நிச்சயமாக இவர்கள் சதிதான் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் அந்த காகப்பட்டரின் குலமாயிற்றே என்று அனுப்பினேன். குலத்தின் குணத்தைக் காட்டி விட்டார்கள். சூதுக்காரர்களே! உங்கள் சூட்சி வெற்றி பெற விடுகிறேனா, பாருங்கள்.
♦ ♦ ♦
காட்சி : 18 இடம் : தர்பார் உறுப்பினர்கள் : சிவாஜி, தளபதி , வீரர்கள், மோகன்.
தளபதி-1 : மகராஜ் புதிய மாளிகை கட்டியதும் அதற்கு என்ன பெயரிட உத்தேசம்?
சிவாஜி : நீயே சொல்லு, என்ன பெயரிடலாம்?
தளபதி-1 : சலவைக் கல்லால் கட்டப் போவதால் வெள்ளை மாளிகை என்று பெயரிடலாமே?
தளபதி-2 : அப்படி பார்த்தால் மாளிகையின் கொலு மண்டபத்திலே தங்கத் தகடு போடப்படுவதால் சொர்ண மாளிகை என்ற பெயர் பொருத்தமாக இராதோ?
தளபதி-1 : நமது சிவாஜி மகாராஜாவுக்கு ஜெயச் சின்னமாக அந்த மாளிகை இருக்கப் போகிறது. அதனால் ஜெயவிலாசம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். நாம் கூறிக் கொண்டே போவானேன்? அவருடைய உத்தரவு எப்படியோ?
சிவாஜி : நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கவில்லை, மகுடாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பே தாங்களெல்லாம் மகாராஜா என்று அழைக்கிறீர்களே, எவ்வளவு ஆழ்ந்த அன்பு உங்களுக்கு என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
(மோகன், வீரர்கள் ஒடிவருகின்றனர்)
ஏன், என்ன செய்தி எதிரிப் படைகளா?
மோகன் : எதிரிகளிடம் படையில்லை , மகராஜ் … தடை விதித்திருக்கிறார்கள்
சிவாஜி : தடையா? என்ன? யார்?
வீரன் : மகராஜ் பட்டாபிஷேகம் நடக்கக்கூடாதாம்.
சிவாஜி : சொன்னவன் யார்?
மோகன் : பிணமாகாமல்தான் இருக்கிறார்கள். அந்தப் பித்தர்கள்.
சிவாஜி : அமைதியாகப் பேசுங்கள். பட்டாபிஷேகத்தைப் பாதுஷாவின் ஆட்கள் தடுக்கின்றனரா?
மோகன் : அவர்கள் துணியவில்லை மகராஜ்! அவர்களுக்கில்லை அந்தக் கெடுமதி. மொகலாயர் வீரத் தலைவனை மதிக்கின்றனர். ஆனால் …
சிவாஜி : சரி! இவர்களை அழைத்துக் கொண்டு நந்தவனம் சென்று. என்ன சேதி என்று விசாரித்துத் தகவலை பிறகு வந்து கூறுங்கள் என்னிடம். என் முன் நிறுத்த வேண்டாம். இவர்களைக் கொண்டு போங்கள்.
(தளபதி பட்டர்களை அழைத்துப் போக , மோகனும் போகிறான்.)
சிவாஜி : சந்தர்! வா இங்கே நீ போகாதே இங்கேயே இரு.
(சிறிது மெளனமாய் இருந்துவிட்டு)…
நான் எப்போதும் இப்படித் திகைத்ததில்லை. எதிரியின் படைகள் நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்ட போதும் எனக்கு ஏற்பட்டதில்லை இந்தக் கலக்கம். நான் நாடாளத் தகுதியற்றவன்.. சிவாஜி சூத்திரன். சூத்திரன் நாடாளக் கூடாது? இது சாஸ்திரம்.
மோகன் : சாஸ்திரமல்ல மகராஜ்! நமது இருதயத்திலே வீசப்படும் அஸ்திரம்.
சிவாஜி : உண்மைதான். எதிரியின் வாளுக்கும், வேலுக்கும் என் மார்பு அஞ்சியதில்லை. இந்த அஸ்திரம் …
மோகன் : மகராஜ் என்னால் தாங்க முடியவில்லை பொறுக்க முடியாது. ஒரு வார்த்தை சொல்லுங்கள், தங்களைத் தடை செய்யத் துணிந்தவர்களை …
சிவாஜி : கண்ட துண்டமாக்குவாய். பயன் என்ன? வாள் கொண்டு அவர்களைச் சிதைக்க விரும்புவாய். அவர்கள் வாள் எடுக்காமலே என்னைச் சித்திரவதை செய்துவிட்டார்களே. முகலாயச் சக்கரவர்த்தி முயன்று பார்த்து தோல்வி பெற்றான். சண்டமாருதம் போன்ற எதிரிப் படையினால் என் சித்தத்தைக் குறைக்க முடியவில்லை. சாத்பூரா முழுவதும் ரத்தக் காடான போது என் மனம் குலையவில்லை. உற்றார் உறவினரும், ஆருயிர்த் தோழர்களும், களத்திலே பிணமான போதும் என் உறுதி குலையவில்லை. போர் போர் போர் என்றே கர்ஜித்தேன். இதோ, என்னை நாடாளத் தகுதியற்றவன் என்று கூறிவிட்டார்கள். நான் சூத்திரன். சூத்திரனுக்கு சாஸ்திரம் அனுமதி தரவில்லையாம். ராஜ்யம் ஆள!
மோகன் : சூதான வார்த்தை அது.
சிவாஜி : ராஜ்யம்! யார் சிருஷ்டித்த ராஜ்யம்? எவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு சிருஷ்டித்த ராஜ்யம்? சந்தர்! எத்தனைத் தாய்மார்கள், தங்கள் குமாரர்களை இதற்கு அர்ப்பணம் செய்தனர். எத்தனை காதலிகள் தங்கள் காதலர்களை இதற்குக் காணிக்கை செலுத்தினர். ராஜ்யம் ஆள சிவாஜிக்கு உரிமையில்லையாம். சூத்திரன் ராஜ்யம் அமைக்கலாம். ரணகளத்திலே உழைக்கலாம். ஆனால் அவன் ஆளக் கூடாது. இது சாஸ்திரம் சந்தர்! இந்த சாஸ்திரம்?
சிவாஜி : மோகன் விலகிநில் ! விசாரம் நிறைந்த என்னை விட்டு விலகும். அப்பா சந்தர்! அஞ்சாநெஞ்சன், அசகாய – சூரன், ஆற்றல்மிக்கோன் என்றெல்லாம் மராட்டிய மண்டலம் புகழ்ந்ததோ அந்த மாவீரனுடைய நிலையைப் பார். மகாராஷ்டிரம் மயக்கத்திலே சிக்கி விட்டது. உன்னையும் அந்த நோய் பிடிக்கா முன்பு விலகிச் செல்.
மோகன் : மகராஜ் ! வீணான மனக் கலக்கம் கூடாது! உமது ஆத்திரத்தை மீறும் ஆற்றல் கொண்ட ஆண்மகன் எவனும் இங்கே இருக்க முடியாது. என் கையில் வாள் இருக்கும் வரை, தங்கள் தாள் பணிகிறேன். ஒரு வார்த்தை சொல்லுங்கள்.
சிவாஜி : நாளைக்கு வா! இன்று என்னை இம்சிக்காதே! வேதனை வெள்ளம் போலாகிவிட்டது. நான் அதைத் தாண்டி கரை ஏறுவேனோ அல்லது அதிலேயே அமிழ்ந்து போவேனோ யார் கண்டார்கள்? மகாராஷ்டிர மண்டலமே! உன் கதி என்னவோ…
“பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களைக் கைது செய்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்…!
நாள் : 02.05.2019, வியாழக்கிழமை, காலை 11 மணி
இடம் : வள்ளுவர் கோட்டம் – சென்னை.
ஆர்ப்பாட்ட சுவரொட்டி முழக்கங்கள் :
1 of 4
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
தகவல் : மக்கள் அதிகாரம் சென்னை தொடர்புக்கு – 91768 01656
“நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்!” என்கிற முழக்கத்தை முன்வைத்து மே தினத்தன்று பேரணி – ஆர்ப்பாட்டம். உழைக்கும் மக்கள் அனைவரும் திரள்வோம் திருச்சியில்.
நாள் : 01.05.2019 பேரணி தொடங்குமிடம் : மரக்கடை to சத்திரம் நேரம் : மாலை 5.00 மணி
ஆர்ப்பாட்டம் : மாலை 6:00 மணிக்கு அண்ணாசிலை அருகில், அனைவரும் வாரீர்.
உலகம் இயங்குவது தொழிலாளர்களால்தான். அந்த தொழிலாளர்களின் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியால் பறிக்கப்படும்போது மொத்த சமூகமும் வீதியில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது. அனைவரும் அணிதிரள்வோம் வாரீர்…
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருச்சி. தொடர்புக்கு : 89030 42388.
நான்
ஒரு தொழிலாளி
உழைப்பாளி
என்பதுதான்
மகிழ்ச்சியும்
மதிப்பும்.
நான் ஒரு தொழிலாளி
என்ற மகிழ்ச்சியை
எதனோடு ஒப்பிட முடியும்?
ஓடை பனிநீரில்
ஊறும் குளிர்நிலவின்
ஜாடை எனில்,
அது,
ஒரு தொழிலாளி
உலகூட்டும்
உழைப்பின் விளைபயனும்
அது பலர்க்கும் உருவாக்கும்
பெரும் சுகமும்
ஒத்ததாய் இல்லை.
நான் ஒரு தொழிலாளி
எனும் கவுரவத்தை
உலகின் பெருமதிப்பு
எதனோடும்
இணைவைக்க முடியவில்லை,
ஏனெனில்,
சூரியன் எனில்,
அது மறைந்து விடுகிறது.
வானம் எனில்,
அது வெளிறி விடுகிறது.
மரம் எனில்,
அது உதிர்ந்து விடுகிறது.
நிலம் எனில்,
அது சரிந்து விடுகிறது.
அனைத்துக்கும் ஆதரவாய்
அழியா பெரும் உயிர்ப்பாய்
புவிப் பரப்பெங்கும்
வர்க்கப் பெருமிதம்
விரிந்து கிடக்கிறது.
என்ன இருந்தாலும்
அவன் பெரிய முதலாளி,
நாம சாதாரணம்
என்ற எண்ணமே பிழை..
பெரிய முதலாளிகள்..
பில்லியன் மூலதனங்கள்..
எதுவாயினும்
தொழிலாளியே
உனது கை படாவிட்டால்
அவை வெறும் கல்.
உனது உழைப்பு தீண்டாவிடில்
பணம்
பிணம்!
பிரச்சினை,
அவன் முதலாளி
என்பது மட்டுமல்ல
நான் தொழிலாளி
எனும் பலமறியாத
பலவீனமே!
ஆலைகள் மாறலாம்
ஆடைகள் மாறலாம்
அனைவரும் சுரண்டப்படுகிறோம்
எனும்
பொது அநீதிக்கெதிராக
வர்க்கமாய்
நாம் இணைந்துகொள்ள
மறுப்பது,
நமது சுவாசத்தை
நாமே மறுப்பது.
இனம்
மதம்
சாதி
பாலினம்
அனைத்தின்
வழியாகவும்
ஆதிக்கம் செய்கிறது
அன்னிய – பெருமூலதனம்.
அனைத்தும்
நம்மைக் கண்டு
அஞ்சி நடுங்கும் …
அனைத்தையும்
அடித்து நொறுக்கும்
வரலாற்றுப் பேராயுதம்
நமது வர்க்க பலம்.
எவ்வளவு
மும்முரமாய் உழைத்தாலும்
அது முதலாளிக்கே,
கொஞ்சம்
அரசியலாய் உழைத்துப் பார்
அதுதான் தொழிலாளிக்கு!
உனது
முதுகெலும்பு
உருவப்படுவது கூடத் தெரியாமல்
முன்னேறி முன்னேறி
முதலாளித்துவ நுகர்வில்
கிறங்காதே…
முன்னோர்கள் ரத்தத்தில்
ஒளியாதே..
முதுகுக்குப் பின்னால்
நெளியாதே..
தொழிலாளி வர்க்கமே
துலங்கும்படி பேசு!
தொடர்ச்சியைப் பேசு!
நீதான்
புது உலகைப் படைத்திடும்
போராட்ட மூச்சு!
எட்டு மணிநேர வேலை..
ஏற்ற ஊதியம்
பணிப் பாதுகாப்பு
உரிமைக்கான சங்கம்..
அத்தனையும்
போராடிப் பெற்றது சிவப்பு.
வர்க்க அரசியல்தான்
மே நாளின் சிறப்பு.
போராடாத இடத்தில்தான்
சோகம் பிறக்கிறது
போராடிப்பார்.. அங்கே
மே நாள் சிலிர்க்கிறது!
தௌஹீத் அமைப்பு வளர்வதற்கு இலங்கை முஸ்லீம்கள் இடம்கொடுத்தார்கள் என்பது உண்மையா ?
தௌஹீத் (வஹாபிய) சாயல்கொண்ட அமைப்புகள் இலங்கைக்குள் வருவதற்கு முன்பு கூட, ஒற்றைக் கருத்தியலைப் பின்பற்றும் சமூகமாக முஸ்லிம்கள் இலங்கையில் இருக்கவில்லை. மரபான இஸ்லாமியப் பாரம்பரியம் என்று ஒன்று தனியாக இல்லை.
சூபி முகாம்கள் (பல) இருந்தன. தப்லீக் ஜமாத் இருந்தது. ஜமாதே இஸ்லாமி இருந்தது. மிகப் பழமையான ஷியாப் பிரிவினரும் இருந்தனர்.
இத்தனை அமைப்புகளினுள்ளும் சமயச் சடங்கு, நடைமுறை மற்றும் அறிதல் முறைகளில் வேறுபாடுகளும் போட்டிகளும், முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்தன.
ஷியா அமைப்புக்களை மற்றைய அமைப்புக்கள் மறுப்பதலில் ஒரு பொது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. எனினும், பிற அமைப்புகளுக்கிடையில் மூர்க்கமான சண்டைகளும் சச்சரவுகளும் வெளிப்பட்டதில்லை. அதிகமான விஷயங்களில் இயைந்து போகும் மனநிலையே இருந்தது. பங்காளிகளுக்கு இடையிலான போட்டி என்ற வகையில்தான் வேறுபாடுகள் இருந்தன.
ஆனால், தௌஹீத் அமைப்புக்கள் இலங்கையில் நுழைந்தபோது, அதுவரை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும் அதை எதிர்த்தன.
அந்த அமைப்பு குறித்து பொதுமக்கள் வெளியில் கடுமையான அதிருப்திகளையும், எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தின. ஏற்கனவே இருந்த எந்தப் பள்ளிகளினுள்ளும் தௌஹீத் (வஹாபிய) அமைப்புக்களைச் செயல்பட அனுமதிக்கவில்லை. தௌஹீத் கருத்துக்களைப் பிரசாரம் செய்யவோ, அவர்களின் முறையில் மதச் சடங்குகளை தலைமையேற்று நடத்தவோ அனுமதிக்கவே இல்லை. இன்றுவரை அதுதான் நிலவரம். தௌஹீத்வாதிகளுக்கு என்று தனியான பள்ளிகள் இருக்கின்றன. அவை அவர்களே உருவாக்கியவை.
முஸ்லிம்களின் முக்கிய மதச் சடங்கான நோன்புகால தராவீஹ் தொழுகையில் – தௌஹீத் அமைப்பு பின்பற்றிய முறையை பிற அமைப்புக்கள் எவையும் பின்பற்றவில்லை. அதே நேரம் முஸ்லிம்களின் விசேட தினங்களான ”பெருநாள்” தினங்களைக் கூட தௌஹீத் அமைப்புக்கள் பின்பற்றும் நடைமுறையினுாடாக ஒருபோதும் பின்பற்றியதே இல்லை. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இரண்டு பெருநாட்கள் கொண்டாடப்பட்டு வருவதும், பிறை பார்ப்பதில் ஏற்படும் சிக்கல்களும் சச்சரவுகளும் அனைத்து சமூகங்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்த சம்பவங்கள்.
ஏன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையில் கூட தௌஹீத் அமைப்பைத் தன்னுடன் இணைக்கவில்லை என்றே கருதுகிறேன். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையிலிருந்த இஸ்லாமிய அமைப்புகள் தௌஹீத் ஜமாதை எப்படிப் புறமொதுக்கிக் கையாண்டார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? அல்லது வேறு எப்படி அவர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்?
இங்கு இன்னுமொரு விசயம் சுட்டிக் காட்டப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் பெரும் பகுதியினரை தம்வசம் வைத்திருக்கும் தப்லீக் ஜமாத், ஜமாதே இஸ்லாமி போன்ற அமைப்புக்கள் தொடர்ச்சியாகத் தௌஹீத் அமைப்புக்களை மக்களுக்குள் நுழைய விடாமலே பார்த்துக் கொண்டன.
தௌஹீத் அமைப்புக்களைப் பின்பற்றுபவர்கள் மொத்த முஸ்லிம்களில் மிகச் சொற்பமானவர்களே. தௌஹீத் (வஹாபிய) சாயல் கொண்ட இந்த அமைப்புக்களில் இருந்து மிகையான கடும்போக்கை கடைப்பிடிக்கும் அறிகுறிகள் வெளித் தெரிந்த போது, தௌஹீத் அமைப்பினர் ஸஹ்ரான் ஹாசிமை அதிலிருந்து விலக்கியும் விட்டனர்.
அதே நேரம் காத்தான் குடி மக்கள் அவரைக் கைது செய்யுமாறு பெரிய ஆர்ப்பாட்டங்களைக் கூட செய்தனர். பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகக் தகவல் உண்டு. அது போல முஸ்லிம் கவுன்சில் கூட ஸஹ்ரான் ஹாசிமுக்கு எதிராக முறைப்பாடுகளை வெளிப்படையாக செய்திருப்பதாக முஸ்லிம் கவுன்சிலின் பிரதித் தலைவரின் அறிக்கையின் மூலம் அறிகிறேன்.
இத்தனையும் நடந்திருக்கிறது. ஒரு சமூகம் தனக்குள் இயங்க வந்த ஓர் அமைப்பை இதைவிட வேறு எப்படி புறக்கணிக்க முடியும்? அவர்களை தடை செய்வதற்கும், சிறை பிடிப்பதற்கும் என்ன அதிகாரங்கள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்தது, இருக்கிறது?
இத்தனை வழிமுறைகளிலும் தௌஹீத்வாதிகளை இலங்கை முஸ்லிம்கள் எதிர்த்திருக்கிறார்கள். புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை எப்படி மறுதலித்துக் கடந்து போக முடியும்?
மேலும், வரலாறு நெடுக இலங்கையில் நடந்த தனித்த அல்லது கூட்டுப் படுகொலைகளின் போது அவற்றை நிகழ்த்திய சமூகத்தில் உள்ளோர், அச்செயல்களை எதிர்த்து வாய் திறக்காமல் மௌனம் சாதித்த வரலாறுகள் உண்டு. ஆனால், ஈஸ்டர் படுகொலை நிகழ்ந்த போது இலங்கை முஸ்லிம் சமூகம் அப்படி மௌனம் சாதிக்கவில்லை. உடனடியாகப் பல தளங்களிலும் தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தது. அப்படுகொலைகளின் சூத்திரதாரியான ஸஹ்ரானின் சொந்தச் சகோதரியே தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்து, தன்னால் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பேட்டி அளித்துள்ளார்.
இதன் பிறகும் இலங்கை முஸ்லிம் சமூகம் தௌஹீத் அமைப்பு வளர இடம்கொடுத்தது; தீவிரவாதத்தை/ பயங்கரவாதத்தை மௌனமாக ஆதரித்தது என எப்படி உங்களால் குற்றஞ்சாட்ட முடியும்?
இவைகள் கேள்விகளாக மட்டுமே முன்வைக்கப்படவில்லை. இது ஒருவகைப் பார்வைக் கோணம். எந்த விசயத்தையும் புரிந்து கொள்ளப் பன்மையான வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கவனப்படுத்தவே இந்தப் பதிவு.
இதைப் படித்துவிட்டு தௌஹீத் அமைப்பு அடிப்படைவாதிகள் இல்லையா? பெண்களை மோசமான வகையில் நடத்தவில்லையா என கிளம்பிக்கொண்டு யாரும் வரத் தேவையில்லை. அடிப்படைவாத அமைப்பு என நான் சொல்வதாக இருந்தால் இலங்கையின் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களின் மீதும்தான் அதைப் பிரயோகிப்பேன்.
பெண்கள் விஷயத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் பிற்போக்குத் தனமானவைதான் என்பேன். அவற்றை விவாதிப்பதற்கல்ல இந்தப் பதிவு என்பதை இதை எழுதத் தொடங்கும் போதே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
ஆனால், பயங்கரவாதச் செயற்பாடுகளை என்னைப் போல, உங்களைப்போல மிகப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வன்மையாக எதிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சமீபத்தில் யோகி சத்குரு ஜக்கி வாசுதேவ் துருக்கி போயிருக்கிறார். அந்த நாட்டில் இருக்கும் கொன்யாவில்தான் ரூமியின் கல்லறை இருக்கிறது. அந்த இடத்திற்கு சென்றவருக்கு ஒரு அதிசயம் நடந்திருக்கிறது.
அவர் கண்ணில் ஒரு டைனோசர் முட்டை போன்ற ஒரு பெரிய கல் தென்பட்டிருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக அந்த கல்லறை இருந்தும் அது ஏனோ யார் கண்ணிலும் படவில்லை. இறையருளை ப்ரோக்கர்கள் இல்லாமல் நேரடியாக பெற்ற சத்குரு அவர்களுக்குதான் அது காட்சியளித்திருக்கிறது பாருங்கள். கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
அந்த முட்டைக்கல்லின் மேல் தன் கழுத்தில் இருந்து சக்திவாய்ந்த ருத்திராட்சத்தை வைத்து சோதித்து பார்க்கிறார். ருத்திராட்சம் அப்படியே அசையாமல் நிற்கிறது… ஒரு இடத்தில் தவிக்கிறது. ஒரே அதிர்ச்சி… அது ஒரு பழமையான சிவலிங்கம்… கன்னத்துல போட்டுக்கோங்க…
செம்பருத்தி சீரியலில் குடும்பத்திற்கே வரிசையாக வருவது போல சத்குருவுக்கும் அதிர்ச்சி வந்து விடுகிறது. அந்த லிங்கம் மட்டுமில்லை, அந்த கல்லறை தோட்டம் முழுக்க ஆங்காங்கே பழமையான கோவிலின் சிதிலங்களை பார்த்து மீண்டும் ராஜாராணி சீரியலில் வருவதுபோல அதிர்ந்து போகிறார் ஜக்கி. ஆம் நண்பர்களே, அது ஒரு பழங்கால சிவன் கோயில். கன்னத்துல போட்டுக்கங்க…
ஆனால் இஸ்லாமியர்கள் தந்திரமாக அந்த இடத்தில் ரூமிக்கு கல்லறை கட்டிவிட்டார்கள். அந்த லிங்கம் 4700 ஆண்டு பழமையானது, சக்தி வாய்ந்தது என்பதும் சத்குருவுக்கு தெரியவருகிறது.
ஞானதிருஷ்டியாலேயே அதை கண்டுபிடித்துவிட்டாலும், விஞ்ஞானிகளை வைத்து ஆராய்ச்சி பண்ணி நிரூபித்துவிட்டார். எந்த விஞ்ஞானிகள் என்று அவரும் சொல்லவில்லை, நாமும் கேட்கவில்லை. சத்குரு மேலயே சந்தேகமா… கன்னத்தில் ப்ளீஸ்…
இந்த கண்டுபிடிப்பால் துருக்கி அரசே ஆடிப்போயிருக்கிறது. யாருய்யா இவரு என துருக்கி பிரதமர் உளவுத்துறையை கூப்பிட்டு கேட்டாராம்… சிவ சிவா… கன்னத்தில் போட்டுக்கலாம். ஆயிரம் அணுகுண்டுகளின் பவர் கொண்ட சத்குருவின் பவர்களை கேள்விப்பட்டு ஆடிப்போய்விட்டாராம்…
ஜக்கி அவர்களின் கண்டுபிடிப்பு இத்தோடு முடியவில்லை… ரூமி கல்லறையில் மட்டுமில்லை, ஐரோப்பா மற்றும் அரேபியா முழுவதுமே இப்படிப்பட்ட லட்சக்கணக்கான கோயில்கள் இருந்ததையும் தன் ஞானதிருஷ்டியால் கண்டுபிடித்துவிட்டார். அதெல்லாம் இப்போது சிதைந்துவிட்டன… என மனது நொந்து தன் சமீபத்திய அருள்தரும் வீடியோவில் உரை ஆற்றியிருக்கிறார்.
அவருடைய மனவாட்டத்தைப் போக்க உடனடியாக அத்வானி… சாரி.. சாரி… அவருக்கு வயதாகி திருந்திவிட்டார்… எனவே அமித்ஷா அவர்கள் தலைமை தாங்கி தன் பாஜக பக்தர்களை அழைத்துக்கொண்டு போய் துருக்கி நாட்டின் மீது படையெடுத்து ரூமியின் கல்லறை இருந்த இடத்தில் சிவன் கோயில் கட்டவேண்டும் என்பதே அகில உலக சத்குரு பக்தர்களின் கோரிக்கை.
இந்த செய்தி அமித்ஷாவை சென்றடையும்வரை அதிகம் பகிரவும்.
ஜார்ஜ் பெர்னாட் ஷா ஒருமுறை சொன்னார், “தகவல் தொடர்பு கொள்வதில் உள்ள ஒரே மிகப்பெரிய பிரச்சினை, அது நடந்த இடத்தில் ஏற்படுத்தும் மாயைதான்”.
மனித தொடர்பு கொள்தலில் உள்ள மிகப்பெரிய கண்ணி குறித்து ஷா எச்சரிக்கும்விதமாக அப்படி சொல்லியிருக்கிறார். ஆனால், நரேந்திர மோடி தன்னுடைய முழுமையான தகவல் தொடர்பையும் பொது மக்கள் தொடர்புத் திட்டத்தையும் இந்த ‘மாயை’யை ஒட்டியே வடிவமைத்திருக்கிறார்.
நம்முடைய பிரதமரைத் தவிர, வேறு எந்த இந்திய தலைவரும் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளிலிருந்து முற்றிலுமாக நழுவிச்சென்றதில்லை.
மிகச் சமீபத்திய மோடியின் ‘தொடர்பு கொள்தலின் மாயை’க்கு உதாரணம், அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் எடுத்த ”அரசியல் அல்லாத” நேர்காணலைச் சொல்லலாம். தன்னுடைய பிரதமர் பதவி காலத்தில் போதுமான அரசியல் நேர்காணல்களை அளித்துவிட்டார் என்கிற மாயையை ஏற்படுத்தும் வகையில், இந்த நேர்காணல் ‘அரசியல் அல்லாத’ என்கிற அடைமொழியோடு வெளியானது.
உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்கொண்ட பிரச்சினைகளில் ஒரு சிறுபகுதியைக்கூட பேசவேயில்லை. அவர் பதில் சொல்ல வேண்டிய ஒரே ஒரு கேள்விக்குக்கூட உருப்படியான, உண்மையான பதிலை அளிக்கவில்லை. பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒரே ஒரு ‘அரசியல் நேர்காணலை’கூட அவர் அளித்ததில்லை.
தான் பதவியேற்ற 2014 முதல் வழங்கி வரும் ‘மன் கி பாத்’ வானொலி உரை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ், ஏபீபி தொலைக்காட்சி பேட்டிகளைத் தவிர, இந்திய மக்களோடு உண்மையான வார்த்தைகளோடு மோடி தொடர்பு கொண்டதே இல்லை.
இலத்தீன் சொல்லான ‘கம்யூனிஸ்’ என்ற சொல்லிருந்து உருவான ‘கம்யூனிகேஷன்’ என்ற சொல்லுக்கு ‘பொதுவில் பகிருதல் அல்லது பகிரச் செய்தல்’ எனப் பொருள். உண்மையான தொடர்பு கொள்ளுதல், இரு வழி பரிமாற்றமாகும். அதாவது அது ஒரு பரிமாற்றம், ஒன்றுசேர்தல் அல்லது ஒன்றாக இணைதல். இது உங்களையும் என்னையும் ஒரு பொதுத் தளத்தில் ஈடுபட வைக்கிறது. அங்கே என எனக்கு கேள்விகளோ, கரிசனங்களோ இருக்குமானால், நீங்கள் என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லும்வகையில் எதிர்வினை செய்கிறீர்கள். அதுபோல எனது கரிசனங்களையும் தீர்த்து வைக்கிறீர்கள்.
இந்திய பிரதமரை போல, என்ன பேச வேண்டும் என்பதையோ எப்போது பேசவேண்டும் என்பதையோ தானே முடிவு செய்வதல்ல அது.
கோடிக்கணக்கான இந்திய மக்களின் மனதின் உண்மையான பல எரியும் கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன. அவை இதுபோன்றவை….
பணமதிப்பழிப்புக்கான நோக்கம்தான் என்ன?
அது சாதித்தது என்ன? அது உண்மையில் யாருக்கு உதவியது?
அது கருப்புப் பணத்தை ஒழித்துவிட்டதா?
அது தீவிரவாத தாக்குதல்களை நிறுத்திவிட்டதா?
சிறு வியாபாரிகளுக்கு (அல்லது தொடர்புடைய யாருக்கேனும்) ஜி.எஸ்.டி. பயனளித்ததா?
பணமதிப்பழிப்பும் ஜி.எஸ்.டி.-யும் சிறந்த யோசனைகள் எனில், வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை ஏன் உள்ளது?
‘நல்ல நாட்கள்’(அச்சே தின்) எங்கே?
வளர்ச்சி (விகாஸ்) எங்கே?
வாக்குறுதி அளித்த கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகள் எங்கே?
ட்விட்டரில் அவதூறு பரப்புவர்களை பிரதமர் பின்தொடர்வது ஏன்?
வகுப்புவாத வன்முறையின் கொடூர சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் வாயை மூடி மவுனியாக இருப்பதேன்? சம்பவங்கள் நடந்தமுடிந்த வெகுநாட்களுக்குப் பிறகு, அதுகுறித்து பலவீனமான ஒரே விதமான பதிலையே அளிப்பதேன்?
நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற திருடர்கள் நாட்டைவிட்டு வெளியேறியபின், நாமெல்லாம் ‘காவலாளிகள்’ என சொல்லிக்கொள்வதேன்?
இதுபோன்ற மிக முக்கியமான கேள்விகளுக்கு என்றேனும் பிரதமர் பதிலளித்திருக்கிறாரா ? மேலும் தொடர்ந்து புனையப்பட்ட நிகழ்ச்சிகளின் பின்னே, உண்மையான பிரச்சினைகளை அவர் மறைத்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற பின்வரும் கேள்விகளுக்கே பதிலளிக்க விரும்புகிறார்…
உங்களுக்கு மாம்பழம் பிடிக்குமா?
மாம்பழத்தை எப்படி சாப்பிடுவீர்கள்?
உங்களுக்கு எப்போதாவது கோபம் வருவதுண்டா?
உங்களுடைய கோபத்தை எப்படி கையாள்கிறீர்கள்?
உங்களுக்கு இன்னமும் நகைச்சுவை உணர்வு இருக்கிறதா?
நீங்கள் அணியும் உடைகளை நீங்களே துவைப்பதேன்?
உண்மையில் எவ்வளவு குறைவாக நீங்கள் தூங்குகிறீர்கள்?
நீங்கள் திரைப்படங்களைப் பார்ப்பீர்களா?
திரைப்படப் பாடல்களை நீங்கள் முணுமுணுத்ததுண்டா?
உங்களுடைய தாய் உங்களுடன் எப்போதாவது வந்து தங்குவதுண்டா?
தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய சமூகத்தில் அதிர்வுக்குரிய மாறுதல்களை உருவாக்கிய, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமர், ‘அரசியல் அல்லாத நேர்காணலை’ பாலிவுட் நடிகருக்கு தருகிறார். அதுவும் பரபரப்பான தேர்தல் நேரத்தில்… நாட்டின் அதிகாரம் மிக்க மனிதர், பயந்து ஓடிக்கொண்டிருப்பதைத்தான் அப்பட்டமாக இது காட்டுகிறது.
இந்த வினோதமான, மிகை யதார்த்தமான இந்த நேர்காணல் குறித்து அதிகம் பேசியாகிவிட்டது. மோடிக்கு இணக்கமான தொலைக்காட்சிகள் இதைக் கொண்டாடின. இணக்கமல்லாத தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் தோலுரித்துப் பேசின. சமூக ஊடகங்கள் பழித்தன; எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. என்.டீ.டி.வி -யின் ராவிஷ் குமார், தன்னுடைய பிரைம் டைம் நிகழ்ச்சியில் இதுகுறித்து ஒரு முழுமையான பகடி நிகழ்ச்சியையே நடத்தினார்.
‘அரசியல்-அல்லாத’ என்ற அடைமொழியோடு வந்தாலும் அதில் ஏராளமான அரசியல் இருந்தது. பிரதமர் எதிர்க்கட்சிகள் மீது பல சந்தர்ப்பங்களில் குற்றம் சொன்னார். ஆர்.எஸ்.எஸ். பற்றி குறைந்தபட்சம் மூன்று முறை உச்சரித்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான ‘நட்பு’ குறித்து, அரசியல் எதிர்க்கட்சிகளிடமிருந்து தனக்கு குர்தாவும் இனிப்பும் வருவது குறித்தும் பேசினார்.
கத்தோலிக்கம் அல்லாத போப் என்பதைப் போல, அரசியல் அல்லாத பிரதமர் என ஒன்று இல்லவே இல்லை.
பலர் இதை புத்திசாலித்தனமான விளம்பர ஜோடிப்பு என்றார்கள். ஆனால், மோடி – அக்ஷய் குமாரின் நேருக்கு நேர், விளம்பரம் என்பதைக் கடந்து தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும். மோடியின் பி.ஆர். குழு அவரை சுவைப்பதிலும் பழக்கத்திலும் பணம், பதவியை அனுபவிப்பதிலும் எளிமையாக உதாரண வாழ்வு வாழும் அன்பான வயதான நபராக காட்ட விரும்பினார்கள்.
ஆனால் அவர்களுடைய திட்டம், யதார்த்தத்திலிருந்து தப்பித்து ஓடுகிற சுயமோகம் பிடித்த ஒருவராக மோடியைக் காட்டி மிக மோசமாக முடிந்தது.
மோடி தன்னை இதுபோல் தட்டிக் கொடுத்திருந்தால், விளைவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என அவருக்கு யாராவது நினைவுபடுத்தியிருக்கலாம். ஆனால், இப்போது தாமதமாகிவிட்டது. இந்தியாவில் தற்போது உள்ள பிரச்சினைகளை தூக்கி எறிந்த பெரும் அரசியல்வாதி என வரலாற்றில் சொல்லப்படுவதற்கு பதிலாக, சமூக ஊடக ட்ரோல் படைகள் மற்றும் மிகப்பெரிய பி.ஆர். எந்திரத்தின் துணையுடன் மக்களுடன் தொடர்பு கொள்தலில் தக்கவைத்திருக்கும் மாயைகளுக்கிடையே இந்தியாவின் 14 -வது பிரதமர் பயந்தவராக -பாதுகாப்பற்றவராக- பாலிவுட் நடிகரின் துணை தேவைப்படுவராக, எப்போதும் நினைவு கூறப்படுவார்.
கட்டுரை : ரோஹித் குமார் தமிழாக்கம் : அனிதா நன்றி : த வயர்
தேர்தல் வரும்பொழுதெல்லாம் அனைத்துக் கட்சிகளும் விவசாயிகளின் நண்பர்களாக மாறிவிடுகின்றன. ‘தங்கள் கட்சி இருப்பதே விவசாயிகளுக்காகத்தான்’ என்பது போல கட்சித் தலைவர்களும் பேசுகின்றனர்.
ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு உதவாதது மட்டுமல்லாமல், வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்குவது, விவசாய மூலப் பொருட்களுக்கான மானியத்தை நிறுத்துவது, மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கையில் விதை விற்கும் உரிமத்தை கொடுப்பது, உணவுப் பயிர்களை ஊக்குவிக்காமல் பணப்பயிர்களை ஊக்குவிப்பது என பல வேலைகளை ஓட்டுக் கட்சிகள் செய்கின்றன.
இருந்தாலும் அடுத்த தேர்தல் வரும்பொழுது நாங்கள் விவசாயிகளை கோடீஸ்வரர்களாக மாற்றாமல் ஓய மாட்டோம் என்பது போல அறிக்கைகளை விடுகின்றனர்.
2019 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பிஜேபி-யை பொறுத்தவரை, 2014-ல் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினார்களா என்று நமக்கு தெரியும், அதை பற்றி எதிர்க்கட்சிகளும் மற்றவர்களும் பேசி வருகின்றனர்.
விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரட்டிப்பு ஆக்க போவதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே பிஜேபி சொல்லி வருகிறது. அதையே இந்த தேர்தல் அறிக்கையிலும் சேர்த்துள்ளது. வருமான இரட்டிப்பு என்பது பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகா? அல்லது கணக்கில் எடுத்துக்கொள்ளாமலா? என்ற கேள்விக்கு பிஜேபி தலைவர்கள் பதில் சொல்வதாக இல்லை.
பண வீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், எதுவுமே செய்யாமலே வருமானம் இரட்டிப்பு ஆகும். எடுத்துக்காட்டாக, 10 வருடங்களுக்கு முன் 5 ரூபாயாக இருந்த தேனீரின் விலை, இப்போது 10 ரூபாய் ஆகிவிட்டது, இதற்கு யாரும் காரணம் அல்ல. பண வீக்கத்தின் காரணமாக விலை அதிகமாகி உள்ளது. இரட்டிப்பைத் தவிர, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP – minimum support price), பயிர்க்காப்பீட்டு திட்டம் போன்ற வழக்கமான பல்லவிகளும் பிஜேபி தேர்தல் அறிக்கையில் உள்ளன.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை விவசாயக் கடன் தள்ளுபடி என்பது முக்கியமான அம்சமாக கூறப்படுகிறது. இது போக MSP அதிகரிப்பு, பயிர்க் காப்பீட்டை சீர் செய்வது போன்ற அம்சங்களும் உள்ளன. இந்த இரண்டு கட்சிகளைத் தவிர திமுக, CPI(M) போன்ற கட்சிகளின் அறிக்கைகளும் MSP அதிகரிப்பு பற்றியும், விவசாயக் கடன் தள்ளுபடி பற்றியும் பேசுகின்றன. குறிப்பாக MSP அதிகரிப்பும் விவசாயக் கடன் தள்ளுபடியும் பொதுவாக அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ள வாக்குறுதிகளாக தெரிகிறது.
விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP), உற்பத்திக்கான உள்ளீடு செலவின் (input cost) 150%-ஆக உயர்த்துவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிஜேபி அறிவித்தது. ஆனால் உள்ளீடு செலவு என்பதில் எதுவெல்லாம் அடங்கும் என்பதில் அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன.
விவசாய சங்கங்கள் M.S. சாமிநாதன் குழு கூறிய அடக்க விலையை பின்பற்ற வேண்டும் என்று கூறிவருகின்றன. இதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது. ஏதாவது ஒரு விளக்கத்தை ஏற்று MSP-யை அதிகரிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், மத்திய மாநில அரசுகளின் கடந்த கால நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது இந்திய விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் விவசாயப் பொருட்களுக்கான MSP -யை அதிகப்படுத்துவதற்கான முழு அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு சில சமீபத்திய உதாரணங்களைப் பார்ப்போம்.
கோதுமை மற்றும் அரிசி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உலக வர்த்தக கழக ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட அளவை விட அதிகமாக தன் நாட்டு விவசாயிகளுக்கு இந்தியா வழங்வதாகக் கூறிய அமெரிக்கா, உலக வர்த்தக கழகத்தில் இந்தியாவின் மீது வழக்கு தொடுக்கப் போவதாக 2018 ஜீலை-ல் செய்திகள் வந்தன.
மேலும் சுண்டல் உள்ளிட்ட ஐந்து பயிர்களுக்கு இந்தியா தனது விவசாயிகளுக்கு அதிக MSP கொடுத்துவிட்டு உலக வர்த்தகக் கழகத்தில் (WTO) தவறான தகவல் கொடுத்ததாக கனடாவும் அமெரிக்காவும் இந்தியாவின் மீது குற்றம் சாட்டின. அதனடிப்படையில் WTO-வில் இந்தியாவின் மீது வழக்கு தொடர்வதாக இவ்விரு நாடுகளும் அறிவித்துள்ளன.
சமீபத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஒன்பது நாடுகள் இந்தியாவின் மீது கரும்பு விவசாயிகளுக்கு WTO-ல் ஒப்புக்கொண்ட அளவை விட அதிக மானியம் கொடுத்ததற்காக WTO-ன் சர்ச்சைகளை தீர்க்கும் அமைப்பில் (Dispute settlement panel) வழக்கு தொடுத்துள்ளன. இம்மூன்றும் கடந்த ஒரு வருடத்திற்குள் விவசாய மானியம் தொடர்பாக WTO-வின் உறுப்பு நாடுகள் இந்தியாவின் மீது WTO-வில் அளித்துள்ள புகார்களாகும்.
இந்திய விவசாயம் முதலாம் உலக நாடுகளின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கிறதென்பதையே இது காட்டுகிறது.
இந்த செய்திகளை பார்த்தவுடன் நமக்கும் இயல்பாக எழும் கேள்வி – ‘இந்திய அரசாங்கம் தனது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையின் (MSP) மீது அந்நிய நாடுகள் WTO-வில் எப்படி புகார் கூற முடியும்?’ என்பதுதான். அவ்வாறு புகார் கூறும் உரிமையை இந்திய அரசாங்கம் மற்ற நாடுகளுக்கு வழங்கியிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
இந்தியா கையெழுத்திட்டிருக்கும் விவசாயம் தொடர்பான உ.வ.கழக ஒப்பந்தத்தின்படி (Agreement on Agriculture – AoA) இந்திய அரசு விவசாயத்திற்காக தரும் மானியத்தின் அளவு மொத்தம் உற்பத்தியாகும் விவசாய பொருட்களின் மதிப்பில் 10 சதவிகதத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.
அதாவது ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் மொத்த மதிப்பு 500 கோடி என்றால் அதில் 50 கோடிக்கு மேல் மானியமாக இந்திய அரசு தனது விவசாயிகளுக்கு வழங்கக்கூடாது. மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த 10% மானிய அளவையும் படிப்படியாக குறைக்க வேண்டும்.
இதனை மீறும் பட்சத்தில் WTO-AoA-ல் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகள் இந்தியாவின் மீது வழக்குத் தொடர முடியும். இதனடிப்படையிலேயே பிற நாடுகள் இந்தியாவின் மீது வழக்கு தொடுத்துள்ளன. இவ்வழக்கின் தீர்ப்புகளை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டு அமல்படுத்த வேண்டும். முன்னமே WTO-ன் சில தீர்ப்புகள் இந்தியாவிற்கு பாதகமாக வந்துள்ளது. அதை இந்திய அரசு ஒப்புக்கொண்டு அமல்படுத்தியும் உள்ளது.
கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக விவசாயம் சார்ந்த அனைத்து முடிவுகளும் இதனடிப்படையிலேயே எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதே உண்மையாகும். எனவே இந்திய விவசாயிகள் கோருகின்ற விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஆட்சியாளர்களால் ஒருபோதும் கொடுக்க இயலாது என்பதே எதார்த்தம்.
தேர்தல் கட்சிகள் அளித்துள்ள வாக்குறுதிகளையும் இந்திய அரசு WTO உடன் செய்துள்ள ஒப்பந்தங்கள் மற்றும் மேலே குறிப்பிட்ட செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இதில் உள்ள முரண் நமக்குப் புரியும். ஒருபுறம் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் MSP-யை குறைக்க, பிறகு நிறுத்த வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் இந்தியாவுக்கு WTO-வின் மூலம் அழுத்தம் தருகின்றன. இன்னொருபுறம் இப்போது இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உள்ளீட்டு விலையில் 150% உயர்த்தப் போவதாக ஓட்டு கட்சிகள் கூறுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் WTO ஒப்பந்தங்களைப் பற்றி தெரிந்திருந்தும் தேர்தல் பிரச்சாரத்தின் போது எந்த கட்சியும் மறந்தும் கூட இது பற்றி மூச்சு விடுவது இல்லை.
பாஜக தவிர பெரும்பாலான கட்சிகளின் அறிக்கைகளில் இருக்கும் இன்னொரு முக்கியமான வாக்குறுதி, விவசாயக் கடன் தள்ளுபடி பற்றியது. விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி பேசுவதற்கு முன்பு மொத்த விவசாயக் கடன் எவ்வளவு உள்ளது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
2016-ம் ஆண்டு மத்திய விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கொடுத்த கணக்கின்படி நிலுவையில் உள்ள மொத்த விவசாயக் கடன் ரூபாய் 12 லட்சம் கோடியாகும். இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி எந்தக் கட்சியும் பேசவில்லை. இந்நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி, ஏற்கெனவே அதிகமாக இருக்கும் அரசின் நிதிப் பற்றாக்குறையை(fiscal deficit) மேலும் அதிகப்படுத்தும் என்று வலதுசாரி பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்திய அரசின் உயர் அதிகாரிகளோ விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதினால் கடனை செலுத்த வேண்டிய தேவையில்லை என்ற மனப்பாங்கு (Credit indiscipline) விவசாயிகளிடையே உருவாகும் என எச்சரிக்கின்றனர்.
மேலும் விவசாயம் தொடர்பான செலவுகளுக்கு நிதி ஒதுக்குவதில் மோடி அரசு மிகவும் அலட்சியமாகவே இருந்து வருகிறது. உதாரணமாக, இந்திய உணவுக் கழகம் (FCI – Food Corporation of India) என்ற அரசு நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களை அரசு நிர்ணயித்த MSP விலையில் கொள்முதல் செய்கிறது.
இந்த தானியங்கள் குறைந்த விலைக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. அதை மாநில அரசுகள் நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கின்றன. MSP விலைக்கு உணவு தானியங்களை கொள்முதல் செய்து மிகக் குறைந்த விலைக்குக் கொடுப்பதால் உண்டாகும் செலவை மானியமாக மத்திய அரசு FCI-க்கு வழங்குகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசு, FCI-க்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 1.21 லட்சம் கோடியை தராமல் உள்ளது. இந்திய உணவுக் கழகம், தனது நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக தேசிய சிறு சேமிப்பு நிதியிடமிருந்து (National Small Saving Fund) FCI கடன் வாங்கியுள்ளது. அரசின் நிதிப் பற்றாக்குறையை (fiscal deficit) சமாளிப்பதற்காகவே மத்திய அரசு பட்ஜட்டில் ஒதுக்கிய நிதியை FCI-க்கு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.
பட்ஜெட்டில் ஒதுக்கிய 1.21 லட்சம் கோடி ரூபாயை தரமுடியாமல் நிதிப் பற்றாக்குறையை காரணம் கூறும் மத்திய அரசு விவசாயக் கடன் தொகையான ரூ.12 லட்சம் கோடியை எவ்வாறு தள்ளுபடி செய்ய போகிறது? அவ்வாறு தள்ளுபடி செய்யும் பட்சத்தில் நிதிப் பற்றாக்குறையின் அளவு, GDPயில் 3%-ஐ விட மிக அதிகமாகும். இதனால் உலக வங்கி, நிதியாதிக்க கும்பல்கள் மற்றும் பொருளாதார தர நிறுவனங்களின் (Rating Agency) கடுங் கோபத்திற்கு இந்திய அரசு ஆளாக நேரிடும்.
எனவே விவசாயக் கடன் தள்ளுபடி என்பது ஓட்டுக்காக கூறப்படும் கவர்ச்சி வாக்குறுதியே தவிர அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முழு அதிகாரம் இந்திய அரசாங்கத்திடம் இல்லை என்பதே உண்மை. நிலைமை இவ்வாறு இருக்க ஏறத்தாழ அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயம் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடுவோம் என்ற தொனியில் பேசிவருகின்றன.
தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாகராஜ கண்டிகை கிராம மக்களின் நேருரை மற்றும் மக்கள் பாடகர் தோழர் கோவன் பங்குபெறும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்.
இப்பேரணி – பொதுக்கூட்ட நிகழ்வுகள் வினவு தளம் – யூடியூப் – முகநூல் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், தொடர்புக்கு 9444461480.
சென்னை பட்டூரில் மிகவும் பிரபலமானது மாட்டுக்கறிக் கடைகளே .. அங்கு நல்ல தரத்துடன் மாட்டுக் கறி மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு மாட்டுக்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் வினவு குழுவினர் நேர்காணல் எடுத்தனர்.
ஒருவேளை மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், மாட்டுக்கறி விற்பனைக்குத் தடை விதிக்க வாய்ப்பிருப்பது குறித்து கறி வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் ? அறிந்து கொள்ள….
பாருங்கள் ! பகிருங்கள் !
வினவு களச் செய்தியாளர்
இதையும் கொஞ்சம் பாருங்க :
மோடி ஆட்சி நன்னாத் தான் இருக்கு .. மோடியே வரட்டும் | Chennai People Comment
பிஜேபிய பத்தி இங்க வந்து பேசாத … செருப்படிதான் விழும் .. | People Comments
விருத்தாச்சலம் அருகே கச்சிராயநத்தம் என்றொரு கிராமம் இருக்கிறது. முழுக்க விவசாய கிராமம், சாதாரண எளிய மக்கள். இந்த சின்னஞ்சிறிய ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட விதவைப் பெண்கள் இருக்கிறார்கள். யாரும் வாழ்ந்து முடித்தவர்கள் அல்ல. சராசரி வயது 35 தான் இருக்கும். நான்கைந்து வயதில் இரண்டு குழந்தைகளுடன், வாழ்க்கையை ஓட்டத் தடுமாறி, ‘விதவை’ என்ற ஊராரின் ஏளனப் பேச்சுக்கு ஆளாகி… அந்தப் பெண்கள் அடையும் துயரத்தின் அடர்த்தி சொல்லி மாளாதது.
டாஸ்மாக் எப்படி தமிழக குடும்பங்களைச் சீரழித்து நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது என்பதற்கு கச்சிராயநத்தம் – ரத்தமும், சதையுமான உதாரணம். அவர்களிடம் ஒரு மணிநேரம் பேசினால் மனம் நடுங்கிப் போகிறது. இத்தனை துயரங்களுடன் ஒரு வாழ்வை வாழ முடியுமா என அச்சம் வருகிறது. எனினும், தங்கள் பிள்ளைகளின் முகத்துக்காக ஏதோ வாழ்கிறார்கள். ஆனால், அந்தப் பிள்ளைகளும் வளர்ந்து வந்து குடிக்கத் தொடங்கும்போது அவர்கள் நிலைகுலைந்து போகின்றனர். வாழ்வின் மீதான பிடிப்பே அற்றுப்போகிறது. மரணத்துக்காக காத்திருப்பதே வாழ்வாகிப் போகிறது. இது கச்சிராயநத்தம் பெண்களின் கதை மட்டும் அல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் பல்லாயிரம் கிராமங்களில் வாழும் இலட்சக்கணக்கான பெண்களின் துயர நிலை இதுதான்.
உண்மையில், தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்திருப்பது ஒரு மாபெரும் மக்கள் பேரழிவு. இலங்கை இன அழிப்புப் போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை விட, டாஸ்மாக் மதுவால் கொல்லப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை அதிகம். இலங்கைப் போரில் உருவான விதவைகளை விட, டாஸ்மாக் மூலம் தமிழக அரசு மக்கள் மீது நடத்திக் கொண்டிருக்கும் சாராய யுத்தத்தில் உருவான விதவைகள் அதிகம். இலங்கை அரசு வீசிய கொத்துக் குண்டுகளில் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கையைவிட, டாஸ்மாக் மது மூலம் விபத்துகளில் சிக்கி, உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஒப்பீடு கவன ஈர்ப்போ, மிகைப்படுத்தலோ அல்ல. நடைமுறை உண்மை.
சற்று மனமூன்றி சிந்தித்துப் பாருங்கள்… மனிதர்களின் உடலும், மனமும் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் எப்போதேனும் சீரழிக்கப்பட்டிருக்கிறதா? ஓர் அரசு நிறுவனம், இத்தனை அதிக எண்ணிக்கையிலான மனித உடல்களை, தன் ஏதேனும் ஒருநடவடிக்கையில் என்றைக்கேனும் இணைத்துக்கொண்டிருக்கிறதா? நிச்சயமாக இது ஒரு வரலாறு காணாத பேரழிவு என்பதில் சந்தேகமே இல்லை.
இந்தப் பேரழிவை நிகழ்த்திக் கொண்டிருப்பது அரசு. நாம் வாக்களித்து தேர்வு செய்த அரசு. நமக்கு நல்லது செய்வார்கள் என நம்பி நாம் தேர்வு செய்தவர்கள், நம் வாழ்வை நாசமாக்குவதையே முழு நேர வேலைத்திட்டமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த டாஸ்மாக் மூலம் நாம் இழப்பது கொஞ்சம், நஞ்சம் அல்ல. விலை மதிப்பற்ற நமது உடல் நலிவடைகிறது. மூளை சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறது. பகுத்தறிவு பறிபோகிறது. சுய மரியாதை காலாவதி ஆகிறது. மொத்தத்தில் குடிபோதை, நம்மை மனதை நிலையில் இருந்து விடுவித்து மிருகநிலைக்கு இட்டுச் செல்கிறது.
இது, இதற்கு மேலும் சகித்துக்கொள்ள முடியாத தீங்கு. ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் டாஸ்மாக் மதுக் கடைகள் தொடர்ந்து இருக்கும் என்றால், இன்னும் பிறக்காத நம் அடுத்த தலைமுறைக்கான ஒரு விஷக் கடையை நாம் விட்டு வைத்திருக்கிறோம் என்று பொருள். இனிமேலும் வேண்டாம் டாஸ்மாக் கடைகள். நமது எதிர்ப்புகளை எண்ணங்களில் இருந்து செயலுக்கு மாற்றுவோம். தனிநபர்களாய் அல்லாமல், கூட்டாக இணைந்து எதிர்ப்பைப் பதிவு செய்வோம். நம் வாழ்வைக் கெடுக்க, நம் வீட்டு உயிர்களை எடுக்க, நம் வீட்டு வாசலில் திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் மதுக் கடைகளை விரட்டி அடிப்போம். (முன்னுரையில் நூலாசிரியர்…)
கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டங்களைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், அவற்றில் ஓர் ஒற்றுமையைப் பார்க்கலாம். காவிரி நீருக்கான போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், பாலாறு, பவானி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு எதிரான போராட்டங்கள், மதுரையில் ‘கிரானைட் குவாரிகள்’ என்ற பெயரில் இயற்கையைச் சுரண்டுவதற்கு எதிரான போராட்டம், தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களின் கடலோரத்தில் தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், ‘இறால் பண்ணை ‘ என்ற பெயரில் கடலோரங்களைச் சுடுகாடாக்கும் திட்டங்களுக்கு எதிரான போராட்டம், ‘மீத்தேன் வாயுத் திட்டம்’ என்ற பெயரில் விவசாய நிலங்களைப் பாழ்படுத்துவதற்கு எதிரான போராட்டம், கெயில் நிறுவனக் குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டம், கவுத்தி வேடியப்பன் மலையைக் காவு கொடுப்பதற்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம்… என நம் கண்ணுக்கு எட்டிய வரையிலும் போராட்டங்களால் நிறைந்திருக்கின்றன நமது கடந்த காலமும் நிகழ்காலமும்.
இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் அநீதியை எதிர்த்து, இந்த மக்கள் திரள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆனால், இது மட்டுமே இவற்றுக்கு இடையிலான ஒற்றுமை அல்ல. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் புதிய கோரிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லை. ஒரு தொழிற்சாலையோ, பாலமோ, பள்ளிக்கூடமோ, கல்லூரியோ கேட்டு மக்கள் போராடவில்லை. இருப்பதையும் பிடுங்காதீர்கள்’ என்றுதான் போராடுகின்றனர். இந்த அடிப்படை வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘எங்கள் ஆறுகளில் மணல் அள்ளாதீர்கள். நாங்கள் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்கிறோம்’ என மன்றாடுகின்றனர். ‘தாது மணல் அள்ளாதீர்கள். நாங்கள் கடலுக்குப் போய் பிழைத்துக்கொள்கிறோம்’ என்கிறார்கள். மக்களின் இந்தக் கோரிக்கைகளை காதுகொடுத்தும் கேட்கத் தயார் இல்லாத அரசு, மக்கள் விரோதத் திட்டங்களை முழுவீச்சுடன் செயல்படுத்திவருகிறது. இதே வரிசையில்தான் டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டமும் வருகிறது. இதுவரை எங்கள் வளங்களை விட்டுவிடுங்கள்’ என முறையிட்ட மக்கள், இப்போது ‘எங்களை உயிரோடாவது விடுங்கள்’ எனப் போராடுகிறார்கள். இதுவரை நடந்தது பிழைப்பதற்கான போராட்டம்; இது உயிருக்கான போராட்டம். (நூலிலிருந்து பக்.178-179)
நூல்:குடி குடியைக் கெடுக்கும் ஆசிரியர்: பாரதி தம்பி
வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600 002. தொலைபேசி: 044 – 42634283. மின்னஞ்சல் : books@vikatan.com
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
பனிப்புயல் அடித்த இரவில் தொலைதூரச் சண்டைச் சத்தங்கள் எங்கிருந்து வந்தன என்பதைத் தனது பயணத்தின் ஏழாம் நாள் அலெக்ஸேய் தெரிந்து கொண்டான்.
ஒரேயடியாகக் களைத்துச் சோர்ந்து, ஒவ்வொரு நிமிடமும் நின்று இளைப்பாறியவாறு, வெண்பனி உருகத் தொடங்கியிருந்த காட்டுப் பாதையில் அவன் தளர் நடை நடந்தான்.
பாதை சட்டென்று இடப்புறம் திரும்பிய முனையில் அவன் திடீரென்று கல்லாய் சமைந்து நின்று விட்டான். இரு மருங்கிலும் அடர்ந்திருந்த இளமரங்களால் நெருக்குண்டு பாதை குறுகலாயிருந்த இடத்தில் ஜெர்மன் மோட்டார்களைக் கண்டான். இரண்டு பிரம்மாண்டமான பைன் மரங்கள் அவற்றின் வழியைத் தடுத்து நின்றன. இந்த பைன் மரங்களின் அருகில் தனது ரேடியேட்ரை அவற்றில் புதைந்தபடி நின்றது கோடாரி வடிவான கவச மோட்டார். அது செக்கச் செவேலென்று இருந்தது. அதன் டயர்கள் எரிந்து போய்விட்டதால் அது இரும்புச் சக்கர வளையங்கள் மேல் நின்றது. அதன் பீரங்கி மேடை விசித்திர நாய்க்குடை போல மரத்தின் அடியில் வெண்பனி மீது ஒரு புறமாக விழுந்து கிடந்தது. கவச மோட்டாரின் அருகில் மூன்று பிணங்கள் கிடந்தன. எண்ணெய்க் கறை படிந்த கறுப்புக் கோட்டுகளும் துணித் தலைக் காப்புகளும் அணிந்த மோட்டார் படையினரின் பிணங்கள் அவை.
எரிந்து சிவந்த மேற்பகுதிகளும் கரியாகிக் கறுத்திருந்த உட்பகுதிகளும் கொண்ட இரண்டு ஜீப் கார்கள் கவச மோட்டாரை ஒட்டினாற் போல நின்றன. அவை நின்ற இடத்தில் சுற்றிலும் இளகியிருந்த வெண்பனி எரிவு, சாம்பல், கரி, இவற்றால் கருண்டிருந்தது. நாற்புறமும் – காட்டுப் பாதையிலும், பாதையோரப் புதர்களிலும், நீர் வடிகிடங்குகளிலும் – ஹிட்லர் படை வீரர்களின் பிணங்கள் சிதறிக்கிடந்தன. அந்தப் படைவீரர்கள் கிலியடித்து ஆளுக்கு ஒரு புறமாக ஓடினார்கள் என்பதும், என்ன நடக்கிறது என்று அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளக்கூட இல்லை என்பதுவும், ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு புதருக்கும் பின்னே சாவுப் புயல் வெண்பனிப் போர்வைக்குள் மறைந்து அவர்களுக்காகப் பதிபோட்டுக் காத்திருந்தது என்பதும் அந்த பிணங்கள் கிடந்த கிடையிலிருந்தே தெரிந்தது.
ரத்தக் களரி நடந்த அந்த இடத்தை அலெக்ஸேய் நெடுநேரம் கவனமாய் பார்வையிட்டான். மிதிப்பட்டு வெண்பனியில் புதைந்திருந்த, சிறிது கடிக்கப்பட்டிருந்த ரஸ்குத் துண்டு ஒன்று ஓரிடத்தில் அவனுக்கு அகப்பட்டது. அது பழையது, பூஞ்சணம் பூத்தது. அலெக்ஸேய் அதை வாயருகே கொண்டு போனான். ரொட்டியின் புளித்த வாடையை ஆர்வத்துடன் முகர்ந்தான். அதை அப்படியே வாய்க்குள் திணித்துக்கொண்டு, மணமுள்ள ரொட்டியை ருசித்து ருசித்து சுவைக்க வேண்டும் போல் ஆசையாயிருந்தது. ஆனால் அலெக்ஸேய் அதை மூன்றுக் கூறுகளாகத் துண்டு போட்டான். இரண்டு துண்டுகளை காற் சட்டையின் பையில் ஆழத்தில் வைத்தான். ஒரு துண்டைக் கிள்ளிச் சிறு பொறுக்குகளை வாயிலிட்டு மிட்டாயைக் குதப்புவது போலச் சுவைக்காமல் குதப்பி அவற்றை உண்டான மகிழ்ச்சியை நீடிக்கச் செய்ய முயன்றான்.
போர்க்களத்தை இன்னொரு தடவைச் சுற்றிப் பார்த்தான். அப்போது அவனுக்கு ஓர் எண்ணம் உதயமாயிற்று. கொரில்லா வீரர்கள் அங்கே எங்காவது அருகாமையில் இருக்க வேண்டும்! புதர்களிலும் மரங்களைச் சுற்றியும் பொருபொருத்த வெண்பனியை மிதித்துக் கெட்டியாக்கியிருப்பவை அவர்களுடைய பாதங்கள் தாம். பிர் மரத்தின் உச்சியிலோ, புதர்களின் பின்னேயோ, வெண்பனிக் குவைகளின் பின்னேயோ இருந்து கொரில்லா வேவு வீரன் பிணங்களின் நடுவே அலைந்து திரியும் தன்னைக் கண்டுக் கொண்டு பார்வையிடுகிறான் போலும். இவ்வாறு நினைத்த அலெக்ஸேய் கைகளை வாயருகே குவித்து வைத்துக் கொண்டு, “ஓஹோ ஹோ! கொரில்லா வீரர்களே!” என்று தன் சக்தியை எல்லாம் திரட்டிக் கத்தினான்.
தனது குரல் எவ்வளவு சோர்வுடன் தணிவாக ஒலிக்கிறது என்பதைக் கேட்டு அவன் வியப்படைந்தான். காட்டின் உட்புறமிருந்து பதில் குரல் கொடுத்து அவனது கத்தலை அடி மரங்களால் துண்ட துண்டாக மீட்டொலித்த எதிரொலி கூட அதிக உரக்கக் கேட்பது போல அவனுக்குப்பட்டது. “கொரில்லா வீரர்களே! கொரில்லா வீ-ர-ர்-களே! ஏ-ஹே-ஹே!” என்று கூவி அழைத்தான் அலெக்ஸேய், எரிந்த மோட்டாரின் கரித்துணுக்குகளுக்கும் பேச்சற்ற பகைவர் உடல்களுக்கும் நடுவே வெண்பனியில் உட்கார்ந்தபடியே.
சிதறலான, கணீரென்ற எதிரொலியால் காடுதான் அவனுக்கு பதில் குரல் கொடுத்தது. திடீரென்று – அல்லது பெருத்த நரம்பு இறுக்கம் காரணமாகத்தான் ஒருவேளை அவனுக்கு இப்படித் தோன்றியதோ? – ஊசியிலைகளின் இசை நயமுள்ள ஆழ்ந்த ஓசையின் ஊடே, சில வேளைகளில் துலக்கமாகப் பிரித்தறிந்து கொள்ளும் வகையிலும் சில வேளைகளில் முற்றிலும் அடங்கி ஓய்ந்து விடுபவைகளாகவும் மந்தமாக அடிக்கடி கேட்டன எதிரொலிகள். தொலைவிலிருந்து காட்டின் வெறுமையிலிருந்த தனக்கு நண்பனின் அழைக்குரல் கேட்டு விட்டது போல அவன் திடுக்கிட்டு உடல் சிலிர்த்தான். எனினும் தன் காதுகளை நம்பாமல் கழுத்தை முன்னே துருத்தியவாறு வெகுநேரம் உட்கார்ந்திருந்தான்.
ஹிட்லர் படை வீரர்களின் பிணங்கள் சிதறிக்கிடந்தன. அந்தப் படைவீரர்கள் கிலியடித்து ஆளுக்கு ஒரு புறமாக ஓடினார்கள் என்பதும், என்ன நடக்கிறது என்று அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளக்கூட இல்லை என்பதுவும், ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு புதருக்கும் பின்னே சாவுப்புயல் வெண்பனிப் போர்வைக்குள் மறைந்து அவர்களுக்காகப் பதிபோட்டுக் காத்திருந்தது என்பதும் அந்த பிணங்கள் கிடந்த கிடையிலிருந்தே தெரிந்தது.
இல்லை. அவன் ஏமாறவில்லை. கிழக்கே இருந்து ஈரக் காற்று வீசியது. பீரங்கிக் குண்டுகளின் துலக்கமான வெடியோசைகள் மறுபடியும் காற்றில் மிதந்து வந்தன. தெளிவாகிவிட்டது!
மும்முரமான பீரங்கித் தாக்கும் எதிர்த்தாக்கும் ஓசையை வைத்துக் கொண்டு பார்த்த போது போர் முனை வரிசை ஒரு பத்துக் கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். அங்கே ஏதோ நடந்துவிட்டது. ஒரு தரப்பு தாக்கு நடந்திற்று, மறுதரப்பு தற்காத்துக் கொள்வதற்காக ஆவேசத்துடன் எதிர்த்து தாக்கிற்று. அலெக்ஸேயின் கண்கள் ஆனந்த நீர் சொரிந்தன.
அவன் கிழக்கே நோக்கினான். அந்த இடத்தில் பாதை நேர் எதிர் திசையில் ஒரேடியாகத் திரும்பியிருந்தது என்பது உண்மையே. அலெக்ஸேய்க்கு முன்னே விரித்துக் கிடந்த வெண்பனிப்போர்வை. ஆனால், அங்கிருந்துதான் இந்த அழைக்குரல் அவனுக்கு கேட்டது. கொரில்லா வீரர்களது அடித் தடங்கள் பதிந்து வெண்பனியில் கருமையாகத் தெரிந்த நீட்டுப் போக்கான பள்ளங்கள் அந்தத் திசைக்கே இட்டுச் சென்றன. வீரமிக்க வனவாசிகளான கொரில்லாக்கள் இந்தக் காட்டில்தான் எங்கோ வசித்தார்கள். “பரவாயில்லை, பரவாயில்லை, தோழர்களே, எல்லாம் நலமே முடியும்” என்று வாய்க்குள்ளாக முணுமுணுத்துவிட்டு அலெக்ஸேய் ஊன்று கோலைத் துணிவுடன் வெண்பனியில் நாட்டி, மோவாயை அதன் மேல் ஊன்றி உடல் சுமை முழுவதையும் அதன் மீது அழுத்தி, மிகுந்த சிரமத்துடன், ஆனால் உறுதியுடன் கால்களைப் பனிக் குவியலில் நகர்த்தி வைத்தான். பாதையிலிருந்து விலகிக் கன்னி வெண்பனித் திடலில் அவன் முன்னேறலானான்.
கேள்வி: // நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள், ஊடகங்கள் அனைத்தும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மல்லுக் கட்டும் போது அதை எதிர்த்து நிற்க வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கருதுகிறார்கள் அல்லவா //
இந்த sterlite பிரச்சனை என்பது எப்போதோ அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது. ‘ban sterlite’ அல்லது ‘burn sterlite’ என்கிற வாசங்கங்களை பார்த்து கோர்ட்டே கேள்வி எழுப்புகிறது. இந்த sterlite பிரச்சனை ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டதே கனிமொழி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே என்று சொல்லப்படுகிறது.
நன்றி
– சதீஷ்
அன்புள்ள சதீஷ்,
கனிமொழியின் தேர்தல் வெற்றிக்காகத்தான் ஸ்டெர்லைட் பிரச்சினை ஊதி பெரிதாக்கப்பட்டது என்றால், ராஜபக்சே வெற்றிக்காகத்தான் ஈழப் பிரச்சினை ஊதிப்பெரிதாக்கப்பட்டது, மம்தா பானர்ஜியின் வெற்றிக்காகத்தான் நந்திகிராம் பிரச்சினை ஊதிப் பெரிதாக்கப்பட்டது என்று சொல்வீர்களா?
இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பல்வேறு கட்டங்களைக் கடந்து மக்கள் அதைப் புரிந்து இறுதியில் எப்படியாவது மூட வேண்டும் என நினைக்கிறார்கள். அதுவே சென்ற ஆண்டு மே மாதம் நடந்த மாவட்ட ஆட்சியாளர் முற்றுகைப் போராட்டம்.
அதை துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்க முயன்றது தமிழக அரசு. பசுமைத்தீர்ப்பாயம் மூலமாக ஆலையை மீண்டும் திறக்க முயன்றது மத்திய அரசு. தூத்துக்குடி மக்களோ யார் வரினும் ஆலையைத் திறக்க முடியாது என்று உறுதியேற்றிருக்கிறார்கள். அதை கனிமொழியின் தேர்தல் வெற்றியோடு ஒப்பிடுவது மக்களை கொச்சைப்படுத்துவதற்கு சமம்.
♦ ♦ ♦
கேள்வி:நாங்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டோம் என்ற விவரம் கட்சிகாரங்களுக்கு தெரியுமா இல்லையா பதில்…
– ராமகிருஷ்ணன்
அன்புள்ள ராமகிருஷ்ணன்,
அதை தெரிந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? வேர்மட்டம் வரை வலுவாக இருக்கும் எந்த ஒரு கட்சிக்கும் தனது தெருவில் யார் தனக்குப் போடுவார்கள், யார் போடமாட்டார்கள், யார் வெளியூரில் இருக்கிறார்கள், யார் வரமாட்டார்கள் என சகல விசயங்களும் தெரிந்திருக்கும்.
தொழில்நுட்ப ரீதியாக வாக்களிக்கும் எந்திரத்தில் நீங்கள் அளிக்கும் வாக்கு ரகசியமாகத்தான் வைக்கப்படும். வாக்களிப்பது யாருக்கு தெரியும் என்று ஆராய்வதை விட வாக்களிப்பதால் என்ன மாற்றம் வரும் என்று யோசித்துப் பார்ப்பது சாலச்சிறந்தது.
♦ ♦ ♦
கேள்வி:மக்கள் அதிகாரத்தில் அங்கம் வகிக்கும் வர்க்கங்கள் குறித்தும் புதிய ஜனநாயகம் குறித்தும் விளக்கம் கூறுங்கள்!
– வீ. சசிக்குமார்
அன்புள்ள சசிக்குமார்,
மக்கள் அதிகாரத்தின் கொள்கை அறிக்கையை இந்த இணைப்பில் சென்று படியுங்கள்! உங்கள் சந்தேகம் அனைத்திற்கும் அதில் விளக்கம், பதில் இருக்கிறது.
கேள்வி:திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா அல்லது வேறு வேறா?
– அ. பாரதிதாசன்
அன்புள்ள பாரதிதாசன்,
தமிழ் தேசியம் மொழி வழித்தேசியத்தை முன்னிறுத்துகிறது. திராவிடம் என்பது சமஸ்கிருதத்திற்கு மாற்றாக தோன்றி வளர்ந்த மொழிக் குடும்பத்தின் பெயர். தென்னிந்தியாவில் இருக்கும் பல்வேறு மொழிகள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. அந்த வகையில் திராவிட இயக்கம் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக தோன்றி வளர்ந்த இயக்கம்.
தமிழகத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் கூட சங்ககாலம் தொட்டே இங்கே பார்ப்பனிய சமஸ்கிருதப் பண்பாடு ஆதிக்கம் செலுத்தவில்லை. திணை வகைகளின் வாழ்வியலைப் பார்த்தால் அது சடங்கு சம்பிரதாயங்களைச் சார்ந்து இல்லாமல் இயற்கை சார்ந்தும் வாழ்வியல் சார்ந்தும் இன்றைய மொழியில் சொன்னால் “மதச்சார்பற்றும்” இருப்பது உண்மை.
பிற்காலச் சோழர்களின் காலத்தில்தான் பார்ப்பனியம் இங்கே ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது. அந்த வகையில் தமிழின் வரலாற்றிலும் பார்ப்பனிய எதிர்ப்பு இருக்கிறது. இன்று வரையிலும் தமிழகம் பெரியார் பிறந்த மண் என்று சொல்லப்படுவதற்கும், “கோ பேக் மோடி” என்று இந்தியாவில் எங்கும் இல்லாத முழக்கம் இங்கே ஒலிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மண்ணின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபுதான்.
எனவே தமிழையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. பார்ப்பனிய எதிர்ப்பில் ஏனைய தென்னிந்திய மக்கள் வட இந்தியாவை விட இங்கே ஒன்று படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதே போன்று பார்ப்பனிய எதிர்ப்பில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தை திராவிடம் தனது தலைமையகமாகக் கொண்டு தோன்றியது எனலாம்.
இன்றைக்கு இருக்கும் திராவிட இயக்கங்களும், தமிழ் தேசியமும் ஓட்டரசியல் பாதையில் நலிவடைந்து விட்டன. திராவிட இயக்கத்தில் பெயரளவிலாவது பார்ப்பனிய எதிர்ப்பு இருப்பது போல தமிழ் தேசியத்தில் காண இயலவில்லை. மேலும் தமிழ் தேசியம் பேசுவோர் திராவிட இயக்கத்தை ஜென்ம பகையுடன் அணுகுகின்றனர். அவர்களில் சிலர் தமிழ்பேசும் ஆர்.எஸ்.எஸ்-ஆகவும் இருக்கின்றனர்.
திராவிட இயக்கமாக வெட்டி ஜம்பம் பேசும் அதிமுக, பார்ப்பனிய பாஜக-வின் பாதந்தாங்கிகளாக சீரழிந்து விட்டனர். எனவே தமிழ் மரபு, திராவிட மரபின் நேர்மறை அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு பொருளாதார ரீதியாக உழைக்கும் மக்களின் விடுதலைக்கு செயல்படும் அரசியலே நமது தேவை.
♦ ♦ ♦
கேள்வி:வினவுக்கு .. நீண்ட நாட்களாக { பிப்ரவரி 1 க்கு பிறகு } கேள்வி பதில் பகுதியில் ஒரு பதிவும் வரவில்லையே ஏன் ..?
– எஸ். செல்வராஜன்
அன்புள்ள செல்வராஜன்,
ஆம், வரவில்லை. வேலைச் சுமை காரணமாக எழுத இயலவில்லை. இனி நீண்ட இடைவெளி இல்லாமல் எழுதுகிறோம். உங்கள் அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி.
பார்ப்பன இசைக் களவை அம்பலப்படுத்தும் பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. இசைக் கருவிகளின் களவு குறித்தும் பல ஆய்வுகள் வந்துள்ளன. யாழ் வீணையாக உருமாறியது குறித்த விவாதம், அவற்றில் மிகப் பிரபலமானது. எனினும் ஆய்வாளர்களால் இதுநாள் வரை தீண்டப்படாமலிருந்த இசைக் கருவி தமிழ் மக்களின் தொன்மையான இசைக் கருவியாகிய பறை. இதற்குக் காரணம் சொல்லாமலேயே விளங்கும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் வளர்மதி, சனவரி, 25, 1997 அன்று, தஞ்சையில் ம.க.இ.க நடத்திய தமிழ் மக்கள் இசை விழாவில் “பறையும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் வழங்கிய ஆய்வுக் கட்டுரையை மேலும் விரிவாக்கி “பறை, இசைக்கருவி – ஓர் ஆய்வு” எனும் நூலாகத் தயாரித்துள்ளார். அந்த நூல் குறித்த அறிமுகக் கட்டுரையை கீழே வாசிக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் ப்ளஸ் டூ வகுப்புகள் துவங்கும் பொழுது, ஒவ்வொரு குழந்தையும் பெரும் உற்சாகத்தில் இருப்பார்கள்.
எல்லாமே நன்றாக நடக்கும் என்பதை, இளம்மனதின் தீவிரத் தன்மையோடு நம்புவார்கள். செல்விக்கும் வண்ணக் கனவுகள் நிறைய இருந்தது.
நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலைக்குப் போகவேண்டும், நிறைய புடவைகள் எடுக்க வேண்டும் என பலவிதமான கனவுகள்.
பள்ளி மாணவிகளுடன் ஆசிரியர் முத்தரசி
ஜூன் மாதத் தேர்வில் முதல் மதிப்பெண்.. அந்த மாத இறுதியில் திடீரென்று காணாமல் போனாள்.
வீடு, அவள் அப்பா வேலை பார்க்கும் இடம் என எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.. எந்தத் தகவலும் இல்லை..
திடீரென்று ஒருநாள் லேண்ட் லைனில் இருந்து பேசினாள்.
“அப்பா குடிச்சு குடிச்சு வீணாய்ப் போய்ட்டார் மிஸ்… கைல காசு இல்லாததால் யாரோ சொந்தக்காரங்ககிட்ட 2 லட்சம் வாங்கிட்டு என்னை கல்யாணம் பண்ணித் தரேன்னு சொல்லிட்டார் .
அவங்க எல்லோரும் வீட்டுக்கு வந்துட்டாங்க. எவ்வளவு போராடியும் இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை… ராத்திரியோட ராத்திரியா நானும் , அம்மாவும், தங்கச்சிகளும் அப்பாவுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்துட்டோம். பயந்து பயந்து ஒரு சின்ன வீட்டுல குடியிருக்கோம் மிஸ்… வேலைக்குப் போலான்னு இருக்கேன் மிஸ்” என்று அழுகையினூடே அவள் பேசிய பொழுதுகள் இன்னும் நினைவில் இருக்கிறது. நான் வார்த்தைகள் அற்று நின்ற தருணங்கள் அவை..
ஒவ்வொரு மாதமும் Attendance Register முடிக்கும்போது ஏதேனும் ஒரு நாள் வந்து விடமாட்டாளா, எப்படியாவது படிக்க வைத்து விட மாட்டோமா என்று இதயம் துடித்துக் கொண்டே இருக்கும்.
அரசுப் பள்ளி வருகைப் பதிவேடுகளில் இடைநிற்றல் என்று அழுத்தமாக சிவப்பு மையினால் எழுதப்பட்ட பெயர்களுக்குப் பின்னால்தான் எத்தனை எத்தனை சிதைவடைந்த வாழ்க்கைகள் நிரம்பியுள்ளன…
பசிக்காக, மானத்திற்காக, பிழைப்புக்காக, சிறுபுன்னகைக்காக அத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையை ஒரே நொடியில் மாற்றிக்கொண்டு, கண்காணாத பாதையில் ஓடிக் கொண்டே இருப்பவர்கள் எத்தனை எத்தனை பேர்….
கிட்டத்தட்ட எல்லோருமே மறந்து போய்விட்ட ஒரு ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் TC வேண்டும் என்று எதிரில் வந்து நின்றவளைக் கண்டு திகைத்துப்போனேன். படிப்பிலிருந்து வெகுதூரம் விலகிப் போய் விட்டிருந்தாள்.
“இப்போ நீ நினைச்சாக் கூட எக்ஸாம் எழுதலாம்.. எழுதறியாம்மா” எனக் கேட்ட போது பதறிப் போனாள்..
யாரால்தான் வெறும் பதினைந்து நாட்களுக்குள் ஆறு பாடங்களைப் படித்து விட முடியும் ?? பெரும் சிரமம்..
பிரபஞ்சனின் அன்புத் தங்கை பானு.. தங்கக் கொலுசுகள் சப்தம் எழ நடந்து வரும் அந்தப் பெண் குழந்தை வீட்டின் செல்லம்..
பானு நிறைய மயிலிறகுகளை ஒவ்வொரு புத்தகத்திலும் வைத்திருந்தாள்.. எல்லா இறகுகளும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் குட்டி போடுமென்று திடமாய் நம்பினாள்..
குழந்தையின் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பாத அவளது அப்பா, ஒவ்வொரு பௌர்ணமி தின நள்ளிரவில், புதிதாக சில இறகுகளை அவள் புத்தகத்தில் வைப்பார். மறுநாள் காலை குழந்தை கண்விழித்து எழும்போது, இறகு குட்டி போட்டதென அகமகிழ்ந்து போகும்..
புத்தகத்தின் மத்தியில் வைக்கப்பட்ட மயிலிறகு குட்டி போடாது என்பதை எந்தப் புள்ளியில் அந்தக் குழந்தை புரிந்து கொள்கிறதோ, அந்தப் புள்ளியில் அக்குழந்தை தன் அறியாமையை, குழந்தைமையை இழக்கிறது..
அறியாமையை இழந்த பின் ஏற்படும் வலி, துயரம், ஏமாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் வெற்றிடத்தை யார் நிரப்புவது??
அரசுப் பள்ளி வருகைப் பதிவேடுகளில் இடைநிற்றல் என்று அழுத்தமாக சிவப்பு மையினால் எழுதப்பட்ட பெயர்களுக்குப் பின்னால்தான் எத்தனை எத்தனை சிதைவடைந்த வாழ்க்கைகள் நிரம்பியுள்ளது…
கருணைமயமான பாடங்கள், அர்த்தம் பொதிந்த கதைகள், சித்திரங்கள், வண்ணக் கனவுகள் என அந்த வெற்றிடத்தை ஒரு நல்லாசிரியர் போக்க முடியும் என்கிறார் பிரபஞ்சன் சார்..
எத்தனை அழகிய அர்த்தமுள்ள வரிகள்?? ஆசிரியர்கள் கொண்டாட வேண்டிய வாழ்வியல் அழகுகள் இவை..
நம்பிக்கையைப் பரிசளிக்கும் இதயங்கள் மட்டுமே எப்போதைக்குமான தேவை… எல்லோருக்கும்.
பின்னிரவுகளில் “மிஸ் நான் பாஸ் பண்ணிடுவேனா ??” என செல்வி பதறும் பொழுதுகளில், அவளைத் தேற்ற நான் அழுத்தமாகப் பற்றிக்கொண்டவை காலக்கரையான்கள் அழிக்க முடியாத பிரபஞ்சன் சாரின் வரிகள் மட்டுமே..
ப்ளஸ் டூ ரிசல்ட் வந்து அனைத்துப் பாடங்களிலும் பாஸ் பண்ணி விட்டாள்…. 50% மதிப்பெண்…
மாணவர்கள் ஜெயிக்கும் இடங்கள்தான், ஆசியர்கள் தங்கள் அடையாளங்களை அடையும் புள்ளி..
தன் அத்தனை துயரங்களையும் மீறி ஒரு 17 வயது பெண் குழந்தை சாதிக்க முடியும் என்பதற்கு முன்னால் நம் உழைப்பெல்லாம் வெகு சாதாரணம்…
வெற்றி என்பது வேறு, சந்தோஷம் என்பது வேறு … இல்லையா??
ப்ளஸ் டூ தேர்வில் சென்ற வருடத்தை விட சற்று கூடுதலாக 98% பெற்று முன்னேறியுள்ளோம் என்பது , புள்ளி விவரங்கள்படி வெற்றியெனில், செல்வி தேர்ச்சி பெற்றது சந்தோஷம்…
“தோல்வி என்பது கண்ணீர்… அதைக்கூட எளிதாக விழுங்கி விடலாம்… ஆனால் வெற்றி என்பது மது.. அது தரும் போதையிலும் தள்ளாடாமல் இருப்பதுதான் பெரிது” என்கிற வைரவரிகள் எப்போதும் நினைவின் புழுதியில் நிலைத்திருக்கிறது… அதனால்தான் தேர்வு முடிவுகள் குறித்த தாமதமான பதிவு…
இங்கே இவ்வளவு பெரிய கூட்டத்தில் பேசுவதென்றால், சற்றே பதற்றமாக உணர்கிறேன். ஆனால், உங்கள் எதிரில் நிற்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தூத்துக்குடியில் வீரஞ்செறிந்த ஒரு போராட்டத்திற்குப் பிறகு மக்கள் அதிகாரம் இந்த மாநாட்டைக் கூட்டியிருக்கிறது. நீங்கள் உயிர் கொடுத்துப் போராடியிருக்கிறீர்கள். இன்றும் பலருக்கு எதிரான வழக்குகள் தொடர்கின்றன.
நீங்கள் ஸ்டெர்லைட் குழுமத்தை எதிர்த்துப் ? போராடினீர்கள். அதன் தாய்க் குழுமம் வேதாந்தா என்பது இந்துத் தத்துவத்தின் தொன்மையான ஒரு மரபின் பெயரில் அமைந்திருக்கின்ற ஒரு பன்னாட்டுக் குழுமமாகும். அந்தப் பெயரேகூட இன்று நாம் எப்பொருள் குறித்துப் பேசப் போகிறோமோ, அந்தப் பொருளை நமக்கு நினைவுபடுத்துகிறது. கார்ப்பரேட் முதலாளித்துவமும் இந்து தேசவெறியும் இணைந்த ஒரு பெயர்தான் வேதாந்தா என்பது.
நாம் ஓர் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். முறைப்படி இந்த நாட்டை கார்ப்பரேட் இந்து தேசம் என்று அறிவிக் கக்கூடிய ஆபத்து எழுந்திருக்கிறது.
1950-ஆம் ஆண்டு நமது அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். கூறியது: “இந்திய அரசியலமைப்புச் சட்டம் அயல்நாட்டுத் தன்மையுள்ளது; மனுஸ்மிருதி தான் இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டமாக இருக்க வேண்டும்.” அந்த ஆர்.எஸ்.எஸ். தான் இப்போது உண்மையில் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இன்று அவர்கள் அந்தக் கனவை மெய்ப்படச் செய்யும் நிலையை நெருங்கி வந்திருக்கிறார்கள். இது நமக்கு வந்திருக்கின்ற பெரிய ஆபத்து. நம்மில் ஒவ்வொருவரும் வரவிருக்கும் தேர்தலில் ஒன்றுபட்டு நின்று, அந்த ஆபத்து மெய்ப்பட்டுவிடாமல் தடுக்கவேண்டிய கடமை இருக்கிறது. (தேர்தல் குறித்த மக்கள் அதிகாரத்தின் அறிக்கை தனியே வெளியிடப்பட்டிருக்கிறது.)
இந்துத்துவ ஆற்றல்கள் தேர்தல்களில் தோற்றாலும்கூட, இந்த ஆபத்து தொடரும். ஏனென்றால், அவர்கள் இந்த நாட்டில் அநேகமாக ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளேயும் ஊடுருவியிருக்கிறார்கள். நிறுவனங்களில் மட்டுமல்ல, பொதுமக்களின் சிந்தனைகளில், எண்ணத்தில் அவர்கள் ஊடுருவியிருக்கிறார்கள். நம்மை கார்ப்பரேட் பெருங்குழுமங்களும் வன்முறைக் கும்பல்களும் மாறி மாறி ஆட்சி புரிகின்றன.
இந்த நிலை எப்படி வந்தது என்பது குறித்து ஒருசில வார்த்தை சொல்ல வேண்டும். இதற்கு ஒரு நீண்ட வரலாறு இருப்பது உண்மைதான். ஆனால், அண்மைக் காலத்தில் இது எப்படி வந்தது என்றால், 80-களின் பிற்பகுதியில், 90-களின் தொடக்கத்தில் காங்கிரஸ் அரசாங்கம் இரண்டு பூட்டுக்களைத் திறந்துவிட்டது.
முதல் பூட்டு பாபர் மசூதியின் பூட்டு. சர்ச்சைக்குரிய இடம் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், அதன் பூட்டைத் திறந்துவிட்டார்கள். இரண்டாவது பூட்டு, இந்தியச் சந்தைக்குப் போட்டிருந்த பூட்டு. பாதுகாக் கப்பட்டிருந்த இந்தியச் சந்தை திறந்துவிடப்பட்டது. பொருளியல் புதுத்தாராள அடிப்படைவாதம் தலையெடுத்தது. அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கையின் அடிப்படைவாதமாகவே இரண்டும் அமைந்தன. முதலாளித்துவத்தைப் பொருத்தவரை, அவர்களுடைய சந்தைக் கோட்பாடும் அவர்களுக்கு ஒரு மதக் கோட்பாடு போன்றதுதான். இதற்கு இன்னொரு பக்கத்தில் பயங்கரவாதம் என்ற ஒன்று புனையப்பட்டது. அந்தப் பயங்கரவாதம் ஒரு பக்கம் மாவோயிச பயங்கர வாதம் என்றும் மறுபக்கம் இசுலாமிய பயங்கரவாதம் என்றும் முத்திரையிட்டு அழைக்கப்பட்டது.
இவற்றைக் காட்டி அரசே இராணுவமயமாக்கப்பட்ட போலீசு அரசாக மாற்றப்பட்டுவிட்டது. இப்போது இந்தியாவில் நாம் காண்பது என்ன? காஷ்மீரில் இராணுவமே ஒரு போலீசைப் போல ஆகிவிட்டது. அதாவது, அன்றாட நிர்வாகத்தையே அங்கு இராணுவம்தான் நடத்துகின்றது. இன்னொருபுறம் சத்தீஸ்கர் போன்ற இடங்களில் போலீசு படையே இராணுவம் போல மாறிவருகிறது. அது உள்ளூர் மக்களையே எதிரி நாட்டினரைப் போல நடத்துகிறது.
இந்து அடிப்படைவாதமும் புதுத்தாராளவாதப் பொருளியல் அடிப்படைவாதமும் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதைப் பல ஆண்டுகளாகவே எங்களில் சிலர் சுட்டிக் காட்டி வந்திருக்கிறோம். அவ்வப்போது இவ்விரு தரப்பினரும் முரண்பட்டு விவாதிப்பதைப் போலத் தோன்றியபோதிலும், இரு தரப்புமே நண்பர்கள்தான்.
மக்களுக்கு இதைப் புரிந்துகொள்வது இடர்ப்பாடாக இருந்தது. வெவ்வேறு வழிகளில் மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். தலித்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், ஆதிவாசிகள் என்று எல்லோரும் போராடினார்கள். கம்யூனிஸ்டுகள் சுரண்டலுக்கு எதிராகப் போராடினார்கள். சிறுபான்மையினர் பெரும்பான்மை ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடினார்கள். தலித்துக்கள் தீண்டாமைக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடினார்கள். ஆனால், இந்தப் போராட்டங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இப்படி அனைவரும் தனித்தனியே பிரிந்து கிடந்ததன் விளைவாக பாசிஸ்டுகள் எளிதில் அதிகாரத்துக்கு வர முடிந்தது.
இன்று நாம் பொதுவாக பாரதிய ஜனதாவிற்கும், குறிப்பாக மோடிக்கும் நன்றி சொல்ல வேண்டும். சாதியம், வகுப்புவாதம், முதலாளித்துவம், பெருங்குழும ஆதிக்கம் இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை என அவர் நமக்கு உணர்த்தியிருக்கிறார். அந்த முறையில் அவருக்கு நாம் நன்றி சொல்லுவோம்.
பசுக் குண்டர்களால் கொல்லப்பட்ட முகம்மது அக்லக் (இடது) மற்றும் பெஹ்லு கான் (கோப்புப் படங்கள்)
இஸ்லாமியர்கள், தலித்துக்கள், ஆதிவாசிகள் ஆகியோர் மீதான தாக்குதல் மிக அப்பட்டமாகவும் கொடூரமாகவும் நேரடித் தாக்குதலாகவும் நடத்தப்பட்டுள்ளது. வன்கும்பல்கள் தெருவில் கண்டவர்களை அடித்துக் கொலை செய்கின்றன. இசுலாமிய பயங்கரவாதிகள், மாவோயிஸ்டுகள் என்பதையும் தாண்டி, வேறு பலரையும் அவர்கள் மோதல்களில் சுட்டுக் கொல்கிறார்கள். ஆதிவாசிகள்கூட மாவோயிஸ்டுகள் எனக் குறிவைக்கப்படுகிறார்கள். இன்னமும் நூற்றுக்கணக்கானவர்கள் சத்தீஸ்கரிலும் ஜார்கண்டிலும் ஒடிசாவிலும் நாட்டின் பல பகுதிகளிலும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்பொழுது அந்தப் பட்டியலில் தலித்துக்களையும் இணைத்துவிட்டார்கள். பல செயல்வீரர்கள் அந்தப் பெயரைச் சொல்லிக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அறிவாளிகள், பத்திரிகையாளர்களைக் கொலை செய்கிறார்கள் என்பதையெல்லாம் பார்க்கிறோம். நாம் என்ன புத்தகங்களை எழுத வேண்டும், என்ன திரைப்படங்களை எடுக்க வேண்டும், என்ன திருவிழாக்களைக் கொண்டாட வேண்டும் என்பதையெல்லாம் ஒரு வன்முறைக் கும்பல் தெருவிலே நின்று கொண்டு தீர்மானிக்க முயல்கிறது.
படுகொலைகள், மோதல் கொலைகள், வன்முறைக் கும்பலைக் கொண்டு அடித்துக் கொலை செய்வது, சிறையில் அடைப்பது இவைகள் மட்டும்தான் தாக்குதல் வடிவங்கள் அல்ல. நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. நீதிமன்றங்கள் தாக்கப்படுகின்றன, மருத்துவமனைகளைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.
பொருளாதாரத்தில் என்ன நடந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். பணமதிப்பு நீக்கம், சரக்கு சேவை வரி என்பனவற்றின் தாக்குதல்கள், வங்கிகள் மீதான தலையீடு, ஆயுதப்படைகள், உளவுப்படைகள், ஊடகங்கள், உழவர்கள், நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு பிரிவு மக்களும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் பல்கலைக்கழகங்களையும் கல்வித்துறைகளையும்கூட விட்டுவைக் கவில்லை. அவர்கள் அறிவாளிகளைக் கண்டு மட்டும் அஞ்சவில்லை, அறிவைக் கண்டும் அச்சப்படுகிறார்கள். ஆகவேதான், அறிவாளிகளைத் தாக்குவதோடு, அறிவையும் தாக்க முற்பட்டிருக்கிறார்கள். பாசிசத்தின் அடித்தளமே மக்களின் மந்த புத்திதான். மக்களை மடையர்களாக மாற்ற, அறிவில்லாதவர்களாக மாற்றுவதற்கென்றே அவர்கள் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். அதற்கான நிறுவனங்களை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்திய அறிவியல் பேராயம் உள்ளிட்ட பல பெருமை வாய்ந்த நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஊடுருவுகிறார்கள். பாசிசத்திற்கும் சாதியத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கல்வியைத் தனியார்மயப்படுத்துவது, வரலாற்றைத் திருத்தி எழுதுவது, கல்வியை மீள் பார்ப்பனியமாக மாற்றுவது, ஏற்கெனவே இடஒதுக்கீட்டினால் கிடைத்திருக்கிற நன்மைகளை இல்லாதொழிப்பது, இவையெல்லாமே இணைந்து வருகின்றன.
பீமா கோரேகானில் தாழ்த்தப்பட்டோர் மீது இந்து மதவெறிக் குபலும் மகாராஷ்டிர அரசும் இணைந்து நடத்தியத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் தாழ்த்தப்பட்டோர். (கோப்புப் படம்)
பாசிசம் இவை அனைத்தையும் தொடர்ந்து செய்கிறது. இதனால் பார்ப்பனர்கள், மேல் சாதியினர் கல்வியில் மீண்டும் முன்னுரிமை பெறுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வித் தாழ்வாரங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள். அகக்கட்டமைப்பைத் தனியார்மயப்படுத்துகிறார்கள், குடிக்கிற நீர், பயன்படுத்துகின்ற மின்சாரம், சுரங்கம் என்று எல்லாமே தனியார் கைக்குப் போகின்றன. இந்த வகையில் பார்ப்பனியம் புதுப்பிக்கப்படுகிறது, பிரபுத்துவம் மீள்கட்டுமானம் பெறுகிறது.
இந்திய அரசு எப்படிப்பட்ட குதர்க்கமான வழியில் செயல்படுகிறது என்பதற்கு அண்மையில் ஒரு சான்று கிடைத்திருக்கிறது. சூழலியல் அரசுசாரா அமைப்பு ஒன்று உச்சநீதி மன்றத்தில் தொடுத்த ஒரு வழக்கின் பெயரில் உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பு என்ன என்று பாருங்கள். கிட்டத்தட்ட இருபது இலட்சம் ஆதிவாசிகளை அவர்கள் வாழக்கூடிய இடங்களிலிருந்து உடனே வெளியேற்ற வேண்டுமென்று உச்சநீதி மன்றம் உத்தரவிடுகிறது.
இதற்கு அவர்கள் சொல்லியிருக்கிற காரணம் என்னவென்றால், நாட்டில் காடுகள் மிகக் குறைவாக இருக்கின்றன. காடு இல்லையென்றால் மழை பெய்யாது, மழையில்லை என்றால் தண்ணீர் கிடைக்காது. ஆகவே, இவர்களையெல்லாம் வெளியேற்றிக் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. ஆனால், இது எந்த வகையான தர்க்கம்? அணைகளையும் சுரங்கங்களையும் நீங்கள் அமைத்தபோது ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்தீர்களே, அப்போது உங்கள் புத்தி எங்கே போனது? தலித்துகளையும், ஆதி வாசிகளையும் அவர்களின் தாயகத்திலிருந்து துரத்தியடித்துவிட்டு, அணைகளையும் சுரங்கங்களையும் அமைத்தீர்களே, அப்போது ஏன் இந்த எண்ணம் வரவில்லை?
உங்களுடைய அந்த வளர்ச்சிக்கு அன்று பழங்குடி மக்கள் தம் காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அந்த வளர்ச்சியின் விலை காடுகள் அழிப்பு. இப்போது காடுகளைக் காப்பாற்றும் பொருட்டும் அவர்களையே விலை கொடுக்கச் சொல்கிறீர்கள்.
பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக பொய்க்குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்ட அறிவுத்துறையினர் (இடமிருந்து) சுதா பரத்வாஜ், வரவர ராவ், வெர்னன் கான்சல்வாஸ், அருண் ஃபெரைரா, கௌதம் நவ்லகா
எல்லாம் எதன் பெயரால்? வளர்ச்சி என்ற பெயரால்! என்ன வளர்ச்சி அது? அனைவரோடும் சேர்ந்த அனைவருக்குமான வளர்ச்சி (சப் கா சாத், சப் கா விகாஸ்) என்று கூறுகிறீர்கள். ஆனால், அதன் மூலம் நீங்கள் கொண்டுவந்து சேர்த்திருப்பது பேரழிவுதான். நர்மதை அணை கட்டப்பட்டபோது ஏற்பட்ட பேரிடரைப் போன்று பல பேரிடர்களைத் தோற்றுவித்துள்ளீர்கள்.
இருபது இலட்சம் பழங்குடி மக்கள் அவர்கள் தாயகத்திலிருந்து வெளியில் துரத்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு வடகிழக்கு மாநிலத்தில் இருபது இலட்சம் மக்கள் நாதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள், அறிவிக்கப்பட இருக்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகளைத் தோற்றுவிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அதற்கு மாறாக வேலையில்லாத் திண்டாட்டம் விண்ணில் சீறிப் பாயக்கூடியதாக உயர்ந்து சென்று கொண்டிருக்கிறது. சாதாரணத் தொழிலாளர்களுடைய கூலி குறைந்து போய் விட்டது, அதிகரிக்கவில்லை.
பணமதிப்பு நீக்கமும் சரக்கு சேவை வரியும் சிறு தொழில், வணிகம் அனைத்தையும் அழித்துவிட்டன. இந்தியாவிலேயே பெரும் பணக்காரர்களான ஒரு விழுக்காட்டினரின் கையில் இருக்கிற செல்வமும் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினரின் கையில் இருக்கும் செல்வமும் சரிசமமாக இருக்கிறது.
2017-ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகிய இருவருடைய செல்வம் 125 விழுக்காட்டிற்கு உயர்ந்தது. பன்னாட்டு ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் அளித்திருக்கின்ற அறிக்கையின்படி, ஐம்பது கோடி மக்களின் செல்வம் ஒன்பது பேருக்குச் சொந்தம். இதுதான் இவர்களுடைய வளர்ச்சிக் கொள்கையின் விளைவு.
வாரிசு அரசியலைக் குற்றஞ்சொல்லிப் பேசுகிறார்கள். காங்கிரசின் வாரிசு அரசியலாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் காணப்படுகின்ற வாரிசு அரசியலாக இருந்தாலும் சரி, இந்த வாரிசு அரசியலை அவர்கள் குறைகூறுகிறார்கள். ஆனால், எந்த வாரிசு அரசியலானாலும் தேர்தலில் போட்டியிட்டாக வேண்டும்.
ஆனால், தேர்தலில் போட்டியிடாத ஒரு வாரிசு அரசியல் இருக்கிறது. அதுதான் உண்மையான முதலாளித்துவம். அது வாரிசு முறையில் செயல்படுகிறது. இந்தத் தொழிலதிபர்களின் வாரிசுகள் எந்த முயற்சியும் இல்லாமல், அந்தச் சொத்துகளுக்கும் தொழில்களுக்கும் வாரிசாகிறார்கள். செல்வம் மட்டுமல்ல, ஒவ்வொன்றையும் வாரிசுரிமையாகப் பெறுகிறார்கள். சுரங்கங்கள், அணைகள், பெட்ரோலியம், ஊடகங்கள் எல்லாமே அவர்களுக்கு வாரிசுரிமையாகக் கிடைக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, முகேஷ் அம்பானி கூறியதைப் போல, இன்றைக்குத் தரவுகள், நம்மைப் பற்றிய தகவல்கள் அவர்கள் கைக்குப் போகின்றன. அவைதான் இன்று எண்ணெய்க்கு நிகரான புதிய செல்வம். இந்தத் தரவுகளை வைத்துக் கொண்டுதான் அவர்கள் நம்மை உடைத்துப் பிளவுப்படுத்துகிறார்கள். நம்மை ஆள்கிறார்கள், நம்மைக் கட்டுப்படுத்துகிறார்கள், நம்மைச் சிதைக்கிறார்கள்.
முகேஷ் அம்பானி என்ற ஒரேயொரு மனிதருடைய செல்வம் என்பது மத்திய, மாநில அரசாங்கங்கள் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு மருத்துவம், நலவாழ்வு, துப்புரவு, தண்ணீர் வழங்குவதற்கான முதலீட்டு, வருவாய்ச் செலவுக்கு சமம். ஒரு நீதிமன்ற உத்தரவைக் கொண்டு இந்தியாவின் இருபது இலட்சம் ஏழை எளிய மக்களுடைய தாயகங்களை உங்களால் பறிக்க முடியுமென்றால், மிகவும் நலிந்த மக்களை உங்களால் ஏமாற்ற முடியுமென்றால், ஏன் ஒன்பது பேரிடம் நீங்கள் இந்த வேட்டையை நடத்தக் கூடாது? ஏன் அவர்கள் மறைத்துவைத்திருக்கிற செல்வங்களை நீங்கள் வேட்டையாடி வெளியே கொண்டுவரக் கூடாது? என்று நான் கேட்கிறேன். ஆனால், அப்படி மனதால் எண்ணிப்பார்ப்பதுகூடத் தெய்வக் குற்றமாகவே கருதப்படுகிறது.
இந்து மதவெறிக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட முற்போக்கு அறிவுத்துறையினர் (இடமிருந்து) கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி மற்றும் பன்சாரே.
நாம் ஒரு புதிய உலகில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். தானியங்கி முறையும் செயற்கை அறிவும் இந்தப் புதிய உலகத்தின் அடையாளங்களாகும். மனித உழைப்பு தேவையற்றதாக்கப்பட்டு, எந்திரங்கள் மனிதர்களின் வேலைகளைச் செய்ய வருகின்றன. வேலைவாய்ப்புகள் மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், என்ன நடந்தாலும் சரி, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்த நாட்டில் உயிர் வாழ்வதற்கு, அடிப்படையான ஊதியம் பெறுவதற்கு, உடல்நலம் பேணுவதற்கு, கல்வி பெறுவதற்கு, உணவு பெறுவதற்கு உரிமை வேண்டும். இது அடிப்படை உரிமை. இருப்பதை எடுத்துப் பிரித்துக் கொடு என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாகவே மாற வேண்டும். செல்வத்தைப் பிரித்துக் கொடு, நிலத்தைப் பிரித்துக் கொடு, செல்வாதாரங்களைப் பிரித்துக் கொடு, அனைத்து மக்களிடமும் பங்கிட்டுக்கொடு! இதையே நம் முழக்கமாக்குவோம்.
நாம் புரட்சி என்ற கனவில் இருப்பவர்கள், தொடர்ந்து நாம் அந்தக் கனவைக் கண்டுகொண்டிருப்போம். ஒருபோதும் அந்தக் கனவிலிருந்து வெளியே போகமாட்டோம். ஆனால், இப்போது நாம் சின்னஞ்சிறு கனவுகளையும் காண வேண்டியவர்களாக இருக்கிறோம். அடுத்த சில வாரங்களுக்குள்ளே இந்த பாசிஸ்டுகளைத் தூக்கியெறிவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வரப்போகிறது. அவர்களை நாம் தூக்கியெறிவோம்.
ஆனால், புதிய ஆட்சியும் ஒரு மனித முகத்தைப் மாட்டிக்கொண்டு, இதே தாராளவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும். அன்று அந்த ஆட்சியைப் பார்த்து நாம் சொல்வோம், கோடீஸ்வரர்களின் ராஜ்ஜியத்தைக் கலைத்துப் போடு! இந்த ஆட்சி எந்திரத்தை உடைத்துப் போடு! இதையே நீ தொடர முடியாது என்று புதிய ஆட்சியாளர்களுக்குச் சொல்லுவோம். நமக்கு வேண்டியதெல்லாம் இந்த நாட்டின் செல்வங்கள் அனைத்தும் மக்களுக்குரியவையாக வேண்டும். ஒரு உண்மையான சேமநல அரசு என்பது சொத்துக் குவியலைத் தடுக்க வேண்டும். அனைத்து மக்களிடமும் அனைத்துச் செல்வங்களையும் பகிர்ந்து கொடுப்பதற்காக நாம் தொடர்ந்து போராடவேண்டியுள்ளது, போராடுவோம்.
காஷ்மீர் என்கிற அந்தத் தொடர் சோக நாடகத்தில் கடைசியாக நிகழ்ந்திருப்பது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதல். இந்தத் தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்திருக்கிறார்கள்.வருத்தற்குரிய செய்தி என்னவென்றால், பெருங்குழுமங்களின் கையில் இருக்கின்ற ஊடகங்கள் போரைத் தூண்டுகின்றன. நாம் போரின் விளிம்பில் நிற்கிறோம் என்கின்றன. போர் மனநிலையை அவர்கள் வளர்க்கிறார்கள். இந்தப் போர் பாகிஸ்தானுக்கு எதிரான போராக இருக்கலாம், அல்லது அதைவிடவும் அதிக வாய்ப்பு காஷ்மீர் மக்களுக்கு எதிரான போராக இது அமையக்கூடும். அப்படி நிகழுமானால், நாம் இந்த ஒடுக்குமுறை அனைத்தையும் மறந்துவிடுவோம் என்று நினைக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் நாட்டு மக்கள் மீது சுமத்தியிருக்கிற கொடிய ஒடுக்குமுறைகளையெல்லாம் நாம் மறக்க வேண்டும் என்பதற்காகவே போர் முழக்கம் எழுப்பப்படுகிறது.
நாம் இப்படி முழங்குவோம். உங்களுடைய கார்ப் பரேட் சமூகப் பொறுப்புணர்வு என்ற கதையெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. உங்கள் தான தருமங்கள் தேவையில்லை. வெறும் மனித உரிமைகள் எங்களுக்குத் தேவையில்லை. எங்களுக்கு சமத்துவம் வேண்டும். கவுரவம் வேண்டும். நீதி வேண்டும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024