Friday, June 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 726

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

4

புதிய-ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. ”ஆதிக்க சாதிவெறி பிடித்த வன்னியர் சங்கத்தைத் தடை செய்! அதன் சொத்துக்களைப் பறிமுதல் செய்!!”
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

2. சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!

3. சாதிய அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?

4. கோபாலகிருஷ்ணன், பிரியா படுகொலைகள்: வன்னிய சாதிவெறிக்குப் பலியான இளந்தளிர்கள்

5 .”ஆதிக்க சாதிவெறியை முறியடிப்போம்!” -வெண்மணி நினைவுநாளில் புரட்சிகர இயக்கங்களின் உறுதியேற்பு

6. பொய்கள் – அவதூறுகளால் உண்மையை மறைத்துவிட முடியாது!

7. வாலைச் சுருட்டிக்கொண்ட வன்னியரசு!

8 கிரானைட்: மெகா கூட்டணி – மகா கொள்ளை
கிரானைட் கொள்ளையை எதிர்த்துப் போராட அறைகூவும் ஆவணப்படம்.

9. குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம்

10. நேரடிப் பணப்பட்டுவாடா திட்டம்: பட்டினிச் சாவுக்கான நுழைவுச்சீட்டு!
”உங்கள் கையில் உங்கள் பணம்” என்ற கவர்ச்சிகரமான சொல்லடுக்கின் பின்னே, ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டும் தீயநோக்கம் மறைந்துள்ளது.

11. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: சட்டத்திருத்தம் தீர்வாகுமா?
பெண்களைப் போகப்பொருளாகக் கருதும் சமூக – அரசியல் கட்டமைப்புதான் பெண்களின் முதல் எதிரியாகும்.

12. நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!
மைய அரசின் அதிகாரத்தை நிலைகுலையச் செய்யும் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே, காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும்.

13. மறுக்கப்படும் காவிரி! வஞ்சிக்கப்படும் தமிழகம்!!

14. படிக்கட்டுப் பயணப் படுகொலைகள்: அரசே குற்றவாளி!
பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் மாணவர்களைச் சாகசக்காரர்கள் எனக் குற்றஞ்சுமத்துவது அநீதியானது.

15. மினி பேருந்தா? மரண ஊர்தியா?

16. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: எதிர்த்தரப்பின் யோக்கியதை என்ன?
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைவதைத் தடுக்க எதிர்த்தரப்பை நம்புவது, மண்குதிரையை நம்புவதற்கு ஒப்பானதாகும்.

 புதிய ஜனநாயகம் ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி!

3

ப.சிதம்பரம்யிரம் கோடி ரூபாக்கு மேல் முதலீடு செயும் அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கும் விரைவாக உரிமம் வழங்குவதற்காக தேசிய முதலீட்டு வாரியம் என்ற புதிய அமைப்பை முன்மொழிந்துள்ளார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். ஒரு பெரிய தொழில் நிறுவனம் ஒவ்வொரு துறையாக விண்ணப்பித்து அனுமதி பெறுவதில் உள்ள தாமதங்களைத் தவிர்த்து, அவர்களுக்கு அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் மையமாக தேசிய முதலீட்டு வாரியம் செயல்படும் என்றும், இதற்கு பிரதமர் தலைவராகவும் நிதியமைச்சரும் சட்ட அமைச்சரும் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள் என்றும் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கை நிறைவேற்ற இத்தகைய அமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்த வாரியம் நடைமுறைக்கு வந்தால், இனி தனித்தனியாக ஒவ்வொரு துறையிடமும் தொழில் தொடங்குவதற்கு முன்னதாக ஒப்புதல் பெறத் தேவையில்லை; எவ்விதத் தாமதமோ, தடங்கலோ இன்றி அனைத்தும் இந்த வாரியத்தில் விரைவாக நிறைவேற்றித் தரப்படும்; இதனால் தொழில் வளர்ச்சி விரைவாக சாத்தியப்படும் என்கிறார் ப.சிதம்பரம். வெறுமனே உரிமங்கள் வழங்குவது, ஒப்புதல் அளிப்பது என்பதாக மட்டுமின்றி, தேர்தல் ஆணையம், மையப் புலனாவுத்துறை போன்று சட்டரீதியாக அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த வாரியம் இருக்கும்; ஒரு புதிய தொழில் நிறுவனத்துக்கு இந்த வாரியம் ஒப்புதல் அளித்துவிட்டால், அதன் பிறகு வேறு எந்தத் துறையும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்க முடியாது; தொடங்கப்படும் தொழில் நிறுவனத்தால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதைப் பற்றி மனித உரிமை அமைப்புகளோ, சுற்றுச்சூழல் இயக்கத்தினரோ, எதிர்க்கட்சிகளோ கேள்விகள் எழுப்பினால் இதற்கு தேசிய முதலீட்டு வாரியம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை; அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதுமில்லை; அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் நாட்டின் தொழில் வளர்ச்சியை விரைவாகச் சாத்தியமாக்கவும் இத்தகைய சட்ட ரீதியான அதிகார அமைப்பு அவசியமாகியுள்ளது என்று அவர் விளக்குகிறார்.

‘ஒரு தொழில் முனைவர், தொழில் தொடங்குவதற்கு முன்பாக பல துறைகளிடமிருந்தும் அனுமதி பெறுவதற்கு பல ஆண்டுகளாகிவிடுகின்றன; இதனால் இலக்கு நிறைவேறாமல் நட்டம் ஏற்படுகிறது; சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால், வனத்துறை அமைச்சகம் இழுத்தடிக்கிறது; இதனால் பல மின்திட்டங்கள் இன்னமும் ஒப்புதல் கிடைக்காமல் உள்ளன. நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பிறகு ஒப்புதல்கள் கிடைத்தாலும், அதன் பிறகு மைய அரசானது, நிலம் கையகப்படுத்துவது, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் மறுவாழ்வும் அளிப்பது முதலான பிரச்சினைகளை வைத்து இழுத்தடிக்கிறது. அதிகார வர்க்கத்தின் சிவப்புநாடாத்தனம், ஊழல், மெத்தனம், அலட்சியம் தொடர்வதால், இதைக் களைந்தெறிய ஒரு அறுவை சிகிச்சை அவசியமாகிவிட்டது’ – என்று இந்த அமைப்பை சி.ஐ.ஐ; அசோசெம், ஃபிக்கி முதலான தரகுப் பெருமுதலாளிகளின் சங்கங்கள் வரவேற்று ஆதரிக்கின்றன.

நம்நாட்டிலுள்ள அரசியலமைப்பு முறைகளின்படி, ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சகத்திடமும் ஒப்புதல் பெற்றுதான் தொழில் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அத்தகைய சில்லறைத் தடைகள் கூட இருக்கக்கூடாது என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனத்தின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் சேவகர்களாக பிரதமரும் நிதியமைச்சரும் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்தியாவில் ஏற்கெனவே நிலவிவரும் பெயரளவிலான ஜனநாயக ஆட்சியமைப்பு வடிவங்கள் இனி இருக்க வேண்டியதில்லை என்பதே இதன் பொருள்.

இயற்கை வளத்தையும் சுற்றுச்சூழலையும் ஒரு பெருந்தொழில் திட்டம் பாதிக்கும் என்றால், அதைத் தடுக்கின்ற பொறுப்பும் கடமையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உள்ளது. அதன்படி ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக இந்த அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்றாக வேண்டும். தற்போதைய தேசிய முதலீட்டு வாரியம் நடைமுறைக்கு வந்துவிட்டால், இனி சுற்றுச்சூழல், பழங்குடியின நலத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, கல்வி-சுகாதாரத்துறை அமைச்சகங்களின் ஒப்புதல் இல்லாமலேயே ஒரு பெருந்தொழில் திட்டத்தைத் தொடங்க முடியும். இப்படி எல்லா துறைகளுக்கான கடமைகளையும் உரிமைகளையும் அதிகாரத்தையும் ஒரு அமைப்பே கையில் எடுத்துக் கொண்டால், மற்ற துறைகளும் அமைச்சர்களும் எதற்காக?

ஒரு திட்டம் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது என்றால், ஒரு திட்டம் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது என்றால், இது பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அமைச்சர்கள்தான் பதிலளிக்க வேண்டியுள்ளது. ஒரு பெருந்தொழில் திட்டத்தால் உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தால், அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டியது அத்துறை சார்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும்தான்.

ஆனால் தேசிய முதலீட்டு வாரியம் என்ற அமைப்பு இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை என்பதால், இந்த அமைப்பு பிற அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஜெயந்தி நடராசன் பிரதமருக்குக் கடிதம் எழுதி இந்த வாரியம் அமைக்கப்படுவதை எதிர்க்கிறார். பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் கே.சி.தேவும் இதே காரணங்களைக்கூறி எதிர்க்கிறார். சுற்றுச்சூழல், மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உருவாக்கப்படும் இந்த வாரியம், ஜனநாய அரசமைப்பு முறையின் அடித்தளத்தையே சிதைக்கிறது என்கிறது, இந்து நாளேடு. இந்த வாரியம் நடைமுறைக்கு வந்தால், அமைச்சர்களின், அமைச்சகங்களின் அதிகாரம் பறிக்கப்படுவது மட்டுமல்ல; நிலத்தை இழந்த விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து போராடினாலும் துறைசார்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ பொறுப்பாக பதிலளிக்க முடியாது. போராட்டத்தை ஒடுக்க போலீசின் தடிகளும் துப்பாக்கிகளும்தான் பேசும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின், அமைச்சகங்களின் அதிகாரங்களைப் பறித்து இந்த வாரியத்திடம் இப்படி அதிகாரத்தைக் குவிப்பதன் காரணம் என்ன? ஏற்கெனவே நீடித்துவரும் பெயரளவிலான ஜனநாயக அரசமைப்பு முறைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம்தான் என்ன? தற்போதைய அரசும் ஆளும் வர்க்கங்களும் செயல்படுத்தி வரும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் புதிய பொருளாதாரக் கொள்கையை மேலும் தீவிரமாகச் செயல்படுத்துவதற்கு ஏற்றதாக, நம்நாட்டில் ஏற்கெனவே உள்ள அரசியலமைப்புச் சட்டம் பொருத்தமானதாக இல்லை. தீவிரமாக்கப்படும் தனியார்மய-தாராளமய-உலகமயப் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பொருத்தமாக அரசியலமைப்புச் சட்டத்தையே மறுவார்ப்பு செவது அவர்களுக்கு அவசியமாகியுள்ளது.

எவ்வாறு சோசலிச சீனத்தில் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிய முதலாளித்துவப் பாதையாளர்கள் முந்தைய அரசியலமைப்புச் சட்டங்களைப் படிப்படியாக மாற்றியமைத்து முதலாளித்துவ உற்பத்திமுறைக்கேற்ற முறையில் மறுவார்ப்பு செது முதலாளித்துவத்தை நிலைநாட்டினார்களோ, அதைப்போலவே நம் நாட்டில் ஏற்கெனவே நிலவிவரும் பெயரளவிலான ஜனநாயக அரசியலமைப்பு முறையை மாற்றியமைத்து தனியார்மய- தாராளமய- உலகமயமாக்கலுக்கு ஏற்ப இன்றைய ஆட்சியாளர்கள் மறுவார்ப்பு செது மறுகாலனியாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர். ஏகாதிபத்திய உலகமயமாக்கம், அதன் இயல்பிலேய ஜனநாயகத்தைச் சிதைக்கும் தன்மை கொண்டது. உலக அளவில் எல்லா வளங்களையும் கொள்ளையிடுவதற்குக் கட்டற்ற சுதந்திரத்தைக் கோருவதுதான் உலகமயம். மறுகாலனியாக்கமானது பாசிச சர்வாதிகார அரசுகளையே, அப்படிப்பட்ட உள்கட்டமைப்பு கொண்ட அரசு வடிவங்களையே உலகு தழுவிய அளவில் கோருகின்றது. இதற்கேற்ப சட்டங்களையும் அமைப்புகளையும் நிறுவனங்களையும் மறுகட்டமைப்பு செது புதிய வகைப்பட்ட அரசுகளை உருவாக்குவதே உலகமயமாக்கத்தின் நோக்கமாக உள்ளது.

இப்படித்தான் தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறை, மின்துறை உட்பட பல துறைகளிலும் சுயேட்சையானதும் அதிகாரம் கொண்டதுமான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கேற்ப நில உச்சவரம்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவில் முதலீடு செதுள்ள பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீடு துறைகளில் நுழைந்துள்ள அந்நிய நிதி நிறுவனங்களின் மீதான வழக்குகள்- தாவாக்களை நீதிமன்றத்துக்கு வெளியே கட்டப் பஞ்சாயத்து முறையில் தீர்த்துக் கொள்ளவதற்கு ஏற்ற வகையில் உரிமையியல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, வழக்குரைஞர்களின் போராட்டத்தால் அதை நடைமுறைப்படுத்துவதை மைய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

மொரிஷியஸ், சுவிட்சர்லாந்து போன்ற வரியில்லா சொர்க்கங்களின் வழியாக இந்தியாவில்முதலீடு செய்து வரி ஏப்பு செய்வதைத் தடுக்க, வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கான பொது உத்தரவு என்ற புதிய வரிவிதிப்பு முறையை இந்திய அரசு முன்மொழிந்தது. இவ்வாண்டின் தொடக்கத்தில் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, பட்ஜெட்டுக்குப் பின்னர் இந்த வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரப்போவதாக அறிந்ததும் பலதரப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், பார்த்தசாரதி ஷோமே என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை பிரதமர் அமைத்தார். அது ஏகபோக முதலாளிகளின் விருப்பத்துக்கேற்ப தனது வழிகாட்டுதலையும் பரிந்துரைகளையும் அளித்துள்ளது. அதன்படியே வருமாண்டு ஏப்ரல் முதலாக நேரடி வரி விதிப்பு மூலம் இது நடைமுறைக்கு வரப் போகிறது.

மரபணு மாற்றுப் பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது; இதற்கான கள ஆவுகள் செவதையும் நிறுத்த வேண்டும் – என்று வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரையாக மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.களையும் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள இப்பரிந்துரையின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தால், எந்தக் கட்சியுமே இதை எதிர்த்துப் பேச வழியில்லை என்பதால், மரபணு மாற்றுப் பயிர்களுக்கு – அதாவது, மாண்சாண்டோ போன்ற ஏகபோக வேளாண் நிறுவனங்களின் பி.டி. பருத்தி விதைகளுக்கும், பி.டி. கத்தரிக்காக்கும் – எதிராகத்தான் நாடாளுமன்றம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்படி நடந்தால் இனி மாண்சான்டோ இந்தியாவில் காலூன்றவே முடியாமல் போவிடும் என்று ஆடிப்போன மன்மோகன்சிங், பேராசிரியர் ராவ் தலைமையில் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு என்கிற நிபுணர் குழுவை அமைத்தார். அக்குழு, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை வரிக்குவரி மறுத்து, மரபணு மாற்றுப் பயிர்கள் சிறப்பான நல்ல விளைவுகளைத் தருகின்றன, இதை எதிர்ப்பவர்கள் விவரம் புரியாதவர்கள்” என்று தனது பரிந்துரையாக அளித்துள்ளது. மீண்டும் கொல்லைப்புறமாக மாண்சான்டோவின் பி.டி.பருத்தி மற்றும் கத்திரிக்காயைத் திணிக்க இந்தக்குழுவின் பரிந்துரைப்படி செயல்பட முயற்சித்து வருகிறது, கைக்கூலி மன்மோகன் அரசு.

ஷோமே, ராவ் போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிகளுக்கும் மேலானவர்களாக, ஆலோசகர்களாக, நிபுணர் குழுக்களாக மேலிருந்து திணிக்கப்பட்டு அவர்களிடம் அதிகாரம் குவிக்கப்பட்டு வருகின்றது.

ஏகாதிபத்தி உலகமயக் கட்டத்தில், இப்படி மேலிருந்து மட்டுமின்றி, கீழிருந்தும் அரசு அதிகாரம் பிடுங்கப்பட்டு வருகின்றது. சிவில் சமூக அமைப்புகள் எனப்படும் தன்னார்வக் குழுக்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தைக் கீழிருந்து செயல்படுத்தும் அமைப்புகளாக இயக்கப்படுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைச் செல்லாக்காசாக்கிவிட்டு , ஏகபோக முதலாளிகளின் கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் அரசியலமைப்புமுறை வேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. பெயரளவிலான ஜனநாயகம் கூட இல்லாமல், யாருக்கும் பதில்சோல்லப் பொறுப்பில்லாத ஒரு அப்பட்டமான பாசிச ஆட்சி வேகமாகத் திணிக்கப்பட்டு வருகிறது. தலைப்பாகைக்கு ஆபத்து வந்துள்ளதாக சில அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் தலைக்கே ஆபத்து வந்துள்ளது என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு இன்னுமொரு சான்றுதான் தேசிய முதலீட்டு வாரியம்.

__________________________________________________________

-புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
__________________________________________________________________

அமெரிக்கா : குழந்தைகளை கொன்ற கொலைகாரன் உருவானது எப்படி !

9
ஆடம் லான்சா
ஆடம் லான்சா

டிசம்பர் 14 ஆம் தேதி 2012 அன்று, அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் நியூட்டன் நகரிலுள்ள சாண்டி ஹூக் பள்ளிக்குள், சந்தோஷமாக கைவீசி சென்ற இளந்தளிர்கள் அடுத்த சில மணி நேரத்துக்குள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சோகம் எவரையும் மனம் கனக்க வைக்கும். இந்தக் கொடுமையான சம்பவம், 6-7 வயது நிரம்பிய 20 குழந்தைகளையும், 6 பள்ளி அலுவலர்களையும், கொலையாளியையும், அவரது தாயையும் சேர்த்து 28 உயிர்களை காவு கொண்டுள்ளது.

ஆடம் லான்சா என்ற 20 வயது நிரம்பிய இளைஞன் தான் இந்த கொலைகளை துப்பாக்கியின் துணையோடு நடத்தியுள்ளான்.

வசதியான குடும்பத்தை சேர்ந்த ஆடம், அவனுடைய அம்மாவுடன் நியூட்டன் நகரில் வசித்து வந்துள்ளான். ஆதாமின் தந்தை பீட்டர் லான்சா, ஜி.ஈ. கேபிடல் நிறுவனத்தின் துணைத்தலைவராக உயர் பொறுப்பில் பணிபுரிபவர். பெற்றோர் இருவரும் மூன்று ஆண்டுகளாக விவாகரத்து முடிந்து பிரிந்து வாழ்கின்றனர்.

சம்பவத்தன்று, தாயின் கைத்துப்பாக்கியால் அவரை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்று விட்டு, வீட்டில் இருந்த இன்னும் ஒரு நீளத் துப்பாக்கியையும் தானியங்கி துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு காரில் சாண்டி ஹூக் பள்ளிக்குச் சென்றிருக்கிறான் ஆடம். பள்ளியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கண்ணில் அகப்பட்டவர்களை குழந்தைகள் என்றும், ஆசிரியர்கள் என்றும் பார்க்காமல் சுட்டுத் தள்ளியுள்ளான். இறுதியில் தன் உயிரையும் மாய்த்து கொண்டான்.

துப்பாக்கி-1இந்த சம்பவம் அமெரிக்க மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அமெரிக்காவில் பொது இடங்களில் தனி நபர்கள் இது போன்று கொலைச் செயல்களில் ஈடுபடுவது இந்த ஆண்டில் மூன்றாவது முறையாகும். 1982-ம் ஆண்டு முதல் 61க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடந்திருப்பதாக மதர் ஜோன்ஸ் இணைய தளம் தெரிவிக்கிறது. அக்கொலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள துப்பாக்கிகள் அனைத்தும் உரிமம் பெற்றவையாகவே இருந்துள்ளன. இச்சம்பவங்களை நிகழ்த்திய நபர்கள் பெரும்பாலும் சகஜமாக வாழ்ந்து அமெரிக்க போட்டியில் தோற்றுப் போனதால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாறியிருக்கின்றனர்.

இக்கொலைகள் நடக்கும் போதெல்லாம் அமெரிக்காவின் துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், ‘ஒவ்வொரு பள்ளியிலும் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை அரசு நியமிக்க வேண்டும்’ என்று அமெரிக்க துப்பாக்கிக் கழகத்தின் எதிர் கருத்துக்களும் வெளியாகும்.

தற்போதைய படுகொலையைப் பார்க்கும் போது குழந்தைகளைக் கூட பாதுகாக்க முடியாத அமெரிக்க சமூகத்தின் தோல்விக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

ஆடம் லான்சாவிற்கு, ஆட்டிசம் எனப்படும் மன இறுக்க குறைபாட்டின் ஒரு வகையான அஸ்பெர்கஸ் இருப்பதாக அவரது 5 வயதில் கண்டறியப்பட்டது. யாருடனும் பேசாமல், பழகாத ஒரு தனிமை விரும்பியைப் போல் இருந்தான் என்று அக்கம் பக்கம் வீட்டார் அவனுடைய குணாதிசயங்களை பற்றி கூறியுள்ளனர்.

2010 உயர் நிலைப் பள்ளி ஆண்டு புத்தகத்தில் அவனுடைய புகைப்படத்திற்கு பதிலாக ‘காமிராவுக்கு வெட்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் சராசரிக்கு அதிகமான புத்திசாலி என்று அவனது பள்ளி நண்பரகள் நினைவு கூர்கிறார்கள்.

அஸ்பெர்கஸ் வகை மன இறுக்கம் புலனுணர்வுகள், பேச்சுத்திறன் இவற்றை பாதித்து சமுதாய தொடர்புகளை துண்டிக்க செய்யும் ஒரு குறைபாடு. ஆட்டிசம், மரபு ரீதியாகவும் குழந்தை கருவில் இருக்கும் போதோ பிறந்து சில நாட்களிலோ சுற்றுச் சூழல் அல்லது உணவுப் பொருட்களில் இருக்கும் உலோக நச்சுக்கள், கதிர்வீச்சு மூலம் நரம்பு மண்டலமும் மூளையும் தாக்கப்படுவதால் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் மதிப்பீட்டுப்படி, நாடு முழுவதும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம், மற்றும் சிறப்பு பராமரிப்புக்கு ஆண்டுக்கு $137 பில்லியன் தேவைப்படுகிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க $2.3 மில்லியன் தேவைப்படும்.

அஸ்பெர்கஸ் வகை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமது விருப்பத்துக்கு மாறாக ஏதாவது நடக்கும் போது கோபத்தையும், ஆத்திரத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் நடந்து கொள்வார்கள்.

பெற்றோரின் அரவணைப்பும், தொடர்ச்சியான மருத்துவ உதவியும், ஆலோசனையும், சிறப்புக் கல்வியும் தான் அஸ்பெர்கஸ் குறைபாடு

உடையவர்களை இயல்பான வாழ்க்கை நடத்த உதவும் வழிமுறைகள் ஆகும், இதை வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது.

துப்பாக்கி

அமெரிக்காவை பொறுத்தவரை எல்லா மருத்துவ சேவையும், மருத்துவக் காப்பீடு திட்டம் மூலமாகத்தான் வழங்கப்படுகின்றன. ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் மனநல நோய்களுக்கான சிகிச்சைகளை பெரும்பாலும் மறுத்து விடுகின்றன. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 13 வயது மகனுக்கு தாயான “லீசா லாங்” என்பவர் “நான் தான் ஆடம் லான்சாவின் தாய்” என்ற பதிவில் தனது மகனை சமாளிக்க முடியாமல், முறையான மருத்துவ சிகிச்சையும் அளிக்க முடியாமல் போராடும் துயரத்தை உருக்கமாக விவரித்துள்ளார்.

அரசு உதவியை பெற வேண்டும் என்றால் மன நோய் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மீது காவல்துறையில் கிரிமினல் வழக்கு ஒன்றை பதிவு செய்து விட்டால் அரசாங்கம் அவர்களுக்கு வைத்தியம் என்பதை சிறைச்சாலையில் அடைத்து வைத்து தரும். அமெரிக்காவின், மனித உரிமை கண்காணிப்புத் துறையின் கணிப்புப்படி, அமெரிக்க சிறைச்சாலைகளில் மனநலம் குன்றியவர்களின் எண்ணிக்கை 2000-ம் முதல் 2006 ஆண்டுக்குள் நான்கு மடங்காக அதிகமாகியிருக்கிறது.

அத்தியாவசிய மருத்துவ சேவைகள் கூட பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற சமூகக் கட்டமைப்பில் தனித்து விடப்படும் நபர்களும் குடும்பங்களும் உடல் நல, மன நலக் குறைபாடுகள் தொடர்பான முழு பொருளாதார மற்றும் மனவியல் சுமைகளை தாமே சுமக்க வேண்டியிருக்கிறது.

ஆடம் லான்சாவின் தாய் நான்சி லான்சா, விவாகரத்துக்கு பிறகு வீட்டிலேயே வைத்து ஆதாமை பராமரித்து வந்திருக்கிறார். பணமும் வசதி வாய்ப்பும் இருந்ததால்தான், திருமதி நான்சி லான்சாவால் விவாகரத்து ஆன பிறகும் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தபடியே பிரச்சனை உடைய மகனை பராமரிக்க முடிந்தது. குறிப்பிட்ட கட்டத்தில் மகனின் நலம் கருதி அவனை மனநோய் காப்பகத்தில் கொண்டு சேர்க்க முடிவு செய்திருக்கிறார். அதை அறிந்ததிலிருந்து ஆடம் கோபமாக இருந்திருக்கிறான்.

அமெரிக்காவின் பெரும்பான்மை பதின்ம வயதினரைப் போல கணினி மற்றும் வீடியோ விளையாட்டுகளில் மிகவும் நாட்டம் கொண்டு, குழுவாக இணையத்தின் மூலம் விளையாடுவதிலும் ஆடமுக்கு பெருத்த ஈடுபாடு இருந்துள்ளது. அத்தோடு அமெரிக்க சமூகத்தின் தனிநபர் வாதம், ‘தகுதியுள்ளது மட்டும் தப்பிப் பிழைக்கும்’ என்ற கோட்பாட்டில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் தந்தை, அமைதியற்ற வீட்டுச் சூழல் அனைத்தும் சேர்ந்த ஆடம் லான்சாவின் மன இறுக்க குறைபாட்டை மோசமடையச் செய்திருக்கின்றன.

மருத்துவ உதவிக்கு இடையூறு மிக்க மனிதத்தன்மையற்ற சட்டத்திட்டங்களை வகுத்துள்ள அமெரிக்க அரசாங்கம், தங்கு தடை இன்றி துப்பாக்கி வாங்குவதற்கு வசதியான சட்டச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. “வேர்மொன்ட்” வகை துப்பாக்கி வகை வாங்க 16 வயது முதல் அனுமதி, நீளத் துப்பாக்கி வாங்கும் உரிமம் 18 வயதுக்கு மேல் அனுமதி, தானியங்கி கைத்துப்பாக்கி வாங்கும் உரிமம் 21 வயதுக்கு மேல் அனுமதி என்று வயது அடிப்படையில் துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன.

துப்பாக்கி விற்பனையை தடுத்து நிறுத்தும் எந்த முயற்சியையும் தேசிய ரைபிள் சங்கம் என்ற அமைப்பு பண பலத்தையும் அதிகார பலத்தையும் கொண்டு தடுத்து நிறுத்துகிறது. துப்பாக்கி உற்பத்தி செய்யும் முதலாளிகளோடு, பல ஆயிரக்கணக்கான சாதாரண அமெரிக்கர்களும் துப்பாக்கி சட்டங்களை மாற்றுவதை எதிர்க்கின்றனர். ‘சக மனிதர்களை நம்ப முடியாது, என்னையும் என் குடும்பத்தையும் நானே பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று சமூகச் சூழலை சுட்டிக் காட்டி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை இவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.

இத்தகைய சூழலில் துப்பாக்கிகள் வாங்கி சேகரிப்பது என்பது திருமதி லான்சாவின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. ஆடம் லான்சாவையும் அவரது சகோதரனையும் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு அழைத்து போவது, அவர்களுக்கு சுடுவதற்கான பயிற்சி அளிப்பது என்று வளர்த்திருக்கிறார்.

லான்சாவின் பெற்றோர் நான்சி-பீட்டர்
லான்சாவின் பெற்றோர் நான்சி-பீட்டர்

மனக் குறைபாடுடைய ஆடம் லான்சா தனது விருப்பத்துக்கு எதிரான நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்து கோபத்தை வெளிக்காட்ட நினைக்கும் போது கைக்கெட்டிய தூரத்தில் கொலைக் கருவிகள் சட்ட பூர்வமாக வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. அவற்றை பயன்படுத்தும் முறையான பயிற்சியும் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இந்த கொடூரமான நிகழ்வுக்கு உடனடி காரணமாக இருந்திருக்கிறது.

குழந்தைகளின் உயிரிழப்பிற்காக கண்ணீர் சிந்திய அதிபர் ஒபாமா, இதை இனியும் தொடர அனுமதிக்க போவதில்லை என்று வாய்ச் சவடால் விட்டாலும், எந்தவிதமான செயல் திட்டத்தையும் முன்வைக்காமல் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஹவாய்க்கு குதூகலமாக குடும்பத்துடன் சென்று விட்டார்.

மரபு ரீதியான குறைபாடு, வன்முறையை மனதுக்குள் திணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், தனித்து விடப்படும் கோட்பாட்டை முன் வைக்கும் சமூகச் சூழல், மருத்துவ வசதிகளை மறுக்கும் பொருளாதார அமைப்பு இவை அனைத்தும் சேர்ந்து 28 உயிர்களை பலி வாங்கியிருக்கின்றன. துப்பாக்கியின் விசைகளை அழுத்தியது ஆடம் லான்சாவாக இருந்தாலும் அவன் கையில் இந்த துப்பாக்கியை வைத்த அமெரிக்க ஆயுத முதலாளிகள்தான் இந்த கொலைகளுக்காக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதுவரை இத்தகைய மரண பயத்தில்தான் அமெரிக்க மக்கள் வாழந்த்தே தீர வேண்டும்.

படிக்க:

அம்பானியின் சேவையில் மன்மோகன் அரசு!

7

மன்மோகன் - அம்பானிமைய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டபொழுது, பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, உப்பு சப்பில்லாத அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் அமைச்சராக அமர்த்தப்பட்டார். ஜெய்பால் ரெட்டி இப்படிப் பந்தாடப்பட்டதற்கு ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கொடுத்த நெருக்குதல்தான் காரணம் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டில் எந்தளவிற்கு உண்மையுண்டு எனப் புருவத்தை நெறித்தவர்களின் ஐயத்தைத் தீர்த்து வைத்தார், பெட்ரோலியத் துறையின் புதிய அமைச்சர் வீரப்ப மொய்லி. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சில முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டியிருக்கிறது” எனக் கூறியதன் மூலமும்; கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப் படுகையில் எரிவாயு வயல்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கணக்குகளை மைய அரசின் தலைமைக் கணக்காயர் தணிக்கை செய்வதைத் தள்ளிப் போட்டதன் மூலமும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போட்டுடைத்தார், அவர்.

கிருஷ்ணா-கோதாவரிப் படுகையிலுள்ள இயற்கை எரிவாயு வயல்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், அவ்வயல்களிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை யூனிட் ஒன்றுக்கு ரூ.226/- என்ற விலையில் அரசு நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. இவ்விலையை ரூ.756/- ஆக அதிகரிக்க வேண்டுமெனக் கோரி வருகிறது, அந்நிறுவனம். ஜெய்பால் ரெட்டி இவ்விலைஉயர்வுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதோடு, ரிலையன்ஸ் நிறுவனம் குத்தகை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அளவிற்கு எரிவாயுவை உற்பத்தி செயாமல் குறைந்த அளவிற்கே உற்பத்தி செய்து வருவதால், அந்நிறுவனம் 2011-12 ஆம் நிதியாண்டில் 100 கோடி அமெரிக்க டாலர்களை அரசிற்கு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், இந்த உற்பத்திக் குறைவு காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது 2012-13 ஆம் நிதியாண்டில் 172 கோடி அமெரிக்க டாலர்களும், 2013-14 ஆம் நிதியாண்டில் 210 கோடி அமெரிக்க டாலர்களும் அபராதம் விதிக்க வேண்டும் எனப் பரிந்துரையும் செய்திருக்கிறார். ஜெய்பால் ரெட்டி பெட்ரோலியத் துறையிலிருந்து தூக்கியெறியப்பட்டதன் பின்னணி இதுதான் என்பது இப்பொழுது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

முதல் போட்டவனுக்கு இலாபம் கிடைக்காமல் ஜெய்பால் ரெட்டி தடுத்துவிட்டார்; அதனால் பிரதமர் மன்மோகன் சிங் அவரை பெட்ரோலியத் துறையிலிருந்து தூக்கியடித்து விட்டார் என்பது இந்தப் பிரச்சினையின் ஒரு சிறு பகுதிதான். இன்று பெட்ரோலியத் துறை அமைச்சகமே அம்பானியின் பாக்கெட்டில் இருப்பதாகக் கூறுகிறார்கள் இத்துறையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள். கோதாவரிப் படுகையில் கொட்டிக் கிடக்கும் கச்சா எண்ணெ மற்றும் இயற்கை எரிவாயு வளத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கொள்ளையடித்துக் கொழுப்பதற்கு முந்தைய பா.ஜ.க. கூட்டணி அரசும், இன்றைய காங்கிரசு கூட்டணி அரசும் எல்லாவிதத்திலும் துணையாக நின்றன; நின்று வருகின்றன. சட்டபூர்வமான முறையிலும் சட்டவிரோதமான முறையிலும் நடந்துவரும் இக்கார்ப்பரேட் கொள்ளை முன் அலைக்கற்றை ஊழலெல்லாம் சுண்டைக்காய்தான்.

கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் இருப்பது கண்டறியப்பட்டவுடன், அப்படுகையின் பெரும்பகுதி – ஏறத்தாழ 339 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வயல்கள் உற்பத்திப் பகிர்வு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், முந்தைய பா.ஜ.க. கூட்டணி அரசால் ரிலையன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இப்படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவைத் தோண்டியெடுக்க எவ்வளவு மூலதனம் போடப்படுகிறதோ, அம்மூலதனத்தை ரிலையன்ஸ் முழுமையாகத் திரும்ப எடுக்கும் வரை, அரசிற்குக் குறைந்தபட்ச ராயல்டி” தொகை கொடுத்தால் போதும் என்பதுதான் உற்பத்தி பகிர்வு ஏல ஒப்பந்தத்தின் அடிப்படையான அம்சம். இந்த மூலதனம் அதிகரிக்க அதிகரிக்க, அரசிற்குக் குறைந்தபட்ச ராயல்டி கொடுக்கும் காலமும் அதிகரித்துக் கொண்டே போகும். உமி கொண்டுவந்தவன் அவல் தின்னும் கதைதான் இது. இந்த ஒப்பந்த விதிதான் இந்தப் பகற்கொள்ளையின் ஆணி வேராக அமைந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் இப்படுகையில் துரப்பணப் பணியைத் தொடங்கியபொழுது, தினந்தோறும் 4 கோடி கனமீட்டர் இயற்கை எரிவாயுவைத் தோண்டியெடுக்க 239 கோடி அமெரிக்க டாலர் மூலதனச் செலவு பிடிக்கும் எனக் கணக்குக் காட்டியது. பின்னர், இம்மூலதனச் செலவை 519 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்து, தினந்தோறும் 8 கோடி கனமீட்டர் இயற்கை எரிவாயுவைத் துரப்பணம் செய்யப் போவதாகக் கணக்குக் காட்டியது. இறுதியாக, இம்மூலதனச் செலவை 880 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்தது, ரிலையன்ஸ்.

மணிசங்கர் அயர் பெட்ரோலியத் துறையின் அமைச்சராக இருந்தபொழுது, அவர் ரிலையன்ஸ் தனது மூலதனச் செலவை அதிகரித்துக் கொள்வதை அங்கீகரிக்க மறுத்திருக்கிறார். இந்நிலையில் மணிசங்கர் அயர் இத்துறையிலிருந்து திடீரென மாற்றப்பட்டு, அம்பானி குடும்பத்தாரால் மாமா என அன்புடன் அழைக்கப்படும் முரளி தியோரா பெட்ரோலியத் துறையின் அமைச்சராக்கப்பட்டார். எரிவாயு உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிப்பதற்கு, மூலதனச் செலவை நான்கு மடங்காக அதிகரிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியதையும் மீறி, பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட முரளி தியோராவும், ஹைட்ரோ கார்பன் துறையின் தலைமை இயக்குநராக இருந்த சிபலும் ரிலையன்ஸ் தனது மூலதனச் செலவை அதிகரித்துக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்தனர்.

ரிலையன்ஸ் நிறுவனம் இப்படுகையைக் குத்தகைக்கு எடுத்தபொழுது, ஒரு யூனிட் இயற்கை எரிவாயு 124/- ரூபா என்ற அடிப்படையில் பதினேழு ஆண்டுகளுக்குத் தேசிய அனல் மின் கழகத்திற்குத் தருவதாக பெட்ரோலிய அமைச்சகத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால், உற்பத்தி தொடங்கிய ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் விலையை 226 ரூபாயாக உயர்த்த வேண்டுமென பெட்ரோலிய அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தது. உள்நாட்டில் உற்பத்தி செயப்படும் இயற்கை எரிவாயுவை சர்வதேசச் சந்தை விலை அடிப்படையில் ரிலையன்ஸ் விற்க முயலுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் பொருட்படுத்தாமல், பிரணாப் முகர்ஜி தலைமையில் செயல்பட்டுவந்த அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு விலை உயர்வு என்ற பகற்கொள்ளைக்கு அனுமதி அளித்தது.

தேசிய அனல் மின் கழகம் இவ்விலை உயர்வை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அக்கழகத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், தேசிய அனல் மின் கழகத்திற்கு மட்டுமின்றி, தனது தம்பி அனில் அம்பானிக்கும் 226 ரூபா என்ற விலையின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவை விற்கத் தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார், முகேஷ் அம்பானி. இந்த வழக்கின்பொழுது ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் உற்பத்திச் செலவு 2 அமெரிக்க டாலர்கள்தான் (ஏறத்தாழ நூறு ரூபா) என வாக்குமூலம் அளித்தது, ரிலையன்ஸ் நிறுவனம். இதேசமயத்தில், இந்திய அரசு நிறுவனமான எண்ணெய் – எரிவாயுக் கழகம் ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவை ரூ.100/-க்கும் குறைவாகவே சந்தையில் விற்பனை செய்து வந்தது. ஆனாலும், அப்பொழுது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் இவ்வழக்கை விசாரித்து வந்த அமர்வு மன்றம் ரிலையன்ஸூக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.

இந்த விலை உயர்வினால் ரிலையன்ஸுக்கு 30,000 கோடி ரூபா வரை அதிரடி இலாபம் கிடைத்தது; தேசிய அனல் மின் கழகம் 24,000 கோடி ரூபா நட்டத்தில் தள்ளப்பட்டது.

இத்தீர்ப்பு வெளிவந்த அடுத்த ஐந்தாவது நாள் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்; ஓய்வு பெற்ற அடுத்த நிமிடமே, கேபினட் அமைச்சருக்குரிய தகுதி கொண்ட தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இது காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையல்ல.

மைய அரசு ரிலையன்ஸ் நிறுவனம் கோரியபடி ஒரு யூனிட் இயற்கை எரிவாயுவின் விலையை ரூ.226/- என உயர்த்திய சமயத்திலேயே, இனி 2014-ஆம் ஆண்டு முடிய எரிவாயுவின் விலையை இதற்கு மேல் உயர்த்தக் கூடாது என நிபந்தனை விதித்து, ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. ஆனாலும், ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஓராண்டாகவே இயற்கை எரிவாயுவின் விலையை ரூ.756/- ஆக உயர்த்த வேண்டுமெனச் சண்டித்தனம் செய்து வருகிறது.

ரிலையன்ஸ் கோரி வரும் விலை உயர்வு ஒப்பந்த விதிகளுக்கு முரணானது என்பது ஒருபுறமிருக்க, இந்த விலை உயர்வை ஒப்புக்கொண்டால், ரிலையன்ஸிடமிருந்து எரிவாயுவைப் பெற்று இயங்கிவரும் மின் மற்றும் இரசாயன உர நிறுவனங்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 53,000 கோடி ரூபா வரை நட்டத்தைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக, மின்சாரத்திற்கும் இரசாயன உரத்திற்கும் மைய, மாநில அரசுகள் தந்துவரும் மானியம் அடுத்த ஆண்டுக்குள் 48,000 கோடி ரூபா வரை அதிகரிக்கும். விலை உயர்வினால் அரசுக்கு ஏற்படும் இந்த நட்டம், இழப்பு ரிலையன்ஸுக்குக் கிடைக்கும் இலாபம் என்பதைக் கூறத் தேவையில்லை.

இந்தக் காரணங்களை முன்வைத்து ஜெய்பால் ரெட்டி விலை உயர்வை அனுமதிக்கத் தேவையில்லை எனக் கூறி வந்தபொழுது, மைய அரசின் நிதித் துறையோ, நட்டம், “கூடுதல் செலவு பற்றிக் கவலைப்பட வேண்டியது நாங்கள்தான்; பெட்ரோலியத் துறை இதில் மூக்கை நுழைக்கத் தேவையில்லை” என ரிலையன்ஸுக்குச் சாதகமாக வாதாடியிருக்கிறது. பிரதம மந்திரி அலுவலகமோ இந்தப் பிரச்சினையில் ரிலையன்ஸுக்குச் சாதகமாக முடிவெடுக்க முடியாதென்றால், இதனைச் சட்டத் துறையிடமும், அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவிடமும் விட்டுவிடுங்கள் என நயவஞ்சகமான ஆலோசனையை முன்வைத்தது.

ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி கோதாவரிப் படுகை வயல்களில் நாளொன்றுக்கு 8கோடி கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய வேண்டும். ஆனால், பெட்ரோலிய அமைச்சகம் விலை உயர்வுக்கு அங்கீகாரம் அளிக்காததால், ரிலையன்ஸ் நடப்பாண்டில் எரிவாயுவை உற்பத்தியை நாளொன்றுக்கு 2.7 கோடி கன மீட்டராகக் குறைத்ததோடு, அடுத்த ஆண்டில் தனது எரிவாயு உற்பத்தி நாளொன்றுக்கு 1.8 கோடி கன மீட்டராகக் குறைந்துவிடும் என்றும் அறிவித்தது. இதனால், கோதாவரி எரிவாயுவை நம்பியிருக்கும் மின் மற்றும் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் ஒன்று தங்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டும்; அல்லது, வெளிநாடுகளிலிருந்து எரிவாயுவை அதிக விலை கொடுத்து – யூனிட் ஒன்றுக்கு ரூ.650/- கொடுத்து இறக்குமதி செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டன.

ரிலையன்ஸ் எரிவாயு உற்பத்தியை முடக்கியதால், 2012-13 ஆம் ஆண்டில் 12,000 மெகாவாட் மின் உற்பத்தியும், அடுத்த ஆண்டில் 13,500 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்படுமென்றும்; எரிவாயு இறக்குமதிச் செலவு, மின் மற்றும் இரசாயன உர உற்பத்தி பாதிப்பு மற்றும் கூடுதல் மானியச் செலவு ஆகியவற்றால் அரசிற்கு ஏற்படவுள்ள மொத்த இழப்பு ஏறத்தாழ 1,10,000 கோடி ரூபாயாக இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸின் அடாவடித்தனமான இந்த உற்பத்தி முடக்கம், ஒருபுறம் கையை முறுக்கி காரியம் சாதிக்கும் தந்திரம் என்றால், மறுபுறம், அதிக விலை கிடைக்கும் வரை எரிவாயுவை உற்பத்தி செயாமல் முடக்கி வைப்பது, அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைப்பது போன்ற கிரிமினல் குற்ற நடவடிக்கையாகும்.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடும் மீனவ கிராம மக்களை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகக் குற்றஞ்சுமத்துவதோடு, அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு உள்ளிட்டுப் பல்வேறு கிரிமினல் வழக்குகளைத் தொடுத்துள்ள அரசு, 13,500 மெகாவாட் மின் உற்பத்தி முடங்குவதற்குக் காரணமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராகச் சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. மாறாக, ஜெய்பால் ரெட்டியை பெட்ரோலியத் துறையிலிருந்து தூக்கியடித்து, ரிலையன்ஸ் நிறுவன முதலாளி முகேஷ் அம்பானியின் மனதைக் குளிர வைத்திருக்கிறது.

ஆறு சிலிண்டர்களுக்கு மேல் மானிய விலையில் சமையல் எரிவாயுவை வழங்கினால் பெட்ரோலிய நிறுவனங்களுக்குப் பெருத்த நட்டமேற்படும் எனப் பீதி கிளப்பி வரும் மைய அரசு, கோதாவரிப் படுகையில் கிடைக்கும் எரிவாயுவின் விலையை உயர்த்திக் கொள்ள ரிலையன்ஸுக்கு அனுமதி அளித்து, அதன் மூலம் அந்நிறுவனம் அடுத்த இரு ஆண்டுகளில் 43,000 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்து வருகிறது.

மைய அரசின் தணிக்கைத் துறை கிருஷ்ணா-கோதாவரிப் படுகை வயல்கள் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உற்பத்தி பகிர்வு என்ற முறையில் ஒதுக்கப்பட்டதிலும்; அவ்வயல்களிலிருந்து கச்சா எண்ணெயையும் எரிவாயுவையும் உற்பத்தி செய்ய போடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மூலதனச் செலவிலும்; இயற்கை எரிவாயுவிற்கு விலை நிர்ணயம் செய்ததிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்து, மைய அரசிற்கு அறிக்கை அளித்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மைய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள அத்தணிக்கை அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம், பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா, ஹைட்ரோ கார்பன் துறையின் இயக்குநராக இருந்த சிபல் ஆகிய மூவரும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டு வந்திருப்பது தக்க ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது. எனினும், மைய அரசு அவ்வறிக்கையை வெளியேவிடாமல் அதிகாரத் தாழ்வாரங்களிலேயே அமுக்கிப் போட்டுவிட்டது.

அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தனியார் நிறுவனங்களுள் சில, தங்களின் பங்குகளை 22,000 கோடி ரூபாக்கு விற்று இலாபமடைந்ததைப் போலவே, முகேஷ் அம்பானியும் கிருஷ்ணா-கோதாவரிப் படுகை ஒதுக்கீட்டில் 30 சதவீதப் பங்குகளை பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு 37,908 கோடி ரூபாக்கு விற்றுக் கொழுத்த இலாபத்தைச் சுருட்டியிருக்கிறார். இக்கார்ப்பரேட் பகற்கொள்ளை பற்றிய செய்திகள் பத்திரிகைகள் வழியாகக் கசிந்து வெளிவந்த பிறகும்கூட, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சு.சாமி உள்ளிட்ட ஊழல் எதிர்ப்பு கனவான்களும் இதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. முகேஷ் அம்பானியின் (பண) பலம் இவர்களின் வாயை அடைத்துவிட்டது போலும்!

அம்பானி சகோதரர்களின் அன்பு மாமாவான முரளி தியோராவைத் தூக்கிவிட்டு, ஜெய்பால் ரெட்டியை பெட்ரோலியத் துறையின் அமைச்சராக்கியதன் மூலம், அத்துறையில் எல்லாம் சட்டபூர்வமான வழியில் நடப்பதாகக் காட்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியது, மன்மோகன் சிங் கும்பல். முதலாளித்துவப் பத்திரிகைகளாலும், ஊழல் எதிர்ப்பு கனவான்களாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் விதந்தோதப்படும் ஜெய்பால் ரெட்டியின் நேர்மை என்பது கார்ப்பரேட் பகற்கொள்ளையைச் சட்டபூர்வமான வழியில் மட்டுமே அனுமதிக்க முடியும் என்பது தவிர வேறெதுவுமில்லை. டீசலுக்கும் சமையல் எரிவாயு உருளைக்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய வேண்டும் எனக் கூறி வந்த தனியார்மயத்தின் தாசானு தாசன்தான் ஜெய்பால் ரெட்டி.

பெட்ரோலிய அமைச்சகத்தில் மட்டுமல்ல, அரசின் அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களை நத்திப் பிழைக்கும் கும்பல்தான் இன்று அமைச்சர்களாக, அதிகாரிகளாக வலம் வருகின்றனர். திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, நிதியமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், கனரகத் தொழில் அமைச்சர் பிரஃபுல் படேல், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜூ, மின்சாரத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா – இவர்கள் அனைவருமே கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலிகள்தான். இவ்வளவு ஏன், பிரதம மந்திரியாக உட்காரவைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கே உலக வங்கியின், அமெரிக்காவின் ஏஜென்ட்தானே! நாட்டின் வளங்களை இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் கூட்டாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதற்குத் திறந்துவிடுவதுதான் இக்கும்பல் செய்துவரும் ஒரே திருப்பணி!

____________________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
___________________________________________________________

21-ம் நூற்றாண்டிலா இப்படி?

35

பொருளின்றி உச்சரிக்கப்படும் சில சொற்கள் உண்டு.
எனினும் அவை பொருளற்ற சொற்களல்ல.

”இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?” – என்ற வியப்புக்குறி
இத்தகைய ரகம்.

சாதிப்படுகொலை மதக்கலவரம்
வரதட்சணைக் கொலை உடன்கட்டையேற்றம் –
போன்ற சமூக ஒடுக்குமுறைகளானாலும்…

நரபலி… தீமிதி, சோதிடம், வாஸ்து சாத்திரம்
சாய்பாபா, சிவசங்கர் பாபா போன்ற மூட நம்பிக்கைகளானாலும்…

கல்வியறிவின்மை மருத்துவ வசதியின்மை
குடிநீர்ப் பஞ்சம் பட்டினிச்சாவு
போன்ற வர்க்கச் சுரண்டல்களானாலும்…

மரண தண்டனை துப்பாக்கிச் சூடு காவல்நிலையக் கொலை
போன்ற அரசு ஒடுக்கு முறைகளானாலும்…

இதே கேள்வி: இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?

கேட்பவர்கள் பாதிரியார்களாகவும்
கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால்
கேள்வி நியாயம்தான்

கேட்பவர்கள் அறிவாளிகள்.
கேட்கப்படுவதோ – பாவம் நாட்காட்டி!

நாள் என் செயும்? நாட்காட்டி என் செயும்?

டிசம்பர்-31 இரவு
தனது கடைசி காகிதத்தையும் உதிர்த்த நாட்காட்டி
”யாமிருக்க பயமேன்” என்று
இரண்டு துருப்பிடித்த ஆணிகளை மட்டுமே
தனது பதிலாக நீட்டுகிறது.

2000 ஆண்டுகள் முடிந்து விட்டன, அதற்கென்ன?

தனது அநாகரிகக் கொள்ளைக்கு ’எத்தனை ஆண்டுகள்’ – என்று
எண்ண வேண்டிய ஜெயலலிதா
’இந்திய நாகரீகத்திற்கு 5000 ஆண்டு’ – என்று கணக்குச் சொல்கிறார்.

’கிளிண்டனே மீட்பன்’ என்று தேவ ஊழியஞ் செய்யும்
ஆர்.எஸ்.எஸ். அடிமைகளோ
பரிதாபத்துக்குரிய கிறிஸ்துவைக்
காலனியாதிக்கவாதியாக்குகிறார்கள்.

கலியுகத்திற்கு 501-ஆம் ஆண்டு என்று
பஞ்சாங்கத்தை நீட்டுகிறார்கள் –
அட்டையில் பார்ப்பனப் பாம்பு சீறுகிறது.

5000 ஆண்டுகளாகவே இருக்கட்டும். அதற்கென்ன?

பூச்சியங்கள் என்ன செய்யும்? பூச்சியங்களின் மாயக்கவர்ச்சியில்
கணிதம் மயங்கலாம்; வரலாறு மயங்குவதில்லை.

மனித குலத்தின் வரலாற்று நெடுஞ்சாலையில்
தப்பிப் பிழைத்த ஒரு மைல்கல் கிறிஸ்து சகாப்தம்.

சாலிவாகன சகாப்தம் விக்கிரம சகாப்தம் – எனத்
தங்கள் திருப்பெயரால் கல்லை நட்ட கோமாளிகளின்
நடுகற்களையும் காணவில்லை.

திருச்சபையின் ஆட்சியை முடித்து வைத்த மூலதனம்
ஆண்டவருக்கு வழங்கிய மானியம் ”கிறிஸ்து சகாப்தம்.”
*

கி.பி.2001 பூச்சியங்கள் கூடக்கூட
மனிதகுலத்தின் முன்னேற்றம் கூடுமெனில்
வயது கூடினால் மனிதனின் அறிவும் கூட வேண்டும்.

இருபதால் நூற்றாண்டிலா இப்படி
என்ற வியப்புக்கு விடை

அறிஞர் பெருமக்களே,
இருபதாம் நூற்றாண்டில்தான் இப்படி!

தங்கம், வெள்ளி, வைரம், இரும்பு, செம்பு, துத்தநாகம்,
யுரேனியம், கோபால்ட் – போன்ற அனைத்து உலோகங்களையும்
நெல், வாழை, கரும்பு, சோளம், காப்பி
என்றனைத்துப் பயிர்களையும் விளைவிக்கும் – சயர்*
பிச்சைக்கார நாடு!

இவையெதுவுமில்லாத ஜப்பான் பணக்கார நாடு.
இருபதாம் நூற்றாண்டில்தான் இது சாத்தியம்.

வானம் பொய்த்த போது மனிதர்கள்
பஞ்சத்தால் செத்திருக்கிறார்கள்.

கறந்த பாலைச் சாக்கடையிலும்
விளைந்த கோதுமையைக் கடலிலும் கொட்டிவிட்டு
ஆண்டுக்கு 150 லட்சம் மனிதர்களைப்
பட்டினி போட்டுச் சாகடிப்பது இருபதாம் நூற்றாண்டில்தான்.

கொள்ளை நோய்களுக்கு மருந்து தெரியாமல்
மக்கள் மடிந்த நூற்றாண்டுகளுண்டு.
மருந்து வியாபாரிகளின் கொள்ளையால்
மக்கள் மடிவது இருபதாம் நூற்றாண்டு.

துன்பத்தால் துடிக்கும் நோயாளியின் சட்டைப் பையைத்
துழாவியிருப்பாரா ஹெராக்ளிடஸ்?*
கையைப் பிடிக்குமுன் பையைப் பிடித்துப் பார்க்கிறார்கள்
அவரது இருபதாம் நூற்றாண்டு சீடர்கள்.
முன்னேற்றம் காலத்தால் அளவிடப்படுவதில்லை.

சிந்துவெளியின் நகர நாகரிகத்தை அழித்தனர் –
ஆரியக் காட்டுமிராண்டிகள்.
காலத்தால் பிந்தையதென்பதால்
ஆரியம் – முன்னேற்றமலல.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளுக்குப்
பிந்தையதுதான் மனுநீதி.
பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர்தான் லூயி போனபார்ட்.*
அக்டோபர் புரட்சிக்குப் பிந்தையதுதான்
எல்ட்சினின் ஆட்சிக் கவிழ்ப்பு.
முன்னேற்றம் ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை.
காலம்தான் முன்னேற்றத்தால் அடையாளம் இடப்படுகிறது.

இயற்கையுடன் மனிதன் கொண்ட உறவினால்
காலத்தை அடையாளமிடுவதாயின்
அன்று கற்காலம்.
இன்று கணினிக் காலம்.

மனிதனுடன் மனிதன் கொண்ட உறவினால்
அடையாளமிடவதாயின்
இது முதலாளித்துவத்தின் காலம்; ஏகபோக மூலதனத்தின் காலம்.

இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி என்று கேள்விக்குறியிடுவோர்
முதலாளித்துவச் சமூகத்திலுமா இப்படி என்று சொல்லிப் பாருங்கள்
– கேள்வியின் முரண் கேட்பவரின் நாக்கையே அறுக்கும்.

அநீதியின் திரண்ட வடிவம் மூலதனம்
பாட்டாளி வர்க்கம் உழைக்க உழைக்க,
பாற்கடலைக் கடையைக் கடைய,
மூலதனம் எனும் ஆலகால விஷம்தான் திரண்டு வருகிறது.

கடலின் அடியாழத்தில் கிடந்த அனைத்துக் கசடுகளும்
புதிய வீரியத்துடன் மிதந்து எழும்புகின்றன.

ஆப்பிரிக்கப் பழங்குடிகள்
இந்தியச் சாதிகள்
ஆப்கான் இனக்குழுக்கள்
எகிப்தி மம்மிகள்…
இறந்தகாலத்தின் ஆவிகளனைத்தும்
மூலதனத்தின் குரலில் அலறுகின்றன.

செவ்வாய் நோக்கிப் பாய்கிறது விஞ்ஞானம்.
தத்துவ ஞானமோ, நீட்சேயின் மீமனிதன்
கான்ட்டின் அறியொணாவாதம்
சங்கரனின் மாயாவாதம் – என
கி.மு-வை நோக்கித் திரும்புகிறது.

டோலி*யைப் படைக்கிறது விஞ்ஞானம்;
மேய்ப்பவனை நாடுகிறது மெய்ஞ்ஞானம்.
எல்லா உற்பத்திச் சக்திகளும் முன்நோக்கிப் பாய்கின்றன;
உற்பத்திச் சக்திகளில் தலையாய மனிதன்
பின்னிக்கிழுக்க்ப்படுகிறான்.

2000 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்து பிறந்தார்.
25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் அவதரித்தான் –
குரங்கிலிருந்து.

கற்காலத்தின் முதல் கல்லை
மனிதன் தீட்டத் துவங்கியதோ
ஒரு லட்சம் ஆண்டுகள் முன்.
கல்லையும் மரத்தையும் செதுக்கியபோதெல்லாம்
தானும் செதுக்கப்பட்டதை அறியாமல்.
மண்ணை உழுதபோதெல்லாம்
தானும் பண்படுத்தப்பட்டதை உணராமல்,
நூற்றாண்டுகள் பல போயின.

மார்க்ஸ் வந்தார்:
”இயற்கையை மாற்றியமைத்த போதே நீயும்
மாற்றியமைக்கப்பட்டாய்.
”இயற்கையுடனான உனது உறவு மாறியபோது
சக மனிதனுடனான உனது உறவும் மாறியதே.
உன் உடலின் மீதே உரிமையின்றி அந்நியப்படுத்தப்பட்டபோது
நீ அடிமை;
நிலத்திலிருந்து அந்நியப்பட்டபோது பண்ணையடிமை.
இப்போது உன் உழைப்பிலிருந்தே
அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறாய், நீ பாட்டாளி”

”உழைப்பு – இயற்கையினால் சுமத்தப்பட்ட அவசியம்.”

”உழைப்பைச் சாபக் கேடாகவும்
ஓய்வைச் சுதந்திரமாகவும் உணர்தல்
மனிதத் தன்மையல்ல.”

”எது மிருகத் தன்மையோ அது மனிதனுக்குரியதாகியிருக்கிறது.”

”பாட்டாளி வர்க்கமே நீதான் இம்மனித குலத்தின் மீட்பன்”

”உன் பணி உலகை வியாக்கியானம் செய்வதன்று –
அதனை மாற்றியமைப்பது”
– என்று தத்துவ ஞானத்தைத் தரையிறக்கினார் மார்க்ஸ்.

சொல்லுங்கள்! மனித குலத்தின் வரலாற்றை
யாருக்குப் பின் – என்று கணக்கிடுவது பொருத்தம்?

மார்க்சுக்குப் பின் என்று கணக்கிட்டவர்கள்
சோசலிசம் படைத்தார்கள்.

கிறிஸ்துவுக்கு மறுவருகையில்லை; கிருதயுகம் எழுவதுமில்லை.

விலங்குத் தன்மையை இழந்தவன் மனிதன் –
எனக் குறிக்க வேண்டுமானால்
குரங்குக்குப் பின் என்று கணக்கிடலாம்.

மனிதத் தன்மையை உணர்ந்தவன் மனிதன் –
எனக் குறிக்க வேண்டுமானால்
மார்க்சுக்குப் பின் என்று கணக்கிடலாம்.

’21-ஆம் நூற்றாண்டிலா!’ என்ற
வியப்புக்குறியைக் கேள்விக்குறியாக்குங்கள்.

நாகரீகத்திற்குப் பின் அநாகரிகமா?
குறளுக்குப் பின் மனுநீதியா?
சோசலிசத்திற்குப் பின் முதலாளித்துவமா?
– என்று கேட்டுப் பழகுங்கள்.

மனிதர்களின் வரலாற்றை
மார்க்சுக்கு முன்
மார்க்சுக்குப் பின் – என்று
திருத்தி எழுதுவோம்.
தேவனின் வரலாற்றையும்தான்.

குறிப்பு:
1. சயர்- மத்திய ஆப்பிரிக்காவின் மிகவும் பின்தங்கிய ஏழை நாடு.
2. ஹெராக்ளிடஸ்: கிரேக்க அறிஞர்; மருத்துவ உலகின் தந்தையெனக் கருததப்படுபவர்.
3. லூயி போனபார்ட்: மன்னராட்சியை ஒழித்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தன்னையே மன்னனாக முடிசூட்டிக் கொண்ட கழிசடைப் பேர்வழி.
4. டோலி: பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் உருவாக்கிய ஆடு.

___________________________________________________________________

– மருதையன், புதிய கலாச்சாரம், ஜனவரி, 2000.

___________________________________________________________________

மற்றுமொரு ஐடி காதல் கதை….

43

ரட்டைகள், அக்கப்போர்கள், வேலை, சம்பள உயர்வு, மேனேஜர் பற்றிய புலம்பல்கள், கிசுகிசுக்கள் என்று பல்வேறு கதைத்தல்கள் நடக்கும் இடம், பல ஐடி நிறுவனங்கள் இயங்கும் அலுவலக வாசலில் உள்ள டீக்கடை

பிஸியாக பேசிக்கொண்டு இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அந்தச் சத்தம்

சர்ர்ர்ர்——- என்று ஒரு ஸ்கூட்டி மின்னல் வேகத்தில் வந்து நின்றது. வந்த பெண்னை நாங்கள் எங்க காம்ப்ளெக்சில் பார்த்ததே இல்லை. அதுவும் வந்த வேகமும், வண்டியை ஒழுங்கில்லாமல் அப்படியே நிருத்தி வைத்ததும் ஏதோ விவகாரம் போல என்று தோன்றச்செய்தது….

“Hey da, what a surprise” என்று சொல்லி முன் வந்த ரவியைத்தான் அவள் சந்திக்க வந்து இருக்கிறாள் என்பது புரிந்தது. சரி எதோ லவ்ஸ் மேட்டர் போலன்னு நினைத்தபடி கிளம்ப எத்தனித்த எங்களை தடுத்து நிறுத்தியது என்னடா ஹாய் என்று அவள் போட்ட சத்தம்.  சத்தம் போட்டதுதான் தாமதம் ரவியுடன் நின்ற அவன் நண்பர்களெல்லாம் நைசாக  விலக ஆரம்பித்தனர்.

அவள் கத்தியவுடன் அவன் கையை பிடிக்க அவன் வர, அவனை ஒரே தள்ளு தள்ளினாள் அவள்.

“என்னம்மா, என்னாச்சுடா Any Problem

”என்னடா இப்போ அம்மா, அம்மாங்குற, இன்னொருத்திய பை’க்லே வச்சு ஊர் சுத்தும் போது இந்த அம்மா ஞாபகம் வரலோயோ?’

”Hey Babe, I guess you have misunderstood, தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு நினைக்கிறேன்”

“என்னடா guess, உன்னைப்பத்தி எனக்கு தெரியதா? எனக்கு முன்னே ஒருத்தியே லவ் பண்ணி, அவ உனக்கு அல்வா கொடுத்த, ஈவநிங்கே என்னை காஃபி ஷாப் கூப்பிட்டவன் தானேடா நீ. STOP ALL YOUR CRAPPPPP…

அலுவலக வாசலிலேயே அவமானப்படுவது வேதனையளித்தது ரவியின் முகத்திலேயே தெரிந்தது. அவன் பேசுவது  சரியாக காதில் விழவில்லை என்றாலும், அவன் அவளை கையை பிடித்து சமாதானம் செய்ய முயற்சி செய்வதும் அதை அவள் பொருட்படுத்தாமல் பேசுவதுமாக இருந்தது.

“Its over Ravi, its over, just get the #$^& out from my sight and life,  நீ ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர் கூட இல்ல After all ஒரு மிடியா டெவலப்பர், போனா போகுதுன்னு உன்னை லவ் பண்ண பாரு, you have taught me a good lesson”

”ஆபீஸ்மா, கத்தாதம்மா பிளீஸ்”

என்னாடா எனக்கே Corporate Culture சொல்லி தரியா? IT பொண்ணு ஆச்சே சும்மா விட்டுவிடுவான்னு நினைச்சியா? எனக்கு உன்னை மாதிரி low class பசங்ககிட்ட எப்படி பேசனும் நல்லா தெரியும்டா”

“பிளிஸ் பவி”

”டேய் பவி என்னடா பவி, பவித்ரான்னு சொல்லுடா என் பெயரை சுருக்க உனக்கு என்னடா ரைட்ஸ் இருக்கு”

”பிளீஸ் பவித்ரா நான் சொல்றத கேளுடா, நான் அந்த பொன்னே பஸ் ஸ்டான்டுலே தாண்டா டிராப் பண்ண போனேன்”

”முதலே என்னை வாடா போடா சொல்லுறத நிறுத்துடா, உன் ஆபிஸ் வேளச்சேரி, இங்க பஸ் ஸ்டான்டுலே டிராப் பண்ண மாட்டே டைடல் பார்க் பஸ் ஸ்டான்டுலேதான் டிராப் பண்ணுவியோ. இந்த கதையெல்லாம் எனக்கு சொல்லாதே”

”நான் உன்னை மாதிரி B.Com இல்லடா, B.E, உன்னை விட 200% சதவிதம் அதிக சம்பளம் வாங்குறேன், இப்போக்கூட USக்கு போரவங்க லிஸ்ட்’லே என் பெயர் டாப்ல இருக்கு. எதுவோ முன்னாடி Love  Failure  ஆகி இருக்கே, அந்த Experienceல என்னை நல்லா பார்த்துக்குவே, அடங்கி இருப்பேன்னு நினைச்சேன்,

“…..”

உனக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை, அதனாலே கல்யாணத்துக்கு அப்புறம் என் அப்பா, அம்மா என் கூட இருக்க ஒத்துகிட்டத்தையெல்லாம் யோசிச்சுதான் OK சொன்னேன். அதை மொதல்ல தெரிஞ்சுக்கோ.

“…..”

“உன் வேலை, பிசாத்து சம்பளம், உன்னோட STUPID ENGLISH, எதுவும் என்னை கவர் பண்ணலே, புரியுதா I am happy you  are out of my life! இது தான் உன்னை கடைசியா பார்த்தா இருக்கனும், do not disturb me anymore. மீறி என்ன தொல்லை பண்ணே என் செருப்பு தான் பேசும்” என்று செருப்பை எடுத்து அவன் முகத்தின் முன்னால் ஆட்டினாள்.

“இன்னும் ஒரு மாசத்தில் என் Statusக்கு ஏத்த ஆளோட உன் முன்னாடி நான் கார்ல போவேன் அப்போ தெரியுன்டா உனக்கு என் Value என்று கூறிவிட்டு வேகமாக வந்ததைப்போல் மறைந்தாள்.

————————-

ரவி சென்னை நகரத்தில் பிறந்து வளர்ந்த நாகரீக இளைஞன், வேகம், துடிப்பு, நுனிநாக்கு ஆங்கிலம், பந்தாவாக பைக், ஐ-போன், ஐ.டி நிறுவன வேலை, ஏடிம் அட்டை, நண்பர்கள், வார இறுதிக் கொண்டாட்டங்கள் என்று வாழும் சராசரி ஐடி இளைஞன். வீடு, கார், வாங்க வேண்டும், பகட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஒரு சராசரி யப்பி இளைஞன்.

இந்த சம்பவம் குறித்து ரவியின் அலுவலகத்தில் அவனுக்கு எச்சரிக்கை கடிதம் தரப்பட்டது. ‘சொந்த விஷயங்கள் அலுவலக மதிப்பை கெடுக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், அது எல்லாருக்கும் தெரியும் வண்ணம் இருக்கக் கூடாது’ என்று வலியுறுத்தப்பட்டது. ‘இனிமேல் இதை மீறினால் அப்ரைசலுக்கு கேடு வரும்’ என்றும் அவன் மேலாளர் எச்சரித்தார். அப்ரைசல் என்ற பணி மதிப்பீடுதான் ஒவ்வொருவரும் வேலையை தக்க வைத்துக் கொள்வதையும், பதவி உயர்வு பெறுவதையும் தீர்மானிக்கும் வருடாந்திர ஏவுகணை.

இந்த விவகாரம் பற்றிய வம்பளப்புகள் முடிவதற்குள்ளாகவே ரவி, அலுவலகத்தில் வேலை பார்த்த கேரளப் பெண்ணான வினு வர்கிஸ் உடன் பழக ஆரம்பித்திருந்தான். பைக்கில் ஊர் சுற்றுவது, வெளி இடங்களுக்குப் போவது, விடுமுறை நாட்களில் வேலை இருந்தாலும் இருவரும் சேர்ந்து தான் வேலை செய்வது என்று அவர்களின் இடையே இருந்த உறவு வலுவாக வளர்ந்தது.

ஒரு சிரியன் கிருஸ்துவ பெண்ணான வினுவை காதலித்தால் கிருஸ்துவ மதத்திற்கு மாறினால் தான் திருமணம் என்பதைத் தெரிந்தும் பழகும் ரவியின் காதலை நினைத்து பலர் ஆச்சரியப்பட்டார்கள்.

ஒரு நாள், ரவியும், வினுவும் சேர்ந்தே வினுவின் திருமணப் பத்திரிகையை அலுவலகத்தில் கொடுக்க ஆரம்பித்தாள். அதில் மணமகன் ரவி இல்லை, அவள் மதத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் இருந்தது. ரவியும் திருமணத்துக்கு கேரளா சென்று வந்தான்.

சில மாதங்களுக்குப் பிறகு, ரவி அவன் டீமுக்கு புதிதாக வந்த சவீதாவிடம் பழக ஆரம்பித்தான். அவளும் இவனைப்போல ஒரு மீடியா டெவலப்பர், இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். நான்கு மாதம் கழித்து ஏற்கனவே மூன்று காதல் நாடகங்களில் ஹீரோவாக இருந்த ரவி, இறுதியில் சவீதாவை திருமணம் செய்து கொண்டான்.

பவித்ராவுக்கு முன் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு, அது முடிவுக்கு வரும் அதே நாளில் பவித்ராவுக்கு ரூட் போடுகிறான் ரவி. ‘பவித்ரா ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர், நல்ல சம்பாத்தியம்’ என்ற கணக்கில் காதலில் இறங்குகிறான். முந்தைய காதல் தோல்வி அடையும் அன்றே அவளிடம் பழக முற்படும் போது கேள்விகள் எதுவும் இன்றி ‘தனக்கும் ஒரு பாய் பிரண்டு வேண்டும்’ என்ற பியர் பிரஷர்க்கு ஆட்பட்டு நட்பை வளர்த்து கொள்கிறாள் பவித்ரா. பியர் பிரஷர் எனப்படும் நட்பு வட்ட அழுத்தம்தான் ஐடி துறையில் ஆண்களையும் பெண்களையும் இயக்கிச் செல்லும் வலிமையான உந்துசக்தி.

மேலும் ‘அவன் குடும்பத்துக்கு ஏற்ற தலையாட்டியாக இருப்பான்’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உறவை முடிவு செய்கிறாள். ஆனால், அவள் படிப்பு, வேலை, சம்பளம், பொதுவிலே அவளிடம் உள்ள மேலாதிக்க குணம் ரவியை பவித்ராவிடமிருந்து தனிமைப்பட வைக்கிறது. இவளைவிட அழகாக இருக்கும் வினுவிடம் அவனுடைய ஆர்வம் திரும்புகிறது.

ரவி ஒரு பெண்ணை பைக்கில் ஏற்றி சென்றதற்காகவா அவனை வெறுத்து வேண்டாம் என்று பவித்ரா சொன்னாள்? ‘அவளுடைய தகுதிக்கு எந்தவிதத்திலும் ஏற்றவன் அவன் இல்லை’ என்று தெரிந்தும் காதலை ஏதோ பிச்சையாக போட்டதாக நினைத்த அவள், ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர், யு.எஸ் ரிடன் மாப்பிள்ளை வாய்ப்பு ஏற்பட்டதும் ரவியை தூக்கி எறிய, கிடைத்த காரணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள்.

பவித்ரா போட்ட சண்டை அநாகரிகமானதாக இருந்தும் அதை நிறுத்த ரவியின் நண்பர்கர் வரவில்லை, மாறாக விரும்பத்தகாத நிகழ்விலிருந்து விலகி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

அலுவலகத்துக்கும் வேலைக்கும் தொடர்பே இல்லாத இடத்தில நடந்த சம்பவம் நிறுவன ஒழுக்கத்தையே கெடுக்கிறது என்கிறார் ரவியின் மேலாளர். ‘தவறு, குழப்பம், கள்ள உறவு, பாலியல் அத்துமீறல் எல்லாம் செய்யுங்கள் ஆனால் அவை வெளியில் வராமல் பார்த்து கொள்ளுங்கள். கள்ள உறவு இருந்தாலும் அவை ஆபீசின் நல்லொழுக்க விதிகளை கெடுக்கா வண்ணம் இருந்தால் பரவாயில்லை’ என்பதே நிறுவனக் கொள்கை. அதன் அடிப்படையில் ரவிக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்படுகிறது.

ரவியும், வினுவும் நெருக்கமாக பழகினாலும், ஒரு சிரியன் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்ணை விரும்ப முடிந்த ரவியினால், திருமணம் முடிப்பதற்கு போராடும் தைரியம் இல்லை, மதம் மாறி அவளை மணக்கும் ‘தியாக’ உணர்வும் இல்லை. வினுவும் நெருக்கமாக பழகிய பிறகும் காரியவாதியாக இருக்கிறாள், மதத்தை விட்டுக் கொடுக்கும் எண்ணமோ, போராடும் உணர்வோ அற்றவளாக இருக்கிறாள். ‘பழகற வரைக்கும் பழகுவோம். எல்லாம் ஒரு ஜாலி, நேரத்தை சந்தோஷமா செலவழிக்க ஒரு வழி, அவ்வளவே!!’

ரவியை வேண்டாம் என்று ஒதுக்கிய பவித்ராவுக்கும், தானாகவே ஒதுங்கிய வினுவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதில் யாருடைய உணர்வும் உண்மையானது இல்லை.  மாறாக தேர்ந்த சதித்தனங்களும், துரோகங்களும் விருப்பத்துடன் அரங்கேறுகின்றன.

உற்றார், வீடு, வாசல், மதம், சாதி என்று எல்லாம் துறந்து காதல்தான் பெரியது என்று நினைத்தால்தான் கலப்பு மணம் நடக்க முடியும். ஆனால் ஐடி துறை காதல் என்பது சம்பளக் காசு, படிப்பு, வெளிநாட்டு வேலை, மதம், கார், வீடு, சொத்து, ஈகோ, சாதி என்று அனைத்து போலித் தனங்களாலும் வழி நடத்தப்பட்டு உருவாக்கப்படுகிறது.

எல்லா நதிகளும் இறுதியில் கடலை சென்று கலப்பதுபோல, ரவியும் சவிதாவும் திருமணம் செய்து கொள்வது சடங்குத் தனமானதே! மாடர்ன் பெண்ணாக, அவனைப் போல அதே மீடியா வேலையில், ஒரே சாதியை சேர்ந்தவளாக சேர்த்து அமைந்ததும், இலட்சியக் கனவினை எட்டிய நிறைவில் ரவி தன் காதல் நாடகங்களுக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்து வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்குள் கால் எடுத்து வைத்திருக்கிறான்.

இந்த காதல் கதையில் எல்லா ஜோடிகளும் தங்களின் காரியவாத பாதையில் ஜெயித்துவிட்டார்கள். காதல் தோற்றுப் போவதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

____________

* உண்மைச் சம்பவம். பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

___________________________________

– ஜென்னி
___________________________________

நீங்கள் பாலியல் குற்றவாளியா?

பாலியல் வன்முறை : அந்தரங்கத்தின் அவலம்!மனிதர்கள் சீக்கிரமே தூங்கிவிடும் குளிர்கால இரவுகளில் தெரு நாய்களுக்கு மட்டும் உறக்கம் வராது. எலும்பும் தோலுமாய்ப் பரிதாபமாயிருக்கும் ஒரு பெண் நாயைச் சுற்றி அதே அளவு பரிதாபத்துடனும், ஏக்கத்துடனும் ஆண் நாய்கள் துரத்தி ஓடும். நள்ளிரவின் இடுக்குகளிலிருந்து எழும் ஊளையும், கத்தலும், சண்டையும், காயமுமாய் அந்த இரவு வழக்கமாய் முடியும்.

அந்தக் காட்சியை எரிச்சலும் வேடிக்கையுமாய்ப் பார்க்கும் மனிதர்களும் முன்னொரு காலத்தில் அப்படித்தான் இருந்தார்கள். குரங்கிலிருந்து ஆதிகால மனிதன் உருவெடுக்கும்போது பாலுறவுக்காகச் சண்டையிடும் வன்முறை அவனது உயிரியல் தேவையாக இருந்தது.

தான் வாழ தன் சமூகமும், கூட்டு உழைப்பும் அவசியம் என்பதை மனிதன் மெல்ல மெல்ல உணர்ந்தபோதுதான் இந்த வகையிலான வன்முறை மங்கத் துவங்கியது. ஆனால் மங்கிய அந்த வன்முறை வேகமாக வளருவதைக் கீழ்க்கண்ட சம்பவங்கள் தெரிவிக்கின்றன.

மயிலாடுதுறையின் மாணவி தேவி சக மாணவன் அருண்குமாரால் கொல்லப்பட்டாள்; இலங்கையிலிருந்து மதுரையில் படித்து வந்த மாணவி மயூரணி, பால பிரசன்னா என்ற மாணவனால் கொல்லப்பட்டாள்; குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஜீனிகுமாரி, ஜோன்ஸ் எனும் இளைஞன் வீசிய அமில வீச்சால் முகம் சிதைந்து மருத்துவமனையில் படுக்கையிலிருக்கிறாள்; அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி சித்ரா தன் வயதினை ஒத்த இரு மாணவர்களால் உயிரைத் துறந்திருக்கிறாள்; உ.பி. மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 25 வயது மதுமிதா, மந்திரி திரிபாதியின் கூலிப்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாள்.

இந்தப் பெண்கள் காதலுக்காக, காதலிக்க மறுத்ததற்காக, காமத்திற்காக, காமவெறியர்களுக்காகச் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதனின் மென்மையான உணர்வு என்று கூறப்படும் பாலுணர்வின் பெயரால்தான் இந்தப் பலிகள் தொடருகின்றன. எனில், மனிதன் மீண்டும் விலங்கு நிலைக்குத் திரும்புகிறானா?

இல்லை, வரலாறு ஒருபோதும் மீண்டும் திரும்ப முடியாது. விலங்கு நிலைக்குத் திரும்ப முடியாத மனிதன் முன்னேறும் தன் மனித நிலை குறித்துத் தெரியாமலும் திகைக்கிறான். அன்று இயற்கையின் பேரழிவுகளைக் கண்டு கலங்கிய மனித இனம் இன்று இயற்கையைப் புரிந்து கொண்டு கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றுவிட்டதால் அத்தகைய அச்சம் இல்லை. ஆனால் மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வான உறவுகளை உருவாக்கியிருக்கும் சமூகம் எனும் செயற்கை, வாழ்க்கை குறித்த பேரதிர்ச்சியைத் திறந்து விட்டிருக்கிறது.

இயற்கையை விட இந்தச் செயற்கையான சமூகமும் அதன் சந்தை விதிகளும்தோற்றுவித்திருக்கும் அச்சமும், பீதியும், குழப்பமும், விரக்தியும் மிக அதிகம். ஆதலால் அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகளில் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியிருக்கும் மனிதன் தனது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக, இன்னமும் தனது ஆரம்பகால கண்டுபிடிப்புகளானமதம், கடவுள், வாஸ்து, இராசிபலன் இன்னபிற மாயைகளில் சரணடைகிறான். இந்த மாயைகளில் பாலுணர்வு குறித்த புதிரும் – கவர்ச்சியும் கனவும் நனவும் நிறைந்த குழப்பமும் உண்டு. மேலும் ஒரு இயற்கையான உயிரினத் தூண்டுதலாக இருப்பதால் அது ஒரு யதார்த்தமான பிரச்சினையாகவும் இருக்கிறது.

ஆக, சமூக உறவுகளில் தனிமைப்பட்டு வரும் விளைவாக, மனிதன் தனது பாலுணர்விலும் அன்னியமாகி வருகிறான். இன்றைய ஆணுக்கும், பெண்ணுக்கும் பாலுணர்வு என்பது அவ்வப்போது மகிழ்ச்சியைத் தந்தாலும் எப்போதும் தொந்தரவாகவும், புதிராகவும், விடை கிடைக்காத இரகசியமாகவும் இருக்கிறது. எனவே இந்தப் பிரச்சினை வர்க்கங்களால் பிளவுண்டிருக்கும் சமூகப் பிரச்சினை போல இன்னமும் தீர்க்கப்படவில்லை. அதுவரை மனித சமூகம் தன்னில் சிலரை, முக்கியமாக பெண்களைத் தீர்த்துக் கட்டி வருகிறது.

இந்தக் கொலைகளை வன்முறை குறித்த ஏனைய செய்திகளில் பத்தோடு பதினொன்றாய் நீங்கள் கருதலாம். நாள்தோறும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இவை சாதாரணமாகவும் தோன்றலாம். இக்கொலைகளில் சில மனச்சிதைவு காரணமாய் நடந்தாலும், பல இயல்பாகத் திட்டமிட்டு, எந்தப் பதட்டமுமின்றியே நடக்கின்றன. மேலும் இத்தகைய மனப்போக்கு வன்முறையாளர்களின் நடவடிக்கையாக மட்டுமல்ல, அவற்றின் பார்வையாளர்களாகிய நம்மிடமும் எழத் தொடங்கியிருக்கிறது. சாதி மதக் கலவரங்களில் ஒரு சில கும்பல்கள்தான் ஈடுபடுகின்றன என்றாலும் அந்த ஈடுபாட்டுக்கு கலவரக்காரர்களின் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களின் அமைதியான அங்கீகாரம் உதவுவது போல, அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் ஆண்களிடம் பெரிய அளவு அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை.

அருண்குமார் சொன்னது போல மற்ற ஆண்களிடம் பேசுவதை மாணவி தேவி தவிர்த்திருக்கலாமே என்பதும், மாணவி மயூரணி குளித்து உடைமாற்றுவதைப் பார்த்த சோலைமலைத் தேவராக மாறி, வாசகன் ஒரு கணம் கற்பனை செய்வதும், லக்னோவின் உயர்குடியினரிடம் பழகி முன்னேற நினைத்த மதுமிதாவைப் போல நமக்கும் ஒருத்தி கிடைக்கமாட்டாளா என்று ஏங்குவதும் என ஆண்களின் எதிர்வினை பலரகமாக உள்ளது.

திருட விரும்பாதவன், கொள்ளையடிக்கத் துணிவற்றவன், லாட்டரிச் சீட்டு வாங்குவது போல, கற்பழித்துப் போலீசிடம் மாட்டாமல் ஏறத்தாழ அதையே சட்டபூர்வமாகச் செய்வது எப்படி என்று சிந்திக்க ஆரம்பிக்கின்றனர். அதிலும் பலவீனமும், தடுமாற்றமும் உள்ள நபர்கள் பாலியல் வன்முறைக்கு விரைவிலேயே தயாராகி விடுகிறார்கள்.

இப்படித்தான் பாலியல் உணர்வுக்கும், வக்கிரத்துக்கும் உள்ள எல்லைக்கோடு பிரித்தறிய முடியாதபடி மங்கி வருகிறது. ஆணின் இச்சையைத் தீர்ப்பதும், அதற்கென தன்னை அழகுபடுத்துவதன் மூலமே வாழ முடியும் என்றாகிப் போன பெண்கள்தான் இச்சமூகத் துயரத்தின் பலிகடாக்கள். பெண்டாளுவதே தம் தகுதியாகக் கருதிக் கொள்ளும் ஆண்கள் இந்த அவலத்தின் அம்புகளாகவும் போனார்கள். இன்றைய சமூக அமைப்பைக் கட்டிக் காத்து வரும் ஆளும் வர்க்கம் நம்மை விரும்பியபடி பயன்படுகிற பலவீனமான அம்புகளாக நாம் ஏன் மாறினோம் என்பதை இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.

பாலியல் காமாலை: பத்திரிகைகள் பரப்பும் நோய்!

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!உலகில் வேறெங்குமில்லாதபடி மதம், சாதியின் பெயரால் மக்களை தனித்தனித் தீவுகளாக்கிய பார்ப்பனியம் கூடவே ஆண்களையும் – பெண்களையும் இருவேறு இனங்களைப் போலப் பிரித்தே வைத்திருக்கிறது. இரு நூறாண்டுகளாய் இத்தகைய கேவலமான பாரம்பரியத்தைக் கொண்டு வாழும் நாம் பாலுணர்வு குறித்த குழப்பமும், திகிலும் எழுவதற்கு மிகவும் தோதாக இருக்கிறோம். கூடவே இன்றைக்கு நமது சிந்தனையை வளர்க்கும் அனைத்துத் தகவல் ஊடகங்களும் பாலுணர்வுப் புகை போட்டு நம்மைச் சாமியாட வைக்கின்றன.

பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களும், அவற்றின் உள்ளூர் ஏஜெண்டுகளும் வெளியிடும் தகவல்களில் பாலுணர்வு ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. குறிப்பாக எல்லாவகைச் செய்திகளும், தகவல்களும் ஏதோ ஒரு வகையில் பாலுணர்வு ரசனையைக் கொண்டு சுவையூட்டப் படுகின்றன. உதாரணமாக, இராக் மீதான அமெரிக்கப் போரில் சதாம் மகன் உதயைப் பற்றிய செய்திகளில் அவரது ஆடம்பர மாளிகை, நீச்சல் குளம், நீலப்படங்கள், காதலிகளின் கதை ஆகியவை தவறாமல் பத்திரிகைகளில் இடம் பெற்றன. புதிய பரபரப்புக்கள் ஏதும் சிக்காத நேரங்களில் பத்திரிகைகளின் பரபரப்புத் தேவையைத் தணித்து வற்றாத பண வருவாயைத் தருவதாகப் பாலுணர்வுச் செய்திகள் இருக்கின்றன.

கேவலத்திற்குப் பெயர்பெற்ற இங்கிலாந்தின் சன்பத்திரிகையின் தரமும் வடிவமைப்பும் கொண்ட தினமலர்தமிழ் நாளிதழ்களின் விபச்சாரத் தரகு வேலைகளுக்கு ஒரு முன்னோடியாகும். சரிகா ஷாவின் கொலை குறித்த கவலை தோய்ந்த பத்திகளுக்கருகே, இணைய தளத்தில் ஒரு ஜோடியின் முதலிரவை நேரடியாகப் பார்க்கலாம் என்ற செய்தியையும், முகவரியையும், தேதியையும் தினமலர் குறிப்பிட்டிருந்தது.

மக்கள் நாளிதழானதினத்தந்தியின் 2,3-ஆம் பக்கத்தில் கள்ளக்காதல் என்ற தலைப்பு நிரந்தரமாய் இடம்பெறும். முதலில், படிக்கப்படும் இச்செய்தி மக்களின் வாசிப்பு முறையையே மாற்றிவிட்டது. தேவி, ராணி போன்ற குடும்ப வாராந்திரப் பத்திரிக்கைகளில் பரிசு பெறும் குடும்பக் கதைகளின் கடிதங்கள் தவறாமல் இடம்பெறும். கள்ள உறவினால் சீரழிந்து போன குடும்பப் பெண்களின் விதவிதமான கதைகள், இவ்விதழ்களைப் படிக்கும் கீழ்த்தட்டு நடுத்தரப் பெண்களுக்கு மனப்பாடமாயிருக்கிறது. இதையே பாலியல் கல்வி என்ற பெயரில் அவள் விகடனும், குமுதம் சிநேகிதியும் சற்றுப் படித்த பெண்களிடம் கொண்டு செல்கின்றன.

வக்கிரங்களையே புதிய கோணங்களில் சொல்வதிலும், வடிவமைப்பதிலும் கைதேர்ந்த மதனின் பாணியில் உருவான ஜூனியர் விகடன், வார இதழ்களின் காமசூத்திரமாகும். சரசுவாகிய நான்எனும் தொடர் அதற்கு இலக்கணம். கள்ளச் சாராயம் விற்று இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., எம்.எல்.ஏ. மந்திரியுடன் படுத்து, சாராயம் காய்ச்சி, எரிசாராயம் கடத்தி, போட்டியாளர்களைக் கொன்று பரிணாம வளர்ச்சியில் சாதனை படைத்த சரசுவின் கதை முடிந்தவுடன் சரசக்கா எங்கேஎன்று வாசகர்கள் தவித்த தவிப்பை வாசகர் கடிதங்கள் காட்டுகின்றன.

ஜூ.வி.யின் பலான பளபளப்புக்கிணையாகப் போட்டியிட இயலாத நக்கீரன் கண்டுபிடித்த ஒரு வழி நடிகையின் கதைகள்’. எல்லா நடிகைகளின் கதையும் ஒரே மாதிரியாக இருந்தாலும் வாசகருக்குச் சலிப்பதில்லை. எந்தெந்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எந்த நடிகையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்களுடைய ரசனை எல்லாம் வாசகருக்கு மனப்பாடம்!

சுஜாதாவின் ஏன், எதற்கு, எப்படியில் பலான செய்திகளும்’, படங்களும் யாரும் எதிர்பாராத கேள்விகளுக்கு விடையாய் வரும். பெண்களின் பின்புறம் பெரிதாக இருப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு அதை விளக்கும் வண்ணம் முக்கால் பக்கத்தில் நீச்சல் உடை பெண்ணின் பின்புறம் அடைத்திருக்கிறது. பிரமிடு பற்றிய கேள்விக்கு பிரா அணிந்த பெண்ணை படுக்க வைத்திருக்கிறார்கள். பெண்ணுடம்பு குறித்த வக்கிரமான பிம்பங்கள் அறிவியலின் பெயரால் நம்மிடம் செருகப்படுகின்றன.

இந்தியா டுடேயின் கனவுலகத் தேவதை ஐஸ்வர்யா ராய்கட்டுரைக்கு கடிதம் எழுதிய ஒரு வாசகர், “”ஐஸ் ஒருவேளை ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்தால் பாண்ட் ஐஸின் உதடுகளைக் கவ்வியிழுப்பார். பாலிவுட்டில் இமேஜ் சரிந்து போகுமே’’ என்று கவலைப்படுகிறார். மாறிவரும் செக்ஸ் உணர்வுகள், குடும்பப் பெண்களின் பாலியல் புரட்சி முதலான தலைப்புக்களில் இந்தியா டுடே, அவுட்லுக் இதழ்களில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஆய்வுக்கட்டுரைவரும். மேட்டுக்குடி மற்றும் மாதச் சம்பள பிரிவினரிடையே இயல்பான கள்ள உறவைக் கட்டியமைப்பது எப்படி எனும் நடைமுறைப் பாடங்கள் இவற்றில் கற்றுத் தரப்படுகின்றன.

குமுதம் அட்டை டூஅட்டை காமக்கலையில் ஒரு அமுதசுரபி. சமீபத்திய இதழொன்றில் இணையத்தில் வக்கிரங்களை அரங்கேற்றிய டாக்டர் பிரகாஷ் வழக்கில் சாட்சியாக இருக்கும் சித்ராவின் பேட்டி ஒன்றைப் போட்டிருந்தார்கள். செய்திகளின் பரப்பளவை விட சித்ராவின் படம் பெரிது. யார் இந்த சித்ரா என்பதை நினைவுபடுத்த ஒரு ஃபிளாஷ்பேக் – அதில், சித்ரா டாக்டருடன் அறிமுகமாகி, பிக்னிக் சென்று, படுக்கையில் துணியில்லாமல் படமெடுக்கப்பட்டது எல்லாம் விலாவரியாக வருகிறது. தன்னை போலீசு துன்புறுத்துவதைத் தெரிவிக்க வந்த சித்ரா குமுதம் மீண்டும் ஒருமுறை தன்னைத் துகிலுரியும் என அறிந்திருந்தால் பேசவே மறுத்திருப்பார். வாசகர்களுக்கு சித்ராவின் கதை என்ற பெயரில் டாக்டரின் கதை கிளுகிளுப்புடன் நினைவுபடுத்தப்பட்டு விட்டது.

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!எந்த ஒரு பிரச்சினையின் தீவிரத்தையும் நகைச்சுவையின் பெயரால் சகஜமாக்குவது ஆனந்த விகடன் பாணி. பழுதடைந்த காரின் கீழே ஒரு பெண் படுத்திருக்கிறாள். அவள் மார்பு காரைத் தூக்கி நிறுத்தும் ஜாக்கி போல உணர்த்தப்படுகிறது. வசனம், “”அடுத்த முறை காருக்கு ஜாக்கி கொண்டு வரலேன்னா, உங்களை என்ன செய்யிறேன் பாருங்க!’’ ஒருஇதழில் ஷகிலாவின் படம் பார்க்கும் அனுபவத்தை நடிகர் கலாபவன் மணியின் மூலம் அபிநயங்களாக, அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள். ஷகிலா படங்களைப் பார்ப்பது இனிமேலும் ஒரு கூச்சப்படவேண்டிய விசயமல்ல என்பதாக வாசகர்கள் உணருகிறார்கள்.

அதே உணர்வை அரி – கிரி அசெம்ளியின் ஷகிலா பேட்டியும் தருகிறது. ஷகிலா படத்தை ஒதுக்குப்புறமாக இருக்கும் திரையரங்குகளில் பயந்து பதுங்கிப் பார்க்கும் அவலத்தை மாற்றி சன் டி.வி.யின் மலையாளச் சானல் வாரம்தோறும் திரையிடுகிறது. ஷகிலாவைக் கேள்விப்பட்டிராதவர்கள் கூட ரசிகர்களாகி அந்த ஒருநாள் நள்ளிரவுத் தருணங்களுக்காக வாரம் முழுவதும் காத்திருக்கிறார்கள்.

இதுபோக, இணையத்தளம், செல்போனின் எஸ்.எம்.எஸ். போன்ற அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியின் சாதனைகளும் பாலுணர்வின் மையங்களாகி விட்டன. இணையத்தில் எந்தத் தலைப்பு அதிகம் பார்க்கப்படுகிறது என்பதன் அளவுகோல் செக்ஸ். போருக்கு எதிரான உலக மக்களின் கருத்தை சர்வே செய்துவிட்டு செக்ஸ்க்கு அடுத்தபடியாக இராக் போர் பற்றிய செய்திகள் அதிகம் பார்க்கப்பட்டன என்று மதிப்பிடுகிறார்கள்.

எஸ்.எம்.எஸ்.இன் 90 சதவீதப் பயன்பாடு காதல், காமம், கள்ள உறவுக்கே பயன்படுகிறது. இலக்கிய ரசிகர்களுக்கு விரக தாபத்தை காவிய உணர்ச்சியாய்ச் சித்தரிக்கும் சாண்டில்யன், ஜானகிராமன், பாலகுமாரன், சாரு நிவேதிதா போன்ற ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். ஷகிலாவைப் பார்த்து சட்டென்று உணர்வு கொள்ளும் பாமரர்களைப் போலன்றி சற்று தாமதமாக, கலைநயத்துடன் கிளர்ச்சியடைவது இந்த ரசிகர்களின் கலைத்தரம்!

இப்பஐ நம்மைச் சுற்றியிருக்கும் தகவல் உலகிலிருந்து செக்ஸ் குறித்த செய்திகள், அந்தரங்கங்கள், கனவுகள், ஆசைகள், ஏக்கங்கள் நமது புலன்களினூடாக ஆயிரமாயிரம் வழிகளில் இறங்குகின்றது. இதற்கு நாம் ஆட்படுவதும், அடிபணிவதும் எவ்வாறு என்பதை உணர்த்தவே மேற்கண்ட உதாரணங்களைப் பார்த்தோம். இந்தச் சரணடைவுக்கான அடிப்படை பொதுவில் ஒரு தனி மனிதனின் பாலியல் உணர்வுக்கும் அதைக் கட்டுப்படுத்தும் சமூக நியதிகளுக்குமுள்ள முரண்பாட்டில் இருக்கிறது. இதைக் கேடாகப் பயன்படுத்தி ஊதிப் பெருக்குகின்றன பத்திரிகைகள்.

50ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் அட்டையில் “”என் டீச்சர்தான், எனக்கு மட்டும்தான் – மாணவர்களின் காதல் சடுகுடு’’ என்று எதிர்பார்க்க முடியாத தலைப்பும். படமும் இன்று ஜூனியர் விகடனில் வருகிறது. பத்திரிக்கைகளில் மக்கள் மீதான பொறுப்புணர்வு, எவ்வளவுக்கு இலாபகரமாக இயங்க முடியும் என்பதிலிருந்தே தீர்மானிக்கப்படுகிறது. மக்களை உணர்ச்சியுடன் ஒன்ற வைப்பதில்தான் அந்த இலாபம் பிறக்க முடியும் என்பதால், வேறு எந்தச் செய்திகளையும் விட பாலுணர்வுச் செய்திகள் பத்திரிக்கைகளுக்கு கை கொடுக்கின்றன.

சாதி, மதம், இனம், மொழி, வர்க்க வேறுபாடு குறித்த செய்திகளின் நியாயத்தை அந்தந்தப் பிரிவு மக்களின் நலனிலிருந்து சரி – தவறு என்று பிரித்துப் பார்க்க முடியும். ஆனால் எல்லாப் பிரிவு மக்களையும் கடந்து நிலவும் ஆணாதிக்கம் காரணமாக பாலுணர்ச்சிச் செய்திகள் மட்டும் சமூக அக்கறையின்றி உணர்ச்சி வசப்படுத்துகின்றன. பாலுணர்வு குறித்த வரலாற்று ரீதியான குழப்பமும், நுகர்வுக் கலாச்சாரத்தின் முதன்மை அங்கமாக செக்ஸை ஆக்கியிருக்கும் உலகமயமாக்கமும், ஏற்கெனவே கோணலாயிருக்கும் நமது பாலுணர்வு குறித்த அரைகுறை அறிவை மேலும் பலவீனமாக்கியிருக்கின்றன.

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!

பாலுணர்வுத் தொழில் – ஒரு வருவாய்ச் சுரங்கம் !

பாலுணர்வுச் செய்திகளை மக்களிடம் சுடச் சுடக் கொண்டு போய்க் காசாக்கும் பத்திரிக்கைகளின் மற்றுமொரு வருவாய் பாலுணர்வுப் பொருட்களின் விளம்பரங்கள்.பாலுணர்வு முதலாளிகளும், பத்திரிக்கை முதலாளிகளும் ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுகிறார்கள். ஜூனியர் விகடனின் ஒவ்வொரு இதழிலும் நாட்டுப்புற செக்ஸ் வைத்தியர்களான சேலம் சிவராஜ் மற்றும் ஈரோடு குருராஜ் சித்த வைத்தியசாலைகளின் விளம்பரங்களும், நவீன ஆணுறையான கோஹினூரின் மோகத்தீ பரவட்டும்!என்ற விளம்பரமும் தவறாமல் இடம்பெறும். அதற்கு நன்றிக் கடனாய் ஜூ.வி.யும் தீயைப் பரப்பி வருகிறது. பாலுணர்வு குறித்த நேரடியான விளம்பரங்கள் மட்டுமல்ல, அதன் மறைமுக அம்சங்களை நடை, உடை, பாவனை, அழகு, அழகிப்போட்டி என்பவை நவநாகரீகம் என்ற பெயரில் உலகம் முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களின் விளம்பரங்களாய் வருகின்றன.

இத்தகைய தொழில்களை நடத்தும் முதலாளிகளுடன், சுற்றுலா, பாலுறவுச் சுற்றுலா, கேளிக்கைத் தலங்கள் முதலான தொழில்களும் அளப்பரிய வருவாயை அள்ளித் தருகின்றன. வேறு எந்தப் பொருளையும் – சேவையையும் விட இவை அதிகச் சிரமமின்றி விலை போகின்றன. எதிர்பாலினரைக் கவர்ந்தேயாக வேண்டும். அப்படிக் கவருவதற்கு இவையெல்லாம் தேவை என்பது இளைய சமுதாயத்தின் ஆளுமைப்பண்பாகவே மாறிவிட்டது.

கை நிறையச் சம்பளம் வாங்கும் இளைஞர்கள், திருமணப் பேச்செடுக்கும் பெற்றோரிடம் வலியுறுத்தும் முதன்மை விசயம் பெண் சிவப்பாக – அழகாக இருக்க வேண்டும்! தமிழனின் சராசரி நிறம் கருப்பு – மாநிறம் என்பது பல சுற்றுக்கள் முடிந்த பிறகே வேறு வழியின்றிப் புரிய வரும். கருப்பைச் சிவப்பாக்குவதாக ஒரு பொய்யைச் சொல்லியே ஃபேர் அண்ட் லவ்லி களிம்பு மட்டும் வருடத்திற்கு பல கோடி ரூபாய்க்கு விற்கிறது. இப்படி இல்லாத ஒரு அழகை ஆணும் பெண்ணும் கற்பனை செய்து ஏமாறுவது முதலாளிகளின் பலம்.

பாலுறவு குறித்த அறியாமையும், யதார்த்தமான பிரச்சினைகளையும் மர்மம் நிறைந்த சங்கதிகளாக்கி குழப்பத்தையும், அச்சத்தையும் உருவாக்கி, பாலுறவுப் பொருட்களைத் தள்ளுகிறார்கள். பாமரர்களுக்கு சிட்டுக்குருவி லேகியமும், தங்க பஸ்பமும், பணக்காரர்களுக்கு வயாக்ராவும் இப்படித்தான் சுலபமாக விலை போகின்றன. காந்தப் படுக்கையில் நீண்ட நேரம் உறவு கொள்ளலாம் என்று ஒரு பச்சைப் பொய்யைச் சொல்லி 2000 ரூபாய் மெத்தையை லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த ஜப்பான் காந்தப் படுக்கைமோசடியில் சிக்கிய இந்தியர்களின் பணம் 330 கோடி ரூபாய் என்றால் எதைச் சொல்லி அழ?

படித்துப் பதவியிலிருக்கும் பணக்கார வர்க்கம் தனது பாலுறவு இன்பத்தை சில நிமிடங்கள் நீட்டிப்பதற்கு சில லட்சங்கள் செலவழிப்பதும், தனது கருப்புப் பண வருவாயை நீட்டிக்க கட்டுக் கட்டாய்ப் போடுவதும் வேறு வேறல்ல. லஞ்சம், மோசடி, சூது, தரகு என எப்படியும் பணம் சம்பாதிக்கலாம் என்று சிந்திக்கும் மனிதர்களின் அறிவுதான் விதவிதமான பாலியல் வக்கிரங்களை அனுபவிக்க உயிரியல் விரோதமாகச் சிந்திப்பதற்கும் பயன்படுகிறது. இத்தகைய மனிதர்களே நீதிபதிகளாக, போலீசு அதிகாரிகளாக, மந்திரிகளாக, நடிகர்களாக, பத்திரிக்கை முதலாளிகளாக இருக்கும் போது அந்தச் சமூகத்தின் இயக்கம் எவ்வளவு வக்கிரமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சமூகப் பிரச்சினைகளின் அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் போலி நிவாரணியாக முன் வைக்கப்படும் பாலுறவின் கற்பனைகள் கண்ணோட்டத்திலிருந்தே அவலங்கள் பிறக்கின்றன. பத்திரிக்கைகளின் பாலுணர்வுக் கதைகளை இதயத்தில் வைத்து வதங்குபவர்களை, பாலுறவுப் பொருட்கள் – சேவைகளின் விளம்பரங்கள் மேலும் வதைக்கின்றன. தங்களது வருமானத்தின் ஒரு பகுதியை இதற்கென ஒதுக்கியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்கெனவே ரணமாயிருக்கும் மனத்தை மேலும் சிதைக்கிறது. பாலுறவுக்கென வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை விட, பாலுறவுக்கென உலகம் கருதும் தகுதிகள் தனக்குக் கிடைக்காமலேயே போய்விடுமோ என்ற அச்சம் பெரிதும் பிடித்தாட்டுகிறது. வாழ்க்கையில் எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்கு இத்தாழ்வு மனப்பான்மையில் கருவுற்று வன்முறை எண்ணத்தைச் சுலபமாகப் பிரசவிக்கிறது.

உடலையும், மனதையும் எல்லையற்ற நுகர்வியப் பண்பாட்டில் இழுத்துச் செல்லும் உலகமயமாக்கம், நமது ஆளுமையைத் தீர்மானிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. அந்த ஆளுமை “”நாம்’’ எனும் சமூகத்தின் பலத்தில் வாழும் மனிதனை, “”நான்’’ எனும் தனிமனிதவாதத்தில் வாழும் பலவீனமான மனிதனாக மாற்றுகிறது. புதிர் நிறைந்ததாக மாற்றப்பட்டிருக்கும் இன்றைய நவீன பாலுணர்வுக் கண்ணோட்டம் ஒரு மனிதனை எப்படிச் சிதைக்கிறது என்பதை இங்கே சுருக்கமாகப் பரிசீலிப்போம்.

அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம் !

கம்யூனிஸ்டுகள் பிரச்சினைகளை மேசையின் மேல் வைக்க வேண்டும்’’ என்பார் மாவோ. தோழர்கள் தங்கள் சுயபரிசீலனையின் போது வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்படிப் பேசாத வரை எந்தப் பிரச்சினையும் தீராது என்பதை விளக்கும் மாவோவின் கூற்று பலருக்கும் ஒரு சாதாரணமான விசயமாகத் தோன்றலாம். ஆனால் இன்றைய சமூக அமைப்பின் இயக்கம் காதும் காதும் வைத்தாற் போல இரகசியமாகவே செல்கிறது என்பதிலிருந்து வெளிப்படையாகப் பேசுவது சுலபமல்ல என்பது பலருக்குத் தெரிவதில்லை.

தனது போட்டி நிறுவனங்களை முடக்குவதற்கு பில்கேட்ஸ் செய்த வியாபாரச் சதிகள், இராக்கைத் தாக்குவதற்கு முன்பாக ஐ.நா.வை வைத்து அமெரிக்கா நடத்திய அரசியல் சதிகள், பி.எஸ்.என்.எல்.ஐ ஒழித்துத் தனியாரை வளர்ப்பதற்கு அருண்ஷோரி செய்த தரகுச் சதிகள், திவாலாவதற்கு முன்பாக என்ரான் நிறுவனம் காட்டிய கணக்குச் சதிகள், தேர்தல் சீட்டுக்களுக்காக கொள்கையின் பெயரில் பேரம் பேசும் ஓட்டுக் கட்சிச் சதிகள், கிரிக்கெட்டின் பரபரப்பை அறுவடை செய்ய வீரர்களை விலைபேசும் சூதாட்டச் சதிகள்… இப்படித்தான் முழு உலகையும் சதி, வஞ்சகம், மோசடி, பொய், துரோகம் முதலான இரகசிய நடவடிக்கைகளை வைத்து முதலாளித்துவச் சமூகம் இயங்குகிறது. இதில் தேர்ச்சியடைபவர்களையே தொழில் மன்னன், அரசியல் இராஜதந்திரி, நிர்வாகப் புலி என்று அழைக்கிறார்கள். சமூகத்தின் சிறந்த ரோல் மாடல்களாகப் பத்திரிக்கைகளும் முன்னிறுத்துகின்றன.

6இவர்களைப் பற்றிய செய்திகளும் மக்களுக்கான நோக்கிலிருந்து மதிப்பிடப்படாமல், இரகசியக் கலைகளில் வல்லவர் யார் என்ற கருத்தே உருவாக்கப்படுகிறது. அதனால்தான் சந்திரசேகர், அமர்சிங், சோ, ஆர். வெங்கட்ராமன், அம்பானி, சங்கராச்சாரி போன்ற அப்பட்டமான அரசியல் – தொழில் – ஆன்மீகத் தரகர்களெல்லாம் மரியாதைக்குரிய பெரிய மனிதர்களாக உலவ முடிகிறது. இதற்குப் பொருத்தமாக பத்திரிகைகளும் அரசியல் செய்திகளை கொள்கை, கோட்பாடு, மக்கள் நிலையிலிருந்து எழுதாமல் கிசுகிசு பாணியில் புனைகிறார்கள். இன்றைக்கு அரசியல் செய்திகளை அறிய கழுகு, சங்கர்லால், வம்பானந்தா போன்ற ஆய்வாளர்களின்ஆய்வுகளைத்தான் மக்கள் படிக்கின்றனர்.

இப்பஐ, சமூக இயக்கத்தில் சமூக விரோதமாக இருக்கும் இரகசியச் செயல்களிலிருந்தே அந்தரங்க விசயங்களை ரசனையுடன் நாடுவது ஒரு பண்பாகத் தோன்றுகிறது. இத்துடன் பாலுணர்வின் புதிர் சேரும்போது அதன் கவர்ச்சி இன்னும் பல மடங்கு பெருகுகிறது. அதனால்தான் முதலாளித்துவ அரசியல் உலகில் தமது எதிர்த்தரப்பினரை நிலைகுலைய வைக்க பாலுறவு இரகசியங்களை ஏவிவிடுவது ஒரு தந்திரமாக இருக்கிறது. கிளிண்டன் – மோனிகா லிவின்ஸ்கி விவகாரத்தின் போது எதிர்க்கட்சியாக இருந்த குடியரசுக் கட்சியினர் அமெரிக்க சமூகத்தில் மிகச் சாதாரணமாக இருக்கும் இந்தக் கள்ள உறவுப் பிரச்சினையை ஒரு மாபெரும் ஒழுக்கப் பிரச்சினை போல மாற்ற முயன்றனர். முதலில் சற்றுத் தடுமாறிய கிளிண்டனோ ஈராக் மீதான தாக்குதலைப் பயன்படுத்தி மோனிகா விவகாரத்தை மூடுவதற்கு முயன்றார். உலகமும் இராக்கை மறந்துவிட்டு வெள்ளை மாளிகையின் அந்தப்புர லீலைகளை இரசித்தது.

கிளிண்டன் ஒரு அமெரிக்க அதிபர் என்ற முறையில் உலக மக்களுக்கு எதிராகச் செய்த அத்துமீறல்களைப் பற்றிப் பேசாத தமிழ்ப் பத்திரிக்கைகளெல்லாம் அவர் மோனிகாவிற்குச் செய்த அத்துமீறல்களைப் பற்றி அட்டைப்படக் கட்டுரையில் இரசித்து எழுதின. மேலும் பிரபலமானவர்களின் பாலுறவுக் கதைகளுக்கு உலகு தழுவிய சந்தையிருப்பதால் டயானா, மைக்கேல் ஜாக்சன் போன்ற நட்சத்திரங்களின் தருணங்களுக்குப் பத்திரிக்கைகள் காத்திருக்கின்றன. இங்கேயும் இவை ஒரு மனிதனின் பாலுறவு ஒழுக்கம் குறித்துக் கூட விவாதிப்பதில்லை. டயானாவுடன் இன்பம் துய்த்த அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்ற ஆவலையே அதிகரிக்கின்றன. இப்படி அண்டை வீட்டின் அந்தரங்கத்திலிருந்து அரண்மனையின் அந்தப்புரம் வரை பாலுறவின் கதைகள், ஈடுபாட்டுடன் வாசிக்கப்படும் ரசனையின் முதல் இடத்தைப் பெறுகின்றன.

ஓட்டுக் கட்சிகளின் அரசியல் ஒழுக்கத்தையும், தலைவர்களின் பாலுறவு ஒழுக்கத்தையும் சம விகிதத்தில் கலந்து கவர்ச்சியான ஆபாசத்தில்அடுக்கு மொழியில் முழங்கும் தீப்பொறி ஆறுமுகம் (தற்போது அ.தி.மு.க.), வெற்றி கொண்டான், நன்னிலம் நடராசன் போன்ற பிரச்சார பீரங்கிகளே தி.மு.க.வின் பிரச்சார பலம். எல்லாக் கட்சியினரும் அணிதிரண்டு வரும் இப்பேச்சாளர்களின் தரத்திற்கும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட தி.மு.க.வின் அரசியல் தரத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. பெண்ணினமே கூனிக் குறுகும் வண்ணம் புரட்சித் தலைவியை வார்த்தைகளால் வருணித்த தீப்பொறியை அதே தலைவி அ.தி.மு.க.வில் அரவணைத்துக் கொண்டதும் இப்படித்தான். அரசியல் வேறுபாடு கடந்து இந்த ஆபாசப் பேச்சுக்களை மக்கள் ரசிப்பது தமிழக அரசியல் – ஒழுக்கத்தின் தரமாக இருக்கிறது.

அரசியலற்ற, சமூக நோக்கமற்ற கண்ணோட்டத்தை உருவாக்குவதில் பாலுறவுக் கண்ணோட்டம் பாரிய பங்கை ஆற்றுகிறது. இது பொது வாழ்க்கை குறித்த ஒரு தனிநபரின் கண்ணோட்டம் மட்டுமல்ல. குடும்பம், உறவினர், அண்டை அயலார், நண்பர்கள் ஆகியோருடன் உறவு கொள்ளும் ஒரு சொந்த வாழ்க்கைக் கண்ணோட்டமாகவும் வினையாற்றுகிறது. சக மனிதர்களுடன் எழும் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பாலியல் பிரச்சினைகளாகத் திரிப்பதற்கு இன்றைய சமூக அமைப்பு மட்டுமல்ல, வரலாற்று ரீதியாகவும் ஒரு காரணம் இருக்கிறது.

வரலாற்றின் ஆரம்பத்தில் குழந்தைகளைப் பெற்றுத் தரும் பெண் மனிதர்களை உற்பத்தி செய்யும் ஒரு சொத்தாகக் கருதப்பட்டாள். இந்தச் சொத்தை அழித்தால் ஒரு குலம் அழியும், கைப்பற்றும் குலம் வளரும் என்று தொடங்கியது வரலாறு. பின்னர் நிலவுடைமைக் காலத்தில் குறிப்பிட்ட ஆணின் சொத்தை அவனது ஆண் வாரிசுகளுக்கு மட்டும் மாற்றித்தரும் கற்புள்ளசொத்தாக பெண் மாற்றப்பட்டாள்.

அப்புறம், ஒரு ஆணின், குடும்பத்தின், சாதியின், மதத்தின் கௌரவமாக, இனத்தூய்மையாக, கலப்பற்ற இரத்தமாக, பெண் மாறினாள். ஒரு பெண் கற்பழிக்கப்படும் போது இந்த இனத்தூய்மை அழிகிறது; தனது சாதி இரத்தத்தை எதிர்ச் சாதியில் நுழைக்க முடிகிறது; முடிவில், எதிர்ப்பிரிவு ஆண்களை நிலைகுலைய வைக்கவும் செய்கிறது.

அன்று தோற்றுப்போன இராஜபுத்திரர்களின் இனத் தூய்மையைக் காப்பாற்றவே அக்குலப் பெண்கள் கும்பலாகக் கொளுத்தப்பட்டார்கள். அதற்கும் முன்பு, ஒரு சலவைத் தொழிலாளி சீதையின் கற்பைக் கேள்விக்குள்ளாக்கினான் என்பதற்கு சீதையை உயிரோடு கொளுத்தினான் இராமன். ‘மேல்’ சாதிப் பெண்களுக்கும் ‘கீழ்’ சாதி ஆண்களுக்கும் கள்ள உறவில் பிறந்தவர்களை சூத்திரர்கள் என்று பார்ப்பனியம் ஒதுக்கியது. சில முசுலீம் இளைஞர்கள் இந்துப் பெண்களைக் காதலித்து மணம் செய்ததற்காகப் பல கலவரங்களை இந்துமதவெறியர்கள் நடத்தியிருக்கிறார்கள்.

இன்றும் கள்ளக் காதல்விவகாரங்களில் சமூகம் கேலி செய்யுமோ என்ற அச்சமும், அவமான உணர்வும்தான் ஒரு ஆணை கொலை செய்ய வைக்கிறது. பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலுணர்வு ஒழுக்கம் குறித்த அச்சம் ஒரு ஆணுக்கு கௌரவக் குறைவாகவும், பெண்ணுக்கு வாழ்க்கைப் பிரச்சினையாகவும் ஆகி விடுகிறது. ஒரு பிரச்சினையை சமூகத் தளத்தில் வைத்து யதார்த்தமாகச் சந்திக்கத் துணிவின்றி, தப்பித்துக் கொள்வதற்கு ஒரு சுலபமான ஆயுதமாகவும் இது இருக்கிறது. இதையே கண், காது, மூக்கு வைத்து பேசும்போது ஒரு சுவராசியமான பொழுதுபோக்காகவும் மாறி விடுகிறது. இதனால் இறுக்கமான சாதியச் சமூகமாக வாழும் நம் மக்களிடையே பாலுறவு குறித்த கிசுகிசுக்கள் – அவதூறுகளின் பாதிப்பு அதிகம் என்பது கூடுதலான சோகம்.

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!முக்கியமாக, பேசப்படும் ஒவ்வொரு அந்தரங்க விசயங்களிலும் ஒரு பெண்ணே அதிகமும் பாதிக்கப்படுவதால் பல பாலியல் வன்முறைகள் குற்றங்களாகப் பதிவு செய்யப்படுவதில்லை. உயர் பதவிகளில் திறமையினாலும், நேர்மையினாலும் பெயரெடுக்கும் பெண்களை ஒழுக்கமற்றவள் என்ற ஒரு சொல் முடக்கி விடுகிறது. மனைவி நடத்தை கெட்டவள் என்று வரும் மொட்டைக் கடுதாசி கூட ஒரு கணவனை நடைப் பிணமாக்கி விடுகிறது; மனைவிக்கோ வாழ்க்கையே முடிந்தது போல் ஆகிறது. பாலியல் பிரச்சினைகள், வன்முறைச் செய்திகளை வெளியிடவும், வெளியிடாமல் இருப்பதற்கும் போலீசுக்கும் – பத்திரிக்கை நிருபர்களுக்கும் பணம் தரப்படுகிறது.

மொத்தத்தில் பாலியல் செய்திகள், கதைகள், வன்முறைகள், கிசுகிசுக்கள், வதந்திகள் ஒரு மாபெரும் பொழுதுபோக்கு இரசனையை மக்களிடம் உருவாக்கியிருக்கின்றன. இந்த அபாயகரமான இரசனை இத்துடன் மட்டும் முடிவதில்லை. பல துறைகளையும் வேறு வேறு அளவுகளில் பிடித்தாட்டத்தான் செய்கிறது.

எல்லாத் துறைகளையும் இந்தக் கிசுகிசு ரசனை கவ்வியிருப்பதன் காரணம் நமது சமூகத்திலிருக்கும் ஜனநாயகமற்ற உறவுகள்தான். கணவனுக்கு மனைவி அடிமை, பெற்றோருக்கு பிள்ளைகள் அடிமை, ஆலமரத்தடிப் பஞ்சாயத்திற்குக் கிராமம் அடிமை, சாதிச் சங்கத்திற்குச் சாதிகள் அடிமை என்று ஒவ்வொரு துறையிலும் இந்த அடிமைத்தனம் பிரிக்க முடியாதபடி கலந்திருக்கிறது.

அடிமைகள் தரப்பில் மோதிப் பார்க்கத் துணிந்தவர்கள் ஜனநாயகத்திற்காக வெளிப்படையாகப் போராடுகிறார்கள். துணியாதவர்கள் ஆண்டைகளைப் பற்றிக் கிசுகிசுத்து மகிழ்கிறார்கள். ஆண்டைகளும் தங்கள் அதிகாரத்தைக் கேள்வி கேட்காத இந்தக் கிசுகிசுக்களை அனுமதிக்கிறார்கள். அதையே ஜனநாயகமென்று காட்டிக் கொண்டு உண்மையான ஜனநாயகத்தைத் தடை செய்கிறார்கள். இறுதியில் சக மனிதனோடும், சமூகத்தோடும், அரசியலோடும் எழும் பிரச்சினையை ஜனநாயகப்பூர்வமாகச் சந்திக்காமல் அற்ப விசயங்களை அந்தரங்கமாகப் பேசிக் களிக்கும் பண்பு இரத்தத்தோடு கலந்து விடுகிறது. இதுவே ஒரு தனிநபர் சக மனிதர்களை கிசுகிசுக்களால் அலட்சியம் செய்துவிட்டு சுமுக உறவையும் வைத்துக் கொள்ளும் ஒரு அருவருப்பான பண்பை புழக்கத்திற்கு விடுகிறது.

கவிஞர் மனுஷ்ய புத்திரன், “”சமீபத்திய இலக்கிய கிசுகிசுக்கள் ஏதும் உண்டா, அப்படி இருந்தால் தெரிவிக்கவும், ரகசியம் காக்கப்படும்,’’ என்று ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தை குமுதம் பத்திரிகை முன்பு வெளியிட்டிருந்தது. இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வாழ்க்கையின் போதாமை குறித்து கவலைப்படும் கவிமனத்தின் நாட்டமும், இரசனையும்எப்படி இருக்கிறது பாருங்கள்!

இப்படித்தான் தமிழ்நாட்டின் இலக்கியச் சிறு பத்திரிக்கைகள் அனைத்தும் எழுத்தாளர்களின் அரட்டை, வம்பு, குடி, அடி தடி, வண்டவாளங்கள், சேட்டைகள் போன்றவற்றை வைத்தே இயங்குகின்றன. சிறுபத்திரிகை வாசகர் விரும்பியும்- எதிர்பார்த்தும் படிப்பது இந்தக் கிசுகிசுக்களைத்தான்.

ம.க.இ.க. முதலான புரட்சிகர அமைப்புக்களை விமர்சனம் செய்யும் பொழுதுபோக்கு வெட்டி அரசியல் குழுக்களும் இந்தப் பாணியில்தான் கிசுகிசுக்கின்றன. “”அந்தத் தோழர் மீது நடவடிக்கை எடுத்து விட்டார்களாமே, இந்தத் தோழர் இப்போது அமைப்பில் இல்லையாமே, அந்தத் தோழர் இன்ன சாதியாமே’’ என்று காதருகே உரைக்கும் இந்த வெட்டிக் குழுக்கள் புரட்சிகர அரசியலையும் – நடைமுறையையும் நேரடியாக எதிர்கொள்ளத் துணிவின்றி இந்த வழிமுறைகளைக் கையாளுகின்றன.

இக்குழுக்களின் சோம்பிக் கிடக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய அணிகளின் வேலைத்திட்டமே இந்தக் கிசுகிசு அரசியல்தான்!

எனவே அந்தரங்கச் செயல்களை ரசனையுடன் பேசும் இப்பண்பு சமூகத்தின் சகல அரங்குகளையும் ஆட்சி செலுத்துவதன் விளைவாக மனிதர்களுக்கிடையே உண்மையான உறவுகள் நசித்துப் போயுள்ளது. குறிப்பாக, நகரத்து மனிதர்கள் செயற்கையாகப் பழகுவதும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும், பிரச்சினைகள் வரும்போது உள்ளுக்குள்ளேயே புழுங்குவதும், திடீரென வன்முறையாளனாக மாறுவதும், முடிவில் வாழ்க்கையை தற்கொலை மூலம் முடிப்பது அல்லது நடைப்பிணமாக வாழ்வது என்றும் முடிவுக்கு வருகிறது.

கனவுலகப் பாலுணர்வின் பிரச்சினைகள் !

ஏற்கெனவே பார்த்தது போல சுற்றியிருக்கும் உலகிலிருந்து பாலுறவுத் தகவல்கள் பல நூறு வழிகளில் ஒரு மனிதனின் சிந்தனையில் இறங்குகிறது. இறக்குமதியானவை வினையாற்றாமல் சும்மா இருப்பதில்லை. இவை இளைஞர்களின் விடலைப் பருவத்திலிருந்தே பாலுணர்வு குறித்த கற்பனைகளை மெல்ல மெல்லக் கிளப்பி விடுகின்றன. இளைய பிரிவினரின் கணிசமான நேரத்தை ஆக்கிரமித்திருக்கும் இக்கற்பனைகள் பாலுறவின் யதார்த்தமான சித்திரத்தை அழித்துவிட்டு அதீதப் புனைவுடன் மிகையான குழப்பமான சித்திரத்தை உருவாக்குகின்றன. இது அதிகரிப்பதற்கேற்ப அவர்கள் அந்நியப்படுவதும் ஆளுமை பலவீனமாவதும் நடந்தேறுகிறது.

எந்தச் சமூகத்தில் ஆணும் பெண்ணும் கறாராகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறார்களோ, பேசவும் – பழகவுமான வாய்ப்புகள் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அங்கே எதிர்பாலினைக் குறித்த கவர்ச்சியும், கற்பனையும் அதிகமிருக்கும். ஆனாலும் வீட்டிலிருந்தாலும், வேலைக்குச் சென்றாலும் இல்லறமே நல்லறமெனப் போதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் ஆண்களின் உடம்பு குறித்து அதிகம் அலட்டுவதில்லை. மாறாக, வாழ்க்கையின் இன்ப – துன்பம், வசதி – வாய்ப்பு குறித்து கருணைகாட்டும் ஆண்கள் மீதுதான் சற்று உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆணுக்கோ பெண்ணுடம்பு குறித்து மோகம் கொள்வதோ முதன்மையாக இருக்கிறது.

ஆணுலகு கற்பனை செய்யும் பெண்ணுடம்பின் பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சினிமா உருவாக்குகிறது. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதை ஒளிவட்டம் போட்டுக் கவனப்படுத்துகிறது. தொடைக்கு ரம்பா, இடுப்புக்கு சிம்ரன் – ஐஸ்வர்யா ராய், மார்பகத்துக்கு மந்த்ரா, கண்களுக்கு பானுப்பிரியா – சிலுக்கு, அப்புறம் மூக்கு, உதடு, கை – கால்கள் என்று ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் அத்தனை உறுப்புகளும் மிகையான கற்பனையால் கிளர்ச்சியூட்டும் விதத்தில் பதிந்து போகின்றன. பொது இடங்களில் சந்திக்கும் போதெல்லாம் ஆண்கள் வெறித்துப் பார்ப்பதும், அல்லது நாகரிகமான முறையில் பட்டும் படாமலும் பார்ப்பதும், பெண்கள் ஜாக்கெட்டை இழுத்து விடுவதும், மாராப்பைச் சரி செய்வதும் இயல்பான சமூக நடைமுறைகளாகி விட்டன. ஆண்களுக்காக அடுப்புக் கரண்டியைப் பிடிப்பதில் அதிக நேரம் செலவழிக்கும் பெண்களின் கைகள், அதற்கடுத்து உடைகளைச் சரிசெய்வதிலேயே ஓய்ந்து போகின்றன.

ஆணைப் போலவே சிறுநீர், மலம், வியர்வை, ரத்தம், சளி அடங்கிய இயல்பான பெண்ணுடம்பு குளிர்பதனப் பெட்டியில் வாடாமல் வைக்கப்பட்டிருக்கும் ரோஜாவைப் போல மனதில் பதியன் செய்யப்படுகிறது. அடுத்து இந்த ரோஜாவைநுகருவதற்கு, உண்மையில் கசக்குவதற்கு மிகை யதார்த்தக் காட்சிகள் இளையோரின் அக உலகில் கட்டப்படுகின்றன. முத்தமும், உடலுறவும் வெண்திரையின் நிழலில் ஆவேசத்துடன் நிஜம் போல ஆடுகின்றன. பலியாடுகளைப் போல உறவு கொள்ளும் மலையாள படங்களை விட படுநேர்த்தியாகக் கிளர்ச்சியூட்டும் ஹாலிவுட் படங்கள் நனவுலகிற்குப் புறம்பான கற்பனையைத் தூண்டி விடுகின்றன.

பாலியல் வன்முறை: அந்தரங்கத்தின் அவலம்!நாம் உணருவது போல அந்தப் படங்களில் இருவர் உண்மையில்உறவு கொள்வதில்லை; நடிக்கவே செய்கிறார்கள். அதன் பின்னே பலரது சோடனைத் திறமையும், தொழில்நுட்பமும் சேர்ந்திருக்கிறது. ரம்மியமான ஒளி, மென்மையை நுட்பமாக உணர்த்தும் ஒலி, நேர்த்தியான படத்தொகுப்பு, மறக்க முடியாத மூடுகள்’, விரகதாபத்தை மிகையாக வெளிப்படுத்தும் அபிநயங்கள் எல்லாம் சேர்ந்து பாலுறவின் உணர்ச்சியை யதார்த்தத்திலிருந்து பல அடி உயரத்திற்கு ஆவேசமான அலையாக எழுப்புகின்றன.

ஆனால் யதார்த்தமான ஒரு பாலுறவில் இவையெல்லாம் சாத்தியமேபயில்லை! டபிள்யூ. டபிள்யூ. எஃப் (WWF) மாமிச மலைகளின் மல்யுத்தக் காட்சிகள் தொடங்குமுன், “”இது எங்கள் தொழில்முறை வீரர்களின் அதி உயர் பயிற்சியினால் நடத்தப்படும் சண்டைக் காட்சிகள். இதைப் பார்த்துச் சண்டை போடுவது உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்’’ என்று எச்சரிக்கை வெளியிடுகிறார்கள்; படுக்கைக் காட்சிகளுக்கு அப்படிப் போடுவதில்லை – அவ்வளவுதான்.

உண்மையில் வெண்திரை உருவாக்கியிருக்கும் பாலுறவுக் கற்பனை சக மனிதனை உயிரும் உணர்வும் உள்ள தன் உயிரின நீட்சியாக நேசிப்பதில்லை. ஒரு பண்டமாகத்தான் பார்க்கிறது; ஆவேசமான வடிகாலாகப் பயன்படுத்துகிறது; அலட்சியம் செய்கிறது. ஆதலால் இங்கே மகிழ்ச்சியில்லை. வெறியைத் தணிப்பது மட்டும்தான் நடக்கிறது.

இருப்பினும் பெண்ணுடம்பு, உறவு பற்றி இளைஞர்களின் கற்பனையில் உண்மையைப் போல உருவாகும் இக்கண்ணோட்டம் இத்துடன் நிற்பதில்லை. மேலும் பயணம் செய்கிறது. அந்தக் கற்பனையில் உருவான பிம்பங்களையும், காட்சிகளையும் சமூக யதார்த்தத்தில் உரசிப் பார்க்கும் களனையும், பாத்திரங்களையும் செய்திகள்என்ற பெயரில் பத்திரிக்கைகள் தருகின்றன.

வயதான கணவனிடம் வாடிப்போன மனைவி, ஆண்மையற்ற கணவனிடம் பெருமூச்சு விடும் மனைவி, வெளிநாட்டில் கணவன் – வாய்ப்பில்லாத மனைவி, கேபிள் டி.வி., விற்பனைப் பிரதிநிதிகள் மயக்கும் குடும்பப் பெண்கள், உடம்புச் சுகத்துக்கு ஏங்கும் மலையாளப் பெண்கள் – கிறித்தவக் கன்னியாஸ்திரீகள், உறவுக்கு ஒத்துழைக்கும் வேலைக்காரப் பெண்கள், மாணவனைக் காதலிக்கும் டீச்சர்கள், உறவை மறக்க முடியாமல் தவிக்கும் விதவைகள், வெளியூரில் தங்கி லீலை செய்யும் பெண்கள், சாமியார்களின் நிர்வாண பூசைக்குச் சமர்ப்பணமாகும் வீட்டுப் பெண்கள், மெரினா, முக்கொம்பு, மருதமலையில் அவசரமாகத் தழுவும் காதலர்கள்.. .. என பார்வையில் பழக்கத்தில் தென்படும் அத்தனைப் பெண்களும் பத்திரிக்கைச் செய்திகளின் உதவியால் இளைஞர்களின் அக உலகுக்குள் சென்று ஆசை காட்டுகிறார்கள்.

பருவமடைந்த பின் இயற்கையான உயிரினத் தூண்டலினால் அனைவரிடமும் ஏற்படும் பழக்கமான சுய இன்பம் இத்தகைய காட்சி, கதைகளுடன் சேர்ந்து கொண்டு புதிய பரிணாமம் அடைகிறது. காணும் பெண்களையெல்லாம் இரகசியமாக மோகிப்பது ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. முழுஉலகமும் – அந்தப் பெண்களும் சகஜமாய் இருக்கும்போது, தான் மட்டும் காமத்திற்கு ஆட்படுவது குறித்து குற்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த முரண்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கேற்ற சமூக நடவடிக்கைகள் இல்லாதபோது இளைஞர்கள் தனிமைப்படுவதில் போய் முடிகிறது. இதில் ஒரு பிரிவு இளைஞர்கள் இவையெல்லாம் சகஜம்தானே என்று சமரசம் செய்து கொண்டு தேர்ந்த காரியவாதியாக மாறுகிறார்கள். அப்படி மாற முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கும் பெரும்பான்மை இளைஞர்கள், தாம் தவறு செய்கிறோமே என்ற அச்சத்துடனும், வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்துடனும் வாழ்க்கையை மகிழ்ச்சியற்று நடத்துகின்றார்கள். கற்றும், உழைத்தும் தேர்ச்சியடைய வேண்டிய இளைஞர்களுடைய ஆளுமை வாடி வதங்குகிறது.

பாலுணர்வு குறித்த இந்தக் கற்பனைக் கண்ணோட்டம் ஆணுக்கும், பெண்ணுக்கும் எதிர் பாலினரைக் கவருவதையே முக்கியமான வாழ்க்கை வேலையாக மாற்றிவிட்டது. உடல், இடுப்பு, நகம், மார்பு, முகப்பரு, மஞ்சள் பல், வாய்நாற்றம், படியாத தலை, சுருளாத முடி, தேவையற்ற ரோமங்கள் என முடிவேயில்லாத உடல் பிரச்சினைகள். கூடவே உடை, அலங்காரம், செருப்பு, வாழ்க்கை முக்கியமான அங்கங்களாகி விடுகிறது. சமூகக் களத்தில் உருவாக வேண்டிய அழகு, நிலைக்கண்ணாடி முன் நெடு நேரம் நின்று ரசிக்கும் அவலமாகி விடுகிறது.

முடிவில் பாலுறவு குறித்த சமூக யதார்த்தத்திற்கும், அகநிலையில் உருவாகும் கற்பனைச் சித்திரத்திற்குமுள்ள முரண்பாடு காதல், திருமணம், தாம்பத்திய வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கிறது. அதிலிருந்து இதுதானா, இவ்வளவுதானா என்று அதிர்ச்சியுறும் அறிவு எது உண்மை, எது பொய் என்பதைப் புரிந்து கொள்வதற்குள் வாழ்க்கை எங்கோ போய்விடுகிறது; சில நேரங்களில் முடிந்தும் போகிறது.

விழுப்புரமருகே லாரி ஓட்டுநராக இருக்கும் ஒரு இளைஞன் ஆந்திராவின் விபச்சாரி ஒருத்தியிடம் ஒரு புதிய அனுபவம் அடைகிறான். அவள் தான் கற்பழிக்கப்படுவது போலத் தயாரிக்கப்பட்ட ஒரு நீலப்படத்தைக் காண்பித்து மகிழ்ச்சியளிக்கிறாள். ஊர் திரும்பிய அவன் பின்னர் தனது உறவுப் பெண்ணொருத்தியைக் காதலித்து மணக்கிறான். முதலிரவில், அந்த ஆந்திர அனுபவத்தை அரங்கேற்ற முயல்கிறான். அவள் மீது பாய்ந்து உடைகளைக் கிழிக்கிறான். மணமகள் வீறிட்டலறுகிறாள். அவமானத்தில் கூனிக் குறுகியவன் மண்ணெண்ணெயைத் தன் மேல் ஊற்றிக் கொண்டு, “கற்பழிப்புக்குஉடன்படாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக அவளை மிரட்டுகிறான். தவறுதலாகத் தீப்பிடித்து எரிகிறான். மருத்துவமனை வாக்குமூலத்தில், “”என் மனைவி நல்லவள், நான்தான் விளையாட்டாய் இப்படிச் செய்து விட்டேன்’’ என்று பேசிவிட்டு ஓரிரு நாட்கள் கழித்து செத்தும் போனான்.

_________________________________________________________

-புதிய கலாச்சாரம், ஜூன்’ 2003
_________________________________________________________

உண்மைச் சம்பவம் : மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம் !

7

மண்ணுள்ளி-பாம்பு

கெணேசு என்கிற கணேச மூர்த்திக்கு சில லட்சியங்கள் இருந்தன. சம்பாதிக்க வேண்டும். நிறைய்ய சம்பாதிக்க  வேண்டும். கைக்கொள்ளாத ரூபாய் நோட்டுக் கட்டுகளின் மேல் விழுந்து புரள  வேண்டும். ஒரு பெரிய வீடு கட்ட வேண்டும்; அதில் ஐம்பதடிக்கு நூறடி அளவில் ஒரு நீச்சல் குளம் அமைக்க வேண்டும். பொள்ளாச்சியில் குறைந்தது நூறு ஏக்கராவுக்கு தென்னந்தோப்பு ஒன்றை அமைக்க வேண்டும். அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டுத் தூங்க வேண்டும். கயிற்றுக் கட்டிலில் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வருமோ என்னவோ – கணேசன் நம்பினான். தூக்கம் வரும். அப்புறம், வாரம் ஒரு முறையாவது கோயமுத்தூர் ரெஸிடென்சியில் தண்ணியடித்து,  மட்டையாகி விட வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் தன்னுடைய மாத சம்பளமான மூவாயிரத்தில் செய்ய முடியாது என்கிற உண்மை தான் கெணேசனை செல்லாக அரித்துக் கொண்டிருந்தது. மூவாயிரத்துக்கு ரெஸிடென்சிக்காரன் வாசல் வரை கூட விட மாட்டான் என்பதை கணேசன் அறிந்திருந்தான். இந்தக் கதை நடந்த காலம் 2005. அப்போது கணேசன் கோவை நூறடி ரோட்டிலிருந்த கவிதா எலக்ட்ரானிக்ஸ் என்கிற மின்சாதனப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தான்.

கணேசன் வேலையில் கெட்டிக்காரன். எந்த ரேடியோ செட்டாக இருந்தாலும் அதிகபட்சம் 30 நிமிடங்களுக்குள் பிரித்து மாட்டி விடுவான். நேஷனல் பானாசோனிக் என்றழைக்கப்படும் முகலாயர் காலத்து ரேடியோ செட்டைப் பழுது பார்க்கும் நிபுணத்துவம் அநேகமாக  கோவையிலேயே அவனுக்குத் தான் இருந்திருக்கும்.  கணேசன் அவ்வளவு கெட்டவன் இல்லை தான்; ஆனாலும் சமீப காலமாக அவன் சொந்த ஊரான வேட்டைக்காரன் புதூரைச்  சேர்ந்த பள்ளித் தோழன் ரெங்கு என்கிற ரெங்கசாமியைப் பற்றி கேள்விப்படும் கதைகள் அவனை நிறையவே மாற்றியிருந்தது. ரெங்குவின் கதைகளில் இருந்து தான் முதல் பத்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் கணேசனின் லட்சியங்களெல்லாம் முளைவிட்டன.

ரெங்குவின் அப்பாவுக்கும் கணேசனின் அப்பாவைப்  போலவே விவசாயம். ஒன்றரை ஏக்கர் துக்கடா நிலம். அதில் கொம்பு வண்டுகள் மொட்டையடித்த ஐம்பது தென்னைகள் பரிதாபமாக நிற்கும். கால்வாய்ப் பாசனம். தக்காளி போடுவார்கள் – விலையத்துப் போகும். வாழை  போடுவார்கள் – பேய் மழை வந்து சாய்த்து விடும். நெல்லைப்  போட்டால் – மழை வராது; கால்வாய் வறண்டு போகும்.  கரும்பு விளைந்த நேரமாகப் பார்த்து யானைகள் புகுந்து துவம்சம் செய்து விடும். நல்ல விளைச்சல் தரும் என்று சொல்லப்பட்ட வெளிநாட்டு விதைகள் வெள்ளாமைக்கே வந்து சேராது. கஷ்ட ஜீவனம்.

ஆனால் ரெங்கு தலையெடுத்தான். ரெங்குவும் கணேசனைப் போலவே ஐ.டி.ஐ படித்தவன் தான். ஆனால் என்ன வேலை பார்த்தான் – அல்லது பார்க்கிறான்; என்ன தொழில் செய்தான்  – அல்லது செய்கிறான் என்பதெல்லாம் ஊராருக்குத் தெரியாது. தெரிந்ததெல்லாம் திடீர் திடீரென்று ரெங்குவால் வாங்கப்படும் பட்டா நிலங்களும், தோப்புத் துரவுகளும், பளிச்சென்று எழுந்து நிற்கும் வீடுகளும் தான்.

மணியக்காரத் தெருவில் இருந்த ரெங்குவின் ஓட்டு வீடு பங்களாவாய் உருமாறியது. உள்ளே பெரிய நீச்சல் குளம் இருப்பதாகவும், தரைமட்டத்துக்குக் கீழே பாதாளத்தில் அறைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். பொள்ளாச்சி பத்திராபீசில் ரெங்குவுக்கு நிரந்தரமாக நாற்காலியே போட்டு விட்டார்கள் என்று கூட சொன்னார்கள்.

ரெங்குவின் அசுர வளர்ச்சியால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டதோ இல்லையோ கணேசன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தான்.

“யேண்டா கெணேசா.. அந்த ரெங்கானும் ஒன்ர கூட படிச்சவந்தான.. பாரு எத்தினி காரியமா சம்பாரிக்கிறான்னு.. நீயெல்லாம் அவன்ர  மூத்தரத்த வாங்கியாச்சும் குடுச்சுப் பாரு. நெப்பு வருதான்னு பாக்கலாம்” சரியாக இரவு சாப்பாட்டுத் தட்டின் முன் உட்காரும் போது தான் கணேசனின் அம்மா லெட்சுமி திரியைப் பத்த வைப்பாள்.

“அவனெ யேண்டி அல்லைல குத்தீட்டிருக்கே.. அறிவும் ஊக்கமும் பொறப்புலயே வந்தாத்தான் ஆச்சு. நீ தின்னுடா கண்ணு” அப்பா தன்னை ஆதரிக்கிறாரா,  அவரும் சேர்ந்து வெந்த புண்ணில் மிளகாய்த் தேய்க்கிறாரா என்பதைக் கணேசனால் கடைசி வரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அப்பனும் ஆத்தாளும்தான் இப்படியென்றால் வெளியே கேட்கவே வேண்டாம்.

“கெணேசு.. ரெங்கானப் பாத்தியா? பொள்ளாச்சில ஏதோ மில்லுக்கு வெல பேசீட்டிக்குறானாமா?”

“கெணேசு.. ரெங்கானப் பாத்தியா? புதுசா காரு வாங்கீக்கறானாமா?”

“கெணேசு.. ரெங்கானப் பாத்தியா?  கழுத்துல கயிறு கெணக்கா தங்கச் செயினு போட்ருக்கானாமா?”

“கெணேசு.. இந்த ரெங்கானிருக்கானே……”

“கெணேசு.. நம்ம ரெங்கான்….”

“கெணேசு….”

இப்படியெல்லாம் அவர்களுக்குள்ளும் பேசிக் கொள்வார்களா,  இல்லை நம்மைப் பார்த்தால் மட்டும் தான் ஆரம்பிக்கிறார்களா  என்று புரியாமல் கணேசன் குழம்பினான். ஒரு சுபயோக சுபதினத்தில் கணேசனின் பொறுமை எல்லை கடந்தது. “வக்காளி ஆனதாகட்டும், போனது போகட்டும். நாமலும் ரெங்காண விட ஒரு பத்துக் காசாவது அதிகமா சம்பாரிச்சிக் காட்டீரோணும்டா” –  முடிவெடுத்து விட்டான். இதுதான்  ஒரு ‘லட்சியவாதி’ உருவானதன் வரலாறு.

முடிவு என்னவோ எடுத்து விட்டான் – ஆனால் எப்படிச் செயல்படுத்துவது? எப்படி பணக்காரன் ஆவது? என்ன தொழில் செய்வது? எப்படி வேகமாக வளர்வது? சரியாக இந்த இடத்தில் தான் கணேசன் பல சவால்களைச் சந்தித்தான். அம்பானியில் இருந்து பில்கேட்ஸ் வரை பணக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் கோவை டவுண் ஹாலில் இருக்கும் விஜயா பதிப்பகத்தில் காசு கொடுத்து வாங்கிப் படித்துப் பார்த்தான். புரியவில்லை என்பது உடனடி விளைவு.  குழப்பமடைந்தான் என்பது தான் நீண்ட கால விளைவு. கடைசியில் வேறு வழியின்றி கணேசன் எடுத்த முடிவு தான் அவன் வாழ்க்கையின் மாபெரும் திருப்புமுனை.  நேரடியாக ரெங்கானிடமே கேட்டு விட வேண்டும் என்பது தான் அந்த முடிவு. என்ன இருந்தாலும் உடன் படித்த நண்பனல்லவா, உதவாமலா போய் விடுவான்?

2005ஆம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க  சந்திப்பு நடந்தது. விஷயத்தைச் சொன்னதும் ரெங்கான் கட கடவென சிரித்தான். “நீயெல்லாம் அதுக்கு சரிப்பட மாட்டே” கழுத்துச் செயினை உருவி விட்டுக் கொண்டான். “அதெல்லாம் பெரிய ரிஸ்குடா” கைச்செயினை தடவிக் கொண்டான். கணேசன் கேட்பதாக இல்லை. கடைசியில் “போலீசு  கேசுன்னு அலைய வேண்டியிருக்கும்” என்று கூட மிரட்டிப் பார்த்தான். கணேசன் அப்போதும் உறுதியாக நிற்கவே, ஒரு மாற்று வழியைக் கூட முன்வைத்தான்.

“ஏண்டா சொல்லச் சொல்ல  கேக்க மாட்டேங்குறே?  பேசாம நானே மொதல்  போட்டு பொள்ளாச்சீல ஒரு டீ.வி ரிப்பேருக்  கடை வச்சித் தாரேன். நீயே நடத்திக்க. பிப்டி பிப்டி பார்ட்னர்சிப். இது ஓக்கேவா?”

“டே.. டீ.வி,  ரேடியோ ரிப்பேருக்கெல்லாம் இப்ப பவுசில்லீடா. இப்பல்லாம் அவனவன் கம்ப்யூட்டருங்கறான். பிளாப்பி டிஸ்க்குங்கறான்.. ஒன்னும் புரியல. ஓட்ட டீ.வி.ய நோண்டி அம்பதும் நூறும் சம்பாரிச்சி என்னிக்கு ஆளாகறது? அதெல்லாம் வேலைக்காகாது. நீ செய்யற பிசினசுல என்னையும் சேத்துக்கடா… இல்லீன்னா என்ன செய்யலாம்னு ஒரு ரூட்டு குடு. என்ன பிரச்சினைன்னாலும் சரி பாத்துக்கறேன்” கணேசன் விடாப்பிடியாக நின்றான். கணேசனின் இறைஞ்சல்கள் ‘இவன் தோதுப்படுவான்’ என்கிற நம்பிக்கையை ரெங்கசாமியிடம் ஏற்படுத்தியது

“சொன்னாக்  கேக்க மாட்டே.. சரி ஒரு ஐடியா இருக்கு. யார்ட்டயும் மூச்சு விடக் கூடாது. என்ன?”

“கழுத்தறுத்தாலும் வெளிய சொல்ல மாட்டேன். சொல்லு”

“ம்ம்ம்.. நல்லா கெவனமா கேட்டுக்க. நான் வேற வேற பிசினசு பண்ணிட்டுருக்கேன். ஆனா அதெல்லாம் ரொம்ப ரிஸ்க்கு. இப்ப ஒரு புது பிசினஸ்ல எறங்கறேன். எனக்கு இதுக்கு ஆள் வேணும். இதுல அத்தினி ரிஸ்க்கு இல்ல. ஆனா கெவருமண்டுக்குத் தெரிஞ்சா சட்னி தான்…”

“டேய் என்னடா சொல்றே.. எதுனாச்சும் கள்ளக் கடத்தலாடா?” முடிந்தவரை பீதியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சிரித்துக்  கொண்டே கேட்பதைப்  போல் கேட்டான்.

“இல்லீடா.. காதக் கொண்டா இங்க. அதாவது, இந்த மண்ணுளிப் பாம்பு தெரியுமா? அதான் நம்மூர்ல ரெட்டத்தலை மணியன்னு சொல்லுவாங்களே.. அதோட ஒடம்புக்குள்ளே  ஏதோ  ரேடியம் மாதிரி பச்சக் கலருல இருக்குதாமா. அதுலேர்ந்து நம்ம சிட்டுக்குருவி லேகியமாட்டா  ஏதோ மருந்து செய்யறாங்க. அதுக்கு சீனாவுல நல்ல டிமாண்டாமா. இங்கேர்ந்து கப்பல்ல சீனாவுக்கு அனுப்பறாங்க. பாலக்காட்டுல எனக்குத் தெரிஞ்ச ஒரு சேட்டன் தான் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் ஏஜெண்டு எடுத்துருக்காரு. அவரு கிட்டேருந்து நானும் ஏஜெண்ட் எடுத்துருக்கேன். தெக்க மதுரைக்கு அந்தால இருக்கற ஊருகள்ள கெடைக்கும்னு அவரு சொல்றாப்ல. அஞ்சி கிலோ அயிட்டத்துக்கு அம்பது ‘எல்’ நிக்கும். ஆளுக்குப் பாதியா பங்கிக்கலாம். என்ன?” சொல்லி முடித்து விட்டு, கணேசனின் முகத்தைக் கூர்மையாகக் கவனித்தான்.

கணேசன் திகைத்துப் போயிருந்தான். மண்ணுளிப் பாம்பை சின்ன வயதில் பார்த்திருக்கிறான். அதுக்குள் இப்படி ஒரு புதையலா?  திகைப்பெல்லாம் ஒரு சில நொடிகள் தான். உடனே தலையசைத்தான்.

“தலையாட்றதெல்லாம் இருக்கட்டும். நீ என்ன செய்யறேன்னு யாருக்கும் தெரியக் கூடாது. சரியா? அப்புறம் திருநெல்வேலில என்ர பிரெண்டு ஒருத்தான் இருக்கறான். அவனையும் தேடச் சொல்லிருக்கேன். ஆனா அவனுக்கு பங்கெல்லாம் கெடையாது. கமிஷன் தான். பத்து பர்சன்டேஜு. அவனோட நெம்பர் தர்றேன். சீக்கிரமா வேலைய ஆரம்ப்பிச்சிடு. முக்கியமா யாருக்கும் தெரியக் கூடாது. உங்க அப்பனாத்தாளுக்குமே சொல்லீறாத! சரியா?”

கணேசனின் வாழ்க்கை அன்றோடு மாறியது. முதல் காரியமாக வேலையை விட்டான். தனது லட்சியத்துக்கு அது ஒரு இடைஞ்சல் என்று கருதினான். நிறைய ஊர் சுற்ற வேண்டும். அதுவும் ரகசியமாகச் சுற்ற வேண்டும். ‘பொருள்’ கிடைத்து விட்டால் அதைப் பஸ்ஸில் கொண்டு வருவது ரிஸ்க் என்று கணக்கிட்டான் – அதற்காகவே ஒரு டீசல் புல்லட்டை கிணத்துக்கடவு மணி மெக்கானிக்கிடமிருந்து இருபத்தையாயிரம் கொடுத்து வாங்கினான். அந்த புல்லட்டை பொள்ளாச்சியில் உதைத்து ஸ்டார்ட் செய்தால் கோவையே நிலநடுக்கம் வந்தது போல் அதிரும். அதில் டீசலை நிரப்பிக் கொண்டு ஊர் ஊராய் அலையத் துவங்கினான்.

இரண்டு வருட தேடல் அது. சோறு மறந்து, தண்ணீர் மறந்து, தூக்கம் மறந்து, குடும்பம் மறந்து, நண்பர்களை மறந்து, ஊரை மறந்து ஒரு மோன நிலையில் தமிழகத்தின் தென்பகுதியைச் சுற்றி வந்தான். காசு தீரும் போது ஏதோ ஊரில் நிற்பான்; அங்கே கிடைத்த வேலையைச் செய்வான். டீசல் டாங்கை நிரப்பும் அளவுக்கும், ஓரிரு வேளை சோற்றுக்கும் காசு தேற்றியதும் திரும்பவும் தேடலைத் துவங்குவான்.

கணேசனுக்கு நல்ல களையான முகம் இருந்தது.  விளைந்த தக்காளி போல் பளபளவென்று இருப்பான் – இந்த இரண்டே வருடத்தில் வதங்கி வற்றிய கத்தரிக்காய் போலானான். மொழுக்கென்று வெளித்தள்ளி நிற்கும் கண்கள் பள்ளத்துக்குள் விழுந்தது போலானது. இரண்டு வருடத்தில் இருபது வயது கூடியவனைப் போலானான். தொடர்ச்சியாக அதிரும் புல்லட் மோட்டார் சைக்கிளில் சுற்றியதன் விளைவாக ஆசனவாயில் மூலம் வைத்திருந்தது. ஒவ்வொரு நாள் விடியலும் ஒரு நரகம். மலமே சிவப்பாய்க் கழியும். கணேசன் அத்தனை பாடுகளையும் தாங்கிக் கொண்டான். பணம்… பணம்… பணம்… அதற்காக நரகக் குழியின் ஆழத்துக்கும் கூடச் செல்லத் தயாராயிருந்தான்.

வாரம் ஒருமுறை ரெங்கானிடமிருந்து அழைப்பு வரும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் மண்ணுளி ஏஜெண்டுகள் கட்டுக்கட்டான பணத்தோடு போலீசில் பிடிபட்ட தகவல்களைச் சொல்வான். எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுருத்துவான். அந்தந்த வாரத்திற்கான ‘சந்தை’ விலை நிலவரத்தைத் தவறாமல் தெரிவிப்பான். கடுமையாகக் கிராக்கி கூடுவதைச் சொல்வான். அவன் பேசி முடித்ததும் மொத்த சீனர்களும் ஆண்மையற்றுப் போய் விட்டார்களோ என்று கணேசன் நினைத்துக் கொள்வான். இதை அடுத்த முறை ரங்கானிடமே கேட்டு விடலாம் என்று நினைப்பான் – அந்த ‘அடுத்த முறை’ வரவேயில்லை.

நிரந்தரமாய்ச் சிவந்த கண்களையும், முன் மண்டை வழுக்கையையும் கணேசன் சம்பாதிக்கத் துவங்கிய மூன்றாம் வருடத்தின் துவக்கத்தில், காசு தீர்ந்து போன  நாளொன்றில் சிவகாசியில் இருந்தான். கைச்செலவுக்கும், பயணச் செலவுக்கும் ஏதாவது தேற்றுவதற்கு, பட்டாசுப் பெட்டிகள்  லோடு அடிக்கும் கலாஸி வேலையில் சேர்ந்திருந்த இரண்டாவது நாளில் தான் தம்புராசுவின் தொலைபேசி அழைப்பு வந்தது.

“அண்ணாச்சி எங்க இருக்கிய? சீக்கிரமா வாரும் வோய்.. இங்கன பொருள் அம்புட்டுகிடுச்சி” தம்புராசு தென் மாவட்டங்களுக்கான சப்-ஏஜெண்ட். திருநெல்வேலியை அடுத்த வள்ளியூரைச் சேர்ந்தவன்.

கணேசனின் காலுக்குக் கீழே பூமி நழுவியது. பணக்கட்டுகளின் மேல் விழுந்து புரள்வதைப் போன்றதொரு காட்சி கண்களுக்குள் ஒரு மின்னல் கீற்றைப் போல் தோன்றி மறைந்தது. அதற்கு மேல் அவன் தாமதிக்கவில்லை. அடுத்த நாளே வள்ளியூரில் இருந்தான். அதற்கடுத்த நாளே ‘பொருளோடு’ இரவோடு இரவாக பயணித்துப் பொள்ளாச்சியை அடைந்தான். பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் ரங்கசாமி புதிதாய் வாங்கியிருந்த தென்னந்தோப்பு ஒன்றில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்த் தங்கினான்.

ஐந்தடிக்கு ஐந்தடி ஒரு குழிவெட்டி அதில் சகதியை நிரப்பி உள்ளே மண்ணுளியை விட்டான். அப்படித்தான் அதைப் பாதுகாக்க வேண்டுமென ரங்கசாமி தொலைபேசியில் வழிகாட்டியிருந்தான். அடுத்து ரங்கானின் வருகைக்குக் காத்திருந்தான் – காத்திருந்த நேரத்தில் கனவுகளில் மிதந்தான். ரங்கசாமி மூன்று நாட்கள் கழித்து வந்தான். வந்தவன் கணேசனின் கற்பனைகளில் வண்ண வண்ணமாய்ப் பறந்து கொண்டிருந்த பலூன்களில் கூர்மையான ஊசியால் ஒரே குத்தாக குத்தி விட்டான்.

“கெணேசா.. அஞ்சு கிலோவுக்கு மேல எடையிருந்தாத்தான் அந்த மருந்து உள்ள உருவாயிருக்கும்னு சொன்னனேடா.. இது மூணு கிலோவு தான் இருக்கு. இது ஆகாதுடா” அமிலத்தைக் காதில் கொட்டியது போல் இருந்தது. மீண்டுமொரு முறை காலுக்குக் கீழே பூமி நழுவியது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இப்படி நழுவுகிறது. கணேசனுக்குக் கண்ணில் நீர் கோர்த்தது. பூச்சியைப் போலும், புழுவைப் போலும் உணர்ந்தான். அவனது நிலை ரெங்கனிடம் பரிதாபத்தை வரவழைத்தது.

“சரி சரி உடு.. இதுக்கேன் அழற. ஆறு மாசம் பொறுத்தா எப்படியும் இது வளந்துடும். பொறகால வித்துப் போடலாம். இது சீக்கிறம் வளர என்ன செய்யோணும்னு சேட்டங்கிட்ட கேட்டுச் சொல்றேன். அதுவரைக்கும் நீ இங்கெயே தங்கிக்க. பண்ணையத்துக்கு இருக்கற ஆளுங்களை அனுப்பிடலாம். காவலுக்கு ஒரு கோம்பை நாய் இருக்கு. மத்தபடி வேற யாருக்கும் விசயம் தெரியக் கூடாது. காதும் காதும் வச்ச மாதிரி இருக்கோணும். என்ன?” கணேசன் தளர்வாய்த் தலையசைத்தான். மேலும் நான்கு நாட்கள் கழித்து சேட்டனின் ‘யோசனைகள்’ தொலைபேசி வழி வந்து சேர்ந்தது

அது மண்ணுளிப் பாம்பின் வளர்ச்சிக்கான ஒரு விநோதமான உணவுத் திட்டம். காலையில் சூரியன் உதிக்கும் முன் நேந்திரம் பழத்தை நெய்யில் வறுத்துப் போட வேண்டும். சூரியன் உச்சிக்கு வந்ததும் சீம்பாலை நன்றாகக் கட்டியாய்க் காய்ச்சித் தூவ வேண்டும். இரவு சூரியன் மறைவதற்கு முன் நாட்டுக் கோழி முட்டைகளை முழுதாகப் போட வேண்டும். முக்கியமான நிபந்தனை – உணவைப் போட்ட பின் அந்த இடத்திலிருந்து அகன்று விட வேண்டும். நம் கண்ணெதிரே மண்ணுளி எதையும் சாப்பிடாதாம்.

இந்த வினோதமான ‘உணவுத்’ திட்டத்தின் விளைவாய் ஆறு மாதத்தில் மண்ணுளிப் பாம்பு கால் கிலோவும், அதற்குக் காவலாக இருந்த கோம்பை நாய் எட்டு கிலோவும் கூடிய நிலையில், கணேசன் பத்து கிலோ குறைந்திருந்தான். அவன் தோல்வியெனும் பாதாளத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த போது தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி மொத்தமாகக் குப்புறத் தள்ளியது.

‘ரெங்கன் மோசடிப் புகார்களின் அடிப்படையில் கைது’  என்பதுதான் செய்தி. மண்ணுளிப் பாம்பு என்பதே ஒரு மோசடி என்பதை விவரித்த அந்தச் செய்தியை வாசிக்க முடியாத அளவுக்கு கண்ணீர் கட்டிக் கொண்டது. ஆட்டம் முடிந்தது.

இரண்டு நாட்கள் கணேசன் பித்துப் பிடித்தது போல் வெறித்துக் கொண்டே அமர்ந்திருந்தான். மூடாத விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. ரெங்கனோடு கணேசன் கூட்டுச் சேர்ந்திருந்தான் என்பதை அவன் குடும்பத்தார் அரசல் புரசலாகக்  கேள்விப்பட்டிருந்தனர். பயந்து போய் ஊரெல்லாம் தேடி கடைசியில் தோப்பு வீட்டில் விட்டத்தை வெறித்தவாறே அமர்ந்திருந்த நிலையில் கண்டுபிடித்தனர். அவன் தம்பி தான் அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான்.

தோப்பு வீட்டிலிருந்து தளர்வாய் நடந்து செல்லும் போது கணேசன் கடைசியாய் ஒரு முறை அந்த மண்ணுளிக் குழியைத் திரும்பிப் பார்த்தான். பரிதாபமான அந்த ஜீவன் சகதியிலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தது. குழியின் பக்கத்திலேயே அமர்ந்திருந்த கோம்பை நாய் ஏக்கத்தோடு கணேசனைப் பார்த்து வாலாட்டியது.

000

இந்தக் கதையை நாலு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னவன் கணேசனின் உடன் பிறந்த தம்பி ஆனந்தன் – என் நண்பன். கதையை எழுதி முடித்த பின்னரும், முடியாதது போலவும் ஏதோ குறைவதைப் போலவும் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து ஆனந்தனை செல்பேசியில் அழைத்தேன்.

“ஆனந்தா.. அந்த மண்ணுளிப் பாம்பு மேட்டரு சொன்னியே! அதுக்கப்புறம் உன் அண்ணன் என்னவானார்?”

“அதையேண்டா கேக்கற.. இப்ப பழையபடி புல்லட்ட தூக்கிட்டுக் கௌம்பிட்டாண்டா”

“ஐயையோ.. திரும்பவும் முதல்லேர்ந்தா?”

“இல்ல இது வேற  மேட்டரு. அதாவது தன்னோட வாழ்க்கைல யாரையுமே கடிக்காத ராஜ நாகத்தோட விஷம் கெட்டிப்பட்டு இறுகி ஒரு மாணிக்கமா மாறுமாம். அது தான் நாக மாணிக்கமாம். வயசான பின்னாடி அந்த பாம்புக்குப் பார்வை குறையும் போது இரவு நேரத்துல அந்த மாணிக்கத்தை வெளியே துப்பி வச்சிட்டு அந்த வெளிச்சத்துல தான் நடமாடுமாம். இதை அந்தப் பாம்புக்குத் தெரியாம எடுத்து வித்தா லெச்ச லெச்சமா கிடைக்கும்னு எவனோ சொன்னான்னு தேடி அலைஞ்சிட்டிருக்காண்டா”

நான் செல்பேசியை வைத்து விட்டேன். கதை முடிந்துவிட்டதா, இல்லையா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.

_____________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
______________________________________________

 

இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!

48

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 26

”வெளிநாட்டுப் பண உதவியுடன் கிறித்தவ மிஷனரிகள் தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபடுகின்றன. கல்வி, சேவை என்ற பெயரிலும் ஆசைகாட்டியும், அச்சுறுத்தியும், அரிஜன பழங்குடி மக்களை மதம் மாற்றுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக மாற்றவும், வடகிழக்கு மாநிலங்களில் ஒரு கிறித்தவ இராஜ்ஜியத்தையே உருவாக்கும் வண்ணம் பிரிவினை – பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவியும் செய்கின்றன. இந்த தேசத்துரோக நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்.”

 ஆர்.எஸ்.எஸ்.இன் இறந்து போன கோல்வால்கர் முதல் உயிரோடு உலவும் இந்து முன்னணி இராம.கோபாலன் வரை பேசி வரும் நிரந்தர அவதூறு.

மதமாற்றம் இந்து மதவெறியர்களை மதங்கொள்ள வைக்கும் ஒரு எரிச்சல். அதிலும் டி.வி.எஸ். ஐயங்கார் நிறுவனங்களைப் போல நிர்வாக முறையில் சுருதி சுத்தமாகச் செயல்படும் கிறித்தவ மதமும், அதன் மதமாற்ற முயற்சிகளும், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வயிற்றைக் கலக்குகிறது. வயிறெரிந்து என்ன பயன்? பெரும்பான்மை மக்களுக்கு சமூக உரிமைகள் தர மறுக்கும் பார்ப்பனியம், மதம் மாறுபவர்களைத் தண்டிக்க வேண்டும் என்கிறது. மறுபுறம் தனது சாதிப் பிரிவினைகளால் வெளி மதங்களிலிருந்து வருபவரைச் சேர முடியாதபடி தடுத்து நிறுத்தவும் செய்கிறது. இப்படி இந்து மதம் எண்ணிக்கையில் குறைவதற்கான வாய்ப்பை அதன் (மனித விரோத) தர்ம சாத்திரங்களே வழங்குவதற்கு நாம் என்ன செய்ய முடியும்? தன் மதத்திலிருந்து வெளியேறுபவர்களை ‘மதத் துரோகிகள்’ என்று கூறட்டும்.  ‘தேசத் துரோகி’ என்று ஏன் அழைக்க வேண்டும்? கடவுளர்களும், புனித நூல்களும் மாற்றப்படும்போது தேசபக்தி எப்படி திடீரென்று மாறிவிடும்? இப்பிரச்சனையில் நமது மையமான கேள்வி இதுதான்.

இனி இந்தியாவில் கிறித்தவ மதம் வளர்ந்த வரலாற்றையும், மதமாற்றம் நடந்த சில பகுதிகளைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஏசுநாதரின் நேரடிச் சீடரான புனித தாமஸ் முதல் நூற்றாண்டிலேயே இந்தியா வந்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அப்போதைய கிறித்தவம் ஒரு மத நிறுவனமாக மாறியிருக்கவில்லை. எனவே வெறும் சமயக் கொள்கையைப் பரப்புதல் என்பதோடு அது நின்று விட்டது. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகே கிறித்தவ மதமாற்றம், ‘மிஷனரிகள்’ எனும் சமயநெறி பரப்பும் நிறுவனங்கள் மூலமாக உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்திய ஏசு நாதர்கிறித்தவ மிஷனரிகள்’ என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245 ஆம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.

அதன்பின் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் துவங்கியது. முதலாளித்துவப் புரட்சி நடப்பதற்கான சூழ்நிலைகள் அரும்ப ஆரம்பித்தன. ஐபீரிய தீபகற்ப நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் வணிகம் செய்யவும், காலனிகளை உருவாக்குவதற்கும், இந்தியாவைப் போன்ற பழைய உலகைச் சேர்ந்த நாடுகளுக்குப் புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் போட்டியிட்டன. அப்படி வழி கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளைப் போட்டித் தகராறின்றி ஸ்பெயினுக்கும், போர்ச்சுகலுக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்கும் ‘புனிதப் பணியினை’ போப் செய்து வந்தார். கூடவே கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் கடமையையும் அறிவுறுத்தினார்.

அப்போது ஐரோப்பாவில் அழிந்து வந்த இசுலாமியப் பேரரசும், மத்தியக் கிழக்கின் புனித நகரமான ஜெருசலேத்தைக் கைப்பற்ற ஐரோப்பிய கத்தோலிக்க நாடுகள் துருக்கியுடன் நடத்திய சிலுவைப் போர்களும் மத உணர்வை அரசியல் விவகாரங்களோடு இறுக்கமாகப் பிணைத்தன. மேலும் மறுமலர்ச்சிக் கால எழுச்சியின் ஒரு விளைவாக ஜெர்மனியின் மார்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்து ‘புராட்டஸ்டண்ட்’ எனும் லூதரனிசத்தைத் தோற்றுவித்தார். இது கிறித்தவ மதத்தின் கடுங்கோட்பாடு மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அம்மத வரலாற்றில் நிகழ்ந்த முதல் பிளவாகும். இவை அனைத்தும் வாத்திகனின் திருச்சபைக்கு, இழந்து போன கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கினை மீட்கும் அவசியத்தையும், விரிவாகப் பிரச்சாரம் செய்யும் தேவையையம் உணர்த்தின. சில மேற்கு ஐரோப்பிய நாடுகள் ‘புராட்டஸ்டண்ட்’ பிரிவிற்கு மாறினாலும் பல நாடுகள் மாறாமல் தடுத்து நிறுத்தப்பட்டன. சிற்றரசர்களும், பேரரசர்களும் கிறித்தவ மதப் பணிக்காக ஆள் பலமும், பண பலமும் ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.

1534இல் இக்னேஷியஸ் லயோலா ஆரம்பித்த ‘ஜெசூட்ஸ்’ என்ற ஏசு சங்கம் இத்தகைய மிஷனரி மற்றும் பாதிரி – துறவியர்களுக்கு முன்னோடியாக விளங்கியது. இதன்பின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிஷனரி அமைப்புகள் தோன்றின. இவற்றில் போப்புக்கும் திருச்சபைக்கும் கட்டுப்பட்டவை ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தும், ஏனையவை புராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்தும் இருந்தன. இருப்பினும் இரு பிரிவைச் சேர்ந்த மிஷனரிகளும் மதத் தொண்டுப் பணிகளோடு தத்தமது நாட்டு ஆட்சியாளர்களின் காலனியாதிக்க நலன்களுக்குச் சேவையாற்றுவதையும் முக்கியமாகக் கொண்டிருந்தனர். இனி இந்தியாவுக்குத் திரும்புவோம்.

போர்ச்சுக்கல் நாட்டின் கடலோடி நாயகனான வாஸ்கோடகாமா தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி, மடகாஸ்கர்தீவு வழியாக இந்திய மாலுமிகளின் உதவியோடு கேரளத்தின் கோழிக்கோடு கடற்கரையில் 1498, மே மாதம் 27 ஆம் தேதி கரை இறங்கினார். ஆரம்பித்தில் போர்ச்சுக்கீசியர்களின் நோக்கம் வியாபாரம் செய்வதும் கிறித்தவ மதப் பிரச்சாரம் செய்வதும் என்பதாக இருந்தது. வலிமை வாய்ந்த இசுலாமியப் பேரரசினைப் போல கிறித்தவமும் அப்படி உருவாக வேண்டும் என்று திருச்சபையினால் ஊக்கங் கொடுக்கப்பட்ட போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவில் குறிப்பாக கோவா மற்றும் கேரளாவில் சுவிசேசப் பணியைத் துவங்கினர். முதலில் இந்தியாவும் கிறிஸ்தவ நாடுதான் என்று நம்பிய போர்ச்சுக்கீசியர்கள் பின்னர் அப்படி இல்லை எனப் புரிந்து கொண்டனர். எனினும் கேரளாவில் ஏற்கனவே சிரியன் கிறித்தவப் பிரிவு மக்கள் அரைகுறை கிறித்தவ மரபோடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களெல்லாம் முறையான கிறித்தவ மரபிற்கு உட்படுத்தப்பட்டு திருச்சபையின் வலைப் பின்னலில் சேர்க்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் அடாவடி வழிகள் மூலமாக மறை பரப்பிய போர்ச்சுக்கல் மிஷனரிகள் பின்னர் தமது வழிமுறைகளை மாற்றிக் கொண்டனர். இந்தியக் கிறித்தவ வரலாற்றில்  கோவாவில் மட்டுமே வன்முறைப் பாதையினை மேற்கொண்ட முதலும் – கடைசியுமான மிஷனரிகள் இவர்கள் மட்டுமே. அதேசமயம் தொண்டுப் பணியியைத் துவக்கி வைத்தவர்களும் இவர்கள்தான். 1541 இல் பிரான்சிஸ் சேவியர் என்ற புகழ்பெற்ற பாதிரியார்  கோவாவில் வந்திறங்கினார். இயேசு சங்க (ஜெசூட்ஸ்) நிறுவனரான இக்னோஷியஸ் லயோலாவின் சீடரான இவர், கப்பலை விட்டிறங்கி  முதலில் தொழுநோயாளிகளின் மருத்துவமனைக்குத் சென்றுவிட்டு பின்னரே ஆர்ச் பிஷப் அரண்மனைக்குச் சென்றார்.  அடுத்த வருடமே கோவாவில் புனித – பால் கல்லூரி நிறுவப்பட்டது. இது ஆசிய மற்றும் ஐரோப்பியப் பாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக விளங்கியது. சேவியரின் முயற்சியினால் கோவாவிலும், கேரளத்தில் மலபார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கிறித்தவத்தைத் தழுவினர். இந்தியாவில் பெருந்திரளான மக்கள் கத்தோலிக்கத்தில் இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை.

அதன்பின் ஏனைய ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் செழிப்பான பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்குடன் வணிகம் செய்ய வந்தன. போர்ச்சுக்கீசியர்கள் கோவா, டாமன், டையூவிலும், டச்சுக்காரர்கள் (ஹாலந்து) கொச்சியிலும், பிரெஞ்சுக்காரர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி, மாஹேயிலும், ஆங்கிலேயர்கள் சென்னை, மசூலிப்பட்டினம், சூரத், கொல்கத்தா என ஏனைய இந்தியப் பகுதிகளிலும் காலூன்றினர். இவர்களில் போர்ச்சுக்கீசியர்கள் கத்தோலிக்கப் பிரிவையும், ஏனைய நாடுகள்  புராட்டஸ்டண்ட் பிரிவையும் சார்ந்திருந்தன. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் நிலைகொண்ட ‘புராட்டஸ்டண்ட்’ நாடுகள் முதலில முக்கியமாக வணிகத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தன. பின்னர்தான் ஆசியாவில் தமது அரசியல் ஆதிக்கத்திற்கு மதமாற்றம் உதவுமென்பதைப் புரிந்து கொண்டனர். 17ஆம் நூற்றாண்டில் முடிவுற்ற போர்ச்சுக்கீசியர்களின் மதமாற்றம் பெருமளவு மக்களைச் சேர்ப்பதில் தோல்வியுற்றது.

அதன் பின்னரே 18, 19, 20 ஆம் நூற்றண்டுகளில் பெருமளவு மக்கள் பல்வேறு மிஷனரிகளால் கிறித்தவர்களாய் மாறினர். இன்று இந்திய கிறித்தவ மக்களின் எண்ணிக்கை நார்வே, டென்மார்க், பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம். மொத்த கிறித்தவர்களில் 70 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலும், 30 சதவீதம் பேர் வடக்கிலும் வாழ்கின்றனர். அந்தந்த மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாடு 5%, கேரளா 26%, ஆந்திரா 4%, கோவா 36%, நாகலாந்து 53%, மணிப்பூர் 19% என கிறித்தவ மக்களின் விகிதம் இருக்கிறது. இப்படிப் பெருந்திரளான மக்கள் மாறுவதற்குக் காரணம் என்ன?

இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல் கிறித்தவ மிஷனரிகள் ஆசைகாட்டியோ, அச்சுறுத்தியோ இதைச் செய்யவில்லை. பார்ப்பனியத்தின் கொடூரமான சாதிய சமூக அடக்குமுறையின் காரணமாக, தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்களிடம் தோன்றிய விடுதலை ஆர்வமே முதன்மையான காரணம்.

10-ஆம் நூற்றாண்டில் இருந்து தீவிரமான பார்ப்பனமயமாக்கத்திற்கு உள்ளாகிய மாநிலம் கேரளம். வடக்கிலிருந்து வந்த நம்பூதிரிகள் சில பத்தாண்டுகளுக்குள்ளாகவே கேரளத்தின் சமூக பொருளாதார ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். நம்பூதிரி, நாயர், கம்மாளர், ஈழவர் மற்றும் புலையர் என்ற இறுக்கமான சாதிய அமைப்பு கொடூரமான விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டது. அதற்கென்றே ‘சங்கர ஸ்மிருதி’ எனும் ‘பார்ப்பனக் குற்றவியல்’ சட்டத் தொகுப்பும் இயற்றப்பட்டது. மனுஸ்மிருதியின் கேரளப் பதிப்பான இந்நூலின் விதிமுறைப்படி தொலைவில் வரும் புலையரை ஒரு நம்பூதிரியின் கண்கள் பார்த்து விட்டாலே நம்பூதிரியைத் தீட்டுப்படுத்திய குற்றத்திற்காக அந்தப் புலையரைக் கொலை செய்யலாம். நாயர்களின் மணப் பெண்கள் தமது முதலிரவை நம்பூதிரிகளின் படுக்கையில் கழிக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் இந்நூற்றாண்டின் ஆரம்பம் வரை அமலில் இருந்துள்ளன. கேரள சாதியக் கொடுமைகளைக் கண்ட விவேகானந்தர் கேரளாவை ‘பைத்தியக்காரர்களின் நாடு’ என்றழைத்தார். கேரளாவில் இலட்சக்கணக்கான மக்கள் மதம் மாறுவதற்கு இவையே காரணங்கள். பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு எதிராக ஈழவ மக்களுக்குத் தன்மானமளித்த நாராயண குரு தோன்றுவதற்கான காரணமும் இதுதான்.

காலனிய ஆட்சியின்போது கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கி தென்கேரளத்தை ஆண்டு வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் ஆயிரக்கணக்கான மீனவர்களும், நாடார் சாதி மக்களும் கிறித்தவத்தைத் தழுவினர். ‘பள்ளு, பறை, சாணான், சக்கிலியன்’ என்ற தாழ்த்தப்பட்டவர்களின் படியமைப்பில் மூன்றாம் நிலையிலிருந்த சாணான் என்றழைக்கப்பட்டவர்கள் நாடார் சாதி மக்களாகும். ‘நாடார் பெண்கள் மாராப்பு போடக்கூடாது’ என்ற பார்ப்பன அடக்குமுறை அங்கே சட்டமாகவே இருந்தது. தமது போராட்டத்தின் மூலம் திருவிதாங்கூர் அரசை மாராப்பு போடக்கூடாது என்ற சட்டத்தை இரத்து செய்ய வைத்தார்கள் நாடார் சாதிப் பெண்களும், ஆண்களும். நாடார்கள் கோவில்களுக்குள் நுழையக்கூடாது என்பதை எதிர்த்துத் தனிக்கோவில்  – வழிபாட்டு முறையை உருவாக்கினார்  ஐயா வைகுண்ட நாதர். நாராயண குருவைப் போல குமரி மாவட்டத்தில் தோன்றிய இச்சீர்த்திருத்தப் பெரியவரின் கொள்கையை ஏற்றவர்கள் ‘ஐயா வழி’ மக்கள் என இன்றும் வாழ்கிறார்கள்.  எனவே குமரி மாவட்டத்தில் மதமாற்றம் எளிதில் நடந்தேறியதில் வியப்பில்லை.

ஒரிஸ்ஸாவின் சோட்டா நாக்பூர் பகுதியில் முந்த்தா ஆரோன், காரியா போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். பார்ப்பன மேல் சாதி நிலப்பிரபுக்களிடம் நிலமிழந்து, வாழ்விழந்து அடிமையில்  உழன்று கொண்டிருந்த இம்மக்களுக்கு பொருளாதார, கல்வி உதவிகளைச் செய்த மிஷனரிகள் வெகு விரைவிலேயே அவர்களுடைய நம்பிக்கை நட்சத்திரமாய் மாறினார்கள். 19 ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்திற்கு மாறிய இம்மக்கள், அதன் மூலமே ஓரளவிற்கேனும் தமது சுயமரியாதையையும், வாழ்க்கையையும் மீட்க முடிந்தது.

பெண் குழந்தைத் திருமணம், வல்லுறவில் இறந்து போகும் சிறுமிகளான மணப்பெண்கள், குலின் எனப்படும் பார்ப்பனப் பிரிவில் விதவைகள் விபச்சாரிகளாக மாற்றப்பட்டது, விதவைகளுக்கும் – விபச்சாரிகளுக்கும் பிறக்கும் கள்ளக் குழந்தைகள் ஒரு மாதத்தில் சராசரியாக 1000 வரை கொல்லப்படுவது – இவையெல்லாம் வங்காள மாநிலத்தில் பார்ப்பன இந்து மதம் ஏற்றி வைத்த மணி மகுடங்கள்.

இத்தகைய பார்ப்பன ஒடுக்கு முறைகளை ஒழிக்க முகலாயப் பேரரசர்களும், முசுலீம் குறுநில மன்னர்களும் பெரிதும் முயன்றாலும் வெற்றி பெறவில்லை. பின்னர் மிஷனரிகளின் முயற்சியாலும், கிறித்தவக் கல்லூரிகளில் பயின்ற இராஜாராம் மோகன்ராய் போன்ற இந்து அறிவாளிகளின் போராட்டத்தினாலும் ஆங்கிலேய அரசு தடைச் சட்டங்களைக் கொண்டு வந்தது.

இனி, இந்து மதவெறியர்கள் அபாயச் சங்கு ஊதும் வடகிழக்கு மாநிலங்களைப் பார்ப்போம். அஸ்ஸாமும் அதைச் சுற்றியுள்ள 6 மாநிலங்களும் அடங்கிய வடகிழக்குப் பகுதி ஏனைய இந்தியாவிலிருந்து இயற்கை, இனம், மொழி, பண்பாடு என பலவற்றிலும் வரலாற்று ரீதியாகப் பிரிந்தே காணப்படுகிறது. பிரம்மபுத்திரா, பாரக் நதிகளின் இரு பள்ளத்தாக்குகளும் இவற்றினைச் சுற்றி நெருக்கமான மலைகளும் இருக்கின்றன. மலைப் பகுதியில் மங்கோலிய இனப்பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இம்மக்கள் சீனா, திபெத் வழியாகப் பல நூற்றாண்டுகளுககு முன்பேயே குடியேறியவர்கள். பள்ளத்தாக்குப் பகுதியில் கலப்பின மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

காமரூபம் என்று வரலாற்றில் அழைக்கப்படும் (ஆரியர்களை எதிர்த்து நின்ற) இப்பகுதியை வேதங்கள் ‘கிராதர்கள், மிலேச்சர்கள் வாழும் நாடு’ எனக் குறிப்பிடுகின்றன. 13ஆம் நூற்றாண்டில் பர்மிய மன்னரான அஹோமி இப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், அவனது வம்சத்தின் ஆட்சி ஏறக்குறைய 6 நூற்றாண்டுகள் நீடித்தது. அஹோமி என்பதே பின்னர் அஸ்ஸாம என்பதாக மாறிற்று. கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஆரியர்கள் அஸ்ஸாமில் குடியேற ஆரம்பித்தனர். பழங்குடி மக்கள் மலைப்பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். பார்ப்பனியத்தின் வர்ண – சாதிச் சமூகமும், அதை நடைமுறைப்படுத்தும் சட்ட திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டன. அஹோமி வமிச மன்னர்களும் வைணவ இந்து மதத்தைத் தழுவிய பின்னர் ஆரியமயமாக்கம் முழு வேகத்தில் நடந்தேறியது. தாந்திரீகம் எனப்படும் மந்திர வழிபாடும், நரபலி, நிர்வாண பூஜை, சக்தி வழிபாடு எனக் கொடூரமான சடங்குகள் வெறியாடும் பிரதேசமாக அஸ்ஸாம் மாறியது.

இதை எதிர்த்து வந்த புத்த மதம் நெடுங்காலம் செல்வாக்குடன் நீடித்தது. வடகிழக்கில்  வர்ண சமூகம் குலைக்கப்பட்டு, புத்த மதம் வந்தது பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் வருத்தப்பட்டார். அதனால்தான் வங்கத்தில் இசுலாமும், வடகிழக்கு மாநிலங்களில் கிறித்தவமும் எளிதில் பரவமுடிந்தது என்று குமுறுகிறார் கோல்வால்கர். இன்றும் வடகிழக்கு மாநில இந்துக்களிடம், ஏனைய இந்திய இந்துக்கள் மத்தியில் காணப்படும் அசமத்துவச் சடங்குகள், இறைச்சி உண்பதில் பேதங்கள், கீழ் சாதியிடம் உணவு பெறுவதைத் தீட்டாகக் கருதுவது போன்ற பார்ப்பனப் பண்புகள் பெருமளவில் கிடையாது. காரணம் இம்மக்களிடம் மரபுரீதியாக இருந்து வந்த பழங்குடியினப் பண்பாடுதான்.

1825ஆம் ஆண்டு பர்மியர்களை ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு வடகிழக்கு மாநிலங்களில் காலனி ஆதிக்கம் தொடங்கியது. அப்போதிருந்து கிறித்தவ மிஷனரிகளின் தொண்டுப் பணியும் தொடங்கியது.  பல்வேறு பழங்குடியின மொழிகளுக்குக் கிறித்தவப் பாதிரிகள் ரோமானிய வரி வடிவம் கொடுத்தனர். தாய்மொழிக் கல்விக்கும், ஏனைய மருத்துவ பொருளாதார முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்கு முக்கியமானதாகும். இதனாலேயே கேரளாவிற்கு அடுத்து இலட்சக்கணக்கான மக்கள் இங்கே மதம் மாறினர்.

காலனிய ஆட்சியில் ஒன்றுபட்ட அஸ்ஸாமாக இருந்த வட கிழக்குப் பிரதேசம் வெள்ளையர்கள் வெளியேறிய பிறகு அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், மேகாலயா என ஏழு மாநிலங்களாக இந்திய அரசால் பிரிக்கப்பட்டன. இவற்றில் 3 மாநிலங்கள் கிறித்தவப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கின்றன. ஏராளமான பழங்குடியினப் பிரிவுகளையும், மொழிகளையும், வளர்ச்சி பெறாத தேசிய இனங்களையும் கொண்டிருக்கும் இம்மாநிலங்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கி இருப்பதற்குக் காரணம் இந்திய அரசுதான்.

வரலாற்று ரீதியாக இந்தியாவிலிருந்து பிரிந்திருந்த இம்மக்கள் இன்று  தமது வாழ்வுரிமைக்காக இந்திய அரசை எதிர்த்துப் போரிடுகிறார்கள். இந்தப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் அஸ்ஸாம் – போடோ, குக்கி – நாகா என ஒன்றுக்கெதிராக மற்றொரு இன மக்களை நிறுத்தி மோதவிட்டது இந்திய அரசின் சதி வேலையாகும்.  தற்போது அசாம் விடுதலைக்காகப் போராடி வரும் ‘உல்ஃபா’ இயக்கம் பெரும்பான்மையாக இந்துக்கள் அடங்கிய ஒரு குழுதான். அதனால் இவ்வமைப்பை இந்து மதவெறியர்கள் அங்கீகரிக்கிறார்களா என்ன? அவர்களை அடக்க கூடுதல் இராணுவத்தைத்தானே அனுப்புகின்றார்கள். எனவே வடகிழக்குப் பிரச்சினைகளுக்குக் கிறித்தவ மத மாற்றம் காரணமல்ல.

இந்தியாவில் மதமாற்றம் செய்ய வந்த மிஷனரிகளுக்கும் அவர்தம் நாடுகளுக்கும் ஆதிக்கம் செய்யும் நோக்கம் இருந்தது உண்மையே. ஆனால், மக்களோ, பார்ப்பனிய சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபடவே மதம் மாறினார்கள். பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியம் மறுத்த கல்வியைக் கிறித்தவம் கொண்டு செல்ல முயன்றது. அசாமி, வங்க மொழி, தமிழ், ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தேசிய மொழிகளில் முதன் முறையாகப் பள்ளிகளும், கல்லூரிகளும் நிறுவப்பட்டன. 18அம் நூற்றாண்டிலேயே பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்காக கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. அச்சகங்களும், வட்டார மொழி நூல்களும்  –  பைபிளும் வெளியிடப்பட்டன. நவீன வங்க இலக்கியம் தோன்றுவதற்கு மிஷனரிகளே காரணமாயின. வீரமாமுனிவரும், பெர்க்லி பாதிரியாரும் தமிழுக்குச் செய்த தொண்டு அளவிடற்கரியது. ஆங்கில – வட்டார மொழி அகராதிகள் வெளியிடப்பட்டன. இன்றும் இந்திய அளவில் 15 சதவீத பள்ளி மாணவர்களும், 10 சதவீத கல்லூரி மாணவர்களும் கிறித்தவ நிறுவனங்களில்தான் படிக்கின்றனர். 15% மருத்துவச் சேவையும் கிறிததவ மருத்துவமனைகளால்தான் இப்போதும் அளிக்கப்படுகின்றது.

இப்படி கல்வி, வட்டார மொழி வளர்ச்சி, சுகாதாரம், மருத்துவம், சிறு தொழில்கள் எனப் பல்வேறு சேவைகள் மூலம் கிறித்தவம் மக்களைக் கவர்ந்தது. சூத்திரரும், பஞ்சமரும் தங்களை முதன் முதலில் மனிதர்களாக மதித்தவர்களைக் கண்டனர்.

இருப்பினும் இந்திய மக்களைப் பெருமளவில் மதம் மாற்றுவதில் கிறித்தவம் தோல்வியுற்றது. பார்ப்பனியத்தின் சகல நோய்களையும் தீர்க்கும் வீரிய மருந்து பைபிளிடம் இல்லை. அதாவது பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை மிஷனரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனாலேயே இந்தியக் கிறித்தவ மதம் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டு சாதிய அமைப்பையும் ஏற்றுக்கொண்டது.

1606-ஆம் ஆண்டு, மதுரையில் திருமலை நாயக்கன் ஆண்ட காலத்தில் மதப்பிரச்சாரம் செய்ய வந்தார் நொபிலி என்ற பாதிரியார். அவர் தன்னை பிரம்மா அனுப்பிய பார்ப்பனனென்றும், தன்னுடன் 5-வது வேதத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறிக்கொண்டார். அதன் மூலமே பார்ப்பன மேல் சாதியினர் உள்ளிட்டு ஒரு சிலரை மதம் மாற வைத்தார். மதப்பிரச்சாரம் செய்ய அனுமதியும் பெற்றார். தமது சாதியச் சமூகச் சுரண்டலுக்கும் – ஆதிக்கத்திற்கும்  கிறித்துவ மதம் தடையில்லை என உணர்ந்த பிறகே பார்ப்பன மேல் சாதியினர் இந்தியாவெங்கும் கிறித்தவ மதமாற்றத்தை ஓரளவிற்கு அனுமதித்தனர்.

மேலும் மிஷனரிகளின் கல்வி – ஏனைய தொண்டுப் பணிகள் மூலமாக இந்து மதத்தின் ஆதிக்க சாதிப் பிரிவே கணிசமான ஆதாயங்களைப் பெற்றது. இவ்வாறு காலனியாதிக்கத்தின் சலுகைகளைப் பெற்று பிழைப்புவாதிகளாக மாறியதும் இவர்களே. இன்றும் நாடெங்கும் உள்ள செயின்ட் ஜோசப் – பீட்டர்ஸ் – ஜான்ஸ் – லயோலா போன்ற மிகப் பிரபலமான கிறித்தவக் கல்லூரிகளில் படித்துப் பயனடைபவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன ‘மேல்சாதி’ மேட்டுக்குடியினர்தான். அவ்வளவு ஏன், இன்று இந்து மதவெறியர்களின் பிரபலமான தலைவர்கள் பலரும் கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர்களே!

இவையெல்லாம் கிறித்தவ மதமாற்றத்தின் இன்னொரு பக்கம். பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மதத்தைத் தழுவிய கேரளம் கூட இன்று தலைகீழாக மாறிவிட்டது. கேரளத்தில ‘புதுக் கிறிஸ்தியானி’ என்ற பெயர் மிகவும் பிரபலம். அதன் பொருள் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் என்பதே. மேலும் இவர்கள் சமீபத்தில் மதம் மாறியவர்கள், பரம்பரைக் கிறித்தவர்கள் அல்ல என்றும் ஒதுக்கப்படுகிறார்கள். அதேபோல ‘சிரியன் கிறித்தவர்’ என்ற ‘பரம்பரைக் கிறித்தப் பிரிவு’ இந்துக்களின் நம்பூதிரி – நாயரைப் போன்ற ‘மேல்சாதி’ கிறித்தவர்களைக் குறிக்கும். இவர்களைத் ‘தம்புரானே, பணிக்கரே’ என்றுதான் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் விளிக்க வேண்டும். மேலும் தீண்டாமையும் வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் உண்டு. தேவாலயங்களில் கூட சாதிகளுக்குக்கேற்பத்தனி வழிபாடுகள், அல்லது தனித் தேவாலயங்கள் என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. தமிழ்நாட்டின் பல கிறித்தவ இடுகாடுகளில் தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பிணங்கள் நுழைய முடியாது.

எனவே, இந்தியாவில் எந்த மதமானாலும், எத்தகைய உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பால் செரிக்கப்படும் என்பது கிறித்தவத்தின் வரலாற்றில் உண்மையாகிவிட்டது.

அதேசமயம் இத்தகைய பார்ப்பன இந்து மதத்தின் சாதிய – தீண்டாமைக் கொடுமைகளே இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாம் – கிறித்தவ மதங்களுக்கு மாறுவதற்குக் காரணமாகிறது. இவை இந்து மதவெறியர்களுக்குத் தெரியும். அதனால்தான் ”சாதி – தீண்டாமையை ஒழிக்கிறோம், யாரும் மதம் மாறாதீர்கள்” என்று கூறுவதற்குப் பதில், மதமாற்றத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்.  அதனாலேயே கிறித்தவப் பாதிரிகள் எரிக்கப்படுவதும், தேவாலயங்கள் இடிக்கப்படுவதும் தொடர்கின்றது.  பார்ப்பனச் சாதிய அமைப்பு என்பது வெறும் சாதிய உணர்வு என்ற கௌரவம் சார்ந்த கருத்து மட்டுமல்ல; ஒரு சமூகப் பொருளாதாரச் சுரண்டல் நிறுவனமாக இருக்கிறது என்பதுதான் அதன் பலம். மதமாற்றத்திற்கெதிரான இந்து மதவெறியர்களின் வெறுப்பும் – திமிரும் அதிலிருந்துதான் பிறக்கிறது.

– தொடரும்

__________இதுவரை____________

தேவாலயத்தை ஆடுகளுக்காக ஒதுக்கி விடலாமா?

5

தேவாலயம் போதல்பிலிப் லார்கின்

தேவாலயம்ருமுறை அங்கு எதுவும் நடக்கவில்லை என்று
நன்கு அறிந்தே நான் உள் செல்ல,
கதவு மெத்தொலியுடன் சாத்திக் கொண்டது.
பாய் விரிப்புகள், இருக்கைகள் மற்றும் கற்கள்
மேலும் கொஞ்சம் புத்தகங்கள் கொண்ட மற்றுமொரு தேவாலயம்;
ஞாயிற்றுக்கிழமைக்காகப் பறிக்கப்பட்ட மலர்கள்
பழுப்பு நிறத்தில் பரவிக் கிடந்தன;
சிறிய, நேர்த்தியான இசைக்கருவி;
மேலும் ஒரு கலவரமூட்டும், நாட்பட்ட, ஆதாரமான மவுனம்,
அதன் காலத்தை
நுரைத்திருக்கும் கடவுள் மட்டுமே அறிவார்.
தொப்பியையும், ஊக்குகளையும்
அருவருப்பான மரியாதையுடன் கழற்றினேன்.

முன்நகர்ந்து விளக்குக்கலத்தில் கையைப் பரவ விட்டேன்;
நான் நின்றிருந்த இடத்திலிருந்து கூரை புதிதாகத் தெரிந்தது–
துடைக்கப்பட்டிருந்ததா அல்லது புதுப்பிக்கப்பட்டிருந்ததா
எனத் தெரியவில்லை
வேறு யாரேனும் அறிந்திருக்கலாம்.
மேடையேறி சாய்மேசையில் பகட்டாக அகல்விரிவு கொண்டிருந்த
பைபிள் வசனங்கள் சிலவற்றில் கவனம் குவித்து
‘இங்கு முடிந்தது’ என்று நான் உணர்ந்து கொண்டதை விட
சற்றே உரத்து கூவினேன்.
எதிரலை சற்று நேரம் நீடித்து அடங்கியது
கதவு பின்னால் பதிவேட்டில் கையெழுத்திட்டு
ஆறணா ஐரிஷ் நாணயங்களை காணிக்கை செலுத்தினேன்.
அப்பகுதி நிற்கத் தகுதியற்றது என உணர்த்தியது.

இருந்தும் நான் நின்றேன்.
மெய்யாகவே, நான் இது போன்று
ஏதாவது செய்ய எப்போதும் ஒரு நட்டத்தில் முடியும்.
என்ன பார்ப்பது எனக் கிலேசமுற்று;
தேவாலயங்கள் அவற்றின்
பயன்பாட்டுத் தேவையை முழுவதும் இழக்க நேர்ந்தால் நாம்
அவற்றை என்ன செய்வது என்று யோசிக்கலானேன்.
சில தேவாலயங்களைக் காலவரன்முறைப்படுத்தி அவற்றின்
வரைதோல், தட்டு மற்றும் பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும்
அப்பக் கலத்தை மக்களின் பார்வைக்காக வைத்துக் கொள்ளலாம்.
மற்றவற்றை வாடகையின்றி ஆடுகள் மழையிலிருந்து
ஒதுங்கிக் கொள்ள அனுமதிக்கலாம்.
அல்லது அவற்றை துர்பாக்கிய நிலையங்கள் என்று
ஒதுக்கி விடலாமா?

இல்லையேல், இருண்ட பிறகு ஊசலாட்ட பெண்கள்
தம் குழந்தைகளை இங்குள்ள
ஒரு மந்திரக் கல்லில் தொட வைப்பார்கள்.
புற்று நோய்க்கு மூலிகை தேடுவர்;
அல்லது நெஞ்சறிந்த ஓர்
இரவில் இறந்தவர் நடமாடுவதாக உரைப்பர்.
விளையாட்டு, புதிர்கள் மற்றும் அங்கொன்று, இங்கொன்றாகச்
சில விஷயங்களினுள் ஏதோவொரு சக்தி அல்லது
வேறான ஓன்று என்பது நீடிக்கவே செய்யும்.
ஆனால், மூடநம்பிக்கையும், நம்பிக்கை போன்றே
கட்டாயம் அழிய வேண்டும்.
இந்த அவநம்பிக்கையும் கூட சென்று விட்டால்
வேறென்ன இருக்கும்? புற்கள், பாசிபடிந்த நடைமேடைகள், புதர்,
தூண்கள் மற்றும் வானம்.

ஒவ்வொரு வாரமும் அதன் தோற்றம் காணியல்பு குறைகிறது;
அதன் நோக்கம் மேலும் இருளார்நது  போகிறது. இந்த இடத்தின்
நோக்கம் பொருட்டு இறுதியாக, மிக இறுதியாக வருகிறவர்
யாராக இருக்கும் என்று நான் வியக்கிறேன்.
இந்த இசைக்கூடத்தின்
பேழைகளை இங்கு வந்து லேசாகத் தட்டி இசைக்கும்
கடைசி மனிதர் யார்?
ஒரு பாழ் குடிகாரரா, அவர்?
பழமையின் மீது காதல் கொள்ளும் ஒருவரா?
அல்லது இங்குள்ள வாடை வீசும் அங்கிகள், இசைப்பேழைகள் மற்றும்
நறுமணப் பொருள்களை எதிர்பார்த்து வரும்
ஓர் கிறிஸ்மஸ்– கொண்டாட்ட அடிமையா?
அல்லது அவர் என்னைப் போன்ற ஒருவரா?

சலிப்புற்று, உண்மையறியாது,
இந்த ஆன்மீக எச்சம் உருக்குலைவதை அறிந்தும்,
புறநகரின் புதர்க்காடு வழியே இந்த சிலுவையின் தளத்தை
நாடி வருவதன், காரணம், அது உருவான காலத்திலிருந்து
நீண்ட நெடுங்காலமாக திருமணம், பிறப்பு, இறப்பு மற்றும்
இது போன்றவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டுக்
கட்டப்பட்ட சிறப்புக்கூடம்?
துப்புரவற்ற, மட்கிய இந்த களஞ்சியத்திற்கு
வேறு என்ன மதிப்பு இருக்க முடியும்
என்று என்னால் சொல்ல இயலவில்லை.
அது என்னை இங்கு அமைதியாக நிற்கத் தூண்டுகிறது.

நிறை முனைப்பு கொண்ட இப்புவியின் நிறைவான ஓர் இல்லம் இது.
இவற்றின் இணைந்த உலாவலில் நமது வாழ்க்கை நிர்ப்பந்தங்கள்
சந்தித்து, அங்கீகாரம் பெற்று
நமது விதிகள் என்று அலங்காரம் கொள்கின்றன. மேலும்
அது கூடுதலான தொன்மம் அடையவில்லை.
யாரேனும் ஒருவர் எப்போதாவது வந்து ஆச்சரியப்படுத்துகிறார்.
பசித்த ஒருவர் மிகத் தீவிரமாக இந்த இடத்திற்கு இழுக்கப்படுகிறார்.
இங்கு இறந்து கிடப்பவர்களை வைத்து,
இங்கு வருவது
நல்லது என்று அவர் ஒருமுறை கேள்விப்பட்டார்.

_________________________________________________

– பிலிப் லார்கின். தமிழில் – சம்புகன்.
__________________________________________________
குறிப்பு:
‘இங்கு முடிந்தது’ — சர்ச்சில் திருமறைப் பகுதி வாசித்து முடித்த பின் சொல்லப்படும் கடைசி வார்த்தை.
ஆறணா ஐரிஷ் நாணயங்கள் — இங்கிலாந்தில் செல்லத்தக்கவை அல்ல.

__________________

ஆசிரியர் குறிப்பு:

பிலிப் லார்கின்
பிலிப் லார்கின்

இங்கிலாந்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்த பிலிப் லார்கின் தனது கல்லூரி படிப்பை ஆக்ஸ்பர்டில் மேற்கொண்டார். ஐரோப்பாவின் நவீனத்துவ கவிதை மரபில் 1950 –களில் உருவான ‘செயற்பாட்டு கவிஞர்கள்’ [Movement Poets ] குழுவில் முதன்மையான பங்கு வகித்தார். ஜே. என்ரைட் . எலிசபத் ஜென்னிங்க்ஸ், தாம் கன், டொனால்ட் டேவி போன்றோர் செயற்பாட்டு கவிஞர்களில் முக்கியமானவர்கள். டி.எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட், டி.எச். லாரன்ஸ் போன்ற ஆரம்ப கட்ட நவீனத்துவ கவிஞர்களிடமிருந்து சற்றே வேறுபட்டவர்கள் இவர்கள். பழமையை மீட்பதும், மீடுவதும் அல்ல; அதனை நிராகரிப்பதும், எதிர்த்த சமருமே நவீனத்துவம் என்று பிலிப் லார்கின் கவிதைகள் அறைந்து பேசுகின்றன. Whitsun Weddings , High Windows , The Less Deceived போன்றவை விரிந்த சமூகப் பார்வை கொண்ட அவருடைய அங்கதக்  கவிதைகள். 1984 –ல் தனக்கு அளிக்கபட்ட அரசவை கவிஞர் அந்தஸ்தை ஏற்க மறுத்தார் பிலிப் லார்கின். இயக்குனர்கள், நடிகர்கள், டி.வி.க்கள் மற்றும் ஆட்சியாளர்களின் அழைப்பு மணிக்காக ஏங்கித் தவித்துக் கிடக்கும் நமது தமிழ் இலக்கிய அவலச் சூழலுக்கு பிலிப் லார்கின் மொழியடிப்படையில் மட்டுமல்ல அரசியல் மற்றும் பண்பு வகையிலும் அந்நியமானவர்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் கருத்துநிலை சார்ந்தும், நடைமுறை ரீதியிலும் ஐரோப்பிய மக்களிடையே சமயம் சார்ந்த நம்பிக்கைகளும், மதிப்பீடுகளும் வீழ்ச்சியுற்றதை இக்கவிதை கொண்டாடுகிறது. ஞாயிறு ஆராதனைகளில் மக்களின் எண்ணிக்கை அற்பமாக ஆனது. வருத்தப்பட்டு பாரம் சுமந்தவர்கள் தமது ஆகக்குறைந்த தேவையான இளைப்பாறுதலுக்கு கூட தேவாலயத்தின் கதவுகளை தட்ட மறுத்தார்கள். உள்ளடங்கிய கேலியும், எள்ளலுமாக இக்கவிதை மிளிர்கிறது. இக்கவிதை விரிக்கும் சித்திரத்திற்கு நேர்மாறான நிலையை நாம் இந்தியாவில் காண்கிறோம். நூறாண்டு, இருநூறாண்டு பழம்பெருமையை பேசும் தேவாலயங்கலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்திய ஒரு பழக்கத்தை அவர்கள் கைவிட்ட பின்னரும் நமது நாட்டின் கிறித்தவர்கள் தொடர்வது ஒருவகையில் நகைமுரண் தான். மதுப்பழக்கத்தை கற்றுக் கொண்டவன், கற்றுக் கொடுத்தவன்  திருந்திய பின்னரும் தொடர்வது போன்ற சோகம் இது. தமது நற்செய்தி மேளாக்கள் களைகட்ட மேற்கத்திய பிரச்சாரகர்களை அழைத்து வரும் பாதிரிமார்கள், பிலிப் லார்கின் போன்ற கவிஞர்களையும் அறிமுகப்படுத்துவார்களா?

தமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை!

15

போலீசு

ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு போலீசும் “இது நம்ம ஆட்சி” எனக் குதூகலிக்கத் தொடங்கிவிடுகிறது.

மக்கள் போராட்டங்களைக் கொடூரமாக ஒடுக்கியும், பல கொட்டடிப் படுகொலைகளையும், போலிமோதல்களையும் செய்துவரும் இந்த செல்லப் பிராணிக்கு, இராணுவத்துக்கு உள்ளது போன்ற அத்தியாவசிய பொருட்களை மலிவாக விற்கும் சிறப்பங்காடி, அதிநவீன சொகுசுக்கார்கள், பல லட்சம் மதிப்பிலான சொகுசு மாடிக் குடியிருப்புகள் என வெகுமதிகளை வாரிவழங்கி வருகிறார் ஜெயலலிதா.

காவல்துறையின் பணிச்சுமையைக் குறைத்து, சட்டம் ஒழுங்கையும் புலனாய்வையும் இன்னும் ‘சிறப்பாக’ச் செய்வதற்கென அண்மையில் ஜெயலலிதா காவல்துறைக்கு துணையாக “தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை” யை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களைக்கொண்டு மாவட்டப் போலீசு கண்காணிப்பாளர்களால் உருவாக்கப்படவுள்ள இந்தப்படை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கூட்ட நெரிசல்களை சரிசெய்தல் போன்ற வேலைகளோடு இரவு ரோந்துப்பணியிலும் ஈடுபடுத்தப்படும்.

பணிக்காலத்தில் மாதந்தோறும் ரூ.7500 ஊதியமும், காவலர்கள் சிறப்பங்காடிகளைப் பயன்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படும். இதுதவிர மானிய விலையில் அவர்களுக்கு அரிசி,கோதுமை, சர்க்கரை போன்றபொருட்களும் வழங்கப்படும் என்று அரசின் அறிவிப்பு கூறுகிறது.

இவ்வாண்டு பத்தாயிரம் பேரையும், அடுத்த ஆண்டு 15 ஆயிரம் பேரையும் சேர்த்து உருவாக்கப்படும் இப்படை, வருங்காலத்தில் சுமார் 50 ஆயிரம் பேரைக் கொண்டதாகக் கட்டமைக்கப்படுமாம். இதில் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் போலீசுத் தேர்வில் முன்னுரிமை என்றும், நாற்பது வயது வரை துணைப்படையிலேயே இருப்பவர்களை நேரடியாக போலீசுப்படையில் சேர்ப்பது என்றும் தூண்டில்போட்டு இளைஞர்களைச் சுண்டியிழுக்க உள்ளனர்.

பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப 635 பேருக்கு ஒரு போலீசு எனும் விகிதத்தை நிலைநாட்டுவதற்காகவே துணைப்படை உருவாக்கப்படுவதாக ஜெயலலிதா சொல்லியுள்ளார். இதே அரசிடம் 42 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தை நிலைநாட்ட கறாரான திட்டம் ஏதும் கிடையாது. பல பள்ளிகளில் 60 முதல் 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல இன்னமும் 10 ஆயிரம் மக்களுக்கு 6-க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர். இந்த எண்ணிக்கைகளை எல்லாம் உயர்த்த அக்கறையில்லாத அரசு, போலீசுப்படையை மட்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்களைத் தடாலடியாக ஓரேநாளில் வீட்டுக்கு அனுப்பி வைத்த ஜெயா, “அவர்கள் அனைவரும் தி.மு.க. அனுதாபிகள்” எனக் கூறி, இப்பணி நீக்கத்தை நியாயப்படுத்தினார். அப்படி தி.மு.க. மீது பழிபோட்ட ஜெயா, இப்பொழுது அ.தி.மு.க. அனுதாபிகளைக் கொண்டு சிறப்பு காவல் இளைஞர் படையை உருவாக்க முனைகிறார். மு.க. நியமித்த மக்கள் நலப் பணியாளர்களும், சாலைப் பணியாளர்களும் கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டனர் எனச் சொல்லிக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால், அம்மா உருவாக்க இருக்கும் இளைஞர் படையோ, மக்களுக்குச் சேவை செய்வதற்கு அல்ல; மக்களை ஒடுக்கும் நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகிறது.

“சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செயப்படாமல் மாவட்டப் போலீசு கண்காணிப்பாளரே இப்படையிரைத் தேர்வு செய்வதால், அ.தி.முக.வினர் பரிந்துரைதான் இப்படையின் தேர்வில் செல்லுபடியாகும்; அ.தி.மு.க. வின் இளைஞர்களை அரசுப் பணத்தில் குளிப்பாட்டிடும் திட்டம்” என அம்பலப்படுத்தி, ஜெயாவின் இத்திட்டத்தை கருணாநிதி எதிர்த்திருக்கிறார். ஆனால், அவர் கருதுவதுபோல இப்படை வெறுமனே ஆளும் கட்சித் தொண்டர்கள் பொறுக்கித் தின்பதற்கான திட்டம் மட்டும் அல்ல.

மக்கள் விரோத குண்டர்களைப் பொறுக்கியெடுத்து துணைப்படை அமைத்து, அந்தந்த மாநிலங்களில் அரசுக்கு எதிரான கருத்துகளோ, போராட்டமோ முளைவிடாது அழித்து வருவதை கடந்த சில ஆண்டுகளாகவே பல மாநில அரசுகள் செயல் உத்தியாகவே கடைப்பிடித்து வருகின்றன. கர்நாடகத்தில் ‘போலீசு நண்பர்கள்’ எனும் பேரில் ஆட்காட்டிகளை உருவாக்கியுள்ளனர். மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் செல்வாக்கு பெற்றுள்ள மாநிலங்களில் சல்வாஜூடும், நாகா, கோர்பா போன்ற பல பெயர்களில் ஆயுதம் தாங்கிய குண்டர் படைகளை உருவாக்கி, பழங்குடியினரையும் புரட்சியாளர்களையும் ஒடுக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இங்கு ‘தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை’ உருவாக்கப்படுகிறது.

ஆனால், அம்மாவின் முன்னாள் தோழர்களான மார்க்சிஸ்டுகள் இப்படை உருவாக்கப்படுவதன் பின்னுள்ள இந்த பாசிச நோக்கத்தை அம்பலப்படுத்த முன்வராமல், சாலைப் பணியாளர்கள், மக்கள்நலப் பணியாளர்கள் நீக்கப்பட்டது போல் இப்படையினரும் நீக்கப்படும் வாப்புள்ளதாக வருத்தப்பட்டு, போலீசு குண்டர்களை இன்னும் அதிகமாகத் தேர்வு செய்யுங்கள்; இப்புதிய இளைஞர் படை தேவையில்லை என்ற ஆலோசனையை அம்மாவின் முன் வைத்துள்ளனர்.

இங்கே நடைமுறையிலுள்ள தீவிரமான மறுகாலனியாக்கச் செயல்திட்டங்களின் விளைவாக சகல தரப்பு மக்களிடமும் அரசுக்கெதிரான கோபம் ஏற்கெனவே பரவி வருகிறது. அணு உலை எதிர்ப்புப் போராட்டம், மின்வெட்டுக்கு எதிரான போராட்டம் என உருவாகியுள்ள அக்கோபம் மாபெரும் எழுச்சியாக மாறிவிடாதபடிக்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் தீவிரமான கண்காணிப்பின் கீழ் அரசு கொண்டுவர முயலுகிறது.

அரசுக்கெதிரான கூட்டங்களுக்கு போலீசு அனுமதியே தருவதில்லை. இதன்பின் நீதிமன்றத்தில் வழக்காடி அனுமதி பெற்று வந்தாலும் கூட்டத்துக்கு வருவோரின் முகங்களை வீடியோவில் பதிவு செய்து மக்களை பீதிக்குள்ளாக்குகிறது,போலீசு. பெருநகரங்களில் முக்கியமான இடங்களில் எல்லாம் 24 மணிநேரமும் இயங்கும் காமிராக்களை பொருத்திக் கண்காணிக்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகள் அனைத்தையும் பயோமெட்ரிக் கருவிகளின் மூலம் கண்காணிக்கவும் உள்ளது.

சென்னையில் நடந்த தொடர்கொள்ளைகளைக் கண்டறியத் துப்பில்லாத போலீசு, வடமாநிலத்தினர் சிலரை போலிமோதலில் சுட்டுக்கொன்றது. பின்னர், வாடகைக்குக் குடியிருப்பவர்களின் புகைப்படங்களோடு கூடிய தகவல்களை வீட்டு உரிமையாளர்கள் காவல்நிலையங்களில் தந்தாகவேண்டும் எனக் கட்டாயப்படுத்தி, ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க முயன்றது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினரின் சட்டப் போராட்டத்தால் போலீசின் இந்த சட்டவிரோதச் செயல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்போது வேறுவழியில் அதனைச் சாதிக்க முயலுகிறது. படித்துவிட்டு வேலையின்றி வாடும் இளைஞர்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்படும் இப்படையை வைத்தே ஒவ்வொரு தெருவையும் அரசு இனி கண்காணிக்கும். மக்களின் கோபம் அரசுக்கு எதிராக எங்கெல்லாம் உருவாகிறதோ, அங்கெல்லாம் இந்த உளவாளிகள் மக்களைக் காட்டிக்கொடுத்து ஒழிக்கத் துணைபோவார்கள். இவ்வாறு சமூகத்தையே பாசிசத்தின் பிடியில் ஒப்படைக்கிறது, ‘தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை’த் திட்டம். இதுவே நாளை சல்வாஜூடும் போன்ற கொடூரமான படையாகவும் பரிணமிக்கலாம். நாடும் மக்களும் பாசிச பயங்கரவாதத்தின் பிடியில் தள்ளப்படும் பேரபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விழிப்புடனிருந்து அதனை முறியடிப்பதே இன்றைய அவசியமாகியுள்ளது.

_____________________________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
_________________________________________________________________

புருணே சுல்தான் : உலகின் நம்பர் 1 ஆடம்பர-வக்கிரம் !

28
புருனே சுல்தான் ராணியுடன்
புருணே சுல்தான் ராணியுடன்

கெபாவா துலி யாங் மஹா முலியா பாதுகா சேரி பாகிந்தா சுல்தான் ஹாஜி ஹஸ்ஸனல் போல்கியா அல் முயிஜாதீன் வதாவுல்லா இப்னி அல்மார்ஹம் சுல்தான் ஓமர் அலி சாய்புதீன் சாஅதுல் காய்ரி வாத்தியன் ஜிசிபி, ஜிசிஎம்ஜி (கொஞ்சம் மூச்சு வாங்கிக்குங்க) என்ற பெயர் படைத்த புருணே சுல்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர்.

1946-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்த சுல்தானுக்கு கடைசியாக கிடைத்த தகவல்களின் படி 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர்.  ராணி அனக் சலேஹா முதல் மனைவியாக செயல்படுகிறார். சுல்தானது இரண்டாவது மனைவி ராணி மரியத்தை 2003-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்போதைய இரண்டாவது மனைவி அஸ்ரினாஸ் மஹர் ஹக்கீம் சுல்தானை விட 32 வயது இளையவர்.

சுல்தானின் 5 வது மகள் 32 வயதான ஹபிசா வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றவர். பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் 29 வயதான முகமது ருசானியை அவர் 2012 செப்டம்பர் 20-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு 40 மில்லியன் யூரோ (சுமார் ரூ 270 கோடி) செலவாகியிருக்கிறது. 3000 விருந்தினர்கள் கலந்து கொண்ட 4 நாட்கள் திருமணத்தில் வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணைப் பறிக்கும் உடைகளில் மணமக்கள் ஜொலித்தனர்.

திருமண விழாவில் தாய்லாந்து பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடியா பிரதமர் உள்பட ஏராளமான வெளிநாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

புருணே சுல்தானிடம் $15 பில்லியன் யூரோ (சுமார் ரூ 1 லட்சம் கோடி) சொத்து உள்ளது. ஒரு காலத்தில் $20 பில்லியனுக்கும் அதிக சொத்துடன் உலகிலேயே முதல் பணக்காரராக இருந்த சுல்தான் அவற்றை எல்லாம் எப்படி சம்பாதித்தார், எப்படி செலவழிக்கிறார் என்று சில விவரங்களை பார்க்கலாம்.

சுல்தானின் அரண்மனையில் 2 லட்சம் சதுர அடியில் 1788 அறைகளும், 257 குளியலறைகளும் உள்ளன. பெரும்பாலான அறைகளில் தங்கத்தால் இழைக்கப்பட்ட சுவர் மறைப்புகள் தொங்குகின்றன. குளியலறைகளில் தங்கக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவரிடம் மொத்தம் 3,000 முதல் 5,000 கார்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கின்னஸ் புத்தகம் அவரிடம் 500 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளதாக பதிவு செய்துள்ளது. அதில் முழுக்க வெள்ளி தகடுகளால் செய்யப்பட்ட காரும் உண்டு.

புருணே சுல்தானின் சகோதரர் ஜெப்ரி போல்கையா உலக அளவில் ஒரு பிளேபாயாக புகழ் பெற்றுள்ளார். அவர் புருணே அரசாங்கத்திலிருந்து $10 பில்லியன் டாலர் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு சுல்தானுடன் பல ஆண்டுகள் வழக்கு நடத்தினார்.

புருனே சுல்தான் மகள் திருமணம் நடைபெற்ற அரங்கு
புருணே சுல்தான் மகள் திருமணம் நடைபெற்ற அரங்கு

சுல்தான் தனது தனிப் பயன்பாட்டுக்காக தங்கத்தால் இழைக்கப்பட்ட போயிங் 747-400 விமானம் ஒன்றையும், ஆறு சிறு விமானங்களையும் இரண்டு ஹெலிகாப்டர்களையும் வைத்திருக்கிறார்.  போயிங் விமானத்தில் 400 பேர் பயணம் செய்ய முடியும். மேலும் விமானம் முழுக்க நட்சத்திர விடுதியின் அனைத்து வசதிகளும் இருக்கின்றன.

முடி வெட்டிக் கொள்வதற்காக 15,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் (ரூ 12.7 லட்சம்) செலவழித்து லண்டனை சேர்ந்த ஒரு சிகை திருத்தும் தொழிலாளியை விமானத்தில் அழைத்து வரச் செய்கிறாராம். ஒரு முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனி அறை பதிவு செய்து கென் மோடஸ்தோ என்ற சிகை திருத்துபவரை லண்டனிலிருந்து வரவழைத்தாராம். அவருக்கு பல ஆயிரம் டாலர்கள் கட்டணமாக கொடுக்கிறார். லண்டனில் 30 பவுண்டுகள் மட்டுமே வசூலிக்கும் கென் சுல்தானுக்கு 16 ஆண்டுகளாக முடி வெட்டுகிறார்.

மத்தியதரைக் கடலில் மிதக்கும் மாளிகை, உலகின் பல பெரு நகரங்களில் தங்குவதற்காக சொந்த மாளிகைகள் என்று உலகெங்கும் தனது ஜாகைகளை போட்டிருக்கிறார் சுல்தான். லண்டனில் அவருக்கே மட்டுமான மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறாக சொத்து கொஞ்ச கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு சொத்தும் எங்கிருந்து வந்தது, அவற்றை யார் சம்பாதித்து கொடுக்கிறார்கள், சுல்தான் அவற்றை எப்படி பராமரிக்கிறார் என்று பார்க்கலாம்.

சுல்தான் 1959-ம் ஆண்டு புருணேயின் அரசியலமைப்பு சட்டத்தின் படி நாட்டின் தலைமை ஆட்சியாளராகவும் 1962-ம் ஆண்டு எடுத்துக் கொண்ட அவசர நிலை அதிகாரங்களுடனும் ஆட்சி புரிகிறார். அவரே புருணேயின் பிரதம மந்திரியாகவும் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சராகவும் செயல்படுகிறார்.

புருணேயின் எண்ணெய் வளத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்வதற்கு ஒரு ஒப்பீட்டை பார்க்கலாம்.

அதாவது உலகின் எண்ணெய் உற்பத்தி மதிப்பு ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பில் உள்ளது. புருணேயில் தனி நபர் உற்பத்தியின் மதிப்பு அதை விட சுமார் 30 மடங்கு அதிகமாக ஆண்டுக்கு ஒரு நபருக்கு கிடைக்கும் எண்ணெய் மதிப்பு ரூ 7.45 லட்சமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ 1,500 மதிப்பிலான எண்ணெய் கிடைக்கிறது. புருணேயின் பக்கத்து நாடுகளான மலேசியாவில் ரூ 47 ஆயிரம் மதிப்பு எண்ணெயும், இந்தோனேஷியாவில் ரூ 12 ஆயிரம் மதிப்பிலும் எண்ணெய் ஒரு நபருக்கு ஆண்டுக்கு உற்பத்தியாகிறது.

புருணேயில் சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.  பெரும்பான்மை மக்கள் அரசுப் பணியில் உள்ளனர். அபரிதமான எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் பெரு வருமானத்தில் பெரும்பகுதியை தனக்கு வைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறார் சுல்தான்.

புருனே சுல்தான் மகள் திருமணக்கோலத்தில்
புருணே சுல்தான் மகள் திருமணக்கோலத்தில்

புருணேயின் எண்ணெய் வளங்களை அமெரிக்க நிறுவனமான ஷெல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எண்ணெய் அகழ்வதற்கான பொறுப்பை ஷெல் புருணே என்ற பெயரில் செய்கிறது.  சுல்தானுக்கு போய்ச் சேர வேண்டிய பங்கை கொண்டு சேர்த்து விடுகிறது. அதன் மூலம் புருணே சுல்தான் தனது சொத்துக்களை சேர்த்திருக்கிறார்.

ஷெல் எண்ணெய் நிறுவனம் புருணேவில் 20,000 மைல்களுக்கும் அதிக நீளமான எண்ணெய் குழாய்களை பராமரிக்கிறது. ஒவ்வொன்றும் 40,000 பேரல் பிடிக்கும் சுமார் 50 அடி விட்டத்திலான டாங்குகளில் எண்ணெய் சேமித்து வைக்கப்படுகின்றது. காடுகளின் நடுவில் ஒரு முழுமையான பெட்ரோ வேதி குழுமத்தை ஷெல் உருவாக்கியிருக்கிறது.

புருணே ஷெல் (பிஎஸ்பி) புருணே அரசாங்கமும், ராயல் டச்/ஷெல் குழுமமும் சம அளவு பங்கு வைத்துள்ள கூட்டு நிறுவனம். அது நாட்டின் ஒரே சுத்திகரிப்பு ஆலையை நடத்துகிறது. பிஎஸ்பியும் அதன் துணை நிறுவனங்களும் நாட்டின் மிகப்பெரிய வேலை தருபவர்களாக இருக்கின்றனர். அரசாங்கத்துக்கு அடுத்தபடியாக. பிஎஸ்பியின் சிறு சுத்திகரிப்பு ஆலை ஒரு நாளைக்கு 10,000  பேரல்களை சுத்திகரிக்கிறது. இதன் மூலம் உள்நாட்டுத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.

தொழிற்சாலை பகுதியைத் தாண்டி ஷெல் தொழிலாளர்களும் குடும்பத்தினருடன் வசிக்கும் சேரியா என்று நகரீயம் உள்ளது. சேரியா ஒரு கார்ப்பரேட் நகரீயம். ஷெல் விமான நிலையத்தில் சிங்கப்பூர், குவாலாலம்பூர், பாங்காக், பாலி, ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற இடங்களிலிருந்து ஷெல் ஊழியர்கள் வந்து இறங்குகின்றனர். ஆம்ஸ்டர்டாமிலிருந்து கேஎல்எம் விமானத்தில் ஷெல் தொழிலாளர்களின் குடும்பத்தினர் வந்து சேருகின்றனர். ஷெல் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, ஷெல் ஊழியர்களுக்கான பள்ளிக்குப் போய், ஷெல் கிளப்பில் ஓய்வெடுத்து, ஷெல் பீச்சில் விளையாடி, ஷெல் கடையில் பொருட்கள் வாங்கி வாழலாம். ஷெல் வானொலி நிலையம் கூட இருக்கிறது.

நாடு முழுவதும் மது பானங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஷெல் ஆயில் இடங்களில் மது பானங்கள் வழங்கப்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஷெல் நீச்சல் கிளப்பில் நீந்தி விட்டு, ஷெல் டென்னிஸ் கிளப்பில் விளையாடி விட்டு, ஷெல் உணவு கூடத்தில் சாப்பிட்டு விட்டு ஷெல் பேருந்தில் ஏறி ஷெல் விமான நிலையம் போய்ச் சேரலாம்.

புருணேயில் இயற்கை வாயு, 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புருணே லிக்விபைட் நேச்சுரல் கேஸ் தொழிற்சாலையில் திரவமாக்கப்படுகிறது. அது உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு) ஆலைகளில் ஒன்று. ஒப்பந்தப்படி புருணே ஜப்பானுக்கு ஆண்டுக்கு 5 மில்லியன் டன் எல்என்ஜி வழங்க வேண்டும். ஜப்பானிய நிறுவனம் மிட்சுபிஷி, ஷெல் மற்றும் புருணே அரசாங்கத்துடன் கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 1995 முதல் அந்த நிறுவனம் 7 லட்சம் டன் கொரியா வாயு நிறுவனத்துக்கு சப்ளை செய்துள்ளது.  உள்நாட்டு மின்சார உற்பத்திக்கு சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது.

புருணேவில் இது வரை உறுதி செய்யப்பட்ட எண்ணெய் வளம் 2015 வரை போதுமானது. ஆழ்கடல் தேடலின் மூலம் கூடுதல் கையிருப்புகள் கிடைக்கலாம் என்று தெரிய வருகிறது. பொருளாதாரத்தை வேறு திசைகளில் வளர்ப்பதற்கான முயற்சிகள் பெருமளவு வெற்றி பெறவில்லை. எண்ணெய் துறையைத் தவிர விவசாயம், காடுகள், மீன் பிடித்தல், வங்கி ஆகியவையும் சிறிதளவு நடைபெறுகின்றன.

புரூனே வரைபடம்புருணேயின் எண்ணெய் உற்பத்தி 1979ல் 2,40,000 பேரல்களாக இருந்தது. அதன் பிறகு வேண்டுமென்றே குறைக்கப்பட்டு இப்போது ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் பேரல் அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆசிய பசிபிக் பகுதியில் இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து புருணே எல்என்ஜி ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ளது. புருணேயின் எண்ணெய் ஏற்றுமதியில் ஜப்பானின் பங்கு 1982ல் 42 சதவீதத்திலிருந்து 1998ல் 19 சதவீதமாக குறைந்தது. தாய்வான், ஆசியான் நாடுகள், அமெரிக்கா ஆகியவை புருணே நாட்டின் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளும் மற்ற முக்கிய நாடுகள்.

அரபு நாடுகள், நைஜீரியா, கொலம்பியா, ஈக்வேடர், பர்மா, காஸ்பியன் கடல் என்று எங்கெங்கு நுழைந்தாலும் தனது கறையை படியச் செய்து விடும் பன்னாட்டு எண்ணெய் வியாபரத்தின் இன்னொரு பெருங்கறைதான் புருணே. அந்த எண்ணெய் வளம் உருவாக்கும் வக்கிரமான ஆடம்பரமும், பேராசையும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்படும் பன்னாட்டு அரசியல் கணக்குகளும்தான் புருணே சுல்தான் போன்ற வக்கிரங்கள் உலகில் இருப்பதை சாத்தியமாக்குகின்றன.  புருணே சுல்தானும் அவரது சகோதரரும் உலகின் மிகப் பெரிய ஊதாரிகளாகவும் கேடு கெட்ட மனிதர்களாகவும் உருவெடுத்துள்ளனர்.

புருணே சுல்தானின் அரசுக்கும் அரசியலுக்கும் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் குடை பிடித்து நிற்கின்றன. சுல்தானின் பாதுகாப்புக்காக பிரிட்டிஷ் அரசு கூர்க்கா படையணி ஒன்றை கொடுத்துள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் உலகளாவிய எண்ணெய் வழங்கல் சங்கிலியின் ஒரு கண்ணியாக சுல்தான் ஒழுக்கமான முஸ்லீமுக்கு பரலோகத்தில் கிடைப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தை இகலோகத்திலேயே அனுபவிக்கிறார்.

திருமணம்:

படிக்க:

புருணே சுல்தான்

பாலியல் வன்புணர்ச்சி – டெல்லி மட்டுமல்ல….

40

பாலியல் வன்முறை‌டந்த ஞாயிறன்று டெல்லியில் நடந்த பேருந்து கும்பல் பாலியல் வன்முறைக்காக ஒட்டுமொத்த தேசமுமே வீதியில் இறங்கிப் போராட வேண்டுமென்று ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன.

மறுநாள் திங்களன்று மாலை ஆறு மணிக்கு பாட்னா அருகிலுள்ள சகார்ஸா மாவட்டத்திலுள்ள பெல்வாரா புனர்வாஸ் என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் குழந்தை கோழிக்கறிக் கடையில் வேலை செய்யும் தனது அண்ணனை அழைக்க வெளியே செல்கிறாள். அரை கி.மீ தூரத்தில் உள்ள அந்த கடையை அடைந்து சகோதரனை அழைக்கிறாள். நீ முன்னால் போ, நான் கடையை அடைத்து விட்டு வருகிறேன் என்கிறார் சகோதரன். சகோதரன் வீடு திரும்பிய பிறகும் பெண் குழந்தை வந்தபாடாக இல்லை. இரவு 9 மணிக்கு தேடத் துவங்குகின்றனர். குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

காலையில் 250 மீட்டர் தூரத்தில் உள்ள கால்வாய்க்கருகில் செருப்பும் துப்பட்டாவும் கிடைக்கிறது. கால்வாயில் சிறுமியின் பிணத்தை கண்டுபிடிக்கின்றனர். பிரேதப் பரிசோதனையில் அவள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிறகே கொல்லப்பட்டிருக்கிறாள் என தெரிய வருகிறது. அவளது மாமா சொல்வது போல யாரும் காவல்துறை உயரதிகாரிகள் இங்கு வந்து விசாரித்ததாகவே தெரியவில்லை. ஒரு கண்காணிப்பாளர் மட்டும் தான் வந்தாராம். டெல்லியில் நடந்தால் அவர்களுக்கு அது முக்கியம், இங்கு நடந்தால் யாருக்குமே தெரிவதில்லை என்கிறார் அக்குழந்தையின் மாமா.

டெல்லி சம்பவத்திற்காக மாணவர்கள் ஊர்வலம் போகிறார்கள். நடுத்தர வர்க்கம் ஊர்வலம் போகிறது. சீக்கிய பெண்மணிகள் அமிர்தசரசில் உடனடியாக ஆறு பேரையும் தூக்கில் போடு எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் தூக்குக்கயிறை உயர்த்திப் பிடிக்கிறார்கள். சுஷ்மா சுவராஜ் 30 நாளில் வழக்கை நடத்தி முடித்து தூக்கில் போடுங்கள் என அப்சல் குருவுக்கு கேட்டது போல உத்திரவிடுகிறார். டெல்லி முதல்வர் காங்கிரசின் ஷீலா தீட்சித் அப்பெண்ணின் குடும்ப விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதி கூறுகிறார். மகிந்திரா நிறுவனம் பாதிக்கப்பட்ட பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிக்கு வேலை தருவதாக உறுதி அளித்துள்ளது.

டெல்லியில் கும்பலாக நடத்திய பாலியல் தாக்குதலையும், அதனைத் தொடர்ந்து அப்பெண் மற்றும் அவரது நண்பரை தாக்கியதும் மிகவும் கொடூரமான நிகழ்ச்சிதான். கட்டாயம் அனைவரும் அதனை கண்டிப்பது சரியானதுதான். ஆனால் சத்திய ஆவேசம் உண்மையானது என்றால் கேட்கப்படாத வன்முறைகள் ஆயிரம் இருக்கின்றனவே!

வாச்சாத்தியின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமே கிடைக்காத போதிலும் மொன்னைத் தீர்ப்பை பெறவே 20 ஆண்டுகள் ஆனதையும், சிதம்பரம் பத்மினி வழக்கையும் கொஞ்ச‌ம் ஒப்பிட்டுப் பார்க்க‌ வேண்டியுள்ள‌து. வ‌ட‌ கிழ‌க்கின் போராளிப் பெண்க‌ளை இந்திய‌ பாதுகாப்பு ப‌டைக‌ள் கொன்று குவிப்ப‌தும், க‌ஞ்ச‌ம் ம‌னோர‌மா போன்ற‌ போராளிப் பெண்க‌ளை பாலிய‌ல் வ‌ல்லுற‌வுக்குள்ளாக்கியும், அவ‌ர்க‌ள‌து பிற‌ப்புறுப்பில் ல‌த்தியை திணித்திருந்த‌ செய‌லையும் செய்த‌  ராணுவ‌த்தை இன்று போராடும் யாரும் எதிர்த்த‌தாக‌ தெரிய‌வில்லை.

விழுப்புரத்தில் இருளர் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய காவல்துறை மீது வழக்கு தொடுக்கப்பட்ட போது, பணம் பிடுங்க இந்தப் பெண்கள் நாடகமாடுகிறார்கள் என்றார் ஜெயலலிதா. அப்போதெல்லாம் சுஷ்மா சுவராஜ்கள் எங்கிருந்தார்கள்? ஊடகங்கள் இதை பரபரப்பாக காட்டி நடுத்தர வர்க்கத்திடம் பிரச்சாரம் செய்வதால் அரசியல்வாதிகள் அனைவரும் பாராளுமன்றத்திலேயே குமுறியிருக்கின்றனர். ஏழைப் பெண்களுக்கோ, இராணுவம், போலீசால் குதறப்படும் பெண்களுக்கோ இத்தகைய ஊடக வெளிச்சம் கிடைப்பதில்லை.

ச‌மீப‌த்தில் டிச‌ம்ப‌ர் 14 அன்று மேற்கு வ‌ங்க‌ மாநில‌ம் சிலிகுரி வ‌ட்ட‌த்தில் உள்ள‌ ராம‌ஜோதா என்ற‌ கிராம‌த்தில் 24 வ‌ய‌துப் பெண் ஒருவ‌ரை அக்கிராம‌த்தை சேர்ந்த‌ பாருய் என்ப‌வர் த‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இணைந்து கும்ப‌லாக‌ பாலிய‌ல்                         வ‌ல்லுற‌வுக்குட்ப‌டுத்தி, க‌டையில் ம‌ண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்றிருக்கிறார். இப்போது அந்த‌ப் பெண்ணும் ம‌ருத்துவ‌ம‌னையில் தான் இருக்கிறார். அவ‌ரைப் ப‌ற்றி சிஎன்என்-ஐபிஎன் டிவி பேசுகிற‌தா? 2 மாத‌ங்க‌ளுக்கு முன் மேற்கு வ‌ங்க‌த்தில் இப்ப‌டி பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண் தான் வாழ்க்கையில் அன்றே தோற்று விட்ட‌தாக‌ கூறுவ‌தை கேட்கையில் ஊடகங்களுடைய போலித்தனம் குறித்து ஆத்திரம் வருகிறது.  இந்த‌ குற்ற‌ங்க‌ளில் இதுவ‌ரை யாரும் கைது கூட‌ செய்ய‌ப்ப‌ட‌வில்லை.

ச‌மீப‌த்தில் பெண்க‌ள் மீதான‌ பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளில் ஈடுப‌டுவோரில் ச‌த‌வீத‌ம் பேர் அவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் உற‌வின‌ர்க‌ள் தான் என்கிற‌து மாந‌க‌ர‌ங்க‌ளில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஆய்வு. பாலிய‌ல் வ‌ன்முறைக‌ள் ந‌ட‌க்கும்  மாந‌க‌ர‌ங்க‌ளில் டெல்லி, மும்பை, பெங்க‌ளூரு போன்ற‌ த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌, நிதிமூல‌த‌ன‌ சூதாட்ட‌ம், ரிய‌ல் எஸ்டேட் தொழில்க‌ள் அதிக‌மாக‌ ந‌ட‌க்கும் ஊர்க‌ள் தான் முன்ன‌ணியில் இருக்கின்ற‌ன. இந்ந‌க‌ர‌ங்க‌ளில் ந‌ட‌க்கும்  இவ்வ‌ன்முறைக‌ளில் வெறும் மோக‌ம், காம‌ம் போன்ற‌ விச‌ய‌ங்க‌ளை விட‌     பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ரை உட‌ல்ரீதியாக‌ தாக்குவ‌து, அவ‌மான‌ப்ப‌டுத்துவ‌து போன்ற‌ செய‌ல்க‌ள் அதிக‌மாக‌ இருக்கின்றன‌.

குறிப்பாக‌ இங்கு தாக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளில் பெரும்பாலோர் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌,     உய‌ர்ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ பிரிவினைச் சேர்ந்த‌ பெண்க‌ளாக‌வே உள்ள‌ன‌ர். க‌ட‌ந்த‌ வார‌ம் பெங்க‌ளூருவில் டிராபிக் போலீசு ஒருவ‌ரே காரில் வ‌ந்த‌ ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ பெண் சாலையில் இறங்கி ஆங்கில‌த்தில் பேசிய‌தால் க‌ன்ன‌ட‌ம் தெரியாதா என‌க்  கோப‌மாகி அவ‌ரை க‌ன்ன‌த்தில் அடித்திருக்கிறார்.

டெல்லி ச‌ம்ப‌வ‌த்தில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு நினைவு திரும்பிய‌து, ம‌ற்றும் அவ‌ருக்கு புத‌ன‌ன்று ந‌ட‌ந்த‌ அறுவைச் சிகிச்சை என‌ சீன் பை சீனாக‌ தொலைக்காட்சி ம‌ற்றும் ப‌த்திரிகைக‌ள் ப‌திவுசெய்கின்ற‌ன. அது தொட‌ர்பாக‌ விவாத‌ங்க‌ளை ஆங்கில‌ தொலைக்காட்சிக‌ள் தொட‌ர்ச்சியாக‌ ந‌ட‌த்தி   வ‌ருகின்ற‌ன. இச்ச‌ம்ப‌வ‌த்தில் ஈடுப‌ட்ட‌ 6 பேருமே உதிரித் தொழிலாளிக‌ள் தான். டிரைவ‌ர், கிளீன‌ர் போன்றோரிட‌ம் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டியிருக்குமோ என‌ ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம்பெண்க‌ளுக்கு ஒருவித‌ அச்ச‌த்தை இப்போராட்ட‌ங்க‌ளை விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்துவ‌து தோற்றுவிக்கிற‌து. க‌டைசியில் பொதுவான‌ ஆணாதிக்க‌ மொழியில் அவ‌ள் ஒழுங்கா இருந்திருந்தா த‌ப்பு ந‌ட‌ந்திருக்காது என்ற‌ மொழியும், க‌டைநிலை சாதிக‌ள் ம‌ற்றும் தொழிலாளிக‌ள் போன்ற‌ சாமான்ய‌ர்க‌ள் தான் இது போன்ற‌ இழிசெய‌ல்க‌ளில் ஈடுப‌டுவார்க‌ள் என்றும் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌மும் பார்ப்பனிய ஊடகங்களும் பேசுகின்றனர்.

பெரு ந‌க‌ர‌ங்க‌ளின் நுக‌ர்வுக் க‌லாச்சார‌த்தை அணு அணுவாக‌ ருசித்து ம‌கிழும்     உய‌ர் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ ம‌ற்றும் ந‌டுத்த‌ வ‌ர்க்க‌த்தின‌ருக்கும், அடிப்ப‌டை   வ‌ர்க்க‌ங்க‌ளுக்குமான‌ ச‌மூக‌, பொருளாதார‌, ப‌ண்பாட்டு வேறுபாடுக‌ள் க‌ட‌ந்த‌ 20  ஆண்டுக‌ளில் க‌ணிச‌மாக‌ அதிக‌ரித்த‌ப‌டியே உள்ள‌து.  நுகர்வு கலாச்சாரம் தோற்றுவித்திருக்கும் ஆடம்பரங்கள் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என்பது ஒரு வெறியாகவே ஊட்டப்பட்டிருக்கிறது. கூடவே இந்த நுகர்வு உலகில் பெண்கள் குறித்த போகப்பொருள் என்ற சித்திரமும் அன்றாடம் உணர்த்தப்படுகிறது. இதே ஊடகங்களும், சினிமாவும்தான் அத்தகைய காமவெறியை பாலியல் சுதந்திரம், மருத்துவம், கட்டுப்பெட்டித்தனத்தை உடைத்தல் என்று பல்வேறு விதங்களில் ஊட்டி வருகின்றன. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்திருப்பதன் பின்னணி இதுதான்.

இதில் மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற வேறுபாடு இல்லாமல் வன்முறைகள் நடக்கின்றன. செல்பேசி, இணையம் எல்லாம் பெண்களை மறைந்திருந்து படம்பிடிக்கும் அபாயங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதனாலேயே பல நூறு பெண்கள் இங்கே தற்கொலை செய்திருக்கின்றனர். முடியாதவர்கள் நடைப்பிணங்களாக வாழ்கின்றனர்.

தினமணி போன்ற பார்ப்பன ஊடகங்கள் இத்தகைய பண்பாட்டு சூழலைக் கண்டிக்காமல் பெண்கள் மட்டும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று ஆணாதிக்க மொழியில் உபதேசம் செய்கின்றன. விடலைக் காதலை புரிய வைப்பது, மேலோட்டமான காதலை உணர வைப்பதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் தோன்றும் பின்னணியும் ஒன்றல்ல. ‘நல்ல’ உடை உடுத்தி அடுக்குமாடிக் கட்டிடங்களில் பாதுகாப்பாக வாழும் பெண்கள் கூட தெரிந்தவர்களாலேயே குதறப்பட்டிருக்கின்றனர்.

சீரழிவுக் கலாச்சாரத்தால் வழிநடத்தப்படும் பொறுக்கி ஆண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகள் எதையும் ஏற்படுத்தி விடாது. நியாயமாக இத்தகைய பொறுக்கிகளை எதிர்த்து எப்படி சண்டை போடுவது என்ற போராட்ட குணத்தையும் வழிமுறையையும்தான் பெண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடிமை போல நடக்கச் சொல்வது வெளிப்படையான ஆணாதிக்கம்தான். இதே ஆணாதிக்கம்தான் பொறுக்கிகளின் மனதிலும் சற்று தீவிரமாக இருக்கிறது. இவையிரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள்!

எனவே ஊடகங்களால் பேசப்படும் டெல்லி சம்பவத்தைத் தாண்டி பாலியல் வன்முறை என்பது அதே ஊடகங்களை உள்ளிட்ட ஆளும் வர்க்க கலாச்சார நிறுவனங்களால் மறைமுகமாக தூண்டிவிடப்படுகின்றன. அதை முறியடிக்காத வரை டெல்லி மட்டுமல்ல, உசிலம்பட்டியும் பெண்களுக்கு பாதுகாப்பானதில்லை.

தர்மபுரி : அறிவாளிகளின் போங்காட்டம்!

21

வில்லன்தரும்புரி தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அடிக்கடி பலவிதமான கூட்டங்கள் பலவிதமான இயக்க சேர்க்கைகளுடன் நடக்கின்றன. உண்மையில் இந்தக் கூட்டங்களில் குறிப்பாக வன்னிய சாதிவெறி, பா.ம.க, ராமதாசை மறந்தும் கூட குறிப்பிடுவதில்லை. எதற்கு பிரச்சினை என்று பாதுகாப்பாக பேசுவது ஒருபுறமிருந்தாலும் “எங்காத்துக்காரரும் கச்சேரி செய்கிறார்” என்பதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையும் இவர்களிடத்தில் இருக்கிறது. பொறுப்பு இருக்க வேண்டிய இடத்தில் ஆசை இருந்தால் அது இப்படித்தான் அபஸ்வரமாக வெளிப்படுமோ?

முதல் கூட்டம் கடற்கரையில் நடந்தது. “சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்” என்கிற பெயரில் ஒரு அமைப்பு தர்மபுரி மற்றும் தமிழகத்தின் இன்னும் பிற இடங்களில் நடந்தேறும் வன்முறைகளையும், மனித உணர்வின் உன்னதமான காதலுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் அபாயத்தையும் போக்க “வன்மத்தின் சிறையில் மானுடம்” என்கிற பெயரில் ஒரு ஓவியக்கண்காட்சியை நடத்தியது. இந்தக் ‘கவித்துவமான’ தலைப்பே பிரச்சினைக்குரியது. நாயக்கன் கொட்டயாயில் பாதிப்படைந்த தலித் மக்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்திய வன்னிய சாதிவெறியர்களுக்கும் இந்த மொழியும் பொருளும் புரியப் போவதில்லை. உழைக்கும் மக்களிடம் சாதிவெறி குறித்து எதார்த்தமாக எப்படி பேசுவது என்பது கூட நமது அறிஞர் பெருமக்களுக்குத் தெரியவில்லை.

அங்கே பல்வேறு ஓவியர்கள் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே சென்ற போது பல ஓவியங்களில் தருமபுரி என்கிற வார்த்தை இருந்ததை காண முடிந்தது.  ஒரு ஓவியத்தில் பூந்தொட்டி ஒன்றை வரைந்து அதில் தருமபுரி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று எழுதப்பட்டிருந்தது. இன்னொரு ஓவியத்தில் சிவப்பு கலரில் ஒரு பெரிய இதயம். அடுத்து பச்சை கலரில் ஒரு பெரிய புதிய வகை விலங்கு.  வீடுகள் கைகள், கால்களை கொண்ட ஒரு ஓவிய்ம் என்று பல ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. எந்த ஓவியத்திலும் உயிர் இல்லை. நவீன ஓவியங்கள் யதார்த்தமாகவோ அரூபமாகவோ இருக்கட்டும். பொருள் என்ற விதத்தில் உயிர் இல்லாத போது வடிவங்கள் என்ன உணர்த்திவிடும்?

அதே போல இராமதாஸ், காடுவெட்டி குரு போன்ற சாதிவெறியர்களின் முகத்தையும் வன்னிய சாதிவெறி, ஆதிக்க சாதிவெறி என்கிற வார்த்தைகளையும் எந்த ஓவியத்திலும் காண முடியவில்லை. வன்மத்தின் சிறையில் மானுடம் என்கிற தலைப்பிற்கேற்ப ஓவியங்களும் மேலோட்டமான அரசியலற்ற மனிதாபிமானத்தை பேசுபவவையாகவே இருந்தன.

ஓவியர் விஸ்வம் பேசும் போது ஓவியங்களை பற்றி எதுவும் பேசவில்லை, ராமதாசை பற்றியும் பேசவில்லை, வன்னிய சாதிவெறியை பற்றியும் பேசவில்லை என்ன தான் பேசினார்,  அண்ணன் திருமாவை பற்றி பேசினார் அது போதாதா ? அம்பேத்கருக்கு பிறகு நான் கண்ட மாபெரும் அறிஞன் என்றால் அது திருமா தான் என்றார். அம்பேத்கரை இதை விட யாராவது இழிவுபடுத்த முடியுமா தெரியவில்லை. கோபாலபுரத்திற்கும், போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறி காவடி தூக்கும் திருமா இடையிடையே தைலாபுரத்திற்கும் செல்வதை நிறுத்தவில்லை. இந்த இலட்சணத்தில் இவர் அறிஞராம், அம்பேத்கராம்!

அடுத்ததாக பேசிய எழுத்தாளர் வ.கீதாவாவது அரசியல் உள்ளடக்கமற்ற அந்த ஓவியங்களை பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ அங்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களில் ஒன்றைக் கூட பெண் ஓவியர்கள் யாரும் வரையாதது தனக்கு பெரிய மனக்குறையாக இருக்கிறது என்றார். எனக்கு பிடில் வாசித்த நீரோ மன்னன்தான் நினைவுக்கு வந்தான். வன்னிய சாதி வெறி குறிப்பாக கண்டிக்கப்படாத போங்காட்டத்தில் பெண்கள் இல்லையே என்றால் வ.கீதா உண்மையான பெண் போராளிகளை தன் வாழ்நாளில் கண்டதில்லை போலும்!

அடுத்தகூட்டம்அதே சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் நடத்திய உண்ணாநிலை அறப்போராட்டம். தாமதமாக சென்று சிலர் பேசியதைப் பார்த்த பிறகுதான் கூட்டத்தை முழுமையாக கவனிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன். அத்தனையும் அக்மார்க் காமடிக் காட்சிகள்.

அப்போது கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திக்கொண்டிருந்த யாக்கன் என்பவர் பேசிக்கொண்டிருந்தார். கூட்டத்திற்கு தி.மு.க வினரை அழைத்திருந்தோம்.  இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்கிறோம் என்று செய்தி அனுப்பியிருக்கிறார்கள் என்று கூறினார்.கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ள தி.மு.க விலிருந்து தலைமைதான் வரவில்லை மாவட்டம், மாநகரம், ஏன் ஒரு வட்டம் கூடவா கிடைக்கவில்லை? உண்மையான அக்கறையிருந்தால் கலந்து கொண்டிருப்பார்கள். தி.மு.கவிற்கோ, அ.தி.மு.கவிற்கு உண்மையான அக்கறை இருக்குமா என்று கூட தெரியாத அளவுக்கு நமது அறிஞர்கள் சந்தர்ப்பவாதத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

அடுத்ததாக தமிழக காங்கிரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் அமெரிக்கை நாராயணன் பேசுவார் என்றார் அறிவிப்பாளர்.  என்னடா பேரு இது பேரே வித்தியாசமா இருக்கே என்று எண்ணிக்கொண்டு அமெரிக்கை நாராயணனனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

எங்கள் தலைவர், எங்கள் தலைவர் என்று அவரை நாங்கள் மட்டும் உரிமையாக்கிக்கொள்ள விரும்பவில்லை அவர் இந்த நாட்டுக்கே தலைவர், உலகத்துக்கே தலைவர். அவர் தான் மகாத்மா. அவர் தான் சாதியை ஒழிக்க உண்மையாக பாடுபட்டார் என்றார். ஆமாம் அவர் கோவணத்தை கூட அம்பேத்கர் அவிழ்த்துவிட்டாரே என்று எண்ணிக்கொண்டேன். இது கூடப் பரவாயில்லை. சாதிப்பிரிவினையை அன்றிலிருந்து எதிர்த்த ஒரே கட்சி காங்கிரசுதான் என்று ஒரே போடாகப் போட்டார். அந்த அதிர்ச்சியில் மேடையில் இருந்த தலித் தலைவர்களும் ஏனைய அறிஞர் பெருமக்களும் வெட்கத்தில் சிவந்ததை தரிசிக்க முடிந்தது.

இந்த அமெரிக்கை நாராயணனுக்கு இரண்டாவது சீமான் என்றே பட்டமளிக்கலாம். அந்தளவுக்கு தாம் தூம் என்று குதித்துக்கொண்டிருந்தார். அடி வயிற்றிலிருந்து பெருங்குரல் எடுத்தவர் பொதுவாக தருமபுரி தாக்குதலை கண்டித்தார். நானும் மேல்சாதிக்காரன் தான் ஆனா சாதி பார்க்கிறேனா என்றவர் திடீரென்று சட்டைக்குள்ளிருந்த பூணூலை கூட்டத்தின் முன்னால் உருவிக் காட்டினார். அவர் அப்படி செய்தது அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகிப்போனது. அனைவரும் முகத்தை சுழித்தனர்.  திருமாவளவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பூணூலில் சிக்கிய தலித்தியம் என்று இந்தக் கூட்டத்திற்கு தலைப்பு வைத்திருக்கலாமோ?

நான் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன் ஆனால் கிரீமி லேயரையும் ஆதரிக்கிறேன் நீங்களும் ஆதரிக்கணும். உங்கள் மத்தியிலிருந்து இடஒதுக்கீட்டை பயன்படுத்தி படித்து மேல வந்தவங்களுக்கு அதுக்கப்புறமும் எதுக்கு இடஒதுக்கீடு. வளர்ந்து மேல போய்ட்டா அப்புறம் எதுக்கு அது.  அதனால அதை நீங்களே எதிர்க்கணும் என்றார் நாராயணன்.

இருப்பினும் நாராயணன் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன் என்று பேசியதும் அண்ணன் திருமா முதலில் தனது கைகளை உயர்த்தி தட்டினார். அண்ணனே தட்டிவிட்டதால் அவரைத் தொடர்ந்து இளைஞர்களும் நாராயணனுக்கு கைகளை தட்டினர். நமக்கோ அழுகையே வந்தது.

நீங்கள் எல்லாம் நன்றாக படித்து உயர் பதவிகளுக்கு, பெரிய பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் அப்போது தான் எல்லோரும் உங்களை மதிப்பார்கள் என்றார். அதன் பிறகு நமக்கு தமிழ்தேசியம் எல்லாம் வேண்டாம். இந்தியாவிற்குள்ளேயே இருப்பது தான் நமக்கும் நல்லது இந்தியாவிற்கும் நல்லது என்று அவர்கள் பேசும் தமிழ்தேசியத்தை அதே மேடையில் மறுத்து பேசிவிட்டு   தமிழா தமிழா நாளை நம் நாளை, தமிழா தமிழா நாடும் நம் நாடே என்று ரஹ்மான் பாட்டை பாடிவிட்டு நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் என்று முடித்தார்.

நான் பார்ப்பான் என்று மேடையில் பூணூலை உருவியது முதல் அம்பேத்கர் எச்சரிக்கையாக இருக்கச்சொன்ன காந்தியை உயர்த்திப் பிடித்து, கிரிமிலேயர் மூலம் இடஒதுக்கீட்டை எதிர்த்து,  இந்திய தேசியத்தை ஆதரித்து, தமிழ்தேசியத்தை எதிர்த்து கடைசியில் ரஹ்மான் பாட்டை பாடியது வரை காங்கிரசுகாரன் தனது கருத்தை, அரசியலை எந்த எதிர்ப்புமின்றி இவர்களுடைய மேடையிலேயே பிரச்சாரம் செய்து விட்டு போய்விட்டான். விட்டால் இவர்களை ராமதாசையும் கூப்பிட்டிருக்கலாம் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. ஒருவேளை உண்மையில் கூப்பிட்டிருப்பார்களோ தெரியவில்லை.

அடுத்ததாக கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷீ என்று இராணுவ வீரர்களை போல உடை அணிந்து வந்திருந்த சினிமா டைரக்டர் களஞ்சியம் பேசினார். இவரும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறார் என்பது அன்றைக்கு தான் தெரியும். அந்த அமைபின் பெயர் “தமிழர் நலம்”. தமிழ் தேசியத்தை உய்விக்க வந்த இது எத்தனை ஆயிரமாவது இயக்கம் என்று தெரியவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் தேசியம் ஒரு மில்லியன் தலைவர்களை தொட்டுவிடுவது நிச்சயம்.

சாதி என்றால் என்ன என்று துவங்கியவர், வெண்மணியில் எரித்துக் கொல்லப்பட்ட நம் தமிழ் சொந்தங்களின் சாவுக்கு காரணமாவனவர்களை சில ஆண்டுகளிலேயே தமிழகத்திலுள்ள நம் தமிழ் சொந்தங்கள் கொன்றார்கள் என்று நக்சல்பாரி புரட்சியாளர்களையும் தமிழ் சொந்தங்களோடு சேர்த்துக்கொண்டார். மொத்தம் ஐந்து நிமிடம் இருபது நொடிகள் பேசிய களஞ்சியத்தின் உரையில் பதினேழு முறை தமிழ்ச் சொந்தங்களே, தமிழ் சொந்தங்களே என்கிற வார்த்தை வருகிறது.

அவர் கூறும் அந்த தமிழ் சொந்தங்களில் உள்ள வன்னிய தமிழ் சொந்தங்கள் தலித் தமிழ் சொந்தங்கள் மீது காட்டிய சாதிவெறித்தனத்தை கடுமையாக, சாதிவெறியர்கள் என்று குறிப்பிட்டு கண்டிக்காமல் பொதுவாக கூறிவிட்டுச் சென்றார். ஒரு வேளை வன்னிய தமிழ் சொந்தங்களின் மனது பாதிக்கப்படக்கூடாது என்று பரந்த தளத்தில் யோசித்திருக்கலாம் அல்லவா!

சரணடைதல்அடுத்தகூட்டம்சேவ் தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த லயோலா கல்லூரியில் நடைபெற்ற கூட்டம். இந்த கூட்டமும் தருமபுரி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிரான கூட்டம் தான்.  இந்த கூட்டத்தில் இரண்டு பேர் பேசியதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று கருதுகிறேன்.

முதலில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணிபுரியும் அரங்க.மல்லிகாவின் உரை.

தலித் தலைவர்கள் யாரும் சரியில்லை என்றவர் அதன் பிறகு ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். இந்த மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள ? அடித்தால் உங்களுக்கு திருப்பி அடிக்கத்தெரியாதா, அடிக்க முடியவில்லையா ? இவர்கள் படங்களை கூட பார்ப்பதில்லையா ? ஏன் அடியை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள், ஊமைகளாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். விட்டால் அனைவரும் ஜாக்கிசானிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு பறந்து பறந்து சண்டையிட வேண்டும் என்று கோருவார் போலும். பெரும்பான்மை ஆதிக்க சாதிவெறி சிறுபான்மை தலித் மக்களிடம் நடத்தும் வன்முறையின் அடிப்படை கூடத் தெரியாமல் ஏதோ அவர்களெல்லாம் கோழைகள் போலவும், இவரைப் போன்று நகரத்தில் பாதுகாப்பாக வளைய வருகிறவர்களெல்லாம் வீரர்கள் போலவும் கருதுவதைத்தான் சகிக்க முடியவில்லை.

பிறகு, சமூக தலைவர்கள் எல்லோரும் முதலில் ஒன்றாக கூடி உட்கார்ந்து பேசுங்கள். முடிந்தால் அந்த கூட்டத்திற்கு இராமதாசையும் அழையுங்கள் என்றார் ! அடிபட்டவனுக்கான பஞ்சாயத்தில் அடித்தவனையே நீதிபதியாக்கும் இந்த போராளிதான் தலித் மக்களை கோழைகள் என்கிறார். இது போன்ற பிரச்சினைகள் எல்லாம் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமானால் சட்டத்தை திருத்த வேண்டும், இருக்கின்ற சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றார்.  சாதிப் பிரச்சினையே சட்டபிரச்சினையில் தான் இருக்கிறது என்பதை போல பேசினார். சட்டத்தை திருத்தினால் சாதியை ஒழித்துவிடலாம் என்கிற கருத்து அம்பேத்கர் காலத்திலேயே தோல்வியடைந்துவிட்டதை அவர் அறியவில்லை என்பதல்ல. அறிஞர்களிடம் தீர்வு கேட்டால் அது அவர்களது வீட்டறையின் யதார்த்தத்தோடு கூட பொருந்தி வராது. சமரசமே சரணாகதி என்றான பிறகு இறுதியில் சட்டத்தின் முன் மண்டியிடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இவ்வளவிற்கும் தலித் மக்களுக்கான பல்வேறு சட்டங்களெல்லாம் ஆதிக்க சாதிகளைப் பாதுகாக்கும் இந்த அமைப்பின் முன்னால் சுருண்டு படுத்துக் கிடக்கின்றன. அவற்றையே கிளப்ப முடியவில்லை எனும் போது புதிய சட்டங்கள் என்ன கிழித்து விடும்?

அடுத்ததாக பேசிய வ.கீதா,” என்னை ஒரு மேடையில் பேசும் பெண்ணியவாதியாவே மாற்றிவிட்டார்கள் அதனால் அந்த வகையிலேயே பேசுகிறேன். எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை என்று சாதி ஒடுக்குமுறை பற்றி பேசத் துவங்கியவர் உற்பத்தி உறவுகள், குடும்பம், பெண்கள் மீதான வன்முறை என்று பெண்களை பற்றியே பேசிக்கொண்டிருந்தவர் ஒரு இடத்தில் நிறுத்தி நிறைய சிதறல் சிதறலாக பேசிவிட்டேன். தொகுப்பாக சொல்லனும்னா பெரியார் தான் பெண்களை பற்றி நிறைய பேசியுள்ளார்” என்றார்.

திருமாவளவன் மீது எனக்கு நிறைய விமர்சனம் உண்டு மதிப்பும் உண்டு. பெண்கள் என்று வரும் போது அவர் கூட அச்சம், மடம், நாணம், பயிர்ப்புன்னு பேசுறாரு என்ன பேச்சு இது ?  ஆதிக்கம் என்றாலே அது ஆணாதிக்கம் தான் இன்றைக்குள்ள முதலமைச்சர் செய்வது கூட ஆணாதிக்கம் தான் என்றார். கல்லூரி மாணவிகளை தொந்தரவு செய்வது தலித் மாணவர்கள் மட்டுமல்ல எல்லா பசங்களும் தான் செய்றாங்க என்றார்.

அதன் பிறகும் பெண்கள் பிரச்சினை பெண்கள் பிரச்சினை என்று தான் பேசிக்கொண்டிருந்தாரே தவிர தர்மபுரியில் நிகழ்ந்த சாதி ஒடுக்குமுறை, அதற்கான காரணம், எதிர்காலத்தில் அதை எப்படி எதிர்கொளவது, அதை முற்றாக ஒழித்துக்கட்ட என்ன வழிமுறை, தீர்வு என்பதை பற்றி பேசவில்லை. இறுதியில் என்னை இப்படி மேடையில் ஏத்தி புலம்ப விட்டுட்டீங்களே என்கிற பொருள்படும்படி சலித்துக்கொண்டார். உண்மையான வாழ்க்கையை நேருக்கு நேர் சந்தித்து களப்பணியாற்றாத அறிஞர் பெருமக்களின் மனவழித்தடங்கள் எல்லாம் இப்படித்தான் போகாத ஊருக்கு வழிகாட்டுகின்றன. இதையே இவர்கள் பொது மேடையில் எல்லோருக்கும் தீர்வாகப் பேசுவது எவ்வளவு பெரிய வன்முறை!

‘கண்டன கூட்டங்கள்’ என்கிற பெயரில் நடப்பவை எல்லாம் இப்படி தான் காமடிக் கூட்டங்களாக இருக்கின்றன. பொதுவாக யாரையும் குறிப்பிடாமல் சாதிவெறி என்பதும் அதையும் குத்திக்கிழிக்கும் படி பேசாமல் புண்படாமல் தொட்டுச்செல்வது என்று தான் இருக்கின்றன. பாதுகாப்பான சென்னையில் கூட்டம் நடத்தும் போதே வன்னிய சாதிவெறி என்று உரத்து பேசமுடியாதவர்கள் விழுப்புரம், கடலூர், சேலம் போன்ற தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எல்லாம் கூட்டம் நடத்தினால் எப்படி எல்லாம் பேசுவார்களோ என்று எண்ணிக்கொண்டே அரங்கை விட்டு வெளியே வந்தேன்.

_____________________________________________________

வினவு செய்தியாளர்
______________________________________________________

இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 25

‘‘கல் – மண்ணால் கட்டப்படும் ஒரு கோவிலுக்காக இந்து போராடவில்லை.  அவனுடைய நாகரிகத்தினை, இந்துத் தன்மையினை, தேசிய உணர்வினைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகின்றான். ஆனால் முசுலீம்கள் வந்தேறியும் – ஆக்கிரமிப்பாளனும் – கோவிலை இடித்தவனுமான பாபரைப் போற்றுகிறார்கள்; பாரதத்தின் அவதார – தேசிய புருஷனான ஸ்ரீராமரை ஏற்க மறுக்கிறார்கள்.”

– பா.ஜ.க. அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ் இதழில்.

இராமன் தேசிய நாயகனா தேசிய வில்லனாதங்கள் தொழிலை வளர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன்.  ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மனதை மயக்கும் தேர்ந்த விளம்பர உத்தியைப் போன்று இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல. இந்த மோசடிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம்.  பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இந்து மதவெறியர்களைப் பொறுத்தவரை இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் ஒருவர் இராமனை ஏற்பதும், வழிபடுவதும் ஒரு நிபந்தனை.  மறுப்பவர்கள் தேசத் துரோகிகள்.  பெரும்பான்மை மக்களிடம் அவர்களே அறியாமல் ‘இந்து உணர்வும் – முசுலீம் வெறுப்பும்’ விஷம் போல ஊடுருவுவதற்கு ‘இராமனின்’ மோசடிச் சித்தரிப்பு ஒரு முக்கியமான காரணம் ஏன்பதை நாம் உணர வேண்டும். அப்படி உணரும்போது இந்த மோசடி அவதாரத்தை வெட்டி வீழ்த்தி வேரறுக்கும் கடமையையும் நாம் ஏற்க வேண்டும்.

70 எம்.எம். திரையில் தேசிய நாயகனாகக் காட்டப்படும் இராமனையும் இந்துப் பொற்காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பண்டைய – இடைக்கால – நவீனகால இந்தியாவின் வரலாற்றை – மார்க்சிய அறிவியல் கண்ணோட்டத்துடன் தெரிந்து கொள்வது அவசியம்.  ஆரியர்களின் படையெடுப்பு – நிறவெறி – வர்ண – சாதிவெறி, புராணங்கள் – காப்பியங்கள் – வேத உபநிடதங்கள் சொல்லும் இந்து மதம், தொல்குடி மக்களையும், பண்பாட்டையும் பார்ப்பனியம் கவ்விய வரலாறு, பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மதங்கள் – மகான்கள், சமஸ்கிருதமயமாக்கம், மொகலாயர் வருகை, இந்து – முசுலீம் மன்னர்களிடையிலான உறவு, போர், இராச்சியங்களின் தோற்றத்திற்கும் மறைவுக்குமான வரலாற்றுக் காரணங்கள், வெள்ளையர் ஆக்கிரமிப்பு – 1947 பிரிவினை…. என சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்று வரை உள்ள வரலாற்றைக் கற்றுணர வேண்டும்.

இங்கே ‘அவதார’ இராமன் ஒரு தேசிய நாயகனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்கிறானா, ‘ஆக்கிரமிப்பாளன்’ பாபர் ஒரு கொடுங்கோலனாக ஆட்சி நடத்தினாரா என்பதை மட்டும் பரிசீலிப்போம்.

வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான்.  திராவிடர்களையும், நாகர்களையும், இதர பூர்வகுடி மக்களையும் வந்தேறிகளான ஆரியர்கள் வேட்டையாடியதை விவரிக்கும் தொல்கதையே இராமாயணத்தின் மூலக் கதையாகும்.  ஆரிய ஆக்கிரமிப்பின் பெருமிதத்தை விவரிக்கும் ஆந்த மூலத் தொல்கதை இன்று இல்லை.  பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்து ‘புராண – இதிகாச’ காலத்தில் அந்தத் தொல்கதை ஒரு காப்பியத்துக்குரிய அம்சங்களுடன் வால்மீகி இராமாயணமாக உருப்பெற்றது.  அதுவும் வரலாறு நெடுக இடைச்செருகல்களோடும் திருத்தங்களோடும் மாறிக் கொண்டே வந்தது.  கடைசியாக தூர்தர்சனில் காட்டப்பட்ட இராமானந்தசாகரின் இராமாயணத்திற்கும், வால்மீகியின் கதைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.

அமெரிக்கா ஆதிக்கம் செய்யும் இன்றைய உலகில் ஹாலிவுட் படங்கள் கூட தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உசிலம்பட்டி போன்ற சிறு நகரங்களில் வெளியிடப்படுகின்றன.  அதைப் போல ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்த இந்தியத் துணைக் கண்டத்தில் இராமாயணமும் எல்லா வட்டார மொழிகளிலும் இயற்றப்பட்டது.  இப்படி ஆரியர்களின் இதிகாசங்களும், புராணங்களும் வேத – உபநிடதக் கருத்துக்களும் இந்திய மொழிகளிலும் ஆடல் – பாடல் கலைகளிலும் ஊடுருவியதன் காரணம் ஏன்ன? கல்வியும், அறிவும் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியத்தின் வருண – சாதி ‘ஒழுக்கத்தை’க் கற்றுத் தருவதற்கும், வாழ்வதற்கும், கண்காணிப்பதற்கும், மீறினால் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிப்பதற்கும் அவை பயன்பட்டன.  இப்படித் தெற்காசியாவின் பல மொழிகளில் விதவிதமாக இயற்றப்பட்ட ஏல்லா இராமாயணங்களையும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் இராமனின் ஆரியப் பண்பு மட்டும் பெரிதாக மாறவில்லை.

தனது இராசகுரு வசிட்டரின் உத்தரவுக்கேற்ப சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்றான் இராமன்.  காரணம், பார்ப்பனப் புரோகிதர்களின் உதவியின்றி நேரடியாக இறைவனை அறிய சூத்திரன் சம்பூகன் தவம் செய்தான் என்பதே.  தமது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த விசுவாமித்திரரை எதிர்த்து பழங்குடியினர் போராடுகின்றனர்.  இராமனோ அசுரப் பழங்குடியினரைக் கொன்று விசுவாமித்திரரைக் காப்பாற்றுகிறான்; போர்க்கலையில் வல்லவனான வாலியை மறைந்து நின்று கொல்கிறான்; மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டு அவளை உயிரோடு கொளுத்திக் கொல்கிறான்.  இப்படி இந்திய மருமகள்கள் ஸ்டவ் வெடித்துச் சாகடிக்கப்படும் கொடூரத்தைத் தொடங்கியவன் இராமன்தான்.  மொத்தத்தில் இந்தியத் தொல்குடி மக்களையும், இராவணன் போன்ற அவர்களது தலைவர்களையும் வேட்டையாடிய ஆரிய இக்கிரமிப்பின் சின்னம்தான் இராமன்.

இன்றைக்கும் தென்னிந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களிடம் இராம வழிபாடு கிடையாது.  எனவே நிறவெறி, வருண வெறி, சாதிவெறி, இனவெறி, ஆணாதிக்க வெறி என பார்ப்பனியத்தின் பண்புகளைக் கொண்டு உருவெடுத்த இராமனை இந்நாட்டு மக்கள் ஏவரும் தேசிய நாயகனாக ஏற்க முடியாது.  மாறாக தேசிய வில்லனாகக் கருதி வெறுக்கத்தான் முடியும்.

ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.  ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.

அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்;  இராமன் மற்றும் அவனுடைய வாரிசுகளின் யோக்கியதை என்ன என்பது தெரியவரும்.  பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல;  மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.  பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!

என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.  பாபருக்குப் பின்வந்த அக்பர் மதங்களை ஒன்றுபடுத்த முயற்சி செய்தார்.  தன் கால மதங்களில் தனக்குத் தெரிந்த நல்ல அம்சங்களை இணைத்து அவர் உருவாக்கிய ‘தீன் இலாஹி’ ஏனும் புதிய மதம் தோல்வியுற்றாலும் அக்காலத்தில் அது ஒரு முற்போக்கான முயற்சியாகும்.  பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பு இருப்பினும், சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை அக்பர் தடை செய்தார்.  இதை அவரது வரலாறு கூறும் ‘அயினி அக்பர்’ நூல் தெரிவிக்கின்றது.  பொதுவாகப் பரிசீலிக்கும் போது எல்லா மன்னர்களையும் போல முகலாய மன்னர்களும் சுகபோகிகளாக, சுரண்டல் பேர்வழிகளாக இருந்திருக்கிறார்கள்.  ஆயினும் ஆட்சியிலும், சமூக நோக்கிலும் இராமனைக் காட்டிலும் முன்னுதாரணமானவர்களாகவே அவர்கள் இருந்தனர்.

மனிதகுல வரலாற்றில் ‘தேசிய நாயகர்கள்’ ஏன்று போற்றப்படும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.  தத்தமது கால மாற்றத்தையும் மக்கள் போராட்டங்களையும் புரிந்து கொண்டு பங்கெடுத்தும் முன்னெடுத்தும் சென்றிருக்கிறார்கள்.  வரலாற்றில் இத்தகைய தனித்தலைவர்களின் பங்கு முதன்மையானது இல்லையென்றாலும், முக்கியமானதுதான்.

தமது அடிமைத்தனத்தையே உணராத ரோமாபுரி அடிமைகளை அணி திரட்டிப் போராடச் செய்த ஸ்பார்ட்டகஸ், அடிமைகளின் ஏக்கத்தைப் போக்கப் பாடுபட்ட ஏசு கிறிஸ்து, அரேபிய நாடோடி இன மக்களை நெறிப்படுத்திய முகமது நபி, பார்ப்பனியத்தின் கொடூரச் சடங்குகளை ஒழிக்கவும், ஒரு சகோதரத்துவச் சமூகத்தைத் தோற்றுவிக்கவும் கனவு கண்ட புத்தர், இத்தாலியை ஒன்றுபடுத்துவதற்காகப் போராடிய கரிபால்டி, இங்கிலாந்து தொழிலாளர் இயக்கத்தின் தந்தையெனப் போற்றப்படும் இராபர்ட் ஓவன், முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை வழங்கிய பிரெஞ்சுப் புரட்சித் தலைவர்கள், அமெரிக்க விடுதலைக்குக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன், நிறவெறியை ஏதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் கண்ட ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சாகும் வரை எதிர்த்துப் போராடிய சே குவேரா, மதவாதிகளின் பிடியிலிருந்து துருக்கியை விடுவித்த கமால்பாஷா, வெள்ளை நிறவெறியை எதிர்த்து தன் இளமையைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா, காலனிய எதிர்ப்பில் இந்திய இளைஞர்களிடம் புது இரத்தம் பாய்ச்சிய பகத்சிங், கீழத்தஞ்சையின் கூலி விவசாயிகளைப் போராட அணிதிரட்டிய சீனிவாசராவ் மற்றும் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் அந்தந்த நாட்டு, மத, இன மக்கள் கொண்டாடுகிறார்கள்.

மனிதகுலம் எதிர்காலத்தில் பொதுவுடைமைச் சமூகமாக மாறுவதற்கு வழிகண்ட மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரை அன்போடு மார்க்சியப் பேராசான்கள் என்று கம்யூனிஸ்டுகள் கொண்டாடுகின்றனர்.  இப்படி வரலாறு நெடுகிலும் இன, தேசிய, மத, ஜனநாயக, புரட்சிகரத் தலைவர்களை மனிதகுலம் உருவாக்கியிருக்கிறது.

இனால் இந்துமத வெறியர்கள் கட்டளையிட்டு தேசிய நாயகனாய்ப் போற்றச் சொல்லும் இராமனிடம் என்ன இருக்கிறது? முதலில் இராமாயணம் ஒரு வரலாற்று உண்மையல்ல.  ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன? தந்தையின் வாக்கைக் காப்பாற்ற, சித்தியின் பேச்சைக் கேட்டு காட்டுக்குப் போனான்; திரும்பி வரும் வரை தம்பியை ஆளச் செய்தான்; தொலைந்து போன மனைவியை மீட்க மாபெரும் போரை நடத்தினான்; மீண்டும் அயோத்தியை ஆண்டான்.  இருப்பினும் பல்வேறு இராமாயணங்கள், இராம பக்தர்கள், உபன்யாசகர்கள், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆகிய அனைவருமே புகழ்ந்துரைக்கும் இராமனின் மாபெரும் பெருமை என்னவென்றால், அவன் ஏகபத்தினி விரதன் என்பதுதான்.  போகட்டும், அதையும் உண்மையென்றே ஏற்போம்.  ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?

ஆகையினால் இராமனைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்படும் தேசிய – அவதாரக் கதைகளை எதிர்த்து முறியடிப்பது என்பது பார்ப்பன இந்து மதத்தின் சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராட்டமே அன்றி வெறும் நாத்திகப் பிரச்சாரமல்ல.  இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்!

– தொடரும்

__________இதுவரை____________