Sunday, June 21, 2026
முகப்பு பதிவு பக்கம் 488

தருமபுரி : மோடியின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0

“மோடி ஜெட்லியின் 2018-19 பட்ஜெட்! முதலாளிகளுக்கு பட்டுக்கம்பளம்! மக்களுக்குக்கோ பட்டை நாமம்!” என்ற தலைப்பில் கடந்த 07-02-2018 அன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இக்கூட்டங்களில் மோடி அரசின் இந்த பட்ஜெட் முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களை உள்ளடக்கி இருப்பதையும், ஏழைகளுக்கு நிறைவேற்றவியலாத வெறும் வாய்வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளதையும் அம்பலப்படுத்தி முன்னணியாளர்கள் பேசினர்.


தகவல்:

புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி. (R.S.Y.F.)
தருமபுரி மாவட்டம்,
தொடர்புக்கு: 81480 55539.

 

சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !

6

ந்துக்களின் கோவில்களில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை?” என்பது புதிய முழக்கமல்ல. தொண்ணூறுகளின் துவக்கத்தில் இருந்தே சங்கப்பரிவார அமைப்புகள் – குறிப்பாக இந்து முன்னணி, இந்த முழக்கத்தை எழுப்பி வந்துள்ளது. கடந்த 2-ம் தேதி (பிப்ரவரி, 2018) மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் “ஏற்பட்ட” தீ விபத்தைத் தொடர்ந்து தற்போது இக்கூச்சல் காதை அடைக்கிறது.

சொல்லப் போனால், கடந்த காலங்களில் கருவறைத் தீண்டாமை கேள்விக்குட்படுத்தப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் – குறிப்பாக, ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம், சிதம்பரம் கோவிலில் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டம், இந்துசமய அறநிலையத் துறை சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமித்த போது – என எல்லா சந்தர்ப்பங்களிலும் மேற்படி எதிர்க் கோரிக்கையை இந்துத்துவ அமைப்புகள் எழுப்பி வந்துள்ளன.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து   உண்மையில் விபத்தா இல்லை சங்கிகள் சதியா?

சமீபத்தில் கேரள அரசு அர்ச்சகர் நியமனம் செய்ததை அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் மீண்டும் தமது பழைய கோரிக்கையை முன்னிறுத்த துவங்கினர் – இப்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்தை அடுத்து ஒரு புதிய உத்வேகத்தை அடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் சில வாதங்களை இந்துத்துவ கும்பல் முன்வைக்கின்றன. முதலாவதாக, இசுலாமியர்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டிடங்கள் அவர்களாலேயே நிர்வகிக்கப்படும் நிலையில் இந்துக் கோவில்களின் நிர்வாகத்தில் அரசு தலையிடுவது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பனர்கள் முன்வைக்கும் முக்கியமான வாதம்.

இசுலாமிய வழிபாட்டுத்தலங்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் “மத்திய வக்பு வாரியம்” என்பது இந்திய வக்பு சட்டம் 1954-ன் கீழ் அமைக்கப்பட்டது என்பதும், அதன் தலைவராக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் இருக்கிறார் என்பதும், மத்திய வக்பு வாரியத்தின் கீழ் மாநில வக்பு போர்டுகள் இயங்குகின்றன என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மைகள்.

தற்போது மத்திய வக்பு போர்டின் தலைவராக இருப்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி. கிறிஸ்தவ தேவாலயங்கள் சொந்த முறையில் இயங்குகின்றன என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு ஒவ்வொரு தேவாலயங்களும் அதன் உறுப்பினர்களால் ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட கமிட்டியினரால் நிர்வகிக்கப்படுகின்றன என்பதும் உண்மை. வரலாற்று ரீதியில் இந்து மற்றும் இசுலாமிய வழிபாட்டிடங்கள் அரசு (மன்னர்கள்) பணத்தில் அமைக்கப்பட்டதைப் போல் அன்றி கிறிஸ்தவ தேவாலயங்கள் வெளிநாட்டு மிஷனரிகளின் நிதியால் அமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அனைத்து மத நிறுவனங்களும் மக்கள் சொத்துக்களை அடிப்படையாக வைத்து செயல்படுவதால் அவை முழுக்க அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்னரும் கூட ம.க.இ.க பிரச்சாரங்களில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்து முஸ்லீம் கிறித்தவம் என்ற வேறுபாடு இல்லை. எனினும் இந்தியாவில் ‘இந்துக்களும்’ இந்து கோவில்களின் சொத்துக்களும் பெரும்பான்மையாக இருப்பதால் சிறுபான்மை மத சொத்துக்களின் முறைகேடுகள் – சர்ச்சைகள் பெரிய அளவிற்கு எழவில்லை.

கோவில் ‘மீட்பு’ப் போராட்டத்தைத் துவங்கியிருப்பதாக கூப்பாடு போடும் ஹெச்.ராஜா!

இந்துக் கோயில்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு அரசர்கள், குறுநில மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்களின் பராமரிப்பிலும் கட்டுப்பாட்டிலுமே இருந்து வந்தன. மக்களின் வரிப்பணத்தையும் உழைப்பையும் கொண்டு தான் கோவில்கள் உருவாக்கப்பட்டன. கம்பெனி ஆட்சியின் கீழ் Regulation XIX of Bengal Code, 1810 மற்றும் Regulation VII of Madras Code, 1817 ஆகிய இரண்டு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்படி இந்துக் கோவில்கள் மற்றும் இசுலாமிய மசூதிகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.

அதன் பின் 1839-42 காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் இந்து வழிபாட்டிடங்களை பராமரிப்பதற்கு எதிராக ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்கள் (போப் உள்ளிட்டு) ஆட்சேபணை தெரிவித்து இங்கிலாந்து மன்னருக்கு பல புகார் மனுக்களை அனுப்புகின்றனர். இந்த நடைமுறையில் ஈடுபட வேண்டாமென இந்தியாவில் இருந்த தமது அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் நீதித்துறை 10.08.1840-ல் ஒரு கடிதம் எழுதுகின்றது. இதனடிப்படையில் கோவில்கள் மற்றும் மசூதிகளின் மேல் அரசுக்கு இருந்த கட்டுப்பாட்டை இந்தியாவிலிருந்த வெள்ளை அதிகாரிகள் தளர்த்துகின்றனர். (ஆதாரம் – ஆய்வு நூல்; State and religious endowments in Madras / Chandra Mudaliar.(University of Madras, 1976))

1845-ல் இருந்து 1872 வரை உள்ளூர் பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவில் நிர்வாகத்தில் ஏகப்பட்ட முறைகேடுகளும் குளறுபடிகளும் நடந்துள்ளன. இவையனைத்தும் புகார்களாகவும், வழக்குகளாகவும் பதியப்பட்டுள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் சாட்சாத் ‘உயர்சாதி’ இந்துக்களால் பதியப்பட்டவை என்பது முக்கியம். இதில் கிறித்தவ முஸ்லீம் ‘சதி’ ஏதுமில்லை. அதைத் தொடர்ந்து 1872-ல் கோவில்களின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட ஆங்கிலேய அரசு முயன்றது. எனினும், உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி அந்த முயற்சி தோல்வியுறுகின்றது.

இதற்கிடையே கோவில்களில் பக்திமான்கள் அடிக்கும் கொள்ளைகள் வரைமுறையின்றிச் செல்லத் துவங்கின. கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்வது, நகைகளைக் களவாடுவது, சிலைகளைக் கடத்தி விற்பது, வசூலாகும் நன்கொடையைத் திருடிக் கொள்வது, கோவிலைப் பராமரிப்பின்றி சீரழிய விடுவது என “பக்திமான்களின்” லீலைகள் அதிகரித்துச் சென்ற நிலையில் சர். டி.சதாசிவ அய்யர், பனகல் ராஜா ஆகியவர்கள் முயன்று 1927-ஆம் வருடத்தில் இந்துமத தர்ம பரிபாலன சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

அச்சட்டப்படி தர்மகர்த்தாக்கள் அடங்கிய வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, கோயில் சொத்துகள் நிர்வகிக்கப்பட்டன. இச்சட்டம் நிறைவேறுவதை சத்தியமூர்த்தி அய்யர் முதல் எம்.கே.டி. ஆச்சாரி வரை அனைத்துப் பார்ப்பனிய சக்திகளும் கடுமையாக எதிர்த்தனர். இன்றைக்கு சங்கபரிவாரங்கள் முன்வைக்கும் அதே கோரிக்கையை இவர்கள் முன்வைத்தனர். ஆனால் அவர்களிடத்தில் ஊழல் முறைகேடுகள் ஏன் நடந்தன, யார் செய்தார்கள், அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் இல்லை. சொல்லப்போனால் முறைகேடுகள் செய்த ஆதிக்க உயர் சாதியினரின் அதிகாரம் பறிக்கப்படுவதே இவர்களின் கவலையாக இருந்தது.

1951-இல் அன்றைய தமிழக முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்து சமய அறநிலையத் துறை எனும் அரசுத்துறையை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்காக அவரை சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள், ’வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்), உள்ளே ஒரு கதர்ச்சட்டை ராமசாமி’ என திட்டித் தீர்த்தன.

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனியம், வென்றது மகஇக

“1951க்கு முன்பு தர்மகர்த்தாக்கள் வேண்டுமென்றே நிலத் தீர்வையையோ அல்லது போர்டாருக்குச் செலுத்தவேண்டிய தொகையையோ செலுத்தாது வைத்து, கோவில் நிலங்களை ஏலத்துக்குக் கொண்டுவந்து தாங்களே தட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்.” என்றும் “தஞ்சாவூர் ஜில்லாவில் வேதாரண்ய ஈஸ்வரர் தேவஸ்தானத்துக்கு 16,000 ஏக்கர் நிலம் கொண்ட 45 கிராமங்கள் சொந்தமாக இருக்கின்றன. இருந்தும்கூட, இதன் வருஷ வருமானம் இன்று ரூ.75,000 என்றுதான் காட்டப்படுகிறது. வட ஆற்காடு ஜில்லாவில் ஒரு கோவிலின் தர்ம சொத்துக்கள் பூராவுமே ஒரு ஜாகீரின் சொந்த சொத்தாக மாறிவிட்டது. தஞ்சாவூர் ஸ்வர்க்கபுரம் மடத்தில் சுமார் ரூ.15,000 ரொக்கம் கையாடல் செய்யப்பட்டு, 26 ஏக்கர் நிலம் பராதீனம் ஆகியிருக்கிறது. திருச்செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் நகைகள் காணாமல் போயுள்ளன” என்றும் குறிப்பிட்டு, இந்து அறநிலையத் துறையின் தேவையை அன்று ஓமந்தூரார் வலியுறுத்தியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்ட பின்னரும் கூட கோயிலின் கருவறையை ஆக்கிரமித்துக் கொண்ட பார்ப்பனர்கள் அடித்த கொள்ளைகளின் பட்டியல் மிக நீண்டது. புதிய ஜனநாயகத்தின் இந்தக் கட்டுரை பார்ப்பனர்களும் பக்திமான்களும் கோவில் சொத்துக்களை சூறையாடியது குறித்து விளக்கமாகப் பேசுகிறது

மற்றுமொரு எடுப்பான உதாரணம் சிதம்பரம் கோவில். 2009-ம் ஆண்டு வரை சிதம்பரம் கோவிலில் உண்டியல் வசூலை தீட்சிதப் பார்ப்பனர்கள் தடுத்து வைத்திருந்தனர். அதுவரை ஆண்டு வருமானமாக தீட்சிதர்கள் சில ஆயிரங்களைக் காட்டி அதுவும் செலவாகி விட்டதாக கள்ளக் கணக்கெழுதி வந்தனர். 2009-ம் ஆண்டில் சிதம்பரம் கோவிலில் ஐந்து உண்டியல்கள் வைக்கப்பட்டு 2014-ம் ஆண்டு அவை எடுக்கப்பட்ட போது வசூலான தொகை மொத்தம் ஒருகோடியே 38 லட்சம் ரூபாய்கள் மற்றும் தங்கம் வெள்ளிப் பொருட்கள்.

எப்படி இருந்தாலும் இந்துக் கோவில்கள் இந்துக்களிடம் தானே இருக்க வேண்டும்? என்கிற பாமரத்தனமாக சிந்திப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் வரலாற்று உண்மை என்ன?

பண்டைய காலங்களில் நிலவிய ஆசிய பாணி சொத்துடைமை வடிவத்தில் இந்திய கிராமங்கள் தன்னிறைவு பெற்று விளங்கின. ஒவ்வொரு கிராமமும் தனது விவசாய உற்பத்தியின் ஒரு பகுதியை தமது உழைப்பிற்கான ஊதியமாக எடுத்துக் கொண்டு ஒரு பகுதியை மன்னருக்கு கப்பமாக அனுப்பி வைத்தது. மற்றுமொரு பகுதியை உள்ளூர் கோவிலுக்குச் செலுத்தினர். அன்றைய கோவில்கள் வெறும் பக்திக்கான இடமாக மட்டும் இல்லாமல் நிர்வாக அலகுகளாகவும் இருந்தன.

ஒவ்வொரு கோவிலிலும் ஏராளமான சொத்துக்களும், தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் என செல்வங்களும் குவிந்து கிடந்தன. எனவே தான் மன்னர்கள் (இந்து மன்னர்களே கூட) அண்டை நாட்டின் மீது படையெடுக்கும் போது கோவில்களைத் தாக்கிக் கொள்ளையடித்தனர். ”விராட இந்துக்களான” மராத்தியர்கள் ”மிலேச்ச முசுலீம்” திப்புவின் ராஜ்ஜியத்தின் மீது போர் தொடுத்து அவரது ராஜ்ஜியத்தில் இருந்த சிருங்கேரி மடத்திற்கு சொந்தமான கோவில்களைக் கொள்ளையடித்ததற்கும் அந்த இந்துக் கோயில்களைப் புனருத்தாரணம் செய்ய “மிலேச்ச முசுலீம்” திப்பு நிதி ஒதுக்கியதற்கும் இது தான் காரணம்.

மன்னராட்சி நிலவிய காலம் தொட்டு கோவில்கள் அரசுக்குச் சொந்தமாக இருந்ததோடு அவை கிராம பொருளாதாரத்தின் சொற்ப உபரியை உறிஞ்சிக் கொழுத்தவைகளாகவும் இருந்தன. இந்து மன்னர்கள் மட்டுமின்றி இசுலாமிய மன்னர்களும் கூட வேர்மட்ட அளவில் நிலவிய கிராமப் பொருளாதாரத்தையும் அதன் குவிமையமாக இருந்த கோவில்களையும் அப்படியே போற்றிப் பராமரித்து வந்தனர். சமீபத்திய வரலாற்றுக் காலம் வரை கோவில்களுக்கு கிராம நிர்வாகத்தில் இருந்த பங்கின் எச்சசொச்சமாக இன்றும் கிராமப் பஞ்சாயத்துகள் கோவில்களில் கூடும் வழக்கம் உள்ளது. இன்றைக்கும் தமிழக கிராமப் புறங்களில் உள்ள அம்மன் கோவில்களுக்கு வரி பிரிக்கும் போது இந்துக்கள் மட்டுமின்றி கிராமத்தில் உள்ள இசுலாமியர்களும், கிறிஸ்தவர்களும் வரி செலுத்தும் வழக்கம் உள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீவிபத்தை அடுத்து இந்துத்துவ கும்பல் முன்னெடுத்திருக்கும் பிரச்சாரத்திற்குப் பின் இருப்பது ஆன்மீகமோ பக்தியோ அல்ல. கோவில்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையும் அல்ல. அப்படி அக்கறை இருந்திருந்தால், கோவில் சொத்துக்களைச் சுரண்டிக் கொழுத்துக் கிடக்கும் பார்ப்பன முதலாளிகளிடமிருந்த அந்த சொத்துக்களை மீட்கப் போராடுவதில் இருந்து அவர்கள் துவங்கியிருக்க வேண்டும். பார்ப்பனர்களும் பக்திமான்களும் கோவில் சொத்துக்களை சூறையாடியது குறித்து திராவிடர் கழகத்தின் உண்மை இதழில் வெளியான இந்தப் பட்டியலில் இருந்து ஹெச்.ராஜாவும் ஆர்.எஸ்.எஸ் வானரப் படைகளும் தனது கோவில் மீட்புப் போராட்ட்த்தைத் துவங்கியிருக்க வேண்டும்.

ஆனால், இந்துத்துவ கும்பலுக்கு இருப்பதோ கீழ்த்தரமான பாசிச அரசியல் உள்நோக்கங்கள். இந்துத்துவ கும்பலின் ஊளைகள் அதிகரித்திருப்பதும் இதே காலகட்டத்தில் கோவில் சிலை திருட்டுச் சம்பவங்கள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருப்பதும் மிகுந்த கவனத்திற்குரியது. அதிலும் குறிப்பாக சிலைத் திருட்டு வழக்குகளில் கைதானவர்களில் ஒருவர் கூட பார்ப்பன குருக்களாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. பாதுகாப்பு நிறைந்த கோயில்களில் இருந்து சிலைகளைத் திருடும் குற்றவாளி என ஒருவன் இருந்தால் அந்த குற்றத்திற்கு துணை போன உள்கைகள் இல்லாமல் இருக்குமா? பார்ப்பன அர்ச்சர்களின் துணையின்றி சிலைகளை எப்படிக் கடத்தியிருக்க முடியும்?

கடந்த முப்பதாண்டுகளாக கோவில்களைக் கைப்பற்றி அவற்றை ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக் கூடாரமாக மாற்றும் இந்துத்துவ கும்பலின் சதித்திட்டத்திற்கு தோதாகவே சிலைத்திருட்டு, கோவிலில் தீவிபத்து என சமீபத்திய நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. இவை ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் அரசால் பராமரிக்கப்பட்டு வரும் சுமார் 36 ஆயிரம் கோவில்களைக் கைப்பற்றவும், அவற்றைத் தற்போது நிர்வகித்து வரும் இந்துசமய அறநிலையத்துறையையே கலைத்து விடவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் சுப்பிரமணிய சாமி. அரசியல் சாசனப் பிரிவு 25 மற்றும் 26-ன் படி ஒவ்வொரு மதக் குழுவினருக்கும் தாம் விரும்பியபடியும், அவரவரின் பாரம்பரிய முறைகளின் படியும் வழிபாடு செய்ய உரிமை இருப்பதாகவும் அதில் அரசு தலையிடுவது அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது என்று வாதிட்டு வருகின்றனர்.

கோவில்களை மீட்க இந்துத்துவ கும்பலின் சார்பாக பல ஆண்டுகளாக முனைப்பாக செயல்பட்டு வருபவர் டி.ஆர்.ரமேஷ். இவர் http://templeworshippers.in/ என்கிற இணையதளம் ஒன்றை இதற்காக பராமரித்து வருகிறார். அதில் தமது லட்சியங்கள் என “Restore the practices and traditions of our Temples” இந்த லட்சியத்தின் கீழ் தேவதாசி முறையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பயிற்சிக் கூடமாக கோவிலை மாற்றுவது வரை எதை வேண்டுமானாலும் அவர்களால் செய்து கொள்ள முடியும்.

இந்துக் கோவில்கள் ஆர்.எஸ்.எஸ் கையில் போனால் கொடியவர்களின் கூடாரங்களாகி விடும்!

இந்துத்துவ அரசியல் நோக்கங்களுக்கு சமூக வாழ்வின் அங்கமாக உள்ள கோயில் வலைப்பின்னலை கைப்பற்றிக் கொள்வது என்பதோடு கோவில்களில் குவிந்துள்ள பல்லாயிரம் கோடி சொத்துகளைக் கைப்பற்றுவது, அதைக் கொண்டு தமது பயங்கரவாத செயல்களுக்குத் திருப்பி விடுவதும் இவர்களது நோக்கங்களாக உள்ளன. வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் என வகைதொகையில்லாத சொத்துகள். இவற்றை கைப்பற்றலாம். கோயில் உண்டியலில் விழும் பணத்தை அப்படியே மடை மாற்றலாம்.

இந்த நோக்கங்களுக்காக அவர்கள் இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள நிர்வாக சீர்கேடுகளையும் முறைகேடுகளையும் ஊதிப் பெருக்கிக் காட்டுகின்றனர். அரசுகளால் நடத்தப்படும் எந்தவொரு அமைப்பிலும் முறைகேடுகள் இருப்பது உண்மைதான். அதை சரி செய்யவே மக்கள் போராடுகின்றனர். சான்றாக ஒக்கி புயலின் போது கடற்படையும், இந்தியக் கடலோரக் காவற்படையும் சரியாக செயல்படவில்லை. எனவே இப்படைகளை கலைத்து விட்டு மீனவர்களே படை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சங்கிகள் ஆதரிப்பார்களா?

அதே போல போக்குவரத்து, சுகாதாரம், கல்வி என அனைத்து துறைகளிலும் அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒரு அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லை என்று அதை அப்பல்லோவுக்கு எழுதிக் கொடு என்பதற்கும், இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட கோருவதற்கும் வேறுபாடு இல்லை.

கோவில்களின் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை மக்களால் பெயரளவிற்காவது அதைக் கேள்விக்குட்படுத்த முடியும். தனியாரிடம் ஒப்படைத்து விட்டால் அங்கே கேள்விக்கே இடமில்லை. இராணுவத்திலும் போலீசாரிடமும் லஞ்ச ஊழல் இருக்கிறது என்பதற்காக அந்த துறைகளை மொத்தமாக அம்பானி அதானி ஏன் அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என்றால் ‘தேஷபக்தர்கள்’ ஒத்துக் கொள்வார்களா? எதார்த்தத்தில் இராணுவத்தின் ஆயுதத் தளவாடங்களின் மூலம் அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருக்கிறது என்பதும் உண்மை.

இந்துமதம் சார்ந்த விவகாரங்களில் அப்படி தனியார்மயம் ( பார்ப்பனிய மயம்) நடப்பதற்குத் தோதான வகையில் மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் எடுபிடிகளின் அரசும் அமைந்துள்ளன. புராணப்புரட்டுக்களை கல்வியில் சேர்ப்பது, பார்ப்பன சடங்குகளை அரசு விழாவாக்குவது, வரலாற்றை திருத்தி எழுதுவது, பாபர் மசூதியை ஒழித்து விட்டு அதிகாரப் பூர்வமாக ராமர் கோவில் கட்டுவது, மாட்டுக்கறி – அசைவ உணவு வகைகளை பொது வாழ்வில் இல்லாததாக்குவது என ஏகப்பட்ட திட்டங்களை பார்ப்பனிய பாஜக அமல்படுத்தி வருகிறது. இத்தகைய கயர்கள் தமிழக கோவில்களை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?

கோவில்களைக் காப்பாற்றுவது என்பது இனிமேலும் மதம் சார்ந்த பிரச்சினை அல்ல – கோவில்களுக்கு சமூகத்தில் இருக்கும் செல்வாக்கைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவற்றின் சொத்து – பாரம்பரிய – வரலாற்று மதிப்பை காப்பாற்ற மக்கள் அனைவரும் களமிறங்கியாக வேண்டும். அறநிலையத்துறையை வலுப்படுத்த வேண்டும்.

கோவில் மட்டுமல்ல, அனைத்து ஆதீனங்களும், மடங்களும் கூட அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். அவை அனைத்திற்கும் தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களும், இதர சொத்துக்களும் உள்ளன. மதங்களில் பக்தி, ஆன்மீகம் மட்டுமே சாமியார்களுக்கும், கடவுளர்களுக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். இவை தவிர அனைத்தும் மக்கள் சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் மன்னர்களும், நம்பூதிரிகளும் அடித்த கொள்ளையை இன்று வரை தண்டிக்க முடியவில்லை. பாபாராம் தேவ், அஸ்ராம் பாபு, ராம்ரஹீம், நித்தியானந்தா போன்ற சாமியார்கள் பொறுக்கித்தனத்தில் மட்டுமல்ல, ஊழல் முறைகேடுகளிலும் முன்னணி வகிக்கிறார்கள்.

ஆக வரும் காலத்தில் இவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது வெறும் சொத்துக்கள் என்ற வகையில் மட்டுமல்ல, தேச விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கே அது  முன் நிபந்தனையாக தேவைப்படுகிறது.

தமிழக கோவில்கள் இந்து அறநிலையத்துறையில் இருந்து இந்துமதவெறிக் கும்பல்களின் கையில் செல்லுமானால் இவர்களுக்கு ஊருக்கு ஊர் ஒரு ஆயுத முகாம் உருவாகிவிடும். அங்கே அப்பாவி மக்களை வெறியேற்றுவது, இளைஞர்களை அடியாட்படைகளாக மாற்றும் வண்ணம்  பயிற்சி கொடுப்பது என பல முறைகேடுகள் நடக்கும். இவற்றுக்கு கோவில்களில் உள்ள மக்கள் சொத்துக்கள் பயன்படும். அனுமதிக்க போகிறோமா?

– சாக்கியன்

மேலும் படிக்க
Fire in Madurai’s Meenakshi temple sparks demand for shops to be evicted from complex
தமிழகம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தில் ரூ.52 கோடி இழப்பு : 3 நாளாகியும் வெப்பம் தணியவில்லை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து: நிபுணர் குழு இன்று ஆய்வு
Madurai: Hindu outfit seeks action over Meenakshi temple fire
Major fire at Meenakshi temple in Madurai, 40 shops gutted
கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை
கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன-‘மேல்’சாதிக் கும்பல்!
உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

 

கரூர் : தலித் மாணவன் சரவணனைக் கொன்ற அந்தோணி பள்ளி சாதி வெறியர்கள் !

5

ல்வி தனியார்மயம் ஆகிவரும் சூழ்நிலையில், ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்கும் என்பதே எட்டாக்கனி ஆகிவிட்ட நிலையில் இதெல்லாம் போதாது என்று, தனியார் பள்ளிகளில் மாணவர்களை சாதி அடிப்படையில் அவமானப்படுத்தப்படுவதும், அடையாளப்படுத்தப்படுவதும் தினம் தினம் நடந்துகொண்டுதான் உள்ளது.

புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

இந்த நிலையில் கரூர் பள்ளி மாணவன் சரவணனின் மரணம் இதனை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்த சிவக்குமார் – சரஸ்வதி ஆகியோரின் மகன் சரவணன். கரூர் ஆண்டாங்கோவிலில் அருகே இருக்கும் புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரவணன் 12-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பள்ளியில் அவன் 10 வகுப்பில் 470 மதிப்பெண் பெற்று முதல் மாணவனாக இருந்துள்ளான். படிப்பு மட்டுமின்றி விளையாட்டு, நீச்சல், யோகா, நடனம் போன்ற அனைத்து துறையிலும் அவனே முதல்நிலை வகித்துள்ளான். இதன்மூலம் அவன் பள்ளியில் உள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்து பாராட்டையும் பெற்று வந்துள்ளான்.

11-ம் வகுப்பு படிக்கையில் பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் வெற்றி பெற்று மாணவர் தலைவனாக (School People leader) தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலையில் இதனை பொருத்துக்கொள்ள முடியாத அப்பள்ளியின் முதல்வர் P.ஜோசப் (எ) அனீஷ், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஜெயந்தி, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நூலக ஆசிரியை தேவி ஆகியோர்கள் இதனை ஏற்க மனமின்றி, சரவணன மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதே பள்ளியைச் சேர்ந்த வேறொரு மாணவியை தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

சரவணன்

மேற்படி விபரம் தெரியவந்து, இதுபற்றி சரவணன் கேட்டபொழுது அம்மூவரும் ” நீயெல்லாம் வெட்டியான் வேலைசெய்யத்தான் லாயக்கு, நீ ரொம்ப அழகாவா இருக்க, பீப்பிள் லீடராக இருக்க உனக்கு தகுதி இல்லடா பறப்பயலே” என்று கேவலமாக அமானப்படுத்தி திட்டியுள்ளார்கள். பின்னிட்டு பெற்றோர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அந்த மூன்று ஆசிரியர்களும் வந்திருந்த பெற்றோர்களிடம் உங்கள் பிள்ளைகளை சரவணனுடன் சேர விடாதீர்கள் என்றும் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும் சரவணனுடன் சேர வேண்டாம் என்றும் மீறி அவனுடன் சேர்ந்தால் T.C.யை கிழித்து வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என்றும் எச்சரிக்கை செய்து மிரட்டியுள்ளார்கள். இதனால் சக மாணவர்கள் மத்தியில் தனிமையாகவே இருந்து வந்துள்ளான். மற்ற சில மாணவர்களும் ஆசிரியர்களும் ஏன் இப்படி சொல்கிறார்கள் என தெரியாமல் குழப்பத்தில் இருந்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் 23.01.2018 அன்று சரவணன் நேரில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மூவரிடமும், ஏன் என் சாதி பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த மூன்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் உள்ள பணியாளர்களும் சரவணனை விளையாட்டு மைதானத்தில் நிற்க வைத்து, சரவணனை பார்த்து ” கேள்வியாடா கேட்கிறே பறப்பயலே, நீ இந்த வருஷம் பாஸ் ஆக முடியாது, பெயில்தாண்டா ஆகப் போற” என்றும், ” உன் அப்பன் வெளிநாட்டில் இருந்தால் நீயெல்லாம் பெரிய ஆளா? உன்னை ஒழிச்சு கட்டாமல் விடமாட்டேன்” என்று மிரட்டியதுடன் பலவாறு சாதிப்பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்த சரவணன் மாலை வீட்டிற்கு வந்து தன் தாயாரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளான்.

பின்பு சாப்பிடாமலே தன் அறைக்கு தூங்க சென்ற சரவணன், மறுநாள் காலை 7.00 மணிக்கு வழக்கம்போல் எழாமல் இருக்கவே அவரின் தாயார் அறைக்கு சென்று பார்த்தபொழுது, சரவணன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சியுற்ற பெற்றோர்கள் உடனே மருத்துவமனைக்கு சரவணனை எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனை செய்த டாக்டர் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தன் மகனை சாதி பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தி தற்கொலைக்கு செய்துள்ளதை நினைத்து, அழுகையும், ஆத்திரமும் அடைந்த பெற்றோரும் உறவினரும், சரவணனின் மரணத்திற்கு நீதிகேட்டு மேற்படி பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

வழக்கம் போல வந்த கரூர் நகர போலீசார் கூட்டத்தை விரட்டிவிட்டு, பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் கண் துடைப்பிற்காக ஒரு புகாரை பெற்றுக்கொண்டு, குற்ற எண். 77/2018 சட்டப்பிரிவு 174ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நாடகம் நடத்தினார்கள். சரணவனின் மரணத்திற்கு என்ன காரணம் சொல்வது என்று திணறிப்போயிருந்த பள்ளி நிர்வாகத்தினர், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் காதல் தோல்வியால் மரணம், மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை என்றெல்லாம் பொய்யாக தகவலை பரப்பிவிட்டனர்.

மேற்படி விபரத்தை கேள்விப்பட்டு களத்திற்கு சென்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் பாதிக்கப்பட்ட சரவணனின் பெற்றோர்களிடம் விபரத்தை கேட்டறிந்து, இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டி அம்பலப்படுத்தினோம்.

பின்னர் போலீசாரும் என்ன செய்வது என தெரியாமல் அமைதி காக்கிறது. சரவணனின் மரணத்திற்கு நீதி கேட்டும், நியாயமான விசாரணை மேற்கொண்டும், மேற்படி பள்ளியின் முதல்வர் P.ஜோசப் (எ) அனீஷ், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஜெயந்தி, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நூலக ஆசிரியை தேவி ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வழியுறுத்தி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு நமது தோழர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இன்று தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக்கொள்ளைக்கும், சாதிய அடக்குமுறைக்கும் எத்தனை மாணவர்கள் பலியாகியுள்ளனர் என்பது பட்டியலிட்டு சொல்ல முடியாது. கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், மாணவர்களின் மீதான சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராகவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் அமைப்பாக அணிதிரள வேண்டும் என்பதையே சரவணனின் மரணம் சுட்டிக்காட்டுகிறது.

சாதி வெறியர்களுக்கு எதிராக களம் இறங்குவோம்!
சாதி வெறியூட்டும் பள்ளிகளை இழுத்து மூடுவோம் !

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர் – 98941 66350

***

தன் மகனை இழந்த தாய் சரஸ்வதி முதல் தகவலறிக்கை கூட பதியாமல் இருந்ததை தொடர்ந்து அனைத்து காவல்துறை மேலதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் பலருக்கும் எழுதிய புகார் மனு

பொருள்:- என் மகனை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி தற்கொலைக்கு தூண்டிய புனித அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிரின்ஸ்பல், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு.

அய்யா/அம்மா,

மேற்கண்ட விலாசத்தில் குடும்பத்துடன் வசித்துவரும் நானும் என் குடும்பத்தினரும் இந்து பறையன் சாதியை சேர்ந்தவர்களாவோம். என் மகன்களில் ஒருவனான சரவணன் 10ம் வகுப்பில் 470 மதிப்பெண் பெற்றுள்ளான். தற்பொழுது அவன் புனித அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயோ மேத்ஸ் குரூப்பில் படித்து வந்தான்.

அவன் படிப்பு மட்டுமில்லாமல் ஸ்போர்ட்ஸ், யோகா, நிச்சல், டான்ஸ் போன்ற அனைத்து துறைகளிலும் முதன்மையாக இருந்து வந்ததன் காரணமாக எல்லோரும் பாராட்டி வந்தார்கள். பள்ளி மாணவர் தலைவராக மாணவர்களால் என் மகன் சரவணன் 11ம் வகுப்பு படித்துவரும் போது தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் மேற்படி பிரன்ஸ்பல், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி ஆகியோர் என் மகன் சரவணன் மாணவர் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்காமல் வேறு ஒரு பெண்ணை மாணவர் தலைவராக்கினார்கள்.

அதனால் என் மகன் சரவணன் மனம் உடைந்து போனான். அதைப் பற்றி பிரின்ஸ்பாலிடமும் ஆசிரியை ஜெயந்தி(பிராமீன்), நூலக ஆசிரியை தேவி(கவுண்டர்) ஆகியவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், “நீயெல்லாம் வெட்டியான் வேலை பார்க்கதாண்டா லாயக்கு. ஸ்கூல் பியூப்பில் லீடராக இருக்க உனக்கு தகுதியில்லடா. பறப்பயலே”, என்று கேவலமாக திட்டியுள்ளார்கள். அந்த விசயங்கள் அனைத்தையும் என்னிடம் என் மகன் சரவணன் சொன்னான். நான் படிக்கிறதுதான் உனக்கு முக்கியம். எதற்கும் வருத்தப்படாதே நன்றாக படி”, என்று சொல்லி சமாதானப்படுத்தினேன்.

தொடர்ந்து மேற்படி நபர்கள் என் மகன் சரவணனை சாதியை சொல்லி டார்ச்சர் செய்துள்ளார்கள். அதனை என் மகன் சரவணன் என்னிடமும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லி அழுதான். நான் என் மகன் சரவணனிடம், “இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் பரிட்சை நடந்துவிடும். அதுவரை பொருத்திரு. யாரிடமும் எதுவும் பேசினால் பிரச்சனையாகிவிடும்”, என்று சொன்னேன். என் மகன் சரவணனும் அமைதியாகிவிட்டான்.

ஒரு மாதம் முன்பாக நான் மேற்படி பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்ற போது மேற்படி பிரின்ஸ்பால், ஜெயந்தி, தேவி, மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்துகொண்டு மாணவர்களின் பெற்றோர்களிடம், “சரவணன்கூட யாரும் அவரவர் பிள்ளைகளை சேரவிடக்கூடாது” என்றும் மாணவர்களிடம், “யாரும் சரவணனிடம் சேரக்கூடாது”, என்றும் சொல்லி அவமானப்படுத்தினார்கள். நானும் என் மகன் சரவணனும் கதறி அழுதோம்.

அதன் பின்னர் பிரின்ஸ்பால், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி ஆகியோரிடம் என் மகன் சரவணன் 23.01.2018ம் தேதியன்று, ‘நான் என்ன தவறு செய்தேன். ஏன் என்னை இப்படி டார்ச்சர் செய்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளான். அதற்கு விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைத்து மேற்படி பிரின்ஸ்பால், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி மற்றும் சில பள்ளி பணியாளர்கள், “கேள்வியாடா கேக்குற. பறப்பயலே. நீ இந்த வருஷம் பாஸாக முடியாதுடா. பெயில்தாண்டா ஆகப்போற. உன்னை ஒழிச்சுகட்டுறோமா. இல்லையான்னு பாருடா”, என்று திட்டியுள்ளார்கள். அழுதுகொண்டே என்னிடம் வந்து என் மகன் சரவணன் சொல்லி அழுதான். இரவு தூங்க சென்ற சரவணன் 24.01.2018ம் தேதியன்று காலை 7 மணியளவில் தூக்கில் இறந்து தொங்கிகொண்டிருந்தான்.

தகவலறிந்து போலீசார் வந்து என்னை விசாரித்தார்கள். நடந்ததை சொன்னேன். வழக்கு பதிவு செய்ததாக கேள்விப்பட்டேன். கடந்த 31.01.2018ம் தேதியன்று கரூர் டவுன் காவல்நிலையத்திற்கு சென்று முதல் தகவல் அறிக்கையை வாங்கி பார்த்த போது நான் சொன்ன விசயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே உரிய விசாரணை நடத்தி மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் மகன் சரவணன் மரணத்திற்கு நீதி பெற காவல்துறை தவிர வேறு புலனாய்வு முகமையை அமர்த்திடவும் மேலும் சூழ்நிலைக்கு உகந்த இன்னபிற நடவடிக்கை எடுக்க வழிவகை செய்திட வேண்டுமென்று மிகவும் பணிந்து வேண்டுகிறேன்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,
(சி.சரஸ்வதி)

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர் – 98941 66350

 

ரஜினி : வரமா – சாபமா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி வெளியீடு !

4

ட்சி ஆரம்பிக்கப் போவதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அறிவித்தார் ரஜினி. ரஜினி குறித்த எண்ணிறந்த விவாதங்களை நடத்திய ஊடகங்கள், ரஜினி போன்ற நட்சத்திர கோமாளிகள் இப்படி துணிந்து அறிவிக்குமளவு தமிழகம் ஏன் இப்படி ஒரு மட்டமான மாநிலமாக இருக்கிறது என்பதை பேசவில்லை.

அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரும் வரையிலும் எந்த அரசியல் போராட்டங்களோ, விமர்சனங்களோ செய்யக் கூடாது என ரஜினி தனது இரசிகர்களுக்கு ஒரு உத்திரவை வெளியிட்டார். போராடுவதற்கு மற்ற கட்சிகள் இருப்பதாக அவர் கேலியுடன் பேசியதிலிருந்தே இவரின் யோக்கியதை தெரிகிறது.

பாஜக மோடி அரசின் கண்காணிப்பில் நாடெங்கும் நடந்து வரும் மதக்கலவரங்கள், கொலைகள், மக்கள் விரோத நடவடிக்கைகள், அனைத்தையும் வைத்து பார்க்கையில் ரஜினியின் ஆன்மீக அரசியல் இந்துமதவெறியின் இளைய பங்காளி அல்லாமல் வேறென்ன?

தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டுமென குதிக்கின்ற பாரதிய ஜனதா தனது அடுத்த நகர்வை ரஜினியை வைத்து முயல்கிறது. பார்ப்பனிய சதிக்கூட்டத்தின் முக்கிய பிரமுகரான குருமூர்த்தி, துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் ரஜினியும், பாஜகவும் சேரவேண்டுமென அறிவிக்கிறார். தமிழக பாஜக தலைவர்களும் அதை பின்பாட்டாக பாடிவருகின்றனர்.

சூப்பர் ஸ்டாராக நிலை கொண்ட நேரம் தொட்டு, இன்றைய கபாலி காலம் வரை ரஜினியின் அரசியல் வரலாறு காட்டுவது என்ன?

அவரது திரைப்படங்களின் கள்ள வருமானம், ஜெயா, மோடி போன்றவர்களை பயந்தும், விரும்பியும் ஆதரிக்கும் சந்தர்ப்பவாதம், முக்கியமான பிரச்சினைகளின் போது மக்கள் விரோத நிலையை எடுத்ததும்தான் அந்த வரலாறு.

இருப்பினும் ரஜினியின் சினிமா செல்வாக்கால் அஞ்சும் ஓட்டுக் கட்சிகள், அவரை அம்பலப்படுத்தி கருத்து ரீதியாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய விரும்புவதில்லை.

விழிப்புணர்வு பெற்று வரும் தமிழகத்தை பின்னுக்கிழுக்கும் முயற்சியாக ரஜினியின் பிரவேசம் இருப்பதை எச்சரிக்கின்றது இத்தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

ரஜினி : வரமா – சாபமா ? – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • எந்திரன் : படமா ? படையெடுப்பா?
  • ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி !
  • ரஜினி பாபாவும் பக்தகேடிகளும் – ஒரு நேருக்குநேர் !
  • பாட்ஷா பாபாவான கதை!
  • ரஜினி ரசிகர்கள்: விடலைகளா ? விபரீதங்களா?
  • ஃபியூஸ் போன ரஜினிக்கு சொம்படிக்கும் குமுதம்!
  • மோடி – ரஜினி சந்திப்பு : பில்டிங் மட்டுமல்ல பேஸ்மெண்டும் வீக்குதான்
  • குமுதம் மடத்தில் ரஜினி சுட்ட வடை !
  • கோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி !
  • போயஸ் ரஜினியும் போயஸ் ராணியும் ஊழலில் ஓரணி !
  • சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு
  • கபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு ?
  • ரஜினி அரசியல் : மக்கள் என்ன கருதுகிறார்கள் ? – 2018 பொங்கல் மெகா சர்வே!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


 

புலம்பாதே ! போராட்டத்தை கையிலெடு ! குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்

0
குடந்தை அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் !
 கல்லூரியில் அமைந்துள்ள வேதியியல்  கட்டிடங்களை காக்க வக்கில்லாமல் வெட்டிசெலவுகளை செய்யும் தமிழக அரசின் பொதுபணித்துறை மற்றும் அதனை செய்ய வற்புறுத்தாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் வேதியியல் துறை மாணவர்களாகிய நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம்.

வேதியியல் துறையின் கட்டிடங்களை காக்க ஆர்வம் காட்டாத பொதுப்பணித்துறையே !
அடிப்படை வசதிகளை அலட்சியபடுத்தும் கல்லூரி நிர்வாகமே!

கல்லூரி கல்வி இயக்குனர் வந்து எங்கள் துறையை பார்வையிட்டு எங்களுக்கான உரிமையை தரும்வரை கல்லூரியே எங்கள் வீடு…..
புலம்புவதை நிறுத்து போராட்டத்தை கையில் எடு
இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.

இவண்
அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள், குடந்தை.

 

அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

53
லகம் எனது பார்வையில்….. என்ற வலைபக்கத்தில் அன்னா வெளியிட்டிருக்கும் கட்டுரை இது. வினவு தளத்திலும் சில அறிவியல் – மகளிர் தினக் கட்டுரைகளை அன்னா எழுதியுள்ளார்.  நவீன மருத்துவத்திற்கும் மாற்று மருத்துவத்திற்கும் உள்ள முரணை எளிய முறையில் விளக்குகிறார், அன்னா. அவருக்கு எமது நன்றி!
– வினவு

மருத்துவத்திற்கும் மாற்று மருத்துவத்திற்கும் இடையிலான வேறுபாடு

இது பண்புடன் எனும் இதழில் சில வருடங்களுக்கு முன் வெளியான என் கட்டுரை. அத்தளம் இப்போது வேலை செய்யாததால் இங்கு பதிகிறேன்.

ம‌ருத்துவம் / மருந்துகள் என்றால் என்ன‌? எவை குறிப்பிட்ட‌ நோய்க‌ளை அல்ல‌து நோய்க‌ளின் அறிகுறிக‌ளை இயன்றளவு தீமையின்றி போக்க‌வோ குறைக்க‌வோ செய்கின்ற‌ன‌வோ, அவ்வாறு செய்வ‌தற்கு ஆதார‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌வோ அவையே ம‌ருந்துக‌ளாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என‌லாமா? அப்ப‌டியாயின் மாற்று ம‌ருத்துவ‌ம் என்றால் என்ன‌? உண்மையாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ருத்துவ‌ முறைக‌ளுக்கு முற்றிலும் எதிர்மாறான‌வையா? மாற்று ம‌ருத்துவ‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் உறுதியாக‌க் கூறுவ‌து போன்று அம் ‘ம‌ருந்துக‌ள்’ வேலை செய்வ‌த‌ற்கு ஏதாவது ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌வா?

ஒரு ம‌ருந்து குறிப்பிட்ட‌ ஒரு நோயைக் குண‌ப்ப‌டுத்த‌ உத‌வ‌லாம். அதை அந்நோயால் பாதிக்க‌ப்ப‌டும் ம‌க்க‌ளுக்கு ம‌ருந்தாக‌க் கொடுக்க‌லாம் என‌ எவ்வாறு முடிவு செய்வ‌ர் என‌ப் பார்க்க‌லாமா? ஒரு உண்மையான உதாரணத்தைக் கொண்டு விளக்கினால் இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால் இத‌ற்கு உதார‌ண‌மாக‌ என‌து துறையில் த‌ற்போது ப‌ரிசோத‌னையில் இருக்கும் உங்க‌ள் அனைவ‌ருக்கும் அநேகமாக‌த் தெரிந்த‌ ஒரு ம‌ருந்தை எடுத்துக் கொள்வோம்.

வ‌யாக்ரா! இது த‌ற்போது ஏன் ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து என்பதற்கான‌ ஒரு காரணம்‌ எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இடுப்புப் பகுதிக்குச் செல்லும் இர‌த்த‌ நாள‌ங்க‌ளை விரிவ‌டைய‌ச் செய்வ‌த‌ன் மூலம் ஆண்க‌ளின் இடுப்புப் ப‌குதிக்கு இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்க‌ச் செய்வதே வயாக்ரா பயன்படுத்தும் ஆண்களில் வேலை செய்ய முக்கிய காரணம். இத‌ன் இர‌சாய‌ன‌ப் பெய‌ர் sildenafil citrate.

மேற்சொன்ன விடயத்தை நினைவில் வைத்துக் கொண்டு, அதற்கு மிக வித்தியாசமான ஒரு விடயத்தைப் பற்றி சுருக்கமாக கீழ்க்காணும் பத்தியில் பார்ப்போம். இரண்டிற்குமான தொடர்பு இதை வாசித்ததும் புலப்படும்.

குழ‌ந்தை க‌ருப்பையில் விருத்திய‌டையும் போது தாயிட‌மிருந்து தேவையான‌ போஷாக்கு, வாயுக்க‌ளை குழ‌ந்தைக்குக் கொண்டு செல்ல‌வும் குழ‌ந்தையிட‌மிருந்து க‌ழிவுக‌ளை தாய்க்கு அனுப்ப‌வும் உத‌வும் அங்க‌ம் சூல்வித்த‌க‌ம் (placenta). க‌ருத்த‌ரித்த‌ உட‌னேயே க‌ருவிலிருந்து உருவாகும் சூல்வித்த‌க‌ செல்க‌ள் தாயின் க‌ருப்பை அக‌ப்ப‌ட‌லத்தினூடாக தாயின் க‌ருப்பையிலிருக்கும் இர‌த்த‌ நாளங்க‌ளை ஊடுருவி, அவற்றை முற்றாக மாற்றி மிக‌வும் விரிவ‌டைய‌ச் செய்யும். இதன் மூல‌ம் தாயின் க‌ருப்பை ஊடாக‌ சூல்வித்த‌க‌த்திற்கு இர‌த்த‌ ஓட்ட‌ம் மிக‌வும் அதிக‌ரிக்கும்.

அதிக‌ரித்த‌ இர‌த்த‌ ஓட்ட‌த்திலிருந்து குழந்தைக்குத் தேவையான‌வ‌ற்றை உறிஞ்சி எடுக்க சூல் வித்த‌க‌த்திற்கு இல‌குவாக‌ இருக்கும். குழ‌ந்தையின் ந‌ல் விருத்திக்கு க‌ருப்பையில் க‌ருக்க‌ட்டிய‌ ஆர‌ம்ப‌த்தில் ந‌ட‌க்கும் இம்மாற்ற‌ம் மிக‌வும் இன்றிய‌மையாத‌து. கரு வளர்ச்சி தடைப்படுவதால் குழந்தை வளர்ச்சி குன்றிப் பிறத்தல் (fetal growth restriction), மற்றும் pre-eclampsia என்று சொல்லப்படும் முன்சூழ்வலிப்பு / குருதி நஞ்சூட்டுதல் உட்பட‌ கருக்காலத்தில் வரும் பலவகையான நோய்களில் இந்த சூல்வித்தகம், அதன் இரத்த நாளங்கள் எவையும் நன்றாக விருத்தியடைந்து இருப்பதில்லை. இந்நோய்க‌ளுக்குத் த‌ற்ச‌ம‌ய‌ம் ம‌ருந்துக‌ள் எதுவும் இல்லை. இந்நோய்கள் பிறந்த குழந்தைகளைப் பலவகையில் பாதிக்கின்றன. அத்துடன் இந்நோய்க‌ளால் தாய்க்கும் குழ‌ந்தைக்கும் க‌ருக்கால‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌ குழ‌ந்தை பிற‌ந்து வ‌ள‌ர்ந்து பல வருடங்களின் பின்பும் இருவ‌ருக்கும் இத‌ய‌ நோய்க‌ள், நீரிழிவு நோய் என்ப‌ன‌ வ‌ரும் வாய்ப்பு மிக‌ அதிக‌ம்.

மேற்சொன்ன இரு விடயங்களையும் வாசித்ததும் யாருக்காவ‌து ஒரு திறமான எண்ணம் தோன்றியதா? என்னுட‌ன் வேலை செய்யும் ஒரு ம‌ருத்துவ‌ அறிவிய‌லாள‌ருக்கு வ‌ந்த‌து. வயாக்ரா ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்ட‌ பாதுகாப்பான‌ ம‌ருந்து. அது ஆண்க‌ளில் இடுப்புப் ப‌குதிக்கு இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்கிற‌து. அது தானே மேற்சொன்ன‌ நோய்க‌ளால் பாதிக்க‌ப்ப‌டும் பெண்க‌ளுக்கும் தேவை. க‌ருப்பை இர‌த்த‌ நாள‌ங்க‌ளை விருத்திய‌டைய‌ச் செய்து சூல்வித்த‌க‌த்தின் இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்க‌ச் செய்தால், சூல்வித்த‌க‌ம் ந‌ன்றாக‌ விருத்தியாவதால் வ‌ள‌ர்ச்சி குன்றிய‌ குழ‌ந்தைக‌ளுக்கு இத‌ன் மூல‌ம் ப‌ல‌ன் கிடைக்க‌லாம் இல்லையா?

திறமான எண்ணம் வ‌ந்த‌து ச‌ரி, அத‌ற்காக‌ இத‌ற்கு ஒரு ஆதார‌மும் இல்லாமல், எவ்வளவு வயாக்ரா கொடுக்க வேண்டும், எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், அதனால் வேறு ஏதாவது பாதிப்பான‌ பக்க விளைவுகள் வருமா என்றெல்லாம் தெரியாமல் இந்நோய்க‌ளால் பாதிக்க‌ப்ப‌டும் கர்ப்பிணிப் பெண்க‌ளுக்கு கொடுப்ப‌து ச‌ரியாகாது தானே. வயாக்ரா இரத்த நாளங்களை விருத்தியடையச் செய்வது முதலே ஆய்வுகூட அடிப்படைப் பரிசோதனைகளில் கண்டுபிடித்தாயிற்று. அத‌னால் அடுத்து க‌ரு வ‌ள‌ர்ச்சி குன்றிய‌ க‌ருக்க‌ளைச் சும‌க்கும் சுண்டெலிக‌ளுக்கு வ‌யாக்ரா கொடுத்துப் பார்த்தார்க‌ள். தாய்ச் சுண்டெலிக‌ளின் சூல்வித்த‌க‌ இர‌த்த‌ நாள‌ங்க‌ள் ந‌ன்றாக‌ விருத்தி அடைந்த‌து ம‌ட்டும‌ன்றி பிற‌ந்த‌ குட்டிச் சுண்டெலிக‌ளும் ந‌ல்ல‌ நிறையுட‌ன் பிற‌ந்த‌ன (1)‌. இதே மாதிரி எலிக‌ள், கினியாப் ப‌ன்றிக‌ளில் செய்த‌ ப‌ரிசோத‌னைக‌ளிலும் வ‌யாக்ரா சாத‌க‌மான‌ முடிவுக‌ளையே த‌ந்த‌து.

சோதனை விலங்குகளில் மருந்து வேலை செய்தால், மனிதரில் வேலை செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பினும், ஒரு ஆதாரங்களும் இல்லாமல் மனிதரில் வேலை செய்யும் என நம்புவது மடத்தனம். அதனால் இவ்வாய்வின் அடுத்த கட்டமாக‌ க‌ருக்கால‌த்தில் மிக‌வும் ஆர‌ம்ப‌த்திலேயே குழந்தையின் வ‌ள‌ர்ச்சி குன்றி இருப்ப‌தாக‌க்  க‌ண்ட‌றியப்பட்ட 10 பெண்க‌ளிட‌ம் (இச்சந்தர்ப்பங்களில் சாதார‌ண‌மாக‌ பிர‌ச‌வ‌த்தின் போதே 50 சதவீத அளவு குழ‌ந்தைக‌ள் இற‌ந்து விடும்) அனும‌தி பெற்று அவ‌ர்க‌ளுக்கு வ‌யாக்ரா கொடுத்தார்க‌ள். அவ்வாறு வயாக்ரா சிகிச்சை அளிக்கப்பட்ட 10 கர்ப்பிணிப் பெண்களில் 9 பேருக்கு குழந்தைகள் பிழைத்தன, மட்டுமன்றி வைத்தியசாலையிலிருந்தும் குறைந்த காலத்திலேயே விடுவிக்கப்பட்டும் விட்டனர். ஓரே ஒரு குழந்தை மட்டுமே இறந்து பிறந்தது (2).

இந்த‌ ஆதார‌ம் போதுமா? இல்லவே இல்லை. ஒரு நோயைக் குணப்படுத்த ஒரு மருந்து அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட‌ வேண்டுமெனில் இத‌ற்கும் மேலாக இன்னுமொன்று செய்ய வேண்டும். அது தான் double blinded randomised clinical trial. வேறெந்தக் காரணிகளின் தாக்கமும் அற்று வயாக்ரா கொடுத்ததன் விளைவால் மட்டுமே குழந்தைகள் நற்சுகத்துடன் பிறந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த இது அத்தியாவசியமானது. அதாவ‌து வ‌யாக்ரா உண்மையில் இப்பெண்க‌ளுக்கும் குழ‌ந்தைக‌ளுக்கும் உத‌வுமா என‌ப் பார்க்க‌ ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ நாடுக‌ளில் பல்வேறு கட்டங்களில் ப‌ல‌ நூறு க‌ரு வ‌ளர்ச்சி குன்றி இருக்கும் க‌ர்ப்பிணிப் பெண்க‌ளை எடுத்து அவ‌ர்க‌ளின் அனும‌தியுட‌ன் சில‌ருக்கு வ‌யாக்ராவும் சில‌ருக்கு வ‌யாக்ரா மாதிரியே இருக்கும் சும்மா ஒரு மாத்திரையும் கொடுக்க‌ வேண்டும்.

இதில் மாத்திரை கொடுக்கும் ம‌ருத்துவ‌ருக்கோ எடுக்கும் பெண்ணுக்கோ அது ம‌ருந்தா அல்ல‌து சும்மா மாத்திரையா என்று தெரிந்திருக்க‌க் கூடாது – அது தான் double blinding. ஏனெனில் மருத்துவருக்குத் தெரிந்தால் அவரை அறியாமலே அவரின் செய்கைகளும் உணர்ச்சிகளும் மருந்து கொடுக்கும் போது மாறுபடலாம். சில மருத்துவர்களிடம் போனால் அவர் மருந்து ஒன்றும் கொடுக்காமலே உங்களுக்கு வருத்தம் கொஞ்சம் குறைந்தது மாதிரி இருக்கும் அல்லவா? அதே போல் மருந்து தான் எடுக்கிறேன் என உண்மையில் நினைத்து சீனிக் குலுசையைப் போட்டாலும் சிலருக்கு சில நோய்கள் மாறிவிடும்*.

அதோடு வ‌யாக்ரா ம‌ருந்து எடுக்கும் குழுவில் நோயின் வீரிய‌ம் அதிக‌ம் இருக்கும் பெண்க‌ளும் சும்மா மாத்திரை எடுக்கும் குழுவில் நோயின் வீரிய‌ம் குறைந்த‌ பெண்க‌ளும் கூட‌ இருக்க‌க் கூடாது. இர‌ண்டு குழுக்க‌ளில் கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லா வித‌த்திலும் ச‌ம‌த்துவ‌மான‌ பெண்க‌ள் இருக்க‌ வேண்டும் – அது தான் randamisation. ஒரு நோயின் வீரியம் குறைவதற்கு ஒரு குறிப்பிட்ட மருந்து கொடுப்பவரினதும் நோயாளியினதும் மனநிலை / காட்டும் உணர்ச்சிகள், நோயின் வீரியம், நோயாளியின் வயது, வாழ்க்கை நிலை என்று எந்தக் காரணிகளும் அன்று அந்த மருந்து மட்டுமே காரணமாகுமா என அறிவதற்கு இவ்வாறான கட்டுப்பாடுகள் இன்றியமையாதது.

இந்த பரிசோதனையிலும் உண்மையில் வயாக்ரா கரு வளார்ச்சி குன்றிய குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது எனக் கண்டால், அதன் பின் வயாக்ரா கருக்காலத்தில் இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருந்தாக ஆதாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும். தற்போது ஜரோப்பாவிலும் நியூசிலாந்திலும் இந்த double blinded randomised clinical trial செய்வதற்கான ஒழுங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு பாடுபடுவதற்கு முக்கிய காரணம் உலகில் எங்கோ ஓரிடத்தில் இவ்வாறான நோய்களால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கிறாள். இந்த வகையான ஒவ்வொரு ஆராய்ச்சியின் இலக்குமே இந்த இறப்பு விகிதத்தைத் குறைப்பதும் இதனால் தாயினது சேயினதும் வாழ்க்கைத் தரத்தை நோயின்றி உயர்த்துவதுமே.

வ‌ழ‌க்க‌மான‌ ம‌ருத்துவ‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் ம‌ருந்துக‌ள் எவ்வாறு உட‌லில் வேலை செய்கின்ற‌ன‌? உட‌லில் என்ன‌ மாற்ற‌த்தைக் கொண்டு வ‌ருகின்ற‌ன‌? அவ‌ற்றால் ஏற்ப‌டும் ப‌க்க‌ விளைவுக‌ள் என்ன‌? ப‌க்க‌ விளைவுக‌ளை விட‌ அவ‌ற்றால் ஏற்ப‌டும் ந‌ன்மைக‌ள் அதிக‌மான‌வையா? அம்ம‌ருந்துக‌ள் உப‌யோகிப்ப‌தால் எதேனும் நீண்ட‌கால‌ தாக்க‌ங்க‌ள் உள்ள‌ன‌வா? என்ப‌தெல்லாம் அறிவிய‌ல் ஆய்வுக‌ளின் மூல‌ம் க‌ண்ட‌றிந்து ஆவணப்படுத்தப்படும். அதோடு தொட‌ர்ந்து அவ‌ற்றின் உப‌யோக‌ம், விளைவுக‌ளை பார்வையிட்டுக்கொண்டே இருப்ப‌ர்.

இனிக் கட்டுரையின் முதலில் கேட்டிருந்த கேள்விக்கு வருவோம். மாற்று ம‌ருத்துவ‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் உறுதியாக‌க் கூறுவ‌து போன்று அம் ‘ம‌ருந்துக‌ள்’ வேலை செய்வ‌த‌ற்கு என்ன‌வாவ‌து ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌வா? என்று. எதுவுமே இல்லை என்பதே அதற்கான பதிலாகும். அநேகமான மாற்று மருத்துவ முறைகளில் மேற்சொன்ன‌ வகையான ஆய்வுகள் எதுவுமே நடைபெறவில்லை.

ஆய்வுகள் நடந்த பலவற்றில் நோயின் வீரியத்தைக் குறைக்கும் தன்மையில் கொடுத்த மருந்துக்கும் சும்மா கொடுக்கப்பட்ட மருந்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. பல சமயம் இந்த மாற்று மருத்துவ முறைகளைச் செய்பவர்கள் இந்த மாதிரியான ஆய்விற்குத் தமது மருந்துகளை உட்படுத்த விரும்புவதுமில்லை. உலகில் எத்தனையோ வகையான மாற்று மருத்துவங்கள் உண்டு. ஆனால் இந்திய/இலங்கைச் சமூகத்தில் அதிகம் உபயோகத்தில் இருப்பவை ஆயுர்வேதம், யோகா, உனானி, சித்த வைத்தியம், ஹோமியோபதி. சுருக்கமாக AYUSH (Ayurveda, Yoga, Unani, Siddha, Homeopathy).

இக்கட்டுரைக்கு ஆயுர்வேதத்தையும் ஹோமியோபதியையும் உதாரணமாக எடுப்போம்.

முக்கியமாக ஆயுர்வேதத்தின் அடிப்படையான வதா, பிதா, கப்பா தோஸாக்கள் இருப்பதற்கே எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆயுர்வேதத்தில் இருக்கும் சில மருந்துகள் சில குறிப்பிட்ட நோய்களுக்கு நிவாரணமாகுமென ஆதாரங்கள் உண்டு. ஆனால் பலவற்றிற்கு இல்லை. அதோடு வழக்கமான மருந்துகளிற்கு இருக்கும் சட்ட திட்டங்களுக்கேற்ப‌ இவ்வாயுர்வேத மருந்துகள் மதிப்பிடப்படுவதில்லை.

வெளிநாடுகளிற்கு இவை உணவுக் கூடுதல்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால் வெளிநாடுகளில் மருந்துகளிற்கு இருக்கும் கடுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பல ஆயுர்வேத மருந்துகளில் ஆபத்தான அளவுகளில் செம்பு, ஆர்சனிக் போன்ற இரசாயன மூலகங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஹோமியோபதிக்கு எந்தவித ஆதாரமுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஹோமியோபதி மருந்துகளுக்குள் எதுவுமே இல்லை. அவர்கள் நோயைப் போக்கும் கூலகத்தை நீரில் பல்லாயிரம் தடவை நீர்க்கச் செய்து (ஜதாக்கி) (ஏனெனில் நீருக்கு ஞாபக சக்தி உண்டென்பது அவர்களின் ‘நம்பிக்கை’) அதன் பின் அந்நீரை மாத்திரையாக்குவார்கள். அம்மருந்தை எடுப்பதற்கும் நீங்கள் ஒரு சீனி மாத்திரையை எடுப்பதற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதனால் ஹோமியோபதி மருந்துகள் பாவிப்பதால் உங்களுக்கு பெரிதாக ஒரு தீங்கும் வராது.

ஆனால் உண்மையான மருந்துக்குப் பதிலாக அதைப் பாவித்தீர்களானால், அந்நோய் குணமடையாமல் அவதிப்படுவீர்கள். ஹோமியோபதி சிகிச்சையாளர்கள் தமது சிகிச்சை முறை உண்மையில் வேலைசெய்கிறது என விஞ்ஞான ரீதியில் ஆதாரபூர்வமாகக் காட்டினால் 10,000 பவுண்டுகள் பரிசாகத் தருவதாக Trick or Treatment என்ற புத்தகத்தின் எழுத்தாளார்கள் சவால் விட்டுள்ளனர். இதுவரைக்கும் யாரும் வெற்றி பெறவில்லை.

இம்மாதிரியான‌ மாற்று “ம‌ருத்துவ” முறைகள் மக்களைக் கவர்வதற்கு முக்கிய‌மாக நான்கு கார‌ண‌ங்க‌ளைக் கூற‌லாம்.

முதலாவது காரணம் :

இம்முறைக‌ள் எல்லாம் இய‌ற்கையானது / இரசாயனங்கள் ஏதும் அற்றது என‌ இம்முறைக‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ள் கூறுவ‌து. இக்கூற்று மிக‌வும் கேலிக்குரிய‌து. ஏனெனில் நீங்க‌ள் அருந்தும் த‌ண்ணீர் கூட‌ ஒரு இர‌சாய‌ன‌ப் பொருள் தான். அத‌ன் இர‌சாய‌ன‌க் குறியீடு H2O. த‌ண்ணீர் இரு ஜ‌த‌ர‌ச‌ன் (ஹைட்ரஜன்) அணுக்க‌ளையும் ஒரு ஒக்சிய‌ன் (ஆக்சிஜன்) அணுவையும் கொண்ட‌து. அநேகமான மாற்று ‘மருத்துவங்களில்’ உபயோகிக்கப்படும் மூலிகைகளும் இரசாயனக் கூட்டுகளே.

அதும‌ட்டும‌ல்ல‌ எம‌து உட‌லே ஒரு இர‌சாய‌ன‌த் தொழிற்சாலையே. ஒரு கூறு இய‌ற்கையான‌து என்றால் அது ந‌ம‌க்கு ந‌ன்மையான‌தாக‌வே இருக்க‌ வேண்டும் என்ற‌ ந‌ம்பிக்கை கூட‌ மிக‌த் த‌வ‌றான‌தே. பாம்பின் ந‌ஞ்சு கூட‌ இய‌ற்கையான‌தே. அத‌ற்காக‌ ந‌ஞ்சு குடித்தால் உட‌லுக்கு ந‌ன்மை அளிக்கும் என‌ யாராவ‌து சொல்வார்க‌ளா? எத்த‌னையோ புழ‌க்க‌த்தில் இருக்கும் ம‌ருந்துக‌ள் ப‌ல‌ மூலிகைக‌ளிலிருந்தே முத‌லில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

மூலிகைக‌ளில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இர‌சாய‌ன‌க் கூட்டுக‌ள் உள்ள‌ன‌. அதில் எந்த‌க் கூட்டு ஒரு குறிப்பிட்ட‌ நோய்க்கு நிவார‌ண‌மாக‌லாம் என‌ ப‌ரிசோதித்து, பின் அதைத் த‌னிமைப்ப‌டுத்தியே ம‌ருந்துக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. அத‌னால் ம‌ருந்துக‌ள் வீரிய‌ம் கூடிய‌வையாக‌வும் ஆப‌த்துக் குறைந்த‌வையாக‌வும் உள்ள‌ன‌.

இர‌ண்டாவ‌து கார‌ண‌ம் :

இம்முறைக‌ள் ப‌ண்டைய‌ கால‌ந்தொட்டு எம்ச‌மூக‌த்தில் உப‌யோகிக்க‌ப்ப‌டுகிற‌து. ஒரு முறை ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ளாக‌ப் பின்ப‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து என்த‌ற்காக‌ அம்முறை ச‌ரியான‌தாக‌வோ ந‌ன்மையான‌தாக‌வோ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. எமது உட‌ல் எவ்வாறு வேலை செய்கிற‌து என்று தேவையான‌ அறிவு இல்லாத‌ கால‌த்தில் உருவான‌ முறைக‌ளை உண்மையில் ந‌ன்மை செய்கிற‌தா என‌ முழுமையாக‌ ஆராயாம‌ல் ப‌ய‌ன்ப‌டுத்துவது பாத‌கமான‌ விளைவுக‌ளையே த‌ரும்.

மூன்றாவ‌து கார‌ணம் :

தாம் முழு ம‌னித‌ உட‌லையும் பார்த்து ம‌னித‌ரின் வாழ்க்கை முறையையும் கேட்டே ம‌ருத்துவ‌ம் அளிப்ப‌தாக‌ மாற்று “ம‌ருத்துவ‌ர்க‌ள்” சொல்வ‌து. இது கூட‌ கேலிக்குரிய‌தே. ஏனெனில் அதைத் தான் வ‌ழ‌க்கமான‌ ம‌ருத்துவ‌ர்க‌ளும் செய்கிறார்க‌ள்.

நான்காவ‌து கார‌ண‌ம் :

இம்மாற்று ‘ம‌ருத்துவ‌த்தில்’ ப‌க்க‌ விளைவுக‌ள் இல்லை என்று ம‌க்க‌ள் ந‌ம்புவ‌து. இந்ந‌ம்பிக்கை கூட‌ மிக‌வும் பிழையான‌தே. எல்லா ம‌ருந்துக‌ளுக்கும் ப‌க்க‌ விளைவுக‌ள் நிச்ச‌ய‌ம் உண்டு. வ‌ழ‌க்க‌மான‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் எம்ம‌ருந்துக‌ள் தீமைக‌ளை விட‌ மிக‌ அதிக‌ம் ந‌ன்மை கொடுக்கின்ற‌ன‌வோ அவற்றைப் ப‌ய‌ன் ப‌டுத்துகின்ற‌ன‌ர்.

மிக‌ முக்கிய‌மாக‌ ம‌ருந்துக‌ளால் வ‌ரும் ந‌ன்மைக‌ள், தீமைக‌ள், நீண்ட‌ கால‌ விளைவுக‌ள் எல்லாவ‌ற்றிற்கும் இய‌ன்ற‌ள‌வு ஆதார‌ங்க‌ளைத் தொட‌ர்ந்து ஆவணப்ப‌டுத்திக் கொண்டிருப்ப‌ர். அவ்வாறான ஆராய்ச்சிகளால் பல வருடங்களுக்குப் பின் ஒரு மருந்து நன்மையை விடத் தீமையே செய்கிறது எனக் கண்டால், அதன் பின் அம்மருந்து உபயோகப்படுத்துவது தடை செய்யப்படும். ஆனால் இம்மாற்று ம‌ருத்துவ‌த்தால் வ‌ரும் ப‌க்க‌ விளைவுக‌ளை யாரும் ஆவணப்ப‌டுத்துவ‌தில்லை.

இச்சிகிச்சை எல்லாவற்றிற்கும் அநேகமானோர் ஆதாரமாகக் கொடுப்பது பல மூன்றாம் மனிதர்கள் கொடுத்த வாக்குமூலங்களையே. தனி மனிதர்களின் வாக்குமூலம் மிகப் பிழையானதானதாகவும் ஒருதலைப்பட்சமானதாகவுமே அநேகமாக‌ இருக்கும். அதற்காகவே தற்சார்பற்ற முடிவு என்ன என்று காண்பதற்காகவே இந்த randominsed double blinded trials அவசியமாகின்றது. அதோடு இந்த மாற்று மருத்துவம் செய்யும் அநேகமானோருக்கு சரியான மருத்துவப் பயிற்சியே இல்லை. பிறகு எவ்வாறு என்ன நோய், எப்படி மருத்துவம் செய்வது எனத் தெரியும்?

“மருந்துகள் என்றால் மேலைத்தேய நாடுகளில் உருவாக்கப்பட்டவை. மாற்று ‘மருந்துகள்’ எல்லாம் கீழைத்தேய நாடுகளில் தோன்றியவை. அதனால் தான் இவ்வளவு எதிர்ப்பு” என்று எம் நாடுகளில் நினைப்பவர்கள் பலர். மருந்துகள் என்றால் தற்சார்பற்ற, ஆதாரபூர்வமாக, இயன்றளவு பாதுகாப்பான முறையில் குறிப்பிட்ட நோய்களைக் குணமாக்குபவை அல்லது அந்நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்துபவை.

சரியான அடிப்படை ஆய்வுகளின் முடிவுகளின் ஊடாக அவற்றால் வரும் தீய பக்க விளைவுகளை விட நன்மைகள் குறிப்பிட்டளவு அதிகம் என முடிவு செய்வதால் அவை மருந்துகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. அவற்றின் ஆரம்பங்கள் எந்த தேசத்தில் இருந்தாலும் பிரச்சினையில்லை. எத்தனையோ மருந்துகள் கீழைத்தேய நாடுகளில் பயன்படுத்திய மூலிகைகளில் இருந்தே உருவாக்கப்பட்டவை. அம்மூலிகைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மூலகங்களில் அக்குறிப்பிட்ட நோய்க்கு நிவாரணியான குறிப்பிட்ட மூலகத்தைத் தனிப்படுத்தி மாத்திரையாக்குவதே மருந்தாகிறது. நோயைக் குணப்படுத்தத் தேவையான இரசாயனக் கூறுகள் மட்டுமே இருப்பதால் மூலிகையாக எடுப்பதை விட மருந்தாக எடுப்பது பாதுகாப்பானதும் விரைவில் குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். அவ்வளவே.

உண்மையான மருத்துவம் மாற்று மருத்துவத்தை விட எல்லா விதத்திலும் உயர்ந்ததென பல ஆய்வுகள் காட்டி விட்டன. ஏனெனில் அவை எத்தனையோ அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறையாகும். எப்போ மாற்று மருத்து முறைகள் நோய்களைக் குணப்படுத்தப் பயனுள்ளவை என ஆதாரங்கள் கிடைக்கிறதோ அன்றே அவை மாற்று மருத்துவத்திலிருந்து உண்மை மருத்துவ முறையாக அங்கீகரிக்கப்பட்டுவிடும். இருப்பது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மருத்துவமும் போலிகளுமே. போலிகளை மாற்று ‘மருத்துவம்’ எனச் சொல்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்பதோடு அது மக்களுக்கு ஒரு பிழையான புரிதலையும் கொடுக்கிறது.

எந்தவித ஆதாரங்களுமின்றியே இம்மாதிரியான மாற்றுமருத்துவங்களை விளம்பரப்படுத்துவோர் பணம் நிறையக் கொண்ட பிரபல ஆட்களே. ஜரோப்பாவில் இதில் முதன்மையானவர் இளவரசர் சார்ல்ஸ். இம்மாற்று மருத்துவ முறைகளை விளம்பரப்படுத்தும் எவரும் தமக்கென வரும் போது, முதலில் இந்த மருத்துவத்தை நாடுவதே இல்லை.

இவர்கள் எல்லோருக்கும் ஏதேனும் நோய் வரின் மிகச்சிறந்த மருத்துவர்களிடம் எவ்வளவு பணம் செலவழித்தும் போக இவர்களுக்கு வசதி உண்டு. இந்த விளம்பரங்களால் உண்மையில் பாதிப்படைவது பொது மக்களே. தயவு செய்து இனி எதாவது மாற்று மருத்துவமுறையை ஊக்குவிப்பர்களிடம், அம்மருந்து எமது உடலில் என்ன மாற்றத்தைச் செய்கிறது என்பதற்கான ஆதாரங்களைக் கேளுங்கள்.

இந்திய அரசாங்கம் அண்மையில் இந்த AYUSH மருத்துவ முறைகளுக்கு அளித்த 1,000 கோடிகளுக்கும் மேலான பணத்தை வைத்து சரியான தற்சார்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டு இம்முறைகளுக்கு உண்மையில் எதாவது ஆதரங்கள் உண்டா எனக் கண்டறிந்தால் மிக நன்று.

————————————————————————————————————————
படங்கள் கூகிளின் உதவியுடன் எடுக்கப்பட்டு பின் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

*கேரளாவில் பிறந்து இலங்கையில் கூட பல வருடங்கள் வசித்த பகுத்தறிவுவாதி ஆபிரகாம் கோவூர். அவர் படித்தது கல்கத்தா பல்கலைக் கழகத்தில். இவ்வொரு முறையும் அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வீடு திரும்பும் போது அவரின் ஊர் மக்கள் தமக்கு கங்கை நதியிலிருந்து ‘புனித’ நீர் எடுத்து வரச் சொல்வார்களாம்.

கோவூர் கங்கை நதிக்குச் சென்று பார்த்து, அங்கிருந்த மிகவும் மாசுபட்ட நீரை எடுத்துக் கொண்டு போகப் பிடிக்காமல் வெறெங்கோ இருந்து மிகவும் சுத்தமான நீர் எடுத்து இரு போத்தல்களில் இட்டு, அதுவே கங்கை நதியின் நீர் எனக் கொண்டு சென்று தமது ஊர் மக்களுக்குக் கொடுத்தாராம்.

அந்த நீர் பெற்ற மக்கள் பலர் கோவூரிற்கு அந்த நீர் எப்படித் தமது பல நோய்களைத் தீர்க்க உதவின என்றும் கங்கை நீரே இப்போ வருத்தங்களைக் குணப்படுத்துவதால் மருத்துவரிடமே போக வேண்டிய அவசியமில்லை என்றார்களாம் (3). இதற்குப் பெயர் தான் placebo effect.

1. Stanley JL, et al., Sildenafil citrate rescues fetal growth in the catechol-O-methyl transferase knockout mouse model. Hypertension (2012); 59 (5): 1021-1028.
2. von Dadelszen P, et al., Sildenafil citrate therapy for severe early-onset intrauterine growth restriction. BJOG (2011); 118(5): 624-628.
3. source: THE MIRACLE OF GANGA WATER by the late Dr Abraham Kovoor

மாற்று மருத்துவத்தைப் பற்றிய விபரமான தகவல்களுக்கு :

நன்றி : annatheanalyst

நிலக்கரிக்காக உயிரையும் ஊரையும் இழக்கும் கிரீஸ் மக்கள் | படங்கள்

0

தொன்மை வாய்ந்த ஏதென்ஸ் நகரிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டோலிமைடாவிற்கு(Ptolemaida) வெளியே பயணம் செய்தால் சூரியனையே நம்மால் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு காற்றில் மாசுக்களின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் டோலிமைடாவைச் சேர்ந்த கோஸ்டாஸிற்கு(Kostas ) அந்த சிக்கல் இல்லை. கண்ணைக் கட்டினால் கூட தன்னால் வண்டியை ஓட்ட முடியும் என்கிறார் அவர்.

“என்னுடைய தந்தை புற்றுநோயால் இறக்கும் போது எனக்கு 12 வயது. அவருடைய சகப்பணியாளர்கள் நால்வர் கூட அதே பிரச்சினையால் தான் இறந்து போனார்கள்” என்கிறார் அவர்.

கிரீஸ் அரசு மின்சக்தி நிறுவனத்தில் (PPC) அவரது தந்தையை போலவே பாதுகாவலராக கோஸ்டாஸ் பணிப்புரிகிறார். டோலிமைடாவின் நிலக்கரி சுரங்க மாசுபாட்டின் காரணமாக பணியில் இருக்கும் போதே இறந்துவிட்ட கோஸ்டாஸின் தந்தை அந்நிறுவனத்தின் முக்கியமான ஊழியர்களில் ஒருவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் ஒருபுறமும் நட்டமடைவது மறுபுறமும் இருந்தாலும் கூட 1.75 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இரண்டு புதிய சுரங்கங்களில் கிரீஸ் அரசு முதலீடு செய்துள்ளது. பாலைவனமான சில கிராமங்களையும் உள்ளடக்கி சுமார் 625 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்துள்ள நிலக்கரி சுரங்கம் நாட்டின் 30 விழுக்காட்டு மின்சாரத்தேவையை பூர்த்தி செய்கிறது.

ஜெர்மனி, செக் குடியரசு மற்றும் போலந்துடன் சேர்ந்து உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலக்கரியை மட்டுமல்லாமல் மிக மோசமான மாசுப்பாட்டையும் சேர்த்தே கிரீஸ் உற்பத்தி செய்கிறது.

கிரீன்பீஸ் அமைப்பின் ஓசையற்ற கொலையாளி (Silent Killer) அறிக்கையின் படி நிலக்கரி சுரங்கத்தின் மாசுபாடு கிரீசில் 1200 மரணங்களுக்கு காரணமாக இருக்கிறது. கிரீசை மட்டுமல்ல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து அண்டை நாடுகளையும் இது பாதிக்கிறது. புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் சராசரி வாழ்நாளும் அங்கே குறைகிறது.

கிரீசின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ள நிலையில் இது போன்ற சுரங்கங்களில் கோஸ்டாஸ் போன்றவர்கள் தங்களது உடல்ரீதியான சிக்கல்களை தள்ளி வைத்துவிட்டு 847 டாலர் மாத ஊதியத்திற்கு பணிப் புரிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபுறம் நிலக்கரி சுரங்க மாசுபாட்டின் காரணமாக, 1976-ம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தட்ட 4000 மக்கள் தங்களது இடங்களை விட்டு வெளியேறி உள்நாட்டு அகதிகளாகிவிட்டனர்.

சிதிலமடைந்த வீடுகள், பசியால் வாடும் சில தெருநாய்கள், பாழடைந்த தேவாலயங்கள் மட்டுமே டோலிமைடாவிற்கு அருகே இருக்கும் மாவ்ரோபிகி (Mavropigi) கிராமத்தின் இன்றைய அடையாளம்.

அந்த கிராமத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணி 2010 –ம் ஆண்டில் தொடங்கப்பட்டப் பிறகு பயத்தினால் பலர் வெளியேறிவிட்டனர். பள்ளிகள் நிரந்தரமாக அங்கே மூடப்பட்டன.

அங்கே எஞ்சியிருக்கும் 10 குடியிருப்புவாசிகளில் அரிஸ்டோக்ராதிசும் அவரது மனைவியும் இருக்கின்றனர். “என்னுடைய மனைவியும் மற்றும் நாய்களும் இங்கே வசிக்கிறோம். வேறெங்கும் சென்று வாழ நான் விரும்பவில்லை. இது மட்டுமே என்னுடைய சொந்த இடம்” என்று கூறுகிறார் அரிஸ்டோக்ராதிஸ்.

நிலக்கரி தோண்டுவதற்காக மிக அண்மையில் கைவிடப்பட்ட மவ்ரோபிகி கிராமம் இடித்து தள்ளப்பட தயாராக இருக்கிறது.
நிலக்கரியைக் கொண்டு செல்லும் கொணரிப்பட்டையை(conveyor belt) சுற்றியிருக்கும் சாம்பலை அரசு மின்சக்தி நிறுவன ஊழியர்கள் இருவர் துடைக்கின்றனர்.
அரசு மின்சக்தி நிறுவனத்தில் பணிப்புரியும் இளைஞர்களில் கோஸ்டாசும் ஒருவர். மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வேண்டுமெனில் சுரங்கத்திலிருந்து வெளிவரும் தூசுக்களையும் சாம்பலையும் நாள்தோறும் அவர் துடைக்க வேண்டும். ஊழியர்கள் 24/7 நேரமும் அச்சுரங்கத்தில் பணிப்புரிகிறார்கள்.
டோலிமைடாவின் வடப்பகுதியில் இருக்கும் சுரங்கத்தில் நிலக்கரி தோண்டப்படுவதை கோஸ்டாஸ் மேற்பார்வையிடுகிறார்.
கோஸ்டாஸின் கண்கள் தூசியினால் சிவப்பாகிவிட்டன. அதிகப்படியான மாசுபாட்டினால் பணியாளர்களும் அங்கே வசிக்கும் மக்களும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு தீவிரமான உடல்நல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.
அரசு மின்சக்தி நிறுவன உற்பத்திப் பிரிவு பணியாளர் ஒருவரின் தோற்றம் இது. அரசு மின்சக்தி நிறுவனத்தாலும் அதன் பங்குதாரர்களாலும் 10,000 க்கும் மேற்பட்டோர் அங்கே பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
வேலை நேரத்திற்குப் பிறகு நிலக்கரி கொண்டு செல்லும் கொணரிப்பட்டை அருகே அரசு மின்சக்தி நிறுவன ஊழியரான கியான்னிஸ் இருக்கிறார். விபத்துக்கள் அங்கே சாதாரணமானது. சில சமயங்களில் அபாயகரமாகவும் இருக்கும். பாதுகாப்பு நடவடிக்கைகள் பொதுவாக அங்கே பின்பற்றப்படுவதில்லை. 1970-லிருந்து 106-க்கும் மேற்பட்ட மக்கள் பணியிடங்களில் பலியாகியுள்ளனர்.
மேற்கு மாசிடோனியாவின் சுரங்கமொன்றில் காணப்படும் ஒரு தொழிலாளி.
அரசு மின்சக்தி நிறுவன ஊழியர் ஒருவர் பரிசோதனைக்காக நிலக்கரி மாதிரியை சேகரிக்கிறார்.
சுரங்கத்தின் நடுவே கைவிடப்பட்ட ஒரு தேவாலயம். சுரங்கத்திற்காக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டப் பிறகு சரவாகி(Charavgi) என்ற கிராமத்தில் இது மட்டுமே தற்போது எஞ்சியிருக்கிறது.
நிலக்கரி தோண்டுவதற்காக இடிக்கப்படத் தயராக இருக்கும் மாவ்ரோபிகி கிராமத்தின் கடைசி 10 குடிவாசிகளில் அரிஸ்டோக்ராதிசும் ஒருவர். அரசு மின்சக்தி நிறுவனம் மாவ்ரோபிகியின் குடிமக்களை அதிகாரபூர்வமாக இடமாற்றம் செய்திருந்தாலும் சிலர் இன்னும் அங்கே வாழத்தான் செய்கின்றனர். “நாங்கள் சாவதற்காக சம்பாதிக்கிறோம்” என்கிறார் அவர்.
டோலிமைடாவில் நிலக்கரி தோண்டும் எந்திரத்தை இரு பணியாளர்கள் இயக்குகிறார்கள்.
மேற்கு மாசிடோனியாவிலிருக்கும்(Macedonia) இச்சுரங்கம் தான் பால்கன்(Balkans ) தீபகற்பத்திலேயே பெரியதும் மேலும் உலகின் ஆறாவது பெரிய சுரங்கமுமாகும்.
கோஸ்டாஸிற்கு 12 வயதாகும் போது புற்றுநோயினால் அவரது தந்தை மரணமடைந்தார்.
அழிவிற்குப்பிறகு, முடிவிலா கருப்பு நிலக்கரி சுரங்கங்களாக காட்சி தரும் டோலிமைடா.

நன்றி: அல்ஜசீரா
தமிழாக்கம்: சுந்தரம்
மூலக்கட்டுரை: Life in the shadows of Greece’s coal mines

 

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை : நூல் அறிமுகம்

2

தமிழ் நிலத்தின் வரலாறாக ராஜராஜனின் படையெடுப்புகள் குறித்த பிரஸ்தாபிப்புகளும், “முன் தோன்றி மூத்த குடி” என்பன போன்ற வெட்டிப் பெருமிதங்களுமே ஓரளவுக்கு ‘விவரம்’ அறிந்த தமிழர்களின் பொதுபுத்திப் பதிவுகளின் சாரமாக இருக்கும். தஞ்சைப் பெரிய கோவிலை அண்ணாந்து பார்த்து ”முப்பாட்டன்மார்களின்” அறிவியல் தொழில் நுட்பங்களைப் புரிந்து கொள்ள முயலும் வலதுசாரி இனவாத பெருமிதங்கள் “திருநள்ளாறு கோவிலைப் பார்த்து விண்கலங்களே தடுமாறுவதாக” வரும் வலதுசாரி மதவாத பிரச்சாரங்களுக்கு வெகு இயல்பாக பலியாவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தச் சூழலில் முனைவர் சி. இளங்கோ எழுதி அலைகள் வெளியீட்டகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ள “தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை…” எனும் நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. நூலின் மதிப்புரையில் மயிலை பாலு எழுதியிருக்கும் இந்த வரிகளே இந்நூலின் முக்கியத்துவத்தை மிக எடுப்பாக உணர்த்துகின்றது.

“மண்ணுக்குக் கீழே மற்றொன்றும் இருக்கிறது”

பல்லாயிரம் வருடங்களாக இத்தமிழ் நிலம் எவற்றையெல்லாம் தனக்குள் பொதிந்து வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தேடுவதற்கு இந்நூல் ஒரு அறிமுகக் கையேடாக உள்ளது. தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகள், பானைகள், குகை ஓவியங்கள், கற்கருவிகள், உலோகக்கருவிகள், நாணயங்கள் போன்றவற்றைக் கொண்டு அந்தக் கால மக்களின் வாழ்வியல் எவ்வாறு இருந்திருக்கும் என்பதைக் குறித்த ஒரு சுருக்கமான சித்திரத்தை முன்வைக்க நூலாசிரியர் முயன்றுள்ளார்.

”ஏடறிந்த வரலாறு அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்கிறது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. தமிழகத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு அந்தக் காலகட்டங்களில் எம்மாதிரியான தொழிற்பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்திருக்க கூடும் என்பதை அலசிச் செல்கிறது இந்நூல். குயவர்கள், கொல்லர்கள், தச்சர்கள், சிற்பிகள், உழவர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகத்தை அச்சமூகத்தில் புழங்கிய பொருட்களைக் கொண்டு முகநூல் சகாப்தத்தின் மாந்தர்களுக்கு சுருக்கமாக அறிமுகம் செய்கிறது இந்நூல்.

கீழடியில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை வேண்டா விருப்புடன் நடத்திய மூன்று கட்ட ஆய்வுகளில் கிடைத்த சுமார் 7000 பொருட்களில் எங்குமே மதத்தின் சாயல் இல்லை என்பது நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது. இன்றைக்கும் பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பல் தலையால் தண்ணீர் குடித்தும் தமிழகத்தில் தங்களது கலவர அரசியலை வெற்றிகரமாக விதைப்பதற்கு தடையாக இருக்கும் காரணிகளில் தமிழகத்தின் ”சமூக மரபணுவின்” பாத்திரத்தை மேலும் நெருக்கமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டிய தேவையை இந்நூல் உணர்த்துகின்றது.

அதே போல் மத்தியில் அதிகாரத்திற்கு வரும் காங்கிரசோ பாரதிய ஜனதாவோ தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகளின் மேல் கணத்த கம்பளியைப் போர்த்தி மூட முயற்சிக்கும் காரணத்தையும் நம்மால் யூகிக்க முடிகிறது. கீழடி ஆய்வின் முக்கியத்துவம் என்ன, கீழடியில் புதைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை மூடி மறைப்பதற்கு மத்திய அரசு ஏன் முயல்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காக தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள தொல்லியல் ஆய்வுகளையும் அவைகளும் இவ்வாறே புறக்கணிக்கப்பட்ட வரலாற்றையும் தொகுப்பாக முன்வைக்கிறது நூல்.

ஒருபக்கம், இல்லாத சரஸ்வதி நதியைத் தேட நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொட்டுகிறார் வளர்ச்சி நாயகன் மோடி , ஆடம்ஸ் மணல் திட்டை “இராமர் பாலம்” என்று நிரூபிக்க கடலுக்கு அடியில் துளை போட கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை, அயோத்தி பாபர் மசூதியின் இடிபாடுகளுக்குள் கற்பனைக் கதாபாத்திரம் இராமனின் பிறப்பைத் தேட தொல்லியல் அறிஞர்களை களமிறக்கியது பாரதிய ஜனதா அரசு – இப்படி பிற்போக்குத்தனங்களை நிரூபிக்க ஊருக்கு முந்தி நிற்கும் அதிகார வர்க்கமும், இந்துத்துவ கும்பலும் உண்மையான மக்களின் வரலாற்றை எவ்வாறு அணுகுகின்றனர் என்பதற்கு கீழடியே சாட்சி.

ஏழாயிரத்துக்கும் மேல் கிடைத்துள்ள சான்றுகளில் வெறும் இரண்டே இரண்டு பொருட்களை மாத்திரம் கரிமச் சோதனைக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. அகழாய்வுக்கென தெரிவு செய்யப்பட்ட 110 ஏக்கர் நிலத்தில் வெறும் 50 செண்ட் நிலத்தில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்குள் அந்த ஆய்வை மேற்கொண்ட நேர்மையான அதிகாரியை மாற்றியது, அகழாய்வில் கிடைத்த பொருட்களை கடத்த முயற்சி என வரிசையாக தமிழ் மக்களின் வரலாற்றை குழிதோண்டிப் புதைக்க மத்திய பாரதிய ஜனதா ஏவிவிட்டுள்ள சதிகளைக் குறித்து இந்நூல் எச்சரிக்கை செய்கிறது.

இந்துத்துவ பாசிசத்தை அரசியல் ரீதியில் எதிர்த்து முறியடிப்பதற்கு நம் தமிழ்ச் சமூகத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியம் குறித்த அறிமுகம் மட்டுமல்ல – நம் சமூகத்தின் நரம்புகளுக்குள் எவ்வாறு பார்ப்பனிய நஞ்சு ஏற்றப்பட்டது என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். அந்த வகையில்  நாம் செய்ய வேண்டிய நீண்ட வாசிப்புக்கு இந்நூல் ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும். அவசியம் வாங்கிப் படிப்பதோடு நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

மேலும் ஆர்வம் கொண்டவர்கள் இதே நூலின் 106ம் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள துணைநூல்களைத் தேடி வாங்கிப் படிக்கலாம்.

நூல் : தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்  – கீழடி வரை…
ஆசிரியர் : சி.இளங்கோ
பதிப்பகம் : அலைகள் வெளியீட்டகம்,
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை – 600 089.
பக்கங்கள் : 112
விலை : ரூ.80

ஆன்லைனில் வாங்க

 

ஒப்பந்த முறை தொழிலாளர் கூட்டமைப்புக்கு வழிகாட்டும் சென்னை கருத்தரங்கம் !

0

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு ! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு !! – கருத்தரங்கம்

ற்காலிக வேலைகள், திடீரென்று வருகின்ற வேலைகள் தவிர தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற வேலைகளில் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது என்று 1970 ஆம் வருடத்தில் போடப்பட்ட “காண்டிராக்ட் தொழிலாளர்கள் முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்புச் சட்டம்” சொல்லிக் கொண்டது. ஆனால் இன்றைய நிலவரம் என்ன? டாக்டரும் காண்டிராக்ட்; கம்பவுண்ட்ரும் காண்டிராக்ட்; கல்லூரி பேராசிரியரும் காண்டிராக்ட்; பஸ் டிரைவரும் காண்டிராக்ட்; எஞ்சீனியரும் காண்டிராக்ட்; மெஷின் ஆபரேட்டரும் காண்டிராக்ட்; கம்ப்யூட்டர் நிபுணரும் காண்டிராக்ட்; ஐ.டி ஊழியரும் காண்டிராக்ட்; எங்கும், எதிலும் காண்டிராக்ட் மயம். இதில் அரசு நிறுவனம், தனியார் நிறுவனம் என்கிற வேறுபாடு இல்லை.

நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளித்த விவசாயம், நெசவு, சிறுவணிகம், மீன்பிடித்தல் மற்றும் சிறுதொழில்களை அழித்து, கோடிக்கணக்கில் அவர்களை வேலையில்லாத ரிசர்வ் பட்டாளமாக்கி உள்நாட்டின் சுயசார்புப் பொருளாதாரத்துக்கு வேட்டு வைத்துவிட்டு பன்னாட்டுக் கம்பெனிகளும், அம்பானி, அதானி போன்ற இந்திய தரகு முதலாளிகளும் கொழுத்த இலாபத்தில் திளைப்பதற்காகவே காண்டிராக்ட் மயமாதல் நடவடிக்கை அரசு துணையோடு தீவிரமாக நடக்கிறது. இதே நோக்கத்தில் காண்டிராக்ட் முறைக்கு ஆதரவாக சட்டங்களைத் திருத்தி உரம் போட்டு வளர்க்கிறது, அரசு.

காண்டிராக்ட் முறையை முறைப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டம் முதலாளியின் காலைத்தான் நக்கி வருகின்றது. விதிமுறை மீறல், விபத்துகளில் கொத்துக் கொத்தான சாவுகள் ஆகிய எந்த குற்றத்திலும் காண்டிராக்ட் முதலாளிகளோ, அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் நேரடி முதலாளிகளோ தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. நீதிமன்றங்களே பெரும்பாலும், காண்டிராக்ட் முறையை ஆதரித்து தான் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. காண்டிராக்ட் முறையில் இருக்கும் சட்டமீறல்களை அங்கீகரிப்பதன் மூலம் காண்டிராக்ட் முறையிலான சுரண்டல்களை சட்டப்பூர்வமாக்கி விட்டன நீதிமன்றங்கள்.

எனவே, பணிநிரந்தரம், 8 மணிநேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம், பணியிட விபத்துப் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடும்போதே சட்டம் என்ற வரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல், அந்தக் கைவிலங்கை உடைத்து வெளியேறுவதும், நமக்கான உரிமையை நிலைநாட்ட தொழிலாளர்களாகிய நாமே அமைப்பாகத் திரள்வதும் தான் நம்மீதான வரம்பற்ற சுரண்டல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி. முதலாளிகளால், முதலாளிகளுக்காகவே நடக்கின்ற அரசை தூக்கியெறிந்து, நம்முடைய நலன்களுக்காக, நாமே நடத்துகின்ற அரசு ஒன்றினை அமைக்காமல் நிரந்தர விடியல் இல்லை. இதற்காக வழிநடத்தக்கூடிய, புரட்சிகர அரசியலை தாங்கி நிற்கின்ற தொழிற்சங்கமே நமக்குத் தேவை.

காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை இல்லை என்பது வீணர்களின் பேச்சு. ஐ.டி ஊழியர்களுக்கு சங்கம் அமைக்கின்ற உரிமையை நிலைநாட்டி, முதலாளி வர்க்கத்தின் கனவைக் கலைத்த நம்மால், காண்டிராக்ட் தொழிலாளர்களை அமைப்பாக்கி, நம்மை இறுக்கிப் பிடித்திருக்கும் கூலியடிமை முறைக்கும்  முடிவு கட்ட முடியும்.

தோழர் அபர்ணா

இதனடிப்படையில், இந்திய அளவில் இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  ( IFTU ), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதிய தொழிற்சங்க முனைப்பு ( NTUI ), அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் (All ECLC W & E U ) ஆகிய 4 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து காண்டிராக்ட் தொழிலாளர்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க திட்டமிட்டன. இதன் முதல் கட்டமாக நாடு தழுவிய அளவில் காண்டிராக்ட் தொழிலாளர் சங்கங்களது கூட்டமைப்பு உருவாக்குவது எனவும், கீழ்க்காணும் முழக்கங்கள் அடிப்படையில் 28.1.2018 அன்று கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

  • காண்டிராக்ட் கொத்தடிமைக்கு முடிவுகட்ட தொழிற்சங்கம் கட்டியமைப்போம்!
  • வேலைகள் அனைத்திலும் நிரந்தரத்தை நிலைநாட்டுவோம்!
  • 8 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்ய மறுப்போம்!
  • சமவேலைக்கு சமஊதியம் என்கிற உரிமையை அடைந்தே தீருவோம்!
  • முழுமையான பணியிடப் பாதுகாப்பினை உத்தரவாதம் செய்யப் போராடுவோம்!
  • வேலை பறிப்பு, பசி-பட்டினியில் தள்ளுகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!
தோழர் பா.விஜயகுமார்

கருத்தரங்கமானது 28.1.2018 ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள கேரளா சமாஜம் கட்டிடத்தில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் துவங்கிய இந்த கருத்தரங்கினை இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  சார்பில் அந்த அமைப்பின் தலைவர் தோழர் அபர்ணா, பு.ஜ.தொ.மு சார்பில் மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார்,புதிய தொழிற்சங்க முனைப்பு சார்பில் அந்த அமைப்பின் தலைவர் தோழர் வாசுதேவன், அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் சார்பில் தோழர் தபன் ஆகியாரைக் கொண்ட தலைமைக்குழு வழிநடத்தியது.

கருத்தரங்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சே. வாஞ்சிநாதன் சிறப்புரையாற்றினார்.கருத்தரங்கில் நாடு முழுவதும் 13 மாநிலங்களிலிருந்து வந்த 20 பிரதிநிதிகள் உரையாற்றினர். வேலை நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், பணியிடப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகிய உரிமைகளுக்காக தாங்கள் நடத்திய போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பு.ஜ.தொ.மு சார்பில் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார், புதுச்சேரி பகுதி செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் உரையாற்றினர். கருத்தரங்கின் இறுதியில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் பிரதீப் ஆங்கிலத்திலும்,  , புதிய தொழிற்சங்க முனைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் கவுதம் மோடி இந்தியிலும், பு.ஜ.தொ.மு பொருளாளர் தோழர் விஜயகுமார் தமிழிலும் முன்மொழிந்தனர்.

கருத்தரங்கின்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகளும், தெலுங்கானாவின் அருணோதயா கலைக்குழுவினரது கலைநிகழச்சிகளும் நடைபெற்றன.ஒரு புதிய கருத்தாக்கத்தையும் நம்பிக்கையையும் இந்த கருத்தரங்கம் உருவாக்கியது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

 

கோவை பாரதியார் பல்கலைகழக ஊழல் ! நேரடி கள ஆய்வு

4

ணி நிரந்தரத்திற்காக துணை பேராசியரிடம் 30 லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் ஆ.கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் 03.02.2018 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் இப்பல்கலைகழகத்தின் 10-ஆவது துணைவேந்தராக 2016 மார்ச் மாதம் பொறுப்பேற்றார்.

துணை வேந்தர் கணபதி

2016 ஆண்டு பல்கலைகழகத்தின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 84 பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். ஒரு பேராசிரியருக்கு 6௦ லட்சம் ரூபாய் என பேரம் பேசி தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதா இறக்கும் வரை ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்ததால் உயர்கல்விச் செயலாளர் முதல், முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் என முறையாக ஊழல் ராஜ்ஜியம் சென்று கொண்டிருந்தது.

ஜெயலலிதா இறந்த பின் மன்னார்குடி மாஃபியா சசி கும்பலுக்கு ஊழல் பங்கு சென்றடையவில்லை என்பதால் கணபதி செய்த பணி நியமனத்தை நிறுத்தும் முயற்சியில் உயர்கல்வித்துறை ஈடுபட்டது. அவசர கடிதம் அனுப்பப்பட்டது. பதிவாளர் ஃபேக்ஸ் ஐ நிறுத்தி வைத்து தாமதமாகவே கொடுத்ததாகவும், அதனால் பணிநியமனம் செய்துவிட்டதாக துணைவேந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே அப்போதைய பதிவாளர் பி.எஸ்.மோகன் பதிவாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் துணைவேந்தர் கணபதிக்கும் நேரடியான பேச்சு வார்த்தையில் முரண்பாடு ஏற்பட்டது. முடிவாக அனைத்து பல்கலைகழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதில் முறைகேடுகளை முறையாக செய்துகொள்ள பணிக்கப்பட்டது.

உயர்கல்வித்துறை விதிகளின்படி இளங்கலை, முதுகலை பாடப்பிரிவில் ஒரே துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே சம்மந்தபட்ட துறையில் உதவி பேராசிரியர் பணியிடம் வழங்கவேண்டும் என்ற அடிப்படை விதியை மீறி பணி நியமனம் நடந்துள்ளது. இதனால் இங்கு மாணவர்களுக்கு வேறுதுறை பேராசிரியர்கள் நடத்தும் பாடம் தெளிவாக உள்வாங்கி கற்றுக்கொள்ள முடியவில்லை. உள்ளே சென்று கல்வி சம்பந்தமாக பேராசிரியரிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்லி புரியவைக்க அவர்களால் இயலவில்லை என்கின்றனர் மாணவர்கள்.

துணைவேந்தராக பொறுப்பேற்றதிலிருந்து உதவிப் பேராசிரியர்கள் 112 பணியிடங்கள் முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் துணை வேந்தர் ஒவ்வொருவரிடமும் 30 முதல் 60 லட்சம் வரை பெற்றுக்கொண்டு நியமித்துள்ளார். இதற்குமுன்னர் இருந்த துணைவேந்தர் ஜேம்ஸ்பிட்சை கொங்கு வேளாள கவுண்டர் ஆதிக்க சாதியினரையே நியமித்ததாகவும் தற்போது கணபதி அவ்வாறு செய்யவில்லை என்பதால், இவருக்கு எதிராக பல்கலைகழகத்துக்குள்ளேயே ஆதிக்க சாதியின் பேராசிரியர்களை இவருக்கு எதிராக இருக்கும் பொது சுரேஷ் என்ற உதவிபேராசிரியர் நியமனத்தில் பேசியதொகையை ஒப்படைக்கும்படி தொல்லை கொடுத்தால், அவருக்கு பணம் கொடுக்கும் போது துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்த ஊழல் பங்கு பிரிப்பதில் உள்ள சண்டை எனவும் கூறலாம்.

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சையும் இதே போன்று ஊழலில் ஈடுபட்டது, வெளிப்படையாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சந்தன மரங்களை வெட்டி விற்பது என்று மாவிலும் கொள்ளை! பனியாரத்திலும் கொள்ளை!  என அடித்து செயல்பட்டது ஊடகங்களால் அம்பலமானது. ஆனால்  ஊழலில் பங்கு அதிகார வர்க்கத்துக்கு ஆளும் கட்சிக்கும் சென்றுள்ளதால் அப்போது முறைகேடு வெளியே வரவில்லை. துணைவேந்தர் கணபதி அவ்வாறு பங்கு கொடுக்காமல் கூடுதலான ஆதிக்கசாதியின கவுண்டர்களை நியமித்ததாகவும், கைது நடவடிக்கைக்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்கள்.

துணைவேந்தர் நியமனம் ஆளுநர் பார்வையிலும், ஊழல்களிலும் உயர்கல்வி செயலர் என்று அனைவர் முன்னிலையில் தான் நடக்கிறது. பொறுப்புக்கு வந்தவுடனே மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் ஒதுக்கப்படும் நிதியை திருடி மாணவர்களுக்கு வஞ்சகம் செய்து கொள்ளையடிப்பது முதல் பல முகாந்திரங்களில் நடந்துள்ளது.

பாரதியார் பல்கலைகழகம்

துணைவேந்தர் கணபதியின் திருட்டு அவ்வப்போது ஊடகங்களில் கசிந்த வண்ணமே உள்ளது. 300 மையங்களில் தலா 10 லட்சம் வசூல் செய்து கொண்டு தொலைதூரக்கல்வி மையத்திற்கு பல்வேறு வெளிமாநிலத்திற்கு அடிப்படை கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களில் நடத்துவதற்கு அனுமதி அளித்தது, சிண்டிகேட் தேர்தல் முறையிலும் முறைகேடு, என கடந்த காலத்தில் ஊடங்களில் சந்தி சிரித்தவை ஏராளம்.

துணைவேந்தர் கணபதியின் ஒருவர் மட்டும் அடித்தகொள்ளை அல்ல இது. கல்வித்துறை அடி முதல் நுனி வரை ஊழல்மயப்பட்டு அழுகி நாறுவதன் நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே இந்த ஊழல். ஒரு பல்கலைக்கழகம் வருங்கால சமூகத்தை உருவாக்க கூடிய மாணவர்களை உற்பத்தி செய்து அனுப்பக் கூடிய இடத்தில் இருக்கிறது. சிந்தனை ரீதியாகவும் செயல்ரீதியாகவும் இப்பல்கலை மாணவர்கள், ஊழல்மய பாதிப்பால் கல்வி முடித்து சமூகத்தில் வாழும்போது அத்தகைய பண்புகளுக்கு அறிமுகமாவது எவ்வளவு பெரிய ஆபத்து?

இதுநாள்வரை கொள்ளை சம்பவம் நடக்காதது போலவும் தற்போதுதான் நடந்தது போலவும் அதிரடியாக கைது செய்து ஊழல்வாதிகளை தண்டிப்பது போல நாடகம் நடத்தும் பாவனையில் காட்டிக் கொள்கிறது அரசு. இந்நாடகத்திற்கு பின்னே ஆளும்வர்க்கம் நலன் இருக்கிறது. அது என்னவென்றால் மருத்துவத்துறையில் நடந்த ஊழலை சுட்டிக்காட்டி நம்மீது நீட் தேர்வை திணித்தார்கள். இதே போல பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கும் இதன் வழிகாட்டியாக உள்ள (UGC) ஒழுங்காக செயல்படாமல் முறைகேடுகள் நடப்பதால் அதை கலைத்துவிட்டு உயர்கல்வி மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை HEERA (Higher Education Empowerment Regulation Agency) உருவாக்க போவதாக புதிய கல்வி கொள்கை திட்டத்தின்படி அறிவித்துள்ளார்கள். எனவே இதுபோன்ற கைது அரசின் நிகழ்ச்சிநிரலில் உள்ள திட்டத்தை மக்கள் மீது திணிப்பதற்கும் நியாயப்படுத்தவும் பயன்படும்.

இவர்கள் உருவாக்கும் HEERA எனும் ஆணையத்தில் ஊழலில் ஊறித் திளைத்திருகின்ற அரசு அதிகாரிகள் ஊழலின் ஊற்றுக்கண்ணான பன்னாட்டு கல்வி நிறுவன முதலாளிகள் – தலைமை நிர்வாக அதிகாரிகள் மட்டுமே இடம்பெறுவர். பேராசிரியர்கள், கல்வியாளர்கள் யாருக்கும் இடமில்லை. இனி பாடத்திட்டம், கட்டணம் என அனைத்தையும் ஆணையம் தான் தீர்மானிக்கும். ஆகவே இங்கு ஊழலும் ஒழியாது. கல்வியில் இந்துத்துவ சிந்தனையும் கார்ப்பரேட் அடிமை புத்தியும் கொண்ட மாணவர்களை உருவாக்கத் துடிக்கும் புதிய கல்வி கொள்கை நேரடியாக அமுல்படுத்தப்படும்.

எனவே எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டுமானால் பாடையில் உள்ள இந்த அரசுக் கட்டமைப்பை சவக்குழியில் புதைக்கின்ற விதமான போரட்டத்தை நடத்த வேண்டும். அதே வேளையில் கல்வி நிலையங்களால் முடிவெடுக்கும் அதிகாரம், நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் அடங்கிய சின்டிகேட்களை கட்டியமைக்க வேண்டும். அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ள வேலையில் எஞ்சியிருக்கும் ஒரே வழி இதுவே…

செய்தி – நேரடி கள ஆய்வு
மக்கள் அதிகாரம்
கோவை


கொள்ளை வேந்தர் கணபதி சொத்துக்களை பறிமுதல் செய் !
கூட்டுக் களவானிகளான அதிகாரிகள் – அமைச்சர்களையும் சிறையிலடை !

நேர்மையான பேராசிரியர்களே! மாணவர்களே!
மாணவர் எதிர்காலத்தை – கல்வி தரத்தை லஞ்சப் பேய்களான துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் தீர்மானிப்பதா?

கிரிமினல் –  மாஃபியாக்களிடமிருந்து கல்வித்துறையை மீட்டு நாமே நடத்துவோம் !

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு – 94451 12675


Confiscate the properties of the corrupt kovai bharathiyar university VC Ganapathi!
Send the officers and ministers who also took part in the corruption to jail!

To the honest professors and students!

  • Should we still allow the shamelessly corrupt VCs and professors to decide the quality of education and the future of our students?
  • Let us reclaim the education department from the corrupt criminal-mafia!

REVOLUTIONARY STUDENT and YOUTH FRONT
TAMILNADU – 9445112675

 

வல்லரசு ஜப்பானில் ஊழியர்களைக் கொல்லும் வேலைச் சுமை !

2

யிரை கொடுத்து வேலை செய்வது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையிலேயே வேலைக்காகத் தங்கள் உயிரைப் பறிகொடுத்த பலர் ஜப்பானில் இருந்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால் பணியிடங்களில் ஏற்படும் மரணங்களைக் குறிப்பதற்கு தனியே `கரோஷி` என்று ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு.

ஜோயி டோக்னாங் என்பவர் ஜப்பானின் மத்தியப் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜப்பானைப் பொருத்தவரை பணியாற்றுவது என்றால் காலை பத்து மணி முதல் ஆறு மணி வரை வேலை செய்வது அல்ல. உறக்கம் கலைவதற்கு முன்பே அதிகாலை எழுந்து அலுவலகத்துக்கோ தொழிற்சாலைக்கோ சென்று விட வேண்டும். உணவு இடைவேளை என்பது பெயரளவுக்குதான். ஏதோ அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கைக்குத் திரும்பிவிட வேண்டும். ஏற்கெனவே குவிந்திருக்கும் வேலைகளை செய்து முடிப்பதற்குள் புதிய சுமைகளை ஏற்றிக்கொண்டே போவார்கள். ஒவ்வொன்றுக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். குடும்பம், வீடு குழந்தைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு 24 மணி நேரமும் வேலையைப் பற்றி மட்டுமே சிந்தித்து, வேலையை மட்டுமே செய்துகொண்டு வாழ்ந்தால்தான் சம்பளம் வரும். இல்லாவிட்டால் சம்பளம் பறிபோவதோடு ஏச்சு, பேச்சுகளுக்கு அவமானங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

இதற்கெல்லாம் பயந்துதான் ஜோயி ஓடியோடி உழைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மனைவியும் மகளும் பிலிப்பைன்ஸில் இருந்தனர். இன்னும் மூன்று மாதங்களில் உங்களுடன் இணைந்து விடுவேன், பிறகு நாம் எல்லோரும் ஒன்றாக, மகிழ்ச்சியாக வாழலாம் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார் ஜோயி. எனவே தற்காலிகமாக மனைவி, மகள் இருவரையும் நினைவுகளில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு வேலையில் கரைந்து போனார்.

ஜோயி தங்கியிருந்தது பலரும் ஒன்று சேர்ந்து வசிக்கும், குறைந்த வாடகைக் குடியிருப்பு ஒன்றில். அலுகலகத்திலிருந்து கிளம்பி தூக்கக் கலக்கத்தோடு சென்று படுக்கையில் விழுந்து புரண்டு படுப்பதற்குள் ஒலிக்கும் அலாரத்தை அணைத்துவிட்டு எழுந்து விறுவிறுவென்று வேலைக்கு விரைந்து சென்றாக வேண்டும். சிறைச்சாலை கைதிகளைப்போல ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைப் போலவே இருக்கும். எல்லாம் முடிவுக்கு வரப்போகிறது. இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே, பிறகு ஜப்பானுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்று கனவு கண்டபடி உறங்கப்போனார்.
எழுந்திருக்கவேயில்லை ஒருநாள். காரணம் மாரடைப்பு. நித்தம் நித்தம் அனுபவித்த மன அழுத்தத்தின் காரணமாக இருதயம் செயலிழந்துவிட்டது. இது நடந்து ஏப்ரல் 2014-ம் ஆண்டில். ஜோயியின் வயது 27 மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் ஜோயியைப் போல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஜப்பானில் பணிச்சுமை காரணமாக இன்னமும் மாரடைப்பால் மரணம், சிலருக்கு மன அழுத்தம், சிலர் அமைதியாகத் தற்கொலை செய்துகொண்டனர்.

பணிச்சுமை தாளாமல் பெருகும் கரோஷி கொலைகளை ஜப்பான் அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஐந்து தொழிலாளர்களில் ஒருவர் தீராத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார், அவர் அநேகமாக இறந்து விடுவார் என்பதையும் அரசு அறிந்தே இருக்கிறது. கரோஷியை முன்வைத்து பல்வேறு ஆய்வுகள் புள்ளிவிவரங்களுடன் வெளிவருவதையும்கூட அவர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, டிசம்பர் 2015 முதல் ஜனவரி 2016 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 22 சதவிகிதத்துக்கும் அதிகமாக தனியார் நிறுவனங்கள் மாதத்துக்கு 80 மணி நேரம்வரை ஓவர்டைம் செய்யுமாறு தங்கள் ஊழியர்களைக் கட்டாயப்படுத்துவது தெரிய வந்துள்ளது.

இப்படிப் பலியாகிறவர்கள் ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமல்ல. கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு ஜப்பானின் டெலிகாம் கம்பெனி ஒன்றில் பணியாற்றச் சென்ற நோயாவின் உற்சாகம் சில தினங்களுக்குள் வடிந்துவிட்டது. முதலையின் வாயைப்போல் கம்ப்யூட்டர் திரை அவரை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டுவிட்டது. கண் சிமிட்டக்கூட நேரமில்லை. அடுத்து, அடுத்து என்று டெட்லைன்கள் வளர்ந்து கொண்டே சென்றன. இடையில் ஒருமுறை ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக வீட்டுக்கு வந்த நோயா உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக படுக்கையில் போய் விழுந்துவிட்டார். “அம்மா தயவு செய்து என்னைத் தூங்கவிடு. நான் தூங்கவேண்டும். என்னை எழுப்பாதே, ப்ளீஸ்!”

இரண்டு ஆண்டுகளில் நோயா இறந்துவிட்டார். கம்ப்யூட்டர் வேலை, நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை என்றும் தன் மகனைப் பற்றிய பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்த அவர் அம்மா அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார். தன் மகனின் அசலான பணி வாழ்க்கை எப்படியிருந்தது என்பது அதற்குப் பிறகுதான் அவருக்குத் தெரிய வந்தது. அறைக்குச் சென்று உறங்கக் கூட நேரமில்லாமல் பலமுறை நோயா தனது மேஜையிலேயே சரிந்து உறங்கியிருக்கிறார். மன அழுத்தத்தைக் குறைக்கப் பல்வேறு மாத்திரை மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஓய்வின்றி 37 மணி நேரம் வரை தொடர்ச்சியாகப் பல முறை பணியாற்றியிருக்கிறார். சரியான உறக்கம், சரியான சாப்பாடு, மன நிம்மதி எதுவும் இல்லை. மாத்திரைகள்தான் அவரைப் பிழைக்க வைத்திருந்தது. இறுதியில் அதே மாத்திரைகள் அவருடைய உயிரையும் பறித்துவிட்டன. ஜோயியைப் போலவே 27 வயது நோயா கரோஷிக்கு இரையாகிவிட்டார்.

ஆனா அதிக வேலைப்பளு என்னை கொன்றுடுகிறது? நீங்கள் மரணத்திற்கு பிறகு பதவி உயர்த்தப்படுவீர்கள்.

அடங்க மறுக்கும் பசியுடன் கரோஷி ஜப்பானைச் சுழற்றியடித்துக் கொண்டிருக்கிறது. 2015 கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்சுரி என்னும் 24 வயது பெண் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். மாதம் 100 மணி நேரத்துக்கு மேல் ஓவர்டைம் செய்யுமாறு அவர் பணியாற்றிவந்த விளம்பர நிறுவனம் கட்டாயப்படுத்தியதால் மட்சுரிக்கு அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சில மணி நேர உறக்கத்துக்காக இறுதிவரை மட்சுரி ஏங்கித் தவித்திருப்பது தெரியவருகிறது.

ஓவர்டைம் என்றும் பெயருக்குதானே ஒழிய, பெரும்பாலான நிறுவனங்கள் அதற்காக கூடுதல் ஊதியம் எதையும் அளிப்பதில்லை. ஆரம்பத்தில் ஒப்புக் கொண்ட சம்பளப் பணத்தை மட்டுமே அவை வழங்குகின்றன. ஆனால் ஒப்புக்கொண்ட பணி நேரத்தைவிட இருமடங்கு நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ஊழியர்களிடமிருந்து முடிந்தவரை உழைப்பைக் கசக்கிப் பிழிந்துகொள்ள வேண்டும் என்னும் வெறியுடன் செயற்கையாக வேலை நெருக்கடியை அவ்வப்போது உருவாக்கி, அசாதாரணமாக காலக்கெடுவை விதித்து ஊழியர்களை மனஅழுத்தத்துக்கும் தற்கொலைக்கும் தள்ளிவிடுகின்றன. ஊழியர்களின் உடல், மனம் இரண்டும் பாதிப்படையும் என்பது தெரிந்திருந்தும், கரோஷி மரணங்கள் அதிகரித்து வருவதைக் கண்ணால் கண்ட பிறகும் இந்நிறுவனங்கள் தங்களைச் சிறிதும் மாற்றிக் கொள்ளத் தயாராகயில்லை.

காரணம், இலாபவெறி, இதற்கு ஜப்பான் அரசின் அங்கீகாரமும் உண்டு. ஒவ்வொருமுறை கரோஷி நிகழும் போதும் முணுமுணுப்புகளும் எப்போதேனும் எதிர்ப்புகளும் கிளம்பும் என்றாலும் இவற்றால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது என்பதை நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. ஆம், தொழிலாளர் நலன்சார் சட்டதிட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வேலை நேரம், விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவையெல்லாமே காகிதத்தில் மட்டுமே சிறைபட்டுக் கிடக்கின்றன.

ஜப்பானியத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினையும் கூடத்தான்.

எடுத்துக்காட்டுக்கு, சட்டப்படி 60 மணி நேரம் மட்டுமே ஒரு மாதம் ஓவர்டைம் செய்யலாம் என்றொரு சட்டவிதியை அரசு கொண்டுவந்தது. ஆனால், இதையும் நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. `அதிகப் பணி` என்று காரணம் சொல்லி 100 மணி நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய விதிமீறல்களை ஒவ்வொரு முறையும் கண்டும் காணாமலும் இருந்துவிடுகிறது அரசு. அந்த வகையில், அதிகரிக்கும் கரோஷி கொலைகளுக்குக் காரணம் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, ஜப்பான் அரசும் தான்.

இலாபம். இந்த ஒன்றுக்காகத்தான் ஜப்பானிய ஊழியர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். இலாபத்தைப் பெருக்குவதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர், முதலாளிகள். தனியார்களைப் பாதுகாக்க எதையும் செய்ய (அல்லது செய்யாமல் இருக்க) தயாராக இருக்கிறது அரசு. அரசு என்பதே முதலாளித்துவத்தின் அடியாள் படையல்லவா?

ஜோயி, நோயா, மட்சுரி ஆகிய பெயர்கள் வேண்டுமானால் நமக்கு அந்நியமானவையாக இருக்கலாம். ஆனால் அவர்களை வெவ்வேறு பெயர்களில் நாம் தினம் தினம் நம் வாழ்வில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கரோஷி என்பது வேண்டுமானால் ஜப்பானியச் சொல்லாக இருக்கலாம். ஆனால் ஜப்பானில் நடக்கும் எல்லாமே மற்ற நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பவைதாம். தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிக்கொள்வதிலும், அவர்களை சுரண்டி ஒடுக்குவதிலும் வளர்ந்த நாடு, வளரும் நாடு இரண்டுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அந்த வகையில் ஜப்பானியத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினையும் கூடத்தான்.

– மருதன்

புதிய தொழிலாளி, ஜனவரி 2018
New Democratic Labour Front I.T. Employees Wing

 

தருமபுரி : வழிப்பறி செய்யும் போலீசைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் !

2

ன்றைக்கு பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்டு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு என்று தினம்தோறும் பிரச்சனையை எதிர்க்கொண்டு விழிபிதுங்கி வாழ்ந்து வருகின்றனர் மக்கள். இப்படி தினம்தோறும் மக்கள் கோவணத்தை உறுவி வரும் அரசு. மறுபக்கத்தில் போலீசை வைத்து சட்டபூர்வ வழிப்பறியை செய்துவருகிறது.

சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள்

4/2/2018 அன்று மாலை 3 மணிக்கு தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் இளவரன், மற்றும் இரண்டு காவலர்கள் சேர்ந்து கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வழி மறித்து அந்த பக்கமாக வரும் இருசக்கர வாகனங்களை பிடித்து பணம் வசூலித்து கொண்டு இருந்தனர். அப்போது பெரியம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  ஜெயவேல் அந்த வழியாக வீட்டுக்கு மாலை 4 மணிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனத்தை திடீரென மறித்துள்ளார் உதவி ஆய்வாளர் இளவரன். வண்டியை நிறுத்த தடுமாறிய ஜெயவேல் சற்று தள்ளி நிறுத்தியுள்ளார். நான் நிறுத்த சொல்லியும் ஏன் தள்ளி நிறுத்தினாய் என்று ஜெயவேலை நடுரோட்டில் அடித்துள்ளார் உதவி ஆய்வாளர் இளவரன்.

எதற்காக அடித்தீர்கள் என எதிர்த்து கேட்ட ஜெயவேலுவை, ” என்னையே கேள்வி கேட்கிறாய நாயே வாட நான் யார் என்று காட்டுகிறேன்” என்று காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று நான்கு போலீசார் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தகவல் அறிந்து நேற்று பெரியாம்பட்டியில் ஆத்திரப்பட்ட சில இளைஞர்கள் சேர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டது மட்டுமல்ல. போலீசார் மன்னிப்பு கேட்க கூறி சாலையை ஸ்தம்பிக்க வைத்தனர். இதனூடாக பொதுமக்களும் போலீசாருக்கு எதிராக இணைந்து கொண்டனர். இதன்பிறகே ஜெயவேலுவை விடுவித்துள்ளனர். அவர் தற்போது தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இது எதோ ஒரு இடத்தில் தவறுதலாக நடந்த சம்பவம் இல்லை. நாடு முழுவதும் இதே நிலைதான். போலீசின் வழிப்பறியும், லஞ்சமும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான்.

போலீஸ் என்றால் நேர்மையானவர்கள், மக்களை காப்பற்றுபவர்கள், தவறை கண்டுபிடித்து தண்டிப்பவர்கள் என்ற பிம்பத்தை சினிமாவும், ஊடகங்களும் எவ்வளவுதான் உருவாக்கினாலும். காவல் நிலையத்தில் மக்கள் புகார் கொடுக்கவோ அல்லது பிரச்சனையை கொண்டு செல்லவோ அச்சப்படுகின்றனர். போலீசார்  பற்றி தமிழகமெங்கும் தினம்தோறும் வரும் செய்திகளை பார்க்கும் போது வழிப்பறி திருடனை கண்டு அஞ்சுவது போல், போலீசை கண்டு அஞ்சுகின்றர் மக்கள். இருசக்கர வாகனம் ஒட்டவே பயப்படுகின்றனர். தான் சம்பாதித்த ஒருநாள் கூலியை பறித்து கொள்வார்களே என்ற அச்ச உணர்வோடே செல்கின்றனர்.

பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்ட பிறகு  வேலைக்கு சென்றால் சம்பளத்தில் பாதியை பேருந்துக்கு கொடுக்க வேண்டிய நிலை இருப்பதால், தினக்கூலிகளாக செல்லும் தொழிலாளிகள் வேலைக்கு சென்றுவர 100 ரூபாய் தாண்டுகிறது. இதற்கு பதிலாக இருசக்கரம் வைத்திருக்கும் சிலர் இருவராக சேர்ந்து பெட்ரோல் போட்டு கொண்டு வேலைக்கு செல்கின்றனர். போலீசாரோ அன்றாடம் தினக்கூலிகளாக சென்று வரும் மக்களை குறிவைத்தே மடிக்கி பிடித்து அபராதம் விதிக்கின்றனர் அல்லது பேரம் பேசுகின்றனர். பணம் குறைவாக இருக்கிறது என்றால் அதற்கு தகுந்தாற்போல் கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் லஞ்சமாக வாங்கி கொள்கின்றனர்.

இன்றைக்கு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இந்த வழிப்பறி மூலம் பிரச்சனை வீதிக்கு வருகிறது. கேள்வி கேட்க முடியாத நபர்களாக இருந்தால் மிரட்டியே பணம் பறிக்கின்றனர். ஒரு உதவி ஆய்வாளர் நாள் ஒன்றுக்கு 50 பேரிடம் தண்டம் வசூலில் ஈடுப்பட வேண்டும் என்று மேலிட உத்தரவாம். காவல் துறை என்றாலே லஞ்சம், ஊழல், பொய் வழக்கு, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் விற்பனை என்று போலீசின் குற்றத்தை அடுக்கி கொண்டே போகலாம். இப்படி குற்றங்களில் ஈடுப்படும் போலீசாரை தண்டிக்க முடிவதில்லை. மாறாக அவர்களிடமே மீண்டும் சட்டத்தை பாதுகாக்கும் அதிகாரத்தை வாரி வழங்குகின்றனர். போலீசு என்றாலே கிரிமினல் கும்பல் தான். எரிகின்ற கொல்லியில் எந்த கொல்லி நல்லகொல்லியாக இருக்க முடியும். போலீசு என்ற கட்டமைப்பையே கலைக்கப்பட வேண்டும். அதுதான்  நிரந்தர தீர்வாகும்.

தோழர்  கோபிநாத்,
மக்கள் அதிகாரம்
தருமபுரி, 9943312467

 

அரிசி கிலோ 50 ரூபாய் ! சிம்கார்டோ இலவசம் ! கருத்துப் படங்கள்

0

அரிசி 50 ரூபாய் ! சிம்கார்டோ இலவசம்..!!

அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40-50 ரூபாய்.
ஆனால், சிம்கார்டோ இலவசம்..!!

***

பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்.
ஆனால், பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

படங்கள் : வேலன்

இணையுங்கள்:

 

சோடாபுட்டி ஜீயர் புராணம் ! வீடியோ !

7

சோடாபுட்டி ஜீயர் புராணம் !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழுவினர் வழங்கும் சோடாபுட்டி ஜீயர் புராணம் !

ஆண்டாளை தேவதாசி என வைரமுத்து இழிவுபடுத்தியதாக எச். ராஜா ஒரு அவதூறு பிரச்சாரத்தை துவக்கினார். அதை வைத்து இந்துமதவெறியை  ஊட்டும் வேலையை இந்துமதவெறி அமைப்புக்கள் செய்தனர். தினமணி வைத்தியநாதய்யரை காலில் விழ வைத்த ஜீயர் பிறகு வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் என அறிவித்தார். பின்னர் திடீரென்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு வைரமுத்து மன்னிப்புக்கு பிப்ரவரி 3ம் தேதி வரை கெடு வைத்தார்.

அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மதவெறி பிக்கப் ஆகாத அதே நேரத்தில், பாஜக மீதான தமிழக மக்களின் வெறுப்பை இந்த விவகாரம் அதிகப்படுத்தியது. கொசுறாக சின்ன சங்கரனின் தமிழ்த்தாய் அவமதிப்பு இதற்கு பெரும் உதவியையும் செய்தது. ஆண்டாளை வைத்து அவாள் நடத்திய இந்த நாடகத்தை நகைச்சுவையாக உணர்த்துகிறது இந்த சோடாபுட்டி ஜீயர் புராணம். பாருங்கள், பகிருங்கள்!

பாருங்கள்! பகிருங்கள்!

தொடர்புக்கு:
அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876
மின்னஞ்சல் : vinavu@gmail.com

அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் !

1

லகின் மிகப்பெரிய சுகாதார நலத்திட்டதால் ஏழைகள் ஏன் பயன்பெற மாட்டார்கள்.  தனியார் துறை மூலமாக சுகாதார அமைப்பை வீடுகளுக்கே கொண்டுவருவதாய் இந்த அரசு பீற்றுகிறதே ஒழிய பொது சுகாதார அமைப்பை வலுவாக்குவதன் வாயிலாக அல்ல

நடப்பாண்டின் (2018) வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு தான் அதிக கவனம் கொடுக்கப்பட்டிருப்பதாக விதந்தோதப்படுகிறது. ஆனால் புள்ளிவிவரங்களை மேம்போக்காக பார்த்தாலே வரவு செலவு திட்டத்தில் கொண்டாடத்தக்க அம்சம் எதுவும் இல்லை என்று தெரிகிறது. உண்மையில் “அனைவருக்கும் சுகாதாரம்” என்பதில் எவ்விதத் தெளிவான பார்வையும் அரசுக்கு இல்லாததையே இந்த வரவு செலவு திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நிதியமைச்சரின் உரையில் இரண்டு முதன்மையான அம்சங்கள் குறிப்பிடப்பட்டன – சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூலமாக சுகாதார அமைப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவது மற்றும் முதன்மையான தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு (50 கோடி நபர்கள்) இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்களில் ஆண்டுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் காப்பீடு வழங்குவது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி – 2018 பட்ஜெட்

அந்த இரண்டாவது அம்சம் சுகாதாரத்தில் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இன்றைய தலைப்பு செய்திகளாகிவிட்டது. ஆனால் இது ஒன்றும் புது முயற்சியல்ல. இது சுகாதார வசதிகளை மேம்படுத்தவோ அல்லது கைச்செலவை (out-of-pocket expenditure) குறைக்கவோ செய்யாது.

தனியார் துறைக்கு இத்திட்டம் பெரிய உந்துதலா?

சுகாதாரத்துறைக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற கூச்சலை ஒருவர் கேட்டால் ஏதோ வரவு செலவு திட்டத்தில் இதற்கு அதிகமாக [நிதி] ஒதுக்கப்பட்டுள்ளதோ என்று நம்பி விடுவார். மாறாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 2018-19-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகை 52,800 கோடி ரூபாய். 2017-18-ம் நிதியாண்டில் 51,550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதாவது ஒப்பீட்டளவில் வெறும் 2.5 விழுக்காடு மட்டுமே அதிகம்.

ஆகையால், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடும் போது உண்மையில் சுகாதாரத்துறைக்கு வரவு செலவு திட்டத்தில் சரிவு தான் ஏற்பட்டிருக்கிறது.
இத்தலையாய திட்டத்தின்(flagship programme) கீழ் புதிதாக 1.5 இலட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை உருவாக்கும் பொருட்டு சுமார் 1,200 கோடி ரூபாயை தாரளமாக வழங்கியிருக்கிறார் நிதியமைச்சர். அதாவது ஒவ்வொரு மையத்திற்கு தலா 80,000 ருபாய் கொடுக்கப்படும். எப்படி இருப்பினும் இது ஏற்கனவே 2017-ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையிலும் இடம் பெற்றிருப்பதால் இது ஒன்றும் புதிய அறிவிப்புமல்ல. சென்ற ஆண்டின் இந்த அனுபவத்தைப் பற்றி எதுவுமே அறிக்கைகளில் இல்லை அல்லது உண்மையில் இது என்ன என்றும் தெளிவாக தெரியவில்லை.

10 கோடி குடும்பங்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்களில் ஆண்டுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் காப்பீடு.

மோசமான உட்கட்டமைப்பு வசதிகள், பற்றாக்குறையான ஊழியர்கள், போதிய உபகரணங்கள் மற்றும் மருத்துகள் இல்லாததாலேயே துணை மையங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. மார்ச் 31, 2012 அன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஊரக சுகாதார புள்ளிவிவரங்களின்படி, 1,56,231 துணை மையங்களில் 17,204 (11%) மட்டுமே இந்திய பொது சுகாதாரத் தரநிலைகளை பின்பற்றுகின்றன. 20 விழுக்காட்டு மையங்களில் போதுமான தண்ணீரும் 23 விழுக்காடு மையங்களில் போதுமான மின்சாரமும் கிடையாது. 6,000-க்கும் அதிகமான மையங்களில் பெண் சுகாதார ஊழியர்கள் கிடையாது. 1,00,000-க்கும் அதிகமான மையங்களில் ஆண் சுகாதார ஊழியர்கள் கிடையாது. 4,243 மையங்களில் இருவருமே கிடையாது. குறைந்தது இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே இவற்றை சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக ஒருவர் கருத முடியும். இந்த அற்ப நிதியை வைத்துக்கொண்டு எப்படி இதை சாதிக்க முடியும் என்று புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது.

இப்பொழுது இரண்டாவது அறிவிப்பான “அரசு உதவி பெரும் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை” பார்க்கலாம். இந்த அறிவிப்பு இதே நிதியமைச்சரால் 2016-ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையிலும் கூறப்பட்டது கண்டிப்பாக நினைவுக்கூறப்பட வேண்டும். “புதிய சுகாதார பாதுகாப்பு திட்டம் ஒன்றை அரசு தொடங்கி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் ரூபாய் காப்பீடு அளிக்கும்” என்று 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னும் இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY) திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை 30,000 ரூபாயாகவே உள்ள நிலையில் தற்போது அதை ஐந்து இலட்சமாக்க வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் காப்பீடு வளங்கப்படுவதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 1,500 கோடி ரூபாய் மட்டுமே.

இது ஒருப்போதும் செலவிடப்படவில்லை மாறாக வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டது. திட்டத்தின் தொடக்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50 விழுக்காட்டை விட குறைவாகவே சென்ற ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது அது சிறு அளவு அதிகரிக்கப்பட்டு 2,000 கோடி ரூபாயாக திருத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளின் யோக்கியதையை இந்த புள்ளிவிவரங்கள் சந்தேகங்கொள்ள செய்கின்றன.

இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY)

மறுபுறம் கல்வி வரி (education cess) 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக அதிகரிக்கப்படும் என்றும் இதன்மூலம் 11,000 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்றும் வரவு செலவு திட்டம் கூறுகிறது. ஒருவேளை இக்கூடுதல் வருவாயில் 25 விழுக்காட்டை சுகாதாரத்துறைக்கு கொடுப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட 2,750 கோடி ரூபாய் கூடுதலாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிடைத்ததோ வெறும் 1,250 கோடி ரூபாய் மட்டுமே. இந்த வரவு செலவு திட்டம் என்ன செய்வது போல் தோன்றுகிறது? ஏழை மக்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு பொதுமக்களிடம் கூடுதலான பணத்தை பறித்து தனியார் சுகாதாரத்துறைக்கு கொடுக்கிறது. இச்சூழலில் [தனியார்] சுகாதார மற்றும் காப்பீடு நிறுவன பங்குகளின் விலை உயர்வானது இத்திட்டங்களின் உண்மையான பயனாளிகள் யார் என்று கட்டியங்கூறுகிறது.

ஏழைகளுக்கான சுகாதாரமா இல்லை பெருநிறுவனுங்களுக்கான ஆதாயமா?

கைச்செலவை குறைப்பதை அடிப்படையாக கொண்டு, தனியார் மருத்துவ காப்பீட்டின் மூலம் மருத்துவத்தை அனைவருக்கும் வழங்குவதற்கு தனியார் சுகாதாரத்துறையை நம்பி இருப்பது என்பது ஒட்டுமொத்த மருத்துவ செலவினங்களையும் அதிகரிக்கிறது மேலும் இது பெரும்பான்மையான மக்களை தவிர்க்கிறது மற்றும் சரியான முறையான [மருத்துவ] நடைமுறைகளை சிதைக்கிறது என்பது உலகம் முழுதுமான அன்பவங்களாக இருக்கிறது. மக்களுக்கு உடல்நலத்தை வழங்க முயற்சிகள் செய்தால் கூட அதை தனியார் துறை மூலமாக செய்யவே இந்த அரசு நினைக்கிறதே ஒழிய பொது சுகாதார அமைப்பை வலுவாக்குவதன் வாயிலாக அல்ல.

கைச்செலவை குறைப்பதற்கு காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் இந்தியாவில் ஒன்றுமே சாதிக்கவில்லை என்பதற்கு நம்மிடம் போதுமான சான்றுகள் உள்ளன. இத்திட்டம் கைச்செலவையும் குறைக்கவில்லை மருத்துவத்தையும் ஏழைகளிடம் கொண்டு சேர்க்கவில்லை என்பதை RSBY-யைப் பற்றிய பல்வேறு தனிப்பட்ட ஆய்வுகள் நிறுவுகின்றன. RSBY-யோ அல்லது புதிய தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமோ உள்நோயாளிகளுக்கான காப்பீடை மட்டுமே அளிக்கின்றன. அடிப்படை மருத்துவத்திற்கோ மக்கள் பொது சுகாதாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அவை போதுமானவையல்ல மேலும் அதிக வசதிகள் தேவைப்படுகிறன. இது கைச்செலவை குறைப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த சுகாதார செலவினங்களில் 67 விழுக்காடு கைச்செலவின் மூலமாகவே செய்யப்படுகிறது அதிலும் குறிப்பாக 63 விழுக்காடு வெளிநோயாளிக்கான பராமரிப்பு செலவாகவே இருக்கிறது.

RSBY (மற்றும் ஆந்திர மாநில ஆரோக்யஸ்ரீ உள்ளிட்ட மாநில திட்டங்கள்) போன்ற காப்பீட்டுத் திட்டங்களைப் பாத்தாண்டுகளாக ஊக்குவித்து வந்த போதும் கைச்செலவு அதிகரித்துக் கொண்டிருப்பதை தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (National Sample Survey) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மருத்துவமனையில் சேரும் கிராமப்புறத்தைச் சேர்ந்த 1.2 விழுக்காட்டினருக்கும் நகர்புறத்தை சேர்ந்த 6.2 விழுக்காட்டினருக்கும் மட்டுமே செலவு ஈடு (Reimbursement) செய்யப்பட்டிருப்பதாக 2014-ம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு தகவல்களை ஆய்வு செய்த சுந்தரராமனும் முரளீதரனும் நிறுவுகின்றனர். காப்பீடு திட்டத்தை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் இருந்தாலும் ஒன்று அவை ஏழை மக்களை சேரவில்லை அல்லது போதுமான நிதி பாதுகாப்பை அளிக்கவில்லை என்பதற்கு சான்று இருக்கிறது. உள்நோயாளிக்கான கைச்செலவை குறைக்கவோ அல்லது உள்நோயாளிக்கான செலவின் அளவிலோ RSBY எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதை அனுப் கரன் மற்றும் ஏனையவர்களின் சமீபத்திய ஆய்வு காட்டுகிறது.

காப்பீடு திட்டம் ஒரு பகுதி மக்களுக்கு ( 40% மக்கள்) மட்டுமே அதுவும், உள்நோயாளிகளுக்கான பராமரிப்புக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது.

பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தாமல் காப்பீட்டின் மீதான அரசின் அக்கறையானது ஒருபுறம் சுகாதாரத்திற்கு அரசு குறைந்த நிதியை ஒதுக்குவதற்கும் மறுபுறம் தனியார் துறை ஏழைகளின் உடல் நலப்பிரச்சினைகளை காசாக்குவதற்கும் இசைவளிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பெரும்பாலும் நகர்ப்புறப் பகுதியிலேயே மொய்த்துள்ளதால் காப்பீடு திட்டங்கள் யாவும் கிராமப்புற ஏழைகளை சேர்வதில்லை என்று மாநில காப்பீடு திட்டம் மற்றும் RSBY திட்டம் ஆகிய இரண்டையும் ஒருங்கே கொண்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆய்வொன்று கூறுகிறது.

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு இல்லை:

உடல்நலத்திற்கான கைச்செலவானது இந்திய மக்களை கவ்வியிருக்கும் முதன்மையான சிக்கல் என்பது பலரால் சரியாக உணரப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கான கடுமையான செலவுகள் மக்களை ஏழ்மையில் தள்ளும் (உடல்நலத்திற்கான கைச்செலவினால் 7 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே விழுகின்றனர்) முதன்மையான காரணி என்பதை ஏராளமான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இப்புதிய திட்டமானது எந்த அளவுகோலின் படி பார்த்தாலும் உலகாளாவிய உடல்நலப்பாதுகாப்பை (universal health coverage) நமக்கு வழங்கப்போவதில்லை. உலகளாவிய உடல்நலப்பாதுகாப்பு அதன் உள்ளார்ந்த பொருளில் அனைத்து விதமான மருத்துவ செலவுகளையும் உள்ளடக்குகிறது. இக்காப்பீடு திட்டம் ஒரு பகுதி மக்களுக்கு (10 கோடி அல்லது 40% மக்கள்) மட்டுமே அதுவும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்புக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக குறைந்தது 2.5 – 3 விழுக்காடாக நிதியை அதிகரிக்க வேண்டும் என்று ஏரளமான பல்கலைக்கழக கட்டுரைகள், அரசாங்க குழுக்களின் பரிந்துரைகள், தேசிய சுகாதார கொள்கை மற்றும் இன்ன பிற அனைத்தும் கூறுகின்றன. ஆயினும் ஆண்டாண்டுகளாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது வெறும் 1.1-1.2 விழுக்காடாகவே இருக்கிறது. தலைப்புச்செய்திகள் தவறாக கூறுகின்றன – இந்த வரவு செலவு திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் இல்லை. இது குழந்தைகள் இறப்பிலும் பேறுகால மரணங்களிலும் உலகில் முன்னிலையாக இருக்கும் ஒரு நாடு தன்னுடைய சொந்த மக்களின் உடல்நலத்திற்காக ஏனைய நாடுகள் செலவிடுவதில் பாதி மட்டுமே செலவு செய்வதைப் பற்றியது – அரசாங்கம் மாறி அரசாங்கம் வந்தாலும் இது தன்னுடைய சொந்த மக்களுக்கான உடல்நலத்திற்கு எவ்வித முனைப்பும் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது.

– தீபா சிங்
அம்பேத்கர் பல்கலைகழக தாராளவாத ஆய்வுகள் பள்ளி, டெல்லி.
தமிழாக்கம்: சுந்தரம்
நன்றி: The Wire