Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 514

ஓவியாதான் பத்ரி சேஷாத்ரி ! காயத்ரிதான் ஹெச். ராஜா !

12

பிக்பாஸ் இரசிக்கப்படுவது ஏன்? இறுதி பாகம்

பிக்பாஸ் போட்டியாளர்களை அரசியல் – சமூகம் – ஆளுமை சார்ந்து மக்கள் பரிசீலிப்பது சரியா?

நீயா நானா நிகழ்ச்சி மூலம் சாலமான் பாப்பையாக்களின் ஏட்டிக்குப் போட்டி பட்டிமன்றங்களை மேலும் மலிவாக்கி மக்களை பயிற்றுவித்திருக்கிறது விஜய் டி.வி. அதையே பிக்பாஸ் போட்டியிலும் மக்கள் செய்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் எந்த அளவு அரசியல் சமூக கருத்துக்கள் அரட்டையில் வருகிறதோ அந்த அளவுக்கு சமூக  வலைத்தளங்களில் அனல் பறக்கும். மெரினா, தலித், எச்ச, ஆணாதிக்கம் என நாளுக்கு ஒன்றாய் தமிழ் இணையம் பேசுகிறது.

இதற்காகவே அத்தகைய காட்சி நறுக்குகளை பொருத்தமான இடத்தில் எடிட் செய்து காட்டுகிறார்கள். இதுபோக போட்டியாளர்களுக்கு முதலிலேயே கவுன்சிலிங் கொடுத்து ‘விளையாட்டை ஆடுவது’ குறித்தும் விளக்கியிருப்பார்கள். மேலும், என்னதான் நட்சத்திர வசதி வீட்டில் இந்த சினிமா மாந்தர்களை வைத்தாலும் கூண்டில் சுற்றி வரும் நரிகள் போல வாய்ப்பிற்காக காத்திருந்து பிறாண்டி எடுத்து விடுகிறார்கள். பிறகு மக்கள் அதற்கு பொழிப்புரை போடுகிறார்கள்.

பிக்பாஸில் கலந்து கொண்டோரின் வர்க்கம் – அரசியல் – சமூகப் பார்வையில் பெரிய வேறுபாடு இல்லை. ஓவியாவும் – காயத்ரியும் கூட ஒரே வகையினத்தில்தான் வருகிறார்கள் என்றால் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். அதற்கு அந்நபர்களின் தனித்தன்மையோடு கூடிய வகையினத்தை மக்களின் மதிப்பீடுகளோடு பார்க்கலாம்.

இவர்களில் பலர் நிலவுடமை அடிமைத்தனத்தையும், முதலாளித்துவ தனிநபர் விட்டேத்தித்தனத்தையும் கொண்டவர்கள். அவர்களிடம் அரசியல் ரீதியாக விசாரணை நடத்தினால் கூட மேற்கண்ட சாயல்களோடு வலதுசாரியாக விடைத்து நிற்பார்கள்.

சினேகன் – இந்த உலகில் தன்னைவிட நல்லவனாக வாழ்வது யாருமில்லை என்பதால் மற்றவர்களை அவ்வப்போது பாவிகளாக கருதி அரவணைப்போடு புத்திமதி சொல்லுபவர். அனைத்தும் அறிந்தவர் என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் என்று ஓங்கி பொய்யுரைப்பார். அன்னார் அவர்கள் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து தமிழ் கற்றவர். “தனது பிறந்த நாளில்தான் தமிழ் பெருமை அடைகிறது” என்று பேசிய வைரமுத்துவுக்கு பொருத்தமான சீடர்.

பரணி – பெற்றோர், பாலாஜி சக்திவேல், சசிகுமாருக்கு அடுத்த படியாக கமலின் காலில் விழுந்ததை பெருமையாக பேசுமளவு அப்பாவி. ஆகவே அடிமை. இவரது தனித்தன்மையை சினிமா குருகுலத்தின் முனிபுங்கவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

கஞ்சா கருப்பு – சினிமா மடத்தின் மூத்தோர்களுக்காக தெருச்சண்டைக்கு போகும் தென்மதுரை வழக்கு பேசும் அடிமை. ஆகவே ஆண்டானாய் எளியோரை இகழுவார். இகழ்வதை கடமை என்று ஆணித்தரமாக நம்புவதால் இவர் அப்பாவியா, காரியவாதியா என்று பிரித்தறிய முடியாதபடிக்கு விசித்தரமானவர். ஆகவே செல்வம் வைத்திருப்போரின் எடுப்பார் கைப்பிள்ளை!

ஆர்த்தி – நடிகையாக நிலைபெறுவதற்கு முன்னால் ஐ.ஏ.எஸ் கனவைக் கொண்டிருந்த சீமாட்டி. ஆகவே அற்ப விசயத்திலும் அதிகாரம் கொடிபறக்கும். ஆதரித்தால் மக்கள் கடவுள். எதிர்த்தால் கால் துரும்பு! இறுதியில் ஆர்த்தியின் தர்பாரில் பிச்சை எடுப்போரே நல்லவர்.

காயத்ரி – சொன்னதைக் கேட்காத குரங்கை வெறுப்பேற்றியே வேலை செய்ய நினைப்பவர். மறுக்கும் குரங்குகளை குதறலோடு ஒதுக்குவார். அப்படித்தான் டான்ஸ் மாஸ்டராக இன்டஸ்ட்ரியில் குப்பை கொட்ட முடியும் என்பவர். குழந்தை மனது கொண்ட தன்னை கோபாக்காரியாக மாற்றாதீர்கள் என்பதை நெற்றியிலேயே எழுதி வைத்திருப்பவர். தன்னைத் திருத்தும் அதிகாரம் தனக்கே இல்லை என ஆழ்ந்த தூக்கத்திலும் ஆணித்தரமாக எடுத்து வைப்பவர்.

ஜூலி – சினிமா மடத்தில் மிக நல்ல அடிமையாக சேவித்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஏற்று காட்சிக்கேற்ற நடனம், அழுகை, பாசம் அனைத்தையும் அள்ளி வீசுபவர்.

சக்தி – சினிமா மடத்தில் பரம்பரை பாத்தியதை உள்ளவரின் செருக்கு கொண்டவர். ஆள் பார்த்து பேசுவார் – அதட்டுவார். என் காலை மிதிக்கும் நீ ஏன் “எக்ஸ்கியூஸ் மீ” கேட்காமல் வெறுப்பேற்றுகிறாய் என்பதை முதலில் நாகரீகமாகவும் மறுத்தால் அதட்டியும் கேட்பவர்.

கணேஷ் – நுனிநாக்கு ஆங்கிலத்தோடும் உடல் மொழியில் மரியாதையோடும் உடற்பயிற்சி – தியானத்துடனும் இந்த உலகிலேயே மிக அதிக ஒழுங்கும் நாகரீகமும் கொண்ட கனவானாய் வாழ முடியும் என்று நம்புபவர். நல்லது கெட்டதுகளுக்கு போகாமல் கூலாக இருந்தாலே போதும், என எச்சரிக்கையுடன் வாழ்பவர்.

ஆரவ் – ஜாலியும், பிரபலமும் விரும்பினாலும் அதற்கு செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து சற்று குழம்பினாலும், மற்றவர்களின் பலம் பலவீனத்தை எடை போட்டுப் பார்த்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்பவர். ஃபர்ஸ்ட் பெஞ்ச் மாணவர் அளவுக்கு ஒரு காரியவாதி.

நமீதா – சினிமா மடத்தில் தன்னைப் போன்ற பரம்பரை பணக்காரர்களை மதிக்கக் கூடக் கற்றுக்கொள்ளாதவர்களுடன் வாழவேண்டியிருக்கும் துன்பத்தை தாங்கிக் கொண்டு அவர்களுக்கு சுத்தம் குறித்து சொல்லிக் கொடுப்பதை பெருந்தன்மையாக கருதுபவர். ஆகவே அவர் வைத்த சட்டத்தை மீறுவோரைப் பார்க்கும் போது எங்கே இருக்க வேண்டிய நான் இங்கேயா என்று சலிப்போ எரிச்சலோ கொள்பவர்.

ரைசா – நான் நானாக இருப்பதை நாசுக்காக சொன்னால் தனக்கு ஒரு இடம் சினிமா மடத்தில் கிடைக்கும் என்று முயற்சிப்பவர். தனது முகமும் அதே நாசுக்கை கொண்டிருக்க வேண்டுமென்று 24 மணிநேரமும் மேக்கப்பும் கண்ணாடியுமாக வேலை செய்பவர். பிக்பாஸின் ஆட்ட விதிகளை அறிந்து கொண்டு அதற்கேற்ற முறையில் விளையாட முற்படும் மல்டிபிளக்ஸ் வர்க்கத்தின் லேட்டஸ்ட் வகை மாதிரி.

வையாபுரி – வாழ்ந்து கெட்ட குடும்பத்தலைவரின் ஆசைகள் – துன்பங்களோடு சராசரியானவர். இந்த பிக்பாஸ் வாழ்க்கை தனக்கு கொடுக்க இருக்கும் செல்வத்தை மனதில் கொண்டு அவ்வப்போது வீட்டு வாழ்க்கை குறித்து புலம்பலோடு நாட்களை ஓட்டுபவர்.

ஓவியா – நான் நானாக இருப்பதை நடனத்தோடும், குளிர்ந்த மொழியோடும் சொன்னால் ஒத்துக் கொள்வார்கள் என்று நம்புபவர் – நடிப்பவர். அதையே முழுநேர வேலையாக கொண்டிருப்பதால் மற்ற வீட்டு வேலைகளை செய்ய முடியாது என்பதை பணிவுடன் எடுத்துச் சொல்பவர். மறுப்போரை சிரித்து மாற்ற நினைப்பவர். முக்கியமாக இவற்றை பொய் பேசாமல் – புறணி பேசாமல் சாதிக்க முடியும் என்ற சாமர்த்தியத்தைக் கொண்டிருப்பவர்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த வகை மாதிரிகளில் பொய் பேசமாட்டார், புறணி பேசுவார், வேலை பார்ப்பார், தன்வேலையை மட்டும் பார்ப்பார் என்ற சில்லறை சமாச்சாரங்களைத் தவிர வேறு என்ன வேறுபாடு இருக்கிறது?

இவர்கள் அனைவரும் அதிகாரத்தில் மூத்தோரை அண்டிப் பிழைப்பதும், இளைத்தோரை ‘வச்சு செய்வதும்’ தவிர வேறு என்ன விதத்தில் வருவார்கள்? இந்த வெட்டி ஆய்வை வெட்டிவிட்டு நேரடியாக விசயத்திற்கு வருவோம்!

ஓவியாவை ஏன் மக்கள் ஆதரிக்க வேண்டும்? காயத்ரியை ஏன் வெறுக்க வேண்டும்?

ருவரது சித்தாந்தமும் ஒன்றேதான். நிலவுடமைப் பண்பாட்டின் வடிவத்தோடு முதலாளித்துவ தனிநபர் சித்தாந்ததை காயத்ரி கொண்டிருக்கிறார் என்றால், முதலாளித்துவ தனிநபர் சிந்தாத்தத்தின் வடிவோடு முதாளித்துவ உலகின் கேளிக்கை வாழ்வை ஓவியா கொண்டிருக்கிறார்.

இவ்விருவரையும் ஒரு ஒப்பீட்டோடு பரிசீலித்தால் இன்னும் விளங்கும். ஓவியாவை கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரியுடனும், காயத்ரியை பாஜக-வின் எச்.ராஜாவோடும் ஒப்பிடலாம். ராஜாவின் வார்த்தைகளைக் கேட்டாலே நீங்கள் கொலை வெறி அடைவீர்கள். பத்ரியின் விளக்கத்தைப் பார்த்தால் அதை ஏற்க முடியாவிட்டாலும் அவரது ‘நாகரீகமான’ அணுகுமுறையால் படித்தவர் சொன்னால் சரியாக இருக்குமோ என்று தயங்குவீர்கள்.

பத்ரி சேஷாத்ரி – எச். ராஜா

ஓவியா தன் கருத்தை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார். அதே நேரம் அதை ஏற்காதவர்களை அவர் இகழ்வதில்லை, எரிச்சலூட்டுவதில்லை. காயத்ரியின் கருத்துக்கள் ஏற்கப்படாதபோது எச் ராஜா போல நாடுகடத்த வேண்டும் என்று பேசுகிறார். ஒன்று பா.ஜ.க-வின் கார்ப்பரேட் முகமென்றால் மற்றொன்று பா.ஜ.கவின் பார்ப்பனிய முகம்.

’நாளை என்ன நடக்கும் என தெரியாது. அதனால் இப்போது இந்த கணத்தை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். Live this moment. Enjoy the life’. – இது ஓவியாக்களின் மனநிலை. லைவ் திஸ் மொமண்ட் என்ற தனிநபர்வாதத்தின் மயக்க மருந்து, இப்போது ஓவியாவின் மூலமாக மறு உலா வருகிறது. வசனம் பழசுதான். ஆனால், முன்னெப்போதையும்விட வேலை, ஊதியம், பணிச்சுமை, பொருளாதார தள்ளாட்டம், இவை உருவாக்கும் தனிவாழ்வின் சிக்கல்கள்… என வாழ்வின் நெருக்கடிகள் நாலா பக்கமும் சூழ்ந்திருக்கும் நிலையில் இந்த வசனம் மேலும் பொருத்தமுள்ளதாக மாறியுள்ளது. ஓர் இளைப்பாறும் தருணத்துக்காக ஏங்கும் மனம் Live this moment என்ற வசனத்தைப் பற்றிக் கொள்கிறது.

ஆனால் இந்தக் கணத்தில் மட்டும் கூட வாழ முடியாத அளவுக்கு நெருக்கடிகள் கணம் தோறும் சூழ்கின்றன. இதற்கு தன் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதுதான் உண்மையிலேயே சுரணையுள்ள மனிதனின் இயல்பான தன்னுணர்வாக இருக்க முடியும். மாறாக சூழலின் பயங்கரத்தில் இருந்து துண்டித்துக்கொண்டு குளிரூட்டப்பட்ட மதுவிடுதியிலோ அல்லது மழை பெய்யும் அந்தி நேரத்தின் மெல்லிசையிலோ அந்த கணத்தை வாழ்ந்து தீர்ப்பது என்பது அருவெறுப்பானது.

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சீரியல் டைப் சண்டைகளின் போது ஓவியா பொய் பேசவில்லை, அவரை தனிமைப்படுத்துகிறார்கள் என்பதெல்லாம் அவரை நேசிக்க மக்களுக்கு போதுமானது என்றால், அவ்வளவு பலவீனமானவர்களா நாம்? சில்லறைப் பிரச்சினைகளுக்கு பொய் பேசாத ஓவியா சமூகத்தின் இதர பிரச்சினைகள் குறித்து கேட்டால் என்ன சொல்வார்?

இப்போது இந்த கணத்தை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். Live this moment. Enjoy the life’. – இது ஓவியாக்களின் மனநிலை.

இன்று “லிபரல்கள்” எனப்படுவோர் பொதுப்புத்தியை வடிவமைப்பதில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகிறார்கள். இவர்கள் சாதிவெறி-மதவெறி-ஆணாதிக்கம் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவு எதிர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். பா.ஜ.க -விலும் கூட இத்தகைய குரல் கொடுக்கும் சித்தாந்தவாதிகள் இருக்கிறார்கள். கட்சி சார்பற்ற இடதுசாரி என்று தங்களைக் கூறிக்கொள்வோர் இன்னொரு வகையினம்.

இவர்களின் சமூகப் பார்வையை குறுக்கு விசாரணை செய்தால் அது ’நானேதான்’ என இறுதியில் முடியும். கட்சிகள், இயக்கங்களை விட தனிநபர்களே மேலானவர்கள் என்ற இவர்களது கண்ணோட்டம், நிலவுகின்ற சமூக அமைப்புதான் ஜனநாயகமானது என்று கூச்சமின்றி பேசும்.

ஜூலி வெளியேற்றப்படும் போது கமல் என்ன சொன்னார்? மெரினா போராட்டத்தில் கூட முழக்கங்களை கண்ணியமாக நாகரீகமாக போட வேண்டும் என்று புத்திமதி சொன்னார். குஜராத் 2002 இனப்படுகொலையில் மோடியின் பங்கை கண்ணியமாக கண்டிப்பது எப்படி கமல் அவர்களே? கமல் விரும்பும் ஒரு போராட்டம் கூட விக்ரமன் சினிமா உணர்ச்சி போல அல்லது அவரது அன்பே சிவம் போல 100% அன்பில் திளைக்க வேண்டுமாம். இங்கே குழந்தைகள் சாவது இயற்கைதான் என்று திமிராக பேசும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எப்படி கண்ணியமாகப் பேசுவது?

மோடியின் ரத்தக்கறை பங்கு ஜூலிக்கும் தெரியாது. மெரினா எழுச்சியில் வந்த இலட்சக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர். பொதுவாக மாடு, விவசாயம், அரசு அலட்சியம் தாண்டி ஜூலியின் அரசியலில் வேறு இல்லை. அவரை வீர தமிழச்சியாக அழைத்தது தவறு. துண்டுப் பிரசுரம் கொடுத்ததால் குண்டர்  சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்ட வளர்மதியும், பிக்பாஸ் வீட்டுச் சிறையில் நடிக்க முயலும் ஜூலியும் ஒன்றல்ல. ஜூலியின் மெரினா பிரபலத்தை விஜய் டி.வி கேவலமாக பயன்படுத்தியது. அந்தக் கேவலத்தின் அடிப்படை மக்களின் பலவீனத்தில் உள்ளது.

துண்டுப் பிரசுரம் கொடுத்ததால் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்ட வளர்மதியும், பிக்பாஸ் வீட்டுச் சிறையில் நடிக்க முயலும் ஜூலியும் ஒன்றல்ல.

அய்யாக்கண்ணு கூட கமல் விரும்பும் “கண்ணியமான” முறையில்தான் டெல்லியில் போராடுகிறார். தொழிலாளிகளை ஒடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக ஏசும் விஷால் போன்ற ஜென்மங்கள் டெல்லி சென்று அவரை ஆதரிக்கின்றன.

“பாட்டிற்காக சிறை செல்லத் தயாராக இருந்த நான் மாட்டிற்காக சிறை செல்ல மாட்டேனா” என்று எதுகை மோனை எஃபெக்டில் பேசுகிறார் சிம்பு. மக்கள் கரவொலி எழுப்புகிறார்கள். பெண்களை இழிவுபடுத்தி பாட்டெழுதுவதும் ஜனநாயக உரிமை, ஜல்லிக்கட்டுக்காக போராடுவதும் ஜனநாயக உரிமை என்பதுதான் மேட்டுக்குடி குலக்கொழுந்துகளின் அரசியல்!

தமிழகத்தில் பெண்கள் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடினால் இத்தகைய தனிநபர் தாராளவாதிகள் குடிப்பது எமது தனியுரிமை என்று பேசுவார்கள். இந்த இடத்தில் ஓவியா( பத்ரி) குடியுரிமையை ஆதரித்தும் காயத்ரி (எச்.ராஜா) எதிர்த்தும் பேசக்கூடும்.

பெண்களின் போராட்ட உணர்வை மதித்தாலும், குடிப்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்று ஓவியா அணி நாகரீகமாக பேசும். மல்லையா முதல் மற்ற பாஜக மாநிலங்கள் வரை குடியை தொழிலாக மேற்கொண்டு வருமானம் பார்க்கும் காயத்ரி அணி இங்கே பொதுப்புத்திக்காக குடி எதிர்ப்பு பேசும்.

இன்றைய அமைப்பு முறையை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தாராளவாதிகளின் தீவிரவாத அணி கோருகிறது என்றால் அதை கொஞ்சம் மாற்றி ஏற்கலாமே என மிதவாத அணி கோருகிறது. மற்றபடி அடிப்படையில் இரண்டுமே சமூக மாற்றத்திற்கு எதிரானதுதான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சில்லறை அற்பத்தனங்களை மக்கள் தமது சமூக நடப்புக்களோடு சேர்த்து பார்க்கிறார்கள். காயத்ரி திமிர் பிடித்த பாப்பாத்தி, நமிதா திமிர் பிடித்த மேட்டுக்குடி, பரணி சாதாரண மக்கள் பிரிவு என்றெல்லாம் பார்த்து ஆதரவு – எதிர்ப்பு நிலை எடுக்கிறார்கள். ஆனால் நாயக – வில்லி பாத்திரங்களில் இருப்போர் தமது தனிப்பட்ட நடத்தைகளையே காட்டி கூட்டத்தை கவரவோ வெறுப்பேற்றவோ செய்கிறார்கள். இந்த பலவீனம் இருக்கும் வரை மோடியோ, ஜெயலலிதாவோ விஜய் டி. –வி வழங்கும் பிக்பாஸின் இன்டர் நேஷனல் ஃபார்மெட்டை வைத்து நம்மை எளிதில் ஏமாற்ற முடியும். தேர்தலில் வெற்றி பெறவும் முடியும்.

உணர்ச்சிகளில் முக்குளித்து உணர்வுகளில் தோற்றுக் கொண்டிருக்கிறோம். அற்பத்தனங்களை அலசி ஆராய்ந்து அரசியலை தவிர்த்துக் கொண்டிருக்கிறோம். பொழுதுபோக்கின் பேரில் தனிநபர் அராஜகத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். பிக்பாஸ் நிகழ்ச்சியை கேலிசெய்யும் பல தனிநபர்களிடம் கூட இத்தகைய வியாதி இருக்கவே செய்கிறது.

இன்றைக்கு சமூகவலைத்தளங்களில் தனிநபராக முற்போக்கு – கம்யூனிசம் – தலித் – பெண்ணியம் பேசும் பலரிடமும் இந்த தனிநபர் “அராஜகவியாதி” தொற்றுநோயாக பரவிக் கொண்டிருக்கிறது. நான்கு புத்தகங்கள் போட்டுவிட்டு இதுவரை இடதுசாரி கட்சிகள் என்ன புடுங்கிக் கொண்டிருந்தன என்று திமிராக சீறுவார்கள். இரண்டு ஆவணப்படங்களை எடுத்து விட்டு கேமராதான் உலகில் புரட்சியைக் கொண்டு வரும் என அகங்காரமாய் அறிவிப்பார்கள். பாதுகாப்பான வாழ்வை உத்திரவாதப்படுத்திக் கொண்டு, தேர்தல் புறக்கணிப்பால் என்ன சாதித்தீர்கள் என மார்க்சிய லெனினிய அமைப்புக்களை அதிகாரத்துடன் கேட்பார்கள்.

இன்றைக்கு சமூகவலைத்தளங்களில் தனிநபராக முற்போக்கு – கம்யூனிசம் – தலித் – பெண்ணியம் பேசும் பலரிடமும் இந்த தனிநபர் “அராஜகவியாதி” தொற்றுநோயாக பரவிக் கொண்டிருக்கிறது.

வீட்டு வேலைகளுக்கு எந்திரங்களையும் பணியாளர்களையும் போட்டுவிட்டு பெண் விடுதலைக்காக ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுவார்கள். பொதுவெளியில் சாதிவெறியை கண்டிக்க தைரியமற்றவர்கள் கபாலி ரஜினியை தலித் போராளியாக காட்டுவதற்கு நான்கு மாதம் எழுதுவார்கள்! சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதை இலட்சியமாக வைத்து விட்டு, ஈழத்திற்காகவும் சில சொட்டு கண்ணீரையும் வடிப்பார்கள்.

இது போக ரத்ததானம், நாய்க்குட்டி கருணை, அப்துல் கலாம் கவிதை, இயற்கை விவசாயம், பேலியோ டயட், ஆன்மீகம், மனிதாபிமானம், உலக சினிமா, உன்னத இலக்கியம் என எல்லா விதங்களிலும் மணிக்கணக்கில் பேசுவார்கள் – ஆலோசனை செய்வார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் இணைக்கும் அரசியல் – சமூக வெளியில்தான் அடிப்படை மாற்றம் நடக்க வேண்டும். இதைப்பற்றிக் கேட்டால், எந்தக் கட்சி யோக்கியம் என்று ஒரு வரியில் முடித்து விட்டு போய்விடுவார்கள். இந்த தனிநபர் தாராளவாதிகளின் தாக்குதலுக்குப் பணிந்து வலது இடது கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கங்கள், தமிழ் அமைப்புக்கள், உள்ளிட்ட பலரும்  தங்களை ‘நாகரீக’மாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

இதை ‘ஓவியாமயமாக்கம்’ என்றும் கூறலாம். ஆங்கிலப் பத்திரிகைகளில் பலரும், தமிழ் ஊடகங்களில் சிலரும் இத்தகைய ‘நாகரீக’ப்படுத்தும் பணியினை சிரமேற்கொண்டு செய்து வருகிறார்கள்.

கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், தாழ்த்தப்பட்ட மக்களை சித்தாந்தத்திலும் – செயலிலும் ஒடுக்கும் பாரதிய ஜனதாவோடு இணைகிறது. ராம்விலாஸ் பஸ்வான் மோடியின் நிழலில் இளைப்பாறுகிறார். தீபாவளிக்கும் திருவண்ணாமலை தீபத்திற்கும் சிறப்பிதழ் போடுகிறது சி.பி.எம்மின் தீக்கதிர் நாளிதழ். முரசொலி விழாவில் ரஜினியை மேடையேற்றி அழகு பார்க்கிறது தி.மு.க.

சுரண்டல் லாட்டரி பில்லியனர் மார்ட்டினின் மகன் தமிழர் விடியல் கட்சி நடத்துகிறார். மோடிக்கு பாராட்டு தெரிவிக்கிறார் விடுதலை சிறுத்தைகளின் ரவிக்குமார். ஜக்கி வாசுதேவின் யோகாவைப் பாராட்டுகிறார் தலைவர் திருமாவளவன். பெண்களை போற்றுகிறது என குமுதத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறார் லீனா மணிமேகலை.

லீனா மணிமேகலை

இறுதியில் அனைவரும் இந்த நாகரீகத்தையும், கண்ணியத்தையும், தனிநபர் சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொண்டு ஓவியாக்களாகவோ அல்லது தம் சொந்த இயல்பு காரணமாக காயத்ரிக்களாகவோ மாறிவிடுகிறார்கள்.

சமூகக்களத்தில் போராட முன்வராத வரையில், பிக்பாஸ் எனும் மாயச்சிறையில்தான் நீங்கள் காலம் தள்ள வேண்டும். அங்கேயே ஆயுள் தண்டனையோ மரணதண்டனையோ பெற்று வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஆதார் வழக்கில் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையில் வராதென வாதிடுகிறது மத்திய அரசு. அந்தரங்கத்தின் பெயரில் குடிமக்கள் தமது நடவடிக்கைகளை மறைப்பது கள்ளத்தனம் என்கிறார் அரசு வழக்கறிஞர். அந்தரங்க உரிமையை பாதுகாப்பது திருட்டுத்தனமல்ல, அது கண்ணியத்திற்குரியது என்று  வாதாடினார் எதிர்தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நமது கண்ணோட்டத்தை கறைப்படுத்தி கண்ணியமே தேவை இல்லை என்கிறது. இழக்கப் போகிறோமா, இயங்கப் போகிறோமா?

(முற்றும்)

இதன் முந்தைய பாகத்திற்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் :

_____________

இந்தப் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது !

0
”ரேஷன் அரிசியும், நூறு நாள் வேலையும் இல்லேன்னா, தூக்கு போட்டு சாக வேண்டியது தான்” எனத் தங்களின் வாழ்க்கை அவலத்தை எடுத்துச் சொன்ன காடந்தேத்தி கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயப் பெண்கள்.

ந்த ஆண்டும் குறுவை சாகுபடியை இழந்து நிற்கிறது, தமிழகம். வடகிழக்குப் பருவமழை பெய்யுமா, பெய்யாதா, சம்பா சாகுபடியாவது நடக்குமா, நடக்காதா எனத் தவித்துப்போய் நிற்கிறார்கள் விவசாயிகள்.

தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக குறுவையும், கடந்த ஆண்டு சம்பா அறுவடையும் இல்லாது போன நிலையில், ரேஷன் அரிசியும் பள்ளிக்கூட சத்துணவும்தான் கூலி, ஏழை விவசாயக் குடும்பங்களின் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் போயிருந்தால், தமிழகத்தின் நெற்களஞ்சியம் பட்டினிச் சாவிற்குத் தப்பியிருக்காது.

தலைஞாயிறு ஆற்றுப்பாலம் அருகே வேலைக்காகக் காத்திருக்கும் கூலி, ஏழை விவசாயிகள்

இது வாசகர்களை அதிர்ச்சியடைய வைப்பதற்காக மிகைப்படுத்திக் கூறப்பட்ட அனுமானம் அல்ல. உண்மை இதனைவிட அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் பரிதாபகரமானதாகவும் இருக்கிறது.

கீழத்தஞ்சை பகுதியில், தலைஞாயிறு ஒன்றியத்திலுள்ள உம்பளச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம், தாழ்த்தப்பட்ட கூலி விவசாயி. வறட்சியையும் சாகுபடி பொய்த்துப்போன துயரத்தையும் அப்பகுதி மக்கள் எப்படி எதிர்கொண்டு வருகிறார்கள் என்பது குறித்துத் தெரிந்துகொள்ள அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபொழுது, அவர் சொன்னார், ”காலையில நீராகாரம் சாப்பிட்டதுதான் சார், இனி ராத்திரி சோறு வடிச்சு, பிள்ளைங்க சாப்பிட்ட பிறகு இருப்பதைச் சாப்பிடணும்.”

இதனை எவ்வித மிகை உணர்ச்சியுமின்றி, மிக இயல்பாக என்னிடம் சொன்ன அந்த ரத்தினத்தின் வயது 71. பட்டினியைத் தாங்கக்கூடிய வயதா அது?

அதே ஊரைச் சேர்ந்த பொன்னுரங்கத்தின் கதை, ரத்தினத்தின் நிலையே மேல் என எண்ண வைத்துவிடுகிறது. பொன்னுரங்கத்திற்குப் புருஷனும் கிடையாது, பிள்ளைகளும் கிடையாது. ஆதரவற்ற அனாதை அவர். எட்டி நடக்க முடியாதபடி அவரது கால்கள் துவண்டு போய்விட்டன. அதனால் எந்தவொரு வேலைக்கும் அவரால் போகமுடியாது. ஊர்க்காரர்கள் கொடுக்கும் சோறு தண்ணியில்தான் அவரது வாழ்க்கை ஓடுகிறது.

71 வயதில் தினந்த்தோறும் அரைப்பட்டினியோடு போராடும் உம்பளச்சேரியைச் சேர்ந்த கூலி விவசாயி ரத்தினம்

கஞ்சி கிடைக்காத சமயங்களில் வெத்தலை பாக்குதான் அவரது உணவு. காலை நேரத்திலேயே வேப்ப மரத்தடியில் போய் உட்கார்ந்துகொள்கிறார். மரத்திலிருந்து விழும் வேப்பங்கொட்டைகளை ஒன்று ஒன்றாகப் பொறுக்கி எடுத்து, அதனைக் கடையில் கொடுத்துப் பண்டமாற்று முறையில் வெத்தலை பாக்கு வாங்கி வைத்துக் கொள்கிறார்.

இந்த மூதாட்டிக்கு முதியோர் ஓய்வூதியத் தொகையைக் கொடுக்க மறுத்துவருகிறது, அதிகார வர்க்கம். ரேஷன் கார்டு, ஆதார் அட்டை என எல்லாம் இருந்தும் அதிகார வர்க்கம் கேட்ட ரெண்டாயிரம் ரூபாய் இலஞ்சத்தை அவரால் கொடுக்க முடியவில்லை என்பதுதான் ஓய்வூதியம் மறுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம். ஊருக்குள் புதிதாக யாரைப் பார்த்தாலும், ”ஓ.ஏ.பி.யை எப்படியாவது வாங்கிக் கொடுங்க சாமி” எனக் கையெடுத்துக் கும்பிடுகிறார், அவர்.

ஓ.ஏ.பி.க்கு அனுமதி கொடுக்க மேல்சாதியைச் சேர்ந்தவர்களுக்கு 2,500 ரூபாயும், தாழ்த்தப்பட்டோர் என்றால் இரண்டாயிரம் ரூபாயும் இலஞ்சம் வாங்குகிறார்கள் எனக் கூறினார்கள், உம்பளச்சேரி மக்கள். இது அ.தி.முக. பிராண்டு சமூக நீதி!

உழைப்பதற்கு உடம்பில் வலு இருக்கும் சம்சாரிகளின் நிலையும், இன்று உணவுக்குத் திண்டாடும் நிலையில்தான் இருக்கிறது. தலைஞாயிறுக்கு அருகிலுள்ள காடந்தேத்தி என்ற கிராமத்தில் நூறுநாள் திட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களைச் சந்தித்து, குடும்பம் நடத்துவதிலுள்ள சிரமங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது, சுசீலா என்ற நடுத்தர வயதைக் கடந்த பெண், ”எங்களப் பார்க்கணும்னு வந்திருக்கிற நீங்க, ரெண்டு சாப்பாடு பொட்டலமும் வாங்கியாந்திருக்கலாம்” எனச் சாதாரணமாகச் சொன்னார். பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்பார்களே, அந்த நிலை!

சுசீலாவின் கணவர் கணபதிக்குச் சரிவர கண் தெரியாது. வயலுக்கு ஜிப்சம் அடித்துக் கொண்டிருந்தபோது, அந்த இரசாயனம் கண்ணில்பட்டு பார்வை ஏறத்தாழ பறிபோய்விட்டது. அவரின் மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் நிரந்தர வேலை கிடையாது. மின் வாரியத்தில் தினக்கூலியாக உள்ள ஒரு மகனின் வேலையை நிரந்தரமாக்க ஒரு இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்கிறார்கள். ”கஞ்சிக்குத் தொட்டுக்கறதுக்கே வக்கத்துப் போய் நிற்கும் நான், இலட்ச ரூபாய்க்கு எங்கே போவேன்?” என குமுறினார் சுசீலா.

***

காவிரியின் கடைமடைப் பகுதி நாகப்பட்டினம் மாவட்டம். அம்மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்திருக்கிறது தலைஞாயிறு ஒன்றியம். தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் நிறைந்த பகுதி அது. தமிழக வறட்சி குறித்து ஆய்வு செய்ய வந்த மைய அரசின் குழு பார்வையிட்டுச் சென்று போன ஊர் தலைஞாயிறு. பாசனத்திற்கு மட்டுமல்ல, குடிநீருக்கே திண்டாடும் அளவிற்கு வறட்சி பாதித்திருக்கும் பகுதி தலைஞாயிறு ஒன்றியம்.

தலைஞாயிறு கடைவீதியையொட்டி அமைந்துள்ள ஆத்துப் பாலத்தில் காலை எட்டு மணிக்கெல்லாம் ஒரு ஐம்பது, அறுபது பேர் வேலைக்காகத் திரண்டு விடுகிறார்கள். அவர்களுள் ஆகப் பெரும்பாலோர் நிலமில்லாத கூலி விவசாயிகள். இத்துணை பேருக்கும் வேலை கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றபோதும், அவர்கள் அங்கே காலையிலேயே கூடுவதற்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் தாண்டி வேறு காரணங்களும் உள்ளன.

”ரேஷன் அரிசியும், நூறு நாள் வேலையும் இல்லேன்னா, தூக்கு போட்டு சாக வேண்டியது தான்” எனத் தங்களின் வாழ்க்கை அவலத்தை எடுத்துச் சொன்ன காடந்தேத்தி கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயப் பெண்கள்.

”வீட்டுல இருந்தா, இன்னக்கி சோத்துக்கு என்ன பண்ணுவது, சில்லறை செலவுக்கு என்ன பண்ணுவது என்ற கவலையே பெரிதாகிவிடும். இங்க வந்தா, வேலை கிடைக்குதோ இல்லையோ, நாலு பேரிடம் சிரித்துப் பேசிவிட்டுக் கவலையை மறந்துவிட்டுப் போகலாம்” என்றார் ஒருவர்.

”வேலைக்கு யாரும் கூப்படலைன்னாலும், நாங்க பதினொரு, பன்னிரெண்டு மணி வரை இருந்துவிட்டுப் போவோம். காலை சாப்பாட கட் பண்றதுக்கு நாங்க கண்டு பிடிச்ச வழி இது” என்றார் மற்றொருவர்.

இக்கூலி விவசாயிகளுக்கு எந்தவொரு நிவாரணமும் தமிழக அரசால் அறிவிக்கப்படவில்லை. நூறு நாள் வேலையை 150 நாளாக உயர்த்தித் தருவோம் என்ற அரசின் அறிவிப்பும் காகிதத் திட்டமாகவே நின்றுவிட்டது. தங்கள் கையை ஊன்றிக் கரணம் போட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

”விவசாயியெல்லாம் இப்ப கொத்தனார், சித்தாளாகிட்டான்” என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.சம்பந்தம். கொத்து வேலையும், ரோட்டில் ஜல்லி கொட்டும் வேலையும்தான் இப்பொழுது ஏழை, கூலி விவசாயிகளுக்கு அரை வயிறு கஞ்சியை ஊற்றுகின்றன. இந்த வேலைகளை விட்டால், இறால் குட்டை வேலை, நூறு நாள் வேலை, ராட்டு (இறால் மீன்கள்) தடவி விற்கும் வேலைகளுக்குச் செல்கிறார்கள்.

இந்த வேலைகளும் மாதம் முப்பது நாளும் கிடைப்பதில்லை. ”மணலுக்குத் தட்டுப்பாடு இருப்பதால், கொத்து வேலை மாதத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள்தான் கிடைக்கும்” என்கிறார் கூலி விவசாயி கண்ணன். வேலை தெரிந்திருந்தால் கும்பகோணம் பக்கம் செங்கல் அறுக்கவும், வேதாரண்யம் உப்பளங்களுக்கும் செல்ல முடியும். விவசாய வேலைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், போர் தண்ணீர் கிடைக்கும் திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும்.

தலைஞாயிறைச் சேர்ந்த லேபர் காண்டிராக்டரான ராஜனே இப்பொழுது வேலை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். நான் அவரைச் சந்தித்த அன்று, அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. வீட்டில் சோறு பொங்க அரிசியும் இல்லை.

ஓய்வெடுக்க வேண்டிய முதிய வயதில் முதுகெலும்பு ஒடிந்து போன மகன், மருமகள், நான்கு பேரக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைச் சுமக்கும் கூலி விவசாயி வேலு

”வேலைக்குப் போன இடத்துல ”‘மண்வெட்டியோட வா” -ன்னாங்க, அதனால் இன்னிக்கு வேலைக்கு போக முடியல. மண்வெட்டி செய்ய புடிய கொடுத்தாம்ன, ஆசாரிங்க கொழுவ கோர்த்துக் கொடுப்பாங்க, அதற்கு முன்னூறு ரூபாயைத் தயார் செய்யணும்‘ என்றார் கூலி விவசாயி வேலு.

”மண்வெட்டிக்கு டாடா கொத்து வாங்கணும்னா ஐநூறு ரூபாய் ஆகும். பழைய கொத்துன்னா முன்னூறு ரூபாய். இருக்குறத தட்டிட்டுப் போட முன்னெல்லாம் முப்பது ரூபாய் கேட்பாங்க. இப்ப நூற்றைம்பது ரூபாய். எங்கே போறதுன்னுதான் தெரியல” என்றார் காடந்தேத்தியைச் சேர்ந்த கணபதி.

வேலு, கணபதியின் கதைகள் எனக்கு உலகப் புகழ் பெற்ற இத்தாலியத் திரைப்படமான ”பைசைக்கிள் தீவ்ஸ்” கதையை நினைவூட்டின. (இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், ஐரோப்பாவில் நிலவிய வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றிப் பேசிய அத்திரைப்படத்தின் கதாநாயகன், சுவரொட்டி ஒட்டும் வேலையில் சேருவதற்கு சைக்கிள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பான்.)

தலைஞாயிறு பேரூராட்சி என்பதால், அந்த ஊரில் நூறு நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்த சட்டத்தில் இடமில்லையாம். இதனால் தலைஞாயிறைச் சேர்ந்த ஏழை, கூலி விவசாயிகளுக்கு நூறு நாள் வேலையும் கிடைப்பதில்லை. அதேசமயம், தலைஞாயிறு ஒன்றியத்திற்குள் வரும் காடந்தேத்தி, உம்பளச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளில் நூறு நாள் வேலை தரப்படுகிறது.

”முன்னாடியெல்லாம் விவசாயம் கையைவிட்டா, முள்ளு பொறுக்கியும் எரு போட்டும் விற்போம். அதெல்லாம் இப்ப இல்லை. இப்ப நூறு நாள் வேலையை மட்டும்தான் நம்பியிருக்கிறோம்” என்கிறார்கள் காடந்தேத்தியைச் சேர்ந்த கூலி விவசாயப் பெண்கள். அத்திட்டத்தில் வேலை கிடைத்தாலும் முறையாகக் கூலி கிடைப்பதில்லை என்பது இன்னொரு பிரச்சினை.

பயிர்க் காப்பீட்டுத் தொகையாக வெறும் 500 ரூபாய் மட்டுமே கிடைக்கப் பெற்ற் உம்பளச்சேரியைச் சேர்ந்த சிறுவிவசாயி அமாவாசை

”காடந்தேத்தியில் ஐந்து வாரமாக நூறு நாள் வேலை நடைபெறுவதாகவும், ஆனால், இன்னும் ஒரு நாள் கூலியைக்கூட கையில் வாங்கவில்லை” என்றும் கூறினார் ஆரோசனை. உம்பளச்சேரியில் ஐந்து நாட்கள் மட்டும்தான் நூறு நாள் திட்டம் நடந்திருக்கிறது. அதற்கும் கூலி வழங்கப்படவில்லை.

நூறு நாள் வேலைக்குக் கூலி கொடுக்க நிதியில்லை எனக் கையை விரிக்கும் எடப்பாடி அரசு, எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை லம்ப்பாக 50,000 ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டிருக்கும் அநியாயத்தையும் அப்பெண்கள் அறிந்து வைத்துள்ளார்கள். ”அவனுங்களையெல்லாம் குழியில போட்டு புதைக்கணும்” எனக் குமுறினார், காடந்தேத்தியைச் சேர்ந்த சுசீலா.

”ஏ.சி.யில உட்கார்ந்துகிட்டு லட்ச ரூபாய் சம்பளம் கேட்டா, மண்ணு சுமக்குறவனுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கணும்?” என்றும் கேள்வி எழுப்பினார், அவர். நூறு நாள் வேலைக்கு கூலியாக நானூறு ரூபாய் தர வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரி வருகின்றன. ஆனால், அரசாங்கம் நிர்ணயித்திருப்பது 205 ரூபாய்தான். அதுகூட எங்களுக்கு முழுசா கிடைப்பதில்லை என்கிறார்கள் அக்கூலிப் பெண்கள்.

***

வேலைக்கும் உத்தரவாதம் இல்லை, கிடைக்கும் கூலியும் குடும்பத்தை ஓட்டும் அளவிற்கு இல்லை என்ற நிலையில் அன்றாடப் பாடே பெரும் போராட்டமாக இருக்கிறது. கொத்து வேலைக்குப் போகும் கண்ணன், தனது குடும்பத்திற்கு மாதமொன்றுக்குக் குறைந்தது மூவாயிரம் ரூபாய் தேவை. ஆனால், கொத்து வேலையில் அந்தளவிற்குக்கூட வருமானம் கிடைப்பதில்லை. கிடைக்கும் கூலியில்தான் சாப்பிட்டுக்கணும். அடுத்த நாள் வேலைக்குப் போக பஸ் காசும் எடுத்து வெச்சுக்கணும். வேலை கிடைச்சு, வேலைக்குப் போக காசு இல்லைன்னா, சுருட்டிக்கிட்டு கிடக்க வேண்டியதுதான் என்கிறார்.

அங்காடியில் போடப்படும் இலவச அரிசிதான் விவசாயத்தை மட்டுமே நம்பிவாழும் குடும்பங்களின் உயிரைப் பிடித்து வைத்திருப்பதோடு, அவர்கள் பஞ்சம் பிழைக்க ஊரை விட்டு அகதிகளாக வெளியேறாமல் தடுத்து வைத்திருக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வரும் குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசியும், மற்றவர்களுக்கு 20 கிலோ அரிசியும், துவரம் பருப்பு அரை கிலோவும் ரேஷனில் கிடைத்துவிடுகிறது. பாமாயிலுக்கு உத்தரவாதம் கிடையாது. ”நாலு அல்லது ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த அரிசி போதாதே” என நான் குறுக்கிட்டபோது, ”அங்காடியிலேயே ஒரு கிலோ ரேசன் அரிசியை 12 ரூபாய்க்குக் கொடுப்பாங்க” என்றார் உம்பளச்சேரியைச் சேர்ந்த செல்வி.

”ஒரு நாள் குழம்பு வைக்கிறோம், ஒரு நாள் ரசம் வைக்கிறோம், ஒரு நாள் வெறும் துவையல்தான். நூறு நாள் காசை நம்பி, மளிகைக் கடையில் கடன், காய்கறிக் கடையில் கடன். இப்படித்தான் இந்த வருடம் சாப்பாடு பிரச்சினை ஓடுது. ஆனா என்ன, அங்காடியில பாதிக்குப் பாதி பச்சரிசிதான் போடுறாங்க. கூலி வேலைக்குப் போறவனுக்குப் பச்சரிசி சோறு பசி தாங்குறதும் இல்ல, கை, கால் குடைச்சலையும் கொண்டுவருது” என்றார் ஆரோசனை.

புள்ளைங்க படிப்புக்கும் சாப்பாடுக்கும் பிரச்சினை வந்திடக் கூடாது எனப் பெண்கள் தவித்துப்போய் நிற்கிறார்கள். குழந்தைகளின் மதிய சாப்பாடை சத்துணவு தீர்த்து வைக்கிறது. சத்துணவு பிடிக்கவில்லை, சாப்பாடு கட்டிக்கொடு எனக் குழந்தைகள் அடம்பிடித்தாலும், அதைத் தவிர இப்பொழுது வேறு வழியில்லை என்கிறார், உம்பளச்சேரியைச் சேர்ந்த சின்னபொண்ணு.

ரோட்டுக்கடைகளில் பத்து ரூபாய்க்கு விற்க்கப்படும் சிக்கன் பக்கோடாதான் கூலி விவசாயிகளுக்கு இப்போது கறி விருந்து. ஒரு பொட்டலத்தைக் குடும்பத்தில் உள்ள எல்லோரும் பங்குபோட்டுக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் நோட்டு, புத்தகம் வேணும் எனப் புள்ளங்க வந்து கேட்கும்போது பிரச்சினை வந்துவிடுகிறது. நோட்டு வாங்க காசைப் புரட்டுவதற்கு இரண்டு நாள் ஆகும்னு புள்ளங்களிடம் சொன்னா, வாத்தியார் அடிப்பார், ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு நின்னுடுதுங்க என்கிறார்கள் காடந்தேத்தியைச் சேர்ந்த பெண்கள்.

பள்ளிக்கூடப் பசங்க பிரச்சினையைவிட, காலேஜுக்குப் போகும் வயதில் பிள்ளைகள் உள்ள வீடுகளில் காலேஜ் பீஸ் கட்டுவதில் தொடங்கி பஸ்ஸுக்குக் காசு புரட்டிக் கொடுப்பது வரையில் தினந்தோறும் பிரச்சினைகள். உம்பளச்சேரியைச் சேர்ந்த ரத்தினத்தின் இரண்டாவது மகன் தனியார் ஐ.டி.ஐ.யில் படிப்பை முடித்துவிட்டாலும், கட்டண பாக்கியிருப்பதால் இன்னும் சர்டிபிகேட்டை வாங்க முடியவில்லை. அவரது மூன்றாவது மகன் மன்னார்குடியிலுள்ள அரசு கல்லூரியில் படிக்கிறான். பஸ்ஸுக்குக் காசில்லைன்னா, அன்னிக்குக் கல்லூரிக்கு மட்டம்தான்.

”எம் புள்ள ஒருத்தன் திருச்சியில தனியார் இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறான். பீஸெல்லாம் இல்ல, ஃப்ரீதான்னு சொல்லி சேர்க்கச் சொன்னாங்க. இப்ப எக்ஸாம் பீஸ் ஐயாயிரம் கொடுன்னு கேட்குறாங்க. புள்ளய படிக்க வைக்கவா, திருப்பிக் கூட்டிட்டு வந்துறவான்னு தவிக்கிறேன்” என்கிறார், உம்பளச்சேரியைச் சேர்ந்த செல்வி.

தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் தனது மகளுக்காகக் கல்விக் கடன் கேட்டு வங்கிக்குச் சென்ற தலைஞாயிறைச் சேர்ந்த முரசொலியிடம், ”75 சதவீத மார்க் எடுத்தவர்களுக்குத்தான் கல்விக் கடன் கொடுப்போம்” எனக் கூறித் திருப்பி அனுப்பிவிட்டார்கள் வங்கி அதிகாரிகள். வெளியாட்களிடம் கடன் வாங்குவதைத் தவிர முரசொலிக்கு இப்பொழுது வேறு வழியில்லை.

படிப்பை விவசாயத்திலிருந்து தப்பியோடுவதற்கான வழியாகவே விவசாயிகள் பார்க்கிறார்கள். அதனால் கடன்பட்டாவது தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்துவிடத் துணிகிறார்கள். உம்பளச்சேரியைச் சேர்ந்த காமராஜ், தனது மகனை எம்.பி.ஏ. வரை படிக்க வைப்பதற்காக மூன்று இலட்ச ரூபாய் கடன்பட்டதாகக் கூறுகிறார்.

படிச்சாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி; ஆகப் பெரும்பான்மையான இளைஞர்கள் விவசாயத்தை நம்பவில்லை. திருப்பூர், கோயம்புத்தூர், சென்னைக்கு வேலை தேடி புலம் பெயர்ந்துவிடுகிறார்கள். ஆந்திராவில் ஹிட்டாச்சி வண்டிகளை ஓட்டுவதற்கும், கேரளாவுக்குக் கல்லுடைக்கவும் பகுதி இளைஞர்கள் சென்றுவிடுவதாகக் கூறுகிறார், உள்ளூர் எல்.ஐ.சி. ஏஜெண்ட் ஏகாம்பரநாதன். வெளியூருக்குச் செல்ல முடியாத இளைஞர்கள் பக்கத்து நகரங்களுக்கு டிரைவராகப் போய்விடுகிறார்கள். படித்த இளம் பெண்கள் உள்ளூரிலேயே கடைகளில் 130 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்கிறார்கள்.

தலைஞாயிறு, காடந்தேத்தி, உம்பளச்சேரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறலாமே தவிர, அவர்கள் வாழ்கிறார்கள் என்பதற்குப் பொருள் கிடையாது. கல்வி, மருத்துவம், கல்யாணம், கருமாதி என வாழ்வில் வரும் சுக, துக்கங்கள் அனைத்திற்கும் அவர்கள் இப்பொழுது தனியார் கடனை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். தனியார் குறுநிதி நிறுவனங்கள், கந்துவட்டிக் கும்பல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அனைத்தும் அவர்களுக்குக் கடன் வழங்குவதில் மிகத் தாராளமாகவே நடந்து கொள்கின்றன.

வறட்சியைக் கண்டு நாம் அஞ்சுகிறோம். தனியார் கந்துவட்டிக் கும்பலோ, வறட்சியைப் புதிய முதலீட்டுக்கும் இலாபத்திற்குமான வாய்ப்பாகப் பார்க்கிறார்கள்.

***

வறட்சி, சாகுபடி பொய்த்துப் போனதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைச் சந்திப்பதில் தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளுக்கும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த சிறு விவசாயிகளுக்கும் பெருத்த வேறுபாடில்லை. இதனை உம்பளச்சேரியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளே எடுத்துச் சொல்கிறார்கள். உதாரணமாக, தலைஞாயிறு ஒன்றியத்தில் நிலவும் குடிதண்ணீர் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், அது சாதி வேறுபாடின்றிப் பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கிறது.

உம்பளச்சேரிக்கு, அவ்வூருக்கு அருகிலுள்ள கரியாப்பட்டினத்திலிருந்து எட்டு நாளைக்கு ஒருமுறைதான் டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளையாகிறது. அன்றாடப் புழக்கத்திற்குத் தேவைப்படும் தண்ணீரை அவ்வூரைச் சேர்ந்த அனைவரும் ஒரு கிலோ மீட்டரோ, இரண்டு கிலோ மீட்டரோ சென்று, அடி பம்புகளில் காத்திருந்து எடுத்துவர வேண்டும்.

டெல்டா விவசாயமே அழிவை நோக்கித் தள்ளப்படிருக்கும் சூழலில் தலைஞாயிறு ஒன்றியப் பகுதி வழியாகக் கடலை நோக்கிச் செல்லும் வ்ண்ணாறு வடிநிலப் பகுதி – அரிச்சந்திரா நதியில் கட்டப்படும் தடுப்பணை. இத்தடுப்பணை மழை நீரைச் சேமிக்கவா, இறால் பண்ணை குட்டைகளுக்கா எனக் கேள்வி எழுப்புகிறார்கள், உள்ளூர் மக்கள்.

காடந்தேத்தி கிராம மக்கள் குளிப்பதற்குப் பக்கத்திலுள்ள மணக்குடியிலுள்ள குளத்திற்குச் செல்ல வேண்டும். குடிதண்ணீர் எடுப்பதற்கு கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள தலைஞாயிறு மெயின் ரோட்டுக்குச் செல்ல வேண்டும். அதிகாலையில் இரண்டு மணிக்கோ, மூணு மணிக்கோ எழுந்து, சைக்கிளில் குடத்தைக் கட்டிக்கொண்டு போய், ரெண்டு ரெண்டு குடமாகத் தண்ணீர் எடுத்துவருவதற்குள் விடிந்துவிடும் என்கிறார்கள், அவ்வூர்ப் பெண்கள்.

தலைஞாயிறில் இரண்டு நாளைக்கு ஒருமுறை தெருக் குழாய்களில் குடிதண்ணீர் வரும். ஆனால், அன்று நடக்கும் குடுமிப்பிடி சண்டையைத் தீர்த்துக் கொள்ள போலீசு ஸ்டேஷன் வரை போக வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

தலைஞாயிறு ஒன்றியப் பகுதியிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத்தான் குடிநீருக்கு நம்பியுள்ளன. இந்தக் கொள்ளிடம் கரையை ஒட்டியிருக்கும் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களில்தான் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, தமிழக அரசு. இதனால் இப்பகுதி மக்கள் எதிர்காலத்தில் இன்றிருப்பதைவிட மோசமான குடிநீர்த் தட்டுப்பாடைச் சந்திக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்.

தலைஞாயிறு பகுதியில் வறட்சி பாதித்த இந்த ஆண்டுக்கான (2016) காப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. வெள்ளம் பாதித்த கடந்த ஆண்டுக்கான (2015) காப்பீடு மட்டும்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும்கூட விவசாயிகள் அடைந்த நட்டத்தில் கால்பகுதியைக்கூட ஈடு கட்டவில்லை. உம்பளச்சேரியைச் சேர்ந்த செல்விக்கும் அமாவாசைக்கும் கிடைத்த காப்பீடு தொகை வெறும் 600 ரூபாய்தான். இதைக்கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தை உழவு ஓட்டுவதற்கு ஆகும் செலவைக்கூட ஈடு செய்ய முடியாது.

இதுவாவது பரவாயில்லை, தலைஞாயிறு ஒன்றியத்திலுள்ள களத்தூர் பிர்காவைச் சேர்ந்த விவசாயிகளுக்குக் காப்பீடு தொகையே கிடையாது எனக் கைவிரித்துவிட்டார்கள் என்கிறார், எஸ்.சம்பந்தம்.

தலைஞாயிறைச் சேர்ந்த ரவிசேகர், ”லாப்டி” மூலம் கிடைத்த ஒரு ஏக்கர் நிலத்தில் (300 குழி) பயிர் செய்து வருகிறார். ஆனால், அவருக்கு 200 குழிக்குக் கணக்கிட்டுதான் வறட்சி நிவாரணம் தந்திருக்கிறார்கள். மீதி 100 குழிக்கான நிவாரணத்தை அதிகாரிகள் அமுக்கிவிட்டார்கள் என்கிறார், அவர்.

குமார் ஒரு ஏக்கர் கோவில் நிலத்தை எடுத்துக் குத்தகை செய்து வருகிறார். இவருக்கு வறட்சி நிவாரணமும் கிடைக்கவில்லை, காப்பீடும் கிடைக்கவில்லை. வறட்சி நிவாரணம், காப்பீடு தொகையை வழங்குவதில் நடந்துள்ள குளறுபடிகளையும் பாரபட்சமான அணுகுமுறையையும் எதிர்த்து ஏன் போராடவில்லை எனக் கேட்டதற்கு, ”எங்களுக்கு இருக்கும் வறுமைக்குக் கிடைத்ததே போதும் என்ற நிலையில் இருக்கிறோம்” எனப் பதில் அளித்தார்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

***

வேலையில்லை, குடிநீர் இல்லை, அரைப்பட்டினியில் தள்ளப்பட்டிருக்கும் குடும்பங்கள் என்ற நிலையிலும்கூட தலைஞாயிறு பகுதி அமைதியாகத்தான் இருந்து வருகிறது. நிவாரணம் கோரி சம்பிரதாயமான முறையில் போராட்டங்கள் நடத்தியதைத் தாண்டி, விவசாய சங்கங்கள் வேறெந்த தொந்தரவையும் அரசிற்கும் அதிகார வர்க்கத்திற்கும் தந்துவிடவில்லை.

வறுமையைவிட, விவசாயிகள் தமது போராட்டக் குணத்தை இழந்து நிற்பதுதான் நம்மைப் பெரிதும் அச்சுறுத்துகிறது. விவசாயிகள் போராடத் துணிய மாட்டார்கள் என்ற கொழுப்பில்தான் எடப்பாடி அரசு தமிழகத்தில் பரவலாக வறட்சி காணப்படவில்லை என உச்சநீதி மன்றத்தில் துணிந்து பொய் சொல்கிறது. வேலையில்லாமல் தவிக்கும் கூலி விவசாயிகளுக்குச் சிறு நிவாரண உதவியைக்கூட அறிவிக்க மறுக்கிறது.

இந்த அமைதி எப்போது குலையும் என்று யோசனை செய்துகொண்டே பேருந்து நிலையத்திற்கு வந்தேன். பேருந்து ஏறும் முன் சாப்பிட்டுவிடலாம் என முடிவு செய்து, அருகில் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்து சப்பாத்தி கேட்டேன். சப்பாத்தியில் கைவைக்கும் சமயத்தில் ”காலையில் நீராகாரம் சாப்பிட்டதுதான் சார்” எனச் சொன்ன அந்த முதியவரின் நினைவும் வந்துபோனது. சப்பாத்தி தொண்டைக் குழிக்குள் இறங்க மறுத்தது.

 -செல்வம்

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு 2017

_____________

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?

0
கடல் சீறம் காரண்மாக நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் மணல் திட்டுக்களில் ஏற்பட்டுள்ள அரிப்பு ( கோப்புப் படம் - நன்றி தினகரன் )

மிழகத்தின் நெற்களஞ்சியம் என்று கருதப்படும் காவிரி டெல்டா (வடிநிலம்) பிராந்தியமே சுருங்கத் தொடங்கிவிட்டது. விளைநிலங்கள் மென்மேலும் தரிசு நிலங்களாகச் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜன் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வினை மேற்கோள் காட்டி, தி இந்து ஆங்கில நாளேட்டில் (ஜுலை 15, 2017) பத்திரிகையாளர் வித்யா வெங்கட் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

தஞ்சை விவசாயிகள் பஞ்சத்தில் வாடுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஒரு மிகப்பெரும் சூழலியல் பேரழிவின் விளிம்பில் தமிழகம் நின்று கொண்டிருப்பதை இந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

காவிரி டெல்டாவில் நிகழ்ந்து வரும் சூழலியல் சீர்கேடு குறித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜ்

நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போதே, கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் பிராந்தியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் எரிவாயு எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற பிரச்சாரத்தைப் பொய்ப்பிக்கும் இக்கட்டுரையின் சில பகுதிகளைச் சுருக்கிக் கொடுத்திருக்கிறோம்.

2014 முதல் 2016 -ஆம் ஆண்டு வரை பேரா.ஜனகராஜனால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, 1970 -களில் தொடங்கி சுமார் நாற்பதாண்டு நிலைமைகளை ஆய்வு செய்திருக்கிறது. இந்திய வானவியல் ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) நேசனல் ரிமோட் சென்சிங் சென்டரிடமிருந்து பெறப்பட்ட 1971 -ஆம் ஆண்டிற்குரிய நிலவியல் வரைபடத்தை, மே 2014 -ல் பெறப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் படத்துடன் ஆய்வாளர் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

இந்த ஆய்வில், விவசாயமல்லாத தொழில்களுக்கு விளைநிலங்களைப் பயன்படுத்துவது என்பன போன்ற நடவடிக்கைகளாலும், பருவநிலை மாற்றங்களாலும், டெல்டாவின் நிலப்பயன்பாட்டிலும் நிலத்தின் மீதான தாவரப்போர்வையிலும் கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானித்திருக்கிறார்.

”பயிரிடும் பரப்பு பெரிதும் வீழ்ச்சியடைந்திருப்பதும், 1971 -க்கும் 2014 -க்கும் இடைப்பட்ட காலத்தில் தரிசு நிலத்தின் அளவு 13 மடங்கு அதிகரித்திருப்பதும் கவலையளிக்கும் விசயங்களாகும். பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாத காரணத்தினால் நிலம் தரிசாகப் போடப்பட்டதும், மற்ற பருவநிலை மாற்றங்களுமே இதற்குக் காரணம்” என்கிறார் பேரா. ஜனகராஜன்.

மூழ்கும் அபாயம்

இந்த ஆய்வு சுட்டிக்காட்டும் இன்னொரு நிகழ்வு சதுப்புநிலக் காடுகளின் அதிகரிப்பு ஆகும். கடல் நீர் உள்ளே வருவதன் காரணமாக சதுப்புநிலக் காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளது. 1971 -ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது சதுப்புநிலக் காடுகளின் பரப்பு 14 மடங்கு அதிகரித்திருப்பதைத் தரவுகள் காட்டுகின்றன.

”சதுப்புநிலக் காடுகள் அதிகரிப்பது பற்றி நாம் மகிழ்ச்சி அடைவதற்கு ஏதுமில்லை. மென்மேலும் அதிகமான விளைநிலத்தை கடல் ஆக்கிரமித்து வருகிறது என்பதும், விளைநிலம் உவர் நிலமாக மாறி வருகிறது என்பதும்தான் இதன் பொருள் ” என்கிறார் ஜனகராஜன். தமிழக நிலப்பரப்பின் தாழ்நிலப் பகுதிகளில் 72% டெல்டா பகுதி கடற்கரையில்தான் உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்து வருவதன் விளைவாக டெல்டா பகுதி கடலில் மூழ்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது.

கடல் சீறம் காரண்மாக நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் மணல் திட்டுக்களில் ஏற்பட்டுள்ள அரிப்பு ( கோப்புப் படம் – நன்றி தினகரன் )

”டெல்டா பகுதியின் கணிசமான நிலப்பரப்பு, கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில்தான் இருக்கிறது” என்று சுஜாதா பைரவன் மற்றும் சிலரின் ஆய்வுகள் கூறுவதை எடுத்துக் காட்டுகிறார் ஜனகராஜன்.  காவிரியின் நதியோட்டத்தில் தொடர்ச்சியாகப் படிகின்ற வண்டல் மண்தான் தஞ்சை வடிநிலப்பகுதியை கடல் மட்டத்துக்கு மேலே உயர்த்தி வைத்திருக்கிறது என்றும், தற்போது வண்டல் மண் வரத்து குறைந்துவிட்டதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

ஆற்றில் மேல் பகுதியில் வரிசையாகக் கட்டப்படும் அணைகள் தான் வண்டல் மண் வரத்து குறைந்து போவதற்குக் காரணம். கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் காவிரி டெல்டாவிற்குள் வண்டல் மண் வரத்து 80% குறைந்திருக்கிறது என்றும் கூறுகிறார் ஜனகராஜன். 1934 -இல் மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அதன் கொள்ளளவு 2708.8 மில்லியன் கன மீட்டர்கள்; 2015 -இல் இது 1889 மில்லியன் கன மீட்டராகக் குறைந்து விட்டது.

இவையனைத்தின் காரணமாக டெல்டாவின் பயிரிடும் நிலப்பரப்பு 1971 -இல் இருந்ததைக் காட்டிலும் 27% குறைந்திருக்கிறது. கடல்நீர் உள்ளே புகுவதன் காரணமாகக் கடற்கரையோரங்களில் இறால் குட்டைகள் கணிசமான அளவில் அதிகரித்து வருவதும் விவசாயத்திற்குக் கேடானதாகவே இருக்கிறது.

இன்னொரு அபாயம் மண்ணின் தன்மையாகும்.  டெல்டா பிராந்தியம் களிமண் பூமி. இதில் 52% விரிசல் விடும் களிமண்ணாகும். தொடர்ச்சியாக நீர்வரத்து இல்லையென்றால் இந்த மண் மிகவும் பலவீனமாகிவிடும் என்று தனது ஆய்வில் குறிப்பிடுகிறார் ஜனகராஜன்.

எச்சரிக்கிறது கோதாவரி டெல்டா !

”கிருஷ்ணாகோதாவரி டெல்டாவில் கடல் மட்டம் உயர்கிறதா, நிலம் தாழ்கிறதா?” என்று தலைப்பிட்டு, ஜூலை 23, 2017 அன்று வித்யா வெங்கட், பி.வி.எஸ். பாஸ்கர் ஆகியோர் இந்து நாளேட்டில் வெளியிட்டுள்ள கட்டுரை, கோதாவரி டெல்டாவில் இன்று என்ன நடக்கிறதோ, அது தான் நாளை தஞ்சையில் நடக்கவிருக்கிறது என்ற அபாயத்தை உறுதி செய்கிறது.

கிருஷ்ணாகோதாவரி டெல்டா வரைபடம்

கிருஷ்ணாகோதாவரி டெல்டாவின் விளைநிலங்கள் உவர்த்தன்மை பெற்றுவருவதாகவும், இது விவசாயத்தைப் பாதித்திருக்கிறது என்றும் ஆந்திர பல்கலைக்கழக்கத்தின் ஓய்வு பெற்ற நிலவியல் பேராசிரியரும், அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகப் பல கள ஆய்வுகளை மேற்கொண்டவருமான பேரா.கிருஷ்ணாராவ் கூறியிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் இந்த டெல்டா பகுதி 1.5 அடி முதல் 5.4 அடி அளவுக்குக் கீழிறங்கியுள்ளது என்றும் அதன் விளைவாக கடல்நீர் உள்ளே புகுந்து வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.

”கோதாவரியில் உள்ள கன்னாவரம் மதகு, 1986 பெரு வெள்ளத்தின் போது 23.6 அடி உயரத்துக்கு தண்ணீர் வந்தபோதுதான் நீரில் முழுகியது, 2013 -ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது அது 18.2 அடி நீரிலேயே மூழ்கிவிட்டது. நிலப்பரப்பு 5.4 அடி கீழிறங்கி விட்டது என்பதை இது நிரூபிக்கிறது” என்கிறார் கிருஷ்ணாராவ்.

டெல்டா கீழிறங்குவதற்குக் காரணம் இங்கே இயற்கை எரிவாயு எடுப்பதுதான் என்று குற்றம் சாட்டுகிறார் கிருஷ்ணா ராவ். இவர் உறுப்பினராக இருக்கும், கிருஷ்ணாகோதாவரி டெல்டா பாதுகாப்பு அமைப்பின் சார்பில், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து, இந்த இழப்புக்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.

”பூமியின் அடியாழத்திலிருந்து ஹைட்ரோ கார்பன்களை எடுக்கும்போது பாறைகள் மீது பெருமளவு அழுத்தம் செலுத்தி வந்த வாயுக்கள் அகற்றப்பட்டு விடுவதால்தான் அவற்றுக்கிடையிலான சமநிலை குலைந்திருக்கிறது” என்பது பேராசிரியர் கிருஷ்ணாராவ் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

”நாங்கள் எரிவாயு எடுப்பதால்தான் நிலவியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதற்குப் போதிய அறிவியல் பூர்வமான தரவுகள் இல்லை” என்று சாதிக்கும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், இவ்வழக்கில் உயர்நீதி மன்ற ஆணைப்படி, டெல்டா ஆய்வுக் கழகம் நடத்தியுள்ள ஆய்வுகளின் அறிக்கைகளை மட்டும் காட்ட மறுக்கிறார்கள் என்று கூறுகிறது தி இந்து நாளேடு.

”அந்த அறிக்கையின் முடிவுகளை நாங்கள் பார்த்தோம். டெல்டா நிலவியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலம் தாழ்ந்துள்ள பகுதிகள் இறால் குட்டைகளால் சூழப்பட்டுள்ளன அல்லது எரிவாயுக் கிணறுகளுக்கு அருகாமையில் உள்ளன” என்று கூறுகிறார்கள் இந்தச் செய்தியாளர்கள்.

தமிழகத்துக்கு சோறிட்ட தஞ்சை உழவர் சமூகத்தையும், தஞ்சை மண்ணையும் கடல் கொள்ள அனுமதிக்கப்போகிறோமா?

 -அஜித்.

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

இந்த சூழலியல் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா ?

1

பிக்பாஸ் இரசிக்கப்படுவது ஏன்? பாகம் 2

“பிக்பாஸ் வீட்டிலிருந்தால் ஓவியாவுக்கு விதவிதமா சமைத்துப் போட்டு அசத்தியிருப்பேன், மிஸ் பண்ணிட்டேனே” என்று வருந்தினார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அந்த நேரம் ஓவியாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கவில்லை. பிக்பாஸ் குடும்பத்தினர் வெளியேற்றும் பட்டியலில் ஓவியாவை முன்னிறுத்திய நாட்களில், அவர் பெற்ற மக்கள் ஆதரவு குறித்து சாரு நிவேதிதா நிச்சயம் கொண்டாடியிருப்பார்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா

பிறகு சாருவும் ஓவியா – பிக்பாஸ் குறித்து நிறைய எழுதி விட்டார். ஒருவேளை தான்தான் ஓவியா குறித்த ரசனையை மக்களுக்கு கற்றுக் கொடுத்ததாகக் கூட அவர் நினைத்திருக்ககலாம். மோடியை அவர் ஆதரித்த போது சாருவின் ரசிகர் வட்டமே ஏற்கவில்லை போன்ற பிரச்சினை பிக்பாஸில் இல்லை. இது எல்லா வகையிலும் பாதுகாப்பானதோடு, பலவகைகளில் அவருக்கு ஆதாயங்களையும் தரும்.

சாருவின் சீடரான அராத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பங்கேற்று, கமலஹாசனைப் பற்றி ஒரு விசயத்தைக் கூறினார். தமிழ் சினிமா புதுமைகள் பல கமலிடமிருந்தே துவங்கினாலும் கீழே மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கேட்க முடியாத உயரத்தில் கமல் இருப்பதாக வருத்தப்பட்டார் ஜெயமோகன். “பாபநாசம்” படத்திலிருந்து அவருக்கு கமல் நெருக்கமாகி பல ‘டிஸ்கஸன்கள்’ முடிந்திருந்தாலும் ஜெயமோகனால் கூட கமலின் “நானேதான்” பேச்சுக்குள் புகுந்து கருத்தை தெரிவிப்பது மிகுந்த சிரமம் என்றார்.

ஜெயமோகனும் கூட கழிப்பறை, தூக்கம் தவிர வருடம் முழுவதும் பேசக்கூடியவர்தான். அப்பேற்பட்டவர் கூட கமலின் சன்னிதானத்தில் பாட முடியவில்லை.

கமல் என்றில்லை தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றாலே அந்த இயக்குநரின் அலுவலகத்தில் உள்ள பெரிய படுக்கையறையில் விரிக்கப்பட்டிருக்கும் உரையாடல் மெத்தையின் தலைமூலையில் அவரும், படுக்கையின் பக்கவாட்டில் ஐந்து – பத்து உதவி இயக்குநர்களும் அமர்ந்திருப்பார்கள். அவ்வப்போது சிற்றுண்டி எடுத்து வரும் பணியாளர்களின் பாத அதிர்வு தவிர அங்கே வேறு மனிதச் சப்தம் இருக்காது. அதாவது இயக்குநர் மட்டும் நான்ஸ்டாப்பாக “நானேதான்” என பேசிக் கொண்டிருப்பார்.

சினிமாவில் கலையை கட்டுப்படுத்துவது மூலதனம் என்பதால், சினிமா-மாந்தர்களை சர்வாதிகாரம் கட்டுப்படுத்தும். நாட்டாமைத்தனத்தில் நாட்களைக் கழிப்பவர்கள் முந்தைய அடிமை – இன்றைய ஆண்டான் எனும் இரட்டைப் பிறவிகளைத் தாண்டி வேறு பாத்திரத்தை ஏற்பதில்லை. காயத்ரியை வெறுப்பவர்களுக்கு இது புரிந்திருக்கலாம்.

அப்பேற்பட்ட கமலை பிக்பாசின் நெறியாளராக இறக்கியிருக்கிறார்கள். அவரது பெரு ஊதியம், சபாஷ் நாயுடு, விஸ்வரூபம் 2 திரைப்படங்களை நல்ல விலைக்கு விஜய் டிவியே வாங்கும் ஒப்பந்தம் போக இமேஜும் முக்கியம். ஆரம்ப நாட்களில் அவரது கெட்டப் சோபிக்கவில்லை என்று ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள்.

முதல் எலிமினேசன் (நீக்கம்) நபரை அறிவிக்கும் நேரத்தில் (காதில் இருக்கும் கருவி மூலம்) “உடனே யாரெனச் சொல்லாதீர்கள் என்கிறார்கள்” என கமல் நகைப்புடன் சமாளித்தார். நீயா நானா-வில் கோபிநாத்தை இயக்குநர் ஆன்டனி இயக்குவது போல கமலையும் யாரோ ஒருவர் இயக்குகிறார். கௌரவமாகக் கூறுவதென்றால் யாரோ ஆலோசனை கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் பங்கேற்பு இல்லாமல் வெற்றியடையாது என்பது ஓர் அடிப்படை நிபந்தனை. ஆகவே ஆரம்பத்தில் கமல் தானே பேசும் மூடில் இருந்தாலும் பின்பு கைதட்டலுக்காக பேச வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார் அல்லது ஓதக் கேட்டு ஏற்றிருப்பார்.

பரணி வெளியேற்றப்பட்ட நாளில் அவர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பரணி சிக்சராக அடிக்க அடிக்க மக்கள் கைதட்டல் அலைஅலையாகக் கிளம்ப சில நேரம் டியூப்லைட் போல தாமதமாகவே கைதட்டினார் கமல். பிறகு அவரது கிச்சன் கேபினட் வகுப்பெடுத்திருக்கும். பிந்தைய வாரங்களில் அவர் பொதுப்புத்தியை கைப்பற்றும் நோக்கில் முயன்றார். தான் மக்களின் பிரதிநிதி என்றும், ஓவியாவை ஆதரிப்பதும், காயத்ரியை எதிர்ப்பதுமான பாணியில் காட்டிக் கொண்டார்.

இதன் போக்கில் இருட்டறையில் காண்பிக்கப்படும் “ஆடியன்ஸ்” ஒத்திகையை சரி செய்து கொண்டார்களோ என்னவோ, எப்போது கைதட்டல் வேண்டுமோ அப்போது கமல் மக்களைக் கண்ணால் பார்ப்பார், அமைதி இடைவெளி விடுவார், கையாலேயே தட்டச் சொல்வார். பிறகு டியூப்லைட் சரியான நேரத்தில் எரிய ஆரம்பித்தது.

சென்ற வாரம் காயத்ரிக்கு பெருவாரியான மக்கள் வாக்களித்து வெளியேற்றும் நேரத்தில் வியாழக்கிழமை அன்று பிக்பாஸ் காயத்ரியை காப்பாற்றியதாக பலர் பொங்கினர். அந்த பொங்கல் தனக்கும் உண்டு எனக் கமலும் இலை-காய் மறையாக பேசி அதை பிக்பாசிடமே கேட்டார்.

விசித்தரமானது என்று நாம் உச்சரிப்பதை விஜித்திரமானது என்று யார் உச்சரிப்பார்கள்? அந்த ‘ஜி’-யை உச்சரிக்கும் பிக்பாஸ் ஜி, காயத்ரியை காப்பாற்றிய கதையைச் சொன்னார். “பிக்பாசின் விதிகள் விஜித்தரமானது, இது இன்டர்நேஷனல் ஃபார்மெட்டில் ஆடப்படும் விளையாட்டு, பார்வையாளர்களுக்கு பல விதிகள் தெரியாது, வீட்டில் இருப்போரால் வெளியேற்றப்படும் நபரை மக்கள் காப்பாற்றுவது போல, மக்கள் வாக்களித்து வெளியேற்றும் நபர் வேறு விதிகளால் காப்பாற்றப்படலாம் – திருப்பி அழைக்கப்படலாம் என்றார்.”

சரிங்க ஆபிசர், அது என்ன இன்டர்நேஷனல் ஃபார்மெட்?

கிரிக்கெட்டில் எல்.பி.டபிள்யூ, கால்பந்தில் ஆஃப்சைடு, கூடைப்பந்தில் ஐந்து ஃபவுல் போலவா அந்த விதிகள்? ஒரு வெங்காயமும் கிடையாது. பிக்பாஸ் வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் கம்பெனி விளம்பரங்கள். ஊர்க் கோவில்களில் கூட டியூப்லைட்டில்தான் எழுதியிருப்பார்கள். இங்கோ லைட்டு வெளிச்சத்தின் நிழலே விளம்பரமாக இருப்பது போல எங்கு பார்த்தாலும் ஆச்சி, ஆயுஸ், விவோ என்று ஒரே கூச்சல்.

ஐந்து நாட்களில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களின் கதையை பார்க்கும் மக்கள் வார விடுமுறை நாட்களில் ஒரு நபரின் வெளியேற்றுப் படலத்தையும், வெளியேறுபவரோடு கமல் உரையாடுவதையும் பார்க்கிறார்கள். இதில் எல்லா நாட்களிலும் விறுவிறுப்பு, சண்டை-சச்சரவு இருந்தாக வேண்டும். அப்படி இல்லாமல் வீடு அமைதியாக இருந்தால், டாஸ்க் என்ற பெயரில் பிக்பாசே கொளுத்திப் போடுவார். இந்த விறு விறுப்பின்றி நிகழ்ச்சியின் விளம்பரங்களும் சூடுபிடிக்காது. வேறு ஆட்களை கொண்டு வருவது, வெளியேறியர்களை மீண்டும் இறக்குவது என்று என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்பதே பிக்பாஸ் சொல்லும் அந்த “இன்டர்நேஷனல் ஃபார்மெட்”!

இப்படி விதிகளோ, வரம்புகளோ நடுவருக்கு அதாவது பிக்பாசுக்கு இல்லை என்பதை விதியாக வைத்திருக்கும் இந்நிகழ்வை, விளையாட்டு – கேம் என்று சொல்வது அபத்தம். ‘’ஜெயலலிதா இயற்கையாக மரித்தார் என்பதே என் கருத்து; ஆனாலும் மக்களின் கேள்விகளுக்கு விடை வேண்டும் என்றே விசாரணைக் கமிஷன் கோரினேன்’’ என்று ஓபிஎஸ் பேசினார் அல்லவா? அதையே இங்கு கமல் கொஞ்சம் நாடகத் தன்மையுடன் மக்களுக்காக பேசுவதாக நடிக்கிறார்.

நெதர்லாந்தில் பிக்பிரதராக இருந்து இந்தியாவில் பிக்பாசாக குதித்திருக்கும் இந்நிகழ்வின் கருவே போட்டிக்கு வருவோரிடம் நடக்கும் சண்டை, பொறாமை, சச்சரவு, கோள் மூட்டுதல், புறம் பேசுதல், வயிற்றெரிச்சல் போன்ற அற்பத்தனங்களை வைத்து சன் டிவியின் மாமியார் – மருகமகள் சீரியல் போல பரபரப்பேற்றுவதுதான். இதுதான் பிக்பாஸ் டீம் – விஜய் டிவி – கமல் – பிக்பாஸ் மற்றும் போட்டியில் இருக்கும் நடிகர்களின் இலக்கு. இதில் முதல் இருவருக்கு விளம்பரம், பின்னிருவருக்கு ஊதியம். இந்த யதார்த்த வகை நாடகத்தின் உணர்ச்சி அலையில் தத்தளிக்கும் ஏமாளிகளாய் மக்கள்.

நன்கு கவனித்துப் பாருங்கள். பிக்பாஸ் வீட்டில் நூறு கேமராக்களும், அவற்றின் படப்பதிவை அதாவது 100 X 24 மணிநேர பதிவுகளை ஒரு மணிநேரத்தில் எடிட் செய்தும் காட்டப்படும். பிறகு வார இறுதியில் கமல் வரும் போது, அந்த சண்டைகளின் தொடர்ச்சியாக மக்கள் யாரை வெளியேற்ற வேண்டும் என்று வாக்களித்து சமூக வலைத்தளங்களில் லா பாயிண்டுகளை அடுக்கி பேசுகிறார்களோ… அதில் பெரும்பான்மைக் கருத்தை பிரதிபலிப்பது போல பேசுவார் – விவாதிப்பார் – கேட்பார். ஆக போட்டியாளர்களின் கோணம், பிக் பாஸின் விதிகள், மக்களின் கருத்து, கமல் அதை பிரதிபலிப்பது என இந்த தொடரில் விறுவிறுப்பு ஏற்றுகிறார்கள். ஒருக்கால் பிக்பாஸை விளையாட்டு என்றால் அதன் விதிகள் இப்படித்தான் போங்காட்டமாக இருக்கின்றன.

அடுத்து பிக்பாஸ் தொடரை வைத்து மக்கள் பேசும் நீதி நியாயங்களை பார்ப்போம்.

பிக்பாஸ் வார நாட்களிலும், கமல் வார இறுதியிலும் வேலை செய்கிறார்கள். மக்களோ 24 X 7 என வாரம் முழுமையும் வேலை பார்க்கின்றனர். அதன்படி இவர்கள் தினசரி ஒன்றரை மணிநேரம் பார்க்கும் பிக்பாஸ் தொடரை வைத்து அந்த வீட்டில் இருக்கும் 101-ஆவது கேமராவாக மாறுகின்றனர். இதுதான் என்டமோல்ஷைன் – விஜய் டிவி-யின் வெற்றி.

அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதிலும் நமக்கு எப்போதும் ஆர்வம் அதிகம்.

அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதிலும் நமக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். அதிலும் அது இரகசிய காமரா என்றால் இரட்டை மகிழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தவர் அந்தரங்கம்+இரகசிய கேமரா ஒரு காம்போ என்பதால் பார்வையாளர்களுக்கு ஒரு கிளுகிளுப்பு. போர்னோ வகை படங்களில், தொழில்முறை போர்னோ நடிகர்கள் நடிக்கும் படங்களைக் காட்டிலும், திருட்டு கேமரா வைத்து படம் பிடிக்கப்படும் தனிநபர்களின் படுக்கையறைக் காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவமும், அதிக பார்வையாளர்களும் கிடைக்கிறார்கள். ஏனெனில் தொழில்முறை போர்னோ படங்கள் பார்வையாளனுக்கு அந்தரங்கமான உணர்வைத் தருவது இல்லை.

மாறாக இரகசிய கேமரா படங்களில், ஏதோ அவனே மறைந்திருந்து அதைப் பார்ப்பதைப் போன்ற உணர்வை அவன் பெறுகிறான். இதே அளவுகோலை பிக்பாஸுக்கும் பொருத்தலாம். இது, கூடவே உட்கார்ந்து விளக்குப் பிடித்துக்கொண்டிருக்கும் திருப்தியை நமக்கு வழங்குகிறது. அதனால்தான் காயத்ரி பேசும் கெட்டவார்த்தையின் மீது கெட்டகோபம் கொள்கிறீர்கள். ஓவியாவின் காதல் தோல்வி உங்களை மனத்தளர்ச்சி கொள்ள வைக்கிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பது அந்த 10 பேர் மட்டுமல்ல… நீங்களும்தான்.

அரபு நாடுகளில் குற்றம் இழைத்தவர்களை நடு வீதியில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்கிறார்கள். அதை ஊரே சேர்ந்து வேடிக்கைப் பார்க்கிறது. இந்த தண்டனையில் பார்வையாளர்களின் பாத்திரம் என்ன? கைகளால் அல்லது மனதால் அவர்களும் இரண்டு கல்லை எறிகிறார்கள். ஒரு பார்வையாளராக பிக்பாஸ் வீட்டில் நாமும் ஒரு உறுப்பினராக மாறிவிடுகிறோம்.

முதலில் இது வீடா? மூன்று வேளையும் தின்றுவிட்டு புறணி பேசிக்கொண்டு வீட்டிலேயே உடகார்ந்திருப்பதற்குப் பெயர் வீடா? எந்த வீட்டில் இப்படி இருக்கிறார்கள்? ஒரு மேட்டுக்குடி வீட்டில் கூட இப்படி இருக்கமாட்டார்கள். முதலில் இதை வீடு என அழைப்பதே அயோக்கியத்தனமானது.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நபர்களின் வர்க்க சேர்க்கையும், ஆளுமை பின்னணியும் கூட யாரும் இயக்காமலேயே முரண்படும்.

பலரும் நினைப்பது போல இந்த நிகழ்வை ஏதோ முன்கதை – திரைக்கதை எழுதி நடத்த முடியாது – அது தேவையும் இல்லை. ஆனால் இந்த யதார்த்தக் கதையின் பாதையையும், பல்டிகளையும் ஒரு திறமையான இயக்குநர் முன்கூட்டியே வடிவமைக்க முடியும். அதைத்தான் வார நாட்களில் பிக்பாஸ் ஜியும், வார இறுதியில் கமல்ஜியும் செய்கிறார்கள்.

இதை போட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதே நேரம் வாழ்க்கைக்கு தேவையான சில படிப்பினைகளையும் இதில் கற்கலாம் என்று பிக்பாஸ் தொடரை பொழுதுபோக்கு + வாழ்வியல் பாடம் என்று கமல் அடிக்கடி சூளுரைப்பதன் பின்னணியும் இதன் தீர்மானிக்கப்பட்ட பாதையை சமநிலையோடு ஏற்கச் செய்வதற்கே!

பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நபர்களின் வர்க்க சேர்க்கையும், ஆளுமை பின்னணியும் கூட யாரும் இயக்காமலேயே முரண்படும். சினிமா பின்புலத்திலிருந்து மார்க்கெட் இழந்தவர்களை எடுக்கும்போது அந்த முரண்பாடு வீரியமாகவும் இருக்கும். மற்றவர்கள் இயல்பாக சண்டை போட்டால் இவர்கள் அதை காவியச் சண்டையாக்கும் முன் அனுபவமுள்ளவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சினிமா மாந்தர்களிடையே வேர்விட்டிருக்கும் அடிமைத்தனம் கலந்த தனிநபர்வாதம் ஒன்றே ஒரு பெரும் போரை தோற்றுவிக்கும் சக்தி வாய்ந்தது.

சினிமா நடிகர்கள் என்பதால் மேக்கப், கவர்ச்சி, டயலாக், நடனம், நாடகம், நகைச்சுவை என மக்களுக்கும், சண்டை போக அழுகை, அமைதி, குமுறல், கோபம், சிரிப்பு, வருத்தம், கேலி என எல்லா உணர்ச்சிகளிலும் முக்குளிக்கலாம். எல்லா ‘ஜெனர்’களிலும் ரசிக்கலாம்.

முத்தாய்ப்பாய் வெளியேற்ற விரும்பும் நபர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். இந்நிகழ்வை நான்கு கோடிப்பேர் பார்க்கிறார்கள், ஒரு கோடியே முப்பது இலட்சம் பேர் வாக்களிக்கிறார்கள் என்று கமலஹாசன் முதல் வாரத்தில் அறிவித்தார். சமூகவலைத்தளங்களிலோ ஒவ்வொருவரும் ஆளுக்கு ஐம்பது – நூறு ஓட்டுப் போடுவதை பெருமையாக அறிவிக்கிறார்கள். ஐந்து லட்சம் பேர் போட்டாலே அதைக் கோடியாக காட்ட முடியும். அதே நேரம் இந்நிகழ்வை அதிகம் பேர் பார்க்கிறார்கள், வாக்களிக்காதவர்கள் கூட ஓவியா – காயத்ரி என்று சார்பு எடுப்பதை நாம் மறுக்கவில்லை.

காயாத்ரி காப்பாற்றப்பட்டதும் இனி ஓட்டே போட மாட்டேன் என பலரும் தேர்தல் புறக்கணிப்பு பேசுகிறார்கள். தமிழ் பிக்பாஸ் இவ்வளவு பிரபலமானதற்கு ஒரே காரணம் காயத்ரிதான். காயத்ரி இல்லாமல் மக்களின் பங்கேற்பு இந்த அளவுக்கு இருக்க முடியாது. ஆரம்பத்தில் காயத்ரி பேசிய “ஜல்லிக்கட்டு போராட்டம்”, ஜூலியை அழவைத்தது, பிறகு ஓவியாவை தனிமைப்படுத்தியது, தற்போது ரைசாவிற்கு டார்கெட் வைத்திருப்பது, இடையில் சேரி பிகேவியர், எச்சைங்க, மயிர் என ஐம்பது நாட்களையும் தனது தோளில் சுமந்து சென்றிருக்கிறார் இந்த அம்மணி!

எனவே காயத்ரி எனும் “வில்லன்” பிக்பாஸ் நிறுவனம் – கமலுக்கு மட்டுமல்ல, ஓவியா ஆர்மி துவங்குமளவு ஒன்றிய ரசிகர்களுக்கும் மிக மிக அவசியம். ஒருவேளை காயத்ரி ஆரம்ப வாரத்திலேயே சென்றிருந்தால் மக்கள் ஈடுபாடு இல்லாமல் ஷோ டல்லடித்திருக்கும். காயத்திரியை காப்பாற்றியதாக பிக்பாஸ் மேல் கோபம் கொள்வதற்கு பதில் நன்றி சொல்வதே ஓவியா ரசிகர்களின் முதல் கடமை.

பிக்பாஸ் போட்டியாளர்களை அரசியல் – சமூகம் – ஆளுமை சார்ந்து மக்கள் பரிசீலிப்பது சரியா?

(தொடரும்)

இதன் முந்தைய இறுதி பாகங்களுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் :

_____________

இந்தப் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சிறப்புக் கட்டுரை : குத்தகை விவசாயிகளாகும் கார்ப்பரேட்டுகள் !

2
நவீன குத்தகை விவசாயிகளாக அவதாரமெடுத்துள்ள தரகு முதலாலிகள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சுனில் மித்தல்

2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோடி அரசு ”மாதிரி விவசாய நிலக் குத்தகைச் சட்டம்” ஒன்றை வெளியிட்டது. அனைத்து மாநிலங்களும் இந்த மாதிரிச்சட்டத்தின் அடிப்படையில் தமது குத்தகைச் சட்டங்களை திருத்த வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

  • விவசாயத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது;
  • சமத்துவத்தை கொண்டு வருவது;
  • விவசாயிகளுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பன்முகப்படுத்துவது;
  • கிராமப்புற பொருளாதாரத்தை விரைவாக மாற்றியமைப்பது.

ஆகியவையே இந்தப் புதிய சட்டத்தின் நோக்கங்கள் என்று பூசி மொழுகப்பட்ட மொழியில் சொல்கிறது நிதி ஆயோக். இந்தச் சட்டத்தினால் ஏற்படப் போகும் விளைவுகள் என்னென்ன, அரசின் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளும், நிலமற்ற விவசாயிகளும் நிறைந்த இந்திய விவசாயத்தை முற்றுமுழுதாகப் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் ஒப்படைத்து விட்டு, விவசாயிகள் குறித்த தனது பொறுப்புகள், கடமைகளிலிருந்து அரசு முழுமுற்றாக விலகிக்கொள்வதும், இதன் வாயிலாக விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளில் பெரும்பகுதியினரை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதும் தான் அரசின் நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசு வகுத்திருக்கும் பல திட்டங்களில் ஒன்றுதான் மோடி அரசின் விவசாய நில குத்தகைச் சட்டம். இந்தப் புதிய குத்தகைச் சட்டத்தின்படி, ”குத்தகை விவசாயிகள்” யார் தெரியுமா? கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள். குத்தகைக்குத் தமது நிலத்தைக் கொடுக்கவிருப்பவர்கள் சிறு குறு விவசாயிகள்.

குத்தகை விவசாயி எனப்படுபவன் யார்?

பெரு நிலக்கிழார்கள், மடங்கள், ஆதீனங்கள் மற்றும் நகர்ப்புறத்தில் குடியேறிவிட்ட நிலவுடைமையாளர்கள் ஆகியோரது நிலங்களில் பாடுபட்டு, விளைச்சலில் கணிசமான பகுதியை நில உடைமையாளர்களுக்கு அளந்து விட்டு, வறுமையில் வாடுகின்ற விவசாயியைத்தான் குத்தகை விவசாயி என்று நாம் அறிந்திருக்கிறோம்.

இத்தகைய ஏழை குத்தகை விவசாயிகளைச் சுரண்டி வந்த பண்ணையார்களையும், மடங்களையும், கோயில் தர்மகர்த்தாக்களையும் எதிர்த்த விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாகத்தான் குத்தகை குறைப்பு, குத்தகைதாரர் பாதுகாப்பு உள்ளிட்ட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

1960 -களிலும், 1970 -களிலும் அனைத்து மாநிலங்களும் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு விடுவது தொடர்பாகச் சட்டங்களை இயற்றின. அவை பல்வேறு ஐந்தாண்டு திட்டங்களின் பரிந்துரையின்படி திருத்தி அமைக்கப்பட்டன.

நில உச்ச வரம்பு சட்டங்கள் மூலமும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டங்கள் மூலமும் பெரிய நிலவுடைமையாளர்களின் உபரி நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்து கொடுப்பது என்ற பெயரில் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டன.

இந்த சீர்திருத்த சட்டங்கள் அனைத்தும் கண்துடைப்பு நடவடிக்கைகள்தான் என்ற போதிலும், இந்த கண்துடைப்பு நடவடிக்கைகளையும் கூட அரசும் ஆளும் வர்க்கமும் தானாகச் செய்து விடவில்லை. வெள்ளையன் ஆட்சிக்காலத்தில் தொடங்கி, பின்னர் தெலுங்கானா, நக்சல்பரி என்று தொடர்ச்சியாக எழுந்த விவசாயிகள் போராட்டம் எழுப்பிய ”உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கம்தான், இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளும் வர்க்கத்தைத் தள்ளியது.

நிலச் சீர்திருத்த சட்டங்கள் இயற்றப்பட்டாலும், நடைமுறையில் பண்ணையார்களும், நிலக்கிழார்களும் சட்டங்களை ஏய்த்து, பினாமி பெயர்களில் நிலங்களைத் தக்க வைத்துக் கொண்டார்கள்; குத்தகைக்கு விடுவதையே சட்டத்துக்கு வெளியில் கொண்டு போய், வாய்வழி ஒப்பந்தங்களாக மாற்றிக் கொண்டார்கள்.

எனவே, ஆளும் வர்க்கத்தின் பல்வேறு வாக்குறுதிகளையும் மீறி இந்திய விவசாயம் ஏழை விவசாயிகளையும் கூலித் தொழிலாளர்களையும் கடுமையாகச் சுரண்டுவதாகவே நீடிக்கிறது. குத்தகைதாரர் சட்டங்களையும் மீறி ஏழை விவசாயிகளின் தேவையையும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்தையும் ஒட்டி வாய்வழி குத்தகை முறை பெருமளவு நிலவுகிறது. இந்தியாவின் சுமார் 30% சாகுபடிப் பரப்புக்கு மேல் இத்தகைய வாய்வழிக் குத்தகையாளர்களாக ஏழை விவசாயிகள் இருக்கிறார்கள்.

2012 – 13 கணக்கெடுப்புபடி 5 ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் (சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம்) சாகுபடி செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 7.8 கோடி. மொத்த நிலவுடைமைகளில் 69.4% -ஐக் கொண்டிருக்கும் இந்த குடும்பங்கள் மொத்த விவசாய உற்பத்தி மதிப்பில் 59%ஐ உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், இந்தக் குடும்பங்கள் விவசாயத்தில் ஈட்டும் வருமானம் அவர்களது நுகர்வு தேவையை விடக் குறைவாகவே உள்ளது. அதாவது, விவசாயத்தில் 100 ரூபாய் செலவழித்தால் ரூ 80 தான் வருமானமாகக் கிடைக்கிறது.

விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிக்கு என்ன காரணம்?

விவசாயிகளின் இன்றைய கடும் நெருக்கடிக்குக் காரணம் விவசாயத்தை கார்ப்பரேட் இலாப வேட்டைக்கு இரையாக்கும் அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளே ஆகும்.

  • பாசன வசதி பராமரிப்பைப் புறக்கணிக்கப்பது;
  • விதை, உரம், பூச்சிக் கொல்லி என்று உள்ளீட்டுப் பொருட்கள் வினியோகத்தில் அரசின் பங்களிப்பு விலக்கப்பட்டு, அனைத்தும் கார்ப்பரேட்மயமாக்கப்படுவது;
  • அரசு, விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகும் விலை நிர்ணயிக்க மறுப்பது, கொள்முதல் செய்ய மறுப்பது;
  • கல்வி, மருத்துவம், உணவு வினியோகம் என அனைத்திலும் விவசாயிகளின் செலவுகளை வணிகமயமாக்கி அதிகரித்திருப்பது;
  • விவசாயிகளைக் கடனில் மூழ்கடித்துத் தற்கொலைக்கும், அழிவுக்கும் தள்ளி விட்டிருப்பது
விழுப்புரம் மாவட்டம், வீ.சாத்தனூர் பகுதியில் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்க நடைபெற்ற போராட்டம்

மேற்கூறிய கொள்கைகள் மூலம் விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாயம் செய்தால் நட்டம்தான் என்பது கல்லின் மேல் எழுத்தாக மாறி விட்ட சூழலில், விவசாயம் செய்யவும் முடியாமல், நிலத்தை விடவும் மனமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.

இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, விவசாயிகளைத் தங்களது காண்டிராக்ட் அடிமைகளாக மாற்றுவதற்கும், குத்தகை என்ற பெயரில் அவர்களுடைய நிலங்களை அபகரித்துக் கொள்வதற்கும் முயற்சிக்கின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள். இந்த நிலத்திருட்டு முயற்சியை, விவசாயிகளைக் காப்பாற்றும் முயற்சியாகக் காட்டுகிறது புதிய குத்தகைச் சட்டம்.

புதிய சட்டம் என்ன சொல்கிறது?

இப்போதைய விவசாயிகளின் நெருக்கடிக்குக் காரணம் விவசாய உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதே என்று சாதிக்கும் மோடி அரசு, விவசாயிகளை அதிலிருந்து விடுவித்து முன்னேற்றுவதற்காகக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு கார்ப்பரேட் ஆதிக்கத்தை இன்னும் புதிய பரிமாணங்களில் விரிவுபடுத்துகிறது.

  1. விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களைத் தமது சொற்ப நிலவுடைமைகளை கார்ப்பரேட்டுகளிடம் அல்லது பணக்கார சாகுபடியாளர்களிடம் ஒப்படைத்து விட்டு, வேறு வேலைகளுக்குப் போகும்படி ஆலோசனை சொல்கிறது மோடி அரசு.
  2. இன்னொரு புறம் பெரிய நிலவுடைமையாளர்களை நிலத்தைக் குத்தகைக்கு விட்டு விட்டு விவசாயத்துக்கு வெளியில் தொழில்முனைவில் ஈடும்படி வலியுறுத்துகிறது.
  3. ஒரு குத்தகைதாரர் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்யும் நிலத்துக்கு உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை.
  4. குத்தகைக்கு எடுப்பவர் யார் என்பதிலும் எந்த வரம்பும் இல்லை. எனவே, இந்தச் சட்டம் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் குத்தகை சந்தையில் விவசாய நிலத்தைக் கைப்பற்றுவதற்கு வழிவகுப்பதாகவே இயற்றப்பட்டுள்ளது.
நவீன குத்தகை விவசாயிகளாக அவதாரமெடுத்துள்ள தரகு முதலாலிகள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சுனில் மித்தல்

இந்தச் சட்டத்தின்படி,

  1. நிலவுடைமையாளரும் குத்தகைதாரரும் பரஸ்பரம் குத்தகை ஷரத்துகளை முடிவு செய்து கொள்ளலாம். இதில் அரசு எந்த வகையிலும் தலையிடாது. ஒரு பணக்கார நிலவுடைமையாளரும் சிறு விவசாயியும் அல்லது ஒரு சிறு நிலவுடைமையாளரும் கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட பெரிய சாகுபடியாளரும் அரசின் தலையீடோ, சட்டப்பாதுகாப்போ இல்லாமல் ஒப்பந்தம் போடும் போது, அது நிச்சயமாக வலியவர்களான கார்ப்பரேட்டுக்குச் சாதகமாகவே இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
  1. இந்த மாதிரிச் சட்டத்தின்படி குத்தகைக்கு எடுக்கும் நிலத்தில் பயிர்த் தொழிலோடு, தோட்டப் பயிர்கள், கால்நடை வளர்ப்பு  பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, இறைச்சி விலங்கு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, விவசாயக் காடுகள், விளைபொருள் பதப்படுத்தல் மற்றும் தொடர்புடைய பிற நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுகின்றன. எனவே, சிறிது காலம் குத்தகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாம் என்று நிலத்தை விட்டுக் கொடுக்கும் சிறு விவசாயி, குத்தகை காலம் முடிந்த பிறகு நிலத்தை திரும்ப பெற்றாலும், அது பயிரிடுவதற்கு இலாயக்கில்லாததாக மாறியிருக்கும்.
  1. ஏற்றுக் கொள்ளப்பட்ட குத்தகை காலத்துக்குப் பிறகு நிலம் தானாகவே உரிமையாளருக்கு திரும்பிப் போவதை உறுதி செய்வதாகச் சட்டம் சொன்னாலும் பல நூறு ஏக்கர் நிலத்தை நூறு விவசாயிகளிடம் குத்தகைக்கு எடுத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனம், அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பத்து பேருடைய குத்த கையைப் புதுப்பித்துக் கொண்டாலே, மற்ற தொண்ணூறு பேரை பணிய வைத்து விட முடியும். குத்தகை ஒப்பந்தத்தை எந்த வெளி ஒப்புதலும் இல்லாமல் இருதரப்பும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நீட்டித்துக் கொள்ளலாம் என்பது கார்ப்பரேட் முதலாளிகளின் அடாவடித்தனத்துக்கு வழங்கப்பட்டுள்ள லைசன்சு.
  2. குத்தகை காலம் முடிந்த பிறகு குத்தகைதாரர் (அதாவது கார்ப்பரேட் நிறுவனம்) நிலமேம்பாட்டுக்கு முதலீடு செய்த மதிப்பில் எஞ்சியதை திரும்பப் பெறும் உரிமையை (கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு) இந்த சட்டம் வழங்குகிறது. இதன் மூலம் நிலம் திரும்ப வேண்டுமென்றால், மேம்பாட்டுக்கு நான் செலவு செய்த தொகையை எடுத்து வை என்று கார்ப்பரேட் நிறுவனம் விவசாயியை மிரட்டும்.
  3. நிலத்தின் மண்வளம் பாதிப்படைந்தால் குத்தகையை ரத்து செய்யலாம் என்ற ஷரத்து இந்தச் சட்டத்தில் இருந்தாலும், மண் வளம் பாதிப்படைந்ததா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பார்கள் என்று சொல்லவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக ஒரு விவசாயி இதனை நிலைநாட்டவும் முடியாது.

ஏற்கனவே நுழைந்திருக்கும் கார்ப்பரேட்டுகள்

ஏற்கனவே பல்வேறு மாநில அரசுகள் கார்ப்பரேட் விவசாயத்துக்கு வழிவகுக்கும் சட்டத் திருத்தங்களைச் செய்திருக்கின்றன. அனைத்து பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களும், ஒடிசா மாநிலமும், காங்கிரசின் கர்நாடகா அரசும் இவ்வாறு சட்டங்களைத் திருத்தியிருக்கின்றன.

பஞ்சாபில் பெப்சி நிறுவனத்திற்காக உருளைக்கிழங்கு ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளோடு அந்நிறுவன அதிகாரி.

மத்தியப் பிரதேசமும், உத்தரப் பிரதேசமும், ஜார்கண்டும் விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விடுவதை அனுமதிக்கும்படிச் சட்டத்தைத் திருத்தியிருக்கின்றன. ஒடிசா, பீகார், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களும் அத்தகைய திருத்தங்களைச் செய்து வருகின்றன. இமாச்சல் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களில் ஏழை தலித், நலிந்த குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

  • ஆந்திர அரசு 4 இலட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இன்னும் 7 இலட்சம் ஏக்கர் நிலத்தைத் தனது நில வங்கிக்கு கையகப்படுத்தத்  திட்டமிட்டுள்ளது.
  • 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ள தெலுங்கானா அரசு இன்னும் பல லட்சம் ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது.
  • கர்நாடகாவில் அரசு நிலத்தில் பயிரிடும் 43 லட்சம் உழவர்கள் வெளியேற்றப்படும் வகையில் கொள்கை மாற்றியமைக்கப்படுகிறது.

விவசாய மற்றும் உணவுத் தொழிலில் பெரும் முதலாளிகளின் முதலீடு மற்றும் பங்கேற்புக்கு ஏற்ப ஒப்பந்த விவசாயத்தின் விரிவாக்கம் மற்றும் சிறு விவசாயிகளின் வெளியேற்றம் நடந்தேறும். மேலும், ஒப்பந்த விவசாயத்தின் விளைவாக ஓரினப்பயிர், மண் வளம் இழப்பு, பாசன வசதிகள் சூறையாடப்படுதல் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஆகியவைகள் நடந்தேறும்.

  • குஜராத், ஒப்பந்த விவசாயத்திற்கு எனச் சிறப்பு சட்டத்தைக் கொண்டுள்ளது. இங்கு 2006 -ம் ஆண்டு இறுதியில் 40 லட்சம் ஏக்கர் ஒப்பந்த விவசாயத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • பஞ்சாபில் 2007 – 08 -ம் ஆண்டில் சுமார் 2 லட்சம் ஏக்கர் ஒப்பந்த விவசாயத்தில் உள்ளது. இது 2009 – 10 -ல் 2.75 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. 1.92 லட்சம் ஏக்கரில் மட்டுமே விரிவுபடுத்தப்பட்டது.

இந்தப் பின்னணியில் ஒப்பந்த விவசாயத்தை விரிவுபடுத்த பஞ்சாப் அரசு ஒப்பந்த விவசாயம் 2013 சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் அரசே முன்னின்று ஒப்பந்த விவசாயத்தை நடத்திக் கொடுக்கிறது.

  • பருத்தி விவசாயத்தில் 50% உற்பத்தி ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையிலே நடக்கிறது.
  • கர்நாடகா மாநிலத்தில் ஒட்டு மொத்த உருளைக்கிழங்கு விவசாயத்தில் 15 சதவீதத்தை பெப்சி மற்றும் கோக்கோ கோலா நிறுவனங்கள், ஒப்பந்த விவசாயத்தின் மூலம் கட்டுப்படுத்துகின்றன.

மேற்குறிப்பிட்ட வழிகளில் சட்டரீதியிலோ அல்லது புறம்பாகவோ முதலாளிகள், பல்வேறு தினுசுகளாக நிலம் கைப்பற்றும் வேலையை செய்கின்றனர்.

  • டாடா நிறுவனம் சுமார் 60,000 ஏக்கர் நிலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
  • குஜராத் மற்றும் பஞ்சாப்பில் முகேஷ் அம்பானி குழுமம் 7500, அனில் அம்பானி குழுமம் 3500 ஏக்கரும் கொண்டுள்ளது.
  • ஏர்டெல் நிறுவனம் பஞ்சாப் மாநில அரசிடமிருந்து 300 ஏக்கரும், சிறு விவசாயிகளிடம் இருந்து 4,000 ஏக்கர் நிலத்தையும் குத்தகை எடுத்துள்ளது. குத்தகைக்கு விட்ட விவசாயிகள் அவர்கள் நிலத்தில் (ரூ 80) தினக்கூலிக்கு வேலை செய்கிறார்கள்.
  • கிட்டத்தட்ட இதே பாணியில் சட்லஜ் அக்ரிகல்சர், நிஜேர் அக்ரோ, விமல் குழுமம் போன்ற நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நூற்றுகணக்கான ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பெரும் பண்ணைகளாக மாற்றி வருகிறது.
  • அயன் எக்சேஞ்ஜ் இந்தியா நிறுவனம் பங்குதாரர்களின் பெயரில் தமிழகத்தில் 650 ஏக்கரும், மகாராட்டிரத்தில் 750 ஏக்கரும், கோவாவில் 150 ஏக்கரும் வாங்கியுள்ளது.
  • தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இமாமி (emami) நிறுவனம் 100 -க்கும் மேற்பட்ட பினாமி பெயர்களில் சுமார் 7,000 ஏக்கர் வாங்கியுள்ளது. இதில் 2,000 ஏக்கர் காட்டாமணக்கு மற்றும் பருப்பு வகை பயிர்கள் பயிரிட்டுள்ளது.
  •  பி.ஏ.சி.எல் (PACL) என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் 1 இலட்சம் ஏக்கர் நிலம் (பாகிஸ்தான் எல்லையை ஒட்டி மட்டும் 400 சதுர கி.மீ  பரப்பளவு நிலத்தை கொண்டுள்ளது) வரை கையகப்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தின் போது ஆங்கிலேய சாகுபடியாளர்கள் இந்திய விவசாயிகளை கட்டாயப்படுத்தியும் கடனுக்கு அடிமையாக்கியும் ஐரோப்பிய சந்தையின் தேவைக்கேற்ப அவுரி சாகுபடி செய்ய வற்புறுத்தினார்கள். அதை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தது அவுரி விவசாயிகள் போராட்டம்.

இன்று விளைபொருளுக்கு விலை கிடைக்காமல், கடனுக்கு அடிமையாகித் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளிடமிருந்து, அவர்களுடைய கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, குத்தகை என்ற பெயரில் நிலத்தைப் பறித்துக் கொள்வதற்கு இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு.

-சூரியன்

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017
_____________

விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடவரும் கார்ப்பரேட் விவசாயம் பற்றிய இக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கருத்துக் கணிப்பு : லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டது ஏன் ?

3

கோடிக்கணக்கில் வருவாயைக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் “சிஸ்டம் சரியில்லை” என்று அரசியல் சூழல் குறித்து குறைபட்டுக் கொண்டார். தேவைப்பட்டால் சிஸ்டத்தை மாற்ற போருக்கு வருவேன் என்றார். பிறகு காலா, எந்திரன் 2.0 படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். நல்ல விளம்பரமும் கிடைத்தது.

அன்னாரின் துணைவியார் “பாபா” படம் வெளிவரும் போதே பாபா டாலர் எனும் செயினைக் கூட ரசிகர்களுக்கு விற்க முயன்ற முதலாளி. டாலரை விட கல்வித் தொழிலில் நிறைய வருமானம் வருமென்பதால் இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறார். துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.

கிண்டியில் இருக்கும் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பல மாத சம்பள பாக்கி வேலை நிறுத்தம், போராட்டம் என்று நடந்திருக்கின்றன. அந்த செய்திகளை ஊடக பலத்தால் அமுக்கிவிட்டு இன்றும் பள்ளி நடக்கின்றது.

இந்நிலையில் கிண்டி பள்ளிக்கூடம் இருக்கும் கட்டிட உரிமையாளரை ஏமாற்றிய கதை தற்போது வெளியேவந்திருக்கிறது. அம்மையார் 2009 -ம் ஆண்டு முதல் பள்ளிக் கட்டிடத்திற்கு வாடகையே கொடுக்கவில்லையாம்.

இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஸ்வரலு பள்ளிக்கூடத்தை பூட்டிவிட்டார். வரவேண்டிய வாடகை பாக்கி ரூபாய், பத்து கோடியாம். நீதிமன்றத்தில் வழக்கு போட்ட போது அம்மையார் 2 கோடி தருவதாக ஒப்புக் கொண்டு அதையும் தராமல் இழுத்தடித்தனராம். ஆகவே பூட்டு போட்டார் உரிமையாளர்.

இது ஒரு சுரண்டல், காரணமில்லாமல் வாடகையை ஏற்றியதே பிரச்சினை என்று கூறுகிறது அம்மையார் தரப்பு. கை, கால்களை ஆட்டாமலேயே நடனம், சண்டை, நடிப்பின் மூலம் படத்துக்கு படம் கோடிகளை கூட்டிக் கொண்டே போகும் சூப்பர்ஸ்டாரின் குடும்பம், பள்ளிவாடகையை கூட்டக் கூடாது என்று நியாயம் பேசுகிறது.

இனி கருத்துக் கணிப்பு!

லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டதற்கு காரணம்?

  • கட்டிட உரிமையாளரின் சுரண்டல்
  • லதா ரஜினிகாந்தின் மோசடி
  • ஆஸ்ரம் பள்ளியில் வருமானமில்லை
  • பாஜக உதவிக்கு வரமுடியாத சூழல்
  • ரஜினியிடம் செலவுக்கு காசில்லை


_____________

இந்தக் கருத்துக்கணிப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல்
    வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் : மற்றுமொரு பேரழிவு ஆயுதம் !

1
விவசாயத்தை அழித்துவிட்டு பணத்தையா சாப்பிட முடியும்? -ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நாட்டின் வளர்ச்சியாக நியாயப்படுத்தும் ஆளுங்கும்பலின் கருத்தை கேலிசெய்யும் விதத்தில் வாழை இலையில் காசு, பணத்தை வைத்துச்சாப்பிடும் போராட்டத்தை நடத்தும் கதிராமங்கலம் கிராம மக்கள்.

காவிரிப் பிரச்சினையாலும் மணல் கொள்ளையாலும் கச்சா எண்ணெய், எரிவாயு துரப்பணவுத் திட்டங்களாலும் அழிவை நோக்கித் தள்ளப்படும் தமிழத்தின் நெற்களஞ்சியத்தின் மீது பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என்ற அணுகுண்டை வீசியிருக்கிறது, எடப்பாடி அரசு. தமிழக மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் வேளையில், அவர்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதிக்கொண்டு, நாகை, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கும் திமிர்த்தனம் சகிக்கவொண்ணாதது.

விவசாயத்தை அழித்துவிட்டு பணத்தையா சாப்பிட முடியும்? -ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நாட்டின் வளர்ச்சியாக நியாயப்படுத்தும் ஆளுங்கும்பலின் கருத்தை கேலிசெய்யும் விதத்தில் வாழை இலையில் காசு, பணத்தை வைத்துச்சாப்பிடும் போராட்டத்தை நடத்தும் கதிராமங்கலம் கிராம மக்கள்.

கிராமமும் இருக்கும், தொழிற்சாலையும் இருக்கும் என வழமையான முறையில் இம்மண்டலத்தைப் புரிந்துகொள்ளக் கூடாது. ஒரு பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என்பது ஏறத்தாழ 250 சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பரப்பில் எழுந்து நிற்கும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பாகும். இம்மண்டலம் அமைய நாம் அனுமதித்தால், விவசாயம் அழிந்து போவது மட்டுமல்ல; அக்கிராம மக்கள் ஊரையே காலிசெய்து விட்டு அகதிகளாக வெளியேறும் நிலைகூட ஏற்படக் கூடும்.

இது மிகைப்படுத்தப்பட்ட ஊகமல்ல. பத்து பதினைந்து ஆடி ஆழத்தில் சுவையான நீர் கிடைத்துவந்த கதிராமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று 150 அடி தோண்டினாலும் பருகுவதற்கோ, பயிருக்கோ பயன்படுத்த முடியாத எண்ணெய் கலந்த நீர்தான் கிடைப்பதாகக் கூறுகிறார்கள், அக்கிராம மக்கள். 11 எண்ணெய்க் கிணறுகளைக் கொண்ட கதிராமங்கலத்தின் நிலையே இதுதான் என்றால், பத்துக்கணக்கான பெரும் தொழிற்சாலைகள் அமையவுள்ள நாகை, கடலூர் மாவட்டக் கிராமங்களின் கதி என்னவாகக் கூடும்?

”அம்மண்டலத்தில் துரப்பணவுப் பணிகள் எதுவும் நடைபெறாது. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் ஆலைகள் மட்டுமே அமையப் போவதாக” -த் தமிழக அரசும் மத்திய பா.ஜ.க. அரசும் விளக்கமளிக்கின்றன. ”மண்ணெண்ணெய்தான் எடுக்கப் போவதாகக் கூறி கதிராமங்கலத்திற்கு நுழைந்த ஓ.என்.ஜி.சி. இப்பொழுது மீத்தேனைத் தேடிக் கொண்டிருப்பதாக” அப்பகுதி மக்கள் சந்தேகிக்கிறார்கள். யோக்கியனைப் போலப் பேசும் பா.ஜ.க.வைத் தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை.

துரப்பணவு தொடங்கி சுத்திகரிப்பது வரையிலான எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்காமல் செய்துமுடிக்க முடியாது. டெல்டா மாவட்டங்களோ கடல் மட்டத்திலிருந்து வெறும் ஒரு மீட்டர் உயரத்தில்தான் அமைந்திருக்கின்றன.

கடந்த நூறாண்டுகளில் டெல்டாவில்  வண்டல் மண் போதிய அளவில் படியாததாலும், பருவ நிலை மாறுபாடுகளாலும், அம்மாவட்டப் பகுதிகள் பூமிக்குள் இறங்கத் தொடங்கி, கடல் நீர் உள்ளே புகும் அபாயத்தை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, நாகை மாவட்டத்தில் கடலையொட்டி அமைந்துள்ள கிராமப்புறங்களில் ஏற்கெனவே நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது.

இப்படிபட்டதொரு நிலையில் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைக்கும் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைப் புல் பூண்டுகூட முளைக்க இலாயக்கற்ற உவர் நிலமாக மாற்றும் சதி தவிர வேறில்லை. காவிரியில் தனது உரிமையைக் கோரும், டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரிவரும் தமிழக மக்களைச் சீண்டிப் பார்க்கும் மாபெரும் அநீதி இது.

‘சோழ நாடு சோறுடைத்து‘ என்ற வரலாற்றுப் பெருமை கொண்டது காவிரி டெல்டா பகுதி. இப்பகுதியின் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது நெல் விவசாயம்தான். தமிழர்களின் இத்தகைய வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கழிப்பறை காகிதம் போலக் கசக்கி எறியத் துணிந்திருக்கிறது, பாரதப் பண்பாடு பேசும் பா.ஜ.க.

விவசாயிகளின் பூமியை கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காடாக மாற்றியே தீருவது என்ற வெறியோடு செயல்படுகிறது, அக்கட்சி. நீட் தேர்வு, இந்தி  சமஸ்கிருதத் திணிப்பு என்ற வரிசையில் தமிழர்களின் உரிமைக்கும் சுயமரி யாதைக்கும் எதிராகப் பார்ப்பன பாசிசக் கும்பல் நடத்திவரும் போரில் மற்றுமொரு முனைதான் இப்பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம்.

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவசாயி தீராத கடனாளியாவது ஏன் ?

2
பஞ்சாபில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கக் கோரி, அம்மாநிலத்தின் பதிண்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

விவசாயக் கடன் தள்ளுபடி என்ற கோரிக்கை, ஆளும் கட்சிகள் தொடங்கிப் பொருளாதார வல்லுனர்கள், வங்கியாளர்கள் வரையிலான கனவான்களுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. ‘விவசாயக் கடன் தள்ளுபடி, மக்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் பண்பைக் கெடுத்து, கடன் தள்ளுபடிக்காகக் காத்திருக்கும் மோசமான பழக்கத்தை ஏற்படுத்திவிடும் என்றும், ‘இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும்’ என்றும் பலவாறான வாதங்களை விவசாயக் கடன் தள்ளுபடிக்கு எதிராக இவர்கள் முன்வைக்கின்றனர்.

இப்படி வாதிடுபவர்கள் யாரும் வங்கிக் கடனை விவசாயியால் ஏன் கட்டமுடியவில்லை என்பது குறித்தோ, இப்பிரச்சினையின் பின்னணி என்ன என்பது குறித்தோ பேச விரும்புவதில்லை.

விவசாயிகளுக்கு ஏற்படும் கடன் சுமை இயற்கைச் சீற்றங்களால் மட்டும் ஏற்படுவதில்லை. விளைச்சல் அதிகரிக்கும்போதும் விளைபொருட்களின் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்து கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் விலை வீழ்ச்சி மக்களிடம் முழுமையாகப் போய்ச் சேருவதில்லை. விலை வீழ்ச்சியினால் இடையில் உள்ள வணிகர்களே பலனடைகின்றனர். இங்கு வணிகர்கள் என நாம் பொதுப்படக் குறிப்பிடுவது, பன்னாட்டு வேளாண் வணிக நிறுவனங்கள், உள்நாட்டு கார்ப்பரேட்  நிதிக் கூட்டமைப்புகள் மற்றும் உள்நாட்டு வியாபாரிகளுமே ஆவர்.

விளைபொருட்களுக்கு இலாபம் தரத்தக்க விலை கோரி மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய சாலை மறியல் (கோப்புப் படம்)

விவசாயிகளின் கடன் பிரச்சினையைச் சுலபமாகப் புரிந்து கொள்ள ஒரு சிறு கடன் கணக்கைப் பார்ப்போம். உற்பத்தி இயல்பாக இருக்கும்போது, ஒரு விவசாயி வங்கியில் இருந்து ரூ.100 கடன் பெறுகிறார். அக்கடனைக் கொண்டு தானிய வகைகளை உற்பத்தி செய்து, அதனைச் சந்தையில் ஒரு வணிகரிடம் ரூ.100 -க்கு விற்பனை செய்கிறார். அவ்வணிகர் அச்சரக்கை நுகர்வோரிடம் விற்பனை செய்கிறார். விவசாயி, தான் பெற்ற கடன் தொகையான ரூ.100 -ஐ வங்கிக்குத் திருப்பிச் செலுத்துகிறார். இதில் வங்கிக்கடன் எந்தச் சிக்கலும் இல்லாமல் சுமுகமாக முடிகிறது.

தற்போது விளைபொருள் உற்பத்தி வழக்கத்தைவிட 10% அதிகரித்திருக்கிறது எனக் கணக்கில் கொள்வோம். தற்போது இதே கடன் கணக்கு என்னவாகிறது எனப் பார்க்கலாம்.

இம்முறையும் விவசாயி வங்கியில் ரூ.100 கடன் பெற்று, அதனைக் கொண்டுதான் விவசாயம் செய்திருப்பார். அவர் விளைவித்த சரக்கின் மதிப்பு ரூ.100. ஆனால் 10% மிகை உற்பத்தியின் காரணமாக விளைபொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 30% வரை வீழ்ச்சியடைகிறது. வணிகர் அந்த விளைபொருட்களை ரூ.70 கொடுத்து வாங்குகிறார். ஏறக்குறைய விளைபொருளின் மதிப்பான ரூ.100 -க்கு அதனை நுகர்வோரிடம் வணிகர் விற்றுவிடுகிறார். தற்போது விவசாயி தனது மூதலீடான (வங்கிக்கடன்) ரூ.100 -ல் வெறும் ரூ.70 -ஐத் தான் திரும்பப் பெற்றிருக்கிறார். அத்தொகையை விவசாயி வங்கிக்குச் செலுத்துகிறார். விளைபொருளின் மதிப்பில் மீதித் தொகையான ரூ.30 தற்போது வணிகர் கையில் இருக்கிறது.

தன்னிடம் விவசாயி பெற்ற கடன் தொகையான ரூ.100 -ல், விவசாயி செலுத்திய ரூ.70 போக, மீதிக் கடன் தொகையான ரூ.30 -ஐச் செலுத்துமாறு விவசாயியை நிர்பந்திக்கிறது வங்கி. ஆனால், அந்தப் பணம் இப்போது வணிகரிடம்தான் உள்ளது. வணிகரிடமிருந்து அந்தத் தொகையைப் பறித்தெடுக்க விவசாயிக்கும் அதிகாரமோ, சக்தியோ கிடையாது. அதேபோல, வங்கியும் வணிகரிடமுள்ள ரூ.30 -ஐப் பெற்றுக் கொள்ள சட்டத்தில் வழிவகைகளும் கிடையாது.

வங்கிகள் தாம் கொடுத்த கடனைத் திரும்பப் பெற விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல்களிலும், ஆட்களை விட்டு மிரட்டும் செயல்களிலும் ஈடுபடுகின்றன. விவசாயிக்கு இருக்கும் ஒரே வழி தற்கொலை செய்து கொள்வதேயாகும். இக்கொடுநிலையைத் தவிர்க்கவே விவசாயிகள் கடன் தள்ளுபடியைக் கோருகின்றனர்,

ஆகவே விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கையைப் பரிசீலிக்கையில், கீழ்க்கண்ட மூன்று விசயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • விவசாயிகள் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் போவதற்கான காரணம், கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற மெத்தனமோ அல்லது கடனைத் திரும்பச் செலுத்த விரும்பாத கெடுமதியோ அல்ல.
  • தற்போது விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், வெகு விரைவில் இதே நிலைமை மீண்டும் வரும். இதன் காரணம், ஒருமுறை கடன் தள்ளுபடி செய்தால், மீண்டும் மீண்டும் கடன் தள்ளுபடி கேட்கும் பேராசை அல்ல. மாறாக, இந்தப் பொருளாதாரத்தின் கட்டமைப்பே அப்படித்தான் இருக்கிறது. எப்போதெல்லாம் விளைச்சல் அதிகமாகிறதோ, அப்போதெல்லாம் கடன் தள்ளுபடி அவசியமானதாகிறது.
  • வங்கிகள் விவசாயிகளுக்குக் கொடுத்த கடன் காற்றில் கரைந்து மறைந்துவிடவில்லை. அவை வணிகர்களின் கையில் இலாபமாகப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அந்தப் பணத்தின் மீது வங்கிகளும் கைவைக்க முடியாது. விவசாயிகளும் கைவைக்க முடியாது

இந்தியாவில் புதிய தாராளவாதக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக, இந்திய உணவுக் கழகம் 22 வகையான பயிர்களுக்கு ஆதார விலையை நிர்ணயித்து வந்தது.

பஞ்சாபில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கக் கோரி, அம்மாநிலத்தின் பதிண்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

பணப்பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப் பல்வேறு வாரியங்கள் இயங்கி வந்தன. தேயிலை வாரியம், காஃபி வாரியம், ரப்பர் வாரியம் போன்றவை தாமே கொள்முதல் மற்றும் விற்பனைப் பணியை மேற்கொண்டு, விலை வீழ்ச்சியின் போது அவை நேரடியாகத் தலையிட்டன.

புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, பணப்பயிர்களுக்கான வாரியங்கள் தங்களது பணிகளை முழுமையாக நிறுத்திக் கொண்டன. இந்திய உணவுக் கழகம் தனது கொள்முதல் கொள்கையைச் சில பயிர்களுக்கு மட்டுமெனச் சுருக்கிக் கொண்டது.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும், அவர்கள் கடன் தள்ளுபடி கோருவதற்கான காரணமும் பின்னணியும் இவைதாம். இன்று விவசாயிகள் கோரும் கடன் தள்ளுபடிக்கு எதிராகக் கம்பு சுழற்றும் பொருளாதாரப் புலிகளுக்கு இவையெல்லாம் தெரியாதா என்ன?

வங்கிகளில், கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் நடத்தக் கடன் வாங்கி, அதனை வேறு தொழில்களுக்கும், தனிப்பட்ட சொத்துக்கள் வாங்குவதற்கும் திருப்பிவிடுகின்றனர். பின்னர், நட்டக்கணக்குக் காட்டிப் பொதுத்துறை வங்கிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் தயக்கம் காட்டாத அரசு, மறுபுறமோ, விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது மற்றும் அப்பொருட்களைக் கொள்முதல் செய்வது ஆகிய தமது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு, விவசாயிகளைக் கடன் சுமைக்குக் காவு கொடுக்கிறது.

(“The Question of Farm Loan Waiver” என்ற தலைப்பில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் சி.பி.எம். இன் கட்சிப் பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி -யில் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு.)

 -மொழியாக்கம்  குமார்.
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

விவசாயிகளின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சர்க்கரையின் அறிவியல்

5

லகம் முழுவதும் பெருகிவருகிற அதீத உடல் பருமன் பிரச்சினையை நிறுத்த விஞ்ஞானிகள் பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள். இப்பிரச்சினை கொழுப்பையும் தாண்டி மிக அபாயகரமாக இருப்பதை புதிய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அல்ஜசீராவின் தொழில்நுட்பத்தை அறிவோம் (Tech Know) குழு சர்க்கரையின் அறிவியலை ஆராய்கிறது.


ர்க்கரை, இது உலகெங்கெலும் உள்ள குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டுவரும் ஒரு பொருளாகும். இது மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில், ஆற்றல் மூலங்களில் முக்கிய பகுதியாகவும் உள்ளது. ஆனால், உலகளவிலான பெருகிவரும் உடல்நல நெருக்கடிக்கு முக்கிய குற்றவாளியாகவும் உள்ளது.

பெருமளவில் அதிகரித்து வரும் அதீத உடல் பருமனுக்கும், நீரிழிவு நோய்க்கும் காரணமாக சர்க்கரை, குறிப்பாக சர்க்கரைக் கரைசல் பானங்கள் (பாட்டில் குளிர்பானங்கள்) இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி உலக அளவில் 190 கோடிப் பேர் அதிக எடையுடனும், அதில் 60 கோடிப் பேர் அதீத உடல் பருமனுள்ளவர்களாகவும் உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் 2014-ம் ஆண்டுத் தரவுகளின் படி உலகில் பெரியவர்களில் மூன்றில் ஒருவர் அதிக எடையுடன் இருக்கிறார். 2015-ம் ஆண்டின் தரவுகளின் படி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 4.2 கோடி பேர் அதிக எடையுடனும் அவர்களில் 48 சதவீதத்தினர் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ளனர்.

மெக்சிக்கோவைப் பொறுத்தவரை, பிரச்சினை இன்னும் மோசமாக உள்ளது. மெக்சிக்கோவின் தேசிய பொது சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி சுமார் 70 சதவீத பெரியவர்கள் அதிக எடையுடன் அல்லது அதீத உடல் பருமனுள்ளவர்களாக உள்ளனர். மெக்சிக்கர்கள் உலகிலுள்ள வேறு எவரையும் விட அதிக சோடா பானங்களை குடிக்கிறார்கள். ஒரு மெக்சிக்கர், ஆண்டுக்கு சுமார் 163 லிட்டர் பானத்தை குடிக்கிறார். இது ஒரு அமெரிக்கர் ஆண்டுக்கு நுகரும் 118 லிட்டரை விட சுமார் 40 சதவீதம் அதிகமாகும்.

இதைக் கட்டுப்படுத்த மெக்சிக்கோ அரசு அந்த பானங்களுக்கு 10% சுங்கவரி விதித்துள்ளது. மெக்சிக்கோவை மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்றும், ‘உலக சர்க்கரை வரி’ விதிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மெக்சிக்கோவை அடுத்து இன்றளவில் பிரான்ஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் சர்க்கரை பானங்களுக்கு வரிக் கட்டுப்பாடுகள் விதிக்க பரிசீலித்து வருகின்றன.

இந்தியாவிலும், சோடாவின் விற்பனை 1998 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்து வருகிறது. ஒரு இந்தியருக்கு ஆண்டுக்கு 11 லிட்டர் சோடா என்றளவில் நுகர்வு உள்ளது. 1980-களில் இருந்து குப்பை உணவு எனப்படும் பொதியப்பட்ட உணவின் நுகர்வும் அதிகரித்து வந்துள்ளது. இதுவே இங்கு அதீத உடல்பருமன், நீரிழிவு மற்றும் இதயநோய் அதிகரிப்பிற்கான காரணமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அதிக சர்க்கரை உணவு அதாவது அதிக கார்போ-ஹைட்ரேட் உணவு உடல் நலத்திற்கு தீங்கானது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிக சர்க்கரை உணவுக்கும் இதய நோய்க்குமான தொடர்ப்பு பற்றிய 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சர்க்கரை, சோடா பானங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கார்போஹைட்ரேட் உணவுப் பழக்கங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவ்வாய்வில் இதய நோய் மற்றும் இறப்பிற்கான வாய்ப்புகள் கணிசமாக உயர்ந்தது கண்டறியப்பட்டது.

***

ர்க்கரை என்றவுடன் நம்மில் பெரும்பாலானோருக்கு வெள்ளை நிற கன படிகங்கள் (ஜீனி) தான்  நினைவுக்கு வரும். ஆனால், சர்க்கரை கார்போ-ஹைட்ரேட்டுகள் எனப்படும் கார்பன் (C), ஹைட்ரஜன் (H) மற்றும் ஆக்சிஜன் (O) அணுக்களின் வேதிப் பிணைப்பினால் உருவாகும் கரிம மூலக்கூறுகளின் ஒரு வகையாகும்.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் கார்போ-ஹைட்ரேட்டுகளை உருவாக்குகின்றன. பகலில் ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி அதை சூரிய ஆற்றலின் உதவியுடன் நீருடன் வினையாற்றச் செய்து கார்போ-ஹைரேட்டுகளையும், ஆக்சிஜனையும் உருவாக்குகின்றன.

குளுக்கோஸ், ஃப்ரக்ட்டோஸ், காலக்டோஸ் போன்ற எளிமையான மூலக்கூறுகள் ஒற்றை சர்க்கரைகள் (Monosaccharides: Mono – ஒற்றை; saccharides – சர்க்கரைகள்) என்றழைக்கப்படுகின்றன. சுக்ரோஸ், லாக்டோஸ், மால்டோஸ் இரண்டு மூலக்கூறுகள் கொண்ட சேர்மங்கள் இரட்டை சர்க்கரைகள் என்றழைக்கப்படுகின்றன.

சுக்ரோஸ் ஒரு குளுக்கோசும், ஒரு ஃப்ரக்டோசும் சேர்ந்த சேர்மமாகும். நாம் பயன்படுத்தும் வெள்ளை நிற கன படிகங்களாகட்டும், நாட்டுச் சர்க்கரை எனப்படும் மஞ்சள் நிற சர்க்கரை, வெல்லம் எதுவாயினும் அது சுக்ரோஸ் என்ற இரட்டை சர்க்கரைகள் (Disaccharides) வகையைச் சேர்ந்ததாகும். பாலில் இருக்கும் சர்க்கரை லாக்டோசாகும். இது ஒரு குளுக்கோசும், ஒரு காலக்டோசும் சேர்ந்த சேர்மம். அதே போல் பார்லி போன்ற தானியங்களில் இருந்து கிடைக்கும் மால்டோஸ் என்பது இரண்டு குளுக்கோஸ் மூலக்கூறுகள் சேர்ந்த இரட்டை சர்க்கரையாகும். இவை அனைத்தும் எளிமையான சர்க்கரைகள் அல்லது எளிமையான கார்போ-ஹைட்ரேடுகள் எனப்படுகின்றன.

தாவரங்கள் உருவாக்கும், மாச்சத்து (Starch-ஸ்டார்ச்), நார்ச்சத்து (Fibre-ஃபைபர்) போன்றவை ஆயிரக்கணக்கான ஒற்றை சர்க்கரைகள் இணைந்த சிக்கலான ஒரு மூலக்கூறு வகையைச் சேர்ந்தவை. அதனால் இவை சிக்கலான கார்போ-ஹைட்ரேடுகள் (Polysaccharides) எனப்படுகின்றன.

நாம் உண்ணும் கார்போ-ஹைட்ரேட்டுகள் செரிமானத்திற்கு முதலில் ஒற்றை சர்க்கரைகளாக உடைக்கப்பட வேண்டும். கார்போ-ஹைட்ரேட்டுகளின் செரிமான நிகழ்ச்சிப் போக்கு நமது வாயிலிருந்து துவங்கிறது. முதலில் உமிழ்நீரில் உள்ள நொதியில் அவை நீர்பகுப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. பின்னர் சிறுகுடலுக்கு சென்றபின் அங்கு கணையநீர் நொதியினால் ஒற்றை சர்க்கரைகளாக உடைத்து உறிஞ்சப்பட்டு அவை இரத்தத்தில் கலக்கின்றன.

இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸ் என்ற ஒற்றை சர்க்கரை உடலெங்குமுள்ள செல்களின் ஆற்றல் மூலங்களாக இருக்கிறது. இரத்தத்தில் குளுக்கோஸ் கலந்தவுடன், இன்சுலின் (Insulin) என்ற இயக்குநீரை (harmone) கணையம் சுரந்து இரத்தத்தில் கலக்கிறது. இன்சுலின் கல்லீரல் மற்றும் தசைகளுக்கு இரத்தத்திலுள்ள குளுக்கோசை எடுத்துக் கொள்ளும் படி சமிக்ஞை கொடுப்பதுடன், அதை ஆற்றலாக மாற்றவும் உதவிபுரிகிறது. செல்கள் அவற்றை எரித்து உடனடி ஆற்றல் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.

மீதமிருக்கும் சர்க்கரைகள் திசுக்களிலும், கல்லீரலிலும் க்ளைக்கோஜென்களாக (Glycogen) சேமிக்கப்படுகிறது. நாம் அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உட்கொள்ளும் போது க்ளைக்கோஜென்களை சேமிக்கும் சேமிப்பிடங்கள் நிறைந்த பின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இன்னும் மீந்திருக்கும். இப்போது இன்சுலின் கல்லீரலுக்கு சமிக்கை கொடுத்து அங்கு அவை கொழுப்பாக மாற்றப்படுகின்றன. இந்த செயல்முறைக்கு கொழுப்பாக்கல் (Lipogenesis) என்று பெயர். இந்தக் கொழுப்பு முதலில் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது.

***

லிஃபோர்னியா, டேவிசில் (Davis) இருக்கும் ஆய்வகத்தில் நடத்தப்படும் ஆய்வு காரணம் – விளைவை முதன்முறையாக வெளிப்படுத்துவதாக உள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியியல் துறையும், அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை நடத்துகின்றன.

இதில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் சர்க்கரையை (கார்போ-ஹைட்ரேட்) பத்து வாரங்களுக்கு உணவு முறையாகக் கொடுத்து, பின்னர் அதன் விளைவுகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அளவிடுகின்றனர். நல்ல உடல் நலத்துடன் 20-வயதுகளில் உள்ள இளைஞர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

பேராசிரியர் கிம்பர் ஸ்டான்ஹோப்

பேராசிரியர் கிம்பர் ஸ்டான்ஹோப் (Kimber Stanhope) தலைமையில் நடக்கும் இவ்வாய்வில், பங்குகொள்ள கல்லூரி மாணவர்களின் சிறு குழு வந்துள்ளது. அவர்கள் இங்கு தங்கள் வகுப்புக்களுக்காக வரவில்லை; மாறாக தங்களையே ஆய்வில் உட்படுத்திக் கொள்ள தன்னார்வலர்களாக வந்துள்ளனர்.

இது ஒற்றை கண்மூடிய (Single Blinded) சோதனை. அதாவது யார் யார் என்னென்ன உட்கொள்கிறார்கள் என்பதை விஞ்ஞானிகள் மட்டுமே அறிவார்கள். ஆய்வு துவங்கிய முதல் நாளில் இருந்து மிகமிக கட்டுப்படுத்தப்பட்ட முறையில் விஞ்ஞானிகள் கொடுக்கும் உணவை மட்டுமே பத்துவாரங்களுக்கு சாப்பிட வேண்டும். வெளி உணவுகளுக்கு அனுமதி இல்லை. மொத்தம் 60 பேரில், 15 பேர்களாக குழுக்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சர்க்கரை விகிதத்தில் உணவுகள் வழங்கப்பட்டன. சர்க்கரை உட்கொள்ளும் உணவுப் பழக்கம் மட்டுமே ஆய்வுக்குட்பட்ட பொருளென்பதால் உடற்பயிற்சி செய்வதற்கும் அனுமதியில்லை.

கல்லீரல் ட்ரைகிளிசரைட்களின் (triglycerides) அளவை ஒழுங்குபடுத்துகிறது. கல்லீரலில் அதிக கொழுப்பு சேமிப்பு அதிகமான ட்ரைகிளிசரைட்களை உற்பத்தி செய்யும். இரத்தத்தில் ட்ரைகிளிசரைட்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அது இரத்த நாளங்களில் அடைப்புக்கான சாத்தியத்தை அதிகரித்து கொடிய இதய நோய் அபயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக ஃப்ரக்டோஸ், கல்லீரல் கொழுப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

அதனால் முதல் நாளில் இருந்து ஒழுங்கான இடைவெளிகளில் காந்த ஒத்திசைவு படமெடுத்தலின் (MRI) மூலம் அவர்களின் உடலுறுப்புகள், குறிப்பாக கல்லீரல் படமெடுக்கப்பட்டு ஒப்பீட்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. கதிரியக்க நோய் கண்டறிதல் துறையில் உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ஜான் மெக்கன் (John McGann) இதை மேற்பார்வையிடுகிறார்.

உணவுக்குப் பின் அவர்களின் மூச்சுக் காற்றும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அதாவது, ஒருவர் தனது மூச்சுக் காற்றில் எவ்வளவு ஆக்சிஜனை உறிஞ்சி நுகர்கிறார்; எவ்வளவு கார்பன்-டை-ஆக்சைடை உற்பத்தி செய்து வெளியிடுகிறார் என்பது நவீன தொழில்நுட்பக் கருவியின் மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் மூலம், அவருடைய உடல் எந்த விகிதத்தில் கொழுப்பை, எரிக்கிறது என்பதை அக்கருவி கணக்கீடு செய்யும். கல்லீரலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைந்து அதாவது எரிந்து ட்ரைகிளிசரைட்களை உற்பத்தி செய்கிறது.

அதே போல அவர்களது இரத்தம் சேகரிக்கப்பட்டு, அதிலுள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களின் அளவு ஒப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. டாக்டர் கேண்டஸ் ப்ரைஸ் (Candace price) இரத்தத்திலுள்ள கொழுப்பமிலங்களின் ஆய்வகத்தின் பொறுப்பாளராக இருக்கிறார்.

அதிகளவிலான கார்போ-ஹைட்ரேட் உணவுகள் ஒருவரின் உடல் பருமன் அதிகரிக்காவிட்டாலும் கூட கொடிய இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்ற ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் வந்தடைந்துள்ளனர்.

முடிவாக கார்போ-ஹைட்ரேட்டுகள் உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அது வெள்ளை, மஞ்சள், பழுப்பு என எந்த நிறத்தில் இருந்தாலும் அவற்றின் விளைவுகள் ஒன்று தான். அவற்றையும் செயற்கை இனிப்பூட்டிகளையும் அவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். உடலின் ஆற்றல் (கார்போ-ஹைட்ரேட்) தேவைக்கு அளவாக பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் டாக்டர் கிம்பர் ஸ்டான்ஹோப்.

***

கார்போ-ஹைட்ரேட்டுகளின் மூலாதாரங்களாக தாவரங்களே உள்ளன. மிகை கார்போ-ஹைட்ரேட் உணவுப் பழக்கம், உடல் நலத்திற்கும், உயிருக்கே கூட தீங்கானது என்கிறது அறிவியல்.

இயற்கை விவசாயம், இயற்கை உணவு போன்ற குழுமங்கள் “வெள்ளை சர்க்கரை உடல் நலத்திற்கு தீங்கு, மஞ்சள், பழுப்பு, நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினையில்லை” என்று பிரச்சாரம் செய்கின்றனர். இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட, சுத்தமான ஆர்கானிக் சர்க்கரை அதிக விலையில் நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து சந்தைப்படுத்தப்படுகிறது. அவர்களும் அதை நம்பி ஏமாறுகின்றனர்.

கடந்த 100, 150 ஆண்டு கால அறிவியலின் வருகைக்குப் பிறகு நமது பழமை சீரழிக்கப்பட்டதன் விழைவுகள் தான் அதீத உடல்பருமன், நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள். அதனால், அதுகாறும் இருந்த பழைய பண்பாடுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்கின்றனர் நாம் தமிழர் சீமான் போன்ற சிலர். இது அறிவியல் முன்னேற்றத்தை கொச்சைப்படுத்துவதாகும். எல்லா கார்போ-ஹைட்ரேட்டுகளையுமே உடல் ஆற்றல் தேவையைவிட மிகையாக எடுத்துக் கொள்ளும் போது அது உடல்நலத்திற்கு கேடானதுதான்.

வெள்ளை சர்க்கரையில் இருக்கும் சுக்ரோசின் அளவை விட நாட்டுச் சர்க்கரையில் இருக்கும் சுக்ரோஸ் அளவு குறைவாக இருக்கலாம். அதாவது இனிப்புச் சுவைக்கு காரணமாக சுக்ரோஸ் இரண்டிலும் இருக்கிறது. இனிப்புச் சுவை அதிகம் வேண்டுவோர் நாட்டுச் சர்க்கரையை அதிகம் போட்டு பயன்படுத்துவர். குறைவாக இனிப்பு சாப்பிடுபவர் அது வெள்ளை சர்க்கரையாக இருந்தாலுமே அளவாக எடுத்துக் கொள்வார்.

மறுபுறம், நமது நாட்டில் புரதம் நிறைந்த இறைச்சி உணவு உடல் நலத்திற்கும், குணநலன்களுக்கும் தீங்கானது என்று அறிவியலுக்குப் புறம்பாக பொய்யைப் பரப்பிவைத்துள்ளது பார்ப்பனியம். அதோடில்லாமல், மாட்டுக்கறிக்கு தடை விதிப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் புரதத் தேவையை பூர்த்தி செய்யவிடாமல் தடுக்கவும் செய்கிறது.

இதனால் புரதம் சாப்பிட முடியாத மக்கள், எளிய கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் மூலம் உழைக்கும் மக்களை இதுவரை பெரிய அளவில் அவர்களுக்கில்லாத உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் போன்ற உடல் நலப் பிரச்சினைகளுக்குள் தள்ளியுள்ளது.

– நாசர்

செய்தி ஆதாரம் :

_____________

இந்த அறிவியல் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சென்னை ஐஐடி : சூரஜ்ஜை தாக்கிய மணீஷுக்கு தண்டனை இல்லை !

1

சென்னை ஐ.ஐ.டி.யில், இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர் சூரஜ் தாக்கப்பட்ட சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். அது குறித்து விசாரிக்க ஐஐடி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டி, நடப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், நடந்த சம்பவங்கள் குறித்த தனது பார்வையையும், குற்றமிழைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ’தண்டனை’களையும் குறிப்பிட்டுள்ளது.

தாக்கப்பட்ட மாணவர் சூரஜ் – ஐ.ஐ.டி. இயக்குனர் வீட்டு முன் மாணவர்களின் போராட்டம் – பேரணி

மத்திய அரசு, கறிக்காக மாடு விற்கத் தடை விதித்து இயற்றிய அரசாணையை எதிர்த்து ஐஐ.டி. சென்னையில் கடந்த மே மாதம் சில மாணவர்களால் மாட்டுக்கறித் திருவிழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளே அவ்விழாவில் பங்கேற்ற சூரஜ் என்ற மாணவர், ஐ.ஐ.டி. வளாகத்திற்குள்ளேயே, மணீஷ் என்ற ஹிந்துத்துவ வெறியனால் தாக்கப்பட்டார்.  இது தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். அதோடு ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் மாட்டுக்கறித் திருவிழாவை நடத்தினர்.

இத்தாக்குதல் குறித்து விசாரிக்க, சென்னை ஐ.ஐ.டி.-ன் இயக்குனர், விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டி ஒன்றை உருவாக்கினர். இச்சம்பவத்தை விசாரிக்க 2 முழு மாதங்களை எடுத்துக் கொண்ட அக்கமிட்டி, கடந்த வாரத்தில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் சூரஜ் மீது தாக்குதல் தொடுத்த மணீஸ்-ற்கு விடுதியில் தங்குவதற்கு ஆறு மாத காலத்திற்குத் தடையையும், ’கடும் கண்டனத்தையும்’ கமிட்டி விடுத்துள்ளது. அதே போல, தாக்குதல் சம்பவம் குறித்து மற்றவர்களிடம் தெரிவித்த ’குற்றத்திற்காக’, தாக்கப்பட்ட சூரஜ்-ன் நண்பர் ஒருவருக்கும் ’கடும் கண்டனத்தைத்’ தெரிவித்துள்ளது. இத்தகைய ’கடும் கண்டனத்தை’ இரண்டு முறை ஒரு மாணவர் பெற்றால், அவருக்கு விடுதியில் தங்க அனுமதி மறுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்த்துவா கிரிமினல் மணீஷ்

தாக்குதல் தொடுத்த குற்றவாளி மணீஷுக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள தண்டனை என்பது மிகச் சாதாரணமானது. விடுதியில் மது அருந்தினாலோ, புகை பிடித்தாலோ கொடுக்கப்படும் தண்டணை தான் ”கடும் கண்டனம்” தெரிவிப்பது. சக மாணவர் மீது கொலை வெறித் தாக்குதல் தொடுத்த ஒருவனுக்கும் அதே தண்டனை தான் என்றால் அது எவ்விதத்தில் நியாயமானது?

இந்தியாவின் முதன்மைக் கல்வி நிறுவனத்தில் ஒரு மாணவனைக் கொலை வெறியோடு தாக்க முயற்சித்த ஒரு கிரிமினலை, நியாயப்படி கல்லூரியை விட்டு நிரந்தரமாக நீக்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சமாக அந்தக் கிரிமினல் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, பாதிக்கப்பட்ட மாணவரிடம் மன்னிப்புக் கேட்டு, அவரும் அதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இடை நீக்கமாவது செய்ய வேண்டும். ஆனால் இங்கு வெறும் அறிக்கையில் “கடும் கண்டனத்தை’த் தெரிவித்து தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டி.

மேலும் அவ்வறிக்கையில், நடந்த தாக்குதல் சம்பவத்தை ’வெவ்வேறு கருத்தியல்களைக் கொண்ட இருதரப்பு மாணவர்களுக்கு இடையிலான மோதல்’ எனக் குறிப்பிட்டுள்ளது. அதோடு  மாணவர்கள் சக மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் என்று புத்திமதியும் கூறியிருக்கிறது.

இந்த அறிக்கை குறித்து சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், தமது முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டியின் இந்த அறிக்கையை முழுக்க முழுக்க பொய்யும், வஞ்சகமும் கலந்த அறிக்கை எனச் சாடியிருக்கிறது.

நடந்த சம்பவத்தை இருதரப்பு மாணவர்களுக்கிடையிலான மோதல் என்று குறிப்பிடுவதன் மூலம், சூரஜ்ஜையும் குற்றவாளியாக்க முயற்சிக்கிறது விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டி. அதாவது குற்றவாளியிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக புகாரும், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களையும் குற்றவாளியாக்கி, வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் போலீசு கிரிமினல்களின் அதே உத்தியை ‘தேசத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனத்தின்’ நிர்வாகமும் செய்துள்ளது.

மாட்டுக்கறி திருவிழாவில் மாட்டுக்கறி சாப்பிட்ட ஒரு மாணவரிடம், ’மாட்டுக்கறி திருவிழாவில் பங்கேற்ற அனைவரையும் கொன்று விடுவேன்’ என மறுநாள் பகிரங்கமாக மிரட்டியிருக்கிறான் மணீஷ். அது குறித்து அம்மாணவர் ’மாணவர்களுக்கான டீன்-னிடம்’ மணீஷ் கொலை மிரட்டல் விடுப்பதாகப் புகார் அளித்துள்ளார். அது குறித்து டீன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மறுநாள் தான் மணீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சூரஜ்ஜைத் தாக்கியுள்ளான். இதில் இருதரப்பு மோதல் என்பது எங்கே இருந்து வந்தது?

இந்த விவகாரத்தில் சென்னை ஐ.ஐ.டி.யைப் பொறுத்தவரையில், அதன் நிர்வாகம் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்.-ன் ஒரு ’ஸ்லீப்பர் செல்’-லாகவே வேலை பார்த்துள்ளது. இப்பிரச்சினையை விசாரித்த மாணவர்களுக்கான ’டீனு’ம், இணைப் பதிவாளர் ஜெயக்குமாரும், வளாகத்தின் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்குமாறு சூரஜை நிர்பந்தித்திருக்கின்றனர். அதற்கு உடன்படாமல் மறுத்த சூரஜ்ஜுக்கு ’தண்டணை வழங்கப் போவதாக’ மிரட்டியுள்ளார் ஜெயக்குமார். அப்படியிருந்தும் பணியாத அவருக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு சமாதானப்படுத்தி கையெழுத்துப் பெற முயற்சித்து இருக்கின்றனர், ஐ.ஐ.டி. நிர்வாகத்தினர். இப்போது சொல்லுங்கள், இவர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் ’ஸ்லீப்பர் செல்’லா இல்லையா ?

ஏற்கனவே மணீஷின் மிரட்டல்கள் குறித்து டீன் அலுவலகத்தில் புகார் செய்யச் சென்ற மற்றொரு மாணவரிடம், அவரது முகநூலில் உள்ள அரசியல், சமூகக் கருத்துக்களை நீக்குமாறும், அவையே இப்படிப்பட்ட பிரச்சினைகளை வளர்க்கின்றன என்றும் மாணவர்களுக்கான டீன் கூறியுள்ளார். ஆனால் மணிஷை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை. இது தான் மாணவர்களுக்கான டீனின் இலட்சணம். சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் இப்படி இருக்கையில், அங்கிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்பான “மாணவர் சட்டசபை மன்றம்” நிர்வாகத்திற்கு அப்பட்டமான ஊதுகுழலாகவே இருந்து வந்திருக்கிறது.

சூரஜ் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்

சென்னை ஐ.ஐ.டியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ’ஃபிஃப்த் எஸ்டேட்’ (Fifth Estate) என்ற இணையதளத்தின் செயல் ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட வருண் ஸ்ரீதர் என்ற மாணவரின் நியமனத்தை இரத்து செய்திருக்கிறது மாணவர் சட்டசபை மன்றம். அம்மாணவர் செய்த குற்றம் என்னவெனில், சூரஜ்ஜின் மீதான தாக்குதலைக் கண்டித்து ”மாட்டுக்கறியும் தாக்குதலும்: சென்னை ஐஐடியில் என்ன நடக்கிறது?” என்ற கட்டுரையை வேறொருவருடன் இணைந்து எழுதியது தான். ஒரு பானைச் சோற்றுப் பதத்திற்கான ஒரு சோறு தான் இந்தப் பொய்.

ஏற்கனவே மாணவர்களின் பிரச்சினைகளுக்காகவும், சமூக, அரசியல் பிரச்சினைகளுக்காகவும், ’அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச்’ சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பிரசுரங்கள் கொடுத்து வந்ததைத் தடுக்க இதே மாணவர் சட்டசபை மன்றத்தை ஐ.ஐ.டி. நிர்வாகம் உபயோகித்தது. ’பிரசுர காகிதங்களால்’ ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மான்களுக்கு உடல் உபாதை ஏற்படும் என்ற ’அரிய கண்டுபிடிப்பை’ முன் வைத்து பிரசுரங்கள் கொடுப்பதைத் தடை செய்தது  மாணவர் சட்டசபை மன்றம்.

கடந்த ஆண்டு மாணவர் சட்டசபை உறுப்பினரான, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒருவரை மாணவர் சட்டசபை மன்றக் கூட்டத்திலேயே, தாக்கியுள்ளான் மணீஷ். மாட்டுக்கறி விவகாரத்திலும், தாக்குதல் தொடுப்பதற்கு முந்தைய நாள் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து, திட்டமிட்டு தான் சூரஜ் மீதான தாக்குதலையும் தொடுத்துள்ளான் மணீஷ்.

இப்படிப்பட்ட தொடர் குற்ற வரலாறு கொண்ட ஒரு கிரிமினலை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டிய போலீசோ, வழக்கம் போலக் குற்றவாளியிடம் பொய்ப் புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்கை நீர்த்துப் போகச் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனம் என்று தம்மைத் தாமே பீற்றிக் கொள்ளும் ஐ.ஐ.டி.யோ போலீசை விட கேடு கெட்டுப் போய், பொய்க்கதைகளை சித்தரித்து அறிக்கை தயாரித்துக் குற்றவாளிக்கு மொன்னைத் தனமான தண்டனைகளைக் கொடுத்து தமது நிறம் காவி தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

நிகழ்ந்துவரும் நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றை மட்டும் மிகத் தெளிவாக நமக்குக் காட்டிச் செல்கின்றன. அரசு, போலீசு, கல்வி, என அனைத்துத் துறைகளும் காவித் தேள்களின் விசக் கொடுக்குகளுக்கு இடையே சிக்கியிருக்கின்றன. மற்றுமொரு குஜராத்தாகவோ, உத்திரப் பிரதேசமாகவோ தமிழகம் மாறாமல் காக்க, ஒட்டுமொத்தத் தமிழகமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது!

மேலும் படிக்க:

“Severe reprimand” For murderous attack!! What next? Double-Severe reprimand for Murder?

Student who attacked beef-eaters punished

——————————————————————————
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் ! – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !

1

மார்க்ஸ் பிறந்தார்  11
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

வினவு குறிப்பு:

இந்தப் பகுதியில் தத்துவஞான ஆராய்ச்சிக்கு தேவையானதையும், தேவையற்றதையும் பார்க்க இருக்கிறோம். ஹெகலின் பிற்போக்கான மாணவர்களோ, மத்திய காலத்தில் அரிஸ்டாட்டிலின் போதனைகளை மதம் போல பாவித்த சிந்தனையாளர்களோ எப்படி தத்துவஞானத்தின் கேள்விக்கு பதில் சொல்லக் கூடாது என்பதை விதியாக்கியதை மறுத்தும், கேலி செய்தும் விளக்குகிறார் மார்க்ஸ். கடந்த கால விளக்கத்தை படைப்பூக்கத்துடன் ஆய்வு செய்யாமல், பக்தியுடன் பின்தொடர்ந்தால் நாம் விழுவது பள்ளமே அன்றி சிகரத்தை ஒரு போதும் அடைய முடியாது.

மாறிவரும் புறநிலையோடு, புரிந்து கொள்ளலில் மேம்படும் அகநிலை சேர்ந்து பயணித்தும் ஆய்வு செய்தும் வரும் போது மட்டுமே புதிய புரிதலை கண்டுபிடிக்க முடியும். இல்லை இன்னார் இப்படி சொல்லவில்லை ஆகவே புதிய விசயத்தை ஏற்க முடியாது என்றால் நாம் தேங்கிப் போன இறந்தகாலத்தின் எச்சங்களாக கரைந்து போவோம். அதனை சாக்ரடிசிடம் காண்கிறார் கார்ல் மார்க்ஸ். கேள்வி கேட்பதோடு பதில் சொல்ல மறுக்கும் மரபை தொடர்ந்து கேலி செய்து நீ கேள்வி கேட்டாகத்தான் வேண்டும் என்கிறார் சாக்ரடிஸ். நிதானமாக படியுங்கள்!

  1. “தத்துவஞானம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது”
    ஆ) தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !

ஹெகலின் அடிமைத்தனமான, சுய புத்தி இல்லாத ஆதரவாளர்களை மார்க்ஸ் அதிகமாக ஏளனம் செய்கிறார். இவர்கள் கீழ்மட்ட மனிதர்கள், எத்தகைய  தனித்தன்மையும் இல்லாதவர்கள், இவர்கள் வழக்கமாக “கடந்த காலத்தின் தத்துவஞான மேதைக்குப் பின்னால் மறைந்து கொள்பவர்கள்-ஆனால் சிங்கத்தின் தோலைப் போர்த்துக் கொண்டிருக்கும் கழுதை சீக்கிரத்திலேயே கண்டுபிடிக்கப்படுகிறது; இன்று அல்லது நேற்றைய தினத்தின் குள்ளனுடைய ஈனக்குரல் யுகங்களினூடே எதிரொலிக்கின்ற காம்பீரியக் குரலுடன் கோமாளித்தனமான வேறுபாட்டுடன் புலம்புகிறது”.(1)

ஒரு குள்ளன் இரண்டு மூக்குக் கண்ணாடிகளை அணிந்து கொண்டு ஒரு மேதையின் பிட்டங்களில் நின்று கொண்டிருக்கும் சித்திரத்தை மார்க்ஸ் ஏளனத்தோடு தீட்டுகிறார்; தான் பார்க்க முடிந்த அதிசயமான காட்சிகளை அவன் பிரகடனம் செய்கிறான்; ஆர்க்கிமிடஸ் புள்ளி இதயத்தில் அல்ல, நான் நின்று கொண்டிருக்கும் “கனமான, உறுதியான அடித்தளத்தில்” இருக்கிறது என்று விளக்குவதற்குக் கோமாளித்தனமான முயற்சி செய்கிறான். “முடி, நகம், விரல், மலம் ஆகியவற்றின் தத்துவஞானிகள் மற்றும் இதரர்களை இப்படித்தான் நாம் அடைகின்றோம்….”(2)

இங்கே மார்க்ஸ் ஒரு பக்கத்தில் வலதுசாரி ஹெகலியவாதிகளின் பரிதாபமிக்க நிலையையும் மறு பக்கத்தில் ஹெகல் வழிபாட்டை, அவருடைய போதனையைத் தனிமுதலானதாக உயர்த்துவதை, ஹெகலியத் தத்துவஞானத்தின் பல்வேறு கூறுகளையும் அம்சங்களையும் விளக்கிக் கூறுகின்ற பாதையில் மட்டுமே எதிர்காலத் தத்துவஞான வளர்ச்சி நடைபெற வேண்டும் என்ற வாதத்தைக் கண்டனம் செய்கிறார்.

அரிஸ்டாட்டில்

அதைப் பொறுத்தமட்டில் ஹெகலின் தத்துவஞானத்தின் விதியை, மத்திய காலத்தைச் சேர்ந்த உரையாசிரியர்களால் சீர்குலைக்கப்பட்ட அரிஸ்டாட்டிலினுடைய தத்துவஞானத்தின் வரலாற்று விதியுடன் ஒப்பிட முடியும். அரிஸ்டாட்டிலின் கருத்துக்கள் ஒரு வகையான தோத்திர நூலாக மாற்றப்பட்டன; மத நம்பிக்கையின் அதிகாரத்தை ஆதரிப்பதற்கு அவருடைய அதிகாரம் உபயோகிக்கப்பட்டது. அவர் எல்லாம் அறிந்தவர் என்ற நம்பிக்கை முட்டாள்தனமான எல்லைகளை எட்டியது. 17ம் நூற்றாண்டில் சூரியனில் கறும் புள்ளிகள் இருக்கின்றன என்பதை தொலைநோக்கு கருவியின் மூலமாகப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளும்படி யேசு சபையைச் சேர்ந்த ஒரு பேராசிரியரிடம் வானவியல் ஆராய்ச்சியாளரான கிர்ஹார் கூறிய பொழுது அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “மகனே, அதனால் பயனில்லை. நான் அரிஸ்டாட்டிலைத் தொடக்கத்திலிருந்து முடிவு வரை இரண்டு தடவைகள் படித்திருக்கிறேன். சூரியனில் கறும் புள்ளிகள் இருக்கின்றன என்ற சிறு குறிப்பைக் கூட அரிஸ்டாட்டில் எழுதவில்லை. எனவே அப்படிப்பட்ட கறும் புள்ளிகள் இருக்க முடியாது.”

தத்துவஞானத்தைப் பற்றி-இது “மேதைகளின்” தத்துவஞானமாக இருந்தாலும் கூட-இத்தகைய “பக்திமிக்க” அணுகுமுறை மார்க்சின் விமர்சன அறிவுக்குத் திருப்தியளிக்கவில்லை. “ஒரு தத்துவஞானம் உண்மையில் தத்துவஞானமாக இருக்கும் என்பதை அதிகாரத்தினால் அல்லது நம்பிக்கையினால் மக்களினத்தின் அதிகாரத்தினால் அல்லது நூற்றாண்டுகளின் நம்பிக்கையினால் என்றாலும் கூட-ஏற்றுக் கொள்வது சரியா?”(3) என்று அவர் எழுதினார். எனவே உண்மையான தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில் துணிவான, சுதந்திரமான அறிவு அவசியம்; அது இதுவரையிலும் சாதிக்கப்பட்டவற்றைக் கொண்டு திருப்தி அடையக் கூடாது, கடந்த காலப் பாரம்பரியத்தைப் படைப்பாற்றலுடன் பகுத்தாராய்ந்து புதிய சாதனைகளைத் தேட வேண்டும் என்பது மார்க்சின் கருத்தாகும்.

அதனால் தான் தத்துவஞானம் மதத்துடன் பொருந்துவதில்லை. நம்பிக்கை மற்றும் குருட்டுத்தனமான வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட தலைமை அதிகார மரபை அது ஏற்றுக் கொள்வதில்லை.

ஹெகல் அரிஸ்டாட்டிலைப் போன்ற அதே ரகத்தைச் சேர்ந்த மாபெரும் சிந்தனையாளர் என்று மார்க்ஸ் கருதினார். அரிஸ்டாட்டிலுக்குப் பிந்திய (எபிகூரிய, ஸ்டோயிக் மற்றும் ஐயுறவுவாதத்) தத்துவஞானங்களின் விதிக்கும் ஹெகலுக்குப் பிந்திய தத்துவஞானத்தின் விதிக்கும் இடையில் பொதுவான அம்சங்கள் இருப்பதை அவர் காண்கிறார். வலதுசாரி ஹெகலியவாதிகள் தத்துவஞானத்தைக் காட்டிலும் மதம் உயர்வானது என்று நிரூபிப்பதற்கு முயற்சி செய்தனர்; அவர்கள் மேன்மையான ப்ளுடார் கைப் போல தத்துவஞானத்தை “மத அரங்கத்துக்கு” முன்னால் கொண்டு வந்தார்கள்; ஆனால் மார்க்ஸ் தத்துவஞானமே “தலைமை அதிகாரமானது” என்கிறார். “தத்துவஞானத்தின் உலகத்தை அடக்குகின்ற, முற்றிலும் சுதந்திரமான இதயத்தில் ஒரு துளி இரத்தம் துடிக்கின்ற வரையிலும் எபிகூரசினுடைய போர் முழக்கத்தை எதிரிகளிடம் பதிலாக எடுத்துக் கூறுவதற்கு ஒருபோதும் களைப்படையாது: மக்களால் வணங்கப்படுகின்ற கடவுளே மறுப்பவன் அல்ல, மக்கள் கடவுளைப் பற்றி நம்புகின்றவற்றை ஆமோதிப்பவனே உண்மையில் பாவம் செய்தவன்.”(4)

அரிஸ்டாட்டிலுக்குப் பிந்திய தத்துவஞானம் கிரேக்கத் தத்துவஞானத்தின் தலைமையான சிகரமாகும். அது அடிமையுடைமை உலகத்தின் சீரழிவையும் புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தையும் அறிவித்தது. ஹெகலுக்குப் பிந்திய தத்துவஞானமும் அதே வரலாற்று நிலைமையில் இருந்தது. அது “பிளவடைந்த உலகத்தை” எதிரிட்டது. அதன் இசைக் கருவி “அயோலிய யாழ்”: அந்த யாழின் நரம்புகளைப் புயல் மீட்டியது. “ஆனால் ஒரு மாபெரும் தத்துவஞானத்தை, உலகத் தத்துவஞானத்தைப் பின்தொடர்ந்து ஏற்படுகின்ற இந்தப் புயல் மனக் குழப்பத்தைத் தோற்றுவிப்பதற்கு ஒருவர் தன்னை அனுமதிக்கக் கூடாது. ’’(5)

“புயலைப்” பற்றிய, ஒரு புதிய “பேராற்றல் மிக்க” யுகத்தைப் பற்றிய இந்த எதிர்பார்ப்பு 1830க்களின் கடைசியிலும் 1840க்களின் தொடக்கத்திலும் மார்க்சின் மனோநிலையின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அப்பொழுது ஜெர்மனி உறக்கத்திலிருந்து விழிக்கத் தொடங்கியிருந்தது; அதன் பொருளாதார, அரசியல் மற்றும் அறிவுத் துறை வாழ்க்கையின் புத்தாக்கம் தொடங்கியிருந்தது; அது 1848ம் வருடத்தின் புரட்சிகரமான கொந்தளிப்பை முன்னறிவித்தது.

டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த பொழுது மார்க்சினுடைய “புயலின் முற்பொழுதைப்” பற்றிய மனோநிலை இன்னும் மிகவும் தெளிவற்றதாக, உண்மையான அரசியலிலிருந்து மிகவும் அப்பாற்பட்டதாக இருந்தது என்பது மெய்யே. அது கருத்துமுதல்வாதத் தத்துவஞானத்தின் தெளிவில்லாத வகையினங்களில் தான் வெளிப்பட்டது. அது வெடித் திரியைப் போன்றதே. வெடி குண்டில் இணைக்கப்பட்டிருக்கின்ற திரி மெதுவாகத்தான் எரிகிறது. ஆனால் சீக்கிரத்தில் குண்டு வெடிக்கிறது.

கார்ல் மார்க்ஸ்

மார்க்ஸ் ஒரு “புயலை”முன்னறிவிக்கின்ற பொழுது “ஆசானைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்ற” ஹெகலியவாதிகளின் கோழைத்தனமான நிலையைத் தாக்குவது குறிப்பிடத்தக்கதாகும். “தனிமுதலான ஆன்மா வாடிக்கையாக மிதவாதத் தன்மையில் வெளியாகிறது” என்று அவர்கள் கருதினார்கள். தத்துவஞானத்துக்கும் “உலகத்துக்கும்” இடையில் உள்ள தகராறை “உண்மையான தேவைகளுடன் சமாதான ஒப்பந்தத்தின் மூலம்”, “ஆயுதந்தாங்கிய சக்திகளை வெட்டுவதன் மூலம், அவற்றைப் பிரித்துவிடுவதன் மூலம்” சரிப்படுத்தி விட முடியும் என்று நினைக்கின்ற “அரை குறையான அறிவுடையவர்களின்” கருத்துக்களை அவர் குறை கூறுகிறார்.(6)

“இப்பிரித்துவிடுதல்” குறிப்பாக, தத்துவஞானம் முக்கியமான பிரச்சினைகளைக் கைவிட்டுச் சுய உணர்வு உலகத்துக்குள் பின்வாங்குவதில் வெளிப்படுகிறது; இந்த நிலைமை அரிஸ்டாட்டிலுக்குப் பிந்திய நிலைமையை முற்றிலும் ஒத்ததாகும். உதாரணமாக, மார்க்ஸ் எபிகூரிய, ஸ்டோயிக் தத்துவஞானத்தை விட்டில் பூச்சிக்கு ஒப்பிடுகிறார்: “உலக முழுமைக்கும் வெப்பமளிக்கின்ற சூரியன் மறைந்ததும் விட்டில் பூச்சி தனி மனிதர்களின் விளக்கு வெளிச்சத்தைத் தேடுகிறது.”(7)

ஆனால் மார்க்ஸ் இங்கே எதிர்மறையான அம்சத்தைப் பார்ப்பதுடன் மிகவும் கவர்ச்சிகரமான அம்சத்தையும், தனிநபரிடத்தில், அவருடைய ஆன்மிக உலகத்தில், அறவியல் பிரச்சினைகளில், இதரவற்றில் அக்கறையை, அதாவது கிரேக்க மனிதாபிமானம் என்று சொல்லப்படுவதையும் பார்க்கிறார்.

இக்கண்ணோட்டத்தில் சாக்ரடீசின் ஆளுமையின் மீது அவருடைய அக்கறை சிறப்பானதாகும். தத்துவஞானத்தை அன்றாட வாழ்க்கையுடன் இணைப்பதில் வெற்றி பெற்ற, தத்துவஞானத்தை பண்டைக்கால ஏதன்சின் தெருக்களுக்கும் சதுக்கங்களுக்கும் கொண்டு வந்த அறிஞரின் “இலட்சிய ரீதியான” உருவம் இளம் மார்க்சைக் கவர்ந்தது. “கிரேக்க வாழ்க்கையுடன் கிரேக்கத் தத்துவஞானத்தின் உறவு, ஆகவே அதன் உள்ளீடான வரையறை சாக்ரடீசிடம் வெளிப்பட்ட காரணத்தால் அவர் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார்.”(8)

இயற்கையை, அண்டவெளியைப் புரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்ட அறிவில் சாக்ரடீசுக்குச் சிறிதும் அக்கறையில்லை. தன்னைப் பற்றி மனிதனுக்கு எதுவுமே தெரியாதென்றால் அவன் உலகத்தைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் எப்படி அறிய முடியும்? “உன்னை அறிந்து கொள்” என்பது சாக்ரடீசின் தத்துவஞானத்தின் முதற்கோட்பாடாகும்.

மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பின்வருவனவாகும்: நன்மை, தீமை என்பன யாவை? அழகு என்பது என்ன? நீதி என்பது என்ன? வாழ்க்கை, மரணம் என்பவை என்ன? காதல் என்பது என்ன? மகிழ்ச்சி என்பது என்ன?

இவை தத்துவஞான ஆராய்ச்சிக்குத் தகுதியில்லாத மிகவும் சாதாரணமான விஷயங்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். இங்கேதான் சாக்ரடீஸ் தன்னுடைய கிண்டலையும் இயக்கவியலையும் கையாள்கிறார். அவர் விவாதத்தை விரும்புகின்ற எவருடனும் விவாதம் புரியத் தயாராக இருக்கிறார், மற்றவர்களிடமிருந்து அறிவொளி பெற விரும்புகின்ற அப்பாவியைப் போல நடிக்கிறார், வெகுளித்தனமான ஆனால் சாதுரியமான கேள்விகளைக் கேட்கிறார்; அவரோடு விவாதம் செய்கின்ற, சுயதிருப்தி அடைந்த நபரின் அறியாமையை, இயக்கவியல் ரீதியில் அவரால் சிந்திக்க இயலாமையை, ஒரு நபருடைய கண்ணோட்டத்தையும் சந்தர்ப்பங்களையும் பொறுத்து ஒரே நடவடிக்கை நன்மையானதாக அல்லது தீமையானதாக இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள இயலாமையை அவை வெளிப்படுத்துகின்றன.

சாக்ரடீஸ்

சாக்ரடீசின் கிண்டல் (மார்க்சும் எங்கெல்சும் மற்றவர்களுடனும் நடத்திய விவாதங்களில் அதை அடிக்கடி உபயோகப்படுத்தினார்கள்) “செவிலித்தாயின் செயலைப்” போன்றது என்பது மார்க்சின் பொருத்தமான உதாரணமாகும்; அதன் உதவியின் மூலம் தத்துவச் சிந்தனை பிறக்கிறது, வளர்கிறது.

“எல்லாம் தெரியும் என்ற சுய திருப்தி மனப்பான்மையைக் கொண்ட” “சாதாரணமான நிதான அறிவுக்கு” சாக்ரடீசின் கிண்டல் ஒரு “இயக்கவியல் பொறியாகும்”. “சாதாரண அறிவுக்குச்” சவால் விடுகின்ற அனைத்துத் தத்துவஞானத்துக்கும் இந்தக் கிண்டல் குறியடையாளம் என்பது மார்க்சின் கருத்து.(9)

சாக்ரடீஸ் “தத்துவஞானத்தின் உருவகம்” – முதலாவதாக, அவரிடம் தத்துவஞானம் ஈடேற்றமடைகிறது, வாழ்க்கையின் புறவுருவமாக, செய்முறையாக இருக்கிறது என்ற அர்த்தத்தில், இரண்டாவதாக, தனிமனித சுய உணர்வின் தத்துவஞானம் அது என்ற அர்த்தத்தில். இக்காரணத்துக்காக மார்க்ஸ் அதன் வரலாற்று ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட வரையறைகளை, அதன் அகநிலைத் தன்மையை, அது தனக்குள் திரும்புவதைக் காண்கிறார். ஆனால் தனிப்பட்ட, மனித மட்டத்தில் அறிவாளியைப் பற்றிய, முரணில்லாத, நேர்மையான தத்துவஞானியைப் பற்றிய இலட்சிய ரீதியான பிம்பத்தை இளம் மார்க்சுக்குக் கொடுத்தது சாக்ரடீசே என்பது வெளிப்படையாகும். அத்தத்துவஞானி உண்மையில் தனக்கே மரண தண்டனை விதித்துக் கொண்டார்; ஏனென்றால் அந்த முடிவு அவருடைய உள் நம்பிக்கைகளிலிருந்து தர்க்க ரீதியாக முன்னேற்றமடைந்தது.

தத்துவஞானிகள் “தாங்களே வாழ்கின்ற பிம்பங்கள், வாழ்கின்ற கலைப் படைப்புகள்”(10), தங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தத்துவங்களின் உயிர்ப்புள்ள விளக்கங்கள் என்ற மார்க்சின் கருத்து மற்றவர்களைக் காட்டிலும் சாக்ரடீசுக்கே அதிகமாகப் பொருந்தும். ஒரு தத்துவஞானியின் ஆளுமை அவருடைய போதனையிலிருந்து சிறிதும்  பிரிக்கப்பட முடியாது என்று இளம் மார்க்ஸ் கருதினார்.

குறிப்புகள்:

(1) Ibid., p. 87.
(2) Ibid.
(3) Ibid., p. 506.
(4) Ibid., p. 30.
(5)Ibid., p. 491.
(6) Ibid., pp. 491, 492.
(7) Ibid., p. 492.
(8) Ibid., pp. 438-39.
(9)Ibid., p. 494.
(10) Ibid., p. 436.

தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல்
    வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தமிழகத்தைப் பலியிடும் புரோக்கர் ஆட்சி !

3

”சுயமரியாதையே இல்லாதவனோடு சண்டை போடுவது கடினம்” என்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பெரியார் கூறியிருப்பதாக நினைவு. இன்று அந்த நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.

ஊழல் வழக்கில் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டபோது, முதல்வர் நாற்காலியில் அமரவைப்பதற்குப் பொருத்தமான ஒரு ”உடல்” ஜெயலலிதாவுக்குத் தேவைப்பட்டது. ”அறிவோ, சொரணையோ, தன்மானமோ கடுகளவும் இல்லாத நபர்” என்று ஜெயா-சசி குற்றக்கும்பலால், தேடி அலசித் தெரிவு செய்யப்பட்ட ”உடல்” தான் பன்னீர்செல்வம்.

அந்த பன்னீருக்கு பல் முளைத்துவிட்டது என்று தெரிந்தவுடன், அரச பதவியில் அமர்த்துவதற்கு பன்னீரைவிடத் தாழ்ந்த அடிமை என்று எடப்பாடி தெரிவு செய்யப்பட்டார்.

ஜெயலலிதாவால் வாஜ்பாயி உள்ளிட்ட பலரும் அசிங்கப்பட்டிருந்த போதிலும், மோடி முதலான அனைவருக்கும் அவர் மீது ஒரு பிரமிப்பு இருந்தது. அதற்குக் காரணம் ஜெயலலிதாவும் தங்களைப் போன்ற ஒரு பார்ப்பன பாசிஸ்டு என்பது மட்டுமல்ல; அவர் தனது காலடியில் கிடத்தி வைத்திருந்த சுயமரியாதையற்ற பிண்டங்கள்!

அந்தச் சாதனைதான் சங்க பரிவாரத்தினரை மெய்சிலிர்ப்பில் ஆழ்த்தியது. ஜெயா செத்து, சின்னம்மாவும் உள்ளே போனபின், இந்த அடிமைப் பிண்டங்கள், மோடியின் காலைத் தமது தலையில் எடுத்து வைத்துக் கொண்டு விட்டன.

நீட், ஜி.எஸ்.டி., உதய், உணவுப் பாதுகாப்புச் சட்டம், வறட்சி நிவாரணம், கடலூர்  நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம்  ஆகிய அனைத்திலும் முழுமுற்றான சரணடைவு. காவிரித் தண்ணீர் பற்றி வழமையான வெற்று அறிக்கைகூட இல்லை. பல்கலைக் கழகத் துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுப்பது முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை எந்த ஊரில் வைக்கலாம் என்பது வரை அனைத்தும் டில்லியின் சித்தம். பா.ஜ.க. கை காட்டும் அனைவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.

தனக்குப் படியளக்கும் மூலதனமான பெண்ணை வாடிக்கையாளர்கள் எல்லை மீறித் துன்புறுத்தினால், தரகர்கள் கூட பவ்யமான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதுண்டு.  அத்தரகர்களைக் காட்டிலும் கேடுகெட்ட ஒரு கும்பல், தமிழகத்தை வைத்துத் தொழில் செய்து கொண்டிருக்கிறது.

தினகரன், சுதாகரன், எடப்பாடி, பன்னீர் என்று அ.தி.மு.க.-வில் பல கோஷ்டிகள். இத்தகைய கோஷ்டித் தகராறுகளின் போது கட்சி உடைந்து ஆட்சி கவிழ்வதைத்தான் நாம் இதுகாறும் கண்டிருக்கிறோம். இங்கேயோ, எத்தனை கோஷ்டிகளாகப் பிரிந்து மோதிக்கொண்டாலும், மிச்சமுள்ள ஆட்சிக்காலத்தைக் காப்பாற்றிக் கொள்வதிலும், கொள்ளையைப் பங்கு போட்டுக் கொள்வதிலும் எல்லா அடிமைகளும் கவனமாக இருக்கிறார்கள்.

காண்டிராக்ட் முதல் மணல் கொள்ளை வரை அனைத்திலும் அனைவருக்கும் பங்கு வழங்குவதன் மூலம், அ.தி.மு.க. வில் ”உட்கட்சி ஜனநாயகத்தை” எடப்பாடி உருவாக்கி வருவதாக கூறுகின்றன பத்திரிகைகள்.  இந்திய நாடாளுமன்றச் சீரழிவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

18 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாளையக்காரர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்த நிலைமையை, இன்றைய சூழ்நிலை நினைவு படுத்துகிறது. பாரதிய ஜனதாக் கட்சிதான் நாம் எதிர் கொண்டிருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனி. ”உடம்பில் ஐரோப்பிய ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்” என அன்றைக்கு சின்ன மருது வெளியிட்ட ”திருச்சி பிரகடனம்”தான் நினைவுக்கு வருகிறது.

இது சுயமரியாதையும் சொரணையுமற்ற தசைப்பிண்டங்களுடன், மானமுள்ள மனிதர்கள் நடத்த வேண்டிய போராட்டம். உடம்பில் அடிமை ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள் !

– புதிய ஜனநாயகம்s, ஆகஸ்ட் – 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

வெள்ளக்காரங்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம் !

26

சுதந்திர தினம் குறித்து மக்களின் கருத்தறிய காஞ்சிபுரம் நகரத்தை பெரும் மழையில் வலம் வந்தோம்.

சிலர் சுதந்திர தினம் குறித்து சுதந்திரமாக கருத்து தெரிவிக்கத் தயங்கினர். மக்கள் தங்களது பிரச்சினைகைளக் கூறினாலே “ஆன்டி இன்டியன்” என்று முத்திரை குத்துகிறார்கள் காவிக் கட்சியினர்.  அதனாலென்ன? “என் போட்டவோட நான் சொன்னத கொட்ட எழுத்துல போடு.. கொண்டாடுறவனுங்க என் வீட்டுக்கு வரட்டும் நான் பாத்துக்கிறேன்,  என்கிறார்கள் உழைக்கும் பெண்கள்!  சிலரோ எந்த பேப்பர்ல போடுவீங்க? நாளைக்கே போட்டுடுவீங்களா? போலிஸ் பிடிச்சுக்குமே என்று கேட்டனர்!

சுதந்திர தின கேள்வி, பேட்டி என்றதுமே போலீசிடம் சிக்கிய கைதி போல அச்சப்படும் தொழிலாளிகள், “நாட்டு நடப்பு அப்படி இருக்குதுப்பா. உண்மைய சொன்னா எங்களுக்குதான் சிக்கல்” என்று ஆரம்பித்து உள்ளக் குமுறலை கொட்டுகிறார்கள். அவர்களில் சிலரை சந்தியுங்கள்.

சங்கர், எம்.பி.ஏ, தனியார் நிறுவன ஊழியர்

நம்ம சுதந்திரத்த நம்ம தான் பாத்துக்கணும். யாரையும் நம்பி பிரயோஜனம் கிடையாது. வெள்ளக்காரன் அப்ப இங்கிருந்து ஆண்டுட்டு இருந்தான். இப்ப, அவன் நாட்டலருந்தே ஆளுறான். அவன் அரசியல்வாதிய ஆளுறான். அரசியல்வாதி நம்மள அடிமையா நடத்துறான். என்ன பொருத்த வரைக்கும் 71 வருசமெல்லாம் ஒரு பெருமை கிடையாது. படிப்புக்கேத்த வேலை இல்லை, சம்பளமும் இல்ல. 71 வருக்ஷம் சுதந்திரம் கிடைச்சு என்ன பலன் சொல்லுங்க?

மாலா, ஜெயா – மருத்துவமனை துப்புரவு தொழிலாளிகள்.

சுதந்திரமா?…(சிரித்துவிட்டு…) வெள்ளக்காரன்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம்.. அடிச்சுட்டு ரொட்டியாவுது கொடுத்திருப்பான். இவனுங்க சுதந்திரனுமுட்டு இருக்கறத எல்லாம் புடுங்குறானுங்க.

ரெண்டு ரூமு, பிரிட்ஜ் இருந்தா ரேஷன் கிடையாதாம். கஷ்டபட்டு வயித்த வாய கட்டி கௌரவமா இருக்க ஒரு வீடு கட்டுனா ரேஷன் கட்டாம். அப்ப.. ரோட்டுல பொங்கி… தின்னுட்டு.. நடுத்தெருவுல தான் படுத்துக்கணும் போல. GST -னா இன்னானே தெரியல. இட்லி சாப்பிட்டதுக்கு 40 ரூபான்றான். இனி, பசிக்கு சாப்பிட கூட முடியாது போலருக்கு. என்ன மாதிரியான வேல செய்யுறோம். வீட்லயும் நிம்மதி இல்ல. இவனுங்களும் அவன் பங்குக்கு சாவடிக்கிறானுங்க…

நான் சொன்னதெல்லாம் கொட்ட எழுத்துல ஃபோட்டோவோட போடுங்க..சுதந்திரம் கொண்டாடுறவனுங்க எங்க வீட்டுக்கு வரட்டும் பாத்துக்கறேன்!

விஜய குமார், வயது-40,  ஆட்டோ டிரைவர்

சுதந்திரமல்லாம் எங்களுக்கு கிடையாதுன்னு எழுதிக்கோங்க. இந்த ஆட்டோ என் தெய்வம். இ்ப்ப ஒரு சவாரி போனேன். இறக்கி விட்டுட்டு மீதி வாங்குறதுக்குள் ஒரு போலீஸ் முன்னாடி லத்தியிலயே ஓங்கி அடிச்சுது. புது ஆட்டோ அப்படியே பெரிய கீறல் விழுந்துடுச்சு. கேட்டா,எவ்வளவு நேரம் இங்கயே நிறுத்துவ-ன்னு கேக்குறான். 200 ரூபாயயும் புடுங்கிட்டான். அது மட்டும் இல்ல. அந்த கீறலுக்குடிங்கரிங் பண்ணி பெயிண்ட் அடிச்சா 1000 ரூபா ஆயிடும்.

இதுல எங்கங்க எங்களுக்கு சுதந்திரம்? வயித்துக்கு சாப்பிட முடியல. GST -ன்றான் , வெல எல்லாத்தயும் ஏத்திட்டான். 400 ரூபா சம்பாதிச்சா 200 ரூபா மாமூல். எப்படி கேள்வி கேட்பேன்? குடும்பத்த கவனிக்கனுமே. எவ்ளோ பிரச்சினைகள் இருக்கு.. எத சொல்றதுன்னு தெர்ல.. எப்படி தீக்கிறதுனும் தெரியல.. எல்லா ஆட்டோ காரங்களுக்கும் இதான் நிலை. என்ன சுதந்திரம் இருந்து என்ன பிரயோஜனம். வயித்த கழுவ எதயும் கேள்வி கேட்க முடியல…

குமார், வயது-50, நகராட்சி ஊழியர்

நாடு நாடா சுத்தி நம்ம நாட்ட விக்கிறத தவிர வேற எந்த வேலையயும் செய்யல பிரதமரு. நம்ம நாட்டுல என்ன வளர்ச்சி இருக்கு. ஒண்ணும் கிடையாது.

சின்ன கொழந்தயக் கேட்டாக்கூட சொல்லும், சும்மா ஊர சுத்துர மோடிய பத்தி…வெளிநாட்டு முதலாளிங்க கூட கூட்டு வெச்சு நம்ம நாட்டுல வெளிநாட்டு பொருள விக்கிற ஏஜென்டா இருக்கற மோடியப் பத்தி எனக்கு தெரியாதா? (இப்படியெல்லாம் பேசினா நாளைக்கு உன்ன கூண்டுல போட்றுவாங்க என அருகில் இருந்தவர் சொல்ல) அவன் அப்பவூட்டு காசுலயா எனக்கு சம்பளம் வருது… நான் பயப்பட. வரிப்பணத்துல சம்பளம் தர்றான்.. எனக்கு பயமெல்லாம் கிடையாது. சுதந்திரம் எல்லாம் சும்மா!

விநாயகம்,வயது- 25, சலூன் கடை

என்னோட கருத்து வேற மாதிரி இருக்கும். நம்ம அரசியல்வாதிங்க சரி கிடையாது. சுத்தி, சுத்தி எத்தன கட்சி, எத்தன தலைவரு ஆனா ஜனங்க கஷ்டப்பட்டாதான் சோறு. எல்லாரையும் போலத் தான் நானும்.. வீடு கடை, முடிஞ்சா பிக்பாஸ்னு போய்டுவேன். ஜல்லிகட்டுக்காக சேர்ந்த கூட்டம் ஏன் விவசாயிகளுக்காக சேரலன்றதுதான் என்னோட ஆதங்கம்.

நீ ஏண்டா கொழந்தைக்காக போராடுற மொதல்ல? அம்மாவ காப்பாத்துடா. கொழந்தய அம்மா காப்பாத்திக்கும். அம்மாதான் விவசாயி அவனோட குழந்த மாடு; அம்மாவே இல்லாம குழந்த என்னங்க பண்ணும்? சரி.. சுதந்திர நாள சுதந்திரமா கொண்டாடுறமா? இல்ல, ஏழு அடுக்கு பாதுகாப்பு, எட்டு அடுக்கு பாதுகாப்பு னு போட்டு கொண்டாடுறானுங்க.. விவசாயிய காப்பாத்தவே வழி இல்லாத இந்த  நாட்டுல சுதந்திரத்த டிவி -யிலதான் கொண்டாடணும்.

மகேஷ், லோடு வண்டி டிரைவர்

என்ன பொருத்தவரைக்கும் பணக்காரன் கொள்ள அடிக்கறதுதான் சுதந்திரம். குழந்தைக்கு ஒரு கிராம் நகை எடுக்க போனா ஆயிரத்தெட்டு வரி, கூலினு எல்லாத்தையும் நம்ம கிட்ட புடுங்குறான். அதையே திருப்பி கொடுத்தா பாதி விலைக்கு கூட எடுக்க மாட்டான். என்ன மாதிரி டிரைவருங்களுக்கு சவாரிய பொருத்து தான் சாப்பாடு. 35 ரூபாயில முடிய வேண்டிய சாப்பாடு இப்போ 48 ரூபா ஆகுது. கேட்டா GST -யாம். என்ன எழவுன்னே தெர்ல; வரி போடுறோம். ஆனா விலையெல்லாம் ஏறாதுன்னு சொன்னான். இப்போ எத பாத்தாலும் வாங்க பயமா இருக்கு.

வண்டிக்கு பாக்கி கட்டணும். அதுக்கு GST -யும் சேர்த்து கட்ட சொல்றான். ஆனா என்னுடைய வருமானம் மாறவே இல்ல. கவர்மென்ட் எங்க இருக்குன்னு தெரியில. எந்த வேலைக்கு போனாலும் அலைய விடுறான். ஒரு சர்டிபிகேட்ட வாங்க அங்க போ இங்க போன்னு துரத்துறான். அரசியல்வாதிங்க கிட்ட, அவனுங்கள பத்தி  நா சர்டிபிகேட் கேட்டுருக்கணும். அப்படி கேக்காம ஓட்டு போட்டது நம்ப  தப்பு!

செய்தி, புகைப்படம் : வினவு செய்தியாளர்

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அடக்குமுறைக் கருவிகள் அணிவகுப்பதா சுதந்திரம் ?

3

பெயர் சுதந்திர தினம்
அணிவகுப்பதோ
அடக்குமுறைக் கருவிகள்.

எங்களிடம்
எத்தனை துப்பாக்கி இருக்கிறது
என்று காட்டுவதா சுதந்திரம்?

எங்கள் பக்கம்
எத்தனை மக்கள் இருக்கிறார்கள்
எனக் காட்டுவதல்லவா சுதந்திரம்!

மக்களோ
உங்களை எதிர்த்து
குண்டாந்தடிக்கு முன்னாடி,
நீங்களோ
குண்டு துளைக்காத
கண்ணாடிக்கு பின்னாடி.

பன்னாட்டு
மூலதன ஆக்கிரமிப்புக்கு
பாதை அமைத்துவிட்டு
உள்நாட்டு பாதுகாப்புக்காக
உனக்கு எத்தனை படைகள் பார்!  என்றால்
நம்ப மறுத்து
வேறுபக்கம் அணிவகுக்கிறார்கள்
மக்கள்.

மீனவர் ரதத்தில்
பிணங்களின் வாடை,
கைத்தறி ரதத்தில்
நெசவின் அலறல்,
விவசாய ரதத்தில்
வெடித்த இதயங்களின்
சிதறல்…

சகிக்க முடிந்தவரால்
ரசிக்க முடியும்.
வண்டி வண்டியாய்
அலங்கரிக்கப்பட்ட பொய்களின்
அணிவகுப்பு.

மக்கள்
வேறு ஒரு அணிவகுப்பை
நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வுரிமை பறிக்கப்பட்ட
விவசாயிகள்
அணிவகுத்து நிற்கிறார்கள்…

தொழிலுரிமை பறிக்கப்பட்ட
சிறுகுறு தொழிலாளார்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள்.

கடலுரிமை பறிக்கப்பட்ட
மீனவர்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள்.

கல்வியுரிமை பறிக்கப்பட்ட
மாணவர்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள்…

கார்ப்பரேட்டே வெளியேறு
என கனன்று நிற்கும் மக்கள்முன்
மோடியின்
வெள்ளையனே வெளியேறு
பஞ்ச் டயலாக்
பஞ்சராகிக் கிடக்கிறது.

பச்சை பசேல்
பறிக்கப்பட்ட வெறுமையில்
பறக்கும் தேசியக் கொடியையும்

திண்ணப் பார்க்கிறது ஆடு, மாடு.
விளைநிலத்தை
காயப்போடும் நாட்டில்
தியேட்டரில்
தேசியகீதம் போட்டால் மட்டும்
தேசம் விளங்கிடுமா!

எங்கள் மலைகளை
விட்டு விடுங்கள்
என கதறுகிறது நியாம்கிரி.

எங்கள் மணல
விட்டு விடுங்கள்
எனக் கெஞ்சுகிறது
பாலாறு, காவிரி,

எங்கள் மண்ணை
விட்டு விடுங்கள்
என இரைஞ்சுகிறது
நெடுவாசல், கதிராமங்கலம்.

ஆதரித்து
ஒரு துண்டறிக்கை கொடுக்கவும்
சுதந்திரமில்லை,

மனிதக்கறி தின்னும்
காவிகள் உலவும் நாட்டில்
மாட்டுக்கறி திண்ணவும்
சுதந்திரமில்லை
எனது
சாப்பாட்டுத் தட்டில்
செத்துக்கிடக்குது சுதந்திரம்.

எனது
மொழிச் சுதந்திரத்தின் மீது
திணிக்கபடுகிறது சமஸ்கிருதம்
சுதந்திரமாய் வாழ முடியாதது
மட்டுமல்ல
என்னால் சுதந்திரமாக
சாகவும் முடியாது
ஆதார் இருந்தால்தான்
நான் சட்டப்படி சவம்!

விவசாயிக்கு இல்லாத சுதந்திரம்…
தொழிலாளிக்கு இல்லாத சுதந்திரம்…
சுயதொழிலுக்கு இல்லாத சுதந்திரம்…
சுயமரியாதைக்கு இல்லாத சுதந்திரம்…

மொத்தத்தில்,
சொந்த நாட்டு மக்களுக்கு
இல்லாத சுதந்திரம்
வேறு யாருக்காக?

உங்கள்
அடையாள அணிவகுப்பில்
அதையும் காட்டிவிடுங்கள்!

– துரை. சண்முகம்
_____________

இந்தக் கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 1 – வானதி சீனிவாசன்

57

தொலைக்காட்சி விவாதங்களில் அந்தக் கனிவான முகத்தை பார்க்காதவர் யாருமில்லை. எண்ணெய் தேய்த்து வாரிய சிகை, மைக்ரோ திருநீறு – நானோ பொட்டு, காட்டன் புடவை என்று பாரதிய கலாச்சாரத்தின் சர்வ லட்சணத்துடன், கொங்கு வழக்கில் ‘இனிய’ குரலில் வாதத்தை எடுத்துவைக்கும் பாங்கு….. அவர்தான் வானதி சீனிவாசன். தமிழக பாரதிய ஜனதாவின் பெண் முகம். தொண்டர்களுக்கு அவர் வானதி அக்கா. ஊடகங்களுக்கு கொள்கைகளை எடுத்தியம்பும் வானதி ‘மேடம்’.

இலக்கிய உலகில் நேர்மை, அறிவு, இலட்சியங்களின் இலக்கணங்களையும், அவ்விலக்கணங்களைப் பின்பற்றும் மேன் மக்கள் குறித்து எடுத்துச் சொல்லும் உரிமையைப் பெற்றிருப்பவர், எழுத்தாளர் திரு ஜெயமோகன்.  அவரது “அறம்” வரிசை சிறுகதைகள் – மனிதகுலத்தின் இலட்சிய மாந்தர்களைப் பற்றி படிப்போருக்கு நாமெல்லாம் என்றுமே ‘சாதா’தான் என்ற குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் ‘பேரிலக்கியம்’.

வானதி அக்காவிற்கும் ஜெயமோகனின் அறத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பவர்கள் நுண் ரசனையற்ற முட்டாள்கள்! சென்ற 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது எழுத்தாளர் ஜெயமோகனும், ஜோ டி குரூஸும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தினமலரிடம் கூறியிருந்தார். அதே போன்று அறம் புகழ் ஜெயமோகனின் வெண்முரசு புத்தக வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் நடந்த போது வானதியும் கலந்து கொண்டார்.

இந்த இலக்கிய வேள்வியில் ஐக்கியமாவதற்கு முன்பு அக்கா அன்று காலையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு ‘அம்மா’ செல்லமாக தடை போட்டதால், சங்க பரிவாரம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே செல்லமாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில்தான் அக்கா ஆவேசமாக முழக்கம் போட்டுவிட்டு, மாலையில் அமைதியாக வெண்முரசு-வில் ஐக்கியமானார்.

சென்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் அக்கா போட்டியிட்டார். அதே  கோவையில் “விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்” எனும் ஜெயமோகனின் ’தீவிரவாதப் படை’ ஒன்று இயங்கி வருகிறது. அந்த வட்டத்தில் முக்கியமான தாதாவாக திகழும் திருவாளர் அரங்கசாமி அவர்கள் அக்காவிற்காக ஒரு வார்டு கவுன்சிலரை விடவும் அதிகமாகப் பிரச்சாரம் செய்தார், வேலை செய்தார். காரணம் காந்திக்கு அடுத்த படியாக கோவையில் ஜனித்த ஒரு மகாத்மா, வானதி அக்காதான் என்பது அவரது கிட்னி முதல் ’அட்ரினல் கிளாண்ட்’ வரை உணர்ந்து கொண்ட ஒன்று.

எனினும் சர்க்கரை அதிகரிப்பினால் கிட்னி செயலிழந்து டயாலிசிஸ்  செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுவதும் உண்டுதான். ஒருவன் கொழுப்பெடுத்துத் திரிகிறான் என்பது மக்கள் வழக்கில் உண்டு. மருத்துவர ரீதியில் கொழுப்பினால் மாரடைப்பு வருவதும் உண்டு. இங்கோ எளிமையின் சின்னமாக மகாத்மாவாக, அறம் கோஷ்டியனரால் அக்காவாக போற்றப்படும் வானதி சீனிவாசனுக்கு ஊழல் கொழுப்பேறிய கதையைப் பார்க்க இருக்கிறோம்.

பா.ஜ.க மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டது (A party with a Difference) என்று பாஜகவினர் விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். மற்ற கட்சிகள் எல்லாம், குடும்ப ஆதிக்கம், ஊழல், உட்கட்சி பூசல் போன்றவற்றால் அடையாளம் காணப்படும் போது, பா.ஜ.க அவற்றுக்கு எதிரான கட்சியாக, ஹிந்துப் பண்பாட்டை மீட்கும் கட்சியாக, தேசத்தின் வளர்ச்சிக்கான கட்சியாக அடையாளப்படுத்திக் கொள்கிறது.

மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜ.க வேறுபடுவது ஒரு விதத்தில் உண்மைதான். தி.மு.க-வின் ஊழலை அ.தி.மு.க-வும், அ.தி.மு.க-வின் ஊழலை தி.மு.க-வும் வெளியிடுவார்கள். ஆனானப்பட்ட காங்கிரசில் கூட கோஷ்டி மோதலில் வேட்டியை கிழித்துக் கொண்டாலும் அவர்களது ஊழலை எதிர்க்கட்சிகள்தான் அம்பலப்படுத்துவார்கள். ஆனால் பா.ஜ.க-வின் ஊழலை மட்டும் அவர்கள் கட்சியினரே ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார்கள்.

திருச்செந்தூரில் 2003-ம் ஆண்டில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் வானதி சீனிவாசன் மற்றும் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

வானதி சீனிவாசன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மின்விசிறியை தவணை முறையில் வாங்கி அதில் கடைசித் தவணை கட்ட முடியாத ஒரு எளிய நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியாக இருந்திருக்கிறார். அக்காவை கூட்டம் மற்றும் போராட்டங்களில் பேச அழைக்கும் பா.ஜ.கவினர் அவருக்கு போக்குவரத்து மற்றும் வழிச்செலவுக்கு பணம் கொடுத்து உதவி வந்துள்ளனர்.

ஆனால் இன்று அக்கா வானதி சீனிவாசன் சில பல கோடிகளுக்கு அதிபதி. இதை நாம் சொல்லவில்லை. இதைச் சொன்னது அதே பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவரும், திருச்செந்தூரில் இருக்கும் முக்கிய பிரமுகருமான பாலசுப்பிரமணிய ஆதித்யன். இனி அவரே பேசுகிறார், கேளுங்கள்.

“கடந்த 2003 -ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள். வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம்.

அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன்.

அது மட்டுமல்ல மையிலாப்பூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.

யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.”

டந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:

அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ.  50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:

அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.

வானதி அவரது கணவர் சீனிவாசனுடன்.

ஐந்தாண்டுகளில் அக்காவின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதாவது 525 சதவீதம் உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு பணமும் சொத்துக்களும் எப்படி வந்தன? அத்தனையும் தானும் தனது கணவர் சீனிவாசனும் வழக்குறைஞர் தொழில் செய்து சம்பாதித்தவை என்று வானதி சமாளிக்கக் கூடும்.

ஆனால், இந்தச் சொத்துக்கள் வானதி குடும்பத்தினர் ஊழல்களாலும், தங்களது அரசியல் சொல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்தவை என்று அம்பலப்படுத்துகிறார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்யனும், பா.ஜ.க-வைச் சேர்ந்த அவரது நண்பர் சங்கரநாராயணனும். “சைலாக் சிஸ்டம்ஸ்” (Zylog Systems) என்ற நிறுவனத்தில், வானதி சீனிவாசன் திட்டமிட்டு அவரது தம்பி சிவகுமார் கந்தசாமியை களமிறக்கி நடத்திய வங்கி மோசடியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார் பாலசுப்பிரமணிய ஆதித்யன். “சிஸ்டம்” சரியில்லை என்று பா.ஜ.க தனது கட்சிக்குள் சேர்க்க விரும்பும் ரஜினி சொல்லியிருந்தாலும் அவரது சிஸ்டத்தில் பாஜக-வின் இந்த “சிஸ்டமேடிக்” ஊழல் வராது.

சென்னையிலுள்ள சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) 1995 -ம் ஆண்டு துவங்கப்பட்ட மென்பொருள் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக வானதியின் கணவர் சீனிவாசன் இருந்திருக்கிறார்.  வானதியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் படி அந்நிறுவனத்தின் 20,000 பங்குகளையும் வைத்துள்ளார்.

சைலாக் சிஸ்டம்ஸ், ஜூலை 20, 2007 அன்று ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,600,000 பங்குகளை வெளியிட்டது. வர்த்தகம் தொடங்கும் போது அதன் ஆரம்ப விலை ரூ. 350-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் செய்வதற்கு, யார் வசம் எவ்வளவு பங்குகள் உள்ளன, எத்தனை பங்குகள் சந்தையில் வெளியிடப்படுகின்றன போன்ற இதர விவரங்களை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) கொடுக்க வேண்டும்.

சைலாக்கின் நிறுவனர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளைப் பற்றி பொய்யான மற்றும் தவறான தகவல்களை கொடுத்ததாகக் கண்டறிந்த செபி, இந்நிறுவனதையும், அதன் நிறுவனர்கள் சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரையும் பங்கு சந்தையிலிருந்து தடை செய்து 2012 -ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தன. இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவர் வானதியின் கணவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி, இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் வசூலித்த சேவை வரி சுமார் ரூ.3 கோடியை அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது. மேலும், 2012 -ம் ஆண்டு காலகட்டத்தில் தனது ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் கொடுக்காமலும் இருந்துள்ளது. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியையும் (PF) அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி (வலது)

சைலாக் நிறுவனம் தனது தொழில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 2009-2013 காலகட்டத்தில், யூனியன் வங்கி, பெடரல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல நூறு கோடிகளை கடனாகப் பெற்றது. ஆனால், அவற்றை தொழில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தாமல், முறைகேடாக பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் அதன் நிறுவனர்கள். அவற்றுள் சைலாக்கின் ஐரோப்பிய கிளை (Zylog systems Europe Ltd) வாங்கிய சொத்துக்களும் அடக்கம். அதாவது இந்திய வங்கிகளில் வாங்கிய கடனைக் கொண்டு வெளிநாட்டில் முறைகேடாக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த கால கட்டத்தில் ஐரோப்பிய கிளையின் இயக்குனராக வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி இருந்துள்ளார்.

மேலும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையையும் கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளது இந்நிறுவனம். இதனால் 2013-ம் ஆண்டு அவ்வங்கிகள் சுமார் ரூ.740 கோடியை வராக்கடனாக அறிவித்தன. அத்துடன், மத்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்திய பொதுத்துறை வங்கிகளை பட்டை நாமம் போட்டு ஏமாற்றிய கயவர்கள் பட்டியலில் மல்லையா மற்றும் இதர முதலாளிகள் மட்டுமல்ல, சைலாக் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் இராமானுஜம் ஷேஷரத்தினம் போன்ற ஆர்.எஸ்.எஸ்-காரர்களின்  நிறுவனங்களும் உள்ளன. ஆம், வானதியின் வர்க்கம் மேம்பட ‘வர்த்தக’ வசதி செய்து கொடுத்த சைலாக் நிறுவனத்தின் மூலவர்கள் சாட்சாத் ஸ்வயம் சேவகர்கள். இதன் விரிவான செய்திகளை இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

காங்கிரசைச் சேர்ந்த கஜநாதன் இந்த ஊழல் நடந்த போது சைலாக் நிறுவனத்தின் இயக்குனராக இருந்துள்ளார். இந்த பின்னணியில் தான் 2009-2013 காலகட்டத்தில் வங்கிகளில் கடன்களை வாங்கிக் குவித்துள்ளது சைலாக். கஜநாதன், வானதி மற்றும் அவரது கணவர் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகனிடம், ஜூனியர் வழக்குரைஞர்களாக பயிற்சி பெற்றவர்கள் தான். ஆக இது திட்டமிட்ட முறையில் இந்திய வங்கிகளை ஏமாற்றி முறைகேடாக சொத்துக்களை வாங்கிய ஊழல்.

வானதி, அவரது கணவர் மற்றும் சைலாக் இயக்குநர்கள்.

தமிழகத்தில் கூட மாவட்ட அளவில் சட்டவிரோதமாகவும், சட்டப்பூர்வமாகவும் ‘தொழில்’ செய்யும் தி.மு.க – அ.தி.மு.க நபர்களிடையே ‘புரிந்துணர்வு’ இயல்பாக இருக்கும். ஆட்சியில் இருக்கும் கட்சிக்காரர், எதிர்க்கட்சிக்காரருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பது அப்புரிந்துணர்வின் தர்மமாகும். அதே விதி காங்கிரஸ் – பா.ஜ.க-விற்கும் உண்டு.

கடன் கொடுத்த வங்கிகள், கடன் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தன. அதில் அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட நவம்பர் 2014 -ல் தீர்ப்பளித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.

மோடி அரசு பதவியேற்ற பின் நவம்பர், 2014-ல் வானதியின் கணவர் சு. சீனிவாசன் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுகிறார். இதற்குப் பின் 2015 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சைலாக் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி சைலாக் தாய் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்க பரிந்துரைக்கப் படுகிறார்.

மோடி அரசு, “என் நாடு, என் அரசு, என் குரல்” என்ற முழக்கத்துடன் அரசில் மக்கள் பங்கேற்கும் திட்டத்தை அறிவித்து ’என் அரசு’ (mygov.in) என்ற வலைத்தளத்தை நடத்தி வருகிறது. அந்த வலைத்தளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை சைலாக் நிறுவனம் 2015 -ம் ஆண்டில் பெற்றது.

இப்போது எல்லாப் புள்ளிகளையும் இணைத்து பாருங்கள். தலை மோடி அரசு முதல் வால் வானதி வரை இந்த ஊழல் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை ஆற்றியுள்ளார்கள்.

சைலாக் நிறுவனத்தின் முறைகேடு வெளிவந்த பத்திரிகைச் செய்தி!

இதனிடையே சைலாக் நிறுவனத்தின் துணை நிறுவனமான சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் 2009 -ம் ஆண்டு யூனியன் வங்கியிலிருந்து ரூ.61.5 கோடியை குறுகிய கால கடனாகப் பெற்றுள்ளது. இணைய சேவை வழங்கல் தொடர்பான வைஃபை (WiFi) திட்டத்தில் பொருட்களை வாங்க முதலீடு செய்வதற்கென்று இந்தக் கடன் பெறப்பட்டது. இந்தக் கடனை சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை.

அது மட்டுமல்ல, போலியான நிறுவனங்களை உருவாக்கியும், போலியான ரசீதுகளை உருவாக்கியும் பொருட்களை வாங்கியதாக கணக்குக் காட்டியது சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம். அப்படி உருவாக்கப்பட்ட பெயர்ப்பலகை நிறுவனங்களின் மூலம், வங்கியில் பெறப்பட்ட நிதியை வெளியேற்றி விட்டு, நட்டமடைந்து விட்டதாக ஏமாற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டறிந்த யூனியன் வங்கி, சைலாக் நிறுவனர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) புகார் அளித்தது. மோசடி மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் ஜனவரி 30, 2017 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இவற்றை பாலசுப்பிரமணிய ஆதித்யன் அம்பலப்படுத்துவதன் அவசியமென்ன என்பதை பின்னர் பார்ப்போம். இவற்றை அம்பலப்படுத்திய உடன்  எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் ஊழலில் தொடர்புடைய பா.ஜ.கவின் கே.டி ராகவன் தனது ஃபேஸ்புக் நட்பு பட்டியலில் இருந்து பாலசுப்பிரமணிய ஆதித்யனை விலக்கம் செய்கிறார், கண்டிக்கிறார். அதோடு கட்சிக்குள்ளும், வழக்கு தொடர்பாகவும் வானதிக்கு ஆதரவளிக்கிறார்.

வானதியின் ஊழலை அம்பலப்படுதும் பாலசுப்ரமணிய ஆதித்தன் மற்றும் சங்கர நாராயணன்

ஆனால் கே.டி.ராகவனது எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் ஊழல் குறித்து ஒரு ஸ்கீரின் ஷாட் பதிவு போட்ட எஸ்.வி.சேகரை பேஸ்புக் நட்பு பட்டியலில் இருந்து ராகவனால் நீக்க முடியாது. ஏனெனில் அந்த அம்பி இந்த அம்பியை விட பெரிய அம்பி. பாலசுப்பிரமணியனோ திருச்செந்தூரில் வசிக்கும் ஒரு சூத்திரன் என்பதால் சார்வாள் உடனே ஆக்சன் எடுத்து விட்டார்.

இப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் தான் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது  தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்தை மீட்பதற்கு நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்கள். ஏடிஎம் வரிசையில் நின்று செத்த மக்களைக் கொச்சைப் படுத்தினார்கள். தொட்டதுக்கெல்லாம் திராவிட இயக்கம் தமிழகத்தை நாசமாக்கிவிட்டது என்று முதலைக் கண்ணீர் வடித்தார்கள்.

அரசின் ஒப்பந்தப்புள்ளி கோரல் அழைப்பிற்கு குறைவான தொகையை சமர்ப்பிக்கும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படும். இதில் என்ன விதிமீறல் அல்லது முறைகேடு இருக்கிறது. மேலும், ஒரு நிறுவனத்தின் நிறுவனர்கள் செய்த முறைகேடுகளுக்கு வானதியோ அல்லது பாஜகவோ எப்படி பொறுப்பாக முடியும் என்றும் சிலர் வாதிடக்கூடும். இது குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.

மேலும், வானதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாலசுப்பிரமணியனின் குற்றச்சாட்டிற்கு அளித்த பதில் பற்றியும், சைலாக் நிறுவனத்தின் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரைப் பற்றியும் இனி பார்ப்போம்.

ரஜினி நடிக்கும் எந்திரன் – 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல் கம்பெனியின் ஊழல் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறோம். அந்தப் படத்தின் வசனகர்த்தா சாட்சாத் ஜெயமோகன் என்பதால் அவருக்கு இந்த கார்ப்பரேட் மோசடிகள் குறித்து அதிர்ச்சி ஏதும் இருக்காது. ஏனெனில் அந்தப்படத்தின் முன்னோட்ட விழாவிற்கு மும்பை சென்ற போதுதான் அவர் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை நேரடியாக ஆதரித்தார். அவரது அறமே எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதல்ல, சம்பாதித்த பணத்தில் எப்படி இலக்கிய ரசனையாக வாழ்கிறார்கள் என்பதே!

ஆயினும் வானதி சீனிவாசனின் இந்த ஊழலை மறுப்பதற்கு அவரோ அவரது பக்தாள் கூட்டமோ கடப்பாறையை விழுங்க வேண்டியிருக்கும்.

(தொடரும்)

– வினவு புலனாய்வுக் குழு

(இந்த ஊழலின் ஆதாரங்கள் பல திரு பாலசுப்ரமணியன் ஆதித்யனால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டவைதான். அவற்றை சரி பார்த்து, ஆராய்ந்து, வேறு சில தகவல்களை தேடிப் பெற்று தொகுத்து இங்கே தருகிறோம்.)

இதன் அடுத்த பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 2

ஆதாரங்கள் :

  1. ஆர்.எஸ்.எஸ்-ன் குருஷேத்திரம் – ஜெயமோகனின் பிருந்தாவனம்
  2. BALASUBRAMANIA ADITYAN
  3. VANTHI SRINIVASAN(CRIMINAL & ASSET DECLARATION) – 2011
  4. COIMBATORE (SOUTH)VANATHI SRINIVASAN(CRIMINAL & ASSET DECLARATION)
  5. ZYLOG SYSTEMS LIMITED IPO (ZYLOG IPO) DETAIL
  6. SIVAKUMAR KANDASWAMY
  7. ZYLOG SYSTEMS EUROPE LIMITED
  8. ASSISTANT SOLICITORS GENERAL IN THE VARIOUS HIGH COURTS
  9. OUTCOME OF BOARD MEETING (AGM ON SEPT 28, 2015)
  10. http://mygov.in
  11. UNION BANK OF INDIA COMPLAINT ON ZYLOG INDIA AND CBI FIR
  12. BJP கே.டி. ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் – ஆதாரங்கள்

_____________

பா.ஜ.க-வின் ஊழலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும்
இந்த புலனாய்வுக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு  நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி