப்புகள் தருபவராகவும் இருக்க வேண்டும்.
தொழில் நிலையங்களில் நிகழ்கின்ற சமூக அல்லது பொருளாதார முக்கியத்துவமுடைய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் – ஒரு சாதாரண விபத்து முதல் தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் வரை, ஒரு பயிற்சியாளரை மோசமாக நடத்துவது முதல் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வரை – பத்திரிகையில் உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். தொழிற்சங்க பிராக்சன் தனது கூட்டங்கள் மற்றும் செயலாளர்களின் முக்கியமான முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் பற்றியும் நமது எதிரிகளின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளைப் பற்றியும் செய்திகள் தர வேண்டும். வீதிகளிலும் கூட்டங்களிலும் நிகழ்கின்ற பொது வாழ்க்கை பற்றிய விவரங்கள் உன்னிப்பாக கட்சி உறுப்பினர்களுக்குச் சமுதாயத்தைப் பற்றி விமர்சிக்க வாய்ப்புகைள அளிக்கும். இந்த விவரங்கள் நமது கட்சிப் பத்திரிகையில் வெளியிடப்படும்போது, அவை ஏற்கெனவே நாம் எவ்வாறு வாழ்க்கையின் அன்றாடத் தேவைகள் மீது கவனம் செலுத்தி வருகிறோம் என்பதைப் பற்றி மேலோட்டமான வாசகர்களுக்குக்கூட தெளிவாகக் காட்டும்.
தொழிலாளர்களுடன் தொடர்புகள்
தொழிலாளர்களிடமிருந்தும் தொழிலாளர் வர்க்க அமைப்புகளிடமிருந்தும் தொழிலாளர்களது வாழ்க்கையைப் பற்றி வரும் செய்திகள் ஆசிரியர் குழுவால் மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் கையாளப்பட வேண்டும். இந்தச் செய்திகள் சிறு தகவல்களாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பத்திரிகைக்கும் தொழிலாளர் வாழ்க்கைக்கும் நெருக்கமான பிணைப்பு இருக்கும் உணர்வை வெளிப்படுத்தும். அல்லது தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையின் நடைமுறை உதாரணங்களில் இருந்து பொதுவுடைமைவாதக் கொள்கைகளை விளக்குவதற்காகப் பயன்படுத்த முடியும். ஆசிரியர் குழுவானது தம்மைச் சந்திக்க வரும் தொழிலாளர்களைச் சந்திக்க ஒவ்வொரு நாளும் வசதியான ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்போது அவர்களது விருப்பங்கள் அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றிய புகார்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைக் குறித்துக் கொண்டு கட்சிக்குத் தெளிவுபடுத்துவதற்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
“பிராவ்தா”வின் முன்னுதாரணம்
முதலாளித்துவக் கட்டமைவின் கீழ் நம்முடைய பத்திரிகைகள் முழுக்கவும் பொதுவுடைமைவாத ஊழியர்களின் கூட்டு நிறுவனமாக ஆவது சாத்தியமில்லை என்பது உண்மையே. எப்படி இருப்பினும் மிகமிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் கூட இத்தகைய புரட்சிப் பத்திரிகை ஒன்றை நிறுவி அமைப்பதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி ஈட்டுவது சாத்தியமே. 1912-13 காலத்தில் ரஷ்யத் தோழர்களின் “பிராவ்தா”-வால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவினுடைய மிகமிக முக்கியமான மையங்களின் ஊணர்வுபூர்வமான புரட்சிகரத் தொழிலாளர்களின் நிரந்தரமான மற்றும் ஊக்கமான நிறுவனத்தை இது உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தியது. பத்திரிகையின் படைப்புகளை மேற்பார்வையிட்டுத் தீர்மானிப்பது, வெளியிடுவது, விநியோகிப்பது ஆகியவற்றைத் தோழர்கள் தமது கூட்டு முயற்சியில் செய்தனர். அவர்களில் பலர் தமது வேலையுடன் சேர்த்து இதைச் செய்ததுடன் தமது ஊதியத்திலிருந்து பணத்தையும் ஒதுக்கினர். இவற்றுக்குக் கைமாறாக, அப்பத்திரிகையானது, அவர்கள் விரும்பிய மிகச் சிறந்த படைப்புகளை அளித்தது. அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்பட்டவற்றையும் மேலும் அவர்கள் தமது வேலையிலும் போராட்டத்திலும் பயன்படுத்தக் கூடியவற்றையும் அவர்களுக்கு அளித்தது. இத்தகைய பத்திரிகை கட்சி உறுப்பினர்களாலும் பிற புரட்சிகர தொழிலாளர்களாலும் “நமது பத்திரிகை” என்று உண்மையாகவும் யதார்த்தமாகவும் அழைக்கப்பட்டது.
கட்சியால் இயக்கப்படும் இயக்கங்களில் நேரடியாகப் பங்கேற்பது போர்க்குணமிக்க பொதுவுடைமைவாதப் பத்திரிகையின் சரியான பண்பாகும். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கட்சியின் நடவடிக்கை குறிப்பிட்டதொரு இயக்கத்தில் குவிந்திருக்குமானால், அந்தக் குறிப்பிட்ட இயக்கத்துக்குப் பணியாற்ற பத்திரிகை தனது அனைத்து துறைகளையும் – தலையங்கப் பக்கங்கள் மட்டுமல்ல – ஈடுபடுத்துவது அதன் கடமையாகும். இந்த இயக்கத்துக்கு உதவும்படியாக பத்திரிகை முழுவதிலும் – அதன் உள்ளடக்கம், உருவம் என்ற இரண்டிலும் – அதற்கான பொருளாயத மற்றும் மூலாதார விசயங்களைச் சேகரித்தளிப்பதை ஆசிரியர் குழு செய்ய வேண்டும்.
“நமது பத்திரிகை”க்காக சந்தாக்கள் சேகரிப்பது என்பது ஒரு கட்டமைப்பாக ஆக்கப்பட வேண்டும். தொழிலாளர்களைக் கொதித்தெழச் செய்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியையும் (சந்தர்ப்பத்தையும்) தொழிலாளர்களின் அரசியல் மற்றும் சமூக உணர்வைத் தூண்டிவிடக் கூடிய விசேட நிகழ்ச்சியால் ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும் பயன்படுத்திக் கொள்வது முதலாவது விசயம். இவ்வாறாக, ஒவ்வொரு பெரிய வேலை நிறுத்த இயக்கம் அல்லது கதவடைப்பை அடுத்து – அப்போது பத்திரிகை பகிரங்கமாகவும், ஊக்கமாகவும் தொழிலாளர் நலன்களுக்காகக் குரல் கொடுத்திருக்கும் – போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மத்தியில் சந்தா சேர்ப்பு இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட வேண்டும். பத்திரிகை சந்தா விண்ணப்பங்களையும் பொதுவுடைமையாளர்கள் ஊக்கமாக வேலை செய்யும் தொழில்களிலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிற்சங்க பிராக்சன்கள் பணியாற்றும் தொழில்களிலும் மட்டுமின்றி, எவ்வெப்போது சாத்தியமோ, அவ்வப்போதெல்லாம் விசேட குழுக்கள் அல்லது பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்யமு தொழிலாளர்கள் வீடுவீடாகச் சென்று விநியோகிக்க வேண்டும்.
இதுபோலவே, தொழிலாளர்களை எழுச்சியுறச் செய்த ஒவ்வொரு தேர்தல் பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்தும் விசேட பிரச்சாரத்துக்கான குழுக்கள் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று தொழிலாளர்களின் பத்திரிகைக்காகத் திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்த வேண்டும்.
மிகப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைப் பாதிக்கின்ற விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் பிற இடர்ப்பாடுகள் வாயிலாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் போது, பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழில் ரீதியில் அமைக்கப்பட்ட தொழிலாளர்களை வென்றெடுக்க வேண்டும். பத்திரிகைக்காக வீடு வீடாகச் சென்று திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்துவதற்காக அவர்களை ஒழுங்கமைக்க சாத்தியமான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வாரம் சந்தா சேர்ப்பு வேலைக்கு மிகமிகப் பொருத்தமான நேரமாகும் என்பதை அனுபவம் காட்டுகிறது. ஒரு மாதத்தின் கடைசி வாரத்தை பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்யும் வேலைக்குப் பயன்படுத்தத் தவறும் எந்த ஒரு உள்ளூர் குழுவும், பொதுவுடைமை இயக்கத்தைப் பரவலாக்குவதைப் பொருத்தவரை கடுமையான கேட்டை விளைவிக்கிறது என்று அர்த்தம். பத்திரிகைக்காகப் பிரச்சாரத்தை நடத்தும் வேலைக்கான குழு எந்தவொரு பொதுக் கூட்டத்திலும் அல்லது எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் இல்லாமல் இருக்கக் கூடாது. அதன் தொடக்கம், இடைவேளை, முடிவு ஆகியவற்றின் போது பத்திரிகைக்கான சந்தா பட்டியலுடன் தோன்ற வேண்டும். ஒவ்வொரு தொழிற்சங்கக் கூட்டத்தின் போது பிராக்சன்களும் ஒவ்வொரு பணிமனைக் கூட்டத்தின் போதும் குழு மற்றும் பிராக்சன்களும் இதே கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.
படிக்க :
♦ அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது ? | லெனின்
♦ லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்
கட்சிப் பத்திரிகைக்காக உறுதியாக நிற்பது
கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சிப் பத்திரிகைக்காக இடையறாது வாதிட வேண்டும். அதன் எதிரிகளுக்கு எதிராக நின்று உறுதியாகப் போராட வேண்டும். முதலாளித்துவப் பத்திரிகைகளுக்கு எதிராக உத்வேகத்துடன் போராட வேண்டும். முதலாளித்துவப் பத்திரிகையின் அப்பட்டமான நச்சுத் தன்மையை, போலித் தனத்தை, செய்திகளை இருட்டடிப்பு செய்தலை, எல்லா வகையான இரட்டை மோசடிகளை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்த வேண்டும்.
நாள்தோறும் மிகமிகக் கொடியதாகும் வர்க்க மோதல்களை மூடிமறைக்கும் சமூக ஜனநாயக மற்றும் சுயேட்சையான பத்திரிகையின் துரோகத்தனத்தை விடாப்பிடியாக அம்பலப்படுத்தி, அற்பமான விதண்டாவாதத்தில் ஈடுபடாமல், இடையறாத மற்றும் முன்னேறித் தாக்கும் விமர்சனத்தின் மூலம் இப்பத்திரிகைகளை வெற்றிகொள்ள வேண்டும். தொழிற்சங்கம் மற்றும் பிற தொழிலாளர்களது நிறுவனங்களின் உறுப்பினர்களைத் தவறாக வழிநடத்தும், முடமாக்கும் சமூக ஜனநாயக பத்திரிகைகளின் செல்வாக்கிலிருந்து பிய்த்தெடுக்க தொழிற்சங்க மற்றும் பிராக்சன்கள் நிறுவன ரீதியிலான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், வீட்டுக்கு வீடு நமது பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்வதன் மூலம் குறிப்பாக ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் செய்வதன் மூலம் சமூக ஜனநாயக பத்திரிகைக்கு எதிரான நமது போராட்டக் கூர்முனை சாதுரியமாகத் திருப்பிவிடப்பட வேண்டும்.
(கட்சி நிறுவனக் கோட்பாடுகள் நூலிலிருந்து…)
வி.இ.லெனின்
லெனினது குரல் – அலெக்சாந்த்ரா கொலந்தாய்
ஏகாதிபத்திய போர் 1914-ம் ஆண்டில் தொடங்கிவிட்டது. இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலம் மார்க்ஸின் கட்டளைகளைப் புறக்கணிக்து, தொழிலாளிவர்க்க நலன்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது. இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனலின் இயக்கு சக்தியான ஜெர்மன் சோஷல்-டெமாக்ரடிக் கட்சி தனது சந்தர்ப்பவாத உள்ளியல்பை வெளிப்படுத்திவிட்டது. தனது நாட்டின் ஆளும் முதலாளி வர்க்கத்துடன் அது ஒத்துழைத்தது. வர்க்கங்களுக்கிடையே சமாதானம் நிலவ வேண்டும் என்ற போக்கை முழுமையாக மேற்கொண்டுவிட்டது.
புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை ஜெர்மன் சோஷல் – டெமாக்ரடிக் கட்சி வெட்கக்கேடான முறையில் கைவிட்ட நாளை நான் நேர்முகமாகக் கண்டு அனுபவித்தேன். 1914 ஆகஸ்டு 4ந் தேதி நான் ஜெர்மன் பாராளுமன்றத்தில் இருந்தேன். ஜெர்மன் சோஷல்டெமாக்ரடிக் கட்சித் தலைவர்களின் வீழ்ச்சி என்னும் அருவருக்கத்தக்க காட்சி யுத்த, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக அவர்களது வாக்களிப்பு பெத்மன் – ஹோல்வெக் சர்க்காரை ஆதரிப்பதாக அவர்கள் உறுதிமொழி கொடுத்தது எல்லாம் என் முன்னர் நிகழ்ந்தன.
படிக்க :
♦ புரட்சியின் தருணங்கள் ! காணொளித் தொகுப்பு !!
♦ ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
ஏகாதிபத்திய யுத்தத்தின் கரும் புகை பலரது மூளைகளை மங்கச் செய்துவிட்டது. நிலைமை எந்த அளவுக்குப் போய்விட்டது என்றால் சமரசப் போக்கு, சந்தர்ப்பவாதம் என்னும் உள மயக்கம் அரசியல் காரணங்களுக்காகத் தாய்நாட்டுக்கு வெளியே இருந்த சில ரஷ்யர்களையும் ஆட்கொண்டுவிட்டது. தங்களது அரசியல் பாவங்களுக்காக கழிவிரக்கம் கொண்டு, இரண்டாம் நிக்கொலாய், அவனது கொத்தடிமைகள் ஆகியோரின் கொள்கைக்கு ஆதரவு அளிப்பதன்மூலம் ஜாராட்சித் தாய்நாட்டுக்குத் தொண்டு செய்யும் நோக்கத்துடன் அவர்கள் ரஷ்யாவுக்கு விரைந்தார்கள்.
நான் அச்சமும் மனச்சோர்வும் கொண்டு உழன்றேன். எல்லாம் பாழாகிவிட்டன என்று எனக்குத் தோன்றியது. சூழ்நிலை மூச்சு முட்டச் செய்வதாகவும் நம்பிக்கைக்கு இடமாற்றதாகவும் இருந்தது. என் எதிரே ஒரு சுவர் எழும்பிவிட்டது போலவும் மேலே செல்ல வழிஇல்லை போலவும் பிரமை உண்டாயிற்று. லீப்க்னெஹ்ட்டின் உதவியால் தான் ஜெர்மனியிலிருந்து வெளியேறி ஸ்டாக்ஹோம் சேர்ந்தேன். உலக இரத்தக் களறியை எதிர்ப்பதற்கு இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனலைத் தூண்டி ஊக்க முடியும் என்று நான் இன்னும் நம்பினேன். ஆனால் எங்கள் கொள்கைகள் எத்தகையவையாக இருக்க வேண்டும் எதை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பது எனக்கோ மற்றவர்களுக்கோ தெரியவில்லை. திக்குத் தெரியாத காட்டில் போல நாங்கள் வழிகெட்டு அலைந்தோம்.

ஒரே குழப்பம் இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனலின் வீழ்ச்சியும் நிகழ்ந்த அந்தச் சமயத்தில் வர்க்க ஒற்றுமைக்கு புகழ்பாடிய முதலாளித்துவக் கட்சிகளின் எக்களிப்பு ஆரவாரத்துக்கு இடையே ஒலித்தது லெனினின் இடிக்குரல். உலகு அனைத்தும் எதிராகத் தன்னந்தனியே நின்று அவர் ஏகாதிபத்திய யுத்தத்தை நிர்தாட்சண்யமாகப் பகுத்தாய்ந்து அதன் உள்ளியல்பை உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் துலக்கமாக அம்பலப்படுத்தினார். இதைவிட முக்கியமாக, இந்த யுத்தத்தை உள்நாட்டுப் போராகவும் புரட்சியாகவும் மாற்றுவதற்கான வழிமுறைகளை அவர் தெளிவாகக் கோடிட்டுக் காட்டினார். அமைதியை விரும்புபவர்கள் சந்தர்ப்பவாதத்தின்மீது போர் தொடுக்க வேண்டும். சொந்த நாட்டு முதலாளி வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கை நிராகாரிக்க வேண்டும் என்றார் அவர்.
கட்சியின் மைய வெளியீடான “ஸொத்ஸியால் – டெமாக்ராத்தின்” பல இதழ்கள் சுவிட்ஸர்லாந்திலிருந்து ஸ்டாக்ஹோம் வந்து சேர்ந்தன. யுத்தத்தைப் பற்றியும் எங்கள் கடமைகளைப் பற்றியும் லெனினது கொள்கைகள் அவற்றில் அடங்கியிருந்தன. எனது வாழ்க்கையின் மிக முக்கியமான கணங்களில் ஒன்றாக அது விளங்கிற்று. எந்தச் சுவற்றில் நான் தலையை மோதிக் கொண்டிருந்தேனோ அதை லெனினது கட்டுரைகள் சுக்கு நூறாகத் தகர்த்து விட்டன. இருள் அடர்ந்த ஆழ் கிணற்றுக்கு உள்ளிருந்து மறுபடி வெயிலொளிக்கு வந்துவிட்டது போல எனக்குத் தோன்றியது. மேலே செல்வதற்கான பாதையை நான் கண்டேன். அது தெளிவாக துலக்கமாக இருந்தது. நான் செய்ய வேண்டியதெல்லாம் புரட்சிகரத் தொழிலாளி வர்க்க அணிகளில் சேர்ந்து விளாதீமிர் இல்யீச் லெனினைப் பின்பற்றுவது மட்டுமே. ரஷ்யாவில் இருந்த மத்தியக் கமிட்டி பீரோ லெனினின் கருத்துக்களை ஏற்கனவே செயல்படுத்திவந்தது என்பது எங்களுக்கு வெகு காலத்துக்குப் பின்னரே தெரியவந்தது.
லெனின் மனிதகுலம் அனைத்துக்கும் மேலே நிற்கிறார், நமக்குப் புலப்படாத உண்மைகளைத் தமது அசாதாரண சிந்தனைத திறன் காரணமாகவே அவரால் காணமுடிகிறது என்று எனக்குத் தென்பட்டது. அவரது கங்கு கரையற்ற மன, ஆன்மிக அஞ்சாமையை அப்போது தான் நான் புரிந்து கொண்டேன். சந்தர்ப்பவாதிகளான காவுத்ஸ்க்கியும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் எவ்வளவு இழி நிலையில் வீழ்ந்தார்களோ, இந்த ரத்தக் களறி குழப்பமனைத்திலும் திட்டவட்டமாக வழிகாட்டிய மனிதரின் அச்சமற்ற, வளையா உறுதி வாய்ந்த உருவம் அவ்வளவு மேல் நிலைக்கு உயர்ந்தது.

1914, அக்டோபரில் நான் லெனினுக்கு எனது முதல் கடிதத்தை எழுதினேன். அவருடைய பதில் ஒரு ரஷ்யத் தோழர் மூலம் எனக்குக் கிடைத்தது. உடனே வேலை தொடங்கும் படியும், தொழிலாளி வர்க்கத்தின் அடுத்த போராட்டம் பற்றிய தமது கொள்கையைச் செயல்படுத்த உதவக்கூடிய ஸ்காண்டினேவிய சோஷலிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளும் படியும் அதில் லெனின் எனக்குக் கட்டளை இட்டிருந்தார். அந்தச் சமயம் முதல் நான் லெனினின் நேரான தலைமையில் வேலை செய்யலானேன்.
அதேசமயம், லெனினுக்கும் ரஷ்யாவிலிருந்த மத்தியக் கமிட்டி பீரோவுக்கும் ஸ்காண்டினேவியா வழியே நிலையான தொடர்பு ஏற்படுத்தும் பொறுப்பு எனக்கும் வேறொரு தோழருக்கும் கொடுக்கப்பட்டது. இந்தத் தொடர்பு உரிய முறையில் ஏற்படுத்தப்பட்டது, ஹாமர்ஷேல்டின் கன்சர்வேடிவ் சர்க்கார் “போல்ஷ்விக் மைய நிலையத்தை” மூடிவிடத் தீர்மானிக்கும் வரை தொடர்ந்து இயங்கியது. நான் கைது செய்யப்பட்டு குங்ஸ்ஹோல்மன் என்னும் இடத்தில் சிறைவைக்கப்பட்டேன்.
பினனர், ஸ்வீடனிலிருந்து வெளியேற்றப்பட்டேன். சில நண்பர்களின் உதவியால் நார்வேயில் ஓஸ்லோ நகரின் புறத்தே ஹோமென் கோலென் என்னும் வட்டாரத்தில் தங்கி வசிக்க எனக்கு வாய்த்தது. குறுங்குடாவுக்கு மேலே மலைமீதிருந்து எனது சிறு சிவப்பு வீட்டிலிருந்து எனது கேள்விகளும் உத்தரவுப்படி எழுதப்பட்ட பிரசுரங்களும் கட்டுரைகளும் லெனினுக்கு அனுப்பப்பட்டது. லெனினது கடிதங்களை இந்த வீட்டில்தான் நான் திறந்து பார்த்தேன். இதே சிறு சிவப்பு வீட்டில்தான் நார்வே இடதுசாரியினரின் தீர்மானம் உருவாக்கப்பட்டது. இடதுசாரி ஸிம்மெர்வால்டை ஆதரிக்கும் இந்தத் தீர்மானம் லெனினால் அங்கீகரிக்கப்பட்டது.
அந்த ஆண்டுகளில் நான் லெனினைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவர் எனக்கு வெறும் மனிதராக அல்ல, மனித குலத்தின் ஆயிரமாண்டுகாலச் சமூக பொருளாதாரப் படிவுகளைப் பெயர்த்துத் தள்ளும் இயற்கை விண்வெளி ஆற்றலின் உருவமாகவே என் கற்பனையில் காட்சி அளித்தார். சமூக உறவுகளில் யாவற்றிலும் பெரிய புரட்சிக்கு, புதிய கொள்கைகளின் அடிப்படையில் சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு உரிய திட்டம் முழுமையடைந்து வரையறுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
படிக்க :
♦ ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
ஏகாதிபத்தியப் போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அது மட்டுமல்ல, லெனினது முயற்சியாலும் சமூகத்தின் சமுதாய அமைப்பில் பிளவுகள் ஏற்படத்தொடங்கிவிட்டன. இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் துணுக்குகளாகச் சிதறிவிட்டது. எனினும் லெனின் மையமாகக் கொண்டு புதிய, பசிய முளைகள் கிளம்பலாயின. இந்த காரணத்தால் தான், பழிகேடு அடைந்த இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனலிலிருந்து புரட்சி மனப்பான்மை கொண்ட சோஷலிஸ்ட் இளைஞர்களைத் தேடிப் பொறுக்கி இடதுசாரி ஸிம்மெர்வால்டைச் சுற்றி அணிதிரட்டுமாறு 1915-லும் 1916-லும் லெனின் எனக்கு உத்தரவிட்டபோது, இந்த வேலை எதிர்பார்த்ததைக் காட்டிலும் எவ்வளவோ எளிதாக எனக்குப்பட்டது.
ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் இடதுசாரி ஸிம்மெர்வால்டின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும் போஸ்டனிலிருந்து ஸீட்டல் வரையிலும் சக்திகளைத் திரட்டும் பொருட்டு நான் அட்லான்டிக் மாகடலை இரண்டு தடவை கடக்க நேர்ந்தது.
(இவர் தான் லெனின் நூலிலிருந்து…)
அலெக்சாந்த்ரா கொலந்தாய்
புத்தகம் : இவர்தான் லெனின்
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ.140
தொடர்புக்கு : 9445123164
தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ
தோழர் லெனின் நடத்திக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றப் புரட்சிகளுக்கு அடிகோலிட்டது. இந்தியாவில், தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயர்களை தூங்க விடாமல் செய்த தோழர் பகத்சிங் தனது ஆதர்சன நாயகனாக குறிப்பிடுவது தோழர் லெனினை மட்டுமே.
இதோ லெனினின் சாதனைகள் – ரசியப் புரட்சி தோற்றுவித்த உலகளாவிய சாதனைகளை இந்தக் காணொளியில் காணுங்கள் …
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
(குறிப்பு : 2017-ம் ஆண்டு ரஷ்ய புரட்சியின் 100-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட காணொளியை தற்போது ஏப்ரல் 22, 2022-ம் ஆண்டு தோழர் லெனினில் 152-வது பிறந்தநாளில் மீள்பதிவு செய்கிறோம்!)
வேலையில்லாத் திண்டாட்டம் : பாசிசப் பேயாட்சியின் பிடியில் உழைக்கும் மக்கள் !
வேலையில்லாத் திண்டாட்டம், தாளாத கடன்சுமைகளால் பெருகிவரும் தற்கொலைகள் :
பாசிசப் பேயாட்சியின் பிடியில் உழைக்கும் மக்கள் !
இந்தியாவிலுள்ள இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்காமல், சுயதொழில் தொடங்கி தொழில்முனைவோராக வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வட தமிழக பிரிவு தலைவர் கே.குமாரசாமி. இது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
“ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்படுவதெல்லாம் முதன்முறை” என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. இந்துமதம் ஆபத்திலிருப்பதாக பெரும்பான்மை மக்களை மதவெறியூட்டுவது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்வது, கலவரங்களை நடத்துவது, அரசு நிறுவனங்களில் சங்கிகளை நுழைப்பது – சுருக்கமாக, நாட்டை இந்துராஷ்டிரமாக கட்டமைப்பதைத் தவிர வெறெதையும் அறிய விரும்பாதது ஆர்.எஸ்.எஸ். இப்படிப்பட்ட ஒரு பாசிச அமைப்பு வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து கவலைப்படுது ஏன்?
ஏனென்றால், வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இன்று நம் நாட்டில் ஒரு கடுமையான பிரச்சினையாக முற்றி நிற்கிறது. வறுமை, உத்தரவாதமற்ற வாழ்நிலை, தாளாத கடன்சுமை ஆகியவற்றால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் பெருகிவருகிறது. எனவே ஆர்.எஸ்.எஸ்.கூட இதுகுறித்து கருத்துசொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
000
“வறுமை காரணமாக அண்ணன் தங்கை தற்கொலை, பணியைவிட்டு நீக்கியதால் புகைப்படக் கலைஞர் தற்கொலை, கடன் தொல்லை அவதியால் விவசாயி பலி, வேலையின்மையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு” என தற்கொலைகளெல்லாம் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.
படிக்க :
♦ அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் !
♦ பக்கோடா புகழ் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு !
உத்தரப் பிரதேசத்தில் ஷூ கடை வைத்திருந்தவர் 40 வயதான ராஜீவ் தோமர். மோடி அரசு அமல்படுத்திய ஜி.எஸ்.டி. வரிவசூலுக்கு பிறகு தனது தொழிலில் கடும் நெருக்கடியைச் சந்தித்தவர். 2020-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, தொழில்நசிவை மேலும் தீவிரப்படுத்தி அவரை கடனாளியாக்கிவிட்டது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், தனது தொழில் நட்டம் பற்றி முகநூல் நேரலையில் பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்த அவரது மனைவி தடுக்க முயன்றும் முடியாததால், அவரும் விஷம் குடித்துவிடுகிறார். இத்தற்கொலை முயற்சியில் அவரது மனைவி இறந்துவிட்டார்.
தற்கொலை செய்துகொள்வதற்குமுன் முகநூல் நேரலையில் அழுதுகொண்டே, அவர் இவ்வாறு பேசினார்: “நான் பேசுவதற்கு சுதந்திரம் இருக்கிறது என நினைக்கிறேன். நான் எனது கடனை நிச்சயம் அடைப்பேன். நான் செத்தாலும் அடைப்பேன். ஆனால் என்னுடைய இந்த காணொலியை முடிந்த அளவு எல்லோரும் பகிரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நான் தேசவிரோதி அல்ல. மோடி ஜியிடம் நானொன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சிறுவணிகர்கள், விவசாயிகளின் நலன்விரும்பி அல்ல. உங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள்.”
“ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்” என்பதுபோல, இதுவொரு தனித்த நிகழ்வல்ல. 2018 முதல் 2020-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும் வேலையின்மை, கடன் மற்றும் வியாபார நெருக்கடி ஆகிய காரணங்களால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 25,000 ஆகும். பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சரே தெரிவித்த புள்ளிவிவரம் இது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2018 – 2020 ஆண்டுகளுக்கு இடையில், வேலையின்மை காரணமாக 9,140 பேர், கடன் அல்லது வியாபார நஷ்டம் காரணமாக 16,091 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2020-ஆம் ஆண்டில் மட்டும் அதிக அளவிலான தற்கொலைகள் நடந்துள்ளது. அந்த ஆண்டில்தான் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்காலத்தில் வேலையின்மை அல்லது வேலையிழந்த காரணத்தால் 3,548 பேரும் கடன் தொல்லையால் 5,213 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
000
மோடி அரசு 2016-ஆம் ஆண்டு மேற்கொண்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை, அதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி. வரிவசூல் முறை ஆகியவை பலரை சிறு வியாபாரத்தை விட்டே துரத்தியது. இனி வாழ்க்கையை எப்படி ஓட்டுவது, கடனை எப்படி கட்டுவது என்ற பயத்தால் பலர் தற்கொலை செய்துகொண்டனர். இக்காலக்கட்டத்தில் 50 லட்சம் மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் 2000 – 2010க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் இல்லாத வகையில், 2018-ஆம் ஆண்டில் (ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால்) வேலையிழப்பு 6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக இப்பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால் கொரோனா ஊரடங்கால்தான் வேலையின்மை அதிகரித்தது. ஆனால் தற்போது நிலைமை சீராகிவிட்டது; அனைத்தும் ‘சுபிட்சமாகிவிட்டது’ என கதைக்கிறார்கள் பா.ஜ.க. ஆதரவாளர்கள்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் உண்மையை போட்டுடைத்த அதேநேரத்தில், “நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் என்பதே கிடையாது; வேலையில்லாமல் இருப்பதெல்லாம் காங்கிரஸ் தலைமைதான்” என்று நக்கலடிக்கிறார் கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா.
2020-ஆம் ஆண்டுக்கு முன்பே ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியடைந்துவருகிறது. அசோக் லேலாண்ட், டி.வி.எஸ். உள்ளிட்டு பல ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சியை சந்தித்தது. நான்கு சக்கர வாகனங்கள் விற்காமல் தேங்கியிருந்த நிலையில், கார் கம்பெனிகளுக்கு உதிரிபாகங்கள் தயாரித்துவந்த பல சிறு நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டன; தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள், கட்டாய விடுப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை அமலாகின. ஐ.டி. துறை தொழிலாளர்களுக்கும் இதேநிலைதான். பார்லே ஜி பிஸ்கட் கம்பெனி தன்னுடைய ஊழியர்களில் 10,000 பேரை வேலையைவிட்டு நீக்கியது.
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலையில்லாத் திண்டாட்டம் என்பது 6.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக 2017-18 ஆம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office) அறிக்கை கூறுகிறது. ஆக, ஏற்கெனவே இருந்த இந்த நெருக்கடிகளை கொரோனா ஊரடங்கு தீவிரப்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.
000
வேலைக்காக காத்திருக்காமல் சுயதொழில் தொடங்கி பிழைத்துக் கொள்ளச் சொல்கிறது ஆர்.எஸ்.எஸ். இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாய்ச்சவடாலடித்து ஆட்சியைப் பிடித்த மோடி, அதிகாரத்திற்கு வந்தபின்பு “பகோடா விற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். அதைத்தான் ஆர்.எஸ்.எஸ். வேறு வார்த்தையில் சொல்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயம் விலை திடீரென கடுமையாக உயரத்தொடங்கியது. அப்போது இதுபற்றி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ “நாங்கள் பூண்டு, வெங்காயம் சாப்பிடுவதில்லை” என நடாளுமன்றத்திலேயே பார்ப்பனத் திமிரோடு பேசினார். பகோடா விற்பதற்குகூட வெங்காயம் வாங்க வேண்டுமே!
இதேபோலத்தான் சமீபத்தில், பெட்ரோல்-டீசல் விலையுயர்வு விவாதப் பொருளானபோது “இதையெல்லாம் பார்த்துக் கொள்ளவா மோடி பிரதமரானர்?” என்று கேட்கிறார் ஒரு பா.ஜ.க. எம்.பி. அப்போது யாருக்காகத்தான் மோடி பிரதமனார்? இதற்கான பதிலை “ஹுருன் இந்தியா” என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள 2022-ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியல் கொடுக்கிறது.
படிக்க :
♦ இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள், போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம்!!
♦ வேலையில்லா திண்டாட்டம் : 15 பணியிடங்களுக்கு 11000 பேர் விண்ணப்பம் !
அந்த அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு மட்டும் 1830 சதவிகிதம் அதிகரித்துள்ளது; அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது; கடந்த ஆண்டில் (2021) மட்டும் கௌதம் அதானி 4,900 கோடி அமெரிக்க டாலர் சொத்து சேர்த்துள்ளார்; அந்த ஆண்டில், உலகின் முதல் மூன்று பணக்காரர்கள் சேர்த்த சொத்துக்களைவிட இது அதிகமாகும் என்று அந்த அறிக்கையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதற்காகத்தான் மோடி இரவும் பகலும் உழைத்தார்/உழைக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்தரவாதமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களின் மறுவாழ்வுக்காக எந்த திட்டங்களையும் அறிவிக்காத மோடி அரசு, ‘ஆத்மநிர்பர்’ என்ற பெயரில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கியது. தற்போது பணமயமாக்கல், உள்கட்டமைப்பு திட்டம் என்ற பெயரில் பொதுத்துறைகளை தாரைவார்த்து வருகிறது. இதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் தொப்பை பருத்துக் கொண்டே செல்வதற்கான காரணம்.
வேலைவாய்ப்பின்மை, வறுமை, கடன்சுமை ஆகியவற்றால் கோடிக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொண்டு செத்து மடிகிறார்களே அதற்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் அசுர வளர்சிக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை.
நமது வரிப்பணம்தான் முதலாளிகளுக்கு மூலதனக் கடன்களாகவும் வரிச்சலுகைகளாகவும் கொட்டப்படுகிறது. நமது வியர்வையில் செழித்த பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கித்தான் அவர்களது மூலதனக் கட்டமைப்பு விரிகிறது. அரசு என்ற பெயரில் இதற்கெல்லாம் ‘ஏற்பாடு’ செய்துகொடுப்பது மோடி ஆட்சிதான். இந்த பாசிசப் பேயாட்சியை தூக்கியெறியாமல் இந்த துயரத்திற்கெல்லாம் விடிவில்லை.

வெண்பா
The Election Laws (Amendment) Act, 2021 : People under the legal supervision of Hindurashtra
Twelve Rajya Sabha MPs from the opposition were suspended throughout the session for insulting the ‘non-existent democracy’ by indulging in ‘ruckus’ in the last concluded Winter Session of Parliament. The only possible thing the opposition could do was to cry out against the deprivation of parliamentary ‘freedom to debate’. The Modi government, which only has a trifle majority in the Rajya Sabha, (BJP alliance – 119 seats, opposition parties – 118 seats) with its suspension move this time, has reduced the noise of the cry. The Election Laws (Amendment) Bill, 2021 was passed in both the houses of the Parliament on December 20 and 21, even as the opposition parties continued to protest against the suspension.
“This amendment is being introduced to eliminate the ‘frauds’ by which a person votes twice. By linking Aadhaar card with voter id, we can eliminate bogus votes and create a ‘fair electoral system’. And the opposition parties are ‘hindering’ this” – This is the impression that the fascist Modi government has created.
Read :
♦ The conspiratorial desperate motive to suppress Punjab behind the ‘security lapse’ outcry!
♦ Afghan people starving to death because of US hegemony !
Prior to the enactment of this Law, on December 18, the Prime Minister’s Principal Secretary held a meeting with the Election Commissioners of India. This proves that the Election Commission, like many other government agencies such as the CBI, the ED & the NIA, was a puppet of the saffron fascists. Election commissioners used to call other officials if they need any information. Though this unusual meeting stirred strong opposition, the Modi government was not bothered.
Aadhaar Linking: Legal History of Monitoring
What is Aadhaar? Why is it created? Aadhaar Act, 2016 – Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies, Benefits and Services) Act, 2016 – is said to be enacted for the following purpose: “Subsidies and benefits do not reach the poor people of the country properly. Therefore, Aadhaar was created to prevent corruption and malpractices.” This explanation makes it clear that Aadhaar is not something for all people.
The Unique Identification Authority of India (UIDAI) was formed by the then Congress government in 2009 with Nandan Nilekani, Co-founder of Infosys, as its Chairman. The question arose whether Aadhaar was legal, since UIDAI was established without any statutory backing. Later, Aadhaar Bill was introduced as a Money Bill in 2016.
Aadhaar became legally valid after the majority verdict of the Supreme Court in a public interest litigation that challenged the constitutional validity of Aadhaar. It was also ruled that Aadhaar should not be made mandatory for all; but only for subsidies and government schemes and no one should be affected by the lack of Aadhaar. Further the Court ruled that Aadhaar was not mandatory to open a bank account, enrollment in school and for getting a SIM card.
The same Court also passed a verdict in later days that made “Aadhaar mandatory” while responding for a PIL. Aadhaar had already brought 99% of the people within its purview by the time the court reached a verdict. Aadhaar, which was illegally mandated from 2010 to 2019, was legalised by the Supreme Court’s decision.
The key to our privacy in the hands of Saffron – Corporate coterie!
The question that whether Aadhaar is safe has not yet been answered. A link for obtaining BJP membership is sent to a person from Lawspet Assembly Constituency, Puducherry. As soon as he clicks on it, he learns that the link goes to the WhatsApp group that connects all the voters in Lawspet. How could the BJP knew which constituency and which booth he belonged? The question arose as to how the BJP knew his address from Aadhaar which he used to buy a SIM card. He belongs to the CPM’s Youth Organization (DYFI). He filed a PIL in March 2021. The court was ‘shocked’ and adjourned the case seeking clarification from the Aadhaar Authority.
Since its inception, the Aadhaar has several flaws and illegalities. The election laws have now been amended to link this flawed Aadhaar with the voter id. Voter id is a public document. Anyone including agents of all political parties can use the information in it. But Aadhaar includes personal biometrics like fingerprints and iris recognition scan. It is a private document containing a person’s identity and information. It is unconstitutional to make it a public document.
The Election Laws (Amendment) Bill, 2021 was tabled in the Parliament on the morning of December 20, 2021 and was passed by that evening itself. “Public opinion should be sought before introducing a law. We, the representatives of the people, were not consulted. The law has been enacted in the name of ‘Electoral Reforms’ without seeking feedback from any political party or people” said recognition T R Baalu, MP, parliamentary committee leader of DMK.
“It is not mandatory to link Aadhaar with voter id” the Modi government says. But this amendment, which does not have the details on when can the authorities ask for the Aadhaar and in what context people can refuse to provide Aadhaar, will make Aadhaar mandatory. The Supreme Court has already said that Aadhaar is not mandatory for availing essential services. But what’s happening in reality? Aadhaar is mandatory for buying SIM cards, registration of properties, buying gas cylinder, admission to school etc. Aadhaar card is being asked even for corona vaccine. Though the Modi government said that the Aadhaar is ‘not mandatory’, it has made Aadhaar mandatory for everything.
Everything, from groceries to cow dung, has been brought under e-commerce. If we search for a specific product on an Android phone, ads about that product chases us everywhere, irrespective of the site we surf. If we watch a video, videos relating to that come to our faces without our permission for days. When Aadhaar is linked with hospital, bank account, school, college, licenses, vaccine, credit card, G-mail, YouTube, Facebook etc, it becomes a linchpin to all the data about an individual.
With this, it is now easier for corporates to know a man’s wishes, needs and what should be talked to him to make him buy a product. With these details, the corporates could accurately conceptualise the voters through the media, the internet and social media in order to bring their henchmen to power.
Aadhaar – Voter id linking: A foundation to fascist tyranny!
The Modi-Amit Shah fascist clique, which works in a full swing in setting up a Hindurashtra by 2024, will use these electoral reforms to cut off the roots of the opposition and make them orphans. If Aadhaar containing personal information is linked with the voter id, the data will go into the hands of the BJP. By getting the details about the individuals who received benefits and subsidies from the government, they can even be intimidated to vote for the BJP. By knowing what a voter is looking for on Facebook, what he reads, and what he likes, he can be wooed to vote for a particular political party by targeting him with certain announcements.
This amendment will be used to intimidate the ‘unwanted’ voters who reject the BJP and to remove them from the electoral rolls. In particular, the amendment would serve to launch a precise attack on the electorate who did not vote for the BJP, just as the BJP planned to take away the citizenship of those it did not want through the National Population Register (NPR) and throw them into the fascist camps.
In 2015, the scheme to link voter id with Aadhaar was first implemented in the country in Andhra Pradesh and Telangana. The Election Commission, which had given up its responsibility to decide on who the voter was, said that the voter should prove himself by linking Aadhaar card with the voter id. Lakhs of voter ids which did not match with the Aadhaar details were removed. No verification was carried out in person or even through letters before the voter id was deleted. They were just removed as unwanted. The move to remove the voters was only dropped on the orders of the Supreme Court. Now many judgements, from Babri Masjid to Maridhas, are evidences for the judiciary’s morality. If someone goes to the Court, it is doubtful that justice will be served.
In 1935, citizenship was revoked for non-Aryans in Hitler’s Germany. Lakhs of Jews were made refugees and were sent to the detention camps. The world, in later years, was shocked to see how they were tortured and murdered. In 1938, a law was enacted forcing the compulsory registration of Jews. Through this, the population of Jews was counted and all their habitations and places of business were plundered. Hitler made only Jews to get registered in Germany. But Modi is making the entire country to register.
RSS – Sangh parivars, who killed thousands of Muslims during Gujarat riots, had electoral rolls. Using the electoral rolls, they identified the houses of the muslims and looted, killed and raped them.
If the BJP-RSS get the Aadhaar details, not only data about Muslims, but also Christians, Dalits, atheists, Communists and other political party members will be in their hands. Where are we working? In which school do our child study? What disease do we have? Who is our doctor? All these informations will be in their hands. We can’t escape anywhere. The fascist mob will follow us!
“Parliament is a pigsty”, said Comrade Lenin. Many people keep wallowing in this pigsty saying, ‘Parliament is sacrosanct’ and ‘The sewer should be cleaned’. Those who said so have lamented that they had not been given the right to comment on the Citizenship Amendment Act, the Farm laws and the Amendment to the Election Laws. They plead with the fascist Modi government to include in the act, a clause on who should not be allowed to use personal information, if aadhaar card is linked with voter id.
Read :
♦ NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !
♦ Mekedatu Dam : In racist politics – BJP and Congress are in the same array
The aim of the Modi-Amit Shah fascist clique is to regain power in 2024 and fulfil its Hindurashtra dream. They are preparing for it through legal and illegal means. Modi is destroying the parliamentary democracy by bringing all voters into the surveillance ring and cutting off the roots of the opposition parties. The opposition parties are just lamenting and watching it.
Either we should kneel before the fascists or fight against them. There was no other way inbetween. We must stand firm in the reality that the fascists cannot be subjugated by parliamentary cries or court appeals. There is no history of fascists lasting for a very long time. It is a must of the times, for the fascists to kneel before the power of the people. The “Delhi Chalo” farmers’ agitation against the Farm laws is the latest evidence of that. And the only way to bring down the saffron – fascist mob including the RSS – BJP & Ambani – Adani is to fight against them by building an anti-fascist people’s alliance of all the working people.

Tamil
மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்கள் !
கடந்த காலங்களில் புதுச்சேரி முதல்வர் நாரயாணசாமியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆளுநர் மாளிகை வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டது நமக்கு நினைவிருக்கும். அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரம் ஆளுநர்களால் கேலிக் கூத்தாக்கப்பட்டது.
இந்த அதிகார குறுக்கீடுகள் யூனியன் பிரதேசங்களோடு நின்றுவிடல்லை, மாநிலங்களிலும் நடைபெறவே செய்கின்றன. தனது இந்துராஷ்டிரக் கனவிற்கான பாதையை செப்பனிடுவதற்காக, எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் தனது உளவாளிகளை “ஆளுநர்கள்” என்ற போர்வையில் அனுப்பிவைத்து கட்டுப்படுத்திவருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.
இதனால் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சி முதல்வர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் கங்காணிகளான ஆளுநர்களுக்கும் இடையில் வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.
000
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களிலேயே, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் ஐந்தாண்டு பதவிக்காலம் முடியாமலேயே வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டு, நாகலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
படிக்க :
♦ பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி !
♦ ‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !
உளவுத்துறை பின்புலம் கொண்ட இவர் அனைவரும் எதிர்பார்த்தபடியே தனது அதிகார வரம்புகளை மீறி மாநில ஆட்சியில் குறுக்கிட்டார். பதவியில் அமர்ந்தவுடன் வழக்கத்துக்கு மாறாக சட்ட ஒழுங்கு மற்றும் உளவுத்துறை டிஜிபிக்களை நேரில் அழைத்து பேசி முதல் பரபரப்பை ஏற்படுத்தினார். தலைமைச் செயலரை தனக்கு நேரடியாக அறிக்கையளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
வி.சி.க, தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள்கூட அப்பொழுதே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டன. தொடக்கத்தில் அமைதி காத்த தி.மு.க.வும் ஆளுநரின் தொடர்ச்சியான அதிகாரத்துவப் போக்கால், பின்னர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் நான்கு மாதங்களுக்கு மேலாக நிலுவையில் வைத்திருந்தார் ஆர்.என்.ரவி. இது தொடர்பாக அமித்ஷாவை சந்திக்க சென்று பத்துநாட்களுக்கு மேல் காத்திருந்தும் சந்திக்க மறுத்ததால் எரிச்சலுற்ற டி.ஆர்.பாலு, “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்” என்று கொதித்தார். அப்பொழுது தொடங்கி வெளியே தெரியாமல் நடந்துவந்த மோதல் வெளிப்படையாகிவிட்டது. இதுவரை 19 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். குறிப்பிடுகிறார்.

மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது மட்டுமின்றி, ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கே உரிய வகையில் தனது சித்தாந்தத்தை பிரச்சாரமும் செய்துவருகிறார் ஆளுநர் ரவி. குடியரசு தினத்தன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் “தெய்வீகம் கமழுகிற புனித திருக்குறள்”, “திருக்குறளில் இம்மைக்கும் மறுமைக்குமான ஞானம் காணப்படுகிறது”, “ஒவ்வொரு பாரதிய குடிமகனின் உளத்திலும் ஸ்ரீ ராமன் குடியிருக்கிறார்” என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் தலைமை வகித்து பேசியபோது, ‘பாரதத்தின்’ ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை வாழ்ந்த மக்களின் பலதரப்பட்ட கலாச்சார, ஆன்மீகங்களால் இந்தியா உருவானதாகவும் இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுவதற்குமுன் அதை ‘பாரதம்’ என்றே விளிப்பதாகவும் பேசினார்.
000
அண்டை மாநிலமான கேரளாவில், ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம். அரசுக்கும் இடையிலான முரண்பாடு இரண்டாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது.
கேரள சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “இவற்றையெல்லாம் நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டேன்; இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று சீறினார் ஆளுநர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது கூடுதல் தனிப்பட்ட உதவியாளராக முன்னாள் பா.ஜ.க. மாநில நிர்வாகியை நியமித்ததற்கு பினராயி தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்தது. “ஆளுநர் மாளிகை விவகாரத்தில் தலையிடுவதற்கு கேரள அரசுக்கு அதிகாரமில்லை” என்றார் ஆரிஃப். அரசின் கொள்கை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க மறுத்தார். கடைசியில், அரசின் சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதிய முதன்மைச் செயலர் கே.ஆர்.ஜோதிலால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகே அவ்வறிக்கையை சட்டமன்றத்தில் வாசித்தார்.
தமிழக ஆளுநர் ரவியைப் போலவே ஆர்ஃப் முகமதுகானும் தன்னை வெளிப்படையான சங்க பரிவாரமாகவே காட்டிவருகிறார். கர்நாடகத்தில் இசுலாமிய மாணவிகள் கல்விநிலையத்தில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடைவிதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுப் பேசினார். சமீபத்தில் காவி கும்பல் தனது முசுலீம் எதிர்ப்பு பயங்கரவாத நோக்கத்திற்காக கொண்டுவந்த, பொய்யை அடிப்படையாக கொண்ட “காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற திரைப்படத்தையும் வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட மத நிறுவனங்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்று பேசிவருகிறார்.
000

மாநிலத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் “சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது” என்ற மந்திரத்தை மறவாமல் ஓதுபவர் மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கர். அரசின் அன்றாட நடவடிக்கைகளில் குறுக்கிடுவதும் சிறுதுரும்பு காரணம் கிடைத்தாலும் அதைவைத்துக் கொண்டு மம்தா அரசுக்கு நெருக்கடி கொடுப்பதையும் அவர் திறம்பட செய்துவருகிறார்.
கடந்த 2021 மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா வெற்றியடைந்ததை அடுத்து, பல இடங்களில் பா.ஜ.க.வினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. இருதரப்புக்கும் இடையிலான மோதல் என்றபோதும் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசைக் குறிவைத்து அப்போதே “சட்டம்-ஒழுங்கு” போதனையை தொடங்கிவிட்டார் ஜெகதீப் தன்கர்.
அரசு அனுப்பும் எந்த கோப்புகளிலும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் கையெழுத்திடாமல் நிலுவையில் வைத்துள்ளதாக முதல்வர் மம்தா குற்றம்சாட்டிவருகிறார். இந்த மோதல் போக்கின் காரணமாக, ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மம்தா பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி மம்தா அரசு ஆலோசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி தனக்குள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி சட்டப் பேரவையை முடக்குவதாக ஆளுநர் அறிவித்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பின்பு ஆளும்கட்சி கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே சட்டப்பேரவையை ஒத்திவைத்துள்ளதாக விளக்கமளித்தார்.
சமீபத்தில், பிர்பூம் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில், வீடுகள் கொளுத்தப்பட்டதால் எட்டு பேர் பலியானர்கள். இச்சம்பவத்திற்கு பிறகு மேற்கு வங்கம் உச்சபட்ச கொதிநிலையில் உள்ளது. கடந்த 28-ஆம் தேதி சட்டப்பேரவையில் இதுதொடர்பாக எழுந்த பிரச்சினையில் பா.ஜ.க.வும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்களும் சரமாரியாக ஒருவரை தாக்கிக் கொண்டு காயமடைந்தனர். ஆளுநருக்கு ஆட்சிக் கவிழ்ப்பு வேளைகளில் ஈடுபடுவதற்கு இதுவொரு பொன்னான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
மம்தாவின் ஆட்சேபனையை நிராகரித்துவிட்டு பிர்பூம் கலவரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, அதற்கான முக்கியாமான நகர்வாக இருக்கப் போகிறது. இக்கலவரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பேசிய பா.ஜ.க. எம்.பி. ரூபா கங்குலி, மே.வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
மகாராஷ்டிரத்தில் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். மே.வங்க, கேரள ஆளுநர்கள் செய்வதைப் போலவே அரசின் அன்றாட விசயங்கள் ஒவ்வொன்றிலும் தலையிட்டு எதிர்க்கருத்து சொல்லி வருகிறார்.

கொரோனா ஊரடங்கின்போது, மாநில அரசு கோயில்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீண்டினார். “மஹாராஷ்டிரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”, இதுகுறித்து சட்டமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் எனப் பேசினார். மேலும் அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இன்றுவரை இழுத்தடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் மஹாராஷ்டிர அவைத் தலைவராக இருந்த நானா பட்டோல் தனது பதவியை துறந்துவிட்டு, மாநில காங்கிரஸ் தலைவராகிவிட்டார். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தி புதிய அவைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆளுநர் கோஷியாரி அனுமதி மறுத்துவருகிறார். மறைமுகத் தேர்தலுக்கு பதிலாக, நேரடித் தேர்தல் நடத்தி அவைத்தலைவரைத் தேர்ந்தடுப்பதற்காக உத்தவ் தாக்கரே கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தமே அதற்கான சப்பைக் காரணமாக சொல்லப்படுகிறது.
உண்மை என்னவெனில், மறைமுகத் தேர்தல் நடந்தால் குதிரை பேரம் மூலம் தங்கள் கூட்டணிக் கட்சியினரை விலைபேசி ஆட்சியைக் கவிழ்த்துவிடுவார்கள் என்ற பயம்தான் உத்தவ் தாக்கரே தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யக் காரணம்.
படிக்க :
♦ ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
♦ சூரப்பாவை இடைநீக்கம் செய்வாரா தமிழக ஆளுநர் ?
ஆளுநர் ஒதுக்கீட்டில் உள்ள 12 சட்ட மேலவை உறுப்பினர்களை நியமிப்பதற்காக ஆளும்கட்சி கொடுத்த பட்டியலையும் ஏற்க மறுத்துவருகிறார் கோஷியாரி. இன்றுவரை இந்த உறுப்பினர் பதிவிகள் காலியாக இருக்கிறது. எப்படியாவது சிவசேனா தலைமையிலான அரசை கவிழ்க்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக வேலைசெய்துவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் நோக்கத்திற்கு பொருத்தமாக ஆளுநர் பகத்சிங் கோஷியாரி செயல்பட்டுவருகிறார்.
000
ஆர்.எஸ்.எஸ். சார்பு ஆளுநர்கள் மாநில அரசுகளில் தலையிடுவது ஏதோ ஆளும் கட்சிகளுக்கு ஏற்படும் பிரச்சினையல்ல. சொல்லிக் கொள்ளப்படும் மாநில அரசுகளின் இறையாண்மை கேலிக்குள்ளாக்கப்படுவதோடு தொடர்புடையது. தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை தோற்கடித்தாலும் தனது கங்காணிகளான ஆளுநர்களை வைத்து அரசு அதிகாரத்தை அவர்கள்தான் கைக்குள் வைத்துள்ளார்கள். அதன்மூலம் மாநில அரசுகளை சுயேட்சையாக இயங்க முடியாமல் முடக்குகிறார்கள்.
நீட் எதிர்ப்பு மசோதா, எழுவர் விடுதலை மசோதா உள்ளிட்ட மக்களுடைய கோரிக்கைகள் சட்டமாக்கப்படாமல் தடுக்கப்படுகிறது. ஹிஜாப் தடையை ஆதரிப்பது, நீட்-புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பது, இந்துத்துவ நச்சுக் கருத்துக்களை பிரச்சாரம் செய்வது என சகிக்கமுடியாத அடாவடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் ஆளுநர்கள். பெருந்திரள் மக்கள் போராட்டத்தின்மூலம் அவர்களை மாநிலத்தைவிட்டே துரத்தியடிக்க வேண்டும். போராட்டப்பாதையின் மூலம் மட்டுமே மாநில அதிகாரத்தில் தலையிடும் ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க.வின் கொட்டத்தை அடக்க முடியும்.

துலிபா
புத்தகத்தின் சாரம் : பண்டிட்டுகள் வெளியேற்றம் பற்றி ஒரு காஷ்மீர பண்டிட்டின் பார்வை வழியிலான கதை !
தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் 1990-ல் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றம் பற்றி சொன்ன திரைக்கதை மிகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மிகப் பலரும் அது “உண்மை” என்று சொன்னதில் உள்ள பொய்களை மறுத்தனர்.
பிரதீப் மேகசின்-இன் புத்தகமான ‘கிரிக்கெட் மட்டுமல்ல : நவீன இந்தியாவின் வழியே ஒரு பத்திரிகை செய்தியாளனின் பயணம்’, விவேக் ரெய்னா என்பவர் பார்த்த அந்த சம்பவங்கள் பற்றிய ஒரு நுணுக்கமான பதிவாகும். பள்ளத்தாக்கில் போராளிகளின் நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்தபோது அங்கிருந்து விவேக்குடும்பம் வெளியேறியது. ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தாரின் ஒப்புதலுடன் மறுபதிப்பு செய்யப்படுகிறது.
000
நான் காஷ்மீருக்கு பலமுறை வருகை தந்தபோது, காஷ்மீர பண்டிட் என்ற எனது அடையாளம் முஸ்லீம்களுடன் பேசும்போது இடையூறாக இருந்ததில்லை. ஆனாலும், 1990களிலான பண்டிட்டுகள் ‘வெளியேற்றம்’ பற்றி விவாதம் திரும்பினால் அவர்கள் தற்காப்பு வாதத்திற்குச் சென்றுவிடுவார்கள். சிலர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கிலேயே தொடர்ந்து வாழ்வதற்கு உத்தரவாதப்படுத்தும் செயல்களைப் போதுமான அளவு செய்யாததற்கு வருத்தங்களைக் கூடத் தெரிவிப்பார்கள்! தில்லியில் குடியேறிவிட்ட விவேக் ரெய்னா என்ற சக காஷ்மீரி பண்டிட் கூட இதுபோன்ற அனுபவத்தைப் பெற்றுள்ளார். ‘1988 – 1990-க்கு இடைபட்ட அதிர்ச்சியூட்டும் அந்த கால கட்டத்தில் எங்கள் இனத்திற்கு நேர்ந்தது பற்றிய குற்ற உணர்வு இல்லாத ஒரு காஷ்மீரி முஸ்லீம் கூட இல்லை’ என விவேக் கூறுகிறார்.
படிக்க :
♦ முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !
♦ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
விவேக் வளர்ந்த சூழலில் அவருக்கு இந்து நண்பர்களைவிட இசுலாமிய நண்பர்கள்தான் மிக அதிகம். அவர் ஸ்ரீநகருக்கு அருகில் உள்ள பல பிரிவினரும் கலந்து வசித்த சட்டாபால் எனும் பகுதியில் வாழ்ந்தார். அவர் குடும்பமும் இசுலாமிய குடும்பங்களுடன் ஆழமான உறவு கொண்டிருந்தது. அவர் 1989-ல் காஷ்மீரின் புகழ் பெற்ற நேஷனல் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவன். இது நான் குழந்தைப் பருவத்தைக் கழித்த கரன் நகர் பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. அவரைச் சுற்றி உள்ள உலகம் மிக மோசமாக மாரிக் கொண்டிருந்த சூழலில், பள்ளியின் 50-ம் ஆண்டு விழாவை மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாகக் கொண்டாட, பள்ளிக் குழந்தைகள் சுறுசுறுப்பாக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த விழா நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. அடுத்த ஓராண்டிற்குள் தமது வீட்டையும் பொருட்களையும் விட்டு விட்டு, தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவரது குடும்பம் நள்ளிரவில் வெளியேறியது.
அவரைச் சுற்றி தொல்லை தரும் அமைதி நிலவுவதை அவர் உணர்ந்ததாக நினைவு கூர்ந்தார். 1987-ம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தது. முஸ்லீம் யுனைட்டெட் ஃப்ரன்ட்-டுக்கும் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரசுக்கும் முரண்பாடு வந்தது. காங்கிரசு கூட்டணி தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றுவிட்டதாக முஸ்லீம் யுனைட்டெட் ஃப்ரன்ட் குற்றம் சுமத்தியது. பெருவாரியான மக்கள் அதிருப்தி அடைந்தனர். தோற்றுப்போன சில முஸ்லீம் யுனைட்டெட் ஃப்ரன்ட் வேட்பாளர்கள் பாகிஸ்தானின் இராணுவப் பயிற்சி பெற எல்லை தாண்டிச் சென்றதாக செய்திகள் வந்தன. லால்சௌக் பகுதியில் ஒரு குண்டு வெடித்தது. போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமான சண்டையில் இடையில் சிக்கி ஒரு பண்டிட் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவங்கள் பண்டிட்டுகளுக்கு கவலையளித்தது, ஆனால் அங்கு பீதி ஏதும் தோன்றவில்லை. எதிர்ப்பாளர்கள் முழங்கிய முழக்கம் நம்பிக்கை ஏற்படுத்தியது என்பதை விவேக் நினைவில் வைத்துள்ளார். ‘பண்டிட் – முஸ்லீம் பாய் பாய், பாரதிய ஃபௌஜ் கஹான் செ ஆயெ? (பண்டிட்டும் முஸ்லீம்களும் சகோதரர்கள், எங்கிருந்து வந்தது இந்திய இராணுவம்?)’ என்பதே அந்த முழக்கம்! ஆயினும், விரைவிலேயே மசூதிகளில் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்யப்பட்ட ஆசாதி முழக்கங்கள் காதுகளைப் பிளந்தன. அவை மிகக் கடுமையாக இந்திய எதிர்ப்புத் தன்மை கொண்டிருந்தன.
இதைத் தொடர்ந்து இரண்டு சமூகங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் குறிவைக்கப்பட்டு, அடுத்தடுத்து அலையலையாக கொல்லப்பட்டனர். பண்டிட்டுகளில் உயர்நீதிமன்ற நீதிபதி நீலகாந்த் கஞ்ஜூ, பாஜக தலைவர் டிகா லால் டப்லூ மற்றும் தூர்தர்சன் டைரெக்டர் லாசா கௌல் கொல்லப்பட்டனர். முஸ்லீம்களில் காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் முஷிர்-உல்-ஹக் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இப்போது சட்டாபால் பகுதியிலிருந்த ரெய்னாவினர் கவலைப்பட்டாலும், பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறுவது என சிந்திக்கவில்லை. விவேக்கின் அப்பா ஓம்கார் நாத் சுகாதாரத் துறையில், அரசாங்க மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தார். அருகில் வசித்த முஸ்லீம்கள் ஆதரவும் நம்பிக்கையும் கொடுத்து, பீதியடைய வேண்டாம் என ஆதரவு தந்தனர்.
இதே காலகட்டத்தில்தான் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த முஃப்தி சையீதின் மகள் ரூபையா-வைக் கடத்திய தீவிரவாதிகள் அவரை விடுவிக்க பேரம் பேசி மிக அபாயகரமான சில காஷ்மீர் போராளிகளை விடுவித்தனர். தமது மகிழ்ச்சியைக் கொண்டாட வீதிகளில் இறங்கிய வெறிகொண்டவர்கள் போட்ட முழக்கங்கள் முழுக்க கடுமையான இந்திய எதிர்ப்பு முழக்கங்களாக இருந்ததோடன்றி, இசுலாமியத் தன்மையையும் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து மசூதிகளில் டேப்பில் பதிவு செய்த இஸ்லாமிய முழக்கங்கள் ஒலிபெருக்கியில் அலற, நகரம் முழுதும் அது எதிரொலித்தது.
பிறகு, ஜக்மோகன் இரண்டாவது முறையாக மாநில கவர்னராக பதவியேற்றார். ஒரு நாள் தனது மூன்று மாடி வீட்டின் பால்கனியிலிருந்து விவேக் பார்க்கும்போது, ஸ்ரீநகரிலுள்ள காவ் கடல் பாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் பீதியடைந்து ஓடிக் கொண்டிருந்தனர். கட்டுப்பாடற்ற அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் குறைந்த்து 28 பேராவது கொல்லப்பட்டிருப்பார்கள். (மீண்டும் இங்கே எண்ணிக்கை 300 பேர் வரை என வேறுபடுகிறது). இந்த நிகழ்வு ‘காவ் கடல் படுகொலை’ என அறியப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு சற்று பின்னர் கீழ்த் தளத்தில் குடியிருந்த விவேக்கின் மாமா ராம்ஜி பால் வாங்கச் சென்றபோது சி.ஆர்.பி.எஃப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அவர்களிடம் நான் ஒரு பண்டிட் என கூறியபோது, அவரை அடித்தவர்கள் கூறியது: ‘காஷ்மீரில் ஒரு நாய் கூட பாகிஸ்தானி தான்’. (’காஷ்மிர் கா குட்டா பி பாகிஸ்தானி ஹை’).
இப்படிப்பட்ட கொலை நிகழ்வுகள் அடிக்கடியும் அதிகரிக்கவும் தொடங்கியது. அதில் மிக மோசமானதை விவேக் நினைவு கூர்ந்தார்: ஷெர்-இ-ஹாஸ்பிடலில் (மருத்துவனை) ஒரு நர்ஸ் (செவிலியர்) பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்பட்டார். உடனடியாக யாரும் எதுவும் செய்யலாம் என தறிகெட்டு நடக்கத் தொடங்கியது. அதிகரிக்கும் அரசின் ஒடுக்கு முறைகளுக்கும், இதோ விரைவில் விடுதலை கிடைக்கப் போகிறது என நம்பும் முஸ்லீம் மக்களின் விருப்பங்களுக்கும் இடையில் பண்டிட்டுகள் சிக்கிக் கொண்டனர். இந்த எல்லா நேரங்களிலும் போராளிகள் அவர் முஸ்லீமா? இந்துவா? என்றெல்லாம் பார்க்காமல் இந்திய ஆதரவாளர் என சந்தேகப்படும் ஒரு ஹிட் பட்டியலை வைத்துக் கொண்டு கொடூரக் கொலைகளையும் குண்டு வீச்சுத் தாக்குதல்களையும் தொடர்ந்தனர். யார் ஒருவரும் பண்டிட் சாதியினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது.
படிக்க :
♦ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !
♦ காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !
ஓர் இரவு பண்டிட் வீடுகளைத் தாக்கி சூறையாடவும் கொள்ளையடிக்கவும் ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவியது. ரெய்னா குடும்பத்தினரின் வீட்டு முகப்பு வாயிற் கதவு இரும்பினால் ஆனது. அதில் மின்சாரத்தைப் பாய்ச்சி வைத்தனர். யாராவது அத்துமீறி நுழைய முயன்றால் மின்சார தாக்குதலுக்கு ஆளாகட்டும் என இந்த ஏற்பாடு. 14 வயதேயான விவேக் தன்னையும் தனது 4 வயது தங்கையையும் பாதுகாக்க ஒரு கிரிக்கட் மட்டையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சில மணி நேரங்கள் காத்திருந்த விவேக் எந்த பரபரப்பு நடவடிக்கையும் இல்லாமற்போகவே சலிப்புற்று, அவனது பெற்றோரிடம் ஏன் இன்னும் யாரும் வரவில்லை எனக் கேட்டு, செமத்தையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
பிற்பாடுதான் அண்டை வீட்டு முஸ்லீம்களும் தனது குடும்பத்தினர் போலவே தங்களது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு தயாரிப்பு செய்துகொண்டு இரவு முழுதும் பயபீதியில் கழித்ததாக விவேக் கண்டு பிடித்தார். இந்திய இராணுவம் அன்றிரவு இசுலாமியர் வீடுகளைத் தாக்கி, பெண்களைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொல்லப்போவதாக வதந்தி பரவியுள்ளது.
ரெய்னாவினருக்கு இறுதியாக ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் அவர்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி ஓடிப்போகவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டியிருந்துள்ளது. அவர்களும் மேலும் நான்கு பண்டிட் குடும்பங்களுடன் சேர்ந்து இரகசியமாக ஏற்பாடு செய்து, ஒரு லாரியின் பின்புறம் ஒளிந்து கொண்டு நள்ளிரவு 2 மணிக்கு அந்தப் பகுதியைவிட்டு வெளியேறிவிட்டனர்.

கட்டுரையாளர் : பிரதீப் மேகசின்
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : தி வயர்
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2 | சித்திரகுப்தன்
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1
பாகம் : 2
பொது :
பெரும்பாலான அடிப்படை தொழிலாளர் சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் இயற்றப்பட்டவை. நிச்சயமாகக் காலனித்துவ ஆட்சியாளர்களைத் துணிச்சலாக எதிர்த்துப் போராடிய லட்சக்கணக்கான தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காக, அவர்களின் நலனை தமக்கும் தமது சந்ததியினருக்கும் உறுதி செய்வதற்காகப் போராடிய தொழிலாளர்களின் சமாதிகளிலிருந்து உருவான சட்டங்கள் அவை. அந்த சட்டங்கள் மூலமாகத்தான் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வர்க்கத்தை தங்கள் பணி நிலையில் பாதுகாப்பதில் காலத்தின் சோதனையாகவும், தாவா, ஒப்பந்தங்களின் போது பேச்சுவார்த்தை என்கிற வகையில் முதலாளியுடன் எதிரெதிரே மேசையில் சமமாக அமர்ந்துதமது தரப்பை முறையிடுவதற்கான சமமான வாய்ப்பாகத் தொழிற்சங்கங்களுக்கு ஏற்கனவே உள்ள சட்டங்கள் இருந்து வருகின்றன.
ஆக்கிரமிப்பாளர்கள் கூட இந்த சட்டங்களை மதித்து தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை உறுதிசெய்ததோடு, தொழிலாளர் நலனை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவைப்படும்போது அந்தச் சட்டங்களில் திருத்தங்களைச் செய்ய ஒப்புக் கொண்டனர்.
சுதந்திரத்திற்கு பிந்தைய ஆட்சியாளர்கள் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் நலனுக்காகச் சட்டங்களின் வீரியத்தைத் தொடர்ந்து வைத்திருந்தனர், அத்தகைய நிலை என்பது தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே சாத்தியமானது.
படிக்க :
♦ பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும் யார்?
♦ ‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !
ஆனால், இப்போது, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பழமையான சட்டங்களை ரத்து செய்வேதன்பது, தொழிலாளர்கள் தங்கள் சதை மற்றும் இரத்தத்தால் வென்ற தொழிலாளர்களின் உரிமைகளை ரத்து செய்வதற்கான வெளிப்படையான முயற்சியாகக் கருதி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து எஞ்சியிருக்கும் உரிமைகளான நமது தாய் நிலத்தை மீட்டெடுக்கும் இறையாண்மை கடமையாகப் பார்க்க வேண்டியுள்ளது.
மத்திய அரசு இயற்றிய சட்டத் தொகுப்புகளில்
தொழிற்சாலைகளில், தொழில் நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் கட்டமைக்கப்பட்டால் 30 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளவர்கள் மட்டுமே பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும் (விதி 4 (சட்டப் பிாிவு 14(2)
தொழிற்தாவாக்கள் தொழிலாளர் ஆணையர் அலுவலக சமரச அலுவலர்கள் முன்பாக எடுத்துச் செல்லப் படுவதற்கு பதிலாக நிர்வாகம் பார்த்து நிர்ணயிக்கும் இசைவுத் தீர்ப்பாளர் (Arbitrator) முன் கட்டப் பஞ்சாயத்து செய்தபின்தான், நீதிமன்றம் செல்ல முடியும்
20 அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்குப் பொருந்தும் ஒப்பந்த தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1970 (CLA) இனிமேல் 50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என இதில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெரும் பகுதி தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பு இல்லாமல் விடப்படுவதோடு அதீத சுரண்டலுக்கும் அவர்கள் ஆளாக நேரிடும்.
புலம் பெயர் தொழிலாளர்களின் நலன்கள் புறம் தள்ளப்பட்டுள்ளது
பணி நிரந்தரம் என்பது எட்டாக் கனியாகியுள்ளது
பொதுவாக வேலை நிறுத்த உரிமை என்பது டி.கே.ரெங்கராஜன் மற்றும் சிலர் -எதிர்- தமிழ்நாடு அரசு (2003 (6) SCC 581) என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஒருபுறம் கேள்விக்குறியதாக இருப்பினும்- தொழிற்தாவாச் சட்டத்திற்குட்பட்டு வரும் தொழிலாளர்கள் அந்த சட்டத்திற்கிணங்க 14 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்து வேலை நிறுத்தம் மேற்கொள்ளலாம்.
தவிர பணிச்சூழலில் பெரும் அசம்பாவிதம் நடந்து அது தொடா்பாக தொழிலாளர்கள் முறையிடுகிறபோது நிர்வாகம் அலட்சியம் காட்டினால் திடீர் வேலை நிறுத்தம் மூலம்தான் நிர்வாகத்தைப் பணிய வைக்க முடியும். பின்னர் பேச்சுவார்த்தையில் சமரச அலுவலர் முன்பாக அத்தகைய தவிர்க்க இயலாத வேலை நிறுத்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நிபந்தனை முடிவும் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இனிமேல் இத்தகைய திடீர் வேலை நிறுத்தங்கள் (flash strike) எதையும் தொழிலாளர்கள் மேற்கொள்ள முடியாது. மேற்சொன்ன புதிய சட்டத் தொகுப்பின்படி இனிமேல் 60 நாட்கள் முன்பாக வேலை நிறுத்த முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். தவிர தாவா நடுவர் முன்பாக நிலுவையிலிருக்கும் போது நடைபெறும் வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேலை நிறுத்தம் செய்வதற்கு 60 நாள் முன்னறிவிப்புத் தேவை என்பதே வேலை நிறுத்தப் போராட்டமே செய்யக் கூடாது என்பதற்கான ஏற்பாடுதான். (பிரிவு: 62-64, தொழிலுறவு சட்டத் தொகுப்பு).
ஆலை மூடல், ஆட்குறைப்பிற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது
தொழிற்சாலை என்பதன் வரையறைகள் மாற்றப்பட்டுள்ளது
குறிப்பிட்ட கால பணி நியமனம் (fixed term employment) என்பது நிலையாணை விதிகளில் உட்புகுத்தப்பட்டுள்ளது
தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை சரிபார்ப்பு என்பது முதலாளி நிர்ணயிக்கும் அலுவலரால் மேற்கொள்ளப்படும் என நிர்வாகத்தின் அதிகார வரம்பிற்குள் சென்றுள்ளது (விதிகள் பிரிவு 6 (பிரதான சட்டம் பிாிவு 14 (3), (4)
பொதுவாக தொழிற்சாலை சட்ட வரம்பிற்குள் வருகிற எந்த ஒரு தொழிற்சாலையையும் மூடுவதோ, கதவடைப்பு செய்வதோ மேற்கொள்வதற்கு முன்பாக தொழிலாளர் துறை மூலமாக அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால் தற்போது மேற்சொன்ன புதிய சட்டத் தொகுப்பிற்கிணங்க (தொழிற்சாலைச் சட்டம் 1948ன் பிரிவு 2(எம்)ல் தொழிற்சாலை என வரையறுக்கப்பட்டுள்ள) எந்த ஒரு தொழிற்சாலையும் 300 தொழிலாளர்களுக்கு குறைவாக பணிபுரிவார்கள் எனில், அல்லது ஒரு ஆண்டில் சராசரியாக பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் என அரசு நிர்ணயிக்கும் எண்ணிக்கைக்கு குறைவாக இருப்பின் அந்த தொழிற்சாலையை மேற்படி முன் அனுமதி பெறாமல் முதலாளிமூடிக்கொள்ளலாம் (பிரிவு 77 தொழிலுறவு சட்டத் தொகுப்பு)
தொழிற்சங்கங்களுக்கிடையே தாவா என்ற நிலை வரும் போது தனியொரு நபர் புகாரளித்து அதைத் தாவாவாக விசாரிக்கலாம்.(விதிகள் பிாிவு 10)
பல வருடங்களுக்கு முன்பு வரை தொழிற்தாவாச் சட்டம் 1947ன் பிரிவு 2A (பணிநீக்கத்தை எதிர்க்கும் தாவா), மற்றும் பிரிவு 2K (பணி நிலைகள், பாரபட்சம், தண்டனைகள் போன்றவற்றை எதிர்க்கும் தாவா) ஆகிய இரண்டின் கீழான தாவாக்களும் முதலில் தொழிலாளர் அலுவலர் முன்பாக நடத்தி சமரச முறிவு பெற்று பின்னர் அரசின் பரிந்துரையின் பேரில்தான் தொழிலாளர் நீதிமன்றம் போன்றவற்றிற்கு செல்ல இயலும் என்றிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டு சட்டப்பிரிவு 2A ன் கீழ் பணி நீக்கம் போன்றவற்றை எதிர்த்து தொடரப்படும் வழக்குகள் தொழிலாளியின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையது என்பதால் தாமதங்களை தவிர்க்க வேண்டுகை விடப்பட்டதைத் தொடர்ந்து அத்தைகய தாவாக்கள் நேரடியாக தனியொரு தொழிலாளியாகவே தொழிலாளர் நீதிமன்றம முன்பாக வழக்காக தொடுக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டது (மருத்துவமனைத் தொழிலாளர் சங்கம் -எ- இந்திய அரசு 2003 I LLJ 1127 (S.C.).
ஆனால் தற்போது, சமரச அதிகாரியிடம் முறையிடுவதற்கு முன்பாக நடுவர்களை (arbitrator) ஏற்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாட்டை புதிதாகப் புகுத்தி உள்ளனர். தொழிற்தகராறு ஒன்றில் ஒரு முடிவைப் பெறுவதற்குப் பழைய நடைமுறையிலேயே தொழிலாளர்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டும். தற்போது தொழிற்தகராறை மேலும் இழுத்தப்படிப்பதற்கான ஏற்பாடாக இந்த நடுவர் முறை நுழைக்கப்பட்டுள்ளது. இது முதலாளிகளுக்குத்தான் சாதகம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.(பிரிவு 42: தொழிலுறவு சட்டத் தொகுப்பு)
சட்டத்தை மீறிச் செயல்படும் ஒரு நிர்வாகத்தின் மீது பழைய சட்டங்களின்படி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியும். ஆனால் புதிய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றங்களில்கூட இனி நீதிமன்றங்கள் தலையிட முடியாது. மாறாக சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது மத்திய மாநில அரசு அதிகாரிகளே, அதுவும் அரசு சார்பு செயலாளர் அளவிலான ஒருவர் தான் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவார்களாம்.
அரசு அலுவலர்கள் என்பவர்கள், அதுவும் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போது குறிப்பிட்ட துறைகளில் அமைகின்ற அரசிற்கு சாதகமான நபர்கள் என பணியிடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறவர்கள். அத்தகைய அரசுத் துறை அதிகாரிகளின் ஆசியோடுதான எல்லா முதலாளிகளும் சட்டத்தை மீறுகின்றனர். அத்தகைய அதிகாரியே நீதிபதியாக நியமிக்கப்பட்டால் யாருக்கு நியாயம் கிடைக்கும்? பலவீனப் பிரிவினரான தொழிலாளர்களைப் பொறுத்தவரை தற்போதைய புதிய நான்கு சட்டத் தொகுப்புகளிலும் நீதி தேவதையின் கண்களோடு காதுகளும் சேர்த்து மூடப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.(பிரிவு 85-89 தொழிலுறவு சட்டத் தொகுப்பு)
மேலோட்டமாக பார்க்கையில் இத்தகைய பாதகமான பிரிவுகள் மாநில அரசு உருவாக்கியுள்ள விதிகளில் இல்லை போல் தோன்றினாலும், அனைத்திலும் பிரதான மத்திய அரசின் சட்டத்தை சார்ந்து என்பது சொல்லப்பட்டுள்ளது.
படிக்க :
♦ பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் | லஜபதிராய் | வீடியோ
♦ தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
மேலும் நீதிமன்றங்களைப் பொறுத்தவரை அரசின் எந்த விதமான நடவடிக்கைகளிலும் தலையிடுவது என்பது நிறுத்தப்பட்டு அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட வேண்டியதில்லை என்கிற பொது குணாம்சம் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே இந்த விதிகளை எதிர்த்து தொழிலாளி தரப்பில், தொழிற்சங்கத்தின் தரப்பில் நீதிமன்றம் சென்றால் சுவற்றில் அடித்த பந்தாக மறுநாளே தள்ளுபடி செய்யப்படும். அதே சமயம் பெருநிறுவன முதலாளிகள் சாா்பில் பிரதான சட்டத் தொகுப்புகளுக்கு முரணாக மாநில அரசின் விதிகள் உள்ளது என வழக்கு தொடரப்படுமானால், உடனே நீதிமன்றம் தலையிட்டு, முதன்மை சட்டத்தின் முக்கிய அம்சங்களிலிருந்து விலகுவதாக மாநில விதிகள் அமையக் கூடாது என உத்திரவிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
தொழிலாளர் நலச் சட்டங்களின் இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு என்பது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போலிருப்பதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. முக்கியமான தொழிற்சங்கங்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் மாநில அரசுடன் தேர்தல் கூட்டணி என்கிற இணக்கத்தில் உள்ளது. இந்த சூழலில் இத்தகைய தொழிற்சங்கங்கள் தற்போது அறிவிக்கை செய்யப்பட்ட விதிகளுக்கு எந்த அளவில் ஆட்சேபணைகள் சமா்ப்பிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் இடது சாரி அமைப்புகளாவது முறையான விரிவான ஆட்சேபணைகள் சமா்ப்பிக்காவிட்டால் வரலாறு அவர்களை மன்னிக்காது.
(முற்றும்).
சித்திர குப்தன்
The conspiratorial desperate motive to suppress Punjab behind the ‘security lapse’ outcry!
In Punjab on January 5, Prime Minister Modi’s car, which was there to attend the BJP’s Ferozepur election rally, was stopped on the Moga-Ferozepur National Highway due to farmers’ agitation. As soon as this news broke out, saffron mobs and the puppet media blew up a nothing event as “Lapse in PM’s security” and “PM’s life in danger”.
UP rowdy ascetic Chief Minister Yogi gushed that “security lapse is a conspiracy to kill the Prime Minister”. BJP men across the country, including the Chief Ministers of Madhya Pradesh and Assam, added flavour to the screenplay by performing special pujas to prolong Modi’s life.
Modi cancelled his event and left because just 500 people were present at the BJP’s election meeting, which was scheduled to be attended by 70,000 people. Punjab Chief Minister Charanjit Singh Channi initially criticised Modi for playing “security lapse” drama to hide his humiliation. But after a round of BJP demonstrations, print and visual media debates that inflated the event, the same Charanjit Singh claimed responsibility for the security flaw and expressed regret, as the amplitude of the drama was high.
Read :
♦ Afghan people starving to death because of US hegemony !
♦ NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !
The Supreme Court dissolved both the enquiry committees of the Punjab Government and the Union Government and set up a ‘neutral’ Inquiry Committee to probe the incident headed by former judge Justice Indu Malhotra.
The Modi’s puppet media and the Punjab farmers who were made into Khalistanis!
The jingoistic campaign in the wake of the Pulwama attack; the campaign of ‘Maoist conspiracy to kill Modi’, which whipped up on the occasion of Bhima Koregaon – These were the campaigns of the main stream media. In the present Punjab case, the media is doing the same. They have been propagating the ideas which the RSS-BJP fascists are planning to conceptualise among the people.
“When the head of a nuclear-weapons State is stuck on a highway for a quarter of an hour, while the police and his élite personal protection force cogitate on what to do next, something is horribly wrong. The last time India’s leadership failed to act on clear and present warnings of similar dysfunctions, a former prime minster was assassinated. That should be reason enough to be serious about finding out exactly what happened — and why” says ‘The Print’ (English digital news media).
“The office of the Prime Minister of India is one of the most important of our democratic institutions. When it comes under threat, it is India that comes under threat, not the individual who happens to occupy the post”, says the Indian Express.
“The office of Prime Minister should be given the utmost security in the country. It is an issue of national security… It is the duty of the state government to legally suppress, repress and eliminate the organizations which prevent PM’s propaganda” wrote ‘Dinamani’ (Tamil Newspaper).
“The PM’s car could easily have been targeted by a well-positioned sniper or grenade-launcher, or faced an attack from a drone, an IED, or some other similarly easily-procured weapon”. Further, “The PM’s security is not just a question of his personal security but of the security of an institution that has a crucial bearing on national security, and indeed, on the life of every citizen”, reported ‘India Today’.
On the whole, the media indirectly projected the protested Punjab farmers as “terrorists”. They did this by projecting the protests of the country’s own people against the anti-people Modi as “security lapse”, “conspiracy to kill PM” and “repeat of 1984” (the year Indira Gandhi was assassinated).
In addition, a report was circulated that the pro-Khalistan organisation “Sikhs for Justice” had claimed responsibility for the security flaw in Modi’s visit. A video containing the speech of the organisation’s leader from abroad was circulated on social media.
Modi’s visit was to the election campaign; Those who picketed the road were farmers; That too the protest was pre-announced – That’s what happened. The video of the leader of a pro-Khalistan organisation saying that he was ‘responsible’ being circulated, as if it was a terrorist attack, looks like someone is playing a game behind it.
The ‘Security Lapse’ drama
Modi’s travel plan was to attend a rally in Ferozepur. He was to fly by helicopter from Bathinda airport. But the helicopter ride was cancelled due to poor weather conditions. Suddenly the travel plan was changed and it was decided to travel by road from Bathinda to Ferozepur (nearly 100 km) by car.
However, Modi’s car was stopped in a village called Piyarena and had to wait for 15-20 minutes due to farmers’ agitation on the Ferozepur-bound national highway. Modi’s election rally was also cancelled as just 500 people attended the meeting, which was scheduled to be attended by 70,000 people.
“Say thanks to your CM for I could return to the Bhatinda airport alive” Modi told to the Punjab Airport Officials before he returned. This waved the flag for the RSS-BJP’s campaign plan.
Samyukta Kisan Morcha, the umbrella organisation of various farmer unions, had earlier declared that they would protest on the day of Modi’s arrival in Punjab. Modi’s car was stopped about 1 km from where the protest took place. A video on social media shows that a special security team stood around Modi’s car with machine guns and it was the BJP men who stood in groups shouting “Hail Narendra Modi” next to the car. So their claim that the farmers caused the security lapse is a filtered lie.
Moreover, it is not the first time that Modi’s visit has been disrupted, i.e., in the language of the BJP, there have been ‘security lapses’. Earlier in 2019, crowds breached the security cordon at the Prime Minister’s rally at Ashoknagar, in West Bengal. In 2018, an impersonator talked on his way past the Special Protection Group (SPG) on to the stage. In 2017, police escorts led the convoy into a traffic jam in Noida. The RSS-BJP, which did not cry as ‘security lapse’ at those times is now howling. We cannot just pass on this just as a simple matter.
Drama for five state elections! A means of repression!!
Various progressive forces and progressive-Liberal media, who knew about the BJP and Modi, know that the current ‘Security Lapse’ drama is similar to the strategy which raised a wave of ‘patriotism’ during the Pulwama attack during the 2019 parliamentary elections; Modi is trying to create a wave of sympathy for himself and reap the votes.
No one has any objection in the fact that in order to retain power, the RSS-BJP will go to any extent. But we can understand the fact that the saffron mob’s campaign on the Punjab issue has a purpose beyond elections, when we link certain things.
First, the BJP is unlikely to win the upcoming assembly elections even if they stand upside down. The BJP is also well aware of this. This is because the fight against the Modi government’s three Farm Laws had created an anti-Modi anti-BJP sentiment among the people of Punjab. Even a small child in Punjab would abuse Modi with derogatory words.
Though the three Farm Laws have now been repealed, the Punjab farmers are not convinced. The Modi government also did not withdraw the laws with the intention of pacifying them. The intent was to temporarily dissolve the farmers’ protest; The Modi government repealed the three Farm Laws so that the class unity of “farmers” would not expand further beyond Punjab as a result of this protest, transcending their Hindu polarization. It was done particularly by keeping Uttar Pradesh elections in mind.
Modi, servant of corporates, has no intention of permanently repealing the Farm Laws. It can be seen in Modi’s speech on the day the laws were repealed. “Three farm laws were in farmers’ benefit but we couldn’t convince section of farmers despite best efforts. And I apologise to the countrymen” he said. Subsequently, Agriculture Minister Narendra Singh Tomar said, “Some people did not like these laws. We moved a step back and we will move forward again”. So, the RSS-BJP is waiting and looking forward to the conducive situation for bringing these laws back.
To create such a situation, suppressing Punjab becomes a prerequisite. Because not only the farmers of Punjab and Haryana fought against the three farm laws. The farmers of Punjab and Haryana also made other agricultural organisations in the country to fight, even though they did not protest vigorously as them. They made the people of all the states to recognize and support their protests. Through their protesting methods, the farmers had brought out the corporate profit frenzy characteristics embodied within the three farm laws to a certain extent.
If the protest of the Punjab farmers is to be assessed shortly and correctly, we can say that “they acted as the engine for the struggle against the Modi government’s recolonization of the Indian farming sector”. Other states of the country are already dominated by private procurement. In this case, it is only states like Punjab and Haryana that depend on government procurement. This is the reason why these states play a leading role in the struggle against the farm laws.
This is well judged by the saffron fascists than we are. Therefore, they are moving with a plan to suppress the nationwide boil down against corporatization of the farming sector by suppressing the volatile Punjab with terrorist-separatist panic. The campaign ‘Modi’s life is not safe’ is an attempt to create justifications for it.
Read :
♦ Mekedatu Dam : In racist politics – BJP and Congress are in the same array
♦ R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion
In addition to this, in October last year, the BSF’s jurisdiction in Punjab and West Bengal was increased from 15 km to 50 km. This should be looked in synergy with the terrorist-separatist panic. As far as Punjab is concerned, nearly half the state is under the control of the BSF through this expansion drive. In this regard, we wrote in the December 2021 issue of “Puthiya Jananayagam’’ (New Democracy) under the title “The expansion of the Border Security Force: Military dictatorship in the name of ‘National Security’”.
The RSS-BJP’s campaign on Punjab is not merely an attempt to seek sympathy and votes for elections. It has a conspiratorial motive. This is not like Pulwama; Like Bhima Koregaon, its purpose is repression. Campaigning as “state near Pakistan” and “Khalistan separatist state” is an attempt to seek justice among the people for the repression it is about to unleash on Punjab.
Now, the RSS-BJP’s “conspiracy drama” has been rendered useless among the people by progressive-democratic forces. But the campaign had not been understood as a means of repression. It is necessary to understand it this way. Because the RSS-BJP’s attack on Punjab will occur in succession along this direction.

sevvandhi
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1 | சித்திரகுப்தன்
2018-லிருந்து மத்திய அரசு பெருமுதலாளிகள் / நிர்வாகிகளுக்கு சாதகமாக இருக்கும் விதத்தில் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒருங்கிணைத்து, 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை துவங்கியதிலிருந்தே தொடர்ந்து அகில இந்திய அளவிலான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அதை எதிர்த்து வந்திருப்பது அனைவரும் அறிந்ததே.
குறிப்பாக 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றுவதை கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வந்தன. மேற்சொன்ன மாநிலங்களிலுள்ள சிபிஎம், சிபிஐ, தொமுச, திரிணமுல் காங்கிரஸ் போன்றவை சார்ந்த தொழிற்சங்கங்கள் மேற்சொன்ன நடவடிக்கையை எதிர்த்து கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தங்களில் சக்தியாக பங்கேற்றதுடன், மேற்படி தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தாதே என்பதை பிரதான கோரிக்கையாக முன் வைத்திருந்தன.
சம்பிரதாயமாக நடத்தப்படும் இதுபோன்ற ஒரு நாள், இரு நாள் வேலை நிறுத்தங்களின் மூலம் மெஜாரிட்டி பலம் கொண்ட அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினை தடுத்து நிறுத்திவிட முடியுமா என்கிற சந்தேகம் தொழிலாளர்களுக்கு இருந்த போதிலும், தமிழகத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை, இடது சாரி சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி போன்ற சங்கங்களின் தலைவர்களின் வீராவேசப் பேச்சுக்களினால் ஈர்க்கப்படும் அப்பாவித் தொழிலாளர்கள் லட்சக் கணக்கில் இத்தகைய வேலை நிறுத்தங்களில் வருடந்தோறும் பங்கேற்பதும், அதன் தொடர்ச்சியாக ஊதிய இழப்பு, பதவி உயர்வில் பாதிப்பு போன்றவற்றை அனுபவித்து வந்தே உள்ளனர்.
படிக்க :
♦ கார்ப்பரேட் ஊடகங்களே ! உங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள் !
♦ தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்
இந்த ஆண்டு பிப்ரவரி என முதலில் நிர்ணயிக்கப்பட்டு, பின்னா் பல மாநில தேர்தல்கள் மற்றும் தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்கள் காரணமாக மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் என நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே அரங்கக் கூட்டங்கள், ஆலை வாயிற் கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள், இணைய வழி சுவரொட்டிகள் என வழக்கம் போல் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பிரச்சாரங்கள் பொறி பறந்தது.
குறிப்பாக இது போன்ற வேலை நிறுத்த நடவடிக்கைகளில் பிரதானமாக பங்கேற்கும் (Organised sector) அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், ஆயுள் காப்பீடு, வங்கி போன்ற நிறுவனங்களின் தொழிலாளர்கள் முன்பாக ஏற்கனவே மத்திய அரசால் திருத்தப்பட்டு பல மாநிலங்களில் அமுலுக்கு வந்துவிட்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான புதிய மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் இவை அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இது ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மத்திய அரசு மேற்படி 4 புதிய சட்டத் தொகுப்புக்களை நிறைவேற்றும் விதத்தில் மாநில அளவிலான விதிகளை ஏற்படுத்தாத மாநில அரசுகள் ஏப்ரல் மாதத்திற்குள் அவற்றை மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தது. தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சி.வி.கணேசன் அவர்கள் தலைமையில் தொழிலாளர் நல ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் மேற்படி சட்டத் தொகுப்புகளுக்கு இணையான விதிகளை உருவாக்குதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் 18 மாா்ச் 2022 மதியம் 3.30 மணிக்கு நடத்தப்பட்டது.
இதில் தொழிலாளர் துறைச் செயலாளர் திரு கிர்லோஸ்குமாா், இஆப., துறை ஆணையர் திரு அதுல் ஆனந்த், இஆப., மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள், தொமுச தேசிய பொதுச் செயலாளர் திரு மு.சண்முகம், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், எச்எம்எஸ் தேசியத் தலைவர் திரு சி.ஏ.ராஜா ஸ்ரீதர், ஏஐடியுசி திரு டி.எம்.மூர்த்தி, சிஐடியு திரு அ.செளந்திரராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, பிஎம்எஸ், அண்ணா தொழிற்சங்கப் பேரவை, எல்டியுசி, எம்எல்எப், எல்எல்எப், டபிள்யுடியுசி சங்க தலைவர்கள் பங்கேற்றனர். (பிஎம்எஸ், ஏடிபி தவிர மற்ற சங்கங்கள் அனைவரும் மேற்சொன்ன சட்டத் தொகுப்புகள் / தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தவர்கள்)
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு புதிதாக உருவாக்கியுள்ள 4 சட்டத் தொகுப்புக்களை தமிழகத்திலும் அமுல் படுத்த வேண்டிய அவசியம் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது, தொழிற்சங்கத் தலைவர்களும் அவற்றில் பெரும்பாலானவை தொழிலாளர்களுக்கு விரோதமாக இருப்பதால் எங்களின் ஆட்சேபணைகள் / கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப திருத்தங்கள் மேற்கொண்டபின் அமுல் படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர். மிகச் சுருக்கமாக 2 மணி நேரத்தில் அந்தக் கூட்டம் முடிந்து விட்டது.
தற்போது தமிழ்நாடு மாநில அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 11/04/2022 தேதியிட்டு 3 அரசிதழ் அறிவிப்புகள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விபரம்:
TN Govt Gazette (Extraordinary) No.214, Dt.11 April 2022:
மத்திய சம்பளச் சட்டத் தொகுப்பு 2019ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க தமிழகத்தில் ஏற்கனவே அமுலில் இருந்து வரும் (1) தமிழ்நாடு சம்பளப் பட்டுவாடா விதிகள், 1937, (2) தமிழ்நாடு சம்பளப் பட்டுவாடா (உரிமை கோரா தொகைகள்) விதிகள், 1949, (3) குறைந்தபட்ச சம்பளம் (தமிழ்நாடு) விதிகள், 1953 ஆகியவற்றினை மேலோங்கும் விதத்தில் சம்பளச் சட்டத் தொகுப்பு (தமிழ்நாடு) விதிகள், 2022 அமுல்படுத்த இருப்பது தொடர்பான வரைவு விதிகள் பொதுமக்கள் அறியும் வண்ணம் பின்வருமாறு அறிவிக்கை செய்யப்படுகிறது. இவற்றின் மீதான ஆட்சேபணைகள் / கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த அறிவிக்கை மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள்ளாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்பவருக்கு தொழிலாளர் துறை ஆணையா், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006-ன் வழியாக சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்படுகிறது.
TN Govt Gazette (Extraordinary) No.215, Dt.11 April 2022:
மத்திய தொழில் உறவுச் சட்டத் தொகுப்பு 2019ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க தமிழகத்தில் ஏற்கனவே அமுலில் இருந்து வரும் (1) தமிழ்நாடு தொழிற்சங்க நெறிமுறைகள், 1927, (2) தமிழ்நாடு தொழிற்சாலை நிறுவனங்கள் (நிலையாணைகள்) விதிகள், 1947, மற்றும் (3) தமிழ்நாடு தொழிற் தகராறுகள் விதிகள், 1958 ஆகியவற்றினை மேலோங்கும் விதத்தில் தொழில் உறவுகள் (தமிழ்நாடு) விதிகள், 2022 அமுல்படுத்த இருப்பது தொடர்பான வரைவு விதிகள் பொதுமக்கள் அறியும் வண்ணம் பின்வருமாறு அறிவிக்கை செய்யப்படுகிறது. இவற்றின் மீதான ஆட்சேபணைகள் / கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த அறிவிக்கை மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள்ளாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்பவருக்கு தொழிலாளர் துறை ஆணையா், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006ன் வழியாக சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்படுகிறது.
படிக்க :
♦ நீங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்களா? : திப்பு, சித்திரகுப்தன்
♦ இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
TN Govt Gazette (Extraordinary) No.216, Dt.11 April 2022:
மத்திய தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத் தொகுப்பு 2020ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க தமிழகத்தில் ஏற்கனவே அமுலில் இருந்து வரும் (1) தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர்கள் (நெறிமுறைகள் மற்றும் ஒழித்தல்) விதிகள், 1975, (2) தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர் தொழிலாளர் (நியமனம் மற்றும் பணி நிபந்தனை நெறிமுறைகள்) விதிகள், 1983, (3) தமிழ்நாடு பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் (பணி நிபந்தனைகள்) விதிகள், 1968, (4) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் (நியமனம் மற்றும் பணி நிபந்தனை நெறிமுறைகள்) விதிகள், 2006, (5) தமிழ்நாடு தொழிற்சாலைகள் விதிகள், 1950, (6) தமிழ்நாடு பாதுகாப்பு அலுவலர்கள் (பணிகள், தகுதிகள் மற்றும் பணி நிபந்தனைகள்) விதிகள், 2005, (7) தமிழ்நாடு தொழிற்சாலைகள் (நல அலுவலர்கள்) விதிகள், 1953, (8) தமிழ்நாடு தொழிற்சாலை விபத்துக்கள் /பெரும் அபாயங்கள் விதிகள், 1994, (9) தமிழ்நாடு தேயிலைத் தொழிலாளர்கள் விதிகள், 1955, (10) தமிழ்நாடு மோட்டார் தொழிலாளர் விதிகள், 1965 ஆகியவற்றினை மேலோங்கும் விதத்தில் தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிபந்தனைகள் (தமிழ்நாடு) விதிகள், 2022 அமுல்படுத்த இருப்பது தொடர்பான வரைவு விதிகள் பொதுமக்கள் அறியும் வண்ணம் பின்வருமாறு அறிவிக்கை செய்யப்படுகிறது. இவற்றின் மீதான ஆட்சேபணைகள் / கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த அறிவிக்கை மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள்ளாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்பவருக்கு தொழிலாளர் துறை ஆணையா், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006ன் வழியாக சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்படுகிறது.
(தொடரும்…)
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2
சித்திர குப்தன்
குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!
கடந்த மார்ச் 28-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா-2022-ஐ அறிமுகப்படுத்தினார். இதற்கு பல எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் குற்றவியல் நடைமுறை மசோதா – 2022 குரல் வாக்கெடுப்பு மூலம் (120 உறுப்பினர்கள் ஆதரவு, 58 உறுப்பினர்கள் எதிர்ப்பு) நிறைவேற்றப்பட்டது. எதிர் கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தும் அதையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. பொதுவாகவே மக்களுக்கு எதிரான சட்டங்களும் மசோதாக்களும் இப்படிதான் நிறைவேற்றியும் வருகிறார்கள் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளையில் இந்த மசோதவில் உள்ள அபாயத்தையும் பார்க்க வேண்டும்.
குற்றவியல் நடைமுறை மசோதா, 1920-ம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, குறைந்தபட்சம் ஓராண்டு தண்டனை பெற்றவர்கள், ஆயுள் தண்டனை பெற்றவர்கள், நீதிமன்றத்தால் விசாரணைக்கான அடையாளங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டவர்கள், குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் நன்னடத்தைக்கான பிணை பெற்றவர்கள் உள்ளிட்டோரின் அடையாள மாதிரிகளை சேகரிக்க முடியும். குறிப்பாக, குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்களின் ‘கைரேகைகள், கால் ரேகைகள்’ ஆகிய அடையாள மாதிரிகள் மட்டும் சேகரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.
படிக்க :
♦ நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
♦ குழந்தைத் திருமண தடுப்பு மசோதா : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின்னுள்ள நோக்கம்!
ஆனால், இப்பொழுது இன்று இருக்கும் நெருக்கடி சூழலில், மக்கள் கொந்தளிப்புடன் இருக்கும் சூழலில் நம்மை ஒடுக்கவே அவசர அவசரமாக பல எதிர்கட்சி தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி எந்த விதமான பதிலும் அளிக்காமல் பல விதிகளை உள்ளடக்கி பல மாற்றங்களை செய்து இந்த மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர் மட்டும் அல்லாது, நீதிமன்றத்தினால் எந்த சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றவராக இருந்தாலும் அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் – 1973ல் பிரிவு 53, 53A-யில் சொல்லப்பட்டுள்ள அவர்களின் கை விரல்ரேகை, உள்ளங்கை அச்சு பதிவுகள், பாதரேகை மட்டுமல்லாது, சளி எச்சில், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளின் (குருதி, விந்தணு மாதிரிகள், தலைமுடி மாதிரிகள்) பகுப்பாய்வுகள். மேலும் கையொப்பம் மற்றும் கையெழுத்து, நடத்தை பண்புகள் உள்ளடக்கிய தனிப்பட்ட உயிரியல் தரவுகளையும் சேமித்து வைக்கும் அதிகாரத்தை போலீசுத்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு வழங்கும் வகையில் வழிவகை செய்கிறது. மேலும் யாரை வேண்டுமானாலும் நீதித்துறையோ, போலீசுத்துறையோ சந்தேகப்படும் வேலையில், அவர்களுக்கும் உயிரியல் மாதிரிகளை எடுக்க கோரிக்கை வைக்கவும், அவற்றை சேகரித்து வைக்கவும் முடியும். இவற்றை எதிர்த்தால் கூட இந்திய தண்டணை சட்டத்தின்கீழ் குற்றமாக கருதப்படும்.
சேகரிக்கப்பட்ட இந்த தரவுகளை தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் 75 ஆண்டுகள் வரை பாதுகாத்து வைக்க வழி செய்கிறது. ஆனால், இந்தியாவின் கட்டமைப்பு என்பது இந்திய குடிமக்களின் இரகசியங்களை காக்கும் வகையில் இல்லை. அப்படியானால் இது எந்த வகையில் பார்த்தாலும் நாட்டு மக்களுக்கே எதிரானதாகதான் உள்ளது.
இந்த மசோதா குறித்து பதிலளித்துள்ள அமித்ஷா, “இந்த சட்டத்தால் ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படாது, இரகசியங்கள் வெளியாகாது. போலீசு தடவியல் நிபுணர்களுக்கு உதவும் நோக்கில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளன” என கூறுகிறார். ஆனால், இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே போலீசுத்துறையின் கையில் தூக்கி அதிகாரத்தை கொடுப்பதுதான்.
ஒன்றிய அரசின் இந்த குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 என்பது, ஒரு குறிப்பட்ட சமூகத்தை மட்டுமே குற்றப்பரம்பரை என்று சொல்லும் வகையில் வரலாற்றையே பிற்காலங்களில் மாற்றியமைக்கவும் முடியும். மேலும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடும் போராளிகளை ஒடுக்கவும் இந்த வழிமுறை அரசுக்கு துணை புரியும். அரசியல் ரீதியிலான போராட்டங்களில் கைது செய்யப்பட்டால் கூட அவர்களின் மாதிரிகளை எடுத்து வைத்து அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையோ, அமைப்பையோ கூட ஒடுக்க முடியும். யாரும் எதற்கும் வாய் திறக்க கூடாது, போராடக்கூடாது, கேள்வி கேட்க கூடாது என்ற வகையிலான அடக்குமுறை (பாசிச அபாயம்) நெருங்குகிறது. இவையும் பாசிசத்தின் அடுத்த அடியாக உள்ளது. அரசின் இந்த சட்ட ரீதியிலான அடக்குமுறை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பிரிவு 20(3)ன் படி மனித உரிமைகளுக்கு எதிராகவே உள்ளது.
ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தன்னுடைய பாசிச அடக்குமுறையின்கீழ் அடிபணிய வைப்பது, அதிலும் குறிப்பாக சட்ட ரீதியிலான அடக்குமுறையின்கீழ் அடக்கி யாரையும் போராடவிடாமல் தடுத்து ஒட்டு மொத்த நாட்டு மக்கள்மீதும் பாசிச காட்டாட்சியை மோடி தலைமயிலான ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் நிகழ்த்துகிறது. இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக பெரும்பாலான மக்களை கொன்று குவித்து பாசிசத்தை அரங்கேற்றி ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்ததை வரலாற்றில் படித்திருப்போம். அதேபாணியில் அதைவிட கொடுரமான முறையில், அதைவிட நாலுக்கால் பாய்ச்சலில் பாசிசமயமாக்கும் வேலையை செய்து வருகிறது என்பதற்கான சான்றுதான் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022. மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் ஒட்டு மொத்த நாட்டையும் காவி – கார்ப்பரேட் பாசிசமயமாக மாற்றி மக்களை அடக்கி ஒடுக்கி இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றவும், ஒட்டுமொத்த மக்களின் உழைப்பை கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டும் வகையில் நாட்டை மாற்றியமைக்கும், வேலையை இரத்த வெறிப்பிடித்த ஓநாயாக இந்த காவி கும்பல்கள் செய்து வருகிறது.
படிக்க :
♦ திருமண வயது 21 மசோதா : பெண்களை மேலும் அடிமைப்படுத்தும் சதித் திட்டம் !
♦ ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !
நாடாளுமன்ற ஜனநாயகம் என்று இந்நாள் வரை பெயரளவில் பேசப்பட்டதை எல்லாம் ஒழித்துகட்டி அதனை பாசிசமாக்கும் வேலை அரங்கேறும் இந்த தருணத்தில், அந்த தேர்தல் ஜனநாயகத்தின் மூலமாகவே பாசிசத்தை வீழ்த்திவிடலாம் என நினைப்பதெல்லாம் வெறும் பகற்கனவு மட்டுமே. இதற்குமுன் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் விரோத சட்ட மசோதாக்களை நிறைவேற்றியபோது என்ன வேலையை செய்தார்களோ? அதேவேலை செய்து தங்களின் கடமையை முடித்துக் கொண்டனர். ஆனால், நாம் அவ்வாறு இருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. அப்படி இருப்பதால் நமக்கும் வாழ்வில்லை. எனவே காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் வகையிலான களப்போராட்டங்களை நடத்துவதே நமது பணி என்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஓவியா
இருளர் மக்களை பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யும் போலீசு!
“எங்கள எப்பதான் வாழவிடுவீங்க! கொத்து கொத்தா புடிச்சி போடுறீங்களே இருளர்கள… இது என்ன ஜனநாயக நாடு” – விழுப்புரத்தில் இருளர்கள்மீதான போலீசின் அடக்குமுறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில், இருளர் சமூக பெண் ஒருவர் தன்னுடைய வேதனையையும் இயலாமையையும் இவ்வாறு வெளிப்படுத்தினார்.
கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் சித்தலிங்கமடத்தைச் சேர்ந்த பாண்டியன், இராமச்சந்திரன் மற்றும் குமார் ஆகிய இருளர் சமூகத்தைச் சேர்ந்த மூவரை போலீசு கைதுசெய்தது. அம்மாவட்டத்தில் உள்ள சின்னவளவனூர் மாரியம்மன் கோவில் உட்பட 10 கோவில்களில் திருடினார்கள் என்பது வழக்கு.
படிக்க :
♦ ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
♦ வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !
இது இருளர் ஆண்களின்மீது போடப்பட்ட பொய்வழக்கு; எனவே கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் மக்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
000
தமிழகத்தில் கோவை, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடத்தில் வாழும் இருளர் மக்கள் மூன்றாண்டுகளுக்கு முன்புவரை ஆந்திர மாநிலம் சித்தூரில் கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவர்கள். இவர்களை, தனது தீவிர முயற்சியால் மரக்காணத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் மீட்டிருக்கிறார். இம்மக்களுக்கு சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதையும் அரசு செய்துகொடுக்கவில்லை.
தங்களது சாதி காரணமாகவும் வேறு வேலை கிடைக்காததாலும் தற்போதும் இவர்கள் சித்தலிங்கமடத்திற்கு அருகில் உள்ள செங்கல் சூளை ஒன்றில், கொத்தடிமைகள்போல்தான் வேலை பார்க்கின்றனர்.
கொத்தடிமைகளாக இருந்ததற்காக அரசாங்கத்தால் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இந்நிதியைப் பெறவேண்டுமானால் கொத்தடிமையாக வேலை செய்த அனைவரின் விவரங்களும் காண்பிக்கப்பட வேண்டும். இதற்காக வெளியூரிலுள்ள கணேசன் என்பவரையும் சந்தித்து சான்றிதழ்களைப் பெறவேண்டியிருந்தது. பாண்டியன், இராமச்சந்திரன், குமார் ஆகிய மூவரும் கணேசனை சந்திப்பதற்காக விழுப்புரம் – சென்னைக்கு இடையிலிருக்கும் கூட்டேரிப்பட்டு என்ற ஊருக்கு இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர்.
வழியில் சின்னவளவனூரில் பாண்டியனும் குமாரும் மது அருந்துகின்றனர். அப்பொழுதுதான் அவர்களைக் கைதுசெய்கிறது போலீசு. இருளர்கள் என்பதால் கேட்க நாதியற்றவர்கள் என்று அவர்கள்மீது கோயிலில் திருடிவிட்டதாக பொய்வழக்கு போட்டிருக்கிறது.
இம்மூவர் மட்டுமின்றி கார்த்தி, சங்கர், விஜி, செல்வம் ஆகியோரும் திருட்டில் ஈடுபட்டதாகவும் பிடிக்கும்போது தப்பி ஓடிவிட்டதாகவும் கதைகட்டியது போலீசு. சம்பவம் நடந்த நாள் இரவில் இந்த நான்கு பேரும் செங்கல் சூளையில்தான் வேலை செய்தனர் என்று அச்சூளையின் உரிமையாளர் கூறியிருக்கிறார். இதிலிருந்தே இவ்வழக்கு ஒரு பொய்வழக்கு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
“குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத வழக்குகளில், இருளர்கள்மீது பொய்வழக்கு போட்டு கைதுசெய்வதை ஒரு போக்காகவே வைத்திருக்கிறது போலீசு” என்று கூறுகிறார் இருளர் மக்களுக்காக சங்கம் நடத்திவரும் பேராசிரியர் கல்யாணி.

இரவு நேரத்தில் கைதுசெய்த போலீசு, அவர்களிடமிருந்த கைப்பேசியைப் பறித்துக் கொண்டது. மேலும் ஸ்டேஷனுக்கு கொண்டுசெல்லாமல் வேறு இடத்தில் வைத்து மூவரையும் இரவு முழுக்க காட்டுமிராண்டித்தனமாக அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. கைது பற்றி அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச சட்டவிதிமுறையைக்கூட போலீசு கடைபிடிக்கவில்லை. கைதானவர்களே தங்கள் கைப்பேசியின் மூலமாக தகவல் தெரிவித்த பிறகுதான் அவர்களது குடும்பத்தினருக்கே தெரிந்திருக்கிறது.
மேலும் இருளர் மக்கள் வீட்டை சோதனையிடச் சென்ற போலீசு கும்பல், விருதாம்பாள் என்பவரின் வீட்டிலிருந்து பாட்டுக்கேட்கின்ற ஸ்பீக்கர்களையும் இரண்டு இணை காதணிகளையும் திருடிச் சென்றிருக்கிறது.
000
இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் பேராசிரியர் கல்யாணி.
மேலும் 2012-ஆம் ஆண்டில் இருளர்கள்மீது புனையப்பட்ட பொய்வழக்கு ஒன்றைக் குறிப்பிடுகிறார் அவர். அப்போது கர்ப்பிணி உட்பட 4 இருளர் பெண்களைக் கடத்திச் சென்று அடித்துத் துன்புறுத்தியதோடு, பாலியல் வல்லுறவும் செய்திருக்கின்றனர் காக்கிப் பொறுக்கிகள்.
ஊழல் செய்யும் அமைச்சர்கள்-அதிகாரிகளை, மல்லையா போன்ற பெரும் பணக்காரர்களை, யுவராஜ் போன்ற சாதிவெறியர்களை கண்ணியமாக நடத்துகிற போலீசு, ஒடுக்கப்பட்ட மக்களை மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை.
ஒருசில போலீசார்கள்தான் இத்தகைய காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது. இது அரசுக்கட்டமைப்பின் அங்கம் முழுவதும் வர்க்க ஒடுக்குமுறையும் சாதிவெறியும் புரையோடியிருப்பதன் வெளிப்பாடே. ஏனெனில் இருளர்கள்மீது பொய்வழக்கு போட்டதற்காக இதுவரை எந்த அதிகாரியும் எந்த ஆட்சியிலும் தண்டிக்கப்பட்டதாக வரலாறில்லை.
இருளர்கள்மீது போடப்பட்ட பொய் வழக்குகளின் உண்மைத் தன்மையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வர்க்கமும் சாதியும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.
படிக்க :
♦ மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு || மக்கள் அதிகாரம் கண்டனம்
♦ இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
ஒடுக்கப்பட்ட மக்கள்மீதான போலீசின் காட்டுமிராண்டித்தனமும் கொட்டடிக் கொலைகளும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் தொடருகின்றன. மக்களுக்கு கட்டுப்படாத, மக்களை அடக்கி ஒடுக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இந்த போலீசுத்துறையையே கலைக்காமல் இதனை மாற்ற முடியாது.
ஜெய்பீம் படத்திற்குப்பின், தமிழக அரசு ஆங்காங்கே பழங்குடி மக்களுக்கு சில நலத்திட்டங்களை வழங்குவதைப் பார்த்து “ஆஹா எல்லாம் மாறிவிட்டது” என்று நினைப்பது தவறு. களத்தில் எந்த மாற்றமும் இன்றி அப்படியேதான் இருக்கிறது.
அத்திரைப்படம் ஓடியபோது, பழங்குடி மக்களைப் பற்றி விவாதித்த ஊடகங்கள் எதுவும் அம்மக்களது அன்றாடப் பிரச்சினைகளை செய்திகளாக்குவதில்லை. அப்படியே, அங்கொன்றும் இங்கொன்றும் செய்திகள் வந்தாலும் பல்வேறு பிரச்சினைகளோடு ஒன்றாக நாமும் அதைக் கடந்துசென்றுவிடுகிறோம்.
மூன்று மணிநேர படத்தைப் பார்த்துவிட்டு, கண்ணீர் சிந்தி முடித்துக்கொள்வதல்ல பிரச்சினை. கண்ணீர் சிந்துபவர்களுக்கு அற உணர்ச்சி இருக்குமாயின் அவர்களுக்காக நடைமுறையில் குரல் கொடுக்க வேண்டும்.
![]()
வாகைசூடி
NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !
அரும்பாடுபட்டு நிலத்தை திருத்தி நீர் பாய்ச்சி வேளாண்மை செய்து வைத்திருக்கும் உங்கள் விளைநிலத்தில், திடீரென ஒருநாள் தங்களை அரசாங்க அதிகாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வந்து, விளைந்து நிற்கும் பயிர்களுக்கு மத்தியில் சாலை அளவுகற்களை நட்டு வைத்து இந்த நிலத்தை நாங்கள் சாலை அமைக்க கையகப்படுத்துகிறோம் என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இது உங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படும் செயல்தானே. இதற்கு எதிராக போராடுவதை தவிர உங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? அது தான் தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நடந்திருக்கிறது. அவர்கள் தங்கள் விளைநிலங்களை காத்துக்கொள்ள போராடி வருகிறார்கள்.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டிருப்பது குறித்த ஒரு பத்திரிகை செய்தி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் தொடங்கி செங்கோட்டை வரையிலான 69 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைய உள்ளது.
அந்த பகுதி மக்களை எந்த வகையிலும் கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு திட்டத்தை அவர்கள்மீது அரசாங்கம் திணிக்கத் துணிந்திருக்கிறது. இதனால் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தால் முப்போகம் விளையும் விவசாய நிலங்கள் 1700 ஏக்கர், 3 லட்சம் தென்னைகள், 200 திறந்தவெளி கிணறுகள், 500 ஆழ்துளை கிணறுகள், 200 வீடுகள் பாதிக்கப்படும். மேலும், இந்த சாலை தென்காசி மாவட்டத்தில் நுழையும்போது, 7 கண்மாய்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட நீரோடைகள், ஆயிரக்கணக்கான வாழை, எலுமிச்சை, காட்டு மரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.
படிக்க :
♦ எட்டு வழிச்சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !
♦ கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
இந்த சாலை நேராக பயணிக்காமல் குறுக்கும் நெடுக்குமாக விளைநிலங்களில் பயணிப்பது போன்று ஏன் திட்டமிடப்பட்டிருக்கிறது? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏதோ உள்நோக்கத்துடன் இந்த சாலை போடப்பட உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர். தங்கள் விளைநிலங்கள் பாதிக்காதவாரு சாலைக்கான மாற்றுப் பாதையின் வரைபடத்தையும் அவர்கள் சமர்பத்தினர்.
ஆனால், அரசாங்கம் அவர்களின் விளைநிலங்களின் வழியாக சாலை போடுவதில் உறுதியான இருந்ததால், இறுதியாக தங்கள் நிலங்களை காத்துக்கொள்ளும் பொருட்டு சாதி மத பேதமின்றி
“NH 744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன்கீழ் போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். போராட்டங்களில் கலந்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் இந்த நிலங்களை மட்டுமே பிழைப்பாதாரமாக கொண்டவர்கள்.
இந்த சாலையால் தங்கள் விளைநிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து வாசுதேவநல்லூர் தொகுதியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மனோகரனை சந்தித்து முறையிட்டனர். அவர், “இது மத்திய அரசின் திட்டம் இதை எங்களால் எதிர்க்க முடியாது” என்று கூறிவிட்டார். அப்போதைய பாஜகவின் அடிமை அதிமுக ஆட்சியாளர்களால் அதற்குமேல் என்ன சொல்லிவிட முடியும்!! சாலை பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டிருக்கின்றனர்.
முதலில் அதிகாரத் திமிரோடு தர மறுத்திருக்கிறார்கள். பின்னர் வரைபடத்தை கொடுத்துள்ளார்கள். ஆனால், அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களுக்கு சாலை பயணிக்கும் வழித்தடம் முன்பே தெரிந்திருக்திறது. அதை பயன்படுத்தி சாலையின் வழித்தடத்தின் ஓரத்தில் இப்பொழுதே நிலங்கள் வாங்கி போட்டுவிட்டனர். சாலை வந்த பின்னர் அதை விற்று லாபம் பார்க்கவோ, சாலையோரத்தில் வணிக வளாகம் கட்டவோ இதை பயன்படுத்தி கொள்வார்கள் என்பது தெளிவு.
திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை செல்லும் பழைய பாதை பெரும்பாலும் பொது மக்கள் பயணிக்கவும் சுற்றுலா பயணிகள் பயணிக்கவும் பயன்படுவது. அதனால் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, குற்றாலம் போன்ற முக்கிய நகரங்களோடு அது இணைந்திருப்பது அத்தியாவசியமானது. ஆனால், இந்த பழைய சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்யவே போடப்படுவதாக சொல்லப்படும் இந்த புதிய சாலை ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி போன்ற முக்கிய நகரங்களை இணைக்காமல் செல்கிறது.

இந்த சாலை அமைவதில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவதை தவிர்ப்பதற்காகவே இந்த சாலை, புதிய சாலை இல்லை, பழைய சாலையின் விரிவாக்கம்தான் என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள் அதிகாரிகள். சிவகிரி முதல் உள்ளாறு வரை பயணிக்கும் இந்த NH 744 சாலைக்கும் நெல்லை வன உயிரின சரணாலயத்திற்கும் இடையே உள்ள தூரம் 6 கி.மீ எனவும், சாலை அமைப்பது தொடர்பாகவும் பாலம் கட்டுவது தொடர்பாகவும் எவ்விதமான அனுமதியும் வனத்துறையால் வழங்கப்படவில்லை எனவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வனத்துறை தெரிவித்துள்ளது. வன உயிரின சரணாலயத்திலிருந்து 10 கி.மீ சுற்றளவிற்குள் எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என விதிமுறை இருக்கும்போது இந்த சாலை வன உயிரின சரணாலயத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைக்கப்படுவது எப்படி? என்று 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர்.
“வழக்கமாக நான்கு வழிச்சாலைகளுக்காக 27 முதல் 30 மீட்டர்கள் அகலத்திற்குதான் இடம் கையகப்படுத்துவது வழக்கம். ஆனால், 8 வழிச்சாலைக்குரிய 60 முதல் 63 மீட்டர்கள் அகலம் வரை கையகப்படுத்துகிறார்கள். சில இடங்களில் 140 மீட்டர்கள் அகலம் வரை கையகப்படுத்துகிறார்கள். இதை மக்கள் விபரீதமாக உணர்கிறார்கள். அதாவது நான்கு வழிச்சாலை என்று சொல்லிவிட்டு எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுத்துள்ளார்கள் என்பதுதான் வேதனை” என்று நக்கீரன் பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.
தென்காசி மாவட்டத்தின் தலைநகரமான தென்காசியில் இருந்து திருநெல்வேலி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த NH-744 நான்கு வழிச்சாலை தென்காசி அருகில் கூட வரவில்லை. இதனால் அந்த நெல்லை முதல் தென்காசி நான்கு வழிச்சாலையையும் இந்த புதிய NH-744 சாலையையும் எப்படி இணைப்பீர்கள் என்று கேட்டால், அதற்கு தனி இணைப்புச் சாலை திட்டம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். எத்தனை கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் எதற்காக இப்படி விரயம் செய்யப்படுகிறது? எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப நோக்கத்திற்காகதான்.
முதலில் திமுகவை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தின் தலைவர் மாடசாமியே ஒரு திமுக பிரமுகர்தான். இந்த பாஜக அடிமை அதிமுக அரசு போய் திமுக ஆட்சி மலர்ந்தால் தமது நிலப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பினார்கள்.
அந்நிலையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, தொகுதி வேட்பாளர் தனுஷ் குமார் “NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம்” ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த நான்கு வழிச்சாலையை எதிர்ப்பதாக உறுதியளித்துள்ளார். இதனை நம்பி வடகரை, அச்சன்புதூர் ஆகிய பகுதிகளில் போராட்ட சங்கத்தினர் வீடுவீடாக சென்று தங்கள் நிலங்களை மீட்க திமுகவிற்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கனிமொழி அவர்கள் பேசுகையில், “இந்த நான்கு வழிச்சாலை தனியார்களுக்கும் முதலாளிகளுக்கும் சாதகமாக அமைக்கப்படுகிறது. வேண்டுமென்றே விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் தனியாருக்கு ஆதரவாக சாலை அமைக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். கமிஷன் வந்தால் போதுமென்ற நிலையில் அனைத்து துறைகளும் செயல்பட்டு வருகின்றன” என்றார்.
எல்லாம் தேர்தல் நாடகத்திற்காகதான்.
இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி குறித்த ஆட்சேபனை மனு அளித்தவர்களிடம் விளக்கம் கேட்க வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், 150-ற்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் ஆட்சேபனை மனு அளித்துள்ள நிலையில் வெறும் 57 பேரை மட்டும் விசாரணைக்கு அழைத்திருந்தனர். இதனை சுட்டிக்காட்டி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அதிகார வர்க்கம் எவ்வளவு கள்ளத்தனமாக நடந்துகொள்கிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டுதான் இது.
சட்டமன்ற ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, போராட்ட சங்கத் தலைவர் மாடசாமி அவர்கள் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்துப் சாலைப் பிரச்சினை தொடர்பாக மணு கொடுத்துள்ளனர். திருமங்கலம் முதல் கொல்லம் வரை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க நிலமெடுப்பு செய்வதற்கு இந்திட்டத்தினை மாற்றுப்பாதையில் செயல்படுத்த போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர் போராட்டக் குழுவினரின் இந்த கோரிக்கையை ஆராய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க உத்திரவிடப்பட்டிருந்தது.
இதனால் சாலை எப்படியும் மாற்றுப்பாதையில் சென்றுவிடும் என்று நம்பி விவசாயிகள் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக நினைத்து மகிழ்ந்திருந்திந்தனர். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.
அந்த உத்தரவின் படி, 30/10/21 மற்றும் 06/11/21 ஆகிய நாட்களில் இந்த குழு தனது கூட்டங்களை நடத்தியது. அதில் திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு வழிச்சாலை திட்டத்தின் சீரமைப்பு (Alignment) பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாதையில் அதாவது முப்போகம் விளையும் விளைநிலங்கள் வழியாகவே சாலையை கட்டமைப்பது என்றும்; மேலும் புதிதாக கொடிக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு இணைப்புச் சாலை அமைக்க தமிழக முதன்மை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு பரிந்துரைத்துள்ளது இந்த குழு.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழக முதன்மை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட பாதையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படவும் கொடிக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு இணைப்புச் சாலை அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
சில மாதங்கள் கழித்து, அமைச்சர் அமைத்த குழு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரையறுத்த பாதை வழியாக சாலை போட முடிவெடுத்து விட்டதாக தகவல் வந்தது. இது பற்றி விவசாயிகள் விசாரித்தபோது, குழுவில் இருந்த சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும் இரண்டு கூட்டங்களில் ஒன்றில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிய வருகிறது. ஏன் என்ற கேட்டால், “என்னை குழு கூட்டத்திற்கு போன் செய்து அழைத்தார்கள், நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்” என்று தெனாவெட்டாக பதில் சொல்லியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு “நான் உங்களில் ஒருவன் எனக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று கெஞ்சுவதும், தேர்தலில் வெற்றி பெற்று பதவியை பார்த்த பின்பு இப்படி தங்களை நம்பிய மக்களுக்கு பச்சையாக துரோகம் செய்வதும் அரசியல்வாதிகள் இயல்புதான். இதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எந்த வகையிலும் விதிவிலக்குகள் அல்ல.
மேலும் அமைச்சர் எ.வ. வேலுவிடம் இதுபற்றி விவசாயிகள் கேட்டபோது, அவர், “அன்று முதல்வர் சொன்னார், அதனால் கூட்டம் நடத்தினோம். ஆனால் இன்று முதல்வர் ஒன்றும் சொல்லவில்லை. இது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்டம். என்னிடம் இதுபற்றி கட்சிக்காரர்கள் இப்படி கேட்டு வரவேண்டாம்” என்று கூறியுள்ளார்.

















