Saturday, May 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 336

தமிழகத்தைக் குலுக்கிய மே தினம் ! | செய்தி – படங்கள் !!

“நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!

கூலி அடிமை முறையை தீவீரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை (GATT) தூக்கியெறிவோம்!” என்கிற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பேரணி – ஆர்ப்பாட்டம் – பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அவற்றின் செய்தி மற்றும் புகைப்படத் தொகுப்பு…

*****

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 01.05.2019 அன்று மே நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் துவங்கி, தபால் நிலையம் வரையில் மே நாள் பேரணி நடத்தப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் விகேந்தர் தலைமையேற்றார். பொதுக்கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. மணிபாலன், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி கும்முடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் தோழர் J. அருள், கும்முடிப்பூண்டி செந்தமிழ் சோலை அமைப்பை சேர்ந்த கவிஞர் சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளர் தோழர் நெடுஞ்செழியன், மணலி தொழிற்சங்க கூட்டமைப்பின் கெளரவ தலைவர் தோழர் செங்கை S. தாமஸ், மற்றும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கும்முடிப்பூண்டி நாகராஜ கண்டிகை கிராம மக்கள் ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி சுதேஷ்குமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் ஆகியோர் மே நாள் எழுச்சி உரையாற்றினர்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் தோழர் சரவணன் நன்றியுரைக்கு பின் இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.

***

புதுச்சேரியில்…

ட்டு மணி நேர வேலை, 8 மணி நேர புத்துயிர்ப்பு, 8 மணி நேர உறக்கம் என மனித வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தது மே நாள். 18-ம் நூற்றாண்டின் கொடிய அடக்குமுறை வரலாற்றைத் திருப்பிப் போட்டது மே நாள். அந்த மே நாள் அரசியலின் அவசியத்தை யோசிக்கவிடாமல் பாராளுமன்றத் தேர்தல் களேபரங்களில் மக்களை மூழ்கவைத்துக் கொண்டிருக்கின்றன ஓட்டுக் கட்சிகள்.

வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஓட்டுப் பொறுக்கி, பதவியைக் கைப்பற்ற நாயாய் அலைகின்றனர். வாக்குறுதிகள் பொய் என்பது ஒருபுறம் இருந்தாலும், எந்த வாக்குறுதிகளும் மக்களது பிரச்சினைகளைப் பேசுவதாக இல்லை. மக்களுக்கு சம்மந்தமே இல்லாத வளர்ச்சியைப் பற்றியும், 6,000 தருகிறேன், 72,000 தருகிறேன் என மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதாகவும் தான் வாக்குறுதிகள் உள்ளன.

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசினாலே அரசின் அடக்குமுறைகள் பாய்கிறது. முதலாளித்துவம் தோன்றிய 18-ம் நூற்றாண்டில் இருந்த அதே நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன தொழிலாளர் மீதான அடக்குமுறைகள். ஆனால், அன்று தொழிற்சங்க அமைப்புக்களோ, சட்டங்களோ இல்லை. ஆனால் இன்றோ தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்து பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருகிறது தொழிலாளி வர்க்கம்.

தொழிலாளர்களுக்கென இருக்கின்ற 44 சட்டங்கள் இன்று காலாவதியாகி விட்டன. வேலைவாய்ப்பை உருவாக்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் கூறு போட்டு தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டன. லாபமீட்டும் நிறுவனங்களையும் ஒழிக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. புதிதாய் பணியமர்த்தப்படும் எந்த ஒரு துறையிலும், நிரந்தர வேலை என்பது கிடையாது.

ஏற்கெனவே காண்டிராக்ட் முறையில் 480 நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால் வேலை நிரந்தரம் என இருந்தது. நடைமுறையில் அது இல்லாமல் ஒழிக்கப்பட்டு விட்டது. தற்போது NEEM, FTE உள்ளிட்ட நவீன உழைப்புச் சுரண்டல் முறைகளால் தொடர்ச்சியாக 480 நாள் வேலை என்பது குதிரைக்கொம்பு தான்! ஒரு தொழிலாளி வேலைக்கு சேரும்போதே வேலையை விட்டு நீக்கும் தேதியை தீர்மானித்து பணிக்கு அமர்த்துவதுதான் குறிப்பிட்ட காலத்திற்கான வேலை வாய்ப்பு (FTE) எனும் கொத்தடிமை திட்டம்.

நீம் (NEEM) என்ற பயிற்சித்திட்டம் மூலம் இளம் தொழிலாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பயிற்சி கொடுத்து திறனை வளர்ப்பதாகச் சொல்லி, நேரடி உற்பத்தியில், நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை இடங்களில் திணிக்கின்றன. இத்தொழிலாளர்கள் கடைசிவரை பயிற்சியாளர்களாகவே இருக்க முடியும். ஒருபோதும் வேலை நிரந்தரம் கிடையாது. நேரடி உற்பத்தியில் ஈடுபட்டாலும், பயிற்சியாளர் என்று சொல்லப்படுவதால் சம்பளப் பட்டுவாடா சட்டத்தின் மூலம் கோரும் நியாயமான சம்பளம், போனஸ், பணிக்கொடை போன்ற எதையும் கோர முடியாது. தொழிலாளி என்ற வரையறையில் வராததால், சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமையும் கிடையாது. இவற்றின் மூலம் நிரந்தர வேலை சட்டப் பூர்வமாகவே ஒழிக்கப்பட்டு விட்டது.

நிரந்தர தொழிலாளர்கள் என்று சொல்லப்படுபவர்களை, இயந்திரத்தோடு இயந்திரமாய் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கட்டிப் போடுகின்றனர் முதலாளிகள். அரை நொடி நகர்ந்தாலும், ஒலி எழுப்பும் கருவிகளை வைத்துக் கண்காணிக்கின்றனர். சிறுநீர் போன்ற இயற்கை உபாதைகளுக்கு அட்டவணை போடுகின்றனர். விடுப்பு எடுத்தால் கக்கூஸ் கழுவ வைப்பது, கழுத்தில் போர்டு மாட்டி விடுவது என மனரீதியிலான ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். இவ்வளவு கடும் பணிச் சூழலில் நாளொன்றுக்கு 12 முதல் 16 மணிநேரம்  வேலை செய்தாலும், அற்பக் கூலிதான் பெறுகின்றனர்.

மொத்தத்தில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்குமுறைகள் சட்டப்படியே நிலை நாட்டப்பட்டு உரிமை கோரும் எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஏதோவொரு மூலையில் ஒரு மணிநேரத்திற்கு 55 தொழிலாளர்கள் முதலாளிகளின் லாபவெறிக்கு பலியாகின்றனர் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆய்வறிக்கை. மறுபுறம், அம்பானி, அதானி, மிட்டல், ரூயா உள்ளிட்ட 9 முதலாளிகளின் சொத்துமதிப்பு மக்களில் 63 கோடிபேரின் சொத்து மதிப்பிற்குச் சமம் என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.

இந்த ஏற்றத்தாழ்வான சூழலைப் புரிந்து கொள்ளாமல் மேதினத்தை சடங்காகக் கொண்டாடுவதில் பயனில்லை. ஆலையில் ஒரு தொழிலாளி பாதிக்கப்பட்டால் அதற்கான போராட்டம் தொழிற்பேட்டை, அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புக்கள் போன்ற எல்லைகளைத் தாண்டி பல்வேறு ஆலைத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் என இணைந்து போராட வேண்டும். ஒரே ஒரு தொழிலாளிக்குப் பிரச்சினை என்றால் கூட அனைத்து தொழிற்சாலைத் தொழிலாளர்களும் ஒன்று சேர்வார்கள், போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்ற அச்சத்தை முதலாளிகளுக்கு உருவாக்க வேண்டும். அதை மேதினத் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி அவர் தம் வழியில் போராட வேண்டும்.

மேற்படி நோக்கத்தை தொழிலாளர் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக மே தின பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நகரின் முக்கிய சிக்னலான ராஜா தியேட்டர் சிக்னலில் பேரணியும், பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

பேரணியையும், ஆர்ப்பாட்டத்தையும் புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர். சரவணன் தலைமை தாங்கினார்.

பேரணியில் மே நாள் தியாகிகளைப் போற்றியும், தொழிலாளர் மீதான அடக்குமுறைகள், சுரண்டல்களை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கட்டுப்பாடோடும், விடாத முழக்கங்களையும் நின்று பார்த்துச் சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், NEEM மற்றும் FTE பற்றியும், அந்த திட்டங்கள் எவ்வாறு உரிமைகளற்ற கொத்தடிமையாக மாற்றுகிறது என்பதை பல்வேறு உதாரணங்களுடனும் விளக்கினர். மேதினத் தியாகிகளால் கிடைத்த உரிமைகளை நிலைநாட்ட அந்தத் தியாகிகளை நெஞ்சிலேந்திப் போராட வேண்டும் என விளக்கினர்.

திருவண்ணாமலை, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தோழர். கண்ணன், “உரிமைகள் பெறுவதற்கு நீதிமன்றத்தை மட்டும் நாடுவதில் ஒரு பலனும் இல்லை. ஏனெனில், நீதிபதிகள் காவி சிந்தனையோடும், கார்ப்பரேட்டுக்களின் அடியாளாகவும் மாறி தீர்ப்புக்களை வழங்குகின்றனர். எங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடக்கிறதோ அங்கு மட்டுமே ஓரளவிற்கு மக்கள் சார்பாக தீர்ப்புக்களை வழங்குகின்றனர். எனவே, உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள ஒரேவழி போராடுவது மட்டுமே” என விளக்கினார்.

அடுத்ததாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர், தோழர். மணியரசு, தொழிலாளர்களது உரிமைகள் பறிக்கப்படுவது போல், பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் மாணவர்கள் உரிமைகள் பறிக்கப்படுவது பற்றி விரிவாக விளக்கினார். கல்வியில் இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழிப்பதன் மூலம், ஏழை, எளிய மாணவர்கள், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார். எனவே, மேதினத் தியாகிகளின் வழியில் தொழிலாளர்களுடன் இணைந்து மாணவர்களும் போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என விளக்கினார்.

இறுதியாக உரையாற்றிய புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் தோழர். மகேந்திரன், மே தினம் என்பது, உரிமைகள் பெற்ற தினம் என்றும், அந்த நாளை போதை விருந்து என கொண்டாடத்தான் என்று முதலாளிகள் கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால், இன்று தொழிலாளர்கள் மட்டுமல்ல, தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாக்க விவசாயிகளும், ஒக்கி புயலில் சிக்கி மீனவர்களும், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போராடுகின்றனர் என்பதை பல்வேறு உள்ளூர் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டு விளக்கினார்.

நிகழ்ச்சியில் நானே உலகம், கம்யூனிசம் வெல்லும் ஆகிய புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், விடாத முழக்கங்களுடன் நகர்ந்த பேரணியும், அதைத் தொடர்ந்த ஆர்ப்பாட்டமும் உணர்வுப்பூர்வமாக வெயிலில் அமர்ந்து கலந்து கொண்ட தோழர்களது அர்ப்பணிப்பும் மக்கள் மத்தியில் நிகழ்ச்சியை கவனிக்க வைத்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி, தொடர்புக்கு: 95977 89801. 

*****

வேலூரில்…

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்ப்பாக 133-வது மே நாள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் 01.05.2019 அன்று மாலை நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில், வேலூர் மண்டி வீதியலிருந்து மாலை 5.00 மணிக்குத் தொடங்கிய பேரணியில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாலை 6.00 மணிக்கு அண்ணா கலையரங்கம் அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின்  மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் சங்கம் சார்பில் அடுக்கம்பாறை, மீன் மார்க்கெட், அண்ணா கலையரங்கம் கிளைகளிலிருந்தும் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின்  மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சரவணன், வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் சங்கம், அடுக்கம்பாறை கிளை உறுப்பினர் தோழர் செல்வி, வழக்கறிஞர் பாலு மற்றும்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பொன்.சேகர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர்.

பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசு நடைமுறைப் படுத்திவரும் தேசிய வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பணி (NEEM-National Employability Enhancement Mission), ஒப்பந்த கால வேலை வாய்ப்பு (FTE – Fixed Term Employment) போன்ற தொழிலாளர் விரோத திட்டங்களை ஒழித்துக் கட்டவும், கார்ப்பரேட் கம்பெனிகளின் காட்டாட்சிக்கு முடிவு கட்டவும் தொழிலாளர்கள் ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்விதமாக அமைந்தது வேலூர் பேரணி மற்றும் அர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்

*****

திருச்சியில்…

லகத் தொழிலாளி வர்க்கம் தனக்கான விடியலைப் போராடி நிறுவிய மே தினமான 01.05.2019 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கங்களான பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம், திருச்சி அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம், திருச்சி சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்புச் சங்கம் ஆகிய சங்கங்களின்

நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளான ம.க.இ.க, பு.மா.இ.மு உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்ற மே தினப் பேரணி மாலை 5.30 மணியளவில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து புறப்பட்டது. பேரணியை பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் உத்திராபதி தொடங்கி வைத்தார்.

பேரணியின் முன்பு சிறுவர்கள் – தோழர்கள் என உற்சாக நடனத்துடன் பறை இசை இசைத்தனர். தேர்தல் கட்டுப்பாடு என்ற மோன நிலையை களைத்தது தோழர்கள் பறை இசை!

ஆயிரக்கணக்கான மக்கள் குவியும் பிரதான சாலையின் மத்தியில், நமது மே தின ஊர்வலத்தையும் பெண்கள், குழந்தைகள் மற்றும் தோழர்கள் உயர்த்திப் பிடித்த செங்கொடி பதாகைகளைப் பார்த்து திருச்சி நகர மக்கள் பரவசப்பட்டனர்.

தோழர்களின் விடாப்பிடியான முயற்சியின் விளைவாக காவல்துறை மக்கள் நெருக்கம் மிகுந்த பிரதான சாலையில் மேதின ஊர்வலம் நடத்த அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

மே – தின கோரிக்கைகளான,

  • நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!
  • கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்!
  • இட்லர் முசோலினி வாரிசுகளாகிய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – சங் பரிவார் கும்பலை வீழ்த்த தொழிலாளி வர்க்கமாய் ஒன்று திரள்வோம்!

என எழுச்சியாக முழங்கிய பேரணி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது. அங்கே 6.30 மணியளவில் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் உதவித்தலைவர் தோழர் சுந்தரராசு, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் மணலிதாசன், அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலாளர் தோழர்.பழனிச்சாமி, பு.மா.இ.மு. திருச்சி. அமைப்பாளர், தோழர் பிரித்திவ், பு.மா.இ.மு. கரூர், பொருளாளர் தோழர்.சிவா, மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன், ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலாளர் தோழர்.ஜீவா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சிறப்புரையாற்றிய ம.க.இ.க மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள் “ஒரு சதவீதம் முதலாளிகளுக்கு சொர்க்கத்தையும் 99 சதவீதம் உழைக்கும் மக்களுக்கு நரகத்தையும் கட்டியமைக்கும் கார்ப்பரேட் ஜனநாயகத்தை வீழ்த்தாமல் விடிவில்லை!

மே தினம் என்றாலே மண்டையை பிளந்து, இரத்தம் சிந்தி உயிரை கொடுத்து தொழிலாளிவர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் நினைவுக்கு வரவேண்டும். அப்படிபட்ட தியாகத்தின் வரலாறே மேதின வரலாறு!

ஆனால் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதிய தாராளமயக் கொள்கைகளை பல கட்டமாக திணித்ததன் விளைவாக தொழிலாளி வர்க்கத்தை நடைமுறையில் பாதுகாத்த 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் காலாவதியாகிவிட்டன. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதெல்லாம் கானல் நீராகிவிட்டது. அரசு வேலை என்பதே ஒழிக்கப்பட்டுவிட்டது. நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM – FTE திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலை என்ற, அடிப்படை உரிமைகள் அற்ற கொத்தடிமைச் சட்டம் நடைமுறையாக்கப்படுகிறது என்றார்.

சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் மெட்ரோ இரயில் தொழிலாளர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சட்டவிரோதம். தொழிலாளர் நலனுக்காக 7 பேர் இணைந்து சங்கம் வைக்கலாம் என இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் தொழிற்சங்கம் அமைத்தது குற்றமெனகூறி 8 பணியாளர்களின் வேலையை பறித்த கொடூரத்தை கண்டித்துத்தான் மெட்ரோ இரயில்வே தொழிலாளர்கள் போராடிவருகின்றனர்.

கார்ப்பரேட் நலனில் காட்டும் அக்கறை சாதாரண குடிமக்கள் மீது இந்த அரசுகள் காட்டுவதில்லை! தொழிலாளர்கள்-வியாபாரிகள் மாணவர்கள் – விவசாயிகள் என எந்த பிரிவு மக்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை! தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பை சுரண்டி சுருட்டிய பணம் , முதலாளிகளின் – கார்ப்பரேட் கும்பலின் கையில் மூலதனமாக குவிகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அம்பானி, அதானி, மிட்டல் ரூயா உள்ளிட்ட 9 முதலாளிகளின் சொத்து 63 கோடி மக்களின் சொத்துமதிப்பிற்கு சமமாக இருக்கிறதென்றால் ஒரு சதவீதம் முதலாளிகளுக்கு சொர்க்கத்தையும் 99 சதவீதம் உழைக்கும் மக்களுக்கு நரகத்தையும் கட்டியமைக்கும் இந்த கார்ப்பரேட் ஜனநாயகத்தையும் அதன் அடிவருடி அரசுகளையும் வீழ்த்தாமல் மக்களுக்கு விடிவில்லை ! ஆகவே நாம் இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையில் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது! கம்யூனிச ஆசான்கள் காட்டிய திசையில் சிந்திப்போம்! மக்கள் அதிகாரத்தைக் கட்டியமைப்போம்! மேதினத் தியாகிகளின் லட்சியத்தை நினைவாக்குவோம்” என தனது சிறப்புரையில் கூறி முடித்தார்.

திருச்சி ம.க.இ.க தோழர்கள் மற்றும் பெண் தோழர்கள் இணைந்து புரட்சிகர பாடல்களை பாடினர். இறுதியாக தஞ்சை ம.க.இ.க செயலர் தோழர் இராவணன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி, தொடர்புக்கு : 89030 42388.

*****

கோவையில்…

கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக மே தினத்தன்று KNG புதூர் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய பேரணியை ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்டிரிஸ் சங்கக் கிளைத் தலைவர் தோழர் எம்.கோபிநாத் அவர்கள் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் துணைத் தலைவர், தோழர் பழனிச்சாமி முழக்கமிட்டு பேரணியைத் துவக்கி வைத்தார். இந்த பேரணி வெளியில் இருந்த மக்களை கவரும்படி இருந்தது.

இந்தப் பேரணியில் தொழிலாளர்கள் மற்றும் ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் உள்பட சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். பேரணியை கணுவாய் நோக்கி சென்ற சாலையில் பொதுமக்கள் இருபுறமும் நின்று கவனித்தனர். மக்களிடம் மே நாள் பிரசுரம்  விநியோகம் செய்யப்பட்டது.

சுமார் 5.30 மணியளவில்  கோவை மாவட்ட துணைத்தலைவர்  தோழர்  எம்.தேவராஜ்  அவர்கள் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது அதில் மே நாள் என்பது யாருக்கானது? இது தற்போதைக்கு எந்தவகையில் அவசியம்? எங்கு முதலில் போராட்டம் துவங்கியது என்பதைப்பற்றி விளக்கி பேசினார்.

மக்கள் கலை இலக்கிய கழகதின் சார்பில் நன் உலகம் பாடலுடன் நிகழ்ச்சி  துவங்கியது. முதலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தோழர்.  சுரேஷ் அவர்கள் இந்த அரசு முறையாக தேர்தல் நடத்துவதற்குக்கூட வக்கற்ற வகையில் இருப்பதையும் கல்வியில் பார்ப்பனியத்தை திணிப்பதையும்  அம்பலப்படுத்தும் விதமாக பேசினார்.

மக்கள் கலை இலக்கிய கழகதின்  சார்பில்  தோழர் சித்தார்த்தன்  அவர்கள்  கோவை மாவட்ட  கண்காணிப்பாளர் SP. பாண்டியராஜனையும் , டாஸ்மாக்  கடைகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், புரட்சிகர அமைப்புகளில் பொதுமக்கள்  தங்களை இணைத்து  கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி பேசினார்.

முருகன் மில் கிளை செயலாளர் தோழர் ஜெகநாதன் அவர்கள் மில் தொழிலாளியின் அவலநிலைமையும் , ஆணாதிக்க மனநிலையில் பெண்கள் வீட்டில் படும் பாட்டையும், ஆலையில் அவர்களின் உழைப்பினை ஒட்ட சுரண்டி ஏமாற்றப் படுவதை விவரித்தார். கூட்டத்தில் இருப்பவர்களை கலகலப்பாக இருக்கும் வகையில் பேசி  ஒட்டு போடுவதால் பிரச்சனை  தீராது போராட வேண்டும் என்று  தனது உரையை  நிறைவுசெய்தார்.

மாவட்ட பொருளாளர் தோழர் சரவணக்குமார் தனது உரையில் பு.ஜ.தொ.மு சங்கம்  துவங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள், ஆனால்  GST, பணமதிப்பு இழப்பு  ஆகியவற்றால் லட்சக்கணக்கானோர்  வேலை இழந்தனர் அதை  கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள், அனைத்திற்கும் அரசுதான் காரணம்  மற்றும்  தொழிலாளர்கள் நுகர்வு வெறியால் போர்குணம் மழுங்கடிக்கப்பட்டு இருப்பதை  அம்பலப்படுத்தியும், காட் ஒப்பந்தம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் அமைந்துள்ளதையும் விளக்கினார்.

இறுதியாக மாவட்ட பொறுப்பாளர் தோழர் லோகநாதன் அவர்கள் மே தினம்  உழைப்பாளர் தினம் என்றும், அது  காலப்போக்கில்  தொழிலாளர் தினமாக சுறுக்கப்பட்டுள்ளது என்பதையும். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு மக்கள் போராட்டங்களே என்பதை விளக்கும் விதமாக பண்ணிமடை பகுதி 6 வயது சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் மக்கள் போராட்டம்தான்  குற்றவாளியை   கண்டுபிடிக்க வைத்துள்ளது என்பதை கூறினார். மக்கள் போராட தயங்குவதற்கு அச்சம் காரணமாய் இருக்கிறது. அச்சமின்றி போராடவில்லையெனில் மனிதகுலம் உயிர் வாழ முடியாது. போராட தயங்கும் எந்த உயிரினமும்  உயிர் வாழ   முடியாது என டார்வின் கூறியதை நினைவு கூர்ந்தார்.

காவல் துறையும் அரசும் மக்கலுக்கானது அல்ல குற்றவாளிகளின் பாதுகாவலன் என்றும்,  இந்த அரசு நீடிக்கும் வரை பிரச்சனைகள் தீராது. கோவில்களில் வழிபாடு, பூஜைகள் செய்து நமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளமுடியாது. தோற்று  போன  இந்த கட்டமைப்பை வைத்துக்கொண்டு தேர்தல் பாதையின் மூலம் நமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியாது.

புதிய  ஜனநாயகத் தொழிலாளர்  முன்னணி போல  ஜனநாயகப்பூர்வமான, தவறு  செய்தால் உடனே திருப்பி அழைக்கிற அமைப்பு முறைகொண்ட  புதியஜனநாயகப்  புரட்சிதான் தீர்வு. எனவே சாதி – மத பேதங்களை  களைந்து வர்க்கமாய் ஒன்றிணைந்து மக்கள் வரவேண்டும்  என பேசி முடித்தார்.

பிரான்ஸ் நிறுவனம் சூயஸ்-க்கு  சிறுவாணித் தண்ணீர் தாரை வார்க்கப்பட்டது    குறித்து ம.க.இ.க நாடகம் நடத்தப்பட்ட பிறகு SRI கிளைத்தலைவர்  தோழர் கோபிநாத் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.

பீரங்கிக் குண்டுவீச்சு அவனைக் கவர்ந்து இழுத்தது ! உற்சாகமூட்டியது !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 10

ன்றைய தினம் வெண்பனியில் நூற்றைம்பது அடிகள் கூட முன்னேற அவனுக்கு வாய்க்கவில்லை. மாலைக் கருக்கல் அவனைத் தடை செய்து விட்டது. மறுபடி ஒரு பழைய அடிக் கட்டையைத் தேர்ந்தெடுத்து அதைச் சுற்றிலும் சுள்ளிகளைக் குவித்து, துப்பாக்கித் தோட்டாவால் செய்த அருமை சிகரெட் கொழுவியை எடுத்து பற்ற வைக்க முயன்றான். அது எரியவில்லை. இன்னொரு தரம் முயன்றான். அவன் உடல் சில்லிற்றுப் போயிற்று. கொழுவியில் பெட்ரோல் தீர்ந்துபோய் விட்டது. அதைக் குலுக்கினான். எஞ்சிய பெட்ரோல் ஆவியை வெளிக் கொணர்வதற்காக ஊதினான். ஒன்றும் பயனில்லை. இருட்டிவிட்டது. பொருத்து சக்கரத்துக்கு அடியிலிருந்து சிதறிய நெருப்புப் பொறிகள் சிறு மின்னல்கள் போல, அவன் முகத்தை சூழ்ந்திருந்த இருளை கண நேரத்துக்கு விலக்கின. சிக்கிமுக்கிக் கல் தேய்ந்து விட்டது, நெருப்பு மூட்டமுடியவில்லை.

தட்டித் தடவித் தவழ்ந்து அடர்த்தியான இளம்பைன் மரக்கன்றின் அடியை அடைந்து, நூல் உருண்டைப்போல சுருண்டு, மோவாயை முழங்கால்களில் புதைத்துக் கொண்டு முட்டுகளைக் கைகளால் அறுகக் கட்டியவாறு, காட்டின் சந்தடிகளைக் கேட்ட படியே முடங்க வேண்டியதாயிற்று. அந்த இரவில் புகலற்ற சோர்வு அலெக்ஸேயை ஒருகால் ஆட்கொண்டிருக்கும். ஆனால், உறங்கிய காட்டில் பீரங்கி வெடிகளின் ஓசைகள் முன்னைவிடத் துலக்கமாகக் கேட்டன. குண்டுகள் சுடப்படுகையில் உண்டாகும் குட்டையான அடியோசைகளையும் குண்டுகள் வெடிக்கும் போது ஏற்படும் ஆழ்ந்த சிதறொலிகளையும் தனிப் பிரித்து அறியத் தான் தொடங்கி விட்டதாகக் கூட அலெக்ஸேயிக்குத் தோன்றியது.

விளங்காத கலவரமும் துயரமும் உலுப்பக் காலையில் விழித்துக் கொண்டு அலெக்ஸேய் உடனே நினைத்துப் பார்த்தான்: “என்னதான் நடந்து விட்டது? கெட்ட கனவு கண்டேனா?” என்று. அப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது சிகரெட் கொளுவியைப் பற்றி. ஆனால் வெயில் கொஞ்சலாக வெப்பமூட்டத் தொடங்கி, சுற்றும் இருந்தவையாவும் – மங்கிய மணல் மணலான வெண்பனியும், பைன் மரங்களும், ஊசியிலைகளுமேக்கூட – மினு மினுத்துப் பளிச்சிட்டதும், பெரிய விபத்தாகப்படவில்லை. இன்னும் மோசமாயிருந்தது வேறொன்று. இறுகப் பிணைத்திருந்த மரத்துப் போன கைகளைப் பிரித்ததும் தன்னால் எழுந்து நிற்க முடியாது என்பதை அவன் உணர்ந்தான். எழுந்திருப்பதற்கு சில வீண் முயற்ச்சிகள் செய்கையில் அவனது ஊன்றுகோல் முறிந்துவிட்டது. சாக்குப்போலத் தரையில் துவண்டு விழுந்தான் அவன். மரத்த அங்கங்கள் சரி நிலைக்கு வர இடமளிப்பதற்காகப் புரண்டு நிமிர்ந்து படுத்தான். ஊசியிலைப் பைன் மரக் கிளைகளின் ஊடாக ஆழங்காணமுடியாத நீலவானை நோக்கலானான். தூய வெண்மையான, மென்தூவி போன்ற, தங்க முலாம் பூசிய சுருட்டை விளிம்புகள் கொண்ட மேகங்கள் அதிலே விரைந்து சென்றன. இப்போது அங்கங்கள் கொஞ்சங்கொஞ்சமாகச் சரியாகத் தொடங்கியிருந்தன. ஆனால், கால்களுக்கு என்னவோ நேர்ந்துவிட்டது. அவற்றால் எழுந்து நிற்கவே முடியவில்லை. பைன் மரத்தைப் பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க அலெக்ஸேய் இன்னும் ஒரு முறை முயன்றான். கடைசியாக இதில் அவனுக்கு வெற்றிகிடைத்தது. ஆனால், கால்களை மரத்தின் பக்கம் கொண்டுவர முயற்சி செய்ததுமே பலவீனம் காரணமாகவும் உள்ளங்கால்களில் ஏற்பட்ட ஏதோ பயங்கரமான, புதிய நமைச்சலுடன் கூடிய வலி காரணமாகவும் விழுந்துவிட்டான்.

இது தான் முடிவா என்ன? இங்கே, பைன் மரங்களுக்கு அடியில், இப்படியே மடிந்து போவதுதானா? இங்கே அவனுடைய உடலை விலங்குகள் கறவிக் குதறித் தின்று எலும்புகளை மட்டுமே விட்டுவைக்கும். அந்த எலும்புகளைக் கூட எவனும் ஒரு போதும் காணமாட்டான், அடக்கம் செய்ய மாட்டானே! சோர்வு திமிற முடியாதபடி அவனைத் தரையோடு தரையாக அழுத்தியது. ஆனால், தொலைவில் முழங்கிற்று பீரங்கிக் குண்டுவீச்சு. அங்கே சண்டை நடந்து கொண்டிருந்தது. அங்கே தன்னவர்கள் இருந்தார்கள். இந்த கடைசி எட்டு, பத்து கிலோ மீட்டர் தொலைவைக் கடப்பதற்கு வேண்டிய வலிமை அவனிடம் இருக்காதா என்ன?

இது தான் முடிவா என்ன?
இங்கே, பைன் மரங்களுக்கு அடியில், இப்படியே மடிந்து போவதுதானா? இங்கே அவனுடைய உடலை விலங்குகள் கறவிக் குதறித் தின்று எலும்புகளை மட்டுமே விட்டுவைக்கும்.
அந்த எலும்புகளைக் கூட
எவனும் ஒரு போதும் காணமாட்டான்,
அடக்கம் செய்ய மாட்டானே!

பீரங்கிக் குண்டு வீச்சு கவர்ந்து இழுத்தது, உற்சாகம் ஊட்டிற்று, அவனை வற்புறுத்தி அழைத்தது. அந்த அழைப்புக்கு அவன் பதில் அளித்தான். கைகளையும் முழங்கால்களையும் ஊன்றி எழுந்து, கிழக்கு நோக்கித் தவழ்ந்து செல்லலானான். தொடக்கத்தில் தொலைவில் நடந்த சண்டை ஓசைகளால் மயக்கப்பட்டு வசமின்றிச் சென்றான். பின்னர் சுய உணர்வுடன் முன்னேறினான். காட்டில் இந்த மாதிரி முன்னேறுவது ஊன்று கோலின் உதவியுடன் செல்வதைவிட எளிது. பாதங்கள் இப்போது எந்தச் சுமையையும் தாங்க வேண்டியிருக்கவில்லை ஆதலால் குறைவாகவே வலிக்கின்றன. விலங்கு போல் தவழ்ந்து செல்வதால் எவ்வளவோ அதிக விரைவாகத் தன்னால் முன்னேற முடியும் என்பதை எல்லாம் அவன் புரிந்து கொண்டான். மகிழ்ச்சி காரணமாக உருண்டை ஒன்று நெஞ்சில் கிளம்பித் தொண்டையில் அடைத்துக் கொள்வதை மீண்டும் அவன் உணர்ந்தான். தனக்குத்தானே அல்ல, இத்தகைய நம்ப முடியாத இயக்கத்தின் வெற்றியைச் சந்தேகித்த பூஞ்சை உள்ளம் படைத்த வேறு எவனுக்கோ போல அவன் இரைந்து சொன்னான்:

“பரவாயில்லை, பெரியவரே, இப்போது எல்லாம் ஒழுங்குக்கு வந்துவிடும்!”

ஓர் இடைநிறுத்தத்தின் போது அவன் குளிரில் விரைத்துப் போன அங்கங்களைக் கக்கத்துக்கிடையே வைத்துச் சூடு படுத்திக்கொண்டான். அப்புறம் பிர் மரப்பட்டையை நகங்கள் பிய்ந்து போகும்படி உரித்து நீண்ட வெண்பட்டை நார்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டான். கம்பளி லேஞ்சித் துண்டுகளை பூட்சுகளுக்கு உள்ளிருந்து வெளியே எடுத்தான். அவற்றைக் கைகளில் சுற்றிக் கொண்டான். உள்ளங்கைகள் மேல் செருப்பின் அடித்தோலின் வடிவில் மரப்பட்டையை வைத்து பிர்மர் நார்களால் அதை இணைத்துக் கட்டிக்கொண்டான். பின்பு இராணுவ மருத்துவப் பைகளில் இருந்த பட்டித் துணிகளை அதன் மேல் சுற்றி இறுக்கினான். வலது கையில் மிகவும் செளகரியமான அகன்ற அடித்தாங்கல் அமைந்துவிட்டது. இடது கையிலோ பற்களால் சுற்றிக் கட்டுப்போட வேண்டியிருந்த படியால் கட்டு அவ்வளவு நன்றாக வாய்க்கவில்லை. எனினும் கைகள் செருப்புகள் அணிந்து இருந்தன. இயங்குவது முன்பை விடச் சுலபமாக இருப்பதை உணர்ந்தவாறு அலெக்ஸேய் மேலே தவழ்ந்து சென்றான். அடுத்த நிறுத்தத்தில் முழங்கால் மீதும் மரப்பட்டைத் துண்டுகளை வைத்துக் கட்டிக் கொண்டான்.

நடுப்பகலில் கதகதப்பு உடம்பில் உறைக்கத் தொடங்கியது. அதற்குள் அலெக்ஸேய் கைகளால் கணிசமான “அடிகள்” முன்னேறியிருந்தான். பீரங்கிக் குண்டு வீச்சு – அவன் அதை நெருங்கிவிட்டதாலோ, அல்லது செவிப்புலனின் ஏதேனும் ஏமாற்றுக் காரணமாகவோ தெரியவில்லை – முன்னிலும் உரக்க ஒலித்தது. நிரம்ப வெப்பமாக இருந்தமையால் அவன் தனது விமானி உடுப்பின் “ஜிப்பை” நெகிழ்த்த வேண்டியதாயிற்று.

பாசி அடர்ந்த சதுப்புத் தரையின் குறுக்காக அவன் தவழ்ந்து சென்றான். அதில் வெண்பனிக்கு அடியிலிருந்து வெளித் துருத்திக் கொண்டிருந்தன பசிய மேடுகள். அங்கே விதி அவனுக்கு இன்னொரு பரிசை ஆயத்தமாக வைத்திருந்தது. ஈர்ப்பும் மென்மையும் உள்ள வெளிறிய பாசிமீது மெருகூட்டியவை போல பளபளத்த கூரிய இலைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த மெல்லிய நூல் போன்ற தண்டுகளை அவன் கண்டான். இந்த இலைகளின் நடு நடுவே, மேட்டின் மேற்பரப்பின் மீதே கிடந்தன கருஞ்சிவப்பான கிரான் பெர்ரிப் பழங்கள். கொஞ்சம் நசுங்கியிருந்தாலும் சாறு நிறைந்தவை அவை. அலெக்ஸேய் குனிந்தான். வெல்வெட் போன்ற மென்மையும் வெதுவெதுப்பும் சதுப்பு நில ஈர மணமும் கொண்ட பாசியிலிருந்து பெர்ரிப் பழங்களை ஒன்றன் பின் ஒன்றாக உதடுகளாலேயேக் கவ்விப் பறித்துத் தின்னத் தொடங்கினான்.

வெண்பனியின் கீழ் இருந்த கிரான் பெர்ரிப் பழங்களின் இனிப்பும் புளிப்புமான இனிய சுவை, சில நாட்களுக்குப் பிறகு அவன் முதல் தடவை உண்ட இந்த உண்மையான உணவு அவன் வயிற்றில் இசிவு வலியை உண்டாக்கியது. ஆனால், அறுப்பது போன்ற இந்தக் குத்துவலி நிற்கும் வரைக் காத்திருக்க அவனுக்கு சக்தி பற்றவில்லை. ஒவ்வொருத் திட்டாகத் தவழ்ந்து ஏறி, வாய்ப்பாக இருந்து கொண்டு, இனிப்பும் புளிப்புமான மணமுள்ள பழங்களைக் கரடி போன்று நாக்காலும் உதடுகளாலும் லாவி லாவித் தின்றான். இந்த மாதிரிச் சிலத் திட்டுக்களை காலி செய்துவிட்டான். வெண்பனி உருகியதால் தேங்கியிருந்த வசந்தகாலக் குளிர்நீர் அவனுடைய பூட்சுகளுக்குள் கசிந்து ஈரமாக்கிற்று. கால்களிலோ, காந்தும் கொடிய வலி உண்டாயிற்று. களைப்பினால் உடல் சோர்ந்தது. ஆனால் அவனோ, இவற்றில் எதையும் உணரவில்லை. வாயில் ஓரளவு இனிப்பு கலந்த கடும் புளிப்பையும் வயிற்றில் இனிய கனத்தையும் மட்டுமே அவன் உணர்ந்தான்.

அவனுக்குக் குமட்டல் எடுத்தது. ஆனால், அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. மறுபடியும் பழங்களைத் திரட்டுவதில் முனைந்தான். தான் செய்திருந்த செருப்புக்களைக் கைகளிலிருந்து கழற்றினான். பெர்ரிப் பழங்களைப் பறித்து டப்பாவிலும் தலைக் காப்பிலும் அவற்றைச் செம்மச் செம்ம நிறைத்துக் கொண்டான். நாடாக்களால் தலைக்காப்பை இடுப்பு வாறுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டான். உடல் முழுவதையும் ஆட்கொண்ட கடும் உறக்க மயக்கத்தை அரும்பாடுப்பட்டுப் போக்கிக் கொண்டு தவழ்ந்து மேலே சென்றான்.

இரவில் முதிய பிர் மர விதானத்தின் அடியை அடைந்து, கிரான் பெர்ரிப் பழங்களைத் தின்றான், மரப் பட்டைகளையும் பிர் கூம்புக்கனி விதைகளையும் சவைத்தான். எச்சரிக்கையும் கலவரமும் நிறைந்த உறக்கத்தில் ஆழ்ந்தான். யாரோ ஓசை செய்யாமல் இருளில் தன் அருகே பதுங்கி வருவது போல அவனுக்கு அநேகதடவைத் தோன்றியது. அவன் கண்களை விழித்து, சட்டென எச்சரிக்கை அடைந்து ரிவால்வரைக் கையில் பிடித்தவாறு அசையாது உட்கார்ந்திருந்தான். விழும் கூம்புக் கனிகளின் சத்தம், லேசாக உறைந்து இறுகும் வெண்பனியின் சரசரப்பு, வெண்பனிக்கு அடியிலிருந்து பெருகும் சிற்றோடையின் மெல்லிய கல கலவொலி, எல்லாமே அவனுக்கு நடுக்கம் உண்டாக்கின.

விடியும் தருவாயில்தான் ஆழ்ந்த தூக்கம் அவனை ஆட்கொண்டுவிட்டது. நன்றாக வெளிச்சம் ஆனபிறகு, தான் எந்த மரத்தடியில் உறங்கினானோ அதைச் சுற்றிலும் நரிக்கால்களின் அடித்தடங்களைக் கண்டான். அவற்றின் நடுவே, தரையில் இழுபட்ட வாலின் நீண்ட அடையாளம் தென்பட்டது.

ஓகோ, இதுவா அவனைத் தூங்க விடாமல் தொந்தரவுச் செய்தது! நரி அவனைச் சுற்றியும் அருகாகவும் நடந்தது, சற்று உட்கார்ந்து விட்டுப் பின்னும் நடந்தது என்பது தடங்களிலிருந்தது தெரிந்தது.

படிக்க:
சைவ சமயத்தின் மீதான கம்பனின் கருத்தியல் குண்டுவெடிப்புகள் !
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !

அலெக்ஸேயின் மனத்தில் கெட்ட சிந்தனை உதயமாயிற்று. தந்திரமுள்ள இந்தப் பிராணி, மனிதனின் சாவை முன் கூட்டி உணர்ந்து கொள்கிறது என்றும், சாவு விதிக்கப்பட்டவனைப் பின்பற்றத் தொடங்குகிறது என்றும் வேட்டைக்காரர்கள் சொல்வார்கள். கோழைத்தனமுள்ள இந்த ஊனுண்ணியை இந்த முன்னுணர்வுதான் அவனுடன் பிணைத்திருக்கிறதோ?

திடீரென அலெக்ஸேய் எச்சரிக்கை அடைந்தான். கிழக்கேயிருந்து இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்த பீரங்கி குண்டுகளின் அதிரொலியின் ஊடாக, மெஷின்கன் குண்டு வரிசைகளின் சடசடப்பு சட்டெனத் துலக்கமாக அவன் காதுகளுக்கு எட்டிற்று.

களைப்பை அக்கணமே உதறி எறிந்து விட்டு, நரியையும் இளைப்பாறலையும் மறந்துவிட்டு, அவன் மீண்டும் காட்டுக்கு உள்ளே தவழ்ந்து முன்னேறினான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம் ! அறநிலையத்துறை ஆணையருக்கு ம.க.இ.க. கண்டனம் !

3

பத்திரிகைச் செய்தி

02-04-2019

ரசியல் சட்டத்திற்கு எதிராகவும் அறிவியலுக்குப் புறம்பாகவும் தமிழக அறநிலையத்துறை ஆணையர் பணிந்தர் ரெட்டி ஒரு ஆணை வெளியிட்டுள்ளார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும்; வருணஜபம், நந்தி பூஜையோடு அமிர்த வர்ஷிண, மேக வர்ஷிணி,  கேதாரி, ஆனந்தபைரவி, ரூப கல்யாணி ஆகிய ராகங்களில் பாடல்கள் பாட வேண்டும்; ஓதுவார்களைக் கொண்டு தேவாரப் பதிகங்களைப் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட விரிவான ஆணை வெளியிட்டுள்ளதோடு, சுந்தரர் பதிகம் பாடி மழை பொழிய வைத்த கதையையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மதச்சார்பற்ற அரசின் மூத்த அதிகாரி ஒருவர் அறிவியலுக்கு எதிராகச் செயல்படுவதும் அரசியல் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படுவதும் கடும் கண்டனத்திற்குரியது. அறநிலையத்துறை உடனடியாக இந்த ஆணையை திரும்பப் பெற வேண்டும்.

யாகம் நடத்தி பாட்டு பாடி மழை பெய்ய வைக்க முடியுமென்றால் வேலையின்மை, வறுமை போன்று ஆயிரக்கணக்கான மக்கள் பிரச்சினைகளையும் இதே போல மிக எளிதாகத் தீர்த்து விடலாமே!

கோடையில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்வது இயல்பான இயற்கை நிகழ்வு. இதைப் பயன்படுத்திக்கொண்டு யாகம் என்ற பெயரில் ஊழல் நடக்குமேயன்றி சொட்டு மழைகூடப் பெய்யாது.

செயற்கைக்கோள்கள் போன்ற அதிநவீன அறிவியல் சாதனங்கள் மூலம் மிகத்துல்லியமாக வானிலையைக் கணிக்கும் இந்தக் காலத்தில், இவ்வாறு மூட நம்பிக்கையின் அடிப்படையில் ஆணை வெளியிடுவது மிகவும் ஆபத்தானதாகும்.

அறிவியல் நெறிகளை வளர்க்க வேண்டிய அரசு இவ்வாறு கட்டுக் கதைகளையும் மூடநம்பிக்கைகளையும் வளர்ப்பது எதிர்காலச் சமுதாயத்தை சீரழிக்கும் செயலாகும். தமிழக அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ், பாஜகதான் இயக்குகிறது என்ற தமிழக மக்கள் கருத்தை மெய்ப்பிப்பதாகவே அறநிலையத்துறை ஆணையரின் செயல் அமைந்துள்ளது. எனவே உடனடியாக இவ்வாணையைத் திரும்பப் பெற வேண்டும். பணிந்தர் ரெட்டி ஆணையர் பொருப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இவண்
காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

பெண்களின் பார்வையில் அழகு – ஆபரணம் – ஆடை – உணவு | பெண்கள் நேர்காணல்

0

ட்சய திரிதியைக்கு எத்தனை பவுன் தங்கம் வாங்குவீர்கள் ?  என்ன சீரியல் பார்ப்பீர்கள் ? அழகு சாதனங்களுக்கு எவ்வளவு செலவழிப்பீர்கள் ? மாதம் எத்தனை முறை ஹோட்டல் உணவு சாப்பிடுவீர்கள் ? எத்தனை பட்டுப்புடவை வைத்திருக்கிறீர்கள் ? இன்னும் பல அதிரடி கேள்விகளுக்கு அதிரடி பதிலளிக்கிறார்கள் பெண்கள் !

பொதுவான ஒரு கேள்விக்கு, வெவ்வேறு வர்க்கப் பிரிவைச் சேர்ந்த பெண்களின் பதில்கள் எவ்வாறு இருக்கின்றன ? பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்கள்

 


கொஞ்சம் இதையும் பாருங்க …

சைவ சமயத்தின் மீதான கம்பனின் கருத்தியல் குண்டுவெடிப்புகள் !

கம்பன் சைவசமயத்தின் மீது மேற்கொண்ட கருத்தியல் குண்டுவெடிப்புகள் ! | வி.இ.குகநாதன்

‘இராமாயணங்கள் எத்தனை வகை?’ என்ற ஒரு கேள்விக்கான விடை காண்பதே மிகப் பெரும் புதிரான பணியாகும். பலரும் வால்மீகி எழுதிய இராமாயணத்தை கம்பர் தமிழில் மொழிபெயர்த்தார் என்றே கருதியிருப்பார்கள். அது தவறு. உண்மையில் நாட்டுப்புறக் கதைகளாக வாய்மொழி மூலமாகவே பல வகையான இராமாயணக் கதைகள் கடத்தப்பட்டு வரப்பட்டு, பல்லாண்டுகளின் பின்னரே அவை எழுத்துருப் பெற்றன. இந்த வகையில் மொத்த இராமாயணக்கதைகள் நூற்றுக்கணக்கானவையா அல்லது ஆயிரக்கணக்கானவையா என்பதே ஆய்விற்குரிய பகுதியாகும்.

இது தொடர்பாக ராமானுஜன் (A. K. Ramanujan) என்பவர் எழுதிய ‘Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation’  என்ற கட்டுரை பல்கலைக்கழக பாடத்திட்டங்களிலேயே இடம்பெற்றுப் பின்னர் இந்துத்துவா அமைப்பினரின் அழுத்தங்களால் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பல்வகைப்பட்ட இராமாயணங்களில் ராமனையும், சீதையினையும் உடன்பிறந்தவர்களாகக் காட்டும் ஒரு கதை; சீதையே இல்லாத ஒரு கதை எனப் பல்வேறுபட்ட வகையான கதை வடிவங்கள் உண்டு. இவை எல்லாவற்றிடையேயும் வால்மீகி எழுதிய இராமாயணமும், கம்பர் எழுதிய கம்ப இராமாயணமுமே மக்களிடம் பெரிதும் பரவலடைந்தவையாகும்.

ஏற்கனவே நாட்டுப்புறக் கதைகளாகவிருந்த இராமாயணத்தை வால்மீகி மற்றும் கம்பர் ஆகியோர் தாம் வாழ்ந்த காலப்பகுதிகளிற்கேற்ப தாம் சார்ந்திருந்த மதங்களிற்குச் சார்பாக இன்னொரு மதத்தின் மீதான தாக்குதலாகவே கதையினை வடிவமைத்திருந்தார்கள். இதில் கம்பரின் நோக்கத்தினைப் பார்ப்பதற்கு முன்னால் காலத்தால் முந்தியவரான வால்மீகியின் நோக்கத்தினைப் பார்ப்போம்.

வால்மீகி ராமாயணத்தின் பவுத்தத்தின் மீதான போர் :

வால்மீகி ராமாயணம் என்பது பவுத்த எதிர்ப்பினையும், பார்ப்பனியத் தாங்கலையுமே முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இதனை விளங்கிக்கொள்வதற்கு புத்தரின் காலத்திற்குச் சென்றுவரவேண்டும். பார்ப்பனியர் குளிரான இடங்களிலிருந்து வந்தமையால் நெருப்பினைக் (அக்கினி) கடவுளாகவும் வேள்வியினை (யாகம்) முதன்மையான சடங்காகவும் கொண்டிருந்தனர். இந்த வேள்விகளின் போது பெருமளவு மாடுகளையும், பிற மிருகங்களையும் வெட்டி வேள்வியில் பலியாக்கி வந்தனர் (இதற்கான சான்றுகளை வேதங்களிலேயே காணலாம்).

அரக்கியாக உருவகப்படுத்தப்படும் தாரகை …

இத்தகைய நிலையில் வேளாண்மையில் பயன்படுத்தப் போதிய மாடுகள் இன்மையால் புத்தர் வேள்வியினை எதிர்த்தார். ஒரு முறை சொர்க்கத்திற்குச் செல்ல என்று கூறி பார்ப்பனர்களால் யாகம் ஒன்று நடத்தப்பட்டு மிருகங்கள் வெட்டப்பட்டு அதில் பலியிடப்பட்டன. அந்த யாகம் நடைபெறுமிடத்திற்குச் சென்ற புத்தர், “ஏன் இவ்வாறு மிருகங்களை நெருப்பில் பலியிடுகிறீர்கள்?” எனக்கேட்டார். அப்போது பார்ப்பனர்கள் யாகத்தில் பலியிடப்படும் மிருகங்கள் எல்லாம் நேரே சொர்க்கம் செல்வதால் கவலைப்படவேண்டாம் எனக்கூற, புத்தர் “இவ்வாறு மிருகங்களைப் பலியிட்டுப் பின்னர் சொர்க்கம் போவதற்குப் பதில் நீங்களே நேரில் நெருப்பில் குதித்து நேரடியாகச் சொர்க்கம் செல்லலாமே!” என்றார். பார்ப்பனர்களிடம் பதிலில்லை, அந்த யாகம் பாதியிலேயே குழம்பிற்று.

இவ்வாறு புத்தருக்குப் பின்னரும் பவுத்தர்களிற்கும் பார்ப்பனர்களிற்கும் யாகங்கள் தொடர்பான மோதல்கள் இடம்பெற்றுவந்தன. இக் காலப்பகுதியிலேயே வால்மீகி ராமாயணம் எழுதப்படப்பட்டது.

இப்போது வால்மீகி இராமாயணத்திற்கு வந்தால், ராமன் மேற்கொண்ட முதற்போர் தாடகை என்ற அரக்கப் பெண்ணிற்கு எதிராகவேயிருந்தது. அதாவது வேள்வியினைக் (யாகம்) குழப்ப வந்த தாடகையினை எதிர்த்து விசுவாமித்திரரின் அழைப்பின் பெயரில் ராமன் எதிர்த்துப் புரிந்த போரே ராமனின் முதற்போர். இதிலிருந்தே அரக்கர்களுடனான பகை ராமனிற்குத் தொடங்குகின்றது.

படிக்க:
அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !
அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?

இங்கு யாகத்தைக் குழப்பும் அரக்கர்களாக புத்தரும், அவரது கொள்கையினைப் பின்வற்றுவோருமே உருவகப்படுத்தப்படுகின்றார்கள். இங்கு ராமாயணத்தில் வேள்விக்குக் கொடுக்கப்படும் சிறப்பினையும், அதனை எதிர்த்தோரை கொடிய அரக்கர்களாகவும் உருவகப்படுத்துவதனைப் பார்த்தால் வால்மீகியின் நோக்கம் புலனாகும். இதனைப் படிக்கும் சிலருக்கு ‘நாம் இறைச்சி சாப்பிட்டுவிட்டுக் கோயிலிற்கே போவதில்லை, ராமபிரான் எவ்வாறு மிருகங்களைப் பலியிடும் யாகத்திற்கு உதவுவார்’ என்ற ஐயம் ஏற்படும்.

ராமாயணத்தில் ராமர் இறைச்சி உண்பவர் மட்டுமல்லாமல் மதுவும் உண்பார் (சான்று : உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8).  வால்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றது எனப் பார்க்க ருத்திர காண்டத்திற்கு வரவேண்டும்.

ராமர் அரசனாக முடி சூட்டப்பட்ட பின்பும் அரசாட்சியில் ஈடுபடவில்லை. பரதனும், அமைச்சர்களுமே ஆட்சியினைப் பார்த்துக்கொண்டனர். வால்மீகி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். ‘நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான்.’ (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).

இவ்வாறு ஆட்சியில் பங்கெடுக்காத ராமன் முதன்முதலில் ஆட்சியில் செய்யும் செயலே சம்பூகன் தலைவெட்டல் ஆகும். அதாவது சூத்திரர்கள் தவம் செய்யவோ அல்லது ஞானம் (கல்வி) பெறவோ கூடாது என்ற பார்ப்பன சனாதன தர்மத்திற்கு முரணாக, சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்வதாக பார்ப்பனர்கள் ராமனிடம் முறையிட, அவன் மரத்தில் தொங்கியபடி தலைகீழாகத் தவம் செய்த சூத்திரனான சம்பூகனின் தலையினை வெட்டி வீழ்த்துகின்றான். (உத்தர காண்டத்தின் 73 முதல் 76 வரையிலான சருக்கங்கள்).

இவ்வாறு வால்மீகி ராமாயணமானது பார்ப்பனிய நலன்களிற்காகப் பவுத்தத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட போராகவே உருவகப்படுத்தப்படுகின்றது. வால்மீகி காலத்தில் பவுத்தமே பார்ப்பனியத்தின் எதிரியாகக் காணப்பட்டமையால் வால்மீகி ராமாயணம் பவுத்தத்தின் மீது போரினைத் தொடுத்தது, ஆனால் கம்பனின் காலத்தில் அத் தேவையில்லை. எனவே கம்ப ராமாயணம் யார் மீது போர் தொடுத்தது என இனிப் பார்ப்போம்.

தமிழர்களிடையே இராமாயணக் கதை :

கம்ப இராமாயணத்திற்கு முன்னரே தமிழர்களிடையேயும் ராமர் கதை பரவியிருந்தது. சங்க இலக்கியங்கள் (அகநானூறு 70, புறநானூறு 378), சிலப்பதிகாரம் (மதுரைக்காண்டம், ஆய்ச்சியர் குரவை) என்பனவற்றிலேயே வேறுபட்ட ராமர் கதைகள் சிறு செய்திகளாக இடம்பெற்றுள்ளன. ‘இராவணன் மேலது நீறு, எண்ணத் தகுவது நீறு’  என திருஞானசம்பந்தரே தேவாரத்தில் இராவணனைப் பற்றி உயர்வாகக் கூறியுள்ளார். இவ்வாறு தமிழகம் ராமர் கதைகள் பற்றி அறிந்திருந்த சூழ்நிலையிலேயே கம்பர் தனது இராமயணத்தை பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் (CE 12th cent) எழுதுகின்றார்.

கம்பரின் காலத்தில் பவுத்தம் இந்தியாவை விட்டுத் துரத்தியடிக்கப்பட்டு, சமணம் கழுவேற்றப்பட்டு விட்டது. எனவே அவற்றினை எதிர்க்கவேண்டிய தேவை கம்பரிற்கு இல்லை. நாயன்மார்களின் செயற்பாட்டினாலும், அக் காலச் சோழ அரசர்களின் தாங்கலாலும் சைவமானது பெரும் சமயமாக உருவெடுத்திருந்தது. கம்பரோ வைணவர் என்பதுடன் அக்காலத்தில் சைவத்திற்கும் வைணவத்திற்குமிடையே பூசல்கள் காணப்பட்ட காலம்.

எனவேதான் கம்பர் சைவத்தின் மீதான பனிப்போராகக் கம்ப ராமாயணத்தை எழுதியிருந்தார். இங்கு பனிப்போர் (Cold war) என்ற சொல் கவனிக்கத்தக்கது (பனிப்போர் என்பது தானே நேரடியாக ஈடுபடாமல் மறைமுகமாகப் போர் செய்வது. எ.கா- அமெரிக்கா-சோவியத் பனிப்போர்).

வால்மீகி போன்று வெளிப்படையாகவல்லாமல் கம்பர் இவ்வாறு மறைமுகமாகப் போர் புரிவதற்குச் சோழர்களின் சைவத்தின் மீதான பற்று, பார்ப்பனிய நலன் இரு புறங்களிலும் (சைவம்-வைணவம்) இருந்தமை, சைவர்களையும் கவர்ந்து தமது கடவுளை ஏற்கச்செய்தல் ஆகியவை காரணங்களாக அமைந்திருக்கக்கூடும். இது பனிப்போர் என்பதால் மிக நுணுக்கமாகப் பார்த்தாலே கம்பரின் நோக்கத்தினை விளங்கிக்கொள்ள முடியும். சைவ-வைணவ முரண் என்பது யார் முதன்மையான கடவுள், எந்தக் கடவுள் ஆற்றல் கூடியவர், எந்தப் பெயரினை (நாமத்தை) உச்சரித்தல் என்பன தொடர்பான மோதல்களே என்பதனை மனதிற்கொண்டு பாருங்கள்.

கம்பர் சைவத்தின் மீது தொடுத்த கருத்தியல் போர் :

கம்பர்  பெருமளவிற்கு உவமைகளைக் கையாண்டே சைவத்தின் மீதான தாக்குதலை மேற்கொண்டிருந்தார். பல்வேறு கட்டங்களாகவே இத் தாக்குதல் இடம்பெற்றிருந்ததுடன், இத்தகைய தாக்குதல்கள் வால்மீகி இராமாயணத்திலோ அல்லது நாட்டுப்புற ராமர் கதைகளிலோ இல்லாதவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கம்பர் முதற் கட்டமாக சிவ (சைவ) பக்தர்களாகவும், ராம பக்தர்களாகவும் உருவகப்படுத்தப் படுபவர்களைக் கொண்டு தனது பனிப்போரினைத் தொடங்குகின்றார். சிவ பக்தர்கள் (வாலி முதற்கொண்டு ராவணனும், அவரது அரக்கர் கூட்டமே சிவ பக்தர்கள்) மற்றையோரின் மனைவியினைக் களவாடுபவர்களாகவும், போரில் தோற்பவர்களாகவுமே காண்பிக்கப்படுகின்றனர்.

மறுபுறத்தில் வால்மீகி ராமாயணத்தின்படி வாலி இறந்தபின் சுக்கீரிவன் வாலியின் மனைவியான தாரையினைத் தனது மனைவியாக்கிய செய்தியினை கம்பன் மாற்றி ராம பக்தனான சுக்கீரிவனின் நற்பெயரினைப் பேணுகின்றான். இன்னொரு ராம பக்தனான அனுமானின் ஆற்றலினைக் கூறும்போது சிவனாலும் செய்ய முடியாத செயலினைச் செய்தவனாகக் காட்டப்படுகின்றான்.

`முத் தலைஎஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம்
முற்றி,
வித்தகத் தூதன்மீண்டது இறுதியாய் விளைந்த
தன்மை,
அத் தலை அறிந்தஎல்லாம் அறைந்தனம்;
ஆழியான்மாட்டு
இத் தலைநிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக்
கொண்டாம்.

(சான்று- கம்ப ராமாயணப் பாடல் 6019)

பொருள் – அனுமன் மூன்று தலைகளை உடைய சூலாயுதம் ஏந்திய சிவபிரானுக்கும் செய்து முடிப்பதற்கு அருமையான காரியத்தை நிறைவேற்றி….

இன்னொரு ராமபக்தனான அங்கதனின் செயலினை உருத்திரமூர்த்தியினாலும் செய்ய இயலாது என்கின்றார்.

அத் தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி
ஆர்த்தார்;
இத் தொழில் இவனுக்கு அல்லால், ஈசற்கும் இயலாது
என்பார்;
குத்து ஒழித்து, அவன் கைவாள் தன்கூர் உகிர்த் தடக்
கை கொண்டான்,
ஒத்து இரு கூறாய் வீழ வீசி, வான் உலைய ஆர்த்தான்.

(க.ரா 7939 வது பாடல்)

பொருள் – (அங்கதனுடைய) அந்த (வீரத்) தொழிலைக்  கண்ட தேவர்கள், கை கொட்டிப்   பேரொலி   செய்தார்கள்; இந்த  வீரத் தொழிலை; இவனுக்கு அல்லால் சிவபிரானுக்கும்; இயலாது என்பார்….

கம்பன் இரண்டாவது கட்டமாக சிவனால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஒவ்வொன்றாக ராமனால் வெற்றி கொள்ளப்படுவதாகக் காட்டுகின்றார். இதனை ராமன் சிவதனுசினை (சிவன்-வில்) சீதை சுயம்வரத்தின்போது உடைப்பதுடன் தொடங்குகின்றது. அடுத்தாக “ சங்கரன் கொடுத்த வாளும்…” பாடல் பொதுவாக அறியப்பட்டதே. இவ்வாறு சிவன் வழங்கிய ஆயுதங்களும், வரங்களும் மட்டும் ராமனால் தோற்கடிக்கப்படவில்லை. சிவனின் வேலாலும் (சூலத்தாலும்) துளைக்கமுடியாத மார்பினை உடைய பலம் பொருந்திய ராவணன் எனக் குறிப்பிட்டு, பின்னர் போரில் ராம பாணத்தால் துளைக்கப்படுவதன் மூலம் ராமனின் ஆயுதம் சிவனின் ஆயுதத்தை விடப் பலம் வாய்நததாக் கம்பன் கூறுகின்றான்.

பழிப்புஅறு மேனி யாள்பால்
சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனி சால
வெதும்பினான், ஈசன் வேலும்,
குழப்பு அரிது ஆய மார்பை,
மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக்
கிடந்தவாள் அரக்கன் கேட்டான்.

(க.ரா 8275 வது பாடல்)

இன்னொரு இடத்தில் சிவனின் சூலத்தை விட ராமனின் அம்பே வலுக் கூடியது என ராவணன் வாய் மூலமாகவே கம்பர் கூற வைக்கின்றார்.

இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று
என்னும்
மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும்
கண்டேன்;
அந்தரம் நீளிது, அம்மா! தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை
நோற்ககிற்பார்?’

(7294 வது பாடல்)

பொருள் – இந்திரனுடைய  வச்சிராயுதமும்; சிவபிரானின் கைகளில் உள்ள மூன்று       இலை வடிவத்தைக் கொண்ட மந்திர ஆற்றல் பொருந்திய முத்தலைச் சூலமும் திருமாலின் வளைந்த சக்கரப் படையின் வருகையையும் பல போர்களில் கண்டுள்ளேன்; அப்படைகளுக்கும் இராமனுடைய அம்புக்கும் வேற்றுமை மிகுதி. இந்திரன்  படை, ஈசன் கை மந்திர அயில், மாயோன் வளை ஆகியவற்றை எளிமையாகப் பொறுத்த யான் தவவேடம் பூண்ட இராமன் அம்புக்குப் பொறுக்க மாட்டாது நொந்தனன். யானல்லாத மற்றையோர்  யார் அவ்வம்பின் ஆற்றலை எதிர்த்துத் தாங்க வல்லார்.

மேற்குறித்த பாடலில் சிவனின் சூலத்துடன், மாயோனின் சக்கரத்தையும் விட ராமனின் அம்பு வலிமையானது எனக் கூறுவதனைக் காணலாம். இவ்வாறு சில இடங்களில் ராமரின் ஆற்றலினை திருமாலின் ஆற்றலை விடக் கூடுதலாகக் காட்டுவது, திருமாலின் அவதாரமே ராமன் என்ற செய்திக்கு முரணானது (சிலவேளைகளில் தனது பாத்திரப் படைப்பான ராமனை மற்றைய எல்லாக் கடவுள்களையும் விட உயர்வாகக்காட்டுவதற்காகவோ! என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது).

இன்னொரு இடத்தில் கம்பர் ‘சிவனின் வில்லும் திருமாலின் வில்லும் நேரடியாக மோத சிவனின் வில் தோற்றது’ என்று வேறு பாடுகின்றார்.

இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும்
வெருவரத் திசைகள் பேர வெங்கனல் பொங்க மென்மேல்
செருமலே கின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன்
வரிசிலே இற்ற காக மற்றவன் முனிந்து மன்னோ`

(1291 வது பாடல்)

மேற்குறித்தவாறு, கம்பர் சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனினை நேரடி மோதலிலேயே தோற்க வைக்கின்றார்.

மூன்றாவது கட்டமாகக் கவிக் கூற்று உவமைகள், ஒப்பீடுகள் என்பவற்றினூடாக கம்பர் தனது சைவத்தின் மீதான போரினைத் தொடர்கின்றார்.  கம்ப ராமாயணத்தில் சிவன் குறித்து கூறப்பட்டுள்ள 395 இடங்களில் 168 இடங்கள் கவிக் கூற்றாக வருவதாகப் பெருமையாகக் கூறுகின்றார் ‘சிவம் பெருக்கும் சீலர்’ ராய.சொ என்பவர். அது உண்மைதான், ஆனால் அவற்றில் பெரும்பாலானவைகளில் அரக்கர்களின் ஆற்றலே சிவனிற்கு ஒப்பிடப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு.

  • திரிசுரா என்ற அரக்கன் சிவனின் சூலாயுதம் போன்றவன் (2987 வது பாடல் )
  • அயோமுகி என்ற அரக்கியின் தோற்றம் ஊழிக்கால உருத்திரமூர்த்தியின் தோற்றம் போன்றது (3585 வது பாடல் )
  • இந்திரசித்தனின் தோற்றமானது சிவன், முருகன், விநாயகன் ஆகிய மூவரையும் ஒருங்கே சேரப் பெற்ற தோற்றம் எனல் (4974 வது பாடல் )
  • சிவனும் நடுங்கும் படி இந்திரசேனன் அம்புகளை எறிதல்(8123 வது பாடல் )
  • ராமன் விட்ட கருடப்படையினால் சிவன் அணிந்திருந்த பாம்புகள் அஞ்சி நடுங்கல் (10006 வது பாடல் )

இதை விடப் பல இடங்களில் சிவன் ‘அழிப்புக் கடவுள்’ என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் (பொதுவாக மக்கள் உலகை அழிக்கும் கடவுளிடம் இறையன்பு செலுத்தமாட்டார்கள், காத்தல் கடவுளையே விரும்புவர் என்ற உளவியல்). இவற்றின் உச்சமாக சிவனின் உணவுக்காகவே ஊழிக்காலம் ஏற்படுகின்றது எனக் கம்பன் பாடுகின்றார்.

நீலநிற நிருதர், யாண்டும் நெற்பொழி வேள்வி நீக்க,
பால்வரு பசியன், அன்பால் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட, உலகுஎலாம் அழிவின் உண்ணும்
காலமே என்ன மன்னோ, கனலியும் கடிதின் உண்டான்.

(5942 வது பாடல் )

கம்பர் காலத்தில், சைவ மதத்தவரோ ஒரு உயிரினைக் கொன்று உண்பதே தீவினை (பாவம்) என்றிருக்க, கம்பரோ ஊழிக்காலத்தில் சிவனோ பசிக்காக முழு உலகையும் உண்பவராக மேலுள்ள பாடலில் காட்டுகின்றார். இதிலிருந்து கம்பரின் நோக்கத்தினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இறுதிக் கட்டத்தில் சிவனின் எட்டுத் தோள்களும் ராமனின் ஒரு விரலிற்கு ஈடு ஆகாது (7295 – “பேய்இரும் கணங்க ளோடு…” ) என்கின்றார் கம்பர்.

சிவ பக்தனான ராவணனே ராமனைப் பரம்பொருளாக ஏற்றுக்கொள்வதாகவும் (9837- “சிவனோ? அல்லன் நான்முகன்..”) ராவணன் வதைபடலத்தில் (134) கம்பர் பாடுகின்றார்.

எல்லாவற்றிலும் உச்சமாக சிவன், பிரம்மன் உட்பட எல்லோரும் “நாராயணாய” எனும் மந்திரத்தை மறந்தால், அவர்கள் இறந்தவரேயாவர் (6232- “முக்கண் தேவனும், நான்முகத்து ஒருவனும்….” ) என்று கம்பர் கூறி எந்த நாமத்தை (பெயர்) யார் கூற வேண்டும் என வலியுறுத்தி சைவத்தின் அடிமடியிலேயே கைவைக்கின்றார்.

இவ்வாறு கம்பன் பல்வேறு கட்டங்களாக சைவத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களை கம்ப ராமாயாணத்தை அணுகி நுணுக்கமாகப் பார்ப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம். சில இடங்களில் கம்பர் சிவனைப் பெருமையாகவும் குறிப்பிடுகின்றார் என்பதனை மறுக்கவில்லை. அதெல்லாம் மேற்கூறியனவற்றுடன் மட்டுமல்லாமல், விரிவஞ்சி நான் குறிப்பிடாத இன்னமும் பல கம்பரின் கூற்றுக்களுடன் கவனமாக ஒப்பிட்டுப் பார்த்தால் கம்பர் சைவத்தின் மீது மேற்கொண்ட பனிப்போர் தெளிவாகப் புரியும்.

கம்பரின் சைவத்தின் மீதான எதிர்ப்புணர்வினை கவிக்கோ ஒரு கவியரங்கில் அனுமான் வேடத்தில் பாடிய ஒரு கவிதை தெளிவாக விளக்கும் (கீழுள்ளது கம்பராமாயணப் பாடலன்று).

தென்னிலங்கை வேந்தன்
திருநீற்றுப் பக்தன் என்றே
பொன்னிலங்கைதனை
பொடியாக்கித் தந்துவிட்டேன்’

–  கவிக்கோ

வி.இ.  குகநாதன்

அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !

0

ரேந்திர மோடி அரசின் மிகவும் விருப்பத்துக்குரிய சொல் ‘துல்லியத் தாக்குதல்’ (Surgical Strike).  2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் முகாம்கள் மீது இந்தியா எல்லை தாண்டி நடத்திய தாக்குதலின்போது இந்த சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. இராணுவம் இந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது; பிரதமரும், அவருடைய பரப்புரையாளர்களும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.

அதே ஆண்டு நவம்பர் மாதம் பிரதமரின் திடீர் பேரழிவுப் பிரகடனமான 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களை திரும்பப் பெறும் முடிவின்போது கருப்புப் பணத்தின் மீதான ‘துல்லியத் தாக்குதல்’ என அந்தச் சொல்லை ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர் பயன்படுத்தினார்.

பயங்கரவாதத்தின் மீதான மோடி அரசின் துல்லியத் தாக்குதல்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தானில் இருந்து வரும் கிளர்ச்சியாளர்களின் ஊடுருவலைத் தடுக்க நமது பாதுகாப்புப் படைகள் தினமும் போரிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  கருப்புப் பணத்திற்கு எதிரான துல்லியத் தாக்குதலும் எதிர்விளைவுகளையே உண்டாக்கியது. பணமதிப்பழிப்பு கருப்புப் பணத்தை ஒழிப்பதற்குப் பதிலாக, பணத்தாளை அடிப்படையாகக் கொண்ட பல சிறு, குறு தொழில்களை ஒழித்துக்கட்டியது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் விதைகள் வாங்கவோ, உரம் வாங்கவோ பணம் இல்லாமல் தடுமாறி நின்றனர்.

படிக்க :
♦ #SayNoToWar : போரை விரும்புகிறவர்கள் உங்கள் குழந்தைகளை அனுப்பி வையுங்கள் !
♦ மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?

அதேபோன்றதொரு தாக்குதலை, மே 2014 முதல் அதாவது மோடி அரசு பதவியேற்றது முதல் நமது சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் போன்ற அறிவுசார் துறைகளை மீது நடத்தி வருகிறது மோடி அரசு. அந்நிறுவனங்களை வேண்டுமென்றே குறைமதிப்பிட்டு அவற்றின் மீது தொடர்ச்சியாக போர் தொடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் மிகவும் வெற்றிகரமாகவே முடிந்திருக்கின்றன; இந்த கல்வி நிறுவனங்களுக்கிடையே இருந்த அறமும் நம்பகத்தன்மையும் இழப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. விளைவாக, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்த நிறுவனங்கள் பெற்றிருந்த மதிப்பிற்குரிய இடத்தை இழந்து வருகின்றன.

தற்போதைய பிரதமர், ஆய்வாளர்கள் மீதும் ஆய்வு உதவித்தொகை மீதும் எத்தகைய மதிப்பு வைத்திருக்கிறார் என்பதை இந்தத் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் மூலமாக வெளிப்படுத்துகிறார். இதுவரை நியமிக்கப்பட்ட இரண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களும் கல்விப் புலத்திலோ அல்லது ஆய்வு புலத்திலோ பின்புலம் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் தங்களுடைய கட்டளையை ஆர்.எஸ்.எஸ்-டமிருந்தே பெற்றிருக்கிறார்கள்.  உதாரணத்துக்கு ‘சங்கி’ சிந்தனைக் கூடத்திலிருந்து உருவான, பூஜ்ஜிய ஆய்வுத்தன்மையுள்ளவர்கள் இந்திய வரலாற்றியல் ஆய்வு கவுன்சிலின் தலைவராகவும் இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கவுன்சிலின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற நேரங்களில், ஆர்.எஸ்.எஸ்.-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் கட்டளைகளை ஏற்று இரண்டு சிறந்த அரசு பல்கலைக்கழகங்களான ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீது மனிதவள மேம்பாட்டுத்துறை வெளிப்படையான விரோதப் போக்கை கடைப்பிடித்தது. முந்தைய காலங்களில் இந்த கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர் அமைப்புகள் ஏபிவிபி-யின் பிரச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், திட்டமிட்டு இந்தப் பிரச்சினைகளை உண்டாக்கியது இந்த அமைப்பு.

முந்தைய காலங்களில் இந்தப் பல்கலைக்கழகங்களில், வெளிநாட்டு மார்க்சிய சித்தாந்தங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அவற்றை சரிசெய்யும்விதமாக தற்போது சுதேசி தேசப்பற்றாளர்களின் சித்தாந்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சில வலதுசாரி சித்தாந்தவாதிகள் கூறிக்கொள்கிறார்கள். சமூக அறிவியல் மற்றும் மனிதநேயத் துறைகள் மீது மட்டுமே மோடி அரசின் போர் என்பதை இவர்களின் கூற்று சொல்வதாக நம்பினாலும், உண்மையில் அப்படி இல்லை. இது இயற்கை அறிவியலின் மீதும் உளப்பூர்வமாக தொடுக்கப்பட்ட போராகும்.

பழங்கால இந்தியர்களே பிளாஸ்டிக் சர்ஜரியையும் செயற்கைக் கருவூட்டலையும் கண்டறிந்தார்கள் என்று பிரதமரே சொன்னது அறிவியல் மீதான தாக்குதலில் முதன்மையானதாக அமைந்தது. முத்தாய்ப்பாக, “அனைத்து நவீன கண்டுபிடிப்புகளும் பழங்கால அறிவியல் சாதனைகளின் தொடர்ச்சிகளே” என்றவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நியமித்தார். அந்த அமைச்சர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன கோட்பாடுகள், வேதங்களிலேயே சொல்லப்பட்டிருப்பதாக சொன்னார்.

படிக்க:
♦ ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !
♦ மோடிக்கு சேவகம் செய்யும் ஜே.என்.யூ துணை வேந்தர் !

அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சரின் இந்தக் கூற்றுகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ். சாகாக்களிலோ சொல்லப்பட்டவை அல்ல; இந்திய அறிவியல் மாநாட்டில் சொல்லப்பட்டவை! சமீப ஆண்டுகளில் நடக்கும் இந்த வருடாந்திர நிகழ்வானது, நவீன அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து பேசப்படுவதற்கு பதிலாக, அமைச்சரின் சித்தாந்தக் கூட்டாளிகள், பழங்கால இந்துக்கள் விமானத்தை கண்டுபிடித்தார்கள் என்றும் கௌரவர்கள் முதன் முதலில் பிறந்த சோதனைக் குழாய் குழந்தைகள் என்றும் பேசினார்கள்.

துயரமாக இல்லாத வகையில் இவை வேடிக்கையானவையாக இருந்திருக்கும். இந்திய அறிவியல் கழகம், தொலைநோக்காளர் ஜாம்சட்ஜி டாடாவின் உதவியோடு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து அறிவியல் ஆய்வுகள் இந்த நாட்டில் மூடநம்பிக்கை மற்றும் புராணத்தின் வழியாக அல்லாமல், காரணம் மற்றும் பரிசோதனைகளின் அடிப்படையில் வழிகாட்டப்பட்டன. டாடா அடிப்படை ஆய்வியல் நிறுவனம், தேசிய உயிரியல் அறிவியல் மையம் போன்ற கல்வி நிறுவனங்கள் சர்வதேச தகுதிக்குரியவை.

அதேசமயத்தில், ஐஐடி-க்கள் தொழிற்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றின. அங்கே படித்த பட்டதாரிகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பலவகைகளில் உதவி வருகின்றனர்.  பிரதமரால் உற்சாகமளிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்களால் ஊக்குவிக்கப்படும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் அறிவியல் சிந்தனைக்கு கடுமையான, மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அறிவுத்துறை மீது இந்த அரசின் போர் குறித்து விமர்சிப்பவர்கள், தற்போதைய பிரதமருக்கும், இந்தியவின் முதல் பிரதமருக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக் காட்டினார்கள். விமர்சகர் பிரசன்ஜித் சவுத்ரி, “உலகின் இரண்டாவது பெரிய அளவிலான பயிற்சியளிக்கப்பட்ட அறிவியலாளர்களையும் பொறியியலாளர்களையும் நேரு உருவாக்கினார். ஹோமி பாபா,  விக்ரம் சாராபாய் போன்றவர்கள் நேருவின் அறிவுறுத்தலின் பேரில், இந்திய அறிவியல்தளத்தை உருவாக்கினார்கள்.. அறிவியல் கோட்பாட்டின் மீது ஆழமான பற்றுமிக்க நேருவை எதிர்க்கும் முயற்சியில், மோடி வெகுஜன போலி அறிவியல் பிற்போக்குத்தனத்தை தேர்வு செய்தார்” என டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில் எழுதினார்.

இந்தியாவின் உயர்தரமான சமூக அறிவியல் ஆய்வை மோடி அரசு ஆபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது என்பதை, நான் அதில் கூடுதலாக சேர்க்கிறேன். காவி சிந்தனையாளர்களுக்கு மாறாக, நேருவிய கலைக் கழகத்தில், மார்க்சியம் உள்ளிட்ட பல அறிவார்ந்த நீரோட்டங்கள் இருந்தன. D.R. Gadgil மற்றும் André Béteille போன்றவர்கள் தங்களது பொருளாதாரம் மற்றும் சமூகவியல் துறைகளில் பாபாவாகவும் சாராபாயாகவும் திகழ்ந்தார்கள். இவர்களும் இவர்களைப் போன்றவர்களும் சமத்துவமின்மை, கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, அரசின் கொள்கைகளை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை புகுத்தாமல் ஆதாரத்தின் அடிப்படையில் உருவாக்கியவர்கள். காவி ஊடுருவல் காரணமாக இதுவும் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.

அறிவியல் மற்றும் அறிவியல் ஊக்குவிப்பு என வரும்போது மோடி அரசு தன்னை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் அரசைக் காட்டிலும் தாழ்வாக உள்ளது. அடல் பிகாரி வாஜ்பாயி அரசில் சில அமைச்சர்கள் கற்றவர்களாகவும் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும் இருந்தனர். முதல் தே.ஜ.கூ. அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இயற்பியலில் ஆய்வுப்பட்டம் பெற்ற எம்.எம்.ஜோஷி இருந்தார்.  அவருடைய அமைச்சரவை சகாக்களான ஜார்ஜ் பெர்னாண்டஸ், யஷ்வந்த் சின்ஹா மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் வரலாற்றையும் அரசு கொள்கைகள் குறித்தும் ஆர்வத்துடன் வாசிப்பவர்களாக இருந்தவர்கள்.  ஜஸ்வந்த் சின்ஹாவும் அருண் சோரியும் படிப்பவர்களாக மட்டுமல்லாது, எழுதுபவர்களாகவும் இருந்தனர்.

படிக்க:
♦ மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்
♦ அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது

இப்போது நேரெதிராக, இந்த அரசில் உள்ள ஒரே ஒரு அமைச்சர், பிரதமர் உள்பட ஒரே ஒருவர்கூட வரலாறு, இலக்கியம் அல்லது அறிவியலில் ஆழ்ந்த ஆர்வம் உள்ளவர்களாக இல்லை. அவர்களில் ஒருவராவது தினமும் செய்தித்தாள்களை படிப்பாரா என நான் யோசிக்கிறேன். சிலர் முகநூல், ட்விட்டர் அல்லது வாட்சப் போன்றவற்றில்கூட இல்லை. பல்கலைக்கழக துணைவேந்தர்களையோ அல்லது ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர்களையோ நியமிக்கும்போது முதல்தரமான ஆய்வாளர்களை நியமிப்பதற்கு பதிலாக, மூன்றாம் தரமான சிந்தாந்தவாதிகளை நியமிக்கும் போது, இவற்றை நினைத்துக்கொள்வேன்.

25 ஆண்டுகளுக்கு முன்பு கல்விப் புலத்தை விட்டு விலகியதிலிருந்து, மோடி அரசின் வலுவிழந்த மனப்பான்மை என்னை பாதிக்கவில்லை என்றாலும் எனக்குள் துயரத்தை உணர்கிறேன். நான் இந்தியாவிலேயே முழுக் கல்வியையும் பெற்றவன்,   அப்போது அரசு பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி மதிக்கப்பட்டது, ஊக்குவிக்கப்பட்டது. தற்போது, பகுதி நேர பணியாளராக உள்ள நான், பல ஆய்வியல்  நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், தனிப்பட்ட முறையில் தொழில்முறையில் துயரத்துக்கு உள்ளாவதைக் காண்கிறேன். தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த இந்த கல்வி நிறுவனங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக தாக்கப்படுவது அவர்களை துயரம் கொள்ளச் செய்கிறது.

மோடி அரசு டெல்லியில் அதிகாரத்துக்கு வந்த அடுத்த ஒரு வருடத்தில் ‘இந்த அரசு அறிவுக்கு எதிரானதாக உள்ளது’ என எழுதினேன். என்னுடைய கருத்தை பொய்ப்பிக்கும் வகையில், மோடி அரசு எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை. ஆனால், நான் சொன்னதை பலவிதங்களில் உறுதிப்படுத்தியது.  மோடி அரசு ஆட்சிக்கு வந்த நிமிடத்திலிருந்து அறிவியல் மீதும் அறிவியல் ஊக்குவிப்பு மீதும் தொடர்ச்சியான துல்லிய தாக்குதல்களை நடத்தியது. பயங்கரவாதம் மற்றும் கருப்புப் பணத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக்காட்டிலும் இது மிகுந்த சேதாரத்தை விளைவிக்கக்கூடியது.

அறிவை உற்பத்தி செய்யும், கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சிறந்த கல்வி நிறுவனங்களை அமைப்பாக குறைமதிப்பிற்கு ஆட்படுத்துவதன் மூலம் மோடி அரசு நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தை புதைத்துவிட்டது. தற்போது வாழும் இந்தியர்களும் பிறக்காத இந்தியர்களும் இந்த மிருகத்தனமான, சகிப்புத்தன்மையற்ற அறிவின் மீதான போரின் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும்.

கட்டுரையாளர்: ராமச்சந்திர குஹா
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: தி வயர்

மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

ன்று நாம் பார்க்க இருப்பது மாரடைப்பைப் பற்றி. உலக அளவில் பெரும்பாலான மக்கள் என்ன காரணத்தால் இறக்கிறார்கள் ? உங்களுக்கு நான் 4 விடைகள் தருகிறேன். சிந்தித்துப் பதில் அளியுங்கள்.

  • முதலாவது சாலை விபத்து அல்லது வன்முறை சம்பந்தமான இறப்புகள்.
  • இரண்டாவது கேன்சர்.
  • மூன்றாவது இருதயம் சம்பந்தமான நோய்கள்.
  • நான்காவது நுரையீரல் மற்றும் கிட்னி சம்பந்தமான நோய்கள்.

உங்களில் அதிகம் பேர் நினைக்கக் கூடியது சரியே. இருதயம் சம்பந்தமான நோய்கள் தான் சரியான விடை, அதிலும் குறிப்பாக மாரடைப்பு.

இது பெரும்பாலும் தடுக்கக் கூடியது. மாரடைப்பு, என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். உடலில் எந்த பாகமும் உயிர்ப்போடு இருக்க வேண்டுமென்றால் அதற்கு போதுமான ரத்தம் தேவை.

உதாரணத்திற்கு உங்கள் கையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இறுக்க மூடி மணிக்கட்டில் இன்னொரு கையை வைத்து அழுத்துங்கள். இப்படி செய்யும்போது அந்த விரல்களுக்கும் உள்ளங்கைக்கும் தேவையான ரத்தம் செல்லாது. இப்போது மூடிய அந்தக் கையை விரித்து பார்ப்போமானால் அது வெளிறிப் போய் இருக்கும்.

நீங்கள் அவ்வாறே இறுக்கிப் பிடித்தது போல் இரண்டு நிமிடம் இருந்தீர்களானால், உங்களால் கையை அசைக்க முடியாது. அதுவே ஒரு மணி நேரம் கழித்து பார்த்தீர்கள் என்றால் உங்கள் கைகளில் நீலம் படர்ந்திருக்கும். அதுவே ஒன்றரை மணி நேரம் கழித்து பார்ப்போமானால், உங்கள் கைகளில் உள்ள ஒவ்வொரு செல்களும் இறந்திருக்கும். அவ்வாறு செல்கள் இறக்கும் முன் நீங்கள் இறுகப் பற்றி இருந்த கையை விட்டீர்கள் என்றால் உங்கள் உள்ளங்கைகளுக்குள் மீண்டும் ரத்தம் ஓட ஆரம்பித்துவிடும், கையானது சிவப்பு வண்ணத்திற்கு மீண்டும் மாறி உயிர் பிழைத்து விடும்.

உடம்பில் உள்ள அனைத்துப் பாகங்களும் ரத்தத்தினால்தான் உயிர் வாழ்கின்றன. ரத்தம் இல்லை என்றால் அந்தப் பாகத்திற்கு உயிர் இருக்காது. உடல் முழுவதும் ரத்தத்தை அனுப்புவது இதயம்தான். ஆனால் இதய தசைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அந்த இதயத் தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்வதற்காகவே சில ரத்தக்குழாய்கள் இருக்கிறது. நரம்பு என்பதன் பொருள் நரம்பு மண்டலம். எனவே நாம் அந்த வார்த்தையை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ரத்தம் கொண்டு வரும் ரத்தக் குழாய்களை நாம் தமனி எனக் கூறுவோம். இந்த தமனி என்ற ரத்தக் குழாய்தான் உடல் முழுக்க ரத்தத்தைக் கொண்டு செல்கிறது. இந்த இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டுவரும் தமனி அடைபடுவதால் உண்டாவதுதான் ஹார்ட் அட்டாக். அதாவது மாரடைப்பு.

படிக்க :
♦ பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு விடை கொடுப்பது சாத்தியமா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ அமெரிக்கா : குண்டு வைத்தால் இதய சிகிச்சை இலவசம் !

இருதயம் துடிக்கும்போது, இருதயத்தின் மேல் உள்ள அந்த மகா தமனி மூலமாய் ரத்தம் உடல் முழுக்க பாய்கிறது. இந்த மகா தமனியில் இருந்தே இரண்டு குழாய்கள் இருதயத்துக்கு வருகிறது. ஒன்று வலது பக்கத்திலும் மற்றொன்று இடது பக்கத்திலும் வருகிறது. இடது பக்கத்தில் வரும் அந்த ரத்த குழாய் இரண்டாகப் பிரிகிறது ஒன்று முன்புறமும், மற்றொன்று பின்புறமும் வருகிறது. இந்த மூன்றும்தான் இதயத்துக்கு ரத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்போது இந்த ரத்தக்குழாயின் இறுதி பாகம் பாதிக்கப்பட்டால், அந்த ரத்தக்குழாயைச் சுற்றியுள்ள பாகங்களுக்கு ரத்தம் பரவாது. அதனால் அந்தத் தசைகள் பாதிக்கப்படும். இதுவே ரத்தக்குழாய் நடுவில் பாதிக்கப்பட்டால் அந்த ரத்தக்குழாயை சுற்றி உள்ள பெரிய அளவிலான தசைகள் பாதிக்கப்படும். இதுவே அந்த ரத்தக்குழாய் தொடக்கத்திலேயே அடைபடுமானால், அந்த ரத்தக்குழாயை சுற்றியுள்ள முழுமைமான தசைகளும் பாதிக்கப்படும். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ரத்தக்குழாய் அடைப்பு இடத்தைப் பொறுத்து இந்த பாதிப்பானது மாறுபடும்.

ஒரு தமனியின் இறுதியில் அடைப்பு ஏற்படுமானால் அப்போது பாதிப்பு குறைவாக இருக்கும் அதுவே ஆரம்பத்தில் அடைபடுமானால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இன்னும் சில பேருக்கு இந்த இந்த தமனிகளை சுற்றியுள்ள அதன் கிளைகளில் அடைப்பு ஏற்படும். அப்படி கிளைகளில் அடைப்பு ஏற்படும்போது அந்த கிளைகளை சுற்றியுள்ள தசைகள் மட்டுமே பாதிக்கப்படும். எந்த குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது அந்தக் குழாய் எந்த அளவிலான தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்துதான் நாம் சிறிய அளவிலான அடைப்பு அல்லது பெரிய அளவிலான மாரடைப்பு என்று கூறுகிறோம். அதுவும் முழுவதுமாக சரி கிடையாது, அதை நாம் பின்னர் பார்ப்போம்.

ரத்தக்குழாயின் இறுதி இடங்களில், அடைப்பு இருந்தால் ஒருவர் எளிதில் பிழைத்துக் கொள்வார். ஆனால், அந்தத் தசைகள் மட்டும் செயலிழந்து போகும். அவருக்கு அதிக வலியைக் கொடுக்கும். அதுவே நாம் மாற்று மருந்து கொடுக்கும்போது அவர் உடல் நலம் தேறி விடுவார். இதுவே ரத்தக்குழாயின் ஆரம்ப இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்குமாயின், அவர் இறக்கும் வாய்ப்பு அதிகம். பெரிய அளவிலான தசைகள் பாதிக்கப்பட்டதால், அவர் வாழ்நாள் முழுக்க மாத்திரை மருந்துகளை உட்கொள்ள வேண்டி வரும்.

எனவே நாம் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான் மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் வருவது, அது எந்த இடத்தில் அடைப்பு ஏற்படுகிறது என்பதை பொறுத்து மாரடைப்பின் தன்மையானது மாறுபடும்.

இப்போது நாம் மூன்று நபர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். முதல் நபருக்கு ஏற்கனவே ரத்த குழாயில் 30% அடைப்பு உள்ளது. இரண்டாம் நபருக்கு 70% அடைப்பு உள்ளது. மூன்றாம் நபருக்கு 90% அடைப்பு உள்ளது என வைத்துக் கொள்வோம்.

நாம் முதலில் எடுத்துக் கொண்ட 30% அடைப்புள்ள நபருக்கு எந்த விதமான பாதிப்பும் தென்படாது. அவர் இயல்பான மனிதரைப் போல் ஓடி, ஆடி தனது அன்றாடப் பணிகளை செய்த வண்ணம் இருப்பார்.

இதுவே 70% அடைப்பு உடைய நபர் மாடிப்படி ஏறும்போது அல்லது கடினமான வேலைகள் செய்யும் போது, அவருக்கு சிறிது களைப்பு ஏற்படும். ஆனால், சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு திரும்பி அவர் தன் பணிகளைத் தொடர்வார். எனவே இவரது அன்றாடப் பணிகளிலும் பெரிய அளவிலான மாறுபாடுகள் எதுவும் தென்படாது.

90% அடைப்புள்ள நபருக்கும் மாறுபாடுகள் தென்படும். ஆனாலும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்து அல்லது அதைப் பொருட்படுத்தாது தனது அன்றாடப் பணிகளை மேற்கொண்டவாறு இருப்பார். இதற்குக் காரணம் இந்த மூன்று நபர்களுக்கும் ரத்த ஓட்டம் அடைபடாமல் பாய்ந்து கொண்டுதான் உள்ளது.

ரத்த ஓட்டம் தடைபடாமல் உள்ளதால், எந்தவித பாதிப்பும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு நாம் ECG மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தோமேயானால், அதில் எந்தவித குறைபாடும் தென்படாது. ஒரு விதமான ஜவ்வு இருக்கும். அதுதான் ரத்தத்தையும் அடைப்பையும் பிரிக்கிறது. இந்த ஜவ்வில் ஏதேனும் விரிசல் அல்லது கிழிசல் ஏற்படுமாயின் ரத்தமானது அதில் படரப்பார்க்கும்.

உதாரணத்திற்கு, நமது கையில் அடிபட்ட இடத்தில் ரத்தம் கசிகிறது என்றால், நாம் கையை வைத்து அந்த ரத்தத்தை அடைக்கப் பார்ப்போம். அவ்வாறு கையை வைத்து மூடும்போது ஏன் ரத்தம் வருவது நிற்கிறது என்றால், நமது உடலில் எப்போதெல்லாம் இவ்வாறு ஜவ்வு அல்லது சதைகள் பாதிப்புக்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் அந்த இடங்களில் ரத்தமானது சிறிய சிறிய இரத்த கட்டிகளாக மாறி படர்ந்து நிற்கும் இவ்வாறு நிற்கும்போது ரத்தமானது வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இதுதான் இயற்கை.

இதேபோல் நமது ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பின் மீதும் படர்ந்துள்ள ஜவ்வானது கிழியும் போது, அதில் நமது ரத்தமானது படர்ந்து அந்தக் கிழிஞ்சல்களை அடைக்க பார்க்கும். இவ்வாறு ரத்த கட்டியானது மேலும் படர்ந்து படர்ந்து முழு அடைப்பை உண்டாக்கிவிடும். எனவே நாம் முதலில் பார்த்த 30% மட்டுமே அடைப்புள்ள நபர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நன்றாகத்தான் இருந்தார். ஆனால் அவருக்கு ஜவ்வானது கிழியும்போது ரத்தமானது படர்ந்து அடைப்பு ஏற்பட்டு முழு விதமான அடைப்புக்கு வழி செய்து, பெரிய அளவிலான மாரடைப்பின் விளைவுக்கு வந்து நிற்கிறார். இந்த வகையான பாதிப்பானது மூன்று நபர்களுக்கும் பொதுவான ஒன்று. அதேபோல் மாரடைப்பும் இந்த மூன்று நபர்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

எனவே மாரடைப்பு ஏற்படும் முன்பு அவருக்கு 30, 60, 90 என எந்த சதவீதத்திலும் அடைப்பானது இருந்திருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு மாரடைப்பு ஏற்படாது. எப்போது மாரடைப்பு ஏற்படும் என்றால், அது 100% எட்டும்போது தான்.

இதை எப்படித் தடுப்பது ? இந்த மூன்று நபர்களுக்கும் பொதுவான பாதிப்பு என்பது ரத்தக்கட்டிகள் ஏற்படுத்தியதுதான். இந்த ரத்தக் கட்டிகளை நாம் கரைத்து விட்டோமேயானால், இரத்தமானது இயல்பாகப் பாய ஆரம்பித்துவிடும். மறுபடியும் அவர்கள் பழைய நிலைக்குத் திரும்புவார்கள்.

ஆனால், அதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. இந்த ரத்தக் கட்டிகள் ஆரம்பத்தில் உருவாகும்போது மிகவும் மெல்லியதாக இருக்கும். பின்னர் கடினமானதாக மாறும். அதுவே 3 மணி நேரம் கழித்துப் பார்ப்போமானால் மிகவும் கடினமானதாக மாறிவிடும். எனவே இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது, எவ்வளவு விரைவாக நாம் ரத்தக் கட்டிகளை கரைக்க மருந்துகளை உபயோகப்படுத்துகிறோமோ, அவ்வளவு விரைவாக இந்த ரத்தக் கட்டிகள் எளிதாகக் கரையும். இப்போது ஒரு நோயாளி ரத்தக்கட்டிகள் உருவாகிய ஒரு மணி நேரத்துக்குள் வருகிறார் என்றால், உடனடியாக அவருக்கு நாங்கள் சிகிச்சை அளிப்போம். அவர் அரை மணி நேரத்திற்குள் சரியாகி விடுவார்.

இதுவே அவர் இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து வருகிறார் என்றால், இந்த ரத்தக் கட்டிகளை கரைக்க நாம் சிரமப்படவேண்டியிருக்கும். ஆகவேதான் வலி ஏற்படும்போது உடனடியாக நாம் வரவேண்டும் எனக் கூறுகிறோம். அதைப்பற்றி நாம் பின்னர் பார்ப்போம்.

இதற்குத் தேவையான மருந்தானது எல்லா அரசு மருத்துவமனைகளிலும் உண்டு. ஒரு பத்து அல்லது இருபது படுக்கையில் மட்டுமே கொண்ட தனியார் மருத்துவமனைகளிலும் கூட நாம் இந்த மருந்தைக் காண முடியும். எனவே நெஞ்சு வலியோடு வருபவர் மாரடைப்பு உள்ளதா என்று பார்க்க ஒரு மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, இந்த ரத்தக் கட்டிகளைக் கரைக்க சரியான, முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மருந்துகளிலும் இரண்டு முதல் மூன்று வகையான மருந்துகள் உள்ளன. இந்த இரத்தக் கட்டிகளை கரைக்கும் மருந்தானது, 100 பேருக்கு செலுத்தினால் 50 முதல் 70 பேருக்குத்தான் இது சரியாக வேலை செய்யும். மீதி உள்ள நபர்களுக்கு நாம் மருந்தை செலுத்தி இருப்போம். ஆனால், இந்த ரத்த கட்டியானது அதில் கரையாமல் இருக்கும். அப்படி கரையாமல் இருக்கும் பொழுது, இருதயமானது சரியாக இயங்க வாய்ப்பில்லை. அந்த நபர்களுக்கு இவ்வாறு மருந்தை செலுத்தி சரியாகவில்லை என்று தெரிந்தபின் ஆஞ்சியோபிளாஸ்டி செய்வோம்.

படிக்க :
♦ மருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் மின் நூல் வெளியீடு
♦ இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?

எனது துறையில் உள்ள மருத்துவர்கள், இத்தகைய ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்பு எனத் தெரிந்த பின் இன்ஜெக்சன் செலுத்தாமல், நேரடியாகத் அந்த ரத்தக் கட்டிகளை உறிந்து எடுத்து ரத்தம் மீண்டும் சரியாக இயங்க வழி அமைத்துக் கொடுத்து விடுவோம். உங்களுக்கு ஒரு நோயாளியை அறிமுகப்படுத்துகிறேன். ஒரு நோயாளி ரத்தக்கட்டு ஏற்பட்ட 4 மணி நேரம் கழித்து வந்தார். இவருடைய நாடித் துடிப்பானது 30 என கீழிறங்கியது. உள்ளே சென்று பார்த்தோமேயானால் வலது பக்கம் உள்ள தமனி முழுவதுமாக அடைபட்டிருந்தது. அங்கு இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பின் அவருடைய நாடித் துடிப்பானது 70 என அங்கேயே அதிகமானது. அவர் இயல்பான நிலைக்கு திரும்பி விட்டார்.

ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்த பாதிப்பை சரி செய்யக் கூடிய அளவிலான மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவமனை அருகில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் இதை சரி செய்ய முடியும். எனவே நாம் செய்யவேண்டியதெல்லாம் இதற்கான மருந்தை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு சரிசெய்வதற்கு பெரிய மருத்துவமனைகளுக்கு செல்லலாம். ஆனால், உடனடியாக அந்த மருந்தை செலுத்த வேண்டியது அவசியம். இதுதான் மாரடைப்புக்கான வைத்தியம்.

இப்போது மாரடைப்பு என்றால் என்ன? அதற்கு உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொண்டோம். நான் உங்களை இன்னொரு கேள்வி கேட்கிறேன்.

மாரடைப்பு வந்தால் எத்தனை பேர் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்கிறார்கள்? ஒரு நூறு பேருக்கு மாரடைப்பு வருகிறது என்றால், எத்தனை பேர் மருத்துவமனையை வந்தடைகிறார்கள் ? விடை வெறும் ஐந்து சதவீதம் பேர்தான். மீதி உள்ள 40 முதல் 50 சதவீதம் பேர் வழியிலேயே இறந்து விடுகிறார்கள். அல்லது வீட்டிலேயே இறந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.

நமது உடலில் இருதயமானது எந்த பக்கம் உள்ளது என்று கேட்டால். அதிகம் பேர் இடது பக்கம் தான் உள்ளது என்று கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நமது இதயத்திற்கு நேரே மூன்று கோடை போட்டால், அது மூன்று பாகங்களாக பிரிக்கும். இடப்பக்கம் சிறிது அளவு அதிகமாக இருக்குமே தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது. எனவே இருதயமானது எங்கு உள்ளது என்று கேட்டால், அது இடப்பக்கமும் அல்ல, வலப்பக்கமும் அல்ல… மாறாக, நடுவில் உள்ளது என நாம் கூற வேண்டும்.

இதையே நாம் இங்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றால் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எல்லாம் அதன் அறிகுறிகளாக நடுப்பக்கத்தில் தான் வலியை ஏற்படுத்தும். ஆனால் மக்கள் இதை வாய்வு என தவறாக புரிந்து கொள்கின்றன.

மாரடைப்புக்கு உண்டான அறிகுறிகள் எவ்வாறு எல்லாம் தென்படலாம்? அனைவரும் கூறுவது போல வலியாக தென்படுவது வெறும் 50 சதவீதம்தான். பல பேருக்கு ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு இருக்கும். அதை வெளிப்படுத்த இயலாது. இன்னும் நிறைய பேருக்கு அந்த இடத்தில் அமுக்குவது போலவும், பிசைவது போலவும் இருக்கும். சில பேருக்கு வெறும் வாந்தி வரும் உணர்வாகத்தான் இருக்கும். சில பேருக்கு இதுவும் இருக்காது. உடலில் வியர்வை மட்டும் அதிகமாக வரும். இப்படி பல அறிகுறிகள் இருப்பதால் இப்படி வந்தால்தான் மாரடைப்பு என நாம் குறிப்பிட்டு கூற இயலாது. இந்த மாதிரி அறிகுறிகள் எங்கெல்லாம் தென்படலாம் என்றால். தாடைக்கு கீழும், வயிற்றுப் பகுதிக்கு மேலும் முன் அல்லது பின் எங்கேனும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்புக்கானதாக இருக்கலாம்.

இப்படிக் கூறுவதால் பலபேருக்கு பல இடங்களில் வலியானது உண்டாகிக் கொண்டுதான் இருக்கும். அதுவெல்லாம் மாரடைப்புக்கான அறிகுறிதானா? என கேள்வி எழலாம். இதற்கு விடை இல்லை. காரணம் மாரடைப்புக்கான அறிகுறி என்றால் வலியானது குறைந்தது 15 அல்லது 20 நிமிடம் நம்மை வாட்டி எடுக்கும். இவ்வாறு இல்லாமல் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடத்தில் வலியானது வந்து செல்கிறது என்றால், அது மாரடைப்புக்கானதாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. மேலும் நாம் மேற்கூறிய இடங்களில் வலி ஏற்பட்டால் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை. யாருக்கெல்லாம் மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதோ, அவர்கள்தான் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு ஒருவர் புகை பிடிக்கிறார் என்றால், அவருக்கு நெஞ்சுக்கரிப்பு அதிக நேரம் ஒரு 40 நிமிடம் உள்ளது என்றால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். அதை அவர் எளிதில் கடந்து போக இயலாது. எனது நண்பர் ஒருவர் ஓடும் போதும் அல்லது நடை பயணம் மேற்கொள்ளும்போதும் சிறிது ஏப்பம் வரும். ஒரு ஐந்து பத்து நிமிடம் உட்கார்ந்தால் சரியாகிவிடும் என கூறினார். நான் அவரை ஒரு ஈஸிஜி(பரிசோதனை) எடுக்க சொன்னேன். அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. எனவே சில நேரம் இவ்வாறு ஏப்பம் வருவது கூட மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் அல்லது மாரடைப்புக்கான முன்னறிவிப்பாகவும் இருக்கலாம்.

ஏன் மாரடைப்பு வரும்போது 50 % பேர்தான் மருத்துவமனைக்கு வந்து சேர்கின்றனர்? இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. நாம் முன்னர் கூறியது போல கையை இறுகப் பற்றிக் கொள்ளும் போது கையானது ரத்த ஓட்டம் இல்லாமல் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது. அதேபோல் இருதயத்தில் நாம் முன்னர் விளக்கியது போல பெரும்பகுதியான தசைகள் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் போது உடனடியாக மரணம் சம்பவிக்கும். இருதயத்தின் தசைகள் பலவீனம் ஆகிய உடன் இந்த நிகழ்வானது நிகழும். நாங்கள் அதை வீ.டி.வி.எஃப் என கூறுவோம். இதுவே மைனர் அட்டாக். அதாவது சிறிய அளவிலான மாரடைப்பு.

நாம் மேலே விளக்கியது போல சிறிய அளவிலான தசைகள்தான் இருதயத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும், இதயமானது சீராக இயங்காமல் வேகமாகத் துடித்து இரத்த ஓட்டத்தை கீழேயும் மேலேயும் செல்ல விடாமல் செய்து விடும். இதனாலும் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புகள் உண்டு. இதற்கு ஒரு காரணம். மாரடைப்பானது நிகழ்ந்து வீட்டிலேயே மரணிப்பது. இரண்டாவது காரணம் மாரடைப்புக்கான அறிகுறி என உணராமல், அதை தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு பின் இறுதிக் கட்ட நிலையில் மருத்துவமனையை வந்து சேர்வது அல்லது வராமல் பாதியிலேயே மரணிப்பது.

அதிக பேர் கசாயம் குடிப்பது அல்லது உஷ்ணம் எனக் காரணம் காட்டி எலுமிச்சம் பழத்தை பிழிந்து குடிப்பது, என மருத்துவமனைக்கு வராமல் காலத்தை கடத்துகின்றனர். இதற்காகத்தான் இந்தப் பதிவில் நாம் சுட்டிக்காட்டுகிறோம். இருதயமானது நடுவில் உள்ளது. இடப்பக்கமும் வலப்பக்கமும் அல்ல. மாரடைப்புக்கான அறிகுறி என்றால் அது நடுவில் ஏற்படும். அப்படியினில் எல்லோரும் பயந்து கொண்டுதான் இருக்க வேண்டுமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில்.

மாரடைப்பானது அனைவருக்கும் வரும்தான். ஆனால், எல்லோருக்கும் வரும் எனக் கூற முடியாது. மாரடைப்பானது யாருக்கெல்லாம் வரும் என நாம் ஒரு லிஸ்ட் போடுவோமா?

  • முதலில் பீடி அல்லது சிகரெட் புகைப்பவர்களுக்கு. இதில் புகையிலையை வாயில் வைத்து மெல்பவர்கள் அல்லது வேறு விதமாக பயன்படுத்துபவர்கள் எல்லோரும் அடக்கம்.
  • இரண்டாவது, சர்க்கரை நோய் உள்ளவர்கள்.
  • மூன்றாவது, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்.
  • நான்காவது, அதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள்.
  • அடுத்தது, வீட்டில் ரத்த உறவுகள் அண்ணன், தம்பி, அப்பா அல்லது தாய் யாருக்கேனும் மாரடைப்பு வந்தது என்றால் அது நமக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.
  • அடுத்தது உடல் பருமன் அதிகம் உள்ள நண்பர்களும், அடிக்கடி டென்சன் ஆகும் நபர்களுக்கும், உடல் உழைப்பு மிகவும் குறைவாக உள்ள நபர்களுக்கும் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் உள்ளது.

நாம் மேலே கூறிய காரணங்களைத் தகர்த்தால், அதாவது சர்க்கரை நோயாளி என்றால் சரியான உணவுமுறை எடுத்துக்கொள்வது, நடை பயணம் செல்வது; அதேபோல், உடல் உழைப்பு இல்லாதவர்கள் என்றால் உடல் உழைப்பில் ஈடுபடுவது, அதிக நேரம் ஒரே இடத்தில் இருப்பதைத் தவிர்ப்பது போன்ற காரணங்களால் நாம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தவிர்க்கலாம்.

மேலும், நாம் சிரமம் ஏற்படாமல் இருக்க, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ஒரு ஈசிஜி அதாவது பரிசோதனை செய்து கொள்வது நல்லது. நாம் மருத்துவமனைக்குச் சென்றால், அவர்கள் ஈசிஜி பிறகு பிளட் டெஸ்ட் ஏதேனும் எடுப்பார்கள். அதனால் நமக்கு சிறிது செலவு ஏற்படத்தான் செய்யும். இந்தச் செலவுக்கு பயந்து, நாம் வீட்டிலேயே இருந்தோமானால், அது நம் உயிருக்கான விலையைத் தந்துவிடும். எனவே நாம் செய்ய வேண்டியது இரண்டுதான். மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் நம்மிடம் இருக்கும் என்றால் அந்த காரணங்களைக் கலைவது.

இரண்டாவது, ஏதேனும் சிறிய அறிகுறி தென்பட்டாலும், நாம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, அதற்கான பரிசோதனைகளைச் செய்து கொள்வது. நாம் இந்த விஷயத்தில் மிகவும் ரிஸ்க் எடுப்பது சரியானதல்ல. இந்த சிறிய வீடியோவில் மாரடைப்புக்கான அனைத்து விஷயங்களையும் நாம் உள்ளடக்குவது எளிதானதல்ல. மக்களிடம் மாரடைப்பு சம்பந்தமான எழும் கேள்விகளுக்கு அடுத்த காணொளியில் விரிவாக விடையளிக்கிறோம்.. நன்றி.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

மாமா நீ நல்ல ஆசிரியர் ! உன்னை எனக்குப் பிடித்துள்ளது !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 3

வார்த்தைகளின் படிகத்தன்மை தொடர்ச்சி …

தேம்பியழுதபடியே தன்னைப் பள்ளியிலிருந்து விரட்ட வேண்டாமெனக் கெஞ்சிய சூரிக்கோ என்ற சிறுவனோ குழந்தைக்கே உரிய தாராள மனப்பாங்குடன் என்னை இரண்டு கரங்களாலும் கட்டிப் பிடித்தபடி, முப்பத்தெட்டு குழந்தைகளிலேயே முதலாவதாக, தன் வாழ்வின் முதல் பாடவேளையிலேயே என்னை மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கடித்தான். நான் பின்னால் மற்ற எல்லாக் குழந்தைகளிடமும் இதையே தான் எதிர்பார்க்க ஆரம்பிப்பேன். ”மாமா, நீ நல்ல ஆசிரியர். எனக்கு உன்னைப் பிடித்துள்ளது” என்று அச்சிறுவன் என் காதில் முணுமுணுக்கிறான்.

இதற்குப் பின் கெட்ட ஆசிரியராக இருக்க முடியுமா என்ன!

இவ்வளவு தாராளமாக, நம்பகமாக, எதிர்பாராவிதமாக, இன்னும் நான் ஒன்றும் சாதித்து விடும் முன்னராகவே நீ ஏன் என் மீது உன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாய்? நிச்சயமாக, உனக்கேற்ற ஆசிரியராக இருக்க நான் மிகவும் பாடுபடுவேன், முயற்சி செய்வேன், உன்னுடைய நம்பிக்கைகளை மெய்ப்பிப்பதற்காக நான் இரவும் பகலும் உழைப்பேன், உனக்காக உன்னோடு சேர்ந்து வளருவேன். சரி, துவக்கத்திலேயே, உனது பள்ளி வாழ்க்கையின் முதல் நிமிடங்களிலேயே எனது ஆசிரியர் மனசாட்சியின் தூய்மைக்கான பொறுப்பை ஏன் என் மீது சுமத்துகிறாய்!

இத்தருணத்தில் குழந்தைகள் என்னைப் பார்க்காமல் இருந்தால் நல்லது .

”பெஞ்சைப் பார்த்து தலையைக் குனியுங்கள்…. கண்களை மூடுங்கள்!… உங்களுக்கு மிகவும் சிரிப்பை வரவழைக்கக் கூடிய ஏதாவது ஒன்றை, உங்கள் குறும்புகளில் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள்.”

நான் சுதாரித்துக் கொண்டு, குழந்தைகள் தம் தலையைக் கரங்களால் பிடித்துக் கொண்டு, கண்களை இறுக்க மூடியபடி தம் குறும்புகளை நினைத்துக் கொள்வதைப் பார்க்கிறேன். சத்தம் போடாமல் மெதுவாக குழந்தைகளின் வரிசைகளிடையே நடந்தபடியே கிசுகிசு வெனச் சொல்கிறேன்:

”பெரும் சிரிப்பேற்படுத்தக் கூடியதை…. உங்களது குறும்புகளிலிருந்து…. சிரிப்பானவற்றை… இடைவேளையின் போது எனக்கு அவற்றைச் சொல்லுங்கள்…”

திடீரென ஒரு சலசலப்பு கேட்டது. மூலிகை மருந்துகள் அடங்கிய நீரூற்று ஒன்று பூமியைப் பிளந்து கொண்டு மேலே வருவதைப் போலிருக்கிறது. இந்த அடக்கமான, அமுக்கமான சிரிப்பை விவரிப்பதே கடினம். இது சிறிது சிறிதாகப் பெருகி வெடிச்சிரிப்பாக உருவெடுத்தது. முப்பத்தெட்டு குழந்தைகள் தலையைக் குனிந்தபடி, கண்களை மூடிக்கொண்டு கலகலவென சிரிக்கின்றனர். பின் அனைவரும் அமைதியானர்கள். ”படிகத் தன்மையுள்ள கண்ணாடிக்குத் திரும்பி வர வேண்டும்.”

”நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நாம் இப்போது வார்த்தைகளைப் பார்த்தோம், இனி வாக்கியங்களைக் கவனிப்போம்….. தலையை உயர்த்துங்கள்!… நேராக நிமிருங்கள்!”

கரும்பலகையை மூடியிருந்த திரையை அகற்றுகிறேன். அங்கே ஒரு படம் உள்ளது. அதில் ஒரு சிறுவன் புத்தகம் படிக்கிறான்.

”இப்படத்தைப் பார்த்து வாக்கியத்தை அமையுங்கள். இச்சிறுவன் எதைச் செய்கிறான்?”

”சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்.”

தாம்ரிக்கோ வாக்கியத்தை உருவாக்க வேண்டுமென எண்ணவில்லை. படத்தைப் பார்த்து அவள் என் கேள்விக்குப் பதில் சொன்னாள், அவ்வளவு தான். இப்போது, ”சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்” எனும் இப்பதிலை வாக்கியம் என்போம்.

”இவ்வாக்கியத்தை எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள் பார்க்கலாம்.”

குழந்தைகள் ஒரே குரலில் சொல்லும் பதில்களை என் கரங்களால் நான் ஒழுங்குபடுத்துகிறேன். திரையை மூடிவிட்டு மூன்று நீல நிற முக்கோண அட்டைவில்லைகளை (வார்த்தைகளின் அடையாளங்களை) எடுக்கிறேன்.

இவ்வாக்கியத்தை எழுத்தைக் குறிக்கும் அட்டைவில்லைகளின் உதவியால் ”எழுதுகிறேன்”. சிறுவன் (அனைவருக்கும் தெரியும்படியான ஓரிடத்தில் ஒரு அட்டைவில்லையை வைக்கிறேன்)… புத்தகத்தை (அருகே அடுத்த அட்டை வில்லையை வைக்கிறேன்)… படிக்கிறான் (பின் மூன்றாவது அட்டைவில்லையை வைத்து இறுதியில் முற்றுப் புள்ளியுடன் கூடிய அட்டைவில்லையை வைக்கிறேன்).

”எங்கே இந்த வாக்கியத்தைப் படியுங்கள்”. நான் ஒவ்வொரு அட்டைவில்லையாக சுட்டிக் காட்ட குழந்தைகள் படிக்கின்றனர்”: ”சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்”.

இப்போது ஒரு சிவப்பு நிற அட்டைவில்லையை எடுக்கிறேன்.

”இந்த அட்டையில்லை ‘சுவாரசியமான’ எனும் சொல்லைக் குறிக்கிறது. எங்கே திரும்பச் சொல்லுங்கள். சரி, இப்போது இந்த வார்த்தையை வாக்கியத்தின் எந்த இடத்தில் வைத்தால் நன்றாக இருக்கும்?”

ஆரம்பத்தில் வைத்தால் நன்றாயிருக்கும் என்று யாரோ பதில் சொன்னார்கள். சரி, பார்ப்போம்:

சுவாரசியமான சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான்.

வேறு பதில்களும் வந்தன:

சிறுவன் புத்தகத்தை சுவாரசியமான படிக்கிறான்.

சிறுவன் சுவாரசியமான புத்தகத்தைப் படிக்கிறான்.

சிறுவன் புத்தகத்தைப் படிக்கிறான் சுவாரசியமான.

மற்ற அட்டைவில்லைகளின் இடையில் சிவப்பு நிற அட்டைவில்லை இடம் மாறிக் கொண்டே இருக்கிறது. எல்லா மாதிரிகளையும் முயற்சி செய்த பின் ”சுவாரசியமான” எனும் சொல்லை இரண்டாவது இடத்தில் வைக்குமாறு குழந்தைகள் எனக்கு ஆலோசனை கூறுகின்றனர். பின் நான் கேள்விகளைத் தொடுக்கிறேன்:

”இந்த வாக்கியத்தில் எவ்வளவு சொற்கள்?.. இந்த வாக்கியத்திலிருந்து கடைசிச் சொல்லை எடுத்து விட்டால்” – நான் கடைசி அட்டைவில்லையை எடுக்கிறேன் – ”என்ன மிஞ்சும்?”

குழந்தைகள் ”படிக்கின்றனர்”: ”சிறுவன் சுவாரசியமான புத்தகத்தை”.

”இது நன்றாக இல்லை, வார்த்தையை பழைய இடத்திலேயே திரும்ப வையுங்கள்!” யாரோ ஆலோசனை கூறுகின்றனர்.

அதை வைத்து விட்டு மூன்றாவது சொல்லை எடுக்கிறேன். குழந்தைகள் ”படித்துவிட்டு” சிரிக்கின்றனர்.

”நன்றாக இல்லை!”

அட்டைவில்லையைத் திரும்ப வைக்கிறேன். இரண்டாவது சிவப்பு நிற அட்டைவில்லையை எடுக்கிறேன்.

”இது ‘மிகவும்’ எனும் சொல். இச்சொல்லை எந்த சொற்களுக்கு இடையில் வைத்தால் நன்றாக இருக்கும் சொல்லுங்கள். என் காதில் மெதுவாகச் சொல்லுங்கள்.”

ஒவ்வொருவரையும் விரைவாக அணுகுகிறேன்: ”நன்றி!….. நல்லது!… நன்றி!..” இதில் கிட்டத்தட்ட யாருமே தவறிழைக்கவில்லை. போன்தோ திடீரென என் கையைப் பற்றிக் கொண்டு, சிரித்தபடியே “நான் உங்களை விட மாட்டேன்” என்கிறான்.

“சரி, அப்படியெனில் என்னைப் பிடித்துக் கொள், சேர்ந்து வகுப்பறையைச் சுற்றுவோம்.”

போன்தோ என் பின்னால் வருகிறான். “மிகவும்” எனும் சொல்லை “சிறுவன்” எனும் சொல்லிற்கும் “சுவாரசியமான” எனும் சொல்லிற்கும் இடையில் வைக்கும்படி நீங்கள் கூறினீர்கள்.”

நான் வேண்டுமென்றே வேறு அட்டைவில்லைகளை நகர்த்தி விட்டு அவற்றின் இடையே புதியதை வைக்கிறேன். போன்தோவுடன் சேர்ந்து ஒரு புறமாக விலகி நின்று சற்று பேச்சை நிறுத்துகிறேன். ஒரு சிறுமி மட்டுமே நான் செய்ததைக் கவனிக்கிறாள்.

”நீங்கள் வார்த்தையைச் சரியானபடி வைக்கவில்லை!” மாயா கரும்பலகையை நோக்கி ஓடுகிறாள், “இதை இங்கே வைக்க வேண்டுமே தவிர அங்கல்ல.”

அவள் அட்டைவில்லைகளை மாற்றியமைக்கிறாள். நான் அவள் கரங்களைப் பற்றிக் குலுக்குகிறேன்.

”நன்றி, மாயா, மிக்க நன்றி, நீ என் தவறைக் கண்டு பிடித்தாய்!”

இப்போது நாங்கள் மூவருமாக வகுப்பின் முன் நிற்கிறோம்.

”சரி, நாம் இன்று என்ன செய்தோம் என்று பார்ப்போம் வாருங்கள்.”

”நாங்கள் உங்கள் காதில் முணுமுணுத்தோம்…”

”கண்களை மூடிக் கொண்டு பெஞ்சில் தலையைக் கவிழ்த்த படி இருந்தோம்…”

”அட்டைப்பெட்டியில் வார்த்தைகளைச் சேகரித்தோம்…”

”நீங்கள் மெதுவாக கிசுகிசுவென கூறிய வார்த்தைகளை நாங்கள் கண்டுபிடித்தோம்…”

படிக்க:
உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !

”பிறகு வாக்கியம்…”

”வாக்கியத்தில் நாங்கள் ’சிவப்பு’ வார்த்தைகளைச் சேர்த்தோம்…”

”எங்கள் குறும்புகளை நினைத்துப் பார்த்தோம்…”

”சிரித்தோம்…”

நான்: ”தாய் மொழிப் பாட வகுப்பு உங்களுக்குப் பிடித்திருந்ததா?”

”மிகவும்… ஆம்… பிடித்திருந்தது…”

இனிய மணியொலி கேட்கிறது. முதல் பாடம் முடிந்து விட்டது. ‘

”அடுத்த பாடம் கணிதம்! எங்கே, குழந்தைகளே, எழுந்திருங்கள்!…”

எல்லா சிறுவர்களையும் பார்த்துச் சொல்கிறேன்: ”வகுப்பறையில் உள்ளே வரும்போதும் வெளியே போகும் போதும் முதலில் சிறுமிகளுக்கு இடம் விடுங்கள்!.. இப்போது ஓய்வெடுங்கள்!”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

மனித குலத்தை எச்சரிக்கிறது மேதின வரலாறு ! பத்திரிக்கைச் செய்தி

PP Logo

1-5-2019

பத்திரிக்கைச் செய்தி

மனித குலத்தை எச்சரிக்கிறது மேதின வரலாறு !

துப்பாக்கித் தோட்டாக்கள், தூக்குமேடை என உலக தொழிலாளி வர்க்கம் நெருப்பாற்றில் நீந்தி பெற்ற உரிமைகளான, எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர புத்துயிர்ப்பு

இன்று மே தினக் காட்சிப் பொருளாய் !

கார்ப்பரேட் அதிகார யுகத்தில் பொறியாளர், மருத்துவர், பேராசிரியர், எழுத்தாளர், விஞ்ஞானி என அனைத்துப் பிரிவினரும் கூலிகளாக மாற்றப்பட்ட நிலையில்,

உழைப்புச் சந்தையே அருகும் சூழலில் – எந்த வேலை கிடைத்தாலும், எத்தனை மணி நேரமானாலும்,

எவ்வளவு சம்பளமானாலும், மாடுகளாய் உழைத்து, உரிமைகளை மெல்ல இழந்து,

நிரந்தரமில்லா வாழ்வில் அல்லாடும் உழைக்கும் மக்களே,

இனி எட்டு மணி நேர வேலை, பணிபாதுகாப்பு என கோரிக்கை வைப்பதில் என்ன பயன்?

வேலை வாய்ப்புக்களை ஒழித்து, மனித குலத்தினையே அழிவுக்குத்தள்ளும்,

முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அரசு கட்டமைப்பை வீழ்த்தி,

மக்கள் அதிகாரத்தை நிறுவாமல் இழந்த உரிமைகளை பெற முடியுமா ?


தோழமையுடன்

வழக்கறிஞர். சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?

தொழில் நுட்பத்தால் வழிநடத்தப்படும் சமூகமாக நாம் மாற்றப்பட்டு வருகிறோம். நாம் எப்படி வாழவேண்டும் நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதை அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி இன்று வடிவமைத்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன்னால் நாம் ஒரு கையடக்க டிஜிட்டல் எந்திரத்தில் விரல்களால் தேய்த்து தேய்த்து பக்கங்களைத் தள்ளி ஒரு மின் புத்தகத்தை படிக்க முடியும் என்பதை கற்பனை செய்திருக்க மாட்டோம். இன்று அதை தொழில்நுட்பம் சாதித்திருக்கிறது. தற்காலம் நம்மில் பெரும்பான்மையினர் டிஜிட்டல் வகையிலான வாசிப்பையே கொண்டிருக்கிறோம். அது கிண்டில் மூலம் அல்லது ஒரு மின் புத்தகத்தை பி.டி.எஃப் கோப்பாக வாசிப்பதாக இருக்கலாம். அல்லது உங்களது ஆண்ட்ராய்டு போனில் நடப்பு செய்திகளையோ வாட்ஸ்அப் அரட்டைகளை மேய்வதாக இருக்கலாம்.

எனினும் இன்றும் கூட நம்மில் சிலர் டிஜிட்டல் வாசிப்பை வசதியாகவும் வேறு சிலரோ அச்சு புத்தக வாசிப்பை வசதியாகவும் கருதுகிறார்கள். இந்த இரண்டு முறைகளிலும் என்ன வேறுபாடு இருக்கிறது, இரண்டின் சாதக பாதகங்கள் என்ன என்பன குறித்து விவாதிப்போம்

அச்சு வாசிப்பு அழிந்து விட்டது, அது டைனோசர் போல் அழிவிற்கான நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறது என்று சில டிஜிட்டல் சித்தாந்தவாதிகள் கருதுகின்றனர். உண்மை என்னவோ வேறொன்றாக இருக்கிறது. பொதுவில் படிப்பது என்று எடுத்துக் கொண்டால் மக்கள் அச்சு புத்தகமாக படிப்பதற்கு தான் விரும்புகிறார்கள். டிஜிட்டலில் படிப்பதற்கு பெரிய அளவில் விரும்புவதில்லை. அல்லது டிஜிட்டல் உலகில் வாசிப்பு என்றொரு துறையை அவர்கள் முக்கியமான ஒன்றாக கருதுவதில்லை.

டிஜிட்டல் வாசிப்பை பொறுத்த வரையிலும் அது குறுகிய கட்டுரைகள் குறுஞ்செய்திகள் ஆகியவற்றை மட்டுமே படிப்பதற்கு அதிகம் பயன்படுத்துகிறது. இப்படித்தான் சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் நம்மிடம் பிரபலமாகியிருக்கிறது. ஃபேஸ்புக்கில் வரும் நிலைத்தகவலில் (Read more) எனப்படும் மேலும் என்ற இணைப்பு இருந்தால் 100-க்கு 80 பேர் அதை சொடுக்கி படிப்பதிதல்லை. அப்படியே சொடுக்கினாலும் அதை சுட்டியின் உதவியோடு பறந்து பறந்து படிப்பார்கள். முழுக்கட்டுரையையும் ‘பார்ப்பார்களே’ ஒழிய படிப்பார்கள் என்று சொல்ல முடியாது.

மேலும் டிஜிட்டல் வாசிப்பில் கவனச் சிதறதல் ஒரு முக்கியமான குறை. இணைய இணைப்போடு ஒரு மின் புத்தகத்தை நாம் வாசிக்கும் போது திரையில் தென்படும் தொடர்புடைய அல்லது நமது உலவல் வரலாறு தொடர்புடைய ஏதாவதொரு இணைப்பை அழுத்தி அதன் பிறகு அடுத்த இணைப்பு என்று கடத்தப்படுவோம். இணைய இணைப்போடு வேலை செய்யும் கணினித் துறை சார்ந்தவர்களது வேலைத்திறனையும் இந்தப் பண்பு பாரதூரமாக பாதிக்கிறது. இதுவே பிரவுசிங் எனப்படும் இணைய உலவலாக கருதுப்படுகிறது.

அச்சு புத்தக வாசிப்பின் பலன்கள்

அச்சு புத்தக வாசிப்பு என்பது அளப்பரிய பல பலன்களை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சிலர் சமீபத்திய வருடங்களில் செய்த ஆய்வுகளில் இருந்து தெரிய வந்திருக்கின்றது. அதன்படி புத்தக வாசிப்பு மட்டுமே நீங்கள் கவனமாக படிப்பதற்கும் படித்ததை கிரகிப்பதற்கும், கிரகிப்பதை மனதில் பதிய வைத்து ஒழுங்கு படுத்துவதற்கும் பயன்படுகிறது.

ஒரு அச்சு புத்தகத்தை வாசிக்கும் பொழுது நமது மூளையானது சிக்கலான தகவல்களை அதன் இணைப்பை, இணைப்பு உருவாக்கும் அரூபமான கருத்துச் சித்திரத்தை,  நீண்ட வாக்கியங்களை புரிந்து கொள்ளும் விதமாக தன்னை மாற்றிக் கொள்கிறது. அதாவது புத்தக வாசிப்பின் போது நமது மூளை அதற்கேற்றபடி புதியதொரு இயங்கு நிலையில் தகவமைத்துக் கொள்கிறது.

இந்த மாற்றம் டிஜிட்டல் வாசிப்பின்போது நடப்பதில்லை. இவையெல்லாம் நம்மை அறியாமல் மூளையில் நடக்கும் மாற்றங்கள் என அந்த ஆய்வுகள் கூறுகின்றன. புத்தக வாசிப்பு என்பது ஒரு குவிமையக் கவனப் பணியாக இருப்பதால் ஒன்று நீங்கள் அந்த புத்தகத்தை ஒன்றி விரும்பிப் படிக்க வேண்டும். விருப்பமில்லை என்றால் எடுத்த புத்தகத்தை மூடிவிட்டு வேறு ஏதாவது செய்யப் போய்விடுவீர்கள்.

டிஜிட்டல் உலகில் இந்த விருப்பமின்மை என்பது பல்துறை கவன ஈர்ப்பால் இணைய உலவலை நாம் மூடுவதற்கு பதில் வெறொன்று என்று தாவிச் செல்வதற்கு தோதாக இருக்கிறது. இதன்படி மூளையானது டிஜிட்டல் என்று வந்தாலே குரங்கு போன்றதொரு தாவல் நிலைதான் பொருத்தமானது என்று ஏற்றுக் கொள்கிறது. கவனத்தை இழந்து நிற்கிறது.

வாசிப்பு என்பது மனித சமுதாயத்தின் தொழில்நுட்ப உரையாடல் என்கிறார்  நார்வே நாட்டின் ஸ்டாவென்ஜர்  பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் ஆனி மேங்கன் (Anne Mangen of Norway’s University of Stavenger). என்ன இருந்தாலும் பௌதீக ரீதியாக ஒரு புத்தகத்தைத் தொட்டுப் படிப்பது உணர்ச்சி சார்ந்த அனுபவமாக இருக்கிறது என்கிறார் அவர். இது முற்றிலும் உண்மை என்பவர் வாசிப்பு என்பது ஒரு தாவித்தாவி இங்கும் அங்கும் மேய்வது அல்ல அது குறிப்பான கவனத்தைக் கோரும் ஒன்று என்கிறார் ஆனி.

டிஜிட்டல் வாசிப்பின் பிரச்சினைகள்

கணினித் திரையில் வாசிப்பது என்பது அச்சு புத்தக வாசிப்பை விட வேகமாக நடந்தாலும் நமது வாசிப்பின் மூலம் குறைவான தகவல்களை மட்டுமே மூளை பெறுகிறது. அப்படி எந்தக் குறைவான தகவல்களை நமது மூளை பெறுகிறது என்பது நமது வளர்ப்பு, ரசனையோடு தொடர்புடையது.

பேருந்து நிலையத்தில் திருடன் கைது என்ற தலைப்பை விட “பஸ் ஸ்டாண்டில் டிப் டாப் உடையுடன் பிக்பாக்கெட் ஆசாமி கைது” என்ற தலைப்பைப் பார்த்தால் நாம் விரும்பிச் செல்வோம். டிஜிட்டல் உலகில் இத்தகைய தலைப்புகள், பன்ஞ்ச் டயலாக்குகள், மெல்லிய முரண்பாட்டைக் கொண்ட காமடி வழக்குகள் போன்றவைகளையே அதிகம் மூளை கவனத்தில் கொள்கிறது. இதற்கு சான்றாக ஒன் இந்தியாவின் தலைப்புகளையும் உள்ளீடற்ற அதன் செய்திகளையும் கூறலாம்.

படிக்க:
செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு
♦ 42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : வாசிப்பின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்

மேற்கத்திய நாடுகளில் மாணவர்களிடையே பாடப்புத்தகம் சார்ந்த வாசிப்பில் என்ன போக்கு நிலவுகிறது என்று பார்க்கலாம். டிஜிட்டல் வாசிப்பு என்பது ஆழமான வாசிப்பிற்கு பதிலாக மேலோட்டமான வாசிப்பையே ஊக்குவிக்கிறது. இதன் பொருட்டு பெரும்பான்மையான மாணவர்கள் ஒரு டிஜிட்டல் கட்டுரையை அச்சில் எடுத்துக்கொண்டு படிக்கிறார்கள். இது அவர்களை கட்டுரைக்குள் நுழைவதற்கும் முக்கியமான பாகத்தை வண்ணமிட்டு குறிப்பதற்கும் குறிப்பிட்ட உள்ளடக்கத்தில் நாம் எங்கே நிற்கிறோம் எது புரிந்தது புரியவில்லை என்பதை நிதானித்து முடிவு செய்வதற்கும் உதவி செய்கிறது.

நீங்கள் டிஜிட்டலில் வாசிப்பதும் அச்சு புத்தகத்தை வாசிப்பதும் இருவேறுபட்ட அனுபவங்களாக நடப்பதால் நமது புரிந்துகொள்ளும் திறனை இரண்டும் வேறுபட்ட அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி சாதக பாதகங்களை நிகழ்த்துகின்றன.

அச்சு வாசிப்பும் டிஜிட்டல் வாசிப்பும் ஒரு ஒப்பீடு

டிஜிட்டல் – அச்சு எனும் இரண்டு வகைப்பட்ட வாசிப்பு அனுபவங்களின் முதன்மையான வேறுபாடு என்னவென்றால் அச்சு வாசிப்பில் வாசிக்கும் போது நீங்கள் அந்த புத்தகத்தின் கனத்தையும் வார்த்தைகளின் நீளத்தையும் உணர்கிறீர்கள். அச்சு புத்தகத்தினுடனான நேரடியான தொடர்பு அந்த புத்தகத்தின் எழுத்து மற்றும் கருத்து ரீதியான வரைபடத்தை நமது மூளை உணருமாறு செய்கிறது. மேலும் நாம் என்ன வாசிக்கிறோம் என்பதை நின்று நிதானித்து புரிந்து கொள்வதற்கும் அச்சு புத்தகம் உதவுகிறது. மறுபுறத்தில் டிஜிட்டல் வாசிப்பு என்பது நமது கண்களுக்கு அதிக அழுத்தத்தையும் வேலையையும் கோருவதால் வாசிப்பு என்பது கடினமாகிறது.

இதன் பொருட்டே நவீன தொழில்நுட்பம் நமது கண்களுக்கு அதிக வேலையை கொடுக்காத வண்ணம் திரைகளை கண்ணுக்கினியதாக மாற்றி வருவதும் உண்மைதான். அதன்படி கிண்டில் (Kindle) வாசிப்பு கணினித் திரை வாசிப்பை விட மேம்பட்டதாக இருக்கிறது. அதில் கண்கள் வெண்திரை வெளிச்சத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது. மேலும் அதன் திரை கண்ணாடிக்கு பதில் வேறு ஒரு பொருளில் தயாரிக்கப்பட்டிருப்பதால் ஒளியின் எதிர்விளைவு (ரிஃபிளக்சன்) என்பது நிகழ்வதில்லை அல்லது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது. இப்படியாக கண் மற்றும் அதன் பிரச்சினைகளை நவீன தொழில்நுட்பம் குறைப்பதற்கு முயன்று வருகிறது.

சரி இது தான் பிரச்சனை என்றால் நாம் நமது டிஜிட்டல் வாசிப்பையும் புத்தக வாசிப்பை ஒத்திசைவாக பயன்படுத்த முடியுமா என்று பார்க்க் வேண்டும். அதற்கான பதில் முடியும் என்பதுதான். எதை டிஜிட்டலில் வாசிக்க வேண்டும் எதை புத்தகத்தில் வாசிக்க வேண்டும் எதை மேலோட்டமாக படித்தால் போதும் அதை ஆழமாக அசைபோட்டு படிக்க வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் முடிவு செய்யும் பட்சத்தில் இரண்டு வாசிப்பையும் முரண்படாமல் பயன்படுத்த முடியும்.

நினைவில் கொள்ளுங்கள் வினவில் இந்த கட்டுரையை நீங்கள் டிஜிட்டல் வடிவத்தில் தான் வாசிக்கிறீர்கள் ஆனால் இது உங்களிடம் மேலோட்டமான சிந்தனையை ஏற்படுத்துகிறதா ஆழமான அசைவுகளை ஏற்படுத்துகிறதா யோசித்துப் பாருங்கள். இந்தக் கட்டுரையை கணினி சாராமல் பிரிண்ட் அவுட் போட்டு படித்துப் பார்த்தால் இதன் உள்ளடக்கம் இன்னும் மேம்பட்ட அளவில் நம்மில் உள்ளிறங்கும் என்பது உண்மைதானே?

டிஜிட்டல் வாசிப்பின் பிரச்சினைகள் நவீன தொழிற்நுட்பத்திற்கு தோல்வியா?

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. டிஜிட்டல் வாசிப்பை விட புத்தக வாசிப்பு தான் மேம்பட்டது என்ற கருத்து நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நாம் நம்மை தகவமைத்துக் கொள்கிறோம் என்று நவீன உண்மையை மறுக்கிறதா? ஏனெனில் இதற்கு முன் பல துறைகளில் இந்த பிரச்சனைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

நாடகம் வரும்போது கூத்து அழிந்தது; சினிமா வரும்போது நாடகம் அழிந்து விட்டது; தொலைக்காட்சி வரும்போது சினிமா நலிவடைந்தது. இணையம் வந்த பிறகு தொலைக்காட்சியே தத்தளிக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த மாற்றங்களை, கலைரசனையை, அறிவுத்திறனை நமது மூளை ஏற்றுக் கொண்டு மாறியிருப்பது உண்மைதானே?

நாடகங்களைப் போல வசனத்தையும், முழு வடிவிலான நடிப்பு காட்சிகளுக்கும் பதில் நவீன சினிமாவில் அல்லது நவீன ஓவியத்தில் குறைவான காட்சிகள், நெருக்கமான காட்சிகள், வசனமற்ற காட்சிகள் மூலம் நாம் ஒரு ஆழமான அனுபவத்தை பெறுவதில்லையா?

இணையப் பத்திரிகைகள் வந்தபிறகு அச்சுப் பத்திரிக்கைகள் தங்களது வணிகத்தை இழந்து வருகின்றன என்பது மேற்கத்திய நாடுகளில் ஒரு தவிர்க்க இயலாத உண்மை. அதன் பொருட்டே கார்டியன் போன்ற பத்திரிகைகளெல்லாம் விளம்பரங்களை இழந்து மக்களிடையே நன்கொடை பெற்று ஊடகத்தை நடத்தும் நிலையைப் பார்க்கிறோம். இப்படி இருக்கையில் புத்தக துறையில் மட்டும் அச்சுப் புத்தகம் மட்டும் அதிகம் இருப்பதும் வாசிப்பதும் சாத்தியமா? இந்த கேள்விக்கும் நாம் பதிலறிய வேண்டும்.

மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படிக்கும் லாரன் சிங்கர் ஒரு ஆசிரியரும் கூட. அவர் தனது சிறார் மாணவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். ஆரம்பத்தில் அவர் நம்மை போல குழந்தைகளுக்கு புத்தகங்கள் மூலம் வாசிப்பை சொல்லிக் கொடுக்கிறார். அதன்பிறகு அந்த குழந்தைகள் அனைவருக்கும் ஒரு ஐபேட் கொடுக்கப்பட்டு வாசிக்கச் சொல்கிறார். என்ன அதிசயம் குழந்தைகள் அப்போதும் அதே போல தான் வாசித்தார்கள். என்ன… ஒரு வித்தியாசமான எந்திரத்தை கொடுத்து படிக்க சொல்வதாக குழந்தைகள் கருதினார்கள், அவ்வளவுதான்.

இது தனக்கு அதிசயமாக இருந்தது என்கிறார் சிங்கர். அவருடைய கருத்தின்படி முந்தைய அச்சுபுத்தக வாசிப்பும், இப்போதைய கணினி வாசிப்பும் இருவேறுபட்ட திறன்களை கோருகிறது. எதிர்காலத்தில் இது குறித்து நாம் ஒரு தெளிவான புரிதலை பெற முடியும். அதாவது மாணவர்கள் டிஜிட்டல் வாசிப்பின் போது எத்தகைய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது நாம் புரிந்து கொண்டிருப்பது போல இருக்காது என்கிறார் அவர்.

லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்த போது நாம் பல தொலைபேசி எண்களை மனப்பாடமாக அறிந்து வைத்திருந்தோம். கம்பியில்லா தொலைபேசியான செல்பேசி வந்தபிறகு அப்படி மனனம் செய்ய வேண்டிய தேவை இல்லை. எல்லா எண்களையும் செல்பேசி எந்திரமே வைத்திருக்கிறது. கால்குலேட்டர் வருவதற்கு முன்னர் எவ்வளவு பெரிய பெருக்கல், வகுத்தலாக இருந்தாலும் கையாலே கணக்கு போட்டு கண்டுபிடிப்போம். இப்போது கால்குலேட்டர் வந்து விட்டதால் மூளை திறனை இழந்து விட்டதா என்றால் இல்லை. புதிய கருவிகளை நமது பழைய திறன்களுக்கு தேவையில்லை என்று அறிவித்து விட்டபடியால் நமது மூளை புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் நிலையை எய்துகிறது. அப்படி நாம் நம்மை அப்டேட் செய்து கொள்கிறோமா என்பதே பிரச்சினை.

சிங்கரும் மற்றுமொரு பேராசிரியருமான முனைவர் பாட்ரிகா அலெக்சாந்தர் இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின்படி வாசகர்கள் டிஜிட்டல் வாசிப்பு குறித்து சிக்கலான மனநிலையை உருவாக்கிக் கொள்வதில்லை. மேலும் அவர்களது பார்வையின்படி டிஜிட்டல் வாசிப்பு என்பது இருபத்தோராம் நூற்றாண்டு வாழ்க்கையை கற்றுக் கொள்வதின் ஒரு பகுதி என்கிறார்கள். இரு வேறுபட்ட வகைகளில் நாம் வாசிப்பது என்பது பிரச்சினை இல்லை. மாறாக எப்போது நாம் டிஜிட்டல் வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு புரிதல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இருப்பினும் சிங்கர் ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறார். சில நேரம் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் அறிய வேண்டுமென்றால் அவர்கள் டிஜிட்டல் வாசிப்பை மேற்கொள்ளலாம். ஏனெனில் டிஜிட்டல் வாசிப்பு மட்டுமே அச்சு வாசிப்பை விட வேகமாக வாசிக்கக்கூடிய சாத்தியங்களை கொண்டிருக்கிறது. அதே நேரம் ஆழமாக புரிந்து கொள்வதற்கும் பொருள் அறிந்து புரிந்து கொள்வதற்கும் மாணவர்கள் குறிப்பிட்ட கட்டுரையை டிஜிட்டலில் இருந்து அச்சில் பிரிண்ட் அவுட் எடுத்து கொள்வது நல்லது. ஆகவே நாம் என்ன கற்கும் முறையை ஏற்கிறோம் என்பது எதை எப்படி கற்கப் போகிறோம் என்பதோடு தொடர்புடையது.

ஆனி அருண்டேல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் ஆங்கிலத் துறை பேராசிரியர் வேயன் கோபிலின்ஸ்கி என்பவரது கருத்தை பார்ப்போம் (English professor, Wayne Kobylinski, Anne Arundel Community college) “என்னுடைய வகுப்பில் பெரும்பாலும் மாணவர்கள் அச்சு நூல்களை வாசிக்க தான் விரும்புகிறார்கள். எனினும் யாராவது ஒருவர் மின் புத்தகத்தை பயன்படுத்த வா என்று கேட்டால் நானும் மறுக்காமல் ஒத்துக் கொள்வேன். என்னுடைய மாணவர்களுக்கு அச்சுப் புத்தகங்கள் மட்டுமே படிப்பதற்கு ஈர்ப்பாக இருக்கின்றன”, என்கிறார் அவர்.

இதற்கு நேர்மாறாக கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோடி டொனாவன் என்ன சொல்கிறார் என்றால் தனது மாணவர்கள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவத்தில் தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் அச்சிட்ட நூல்களை விரும்புவதில்லை. ஆனால் எங்களது ஆசிரியர்கள் இரண்டையுமே பயன்படுத்துமாறு கூறுகிறார்கள் என்கிறார்.

மேலும் டொனாவன் கவனித்தபடி அவரது மாணவர்கள் டிஜிட்டல் வாசிப்பை இலகுவாக பயன்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள். டிஜிட்டலில் வாசிக்கும் பொழுது எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்க முடியும். அதே சமயம் அச்சிட்ட நூல்கள் என்றால் ஓரிரு முறை மட்டும் தான் படிக்கத் தோன்றும்.

உலகளாவிய அளவில் நாம் டிஜிட்டலில் வாசிப்பது என்பது இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது உண்மையில். டிஜிட்டல் ஊடகம் என்பது நமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. அது பேஸ்புக் ஆகவோ வாட்ஸ்அப் ஆகவோ அல்லது விவாதிக்கும் குழுமங்கள் ஆகவோ இருக்கலாம். இது குறித்து 180-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் 33 நாடுகளில் ஒருங்கிணைந்து ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள்.

(Anne Mangen, Chair of the Action, working at the Reading Centre at the University of Stavanger.) இந்த ஆய்வு குறித்து ஆய்வு குழுமத்தின் அங்கத்தினரும் ஸ்டாவேன்ஞ்சர் பல்கலைக் கழகத்தில் பணிபுரிபவருமான ஆனி மேங்கன் கூறுகிறார்.

டிஜிட்டல் உலகில் நாம் எவ்வளவு நேரம் வாசிக்கிறோம் எதை வாசிக்கிறோம்?

இதற்கான விடை என்பது வாசிப்பு என்பதை நாம் எப்படி வரையறுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. இத்துறையில் இது குறித்த புள்ளி விவரங்கள் அனைத்தும் மேற்கண்ட வரையறையை பொறுத்தே அமைகிறது. நமது வரையறையில் பாடப்புத்தகங்கள் அதிலுள்ள படங்கள் சமூக வலை தளங்கள் பல்வேறு இணைய தளங்களுக்கு இட்டுச்செல்லும் ஹைபர் லிங்குகளை கொண்ட உள்ளடக்கங்கள் அனைத்தும் இருக்கின்றன.

படிக்க:
உலக புத்தக தினம் : புத்தக வாசிப்பு – பலன்கள் பதினைந்து
♦ 2017-ம் ஆண்டின் புத்தக வாசிப்பு – கருத்துக் கணிப்பு

இதன்படி ஒவ்வொரு நாளும் நாம் மின்னஞ்சல்கள், அரட்டை செய்திகள், நடப்பு செய்திகள், அலுவலக ஆவணங்கள், பதிவுகள், விவாதங்கள் அனைத்தையும் படிக்கிறோம். சுவாரஸ்யமான முறையில் இசையும் சினிமாவும் கூட முற்றிலும் டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. இதை ஒப்பிடும் போது பல நாடுகளில் டிஜிட்டல் புத்தகங்கள் என்பது ஒட்டுமொத்த இணைய உலகில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவைத்தான் கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் வாசிப்பின் அளவு அதிகரித்து வந்ததோடு தற்போது அது ஒரு முக்கியமான துறையாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

கிண்டில் போன்ற தொழில்நுட்ப சாத்தியங்கள் தற்போது கிடைத்திருந்தாலும் அது இணையத்தோடு இணைக்கப்பட வில்லை என்றாலும் வாசகர்களைப் பொறுத்தவரை அச்சுப் புத்தகங்கள் படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இதில் அடைவதில்லை.

எப்போது நாம் அச்சிட்ட புத்தகங்களை படிக்க வேண்டும் என முடிவு செய்கிறோம்?

இக்கேள்வியை பொருத்தவரை பல பகுதிகள் காரணங்கள் நிலைமைகள் தீர்மானிப்பதாக இருக்கின்றன. ஒரு வாசகர் என்ன வகை புத்தகத்தைப் படிக்கிறார் அதன் பயன் மதிப்பீடு என்ன போன்றவைகளும் வாசிக்கும் முறையை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதில் முதன்மையானது அளவு மிக நீண்ட கட்டுரைகள் நீண்ட ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை படித்து உள்வாங்குவதற்கும் குறிப்பெடுத்துக் கொண்டு படிப்பதற்கும் பலரும் மாணவர்களும் கூட அச்சுப் புத்தகங்களையே விரும்புகிறார்கள். குறுகிய கட்டுரைகள் என்றால் அப்போது நிலைமை வேறாக இருக்கிறது

இறுதியாக, இணையம் வந்த பிறகு நாம் வாசிக்கும் பழக்கத்தையே இழந்து வருகிறோம் என்ற உண்மையும் இருக்கிறது. அதிகம் பார்க்கிறோம், கேட்கிறோம் போல படிக்கிறோம் எனச் சொல்ல முடிவதில்லை. இணையத்தில் கருத்துருவாக்கம் செய்யும் அறிஞர் பெருமக்கள் அனைவரும் படிப்பை முதன்மையாகக் கொண்டிருக்கிறார்கள். படிப்பு இல்லையேல் அவர்களது புத்தாக்க உணர்வு, செயல்பாடு எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆகவே முதலில் நாம் படிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இல்லையேல் இந்த அச்சு, டிஜிட்டல் பிரச்சினையே இல்லை. அப்படி படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு இரு வகைகளுக்கும் ஏற்ற மாதிரி நமது வாசிப்பு பழக்கத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

– இளநம்பி

நன்றி :
♦ How Is Reading Digitally Different Than Reading Print?
♦ ‘There’s No Easy Answer’

மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !

வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போராட்டத்தின் வெற்றிக்கு மனப்பூர்வமாகப் பாடுபடும் தொழிலாளி வர்க்கத் தலைவர்கள் தமது வாழ்வு மற்றும் பணி மூலம் உதாரணமாக விளங்குவதைப் போன்று அவர் இருந்தார்.

“லீப்னெஹ்ட்டின் பெயர் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்ததாகும்” என்று எழுதினார் லெனின். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லீப்னெஹ்ட் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்குத் தலைமை தாங்கினார். கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் இவர்களது நண்பராய், சக தோழராய் இருந்தார். தலைசிறந்த பாட்டாளி வர்க்க நிறுவன ஒழுங்கமைப்பாளராகவும் சங்கநாதமென ஒலித்த குரலாகவும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு அப்பாலும் முற்போக்குத் தொழிலாளர்களின் அன்புக்குப் பாத்திரமாகி அவர்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தார். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த போராட்டத் தலைவராக இருந்த அவர் ஆற்றல் மிகுந்த பிரசாரகராயும் விளங்கினார்.

சிலந்தியும் ஈயும் ஐரோப்பிய நாடுகளில் அது வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் தெளிவான, எளிய நடையில் புலப்படுத்துகிறார். ஒடுக்குமுறைத் தளைகளை முறிக்க வேண்டுமாயின் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஒருசேரப் பாடுபடுவது ஒன்றே வழி என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

– பதிப்பாளர், மாஸ்கோ பதிப்பகம்


சிலந்தியும் ஈயும்

நீங்கள் எல்லோரும் அதை நன்கு அறிவீர்கள் – அந்தப் பூச்சி சால் போன்ற வயிறுடையது. முடிகள் மண்டிய பிசுபிசுப்பான உடல் கொண்டது. பகலின் ஒளியிலிருந்து தூர விலகி இருண்ட இடங்களில் பதுங்கியிருக்கிறது. கொலைகார வலையைப் பின்னி வைக்கிறது. கவனக் குறைவான அல்லது சிந்தனையில்லாத, பரிதாபத்துக்குரிய ஈ இந்த வலையிலே அகப்பட்டுக் கொலையுண்டு போகிறது. அருவருப்பான அந்தக் கொடூரப் பூச்சி கண்ணாடி போன்ற உருண்டைக் கண்களுடையது. தன்னிடம் அகப்பட்டுக் கொள்ளும் ஈயைக் கெட்டியாய் பற்றிக் கொண்டு அழுத்தி நெரிப்பதற்கு வசதியாய் கோணமாய் மடங்கிக் குச்சி போலமைந்த நீண்ட முன்கரங்களைக் கொண்டது. அந்தக் கொலைகாரப் பூச்சிதான் சிலந்தி.

அதோ அந்த மூலையில், இரை எப்பொழுது தன் பிடியில் வந்து சிக்குமென்று ஆடாமல் அசையாமல் உணர்ச்சியற்றுக் காத்திருக்கிறது. அல்லது மெல்லிய ஈயைச் சிக்க வைத்துத் தப்ப முடியாதபடிக் கட்டுண்டு போகச் செய்யும் தனது கொலைகார இழைகளை பேய்த்தனமாய் நெய்து கொண்டிருக்கிறது! வெறுக்கத்தக்க கொடும் பிறவியான அது அளவிலா முயற்சியெடுத்து வேலை செய்கிறது. தன்னிடம் வந்து சிக்கும் இரை தப்புவதற்குச் சிறிதும் வழியின்றி கடைசி இழை வரை யாவற்றையும் செவ்வனே அமைத்துத் தனது வலையைக் குற்றம் குறையற்றதாய் நெய்கிறது. முதலில் ஓர் இமையைப் பின்னியமைக்கிறது. பிறகு இரண்டாவது, மூன்றாவது – இப்படி மேலும் மேலும் அமைத்துச் செல்கிறது. சிக்கும் இரை சாகுமுன் எவ்வளவு தான் துடியாய்த் துடித்தாலுங்கூட வலை பிய்ந்து போகாமல், அதிரவுங்கூட இல்லாமல் கெட்டியாய் இருக்கும் பொருட்டு, இழைகளைக் குறுக்கில் இழுத்துச் சுற்றுகிறது, மறுமுறையும் இழுத்துக் கெட்டியாய்ச் சுற்றுகிறது.

படிக்க :
எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !
மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?

முடிவில் வலை தயாராகிவிடுகிறது, கண்ணி வைக்கப்பட்டு விட்டது, இனி தப்ப வழி ஏதுமில்லை – சிலந்தி இப்பொழுது அதன் உறைவிடத்தில் பதுங்கிக் கொள்கிறது. சூதறியாத ஈ பசியால் உந்தப்பட்டு உணவு தேடிக் கொண்டு எப்பொழுது வருமென்று சிலந்தி காத்திருக்கிறது.

ஈ வந்து சேர சிலந்தி அதிக நேரம் காத்திருக்க நேர்வதில்லை. பாவம், அப்படியும் இப்படியுமாய்ப் பார்த்தவாறு ஈ ஓடி வந்து விரியப் பறந்திருக்கும் இழைகளை அடைந்து துணுக்குற்று நடுங்குகிறது. சிக்குண்டுத் துடிக்கிறது, பெரு முயற்சி செய்கிறது – அவ்வளவுதான், இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

வில்ஹெல்ம் லீஃப்னெஹ்ட்

ஈ அகப்பட்டுக் கொண்டுவிட்டதைக் கண்டதும் சிலந்தி தனது பதுங்கிடத்தை விட்டு மெள்ள முன்னே வருகிறது. பசி வெறி கொண்ட கண்களுடன் குச்சிக் கரங்களை அசைத்துக் கொண்டு தனது இரையை நோக்கி முன்னேறுகிறது. அது அவசரப்படத் தேவையில்லை, தன் வலையில் அகப்பட்டுக் கொள்ளும் அபாக்கியசாலி தப்ப முடியாது என்பது அந்தப் பயங்கர பைசாசத்துக்குத் தெரியும். அது மேலும் மேலும் நெருங்கிச் செல்கிறது, துருத்திக் கொண்டிருக்கும் மங்கலான கண்களால் தனது இரையை ஏறிட்டுப் பார்த்து எடை போடுகிறது, அதைத் தவிக்கச் செய்து திணறடிக்கிறது. ஈ தன்னை நெருங்கி வரும் பயங்கர அபாயத்தைக் கண்டு நடு நடுங்குகிறது, பிசுபிசுப்பான அந்த இழைகளிலிருந்து பிய்த்துக் கொள்ள முயலுகிறது, தப்பிப்பதற்கு அரும்பாடுபடுகிறது. இந்த மூர்க்கமான இறுதி முயற்சிகளில் அது தனது பலத்தை இழந்து விடுகிறது.

ஆனால் அதன் முயற்சிகள் பயனளிக்கவில்லை, அதன் பிரயத்தனங்கள் வீணாகின்றன! வலையில் அது மேலும் மேலும் கடுமையாய்ச் சிக்கிக் கொள்கிறது. இதற்கிடையில் சிலந்தி அதை மேலும் மேலும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சிலந்திக் கூட்டின் வலைப் பின்னல்கள் மெல்லியனவாய் இருப்பினும் தப்ப வழியின்றி ஈயை இறுகப் பற்றிக் கொண்டுவிட்டன. இவற்றிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஈ மேற்கொள்ளும் முயற்சி ஒவ்வொன்றும் மேலும் அதிகமான இழைகளில் அதை மாட்ட வைத்து. மேலும் அதிகமான வலைப் பின்னல்களில் சிக்கச் செய்கிறது. முடிவில், எதிர்க்கும் ஆற்றல் அனைத்தையும் இழந்து ஓய்ந்து போய் மூர்ச்சித்துவிடும் ஈ, அதன் பகைவனின், வெற்றியாளனின் அந்தப் பயங்கரச் சிலந்தியின் காலடியில் கிடக்கிறது!

பிறகு அந்தப் படுபயங்கரப் பிராணி முடிகள் மண்டிய தனது கொடுங்கரங்களை நீட்டி ஈயைப் பிடித்துத் தனது கொலைகார அரவணைப்பிலே கெட்டியாய் அழுத்துகிறது. அடுத்து அது பலமிழந்து போய் நடுங்கும் ஈயின் உடலைக் கடிக்கிறது. ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் என்று தனது வெறிக்கும் பசிக்கும் ஏற்ப அத்தனை தரம் விழுந்து பிடுங்குகிறது. அதன் இரத்த வெறி தற்போதைக்கு அடங்கியதும் பாதி உயிர் போன நிலையில் அந்த ஈயை விட்டுவிட்டு விலகுகிறது. பிறகு திரும்பி வந்து மீண்டும் உறிஞ்சுகிறது. இப்படித் திரும்பித் திரும்பி வந்து ஈயின் உடலிலுள்ள இரத்தம் அனைத்தையும், சத்து அனைத்தையும் உறிஞ்சி இழுத்து விழுங்குகிறது. பாவம் அந்த ஈ, எளிதில் அது உயிரை இழப்பதில்லை, குத்துயிரும் கொலையுயிருமாய் நெடு நேரம் திணறுகிறது.

படிக்க :
‘மே’லான கவனத்திற்கு ! மே நாளின் சிறப்பு ! | துரை சண்முகம்
♦ வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !

இரத்த வெறி கொண்ட அந்தப் பைசாசம் தனது இரையிடம் இம்மியளவு உயிர்த் துடிப்பு எஞ்சியிருக்கும் வரை அதை விடுவதில்லை. ஈயின் உயிரை உள்ளுக்கு இழுக்கிறது, அதன் பலத்தை உறிஞ்சியிழுக்கிறது, இரத்தத்தைக் குடிக்கிறது. ஈயிடமிருந்து பருக எதுவுமே இல்லாமற் போன பிறகு தான் அதை விடுகிறது.

முற்றும் உறிஞ்சப்பட்டு சாகடிக்கப்பட்ட ஈ மெல்லிறகையும் விட இலேசாகியபின் வலையிலிருந்து தள்ளிவிடப்படுகிறது. சிறிதளவு காற்று வீசியதுமே காற்றோடு காற்றாய் அடித்துச் செல்லப்படுகிறது. யாவும் முடிவுற்றுவிட்டன.

வயிற்றை நிரப்பிக் கொண்டு திருப்தியோடு சிலந்தி மட்டும் தனது உறைவிடத்துக்குத் திரும்புகிறது. தன்னையும் தனது உலகையும் நினைத்து மன நிறைவு கொள்கிறது. தரமானவர்கள் உலகில் இனியும் நல்லபடியாகவே காலங்கழிக்க முடிகிறதென அகமகிழ்ந்து கொள்கிறது….

***

நகரத்தையும் கிராமத்தையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர்களே, உறிஞ்சியிழுக்கப்பட்டுக் கொல்லப்படும் இந்த ஈ, விழுங்கப்படும் இந்த ஈ நீங்களேதான்! ஏனையோர் வாழ்வது உங்களுடைய இரத்தத்தைக் குடித்துத்தான்! ஒடுக்கப்பட்ட மக்களே, அறிவுத் துறையினரே, ஆலைத் தொழிலாளர்களே, உங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து நிற்கத் துணியாதோரான அஞ்சி நடுங்கும் இளம் மகளிர்களே, பலமற்றோராய் இருந்து மிதிபடும் பெண்டிர்களே, யுத்த வேந்தர்களுக்குப் பலியாகும் அப்பாவிகளே! சுருங்கக் கூறின் ஏழைகளும் சுரண்டப்படுவோருமானோரே, உங்களுடைய இரத்த நாளங்களிலிருந்து உறிஞ்ச ஏதும் இல்லாமற் போனதும் உதறியெறியப்படுவோரே!

எல்லாச் செல்வங்களின் உற்பத்தியாளர்களே, தேசத்தின் இதயமும் மூளையும் ஜீவ சக்தியுமானோரே, அடி பணிந்து ஓசையின்றி எங்கோ மூலையில் அவலமான முறையில் மடியும் உரிமையன்றி வேறு உரிமை ஏதும் இல்லாதவர்களே! உங்களுடைய இரத்தத்தை, வியர்வையை, உழைப்பை, உங்களுடைய சிந்தனைகளை, உங்களுடைய உயிரைக் கொடுத்து உங்கள் எஜமானர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் இருப்போரை – அருவருக்கத்தக்க சிலந்திகளை – பெரியவர்களாக்குகிறீர்கள், வலியவராக்குகிறீர்கள்.

எஜமானன், பணமூட்டை, சுரண்டலாளன், ஊகவாணிபன், முதலாளி, ஆசை காட்டி மோசம் செய்கிறவன், சமயச்சபை மேலவர்கள், எல்லா வகையான புல்லுருவிகள், நம்மை வருத்தும் கொடுங்கோலன், படுமோசமான ஒடுக்குமுறைச் சட்டங்களை இயற்றுகிறவன், நம்மை அடிமைப்படுத்தும் மூர்க்கன் ஆகிய இவர்கள் தான் சிலந்தி. மக்கள் செலவில் உண்டு வாழும் ஒவ்வொருவனும், நம்மைக் காலால் மிதித்துத் துவைக்கும், நமது துன்ப துயரங்களையும் பயனற்றுப் போகும் நமது முயற்சிகளையும் எள்ளி நகையாடும் ஒவ்வொருவனும்தான் இந்தச் சிலந்தி.

ஏழைத் தொழிலாளிதான் ஈ. வேலை வாங்கும் எஜமானன் பிறப்பிக்க விரும்பும் கொடிய சட்டங்களுக்கு எல்லாம் இந்த ஏழைத் தொழிலாளி அடங்கி நடக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் வாழ வழியற்ற நிலையிலுள்ள அபாக்கியவானான இந்தத் தொழிலாளி தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஜீவனோபாயம் தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரிய ஆலை முதலாளிதான் சிலந்தி.

தனது தொழிலாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நாள் ஒன்றுக்கு 6-லிருந்து 8 மார்க்(1) வீதம் சம்பாதிக்கும் இந்த முதலாளி, அதே போது 12-லிருந்து 14 மணி நேர வேலைக்கு இத்தொழிலாளர்களுக்கு மனம் துணிந்து, இல்லை அருள் கூர்ந்து 2-லிருந்து 3 மார்க் வரையிலான அரைப் பட்டினிக் கூலி தருகிறான்.

சுரங்கத்தின் நச்சுக் காற்றில் தன் உயிரைப் பலி கொடுக்கிறானே, தான் அனுபவிக்கப் போகாத செல்வங்களைத் தரைக்கு அடியிலிருந்து வெட்டியெடுக்கிறானே, அந்தச் சுரங்கத் தொழிலாளிதான் ஈ. திருவாளர் பங்கு முதலாளிதான் சிலந்தி. இந்த ஆளின் பங்குகள் மதிப்பில் இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் உயர்ந்து செல்கின்றன.

படிக்க :
♦ முதலாளித்துவம் உடைந்து கொண்டிருக்கிறது என்கிறார் ரகுராம் ராஜன் !
♦ மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்

ஆயினும் இவர் திருப்தியடைவதே இல்லை, மேலும் மேலும் உயர்ந்த லாப விகிதங்கள் வேண்டுமென்கிறார், தொழிலாளர்களுடைய உழைப்பின் பயன்களை அவர்களிடமிருந்து சூறையாடிக் கொண்டு விடுகிறார். தொழிலாளர்கள் சொற்ப அளவு கூலி உயர்வு கேட்கத் துணிவார்களாயின் ராணுவத்தை அழைத்துக் கலகக்காரர்களுக்குத் துப்பாக்கிக் குண்டுகளின் சுவையைத் தெரியப்படுத்துகிறார்.

சின்னஞ் சிறு வயதில் அறியாப் பருவத்தில் ஆலையிலும் பட்டறையிலும் பிறகு வீட்டிலும் மாடாய் வேலை செய்து குடும்பச் செலவுக்கு, வரவை இணையாக்க உதவ வேண்டியிருக்கும் சிறு பிள்ளை தான் ஈ. போதாமையால் தம் குழந்தைகளைக் காவு கொடுக்கும்படி பலவந்தம் செய்யப்படும் ஏழைப் பெற்றோர்களல்ல சிலந்தி; இயற்கை உணர்ச்சிகளின் இந்த வக்கரிப்புகளை, தனது சொந்தக் குடும்பம் இப்படி நாசமாவதை மாறாத மூர்க்க விதியாக்கும் இன்றைய அடாத நிலைமைகளே தான் சிலந்தி.

மக்களுடைய மகளாய்ப் பிறந்த மதிப்புக்குரிய மங்கை நேர்மையாய் வாழ வழி தேடுகிறாள், ஆனால் ஆலை முதலாளி அல்லது டைரக்டரின் காமவெறிக்குப் பணியாவிடில் வேலை பெற முடியாதவளாய்த் திண்டாடுகிறாள். அவளைக் கெடுக்கும் அந்த ஆள் பிற்பாடு – பல சந்தர்ப்பங்களில் பிள்ளையும் பிறக்கப் போகும் நிலையில் – “மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக” ஈவிரக்கமின்றி மெத்தனமாய் அவளை நடுத்தெருவில் விடவே நிற்கதியாகிறாள் – அவள் தான் ஈ.

தளுக்கு இளைஞன், “உயர் குடும்பத்தில்” பிறந்த வீணன், கூத்தடித்துத் திரிந்து அறியாப் பெண்களைச் சீரழித்துச் சாக்கடையிலே தள்ளுகிறானே, இப்படித் தன்னால் சீரழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தன் மதிப்பும் உயர்வதாய்க் கருதுகிறானே அவன் தான் சிலந்தி.

நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் உழவர்களே, செல்வந்தர்களான நிலப்பிரபுக்களுக்காக நிலத்தை உழுது நீங்கள் அறுத்தெடுத்துக் கொள்ளப் போகாத பயிரை விதைத்தும், நீங்கள் சுவைக்கப் போகாத கனிகளை வளர்த்தும் வரும் நீங்கள் தான் ஈ. தான் சொகுசாய்ச் சுகபோக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காகத் தனது ஏழைச் சாகுபடியாளர்களையும் பண்ணையடிமைகளையும் கூலியாட்களையும் கணப்பொழுதும் ஓய்வின்றி வேலை வாங்கும் அந்த நிலப்பிரபுதான், ஆண்டுக்கு ஆண்டு வாரத்தை(2) உயர்த்தியும் நேர்மையான உழைப்புக்குரிய கூலியைக் குறைத்தும் செல்லும் அந்த நிலப்பிரபுதான் சிலந்தி.

ஏழையும் எளியோருமான நாம் எல்லோரும் தான் ஈ. நீண்ட நெடுங்காலமாய் வழிபாட்டு மேடையின் படிகளில் நின்று நடுங்கியும், சமயக் குருமார்களது சாபச் சொற்களுக்குத் தலைவணங்கியும், சமயச் சபையின் கீர்த்திக்காகவும் உல்லாச விளையாட்டுக்காகவும் போராடியும் ஒருவரையொருவர் அடிமை செய்தும் வந்திருக்கும் நாம் தான், அவர்களுடைய சமயப் போதனையின் நலிவுறச் செய்யும் செல்வாக்குக்கு உட்பட்டு ஆன்மீக முடவர்களாகிவிட்டோம். ஆதலால், நமது முதுகு ஓடிய வளைந்தும் மண்டியிட்டும் வந்துள்ள நாம் தான், நமது ஒடுக்குமுறையாளர்களை அவர்களது அநீதியின் பலன்களை அனுபவிக்கும்படி விட்டு வந்துள்ள நாம் தான் ஈ.

கறுப்பு அங்கி அணிந்து நயவஞ்சகமும் பேராசையும் நிறைந்த பார்வை கொண்டுள்ள அந்த குருமார் தான், இழிநிலையிலே இருத்தும் தனது போதனையின் மூலம் தனது பக்த கோடிகளின் எளிய உள்ளங்களை மயக்கங் கொள்ளச் செய்து பணிந்து ஒடுங்கும் அடிமைப் புத்தியை வளர்த்தும், இதன் மூலம் மக்களது ஆன்மாவை மாசுபடுத்தியும், போலந்தின் விவகாரத்தில்(3) நடைபெற்றது போல் தேசங்களையே பாழ்பட வைத்தும் செல்லும் அந்த சமயக் குருமார் தான் சிலந்தி.

படிக்க :
♦ ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
♦ கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

சுருங்கக் கூறினால் ஒடுக்கப்பட்டோரும் அடிமைப்பட்டோரும் சுரண்டப்படுவோரும் தாம் ஈ. கேடுகெட்ட ஊக வாணிபக்காரர் என்றோ, சட்ட முறையற்ற கொடுங்கோலர் என்றோ எப்படி வேண்டுமாயினும் அழைக்கப்படத் தக்கவராயுள்ள அவரேதான் சிலந்தி.

சிலந்தி முன்னொரு காலத்தில் அரண்கள் செய்யப்பட்ட பெரிய கோட்டைகளிலும் நிலப்பிரபுத்துவப் பண்ணைகளிலும் தனது வலையைப் பின்னி வந்தது. இன்று அது பெரிய தொழில் மையங்களில், இக்காலத்துப் புண்ணியவான்களது செல்வமனைகளில் தன்னை இருத்திக் கொள்ள முனைகிறது. பெரும்பாலும் ஆலை நகரங்களில் தான் அதை அதிகமாய்க் காண்கிறோம்.

ஆயினும் கிராமப்புறங்களிலும் சிறு ஊர்களிலும் அது வலை பின்னிக் கொண்டுதான் இருக்கிறது. எங்கே சுரண்டல் தாண்டவமாடுகிறதோ, எங்கே தொழிலாளியும் சொத்தில்லாத பாட்டாளியும் சிறு கைவினைஞரும் நாட்கூலியாரும் கடன் சுமை தாங்காமல் வருந்தும் சிறுவிவசாயியும் ஊகவாணிபர்களது வரைமுறையற்ற லாப வெறிக்கு ஈவிரக்கமின்றி உட்படுத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் அது இருக்கக் காணலாம்.

அது எங்கே இருப்பினும், நகரமாயினும் கிராமமாயினும், அங்கே பேதைகளான ஈக்கள் பகைவரது வலைகளில் சிக்கிக் கொண்டு தப்ப முடியாமல் தவிப்பதைக் காணலாம், துடிதுடித்துப் பலமிழந்து ஓய்ந்து உலர்ந்து போய் மடிவதைக் காணலாம்.

பல மில்லாத மெல்லிய ஈக்கும் இரத்த வெறி கொண்ட கொடூரச் சிலந்திக்கும் இடையே எத்தனையோ நூறு ஆண்டுகளாய் நடைபெறும் இந்தப் போரில் புரியப்பட்டுள்ள சொல்லொணாத படுபயங்கரங்களுக்கு அளவே இல்லை! இந்தக் கதை கொடுமையிலும் கொடுமையானது. அதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. நடந்தது நடந்து விட்டது, கடந்த காலம் போகட்டும், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிப் பேசுவோம்.

சிலந்திக்கும் ஈக்கும் இடையே நடைபெறும் இன்றைய போராட்டத்தை நெருங்கிச் சென்று உற்று நோக்குவோம். நிலைமையை உள்ளது உள்ளபடி நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும். ஈக்களாகிய நாம் நமது பகைவர்கள் நமக்காக மீண்டும் எப்படிப்பட்ட கண்ணிகளை வைத்தமைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் கண்டு கொண்டாக வேண்டும். யாவற்றுக்கும் மேலாய் நாம் ஒன்றுபட்டாக வேண்டும்.

நாம் தனித்து நிற்கும் வரை நம்மைக் கட்டியிருத்தி வைக்கும் வலைப் பின்னல்களைப் பிய்த்தெறியப் பலமற்றோராகவே இருப்போம். நமக்கு விலங்குகளிடும் சங்கிலிகளை உடைத்தெறிவோம், நமது பகைவர்களை அவர்களது பதுங்கு இடங்களிலிருந்து விரட்டியடிப்போம், எங்கும் அறிவின் பிரகாச ஒளியைப் பரப்புவோம், பேய்த் தனமான இந்தச் சிலந்தி இனி எந்நாளும் இருண்ட மூலையில் இருந்து தனது கொலைகாரக் கைங்கரியத்தைச் செய்ய வழியில்லாதபடி செய்வோம்!

ஈக்களே, நீங்கள் விரும்பினால், மெய்யாகவே விரும்பினால், யாராலும் உங்களை வெல்ல முடியாதபடி நீங்கள் பெரும் பலம் படைத்தோராகிவிட முடியும்! மெய் தான், இன்றும் சிலந்திகள் பலமுடையதாகவே இருக்கின்றன, ஆனால் எண்ணிக்கையில் அவை மிகமிகச் சொற்பம். ஈக்களான நீங்கள் சின்னஞ் சிறியவர்களாய் இருப்பினும், செல்வாக்கு இல்லாதிருப்பினும், எண்ணிக்கையில் அதிகமாய் இருப்பவர்கள்; வாழ்வே நீங்கள் தான், உலகமே நீங்கள் தான் – மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாமே நீங்கள்தான்!

நீங்கள் ஒன்றுபட்டால், உங்களுடைய இறக்கைகளின் ஒரேயொரு வீச்சாலேயே எல்லா இழைகளையும் அறுத்தெறிந்துவிடலாம், இன்று உங்களைக் கெட்டியாய்க் கட்டி, அடக்கி வைத்திருக்கும் சிலந்தி வலைகளை எல்லாம், உங்களைத் திணற வைத்துத் துடிக்கச் செய்து பட்டினியால் சாகடிக்கும் இந்த வலைகளை எல்லாம் அடியோடு துடைத்தெறிந்துவிடலாம், வறுமையையும் அடிமை வாழ்வையும் நீங்கள் ஒழித்துக் கட்டிவிடலாம். மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாம் செய்யலாம்!

ஆகவே விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!

 அடிக்குறிப்புகள்:

  1. மார்க் – ஜெர்மன் மார்க் – ஜெர்மன் நாணய முறை.
  2. வாரம் – நிலவாரம் – நிலவுடைமையாளர்கள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் கொடுக்க வேண்டிய நிலவாடகை, நிலத்துக்கான குத்தகை.
  3. ஆஸ்திரிய மற்றும் பிரஷ்யவுக்கு எதிரான போலந்தின் தேசிய விடுதலை எழுச்சியில் சமயகுருமார்கள் அடிமைச் சிந்தனையை பரப்பி தேசத்தின் ஆன்மாவை சீரழித்தனர்.

-வில்ஹெல்ம் லீப்னெஹ்ட்

அல்லாவின் பெயரால் : பாகிஸ்தானியரின் கனவும் … சவுதி மரண தண்டனையும் !

0

பாகிஸ்தான், சர்கோதா (Sargodha) நகரில் பிளேக் நோயினால் பத்தாயிரக்கணக்கான மக்கள் தங்களது இன்னுயிரை இழந்தது பற்றி கதைகதையாக மக்கள் இன்று கூறுகிறார்கள். அது மனிதகுலத்தின் ஒரு சாபக்கேடு.

நூறு ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊரான சர்கோதாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கிறார் முகம்மது பரூக். அது அவர் விரும்பாதது. அவரது கனவுகளுக்கு பதிலாக கிடைத்தது மரணம். தன்னுடைய குட்டி மகள் வயது வந்ததும் திருமணம் செய்வதற்கான கனவுகள் அவை. ஆனால், கொடுங்கனவுகளே ஏழைகளுக்கு எதார்த்தமாகின்றன.

படிப்பறிவற்ற பாரூக் தன்னுடைய குடும்பத்திற்கு உதவிட ரிக்க்ஷா வண்டி ஒட்டி வந்தார். ரிக்க்ஷாவின் மூன்று சக்கரங்கள் ஓடினால் தான் அவரது நிறைமாத மனைவி மற்றும் மகளின் வாழ்க்கையும் சற்று ஓட்ட முடியும்.

அதிக நேரம் உழைத்தாலும் குறைவான பணம் தான் பரூக்கிற்கு கிடைத்தது. எனவே கனவு காண்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால், அவரது அப்பா அப்துல் சமதிற்கு ஒரு கனவு இருந்தது. தன்னுடைய மூன்று மகன்களுக்கும் ஒரு மகளுக்கும் தன்னை விட சிறப்பான ஒரு வாழ்க்கை கிடைக்க அவர் கனவு கண்டார்.

சவுதியில் பணியாற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் (கோப்புப் படம்)

2010-ம் ஆண்டில் சமதின் கனவை கொடுங்கனவாக்க வெளிநாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்பவர்கள் என்று கூறிக்கொண்டு இரண்டு தரகர்கள் அவரை சந்தித்தனர். சமத், தன்னுடைய கனவை நினைவாக்கவும், பரூக் புதிய கனவுகள் காணவும் அதை நல்வாய்ப்பாக கண்டனர்.

அந்த தரகர்களில் ஒருவர் அல்லாஹ் டிட்டா மற்றொருவர் மஸார் அப்பாஸ். இருவரும் சமதிடம் 1,50,000 ரூபாய் கொடுத்தால் அவரது மகனை சவூதி அரேபியாவிற்கு அழைத்து செல்வதாக உறுதியளித்தனர். அது மட்டும் நடந்தால் 26 வயதியான பரூக் ஒரு புதிய வாழ்க்கையை சவுதியில் தொடங்கலாம். விளைவாக சர்கோதாவில் அவரது குடும்பத்தினர் வாழ்க்கையும் மலரும் என்று நம்பினார்கள்.

ஆனால், தரகர்கள் கேட்டத்தொகையோ அவர்களது குடும்பத்திற்கு சாதாரணமானது கிடையாது. அவர்களது மூன்று சக்கர வண்டியுடன் அவர்களிடமிருந்த மதிப்பு வாய்ந்த பொருட்கள் அனைத்தையும் அவர்களது கனவிற்காகவும், அவர்களது எதிர்காலத்திற்காகவும் பரூக்கின் குழந்தைகளுடைய எதிர்காலத்திற்காகவும் விற்க வேண்டியிருந்தது.

அந்த பணம் கடவு சீட்டையும் இதர பயண ஆவணங்களையும் பரூக்கிற்கு வாங்கி கொடுத்தது. அதே ஆண்டின் மே மாதத்தில் பாகிஸ்தான் முழுவதும் வெள்ளப்பெருக்கு பேரவலம் ஏற்படுவதற்கு சற்று முன்னதாக தரகர்கள் இருவரும் பரூக்கை கராச்சிக்கு அழைத்து சென்றனர். ஆனால், விளக்குகளின் நகரம் பரூக்கின் வாழ்க்கையை கூடிய சீக்கிரம் இருளில் தள்ள இருக்கிறது.

அடுத்த சில நாட்கள் அவர் அங்கு தங்கி இருந்தார். மே மாத வெய்யிலும் கடுமையான ஈரப்பதமும் அவரை வாட்டின. ஆனால், அதை விட பயங்கரமான நெருப்பொன்று அவரை கவ்வ காத்திருந்தது.

இரண்டு வாய்ப்புகள் அவர் முன்னால் இருந்தன. ஒன்று முன்பு போல அவரது வாழ்க்கையும் அவரது குடும்ப வாழ்க்கையையும் பணயம் வைத்து போராடுவது மற்றொன்று தரகர்கள் சொல்வதை செய்வது. அவர் தரகர்கள் சொல்வதை செய்வது என்று முடிவெடுத்தார்.

ஹெராயின் போதை பொருள் அடங்கிய மாத்திரைகளை அவர் விழுங்கினார். அது வயிற்றிலிருந்து எடுக்கும் வரை பத்திரமாக இருக்கும். பின்னர் அவர் விமானத்தில் ஏற்றப்பட்டார். அவருக்கு பிரியாவிடை கொடுக்க அங்கே யாருமில்லை. அவர் மீண்டும் வரும் போது தான் அங்கு இருக்க வேண்டும் என்று அவரது மகள் அவரிடம் கேட்கவில்லை. மனைவியையும் வயிற்றிலிருக்கும் குழந்தையையும் நன்றாக பார்த்துக்கொள்ளுமாறு அவர் கூறவும் இல்லை.

வெளிநாடுகளில் சிறையில் வாடும் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை:

சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை:

அங்கு அறிமுகமில்லா அந்த தரகர்கள் மட்டுமே அவருக்கு தெரிந்த முகங்கள். அவர்கள் இருவரும் பரூக்கை விமானத்தில் ஏற வலியுறுத்தினார். இறங்கியவுடன் அவரை அழைத்து செல்ல சிலர் வருவார்கள் என்று கூறினார்கள். ஆனால், அந்த சிலர் சவூதி அதிகாரிகள் என்பது பரூக்கின் விதிப்பயனா இல்லை ஏழைகளின் கொடுங்கனவா?

ரியாத்தில் இறங்கிய மறுகணமே பரூக் கைது செய்யப்பட்டார். சர்வதேச சட்டதிட்டங்களுக்கு புறம்பாக அரபி மொழியில் அவருக்கு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சிலப்பகுதிகள் மட்டுமே அவருக்கு மொழி பெயர்க்கப்பட்டன.

புரியாத மொழியில் விசாரணை நடத்தப்பட்டதால் அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவருடைய எதிர்ப்பை தெரிவிக்க ஒரு மாத காலம் காலக்கெடு கொடுக்கப்பட்டது. நல்ல உள்ளம் கொண்ட சில சிறைக்கைதிகள் மூலம் அரபி மொழியில் தன்னுடைய எதிர்ப்பை உரிய காலத்தில் பதிவு செய்து கொடுத்தார். ஆனால், தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்து சொல்வதற்கோ அல்லது சட்ட வல்லுனரை அமர்த்தவோ அடிப்படை உரிமை அவருக்கு மறுக்கப்பட்டது.

அவருக்கு இரண்டு மாதங்களில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாவின் பெயரால் தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் அவரது இரண்டாவது மகளும் பிறந்தாள்.

இன்று அவரது மகள்களுக்கு 11 மற்றும் 9 வயதாகிறது. மேலும் பரூக் சிறையிலடைக்கப்பட்டு பத்தாண்டுகளாகிறது. அவர் முதலில் மாலஸ் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அல் ஹாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பரூக் தன்னுடைய குடும்பத்தினருடன் அடிக்கடி பேசுகிறார். பரூக்கின் மகள்கள் அவரிடம் என்ன பேசுவார்கள் நீங்கள் அவரிடம் என்ன பேசுவீர்கள் என்று நான் சமத்திடம் கேட்டேன். ஆழ்ந்த மவுனமே பதிலாக கிடைக்கிறது. சூழ்நிலையின் மவுனம் அவரையும் ஆட்கொண்டுவிட்டது.

பரூக் கைது செய்யப்பட பிறகு இரு தரகர்கள் மீது வழக்கு தொடுத்து முதல் தகவல் அறிக்கையை சமத் பதிவு செய்தார். ஆனால், அவர்கள் இருவரும் ஒன்றரை ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். பின்னர் தொடர்ச்சியாக அதிபர், முதன்மை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் என்று மன்றாடிக் களைத்து விட்டார். எந்த பதிலும் அவருக்கு கிடைக்கவில்லை.

படிக்க:
எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !
கொலைகார சவுதி அரசால் குதறப்படும் ஏமன் மக்கள் – படக் கட்டுரை

பரூக் கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அல்லது தூதரக உறவுகள் பற்றிய வியன்னா ஒப்பந்தம், உலகளாவிய மனித உரிமை பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை, எந்தவொரு வடிவிலான சிறைச்சாலை அல்லது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான ஐநா கோட்பாடுகள் அல்லது கெய்ரோ இஸ்லாமிய மனித உரிமைகள் பிரகடனம் உள்ளிட்ட எந்த மனித உரிமை சட்டதிட்டங்கள் மூலமாகவும் பரூக்கை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இச்சட்ட திட்டங்கள் பற்றி சமத்திற்கு எதுவும் தெரியாது. அல்லது அது பற்றி அவர் கவலை கொள்வதுமில்லை. அவரிடம் சமீபத்தில் போனில் பேசிய போது தன்னுடைய மகன் விடுதலையாவதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டார். மவுனம் மட்டுமே என்னுடைய பதிலாக இருந்தது.

சர்கோதா நகரை மீண்டும் 2010-ல் ப்ளேக் நோய் கவ்வியது. ஆனால், இம்முறை என்ன சொல்வதென்று யாருக்கும் தெரியவில்லை.


கட்டுரையாளர்:
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : Dawn

எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !

த்தகைய கீழ்த்தர எண்ணம் கொண்ட ஒருவரை கிட்டத்தட்ட 130 கோடி மக்கட்தொகை கொண்ட இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை மோடியின் தேர்தல் கால நடவடிக்கைகளும், பேச்சுக்களும் பதிவுசெய்து வருகின்றன. எத்தனையோரு துன்பமான நிகழ்விது.

1. வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என அத்தனை அமைப்புகளையும் பாஜகவின் ஒரு கிளையாக, ஆர்.எஸ்.எஸ். சாகாவாக மாற்றி எதிர்கட்சிகளை முடக்க முயற்சித்து பாஜகவிற்கு தேர்தல் அறுவடைக்காக பயன்படுத்துவதோடு நிற்கவில்லை.

2. சாதி, மத மோதல்களை வளர்க்க அத்தனை வக்கிரமான பேச்சுக்களையும் அனுமதிப்பதோடு தானே அத்தகைய வன்மமான பேச்சுக்களைப் பேசியது.

3. வாரணாசி தேர்தல் விண்ணப்பம் தாக்கல் செய்த நாளில் காவியுடையணிந்து நடத்திய அத்தனை மத நாடகங்களும், தான் ஒரு மதத்தின் பிரதிநிதி மட்டுமே என்று வெளிப்படையாக பிரகடனம் செய்த நிகழ்வு.

படிக்க :
♦ மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”

அதோடு நின்றதா என்றால் இல்லை. மேற்கு வங்காள தேர்தலில் அருவருக்கத்தக்க விதமாக சனநாயகத்தை கொலை செய்கிற, குதிரை பேரத்தை வெளிப்படையாக அறிவிக்கிற வகையில் உள்ளது மோடியின் பேச்சு:

//உங்கள் எம்.எம்.எல்.ஏ.-க்கள் உங்களை விட்டு விலகப்போகிறார்கள். தீதி அவர்களே, இன்றைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார்கள். எனவே தேர்தல் முடிவுக்குப் பின் அவர்கள் பாஜக-வில் இணைவார்கள்// – மோடியின் தேர்தல்கால உரை.

எத்தகைய ஒரு குரூரமான பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளனர்.

நன்றி : முகநூலில் – Thiru Yo

பொன்பரப்பி வன்கொடுமை : எழுத்தாளர் ஜெயமோகன் யாரை கண்டிக்கிறார்?

2

பொன்பரப்பி சாதி வன்முறையை கண்டிக்கும் எழுத்தாளர்கள் கூட்டத்தில் ஜெயமோகன் தன்னால் ஒழுங்காக பேச முடியாததற்கு காரணம் திருமாவளவனின் திடீர் வருகை என்று குற்றஞ்சாட்டும் தொனியில் எழுதியுள்ளார்.

திருமாவளவன் அங்கு வந்த உடனே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் உடனே பேச்சை நிறுத்திக் கொண்டதாகவும் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். உண்மையில் அங்கு என்ன நடந்தது என்றால் திருமாவளவன் சிதறி அமர்ந்திருந்த மக்களை முன்னே சென்று அமருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது நாற்காலிகளை எடுத்துக் கொண்டு முன்னே சென்று சிலர் அமர முற்பட்டதையே சலசலப்பு என்று கூறியிருக்கிறார்.

ஒரு நிமிட அளவுக்கு மட்டுமே அந்த இடையீடு அமைந்திருந்தது. பின்னர் திருமாவளவன் நேராக மேடைக்குச் சென்றார். பேசி முடித்துவிட்டு உடனே செல்லவிருப்பதாக அவசரம் காட்டிய ஜெமோ, கூறியபடி செல்லாமல் திருமாவளவனுடன் இணைந்து எதையோ தீவிரமாக சிந்திக்கும் பாவனையில் கப்பல் கவிழ்ந்து விட்ட சோக முகத்துடன் அமர்ந்திருந்தார்.ப் அந்த படங்களை அவரது எடுபிடிகள் அதிகமாக இப்போது பகிர்கிறார்கள்.

தனது வலைப்பதிவில் வன்னியர்களை கண்டித்திருக்கும் ஜெயமோகன், அந்த கூட்டத்தில் மூச்சு விடவில்லை. அது போல் பிரச்சினையின் சூத்திரதாரியான இந்து முன்னணியின் பங்களிப்பையும் தணிக்கை செய்துள்ளார். சென்னைக்கு வந்து சென்றதை ஒரு பயண அனுபவக் கட்டுரை போன்று தனது வலைப்பதிவில் விவரித்துள்ளார். தனது அத்தையின் மரணம், அதற்குச் செல்ல நேர்ந்தது, பின்னர் தாமதமாக விமான நிலையம் சென்றது, அங்கு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட சந்திப்பு, சென்னை வந்த பிறகு விசிக அலுவலகத்தில் பார்க்கிங் வசதி இல்லாததால் தனக்கு ஏற்பட்ட சிக்கல், சாலை மதில் ஏறிக் குதித்தது என்று தடைகள் பல கடந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதை ஆரவாரமாக எழுதி உள்ளார்.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் – புஜதொமு கண்டனம்
♦ பொன்பரப்பி வன்கொடுமை : தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு !

ஒரு வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிக்கும் பாவனை கொண்ட இவ்வளவு கேடுகெட்ட உரையை ஜெயமோகனைத் தவிர வேறு யாரும் ஆற்ற முடியாது. எந்த அரசியல்வாதியுடனும் மேடையேறியதில்லை; இவர் (திருமா) மட்டும் விதிவிலக்கு என்று சொன்னதில் வெளிப்பட்ட உயர் சாதி பெரிய மனம் நவீனத்தை கடந்து சிந்திப்பதாக காட்டிக் கொள்ளும் ஒருவர் வாய்க்கப் பெற்றிருப்பது பேரவலம்.

ஜெயமோகன் வாழும் காலத்தில் வாழ்வது தனக்கு பெருமை என்றார் லக்ஷ்மி மணிவண்ணன். ராமதாஸ் வாழும் காலத்தில் வாழ்வது அவமானகரமானது என்று சொல்ல அங்கு எந்த எழுத்தாளரும் துணியவில்லை. இந்தக் கூட்டம் தலித் அரசியலில் ஜெயமோகன் கைநனைக்க உதவ அவரது குமரி மாவட்ட எடுபிடி எழுத்தாளரால் ஒழுங்கு செய்யப்பட்ட போலியானதொரு தலித் ஆதரவு பாசாங்குக் கூட்டம் என்பதில் சந்தேகமில்லை.

அதில் கலந்து கொண்டு திருமாவளவன் அவ்வளவு ஈடுபாட்டுணர்வுடன் பேசியது சங்கடமாக இருந்தது என்றாலும் பேச்சில் முத்தாய்ப்பாக ஒரு கருத்தை வெளியிட்டார். “ஒரு பிரச்சினை எழும்போது அதில் உறுதியான நிலைப்பாடு எடுக்காமல் பட்டும்படாமலும் கருத்து சொல்வது நீங்கள் ஜனநாயகவாதிகள் தானா என்ற கேள்வியை எழுப்புகிறது” என்றார்.

அவர் யாரையோ நோக்கி சொன்னதாக இருந்தாலும் மேடையில் அமர்ந்திருந்த ஜெயமோகன், லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற போலிகளின் முகத்தில் அது முதலில் கண்டிப்பாக அறைந்திருக்கக்கூடும்.

நன்றி : முகநூலில் – Raj Dev

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் !

யர்நீதிமன்ற வரலாறும் (சென்னை) நீதித்துறைச் சார்ந்த அரிய சுவையான தகவல்களும் நிரம்பிய நூல். “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்.(1987)’’

நண்பர்களே…

இன்றைய காலக்கட்டத்தில் அரசியல்வாதிகளின் வார்த்தைகளை பெரும்பாலோர் நம்புவதில்லை. அதேநேரத்தில் தங்களின் பிரச்சனைகளை நீதிமன்றங்கள் நியாயத்துடன் தீர்த்து வைக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

நால்வருண நீதி என்று சொல்லப்படுவதற்கு மாறாக எல்லா மக்களுக்குமான பொதுவான நீதியை வழங்கும் என்று நம்பப்பட்ட நீதிமன்றங்களின் வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளில் நீதியும் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானவை ஆகும்.

ஆனால் 19-ம் நூற்றாண்டில் வழக்குகள் சார்ந்த விவரங்கள் தமிழ்மொழியில் இருந்ததைப் போன்று பின் வந்த காலங்களில் அதாவது சுதந்திரத்திற்கு பின்னான காலங்களில் நமக்கு கிடைப்பது அரிதாகிவிட்டது.

இத்தகைய சூழலில் “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” என்ற நூலை (1987) – நீதிபதி சி.இராமகிருட்டினன் பி.எ.பி.எல்., அவர்களால், அரிய செய்திகளுடன் மிகச் சுவையாக எழுதப்பட்டுள்ள இந்த நூலை – ஜனநாயக சிந்தனை உள்ளவர்கள் அனைவரும் எளிதில் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் அந்த நூலின் இணைப்பை தங்களுக்கு கொடுத்துள்ளேன்.

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி