Wednesday, July 30, 2025
முகப்பு பதிவு பக்கம் 333

சினிமா ஒருவரிச் செய்திகள் – 08/06/2019

மசாலா : மோடி அரசு கொண்டு வந்த டீமானிடேஷன் மோசடிகளை மையமாக வைத்து, மோசடி என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது. ஜே.சி.எஸ் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜூ, பல்லவி டோரா, என்.சி.பி விஜயன், அஜய்குமார் உள்பட பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கே.ஜெகதீசன் இயக்குகிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து பெரும்புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன், என்கிறார் இயக்குனர் ஜெகதீசன்.

மருந்து: உடனடியாக எச்ச ராஜா, தமிழிசையின் கவனத்திற்கு இந்த செய்தியை கொண்டு சென்றால் மெர்சலே மெர்சலாகும் அளவுக்கு இந்த படத்திற்கு விளம்பரம் கிடைப்பது நிச்சயம்.

♠ ♦ ♣

மசாலா ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம், கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்தது. ஜூகிபா என்ற கதையைத் தழுவி இந்தப் படத்தை எடுத்துள்ளனர் என்று பிரபல எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் ஷங்கரும், படத்தின் தயாரிப்பாளரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், வழக்கு தொடுத்துள்ள தமிழ் நாடனின் ஜூகிபா கதைக்கும், எந்திரன் படத்தின் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் காப்புரிமைச் சட்டப்படி இயக்குனர் ஷங்கர் மீது வழக்குத் தொடுக்க போதிய முகாந்திரம் உள்ளது. எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

மருந்து : இயக்குநர் ஷங்கர் தம்மாத்துண்டு கதையை சுட்டுத்தான் பிரம்மாண்டமாக எடுக்கிறார் என்பது நீதிமன்றத்தின் மூலம் தெரிய வருகிறது. இனி தமிழ் சினிமாவிற்கு என்று கதைத் திருட்டை கண்டுபிடிக்கும் போலீசு பிரிவை உருவாக்க வேண்டும் போல. நைசா சுடுகிறவர்தான் மாஸ் டைரக்டராக பவுசு காட்ட முடியும் என்பதற்கு ஷங்கரே சாட்சி!

♠ ♦ ♣

மசாலா : நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மூன்று மாணவிகள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். நீட் தேர்வோ, பள்ளி இறுதத் தேர்வோ, எந்தத் தோல்வியும் தற்காலிகம் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். அவர்களை சுற்றி உள்ளோரும் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்வில் ஒருமுறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை சவாலாக ஏற்று, மீண்டும் முயலவும், வெல்லவும் பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தை, ஆதரவை பெற்றோர்களும் ஆசிரியர்களும் நல்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில், பல பெற்றோர்களே முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்கிறார்கள்.

இது போதாது என்று, அரசியல் வேறு. நம் அரசியல்வாதிகள், உண்மையாகவே கொள்கைரீதியாக நீட்டை எதிர்ப்பவர்கள் சிலர் என்றால், தங்களுக்கு மெடிக்கல் சீட்டுக்கு வசூல் ஆகிக் கொண்டிருந்த டொனேஷன் கமிஷன் வகையறா நின்ற வயிற்றெரிச்சலில் பலர். அரசியல் தீர்வு வரும்போது வரட்டும்; அதுவரை மாணவர்கள் மனதை அலைபாய விடவேண்டாம். தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல. அவரைப் போல தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை தூண்டுபவர்கள் மனிதர்களே அல்ல.

  • சினிமா நடிகை கஸ்தூரி

மருந்து : நீட் தற்கொலைகளுக்காக பெற்றோர்களையும், நீட்டை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும் நொட்டை சொல்கிறார் ‘ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டு’ கஸ்தூரி. எய்தவனை விடுத்து அம்புகளை குற்றவாளியாக்கும் வம்பு மாமி கஸ்தூரி காற்றடித்தாலும் காவிக் கறைத் துண்டை விட்டுக் கொடுக்க மாட்டார்.

♠ ♦ ♣

மசாலா: பிரேமம் படத்தில் புகழ்பெற்றவர் சாய் பல்லவி. அதன்பிறகு தனுசுடன் நடித்த மாரி-2 படத்தில் அவரது நடனம் பெரிதாக பேசப்பட்டது. சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார் சாய்பல்லவி.

இந்த நிலையில், தற்போது தெலுங்கில் ராணாவுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். நக்சலைட்டுகள் பற்றிய கதையில் உருவாகும் அப்படத்தில் இளம் நக்சலைட்டாக சாய்பல்லவி நடிக்கிறாராம்.

மருந்து : ரவுடி பேபிகள் நக்சலைட்டாக நடிக்கப் போவதையும் ராணாக்கள் தமது ஹீரோயிசத்தை வெளிக்காட்ட நக்சலைட் களத்தையும் எடுத்திருப்பதைப் பார்த்தால் ஒன்று சொல்லத் தோன்றுகிறது, பாவம் நக்சலைட்டுகள்!

♠ ♦ ♣

மசாலா: பிரபல மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு தனது சிதம்பர நினைவுகள் என்ற புத்தகத்தில் சிவாஜியை சந்தித்த அனுபவத்தை எழுதியுள்ளார். சிவாஜியின் நடிப்பாற்றல், பேச்சாற்றல், நினைவாற்றல் என பலவற்றை குறிப்பிட்டுள்ளார். தமிழாக்கம் செய்யப்பட்ட இவரது நூலிலிருந்து சிவாஜி பற்றிய தகவல்களை தொகுத்து பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரு பாடமாக வைத்துள்ளனர்.

கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், உள்ளிட்ட சிவாஜி நடித்த முக்கிய படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. “என்னைப்போல் சிவாஜியால் நடிக்க முடியும். என்னால் சிவாஜி போல் நடிக்க முடியாது” என்று உலகப் புகழ்பெற்ற நடிகர் மார்லன் பிராண்டோ சொன்னதும் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மருந்து : இருக்கட்டும். தமிழக முன்னேற்ற முன்னணி என்றொரு கட்சி ஆரம்பித்து மண்ணைக் கவ்வியவர் சிவாஜி கணேசன். அந்த வீர வரலாற்றையும் பாடத்தில் சேர்த்தால் சிம்பு முதல் விஷால் வரை அடுத்த முதலமைச்சர் ஆகலாம் எனும் சினிமாக்காரர்களின் அட்ராசிட்டியை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி எச்சரிக்கலாமே?

♠ ♦ ♣

மசாலா: தமிழ் சினிமாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கப் போவதாக ஒரே சமயத்தில் இரண்டு அறிவிப்புகள் வெளியாகின. ‘தலைவி’ என ஒரு படமும், ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் மற்றொரு படமும் அறிவிக்கப்பட்டன.

‘தலைவி’ படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக தமிழ் கற்று வரும் கங்கனா கொஞ்சம் குண்டான தோற்றத்தைப் பெறுவதற்காக உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளாராம். படத்தின் பட்ஜெட்டாக 100 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனமான விபிரி ஒதுக்கியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

மருந்து : சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ 1 அக்கியூஸ்டான ஜெயாவிடம் நீதிமன்றம் கட்டச் சொன்ன அபராதமும் நூறு கோடிதான். பட்ஜெட்டும் நூறு கோடிதான். பட்ஜெட் விவகாரம் இருக்கட்டும், படைப்பில் அந்த அபராதம் வருமா? நிச்சயம் வராது. கொள்ளைக்காரி என்று படமெடுக்க வேண்டியவரை தலைவி என்று எடுக்கிறார்கள் கோடம்பாக்கத்து கோமாளிகள்!

♠ ♦ ♣

மசாலா:  ‘பாரத்’ படத்தின் பிரிமியர் காட்சி மும்பையில் நடைபெற்ற போது சல்மான் காரில் ஏறுவதற்கு வசதியாக அவருடைய செக்யூரிட்டிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

அப்போது சல்மான், திடீரென அவருடைய ஒரு செக்யூரிட்டியை அறைந்தார். அது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

மருந்து : 1998-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் அபூர்வ கருப்பு இன மானை வேட்டையாடினார். 2002-ம் ஆண்டில் முழு போதையில் காரோட்டி ஒருவரைக் கொன்று நால்வரை படுகாயப்படுத்தினார். இரண்டு வழக்குகளிலும் விடுதலையான குற்றவாளி சல்மான் கான் தனது செக்யூரிட்டியை கொல்லாமல் அறைய மட்டும் செய்தார் என்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.

♠ ♦ ♣

மசாலா: இந்தி நடிகை  ப்ரியங்கா சோப்ரா அமெரிக்கப் பாப் பாடகர் நிக் ஜோனசை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன், அவர் லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தனக்கும் தன்னுடைய கணவர் நிக் ஜோனசுக்கும் அரசியல் ஆர்வம் இருப்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

நேர்காணலில், எதிர்காலத்தில் அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழவிருக்கிறது. நானும் என்னுடைய கணவரும் அரசியல் ஆர்வம் மிக்கவர்கள். மாற்றத்தையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருப்பவர்கள். என்னுடைய கணிப்புப் படி, நானும், அவரும் விரைவில் தீவிர அரசியலில் இறங்குவோம். நான் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமர் ஆவேன். அவர், அமெரிக்க அதிபர் ஆவார். இது உறுதி. அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்கள் இருவருக்கும் பெரிய ஆர்வம் உண்டு. என்றாலும், அதில் நேரடியாக தலையிட யோசித்துக் கொண்டிருந்தோம். இனிமேலும் அப்படிப் பொறுமையாக இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

மருந்து : மோடியை நேருக்கு நேர் சந்தித்து பேசியிருப்பதால் பிரதமர் வேலை எவ்வளவு சுலபம் என்ற இரகசியம் பிரியங்காவிற்கு தெரிந்திருக்கும். மேலும் மோடி, ட்ரம்பின் அறிவு, தகுதி, தராதரத்தை வைத்துப் பார்க்கும் போது ஆச்சியும் ஐயரும் முறையே இந்தியாவையும் அமெரிக்காவையும் ஆள விரும்புவதில் தவறே இல்லை.

♠ ♦ ♣

மசாலா: ஆந்திர முன்னாள் முதல்வரும் இன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையுமான ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை யாத்ரா என்ற பெயரில் தயாரானது. அதில் ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி நடித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக போவதாகவும், அதில் ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் சூர்யா நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து ஆந்திர பத்திரிகையாளர்கள் சூர்யாவிடம் கேட்டபோது நானும் அந்த செய்திகளை படித்தேன். ஆனால் அதில் உண்மை இல்லை. அப்படி நடிக்க கேட்டு யாரும் என்னை இதுவரை அணுகவில்லை. ஜெகன் அண்ணாவுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவர் வெற்றி பெற்று முதல்வராகி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஜெகன் அண்ணா வாழ்க்கையை சொல்லும் படம் நல்ல திரைக்கதையுடன் வந்தால் அவர் கேரக்டரில் நடிக்க விரும்பம்தான் என்று கூறியிருக்கிறார் சூர்யா.

மருந்து : அப்போ எடப்பாடி வாழ்க்கை வரலாற்று படத்தில் எடப்பாடியாக சிவக்குமார் நடிப்பாரா? ஓ.பி.எஸ் மகனும் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் வாழ்க்கை வரலாற்று படத்தில் கார்த்தி நடிப்பாரா?

♠ ♦ ♣

மசாலா: சூர்யா நடித்து வெளிவந்த ‘என்ஜிகே’ படத்திற்காக திருத்தணியைச் சேர்ந்த சூர்யா ரசிகர்கள் சுமார் 6 லட்ச ரூபாய் செலவு செய்து, 215 அடி உயர கட்அவுட் ஒன்றை வைத்தனர். அது பற்றி செய்திகள் வெளிவந்த ஒரு நாளிலேயே நகராட்சி அதிகாரிகளால் அந்த கட்அவுட் அகற்றப்பட்டது.

மருந்து: எப்போதும் பிசி என்று பேச வாய்ப்பில்லாத தொலைபேசி எண்ணைக் கொண்டுள்ள அகரம் பவுண்டேசன் மூலம் ஏழைபாழைகளுக்கு கல்வி உதவி செய்யும் வள்ளலுக்கு ஆறு லட்ச ரூபாயில் கட்அவுட் வைப்பது ஒரு குற்றமா?

புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !

குலக்கல்வித் திட்டம்

ஜூன் மாதம் தொடங்கிவிட்டது. கொளுத்தும் வெயில் ஒருபுறம் என்றால், பள்ளிகளும், கல்லூரிகளும் பிடுங்கும் பணம் மறுபுறம் மயக்கமுறச் செய்கிறது. நம் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தானே என பெற்றோர் கடன் வாங்கியாவது கேட்ட பணத்தை கொடுக்கின்றனர். எவ்வளவு செலவழித்தாலும் தரமான கல்வி நம் மாணவர்களுக்குக் கிடைக்கிறதா ?

புதிய கல்விக் கொள்கைகல்வியில் தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய 1990-களில் இருந்து கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதற்கு பதில் பணம் கொடுத்து வாங்கும் சரக்காக மாற்றப்பட்டுவிட்டது. படிப்படியாக ஏழைகளை உயர்கல்வியிலிருந்தும், பள்ளிக் கல்வியிலிருந்தும் அப்புறப்படுத்தி வருகின்றன மத்திய மாநில அரசுகள்.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசால் கடந்த 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பிர்லா – அம்பானி குழு, ”உயர்கல்வித் துறைக்கு பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக வழங்கப்படும் நிதியை படிப்படியாக நிறுத்த வேண்டும்” என பரிந்துரைத்தது. கடந்த 2015-ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைக்க வேண்டும் என மோடி அரசு பகிரங்கமாகவே அறிவித்தது.

யூஜிசி-க்குப் பதிலாக கொண்டுவரப்படும் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், தமது வருமானத்தை உயர்த்தி தமது செலவினங்களைப் பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது, இனி அரசுத் தரப்பில் இருந்து உயர்கல்விக்கான மானியம் எதுவும் கிடையாது. பணம் இருந்தால் மட்டும் கல்லூரியை நினைத்துப் பார் என்கிறது மோடி அரசு.

மருத்துவக் கல்விக்கு நீட் நுழைவுத் தேர்வை திணித்தது போல் இனி அனைத்துக் கல்லூரிப் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு அடித்தளம் இட்டிருக்கிறது புதிய கல்விக் கொள்கை. அதோடு நிற்கவில்லை, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதாகக் கூறி 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்து மாணவர்களின் கல்வி நிலை மற்றும் உடற்தகுதியைப் பொறுத்து அவர்களுக்கு தொழிற்கல்வி வழங்குவது என மீண்டும் பழைய குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறது மோடி அரசு.

உயர்கல்வி ஆணையம் முதல் பள்ளிக் கல்வித்துறை வரை அனைத்தையும் காவி மயமாக்கி வருகிறது ஆர். எஸ். எஸ் – சங்க பரிவாரக் கும்பல். சூத்திரனுக்கு கல்வி இல்லை என்பது அன்றைய மனுநீதி ! காசில்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதுதான் புதிய கல்விக் கொள்கை ! அதனை அம்பலப்படுத்துகிறது இத்தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! – புதிய கலாச்சாரம் ஜூன் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .

மனுநீதி 2.0
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

” புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 !” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • செல்வி பாஸ் ஆகிட்டா … – ஒரு ஆசிரியரின் மகிழ்ச்சி !
  • மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு: தற்செயலா? சூழ்ச்சியா?
  • வருகிறது வேதக் கல்வி முறை: பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார்!
  • கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே!
  • ஜியோ பல்கலைக்கழகம்: என்னாது கெணத்தக் காணோமா?
  • புதிய கல்விக் கொள்கையல்ல கல்வி மறுப்புக் கொள்கை!
  • ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்!
  • கல்வி உரிமையைப் பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம்!
  • பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி!
  • வேதக் கல்வி வாரியம்: பிணத்துக்கு சிங்காரம்!
  • பெண் கல்வி: பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா!
  • நாம் படித்து வாங்கும் பட்டத்திற்கு புனிதம் இருக்கிறதா?
  • ஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை!
  • கல்விக் கொள்ளையர்களின் அம்மா!
  • பொறியியல் கல்வியின் சீரழிவும் கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும்!
  • பாலிடெக்னிக் – ஐ.டி.ஐ. தரம் பற்றி ஒரு அமெரிக்கக் கவலை!
  • வாழ்க்கையைப் புரிய வைப்பதே கல்வி!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

பொள்ளாச்சி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

“தற்கொலை செய்து கொண்டவர்களை விமர்சிக்கும் அருகதை உங்களுக்கு இல்லை !”

5

ருத்துவ கனவோடு இருந்த அனிதாவை நரபலி வாங்கி, அமலுக்கு வந்த ‘நீட்’, இந்த ஆண்டு மூவரை பலி வாங்கியுள்ளது; எண்ணற்ற மாணவர்களின் கனவுகளை காவு வாங்கியிருக்கிறது. தேர்தல் முடிவுகளின் மூலமாகவாவது ‘நீட்’ துயரங்கள் முடிவுக்கு வரும் என காத்திருந்த நிலையில், மீண்டும் ஆரவாரத்துடன் மனுநீதி அரசு அரியணை ஏறியுள்ளது.

மனுநீதியின்படி, யார் கொல்லப்படுவார்களோ அவர்களே தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ (வயது 18) பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்களைப் பெற்றவர். அவருடைய பெற்றோர்  திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப் பார்ப்பவர்கள். நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் தூக்குமாட்டி ரிதுஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வருட நீட் பலி : மாணவிகள் ரிதுஸ்ரீ (இடது) மற்றும் மாணவி வைஷ்யா.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா (17) பொதுத்தேர்வில் 455 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததைப் பார்த்து மண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு மாய்ந்திருக்கிறார். இவருடைய அப்பா, பேருந்து நிலையத்தில் வாகனங்களை பாதுகாக்கும் நிலையம் நடத்திவருகிறார்.

மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பத்தில் பிறந்தவர் மோனிஷா (18). “நீட் தேர்வில் நான் மார்க் கம்மி, இனி நான் இருக்கக்கூடாது” என எழுதி வைத்துவிட்டு, தூக்கு மாட்டி இறந்து போனார் மோனிஷா.

இரண்டாண்டுகளுக்கு முன் மத்திய அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரின் ‘தமிழகத்துக்கு நீட் விலக்கு நிச்சயம் உண்டு’ என்கிற வாக்குறுதியை நம்பி காத்திருந்த அனிதா, நீட்டின் திடீர் அமலாக்கத்தால் நம்பிக்கை உடைந்து தன்னை மாய்த்துக்கொண்டார்.

அதற்கு பொறுப்பான மாநிலத்தை ஆளும் அதிமுக அரசோ, பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசிய நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களோ குற்றவுணர்ச்சி கொள்ளவில்லை. மாறாக, அனிதா நீட்’ஐ எதிர்கொள்ள முடியாமல் இறந்தார் என காரணத்தை கண்டுபிடித்தார்கள்.

படிக்க:
♦ நீட் தற்கொலைகள் : தீர்வு என்ன? | மக்கள் அதிகாரம்
♦ நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !

“அனிதா மரணத்தை நீட் புதிதாக கொண்டு வந்ததால் அதனை பற்றிக் கொள்ளும் தயாரிப்பு, பக்குவம், முனைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட தோல்வியின் பலன்” என்றார்கள். ரிதுஸ்ரீ எல்லா தேர்வு தயாரிப்புகளையும், பயிற்சிகளையும் முறையாக கையாண்டு முயன்று, முட்டி, மோதி உயிரை விட்டிருக்கிறார்.

அனிதாவும், ரிதுஸ்ரீயும் முன்னேறத் துடிக்கும் ஒரு இனத்தின் சமூகக் கூட்டு விழைவின் முகங்கள். தேர்வு தோல்வி மனப்பான்மையில் தற்கொலை செய்து கொள்ளும் சராசரிகள் அல்லர் அவர்கள்.” என்கிறார் ராஜ் தேவ்.

நீட் கொலைகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், அவை யாவும் ஆள்வோரின் செவிட்டுக் காதுகளுக்கு கேட்பதாக இல்லை.

இந்த நிலை தொடர்ந்தால்,  தமிழினம் அதன் உயரவாவையும், உயர் குறிக்கோளையும் ஒட்டுமொத்தமாக கைவிட்டு எழுத்தர், பணியாளர், கணக்கர், அலுவலர், பியூன் போன்ற வேலைகளுக்கு அதனை தகுதியிறக்கம் செய்து விடுமோ என்கிற கவலையை முகநூலில் பகிர்ந்திருக்கிறார் ராஜ் தேவ்.

நன்றாக படிக்கும், நிறைய மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? தற்கொலைகள் தனிப்பட்டவர்களின் விழைவா, அல்லது ஆளும் அமைப்புகளின் திணிப்பா?

“முன்பெல்லாம் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள்தான் அதிக அளவு தற்கொலை செய்து கொள்வார்கள். இப்போதெல்லாம் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களே அதிகமாக இந்த முடிவை எடுக்கிறார்கள். கல்வியின் நிமித்தம் நமது குழந்தைகளுக்கு மிகப்பெரிய அநீதி நடந்து கொண்டிருக்கிறது…

தேர்வில் தோல்வியடைவதோ அல்லது தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்குவதோ எதுவும் அவர்களுக்கு பொருட்டல்ல. நம்முடைய குழந்தைகள் படிக்கக் கூடாது என்பது மட்டுமே அவர்களின் பிரதான நோக்கம். அதற்காக மிக நுட்பமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன” என நீட் தற்கொலைகளின் பின்னணியைப் பேசுகிறார் மனநல மருத்துவர் சிவபாலன்.

இந்தக் காய்களை நகர்த்துகிறவர்கள் யார்? தமிழக மக்களின் கல்வி உரிமையை அதிமுக அரசு டெல்லிக்கு அடகு வைத்துவிட்டதை சுட்டிக்காட்டுகிறார் பத்திரிகையாளர் அருள் எழிலன்.

“இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு 22 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில். ஆனால், அது தமிழக மாணவர்களுக்கு பயன்படவில்லை. நமது கல்வி உரிமையை பொது சொத்தை டெல்லிக்கு அடகு வைத்து விட்டது அதிமுக!” என்கிறார் அவர்.

“தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா தீக்குளித்து உயிர் துறந்திருக்கிறார். 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் ஜெயிக்க முடியாத ஆதங்கத்தில் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ பலியாகி விட்டார்.

வாழ வேண்டிய இரு பெண் குழந்தைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பட்டியல் இனம் சார்ந்தவர்களில் 20,009 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63,749 பேரும், முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்களில் 7,04,335 பேரும் வெல்ல முடிகிறதென்றால், நியாயமான முறையில்தான் நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றது என்பதை எப்படி நம்புவது?” என கேள்வி எழுப்புகிற எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி,  சமூக நீதி நம் கண்ணெதிரில் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என ஆதங்கப்படுகிறார்.

படிக்க:
♦ நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?
♦ நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !

நீட் தற்கொலைகள் மூன்றாக உயர்ந்துள்ள இந்நேரத்தில், மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைவதெல்லாம் ஒரு விஷயமா? தற்கொலை செய்துக்கொள்வது கோழைத்தனம். இதை பெரிய தியாகமாக சித்தரிக்காதீர்கள் என்று எழுதுவோருக்காக வழக்கறிஞர் கிருபா முனுசாமி நீண்ட பதிலை சொல்ல விரும்புகிறார்..

“பொதுவாக, மருத்துவக் கல்வியை பயில முடியாது தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் பின்புலத்தை பார்த்தோமேயானால், இந்திய ஜாதிய சமூகத்தில் சிறப்புரிமை வாய்க்கப்பெறாத, ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கும், மனிதத் தன்மையற்ற நடத்தைக்கும் உட்படுத்தப்படும் ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

நால்வர்ண முறை

இந்த ஜாதிய கொடுமைகளிலிருந்து வெளியேறி, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், அவர்களுக்கு இருக்கக்கூடிய, இயலக்கூடிய ஒரே வழி ‘கல்வி’ மட்டுமே! ஏனெனில், கல்வி கிடைத்துவிட்டால், அதன் விளைப்பயனாக கிட்டும் உறுதியான வேலைவாய்ப்பும், கௌரவமான ஊதியமும் தன்னியல்பாகவே சுயமரியாதையுடனான கண்ணியமான வாழ்க்கையை சாத்தியப்படுத்தும் என நம்புகிறார்கள். அது உண்மையும் கூட.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அப்படி அவர்கள் பயிலும் கல்வி ஏன் மருத்துவமாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் மேலெழுகிறது. அதற்கு முக்கிய காரணம், மனித உயிர்களை காப்பதாலோ என்னவோ மற்ற எந்த தொழில்களை விடவும் மருத்துவத் தொழில் முதன்மையானதாக கருதப்படுகிறது. மருத்துவர் என்றாலே டாக்டர் அம்மா அல்லது டாக்டர் ஐயா என்ற பின்னொட்டும் தானாக சேர்ந்துக்கொள்கிறது.

அதன்காரணமாகவே, நெடுங்காலம் வரையிலும் மருத்துவப் படிப்பையும், அத்தொழிலையும் சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டுமே பயிலமுடியும் என்ற அடிப்படையற்ற தகுதியை விதித்து பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டனர். ஒருவர் தன் வாழ்நாளில் மருத்துவரை அணுகும் அளவிற்கு, தொழில்நுட்ப நிறுவனத்தையோ அல்லது நீதித்துறையையோ அணுகுவாரா என்றால், கண்டிப்பாக இல்லை. ஆகவே தான், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மருத்துவர் என்ற கனவு நிரந்தரமாக குடியேறி விட்டது!

மருத்துவம், பொறியியல், சட்டம் கடந்து வேறு படிப்புகள் அல்லது தொழில்கள் என்று எடுத்துக்கொள்வோம். இந்நாட்டில் ஒருவரின் மீதான மதிப்பென்பது அவரின் வேலையை சார்ந்ததா இல்லையா? இங்கே தொழில் என்பது ஜாதியைப் பொறுத்ததா இல்லையா? ஜாதிய அடுக்கில் மேலிருப்பவர்களுக்கு சேவை செய்யவே மற்ற ஜாதிகள், அந்தந்த ஜாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்வதே கடமை என்ற வரலாறு இன்றும் தொடர்கிறதா இல்லையா?

வெளிநாடுகளில் பார்க்கும் பொழுது, ஒரு பெரும் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கும் ஒருவரின் மகள் முடி திருத்தும் வேலை செய்கிறார், சொந்தமாக உணவகம் வைத்திருப்பவரின் மகன் நடனம் ஆடுகிறான். அங்கிருக்கும் எவரும் குழந்தையை பார்த்துக் கொள்வதிலிருந்து எல்லாவித பகுதிநேர வேலையை செய்கின்றனர், சுயமரியாதையான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஏனெனில், அங்கே எந்த தொழிலும் இழிவில்லை. தொழிலைக்கொண்டு மனிதரை இழிவாகப் பார்க்கும் மனநிலையும் இல்லை. அது நம் நாட்டில் சாத்தியமா?

துணி துவைக்க ஒரு ஜாதி, மலம் அல்ல ஒரு ஜாதி, சுடுகாட்டிற்கு ஒரு ஜாதி, பறை அடிக்க, வியாபாரம் செய்ய, மேளம் அடிக்க, ஏன் கோயிலில் மணி அடிக்க கூட என்று ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஜாதியை இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இங்கிருந்து உதவித்தொகையில் வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்கள் பணம் பற்றாத நிலையில் பகுதிநேர வேலை செய்து பணம் ஈட்டுவது வழக்கம்.

அதிலும் கூட, பார்ப்பனரல்லாத மாணவர்கள் உணவகங்களில் தட்டு கழுவும் வேலை செய்ய, பார்ப்பன மாணவர்களோ அங்கே குடிபெயர்ந்த இந்தியர்களின் வீடுகளில் சடங்குகள் நடத்தியும், அவர்கள் கட்டியிருக்கும் கோயில்களில் நோகாமல் பூஜை செய்தும் சம்பாதிப்பதை காண முடிகிறது. கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் அவரவர் ஜாதி விதித்திருக்கும் தொழிலை கடமைத் தவறாது செய்ய முடிகிறது என்றால், ஜாதியும், அது வகுத்திருக்கும் தொழிலும் நம் மனங்களில் அந்த அளவிற்கு வேரூன்றி இருக்கிறது.

ஜாதியைப் பொறுத்து தொழிலை திணிக்கும், தொழிலைக் கொண்டு மனிதரை அளவிடும் உங்கள் யாருக்கும்  மருத்துவ நுழைவு தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்டவர்களை விமர்சிக்க அருகதை இல்லை. ஏனெனில் அவர்களை சாவுக்கு தள்ளிக் கொன்றதே நீங்கள்தான்!

கௌரவம், கௌரவம் என்று எல்லாப் பளுவையும் எங்கள் தலைகளில் சுமத்திவிட்டு, திரைத்துறை, ஊடகம், நாட்டியம், வசதியான உடை, நினைத்தால் திருமணம், இல்லையேல் மறுமணம் என்று விரும்பிய வாழ்க்கையை சுதந்திரமாக வாழும் சிறப்புரிமை பெற்ற நீங்கள்தான், அடுத்தவர் வாழ்க்கையை அளக்கிறீர்கள். முதலில்  ஜாதியத் தொழில்களை ஒழியுங்கள், பிறகு பாடம் எடுக்கலாம்!”.


தொகுப்பு : கலைமதி

அரிசி : பொது அறிவு வினாடி வினா 19

அரிசி : பொது அறிவு வினாடி வினா

உலகில் பரவலாக உட்கொள்ளப்படும் உணவாக அரிசி உள்ளது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இது அதிக அளவில் நுகரப்படுகிறது. நம் முக்கிய உணவாக உள்ள அரிசி பற்றி, நாம் எவ்வளவு விசயங்கள் அறிந்து வைத்துள்ளோம் என்பதை சோதித்துப் பார்ப்போம் வாருங்கள்.

(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)

கேள்விகள்:

  1. உலகின் எந்தப் பகுதி அரிசியை அதிகம் உட்கொள்கிறது?
  2. உலக அளவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும், மக்காச் சோளம், கரும்பு, அரிசி போன்றவற்றில் அரிசியின் இடம் என்ன?
  3. 2014-ம் ஆண்டு கணக்கீட்டின் படி அரிசியின் உலக உற்பத்தி எவ்வளவு?
  4. உலக அளவில் மனித குலத்திற்கு தேவைப்படும் கலோரி உணவுப் பொருளில் அரிசியின் இடம் என்ன?
  5. அரிசியை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு தேவைப்படும் சாதக அம்சங்கள் என்ன?
  6. உலக அளவில் மனித குலத்திற்கு தேவைப்படும் உணவு எரிபொருளில் அரிசி, கோதுமை, சோளத்தின் பங்கு என்ன?
  7. தொல்லியல் மற்றும் மொழியியல் ஆதாரத்தின்படி அறிவியல் முன்வைக்கும் அரிசி சாகுபடி செய்யப்பட்ட முதல் இடம் உலகில் எங்கு இருக்கிறது?
  8. இந்தியா-பாகிஸ்தானுக்கு அரிசி அறிமுகமான ஆண்டு எது?
  9. சீனா, இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், வியட்நாம், தாய்லாந்து, மியன்மார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் உலக அளவில் அரிசி உற்பத்தியில் கொண்டிருக்கும் விகிதம் என்ன?
  10. 2016-ம் ஆண்டு கணக்கின் படி ஆண்டுக்கு 209.5 மில்லியன் டன்கள் அரசியை உற்பத்தி செய்யும் இந்த நாடுதான் உலக அரிசி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது. (உலகின் மொத்த உற்பத்தி 741 மில்லியன் டன்கள்)
  11. 2016-ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவின் அரிசி உற்பத்தி எவ்வளவு?
  12. 2012-ம் ஆண்டு கணக்கின் படி உலகில் அதிக அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடு எது? ( 9.75 மில்லியன் டன்கள்)
  13. 2010-ம் ஆண்டு கணக்கின் படி உலக அளவில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு எத்தனை டன் அரசி உற்பத்தி செய்யப்படுகிறது?
  14. உலக அளவில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 10.8 டன் அரிசியை உற்பத்தி செய்யும் நம்பர் ஒன் நாடு எது?
  15. ஒரு இலட்சம் அரிசி வகைகளைக் கொண்ட சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம் எந்த நாட்டில் உள்ளது?
  16. 2009-ம் ஆண்டு கணக்கின் படி இந்திய விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக உற்பத்தி செய்த அரிசியின் அளவு என்ன?
  17. 2009-ம் ஆண்டு கணக்கின் படி உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியாவின் இடம் எது?
  18. உரம் – பூச்சிகொல்லி மருந்து போன்ற ரசாயனங்கள் இன்றி ஆர்கானிக் முறையில் இந்தியாவில் விவசாயம் செய்யப்படும் ஹெக்டேர் நிலம் எவ்வளவு?
  19. உரம், பூச்சிகொல்லி மருந்து போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தியும் இந்தியாவின் சராசரி அரிசி உற்பத்தி சீனாவின் சராசரி உற்பத்தியில் பாதியை மட்டுமே கொண்டிருப்பதன் காரணம் என்ன?
  20. 2012- ஆண்டு கணக்கின் படி இந்திய மக்களின் மொத்த தற்கொலையில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் எவ்வளவு?
  21. இந்தியாவில் 2016-ம் ஆண்டு கணக்கின் படி 15.75 மில்லியன் டன் அரசியை உற்பத்தி செய்து முதலிடத்தை பிடித்த மாநிலம் எது?
  22. 2015-16ம் ஆண்டு கணக்கின் படி தமிழகத்தின் அரிசி உற்பத்தி எவ்வளவு?

நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !

உலக சுற்றுச்சூழல் நாள் : படக் கட்டுரை

0

புதன்கிழமை ( ஜூன் 5) அனுசரிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் நாளின் இந்த ஆண்டுக்கான கரு ‘காற்று மாசுபாடு’. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் நாளில் மரம் நடுவது ஒரு சடங்காகவே பாவிக்கப்படுகிறது.

காற்று மாசுபாடு குறித்தோ, குறைந்து வரும் மழையளவு, அதிகரிக்கும் வெப்பம், கடுமையான வறட்சி குறித்த நீண்ட காலத்துக்கான திட்டமிடலை உலகின் எந்த நாடுகளும் முன்னுரிமை கொடுத்து செய்வதில்லை.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள், பெருமுதலாளிகளுக்கு இயற்கை வளங்களை கூறுபோட்டு விற்பதையே அதிவேகமாகச் செய்ய விரும்புகின்றன. குறிப்பாக, அதானி – அம்பானிகளுக்கு வனங்களை அழிக்கும் முழு பொறுப்பையும் அளித்துள்ள மோடி அரசு, சுற்றுச்சூழலை காக்க என்ன திட்டங்களைத் தீட்டும்? உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்தியாவின் சூழலை விளக்கும் சில படங்கள் இங்கே…

தானே-யில் உள்ள ‘ஏரி’யை ‘உலக சுற்றுச்சூழல் நாளை’ ஒட்டி தூய்மையாக்கும் பணியில் செயல்பாட்டாளர்கள்…

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கிரிக்கெட் வீரர் கபில் தேவ், நடிகர் ஜாக்கி ஷெராப், நாட்டுப்புற பாடகர் மாலினி அஸ்வதி உள்ளிட்டோர், ‘உலக சுற்றுச்சூழல் தின’த்தை முன்னிட்டு டெல்லியில் மரக்கன்று நட்டனர். இத்துடன் மத்திய அமைச்சரின் சுற்றுச்சூழல் நாள் கடமை முடிந்தது ! மீத நேரங்களில் அதானி அம்பானிகளுக்கு வனங்களையும், மலைகளையும் அள்ளிக் கொடுப்பதுதான் பிரதான வேலை ..

வழக்கமாக நடக்கும் சில சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சிகளில் ‘சைக்கிள் பேரணி’யும் உண்டு. டெல்லியில் நடந்த அப்படிப்பட்ட சைக்கிள் பேரணிகளில் ஒன்று…

அனைத்து நடப்புகளுக்கும் மணலால் சிற்பம் வடிக்கும் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்னாயக், உலக சுற்றுச்சூழல் நாளுக்கு ஒடிசாவின் பூரி கடற்கரையில் வடித்த மணல் சிற்பம்.. ‘காற்று மாசுபாட்டை வெல்லுங்கள்’ என்கிறது.

உலக சுற்றுச்சூழல் நாளில் குவாஹாத்தி மாநகராட்சி குப்பைகளை கொட்டும் பொரகான் என்ற இடத்தில் மறுசுழற்சிக்குரிய பொருட்கள் ஏதேனும் கிடைக்குமா எனத் தேடும் குப்பை சேகரிப்பாளர்கள்.

மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் உலக சுற்றுச்சூழல் நாளில் குப்பைகளுக்கு நடுவே நடந்து செல்லும் மக்கள்…

பொரகான் குப்பை மேட்டில் பறவைகள், விலங்குகளுக்கிடையே ஏதேனும் பயன்படுத்தத்தக்க குப்பை கிடைக்குமா எனத் தேடும் சிறுவன்…

குவாஹாத்தியின் பொரகான் குப்பை மேட்டில் ‘வாழும்’ செங்கால் நாரைகள்… இதுவும் உலக சுற்றுச்சூழல் நாளில் பதிவான காட்சியே…

மும்மையில் உள்ள அலையாத்தி மரங்கள் சூழ்ந்த மிதி ஆற்றின் அருகே எரிக்கப்படும் குப்பைகளின் ஊடாகக் கடந்து செல்லும் மக்கள்…

பசுமை சூழ்ந்த வனத்தின் பின்னணியில் குவிந்து கிடக்கும் பொரகான் குப்பை மேட்டியில், பிழைப்புக்காக பயன்படுத்தத்தக்க பொருட்கள் கிடைக்குமா என தேடி அலையும் இரு பெண்கள்…

பொரகான் குப்பை மேட்டில் குப்பைகளை மேயும் மாடுகளுக்கிடையே, பயன்படுத்தத்தக்கப் பொருளைத் தேடும் பெண்…

அமிர்தசரசில் குப்பை மேட்டில் பயன்படுத்தத்தக்க பொருட்களைத் தேடிம் குப்பை சேகரிப்பாளர்கள்…

அமிர்தசரஸ் நகரின் புறநகரில் உள்ள குப்பை மேட்டை தன்னுடைய பிழைப்புக்கான நம்பிக்கைக்குரிய இடமாகப் பார்க்கும் ஒரு இளைஞர்…


கலைமதி
நன்றி : அவுட்லுக் இந்தியா

குட்டி முதலாளித்துவ வர்க்கமும் பாசிசமும் !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 7

டோக்ளியாட்டி

குட்டி பூர்ஷுவாக்களிடையே இந்த இயக்கம் எப்பொழுது ஓர் ஒருமித்த இயக்கமாக மாற்றம் கண்டது? ஆரம்பத்தில் அல்லாமல், 1920-ம் ஆண்டின் இறுதியில்தான் அந்த மாற்றம் ஏற்பட்டது. அதிலும் ஒரு புதிய அம்சம் குறுக்கிட்டபொழுதுதான் அது மாற்றமடைந்தது. பூர்ஷுவா வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான சக்திகள் ஓர் ஒருங்கிணைந்த அணியாக குறுக்கிட்டபொழுதுதான் அந்த மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முன்னரும் பாசிசம் வளர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், அடிப்படை சக்தியாக அது ஆகியிருக்கவில்லை.

பாசிச இயக்கம் யுத்தத்தின் பொழுது தோன்றுகிறது, பின்னர் அது பாஸ்ஸி டி கம்பாட்டிமென்டோ 8 (இத்தாலிய போராடும் லீக்) ஆகத் தொடர்கிறது. எனினும், சில தனி நபர்கள் அதை இறுதிவரை ஆதரிக்கவில்லை. உதாரணத்திற்குச் சொல்வதென்றால் அரசியல் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடும்போது நென்னியை நாம் பாசிசவாதி என்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அவர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிவிட்டார் 9. துவக்கத்தில் பாசிசமானது வெவ்வேறு தன்மை கொண்ட பல்வேறு குழுக்களைக் கொண்டிருந்தது. அவை, இறுதிவரை ஒன்றாகச் சேர்ந்து சென்றதாக வரலாறு இல்லை. நகரங்களில் பாசிச இயக்கத்தின் அத்தியாயங்களைப் படித்துப் பாருங்கள். 1919 – 20-ல் குட்டி பூர்ஷுவா நபர்களும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பொதுவான அரசியல் பிரச்சினைகளை விவாதித்ததையும் ஏராளமான கேள்விகளை எழுப்பியதையும் கோரிக்கைகளை முன்வைத்ததையும் நீங்கள் கண்டிருக்கக் கூடும். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பாசிசத்தின் முதல் வேலைத் திட்டம் தோன்றியது.

ஸ்குவாட்ரிஸ் மோ (Squadrismo)

பியஸ் ஸா சான் செபோல் குரோ10 வேலைத் திட்டமானது பிரதானமாகக் குட்டி பூர்ஷுவா திட்டமாகும்; அது நகர்ப்புற பாசிச சக்திகளைப் பிரதிபலித்தது. இதற்குப் பதிலாக பாசிசத்தை எமிலியா போன்ற கிராமப்புறப் பகுதிகளில் கவனியுங்கள். அது வித்தியாசமானது. பின்னாட்களில், 1920-ல் தொழிலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ஆயுதம் தாங்கிய குழுக்கள் வடிவத்தில் அது தோன்றியது. அது ஸ்குவாட்ரிஸ் மோக்களாக11 அதாவது சிறு குழுக்களாக ஆரம்பத்தில் உருவெடுத்தது. தறுதலைகள், குட்டி பூர்ஷுவா மற்றும் நடுத்தர சமூகப் படிமானத்தைச் சேர்ந்தவர்கள் அதைப் பின்பற்றினார்கள். ஆனால் அது உடனேயே தொழிலாளி வர்க்கத்திற்கெதிரான ஒரு போராட்டக் கருவியாயிற்று. அதனுடைய தலைமையகத்தில் எவ்வித விவாதமும் நடத்தப்படுவதில்லை. ஏன் இந்த வித்தியாசம்? ஏனென்றால் இங்கே கிராமப்புற பூர்ஷுவா வர்க்கத்தினர் ஒரு அணி திரட்டும் சக்தியாகக் குறுக்கிட்டனர்.

1921 நடுப்பகுதியிலிருந்து நகரங்களில் சிறுசிறு குழுக்கள் (ஸ்குவாடு) அமைக்கப்பட்டன. முதலில் தேசியப் பிரச்சினை கூர்மையாகவிருந்த டிரிஸ்டியிலும் பின்னர் இந்தச் சக்திகள் மிகவும் பதட்டநிலையிலிருந்த இதர நகரங்களிலும் இந்தச் சிறு குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்தச் சிறு குழுக்கள் கிராமப்புற குழுக்கள் போன்று உருவாக்கப்பட்டன. டூரின் நகரின் தொழிற்சாலைகள் கைப்பற்றப்பட்ட பிறகு12 இந்தக் குழுக்கள் அங்கே தோற்றுவிக்கப்பட்டன; எமிலியாவில் இந்த நேரத்திற்குள் பாசிசம் ஏற்கெனவேயே ஒரு வலுவான அமைப்பைப் பெற்றுவிட்டது.

1920-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பூர்ஷுவா வர்க்கத்தினரும் அமைப்பு ரீதியாக நகரங்களில் தலையிட்டனர். இதன் விளைவாக நகரங்களில் பாசிசக் குழுக்கள் தோன்றின. பாசிச இயக்கத்திற்குள் பல நெருக்கடிகள் தோன்றின. முதல் இரண்டு வருட நெருக்கடிகளை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

முசோலினி.

அச்சமயம் பாசிஸ்டுகளிடையே பின்வருமாறு விவாதிக்கப்பட்டது: நாம் ஒரு கட்சியா? இதுதான் ரோம் காங்கிரசில் அகஸ்டியோவில் நடந்த காங்கிரசில் எழுந்த பிரச்சினை13. அந்த காங்கிரஸ் கூறுகிறது: நாம் ஒரு கட்சியாக வேண்டும். முசோலினி இதற்குப் பின்வருமாறு பதிலளிக்கிறார்; “நாம் இன்னமும் ஒரு இயக்கமாகவே இருந்து வருவோம்.” முசோலினி சாத்தியமான அளவுக்கு பரந்துபட்ட மக்கட் பகுதிகளை தனது செல்வாக்கில் வைத்திருக்க முயற்சித்தார். அதன் காரணமாக அவருக்கு எப்பொழுதும் அதிக ஆதரவும் இருந்தது. அதே சமயம் தொழிலாளிவர்க்க அமைப்புகளை நொறுக்க வேண்டுமென்பது பகிரங்கமாகவே விரும்பியவர்களுக்கும் பழைய தத்துவங்களின் மிச்ச சொச்சங்களை இன்னும் ஆதரித்து வந்தவர்களுக்குமிடையே மோதல் நடைபெற்றது.

முசோலினி டி அன்னுன்ஸியோ இயக்கத்திற்குத் துரோகம் இழைத்தார்14; அது ஆபத்தானது என்று அவர் கருதியதே இதற்குக் காரணம். 1920-ம் ஆண்டில் தொழிற்சாலைகள் கைப்பற்றப்பட்ட நடிவடிக்கை விசயத்தில் அவர் முதலில் அனுசரணையான அணுகுமுறை கொண்டிருந்தார். ஆனால் பிறகு முற்றிலும் மாறிவிட்டார். பாசிச இயக்கத்திற்கும் தொழிலதிபர்களின் அமைப்புகளுக்குமிடையே முதலாவது பகிரங்க தொடர்புகள் ஏற்பட்டன. தாக்குதல் ஆரம்பமாகிவிட்டது. ரோம் மீது படையெடுப்பு துவங்கும் வரை இரண்டு வருட காலம் அந்தத் தாக்குதல் நீடித்தது.

அமைப்பு ரீதியான அம்சம் இப்போது குறுக்கிட்டது. கிராமப்புற பூர்ஷுவா வர்க்கத்தினர் சிறு குழுக்கள் வடிவத்திலான அமைப்பை அளித்தனர். தொழிலதிபர்கள் அதை நகரங்களுக்குப் பயன்படுத்தினர்.

படிக்க :
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦ பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

குட்டி பூர்ஷுவா சக்திகள் மற்றும் பெரும் பூர்ஷுவா வர்க்கத்தினரின் ஸ்தாபன அம்சம் ஆகிய இரண்டு அம்சங்கள் குறித்த நமது நிர்ணயிப்பு எவ்வளவு சரியானது என்பதை இந்த ஆய்விலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய அம்சங்கள் பரஸ்பரம் ஒன்று மற்றொன்றின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தின என்பதை இனிப் பார்ப்போம்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

8. பால்சி இதாலியனி டி கம்பாட்டிமென்டோ (இத்தாலிய போராடும் லீக்) முசோலினியின் இயக்கத்திற்கு மிலானில் 1919 மார்ச்சில் நடந்த அதன் அமைப்பு கூட்டத்திற்குபின் அதற்கு கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வப் பெயர்.

9. முசோலினிக்கும் சோஷலிஸ்டுத் தலைவர் பியட்ரோ நென்னிக்கும் (பிறப்பு 1891) இடையே அரசியல் ஒத்துழைப்பும் போட்டி போடுதலும் மாறி மாறி ஏற்பட்டதன் வரலாறு 1908-ல் துவங்கியது; அப்பொழுது குடியரசுவாதியாக இருந்த நென்னி, போர்லிப் பண்ணைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். சோஷலிஸ்டுக் கட்சியின் போர்லி தொகுதிச் செயலாளராக இருந்தார் முசோலினி.

பியட்ரோ நென்னி (Pietro nenni)

முதலாவது உலகப் போரில் ஒப்பந்த நாடுகள் பக்கம் இத்தாலி தலையிட வேண்டுமென இருவரும் வலியுறுத்தினர். இந்த நிலை மேற்கொண்டமைக்காக முசோலினி சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். போருக்குபின் பொலோக்னாவின் ஜனநாயகக் கட்சியின் அமைப்புக் கூட்டத்தில் நென்னி பங்கு கொண்டார். முன்னாள் படைவீரர்களின், குட்டி பூர்ஷுவாக்களின் பிரச்சினைக்கு தீவிரமான ஜனநாயகத் தீர்வை பொலோக்னாவின் ஸ்தாபனம் முன் வைத்தது – முசோலினி முன்பு பயன்படுத்திய தெளிவற்றதன்மையுடைய வெகுஜன இயக்கத்தை ஒத்தது இது. நென்னி பின்னால் அதிகம் திட்டவட்டமான வர்க்க நிலைக்கு ஈர்க்கப்பட்டு 1921-ல் சோஷலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.

10. மிலானின் பியஸ்ஸா : சான் செபோல்கிரோவின் ஒரு மண்டபத்தில் 1919 மார்ச் 23-ம் தேதி நடந்த கூட்டத்தில் பாசிஸ்டு இயக்கம் அதிகாரப்பூர்வமாக தோன்றியது. முசோலினியின் ஏடான ‘இல் போப்பலோ டி’ இத்தாலியாவின்’ ஆதரவாளர்கள் படையிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள், அராஜக சிண்டிக்கலிச சிறுபான்மையினர் இவர்களெல்லாம் ஒரே வேலைத் திட்டத்தின் கீழ் அணி திரண்டனர். இதன் விளைவாக ஏற்பட்ட வேலைத் திட்டம் வாய்வீச்சும், தெளிவற்ற தேசியவாதமும், அரைகுறையான சமூக சீர்திருத்தமும் கொண்டதாக இருந்தது.

இந்த இயக்கம் தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்டது என்று அறிவித்தது; உண்மையில் பகிரங்கமாக உலகப் போரை ஆதரித்தது. பியூம் (ரிஜிகா), டால்மாட்டா மீது இத்தாலி உரிமை கொண்டாடியபோது அதற்கு ஆதரவளித்தது. தொழிலாளர் நலன்களை பாதுகாப்பது தங்கள் லட்சியம் என அறிவித்தது. ஆனால் சோஷலிசத்துக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. மூலதனத்தின் மேலாதிக்கமும் தொழிலாளர்கள் அமுக்கப்படுதலும் தனிச் சொத்துரிமைக்கும் லாபத்திற்கும் தேவைப்படுகின்றன என்ற திட்டத்தை அந்த இயக்கம் ஏற்றது. இந்தத் திட்டத்தின் தெளிவின்மை ஒருபுறம் சோஷலிஸ்டுக் கட்சியின் வெகுஜனக் கொள்கையை எதிர்க்க முடியாது போயிற்று.

மறுபுறம் முதலாளிகளை நம்ப வைத்து இந்த புதிய இயக்கத்திற்கு ஆதரவு கோருவதும் சாத்தியமில்லாது போயிற்று. இந்த உள்ளார்ந்த பலவீனம் 1919 பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியில் முடிந்தது. மிலானில் போட்டியிட்ட ஒரே பாசிஸ்டு வேட்பாளர் 4795 வாக்குகள் பெற்றார்.

11. ஸ்குவாட்ரிஸ்மோ : திட்டமிட்டு வன்முறையை கையாளுவதற்காக பாசிஸ்டுகளால் வேலைக்கு அமர்த்தப்பட்ட “செயல் குழுக்களை”க் குறிப்பதற்காக உண்டாக்கப்பட்டது இந்தப் பதம்.

12. தொழிற்சாலைகளில் கதவடைப்பு செய்யப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாக, இத்தாலிய உலோகத் தொழிலாளர்கள் சம்மேளனம் உத்திரவிட்டதற்கிணக்க டூரின், மிலான், ஜினோவாவிலும் அதைவிட குறைந்த தொழில் கேந்திரங்கள் பலவற்றிலும் எந்திரங்களையும் உலோகத் தொழிற்சாலைகளையும் 1920 செப்டம்பர் துவக்கத்திலிருந்து தொழிலாளர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இத்தாலியின் யுத்த பிற்கால புரட்சிகர அலையின் உச்சகட்டத்தை இது குறிக்கிறது என்று பொதுவாக சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு தொழிற்சாலைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் இயக்கம் புரட்சிக்கு பக்குவமான சந்தர்ப்பத்தைக் குறிக்கிறதா இல்லையா என்பது இன்னமும் விவாதிக்கப்படுகிறது. (இந்த இயக்கம் மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவியது; ரயில்வே தொழிலாளர்கள் ஆதரவளித்தனர்).

தொழிற்சாலைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் இயக்கம். (கோப்புப் படம்)

தொழிற்சாலைகளை இவ்வாறு எடுத்துக் கொண்டது உலோகத் தொழிலாளர்களுக்கு ஒரு தற்காலிகத் தொழிற்சங்க வெற்றியில் முடிந்தது. ஆனால் தொழிலாளர் இயக்கம் மொத்தத்திற்கும் அதனுடைய அரசியல் விளைவுகள் பெரிதும் நாசகரமாக இருந்தன. சோஷலிஸ்டுக் கட்சி தயாராக இல்லாதிருந்ததும், “புரட்சியை நடத்த” அதற்கு அடிப்படை விருப்பமின்மையும் அம்பலப்படுத்தப்பட்டன. இத்தாலியத் தொழிலாளர்களின் பலம் கடுமையாகச் சோதிக்கப்பட்டது. தங்களுடைய வர்க்க நலன்களை காப்பாற்றிக் கொள்ள தொழிலதிபர்கள் ஒட்டுமொத்தமாக பாசிசத்தின் பக்கம் திரும்பினர்.

13. பாஸ்சி இத்தாலியன் டி கம்பாட்டிமென்டோ : 1921 நவம்பர் 7 முதல் 10 வரை ரோம் நகரின் தியேட்ரோ அகஸ்டோவில் நடந்த காங்கிரஸின் இறுதியில் இவர்கள் தங்களை தேசிய பாசிஸ்டுக் கட்சியாக மாற்றிக் கொண்டனர். இயக்கத்தின் சமரசத்தை விரும்பாத பகுதியால் முசோலினியின் மீது கிட்டத்தட்ட திணிக்கப்பட்ட நடவடிக்கையாகும் இது.

14. முதலாவது உலகப் போருக்குப்பின் இத்தாலியத் தொழிலும் வாணிகமும் இத்தாலிய ராணுவ அமைப்பும் டால்மாடியன் கடற்கரையோரத்தில் உள்ள பியூமி (ரிஜிகா) நகர் மீது பார்வையைச் செலுத்தின. அட்ரியாட்டிக் கடலை “இத்தாலிய ஏரி”யாக மாற்றவும் முந்திய ஆஸ்ட்ரிய-ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் பிரதேசங்களில் பொருளாதார ஊடுருவலுக்கு கதவு திறந்து விடவும் இது கேந்திரமானது. அந்த நகரின் உரிமை பற்றி (1863-1938) யுகோஸ்லேவியாவுடன் இருந்த தாவா இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும்போதே அதைத் திரும்ப பெறக்கோரும் கவிஞர் கேப்ரியல் டி அன்னுன்ஸியோ தலைமையிலான சக்திகள் இர்ரெண்டிஸ்டுகள் (இத்தாலி முதலிய கீழ் ஐரோப்பிய நாடுகளில் அவ்வந்நாட்டு மொழி பேசும் மாவட்டங்கள் அவ்வந்நாட்டைச் சேர வேண்டுமென்ற கோட்பாட்டாளர்கள், முன்பு இத்தாலிக்கு சொந்தமாக இருந்த பிரதேசங்களை மீண்டும் அந்த நாட்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறவர்கள்) 1919 செப்டம்பரில் அந்நகரை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

கவிஞர் கேப்ரியல் டி அன்னுன்ஸியோ (Gabriele D’Annunzio)

டி அன்னுன்சியோபிவின் கட்டுப்பாட்டில் பியூமி, ரோம் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்யும் களமாக ஆயிற்று. முசோலினி, கவிஞரின் செயலை ஆதரித்தார். “ரோம் மீது படையெடுப்பு” என்ற அவரது திட்டம் இத்தாலியக் கிழக்கு கடற்கரையில் படைகள் இறங்குவதுடன் துவங்கும் என்பதையும் தெரிவித்தார். இத்தாலிக்கும் – யூகோஸ்லேவியாவுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சினைகள் 1920 நவம்பரில் செய்து கொண்ட ரப்பல்லோ ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பியூமி நகர் ஒரு சுதந்திரமான நகர அரசாக ஆயிற்று. இதனைக் கண்ணுற்ற முசோலினி, டி’அன்னுன்சியோவுக்கு அளித்த ஆதரவை மாற்றிக் கொண்டார். திடீர் அரசியல் புரட்சி பற்றிய திட்டத்தை தனது பத்திரிகையில் பிரசுரித்தன் மூலம் கவிஞருக்கு துரோகம் இழைத்தார்.

டி’அன்னுசியோவின் நேரடி நடவடிக்கை கட்சியைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்ட வலதுசாரி இயக்கத்தில் கவிஞரை முதலிடத்திற்கு கொண்டு சென்றது: முசோலினியின் திடீர் மாற்றத்தை இது பெருமளவுக்கு விளக்குகிறது. பிரதம மந்திரி கியோவான்னி கியோலிட்டியின் உத்தரவுபடி இத்தாலிய ராணுவப்படை டி’அன்னுன்யோவின் படைகளை பியூமி நகரை விட்டு விரட்டியடித்ததும் 1920 டிசம்பர் 26-ல் அந்த நகரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

நூல் அறிமுகம் : தென்னிந்திய குலங்களும் குடிகளும்

க்களினம் சம்பந்தமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் இந்நூல் அரை நூற்றாண்டுக்கு முன் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல்களைத் தழுவிச் சுருக்கி எழுதப்பட்டதாகும். தென்னிந்திய மக்கள் எல்லோருக்கும் பொதுவான சில பழக்க வழக்கங்கள் உள்ளன. அவ்வகை வழக்கங்களை விரித்துக்கூறாது ஒவ்வொரு கூட்டத்தினரிடையும் சிறப்பாகக் காணப்படுகின்றவற்றை விரித்துக் கூறியுள்ளோம். மேல்நாட்டுக்கல்வி, நாகரிகம் என்பவற்றின் நுழைவால் விரைந்து மறைந்து கொண்டுவரும் தென்னாட்டு மக்களின் பழைய பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்கு இந்நூல் வாய்ப்பளிக்கும். அரை நூற்றாண்டுக்குள் இந்நூலிற் கூறப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள் பல மறைந்துவிட்டன; சில மறைந்துகொண்டு வருகின்றன. (நூலாசிரியரின் குறிப்பிலிருந்து)

ஹெக்கல் படைப்பின் வரலாறு என்னும் நூலில் இப்பூமியின் தரை, நீர்ப்பரப்புக்கள் தொடர்ந்து மாற்றமடைந்து வந்த தன்மைகளை ஆராய்ந்து கூறியுள்ளார். அவர் கூற்று வருமாறு; ”இந்துமாக்கடல் முன் ஒரு பூகண்டமாகவிருந்தது. அது சந்தாத்தீவுகள் முதல் (ஆசியாவின் தென்கரை வழியாக) ஆப்பிரிக்காவின் கிழக்குக்கரை வரையில் பரந்திருந்தது. முற்காலத்தில் மக்களின் பிறப்பிடமாக விளங்கிய இத்தரைக்கு இஸ்கிளாத்தர் இலெமூரியா எனப் பெயரிட்டுள்ளார். இப்பெயர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த குரங்கு போன்ற மக்கள் காரணமாக இடப்பட்டது. இலெமூர் என்பதற்கு தேவாங்கு என்பது பொருள். இலெமூரியா, மக்களுக்குப் பிறப்பிடமாகவுள்ளது என்னும் பெருமையுடையது. மலாய்த் தீவுக்கூட்டங்கள் முற்காலத்தில் இரு பிரிவுகளாகவிருந்தனவென்று வலேசு என்னும் இயற்கை வரலாற்றியலார் ஆராய்ந்து கூறியுள்ளார்.”

மலாய்த் தீவிலும் தென்னிந்தியாவிலும் வாழும் மக்கள் சிலரின் பழக்க வழக்கங்கள் ஒரே வகையாகவுள்ளன. போர்ணியோத் தீவில் வாழும் (இ)டைக்கர் மரமேறும் வகையும் தென்னிந்தியாவில் ஆனைமலையில் வாழும் காடர் மரமேறும் வகையும் ஒரேவகையாகவுள்ளன. காடரும் திருவிதாங்கூர் மலை வேடரும் தமது முன்பற்களை உடைத்து அல்லது அராவிக் கூராக்கிக்கொள்வர். ஆண்கள் பதினெட்டு வயதடையும் போதும் பெண்கள் பத்து வயதடையும்போது இவ்வாறு செய்து கொள்கிறார்கள். மலாயாவில் யக்குன் என்னும் மக்கள் இவ்வாறு செய்து கொள்கின்றார்கள்.

… இந்தியாவில் மிகப் பழங்காலத்தில் மூன்று இன மக்கள் வாழ்ந்தார்கள். (1) மத்தியதரை மக்கள். இவர்களே திராவிட இனத்தவர் எனப்படுவோர். (2) நிகரிட்டோ மக்கள் (3) ஆதி ஆஸ்திரேலோயிட்டு மக்கள் நிகிரிட்டோ வகை. தென்னிந்திய மலைச் சாதியினராகிய இருளர், காடர்களிடையே காணப்படுகின்றது. ஆதி ஆஸ்திரேலோயிட்டு வகை முண்டா, சாந்தால், கொல் முதலிய மொழியகளைப் பேசும் மக்களிடையே காணப்படுகின்றது. இம்மக்கள் ஆரியரின் வருகைக்குமுன் வடமேற்குத் திசையினின்று வந்தவர்களாகலாமென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இவ்வினத்தினரையே மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கொல்லாரியர் எனக் கூறியுள்ளார்கள். ஆதி ஆஸ்திரேலோயிட்டு இனத்தவர்களே மலாய்த் தீவுகள், பர்மா, சயாம் முதலிய நாடுகளின் ஆதி மக்களாவர். இவர்கள் எப்படி இந்தியாவை அடைந்தார்கள் என்று கூற முடியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் நில இணைப்பு இருந்த காலத்தில் இவர்கள் இந்தியாவை அடைந்திருக்கலாமெனச் சிலர் கூறுவர். இந்திய மக்கள் (People of India) என்னும் நூல் எழுதிய ஹெர்பெட் இரிஸ்லி இந்தியாவில் தொடக்கத்தில் திராவிட மக்கள் வாழ்ந்தார்கள் என்றும், பின்பு பல்வேறு இனத்தவர்கள் இம்மக்களோடு வந்து கலந்தார்கள் என்றும் கொண்டு இந்திய இனத்தவர்களை, சித்திய திராவிடர், ஆரிய திராவிடர், மல்கோலிய திராவிடர், திராவிடர் முதலிய பிரிவுகளாகப் பிரித்தார்.

… ”தென்னிந்திய குலங்களும் குடிகளும்” என்னும் இந்நூல் இந்திய மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களை பிற மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு நோக்கி இன ஒற்றுமை வேற்றுமை காண்பதற்கு உதவியளிக்கும். (நூலிலிருந்து பக்.9-11)

படிக்க:
தமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி
கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் !

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்; வட இந்தியக் குலங்களும் குடிகளும்; இலங்கைத் தமிழர் பழக்கவழக்கங்கள், திருமணம், மரணம், புத்தளம் கரையார், அணிவகை, ஆடவர் அணிபவை, பெண்களணிகள், இலங்கைத் தமிழரிடையே காணப்படும் சாதிகள், மாட்டுக்குறிசுடும் அடையாளங்கள், சாதிகளின் பட்டப்பெயர்… ஆகிய உட்தலைப்புகளில் விவரிக்கிறார்.

அம்பட்டன்: தமிழ்நாட்டில் அம்பட்டப் பெண்கள் மருத்துவச்சி வேலை பார்ப்பர். செகந்நாத ஆலயத்தில் அம்பட்டர் சமைக்கும் உணவுக்குத் தீட்டு இல்லை. அக்கோயிலில் பூசை செய்யும் பூசாரி அம்பட்டன். அவன் சமைத்துக் கடவுளுக்குப் படைத்த உணவைப் பிராமணரும் அமுது கொள்வர்… அம்பட்டரின் சாதித்தலைவன் பெரியதனக்காரன் எனப்படுவான். மயிர்வினை செய்தல், வைத்தியம் பார்த்தல், வாத்தியமொலித்தல் என்னும் மூன்று தொழில்கள் அம்பட்டருக்குரியன. பண்டிதன், பரியாரி, குடிமகன், நாசுவன், மயிர்வினைஞன் என்பன அம்பட்டனைக் குறிக்க வழங்கும் பெயர்கள்.

நன்றி: பிபிசி

ஆண்டி : ஆண்டிகள் தமிழ் வகுப்பைச் சேர்ந்த பிச்சைக்காரர். இவர்கள் பண்டாரங்களிலும் தாழ்ந்தோர். கோயில்களிலும் மடங்களிலும் வேலை செய்வோர் முறையே கோவிலாண்டிகள் மட ஆண்டிகள் எனப்படுவர்… ஆண்டிகளுள் கோமண ஆண்டி, இலிங்கதாரி, முடவாண்டி, பஞ்சத்துக்காண்டி எனப் பல பிரிவுகளுண்டு. இப்பிரிவுகள் பஞ்சத்துக்காண்டி, பரம்பரை ஆண்டி என்னும் இரு பிரிவுகளிலடங்கும்…

ஈழவர் : ஈழவர், தீயர் என்போர் மலையாளர் கொச்சி என்னும் இடங்களிற் காணப்படுகின்றனர். மத்திய தீருவிதாங்கூரின் தென்புறங்களில் இவர்கள் ஈழவர் என்றும், வட, விதாங்கூர்ச் சனத்தொகையில் 17 சதத்தினர் இவர்களாவர். யாழ்ப்பாணம், ஈழம் என்னும் பெயர் பெற்றிருந்ததெனத் தெரிகிறது. ஈழவர் அங்கிருந்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றனர். சேரவர் என்பது சேவுகர் என்பதன் திரிபு. மலையாளத்தில் வழங்கும் கப்பற் பாட்டுகளில் சேவுகர் என்னும் பெயர் காணப்படுகின்றது. தென் திருவிதாங்கூரில் வாழும் ஈழவர் முதலியார் எனப்படுவர். புலையர் அவர்களை மூத்த தம்பிரான் என அழைப்பர்…

குறும்பர் : ஆட்டைக் குறிக்கும் குறு என்னும் கன்னடச் சொல்லிலிருந்து இப்பெயர் உண்டானதென்று கருத இடமுண்டு. குறு என்பது கொறி (ஆடு) என்னுஞ்சொல்லின் திரிபு. இவர்களின் தலைமைக்காரன் கொடு எனப்படுவான்… (நூலிலிருந்து)

நூல் : தென்னிந்திய குலங்களும் குடிகளும்
ஆசிரியர் : ந.சி. கந்தையா பிள்ளை

வெளியீடு : சந்தியா பதிப்பகம்,
புதிய எண் : 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி எண்: 044 – 2489 6979.
மின்னஞ்சல் : sandhyapathippagam@gmail.com

பக்கங்கள்: 136
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க : sandhya publications | noolulagam | commonfolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

நீட் தற்கொலைகள் : தீர்வு என்ன? | மக்கள் அதிகாரம்

பத்திரிகைச் செய்தி

 நாள் : 06.06.2019

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள் தீர்வு என்ன?

னிதா மரணத்தின் துயரமே மறையாத நிலையில் நீட் தேர்வினை எழுதி அதில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் அல்லது தேர்வாகாததால் 3 மாணவிகள் தமிழகத்தில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

தன்னையே தீ வைத்துக்கொண்டு எரித்த பட்டுக்கோட்டை மீன் வியாபாரியின் மகள் வைஸ்யா என்ற மாணவியின் உணர்வுகள் எப்படிப்பட்டவை? அவரின் கனவு, ஆசைகள்  எப்படிப்பட்டதாக இருக்கும்? மருத்துவராக வேண்டும் என்ற கனவு மண்ணாய்ப் போனதே என்ற விரக்தி அவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்? தற்கொலைக்கு தூண்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது சட்டம்.  தற்கொலைகளுக்கு காரணமான மத்திய மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டாமா?

இந்த வருட நீட் பலி : மாணவிகள் ரிதுஸ்ரீ (இடது) மற்றும் மாணவி வைஸ்யா.

தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரிகளின் இடங்கள் தமிழ் மாணவர்களுக்குத் தகுதி இல்லை என்று மறுக்கப்பட்டு பணம் படைத்தவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன்னர் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டசபை தீர்மானம்  குடியரசுத்தலைவரின் அலுவலகத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லிக்கொள்ளும் சட்டசபைக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

12-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் எல்லாம் வீண், நுழைவுத்தேர்வின் அடிப்படையில் எடுக்கும் மதிப்பெண்களே மருத்துவராகும் தகுதியை தீர்மானிக்கும் என்ற, நீட் தேர்வே பெரும்பான்மை மாணவர்களை மருத்துவப்படிப்பில் இருந்து துரத்துவதையே நோக்கமாகக் கொண்டது.

பல லட்சங்கள் இல்லாமல் நுழைவுத்தேர்வில் சேர்வதே சாத்தியமில்லை. சாதாரண, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் இனி அறவே வரக்கூடாது என்பதுதான் மோடி அரசின் திட்டம்.

துப்பட்டா போடக்கூடாது, முழுக்கை சட்டைப்போடக்கூடாது, கம்மல் போடக்கூடாது என்று அனைத்தையும் அவிழ்த்துப்பார்க்கும் கொடூரத்தை ஏற்றுக்கொண்டு “வேறென்ன செய்ய முடியும்?” என்று அமைதியாக நாம் இருக்கும் வரை, இப்படிப்பட்ட படுகொலைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். மொத்தக் கல்வியே இன்றைக்கு கார்ப்பரேட்டுகளுக்காக தாரைவார்க்கப்பட்டு சாதிக்கு ஒரு நீதி, குலக்கல்வித் திட்டம், இந்தித்திணிப்பு என காவிமயமாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

படிக்க:
♦ நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?
♦ தமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி

இது ஏதோ கல்வித்துறையில் மட்டுமல்ல; மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் என திட்டமிட்டு தமிழினத்தை ஒழிப்பதற்கான மோடி அரசின் திட்டங்களில் ஒன்றாகத்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு மாணவர்களை பலிவாங்கிக் கொண்டு இருக்கிறது.

அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் மருத்துவக்கல்வி பாரபட்சமின்றி கிடைக்க, நீட் தேர்வு இரத்து செய்யப்பட வேண்டும். நீட்-க்காக இனி எந்த உயிர்ப்பலியும் தமிழகத்தில் நிகழக்கூடாது.  நீட் உள்ளிட்ட தமிழகத்தின் மீதான அடக்குமுறைகளை இரண்டில் ஒன்று பார்ப்போம் ! அடக்குமுறைகள் வென்றதாக வரலாறில்லை!


மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு : 99623 66321

குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வரைகின்றனர் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 13

80-ம் ஆண்டுகளின் போக்கு

செப்டெம்பர் முதல் தேதி, எனது ஆறு வயதுக் குழந்தைகளின் முதல் பள்ளி நாள் பழையதாகி விட்டது. நாளை குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சிந்திக்க எனக்கு உதவாமல் இது என்னை விட்டு அகலாது.

எனது ஆறு வயதுக் குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள்? (இவர்களில் பலருக்கு ஆறு வயதாக இன்னமும் 2-3 மாதங்கள் உள்ளன என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்).

நான் அவர்கள் வரைந்த படங்களைப் பார்க்கிறேன், அவர்கள் எழுதிய சொற்களையும் வாக்கியங்களையும் படிக்கிறேன்.

சாதாரணப் படங்கள். பெரும் பிறவித் திறமையை வெளிப்படுத்தும் படங்களை அவற்றின் இடையே நான் காணவில்லை. ஆனால், இவற்றின் சாரம் என்னைக் கவர்ந்தது. குழந்தைகள் என்ன வரைகின்றார்கள்? விண்கப்பல்கள், விண்வெளி வலவர்கள், விமானங்கள், கார்கள், உயரமான வீடுகள், பள்ளிக்கூடம், சர்க்கஸ் காட்சிகள், விலங்கியல் பூங்காவில் உலாவும் காட்சி, மலைகள், காடுகள், புல்வெளிகள், மலர்கள், அம்மா, விழாக்கள், விளையாடும் குழந்தைகள், பலூன்கள், மனித உருவங்கள், விலங்குகள், பெரும் சூரியன் ஆகியவற்றை அவர்கள் வரைகின்றனர்.

சுருங்கச் சொன்னால் அவர்கள் மகிழ்ச்சியை வரைகின்றனர், தாங்கள் உலகத்தை எப்படிப் பார்க்கின்றனர் என்று அவற்றில் காட்டுகின்றனர். ஒருவன், ஒளிக் கற்றைகளுடன் கூடிய புன்சிரிப்பைச் சிந்தும் பெரும் வட்டத்தை வரைந்து, அதற்கு ஒரு நூலையும் வரைந்திருந்தான். ஒரு சிறுவன் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். சிறுவன் ஓடிய படியே அதை இழுத்துச் செல்கிறான். “நான் சூரியனைப் பிடித்து விட்டேன்” என்று விளக்கினான் அந்த “ஓவியன்”. மற்றப் படங்களில் “இது டாங்கி”, “நிலா”, “நான் விளையாடுகிறேன்”, “என் அம்மா“, “பள்ளிக்கூடம்”, “எங்கள் வீட்டின் பின்புறம்”, “என் தம்பி”, “காளான்” என்று எழுதப்பட்டிருந்தது.

படங்களின் கீழ் உள்ள சொற்கள், வாக்கியங்கள், எண்களை என் நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறேன் இருவரைத் தவிர எல்லாக் குழந்தைகளுக்கும் தம் பெயர்களையும் வெவ்வேறு சொற்கள், வாக்கியங்களையும் எழுதத் தெரிந்திருந்தது. “எனக்குப் படிக்கவும் எழுதவும் தெரியும், என் அப்பா சொல்லித் தந்தார்” என்று தேன்கோ எழுதினான். “நான் ஏற்கெனவே ஒரு புத்தகத்தைப் படித்து விட்டேன்” என்று தேயா எழுதினாள். மாக்தா கீழ்க்காணும் பல கணக்குகளை எழுதியிருந்தாள்: 10+5=15, 100-90= 10, 100+100 =200…..

பார்த்தீர்களா, எப்படிப்பட்ட அசாதாரணமான குழந்தைகள். 80-ம் ஆண்டுகளின் போக்கு! ஏன் இவர்கள் எழுத்துகள், நூல்கள், எண்கள் மீது இப்படி அக்கறை காட்டுகின்றனர்? கண்ணாமூச்சி விளையாட்டோ வேறு விளையாட்டோ விளையாடலாம், தாண்டிக் குதித்துக் கொண்டிருக்கலாம். ”இங்கு என்ன எழுதியுள்ளது?”, “இது என்ன எழுத்து?” என்று தொலைக்காட்சிப் படங்களின் தலைப்பு எழுத்துகளையும் தெருக்களில் தென்படும் பலகைகளில் உள்ளவற்றையும் சுட்டிக்காட்டி ஏன் இவர்கள் தம் தாய், தந்தை, தாத்தா, பாட்டிகளைக் கேள்வி கேட்டுத் துளைக்கின்றனர்? பத்திரிகையில் உள்ள தமக்குத் தெரியாத எழுத்துகளைக் கண்டுபிடிப்பதில் ஏன் இவர்கள் இப்படி கஷ்டப்படுகின்றனர்? ஐந்து வயதான குழந்தைகள், ஏன் நான்கு வயதான குழந்தைகள் கூடப் படிக்க முயலுகின்றனர். இதைச் சொல்லித்தருமாறு அவர்கள் தம் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்துகின்றனர். தமது சைக்கிள்கள், கார் பொம்மைகள், மற்ற விளையாட்டுப் பொருட்களை மறந்துவிட்டு இவர்களே அடிக்கடி பரஸ்பரம் எழுத்துகள், எண்களைச் சொல்லித் தருகின்றனர். இந்த ஆறு வயதுக் குழந்தைகள் புதியவற்றை அறிந்து கொள்ளும் நாட்டத்தோடு மட்டுமின்றி குறிப்பிட்ட அளவு ஞானத்தோடும் (இது பள்ளிப் பாடத்திட்டத்தில் அடங்கியுள்ளது) வகுப்பறைக்கு வந்துள்ளனர்.

படிக்க:
மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !

பல குழந்தைகளுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும் என்பது குறித்து ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிப்பதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இப்போது என்ன செய்வது?” என்று கூட அவர்கள் குறைப்பட்டுக் கொண்டனர். “படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் வீட்டில் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டாம், ஏனெனில் இவர்கள் இதையே வகுப்பறையிலும் படிக்க வேண்டி வருவதால் பாடவேளையின் போது இவர்களுக்குச் சலிப்பேற்படும்” என்று ஒரு பத்திரிகையில் ஆசிரியை ஒருவர் பெற்றோர்களுக்கு அறைகூவல் விடுத்ததைக்கூட நான் பார்த்தேன்.

ஆனால் பெற்றோர்கள் விசேஷப் பாடத்திட்டத்தின்படி தம் குழந்தைகளுக்கு ஒன்றும் சொல்லித் தருவதில்லையே. குழந்தைகளே தமது “ஏன்”, “எப்படி”, “இது என்ன?”, “இப்படியிருந்தால்” போன்ற கேள்விகள் மூலம் தமது கல்வியைப் பெறுகின்றனர். வீட்டில் குழந்தைக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தராமலிருக்குமாறு கோருவதில் பொருளில்லை என்று எனக்குப்படுகிறது. ஏனெனில் இன்றைய குழந்தையின் அறிந்துணரும் நாட்டத்தை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முக்கியமானது என்னவெனில், இப்படித் தடை செய்ய வேண்டியது அவசியமா? இது குழந்தையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்குமே.

ஒரு வகுப்பில் குழந்தைகள் வெவ்வேறான ஞான மட்டங்களில் இருக்கும்போது ஆசிரியரின் பணி நிச்சயமாகக் கடினமாகும். ஏனெனில் “பூஜ்ஜியத்திலிருந்து கல்வி துவங்கும்போது தயாராக உள்ள முறை இச்சந்தர்ப்பங்களில் எடுபடாது. கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டிவரும். சில சமயங்களில் ஒன்றிற்குப் பதிலாக இன்னொன்றைக் கூடப் பயன்படுத்த நேரிடும். நடைமுறையில் இது, ஆசிரியர் தன் முறையியல் கோட்பாடுகளை மாற்றுவதைக் குறிக்கும். சில சமயங்களில் ஆசிரியருக்கே உரித்தான தன் சொந்த சடத்துவத்திற்கெதிராகப் போராடுவதைக் குறிக்கும்; சில ஆசிரியர்கள் வழக்கமான கல்வி முறைகளை மாற்றுவதன் தீமைகள் குறித்து வாய் வீச்சுக்களின் மூலம் இதைத் திறமையாக மூடி மறைப்பார்கள். ”ஆம், சில சந்தர்ப்பங்களில் ஒரு சில ஆசிரியர்களின் செயலற்ற மந்த நிலை மற்ற ஆசிரியர்களின் படைப்பாற்றலை மழுங்கடிக்கச் செய்கிறது. புதியவற்றை நாடும் ஆசிரியர்களைக் கட்டிப்போடுகிறது”. ஒரு விந்தையான நிலை ஏற்படுகிறது: ஆக்கபூர்வமான அணுகுமுறையற்ற ஒரு ஆசிரியர் தன் மாணவர்களைச் சோம்பேறிகளெனக் கூறுகிறார். மிக மோசமாகப் பாடம் நடத்தும் ஆசிரியர் (இதற்கு அவருக்கு பூஜ்ஜியம் மார்க்குதான் போடலாம்) தன் மாணவர்களுக்கு இப்பாடத்தில் பூஜ்ஜியம் மார்க்கு போடுகிறார்.

குடும்பம், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நர்சரிப் பள்ளிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள், திரைப்படம், விளையாட்டுப் பொருட்கள், மனிதர்கள், நமது நவீன வாழ்க்கை எல்லாம் சேர்ந்துதான் இன்று என் முன் உட்கார்ந்துள்ள இந்த அசாதாரணக் குழந்தைகளை உருவாக்கியுள்ளன. பள்ளிக்கு வந்த போது இவர்களில் பலருக்குப் படிக்கவும் எழுதவும் கூட்டவும் கழிக்கவும் வகுக்கவும் பெருக்கவும் (பத்து வரைக்கும் மட்டுமல்ல அதற்கு மேலும் கூட) தெரியும். இன்று இவர்கள் தம் வளர்ச்சியாலும் “கல்வியறிவாலும்” என்னைப் பன்முறை வியப்பில் ஆழ்த்தினர். என்னால் இவர்களை ஒன்றுமறியாத சிறுவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆறு வயதுக் குழந்தைகள் உள்ள மற்ற பல வகுப்புகளைப் போன்றே என் வகுப்பிலும் வெவ்வேறு திறமைகளையும் வெவ்வேறு மட்ட ஞானத்தையும் உடைய குழந்தைகள் நிறைந்திருக்கட்டும். தனிப்பட்ட அணுகுமுறைக் கோட்பாடு என் வகுப்புகளில் எடுபடவில்லையெனில் ஏன் போதனை முறை இக்கோட்பாடு குறித்து இவ்வளவு பெருமிதம் கொள்கிறது?

அதே சமயம், ஆறு வயதுக் குழந்தைகள் பள்ளிக்கு வந்துள்ளார்கள் என்றால், இவர்கள் பள்ளிக்கு வரும் முன்னரே புதியவற்றை அறியும் நாட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றால், இவர்கள் மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு முழுப் பொறுப்போடு பாடம் படிப்பதில் ஈடுபடுவார்கள் என்று நான் நினைக்கிறேனா? நான் இப்படி நினைத்தால், குழந்தைகளின் உண்மையான வாழ்விலிருந்து தள்ளி நிற்கும் ஒரு எளிய ஆசிரியனாக அல்லவா இருப்பேன்! எனது வேலையின் சிக்கலே எதுவெனில், அவர்களின் ஞானம் எப்படிப்பட்டதாயிருந்தாலும் அவர்கள் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள், அவர்களுக்கு விளையாட்டுதான் வாழ்வின் உட்பொருள் என்பதாகும்.

ஒருமுறை ஒரு ஐந்து வயதுச் சிறுமியை அவளுக்கு எவ்வளவு “கல்வியறிவு” உள்ளது என்று சோதித்துப் பார்ப்பதற்காக என்னிடம் கூட்டி வந்தனர். அச்சிறுமி நன்றாகப் படித்தாள், பல கதைகளைப் படித்திருந்தாள், தன் மனப் பதிவுகளை அவளால் எழுத்து வடிவில் வடிக்க முடிந்தது. கடிகாரத்தில் மணி பார்த்துச் சொன்னாள். வகுத்தாள், பெருக்கினாள், மூளை வளர்ச்சியை நிர்ணயிக்கும் பல சிக்கலான சோதனைகளில் நன்கு தேறினாள். நான் அவளைப் போகச் சொல்லிவிட்டு, பெற்றோர்களுடன் பேசத் துவங்கியதுமே அவள் மேசையின் அடியில் புகுந்து கொண்டு எங்களைப் பார்த்து நாய்க்குட்டியைப் போல் குரைக்க ஆரம்பித்தாள்.

பள்ளிப் பாடங்கள் நான்கு, ஐந்து, ஆறு ஏன் ஏழு – எட்டு வயதுக் குழந்தைகளின் இயல்பை அடியோடு மாற்றுவதில்லை. அதாவது, குழந்தைப்பருவம் என்றழைக்கப்படுவதிலிருந்து இவர்களைப் பிரிப்பதில்லை. கருத்தாழமுள்ள விஷயங்களைத் தெரிந்திருப்பதாலும், மேன்மேலும் இவற்றை அறிந்து கொள்ள முயலுவதாலும் மட்டுமே குழந்தை பொறுப்புள்ளவனாகி விடுவதில்லை. ஆறு வயதுக் குழந்தைகளுக்கு எனது கட்டளைகள், தடைகள், அறைகூவல்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும், நீண்ட நேரம் அவர்களால் பாடம் படிக்க முடியாது, ஒரே மாதிரியான நிலை அவர்களுக்கு விரைவிலேயே சலிப்பேற்படுத்தும் …..

இன்று என் வகுப்பில் எப்படியிருந்தது? குழந்தைகள் களைத்து விட்டனர். அவர்களுக்குச் சலிப்பாயுள்ளது என்பதை இரண்டு முறை உணர்ந்தேன். இன்னமும் குறைவான பாடவேளைகளைப் பற்றி நான் யோசித்துப் பார்க்க வேண்டுமோ! ஒவ்வொரு பாடவேளையிலும் 15 நிமிடங்கள் பாடம் நடத்தினால் போதுமோ? ஒரு நாளில் எட்டு சிறு பாடவேளைகள். இல்லை, தாய்மொழி, கணிதம், ருஷ்ய மொழி வகுப்புகளை மட்டும் இப்படிப் பிரிப்பது நல்லது. வரைதல், பாட்டு வகுப்பு, உடற்பயிற்சி வகுப்புகளை விட இவற்றிற்குப் பெரும் மூளை உழைப்பு தேவைப்படும். தாய் மொழிப் பாடம் 15 நிமிடங்கள் நடந்ததும் வகுப்பு மணியடிக்கும். பின் வகுப்பை விட்டு வெளியே போகாமலேயே 5 நிமிடங்கள் ஓய்வு. எஞ்சிய 15 நிமிடங்களை கணிதத்திற்கு ஒதுக்குவோம். நாளை இப்படிச் செய்து பார்க்க வேண்டும்….

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

தமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி

புதிய கல்விக் கொள்கை (2019) என்ற பெயரில் கல்வியை தனியார் முதலாளிகளின் கையில் ஒப்படைப்பதுடன், முழுக்க முழுக்க காவிமயமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது பாஜக அரசு.

ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். – பாஜக, புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தி எதிர்ப்பு மனநிலை கொண்ட தமிழகம், மத்திய அரசின் இந்த நகர்வுக்குக் கடுமையான எதிர்வினை ஆற்றியது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தன.

இரண்டே நாட்களில், இந்தி கட்டாயமல்ல என்று தனது வரைவு அறிக்கையில் மாற்றம் செய்து வெளியிட்டது மத்திய அரசு. மத்திய அரசின் இந்தி திணிப்பைக் குறித்து சென்னை மக்களிடம் கருத்துக் கேட்க வினவு குழுவினர் சென்றனர்.
மக்கள் என்ன சொல்கிறார்கள் ?

பாருங்கள் ! பகிருங்கள் !

கேள்வி பதில் : தியானம் – தேர்தல் – காவி விளம்பரம் !

கேள்வி: // தற்போது தொலைக்காட்சிகளில் வருகிற அனைத்து விளம்பரங்களிலும் ஏதாவது ஒரு வகையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது பற்றி …? //

– எஸ். செல்வராஜன்


விளம்பரங்களில் காவி நிறம் இடம்பெற்றிருப்பது குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் சொல்வது உண்மையானால் பாஜக-வின் செல்வாக்கு வட இந்திய மாநிலங்களில் அதிகரித்திருப்பதன் படி பொருத்தமானதுதான். சமீபத்தில் அலகாபாத்தில் நடந்த அர்த் கும்பமேளாவிலேயே நிறைய பன்னாட்டு – இந்நாட்டு நிறுவனங்கள் தமது விளம்பரங்கள் மற்றும் காட்சி நிலையங்களை வைத்திருந்தன. அவற்றில் காவி நீக்கமற நிறைந்திருந்தது உண்மைதான். தற்போது 12-வது வகுப்பு பாடத்திட்டத்தில் பாரதியாருக்கு காவி முண்டாசு கட்டியதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. பாரதியார் எப்போது காவி அணிந்தார் என்பது ஒருபுறமிருக்க அவரது சனாதனதர்ம ஆதரவு கருத்துக்களின்படி அவரை அப்படி காட்டுகிறார்கள். தமிழ்நாட்டு பாடத்திட்டத்திலேயே இப்படி என்றால் மத்திய அரசின் பாடத்திட்டங்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.

பார்ப்பனியத்தின் செல்வாக்கு அதிகமுள்ள பசு வளைய மாநிலங்களில் காவி வண்ணம் பல்வேறு வகைகளில் செல்வாக்கு செலுத்துகிறது. தமிழகத்தில் இருந்து வடக்கே செல்லும் ஒரு ரயிலில் நீங்கள் காவி உடை தரித்து, திருநீறு பூசி பயணிப்பதாக இருந்தால் எங்கேயும் பயணச்சீட்டு எடுக்க வேண்டியதில்லை. பயணச்சீட்டு பரிசோதகர் கேட்கமாட்டார் என்பதோடு சக பயணிகளும் ஏதாவது தின்பதற்கு கொடுப்பதோடு, நிதியுதவியும் செய்வார்கள். காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட இல்லாமல் காவி கெட்டப்பில் நீங்கள் காசி வரை பயணிக்கலாம். அக்ஷய திரிதியை என்றொரு பார்ப்பனப் பண்டிகையை நகை நிறுவனங்கள் சந்தைப்படுத்தியது போல காவி பல்வேறு வகைகளில் சந்தைப்படுத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவையாக இருக்கிறது. பாபா ராம்தேவின் மூலிகை பற்பசைக்கு போட்டியாக கோல்கேட் நிறுவனமே வேதசக்தி என்று மூலிகை பற்பசையை சந்தையில் இறக்கியிருக்கிறது. எனில் காவி நிறம் இல்லாமல் விளம்பரங்கள் எப்படி இருக்க முடியும்?

♦ ♦ ♦

கேள்வி: // காவி பாசிச அபாயத்தை தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் முறியடிக்க முடியுமா? இல்லையெனில் பாசிசம் ஜனநாயக சக்திகளை ஒழித்து விடாதா? //

– வி. வெங்கடகிருஷ்ணன்

அன்புள்ள வெங்கடகிருஷ்ணன்,

தேர்தல் முடிவுக்கு  முன்பாக இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். தேர்தல் முடிவுகளே உங்களுக்கு பதிலை அளித்திருக்கும். அதாவது வாக்களிப்பதன் மூலம் காவி பாசிச அபாயத்தை முறியடித்துவிட முடியாது. ஏனெனில் கணிசமான மக்கள் பார்ப்பனிய பண்பாட்டு செல்வாக்கில் சிக்கியிருக்கிறார்கள். அதை பாஜக – சங்க பரிவாரங்கள் இன்னும் ஊதிப் பெருக்கி வருகின்றன. சித்தாந்த ரீதியாக காவிப் பக்கம் அணிதிரட்டப்பட்டிருக்கும் மக்களை மீட்பதற்கு தேர்தல் பாதை உதவாது. எதிர்க்கட்சியான காங்கிரசு கூட பசு வளையம் எனப்படும் இந்தி பேசும் மாநிலங்களில் மிதவாத இந்துத்துவாவின் முகத்தையே காட்டியது. பிரக்யா சிங் தாகூர் எனப்படும் பயங்கரவாதி போட்டியிட்டு வென்ற போபால் தொகுதியில் காங்கிரசு சார்பாக திக்விஜய் சிங் போட்டியிட்டு தோற்றார். தேர்தலில் இவரும் அனேக சந்நியாசிகளை அழைத்து யாகம் செய்தார். தானும் காவி பக்தன் என்று காட்டிக் கொண்டார்.

தேர்தல் பரப்புரையில் மோடி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் நடத்திய பசுவின் பெயராலான கொலைகள், இதர சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள், உனா போன்ற தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ரஃபேல் ஊழலை பேசத்துணிந்த ராகுலுக்கு அக்லக் குறித்தோ பெஹ்லுகான் குறித்தோ பேச ஏன் தைரியமில்லை? இந்து வாக்குகளை இழந்து விடுவோம் என்று இவர்கள் பாஜகவின் அணுகுமுறைக்கு வலுவேற்படுத்துகிறார்கள். எனவே தேர்தல் பாதைக்கு அப்பாற்பட்டு இந்துத்துவ பயங்கரவாதத்தை நாம் எப்படி முறியடிப்பது என்பது குறித்து ஆலோசிப்பதே சாலச்சிறந்தது.

♦ ♦ ♦

கேள்வி: // இந்த 5 ஆண்டு மோடி ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளின் பட்டியல் தர முடியுமா ? //

– ராஜா

அன்புள்ள ராஜா,

வினவு தளத்தில் மோடி ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து விரிவான பதிவுகள், கட்டுரைகள், செய்திகள் உள்ளன. தேடிப் படியுங்கள்.

மோடி, இந்துத்துவா, பாஜக, மாட்டுக்கறி, தலித், பார்ப்பனியம், பாசிசம், ஆர்.எஸ்.எஸ் போன்ற குறிச்சொற்களை தேடுதல் பெட்டியில் போட்டு தேடிப் பாருங்கள். எண்ணிறந்த கட்டுரைகள் உங்களுக்கு கிடைக்கும்.

♦ ♦ ♦

கேள்வி: // மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

தியானம் என்பது உண்மையா ? புத்தர் போதித்த விபாசனா , ஓஷோவின் விழிப்புணர்வு , ரமண மஹரிஷி , பாபாஜியின் கிரியா யோகம் மூலம் நிப்பாணம் அடைய முடியுமா ? அல்லது மனதின் கற்பனையா? வெகு நாட்களாக தியானம் செய்து வருகிறேன். ஆனால் என்னால் எந்த ஒரு நிலையும் அடைய முடியவில்லை . நான் சரியான பாதையை தேர்வு செய்ய ,தங்களிடம் அறிவியல் ரீதியான பதிலை எதிர்பார்க்கிறேன்? நன்றி//

– எ.ரவிச்சந்திரன்

அன்புள்ள ரவிச்சந்திரன்,

தியானம் குறித்த சிறப்பான அறிவியல் விளக்கத்தை கீழ்க்கண்ட கட்டுரையில் வாசிக்கலாம்.

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!

அந்தக் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:

ஆன்மீக “அமைதியும்’ அறிவியல் உண்மையும்!

உண்மையில் பக்தர்கள் தங்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை மேற்கண்ட சாமியார்களின் விதவிதமான முறைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமா? பலராலும் பூடகமாக வியந்தோதப்படும் ஆன்மீகத்தின் பொருள் என்ன? பல்வேறு முறைகளில் பயிற்சி செய்யப்படும் யோகா முறை ஒரு மனிதனுக்கு நிம்மதியைத் தருமா? நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட சாமியார்களின் உரைகளில் சீடர்களுக்கு தெளிவு பிறக்க வாய்ப்புள்ளதா?

“மனதைக் கட்டுப்படுத்துதல், கட்டுப்படுத்தினால் இறுதியில் பேரானந்தம்’ என்பது ஆன்மீகம் என்பதற்கு இவர்கள் தரும் இலக்கணம். மனதையே ஆன்மா, ஜீவன், உடலுக்கும் உயிருக்கும் அப்பாற்பட்டது என்றெல்லாம் கற்பித்துக் கொள்கிறார்கள். இத்தகைய அரூபமான விளக்கத்தில் உண்மையோ, பொருளோ இல்லை. அறிவியல்பூர்வமாக மனது என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒன்று. அதே சமயம் அதற்கென்று தனித்துவமான இடமும் உண்டு. ஆனால் அது தனியாய் பிறந்து வளர்ந்து செயல்படுவதில்லை. மனிதனின் உடற்கூறியலைக் கொண்டு குழந்தையின் மூளை இயல்பாக மனித மூளையாக உருவாகியிருந்தாலும் ஆரம்பத்தில் அது தன்மையில் விலங்குகளின் மூளையைப் போன்று சாதாரணமாகவே இருக்கிறது. புற உலகோடு கொண்டுள்ள தொடர்பால் மட்டுமே அது மனித மூளையின் செயல்பாட்டைப் பெறுகிறது.

உடலுக்கு வெளியே சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கையை, சமூகத்தை, முழு உலகைப் புரிந்து கொள்வதாலும், தொடர்பு கொண்டு வினையாற்றுவதன் வாயிலாகவும்தான் தனித்துவத்தைப் பெறுகிறது மனித மனம். சூழ்நிலையும், வாழ்நிலையும்தான் மனதின் அகத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. உணர்ச்சிகளாலும், அறிவுத்திறனாலும், மனிதர்கள் வேறுபடுவதன் காரணமும் இதுதான்.

மனதின் தோற்றமும், இருப்பும், செயல்பாடும் இவையென்றால் அதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? மனதின் பிரச்சினை என்பது மனிதனின் பிரச்சினை; மனிதனின் பிரச்சினை என்பது அவன் வாழ்வதற்காகப் புற உலகோடு கொண்டுள்ள தவிர்க்கமுடியாத உறவினால் ஏற்படும் பிரச்சினை. இத்தகைய பிரச்சினைகளினால் மனிதனிடம் இரண்டுவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று உடல் ரீதியானது. இரண்டாவது கருத்து ரீதியானது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தும் பிரிந்தும் வினையாற்றுகின்றன.

உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளில் மூளையும், அதனால் பாதிக்கப்படும் ஏனைய உடல் அங்கங்களும் அடக்கம். கருத்து ரீதியான பிரச்சினைகளை அவ்வளவு சுலபமாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூக உறவில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் மனிதன், பிரச்சினை வரும்போது சமூகத்தில் தனது இடம் குறித்த குழப்பமும், பயமும், அடைகிறான். இது முற்றும் போது சமூகத்தோடு முரண்படத் துவங்குகிறான். முரண்படுதலின் வீரியத்திற்கேற்ப அவனது சமூக வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

படிக்க:
♦ கேள்வி பதில் : ஸ்டெர்லைட் – தேர்தல் – பறையிசை !
♦ கேள்வி பதில் : வணிக ஊடகத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு பணியாற்ற முடியாதா ?

ஆக மனிதனது உடல் நலமும் அல்லது மூளை நலமும், சிந்தனை முறையும் ஒத்திசைந்து இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். ஆயினும் வர்க்க சமூகத்தில் இந்த ஒத்திசைவு குலைவது தவிர்க்க இயலாதது. வர்க்கப் பிளவுகளையும் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கும் இன்றைய உலகமயமாக்க காலம், மக்கள் ஆன்மீகத்தை நோக்கி ஓடுவதையும், சாமியார்கள் வாழ்க வளமுடன், வாழுவதே கலையென்று ஆடுவதையும் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும் மன நலன் மற்றும் சமூக நலன் இரண்டையும் சீரடையச் செய்வதற்குரிய பொருத்தமான மருந்துகள் சாமியார்கள் மற்றும் அவர்களது யோக முறைகளில் நிச்சயம் இல்லை. ஏன்?

வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனிதனும், மனதும் பாதிக்கப்படுகின்றனர் என்றால் மூளை பாதிக்கப்படுகிறது என்பதே சரி. கோபம், அச்சம், சலிப்பு, சோர்வு, விரக்தி, சோகம், பதட்டம், படபடப்பு, மன அழுத்தம், போன்றவை எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படக்கூடிய உணர்ச்சிகள். குறிப்பிட்ட காரணங்களால் இவை அடிக்கடி ஏற்பட்டு நாளடைவில் தொடர்ந்து நீடித்தால் மனம் மெல்லமெல்லச் சிதைவது நடக்கிறது. மனச் சிதைவின் விளைவால் மூளையில் உள்ள உயிர்ம வேதியல் சக்திகளின் சமநிலை குலைகிறது. இதன் தொடர் விளைவால் பல உடல் பிரச்சினைகளும், வாழ்க்கை மீதான விரக்தியும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வென்ன?

மூளை இழந்து விட்ட சக்திகளை திரும்பப் பெறுவதன் மூலமே, புண்ணான மூளையையும் மனதையும் நேர் செய்ய முடியும். அதை மனித உடலையும், நோய்க்கூறுகளையும் அறிவியல் பூர்வமாக கற்றுக்கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் கண்டுபிடித்துக் குணமாக்க முடியும். மாறாக, தியானம் செய்வதன் மூலமாக, மூளை இழந்த பௌதீக ரீதியான சக்திகளைப் பெறமுடியாது.

ஏனெனில், இது வெறும் கருத்துப் பிரச்சினையல்ல. உடல் நோய்வாய்ப்படுவது என்பது பொருளின் பிரச்சினை. பொருளுக்கு கருத்து மருந்தல்ல. எளிமையாகச் சொல்வதாக இருந்தால் தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, எலும்பு முறிவு, மற்றும் எளிதில் குணப்படுத்த இயலாத எய்ட்ஸ் முதலான நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுகிறோம். இதை தியானம் செய்வதால் தீர்க்கமுடியாது. மனம் அல்லது மூளையின் பிரச்சினைகளும் அப்படித்தான்.

இருப்பினும், மனம் நோய்வாய்ப்படுவதற்கும், உடல் நோய்வாய்ப்படுவதற்கும் வேறுபாடு உண்டு. உணவின்மை, சத்துக்குறைவான உணவு, சுகாதரச் சீர்கேடுகள், நுண்கிருமிகள் முதலியவற்றால் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஆனால் மூளையோ, வாழ்க்கைப் பிரச்சினைகளால் குறிப்பிட்ட கருத்து நிலைக்கு தொடர்ந்து ஆட்படுவதால் சக்தியை இழந்து நோய்வாய்ப்படுகிறது.

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட் !இத்தகைய பலவீனமான மூளையால் உடலின் சமநிலை குலைந்து ஏனைய உடல் பாகங்களும் பாதிப்படைந்து, செயல்பாடு சீர்கேடு அடைகின்றது. பாதிப்படையும் மனதிற்குப் பின்னே இத்தனை உண்மைகள் இருக்கும் போது, சாமியார்கள் அடிமுட்டாள்தனமாக “குணப்படுத்துவேன்’ என்று திமிராகப் பேசுவது அயோக்கியத்தனம். நியாயமாக இவர்களை போலி மருத்துவர்கள் என்று கைது செய்து உள்ளே தள்ளுவதே சரி.

யோகா போன்ற முறைகளால் நோயைக் குணப்படுத்தமுடியும் என்பதுதான் மூட நம்பிக்கையே தவிர தன்னளவில் அவை ஒரு உடற் பயிற்சிக்குரிய நன்மையைக் கொண்டிருக்கின்றன. உடற்பயிற்சியால் ஒரு மனிதனின் உடல் நலம் பொதுவில் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உண்மைதான். இருப்பினும் இந்த ஆரோக்கியம் வெறும் உடற்பயிற்சியால் மட்டும் வந்து விடுவதில்லை. அது ஊட்டச் சத்து, சுகாதாரம், போதுமான ஓய்வு, உறக்கம் போன்றவையுடன் தொடர்புள்ளது. சுருக்கமாகச் சொன்னால் வசதி அல்லது வர்க்கம் சம்பந்தப்பட்டது.

அடுத்து, தியானம் என்பது மனம், அதாவது மூளையின் ஒரு பகுதிக்கு அல்லது செயல்பாட்டிற்குச் செய்யப்படும் பயிற்சியாகும். தியானத்தின் மூலம் மட்டுமல்ல, ஒரு நல்ல இசையைக் கேட்பதிலோ, ஒரு குழந்தையைக் கொஞ்சுவதிலோ, இயற்கைக் காட்சியுடன் ஒன்றுவதிலோ கூட மனம் பயிற்சியையும் ஓய்வையும் பெறமுடியும். இவை ஒவ்வொருவரின் விருப்பம், இரசனை, பண்பு, வாழ்க்கையைப் பொறுத்தது. ஆயினும் அழுத்திச் செல்லும் வாழ்க்கையின் இடைவெளிகளில் பலருக்கு இவை சாத்தியப்படுவதில்லை. அதனால் பிரச்சினை வரும்போது ஓய்வு பெறாத மனம் விரைவில் துவண்டு விடுகிறது.

மனதிற்கு அப்படிச் சிறப்பாகப் பயிற்சியையும், ஓய்வையும் தந்திருப்பவர்களுக்குக் கூட வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனது பாதிக்கப்படுவது நடக்கும். இதிலிருந்து மீள்வதற்கு மருத்துவமே பெருமளவுக்கு உதவும் என்பதையும் தியானம் உதவாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, மனதைச் சிதைத்து வதைக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளால் நோயுற்ற ஒரு மனிதனை எல்லா உளவியல் மருத்துவர்களாலும் குணமாக்கி விட முடியாது. “நான்’ எனப்படும் தன்னிலையை வைத்து வாழும் மனிதனின் அடிப்படை, உண்மையில் “நாம்’ எனும் சமூக மையத்தில்தான் சுழல்கிறது. அந்த மையம் மனிதர்களது விருப்பு, வெறுப்பின்படி அமைந்ததல்ல; அது சமூக உறவுகளால் பின்னப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தம் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் சமூக அறிவியல் கண்ணோட்டம் கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் இந்த நோயின் காரணத்தையே புரிந்து கொள்ள இயலும்.

***

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை ! “ – புதிய தொடர்

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 01

பார்ப்பனியக் கொடுங்கோன்மையைத் தோலுறிக்கும் அறிஞர் அண்ணாவின் படைப்புகளை வெளியிடும் முயற்சியாக “சந்திரமோகன்” (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) நாடகத்தை வினவு தளத்தில் வெளியிட்டோம். இத்தொடருக்கு தங்களது பெருவாரியான ஆதரவை வாசகர்கள் வழங்கினர். அந்நாடகத் தொடர் முடிவடைந்ததும், பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் ஆயுதக் கிடங்காக வீற்றிருக்கும் “ஆரிய மாயை” எனும் நூலை இன்று முதல் தொடராக வெளியிடுகிறோம். ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமையன்று ஆரிய மாயை தொடர் வெளிவரும். தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ! – வினவு

முன்னுரை :

“ஆரிய மாயை” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. (படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விசய விளக்கமாற்றவும், சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சாளருக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்.)

சி. என். அண்ணாதுரை

ஆரிய மாயை

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர் தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கண நாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி! போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய்போற்றி!
சிண்டு முடிந்திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரை, இதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!

இந்தப் போற்றித் திருப்பா, புதுமையானதாக இருக்கிறதே! இதன் பொருள் விளங்கவில்லையே! பேராசையும் வஞ்சகமும், பிறவுமான கேடு பயக்கும் குணமுடையோரைப்  போற்றுவது மடைமையன்றோ? ஒழித்திட வேண்டியதைத் தொழுதிடுவது அறிவுடையாகுமா? தேளைத் தேவனென்றும், பாம்பைப் பரமனென்றும், நரியை நாதனே என்றும், புலியை புண்ணியவானென்றும், பித்தருங் கூறாரே! நீயோ நயவஞ்சகரை – நா இரண்டுடையாரை, நாவார வாழ்த்துகிறாயே போற்றி! போற்றி! என்று, இது என்ன பரதா? என்று கேட்பர், அன்பர் . அடியேன் அறைவதல்ல ஐயன்மீர் ! நமது இனத்திலே உள்ளனரே… விரிந்த மனப்பான்மையும், பரந்த பாசமும், கனிந்த உள்ளமும், கருணை வெள்ளமுங் கொண்ட ‘சற்சூத்திரர்கள்’ – அவர்கள் சதாகாலமும், ஆரியரைப் போற்றி வாழுகிறார்களல்லவா? அவர்கள் போற்றித் தொழுதிடும் ‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்களை அறிந்தோர் எடுத்துரைத்துள்ளனர். அடியேனுடைய வேலை ; அவற்றைத் தொகுத்துப் பார்ப்பன பக்தர்கள் நடத்தும் ‘போற்றி போற்றி’ யுடன் இணைத்து, அவசரத்திலே அகவலாக்கி உம்மிடம் தந்ததுதான்! நான் ஆரியரைப் போற்றவுமில்லை, போற்றிடக் கூறவுமில்லை. அதுபோலவே நான் அவர்களை ஏசவும் இல்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்.

அக்ரகாரத்தை அனுதினமும் அர்ச்சிக்கும் அன்பர்கள் ‘ஏண்டா பரதா! எக்காரணம் பற்றி, எந்த ஆதாரத்தின் மீது நீ பூதேவரை நயவஞ்சகரென்று நாத்தடுமாறாது கூறுகிறாய், படுமோசக்காரா என்று பதற்றம் பேசுகிறாய், பலப்பல கூறி ஏசுகிறாய், பாப் மூட்டையைச் சுமக்கிறாய், பாவி நீ ரெளரவாதி நரகத்தில் உழலுவாய், போ’ என்று சபிப்பர். உங்களுக்குக் கூறுகிறேன்; தூற்றலல்ல, நான் தொகுத்திட்ட இப்பா; பன்னெடு நாட்களுக்கு முன்பு படம் பிடித்தார் ஓர் பரங்கி. அதனை நான் இன்று வெளியிடுகிறேன். சரக்கு நம்முடையதல்ல! இல்லாததை எடுத்துக் காட்டிக் கூறுவதுமல்ல! மீண்டுமொரு முறை இப்போதே போற்றிப் பாசுரத்தைப் படியுங்கள். படித்தீர்களா? சரி, இதோ பாருங்கள், சில ஆங்கிலச் சொற்கள்!

Avarice, Ambition, Cunning, Wily, Doubletongued Service, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression, Intrigue.

இனி, இந்த ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் என்ன பொருள் என்பதை அகராதியின் உதவி கொண்டு பாருங்கள். பிறகு, நான் தீட்டிய போற்றிப் பாசுரம் சரியா, மிகைப்படுத்தினேனா, தவறா? என்பது பற்றி யோசியுங்கள்.

தோழர்களே! இத்தகைய பதங்களால் ஆரியரை அர்ச்சித்திருக்கிறார். ‘ஆபிடியூபா’ எனும் அறிஞர். இன்றல்ல நேற்றல்ல; டாக்டர் நாயரின் முரசு கேட்டல்ல; வகுப்புவாத நச்சரவு கடித்ததாலல்ல; கண்ணாரக் கண்டதைக் கருத்தார உணர்ந்து, நாவார உரைத்தார். 1807-இல்

“Hindu Manners Customs and Ceremonies” என்ற நூல் Abbe J. A. Dubois என்பவரால், 1807-ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. அதிலே பார்ப்பனரை அவர் இவ்வண்ணம் அர்ச்சித் திருக்கிறார்! ஆரிய இன இயல்பை , மிகத் தெளிவாகத் தீட்டியிருக்கிறார். இவ்வித இயல்புடைய இனத்தைத்தான் இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் ஜாதி என்று உரைக்கின்றனர். ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர்தம் நிலை.

ஆபி டியூபா, பிரெஞ்சுப் பாதிரி. இங்குச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், தாம் கண்டறிந்த உண்மையை எழுதி வைத்தார். அதிலே, பார்ப்பனரின் பண்பு பற்றி அவர் வருணிக்கையிலே, அவர் பிரயோகித்துள்ள பதங்களையே நான் போற்றிப் பாசுரமாக்கிக் காட்டினேன். ‘அவர்  தீட்டியுள்ளது தவறானது ; காமாலைக் கருத்துடையவர் அவர்’ என்று யாரும் கூறிடவும் முடியாது. ஈடில்லாத “இந்து” பத்திரிகை, ஆபி டியூபாவின் நூலுக்கு மதிப்புரை தந்திருக்கிறது. அது மட்டுமா? அன்று அப்பாதிரியார் கூறிய அதே நிலையிலேயே இங்கு மக்கள் இன்றும் உள்ளனர் என்றும் “இந்து” எழுதிற்று.

ஆரியரில் யாரோ ஓர் அயோக்கியனை, என்றோ ஒரு நாள் அந்த வெளிநாட்டுக்காரன் கண்டுவிட்டுப் பொதுப்படையாகப் புகல்வது மடமையன்றோ? எந்நாட்டிலும், எந்த இனத்திலும் அயோக்கியர்கள் சிலர் இருப்பர்; அதற்காக அந்த இனமே அத்தகைய இயல்புடையது என்று இயம்பலாமா? இது முறையா, அழகா? என்று கேட்பர் சிலர்! முறையாகாது என்று நான் மும்முறை கூறுகிறேன். அழகல்ல என்று ஆறு தடவை வேண்டுமாயினும் சொல்கிறேன். ஓர் ஆளின் கெட்ட குணத்தை ஆதாரமாகக் கொண்டு, அந்த ஆள் எந்த இனத்தவரோ, அந்த இனத்தையே அக்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது மடமைதான்.

மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும்தானே நடக்கிறது! வேதாந்தமும் விரக்தியும், விருந்தும், வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா?

ஆனால், ஆபி  டியூபா, முப்பது ஆண்டுகள் இங்கு உலவினார்; நாடு முழுவதும் சுற்றினார்; மக்களின் அன்றாட வாழ்க்கையினைக் கூர்ந்து கவனித்தார். ஆரிய இனத்தின் இயல்பினை, உள்ளது உள்ளவாறு கண்ட பிறகே, ஏட்டில் எழுதினார்.

சரி, ஆபி டியூபா பிரெஞ்சுப் பாதிரி; அவர் பிரான்சு மொழியிலே எழுதியிருப்பார். அதை ஆங்கிலமாக்கியவர் கயிறு திரித்திருக்கக் கூடாதோ? என்று சாகசச் சித்தர்கள் கேட்பர். ஆபி  டியூபாவின் பிரெஞ்சு நூலை, ஆங்கிலமாக்கியவர்கள் H.K. பூன் சாம்ப் என்னும் ஆங்கிலர்தாம். ஆனால், அதனை மேற்பார்வை செய்தவரோ, C.V.முனுசாமி ஐயர் எனும் பூசுரரே!

தவறு இருப்பின், அவரா சும்மா இருப்பார்? ஆகவே ஆபி டியூபா, ஆரியரை நன்கு அறிந்தே இங்ஙனம் அர்ச்சித்திருக்கிறார். ஆரிய மாயையில் அவர் சிக்கிச் சொக்காத காரணத்தால், உள்ளது உள்ளபடி தீட்டிட முடிந்தது. அர்ச்சனை கிடக்கட்டும் அன்பர்களே! அவர் தீட்டியுள்ள வாசகக் கருத்துக்கள் சிலவற்றினைக் கேளீர்!

படிக்க:
தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா ! சரிதாவின் வாக்குமூலம் !
ஊர்க்குளங்கள் அழியுது ! வயல்கள் மீன் வளர்ப்பு குளங்களா மாறுது !

”பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு. எனவே, அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை!”

இது ஆபி டியூபாவின் வாசகம். இன்றும் இதிலே முழு உண்மை இருத்தலை உலகு அறியும். மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும்தானே நடக்கிறது! வேதாந்தமும் விரக்தியும், விருந்தும், வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா? இதைத்தான் ஆபி  டியூபா அன்றே கூறினார்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

அடுத்த பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா ! சரிதாவின் வாக்குமூலம் !

வார வேலை நாட்களில், திருமால்பூர் ரயிலும் என்னோட நண்பன்தான். வேலை நாட்களில் அந்த நண்பனோடுதான் தினசரி பயணம். செங்கல்பட்டில் இரவு 8 மணிக்கு காஞ்சிபுரம் – திருமால்பூர் ரயிலில் உட்கார இடம் கிடைப்பதெல்லாம் அரிது. அன்று எப்படியோ, ஒரு ஓரமாக நெரிசலில் நிற்கக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. என் பக்கத்தில் நின்றிருந்தவர் பேச ஆரம்பித்தார்.

”இந்த ரயில் எப்பவும் இப்படித்தானா? ஒரே கூட்டமா, நிக்கக்கூட இடம்விடமாட்றாங்க? மூணு வயசுக் கொழந்தயக்கூட உட்காரச் சொல்ல மாட்றாங்க…… ரொம்ப மோசம்…” என்றார்.

இன்னிக்கு எவ்ளவோ பரவாயில்ல…. இதவிட மோசமா உள்ள நிற்கவே முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும்… உட்கார்ந்துட்டு இருக்கவங்களும் ஆயிரத்தெட்டு பிரச்சனையில வர்றாங்க, அவங்க நமக்கு இடம் கொடுத்து உட்கார வைப்பாங்கனு எதிர்ப்பார்க்கக்கூடாது. நாமளே இடத்தை உருவாக்கிக்கணும். தயவா கேட்டு உட்கார்ந்திடணும்..”னு சொன்னேன்.

பொதுவா அந்த ரயிலில் வழக்கமா போறவங்க முகம் நமக்கு தெரிஞ்சிடும். புதுசா வர்றவங்க தயங்குறதுலயே கண்டுப்பிடிச்சிடலாம்.

செங்கல்பட்டு – பாலூர் ஸ்டேஷன் வந்ததும் நின்ற இடத்திலிருந்து கீழே உட்கார்ந்தேன். பக்கத்தில் ஒரு குரல், வழக்கமா பார்க்காத முகம். “அக்கா, இங்க உக்கார்ந்துகிடட்டுமா?” திரும்பிப் பார்த்தேன்..

”இதெல்லாம் கேட்டுக்கினு இருக்ககூடாது டக்குனு உட்கார்ந்திடணும்” என்றேன். சிரித்தார்…

எல்லாரும் தேர்தலில், ஓட்டுப் போட்டதைப்பத்தி பேசிட்டுருந்தோம். எப்படித்தான் மோடி ஜெயிச்சாரோ தெரியலயே? நம்ம தமிழ்நாட்டுக்காரங்க சரியாத்தானே ஓட்டுப்போட்டுருக்கோம்…. வட இந்தியாவுலதான் தப்பு பண்ணிட்டாங்க… னு ரொம்ப கவலையாக பேசினோம்.

படிக்க:
♦ குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் !
♦ பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா ?

பக்கத்தில் உட்கார்ந்தவர். மெதுவாக என்னிடம் “எல்லாரும் கம்பெனிக்கு போய்ட்டு வர்றீங்களா?” என்றார்.

“இல்ல.. இல்ல… எல்லாரும் ஒவ்வொரு இடத்துல வேலை பாக்கறவங்க; தனியார் கம்பெனி சிலர், ஆஸ்பிட்டல், கோர்ட், செகரடேரியேட்னு எல்லா வேலைக்கு போறவங்களும் இருக்காங்க” என்றேன்.

“சரி, நீங்க எங்க போய்ட்டு வர்றீங்க..” என்றேன்.

“குஜராத்” என்றார்.

“என்னது… வேலை செய்ய அவ்வளவு தூரமா? குஜராத்தா?” என்று அதிர்ச்சியானேன்.

“இல்ல…. இல்ல…. எங்க சொந்த ஊரே குஜராத் தான்” என்றார்.

“அப்படியா? எப்படி தமிழ் இவ்ளோ சரளமா பேசறீங்க…. ஆளப் பாத்தா குஜராத்தி மாதிரி தெரியல, தமிழ்ப் பொண்ணு மாதிரி.. எப்படி? உடை, மொழி எதுலயும் கண்டுபிடிக்க முடியலயே, உன் பொண்ணும் தமிழ் பொண்ணு மாதிரியே இருக்கா… எப்படி..?” என்று ஆர்வமானேன்

“8 வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்காரு இங்க வேலை தேடி வந்தாரு…. தனியார் கம்பெனியில வேலை. வந்த ஒரு வருசத்துல என்னையும் கூட்டிட்டு வந்துட்டாரு. அப்பத்துல இருந்து நானும் இங்கத்தான் இருக்கேன், அதனால தமிழ் நல்லா பேசுவேன். கூலி வேலைக்கும் போயிருக்கேன்” என்றார்.

“பேரு?”

“சரிதா…”

“இப்ப எதுக்கு குஜராத் போய்ட்டு வர்றீங்க….”

“சொந்தக்காரங்களப் பார்த்துட்டு, வீட்டுக்காரரோட சர்டிபிகேட் ஒண்ணு எடுத்துட்டுவர.. போயிட்டு வர்றோம்.”

“பிரதமர், மோடியோட ஊர் குஜராத் தானே? உங்களுக்கு முதலமைச்சாரா இருந்துருக்காரு, இப்ப பிரதமாராவும் இருக்காரு… ஏன் அந்த ஊர்லய இருந்து வேல செய்து பொழைக்க முடியலயா?” என்றேன்

“நிஜமாவே, தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா. இங்க இருக்கற வசதி, வேலை, மனுசங்க அங்க இல்ல… அங்க எந்த வேலையும் இல்ல.….

புடவைக்கு சமிக்கி, பூ டிசைன் போட்ற வேலை செய்வேன்…. அப்போ டெய்லி 30 ரூபாத்தான் கூலி தருவாங்க….. அதுக்கே, வேலை செய்யறவங்க வீட்டுக்குள்ள போகக்கூடாது…. ரொம்ப கட்டுப்பாடா இருப்பாங்க…  இதுதான் இந்தியா, எல்லா இடத்துலயும் இப்பிடித்தான் இருக்கும்னு நினைச்சேன்.

ஆனா, தமிழ்நாடு சூப்பர்க்கா! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…! இங்க, எங்க வீட்டுக்காரு தனியா இருக்கும்போது யாரும் அவருகிட்ட பழகலயாம், நான் வந்ததுக்கப்புறம் எல்லாரும் நல்லா பழகுறாங்க…. யாரும் இங்க, ‘வீட்டுக்குள்ள வராதேனு’ சொல்லறது இல்ல.

நானும், சென்னை – படப்பையில இருக்குற பீர் கம்பெனியில வேலைப் பார்த்தேன். ரெண்டு கொழந்தைங்களும் இங்கத்தான் டெலிவரி ஆச்சு…. அப்ப, இங்க இருக்கவங்கதான் பாத்துட்டாங்க…..  இப்ப காஞ்சிபுரம் பக்கத்தல வெம்பாக்கத்துல வாடகைக்கு இருக்கோம். ரொம்ப நல்லா இருக்கோம்க்கா. குஜராத்துல அவ்ளோ கஷ்டப்பட்டோம்” என்றார்.

என் பக்கத்திலிருந்தவர்… “ஆமா.. குஜராத்துல, மோடிக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைச்சிட்டு இங்க வந்து நல்லா இருப்பீங்க…..! முதல்ல உங்கள காலி பண்ணி உங்க ஊருக்கு பேக் பண்ணணும்.! இங்க வந்து செட்டிலாயிட்டு பேல்பூரி; பஞ்சு மிட்டாய்; ஜஸ் எல்லாம் வித்து பொழச்சிட்டு அங்கப்போய் மோடிக்கு ஓட்டு போட்டுட்டு வருவீங்க… முதல்ல உங்கள உங்க ஊருக்கே தொரத்துனாத்தான் மோடியோட வில்லத்தனம் புரியும்” என்றார்.

அதற்கு, சிரித்தவாறே பதிலளித்தார் சரிதா;

“இந்த வாட்டி நான் ஓட்டு போடலக்கா, கார்டு இல்லக்கா…

அங்கயும் நரேந்தர மோடிக்கு கிராமத்துல ஆதரவு வயசானவங்க, எங்க மாமியார்; மாமனார்; மாடி வீடு வெச்சிருக்கரவங்களுக்குத்தான் அவர பிடிக்கும். ஏன்னா சாமி, பகவான் மேல அவ்ளோ பக்தியானவங்க… அவர பகவானா பாக்குறாங்க! குடிசைல வாழறவங்களுக்கும், எங்கள மாதிரி கூலி வேலை செய்யறவங்களுக்கு மோடிய புடிக்காது..

“ஆனா ஒரு விஷயத்துல எனக்கு நரேந்தர மோடி பிடிக்கும்..” என்றார்.

“ஏன்?”

“குஜராத்துல வேல இல்ல, ரொம்ப கஷ்டம்.. ன்றதாலத்தானே நாங்க தமிழ்நாடு வந்தோம். அவருதானே எங்கள எங்க ஊரவிட்டு இங்க, அனுப்பினாரு…. இப்ப, எனக்கு தமிழ் தெரியும்… இங்க இருக்கவங்க சொந்தக்காரங்க மாரி ஆயிட்டாங்க. எங்க பொண்ணுங்களும் குஜராத்தி, தமிழ் இங்கிலீஷ்னு படிக்கறாங்க, எங்க பொண்ணு தமிழ்லதான் நிறைய மார்க்கு வாங்கும் 90-க்கு மேல வாங்குது… இதுக்கெல்லாம் காரணம் நரேந்தர மோடிதான்!” என்றார்.

அதற்கு, முருகன் கோயிலுக்கு போயிட்டு வரும் செல்வி, என்பவர்…

“ஒண்ணு மோடிய பிடிக்கணும், இல்ல தமிழ்நாட்ட பிடிக்கணும், தமிழ்நாட்டுக்கு மோடிய பிடிக்காது. மோடிக்கு தமிழ்நாட்ட பிடிக்காது. இது எங்க நிலம…” என்றார் அவர்.

“உங்க பொண்ணு பேர் என்ன?”

“மொத பொண்ணு காவ்யா, ரெண்டாவது திவ்யா…”

“உங்க குஜராத்துல வைக்கிற பேரு மாதிரி இல்லயே?”

“ஆமா..ங்க்கா, தமில்நாட்டுல இருக்கோம் குழந்தைகளுக்கு, நாம தமிழ் பேருதான் வைக்கணும்னு அவங்கப்பா சொல்லிட்டாரு…

ரேஷன் கார்டுக்கூட எங்களுக்கு வாடகை வீடு விட்டவங்க வாங்கிக் குடுத்தாங்க…. இருந்தாலும் இந்த வாட்டி எலக்க்ஷனுக்கு ஓட்டுப்போடல…  ஓட்டர் கார்டு இல்ல, அதுவும் இங்கேயே வாங்கித்தறேனு சொல்லியிருக்காங்க…” என்றார்.

படிக்க:
♦ சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !
♦ “The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது !

மேலும் “இங்க, நாங்க….வேலை செஞ்சு நல்லா சாப்பட்டுக்கினு….. எங்க பொண்ணுங்கள இங்கிலீஷ் மீடியம் படிக்க வைச்சிக்கினு நல்லா இருக்கோம். காரணம் தமிழ்நாடு வந்ததாலத்தான். அதனாலே தமிழ்நாடு பிடிக்கும், தமிழ்நாட்டுக்கு அனுப்பி வெச்ச நரேந்தர மோடியும் பிடிக்கும்.

குஜராத்துல இவ்ளோ வசதி, வேலை எல்லாம் இல்லக்கா…. எங்க அம்மா, அப்பா, மாமா, மாமி அவங்கள இங்க வரச் சொன்னா வரமாட்டாங்க…. வயசானாவங்க, ஆனா….. தம்பி, மச்சினனை கூட்டிப்போக சொல்றாங்க, மெதுவா அவங்களும் இங்க வந்துடுவாங்க….

இங்க எல்லாம் ரொம்ப சூப்பருக்கா…. குஜராத்து ரொம்ப மோசம்….. ட்ரேயினுலக்கூட ஜன்னல்ல, டாப்புலலாம் போவாங்க… சுத்தமே இருக்காது. அங்க…நிம்மதியா மூச்சுக்கூட விட முடியாது. இப்ப அப்படித்தான் மூணு நாளா அந்த டிரெயின்ல வந்தேன்” என்றார்.

“என்ன சாப்பிட்டீங்க… மூணு நாளா ?”

“சாப்பாத்திதான்… சாப்புடுறீங்களா… இன்னும் இருக்கு…” என்றார்.

“என்னாது, மூணு நாளுக்கு முன்ன சுட்ட சாப்பாத்தி இன்னும் இருக்கா?  நீ சொன்னதேப்போதும்…. எங்கிட்ட ஜில் வாட்டர் இருக்கு வேணுமா?” என்றேன்.

“ஆ… எப்படிக்கா? ஜில் வாட்டர்…”னு ஆச்சர்யத்தோட வாங்கிக் குடித்துவிட்டு தன், மகளுக்கும் கொடுத்தார். ரொம்ப தேங்க்ஸ்க்கா…. தமிழ் நாட்டுல எல்லாரும் நல்லா பேசுறீங்க, பழகுறீங்க..” என்றார்.

‘அதானே மோடிக்கு பிரச்சனை?’ என்று நினைத்தேன்…

“வெம்பாக்கம் போக எந்த ஸ்டேஷன் இறங்கணும்?” என்றார்.

“காஞ்சிபுரம் பழைய ரயில்வே ஸ்டேஷன் இறங்கி, ஷேர் ஆட்டோல பஸ்ஸ்டாண்டு…போயி…”

“அங்க இருந்து எனக்கு தெரியும்கா…” என்றார்.

அவர், இறங்கி… மறையும்வரை  எனக்கு, பை சொல்லி மறைந்தார்.

குஜராத் மாடல் வளர்ச்சி அது இதுன்னு ஐஞ்சு வருசமா எத்தனை ரீல் விட்டு பேசுனாங்க.. ஆனா கூட வர்ற ஒரு குஜராத் பொண்ணுகிட்ட இருந்தே இப்பிடி உண்மை வெளிவந்தா நேருல போய் பாத்தா அந்த ஊரு எப்படி இருக்கும்?

காமாட்சி

உடலழகன் போட்டி | அ முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
 உடலழகன் போட்டிக்கு போவதென்பது முடிவாகிவிட்டது. இதற்கு முன்னர் நான் அப்படியான ஒரு போட்டியை பார்க்க எங்கேயும் போனதில்லை. பிரச்சினை என்னவென்றால் நான் ரொறொன்ரோவில் இருந்தேன், போட்டி 350 கி.மீட்டர் தூரத்திலிருந்த ஒட்டாவாவில் நடந்தது. நான் மனைவியிடம் போட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம் என்று கேட்டேன். அவர் ‘காலை ஒன்பது மணி, பழைய நேரம் பத்து மணி’ என்றார்.

ஒக்டோபர் மாதத்து கடைசியில் கனடாவில் நேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்கு தள்ளி வைப்பார்கள். அது என் மனைவியை பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எப்பொழுது நேரம் சொன்னாலும் புதிய நேரத்தையும் பழைய நேரத்தையும் சேர்த்தே சொல்வார். கடந்தவாரம்தான் நேரத்தை மாற்றியிருந்தார்கள். ஆனால் மனைவி ஒரு மாதத்துக்கு தொடர்ந்து நேரத்தை இப்படித்தான் சொல்வார். ‘இப்பொழுது 7 மணி, பழைய நேரம் 8 மணி.’

நாங்கள் இவ்வளவு தூரம் பயணம்செய்து போட்டியை பார்க்க தீர்மானித்ததற்கு காரணம் ஓர் ஈழத்துக்காரர் இம்முறை போட்டியில் கலந்து கொள்கிறார் என்பதுதான். அவருக்கு வயது 35. உடலழகன் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கு கிடையாது. எல்லோரையும்போல தானும் தன்பாடுமாக அவ்வப்போது உடற்பயிற்சி நிலையத்துக்கு போய் வந்தார்.

அங்கே ஒருநாள் கோயிலுக்கு நேர்ந்ததுபோல கட்டுக்கோப்பாக உடம்பை வளர்த்திருந்த ஒரு வெள்ளைக்காரரைச் சந்தித்தார். அவர் ‘ஆசியாக்காரர்களுக்கு சும்மா உடற்பயிற்சி நிலையத்துக்கு வந்து போக மட்டுமே தெரியும். ஒரு போட்டிகளிலும் கலந்துகொள்ள மாட்டார்கள்’ என்று போகிறபோக்கில் சொல்லிவிட்டார். அப்படி அவர் ஏளனமாகப் பேசியது ஈழத்துக்காரருக்கு மனதை உறுத்தி, எப்படியும் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பது மட்டும் தெரியவில்லை.

ஐந்து தடவை கனடா தேசிய சாம்பியனாக வெற்றி பெற்ற ம்போயோ எட்வேர்ட்ஸ்

ஐந்து தடவை கனடா தேசிய சாம்பியனாக வெற்றி பெற்ற ம்போயோ எட்வேர்ட்ஸ் என்பவரை பயிற்சிக்காக ஈழத்துக்காரர் அணுகினார். அவர் இவருடைய குச்சிபோன்ற உடம்பை ஒரு கணம் ஏற இறங்கப் பார்த்துவிட்டு மறுத்துவிட்டார். இவர் விடவில்லை, தொடர்ந்து தனக்கு தெரிந்த மாதிரி பயிற்சிகள் செய்துவந்தார். ஒரு வருடம் கழித்து எட்வேர்ட்ஸை அணுகியபோது மறுபடியும் மறுத்தார். இவருடைய விடா முயற்சியை தொடர்ந்து கவனித்த சாம்பியன் கடைசியில் ஒருநாள் தானாகவே பயிற்சி தருவதற்கு சம்மதித்தார். ஆனால் சில நிபந்தனைகள் இருந்தன. பயிற்சிக்காலம் முழுவதும் மாச்சத்து உணவு கிடையாது. உப்பு, சர்க்கரை இல்லை. போட்டிக்கு முன்னர் 36 மணிநேரம் தண்ணீர் குடிக்கக்கூடாது. உடற்பயிற்சிக்காரர்களுக்காக  விசேடமாகத் தயாரிக்கப்படும் உணவை மட்டுமே உட்கொள்ளவேண்டும்.

ஐந்து வருடமாக தொடர்ந்து பயிற்சி எடுத்து போட்டியில் பங்குபற்றுகிறார். அதை பார்க்கத்தான் நானும் மனைவியும் ஒரு நண்பருமாக ஒட்டாவா புறப்பட்டிருந்தோம். உடல் அழகன் போட்டி நடக்கும் அரங்கத்துக்கு போய்ச் சேர்ந்தபோது ஒரு புது இடத்துக்கு வந்துவிட்டதுபோல இருந்தது. அந்த வகையான கூட்டத்தை நான் முன்னர் கனடாவில் கண்டது கிடையாது.

ஆண்களும் பெண்களும் முற்றிலும் வித்தியாசமானவர்களாக தோற்றமளித்தார்கள். ஆறடி உயரமாக வலுவான தேகத்தில், உடம்போடு ஒட்டிப்பிடிக்கும் டீசேர்ட் அணிந்து புஜங்கள் உருளும் உடம்போடு ஆண்கள் காணப்பட்டார்கள். வந்திருந்த பெண்களில் வயது முதிர்ந்த பெண்கள் அபூர்வம். அநேகமானவர்கள் தசைநார்கள் திரண்டு இளமையாக காணப்பட்ட பெண்கள். எங்கள் மகிழ்ச்சியை இரண்டு மடங்காக்கும் ஒரு தகவல் அப்போது கிடைத்தது. உடல் அழகன் போட்டியுடன் உடல் அழகிப் போட்டியும் அதே மேடையில் நடைபெறுமாம்.

டிக்கட் கொடுக்கும் இடத்தில் நிரையாக நின்றார்கள். நான் ஏற்கனவே தொலைபேசியில் என் பெயரை முன்பதிவு செய்திருந்தேன். எனக்கு முன்னால் ஒருத்தர் மேசையில் இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு டிக்கட் கொடுக்கும் பெண்மணியிடம் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடைய கைகள் திரண்டு ஒரு குழந்தையின் தொடைகள்போல வெளியே தள்ளிக்கொண்டு நின்றன. அவருடைய பின்பக்க காட்சியை பார்த்துக்கொண்டு வரிசை வெகுநேரம் நின்ற பிறகு டிக்கட் பெண் என்னிடம் திரும்பினார். நான் பெயரைச் சொன்னேன். கனடா வந்து இத்தனை வருடங்களாகியும் என் பெயரைச் சொன்னவுடன் புரிந்துகொண்டு டிக்கட்டுகளை தந்தது இதுவே முதல் தடவை.

படிக்க:
நான் சிறுவனாக இருந்தபோது … குழந்தைகளின் நினைவுகள் !
♦ உகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் !

அரங்கம் நிறைந்திருந்தது. பன்னிரண்டு நடுவர்கள் முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். முதலில் பெண்கள் போட்டி. அறிவிப்பாளர் பெயரைச் சொல்ல பெண்கள் நடந்து வந்து மேடையின் நடுவில்  தங்கள் அங்கங்களை பரிசீலனைக்காக நிறுத்தினார்கள். இரண்டு முக்கோணங்கள் தொடுத்த  மார்புக்கச்சும், ஒரு முக்கோண இடைக்கச்சும் அணிந்திருந்ததால் அவர்களுடைய எல்லா அங்கங்களும் துலக்கமாகத் தெரிந்தன. இந்தப் பெண்களின் கைகளும் கால்களும் மெலிந்து தசைநார்கள் இறுகிக் கிடந்தன. விலா எலும்புகள் அத்தனையும் தள்ளிக்கொண்டு நின்றதில் கொழுப்பைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. உடம்பில் எந்த பகுதியிலும் வரிகளோ சுருக்கங்களோ இல்லாமல் வயிறு மடிப்பு மடிப்பாக இறுகி சிலேட் பலகைபோல தட்டையாக காட்சியளித்தது.  நடுவர்கள் இடது தொடை, வலது புஜம், வயிறு, முதுகு என்று அங்கங்களைச் சொல்லச் சொல்ல அவர்கள் அந்தந்த அங்கங்களின் திரட்சியையும், தசை மடிப்பையும் காட்டினார்கள்.

அதில் ஒரு பெண்ணை மறக்கமுடியாது. உயரமாக தங்கமுடி புரள குதிரைபோல டக்டக்கென்று நடந்துவந்தாள். அவளைப் பார்த்ததும் அவளுடைய தசைநார்களுக்கும் எலும்புகளுக்குமிடையில் பெரும் சண்டை நடைபெறுவது தெரிந்தது. போட்டி தொடங்க முன்னரே என்னிடமிருந்த அத்தனை புள்ளிகளையும் அந்தப் பெண்ணுக்கே வழங்கினேன். நடுவர்கள் முதுகு என்றார்கள். அவள் இடதுகையால் முதுகில் வழிந்து கிடந்த பொன்முடியை தூக்கி நிறுத்திக்கொண்டு தன் வலது பக்க முதுகு தசைகளை மட்டும் இறுக்கிக் காட்டினாள். பிறகு டக்கென்று ஒரு சத்தம் கேட்டது. இடது பக்க தசைநார்களை மட்டும் இறுக்கிக் காட்டினாள். இன்னொரு டக் சத்தம். இரண்டு காந்தங்கள் ஒட்டிக்கொள்வதுபோல இரண்டு பக்க முதுகும் ஒட்டிக்கொண்டது. சபையினரின் கைதட்டல் எழுந்தது. நாங்கள் எதிர்பார்த்ததுபோல அவளுக்கே முதலிடம் கிடைத்தது.

ஆண்கள் போட்டிக்காக நாங்கள் காத்துக்கொண்டிருந்தபோது என் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதைப் படித்துப் பார்த்த நான் திடுக்கிட்டேன். போட்டியில் பங்குபற்றும் ஈழத்துக்காரர் அனுப்பியிருந்தார். ‘அவசர உதவி தேவை.  மேடைக்கு வரவும்.’ அவர் முதல் நாளே வந்துவிட்டார். போட்டியாளர்கள் எல்லோரும் பொய் கண்டுபிடிக்கும் கருவி சோதனையில் பாஸாக வேண்டும். அதில் தோல்வியுற்றால் அவர்களுடைய ரத்தத்தில் போதைப்பொருள் சேர்ந்துள்ளதா என்பதை பரிசீலித்துப் பார்ப்பார்கள். ஏதோ பிரச்சினையென்று  நெஞ்சில் பயம் ஏறியது.

என்னுடன் பயணித்த நண்பர் இளவயதுக்காரர்;  உயரமாய் வாட்டசாட்டமாய்  இருப்பார். அவரை மேடைக்குப்போய் பார்த்துவர அனுப்பினேன். சிறிது நேரத்தில் அவர் சிரித்துக்கொண்டே திரும்பினார். போட்டியாளர்கள் முழு உடம்பையும் மழித்து, ஒருவித கறுப்பு எண்ணெயை பூசி போட்டியில் கலந்துகொள்வார்கள். அந்த எண்ணெய் தேய்த்துவிட வேண்டியவர் வரவில்லை. எண்ணெய் பூசினால்தான் தசைநார் மடிப்புகள் மேடை ஒளியில் துல்லியமாகத் தெரியும். நண்பர் அந்த வேலையைத்தான் தனக்கு தெரிந்த அளவுக்கு செய்துமுடித்துவிட்டு திரும்பியிருந்தார்.

எனக்குப் பக்கத்தில் பயில்வான்போல தோற்றமுள்ள ஒருவர் உட்கார்ந்து பெண் போட்டியாளர்களை உரக்கக் கூவி அவ்வப்போது உற்சாகப்படுத்தியதுமல்லாமல் ‘இன்னும் கொஞ்சம் நடுவுக்கு நகர், பின் பக்கத்தைக் காட்டு, காலை முன்னுக்கு மடி, புஜங்களை மேடையை நோக்கி திருப்பு’ என்று கத்திக்கொண்டே இருந்தார்.  இவர் ஒரு பிரபல பயிற்சியாளர் என்பதை நான் பின்னால் அறிந்துகொண்டேன்.

காந்தத்தைப்போல முதுகை ஒட்டவைத்த பெண், போட்டி முடிந்த பின்னர் சபையினுள் நுழைந்தார். அவர் போட்டிக்கு தரித்த முக்கோண உடைக்கு மேலே முன்பக்கம் பூட்டாத மேலங்கி ஒன்றை அணிந்திருந்தார். பயிற்சியாளரை நெருங்கியதும் அவர் அந்தப் பெண்ணின் இரண்டு கொலரையும் பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்தார். பின்னர் அதைத் தொடர்வதற்காகவோ என்னவோ இருவரும் அவசரமாக வெளியேறினார்கள்.

ஆண்களுக்கான போட்டி தொடங்கியபோது அது முற்றிலும் வேறு விதமான காட்சியாக அமைந்தது. அவர்கள் மல்லர்கள் நடந்துவருவதுபோல கால்களை அகலமாக வைத்து மேடையில் தோன்றினார்கள். அவர்களுடைய தொடைகள் பலாக்காய்கள் காய்த்ததுபோல தொங்கின. புஜங்கள் தனித்தனியாக உயிர் பெற்றது போல சும்மா நடக்கும்போதே திரண்டு திரண்டு உருண்டன. கைகளை மடக்குவதும், கால்களை சுழட்டுவதும், வயிற்று தசைகளை ஓடவிடுவதும், முதுகை புத்தகத்தை திறப்பதுபோல அகலிப்பதுமாக பலவிதமான வித்தைகளை ஒவ்வொருவரும் சளைக்காமல் செய்து காட்டினார்கள்.

நடுவர்கள் இதற்கெல்லாம் மயங்கிவிடுபவர்கள் அல்ல. அவர்கள் தசைநார்களின் பருமனையோ அவை உருளும் லாவகத்தையோ கணக்கில் எடுப்பவர்களாகத் தெரியவில்லை. ஒரு உடம்பில் தசைநார்கள் சரியான விகிதத்தில் விருத்தியாகி இருக்கின்றனவா என்பதை கவனித்தார்கள். 5′ 5″ உயரமான ஓர் ஆணின் எடை 160 றாத்தலாக இருக்கவேண்டும். அதற்குமேலான ஒவ்வொரு அங்குல உயரத்துக்கும் எடை 5 றாத்தல் கூடவேண்டுமென்பது விதி. தசைநார்கள் உடம்பு முழுக்க சீராக விருத்தியடைந்திருக்கிறதா என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள். சிலருக்கு கைகள் வளர்ச்சியடைந்திருக்கும் ஆனால் அதே அளவுக்கு முதுகு தசைகள் வளர்ச்சியடைந்திருக்காது. மனித உடம்பில் 640 தசைநார் முறுக்குகள் இடது பக்கம் 320, வலது பக்கம் 320 என்று இருக்கும். இதிலே ஆகக்கூடிய தசைநார்களை சீராகவும் முழுமையாகவும் பெருக்கியிருக்கிறார்களா என்பதைத்தான் நடுவர்கள் பரிசீலிப்பார்கள். அத்துடன் அவற்றை ஒருவர் கவர்ச்சியாக வெளிப்படுத்தும் திறமை பெற்றவராயும் இருத்தல் அவசியம்.

போட்டியில் பங்குபற்றிய அத்தனைபேரும் வெள்ளைக்காரர்கள். இரண்டே இரண்டு கறுப்பு இனத்தவர். ஒரேயொரு தமிழர். போட்டியாளர் ஒவ்வொருவரும் மேடையில் தோன்றும்போது பெரும் கூச்சல் எழும். அவருடைய பயிற்சியாளர், நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கும்.

ஈழத்துக்காரர் மேடையை நோக்கி கணுக்கால் வெள்ளத்தில் நடப்பதுபோல அசைந்து அசைந்து வந்தபோது மூன்றே மூன்று குரல்கள் எழும்பின. அது எங்களுடையதுதான். நடுவர்கள் உத்திரவுப்படி அவர் மேடையில் சுழன்று சுழன்று தேகத்தில் ஐந்து வருடங்களாக பாடுபட்டு வளர்த்துப் பழக்கிய தசை மடிப்புகளையும், திரட்சிகளையும் பல நிலைகளில் பல கோணங்களில் காட்டினார். கறுப்பு எண்ணெயில், மேடையில் பிரகாசித்த குவிய விளக்குகளின் ஒளியில், நண்பரின் தசைக் கட்டங்கள் எல்லாம் நல்லாய் கூராக்கிய கத்திபோல பளிச்சுப் பளிச்சென்று ஒளிவிட்டன. ஆறுதசைக் கட்டம், எட்டு தசைக்கட்டம் என்றெல்லாம் பேசுகிறார்கள். அங்கே மேடையில்  அவை எல்லாம் மிகச் சாதாரணமாகத் தோன்றின.

தேசிய விருதுபெற்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றதாலோ என்னவோ ஈழத்துக்காரரின் அசைவுகள் கச்சிதமாக மேடையில் வெளிப்பட்டன. ஒரு கட்டத்தில் இப்படியெல்லாம் மனித உடலில் சாத்தியமா என்று வியக்கத் தோன்றியது. நடுவர்கள் நெஞ்சை அகலிக்கச் சொன்னார்கள். இவர் நெஞ்சை விரித்ததும் ஒரு வண்ணத்துப்பூச்சி இரண்டு செட்டைகளையும் விரித்ததுபோல அவருடைய மார்பு இரண்டு மடங்காகப் பெருகியது. சபையினர் ஒருகணம் பிரமித்துப் போனது அப்பட்டமாகத் தெரிந்தது.

படிக்க:
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளுக்கு நினைவேந்தல் | வேலூர் , புதுவை !
♦ நீங்கள் எத்தனை பேரைக் கொன்றீர்கள் ? எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

தன்னுடைய முறைக்காக இவர் மேடைக்கு வெளியே காத்திருந்தபோது மற்ற போட்டியாளர்கள் இவரை துச்சமாக மதித்தனர்; மனரீதியாக கலைக்க முயன்றனர். ஒருவர் இவர் புஜத்தின் பருமனை ஆராய்ந்துவிட்டு அது இன்னும் முழுமையாக முதிர்ச்சியடையவில்லை என்றார். இன்னொருவர் கண்ணாடியின் முன் நின்று தன் கைகளை மடக்குவதும், நெஞ்சை அகலிப்பதும், கால்களை பக்கவாட்டில் சுழட்டுவதுமாக தன் பிம்பத்தில் தானே மயங்குவதுபோல நின்றார். எல்லாம் இவரை பயங்காட்டும் முயற்சிதான். நண்பர் ஒன்றையும் சட்டை செய்யாமல் தன் முறைக்காக காத்திருந்தார். இவையெல்லாம் அவர் பின்னால் சொல்லி தெரிந்துகொண்டது.

முதல் சுற்று முடிந்து இரண்டாவது சுற்று தொடங்கியபோது இன்னும் சுவாரஸ்யமாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியாளருக்கும் மேடையில் ஒரு நிமிடம் அளிக்கப்பட்டது. அவர் தேர்வுசெய்த ஒரு பாடலுக்கு, நடன அசைவுகள் மூலம் தன் அங்கத்திலுள்ள அத்தனை தசைநார்களையும் இசைக்கேற்ப முறுக்கிக் காட்டவேண்டும். இரண்டாவது சுற்றில் ஈழத்துக்காரருக்கு நிறையக் கைதட்டல் கிடைத்தது. நடுவர்கள் முடிவை அறிவித்தார்கள். கிழக்கு ஒன்ராறியோ உடலழகன் போட்டியில் ஈழத்துக்காரர் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை செய்திருந்தார்.

வெற்றிபெற்ற மூன்று பேரும் மேடையில் நின்று படம் பிடித்துக்கொண்டபோது  அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்ததை அவதானித்தேன். பின்னால் அது என்னவென்று ஈழத்துக்காரரை விசாரித்தபோது பக்கத்தில் நின்றவர் தனக்கு மயக்கமாகி வருகிறதென்றும் தான் விழுந்தால் தன்னை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் சொன்னார். அதற்கு ஈழத்துக்காரர் என்ன பதிலிறுத்தார் என்று கேட்டேன். ‘எனக்கும் மயக்கம் வருகிறது. நான் விழுந்தால் நீங்கள் பிடியுங்கள்’ என்று தான் அவரிடம் சொன்னதாகக் கூறினார். இந்த மேடைகளில் மயங்கி விழுவது பலமுறை நடந்திருக்கிறது. சராசரி மனித உடம்பில் கொழுப்பு 20 வீதம் இருக்கும். உடலழகன் போட்டியாளர்கள் கொழுப்பு சத்தை நாலு வீதத்துக்கு குறைத்துவிடுவார்கள். சத்து வீதம் அதற்கு கீழே போனால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

போட்டி முடிந்த பின்னர் ஈழத்துக்காரரை மேடைக்கு பின்னால் சென்று சந்தித்தோம். உடைமாற்றி மிகச் சாதாரணமாகத் தோற்றமளித்தார். அரை மணித்தியாலத்திற்கு முன்னர் திரும்பியும் பாராதவர்கள் இப்பொழுது அவரை சூழ்ந்து வாழ்த்தினார்கள். நான் அவரைக் கட்டிப்பிடித்து என் மகிழ்ச்சியை காட்டினேன். ஓர் இரும்புச் சிலையை கட்டிக்கொண்டதுபோல இருந்தது. ஒருவருக்குச் சொல்லவேண்டிய ஆகச் சிறந்த வாழ்த்து புறநானூறில் வருகிறது. ‘என்னுடைய வாழ்நாளும் சேர்த்து நீ வாழவேண்டும்.’ அதற்கு முற்றிலும் தகுதியானவராக அவர் அப்போது எனக்கு தோன்றினார்.

‘தனிமையான போராட்டத்தில் உங்கள் எதிராளிகளை வெல்வீர்கள்’ என்றேன். அவர் ‘இந்தப் போராட்டம் என் எதிராளியை வெல்வதற்கு அல்ல. என் உடம்பை வெல்வதற்கு’ என்றார்.

வெற்றியை கொண்டாட உணவகத்துக்கு போகலாம் என்று தீர்மானித்தோம். யானை போன வழி பாதை என்பார்கள். உணவகத்தை நோக்கி அவர் நடந்தார். அங்கே உண்டான பாதையில் நாங்கள் பின்னால் சென்றோம். கடந்த 18 மாத காலமாக அவர் பயிற்சியாளர் வகுத்த உணவுப் பட்டியல் பிரகாரம் உணவருந்தினார். உப்புச் சேர்க்காத, சர்க்கரை கலக்காத, ஊட்டச்சத்து நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட உணவு. கடந்த 36 மணிநேரமாக அவர் சொட்டு நீர் பருகவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அன்றுதான் முதன்முறையாக அவர் சாதாரண உணவை உட்கொண்டார். உணவுத் தட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரவர அவர் உணவை ருசித்து ருசித்து சாப்பிட்ட காட்சி மறக்கமுடியாதது.

எங்களைச் சுற்றி அந்த உணவகத்தில் போட்டியாளர்களும் நடுவர்களும் வென்றவர்களும் தோற்றவர்களும் இரண்டு கைகளாலும் நிறுத்தாமல் சத்தமெழுப்பியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பரிசாரகி சன்னமான உடை தரித்து, மீன் வலை காலுறையில் பெரிய பெரிய உணவு தட்டங்களை குடைபோல தலைக்குமேல் தூக்கியபடி விரைந்தாள். குருவிக்கூட்டிலிருந்து தலை நீட்டும் குஞ்சுபோல அவள் வெண்கழுத்து பின்னே நீண்டு சாய்ந்திருந்தது. அமெரிக்க கொடி வரைந்த ரீசேர்ட் அணிந்த ஒருத்தர் மேசையை தட்டி பல உணவுகளுக்கு ஆணை கொடுத்தார். பயில்வான்களும் அவர்கள் காதலிகளுமாக உணவகம் நிரம்பியிருந்தது. அடிக்கடி இரண்டு பாம்புகள் முத்தமிடுவதுபோல முன்னால் வளைந்து முத்தமிட்டுக்கொண்டார்கள். அடுத்த நாள் விடியாமல் போகக்கூடும் என்பதுபோல அவசரமாக அத்தனை தட்டங்களையும் அந்தக் கூட்டம் தின்று தீர்த்தது.

‘உங்களை எள்ளலாகப் பேசிய வெள்ளைக்காரருக்கு நீங்கள் பாடம் படிப்பித்துவிட்டீர்கள். இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்?’ என்று கேட்டேன். அவர் பதில் கூறாமல் நீண்டநேரம் யோசித்தார். முகத்தில் தாடை எலும்புகள் எங்கே தொடங்கி எங்கே முடிகின்றன என்பது துலக்கமாகத் தெரிந்தது. முள் சரியான இடத்துக்கு வந்ததும் ரேடியோ பாடுவதுபோல அவர் பதில் சொல்லத் தொடங்கினார். திடீரென்று பேசினாலும் ஏற்கெனவே சிந்தித்ததையே சொன்னார் என்று நினைக்கிறேன். ‘எள்ளலாகப் பேசியவரின் கதை முடிந்துவிட்டது. இனிமேல்தான் என்னுடைய கதை ஆரம்பமாகிறது’ என்றார்.

‘போட்டி மனநிறைவை தந்ததா?’ என்றேன். அவர் ‘இது ஒரு மோசமான போட்டி. டென்னிஸ் போலவோ, கொல்ஃப் போலவோ இன்னொருவருடன் சேர்ந்து ஆடும் ஆட்டம் அல்ல.  3-4 மணிநேரம் தினமும் உடற்பயிற்சி செய்து தயாரிக்கவேண்டும். அந்த நேரத்தை என் குடும்பதினரிடம் இருந்துதான் நான் திருடினேன். கட்டுப்பாடான உணவுப் பழக்கம்; மிக மிகத் தனிமையான உழைப்பு. பல நேரங்களில் உங்கள் மீதும், உலகத்தின் மீதும் வெறுப்பு ஏற்படும். உடலை வருத்திப் பிழிந்து கிடைத்த வெற்றிதான் இது’ என்றார்.

எனக்கு பேராசிரியர் ரோபர்ட் கேர்ன்ஸ் நினைவுக்கு வந்தார். அவர் கண்டுபிடித்த கார் கண்ணாடி துடைப்பானை ஃபோர்ட் கார் கம்பனி திருடிவிடுகிறது. பேராசிரியர்,  ஃபோர்ட் கம்பனிமீது வழக்கு தொடுத்து 12 வருடங்களாக நீதிக்காக போராடுகிறார். அவருக்கு வேலை பறிபோகிறது; மனைவி பிள்ளைகள் அவரை விட்டு விலகுகிறார்கள். நண்பர்கள் உதாசீனம் செய்கிறார்கள். அப்படியும் விடாமல் தனித்து நின்று போராடி பேராசிரியர் வெல்கிறார். ‘தனிமையான போராட்டத்தில் உங்கள் எதிராளிகளை வெல்வீர்கள்’ என்றேன். அவர் ‘இந்தப் போராட்டம் என் எதிராளியை வெல்வதற்கு அல்ல. என் உடம்பை வெல்வதற்கு’ என்றார்.

பகீரதன் விவேகானந்

நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டோம். பனிக்காலம் தொடங்கிவிட்டாலும் சில மரங்கள் தங்கள் கடைசி இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. கனடாவின் 143 வருட சரித்திரத்தில் முதன்முதலாக ஓர் ஈழத்தமிழர் உடலழகன் போட்டியில் பங்குபற்றியதுமல்லாமல் இரண்டாவது இடத்தையும் வென்றிருந்தார். அவர் பெயர் பகீரதன் விவேகானந்.

ஒரு மேப்பிள் இலை உதிர்ந்ததுபோல, ஒரு குறுக்கெழுத்துப் புதிர் பூர்த்தியானதுபோல, ஒரு வீதி விளக்கு சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியதுபோல இந்தச் சம்பவம் மிகச் சாதாரணமாக மறக்கப்பட்டுவிடும்.

கனடாவில் வெளியாகும் 9 தமிழ் பத்திரிகைகளில் ஒன்றுகூட இதுபற்றி எழுதப்போவதில்லை. நடைமுறையில் இருக்கும் உச்சபட்ச வேக விதிகளை புறக்கணித்து எங்கள் கார் இடையில் ஓர் இடமும் நிற்காமல் ஓடியது. நாங்கள்  ரொறொன்ரோ வந்து சேர்ந்தபோது இரவு நேரம் 11.00 மணி. பழைய நேரம் 12.00 மணி.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

கால்களை அறுத்து அகற்றுவதை விடச் சாவே மேல் …

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 2

‘கர்னல்கள் வார்டு’ என அழைக்கப்பட்ட வார்டு ஒப்பு நோக்கில் சிறிய அறைதான். பிளாச்சுத் தரையில் பதிந்திருந்த கரும்பழுப்புத் தடங்களைக் கொண்டு போருக்கு முன் அதில் இரண்டு மஞ்சங்களும் இரண்டு சிறு மேஜைகளும் நடுவே ஒரு பெரிய மேஜையும் இருந்தன என்று அனுமானிக்க முடிந்தது. இப்போது அறையில் நான்கு கட்டில்கள் இருந்தன. ஒன்றில் தலையோடு காலாகப் பட்டித்துணி கட்டப்பட்டு, துணியால் சுருட்டப்பட்ட புதிதாய்ப் பிறந்த குழந்தை போலக் காணப்பட்ட காயமடைந்த வீரன். அவன் எப்போதும் நிமிர்ந்து படுத்து, பட்டித்துணிகளின் ஊடாக விட்டத்தை அசைவற்ற உணர்வற்ற விழிகளால் வெறித்தே நோக்கிக்கொண்டிருந்தான். அலெக்ஸேயின் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு கட்டிலில் படுத்திருந்தவர் துடியான ஆள். அம்மைத்தழும்புள்ள அவரது திரைத்த முகம் படைவீரத் தோற்றம் கொண்டிருந்தது. அரும்பு மீசை வெளேரென்று நரைத்திருந்தது. பிறருக்கு உதவும் சுபாவமுள்ள கலகலப்பான மனிதர் அவர்.

மருத்துவமனையில் ஆட்கள் விரைவில் பழகிவிடுவார்கள். அம்மைத் தழும்புக்காரர் சைபீரியாவாசி; அரசாங்கப் பண்ணைத் தலைவராக இருந்தவர், போர்த் தொழிலில் ஸ்னைப்பர் எனப்படும் குறிதவறாது சுடும் மறைமுகத் தாக்குவீரர்; வெற்றிகரமான தாக்குவீரர் என்ற விவரங்களை எல்லாம் அலெக்ஸேய் மாலை நேரத்துக்குள் தெரிந்து கொண்டுவிட்டான். அந்த மனிதர் “சோவியத் யூனியனின் வீரர்” என்ற பட்டம் பெற்றவர். தமது குலப்பெயரைக் கூறியதுமே அலெக்ஸேய் அவருடைய எளிய உருவத்தை ஆவலுடன் நோக்கினான். அந்த நாட்களில் இப்பெயர் இராணுவத்தில் விரிவாகப் பிரபலமாயிருந்தது. பெரிய செய்தித் தாள்கள் இவரைப் பற்றித் தலையங்கங்கள் கூட எழுதியிருந்தன. மருத்துவமனையில் யாவரும் – மருத்துவத்தாதிகளும் மருத்துவர்களும் வஸீலிய் வஸீலியெவிச்சுமே கூட – அவரை ஸ்தெபான் இவானவிச் என்று மரியாதையுடன் அழைத்தார்கள்.

பட்டித்துணிக் கட்டுகளுடன் கிடந்த நான்காவது ஆள் நாள் பூராவும் தன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. பொதுவாகவே அவன் வாய்மூடி மெளனியாக இருந்தான். ஆனால், உலக நடப்பை எல்லாம் அறிந்த ஸ்தெபான் இவான்விச் அவனுடைய வரலாற்றை அலெக்ஸேய்க்குக் கொஞ்சங்கொஞ்சமாக விவரித்தார். இவன் பெயர் கிரிகோரிவ் க்வோஸ்தயேவ். அவன் டாங்கிப் படை லெப்டினென்ட், அவனும் “சோவியத் யூனியனின் வீரன்” என்ற பட்டம் பெற்றவன். டாங்கிப் பயிற்சிக் கல்லூரியிலிருந்து நேரே இராணுவத்துக்கு வந்திருந்தான்.

போர் தொடங்கிய நாள் முதலே சண்டையில் பங்கு கொண்டான். பெலஸ்தோக் என்னும் இடத்தின் அருகே நடந்த புகழ் பெற்ற டாங்கிப் போரில் தனது டாங்கியை இழந்துவிட்டான். அக்கணமே அவன் கமாண்டரை இழந்த மற்றொரு டாங்கியில் ஏறிக் கொண்டு, டிவிஷனின் எஞ்சிய டாங்கிகளுடன் பகைவரைத் தாக்கி, மீன்ஸ்க் நகரை நோக்கிப் பின்வாங்கிய சோவியத் படைகளுக்குக் காப்பு அளித்தான். பூக் ஆற்றின் கரையில் நடந்த போரில் அவன் இரண்டாவது டாங்கியையும் பறி கொடுத்து விட்டான், தானும் காயமடைந்தான். எனினும், மற்றொரு டாங்கியில் ஏறிக் கொண்டு கொல்லப்பட்ட கமாண்டரின் இடத்தில் டாங்கிக் கம்பெனியின் தலைமையை ஏற்றான். பிறகு ஜெர்மானியரின் பின்புலத்தைச் சேர்ந்து மூன்று டாங்கிகள் கொண்ட இயங்கும் படைப்பிரிவை அமைத்து ஜெர்மானியரின் பின்புலத்துக்குள் வெகுதூரம் புகுந்து சென்று வண்டித் தொடர்களையும் படையணிகளையும் தாக்கியவாறு சுற்றித் திரிந்தான்.

அவன் பிறந்த இடம் தரகபூஷ் என்ற நகர்புறத்தில் இருந்தது. சோவியத் தகவல் நிலையத்தின் வாயிலாக டாங்கி வீரர்கள் ஒழுங்காகக் கேட்டு வந்தார்கள். போர்முனை தனது சொந்த ஊர் வரை சென்றுவிட்டது என்பதை அந்த செய்தி அறிக்கைகள் மூலம் க்வோஸ்தயேவ் தெரிந்து கொண்டதும் அவனால் தாங்க முடியவில்லை. தனது மூன்று டாங்கிகளையும் வெடிவைத்து தகர்த்துவிட்டு எஞ்சியிருந்த எட்டு படைவீரர்களுடன் காடுகள் வழியே ஊரை நோக்கி நடந்தான்.

போர் தொடங்குவதற்கு சற்று முன் அவன் தன் ஊரை அடைந்தான். கிராமப் பள்ளி ஆசிரியையான அவன் தாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தாள். முதிய விவசாய நிபுணரும் உழைப்பாளிப் பிரநிதிகளின் மாவட்ட சோவியத் உறுப்பினருமான அவனுடைய தந்தை மகனை இராணுவத்திலிருந்து திரும்பும்படி அழைத்திருந்தார்.

ஊரை நெருங்குகையில் க்லோஸ்தியேவ் தனது வீட்டையும் பழைய காட்சிகளையும் நினைவுபடுத்திக் கொண்டான். அவனது உயரமற்ற மரவீடு பள்ளியின் அருகே இருந்தது. சிறுகூடான மெலிந்த மேனியளான அவனது தாய் பழைய சோபாவில் ஒன்றும் ஏலாத நிலையில் படுத்திருப்பாள். தகப்பனார் பழைய மோஸ்தரில் தைத்த டஸ்ஸோர் பட்டுக் கோட்டு அணிந்து, நோயாளியின் சோபா அருகே அமர்ந்து கவலையுடன் இருமியவாறு நரைத்த தாடியை உருவிக்கொண்டிருப்பார். சிறுமிகளான மூன்று தங்கைகள் சிறு கூடான மேனிகளும் சமாள நிறமுமாக அம்மாவையே உரித்து வைத்தாற் போல் இருப்பார்கள். கிராம உதவி மருத்துவப் பெண் ஷேன்யாவையும் அவன் நினைவுக்கூர்ந்தான். அவள் நீல விழியாள். ஒடிசலாக இருப்பாள். ரெயில் நிலையம் வரை வண்டியில் வந்து அவனை வழியனுப்பினாள் அவள். தினந்தோறும் அவளுக்குக் கடிதம் எழுதுவதாக அவன் வாக்களித்தான்…

இப்போது ஊரில் க்யோஸ்தியேவ் கண்ட காட்சி மிகத் துயர் நிறைந்த அனுமானங்களை விடப் பயங்கரமாக இருந்தது. வீட்டையோ கிராமத்தையோ அவன் காணவில்லை. எரிந்து கரிந்த அழிபாடுகளின் இடையே தத்திக் குதிப்பதும் முணுமுணுப்பதுமாகவும் ஓரளவு மூளை புரண்டும் இருந்த ஒரு கிழவியிடமிருந்து கிராமத்தில் நடந்தவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டான் க்யோஸ்தியேவ்.

புகையினால் அவர்களுக்கு மூச்சுத் திணறியது. பழுக்கக் காய்ந்த கவசமூடி அவர்களைப் பொசுக்கியது. அவர்களுடைய உடைகள் எரிந்து கருகின. ஆயினும் அவர்கள் விடாது போரிட்டார்கள்.

ஜெர்மானியர் நெருங்கிவந்த சமயத்தில் பள்ளி ஆசிரியையின் உடல்நிலை மிகவும் மோசமாயிருந்ததால் அவளை வெளியே இட்டுச் செல்லவும் முடியாமல் கிராமத்திலேயே விடவும் மனமின்றி விவசாய நிபுணரும் புதல்விகளும் தயங்கிக் கொண்டிருந்தார்களாம். உழைப்பாளிப் பிரதிநிதிகளின் மாவட்ட சோவியத் உறுப்பினருடைய குடும்பம் கிராமத்தில் தங்கியிருப்பதை ஹிட்லர் படையினர் தெரிந்து கொண்டார்களாம். குடும்பத்தினரைப் பிடித்து வீட்டின் பக்கத்திலிருந்த பிர்ச் மரத்தில் அன்று இரவே தூக்கு போட்டுவிட்டு வீட்டை எரித்துவிட்டார்களாம். க்யோஸ்தியேவ் குடும்பத்தினருக்காக வேண்டிக்கொள்ளும் பொருட்டு ஷேன்யா தலைமை ஜெர்மான் அதிகாரியிடம் போனாளாம். அவள் வெகு நெரம் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் ஜெர்மன் அதிகாரி அவளைத் தன் ஆசைக்கிழத்தி ஆக்கிக்கொள்ள முயன்றதாகவும் ஜனங்கள் பேசிக்கொண்டார்களாம்.

உண்மையில் என்ன நடந்தது என்பது கிழவிக்குத் தெரியாதாம். அதிகாரி தங்கியிருந்த வீட்டிலிருந்து ஷேன்யாவின் பிணம் மறு நாள் வெளியே கொண்டுவரப்பட்டதாம். இரண்டு நாட்கள் ஆற்றின் அருகே கிடந்ததாம்.

கிழவி கூறியதைக் கேட்ட க்யோஸ்தியேவ் ஒரு வார்த்தை பேசவில்லை, ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை.

ஜூன் மாதக்கடைசியில், ஜெனரல் கோனெவின் சேனை மேற்குப் போர்முனையில் தாக்கு நடத்திய சமயத்தில், கிரிகோரிய் க்யோஸ்தியேவ் தனது படைவீரர்களுடன் ஜெர்மன் முனையைப் பிளந்து ஊடுருவி விட்டான். ஆகஸ்டு மாதம் அவனுக்கு புதிய டாங்கி, புகழ்பெற்ற “டி-34” ரக டாங்கி, தரப்பட்டது. குளிர் காலத்துக்குள் அவன் “அளவு மீறிய” மனிதன் என்று பெயர் வாங்கிவிட்டான். அவனைப் பற்றிக் கதைகள் சொல்லப்பட்டன, பத்திரிக்கைகள் எழுதின. இவை நம்ப முடியாதவையாகத் தோன்றின என்றாலும் உண்மையில் நிகழ்ந்திருந்தன.

உதாரணமாக அவன் ஒரு முறை வேவு பார்க்க அனுப்பப்பட்டான். இரவில் ஜெர்மானியக் காப்பரண்களின் ஊடாகத் தனது டாங்கியில் முழு வேகத்துடன் புகுந்து, சுரங்க வெடிகள் புதைக்கப் பட்டிருந்த திடலை விபத்தின்றிக் கடந்து, ஜெர்மானியர் வசமிருந்த நகருக்குள் குண்டுகளைப் பொழிந்து பீதியைக் கிளப்பியவாறு தாக்கி நுழைந்தான். செஞ்சேனைப் பிரிவுகள் அந்நகரை அரை வளைவில் இறுக்கிக் கொண்டிருந்தன. கயோஸ்தியேவ் ஜெர்மானியரைக் கதி கலங்க அடித்தவாறு நகரை ஊடுருவி, மறுகோடியில் இருந்த சோவியத் படைகளைச் சேர்ந்துவிட்டான். இன்னொரு தடவை, ஜெர்மானியப் பின்புலத்தில் பதுங்குக்கிடங்கிலிருந்து திடீரெனப் பாய்ந்து குதிரை வண்டித் தொடர் மீது டாங்கியை மோதிப் பட்டைச் சக்கரங்களால் நொறுக்கித் துவைத்துவிட்டான்.

குளிர்காலத்தில் ஒரு சிறு டாங்கிப் பிரிவுக்குத் தலைமை ஏற்று, ஷெவ் நகரின் அருகில் அரண் செய்யப்பட்ட கிராமத்தின் காவற்படையை அவன் தாக்கினான். வெளிப் புறத்திலேயே, தற்காப்புப் பகுதியை டாங்கிகள் கடக்கும்போது திரவ எரிபொருள் குப்பி ஒன்று அவனது டாங்கிக்குள் படாரென்று வெடித்தது. புகை மண்டிய, மூச்சு முட்டச் செய்யும் தழல், டாங்கியைச் சூழ்ந்து மூடியது. ஆனால், டாங்கி வீரர்கள் தொடர்ந்து போரிட்டார்கள். க்யோஸ்தியேவும் முற்றுகையைப் பிளந்து தன்னுடன் வெளியேறியவர்களிலிருந்து அவன் பொறுக்கி எடுத்திருந்த துணைவீரர்களும் பெட்ரோல் தொட்டியோ குண்டுகளோ வெடிப்பதனால் தாங்கள் எக்கணமும் சாக நேரிடும் என்பதை அறிந்திருந்தார்கள்.

புகையினால் அவர்களுக்கு மூச்சுத் திணறியது. பழுக்கக் காய்ந்த கவசமூடி அவர்களைப் பொசுக்கியது. அவர்களுடைய உடைகள் எரிந்து கருகின. ஆயினும் அவர்கள் விடாது போரிட்டார்கள். டாங்கியின் பட்டைச் சக்கரங்கள் அருகே வெடித்த கனத்த குண்டு டாங்கியைக் குப்புறக் கவிழ்த்து விட்டது. வெடிப்பு அலை காரணமாக வெடியால் கிளத்தப்பட்ட மணலும் வெண்பனியும் காரணமாகவோ டாங்கியில் எரிந்த தழல் அணைந்துவிட்டது. உடம்பெல்லாம் எரிந்து அழன்ற நிலையில் க்யோஸ்தியேவ் டாங்கியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டான். கொல்லப்பட்ட பீரங்கி வீரன் அருகே, அவன் இடத்தை தான் ஏற்றுக் கொண்டு டாங்கியின் பீரங்கிமேடையில் உட்கார்ந்திருந்தான்….

அவன் மருத்துவமனைக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே அவன் இத்தனை நாட்களாக ஊசலாடிக் கொண்டிருந்தான். உடல்நிலை சீர்படும் என்ற நம்பிக்கையே அவனுக்கு இல்லை, எதிலும் அக்கறையோ ஆர்வமோ இல்லை. சில வேளைகளில் நாள் பூராவும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் இருந்துவிடுவான்.

படுகாயம் அடைந்தவர்களின் உலகம் வழக்கமாக வார்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும். தவிரவும் படுகாயமுற்றவனுக்கு அலுப்பூட்டும்படி மெதுவாக நகரும் மருத்துவமனை நாட்களை முற்றாக எப்போதும் நிறைத்திருப்பது, அவனுடைய எண்ணங்களைத் தன்னுடன் பிணித்திருப்பது அவனது காயம்தான். இந்தக் காயம், வீக்கம் அல்லது அங்க முறிவைப் பற்றி எண்ணியவாறே அவன் உறங்குகிறான், கனவில் இவற்றையே காண்கிறான், கண்விழித்ததுமே வீக்கம் குறைந்து விட்டதா, சிவப்பு நிறம் போய்விட்டதா, காய்ச்சல் அதிகமாகி இருக்கின்றதா தணிந்துவிட்டதா என்று அறியப் பதைபதைப்புடன் முற்படுகிறான். இரவின் நிசப்தத்தில் கூர்ந்து கவனிக்கும் காது ஒவ்வொரு சரசரப்பையும் பன்மடங்காகப் பெருக்கிக்கொள்வது போலவே இங்கே தனது உடல் நலக்கேடு பற்றிய ஒரு முனைப்பான தியானம் காயங்களை இன்னும் வேதனை தருபவை ஆக்கிற்று. மிகத்திண்மையும் மனவுறுதியும் உள்ளவர்களைக்கூட, போரில் சாவைக் கலங்காமல் நேரிட்டு நோக்கியவர்களைக்கூட, தலைமை மருத்துவரின் குரலில் ஒலிக்கும் சின்னஞ்சிறு வேறுபாடுகளைக் கூடத் திகிலுடன் உற்றுக் கேட்கும்படியும், நோயின் போக்கு பற்றி வஸீலிய் வஸீலியெச்சின் கருத்தை அவரது முகத் தோற்றத்தைக் கொண்டு ஊகிக்க பதைக்கும் நெஞ்சுடன் முயலவும் அது கட்டாயப்படுத்தியது.

தன் மனம் படும் பாட்டை மெரேஸ்யெவ் கவனத்துடன் மறைத்தான். மருத்துவர்களின் உரையாடலில் தனக்கு அக்கறை இல்லை போலக் காட்டிக் கொண்டான். எனினும் மின்னோட்டம் பாய்ச்சுவதற்காகக் கால் கட்டுகள் அவிழ்க்கப்பட்ட ஒவ்வொரு தடவையும் துரோகத் தன்மை கொண்ட கருஞ்சிவப்பு நிறமும் புறவடிகளில் வர வர மேலே மேலே ஏறி வருவதைக் கண்டு, அச்சத்தால் அவன் கண்கள் பரக்க விழிக்கும்.

முதிய படகோட்டி அர்க்காஷா மாமா போல நொண்டியாகக் கட்டைக் கால்களுடன் காலந்தள்ள வேண்டிவருமோ? ஆற்றில் குளிப்பதற்கு, அவரைப் போலவே கட்டைக் கால்களைக் கழற்றிக் கரையில் வைத்துவிட்டுக் குரங்கு போலக் கைகளை ஊன்றி நகர்ந்து நீரில் விழ வேண்டியிருக்குமோ?..

அவனுடைய சுபாவத்தில் நிம்மதியின்மையும் ஏக்கமும் நிறைந்து விட்டன. கண்டிப்பான, கொஞ்சங் கொஞ்சமாக அதிகரித்த சிறந்த மருத்துவமனை உணவு அவனுடைய சக்தியை விரைவாக முன்னிலைக்குக் கொண்டுவந்துவிட்டது என்பது உண்மையே. கட்டுகளை மாற்றும் போதும் கதிர்வீச்சுச் சிகிச்சை அளிக்கும் போதும் அவனுடைய நொய்ந்த உடலைக் கண்டு பயிற்சி மருத்துவ யுவதிகள் முன்போல அரண்டு விழிப்பதில்லை.

ஆனால், அவன் உடம்பு எவ்வளவு விரைவாக வலுவடைந்ததோ அவ்வளவு விரைவாக அவனுடைய கால்கள் மோசமாகிக் கொண்டு போயின. சிவப்பு நிறம் புறவடிகளைக் கடந்து கணுக்கால்கள் வழியே மேலே பரவியது. விரல்கள் முற்றிலும் உணர்வு இழந்துவிட்டன. மருத்துவர்கள் அவற்றை ஊசிகளால் குத்தினார்கள். இந்த ஊசிகள் உடம்புக்குள் நுழைந்தன, எனினும் அலெக்ஸேய்க்கு வலியை உண்டாகவில்லை. வீக்கம் பரவுவதை ‘முற்றுகை’ என்ற விந்தைப் பெயரால் அழைக்கப்பட்ட புது முறையால் மருத்துவர்கள் தடுத்துவிட்டார்கள். ஆனால், வலி அதிகரித்தது. அது தாங்கவே முடியாதது ஆகிவிட்டது. பகலில் அலெக்ஸேய் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு சத்தமில்லாமல் படுத்திருப்பான். இரவில் வார்டு மருத்துவத்தாதி க்ளாவ்தியா மிஹாய்லவ்னா அவனுக்கு மோர்பியா இஞ்செக்ஷன் கொடுப்பாள்.

மருத்துவர்களின் உரையாடல்களில் ”அறுத்து அகற்றி விடுதல்” என்ற சொற்றொடர் மிக அடிக்கடி கேட்கலாயிற்று. வஸிலிய் வஸிலியெவ்ச் சில வேளைகளில் அலெக்ஸேயின் கட்டில் அருகே நின்று, “என்ன, ஊர்வான், வலிக்கிறதோ? வெட்டி எடுத்து விடுவோமா, ஊம்? ‘சரக்’ – தீர்ந்தது காரியம் என்பார்.”

அலெக்ஸேயின் உடல் முழுவதும் உறைந்து குறுகிவிடும். வாய்விட்டுக் கத்தாமல் இருப்பதற்காகப் பற்களை இறுக்கிக் கொண்டு அவன் தலையை அசைக்க மட்டும் செய்வான்.

“நல்லது, துன்பப்படு துன்பப்படு, உன் பாடு. இதோ அதையும் செய்து பார்ப்போம்” என்று கோபத்துடன் முணுமுணுத்துப் புதிய சிகிச்சை முறையைக் குறிப்பார் தலைமை மருத்துவர்.

வார்டிலிருந்து அவர் சென்றதும் கதவு சாத்தப்படும், ஆளோடியில் மருத்துவர்களது காலடிச் சத்தம் அடங்கிவிடும், அலெக்ஸேயோ மூடிய விழிகளுடன் படுத்தவாறே “கால்கள், கால்கள், என் கால்கள்…” என்று எண்ணமிடுவான். கால்களை இழந்துவிட நேருமோ? தன் ஊர் கமீஷினில் இருக்கும் முதிய படகோட்டி அர்க்காஷா மாமா போல நொண்டியாகக் கட்டைக் கால்களுடன் காலந்தள்ள வேண்டிவருமோ? ஆற்றில் குளிப்பதற்கு, அவரைப் போலவே கட்டைக் கால்களைக் கழற்றிக் கரையில் வைத்துவிட்டுக் குரங்கு போலக் கைகளை ஊன்றி நகர்ந்து நீரில் விழ வேண்டியிருக்குமோ?..

இந்த மனத் துன்பம் வேறு ஒரு நிலைமை காரணமாக இன்னும் அதிகமாயிற்று. மருத்துவமனையில் சேர்ந்த முதல் நாளே அவனுக்குக் கமீஷினிலிருந்து சில கடிதங்கள் கிடைத்தன. தாயாரின் முக்கோண மடிப்புக் கடிதங்கள் பொதுவாகத் தாயாரின் எல்லாக் கடிதங்களையும் போலவே சுருக்கமாக இருந்தன. அவற்றில் பாதிக்குமேல் உறவினர்களின் வணக்கங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. வீட்டில் எல்லாம் கடவுள் அருளால் நலம் என்றும், அலெக்ஸேய் தாயாரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் தேறுதல் அளிக்கும் உறுதி சொற்கள் எழுதப்பட்டிருந்தன. மறுபாதியில், தன்னை ஜாக்கிரதையாகப் பேணிக்கொள்ளும்படியும், குளிர் தாக்க இடங்கொடுக்காமல் இருக்கும்படியும், கால்களை நனைத்துக் கொள்ளாமல் இருக்கும் படியும், அபாயமான இடங்களுக்குப் போகாதிருக்கும் படியும் பகைவனின் துரோகம் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படியும் அலெக்ஸேயிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

மாணவர்கள் போன்று கொட்டை கொட்டையான உருண்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த நீல உறைகளில் தொழிற்சாலைக் கல்லூரியில் அலெக்ஸேயுடன் படித்த மாணவியின் கடிதங்கள் இருந்தன. அவள் பெயர் ஓல்கா. கமீஷினில் உள்ள மரத் தொழிற்சாலையில் தொழில்நுட்ப நிபுணியாக அவள் இப்போது வேலை செய்து வந்தாள். புத்திளமைப் பருவத்தில் அலெக்ஸேயும் இதே தொழிற்சாலையில் உலோகக் கடைச்சற்காரனாக வேலைப் பார்த்திருந்தான். இந்த யுவதி பிள்ளைப்பருவத் தோழி மட்டும் அல்ல. அவளுடைய கடிதங்களும் அசாதரணமானவையாக, தனிச் சிறப்பு உள்ளவையாக இருந்தன. அலெக்ஸேய் அவற்றைப் பல தடவை படித்தான். மறுபடி மறுபடி அவற்றைக் கவனமாகப் படித்து, மிக மிகச் சாதாரணமான வரிகளில் தனக்கே முழுமையாக விளங்காத, களி நிறைந்த, உள்ளர்த்தத்தைத் தேடுவான்.

அதிகாரி தங்கியிருந்த வீட்டிலிருந்து ஷேன்யாவின் பிணம் மறுநாள் வெளியே கொண்டுவரப்பட்டதாம். இரண்டு நாட்கள் ஆற்றின் அருகே கிடந்ததாம். கிழவி கூறியதைக் கேட்ட க்யோஸ்தியேவ் ஒரு வார்த்தை பேசவில்லை, ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை.

தனக்கு வேலை ஒரேயடியாக நெரிவாகவும், அப்போது இரவில் உறங்குவதற்குக் கூடத் தான் வீட்டுக்குப் போவதில்லை என்றும், நேரத்தை வீணாக்காமல் இருக்கும் பொருட்டு அலுவலகத்திலேயே உறங்கி விடுவதாகவும், தனது தொழிற்சாலையை இப்பொழுது அலெக்ஸேயால் அடையாளமே கண்டுகொள்ள முடியாது என்றும் தற்போது தொழிற்சாலையில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அறிந்தால் அவன் பிரமித்துப் போய், சந்தோஷ மிகுதியால் வெறி கொண்டுவிடுவான் என்றும் எழுதியிருந்தாள் ஓல்கா.

தனக்கு ஓய்வு நாட்கள் மாதத்துக்கு ஒரு தடவைக்கு மேல் கிடைப்பதில்லை என்றும் அந்த நாட்களில் அவனுடைய தாயாரைப் போய்ப் பார்ப்பதாகவும், அலெக்ஸேயின் அண்ணன்மாரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை என்றும் எனவே முதிய தாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், தாயாரின் வாழ்க்கை கடினமாக இருக்கிறது என்றும், சமீபத்தில் அவள் அடிக்கடி நோய்வாய்படுவதாகவும் ஓல்கா நடுவில் குறித்திருந்தாள். தாயாருக்கு மிக நிறைய எழுதும்படியும் கெட்ட செய்திகளால் அவளைக் கலவரப்படுத்தாமல் இருக்கும்படியும் ஏனெனில், இப்போது தாயின் ஒரே நம்பிக்கையாக இருப்பவன் அவன்தான் என்றும் அவள் அலெக்ஸேயைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

படிக்க:
பழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் !
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !

ஆகவே, மருத்துவர்களின் பேச்சில் “அறுத்து அகற்றி விடுதல்” என்ற சொற்கள் அடிக்கடி அடிபடத் தொடங்கவே அவன் திகில் அடைந்தான். நொண்டியாக அவன் ஊருக்கு எப்படிப் போவான்? தனது கட்டைக்கால்களை ஓல்காவுக்கு எப்படிக் காட்டுவான்? போர் முனையில் புதல்வர்களையும் பறிகொடுத்துவிட்டு, கடைசி மகனான அலெக்ஸேயை எதிர்பார்க்கும் தாயாருக்கு அவன் எப்படி அதிர்ச்சி உண்டாக்குவான்?

“அறுத்து அகற்றுவதா? இல்லை, அது மட்டும் வேண்டாம். இதை விடச் சாவே மேல்… எத்தகைய கொடூரமான, முள்ளாய் தைக்கும் சொல்! அறுத்து அகற்றுதல்! கூடவே கூடாது. இது மட்டும் நடக்கவிடக்கூடாது!” என எண்ணிக் கொண்டான் அலெக்ஸேய். சற்று பொறுத்திருப்பது என்று தீர்மானித்து, தான் செளகரியமாக வாழ்வதாகவும், போர் நெருக்கடி அற்ற பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தாயாருக்கும் ஓல்காவுக்கும் எழுதினான். முகவரி மாற்றத்துக்கு காரணம் கற்பிப்பதற்காக, உண்மைபோல் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் பின்புலத்தில் பணியாற்றுவதாகவும் விசேஷப் பொறுப்பு ஒன்றை நிறைவேற்றுவதாகவும், இங்கே இன்னும் நீண்ட காலம் இருக்க வேண்டும் போல் தோன்றுவதாகவும் தெரிவித்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை