Wednesday, July 30, 2025
முகப்பு பதிவு பக்கம் 329

நூல் அறிமுகம் : அறிவியல் தத்துவம் சமுதாயம்

ந்திய சமூகம் பழமையானது. பல இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டது. அறிவியல், தத்துவம், மருத்துவம் போன்ற துறைகளில் உலக அறிஞர்களின் கவனத்திற்கும் ஆராய்ச்சிக்கும் ஆட்பட்டது. வற்றாத வளத்தாலும் தனது வரைபட அமைப்பாலும் பிற நாட்டவர்கள் குடியேறவும், படையெடுப்பாளர்கள் போர் செய்து ஆட்சி அமைக்கவுமான வரலாற்றையும் கொண்டது. அதன் காரணமாகவே பல மதக் கருத்துகளும் அமைப்புகளும் பரவி ஒரு பன்முகச் சமூகமாக அது காட்சியளிக்கிறது. இவையெல்லாம் இந்திய சமூகத்திற்கு பெருமையளிப்பதாயினும் இக்காரணங்களாலேயே இன மத மோதல்களுக்கும் அடிமைத்தனங்களுக்கும் காரணமாகவும் அமைந்துள்ளது.

மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் பழங்கால இந்திய சமூகத்திற்கும் கிரேக்க சமூகத்திற்கும் உள்ள தொடர்புகளை இச்சிறு நூலில் ஆராய்கிறார். சமூக சிந்தனைகள், மத வழிபாடுகள், மருத்துவக் கூறுகள் அனைத்திலும் இரு சமூகத்திற்குள்ள ஒற்றுமைகளை இச்சிறு நூலில் விளக்கியுள்ளார். (பதிப்பாளர் குறிப்பிலிருந்து…)

இயற்கை அறிவியலை நோக்கி அந்த அற்புதமான முதலடி எடுத்துவைக்கப்பட்டது இந்தியாவில்தான். அநேகமாக அது புத்தரின் காலத்திற்குச் சற்று முன்பாக நடந்தது, என்பதே இந்த ஆய்வுக் கட்டுரையில் நிறுவப்படவிருக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். அதே நேரத்தில், பண்டைய இந்தியாவில் இயற்கை அறிவியல் தொடக்கநிலையை அல்லது தொன்மையான கட்டத்தைத் தாண்டி வளர்ந்துவிடவில்லை என்பதும் உண்மை. அதன் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய அளவுக்கு ஏதோவொரு வலுவான காரணக்கூறு இருந்திருக்கிறது என்பது தெளிவு. அந்தக் காரணக்கூறு என்ன?…

பண்டைய மரபுகள் மறைவது கடினமாக இருக்கும் ஒரு தேசத்தில், கடந்த காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை, தற்காலத்தைப் பற்றிய மேம்பட்ட பார்வைக்கு வழிவகுக்கும். வேறு சொற்களில் சொல்வதானால், இயற்கை அறிவியலின் வளர்ச்சிக்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற போதிலும், இன்று வஞ்சகமான முறையில் அதன் வளர்ச்சியை முடக்க முனையும் கூறுகளை புரிந்துகொள்ளவும் அது உதவும்.

பண்டைய இந்தியாவில் இயற்கை அறிவியலின் வளர்ச்சிக்கு பகையாக இருந்த சக்தியை அடையாளம் காண இந்த ஆய்வுக் கட்டுரையில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டைய இந்தியாவில் அறிவியலை முடக்கிய முக்கியமான காரணக்கூறு அரசியல்ரீதியானது என்ற வாதமும் இக்கட்டுரையில் முன்வைக்கப்படுகிறது. சொகுசாக அனுபவிக்கும் சிறுபான்மையினராகவும் பாடுபட்டு உழைக்கும் பெரும்பான்மையினராகவும் – இந்தியச் சொல்லாடல்களில் கூறுவதானால் துவிஜர்களாகவும் சூத்திரர்களாகவும் – பிளவுபட்ட ஒரு சமுதாயத்தைப் பராமரிக்கிற, மறு உருவாக்கம் செய்கிற தேவையிலிருந்து அந்தக் காரணக்கூறு வந்தது. இந்தச் சமூக ‘ஒழுங்கமைப்புக்கு’ மிகமிக ஆரவாரமாக, மிகமிக குரூரமாக வக்காலத்து வாங்கியவர்கள் சட்டங்களை இயற்றுகிற இடத்தில் இருந்தவர்கள்தாம். இயற்கை அறிவியலை சாத்தியமானதாக்கக்கூடிய அனைத்துக்கும் எதிராக எல்லாவகையான சட்டங்களையும் பிறப்பித்தவர்கள் அவர்கள்; இதை நாம் பின்னர் காணவிருக்கிறோம்.

படிக்க:
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?

எனினும் சட்டத்தின் மூலம் வலிந்து திணிக்கப்பட்டதை மட்டுமே கவனத்தில் கொள்வது என்பது பண்டைய இந்தியச் சூழலின் ஒரு பகுதியை மட்டுமே பார்ப்பதாகிவிடும். அறிவியலை அழிக்கும் சக்தியாக செயல்பட்ட மற்றொரு காரணக்கூறு, நாட்டில் நிலவிய பொதுவான தத்துவார்த்தச் சூழலை அதே அரசியல் தேவை எப்படி சீர்குலைத்தது என்பதாகும். பண்டைய இந்திய தத்துவார்த்தச் சிந்தனை மரபில் தகுதி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்த புகழ்பெற்ற ஞானிகள் சிலர் தங்களது அறிவு வளத்தையெல்லாம் இயற்கை அறிவியலின் வளர்ச்சியை முடக்குவதற்கென்றே பயன்படுத்தினார்கள். அறிவியலில் அபாயம் இருப்பதாகக் கருதிய சுயநல சக்திகளின் ஈவிரக்கமற்ற அரசியல் சூதாட்டத்தில் கதியற்ற பகடைக் காய்களாகவே அற்புதத் திறன் வாய்ந்த தத்துவ ஞானிகள் பயன்படுத்தப்பட்டனர். (நூலிலிருந்து பக்.7-8)

பண்டைய இந்தியாவில் சமயச் சார்பின்றி முற்றிலும் உலகியல் சார்ந்ததாக இருந்த, அத்துடன் இயற்கை அறிவியல் குறித்த நவீன புரிதலுக்கான தொடக்கத்தைக் கொண்டிருந்த ஒரே கல்வித்துறை மருத்துவம் மட்டுமே. ஒலியியல், இலக்கணம், சொல் இலக்கணம், அளவையியல், காலமுறை வானியல் ஆகியவை – வரைகணிதமும் கூட – வைதிக வட்டாரங்களில் மிக அதிகமாகப் பேசப்பட்ட இதர கல்வித்துறைகளாகும். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட கல்வித்துறை கூட சடங்கு நுட்பம் அல்லது கல்பா என்பதன் ஒரு பகுதியாகவே வரையறுக்கப்பட்ட அர்த்தத்தில் இருந்து வந்தது. சடங்கு நுட்பத்தைப் போலவே இவையனைத்தும் சமய அமைப்புகளிலிருந்து துவங்குவனவாக, அவற்றின் வேத ஞானத்தின் பகுதியாக இருந்தன. இவற்றுக்கான பாரம்பரியச் சொல் வேதங்கா என்பதாகும். அதாவது வேதத்தின் அங்கங்கள் என்று பொருள். இவ்வாறாக இந்தக் கல்வித் துறைகளில் மதத்தின் பிறப்படையாளங்கள் பதிந்துள்ளன அல்லது சமயச்சார்பின்மைக்கு எதிரான அடையாளங்கள் உள்ளன. குறிப்பாக பிரம்மகுப்தரின் வானியல் குறித்து ஆய்வாளர் அல்-பெருனி சிறப்பாகக் குறிப்பிடுவதைப்போல, இவை ஆக்கப்பூர்வ அறிவியலாக வளர்வதில் சமாளித்து நிற்கவியலாத கடினமான நிலைமைகளை எதிர்கொள்கின்றன. (நூலிலிருந்து பக்.33-34)

நூல் : அறிவியல் தத்துவம் சமுதாயம்
ஆசிரியர் : தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தமிழில் : அ. குமரேசன்

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089.
தொலைபேசி எண்: 98417 75112.

பக்கங்கள்: 64
விலை: ரூ 35.00 (முதற் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க : nhm

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பாசிசத்தை எவ்வாறு வரையறுப்பது ?

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் |  விரிவுரை – 2 | பாகம் – 13

டோக்ளியாட்டி

ந்த நெருக்கடி எப்போது ஆரம்பமாயிற்று? 1929-ம் ஆண்டு இறுதியிலும் 1930-ம் ஆண்டு தொடக்கத்திலும் இது ஆரம்பமாயிற்று. ஆனால், நாம் எப்போதுமே வலியுறுத்தி வந்திருப்பதுபோல், இந்த நெருக்கடிக்கான அறிகுறிகள் 1927-ம் ஆண்டு வாக்கிலேயே தென்பட ஆரம்பித்துவிட்டன. உற்பத்தி எந்திரத்தின் வளர்ச்சி காரணமாகவும், தொழில்துறை வளங்கள் ஒரு சிலர் கைகளில் குவிந்ததன் காரணமாகவும், முதலாளித்துவத்தின் தொழில்நுட்ப, ஸ்தாபன வளர்ச்சியின் காரணமாகவும் தோன்றிய பொருளாதார முரண்பாடுகளின் சின்னங்களே இவை. இந்த வளர்ச்சிப் போக்கு முதலில் அளவுக்கு மீறிய பளுவை உண்டு பண்ணிற்று. பிறகு, 1926-ல் உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும் பிரச்சினை தீவிரமடைந்தது. இதன் காரணமாக ஊதிய வெட்டு அத்தியாவசியமானதாகிவிட்டது.

இதன் பிறகு பாசிசம் சர்வாதிபத்தியப் பாதையிலிருந்து ஒருபோதும் விலகிச் சென்றதில்லை. இது இன்றியமையாததாயிற்று. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் முழு உக்கிரமடைந்து இன்றுவரை தொடர்கிறது.

1929-ம் ஆண்டு இறுதியில் நெருக்கடி மிகவும் தீவிரமடைந்தபோது, பிரச்சினையின் போக்கு மாறியது. வெகுஜனங்களைப் பிளவுபடுத்துவது மட்டும் போதாது; இதற்கும் மேலாக ஏதேனும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆட்சியின் மீது வெகுஜனங்களுக்கு அதிருப்தி ஏற்படுவது பாசிசத்தின் வெகுஜன அடித்தளம் சுருங்குவதையே குறிக்கும். இந்தப் பிரச்சினை மிகவும் கூர்மையடைந்தது.

இவ்வாறு, பாசிஸ்டுக் கொள்கையின் இரண்டாவது அம்சம் – வெகுஜனக் கொள்கை – அரங்கேறியது. பொருளாதார நிலைமையை முன்னிட்டும், இத்தாலிய பூர்ஷுவாக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வர்க்க உறவுகளை முன்னிட்டும் வெகுஜனக் கொள்கையைக் கடைப்பிடிப்பது அவசியமாயிற்று. அப்போதுதான் வெகுஜன அடித்தளத்தில் ஏற்படக்கூடிய பிளவுகளைச் சமாளிக்க முடியும்; பாசிஸ்டு எதிர்ப்பு இயக்கங்கள் வளர்வதை எதிர்த்துப் போராட முடியும்.

1930-ம் ஆண்டு முதல் இன்றுவரை நிலைமை தேக்கமடைந்துள்ளது. ஆனால் பிரச்சினை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. பிரச்சினையின் உக்கிரம் எண்ணற்ற மாற்றங்கள் செய்து வருவதிலும், அதிகாரத்திலுள்ளவர்கள் மாற்றப்படுவதிலும் பிரதிபலிக்கக் காணலாம்.

அதிகாரத்திலுள்ளவர்களை மாற்றுவதைப் பொறுத்தவரையில் ஒரு மாற்றம் மிக முக்கியமானது. 1932 மத்தியில் ரோக்கோ தீர்த்துக் கட்டப்பட்டதையே இங்கு குறிப்பிடுகிறோம். பாசிச சர்வாதிபத்தியத்தின் இயல்பில் ஏற்பட்ட மாற்றத்தையும், ஜனரஞ்சகக் கொள்கை எனப்படும் கொள்கையின் தொடக்கத்தையும் இது குறித்தது.

தற்போது, வெகுஜனங்களை தனது ஸ்தாபன அமைப்புகளுக்குள் கொண்டு வருவதற்கும், சர்வாதிகார அமைப்புடன் அவர்களைப் பிணைத்து வைத்திருப்பதற்கும் பாசிசம் பெருமுயற்சி செய்து வருகிறது. பாசிஸ்டுக் கட்சியையும் இளைஞர்களையும், தொழிற்சங்கங்களையும் ஒழுங்கமைப்பது சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினைகள் யாவும் இன்னமும் சர்வாதிபத்தியக் கண்ணோட்டத்திலிருந்தே கையாளப்பட்டு வருகின்றன. எனினும் சற்று வேறுபட்ட முறையில் இது நடைபெற்று வருகிறது.

”பாசிசத்தை… ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட ஒன்றாகவோ, திட்டமிடப்பட்ட ஒன்றாகவோ அல்லது முன்மாதிரி எடுத்துக்காட்டானதாகவோ பார்க்கக் கூடாது. மாறாக, பொருளாதார நிலைமையிலிருந்தும், வெகுஜனங்களின் போராட்டத்திலிருந்தும் தோன்றிய பொருளாதார, அரசியல் உறவுகளின் ஓர் ஒட்டுமொத்த விளைவாகவே அதனை நோக்க வேண்டும்.”

நேற்றைய விரிவுரையிலும் இன்றைய விரிவுரையிலும் ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக் காட்டியிருக்கிறேன். அது இதுதான்: பாசிசத்தை ஒரு திட்டவட்டமான, தீர்மானமான இயல்பு கொண்டதாகப் பார்க்கக் கூடாது. அதன் வளர்ச்சிப் போக்கை அடிப்படையாக வைத்து அதனைப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட ஒன்றாகவோ, திட்டமிடப்பட்ட ஒன்றாகவோ அல்லது முன்மாதிரி எடுத்துக்காட்டானதாகவோ பார்க்கக் கூடாது. மாறாக, பொருளாதார நிலைமையிலிருந்தும், வெகுஜனங்களின் போராட்டத்திலிருந்தும் தோன்றிய பொருளாதார, அரசியல் உறவுகளின் ஓர் ஒட்டுமொத்த விளைவாகவே அதனை நோக்க வேண்டும்.

சர்வாதிபத்தியம் நமது போராட்டப் பாதையைத் தடுக்கிறது என்று நினைப்பது தவறு. வெகுஜனங்களுக்கு ஜனநாயகப் பலன்கள் கிட்டச் செய்யும் போராட்டத்தின் பாதையை சர்வாதிபத்தியம் மூடிவிடுகிறது என்று நினைப்பது தவறு. இது தவறு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வாறு நினைக்கும்படி பாசிசம் நம்மைத் தூண்டி வருகிறது. எல்லாம் முடிந்து விட்டது. இனி அதற்கு அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்ற மாயத்தோற்றத்தை நமக்குக் காட்ட பாசிசம் முயல்கிறது.

இந்தக் கண்ணோட்டத்துக்கு அணுவளவும் இடம் தரக்கூடாது. அதனை எதிர்த்துக் கடுமையாகப் போராட வேண்டும், வெகுஜனப் போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சிப் போக்கும் பாசிச சர்வாதிகாரப் பிரச்சினையைத் திரும்பவும் கிளப்புகிறது. வெகுஜன இயக்கங்கள் பல்கிப் பெருகுவது சர்வாதிகாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படுவதைத் தூண்டுகிறது. வெகுஜனங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாசிசம் தனது செயல்முறையை மாற்றிக் கொள்ளச் செய்கிறது. இதனை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

பாசிசத்தைப் பற்றி நான் தெரிவித்திருக்கும் கருத்து நமது கொள்கை முழுவதுக்கும் ஆதார அடிப்படையாக இருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் ஒரு சரியான கொள்கை வழியை நிர்ணயிக்க முடியும்.

சர்வாதிபத்தியம் கட்சியின் போராட்டப் பாதையை மூடி விடுவதில்லை; மாறாக புதிய பாதைகளைத் திறந்து விடுகிறது.

பாசிசம் நமக்குத் திறந்துவிடும் புதிய பாதைகளை உடனடியாகக் காணுவதற்கு நாம் இயலாதவர்களாக இருந்தால் அது தவறு.

இந்தத் தவறு அரசியல் ரீதியில் நமது திறமையின்மையையே காட்டும். ஆனால் இதனை கட்சி உணர்ந்து கொள்ளும்போது பாசிச சர்வாதிகாரப் பிரச்சினையை மீண்டும் எழுப்புவதில் வெற்றி பெறும்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

மாயாவைப் பாருங்கள் … அவள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறாள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 02

புதியவற்றை அறியும் மகிழ்ச்சி எப்படிப் பிறக்கிறது?

ன் வகுப்புக் குழந்தைகளுக்கு நடனமாடப் பிடிக்கும். சில சமயம் இடைவேளைகளின் போது அவர்களே கிராமபோனைப் போடுவார்கள். எனவே, இவர்களுக்கு நடனமாடப் பிடிக்குமெனத் தெரிகிறது. மோட்சார்ட், ஷோ பேன், சய்கோவ்ஸ்கி, பா லியஷ்வீலி ஆகிய பெரும் இசைக் கலைஞர்களின் படைப்புகளை நான் தேர்ந்தெடுத்தேன். இசைக்கேற்ப நடனமாடும் போது ராகத்தைக் கேட்க வேண்டும். இதில் எம்மாதிரியான உணர்வுகள் பிரதிபலிக்கின்றன என்று புரிந்து கொள்ள முயல வேண்டும், இவற்றைத் தம் அசைவுகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று விளக்க முற்பட்டேன்.

இப்போது சய்கோவ்ஸ்கியின் “பழைய பிரெஞ்சுப் பாடல்” ஒலிக்கிறது. குழந்தைகள் தம்மிடங்களிலிருந்து எழுந்து நடனமாட வசதியான இடத்தைத் தேடி வந்தனர். பல சிறுமிகள் நேர்த்தியாக நடனமாடுகிறார்கள், சில சிறுவர்கள் இந்த நடனத்தை ஒரு விளையாட்டாக மாற்றினர் – ஒருவருடன் ஒருவர் மோதிய படி அவர்கள் குதிக்கின்றனர். மாரிக்கா மட்டும் தனியே நின்று கொண்டிருக்கிறாள். சாஷாவும் தேன்கோவும் பெஞ்சில் உட்கார்ந்திருக்கின்றனர். என்னருகே வந்து, மற்றவர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்படி அவர்களுக்குச் சொல்கிறேன். மெதுவாக நாங்கள் பேசிக் கொள்கிறோம்.

“மாயாவைப் பாருங்கள்…. அவள் எவ்வளவு அழகாக நடனமாடுகிறாள், எவ்வளவு மென்மையாகக் கரங்களை அசைக்கின்றாள்!” என்கிறேன் நான். “சரி, யாருடைய நடனம் உங்களுக்குப் பிடித்துள்ளது?”

“யாருடைய நடனமும் எனக்குப் பிடிக்கவில்லை!” என்கிறான் சாஷா.

“ஏல்லா சிரிப்பு வரும்படி நடனமாடுவது எனக்குப் பிடித்துள்ளது. அவள் எப்படிச் சுற்றுகிறாள் பார்த்தாயா!”

“கோத்தே நடனமாடுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

சரி, இது என்ன? போன்தோ சிறுமிகளின் கால்களை வாரி விட்டுக் கொண்டிருக்கிறானே, அவர்கள் அவனைப் பிடித்துத் தள்ளுகின்றனர். “போ, தொந்தரவு செய்யாதே!” என்று கூறியபடியே தொடர்ந்து நடனமாடுகின்றனர். ஆனால் போன்தோ நிற்கவில்லை. போன்தோ காலை வாரியதைக் கவனிக்காத மாயா கீழே விழுந்தாள்.

“சிறுவர்களே, நீங்கள் போய் மாயாவிற்கு எழுந்திருக்க உதவுங்கள். போன்தோவை இங்கே அழைத்து வாருங்கள்.”

ஆனால் போன்தோ அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை. நானே தலையிட வேண்டி வந்தது. போன்தோ பயந்தபடியே என்னைப் பார்க்கிறான். அவனுக்கு என்ன ஆயிற்று என்றே புரியவில்லை. “போன்தோ, உனக்கு நடனமாட விருப்பமில்லையா?”

“இருக்கிறதே!”

“பின், ஏன் சிறுமிகளின் கால்களை வாரி விடுகிறாய்?” என் குரலில் அச்சுறுத்தும் தொனியே தென்படாவிட்டாலும் போன்தோ கவலைப்பட்டான்.

“அவளே தான் கீழே விழுந்தாள்.” நான் என்ன செய்வது? பொய்யை அம்பலப்படுத்துவதா? சாஷா அவன் மீது பாயவே தயாராயிருக்கிறான்.

“சாஷா, சற்று பொறு. ஒருவேளை அவன் தெரியாமல் செய்திருக்கலாம்.”

பின் நான் அவனை என்னை நோக்கி இழுக்கிறேன். அவனோ முரண்டு பிடிக்கிறான். நான் குனிந்து அவன் காதில் மெதுவாகச் சொல்கிறேன்:

“சிறுமிகளுக்குத் தொந்தரவு செய்ய உனக்கு விருப்பமில்லை என்பதை நான் நம்புகிறேன். சரி, நீ போய் நடனமாடு. நாங்கள் பார்ப்போம்.”

போன்தோ அவர்களுடன் சென்று கலந்து, ஒழுங்காக நடந்து கொண்டான். இதனிடையே மாரிக்கா என் காலருகே உட்கார்ந்தாள், சாஷாவும் என்னுடன் ஒட்டிக் கொண்டான். நாங்கள் நால்வருமாக சேர்ந்து நடன மாடுபவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இசை ஒலிக்கிறது, குழந்தைகள் நடனமாடுகின்றனர். இந்த 20 நாட்களில் இவர்கள் உண்மையிலேயே வளர்ந்து விட்டார்களா, அல்லது எனக்குத்தான் இப்படித் தோன்றுகிறதா? இல்லை , இவர்கள் இன்னமும் தம் வயதைக் கடக்கவில்லை.

“நேராக உட்காருங்கள்! கைகளைப் பின்னால் கட்டுங்கள்! அசையாதீர்கள்! நான் சொல்வதைக் கேளுங்கள்!” போன்ற வழக்கமான முறைகளில் பாடங்கள் நடத்தினால் குழந்தைகள் உடனேயே சலிப்படைவார்கள், கொட்டாவி விடுவார்கள். முழுக்க முழுக்கத் தூய்மையான போதனை முறையின்படி இவர்களுக்கு கண்டிப்பாக, கருத்தாழமுள்ள வேலைகளைத் தந்தால் விரைவிலேயே குழந்தைகளுக்குப் படிப்பில் சலிப்பேற்படும்.

பாடவேளைகளில் என்ன செய்ய வேண்டுமென விரும்புகின்றார்கள் என்றெல்லாம் குழந்தைகளிடமே அடிக்கடி கேட்பது நன்றாயிருக்கும். அல்லது, பாடம் துவங்கும் முன்னரே, எப்படி பாடத்தை நடத்துவது என்று குழந்தைகளிடம் கேட்டால் நல்லதோ!

பரிசோதனைக்காக இப்படிப்பட்ட பாடங்களைச் “சொல்லிப் புரிய வைக்கும்” கோட்பாட்டின்படி நடத்த நான் முயன்றேன். இவற்றில் குழந்தைகள் என்னிடமிருந்து விலகிப் போனதாக எனக்குப்பட்டது. இத்தகைய பாட வேளைகளின் போது சலிப்பாக இருந்தது, ஏதோ நான் விசாரணை நடத்துவது போன்றும் அவர்களை ஏதோ முக்கியமான ரகசியத்தைச் சொல்லுமாறு கட்டாயப்படுத்துவது போன்றும் அவர்கள் என்னை நம்பாதது போலும் எனக்குப்பட்டது. அவர்கள் கரங்களை உயர்த்தினார்கள், என் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். இவற்றில் மகிழ்ச்சியும் உற்சாகமும் இருக்கவில்லை. “கரங்களை உயர்த்துங்கள்! எல்லோரும்!… எல்லோரும் யோசியுங்கள்!” என்று அடிக்கடிச் சொல்லும்படி நேரிட்டது. இதே கடமைகள் சிக்கலானவையாக மாறின. இப்பாடங்களில் என்ன மாற்றம் நடந்தது. எனது உறவுமுறை மாறியது: நான் அதிகாரபூர்வமானவனாக, பிழைபடாதவனாக, கண்டிப்பானவனாக, தெரிந்தவற்றையெல்லாம் சொல்லும்படி குழந்தைகளைக் கட்டாயப்படுத்துபவனாக நான் மாறினேன். அவர்களது அறிவைப் பதிவு செய்பவனாக நான் மாறினேன். அனேகமாக இது குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை போலும். பாட முடிவில் சாஷா (இவன் என்னை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தான்) என்னை அணுகிக் கேட்டான்:

படிக்க:
இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?
கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !

“ஏன் இன்று நீங்கள் எல்லா பாடவேளைகளிலும் சோர்வாயிருந்தீர்கள்? உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா?”

“உனக்குப் பாடங்கள் பிடிக்கவில்லையா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை !” என்றான் சிறுவன். “நாங்கள் ஒரு முறை கூட சிரிக்கவில்லை“ என்று கூடச் சேர்ந்து கொண்டான் இலிக்கோ.

திடீரென எனக்குப் பட்டது: பாடம் எப்படியிருந்தது, எனக்கு அவர்களால் என்ன சொல்ல முடியும், பாடவேளைகளில் என்ன செய்ய வேண்டுமென விரும்புகின்றார்கள் என்றெல்லாம் குழந்தைகளிடமே அடிக்கடி கேட்பது நன்றாயிருக்கும். அல்லது, பாடம் துவங்கும் முன்னரே, எப்படி பாடத்தை நடத்துவது என்று குழந்தைகளிடம் கேட்டால் நல்லதோ! “குழந்தைகளே, நன்றி. எனது ஆசிரியர் திறமையை மேம்படுத்தும் ஆசிரியர்களாக உங்களைப் பார்ப்பது தற்செயல் அல்ல!” இத்தகைய பரிசோதனைகளை இனி மேற்கொள்வதில்லை, கூட்டான மகிழ்ச்சியைத் தராதபடி பாடங்களை நடத்துவதில்லையென முடிவு செய்தேன். பின்வருமாறு எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?

1

நாடாளுமன்றத்தில் பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமது உறுதிமொழியை தமிழில் வாசித்ததோடு இறுதியில் “தமிழ் வாழ்க” என முழக்கமிட்டுள்ளனர். இதற்கு எதிராக பாரத் மாதா கீ ஜே என பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி உள்ளனர். நாடாளுமன்றத்தில் நடந்த இந்தக் காட்சிகள் தமிழ் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக நேற்று (18 ஜூன்) “ #தமிழ்_வாழ்க ” என்கிற ஹேஷ்டேகை தமிழர்கள் வைரலாக்கினர். பா.ஜ.க.வின் தமிழ் வெறுப்பு அப்பட்டமாக வெளிப்படுவது இது முதன்முறையும் அல்ல; கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை.

சமீபத்தில் வெளியான தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் ஆறாம் வகுப்புக்கு மேல் அனைத்து மாணவர்களும் கட்டாயம் இந்தியை ஒரு மொழிப்பாடமாக கற்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழகம் கொந்தளித்து எழுந்ததைத் தொடர்ந்து மெல்லப் பின்வாங்கிய மத்திய பா.ஜ.க. அரசு, எனினும், வரைவு அறிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தம் “மூன்றாவது மொழி ஒன்றை கற்க வேண்டும்” என்கிறது. இவ்வாறு மூன்றாம் மொழியாக சீனம், ரஷியன், ஜப்பான், ஸ்பானிஷ் உள்ளிட்ட சர்வதேச மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்கான உள்கட்டமைப்பு அரசிடம் இல்லை என்பதால் முக்காடு போட்டுக் கொண்டு ஹிந்தியை திணிப்பதற்கான முயற்சி என்பதாகத்தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தி பேசாத மாநிலங்களின் மேல் – குறிப்பாக தமிழகத்தின் மேல் – இந்தியைத் திணிக்கும் இந்த முயற்சிக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாறு உள்ளது. பல்வேறு மதங்கள், கலாச்சார பின்னணி, மொழி, வேறுபட்ட தன்மை கொண்ட புவிப் பரப்பு என பெரிதும் வேற்றுமைகள் கொண்ட இந்த நாட்டை இணைப்பதற்கான பொது அடையாளம் ஒன்றைத் தேடும் முயற்சி சுதந்திரத்திற்கு முன்பே மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறான ஒரு பொது அடையாளமாக மொழியைத் திணிப்பதற்கான முயற்சியும் அப்போதே துவங்கப்பட்டு விட்டது.

நூற்றாண்டுகளைக் கண்ட வெள்ளையர் ஆட்சியின் விளைவாக ஆங்கிலம் மக்களை இணைப்பதற்கான ஒரு ஊடகமாக வளர்ந்திருந்தது. உயர்கல்விக்கான சாதனமாக மட்டுமின்றி வெள்ளை அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரத்தின் ஒருங்கிணைவுக்கும் ஆங்கிலமே கருவியாக இருந்தது. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வடக்கத்திய அரசியல்வாதிகள் ஆங்கிலத்தை அந்நிய மொழியாக கருதி எதிர்த்து வந்தனர். எனினும், தென்னகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளோ ஆங்கிலத்தையே விரும்பினர். இந்த முரண்பாடு குறித்து 1937-ல் கட்டுரை ஒன்றை எழுதிய ஜவகர்லால் நேரு, இந்தியாவை இணைப்பதற்கான ஒரு மொழியின் அவசியத்தை அதில் வலியுறுத்தி இருந்தார்.

அந்த சமயத்தில் நேருவும், காந்தியும் இந்தி மற்றும் உருது கலப்பு கொண்டு ஹிந்துஸ்தானி மொழியை மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு சாதனமாக பயன்படுத்தலாம் என கருத்து கொண்டிருந்தனர். அதே மொழியின் அடிப்படையில் இந்து மற்றும் முசுலீம் மக்களையும் இணைத்து விட முடியும் என அவர்கள் நம்பினர். பின்னர் அரசியல் சாசன அமர்வின்போது உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஆர்.வி. துலேகர் இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென வாதாடினார். அதே போல் அரசியல் சாசனம் அதிகாரப்பூர்வ முறையில் இந்தியிலும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என மேலும் சில உறுப்பினர்கள் வாதாடினர்.

ஆனால், அதே அமர்வில் இருந்த பிற மொழி பேசும் உறுப்பினர்களோ இந்தியை விட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தமிழ், வங்கம் ஒரியா உள்ளிட்ட மொழிகள் உள்ளன என்றும், இந்தியைத் திணிப்பது நியாயமில்லை எனவும் வாதாடினர். இந்நிலையில் அரசியல் சாசன அமர்வின் உறுப்பினர்களான கே.எம் முன்ஷி மற்றும் கோபால்சுவாமி அய்யங்கார் ஆகியோர் இந்தி மொழியில் அரசியல் சட்டம் இருப்பதில் உள்ள முக்கியமான சிக்கல் ஒன்றை சுட்டிக்காட்டினர். இந்தி ஒரு நவீன மொழியாகவோ, முன்னேறிய மொழியாகவோ இல்லாதிருப்பதால் சட்ட மொழியாக அது இருப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அவர்கள் தரவுகளோடு முன்வைத்தனர். அதன் பின் எந்த மொழியும் தேசிய மொழியாக இருக்க வேண்டியதில்லை எனவும், ஆங்கிலத்தோடு இந்தியும் அலுவல் மொழியாக இருக்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

படிக்க:
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

என்றாலும் அன்றைக்குத் துவங்கி இன்று வரை ஒவ்வொரு முறை இந்தியைத் திணிக்க “தேசிய” கட்சிகள் முயற்சிப்பதும், அதை தமிழகம் எதிர்ப்பதும் வாடிக்கையாக நடந்து வருகின்றது. ஒவ்வொரு முயற்சியின் போதும், ஒரு பொது மொழி இல்லாமல் எப்படி ஒரு தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பது? என்கிற கேள்வியை வடக்கு முன்வைக்கிறது.

மக்களை ஒன்றிணைக்க மொழியால் மட்டுமே இயலுமா?

அவ்வாறு இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இந்தியத் துணைக்கண்டம் தனது விரிந்து பரந்த நிலப்பரப்பில் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் தனக்கென தனித்த அடையாளத்தைக் கொண்டிருக்கிறது. மொழி உள்ளிட்ட இந்த தனித்த அடையாளங்கள் ஒவ்வொன்றும் பல நூற்றாண்டுகளாக – இந்தியா என்கிற ஒரு கருத்து உருவாவதற்கும் பல நூற்றாண்டுகளுக்கும் முன்பிருந்தே – வரலாற்று ரீதியில் உருவாகி நிலைபெற்றவை. என்றாலும், எங்கோ தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் அநீதி இழைக்கப்பட்ட நிர்பயாவுக்காக, ஆசீஃபாவுக்காக, தங்ஜம் மனோரமாவுக்காக, போட்மாங்கேவுக்காக மற்றொரு கடைக்கோடியான கன்னியாகுமரியின் முனையில் நிற்கும் ஒரு தமிழன் போராட முன்வருகிறான்.

கருகிய பயிரைக் கண்டு நெஞ்சு வெடித்து சாகும் தஞ்சை விவசாயிகளுக்கு விதர்பா விவசாயியின் கழுத்தில் இறுகும் கயிற்றின் நுணி யார் கையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதா? கல்விக் கடனை அடைக்க முடியாமல் வேலையும் கிடைக்காமல் பரிதவித்து அலையும் வங்கத்து இளைஞனின் நிலையை அத்துக்கூலிகளாய் நாடெங்கும் விசிறியடிக்கப்படும் பீகார் உ.பி. தொழிலாளிகள் புரிந்து கொள்ள மொழிதான் தேவையா? மக்களை இணைக்காமல் நாட்டை மட்டும் இணைத்து விட முடியாது – மக்களை அவர்களது வாழ்க்கை தான் இணைக்குமேயன்றி மொழி மாத்திரமல்ல. மொழி ஒரு கருவி மட்டுமே.

இதைப் புரிந்து கொள்ளாத மாட்டு வளைய சனாதன அரசியல்வாதிகள் இந்தியைத் திணிப்பது தேவையற்ற பகைமை உணர்ச்சியையே தூண்டி விடும். கை விரல்கள் கூட ஒரே நீளத்தில் ஒன்றே போல் இருப்பது ஆபாசமாகத்தானே இருக்கும்?

சாக்கியன்

பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !

மிழக ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் நிலைப் பற்றி, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் அங்கு பணிபுரியும் 100 பெண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற இலாப நோக்கத்தின் அடிப்படையில், மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வர வேண்டும் என்பதே பல ஆயத்த ஆடை தொழிற்சாலைகளின் தேவையாகும். அதனை பூர்த்தி செய்ய தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மருத்துவர்கள் ஆலோசனையின்றி, அங்கீகாரமற்ற மாதவிடாய் வலி நிவாரணி மாத்திரைகளை வழங்கி வந்திருக்கின்றன என்ற உண்மை இந்த ஆய்வின் முடிவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது இலாப நோக்கத்திற்காக முதலாளிகள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு இதைவிட சான்று எதுவும் இல்லை.

தங்களது தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் எடுக்கும் விடுப்புகளைக் கண்காணிக்கவும் உடல்நிலை சரியில்லை என பொய் சொல்கிறார்களா எனச் சோதிக்கவும் உணவு மற்றும் கழிவறை செல்ல அதிக நேரத்தை செலவிடுகிறார்களா என்பனவற்றைக் கண்காணிக்கவும் மேற்பார்வையாளரையும் நியமித்திருக்கிறது தொழிற்சாலை நிர்வாகம். வேலை செய்யும்போது மாதவிடாய் வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் காண்பிப்பதோ, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதோ என இல்லாமல், அங்கீகாரமற்ற வலி நிவாரண மாத்திரையை, மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் பெண்கள் உட்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் இந்த ஆய்வின் மூலம் வெளியாகியுள்ளது.

மாதிரிப் படம்

ஆடைத் தொழிற்சாலையில், தனது 17 வயதில் தையல் வேலைக்குச் சேர்ந்த சுதாவிற்கு தற்போது வயது 20. தனது வீட்டுச் சூழ்நிலையால் இந்த வேலைக்கு வந்திருக்கும் இவர், விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்வார்கள் என அஞ்சி, மாதவிடாய் காலத்திலும், தொழிற்சாலை வழங்கும் மாத்திரைகளை உட்கொண்டு வேலை பார்த்து வந்திருக்கிறார்.

“எனது மாதவிடாய் காலத்தில் தொழிற்சாலை வழங்கிய மாத்திரைகள் என் வலியை குறைத்தது. நான் வலிகளை மறந்து வேலை செய்ய என்னை பழக்கப்படுத்திக் கொண்டேன். ஆனால் இப்போது எனது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறுகிறார் சுதா.

மருத்துவர்களின் ஆலோசனையின்றி, வழங்கப்பட்ட வலி நிவாரணி மாத்திரையை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்ததால், அவரின் கருப்பையில் நீர்த்திசுக்கட்டிகள் உருவாகியுள்ளது என மருத்துவச் சோதனையில் தெரிய வந்துள்ளது. விடுப்பு எடுத்தால் சம்பளம் இழக்க நேரிடும் என்று பயந்த அவர், தான் வாங்கும் 6000 ரூபாய் சம்பளத்தில் பாதியை தற்போது மருத்துவத்திற்கு செலவழித்து வருகிறார். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியும், தன் வீட்டுக் கடனை அடைக்கவேண்டும் என்பதற்காக ஓய்வெடுக்க வழியின்றி வேலைக்கு சென்று வருகிறார் சுதா.

இதுபோல அங்கீகாரமற்ற மாத்திரையை உட்கொள்ளும் பெண்கள் பலரும், மன அழுத்தம், பதற்றம், சிறுநீர்ப் பாதை நோய் தொற்றுகள், நீர்த்திசுக்கட்டிகள், கருச்சிதைவு போன்றவற்றால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

சுதாவை போல், தொழிற்சாலையில் வழங்கிய வலி நிவாரணி மாத்திரையை மாதக்கணக்கில் சாப்பிட்டு வந்த, கனகா மாரிமுத்துவிற்கு, மாதவிடாய் நின்றுவிட்டது. இப்போது அவருக்கு வயது 21.

“அப்போது என் முன் இரண்டு வழிகளே இருந்தது. ஒன்று ஊதியத்தை இழப்பது, மற்றொன்று மாத்திரைகளை உட்கொண்டு வேலைகளை பார்ப்பது” என்று கூறிய கனகா, தற்போது உடல்நலக் குறைவால் விடுப்பில் உள்ளார்.

“மாதவிடாய்க்காக தொழிற்சாலையில் வழங்கும் மாத்திரையை, மேற்பார்வையாளர் முன்னிலையில் நாங்கள் கட்டாயமாக விழுங்க வேண்டும். அந்த மாத்திரையின் பெயர், பின் விளைவுகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. அதன் நிறம், அளவு மட்டுமே தெரியும்” என தொழிற்சாலையில் பணிபுரியும் 15 முதல் 25 வயதுடைய பெண்கள் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் பணிபுரியும் செல்வி மாதவிடாய் குறித்துப் பேச விரும்பவில்லை. ஏனென்றால், ஒருமுறை தனது மாதவிடாய் வலியைக் குறித்து தன்னுடைய மேற்பார்வையாளரிடம் (ஆண்) கூறியபோது, அவர் கிண்டல் செய்துள்ளார். அதிலிருந்து வலி வந்தாலும் அதனை வெளியில் சொல்லாமல், தொழிற்சாலை வழங்கும் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். 6 மாதங்களுக்குப் பின் செல்விக்கு, வயிறு எரிச்சல் அதிகமாகியுள்ளது. அதன் காரணமாக தற்போது 10 நாட்கள் வருமான இழப்புடன் விடுமுறையில் இருக்கிறார்.

இதுகுறித்து தொழிலாளர் உரிமைக்கான மதச்சார்பற்ற சமூக சேவை தொண்டு நிறுவனத் தலைவர் (head of labour rights charity serene secular social service society) ஜேம்ஸ் விக்டர் கூறியதாவது, “இந்தப் பெண்கள் வீட்டில் இருந்தபோது மாதவிடாய் முறையாக இருந்தது, ஆனால், வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் அவர்களுக்கு உடல்நிலை பிரச்சினைகள் வந்துள்ளது. இந்தப் பிரச்சினைகள் ஆபத்தானவை” என்கிறார். மேலும், “மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின் மற்றும் ஓய்வு வழங்காமல், மாதவிடாய் நிற்க மாத்திரைகளை வழங்கியுள்ளது தொழிற்சாலை. வேலைகள் மெதுவாக செய்தால் அதற்கும் பெண்களை வஞ்சிக்கிறது நிர்வாகம்” என்கிறார்.

மாதவிடாய் காலத்தின்போது தொழிற்சாலையில் தங்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பெண்கள் காட்டியுள்ளனர். அந்த மாத்திரையில் பிராண்ட் மற்றும் காலாவதி தேதி போன்ற எந்த தகவலும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் பரிசோதனைக்காக அம்மாத்திரைகளை மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளது ராய்ட்டர்ஸ் நிறுவனம். மருத்துவச் சோதனையில், “அம்மருந்துகள் இபுப்ரோஃபென் (Ibuprofen), அட்வில் (Advil) போன்ற வலி நிவாரணி மருந்துகள் போலவே வலியை குறைக்கவல்லது. எனினும் அதனைத் தொடர்சியாக உட்கொண்டு வந்தால், பக்கவிளைவுகள் ஏற்படும்” என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நிறைய தொழிற்சாலைகளில் கழிப்பறைகளை வேண்டுமென்றே சுத்தப்படுத்துவதில்லை. கழிப்பறை சுத்தமாக இல்லையென்றால் பெண்கள் அதை உயயோகிப்பது குறையும். அதனால் வேலைகள் அதிகமாக நடக்கும் என்பதே அவர்களின் நோக்கம்…

தமிழகத்தில் சுமார் 40,000 ஆயத்த ஆடை மற்றும் நூற்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் கிட்டதட்ட 3 இலட்சம் பெண் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள் என அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதுவன்றி, கணக்கில் வராத முறைசாரா ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்தும், ஏழை எளிய குடும்பத்தில் இருந்தும், கல்வியறிவில்லாத, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்தும் இளம் பெண்கள் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைக்கு பணிபுரிய வருகிறார்கள்.

பெரிய பெரிய தொழிற்சாலைகள் அதிக உற்பத்தி செய்து, குறைவான விலையில் விற்பதால், நடுத்தர தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை அதிகரிக்கவும், இலாபம் ஈட்ட, தங்களது தொழிற்சாலையில் வேலைப் பார்க்கும் தொழிலாளிகளுக்கு சிறுநீர் கழிக்கக் கூட நேரத்தை வழங்குவதில்லை.

பல தொழிற்சாலைகளில் ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் மட்டுமே கழிப்பறைக்கு நேரம் ஒதுக்கும் அவலமும் நிகழ்கிறது. அதுவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது என 2016-ல் சமூக விழிப்புணர்வு ஆராய்ச்சிக் கல்விக்கான தொண்டு நிறுவனம் (Charity community awareness research education trust) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
கள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் !

“பல பெயர்களிலும், பல வடிவங்களிலும் சுரண்டல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நிறைய தொழிற்சாலைகளில் கழிப்பறைகளை வேண்டுமென்றே சுத்தப்படுத்துவதில்லை. கழிப்பறை சுத்தமாக இல்லையென்றால் பெண்கள் அதை உயயோகிப்பது குறையும். அதனால் வேலைகள் அதிகமாக நடக்கும் என்பதே அவர்களின் நோக்கம்” என பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பெண்கள் ஆய்வுத் துறையின் தலைவர் மணிமேகலை நடேசன் தெரிவிக்கிறார். இவர், 2011-ல், ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களின் நிலையை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.

ஆவணப்படுத்தப்பட்டாலும், அவை சட்டத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டாலும் என்ன பயன்? வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த பெண்கள், குடும்பப் பாரம் போக்க பணிக்குச் சென்றால், அங்கேயும் நரக வேதனைதான்.

கட்டுரையாளர் : அனுராதா நாகராஜ்
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : சங்கீதா
நன்றி : ஸ்க்ரால்

” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” | விழுப்புரம் பொய்க் கேஸ் அனுபவம் !

மிழகத்தில் விழுப்புரம் தொடங்கி டெல்டா மாவட்டம் வரை பேரழிவை ஏற்படுத்த காத்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக, பிரச்சாரம் செய்த மக்கள் அதிகாரம் தோழர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்திருகிறார்கள்.

இளம் தோழரான மதுரைவீரனிடம் கைது குறித்து கேட்டபோது, “கடந்த 09.06 2019 ஞாயிறு 11 மணியளவில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மணிமேகலை, தொல்காப்பியன், ஞானஒளி மற்றும் திலீபன் ஆகியோர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தோம்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளிவந்த தோழர்கள்.

அப்பொழுது என்பீல்டு பைக்கில் வந்த ஏட்டு ஒருவர் என்னையும் தோழர் திலீபனையும் கூப்பிட்டார். வழக்கமாக நோட்டீசு கேட்பதற்காகத்தான் கூப்பிடுகிறார் என்று அருகில் சென்றதும், உங்கள் இருவரையும் ஐயா கூப்பிட்டார் என்றார். தோழர் திலீபன் பிரச்சாரம்தானே செய்கிறோம் எதற்காக கூப்பிடுகிறார் என்றார்.

“ஒன்னுமில்லை… உங்ககிட்ட ஏதோ பேசணும் என்று சொன்னார்.”

“நாங்கள் எப்போதுமே இங்கதான் பிரச்சாரம் பண்றோம்.. இப்ப மட்டும் என்ன புதுசா கூப்பிடுறீங்க?” எனக்கேட்டதும் “எது சம்பந்தமா பிரச்சாரம் பண்றீங்க?” என்றார்.

“ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரா”

“நீங்க மட்டும் ஏன் தனியா பண்றீங்க, எவ்வளவு பேர் அமைப்பில் இருக்கிறார்கள்..” என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்பெசல் பிராஞ்ச் மற்றும் இன்னொரு போலீசு தோழர் தொல்காப்பியனை அழைத்து வந்தனர். பல கேள்விகளுக்கு பிறகு அங்கேயே அட்ரஸை வாங்கியவுடன் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் நோட்டீஸை பெற்றுக் கொண்டு “சரி வாங்க போகலாம்” என்றார்.

தாலுக்கா காவல்நிலையம் சென்றதும் இன்ஸ்பெக்டர் ராஜன் “நோட்டீஸ் எதுவும் கொடுக்கக்கூடாது என்று மேலிடத்துல இருந்து சொல்லியிருக்காங்க. கேஸ் போட சொன்னாங்க. வேணும்னா இந்த ஒருமுறை உங்களுக்காக நான் பேசிப் பார்க்கிறேன்” என்று ‘அக்கறையோடு’ சொன்னார்.

படிக்க:
♦ ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !
♦ சிவப்புச் சட்டை!

கொஞ்ச நேரம் கழித்து எஸ்.ஐ கேஸ் போட சொன்னார். ரைட்டர் எங்களிடம் அட்ரஸ் கேட்டு சிஎஸ்ஆர் காப்பியில் பதிவு செய்து கொண்டிருந்தார். ஆனால் எந்த பிரிவில் வழக்கு போடுவது என்று தெரியாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். இதற்கு மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. மதிய உணவு நேரம் என்பதால் சாப்பாட்டை நம்மிடம் வாங்கிக்கச் சொன்னார்கள்.

வழக்கமா நீங்கதானே வாங்கிக் கொடுப்பீர்கள் என்று கேட்டதும்… காசு எதுவும் இல்ல. நீங்க உண்டியல் வச்சிருந்தீங்களே அது எங்க என்று கேட்டார்கள். பிறகு நாங்களே தோழர்களிடம் சொல்லி வாங்கி சாப்பிட்டோம்.

இவர்கள் ஒரு பொய்க் கதையை யோசித்து எழுதி முடிப்பதற்கு மாலை 5:30 மணி ஆகிவிட்டது. எங்கள் மீது வழக்கு போட என்ன காரணம் என்று சொல்லவில்லை. மேஜையில் இருந்த எஃப்.ஐ.ஆர் காப்பியை படித்ததும் அதனை பிடுங்கிக் கொண்டார்கள். எந்த பிரிவில் வழக்கு போட்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் காட்டினார்கள். ஒருவழியாக காவல்நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு சென்று மெடிக்கல் சர்டிஃபிகேட் எடுத்துக்கொண்டு நீதிபதியிடம் செல்வதற்கு மாலை 6:30 மணி ஆகிவிட்டது.

நீதிபதி கேட்டார். உங்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு என்னவென்று தெரியுமா?

“தெரியாதுங்க”

போலிசை ஏற இறங்க பார்த்துவிட்டு… எஃப்.ஐ.ஆர் காபியை படித்தார்.

“புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள், அவர்களை விசாரிக்கையில், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் கைகளில் கருங்கற்களை வைத்துக்கொண்டு, பேருந்து கண்ணாடிகளையும், மின்விளக்குகளையும் உடைப்பதற்காக சதி செய்து கொண்டிருந்தார்களாம். பொதுமக்களின் அமைதிக்கும் உயிருக்கும் கேடு விளைவிப்பதோடு அரசுக்கு எதிராக சதி செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சீர் குலைத்துவிடுவார்கள்…” என்று எழுதியதை நீதிபதி படித்துக்காட்டினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

உடனே போலிசை ஏறிட்டு… என்ன கதை இது. சினிமா ஸ்கிரிப்ட் எழுதி வச்சிருக்கிங்க. மின்கம்பத்தை அடிக்க போனார்கள், கல்லை எடுத்தார்கள்னு… வேற கதையே உங்களுக்கு கிடைக்கலையா? என்று கேட்டுவிட்டு…

இந்த நோக்கத்தில் தான் இருந்தார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க என்ன ஜோசியக்காரர்களா? அவர்கள் மூளைக்குள் புகுந்து இதைத்தான் செய்ய நினைத்தார்கள் என்று எழுதுவதற்கு….. பொது இடம் தானே cctv camera இருக்கும் இல்லையா… அதில் நீங்கள் சொன்னதெல்லாம் பதிவாகி இருக்கிறதா? சரி பொதுமக்களை அச்சுறுத்தும்படி நடந்து கொண்டதாக தானே சொல்கிறீர்கள். பொதுமக்களிடம் வாக்குமூலம் வாங்கினீர்களா? என்று கேட்டார்.

போலீஸ்காரர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள். எஃப்.ஐ.ஆர் காப்பியில் மதுரைவீரன் வயது 21 என்று குறிப்பிட்டு இருந்ததை பார்த்து போலீஸை நோக்கி கேட்டார்.

“மதுரைவீரன்.. இவருக்கான வயது சர்டிபிகேட் இருக்கிறதா” என்றார்.

“இல்லை” என்றது போலிசு.

22 வயதிற்குள் இருப்பவர்கள் மேல் கேசு போடும்போது ஏஜ் சர்டிஃபிகேட் வைக்கணும்னு தெரியாதா? பி.காம் முடித்துள்ள இந்த மாணவன் மேல் வழக்கு போட்டிருக்கிறீர்கள். சமூகத்தைப் பாதுகாக்கும் போலீஸ் இப்படி இருந்தால் எப்படி சமூகம் முன்னேறும்?” என்று ஆவேசமாக திட்டினார்.

போலீஸ் வாயைத் திறக்கவில்லை. கடுப்பான நீதிபதி, “இதனை இன்வெஸ்டிகேசன் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்ட வேண்டும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு..” என்று கோவமாக சொன்னார்.

தோழர் மதுரைவீரன் “ ஐயா…பொய்க் கேஸ் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். இவர்கள் கேசு போட்டு விட்டார்கள். என் வாழ்க்கை என்ன ஆவது? பொய்க் கேசு போட்ட இவர்கள் மீது என்ன நடவடிக்கை” என்றார்.

நீதிபதி சொன்னார். “மக்கள் போலீசை எதிர்த்துப் பேசுவதில்லை, எதற்கு தொல்லை என்று கடந்து சென்று விடுகின்றனர். இந்த வழக்கில் இன்வெஸ்டிகேஷன் என்று குறிப்பிட்டுள்ளேன். டிரையலுக்கு வந்தால் நான் பார்த்துக் கொள்வேன். அப்போது நான் பேசமாட்டேன் என் பேனா தான் பேசும்” என்று சொல்லிவிட்டு எங்களுக்கு ரிமாண்ட் ஆர்டர் கொடுத்தார்.

படிக்க:
♦ பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !
♦ செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு: தோழர்கள் மக்கள் போர்க்கோலம்

அங்கிருந்து விழுப்புரம் பெரும்பாக்கம் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஜெயில் முன்பே சென்று நாங்கள் முழக்கம் போட்டதும் ஜெயிலர் வந்து பார்த்துவிட்டு “தீவிரவாதியை உள்ளே வைத்துக் கொள்ள மாட்டோம்” என்று சொல்லிக் கொண்டே ஓடி விட்டார். எங்களைக் கூட்டி வந்த எஸ்கார்ட் போலிசு “இவர்கள் ரொம்ப நல்லவர்கள்தான். எடுத்துக் கொள்ளுங்கள்” என்றனர். ஆனால் அதனை ஜெயிலர் ஏற்றுக் கொள்ளாமல் திரும்பிவிட்டார்.  அங்கிருந்து கிளம்பி  காவல்நிலையத்துக்கே அழைத்து வந்தனர். எங்களை அழைத்து வந்த போலிசு “என்னோட தங்கச்சிக்கு மஞ்சள் நீராட்டு இருக்கு. அதுக்கு வேற போவணும்” என்று புலம்பினார்.

காவல் நிலையத்தில் எங்களை விட்டுவிட்டு நீதிபதியிடம் சென்று கடலூர் சிறைக்கு மாற்றி ஆர்டர் வாங்கி வந்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன் ஜீப்பைக் கொடுத்தார். ஜீப்புன்னா டீசல் போடணும். கையில காசு இல்ல. அதனால பஸுல போயிடலாம் என்று இரண்டு எஸ்கார்ட் போலீசு பேசிக்கொண்டிருந்தனர். இறுதியாக ஜீப்பில் கூட்டிச் சென்றனர். கடலூர் மத்திய சிறையை அடைந்தபொழுது இரவு 10:30.

ஜெயிலர், “உங்கள சோதனை பண்ணனும் சட்டையை கழட்டுங்கள்” என்றார்.

“முடியாது. நாங்கள் கிரிமினல் குற்றவாளி கிடையாது. அரசியல் கைதி”.

“டேய்..! கழட்டுடா” என்றார்.

மரியாதையாக பேசுங்கள். எங்களால் கழட்ட முடியாது என்றதும்… “இவர்களை வெளியே அனுப்பு” என்றார் ஜெயிலர்.

எஸ்கார்ட் போலீஸ் ரொம்பவும் பாவமான முகத்துடன், “தயவு செஞ்சி கழட்டுங்க..” என்று கெஞ்சினர். நாங்கள் முடியாது என்று கறாராக மறுத்து விட்டோம்.

ஜெயிலர் சொன்னார். “வைகோ, திருமுருகன் காந்தி எல்லோரும் கழட்டுறாங்க நீங்க கழட்ட முடியாதா? சிறைக்குன்னு விதிகள் இருக்கு. இங்க முதல்வரே வந்தாலும் கழட்டித்தான் ஆகணும்..” என்றார் ஜெயிலர்.

எஸ்கார்டு போலிசு எங்களிடம் “நீங்க எதையும் கழட்ட வேண்டாம் லுங்கியை மாற்றிக்கொண்டு, பேண்ட்டை மட்டும் கொடுங்க. அதில் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்று நாங்கள் சோதனை செய்து கொள்கிறோம்.” என்றனர்.

முடியவே முடியாது என்று, ஜெயிலர் சொன்னார். “சிறைக்கென்று மேனுவல் உண்டு” என்றார். அரசமைப்புச் சட்டப்படி எல்லாம் ஒன்றுதான். எந்த மேனுவலாக இருந்தாலும் சட்டத்திற்குட்பட்டதுதான் என்றதும் கடுப்பாகினார் ஜெயிலர்.

கொஞ்ச நேரம் கழித்து எஸ்கார்ட் போலீசு அவர்களுடைய போனில் எங்களை வீடியோ எடுத்தனர். எடுத்த வீடியோவை டி.எஸ்.பி -க்கு அனுப்பி விட்டு பேசினார். சிறைத்துறையும் அவர்களுடைய மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். எஸ்கார்டு போலீஸ் கோபப்பட்டு “நாங்க ஏதாவது தப்பு செய்தோமா… ஏன் இப்படி பண்றீங்க… வேற யாராவது என்றால் நடப்பதே வேறு” என்றார்கள்.  பின்பு அவர்களாகவே “நீங்க சுட்டாலும் பரவாயில்லை என்ற முடிவோடு வந்து இருக்கீங்க. நாங்க அப்படி இல்ல. போய் பொண்டாட்டி புள்ளைய பார்க்கணும்” என்று நம்மிடம் சோகமான முகத்துடன் சொன்னார்கள்.

கொஞ்ச நேரம் கழித்து.. “இவங்க சட்டைய கழட்ட மாட்டாங்க. ஒரு ஓரமா நீ ஒரு 3 மணிநேரம் தூங்கு. நான் ஒரு 3 மணி நேரம் தூங்குறேன். காலையில வரைக்கும் இப்படியேதான் போயிட்டு இருக்கும்” என்று முடிவெடுத்து விட்டனர் எஸ்கார்ட் போலீசு இருவரும்.

ஒரு கட்டத்தில் எப்படியோ மேலதிகாரிகள் மூலம் ஜெயிலரிடம் பேசிவிட்டு, மேல் ஆடையோடு செக் செய்துவிட்டு வர சொன்னார்கள். “இங்க யாராவது பெண்களா இருக்காங்க, உங்களுக்கு கூச்சமாக இருந்தால் கூட ரூமுக்கு சென்று காட்டுங்கள்..” என்று சொன்னார்கள்.

அப்போதும் நாங்கள் “முடியாது” என்றோம்.

சிவில் உடையில் எங்கிருந்தோ வரவழைக்கப்பட்ட இரண்டு போலீஸ் வந்தது. ஒவ்வொரு தோழராக வரச் சொன்னார்கள். தோழர் திலீபனிடம் சட்டையை கழட்டச் சொல்லி மிரட்டினார்கள். தோழர் திலீபன், முடியாது என்றதும் கம்ப்யூட்டர் அறைக்கு அழைத்துச் சென்று சிங்கம் சூர்யா பட பாணியில் டேபிளை தட்டிவிட்டு கழட்ட முடியுமா முடியாதா என்று அதட்டினர். அந்த சத்தத்தில் 10 போலீசு உள்ளே வந்து விட்டனர். தோழர் திலீபன் முடியாது என்று மறுக்கவே….தோழரின் கை-கால்களை ஆளுக்கொரு போலிசு பிடித்துக் கொண்டு சட்டையை கழட்டிவிட்டு பார்த்து உள்ளே அனுப்பினர்.

படிக்க:
♦ கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !
♦ புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

மதுரைவீரன் தோழரோ “சசிகலா – ஜெயலலிதா எல்லாம் சிறைக்குப் போனார்கள் அவர்களை எல்லாம் இப்படித்தான் நடத்தினீர்களா? என்று கேட்டதும் எல்லோருக்கும் ஒரே விதிதான். அந்த வீடியோவ காட்டினாத்தான் நம்புவியா என்று எகத்தாளமாக கேட்டுவிட்டு கைகளை பிடித்துக்கொண்டு சட்டையை கழட்டியது  போலிசு.  நீங்கள் செய்வது “மனித உரிமை மீறல்” என்றதும்….. எதுவாக இருந்தாலும் நீதிபதிகிட்ட சொல்லிக்கோ என்று சொல்லிவிட்டு சட்டையை கழட்டியது.

“இவர்களை எல்லாம் இப்படி பண்ணத்தான் முடியும். அத  விட்டுவிட்டு பிடித்து உருவிக் கொண்டு இருக்கிறீர்களா” என்று சிவில் உடையில் வந்த போலிசு தனது அதிகாரத் திமிரை வெளிப்படுத்தியது. இறுதியாக சோதனை முடிந்த பிறகு அட்மிஷன் போட்டு எங்கள் மூன்று பேரின் சட்டையைக் கொடுத்து அனுப்பினர். அப்பொழுது மணி 1:30-ஐ தாண்டியது.

மக்கள் அதிகாரம் டி-ஷர்ட்டை போடுவதற்கு முனைந்த போது அதற்கு அனுமதி மறுத்து விட்டார்கள். கேட்டதற்கு “உங்களுக்கு எதிரி யாராவது இருப்பார்கள். அவர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாக்கத்தான்” என்றார்கள்.

மூவரையும் தனி அறையில் போட்டு விட்டனர். அடுத்தநாள் காலையில் தலைமை ஜெயிலர், “நீங்கதான் ஆடையை கழட்டுவதற்கு அடம்பிடிச்சிங்களா? அனைத்தையும் கேள்விப்பட்டேன். மனதுக்கு கஷ்டமாக இருந்தது. நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். பல போராட்டம் படிக்கும் காலத்தில் நானும் செய்திருக்கிறேன். கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள். அப்போதுதான் வெற்றி பெற முடியும்” என்றார். மூன்றாவது நாள் பெயில் கிடைத்து வெளியில் வரும் பொழுது எங்களை ஒரு பார்வையுடன் பார்த்தார்.

எங்கள் அனுபவமாக, அதிகாரவர்க்கம் தலைக்கனத்துடன் இருக்கிறார்கள். ஜெயிலுக்கு வருபவர்கள் அனைவரும் அக்யூஸ்ட் என்று அவர்கள் கருதுகிறார்கள். அமைப்பு பெயரை சொன்னால்தான் மரியாதை கொடுக்கிறார்கள். அமைப்பாக இருப்பதன் மூலம்தான் உரிய மரியாதை கிடைக்கிறது. நாம் அவர்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடிகிறது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

நினைவேந்தல் – படத்திறப்பு !

அண்ணாமலை அரங்கம்,
ரயில்வே நிலையம் அருகில்,
கோயம்புத்தூர்.

23-06-2019,
காலை 10 மணி

 

தலைமை :

தோழர் அ.முகுந்தன்,
மாநில தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

உருவ படம் திறப்பு :

தோழர் மனோகரன்,
முன்னாள் பொருளாளர்,
கோவை மண்டல பஞ்சாலைச் சங்கம்.

நினைவேந்தல் உரை :

தோழர் எஸ். கிருஷ்ணமூர்த்தி,
மாவட்டச் செயலாளர்,
சி.ஐ.டி.யு. – கோவை.

தோழர் என். தாமோதரன்,
சி.பி.ஐ.(எம்.எல்) மாநில குழு உறுப்பினர்,
கோவை.

திரு C. நடராஜன்

திரு M.P. ஆறு குட்டி

தோழர் காளியப்பன்,
பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

தோழர் ப.விஜயகுமார்,
பொருளாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

தோழர் மருதையன்,
பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.


ன்பார்ந்த நண்பர்களே !

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோவை மாவட்டத்தின் ஒப்பற்ற புரட்சிகர நக்சல்பாரி தலைவரான தோழர் விளவை இராமசாமி அவர்கள் கடந்த 11.06.2019 அன்று இயற்கை எய்தினார். தான் தலைமையேற்று நடத்திய போராட்டங்களில் தோல்வியை ஒருபோதும் விரும்பாத பிறவிப் போராளியான அவர், உடல் நலிவுற்ற நிலையில் கடந்த 20 மாதங்களாக இயற்கையோடு நடத்திய போராட்டத்தில் மட்டும் ‘தோற்று’ப் போனார். அவரது மறைவு புரட்சிகர இயக்கத்திற்கும், தொழிலாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்திய புரட்சி இயக்கம் ஒரு முன்னணிப் போராளியை இழந்து விட்டது.

கோவையின் வடக்கு வட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான விளாங்குறிச்சியில் பழனியப்பன் – செல்லம்மாள் தம்பதிகளுக்கு 1960-ம் ஆண்டு மார்ச் 6-ம் நாள் பிறந்தார். இளமைக்காலத்தில் இருந்தே பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் மீதும், முற்போக்கு பத்திரிகைகள் மீதும் பெரும் நாட்டம் கொண்டவராக இருந்து வந்தார். முற்போக்கு பத்திரிகைகள் மீதான அவரது ஈர்ப்பு வெறும் இலக்கியத்தின் மீதான காதல் அல்ல. மாறாக சமூகத்தின் மீதும் இந்த சமூகத்தை மாற்ற வேண்டும் என்கிற வேட்கையின் மீதும் உள்ள வெளிப்பாடுதான். புரட்சிகர இயக்கமான நக்சல்பாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு முன்னதாக, 1989-ல் ஞானி நடத்திய “நிகழ்” இதழில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர் எழுதிய கவிதையே இதற்குச் சான்று. அந்தக் காலகட்டத்தில் தன்னைச் சுற்றி அன்றாடம் நடக்கும் சமூக அவலங்களை பல்வேறு பத்திரிகைகளுக்கு செய்தியாக அனுப்புவதை ஒரு வேலைத்திட்டமாகவே கொண்டிருந்தார்.

CS&W பஞ்சாலைத் தொழிலாளியின் மகனான இராமசாமியினுடைய வாழ்க்கைக் கனவு தான் ஒரு ஓவியராக ஆக வேண்டும் என்பதே. ஆனால், தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, மத்திய அரசின் தேசிய பஞ்சாலைக் கழகத்தைச் (என்.டி.சி) சேர்ந்த முருகன் மில்லில் 1982-ல் சாதாரண பஞ்சாலைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கினார். இவ்வாலையில் அப்ரண்டிசாக பணிபுரிந்தபோது, அவரது சூப்பர்வைசர் அவரிடம் சிகரெட் வாங்கி வரச் சொல்கிறார். இந்தச் செயல் தனது தந்தைக்கு பிடிக்காது எனக்கூறி சூப்பர்வைசரின் உத்தரவை நடைமுறைப்படுத்த மறுக்கிறார். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மறுநாள் இவரது ஐ.டி. கார்டை பிடுங்கிக் கொண்டு தர மறுத்தார் சூப்பர்வைசர். இதை எதிர்த்து, தன்னுடன் பணிபுரியும் அப்ரண்டிஸ் தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு போராடி, நிர்வாகத்தை பணிய வைத்தார். அன்று முதல் சாதாரண தொழிலாளி இராமசாமி தோழர் இராமசாமியாக அறியப்பட்டார்.

இயல்பாகவே பஞ்சாலைகளில் தொழிலாளர்களின் வேலை புல்நைட், பகல்நைட் என ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கைத் தரமோ நாளுக்கு நாள் மோசமாகி போய்க்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தொழிலாளர்களின் பாதுகாவலனாக, அவர்கள் பிரச்சினைகளை நிர்வாகத்திடம் பேசும் தொழிற்சங்கத் தலைவராக உருவெடுத்தார், இராமசாமி. துவக்கத்தில் முருகன் மில்லில் இயங்கி வந்த ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் கிளைச்செயலாளராக பொறுப்பேற்று முருகன் மில்லிலும் என்.டி.சி. நிறுவனத்தின் பிற மில்களிலும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இராமசாமியின் குரல் விரிவடையத் துவங்கியது. வெறும் தொழிற்சங்க நடவடிக்கை என்பதில் இருந்து தாண்டி, தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்துக்கான வழிகுறித்து தனது சித்தனையை விரிக்கத் துவங்கினார். சரியான அமைப்புக்கான தேடலையும் துவங்கினார். இந்தத் தேடலின் இறுதியில் நக்சல்பாரி புரட்சிகர அமைப்பில் இயங்கத் துவங்கி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் முன்னோடிகளில் ஒருவராக உயர்ந்தார். அதன் நிறுவனர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பு.ஜ.தொ.மு. மாநில துணைத் தலைவராகவும், கோவை மாவட்டத் தலைவராகவும், பு.ஜ.தொ.முவுடன் இணைக்கப்பட்ட கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று கொங்கு மண்டலத்தில் புரட்சிகர தொழிற்சங்கத்தை கட்டியமைப்பதில் பெரும் பங்காற்றினார்!

1980-களில் நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தின் வழிகாட்டுதலில் தன் அரசியல் பயணத்தை துவங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளி வர்க்கத்திற்காக செயலாற்றி வந்தார். எந்தப் பிரச்சினை என்றாலும், வெற்றியோ, தோல்வியோ களத்தில் இறங்குவோம் என போராட்டங்களில் உறுதியாக நின்றவர். “உழைக்கும் மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு விசயத்திலும், எதிரி எத்தகைய பலமானவனாக இருந்தாலும், தோற்கக்கூடிய சூழலாக இருந்தாலும் போராடித் தோற்க வேண்டும் தோழரே! பாட்டாளி வர்க்கத்தின் தற்காலிகத் தோல்வி கூட கவுரவமானதாக இருக்க வேண்டும் தோழரே!” இதுதான் தோழர் இராமசாமியின் போர்க்குரல்! தோழர் இராமசாமி உடல் நலிவுற்று வீழ்ந்த நிமிடம் வரையிலும் இந்தக் கம்பீரக்குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.

தோழர் இராமசாமி பணியாற்றிய முருகன் மில்லை உள்ளடக்கிய என்.டி.சி. நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது என்கிற போதிலும், தொழில் நசிவைக் காரணம் காட்டி, பல மில்களை மூடுவது, அதன் சொத்துக்களை அற்ப விலைக்கு விற்பது போன்ற அயோக்கியத்தனங்களுக்கெதிராக போர்க்குரல் எழுப்பிய தோழர் இராமசாமி, என்.டி.சி தொழிலாளர் சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தலை நிர்வாகம் பல ஆண்டுகளாக நடத்தாமல் தொழிற்சங்க கட்டைப் பஞ்சாயத்துத் தலைவர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருந்ததை கண்டு கொதித்துப் போனார். இதன் விளைவாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் ”கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்” என்கிற சங்கத்தை கட்டியமைத்து ஒத்த கருத்துடைய தொழிலாளர்களை அணிதிரட்டினார். தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்றார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடந்த சங்க அங்கீகாரத் தேர்தலில் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்துக்கு தொழிற்சங்க அங்கீகாரத்தை வழங்கிய தொழிலாளி வர்க்கம் தோழர் இராமசாமியை தனது தலைவராக அங்கீகரித்து, செங்கொடியை உயர்த்திப்பிடித்தது.

கோவை பகுதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, சுவரொட்டி ஓட்டுவதற்கு கூட தடை இருந்தபோது அந்தத் தடைக்கு எதிராக, போலீஸ் இராஜ்ஜியத்தை அம்பலப்படுத்தி வீதியில் இறங்கி போராடியதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக 2015-ம் ஆண்டு பாசிச ஜெயாவின் விடுதலை குறித்து பு.ஜ.தொ.மு. சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைக் காரணம் காட்டி தோழர் மற்றும் அவரது மகன் மீது கோவை போலீஸ் பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் தள்ளியது.

அதேபோல கோவை மண்டலத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றதில் தோழரின் பங்கு அளப்பரியது. தொழிலாளர்களுடைய போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு, அவர்களின் போராட்ட பந்தலிலேயே அமர்ந்து உரையாடித் தொழிலாளர்களுக்கு, எளிமையாக வர்க்க அரசியலை விளக்கி உணர்வூட்டுவதில் அவருக்கு நிகர் அவரே! ஆசான் லெனினின் ”என்ன செய்ய வேண்டும்?” நூலை தொழிலாளிகளும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாக காணொளி மூலமாக விளக்கி, தமிழகத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஒரு வழிகாட்டியாக தன்னை பதிவு செய்துள்ளார்.

படிக்க:
தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !
சுத்தியால் அடித்துத்தான் முதலாளி எங்களை எழுப்புவார் !

தான் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் உறுதி, கொள்கையில் விடாப்பிடியான போராட்டம், அரசியல் முன்முயற்சி, இழப்புக்கு அஞ்சாத தலைமை பண்பு ஆகியவை தோழர் இராமசாமியின் அடையாளங்கள். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னணி படைவீரராக களம் கண்டவர். குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதை எதிர்த்தும், தேசிய பஞ்சாலைக் கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது எனவும் கடுமையாக எதிர்த்தவர். கோவை மண்டல பஞ்சாலைச் சங்கத்தை நிறுவி, சிதறிக் கிடந்த பஞ்சாலைத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து இறுதிவரை போராடினார். அதனாலேயே நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு ஆளாகி தன் வேலையையும் இழந்தார். வேலை இழப்பு அவரது உறுதியையோ, பாட்டாளி வர்க்கத்துக்கான பணிகளையோ ஒருபோதும் பாதித்தது இல்லை .

“கம்யூனிஸ்ட் என்பவர் பரந்த உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர் போல கருத வேண்டும். தனது சொந்த நலன்களை புரட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படுத்த வேண்டும். எங்கும் எப்போதும் ஏற்றுக் கொண்ட கோட்பாட்டினை உயர்த்திப் பிடிப்பதும் தவறான கருத்துக்கள், செயல்பாட்டுக்கு எதிராக சளைக்காமல் போராட்டம் நடத்தவும் வேண்டும்” என்கிற மாவோவின் கூற்றுக்கு இணங்க தன்னுடைய புரட்சிகர இயக்க வாழ்க்கையை சமரசம் இன்றி போராடி வாழ்ந்து மறைந்தவர் தோழர் விளவை இராமசாமி.

உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்து மரணமடைந்த தோழரின் அர்ப்பணிப்பை பற்றிக் கொள்ளுவோம்! நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவர் ஏற்றுக் கொண்ட மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! ஆளும் தகுதியை இழந்துவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்த தோழர் விளவை இராமசாமியின் நினைவேந்தலில் உறுதியேற்போம்!

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி.
தொடர்புக்கு: 94444 42374, 90924 60750

ஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன ?

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 05

ரியத்துக்கு முன்பு இந்தியாவின் நிலை என்ன? ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை, இவற்றைப் பண்டைய ஆராய்ச்சி மூலம் சிறிது காலவரையறையுடன், கீழே காட்டப்பட்டிருக்கிறது. இவை சரித்திர ஆசிரியரான தோழர் P.T. சீனிவாச அய்யங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய சரித்திரம்’’ முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.

கி.மு. 5000 வரை இந்தியாவின் நிலை :

”ஆரியம் பரவுவதற்கு முன் இந்தியாவில் நான்கு வருண பேதங்கள் கிடையா. மண விஷயத்தில் ஆரியர்களின் யக்ஞ முறை அனுஷ்டிக்கப்படவில்லை. வட இந்தியாவில் பேசப்பட்ட பாஷைகள் கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்கிருதத்தில் கடன் வாங்கியதானாலும், தென் இந்தியா சமஸ்கிருதத்துக்கு அடிமைப்படவில்லை. இந்தியாவில் ஆரம்ப காலத்தில் பேசி வந்த பாஷை இப்போது கோதாவரி, வங்கம், விசாகப்பட்டினம் முதலிய இடங்களில் வசிக்கும் அதிக கல்வியறிவில்லாத மக்கள் பேசும் பாஷையாக இருந்திருக்க வேண்டும். அதனுடைய நாகரிக உருவந்தான் தமிழ் என்பது.”

இரும்புக்கருவிக் காலம் – கி.மு 5000 முதல் 3000 வரை :

”சமஸ்கிருதம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்து முன்பு தமிழ் பாஷையிலிருந்து இந்த நாட்டின் பண்டைய வாழ்க்கையைச் சித்தரித்து விடலாம். அக்காலத்தில் நால்வகை நில (முல்லை, நெய்தல், மருதம், குறிஞ்சி) மக்களே வாழ்ந்தார்கள். கிறிஸ்து சகாப்தம் ஆரம்பமாவதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன், தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்தான் (திராவிடர்), சால்தியன் (தற்பொழுது ஈராக் எனப்படும் பிரதேசங்கள்) நாகரிகத்துக்கு ஆதிகர்த்தாக்கள் என்று பல பாஷா பண்டிதர்கள் நினைக்கிறார்கள். பிரேதத்தை எரிக்கும் வழக்கம் ஆரியம் பரவியதற்குப் பிறகு ஏற்பட்டது. அம்மக்கள் (ஆரியரல்லாதார்) இமயம் முதல் குமரி வரையிலும், சிந்து (நதி) முதல் பிரம்மபுத்திரா (நதி) வரையிலும் பரவிக் கிடந்தனர்.

ஆரியக் கோட்பாடு, கி.மு. 3000 முதல் 1500 வரை :

P.T. சீனிவாச அய்யங்கார்.

”இக்காலத்தில்தான் தெய்வ வழிபாடு புதிய முறையொன்றை அடைந்தது. நெருப்பின் மூலம் கடவுளைத் தொழுதலே அம்முறை. இதை ஒப்புக் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும், ஒப்புக்கொள்ளாதவர்கள் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) என்றும் ஆனார்கள். தேவபாஷையாகிய சாண்டாசா (சமஸ்கிருதம்) பாஷையைத்தான் இந்தோ – ஐரோப்பிய பாஷையெனக் கூறுகிறார்கள்.

இந்த அக்னி வழிபாட்டையும் புதிய பாஷையையும் வடமேற்குக் கணவாய் வழியாய் இந்தியாவிற்கு வந்த அன்னியர்தாம் (ஆரியர்) கொண்டு வந்தனர் என ஐரோப்பியப் பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இவை, பிரயாகை (அலகாபாத்)யில் உண்டாயிற்று என்றுதான் தெரிகிறது.

கி.மு. 3000 முதல் 2000 வரை :

பர்க்கவாஸ், அகஸ்தியர் என்ற இரு ஆரியப் புரோகிதக் குடும்பங்கள்தான், தென்னிந்தியாவுக்கு ஆரியக்கலைகளைக் கொண்டு வந்து பரவச் செய்தன.

”மலையாளத்திலே, பிராமண காலனி (குடியேற்றம்)யும் உண்டாயிற்று. இராமாயண காலத்தில் (கி.மு. 2000) தென் இந்தியா, தஸ்யூக்களின் அல்லது இராஷதர்களின் (திராவிடர்) பலமான கோட்டையாக இருந்தது. அவர்கள் ஆரிய முனிவர்களின் யாகக் கிருத்தியங்களுக்கு விரோதமாக இருந்தார்கள். அந்த இராக்ஷதர்கள் (திராவிட) வட இந்தியரைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களாயில்லை. இக்காலத்தில் தென்னிந்தியாவில் பல ராக்ஷச ராஜ்யங்கள் இருந்தன. இவற்றுள் பெரியது கோதாவரி பள்ளத்தாக்கிலிருந்த ஜனாஸ் தானா என்ற இராஜ்யமாகும். டெக்கான் காடுகளென்னும் தண்டகாரண்யத்தில் (விந்தியமலைக்குத் தெற்கேயும், திருவேங்கட மலைக்கு வடக்கேயுமுள்ள பிராந்தியமாகக் கொள்ளலாம்), ஆரியர்களின் கொள்கைகள் பரவுவதைத் தஸ்யூக்கள் வெறுத்தனர்.

வர்ணாசிரமக் கொள்கையான பிராமணன் க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவை யாகங்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. விந்திய மலைக்கு வடக்கேயுள்ள பகுதியைப் புண்ணிய பூமியாகக் கருதி, அதற்கு ஆரிய ரிஷிகள் ஆரிய வர்த்தனம் என்று பெயரிட்டனர். அவர்களுக்கு விரோதமானவர்களை அந்த ரிஷிகள் தக்ஷண பாதாவுக்குத் (ஆரிய ஆதிக்கமில்லாத தண்டகாருண்யப் பிரதேசங்களுக்கு) துரத்தினர். தென் இந்தியாவிலுள்ள தஸ்யூக்கள் (திராவிடர்), பேர் பெற்ற வியாபாரிகள், அவர்களை ரிஷிகள், பணிக்கர் என்று அழைத்தனர். ஆரியர் வகுத்த நான்கு வருணங்களையும் சேராதவர்கள் தஸ்யூக்கள் எனப்படுவர்.

மகாபாரதக் காலத்திற்குப் பின் கி.மு. 1409 – 750 :

”கி.மு. 1500 -ல், பிராமணர்களின் நான்கு ஆசிரமக் (பிரம்மச்சாரிய, கிரகஸ்த, வானப்பிரஸ்த, சந்யாச நிலை) கொள்கை தலை நீட்டியது. பிராமணர்களுக்கு மட்டுமே பிறப்பு இறப்பு அற்ற மோக்ஷதானம் உண்டு என்ற கொள்கையும் பரவியது. உபநயனம் என்ற சடங்கும், முதல் மூன்று வர்ணத்தாருக்கு மட்டும்தான் என்று ஆயிற்று. பிராமணர்களே புரோகிதராகவும், அரசர்களுக்கு மந்திரிமார்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள்தான் அரசனை அடக்கி ஆதிக்கம் செய்தார்கள்.

“டவுனுக்குத் தென்புறத்திலே ஓர் இடம் உண்டு. அதில்தான் மன்னரின் தர்பார் நடக்கும். அந்தக் கூட்டத்தில் சொக்கட்டான் நடப்பதுண்டு. முதல் மூன்று வருணத்தார் மட்டுந்தான் அங்கு விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

கி.மு. 750 முதல் 320 வரை :

P.T. சீனிவாச அய்யங்கார் எழுதிய ”இந்திய சரித்திரம்’’ நூலின் முகப்பு அட்டை.

”இக்காலத்தில் மதம் மனித வாழ்வில் முக்கிய ஸ்தானம் பெறுகிறது என நினைத்து, அரசர்கள் புதிய மதங்களையும் உண்டாக்கி அரசாங்க வருமானத்துக்கு வகை தேடினார்கள். சந்நியாசிகள், அதிலும் பிராமண சந்நியாசிகள் மூலமாகத்தான் மோக்ஷம் கிடைக்குமென்ற புதிய கோட்பாடு உண்டானது. அதன் ஆரம்பந்தான் லிங்கம், சாளக்கிராமம் என்ற விக்ரக வணக்கமாகும். க்ஷத்திரியர்கள் சந்நியாசிகள் ஆவதற்கோ , பிராமணராகப் பிறக்காமல் மோட்சமடைவதற்கோ, ஆரிய மதத்தில் இடங்கிடையாது என்பதை உணர்ந்த இக்காலத்தில்தான், க்ஷத்திரியத் துறவு சமயங்களான சமணமும், பௌத்தமும் எழும்பின.

”பெளத்தர்கள் எழுதிய பாலி பாஷையும், சமணர்கள் (ஜெயினர் என்றும் கூறுவது உண்டு) எழுதிய அர்த்த மகதி பாஷையும், சமஸ்கிருத பாஷைக்குப் பரம விரோதிகளாகும். (பாஷையிலுங் கூட ஆரியர் – பௌத்த சமணத்தார்களுக்குப்  பகைவர்கள் என்பது கவனிக்கத்தக்கது) புதிதாக எழுந்த பெளத்த – சமண மதங்களால் பிராமணர்களுக்கு மதிப்புக் குறையத் தலைப்பட்டது.

கி.மு. 320 முதல் 230 வரை :

”இந்தியா பூராவும் மெளரிய அரசர்கள் ஆட்சி செலுத்தினாலும், தமிழர் இனம் மட்டும், அந்தச் சக்கரவர்த்திகளின் ஆதிபத்தியத்தில் வரவில்லை. மூவேந்தர்கள் ஆட்சியில் தமிழக வாணிபம், ஆரியமயமாக்கப்பட்ட வட இந்திய ராஜ்யங்களுடனும், மேற்கே பாரசீகம் (பெர்சியா) எகிப்து, அரேபியா, கிரீஸ், தமிழில் யவன நாடு ஆகிய தேசங்களுடனும், கிழக்கே பர்மா (சுவர்ண பூமி என்று கூறுவர்) மலேயா, ஜாவா (சாவகம் என்றும் பெயர்) சுமத்திரா, சீனம், சீபம் (சயாம் என்பார்கள் ஆங்கிலத்தில்) ஆகிய தேசங்களுடனும் நடைபெற்றது.

படிக்க:
மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவோம் – காந்தியின் பேரன் !

”பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் மன்னர்கள் அரண்மனைகளில், பிராமணர்கள் செல்வாக்கடைய ஆரம்பித்தார்கள். பிராமணர்களின் யாக முறைகளில் ஆசை பிறந்தவுடன், அவர்கள் உண்டாக்கிய சந்திர சூரிய வம்சத்தில் தாங்களும் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் வேட்கையும் பிறந்தது சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு. அகஸ்திய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் தமிழ் பாஷையைக் கற்றுக் கொண்டு, தமிழ் பாஷைக்கு ஐந்திர சிஸ்டத்தில் சமஸ்கிருத இலக்கணத்தை உண்டாக்கினார்கள். அரசன் ஆரியக் கோட்பாட்டில் மயங்கினாலும் தமிழ்ப் பொதுமக்கள் ஆரிய மத சமூக வலையில் அகப்பட்டார்களில்லை.

கி.மு. 230 முதல் கி.பி. 300 வரை :

”கி.பி. 150 -ல் பிராகிருத மொழி போய், சமஸ்கிருதம் அரசாங்க பாஷையாகியது வடநாட்டில். இக்காலம், பல்லவர்கள் மாளவ தேசத்தை ஆண்ட சமயம். காஞ்சியை ஆண்ட ஆரியமயமாக்கப்பட்ட பல்லவர்களே கி.பி. 200-க்கு முன் தமிழ்நாட்டில் பிராகிருத மொழியை உத்தியோக பாஷையாக்கினார்கள். வட இந்தியாவில் இருந்த அரசியல் முறையைத் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள். தமிழ் அரசர்களும் ஆரியத்தைப் பின்பற்றி, இராஜ சூய யாகம் முதலியன செய்ய ஆரம்பித்தனர். இராமாயணமும், பாரதமும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. மனுதர்ம சாஸ்திரம் வட இந்தியாவின் கீழ்ப்பகுதியில்தான் எழுதப்பட்டது! (இதனால் இம்மூன்று நூற்களும், அவற்றிற் பிறந்த கிளை நூற்களும், தமிழகத்துக்குப் புறம்பானவை என்பது பெறப்படுகிறது)

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

அவன் கால்கள் அகற்றப்பட்டது தெரிந்ததும் வோல்கா என்ன சொல்வாள் ?

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 6

றுவைக்குப் பிறகு அலெக்ஸேய் மெரேஸ்யெவின் இயல்பில், இத்தகைய சூழ்நிலையில் ஏற்படக்கூடிய மிகப் பயங்கரமான மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. அவன் தனக்குள் ஒடுங்கிவிட்டான். அவன் குறை சொல்லவோ, அழவோ, சிடுசிடுக்கவோ இல்லை. அவன் மௌனம் சாதித்தான்.

தனது ரெஜிமெண்டுக்கு, விமானி வேலைக்கு, பொதுவாகவே போர் முனைக்கு அவன் இனி ஒருபோதும் திரும்பப் போவதில்லை. விமானத்தை உயரே கிளப்பிக் கொண்டு போகவும் விமானப் போரில் கலந்து கொள்ளவும் இனி அவனுக்கு இயலாது! இப்போது அவன் அங்கஹீனன்; விருப்பிற்குகந்த பணியிலிருந்து அகன்று விட்டவன்; ஓரிடத்தில் கட்டுண்டவன்; குடும்பத்தினருக்குச் சுமை, வாழ்வுக்குத் தேவை அற்றவன். இதை நேராக்க முடியாது, வாழ்நாள் முழுவதும் இது இப்படியே இருக்கும்.

நாள் முழுவதும் அசையாமல் நிமிர்ந்து படுத்து, மோட்டிலிருந்து நெளிந்த வெடிப்பையே நிலைக்குத்திட்டு நோக்கியவாறு கிடப்பான் அலெக்ஸேய். தோழர்கள் அவனிடம் பேச்சுக் கொடுத்தால் “ஆமாம்”, “இல்லை” என்று – அதுவும் அடிக்கடி பொருத்தம் இன்றி -விடையளித்துவிட்டு மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்து விடுவான். மருத்துவர்கள் குறித்த சிகிச்சை முறைகளை எல்லாம் அவன் பணிவுடன் கடைபிடிப்பான், அவர்கள் எழுதிக் கொடுத்த மருந்துகளை எல்லாம் சாப்பிடுவான், தாமதமாக, பசியே இன்றி உணவு கொள்வான், பின்பு மறுபடி நிமிர்ந்து படுத்துவிடுவான்.

“டேய், தாடி, என்ன யோசனை பலமாயிருக்கிறது?” என்று அவனிடம் பேச்சு கொடுத்தார் கமிஸார்.

அலெக்ஸேய் அவர் புறம் முகத்தைத் திருப்பினான், அவரைக் காணவே இல்லை போன்ற தோற்றத்துடன்.

“என்ன யோசனை பலமாயிருக்கிறது என்று கேட்டேன்.”

“ஒன்றுமில்லை.”

ஒரு முறை வஸீலிய் வஸீலியயெவிச் வார்டுக்கு வந்தார்.

சிறந்த தேர்ச்சியுடன் செய்யப்பட்ட அறுவையை அவன் எஃகு சரீரம் எளிதில் தாங்கிக்கொண்டது. காயங்கள் விரைவாக ஆறிக் கொண்டு வந்தன. எனினும் அவன் வெளிப்படையாக தெரியும் அளவுக்குப் பலவீனம் அடைந்தான்.

“என்ன, ஊர்வான், உயிரோடு இருக்கிறாயா? என்ன சமாச்சாரம்? வீரன்தான் நீ, முணுக்கென்று கூடக் கத்தவில்லை! நீ ஜெர்மானியர்களிடமிருந்து தப்பி, பதினெட்டு நாட்கள் தவழ்ந்து, ஊர்ந்து வெளியேறினாய் என்பதை இப்போது நம்புகிறேன், தம்பி. என் வாழ்நாளில் நான் எத்தனை படைவீரர்களைக் கண்டிருக்கிறேனோ, அத்தனை உருளைக் கிழங்குகளைக்கூட நீ தின்றிருக்க மாட்டாய். ஆனால் உன் போன்றவனுக்கு அறுவை செய்ய இதுவரை வாய்க்கவில்லை” தலைமை மருத்துவர் ரசக்கற்பூரத்தால் அரிக்கப்பட்ட நகங்களைக் கொண்ட, தோலுரியும் சிவந்த கைகளைத் தேய்த்துக் கொண்டார். “என்ன உர்ரென்று முகத்தை வைத்துக் கொள்கிறாய்? இவனைப் புகழ்கிறேன், இவன் முகத்தைச் சுளிக்கிறான். நான் மருத்துவ லெப்டினன்ட் ஜெனரலாக்கும். தெரியுமா? உத்தரவிடுகிறேன் ! ஊர்ந்தும் வந்திருக்கிருக்கவே வேண்டாமே! ரிவால்வரில் மூன்று குண்டுகள் பாக்கியிருந்தனவே.”

தடையரண்களால் சூழப்பட்டுக் கடுகடுப்புடன் போர்க்கோலம் பூண்டிருந்த மாஸ்கோவில் எங்கிருந்தோ எப்படியோ தளிர்த்திருந்த தூவி வில்லோக் கிளைகள் சிலவற்றைக் க்ளோவ்தியா மிஹாய்லவ்னா கொண்டுவந்தாள். ஒவ்வொரு நோயாளியின் சிறு மேஜை மீதும் ஒரு வில்லோக் கொம்பைக் கண்ணாடித் தம்ளர்களில் வைத்தாள். செம்மையோடிய கொம்புகளில் வெள்ளிய தூவியடர்ந்த இலை மொக்குகள் சிறு நூல் பந்துகள் போலக் காட்சி தந்தன. வசந்தகாலமே நாற்பத்து இரண்டாம் வார்டுக்குள் வந்துவிட்டது போன்ற புத்துணர்ச்சி அவற்றிலிருந்து எங்கும் பரவியது. அன்று எல்லோருமே இன்பக் கிளர்ச்சி கொண்டிருந்தார்கள். வாய் மூடி டாங்கிவீரன் கூட கட்டுகள் போட்ட முகமும் தானுமாகச் சில வார்த்தைகளைக் கலகலத்தான்.

அலெக்ஸேய் படுத்தபடியே எண்ணமிட்டான்: கமீஷினில் இப்போது கலங்கல் நீரோடைகள் சேறு படிந்து நடக்கிட்டிருக்கும் நடைபாதைகளின் ஓரமாக சாலைகளில் பரவிய பளிச்சிடும் கூழாங்கற்கள் மேல் பாய்ந்தோடும். வெப்பமடைந்த தரை, குளுமையான ஈரிப்பு, குதிரைச் சாணம் இவற்றின் வாடை கலந்து வீசும். இந்த மாதிரி ஒரு நாளில்தான், வோல்கா ஆற்றின் செங்குத்தான கரைமீது அவனும் ஓல்காவும் நின்றார்கள். வானம்பாடிகளின் குரல்கள் வெள்ளி மணிகள்போல ஒலித்தன.

படிக்க:
கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !
ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !

மற்றபடி எங்கும் ஆழ்ந்த அமைதி வீற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் வோல்கா ஆற்றின் கண்ணுக்கெட்டாத அகல் பரப்பின் மீது ஓசையின்றி மிதந்து சென்றன. ஆற்றோட்டத்துடன் பனிக்கட்டிப் பாளங்கள் மிதந்து செல்லவில்லை நெளிநெளியாக அலைகளை எழுப்பியவாறு விரைந்து பாயும் ஆற்றின் பெருக்குக்கு எதிராக ஓல்காவும் அவனும் மிதந்து செல்வது போலவும் அவர்களுக்குப் பிரமை உண்டாயிற்று. அவர்கள் பேசாமல் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே அளவற்ற இன்பம் காட்சி தந்தது. அந்த இன்பத் திளைப்பில், வோல்கா ஆற்றுப் பரப்பிற்கு மேலே, விட்டு விட்டு வீசிய இளவேனில் காற்றில் அவர்களுக்கு மூச்சு திணறுவது போலிருந்தது. இத்தகைய இன்பக் கணங்கள் இனி என்றுமே வராது. அவள் அவனிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வாள். திருப்பிக் கொள்ளவில்லை என்றாலும் இந்தத் தியாகத்தை அவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அழகு ஒளி மற்றும் வடிவமைப்புடன் திகழும் ஓல்கா, கட்டைக் கால்களில் விந்தி விந்தி நடக்கும் தன் அருகே செல்ல அனுமதிப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டா?… வசந்தகாலத்தின் அந்த எளியநினைவுச் சின்னத்தை மேஜையிலிருந்து அகற்றி விடும்படி அவன் மருத்துவத்தாதியை வேண்டிக்கொண்டான்.

தூவி வில்லோக் கொம்பு அகற்றப்பட்டுவிட்டது, ஆனால், துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது கடினமாயிருந்தது. அவன் காலற்ற முடவன் ஆகிவிட்டான் என்று அறிந்ததும் ஓல்கா என்ன சொல்லுவாள்? போய்விடுவாளா, மறந்து விடுவாளா, தன் வாழ்க்கையிலிருந்து அவனை அகற்றித் துடைத்துவிடுவாளா? அலெக்ஸேயின் உள்ளமும் ஆன்மாவும் இதை எதிர்த்தன. இல்லை, அவள் அப்படிப்பட்டவள் அல்ல. அவள் அவனை ஒதுக்கிவிட மாட்டாள், முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டாள்! இது இன்னும் மோசம். பெருந்தன்மை காரணமாக அவள் அவனை மணந்துகொள்வாள், நொண்டிக்கு வாழ்க்கைப்படுவாள், இந்தக் காரணத்தால் உயர் தொழில்நுட்பக் கல்வி பெறும் தனது கனவை விட்டுவிடுவாள், தன்னையும் அங்கவீனமான கணவனையும், யார் கண்டது, குழந்தையையுங்கூடப் பராமரிப்பதற்காக வேலை நுகத்தில் கழுத்தை மாட்டிக் கொள்வாள் – இவ்வாறு எண்ணிப் பார்த்தான் அலெக்ஸேய்.

இந்தத் தியாகத்தை ஏற்றுக்கொள்ள அவனுக்கு உரிமை உண்டா? அவர்கள் இன்னும் எவ்விதத்திலும் கட்டுப்பட்டவர்கள் அல்லவே. அவள் அவனுடைய மணப்பெண்தானே தவிர மனைவி அல்லவே. அவன் அவளைக் காதலித்தான், மனமாரக் காதலித்தான். ஆனால் அவளை மனைவி ஆக்கிக்கொள்ளத் தனக்கு உரிமை கிடையாது என்று அவன் தீர்மானித்தான். தங்களை ஒருவருடன் ஒருவர் இணைக்கும் எல்லாத் தொடர்புகளையும் தானே அறுத்து விட வேண்டும், அதுவும் சட்டென்று அறுத்துவிட வேண்டும் – துயர் நிறைந்த வருங்காலத்திலிருந்து மட்டுமல்ல, தயக்கத்தின் சித்தரவதையிலிருந்து அவளுக்கு விடுதலை அளிக்கும் பொருட்டு – என நிச்சயித்தான்.

ஆனால் “கமீஷின்” என்ற முத்திரை பதிந்த கடிதங்கள் வந்து இந்தத் தீர்மானங்களை எல்லாம் அழித்துத் துடைத்து விட்டன. ஒல்காவின் கடிதம் மறைமுகமான ஏதோ கலவரத்தால் நிறைந்திருந்தது. துன்பம் வரப்போவதை முன்னுணர்ந்தவள் போல அவனுக்கு என்னதான் நேர்ந்தாலும் தான் எப்போதும் அவனுடன் இருக்கப்போவதாக அவள் எழுதியிருந்தாள்.

அவன் அவளைக் காதலித்தான், மனமாரக் காதலித்தான். ஆனால் அவளை மனைவி ஆக்கிக்கொள்ளத் தனக்கு உரிமை கிடையாது என்று அவன் தீர்மானித்தான்.

சொந்த ஊரிலிருந்து வந்த கடிதங்கள் முதல் முறையாக அலெக்ஸேய்க்குக் களிப்பூட்டவில்லை. அவன் உள்ளத்தில் அவை புதிய தடுமாற்றத்தை விளைத்தன. இங்குதான் அவன் தவறு செய்தான் – வருங்காலத்தில் அவனுக்கு எவ்வளவோ வேதனை உண்டாகக் காரணமாயிருந்த தவறு செய்தான். தன் கால்கள் வெட்டி எடுக்கப்பட்டு விட்டன என்ற சேதியை கமீஷிக்னுக்குத் தெரிவிக்க அவனுக்கு துணிவு வரவில்லை.

அலெக்ஸேய் மெரேஸ்யேவின் மருத்துவமனை நாட்கள் களிப்பற்ற சிந்தனையில் அலுப்பூட்டும் வகையில் கழிந்தன. சிறந்த தேர்ச்சியுடன் செய்யப்பட்ட அறுவையை அவன் எஃகு சரீரம் எளிதில் தாங்கிக்கொண்டது. காயங்கள் விரைவாக ஆறிக் கொண்டு வந்தன. எனினும் அவன் வெளிப்படையாக தெரியும் அளவுக்குப் பலவீனம் அடைந்தான். மருத்துவர்கள் எத்தனையோ சிகிச்சை முறைகளை மேற்கொண்ட பின்னரும் அவன் கண்ணெதிரே நாளுக்கு நாள் இளைத்து வாடிப்போனான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மூளை பாதிப்பை கண்டறியும் மென்பொருள் “ நியூரோ ரீடர் “ !

0

ம்பதுகளின் துவக்கத்திலிருக்கும் அமெரிக்கரான அந்தோனி ஆண்ட்ரூஸ் விபத்தின் பின்விளைவாய் ஏற்படும் நாட்பட்ட மூளை பாதிப்புக்கு (chronic traumatic encephalopathy) ஆளானவர். அவர் தனது பள்ளி நாட்களில் பெரும்பாலான அமெரிக்க மாணவர்களைப் போன்றே அமெரிக்க கால்பந்தாட்டம் விளையாடியவர்.

அமெரிக்க கால்பந்தாட்டம் பொதுவான கால்பந்தாட்டத்தை விட முற்றிலும் மாறுபட்டது. எதிரணி வீரரோடு நேருக்கு நேர் மோதுவது, பந்தை கையால் தூக்கி எரிவது, அப்படி எரிய முயலும் வீரரை எதிரணி வீரர்கள் மொத்தமாக சூழ்ந்து கொண்டு மேலே விழுந்து அழுத்துவது என அதன் விதிகள் பொதுவாக நாம் அறிந்துள்ள காலபந்தாட்டத்தின் விதிகளில் இருந்து பெரிதும் மாறுபட்டது.

அந்த விளையாட்டில் அடிபட்டுக் கொள்வது – குறிப்பாக தலையில் – மிகச் சாதாரணம் என்பதோடு அடிபட்ட வீரர்கள் அதை கவுரவமாகவும் கருதிக் கொள்வர். வீரர்களின் தலைக்கவசங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் போது அவர்களின் மண்டை ஓட்டினுள் இருக்கும் மூளை ஒரு திடீர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. இதன் விளைவாக மூளையைத் தாங்கி நிற்கும் நரம்பிழைகள் (axon) ரப்பரைப் போல் முன்னும் பின்னும் இழுக்கப்படுகின்றது.

நரம்பிழைகள் இழுக்கப்படுவதன் காரணமாக மூளைக்கு முக்கியமான இரசாயனங்களை எடுத்துச் செல்லும் மெல்லிய குழாய்கள் அறுபடும் வாய்ப்பு உள்ளது. அதே போல் நரம்பிழைகளை அதனிடத்தில் இருத்தும் வேலையைச் செய்யும் டௌ புரதம் ஆங்காங்கே கட்டிக் கொண்டு முக்கியமான இடங்களில் அடைத்துக் கொள்கிறது. சிலருக்கு இவ்வாறு டௌ புரதம் கட்டிக் கொள்வது வளர்ந்து செல்களின் இறப்பு, மூளை சுருக்கம் அல்லது நினைவிழப்பு (டெமென்ஷியா) ஆகிய சிக்கல்களுக்கு காரணமாகி விடுகின்றது.

படிக்க:
எச்சரிக்கை ! விரைவில் உங்கள் மூளையின் நினைவுகள் கடத்தப்படலாம் !
♦ கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?

அந்தோனி ஆண்ட்ரூவிடம் ஏற்பட்ட பாதிப்புகளை முதலில் கவனித்தது அவரது மனைவி. இருவருமாகச் சேர்ந்து நிதி மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவது, திட்டமிட்ட பயணங்களை மறந்து விடுவது என அவ்வப்போது ஆண்ட்ரூ விசயங்களை “மறந்துவிடுவதை” கவனித்த அவரது மனைவி மோனா, முதலில் இதையெல்லாம் வேண்டுமென்றே செய்கிறாரோ என சந்தேகப்பட்டுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் மருத்துவரை அணுக முடிவெடுத்துள்ளனர்.

நான்காண்டுகளுக்கு முன்பு இதே போன்ற காந்த அதிர்வு படிமமாக்கச் சோதனை (Magnetic resonance imaging – MRI) ஒன்றை ஆண்ட்ரூ மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது மூளையில் எந்த சிக்கலும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும், மீண்டும் அதே சோதனையை ஒரு முறை செய்து பார்த்து விட முடிவு செய்துள்ளார் அவரது மனைவி மோனா. அதன்படி ஆண்ட்ரூவின் மூளையை காந்த அதிர்வு படிமமாக்கச் சோதனைக்கு உட்படுத்தினர் மருத்துவர்கள். தற்போதைய பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த மருத்துவர்கள், மூளையில் கட்டிகளோ அல்லது இரத்தக்கசிவோ, அல்லது சிதைவுற்ற பகுதியோ இல்லை என்பதை உறுதி செய்ததோடு மூளை ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆண்ட்ரு அவரது மனைவி மோனா.

இவ்விரு பரிசோதனை அறிக்கைகளையும் எடுத்துக் கொண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர்களான மெரில் மற்றும் அவரது சகா சைரஸ் ராஜியை அணுகியுள்ளார் மோனா. ஆண்ட்ரூவின் பழைய மற்றும் புதிய பரிசோதனை முடிவுகளை நியூரோரீடர் எனும் மென்பொருளைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்த வல்லுநர்கள், அவர் அதிர்ச்சியின் விளைவாய் ஏற்படும் நாள்பட்ட மூளை பாதிப்பு நோய்க்கு (chronic traumatic encephalopathy – CTE) ஆளாகியுள்ளார் என்பதைக் கண்டுபிடித்தனர். இவ்வகையான மூளைபாதிப்பானது தலையில் ஏற்படும் தாக்குதல்களின் விளைவாய் மெல்ல மெல்ல மூளையின் திறன் பாதிப்புக்கு உள்ளாவதால் ஏற்படுகின்றது. பெரும்பாலும் அமெரிக்க கால்பாந்தாட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்கள் இந்த நோய்க்கு ஆளாகின்றனர்.

பொதுவாக, அதிர்ச்சியால் விளையும் நாள்பட்ட மூளை பாதிப்பை கண்டறிவது மிகவும் கடினம். பல சந்தர்ப்பங்களில் அதை அல்சைமர் அல்லது டெமென்ஷியா என மருத்துவர்கள் முடிவு கட்டி தவறான சிகிச்சையை மேற்கொண்டு பாதிப்புகள் அதிகரிப்பது உண்டு. ஏற்பட்டிருப்பது சி.டி.ஈ தான் என்பதைக் கண்டறிய மூளையின் திசுக்களை வெட்டியெடுத்து பரிசோதனை செய்வதே உத்திரவாதமான வழிமுறையாக இதுவரை கருதப்பட்டு வந்த நிலையில், நியூரோரீடர் ஒரு வரப்பிரசாதம்.

ஆண்ட்ரூ நான்காண்டுகளுக்கு முன் எடுத்திருந்த எம்.ஆர்.ஐ சோதனையின் முடிவுகளையும் தற்போது எடுத்திருந்த அதே சோதனையின் முடிவுகளையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்தது நியூரோரீடர். பொதுவாக எம்.ஆர்.ஐ சோதனை அறிக்கையை மருத்துவர்கள் பரிசோதிப்பர்; பின், அதில் ஏதும் மாறுபாடுகள் தட்டுப்பட்டால் அது தொடர்பான சிகிச்சையை பரிந்துரை செய்வர்.

நியூரோரீடர் மென்பொருள் ஒருவரிடம் வெவ்வேறு சந்தர்பங்களில் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ சோதனையின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கிறது. பழைய மற்றும் புதிய முடிவுகளில் வெளிப்படும் மிக நுணுக்கமான மாறுபாடுகளை கண்டறிந்து மருத்துவரிடம் சொல்லி விடுகிறது. அதன் பின் அறிவாற்றல் சோதனைகள் (Cognitive Tests) உள்ளிட்ட வழமையான சோதனைகளை மேற்கொள்ளும் மருத்துவர்களால் ஓரளவுக்குத் துல்லியமாக மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மையை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறையைத் தீர்மானிக்க முடிகிறது.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
♦ செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு

சாதாரண மனிதக் கண்களுக்குத் தட்டுப்படாத மிகச் சிறிய மாற்றங்களைக் கூட நியூரோரீடர் போன்ற மென்பொருட்கள் கண்டறிந்து விடுவதால் மேற்கொண்டு சோதனை செய்ய வேண்டியதன் பரப்பளவு வெகுவாக குறைந்து விடுகிறது. நியூரோரீடர் இன்னமும் பரவலாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதோடு இதைப் போன்ற மென்பொருட்கள் இன்னமும் சோதனைக் கட்டத்திலேயே உள்ளது.

மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பரிசோதிக்கும் கணினி மென்பொருட்களின் துல்லியம் இன்னமும் நூறு சதவீதத்தை எட்டவில்லை என்பதும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சம். இன்றைய அளவில் இது போன்ற மென்பொருட்கள் மருத்துவர்களுக்கு உதவி புரியும் ஒரு கருவி என்கிற அளவிலேயே இருக்கின்றது.

எனினும், மூளையைப் பரிசோதிக்கும் மென்பொருட்களுக்கு – குறிப்பாக சி.டி.ஈ போன்ற நோய்களைக் கண்டறிவதற்காக பயன்படுத்துவதை – எதிர்க்கும் மருத்துவர்களும் இருக்கவே செய்கின்றனர். பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநரும் அப்பல்கலைக்கழகத்தின் சி.டி.இ மையத்தின் இயக்குநருமான மருத்துவர் ஆன் மெக்கேய் ஆண்ட்ரூவின் நோய் கண்டறியப்பட்டதைக் குறித்த சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்.

ஆண்ட்ரூவிற்கு ஏற்பட்டுள்ள நோய் அறிகுறிகளுக்கு வேறு பல காரணங்களுக்கும் இருக்க வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடும் ஆன், இன்னமும் மூளையின் திசுக்களை பரிசோதிப்பதே சி.டி.ஈ பாதிப்பைக் கண்டறியும் உத்திரவாதமான வழி என்கிறார்.

சைரஸ் ராஜி மற்றும் அவரது சகா மெரில் (வலது)

எம்.ஆர்.ஐ பரிசோதனையின் முடிவுகளை நியூரோரீடர் கொண்டு ஆராய்வது முழுமையாக துல்லியத்தன்மையை எட்டவில்லை என்பதை மருத்துவர் ராஜியும் அங்கீகரிக்கிறார். “எந்த ஒரு சோதனை முடிவுகளும் அறுதியானது அல்ல – அப்படி இருக்கவும் கூடாது. பல்வேறு தரவுகளைக் கூட்டாக பரிசீலிப்பதன் வழியேதான் நோயின் மூலத்தைக் குறித்த சரியான அனுமானத்திற்கு வந்து சேர முடியும்” என்கிறார் ராஜி. மேலும் சோதனை முடிவுகளை தொடர்ச்சியான கால இடைவெளியில் ஒப்பீடு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் சரியான திசை வழியில் முன்னேறிக் கொண்டுள்ளதா என்பதையும் அவதானிக்க முடியும் என்கிறார் ராஜி.

அல்ஜீமர், டெமென்ஷியா உள்ளிட்ட பல்வேறு மூளை பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளின் விளைவுகளை தொடர்ச்சியான கால இடைவெளியில் எடுக்கப்படும் எம்.ஆர்.ஐ சோதனை முடிவுகளை ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடிகிறது என்கின்றனர், அதற்கான மென்பொருட்களைப் பயன்படுத்தும் மருத்துவர்கள். குறிப்பாக ஆண்ட்ரூவின் விசயத்தையே எடுத்துக் கொண்டால், அவரது நோயின் காரணத்தைக் கண்டறிந்த பின் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் எதிர்பார்த்த பலன்களை அளிப்பதை அவரது எம்.ஆர்.ஐ சோதனை முடிவுகளை நியூரோரீடர் மென்பொருளின் மூலம் ஆய்வு செய்த போது மருத்துவர்கள் அறிந்துள்ளனர்.

ஆண்ட்ரூவின் சிகிச்சை மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருள் குறித்து அவரது ஒப்புதலுடன் ஒரு கட்டுரையை எழுதிய மெரில் மற்றும் ராஜி ஆகியோர் அதை மருத்துவ பத்திரிகை ஒன்றில் வெளியிட்டனர். அந்தக் கட்டுரை வெளியான பின் இந்த மென்பொருள் பயன்பாட்டை ஆதரித்தும் விமரிசித்தும் நரம்பியல் மருத்துவ உலகம் விவாதித்து வருகின்றது. எப்படிப் பார்த்தாலும், எதிர்காலத்தில் மனித உடலைப் பரிசோதிக்க ஒரு உத்திரவாதமான கருவியாக கணினிகள் வளர்ந்து வருவதை முற்றிலுமாக மறுத்து விட முடியாது.

சாக்கியன்

ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !

1

ங்கிகளின் ஆட்சியில் நாட்டில் எந்த ஒரு மூலையிலும் ஒரு எழுத்தாளரோ, பத்திரிகையாளரோ, செயல்பாட்டாளரோ தாக்கப்படுவது இயல்பானதாகிவிட்டது. அத்தகைய சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு ஆதரவுக் குரல்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஒலிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

தமிழகத்தில் ஒரு ‘முன்னணி’ எழுத்தாளர், சினிமா வசனகர்த்தா தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அந்தத் தாக்குதலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, சமூக ஊடகங்களில் அதைக் கொண்டாடுகிறார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டதை ஒரு சிலர் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்றும், ஒருவர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையில் அவரை கேலி செய்வது சரியல்ல எனவும் எழுதியிருக்கின்றனர்.

ஆனால், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வந்த பெரும்பாலான பதிவுகளில் ஜெயமோகனின் ‘அறமே’ , ‘பின் தொடரும் நிழலின் குரலாய்’ வந்து ஒலிக்கிறது !

***

டிவிட்டர் பதிவுகள்…

ரேவன் : 

புளிச்ச மாவு பிரச்சினையில குத்து வாங்கிய எழுத்தாளர் ஜெயமோகன் எடுத்த வாந்தியில் இதுவும் ஒன்று.

”ஏன் சமஸ்கிருதத்தை வெறுக்கிறார்கள் தமிழர்கள்? அறிவியல்,விண்வெளி ஆய்வில் பிராமணர்கள் சாதனை புரிகின்றனர். அதனால் அவர்களின் மொழியில் தமிழர்களுக்கு பொறாமை,வெறுப்பு.”

மூக்கு பொடைப்பா இருந்தா…

***

ஷிவானி சிவக்குமார் :

நீங்க பெரிய எழுத்தாளர்னு சொல்லியிருக்கலாம்ல..!
சொன்னதுக்கு பிறகு தாண்டா வெளுத்தான் – ஆசான்

♦ புளிச்சமாவு என்ற நாவலில் இருந்து !!

***

மஞ்சள் நிலா :

#மாவு என்பது ஒரு வார்த்தை ! ஆனால் …

3 நாள் #புளிச்சமாவு என்பது உணர்வுப்பூர்வமானது!! #ஜெயமோகன்

***

புத்தன் :

கிரைண்டர் மிக்சி எல்லாம் தூக்கிவீச வேண்டியது அப்பறம் வீட்ல மாவாட்ட முடியாம கடைல புளிச்ச மாவு வாங்கி அடிவாங்க வேண்டியது … பைத்தியகாரனுக …

***

இப்ராஹிம் சிராஜ் :

ஜெமோவை தாக்குனது வெளிநாட்டு சதி யுவர் ஆனர் …
உக்கார்றா சங்கி, அது புளிச்ச மாவு பிரச்சனையாம்….

***

சாம்ராஜ் குமார்:

ஒருவேளை ராஜாஜி ஒரு மளிகை கடை பெண் மீது புளிச்சமாவு பாக்கெட்டை வீசியிருந்தால், பெரியார் அந்த பெண்ணிடம் ராஜாஜியை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து இருப்பார்! கொள்கையில் இணையாத இருதுருவங்கள்!,. தற்போது ரவி பெரியாருமில்லை ஜெமோ ராஜாஜியுமில்லை.

***

நிமேஷிகா:

அடுத்த நாவலோ அல்லது அடுத்து வசனம் எழுதும் திரைப்படமோ அரசு மருத்துவமனை சார்ந்ததாக இருக்கும்.

எனவே அரசு மருத்துவமனையின் அவல நிலையை நேரிடையாகக் கண்டறிய புளிச்ச மாவு வியாபாரியிடம் வாண்ட்டடா அடி வாங்கி மருத்துவமனையில் தஞ்சமடைந்திருக்கும் உண்மை நம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை!

***

சுபேஷ்:

புளிச்சமாவு = மாவு+ஈஸ்ட் = மாவோயிஸ்ட்
ஜெயமோகனை அடிச்சது மளிகைக்கடைக்காரன் இல்லையாம்.. மாவோயிஸ்ட்டாம்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிருக்கான்.. #Prayforjeyamohan

***

கவாத்து:

ஒரு எழுத்தாளனோட மனைவி அழக்கூடாது.. என்ன நடந்துச்சுனு மட்டும் கேளு..
மாவு வாங்க போனேனா.. அவன் புளிச்ச மாவு கொடுத்துட்டான்.. அதான் இந்த களபரம்.

***

ரவிக்குமார்:‌

அணு உலைக்கு எதிரா போராட்டம் பண்ணி உதை வாங்கி இருந்தா யாராவது கிண்டல் பண்ணீருப்பாங்களா… புளிச்ச மாவு விக்கிறவன் கிட்ட போய் தர்ம அடி வாங்கிட்டு வந்ததால் தான் கிண்டல் பண்றோம்..

***

மது:

டி.எல்-ல சிலர் புளிச்ச மாவு சண்டைக்கு கண்டன கூட்டம் நடத்தணும்-ங்கிற ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்காங்க.. நடந்தது கருத்தியல் சண்டை இல்ல.. கடைக்காரருக்கும் கஸ்டமருக்குமான சண்டை.. கெளரி லங்கேஷ்-க்கு போட்ட ட்விட்ட ஜெமோ-க்காக தூசி தட்டுறது கொஞ்சம் மிகையா இருக்கு..

***

கோபிநாத்:

தோசைக்கு புளிச்ச மாவென்றால்…
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்!

***

கல்யாண் குமார்:

ஒருநாள் புளிச்ச மாவை உன்னால் சகிக்க முடியவில்லையே! 2000 வருசமா நீங்கள் அரைக்கும் இந்துமதம் எனும் மாவு எவ்வளவு புளித்திருக்கும்!

***

My name is not that important:

ஜெ : என்னவே 2 நாள் புளிச்ச மாவைப் போய் குடுத்துட்டீரே..

அண்ணாச்சி : நீர் மட்டும் 2000 வருஷ புளிச்சி வெண்முரச குடுக்குதீரு.. நான் 2 நாள் புளிச்ச மாவு குடுத்தா உமக்கு வலிக்குதோ..

***

விஜய்:

பேசாம பொன்னார்க்கு பதிலா ஜெமோவை அங்க நிறுத்தியிருந்தா எழுத்தாளர்ன்னு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருக்கலாம். இப்படி மாவு வாங்க போயிருக்க தேவையில்ல. #PrayforJemo

***

முகநூல் பதிவுகள்…

மனுஷ்ய புத்திரன் :

துரதிஷ்டம் பிடித்த இரவொன்றில்
மகா கலைஞன் ஒருவனை
விதி மாவுக்கடை ஒன்றை நோக்கி
அழைத்துச் சென்றது

மகா கவிஞன் ஒருவனுக்கு
மதமேறிய கோயில் யானை ஒன்றால்
துயரம் காத்திருந்ததுபோல
மகா கலைஞனுக்கு
ஒரு குடிவெறியேறிய
மாவுக்கடைக்காரன் வடிவில்
துயரம் காத்திருந்தது

இப்படித்தான் தோழர்களே
வரலாற்றில் மகத்தான சம்பவங்கள்
முதல் முறை அவலத்திலும்
இரண்டாம் முறை கேலிக்கூத்திலும் முடிகின்றன

ஒரு புளித்த மாவு பாக்கெட்டிற்குள்
காப்பியங்களை கறைப்படுத்தும்
சாத்தானின் கைகள் ஒளிந்திருப்பதை அறியாமல்
மகா கலைஞன்
மாவுப்பாக்கெட்டுடன் வீடு திரும்பினான்

புளித்த மாவிலிருந்த
உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள்
கண் விழித்து எழுந்ததை
தன் கூர்மையான படைப்புக் கண்களால் கண்டுகொண்ட மகாகலைஞன்
திடுக்கிட்டு மாவுபாக்கெட்டோடு
கடை நோக்கி விரைந்தான்
நீதி கேட்டு ஒரு நகரை எரித்த நிலம் இது
அறத்திற்காக பெற்ற மகனை
தேர்க்காலிட்ட நாடு இது
ஒரு புளித்த மாவுக்கான நீதி
பொங்கும் நேரம் வந்துவிட்டதை
யாருமே கவனிக்கவில்லை

ஏற்கனவே புளித்த வாழ்க்கையில்
புளித்த சாராய போதையில்
புளித்த மாவுவிற்ற கடைக்காரனால்
ஒரு மகா கலைஞனின் மொழியை
புரிந்துகொள்ள முடியவில்லை

பட்டத்து யானையின் காதில் புகுந்த
எறும்பைபோல
மகா கலைஞனின் தலைக்குள் புகுந்துவிட்ட
புளித்த மாவின் பாக்டீரியா
காவியச்சுவை குன்றிய
மானுட நடத்தை நோக்கி
மகா கலைஞனை நடத்தியது
அவன் அறம் கூறி வீசி எறிந்த
புளித்த மாவு பாக்கெட்
தரையில்பட்டு சிதறியபோது
பிரளயம் தொடங்கியது

மாவிலிருந்த
பல்லாயிரம் பாக்டீரியாக்கள்
பரவத் தொடங்கின
முதலில் கடைத்தெருவில்
பரவிய பாக்டீரியா
பிறகு அடுத்த தெருவுக்கு பரவியது
பிறகு பக்கத்து ஊருக்கு பரவி
சிற்றூர்களெங்கும் பரவியது
சிற்றூர் தாண்டி
பெரு நகரத்தையும் ஆக்ரமித்த
புளித்த மாவின் பாக்டீரியா
கடல்தாண்டி புலம் தாண்டி
நாடு கடந்து பரவத் தொடங்கியது

ஒரு பாக்டீரியா
மகாகலைஞனுக்காக பேசியது
இன்னொரு பாக்டீரியா மாவுக்கடைக்காரனுக்காக பேசியது
இன்னொரு பாக்டீரியா புளித்த மாவின் அரசியல் பேசியது
வேறொரு பாக்டீரியா சமூக நீதி பேசியது
சில பாக்டீரியாகள் அறம் பேசின
சில பாக்டீரியாக்கள் மறம் பேசின
சில பாக்டீரியாக்கள் புறம் பேசின
மகா கலைஞனின் தத்துவார்த்த விரோத பாக்டீரியாக்கள்
மகா கலைஞனின் தத்துவமும் புளித்துபோனவை என்றன
மகா கலைஞனின் இலக்கிய விரோத பாக்டீரியாக்கள்
மகா கலைஞனின் சொற்களும்
புளித்தவையே என்றன
மகா கலைஞனின் ஆதரவு பாக்டீரியாக்கள்
மகாகலைஞனின் எதிர்ப்பு பாக்டீரியாக்களை
கடித்துத் துப்ப முயன்றன
நடு நிலை பாக்டீரியாக்கள்
எந்தப்பக்கம் போவது என்றும் தெரியாமல்
குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன

புளித்த மாவிலிருந்து கிளம்பிய பாக்டீரியாக்கள்
டினோனஸர்களாக மாறி
ஊரைச்சூறையாடக்கண்ட மகா கலைஞன்
மனமுடைந்துபோனான்
ராப்பபகலாய் பாக்டீரியாக்களின்
உறுமல்களில் அவனால் தூங்க முடியவில்லை

அரசு மருத்துவமனையின்
பச்சை நிறப்படுக்கையொன்றில்
பாதுகாப்பாக ஒளிந்துகொண்டபோதுதான்
புளித்த மாவின் பாக்டீரியாக்களைவிட
மருத்துவமனையின் நிஜ பாக்டீரியாக்கள்
எவ்வளவு பயங்கரமானவை
என்பதை உணரத் தொடங்கினான்

ஒரு புனிதக் கலைஞனின்மீது
ஒரு புனித எழுத்தின்மீது
ஒரு பாக்கெட் புளித்தமாவு கொட்டினால்
எல்லாமே எவ்வளவு புளிப்பாகிவிடும் என்பதை
வரலாறு பதிவு செய்துகொண்டது

மாவீரன் நெப்போலியனை
வைரஸ் காய்ச்சல் ஒன்று வென்றதைப்போல
மகா கலைஞனின் உன்னதங்களை
புளித்த மாவின் பாக்டீரியா ஒன்று
வேட்டையாடிக்கொண்டிக்கிறது

பார்வதிபுரம் காவலர்
புலனாய்கின்றார்
17.6.2019
பிற்பகல் 3.30.
மனுஷ்ய புத்திரன்

***

படிக்க:
♦ நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!
♦ அறம் தின்ற ஜெயமோகன் !

***

இரா. முருகவேள் :

ஜெயமோகன் மீது முகநூலில் வெளிப்பட்ட வெறுப்பின் தீவிரம் அவரது ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது போலிருக்கிறது. எனவே மளிகைக் கடையில் ஜெயமோகன் தவறிழைக்கவில்லை. அப்படியே சிறுதவறு செய்திருந்தாலும் எழுத்தாளர் என்றவிதத்தில் மன்னிக்கக் கூடியதே என்று வாதிடுகிறார்கள்.

JAYAMOHANபுளித்த மாவு ஒரு உடனடிக் காரணம் மட்டுமே. ஜெயமோகன் அவரது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ் அரசியலுக்காகவே விமர்சிக்கப்படுகிறார். அவர் தன்னைக் காந்தியவாதியாகக் காட்டிக் கொள்ள முயன்றாலும் அவரது பாசிச அரசு ஆதரவு நிலைபாடுகள் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

மக்கள் கலைஞர்களின் தவறுகளை மன்னிக்கக் கூடியவர்கள்தான். சௌபா தன் மகனைக் கொன்ற போதும், தனது முடிவைச் சந்தித்த போதும் முகநூலில் ஒரு துயரார்ந்த மனநிலையே நிலவியது.

ஜெயமோகன் எள்ளி நகையாடப்படுகிறார் என்றால் அதற்குக் காரணம் அவர்தான். புளிப்பு விவகாரமாக அதைச் சுருக்க முயன்றால் மேலும் மேலும் அது ஜெயமோகனுக்கே எதிராகத்தான் முடியும்.

இப்போதே மளிகைக்கடைக்காரரின் பிழைப்பில் மண் போட்டார், ஏழை நோயாளியின் படுக்கையை ஆகிரமித்தார், எம்பியைப் பயன்படுத்தினார். உணவுப் பொருள் கெட்டுப் போனதென்றால் அதற்கு உரிய இடத்தில் புகார் அளிக்காமல் (பாலபாரதி பதிவைப் பார்க்கவும்) குறுக்கு வழியில் போலீசை நாடியது தவறு என்றெல்லாம் வரத் தொடங்கிவிட்டது.

ஜெயமோகனுக்கு இருப்பதாகக் கருதப்பட்ட இடத்தை தமிழ் அறிவுலகம் ஒருபோதும் அவருக்குக் கொடுத்ததில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் நிரூபித்திருக்கிறது.

***

யமுனா ராஜேந்திரன் :

ஜெயமோகன் அடிப்படையில் மனம் நிறைய வன்முறையையும் வன்மத்தையும் கொண்டு திரியும் ஒரு நபர். ஒரு பெண்ணின் மீது ஒரு பொருளை வீசுவது என்பது உச்சபட்ச வன்முறை.

இது ஒரு சாதாரணமான கஸ்டமர் கம்ப்ளெய்ன்ட் பிரச்சினை. அந்த நிலையில் எந்தக் கணவன் இருந்தாலும் மனைவிக்கு ஆதரவாக இதைத்தான் செய்வான்.

குடிப்பவனெல்லாம் கெட்டமனிதனா? ஜெயமோகன் மருத்துவமனை சென்றது நாடகீயமான ஒரு பில்ட்அப். ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட ஒருவருக்காக காவல்துறையை இன்புளுவன்ஸ்ஸ் செய்தது அதிகார துஷ்பிரயோகம்.

இது அரசியல் தலையீடு இல்லையா? ஒரு சிவில் தகராறுக்கு இலக்கியச் சாயமும் கருத்துரிமைச் சாயமும் பூசுவது பச்சை அயோக்கியத்தனம் …

***

கோ. சுகுமாறன் :

ஜெயமோகனையும் கைது செய்ய வேண்டும்!

ஜெயமோகன் கொடுத்த புகாரில் மளிகைக் கடைக்காரர் செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். மாவுப் பாக்கெட்டை முகத்தில் வீசி, சாதியை குறிப்பிட்டு பேசியதாக மளிகைக் கடைக்காரர் மனைவி கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து ஜெயமோகனையும் கைது செய்ய வேண்டும்.

***

தயாளன் :

எழுத்தாளன், கவிஞன், புலவன், அறிஞன் எனப்படுவோர் ஏதோ வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போலவும், மாவுக்கடைக்காரர்கள் ஏதோ வேண்டாததற்கு பிறந்து விட்டது போலவும் சலம்பித் தள்ளுகிறார்கள். எழுத்தாளனுக்கு எழுத்து ஒரு தொழில். அவ்வளவுதான்.

மாவுக்கடைக்காரருக்கு மாவு அரைப்பது ஒரு தொழில். அந்த வெட்டி எழுத்தாள”ன்” ஒரு பெட்டி கேஸுல உள்ளே போயிறக்கூடாதுங்கிற அவசரத்துல முந்திக்கிட்டு புகார் எழுதிக் கொடுத்துட்டு ஆஸ்பத்திரில படுத்திருக்கார். இதுவே ஒரு ரொம்ப சீப்பான அல்பத்தனம். அவ்வளவு வன்மமா அவருக்கு.

மாவு பாக்கெட்டை வீசியெறிஞ்சுட்டு பெரிய “சர்க்கார் தனம்” பண்ணியிருக்கார். ஒரு சாதாரண பெட்டிக் கேசுக்கு எம்பி வரைக்கும் சிபாரிசு. ஜெயமோகன் ஒன்றும் எழுத்தாள தேவதூதன் அல்ல. பி.எஸ்.என்.எல்.-லிலும் வேலை பார்த்துக் கொண்டு, பகுதி நேரமாக கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் அறமற்ற வணிக எழுத்தாளன். புத்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் தனி.

இதுல கருத்துரிமைக்கு ஆதரவா ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கு. மாவுக்கடைக்காரரின் வாழ்வுரிமை பத்தி நாம பேச வேண்டாமா? மாவுக்கடைக்காரரின் மனைவியிடம் மன்னிப்பு கேள்! ஜெயமோகன் செய்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். எழுத்தாள அராஜகவாத குண்டர்களிடமிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

***

ஷோபா சக்தி :

ஜெயமோகன், விஷ்ணுபுரத்தோரை ஊருலகம் தெரியாத அப்புராணிகளாக வளர்த்துவருவது உள்ளபடியே வருந்தத்தக்கது. நேற்றுப் பாருங்க இந்த வெண்பாவும் அனோஜனும்; டாஸ்மாக் கலாசாரம்தான் கூடாதது, பைவ் ஸ்டார் குடி கலாசாரம் பரவாயில்லை என்பதுபோல பேசியிருக்கிறார்கள்.

அடிதடி, கொலை, கொள்ளை, பவுடர், ரேப், இனவாதம் மதவாதம் எல்லாமே இந்த பைவ் ஸ்டார் பப்புகளில் நிறைந்திருக்கும்.

சென்னையின் தலையாய பப்பான பார்க் ஓட்டல் பப்பில் ஒருமுறை நானும் சாருவும் இருந்தபோது கவிஞர் தய். கந்தசாமியை போனில் அழைத்து, பப்புக்கு வருமாறு கேட்டோம். அப்போதெல்லாம் கந்தசாமி பார்ப்பதற்கு சாட்சாத் அய்யனார் போலவேயிருப்பார். உள்ளே விட மறுத்துவிட்டார்கள். சண்டைபோட்டு உள்ளே அழைத்துவந்தோம். பின்பும் தகராறாகி வெளியேறினோம். இதைச் சாரு அப்போது பத்தி பத்தியாக எழுதியிருந்தார்.

அதைவிடுங்க.. இப்போது 3 மாதங்களிற்கு முன்பு அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரின் ஒரு பப்பிற்குள் என்னை நுழையவிடவில்லை. என்னுடன் அடையாள அட்டையை வைத்திருக்கவில்லை எனச் சப்பைக் காரணம் சொன்னார்கள். ஆனால் உண்மையான காரணம் என் நிறம். கூடயிருந்த சாட்சி Kishoker Stanislas . இதெல்லாம் அவுஸ்ரேலியாவில் ‘வழமையானது’ என நண்பர்கள் சொன்னார்கள்.

டாஸ்மாக் கலாசாரம் அடித்தள மக்கள் கலாசாரம். அங்கே சக மனிதர் மீதான அக்கறையையும் பரிவையும் சமாதானத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் விதத்தை அனுபவித்தவருக்கே அதன் அருமை தெரியும். டாஸ்மாக் கலாசாரம் எவ்வாறு மானுடம் தழுவியது என்பதை அண்மையில்தானே நம் கவி பிரான்ஸிஸ் கிருபா நிரூபித்தார்.

சில மாதங்களிற்கு முன்பு ஜெயமோகன் ஒரு கட்டுரையில் இந்திய விமானநிலையங்களின் கழிவறைகளில் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் இனாம் கேட்டு நச்சரிப்பதாகவும் அது நாட்டிற்கே அவமானம் எனவும் எழுதியிருந்தார்.

இந்திய விமான நிலையங்களில் உயர்மட்ட அதிகாரிகளிலிருந்து எல்லா நிலைகளிலுமே இனாம் கேட்பார்கள். சிலபேர் கொண்டுபோகும் விஸ்கிப் போத்தலைக் கூடக் கேட்பார்கள். போர்டிங் போடும்போது கவுண்டரில் இருக்கும் நுனிநாக்கு ஆங்கில யுவன்களும் யுவதிகளும் முதல் வகுப்பு இருக்கை தருகிறோம் 200 ஈரோக்கள் தருகிறீர்களா? என இரகசியமாக வழிவார்கள். இந்திய விமான நிலையங்களில் லஞ்சம் எப்படி விளையாடும் என்பதை ஈழத் தமிழரைவிட நன்கறிந்தோர் வேறு எவர்!

எளிய – அடித்தட்டு மக்கள் மீதான ஜெயமோகனின் பார்வை முன்முடிவுகள் கொண்ட சராசரி இந்திய தத்துவ ஞானப் பார்வை என நினைக்கிறேன். தெருவில் நவ்வாப் பழம் விற்கும் சிறு வியாபாரியைக் கண்டித்தும் கார்ப்பரேட் அங்காடிகளைச் சிலாகித்தும் ஜெயமோகன் எழுதியதும் ஞாபகம் வருகிறது.

ஆசிரியரை எதுவரை தொடரலாம் என்பதற்கும் எல்லைகளுள்ளன. இறைச்சியைச் சாப்பிட்டால் எலும்பைக் கோர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பது ஈழத்து வழக்கு.

படிக்க:
♦ ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் ? கருத்துக் கணிப்பு
♦ சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் !

***

அ. மார்க்ஸ் :

ஜெயமோகன் பிரச்சினை குறித்து முழு விவரங்களையும் கேட்டு அறிந்தேன். நாகர்கோவில் நண்பர்கள் உதவினார்கள். ஒரு சாதாரண பிரச்சினையை அவர் இத்தனை சிக்கலாக்கியிருக்க வேண்டியதில்லை.

உள்ளூர் நண்பர்கள், இது போன்று மாவு பாக்கெட்கள் விற்கும் சிறு கடைக்காரர்கள் ஆகியோரிடமும் பேசியபோது ஜெயமோகன் சற்றுப் பொறுமையாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அன்றாடம் எத்தனையோ அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு போகிறோம். உடைந்து கிடக்கும் சாலைகள், ஏமாற்றும் கான்டிராக்டர்கள் இவை குறித்தெல்லாம் நாம் கவலைப்படாமல் கடந்து போய் விடுகிறோம். இப்படியான பிரச்சினைகளை இந்த ‘லெவலு’க்குக் கொண்டு சென்றிருப்பது ஒரு அப்பட்டமான “மிடில் கிளாஸ் மென்டாலிடி” என்றுதான் சொல்ல வேண்டும்.

திருச்சியிலிருந்து ஒரு நண்பர் ஜெயமோகன் 2008 -ல் எழுதிய பதிவொன்றை அனுப்பி இருந்தார். ஒரு முறை ஜெயமோகன் ATM கதவு ஒன்றைச் சரியாகத் திறக்கத் தெரியாமல் அதை உடைத்துத் திறந்து வெளிவந்தன் கதையை அவரே எழுதியது அது.

அதைப் படிக்கும்போது ஒன்று விளங்குகிறது. தான் ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் ஏகப்பட்ட சிந்தனைகளைச் சுமந்து எப்போதும் தாஸ்தாவெஸ்கி, காம்யூ போன்ற சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கும்போது இபடித்தான் பொறுமை இல்லாமல் நடந்து கொள்ள முடியும் என அவர் தன்னை நியாயப்படுத்துகிறார். மூர்க்கமாக நடந்து கொண்ட அச் சம்பவத்தையும் தனது மேதமையின் அடையாளமாகச் சித்திரிக்கும் அம் முயற்சி உண்மையில் நேற்று வாசிக்கும்போது எனக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது.

ATM கதவை உடைப்பது பெரிய குற்றம். அது வழக்காகி இருந்தால் சிக்கல். எனினும் ஒரு எழுத்தாளர் என்கிற வகையில் அந்த வங்கி அதிகாரிகள் மிக்க பொறுமையுடன் அந்த நிகழ்வைக் கையாண்டுள்ளனர், அவர்களே அதை ‘ரிப்பேர்’ செய்து உரிய தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு வழக்கு ஏதும் இல்லாமல் செய்துள்ளனர். அவர்களின் அந்தப் பொறுமைக்கு ஒரு நன்றி தெரிவிக்கும் பண்பு கூட அப்பதிவில் ஜெயமோகனிடம் காணவில்லை.

இப்படியான ஒரு புளித்த மாவுப் பிரச்சினையில் நானாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் எனச் சற்று யோசித்துப் பார்த்தேன். மாவு புளித்திருக்கு என மனைவி சொல்லி இருந்தால், “சரி அதைத் தூக்கி எறி. வீட்டில் கோதுமைக் குருணை இருந்தால் கொஞ்சம் கஞ்சி போடு. சாப்பிட்டுவிட்டுப் படுப்போம். உடம்புக்கும் நல்லது” என்று அது இப்படியான சம்பவமாக ஆக்கப்படாமல் கழிந்திருக்கும்.

இரண்டு விடயங்கள் முடிக்கு முன்:

1. அந்த கடைக்காரர் செல்வம் என்பவர் குறித்தும் நாகர்கோவில் நண்பர்கள் ரொம்பவும் நல்ல அபிப்பிராயத்தையே சொல்கின்றனர்.

2. மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவிற்கு ஜெயமோகனுக்கு ஒன்றும் இல்லை. வழக்கை மெய்ப்பிப்பதற்காகவும், வலுவாவதற்காகவும் வழக்கமாக எல்லோரும் செய்யும் தந்திரம்தான் இது என்பதை பாரதி மணி போன்ற பெரியவர்களும் கூடப் பதிவு செய்துள்ளனர். அரசு மருத்துவர் ஒருவர் இப்படி வழக்குக்காக அரசு மருத்துவமனையில் வந்து வேண்டுமென்றே படுத்துக் கொள்வது எப்படி ஒரு உண்மையான நோயாளிக்குக் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதியைப் பாதிக்கிறது என அவர் உளமார்ந்த வருத்ததுடன் எழுதியிருந்தது நெஞ்சைத் தொடுகிறது..

இந்தப் பின்னணியில் நான் ஜெயமோகனிடம் முன்வைக்கும் அன்பான வேண்டுகோள் இதுதான். ஜெயமோகன் கடைக்காரர் செல்வத்தின் மீது தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டு இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும்.

நாகர்கோவில் எழுத்தாள நண்பர்களான லட்சுமி மணிவண்ணன் முதலானோர் இதற்கு உதவ வேண்டும்..

ஜேயமோகனிடமிருந்து வேறு பல நியாயமான காரணங்களுக்காக கருத்து வேறுபடுபவர்கள் இச்சம்பவத்தைப் பயன்படுத்தி அவரை வசைபாடுவதைநிறுத்திக் கொள்வோம்.

***

அதிஷா வினோத் :

வசனம் எழுதும் படங்களுக்கு பலகோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அவர் நினைத்தால் தனியாக மாவு ஃபேக்டரியே தொடங்க முடியும். இருந்தும், இன்னமும் தன் மாவை தானே போய் கடையில் வாங்குகிறார் என்றால் அவருடைய எளிமை இதிலிருந்தே விளங்குகிறது… இன்றைய காந்தி அவர்.

பாருங்கள் எவ்வளவு அடிபட்டாலும் கோடிகோடியாக சொத்துபத்து இருந்தாலும் அரசு மருத்துவமனையில்தான் வைத்தியம் பார்க்கிறார். இதே காரியத்தை அஜித்குமார் பண்ணியிருந்தால் அவருடைய ரசிகர்கள் தலடா கொலடா எளிமைடா வலிமைடா… தல போல வருமா என கொண்டாடியிருப்பார்கள். ஆனால் தமிழ் எழுத்தாளர் என்பதால் அவரை கிண்டல் பண்ணுகிறார்கள்.

இத்தனை காலமும் தன் மாவை தானே வாங்கிக் கொண்டிருந்ததும் அவருடைய எளிமையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த உதவிய அந்த மாவுக்கடைக்காரருக்கு நன்றி.

– நடுநிலை அறம் குமார்!

***

அறிவு செல்வம் :

பெரியார் தாக்கப்பட்டிருக்கிறார். கலைஞர் தாக்கப்பட்டிருக்கிறார். அவர்களெல்லாம் கொள்கைக்காக தாக்கப்பட்டார்கள்.

புளிச்ச மாவுக்காக அல்ல..


தொகுப்பு : அனிதா

ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?

0

‘இந்து ராஷ்டிரம்’ அல்லது ‘இந்து தேசம்’ என்கிற உட்கருத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? இது நிதர்சனமா அல்லது ஒரு செயல்திட்டமா? பல காலமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்து ராஷ்டிரம் குறித்து சங்க பரிவாரங்களைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் சில சமயம் பேசுவதில்லை. மாறாக, அவர்கள் இந்தியாவை ‘மாற்ற’ வேண்டும் எனப் பேசுகிறார்கள். இது இந்து ராஷ்டிரம் என்பது ஒரு செயல்திட்டம் என்பதையும் அது இன்னும் முடிக்கப்படவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்று, இந்துத்துவத்தின் பிடி ஒரு புதிய நிலையை அடைந்திருக்கிறது. அதன் மேலாதிக்கம் அனைத்து நிலப்பரப்புகளுக்கும் விரிவடைந்திருக்கிறது. மேலும், சமூகத்தின் ஆழம் வரை சென்றுள்ளது. அதனுடைய ஏவலாளிகளின் கூற்றுப்படி அது மேலும் விரிவுப்படுத்தப்படும், ஆழப்படுத்தப்படும்.

ஆனால், அதன் இறுதி நோக்கம் என்ன? இந்த செயல்திட்டம் எப்போது நிறைவை எட்டும்? பெயரளவிலோ அல்லது வெளிப்படையாகவோ ஒரு இந்து அரசு நிறுவப்படும்வரை, முறையான இந்து ராஷ்டிரத்தை உருவாக்க முடியாது என்பதே உண்மை.

தன்னுடைய நீண்டகால வரலாற்றில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம், இந்து ராஷ்டிர கட்டுமானம், அரசியல்ரீதியாகவும் தார்மீகரீதியாகவும் அரசின் முறைகேட்டுக்குரிய செல்வாக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் தள்ளி நின்றது.

70-களின் மத்திய பகுதிகளில் இது மாற்றத்துக்குள்ளானது. அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது, நிரந்தரமான இந்து ராஷ்டிரத்தை உருவாக்கவும் நிறுவனமயமாக்கவும் ஒரு முக்கியமான கருவியாக பார்க்கப்பட்டது.

அதன் விளைவாக, காலப்போக்கில் இரண்டு மாற்றங்கள் ஒரே நேரத்தில் கொண்டுவரப்பட்டன. முதலாவது, பாரதிய ஜனதா கட்சியுடனான சமநிலையான உறவைப் பேணுதல், ஆர்.எஸ்.எஸ். மற்றும் மற்ற சங் பரிவார அமைப்புகள் பாஜகவை நோக்கி மாறுதல்.

இரண்டாவது, பாஜகவின் உள்ளே அதிக அதிகாரத்தை மையத்தை நோக்கிய நகர்வும், பிரதமராக நரேந்திர மோடிக்கு அதிகாரத்தையும் அவரைச் சுற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட குழு உண்டாக்கப்பட்டது. ஆனால், சங்க பரிவார படையும் அதன் செயல்பாட்டாளர்களும் பாஜகவுக்கு தேர்தல் பணி செய்யும் இயந்திரங்களாக தேவைப்பட்டனர். மேலும், பரந்துபட்ட சமூகத்தை ஒருங்கிணைக்கும் பணியையும் அவர்கள் செய்ய வேண்டியிருந்தது.

படிக்க:
♦ கார்ப்பரேட் காவி பாசிசம் ! புதிய ஜனநாயகம்
♦ காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். மற்றுமுள்ள முக்கிய சங்க பரிவாரங்களிடமிருந்து இப்போதும் பிறகும்கூட தப்பமுடியாது. இதன் பொருள் என்னவென்றால், சங்க பரிவாரங்கள் ஒருபோதும் ஒரு நபரை நம்பி இல்லை என்பதே.

பாஜக மற்றும் சங்க பரிவாரங்களின் வலதுசாரி பாசிஸ்டு (சிலர் நேரடியாகவே பாசிஸ்டு) குணங்களை முதலில் முதன்மைப்படுத்தியது இடதுசாரி அறிவுஜீவிகளே என்றாலும், அவர்கள் சொன்னது போல அது ஒரு பாசிஸ்டு அரசாக இருக்காது என்பதை அறிவார்கள்.

தாராளவாதிகள் பாஜக என்பது எதிர்பாராதவிதமாக மதவாத போக்குள்ள ஒரு வலதுசாரி சக்தி என பேசுகிறார்கள். ஆனால், மையத்தில் அதிகாரத்தின் பொறுப்பில் அமரும்போது, இந்த அம்சத்தை மிதப்படுத்த அந்த அதிகாரம் உதவும் எனவும் நம்புகிறார்கள். ஆனால், ஜனநாயத்தின் அனைத்து அடிப்படை முக்கியத்துவங்களையும் நீக்கும் ஒரு தலைவர் தலைமையிலான ஒரு கட்சி சர்வாதிகாரம் இருக்கப்போவதில்லை எனில், மேலும் மிக முக்கியமான சட்டப்பூர்வமாக்குதல் நோக்கங்களுக்காக, அனைத்து வழிகளிலும் தேர்தல் முறையானது துல்லியானது என நம்பப்பட்ட நிலையில், அது அதிகாரத்தை உண்மையில் தக்கவைத்துக்கொண்டுள்ளது, எனில் அதன் இறுதி நோக்கம்தான் என்ன?

பல்வேறு வகையான சிவில் உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலமும், நடைமுறையில் இருக்கும் அடக்குமுறை சட்டங்களை தீவிரமாக்குவதன் மூலமும், பொது ஊடகங்களை மறைமுகமாகவும் சூழ்ச்சியுடனும் கையாளுவதும், விருப்பமான நியமனங்களைச் செய்து புலனாய்வு அமைப்புகள், ஆட்சிப் பணிகள், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றை துணையாக்கிக் கொள்ள முயல்வது போன்றவற்றின் மூலம் இந்திய ஜனநாயகத்தை அதன் உள்ளிருந்து வரும் காலங்களில் மேலும் ஒன்றுமில்லாமல் ஆக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பதற்கு இது போதுமானதாக இல்லை. மோடியின் முதல் ஆட்சிக் காலத்தில் என்ன நடந்ததோ அதன் தொடர்ச்சியாகவே இதுவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

நிலைத்த ‘இந்து ராஷ்டிர’த்தை உருவாக்க முன்னேறும்போது, முசுலீம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்கும் சில தனிநபர்கள் மற்றும் இந்துக்களுக்கு மற்ற சமூகத்தினருக்குக் கிடைக்காத கூட்டு உரிமைகளை வழங்கவும் அரசியலமைப்பின் கீழ் சில புதிய சட்டங்களை உருவாக்கும் முயற்சி நடக்கும்.

பாஜகவும் சங் பரிவாரங்களும் நீண்ட நாட்களாக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர காத்திருக்கும் நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கான தனிபெரும்பான்மையை அடையும் முயற்சிகளும் இருக்கும். 370 பிரிவை நீக்குவது மட்டுமே நோக்கமாக இருக்காது. ஆனால், நேபாளம் முன்பு மதசார்ப்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்து மதத்துக்கு தனி அந்தஸ்து வழங்கும் வகையில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டப்பட்டது போல, இங்கே முயற்சிக்கப்படலாம். அதாவது, ‘சனாதன மத கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில்’ இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம்.

படிக்க:
♦ மனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு !
♦ புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

கிறிஸ்டோபர் ஜஃப்ரிலாட் சொன்னதைப் போல, இஸ்ரேலின் இந்துத்துவ வடிவம் என்பதே அவர்களின் நீண்ட காலத் திட்டம். ஆனால், அவர்கள் பேராசிரியர் சம்மி ஸ்மூஹா உருவாக்கிய, அபாயகரமாக வழிநடத்தக்கூடிய “இன ஜனநாயகம்” என்ற வார்த்தையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒரு யூத அரசாக இஸ்ரேலின் இருப்புக்கு, அரபு பாலஸ்தீன மக்களை இரண்டாம் தர குடிமக்களாக ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த வார்த்தை மூலம் பொருள் தருகிறார்கள்.

ஆம் உண்மைதான் “இன ஜனநாயம்” என்பதன் பொருள் இஸ்ரேலில் ஜனநாயகமில்லாத தன்மையும் உள்ளது என பொருள். ஆனால், மேலோட்டமாக இது ஜனநாயகத்தைக் கடத்துகிறது. இந்தப் பார்வையை பல இஸ்ரேலிய ஆதரவு தாராளவாதிகள் ஆதரிக்கிறார்கள், மேலும் பல மேற்கத்திய நாடுகளும்கூட இதை ஆதரிப்பதன் மூலம் இஸ்ரேலின் ஜனநாயகம் அல்லாத, இனப்பாகுபாட்டிற்கான உறவுகளை ஒருங்கிணைக்க ஆர்வமாக உள்ளனர். இதே நேரத்தில் தெற்கு ஆப்பிரிக்காவின் இனக் கொள்கை (சாதி அடிப்படையில் மக்களை இங்கே பிரிப்பதைப் போல, நிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிரிவினை), மேற்கத்திய ஜனநாயக சக்திகளால் உருவாக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது. இதுதான் தெற்கு ஆப்பிரிக்காவில் ஜனநாயகமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு இந்து ராஷ்டிரம் என்பது அடிப்படையில் ஜனநாயமற்ற அரசாகவும் சமூகமாகவும் இருக்கும். மேலும் மத பெரும்பான்மையினருக்கு பல ஜனநாயக அம்சங்களும் அதையும் கடந்தும்கூட சில அம்சங்கள் வழங்கப்படக்கூடும். ஆனால், உயர்சாதியினரின் இரக்கமற்ற வன்முறையை தன்னகத்தே கொண்ட சாதிய அமைப்பு இல்லாத இஸ்ரேலைப் போல, அது ஜனநாயகமாக இருக்காது.

தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது இடது வலது அல்லது மைய அரசு ஆனாலும் ஒரு யூத நாடு என்கிற இஸ்ரேலின் அடிப்படை பண்பை மாற்ற முடியாது. இந்துத்துவமும் அதுபோன்றதொரு அரசியல் நிதர்சனத்தை உருவாக்க முனைகிறது. அப்படி உருவாகிவிட்டால் எந்தக் கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்தாலும் அடிப்படை மாறாது.

இந்த தேவையின் அடிப்படையில் இரண்டு முக்கியமான ஒப்புமைகளைக் காணலாம். முதலாவது, இஸ்ரேலின் எந்தக் கட்சியும் எந்தவொரு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியையும் முழுமையான சுதந்திரமான இறையாண்மையுள்ள பிரதேசமாக அதை அனுமதிக்காது. அந்தப் பகுதியின் முழு கட்டுப்பாட்டாளர்களாக அவர்கள் இருப்பார்கள். சர்வதேச சட்டங்களின்படி, ஜம்மு காஷ்மீரின் நிலைமை பாலஸ்தீனத்தின் நிலையைவிட முற்றிலும் வேறானது. ஆனால், இஸ்ரேலின் கொள்கையின்படி, இந்தியாவில் இருக்கும் எந்தக் கட்சியும் ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரத்தைத் தர முன்வராது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் வசிக்கும் மக்களுக்கு உள்ள மனித உரிமைகள் கூட காஷ்மீர்வாசிகளுக்குக் கிடைக்காது.

இஸ்ரேல் மற்றும் இந்திய அரசியல் வர்க்கத்துக்கு, “மக்களைக் காட்டிலும் நிலமே மிக முக்கியமானது”. ஆழ்ந்து அந்நியப்படுத்தப்பட்ட மக்கள் மீதான வன்முறையின் மூலம் அவர்கள் ஆட்சி செய்வார்கள். இஸ்ரேல் தன்னாட்சி என்பது சில கோணங்களில் வேறுபட்டிருந்தாலும், தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டங்கள் முன் கேள்விக்குள்ளாக்கப்படும்போது இஸ்ரேல் தனது நிலையிலிருந்து பின்வாங்கிக் கொள்ளும். அதுபோல, ஜம்மு காஷ்மீர் கையகப்படுத்தலின்போது அளிக்கப்பட்ட அரசியலைப்பின் 35 ஏ மற்றும் 370 பிரிவுகளை பாஜக நீக்கும்.

1948-ம் ஆண்டு உறுதியளிக்கப்பட்ட தன்னாட்சி வாக்குறுதியை முன்னர் மத்தியில் ஆண்ட கட்சிகள் கிடப்பில் போட்ட நிலையில், பாஜக தன்னாட்சி என்பதை சட்டத்தின் மூலமாகவே அகற்ற விரும்புகிறது.

இரண்டாவது, இஸ்ரேல் தனது குடிமக்கள் சட்டத்தில் உலகில் உள்ள யூதர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என சொல்கிறது. அதுபோல, பாஜக தனது குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவில் எப்போது வேண்டுமானாலும் திரும்ப, முசுலீம் அல்லாத பாகிஸ்தானியரை, வங்காள தேசத்தவரை, ஆப்கனை சேர்ந்தவரையும் இந்து மதப் பிரிவுகளைச் சேர்ந்த தெற்காசிய ஆசியாவைக் கடந்த மக்களையும்கூட அழைக்க நினைக்கிறது.

நிச்சயமாக, இவர்களின் இந்த மோசமான மற்றும் ஜனநாயக விரோத திட்டங்களுக்கிடையே ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது.

தற்போதுள்ள இஸ்லாமாபோபியா மீது அமர்ந்து பயணிக்க சியோனிஸம் மகிழ்ச்சி கொள்கிறது. ஆனால், அதன் அடிப்படையான எதிரி இசுலாம் அல்ல, பாலஸ்தீனியர்கள்தான் – அவர்கள் கடவுள் மறுப்பாளர்களா, முசுலீம்களா அல்லது கிறித்துவர்களா என்பதல்ல. எனவே, இது மிகவும் சகிப்புத் தன்மையுள்ள மத நிலை.

ஆனால், இந்துத்துவத்தின் அடிப்படையே முசுலீம்களுக்கு எதிரான நிலைப்பாடுதான். இந்து ராஷ்டிரம் என்பது சகிப்புத் தன்மையற்ற மத அரசு.

நாம் அதை இன்னும் நெருங்கவில்லை எனிலும், அதற்கான எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கிவிட்டது.


கட்டுரையாளர் : Achin Vanaik
கலைமதி
நன்றி : தி வயர்

பாசிஸ்டு சர்வாதிகாரத்தில் நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகளின் நிலை !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 2 | பாகம் – 12

டோக்ளியாட்டி

ர்டிட்டி தொண்டர் படையினரையும், அவர்களது காப்டன்களையும், அதிகாரிகளையும், உதவாக்கரைகளையும், தறுதலைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குழு என்ற முறையில் அதிகாரத்தைக் கைப்பற்ற சில காலமாகவே இவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டால் பிறகு அது தங்களுடையதாகிவிடும் என்று இவர்கள் கருதிக் கொண்டிருந்தனர். குட்டி பூர்ஷுவாக்கள் அதிகாரத்துக்கு வரமுடியும், பாட்டாளி வர்க்கத்தையும் பூர்ஷுவாக்களையும் தங்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியும், தங்கள் சொந்தத் திட்டங்களின்படி சமுதாயத்தை மறுசீரமைக்க முடியும் என்று இவர்கள் கற்பனையில் மூழ்கிப் போயிருந்தனர்.

பாசிசம் ஆட்சிபீடம் ஏறியதும் இந்தக் கனவுகள் எல்லாம் பொய்த்துப் போயின. பாசிசம் அதிகாரத்துக்கு வந்ததும் முதல் காரியமாக பூர்ஷுவாக்களுக்குச் சாதகமாக பல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு நாம் நிலைமையை மிகைப்படுத்தக் கூடாது. உடனடியாக ஊதியங்கள் மீது எத்தகைய தாக்குதலும் தொடுக்கப்படவில்லை. இது ஏன்? ஏனென்றால் பூர்ஷுவாக்களால் ஏககாலத்தில் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்க முடியாது. அவர்களைப் பல பிரச்சினைகள் எதிர்ப்பட்டன. அரசு எந்திரத்தை மறுசீரமைக்க வேண்டியிருந்தது. குட்டி பூர்ஷுவாக்களின் அதிருப்தியைத் தணிக்க வேண்டியிருந்தது. அவர்கள் மேலும் மேலும் புதிய கோரிக்கைகளை முன்வைத்து வந்ததோடு அரசு எந்திரத்துக்குள்ளும் ஊடுருவ ஆரம்பித்திருந்தனர். இதோடு அடிபட்டுக் குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. பூர்ஷுவாக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த அவர்கள் எளிதாக தங்கள் சக்திகளை ஒன்றுதிரட்டிப் போராட்டத்தில் குதிக்க முடியும்.

ஆர்டிட்டி கொலைகார படையினர்.

முதலில், வர்க்கப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தவும், இந்த அம்சம் பிரதானமானதாக மாறி தங்கள் விவகாரங்களில் தலையிடாதிருக்கும்படிச் செய்யவும் பூர்ஷுவாக்கள் முயன்றனர். அச்சமயம் உருவாகி வந்த ஸ்திர நிலைமை சில பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு பூர்ஷுவாக்கள் தீர்வுகாண துணை புரிந்தது. தொழில் துறையின் கைகளைக் கட்டிப்போட்டு வந்த யுத்த எந்திரம் அகற்றப்பட்டது. முந்திய காலகட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன; மூலதனத்துக்கு விரிந்து பரந்த சுதந்திரம் அளித்து, அதன் முன்முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டன.

வர்க்கப் பிரச்சினையை கூர்மையாக்காமல், ஊதியங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்காமல் பல்வேறு பிரச்சினைகளை பாசிசத்தால் எவ்வாறு சமாளிக்க முடிந்தது? பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றிய சமயத்தில் ஸ்திர நிலைமை ஏற்பட ஆரம்பித்திருந்ததும், இத்தாலியப் பொருளாதார நிலைமை மேம்பாடுறத் தொடங்கியிருந்ததும்தான் இதற்குக் காரணம்.

எனினும் இது பாசிசத்துக்கு மிகவும் சோதனை மிக்க காலமாக இருந்தது – நெருக்கடி மிக்க காலம் என்று கூறுவதற்குக் காரணம் இருந்தது. இந்தக் காலத்தில்தான் பாசிசத்தின் திட்டத்துக்கும் பழைய திட்டத்தை ஆதரித்து வந்த குட்டி பூர்ஷுவா வெகுஜனப் பகுதியினரின் ஆர்வ விருப்பங்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் பகிரங்கமாக வெளிப்படத் தொடங்கின. இந்த முரண்பாடுகள் முதல் ஆண்டில் எவ்விதம் பிரதிபலித்தன?

ஆர்டிட்டி கொலைகார படைக்கு ஆதரவான பிரச்சார சுவரொட்டி.

பாசிச முகாமுக்கு வெளியே கனன்று கொதித்துக் கொண்டிருந்த எதிர்ப்பு இயக்கங்களில் அவை பிரதிபலித்தன. பாசிச முகாமுக்குள்ளிருந்தவை உள்ளிட்ட குட்டி பூர்ஷுவா சக்திகளை இந்த இயக்கங்கள் கவர்ந்து ஈர்த்தன. இதனால் இந்த சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் பாசிசத்துக்கு ஏற்பட்டது. இச்சக்திகளை பாசிசம் சகித்துக் கொண்டிருந்திருக்குமானால் அதன் வெகுஜன அடித்தளம் பெரிதும் ஆட்டம் கண்டிருக்கும்.

எனவே, பாசிசம் முதலில் பாப்புலர் கட்சியைக் குறிவைத்தது. அதுதான் பாசிசத்தின் முதல் எதிரியாக இருந்தது. அதன்மீது தனது அடக்குமுறைக் கணைகளைத் தொடுத்தது. பாப்புலர் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்நிலைகளை மேற்கொண்டனர். இதேபோன்று அமைச்சரவையிலிருந்த ஏனைய குழுக்களும் கட்சிகளும் போர்க்கொடி தூக்கின. குட்டி பூர்ஷுவா, மத்தியதர பூர்ஷுவா பகுதியினரிடையே இவற்றுக்கு வலுவான ஆதரவு இருந்தது. பாசிசம் எடுத்த பல கடுமையான நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் – பொருளாதாரக் குவியலின் ஆரம்பம், சிறு சொத்துடைமையாளர்களின் சீர்குலைவு. சிறு விவசாயிகள் மீது வரிச்சுமை போன்ற நடவடிக்கைகளை இவ்வகையில் குறிப்பிடலாம். இக்கால கட்டத்தில் எங்கும் அதிருப்தி நிலவியது: பாசிஸ்டுக் கட்சிக்குள்ளேயே கூட அது ஊடுருவிச் சென்றது. அதிருப்தி, அரசு எந்திரத்தின்மீது ஆதிக்கம் செலுத்த இயலாமை ஆகிய இவ்விரண்டு அம்சங்களும் சேர்ந்து ஆரம்பம் முதலே அரசாங்கத்தைச் சரிவர நிர்வகிக்க முடியாத சூழ்நிலைமையை உருவாக்கின; ஆட்சி பீடத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கிழடு தட்டிப் போய், நாட்டுக்குப் பெரும் பாரமாக இருந்தவர்களையும் அகற்ற முடியவில்லை. இவை போன்ற இக்கட்டுகளிலிருந்துதான் மாட்டியோட்டி நெருக்கடி தோன்றியது.

மாட்டியோட்டி நெருக்கடி ஆரம்பமானபோது தொழிலாளி வர்க்கம் பிரதான சக்தியாகத் தோன்றவில்லை. பல நிகழ்ச்சிகள் இதனை மெய்ப்பித்தன; உதாரணமாக, தெற்கிலும், ரோமிலும், நேப்பள்சிலும், பிறகு டூரினிலும் மிகப் பெருமளவுக்கு கொதிப்பும் குமுறலும் கிளர்ச்சியும் நிலவின. சற்றுத் தாமதித்துத்தான் தொழிலாளி வர்க்கம் தன் சக்திகளை அணிதிரட்டி, தலையிட்டது. பிரதான அம்சமாகப் பரிணமித்தது. 1925-26-ம் ஆண்டுகளில்தான் நமது கட்சி சுறுசுறுப்படைந்து முன்னணிப் படையாகத் திகழ்ந்தது.

ஏனென்றால் எதார்த்த நிலைமையும், இத்தாலிய முதலாளித்துவத்தின் ஸ்திரத் தன்மையின் இயல்பும் இந்த ஆண்டுகளில்தான் முழு அளவுக்குத் திரை விலகி வெளிப்பட்டன. தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறையும் ஊதிய வெட்டுகளும் ஆரம்பமாயின. வேலையில்லாத் திண்டாட்டம் பூதாகரமாக தலைதூக்கியது. வாழ்க்கைச் செலவுகள் தாங்கொணா அளவுக்கு அதிகரித்தன. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில்தான் பொருளாதாரமும் உற்பத்தியும் ஒரு சிலரின் கையில் குவியும் இயக்க நிகழ்வு ஆரம்பமாயிற்று. பொருளாதாரத்தை இந்த வளர்ந்து வரும் குவியலால் ஆளும் பூர்ஷுவா வர்க்கங்கள் பெரிதும் ஊக்கமும் உத்வேகமும் பெற்று, தொழிலாளி வர்க்க அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தன.

இத்தாலி பாப்புலர் கட்சியினர்.

மத்தியிலிருந்த பெரும் பூர்ஷுவாக்களின் ஊசலாடும் சக்திகளுக்கும் அடித்தளத்திலிருந்த குட்டி பூர்ஷுவா சக்திகளுக்கும் இடையே தோன்றிய முரண்பாடுதான் மாட்டியோட் நெருக்கடிக்கு மூலகாரணம் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டேன். பாட்டாளி வர்க்கம் கடைசி நிமிடத்தில்தான் ஒரு தீர்மானகரமான சக்தியாக அரங்கில் தோன்றிற்று. இதே சமயம் பொருளாதார வர்க்க அம்சங்கள் போன்றவையும் தலையிட்டன. உதாரணமாக, ஸ்திர நிலைமை -விரிவடைவதற்கு மூலதனத்துக்குள்ள சுதந்திரம் – நிதி மூலதனத்தை வலுப்படுத்திற்று. உற்பத்தி ஒரு சிலர் கையில் குவிவதை ஊக்குவித்தது. இதன் காரணமாக பாசிஸ்டு சர்வாதிகாரத்தில் நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகள் உச்சநிலைக்கு வந்தன.

1923-க்கும் 1926-க்கும் இடையே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியல் வாழ்க்கையில் இவை நேரடிப் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின. நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகள் மேல்நிலையைப் பெற்றதும், அனைத்து எதிர்ப்பையும் அவை அடக்கி ஒடுக்கியதுமானது அரசியல் மட்டத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திற்று. பூர்ஷுவாக்கள் மிகவும் பிற்போக்கான அடிப்படையில் அரசியல் ரீதியில் ஒன்றுபடுவதற்கும் இது வகை செய்தது.

சர்வாதிபத்தியம் பிறந்தது. பாசிசம் சர்வாதிபத்தியமாகப் பிறக்கவில்லை; பூர்ஷுவா வர்க்கத்தின் தீர்மானமான சக்திகள் அதிகப்பட்ச பொருளாதார ஒற்றுமையையும் அரசியல் ஒற்றுமையையும் எய்திய போதுதான் பாசிசம் சர்வாதிபத்தியமாக மாறிற்று.

பரினாஸ்ஸி (Roberto Farinacci)

சர்வாதிபத்தியம் என்பது பாசிஸ்டு சித்தாந்தத்திலிருந்து தோன்றாத மற்றொரு கருத்தோட்டமாகும். குடிமகனுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகள் பற்றிய பாசிசத்தின் ஆரம்பக்காலக் கண்ணோட்டத்தைப் பார்த்தால், அராஜகவாதப் பெரும்போக்கு அம்சங்கள் அதில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். தனிநபர் விவகாரங்களில் அரசு தலையிடுவதற்குக் காட்டப்படும் எதிர்ப்பு இவ்வகையைச் சேர்ந்ததே ஆகும். உண்மையில் சர்வாதிபத்தியம் என்பது இடையிலேற்பட்ட மாற்றத்தையும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

பிரச்சினையின் இந்த அரசியல் அம்சங்களை மேலெழுந்த வாரியாகத்தான் குறிப்பிட முடியும். சர்வாதிபத்தியப் பிரச்சினை எவ்வாறு முன்வைக்கப்படுகிறது என்பதைப் பரிசீலிக்கும்போது முந்திய காலகட்டத்தில் எழுந்த பிரச்சினைகளையும் நாம் காண வேண்டும். பூர்ஷுவா வர்க்கம் தனது செயல்முறையை மாற்றிக் கொண்டது. அவ்வாறே பாசிசமும் தனது செயல் முறையை மாற்றிக் கொள்ள வேண்டியதேற்பட்டது. இந்த மாற்றம் விவாதங்களையும் போராட்டங்களையும் குறித்தது. பாசிஸ்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றங்களையும் இது பிரதிபலித்தது. கட்சிக்குள்ளும் பாசிசத் தொழிற்சங்கங்களுக்குள்ளும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. கட்சியில் இந்தப் போராட்டம் பாசிஸ்டுக் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் கட்சிக்கும் அரசுக்குமுள்ள உறவு குறித்த பிரச்சினையை மையமாகக் கொண்டிருந்தது.

அரசு நிறுவனங்களுக்கும் மேலான அதிகாரம் கட்சிக்கு இருக்க வேண்டும் என்று தீவிர நடுத்தர ஊழியர்கள் கொண்டிருந்த கண்ணோட்டமே பாசிஸ்டுக் கண்ணோட்டமாக அமைந்திருந்தது. கட்சிதான் உண்மையில் அதிகாரம் செலுத்த வேண்டும். இந்த நிலையைத்தான் பரினாஸ்ஸி12 மேற்கொண்டிருந்தார். மாகாண கட்சி செயலாளர் மாகாண தலைமை அதிகாரியைவிட மிகவும் அதிகாரம் படைத்தவராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தேசியவாதிகளான ஃபெதர்ஸோனியும் ரோக்கோவும்13 வேறுவிதமான கருத்துக் கொண்டிருந்தனர். அரசுக்குத்தான் முதல் அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும், அதற்குப் பின்னர்தான் கட்சி வரவேண்டும். அரசுக்குக் கட்சி கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். முசோலினி இரு குதிரைகளில் சவாரி செய்யும் செப்பிடு வித்தையில் இறங்கினார். மாட்டியோட்டி காலத்தில் பரினாஸ்ஸியைப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால், சர்வாதிபத்தியப் பிரச்சினை தலைதூக்கியபோது ரோக்கோவுடன் சேர்ந்து கொண்டார். அரசுதான் எல்லாம், அதற்கு எதிராக எதுவும் கூடாது என்ற திட்டவட்டமான கோட்பாட்டை முன்வைத்தார்.

ஃபெதர்ஸோனி (Luigi Federzoni)

புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது இந்த நடைமுறை பூர்த்தியடைந்தது. பாசிஸ்டுக் கட்சியானது அரசின் வெறும் தேசிய பிரசார ஊதுகுழலாயிற்று. குட்டி பூர்ஷுவாக்களையும் மத்தியதர பூர்ஷுவாக்களையும் அரசிடம் விசுவாசம் கொள்ளச் செய்வதும், தொழிலாளர்களைப் பாசிசத்தின் பக்கம் ஈர்ப்பதுமே இந்தப் பிரசாரப் பணியின் குறிக்கோள்.

தொழிற்சங்கங்கள் பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினை. இந்தப் பிரச்சினை எவ்வாறு சமாளிக்கப்பட்டது? துரதிர்ஷ்டவசமாக இது பற்றி மிகச் சுருக்கமாகவே நம்மால் கூறமுடியும். தொழிற்சங்கப் பிரச்சினையில் நூற்றுக்கு நூறு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.

பாசிஸ்டுத் தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள், ஆரம்பத்தில் அது மிக சொற்பமானதாகவே, அற்பமானதாகவே இருந்தது. இதற்கு முன்னர் பாசிசம் வெகுஜனப் பகுதியினரை ஒருங்கு திரட்டுவதற்குப் பதிலாக அவர்களைச் சிதறடிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தது. 1920-ம் ஆண்டுக்கும் 1923-ம் ஆண்டுக்கும் இடையே பாசிசத் தொழிற்சங்கங்கள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒருங்கு திரட்டினர். அதே சமயம் வர்க்க உணர்வு கொண்ட தொழிற்சங்கங்களிலிருந்து வெளியேறியவர்கள் லட்சக்கணக்கில் இருந்தனர். தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதே இந்தக் காலகட்டத்தில் பாசிசத்தின் திட்டமாக இருந்தது,

மாட்டியோட்டி காலம் வரை இந்தப் போக்கு நீடித்தது. தொழிலாளர்களை ஸ்தாபன ரீதியாக ஒன்று திரட்டப் பாசிசம் முயற்சித்தது. ஆனால் இதில் தோல்வியே கண்டது. ஆனால் சர்வாதிபத்திய பிரச்சினை எழுந்தபோது, அரசை சர்வாதிபத்திய ரீதியில் மறுசீரமைக்கும் பாதையை பாசிசம் மேற்கொண்டபோது, செயல்முறை மாற்றமடைந்தது. அப்போது பாசிசம் தனது சொந்தத் தொழிற்சங்கக் கட்டுக்கோப்புக்குள் தொழிலாளர்களை அணி திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வர்க்க உணர்வு கொண்ட தொழிற்சங்கங்களிலிருந்து அவர்களைப் பிரிப்பது மட்டும் அச்சமயம் அதன் பணியாக இருக்கவில்லை. மாறாக அவர்களைத் தானே அணி திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று.

படிக்க:
புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !
சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !

இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது? இது விஷயத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1926-ம் வருடச் சட்டம் இத்தீர்வுக்கு ஓர் அடிப்படையாக அமைந்தது. இச்சட்டம் தொழிற்சங்க ஏகபோகத்துக்கு வழி வகுத்தது. ஆலைப்பிரிவுக் கமிட்டிகள் போன்றவற்றைக் கலைத்துவிட்டது. இந்தத் தொழிற்சங்க ஏகபோகத்தின் அடிப்படையில்தான் வெகுஜனங்களைப் பாசிசத்தின் பக்கம் கவர்ந்து ஈர்க்கும் பணி ஆரம்பமாயிற்று.

மேலும் சில மாற்றங்கள் பின்னால் மேற்கொள்ளப்பட்டன என்பதை நினைவில் கொள்ளுங்கள். 1926, 1927, 1928-ம் ஆண்டுகளின் சர்வாதிபத்தியமும் 1931-ம் ஆண்டுச் சர்வாதிபத்தியமும் ஒன்றல்ல. நாட்டின் பொருளாதார நிலைமையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும் இத்தாலியின் பொருளாதாரத்தில் தோன்றிய நெருக்கடி காரணமாகவும் கடைசியாகக் குறிப்பிடப்பட்ட மாற்றத்தைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

12. ராபர்ட்டோ பரினாஸ்ஸி (1892-1945) கிரிமோனாவின் பாசிஸ்டுத் தளபதி. வளைந்து கொடுக்காத கிராமப்புற அணியின் ஒரு தலைவர். மாட்டியோட்டி நெருக்கடியின் இறுதியில் பரினாஸ்ஸி முசோலினிக்கு பாதுகாப்பாக இருந்தார். டியூஸ் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள சாகசம் புரிந்தார். நன்றியுள்ள முசோலினி அவரை பி.என்.எப்க்கு செயலாளராக 1925 பிப்ரவரி 12-ல் நியமித்தார். ஆனால் இரண்டு வருடங்களுக்குப்பின் பெரிய பூர்ஷுவாக்களோடு மோதியபோது பரினாஸ்ஸி ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். இரண்டாவது உலக யுத்தத்தில் இத்தாலி நுழையும் காலம்வரை கட்சியில் ஒரு முக்கியத்துவமற்ற நபராக இருந்தார். 1945-ல் இத்தாலிய கொரில்லாக்கள் அவருக்கு மரண தண்டனை விதித்தனர்.

ஆல்பிரெட்டோ ரோக்கோ (alfredo rocco)

லியூகி ஃபெதர்ஸோனி (1875-1967) பாசிசத்திற்கு முந்திய இத்தாலிய தேசிய சங்கத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவர். பாசிஸ்டு-தேசிய சங்கம் இணைந்ததும் 1923-ல் பி.என்.எப்ல் சேர்ந்தார். முசோலினியின் முதல் அமைச்சரவையில் காலனிகளுக்கான அமைச்சராகப் பணியாற்றியபின், 1924-ல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருடைய இந்த அந்தஸ்தில்தான் அரசைவிட கட்சிக்கு முதல் இடம் என்ற பரினாஸ்ஸியின் கருத்தோடு மோதினார்.

13. ஆல்பிரெட்டோ ரோக்கோ (1875-1935) பி.என்.எப், 1923-ல் ஈர்த்துக் கொண்ட மற்றொரு தேசியவாதி. 1925 முதல் 1932 வரை நிதித்துறை அமைச்சராக இருந்தபோது அரசு, சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் எதேச்சாதிகாரத்தை ஏற்படுத்திய சட்டத்தைத் தயாரிக்கும் பணியை மேற்பார்வையிட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?

கேள்வி : //வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க காரணம் என்ன? தீர்க்க என்ன வழி? கூறுங்களேன்.//

– ராஜா

ன்புள்ள ராஜா,

டந்த ஐந்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை மிகவும் அதிகரித்திருக்கிறது. மோடி அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2017-18 ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் ஊடகங்கள் மூலம் சமீபத்தில் கசிந்தது. கடந்த ஐந்தாண்டு கால மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத ‘சாதனை’களை முறியடிக்கும் வகையில், இந்த புள்ளிவிவரம் இருக்கிறது. இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் 2017-18 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த பி. சி. மோகனன், அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஜே. மீனாட்சி ஆகியோர், வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரத்தை தொடர்புடைய அமைச்சகம் வெளியிட மறுப்பதாகக் கூறி, தங்களுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் வெளியாக வேண்டிய இந்த ஆய்வறிக்கையை தாங்கள் இருவரும் ஆராய்ந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் 65 மில்லியன் இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதாவது ஆறரைக் கோடி மக்கள். இது 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் என்கிறது ஆய்வறிக்கை. ( விரிவாகப் படிக்க: 45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி : ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை ! )

பி. சி. மோகனன் மற்றும் ஜே. மீனாட்சி

மோடி அரசின் மிக மோசமான சீரழிவு அறிவிப்பான பணமதிப்பழிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் ஏராளமான ஆய்வுகள் வந்திருக்கின்றன. சமீபத்தில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் 50 லட்சம் மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2000 – 2010-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 2018 -ம் ஆண்டில் வேலையிழப்பு 6% அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை படிப்படியாக உயர்ந்து மோடியின் சர்வாதிகார அறிவிப்பு வந்த 2016-க்குப் பின் அது உச்சத்தை எட்டியதாக ஆய்வு கூறுகிறது. ‘இந்தியாவின் பணி நிலைமை 2019’ என்ற அந்த அறிக்கை, இந்தியாவின் பணி மற்றும் தொழிலாளர் நிலைமை ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில், 20-24 வயது வரையான நகர்ப்புற ஆண் மற்றும் பெண்கள், ஊரக ஆண் மற்றும் பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை மிகவும் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பணக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட பல ஆயிரக்கணக்கான பணி இழப்புகளை ஏற்படுத்தியது பணமதிப்பு நீக்கம். ஒப்பந்த தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ரியல் எஸ்டேட் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. சந்தைகளில் தேவை குறைவு காரணமாக வண்டிகளில் நிரப்பப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி குப்பைக்குச் சென்றன. விலை குறைந்ததோடு, விவசாயிகளையும் அது பாதித்தது.

ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் சிறு மற்றும் குறுந் தொழில்கள் இன்னமும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.  சமீபத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் இந்த நிறுவனங்களின் கடன் நிலுவைத் தொகை 2018-ம் ஆண்டு இரட்டிப்பாகியுள்ளதாகக் கூறுகிறது. 2017-ம் ஆண்டு கடன் நிலுவை ரூ. 8,249 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டு ரூ. 16,118 கோடியாக உயர்ந்துள்ளது.

“பணக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட துறைகள் பெரிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமும், பணி ஆற்றலில் 80 சதவீதமும் பங்காற்றுகின்றன. இந்திய சுதந்திரத்துக்குப் பின், இந்தத் துறைகள் இப்படிப்பட்ட கொள்கை அமலாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என பணமதிப்பு நீக்கம் குறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் மைத்திரீஷ் கட்டக் தெரிவிக்கிறார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், பணி வாய்ப்பு உருவாக்கத்தில் முக்கியமான பங்காற்றுகின்றன. அதுபோல ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைக்கும் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் அவற்றை நம்பியுள்ள வர்த்தகமும் கடந்த நான்கரை ஆண்டுகளில் வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பை சந்தித்துள்ளதாக அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் புள்ளிவிவரம் சொல்கிறது.  இந்தத் தொழில்களின் நிலைமை அபாய கட்டத்தில் இருப்பதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. குறு தொழில்களில் 32% வேலை இழப்பும், சிறு தொழில்களில் 35% வேலை இழப்பும், நடுத்தர தொழில்களில் 24% வேலை இழப்பும் ஏற்பட்டிருப்பதாக 34,000 மாதிரிகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது தையல் கூடங்கள், தீக்குச்சி, பிளாஸ்டிக், பட்டாசு, வண்ணம் ஏற்றுதல், பதனிடும் நிலையங்கள், சில்லறை வேலை மற்றும் அச்சு நிறுவனம் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களைத்தான் அதிகமாக பாதித்துள்ளது.

படிக்க:
♦ வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் ! மோடி அரசின் சாதனை !
♦ மோடியின் ‘சாதனை’ : 13 கேண்டீன் உதவியாளர் பணிக்கு 7000 விண்ணப்பம் | 12 பட்டதாரிகள் தேர்வு !

நாட்டின் தனிநபர் வருமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத அளவிற்கு அதிகரித்து நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கையில், பெட்ரோல் விலை உயர்வு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும்போது, விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கிறது என்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரித்து, ஒரு சதவீதம் கோடீஸ்வரர்கள் வசம் நாட்டின் 78 சதவீத சொத்துக்கள் குவிந்து கிடக்கும்போது மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. ஒருபுறம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் வாய்ச்சவடால் அடித்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய விவசாயிகளின் சராசரி வருமானம் உயராமல் தேங்கிக் கிடப்பதாக மைய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறுகிறார்.

“ஸ்டார்ட் அப் இந்தியா”, ஸ்கில் இந்தியா என மோடி காட்டிய ஜூம்லாக்கள் எல்லாம் பிசுபிசுத்துப் போய்விட்டன. “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டத்தில் தொடங்கப்பட்ட 25% நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகள்கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் மூடப்பட்டுள்ளன. ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் மொத்தமே 6 இலட்சம் பேருக்குதான் வேலை கிடைத்திருக்கிறது.

மோடி கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கு மேல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் காற்றில் பறக்கவிட்டது மட்டுமல்லாமல், மக்கள் தமது சொந்த முயற்சியில் உருவாக்கிக் கொள்ளும் வேலைவாய்ப்புகளையும் – தள்ளுவண்டிக் கடைகள் போடுவது, ஆட்டோ ஓட்டுவது போன்றவை – தட்டிப்பறித்துவிடும் வேலையைத்தான் செய்து வருகிறார். இந்த அரசு ஒரு கொடுங்கனவு (nightmare) என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்!

படிக்க:
♦ பொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்
♦ அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் !

மேற்கண்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது என்ன? அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் விவசாயம் அரசால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. இதனால் ஊரகப் பகுதியில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் நகரங்களை நோக்கிச் செல்கின்றனர். நகரங்களிலோ பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி அமலாக்கத்தால் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர். மோடி கொண்டு வந்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.

சமீபத்தில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கார்களின் விற்பனைக் குறைவால் உற்பத்தியைக் குறைத்து, சில நாட்கள் ஆலையையே மூடுகின்றனர். இதனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளிகள் வேலை இழப்பர்.

சென்ற 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட சப்-பிரைம் நெருக்கடி காரணமாக உலகெங்கும் இந்தப்போக்கு வளர்ந்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பண்டங்கள் விலை கிடுகிடுவென ஏறிவிட்டது. இதனால் மக்கள் தமது தேவைகளை குறைத்துக் கொள்வதால் விவசாயம், சிறு குறு தொழில்கள் நசிவடைந்து போகின்றன. இத்துறைகளில் வேலை வாய்ப்பு முற்றிலும் அழிக்கப்படுகிறது.

மறுபுறம் பெரிய நிறுவனங்களும் உற்பத்தி செய்த பொருட்களை அதிகம் விற்க முடியாமல் தேங்கிப் போயுள்ளன. மக்களிடையே வாங்கும் சக்தி இல்லாமல் பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது.

இந்நிலையில் வேலையின்மையைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் ?

அறுபது சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து மையப்படுத்தப்பட்ட திட்டம் போடப்படவேண்டும். அதாவது இந்தியா முழுவதற்கும் தேவையான அரிசி, கோதுமை, கரும்பு, காய்கறிகள் அனைத்தையும் ஆண்டு முழுவதும் சீரான விலையில் கிடைக்கும்படி விவசாயத்தையும் சந்தையையும் இணைக்கும் வண்ணம் மையப்படுத்தப் பட்ட திட்டம் போடப்பட வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக சிறு குறு தொழில்களையும் மேற்கண்ட முறையில் மையத்திட்டம் போட்டு முறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் வேலை முறையை ஒழித்து விட்டு அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்கும் வண்ணம் தொழிலாளர் உரிமை நலத்திட்டங்கள் திருத்தப்பட வேண்டும். அன்னிய முதலீடுகளை நிறுத்தி விட்டு சுதேசிப் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஒரு  சோசலிச நாட்டில் வேண்டுமானால் சாத்தியமாகலாம்.

இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியம் இல்லை. காரணம் இங்கு ஓரிரு சதவீத முதலாளிகள் நாட்டின் 75%-த்திற்கும் மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். இந்த மலையளவு வேறுபாடு ஒன்றே வேலையின்மையின் சித்திரத்தை தந்து விடுகிறது. சீனா, ரசியாவில் உண்மையான கம்யூனிச ஆட்சி இருந்த போது அந்த நாடுகளின் விலைவாசி ஆண்டுக்கணக்கில் உயராமல் இருந்தது. அதே போன்று தொழிலாளர் வேலை வாய்ப்பும் அனைவருக்கும் கிடைத்து வந்தது.

தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் கட்டுப்படுத்தும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டு ஒட்டு மொத்த தனியார் பெருநிறுவனங்களையும் நாட்டுடமை ஆக்காமல் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவே முடியாது.

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ! ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

3

பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் புதிய கல்விக் கொள்கை – 2019 –யை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழக தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் !

அன்பாந்த மாணவர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே!

டந்த 5 ஆண்டுகாலம் மோடி தலைமையில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல், கல்வித்துறை முழுவதுமாக கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்க 2015 -ல் காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதுமட்டுமல்ல, பள்ளிகள் முதல் ஐ.ஐ.டி வரை இந்தி – சமஸ்கிருதத்தை திணிப்பது, பார்ப்பனிய பண்பாட்டை புகுத்துவது, உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ள ஆட்களை அமர்த்துவது என காவிமயமாக்கியும் வந்தது.

இப்போது மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளதால் 100 நாட்கள் இலக்கு வைத்து கல்வித்துறையை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற வெறிகொண்டு அலைகிறது. அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ள கஸ்தூரிரங்கன் என்பவர் தலைமையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு அவசர அவசரமாக கருத்துக்கேட்டு, சட்டமாக்கத் துடிக்கிறது மோடி அரசு.

உண்மையில் இது அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையல்ல. கல்வியை சர்வதேச சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனும், ’சூத்திரனுக்கு கல்வி எதற்கு’ எனும் பார்ப்பனிய மேலாண்மையை நிறுவும் காவிகளின் நலனும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரக புதிய மனுநீதி!

பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எந்த விலைகொடுத்தேனும் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்.

படிக்க:
♦ அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !

ஏன் புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிக்க வேண்டும்?
  1. இது கல்விக் கொள்கையல்ல, பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் பார்ப்பனியத்தின் புதிய மனுநீதி!
  2. தரத்தின் பெயரில் பணக்காரர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மட்டும் உயர்க் கல்வி, ஏழைகளுக்கு 10-ம் வகுப்புக்கு மேல் தொழிற்பயிற்சி. “சூத்திரர்களுக்கு கல்வி இல்லை. அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும்” என்ற ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் மீண்டும் உயிர்ப்பெறுகிறது!
  3. தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஒழிக்கப்படுகிறது. மும்மொழி திட்டத்தின் பெயரில் இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு!
  4. இந்திய வரலாற்றை இந்துத்துவ வரலாறாக திரிப்பது – சமஸ்கிருத பண்பாட்டை புகுத்துவது!
  5. தொன்மை – பாரம்பரியம் – பண்பாடு எனும் பெயரில் அறிவியலுக்கு புறம்பான வேதம் – புராணம் – இதிகாசம் போன்ற மூட நம்பிக்கைகளை, ஆபாசக் குப்பைகளை பாடத்திட்டமாக்குவது.
  6. சமுதாய ஒப்படைப்பு என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவது.
  7. உயர்க் கல்வியை மறுகட்டமைப்பு செய்வது என்ற பெயரில் யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களை ஒழிப்பது. உயர் கல்வி ஆணையம், உயர் கல்வி கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பது.
  8. இந்திய கல்வியை சர்வதேசியமயமாக்குவது. கெயின், மூக்ஸ் போன்ற ஆன்லைன் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை மாணவர்களுக்கு வரவைப்பது. அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்களை தனியார்மயமக்கி சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை பறிப்பது.

இதுதான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை. ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிராக உள்ள மோடி அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை நிராகரிப்போம்!

புதிய கல்விக் கொள்கை –2019-ஐ நிராகரிப்போம் ஜூன் – 20, 21 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் ! அனைவரும் வாரீர் !

தகவல் :
புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675,
மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com
முகநூல் : rsyftn