Friday, August 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 336

அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

விதை உற்பத்தி நிறுவனமான மஹைகோ (Mahyco), தன் பி.டி. கத்திரிக்காய் விதைகளுக்காக விதை கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் கடந்த 2010-ம் ஆண்டு அனுமதி கேட்டது. அப்போது பி.டி. கத்திரி பயிரிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல இந்திய மற்றும் வெளிநாட்டு  உயிரியல் விஞ்ஞானிகள், உயிரியல் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிய எச்சரிக்கை விடுத்தனர். அப்போது இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நான்கு மாதங்கள் அறிவியல் விசாரணை, மக்கள் கருத்துக் கேட்பு என்று பல தகிடுத் தத்தங்களுக்கு பிறகு தற்காலிகமாக , பி.டி. கத்திரி பயிரிடப்படுவதை இந்தியாவில் நிறுத்தி வைத்தார்.

இந்த நிறுத்தி வைப்புக்கு, பல்வேறு சர்வதேச விஞ்ஞானிகளின் அறிவுரை ஒரு காரணமாக இருந்தது. இந்த பி.டி. கத்திரியானது உயிரியல் பாதுகாப்பு அம்சத்தில் ஏற்படுத்தும் குறைபாடு மற்றும் பி.டி. கத்திரியின் நச்சுத்தன்மை, மனித உடல்நலத்திற்கு ஏற்படுத்தும் தீங்கு ஆகியவையே ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பில் இருந்தும் பி.டி. கத்திரிக்கு வந்த எதிர்ப்பாக இருந்தது. அதனால் பி.டி. கத்திரி பயிரிடப்படுவதற்கான தடை இன்று வரை நீடிக்கிறது.

ஆனால் அரியானாவில் பி.டி. கத்திரி பயிரிடப்படுவது கடந்த ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் சட்டவிரோதமாக இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர் பயிரிடப்பட்டது எப்படி? என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு இந்த பி.டி. பயிர்கள் எப்படி பரப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee) என்ற அரசு நிறுவனம்தான் மரபணு தொழில்நுட்பத்திற்கான ஒரு கட்டுப்பாட்டு ஆணையமாக ( Regulatory Body ) செயல்படுகிறது. இந்த ஆணையமானது மரபணு தொழில்நுட்பத்தின் அபாயங்களிலிருந்து சுற்றுச்சூழல், இயற்கை மற்றும் மனித உடல் நலத்தை காப்பது ஆகும்.

ஆனால் 2017 -ல்  குஜராத்தில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட சோயாவிற்காக, GEAC-யிடம் அளித்த புகாரில் மெத்தனமே மேலோங்கி இருந்ததாக குஜராத்தில்  ஜட்டன் டிரஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் கபில் ஷா கூறுகிறார்.

படிக்க:
மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !
♦ பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிரான பி.டி. பருத்தி இப்போது சட்டப்பூர்வ முறையில் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பி.டி. பருத்தியானது, 2001-ம் ஆண்டு, குஜராத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மறைமுகமாக சட்ட விரோதமான முறையில் உயிர் தொழில்நுட்ப நிறுவனங்களால் பயிரடப்பட்டதுதான்.  இப்படி பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரடப்பட்ட பிறகு தான் அது பி.டி. பருத்தி என்று வெளிஉலகுக்கு தெரிய வந்தது. அப்போது பி.டி. பருத்தியானது மரபணு பரிசோதனை கட்டத்தில்தான் இருந்தது. ஆனால் மார்ச் 2002-ம் ஆண்டு பி.டி. பருத்தி பயிரடப்படுவதற்கு GEAC ஒப்புதல் வழங்கியது.

உயிரியல் துறையைச் சேர்ந்த (உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட GEAC -யின் பார்வையாளர் ) புஷ்பா பார்கவ் 2015-ல் விவசாயிகளுக்கு , ஒப்புதல் வழங்காத மரபணு மாற்றப்பட்ட விதைகள் விற்கப்பட்டன என்று கூறுகிறார். 2008-ம் ஆண்டு மரபணு மாற்றப்பட்ட வெண்டை பயிரிடப்பட்டதைச் சுட்டிக் காட்டுகிறார்.

பங்களாதேஷில் 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்கு எதிராக விஞ்ஞானிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராட்டம் நடத்தினர்.

சட்டவிரோதமாக மரபணு மாற்றப்பட்ட HT சோயாபீன்ஸ் குஜராத்தில் 2017-ம் ஆண்டு விளைவதாக தகவல் வெளியானது. 2018-ம் ஆண்டு சட்டவிரோதமாக மரபணு மாற்றப்பட்ட HT பருத்தி  இந்தியாவில் வளர்வதாக தகவல் வெளியானது.

இந்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரமே மரபணு மாற்றப்பட்ட பூசணி, கடுகு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பப்பாளி, சோளம் போன்ற பயிர்களின் விதைகளை அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு GEAC -ன் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமின்மை என்பதன்படி இறக்குமதி செய்து வருகிறது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், கடந்த 2018-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 65 உணவு மாதிரியில் நடத்திய பரிசோதனையில் 32 சதவீதம் மரபணு மாற்றப்பட்டது என்று உறுதியானது. சில  நிறுவனத்தின் உணவு மாதிரிகள் மரபணு  மாற்றப்பட்ட உணவு வகைகள் சார்ந்தவை அல்ல என்று அச்சிடப்பட்டு இருந்தாலும் அவைகள் மரபணு மாற்றப்பட்டவை என்பது தெரியவந்தது.

இப்படி மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்காக எந்த ஒரு அறிவியியல்பூர்வ ஆய்வும் இல்லாமல், இந்தியாவில் இந்த GM பயிர்கள் விளைவிக்கபடுகின்றன.

GEAC ஆனது  மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்காக  எப்படி பரிசோதனை செய்கிறது என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை :

  • அதன் விதைகளைத் திரும்பப் பயன்படுத்த முடியுமா?
  • மரபணு மாற்றப்பட்ட விதைகளில் இருந்து வரும் உணவை அது எந்த உயிரினத்தின் மீது பரிசோதனை நடத்தும்?
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களால், பக்கத்து பயிர்களில் மகரந்தச் சேர்க்கை மூலம் நடக்கும் வேதியியல் உயிரியியல்  மாற்றங்கள் என்ன? பக்கத்து நிலத்துப் பயிர்கள் தன் தன்மை இழக்காமல் இருக்குமா?
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான உள்ளீடுகள் என்னென்ன? அவை மண்ணில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்னென்ன?

இது போன்ற கேள்விகளுக்கான ஆய்வுகள் எல்லாம் இல்லை.

மரபணு மாற்றப்பட்ட விதை நிறுவனத்தின்  விண்ணப்பங்களை பாரதூரமாக சீர் தூக்கி, அறிவியல் வழியில் முடிவெடுக்கும் ஒரு அமைப்பாக GEAC இல்லை. அப்படி அறிவியல்பூர்வமான ஆய்வு முறைகளும், பரிசோதனை வழிகளும் இந்தியாவில் இல்லை.

GEAC ஆனது  உயிரியல் தொழில்நுட்பத்தின் அபாயகரமான விளைவுகளிலிருந்து மக்களையும், மண்ணையும், விவசாயத்தையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் என்று சொல்லிக் கொள்கிறது. ஆனால் அது செயல்படும்விதமானது, மரபணு விதைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கட்டற்ற வசதிகளும், அனுமதியும் அளிப்பதாகவே உள்ளது!

படிக்க:
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
♦ சட்டவிரோதமாக மரபீனி உணவுப் பொருட்களை அனுமதிக்கும் இந்திய அரசு !

ஜெய்ராம் ரமேசின் பி.டி. கத்திரி நிறுத்தி வைப்புக்குப் பிறகு, GEAC, பி.டி. கத்திரி விதையை உருவாக்கிய மஹைகோவின் பி.டி. கத்திரி விதைகள், இதே போல மரபணு மாற்றப்பட்ட விதை ஆராய்ச்சி செய்யும் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் விதைகள், தார்வார்ட் வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்தின் விதைகள் அனைத்தும் , மொத்தமாக மரபணு மாற்ற விதைகளை சேமித்து வைக்கும் NBPGR என்ற மரபணு விதைகளை சேமித்து வைக்கும் அரசு நிறுவன சேமிப்புக்  கிடங்கில் சேமித்து வைத்திருக்கப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்து இருக்க வேண்டும்.

2010  பிப்ரவரி மற்றும் மே மாதம் நடைப்பெற்ற GEAC மாதக் கூட்டக் குறிப்பில் மஹைகோ நிறுவனம் மற்றும் மேற்கூறிய பல்கலைக் கழகங்களிடமிருந்து விதைகளை NBPGR -ல் சேமித்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால் அப்படி சேமித்து வைக்கவில்லை.

ஆனால் NBPGR -ன் இயக்குநர் குல்தீப் சிங், “மஹைகோ மற்றும் யாரும் அப்படி எந்த ஒரு விதையையும் சேமித்து வைக்கவில்லை” என்று மாங்கோபே என்ற சுற்றுச்சூழல் பத்திரிகை  நடத்திய கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

பிரதி மாதம் ஒவ்வொரு  இரண்டாவது புதன்கிழமை கூடும் என்ற அறிவிப்போடு இருக்கிறது GEAC இணையம். அதற்கான தேதி எதுவும் குறிப்பிடப் படவில்லை. மார்ச் மாதம் 20-ம் தேதிக்குப் பிறகு கூட்டம் நடந்தாக பதிவு ஏதும் இல்லை. காண்ட்ராக்ட் விடுவதற்கு எதற்கு மாதக் கூட்டம் ? என்று நினைத்திருப்பார்கள் போலும்.

இந்தியா தன்னகத்தே சுமார் 2,500 கத்திரி ரகங்களை கொண்டுள்ளது. இப்போது கத்திரி விளைச்சலில் எந்த ஒரு பற்றாக்குறையும் இல்லை. உணவுச் சங்கிலியில் ஒரு ஏகபோகத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த பி.டி ரக கத்திரி விதைகளை, மரபணு மாற்றப்பட்ட விதை நிறுவனங்கள் திருட்டுத்தனமாக இந்திய மண்ணில் பரவ விடுகின்றன.

மரபணு மாற்றப்பட்ட விதைகள், திருட்டுத்தனமாக சந்தையில் நுழைக்கப்படுவதை பி.டி. பருத்தி காலத்தில் இருந்தே இந்தியா பார்த்து வந்துள்ளது. பி.டி. பருத்தி பரவலுக்குப் பின்தான் இந்திய விவசாயிகள் தற்கொலைகள் அதிகமாகின.

நமது விதைகளை மட்டுமில்லை. ஒவ்வொரு பிடி மண்ணையும் மரபணு மாற்றம் செய்யப் பார்க்கிறார்கள். இந்த பூமி நம் குழந்தை! அது நம்முடையது!

பரணிதரன்


நன்றி: Scroll,  Couter Punch

காப்பாற்றிவிட்டான் … காப்பாற்றிவிட்டான் விமானத்தை !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 17

லெக்ஸேய் தனது விமான நிலையத்தை அடைந்தபோது அங்கே விமானப் பறப்பு மும்முரமாக நடந்து கொண்டுருந்தது. அந்தப் போர்க்கால வசந்தத்தின் எல்லா நாட்களையும் போலவே அன்றும் அங்கே வேலை அளவுக்கு மேல் நெரிந்தது.

விமான எஞ்சின்களின் இரைச்சல் ஒரு நிமிடங்கூட ஓயவில்லை. பெட்ரோல் நிரப்பிக் கொள்வதற்காகத் தரை இறங்கிய ஒரு விமான அணியின் இடத்தில் மற்றொரு அணியும் பிறதொரு அணியும் வானில் கிளம்பின. விமானிகளும் பெட்ரோல் ஓட்டிகளும் பெட்ரோல் போடும் பண்டக சாலைக்காரர்களும் எல்லோருமே அன்று ஒரேயடியாகக் களைத்துச் சோர்ந்து போனார்கள்.

எங்கும் ஒரே வேலை மும்முரமும் கெடுபிடிமாக இருந்ததாயினும் அலெக்ஸேய் மெரேஸ்யேவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

விமானிகள் தங்கள் விமானங்களைக் காப்பிடத்துக்கு ஓட்டிச் செல்வதற்கு முன்னே, “இன்னும் கொண்டு வரவில்லையா?” என்று எஞ்சின்களின் இரைச்சலுக்கு இடையே மெக்கானிக்குகளிடம் வினாவினார்கள்.

பெட்ரோல் மோட்டார்கள் தரையில் புதைக்கப்பட்டிருந்த பெட்ரோல் தொட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக நெருங்குகையில் “அவனைப் பற்றி ஒன்றும் தகவல் இல்லையா?” என்று வினவினார்கள் ‘பெட்ரோல் மன்னர்கள்’.

அறிமுகமான ரெஜிமெண்ட் மருத்துவ விமானம் காட்டுக்கு மேலே எங்காவது கடகடக்கிறதா என்று எல்லோரும் உற்றுக் கேட்டார்கள்….

மீள்விசையுடன் அசைந்த ஸ்டிரெச்சரில் அலெக்ஸேய் உணர்வுக்கு வந்ததும், தெரிந்த முகங்கள் தன்னை நெருக்கமாகச் சூழ்ந்திருக்கக் கண்டான். விழிகளை அகலத் திறந்தான். கூட்டம் களிப்புடன் ஆராவாரித்தது. ரெஜிமெண்ட் கமாண்டரான மேஜரின் இளமுகம் அடக்கமாகப் புன்னகைத்தவாறு ஸ்டிரெச்சரின் மிக அருகில் தென்பட்டது. அவருக்குப் பக்கத்தில் படைக் காரியாலயத் தலைவரின் அகன்று பருத்த, வேர்வை வழியும் செந்நிற வதனம் காணப்பட்டது. விமான நிலைய சேவைப் பட்டாளத்தின் கமாண்டரது கொழுத்த வெண்ணிற முகங்கூடத் தெரிந்தது. எத்தனை பரிச்சயமான முகங்கள்! நெட்டையன் யூரா ஸ்டிரெச்சரை முன்னால் தூக்கிக் கொண்டு நடந்தான். பின்னே திரும்பி அலெக்ஸேயைப் பார்ப்பதற்கு அவன் ஓயாது முயன்றான். அந்தக் காரணத்தினாலேயே ஒவ்வோர் அடியிலும் தடுமாறினான். பக்கத்தில் தத்தி நடந்தான் விமானி குக்கூஷ்கின். இவன் சிறுகூடான மேனியன், இனிமையற்ற, சிடுசிடுத்த முகத்தினன். சச்சரவிடும் சுபாவம் காரணமாக இவனை விமானப்படையினருக்கும் பிடிக்காது. அவனும் புன்னகைத்தான். யூராவின் நீண்ட அடிவைப்புகளுக்கு ஒத்தாற்போல் நடக்க முயன்றான்.

தனக்கு இத்தனை நண்பர்கள் இருப்பதாக அலெக்ஸேய் நினைத்ததே இல்லை. இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் தானே ஆட்களின் உண்மை இயல்பு வெளிப்படுகிறது!

வெறுமையாக்கப்பட்ட பிர்ச் மரச் சோலை ஓரத்தில் உரு மறைக்கப்பட்டிருந்த வெள்ளி வண்ண மருத்துவ விமானத்துக்கு அலெக்ஸேய் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டான். விமானத்தின் குளிர்ந்து போன எஞ்சினைத் தொழில்நுட்ப நிபுணர்கள் இறக்குவது தெரிந்தது.

அபாய அறிவிப்பு சங்கு ஏக்கத்துடன் ஊளையிட்டது. எல்லோருடைய முகங்களிலும் செயல் துடிப்பும் கவலையும் உடனே தென்படலாயின. மேஜர் சில சுருக்கமான உத்தரவுகள் இட்டார். ஆட்கள் எறும்பு போல் நாற்புறமும் விரைந்து ஓடினார்கள். சிலர் காட்டோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விமானங்களை நோக்கியும், சிலர் மைதானத்தின் விளிம்பில் குன்று போலத் துருத்தியிருந்த தலைமை இடக்காப்பரணுக்கும், சிலர் சோலையில் மறைவில் இருந்த மோட்டார்களை நோக்கியும் விரைந்தார்கள். பல வால்கள் கொண்ட ராக்கெட்டின் மெதுவாகப் பரவிய சாம்பல் நிறத்தடம் புகையால் தெளிவாக வானில் கோடிடப்பட்டதை அலெக்ஸேய் கண்டான். “விமானத்தாக்கு!”  என்று புரிந்து கொண்டான்.

லேனச்கா, மெக்கானிக் யூரா, இருவருமாக ஸ்டிரெச்சரைத் தூக்கிக்கொண்டு, ஓட்டமாகச் சென்று, பக்கத்திலிருந்த காட்டோரத்துக்கு அதைக் கொண்டு சேர்த்தார்கள்.

அலெக்ஸேயுடன் ஸ்டிரைச்சரைக் குறுகிய காப்பகமுக்குள் புகுத்த முடியவில்லை. அக்கறையுள்ள யூராவும் லேனச்காவும் அலெக்ஸேயைக் கைத்தாங்கலாகக் காப்பகமுக்குள் கொண்டு போக விரும்பினார்கள். அவனோ இதற்கு மறுத்து விட்டான். ஸ்டிரைச்சரைக் காட்டோரத்தில் இருந்த பருத்த பிர்ச் மர நிழலில் வைக்குமாறு கூறினான். அடுத்து வந்த நிமிடங்களில் சொப்பனத்தில் போல விரைவாக நடந்த நிகழ்ச்சிகளை மர நிழலில் படுத்தபடியே கண்கூடாகக் கண்டான் அலெக்ஸேய். விமானச் சண்டையைத் தரையிலிருந்து பார்வையிடும் வாய்ப்பு விமானிகளுக்கு அரிதாகவே வாய்க்கும். போரின் முதல் நாளிலிருந்தே சண்டை விமான அணிகளில் பறந்த அலெக்ஸேய்க்கு விமானச் சண்டையைத் தரையிலிருந்து காணும் வாய்ப்பு ஒரு தரம் கூட கிடைக்கவில்லை. வானில் போரிடுகையில் மின்வேகப் பாய்ச்சலுக்கு பழக்கப்பட்டவன் அவன். கீழேயிருந்து பார்க்கையில் விமானச் சண்டை விரைவாகவோ பயங்கரமாகவோ அற்றதாகத் தென்பட்டது. பழைய மொண்ணை மூக்குச் சண்டை விமானங்கள் மிக மெதுவாக இயங்குவது போலத் தோன்றியது. அவற்றின் மெஷின்களின் முழக்கம் மேலிருந்து தீங்கற்றதாக ஒலித்தது. தையல் இயந்திரத்தின் கடகடப்பு அல்லது காலிக்கோத் துணி மெதுவாகக் கிழிக்கப்படும் ஓசை போன்ற வீட்டு ஒலியை அது ஒத்திருத்திருந்தது. இவை எல்லாம் அலெக்ஸேய்க்கு வியப்பூட்டின..

படிக்க:
சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் !
சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்

விரைவில் எல்லாச் சந்தடியும் அடங்கி விட்டது. சண்டை விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறங்கலாயின. வழக்கம் போல வானில் வட்டமிடாமல் நேராகத் தரையில் இறங்கி ஓடுகையில் காட்டோரத்துக்குத் திருப்பித் தங்கள் காப்பிடத்தை அடைந்தனர். விமான நிலையம் வெறுமையாகிவிட்டது. காட்டில் விமான எஞ்சின்களின் முழக்கம் அடங்கிவிட்டது. ஆனால், தலைமை இடத்தில் இன்னமும் ஆட்கள் நின்றுகொண்டு, கண்களில் வெயில் படாமல் அங்கைகளால் மறைத்தவாறு வானை நோக்கிக்கொண்டிருந்தார்கள்.

” ‘ஒன்பதாவது’ இன்னும் வரவில்லை! குக்கூஷ்கின் மாட்டிக்கொண்டுவிட்டான்!” என்று அறிவித்தான் யூரா.

எப்போதும் கடுகடுவென்றிருக்கும் குக்கூஷ்கினின் சிடு சிடுத்த சிறு முகத்தை அலெக்ஸேய் நினைவுபடுத்திக் கொண்டான். இதே குக்கூஷ்கின் இன்று எவ்வளவு அக்கறையுடன் ஸ்டிரெச்சரைத் தாங்கிக்கொண்டு நடந்தான் என்பதையும் எண்ணிப் பார்த்தான். ஒரு வேளை? மும்முரத்தில் இருக்கும் போது விமானிகளுக்குப் பெரிதும் பழகிப்போன இந்த எண்ணம், விமான நிலைய வாழ்க்கையின் தொடர்பு விட்டுப் போன இந்தச் சமயத்தில் அலெக்ஸேய்க்கு நடுக்கம் உண்டாயிற்று.

அப்போது வானில் எஞ்சின் ஓசை ஒலித்தது.

யூரா மகிழ்ச்சியுடன் துள்ளினான்:

“அவன்தான்!”

தலைமை இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ நடந்துவிட்டது. “ஒன்பதாவது” தரையில் இறங்காமல் விமான நிலையத்துக்கு மேலே அகன்ற வட்டம் இட்டது. அது அலெக்ஸேயின் தலைக்கு உயரே வந்த பொது அதன் இறக்கையின் ஒரு பகுதி உடைந்து விழுந்திருந்தது, தெரிந்தது. எல்லாவற்றையும் விட பயங்கரம்! – அதன் அடிச்சட்டத்திலிருந்து ஒரு “கால்”. அதாவது சக்கரம் – மட்டுமே தென்பட்டது. சிவப்பு வானங்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் காற்றில் சீறிப் பாய்ந்தன. குக்கூஷ்கின் மறுபடி தலைகளுக்கு மேலாகப் பறந்து சென்றான். சிதைந்த கூட்டுக்கு மேலே பறந்தவாறு, எங்கே உட்கார்வது எனத் தெரியாமல் திகைக்கும் பறவை போலிருந்தது அவனுடைய விமானம். இது மூன்றாம் தடவை வட்டம் இட்டது.

விமானத்தை இறக்குவது அசாத்தியம் ஆகிவிடும் இம் மாதிரிச் சந்தர்ப்பங்களில் உயரத்தில் கிளம்பி, பாராசூட்டின் உதவியால் விமானத்திலிருந்து குதித்துவிட விமானிகள் அனுமதிக்கப்படுவது உண்டு. “ஒன்பதாவது” இத்தகைய கட்டளையைத் தரையிலிருந்து பெற்றிருக்க வேண்டும். ஆயினும் அது பிடிவாதமாகத் தொடர்ந்து வட்டம் இட்டது.

வாலில் “ஒன்று” என்ற இலக்கம் பொறித்த சண்டை விமானம் நிலையத்திலிருந்து வழுகிச் சென்று வானில் கிளம்பியது. மேலே சென்றதும் அது அடிபட்ட “ஒன்பதாவதை” முதல் வட்டத்திலேயே மிகத் திறமையுடன் நெருங்கிவிட்டது. அந்த விமானத்தை பறப்பதில் பதற்றமற்ற தேர்ச்சி கொண்ட ஒரு ரெஜிமெண்ட் காமாண்டரே ஓட்டுகிறார் என்று அலெக்ஸேய் ஊகித்துக் கொண்டான். குக்கூஷ்கினுடைய ரேடியோ பழுதடைந்திருக்கும் அல்லது அவனே நிதானம் இழந்திருப்பான் என்று தீர்மானித்து அவர் விமானத்தில் அவன் அருகே போய் இறக்கைகளை அசைத்து, “நான் செய்வது போலச் செய்” என்று சைகை காட்டிவிட்டு, ஒரு புறம் விலகி மேலும் உயரே எழும்பலானார். ஒரு பக்கமாக விலகி விமானத்திலிருந்து குதிக்கும் படி அவர் குக்கூஷ்கினுக்குக் கட்டளை இட்டார். ஆனால், அதே சமயத்தில் குக்கூஷ்கின் வேகத்தைக் குறைத்துத் தரையை நோக்கி இறங்கினான். இறக்கை உடைந்து சிதைந்த அவனது விமானம் விரைவாகத் தரையை நெருக்கியவாறு அலெக்ஸேயின் தலைக்கு நேர் மேலாகப் பாய்ந்து சென்றது. தரையின் கோட்டுக்கு வெகு அருகில் அது சட்டென்று ஒரேயடியாக இடப்புறம் சாய்ந்து நல்ல “காலை” தரையில் ஊன்றி ஒற்றைச் சக்கரத்தில் சிறிது தூரம் ஓடிய பின் வேகத்தைக் குறைத்து வலப்புறம் விழுந்து, வெண்பனி படலங்களைக் கிளப்பியவாறு தனது அச்சைச் சுற்றிச் சுழன்றது.

கடைசிக் கணத்தில் விமானம் பார்வையிலிருந்து மறைந்து விட்டது. வெண்பனிப் புழுதி அடங்கியதும், அடிபட்டு விலாப்புறம் சாய்ந்திருந்த விமானத்திலிருந்து சற்றுத் தொலைவில் வெண்பனிமேல் ஏதோ கறுப்பாகத் தெரிந்தது. அந்தக் கரும்புள்ளியை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். மருத்துவ மோட்டார் சங்கு ஊதியவாறு முழு விரைவுடன் அதன் பக்கம் பாய்ந்தது.

“காப்பாற்றி விட்டான், காப்பாற்றி விட்டான் விமானத்தை! சபாஷ் குக்கூஷ்கின்!” என்று ஸ்டிரெச்சரில் படுத்தபடியே எண்ணமிட்டான் அலெக்ஸேய். நண்பன்மேல் அவனுக்குப் பொறாமை உண்டாயிற்று.

ஒருவராலும் நேசிக்கப்படாத இந்தச் சிறு மனிதன், இத்தகைய உளத் திண்மையும் சிறந்த தேர்ச்சியும் வாய்ந்தவனாகத் தன்னை திடீரென நிரூபித்துக் கொண்ட அந்த மனிதன் வெண்பனி மீது கிடந்த இடத்திற்குப் பாய்ந்து ஓட அலெக்ஸேய்க்கு ஆசை உண்டாயிற்று. ஆனால், அவன் துணிகளால் சுற்றிப் போர்த்தப்பட்ட ஸ்டிரெச்சர் கித்தானுடன் அழுத்தப்பட்டுக் கிடந்தான். பெருத்த வலி அவனை நசுக்கிக் கொண்டிருந்தது. நரம்பு இயக்கம் சற்று தளர்ந்ததுமே இந்த வலி முழு சக்தியுடன் அவனைத் தாக்கத் தொடங்கியிருந்தது…..

அலெக்ஸேயின் ஸ்டிரெச்சர் மருத்துவ விமானத்தின் தனிப்பட்ட கூடுகளில் பொருத்தப்பட்டது. பக்கத்து கதவு திறந்தது. இராணுவ மேல் கோட்டுக்கு மேலே வெள்ளை நீள அங்கி அணிந்த அறிமுகமற்ற ஒரு மருத்துவர் அதன் வழியாகவே உள்ளே வந்தார்.

“ஒரு நோயாளி ஏற்கனவே இங்கே இருக்கிறானா?” என்று அலெக்ஸேயைக் கண்டதும் கேட்டுவிட்டு, “மிகவும் நல்லது! மற்றவனையும் எடுத்து வாருங்கள், இதோ பறப்போம்” என்றார்.

விமான எஞ்சினின் தாலாட்டும் ஒரு சீரான ஓசையில் எல்லாம் குழம்பி மங்கி, சாம்பல் நிற மூட்டத்தில் கரைந்தன. யுத்தமோ, வெடிகுண்டுத் தாக்கோ இல்லை, கால்களில் சித்ரவதையான, இடைவிடாத, நச்சரிக்கும் வலியும் இல்லை …

யூராவின் உதவியுடன் ஒரு ஸ்டிரெச்சரைப் பிடித்து விமானத்துக்குள் ஏற்றினார் மருத்துவர். ஸ்டிரெச்சரில் கிடந்தவன் நீட்டி முனகினான். அது கூட்டில் வைக்கப்படும் போது துப்பட்டி விலகி நழுவியது. குக்கூஷ்கினின் வேதனையால் சுளித்த முகத்தை ஸ்டிரெச்சரில் அலெக்ஸேய் கண்டான்.

மருத்துவர் மன நிறைவுடன் கைகளைத் தேய்த்துக் கெண்டு விமான அறையைச் சுற்றிக் கண்ணோட்டினார், அலெக்ஸேயின் வயிற்றில் லேசாகத் தட்டினார்.

“ரொம்ப நல்லது, இளைஞரே, இதோ உமக்குத் துணையாள், பறக்கும்போது சலிப்பு ஏற்படாமல் இருக்க.. ஊம்? இப்போது வெளியாட்கள் எல்லோரும் இறங்கிவிடுங்கள்.”

இப்படிச் சொல்லிக் கொண்டே, அங்கே தயங்கி நின்ற யூராவை வெளியே தள்ளினார். கதவுகள் சாத்தப்பட்டன. விமானம் அதிர்ந்து, புறப்பட்டது, துள்ளி எழுந்தது, பின்பு எஞ்சினின் ஒரு சீரான கடகடப்புடன் குலுங்கல் இன்றிக் காற்றில் மிதந்து சென்றது. மருத்துவர் சுவரைப் பிடித்தவாறு அலெக்ஸேயின் அருகே வந்தார்.

“உடம்பு எப்படி இருக்கிறது? எங்கே, நாடியைப் பார்ப்போம்.” – இவ்வாறு கூறி அலெக்ஸேயை ஆவலுடன் நோட்டமிட்டுத் தலையை ஆட்டினார். “ம் ம். நிரம்ப மன வலிமை உள்ள ஆள் நீர்! உமது சாகசச் செயலைப் பற்றி நண்பர்கள் ஏதோ நம்பவே முடியாத, ஜாக் லண்டன் வருணிப்பது போன்ற ஒரு கதையைச் சொல்லுகிறார்கள்.”

அவர் தமது இருக்கையில் அமர்ந்து செளகரியமாக உட்கார்வதற்காகச் சற்று நேரம் இப்படியும் அப்படியும் அலை பாய்ந்தார், பின்பு உடலைத் தளரவிட்டுத் தலையைத் தொங்கப் போட்டவாறு அக்கணமே உறங்கிவிட்டார். இளமை கடந்து விட்ட அந்த வெளிறிய மனிதர் எப்படி ஒரேயடியாகக் களைத்துப் போயிருக்கிறார் என்பது துலக்கமாகத் தெரிந்தது.

படிக்க:
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !
தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

“ஏதோ ஜாக் லண்டன் வருணிப்பது போன்ற கதை!” என்று நினைத்துக் கொண்டான் அலெக்ஸேய். பிள்ளைப் பருவத்தில் படித்த கதை அவனுக்கு நினைவு வந்தது. அமெரிக்க எழுத்தாளர் ஜாக் எழுதிய அந்தக் கதை கடுங்குளிர் தாக்கியதால் மரத்துப்போன கால்களுடன் பாலைவனத்தின் வழியே, நோயுற்று, பசித்திருந்த விலங்கால் பின்தொடரப்பட்டுச் சென்ற ஒரு மனிதனைப் பற்றியது. விமான எஞ்சினின் தாலாட்டும் ஒரு சீரான ஓசையில் எல்லாம் குழம்பி மங்கி, சாம்பல் நிற மூட்டத்தில் கரைந்தன. யுத்தமோ, வெடிகுண்டுத் தாக்கோ இல்லை, கால்களில் சித்ரவதையான, இடைவிடாத, நச்சரிக்கும் வலியும் இல்லை, மாஸ்கோவுக்குத் தன்னை ஏற்றிச் செல்லும் விமானமும் இல்லை, இவை எல்லாமே பிள்ளைப் பருவத்தில் தொலைதூரக் கமீஷின் நகரத்தில், தான் படித்த அற்புதக் கதையில் வரும் வருணனைகள் தாம் என்பதே உறங்கத் தொடங்கிய அலெக்ஸேயின் மனதில் கடைசியாக எழுந்த எண்ணம்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

ஓட்டுப் போடலங்குற கோவத்துல மோடி எதுனாலும் பண்ணலாம் – மக்கள் கருத்து | காணொளி

மீண்டும் மோடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வந்தது குறித்தும், தமிழகத்தில் பாஜக வரமுடியாமல் போனதன் காரணம் குறித்தும் தமிழக மக்கள் பதிலளிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது இன்னும் ஐந்தாண்டுகால பாஜக ஆட்சி என்ன அட்டூழியங்களை நடத்துமோ ? என்ற அச்சத்தையும் சென்னையில் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தங்கள் கருத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர்.

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்கள்

பழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் !

0

இந்த கட்டுரை கடந்த  2015-ம் ஆண்டு மே மாதம் தி வயர் இணையதளம் தொடங்கப்பட்ட போது வெளியிடப்பட்ட கட்டுரை. மக்களின் வாழ்க்கை பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்து உணர்த்தும் ஒரு கட்டுரை இது. கடந்த 2019, மே 11 அன்று தி வயர் இணையதளம் இக்கட்டுரையை மீள்பிரசுரித்தது.

மக்களின் மொழியில் நக்சல்கள் பேசும் போது

து டிசம்பர் மாத துவக்கம். கும்மிருட்டும், கடுங்குளிரும் பீஜபுர் காடுகளை ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கும். அப்படி ஒர் இரவில் மராட்டிய எல்லைக்கு அடுத்து இந்திராவதி ஆற்றின் கரையோரத்திலிருக்கும் பீட்ரே கிராமத்தில் உள்ளூர்வாசிகள் சிலர் சடசடவென்று எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கருகில் கூடியிருக்கின்றனர்.

அங்கு பெரும்பாலான குடும்பங்களில் தொலைக்காட்சி கிடையாது. மாலைப் பொழுதுகளில் நெருப்பருகே கூடியிருப்பதுதான் அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. அதுதான் தக்க தருணமென்று ஒரு பாடலை போடுவதற்காக தன்னுடைய செல்பேசியை ஒரு அரசாங்க ஊழியர் எடுக்கிறார்.

நான் ஒரு மடத்தனமான பாலிவுட் பாடலைதான் எதிர்பார்த்திருந்தேன். சத்திஸ்கரை சுற்றிலும் பேருந்துகளில் இப்பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். உறுதியான நக்சல்கள் பிரச்சினையால் குண்டும்குழியுமான இந்த நீண்ட கரடுமுரடான சாலைகளில் பயணிக்கையில் இவைதான் மக்களுக்கு பிடித்தவையாக இருக்கின்றன.

ஆனால் ஒரு பெண்ணின் பூரிப்பான மற்றும் கம்பீரமான குரல் கோரஸுடன் அந்த போனிலிருந்து வெளிப்பட்டது.

அவள் தன்னுடைய காதாநாயகன் மீதுள்ள அன்பினால் பாடுகிறாள். அவளது நிலத்தினை பாதுகாக்க உயிர்துறந்த தியாகி அவளது கதாநாயகன். “நீ போராடி பாதுகாத்த இந்த கானகத்தின் அழகு உன்னை இழந்து வாடுகிறது. நீ எங்கே இருக்கிறாய்? உன்னுடைய குரல் எங்கே? எங்களால் அதை கேட்க முடியவில்லை”. இப்பாடலின் தோற்றுவாய் மற்றும் உண்மைத்தன்மையில் சற்றே சந்தேகம் இருக்கலாம்.

இது நக்சல்களை ஆதரிக்கும் பாடல். ஆனால் இக்கூட்டம் நக்சல்களின் கூட்டமல்ல. சாதாரண மக்களின் கூட்டம். அவர்கள் எதற்காக வெளிநபரின் முன் வெளிப்படையாக போராளிகளின் பாடலைப் பாடுகின்றனர்?

வானொலியில் போராளிகள் :

நக்சலின் பாடல்கள் எந்த அளவிற்கு எதிரானவர்களிடம் கூட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. பழங்குடி மக்களின் கோண்டி மற்றும் ஹல்பி மொழிகளில் அவர்களது பாடல்கள் இருப்பதுதான் மக்களுடனான நக்சல்களின் ஐக்கியத்திற்கு காரணம்.

“எங்களது நேரத்தைப் போக்க எப்போதுமே இப்பாடல்களை நாங்கள் கேட்கிறோம். உள்ளூர் போலீஸ்காரர்கள் சிலர் கூட இந்தப் பாடல்களை வைத்திருக்கிறார்கள்” என்று ஒரு கிராமவாசி கூறினார். இப்பாடல்களை நகரிலுள்ள கடைகளில் வாங்கி தங்களது கைப்பேசியில் மக்கள் சேமித்து கொள்கிறார்கள்.

இந்தி அம்மக்களிடம் நெருக்கமாக இல்லாத சூழலில் பாடல்களையும் இன்னப்பிற பொழுதுபோக்கு அம்சங்களையும் பழங்குடி மக்களது தாய்மொழியில் கொண்டு சேர்ப்பது நக்சல்களின் உலகப்பார்வைக்கும் உள்ளூர் மக்களிடம் ஐக்கியமாவதற்கும் முதன்மையான காரணியாக இருக்கிறது. பழங்குடி மொழிகளை நக்சல்கள் பயன்படுத்தும் அதே நேரத்தில் உள்ளூர்மக்கள் மீது இந்தியை திணித்து அவர்களது மொழிகளை அரசாங்கம் புறக்கணிக்கிறது.

இந்திராவதி ஆற்றங்கரையின் புகைப்படம் (நன்றி – தி வயர்)

சத்திஸ்கரில் உள்ள பள்ளிகளில் இந்த திணிப்பை நாம் நன்கு அறியலாம். மாநில அரசு பழங்குடி மக்களின் மொழிகளை பாடநூல்களில் புறக்கணிக்கும் சூழலில் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் கோண்டி மொழிக்கு சிறப்பு கவனத்தை நக்சல்கள் கொடுக்கின்றனர். தண்டகாரன்யா வித்யா வைபக் (Dandakaranya Vidya Vibhag) மூலம் சில அரிய கணித மற்றும் அறிவியல் நூல்கள் இந்த ஆசிரியருக்கு கிடைத்தன.

தண்டகாரன்யா வித்யா வைபக் என்பது நக்சல்களது கல்விசார் அமைப்பு. இது பல்வேறு நூல்களை கோண்டி மொழியில் (பெரும்பாலும் சாதாரன கணிணி அச்சு பொறியில்தான் அச்சிடப்படுகிறது) வெளியிடுவது மட்டுமல்லாமல் கையாலும் எழுதப்பட்டு பகிரப்படுகிறது. இந்த குறிப்பிட்ட விசயத்தில் அரசாங்கத்தை விட நக்சல்களின் கை ஓங்கியுள்ளது.

கோண்டி மொழிக்கென புதிய எழுத்து முறையை நக்சல்கள் உருவாக்கியதாகவும் தற்போது அம்மொழி தேவனாகரி வடிவத்தில் எழுதப்படுவதாகவும் முன்னாள் நக்சல் போராளி ஒருவர் உறுதிப்படுத்தினார். இது பழங்குடி மக்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கவும் அவர்களது மொழிக்கென சிறப்பான தகுதியை அளிப்பதற்கான ஓர் முயற்சி. கோண்டி எழுத்து சீர்திருத்த பரிந்துரைகளுடன் பல்வேறு அணிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை கூடினாலும் அம்முயற்சி முழுமையாக நடைமுறைபடுத்தப்படவில்லை.

படிக்க:
சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !
♦ சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !

2013 -ல் வடிவமைத்து கொண்டிருந்த கடைசி எழுத்து ‘T’ என்று நினைக்கிறேன். பின்னர் D.V.V -விடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அடுத்தடுத்த வடிவமைப்பிற்கான ஒருமித்த கருத்திற்கு எங்களால் வர முடியவில்லை என்று அவர் கூறினார். மறுபுறம் 25 இலட்ச கோண்டி மொழி பேசுபவர்கள் இருந்தாலும் எட்டாவது அட்டவணையின் கீழ் அதற்கு அங்கீகாரம் அளிக்காமல் அதை விட குறைவான எண்ணிக்கை கொண்ட மொழிக்கு மாநில அரசு அங்கீகாரம் கொடுக்கிறது.

மொழி மற்றும் கலாச்சார ரீதியில் மக்களை தொடர்பு கொள்ளும் அவர்களது மற்றுமொரு அமைப்பு சேட்னா நாட்யா மஞ்ச் (Chetna Natya Manch) எனும் நாட்டுப்புற நாடக மற்றும் நடனக் குழு. மின் தொழில்நுட்ப ரீதியிலான பொழுதுபோக்குகள் இல்லாத நிலையில் உள்ளுர் மொழியில் இம்மதிரியான நேரடியான நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகம் கிடைக்கிறது.

இந்திய அரசாங்கத்தின் பழங்குடிகள் மற்றும் அவர்களது இயற்கை வளங்களுக்கு எதிரான சுரண்டல், முதலாளிகள் மற்றும் சாதிய ஒடுக்குமுறையாளர்களுக்கு இடையிலான கூட்டுச்சதி ஆகியவற்றை பற்றி அவர்களது நாடகம் மற்றும் பாடல்கள் பேசுகின்றன. இப்படி பழங்குடிகள் மையத்தில் சேட்னா நாட்யா மஞ்ச் வெற்றிகரமாக இயங்கி வரும் சூழலில் கடுமையாக பாதிக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தில் அரசுக்கு ஆதரவான பரப்புரை குழு ஒன்றை போலீசு இறக்கியுள்ளது.

பொதுவான மொழியை கண்டறிதல் :

விவசாயம் மற்றும் மருத்துவத்திற்கு உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவது மக்களுடன் நக்சல்களின் ஐக்கியத்திற்கு உதவுகிறது. விவசாயம் செய்வது குறித்தும் கால்நடை வளர்ப்பு குறித்தும் கோண்டி பாடநூல்களில் அறிவுரைகள் இருக்கின்றன. அதே போல ஆங்கில நூல்களிலிருந்து கோண்டி மொழிக்கு பெயர்க்கப்பட்ட மருத்துவ குறிப்புகளை மருத்துவ ஊழியர்கள் எங்கும் எடுத்து செல்கின்றனர். மனித உடற்கூறியல் குறித்த எடுப்பான படங்கள் கொண்ட நூல் ஒன்றை கட்டுரையாளரும் பெற்றிருக்கிறார்.

மனித உடற்கூறியல் குறித்த எடுப்பான படங்களுடன் கோண்டி மொழியில் வெளியிடப்பட்டுள்ள நூல்.

இது வெறுமனே கோண்டி மொழி குறித்த அறிவு என்று சுருக்கி விட முடியாது. உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்த பொறாமைப்படத்தக்க அறிவைத்தான் இது வெளிப்படுத்துகிறது. இதே எழுத்தாளாரின் வேறொரு நூலான “மாவா ஜங்கல், மாவா தவாய்”( Mava Jangal, Mava Dawai) – பாஸ்தாரிலுள்ள தாவரங்களைப் பற்றிய தகவல் களஞ்சியம் என்று பாராட்டப்பட்டது. சான்றாக, வயிற்றுப்போக்குக்கு யென் எனும் ஊள்ளூர் தாவரத்தின் வேரை பொடியாக்கி நாள்தோறும் சாப்பிட வேண்டும் என்று அது கூறுகிறது. மறுபுறமோ பழங்குடிகளது அறிவு வளத்தை பற்றி தெரிந்து கொள்ள அரசிற்கு அக்கறையில்லை. மாறாக மண்ணிற்கடியில் உள்ள வளத்தை பற்றிதான் அதிக அக்கறை கொள்கிறது.

உள்ளுர் மக்களது கோண்டி மற்றும் இதர மொழிகளை நக்சல்கள் ஆழமாக பயன்படுத்துவது என்பது அரசு ஒருபோதும் செய்யாத அல்லது செய்ய முடியாத ஒரு செயலாகும். நக்சல் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கோண்டி மொழியில் குழந்தைகள் படிக்க சத்திஸ்கரிலுள்ள பள்ளிகளோ சமீபத்தில்தான் அதுவும் சில குறிப்பிட்ட தலைப்புகள் மட்டுமே கோண்டி மொழியில் படிக்க உரிமையளித்துள்ளன.

நக்சல்களது கோண்டி பாடல்கள் உள்ளூர் மக்களை பல்லாண்டுகளாக மகிழ்வித்துக் கொண்டிருக்க அரசாங்கமோ வானொலி சேவையில் கூட பழங்குடி மொழிகளுக்கு இடமளிக்கவில்லை. பழங்குடியல்லாத மூத்த நக்சல் தலைவர்கள் கூட முயற்சி செய்து கோண்டி மொழியை கற்கும் அதே வேளையில் பல்வேறு மூத்த அரசு அதிகாரிகள் பழங்குடி மொழிகளை கற்க வேண்டிய அவசியத்தை உணரவில்லை.

அரசிற்கு படிப்பினை :

நக்சல்கள் பழங்குடிகளல்ல “வெளியாட்கள்” என்று தொடர்ந்து அரசாங்கம் முத்திரை குத்துகிறது. ஆனால் யார் இங்கே உண்மையான வெளியாள் என்கிறார் இந்திய கம்யுனிஸ்டு கட்சியை சேர்ந்த பாஸ்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனிஸ் குஞ்சம். “பழங்குடி மக்களது மொழியையும் கலாச்சாரத்தையும் நன்கு கற்றுக்கொண்ட நக்சல் தலைவர் வெளியாளா? அப்படியென்றால் பழங்குடிகளை பற்றி ஒன்றுமே தெரியாத அரசாங்க அதிகாரி எப்படி உள்ளூர்வாசியாக இருக்க முடியும்?” என்று கேட்கிறார்.

படிக்க:
மராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது !
♦ #MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ‘கண்ணியத்துக்கான பேரணி’ !

“பழங்குடிகளுக்கான முழுமையான குடிமக்கள் என்ற அங்கீகாரத்திற்கு முதலில் அவர்களது மொழிகளுக்குத் தேவையான இடத்தை அரசு ஒதுக்க வேண்டும்”. ஆனால் எதார்த்தத்தில் அது நடப்பதில்லை என்று இந்திய மக்கள் மொழியியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் கணேஷ் தேவி கூறுகிறார். புறக்கணிக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தப்பட்டதன் எதிர்வினைதான் வன்முறையாக வெடிக்கும் அவர்களது கோபம். ஒரு சரியான மொழி அங்கீகாரம், அந்த கோபத்தை சற்று ஆற்றுப்படுத்தும் என்று கூறினார்.

“இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு” எதிரான போரை வென்றெடுக்க அரசினுடைய திட்டத்தின் ஒரு அடித்தளமாக பழங்குடிகள் இருக்கிறார்கள் என்று பொதுவாக கூறப்படுகிறது. பாதுகாப்பை பராமரிப்பதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குமான உறுதியான அணுகுமுறைகளுக்கு அப்பால், உள்ளூர் மொழிகளுக்கு மதிப்பை கொடுக்கும் மென்மையான அணுகுமுறைகளை அரசாங்கம் கையாள வேண்டும். இது வெறுமனே மொழியியல் சார்ந்து மட்டுமல்லாமல் அம்மொழிகள் மூலம் வெளிப்படும் பழங்குடிகளது வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் அறிவு ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

இதை அங்கீகரிப்பதிலும் அதன் மீது செயலாற்றுவதிலும் நக்சல்கள் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றனர். பழங்குடிகளது எதிர்காலத்திற்கு அவர்களது மொழிகளுக்கு சிறிய அளவே பங்கிருப்பதாகவே அரசாங்கம் பார்க்கிறது. தாண்டேவாடா ஆட்சியாளர் அலுவலகத்திலுள்ள ஒரு விளம்பர அட்டை எதிர்காலத்தை தெளிவாகக் காட்டுகிறது. சிப்பந்திகள் மற்றும் மெக்கானிக்குகளது புகைப்படங்களை ஏந்திக்கொண்டு உள்ளூர் தொழில்முறை பள்ளிக்கூடங்களுக்கு பழங்குடிகள் செல்வது போல அதில் காட்டப்பட்டிருக்கிறது. இக்கனவைதான் மண்ணின் மைந்தர்களுக்கு இந்த அரசாங்கம் விற்கிறது.

அதனால்தான் இதனை அவர்கள் மீதான அரசாங்கத்தின் மொழியியல் ரீதியான பராமுகம் என்கிறார் கோண்ட்வானா தர்ஷன் (Gondwana Darshan) எனும் பழங்குடி மாத இதழை நடத்தும் தாகூர் இரமேஸ் குஷ்ரோ. நேர்மைக்கு பதிலாக சம்பிரதாயமே அரசாங்கத்தின் செயல்பாடாக இருக்கிறது என்று மேலும் அவர் கூறினார்.


கட்டுரையாளர்: Debarshi Dasgupta
தமிழாக்கம்: சுகுமார்
நன்றி : தி வயர்

உண்மையில் பாசிசம் என்பது என்ன ?

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 3

டோக்ளியாட்டி

முன்னுரை

ங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள சொற்பொழிவுகள் பால்மிரோ – டோக்ளியாட்டி “எதிரிகள்” என்ற தலைப்பில் நிகழ்த்திய 15 பகுதிகளைக் கொண்ட உரையின் பிரதான பகுதியாகும். இது, 1935-ம் ஆண்டில் மாஸ்கோவில் உள்ள லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் நிகழ்த்தப்பட்டது. எட்டு உரைகளது மூலப் பிரதிகளின் நிழற்படப் பிரதிகளை மாஸ்கோவிலுள்ள மார்க்சிய – லெனினியக் கழகம் எர்னெஸ்டோ ரகியோனேரியிடம் அளித்தது. அவர்தான் தற்பொழுது டோக்ளியாட்டியின் தொகுப்பு நூல்களை எடிடோரி ரியூனிட்டிக்காக மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். இது 1970-ம் ஆண்டில் முதன் முறையாக புத்தக வடிவில் தோன்றியது.

அதற்குப் பின் மேலும் மூன்று உரைகள் – பாசிசம் குறித்து ஒன்றும், இத்தாலிய கம்யூனிஸ்டுகளின் இதர “எதிரிகள்” (சோசலிஸ்டுகள் மற்றும் குடியரசுவாதிகள், அராஜகவாதிகள்) – குறித்து இரண்டும் கிடைக்கப்பெற்று இத்தாலியில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தற்பொழுதைய தொகுப்பானது பாசிசம் குறித்தும், பாசிச அரசாங்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்துமான சொற்பொழிவுகளை மட்டுமே கொண்டுள்ளது. இந்தப் பொருள் குறித்து கம்யூனிஸ்டு அகிலத்தின் தத்துவார்த்த இதழுக்காக 1934-ம் ஆண்டில் டோக்ளியாட்டி எழுதிய ஒரு கட்டுரையும் பின் இணைப்பாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து உரைகளையும் விரிவாகக் குறிப்பெடுத்த மாணவரான கியுசெப்பே காடியின் குறிப்புகளிலிருந்து இந்த உரை தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் காடி, டோக்ளியாட்டியின் முதல் உரை குறித்த குறிப்பை அவருடைய ஒப்புதலைப் பெறுவதற்காக அவரிடம் அளித்தார். இந்தச் சொற்பொழிவுகள் அந்தப் பள்ளியில் பெரும் ஆர்வத்தைக் கிளர்த்தியதால் பள்ளியைச் சேர்ந்த இதர நாட்டு கட்சிகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் இதில் கலந்து கொண்டதாக மற்றொரு இத்தாலிய கம்யூனிஸ்டான ஸ்டீஃபனோ சியாப்பரெல்லி கூறுகிறார். தெள்ளத் தெளிவாக போதிக்கும் பாணியில் இந்த உரைகள் அமைந்திருக்கின்றன என்றால் இத்தாலிய மாணவர்களின் பின்னணியே அதற்குக் காரணம். கியுசெப்பே காடி கூறுவது போல “கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் தொழிலாளி – வர்க்க குடும்பத்திலிருந்து வந்தவர்கள், பாசிச சிறைகளிலிருந்து வெளி வந்தவர்கள், போதிய படிப்பு அனுபவம் இல்லாதவர்கள். இதனாலேயே எளிமையாகவும், சாத்தியமான அளவுக்கு அடி ஆரம்பத்திலிருந்தும் விளக்குவதற்கு டோக்ளியாட்டி தொடர்ந்து முயற்சித்தார். அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர் விளங்கும் முறையிலும், மெதுவாகவும் வகுப்புகளை நடத்தினார். இது என்னுடைய குறிப்பெடுக்கும் பணிக்கு மிகவும் உதவியாயிருந்தது.

இத்தாலிய பதிப்பில் தட்டச்சு தவறுகள், குறியீடுகள், இலக்கண முறைப்படி சில திருத்தங்கள் செய்தல் என்றளவுக்கு மட்டுமே மாற்றம் செய்யப்பட்டது. கோடிட்ட பகுதிகள் மூலக்குறிப்பில் அடிக்கோடிடப்பட்டுள்ளன. சொற்பொழிவுகளின் தலைப்புகளை இத்தாலியப் பதிப்பின் ஆசிரியர் எர்னெஸ்டோ ரகியோனேரி செய்துள்ளார். எண்ணிடப்பட்ட குறிப்புகள் யாவும் மொழியாக்கம் செய்தவரால் தரப்பட்டவையாகும்.”

– டேனியல் டிச்டர்.

உள்ளடக்கம்

விரிவுரை 1 : பாசிஸ்டு சர்வாதிகாரத்தின் அடிப்படை அம்சங்கள்
விரிவுரை 2 : பூர்ஷ்வாக்களின் புதுமாதிரியான கட்சி
விரிவுரை 3 : தேசிய பாசிஸ்டுக் கட்சி
விரிவுரை 4 : பாசிசத்தின் ராணுவ மற்றும் பிரச்சார அமைப்புகள்
விரிவுரை 5 : பாசிஸ்டுத் தொழிற்சங்கங்கள்
விரிவுரை 6 : டொபோலவோரோ
விரிவுரை 7 : கார்ப்பரேட்டிவிசம்
விரிவுரை 7 (தொடர்ச்சி) : கார்ப்பரேஷன்களின்பால் நமது கொள்கை
விரிவுரை  8 : கிராமப்புறங்களில் பாசிசத்தின் கொள்கை
பின் இணைப்பு
குறிப்புகள்

****

விரிவுரை 1 :

பாசிஸ்டு சர்வாதிகாரத்தின் அடிப்படை அம்சங்கள்

மது பாடத்தை துவக்குவதற்கு முன்னர் “பகைவர்கள்” என்ற பதத்தைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பதத்துக்கு உங்களில் சிலர் தவறான விளக்கத்தை அளிக்கக் கூடாதென்பதற்காக இதைச் சொல்கிறேன்; தவறான விளக்கமானது அரசியல் தவறுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

“பகைவர்கள்” என்று பேசும்பொழுது பாசிச, சமூக-ஜனநாயக மற்றும் கத்தோலிக்க அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள வெகுஜனங்களை நாம் சிந்தையில் கொண்டிருக்கவில்லை. நமது பகைவர்கள் பாசிச, சமூக-ஜனநாயகம் மற்றும் கத்தோலிக்க அமைப்புகளேயாகும். ஆனால், அந்த அமைப்புகளில் உள்ள மக்கள் நமது எதிரிகள் அல்ல. அவர்கள் உழைக்கும் வெகுஜனங்கள். அவர்களை நம் பக்கம் ஈர்ப்பதற்கு நாம் ஒவ்வொரு முயற்சியையும் செய்ய வேண்டும்.

இனி நமது விஷயத்திற்கு வருவோம். பாசிசம். பாசிசம் என்றால் என்ன? அது குறித்துக் கொடுக்கப்பட்டுள்ள மிக முழுமையான விளக்கம் என்ன?

பாசிசம் குறித்த மிக முழுமையான விளக்கமானது கம்யூனிஸ்டு அகிலத்தின் விரிவான நிர்வாகக் குழுவின் 13-வது கூட்டத்தில் கொடுக்கப்பட்டது. அது பின்வருமாறு:

“பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்தியவாதிகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்.”

பாசிசம் என்பது எப்பொழுதும் இந்த வழியில் விளக்கப்படுவதில்லை. மாறாக, வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு காலங்களில் பெரும்பாலும் தவறான விளக்கங்களே கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் பாசிசம் குறித்து நாம் தந்துள்ள மாறுபட்ட விளக்கங்களை ஆராய்வது சுவையாக இருக்கும். (இந்தப் பணியை நீங்களும் மேற்கொள்ள வேண்டுமென்று உங்களுக்கு ஆலோசனை தருகிறேன்).

போர்டிகா. (amadeo bordiga)

உதாரணத்திற்கு, நான்காவது உலக காங்கிரசில் பாசிசம் குறித்து கிளாரா ஜெட்கின் ஒரு உரை நிகழ்த்தினார். அது முற்றிலும் பாசிசத்தின் குட்டி பூர்ஷுவா குணாம்சத்தை சுட்டிக்காட்டுவதையே இலக்காகக் கொண்டிருந்தது. போர்டிகா1 உரையாற்றும் பொழுது பூர்ஷுவா ஜனநாயகத்திற்கும் பாசிச சர்வாதிகாரத்திற்குமிடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது என்று வலியுறுத்தினார்; அரசாங்கத்தின் இவ்விருவகைப்பட்ட வடிவங்களுக்கிடையே ஒரு வகையான மாறி மாறிவரும் சுழற்சி இருப்பதாகக் கூறி அவை இரண்டும் ஒன்றுதான் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார்.

இந்த உரைகள் இரண்டு அம்சங்களை இணைத்து, அவற்றினிடையே தொடர்பேற்படுத்தத் தவறிவிடுகின்றன. பூர்ஷுவா வர்க்கத்தின் சர்வாதிகாரம் மற்றும் குட்டி-பூர்ஷுவா வெகுஜன இயக்கம் என்பவையே அந்த இரண்டு அம்சங்கள்.

கோட்பாட்டு ரீதியிலான கண்ணோட்டத்தில் காணும் பொழுது இவ்விரு அம்சங்களுக்கிடையிலான இணைப்பை முற்றிலும் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இருந்தாலும், இந்த இணைப்பு புரிந்து கொள்ளப்பட வேண்டும். முதலாவது அம்சத்தை காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால், பாசிசத்தின் வரலாற்றுப்பூர்வ வளர்ச்சியின் பிரதான வழியையும், அதனுடைய வர்க்க உள்ளடக்கத்தையும் அவர் காண இயலாது என்பதோடு அதைக் காணத் தவறியும் விடுவார். இரண்டாவது அம்சத்தைக் காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால் அதனுடைய விளைவுகளை அவர் காணத் தவறிவிடுவார்.

சமூக ஜனநாயகம் செய்த தவறு இதுதான். சிறிது காலம் முன்னர் வரை, சமூக ஜனநாயகமானது பாசிசம் குறித்து நாம் கூறிய அனைத்தையும் மறுத்து, அதை மத்தியகால வடிவம் என்றும், முதலாளித்துவ சமூகத்தின் சீரழிவு என்றுமே கருதி வந்தது. உண்மையில் பாசிசம் கொண்டிருந்த குட்டி பூர்ஷுவா வெகுஜன தன்மையை முற்றிலும் அடிப்படையாகக் கொண்டே சமூக ஜனநாயகம் இத்தகைய நிர்ணயிப்புகளை மேற்கொண்டது.

ஆனால், வெகுஜன இயக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. சர்வாதிகாரம் என்பதுகூட ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால்தான், சுலபமாக செய்யக்கூடிய ஒரு தவறு குறித்து நான் உங்களை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும். இத்தாலிக்கு எது பொருந்துமோ அது இதர ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தும் என்றோ, பொருந்த வேண்டும் என்றோ நினைக்காதீர்கள். பாசிசமானது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும். வெவ்வேறு நாடுகளின் வெகுஜனப் பகுதியினர் வெவ்வேறு வடிவங்களிலான அமைப்பைக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் எந்தக் கால கட்டத்தைக் குறித்து நாம் பேசுகிறோம் என்பதையும் நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். பாசிசமானது ஒரே நாட்டில் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு நோக்குளை, கோணங்களை மேற்கொள்கிறது. எனவே, இரண்டு அம்சங்களை நாம் ஆராய வேண்டும். நாம் ஏற்கனவே பாசிசம் குறித்த மிக முழுமையான விளக்கத்தைக் கண்டோம்: “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்தியவாதிகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்.”

படிக்க:
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !
தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

இதன் பொருள் என்ன? இந்தக் கணத்தில், வரலாற்று வளர்ச்சியின் இந்த காலகட்டத்தில் நாம் ஏன் இந்த வடிவத்துடன் மோத நேரிடுகிறது? அதாவது, முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட பகுதிகளின் ஒளிவு மறைவற்ற சர்வாதிகாரத்துடன் ஏன் மோத நேரிடுகிறது?

ஒவ்வொருவரும் இந்தப் பிரச்சினை குறித்து தெளிவாக இல்லாததால் இது பற்றி பேச வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய விளக்கங்களால் மண்டை முழுவதும் நிரம்பியிருந்த ஒரு தோழரை நான் எதிர்கொள்ள நேரிட்டது; கிராம்ஷியின் கட்டுரைகளில் ஒன்றில் ஒவ்வொரு அரசும் ஒரு சர்வாதிகாரம்தான் என்று கூறப்பட்டிருப்பதைக் கண்டு அவர் வியப்படைந்தாராம்.

தெளிவாகக் கூறுவதென்றால் பூர்ஷுவா ஜனநாயகமும், சர்வாதிகாரமும் எதிரெதிரான நிலைகளில் நிறுத்தப்படக்கூடாது. ஒவ்வொரு ஜனநாயகமும் ஒரு சர்வாதிகாரம்தான்.

அடிக்குறிப்புகள் :

1. அமாடியோ போர்டிகா (1889-1971) பார்லிமெண்டரி முறைக்கு ஒரேயடியாக அவர் எதிர்ப்புத் தெரிவித்ததையும் தேர்தல்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அவர் வாதத்தையும், இடதுசாரி கம்யூனிஸம், ஒரு சிறுபிள்ளைக் கோளாறு என்ற நூலில் லெனின் கடுமையாக விமர்சித்தார். இத்தாலிய சோஷலிஸ்டுக் கட்சியில் இருந்த கம்யூனிஸ்டுப் பிரிவுக்கு தலைமை தாங்கியவர். அந்தப் பிரிவை சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியில் கொண்டு வந்து 1921 ஜனவரியில் இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியை  ஸ்தாபித்தார். இத்தாலிய சோஷலிசத்தின் மிகவும் மோசமான பாரம்பரியத்திலிருந்து ஆரோக்கியமான முறையில் மாறி, உறுதியான கட்சிக் கட்டுப்பாடு,  ஸ்தாபனம் என்ற லெனினிய கோட்பாட்டை அவர் தலைமையில் இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி வலியுறுத்தியது. இது விஷயங்களில் இத்தாலியக் கம்யூனிஸ்டுகளின் அக்கறை சில சமயங்களில் அளவுக்கு அதிகமாக இருந்ததால், இறுதியில் அவர்களது ஸ்தூலமான அரசியல் செயல்பாடு பாதிக்கப்பட்டது. மேலும், போர்டிகாவின் இடதுசாரிப் போக்கும் யாந்திரிகமாக கொச்சைப்படுத்தும் போக்கும், பாசிசம் பற்றியும் ரோம் படையெடுப்பை  அடுத்து ஏற்பட்ட கணிசமான மாற்றத்தையும் ஆழமான பரிசீலனை செய்வதிலிருந்து கட்சியைத் தடுத்தன. 1922 நவம்பரில், கம்யூனிஸ்டு அகிலத்தின் நாலாவது உலகக் காங்கிரஸில், ரோம் படையெடுப்பு  நிகழ்ந்த சில வாரங்களுக்குள்ளேயே, பூர்ஷுவா பிற்போக்கின் வரலாற்றில் பாசிசம் ஒரு குணாம்சரீதியான வளர்ச்சியல்ல என்றும், பாசிசம் அதிகாரத்தை கைப்பற்றியது பாட்டாளி வர்க்கத்தின் கடமையை சுலபமாக்குகிறது என்றும் உறுதிபடக் கூறினார். 1923 பிப்ரவரியில் போர்டிகா இத்தாலியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது அரசியலில் அதிருப்தி அடைந்து வந்த அகிலம் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு புதிய நிர்வாகக் குழுவை நியமித்தது. அதே ஆண்டு சிறையிலிருந்து குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டதும் இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் புதிய “மைய”த் தலைமையில் சேர்த்துக் கொள்வது என்ற அகிலத்தின் திட்டத்தினை போர்டிகா ஏற்க மறுத்தார். அதுவரையிலும் பின்னணியில் இருந்தவரும் அநேகமாகப் போர்டிகாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவருமான அண்டோனியோ கிராம்ஷி, படிப்படியாக கம்யூனிஸ்டுக் கட்சியின் புதிய தலைவர்களது உள்வட்ட மையத்தை 1924 மத்தியில் அமைத்தார். முடிவில் 1930-ல் கட்சியிலிருந்து போர்டிகா வெளியேற்றப்பட்டார். இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தோற்றம், போர்டிகாவிலிருந்து கிராம்ஷிக்கு மாற்றம், போர்டிகா, கிராம்ஷி டோக்ளியாட்டியும் மற்றவர்களும் முதலாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து தீர்மானமான ஆண்டுகளில் எடுத்த நிலை ஆகியவை  குறித்தும் வரலாற்று ரீதியான சம்பவங்கள் பற்றியும் சிறையிலிருந்து அன்டோனியோ கிராம்ஷி எழுதிய குறிப்புப் புத்தகங்களிலிருந்து சில பகுதிகள் என்ற நூலுக்கான முன்னுரையில் காணலாம். இதை மொழிபெயர்த்து வெளியிட்ட பதிப்பாசிரியர்கள் குவின்டின் கோயரும் ஜியோப்ரே நோவல் சுமித்தும் ஆவர் (இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ், நியூயார்க், 1971).

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

காலமும் மனிதனும் | பொருளாதாரம் கற்போம் – 20

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 20

காலமும் மனிதனும்
அ.அனிக்கின்

பொருளாதார நிகழ்வுப் போக்குகளில் இருக்கின்ற புறவயமான விதிகளை வாணிப ஊக்கக் கொள்கையினர் பார்க்கவில்லை. பொருளாதார நிகழ்வுப் போக்குகளில் ஒழுங்கை ஏற்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் ஆட்சியிலிருப்போரின் மனதை மட்டுமே பொறுத்திருக்கிறது என்று அவர்கள் கருதினார்கள். பொருளாதாரத்தில் இன்று நாம் ‘விருப்பச் செயல்முறை’ என்று சொல்வது வாணிப ஊக்கக் கொள்கையினரின் தனிச்சிறப்பான அம்சமாக இருந்தது.

பொருளாதாரத்தில் புறவயமான, புலனறிவுக்கு உட்பட்ட விதிகள் இருக்கின்றன என்ற கருத்தை முதன்முறையாக வெளியிட்டவர் பெட்டி; அவர் இந்த விதிகளை இயற்கையின் விதிகளுக்கு ஒப்பிட்டு இயற்கையான விதிகள் என்று பெயரிட்டார். அரசியல் பொருளாதாரம் ஒரு விஞ்ஞானமாக வளர்ச்சியடைவதில் முன் எடுத்து வைக்கப்பட்ட மாபெரும் காலடி என்றே இதைக் கூற வேண்டும்.

உற்பத்தி, பகிர்ந்தளிப்பு, பரிவர்த்தனை, செலாவணி போன்ற அடிப்படையான பொருளாதார நிகழ்வுப் போக்குகள் முறையான, பெருந்திரளான வடிவத்தைப் பெறுகின்றவரை, மனித உறவுகள் பண்ட -பணத் தன்மையைப் பெற்று மேலோங்குகிற வரை பொருளாதார விதி என்ற உண்மையான கருத்து ஏற்பட முடியாது.

பண்டங்களை வாங்குவதும் விற்பதும், உழைப்பை விலைக்குப் பெறுதல், நிலத்தைக் குத்தகைக்கு விடுதல், பணவியல் செலாவணி ஆகிய உறவுகள் ஒப்பளவில் முழுமையாக வளர்ச்சி அடைந்தாலொழிய, இவை அனைத்தும் புறவயமான விதிகளின் இயக்கத்தை வெளிப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு மக்கள் வரமுடியாது, வாணிப ஊக்கக் கொள்கையினர் பொருளாதார நடவடிக்கையின் ஒரு துறையில் அந்நிய வர்த்தகம் என்ற துறையில் மட்டுமே மிகவும் அதிகமான அக்கறை காட்டினர். ஆனால் பெட்டி இதற்கு மாறாக நடந்து கொண்டார்; அவர் அந்நிய வர்த்தகத்தைப் பற்றி எத்தகைய அக்கறையும் காட்டவில்லை. அவர் கூலி முன்னேற்றம், நில வாரம், இன்னும் வரி விதிப்பு முதலியவற்றை நிர்ணயிக்கின்ற, அடிக்கடி ஏற்படுகின்ற விதிகளுக்கு உட்பட்ட நிகழ்வுப் போக்குகளில் அக்கறை காட்டினார்.

17-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து அதிகமான வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடாக மாறியிருந்தது – இது அடிப்படையில் முதலாளித்துவ வளர்ச்சியில் பட்டறைத் தொழில் கட்டம்.  இந்தக் கட்டத்தில் அதன் வளர்ச்சி புதிய இயந்திரங்களை உபயோகிப்பதாலும் புதிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றுவதாலும் ஏற்பட்டதல்ல; பழைய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் முதலாளித்துவ வேலைப் பிரிவினையை விரிவாக்கியதன் மூலம் அதன் வளர்ச்சி சாத்தியமாயிற்று.

உதாரணமாக, ஒரு தொழிலாளி ஒரு குறிப்பிட்ட வேலையைச் சிறப்புச் செயலாகச் செய்கிற பொழுது அதில் அதிகமான திறமையைப் பெறுகிறார்; எனவே உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. அரசியல் பொருளாதாரத்தில் வேலைப் பிரிவினையை உயர்வாகப் பாராட்டுகின்ற வழக்கத்தைப் பெட்டி தொடங்கினார். அவர் கடிகாரம் செய்கின்ற உதாரணத்தின் மூலம் அதன் திறமையை விளக்கினார். ஆடம் ஸ்மித் அதை வன்மையாக ஆதரித்ததோடு அதையே தன்னுடைய முறையின் அடிப்படையாக ஆக்கினார்.

படிக்க:
முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்
♦ நூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …

பெட்டியின் காலத்தில் தொழில்துறை உற்பத்தி, விவசாய உற்பத்தி ஆகிய இரண்டுமே பெருமளவுக்கு முதலாளித்துவ அடிப்படையில் நடைபெற்று வந்தன. கைத் தொழில்களையும், சிறு அளவு விவசாயத்தையும் மூலதனத்துக்கு உட்படுத்துவது மெதுவாகவே நடைபெற்றது; பல்வேறு பிரிவுகளிலும் பகுதிகளிலும் அது வெவ்வேறு வழிகளில் நடைபெற்றது. விரிவான பகுதிகளில் முதலாளித்வத்துக்கு முந்திய உற்பத்தி வடிவங்கள் இன்னும் இருந்தன. ஆனால் இந்த வளர்ச்சியின் போக்கு அப்பொழுதே தோன்றிவிட்டது; இதை முதலில் கவனித்தவர்களில் பெட்டியும் ஒருவர்.

இங்கிலாந்தின் பொருளாதாரம், வர்த்தகத்தின் அடிப்படையாக இன்னும் இருந்து வந்த கம்பளித் தொழிலோடு சேர்ந்து நிலக்கரி வெட்டுதலும், இரும்பு, எஃகு தயாரிக்கும் தொழில்களும் வளர்ச்சியடைந்தன. 1680 -களில் 30 லட்சம் டன் நிலக்கரி வருடந்தோறும் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்கு முந்திய நூற்றாண்டின் மத்தியில் 2 லட்சம் டன் மட்டுமே வெட்டியெடுக்கப்பட்டது. (ஆனால் நிலக்கரி இன்னும் எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. நிலக்கரியைச் சுட்டுப் பயன்படுத்துகின்ற முறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே கரியை உபயோகித்து உருக்கு தயாரிக்கப்பட்டது. இதனால் காடுகள் அழிக்கப்பட்டன.) இந்தத் துறைகள் ஆரம்பத்திலிருந்தே முதலாளித்துவ ரீதியில் வளர்ச்சியடைந்தன.

நாட்டுப்புறங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இயற்கையான பொருளியல் அமைப்பும் சிறு அளவில் பண்ட உற்பத்தியும் செய்து வந்த சிறு நிலவுடைமையாளர்களின் வர்க்கம் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தது. அவர்களுடைய சிறு நிலவுடைமைகளும் கிராமப் பொது நிலமும் பெரிய நிலவுடைமையாளர்களிடம் மென்மேலும் குவிந்து கொண்டிருந்தன; அவர்கள் இந்த நிலங்களை விவசாயிகளிடம் குத்தகைக்கு விட்டனர். அதிகப் பணமுள்ள விவசாயிகள் கூலி உழைப்பைப் பயன்படுத்தி முதலாளித்துவ விவசாயத்தை நடத்தத் தொடங்கியிருந்தனர்.

பெட்டியும் ஒரு பெரிய நிலவுடைமையாளரே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனினும், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, அவர் தம்முடைய எழுத்துக்களில் நிலப்பிரபுக்களின் நலன்களை வெளிப்படுத்தவில்லை. லேவ் தல்ஸ்தோய் பற்றிக் கூறும் பொழுது, இலக்கியத்தில் சரியான விவசாயியின் படத்தை இந்தப் பிரபுவுக்கு முன்பாக யாரும் சித்திரிக்கவில்லை என்றார் லெனின், அதைப் போலவே அரசியல் பொருளாதாரத்தில் சரியான முதலாளியின் படத்தை இந்த நிலவுடைமையாளருக்கு முன்பாக, யாரும் சித்திரிக்கவில்லை.

முதலாளித்துவ வளர்ச்சியால் மட்டுமே “நாட்டின் செல்வத்தைப்” பெருக்க முடியும் என்பதைப் பெட்டி தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார், அவர் தமக்குச் சொந்தமான பண்ணைகளில் இந்தக் கருத்துக்களை ஓரளவுக்கு அமுலாக்கினார். தன்னுடைய நிலங்களைக் குத்தகைக்குவிடும் பொழுது விவசாயிகள் நிலத்தையும் அதில் பயிரிடும் முறைகளையும் அபிவிருத்தி செய்வார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிறகே அவர் குத்தகைக்கு விட்டார். தன்னுடைய பண்ணையில் ஆங்கிலக் கைவினைஞர்கள் குடியேற்றத்தையும் அவர் ஏற்படுத்தினார்.

ஒரு நபர் என்ற முறையில் பெட்டியிடம் ஏராளமான முரண்பாடுகள் இருந்தன. பாரபட்சமற்ற வரலாற்றாசிரியருடைய பார்வையில் இந்த மாபெரும் சிந்தனையாளர் சில சமயங்களில் சில்லறைத்தனமான வீர சாகஸக்காரராகவும், இன்னும் சில சமயங்களில் திருப்தியடையாத லாப வேட்டைக்காரர் மற்றும் விடாப்பிடியாக வழக்குத் தொடுப்பவராகவும், வேறு சமயங்களில் சூழ்ச்சிமிக்க அரசவையாளராகவும் தோன்றுகிறார்; சில சமயங்களில் வெகுளித்தனமான தற்பெருமைக்காரராகவும் தோன்றுகிறார்.

அவர் வாழ்க்கையைச் சுவைக்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசை கொண்டவர் என்பது அவருடைய தனிச் சிறப்பான அம்சமாகும். ஆனால் அந்த ஆசை அடைந்த வடிவங்கள் அவர் வாழ்ந்த காலத்திலிருந்த சமூக நிலைமைகளினாலும் சந்தர்ப்பங்களினாலும் ஏற்படுத்தப்பட்டன. ஒரு கோணத்தில் பார்த்தால் செல்வமும் அந்தஸ்தும் அவருடைய ஒரே நோக்கம் என்று கூற முடியாது; ஆனால் அவற்றின் மீது அவருக்கு ஒரு பெருந்தன்மையான அக்கறை இருந்தது. அந்தக் காலத்துக்கும் அன்றைய நிலைமைகளுக்கும் பொருத்தமான வகையில் அவர் காட்டிய சுறுசுறுப்பும் சூழ்ச்சியும் கபடமும் அவருக்கு உள்ளூற திருப்தியைக் கொடுத்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் செல்வமும் பட்டங்களும் அவருடைய வாழ்க்கையையும் சிந்தனைப் போக்கையும் பெருமளவில் பாதிக்கவில்லை.

படிக்க:
விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்
♦ எத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது !

லண்டனில் பெட்டியுடன் பழகிய ஜான் எவெலிங் என்பவர் 1675-ம் வருடத்துக்கான தமது குறிப்பில் பிக்காடில்லி என்ற பகுதியிலிருந்த பெட்டியின் மாளிகையில் நடைபெற்ற ஒரு ஆடம்பரமான விருந்தை வர்ணித்திருக்கிறார். “அவரைச் சாதாரணமான நிலைமைகளில் அறிந்த என் போன்றவர்கள் இப்பொழுது அவருடைய சிறப்பான மாளிகையில் அவரைப் பார்க்கும் பொழுது, இவ்வளவு செல்வத்தை அவர் எப்படித் திரட்டினார் என்று வியப்படைவார்கள். ஆனால் அங்கேயிருந்த விலையுயர்ந்த மரச்சாமான்களையும் கலைப் பொருள்களையும் அவர் அதிகமாக மதித்தார் என்று சொல்ல முடியாது; அவருடைய நாகரிகம் நிறைந்த மனைவிக்கு தரக்குறைவான அல்லது நேர்த்தியில்லாத பொருள்களைப் பிடிக்காது. அவர் தன்னைப் பற்றிக் கூட அலட்டிக் கொள்ளாதவர்; உயர்ந்த சமநிலை உடையவர். கடவுளே! எனக்கு இவையெல்லாம் எதற்கு? நான் வைக்கோற் படுக்கையில் இதே திருப்தியோடு உறங்கக் கூடியவன் என்று தான் கூறுவார். அவர் தன்னுடைய வசதிகளைப் பற்றி அதிகமாகக் கவலைப்படாதவர்…” (1)

அவருடைய வாழ்க்கை நெடுகிலும் அவருக்கு எதிரிகள் – பகிரங்கமான எதிரிகளும் இரகசியமான எதிரிகளும் அதிகமே. அவரைக் கண்டு பொறாமைப்பட்டவர்களும் அவருடைய அரசியல் எதிரிகளும் அவரை எதிர்த்தனர். அவர் காரமாக ஈவிரக்கமற்ற வகையில் ஏளனம் செய்வதில் சமர்த்தர். அவருடைய பேச்சினால் புண்பட்டவர்களும் அவருக்கு எதிரிகளானார்கள். சிலர் அவரைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டுமென்று திட்டம் போட்டார்கள்; வேறு சிலர் மறைமுகமாகச் சதி செய்தார்கள். ஒருநாள் டப்ளின் நகரத்தில் அவர் தெருவில் போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு கர்னல் இரண்டு  உதவியாளர்களோடு வந்து அவரைத் தாக்கினார். சர் வில்லியம் பெட்டி அவர்களை விரட்டியடித்தார். ஆனால் அந்தக் கர்னலின் கூர்மையான பிரம்பு முனை அவருடைய இடது கண்ணைக் குத்தி அநேகமாக அவரைக் குருடாக்கிவிட்டது. அந்தக் கர்னல் கொடுத்த அடி எளிதில் புண்படக் கூடிய இடத்தில் பட்டுவிட்டது, அதிலும் பெட்டிக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்வைக் கோளாறு இருந்தது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) The Diary of John Evelyn, London, 1959, p. 610.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

ஆரியருக்கு அடிப்பணியாதீர் ! அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 19


காட்சி : 26

இடம் : வீதி
உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், குடியானவன்.

பாலச்சந்திரப்பட்டர் : கேசவப்பட்டரே உம்முடைய பந்துக்களெல்லாம் வந்து விட்டாளோ?

கேசவப்பட்டர் : ஆகா! சகலரும். ஏறக்குறைய பத்தாயிரம் குடும்பங்கள் இருக்கும் போல இருக்கு சமாராதனையில்.

கேசவப்பட்டர் : பத்தாயிரத்து நூறுவோய்.

பாலச்சந்திரப்பட்டர் : சிவாஜி தர்ம தாதா அவன் நீடூழி காலம் வாழ வேண்டும்.

கேசவப்பட்டர் : அந்த தர்ம தாதா கெடக்கட்டும் ஒய். இப்படிப்பட்ட தர்ம தாதாக்களை நமக்குத் தருகிற நமது குல குருமார்களைப் போற்றும் ஒய். இவ்வளவு சுக போகத்தை நமக்குத் தரும் சாஸ்திரம் குலையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலே நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.

பாலச்சந்திரப்பட்டர் : காகப்பட்டர் இங்கு பிரவேசித்ததும் நமது குலத்துக்கே யோகம் பிறந்துவிட்டது. அடடா கேசவப்பட்டரே. இந்த மராட்டியா யுத்தத்திலே ஜெயித்தபோது, எவ்வளவு ஆர்ப்பரிச்சா தெரியுமா? இப்ப பொட்டிப் பாம்பாகி விட்டா. நாம் இப்போத்தான் தலை நிமிர்ந்து நடக்க முடியறது. நமது கெளரவம் காகப்பட்டரால் நிலைத்தது. அவரே நமது குல ரட்சகர்.

(குடியானவன் வருதல்)

கேசவப்பட்டர் : வாப்பா, வா!

குடியானவன் : கும்பிடுறேன் சாமி!

கேசவப்பட்டர் : ஊர் எவ்வளவு ஜெகஜோதியாயிருக்கு பார்த்தியோ?

பாலச்சந்திரப்பட்டர் : எங்கு பார்த்தாலும் வேத ஒலி , பிராமண சேவை. இப்படிப்பட்ட காட்சியைக் காணக் கொடுத்து வைத்தோமே..

குடியானவன் : மழையே காணுங்களே.

கேசவப்பட்டர் : நம்முடைய நாட்டிலே வந்திருக்கிற புண்ணிய புருஷாளைத் தரிசிச்சிண்டிருக்கா வர்ண பகவான். அவாள் சந்தோஷமா இருக்கச்சே , கண்ணீர் விடப்படாது பாரு.

குடியானவன்: சாமி என்ன கதை வேணுமானாலும் சொல்லுங்க. மழையில்லாத்தாலே வயக்காடெல்லாம் வெடிச்சப் போச்சு. மாடு கண்ணெல்லாம் எலும்பும் தோலுமாப்
போச்சுங்க.

பாலச்சந்திரப்பட்டர் : ஏன் ஒய் இவன் இந்த சாது சன்னியாசி கூட்டத்தைச் சேர்ந்தவனா இருப்பானோ?

குடியானவன் : ஏங்க, அவுங்க சொல்றதிலேயும் தப்பு ஒண்ணும் இல்லீங்களே இப்ப பாருங்க, பத்தாயிரக் கணக்கான பிராமணா போஜனத்துக்கு வந்திருக்காங்களே, இவுங்கள்ளாம் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தப்ப எங்க போனாங்கன்னு கேக்கறாரு பண்டாரத்தையா. நியாயந்தானுங்களே! அப்போ காணுங்களே இவுங்களெல்லாம். சமாராதனைன்னு சொன்ன உடனே, அடேங்கப்பா புத்திலேயிருந்து ஈசல் கிளம்புற மாதிரியும், பழத்தோட்டத்திலே இருந்து வெளவால் கிளம்புற மாதிரியும் வந்துட்டாங்களே.

பாலச்சந்திரப்பட்டர் : டே பிராமணாளைத் தூஷிக்காதேடா . இதிகாசத்தை, சாஸ்திரத்தைப் பழிக்காதே

குடியானவன் : என்னமோ போங்க… வரவர எங்களுக்கு இந்தப் புராணம் இதிகாசம் இதிலெல்லாம் சந்தேகம் வலுத்துக்கிட்டுத்தான் வருது.

பாலச்சந்திரப்பட்டர் : சந்தேகம் வலுக்கிறதா. அட, சர்வேஸ்வரா! இந்தப் பாபிகளுக்கு என்ன தண்டனை தருவாயோ?

கேசவப்பட்டர் : ஏண்டா விதண்டாவாதி ! விதண்டாவாதம் பேசிண்டிருக்கே அஞ்ஞானி.

குடியானவன் : அடே! நீங்கதான் பெரிய மெய்ஞானியா இருங்களேன். நாழியானாலும் ஆகட்டும். ஒரு சந்தேகம். இந்த அண்டசராசரங்களை எல்லாம் ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷன் தாங்குகிறதாதானே சொல்றீங்க..

கேசவப்பட்டர் : அதிலே உனக்கென்னடா சந்தேகம். ஏண்டா ஒரு வஸ்து நிக்கணும்னா, அதுக்கு ஒரு ஆதாரம் வேணுமோ, இல்லையோ?

குடியானவன் : ஆமாம் !

கேசவப்பட்டர் : அதுபோல இந்த அண்டத்தை ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷன் தாங்குகிறதா பெரியவா சொல்றா ! இதிலென்னடா தப்பு?

குடியானவன் : அப்படி வாங்க வழிக்கு. இப்ப நீங்க சொன்னீங்களே, இது நியாயமான பேச்சு. ஏனுங்க, அண்டத்தை ஆதிசேஷன் தாங்கினபோது, ஆதிசேஷனை எது தாங்குச்சி? அதுக்கும் ஒரு ஆதாரம் வேணும்ங்களே?

கேசவப்பட்டர் : போடா போ விதண்டாவாதி!

குடியானவன்: கோவிக்காம சொல்லுங்க. தெரியாம கேக்கறேன். நான் பட்டிக்காட்டான். நீங்கள்ளாம் எல்லாம் படிச்ச மெய்ஞானின்னு பேசுறீங்களே. எங்க சந்தேகத்தை போக்கணுமில்லே. அண்டத்த ஆதிசேஷன் தாங்குறாருன்னு சொல்றீங்க ஒரு சமயம். அப்புறம் சொல்றீங்க, பார்வதி சிறு விரல்லே மோதிரமா இருக்கிறார்ன்னு சொல்றீங்க. இன்னொரு சமயம் என்னடான்னா பார்க்கடலிலே பள்ளி கொண்டிருக்கார்னு சொல்றீங்க. அது எப்படிங்க முடியும்? ஒரே ஆதிசேஷன் பார்வதி விரல்லெ. மோதரமா இருக்காரு பரந்தாமனுக்குப் படுக்கையா இருக்காரு. இந்த அண்டத்தையும் தாங்கறார்ணா இது நம்பற சேதிங்களா? என்னமோ போங்க. ஒங்களுக்கே தெரியாது… எனக்கு எங்கே சொல்லப் போறீங்க?

♦ ♦ ♦

காட்சி : 27
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, காகப்பட்டர், மோகன், தளபதி, பட்டர்கள்.

காகப்பட்டர் : சிவாஜி அன்று சூத்திரனாகப் பிறப்பிக்கப்பட்டாய். ஆனால் ஆகம விதிப்படி இன்று நீ க்ஷத்திரியனாக்கப்பட்டாய். அரசாளும் தகுதி பெற்றாய், அந்தணரின் ஆசி பெற்றாய்.

மராட்டியப் பிரமுகர்களே! சாஸ்திரோத்தமாக செய்யப்பட்ட யாகாதி காரியங்களின் விசேஷ பலனால் சத்திரபதி சிவாஜி க்ஷத்திரியராகிவிட்டார். ஆரிய ஆசிர்வாதம் பெற்ற அவர், ஆண்டவனின் ஆதரவைப் பெற்று விட்டார். இனி அவரே உங்களுக்கு மன்னன்.

மன்னா! மன்னன் மக்களின் தலைவன்; மகான்கள் மன்னருக்குத் தலைவர். ஆண்டவன் மகானின் தோழன். இதுவே வேதாசாரம். வேதம் உள்ளளவும், கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் மராட்டிய மண்டலம் ஜெகஜோதியாய் விளங்கும். சிவாஜி இனியாகிலும் நீ திரவியத்தை கோட்டைக் கொத்தளங்கள் கட்டுவதற்கும் அகழி , அரண் அமைப்பதற்கும், ஆயுதங்களுக்கும் வீணாக்காமல் பகவத் பக்திக்கும், பிராமண சேவைக்கும் செலவிடு, உத்தமனே! உன் ராஜ்யம் சனாதன பூமியாக விளங்கட்டும். சர்வ மங்களம் உண்டாகட்டும்.

(ஆசிர்வதிக்கிறார். சிவாஜி வணங்க, மோகன் ஆவேசமாய் ஒடிவந்து)

மோகன் : மராட்டியமே, மண்டியிடாதே வீரமே வீழ்ச்சியுறாதே மராட்டிய மாவீரர்களே மன்னன் சிவாஜியை மாற்றான் முன் மண்டியிடச் செய்த கோழைகளானீர். கொடுமை, கொடுமை இது. அறிவுலகத்திலே அனைவரும் இதைக் கண்டித்தே பேசுவர். முடி நமது சிவாஜி மன்னனிடம், பிடி இந்த வேதம் ஓதியிடம்.

படிக்க:
தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

காகப்பட்டர் : யார் இந்த துஷ்டன்? போக்கிரித்தனமாகப் பேசுகிறான்.

மோகன் : போதும் நிறுத்தடா உன் மோசடிப் பேச்சை.

(சிவாஜி மோகன் கன்னத்தில் அடித்தல்)

வேந்தே! தாங்கள் மண்டியிட்ட போது உண்டான வேதனையை விட இது சற்றுக் குறைவாகத்தான் இருக்கிறது.

காகப்பட்டர் : சிவாஜி உன்னுடைய ஆட்சியிலே இப்படிப்பட்ட அவலட்சணங்கள் இருக்கவே கூடாது… எவ்வளவு போக்கிரித்தனமாகப் பேசுகிறான்.

மோகன் : நாலு ஜாதி அதில் பிராமணர் அடக்கி ஆளவும், மற்றவர்கள் அடிமையாகவும் பிறக்கின்றனர் என்ற கொள்கையை எதிர்ப்பதால் போக்கிரித்தனம்? ஆண்டவன் அருள்பெற அறநெறி தேவையே ஒழிய, ஆரியரின் காலைக் கழுவி, நீரைப் பருகுவது வழியல்ல என்று எடுத்துக் கூறுவதா போக்கிரித்தனம்? எது போக்கிரித்தனம்?

காகப்பட்டர் : ஏது , இவன் போக்கிரி மட்டுமில்லை ; விதண்டா வாதக்காரனாகவும், இருக்கிறானே! ஏ, பாபஸ்வரூபமே பிராமணோத்தமர்களை நிந்தனை செய்யாதே. மீளா நரகம் போவாய்.

மோகன் : நரகம் மேல். அங்கு நயவஞ்சகர் காலிலே நாடாள்வோர் வீழ்வார்கள் என்ற கதை இல்லை. மமதை பிடித்தவனே! உன் மனம் களிப்பது எனக்குத் தெரியும். மராட்டியரின் மாவீரத் தலைவனை மண்டியிடச் செய்து விட்டோமே என்ற செருக்குடன் இருக்கிறாய். ஆனால் …

காகப்பட்டர் : துஷ்டனே முன்னம் ஒரு நாள் மாபலி என்ற மன்னர், தன் முடி மீது பரமனின் அடிவைக்க இடமளித்தான். சிவாஜி மன்னன் புத்திமான், சனாதனி. ஆகவே, பிராமண பக்தியோடு இருக்கிறார். பண்டைப் பெருமையை நிலைநாட்டுகிறார்.

சிவாஜி : மோகன், இந்த சபையிலே இனித் துடுக்குத்தனத்துக்கு இடமளிக்கப் போவதில்லை .

மோகன் : அது தெரிகிறது மகராஜ்! இனி இங்கு வீரருக்கு வேலை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

காகப்பட்டர் : அடே, விஞ்ஞானி கேள்! வேத, புராண, சாஸ்திர, இதிகாசங்களுக்கு மேன்மையும், மகிமையும் அவைகளிலே நம்பிக்கையும் மக்கள் உள்ளத்திலே இருக்கும் மட்டும், உன் போன்ற வீரர்கள் கூவினாலும், கொக்கரித்தாலும், எம்மை அசைக்க முடியாது. வாளை வீசுவதாலேயே வெற்றி கிடைத்துவிடும் என்று எண்ணாதே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

மோகன் : காகப்பட்டர் மண்டியிடும் மன்னர்கள் மட்டுமே மாநிலத்தில் உள்ளனர் என்று எண்ணாதீர். மக்கள் மனமயக்கம் வெகு விரைவிலே தெளியப் போகிறது. அப்போது உங்கள் அட்டகாசம் அடியோடு ஒழியும். மாவீரர்களே! மன்னன் சிவாஜியின் சபையிலே வரம்பு மீறி பேசினேன் என்று என்னைத் தண்டிக்கட்டும். ஒரு வார்த்தை உங்களுக்கு. ஆரியருக்கு அடிப்பணியாதீர். அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர். அறமும் தழைக்காது. அரசும் நிலைக்காது. அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். ஆறு, பத்து, இருபது தலையுடன் ஆமை வராக முகமுடையான், அண்ணன் தம்பி மகனுடையான், அந்தப்புரத்திலே அறுபதினாயிரம் பேருடையான் என்று கூறி, கடவுளையே நிந்திக்கும் கயவர்கள் அவர்கள். அவர்களுடைய கபட வேடத்தை நம்பி மோசம் போகாதீர்.

சிவாஜி : மோகனா! தோழமையின் எல்லையையும் தாண்டி விட்டாய். நில்

தளபதி – 1 : இதுவரை மன்னர் முன் இப்படி எதிர்த்துப் பேசியவர் யாருமில்லை .

தளபதி – 2 : மகராஜ் சினங்கொண்டு சீரழிவாகப் பேசிய இச் சிறுமதியாளனைச் சிறையிலே அடையுங்கள்.

காகப்பட்டர் : துஷ்டன்.. துராத்மா.. வேத நிந்தகன்.. நாஸ்திகன்.
(மோகன் வாளை உருவ)

சிவாஜி : மோகன் வாளைக் கீழே போடு.

மோகன் : மகராஜ்! (வாளை போட)

சிவாஜி : அரச சபையை அவமதித்த உன்னை நமது மெய்ப் பாதுகாவலர் வேலையின்றும் நீக்கிவிட்டோம்.

மோகன் : மகராஜ் எனக்கா இந்தத் தண்டனை?

சிவாஜி : தண்டனையின் முழு விவரமும் கூறியாகவில்லை. நாளை சூரியோதயத்துக்குள் நீ தலைநகரைவிட்டுப் போய் விடவேண்டும்?

மோகன் : தேசப்பிரஷ்டமா?

சிவாஜி : அரச சமூகத்திற்கு நீ தகுதியற்றவன்! போ. (வீரர்கள் நெருங்க)
வீரர்களே ! விலகி நில்லுங்கள். அவன் போவான் ! சர்தார் !

(போகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

100 வருசமானாலும் இங்க பிஜேபி வர முடியாது – மக்கள் கருத்து | காணொளி

நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த தமிழக மக்களுக்குத் தேர்தல் முடிவுகள் மிகப்பெருமளவில் அதிர்ச்சியளிப்பதாகவே இருந்தன.

மோடி இந்தியாவில் வென்றதற்கும், தமிழகத்தில் பாஜக தோல்வியுற்றதற்கும் காரணம் என்னவென்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் ?

சென்னை கோயம்பேடு பகுதி சிறு வியாபாரிகள் மற்றும் பயணிகளுடன் வினவு செய்தியாளர்கள் நேர்காணல்..

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்கள்

மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !

மெரிக்க மான்சாண்டோ நிறுவனமானது (தற்போது ஜெர்மனியின் பேயர் நிறுவனத்திற்கு சொந்தமானது) மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை 1998 முதல் இந்தியாவில் விற்று வருகிறது. அந்த வருடத்தில் இருந்து பி.டி. காட்டன் உற்பத்தியில் ஒரு முழுமையான ஏகபோகத்தை நிறுவி உள்ளது. இந்திய பருத்தி உற்பத்தியில் 90 சதவீதம் – 11.8  மில்லியன் ஹெக்டரில் பி.டி. காட்டன் பயிரிடப்படுகிறது.

தற்போது மான்சாண்டோ நிறுவனமானது, மும்பையைச் சேர்ந்த மாஹைகோ என்ற விதை நிறுவனத்துடன் சரிவிகித பங்குடன் கூட்டு நிறுவனமாக மாஹைகோ மற்றும் மான்சாண்டோ ஹோல்டிங் (Mahyco and Monsanto Holding Pvt Ltd MMBL ) என்ற நிறுவனத்தின் பெயரில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்திய நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. அப்படி விற்பனை செய்யும்போது விதைகளுக்காக உரிமக் கட்டணம் அல்லது தொழில்நுட்பக் கட்டணம் என்ற பெயரில் ஒரு உரிமக் கட்டணத்தையும் விதிக்கிறது. (charges a licensing fee called ‘trait fee’, or technology fee).

நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி கண்காணிப்பு விசாரணை ஆணையமானது, தன் விசாரணை அறிக்கை மூலம் மான்சாண்டோ எவ்வாறு பி.டி. காட்டன் விதை விலை நிர்ணயிப்பில் பித்தலாட்டம் செய்து வருகிறது. என்று சி.சி.ஐ -க்கு The Competition Commission of India (CCI) தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் மாஹைகோ மற்றும் மான்சாண்டோ ஹோல்டிங் (MMBL) நிறுவனமானது பி.டி. காட்டன் தொழில்நுட்பத்திற்கான சந்தையில் நியாயமற்ற உரிம கட்டணத்தை, விதைகளுக்கு நிர்ணயிப்பதன் மூலம், தனது மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்துகிறது . மேலும் பி.டி. காட்டன் விதைகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக விலை நிர்ணயம் செய்யும் விலை நிர்ணய ஒப்பந்தங்களில் இந்நிறுவனம் நுழைகிறது.

விவசாய அமைச்சகம் மற்றும் நுசிவிடு என்ற நிறுவனமும் 2015-லேயே  மான்சாண்டோ குழுமத்திற்கு எதிராக பி.டி. காட்டன் தொழில்நுட்ப சந்தையில் அந்நிறுவனத்தின் மேலாதிக்க நிலையைப் குற்றம் சாட்டினார்கள். அதன் பின்னர்தான் விசாரணை தொடங்கியது. சி.சி.ஐ -யின் மூலம் வந்த விசாரணைக்காக மான்சாண்டோ டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

எகனாமிக்ஸ் டைம்ஸ், சி.சி.ஐ -யுடன் நடத்திய கலந்தாய்வில் உரிமம் கட்டணத்தை உயர்த்துவதானது, நேரடியாக விதைகளின்  சில்லறை விற்பனையை அதிகரிக்கும், அதன் மூலம் அந்நிறுவனமானது அதிக உபரியை இலாபமாகக் கொள்ளும். இந்த சுமை அனைத்தும் விதைகளை நேரடியாகக் கையாளும் விவசாயிகளின் தலையில்தான் விழும் என்கிறது.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : குத்தகை விவசாயிகளாகும் கார்ப்பரேட்டுகள் !
♦ குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !

விதைகளுக்கான விலை ஒழுங்குமுறை (Price Regulation) இல்லாத ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விதை உற்பத்தியாளர்களிடம் அதிக உரிமக் கட்டணத்தை தன் மேலாதிக்க நிலையைப் பயன்படுத்தி நிர்ணயம் செய்கிறது.

மான்சாண்டோ குழுமம், தனது விதைகளுக்கு ஒவ்வொரு இடங்களுலும் வெவ்வேறு விலைகளை  நிர்ணயம் செய்வதன் நோக்கம், வெறுமனே விதைக்கு விலை நிர்ணயிப்பது மட்டுமல்ல, தனது போட்டியாளர்களையும் சிதைக்கவேண்டும் என்பதுதான். இது ஒரு ஏகபோக நிறுவனம் மேற்கொள்ளும் மூன்றாம் தரமான  விலைநிர்ணயமாகும். இந்த விலைப் பாகுபாடு நுகர்வோரின் எந்த ஒரு மேம்பாட்டுக்கும் வழிவகுப்பது இல்லை. மேலும் நிலையான விலை ஒழுங்குமுறை உள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட தன் உரிமம் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

மான்சாண்டோ குழுமம்  உரிமக் கட்டணத்தை, விதை தொழில்நுட்பத்தின் அதிக செலவினங்களுக்காகவோ மற்றும் விதை தொழில்நுட்பத்தில் புதிய ஆராய்ச்சி அடிப்படையிலோ உயர்த்தவில்லை. மான்சாண்டோ குழுமமானது மிகவும் குறைவான செலவில்தான் விதைகளுக்கான உரிமம் பெறுகிறது என்று நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி கண்காணிப்பு விசாரணை அறிக்கை அம்பலபடுத்துகிறது.

மேலும், மான்சாண்டோ குழும  நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ஒரு நிறுவனம், மான்சாண்டோவின் பிற  போட்டி நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடும்போது தனக்கு (MMBL) முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது மான்சாண்டோ. இதன் மூலம் தன்னுடைய போட்டி நிறுவனங்களின் நுழைவைத் தடுக்கிறது என்று  அந்த அறிக்கை கூறுகிறது.

படிக்க:
விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம் !
♦ 4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !

இது குறித்து சி.சி.ஐ-யின் இயக்குனர் ஜெனரல் கூறுகையில், வணிகப் போட்டி சட்டத்திற்கு புறம்பாக, தன் துணை ஒப்பந்தம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தங்கள் சரக்குகள் அனைத்தையும் அழித்து விட வேண்டும் என்று தன் துணை ஒப்பந்ததாரர்களுக்கு மான்சாண்டோ நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளதாகக் கூறுகிறார் சி.சி.ஐ-யின் பொது இயக்குனர் .

மேலும் அவர் MMBL நிறுவனத்தின் இந்தக் கெடுபிடி, விதையின் தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை  இல்லாமல் ஆக்குவதும், விதைகளின் விலைகளை அதிகரித்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

பி.டி. பருத்தியின் காப்புரிமையைப் பெற்றிருப்பதன் மூலம் தங்கள் பங்குதாரர்கள் புதிய கலப்பின வகைகளைப் பயன்படுத்துவதைத் தவறு எனக் கூறுகிறது மான்சாண்டோ நிறுவனம். இந்த கலப்பினங்கள் பொதுச் சொத்தல்ல என்பதுதான் அதன் வாதம். இதன் மூலம் அது பருத்திக்கான தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பருத்தி என்ற பயிரையே, தான் இல்லாமல் மீண்டும் சாகுபடி செய்ய முடியாதவாறு பார்த்துக் கொள்கிறது. காலகாலத்திற்கும் விவசாயிகளை மட்டுமில்லாமல், உள்ளூர் நிறுவனங்களையும் தங்களையே சார்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உள்ளே கொண்டுவரப்பட்ட மான்சாண்டோ நிறுவனம், இன்று பருத்தி விதை சந்தையில் ஏகபோகமாக வளர்ந்து விவசாயிகளையும் பிற போட்டி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தி மெல்ல மெல்ல அவர்களைச் சாகடிக்கிறது.

பரணிதரன்


நன்றி: RT,  எக்னாமிக்ஸ் டைம்ஸ்

தள்ளி நின்றால் போதும் … தமிழ் வளர்ந்துவிடும் !

தள்ளி நின்றால் போதும்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
மீபத்தில் இக்வடோர் நாட்டுக்கு சென்று திரும்பிய நண்பர் ஒரு கதை கூறினார். அந்த நாட்டு அரச கரும மொழி ஸ்பானிஷ். அவர்களுடைய மக்கள் மொழியான குவெச்சா அழிந்து வருகிறது. அதை பேசுவோரும் குறைந்து விட்டார்கள். தென் அமெரிக்காவின் ஆதிவாசிகளான இன்கா இனத்தவர் பேசிய மொழி அது. அதை அழிவிலிருந்து காப்பாற்ற பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. இப்பொழுது மைக்ரோசொஃப்ட் நிறுவனம் குவெச்சா மொழி கம்ப்யூட்டரில் இடம் பெறும் தகுதி பெற்றுவிட்டது என அறிவித்திருக்கிறது.

ஒரு மொழியை பாவிக்காவிட்டால் அது அழிந்து போகும். தமிழ் நாட்டின் பிரபல கவி ஒருவர் தமிழை ஒன்றுமே செய்யத்தேவை இல்லை, அது தானாகவே வளரும் என்று சொல்லியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் ஆங்கிலம், ஹவாய் மொழியை நசுக்கி வருவதால் ஹவாய் மொழி பேசுபவர்கள் அருகிவிட்டார்கள். 1984-ல் இருந்து அரசாங்கம் தலையிட்டு ஹவாய் மொழியை மறுபடியும் உயிர்ப்பித்து வருகிறது.

மாதிரிப் படம்

வேல்ஸ் நாட்டில் ஆங்கிலத்துக்கும் வேல்ஸ் மொழிக்கும் சம அந்தஸ்து. அப்படியிருந்தும் வேல்ஸ் மொழி பேசுபவர்கள் 20 சதவீதமாக குறைந்துவிட்டார்கள். இங்கேயும் அரசாங்கம் விழித்துக்கொண்டு மேலும் மொழி அழிவதை தடுத்து வருகிறது. அவர்கள் ஒன்றுமே செய்யாமல் விட்டால் அந்த மொழிகள் கிட்டத்தட்ட ஒழிந்தே போயிருக்கும். நூறு வருடங்களுக்கு முன்னர் ஹீப்ரு மொழி, எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. இன்று ஏழு மில்லியன் மக்கள் அதை பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். 1948 -ல் அவர்களுக்கு ஒரு நாடு கிடைத்து ஹீப்ரு மொழி புதுப்பிக்கப்பட்டது. அந்த நாடு கிடைத்திருக்காவிட்டால் அவர்கள் மொழி அழிந்துபோயிருக்கும்.

சமீபத்தில் ஒரு தமிழ் நாட்டுக்காரரை சந்தித்தேன். அவர் ஆரம்பத்திலிருந்து தமிழ்நாட்டிலேயே படித்து பல்கலைக்கழக படிப்பை முடித்து மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர். தமிழ் தடக்கி தடக்கித்தான் பேசுகிறார். அவருக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியாது. அவர் சொன்னார் தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமலே முழுப்படிப்பையும் படித்து முடிக்கலாம் என்று.

படிக்க:
முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி
♦ காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

இது எப்படி சாத்தியமாகும்? ஸ்பெயின் நாட்டில் ஸ்பானிஷ் மொழி தெரியாமல் படிப்பை முடிக்க முடியுமா? பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு தெரியாமல் படிப்பை முடிக்கமுடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் இது சாத்தியம் என்று சொல்கிறார்கள். கனடாவில்கூட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு தமிழ் பாடத்தில் கிடைத்த மதிப்பெண்களை அவர்களுடைய தகைமையை தீர்மானிப்பதற்கு கணக்கில் காட்டலாம். இது நம்புவதற்கு கடினமானதாகத்தான் இருக்கிறது.

கனடா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களின் மொழிகளை வளர்த்து ஊக்குவிப்பதற்கு கனடிய அரசு உதவி செய்கிறது. இம்முறை விஜயதசமியின் போது நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் ஏடு துவக்கி தமிழ் கற்றுக்கொண்டார்கள். வரிசையாக நின்று சுட்டுவிரலால் அரிசியிலே எழுதினார்கள். ஆனால் ஒருவர் தன் மகளுக்கு கணினியில் தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்தார். அந்தச் சிறுமி வெகுவிரைவிலேயே கணினியில் பல வார்த்தைகளை தமிழில் எழுதினாள். கம்ப்யூட்டரில் தமிழ் படிப்பது மிகச் சுலபம். மூன்று மாதத்தில் 2000 வார்த்தைகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம். வீரகேசரி, தினகரன் பத்திரிகைகள் படிக்குமளவுக்கு தமிழ் அறிவு பெறலாம், மீதியை அவர்களாகவே கற்றுக்கொள்ளலாம். இப்படியான வசதிகள் இன்று வந்துவிட்டன.

’சமீபத்தில் ஒரு தமிழ் நாட்டுக்காரரை சந்தித்தேன். அவர் ஆரம்பத்திலிருந்து தமிழ்நாட்டிலேயே படித்து பல்கலைக் கழக படிப்பை முடித்து மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர். தமிழ் தடக்கி தடக்கித்தான் பேசுகிறார். அவருக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியாது.’

முப்பது வருடங்களாக ஒரே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் அடுத்த தலைமுறையில் தமிழ் வாழுமா? இவர்களுக்கு ஒரே கதையைத்தான் நான் பதிலாகச் சொல்கிறேன். ஒரு காலத்தில் மிருகண்டு முனிவர் வாழ்ந்தார். மணமுடித்து பல வருடம் ஆகியும் அவருக்கு பிள்ளை இல்லை. கடவுளை நோக்கி தவம் செய்யவும் அவர் தோன்றி ஒரு கேள்வி கேட்டார். ‘ உமக்கு 100 வயது வாழும் சாதாரண புதல்வன் வேண்டுமா அல்லது உலகுள்ளவரை பெருமை சேர்க்கக்கூடிய, 16 வயது மட்டுமே உயிர் வாழும் பிள்ளை வேண்டுமா?’ மிருகண்டு முனிவர் யோசிக்காமல் 16 வயது என்று சொன்னார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயர் என்று பெயர் சூட்டினார். மீதிக் கதை எல்லோருக்கும் தெரியும்.

புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் இன்று பத்து லட்சத்துக்கும் மேல் உலகமெங்கும் வாழ்கின்றனர். கனடாவில் மாத்திரம் மூன்று லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். நூறு வார்த்தைகள் தெரிந்தால் அன்றாட தேவைக்கு தமிழ் பேசி இவர்கள் வாழ்க்கையை சமாளிக்கலாம். அதனால் என்ன பெருமை? நூறு வார்த்தைகள் கற்கும் தமிழர் வேண்டுமா அல்லது தமிழில் மேல்கல்வி கற்கும் புலமைபெற்றவர் வேண்டுமா?

வருடாவருடம் ரொறொன்ரோவில் தமிழியல் மாநாடு நடக்கிறது. இந்த வருடம் நடந்த ஐந்தாவது மாநாட்டில் பல நாடுகளிலிருந்து படைப்பாளிகளும், கல்வியாளர்களும், 50 – 60 மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

நுழைவு இலவசம் அல்ல; முன்கூட்டியே பதிவுசெய்து கட்டணம் கட்டியாகவேண்டும். அப்படியிருந்தும் பல மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. தானாக விரும்பி தமிழ் படிக்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புலம் பெயர்ந்த தமிழர்களில் எதிர்காலத்தில் குறைந்தது ஆயிரத்துக்கு ஒருவர் தமிழை உயர் பாடமாக எடுத்து முனைவர் பட்டம் வரை படிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் தமிழ் ஆராய்ச்சியில் இறங்குவார்கள், உயர்ந்த இலக்கியங்கள் படைப்பார்கள். தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் ஃபிரான்ஸிலே சிறுவர் சிறுமியருக்கான தமிழ் கல்வித்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதை இன்று உலகத்து பல நாட்டு தமிழர்களும் பயன்படுத்துகிறார்கள். மதுரைத் திட்டம், நூலகத் திட்டம் மூலமாக ஆயிரக்கணக்கான நூல்கள் கணினி வழியாக இலவசமாக உலகம் முழுவதும் படிக்கக் கிடைக்கின்றன. தமிழ் விக்கிபீடியாவில் இன்றைய தேதியில் 22,645 கட்டுரைகள் ஏறிவிட்டன. தமிழ் விக்சனரியில் 1,15,000 வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றிற்காக எத்தனையோ புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவுசெய்து மௌனமாக உழைக்கிறார்கள். அவர்களைப்பற்றி வெளியுலகம் அறிவதே இல்லை.

படிக்க:
என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்
♦ பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

ஈழத்து பூராடனார் என்ற பெரும் தமிழ் அறிஞர் கனடாவில் வாழ்கிறார். இதுவரை 250 தமிழ் நூல்கள் எழுதியிருக்கிறார். தமிழில் கணினியில் 1986-ல் அச்சடித்து முதல் வெளியான புத்தகம் அவருடையதுதான். அதன் பெயர் ‘பெத்தலேகம் கலம்பகம்’. அந்த நூலை அச்சடித்த தமிழ் எழுத்துருவை கணினியில் உருவாக்கியதும் அவர்தான். ஹோமரின் ஒடிசி, இலியட் ஆகிய காவியங்களை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 48 ஆதிக்கிரேக்க நாடகங்களை மொழியாக்கம் செய்து 14 புத்தகங்களாக பதிப்பித்திருக்கிறார். ஒரு பல்கலைக் கழகம் செய்யவேண்டிய வேலையை தனியொருவராக செய்தவரை பலருக்கு தெரியாது. இவருக்கு செவ்வியல் மாநாட்டுக்கு அழைப்பு இல்லை.

ஈழத்து பூராடனார்

கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத்தோட்டம் பத்து வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்டது. கனடிய அரசு இதை charitable organization ஆக அங்கீகரித்திருக்கிறது. ரொறொன்ரோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறப்பு இலக்கிய உரைகளை தொடர்ந்து ஏற்பாடு செய்கிறது. வருடா வருடம் இலக்கியத் தோட்டத்தின் சர்வதேச நடுவர்கள் உலகத்து சிறந்த தமிழ் படைப்பாளிகளை அடையாளம் கண்டு பரிசு கொடுத்து கௌரவிக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும் பாய்ச்சல்களை சத்தமில்லாமல் நிகழ்த்துகிறார்கள். தமிழ் கணிமைத்துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு பெரும் தொகை முதலீடு செய்யப்படுகிறது. ஒலியில் இருந்து தமிழ் எழுத்துருவுக்கு மாற்றும் திட்டத்தில் தன்னார்வத் தொண்டர்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள். தமிழ்நாட்டு கவி சொன்னதில் பாதி உண்மை இருக்கத்தான் செய்கிறது. கிராமத்திலே ஒரு பழமொழி உண்டு. ‘தானும் செய்யமாட்டான், தள்ளியும் நிற்கமாட்டான்.’ தமிழ்நாடு ஒன்றுமே செய்யவேண்டாம். தள்ளி நின்றால் போதும், தமிழ் வளர்ந்துவிடும்.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

நூல் அறிமுகம் : தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளைத் திறம்பட வேகமாக முடித்து வைக்கவும், வனங்கள் மற்றும் இதர இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சார்ந்த சட்ட உரிமைகளை அமல்படுத்தவும், சுற்றுச்சூழல் தொடர்பான அல்லது அதனைச் சார்ந்த விவகாரங்களைக் கையாளவும், அவற்றால் மனிதர்களுக்கும் மற்றும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க இந்தச் சட்டம் வழி வகை செய்யும்.

ஏனென்றால், ‘ஐக்கிய நாடுகள் அவை’ சார்பில் 1972 -ம் ஆண்டு, ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழல் (Human environment) மாநாட்டில் இந்தியாவும் கலந்துகொண்டு, மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்பாட்டுக்கு சரியான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒப்புக்கொண்டுள்ளது.

ஏனென்றால், 1992-ம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியாவும் கலந்துகொண்டது. மாசுக்கட்டுப்பாடு மற்றும் இதர சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புறுதி மற்றும் இழப்பீடு கோருவதற்கு வேண்டிய தேசிய அளவிலான சட்டங்களை உருவாக்குதல் மற்றும் அவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்து, தீர்வு காணத் தேவையான நீதித்துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த நடைமுறைகளை உருவாக்கித் தர வேண்டும் என அதில் கலந்துகொண்ட நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

ஏனென்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ல் வாழ்வதற்கான உரிமை என்பதில் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் உரிமையும் அடங்கும் என்று இந்திய நீதித்துறை அங்கீகரித்துள்ளது.

ஏனென்றால், மேற்கண்ட கருத்தரங்குகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கு இதுவே சரியென்று கருதுவதாலும், சுற்றுச்சூழல் தொடர்பான பல்வகைப்பட்ட பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டும், “தேசிய பசுமைத் தீர்ப்பாயம்” ஒன்று ஏற்படுத்த வேண்டியுள்ளது.

இந்திய குடியரசின் 61-வது ஆண்டில், நாடாளுமன்றத்தில் கீழ்க்கண்டவாறு சட்டம் இயற்றப்பட்டது

குறிக்கோள்கள் மற்றும் காரணங்கள் :  கடந்த சில ஆண்டுகளில், தொழில் துறை, உள்கட்டமைப்பு  மற்றும் போக்குவரத்துத் துறைகளில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் காரணமாகவும், வேகமான நகரமயமாதலாலும் நம்முடைய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது புதிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களிலும், இதர அதிகார அமைப்புகளின் (Authorities) முன்பும் சுற்றுச்சூழல் சார்ந்த வழக்குகள் கணிசமான அளவு நிலுவையில் உள்ளன. ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளின் காரணமாக, மனிதனின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்டுள்ள அபாயம், கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

1972 -ம் ஆண்டு, ஸ்டாக்ஹோமில் நடைபெற்று மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழல் (human environment) தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியாவும் கலந்துகொண்டது. மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கு சரியான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்று அம்மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொண்டது. மாசுக்கட்டுப்பாடு மற்றும் இதர சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புறுதி மற்றும் இழப்பீடு கோருவதற்கு வேண்டிய தேசிய அளவிலான சட்டங்களை உருவாக்குதல் மற்றும் அவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்து, தீர்வு காணத் தேவையான நீதித்துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த நடைமுறைகளை உருவாக்கித் தரவேண்டும் என அம்மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 28-ல் வாழ்வதற்கான உரிமை என்பதில் நலவாழ்வுக்கான சுற்றுச்சூழல் உரிமையும் அடங்கும் என்று இந்திய நீதித்துறை அங்கீகரித்துள்ளது.

ஆபத்து நிறைந்த பொருட்களைக் கையாளும் போது ஏற்படும் விபத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதை முழுமையாக பொறுப்புறுதி செய்யும் வகையில் தேசிய சுற்றுச் சூழல் தீர்ப்பாயச் சட்டம், 1995 கொண்டுவரப்பட்டது. அதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும்போது, நபர்களுக்கோ, சொத்துக்கோ மற்றும் சுற்றுச்சூழலுக்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கும் வகையில், வழக்குகளை விரைவாகவும், திறம்படவும் முடிக்கும் வகையில் தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தை நிறுவவும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. என்றாலும், குறைந்த அளவே அதிகார வரம்பு பெற்றிருந்த, தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை.

சுற்றுச் சூழல் (பாதுகாப்புச்) சட்டம், 1986-ன் கீழ்வரும் பாதுகாப்பு நடைமுறைகளின்படி செயல்படும் தொழிற்சாலைகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் உத்திகளையோ அல்லது பலதரப்பட்ட தொழிற்சாலைகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் உற்பத்திகளை மேற்கொள்வதற்கோ அல்லது மேற்ளொள்ள இயலாமல் போவது தொடர்பாகவோ விதிக்கப்படும் கட்டுப்பாட்டு எல்லைகள் குறித்து, மேல்முறையீடு செய்வதற்காக, தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு ஆணையச் சட்டம், 1997-ம் ஆண்டு இயற்றப்பட்டு, தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு ஆணையத்தின் விசாரணை அதிகார வரம்புகள் வரையறுக்கப்பட்டவையாக இருந்ததால், அதற்கு குறைந்த அளவே பணிகள் இருந்தன.

படிக்க:
பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன ?
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !

… பலவகைப்பட்ட பிரச்சினைகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் வழக்குகளை கையாளச் சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவது அசியமானதாகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான சட்டப்பூர்வ உரிமைகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனங்கள் பாதுகாப்பு மற்றும் இதர இயற்கை வளங்கள் சார்ந்த உரிமையில் வழக்குகளை வேகமாகவும், திறம்படவும் முடித்து வைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான சட்டத்தை வடிவமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. (நூலிலிருந்து பக்.3-5)

தேசிய பசுமைத் தீர்ப்பாயச்சட்டம் பற்றிய அறிமுகம், அதன் வரையறைகள்; தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமையும் விதம் குறித்து; அதன் தலைவர்கள் நீதித்துறை சார் உறுப்பினர் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர்களுக்கான தகுதிகள்; அவர்களது நியமனம் குறித்த வரையறை; தீர்ப்பாயத்தின் விசாரணை வரம்பு, அதிகாரங்கள் மற்றும் விசாரணைகள்; தீர்ப்பாயத்தின் நடைமுறை மற்றும் அதிகாரங்கள் உள்ளிட்டவை தனித்தலைப்புகளில் விளக்கப்பட்டிருக்கிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை பற்றிய சட்டரீதியான புரிதலை ஏற்படுத்துகிறது இச்சிறுநூல்.

நூல் : தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010
தமிழ் மொழியாக்கம் : ஜெய. கார்த்திகேயன்

வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்,
73, சாய் லட்சுமி குடியிருப்பு, குமரன் நகர், இரண்டாவது பிரதான சாலை, சின்மயா நகர், விருகம்பாக்கம், சென்னை – 600 092.
தொலைபேசி எண்: 90949 90900.
மின்னஞ்சல் : info@poovulagu.org

பக்கங்கள்: 56
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க : marinabooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

நாளை குழந்தைகளை பைகள் இல்லாமல் கூட்டி வாருங்கள் !

0

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 10

அமனஷ்வீலி

முதல் நாளின் கடைசிப் பாடவேளை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

குழந்தைகள் தாங்கள் விருப்பப்பட்டதை வரைந்த தாள்களைத் தருகின்றனர். தங்கள் பெயர், குடும்பப் பெயர், ஏதாவது தெரிந்த வார்த்தைகள், எழுத்துகள், எண்கள் முதலியவற்றையும் எழுதும்படி நான் கேட்டுக் கொண்டேன். இவற்றை எல்லாம் நான் பின்னால் பார்ப்பேன்.

முதல் பள்ளி நாளைப் பற்றிய கருத்துக்கள் இப்பொழுது கிடைத்த பின், நான் மிக முக்கியமானதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது, அவர்களின் வாழ்க்கையில் முழு மாற்றம் ஏற்பட்டுள்ளது. “குழந்தைகளே, உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் என்ன முக்கிய நிகழ்ச்சி நடந்துள்ளது” என்ற கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? ”நாங்கள் பள்ளிக்குச் சென்றோம்!” “நாங்கள் பள்ளி மாணவர்களானோம்!” “நாங்கள் படிக்க ஆரம்பித்தோம்!” என்று அனேகமாக அவர்கள் பதில் சொல்வார்கள்.

நான் இந்தக் கேள்வியைப் பற்றி, சரியாகச் சொன்னால், குழந்தைகளிடமிருந்து எப்படிப்பட்ட பதில் கிடைத்தால், அதை ஆதாரமாகக் கொண்டு அவர்களை உலகை அறியும் போக்கினுள் மேன்மேலும் ஆழமாக இட்டுச் செல்லமுடியும் என்று நிறைய சிந்தித்தேன்.

முதல் கேள்விக்குப் பின், இன்னொரு முடிவான கேள்வியைக் கேட்பேன்: “பள்ளியில் எப்படிப்பட்ட விஷயங்கள் உங்களை எதிர்நோக்கியுள்ளன?”

இந்த இரண்டு கேள்விகளும் ஒன்றோடொன்று தர்க்க ரீதியாகத் தொடர்புடையவை என்று எனக்குப்பட்டது. இரண்டாவது கேள்வியைக் கேட்பதற்கான அடித்தளத்தை முதல் கேள்வி தயார்படுத்துகிறது.

வரையப்பட்ட தாள்கள் ஒன்றுதிரட்டப்பட்டு விட்டன. குழந்தைகள் என் கண்களைப் பார்க்கின்றனர்.

”குழந்தைகளே, உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்று என்ன முக்கிய சம்பவம் நடந்தது?”

பதில்கள் என்னை பிரமிக்க வைத்தன. “எங்கள் வீட்டை இடித்தார்கள்!” “எங்கள் வீட்டின் பின் கார் எரிந்தது!” “எங்கள் தெருவில் விபத்து நடந்தது!” “கார் ஒரு ஆள் மீது மோதியது!” “என் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை!” “எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இறந்தார்!” “கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன!” “எங்கள் தண்ணீர்க் குழாய் உடைந்தது!”

“என் தாத்தாவை மருத்துவமனையில் சேர்த்தார்கள்!..”

”என்ன இது? குழந்தைகள் என்னை ஏமாற்றியிருக்க முடியாது.” நான் கேள்வியை சரியாகக் கேட்கவில்லையா என்ன? அல்லது, தன் வீட்டை இடித்ததாக முதலில் பதில் சொன்னவனை அடுத்து கண் மூடித்தனமாக, ஆட்டு மந்தையைப் போல் நடந்து கொண்டார்களா? எரிந்தது, மோதியது, சாவு போன்ற சோக நிகழ்ச்சிகள் மட்டும் ஏன் எல்லோர் கவனத்திலும் முன்வந்தன?

நான் எதிர்பார்த்தபடி பதில்கள் வரவில்லை என்று தெரிந்ததுமே ஒரு வேளை நான் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமோ? “என்ன நீங்கள் இப்படிக் கேட்கின்றீர்கள்? நாங்களனைவரும் பள்ளிக்கு வந்தது அல்லவா எங்கள் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சி” என்று யாராவது ஒருவன் எழுந்து சொல்லுவான் என்று நான் நம்பினேன்.

ஓ, கேள்வியே! நீ ஆசிரியருக்கு ஒரு முட்டுக்கட்டை!“ இவையெல்லாம் வருத்தம் தரத்தக்கவைதான், குழந்தைகளே. ஆனால் நான் இதைப் பற்றிக் கேட்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் என்ன முக்கியமான, மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்தது? நன்றாக யோசித்துப் பாருங்கள்.”

குழந்தைகளுக்கோ யோசிக்கவே விருப்பமில்லை. அவர்கள் பதில் சொல்லத் தயார். நான் காத்துக் கொண்டிருப்பதைச் சொல்ல மாட்டார்களோ! அப்படியேதான் நடந்தது.

“எங்களுக்குப் புது வீடு கிடைத்துள்ளது!”

“என்னை ஞாயிற்றுக்கிழமை சர்க்கசிற்குக் கூட்டிச் செல்வதாக அம்மா சொன்னாள்!”

“நாங்கள் பியானோ வாங்கினோம்!”

“நேற்று என் அப்பா வேலைப் பயணத்திலிருந்து திரும்பினார்!”

“கிராமத்திலிருந்து எங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்துள்ளனர்!”

“என் நாய் திரும்பி வந்தது!”

“என் தாத்தா நேற்று மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தார்!”

“இன்று எனக்கு சைக்கிள் வாங்கித் தருவார்கள்!”

”என் அம்மாவின் தலையிலிருந்து கட்டைப் பிரித்து விட்டனர், காயம் தெரியவில்லை!”

”என்ன இது? குழந்தைகள் என்னை ஏமாற்றியிருக்க முடியாது.” நான் கேள்வியை சரியாகக் கேட்கவில்லையா என்ன? … எரிந்தது, மோதியது, சாவு போன்ற சோக நிகழ்ச்சிகள் மட்டும் ஏன் எல்லோர் கவனத்திலும் முன்வந்தன?

என்ன செய்வது! இவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் எனக்குத் தம் பாடத்தைச் சொல்லித் தந்தனர், நானும் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம், குழந்தைகளுக்கு எது மகிழ்ச்சி தருகிறது, எது வருத்தம் தருகிறது என்று எனக்கு ஓரளவு தெரியும். ஆசிரியரின் கேள்விகளுக்கான குழந்தைகளுடைய பதில்களின் துல்லியம், விசயத்தின் தர்க்கத்தை விட குழந்தையின் அனுபவத்தின் தர்க்கத்தை அதிகமாகச் சார்ந்துள்ளது என்ற ஒரு முக்கியமான முடிவிற்கு நான் வருகிறேன். தம் வாழ்க்கையில் என்ன முக்கிய, மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றன என்று குழந்தைகள் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கையில் நான் என் குறிப்பேட்டில் ஒரு ‘முதுமொழியை’ எழுதுகிறேன். இதை இனி மேல் பின்பற்றுவேன்:

குழந்தைகளை நோக்கி ஆசிரியர் கேட்கும் கேள்வி என்பது முறையியலுக்கு மட்டுமின்றி ஆசிரியரியல் முழுவதற்குமே ஒரு ஜீவ அணுவாகும். இதை நுண்ணோக்கி ஆடியின் கீழ் பார்த்தால் அதில் கல்வி போதிக்கும் முழு நிகழ்ச்சிப் போக்கு மற்றும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு முறைகளின் தன்மை ஆகியவற்றின் போக்கு முழுவதையும் அறிந்துணரலாம்; இதில் ஆசிரியரையே கூட அறிந்துணரலாம். ஏனெனில், கேள்வி என்பது அவருடைய ஆசிரியர் திறமையின் வெளிப்பாடாகும்.

“உங்களிடம் இவ்வளவு மகிழ்ச்சியான செய்திகள் உள்ளனவா! மிக்க நன்று! சரி, இப்போது நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள்?”

“பள்ளியில்.”

படிக்க:
பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி
மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !

“நல்ல, கூட்டிசையான பதில்! நன்றி, குழந்தைகளே! பள்ளியில் உங்களை என்ன விஷயங்கள் எதிர்நோக்கியுள்ளன என்று சொல்லுங்களேன்.”

”சுவாரசியமான விஷயங்கள்!” “பெரிய, மிகப் பெரிய விஷயங்கள்!” “தயவு செய்து திரும்பச் சொல்லுங்கள்!”

“மிகப் பெரிய விஷயங்கள் எம்மை எதிர்நோக்கியுள்ளன!”

எளிய, தெளிவான பதில்! இதே போன்ற உற்சாகத்துடனும் காரிய முனைப்புடனும் ஒரு சில ஆண்டுகட்கு முன் எனது ஆறு வயது மாணவர்களில் ஒருவன் கூறிய அதே வார்த்தைகளை நான் மீண்டும் கேட்டேன்….

நாங்கள் படிகளின் வழியே மாடியிலிருந்து கீழே இறங்கி வருகின்றோம். பெற்றோர்கள் வாயிலருகே எங்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

“நாளை குழந்தைகளை பைகள் இல்லாமல் கூட்டி வாருங்கள்!”

“புத்தகங்கள், மற்ற பொருட்கள் இல்லாமலா? வியப்பாயுள்ளது…. என்ன இருந்தாலும் பள்ளி அல்லவா!…” என்று அவர்கள் குழம்பினர்.

பெற்றோர்களின் ஆச்சரியக் குரல்களுக்கு நடுவே ஒரு சிறுவனின் உற்சாகமான குரல் மீண்டும் மீண்டும் கேட்கிறது:

“அம்மா, அம்மா! எவ்வளவு சுவாரசியமாக இருந்தது தெரியுமா! அம்மா, எவ்வளவு சுவாரசியமாக இருந்தது தெரியுமா!..”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !

1

சாதிவெறி படிக்காதவர்களிடம் மட்டுமே இருக்கும் பண்பா ? படிப்பிற்கும் சாதிவெறிக்கும் தொடர்புண்டா ?  படித்தவர்களிடம் சாதிவெறி இருக்குமா ?

மருத்துவர் ராமதாசும், அவரது இளவல் அன்புமணியும் படிக்கவில்லையா ? ”சமூக நீதிக் காவலர்” பட்டத்தை தனக்குத் தானே சூட்டிக் கொண்ட மெத்தப் படித்த ”மருத்துவர் ஐயா” அவர்களுக்கே சாதி வெறி நிரம்பி வழிகையில், படித்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு சாதிவெறி இருக்காதா என்ன ?

இருபத்தாறு வயதான மருத்துவர் பாயல் தாத்வி, மும்பை நாயர் மருத்துவ கல்லூரியில் எம்.டி. மகப்பேறு மருத்துவம் படித்துக்கொண்டிருந்த மாணவி. ஆதிவாசி தாத்வி பில் என்ற பழங்குடியின சாதியைச் சேர்ந்தவர். அவருடைய குடும்பத்தில் மருத்துவம் படித்த முதல் பெண். ‘நீட்’ என்னும் அநீதியான வழிமுறை மூலம் அனைவரும் மருத்துவம் படித்துவிடக்கூடாது என மனுஷ்மிருதி அரசாங்கம் பல அனிதாக்களை கொன்று கொண்டிருக்கும் காலத்தில், அதையும் மீறி பாயல் எம்.டி. படிப்பு வரை சென்றார்.

உயர் படிப்புகளும் உயர்ந்த கல்விக்கூடங்களும் தங்களுக்காகவே உள்ளவை என சாதிய வன்மத்துடன் அலையும் நபர்கள் நிரம்பிய இடங்களில் பாயல் போன்றவர்கள் உயிருடன் மீள்வது மிகப் பெரும் சாதனையாகவே இருக்கும். பாயல் தாத்வியால் அத்தகையதொரு சாதனையை படைக்க முடியவில்லை, தன்னை மாய்த்துக்கொள்வதன் மூலம் சாதிய வன்மத்திலிருந்து விடுபட்டு விடலாம் என அவர் நினைத்திருக்கிறார். அதன்படி, கடந்த புதன்கிழமை தன்னுடைய அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார் பாயல்.

மருத்துவர் பாயல் தாத்வி

பாயல் தாத்வியின் பெற்றோரும் அவரது கணவரும்; பாயலுடன் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மூன்று மருத்துவர்கள்தான் அவரது இறப்புக்குக் காரணம் என்கிறார்கள். சாதிய வன்மத்துடன் பாயலை அவர்கள் நடத்தியதாகவும் இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீனுக்கு எழுதிய புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தொடர்ச்சியாக அவர்கள் பாயலை சாதிரீதியாக துன்புறுத்தியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

“எங்கள் சாதியில் மருத்துவ மேல்படிப்பு படிக்கும் முதல் பெண், என் மகள்தான். எங்கள் குடும்பத்திலும் மருத்துவம் படிக்கும் முதல் பெண். அவர் நன்றாக படிக்கக்கூடிய மாணவி, கடினமாக உழைத்துதான் இந்த நிலைக்கு வந்தார்” என கண்ணீருடன் நினைவு கூறுகிறார் பாயலின் அம்மா, அபேதா தாத்வி.

மகாராஷ்டிர மாநிலம் ஜால்கானில் உள்ள வட்டார அலுவலகத்தில் பாயலின் பெற்றோர் பணியாற்றுகிறார்கள். அவருடைய மூத்த சகோதரர் உடல் குறைபாடு கொண்டவர். “தன் அண்ணனின் உடல் குறைபாடு காரணமாகத்தான் பாயல் மருத்துவம் படிக்க விரும்பினார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது மருத்துவம் படிக்க விரும்புவதாகக் கூறினார். எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமும் பாயலின் முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்றது” என்கிறார் அபேதா.

மிரஜ் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்த பாயல், மருத்துவ மேல் படிப்புக்காக நாயர் மருத்துவமனை கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.

“நாயர் மருத்துவமனையில் மேல்படிப்புக்காக சேர்ந்தபோது, தற்காலிகமாக ஹேமா அனுஜ் மற்றும் பக்தி மெஹர் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். அப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பாயலை துன்புறுத்தத் தொடங்கினர்” என்கிறார் பாயலின் கணவர் மருத்துவர் சல்மான் தாத்வி.

படிக்க:
குஜராத்தில் மருத்துவர் மாரிராஜை வதை செய்யும் பார்ப்பனியம் !
♦ தோழர் மருதையன் உரை : நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா !

“அந்த இரண்டு மருத்துவர்களும் கழிப்பறை சென்றுவிட்டு வந்து, பாயலில் போர்வையில் காலை துடைத்திருக்கிறார்கள், அதில் துப்பியும் வைத்திருக்கிறார்கள். எங்காவது வெளியே சென்றிருந்தால், கணவருடன் நேரத்தை செலவிடவே வெளியே சென்றிருக்கிறார் என கூறி கேலி செய்துள்ளனர்” என மருத்துவம் படித்த அந்த சாதிவெறியர் குறித்து சொல்கிறார் சல்மான்.

இந்த இருவடன் அங்கிதா கந்தேவால் என்பவரும் சேர்ந்து பாயலை சாதிய வன்மத்துடன் ராகிங் செய்துள்ளனர். மருத்துவர்களுக்கிடையேயான வாட்சப் குழுவில் பாயலை சாதிவெறியுடன் விளித்துள்ளனர். இந்த வாட்சப் செய்திகளை தன் கணவரிடமும் அம்மாவிடமும் பகிர்ந்துள்ளார் பாயல். கணவரை சந்திக்க அனுமதி மறுப்பது, பணியின்போது உணவு உண்பதற்குரிய நேரத்தில் அவரை உண்ணவிடாமல் செய்வது என அவருக்கு தொடர்ச்சியாக மனரீதியிலான தொல்லையை பணியிடத்திலும் தந்துள்ளனர்.

புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் அவருடைய அம்மாவைக்கூட சந்திக்க விடாமல் தடுத்துள்ளனர். 2018 டிசம்பர் வாக்கில் பாயலின் அம்மா, இந்த மூன்று மருத்துவர்கள் குறித்து மகப்பேறு மருத்துவ துறையின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மருத்துவராக பட்டம் பெற்ற பாயல் , படம் : நன்றி தி ஹிந்து.

“புதன்கிழமை மாலை 4 மணி வாக்கில் பேசிய பாயல், அழுதுகொண்டே தான் அனுபவித்துவரும் சித்ரவதைகள் குறித்து பேசினார். நான் அடுத்த நாளே அங்கு வருவதாகச் சொல்லி, பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகக் கூறினேன்” என்கிறார் அபேதா.

“என் மகள் மிகவும் உறுதியானவர். தொடர்ச்சியாக இந்த மூவரும் துன்புறுத்தியதால் அவர் உடைந்து போயிருக்கிறார். இவர்கள் மூவரும் தண்டிக்கப்படுவதன் மூலம்தான் இத்தகைய கொடுமைகளை செய்பவர்களுக்கு அது உதாரணமாக இருக்கும்.” என்கிறார்.  தன்னுடைய மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கும் எனவும் நம்புகிறார் அபேதா.

பாயலின் சகோதரரான ரிதேஷ், “எங்களுக்கு நீதி வேண்டும். நாங்கள் ஏற்கெனவே டீனைக் காண பலமுறை முயற்சித்தோம். ஆனால், முடியவில்லை. நான் உடல் குறைபாடு உள்ளவன். அம்மா புற்றுநோயாளி. எங்களுடைய ஒரே நம்பிக்கையாக இருந்தவர் பாயல் மட்டுமே” என்கிறார்.

“என் தங்கையை துன்புறுத்திய மூன்று மருத்துவர்களின் மருத்துவ பட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்” என்கிறார் ரிதேஷ். பாயலை சாதிரீதியாக துன்புறுத்திய மூன்று மருத்துவர்களும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ரோஹித் வெமுலா ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் பயில்கையில் விடுதியிலிருந்து வெளியேறுமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்கலை நிர்வாகமும், ஏபிவிபி குண்டர்படையும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் சேர்ந்து மிரட்டி தற்கொலைக்குத் தள்ளியது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ உயர்படிப்புக்குச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர் ஜுலை 10-ம் தேதியன்று மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார். அவர் தனது கையில் தானே விசமருந்து ஊசி ஏற்றி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியது நிர்வாகம். ஆனால் இது சரவணனின் மருத்துவக் கல்லூரி சீட்டைப் மூன்றாம் சுற்று கவுன்சிலிங்கில் விற்பதற்காக நடத்தப்பட்ட கொலை இது எனக் குற்றம்சாட்டினர் சரவணனின் பெற்றோர்.

குஜராத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்புக்குச் சென்ற மருத்துவர் மாரிராஜ் அங்கு தொடர்ச்சியாக சாதியரீதியாக இழிவுபடுத்தப்பட்டதன் விளைவாக தற்கொலைக்கு முயன்றார். உடனிருந்த நண்பர்கள் சிலர் உடனடியாகப் பார்த்ததால் அவர் மரணத்திலிருந்து மீண்டார். இருப்பினும் அவரை இறுதி வரையிலும் தேர்வு எழுதவிடாமல் தடுத்து நிறுத்தியது கல்லூரி நிர்வாகம்.

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து மருத்துவக் கனவோடு பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி அனிதா, நீட் எனும் மனுதர்ம தேர்வுமுறையால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார். சரியாகச் சொல்வதானால், மனுவால் சனாதன தர்மப்படி கொல்லப்பட்டார்.

இவ்விவகாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி அம்பலமான பின்னர்தான் இந்தியா முழுவதும் இது குறித்துப் பேசப்பட்டது. ரோஹித் வெமுலா, அனிதா மரணங்களைப் போல பாயலின் மரணமும் சமூக ஊடகங்கள் மூலமாக அதிர்வுகளை எழுப்பியிருக்கிறது. பாயலுக்கு நீதி கேட்டு பலர் எழுதுகின்றனர். நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்திருப்பது சனாதன சாதியத்தை தூக்கிப் பிடிக்கும் ஒரு அரசு. அதனிடம் வேண்டிப் பயனில்லை; போராடினால் மட்டுமே நீதி கிடைக்க வழியுண்டு…


கலைமதி
நன்றி: தி இந்து,  ஹிந்துஸ்தான் டைம்ஸ்

பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்குவழி ஏதுமில்லை | காணொளி

மீண்டும் வெற்றி பெற்றுவிட்டது பாஜக ! உற்சாக வெள்ளத்தில் கூத்தாடுகின்றனர் சங்கிகள் ! முற்போக்காளர்களும் ஜனநாயகவாதிகளும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். தமிழக மக்களோ அச்சத்திலும் ஆத்திரத்திலும் இருக்கிறார்கள். எப்படி சாத்தியமானது மோடியின் வெற்றி ?

இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மீள வழி என்ன ? இந்தக் காணொளியைக் காணுங்கள் ! பகிருங்கள் !

வினவு செய்திப் பிரிவு

தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

4

டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கடந்த 2014-ம் ஆண்டைவிட அதிகமான ஓட்டுக்கள் பெற்றதோடு சுமார் 300 இடங்களையும் பெற்றிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. பிரதமர் நரேந்திர மோடி முழுத் திருப்தியடைவதற்கான அனைத்து நியாயங்களும் இந்த தேர்தல் முடிவுகளில் உள்ளன.

இத்தேர்தல் முடிவுகள் எப்படி உருவாக்கப்பட்டன என்பது குறித்து மற்ற அனைவரையும்விட மோடிக்கு நன்றாகத் தெரியும். கடந்த தேர்தல் பரப்புரையின் போது தாம் அளித்த வளர்ச்சி குறித்த வாக்குறுதிகள் குறித்து தனது தற்போதைய பரப்புரையில் பேசுவதை மிகக் கவனமாகத் தவிர்த்தார். அதற்குப் பதிலாக இந்துக்களின் மனதில் முசுலீம்களைப் பற்றிய பயத்தை விதைப்பது, பயங்கரவாதத்தை வீழ்த்தக் கூடிய தகுதி கொண்ட ஒரே தலைவனாகத் தம்மையே விளம்பரப்படுத்திக் கொள்வது என்ற வகையிலேயே அவரது பரப்புரை அமைந்தது.

இரட்டை நாக்கு மோடி

மேலும், புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் பலியான துணை இராணுவப் படையினரை தனது தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தி அவர்கள் பெயரில் வாக்குகளைச் சேகரிக்கும் அளவிற்குத் தரமிறங்கினார். இந்த இழிவான தந்திரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்குத் தெரியவில்லை. இது பாஜகவுக்கு கை கொடுத்தது.

வார்தா-வில், மோடி நேரடியாக மதத்தின் அடிப்படையில் இந்து வாக்காளர்களிடமிருந்து வாக்குச் சேகரித்தார். குறிப்பாக மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூரை பயங்கரவாதக் குற்றங்களுக்காக விசாரித்ததன் மூலம் இந்துக்களின் நம்பிக்கைகள் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறி வாக்கு சேகரித்தார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை, “சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியிலிருந்து போட்டியிடுகிறார்” என்று கூறி ஏளனம் செய்தார் மோடி. முசுலீம்கள் இந்தியாவின் சரிசமமான குடிமக்கள் இல்லை என்பதாக சித்தரித்தார்.

மோடியின் இத்தகைய முனையாக்கம் செய்யப்பட்ட அறிக்கைகள் தொலைக்காட்சிகளில் நேரலையாகக் காட்டப்பட்டன. அவை பாஜக-வின் பிரச்சார இயந்திரத்தால் நாடு முழுவதும் பரப்பப்பட்டது, அந்த நஞ்சு பரவலாகவும், விரிவாகவும் மக்களுக்குச் சென்றடைவது உறுதிசெய்யப்பட்டது. அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும், வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மதத்தை அடிப்படையாகக் கொண்ட குடியுரிமை வழங்குவது குறித்த பாஜக-வின் பரப்புரைக்கு இது வலு சேர்க்க உதவியது.

படிக்க:
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !
♦ மோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் !

இந்தியாவின் தேர்தல் பரப்புரை சட்டங்களை பகிரங்கமாக மீறும் இது போன்ற நடவடிக்கைகளிலிருந்து மோடியைத் தடுப்பது குறித்தோ, கண்டிப்பது குறித்தோ தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருந்தது. இது இவ்வாறிருக்க, மோடியும் அமித்ஷாவும் குண்டுவெடிப்புக் குற்றவாளி பிரக்யாசிங்கை போபாலில் வேட்பாளராக நிறுத்துமளவுக்குச் சென்றனர். அவரை வேட்பாளராக்கியது, இந்துத்துவ ஆதிக்கத்தை மட்டும் குறியீடாகக் காட்டவில்லை, கூடுதலாக முசுலீம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தையும் குறியீடாகக் காட்டியது.

(பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட) மூத்த போலீசு அதிகாரி ஹேமந்த் கார்கரேவின் படுகொலையை, போபால் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட பின்னர் பிரக்யாசிங் ஆதரித்தார். ஏனெனில் கார்கரேதான் முசுலீம்களைக் கொல்ல வெடிகுண்டு வைத்த வழக்கில் பிரக்யாசிங்கைக் கைது செய்தவர். அடுத்ததாக காந்தி படுகொலையை ஆதரித்து இவர் விட்ட அறிக்கை, மோடியையே மிரளச் செய்தது. மோடி பிரக்யாசிங்கிடமிருந்து தன்னை விலக்கிக் காட்டிக்கொண்டார்.

அப்போதும்கூட கோட்சே பிரதிநிதித்துவப்படுத்திய அரசியலின் மீதான விமர்சனத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்துக் கொண்டார் மோடி. பிரக்யா சிங்கைப் போல மோடிக்கும் காந்திக்காகவோ அவரது கொள்கைகளுக்காகவோ ஒதுக்குவதற்கு நேரம் கிடையாது. ஆனால் காந்தியை களமிறக்கச் சாத்தியமான இடங்களில் அவரைப் பயன்படுத்துவது மற்றும் காந்தி கொலையை நியாயப்படுத்துவதை தவிர்ப்பதையும் தனது நடைமுறைத் தந்திரமாகக் கொண்டுள்ளார் மோடி.

மோடி விரும்புவது போல, பாஜக-வின் இந்த தேர்தல் வெற்றியை பாரதத்தின் வெற்றி என்று யாராவது அழைக்க முடியுமா ? அப்படி அழைப்பது போபாலில் பிரக்யாசிங் தாக்கூரின் வெற்றியை இந்தியாவின் வெற்றி என்று ஏற்றுக் கொள்வது போல்  ஆகிவிடும் அல்லவா ? மோடி தேர்தலுக்கு முன்னரே பிரக்யாசிங்கிடமிருந்து விலகியிருந்ததை விட  இனி இன்னும் அதிகமாக விலகி இருப்பார் என்று அனுமானித்துக் கூறுகின்றனர்.

எனினும் அதனால் ஒருபலனும் இல்லை. குஜராத்தில் பிரவின் தொகாடியா ஒதுக்கப்பட்டதைப் போல பிரக்யாசிங் ஒதுக்கி வைக்கப்படலாம் அல்லது அவர் ஒரு அமைச்சராகக் கூட நியமிக்கப்படலாம். மோடியின் நோக்கம், இந்த நாட்டின் இரத்த ஓட்டத்திற்குள் ஒரு நச்சுக் கிருமியைச் செலுத்துவதுதான். அந்த வேலை நிறைவேறிய பின்னர், ஒவ்வொரு நோய் பரப்பிகளின் தலையெழுத்தும் கவனத்தில் கொள்ளத்தக்கவையல்ல..

மோடியின் கண்கவர் வெற்றியின் மூன்று பிற அம்சங்கள் குறித்து நாம் கவலை கொள்ளவேண்டும். நினைத்துப் பார்க்கமுடியாத அளவிலான பணபலத்தை பயன்படுத்தியிருப்பதுதான் முதல் அம்சம். இந்த மிகப்பெரும் பணபலம் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றாற்போல அவரது பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நண்பர்களின் அடையாளத்தை பொதுமக்களிடமிருந்து மறைப்பதற்கேற்ற புதிய விதிமுறைகளை தாமே எழுதிக் கொண்டார்.

இந்தக் கார்ப்பரேட்டுகள்தான் இந்தத் தேர்தலில்  பாஜகவின் பகட்டான பிரச்சாரத்திற்கு பின்னிருந்து படியளந்தவர்கள். இதன் மூலம்தான் எக்கச்சக்கமான விளம்பரங்கள், சட்ட விதிகளை மீறி தேர்தல் சமயத்தில் திடீரென முளைத்து, தேர்தல் ஆணையத்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு,  தேர்தலுக்குப் பின் மறைந்து போன 24 X 7 பிரச்சாரச் சேனல் என்று பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது பாஜக.  பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு யார் படியளந்தார்கள் என்பது நமக்கு நேரடியாக தெரிய வாய்ப்பில்லையாதலால், (பொருளாதார) கொள்கைகளின் மூலமாக எவ்விதத்தில் அவை திருப்பி செலுத்தப்படும் என்பது குறித்து குறிப்பிட்டுக் கூறுவதும் கடினமானது.

இரண்டாவதாக, ஊடகங்களின் பெரும் பிரிவு மோடி வழிபாட்டை சந்தைப்படுத்தியதோடு, மோடி அரசாங்கத்தின் பல்வேறு ‘திட்டங்களின்’ சாதனைகளை மிகைப்படுத்தி விற்பனை செய்தனர். மோடி மற்றும் அமித்ஷா நடத்திய பேரணிகளுக்கு அளவுக்கதிகமான நேரத்தை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒதுக்கினர்.

இதைத்தாண்டி கடந்த ஐந்தாண்டுகளாகவே, பாஜகவின் பிரிவினைவாத மற்றும் வேற்றுமைவாத நிகழ்ச்சி நிரலை சந்தைப்படுத்த உதவியதன் மூலம், பொதுமக்களை சீரழித்ததோடு, அரசாங்கத்தின் தோல்வியுற்ற கொள்கைகளின் மீதான விமர்சனக் கண்ணோட்டத்தை மழுங்கடிக்கச் செய்வதில் பெரும் ஊடகங்கள் பாஜகவுக்கு பேருதவி செய்தன. ஊடகத்தின்  இப்பிரிவினர்தான் லவ் ஜிகாத் முதல் அயோத்தி பிரச்சினை வரையிலான சங்கப் பரிவாரத்தின் மதவாதக் கருத்துக்களையும், தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பாஜக-வின் மிகைப்படுத்தப்பட்ட சுயபிரச்சாரத்தையும் கடத்தும் குழலாகச் செயல்பட்டனர்.

”மோடியின் ஆட்சிக்காலத்தில் தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களே நடந்ததில்லை” என்பது போன்ற நிர்மலா சீதாராமனின் சவடாலைப் போன்று, அமைச்சர்களின் அப்பட்டமான பொய்களும் கேள்விக்கிடமற்றுக் கடந்து போக அனுமதிக்கப்பட்டன. புல்வாமாவில் நடந்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்வி குறித்து எவ்விதக் கடுமையான கேள்விகளும் கேட்கப்படவில்லை.  அதேபோல இந்திய விமானப்படையின் மிக் ரக விமானத்தை இழந்து, இந்திய விமானி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு, சொந்த ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய அவலங்களை உள்ளடக்கிய பாலகோட் பதிலடித் தாக்குதல் குறித்தும் எவ்விதக் கேள்விகளும் கேட்கப்படவில்லை.

மோடி அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் ஊடகங்கள் அவதூறு வழக்குகளாலும், சிபிஐ அல்லது வரி விசாரணை போன்றவைகளாலும் குறி வைக்கப்பட்டன. சில பத்திரிகையாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் தங்கள் பணியை இழந்தனர். வேறெங்கும் வெளிப்படுத்த முடியாத விமர்சனங்களின் மூலமாக இருக்கும் சமூக வலைத்தளங்களை மிரட்ட, இந்த நாட்டின் கணிணி சட்டங்கள் தொடர்ச்சியாக கட்சி செயல்பாட்டாளர்களாலும் போலீசாராலும் நாடு முழுவதும் தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டன.

மூன்றாவதாக, தேர்தல் கமிசனின் செயல்பாடுகள் நினைவு தெரிந்தவரையில் மிகவும் அதிகமான அளவிற்கு கட்சி சார்பானதாக இருந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் நடத்தை விதிகளை மோடியும் பாஜகவும் பகிரங்கமாக மீறியதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்குக்கு அபாயம் இருப்பதாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 -ஐப் பிரயோகித்து பிரச்சாரத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது மட்டுமல்லாமல், அங்கு பிரதமரின் பேரணிகளை அனுமதிக்கும் வகையில் நேரத்தை வெட்டிச் சுருக்கிக் கொண்டது தேர்தல் ஆணையம்.

இவையனைத்தையும் இணைத்துப் பார்த்தால், இவ்வகையான வெற்றியால் இந்தியாவிற்கு என்ன பலன் ? மோடியும் பாஜகவும் கடந்த ஐந்தாண்டுகளாக சாதித்ததாகச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொன்றும் தேர்தலால் தற்போது அங்கீகரிக்கப்பட்டிருப்பதோடு, நாட்டை மதவாதமாக்குவதற்கான அடித்தளமும் இடப்பட்டுள்ளது.

மேலும் மையப்படுத்தப்பட்ட முடிவெடுத்தல் (Centralised Decision Making),  தான்தோன்றித்தனமான கொள்கை முடிவுகள், பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான பெரும் சலுகைகள், சுதந்திர ஊடகங்களின் மீதான பெரும் வெறுப்பு மற்றும் மாற்றுக் கருத்துக் கொண்டோரின் மீதான சகிப்பின்மை ஆகியவற்றிற்கும் அடித்தளமிடப்பட்டு உறுதியாக்கப்பட்டுள்ளது.

படிக்க:
மோடிக்கு குடை பிடிக்கும் தேர்தல் ஆணையம் : கேலிச்சித்திரங்கள்
♦ காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !

தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேச விரோத நடவடிக்கைகள் மீது கூடுதலான, கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கூறியிருக்கிறார். இது ஒரு உதாரணம்தான். இனி வரும்காலங்களில் அரசு இயந்திரத்தின் உறுப்புகள் மீதான மோடி அரசாங்கத்தின் போர் அடுத்தகட்டத்திற்குச் செல்லும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மத்திய – மாநில உறவுகள், நீதித்துறை ஆகிய இரண்டு அரண்கள்தான் மோடியின் பல்வேறு முயற்சிகளையும் தாண்டி கடந்த ஆட்சியில் ஓரளவு தப்பின. இந்த இரண்டு அரண்களை நோக்கிதான் இனி மோடி திரும்புவார். “தனது புதிய பெரும்பான்மையைப் பயன்படுத்தி மாநிலங்களில் பணிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசிற்கு வழங்க முயற்சிப்பார். இதனைச் செய்து முடிக்க நிதிக் கமிசனை தனது  ஒடுக்கும் தடியாக உபயோகிப்பார்” என்று பிரபல பொருளாதார நிபுணர் நிதின் தேசாய் தனது அச்சத்தை வெளிப்படுத்துகிறார். நீதிபதிகள் நியமனத்தில் தலையிடுவதன் மூலம், அடுத்த ஐந்தாண்டுகளில் நீதித்துறையில் தனது தடத்தைப் பதிப்பார்.

எதிர்க்கட்சிகள் வீரியமான பரப்புரைகளைச் செய்தால்மட்டுமே, இந்த பயங்கரமான நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகப் போராட முடியும். அமித்ஷா அமைத்திருக்கும் இந்த தேர்தல் பொறியை வெறுமனே சாதிய மற்றும் குழு அடிப்படையிலான கூட்டணிகள் மூலம் போரிட முடியாது.

பாஜகவின் நடைமுறைத் தந்திரமானது, துருத்தி நிற்கும் சாதியப் பற்றுறுதியை உடைத்து, அனைத்து சாதியினரையும்  இந்துக்களாக மாற்றுவதாக இருக்கிறது. இதற்கு முன்னர், மண்டல் கமிசன் அரசியல் இந்த கமண்டல அரசியலுக்கு எதிராக அறிவார்ந்த சாதியக் கணக்கீட்டை வைத்து முறியடித்தது. ஆனால் இன்றைய நிலைமையில் அப்படிச் சாத்தியமில்லை.

பாஜக வாக்காளர்களை இந்துக்களாக (மற்றும் முசுலிம்களாகப்) பார்த்தால், எதிர்க்கட்சிகள் வாக்காளர்கள் மத்தியில் இருக்கும் விவசாயிகளிடம், பெண்களிடம், இளைஞர்களிடம் தம்மைக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இது இன்னுமொரு விவாதத்திற்குரிய விசயமே!


கட்டுரையாளர் : சித்தார்த் வரதராஜன்
தமிழாக்கம் :நந்தன்
நன்றி : தி வயர்