அன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2
கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதம் முடியும் தருவாயில் ஒரு முக்கிய பரிசோதனை செய்வது நல்லது. இந்த பரிசோதனைக்கு “NT scan” என்று பெயர் அதாவது Nuchal translucency scan.
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் கழுத்துப்பகுதிக்குப் பின் புறம் உள்ள பகுதியில் நிணநீர் சேகரிப்பு அதிகம் இருக்கிறதா, இல்லை சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்வதே இந்த சோதனையின் நோக்கம். நார்மல் குழந்தைகளுக்கு நிணநீர் ஓட்டம் சரியாக இருக்கும். அதனால் கழுத்துக்கு பின் நீர் சேருவது இருக்காது.
இதுவே இதயத்தில் பிறவி நோய் இருக்கும் குழந்தைகளுக்கும், மூளை நரம்பியல் நோய் இருக்கும் / மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் கழுத்துப்பகுதிக்குப்பின் நீர் அதிகமாக சேரும்.
பொதுவாக 12 வாரக்குழந்தைக்கு இந்த Nuchal translucency 3.2 mm -க்குள் இருப்பது குழந்தைக்கு பிறவிக்கோளாறு இல்லை என்பதை உறுதி செய்கிறது. சரி ஒருவேளை Nuchal translucency அதிகமாக இருந்தால் குழந்தைக்கு பிறவிக்கோளாறு கட்டாயம் இருக்கிறது என்று அர்த்தம் ஆகிவிடுமா???
நிச்சயம் ஆகாது. இந்த பரிசோதனை என்பது ஒரு screening testதான். அதாவது சமுதாயத்தில் பரவலாக செய்யப்படும் இந்தப்பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்தால் நோய் கட்டாயம் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை.
இந்த ஸ்கேனில் பாசிடிவ் தன்மை வந்தால் நாம் அதற்கடுத்து ட்ரிபிள் ஸ்க்ரீனிங் எனும் ரத்தப்பரிசோதனை செய்ய முடியும். இந்த ரத்தப்பரிசோதனையில்
தாயின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும் ரத்தத்தில் ஆல்பா ஃபீட்டோ ப்ரோட்டின் (இது சிசு உற்பத்தி செய்யும் ஒரு புரதம்) பீட்டா HCG (இது தொப்புள்கொடியில் இருந்து உருவாகும் ஒரு நொதி) மற்றும் ஈஸ்ட்ரையால் எனும் ஹார்மோன் இந்த மூன்றையும் தாயின் ரத்தத்தில் சோதிப்பதன் மூலம் நம்மால் சிசுவுக்கு இருக்கும் பிறவி நோய்களை கண்டறிய முடியும்.
படிக்க:
♦ அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ இந்தியாவின் பழங்கால பிரசவக் கொடுமைகள்
தாயின் ரத்தத்தில் AFP எனும் ஆல்பா ஃபீட்டோ ப்ரோட்டின் அதிகமாக இருந்தால் குழந்தைக்கு நரம்பு – மூளை சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாக அர்த்தம். AFP குறைவாக இருந்து HCG மிக அதிகமாக இருந்தால் குழந்தைக்கு டவ்ன் சிண்ட்ரோம் போன்ற நோய்கள் இருக்க வாய்ப்பு அதிகமாகிறது.
இத்தோடு சிசுவுக்கு மூக்கு எலும்பு உருவாகாமல் இருந்தால் டவுன் சிண்ட்ரோம் எனும் பிறவிக்குறைபாடு இருக்க வாய்ப்பு அதிகம். கர்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில் குழந்தை வளர்ச்சி அதற்கு பிறவிக்குறைபாடு இருக்கிறதா இல்லையா போன்ற பல விசயங்களை நம்மால் காண இயலும்.
மாதம் ஒருமுறை கட்டாயம் மருத்துவரைச் சந்தித்து ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவுகள், சிறுநீர் சர்க்கரை மற்றும் புரத அளவுகள் பரிசோதித்து வர வேண்டும்.
மூன்றாவது மாத முடிவில் ரணஜன்னி மற்றும் தொண்டை அடைப்பான் வியாதிகளுக்கு எதிரான Td எனும் தடுப்பூசியை ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் தடுப்பூசி போடப்பட்ட ஒரு மாதம் கழித்து மற்றொரு Td ( Tetanus Diphtheria) தடுப்பூசி போட வேண்டும்.
இந்த தடுப்பூசி எதற்கு ?
குழந்தை பிறக்கும் போது ஏற்படும் ரனஜண்ணி (Neonatal tetanus) எனும் உயிர் கொல்லி நோயில் இருந்து குழந்தையைக் காக்கும். தொண்டை அடைப்பான் எனும் டிப்தீரியா நோய் வராமல் தாய் மற்றும் பிறக்க இருக்கும் சேயை காக்கும்.
இந்த மூன்று மாதங்களில் செய்ய வேண்டிய மற்றுமொரு முக்கிய வேலை.. குடற்புழு நீக்கம்.
வயிற்றில் இருக்கும் கொக்கிப்புழு, நாடாப்புழு போன்றவை ரத்தத்தை உறிஞ்சி அவை வாழும் தன்மை கொண்டவை. கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைவது இயற்கை. இந்த புழுக்கள் ரத்த ஹீமோகுளோபின் அளவை இன்னும் அபாய அளவுக்கு குறைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே மருத்துவர் பரிந்துரையின் பேரில் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
ஐந்தாவது மாதம் தாய்க்கு செய்ய வேண்டிய TARGET scan எனும் பிறவிக்குறைபாடு கண்டறிதல் பரிசோதனை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
***
ஐந்தாவது மாதம் 18 வாரம் முதல் 21 வாரம் வரை முக்கியமான ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இதை Target scan என்று கூறுகிறோம். குழந்தையின் உடலில் ஏதேனும் உடல் சார்ந்த பிறவிக்கு குறைபாடு இருக்கிறதா என்று பார்க்கும் ஸ்கேனாகும்.
- முகத்தில் மூக்கு எலும்பு உருவாகியிருக்கிறதா?
- வாய்பிளவு – அன்னப்பிளவு இருக்கிறதா?
- இதயத்தின் அறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா?
- குடல் பகுதி எப்படி இருக்கிறது?
- குழந்தையின் கை மற்றும் கால்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?
- கைகளில் விரல்கள் எத்தனை இருக்கின்றன?
என்பது வரை அத்தனையும் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் எந்த குறைபாடும் இல்லாத குழந்தை கர்ப்பபையில் வளர்கிறது என்று முடிவுக்கு வரலாம்.
கர்ப்பிணிகளுக்கு இந்த இரண்டாவது மும்மாதத்தின் கடைசியில் இருந்து
இரும்புச்சத்து குறைபாடு ஆரம்பிக்கும். எனவே இரும்புச்சத்துக்கான மாத்திரை நான்காவது மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும்.
இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கும் மேல் கர்ப்பிணித் தாய்மார்கள் ரத்த சோகை எனும் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குக்காரணம் நமது வழக்கப்படி பெண்கள் வீட்டில் கடைசியாக மீதம் இருப்பதை உண்டு வாழ்ந்து வருவர்.
ஊட்டச்சத்து குறைவான உணவான அரசியை அதிகமாக உண்பர். ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் முட்டை, மாமிசம் போன்ற உணவுகளை ஆண்களுக்கென; பிள்ளைகளுக்கென ஒதுக்கி வைக்கும் பழக்கம் நமது பெண்களிடையே உண்டு. இந்த வழக்கம் கல்வியறிவால் மெல்ல மெல்ல மாறிவருவது வரவேற்கத்தக்கது.
அசைவம் உண்ணும் கர்ப்பிணி பெண்களுக்கு தினமும் ஒரு முட்டை, வாரம் மூன்று முறையேனும் மாமிசம் உண்ணக் கிடைக்க வேண்டும். சைவம் மட்டும் உண்ணும் பெண்கள் கட்டாயம் புரதம் நிரம்பிய பயறு வகைகள், கடலை வகைகள், பருப்பு போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.
காய்கறிகள் தினமும் 150 முதல் 200 கிராம் வரை உண்பது நல்லது. இன்றும் பிரசவத்தின் போதும், கர்ப்ப காலத்தின் போதும் தாய் சேய் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது “இரும்புச்சத்து குறைபாடு” எனும் அனீமியா ஆகும்.
கர்ப்பிணிக்கு முதல் மாதம் எடுக்கப்படும் Hemoglobin 12 g/dl என்ற அளவுக்கு மேல் இருந்தால் நல்லது. 10g/dl என்பது இந்திய சராசரி. இது தான் பெரும்பாலும் அனைத்து பெண்களுக்கும் இருக்கும். ஆகவே இதை நம் பெண்களுக்கு ஓகே என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
படிக்க:
♦ உலகம் சுற்றும் எடப்பாடி – கருத்துக் கணிப்பு
♦ அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !
கர்ப்பமானது முதல் மாதங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்ல செல்ல அனீமியா கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கும். ஆகவே கட்டாயம் நான்காவது மாதத்தில் இருந்து இரும்புச்சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ள அரசு பரிந்துரை செய்கிறது.
இந்த இரும்புச்சத்து மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதற்கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அதற்கடுத்தபடியாக முக்கியமான சத்து “கால்சியம்”
கரு சிசுவாக வளர்ந்து குழந்தையாகும் போது குழந்தையின் எலும்புகள் உருவாக வேண்டும். அந்த எலும்புகள் உருவாகுவதற்கு தேவையான கால்சியம் தாயிடம் இருந்து செல்லும்.
அதாவது தாயின் ரத்தத்தில் இருந்து கால்சியம், சிசுவுக்குச் செல்லும். சிசு அந்த கால்சியத்தை உபயோகித்து தனது எலும்புகளை வளர்த்துக் கொள்ளும். தாயின் ரத்தத்தில் எப்போதும் கால்சியம் சத்து சரியான அளவில் இருக்க வேண்டும்
இதற்கு கால்சியம் சத்து நிரம்பிய எளிய உணவான முட்டைகள் உதவும். நாளொன்றுக்கு கட்டாயம் ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டைகள் உண்டு வருவது நல்லது. இத்துடன் கால்சியம் சத்துக்கான மாத்திரையையும் உட்கொள்ள அரசு பரிந்துரை செய்கிறது.
கால்சியம் சத்து குறைபாட்டால் தாய்க்கு கர்ப்ப காலம் முழுவதும் அதிகமான உடல் சோர்வு வலி ஏற்படும். குழந்தை என்பது ஒரு அழகிய ஒட்டுண்ணியாகும். ஒட்டுண்ணி வகை உயிரினங்களை Parasite என்கிறோம். குழந்தையும் தாயிடம் இருந்து சத்துகளையும் ரத்தத்தையும் உறுஞ்சி வாழ்வதாலும் வளர்வதாலும் அதுவும் ஒரு ஒட்டுண்ணி தான்.
இந்த மிகப்பெரும் ஒட்டுண்ணி உடலின் ஒரு பகுதியில் இருந்தாலும் உடல் அதை ஏற்றுக்கொள்கிறது. இதற்காக கர்ப்ப காலத்தில் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைக்கப்படும். ஆகவே pregnancy is a hypo immune state.
எனவே இந்த காலத்தில் எளிதாக நோய் கிருமி தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.
தாய்மார்கள் தண்ணீர் பருகும் விசயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை மட்டுமே பருக வேண்டும். மிகுந்த தேவை தவிர அநாவசியமான நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். பயணம் செய்தாலும் ரயில் வண்டியை தேர்வு செய்ய வேண்டும்.
பைக் பயணங்களை குண்டும் குழியுமான சாலைகளில் செல்வதை தவிர்த்து விட வேண்டும். கூட்டமான ஜனநெரிசலான இடங்களை தவிர்க்கவும். அங்கே காற்றினால் பரவும் சளி இருமல் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு அதிகமாகிறது. காய்ச்சல், சளி, இருமல் வந்தால் சுய மருத்துவம் எடுப்பது தவறு. மேலும் மருந்தகங்களில் சுயமாக மருந்துகள் எடுப்பது மாபெரும் தவறாக அமையும்.
உங்கள் மகப்பேறு மருத்துவரையோ அல்லது குடும்ப மருத்துவரையோ அணுகி மருந்துகள் எடுக்கவும். கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய அபாயகரமான மருந்துகள் உள்ளன. அவற்றை மருத்துவர்கள் மட்டுமே அறிவர்.
ஆகவே கர்ப்பிணிகள் கட்டாயம் மருத்துவரை சந்தித்து மட்டுமே மருந்துகள் உட்கொள்ள வேண்டும். ஐந்தாவது மாதத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வொன்றைப் பற்றி பின்வரும் (அடுத்த) பகுதியில் காண்போம்.
நன்றி : ஃபேஸ்புக்கில் – Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.




மேலும் அவர், மாத்தளையில் எல்கடுவ பிளாண்டேஷன் நிர்வாகத்தில் இயங்கும் எல்கடுவ தோட்டம் செம்புவத்த, ரோட்டலா, குளிராட்டி, நடுத்தோட்டம் ஆகிய ஐந்து பிரிவுகளை உள்ளடக்கிய தோட்டம் ஆகும்.







அதன் பின் தோழர் ஏ. மோகன் அவர்கள் இக்கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். அவர் தனது தலைமையுரையில்: “இந்த தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா என்பது பல தேசிய இனங்களின் பல மொழி, கலச்சாரம் கொண்ட நாடு. இங்கு இரண்டு மொழிகளில் மட்டும் அறிக்கை வெளிடுவதும்; கிராமபுற ஏழை எளிய மக்களிடம் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கக் கூடாது என்ற நோக்கத்திலும்தான் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் இதனை நாம் முறியடிக்க வேண்டும்.” என பேசினார்.
அவருக்கு அடுத்தபடியாக பேராசிரியர் ப.ரவிக்குமார் பேசுகையில் : “இந்த கல்விக் கொள்கையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் இந்த புதிய கல்வி கொள்கை என்பது கார்ப்பரேட்டுகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் உகந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.




இலண்டனை வென்று விட்ட எடப்பாடி அடுத்து பூலோக சொர்க்கம் அமெரிக்காவிற்குச் சென்றார். ஒவ்வொரு ஷாட்டிலும் புதிய கோட்டு சூட்டுக்கள், ஷூக்கள் அணிந்தாலும் வேட்டி சட்டை போல சுதந்திரமாக அவரால் நடக்க முடியவில்லை என்றாலும் நடந்தார். ஏர் பிடிக்காமலே விவசாயி பட்டம் பெற்றவர் பபல்லோ நகரத்துக்குச் சென்று அங்குள்ள மாட்டுப் பண்ணையை பார்வையிட்டு மாடுகளுக்கு வைக்கோலும் கொடுத்தார். அமெரிக்க மாடு எப்படி வளர்க்கப்படுகிறது, எப்படி சாணி போடுகிறது போன்ற தொழில்நுட்பங்களை கேட்டறிந்தார்.
கட்சியின் மாநில தலைவராக பொன். ராதாகிருஷ்ணன் இருந்தார், அவர் பிறகு மத்திய அமைச்சராக ஆக்கப்பட்டார், தமிழிசை மாநில தலைவராக நீண்டகாலம் இருந்தார், இப்போது கவர்னர் ஆக்கப்பட்டிருக்கிறார். என்னதான் கட்சிக்கு குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியை தமிழிசை பெற்றுத்தராவிட்டாலும், அவருடைய சின்சியர் உழைப்புக்கு ஒரு வெகுமதிதான் இந்த பதவி.
அண்ணல் அம்பேத்கர் தனது காலத்தில் சாதி தீண்டாமைக்கு காரணமான இந்துமதத்தை, பார்ப்பனியத்தை முற்று முழுதாக அம்பலப்படுத்தினார். அதற்காகவே அவர் காலத்தில் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்ந்த காந்தியை துணிவுடன் எதிர்கொண்டார். காந்தியை விமரிசிப்பது என்பது மைய நீரோட்ட அரசியலை எதிர்ப்பதாகும். இருப்பினும் அதற்காக அவர் கவலைப்படவில்லை. அதே போன்று பெரியாரும் சமூகநீதிக்காகவும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்தும் போராடினார். எனவே இவர்களுக்கு கிடைத்த பிரபலம், புகழ் என்பது அவர்களது சொந்த முயற்சிக்கு கிடைத்த ஒன்றாகும். சொல்லப்போனால் அவர்களுக்குரிய சமூக அந்தஸ்து இதனால் ஆரம்பத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. தொடர்ச்சியான அவர்களது செயல்பாடே அவர்களுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பை பெற்றுத் தந்தது.
கருணாநிதியையே எடுத்துக் கொண்டால் அவர் பள்ளிப் படிப்பை கூட முடித்தவரல்ல. அவரது சாதியும் ஆதிக்க சாதி போன்று செல்வாக்கு கொண்டது அல்ல, சிறுபான்மையான மக்களைக் கொண்ட சாதி. ஆனால் அவரது முயற்சியால் அவர் தலைவரானார். பள்ளி நாட்களில் கையெழுத்து பத்திரிகை ஆரம்பித்தார். பின்பு முரசொலியை அச்சிட்டு ஆரம்பித்தார். உள்ளூரில் நாடகம் போட்டார். பின்பு நாடக வசனம் எழுதி சினிமாவிற்கு வசனம் எழுதும் நிலையை அடைந்தார். உள்ளூரில் பேசி பிறகு மாநிலம் முழுக்க பேசி பிரபலமானார். அன்றைக்கு இவரைப் போன்ற பலரை திராவிட இயக்கம் உருவாக்கியிருந்தது. முடிவெட்டும் சலூன்கள், மாணவர்களின் விடுதிகள் போன்றவை திராவிட இயக்கத்தின் அரசியல் பேசப்படும் மையங்களாகின. பார்ப்பனிய செல்வாக்கு கொண்ட ஒரு நாட்டில் சலூன்கள் எப்படி அரசியல் மையங்களாகின என்பது உங்களது கேள்விக்கு ஒரு விடை.
ஒரு பேருந்து அல்லது ரயிலில் புதிய ஜனநாயகம் அல்லது புதிய கலாச்சாரம் பத்திரிகையை விற்கும் போது அந்த இடத்தில் பேசும் தோழரை மக்கள் தைரியமானவராக, இயக்கத்தின் செயல்பாட்டளராக கருதி ஆதரிக்கின்றனர். அதே போன்று மேடையில் பொதுக்கூட்டத்தில் பேசும் போதும் அப்படி கருதுகின்றனர். இங்கெல்லாம் தோழர்கள் ஒரு இயக்கத்தின் பிரதிநிதி என்று கருதப்பட்டு மக்களால் போற்றப்படுகின்றனர். அந்தஸ்து என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் என்பது சாதிய சமூகத்தின் நிலை. மாறாக அந்த நிலையை செயல்பாட்டால் கிடைக்கும் ஒன்றாக மாற்றுவது இத்தகைய சமூக இயக்கங்களே!



இந்நிலையில் நமது சங்கம் ஆலையில் செயல்படுவதை நிர்வாகத்திற்கு உறைக்கும் விதமாக, 04.09.2019 அன்று ஆலைவாயிலில் பெயர்ப்பலகை வைத்து, கொடியேற்றுவது என தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதற்காக 26.08.2019 அன்றே, பகுதி போலிசு நிலையத்திலும், மாவட்ட கண்காணிப்பாளரிடமும் முறையாக அறிவிப்பு செய்து பாதுகாப்பு கோரி கடிதம் கொடுத்தனர். பொதுப்பணித் துறையிடமும் அனுமதிக் கடிதம் கொடுத்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இதற்கு முன் வரை சங்கத்தை ஒரு பொருட்டாக மதிக்காத நிர்வாகம், கொடியேற்று நிகழ்ச்சியை அறிவித்தவுடன், அதைத் தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் குட்டிக் கரணம் போட்டுப் பார்த்தது.






அரைப்பாக்கெட் கோல்ட் பில்டர் சிகெரெட்டை வாங்கிக்கொண்டு அவர்கள் பாட்டுக்கு இறங்கிச் சென்றதைப் பார்த்த கடைப் பையனுக்கு அதிர்ச்சி. அருகில் நின்றிருந்த கடை முதலாளியைத் திரும்பிப் பார்த்தான். ‘போகட்டும் விடு எதுவும் கேக்காத’ என்பதைப்போல தலையசைத்தார் முதலாளி. அவரது சகிப்புத்தன்மைக்கு இரண்டு காரணங்கள் இருந்தது. முதலாவது அவர் மலையாளி. உள்ளூர் ரவுடிகளைப் பகைத்துக்கொண்டு அங்கே தொழில் செய்ய முடியாது. இரண்டாவது அவர் இஸ்லாமியர். இதற்கு விளக்கம் தேவையில்லை.
சத்தமில்லாமல் திருப்பிக்கொண்டு வந்தவழியே சென்றார் தள்ளுவண்டிக்காரர். என்ன நிறமென்றே கணிக்க முடியாத விசித்திர நிறத்தில் வாயிலும் மூக்கிலும் ஒழுகிய திரவத்தைக் காவி வேட்டியில் துடைத்துக்கொண்டு திரும்பி வந்தான் அண்ணன். தள்ளாடியபடி நடந்துவந்த அண்ணனை இரண்டுபேர் தழுவியபடி கைத்தாங்கலாக அழைத்து வந்ததைப் பார்க்க பத்தாசா நடனத்தைப் பார்ப்பதுபோல இருந்தது. (பத்தாசா நடனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் யூ டியூபில் சொடுக்கவும்)
சூத்திரன் என்றால் வேசிமகன் என்கிறது வேதம். மேலும் பார்ப்பன, ஷத்திரிய, வைசிய பெண்கள் தமக்கு கீழே உள்ள வர்ண ஆண்களோடு சேர்ந்து பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் சூத்திரர்கள் என்று வேதம் கூறுகிறது. சாதாரண மக்களின் குல தெய்வங்களான மாரியம்மன், இசக்கி, சுடலைமாடன், காத்தவராயன், மதுரை வீரன் போன்ற நாட்டுப்புற கடவுள்களை சிறு தெய்வம் என்று இந்துமதம் இழிவுபடுத்துகிறது. நாட்டுப்புற தெய்வ வழிபாட்டில் விலங்கு பலி, கறி படையல், அனைத்தும் உண்டு. இதையும் இந்துமதம் இழிவுடனே பார்க்கிறது.
இந்தியாவில் சட்டத்தை மீறி குழந்தைகள் திருமணம் நடைபெறுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் குழந்தை திருமணங்கள் குறைந்தாலும் இந்தி பேசும் மாநிலங்களில் இன்னும் செல்வாக்கோடு இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்திலேயே குழந்தைகள் திருமணம் தடை செய்யப்பட்டாலும் அது இன்னமும் தொடர்கிறது. பாஜக, காங்கிரசு போன்ற கட்சிகளே இந்தி பேசும் மாநிலங்களை ஆண்டு வருகின்றன. அங்கே இக்கட்சிகள் குழந்தைகள் திருமணத்தை தடை செய்ய போதிய முன்முயற்சி எடுப்பதில்லை. கூடவே கண்டுகொள்வதுமில்லை.
பிறகு ஒரு தலைப்பில் நீங்கள் எழுத நினைக்கிறீர்கள். அந்த தலைப்பு குறித்து உங்கள் குறிப்புகளில் ஏதும் கருத்துக்கள் உள்ளதா என்று பார்த்து அதன் வழியில் சிந்திப்பதும், சிந்தனை துளிகளை குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டு ஓரிரு நாள் அசை போடுங்கள். பிறகு அந்த குறிப்புகளை திரைக்கதை போல சுருக்கமாக எழுதுங்கள். இப்போது அந்த குறிப்புகள் மூலம் படிப்பவர் ஏதேனும் ஒரு புதிய விசயத்தை படிக்க முடியும் என உங்களுக்குத் தோன்றுகிறதா, பாருங்கள். அப்படி இருப்பின் பிறகு திரைக்கதை குறிப்புகள் உதவியுடன் எழுதுங்கள். ஆரம்பத்தில் சில பல தயக்கம், தடுமாற்றம் இருந்தாலும் மனந்தளராமல் திரும்பத் திரும்ப எழுதுங்கள். எழுத்து வரும்.
நேரடியாக முசுலீம்களுக்கு மிரட்டல் விடுவிக்கப்படுகிறது. பீம் சேனாவின் தலைவர் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார். காவலைரைக் கொன்ற இந்துமதவெறியர்கள் கூட பிணையில் எளிதாக வெளியே வருகிறார்கள். இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரியாக உ.பி மாற்றப்பட்டு வருகிறது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவை திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருப்பினும் வடமொழிக் கலப்பு அதிகம். ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பனிய எதிர்ப்பை சுட்டுவதற்காகவே திராவிடர், திராவிட இயக்கம், திராவிடர் கழகம் என்ற பெயர்கள் வைக்கப்பட்டன. அன்றைக்கு மதராஸ் மாகாணம் என்பது தென்னிந்தியாவை குறித்ததால் நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்களை அதாவது தென்னிந்திய மக்களின் நலனையும், அதற்கு எதிரான பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும் முன்வைத்தார்கள்.