பொறியியல் பாடத்தில் பகவத் கீதை என்ற பெயரில் வருணாசிரமத் திணிப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
தமிழகத்தின் தனித்த மரபுகள், சிந்தனை முறை, பண்பாடு ஆகியவை பார்ப்பனிய இந்துத்துவ சித்தாந்தத்தைப் பரப்பப் பெருந்தடையாக இருப்பதை நன்குணர்ந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிசக் கும்பல், தமிழக மக்கள் மீது தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை என்ற வரிசையில் பொறியியல் கல்வியில் பகவத்கீதை உபநிடதங்கள் போன்ற மிகக் கேடான பாடங்களை நுழைத்துள்ளது.
இளநிலை, முதுநிலை பொறியியல் பயில்வோர் அனைவரும் மானுடவியல் பாடங்களையும் கற்கவேண்டும் என்ற போர்வையில் தீண்டாமை உள்ளிட்ட நால்வருணக் கோட்பாட்டையும் பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் நியாயப்படுத்தும் பகவத் கீதையை மறைமுகமாகக் கட்டாயமாக்கியுள்ளது மோடி அரசு. தொல் அறிவியல் என்ற பெயரில் புராணக் குப்பைகளை பொறியியல் பாடத்தில் சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை முன்னரே அறிவித்து இருந்தது. கீதை உபநிடதங்கள் விருப்பப் பாடம்தான் என்று துணைவேந்தர் சூரப்பா அறிவித்து இருந்தாலும், இதற்கு மதிப்பெண் உண்டு என்பதன்மூலம் மறைமுகமாகக் கட்டாயமாக்கியுள்ளது.
பல்வேறு மத நம்பிக்கைகொண்டுள்ள மக்கள் வாழும் நாட்டில் முழுக்க அறிவியலை அடிப்பையாகக் கொண்டுள்ள பொறியியல் கல்வியில் இந்துமதக் கருத்துக்களைத் திணிப்பது அறிவியல் சிந்தனையை முடக்கி, மொத்த மாணவர் சமூகத்தையும் மதவெறி பாசிஸ சிந்தனை கொண்டவர்களாக மாற்றுவதும் அதன் மூலம் கார்பரேட் முதலாளிகளுக்கு மலிவான அடிமைகளை உருவாக்குவதுமே மோடி அரசின் நோக்கம். மேலும் சிறுபான்மை மக்களை அச்சத்தில் இருத்தி வைத்திருப்பது இன்னொரு நோக்கம்.
“அறிவே ஆற்றல்” என்ற தலைப்பில்தான் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் வேதங்களுக்கு விளக்கம் சொல்லும் உபநிடதங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து எந்த அறிவையும் பெற முடியாது. இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளரும் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவருமான டாக்டர் அம்பேத்கர், இந்தியாவின் ஒப்பற்ற பகுத்தறிவாளர் தந்தை பெரியார் ஆகிய இருவராலும் “முட்டாள்களின் உளரலென்றும், குடிகாரனின் பிதற்றலென்றும்” இகழ்ந்தொதுக்கப்பட்ட குப்பைதான் பகவத் கீதை.
உண்மையிலேயே பொறியியல் மாணவர்களுக்கு நல்ல நெறிகளைக் கற்பிக்க வேண்டுமென்றால் அதற்கு திருக்குறளையும் நாலடியார், இன்னாநாற்பது, இனியவை நாற்பது என்றவாறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையல்லவா கற்பிக்க வேண்டும்? தமிழ் அறநெறி நூல்களோடொப்பிடத்தக்க நூல்கள் ஏதேனும் வடமொழியில் உண்டா?
வட இந்தியர்களை மட்டுமின்றி நாட்டின் பல பகுதி மக்களுக்கும் இந்து மதவெறியூட்டி காட்டுமிராண்டிகளாக்கியதைப்போல, தமிழக மக்களையும் மாற்றத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல். இந்தியா முழுவதையும் தனது நிரந்தர மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வர மதவெறியை முக்கிய ஆயுதமாகக் கருதி இத்தகைய படுபிற்போக்குத்தனமான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது மோடி அரசு.
ஒருகாலத்தில் மற்றவர்களுக்குக் கல்வியை மறுத்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர்கள் இப்போது அது முடியாது என்பதால் மதவெறி, தேசவெறியைத் தூண்டி தனது ஆதிக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள வெறிகொண்டு அலைகின்றனர்.
தனது தோலைக் காப்பாற்றிக் கொள்ளவும் , தமிழகத்தைக் கொள்ளையிடவும் தமிழக நலன்கள், உரிமைகள் அனைத்தையும் அடகு வைக்கும் எடப்பாடி கும்பல் பார்ப்பன இந்துமத வெறி ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அடியாளாகச் செயல்படுகிறது.
இத்தகையதொரு ஆபத்தான சூழலில், கல்வியில் திணிக்கப்படும் இத்தகைய நச்சுத் திட்டத்தை தமிழக மக்கள், கல்வியாளர்கள், குறிப்பாக மாணவர்கள் உறுதியாக நின்று முறியடிக்க வேண்டும்.
மோடி அரசின் மக்கள் விரோத, அறிவியல் விரோத வேதக் கல்வியை பொறியியலில் திணிக்கும் திட்டத்தை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனே கைவிடும்படி வலியுறுத்துகிறது. தமிழக மக்கள் மீது மிகுந்த வன்மத்துடன் அடுத்தடுத்துத் தாக்குதல் தொடுக்கும் பா.ஜ.க திட்டத்தை முறியடிக்க அனைவரும் ஒரணியில் திரள அறைகூவி அழைக்கிறது.
தோழமையுடன் தோழர் காளியப்பன்
மாநிலப்பொருளாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் (FORUM AGAINST HINDUTVA FASCIST OFFENSIVE – FAHFO)
”செப்-22, 2019: கலாச்சார எதிர்ப்பியக்க நாளாகக் கொண்டாடுவோம்!”
செப்-22: காலை 10 மணி. ஐதராபாத்தில் உள்ள ‘சுந்தரய்யா விஞ்ஞான கேந்திரத்தின் அருகே உள்ள பூங்காவைச் சுற்றி பலவித தப்புக்கள்-முழவுகள்-மத்தளங்கள் முழங்கின. பெண்கள்-ஆண்கள்-சிறுவர்களின் ஆரவாரமான ஆட்டங்களுடன் ஊர்வலமாக வந்த புரட்சிகரக் கலைக் குழுக்கள் அரங்கை வந்தடைந்தன. இது அரசின் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான கலாச்சார எதிர்ப்பியக்க அரங்கம். சுமார் 800 பேருக்கு மேல் திரண்டிருந்த அரங்கில் – அரசின் பாசிச கிரிமினல் திட்டங்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுந்தன.
இந்துத்துவ மற்றும் ஏகாதிபத்தியப் பண்பாட்டு நஞ்சுக்கு மாற்றான பண்பாட்டு எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டி எழுப்பும் முன்முயற்சியோடு அமைக்கப்பட்டு ‘பாசிச’த்துக்கு எதிரான கலச்சார எதிர்ப்பு நாளாக அன்றைய நாள் மேடையிலிருந்து அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.
வரவேற்புரைக்குப்பிறகு அரங்கின் கரவொலியோடு – பிரஜாகலா மண்டலி, அருணோதயா, அருணோதயா பண்பாட்டுக் கூட்டமைப்பு, மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க. – PALA), RCF உள்ளிட்ட ஆறு புரட்சிக் கலைக்குழுக்களின் பிரதிநிதிகளும், தொடக்கச் சிறப்புரை வழங்கவிருக்கும் நிஷாந்த் நாடக மஞ்ச் இயக்குனரும், டெல்லிப் பேராசிரியருமான சம்சுல் இசுலாமும் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
இந்துத்துவச் சக்திகள் (ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.) திணிக்கும் ஒற்றைத்தன்மையான பண்பாட்டுக்கு எதிராகப் பல்வேறுபட்ட தேசிய இனங்களில் செழுமையான உழைக்கும் மக்கள் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் பண்மைக் கலாச்சாரத்தை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள FAHFO அரங்கம் – மத்திய அரசில் ‘சட்டவிரோத’ முறையில் அதிகாரக் குவிப்போடு தீவிரமாக இறங்கியுள்ள ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலை அம்பலப்படுத்தி எதிர்க்கும் விதத்தில் மக்கள் மத்தியில் எழுச்சியோடு இயங்கும் என்று கூட்டத்தலைவர் அறிவித்தார்.
தொடக்கச் சிறப்புரை வழங்கிய சம்சுல் இஸ்லாம் பாசிசம் கொலைவெறியோடு மக்களை அழித்த நாட்களை உலக வரலாற்று ரீதியிலும், அத்தகைய சக்திகளையும் ஏகாதிபத்தியங்களையும் வரவேற்றுக் குலாவிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கிரிமினல் வரலாற்றையும் இன்றைய கட்டம் வரை எடுத்துக்காட்டுகளோடு விவரித்தார். தலித் – முஸ்லீம்கள் – அனைத்துத் தரப்பு கொதிப்போடும் விவரித்தார்.
பாசிஸ்டுகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் தொடுத்த வீரமிகு போராட்டங்கள், அவற்றோடு அரணாய் நின்று பிரச்சாரம் செய்த மக்கள் பண்பாட்டுப் போராளிகள் பற்றியும், நெருக்கடி நேரத்திலும் துணிந்து எதிர்த்த ஜெர்மானிய நாடகக் கலைஞர் பெர்போல்ட் பிஃரெக்டின் வலிமை மிக்க கவிதை வரிகளையும் (”இருண்ட காலங்களில் பாடல் இசைக்க முடியுமா?… இருக்கும், இருண்ட காலங்கள் பற்றிய இசை இருக்கும் … அல்லது மௌனம் இருக்கும்”) ஜெர்மன் பாஸ்டர் நீமுல்லரின், கவிதை வரிகளையும் (”அவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினார்கள்….”) மேற்கோள் காட்டி ஆவேசம் மிக்க எழுச்சி உரையாற்றினார்.
1 of 3
FAHPO-வுக்கு ஆதரவாக நிற்கும் ம.க.இ.க. கலைக்குழுவின் ‘நெருங்குதடா’ பாடல் நிகழ்ச்சியின் முதல் பாடலாகத் தொடங்கியது. இன்றைய எதார்த்த நிலையை அப்படியே மக்கள் முன்வைத்து – ‘தருணமிது துணிந்து நில்லடா’ என்று எதிர்ப்புப் போராட்டத்துக்கும் அழைத்தது. அடுத்ததாக, RCF, மகாராட்டிரக் கலைக்குழுத் தோழர்கள் – செங்கொடியின் தலைமையை முன்வைத்து ஒரு பாடலை இசைத்தனர்.
1 of 5
அடுத்தடுத்து, ஆடல் பாடல்களோடும், நாடகங்களோடும் இரவுவரை நீண்ட நிகழ்ச்சிகளில் புரட்சிப் பாடல்கள் இசைக்கப்பட்டன. அருணோதயா கலைக்குழுவின் கருப்பு உடை இளைய தோழர்களின் அடக்குமுறைக்கு எதிரான காட்சிப் படிமங்களும், மோடி முகமூடியை அணிந்தவரைச் சுற்றிவந்து ஆடிய வண்ணமிகு சவால்/கேலி ஆட்டங்களும், மற்றொரு அருணோதயா கலைக்குழுவின் தோழர்கள் பாசிச எதிர்ப்பு ஜமுக்கல்கதா நிகழ்வை வைத்து பாரம்பரிய வடிவத்தில் புதிய உள்ளடக்கத்தை நிரப்பிய முயற்சிகளும், அருணோதயா விமலக்கா பெண்கள் குழுவினர் அனைத்துக் குழுக்களையும் இணைந்து நிகழ்த்திய ஆடல் நிகழ்வுகளும் தலித் மற்றும் இசுலாமிய மக்கள் இந்துத்துவச் சூலத்தால் கொல்லப்படுவதும்; மக்கள் உரிமைப் போராளிகள் – சாயிபாபா மற்றும் புரட்சி எழுத்தாளர், வழக்குரைஞர்கள் – சிறைப்பட்டிருப்பதையும் இணைத்துக் காட்சிப்படுத்திய நாடகமும், பெய்ஸ்-அகமது பெய்ஸின் கவிதைக்கு இசை அமைத்த பாடலும், இக்பால் பானுவின் குரலில் துணிச்சலாக இசைக்கப்பட்ட அந்த நாளைய மதவெறி எதிர்ப்புப் பாடலும், பால்ராப்சனின் OLD MAN RIVER REEPS ROLLING பாடலை – ஆங்கிலம், வங்காளி, அசாமி பாடல்களாக வடிவமைத்ததை வரிசையிட்டுப் பாடினார் அருணோதயா குழுவின் ஒற்றைப்பாடகர். அவை அற்புதப் படிமங்களாக புரட்சிகர சர்வதேச உணர்வைக் கிளர்த்தின.
1 of 6
நிகழ்ச்சியின் இறுதிப்பாடல்களாக, முத்தாய்ப்பாக அமைந்தவை ம.க.இ.க.-வின் ”ஹைட்ரோ கார்பன்” எதிர்ப்பு சூஃபி வடிவப்பாடலும், காஷ்மீர் மீதான அடக்குமுறை எதிர்ப்புப் பாடலும் ஆகும்.
பாசிசம் என்றும் வென்றதில்லை; பாட்டாளிச் செம்படை தோற்றதில்லை. அது எண்ணற்ற தியாகங்களை ஈந்து உலக மக்களைக் காத்து வந்ததே வரலாறு. ஐதராபாத் (FAHPO) அரங்க நிகழ்ச்சி வரப்போகும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன் அறிவிப்பதாக இருந்தது.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 03
பாடவேளையின் போது குழந்தையின் வாழ்க்கையைத் தொடரும் கோட்பாடு
குழந்தை தன் மனப்பதிவுகளை, இன்ப துன்பங்களைப் பள்ளிக்கு வெளியே வைத்து விட்டு, படிக்க வேண்டுமென்ற தூய எண்ணத்தோடு வர முடியாது. எனவே, தான் குழந்தைக்கு படிப்பு சொல்லித் தர ஆரம்பிக்கும் போது, அந்த நிமிடம் முதல் குழந்தை தன் இன்ப துன்பங்களை மறந்து விடுவான் என்றோ, பால்கனியிலோ கொட்டடியிலோ உள்ள சைக்கிளில் சவாரி செய்யும் கற்பனையை விட்டு விடுவான் என்றோ, நேற்று குடும்பத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியை நினைவிலிருந்து அகற்றியிருப்பான் என்றோ, பையில் உள்ள போர் வீரன் பொம்மையை விட்டு எண்ணத்தை அகற்றுவான் என்றோ, நேற்று தாத்தா சொன்ன சுவாரசியமான கதையை முற்றிலும் மறந்து விடுவான் என்றோ எந்த ஒரு ஆசிரியரும் ஒருபோதும் நினைக்க வேண்டாம். இவையெல்லாம் குழந்தையின் வாழ்க்கை.
சம்பவங்கள், மனப்பதிவுகள், இன்ப துன்பங்களைத் தற்காலிகமாக மறக்கலாம்; ஆனால் எல்லாவற்றையும் மறந்து விட்டு, வேறு எதையாவது ஒன்றை அறிவதில் முழுக்க முழுக்க ஈடுபடுவது என்பது எளிய காரியமல்ல. என் அன்பு சக ஆசிரியரே! குழந்தையின் கையிலிருந்து போர் வீரன் பொம்மையை ஏன் பிடுங்க வேண்டும்? அவன் அதை வைத்துக் கொண்டு பாடவேளையின் போது விளையாடக் கூடாது என்பதற்காகவா? அதன் அதிக கவனமுள்ளவனாகி, சிந்தனையை ஒருமுனைப்படுத்த வேண்டும் என்பதற்காகவா? இது நல்ல எண்ணம் தான் என்பதில் சந்தேகமில்லை, அந்தப் போர் வீரன் பொம்மையைக் குழந்தையிடமிருந்து பிடுங்குவதிலும் எவ்விதக் கஷ்டமும் இருக்காது, புருவத்தை உயர்த்தி, “அதை என்னிடம் தா” என்றோ, இதைப் போன்று வேறு எதையாவது சொன்னாலே போதும். ஆனால் அப்பொம்மையைப் பிடுங்குவதால் உண்டான ஏமாற்றத்தை, இதைப் பற்றிய கவலையை இதே போல் வெற்றிகரமாக அவன் தலையிலிருந்து வெளித்தள்ள முடியுமா! இதைப் பற்றி யோசிப்போம்!
ஒரு வேளை நாம் இப்படியெல்லாம் செய்திருக்க வேண்டாமோ? அந்தப் பொம்மை குழந்தையின் பையிலேயே இருக்கட்டும், அவன் கற்பனையில் சைக்கிள் சவாரி செய்யட்டும், நேற்று தாத்தா சொன்ன கதையைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கட்டும்! ஒவ்வொரு குழந்தையும் தன் முழு வாழ்க்கையோடு பள்ளிக்கு வரட்டும். அவர்கள் மனதில் உள்ளதை என்னுடன் – தங்கள் ஆசிரியருடன் – பகிர்ந்து கொள்ளுமாறு அவர்களிடம் நான் கேட்டுக் கொள்வேன்.
அப்போது, பாடவேளையின் போது (அது எந்தப் பாடமாக இருந்தாலும் சரி) இலிக்கோ நேரடியாகத் தன் பையிலிருந்து போர் வீரன் பொம்மையை எடுப்பான். நான் அவனைப் பெரிதும் சுவாரசியமாகப் பார்ப்பேன். “எவ்வளவு நன்றாக உள்ளது! உன்னிடம் இது மாதிரி ஒரு பொம்மைதான் உள்ளதா? வேறு இருக்கிறதா? வேண்டாம், அதை எனக்குப் பரிசளிக்காதே! உன்னிடமுள்ள போர் வீரன் பொம்மைகள் எல்லாவற்றையும் கொண்டு வா. இவற்றோடு விளையாடுவது சுவாரசியமாக இருக்கும்!” இலிக்கோவிற்குத் திருப்தியாக இருக்கும், நாளையே அவன் தன் போர் வீரன் பொம்மைகள் எல்லாவற்றையும் கொண்டு வருவான். நான் இதற்கேற்ற ஒரு கதையைக் கண்டுபிடித்து எல்லோருக்கும் சொல்வேன்.
கீகா, தன் அப்பா அலுவல் பயணத்திலிருந்து திரும்பியதாகச் சொல்லி என்னை சந்தோஷப்படுத்துவான். “அவர் எனக்கு ஏதோ பரிசு கொண்டு வந்தார், ஆனால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. அவர் களைத்துப் போயிருந்தார், பெட்டியைத் திறக்கவும் என்ன பரிசு என்று சொல்லவும் விரும்பவில்லை. ‘இது என் ரகசியம்’ என்றார் அப்பா. பள்ளியிலிருந்து திரும்பியதும் அப்பா என்ன கொண்டு வந்தாரென அறிவேன்.”
“பிறகு என்ன என்று சொல்வாயா? அது விளையாட்டு சாமானாக இருந்தால் எங்களுக்கு விளையாடத் தருவாயா?”
ஏல்லா, நேற்று இரவு தனக்குத் தங்கை பிறந்ததாக மகிழ்ச்சியோடு அறிவிப்பாள். அப்பா மிகவும் பதட்டமாயிருந்தார், எல்லோரும் மகப்பேறுமனைக்குச் சென்றதால் அவள் மட்டும் வீட்டில் தனியே இருந்தாளாம். அவள் தூங்கி விட்டதால் அவளுக்கு என்ன நடந்ததென்று தெரியாது. இன்று காலை அப்பா, “உனக்குத் தங்கை பிறந்திருக்கிறாள்” என்றார்.
“அவளுக்கு என்ன பெயர் வைத்திருக்கின்றீர்கள்?” என்று குழந்தைகள் கேட்பார்கள்.
“இன்னமும் யோசிக்கவில்லை.“
“ஏல்லாவின் தங்கைக்கு என்ன வாழ்த்து சொல்லலாம்?” என்று குழந்தைகளைக் கேட்பேன்.
“அவள் வளர்ந்து பெரியவளாகட்டும்!”
“அவள் அழகானவளாக, புத்திசாலியாக இருக்கட்டும்!”
“அன்பானவளாக, மென்மையானவளாக இருக்கட்டும்!”
“தன் பெற்றோர்களை நேசிக்கட்டும்!”
“தன் அக்காவையும் நேசிக்கட்டும்!”
“சொன்ன சொல்லைக் கேட்டு நடக்கட்டும்!”
“நன்றாகப் படிக்கட்டும்!”
“அவள் நம் வகுப்பில் படிக்கட்டும்!”
“ஏல்லா! உன் தங்கைக்கு எங்கள் நல் வாழ்த்துகளைச் சொல்!” என்று மகிழ்ச்சியாலும் திருப்தியாலும் முகம் சிவந்த சிறுமியிடம் கூறுவேன்.
ஏல்லா புன்முறுவல் செய்வாள்.
“அவளுக்குப் புரியாது, அவள் மிகச் சிறியவள்!…”
“நீ எல்லாவற்றையும் நினைவில் வைத்து, அவள் பெரியவளானதும், அவள் பிறந்த செய்தி இன்று நாம் அனைவருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியளித்தது என்று சொல்!”
சூரிக்கோ, தன் தாத்தாவிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதாயும் அவசர மருத்துவ உதவியைக் கூப்பிட்டதாயும் கூறுவான். வீட்டில் யாருமே இரவு பூராவும் உறங்கவில்லை. “கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகி விடும்” என்று தாத்தா எல்லோரையும் சமாதானப்படுத்தினார். தன் தாத்தாவை அவன் எப்படி நேசிக்கிறான் என்று சூரிக்கோ கூறுவான். “அவர் மிகச் சிறப்பாகக் கதை சொல்லுவார். வேண்டுமானால் சொல்லுங்கள், அவருக்கு உடல்நிலை சரியானதும் அவரைப் பள்ளிக்கு அழைத்து வருவேன், அவர் எல்லோருக்கும் கதை சொல்வார்.” இன்று காலை தாத்தா தன்னை முத்தமிட்டதையும், அம்மா மீண்டும் அவசர மருத்துவ உதவி கோரி டெலிபோன் செய்ததையும் சூரிக்கோ நினைவு கூர்வான். என் முகத்திலும், மற்ற குழந்தைகளின் முகங்களிலும் சோகம் படரும். அவர் விரைவில் உடல் நலம் பெற எங்கள் வாழ்த்துகளை அவருக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொள்வோம், பள்ளிக்கு வந்து எங்களுக்குக் கதை சொல்லுமாறு அழைப்பு விடுப்போம், நாங்களே தயாரித்த பட அட்டைகளை அவருக்குப் பரிசாக அளிப்போம்.
இந்தப் பாடங்களில் இல்லாமல், குழந்தைகளின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கையின் இந்த மூல ஊற்றுகளில் இல்லாமல் வேறெங்கே இரக்கம், மென்மை, கவனம், அனுதாபம், அன்பு, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை வளர்க்க முடியும்? இது இப்படியிருக்கும் பட்சத்தில் இந்த ஆசிரியரியல் இசையின் தாள நயங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் மேன்மேலும் வலிமையாக ஒலிக்கும், பாடங்கள் இவர்களது வாழ்க்கையின் உட்பொருளாகும்.
கேள்வி: //கீழடி அகழ்வாய்வுகள் காட்டுவது என்ன? கீழடி சான்றுகள் மூலம், ஆற்றங்கரையில் தங்கி வாழ்ந்த, விவசாயம் சார்ந்த சமூகமாக நகர நாகரீகம் கண்ட சமூகமாக வளர்ந்து உள்ளதை காட்டுகிறது.
மற்றும் அணிகலன்கள், விளையாட்டுப் பொருட்கள் (குறிப்பாக: பகடைக் காய்கள், தாயக்கட்டைகள்) கிடைத்தமையை வைத்து உற்பத்தி சார்ந்த உழைப்பில் இருந்து சிலர் விலகி வாழ்ந்தனர் என புரிந்து கொள்கிறேன்.
எனில், 2300-2600 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் வாழ்ந்த சமூகத்தின் உற்பத்தி முறை என்ன?
1) முற்றிய நிலையில் உள்ள புராதன பொதுவுடமை சமூக உற்பத்தியா? அங்கே அப்போது தாய்வழிச் சமூகம் தான் நீடித்ததா?
2) அடிமை உற்பத்தி முறையா? அல்லது வேறு ஏதாவதா?
மேலும்..
மத அடையாளங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்பது பற்றி ஒருபக்கம் மகிழ்ச்சி தான் என்ற போதிலும், இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் அதிலும், எழுதத் தெரிந்த, விளையாடத் தெரிந்த மனிதர்கள் முற்றிலுமாக அறிவியல் அறிவு பெற்று இருப்பார்கள் என நம்ப முடியவில்லை.
இதுவரை ஆய்ந்த இடங்கள் குடியிருப்புகள் மற்றும் தொழிற்கூடங்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள்.
எனில், மக்கள் கூடும் பொது இடங்களில் (மந்தை போன்று) கடவுள் வழிபாடு அல்லது மத அடையாளங்கள் கிடைக்கக் கூடும் எனவும் கருதுகிறேன்.
தொகுப்பாக நீங்கள் விளக்கினால், புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
நன்றி.//
– இரணியன்
அன்புள்ள இரணியன்,
கீழடியில் நடந்த நான்காம் கட்ட ஆய்வு குறித்த அறிக்கை தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டிருக்கிறது. கீழடி குறித்த ஆய்வு முழுமை பெற பதினைந்து ஆண்டுகள் தேவைப்படும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். இந்த ஆய்விற்கு மத்திய அரசு காட்டும் பாராமுகம் ஒருபுறமிருக்க தமிழக தொல்லியல் துறை அளித்த அறிக்கை தமிழகத்தின் ஏடறிந்த வரலாற்றுக் காலத்தை கி.மு ஆறாம் நூற்றாண்டிற்கு முன் தள்ளியிருக்கிறது. கீழடி ஆய்விடங்களில் ஆழ் இடுக்கில் எடுக்கப்படும் கார்பன் வகை மாதிரிகளின் ஆய்வு இந்தக் காலத்தை இன்னும் துல்லியமாகக் தரும்.
சங்க இலக்கியத்தின் படி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய திணை வகைகளின் மக்கள் வாழ்க்கையை அறிவோம். முதலில் மலையில் வேடவர் வாழ்க்கை, பின்பு காடு சார்ந்த இடங்களில் கால்நடை வளர்ப்போர் வாழ்க்கை, அதன் பிறகு நிலம் சார்ந்த வேளாண்மை வாழ்க்கை என்று பரிணாம வளர்ச்சியில் மனித சமூகம் சென்றதற்கு இத்திணை வகைகள் ஒரு சான்று. இருப்பினும் ஒரே நேரத்தில் இந்த நான்கு திணைகளிலும் மக்கள் வாழ்க்கை முன்னேறியதும் இருக்கிறது. அவர்களுக்கிடையில் பண்ட மாற்று நடந்ததையும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதனால்தான் சங்ககால இலக்கியங்கள் இந்நான்கு திணை வாழ்க்கை பற்றியும் எடுத்துக் கூறுகிறது.
கீழடி ஆய்வறிக்கையை வைத்துப் பார்த்தோமானால் அங்கே வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் வைகை நதிக்கரையில் இருந்திருப்பது தெளிவு. தொல்லியல் பொருட்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு நகர நாகரீகத்திற்கான அடிப்படைகளையும் கொண்டிருக்கிறது. எதிர்கால ஆய்வுகள் இதை துல்லியமாக உறுதிப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
சங்க காலத்தில் மூவேந்தர் அல்லாத சிற்றரசர்கள், இனக்குழுத் தலைவர்கள் குறித்த பாடல்களை சங்க கால இலக்கியம் கூறுகிறது. அதன்படி புராதான பொதுவுடைமை இனக்குழு சமுதாயம் வளர்ச்சி அடைந்து சமூகம் வர்க்கங்களாய் பிரிந்து குழுக்களுக்கு தலைவன் அல்லது அரசன் தோன்றும் காலமாக பார்க்கலாம்.
கீழடியில் அணிகலன்களும், தாயக்கட்டைகளும் கிடைத்திருப்பதால் அங்கே சிறு அளவிலான உபரி உற்பத்தி இருக்கவும், இனக்குழு வாழ்க்கை முதிர்ச்சியடைந்து அடுத்த கட்ட சமூக மாற்ற நகர்விற்கு மக்கள் செல்லும் காலமாகவும் பார்க்கலாம். சங்ககால இலக்கியங்களின் படி ஐந்திணைகளுக்கும் கடவுள் உண்டு. கீழடியில் கடவுள் குறியீடுகள் கிடைக்கவில்லை என்பதால் அம்மக்கள் ‘பகுத்தறிவுடன்’ வாழ்ந்தார்கள் என்பது அபத்தம். கண்டிப்பாக இயற்கை வழிபாடும், திணைக்கேற்ற கடவுளர்களும் இருப்பார்கள். குறிப்பாக அங்கே மூத்தார் வழிபாடு இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுகிறார். எனினும் கங்கைச் சமவெளியில் தோன்றிய பிற்கால வேத நாகரீகம் போன்று கடவுள், புராணம், மந்திரங்களை முதன்மைப்படுத்திய சனாதன தர்மம் போன்று இங்கில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
கீழடியின் காலத்தில் தாய்வழிச்சமூகம் முதிர்ச்சியடைந்து தந்தை வழிச் சமூகமாக மாறும் காலகட்டமாக இருக்கலாம். அணிகலன்கள், தாயக்கட்டைகளை வைத்துப் பார்க்கும் போது அங்கே சிறு அளவிலான உபரி உற்பத்தி இருப்பதையும், அதை வைத்து சமூகம் எளிய வர்க்கங்களாக பிரிவதையும் அவதானிக்கலாம். ஒரு நதிக்கரை நாகரீகத்தின் வளர்ச்சி அனைத்தையும் கீழடி தொல்லியல் ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. மேலும் வணிகம் சார்ந்த பொருட்களும் கீழடியில் கிடைத்திருக்கிறது. சமூகம் வர்க்கரீதியாக பிரிய ஆரம்பித்திருப்பதற்கு இதுவும் ஒரு சான்று. வணிக சமூகத்தில் வர்க்கரீதியாக தோன்றும் பிரச்சினைகளுக்கான நீதி உபதேசங்களையும் சங்க கால இலக்கியம் முன்வைக்கிறது.
எது எப்படி இருந்தாலும் பார்ப்பனியத்தின் வேதநாகரிகத்தை மறுத்து பண்டைய தமிழ் திராவிட நாகரிகம் முன்னோக்கிச் செல்வதை பாஜக அரசு ஒரு போதும் விரும்பாது. கீழடியில் இதற்கு மேல் ஆய்வுகள் நடத்தப்படுவதற்கே நாம் போராட வேண்டும்.
அதைக் கீழடியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு பணியிடமாற்றத்துக்கு ஆளான அமர்நாத் ராமகிருஷ்ணனின் வார்த்தைகளிலேயே புரிந்து கொள்வோம்.
கீழடி அகழ்வாய்வை இழுத்து மூட மோடி அரசால் இடமாற்றும் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாறுதல் பெற்ற சமயத்தில் நக்கீரன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :
“இதுவரை அகழாய்வு பணியில் உள்ள அதிகாரியை பணி நிறைவுபெறாமல் மாற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. வேண்டுமென்றே என்னை மாற்றியிருக்கிறார்கள். என் தலைமையில் இதுவரை கண்டுபிடித்த ஆவணங்களின் பட்டியலை அனுப்பியிருந்தேன். அப்போது மத்திய அரசிடம் இருந்து ஏன் சாமி சிலைகள் ஏதும் கண்டெடுக்கபடவில்லை என்ற கேட்டனர். அதற்கு நாம் சரியான பதிலை கொடுத்திருந்தோம் “திராவிட நாகரீகம் 2,500 வருடங்களுக்கு முன்னானது இப்போது உள்ள கடவுள் வணக்கம் அப்போது இல்லை. தமிழர்களிடம் முன்னோர்கள் வழிபாடு காணப்பட்டதால் தற்போதைய சாமி சிலைகள் இல்லை என்று பதில் அளித்திருந்தேன்” அதன் பின்பு இரண்டு நாட்களில் எனக்கு இடமாறுதல் தபால் வந்தது”.
தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது.
ஐராவதம் மகாதேவன் கவனம் செலுத்திய இன்னொரு துறை சிந்துவெளி எழுத்துகள் குறித்தனவாகும். சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட நாகரிகம் என நிறுவினார் ஐராவதம் மகாதேவன். “சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆனால், ஆரியர்களுடைய நாகரிகமோ கிராமப்புறத்தைச் சார்ந்த மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடைய நாகரிகமாகும். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள், முத்திரைகளில் பல்வேறுவிதமான விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிலும் குதிரையின் உருவம் காணப்படவில்லை. குதிரை என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது” என்று எடுத்துக்காட்டினார் ஐராவதம் மகாதேவன்.
திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் தலைமை வகித்துப் பேசிய வரலாற்று அறிஞர் ரொமிலாதாப்பர் கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்து – இந்தி – இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கேற்ப வரலாற்றைக் கட்டமைக்க விரும்பும் பார்ப்பன இந்து மதவெறிக்கும்பல், புராண கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் அறிவியல் பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை அனுமதிப்பார்களா?
அதனால்தான் இல்லாத சரஸ்வதி நதியை கண்டறிய பல கோடி, இராமாயண அருங்காட்சியகத்திற்கு ரூ.151 கோடி ஒதுக்கிவிட்டு, கீழடியில் கண்டறிந்த பொருட்களின் காலப் பகுப்பாய்விற்கு ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.
கார்பன்-14 பகுப்பாய்வுக்கு இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில் 28 பொருட்களையும், குஜராத்தின் தொலவிராவிலிருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியவர்கள், கீழடியில் கண்டறியப்பட்ட 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் குறைந்தது 10 மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மறுத்து, இரண்டிற்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது மத்திய தொல்லியல் துறை.
இந்தியாவில் நடந்துள்ள பல அகழாய்வுகள், பல ஆண்டுகள் பல கட்டங்களாக தொடர ஊக்குவித்த மத்திய அரசு, கீழடி அகழாய்வை இரண்டே ஆண்டுகளில் முடிவு கட்ட முயற்சித்தது. இதற்கெதிராக எழுந்த எதிர்ப்பால் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு அனுமதி என அறிவித்து விட்டு, கீழடி அகழாய்வில் முக்கியப் பங்கு வகித்த, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா தலைமையில் செயல்பட்ட குழுவை கூண்டோடு அசாமுக்கும், வேறு இடங்களுக்கும் தூக்கியடித்துவிட்டது. துணை கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள ஒருவரை இங்கு நியமித்துள்ளது. இந்த மாறுதல் வேண்டாம் என்கிற மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பரிந்துரையையும் குப்பையில் வீசிவிட்டனர்.
புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது அணியினரும் ஹரியானாவின் ராகிகரி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை 2015-ல் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தயக்கத்திற்குப் பிறகு இப்போது வெளியாகியிருக்கின்றன. இந்த முடிவை இந்துத்துவவாதிகள் எப்படி எதிர்கொள்வார்களோ என்பதுதான் தயக்கத்திற்குக் காரணம்.
ராகிகடியில் இந்த அணி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அந்த எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டில் உள்ள Petrous bone என்ற காதுகளைப் பாதுகாக்கும் பகுதியை பிரித்தெடுத்து, அதிலிருந்து அந்த எலும்புக்கூட்டின் மரபணு ஆராயப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கின்றன.
கேள்வி: ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள்தான் சமஸ்கிருத மொழியையும் வேதகால இந்து மதத்தையும் உருவாக்கினார்களா ?
பதில்: இல்லை.
கேள்வி: அவர்களது மரபணு, ஆரியர் – திராவிடர் என்ற பிரிவில் யாரோடு பொருந்துகிறது ?
பதில்: திராவிடர்கள்.
கேள்வி: தற்போதைய காலத்தில் இவை தென்னிந்தியர்களுடன் அதிகம் பொருந்துகின்றனவா, அல்லது வட இந்தியர்களுடனா?
பதில்: தென்னிந்தியர்கள்.
எல்லாமே மிகச் சிக்கலான கேள்விகள், பதில்கள். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் Science இதழில் பதிப்பிக்கப்படவிருக்கின்றன.
2015-லேயே ஆய்வு முடிந்துவிட்டது என்றாலும் விவகாரம் அரசியல் ரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது என்பதால் ஷிண்டே முடிவுகளைப் பதிப்பிக்கத் தயங்கினார். ஹரப்பா தொடர்பான எந்த ஆய்வு முடிவானாலும் தற்போதை மத்திய அரசின் இந்துத்துவக் கருத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, வேத காலமும் அப்போதைய இந்து மதமும்தான் இந்திய நாகரீகத்தின் துவக்கம் என்பதைத்தான் தற்போதைய அரசு வலியுறுத்த விரும்புகிறது.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தென்னிந்தியாவில் மட்டுமல்ல, சிந்து நதிக்கரையில் துவங்கி வைகை நதிக்கரை வரை பார்ப்பனியத்திற்கு முன்பான, அதற்கு மாற்றான ஒரு நாகரீகம் இருப்பது தெள்ளத் தெளிவு. இந்த ஒரே காரணத்திற்காகத்தான் கீழடி ஆய்வை மத்திய அரசு புறக்கணிக்கிறது.
எனவே கீழடியின் வரலாற்றை மீட்கும் போரை நாம் இந்துத்துவவாதிகளுடன் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நன்றி!
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் !
நாட்டுப் பிரிவினை என்பது நிகழ்ச்சி நிரலுக்கு வந்தபோது பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் தவிர, இங்கே ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றுள் காஷ்மீரும் ஒன்று. இந்த சமஸ்தானங்கள் எல்லாம் யாரோடு சேர்வது என்ற கேள்வி எழுந்தது. இதற்காக அன்று இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947 (India Independence Act 1947) என்ற சட்டம் பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்டது. அதில் முக்கியமாக இரண்டு விதிகள் இடம் பெற்றிருந்தன. ஒரு குறிப்பிட்ட சமஸ்தானத்து மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருந்தால், அது இந்தியாவின் பக்கம் என்றும் பெரும்பான்மையினர் முஸ்லீம்களாக இருந்தால், பாகிஸ்தான் பக்கம் என்றும் அந்த குறிப்பிட்ட நிலப்பரப்பு இந்தியாவை அல்லது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பொது வரையறைகள் வகுக்கப்பட்டன.
சில இடங்களில் மன்னர் முஸ்லீமாகவும் மக்கள் இந்துக்களாகவும் இருந்தனர்; உதாரணமாக ஹைதராபாத் நிஜாம். ஜுனாகத் சமஸ்தானம். திருவிதாங்கூரில் இந்து மன்னர், இந்து, முஸ்லீம்,- கிறிஸ்தவர் எனக் கலவையாக மக்கள் தொகையினர். காஷ்மீரை எடுத்துக்கொண்டால், அங்கு இந்து மன்னர், மக்கள் முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் பவுத்தர்கள்.
பிரிவினைக்கு வகுக்கப்பட்ட மேற்கூறிய பொது வரையறையின்படி பார்த்தோமானால், முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் பாகிஸ்தானோடு இணைந்திருக்க வேண்டும். ஆனால், 1947 ஆகஸ்டு 14, 15 தேதி வரை காஷ்மீரின் இந்து மன்னர் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளோடும் இணைய விரும்பவில்லை. ஸ்டாண்ட்ஸ்டில் அக்ரீமென்ட்” (Standstill Agreement) என்றொரு ஒப்பந்தத்தைத் தயாரித்துத் தற்போதைய தனது நிலையை அங்கீகரிக்குமாறு நேருவிடமும் ஜின்னாவிடமும் கோரினார். ஜின்னா அதில் கையெழுத்திட்டார். நேரு கையெழுத்திடவில்லை.
கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து காஷ்மீரை விலைக்கு வாங்கியவர்கள்தான் டோக்ரா என்றழைக்கப்படும் இந்து மன்னர் பரம்பரையினர். 1846 பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கை கிழக்கிந்திய கம்பெனி போரில் தோற்கடித்தது. ரஞ்சித் சிங்கின் கவர்னராக காஷ்மீரில் இருந்த குலாப் சிங், கிழக்கிந்திய கம்பெனியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு, அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 75 இலட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய தேசம்தான் காஷ்மீர்.
அந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான நிலப்பகுதி மன்னனுக்கும், பண்டிட்டுகள், டோக்ராக்கள் போன்ற ஆதிக்க சாதியினருக்குமே சொந்தமாயிருந்தது. ஆகப் பெரும்பான்மையான நிலமற்ற விவசாயிகள் இஸ்லாமியர்கள். அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டவர்கள். விவசாயிகள் விளைவித்த ஆப்பிள், குங்குமப்பூ முதல் கம்பளிகள், சால்வைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 85% வரை வரி வசூலிக்கப்பட்டது. காஷ்மீர் மன்னராட்சி விலைமாதர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களிடமும் வரி வசூலித்து, அரசாங்க விலைமாதர்கள் என்ற உரிமமும் வழங்கியிருக்கிறது. அரசுப் பதவிகளில் அமர்ந்திருந்த பண்டிட்டுகளும் பிற ஆதிக்க சாதியினரும் ஊழலிலும் உல்லாசத்திலும் ஊறித் திளைத்ததாகவும் அன்றைய ஆங்கிலேய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். (Dogra raj in Kashmir)
மன்னர் ஹரி சிங்.
இப்படி நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்களால் ஒடுக்கப்பட்ட, 90 விழுக்காட்டுக்கு மேல் முஸ்லீம் மக்கள் நிரம்பிய காஷ்மீர் பள்ளத்தாக்கு பாகிஸ்தானுடன் சென்றுவிடும் என்பதுதான் ஹரிசிங்கின் கருத்து. மன்னனால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பான பிரஜா பரிஷத் என்ற கட்சியின் எண்ணமும் அப்படித்தான் இருந்தது. எனவே, ஜம்முவை மட்டுமாவது தக்கவைத்துக் கொள்ளவே அவர்கள் விரும்பினர்.
ஆனால், ஜம்முவிலும் பெரும்பான்மையினர் (61%) முஸ்லீம்களாகவே இருந்தனர். எனவே, ஜம்முவை இந்துப் பெரும்பான்மையாகவோ அல்லது முஸ்லீம்களுக்குச் சமமான எண்ணிக்கை கொண்டதாகவோ மாற்றினாலொழிய, தமது எண்ணம் ஈடேறாது என்பதால் ஒரு சதித்திட்டத்தை அரங்கேற்றினர். 1948- மாணவராக இருந்தவரும் பின்னாளில் காஷ்மீர் டைம்ஸ் என்ற நாளேட்டை நிறுவியவருமான வேத் பாசின் இதனை விளக்கியிருக்கிறார். (The killing fields of Jammu: How Muslims become a minority in the region)
ஜம்முவில் இருந்து கணிசமான முஸ்லீம்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு மன்னரின் படைகளும் மன்னருக்கு உதவியாக வந்த பிற இந்து சமஸ்தானங்களின் படைகளும் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கு முன்னதாக மன்னரின் படையில் இருந்த முஸ்லீம் சிப்பாய்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன.
இவ்வாறு தாக்கி விரட்டப்பட்ட முஸ்லீம்கள் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படும் பகுதியை நோக்கி உயிர் தப்பி ஓடினர். உயிரைக் காப்பாற்றி விடுகிறோம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான லாரிகளில் முஸ்லீம் மக்களை ஏற்றி சியால்கோட் பகுதிக்கு கொண்டு சென்று, அங்கே பச்சைப் படுகொலை செய்தனர். இந்தப் படுகொலை நடந்த 5 நாட்களுக்குப் பின்னர்தான் பத்தான்கள் காஷ்மீர் மீது படையெடுக்கின்றனர். அடுத்த 4 நாட்களில் (26.10.1947) மன்னன் ஹரிசிங் இந்திய அரசுடன் இணைந்து கொள்கிறார்.
இந்தப் படுகொலை குறித்து அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேலுக்கு ஷேக் அப்துல்லா எழுதிய கடிதம் படேல் கடிதப் போக்குவரத்துகளின் முதல் தொகுதியில் வெளியாகியிருக்கின்றன. மன்னனின் முழு ஆதரவுடன், மன்னனின் படைகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இணைந்து இந்தப் படுகொலையை நடத்தின என்றும் இது குறித்து காந்திக்கும் நேருவுக்கும் தான் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
ஜவஹர்லால் நேரு.
வெளியிலிருந்து காஷ்மீரில் சென்று குடியேறிய இந்துக்களும், சீக்கியர்களும் முஸ்லீம்களைப் படுகொலை செய்தனர் என்றும் பெண்களை மானபங்கம் செய்தனர் என்றும் இவற்றுக்கெல்லாம் காஷ்மீர் மன்னன்தான் பொறுப்பு என்றும் 25.12.1947 அன்று காந்தி எழுதியிருக்கிறார் (தொகுதி ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை 2 இலட்சம் என்று இலண்டனின் ஸ்பெக்டேடர் பத்திரிகையும் 2,37,000 என்று இலண்டன் டைம்ஸ் நாளேடும் பதிவு செய்திருக்கின்றன. முஸ்லீம்களுக்கு எதிராக இப்படி ஒரு தாக்குதலை அந்த மன்னனே முன்னின்று நடத்தியதாக அன்று காந்தியும் பதிவு செய்திருக்கிறார்.
இத்தகையதொரு கொடிய இனப்படுகொலை நம்முடைய கண்களில் இருந்து முற்றிலுமாக மறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு படுகொலை நடந்த பிறகும் முஸ்லீம்கள் 90 சதவீதத்திற்கு மேல் வாழ்கின்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு பண்டிட்கூடக் கொலை செய்யப்படவில்லை என்று பதிவு செய்கிறார். இன்று காஷ்மீர் பண்டிட்டுக்களுக்காக நியாயம் கேட்கின்ற யோக்கியர்கள் இந்த இனப்படுகொலைக்குப் பதில் சொல்லவேண்டும்.
முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் படுகொலையைப் பயன்படுத்திக்கொண்டு காஷ்மீர் மக்களைத் தன் பக்கம் திருப்பி விட முடியும் என்று நம்பித்தான் அன்று பாகிஸ்தான் அரசு பழங்குடிப் படையை காஷ்மீருக்குள் அனுப்பியது. தனது படையை முஸ்லீம்கள் வரவேற்பார்கள் என்று எண்ணியது. ஆனால், அதன் எண்ணம் நிறைவேறவில்லை.
பண்டிட்டுகள் மற்றும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான ஒரு கலவரமாக இது மாறிவிடக்கூடாது என்ற காரணத்தினால்தான் ஷேக் அப்துல்லா, ஜம்முவில் நடந்த இந்த இனப்படுகொலையை காஷ்மீர் முஸ்லீம்கள் மத்தியில் அரசியல் ஆக்கவில்லை என்று அன்றைய காலகட்டத்தைப் பற்றி எழுதும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் முகம்மது அலி ஜின்னா.
பிறப்பால் முஸ்லீமான ஷேக் அப்துல்லா மட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த ஆகப் பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் ஏன் பாகிஸ்தானுடன் சேரவில்லை?
இன்று காஷ்மீரின் சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டதைக் கொண்டாடும் தேசபக்தர்கள் யோக்கியமாகவும் நாணயமாகவும் இதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காஷ்மீர் மக்கள் பின்பற்றிய சுஃபி இஸ்லாம் என்பது சன்னி இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து அடிப்படையிலேயே வேறுபட்டது. சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து பார்ப்பனிய சாதிக் கொடுமையின் காரணமாக மதம் மாறியவர்கள். எனவே, மதம் மாறிய இந்த இஸ்லாமியர்களுக்கும் மதம் மாறாமல் இந்து மதத்திலேயே நீடிக்கின்ற ஒடுக்கப்பட்ட சாதியினருக்குமிடையே அன்று முதல் இன்று வரை ஒரு தோழமையான உறவு நீடிக்கவே செய்கிறது. இந்த உறவின் வெளிப்பாடாகத்தான் நாகூர் முதல் அஜ்மீர் வரையிலான தர்ஹாக்களுக்குத்தான் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இந்துக்களும் இன்றுவரை செல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி முன்வைத்த காஷ்மீரி தேசியம் என்பது மதச்சார்பற்ற தேசியமாகும். எனவேதான், இஸ்லாமியக் குடியரசு என்று அறிவித்துக் கொண்ட பாகிஸ்தானை அக்காரணத்துக்காகவே ஷேக் அப்துல்லா நிராகரித்தார். மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய கொள்கைகளைப் பின்பற்றப் போவதாக இந்திய அரசு கூறியதால், இந்தியாவைத் தெரிவு செய்வதாக அவர் கூறினார்.
காஷ்மீர் முஸ்லீம்கள் சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் என்பது மட்டுமல்ல, காஷ்மீரி முஸ்லீம்களில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள் நிலமற்ற ஏழை விவசாயிகள், நெசவாளர்கள், உழைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்கள். டோக்ரா ஆட்சியில் முஸ்லீம் என்றாலே சூத்திரன், பஞ்சமன் என்று கருதும் நிலையிலேயே அவர்கள் ஆதிக்க சாதியினரால் நடத்தப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பழங்குடியினப் படை.
காஷ்மீர் மக்களின் தேசிய உணர்வுக்கு மன்னர் ஆட்சிக்கு எதிரான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புணர்வு உள்ளடக்கமாக இருந்தது. தேசிய மாநாட்டுக் கட்சியின் கொள்கை அறிக்கையில் இது பிரதிபலித்தது. உழுபவனுக்கு நிலம், பெண் கல்வி, பெண்களுக்குச் சமமான சொத்துரிமை, பெண்களுக்குச் சம வேலைவாய்ப்பு – சம ஊதியம், மதச்சார்பின்மை, கருத்துரிமை, ஆலைகள் அரசுடமை, கல்வி- ஓய்வு ஆகிய அடிப்படை உரிமைகள் எனத் தாங்கள் உருவாக்கவிருக்கும் அரசமைப்புச் சட்டம் பற்றி அந்தக் கொள்கை அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இந்தக் கொள்கைகளுக்கும் விழுமியங்களுக்கும் பாகிஸ்தான் பொருந்தி வராது என்ற காரணத்தினால்தான் பாகிஸ்தானை நிராகரித்தது தேசிய மாநாட்டுக் கட்சி.
இதன் காரணமாகத்தான் தேசிய மாநாட்டுக் கட்சியின் தொண்டர்களும், ஆயுதமேந்திய முஸ்லீம் பெண்களும் பாகிஸ்தானிலிருந்து ஆக்கிரமிக்க வந்த பழங்குடிப் படையை எதிர்த்துப் போராடி விரட்டியடித்தனர். இப்படி நம்பிக்கையோடு இந்தியாவுடன் இணைந்திருக்க விரும்பிய மக்களுக்கு இந்திய அரசு செய்த வஞ்சகம்தான் காஷ்மீரின் வரலாறு.
மேற்சொன்ன வரலாற்றுப் பின்புலத்திலிருந்து தான் சட்டப்பிரிவு 370, 35 ஆகியவற்றை நாம் பரிசீலிக்க வேண்டும். மேற்கூறிய சட்டப்பிரிவுகள் காஷ்மீருக்கு மட்டும் வழங்கப்பட்ட சலுகைகள் அல்ல. ஒரே நாடு ஒரே சட்டம் என்று அன்றைக்குப் பேசியிருந்தால், இந்தியா என்ற ஒரு நாட்டையே இரும்பு மனிதர் படேல் உருவாக்கியிருக்க முடி யாது. தனித்தனியாக பல மன்னர்களிடம் பேரம் பேசி சேர்க்கப்பட்டதுதான் இந்திய தேசம். ஆளும் வர்க்கங்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் பெரும்பான்மை மதத்துக்கும் சலுகை வழங்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டதுதான் இந்திய அரசியல் சட்டம்.
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் முகம்மது அப்துல்லா.
இன்று ஆசாதி என்று முழங்கும் காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் கைக்கூலிகள் என்று அவதூறு செய்கிறது பா.ஜ.க. ஆனால், 1947- இந்து சமஸ்தானமான திருவிதாங்கூரை இந்தியாவுடன் சேரவேண்டாம் என்றும் தனிநாடாகப் போகுமாறும் ஆலோசனை வழங்கியவர் ஆர்.எஸ்.எஸ்.-ன் குருநாதரான சாவர்க்கர். இந்தியாவில் சேராமல் தனிநாடாகப் போவதென்று முடிவு செய்தமைக்காக ஜின்னாவால் பாராட்டப்பட்டவர் திருவிதாங்கூர் திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யர்.
ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதை இன்று பா.ஜ.க. தேசபக்தர்கள் எதிர்க்கின்றனர். ஆனால், குஜராத்தில் இருந்த ஜுனாகத் சமஸ்தானத்தின் நவாப் இந்தியாவுடன் இணைய மறுத்த காரணத்தினால், அங்கே 20.2.1948 அன்று ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை மக்கள் இந்தியாவுடன் இணைவதற்கு வாக்களித்ததன் அடிப்படையில்தான் அது இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தனி நாடாகத் தேர்தல் நடத்தி முடித்து அரசமைப்புச் சட்ட முடியாட்சி என்று தன்னை அறிவித்துக் கொண்ட மணிப்பூர் அரசு 1948-ல் கட்டாயப்படுத்தி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
சிறப்புரிமை என்பது காஷ்மீருக்கு மட்டும் வழங்கப்பட்டதல்ல. 371 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திய அரசியல் சட்டம், வட கிழக்கிந்திய மாநிலங்களுக்குப் பல சிறப்புரிமைகளை அளிக்கிறது. அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்பு சட்டப்பிரிவு 370 (அன்று 306A) ஐ எதிர்த்து சியாமா பிரசாத் முகர்ஜியோ பா.ஜ.க. வின் மூதாதையர்களோ யாரும் வாக்களிக்கவில்லை. அதற்கு எதிராக வாக்களித்த ஒரே ஒரு நபர் மவுலானா ஹஸ்ரத் மொகானி. இவர்தான் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை வடித்தவர். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினர். சட்டப்பிரிவு 370- கீழ் சுயாட்சி உரிமை காஷ்மீருக்கு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இவர் தெரிவித்த ஆட்சேபம். (An Existential Crisis for Jammu & Kashmir and Danger to Indias Federal Structure)
1953 – ஜவஹர்லால் நேரு சிங் கூட்டணியால் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி ஜம்மு காஷ்மீரில் நடந்த போராட்டம்.
பிரிவு 370- கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் அனைத்தும் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு, அது காலிப் பெருங்காய டப்பாவாக்கப்பட்டுவிட்டது. 1953- ஷேக் அப்துல்லாவைக் கைது செய்ததில் தொடங்கிப் பல்வேறு விதமான அரசியல் சதிகள், ஊழல்படுத்தும் நடவடிக்கைகள், தேர்தல் தில்லுமுல்லுகள், நம்பிக்கைத் துரோகங்கள் ஆகியவற்றின் மூலம் டில்லி இதனைச் சாதித்தது. நாற்காலி அரசியலால் ஊழல்படுத்தப்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சியினர் உள்ளிட்ட காஷ்மீரின் அரசியல்வாதிகள் காஷ்மீர் மக்களிடையே மதிப்பிழந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக 1980- இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலிருந்தும் விடுதலை கோரும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற அமைப்பு தோன்றியது. மதச்சார்பின்மையை முன்வைத்த அந்த அமைப்பை இந்திய, பாக். அரசுகள் இரண்டுமே வெறுத்தன. இந்த அமைப்பை ஒழித்துப் போராட்டத்தை மதச்சார்புள்ளதாக மாற்றும் பொருட்டு இசுலாமிய மதவெறி தீவிரவாத அமைப்புகளை இந்திய உளவுத்துறையே ஊக்குவிக்க, இதனை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது. தீவிரவாத அமைப்புகளைப் பயிற்றுவித்து காஷ்மீருக்குள் அனுப்பத் தொடங்கியது.
1990 முதல் இன்று வரை இந்திய இராணுவத்தின் ஆட்சி என்பதுதான் நடைமுறையில் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் சிறப்புரிமை. பாகிஸ்தானைப் போல அல்லாமல், இந்தியா மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் பின்பற்றும் என்று நம்பித்தான் முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது. காஷ்மீர் மக்களின் முதுகில் குத்தியது காங்கிரசு. நெஞ்சில் குத்தியிருக்கிறார்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
சென்னையின் ரிச்சி தெரு தென்னிந்தியாவின் மினி சிங்கப்பூர். இங்கு கிடைக்காத உபகரணங்களே இல்லை. வாழ்க்கையின் கடைகோடி நடைபாதைவாசிகள் வாங்கக்கூடிய, 300 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கும் விலையுள்ள பழைய கைப்பேசி ஹெட்ஃபோன் முதல் சினிமா நடிகர்கள், நடிகைகளின் வீடுகளை அலங்கரிக்கும் 10 லட்சம் மதிப்புள்ள ஆடியோ சிஸ்டம் வரை கொட்டிக் கிடக்கும் அதிசயம்.
பழமையான ரேடியோ மார்கெட் எனப்படும் ரிச்சி தெரு. ஸ்பீக்கர் விற்கும் ஒவ்வொரு கடைக்கு முன்பும், பெட்டிகள் தயாரிக்கும் பணிகளும், பரபரப்பாக வண்டிகளில் பொருட்களை ஏற்றி இறக்குவதுமாக இருந்ததை இப்போது பார்க்க முடிவதில்லை.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன் ரேடியோ மார்கெட் என்ற பெயரால் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி ஏராளமான நாகரிக மாற்றங்களோடு, இன்று பல ஆயிரம் சிறு குறு வியாபாரிகளை – தினக் கூலிகளை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு வியாபாரம் ஆடியோ ஸ்பீக்கர் விற்பனை. ஊர்த்திருவிழாக்களில், கட்சிக் கூட்டங்களில் வைக்கப்படும் ஆளுயர ஸ்பீக்கர்கள் தெருக்களை அலங்கரித்துக் கொண்டிருந்தது ஒருகாலம். ஒவ்வொரு கடைக்கு முன்பும் ஸ்பீக்கரின் அளவிற்கேற்ப பெட்டிகள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். ஆனால், இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே கடைகளைப் பார்க்க முடிகிறது.
ஸ்பீக்கர் விற்கும் சிறு கடை வியாபாரி விக்னேஷ் என்ற இளைஞரைச் சந்தித்தோம்.
“பத்து ஆண்டு காலமாக தொழில் நடத்தி வருகிறேன். எங்க அப்பா நடத்திய கடை. தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று தென் மாநிலங்கள் முழுக்க எங்களுக்கு கஸ்டமர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் கடைகோடி கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி என்று பல நகரங்களுக்கும் வியாபாரம் செய்கிறோம்.
சிறு கடை வியாபாரி விக்னேஷ்
முழுக்க முழுக்க அவுட்டோர் பர்பசுக்கு மட்டுமே இந்த ஸ்பீக்கர்கள் பயன்படும். இந்து, முசுலீம், கிறித்தவர்கள் என்று பல மதத்தவர்களுக்கும் இந்த ஸ்பீக்கர் செட்டு இல்லாமல் விழா நிறையாது. அந்த விழாக்களுக்கு கலை என்றால் இது இருந்தால்தான். பல தேவைகளுக்கு எல்லா சைஸ்களிலும் ஸ்பீக்கர் செய்து கொடுப்போம். ஒரு இன்ச் ஸ்பீக்கரிலிருந்து 64 இன்ச் ஸ்பீக்கர் வரை உள்ளது. அந்த ஸ்பீக்கர் பொறுத்தப்படும் மரப்பெட்டி, ஒரு ஜான் உயரத்திலிருந்து ரெண்டாளு உயரம் வரை செய்வோம். ஆனால், இப்போது அதிகபட்சம் 1,500 வாட்சுக்கு மேல் ஸ்பீக்கர் இல்லை. அதற்கு தடை போட்டாங்க. இறைச்சல் மாசு, அபராதம் தவிர்க்க 18 இன்ச் ஸ்பீக்கர்தான் இப்போது கடைசி. வெறும் 12 இன்ச் ஸ்பீக்கர் நாலை இணைத்து சதுர வடிவில் மர பாக்ஸ் அடிக்கிறோம். அதுதான் இப்போ அதிகமாக ஓடுது. இதைப் போலவே 800, 1000 வாட்சுக்கும் தயாரிப்போம்.
சாலையோரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் பெட்டி.
இதில் 20-க்கும் மேற்பட்ட தரத்தில் பல பிராண்ட் ஸ்பீக்கர்கள் ரூ.3,000-லிருந்து 20ஆயிரம் வரை உள்ளது. சாமியானா பந்தல் வாடகைக்கு விடும் வியாபாரிகள் நடுத்தரமானதையும், கல்லூரி, பள்ளி, இந்து மற்றும் கிறித்துவ மத கலைநிகழ்ச்சிகளுக்கு சற்று தரமானதையும் வாங்குகிறார்கள். ஒருதடவை வாங்கி விட்டால் பல ஆண்டு எந்தச் செலவும் வைக்காது. கையாளும்போது ஏதாவது உடைந்தால் அதை சிறு ரிப்பேர் பார்த்தாலே சரியாகிவிடும்.
வாடிக்கையாளரின்றி கலையிழந்து இருக்கும் ஸ்பீக்கர் விற்கும் கடை.
வழக்கமான வாடிக்கையாளர்கள் ஃபோனிலேயே பேசி ஆர்டர் கொடுப்பார்கள். நாங்கள் பார்சலில் அனுப்பி வைப்போம், அவர்கள் செக்காக பணத்தை அனுப்பி விடுவார்கள். இப்போது பொதுக்கூட்டங்கள் பேச பல தடைகள் விதிப்பதால் முன்பு மாதிரி ஆர்டர் வருவதில்லை. தேவையும் குறைந்து போனது. அதனால் மார்கெட் டல்லடிக்கிறது.”
என்று பேசிக் கொண்டே ஃபோன் ரிங்டோன் ஒலித்தவுடன் அதை நோக்கி ஓடினார்.
“8 வருசமாக இந்த ஸ்பீக்கர் லோடு அடிக்கிறேன். ஒரு ட்ரிப்புக்கு கூலி 250 ரூபாய். முன்னெல்லாம் ஒரே கடைக்கு மூனு ட்ரிப் அடிப்பேன். இப்போ நாலு கடைக்காரங்க சேர்ந்து ட்ரிப் கூலி கொடுக்குறாங்க. வியாபாரம் இல்லேன்னு பல நாளு வேலைக்குக் கூப்பிட மாட்டேங்குறாங்க. பெரம்பூர், அயனாவரம், சூளை இப்படி 10 கி.மீ சரவுண்டிங்கில ஸ்பீக்கர் பெட்டி தயாரிக்கிறாங்க. அங்கேயும் 50 பட்டறைக்கு மேல் இருந்தது, இப்போ இருபதா கொறைஞ்சி போச்சு” என்று சொல்லிக்கொண்டே வண்டியைத் தள்ளிச் சென்றார்.
***
இதே ஸ்பீக்கர், ஆனால் விலையோ பல லட்சங்கள். சிங்கப்பூர், இத்தாலி, பிரான்சு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு பிராண்டுகள். போஸ், டெனான், டைனாடியோ, போல்க், ஹார்மன் காடன், ஜே.எல்.எக்ஸ், சோனாஸ், கிளிப்ஸ், மராண்ட்ஸ். இப்படி அதனுடைய ஆம்பிளிபயர் மட்டும் 1 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் வரை இருக்கு. ஊஃபர், சப் ஊஃபர், சரவுண்ட், ஃபிரண்ட், ஃபிரண்ட் வய்டு, ஃபிரண்ட் ஹைட், சென்டர், பேக், பேக் ஒய்டு, ஸ்கை (சீலிங்) இப்படி காற்று தவழும் எட்டுத் திக்கு மட்டுமல்ல, 80 கோணங்களிலும் இசை காதில் நிறைய வேண்டும்.
விலையுயர்ந்த ஸ்பீக்கர்கள்.
வீடியோ திரையில் விமானம் பறந்தால், தரைக்கு மேல் பறப்பது மாதிரி இருக்கும். கதாநாயகி நீர்வீழ்ச்சியில் குளித்தால், வீடியோ பார்ப்பவர்களின் முதுகு ஈரமாவது போல் உணர முடியும். இப்படி இசை சிலிர்ப்பு கிடைக்கும். சுமார் ஏழு லட்சம் வரை செலவு செய்தால், நீங்கள் உலகத் தரத்தில் இசை ரசிகராக உலாவ முடியும்.
விலை உயர்ந்த ஆடியோ பொருட்கள் விற்கும் கடை உரிமையாளரிடம் பேசினோம்.
விலையுயர்ந்த ஆடியோ பொருட்கள் விற்பனை செய்யும் டெசிபில் ஆடியோ கார்னர் கடை உரிமையாளர்
“முன்பெல்லாம் மாதத்திற்கு 3 முறை சிங்கப்பூர் சென்று பொருட்களை தேடித் தேடி வாங்கிவந்து விற்போம். இப்போது 2 மாதத்திற்கு ஒரு முறைகூட போகமுடிவதில்லை. எனக்கு இந்தத் தொழில் உயிர். நான் சிறு வயது முதல் இசைப் பிரியன். 10 ஆண்டு காலம் லண்டனில் வாழ்ந்தேன். எனக்கு எல்லா இசையும் அத்துப்படி.
கண்களைக் கவரும் மல்டி மீடியா ஸ்பீக்கர்.
இசை நுணுக்கம் தெரிந்தவர்கள், பணம் படைத்தவர்கள், விலையை பெரிதாகக் கருத மாட்டார்கள். பிராண்ட், ஒரிஜினல் – அதுதான் அவர்களுக்கு முக்கியம். செல்ஃபோன், வாட்ச், கார் மாதிரி இதையும் அடிக்கடி டாப் பிராண்டுகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்ளை தற்போது பார்க்க முடிவதில்லை. அந்த இசை ரசிகர்களுக்கு இப்போ என்ன ஆனதென்றே தெரியவில்லை. எல்லாம் இந்த டிமானிஸ்டேசன், ஜி.எஸ்.டியால் வந்த வினை.
1 of 3
ஆம்ப்ளிபயர்கள்.
இந்த வருடம் பல நாட்கள் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாமல் கடையைத் திறந்து மூடிக்கொண்டிருக்கிறேன். எதிர்காலம் எப்படி போகும் என்று புரியவில்லை. ஆனால், எல்லாம் சரியாகிவிடும், பார்ப்போம்” என்றார் விரக்தியாக.
“நீங்களோ இசை ரசிகர், தனிமையில வேற உட்கார்ந்திருக்கீங்க. காதுக்கு இனிமையா தரமான பாட்டு போட்டுக் கேட்கலாமே” என்றோம்.
“ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” என்று சிரித்தபடியே வழியனுப்பினார்.
காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !
”அரசியல் சாசனப் பிரிவு 370 பிரிவு ரத்தாவது, அதனுடன் இணைந்து அரசியல் சாசனத்தின் பிரிவு அம்மாநிலத்திற்குப் பொருந்துவதையும் ரத்து செய்கிறது. இதன் விளைவு, அம்மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாது போகிறது.”
அரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், செப்.6, 1952 அன்று ஜவஹர்லால் நேருவுக்கு அனுப்பிய குறிப்பிலிருந்து…
♦♦♦
ஜம்மு காஷ்மீருக்குத் தனிச் சிறப்புரிமைகள் வழங்குவதாகக் கூறப்படும் அரசியல் சாசனப் பிரிவு 370- செயலற்றதாக்கியதன் மூலம், ஜம்மு காஷ்மீருக்கென பெயரளவில் இருந்துவந்த தனிக் கொடி, தனி அரசியல் சாசனச் சட்டம், கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் ரத்தாகிவிட்டன. இனி, இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமின்றி, மைய அரசின் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இன்றியும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் இன்றியும் அம்மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துவிடும். அதேபொழுதில், இனி அங்கு அமையவுள்ள அரசுதான், தனது திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் மைய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். ஒரேயொரு அரசுத் தலைவர் ஆணை மூலம் நிலைமையைத் தலைகீழாக மாற்றிவிட்டது, மோடி அரசு.
இந்திய அரசியல் சாசனத்தில் கையெழுத்திடும் அரசியல் சாசன சபை உறுப்பினர்கள். (கோப்புப் படம்)
370-ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்குப் பெயரளவில் இருந்துவந்த சிறப்பு உரிமைகள் அனைத்தையும் அடியோடு ரத்து செய்ததற்குத் தீவிரவாதம், வளர்ச்சியின்மை என வாய்க்கு வந்த காரணங்களை அடுக்குவதோடு, அந்தப் பிரிவே தற்காலிகமானதுதான். அதனால் அவ்வுரிமைகளை ரத்து செய்தது சட்டப்படி சரிதான்” என வாதாடி வருகிறது, சங்கப் பரிவாரக் கும்பல். இப்பிரிவு அரசியல் சாசனத்தில் தற்காலிகமான, இடைக்காலத்துக்குரிய மற்றும் சிறப்பு வழிமுறைகள் (Temporary, Transitional and Special Provisions)” என்ற தலைப்பின் கீழ் வருவதைத் தமது வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள், சங்கப் பரிவார அறிவாளிகள். இந்த வாதம் பாபர் மசூதியின் கீழே ராமர் கோவில் இருந்ததாகக் கூறப்படுவதற்கு இணையான மாபெரும் பித்தலாட்டம், வரலாற்று மோசடி.
370- வரலாற்றுப் பின்னணி
இந்தியா பிரிவினை நடந்து, அவ்விரு நாடுகளும் சுதந்திரமான” தனித்தனி நாடுகளாக மாறிய 1947, ஆகஸ்டில், ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியின் கீழ் தனி நாடாக இருந்தது. அன்று காஷ்மீர் மக்கள் ஷேக் அப்துல்லாவின் தலைமையில் இருந்த ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சியின் கீழ் அணிதிரண்டு மன்னராட்சிக்கு எதிராகப் போராடி வந்ததோடு, மதச்சார்பற்ற, சுதந்திரமான காஷ்மீர் அமைவதைத்தான் விரும்பினார்களேயொழிய, இந்தியாவோடோ, பாகிஸ்தானோடோ இணைய விரும்பவில்லை.
இத்தகைய அரசியல் சூழ்நிலையில்தான், 1947 அக்டோபர் அன்று பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பழங்குடிகள் ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதல் தொடுத்து, வடக்குப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். அந்த ஆக்கிரமிப்பை முறியடிக்க வேண்டிய தேவையையொட்டி, ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் முடிவை மன்னர் ஹரி சிங் எடுத்தார். இம்முடிவுக்கு ஷேக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சியும் ஆதரவளித்தது.
1949 ஆண்டு சிறீநகரில் நடந்த ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் மாநாட்டில் ஷேக் அப்துல்லாவுடன் (இடது) ஜவஹர்லால் நேரு. (கோப்புப் படம்)
ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தாலும், மற்ற மன்னராட்சிப் பகுதிகள் இந்தியாவுடன் இணைந்ததைப் போல இந்த இணைப்பு நடக்கவில்லை. பாதுகாப்பு, தொலைதொடர்பு, வெளியுறவு ஆகிய மூன்று துறைகளில் மட்டுமே இந்திய அரசிற்கு அதிகாரம் உண்டு; மற்ற அனைத்துத் துறைகளும் ஜம்மு காஷ்மீர் அரசியல் சாசனச் சட்டம் 1939-ன் படி ஜம்மு காஷ்மீரை ஆள்பவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில்தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இந்திய அரசும் இந்நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுதான் இணைப்பு ஒப்பந்தத்தில் (Instrument of Accession) கையெழுத்திட்டது.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்த அதேசமயத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்திய அரசுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தன. அச்சமயத்தில் ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அமைப்போ, அரசியல் நிர்ணய சபையோ இல்லை. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் இருந்தது. ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் குறித்த பொது வாக்கெடுப்பை இனிதான் நடத்த வேண்டி யிருந்தது. இத்தகைய நிலையில் அதிகாரப் பகிர்வு குறித்து நிரந்தரமான ஒப்பந்தத்தை உருவாக்கும் சாத்தியமில்லை. எனவே, இடைக்கால ஏற்பாடு குறித்து இந்திய அரசின் சார்பில் நேருவும் படேலும்; ஜம்மு காஷ்மீரின் சார்பில் ஷேக் அப்துல்லாவும் மிர்ஸா அப்சல் பேக்கும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில்தான் 370- உருவாக்கப்பட்டு (அப்பொழுது அப்பிரிவு 306 என அழைக்கப்பட்டது) இந்திய அரசியல் சாசனத்தில் அக்.17, 1949 அன்று சேர்க்கப்பட்டது.
இந்த இடைக்கால ஏற்பாடான 370 பிரிவு, ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்படும் வரை அதிகாரப் பகிர்வு குறித்து இந்திய அரசுத் தலைவருக்குச் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தற்காலிகமான அதிகாரங்களை வழங்கியது. இதன்படி, ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அரசிடம் கையளிக்கப்பட்ட பாதுகாப்பு, வெளியுறவு, தொலைதொடர்பு ஆகியவை தொடர்பான சட்டங்களை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு முன்பாக, அரசுத் தலைவர் ஜம்மு காஷ்மீர் அரசிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இம்மூன்று துறைகளுக்கு அப்பால் உள்ள விடயங்கள் தொடர்பான சட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்படும் வரை ஜம்மு காஷ்மீர் அரசு இந்த ஒப்புதலை வழங்கலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் அரசு அளிக்கும் ஒப்புதல்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை அங்கீகாரம் அளித்தால் மட்டுமே அவை செல்லுபடியாகும்.
இந்த இடைக்கால ஏற்பாடான 370 செயலற்றதாக்கவோ அல்லது மாற்றங்களோடு தொடரவோ இந்திய அரசுத் தலைவர் உத்தரவிடலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 370 ரத்து செய்வது குறித்தோ, மாற்றங்களோடு தொடருவது குறித்தோ இந்திய அரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தால் மட்டுமே அவர் அவ்வாறு உத்தரவிட முடியும். இதன் பொருள், ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை இல்லாமல் இந்திய அரசுத் தலைவர் 370 ரத்து செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, அப்பிரிவில் மாற்றங்களைக்கூடச் செய்ய முடியாது என்பதாகும்.
காங்கிரசின் துரோகங்கள்
ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபைக்கான அறிவிப்பு 1951- ஆண்டு மே தினத்தன்று வெளியிடப்பட்டு, அவ்வாண்டிலேயே அச்சபையின் 75 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெற்றன. இத்தேர்தலில் ஷேக் அப்துல்லா தலைமையில் இயங்கிவந்த ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சி 75 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீர் அரசியல் சாசன சபை உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திடும் ஷேக் அப்துல்லா. (கோப்புப் படம்)
ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 31.10.1951 தொடங்கி 26.01.1957 வரை செயல்பட்டு, 27.01.1957 அன்று சட்டபூர்வமாகக் கலைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அச்சபை ஜம்மு காஷ்மீருக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கியது, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் இணைந்ததை உறுதி செய்தது என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, இதேகாலக்கட்டத்தில், நேருவின் தலைமையில் இருந்த இந்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மீது தனது அதிகாரத்தை விரிவாக்கும் நோக்கில் பல சதிகளையும் அரங்கேற்றியது.
ஜம்மு காஷ்மீரின் பிரதம மந்திரியாக இருந்த ஷேக் அப்துல்லா, 1953 ஆகஸ்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு புனையப்பட்டது. அப்பொழுது ஜம்மு காஷ்மீரின் அரசுத் தலைவராக இருந்த கரண் சிங் (மன்னர் ஹரி சிங்கின் மகன்) இந்திய அரசின் ஏஜெண்டாக இருந்து அப்துல்லாவைக் கைது செய்ததோடு, அவரது அமைச்சரவையையும் கலைத்தார். இதன் பின் பக்ஷி குலாம் முகம்மது என்ற கைக்கூலி காஷ்மீரின் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டு, புதிய அரசும் அமைக்கப்பட்டது.
இதேசமயத்தில், 1950, 1952 மற்றும் 1954 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசின் அதிகாரத்தை விரிவாக்கும் அரசுத் தலைவரின் ஆணைகள் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்டன. இவற்றுள் 1954 ஆணை முந்தைய இரண்டு ஆணைகளையும் நீக்கியதோடு, காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த மூன்று துறைகளுக்கு அப்பாலும் சென்று, மைய அரசுப் பட்டியலில் உள்ள இனங்களுள் பெரும்பாலானவை ஜம்மு காஷ்மீருக்குச் செல்லுபடியாகும் என்ற நிலையை உருவாக்கியது.
306 ஏ அவசியம் குறித்து இந்திய அரசியல் சாசன சபையில் உரையாற்றிய காஷ்மீர் அரசின் திவான் கோபாலசுவாமி அய்யங்கார். (கோப்புப் படம்)
ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 1954 பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு இணைந்ததை அங்கீகரித்ததோடு, ஷேக் அப்துல்லாவிற்கும் நேருவிற்கும் இடையே கையெழுத்தாகியிருந்த டெல்லி ஒப்பந்தத்தையும் ஏற்றுக் கொண்டது. இந்த டெல்லி ஒப்பந்தம்தான் மைய அரசு தனது அதிகாரத்தை விரிவாக்கும் வண்ணம் வெளியிட்ட 1954 அரசாணைக்கு அடிப்படையாக அமைந்தது. அதேசமயம், ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புரிமைகள் வழங்கக்கூடிய அரசியல் சாசனப் பிரிவு 306 (தற்பொழுது 370), மாற்றங்களோடு தொடருவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து இந்திய அரசிற்கு எந்தவொரு பரிந்துரையும் செய்யாமலேயே ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை ஜனவரி 27, 1957- கலைக்கப்பட்டது.
370 மற்றும் அதன் உட்கூறுகளின்படி, ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கூட்டப்படும் வரைதான், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசு இயற்றும் சட்டங்கள் மற்றும் ஆணைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு உண்டு. அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்ட பின் அந்த அதிகாரத்தை ஜம்மு காஷ்மீர் அரசு இழந்துவிடுகிறது. மேலும், அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசு இயற்றிய சட்டங்கள் மற்றும் வெளியிட்ட ஆணைகளுக்கு அங்கீகாரம் வழங்கிக் கலைக்கப்பட்ட பிறகு, இந்திய அரசிற்கு அல்லது நாடாளுமன்றத்திற்கு அதன் பிறகு புதிதாக எந்தவொரு சட்டமோ, ஆணையோ வெளியிடும் அதிகாரமும் கிடையாது. அதாவது, ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கூடி, ஜம்மு காஷ்மீருக்கும் இந்திய அரசிற்கும் இடையேயான அதிகாரப் பகிர்வை முடிவு எடுத்துக் கலைந்த பிறகு, இந்திய அரசிற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அதிகாரம் தானாகவே ரத்தாகிவிடுகிறது.
மேலும், 370- பிரிவை மாற்றங்களோடு தொடர்வது தொடர்பாகவோ அல்லது ரத்து செய்வது தொடர்பாகவோ அரசியல் நிர்ணய சபை இந்திய அரசுத் தலைவருக்கு எந்தவொரு பரிந்துரையையும் அளிக்காமல் கலைந்து போனதால், அப்பிரிவை நீக்கும் அதிகாரம் மட்டுமல்ல, அதில் எந்தவொரு சிறு மாற்றத்தையும் செய்யும் அதிகாரமும் அரசுத் தலைவருக்குக் கிடையாது. இவ்வாறாக, அரசியல் சாசனப் பிரிவு 370 இந்திய அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யமுடியாத நிரந்தர உறுப்பாகிவிடுகிறது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது இந்தியாவின் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த வல்லபாய் படேல். (கோப்புப் படம்)
இந்திய அரசியல் சாசனத்தின் நிலை இவ்வாறிருக்க, பா.ஜ.க. அரசிற்கு முன்பிருந்த காங்கிரசு அரசுகள், அம்மாநிலத்தை ஆண்ட தமது கூட்டாளிகளைப் பயன்படுத்திக்கொண்டு, அம்மாநில அரசின் ஒப்புதலைப் பெற்று, ஜம்மு காஷ்மீர் மீது இந்திய அரசின் அதிகாரத்தை மென்மேலும் விரிவுபடுத்தின. இந்த விரிவாக்கத்திற்கு 1954- வெளியிடப்பட்ட அரசாணையை அடிப்படையாக இந்திய அரசு பயன்படுத்திக் கொண்டது எனக் கூறும் அரசியல் சாசனச் சட்ட வல்லுநர் ஏ.ஜி.நூரானி, 1954 1996- இடைப்பட்ட ஆண்டுகளில் 1954 அரசாணையில் 44 திருத்தங்களை இந்திய அரசு மேற்கொண்டதாகச் சுட்டிக் காட்டுகிறார்.
ஆகஸ்டு 5- முன்பாகவே, இந்திய அரசியல் சாசனத்தில் அடங்கியிருக்கும் 395 பிரிவுகளுள் 260 பிரிவுகளும், மைய அரசின் பட்டியலில் உள்ள 97 இனங்களில் 94 இனங்களும் ஜம்மு காஷ்மீரிலும் செல்லுபடியாகும்படி இந்திய அரசின் அதிகாரம் விரிவாக்கப்பட்டுவிட்டது. அதாவது, ஆகஸ்டு 5- முன்பாகவே 370- பிரிவு செத்த பாம்பாகிவிட்டது என்பதே உண்மை. அந்தச் செத்த பாம்பை அடித்த வீரர்கள்தான் மோடி ஷா கும்பல். அந்தச் செத்த பாம்பைக்கூடச் சட்டப்படி எதிர்கொள்ள முடியாமல், பார்ப்பனக் கும்பலுக்கே உரிய நரித்தனங்கள் மற்றும் கிரிமனல்தனமான வழியில் செயலற்றதாக்கி, அம்மாநிலத்தை இரண்டாக உடைத்து, ஆட்சிக் கவிழ்ப்புக்கு இணையான தாக்குதலை அம்மக்களின் மீது நடத்தியிருக்கிறது.
மோடி – ஷா கும்பலின் ஆட்சிக் கவிழ்ப்பு (coup)
ஒரு நாடு மற்றொரு நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தால், அந்நாட்டை காலனிய எஜமானர்கள் என்போம். ஜம்மு காஷ்மீரின் பெயரளவிலான சிறப்புரிமைகளைப் பறித்தும், மாநிலத் தகுதியை நீக்கி அதிகாரமற்ற யூனியன் பிரதேசமாக மாற்றியிருப்பதன் மூலமும் ஜம்மு காஷ்மீரை டெல்லியின் காலனியாக மாற்றிவிட்டது, மோடி ஷா கும்பல். இதற்கு அரசியல் சாசனப் பிரிவுகள் 3, 370 மற்றும் 367 ஆகியவற்றைக் கேடாகவும், கிரிமினல்தனமாகவும், அப்பிரிவுகளின் உட்கிடக்கைக்கு எதிராகவும் பயன்படுத்தியிருக்கிறது, மோடி அரசு.
பிரிவு 370 செயலற்றதாக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா. பின்புலத்தில் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த ஆகஸ்டு அன்று மோடி அரசு நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புரிமைகளை வழங்கும் 370 செயலற்றதாக்கக் கோரும் தீர்மானத்தையும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரும் மசோதாவையும் முன்மொழிந்தது. இதனையடுத்து, இந்திய அரசியல் சாசனம் முழுமையும் எவ்வித மாறுதலும் இன்றி ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும் என்ற அரசாணையை 370(1) பிரிவின் கீழ் வெளியிட்டார், ராம்நாத் கோவிந்த். மேலும், இவ்வாணை 1954 அரசாணையை நீக்குவதாகவும் (Supersede) அறிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் தொடர்பான ஆணைகளை வெளியிட அரசுத் தலைவருக்கு 370(1) அதிகாரம் அளித்தாலும், அவ்வாணை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் அரசோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் கூறுகிறது. மேலும், 370 பிரிவின் கூறு 3, ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை பரிந்துரைக்காமல் இந்திய அரசுத் தலைவர் தன்னிச்சையாக 370- பிரிவில் மாற்றங்களைச் செய்யவோ, அதனைச் செயலற்றதாக்கவோ ஆக்க முடியாது எனக் குறிப்பிடுகிறது. 370 பிரிவு இந்திய அரசுத் தலைவருக்குச் சட்டப்படி விதித்திருக்கும் இந்த வரம்புகளை மீறுவதற்கு பிரிவு 367- கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது, மோடி அரசு.
இந்த 367 பிரிவு அரசியல் சாசனத்தின் கூறுகளுக்கு வியாக்கியானம் அளிக்கும் கூறாகும். அரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட ஆணை 367- பிரிவில் புதிய உட்கூறு ஒன்றைச் சேர்க்கிறது. இப்புதிய உட்பிரிவு, 370- பிரிவில் ஜம்மு காஷ்மீரின் பிரதம அமைச்சர் (Sadar-i- மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு என வரும் இடங்களிலெல்லாம் ஆளுநர் என்றும் ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை என வரும் இடங்களிலெல்லாம் ஜம்மு காஷ்மீர் மாநிலச் சட்டமன்றம் என்றும் பொருள் கொள்ளவேண்டுமென புதிய விளக்கத்தை அளித்தது.
காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக். (கோப்புப் படம்)
ஜம்மு காஷ்மீர் மாநிலச் சட்டமன்றம் ஓராண்டுக்கு முன்பாகவே கலைக்கப்பட்டுவிட்டது. தற்பொழுது அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சிதான் நடந்துவருவதால், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர்தான், குடியரசுத் தலைவரின் சார்பாக அம்மாநிலத்தை ஆண்டு வருகிறார். அரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தன்னால் ஆளுநராக நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக்கோடு ஆலோசனை நடத்தி, இந்திய அரசியல் சாசனத்தின் அனைத்துக் கூறுகளும் எவ்வித மாற்றமும் இன்றி அம்மாநிலத்திற்கு இனிப் பொருந்தும் என உத்தரவிடுகிறார்.
ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும், சட்டமன்றமும் கலைக்கப்பட்டுவிட்டதால், அவை செய்யவேண்டிய பணிகளுக்கு இப்பொழுது நாடாளுமன்றம்தான் பொறுப்பு. நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, 370- செயலற்றதாக்கும்படி தீர்மானமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, உடனடியாக அரசுத் தலைவரை ஆணை வெளியிடச் செய்துவிட்டது, மோடி அரசு. மேலும், அம்மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் மசோதாவையும் நிறைவேற்றிவிட்டது.
இவை அனைத்துமே ஏதோ சட்டப்படி நடந்தவை போலத் தெரிந்தாலும், உண்மையில் இது அரசியல் சாசனச் சட்டத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் மோசடிகளாகும். அரசியல் சாசனப் பிரிவு 367 கொண்டு தெளிவற்ற கூறுகளுக்கோ சொற்களுக்கோதான் விளக்கம் அளிக்க முடியும். ஆனால், 370 பிரிவின் உட்கூறுகளில் கூறப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை, ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, மாநிலச் சட்டமன்றம் ஆகியவை தெளிவற்றதாகவோ, சந்தேகத்திற்குரியதாகவோ இல்லாதபோது, அவற்றுக்குப் புதுவிளக்கம் அளிக்க முடியாது” என்கிறார், நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஃபைசான் முஸ்தபா.
மேலும், அரசமைப்புச் சட்டத்தின் மற்ற கூறுகளை ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்துவதற்குத்தான் 370 பிரிவு தந்திருக்கும் தற்காலிக அதிகாரத்தை அரசுத் தலைவர் பயன்படுத்த முடியுமே தவிர, 370- திருத்துவதற்கு 370- பயன்படுத்துவது அரசமைப்புச் சட்டத்தின்படி தவறானது என்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் ஷதான் ஃபராஸத் குறிப்பிடுகிறார்.
ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றியமைக்கும் முன்பாக, அது தொடர்பாக அம்மாநிலச் சட்டமன்றத்தோடு ஆலோசிக்க வேண்டும் என அரசியல் சாசனப் பிரிவு 3 தெரிவிக்கிறது. சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், அம்மாநிலம் தொடர்பான சில மசோதாக்களை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு உண்டு. ஆனால், அரசியல் சாசனப் பிரிவு 3 தொடர்பான விடயங்களில், அப்பிரிவே நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு வரம்பிட்டு அம்மாநிலச் சட்டமன்றத்தோடு ஆலோசிக்க வேண்டும் எனக் கூறும்போது, நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்திருப்பது அரசியல் சாசனத்திற்கு முரணாகும்” என்றும் சுட்டிக் காட்டுகிறார், ஷதான் ஃபராஸத்.
இவ்விளக்கங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டாலும்கூட, 2018- 370 பிரிவு குறித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அப்பிரிவு தற்காலிகமானது என்ற தலைப்பின் கீழ் உள்ளதென்றாலும்கூட, அப்பிரிவு தற்காலிகமானதல்ல” எனக் குறிப்பிட்டிருக்கிறது. 1969 370- தற்காலிகமானது என ஏற்றுக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், அதனைச் செயலற்றதாக்க முடியாது எனத் தீர்ப்பளித்திருக்கிறது.
ஆளுநரின் அதிகார வரம்பு தொடர்பாக பீகாரில் சிக்கல் எழுந்தபோது, அது தொடர்பான பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, சட்ட மன்றத்தின் நேரடி ஒப்புதலோடு செய்ய முடியாத ஒரு செயலை, சட்டமன்றம் கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி இருக்கும்போது செய்வது அரசமைப்புச் சட்ட மோசடி யாகும். இது சட்டநெறிமுறை ஆகாது” எனத் தீர்ப்பளித்திருக்கிறது.
எனவே, அரசமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கும் நெறிகளுக்கும் எதிராக, முரணாக, அவற்றைத் திருத்தி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புரிமைகளை வழங்கும் 370- பிரிவைச் செயலற்றதாக்கியிருப்பதும், அம்மாநிலத்தை இரண்டாக உடைத்து, ஒன்றியப் பிரதேசமாக மாற்றி தகுதி இறக்கம் செய்திருப்பதும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை போன்றதொரு கிரிமினல் குற்றமாகும். இக்கிரிமினல் குற்றத்தைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரால் நியாயப்படுத்த முயலுகிறது, ஆர்.எஸ்.எஸ்.
மோடி அரசு 370 செயலற்றதாக்கியதைக் கண்டித்து பஞ்சாபிலும், பெங்களூருவிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.
காஷ்மீர் மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். இழைத்திருக்கும் அநீதியை மற்ற மாநில மக்கள் கண்டும் காணாது போல நடந்துவருவது தம் தலை மீது தாமே கொள்ளிவைத்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும். ஏனென்றால், 370- பிரிவை நீக்க வேண்டும் என்பது மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கை அல்ல. மாநில அரசின் மையமான உரிமைகளைப் பறித்து, அவற்றை பஞ்சாயத்து போர்டுகளைப் போல ஆக்க வேண்டும் என்பதுதான் இந்து ராஷ்டிரத்தின் திட்டம். ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு, என்.ஐ.ஏ.விற்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்பன வழியாக தனது நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது.
குஜராத் மாநிலத்தை இந்துத்துவாவின் சோதனைக் களமாகப் பயன்படுத்தியதைப் போல, மாநில உரிமைகளைப் பறிப்பதற்கு ஜம்மு காஷ்மீரைச் சோதனைக் களமாகப் பயன்படுத்தியிருக்கிறது, மோடி அரசு. எனவே, காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை எதிர்த்துக் குரல் கொடுப்பதன் வழியாகத்தான் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில மக்களும் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
விருதாச்சலத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து, போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வாரக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 20.09.2019 அன்று காலை 11 மணி அளவில் விருதாச்சலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார். அனைத்து விவசாய சங்கங்களின் மாநிலச் செயலாளர் திருஸ்டீபன், ஜனநாயக விவசாயிகளின் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் திரு அன்பழகன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் மற்றும் கடலூர் மண்டல மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 08 அ
தனது வளையாத காலை விமானி அறைக்குள் முடிவில் ஒரு விதமாக வைத்து விட்டான் அலெக்ஸேய். நம்ப முடியாத அளவு அரும் பிரயாசை செய்து மறு காலையும் அறைக்குள் இழுத்து, தொப்பென்று இருக்கையில் சாய்ந்தான். அதே நொடியில் தோல் வார்களால் பொய்க்கால்களை நெம்படிகளுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டான். அமைப்பு சரியானதாக வாய்த்திருந்தது. வார்கள் பொய்க்கால்களை நெம்படிகளுடன் மிகுவாகவும் உறுதியாகவும் அழுத்தி இறுக்கியிருந்தன. பிள்ளைப் பருவத்தில் நன்றாகப் பொருத்தப்பட்ட ஸ்கேட்டுகளைப் பாதங்களுக்கு அடியில் உணர்ந்தது போலவே நெம்படிகளை இப்போது உணர்ந்தான்.
ஆசிரியர் அவனது அறைக்குள் தலையை நீட்டினார்.
“ஏன் தம்பீ, நீ குடித்திருக்கிறாயா என்ன? ஊது” என்றார்.
எஞ்சின் சில தடவைகள் காதைத் துளைப்பது போல உறுமியது. பின்பு அதன் பிஸ்டன்கள் அடிக்கும் துலக்கமானத் தனி ஓசை கேட்டது. களி மிகுதியால் மெரேஸ்யெவ் கத்தியும் விட்டான். பெட்ரோல் செலுத்துவிசையைக் கையால் தன்னுணர்வின்றியே இழுத்தான். அதற்குள் பேச்சுக் குழாய் வழியே வந்தது ஆசிரியரின் கோபக் குரல்:
“குருவுக்கு மிஞ்சின சீடன் ஆகப் பார்க்காதே!”
ஆசிரியர் தாமே பெட்ரோல் செலுத்துவிசையைப் போட்டார். எஞ்சின் கடகடத்தது, ஊளையிட்டது. விமானம் எகிறிக் குதித்தவாறு பறப்பு முன்னோட்டம் தொடங்கியது. தன்னுணர்வின்றியே இயக்கியவாறு நவூமவ் பிடியைத் தம் பக்கம் இழுத்தார். தட்டான் பூச்சி வடிவான விமானம், எல்லா விமானிகளும் ஒரு காலத்தில் விமானமோட்டக் கற்றுக் கொண்ட அந்தப் பறப்பூர்தி, செங்குத்தாக வானில் கிளம்பியது.
சாய்வாக வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் புதிய பயிற்சி மாணவனின் முகத்தைக் கண்டார் ஆசிரியர். நீண்ட இடை நிறுத்தத்துக்குப் பின் முதல் விமானப் பறப்பின் போது இத்தகைய எத்தனையோ முகங்களை நவூமவ் கண்டிருந்தார். தேர்ந்த விமானிகளின் பெரிய மனிதப் பாங்கான நல்லியல்பை அவர் பார்த்திருந்தார். ஒன்றன் பின் ஒன்றாக ஆஸ்பத்திரிகளில் நீண்ட காலம் தங்கிவிட்டு மறுபடி தங்கள் வழக்கமான சூழ்நிலைமைக்கு வந்துள்ள உற்சாகிகளான விமானிகளின் விழிகளில் சுடர் வீசுவதை அவர் கண்டித்திருக்கிறார்.
பயங்கர விமான விபத்தில் படுகாயமடைந்து திரும்பியவர்கள் விமானம் வானில் கிளம்பியதும் வெளிறுவதையும் பதற்றமடையத் தொடங்குவதையும் உதடுகளைக் கடிப்பதையும் அவர் அவதானித்திருந்தார். முதல் முறை தரையிலிருந்து வானில் எழும்பும் கற்றுக் குட்டிகளின் சுறுசுறுப்பு ததும்பும் ஆவலை அவர் பார்த்திருந்தார். ஆனால் விமானம் ஓட்டுவதில் அனுபவம் உள்ளவனாகத் தோன்றிய இந்த அழகிய சாமள நிற இளைஞனின் முகத்தில் இப்போது கண்ணாடி வாயிலாக அவர் கண்ட விந்தையான பாவத்தை நவூமவ் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றிய பல ஆண்டுகளில் ஒரு தரங்கூடக் காணவில்லை.
ஜுரத்தினால் ஏற்படுவது போன்ற புள்ளிகள் அடர்ந்த செம்மை புதியவனின் சாமள நிறத் தோலின் ஊடாகப் பரவியது. அவன் உதடுகள் வெளிறின, ஆனால் அச்சத்தால் அல்ல, நிச்சயமாக இல்லை, நவூமவுக்குப் புரியாத, மாண்பு சான்ற கிளர்ச்சி காரணமாக. அவன் யார்? அவனுக்கு என்ன நேர்ந்துவிட்டது? மெக்கானிக் அவனைக் குடிகாரன் என்று எண்ணியது ஏன்?
விமானம் தரையிலிருந்து கிளம்பிக் காற்றில் மிதக்கத் தொடங்கியதும், காப்புக் கண்ணாடிகள் இன்னும் போடப்படாத புதியவனின் விழிகளில் – ஜிப்ஸியுடையவை போன்று கருமையான, பிடிவாதம் நிறைந்த விழிகளில் – திடீரெனக் கண்ணீர் மல்கியது. கன்னத்தில் வழிந்த கண்ணீர் திருப்பத்தின் போது முகத்தில் அடித்த காற்றுத் தாரையால் பூசப்பட்டது. இதை எல்லாம் ஆசிரியர் கவனித்தார்.
“யாரோ விசித்திரப் பிரகதி! இவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்ன செய்வானோ, யார் கண்டது?” என்று தீர்மானித்துக் கொண்டார் நவூமவ். ஆனால் சதுரக் கண்ணாடியிலிருந்து தம்மை நோக்கிய அந்தக் கிளர்ச்சி பொங்கிய முகத்தில் இருந்த ஏதோ ஓர் உணர்ச்சி ஆசிரியரையும் பற்றிக் கொண்டது. தமது தொண்டையிலும் ஏதோ அடைத்துக் கொள்வதையும் உணர்ந்து அவர் வியப்பு அடைந்தார்.
“ஒட்டும் பொறுப்பை உனக்குக் கொடுக்கிறேன்” என்று அவர் சொன்னார். ஆனால் அப்படிக் கொடுத்துவிடவில்லை. கைகளையும் பாதங்களையும் தளர்த்த மட்டுமே செய்தார். ஓட்டும் பொறுப்பை விளங்காத இந்த விசித்திரப் பரகிருதியிடமிருந்து எந்தக் கணத்திலும் வலிய எடுத்துக் கொள்ள ஆயத்தமாக இருந்தார் அவர்.
அலெக்ஸேயின் ஒவ்வொரு அசைவையும் நவூமவ் முன்னிருந்த கருவிகள் அப்படியே இயங்கிக் காட்டின. புதியவன் தன்னம்பிக்கையுள்ள, கைதேர்ந்த விமானி என்பதை அவற்றிலிருந்து அவர் கண்டுகொண்டார். அனுபவம் முதிர்ந்த போர் விமானியான பயிற்சிப் பள்ளித் தலைவர் “வரப்பிரசாதம் பெற்ற விமானி” என்று இத்தகையவர்களைக் குறிப்பிடுவது வழக்கம்.
முதல் சுற்றுக்குப் பின் நவூமவ் தன் சீடனைக் குறித்து அஞ்சுவதை விட்டுவிட்டார்.
விமானம் தயக்கமின்றி, உரிய முறையில் இயங்கியது. ஒரு விஷயந்தான் சற்று விந்தையாகப்பட்டது. விமானத்தைச் சமமட்டத்தில் செலுத்துகையில் பயிற்சியாளன் ஓயாமல் இடமும் வலமுமாகச் சிறு சிறு திருப்பங்கள் செய்தான். சில வேளைகளில் விமானத்தைச் சிறிது மேலே கிளப்பினான். சில வேளைகளில் கீழே இறக்கினான். தனது தேர்ச்சியை அவன் சோதித்துப் பார்ப்பது போல் இருந்தது. புதியவனை மறு நாளே தனியாகப் பயிற்சிப் பகுதியில் பறக்க அனுமதிக்கலாம் என்றும், இரண்டு மூன்று பறப்புக்களுக்குப் பின் சண்டை விமானத்தின் சிறு நகலான “ஊத்-2” ரகப் பயிற்சி விமானத்தை ஓட்ட விடலாம் என்றும் தமக்குள் தீர்மானித்துக் கொண்டார் நவூமவ்.
குளிராயிருந்தது. இறக்கைத் தம்பத்தின் மேலிருந்த வெப்பதட்பமானி நீர் உறைமட்டத்துக்குக் கீழ் பன்னிரண்டு டிகிரி குளிர் இருந்ததாகக் காட்டியது. கூரிய காற்று, விமானி அறைக்குள் புகுந்து நாய்த் தோல் பூட்சுகளுக்குள் புகுந்து பயிற்சி ஆசிரியரின் கால்களை விரைக்கச் செய்தது. திரும்ப நேரம் ஆகிவிட்டது.
ஆனால் “தரையில் இறங்குக!” என்று அவர் குழாய் வாயிலாக உத்தரவு இட்ட போதெல்லாம் ஆர்வம் பொங்கும் கரு விழிகளில் மெளன வேண்டுகோள் தென்படுவதைக் கண்ணாடியில் கண்டார். அது வேண்டுகோள் கூட இல்லை, கோரிக்கை. உத்தரவை மறுபடி இடுவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. வழக்கமான பத்து நிமிடங்களுக்குப் பதில் சுமார் அரைமணி நேரம் அவர்கள் பறந்தார்கள்.
விமானி அறையிலிருந்து வெளியே துள்ளி, விமானத்தின் அருகே குதித்தார் நவூமவ். கையுறைகளைத் தட்டிக் கொண்டார், பாதங்களைத் தொப்புத் தொப்பென்று அடித்தார். ஆரம்ப குளிர் அன்று காலையில் உண்மையிலேயே கடுமையாக இருந்தது. பயிற்சி மாணவனோ, வெகு நேரம் அறைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தான். பின்பு அதிலிருந்து மெதுவாக, விருப்பமற்றவன் போல வெளியே வந்தான். தரையில் இறங்கியதும் இறக்கையின் அருகே உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் உவகை ஊற்றெடுத்தது போன்று அது தோற்றம் அளித்தது. குளிராலும் இன்பக் கிளர்ச்சியாலும் செம்மை சுடர்ந்தது அது.
“விரைத்துப் போனாயோ? என்னை பூட்சுகள் வழியாக எப்படிக் குளிர் தாக்கிவிட்டது தெரியுமா? அடே, நீ சாதாரண ஜோடுகள் அல்லவா அணிந்திருக்கிறாய்! கால்கள் குளிரில் மரத்துப் போகவில்லையா?”
“எனக்குக் கால்கள் இல்லை” என்று தனது எண்ணத்தால் புன்னகைத்தவாறு பதிலளித்தான் பயிற்சி மாணவன்.
“என்ன?” என்றார் நவூமவ், உணர்ச்சிகளுக்கேற்ப விரைந்து மாறும் அவர் முகம் நீண்டுவிட்டது.
“எனக்குக் கால்கள் இல்லை” என்று தெளிவாகத் திருப்பிச் சொன்னான் அலெக்ஸேய்.
“‘கால்கள் இல்லை’ என்றால் என்ன அர்த்தம்? நோயுள்ளவையா அவை?”
“இல்லை என்றால் இல்லை, அவ்வளவுதான். இவை பொய்க்கால்கள்.”
யாரோ தலையில் சம்மட்டியால் அடித்து தரையில் பதித்து விட்டது போல நொடிப்பொழுது மலைத்து நின்று விட்டார். இந்த இளைஞன் அவரிடம் சொன்ன விஷயம் முற்றிலும் நம்ப இயலாததாக இருந்தது. கால்கள் இல்லையாவது? இப்போது தானே இவன் விமானம் ஓட்டினான், அதுவும் நன்றாகவே ஓட்டினான்!…
“காட்டு” என்று ஏதோ அச்சத்துடன் சொன்னார் ஆசிரியர்.
இந்த ஆவல் அலெக்ஸேய்க்குக் கோபமூட்டவோ அவமதிப்பாகப்படவோ இல்லை. மாறாக, வேடிக்கையான இந்தக் குதூகல மனிதரை ஒரேயடியாக வியப்பில் ஆழ்த்த அவனுக்கு விருப்பம் உண்டாயிற்று. சர்க்கஸ் செப்படி வித்தைக்காரன் போன்று காற்சட்டையை உயர்த்தி ஏககாலத்தில் இரண்டு கால்களையும் காட்டினான்.
தோலாலும் அலுமினியத்தாலும் ஆன பொய்க்கால்கள் மேல் நின்றான் பயிற்சி மாணவன். ஆசிரியரையும் மெக்கானிக்கையும் முறைக்காகக் காத்திருந்த பயிற்சியாளர்களையும் புன்னகையுடன் நோக்கினான்.
இந்த மனிதனின் உள்ளக் கிளர்ச்சி, இவன் முகத்தில் காணப்பட்ட அசாதரணத் தோற்றம், இவனுடைய கருவிழிகளில் பொங்கிய கண்ணீர், பறப்பு உணர்ச்சியை நீடிப்பதற்கு அவன் காட்டிய பேரார்வம், எல்லாவற்றையும் நவூமவ் அக்கணமே புரிந்துகொண்டார். இந்தப் பயிற்சி மாணவன் அவரைப் பரவசப்படுத்திவிட்டான். அலெக்ஸேய் அருகே பாய்ந்து வெறி கொண்டவர் போல அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.
“அடேயப்பா, எப்படி உன்னால் முடிந்தது? அருமையான ஆள் நீ! அட உனக்கே தெரியாது நீ எப்பேர்பட்ட மனிதன் என்று!…” எனத் தொண்டை தழுதழுக்கக் கூறினார்.
முக்கியமான காரியம் இப்போது நிறைவேற்றப்பட்டு விட்டது. பயிற்சி ஆசிரியரின் அபிமானத்தைப் பெற்றாயிற்று. மாலையில் அவர்கள் சந்தித்துப் பயிற்சித் திட்டத்தைச் சேர்ந்து வகுத்தார்கள்.
பெல்ஜிய நாட்டில் உள்ள தீவிர வலதுசாரி இனவாதக் கட்சியான “பிலாம்ஸ் பெலாங்” (Vlaams Belang) இளைஞர் அணியினர் ஆயுதங்களுடன் காட்சியளிக்கும் படம் ஒன்றை டிவிட்டரில் காணக் கிடைத்தது. அவர்கள் 2019 -ம் ஆண்டு கோடை விடுமுறைக் காலத்தில், போலந்தில் கிராகவ் நகருக்கு அருகில் “அரசியல் வகுப்புகள்” என்ற பெயரில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்ட நேரம் இந்தப் படம் எடுக்கப் பட்டுள்ளது.
இதனால் தமக்கு ஏதாவது பிரச்சினை வரலாம் என்ற எந்த பயமும் இல்லாமல், இராணுவப் பயிற்சி பெரும் படத்தையும், யூடியூப் வீடியோவையும் அவர்களே வெளியிட்டுள்ளனர். ஐரோப்பாவில் வலதுசாரி பயங்கரவாதம் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் அரசு இது குறித்து கவனம் எடுக்கவில்லை. அத்துடன், இந்த தகவல் எந்தவொரு ஊடகத்திலும் வெளிவராது என்பதை நிச்சயமாகக் கூறலாம்.
பெல்ஜியத்தில் பிலாம்ஸ் பெலாங் கட்சி தன்னை ஒரு மிதவாத பொப்புலிஸ்ட் கட்சியாக காட்டிக் கொள்கிறது. அது வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிரான இனவாதம், இஸ்லாமோபோபியா கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் வளர்ந்து வரும் கட்சி. அது டச்சு மொழி (பெல்ஜியத்தில் பிலாம்ஸ் என்று அழைப்பார்கள்) பேசும் மாநிலத்தில் மட்டும் இயங்கும் பிரதேசக் கட்சி. அந்தக் கட்சி சார்பில் பல உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் தெரிவாகி உள்ளனர்.
“பிலாம்ஸ் பெலாங்” வலதுசாரி குழுவினர் ஆயுதபயிற்சி எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
தீவிர வலதுசாரி பயங்கரவாதம் இன்றைய உலகில் மிகப் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக பல புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி நெதர்லாந்து தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. (NOS, 18-08-2019) இதுவரை மேற்கத்திய நாடுகளில் நடந்துள்ள வலதுசாரி பயங்கரவாத தாக்குதல்கள் யாவும் அங்கு வாழும் வெளிநாட்டு குடியேறிகளை இலக்கு வைத்து நடந்துள்ளன.
பிரைவிக் (Brevik), டாரன்ட் (Tarrant) ஆகியோர் வலதுசாரி பயங்கரவாதிகளின் நாயகர்களாக, வழிகாட்டிகளாக போற்றப் படுகின்றனர். நோர்வேயை சேர்ந்த பிரைவிக் ஒஸ்லோ நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 90 பேர் பலியாகக் காரணமாக இருந்தவன். அதே மாதிரி நியூசிலாந்து கிரைஸ்ட் சேர்ச்சில் 50 பேர் பலியாக காரணமான பயங்கரவாத தாக்குதலை நடத்தியவன் டாரன்ட்.
சமூக வலைத்தளங்களில் பரப்பப் படும் வதந்திகளும் வலதுசாரி பயங்கரவாதிகளினால் உண்மை என நம்பப்படுகின்றன. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவில் படையெடுக்கும் அகதிகள், குடியேறிகள் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் பூர்வீக வெள்ளையினத்தவரின் சனத்தொகை குறைந்து வருவதாக வதந்திகள் பரப்பப் படுகின்றன.
நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சேர்ச் நகரில், ஒரு வெள்ளையின நிறவெறிப் பயங்கரவாதி மசூதியில் தொழுது கொண்டிருந்த ஐம்பது பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் உலகை உலுக்கி இருந்தது. 15 மார்ச் 2019 நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் ஒரு வெள்ளையின, நாஸி பயங்கரவாதி என்பதால் விபச்சார ஊடகங்கள் அவனை “துப்பாக்கிதாரி” என்றும், சம்பவத்தை “துப்பாக்கிச் சூடு” என்று மட்டுமே குறிப்பிட்டன. தமிழ் அடிமை ஊடகங்களும் “மர்ம நபர்” என்று அறிவித்தன. விரைவில் அவனை ஒரு மன நோயாளி என்று சொன்னாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை.
நியூசிலாந்தில் மசுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்.
அதே நேரம், எங்காவது ஒரு முஸ்லிம் கத்தியால் குத்தினால் கூட, அதை ஒரு மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலாக சித்தரித்து ஊடகங்கள் அலறிக் கொண்டிருக்கும். அமெரிக்காவில் நடந்த பெருமளவு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம் நவ- நாஸிச, தீவிர வலதுசாரிகள் என்று புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இருப்பினும் இந்த விபச்சார ஊடகங்கள் வலதுசாரி பயங்கரவாதத்தை கண்டுகொள்வதில்லை.
நான், 1991 ம் ஆண்டு, ஜூலை மாதம், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி, பேர்ன் மாநிலத்தில் உள்ள ஓர் அகதி முகாமில் தங்கி இருந்தேன். அப்போது எமது முகாமில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இன்னொரு அகதி முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. அந்தச் சம்பவத்தில் யாரும் கொல்லப் படவில்லை, காயமடையவுமில்லை.
அந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஒரு (முன்னாள்?) சுவிஸ் இராணுவ வீரன். அகதிகளை பயமுறுத்தி வெளியேற வைக்கும் எச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளான். அன்றைய தினம் வெளியான உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றின் (பெயர் நினைவில்லை) முன்பக்கத்தில் அவனது பேட்டி வெளியாகி இருந்தது. தானியங்கி துப்பாக்கி ஒன்றை மடியில் வைத்திருக்கும் படம் ஒன்றும் போட்டிருந்தார்கள்.
அன்றைய பத்திரிகை செய்தியில் பேட்டி கொடுத்த “துப்பாக்கிதாரி”(பயங்கரவாதி?) அகதி முகாம் மீதான தாக்குதலுக்கு தெரிவித்த காரணம் இது: “அகதிகள் வருகையால் சுவிட்சர்லாந்து பாழாகி விடும் என்றும், வெளிநாட்டவர்கள் வேலை வாய்ப்புகளை பறிக்கிறார்கள் என்றும்…” குற்றம் சாட்டி இருந்தான். சுருக்கமாக, இனவெறியில் நடத்திய தாக்குதல்.
அந்தக் காலத்தில் இலங்கையில் இருந்து நிறைய அகதிகள் வந்து கொண்டிருந்தனர். சுவிஸ் அகதி முகாம்கள் சிலவற்றில் ஈழத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யூகோஸ்லேவியா, அல்பேனியா, எரித்திரியா என்று பிற நாடுகளை சேர்ந்த அகதிகளும் இருந்தனர்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், அந்தக் காலகட்டத்தில் தஞ்சம் கோரிய முஸ்லிம் அகதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்தக் காலத்தில் ஈரான், ஈராக், சிரியா போன்ற “முஸ்லிம்” நாடுகளில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அகதிகள் மட்டுமே வந்திருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளும் இருந்தனர். ஆனால், சுவிஸ் அரசு அவர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.
ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் நவ-நாசிஸ தீவிர வலதுசாரிகள் ஆரம்பத்தில் ஆசிய / ஆப்பிரிக்க அகதிகளை மட்டுமே எதிர்த்து வந்தனர். குறிப்பாக இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அப்போது இருக்கவில்லை. அதற்கு மாறாக, பொதுவாக கறுப்பினத்தவர் மீதான வெறுப்புணர்வு இருந்தது. அதே மாதிரி, மத்திய கிழக்கு அல்லது தெற்காசிய நாட்டவரை “முஸ்லிம்கள்” என்ற பொதுப் பெயரில் துவேசம் காட்டும் போக்கும் இருந்தது.
அதாவது, வெள்ளையரின் நாடுகளில் நீங்கள் ஒரு தமிழ்க் கிறிஸ்தவராக இருந்தாலும், பெரும்பாலான வெள்ளையரின் பார்வையில் ஒரு “முஸ்லிம்” தான்! இதை எனது நாளாந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தெற்காசிய இனத்தவர் போன்று தோன்றும் அத்தனை பேரும், வெள்ளையரின் கண்களுக்கு முஸ்லிம்கள் தான். “இல்லை நான் ஒரு இந்து/பௌத்தன்/கிறிஸ்தவன்” என்று தெளிவு படுத்தினாலும், வெள்ளையின மக்களின் பொதுப் புத்தியை இலகுவில் மாற்ற முடியாது.
நியூயோர்க்கில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு, முன்னர் ஒருபோதும் எதிர்பார்த்திராத சமூக மாற்றங்கள் உருவாகின. ஐரோப்பிய நாடுகளில் குடியேறி மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தினர் மீதான இன ஒடுக்குமுறை பரவலாக வந்தது. அது சமுதாயத்தை இரண்டாகப் பிளவுபடுத்தியது. இலங்கையில் நடப்பதைப் போன்று, சிறுபான்மை இனத்தவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பெரும்பான்மை இனத்தவரின் பேரினவாதம் முன்னுக்கு வந்தது.
எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போன்று, அமெரிக்க அரசு “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை தூண்டி விட்டது. இது ஒரு சில நாட்களிலேயே ஐரோப்பாவிலும் பரவி விட்டது. போதாக்குறைக்கு, அரசுகளும், ஊடகங்களும் இஸ்லாமிய பூதம் இருப்பதாக பயமுறுத்திக் கொண்டிருந்தன. அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் நடந்த யுத்தங்களும், அங்கிருந்து வந்த அகதிகளும் புதிய நெருக்கடிகளை உண்டாக்கின.
அது வரையும் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடந்த நவ – நாசிஸ குழுக்கள், புதிதாக கிடைத்த வாய்ப்புகளை இறுகப் பற்றிக் கொண்டன. இஸ்லாம் என்ற மதத்திற்கு எதிரான பரப்புரைகள் வெகுஜன ஊடகங்களிலேயே நடக்கும் பொழுது அவர்கள் சும்மா இருப்பார்களா? இது தான் சந்தர்ப்பம் என்று முஸ்லிம் குடியேறிகளுக்கு எதிரான புனிதப் போரை அறிவித்தன. அதன் விளைவுகளில் ஒன்று தான், நியூசிலாந்து மசூதியில் ஐம்பது பேர் பலியாகக் காரணமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.
வலதுசாரி நிறவெறிப் பயங்கரவாதம் குறித்து ஊடகங்கள் அக்கறை காட்டாது விடினும், ஐரோப்பிய அரசுகளும், அவற்றின் புலனாய்வுத்துறையினரும் இது குறித்து கவனம் எடுத்து கண்காணித்து வருகின்றனர். உள்நாட்டு பூர்வீக ஐரோப்பிய சமூகத்தினர் மத்தியில் உருவாகும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தமது இலக்கை அடைவதற்காக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடலாம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
வளர்ந்து வரும் வலதுசாரிப் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து மேற்கைரோப்பிய அரசுகள் மென் போக்கை பின்பற்றி வருகின்றன அதற்குக் காரணம் இந்நாடுகளில் இனப்பிரச்சினையை உண்டாக்கி இனங்களை மோத விடுவதற்கு வலதுசாரி பயங்கரவாதம் அரசின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகின்றது.
அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக ஜேர்மனியில் இயங்கிய வலதுசாரி பயங்கரவாத இயக்கமான “National Socialist Underground” (NSU) பற்றிய ஆவணப் படம் ஒன்று பார்க்கக் கிடைத்தது. அதிலிருந்து எடுத்த சில குறிப்புகளை இங்கே தருகிறேன். ஐரோப்பிய அரசுக்களுக்கும், வலதுசாரி பயங்கரவாதிகளுக்கும் இடையிலான இரகசிய தொடர்புகள் அம்பலத்திற்கு வருகின்றன.
♦ முன்னாள் சோஷலிச கிழக்கு ஜேர்மனியில், நவ நாஸிகள் அல்லது தீவிர வலதுசாரிகளே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதன் விளைவாக ஜேர்மனி ஒன்று சேர்ந்தது. இதனை முன்னாள் நவ நாஸி தனது வாக்குமூலத்தில் குறிப்பிடுகின்றான்.
♦ முன்னர் கிழக்கு ஜேர்மன் இரகசியப் போலீஸ் தம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்ததாகவும், ஒன்றிணைந்த ஜேர்மனியிலும் தாம் வரவேற்கப் படவில்லை என்றும் குறிப்பிட்டான்.
♦ தலைமறைவாக இயங்கும் நவ நாஸிகளில் ஏராளமான அரச உளவாளிகள் உள்ளனர். இருப்பினும், அரசுக்கு வேலை செய்த அதே நவ நாஸிகள் தான், தலைமறைவாக இயங்கிய NSU உறுப்பினர்கள் என்ற விடயம் தசாப்த காலமாக அரசுக்கு தெரியவில்லையாம்! (நம்ப முடியுமா?)
♦ NSU உறுப்பினர்கள் மூன்று பேர் மட்டுமே என்று சொல்லப் படுகின்றது. இருவர் வங்கிக் கொள்ளை முயற்சியில் பொலிசால் வேட்டையாடப் பட்ட நேரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். மூன்றாவது நபரான பெண் உறுப்பினர் சரணடைந்தார். – அந்த மூவரைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? யாருக்கும் தெரியாது. அது தொடர்பான விசாரணை முடிவுகள் இன்னமும் மூடுமந்திரமாக உள்ளன.
♦ NSU பல தடவைகள் வங்கிகளை கொள்ளையடித்தும் பிடிபடவில்லை. அது மட்டுமல்ல, நாடு முழுவதும் பத்துப் பேரளவில் கொலை செய்துள்ளது. கொல்லப் பட்டவர்களில் ஒரு பொலிஸ் பெண்மணியை தவிர ஏனையோர் வெளிநாட்டு குடியேறிகள். துருக்கியர்கள், ஒரு கிரேக்கர். கொலை சம்பந்தமாக துப்புத் துலக்கிய பொலிஸ் “கிரிமினல்களின் கணக்குத் தீர்க்கும் கொலைகள்” என்று அலட்சியப் படுத்தியது.
♦ ஒரு தடவை கொலை நடந்த இடத்தில், “தற்செயலாக” இருந்த அரச உளவாளியான நவ நாஸியிடம் சாட்சியம் எடுக்கவில்லை. விசேட விசாரணைக் குழு இந்த விடயத்தை வெளிக் கொண்டு வந்தது. இருப்பினும், அந்த நேரடி சாட்சி விசாரிக்கப் படாதது மட்டுமல்ல, வேறு பதவி கொடுத்து இடம் மாற்றப் பட்டார்.
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் நிலைமை குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததாகவும், தற்போது அது நீக்கப்பட்டுவிட்டதால், அம்மாநில மக்களின் வாழ்க்கை மேம்படப் போகிறது” என்றும் நீட்டி முழக்கினார். மோடி மட்டுமல்ல, சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருமே இப்படிப்பட்டதொரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறார்கள். இந்த வாதமுறையின் மூலம், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஏதோ பீகாரைவிட வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதைப் போன்ற கருத்தை நாட்டின் பிற பகுதி மக்களிடம் உருவாக்கிவிட முயன்று வருகிறது, ஆர்.எஸ்.எஸ். ஆனால், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி குறித்து அரசு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் புள்ளிவிபரங்களே அம்மாநிலம் பல்வேறு சமூக நலன் சார்ந்த அம்சங்களிலும், மனித வளர்ச்சிக் குறியீட்டிலும் (Human Development Index) பா.ஜ.க. ஆண்டுவரும் பசு வளைய மாநிலங்களைவிட, ஏன் குஜராத்தை விடவும் முன்னேறிய நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.
மனித வளர்ச்சி குறியீடு என்பது மூன்று முக்கிய காரணிகளான கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது.
இம்மதிப்பீட்டில் ஜம்மு காஷ்மீர் 1990-களில் இருந்தே ஓரளவு முன்னேறிய நிலையில்தான் இருந்து வருகிறது. 25 மாநிலங்களைக் கொண்ட மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் காஷ்மீர் 11-ஆவது இடத்தில் உள்ளது. 370 போன்ற “தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான” சட்ட உரிமைகள் இல்லாத இராஸ்தான், ஆந்திரா, ஒடிசா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உ.பி., பீகார் ஆகிய மாநிலங்களெல்லாம், ஜம்மு காஷ்மீரை ஒப்பிடும்போது பின்தங்கிய நிலையில்தான் உள்ளன. உ.பி., பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களை விடுங்கள், மோடியின் சாதுர்யத்தால் அசாத்திய வளர்ச்சியடைந்திருப்பதாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்கூட காஷ்மீருக்குக் கீழே 14-ஆவது இடத்தில்தான் இருக்கிறது.
மனித வளர்ச்சி குறியீட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உறுதி செய்யப்படும் சமூகப் பாதுகாப்பு முக்கியமானதொரு அம்சமாகும். பேறுகால சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மரணமடையும் விகிதமும், பச்சிளம் குழந்தை மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மரணமடையும் விகிதமும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2005-க்கும் 2015-க்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் கணிசமாகக் குறைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. தேசிய குடும்ப சுகாதார அறிக்கை. அவ்வறிக்கைகளின்படி, 2005-இல் 1000 குழந்தைகளுக்கு 38 ஆக இருந்த ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் 2015-இல் 32 ஆகக் குறைந்திருக்கிறது.
இக்குறியீட்டில் மோடி-அமித் ஷாவின் குஜராத் மாநிலம் இன்றுவரையிலும் ஜம்மு காஷ்மீரைவிடப் பின்தங்கியேயுள்ளது. அங்கு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணவிகிதம் 2005-இல் 43; 2015-இல் 34.
பெண் கல்வியை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாண்டுகளில் காஷ்மீரில் பத்தாம் வகுப்பிற்கு மேலே படிக்கும் பெண்களின் எண்ணிக்கை 10.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆறு வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது 2005-06-இல் 57.5 சதவீதமாக இருந்தது. அது 2015-16-இல் 65.5% ஆக உயர்ந்த்திருக்கிறது. இச்சதவீதம் பா.ஜ.க. ஆளும் உ.பி. மாநிலத்தைவிட அதிகமாகும்.
பெண் சிசு பாதுகாப்பிலும்கூட ஜம்மு காஷ்மீர் குஜராத்தைவிட ஒருபடி மேலேதான் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 2005-06-இல் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 902 ஆக இருந்த பெண் குழந்தை பிறப்பு விகிதம் 2015-16 இல் 921 ஆக அதிகரித்திருக்கிறது. அதேசமயம், குஜராத்தில் கடந்த பத்து வருட காலத்திலும் பெண் பிறப்பு விகிதம் 902 என்ற எண்ணிக்கையிலேயே தேங்கி நிற்கிறது. இத்தேக்க நிலைக்குக் காரணம், தந்தை வழி ஆணாதிக்க இந்துத்துவா மனப்பான்மை என்பதை யாரும் மறுக்கவியலாது.
இளவயது பெண் திருமணங்களின் சதவீதம் ஜம்மு காஷ்மீரில் 8.7 ஆகச் சரிந்துவிட்ட நிலையில், குஜராத்தில் அதனைவிட மூன்று மடங்கு அதிகமாக 24.9 சதவீதமாக உள்ளது.
திட்ட கமிசன் 2009-10-இல் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஜம்மு காஷ்மீரில் கிராமப்புற வறுமை 8.1 சதவீதமாகும். இச்சதவீதம் தேசிய சராசரியைவிட (33.8%) மிகமிகக் குறைவாகும். இவ்விடயத்தில் ஜம்மு காஷ்மீரையும் குஜராத்தையும் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு தென்படுகிறது. திட்ட கமிசன் புள்ளிவிவரப்படி 2009-10-இல் குஜராத்தில் கிராமப்புற வறுமை 26.7 சதவீதமாகும். மோடி, குஜராத் முதல்வராகப் பதவியேற்று ஏழு ஆண்டுகள் கழித்து வந்த புள்ளிவிவரம் இது. தனது ஏழாண்டு கால ஆட்சியில் கிராமப்புற வறுமையைக் குறைக்க முடியாத மோடி, அம்மாநிலத்தை வளர்ச்சியின் உச்சத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டதாகக் கூறுவது எத்தகைய மோசடி!
ஜம்மு காஷ்மீரில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமென்றாலும், அவ்வெண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவானது எனத் தேசியக் கணக்காய்வு மையம் 2017-18-இல் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த கணக்கெடுப்பில் ஜம்மு காஷ்மீரைவிடப் பத்து மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதையும் அவ்வறிக்கைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. அதேசமயம், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தரமான வேலைவாய்ப்பு குறியீடு கணக்கீட்டின்படி தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஜம்மு காஷ்மீர் குஜராத்தைவிட முன்னேறிய நிலையில் இருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவற்றுக்கு அப்பால், ஊரகச் சாலைக் கட்டமைவு, மருத்துவர்களின் எண்ணிக்கை, சராசரி ஆயுட்காலம் ஆகிய சமூக மதிப்பீடுகளிலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைச் சாதித்திருப்பதை அரசின் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இவற்றையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஜம்மு காஷ்மீரின் சமூகப் பொருளாதார நிலை குறித்துப் பச்சைப் பொய்யை உண்மையைப் போலப் பிரச்சாரம் செய்துவருகிறது, ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தின் மனித வள மேம்பாட்டு வளர்ச்சிக்கு திராவிட இயக்கங்களும், கட்சிகளும் செய்த பங்களிப்பை மறைத்துவிட்டு, திராவிட அரசியலால்தான் தமிழகம் பின்தங்கிச் சீரழிந்துவிட்டதைப் போல பிலாக்கணம் பாடிவரும் பார்ப்பன வக்கிர மனோபாவம்தான் 370-ஆவது அரசியல் சட்டப்பிரிவு குறித்தும் அவதூறு செய்துவருகிறது.
இங்கு நாம் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்களெல்லாம் காஷ்மீர் மக்களின் வாழ்வியல் வளர்ச்சி குறித்துக் காட்டுகின்றன. இவற்றையெல்லாம் வளர்ச்சியாகக் கருத முடியாதென்றால், மோடியும் ஆர்.எஸ்.எஸ்.-ம் ஜம்மு காஷ்மீரில் யாருக்கு வளர்ச்சி இல்லை என்று அழுகிறார்கள்?
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
செப்டம்பர் 6 ஆம் தேதி, இரவு 11 மணியளவில், 24 வயதுடைய கல்லூரி மாணவர் முதாசிர் அகமது தர், பாரமுல்லா மாவட்டம், குவாஜா பாக்கில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அரசியலமைப்புச் சட்டத்தை நீக்கி 51 நாட்கள் முடிவடைந்துள்ள போதிலும், அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என்பதால், முதாசிர் தனது குடும்பத்தினரை சீக்கிரம் படுக்கைக்குப் போகுமாறு கூறியுள்ளார்.
குடும்பத்தினர் படுக்கச் சென்ற சிறிது நேரத்திலேயே அவர்களது வீட்டிற்கு முன்பு வாகனங்கள் வரிசையாக வந்து நின்றது. யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக தட்டியதால், வீட்டில் மூத்தவரான முகமது ரம்ஸாம் தர் (60) கதவினைத் திறந்துப் பார்த்தார். ஆயுதத்துடன் போலீசு சீரூடை அணிந்திருந்த சிலர் அவர்களது வீட்டிற்கு முன் வரிசையாக நின்றிருந்தனர்.
“வீட்டில் உள்ளஆண்கள் அனைவரும் வெளியில் வாருங்கள்” என்று உத்தரவிட்டான் சீரூடை அணிந்திருந்த ஒருவன். வயதானவர் உட்பட ஐந்து ஆண்கள் அவர்கள் முன் நின்றனர்.
“அவர்கள் அதட்டும் தொனியில் எங்களது அடையாள அட்டைகளை எடுத்துவரச் சொன்னார்கள். அவர்கள் சிறப்பு செயல்பாட்டுக் குழு, ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து வந்துள்ளார்கள் என்று உடனே கண்டு கொண்டோம். எங்களது அடையாள அட்டைகளைப் பார்த்தவுடன், என் தம்பியையும், உறவினர் ஒருவரையும் போலீஸ் வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினர்” என்கிறார் முதாசிர்.
“எதற்கு ஏறவேண்டும்?” என பெண்கள் கேட்டதும் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டது போலீசு. அதோடு நிறுத்தாமல், முதியவர் முகமது ரம்ஸாம் தர் தலையில் ஓங்கி பலமாக அடித்தத்தில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். “அடித்ததில் என் தந்தைக்கு இரத்தம் அதிகமாக வெளியேறியது. நாங்கள் கதறினோம். ஆனால் அவர்கள் மற்றவர்களையும் தாக்க ஆரம்பித்தார்கள். நான் என் தந்தையைக் காப்பாற்ற விரைந்தபோது, அவர்கள் (காவல்துறையினர்) என்னை நோக்கி பெல்லட் குண்டுகளால் சுட்டனர்” என்கிற முதாசிர் தற்போது ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
முதாசிர் அருகே அவரது சகோதரி மெக்மூதா அக்தர் (31) அமர்ந்திருந்தார். அவர், “போலீஸ் படைகளின் செயல்கள் எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொன்றுவிடும் விதமாக இருந்தது. என் தந்தைக்கு 11 தையல்கள் போடும் அளவிற்கு அவர்கள் மிக மோசமாக தாக்கியுள்ளனர். அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை” என்றார்.
“பெல்லட் குண்டுகளால் சுட்டபின் அவர்கள் எனது சகோதரன் முதாசிரை சந்துக்குள் இழுத்து சென்று இரக்கமின்றித் தாக்கினர். முதாசிரை விட்டுவிடும்படி நாங்கள் கெஞ்சினோம். ஆனால் அவர்களின் காதுகளுக்கு அவை கேட்கவில்லை” என்கிற மெக்மூதா, அவர்களின் மிருகத்தனமாக தாக்குதலில் இருந்து தானும் தப்பவில்லை என்கிறார்.
பெல்லட் குண்டு தாக்குதலால் மோசமாக காயமடைந்துள்ள முசாதிர்.
முதாசிர் உடம்பில் பல காயங்கள் இருந்தது. “பெல்லட் குண்டுகள் முதாசிரின் உடம்பை ஆழமாக துளைத்துள்ளதால் பல குண்டுகளை மருத்தவரால் அகற்ற முடியவில்லை. இருதயப் பகுதியில் குண்டுகள் துளைத்துள்ளது” என்கிறார் மெக்மூதா.
முதாசிருடைய குடும்பத்தினரும், பக்கத்து வீட்டுக்காரர்களும் போலீஸ் படையின் தாக்குதலில் இருந்து முதாசிரை மீட்கப் போராடினர். ஆனால் போலீசார் அவர்களையும் தாக்கியுள்ளனர்.
“போலீஸ்காரர்கள் எங்களது வீட்டிற்கு வந்து எங்களை அழைத்தபோது, இந்த இரவு நேரத்தில் பெண்களையும், குழந்தைகளையும் தனியாக வீட்டில் விட்டு வர முடியாது. ஆனால் காலை வந்துவிடுவோம் என்று நாங்கள் உறுதியாகக் கூறினோம். ஆனால் அதன்பிறகுதான் அவர்கள் எங்களை மிருகத்தனமாகத் தாக்க ஆரம்பித்தார்கள்” என்கிறார் ஓட்டுநரான 30 வயது இளைஞர் ஜாவேத் அகமது.
ஜாவேத் அகமதுவின் மனைவி ஷுகுஃப்தா ஜன், படைகளின் தாக்குதலில் இருந்து தனது கணவரை மீட்க விரைந்தபோது, அவரை நோக்கி சுட்டுள்ளனர்.
“பெல்லட் குண்டுகளால் என்னை நோக்கிச் சுட ஆரம்பித்தார்கள். நான் அலறினேன். சூடான இரும்புக் கம்பிகள் எனது உடலை துளைத்ததுப் போல் உணருகிறேன்” என்கிற ஷுகுஃப்தாவிற்கு, ஆகில் ஜாவேத் என்ற 18 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவரும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கிறார்.
“எனது உடலில் கடுமையான வலி உள்ளது. ஆனால், என் மகனுக்கு பால் கொடுக்கமுடியவில்லை என்பதே உடல் வலியைவிட கொடுமையான வலி. ஒரு தாயால்தான் இந்த வலியை உணரமுடியும்” என்கிறார் ஷுகுஃப்தா.
மேலும் அவர், “என் மகன் என்னை எதிர்ப் பார்த்துக் கொண்டிருப்பான். நான் இறந்துவிட்டால் அவனை யார் கவனித்துக் கொள்வது?” என்று தனது ஆதங்கத்தைக் கொட்டியவர், “போலீஸ்காரர்கள் அப்பாவி மக்களைத்தான் பெல்லட் குண்டுகளால் தாக்குகின்றனர்; சித்திரவதை செய்கின்றனர்; வீட்டிற்குள் புகுந்து துன்புறுத்துகின்றனர். அவர்களது கைகளில் எப்பொழுதும் துப்பாக்கிகள் இருக்கின்றன. ஆகையால் அவர்கள் எங்கள்மீது தங்களது அதிகாரத்தைச் செலுத்துகின்றனர்” என்றார் அவர்.
இது குறித்து முதாசிர் பக்கத்து வீட்டுக்காரர்கள், “பெல்லட், கண்ணீர் புகைக் குண்டுகளால் முதாசிர் குடும்பத்தினர்மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்திய பிறகு, படையினர் வீட்டிற்குள் புகுந்து சன்னல் கண்ணாடிகளையும், வெளியில் நிறுத்தி வைத்திருந்த கால்டாக்சியையும் உடைத்தனர்”. அதைத் தடுக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒன்பது பேர் காயமடந்தனர்; ஆறு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
“நாங்கள் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு எங்களது மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் கூறினர். அங்கு எங்களுக்கு நான்கு ஆம்புலன்சையும் ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வெளியில் செல்லும் வேளையில் ஜம்மு-காஷ்மீர் போலீஸ்சார் வந்து தடுத்து நிறுத்தினர். கிட்டத்தட்ட அரைமணிநேரம் எங்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை” என்கிறார் அகமத்.
பெல்லட் குண்டுகள் முதாசிரின் உடம்பை ஆழமாக துளைத்துள்ளதால் பல குண்டுகளை மருத்தவரால் அகற்ற முடியவில்லை. இருதயப் பகுதியில் குண்டுகள் துளைத்துள்ளது.
“பாரமுல்லா மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி போலீஸாரிடம், நாங்கள் மிக மோசமான நிலைமையில் இருப்பதாகவும், எங்களை வெளியில் செல்லுவதற்கு அனுமதியளிக்கும்படியும் கேட்டார். வலியைத் தாங்கமுடியாமல் முதாசிர் துடிப்பதைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர், “நல்லா அனுபவியுங்கள்!” என்று ஏளனமாக சொன்னார்.
முதாசிர் குடும்பத்தினரைக் காப்பாற்றச் சென்ற இக்பால் லத்தீப் கானின் (28) இரண்டு கண்களிலும் பெல்லட் குண்டுகள் துளைத்துள்ளது. தச்சு வேலை செய்யும் இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.
அவரது கண்களில் இரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால் மருத்துவர்கள் அவரது கண்களைத் தொடவும் பயந்தார்கள். “கண்ணீர் புகைக் குண்டினை அவர்கள் (போலீசார்) நேரடியாக என் தலையில் போட்டதுபோல் உணர்கிறேன். நான் இப்போது எனது வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்” என்றார் கான், மெல்லிய குரலில்.
“அவரது கண்களில் ஆழமாகக் குண்டுகள் துளைத்துள்ளது. இரத்தம் நிற்காமல் அதிகமாக வெளியேறுவதால் எங்களால் எதுவும் சொல்ல இயலாது. நாங்கள் ஒரு அறுவை சிகிச்சையை நடத்தியுள்ளோம். இரண்டு கண்களிலும் குண்டுகள் துளைத்துள்ளதால், இக்பால் லத்தீப் கானின் கண் பார்வை சந்தேகத்திற்குறியதுதான்” என்று கண் மருத்துவர் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரித்திருக்கும் பெல்லட் குண்டுகளின் தாக்குதலை, சர்வதேச அமைப்புகள் கண்டித்து வருகிறது. இந்தப் பெல்லட் குண்டு தாக்குதலால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள் தங்களது பார்வைகளை இழந்துள்ளனர். ஒரு இரவிலேயே காஷ்மீர் மக்களது வாழ்க்கை தலைகீழாக மாற்றப்படுகிறது.
பள்ளத்தாக்கில், துண்டிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தால் இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல, முதாசிர் குடும்பம் போன்று பொருளாதார ரீதியாகப் பலவீனமான குடும்பங்களையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.
கால் டாக்சியை நம்பிதான் முதாசிர் குடும்பம் இருக்கிறது. “தகவல் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து ஒரு நயா பைசாவைக் கூட நான் சம்பாதிக்கவில்லை. இந்தக் கொடூரச் சம்பவம் ஏழை மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமானதாக்குகிறது” என்கிற ஜாவேத் தனது மனைவியின் மருத்துவ செலவிற்காக பெரிதும் சிரமப்படுகிறார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு கான் மற்றும் தர் குடும்பத்தினர், இறுதித் தீர்வு போராட்டம்தான் என்று நம்புகின்றனர். “எத்தனை காலங்களுக்குதான் அவர்களுடைய மிருகத்தனத்தையும் ஒடுக்குமுறையையும் பொறுத்துக் கொள்ள முடியும்? காரணங்கள் ஏதுமின்றி நாங்கள் பாதிப்புக்குள்ளாகிறோம்” என்று கானை மருத்துவமனையில் சந்திக்க வந்த உறவினர் மன்சூர் அகமது கூறுகிறார்.
“இந்த நடவடிக்கைகளால் எப்படி அவர்களால் அமைதியை கொண்டுவர முடியும்? அவர்கள் எங்களைத் தவறான செயலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். உண்மையில் அவர்கள் இங்கு அமைதியைக் கொண்டு வர விரும்பவில்லை. காஷ்மீரில் எப்போதும் அமைதியின்மையைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்” என்கிறார் அக்மத்.
போட்ட காசக் கூட எடுக்க முடியல … பத்துநாள் வித்தா இருபதுநாள் கீழ கொட்ட வேண்டிய நிலைமை வருது.
25 வருசமா பூ வியாபாரம் பன்றேன். இந்த பத்துவருசத்துலதான் பூ இவ்ளோ வீழ்ச்சியடைஞ்சிருக்கு. பண்டிகை காலங்கள்ல எவ்ளோனாலும் விலை கொடுத்து வாங்கிடுறாங்க. விநாயகர் சதுர்த்திக்கு சாமந்தி கிலோ 200 ரூபாய்க்கு வித்துச்சி. இன்னிக்கு பத்து ரூபாய்க்கு வாங்க ஆளில்லை. பூவை கீழே கொட்டிக்கிட்டு இருக்கோம். கீழ கொட்டினாலும் அள்ள ஆளில்லை. இதனால விவசாயிங்களுக்குத்தான் பிரச்சினை. ஏற்கெனவே நலிஞ்சி போயிருக்காங்க. இதனால திரும்ப விவசாயம் செய்யாம விட்டுருவாங்க. திரும்ப விலை ஏறும்.
தங்க நகைலாம் ஒன்னும் சேக்கலை. வாரம் ஐயாயிரம் நாலாயிரம் வீட்டுக்கு அனுப்பிடுவேன். புள்ளங்கள படிக்க வக்கிறோம் அவ்ளோதான்.
சென்னை கோயம்பேடு பூ வியாபாரிகள் – கூலித் தொழிலாளர்களின் ஆதங்கம்!
பருவநிலைக்கானப் போராட்டம் இந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதியிலிருந்து 27-ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல வணிக உலகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் முன் எப்போதும் நிகழாதது இந்நிகழ்வு.
மக்களது இருப்பையே அச்சுறுத்தும் பருவநிலை பேரழிவு குறித்து உலகத் தலைவர்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் உலகெங்கிலும் 2,600 -க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தப் போராட்டம் பள்ளி மாணவர்களால் முன்னின்று நடத்தப்படுவது இந்தப் போராட்டத்தின் சிறப்பம்சமாகும். பதினாறு வயதே நிரம்பிய பெண்ணான சுவீடனின் கிரேட்டா துன்பெர்க் இந்த இயக்கத்தின் அடையாளக் குரலாக வெளிப்படுகிறார்.
பருவநிலை விஞ்ஞானிகளால் 2017-ல் எழுதப்பட்ட “மனித குலத்திற்கு எச்சரிக்கை” என்பதன் பின்னணியில் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மனிதன் தன்னுடைய செயல்கள் மூலம் எவ்வாறு பேரழிவு விளைவுகளை இக்கிரகத்திற்கு ஏற்படுத்துகிறான் என்பதை இந்த விஞ்ஞானிகள் இதில் சுருக்கமாகத் தெரிவித்து இருந்தனர். உலகத்தில் நிலவும் வெப்பநிலையில் ஏற்கனவே மனிதர்கள் ஒருசெண்டிகிரேட் அளவு வெப்பமயமாதலைத் தூண்டியுள்ளனர். கூடிய விரைவில் இது 2 செண்டிகிரேட் என்ற அளவிற்கு மேலே நிகழும் இத்தகைய வெப்பநிலை அதிகரிப்பானது பனிப்பாறை உருகுவதற்கும், கடல் மட்டம் அதிகரிப்பதற்கும் இட்டுச் சென்று, இந்த கிரகத்தின் வெப்பமயமாதலில் ஒரு சுய சுழற்சிக்கு வழிவகுக்கும். இது ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பையே அச்சுறுத்துகின்றன.
புவி வெப்பமயமாதல், அறிவியியலின் படி மறுக்க முடியாத நிகழ்வு. அது உண்டாக்கும் பேரழிவுகளை தடுப்பதற்காக தான் ஒப்புக் கொண்ட நடவடிக்கைகளை பேரளவுக்கு கூட இந்த உலகச் சமூகம் செயல்படுத்துவதில்லை. சுதந்திர நாடுகளின் தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்றம் என்பது ஒரு அறிவியியல் நிகழ்வு என்பதை அங்கீகரிக்கப்பதில் தவறிவிட்டார். மேலும் புதைபடிவ எரிபொருட்களில் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறார்.
அதிகளவு கீரின்ஹவுஸ் வாயுக்களை வெளியிடுவதை தடுப்பதற்காக, உலகின் புகைப்போக்கி என்றழைக்கப்படும் சீனா, தற்போது மூன்றாம் உலக நாடுகளில் நிலக்கரித் திட்டங்களுக்காக (மான்ஸ்ட்ரோ சிட்டி என்றழைக்கப்படும் சகிவால் மின் உற்பத்தி நிலையம்) தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.
உலக முதலாளித்துவத்துவத்தால் எரியூட்டப்படும் அமைப்பைத் தோலுரிக்காமல், பருவநிலை மாற்றம் பற்றி இனி விவாதிக்க முடியாது. உற்பத்தி பொருட்களை சரக்குகளாக மாற்றமடையச் செய்து, வளங்களை பணத்தின் அடிப்படையில் அளக்கும் போக்கே, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்களைக் காட்டிலும் அச்சமூகத்தின் தனிச் சிறப்பாகும் இதன் நோக்கம் பொருட்களை உருவாக்குவதும், நீண்ட கால நீடித்த தன்மையோ இல்லை, சரக்குகளின் சுற்றோட்டத்தின் மூலமே, தனியார் இலாபங்களை உருவாக்குதலே ஆகும். முதலாளித்துவத்தின் தனித்தன்மையை அறிய வேண்டுமானால் அதன் வருகையான பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் உலகின் பொருள்சார் செல்வத்தின் பெரும்பகுதி தற்கால மற்றும் வருங்கால தலைமுறைகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் என்று இருந்தது.
முதலாளித்துவத்தின் வருகை என்பது மனித இயல்பில் பொறிக்கப்பட்ட ஒரு பரிணாம ரீதியான பாதை என்பதை விட, மனித வரலாற்றின் நீண்டகாலப் போக்கை சீர்குலைக்கும் ஒரு நிகழ்வாகும். முதலாளித்துவத்தின் எழுச்சிக்குப் பின் ஏற்பட்ட வன்முறை மற்றும் கொள்ளையடிக்கும் வரலாற்றை விவரிக்கும் மார்க்ஸ், எப்படி சமுதாய சொத்துரிமை மீதான தாக்குதல், சரக்கு உற்பத்தியின் அடிப்படையிலான ஒரு சமுதாயம் உருவாவதற்கு மையமாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறார். இது மனித இயல்பு அல்ல. உலக முதலாளித்துவத்திற்கான நிலைமைகளை அமைத்த மில்லியன் கணக்கான மக்களை, பட்டினிக்கும், இடப்பெயர்வுக்கும், வாழ வழியின்மைக்கும் ஆளாக்கியது.
முதலாளித்துவம் அதன் சுற்றுப்புறத்துடன் சமநிலையில் இருக்க முடியாத ஒரு விரிவாக்க அமைப்பு. முதலாளித்துவம் அது தன் இலாபத்தின் நிரந்தரத் தேடலுக்காக இயற்கை வளங்களை பிரித்தெடுப்பதற்க்கும், தன்னுடைய சரக்குகளை விற்பதற்கும் புதிய சந்தைகளை அவசியமாக்குகிறது. பருவநிலை அரசியல் நிபுணரான ஜான் பெல்லாமி பாஸ்டர் இந்தப் போக்கை உற்பத்தியின் டிரெட்மில் என்றழைத்தார். இதில் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக டிரெட்மில் வேகமாக இயங்கினாலும் அதில் வேகமாக ஒட வேண்டும்.
சமூக மற்றும் சூழலியல் விளைவுகள் எதிர்மறையாக நிகழ்ந்தாலும், தன்னுடைய சரக்குகளுக்காக மேலும் மேலும் இயற்கை வளங்களை உற்பத்தி துறை மூலம் விழுங்குகிறது. நுகர்வு சாதனம் இல்லாமல் மனிதர்களை முழுமையற்றவர்களாக உணரச் செய்கிறது. அநேகமாக மனிதர்கள் நுகர்வு சாதனம் இல்லாமல் தேவையில்லை என்று கூறுவதற்கு 1.2 டிரில்லியின் டாலர் அளவில் விளம்பரத் தொழிற்துறை இயக்கப்படுகிறது. இந்த தீய சுழற்சி நமது சுற்றுப்புறத்தை மட்டும் விழுங்குவதோடு மட்டுமில்லாமல், பண்டங்களின் மூலம் ஒரு தனிநபரின் சமூக மதிப்பை அடையாளப்படுத்தி, மனிதர்களின் சமூக உறவுகளையும் கூட புறநிலைப்படுத்துகிறது.
மூன்றாம் உலக நாடுகளில் முதலாளித்துவம் தன் காலனிய வன்முறைகளின் மூலம் தன் தடையற்ற சந்தைக்கு, அந்நாடுகளின் இயற்கை வளங்களை திறக்கச் செய்ததன் மூலம் அந்நாடுகளின் வரலாற்றுப் பாதையை உடைத்தது. மிகையான கடன்கள் ஏழை நாடுகளை முதலாளித்துவத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்றன. தன்னுடைய மிகச்சிறந்த படைப்பான “பூமராங் கடன்” என்ற ஆய்வில் சூசன் ஜார்ஜ் 1980-களில் இருந்து எவ்வாறு ஏழை நாடுகள், தங்களுடைய கடன்களை ஏற்றுமதி மூலமாக செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறது என்பதை விளக்கியிருப்பார். இந்நாடுகளில் பெரிய அளவில் தொழிற்துறை உற்பத்தி இல்லாமல் இருந்தால், அந்நாடுகள் தாங்கள் திரும்ப செலுத்த முடியாத பெரும் அளவு குவிந்த கடன் தொகைக்குப் பதிலாக தங்கள் இயற்கை வளங்களை அந்நிய நிறுவனங்களுக்கு திறந்து விடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான உந்துதல், விவசாயத்தில் நீடித்த தன்மையில் அமைந்த நடைமுறைகளை ஒழித்து குறுகிய காலத்திற்குள் விரைவான இலாபத்திற்கான நடைமுறைகளுக்கு வழிவகுக்கிறது.
உலகெங்கிலும் நடைபெற்று வருகின்ற காடுகளின் அழிப்பானது, மேற்கில் உள்ள சுரங்க நிறுவனங்கள், பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனங்கள் நுழைவுக்கே ஆகும். அமேசானின் சமீபத்திய தீ விபத்துகள், மேற்கத்திய நாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதற்காக, மேய்ச்சல் நிலத்தை உருவாக்குவதற்காக நிலத்தை வெறுமையாக்கும் திட்டமிட்ட முயற்சியாகவேத் தெரிகிறது. இப்புவியின் நுரையீரல், அதற்கு வடக்கே வசிப்பவர்கள் ஹம்பர்கரை தடையின்றி உண்பதற்கு தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. இது சமூக பொறுப்பைவிட தனியார் இலாபங்களை எடை போடும் ஒரு அமைப்பின் பகுத்தறிவற்ற தன்மையை காட்டுகிறது.
விஞ்ஞான எச்சரிக்கைகள் இருந்தப் போதிலும், புதைபடிவ எரிபொருட்களை ஏன் நம்மால் வெளியேற்ற முடியவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. பெரிய புதைபடிவ நிறுவனங்கள் இதில் பாரிய முதலிடுகள் செய்துள்ளன. மேலும் அந்நிறுவனங்களின் எதிர்கால இலாபங்களை உறுதிசெய்வதற்காக மேற்கத்திய அரசுகளின் ஆதரவைப் பெற்றுள்ளன. மூன்றாம் உலக நாடுகள், தங்களுடைய கடன்களை திரும்ப செலுத்துவதற்காக, இயற்கை வளங்களில் முதலீடுகளைத் தேடுகின்றன. தங்களின் பொருளாதரத்தை மிகவும் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்கள் கொள்கை நடைமுறைகளுக்கும் திறக்கிறது. முதலாளித்துவம், மனிதகுலத்தை அதன் சொந்த சுய நிர்மாணமாக்கலில் பங்கு கொள்ள நிர்ப்பந்திக்கும் ஒரு தர்க்கத்திற்குள் பூட்டி வைத்திருக்கிறது.
தனிப்பட்டநபர்களின் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியம் என்றாலும், அவை அமைப்புமுறையான நெருக்கடியை எதிர்கொள்ள அவசியமான கூட்டு நடவடிக்கைக்கு பதிலாக இருக்க முடியாது என்பதையும் இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது, இன்று மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கக் கூடிய ஒரு துடிப்பான ஜனநாயகத்தை புத்துயிர் பெறுவதில் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைப் பொறுத்தவைரை பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்குலைவு குறுகிய பிரச்சினையாக நீண்டகாலமாக இருக்க முடியாது. இரண்டு மாதத்திற்கு முன்னர் தட்டாவைச் சேர்ந்த விவசாயிகள் கடல் மட்டம் உயர்வானது தங்கள் நிலங்களை மூழ்கடித்ததற்கு எதிராக ஒரு நீண்ட பேரணியை நடத்தினர். கடந்த வாரம் நாங்கள் லாகூர் அருகேயுள்ள குலலன் வாலா மற்றும் கோட் ஆசாத் உல்லா ஆகிய கிராமங்களை பார்வையிட்டோம். அங்கேயுள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள், குழந்தைகளின் எலும்புகளில் குறைபாடுகளைத் தோற்றுவிக்கின்றன. அக்கிராமத்தை மாசுபடுத்துவர்கள் யார் என்பதை அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள். இருந்தபோதிலும் அவர்களை பொறுப்பாக்குவதற்கு இயலாமல் இருப்பதற்கு, அவர்கள் அதிக சக்திவாய்ந்தவர்களாக இருப்பதாக அக்கிராமவாசிகள் உணர்கிறார்கள். இப்பகுதிகள் தியாக மண்டலங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஏனெனில் ஒரு சிலரின் செழிப்பான வாழ்க்கையை தக்கவைக்க உள்ளூர் மக்களின் வாழ்க்கை தியாகம் செய்யப்படுகிறது.
சுற்றுச்சூழல் சீர்குலைவால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து, அப்பகுதியின் மக்களிடமிருந்து, செல்வந்தர்கள் தாங்கள் இச்சீர்குலைவில் இருந்து தப்பிக்க ஒரு சுற்றுச்சூழல் வளையத்தை – சுற்றுச்சூழல் இன ஒதுக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று ஐ.நா நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த நிகழ்வு ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. அதை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் அடிப்படை தர்க்கத்தை கேள்விக்குட்படுத்தாமல் நாம் அதை அர்த்தமுள்ளதாக விவாதிக்க முடியாது.
வேறுவிதமாகக் கூறினால் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது என்பது ஒரு அருவமான செயல்முறையை கண்டிப்பது மட்டுமில்லாமல், நமது சூழலை நிர்ணயிக்கும் சமூக உறவுகளின் ஒதுக்குதல், ஆதிக்கம், சுரண்டல் போன்றவற்றை அடையாளம் காண்பதிலும் இருக்கிறது. செத்துப் போன முதலாளித்துவத்தின் சீர்குலைவான குழப்பத்திற்கு ஒரு புதிய சமூக அமைப்பு மட்டுமே நீடித்த தன்மையையும், திட்டமிடுதலையும் வழங்க முடியும்.
உலகம் முழுவதிலும் சுவர்கள் மற்றும் எல்லைகளை நிர்மாணிப்பதில் தீவிரப்படுத்தும் ஒரு பருவநிலை பேரழிவை நாம் காணப்போகிறோமா? அதற்கு மில்லியன் கணக்கான மக்களை இராணுவமயமாக்கி இச் சமூக கட்டுப்பாடுகளுக்கு அனுப்ப போகிறோமா? இல்லை உலகமெங்கிலும் உள்ள மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டில் நுகர்வு மற்றும் உற்பத்தி கட்டுப்பாட்டை கொண்டுவரும் மாற்று முறையை உருவாக்கப் போகிறோமா? இது நாம் ஒழுங்கமைக்கப்பட்டு மீண்டும் போராட வேண்டிய நேரம்.
தினமலர் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகளும் அடிவருடி ஊடகங்களும் “ஹவ்டி மோடி”யுடன் ஒரு நாள் என்று அங்கலாய்த்து பக்கம் பக்கமாய் எழுதியும் ஊதியும் தள்ளியது.
ட்ரம்போ பொழுது விடிந்ததும் “ஹவ்டி இம்ரான்கான்” என்று அடுத்த நகர்வை நோக்கிச் சென்றுவிட்டார். அடிமைகளுக்குள் சண்டைகள் வரலாம். ‘சமாதான’ புருஷர்களுக்கு அடிமைகள் மட்டும்தான் வேண்டும்.
அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்று முழங்கிய ட்ரம்ப் இந்தியர்களை கடுமையான உழைப்பளிகள் என முழங்க காரணம் என்ன ?
***
***
அமெரிக்காவில் மோடி பேசும் போது தேசபக்தியில் திளைத்த முகங்களை மட்டுமே தொலைக்காட்சிகள் காண்பித்தன. இவர்களைக் காட்டவில்லை !