Thursday, July 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 328

காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?

ச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைக்கூடப் பின்பற்ற மறுப்பதன் மூலம் கர்நாடகாவிற்குச் சாதகமாகச் செயல்படுகிறது, காவிரி ஆணையம்.

“காவிரியில் தமிழகத்திற்குரிய ஜூன் மாத ஒதுக்கீடான 9.19 டி.எம்.சி. நீரைக் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும்” என மே மாத இறுதியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஜூன் மாதம் தொடங்கிப் பத்து நாட்கள் கடந்த பிறகும் ஒரு டி.எம்.சி. தண்ணீர்கூடக் கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு வந்துசேரவில்லை. இதுவரை வந்த நீரின் அளவு 0.76 டி.எம்.சி.தான் எனப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. வந்து சேர்ந்த நீரின் அளவைப் பார்த்தால், அது கர்நாடக அணைகளில் இருந்து கசிந்து வெளியேறிய நீராகத்தான் இருக்குமேயொழிய, திறந்துவிடப்பட்ட நீராக இருக்க வாய்ப்பேயில்லை.

காவிரி ஆணையம்
குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்.

காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள், தீர்ப்புகளைக்கூடக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப் போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, ஒரு பல்லில்லாத ஆணையத்தின் உத்தரவுக்கு என்ன மதிப்பைத் தந்துவிடப் போகிறது? காவிரி ஆணையத்தின் கூட்டம் முடிந்த மறுநிமிடமே, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.சிவக்குமார், ஆணையத்தின் முடிவு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்” என அறிவித்தார். இதன் பொருள், தண்ணீரைத் திறந்துவிட முடியாது என்பது தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் பொறுப்பும் கடமையும் காவிரி ஆணையத்திற்கு மட்டுமே உண்டு.  எனினும், இவ்வாணையம் காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தோடு அமைக்கப்படவில்லை. மேலும், இவ்வாணையம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் முடிந்துவிட்ட பிறகும்கூட, ஆணையத்திற்கான முழுநேரத் தலைவரை மோடி அரசு நியமிக்கவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமைக்கப்படவில்லை. இவற்றைச் செய்து முடிப்பதற்கான அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை. காவிரி ஆணையம் தப்பித்தவறிக்கூடத் தமிழகத்திற்குச் சாதகமாக நடந்துவிடக் கூடாது என்பதுதான் இந்த இழுத்தடிப்பின் பின்னுள்ள உள்நோக்கம். காவிரி ஆணையமும் மோடி அரசின் இந்த உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில்தான் செயல்பட்டு வருகிறது.

காவிரி ஆணையம் சூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடிய பத்து நாட்களுக்கு ஒருமுறை கூடி, கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்காணித்து, அதற்கேற்ப உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஆணையமோ கடந்த ஆண்டில் ஜூலையில் ஒருமுறை கூடியது. அதன் பின்னர் டிசம்பரில்தான் மற்றொருமுறை கூடியது. தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் குறுவை சாகுபடிக்காக ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் எனக் கோரிய பிறகுதான் கடந்த மே மாத இறுதியில் ஆணையம் கூடியிருக்கிறது.

படிக்க :
♦ காவிரி : தொடருகிறது வஞ்சனை !
♦ காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் !

காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளில் காணப்படும் நீர்வரத்து எவ்வளவு, எவ்வளவு நீரை, எதற்காக கர்நாடக அரசு வெளியேற்றுகிறது, அணையின் நீர் இருப்பு எவ்வளவு என்பதையெல்லாம் ஆணையம் மாதாமாதம் கண்காணித்துப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை ஆணையம் நடைமுறைப்படுத்துவதேயில்லை.

குறிப்பாக, கர்நாடக அரசு கோடை கால சாகுபடிக்குக் காவிரியிலிருந்து எவ்வளவு நீரை எடுத்துப் பயன்படுத்துகிறது என்பதை ஆணையம் கண்காணிப்பதேயில்லை. மேலும், அம்மாநில அரசு காவிரி நீரைச் சட்டவிரோதமான முறையில் ஏரிகளுக்குக் கடத்திக்கொண்டு போய் பதுக்கி வைப்பதையும் ஆணையம் கண்டுகொள்வதேயில்லை.

கடந்த ஐந்து மாதங்களில் காவிரி ஆணையம் ஒருமுறைகூடக் கூடவில்லை. கடந்த அக்டோபர் 2018 தொடங்கி மே 2019 முடியவுள்ள எட்டு மாதங்களில் கர்நாடகம் தர வேண்டிய 51.61 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தருவது குறித்து ஆணையம் அக்கறை கொள்ளவில்லை. பா.ஜ.க.-வின் பினாமியான எடப்பாடி அரசும் அந்நிலுவை நீர் குறித்து வாய் திறக்கவில்லை.

கடந்த மே மாத இறுதியில் நடந்த ஆணையத்தின் கூட்டத்தில் இந்த நிலுவை நீர் பற்றி விவாதிக்க முன்வராத ஆணையம், மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிப்பதை நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக முன்வைக்க முயன்று, பின்னர் தமிழக அரசின் எதிர்ப்பின் காரணமாகப் பின்வாங்கிக் கொண்டது.

இப்படி மைய அரசும் காவிரி ஆணையமும் கர்நாடகாவிற்குச் சாதகமாகவே நடந்து வருவதால்தான், தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய பங்கைத் திறந்துவிடும் அளவிற்குத் தனது அணைகளில் தண்ணீர் இல்லை” எனத் துணிந்து சொல்கிறது, கர்நாடக அரசு. வறட்சி காலத்திலும்கூட, கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை அதற்கேற்ற விதத்தில் (distress formula) காவிரிப் பாசன மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், கர்நாடகாவோ காவிரி ஆற்றைத் தனக்கு மட்டுமே பாத்தியப்பட்ட சொத்தாகவும், அதில் தமிழகத்திற்கு எள்ளளவும் உரிமை கிடையாது என்றும் திமிர்த்தனமாகவே நடந்து வருகிறது.

கர்நாடக அரசு கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்திற்குக் காவிரியில் திறந்துவிட்டுள்ள நீரின் அளவையும், அந்நீர் திறந்துவிடப்பட்ட காலமுறையையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தன்னால் தேக்க முடியாத உபரி நீரைத் திறந்துவிட்டிருக்கும் உண்மையையும், காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுத்து, தமிழகத்தை உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக மாற்றியிருக்கும் அவலத்தையும் யாரும் விளங்கிக் கொள்ள முடியும்.

காவிரிப் பிரச்சினை
குறுவை சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக்கோரி கல்லணையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயிகள்.

உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்குப் பாதகமான தீர்ப்பை அளிக்கிறது. மைய அரசோ ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைக்கிறது. கர்நாடகமோ எதற்கும் கட்டுப்படாமல் அடாவடித்தனமாகச் செயல்படுகிறது. இந்த ஆட்டத்தைத் தமிழகம் இன்னும் எத்துணை நாட்களுக்குச் சகித்துப் போக முடியும்?

தமிழகம் குறுவை சாகுபடியை முற்றிலுமாகக் கைவிட்டுவிட வேண்டும் என்பதுதான் கர்நாடகாவின் இறுதி நோக்கம். ஏனென்றால் குறுவை சாகுபடி நடக்கும் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் முடியவுள்ள மாதங்களில்தான் கர்நாடகம் தனது அணைகளிலிருந்து 143 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

“தனது அணைகளில் போதிய அளவு நீரில்லை” என்ற காரணத்தைக் கூறியே, கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது நோக்கத்தை வெற்றிகரமாகத் தமிழகத்தின் மீது திணித்துவிட்டது, கர்நாடகா. இந்த ஆண்டாவது குறுவை பயிரிடுவதற்குரிய நீரைக் கர்நாடகாவிடமிருந்து பெற்றுத் தருமாறு டெல்டா விவசாயிகள் கோரிவரும்போது, அதனை உத்தரவாதப்படுத்தாத மைய அரசு, கிருஷ்ணா நதி நீர் இணைப்புப் பற்றி வாய்ப்பந்தல் போடுகிறது.

தமிழகம் தனக்குரிய காவிரி நீரைக் கேட்டால், மோடி அரசோ கானல் நீரைக் காட்டும் மோசடியில் இறங்குகிறது. இந்த நதி நீர் இணைப்பு என்பது காவிரியில் தமிழகத்திற்குரிய வரலாற்றுரீதியான, நியாயமான, சட்டரீதியான பங்கை மறுக்கும் நயவஞ்சகமாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிக் கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடாவிட்டால், அது குறுவை சாகுபடியில் ஈடுபடும் டெல்டா மாவட்ட விவசாயிகளை மட்டும் பாதிக்கப் போவதில்லை. குடிநீருக்குக் காவிரியை நம்பியிருக்கும் தமிழகத்தின் 24 மாவட்ட மக்களையும் நா வறண்டு சாகச் செய்யும்.

படிக்க:
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
♦ அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !

காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கை கர்நாடகம் திறந்துவிடுவதை உத்தரவாதப்படுத்த மறுக்கும் மைய அரசுதான், டெல்டா மாவட்டங்களின் நிலத்திலும், கடலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அடுத்தடுத்துத் திணிக்கிறது. தமிழக மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற மறுக்கும் மைய அரசுதான் தமிழக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்து எரிவாயுக் குழாய்களைப் பதிக்கிறது, மின்கோபுரங்களை அமைக்கிறது.

இவை ஒவ்வொன்றும் தனித்தனியான பிரச்சினைகள் அல்ல. தனித்தனியான போராட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த முறையில் தமிழகம் தழுவிப் போராடுவது மூலம்தான் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசைப் பணிய வைக்க முடியும்.

ரஹீம்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

விண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்

செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்டைக்குள் ‘கொம்பு’ முளைக்கிறது!
– ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சுற்றுலா பயணிகள் செல்ல நாசா அனுமதி!

கருத்துப்படங்கள் : வேலன்

நூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள் : உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை

சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்த இந்த நூல் முயற்சி, சூழல் ஆர்வலர்களுக்கு சட்டத்தை அறிமுகப்படுத்தும் எளிய முயற்சியே. எனவே, இது முழுமையானதல்ல. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு சட்டம் குறித்த ஒரு அறிமுகத்தை கொடுப்பது மட்டுமே இந்த முயற்சியின் நோக்கம். (நூலின் அறிமுகப்பகுதியிலிருந்து…)

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளும், நீர்நிலைகளும், மற்ற இயற்கை வளங்களும் அழிக்கப்படுகின்றன. மேலும் இயந்திரமயமாதல், நகரமயமாதல், தொழில்மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் நிலம், நீர், காற்று உள்ளிட்ட அனைத்தும் மாசுபடுத்தப்படுகின்றன. அரசு, தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரின் பொறுப்பற்ற போக்கால் ரசாயனக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், அணு (உலை)க் கழிவுகள் போன்ற துறை சார்ந்த கழிவுகளும் பெருகி மனிதர்களோடு இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரிகளின் உயிருக்கும், நல்வாழ்வுக்கும் உலை வைத்துக் கொண்டிருக்கின்றன.

அரசு அமைப்புகளோ, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிப்பதையும், சூழலை மாசுபடுத்துவதையும் ஆதரிக்கும் போக்கிலேயே தொடர்ந்து செயல்படுகின்றன. இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் அவை போன்ற தவிர்க்க முடியாத சில அமைப்புகளின் நெருக்குதல் காரணமாக சுற்றுச்சூழல் சட்டத்தை பெயரளவில் இயற்றிவிட்டு அவற்றை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளுவதிலேயே அரசு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

சேலம் எட்டுவழிச்சாலைக்காக பறிக்கப்பட்ட பசுமை வயல்கள்.

நீதித்துறையிலும் பெரும்பாலான நீதிபதிகள் பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலை பாதிப்பதில் தவறில்லை என்ற கருத்தையே கொண்டுள்ளனர். ஆனால் இத்தகைய நீதிபதிகளுக்கு இடையிலும்கூட வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி உள்ளிட்ட நீதிபதிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அயராது பாடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எம்.சி. மேத்தா போன்றவர்களும் சுற்றுச்சூழல் சட்டவியலை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளனர்.

இத்தகைய நன்முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முதன்மை பொறுப்பு கொண்ட அரசுத்துறைகள் சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற சட்டவிரோத அநீதிகளுக்குத் துணைபோவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் வந்தநிலையில்தான் பாலாறு பாழ்பட்டுபோனது. வேலூர் பகுதியின் நிலம் தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் நஞ்சானது. கரூர், திருப்பூர் போன்ற இடங்களின் நிலத்தடி நீர்கூட மாசுபட்டது. இவை சில உதாரணங்கள்தான். சொல்வதற்கு இன்னும் ஏளாளமிருக்கிறது.

இந்த சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கு அரசுத்துறைகளும், தனியார் துறையில் உள்ள பெருவணிக நிறுவனங்களும் முதன்மை காரணமாக இருந்தாலும், அப்பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்கு இதில் பங்கே இல்லை என்று முற்றிலுமாக புறம் தள்ளிவிட முடியாது. சுற்றுச்சூழல் குறித்த புரிதலின்மை, புரிந்திருந்தாலும் சீர்கேடுகள் நடக்கும்போது செயலற்று இருத்தல், சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக போராடுபவர்களை ஏளனமாக பார்த்து அவர்களை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளும் குற்றச்செயல்களே! இவை மறைமுகமாக அல்ல … நேரடியாகவே சூழலை சீரழிப்பவர்களுக்கு உதவி செய்யும் செயல்களாகும். (நூலிலிருந்து பக்.14-15)

… இந்தியாவில் 1972-ம் ஆண்டில் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டமும், 1974-ம் ஆண்டில் தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டமும், 1981-ம் ஆண்டில் காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டமும், 1986-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு)ச் சட்டமும் உருவாக்கப்பட்டன.

தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் – 1974

நகர்ப்புற, தொழில்மய உலகில் உருவாகும் மாசுகளை கட்டுப்படுத்த உருவான முதல் சட்டமாக, தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் 1974ஐக் கூறலாம். இந்த சட்டத்தில்தான் ”மாசுபடுதல்” என்றால் என்னவென்று வரையறை செய்யப்பட்டது.

இதன்படி, ”பொது உடல்நலம் அல்லது பாதுகாப்பு அல்லது வீட்டு, வணிக, தொழில், வேளாண் அல்லது மற்ற சட்டமுறையானச் செயல்களின் பயன்களுக்கு, அல்லது விலங்குகள் அல்லது தாவரங்கள் அல்லது நீரில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றின் வாழ்க்கைக்கு அல்லது நலத்திற்கு தொல்லை ஏற்படுத்தக்கூடிய அல்லது கேடு அல்லது ஊறு விளைவிக்கும் வகையில் தண்ணீரின் தூய்மையைக் கெடுத்தல் அல்லது தண்ணீரின் இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியியல் கூறுகளை மாறச் செய்தல் அல்லது நேரடியாக அல்லது மறைமுகமாக சாக்கடை அல்லது தொழில்கழிவு (trade effulent) பொருள்களை அல்லது ஏதாவது ஒரு திரவ, வாயு அல்லது திடப்பொருளை தண்ணீரில் வெளியேற்றுதல் ‘மாசுபடுதல்’ ஆகும்.

இவ்வாறு தண்ணீர் மாசுபடுதலை தடுக்க மத்திய அளவிலும், மாநில அளவிலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை உருவாக்க இந்த சட்டம் வழிவகுத்தது. (நூலிலிருந்து பக்.30-31)

காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் 1981

காற்று மாசுபாடு என்பது உண்மையில் நம் நாட்டில் வேறு எங்கும் இல்லாத சமத்துவத்தை நடைமுறைப்படுத்துகிறது. ஏழை, பணக்காரன் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் அம்சம் காற்று மாசுபாடுதான்.

காற்றில் இயல்பாகவே சல்பர் டை ஆக்ஸைட், ஹைட்ரஜன் சல்பைட், கார்பன் மோனாக்ஸைட் போன்ற தீய விளைவுகளை ஏற்படுத்தும் வாயுக்கள் உள்ளன. இவற்றோடு புறவெளியிலிருந்து வெளியாகும் காஸ்மிக் கதிர்கள் காற்றுவெளியில் புகுகின்றன. நம்மை சுற்றியுள்ள மண்ணிலிருந்து ரேடியம், யுரேனியம், தோரியம் போன்றவை கதிரியக்கத்தை உருவாக்குகின்றன. வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மேலும் பல நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுப் பொருட்களை வெளியிட்டு காற்றை மாசுபடுத்துகின்றன. எனவே காற்று மாசுபாட்டை நெறிப்படுத்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது.

இந்த சட்டத்தின்படி, ”மனித உயிர்களுக்கு அல்லது மற்ற உயிரினங்களுக்கு அல்லது தாவரங்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவிக்கும் அல்லது ஊறு விளைவிக்கும் வகையில் அடர்த்தியாக காற்று வெளியில் தங்கியிருக்கும் இரைச்சல் உள்ளிட்ட ஏதாவது ஒரு திட, திரவ, அல்லது வாயுப்பொருள் காற்று மாசுக்களை உருவாக்கும் பொருள்” என வரையறை செய்யப்பட்டது. … ஏறத்தாழ தண்ணீர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினை ஒத்த அதிகாரங்களே இந்த காற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் வழங்கப்பட்டன. (நூலிலிருந்து பக்.37-38)

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு)ச் சட்டம், 1986

தண்ணீர் மற்றும் காற்று ஆகியவற்றில் ஏற்படும் மாசுக்களை கட்டுப்பட்டுத்த வாரியங்கள் உருவாக்கப்பட்டாலும், மீதமிருக்கும் வேறுவகையான மாசுக்களை கண்டறிந்து, அவற்றையும் தடுப்பதற்கான  தேவை இருப்பது உணரப்பட்டது.

படிக்க:
அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !

இதைத் தொடர்ந்து 1986-ம் ஆண்டில் ”சுற்றுச்சூழல்(பாதுகாப்பு)ச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில் தண்ணீர், காற்று உள்ளிட்ட அனைத்து வகையான மாசுக்களை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைப்பதற்கான வழிவகை கண்டறியப்பட்டது.

மேலும் இந்த சட்டத்தில்தான், ”சுற்றுச்சூழல்” என்ற சொல்லுக்கான வரையறை முதல்முறையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ”தண்ணீர், காற்றும் மற்றும் நிலம் மேலும் மனித உயிர்கள், மற்ற உயிருள்ள படைப்புகள், தாவரங்கள், நுண்ணுயிர்கள், சொத்து ஆகியவற்றோடு இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பு ஆகிய அனைத்தும் இணைந்ததே சுற்றுச்சூழல்” ஆகும்.

நூல் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள் :
உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை
ஆசிரியர் : வழக்குரைஞர் சுந்தரராஜன்

வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்,
106/1, கனகதுர்கா வணிக வளாகம், கங்கையம்மன் கோயில் தெரு,
வடபழனி, சென்னை – 600 026.
தொலைபேசி எண்: 044 – 4380 9132 | 98416 24006.
மின்னஞ்சல் : info@poovulagu.org

பக்கங்கள்: 96
விலை: ரூ 70.00 (முதற் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் !

0
தோழர் சிநேகா, பு.மா.இ.மு.

“பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும், புதிய கல்விக் கொள்கை – 2019-ஐ நிராகரிப்போம் !” என்கிற தலைப்பில் பு.மா.இ.மு. தலைமையில் ம.க.இ.க. உள்ளிட்ட  தோழமை அமைப்புகளின் பங்கேற்புடன் மதுரை கோரிப்பாளையம், பள்ளிவாசல் தெரு பகுதியில், கடந்த 21.06.2019, வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழர் ரவி, பு.மா.இ.மு.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை பகுதி பு.மா.இ.மு. தோழர் ரவி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் “அரசுப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இவையெல்லாம் மூடப்படும் அபாயம் தற்போது நமது கண்முன்னே உள்ளது.  இந்த கல்விக்கொள்கை அம்பானி, பிர்லா மற்றும் கார்ப்பரேட்டுகள் நலனுக்கானது. பல தேசிய இனங்களின்  மொழி, கலாச்சாரம், பண்பாடு இவற்றை அழித்து ஒரே மொழி, கலாச்சாரம், பண்பாடு கொண்ட  இந்து‍, இந்தி, இந்தியா என்ற இந்துத்துவ சித்தாந்தத்தை இந்த கல்விக்கொள்கையின் மூலமாக திணிக்கத் தீவிரமாக முயற்சி  செய்கிறது RSS, BJP கும்பல். நீட் தேர்வு மூலமாக காசிருந்தால்தான் மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். விளைவு மாணவி அனிதா தொடங்கி தொடர்ச்சியான தற்கொலைகள். இந்த வருடம் நான்கு மாணவிகள் அப்படி இறந்துள்ளார்கள். அதே போன்ற‌ நிலையை ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கொண்டு வருவதே இந்த புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். இந்த அபாயகரமான திட்டத்தை ஜல்லிக்கட்டு போராட்டம் போல மக்கள் ஒன்று சேர்ந்துதான் முறியடிக்க முடியும்” என பேசி முடித்தார்.

பேராசிரியர் ராஜமாணிக்கம் பொன்னையா, (ஓய்வு).

அடுத்ததாக, ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜமாணிக்கம் பொன்னையா அவர்கள் பேசியபோது “புதிய கல்விக்கொள்கை என்பது இந்திய அரசு அமைத்த மூன்றாவது கல்விக்கொள்கை. முதலில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த மெக்காலே கல்விக் கொள்கை. இந்த கல்விக் கொள்கையின் நோக்கம் ஆங்கிலேய ஆட்சிக்கு தேவையான அடிமைகளை உருவாக்குவதே. பின் 1966-ல் கோத்தாரி கமிசன் அடிப்படையில் கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டது. இந்த கல்விக் கொள்கை கல்வி நிலையங்களை அதிகரிக்க வேண்டும்; மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்றது; கல்வி தேசியமயமானது. இந்த காலகட்டத்தில் பல பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதே சமயம் சுயசார்பான பொருளாதார கொள்கை இந்திய அரசால் பின்பற்றப்பட்டது.

ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன் உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையாக அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகளைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்தது.  தமிழகத்தில் உள்ளே  விடவில்லை. நவோதயா பள்ளிகள் அடிப்படையிலேயே சமமற்ற கல்வியை வழங்கியது. உலகமயமாக்கல் காலத்தில் கஸ்தூரி ரங்கன் அறிக்கை மூலமாக புதிய உலகக் கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நவீன தாராளமயத்தில் உற்பத்தி பற்றி கவலையில்லை. இந்தியாவை நுகர்வு இந்தியாவாக மாற்ற ஏதுவான கல்விக் கட்டமைப்பை தந்துவிட்டு உயர்கல்வியை வணிகமயமாக்குவதுதான் திட்டம். இந்த கல்வித் துறையை கலைத்து விட்டு மத்திய கல்வி கமிசன் அமைத்து கல்லூரிக் கல்வியை சிதறடிக்கிறார்கள். மிகப்பெரிய பாகுபாடுடையதாக கல்வியை மாற்றுகிறார்கள். இந்தியை திணிப்பது முதல் பழங்கதைகளையும், புராணங்களையும் கொண்டு வருகிறார்கள். 3 வயதிலிருந்தே தொழில் கல்வியை கொண்டு வருகிறார்கள். +2 முடித்து தேசிய தகுதித் தேர்வை கொண்டு வருகிறார்கள். வேதகால சமுதாயத்தை தாராளமயத்திற்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கையில் கொண்டு வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்திட வேண்டும்” என பேசி முடித்தார்.

தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.

அடுத்ததாக தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க. அவர்கள் பேசியதாவது, “1986 – களில் புதிய கல்விக்கொள்கை, புதிய மருந்துக்கொள்கை புதிய ஜவுளிக்கொள்கை ஆகியவற்றை எதிர்த்து அரசியல் மாநாடு நடத்தினோம். டங்கல் திட்டத்தில் கையெழுத்துப்போட இந்தியாவை ஏகாதிபத்தியங்கள் அழுத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது. இன்று உலக வங்கி உலகை கிராமமாக ஆக்கிவிட்டது. நவீன smart city அமைக்கிறார்கள். இது காசுள்ளவர்களுக்கான நகரம். இதுபோல இந்தக் கல்விக்கொள்கை காசு இருப்பவன் மட்டுமே படிக்க முடியும். என் மொழியை அழிக்க வருகிறது செத்துப்போன சமஸ்கிருதம். ஆட்சி அலங்காரத்திற்கு கொண்டு வரப்பார்க்கிறார்கள். கல்வி உரிமையை பறிக்கும் இந்தத் திட்டம் ஆபத்தானது. இத்திட்டத்தை முறியடிப்போம்” என பேசி முடித்தார்.

தோழர் சிநேகா, பு.மா.இ.மு.

தோழர் சிநேகா, பு.மா.இ.மு. அவர்கள் பேசியபோது, “கல்வி நிறுவனங்கள் இப்போதே கட்டணக் கொள்ளையடிக்கிறார்கள். இந்தாண்டு இதுவரை பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்காமல் கட்டணக் கொள்ளையை வேடிக்கை பார்க்கிறது அரசு. புதிய கல்விக் கொள்கையின் ஷரத்து 334, இட ஒதுக்கீடு அவசியம் இல்லை என்கிறது. டாஸ்மாக்கிற்கு இலக்கு வைத்து விற்பனை செய்யும் அரசு, சாதாரண மக்கள் படிக்கக்கூடிய அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்தாமல் இழுத்து மூடப்பார்க்கிறது. இந்த புதிய கல்விக் கொள்கையை முறியடித்தே ஆக வேண்டும்” எனப் பேசி முடித்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அ.சீனிவாசன், (ஓய்வு), அவர்கள் பேசியதாவது ‘‘1975-க்கு பின்னால் மாநில ஆட்சிக்கு உட்பட்டிருந்த கல்வி மத்திய பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் மாநிலம் தலையிட முடியாததாக ஆகியது. இன்று இந்த புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தை இந்தி ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் தரவில்லை. பன்நெடுங்காலமாக இருந்து வந்த கருத்துக்களைத்தான் கொள்கையாக முன்வைக்கிறார்கள். சமஸ்கிருத, இதிகாச, புராணக் கல்வியை கொண்டு வருகிறார்கள். சுயநிதி கல்லூரிகள், பள்ளிகள் எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டன. இன்று கல்வியே முழுவதுமாக வணிகமயமாகிறது இதை அனைவரும் சேர்ந்து எதிர்த்து நின்று முறியடிக்க வேண்டும்” என பேசினார்.

தோழர் ஆசை, செக்கானூரணி, பகுதி ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் அவர்கள் பேசியதாவது, ‘‘489 பக்க வரைவு அறிக்கையில், நம் பிள்ளைகள் முட்டாள்கள் என்றும் 5,8 -வது படித்த பின் வீட்டு வேலை செய்யவும், தொழிற்சாலைகளில் அடிமை வேலைகளில் ஈடுபடவும்தான் இலாயக்கு என்கிறார்கள். வேதகால கல்விமுறை எப்படி இருந்தது. உயர் சாதியினருக்கு இரண்டு வகையான கல்வி இருந்தது. அது சத்ரியர்களுக்கு சண்டை போடும் கல்வி.  வைசிய கல்வி வணிக பிரிவினருக்கு. அடிமைகளுக்கு, உழைத்து வாழ்ந்தவர்களுக்கு கல்வி கொடுக்கப்படவில்லை. இதையேதான் புதிய கல்விக்கொள்கையும் கொண்டு வரப்போகிறது. இந்திய அரசியல் சாசனத்தில் சொன்ன விசயங்களை குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். இனி பெரும்பான்மையான மக்களுக்கு கல்வியை மறுப்பதே கல்விக் கொள்கை. இதை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்.’’ என பேசினார்.

படிக்க:
புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
தமிழில் தேசியக் கல்விக் கொள்கை 2019 – பிடிஎஃப் டவுண்லோடு

இறுதியாக நன்றியுரை நிகழ்த்திய நெல்லைப் பகுதி பு.மா.இ.மு. தோழர் சிவா, ‘‘நீதிமன்றங்கள் மூலமாக இந்த கல்விக்கொள்கையை இரத்து செய்ய முடியாது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் முறியடிக்க முடியும்.’’ என பேசி நிறைவு செய்தார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

சிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 03

தூக்கம் மற்றும் சோர்வின் கடவுளாகிய மோர்பேயை வகுப்பறையிலிருந்து விரட்டும் பொருட்டு மோமூஸ் எனும் சிரிப்பு, மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும். குழந்தைகள் பாடவேளைகளில் எப்போது மகிழ்ச்சி யடைகின்றனர்?

என்னிடம் கால்பந்து உள்ளது. “நான்கையும் ஐந்தையும் கூட்டினால் எவ்வளவு வரும்?” கால்பந்து அறையின் வலது மூலைக்குச் செல்கிறது. யார் இதைப் பிடிக்கின்றார்களோ அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

“ஒன்பது!” என்று அதைப் பிடித்த சிறுவன் பதில் கூறிவிட்டு பந்தைத் திரும்பி எறிந்தான்.

“ஒன்பதிற்கும் மூன்றிற்கும் இடையிலான வித்தியாசம் எட்டு. சரியா?” பந்து நடு பெஞ்சுகளை நோக்கிச் செல்கிறது.

“தப்பு! ஒன்பதிற்கும் மூன்றிற்கும் இடையிலான வித்தியாசம் ஆறு.” பந்து திரும்ப என்னிடம் வருகிறது.

“எந்த மூன்று எண்களைச் சேர்த்தால் பத்து வரும்?”

“ஏன் பந்து?” என்று எனக்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடும். “இக்கணக்குகளை பந்து இன்றித் தீர்க்க முடியாதா?”

நிச்சயமாக பந்தின்றியே பதில் சொல்லியிருப்பார்கள். ஆனால் உற்சாகம் இருந்திருக்காது.

“தலையைத் தொங்கப் போடுங்கள். கண்களை மூடுங்கள்… நான் உங்களுக்குக் கணக்குகளைச் சொல்வேன். நீங்கள் தலையை உயர்த்தாமல் விடையைக் கை விரல்களால் காட்டுங்கள்.”

குழந்தைகள் தலைகளைத் தொங்கப் போட்டனர், கண்களை மூடிக் கொண்டனர். நான் மெதுவான குரலில் சொல்கிறேன்:

“நான் ஒரு எண்ணை மனதில் வைத்திருக்கிறேன். இதனுடன் 3 ஐச் சேர்த்தால் 8 வரும். என் மனதில் உள்ள எண் எது?”

ஐந்து விரல்களுடன் பலர் கைகளை உயர்த்துகின்றனர். கையை உயர்த்திய ஒவ்வொருவரையும் நான் அணுகி, விரல்களைத் தொட்டபடியே மெதுவாகக் கூறுகிறேன்: “சரி! தவறு! சரி! நன்கு யோசி!”

“நான் ஒரு எண்ணை நினைத்துள்ளேன். இதிலிருந்து 4 ஐக் கழித்தால் 3 எஞ்சும். நான் நினைத்துள்ள எண் எது?”

இப்போது குழந்தைகள் இரு கரங்களையும் உயர்த்தி நான் நினைத்த எண்ணை விரல்களால் காட்டுகின்றனர். “சரி! சரி! தவறு! சரி!” மீண்டும் நான் அவர்களின் விரல்களைத் தடவியபடியே காதுகளில் கூறுகிறேன்.

தலைகளைத் தொங்கப்போடுமாறு ஏன் நான் குழந்தைகளிடம் கூறுகிறேன்? சாதாரணமாக உட்கார்ந்த நிலையில் இவர்களால் கணக்குகளைப் போட முடியாதா என்ன? நிச்சயமாக முடியும். ஆனால் இந்த உற்சாகம் இருக்காது.

“இதே போன்ற கணக்குகளை நீங்கள் எனக்குச் சொல்லுங்கள்” என்று நான் குழந்தைகளிடம் கூறுகிறேன்.

“2 + 8 ன் கூட்டுத் தொகையையும் 6 + 4 ன் கூட்டுத் தொகையையும் ஒப்பிடுங்கள்” என்று ஒரு சிறுவன் கூறுவான்.

“வெகு சுலபம்!” என்று கரும்பலகையில் கணக்கை எழுதியபடியே உச்சரிக்கிறேன்: “2+8 > 6+4. யாராவது இதை விடக் கடினமான கணக்கைச் சொல்லுங்கள்.”

ஆனால் குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “என்ன விஷயம்?.. ஓ, மன்னியுங்கள், ‘குறைவானது’ என குறியிட வேண்டுமல்லவா…” வகுப்பறையில் மீண்டும் அதிருப்தி.

“என்ன நடந்தது?… தவறா?” என்று கரும்பலகையில் எழுதியதைக் கவனமாகப் பார்ப்பது போல் பாவனை செய்கிறேன். “ஆமாம்… 2 ஐயும் 8 ஐயும் கூட்டினால் 11 வரும், 6 ஐயும் 4 ஐயும் கூட்டினால் 10 வரும்.” எனவே, “பெரியது” என்ற குறிக்குப் பதில் “’சிறியது” என்ற குறியை இடுகிறேன்.

“இரண்டும் சமமானவை…. சமம் என்ற குறியிட வேண்டும். சமக்குறி… பத்தும் பத்தும் சமம்!” என்று குழந்தைகள் கத்துகின்றனர்.

படிக்க:
அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

குழந்தைகளுடைய “கலகத்தின்” காரணம் எனக்கு ஒரு வழியாகப் புரிகிறது .

“மன்னியுங்கள்! இங்கே சமக்குறி அல்லவா இருக்க வேண்டும். பத்தும் பத்தும் சமம்…”

இது என்ன சொந்த செல்வாக்கைக் குறைத்துக் கொள்ளும் முறை என்று நீங்கள் கேட்கக்கூடும். எதற்கு இந்த நடிப்பு? “2 +8-ன் கூட்டுத் தொகைக்கும் 6+4-ன் கூட்டுத் தொகைக்கும் இடையில் என்ன குறியிட வேண்டும்?” என்று சாதாரணமாகக் கேட்டிருந்தால் அவர்கள் எவ்விதக் குழப்பமும் இன்றி சமக்குறி இட வேண்டுமெனக் கூறியிருப்பார்கள். விஷயம் அத்துடன் முடிந்திருக்கும். இங்கோ குழந்தைகள் பொங்கியெழுகின்றனர், வகுப்பறையில் ஒரே சத்தம்! இதெல்லாம் எதற்கு?

ஆம், மற்ற ஆசிரியர்கள் பல சமயங்களில் இன்னமும் பின்பற்றும் சடத்துவம் பலமானது. இதைப் பற்றி மாபெரும் ருஷ்ய எழுத்தாளரும் ஆசிரியருமான லேவ் டால்ஸ்டாய் பின்வருமாறு கூறினார்: குழந்தைகள் படிக்க வசதியான வகையில் பள்ளிகள் அமைக்கப்படுவதில்லை , மாறாக, ஆசிரியர்களுக்குச் சொல்லித் தர வசதியாகப் பள்ளி அமைக்கப்படுகிறது.

ஒரு ஆசிரியரைப் பொறுத்தமட்டில், திட்டவட்டமான கேள்விகளைக் குழந்தைகளிடம் கேட்டு அதற்கு சரியான, தெளிவான, முழு பதில்களைப் பெறுவது எளிது. குழந்தைகள் படித்தாக வேண்டும், அவர்களுக்கு வேறு வழியில்லை. எனவே, கேள்வி கேள், அவர்கள் மண்டைகளைப் பிய்த்துக் கொள்ளட்டும். பின் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் குறுகிய, நீண்ட நேரங்களுக்கு அவர்கள் எதைப் படித்துள்ளார்கள் என்று கேள்விகள் கேள். எவ்வித தந்திரங்களும் தேவையில்லை. “சொல்லித் தருவது ஆசிரியர்களுக்கு வசதியாக இருக்கும் பொருட்டு” எல்லாவற்றையும் சுலபமாக முடித்து விடலாம்.

விஞ்ஞான அறிவை கிரகிப்பது, பன்முகத் திறமைகளை வளர்ப்பதன் அவசியம் பற்றி ஏதாவது அவசரமாகக் கூற அஞ்சுகிறேன். ஞானம், திறமைகள், பழக்கங்கள்! மனிதன் வாழ்விலும் வேலையிலும் ஆக்கப் பணியிலும் இவை எவ்வளவு முக்கியமானவை! பல பொருட்களையுடைய எண்களில் வெளிப்படும் இவை எல்லாம் மிகுந்திருந்த போதிலும் இவை மட்டுமே தனிநபரை உருவாக்கப் போதாதவை. குறிப்பிட்ட அளவு ஞானம் இல்லாவிடில் தனிநபர் நிலவ முடியாது, ஆனால் வளமிகு ஞானம் மட்டுமே தனிநபரை உருவாக்கி விடுவதில்லை. ஏனெனில், யதார்த்தத்தின் பால், மனிதர்களின் பால், சுற்றியுள்ளவர்களின் பால், ஞானத்தின் பால் மனிதனுக்கு உள்ள உறவுதான் இவனைத் தனி நபராக்குகிறது. தன் செயல் முனைப்பு மற்றும் உலகக் கண்ணோட்டத்தால்தான் அவன் தனிநபராகிறான். தனிநபர் என்பது போராடும் மனிதனைக் குறிக்குமே தவிர சற்றும் பிறழாது கண் மூடித்தனமாகத் தன் கடமைகளை நிறைவேற்றுபவனைக் குறிக்காது. போராளியாக விளங்க நவீன, பன்முக ஞானமும், மாறி வரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இவற்றைப் பயன்படுத்தும் திறமைகளும் பழக்கங்களும் தேவை.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

‘அர்ஜுன் ரெட்டி’ என்ற சூப்பர் ஹிட் படம், இந்தியில் ‘கபீர் சிங்’ என்ற பெயரில் தற்போது வெளியாகியிருக்கிறது. விரைவில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாக உள்ளது. அர்ஜுன் ரெட்டி வெளியானபோது, சில விமர்சங்கள் தவிர்த்து தென்னிந்திய மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பெண்கள் அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா-வை உடனடியாக தங்களுடைய கனவு நாயகனாக வரித்துக்கொண்டார்கள். நூற்றாண்டு கால இந்திய சினிமா வரலாற்றில் நிறைய தேவரகொண்டாக்கள் வந்திருக்கிறார்கள். எனவே, இதெல்லாம் வழமையாக நடக்கக்கூடியதுதான்.

சூப்பர் ஹிட் சினிமா, கதாநாயகனை கொண்டாடும் சமூகம்… இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அர்ஜுன் ரெட்டிபோல ஒரு கணவன் அல்லது காதலனுடன் ஒரு பெண் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என யாரேனும் சிந்தித்ததுண்டா? அப்படி சிந்தித்தவர்கள், அப்படிப்பட்ட ஒரு ஆணழகனு-டன் (சதை முறுக்கேறிய, பார்த்தவுடன் காதல் கொள்ளத்தூண்டும் ஒருவரை ‘ஆணழகன்’ என சொல்கிறார்கள் இல்லையா?)  வாழ நேர்ந்தால் அந்த வாழ்க்கை ‘ஸோ ரொமாண்டிக்’ என குதூகலிக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்தப் பதிவு.

என் பெயர் ‘அ’ அல்லது ‘ஆ’ என ஏதோ ஒன்று என வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய பெயர் இங்கு முக்கியமல்ல, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதுதான் முக்கியம். விசயத்துக்கு வருகிறேன்… நான் அர்ஜுன் ரெட்டியில் வருகிற நாயகிபோல, தலை நிமிர்ந்து (இதெல்லாம் ஒரு பெருமையா, அடிமைத்தனம் – அவமானம் என்பதை உணர்வதற்குள் 35 வருடங்கள் ஓடிவிட்டன) நடக்காத பெண்.

பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தது பெண்கள் பள்ளியில். பெண்கள் பள்ளியில் படித்தாலுமேகூட பதின்பருவ காதல்கூட வந்ததில்லை. நடுத்தரக் குடும்பங்களில் இயல்பாகவே இருக்கும் காதல் குறித்த எச்சரிக்கைகள் எனக்கும் விடப்பட்டுக்கொண்டே இருந்தன. நல்ல மதிப்பெண் வாங்குவது, பொறியியல் கல்லூரிக்குப் போவது, இது மட்டும்தான் அப்போதைய இலக்கு.

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றவள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், படிப்பு – மதிப்பெண் போன்றவை வாழ்க்கையின் நல்லது கெட்டதுகளை ஒருபோதும் சொல்லிக்கொடுப்பதில்லை. வீட்டிலும் அப்படித்தான் வெற்று எச்சரிக்கைகள்தான் வந்துகொண்டிருக்குமே தவிர, வெளிப்படையாக எதையும் சொல்ல மாட்டார்கள்.

படிக்க:
மம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற குடியானவன் குடும்பத்த காப்பாத்துவானா ?
♦ பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?

பள்ளிப் படிப்பு முடிந்ததும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். ஒரு சிறு நகரத்திலிருந்து பெருநகரத்துக்கு முதன்முறையாக வருகிறேன். விடுதியில் தங்கிப் படித்தாலும் பெற்றோரின் முழுநேர கண்காணிப்பிலிருந்து தப்பிக்கிறோம் என்கிற எண்ணம் சுதந்திர உணர்வைக் கொடுத்தது. ஆண்களுடன் படிக்கிறேன், பழகுகிறேன். கூச்ச உணர்வும் இல்லை, ஈர்ப்பும் இல்லை; எச்சரிக்கை உணர்வு அதிகமாகவே இருந்தது.

பிறகு ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்கிறேன். முதல் இரண்டு ஆண்டுகள் பணியைக் கற்றுக்கொள்வதிலும் தக்க வைத்துக்கொள்வதிலும் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டன. காதல் பற்றியெல்லாம் நினைக்க நேரமே இல்லை. அதன் பின், வழக்கமான பணி வாழ்க்கையில், பெற்றோரை விட்டு தள்ளியிருக்கும் சூழலில் நேர்ந்த தனிமை. சாதாரணமாக சாப்பீட்டீர்களா என்று கேட்டால்கூட மிகப்பெரும் ஆறுதலாக இருக்கும். அப்படியொருவர் மீது ஈர்ப்பு அல்லது காதல் என்று சொல்லமுடியாத ஒரு உணர்வு. அது அடுத்தக்கட்டத்துக்குப் போகாமல் அப்படியே முடிந்தது.

அதன் பிறகுதான் கதாநாயகன் அர்ஜுன் ரெட்டியை சந்திக்கிறேன். நான் பணியாற்றிய நிறுவனத்தில் அர்ஜுன் ரெட்டி, வேறொரு பிரிவில் வேலைப் பார்த்தார். ஒரு புராஜெக்ட்டுக்காக இருவரும் ஒன்றாக வேலைப் பார்க்க நேர்ந்தது. அர்ஜுன் ரெட்டி நல்ல உயரம்; முறுக்கேறிய உடல்வாகு; நன்றாகப் பாடுவார். ஆரம்பக்கட்ட ஈர்ப்புக்கு இதுபோதுமானது என்கிறது அறிவியல். எனக்கும் அப்படித்தான்.

அர்ஜுன் ரெட்டிக்கு என் மீது ஈர்ப்பு வர ‘அப்பாவிப் பெண்’ தோற்றம் போதுமானதாக இருந்திருக்கிறது. தான் சொன்னதைக் கேட்டு நடக்கும் ஒரு தலையாட்டி பொம்மையாக வேண்டும். எந்தவகையான மீறலிலும் ஈடுபடாத அடிமையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் பொருள். ஈர்ப்பு காதலாக முகிழ்ந்த காலத்தில் அர்ஜுன் ரெட்டி தன்னைப் பற்றிய ‘உண்மை’களை சொல்கிறார். தான் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர்கள் இருவரையும் கட்டாயப்படுத்தி பிரித்துவிட்டதாகவும் சொல்கிறார்.

என்னை முற்போக்கானவள் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. என்னுடைய ’டிராக் ரெக்கார்ட்’ கடைந்தெடுத்த கட்டுப்பெட்டித்தனமான பின்னணியுடையது. எனவே, ஆண்களின் பலதார மணம், பல பெண்களுடன் உறவு என்பது இந்திய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை. அத்தகைய சமூகத்தில் வளர்ந்த நான், அர்ஜுன் ரெட்டியின் முந்தைய வாழ்க்கை குறித்து, கவலை கொள்ளவில்லை. பரிவு கொண்டேன், காதல் மேலும் கூடியது.

அதே நேரத்தில், அர்ஜுன் ரெட்டி கடைந்தெடுத்த ஆணாதிக்கவாதி என்பதை அறியாமல் ஒரு நபர் மீது எனக்கிருந்த ஈர்ப்பும் காதலுமல்லாத உணர்வு குறித்து பகிர்ந்துகொண்டேன். திருமணத்துக்கு முன், அர்ஜுன் ரெட்டிக்கு அது ஒரு விடயமாகவே தெரியவில்லை. அர்ஜுன் ரெட்டியின் பரந்த மனப்பான்மையை எண்ணி பெருமை கொண்டேன்.

பணிக்குச் செல்ல ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளிலேயே திருமண அழுத்தம் தர ஆரம்பித்துவிட்டனர் பெற்றோர். திருமணம் வேண்டாம் என்று ஒருமுறை சொன்னபோது என் அம்மா, திருமணம் செய்துகொள்ளாதவர்களுக்கு சுடுகாட்டில் இடம் கிடைக்காது என்றார். எந்த விலை கொடுத்தேனும், எப்பாடுபட்டாவது தங்களுடைய பிள்ளைகளுக்கு ‘காலாகாலத்தில்’ திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் எதிர்பார்ப்பு. இது குழந்தைகள் மீதான அக்கறை என்பது போய், இறுதியில் அது அழுத்தமாகவே மாறிவிடுகிறது.

இத்தகைய சூழலில், திருமணத்தை தள்ளிப்போட்டவள், திருமணம் செய்துகொள்கிறேன் என்கிறாளே என்ற விதத்தில் என்னுடைய திருமணத்துக்கு உடனே ஒப்புதல் அளித்தார்கள். திருமணத்துக்கு முந்தைய நாள், அர்ஜுன் ரெட்டி, மதுபோதையில் இந்தத் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்றார். முந்தைய காதல் பிரிவை மறக்கமுடியாமல் அர்ஜுன் ரெட்டி தவிப்பதாக நினைத்தேன். திருமணம் ஆன நான்கைந்து மணி நேரத்திலேயே அர்ஜுன் ரெட்டியின் நிஜமான முகத்தை தரிசிக்க முடிந்தது.

படிக்க:
பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை
♦ ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள பெண்களைப் பேசவிடு!

அர்ஜுன் ரெட்டியால் குடிக்காமல் இருக்க முடியாது; அதனால் தொட்டதெற்கெல்லாம் கோபம் வரும். பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கென்றே பிறந்த அடிமைகள் என்பது அர்ஜுன் ரெட்டியின் அசைக்க முடியாத நம்பிக்கை. முந்தைய நாள் இரவு திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று சொன்னதற்குக் காரணம் நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பு ஒருவர் மீது நான் ஈர்ப்பு கொண்டதுதானாம். நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ தன் பாலின் மீதோ எதிர்பாலின் மீதோ ஈர்ப்பு வராமல் இருக்குமா? இதெல்லாம் ஒரு விசயமா என்றபோது, அப்படியெல்லாம் இல்லை, நீ அவனுடன் எப்படியெல்லாம் கற்பனையில் வாழ்ந்திருப்பாய் என்றார் அர்ஜுன் ரெட்டி. ஒரு ஆணாதிக்க சைக்கோவால் மட்டுமே இப்படி கேட்க முடியும்.

ஆணாதிக்க சைக்கோக்களைக் கொண்ட சமூகத்தில் அர்ஜுன் ரெட்டியின் சைக்கோத்தனத்தை சகித்து வாழ முயற்சித்தேன். முதல் நாளே பிரச்சினை என்பதை யாரிடம் சொல்வது, ஊரிலிருந்து வந்திருந்த பெற்றோர் வீடுகூட போய் சேர்ந்திருக்க மாட்டார்களே… அடுத்த சில மணி நேரத்தில் அர்ஜுன் ரெட்டி வந்து மன்னிப்பு கேட்டார். இனி அப்படி பேசமாட்டேன் என்ற அர்ஜுன் ரெட்டி கட்டியணைத்த போது, சினிமாக்களில் காட்டப்படுவதுபோல ரொமாண்டிக்காக இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? பயமும் பீதியுமாக இருந்தது.

அர்ஜுன் ரெட்டி போன்ற ஆணாதிக்க சைக்கோக்களை அவர்களுடைய சூழலும் சேர்ந்தே உருவாக்குகிறது. அப்படிப்பட்ட சூழலில் குறைந்தபட்ச மரியாதை உணர்வுடன் வளர்ந்த பெண்களால் வாழ்வது இயலாத விடயம். பிரச்சினை எங்கிருந்து கிளம்பும் எப்படி முடியும் என்று தீர்மானிக்க முடியாது. எதற்காக அடிவிழும் என்று அனுமானிக்க முடியாது. பயத்துடனே வாழ வேண்டும். அர்ஜுன் ரெட்டி போன்ற குடிகாரர்களின் வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால், இதெல்லாம் நடக்குமா என கற்பனையில்கூட நினைத்திராத விடயங்கள் நடக்கும்.

அர்ஜுன் ரெட்டி எப்போது படுக்க அழைத்தாலும் படுக்க வேண்டும். உங்கள் விருப்பம், நிராகரிப்பு குறித்து அங்கே எந்தவித அனுசரணையும் இருக்காது. உங்களுக்கு மாதவிடாய் காலம் என்பது பற்றியோ, பகலாக இருக்கிறதே என்பது பற்றியோ, நள்ளிரவு 3 மணி, ஆழ்ந்த உறக்கத்துக்கு போய்விட்ட 12 மணிக்கு எழுப்பி உறவுக்கு அழைத்தாலும் நீங்கள் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் நாகூசும் வார்த்தைகளால் நீங்கள் அர்ச்சிக்கப்படுவீர்கள். உங்களுக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு இருப்பதாக உறுதிபடுத்தப்படும். சில சமயங்களில் அடியும் விழும். இது ரொமாண்டிக்காக இருக்கும் என உங்களால் மெய்சிலிர்க்க முடிகிறதா?

அர்ஜுன் ரெட்டி போன்ற போதைக்கு அடிமையான ஒருவனால், குறைந்தபட்சம் மனிதனாகக்கூட நடந்துக்கொள்ள முடியாது. கூடவே, மற்றொரு போதையான ஆணாதிக்க திமிரும் சேர்ந்துகொள்ளும்போது விளைவுகள் விபரீதமானவை. ‘திருத்திவிடுவேன்’, ‘திருந்திவிடுவான்’ என சொல்வது உங்களுக்கு நீங்களே குழிவெட்டிக்கொள்வதுபோலத்தான்.

இப்படியான உறவிலிருந்து எளிதாக வந்துவிடலாமே என நீங்கள் கேட்கக்கூடும். இந்திய சமூகத்தில் திருமணம் என்பது ஒரு பொறி. அதில் சிக்கிக்கொண்டவர்கள் வெளிவருவது அத்தனை எளிதல்ல. திருமணமான ஒரு மாதத்தில் என்னைப் பார்க்க வந்த அம்மாவிடம், அர்ஜுன் ரெட்டி ‘உங்கள் பெண் பல ஆண்களுடன் சுற்றியவள்’ என ஒரே போடாக போட்டார். அதற்கு அம்மா, “டாக்டர் கிட்ட சர்டிபிகேட் வாங்கிட்டு வந்தா என் பொண்ணு நல்லவன்னு ஒத்துகுவியாப்பா” என்றார் அப்பாவித்தனமாக. முதன்முறையாக அந்த நிமிடம் அம்மாவை வெறுத்தேன்.

எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும்; திருமணத்தில் ஏதேனும் பிரச்சினை வந்தால், அதை அப்படியே அடக்கிவிட்டு, அந்த வாழ்க்கையை தொடர வேண்டும். இதைத்தான் சமூகம் விரும்புகிறது. அம்மாவும் இந்த சமூகத்திலிருந்து வந்தவர்தான். இங்கே திருமண உறவில் வல்லுறவு, வன்முறை என்பது இயல்பானதாகவே இருக்கிறது.

திருமண உறவில் இருந்த அப்பா, வேறொரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று பிரச்சினையானதாக அம்மா ஒரு முறை பகிர்ந்துகொண்டார். அவருக்கு அப்பா மீது கோபம் இருந்தது. ஆனால், அப்பாவுடனான உறவை முறித்துக்கொள்ளும் தன்மானம் அவருக்கு இல்லை. அதேபோல், அர்ஜுன் ரெட்டியும் ஒரு பெண்ணிடம் நடந்துகொள்கிறார். நான் சகித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் வதை செய்யும் இந்த குடும்ப அமைப்பிலிருந்து என்னால் தப்ப முடியவில்லை. இறுதியில் அம்மாவின் நகலாக நான் மாறிப்போனேன்.

அர்ஜுன் ரெட்டிகளை சகித்துக்கொள்கிற பெண்கள் இப்படித்தான் வழிவழியாக உருவாக்கப்படுகிறார்கள். அர்ஜுன் ரெட்டி போன்ற கடைந்தெடுத்த ஆணாதிக்க சினிமா வெற்றிபெறுவதும், அது பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்படுவதும் சமூகத்தின் சீழ்பிடித்த நிலையைத்தான் காட்டுகிறது.

அர்ஜுன் ரெட்டி போன்ற கதாபாத்திரத்தை கதாநாயகனாக பெண்கள் வரித்துக்கொள்வதைப் பார்க்கும்போது பயமே மேலிடுகிறது. அப்படிப்பட்டவர்களை ஒரு கணமேனும் இந்தப் பதிவு சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை எழுதியிருக்கிறேன்.

நன்றி,

தமிழரசி

அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !

ட்டிஸ்கர் பழங்குடிகள் தங்களுடைய போராட்டத்தின் மூலம் அம்மாநிலத்தின் தந்தவாடா பகுதியில் உள்ள பைலாடிலா மலைப்பகுதியில் அமைய இருந்த அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை அமைய விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அம்மக்களின் தொடர்ச்சியான ஆறு நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு சட்டிஸ்கர்  மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகல் சுரங்கம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

இரும்புத்தாது சுரங்கப் பின்னணி :

இம்மாநிலத்தில் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் 2014-ம் ஆண்டு அங்குள்ள கிராம சபை மூலமாக இந்த சுரங்கத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போதைய போராட்டத்தில் பங்கெடுத்த பழங்குடிகள் அந்த கிராம சபை என்பது ஒரு மோசடி. கிராம சபைத் தீர்மானத்தில் 104 பேர்தான் கையொப்பமிட்டுள்ளனர். ஆனால் நாங்கள் 600 வாக்காளர்கள் உள்ளோம். இது எப்படி ஒரு கிராம சபைத் தீர்மானமாக இருக்க முடியும் என்கிறார்கள்?

வனத்துறை கடந்த 2015-ம் ஆண்டு 315.813 ஹெக்டர் பரப்பளவில் பைலாடிலா மலைப் பகுதி எண் 13-ல் இரும்பு தாது சுரங்கம் எடுப்பதற்கு அனுமதி வழங்கியது. இந்த 13 பிரிவு மலைப்பகுதியில் 25 கோடி டன் இரும்புத்தாது இருப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதானி

இதற்காக மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சி நிறுவனமும், மாநில அரசின் சட்டிஸ்கர் கனிம வளர்ச்சி நிறுவனமும் (51:49 என்ற பங்கின் அடிப்படையில்) சேர்ந்து கூட்டு நிறுவனமாக NCL  என்ற நிறுவனத்தை உருவாக்கியது. பின்னர் 2018 டிசம்பரில் 25 வருட குத்தகைக்கு அதானி குழுமத்திற்கு (MDO –Mineral development cum Operator) இந்த மலைப்பகுதி எண் 13  வழங்கப்பட்டது.

இது கடந்த ஆண்டு நடைபெற்ற அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவசரமாக அக்குழுமத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டிஸ்கரின் முன்னாள் பா.ஜ.க முதலமைச்சர் ராமன் சிங் ஆட்சியின்போது அதிகாரவர்க்கத்தின் தலையீட்டின் பேரில் இந்த குத்தகை வழங்கப்பட்டிருக்கிறது.

இச்சுரங்கத் திட்டத்திற்காக இக்காடுகளில் சுமார் 25,000 மரங்களை  வெட்ட வேண்டியதிருக்கும். இதுவரை சுமார் 10,000 மரங்கள் வெட்டப்பட்டு இருக்கின்றன. சுரங்கத்திற்காக சாலை அமைக்கும் பணியும் தீவிரமாக நடைப்பெற்று வந்தது.

சட்டிஸ்கர் பழங்குடிகளின் நம்பிக்கை : 

பழங்குடிகள் இந்த மலையில் தங்கள் தெய்வம் வசித்து வருவதாக நம்புகிறார்கள்.  “எங்கள் தெய்வமான பீத்தோர் ராணி இந்த மலையில் வாழ்கிறார். பீத்தோர் ராணி எங்கள் வன தேவதை. அவர் எங்கள் தெய்வம் நந்தராஜின் துணை. எங்கள் கடவுள் நந்தராஜும், பீத்தோர் ராணியும் இந்த மலைகள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் ஒவ்வொரு பாடலிலும் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. அரசுக்கு இது ஒரு இரும்புத்தாது மலை எண் 13. ஆனால் இது எங்களுக்கு வாழ்விடம்.” என்று பழங்குடிகள் போராட்டத்தின் போது தெரிவித்தனர்

படிக்க:
தூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்
♦ ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !

பைலாடிலா மலைப்பகுதியில் உள்ள மற்ற இடங்களில் பல வருடங்களாக NMDC மூலம் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தாலும், இந்த 13 எண் மலைப் பகுதியில் தங்கள் தெய்வம் வாழ்வதாக நம்புவதால், அவர்கள் இந்த மலைப்பகுதியில் தாது வெட்டி எடுக்க அனுமதிக்கப் போவதில்லை என்று கூறுகிறார்கள்.

மேலும் புதியதாக NCL என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டதும், மலையின் குத்தகையை அதானி குழுமத்திற்கு கொடுத்ததும், பழங்குடிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.

சட்டிஸ்கர் பழங்குடிகளின் போராட்டம் :

தந்தவாடா, சுக்மா, பிஜப்பூர்  மாவட்டங்களில் உள்ள, 200 கிராமங்களிலிருந்து திரண்ட சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பழங்குடிகள் தேசிய கனிம வளர்ச்சி நிறுவனத்தின் (NMDC) முன்பு சங்க்யூத் பஞ்சாயத் சமிதி என்ற அமைப்பின் கீழ் ஜூன் 7-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.

NMDC யிலிருந்து சுமார் 60 கீ.மீ. தூரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை தங்கள் தலையில் சுமந்து கொண்டு, நடந்தே NMDC வாயிலுக்கு வில், அம்புகளோடு வந்தடைந்தனர்.

பழங்குடி மக்களின் முற்றுகைப் போராட்டம் (கோப்புப் படம்)

NMDC  சோதனைச் சாவடியை மறித்தும், இரும்புத்தாது சுரங்கத் தொழிலாளர்களை வனப்பகுதிக்கு உள்ளே அனுமதிக்காமலும் போராடியுள்ளனர். இந்தப் போராட்டத்தை கண்டு பயந்த சட்டிஸ்கர் மாநில அரசு, பழங்குடிகளின் தலைவர்கள் மற்றும் பஸ்தர் காங்கிரஸ் மக்களவை எம்.பி தீபக் பாஜ்  ஆகியோரிடம் நடத்திய பேச்சுவார்த்தை மூலம், தற்காலிகமாக இரும்புத்தாது சுரங்கம் சம்பந்தமான அனைத்து விதமான வேலைகளையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது. சட்டிஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் யோகி பழங்குடிகளுக்கு ஆதரவாக போராட்டக்களத்திற்கு வந்துள்ளார்.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதை தடுக்கவும், அப்போது இருந்த கிராம சபை எடுத்த உத்தரவிற்கா விசாரணை கமிட்டி அமைக்கவும் சட்டிஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.

அதானி குழுமத்திற்கு வழங்கிய குத்தகையை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக பூபேஷ் கூறுகிறார். NMDC என்பது மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் மாநில அரசின் கீழ் மட்டும் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்கிறது சட்டிஸ்கர் மாநில அரசு. இதில் என்ன சிறப்பம்சம் என்றால் NCL-ன்  இயக்குநர்களில் ஒருவராக பூபேஷ் பாகல் இருக்கிறார்.

ஜனதா காங்கிரஸ் சட்டிஸ்கர் கட்சியைச் சேர்ந்த அமித் ஜோகி பூபேஷ்க்கும், அதானி சகோதரர்களுக்கும் இடையே நடைபெற்ற  திரைமறைவு பேச்சுவார்த்தையை சட்டிஸ்கர் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார்.

படிக்க:
அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !
♦ ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !

தந்தவாடாவில் பல்லிளிக்கும் அரசு கட்டமைப்பின் தோல்வி :

  • கிராம சபை என்ற அரசு உறுப்பு எவ்வாறு புரையோடி உள்ளது என்பது அது வழங்கிய ஒப்புதல் மூலம் தெளிவாகி உள்ளது. மற்றும் அதை எவ்வாறு எளிதாக வளைக்க முடியும் என்பதற்கான ஒரு உதாரணமாக இது இருக்கிறது.
  • பா.ஜ.க அல்லது காங்கிரஸ் என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு சூறையாட அனுமதி வழங்குவதில் போட்டிதான் நடக்கிறது என்பதும் இதில் தெளிவாகிறது.
சட்டிஸ்கர் முதல்வர் பூபேஷ்

தந்தவாடா எஸ்.பி. அபிசேக் பல்லவ் தாங்கள் போராட்டக் களத்தில் மாவோயிஸ்ட்டுகளின் துண்டறிக்கைகளை கண்டறிந்து உள்ளதாகவும், மாவோயிஸ்ட்டுகள் போராட்டத்தை தூண்டுவதாகவும் கூறியுள்ளார்.

சங்க்யூத்  சர்பந்த் ஜன் சங்கர்ஸ் சமிதி என்ற அமைப்பின் தலைவர், நாங்கள் எப்போதல்லாம் எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோமோ அப்பொழுதெல்லாம் அவர்கள் இதை வழக்கமாக சொல்வார்கள். நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக, எங்கள் காடுகளுக்காக, பூமிக்காக, தெய்வத்திற்காக போராடுகிறோம் என்கிறார்.

தந்தவாடாவில் நிறைந்து  இருப்பது கனிம வளங்கள் மட்டுமில்லை!  பீத்தோர் ராணியும், பழங்குடி மக்களின் போராட்டச் சிந்தனையும்தான்!!

பரணிதரன்

செய்தி ஆதாரம் :
Why is Bhupesh Baghel silent on his alleged meeting with Adani officials?
Chhattisgarh mining protests continue on Day 5
♦ Chhattisgarh stops iron ore mining at in Bailadila after tribal protests 
♦ After protests by tribals Chhattisgarh stops mining in Bailadila hills
Dantewada Tribal Protest Enters Fifth Day Against Adani Mining on Hill

இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

  1. ஒரு ஏழை முசுலீம் பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை!
    “தொலைக்காட்சிகளில் தீவிரவாதியாக அடையாளப் படுத்தப்பட்டு விட்டதால், தன்னை யாராவது அடித்தே கொன்றுவிடக்கூடும்” என்ற அச்சத்தில் இருக்கிறார், ரியாஸ் அகமது.
  2.  இந்திய நாடு அடி(மை) மாடு!
    இராமனை விடவும் பாரதிய ஜனதாவின் வெற்றிக்குப் பெரிதும் பயன்பட்ட மாடுதான் சங்கப் பரிவாரத்தின் பக்திக்கு உரியது என்றால், அது மிகையல்ல.
  3. கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல்!
    பா.ஜ.க. அமைத்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேசிய சாதிக் கூட்டணி எனக் குறிப்பிடுமளவுக்குப் பல்வேறு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளை உள்வாங்கியிருக்கிறது.
  4.  மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம்!
    இந்து மதவெறி பயங்கரவாதத்தைச் சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனோநிலைக்கு வடமாநில இந்துக்கள் ஆட்பட்டிருப்பதுதான் கவலைக்குரிய விடயம்.
  5.  மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம்!
    மோடியை இன்னமும் மீட்பராகக் கருதும் அளவிற்கு வட இந்திய மக்களிடம் அரசியல் அறியாமை ஆழமாக வேர்விட்டிருக்கிறது.
  6.  தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி: மோடி வித்தைகள் பலிக்காது!
    பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மென்மேலும் சலுகைகள் அளிப்பது என்பதைத் தவிர, வேறு தீர்வுகள் மோடியிடம் கிடையாது.
  7.  முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் பாசிசத்தின் வெற்றியும்
    முதலாளித்துவம், தனது நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள மோடி போன்ற பாசிஸ்டுகளைத்தான் மக்கள் முன் மாற்றாக நிறுத்துகிறது.
  8.  மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி?
    சட்டத்தின் ஆட்சியை யாரேனும் நிலைநாட்ட மாட்டார்களா என்று மே.வங்க மக்கள் ஏங்கிக்கொண்டிருந்த சூழல், வங்கத்தில் பா.ஜ.க. காலூன்றுவதற்குப் பொருத்தமான தருணமாக அமைந்துவிட்டது.
  9.  காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா?
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைக்கூடப் பின்பற்ற மறுப்பதன் மூலம் கர்நாடகாவிற்குச் சாதகமாகச் செயல்படுகிறது, காவிரி ஆணையம்.
  10.  ஈழப் போர்க் குற்ற விசாரணை : இலங்கைக்குச் சலுகை! ஈழத் தமிழருக்கு வஞ்சனை!
    ஈழப் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், காகிதத் தீர்மானமாகவே இருந்து வருகிறது.
  11.  இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு!
    இரானில் அமெரிக்க அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தவே, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, போர் அச்சுறுத்தல்களையும் ஏவிவிட்டிருக்கிறது, அமெரிக்கா.
  12.  மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !
    அதானி குழுமத்தின் அபரிதமான வீக்கத்தின் பின்னே, ஊழல் கறைபடியாத உத்தமர் மோடியின் திருவிளையாடல்கள் மறைந்துள்ளன.
  13.  வேண்டாம் ஹைட்ரோ கார்பன் ! எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
    பொன் விளைந்த பூமியாக இருந்த நைஜர் டெல்டா, எண்ணெய்க் கிணறுகளால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிட்டது.
  14. டெல்டாவின் அழிவு ! | வேதாந்தாவின் வளர்ச்சி !
    நைஜீரியாவில் ஒகோனி மக்களுக்கும், நைஜர் டெல்டாவுக்கும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் என்ன செய்தனவோ, அதைத்தான் வேதாந்தா நிறுவனம் நமக்கும் செய்யும்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

கேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் !

கேள்வி : //தரகு முதலாளித்துவம் தரகு ஏகாதிபத்தியமாக வளருமா? இரண்டிற்கும் என்ன வேறுபாடுகள்?//

– காலன்

ன்புள்ள காலன்,

ரகு முதலாளித்துவம் என்பது ஏகாதிபத்தியங்களின் கீழ் நிதி, தொழில் நுட்பம் இதர வகைகளில் அவர்களைச் சார்ந்து இருக்கும் முதலாளித்துவம் ஆகும். தரகு என்ற சொல்லே அதைத்தான் உணர்த்துகிறது.

ஏகாதிபத்தியம் என்பது உற்பத்தியில் ஏகபோகம்; ஆலை மூலதனத்துடன் வங்கி மூலனதனம் கலந்து நிதி மூலதனம் உருவாதல்; நிதிமூலதன ஆதிக்க கும்பல்களின் தோற்றம், மூலதனத்தை ஏற்றுமதி செய்வது, சர்வதேசியக் கூட்டுக் கம்பெனிகள் உருவெடுத்தமை, நாடுகளுக்கிடையே பிரதேச வரையறைக்கான, செல்வாக்கு மண்டலத்திற்கான போட்டி, உலகைப் பங்கீடு செய்து கொண்டது பூர்த்தியாகி இருந்தால், இனி மறுபங்கீடு செய்து கொள்ளப் போட்டி தொடங்குதல், உலகப் போரில் இறங்குதல் என்பவை ஆகும்.

2015 -ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது வரிசையில் நின்று அவரைச் சந்தித்த இந்திய தரகு முதலாளிகள். (கோப்புப் படம்)

நமது நாட்டில் இருக்கும் தரகு முதலாளிகள் தற்போது தேசங்கடந்து தமது தொழில் விரிவாக்கத்தைக் கொண்டிருந்தாலும், அன்னிய நிறுவனங்களை விலைக்கு வாங்கினாலும் அடிப்படையில் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்களிடம் கடன் வாங்கியும், தொழில் நுட்ப ரீதியாக சார்ந்துமே செயல்படுகின்றனர். எனவே இவர்கள் ஏகாதிபத்திய நாட்டின் ஏக போக முதலாளிகள் எனும் வகையினத்திற்குள் வரமாட்டார்கள்.

♦ ♦ ♦

கேள்வி : //how to study socialism & communism? சோசலிசம் – கம்யூனிசத்தை எப்படி கற்பது?//

– காலன்

ன்புள்ள காலன்,

மார்க்சியம் கற்பது குறித்து இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும் :

♦ மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?

இதைத் படியுங்கள், பிறகு எங்களது மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் தோழர்களோடு இணைந்து நீங்களும் மார்க்சியம் கற்கலாம்.

♦ ♦ ♦

கேள்வி : // கேலிக்கூத்தாக்கும் அரசியல் கட்சி கூட்டணிகளை தவிர்க்க – கட்சிகள் “தனித்தே போட்டியிட வேண்டும்” என்று உத்தரவு இட தேர்தல் கமிஷனுக்கு திராணி உண்டா.. ? //

– எஸ். செல்வராஜன்.

ன்புள்ள செல்வராஜன்,

இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரம் தேர்தலை தேர்தல் விதிமுறைகள், வழிமுறைகளோடு நடத்துவதை மட்டுமே கொண்டிருக்கிறது. நீங்கள் கூறுகின்றபடி நடக்க வேண்டுமென்றால் அரசியல் சாசன சட்டத்தில் திருத்தங்கள் போடப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

மற்றபடி தேர்தல் கூட்டணிகள், விலகல்கள், பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஆளுங்கட்சி அரசாங்கத்தின் அதிகார வர்க்கங்கள், உளவுத்துறைகளை வைத்து நடத்துகின்றன. சென்ற தேர்தலில் தேர்தல் கமிஷன் எப்படி பாஜக கமிஷனாக செயல்பட்டது என்பதை அறிவோம்.

♦ ♦ ♦

கேள்வி : //வரும் தேர்தலில் இந்திய அளவில் பாஜக வெற்றியை தக்க வைக்குமா?//

– திலீபன் மோகன்

ன்புள்ள திலீபன் மோகன்,

தற்போது பாஜக வெற்றியடைந்திருப்பதை நீங்களே அறிவீர்கள். வெற்றிக்கு பிறகு மோடி அரசு தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் செய்த அடக்குமுறைகளை தீவிரமாக செய்யத் துவங்கியிருக்கிறது.

வெளிப்படையான பயங்கரவாதிகளே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு உறுப்பினர்களாக ஆகியிருக்கிறார்கள். பாஜக உறுப்பினர்கள் கீழவையில் பதவிப் பிரமாணம் எடுக்கும் போது ஜெய் ஸ்ரீராம் என முழங்குகிறார்கள்!

♦ ♦ ♦

கேள்வி : //உங்களது தளத்தில் நம் நாட்டின் குறைகள் மட்டுமே வெளிவருகின்றன. ஏன் நம் நாட்டில் நிறைகள் எதுவும் நடக்கவில்லையா, ஏன் அவற்றை பதிவிடுவதில்லை?//

– விஷ்ணுகுமார்

அன்புள்ள விஷ்ணுகுமார்,

நாடு என்பது என்ன? அது அங்கே இருக்கும் மக்களைக் குறிக்கிறது. அந்த மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை வினவு போன்ற மாற்று ஊடகங்கள் தெரிவிக்க விரும்புகின்றன.

அதில் அம்பானி, அதானி, டாடா, அகர்வால் போன்ற முதலாளிகள் சீரும் சிறப்புமாக வாழும்போது பெரும்பான்மை மக்கள் இந்த கோடை காலத்தில் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த முரண்பாட்டை உள்ளது உள்ளபடி வெளியிடுவது சரிதானே? அடிப்படை குடிநீருக்கே இந்தக் கதி என்றால் கல்வி, சுகாதாரம், வேலை, இருப்பிடம் அனைத்திலும் நமது மக்கள் நிற்கதியாகத்தானே நிற்கிறார்கள்.

அண்டப்புளுகன் அர்னாப்

இந்தக் குறைகளை வெளியிடுவதன் நோக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு எதிர்காலத்தில் அவர்கள் தமக்கான வாழ்வை நிர்ணயம் செய்யும் வண்ணம் புரட்சி செய்ய வேண்டும் என்பதே. ‘நல்லதொரு குடும்பம், ஹார்லிக்ஸ் குடும்பம்’ போன்றவை விளம்பர மாயையகளே!

ஆளும் வர்க்க ஊடகங்களோ இதற்கு நேர்மாறான செய்திகளை வெளியிடுகின்றது. மோடி அரசு அமெரிக்க அடிவருடியாக செயல்படுகிறது என்று நாம் சொன்னால், தினமலரோ, அர்னாப் கோஸ்வாமியோ வெளிநாடுகளில் மோடி சுற்றுப் பயணம் செய்து நம் நாட்டின் மதிப்பை பன்மடங்கு உயர்த்திருக்கிறார் என்பார்கள். இறுதியில் நேர்மறை செய்திகள் என்பது இப்படித்தான் பொய்யும் புரட்டுமாக இருக்கின்றன.

♦ ♦ ♦

கேள்வி : //தமிழ்த் தேசியம் இங்கு சாதிய தேசியமாக, பிற்போக்குத் தேசியமாக (தியாகு போன்றவர்களைத் தவிர) இருக்கும் நிலையில், முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவத்தையும் விமர்சனங்களையும் முன்வைத்து தமிழ்த்தேசியம் பேசும் தேவேந்திர குல வேளார்களின் (உள் நோக்கத்துடன் சாதியை குறிப்பிடவில்லை) கண்ணோட்டம், குறைபாடு, சிக்கல்கள் பற்றி வினவின் பார்வை என்ன?//

– மோகன்

ன்புள்ள மோகன்,

தேவேந்திர குல வேளாளர்கள் மாறுபட்ட வடிவத்தில் முன் வைக்கும் தமிழ் தேசியம் என்ன? எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்? அதன் இணைப்பு ஏதும் அனுப்ப இயலுமா?

புதிய தமிழகம் – டாக்டர் கிருஷ்ணசாமி நேரடியாக பாஜக அடிமையாக மாறியதுதான் சமீபத்திய செய்தி. இதைத்தாண்டி தமிழ்த்தேசியம் பேசும் தேவேந்திர குல வேளாளர்கள் யார்?

♦ ♦ ♦

கேள்வி : //ராமன் கொன்றது அவரது மகன்கள் லவ, குசா என்ற செய்தி உண்மையா?அதன் ஆதாரம் என்ன?//

– அபுசார்

ன்புள்ள அபுசார்,

தோராயமாக ஒரு கணக்கீட்டின் படி இராமயணக் கதையினைக் கூறும் நூல்கள் பல்வேறு மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. அவற்றில் வால்மீகி ராமாயணம் பழமையானது.

இந்தியாவிலேயே தமிழில் கம்பர், இந்தியில் துளசிதாசர், மலையாளத்தில் எழுத்தச்சன், அசாமியில் மாதவ் கங்குனி, ஒரியாவில் பலராம்தாஸ் போன்றோர் அதை மறுபடைப்பாக்கம் செய்துள்ளார்கள்.

இதன்றி பர்மா, இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், இலங்கை, நேபாள், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், மங்கோலியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகள் இயற்றப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் வால்மீகி இயற்றிய ராமாயணத்திலிருந்து சிறிதோ, பெரிதோ மாறுபட்டும் இருக்கின்றன. வால்மீகி ராமாயணத்திலேயே முதல் காண்டமான பால காண்டம், இறுதி காண்டமான உத்தர காண்டம் இரண்டும் வால்மீகியால் எழுதப்பட்டதல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மற்ற காண்டங்களோடு உள்ள மொழிநடையும், கதையிலும் மாறுபாடு இருப்பதால் அப்படி கூறுகின்றனர்.

உத்தரக் காண்டத்தின் படி இராமன் சீதையின் மேல் சந்தேகம் கொண்டு காட்டில் விட்டுவிடுகிறான். அங்கே வால்மீகி ஆசிரமத்தில் சீதைக்கு லவன், குசன் எனும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றனர். ராமனின் அசுவமேத யாகக் குதிரையை அவர்கள் கானகத்தில் கட்டி வைக்க, பிறகு ராமனின் சகோதர்களான இலக்குமணன், பரதன், சத்துருக்கனன் ஆகியோர் இரட்டையர்களோடு போரிட்டு தோற்க, பின்பு ராமனே வந்து சண்டை போடுவதாக ஒட்டக்கூத்தர் கதை சொல்கிறார்.

இராமனின் கதை இப்படி வெவ்வேறு நாடுகளின் பண்பாடுக்கேற்ப வேறு வேறு வடிவங்களை எடுக்கின்றன. ஒரு ராமாயணத்தில் ராமனும் சீதையும் சகோதர சகோதரிகளாக இருக்கின்றனர். எனவே நீங்கள் கேட்டிருப்பது போல ஏதாவது ஒரு இராம கதையில் இருந்திருக்கலாம். எங்களுக்குத் தெரியவில்லை.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

இத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 14

டோக்ளியாட்டி

விரிவுரை 3

தேசிய பாசிஸ்டுக் கட்சி

பாசிசம் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் யுத்தத்திற்கு முன்னர் இருந்து வந்த பூர்ஷுவா சக்திகளின் அரசியல் நிறுவனம் பற்றி நான் ஏற்கெனவே கூறியதை தோழர்கள் நன்கு நினைவில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இத்தகைய நிலைமையில் பாசிஸ்டுக் கட்சி எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதையும், அதனால் இன்று ஏற்பட்டுள்ள விளைவுகளையும் அவர்களால் சரியாகப் புரிந்து கொள்வது கடினம்.

பூர்ஷுவா வர்க்கம் ஒரு வலுவான, ஒன்றுபட்ட அரசியல் நிறுவனத்தை என்றுமே பெற்றிருந்ததில்லை; கட்சி வடிவத்திலும் அதற்கு ஒரு நிறுவனம் இருந்ததில்லை. இதுதான் யுத்தத்திற்கு முன்னர் இத்தாலியில் இருந்த நிலைமை. யுத்தத்திற்கு முன்னர் ஓர் அரசியல் கட்சிக்குரிய இயல்பும், பெயரும் கொண்ட ஒரு பூர்ஷுவா அரசியல் நிறுவனத்தை நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்துடனும், செயல்முறையுடனும் நாடு முழுவதுக்குமான ஒரு மத்திய தேசிய நிறுவனத்தையே இங்கு குறிப்பிடுகிறேன். இத்தகைய ஒரு அமைப்பு இருந்ததா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள், உங்கள் முயற்சி வீண்தான். ஏனென்றால் அத்தகைய ஓர் அமைப்பு இருந்ததை உங்களால் காண முடியாது.

இத்தாலியப் பொருளாதாரக் கட்டமைப்பின் நேரடி விளைவிலிருந்து தோன்றியதே இத்தகைய அரசியல் நிலைமை. ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது நாட்டில் கனரகத் தொழில்துறை இருந்து வந்த போதிலும் தேசத்தின் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் அதனால் ஒழுங்குபடுத்த முடியாததே இந்த அரசியல் பலவீனத்துக்குக் காரணம். விவசாயப் பொருளாதாரம் இத்தாலியப் பொருளாதாரத்தில் இன்னமும் பெரும் பங்காற்றி வந்தது. பெரும் எண்ணிக்கையில் இருந்த இடைப்பட்ட பிரிவினரும் ஒரு முக்கியப் பங்காற்றி வந்தனர்.

நீங்கள் எப்படித் துருவிப் பார்த்தாலும் இங்கிலாந்தில் இருப்பது போன்ற ஒரு நிலைமையை இத்தாலியில் காண முடியாது. உதாரணமாக இங்கிலாந்தில் இரண்டு எடுத்துக்காட்டான கட்சிகள் இருக்கின்றன. லிபரல் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி ஆகியவையே அவை. அக்கட்சிகள் தேசிய அளவில் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு திட்டத்தையும், கொள்கை வழியையும், ஒருமைப்பாட்டு உணர்வையும் கொண்டுள்ளன. ஒன்று மாற்றி ஒன்று அதிகாரத்துக்கு வருகின்றன. இத்தாலியில் இத்தகைய கட்சிகள் ஏதுமில்லை.

இதற்குப் பதிலாக, பூர்ஷுவாக்களின் கருத்தோட்டம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்த இயலாதவையும், தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை எய்த முடியாதவையுமான கட்சிகளும் கோஷ்டிகளும்தான் ஏராளமாக உள்ளன. யுத்தத்திற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் மிகப்பல கட்சிகளின் குழுக்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்தனர்.

காஸ்டான்டினோ லஸ்ஸாரி (Lazzari Costantino)

ஆனால் இந்தக் கட்சிகள், குழுக்களின் அரசியல் மற்றும் ஸ்தாபன திட்ப நுட்பத்தைப் பார்ப்பீர்களேயானால் பின் கண்ட முடிவுகளுக்குத்தான் வருவீர்கள்: இக்கட்சிகளை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் காட்டும் எல்லைக் கோடுகள் முனைப்பானவையாக, கூர்மையானவையாக இல்லை. அவை மங்கிப்போய் தெளிவின்றி அரைகுறையாகத்தான் காணப்படுகின்றன. நீங்கள் பெரிய குழுக்களை நெருங்கிச் சென்று பார்க்கும்போது அவற்றிடம் கட்சி இயல்பை நீங்கள் காணமுடியாது. பெரும் எண்ணிக்கையிலுள்ளவர்களைக் கொண்ட குழு கியோலிட்டி குழுதான். ஆனால் அதுவும் கூட ஓர் அரசியல் கட்சி அல்ல. ஒவ்வொரு பிரதிநிதியும் தமது சொந்தப் பகுதியில் ஒரு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்தக் குழு ஒரு ஸ்தாபனம் என்ற முறையில் அதன் சொந்தப் பிராந்தியத்துக்கு அப்பால் சென்றதில்லை. டூரினிலுள்ள லிபரல் முடியாட்சி யூனியனை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கொத்துக் கொத்தாக உள்ள இந்தக் குழுக்கள் ஓர் ஒருங்கிணைந்த கட்சியாக உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை.

ஆனால் அதே சமயம் இடதுசாரி அமைப்புகளை, உழைக்கும் வெகுஜனங்களது அமைப்புகளைப் பார்ப்பீர்களேயானால் முற்றிலும் வேறுபட்டதொரு காட்சியைக் காண்பீர்கள்.

யுத்த முற்கால பிரதிநிதிகள் சபையில் பெரிதும் ஒருங்கிணைந்த ஒரு பூர்ஷுவாக் கட்சியாக இருந்தது ரேடிக்கல் கட்சிதான். இது ஏன்? ஏனென்றால் வடபகுதியைச் சேர்ந்த உழைக்கும் வெகுஜனங்கள் அக்கட்சியின் ஆதார அடித்தளமாக அமைந்திருந்தனர். சோஷலிஸ்டுக் கட்சி உருவான அதே சூழ்நிலையில்தான் ரேடிக்கல் கட்சியும் தோன்றிற்று. ஆனால் அது பூர்ஷுவா ஜனநாயகப் பாதையில் விலகிச் சென்றது. பாட்டாளி வர்க்கத்தின் பல்வேறு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் உதயமானதால் இது ஒரு கட்சியின் வடிவத்தை எய்தியது.

படிக்க:
தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

யுத்த முற்காலத்தில் இருந்த ஒரே கட்சி, உண்மையான ஒரே கட்சி சோஷலிஸ்டுக் கட்சிதான், தேர்தல்களில் மிலானிலும் அதே சமயம் காக்லியரியிலும் ஒரே வேட்பாளரை நிறுத்தக்கூடிய ஒரே கட்சி சோஷலிஸ்டுக் கட்சிதான். இதேபோன்று டூரினிலும் பாரியிலும் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஒரே வேட்பாளரை நிறுத்துவது என்பது எண்ணிக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும்.

நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமரச நடவடிக்கைளின் விளைவாக பூர்ஷுவாக்களின் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டது. இது 1890-1898-ம் ஆண்டுகளில் நடைபெற்றது. இதனை கியோலிட்டியின் காலம் எனக் கூறலாம்.

கியாசின்டோ மெனோட்டி செர்ராட்டி (Giacinto Menotti Serrati)

மேலும், வடக்கிலுள்ள பூர்ஷுவா அரசியல் குழுக்களுக்கும் தெற்கிலுள்ள பூர்ஷுவா அரசியல் குழுக்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு நிலவுவதை நீங்கள் காணலாம். வடக்கில் உள்ள அரசியல் குழுக்கள் விரிந்து பரந்தவை. ஒரு லிபரல் கட்சியை உருவாக்கும் போக்கு கொண்டவை. இந்தச் சக்திகளை ஒன்றுபடுத்தும் பிரச்சினை அச்சமயம் முன்னணிக்கு வந்தது. பத்திரிகைகளிலும் பெரிதும் விவாதிக்கப்பட்டது. ஆனால் அச்சமயம் இது முற்றுப் பெறவில்லை.

தெற்கே செல்வீர்களேயானால் இதைக்கூடப் பார்க்க முடியாது. அங்கு பூர்ஷுவாக்களின் அமைப்பு ஸ்தல நலன்களாலும், தனிப்பட்ட சொந்த நலன்களாலும் சிதறுண்டு கிடந்தது. ரேடிக்கல் கட்சி, சோஷலிஸ்டுக் கட்சி, குடியரசுக் கட்சி (கட்சி என்னும் சொல்லின் உண்மையான அர்த்தத்தில் இது தேசியத்தன்மை கொண்ட ஒரு கட்சியாக இருக்கவில்லை, ஒரு சில இடங்களில் மட்டுமே ஆதரவு பெற்ற ஓர் அமைப்பாக இருந்தது) ஆகிய கட்சிகள் எல்லாம் தெற்கில் ஸ்தல முத்திரைகளாகக் கொண்டவையாகவே இருந்தன. உதாரணமாக சோஷலிஸ்டுக் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நேப்பள்சில் சோஷலிஸ்டுக் கட்சியின் வரலாறும் இத்தாலியின் இதர பிராந்தியங்களில் சோஷலிஸ்டுக் கட்சியின் வரலாறும் ஒரே மாதிரியானதல்ல. சில அம்சங்களில் இது ஏனைய பூர்ஷுவாக் கட்சிகளை ஒத்திருந்தது. கட்சிக்குள் நடைபெறும் கோஷ்டி சண்டைகளிலும், சூழ்ச்சிகளிலும் இது பிரதிபலிக்கக் காணலாம். இதேதான் சிசிலியிலும் நடைபெற்றது. அங்கு இன்னொரு கட்சியைத் துவக்கும் அளவுக்கு உட்கட்சிப் பூசலும் சச்சரவும் கருத்து வேறுபாடும் மேலோங்கி இருந்தன. ரெக்கியோ எமிலியாவில் ¹ நடைபெற்ற சோஷலிஸ்டுக் கட்சியின் தேசிய காங்கிரசில் தேசியவாதிகள் பிளவுபட்டு “சிசிலி” சீர்திருத்தக் கட்சியை அமைத்தனர். வேறு சில குழுக்களும் தோன்றின. இவையாவும் தனியமைப்புகளாக மெஸ்ஸினாவிலும் கடானியாவிலும் சிறிதுகாலம் செயல்பட்டு மறைந்தன.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

1 லியோனிடா பிஸ்ஸோலாட்டியும் மற்ற தீவிர வலதுசாரி சீர்திருத்தவாதிகளும் கியோலிட்டியின் மேன்மேலும் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட காலனிக் கொள்கையை, குறிப்பாக லிபியாவை ஆக்கிரமித்துக் கொண்டதை ஆதரித்தனர்: எமிலியாரெக்கியோவில் 1912 ஜூலையில் நடைபெற்ற சோஷலிஸ்டுக் கட்சியின் 12-வது தேசிய காங்கிரஸில் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். காஸ்டான்டினோ லஸ்ஸாரி, கியாசின்டோ மெனோட்டி செர்ராட்டி தலைமையில் கட்சியின் கட்டுப்பாடு மாக்சிமலிஸ்டுகள் கைக்குச் சென்றது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

ஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் ?

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 7

தற்கிடையில் வெளியே வசந்தம் கும்மாளி போடலாயிற்று.

எப்போதும் போலவே வசந்தம் உள்ளங்களைக் கனிவித்தது, கனவுகளை எழுப்பியது.

“ஆகா, இப்போது துப்பாக்கியும் கையுமாக எங்கேனும் காட்டுக்குப் போனால், எவ்வளவு நன்றாயிருக்கும்! எப்படி, ஸ்தெபான் இவானவிச், சரிதானே? பொழுது புலரும் வேளையில் குடிசையில் பதிபோட்டுக் காத்திருந்தால்… அற்புதமாயிருக்கும்!

காலை நேரம் ரோஜா நிறம் பொலியும், உற்சாகமூட்டும், இளங்குளிர் அடிக்கும். நாம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு உட்கார்ந்திருப்போம். திடீரென்று கல, கல, கல என்ற ஒலி. இறக்கைகள் ஷ்ஷ, ஷ்ஷ, ஷ்ஷ என வீசும் சத்தம். நமக்கு மேலே வால் விசிறி போல விரித்தவாறு இறங்கிவரும் ஒரு பறவை, இன்னொன்று, மூன்றாவது…”

ஸ்தெபான் இவானவிச் ஓசையுடன் மூச்சு இழுத்தார். அவர் நாவில் நீர் ஊறியது போலும். கமிஸாரோ, விடாது பேசிக் கொண்டு போனார்.

“அப்புறம் நெருப்புக்குப் பக்கத்தில் நீர்சுவறாக் கோட்டை விரித்துக் கொண்டு, புகை மணம் வீசும். தேநீரும் கொஞ்சம் வோத்காவும் பருகுவோம். ஒவ்வொரு தசையும் கதகதப்பு அடையும்படி, ஊம்? உழைப்புக்குப் பிறகு..

“ஆஹ்ஹா! ஒன்றும் சொல்லாதீர்கள், தோழர் கமிஸார்..”

இவ்வாறு வேட்டை அனுபவங்களின் வர்ணனைகள் தொடங்கின. ஒருவரும் கவனிக்காத முறையில் பேச்சு போர்முனை நிலவரங்களுக்குத் திரும்பியது. தங்கள் டிவிஷனில், படைப் பகுதியில் இப்போது என்ன நடக்கிறது, பனிக்காலத்தில் கட்டப்பட்ட நிலவறைக் காப்பிடங்கள் நீர் கசிகின்றனவா இல்லையா, அரண்கள் சிதைந்து விட்டனவா இல்லையா, மேற்கே தார் ரோடுகளில் நடந்து பழகிய பாசிஸ்டுகளுக்கு இந்த வசந்தகால நீர்க்குட்டங்களும் சேறும் எப்படியிருக்கும் என்றெல்லாம் அனுமானிக்கலானார்கள் நோயாளிகள்.

பகல் உணவு வேளைக்குப் பிறகு சிட்டுக் குருவிகளுக்கு இரை கொடுப்பது தொடங்கிற்று. சாப்பாட்டுக்குப்பின் எஞ்சிய துணுக்குகளைத் திரட்டி, ஜன்னலின் மேல் திறப்பு வழியே அவற்றைப் பறவைகளுக்காக வெளிக்குறட்டில் போடும் யோசனை ஸ்தெபான் இவானவிச்சுக்கு உதித்தது. இது பொது வழக்கம் ஆகிவிட்டது. இப்போது வெறுமே எஞ்சிய துணுக்குகள் மட்டுமே போடப்படவில்லை. நோயாளிகள் பெரிய துண்டுகளை வேண்டுமென்றே மிச்சம் வைத்து அவற்றைத் துணுக்குகளாக நொறுக்கினார்கள்.

இவ்வாறு, ஸ்தெபான் இவானவிச்சின் யோசனையால் சிட்டுக் குருவிக் கூட்டம் முழுவதும் இரை கொள்ள வகை செய்யப்பட்டது. இரைச்சலிடும் இந்தச் சின்னஞ்சிறு பறவைகள் சற்றுப் பெரிதான ஒவ்வொரு துணுக்குகளையும் கொத்தித் தின்னப்பாடுபடுவதையும் கீச்சிடுவதையும் சச்சரவு செய்வதையும், வெளிக்குறட்டைச் சுத்தம் செய்ததும் பாப்ளார் மரக்கிளைகளில் இளைப்பாறுவதையும் இறகுகளைக் கோதிக்கொள்வதையும் பிறகு ஒன்றாகச் சிவ்வென்று பறந்து தங்கள் சிட்டுக்குருவி அலுவல்களுக்காக எங்கோ செல்வதையும் அவதானிப்பதில் வார்டு முழுவதற்கும் பெருத்த இன்பம் உண்டாயிற்று.

சிட்டுக் குருவிகளுக்கு இரை போடுவது விருப்பப் பொழுதுபோக்கு ஆகிவிட்டது. சில பறவைகளை நோயாளிகள் இனங்கண்டு கொண்டு அவற்றிற்குப் புனைப் பெயர்களும் சூட்டினார்கள். வார்டுக்காரர்களைச் சிறப்பாகக் கவர்ந்தது வாலறுந்த, துடுக்கும் சுறுசுறுப்பும் மிக்க ஒரு சிட்டுக்குருவி. சச்சரவிடும் கெட்ட சுபாவம் காரணமாகவே அது வாலைப் பறிகொடுத்தது போலும். ஸ்தெபான் இவானவிச் அதற்கு “இயந்திரத் துப்பாக்கிவீரன்” என்று பெயரிட்டார்.

இரைச்சலிடும் இந்தப் பறவைகளுடன் நடந்த அமளியே டாங்கிவீரனை அவனது வாய்மூடித்தனத்திலிருந்து வெளியே கொண்டுவந்தது என்பது அக்கறைக்குரிய சேதி. ஸ்தெபான் இவானவிச் உடம்பை இரண்டாக மடித்து வளைத்து, கவைக் கோல்களை ஆதாரமாகப் பற்றியவாறு வெப்பநீராவிக் குழாய் மீது நெடுநேரம் தம்மைச் சமன்படுத்திக் கொண்டு ஜன்னல் குறட்டின் மேல் ஏறி ஜன்னல் மேல்திறப்பை எட்டுவதற்கு முயற்சிப்பதை உற்சாகமின்றி அசட்டையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், மறுநாள் சிட்டுக் குருவிகள் பறந்து வந்ததும் டாங்கி வீரன் அவற்றின் பரபரப்பு மிக்க அமளியை நன்றாகப் பார்க்கும் பொருட்டு, வலியினால் முகத்தைச் சுளித்தவாறு கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். மூன்றாம் நாளோ அவன் இனிய கேக்கின் பெரிய துண்டு ஒன்றைப் பகல் சாப்பாட்டின் போது மறைத்து வைத்துக் கொண்டான் – மருத்துவ மனையின் இந்த விசேஷத் தின்பண்டம் இலவசத் தீனிக்காரக் கீச்சுமூச்சுக் கும்பலுக்குச் சிறப்பாகப் பிடித்தாக வேண்டும் என்பதுபோல. ஒரு தடவை “இயந்திரத் துப்பாக்கி வீரன்” வரவில்லை. அதைப் பூனை பிடித்து விழுங்கியிருக்கும் என்றும் அதற்கு நன்றாக வேண்டும் என்றும் சொன்னான் குக்கூஷ்கின். மறுநாள் வாலறுந்த குருவி ஜன்னல் வெளிக்குறட்டில் கண்கள் துடுக்குடன் பளிச்சிடத் தலையை வெற்றிப் பெருமிதத்துடன் திருப்பியவாறு மறுபடி கீச்சிடவும் சண்டை போடவும் தொடங்கியபோது டாங்கிவீரன் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தான். நீண்ட பல மாதங்களுக்குப் பின் முதல் தடவையாக வாய்விட்டுச் சிரித்தான் அவன்…

படிக்க:
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?

க்ளாவ்தியா மிஹாய்லவ்னா முதுகுக்குப் பின் கையை மறைத்தவாறு மர்மத் தோற்றத்துடன் கதவருகே நின்று, பளிச்சிடும் விழிகளால் எல்லோரையும் பார்வையிட்டுவிட்டு, “ஆமாம், இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள்?” என்று கேட்கும் நேரம் நாற்பத்து இரண்டாம் வார்டில் மிக மகிழ்ச்சி பொங்கும் நேரம் ஆக விளங்கியது.

கடிதங்கள் வந்திருக்கின்றன என்று இதற்கு அர்த்தம். கடிதம் பெறுபவன் நடனமாடும் பாவனையில் கட்டில் மேல் கொஞ்சமாவது துள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட அடிக்கடி இப்படிச் செய்ய நேர்வது கமிஸாருக்குத்தான். சில தடவைகளில் அவருக்கு மொத்தமாகப் பத்துப் பன்னிரண்டு கடிதங்கள் கிடைப்பது உண்டு. அவருக்கு டிவிஷனிலிருந்தும் பின்புறத்திலிருந்தும் கடிதங்கள் வரும். உடனுழைப்பாளர்களும் கமாண்டர்களும் அரசியல் அலுவலர்களும் எழுதுவார்கள். அதே போலப் படைவீரர்களும், பழைய ஞாபகத்தை வைத்துக் கொண்டு கமாண்டர்களின் மனைவிகளும் (கட்டுக்கு அடங்காத கணவன்மாரை வழிக்குக் கொண்டுவரும்படி இவர்கள் கேட்பார்கள்), போரில் கொல்லப்பட்ட தோழர்களின் விதவைகளும் எழுதுவார்கள். அவர்கள் ஏதேனும் யோசனை கேட்பார்கள், அல்லது உதவி கோருவார்கள்.

கஸாஃஸ்தானிலிருந்து ஒரு பயனீர் சங்கத்துப் பெண்கூட எழுதுவது உண்டு. கொல்லப்பட்ட ரெஜிமெண்டுக் கமாண்டரின் மகள் அவள். இந்தப் பெண்ணின் பெயர் கமிஸாருக்கு எவ்வளவோ முயன்றும் நினைவுக்கு வருவதில்லை. இந்தக் கடிதங்களை எல்லாம் கமிஸார் அக்கறையுடன் வாசிப்பார். எல்லாக் கடிதங்களுக்கும் கட்டாயமாகப் பதில் அளிப்பார். இன்னின்ன கமாண்டரின் மனைவிக்கு உதவும்படி தேவையான அலுவலகத்துக்கு அதே கையோடு எழுதிவிடுவார். கட்டுமீறிச் சென்றுவிட்ட கணவனைக் கோபத்துடன் விளாசுவார். வீட்டு நிர்வாக அதிகாரிக்கு, எழுதும் கடிதத்தில் போர்முனையில் பணியாற்றும் துடியான கமாண்டர் இன்னாருவடைய இருப்பிடத்தில் அவன் கணப்பு ஏற்பாடு செய்யாவிட்டால் தாமே நேரில் வந்து அவன் தலையை வெட்டி விடுவதாக அச்சுறுத்தி எழுதுவார். நினைவு வைத்துக்கொள்ள முடியாத சிக்கலான பெயர் கொண்ட கஸாஃஸ்தான் சிறுமியை அரையாண்டுத் தேர்வில் ருஷ்ய மொழிப் பாடத்தில் அவள் தேறாததற்காகக் கடிந்து கொள்வார்.

ஸ்தெபான் இவானவிச்சும் முனைமுகத்துடனும் பின்புலத்துடனும் சுறுசுறுப்பாகக் கடிதப் போக்குவரத்து நடத்திக் கொண்டிருந்தார். தம்மைப் போன்ற வெற்றிகரமான ஸ்னைப்பர்-களாயிருந்த புதல்வர்களிடமிருந்தும் கூட்டுப் பண்ணைக் குழுத் தலைவியான பெண்ணிடமிருந்தும் தமக்கு வரும் கடிதங்களை ஸ்தெபான் இவானவிச் பெரு மகிழ்ச்சியுடன் அப்போதைக்கப்போதே உரக்கப் படிப்பார். வார்டு நோயாளிகள் எல்லோருக்கும், அறைத் தாதிகளுக்கும் நர்ஸ்களுக்கும் வறண்ட, சிடுமூஞ்சியான உள்ளுறை மருத்துவருக்குங்கூட அவருடைய குடும்ப விவகாரங்கள் எல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தன.

கலகலப்பின்றி, உலகம் அனைத்துடனும் சச்சரவிடுபவன் போலிருந்த குக்கூஷ்கினுக்கு கூட, பார்நெளல் என்னும் இடத்திலிருந்து அவன் தாயார் கடிதங்கள் எழுதுவாள். அவன் மருத்துவத்தாதியிடமிருந்து கடிதத்தை ஆர்வத்துடன் பிடுங்கிக் கொண்டு, எல்லோரும் உறங்கும்வரை காத்திருந்து, வாய்க் குள்ளாகச் சொற்களை முணுமுணுத்தவாறு படிப்பான். அந்த நேரத்தில் கூரிய, கடுமையான அமைப்புள்ள அவனது சிறு முகத்தில், அவனுடைய இயல்புக்கு முற்றிலும் பொருந்தாத, கம்பீரமும் சாந்தமும் திகழும்; சிறப்பான பாவம் தென்படும். முதிய உதவி மருத்துவச்சியான தன் தாய் மீது அவன் பெருத்த பாசம் கொண்டிருந்தான், ஆனால் தனது இந்த அன்பு குறித்து நாணினான், அதை முயன்று மறைத்து வந்தான்.

கிடைத்த செய்திகள் வார்டில் உற்சாகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும். இந்தக் களிபொங்கும் நேரத்தில் டாங்கி வீரன் ஒருவன் மட்டுமே முன்னிலும் அதிக ஏக்கங்கொண்டு முகத்தைச் சுவர்பக்கம் திருப்பிப் போர்வையை இழுத்துத் தலையை மூடிக் கொண்டுவிடுவான். அவனுக்குக் கடிதம் எழுதுவோர் யாரும் இல்லை .

ஆனால், ஒரு நாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா ஏதோ தனிப்பட்ட கிளர்ச்சியுடன் வந்தாள்.

“ஆமாம், இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள்?” என்றாள்.

டாங்கிவீரனின் கட்டில் மேல் அவள் பார்வை சென்றது. நல்லியல்பு திகழும் அவளுடைய முகத்தில் பரந்த புன்னகை சுடர்ந்தது. ஏதோ வழக்கத்துக்கு மாறான விஷயம் நடந்திருக்கிறது என்று எல்லோரும் உணர்ந்தார்கள். வார்டு உன்னிப்பாகக் கவனித்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

இந்து என்றால் யார் ? இந்துஸ்தானம் என்பது எது ?

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 06

கி.பி. 320 முதல் 600 வரை:

”இக்காலத்தில் மத்திய இந்தியாவில், யசோதர்ம தேவன் என்ற பிராமணர் பிரக்யாதியாய் அரசாண்டார். இவரைக் கலியுக அவதாரமென்று அழைத்தனர். ஜெயினர்கள் (சமணர்) அவரை வெறுத்தனர். இஸ்லாம் ஆட்சி பரவிய பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான், இந்தக் கலியுக அவதாரக் கொள்கை உண்டாகியிருக்கிறது. நர்மதை, கிருஷ்ணா ஆகிய இரு நதிகளுக்குமிடையே ஆண்ட வகாடா வம்சத்தைச் சேர்ந்த ஹரிஷேணாவின் மந்திரிகள், மலபார் பிராமணர்களாய் இருந்தனர். இந்த நூற்றாண்டில் கூட வட நாட்டின் கோட்பாடு, பழக்க வழக்கங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கஞ் செலுத்தவில்லை. பல நூற்றாண்டாக மூன்றாம் சங்கம் பாண்டிய மன்னர்களால் நடைபெற்றது. இவற்றினால் தமிழர் வாழ்க்கை கி.மு. 5000 முதல் கி.பி. 400 வரை யாதொரு மாறுதலும் இன்றி ஒரே படித்தரமாக அமைந்திருந்தது.

இந்நிலையில் இன்றுள்ள இந்து மகாசபைக்கு என்ன இலட்சியம் இருக்கிறது, இந்து ஆட்சியை ஏற்படுத்த? இந்துஸ்தானம் இந்துக்களுக்கே என்று கூற முடியுமானால் ஏற்படுத்தட்டும்!

சரி! செய்யட்டுமே அதனை! இந்துஸ்தான் இந்துக்களுக்கு ஏற்பட இந்து மகாசபை வேலை செய்ய வேண்டும். வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை? இந்துஸ்தானத்திலே இரதகஜதுரக பதாதிகளை புண்ய தீர்த்தப் புரோஷணத்தை, பூவையர் பாடலை, ஆடலை, அம்பு விடுவதைச் செய்வதை விட்டு, இங்கு என்ன வேலை என்று கேட்கிறோம்?

”இந்து” என்றால் யார்? இந்துஸ்தானம் என்பது எது? திராவிடர் யார்? திராவிட நாடு என்பது எது? என்ற பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் எந்த வீரரும், வீராங்கனையும் வேறு எங்கும் போக வேண்டாம். நல்ல படிப்பகத்துக்குப் போகட்டும்; அகராதியைப் பார்க்கட்டும்; இலக்கியங்களைக் காணட்டும்; உண்மை விளங்கும்.

நேரம் கிடைக்காது என்பர். உண்மை! சுருக்கித் தொகுத்து நாமே தருகிறோம். படித்து உணரட்டும்.

• இராமேஸ் சந்திர தத் எழுதிய “புராண இந்தியா”
• இராமேஸ் சந்திர முசும்தார் எழுதிய ”பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்.”
• சுவாமி விவேகானந்தர், ”இராமாயணம்’ என்னும் தலைப்பில் பேசிய பேச்சு.
• 1922 -ல் கேம்பிரிட்ஜ் பிரசுரித்த, ”பழைய இந்தியாவின் சரித்திரம்.”
• இராதா குமுத முகர்ஜி எழுதிய “இந்து நாகரிகம், ரிக்கு வேதம்.”
• ஜேம்ஸ் மர்ரே எழுதிய “அகராதி”
• பண்டர்கார் கட்டுரைகள்.
• டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய ”தென் இந்தியாவும், இந்தியக் கலையும்.”
• P.T. சீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”
• ஜெகதீச சந்தர்டட் எழுதிய ”இந்தியா – அன்றும் இன்றும்”
• A.C. தாஸ் எழுதிய “வேதகாலம்”
• C.S. சீனிவாசாச்சாரியார் எழுதிய ‘இந்திய சரித்திரம்’, ”இந்து இந்தியா.”
• H.G. வெல்ஸ் எழுதிய “உலக சரித்திரம்”
• சகலகலா பொக்கிஷம் என்னும் “நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா.”
• C.G. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு”
• ஹென்றி பெரிஜ் 1965-ல் எழுதிய விரிவான “இந்திய சரித்திரம்”
• இ.பி. ஹாவெல் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி”
• G.H. இராபின்சன் எழுதிய “இந்தியா”
• நாகேந்திரநாத் கோஷ் எழுதிய “ஆரியரின் இலக்கியமும் கலையும்”
• வின்சென்ட் ஏ ஸ்மித் எழுதிய ”ஆக்ஸ்போர்ட் இந்திய சரித்திரம்’
• ‘இம்பீரியல் இந்தியன் கெஜட்”
• சர். வில்லியம் வில்சன் ஹண்டர் எழுதிய ”இந்திய மக்களின் சரித்திரம்”
• இராகோசின் எழுதிய “வேதகால இந்தியா”

– இவ்வளவு ஆராய்ச்சியாளர்களிடமும் ‘தப்பி’ பிறகு நம்மிடம் வரட்டும், வீர சவர்க்காரும், வீர வரதரும், வயது முதிர்ந்த (ஆனால் விவேக முதிர்ச்சிக்கு நாம் உறுதி கூற முடியாது) திவான்பகதூர் சாஸ்திரியாரும்!

இந்துஸ்தானம் என்ற பகுதி, குஜராத், இராஜஸ்தான் ஐக்கிய மாகாணம் ஆகிய பிரதேசம் கொண்ட இடம்.

சரித பாகங்களை ஒட்டியும் விளக்கவும் அவ்வப்போது வெளியிடப்படும் பூகோளப் படங்களில் இந்துஸ்தானம் என்ற பகுதி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எங்கே போய் அந்தப் படங்களைத் தேடிக் கொண்டிருப்பது? என்று இந்து மகாசபைக்காரர் கவலைப்படுவர். உண்மைதான். அவர்களுக்கு வேலை அதிகம். தேடித் திரிய வேண்டாம். நாமே குறிப்புத் தருகிறோம்.

கான்ஸ்டேபிள் கம்பெனியார் வெளியிட்ட பூகோளப் பாடப் புத்தகத்தில் (Atlas) இந்தியா எனும் பூபாகத்தில் இனவாரி வட்டாரமும், மொழிவாரி வட்டாரமும் பிரித்து வேறு வேறு வர்ணம் தீட்டப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இரு விதமான படங்களிலும், திராவிடம் தனியாக இருக்கக் காணலாம்.

சரித சம்பவங்களில் முக்கியமானவற்றை நோக்கினாலும், இந்தியா எனும் பூபாகத்தில், இடையிடையே ஏற்பட்ட ”வல்லரசு’’களின் எல்லைகளை நோக்கினாலும், எந்த இராஜ்யமும், விந்திய மலைக்கு மேற்புற அளவோடுதான் இருக்கக் காண்பர். நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணியமாக ஓடிக் கொண்டிருந்தது என்பதைச் சரிதம் படிப்போர் அனைவரும் நன்கு அறிவர்.

படிக்க:
ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !
வட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் ! மோடியையும் நேசிக்கிறார்கள் !

இத்தகைய தனித் திராவிட நாட்டிலே இந்துக்களுக்கு என்ன வேலை இருக்கிறது? இந்து மதத்தின் பேரால் இம்சை பல செய்தது போதாதா? இன்னமும் இந்துஸ்தானத்துக்கும், பாகிஸ்தானத்துக்கும் தகராறு இருப்பதாக திராவிட நாட்டிலே பேசி, இங்குள்ள மக்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று கேட்கிறோம். ஒரு குடம் கங்கை நீரை அங்குக் கொண்டு வந்து புரோக்ஷணம் செய்வதைவிட இந்து மகா சபையினர் கங்கையிலே நன்றாக முழுகி எழுந்து அங்கே பேசட்டும். இந்துஸ்தானத்தைத் தமதாட்சிக்குட்படுத்திக் கொள்ளட்டும். பாகிஸ்தானத்தாரும் அதைத் தடுக்கவில்லை. நாமும் தடுக்கவில்லை. மேலே பாகிஸ்தான் தெற்கே திராவிட நாடு! இடையே இந்துஸ்தான்! இதுதான் முடிவு.

முன்பு, திவான் பகதூர் K.S. இராமசாமி சாஸ்திரியார் மதுரையில் நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டு வரவேற்புத் தலைவராக இருந்து ஆற்றிய சொற்பொழிவில், இங்கு இந்து மகாசபையைக் கூட்ட வேண்டி வந்த உட்காரணத்தைக் கக்கிவிட்டார். அதாவது, இந்து – முஸ்லீம் பிரச்சினையைப் பற்றிய பயங்கரமான பீதிகளைக் கிளப்பிவிட்டுத் திராவிடத்தில் உள்ளோரையும் “இந்துக்கள்’  என்று பாத்யதை கொண்டாடித் திராவிடரைத் துணைக்கு அழைப்பது போல் நடித்து, ஆரியத்தை நிலைக்கச் செய்வதுதான் இங்குள்ள இந்து மகா சபையினரின் உண்மையான கருத்து. அது சாஸ்திரியாரின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

கேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் !

கேள்வி : //விலங்குகளை கொல்வது குற்றமா?அப்படி குற்றம் எனில் ஏன் அதை சாப்பிடுகிறார்கள்? வள்ளலார் ஏன் இதை முன்வைத்தார்? அதே போல் வாடின பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்? அசைவம்! சைவம்? இதற்கான விளக்கம்?//

– கொடுக்கு

ன்புள்ள கொடுக்கு,

கேள்விகளை உங்களது சொந்தப் பெயரிலேயே கேட்கலாம். பொதுவில் விலங்குகளை கொல்வது குற்றமா என்று கேட்பது பொருத்தமற்றது. விலங்குகளை காட்டு விலங்குகள், வீட்டு வளர்ப்பு விலங்குகள் என்று இரு பிரிவாக பார்க்க வேண்டும். காட்டு விலங்குகள் சுற்றுச் சூழலின் சமநிலையை பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகவே அவற்றினை கொல்லக்கூடாது. இது உலகெங்கும் உள்ள நடைமுறை.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை காட்டு விலங்குகளைக் கொல்வது ஒரு பொழுதுபோக்காக மன்னர்கள், நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள் காலத்தில் உலகெங்கும் இருந்தது. தற்போது அப்படிக் கொல்லக் கூடாது என்று பல நாடுகளில் சட்டமே இருக்கிறது.

வீட்டு வளர்ப்பு விலங்குகள் என்பவை நமது தேவைக்காக நம்மால் வளர்க்கப்படுபவை. அவற்றை இறைச்சிக்காக கொன்று உண்பதில் பிழையில்லை. ஏனெனில் வீட்டு விலங்குகள் எவையும் பாரம்பரியமாக இயற்கையாக வீட்டு விலங்காகத் தோன்றி வளரவில்லை. நாய், ஆடு, மாடு, கோழிகள், வாத்துகள் அத்தனையும் காட்டு விலங்குகளில் இருந்து மனிதனால் கைப்பற்றப்பட்டு பின்னர் புதிதாக பழக்கப்படுத்தப்பட்டு வீட்டு விலங்குகளாக தோற்றுவிக்கப்பட்டவை. குரங்கு மூதாதையர் காலத்தில் இருந்தே மனிதன் தனது உணவுத் தேவைக்காக இந்த விலங்குகளை வளர்த்து வந்தான். சமீபத்தில் வந்த ஆல்பா என்ற ஹாலிவுட் திரைப்படம் ஓநாய் எப்படி மனித குலத்தின் வீட்டு நாயாக மாற்றப்பட்டது என்பதை சுவாரசியமாக விளக்குகிறது.

இன்று மக்களின் புரதச்சத்து தேவையை வீட்டு விலங்குகளே பூர்த்தி செய்கின்றன. மேலும் கால்நடைகளின் வளர்ப்பை நாமே கட்டுப்படுத்திக் கொள்வதால் அவற்றை எவ்வளவு எண்ணிக்கையிலும் உருவாக்கிக் கொள்ளலாம். இவற்றைக்  கொன்று தின்பதால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதில்லை.

அடுத்து வள்ளலார் ஏன் அசைவ உணவை சாப்பிடக் கூடாது என்றார், எனக் கேட்டிருக்கிறீர்கள். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஜீவகாருண்யம் பேசியவர். சத்திய ஞான சபையை நிறுவியவர். எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம், தான் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். ஆகவே இவர் அன்றைய பார்ப்பன மற்றும் உயர்சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார்.

எனவே இராமலிங்க அடிகளாரை ஏதோ அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று மட்டும் சொன்ன சாமியாராகச் சுருக்கிப் பார்ப்பது தவறு. அவருடைய பிரதான வாழ்க்கைப் பணி இந்த சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்தான். சைவ உணவுப் பழக்கம் கொண்ட சைவ மதத்தாரும் வள்ளலாரை ஏற்கவில்லை. அவர் எழுதிய திருவருட்பா மீது வழக்கே போட்டிருக்கிறார்கள். எனவே நாம் வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பை வரித்துக் கொள்வோம். அசைவம் சாப்பிடக்கூடாது என்ற அவரது கொள்கையை ஏற்க வேண்டியதில்லை.

♦ ♦ ♦

கேள்வி : //சீமான் முன்னெடுக்கும் இன தூய்மைவாதத்தை முன்னிலைபடுத்தும் தமிழ்தேசியம் சரியா ? வர்க்க (வர்க்கமே இங்கு சாதியாய் உள்ள போது) முரண்பாடுகளை களையாத தமிழ்தேசியம் சாத்தியமா?//

அருள் செல்வன்

ன்புள்ள அருள்செல்வன்,

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. சீமான் முன்னெடுக்கும் இனத்தூய்மை வாதம் என்பது தமிழகத்தில் தமிழோடு தெலுங்கு, கன்னடம், உருது மொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருப்போரை தமிழர்கள் என்று ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களைத்தான் தமிழ் தேசியத்தின் எதிரிகளாக அவர் கட்டியமைக்கிறார்.

சாதிகளை வைத்தே யார் தமிழர் என்று பிரிப்பதும் உள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இங்கே ஒடுக்கும் தேசிய இனம் எதுவும் இல்லை. இந்து – இந்தி – இந்தியா எனப்படும் அரசியல்ரீதியான அமைப்பே நம்மை ஒடுக்குகிறது. அதை எதிர்த்துப் போராடும்போது நம்மை ஒத்த பிற தேசிய இன மக்களையும் கூட்டாக சேர்த்துக் கொண்டு போராட வேண்டுமே ஒழிய அவர்களை எதிராக நிறுத்த வேண்டியதில்லை.

இன்று தமிழகத்தில் இருக்கும் சிறு நிறுவனங்கள், டீக்கடைகள், ஓட்டல்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் அனைத்திலும் வெளி மாநில மக்களே பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு உரிமையாளர்களாக உள்ள தமிழர்களே, இக்கடைகளில் தமிழர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதை ஏற்க மாட்டார்கள். ஏனெனில் குறைந்த கூலிக்கு நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவது அவர்கள் மட்டுமே. இந்தப் போக்கு தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா தென்னிந்திய மாநிலங்களிலும் உள்ளது. விவசாயத்தின் அழிவு காரணமாகவே இத்தகைய இடப்பெயர்வுகள் இந்தியா முழுவதும் நடக்கின்றன.

சாதிகளே வர்க்கமாகப் பிரிந்து கிடக்கும்போது தமிழ் தேசியம் பேசுவோர் அதை கணக்கில் கொள்வதில்லை. அவர்கள் முன்வைக்கும் தமிழ் தேசியம் என்பது எல்லா வர்க்கங்களையும் உள்ளடக்கியதுதான். இது சாத்தியமா, சாத்தியமில்லையா என்று பார்ப்பதை விட சரியா, தவறா என்று பார்த்தால் நிச்சயம் தவறுதான்.

வர்க்க விடுதலையைப் பேசாமல் நம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க இயலாது. இன்று கல்வியிலும், மருத்துவமனைகளிலும் தனியார்மயம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான தமிழ் முதலாளிகள் கல்வியை – சுகாதாரத்தை வணிகச் சரக்காக்கியிருக்கின்றனர். அவர்களது நிறுவனங்களை அரசுடைமையாக்காமல் நம் மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரத்தை இலவச உரிமையாக வழங்குவது எங்கனம்?

சீமான் போன்றோர் தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போடும் வகையில் அரசு கல்வி நிறுவனங்களை மாற்றுவோம் என்று கூறுகின்றனரே அன்றி தனியார்மயமாக்கத்தை ஒழிப்போம் என்று பேசுவதில்லை.

வாழ்க்கைச் சிக்கல்கள் பெருகிவரும் நேரத்தில் வர்க்கரீதியான அரசியல் பலவீனமாய் இருக்கும்போது சீமான் போன்றோரின் ‘தூய்மைவாத’ அரசியல் கொஞ்சம் எடுபடலாம். அரசியல்ரீதியாக அதைத் தவறு என்பதோடு, உண்மையில் மக்களின் விடுதலைக்கு என்ன வழி என்று மொழி, இனம் பார்க்காமல் போராடுவதே சரியாகும்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

தமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு !

வானிலை குறித்த தனது தனிப்பட்ட ஆர்வத்தில் தகவல்களைச் சேகரித்து வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் பிரதீப் ஜான் – தமிழ்நாடு வெதர்மேன் – அவர்கள், அவருடைய யூ-டியூப் தளத்தில் நேற்று (20.06.2019) ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.

அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட, சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவ்வப்போது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். கடும் தண்ணீர் பஞ்சத்தில் வதைபடும் சென்னைவாசிகளுக்கு இது ஒரு நற்செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்த தமிழ்நாடு வெதர்மேனின் காணொளிப் பதிவைக் காண :

நன்றி : தமிழ்நாடு வெதர்மேன்.

உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா

“தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்” என்பது போல எங்கோ அமெரிக்காவின் வால் வீதியில் நிகழும் பங்குச்சந்தை சரிவுகள், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. உலக நாடுகளைப் பிணைத்திருக்கும் உலகப் பொருளாதரம் பற்றி நாம் என்ன தெரிந்துள்ளோம் என சோதித்துப் பார்ப்போம் வாருங்கள்.

(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)

  1. 2007 -2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முந்தயை 2006-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 5.5%-ஆக இருந்தது. எனில் 2009-ம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு?
  2. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளரும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தோரயமாக எவ்வளவு? (இந்த நாடுகளில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட 155 நாடுகள் உள்ளன.)
  3. உலகில் எந்த நாடு அதிக அளவிலான பணவீக்க விகிதத்தைக் கொண்டிருக்கிறது?
  4. கீழ்க்கண்ட உலகப் பகுதிகளில் எந்த மண்டலம் அதிக அளவிலான வளர்ச்சி விகதத்தை 2018-ம் ஆண்டில் கொண்டிருக்கிறது? அந்த மண்டலம் 3.1 வளர்ச்சி விகிதத்தை கொண்டிருக்கிறது.
  5. கீழ்க்கண்ட நாடுகளில் எந்த நாட்டின் உள்ளூர் வங்கிகள் அந்த நாட்டு அரசின் கடன் பத்திரங்களை அதிகம் வைத்திருக்கிறது?
  6. கீழ்க்கண்ட வளர்ந்து வரும் நாடு அல்லது மண்டலங்களில் எது அதிக அளவில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக கடனைக் கொடுத்து வருகிறது?
  7. 2017-ம் ஆண்டில் உலக அளவிலான தனியார் மற்றும் பொதுத்துறை கடன் தொகை கடன் எவ்வளவு?
  8. குறைந்த அளவு வளர்ச்சி கொண்ட நாடுகளுக்குத் தேவைப்படும் வளர்ச்சிக்கான பணம் எவ்வளவு?
  9. உலக நாடுகளுக்கு கடன் கொடுத்து கந்து வட்டிக்காரன் போலச் செயல்படும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமையகம் எங்குள்ளது?
  10. ஒரு தொழில் மந்தம் என்பது எத்தனை தொடர் காலாண்டுகளைக் கொண்டிருக்கும்?
  11. உலக அளவில் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு எது?
  12. முதன் முதலில் காகிதப் பணத்தை பயன்பாட்டிற்குக் கொண்டுவந்த நாடு எது?
  13. சூதாட்டமே பங்குச் சந்தை என்பது ஒருபுறமிருக்க உலகின் முதல் பங்குச் சந்தை எந்த நாட்டில் துவங்கியது?
  14. ஜப்பான் நாட்டின் செலவாணி என்னவென்று அழைக்கப்படுகிறது?
  15. யூரோ எனும் செலவாணியை எத்தனை நாடுகள் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துகின்றன?
  16. ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?
  17. ஒவ்வொரு ஆண்டின் உலகப் பொருளாதார மன்றத்தின் குளிர்கால சந்திப்பு எங்கு நடைபெறுகிறது?
  18. உலக நாடுகளுக்கு கடன் கொடுத்து கண்டிசனும் போடும் உலக வங்கி எந்த ஆண்டில் துவங்கப்பட்டது?
  19. GDP எனப்படும் பெயரின் விரிவாக்கம் என்ன?
  20. ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக துவங்கப்பட்ட உலக வர்த்தகக் கழகம் எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
  21. ரூபிள் எனப்படும் செலவாணி எந்த நாட்டிற்கு உரியது?
  22. பொருளாதார மற்றும் அரசியல் அரங்கில் புகழ் பெற்ற “டாஸ் கேப்பிட்டல்” நூலை எழுதியவர் யார்?
  23. BRIC எனப்படும் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் எவை?
  24. ஜி 20 எனப்படும் நாடுகளின் கூட்டமைப்பின் முதல் சந்திப்பு எந்த ஆண்டில் நடைபெற்றது?
  25. 1930-ன் உலகப் பெருமந்தம் எந்த நாட்டில் துவங்கியது?

நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !