கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பிறகும், சென்னை அயோத்தியா மண்டபமும் அதன் சுற்றுப் பகுதியும், ஜெயந்தியின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. சென்னையின் அக்மார்க் பார்ப்பன ஆண்களும், பெண்களும் பிளாஸ்டிக், பித்தளை பூக்கூடை, பேப்பர், மெட்டல், களிமண், பிளாஸ்ட் ஆஃப் பேரிஸ் இவற்றாலான கிருஷ்ணன் பொம்மைகளுடன் தங்கள் கலாச்சார உடையான கச்சம், மடிசார் பூண்டு குடும்பம் சகிதமாக குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண்டிருந்தனர்.
பரபரக்கும் சாலையின் நடைபாதையில் சாயம்போன, ’மூலியான’ கிருஷ்ணன் பொம்மைகள் யாரும் கவனிப்பாரின்றி கிடந்தன. அருகில் நடுத்தர வயதுள்ள ஒருவர் பிய்ந்துபோன செருப்புக் குவியல்களுக்கிடையே வாடிக்கையாளர்களை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணனுக்கு அருகே பிஞ்ச செருப்பா, என்று பக்தர்கள் வருந்தும் வண்ணம் அந்தக் கோலமிருந்தது. ஆனால், செருப்புத் தைக்கும் தொழிலாளி எந்தச் சலனமும் இல்லாமல், “என்ன வேண்டும்” என்று கண்களால் ஏறிட்டார்.
“என்ன இது கிருஷ்ணன் சிலையும் செருப்புகளும் ஒரே இடத்தில்?”
“ஓ… அதுவா… நான் பெயின்டர். ரியல் எஸ்டேட் – பில்டிங் படுத்ததிலேருந்து வேல இல்ல, இப்படி சீசனுக்கு ஏத்தத் தொழில செஞ்சிகிட்டிருக்கேன். மொதல்ல, செருப்புக் கட போடலாமுன்னு இதே எடத்துல பங்க் கட போட்டேன். போலீசு, அதிகாரிங்க வந்து, பப்ளிக் நியூசென்சுன்னு சொல்லி தூக்கிட்டாங்க. சரின்னு அப்படியே கோனிய விரிச்சு கீழே உக்காந்துட்டேன். இப்படி இருக்க எங்கிட்டே புது செருப்பு வாங்க வருவாங்களா? அதான் பழைய செருப்புகளை தைக்க ஆரம்பிச்சேன். எதுவாயிருந்தாலும் நமக்குத் தொழில்தான். கூடவே பக்கத்திலிருந்த பொம்மைக் கடைக்குப் போயி, ஒடஞ்சி போன புது பொம்மைகள பெவிக்கால், எம்சீல் போட்டு ஒட்டி, பெயிண்ட் அடிச்சு புதுசாக்கிடுவேன்.

கடைக்கு வர்றவங்க, இதப் பாத்துட்டு, ‘எங்கிட்டே பழய பொம்மை இருக்கு, சீர் பண்ணி தருவீயா?’ன்னாங்க. அதுலேருந்து இந்தத் தொழில் பிக்கப் ஆயிடுச்சு. பண்டிகைக் காலங்கள்ல நல்லா போகுது. இப்போ பழைய பொம்மைக்கு பெயிண்ட் அடிக்கிற வேலைக்கு ரெண்டு பெயின்டர கூட்டா சேத்துகிட்டேன்” என்றார் குமார்.
அவரிடம் பணிபுரியும் சேலத்தைச் சேர்ந்த பரமேஸ்வர்:
“ஊர்ல கொத்தனார் வேல பாத்தேன். பூசுவேல, கட்டு வேல எல்லாம் செய்வேன். அங்கே வேல இல்லாததனால சென்னை வந்தேன். இங்கே வீடுகளுக்கு சுண்ணாம்பு, பெயிண்ட் அடிக்கிறதுனு பல வேலங்க செஞ்சேன்.

ஃப்ரெண்டு ஒருத்தரு சிலைக்கு பெயிண்ட் அடிக்கிறத பத்தி சொன்னாரு. பண்டிகை சீசனுல இங்கே வருவேன். கிருஷ்ண ஜெயந்திக்கு முன் வந்தா, கார்த்திகை தீபம் முடிஞ்சி போவேன். சாப்பாடு, தூக்கம் எல்லாம் இந்த பிளாட்பாரம்தான். குளிக்க பைசா கொடுத்து போற இடம்தான். செலவுன்னு பாத்தா, ஒரு நாளைக்கு 300 ரூபா ஆயிடும். மீதி இருந்தாத்தான் வீட்ட பத்தி நெனப்பு வரும். சில நாளு ஐநூறு, ஆயிரமுன்னு வேல வரும். பால நாளு அம்பது, நூறுதான் கெடைக்கும்.

ஒரு பொம்மைய சீர் செய்ய 50, 100-ன்னு கேட்டா ரொம்ப படுத்துவாங்க. வர்றவங்க பெரும்பாலும் ஐயருங்கதான். முழம் நீள பொம்மைய எடுத்து வந்து, அதன் பெருமையப் பத்தி ஒரு கிலோ மீட்டர் நீளம் பேசுவாங்க. ‘எங்க தாத்தா வச்சிருந்தது, அத்திம்பேர் கொடுத்தது, ராசியான சிலெ. இது இல்லேன்னா எங்கக் குடும்பமே இல்ல, இத பழசுன்னு தூக்கிப் போட்டா எம் மாட்டுப் பொண்ணு கோச்சுக்கும்’ – இப்படி ஏதேதோ சொல்வாங்க.
அந்த இத்துப் போன பொம்மைய காமிச்சு, ‘கிருஷ்ணரோட சிரிப்பப் பாரு, அதோட முகத்துல களையைப் பாரு, இதே மாதிரி மாசு மரு இல்லாம – ரிப்பேர் பண்ணுனது தெரியாம இருக்கனு’முன்னு சொல்லிட்டு கடைசியில ‘கூலிய பாத்துக் கேளு’ன்னு முடிப்பாங்க.
வர்றவங்க எல்லாரும் சொல்லி வச்சாப்ல ஒரே மாதிரிதான் பேசுவாங்க. நாம பொம்மைக்கு ஏத்த மாதிரி இது மூனு அடி பொம்மை, நீங்க கேக்குற மாதிரி வேணுமுன்னா, 15, 20 ஷேடு அடிக்கணும், வேல அதிகம், 700 ரூபா ஆகுமுன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, ‘இத 200 ரூபாய்க்குத்தான் வாங்கினேன்’ என்று சொல்லி, அதன் மதிப்ப அவங்களே கொறைச்சிடுவாங்க. கடைசில 300 ரூபாய்க்கு ஒத்துக்க வைக்கிறதே பெரும்பாடு.
பெயின்டிங் செய்யிறத விட, அவங்ககிட்ட பேசுறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கும்; திரும்பவும் பொம்மைய வாங்கும் போதும் அதையே பேசுவாங்க; காதே வலிக்கும். அப்புறம் எதிர்பார்த்த ரிசல்ட் வரலன்னு கொற சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. ‘பொம்ம அப்படி இல்ல, இப்படி இல்ல, சொன்ன மாதிரி இல்ல, சிரிச்ச மூஞ்சி போயிடுச்சு, அந்தக் கொழந்த சிரிப்பே காணோமுன்னு’ மூடவுட்டாயிடுவாங்க. நமக்கோ பயமாயிடும். பணம் கொடுக்கலேன்னாகூட பரவாயில்ல, பொம்மைய எடுத்துப் போனாலே போதுமுன்னு எங்க சாமிகிட்டே வேண்டிப்போம்.
அதுக்கு நாங்க செஞ்ச வேல கொஞ்சமில்ல. மொதல்ல உப்புக் காகிதம் தேய்ச்சு, அழுக்கெடுப்போம். பிறகு வார்னிஷ் அடிச்சு மெருகேத்துவோம். ஒடஞ்ச மூஞ்சு, கையி எல்லாம் களிமண்ணோ, பேப்பரோ, எம்சீலோ எடத்துக்கு ஏத்தமாதிரி ஓட்டைய அடைப்போம். சிலையில ஒட்டி வச்சிருக்கிற மாலை மணி இத்துப் போயிருந்தா, அத பெவிக்கால் வச்சி ஒட்டுவோம். அதுக்கப்புறம் நல்லா வெயில்ல காயவைப்போம். கடைசில 15 கலர், 20 கலருன்னு உருவத்துக்கு ஏத்த மாதிரி கலர் கொடுப்போம்.
உப்பு காகிதம், தின்னரு, வார்னிஷ், எம்சீல், பெவிக்கால், பிரஷ், காட்டன் வேஸ்ட் இப்படி ஆயிரத்தெட்டு செலவு. நமக்குத் தேவையான அளவு மட்டுமே வாங்க முடியாது, சிலது மொத்தமாத்தான் கிடைக்கும். இந்த முடிச்சு கூலி வாங்குறதுக்குள்ள எங்களுக்கு மூச்சே முட்டிடும்.
என்ன இருந்தாலும் நிழலோடு வேல, உக்காந்த எடத்துல செய்யிறோம்” என்று சொல்லிவிட்டு, நம்மைப் பார்த்து ஒரு ஞானியைப் போல சிரித்தார்.

பக்கத்தில் இருந்த இன்னொரு ஆர்ட்டிஸ்ட் சிவலிங்கம், “சார் அவன் சொன்னது கொஞ்சம்தான். ஒரு நாள் நீங்க இங்கே உக்காந்து வர்ற கஷ்டமர் பேசுறத கவனிங்க, நாங்க எவ்வளவு வேதனைய அனுபவிக்கிறோமுன்னு தெரியும். வர்ற ஐய்யருங்க எத்தன விதவிதமா பேசினாலும் அவங்க சொல்ல வர்ற விசயம் சிம்பிள் சார். நாமதான் புரிஞ்சிக்கணும். ‘என் எடத்துக்கு நீ வர முடியாது, உன் இடத்துக்கு நான் வரமாட்டேன், அத நீ புரிஞ்சிக்கோ’. இதுக்குத்தான் சார் ஐயருங்க நம்மகிட்டே நீள நீளமா பேசுறாங்க. அதுக்குதான் சார் அவங்க படிக்கிறாங்க. அவங்க ஒழப்பும் பொழப்பும் அதுதான் சார். இத எவன் புரிஞ்சிகிட்டாலும் இங்கே குப்ப கொட்டலாம்.
படிக்க:
♦ நூல் அறிமுகம் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?
♦ ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ?
இதவுட கொடுமை ஒன்னு இருக்கு சார். பல வருசத்துக்கு முன்னாடி ஒரு பொம்மைய சீர் பண்ணிகிட்டுப் போயிருப்பாங்க, அது ஒடஞ்சிருச்சின்னா, என்னதான் ரிப்பேர் பண்ணுனியோ, ஒழுங்காவா செஞ்சிருக்கேன்னு சொல்லி, நம்மளயே குற்றவாளியாக்குவாங்க. அதுமட்டுமல்ல, ஓசியில திரும்பவும் ரிப்பேர் பண்ணிகிட்டுப் போயிடுவாங்க.
நாம சத்தம் போட்டு நியாயம் கேட்டா, பொறுக்கி மாதிரி நம்மள காமிச்சுக்குவாங்க, போனாப் போகுதுன்னு விட்டுத் தொலைச்சிடுவோம்” என்று செருப்புகளை தைக்க ஆரம்பித்தார். அவரது கைகளின் இசைவிற்கேற்ப அழகிய வடிவம் பெற்றது, அந்தப் பிய்ந்துபோன செருப்புகள்.
– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்





ஆகவே இராபின்சனாதல் என்பது அவசியத்தின் காரணமாக எப்போதும் சமூகத் தன்மை கொண்டதும், வரலாற்று ரீதியான வளர்ச்சியில் ஸ்தூலமான ஒரு கட்டத்தோடு இணைக் கப்பட்டிருப்பதுமான உற்பத்தியின் விதிகளை, சமூகம் என்ற மிக முக்கியமான கூறை விலக்கியுள்ள சூக்குமமான மாதிரிப் படிவத்தைக் கொண்டு ஆராய்வதற்குச் செய்யப்பட்ட முயற்சியாகும். மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் இராபின்சனாதலை மார்க்ஸ் மிகவும் ஆழமாக விமரிசனம் செய்தார். இந்த விருப்பம் 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த “மிகவும் சமீபமான அரசியல் பொருளாதாரத்துக்கு” நகர்ந்து விட்டது என்று அவர் கூறினார்; அது தனக்குச் சாதகமான முறையில் ”இயற்கையான மனிதனின்” கற்பனை உலகத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்துக்கு உரித்தான பொருளாதார உறவுகளைப் 
வரலாற்று ரீதியாக காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளும்போது கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது இந்திய அரசு.




























வந்தேறிகள் ஆளக்கூடாது, தமிழன்தான் ஆளவேண்டும் என்று அனைத்து பிரச்சினைகளுக்கும் இனவாத அரசியலை முன்வைத்து உணர்ச்சியாக பேசுகிறார். யார் வந்தேறி, யார் தமிழன் என்ற கேள்வி தமிழ்ச் சாதிகள்தான் அதாவது ஆதிக்க சாதிகள்தான் தமிழர்கள் என்று வருகிறது. அந்த வகையில் அவருடைய தமிழ் தேசிய அரசியலில் சாதியம் கலந்திருக்கிறது. தமிழனுக்கு பொற்கால வரலாறு உண்டு, இன்று தமிழன் ஏமாந்து விட்டான், தமிழினத்தை மீட்க வேண்டும் என்பதையெல்லாம் நா புடைக்க, நரம்பு மிடுக்க அவர் பேசுகிறார். மேலோட்டமான அரசியல் புரிதலில் இருக்கும் மக்கள் பிரிவினரை இந்த உணர்ச்சிமயமான முழக்கம் ஆரம்பத்தில் ஈர்க்கும். மராட்டிய மாநிலத்தில் இப்படித்தான் “மதராசிகளை விரட்ட வேண்டும்” என்று பால் தாக்கரே பேசி தனது சிவசேனாவை வலுப்படுத்தினார். இன்று அந்த முழக்கம் அங்கேயே எடுபடுவதில்லை. சிவசேனாவும் பாஜக-வின் இளைய பங்காளியாக தேய்ந்து போனது. இது இரண்டாவது விசயம்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும், மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போதும் சீமான் இவர்களை கடுமையாக விமரிசிக்கவில்லை. அடக்கி வாசித்தார். நாம்தமிழர் கட்சி திராவிட இயக்கத்தையே முதன்மையான எதிரியாக கருதுவதால் திமுக, திக போன்றவற்றை எதிர்ப்பது போல அதிமுக, பாஜக-வை எதிர்ப்பதில்லை. இதனால் பலநேரம் நாம் தமிழர் கட்சி தமிழ் ஆர்.எஸ்.எஸ் போன்றே காட்சி தருகிறது. இனவாதம் இயற்கையாகவே மதவாதம், சாதியவாதத்தோடு தொடர்புடையது என்பதற்கு இது ஒரு சான்று. இது நான்காவது விசயம்.
திருமணமான பெண் தனது மாதவிடாய் நிற்கும் நாட்களை கட்டாயம் குறித்து வைத்து இருக்க வேண்டும். மருத்துவர் Last menstrual period எப்போது என்று கேட்டால் சட்டென கூற உதவும். மாதவிடாய் தள்ளிப்போனால் கடைசி மாதவிடாய் நிகழ்ந்து நாற்பது நாட்கள் கழியும் போது சிறுநீர் மூலம் கர்ப்பமானதற்கான பரிசோதனையை செய்து பாருங்கள்.
தமிழக அரசு கர்ப்பமாகும் ஒவ்வொரு தாயும் கட்டாயம் கர்ப்பத்தை பதிவு செய்ய ஆணையிட்டிருக்கிறது. ஒவ்வொரு கர்ப்பிணியின் முழுவிபரமும் PICME (pregnancy infant cohort monitoring and evaluation) எனும் மென்பொருள் மூலம் பதிந்து ஒரு பிரத்யேக எண் கொடுக்கப்படுகிறது.
குமட்டல் அதிகம் வந்தால் உள்ளே இருப்பது ஆண் குழந்தை, குழந்தைக்கு மண்டையில் முடி அதிகம் இருந்தால் அதிகம் வாந்தி வரும் என்று சில கட்டுக்கதைகள் உலாவந்தாலும்.
ஆக மொத்தம் இந்த இருபது கோடி மக்களை நம்பித்தான் இந்திய முதலாளிகள் பொருட்களை உற்பத்தி செய்து, சேவைத்துறை சேவைகளையும் அளிக்கின்றனர். மாதத்திற்கு சில இலட்சம் கார்களும், இருசக்கர வாகனங்களும் இப்போதும் விற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முந்தைய ஆண்டுகள், காலாண்டுகளை விட மிகக் குறைவாக விற்கிறது. மேலே சொன்ன அந்த பத்துக் கோடியில் பெரும்பான்மையினர் கடைசி பத்து ஆண்டுகளில் தங்களுக்குத் தேவையான நுகர்பொருட்களை வாங்கி விட்டார்கள். அந்த வாங்குதல் பூர்த்தி அடைய அடைய இங்கே புதிய விற்பனை தள்ளாடுகிறது. இதில் ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் ஓட்டுநர்களின் தலையில் புதிய கார்களை கட்டி கொத்தடிமைகளாக நடத்தினாலும் கார் சந்தை தேங்கித்தான் நிற்கிறது.
சிறு, குறு நிறுவனங்களும், சிறு வணிகர்களும்தான் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் பிரிவினராவர். அவர்களை கேட்பார் கேள்வியின்றி ஜி.எஸ்.டி சூறையாடியது. வரிப்பிடித்தம் திரும்பும் நாள்கள் அதிகமானதால் வணிகர்கள் ரொக்க சுழற்சி இன்றி திண்டாடினர். இதற்கு முன்னர் மறைமுக வரியாக செலுத்திக் கொண்டிருந்த நுகர்வோர் எனப்படும் பொது மக்கள் இப்போது ஜி.எஸ்.டி வரியாக கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிஸ்கெட், பேஸ்ட், சோப், நாப்கின், செல்பேசி கட்டணங்கள் என ஒன்று விடாமல் ஜி.எஸ்.டியால் விலை உயர்ந்தது. போதாக்குறைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை அதிகரித்தது. வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி- இவை எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களின் நுகர்வை வெகுவாகக் குறைத்து விட்டது.
இந்த நிலைமைகளும் இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கச் செய்கின்றன. இந்தியாவின் முதலாளிகள் பலர் தமது நிறுவனத்தின் மதிப்பைக் காட்டிலும் கடன்களை கணிசமாக வைத்திருக்கின்றனர். அனில் அம்பானி திவால் என்றால் முகேஷ் அம்பானி சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு பங்குகளை விற்று முதலீட்டை வாங்குகிறார். டாடா, அதானி உள்ளிட்ட நிறுவனங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமும், உள்ளூர் பொதுத்துறை வங்கிகளிடமும் கணிசமான கடன்களை வாங்கியிருக்கின்றனர். பங்குச் சந்தை சூதாட்டம், ஊக வாணிபத்தின் மூலம் இவர்களது நிறுவனங்களின் சொத்து காட்டப்பட்டாலும் உண்மையில் அவர்களும் நெருக்கடியில் உள்ளனர். இதையெல்லாம் தாண்டி அவர்களது தனிப்பட்ட சொத்துக்கள் மட்டும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.



அல் ஜசீரா வெளியிட்ட செய்தி அங்கிருக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிப்பதோடு, பயத்தோடு வாழ்வதாக சொல்கிறது. தினக்கூலிகளாக உள்ள தொழிலாளர்களை வெளியேற்ற எந்தவித நோட்டீசும் வழங்கப்படவில்லை. வெளிமாநிலங்களிலிருந்து வந்திருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறைகள் எதுவும் நிகழவில்லை.
“தேர்தலுக்கு முன்பு பாத யாத்திரையின்போது, எங்களுடைய சம்பளத்தை ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாக ஜெகன் வாக்குறுதி அளித்திருந்தார். முதலமைச்சராக பதவியேற்றபின், சம்பள உயர்வை அறிவித்தார். ஆனாலும் எங்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை” என தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பி. மணி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த நான்கு மாதங்களாக மதிப்பூதியமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் ஆஷா தொழிலாளர்கள் உள்ளனர்.
பீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள மைக்கா சுரங்கங்கள் உள்ள பகுதிகளான கொடெர்மா, கிரித், ராஜாவ்லி பகுதிகளில் இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஊதியம், சிறப்பு பயன்கள், பணிச் சூழல் ஆகியவற்றில் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ‘பணியிடத்தில் ஜனநாயக திட்டம்’ என்ற பெயரில் தனது இணையதளத்தில் பெர்னி சாண்டர்ஸ் அந்தத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

