Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 788

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010 மின்னிதழ் டவுண்லோட்!

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1.       பழைய பேப்பரே வெட்கப்படுது!

2.       டாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ஆபத்து!

3.       அயோத்தி: இராமன் போட்ட வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!!

4.       தங்கம்: வெளிச்சத்தின் கீழ் இருள்!

5.       சிலி விபத்து: முதலாளித்துவச் சுரண்டலுக்கு பலியாகும் தொழிலாளர்கள்!

6.       திரை விமரிசனம்: பீப்லி லைவ் -சிரிப்பு வரவில்லை!

7.       வரலாறு: இராஜராஜசோழனது ஆட்சி: பார்ப்பனியத்தின் மீட்சி! அடிமைகளின் அவலம்!!

8.       தொழிலாளர்கள்: பிரிந்திருந்தால் தற்கொலை சேர்ந்திருந்தால் விடுதலை!

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!

135

நமக்கும் இந்த சிறுபத்திரிகைகாரவுகளுக்கும் எப்பவும் ஒத்துக்கிடாது பாத்துக்கிடுங்க! முன்னயாவது அப்பக்கைப்ப கொஞ்சமோ, நஞ்சமோ ஒருபாடு கிசுகிசு வெட்டுக இல்லாம வரும். ஊட்டி தளைய சிங்கம் மேட்டரு, குத்தாலத்துல அண்ணாச்சி விக்ரமாதித்யன் தண்ணியப் போட்டு பண்ணுண அலம்பல், ஜெயமோகன் யாரை அடிச்சாக, சாரு யாருகிட்ட அடிவாங்குனாகன்னு ஒரே ஜாலி ஜம்பர்தான். இவுகதான் சாகவரம் பெத்த இலக்கியம்னு எதை எதையோ சொல்லி பீலா விடுவாக. நம்மளக்க கேட்டா இவுகளோட கிசுகிசுதாதன் சாகாவரம் படைச்ச இலக்கயம்னு அந்த மகர நெடுங்குழைக்காதன் சத்தியமா சொல்லுவேன்.

ம்..ம்.. அதெல்லாம் ஒரு காலம். இப்ப பாத்தீகன்னா எல்லா கிசுகிசு சங்கதிகளையும் நெட்டுல சட்டுப்புட்டுனு எழுதி தள்ளுராகளா, அதுவும் பதிவுலகத்துல கீ போர்ட வச்சே டான்சாடுற நம்ம மொக்கைத் தம்பிமாரு இதுமாதிரியான நியூசெல்லாம் தினமும் ஊர் பூரா போன்ல கூப்ட்டு பத்த வச்சர்ராக. அதுல இருந்தே சிறு பத்திரிகைகள வாங்குறுத நிறுத்தி தொலைச்சாச்சு. பிறவு ஒவ்வொண்ணையும் 30 ரூபா, 50 ரூபா வாங்குறது தெண்டமுல்லா?

நேத்தைக்குத்தான் நம்ம கூட்டுக்காரவுக அவுகளும் என்னாட்டம் இலக்கியவியாதி சகவாசம் வச்சிருந்தவுகதான், இந்த மாசத்து உயிர்மைய கொடுத்தாக. என்னன்னு கொஞ்சம் மேஞ்சு பாத்தா, அடங்கொப்புறானே, என்னத்தைச் சொல்ல……!!!

ஆமா நைனா ஒவ்வொரு தபா நீ உயிர்மை வாங்கிக்கீறீயா, அதுல இன்னா ருக்கும்? அட்டையில மல்டி கலர் மாடுலேஷன். அதான்பா கருத்து கந்தசாமி டிசைன்! குற்றம், தேகம், வதை, இரவுன்னு என்னன்னமோ ராவா அட்ச்சு விடுவான். அப்பாலிகா தலையங்கம் பாத்தா மன்ஸ்ய புத்ரன் அண்ணாத்தே என்னமோ பயங்கரமா பொலிட்டிக்ஸ் பட்சவரு மேறி அவுத்து விடுவாறு, அப்பாலிக்கா நம்ம சாரு நைனா டப்பாகஞ்சிய சீம சாராய பாட்டில் ஊத்தி அட்ச மப்புல ஆறேழு பக்கத்துல சினிமா குனிமான்னு வாந்தி எடுப்பாரு, கொஞ்சம் அந்தாண்ட போனீன்னா இசை, அப்பால ஈரான் சினிமான்னு உடுப்பி அவியலாட்டம் உள்ள தள்ள ரொம்ப இம்சையா ருக்கும். புச்சா இன்னா பாத்தேன்னு கேக்குறீயளா…

மூணாவது பக்கதுல பாத்தீங்கன்னா உயர்மையில இருந்து இந்த வருசம் அறுபது நூலுங்க வருதாம், ஆறுக்கும் மேற்பட்ட வெளியீட்டு விழான்னு கன ஜோரா இருக்குங்க. என்னமோ போங்க, நம்ம கவி அம்பி மனுஷ்ய புத்திரனோட கம்பெனி இம்புட்டு பெருசா வளர்ந்து வருசத்துக்கு அறுபது புக்கு போடுறது சாதாரணமில்லிங்கோ; அப்படீன்னு தப்பா முடிவு செய்ஞ்சிராதீங்க சாமியோவ், கொஞ்சம் முழுசா படிச்சுபுட்டு ஒங்க கருத்த சொல்லுங்க.

முதல்ல பாத்தீகன்னா சுஜாதா நேர்காணல்னு ஒரு புத்தகம். அதுல கட்டிங் லைனா “ அவரது பரந்துபட்ட பன்முகத் தன்மை கொண்ட அக்கறைகளுக்கும் ஆளுமைக்கும் இன்னொரு சாட்சியம்” பளிச்சுனு போட்ருக்காக. ஏம்வே சங்க கால பெண்களை பேசிகிட்டு அப்படியே நைசா பாரிஸ் ஒயினைப் பத்தி பேசுனா அது பன்பட்டர்ஜாம் அக்கறையா? நல்லாருக்கு நைனா உங்க இலக்கணம்.

இந்த ஸ்ரீரங்கத்து பாப்பார ஐயங்காரு ஏதோ கம்யூட்டர பத்தி எழுதினாரு, கூடவே கதங்களயும் எழுதினாருங்கறதெல்லாம் இருக்கட்டும். அவரு ஏன் ஒரு லிபரல் பாயை பிடிச்சு தன்னோட புக் ரைட்ச கொடுத்துட்டு போகணும்? மத்யமர் கதைங்கள்ள இட ஒதுக்கீட்டை கேலி பண்ணி, பிராமண சங்கத்துல விருது வாங்கி, சங்க பரிவாரத்து ஜீக்களுக்கு நமஸ்காரம் போட்ட கையோட சலாம் அலைக்கும் பாய்னு புக் போட விட்டுருக்காருன்னா, அதுதாம்டே பார்ப்பன நரித்தந்திரம். சரி இதுக்காக நம்ம ம.புத்திரனை பாய்னு நினைச்சுக்காதீக. அவுக பாய் இல்ல பிசினஸ்மேன்.

இல்லேன்னா சுஜாதாவோட புக்குங்கள போட்டு, நைசா லைப்பரரிக்கு தள்ளி ஒரு பதிப்பக சாம்ராஜ்ஜியத்தையே உண்டாக்கிட்டாருல்லா, அதுதாம்டே பிசினஸ் தந்திரம். சரி இந்த பாய் எப்படி லைப்ரரி ஆர்டரு பிடிக்குராறு, எவனுக்காவது தெரியுமாடே?

போலே போக்கத்த மூதிகளா, இதுல என்ன இரகசியம் வேண்டிக் கிடக்கு? அப்படியே அந்த அறுபது நூலு நாயன்மாரு பட்டியலப்பாருடே…..

பதிவுலகத்துல இருக்குற சாதா, ஸ்பெசல் சாதான்னு எல்லா பயபுள்ளைகளும் தமிழச்சி தங்கபாண்டியன சாரு புக் பங்ஷன்னுல ஜொள்ளுவிட்டதை எழுதியிருக்கானுகல்லா, அந்த அம்மாதான் இந்த லைப்ரரி ஆர்டர் தேவதை…. எப்புடி?

“பாம்படம்” கரிசல்பூமியின் நினைவுப் பதிவுகள்னு ஒரு புத்தக விளம்பரம். நம்ம தேவதையம்மா எழுதினது. என்ன எழுதியிருப்பாக? “பாம்படமாம் பாம்படம், விருது நகரு பாம்படம், தங்கம் தென்னரசு பாட்டியோட பாம்படம், லைப்ரரி ஆர்டருக்கான பாம்படம்,” இதுதாம்டே விசயம். அடுத்து பாத்தா லைப்ரரி ஆர்டர் தேவதையப்பத்தி மத்த பயபுள்ளக ஆகோ ஓகோன்னு எழுதுன ஐஸ் பேக்டரியவே ஒரு புக்கா போட்டுரக்கானுக, “தமிழச்சியின் பதிப்புலகம் – சில மதிப்பீடுகள்” என்னாமா யோசிக்கிறானுக,,, டெரரால இருக்கு…. அது சரிடே பதிவுலகத்துல இருக்குற ஒரிஜினல் தமிழச்சி இவுகதான்னு குழிம்பிக்கிடாதீங்கடே, நம்ம அக்கா பாரீசுல இருக்காக அவுக வேற…

சரிதானுங்க, லைப்ரரி ஆர்டரோட அடுத்த குல்சா வி.ஐ.பி யாருன்னு தெரியுமாங்கோ? அவருதான் நம்ம வி.சிறுத்தைகளோட எம்.எல்.ஏ இரவிக்குமார். அடிக்கடி கருணாநிதி ஐயாவோட பக்கத்துல நின்னு “இந்தப்பூனையும் பிசா சாப்பிடுமா”ங்குற கதியில போஸ் கொடுப்பாருங்க. அவிகளுக்கென்ன, இப்பதான் ரியல் எஸ்டேட், பஞ்சாயத்துன்னு லைஃப்புல நல்லா செட்டிலாகிட்டாருங்கண்ணா. தமிழ்நாட்டுல இருக்குற இலக்கியவியாதிங்க எல்லாம் கவர்ன்மெண்டு காரியங்கள சாதிக்கணும்னா நம்ம எம்.எல்.ஏவைத்தான் தொடர்பு கொள்றாங்களாம்… அந்த படிக்கு ஐயாவோட நாலு புக்கு ரிலீசாகுதாங்க…

அண்டை அயல் உலகம்“னு ஒரு புத்தகம். இது ஜூனியர் விகடன்ல வந்ததுன்னு நினைக்கிறேனுங்க. அத பாத்தீங்கன்னா ஃபுல்லா நம்ம இந்திய அரசு வெளிநாட்டுக் கொள்கை என்னவோ அதயே ஏகப்பட்ட விவரங்களோட -அல்லாம் நெட்டுல சுட்டதுதாங்க – அடிச்சு விடுவாறு. இன்னைக்கு தமிழ்நாட்டுல பஞ்சாயத்து பண்றவங்க நாளைக்கு நீரா ராடியா அக்கா மாதிரி உலகத்துக்கே பண்ணனுங்குறதுக்கான டிரெயினிங்னு வச்சுக்கங்க. ஆக நம்ம எம்.எல்.ஏ புக்க போட்டுக்கிட்டா அவரு விட்டையோட மத்த விட்டைங்களையும் லைப்ரரிக்கு தள்ளிரலாங்குறதுதான் ஹமீது பாயோட திட்டம். புரிஞ்சுதுங்களா?

ஒரு காலத்துல இவுங்க எல்லாம் ஒரு கூரூப்பாத்தான் அலைஞ்சாங்க. எம்.எல்.ஏ அண்ணன் சேரிப்புயல் கட்சியில சேர்ரதற்கு முன்னாடி காலச்சுவடு அக்ரகாரத்துல நெய் பொங்கல் சாப்பிட்டுகிட்டு இருந்தாக. இப்போ ஒரு சம்மர்சால்ட் போட்டு கலைஞர் ஐயா வூட்டுக் டிகிரி காஃபி குடிக்கிறாங்கன்னா இந்த வளர்ச்சியை உயிர்மை பயன்படுத்தற மாதிரி காலச்சுவடு பயன்படுத்த முடியலைங்க.. அது தனிக்கதை…

இப்ப இந்த அறுபது நூலு நாயன்மாருங்கள்ள சிலர மட்டும் பாப்போம்..

இதுல முத நாயன்மாரு நம்ம சாரு மாமா.. மாமுவோட ஏழு புக்ஸ் இந்த வருடம் ரீலீசாம். இதுல 95 பர்சண்டேஜ் இந்த ஆண்டுல எழுதிக்கீறாராம். என்னா நைனா இது என்ன கட்டிங் மேட்டரா, பர்சண்டேஜ் கணக்கு கொடுத்துகினு…

இதுல முத நூலு தேகம்னு ஏதோ வதை நூலாம். சில பேரு அத சதை நூலுன்னு வியாக்கியானம் கொடுக்குறான். ஓசியில படிச்ச நம்ம தோஸ்த்துகிட்ட கேட்டா அல்லாம் குல்சா மேட்டராம். என்னபா இது அநியாயமா கீது? குண்டியடிச்சான், குஞ்ச ஆட்டுனான், நாக்க போட்டான்னு எழுதுனா அது உலக இலக்கியமா? நெட்டுல மூணு எக்ச போட்டா குல்சா மேட்டரெல்லாம் ஜல்சாவா கொட்டிகினு இருக்கும். இத ஒரு நாவலுன்னு போட்டு பங்ஷன் நடத்தி அதை நாப்பத்திநாலு வெட்டி பாய்ஸ் விமர்சனும்னு போட்டு… படுத்துராங்கப்பா….

செக்ஸ்னா அது ஐஞ்சு நிமிசத்து மேட்டரு, வந்தமா, முடிச்சமான்னு போறதுக்கே ஜனத்துக்கு டைம் இல்ல, அதப்போயி இந்த நைனா 26மணிநேரமும் பேசிக்கினு, எழுதிக்கினு, போய் ஒரு நல்ல டாக்டரப்பாருயா வெண்ணை!

அடுத்த புக்க பாத்தா அது நித்யானந்தாவோட அல்சா மேட்டரு.. இந்த சாமியத்தான் நம்ம நைனா ஒரு காலத்துல கும்பிட்டுகினு, அதயும் போட்டோ புடிச்சு போட்டு பி.ஆர்.ஓ வேல பாத்துகினு இருந்தாரு. அப்பாலிக்கா ரஞ்சிதா சீன் வந்துச்சா, உடனே நைனா நல்ல புள்ளயாட்டம் கூட்டத்தோட கூட்டமா குன்சா தர்ம அடி போட்டு எஸ்ஸாயிட்டாரு. நாஸ்டாவுல உப்ப போட்டு தின்னா இந்த நைனா இப்பிடி செய்யுமா?

சாமி அருள் வாக்கு சொன்னதையும் பிசினஸ் பன்றான், சாமி சரசமாடிச்சுன்னா அதயும் பிசினஸ் பன்றான், நைனா இது உனக்கே அசிங்கமா இல்ல? எபெட்டிஷ்னா என்னான்னு அல்லாருக்கும் டியூஷன் எடுக்குறிரீயே இதுதான்பா டிரிபிள் எக்ஸ் ஃபெட்டிஷ். இதெல்லாம் நைனாவோட குத்தமில்லப்பா. நைனாவுக்கு கூச்ச நாச்சமில்லாம சில குல்சா மொக்கைஸ் செம்பு தூக்குறான் பாரு, அவன பிடிச்சு கேக்கணும்.

கனவுகளின் நடனம்” இது நைனாவோட சினிமா புக்காம். நைனா சினிமாவப்பத்தி எழுதலேன்னு எந்த குயந்தை அழுதுச்சு? இந்த டிஜிட்டல் குப்பைங்கள புக்கா போடுறான்னா என்னா தைரியம்? இதுபோக நைனா எழுதுன அஜால் குஜால் இலக்கிய கிசுகிசுங்க எல்லாம் மூணு புக்சா வந்துருச்சாம். கனிமொழி வந்து காமராஜ் ஹால்ல பேசியாச்சா, இத வச்சே ஹமீது பாய் அல்லா புக்கையும் லைப்பரரிக்கு தள்ளிருவாரு…இனி இன்டருநெட்டுல பாக்க முடியாதவனெல்லாம் நைனா புக்க லைப்ரரியில படிச்சு பரலோகம் போவப் போறான். சாவுங்கப்பா…

ஸ்பெக்ட்ரல் ஊழல்ல லம்பா அடிச்சா கையோட கனி அக்கா காமராசர் ஹால்ல நைனா சாருவோட நட்ப பத்தி பேசுதுன்னா, என்னாத்தச் சொல்ல? அன்னிக்கு அங்கன சம்சா, காஃபிய முழுங்குன ஒரு பயலுக்கும் அக்காவோட ஊழல் கதக்கு ஒரு ஞாயத்தை கேக்கணும்னு தோணலையே?

அப்பால பாத்தா நம்ம எஸ்.ராவோட “துயில்” நாவல். இதுக்கு கட்டிங் லைனா என்னா கொடுத்துகிறான்னா, ” மனித உடல் என்னும் மகத்தான பிரபஞ்சத்தில் நிகழும் எண்ணற்ற விசித்திரங்களைப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்”……

ஏம் வே எஸ்.ரா? இது உமக்கே ரொம்ப ஓவரா இல்லையா வே? மனித உடல்ல என்ன எழுவு விசித்தரத்த கண்டீரு? கக்கா, ஒன்னுக்கு, சளி, எலும்பு, தோலு, இதுதாம்வே எல்லாத்துக்கும் இருக்கு? இதுல ஆம்பளயாளுகன்னா விந்து, பொம்பள ஆளுகன்னா மென்சஸ்னு இதுல என்ன எழவுயா பிரபஞ்ச ரகசியம் இருக்கு? நீரு ஆ.விகடனுல தொடர் எழுனங்கறதுக்காக வீட்டுக்கு விருந்தினர் வந்தா சிரிக்கணும், தேத்தண்ணி கொடுக்கணும்னு காலனாவுக்கு தேறாததையெல்லாம் எழுதினீரு. அந்த கணக்கே இன்னும் முடியலேன்னா பாத்தா அதுக்குள்ள ஒரு நாவல எழுதிட்டீரு. நீரு எழுதுன வசனத்தையெல்லாம் பாலா குப்பைன்னு தூக்கி எறியிதாருன்னு சொல்லுதாக, உண்மையாவே?

எழுத்துங்குறது ஒரு புள்ளத்தாச்சி வலியோட பிரசவம் பாத்து குழந்தைய தர்ரது மாதிரி. அதை பிளாஸ்டிக் பொம்மை மாதிரி தயாரிச்சா அதுல என்னவே விசித்திர வெங்காயம் இருக்கும்?

சரி அடுத்த மேட்டர பாப்போம்.

இந்த அறுபது நூலு நாயன்மாருல்ல இந்த வாட்டி மாஸ்டர் பீஸ் என்ன தெரியுமா? ரசிகமணி டி.கே.சி கடிதங்கள்னு ஒரு புத்தகம். 944 பக்கமாம். 600 ரூபாய் விலையாம். முன்னாடி பதிஞ்சா 450 ரூபாயாம். இதுல அண்ணாச்சி மத்த தம்பிமார் 24 பேருக்கு எழுதின கடுதாசிங்க தொகுத்திருக்காங்களாம். இதுக்கு கட்டிங் மேட்டரா கரிசல் காட்டு செக்ஸ் தாத்தா கி.ரா எழுதுன முன்னுரையில இருந்து போட்டுருக்காக…..

” அவருடைய ஒரு கடிதத்தின் முடிப்பு இப்படி இருக்கும்….” ” என்னுடன் இருந்த நண்பர்களும் எல்லாருமாக நேற்றுப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். தங்கள் அண்ணியும் குற்றாலமும் ஆழ்வார்குறிச்சிக்குப் போயிருக்கிறார்கள். தங்கம் தென்காசி. ஆகவே நான் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சிவமே என்றிருக்கிறேன். பலராமும் துணைக்கு இருக்கிறார். அருவிச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மற்றபடி நிசப்தம். மணி காலை 3.3.0″

இதுமாதிரி 944 பக்கத்திலும் இருக்குதுன்னா அட கொலைகாரப் பாவிகளா, இந்த கருமாந்திரத்தை புக்கா போடுறதுக்கு எத்தனை ரீம் மேப்லித்தோ பேப்பர், அந்த பேப்பரை தயாரிக்கிறதுக்கு எத்தனை மரத்தை வெட்டி அழிச்சாங்களோ! உயிர்மை பதிப்பகம் காடுகள அழிக்குதுன்னு இப்பவாச்சும் விளங்குதா ஆக்கங்கெட்ட மூதிகளா?

டி.கே.சிக்கு ஏதோ அரசு குமாஸ்தா வேலைக்கு இன்டர்வியூ வந்துதாம். அன்னிக்கு காலையில அண்ணாச்சி கிளம்பும்போது குறுக்க பூனை ஏதோ வந்துச்சுன்னு கேன்சல் பண்ணிட்டராம். அவரு பெரிய ஜமீன்ங்கிறதுன்னால மாளிகை வீடு, தாமிரபரணி சோறு, அவியல்னு உபச்சாரம் பலமா இருக்கும். தமிழ்நாட்டு இலக்கியவியாதிகளை கூப்புட்டு தங்க வச்சு பேசி அழுகு பாத்தே இந்த மனுசன் காலத்தை ஓட்டியருக்காரு. அந்த பூனை மட்டும் அன்னிக்கு வரலேன்னா இந்த 900 பக்கம், ஏகப்பட்ட மரங்க எல்லாத்தையும் காப்பாத்தியிருக்கலாம்.

எங்கூருக்காரகுன்னு பாத்தா மானத்த கப்பலேத்துராரே? ஏலேய் காலையில மூணு மணிக்கும் நிசப்தமாத்தாம்டே இருக்கும், அருவின்னா சத்தம் இருக்காதாடே…இதையெல்லாம் ஒரு பெருசு கடிதம் எழுதி அதப்போய் புக்கா போடுறான்னா இந்த பாய்க்கு என்னா தைரியம்? இனி இந்த எழவும் லைப்ரரி ஆர்டருங்குற பேருல மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு தமிழ்நாடு முழுக்க போகப்போவுது..

இதுல உங்களுக்கு ஒரு எக்ஸ்குளூசிவ் மேட்டரு ஒன்னு சொல்லுதேன், யாருகிட்டேயும் சொல்லாதீங்க.. இந்த டி.கே.சி பேரன்ங்கள்ள ஒருத்தன் நம்ம கூட்டுக்காரனோட ஆபிசிலதான் வேல பாக்கனாம். அதுல என்ன விசேசம்னா அந்த பயபுள்ளைக்கு தமிழே படிக்க தெரியாதாம்… ஆக தமிழுக்கு தொண்டு ஆத்துன பெரிசு பரம்பரைக்கே தமிழ் தெரியாத போது அந்த பெருசு அப்பம் சாப்பிட்டு குசு விட்ட கதையெல்லாம் புத்தகமா நாம படிக்கணும்னா, ஒண்ணு மட்டும் சொல்லுதேன், இந்த தமிழ்நாடு நாசமா போகட்டும்லே…

இந்த புக்ஃபேருக்கு வாசல்லேயே காத்துக்கிடந்து எந்த பயபுள்ளையாவது இந்த புக்க வாங்கிட்டு வந்தீகன்னா புடிச்சு கடிச்சு வக்கப்போறேன், அம்புட்டு கொலைவெறியில இருக்கேன்…..

சரி இந்த பெருசு புத்தகத்துக்கு முன்னுரை எழுதுன கரிசல் செக்ஸ் தாத்தா கி.ரா இருக்காருல்ல… அவருக்கு மத்த இலக்கியவியாதிமாரு எழுதுன கடிதங்களையும் புக்கா கொண்டு வாராகளாம்… அடுத்து என்ன சாரு மாமாவுக்கு, மாமா சாரு எழுதிய நேஹா கடிதங்களா இல்ல டோண்டு இராகவன் கேள்வி பதிலா… நல்லா இருங்கடே !!!

அடுத்து பாத்தீகன்னா நம்ம ஃபீரிலேன்சு பத்திரிகையாளர் மணாவோட புக்காம். என்னண்டு பாத்தா… “கமல்ஹாசன்: நம்காலத்து நாயகன்” ண்டு தலைப்பு போட்டுருக்கான். கமலஹாசன் நாயகனில்ல, வில்லன்னு எந்த கபோதி சொன்னான்? இதுல கமலைப் பத்தி பிரபல ஆளுமைங் எழுதுன பதிவுகளும் போட்டாவும் வருதாம்.

திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை பிரஸ்ஸூங்களுக்கு போனா தெருவுக்கு ஒரு ரஜனி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜித் ரசிகன்னு பிரிண்டாகுறதை பாக்கலாம். அதுல இல்லாத பதிவா, போட்டாவா…ஏம்டே இப்படி ஊரை ஏமாத்துரீக….நம்ம பாய் ஏற்கனவே “உன்னைப் போல ஒருவனில்” ஒரு பாட்டு எழுதுனத வச்சு கமலை ஒரு ஏகாந்த யோகியாக சித்தரிச்சு பரவசமான பார்ட்டி. அதுக்கு நன்றிக்கடன்தாம்டே இந்த புக்கு….

இதுக்கு அடுத்தாப்ல நம்ம தத்துவ அறிஞர் யமுனா ராஜேந்திரனோட மூணு புக்கு போட்டுருக்காக.. இதுல புரட்சி, உலக சினிமா, ஆவணப்படம்னு டைட்டிலெல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா அண்ணாத்தே எது எழுதுனாலும் காசியில ஆரம்பிச்சு கன்யாகுமாரி வரை இழுத்து இழுத்து பேசியே கொல்வாரே… முன்ன ஒரு தடவை உயிர்மையில பிழை திருத்தும் வேலை செய்யுற ஒரு நண்பரைப் பாத்தேன்.. அப்பதான் அவரு சொன்னாரு, “யமுனா ராஜேந்திரன் கட்டுரைகளை திருத்தி எழுதுற துக்கத்துக்குகூட மனுஷ்ய புத்திரன் சம்பளம் போறவே போறாது”ன்னு.. இந்த வாட்டி இந்த மூணுபுக்குக்கும் யாரோட லங்கோடு கிழிஞ்சதோ தெரியல..அவுகளுக்கு நம்ம அனுதாபங்களையாவது தெரிவிச்சுக்கிடுவோம்.

தமிழக மேலவை” ங்குற தலைப்புல கே.எஸ்.இராதாகிருஷ்ணன் புக்கு வருதாம். இது சத்தியாம லைப்புர்ரி ஆர்டருக்கான புத்தகம். அண்ணாத்தேயும் தி.மு.கவுல முக்கிய தலைங்குறதால பாய் இவர வச்சு வருசத்துக்கு ஐஞ்சு புக்காவது போடுவாறு. இனி “புதிய சட்ட மன்றம் கட்டிய கதை, மு.கவின் மாமல்லபுர விஜயம், அழகிரியின் டெல்லி வாசம்னு” புது புது புக்குங்க வரும். இதுகளையெல்லாம் வாசிக்கிறதுக்கு தமிழ்நாடு எத்தனை கொடுத்து வச்சுருக்கணும்!!!

வா.மு.கோமுங்கறவரோட இரண்டு நாவலும், ஒரு சிறுகதையும் வருதாம். இவரு யாருன்னு விசாரிச்சா நம்ம நைனா சாருவே இவர தன்னோட சீடன்னு அறிவிச்சிருக்கராம்ல. அப்படின்னா இவரும் ஜல்சா மேட்டரு ரைட்டரா, காலம் ரொம்ப கெட்டுப் போச்சு, வேற என்னத்தைச் சொல்ல?

அப்பறும் பழமொழி, கிராமம், விளையாட்டு, சாப்பாடு ன்னு வெரைட்டியான நூல்கள். ஒரு காலத்துல இதுங்களயெல்லாம் மணிமேகலைப் பிரசுரத்துலதான் பாப்போம்.. இப்ப உயிர்மையிலும் பாக்கலாம்.

வெள்ளைப் பல்லி விவகாரம்” என்ற தலைப்பில் லஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுப்பு வருதாம். இந்த அண்ணன் யார்? ஒரு  காலத்துல மனுஷ்ய புத்திரன், கண்ணனோட காலச்சுவடு ஆசிரியர் குழுவுல இருந்தவர். தன்னோட வாழ்க்கையை மனுஷ்ய புத்திரன் பாழாக்கிட்டாருன்னு சொன்னவரு. இப்ப பாழாக்குனவரு புண்ணியத்துல புக்க கொண்டு வராறு.. இவனுங்க ஏன் அடிச்சுக்குறான், எப்படி சேந்துக்குறான்ன்னு ஏதாச்சும் புரியுதாடே?

விமலாதித்த மாமல்லன் கதைகள்” இது ஒரு சிறுகதை புக்காம். இவரும் கூட பிளாகுலயும், பஸ்சுலயும், டவிட்டர்லயும் என்னெல்லாமோ எழுதிப் பாக்குறாரு, ஒன்னும் களை கட்ட மாட்டேங்குது. இவரு மாமா சாருவை  திட்டிகிடந்த்தை பாத்து பீதியான நம்ம மொக்கைத் தம்பிமாறுங்க ஜெயமோகனுக்கு எதிரா பாய இவருக்கு கொம்பையும் சீவி மச்சி சாருன்னு பட்டத்தையும் வச்சி அவர்கையில ஒரு குச்சி ஐச கொடுத்திட்டாகளாம்… சரி இருக்கட்டும். மச்சி சாரு 83ல போட்ட புக்கே இன்னும் விக்காம இருக்காம். அதையே பதிவுலகத்துல ஃபிரியாக கொடுக்குறதுக்கு மச்சி சாரு ததிங்கிணத்தோம் போடுறாரு.. இந்த இலட்சணத்துல இவரு கதைங்க அல்லாம் ஒரே தொகுப்பா வருதுன்னா என்னா அர்த்தம்?

அதுல காமடி என்னன்னா இந்த மச்சி சாருவோட வாழ்க்கை இலட்சியம் ஜனாதிபதி கையால விருது வாங்குறதாம். சனாதிபதி கையில விருது வாங்குறது இருக்கட்டும். உயிர்மையில நூல் வெளியீட்டு விழா லிஸ்ட்ல பாத்தீகன்னா, சாரு, எஸ்.ரா, ரவிக்குமார், தமிழச்சி, மனுஷ்ய புத்திரன் மெயின் சாமிகளுக்கெல்லாம் தனித்தனி விழா. ஆனா நம்ம மச்சி சாரு புக்கெல்லாம் 12 புக் வெளியீட்டு விழாவுல கூட்டத்தோட கூட்டமா கலந்து பொச்சு… லோக்கல்லயே தனிக்கவனிப்பு இல்லேங்குற பட்சுத்துல இவரு தன்னை இன்டர்நேஷ்னல் பிகரா நினைச்சு கனவு காணுராரே, நமக்கே ரொம்ப கஸ்டாமா கீது…. காட் பிளஸ் அமெரிக்கா அண்டு மச்சி சார்!@!

புரியாட்டி இன்னொரு உதராணத்த பாப்போம். சேலம் சிவராஜ் வைத்தியர் கிழமைக்கு ஒரு ஊர்னு விஜயம் செய்வாரு. இதுல பெரிய சிட்டிங்களுக்கெல்லாம் முழு நாள ஒதுக்குவாறு. சில்லறை நகரங்களையெல்லாம் ஒரே நாளில் நாலைந்துன்னு பாப்பாரு, இப்ப நம்ம மச்சி சாரோட கதையும் அதுதான், இதுக்கும் மேல புரியலேன்னா சிட்டுக்குருவி லேகியம் வாங்கி விழுங்குலே…..

அடுத்து பத்து கவிதை தொகுப்பு, எப்பவும் வர்றதுதானேன்னு நெனக்காதீக இதுல நம்ம பதிவுலக அம்பிமாறு எழுதுனதும் இருக்காம். வெள்ளிக்கிழமை மாலை கொசு, கழுதை மட்டமும் கழுவாத புட்டமும், பீக்கடல் அப்படீன்னு பதிவமாருங்க டிஜிட்டல்ல கிறுக்கியதை எடுத்து மூணு புத்தகமா போட்டா ஒரு முப்பது பதிவுல விளம்பரம் இனாமா தேத்தலாம். அப்புறம் என்ன புரவலருக்கு புரவலர், விளம்பரத்துக்கு விளம்பரம், வியாபாரத்துக்கு வியாபாரம்… கூட்டிகழிச்சு பாருலே இந்த மார்கெடிங் கணக்கு சரியா வரும்… இதுதாம்லே மனுஷ்ய புத்திரன் ‘டச்‘சு

ஆமா, இதெல்லாம் வரும்போது ”எட்டு லார்ஜ் குடித்தது தப்பில்லை. அடுத்து குடித்த பியர்தான் பிரச்சனை” ன்னு நம்ம எலக்கிய குருஜி சுந்தரின் பஸ்மொழிகளெல்லாம் ஏன் வரலையின்னு கேட்கப்பிடாது. பதிவுலகம் ரத்த பூமி, பதிவர் மேட்டர்லாம் டச் பண்ணா அப்புறம் ரணகளம் ஆகும், ரத்த ஆறு ஓடும் .. பீ கேர்புல். என்னத்தாம்லே சொல்லிகிட்டேன்…

அடுத்து நம்ம ஹீரோவ பத்தி பாப்போம் அதாம்லே அம்பி பாய் மனுஷ்ய புத்திரன். அவுகளோட 120 கவிதைகள் 300 பக்கங்களுக்கு மெகா புக்கா வருதாம்லே.. சாம்புளுக்கு ஒன்னு

இதற்குத்தானா?

பார்க்காமலே
இருந்திருக்கலாம்

பார்த்தும்
பாராத்து போல போயிருக்கலாம்

பார்க்க வந்தது
உன்னையல்ல என்று சொல்லியிருக்கலாம்

பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்

பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு தூரம் வந்தது?

…………………………………………………….

தெரியாமத்தான் கேக்கறேன் பார்த்தான், பாக்கலேன்றத பின்னிப் பின்னி எழுத்திட்டு அது கவிதைன்னா அந்த கடவுளுக்கே அடுக்குமாலே..

“கக்கா போகலாம், போகாமலும் இருக்கலாம், போனாலும் பாதகமில்லை, தண்ணியிருந்தா கழுவலாம், இல்லாட்டி துடைக்கலாம், நாறினா ஓடலாம்,” ம்னு நான் என்டர் தட்டாத ஒரு கவிதை சொன்னா ஒத்துப்பியாலே?.. பொழப்ப பாருலே போக்கத்த மூதின்னு துப்பமாட்ட?

தி.மு.க. ஆதரவு பெருந்தலைகளை கொண்டு தன்னோட நூலக ஆர்டரை நைசா வளைச்சு பிசினஸ் சாம்ராச்சியத்தை சைசா தேத்தும் ‘பாஸ்’ மனுஷ்ய புத்திரன் கொண்டுவரும் 60 புத்தகங்களோட லட்சணம் இப்படித்தாம்லே பல்ல இளிக்குது. இதுக்காக்க எத்தன மரத்தை வெட்டிச் சாச்சாகளோ இதத்தாம்லே காடு அழியுதுன்னு சொல்லுதேன். இது சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லையா? இயற்கை வளமும், கருத்து வளமும் இப்படி வீணாபோவதை நாம ஆதரிக்கவாலே முடியும்… எதிர்க்கனும்லே…!

டிஸ்கி 1: பணி மாற்றமா, பணி உயர்வா, விசாரணையிலிருந்து விடுதலையா, ரியல் எஸ்டேட்டா, கட்டப் பஞ்சாயத்தா, நூலக ஆணைக்கு தள்ள வேண்டுமா, எதையும் புத்தகமாக போட வேண்டுமா – உடனே உயிர்மை பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெறும் பதினைந்து சதவீத கழிவைக் கொடுத்து உலகத் தரமான சேவையை பெறுங்கள்…

டிஸ்கி 2: இப்படி காடுகள் அழிந்தால் வெங்காய விலை எப்படி குறையும்?

டிஸ்கி 3: வினவு தளத்தில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!

________________________

– காளமேகம் அண்ணாச்சி
________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:


மகளிர் காவல் நிலையத்தில்…. ஒரு நேரடி அனுபவம்!

18

தோழி ஒருவருக்காக ஒரு மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. புகார் மனுவை  வக்கீல் எடுத்துவருவதாக சொன்னதால், காவல்நிலையத்துக்கு வெளியே  காத்திருந்தோம். என்ன மகளிர் காவல்நிலையமாக இருந்தாலும், ஒரு பெண்ணால் நேரடியாக கம்ப்ளெயிண்ட் கொடுத்து எப் ஐ ஆர் பதிய முடிவதில்லை.  ஒரு வக்கீல் வந்து இன்ஸ்பெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே  நடைமுறையில் ஓரளவிற்குச் சாத்தியமாகிறது. நாங்கள் சென்ற சமயத்தில், இன்ஸ்பெக்டர் வெளியில் சென்றிருந்தார். ஒரு ஏட்டு, ரைட்டர் மற்றும் நான்கைந்து  பெண் கான்ஸ்டபிள்கள் இருந்தனர். மாலை ஏழு அல்லது ஏழரை மணி இருக்கும்.

அப்போது கண்ணீரோடு ஒரு பெண்  விரைந்து வந்தார். இல்லை, ஓடி வந்தார் என்றே சொல்ல வேண்டும். உள்ளே சென்ற அவர், அங்கிருந்த போலிஸிடம், “மேடம், என் புருஷன் அம்மிக்கல்லை தூக்கி என்மேலே போடறாருங்க மேடம்,  கழுத்துலே பட்டுடுச்சு, தெனம் குடிச்சுட்டு ஒரே அடி,உதை” என்று அதற்கு மேல் பேச முடியாமல் விம்மினார்.

“வீடு எங்கே இருக்கு” என்று வினவிய இன்னொரு போலிஸ்காரரிடம்,   புறநகர்ப்பகுதி ஒன்றைக் கூறினார்.  “சரி, இப்போ எங்கியாவது போய் தங்கிக்கோ, நாளைக்கு காலையிலே வா, கண்டிப்பா விசாரிக்கறோம்” என்றதும்,  முகத்தில் ஏமாற்றத்துடன் பாவமாக “எத்தனை மணிக்கு மேடம்” என்றார் அவர். காலையிலே எட்டு மணிக்குக் கூட வா, நாங்க இருப்போம் என்று நம்பிக்கையளித்தும்,  தயக்கத்துடனே நின்றுக்கொண்டே இருந்தார்  அவர்.

“பயமா இருக்குங்க, மேடம்” என்றதும், “இவ்ளோ நாளா இருந்துட்டே இல்லேம்மா, ஒரு நாள் பொறுத்துக்கோ, அம்மா அப்பா வீடு எங்கே இருக்கு?” என்றார் ஏட்டு. “யாரும் இல்லைங்க மேடம் ” என்றதும்,  “யாராவது தெரிஞ்சவங்க வீட்டுலே போய் தங்கிட்டு காலையிலே வா, இப்போ உன் வீட்டுக்காரனை கூப்பிட்டு நாங்க இங்கே நைட் தங்க‌ வைக்க முடியாது, குழந்தைங்க இருக்கா” என்றதும் “இருக்குங்க மேடம், ஒரு பையன்” என்று சொல்லிவிட்டு  ஒருவித தயக்கத்துடன் வெளியேறினார்.  ஒருவேளை, இத்தனைநாட்கள அவ்வீட்டில் கழித்ததைவிட  இன்று இரவு  அங்கே கழிப்பது என்பது அவர் வாழ்க்கையில் மிகுந்த பயங்கரமானதாக இருக்கக்கூடுமென்ற பயம் காரணமாக இருக்கலாம் அல்லது எங்கு தங்குவது என்ற கலக்கமாகவும் இருக்கக் கூடும்.

அப்பெண் வெளியெறியவுடன்  ஏட்டு “கோயிலுக்கு போயிட்டு வந்துடறேம்ப்பா” என்று வெளியே சென்றார். அவர் திரும்பி வந்த‌போது கையில் ஒரு பாக்கெட் இருந்தது. உள்ளே இருந்த அனைவருக்கும் “அம்மன் என்னா அழகுப்பா” என்று சிலாகித்தபடி விநியோகித்தார். மற்ற பெண் போலிசுகளும் மிகுந்த பக்தியுடன் எடுத்துக்கொண்டனர். வெளியில் வந்து எங்களுக்கும் அந்த பொட்டலத்தை நீட்டினார். பிரசாதம். தோழி எடுத்துக்கொண்டார். “பக்கதுலேதான் இருக்கு, நல்ல தரிசனம் ” என்றார் எங்களிடம் சிரித்த முகத்துடன்.  எனக்கோ,  காவல், சட்ட‌ மற்றும்  மற்றும் நீதித்துறையில் இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்து அலுவலக நேரத்தில் இருக்கலாமா என்ற சந்தேகம் வந்தது. சடையை இரு புறமும் மடித்து காதோரம் குத்தி  முடியை தொங்கக்கூட விடாத அந்தக்கால பெண் போலிசுகள் நினைவில் எட்டிப் பார்த்தனர்.  மத அடையாளங்களை குறைந்தபட்சம் அலுவலக நேரத்திலாவது வெளிக்காட்டாமல் இருக்கலாம் என்ற நினைப்புடன் பிரசாதத்தை மறுத்து விட்டேன்.

எங்களுடன் இன்னொருவரும் காத்திருந்தார். அவரது பெண்ணுக்காக வந்திருக்கிறாராம். முன்பே புகார் கொடுத்திருக்கிறார்கள்.  மருமகனின் தந்தை,  பெண்ணை  அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், கழுத்தை பிடித்து நெரிப்பதாகவும், ரூமுக்குள் பூட்டி வைத்துவிடுவதாகவும் , அதனால் மகளிர் காவல் நிலையத்தை நாடியதாகவும் சொன்னார். அடுத்த நாள்,  அவரது பெண்ணையும் மருமகன் மற்றும் அவரது தந்தையை ஏசி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்போவதாக அது விஷயமாக விசாரித்துச் செல்ல வந்திருப்பதாகவும் பகிர்ந்துக் கொண்டார்.

இதன் நடுவின் இன்ஸ்பெக்டர் வந்துவிட எங்களை உள்ளே அழைத்து என்ன விஷயமென்று கேட்டுக்கொண்டார். தோழியும் தனது குறைகளைச் சொன்னார். கணவர் குடித்துவிட்டு கலாட்டா செய்வதாகவும், அவரது வீட்டார் தனது உடைமைகளை  வெளியே தூக்கிப் போடுவதாகவும், வீட்டை விட்டு வெளியேறச் சொல்வதாகவும், அதற்காக புகார் கொடுக்க வந்திருப்பதாகவும்  கூறினார். மேலும், தான் விவாகரத்துக்கு முறையீடு செய்யப்போவதாகவும் சொன்னார்.

தோழி மற்றும் கணவரது வேலை, படிப்பு விவரங்களை கேட்டுக்கொண்ட போலிசார், “சாஃப்ட்வேர்தான் சார், இப்போ எல்லாம் ஐடிக்காரங்கதான்…அதிகமா படிச்சிருக்காங்கன்னு சொல்றாங்க, ஆனா சண்டை போட்டுக்கிட்டு அசிங்கம் பண்றது அவங்கதான்” என்று புலம்ப ஆரம்பித்தார். ஒரு சில கேஸ் விவரங்களையும் பகிர்ந்துக் கொண்டார்.  தோழியின் வக்கீல் வந்து சேர்ந்தார்.  புகாரை வாங்கிக்கொண்டு இரவாகி விட்டதால் காலையில் வருமாறும், கணவரை அழைத்து விசாரிப்பதாகவும் வாக்களித்தார்.   கம்ப்ளெயிண்ட் பதிவு செய்து ஒரு ரசீது போன்ற ஒன்றைப் பெற்றுக்கொண்டு வெளியேறினோம்.

பெண் போலிசினால் பெண்ணுக்கு என்ன பயன்?

அடுத்தநாள் வந்தபோது, ஒருவர் ஆஜானுபாகுவான தோற்றத்தோடு அமர்ந்து தியானம், பக்தி பற்றி பேசிக்கொண்டிருந்தார். போலீசார் அனைவரும் மிகுந்த பயபக்தியுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். சந்தேகங்களையும் கேட்டுக்கொண்டார் ஒருவர்.  வெளியில் சென்றிருந்த இன்ஸ்பெக்டர் அதுவரை வரவில்லை.  தோழியை கண்டதும் ஏட்டு ஒரு கான்ஸ்டபிளை அழைத்து “இவங்க கூட போய் அவங்க வீட்டுக்காரரை கூப்பிட்டு வந்துடு” என்றார்.  தோழியும், கான்ஸ்டபிளும் சென்றுவிட நான் வெளியில் காத்திருந்தேன்.

நேற்று சந்தித்த அந்த பெண்ணின் அம்மா அங்கே நின்றிருந்தார். பார்த்ததும், “அவந்தாம்மா என் பொண்ணோட மாமனார், அவன் மேல தான் கம்ப்ளெயின் கொடுத்திருக்கேன், இவங்க என்னடான்னா அவனை உட்கார வைச்சு ஆன்மீகம் பேசுறாங்க, அவன் பேச ஆரம்பிச்சா அவனை மாதிரி நல்லவனே இல்லன்ற மாதிரி பேசு ஏமாத்திடுவான்” என்று அங்கலாய்த்தார். எத்தனை ஆனந்தாக்கள் வந்தாலும்……என்று நினைத்துக்கொண்டதை சொல்லவில்லை. அதிருப்தியை அவருடன் பகிர்ந்துக்கொண்டதோடு சரி!

இதன் நடுவில், அந்த புறநகர்ப்  பெண் வந்து நின்றுக்கொண்டிருந்தார். யாரும் அவரை விசாரிக்கவில்லை. ஆன்மீகத்தில் லயித்து இருந்தனர். இன்ஸ்பெக்டர் அதற்குள் வந்துவிட, குறிப்பிட்ட பெண்ணும் அவரது கணவர் மற்றும் பெண்ணின் சகோதரரும் எங்கிருந்தோ வந்தனர். அவர்களை ஜீப்பில் ஏறுமாறு சொன்னதும் அப்பெண் விசும்பத் தொடங்கினார்.  ஒரு போலிஸ், “அழாதே, உனக்கு என்ன வேணுமோ நாங்க பண்ணித்தரோம், ஒரு பொண்ணோட கஷ்டம் இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்” என்று சொல்லி அழைத்துச் சென்றார். இப்போது அவர்களின் கவனம் புறநகர் பெண்ணின் மீது திரும்பியது.

அந்த பெண்ணிடம், “நீ நேத்து வந்தே இல்ல, ஒரு பேப்பர்லே கம்ப்ளெயின் எழுதிக் கொடு ” என்று ஒரு பேப்பரை தந்தார் ஒருவர். அந்த பெண் மருண்ட படி, அதை வாங்கிக்கொண்டு என்னிடம் திரும்பினார். “அக்கா கொஞ்சம் எழுதி தர்றீங்களா” என்று விவரங்களை கூறத் துவங்கினார்.  எழுதப்படிக்க தெரியாதவர்களால் அல்லது வக்கீலை வைத்து புகார் மனு  கொடுக்க முடியாதவர்கள் நிலை இதுதானா? ரைட்டர் என்பவர் புகாரை எழுதிக் கொள்ள  மாட்டாரா?

இதன் நடுவில், இன்னொரு பெண்,  தனது கணவரை அவரது தாய்‍‍ தந்தை அழைத்துச் சென்றுவிட்டதாகவும், மாமியார் காலால் உதைத்ததாகவும்,  சாமான்களை எல்லாம் அவரது கணவர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் புகார் செய்தார். ஏறகெனவே எழுத்துவடிவில் புகார் கொடுத்திருப்பார் போல. “நீ என்னமா ஆசைப்படறே, வாழணும்னு விரும்பறியா” என்று போலிஸ் கேட்க அந்த பெண் ” ஆமா மேடம், நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அவர் கூட தான் வாழணும்னு ஆசைப்படறேன்” என்றதும் “உனக்கு என்ன வேணுமோ நாங்க பண்ணித்தரோம்” என்று உறுதியளித்தார் ஏட்டு.  அந்தப் பெண்ணுடன் இன்னொரு கான்ஸ்டபிளை அனுப்பி அந்த பெண்ணின் கணவரையும், அவர்கள் குடும்பத்தினரையும் அழைத்து வரும்படி சொன்னார் சப்‍இன்ஸ்பெக்டர். கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வந்துவிட விசாரணை ஆரம்பமாகியது.

சிறுபிள்ளைகள் போல இருதரப்பும் மாற்றி மாற்றி புகார் சொல்லிக்கொண்டிருந்தபோது,  ‘என்ன இருந்தாலும் மருமகளை எதுக்குங்க அடிக்கறீங்க, அதான் கல்யாணம் பண்ணி வைச்சுட்டீங்க இல்ல, அப்புறம் அவங்க ரெண்டு பேரு வாழ்க்கை” என்றதும்  “அவ என் பையனை கை நீட்டி அடிச்சா, அதை பாத்துக்கிட்டு என்னை சும்மா இருக்க சொல்றீங்களா” என்றார் பெண்ணின் அம்மா.

திடுக்குற்ற  போலீஸ் அந்தப் பெண்ணிடம், “என்னம்மா,  அவங்க சொல்றது உண்மையா” என்றதும், “ஆமா மேடம், சண்டையிலே அவர் என்னை கீழே தள்ளுனாருங்க மேடம், நானும் கை ஓங்கி அடிச்சேன்” என்றார். பெருமைக்குரிய விஷயம்தான் இல்லையா…மேலும் வெகு இயல்பான கோபம்தான் அது. ஆனால், விசாரித்துக்கொண்ட போலீஸ்காரருக்கு அப்படி படவில்லை போலும். நூற்றாண்டுகளாக நமது மூளையில் பதிய வைக்கப்பட்டிருந்த அந்த உன்னத கேள்வி அப்போது போலீசு வாயில் இருந்து வெளி வந்தது ” என்ன இருந்தாலும் ஒரு ஆம்பிளைய நீ கை நீட்டி அடிக்கலாமா” என்பதுதான் அது!!  இப்போது அந்தப் பெண்ணிடம் பதிலில்லை.  பஞ்சாயத்து தொடர்ந்து நடந்து ஒரு வழியாக அப்பெண்ணும் அவரது கணவரும்  அதே ஏரியாவில்  இரு தெருக்கள் தள்ளி தனிக்குடித்தனம் வைக்கவேண்டும் என்ற தீர்ப்போடு சப்‍இன்ஸ்பெக்டர் அவர்களை அனுப்பி வைத்தார்.

இதற்குள் தோழியும், அவரது கணவரும் வந்துவிட  போலீஸ்காரர் இருவரையும் விசாரித்தார். தோழி சொன்னது, தோழியின் கணவர் தனது வக்கீலுடன் மாலையில் வருவதாக சொன்னதும் மாலை ஆறு மணிக்கு வருமாறு இருவரிடமும் கூறி திருப்பி அனுப்பிவிட்டன‌ர்.  மாலையில், நானும் தோழியும் திரும்பச் சென்றோம். காவல்நிலையத்தின் நுழைவாயிலின் அருகில் சென்றபோது  ஒரு ஆண் வெளியே வந்தார்.  பார்த்தால்  நடுத்தர வயது என்று சொல்லலாம்.   சற்று குட்டையான உருவம். சற்று பதட்டமாக இருந்தது போலிருந்தது.  வெளியே வந்த போலிசு, “எதுன்னாலும் பயப்படாதே, ராத்திரியிலே ஏதாவது பிரச்சினைன்னா உடனே 100 ஐ கூப்பிடு” என்றதும் அவர் தலையை ஆட்டியபடி சென்றார்.

இன்ஸ்பெக்டரும் இன்னும் சில போலிசுகளும் வெளியே வந்தனர். எங்களைப் பார்த்தும், “அதோ போற ஆளு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி “ஐயய்யோ வாங்க மேடம், என் வீட்டுக்குள்ளே வேற ஒரு ஆள் பூந்திருக்கான்”னு பதறியடிச்சுக்கிட்டு வந்தான். ஆளை அனுப்பினா, அவன் பொண்டாட்டி பிறந்தமேனியா வேற ஆள்கூட இருந்திருக்கா. சனியனுங்க….அப்புறம் துணியை போடவைச்சு இங்கே கூப்பிட்டு வந்திருக்கோம்..உள்ளேதான் இருக்குதுங்க ரெண்டும்..டைவர்ஸ் வாங்கிட்டு எவன்கூடயாவது போக வேண்டியதுதானே…ஒண்ணும் சொல்லிக்க முடியலை…அவ தெளிவா பேசறா…இவன் என்ன பண்ணமுடியும் சொல்லுங்க..பொம்பளைங்க சரியில்லைங்க இந்த காலத்துலே” என்று சொன்னபடி ஏதோ பந்தோபஸ்துக்காக செல்வதாக சொல்லிவிட்டுச் சென்றார்.

நாங்களும் தோழியின் கணவர் தரப்புக்காக காத்திருந்தோம். உள்ளே அந்த குறிப்பிட்ட ஜோடி நின்றிருந்தனர். அப்பெண்ணைப் பார்த்தால் ஒரு முப்பந்தைந்து மதிக்கலாம். மெலிந்த உருவம் கொண்டவராகவும், மொட்டையடித்து இரு இன்ச் வளர்ந்த முடியுடனும் முகத்தில் எந்த உணர்ச்சிகளும் அற்று நின்றிருந்தார். கண்டிப்பாக அவர‌து கணவருக்கும் இவருக்கும் குறைந்தது பத்து வருடங்களாவது இடைவெளி இருக்கலாம். சற்று தள்ளி,  28 வயது மதிக்கத்தக்க, சட்டையில் பட்டன்களை ஏறுக்குமாறாக போட்டபடி அவன் நின்றிருந்தான். முகம் இறுகிப் போயிருந்தது.

அப்போதுதான், ஒரு தம்பதி உள்ளே நுழைந்தனர். காலை தாங்கி தாங்கி நடந்தபடி அந்த அம்மா வர அவருக்கு கைலாகு கொடுத்து அழைத்து வந்தார் அவரது கணவர். ஒரு போலீசுக்கார பெண், அவர்களை பெஞ்சில் அமரச்சொன்னார். அந்த அம்மா, திரும்பி அந்த பையனைப் பார்த்து சட்டை பித்தான்களை ஒழுங்காக போடுமாறு சைகை காட்டினார். அவனோ அதை சற்றும் லட்சியம் செய்யவில்லை. அந்த பையனின் பெற்றோர் இவர்கள். அந்த வயதானவரிடம் விபரங்கள் கேட்டு, பெண் போலிசு ஒரு தாளில் எழுதத் தொடங்கினார். முடிக்கப் போகும் தறுவாயில் அந்த அம்மாள் எங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா என்று கேட்டார்.  எங்களிடம் சில நூறு ரூபாய்களே இருந்தன. அந்த அம்மாளின் கணவர் வெளியே சென்றுவாங்கி வந்தார். அந்த தம்பதியினரும், அந்த பெண் போலீசும் உள்ளறைக்குச் சென்றனர். சற்று நேரத்தில், அந்த தம்பதியினருடன் அந்த ஆளும் வெளியே வந்தனர்.

அந்த ஆளின் முகத்தில் எந்த பாதிப்பு தெரியவில்லை. மிக சாதாரணமாக ஒன்றும் நடக்காதது போலவே வெளியே வந்தார். கேட்டின் அருகில் மூவரும் சென்றதும், அந்த அம்மாள் மட்டும் திரும்ப உள்ளே வந்தார். அமர்ந்திருந்த அப்பெண்ணின் அருகில் சென்று குனிந்து கையை நீட்டி, “இனிமே ஏதாவது தப்பு நடந்தது கொன்னுடுவேன்” என்றும் “வெக்கமாயில்லே, உனக்கு ரெண்டு பசங்க இருக்கு இல்லே, ஒழுக்கமா இருக்கிற வழிய பாரு”  என்று கடுகடுப்பாக சொல்லிவிட்டு எங்களை நோக்கி “அவளுக்கு கொஞ்சமும் மானம் ரோஷம் இல்லே, எப்படி உட்கார்ந்திருக்கா பாருங்க‌” என்று  சொன்னபடி தாங்கி தாங்கி நடந்துசென்றார்.

நிச்சயம் இது ஆச்சரியமாக இல்லை. ஒழுக்கம் என்பது பெண்ணுக்கும் மட்டுமே, ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், மானம் ரோஷத்துடன் வாழ வேண்டியது பெண் மட்டுமே என்று சட்டங்கள் எழுதும் நாட்டில் இது ஒன்றும் ஆச்சரியமே இல்லை. போலீஸ் ஸ்டேஷன் என்ன? நீதிமன்றங்களில் கூட எழுதப்படாத சட்டங்கள் உயிருடன் தானே இருக்கின்றனர். முழு தவறுக்கும் பெண்ணே பொறுப்பு என்பது போல அந்த ஆணின் தாயே அப்பெண்ணை பழித்து தவறில் பங்கு பெற்றவனை பெருமை குறையாமல் அழைத்துச் செல்ல முடிகிறதே! அப்பெண்ணை திட்டிய மறுகையோடு அந்த ஆணையும் நாலு அடி செருப்பால் அடித்திருந்தால் அவர் சொல்லும் ஒழுக்கத்திற்கு அர்த்தம் உண்டு.

அந்த அம்மாள் சென்றபின்,  போலீசுக்காரர் “நல்லாவா இருக்கு இதெல்லாம், ஒழுங்கா இருக்க வேண்டியதுதானே, ரெண்டு பசங்க இருக்கு இல்லே” என்று தன் பங்குக்கு ஆரம்பித்தார். தனித்து விடப்பட்ட அவர் தனது செல்போனில் யாரையோ அழைத்தார். அவரை அழைத்துச் செல்ல யாராவது வரவேண்டுமே! “யாருக்கு போன் பண்றே, யாரும் இல்லேன்னே இல்லே, போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணு ” என்று தனது அதிகாரத்தை காட்ட ஆரம்பித்தார் போலிசுக்காரர். “இல்லே, எங்க சித்தி பொண்ணுக்கு…” என்று இழுத்ததும் போனை வாங்கி வைத்துக் கொண்டார். கதியற்று அமர்ந்திருந்த அப்பெண் அடுத்து என்ன நடக்கும் என்று அந்த போலிசிடமே வினவினார். “கோர்ட்டுல போகணூம்” என்று சொல்லிவிட்டு “அந்த ஜன்னலை எல்லா சாத்து, பின்னாடி கதவை மூடிட்டு வா” என்று வேலைகளை ஏவத் தொடங்கினார்.

எவ்வளவு மனித உரிமை மீறல்! அப்பெண் தவறு செய்தவளாகவே இருக்கட்டும், அவரைப் பற்றிய தீர்மானங்களை, முடிவுகளை,  தண்டனைகளை எடுக்க இவர்கள் யார்? போலிசாகத்தான் இருக்கட்டுமே! என் தோழியின் விஷயத்தில் பெண் காவல் அதிகாரிகளின் போக்கு  சுவாரசியமான, நிச்சயம் விவாதத்திற்கான சம்பவமே! பிறிதொரு முறை பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஆனால், மகளிர் காவல் நிலையங்கள் என்பவை ஆண் காவல் நிலையங்களில் அல்லது பொதுக் காவல் நிலையங்களின் மற்றுமொரு கையாகவே விளங்குகிறது.  அதாவது, பொதுக்காவல் நிலையத்தின் பணிச்சுமையை வேண்டுமானால் இந்த அமைப்பு குறைக்கலாமே தவிர இதனால் பெண்களில்/குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் அல்லல் சற்றும் குறையவில்லை.   இது, பெண்ணின் கைக் கொண்டு பெண்களை ஒடுக்குவதற்கே இவ்வமைப்பு உறுதுணையாக இருக்கிறது. சட்டமும், ராணுவமும், போலிசும் எப்படி ஒரு வர்க்கத்தை ஒடுக்க மற்றொரு வர்க்கமாக இருக்கிறதோ அது போல.  மகளிருக்கான  பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை  ஓரளவுக்கு தருவதாகக் கொண்டாலும், உரிமைகளை பாதுகாக்க ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍, ‍ குறைந்த பட்ச மனித உரிமைகளைக் கூட கொடுக்க முடியவில்லை. இதற்கு பெண் அதிகாரிகளின் போக்கும் முக்கியக் காரணம்.

ஏற்கெனவே சமூகத்தால் உண்டாக்கி வைக்கப்பட்ட கருத்துகளை தலையிலேற்றிக் கொண்டு அதை கட்டிக்காப்பதிலேதான் முனைப்பாக இருக்கிறார்களே தவிர வேறு எந்த சுதந்திரமான சிந்தனைகளோ முற்போக்கான எண்ணங்களோ நான் கண்ட காவல்நிலையத்தில் இல்லை.  சென்னையில் புறநகர் பகுதியிலே இப்படி  என்றால் தமிழகத்தின் கிராமப்புற/ஊராட்சிகளில் எப்படி இருக்குமென்று நீங்களே கற்பனை செய்துக் கொள்ளலாம்.  மேலும், குடும்பப் பிரச்சினைகளை வெளியே கொண்டு  வரும் பெண்களை‍ , படிக்காத அப்பாவி பெண்களை, குரல் உயர்த்தத் தெரியாத பெண்களை நடத்தும் முறை நிச்சயம் வேறுதான்.

பெரும்பாலும் இவை குடும்ப அமைப்புகளை கட்டிக்காக்கவே, குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை கட்டப்பஞ்சாயத்து முறையில் தீர்க்கவே முற்படுகின்றன.  புகாரை வாங்கிக் கொண்டு இருதரப்பிலும் எழுதி வாங்கிக்கொண்டு விட்டுவிடுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. அடிவாங்கி ரத்தம் சொட்ட வந்தாலொழிய இவர்கள் வன்முறை என்று நம்புவதில்லை. மனதளவில் நடந்தாலும் வன்முறை வன்முறையே! ஒரு கட்டத்தைத் தாண்டி இவர்களுக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்,  குடும்ப அமைப்பினால் அழுத்தப்பட்டு, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு திசை தேடி வரும் பெண்களை மீண்டும் அவ்வமைப்பிற்குள்தான் தள்ளுவதுதான் இக்காவல் நிலையங்களின் கடமைபோலவே நடந்துக் கொள்கிறது.  “மகளிர் காவல் நிலையங்களினாலே விவாகரத்தின் எண்ணிக்கை கூடுகிறது” என்று ஹை கோர்ட்டின் நீதிபதி ஒருவர் தீர்ப்பெழுதி இருக்கிறார். அதனால், குடும்பப் பிரச்சினைகளை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதுவும் செய்து விட முடியாது என்று சால்ஜாப்பு வேறு இவர்களுக்கு இருக்கிறது.

பன்னெடுங்காலமாக, ஒடுக்கப்பட்ட பெண், சமூகத்தாலும் குடும்பத்தாலும் வஞ்சிக்கப்பட்ட பெண் சட்டத்தின் துணைக் கொண்டு  வெளிவே வரும்போது அவளுக்கு உதவாமல் குடும்பத்தை கட்டிக்காக்கும் கோர்ட்டுகளும் காவல் நிலையங்களும் எதற்காக?

ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தில் தனக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதியையும், வன்முறையையும் பேசமுற்படுவாராயின்….நிச்சயம் சிவில் போர்தான். முற்றிலும் ஆணாதிக்கத்தை தலையில் சுமந்துக் கொண்டிருக்கும், ஆணின் எண்ணங்களை உள்வாங்கிய பெண்கள் வேலை செய்யும் இடமே மகளிர் காவல் நிலையங்கள். இவற்றினால் என்ன பயன்?

_________________________________________________________

– கலா, வினவு வாசகர்
_______________________
_______________________________________

கூட்டணி ப்ளாக்மெயிலுக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!!

26

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஊடகங்களால் அதிகம் வில்லனாக்கப்பட்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாதான். இந்தியாவில் அறியப்பட்ட எல்லா ஊழல்களிலும் அரசியல்வாதிகள், ஓரளவுக்கு அதிகாரிகள் மட்டுமே தொடர்புடையவர்களாக காட்டப்பட்டிருக்கின்றனர். இதில் மறைக்கப்படும் விசயம் என்னவென்றால் இந்த ஊழல்களுக்கு அச்சாரமான முதலாளிகளின் தொடர்புகள் மட்டும் எப்போதும் தெரிவதில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல், ராடியா டேப் போன்றவற்றின் மூலம் சில முதலாளிகளது பெயர்கள் கசிந்திருக்கின்றன. ஆனால் என்ன பயன்? நேற்று புதிய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபில் தொலைத்தொடர்பு சேவை முதலாளிகளான ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மிட்டல் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார். என்ன பேசியிருப்பார்? கவலைப்படாமல் தொழிலைத் தொடருமாறும், செய்திகளில் அவர்களது பெயர்கள் அடிபட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாமென்றும்தான் பேசியிருப்பார். இதை நாம் ஊகமாகச் சொல்லவில்லை, ஊடகங்களும் அப்படித்தான் செய்தி வெளியிடுகின்றன.

ரத்தன் டாடாவின் தொழில் விருப்பங்களுக்கேற்ப ராசாவை அமைச்சாராக்க நீரா ராடியா லாபி வேலை செய்தது ஆதாரப்பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் புதிய அமைச்சர் அதே டாடாவை சந்தித்து ” மாப்புள, நீ ஒன்னியும் கவலப்படாத, எதையும் கண்டுக்காம தொழிலப் பாரு”ன்னு பேசினால் அதன் மறைபொருள் என்ன? ஊழல் செய்த முதலாளிகளின் தகிடுதத்தங்கள் மறைக்கப்பட்டு எல்லாவற்றையும் ராசா தலையில் கட்டுவதுதான் நோக்கம்.

ஊடகங்கள், அரசியல் கட்சிகள், புரோக்கர்கள் எல்லாரும் இந்த வேலையைத்தான் செய்து வருகின்றனர். அமெரிக்க மாமா சுப்ரமணிய சாமி நேற்று நெல்லையில் அ.தி.மு.க பினாமி கூட்டம் ஒன்றில் பேசும்போதும் இதையே கூறியிருக்கிறார். அதாவது பிரதமர் மன்மோகன் சிங் நல்லவராம், அவருக்கு ஊழலில் தொடர்பே இல்லையாம், எல்லாம் ராசாதான் செய்திருக்கிறாராம். இப்படி கல்லூளி மங்கனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?

சு.சாமி கூட ஒரு அரசியல் புரோக்கர்தான். அமெரிக்காவிற்கும், காங் எதிர்ப்பு, பா.ஜ.க ஆதரவு முதலாளிகளுக்கும் தரகு வேலை பார்க்கும் இந்த மாமா ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெரிய புடுங்கி போல பேசுவதற்கு காரணம் என்ன? வரும் சட்டமன்றத் தேர்தலலில் தி.மு.க – காங் கூட்டணியை கலைப்பதன் மூலம் அ.தி.மு.கவிற்கும், மறைமுகமாக பா.ஜ.கவிற்கும் உதவுவதுதான் நோக்கம். அதனால்தான் இவர் ராசாவை மட்டும் குறிவைத்து தாக்குவதோடு ஒவ்வொரு முறையும் கல்லுளி மங்கன் மன்மோகன் சிங்கிற்கும் வக்காலத்து வாங்குகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பா.ஜ.க ஆட்சிக்காலத்திலேயே தொடங்கிவிட்டது குறித்தெல்லாம் மாமா சு.சாமிக்கு கவலை இல்லை. அவரது ஒரே அஜண்டா தி.மு.க எதிர்ப்புதான். அதுவும் கூட அவரது பார்ப்பனிய சிந்தனையில் ஆழப்பதிந்துவிட்ட விசயம்தான். ஆக ஒரு அரசு, அரசியல் அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கும் ஊழலை ஒரு தனி மனித, கட்சி விவகாரமாக மாற்றுவதையே சு.சாமி குறிக்கோளாக கொண்டிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரல் ஊழல் வெடித்துக் கிளம்பியதற்கு தான்தான் காரணமென்று பிதற்றித் திரியும் ஜெயலலிதாவின் கணக்கும் அதேதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் பணபலத்தையும், அழகிரி ஃபார்முலா தேர்தல் முறையையும் (உண்மையில் இந்த தேர்தல் ஃபார்முலாவைக் கண்டுபிடித்தவர் ஜெயலலிதாதான்) எதிர் கொள்ள முடியாபடி, சொந்தக் கட்சி கரைந்து கழுதையாகிவிட்ட நிலையில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.

முழுத் தமிழகத்தையும் கொள்ளையடித்து மொட்டை போட்ட இந்த ஊழல் நாயகி இப்போது ஊழல் எதிர்ப்பு வீராங்கனையாக பேசுவதை என்னவென்று சொல்ல? ராசாவை நீக்கினால் காங்.கிற்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும் என்று தொடங்கியவர் இன்னும் நிறுத்தவில்லை. போதாக்குறைக்கு ஊடகங்களும் இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்றிவிடுகின்றன. அந்த வகையில் தமிழக ஊடகங்களில் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது கூட்டணி மாற்றம் குறித்த பரபரப்பு செய்தியாக மாற்றப்பட்டுவிட்டன.

நேற்று கோபியில் பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் “அ.தி.முகவுடன் கூட்டணி ஏற்படலாம், தி.மு.க வுடன் கூட்டணி முறியலாம்” என்றே கருத்து தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில் ராசா குற்றமற்றவர் என்று நல்லபிள்ளை போல பேசிய இளங்கோவின் பிறகு சூழ்நிலை மாறியதும் தனது பழைய அஜெண்டாவை கையிலெடுத்துக் கொண்டார். சோனியா பெயரைக் கேட்டாலே சிறுநீர் கழிக்கும் இந்த ஈரோட்டு அடிமை ஏதோ தன்மானமுள்ள வீரன் போல சித்தரித்துக் கொள்ளும் கொடுமையை என்னவென்று சொல்ல?

தமிழகத்திற்கு இருநாள் சுற்றுப்பிராயாணமாக வரும் ராகுல் காந்தி, காசுக்கு அழைத்து வரப்படும் 63,000 செட்டப் இளைஞர் காங். நிர்வாகிகளை சந்திக்கிறாராம். ஆனால் கருணாநிதியை சந்திக்கவில்லையாம். இதனால் கூட்டணி முறிந்து விடும் என்று ஊடகங்கள் வதந்திகளைக் கிளப்புகின்றன. ராகுல் காந்தி வரும் நேரம் பார்த்து அவரது அடிமை இளங்கோவனும் அதே போல பேச போயஸ் தோட்டத்தில் உற்சாகம் பொங்கி வழிகிறது.

பா.ஜ.க காலத்திலிருந்து நிறுவன ஊழலாக நிலைபெற்றிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசு கட்சிக்கு மிகப்பெரிய பங்குண்டு. 2008 இல் ராசா ஒதுக்கியது குறித்து 2010இல் அதுவும் எதிர்க்கட்சிகள் பேச ஆரம்பித்த பிறகே காங்கிரசும் ஏதோ நடவடிக்கை எடுப்பது போல பாவ்லா காட்டுகிறது. அந்தப் படிக்கு இந்த ஊழலை காங்கிரசு சந்தர்ப்பவாதமாக கையாள்கிறது. விசாரணை, சி.பி.ஜ ரெய்டு, என்றெல்லாம் சீன் போடுபவர்கள் ஏன் அதை இரு வருடங்களுக்கு முன்னரே செய்யவில்லை?

காங்கிரசின் நோக்கம் முதலாளிகளுக்கு உதவுதுதான். அதை செய்துவிட்டார்கள். தற்போது ஊழல் என்று பேசப்படும் நிலையில் அதை வைத்து தமிழக கூட்டணியில் தமது பங்கை அதிகப்படுத்தும் வேலையைச் செய்கிறார்கள். அதனால்தான் ராசாவை மட்டும் இந்த ஊழலில் தனிமைப்படுத்திவிட்டு பழம்பெரும் காங்கிரசு பெருச்சாளிகள் ரொம்ப நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து தி.மு.கவிடம் அதிக தொகுதிகளை வரும் தேர்தலில் கேட்கலாம். அதை தி.மு.கவும் தவிர்க்க முடியாது. இரண்டாவது சந்தர்ப்ப சூழலைப் பொறுத்து தி.மு.க கூட்டணியை வெட்டியும் விடலாம். அதனால் ஜெயா நிச்சயம் அதிக தொகுதிகளை தருவது உறுதி. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழலை தி.மு.க ஊழலாக அல்லது ராசா ஊழலாக மாற்றி தேர்தலில் ஆதாயமும் அடையலாம்.

ஆக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொறுத்தவரை காங்கிரசு ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்திருக்கிறது. முதலாளிகளுக்கு மலிவான விலையில் அலைக்கற்றையை ஒதுக்கியது, அப்படி ஒதுக்கியதில் ஊழல் என்ற பெயரில் தமிழக கூட்டணி பலத்தில் தனது பங்கை அதிகப்படுத்தியது; அதன்படி தமிழகத்தில் சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட தொண்டர்கள் இல்லாத மிட்டா மிராசுதாரர்களைக் கொண்ட கட்சி, தலைவர்களும், கோஷ்டிகளும், வேட்டிக் கிழிப்புகளுமே கொண்ட கட்சி இப்போது ஜாமென்று பல்லக்கில் பவனி வருகிறது. இதற்காகத்தான் இவர்கள் காத்திருந்தார்கள் போலும்.

ஸ்பெக்டரம் ஊழலுக்காக நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கம் எடுக்கப் போவதாக சி.பி.எம் அறிவித்திருக்கிறது. இணையத்திலும் நமது மாற்று தோழர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தினம் இரண்டு பதிவுகள் போட்டுத் தாக்குகிறார்கள். தோழர்களது கணக்கு இதை வைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு, தி.மு.க இல்லாத அ.தி.மு.க அணியை பலப்படுத்துவது. ஆனால் அம்மா அங்கே தோட்டத்தில் காங்கிரசு பெருச்சாளிகளுக்குக்காக பொக்கேயை வைத்துக் கொண்டு காத்துக்கிடக்கிறாரே? பார்ப்பனிய ஊடகங்களும் அதையே இலக்கு வைத்து பிரச்சாரம் செய்கின்றன. இந்நிலையில் தோழர்கள் என்ன செய்வார்கள்? காங், அ.தி.மு.க கூட்டணி அமையக்கூடாது என்று ஆண்டவனிடம் வேண்டுவதைத் தவிர அவர்களுக்கு கதிமோட்சம் ஏதுமில்லை.

மேலும் ஊழல் நாயகி ஜெயலலிதா தலைமையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்க்க முடியுமா என்ற கூச்சம் கூட சி.பி.எம்மிடம் இல்லை. அந்த அளவுக்கு அம்மா விசுவாசம் கொடிகட்டிப்பறக்கிறது. சுயமரியாதையும், தனது கொள்கையை வைத்து மக்களைத் திரட்ட முடியுமென்ற நம்பிக்கையும் இல்லாத இந்த செங்கொடிக் கோமாளிகளின் அரசியல் எதிர்காலம் அதாவது தமிழகத்தில் கிடைக்கும் நாலைந்து சீட்டுக்கள் போயஸ் தோட்டத்து புரட்சித் தலைவியிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஒருவேளை காங், அ.தி.மு.க கூட்டணி ஏற்பட்டால் சி.பி.எம் தோழர்கள் வேறுவழியின்றி தி.மு.க கூட்டணிக்கும் செல்வதற்கு தயங்க மாட்டார்கள். என்ன, “ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா மட்டும் செய்தது, அதற்கும் தி.மு.கவிற்கும் தொடர்பில்லை” என்று ஒரு விளக்கம் கொடுத்தால் போயிற்று. அந்த வகையில் சாயம் போன இந்த செங்கொடியின் எதிர்காலம் கோபாலபுரத்திலும் சிக்குண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

எனினும் நிறுவன மயமான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரசு அத்தனை சுலபத்தில் கழட்டி விட முடியாது. அதனால்தான் தற்போது விசாரணைகள், ரெய்டுகள் எல்லாம் ராசா, சில அதிகாரிகள் என்று தனிநபர்களை மையமாக வைத்து செய்யப்படுகின்றன. அதன்படி இதில் ராசாவை மட்டும் பலிகொடுத்து தி.மு.க, காங்கிரசு கூட்டணி நீடிக்கவும் வாய்ப்பிருக்கின்றன. இதில் காங்கிரசு மேல் நிலையிலிருக்கும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் புதிதல்ல.

இந்த உள்குத்து நிர்ப்பந்தத்தை தி.மு.க பெருச்சாளிகள் அறியாமலில்லை. அதனால்தான் மாறன் சகோதரர்கள், ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகள் எல்லாம் ஒன்றிணைந்து சி.ஜ.டி காலனி கோஷ்டியை தனிமைப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. இதற்காக மாறன்கள் தற்காலிகமாக அழகிரி கும்பலுடன் சமாதானமாக இணைந்திருக்கிறார்கள். தற்போது ராஜாத்தி அம்மாள் கோஷ்டியின் எதிர்காலம் கருணாநிதியின் தர்மசங்கடம் என்ற வகையில்தான் ஊசாலாடுகின்றதே அன்றி வேறுவகையில் அல்ல.

தமிழக ஊடகங்கள் அனைத்தும் இதையே பரபரப்புச் செய்தியாக்கி விற்று வருகின்றன. கருணாநிதியைப் பொறுத்தவரை அவரைப் பாராட்டி ஏதாவது ஒரு விழா எடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒரு குத்தாட்ட நிகழ்ச்சி நடத்திவிட்டால் போதுமானது. அத்தகைய காக்காய் முதுகு சொறிதலைத் தவிர அவருக்கு வேறு நோக்கங்கள் இல்லை. எனவே ராசாவை மட்டும் பலிகொடுத்து விட்டு தி.மு.க பழையபடியே ஒன்றுமில்லாதது போல இயங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆக கூட்டி கழித்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் ஊழல் இத்தகைய கூட்டணி பேரங்களுக்கான கச்சாப்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. ஒன்னே முக்கால் இலட்சம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஏதோ வானத்திலிருந்தோ இல்லை நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வரும் பணம் என்பதாகத்தான் மக்கள் புரிந்திருக்கின்றனர். இல்லை அது அவர்களிடமிருந்துதான் பறிக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கே சுத்தமாக மறைக்கப்பட்டிருக்கிறது.

இனி இந்த விவகாரங்கள் ஓய்ந்து கூட்டணி பேரங்கள் பேசி முடிக்கப்பட்டு அமல்படுத்தும் வேளையில் டெல்லியில் ஏதாவது ஒரு பண்ணை வீட்டில் விருந்து நடக்கும். எல்லா முதலாளிகளும், அரசியல் பெருந்தலைகளும் அங்கே வருவார்கள். “சியர்ஸ்” சொல்லிக் கொண்டு சீமைச்சாராயத்தை உள்ளே தள்ளும் வேளையில் நாட்டுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் அங்கே கேலிக்குரிய இறந்த காலமாகிவிடும். தேசத்தின் அடுத்த வளத்தை எப்படி சுருட்டலாம் என்று அங்கே விவாதம் சூடுபிடிக்கும். நமட்டுச் சிரிப்புடன் முதலாளிகள் தத்தமது மாளிகைக்குத் திரும்புவார்கள்.

இதை ஏற்கப் போகிறோமா, இல்லை இந்த ஊழலின் உறைவிடமாய் நாறும் இந்த சமூக அமைப்பை தகர்க்கப் போகிறோமா?

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன.

  1. கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள்

    விலை ரூ. 40.00

  2. ஈராக்: வரலாறும் அரசியலும்

    பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 15.00

  3. அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம்

    – வினவில் வெளியான தொலைக்காட்சி விவாதம்
    விலை ரூ. 10.00

  4. விடுதலைப் போரின் வீர மரபு

    – புதிய கலாச்சாரம் இதழில் வெளியான காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின் நூல் வடிவம்,
    விலை ரூ. 65

  5. பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்

    – உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி வினவு தளத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் நூல் வடிவம்,
    விலை ரூ. 55.00

  6. நினைவின் குட்டை கனவு நதி

    சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்

    – சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உண்மை முகங்களை எடுத்துக் காட்டும் நூல், புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 70.00

  7. மீண்டும் தொழிலாளி வர்க்கம்

    வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான தொழிலாளி வர்க்க போராட்டக் கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 80.00

  8. நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

    வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 110.00

_____________________________________________________

நூல் வெளியீட்டு விழா

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)

விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி

பதிவர் சந்தனமுல்லை

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன்
, பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!

(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அரசியலில் விஜய் ! எ.கொ.இது சரவணா?!

31
வணக்ம்னா, அடுத்த முதல்வர் நாந்தானுங்கோ!

தமிழ் நாட்டு மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? சினிமாவில் ஜிங்குசா பாட்டைப் பாடியவாறு மரத்தை சுற்றி வரும் டூயட் நட்சத்திரங்கள், சேர்ந்தாற் போல நாலைந்து வார்த்தைகள் பேசத்தெரியாத முட்டாள்கள் அவ்வப்போது அரசியலுக்கு வாரேன் என்று செய்யும் டார்ச்சர் இருக்கிறதே, முருகா, முருகா…

கேட்டால் அரசியலுக்கு வருவது அடிப்படை மனித உரிமை என்று சில அறிவாளிகள் நியாயம் பேசுவார்கள். மனித உரிமையில் பாலைவனமாய் காய்ந்து கிடக்கும் நாட்டில் இதுதான் மனித உரிமையாம், வெங்காயம்.

தினத்தந்தியின் சினிமா இணைப்பைத் தவிர வேறு எதையும் செய்தியாகக் கூட வாசித்திராத, கேள்விப்பட்டிராத இந்த குத்தாட்ட நாயகர்களுக்கு சமூக உணர்வு பொங்கும் அந்த தருணம் இருக்கிறதே, அதைக் கேட்டால் எல்லாரையும் வெட்டிவிட்டு சிறைக்கு போவதற்கு கூட நாம் தயங்க மாட்டாம். அந்த அளவுக்கு இவர்களது சமூக அக்கறை பில்டப் நம்மிடம் கொலைவெறியையே தோற்றுவிக்கும்.

வசனம் எழுதிய கருணாநிதிக்கு வரும் கூட்டத்தை விட தனது மேக்கப் போட்ட சிவப்புத் தோலுக்கு வரும் கூட்டம் அதிகம் என்பதை கருணாநிதி அங்கீகரிக்கவில்லை என்ற ஈகோ போட்டிதான் எம்.ஜி.ஆர் எனும் பாசிசக் கோமாளி கட்சி ஆரம்பித்தற்கு காரணம். சினிமாவில் கையைக் காலை ஆட்டி அசைத்தற்கே முதலமைச்சாராக முடியுமென்றால் வேறு எதைச் சொல்ல?அதனால்தான் எம்.ஜி.ஆர் கட்சியில் தொண்டர்களாக மட்டுமல்ல அமைச்சர்களாகவும் கூட அடிமைகளே நீடித்தார்கள். நீடிப்பார்கள்.

எம்.ஜி.ஆர் மண்டையைப் போட்ட பிறகு குரலை வைத்தே வித்தை காட்டிய சிம்மக் குரலோனுக்கு ஆசை வந்து தனிக்கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் கனவில் மிதந்தார். எனினும் “பிள்ளைகளே இப்படிக் கைக்காசை செலவழிக்க வைத்து மொட்டை அடித்து விட்டீர்களே” என்று “எங்கே நிம்மதி” புதிய பறவை ரேஞ்சில் துக்கத்துடன் போய்ச் சேர்ந்தார் சிவாஜி கணேசன்.

எம்.ஜி.ஆரால் கலையுல வாரிசு என்று அறிவிக்கப்பட்டதும் கே.பாக்யராஜ் எனும் முருங்கைக்காய் நாயகனுக்கும் அப்படித்தான் தலைகால் புரியவில்லை. “தாவணிக் கனவுகள்” ரிலீசான போது அவர் அதிகம் கனவு கண்டது கோட்டையில் கொடியேற்றுவதுதான். பிறகு கட்சி ஆரம்பித்து கடன் வாங்கி இப்போது இத்துப்போன கட்டிடத்தில் “பாக்ய” இதழில் கேள்வி பதில் பகுதிகளுக்கு அம்புலிமாமா கதையைச் சொல்லி காலத்தை ஓட்டுகிறார் நம்ம பாக்யராஜ்.

அப்பாலிகா டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பித்ததும், தி.மு.கவில் ஆஞ்சநேய பக்தாராக இருந்து கொண்டே கொள்கை பரப்பு செயலாளராக இருந்ததும், பின்னர் மீண்டும் தனிக்கட்சி ஆவர்த்தனத்தை தொடருவதும் நம்மைப் பொறுத்தவரை நல்ல வேடிக்கையான விசயங்கள். இப்போதும் ஏதாவது இடைத்தேர்தல் என்றால் இவர் போட்டியிடுவதும், அதற்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் பிரச்சாரம் செய்வதும்…. ஆசை யாரை விட்டது? ஆனாலும் ஒன்றை ஒத்துக் கொள்ளவேண்டும். டி.ராஜேந்தர் பேசும் அடுக்கு மொழி காமடிக்காகவாவது இவர் அரசியலில் தொடர வேண்டும்.!

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவரது கார்பவனிக்காக டிராபிக்கில் சிறிது நேரம் நின்றதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் உணர்வு பொங்கி எழ காரணம். கூடவே மணிரத்தினம் வீட்டுக் காம்பவுண்டில் யாரோ சிலர் நமுத்துப் போன வெங்காய வெடியை போட்டதும், “தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை” என்று வெடித்தார் ரஜினி. சோ, பார்ப்பன ஊடகங்கள் பெரு முயற்சி செய்து ரஜினியின் பலூன் இமேஜை ஊதிப்பெருக்க எது எப்படியோ கடைசியில் அண்ணாத்தேயின் அரசியல் விஜயம் காமடியாக முடிந்து விட்டது.

பிறகு சரத்குமார். தானிருக்கும் போது நடிகர் விஜயை வைத்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தபால் தலை வெளியிடுவதா, என்று கோபித்துக் கொண்டு விஜய் மல்லையாவின் தனி விமானத்தில் மதுரை பறந்து ஆண்டிப்பட்டியில் ஜேவை சந்தித்து அ.தி.மு.கவில் அங்கமாகி பிறகு அங்கும் பருப்பு வேகாமல் சமத்துவ கட்சி கண்ட சரத்குமார் அடுத்த தேர்தலில் கூட்டணி தருமத்தில் ஒரு இரண்டு சீட்டாவது கிடைக்குமா என்று ஏங்குகிறார். ஆனாலும் இவர் விடும் சவுடால்களுக்கு குறைவில்லை.

போலீசு கெட்டப்பில் தீவிரவாதிகளை பந்தாடும் விஜய்காந்த் நிஜத்திலும் அப்படி ஒரு ஃபவர் தன்னிடம் இருப்பதாக தவறாக கருதி அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டார். கட்சியை குடும்பத்தின் பிடியிலும், கட்சி பிரமுகர்களாக ஊழலில் கொட்டை போட்ட பெருச்சாளிகளை வைத்தும் காலத்தை ஓட்டுகிறார். அம்மா தயவுக்காக காத்திருக்கிறார்.

கடைசியாக இளைய தளபதி விஜய். ஒரு படத்துக்கு ஊதியமாகவும், சென்னை நகரின் விநியோக உரிமையாகவும் சேர்த்து பதினைந்து கோடி வாங்கும் விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த நான்கு படங்கள் ஓடவில்லை. இன்னும் எத்தனை நாள்தான் மக்கள் குத்தாட்டங்களை இரசிக்க முடியும்? ஒன்னுக்கு நாலு படமாய் முதலுக்கு மோசமாப் போச்சே என்று வயிறெரிந்த திரையரங்க அதிபர்கள் நட்டத்தில் கொஞ்சமாவது திருப்பி கொடுங்கள் என விஜய் தரப்பைக் கேட்டனர். அதில்தான் நம்ம இளைய தளபதி முறுக்கிக் கொண்டு அரசியல், இரசிகர் மன்றம் என்று உதார் விடுகிறார்.

வணக்ம்னா, அடுத்த முதல்வர் நாந்தானுங்கோ!

80களில் ‘புரட்சி’ப் படங்களை எடுத்து பிரபலமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வாரிசை திட்டமிட்டே களத்தில் இறக்கினார். ஆரம்பத்தில் அது சங்கவியா? போன்ற நடிகைகளை அரை அம்மணமாக்கி அவர்களோடு ஸ்டெப் கட்டிங் விஜயை ஆடவைத்து கிட்டத்தட்ட கொஞ்சம் பலான ஸ்டைலில் படங்களை வெளியிட்டார், சந்திரசேகர். அப்போதெல்லாம் இரசிகர்கள் விஜயைப் பார்ப்பதற்க்காக செல்வதில்லை. சங்கவி போன்ற கவர்ச்சி நடிகைகளை பார்ப்பதற்கே சென்றார்கள். இப்படி ஆரம்பித்த விஜயின் திரையுலக வாழ்க்கை பின்னர் ஒரு நட்சத்திரமாக செட்டிலானது. இதில் கடுமுழைப்புதான் அவரை நட்சத்திரமாக்கியது என்பதெல்லாம் ‘கடவுளே’ தாங்க முடியாத வார்த்தைகள். நன்றாக குத்தாட்டம் ஆடுவார் என்பதைத் தவிர மாலை முரசு சினிமா நிருபர் கேட்கும் மழலைத்தனமான கேள்விகளுக்கு கூட அவரால் பதில் சொல்ல முடியாது என்பதே உண்மை.

இப்போது என்ன பிரச்சினை? மு.க.ஸ்டாலின் மகனது மன்மத அம்பு படத்திற்காகவும், சன் டி.வியின் ஆடுகளம் படத்திற்காகவும் தமிழக திரையரங்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காவலன் படத்திற்கு திரையங்கு இல்லையாம். அதிலும் திரையரங்க அதிபர்கள் பழைய தோல்வியடைந்த படங்களுக்கான நட்டத்தையும் கேட்கின்றனராம். குருட்டு அதிர்ஷடமாக கிடைத்த நட்சத்திர வாழ்க்கை அதோகதியாகிவிடுமோ என்ற பயம் விஜய் தரப்பினருக்கு வந்துவிட்டது.

தமிழ் சினிமா என்பது ஒரு சூதாட்ட விடுதி போலத்தான். இங்கே ஆண்டாண்டு காலமாக ஏதோ ஒரு பிரிவினர்தான் வருமானத்தை அள்ளுகின்றனர். அது தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள், திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ஃபைனான்ஸ் செய்பவர்கள் என்று மாறிக் கொண்டே இருந்தது இப்போது எல்லாம் தி.மு.க குடும்பத்தின் பிடியில் என்று ஆகிவிட்டது. அதன்படி இனி நட்சத்திரங்களின் இமேஜூம், வருமானமும் கூட சன்.டி.வியின் பிடியில்தான். இந்த காலமாற்றத்தை இளைய தளபதியால் ஜீரணிக்க முடியவில்லை. கடவுளர்களைப் பொறுத்தவரை அவர்களது ஆட்சி முடிந்து விட்டது என்பதை எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் பிரச்சினை.

இந்நிலையில் இரசிகர் மன்றக் கொடி, இரசிகர்களை விஜய் சந்திக்கிறார், என்ற ஆர்ப்பாட்டங்களெல்லாம் நல்லபடியாகவே நடந்து முடிந்துவிட்டன. எல்லாம் தமிழகமே தனது பின்னே அணி திரண்டிருக்கிறது என்று காட்டத்தான். இதன் பின்னிணைப்பாக அப்பா சந்திரசேகர் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் சந்தித்திருக்கிறார். கருணாநிதியிடம் தனது மகன் உயிருக்கு ஆபத்து என்று பாதுகாப்பை கேட்டாராம் தந்தை. ஒரு கொசு கூட கடிக்க விரும்பாத இந்த அய்யோ பாவம் மூஞ்சிக்கு என்ன ஆபத்து இருக்க முடியும், ஒன்றும் தெரியவில்லை.

காவலனை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்தை தவிர இவர்களது அரசியல் ஆவேசத்துக்கு எந்த எழவும் அடிப்படையல்ல. காவலன் படத்தை நாற்பது  கோடிக்கு வாங்கியிருக்கும் ஷக்தி சிதம்பரம் ஒரு சிறு முதலீட்டு தயாரிப்பாளர். இவருக்கு ஏது இவ்வளவு பணம் என்றால் எல்லாம் அ.தி.மு.க பெருந்தலைகள் கொடுத்தது என்று அவரே கூறுகிறார். சன்.டிவியின் ஏகபோகத்தை தடுப்பதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வழி புரட்சித் தலைவியின் ஏகபோகமாகும். இதில் நமது சி.பி.எம் நண்பர்கள் காவலன் ரிலீசு ஆகவில்லை என்று ஏக கோபத்தில் இருக்கிறார்கள். தமிழ் சினிமா தி.மு.க குடும்பத்தின் ஏகபோகமாகிவிட்டது என்று சவுண்டு விடுகிறார்கள். இதைத் தடுப்பதற்கு இவர்களும் போயஸ்தோட்டத்திற்குத்தான் செல்கிறார்கள். அய்யா குடும்பத்தின் ஏகபோகத்தை தடுப்பதற்கு அம்மா குடும்பம். தோழர்களும் என்ன செய்வார்கள், பாவம்.

ஆக அடுத்த தேர்தலில் விஜய் அ.தி.மு.க அணிக்கு பிரச்சாரம் செய்வாரா, இல்லை கட்சியில் சேருவாரா, இல்லை தனிக்கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்விகளெல்லாம் காவலன் படம் ரிலீசாவதைப் பொறுத்தது. ஒரு படம் பதினைந்து கோடி ரூபாயை தருகிறது என்றால் அதைத் தவிர இவர்கள் கவலைப்படத்தக்க பிரச்சினைகள் ஏதுமில்லை. ஆஃப்டரால் ஒரு படம் ரிலீசாக முடியவில்லை என்பதற்காக நாட்டு மக்களை காப்பாற்ற அரசியிலில் குதிக்கிறேன் என்று ஃபிலிம் காட்டுவதைத்தான் சகிக்க முடியவில்லை.

இனி அடுத்த அஜித் படமும் இதே போல ரிலீசாகவில்லை என்றால் என்ன நடக்குமோ தெரியவில்லை. சினிமாவில் சூரத்தனம் காட்டும் இந்த வீரர்கள் உண்மையில் ஏன் இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? சன் டி.வியின் ஏகபோகம் பிரச்சினை என்றால் அதை வெளிப்படையாக கூறி திரையுலகை அணிதிரட்டி போராடலாமே, ஏன் செய்ய வில்லை?

தமது நட்சத்திர இமேஜ் சன் டி.வியால் உயர்ந்த போது மகிழ்ந்தார்கள். இப்போது தாழ்த்தும் போது எதிர்க்க முடியாமல் அரசியல் பலம் என்ற பெயரில் ரசிகர் பட்டாளத்தை வைத்து பேரம் பேசுகிறார்கள். இதுதான் இவர்களது அவர்களது அரசியல் பிரவேசத்துக்கு காரணம் என்றால் தமிழகத்தை யாரால் காப்பாற்ற முடியும்?

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…

போலீசால் படுகொலை செய்யப்பட்ட தோழர் வர்கீஸ்

கேரளத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வர்கீசை ‘மோதல்’ என்ற பெயரில் கொலை செய்த உயர் போலீசு அதிகாரி ஒருவருக்கு அண்மையில் நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்திருக்கிறது. அரிதினும் அரிதாக, இப்படுகொலை நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கொலைகார போலீசு அதிகாரிக்கு நீதிமன்றம் தண்டனை அளித்திருப்பது, இந்தியாவிலேயே முதன்முறையாகும்.

அன்று இளைஞராக இருந்த தோழர் வர்கீஸ், நக்சல்பாரி பேரெழுச்சியைத் தொடர்ந்து சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். கேரளத்தின் வயநாடு பகுதியில் தேயிலைத் தோட்ட முதலாளிகளின் – நிலப்பிரபுக்களின் கொடூரச் சுரண்டலையும் கொத்தடிமைத்தனத்தையும் விளக்கி மக்களை எழுச்சியுறச் செய்தார். ஆண்டுதோறும் வயநாட்டின் வள்ளியூர் கோயில் திருவிழாவில் பழங்குடியின மக்களைப் பிடித்து ஆடு-மாடுகளைப் போல விற்கும் நிலப்பிரபுக்களின் கொடூரத்தை எதிர்த்து நின்று போராடினார்.

இதைத் தொடர்ந்து, நக்சல்பாரிகளை ஒழிக்க கொலைகார போலீசு வெறியன் லட்சுமணா மற்றும் விஜயன் தலைமையில் ஒரு சிறப்பு அதிரடிப்படை நிறுவப்பட்டு வயநாட்டில் தேடுதல் வேட்டை தீவிரமானது. தலைமறைவாகி போராட்டங்களை நடத்தி வந்த தோழர் வர்கீஸ், திருநெல்லியில் ஒரு மூதாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது, 1970 பிப்ரவரி 18-ஆம் தேதியன்று போலீசு அதிரடிப்படையால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். திருநெல்லி அருகே காட்டுப் பகுதியில் மிருகத்தனமாகச் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், அவரது கண்கள் பிடுங்கி எறியப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். போலீசாருடன் வர்கீஸ் நடத்திய ஆயுத மோதலில் அவர் குண்டடிபட்டு மாண்டதாக அன்றைய காங்கிரசு அரசும் போலீசும் கதை கட்டின. வயநாட்டில் தோழர் வர்கீசுடன் இணைந்து செயல்பட்ட இதர நக்சல்பாரி தோழர்களும் வயநாட்டுப் பழங்குடியின மக்களும் கொடூரமாக வதைக்கப்பட்டனர்.

பயங்கரவாதப் போலீசின் கொட்டங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியவில்லை. புதைக்கப்பட்ட உண்மைகள் பூதமாகக் கிளம்பத் தொடங்கின. 1970-களில் நக்சல்பாரி ஒழிப்பு அதிரடிப் படையிலும் பின்னர் ரிசர்வ் போலீசுப் படையிலும் கீழ்நிலை போலீசுக்காரராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி. ராமச்சந்திரன் நாயர், “எனது மேலதிகாரி லட்சுமணாவின் உத்தரவின் பேரில்தான் நான் வர்கீசைச் சுட்டுக் கொன்றேன். அப்போது வயநாடு எஸ்.பி.யாக இருந்த விஜயனும் திருநெல்லி டி.எஸ்.பி.யாக இருந்த லட்சுமணாவும்தான் வர்கீசைக் கொல்லும்படி எனக்கு ஆணையிட்டனர்” என்று கடந்த 1998-ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாகப் பேட்டியளித்தார். நீதிமன்றத்திலும் இதைத் தெரிவித்து உரிய தண்டனை பெற்றுக் கொள்ள தான் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை இயக்கத்தினர் மூலம் பத்திரிகைகளில் வெளிவந்த இந்த உண்மை, கொலைகார போலீசின் கோரமுகத்தையும் அப்போதைய காங்கிரசு – வலது கம்யூனிஸ்டு கூட்டணி அரசாங்கத்தின் பயங்கரவாத வெறியாட்டத்தையும் நாடெங்கும் திரைகிழித்துக் காட்டியது.

கொலைகார போலீசுப்படைத் தலைவனாகிய லட்சுமணா, ஜெயராம் படிக்கல் என்ற போலீசு வெறியனோடு சேர்ந்து அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் கள்ளிக்கோட்டை பொறியியல் கல்லூரி மாணவரும் நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தின் செயல்வீரருமான தோழர் ராஜனை 1976 -இல் காகயம் முகாமில் அடைத்து சித்திரவதை செய்து கொன்று, பின்னர் அவரது உடலை பீச்சி அணையில் வீசி எறிந்தவன். இதே லட்சுமணாவின் அதிரடிப்படை 1976-இல் நக்சல்பாரி புரட்சியாளரான விஜயனைச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று யாருக்கும் தெரியாமல் வர்க்கலா எனும் ஊரில் எரித்ததாக ஓய்வு பெற்ற போலீசு வாகன ஓட்டுநர் ஒருவர் கடந்த 1999-இல் வாக்குமூலம் அளித்தார்.

அடுத்தடுத்து வெளிவந்த இந்த வாக்குமூலங்களால் அதிர்ச்சியடைந்த கேரள மக்கள், போலீசு படுகொலைகளுக்கு எதிரான மனித உரிமை இயக்கங்களுக்குப் பெருத்த ஆதரவு அளித்தனர். நாடெங்கும் மனித உரிமை இயக்கங்களின் கண்டனமும் நிர்ப்பந்தமும் வலுக்கத் தொடங்கியதால், வேறு வழியின்றி அப்போதைய சி.பி.எம். கூட்டணி அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தோழர் வர்கீசின் சகோதரர்களான தாமஸ், ஜோசப் ஆகியோர் 1999-இல் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ராமச்சந்திரன் நாயரும், இரண்டாவது குற்றவாளியாக லட்சுமணாவும், மூன்றாவது குற்றவாளியாக விஜயனும் சேர்க்கப்பட்டனர். ராமச்சந்திரன் நாயருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் போலீசுக்காரரான முகம்மது ஹனீப், வர்கீசின் பள்ளித் தோழரான பிரபாகர வாரியார், ஜோகி என்ற விவசாயத் தொழிலாளி உள்ளிட்டு மொத்தம் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். போலி மோதல் படுகொலைக்கு எதிரான பொதுக்கருத்து வலுவாக இருந்ததால், “நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சாமானிய இளைஞனை வயநாட்டின் திருநெல்லி காட்டில் சுட்டுக் கொன்ற கொடுஞ்செயலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்க வேண்டும்” என்று அரசு தரப்பு வழக்குரைஞர் இந்த வழக்கில் வாதிட்டார். குற்றம் சாட்டப்பட்ட இரு போலீசு அதிகாரிகளும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் இந்த விசாரணைக்குத் தடை கோரியதால் இந்த வழக்கு விசாரணை நீட்டித்துக் கொண்டே போனது.

இதற்கிடையில் கடந்த 2006-ஆம் ஆண்டில் முன்னாள் போலீசுக்காரரான ராமச்சந்திரன் நாயர் மரணமடைந்தார். மற்ற இருவர் மீதான வழக்கில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதியன்று கொச்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. டி.ஜி.பி.யாகி ஓய்வு பெற்ற 83 வயதான முன்னாள் போலீசு அதிகாரி விஜயனும், ஐ.ஜி.யாகி ஓய்வு பெற்ற 75 வயதான லட்சுமணாவும் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். விஜயன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று அவர் விடுவிக்கப்பட்டார். கொலைகார லட்சுமணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு மன்றத்திலிருந்து லட்சுமணா வெளியே வரும்போது “கொலைகார லட்சுமணா ஒழிக!” என்ற முழக்கங்கள் எங்கும் எதிரொலித்தன.

“திருநெல்லியில் இன்று இரவு இரண்டு நட்சத்திரங்கள் உயர்ந்தோங்கி மின்னும். அவை தோழர் வர்கீசின் ஒளிரும் கண்களாகும்!” என்று ஆண்டுதோறும் தோழர் வர்கீசின் நினைவு நாளான பிப்ரவரி 18-ஆம் தேதியன்று கேரளத்தில் சுவரெழுத்துக்களும் சுவரொட்டிகளும் பளிச்சிடும். தோழர் வர்கீசின் நினைவு நாற்பதாண்டுகளாகியும் இன்னமும் மக்களின் மனங்களிலிருந்து நீங்கிவிடவில்லை. தோழர் வர்கீஸ் மட்டுமின்றி, தோழர் ராஜன் படுகொலைக்கு எதிராகவும் கேரளத்தில் மக்கள் கொதித்தெழுந்ததால்தான் அங்கே இந்த அளவுக்கு விசாரணை நடந்துள்ளது.

நக்சல்பாரி புரட்சியாளர்களான தோழர்கள் வர்கீஸ், ராஜன் முதலானோர் கொல்லப்பட்டதைப் போலவே, 1980-களின் தொடக்கத்தில் தமிழகத்தின் தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் போலீசு ‘சூரப்புலி’ தேவாரம் நடத்திய நரவேட்டையில் தோழர் பச்சையப்பன் உள்ளிட்டு பத்துக்கும் மேற்பட்ட நக்சல்பாரி புரட்சியாளர்கள் ‘மோதல்’ என்ற பெயரில் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மனித உரிமை – ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து, இரகசிய கொலைக் குழுக்களைக் கட்டியமைத்து மோதல் என்ற பெயரில் நக்சல்பாரி புரட்சியாளர்களைக் கொன்றொழிப்பதை வழமையாகக் கொண்டுள்ள இத்தகைய அரசு பயங்கரவாதப் படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். கேரளத்தின் லட்சுமணா, தமிழகத்தின் தேவாரம் போன்ற கொலைகார போலீசு அதிகாரிகள், போலீசு கொலைக் குழுக்கள், இந்நரவேட்டைக் கொள்கையை வகுத்து செயல்படுத்திய அரசு அதிகாரிகள், இதற்குப் பக்கமேளம் வாசித்த ஊடகங்கள், ஓட்டுப் பொறுக்கிகள் உள்ளிட்டு அனைத்துப் பயங்கரவாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பயங்கரவாதப் போலீசு, இப்போது ரவுடிகளைக் கேள்விமுறையின்றிக் கொன்றொழிப்பதோடு, தனிப்பட்ட விரோதங்களுக்காக சாதாரண நபர்களையும் சுட்டுக் கொல்லும் பயங்கரவாத மிருகமாக மாறிவிட்டது. மனித உரிமைக்கான போராட்டத்தில் கேரள மக்களைப் போலவே போலி மோதல் கொலைகளுக்கு எதிராகத் தமிழக மக்களும் விழித்தெழும்போது, இங்கேயும் கொலைகார போலீசு கும்பல் தண்டிக்கப்படும்.
_____________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
_____________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!

37

கோவை என்.டி.சி தொழிற்சங்கத் தேர்தல்: பு.ஜ.தொ.மு மாபெரும் வெற்றி!

கோவை என்.டி.சி தொழிற்சங்கத் தேர்தல்: பு..தொ.மு மாபெரும் வெற்றி!

தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் டிசம்பர் 18ம் தேதியன்று தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) பெருவெற்றி பெற்றிருக்கிறது.

மொத்த வாக்குகளில் முதலிடத்தை தொ.மு.ச வும் (2 பிரதிநிதிகள்) இரண்டாமிடத்தை பு.ஜ.தொ.மு வும், (ஒரு பிரதிநிதி)  மூன்றாமிடத்தை சி.ஐ.டி.யு வும் (ஒரு பிரதிநிதி), நான்காம் இடத்தை ஐ.என்.டி.யு.சி யும் (ஒரு பிரதிநிதி) பெற்றிருக்கின்றன.

1974 இல் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் ஆலைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 36 ஆண்டுகளில் தேர்தல் என்ற ஒன்றை என்.டி.சி மில் தொழிலாளிகள் கண்டதில்லை. தேர்தலை நடத்தவேண்டும் என்பதற்காக கோவையில் இருந்த எந்த கட்சியின் தொழிற்சங்கமும் போராடியதில்லை. தேர்தலே நடக்காமல் இருப்பது நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் வசதியானதாகவே இருந்தது. தொழிலாளர்களின் அங்கீகாரத்தைப் பெறாமலேயே,. அவர்களுக்கு பதில் சொல்லும் தேவை இல்லாமலேயே, அவர்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் பெற்றிருந்தனர். நிர்வாகமும் தேர்தலே இல்லாமல் இவர்களையெல்லாம் பிரதிநிதிகளாக அங்கீகரித்திருந்தது.

தொழிலாளி வர்க்கத்தின் மீது சதித்தனமாகத் திணிக்கப்பட்டிருந்த இந்தக் கட்டைப் பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தேர்தலை நடத்த வைப்பதற்கும் பு.ஜ.தொ.மு தொடர்ந்து போராடியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியது.

தேர்தல் நடத்தப்பட்டால் பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தினாலும், 36 ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத ஜனநாயக உரிமையை தொழிலாளி வர்க்கத்துக்கு வழங்கினால் நேரக்கூடிய அபாயம் குறித்த கவலையினாலும் உறக்கம் இழந்த தொழிற்சங்கத் தலைமைகள், ஒரு கூட்டுக் கமிட்டி அமைத்து தேர்தலுக்கு இடைக்காலத் தடையாணை வாங்க அரும்பாடு பட்டனர். இன்று தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றிருக்கும் சங்கங்கள்தான் தேர்தலை முடக்குவதற்கு மும்முரமாக வேலை செய்தன. சட்டத்தில் சந்து கண்டுபிடித்து தேர்தலை தடுப்பதற்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் முறியடித்த பின்னர்தான் இந்த தேர்தல் நடைபெற்றிருக்கிறது.

எனவே, நடந்து முடிந்த தேர்தலில் பு.ஜ.தொ.மு பெற்ற வெற்றியினைக் காட்டிலும், இந்தத் தேர்தலை நடத்த வைத்ததுதான் பு.ஜ.தொ.மு வின் முதன்மையான வெற்றி.

தேர்தலை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நிர்வாகம் பணிய நேர்ந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று சண்டித்தனம் செய்தது. ஆண்டுக்கணக்கில் தற்காலிகத் தொழிலாளர்களாக வைக்கப்பட்டிருக்கும் சுமார் 1600 தொழிலாளர்களின் வாக்குரிமையை மறுக்க முடியாது என்றும் 240 நாட்கள் வேலை செய்த எல்லாத் தொழிலாளிகளுக்கும் நிரந்தரத் தொழிலாளிகளுக்குரிய உரிமைகள் உண்டு என்றும் போராடி, சுமார் 600 தற்காலிகத் தொழிலாளிகளுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்தது பு.ஜ.தொ.மு.

மீதமுள்ள சுமார் 1000 தற்காலிகத் தொழிலாளிகளுக்கு வாக்குரிமையை மறுப்பதன் மூலம் தேர்தலைத் தள்ளிப்போட சதி செய்தது நிர்வாகம். இந்தச் சதியைப் புரிந்து கொண்டதனால், தேர்தலை நடத்த வைத்து, 1000 தொழிலாளிகளின் வாக்குரிமை குறித்த பிரச்சினைக்கு அதன் பின் போராடுவது என்று முடிவு செய்தது பு.ஜ.தொ.மு. தற்காலிகத் தொழிலாளிகள் என்று வரையறுக்கப்பட்ட சுமார் 600 தொழிலாளிகளுக்கு வாக்குரிமையைப் பெற்றதன் மூலம், அவர்களுடைய பணி நிரந்தரத்துக்கான உரிமைக்கு கால் கோள் இடப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் பு.ஜ.தொ.மு ஈட்டிய இரண்டாவது வெற்றி இது.

மூன்றாவது வெற்றிதான் பு.ஜ.தொ.முவின் தேர்தல் வெற்றி. இந்த வெற்றியும் எளிதில் அடையப்பட்டதல்ல. தேர்தல் நடைபெற்ற 7 மில்களில் ஒரு மில்லில் மட்டுமே கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் இயங்கி வருகிறது. அதனுடைய செயல்பாடு ஏற்படுத்திய தாக்கம்தான் எல்லா மில்களிலும் உள்ள தொழிலாளர்களை பு.ஜ.தொ.மு வை நோக்கி ஈர்த்திருக்கிறது.

பல என்.டி.சி ஆலைகள் நட்டம் என்று பொய்க்கணக்கு காட்டி மூடப்பட்டும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டும், இருக்கின்ற மில்களில் 20 ஆண்டுகளாக ஊதிய உயர்வு ஒப்பந்தமே இல்லாமல் கிடப்பில் போடப்பட்டும், எதுவும் செய்ய இயலாமல், 36 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தேர்தல் கூட இல்லாமல், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர்களைத் தனது பிரச்சாரத்தின் மூலம் தட்டி எழுப்பியது பு.ஜ.தொ.மு. வெறுமனே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரங்கள் அல்ல இவை.

தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் எவை, அவை மறுக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன, இன்றைய ஜவுளித்துறை நெருக்கடியின் ஊற்றுமூலம் எது என்று தொழிலாளர்களுக்கு விளங்க வைத்தன இப்பிரச்சாரங்கள். எண்ணற்ற ஆலை வாயிற்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், துண்டறிக்கைகள்… அனைத்துப் பிரச்சார செலவுகளுக்கும் நிதி கொடுத்து ஆதரித்தவர்கள் தொழிலாளர்கள். தொழிலாளர்களிடம் பு.ஜ.தொ.மு பெற்றது கொள்கை ரீதியான ஆதரவு.

இத்தேர்தலில் தற்போது 2 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.கவின் தொ.மு.ச, தனது கொள்கையான “பிரியாணியையும் பாட்டிலையும்” வைத்து சுமார் 10 இலட்ச ரூபாய் செலவு செய்து பிரச்சாரம் செய்தது. ஒரு ஓட்டுக்கு அவர்கள் செய்த செலவு சுமார் 1600 ரூபாய்.

பிரியாணியையும், பாட்டிலையும், சாதியையும் காட்டி, அந்த ஒரு நாளில் மயக்கத்திலாழ்த்தி தொழிலாளிகளின் ஓட்டை அவர்கள் அபகரித்திருக்கலாம். ஆன்ல் தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கையை அவ்வாறு அபகரிக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் யாரோ, போராடக் கற்றுக் கொடுப்பவர்கள் யாரோ அவர்கள் மட்டும்தான் தொழிலாளியின் நம்பிக்கையைப் பெற முடியும்.

பிரியாணிப் பொட்டலக்காரர்களுக்கு இந்த உண்மை தெரியாததல்ல. அது தெரிந்ததனால்தான் முடிந்த வரையில் தேர்தலே நடக்காமல் அவர்கள் தடுக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை. “அவர்கள் தீவிரவாதிகள்” என்று முத்திரை குத்தி அச்சுறுத்திப் பார்த்தார்கள்; தொழிலாளிகளுக்கு தங்களது எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தைக் காட்டிலும் பெரிய அச்சத்தை இந்த தீவிரவாதப் பூச்சாண்டி ஏற்படுத்திவிடவில்லை. “அவர்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி இல்லாததால் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தி கோரிக்கைகளைப் பெற இயலாது” என்று சொல்லிப்பார்த்தார்கள்; “எம்.எல்.ஏ இல்லை” என்ற உண்மை, தொழிலாளிகள் மத்தியில் பு.ஜ.தொ.மு வின் செல்வாக்கை அதிகரிப்பதற்கே பயன்பட்டது.

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (பு.ஜ.தொ.மு) வெற்றியும் பெற்று விட்டது. “இந்த வெற்றி கோவையில் உள்ள தனியார் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தோற்றுவித்திருக்கிறது என்றும் தங்கள் மில்லில் சங்கம் தொடங்க வருமாறு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன” என்றும் கூறுகிறார், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் செயலர், தோழர் விளவை இராமசாமி.

கோவை நகரின் பஞ்சாலை முதலாளிகளிடம் இந்த வெற்றி என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? ரங்கவிலாஸ், ஸ்டேன்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தையும், சின்னியம்பாளையம் தியாகிகளின் போர்க்குணத்தையும் அவர்களுக்கு நினைவு படுத்தியிருக்குமோ? அல்லது, பிரட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியில் நடைபெற்ற போராட்டங்கள் என்பதால் அவை பழங்கதைகள் என்று முதலாளிகள் இறுமாந்திருப்பார்களா?

காலனியாதிக்கம், இன்று புதிய வடிவில் மறுகாலனியாக்கமாகத் திரும்பியிருக்கும்போது, தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாறு மட்டும் திரும்பாதா என்ன? திரும்ப வைப்போம்!

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!!

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு நிர்வாகத்தை பணிய வைத்து ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஒன்றை போட வைத்திருக்கிறார்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள். ஓசூர் தொழிலாளர் வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்றால் மிகையல்ல. அதை ஒட்டி பு.ஜ.தொ.மு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்காக தொழிலாளர்களிடம் விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தை இங்கே வெளியிடுகிறோம்

– வினவு


ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி! பொதுக்கூட்டம்!!

அன்பார்ந்த தொழிலாளர்களே,

ஓசூரில் செயல்படும் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் சென்ற மார்ச் மாதம் 33 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் பெறுவதற்கும், சங்கம் வைக்க அங்கீகாரம் பெறுவதற்கும் நாங்கள் மேற்கொண்ட போராட்டங்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இன்று பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் ரூ. 11000 நேரடி ஊதிய உயர்வு பெற்றுத் தந்துள்ளோம். மேலும், மூன்று வகைக் காப்பீடுகள் மற்றும் கிப்ட் என்ற வகையில் ஆண்டு தோறும் ரூபாய் 5000, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் 2400 மதிப்புள்ள ஜெர்கின், நல்லெண்ணத் தொகை என்ற வகையில் ரூபாய் 5500 மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தந்துள்ளோம். இது ஒரு மாபெறும் வெற்றி! ஓசூரில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளர்களும், “ஒசூர் வரலாற்றிலேயே இந்த ஒப்பந்தம் மாபெறும் சாதனை, இப்படி ஒரு ஒப்பந்தத்தை இதுவரை நிறைவேற்றிப் பார்த்ததில்லை. தொழிலாளி என்ற வகையில் பெருமையாக இருக்கிறது.” எனப் பாராட்டுகிறார்கள், வியக்கிறார்கள்!

முதலாளித்துவப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட போராடி வரும் எங்களுக்கு ஒரு பன்னாட்டுக் கம்பெனி நிர்வாகத்தைப் பணிய வைத்தது என்ற வகையில் இது மாபெரும் வெற்றியே!  அதாவது பணி நிரந்தரத்திற்காக கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்க்ளின் வெற்றி ஓசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு விழுந்த முதல் அடி என்றால், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் வெற்றி என்பது அதன் அடுத்த படி!

கமாஸ் வெக்ட்ராவில் இதற்கு முன்பு இரு முறை சங்கம் கட்ட முயன்று தொழிலாளர் தலைமையில் இருந்தவர்களின் துரோகத்தால் கலைந்து விட்டது. இதனால், தொழிலாளர்கள் தொழிற்சங்கம் கட்டுவதிலேயே நம்பிக்கையின்றி இருந்தனர். எமது தோழர்களின் கடுமையான முயற்சியால் மட்டுமே தொழிற்சங்கம் கட்டப்பட்டது. தொழிற்சங்கம் கட்டியது முதல் இன்று வரை நிர்வாகத்தின் சூழ்ச்சிகளுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளோம். பணி நிரந்தரம் செய்வதற்காக நாங்கள் சட்டத்தை மட்டும் நம்பி இருக்கவில்லை. அரசையும், ஆலை நிர்வாகத்தையும் நிர்பந்திக்கும் வண்ணம் பல போராட்டங்களை நடத்தினோம். எங்களது முதல் கட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றோம்.

அடுத்து, ஊதிய உயர்வு ஒப்பந்தம், நாங்கள் கோரிக்கை மனு கொடுத்தவுடனேயே நிர்வாகம் ஒப்பந்தத்தை எளிதாக முடித்துவிடவில்லை. “2500 ரூயாய்தான் ஊதிய உயர்வு தரமுடியும், வேணும்ணா நீங்க ஸ்ட்ரைக் பண்ணிக்கங்க.” என்று அடாவடித்தன் செய்தது நிர்வாகம். தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது. தினமும் ஒரு காரணத்தைக் கூறி ஒப்பந்தத்தை தள்ளிப் போட்டது. இவற்றை எதிர்கொண்டு பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைமையின் வழி காட்டுதலின்படி செயல்பட்டோம். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஐந்து மாதத்திலேயே பேசி முடித்தோம். நிர்வாகத்தின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து வெற்றி பெற்றோம்!

நிரந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேசி முடிப்பதோடு நாங்கள் நின்று கொள்ளவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனசு வழங்கக் கோரி நிர்வாகத்திடம் போராடி வருகிறோம். தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ரூ.4500 லிருந்து ரூ.6000 ஆக ஊதியத்தை பேசு முடித்துள்ளோம். ஆலையில் புதிதாக ஆள் எடுப்பு செய்வதாக இருந்தால் இவர்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை பேசி முடித்துள்ளோம்.

__________________________________________________

“நக்சல்பாரிகள் என்றால் தீவிரவாதிகள்; குண்டு வைப்பவர்கள்; அவர்களுடன் சேர்ந்தால் நாளைக்கு உங்களுக்கு நல்லதல்ல; இப்பப் பிரச்சினை இல்லைன்னாலும் என்னைக்கும் பிரச்சினைதான்” என்று கமாஸ் தொழிலாளர்களுக்கு உபதேசிக்காதவர்கள் இல்லை. உண்மையில் யாரை தீவிரவாதிகள், யாருடன் சேர்ந்தால் வாழ்க்கை பறிபோகும் என்றெல்லாம் பேசினார்களோ, அந்த நக்சல்பாரிகளாகிய எங்கள் சங்கத்தில் சேர்ந்துள்ளதால்தான் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்களின் வாழ்க்கை உத்தரவாதம் செய்யப்பட்டது. நிரந்தர வேலை, எல்லோரும் மெச்சும்படியான ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. இதுதான் உண்மை!

நக்சல்பாரிகளாகிய நாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள். நாங்கள் முதலாளிகளுக்கு அழிவு சக்தி! உழைக்கும் மக்களுக்கு ஆக்க சக்தி!  அதனால்தான் முதலாளிகள் எங்கள் பெயரை கேட்டவுடனேயே ஓங்கிக் கூச்சலிடுகிறார்கள்.

உற்பத்தியை சீர்குலைப்பவர்கள் நக்சலைட்டுகள் என்று முதலாளிகள் சொல்கிறார்கள். உற்பத்தியை சீர்குலைப்பதல்ல, எங்களது நோக்கம்.முதலாளித்துவ உற்பத்தி தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் பஞ்சத்திலும் பட்டினியிலும் தள்ளுகிறது என்பதைதான் எதிர்க்கிறோம்! அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளால், உள்நாட்டு தரகு முதலாளித்துவ கம்பெனிகளால் ஒட்டு மொத்த உள்நாட்டுத் தொழில்கள் அழிக்கப்படுவதையும் விவசாயம் அழிக்கப்படுவதையும் எதிர்க்கிறோம். மக்கள் அனைவருக்கும் இயற்கையில் உள்ள எல்லாப் பொருள்களும் பொது என்பதே எங்கள் கொள்கை. இதனால் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெறவேண்டித்தான் போராடுகிறோம்.

நாங்கள் எப்போதும் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்வதில்லை. நாங்கள் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக செயல்படுபவர்கள்.“அட்ஜெஸ்மெண்ட் இல்லாம தொழிற்சங்கத்தை நடத்த முடியாது” என்று எங்களுக்கு பிழைப்புவாதத் தலைவர்கள் உபதேசிக்கிறார்கள்.ஆனால்முதலாளிகளுடன்சமரசம்செய்துகொள்வது தொழிலாளர்களுக்கு துரோகத்தில்தான் முடியும் என்பது கண்முன்னே நாம் காணும் அனுபவம்!

“எப்பப்பார்த்தாலும் போராட்டம்  பொதுக்கூட்டம்னு கூப்பிட்டுகிட்டே இருப்பாங்க!” என்று எங்களுக்கு எதிராக எங்கள் சங்கத்தில் இணைந்தவர்களிடம் பேசி தீர்த்தார்கள். சங்கத்தைவிட்டு வெளியே வரச்சொல்லி அழைத்தும் பார்த்தார்கள். இவ்வாறு பேசுபவர்கள் வேறுயாரும் அல்ல.முதலாளிகள் பரப்பும் கலாச்சார சீரழிவுகளையே வாழ்க்கையாகக்கொண்ட சுயநலவாதிகள், அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள முதலாளித்துவ ஊடகங்கள்.

ஆம்,நாங்கள் அடிக்கடி போராட்டம், பொதுக்கூட்டம் நடத்துபவர்கள்தான். யாருக்காக? இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக! அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளால் நமது நாடு மீண்டும் அடிமையாக்கப்படுகிறதே அதற்கு எதிராக! தினம்தோரும் என்னற்ற தொழிலாளர்கள் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு பலியாகிறார்களே அதற்கு எதிராக! விவசாயிகளின் வாழ்வு பறிக்கப்படுகிறதே அதற்கு எதிராக! நீதிமன்றம்,சட்டமன்றம், போலீசு என்ற பெயரில் உழைக்கும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறதே அதற்கு  எதிராக!  இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் படைக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வு விடியவேண்டும் என்பதற்காகத்தான் போராடுகிறோம்.

எங்களது அமைப்பின் தலைவர்கள் புகழையும் பணத்தாசையையும் விரும்பாதவர்கள்! சுகபோகத்தை விரும்பாதவர்கள்; எளிமையானவர்கள்; கட்டுப்பாடானர்வர்கள் எங்களை பாராட்டி விளம்பரங்களை நாங்களே செய்துகொள்வதுமில்லை! பிறர் எங்களுக்கு தனி நபர் விளம்பரங்கள் செய்தால் அதனை நாங்கள் அனுமதிப்பதுமில்லை! தலைமை முதல் கீழே உள்ள அணிகள் வரை துதி பாடும் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள். ஏனென்றால், நாங்கள் நக்சல்பாரிகள். உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடுபவர்கள். கம்யூனிசம் எங்களது கொள்கை!

நாங்கள் மக்களை நேசிப்பவர்கள்; மக்கள் மட்டும்தான் வரலாற்றைப் படைக்கும் மாபெரும் உந்து சக்தி என்பதை நம்புகிறவர்கள்; உழைக்கும் மக்களின் ஒற்றுமையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்; எங்களுடைய எல்லாப்  போராட்டங்களையும் நாங்கள் மக்களிடம் கொண்டு செல்பவர்கள். அதனால்தான் எங்களின் போராட்டம் வெற்றியடைகிறது.

நாங்கள் எங்கள் அமைப்புக்கும், தலைமைக்கும் கட்டுப்பட்டவர்கள். உண்மையான ஜனநாயகத்தை நீங்கள் எங்கள் அமைப்பில் மட்டும்தான் பார்க்க முடியும். அதனால்தான், ஒரு முன்னுதாரணமிக்க ஒப்பந்தத்தை எங்களது அமைப்பின் தலைமையின் கீழ் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர்களால் சாதிக்க முடிந்தது.

_________________________________________________

நாடு இன்று மறுகாலனியாக்கப்பட்டு வருகிறது. அன்னியப் பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தரகு முதலாளித்துவக் கம்பெனிகளும் நமது நாட்டை ஒட்டச் சுரண்டுகின்றனர். தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்ற பெயரில் நமது நாட்டின் பொதுச் சொத்து சூறையாடப்படுகிறது. கனிம வளங்கள், காடுகள், கடல் என எல்லாமே முதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. விவசாயம், நெசவு, சிறு தொழில்கள், வியாபாரம் மற்றும் வர்த்தகம் என எல்லாமே ஒழிக்கப்பட்டு முதலாளிகளின் நலனிற்கேற்ப மறுவார்பு செய்யப்படுகிறது. பல ஆண்டுகள் போராடிப் பெற்ற  உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர் என அரசியல் சாசனத்தில் சொலப்பட்ட எல்லா அடிப்படை உரிமைகளும் காசு உள்ளவர்களுக்கு மட்டும் சொந்தமாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் சங்கம் வைக்க அனுமதிக்கப்படுவதில்லை. மீறி வைத்தால் சங்கம் வைக்க முயற்சிப்பவர்கள் வேலையை விட்டு விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஆலை மூடல் செய்து ஆட்டம் போடுகிறது முதலாளித்துவம். இதற்கு சட்டமும், நீதியும் சேவை செய்கிறது. அரசோ வாழ்த்தி வரவேற்கிறது.

இன்றுள்ள பிழைப்புவாத தொழிற்சங்க தலைமையோ முதலாளிகளின் வாதத்தையே தொழிலாளர்களுக்கு உப்தேசிக்கிறார்கள். போராட்டம் செய்யக் கூடாது என்று வழி நடத்துகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் என்று தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துகிறார்கள். இந்த உலகத்தையே படைத்த தொழிலாளி வர்க்கத்தை புழுக்களைவிட கேவலமாக நடத்துகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் எதிர் திசையில் போராட வேண்டிய கடமை தொழிலாளர் வர்க்கத்திற்கு உள்ளது. தொழிலாளர்கள் ஓரணியில் திரளவேண்டியுள்ளது. அந்த வகையில் போராடும் பு.ஜ.தொ.மு.வில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்!

  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை புதைக்குழிக்கு அனுப்புவோம்!
  • ஓசூரை தொழிலாளர் வர்க்கக் கோட்டையாக்குவோம்!
  • நாட்டின் விடுதலைக்காகவும் தொழிலாளர் உரிமைகளை மீட்பதற்காகவும் போராடுவோம்!
  • புதிய ஜனநாயகக் குடியரசமைப்போம்!
  • 19-12-2010

    மாலை 3 மணிக்கு

    இரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம்

    தலைமை: தோழர் சங்கர் மாவட்டச் செயலர், கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்

    மாலை 4.30 மணிக்கு

    ராம்நகர் அருகில் பொதுக்கூட்டம்

    தலைமையுரை;

    தோழர்.பரசுராமன்.மாவட்டத்தலைவர்,கிருஷ்னகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்

    மாலை 4.45 மணிக்கு வாழ்த்துரை;

    தோழர்.மாதையன்.செயலர்,ஏடிசி தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.ஜி.விஜயகுமார்,செயலர்,எக்சைடுதொழிலாளர்சங்கம்,ஓசூர்,

    தோழர்.முரளி,துணைத்தலைவர்,பேட்டாதொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.மாதையன், துணைத்தலைவர்,டிடிகே தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.அகஸ்டின்,வெக்ட்ராஅசாத்  கம்பெனி,அத்திப்பள்ளி,கர்நாடகா,

    தோழர்.சம்பங்கி ராமப்பா,தலைவர்,குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    தோழர்.ஜெயராமன்,ஒப்பந்தத் தொழிலாளி,ஓசூர்,

    தோழர்.கண்ணன்,செயலர்,பு.ஜ.தொ.மு கிளை,ஜிடிபி கிரானைட் தொழிலாளர் சங்கம்,சேலம்,

    தோழர்.செல்வராசு,ஓட்டுனர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,

    தோழர்.ம.சி..சுரேஷ்குமார்,மாவட்டச் செயலர்,பு.ஜ.தொ.மு.திருவள்ளூர்,

    தோழர்.ராஜன்,எஸ்.ஆர்.ஐ,பு.ஜ,தொ.மு,கோவை,

    தோழர்.கலை.பு.ஜ.தொ.மு. புதுவை,

    மாலை 6.15 மணிக்கு

    ஏற்புரை:தோழர்.முருகன்.தலைவர்,கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர் சங்கம்,ஓசூர்,

    மாலை 6.30 மணிக்கு சிறப்புரை;

    தோழர்.சுப.தங்கராசு, மாநிலச் செயலர்,பு.ஜ.தொ.மு,தமிழ்நாடு,

    மாலை 7.45 மணிக்குபுரட்சிகர கலைநிகழ்ச்சி

    மையக்கலைக்குழு,மகஇக தமிழ்நாடு,

    மாலை 8.40 மணிக்கு நன்றியுரை;

    தோழர்.முரளி,செயலர்,கமாஸ்வெக்ட்ரா தொழிலாளர் சங்கம்,புஜதொமு,ஓசூர்.

    ______________________________________

    புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

    தொடர்புக்கு;செல்-9788011784,ஓசூர்.
    ______________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்

    தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?

    கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை. முழு இடமும் தன் உருவத்தை தலைகீழாக மாற்றியிருந்தது. தங்கத்தை நம்பி வாழ்ந்த அந்த மக்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்?

    பாரம்பரிய தங்கநகைத் தொழிலின் அழிவு!

    கோவையிலும் சரி, பொதுவாக நமது நாட்டிலும் சரி, தங்க நகை உருவாக்கம் என்பது முழுவதுமாக ஒரு நிலபிரபுத்துவ பாணியிலான உற்பத்தியாகவே இருந்துள்ளது. தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகளை அமைத்திருப்பர்; அவர்களது மொத்த குடும்பமும் சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடும். நகை தேவைப்படுவோர் தங்கத்தை (நகையாகவோ, நாணயமாகவோ) ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக வார்த்துத் தருவார்.

    ஒரு நகையின் டிசைன்/ மாடல் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அதில் கல்பதிப்பது, அந்த நகையில் இருக்கும் பால்ஸ், கம்பி போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார்.

    இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம்.

    இந்தப் பழையகால உற்பத்திமுறையில் தங்க நகை வடிவமைப்புத் தொழில் பல நூற்றாண்டுகளாக அப்படியே தேங்கி நின்றது. ஏனென்றால் நுகர்வு குறைவு. தேவைக்கதிகமாக வாங்கிப் பூட்டி வைப்பது என்பது போன்ற வழக்கங்கள் மிக மிக சில மேட்டுக்குடி குடும்பங்களிலேயே இருந்தது. மேலும் உற்பத்தி அதிகமாகி அதை சந்தையில் தள்ளியாக வேண்டும் எனும் கட்டாயமும் எழவில்லை.

    புதிய தாராளவாதக் கொள்கையின் அறிமுகம் இந்த நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் புதிதாக உருவாகி வந்த சேவைத்துறை ஊழியர்களுக்கும் ஐந்திலக்க சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டபடியால்ல், அத்துறைகளின் மாப்பிள்ளைமார்களுக்கும் பெற்றோர்களுக்கும் மணப்பெண் வீட்டை ரத்தம் வர கறப்பதற்கான வாய்ப்பும் கூடியது. தங்கம் ஒரு சேமிப்பு என்ற நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கடந்து, அது இப்போது அந்தஸ்தின் அடையாளமாகி விட்டது.

    நகை நுகர்வின் அதிகரிப்பு, அதன் உருவாக்க முறையில் மாற்றத்தை தோற்றுவித்தது. இதன் விளைவாக அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையேயும் தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து பெரும் மாற்றங்கள் உருவாகத் துவங்கின.

    நகைத் தொழில் அதிகமாக நடந்து வந்த கோவையில் தொண்ணூறுகளின் இறுதியில் நகைப் பட்டரைத் தொழிலாளிகள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். முன்னொரு காலத்தில் ‘ஜே ஜே’ என்று நகைப் பட்டறைகள் நடந்து வந்த சலீவன் வீதி, குரும்பர் வீதி போன்ற பகுதிகள் எழவு விழுந்த வீடுகள் போன்று ஆனது. 98ல் இருந்து இரண்டாயிரத்திரண்டாம் ஆண்டுக்குள், நான்கே ஆண்டுகளில் சுமார் 300 நகைத் தொழிலாளிகளுக்கும் மேற்பட்டோர், நகையைக் கழுவப் பயன்படும் சயனைடைத் தின்று தற்கொலை செய்துகொண்டார்கள்.

    முப்பதாயிரம் பேர்களுக்கு மேல் ஈடுபட்டிருந்த நகைத் தொழிலில் இருந்து இருபதாயிரம் பேர் காணாமல் போயினர். 2002 வாக்கில் வெறும் பத்தாயிரம் பேர் தான் ஈடுபட்டிருந்தனர். இந்த வீழ்ச்சி 98க்குப் பின்னர்தான் உணரப்பட்டது என்ற போதிலும், வீழ்ச்சிக்கான விதை அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தூவப்பட்டுவிட்டது.

    தாராளமயமும், நுகர்வுக் கலாச்சாரமும் ஊட்டிய தங்க போதை!

    1991இல் என்.ஆர்.ஐ இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வருவதில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும் தங்கம் இறக்குமதி செய்வதில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ன. 1990ல் இருந்து 1998 காலகட்டம் வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15 சதவீதமாக வளர்ச்சியுற்றது. இது அதே காலகட்டத்தில் வளர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்த விகிதத்தை விட, உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்த விகிதம் மிகவும் அதிகமாகும்.

    இப்படி வெள்ளமென உள்நுழைந்த தங்கம், நகை உருவாக்கத் தொழிலில் மாற்றத்தைக் கோருகிறது. அதே காலகட்டத்தில் சிறிய அளவிலான நகைக் கடைகளுக்குப் போட்டியாக வட்டார அளவிலான வீச்சு கொண்ட நகை மாளிகைகள் உருவாகத் தொடங்கின. வாடிக்கையாளர்களில் ஒரு பெரும் பகுதியினர் இனிமேலும் ஆசாரிகளிடம் சென்று நாட்கணக்கில் காத்திருந்து அவர்கள் செய்து தரும் டிசைனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறத் துவங்கியது.

    கடைக்குச் சென்றோமா பத்துக்கு இருபது டிசைன்களைப் பார்த்தோமா அதில் ஒன்றைப் பொறுக்கியெடுத்தோமா என்று வேலை சுளுவாகியது. இத்தகைய மாளிகைகள், தமது ஷோரூம்களில் வைத்து விற்கும் நகைகளை ஏதாவது ஒரு பட்டறையில் தங்கப் பாளங்களைக் கொடுத்து முழு நகையாக செய்து வாங்கி வந்தன.

    இது நகைப் பட்டறைகளுக்கு விழுந்த முதல் அடி. தமது வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினரை கவர்ச்சிகரமான ஷோரூம்கள் கொண்ட நகை மாளிகளிடம் அவர்கள் இழந்தனர்.

    நகை மாளிகைகளுக்கு இவர்கள் செய்து கொடுத்தாலும், லாபம் முன்பை விடக் குறைவு தான். ஆனாலும் ஓரளவுக்கு வேலையிழப்பை சமாளித்து வந்தவர்களுக்கு இன்னுமொரு இடி சங்கிலித்தொடர் நகை மாளிகைகளின் வரவால் ஏற்பட்டது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் கொழுத்து விட்ட மேட்டுக்குடி வர்க்கம், வாழ்க்கைத்தரமும் சேமிப்பும் மேம்பட்ட நடுத்தர வர்க்கம், இவர்கள் அனைவரிடமும் நிலவிய பிற்போக்குத்தனமான நகை மோகமும், நகை முதலாளிகளுக்கு பொன்னானதொரு வாய்ப்பை, மெய்யாகவே தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கியது.

    நகைக்கடையை சுமக்கும் மணமகள்கள்: செல்வத்தின் செருக்கு!

    நுகர்வு மோகத்துக்கான வடிகாலாகவும், அந்தஸ்தைக் காட்டிப் பீற்றிக் கொள்ளத் தோதான பகட்டாகவும், அதே நேரத்தில் எச்சரிக்கை உணர்வு மிக்க இந்திய நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பெட்டகமாகவும், லஞ்ச ஊழல் கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கும் வரி ஏய்ப்பு செய்வதற்குமான கையடக்கமான முதலீடாகவும் இருந்த தங்கம், தனிச்சிறப்பானதொரு இடத்தை சந்தையில் பிடித்தது.

    ஜாய் ஆலூக்காஸ், கல்யாண் ஜுவல்லரி, ஸ்ரீ குமரன் நகை மாளிகை, ஜோ ஆலுக்காஸ்  சன்ஸ், மலபார் கோல்ட், ஆலாபட் ஜுவல்லரி, தனிஷ்க் என்று புற்றீசல் போலக் கிளம்பின சங்கிலித் தொடர் நகைக்கடைகள். இவர்களில் பலர் பாரம்பரிய நகை வியாபாரிகள் அல்ல என்பதுடன்,கார்ப்பரேட் நிறுவனங்களும், கறுப்புப் பண மாஃபியாக்களும்தான் இன்று இத்தொழிலில் கோலோச்சுகின்றனர்.

    இவர்களுடைய விற்பனைக்கு ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் நிலவி வந்த தங்க மோகம் போதுமானதாக இல்லை. வாழ்த்து அட்டை வியாபாரிகளும் பரிசுப்பொருள் வியாபாரிகளும், “தந்தையர் தினம், தனயர் தினம், தமக்கையர் தினம், காதலர் தினம், காதல் கைகூடாதவர்கள் தினம்” எனப் பலவகையான தினங்களை உற்பத்தி செய்வதைப் போல நகை வியாபாரிகள் புதிய சம்பிரதாயங்களை உருவாக்கத் தொடங்கினர். ‘உயர்’சாதிகளிலிருந்து மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்கம் பரவலாகத் தோன்றி விட்டதால், இன்ன ஜாதிக்கு இன்ன தாலி என்றும், இன்ன ராசிக்கு இன்ன ராசிக்கல் என்றும் பரிந்துரைக்க ஜோதிட ‘வல்லுநர்களை’ பெரும் நகைக் கடைகள் அமர்த்திக் கொண்டனர்.

    ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் கேள்வியே பட்டிராத அக்ஷய த்ரிதியை என்ற ஒரு பண்டிகையை பரணிலிருந்து தூசு தட்டி எடுத்தனர். அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று மாறி மாறி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அட்சய திரிதியை நாளில் நகை வாங்கினால் ‘நல்லது’ என்றும் ‘ஐசுவரியம்’ பொங்கும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர்.

    மேல் வர்க்கத்தாரின் மீது பிரமிப்பு கொள்ளும் அடித்தட்டு வர்க்கத்து மக்களும் கூட அந்த நாளில் “ஒரு குந்துமணி அளவுக்காவது வாங்கித்தான் வைப்போமே” என்று சிந்திக்கும் அளவுக்கு அக்ஷய த்ரிதியை ஒரு சடங்காகவே மாறிப்போனது. நல்லதோ கெட்டதோ ஒரு தேவைக்குப் பயன்படும் என்ற நியாயத்தைக் கூறிக்கொண்டு, கடன் வாங்கியாவது அந்த நாளில் தங்கத்தை வாங்குவது ஒரு பழக்கமானது. போதும் போதாதற்கு மக்களிடையே நிலவும் சினிமாக் கவர்ச்சியும் துணைக்கழைத்துக் கொள்ளப்பட்டது. துணிக்கடைகளைப் போலவே நகைக்கடைகளுக்கும் பிரபல நடிகைகள் நடிகர்கள் பிராண்டு அம்பாசிடர்களாகினர்.

    கூலிகளாய் ஆக்கப்பட்ட தங்கநகை பட்டறை முதலாளிகள்!

    இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் பரவலாக சிறிய யூனிட்டுகளில் நவீன இயந்திரங்கள் இடம்பெறத் துவங்கின. இதற்கிடையில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து வேலைச் சந்தையின் போட்டியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளை சங்கிலித் தொடர் நகை மாளிகைகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஒழித்துக் கட்டின.

    ஓரளவுக்கு நவீன நகை மாளிகைகளின் தாக்குதலை சமாளித்து குற்றுயிரும் குலை உயிருமாக மிஞ்சிய நகைப்பட்டறைகள் பெரும் நகைக்கடைகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்து தரும் யூனிட்டுகளாக மாறிப்போயின. மொத்தமாக அவர்களின் வாடிக்கையாளர் அடித்தளமே ஆட்டம் கண்டு நொறுங்கிப் போனது. சிறுபட்டரைகளிடம் மிச்சம் மீதியிருந்த சுயேச்சைத் தன்மையையும் முற்றாக ஒழிந்து முழுக்க முழுக்க பெரிய நகைமாளிகைகளை அண்டியிருக்கும் அத்துக் கூலிகளாக முழுமையாக மாறிப்போயினர். சிறு பட்டறை முதலாளிகள் எல்லாம் வேலை எடுத்துச் செய்யும் ஏஜென்டுகளாக மாற்றம் பெற்றனர்.

    இந்தக் கால கட்டத்திற்குப் பின் ஒரே நகையை ஒரே பட்டரையில் தயாரிக்கும் பாணிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒரு நகையில் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பட்டறைகளில் தயாரித்து பின்னர் இன்னொரு பட்டறையில் இணைத்துக் கொள்வது என்ற பாணி உருவெடுத்தது. நாடெங்கும் பரவிக்கிடந்த தங்கநகைத் தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து ஒருசில நகரங்களில் வந்து குவிந்தனர். புகழ் பெற்ற ஜெய்பூர் மாடல், பெங்காலி மாடல், கேரள காசு மாலை, மாங்கா மாலை நகைகள் கோவையில் இருந்து தயாராகிறது என்ற செய்தியின் பின்னே உள்ள நிதர்சனம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான கேரள நகைத் தொழிலாளர்களும், பெங்காலித் தொழிலாளர்களும் கோவையில் வந்து குவிந்துள்ளனர் என்பதாகும்.

    சுரண்டப்படும் பல்தேசிய  தொழிலாளிகள்!

    இப்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் என்பது நிரந்தரமானதல்ல  மூன்றிலிருந்து நாலாயிரத்துக்குள் சம்பளம் இருக்கும்  மற்றபடி இன்செண்டிவ் அடிப்படையில் தான் வேலை செய்கிறார்கள். அதாவது இத்தனை கிராம் ஆபரண உற்பத்திக்கு இத்தனை இன்செண்டிவ் எனும் அடிப்படையில். கோவை நகரம் என்பது சென்னையை ஒப்பிடும் போது அதிகம் செலவு பிடிக்கும் நகரம். எத்தனை சிக்கனமாக வாழ்க்கை நடத்தினாலும் கூட நாலாயிரம் என்பது மாதத்தின் இருபதாவது நாளிலேயே தீர்ந்து போகும். எனவே இன்செண்டிவ் தான் தாக்குப்பிடிப்பதற்கும் ஊருக்கு ஏதோ கொஞ்சம் பணம் அனுப்புவதற்கும் இருக்கும் ஒரே வழி.

    இந்தப் பட்டறைகளில் நவீன முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறை பழைய நிலபிரபுத்துவ பாணி உறவுகளோடு கைகோர்த்துக் கொண்டு, தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறது. அதாவது, 8 மணி நேரம் அல்லது குறிப்பிட்ட நேர அளவிலான வேலை என்று கிடையாது; நிலையான சம்பளமும் கிடையாது. மாறாக அட்சய திரிதியை, தீபாவளி, முகூர்த்த தினங்கள் போன்று எப்போது பரபரப்பான விற்பனை நடைபெறும் நாள் வருகிறதோ அப்போது பெரு நகைக்கடைகள் தங்கக் கட்டிகளை இது போன்ற பட்டறைகளுக்குக் கொடுத்து நகையாக வாங்குவார்கள்.

    அந்த சமயத்தில் மட்டும் ஊழியர்களை கசக்கிப் பிழிவது; அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூங்காமலும், இடையில் பட்டறையை விட்டு வெளியேற தடை விதிப்பதும் (தங்கத் துணுக்குகளை நக இடுக்குகளில் மறைத்து எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற சந்தேகத்தில்) கழிவறை வரையில் கண்காணிப்பதும் என்று குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட காட்டுவதில்லை. தொழிலாளிகளும் அந்த நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு. சீசன் அல்லாத நாட்களில் சம்பளம் கிடையாது.

    இப்படிப்பட்ட பட்டறைகள் பொதுவில் காற்றோட்டம் இல்லாமலும் அடைசலாகவும் தான் இருக்கும். தப்பித்தவறிக்கூட தங்கத் துகள்கள் பட்டறை முதலாளிகளுக்குத் தெரியாமல் வெளியேறுவதைத் தடுப்பதற்கே இந்த ஏற்பாடு. தொடர்ந்து உட்கார்ந்தே வேலை செய்வதால் மூலவியாதி, முதுகுவலி, தங்கம் உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களின் விளைவாய் ஆஸ்துமா போன்ற உபாதைகளோடு தான் பெரும்பாலான நகைத் தொழிலாளிகள் தமது வாழ்வை கழிக்க வேண்டியுள்ளது. சிறிய பட்டறைகளில் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருந்தாலும் அவர்களோடு சேர்ந்து சிறு முதலாளிகளும் வேலை செய்கிறார்கள்.

    முதலாளித்துவ பாணி இயந்திர உற்பத்தியாய் இருப்பதால் பால்ஸ் ஒரு பட்டறை, மோதிரம் ஒரு பட்டறை, கம்மலுக்கு ஒரு பட்டறை, கல் பதிக்க, கம்பி நீட்ட என்று உதிரி உதிரியாகத் தயாராகி, கடைசியில் ஒரு பட்டறையில் இணைக்கப்படுகிறது. இதன் உடன் விளைவாக ஒரு நகைத் தொழிலாளிக்கு முழுமையான ஒரு ஆபரணத்தை உருவாக்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது.

    டிசைன்களை உருவாக்க பட்டைய படிப்பு, கம்ப்யூட்டர் வடிவமைப்புக்கான படிப்பு என்று ஏற்பட்டதால் பாரம்பரிய தொழில் நுட்ப அறிவு முழுமையாக நிராகரிக்கப்பட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ளது. முழுமையான ஆபரண உருவாக்கத் திறனும் நுட்பமும் கொண்ட தொழிலாளி வெறும் கம்பி இழுக்கும் வேலையோ கல்பதிக்கும் வேலையோ செய்யும்படிக்கு நிர்பந்திக்கப்படுகிறார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் குறைகூலிக்கு இது போன்ற பட்டறையில் தொழிலாளியாய்வேலைக்குச் செல்கிறார்.

    சீசன் நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு எனும் நெருக்கடி காரணமாக, நாட்கணக்கில் தூக்கமில்லாமலும் ஓய்வின்றியும் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. தூக்கம் வராமல் இருக்க கனமான உணவைத் தவிர்த்தும், பிஸ்கட்டுகள் சாக்லேட்டுகள் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தின்று இரண்டு மூன்று நாட்கள் தாக்குப் பிடித்தும் வேலை செய்கிறார்கள் தொழிலாளர்கள். தொடர்ந்து தூங்காவிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆனால் தண்ணீர் குடித்தாலோ அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்து போக வேண்டியிருக்கும் என்பதால் அவ்வப்போது உதடுகளை மட்டும் நனைத்துக் கொள்ள மட்டுமே தண்ணீர்.

    தங்கத்தின் சூதாட்டமும், இரத்தக்கறை படிந்த வரலாறும்!

    தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி

    சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 800 டன் தங்க நகைகள் விற்பனையாகியுள்ளது. இதில் கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பங்கு மட்டுமே அறுபது சதவீதத்திற்கும் அதிகம். உலகளவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் தங்கத்தில் 15% இந்தியாவில்தான் விற்பனையாகிறது. எனவே இந்தியாவை ‘தங்கத்தின் இதயம்’ என்கிறார்கள் தங்க வியாபாரிகள்.

    தங்கம் இப்போது முன்பேர ஊக வணிகத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதாலும், டாலரின் வீழ்ச்சி காரணமாக பாதுகாப்பான முதலீட்டின் அடுத்த புகலிடமாகத் தங்கம் இருப்பதாலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அதன் விலை மூன்று நான்கு மடங்கு எகிறியுள்ளது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான  செயற்கையான விலையேற்றம் என்பது உழைக்கும் மக்களை அதன் அருகில் கூட வர முடியாமல் விரட்டியடித்துள்ளது.

    பளபளக்கும் இந்த உலோகத்தின் வெளிச்சத்தில் தமது பகட்டினைக் காட்டும் சீமான்கள் இந்த வெளிச்சத்தின் கீழே இருண்டு கிடக்கும் கோடிக்கணக்கானோரின் வாழ்வை அறிந்திருக்கவே மாட்டார்கள்.

    அழிந்து போன கோவை தங்க நகை தொழிலாளிகளை எண்ணியபடி காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தேன். கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையின் முன் கூட்டம் அடைத்துக் கொண்டிருந்தது. சிலர் முகமெல்லாம் சிரிப்பாக கடையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். பஞ்சடைந்த நகைத் தொழிலாளின் கண்கள் நினைவிலாடியது. இந்தப் பழைய உலகத்தின் அற்பத்தனங்கள் வைக்கும் செலவு என்பது ஊகபேர சூதாடிகள் நிர்ணயிக்கும் விலையான பவுனுக்கு பதினாறாயிரம் ரூபாய்கள் மட்டும் தானா…?

    எங்கோ தென்னாப்ரிக்காவின் தங்க வயலின் பொந்துகளுக்குள் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் அற்று, நச்சுவாயுக்களை சுவாசித்து டன் டன்னாக பாறையை வெட்டி குந்துமணி குந்துமணியாக தங்கத்தைச் சேர்க்கும் அந்தக் கறுப்பினத் தொழிலாளியின் வியர்வைக்கும் இங்கே ஏதோவொரு சந்தினுள் ஒரு இருட்டு அறையினுள் குண்டு பல்பின் வெளிச்சத்தில் வெளியாகும் ஆஸ்துமா இருமலுக்கும் என்ன விலை வைக்க முடியும்? ஸ்பெயின் நாட்டுக் காலனியவாதிகள் கொன்றொழித்த இருபது கோடி செவ்விந்தியர்களின் ரத்தத்திலும் எண்ணி மாளாத கறுப்பின அடிமைகளின் ஏக்கப் பெருமூச்சின் வெப்பத்திலும் தோய்ந்த தங்கம் உங்கள் கழுத்தில் ஊறுகிறது.

    இது அழகா, புனிதமா, ஆபாசமா?

    _______________________________________________________________

    கார்க்கி, புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010

    _______________________________________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:


    மவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன் !

    15
    மன்மோகன்சிங் என்கிற கல்லுளிமங்கன்

    மன்மோகன்சிங் என்கிற கல்லுளிமங்கன்

    “பிரதமர் நாற்காலியின் கவுரவத்தை குலைத்து விடாதீர்கள்” என்று எதிர்க்கட்சிகளை எச்சரித்திருக்கிறார் அன்னை சோனியா.

    நாற்காலி என்ற அஃறிணைப் பொருளுக்கு  கவுரவம் ஏது என்று நீங்கள் குழம்ப வேண்டாம்.

    “வி வாண்ட் ஜே.பி.சி” “வி வாண்ட் ஜே.பி.சி” என்று கடந்த பல நாட்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அலைகடலாகக் குமுறிக் கொந்தளிப்பதையும்,  ஆழ்கடலின் அமைதியும் புன்னகை மாறாத முகமும் கொண்ட அவைத்தலைவர் மீரா குமார், அமைதி அமைதி என்று 4 முறையும், இருக்கைக்கு செல்லுமாறு 2 முறையும் மென்மையாக கையசைத்து விட்டு, பிறகு அவையை ஒத்தி வைப்பதாக கூறி ஒரு முறை கைகூப்பி வணக்கம் சொல்வதுடன் படம் முடிவதை அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அரங்கம் நிறைந்த காட்சியாகத் தொடங்கி, மெல்ல மெல்ல கூட்டம் குறைந்து, .. நேற்றோடு படம் தூக்கப்பட்டுவிட்டது.

    நடந்து முடிந்த இந்தக் களேபரத்தை ஆடாமல் அசையாமல், அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டவை நாடாளுமன்றத்தில் இருந்த இரண்டு பொருட்கள் மட்டுமே. முதலாவது நாடாளுமன்ற நாற்காலி. இரண்டாவது மன்மோகன்சிங்.

    எனவே, “நாற்காலியின் கவுரவத்தை குலைத்து விடாதீர்கள்” என்று அன்னை இரு பொருள்படவே கூறியிருக்க வேண்டும். பிரதமரை இழிவு படுத்துவது நமது நோக்கமல்ல. தனது கூற்றை சோனியாவே தெளிவு படுத்தியிருக்கிறார். ”Ms.Gandhi complimented the Prime minister on ‘his wise leadership’, on his ‘remaining calm amidst the storm” என்று சோனியா சொன்னதாக எழுதியிருக்கிறது இந்து பத்திரிகை. “பிரதமருடைய இந்த முயற்சி யில் காங்கிரசு கட்சி அவருக்குப் பின்னால் உறுதியாக நிற்கும்” என்றும் அன்னை சோனியா அறிவித்திருக்கிறார்.

    இன்று நாம் காணும் நாடாளுமன்றக் காட்சிகளைப் போன்ற காட்சிகளை முன்னர் தமிழக சட்டமன்றத்திலும் நாம் கண்டிருக்கிறோம். ஊழல் வழக்குகளின் காரணமாக அன்னை ஜெயலலிதாவால் அமர முடியாத முதல்வர் நாற்காலியில், ஒரு ஓரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஒண்டிக் கொண்டிருந்தபோது தமிழக சட்டமன்றத்திலும் இதுதான் நடந்தது.

    முதல்வர் நாற்காலியாக இருந்தாலென்ன, பிரதமர் நாற்காலியாக இருந்தாலென்ன, அஃறிணைப்பொருட்கள் என்ற வகையில் அவையிரண்டும் சமமே. அதே நேரத்தில் அவற்றில் அமர்ந்திருந்த மன்மோகன் சிங்கும் பன்னீரும் சமம் என்று கூறிவிடமுடியாது.

    பன்னீர் அமைச்சராவதற்கு முன் டீக்கடை முதலாளி. மன்மோகன் சிங்கோ உலக வங்கி அதிகாரி. பன்னீருக்கு விவரம் பத்தாது என்பதால் பேசுவதில்லை. மன்மோகன் சிங் ரொம்ப விவரமறிந்தவர் என்பதால் பேசுவதில்லை. மவுனமாக இருப்பதனால் முட்டாளும் அறிவாளியும் சமமாகி விட முடியாதில்லையா? அதனால்தான் ‘அறிவார்ந்த தலைமை’ என்று அன்னை சோனியா அழுத்திக் கூறியிருக்கிறார்.

    ”நம்முடைய அரசாங்கத்திடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை, நாம் பயப்படுவதற்கும் எதுவும் இல்லை” என்றிருக்கிறார் சோனியா. உண்மைதானே. தேசிய நெடுஞ்சாலைகளின் கப்பிக்கல் முதல் கான்கிரீட் தூண்கள் வரை அனைத்திலும் கமல்நாத்துக்கு கழிவுத்தொகை 15 சதவீதம் என்பது வெளிவந்து விட்டது. முகேஷ் அம்பானிக்கு கொடுக்கப்பட்ட 91,000 கோடி வரிச்சலுகை ரகசியம் வெளிவந்து விட்டது.  ராஜா மட்டுமல்ல, கமல்நாத், ஆனந்த் சர்மா, பிரபுல் படேல் முதலான அமைச்சர்கள் யார் யாருடைய சிபாரிசின் பேரில் பதவியைப் பெற்றார்கள் என்பது ராடியா டேப்பில் வெளிவந்துவிட்டது. மற்ற அமைச்சர் பெருமக்களின் நியமனம் குறித்த ரகசியங்கள் பாக்கி உள்ள டேப்புகள் ஒலிபரப்பாகும்போது தெரியவரக் கூடும்.

    அமைச்சர்களை நியமிப்பவர் பிரதமர். டேப்புகளில் பேசியிருக்கும் பிரமுகர்கள் எல்லோரும் “மேலிடத்தில் பேசிவிட்டேன்” என்று சொல்லும்போது, பிரதமரிடம் பேசிவிட்டதாகத்தான் அதற்கு நாம் பொருள் கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக ராஜாவை நியமிக்க பிரதமரிடம் சிபாரிசு செய்த டாடா மாட்டிக் கொண்டு விட்டார். சிபாரிசை அமல்படுத்திய மன்மோகன் மவுனம் சாதிக்கிறார். லாபியிங் செய்த ராடியா மீது விசாரணை. விசாரணையை நடத்துவது லாபியிங்குக்கு இடம் கொடுத்து மடமும் கொடுத்த மன்மோகன் சிங் அரசு. இந்தக் கேலிக்கூத்தை எங்கே போய் சொல்ல?

    எந்த மந்திரிக்கு எந்த கார்ப்பரேட் சிபாரிசு என்று இப்போது தெரிந்து விட்டது. பிரதம மந்திரியாக மன்மோகன் சிங்கை நியமிக்க யார் யாருக்கு சிபாரிசு செய்திருப்பார்கள்? மேற்படி உண்மை ராடியா டேப்பில் வருமா என்று சொல்ல முடியாது. அது ஒருவேளை விக்கி லீக்ஸில் வெளிவரக்கூடும். ஏனென்றால், பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை சிபாரிசு செய்தவர்கள் உலக வங்கியும், அமெரிக்க முதலாளிகளுமாயிற்றே.

    அந்த ரகசியம் வெளியில் வந்துவிட்டாலும் மன்மோகன் சிங் பேசமாட்டார். அன்னை சோனியா சொல்லியிருப்பது போல காங்கிரசு கட்சியும் அதற்கெல்லாம் பயந்து விடாது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அத்தனை கட்சிகளின் அம்மணப் படங்களும்தான் ராடியா டேப்பில் ஓடுகின்றன. யாரைப் பார்த்து யாரும் கூச்சப்படுவதற்கோ தலை குனிவதற்கோ என்ன இருக்கிறது? “இன்று நீ நாளை நான்” என்று டவுசர் கழட்டப்பட்டவர்களும், கழட்டப்பட இருப்பவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து புரிந்துணர்வுடன் புன்னகை பூத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். பயப்படுவதற்கு வேறெதுவும் இல்லை.

    இந்த இரைச்சல்கள் கூச்சல்களெல்லாம் சிறுபிள்ளைத் தனமானவை என்பதை மன்மோகன்சிங் அறிவார். அதனால்தான் நாடாளுமன்ற அமளி துமளிகளைக் கண்டு அவர் அதிரவில்லை. மவுனமாகப் புன்னகை பூக்கிறார். இது முற்றும் உணர்ந்தவரின் மவுனம். அறிவார்ந்த மவுனம்.

    இதற்கு முன் எத்தனை ராடியா டேப்பை அவர் பார்த்திருக்கிறார்?

    1994 இல் நாட்டுக்கும், நாடாளுமன்றத்துக்கும் தெரியாமலேயே காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவைத்தார் மன்மோகன் சிங். அன்றைக்கும் நாடாளுமன்றம் சலசலக்கத்தான் செய்தது. அறிவாளி மன்மோகன் சிங் அசைந்து கொடுக்கவில்லை.

    2005 இல் அமெரிக்காவுக்கு கிளம்பிய மன்மோகனிடம், “ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகப் போகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்கள் இடதுசாரிகள். “இல்லவே இல்லை” என்று சாதித்தார் மன்மோகன். வாஷிங்டனிலிருந்து வெளிவந்த பிரணாப்-ரம்ஸ்ஃபீல்டு, மன்மோகன்-புஷ் கூட்டறிக்கைகள் இந்தப் பொய்யை அம்பலமாக்கின. இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்கள் இறுதியாக்கப்பட்டிருந்தன.

    பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதம் வந்தது. “ஹைட் சட்டமா, நான் கேள்விப்பட்டதே இல்லையே” என்றார் பிரதமர். அமெரிக்க செனட் உறுப்பினர்கள் குட்டை உடைத்தனர். நாடாளுமன்றத்தில் கூச்சல். அன்றும் மவுனமாய் இருந்தே சாதித்தார் மன்மோகன்சிங்.

    இன்று ஐயப்பன் பஜனையைப் போல அரசியல் முச்சந்திகள் தோறும் அலறுகிறது ராடியா டேப். அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ராடியாவுடன் தொடர்பு கொண்டிருந்த பிரபலங்கள் அனைவரும் “டேப்பில் என்னுடைய குரலை மட்டும் அழித்து விடு இறைவா” என்று மனதுக்குள் மன்றாடுகின்றனர். கோட்டு சூட்டு போட்ட கார்ப்பரேட் கனவான்கள் ” நீ 50,000 கோடி, நீ 10,000 கோடி” என்று ரோட்டில் கட்டி உருளுகின்றனர். அரசியல் வாதிகளை டிவியில் உரித்தெடுக்கும் ஊடக நட்சத்திரங்களெல்லாம் உளறுகின்றனர். ஊரே அமர்க்களப்படுகிறது.

    உத்தமர் மன்மோகன்சிங் மட்டும் மவுனம் சாதிக்கிறார். இந்த மவுனத்தின் பொருள்தான் என்ன? இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று. வாய் திறந்து பேசினால் அந்த வார்த்தைக்கு ஒரு அர்த்தம்தான். மவுனமோ இரவைப் போன்றது. அதற்கு ஆயிரம் அர்த்தங்கள். பல்லாயிரம் பொழிப்புரைகள்.

    “நடப்பது எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் மவுனமாக இருக்கிறார்.”

    “அவர் ஊழல் என்ற சொல்லைக்கூட உச்சரித்து அறியாத உத்தமர். தன்னைச் சுற்றி இத்தனை ஊழலா என்ற அதிர்ச்சியில் ஊமையாகிவிட்டார்.”

    “பதவியே வேண்டாம். என்னை விட்டு விடுங்கள் என்று சோனியாவிடம் விக்கி விக்கி அழுதும் பயனில்லாததால் விக்கித்து நிற்கிறார்.”

    –   மன்மோகனின் மவுனத்துக்குத்தான் எத்தனை விளக்கங்கள்!

    மற்றவர்களையெல்லாம் விடுங்கள். “பிரதமரைப் பேசச் சொல்” என்று சுப்ரீம் கோர்ட்டில் பெட்டிசனே போட்டார் ஒரு ஆசாமி. அந்த சு.சாமியே சொல்கிறார்: பிரதமர் நல்லவர்.

    நல்லவருக்கு அடையாளம்தான் என்ன?

    அடிஅடின்னு அடிச்சாலும், டமாரம் வச்சி அடிச்சாலும் கல்லுளி மங்கனாட்டம் கம்முன்னு இருக்காரே, அதிலேர்ந்தே தெரியல, அவரு ரெம்ப ..நல்லவரு.

    ஓ. பன்னீரை விட, வடிவேலுவை விட,  ரெம்ப….ரெம்ப  நல்லவரு!

    ______________________________________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:

     

     

     

    பழைய பேப்பரே வெட்கப்படுது!!

    “ஹிந்து சிக்ஸ் பிஃப்டி, தினமணி தினமலர் ஃபோர் பிஃப்டி, தினத்தந்தி த்ரீ ஃபிப்டி, விகடன், குமுதம், இந்தியாடுடே ஃபைவ் ருபீஸ்..” கடகடவென அதிகாரமாக குரல் வந்து விழ, நான் பழைய பேப்பர் வியாபாரியா?இல்லை அவர் வியாபாரியா என ஒருகணம் நிலைகுலைந்து போனார் பழைய பேப்பர் வியாபாரி.

    “சார்!சார்! கொஞ்சம் நிறுத்து சார். விட்டா எங்கூட வியாபாரத்துக்கே வந்துருவ போல இருக்கு, அவ்ளோளாம் வராது சார்! எனக்குக் கிடைக்கறதே கிலோவுக்கு ஐம்பது பைசாவோ, ஒரு ரூவாயோதான்.. நீ இப்படி ரேட்டுப் போட்டா நான் பழைய பேப்பர் வியாபாரத்தையும் வுட்டுட்டு இனிமே எங்க போறதுன்னு தெரியல..”

    “ஏம்ப்பா நான் என்ன தப்பாவா சொல்லிட்டேன். விவரந் தெரியாதவங்ககிட்ட நீ எப்படி வேணாலும் வியாபாரம் பண்ணிக்கோ… வீட்ல கம்ப்யூட்டர் இண்டர்நெட்டுனு வெச்சுகிட்டு நான் இது கூட தெரியாமலா இருப்பேன்.. நெட்ல பாத்தா இன்னைய ரேட்டு கரெக்டா வருது.. நான் ஒண்ணும் உன் கண்ணக் கட்டி ஏமாத்துல.. வேண்ணா பாக்குறியா.. ”

    “காயலாங்கடைய பாக்கவே நேரம் பத்துல.. இதுல கம்ப்யூட்டர பாக்கணுமா.. நீ வேற சார்.. அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இப்படி லோல்படுறேன்.. வண்ணாரபேட்ட வந்து பாரு சார்.. குடோன்ல இந்தக் கம்ப்யூட்டரையெல்லாம் குடலை உருவிப் போட்டா எடைக்குக் கூட தேறல.. என்னா கம்ப்யூட்டரோ! கம்பியூட்டர விடு சார், என் வயித்தப் பாரு.. காலைலேர்ந்து வெறும் டீயிலயே மூணு சக்கர வண்டிய மிதிச்சுக்கிட்டு,மூணு நாலு மெத்தைல ஏறி பழைய பேப்பர வாரியாந்து வலி நோவுது சார். ஏமாத்திப் பொழைக்கணும்னா எனக்கு ஏன் சார் இவ்ளோ பாடு..”

    “நோ..நோ.. இந்த ஆர்க்யூமெண்டே வேணாம். நாட்ல யார்தான் கஷ்டப்படல.. நான் கூடத்தான் காலைல எழுந்து சாப்பிட்டனோ, சாப்பிடலயோ டயத்துக்கு ஆபிசு ஓட வேண்டியிருக்கு.. நீ த்ரீ வீலர்னா நான் டூ வீலர்.. எல்லாருக்கும் கஷ்டந்தான்.. அதுக்காக ஒரு நியாயம் வேண்டாமா.. கட்டுப்படியானா எடு! ஒத்து வரலயா விடு.. டோண்ட் வொர்ரி!”

    “இப்படிப் பேசினா எப்புடி சார்! மூணாவது மெத்தைல இருந்து வேற இவ்வளவையும் தூக்கியாந்தாச்சு, கம்ப்யூட்டர்ல அவன் ஆயிரம் போடுவான்.. காயிலாங் கடக்காரன் ஒத்துக்கணும்ல…”

    “சரிசார், வேற என்ன பண்றது, நேரு சீரா போட்டுக்கலாம்.”

    “என்ன நேரு சீரோ! நம்ம நாட்லயே இது ஒரு பெரிய ப்ராப்ளம்… தொழிலே இல்லேங்கறது, கொடுத்தா ஏட்டிக்குப் போட்டி பேசுவீங்க.. உன்ன சொல்லி குத்தமில்ல… ஸ்டேட் கவர்மெண்ட்டே சரியில்ல… சரி காலைல காட்டியும் வம்பு வேணாம்.. நீ மொதல்ல எடயப் போடு…”

    “உங்கிட்ட நூறு ரூபா பேப்பர போடுறதுக்குல்ல நான் பத்து ரூபாய்க்கு பால் குடிக்கணும் போல இருக்கு.. ஓகே.. போடு..போடு..”

    “என்னா சார்! பழைய பேப்பர்காரன்கிட்ட போயி இவ்ளோ வலி படுற, வீடு வந்து வாங்கிட்டுப் போறனே சார்… அம்பது பைசா, ஒரு ரூபா விட்டுக்கொடு சார்..”

    “பாத்தியா, பேச ஆரம்பிச்சுட்ட, பேசாம எடயப் போடு! பழைய பேப்பர்னா சும்மாவா? ஐ நோ எவரிதிங்… பழைய அட்டப்பெட்டிய வெச்சுதான் அம்பானியே பணக்காரணானான் தெரியுமா? ஏதோ ஹிண்டு பேப்பர படிச்சிட்டு சும்மா வீட்ல கெடக்குற ஜடம்னு என்ன நெனச்சியா? ஐ எம் ஏ ப்ராஞ்ச் மேனேஜர் ஆஃப் சிட்டியூனியன் பேங்க்… எபவ் டொண்ட்டி ஃபைவ் இயர்ஸ் சர்வீஸ்!”

    “சரளமாக கல் வந்து விழுவது போல ஆங்கிலத்தில் வார்த்தைகள் வந்து விழ.. பழைய பேப்பர் வியாபாரிக்கு எடை குழறியது… இரு சார்.. ஒரு கிலோ கல்ல எடுத்துட்டு வந்துர்றேன்,” என்று வண்டியை நோக்கி நகர்ந்தார்..

    “இவனுகள சாதாரணமா நெனக்காதீங்க, இந்தத் தராசு, கல்லு எல்லாமே ஃப்ராடு.. கிலோ கணக்குல நம்மகிட்ட அடிச்சுட்டுப் போயிடுவான்! நம்ம அபார்ட்மெண்ட்டு மாதிரி எத்தன பேரு? எத்தன கிலோ அடிப்பாங்க, கணக்குப் போட்டு பாருங்க.. சும்மா நடிப்பாங்க சார்… இங்க சம்பாரிச்சு ஊர்ல போயி வட்டிக்கு விடுவான், வீடு கட்டுவான். ஒண்ணு தெரியுமா, அவன் லைஃப்ப என்ஜாய் பண்ற மாதிரி நாம கூட பண்ண முடியாது… இந்த காச வாங்கி நாம ஒண்ணும் பேங்க்ல போடப் போறது கெடயாது.. சனங்கள ஏமாத்த முடியாதுன்னு அவன் தெரிஞ்சுக்குனும் பாருங்க.. அதுக்குத்தான் கொஞ்சம் ஸ்டிரிக்டா இருக்கறது…” பக்கத்து வீட்டுக்காரரிடம் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்..

    “தோ சார்!…” பேப்பர், பத்திரிகையை வகைப்படுத்தி நிறுத்துப் போட்ட வியாபாரி, “குறிச்சுக்க சார்.. இங்கிலீசு ஆறு கிலோ, தமிழ் மூணு கிலோ, புத்தகம் நாலு கிலோ” என்று லாவகமாக மனதுக்குள்ளேயே கூட்டிக் கொண்டு எதிரில் நிற்பவரை கண்களால் எடை போட்டுக் கொண்டே சாக்குப் பைக்குள் பேப்பரை அசக்கி அசக்கி திணித்தார். கூடவே கின்லே காலி பாட்டிலை நசுக்கி உள்ளே திணித்தார்.

    “என்னப்பா நீ பாட்டுக்கும் எடை போடாமயே நசுக்கிப் போடுற.. அதயும் நிறு” என்றார் பேங்க்காரர் படபடப்பாக…

    “சார் அதுக்கல்லாம் எட கெடயாது சார்… மொத்தமா ஒரு ரூபா போட்டுக்க.”

    “என்னப்பா, பத்து பாட்டில் போட்டுருக்கேன். ஒரு ரூபாங்கற..”

    “நீ அம்பது போட்டாலும் அது தலையெழுத்து அவ்ளோதான் சார்.. காயலாங்கடைல வந்து பாரு.. உன் கம்பியூட்டரு மண்ட ஓடுக்கே அங்க மதிப்பு கெடயாது.. சும்மா ஒடச்சுதான் போடுவோம்.”

    “ஏமாந்தவனா இருந்தா இன்னும் நீ அள்ளி விடுவ.. உங்கிட்ட போட்டது மொதல்ல என் தப்பு, சரி.. சரி.. பணத்தக் குடு…”

    “உன்ன ஏமாத்தி நா என்ன அம்பானியா ஆகப்போறேன். ஏன் சார் நீ வேற.. பேசக்கூடாதுன்னு வேற சொல்ற.. இந்தா சார் உன் பணம் அறுபத்தேழு..”

    “பாத்தியா திரும்பவும் வேலயக் காட்டுறியே, எவ்ளோ கணக்கு சரியா சொல்லு…”

    “என்னா சார், உன் கண்ணயா மறைச்சுட்டேன். அறுபத்தேழு ரூபா எழுபத்தஞ்சு காசு வந்துச்சு.. சில்லறை இல்லையேன்னு நோட்டா குடுத்தேன்.. இந்தா ஒரு ரூபாயா வெச்சுக்கோ…”

    “என்னமோ, நீ எனக்கு பிச்ச போடற மாதிரி சொல்ற.. நாலு தெரு அலையாம உனக்கு லம்ப்பா இங்க கெடைக்குது.. இதுல நீ சலிச்சுக்குற, இதையே கார்ல போறப்ப மவுண்ட்ரோட்ல மொத்த வியாவாரிகிட்ட போட்டேன்னு வெச்சுக்க, எனக்கு நூறு ரூவா கெடச்சிருக்கும். சரி.. சரி.. உங்கிட்ட பேசப் பேச பிரச்சனைதான், ஒரு எழுபது ரூபாயா எடு… வேஸ்ட் ஆஃப் மை டைம்.. வேஸ்ட் ஆஃப் மை எனர்ஜி, ஒண்ணு தெரிஞ்சுக்க.. என்னிக்கும் நேர்மையா வாழப் பழகு… லைஃப் கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கும்… தொழில சுத்தமா செய்யி… செய்யும் தொழிலே தெய்வமுன்னு சும்மாவா சொன்னான்..” பேசிக் கொண்டே போக பழைய பேப்பர்காரர் சடாரென எழுபது ரூவாயாக கணக்குத் தீர்த்தார்.

    வேண்டாத சுமையாக சாக்குப் பையை சுமந்தவர் முணகிக் கொண்டார், “என் பைலேர்ந்து ஒரு மூணு ரூவாய புடுங்கறதுக்கு தத்துவம் வேற! அடச்சே..” ஒரு கணம் துருபிடித்த இரும்பை உதறிப் பார்ப்பது போல மௌனமாக இமைகளை உதறி பேங்க்காரரை உற்று நோக்கியவாறு நகர்ந்தார்.

    “என்ன அப்படிப் பாக்கறீங்க, காசு பெருசில்ல சார்.. நம்மள ஒண்ணுந் தெரியாத முட்டாள்னு நெனக்கிறாம் பாருங்க, அதான் நானும் விடல…” ஹி..ஹி..ஹி. பக்கத்து வீட்டுக்காரரிடம் தனது சாமர்த்தியத்தைப் பகிர்ந்து கொண்டு டக் டக் கென்று மாடியேறினார் பேங்க்காரர்…

    ________________________________________________________________________

    – சுடர்விழி, புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010

    ________________________________________________________________________

    கோவை என்.டி.சி தேர்தல்: கைக்கூலிகளை எதிர்த்து புரட்சியாளர்களின் சமர்!

    29

    அந்த வாக்குச் சீட்டுகள் டிசம்பர் 18ம் தேதிக்காக காத்திருக்கின்றன. அன்றுதான் தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் நடைபெறப் போகிறது. இந்த 7 ஆலைகளில் 5 ஆலைகள் கோவையிலும், மற்ற இரண்டு ஆலைகள் முறையே சிவகங்கையிலும், இராமநாதபுர மாவட்டத்திலும் இருக்கின்றன.

    தேர்தல் அன்று தன் மீது எழுதப்படும் வாசகங்கள் என்னவாக இருக்கும் என்று அச்சடிக்கப்பட்ட அந்த வாக்குச் சீட்டுகளுக்கு நன்றாக தெரியும். மறுநாள் – அதாவது டிசம்பர் 19ம் தேதி அன்று – வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது, எந்த திசையை நோக்கி வருங்காலம் நகரப் போகிறது என்பதையும் அவைகள் துல்லியமாக அறியும்.

    அதனாலேயே ஆவலுடன் டிசம்பர் 18ம் தேதிக்காக வாக்குச் சீட்டுகள் காத்திருக்கின்றன.

    அதனாலேயே இந்தத் தேர்தலில் நாம் தோற்றாலும் பரவாயில்லை. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் மட்டும் வெற்றி பெறக் கூடாது என ஒவ்வொரு ஓட்டுக் கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்களும் முழுமூச்சுடன் போராடி வருகின்றன. ‘எங்க தொழிற்சங்கத்துக்கு ஓட்டுப் போடலைனாலும் பரவால. அவனுங்களுக்கு மட்டும் தயவு செஞ்சு ஓட்டுப் போடாதீங்க…’ என ஒவ்வொரு தொழிலாளியின் காலிலும் விழுந்து கெஞ்சுகின்றன, கையெடுத்து கும்பிடுகின்றன.

    இப்படி ஓட்டுக் கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் நடந்துக் கொள்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கோவை பஞ்சாலைகளில் பிடிப்பு இருந்தால்தான் கோவையை சுற்றியிருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுக் கட்சி தொறிசங்கங்களால் கோலோச்ச முடியும். தொழிலாளர்களை ஏமாற்றி, முதலாளிகளுக்கு சாதகமாக நடக்க முடியும். முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டை பாய்ந்து கவ்வ முடியும்.

    அப்படியென்ன கோவை பஞ்சாலை தொழிற்சங்கங்களுக்கு முக்கியத்துவம் இருக்கின்றன என்பதை அறிய சுருக்கமாக ஆங்கிலேயர் காலம் தொட்டு கோவையின் வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும்.

    இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்து பலகோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருப்பது ஜவுளித்துறைதான். லாபம் கொழிக்கும் இந்தத் துறையை குறித்து ஆங்கிலேயர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். சுற்றுப் புறங்களில் பருத்தி விளைய வேண்டும். விளைந்த பருத்தியை நூலாக நூற்பதற்கு மிதமான தட்பவெப்பம் நிலவ வேண்டும். இப்படி இந்தியாவில் எந்தெந்த பகுதிகள் இருக்கின்றன என துல்லியமாக கணக்கிட்டு 3 பகுதிகளை தேர்ந்தெடுத்தார்கள். அந்தப் பகுதிகளில் சாலைகளையும், இரயில் பாதைகளையும் அமைத்து ஜவுளித்துறை சாதனை மையங்களாக உருவாக்கினார்கள். அப்படி தோன்றியதுதான் ஏ,பி,சி எனப்படும் 3 நகரங்கள். இதில், ஏ – அகமதாபாத்; பி – மும்பை; ஆகியவை வடமாநிலங்களில் இருக்க, சி – கோயமுத்தூர் மட்டும் தென்னகத்தில் – அதிலும் தமிழகத்தில் இருக்கிறது.

    குறைவான கூலியில் பல மணிநேரங்கள் வேலை செய்ய கோவையில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்பதை புரிந்துக் கொண்ட சர்.ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர், 1888ல் கோவையில் முதல் பஞ்சாலையை தொடங்கினார். ஸ்டேன்ஸ் மில் என்றழைக்கப்பட்ட இந்த பஞ்சாலையை அன்று ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் மக்கள் பார்த்தார்கள். அங்கிருந்த பஞ்சை நூலாக்கும் இயந்திரங்களை ஒரு அணா செலுத்தி மக்கள் பார்க்கலாம் என நிர்வாகம் அனுமதித்தது. அதாவது இந்த வகையிலும் மக்களை சுரண்டியது. அப்படி சென்று பார்த்த ஜி.குப்புசாமி நாயுடு, தானும் ஒரு பஞ்சாலையை தொடங்க விரும்பினார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்று பல கிளைகளாக வளர்ந்து நிற்கும் லட்சுமி மில்ஸ்.

    ஸ்டேன்ஸ் மில்லை தொடர்ந்து 1900ல் மால் மில், 1906ல் காளீஸ்வரர் மில், ரங்க விலாஸ் மில், ராதாகிருஷ்ணா மில்… என 1930 வரை 8 மில்கள் தோன்றின. பைகாரா திட்டத்தின் மூலம் மின்சாரம் கிடைப்பதற்கு முன்புவரை இந்த பஞ்சாலைகள் நீராவி சக்தியினாலேயே  இயங்கி வந்தன. 1930க்கு பிறகு மின்சாரம் முன்பை விட மலிவாக கிடைக்க ஆரம்பித்தப் பின் பஞ்சாலைகள் வேகமாக வளர்ந்தன. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும், இங்கிலாந்தின் உற்பத்தி இலக்குகள் யுத்த சேவையை நோக்கி திரும்பின. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நூலுக்கும், துணிகளுக்கும் உருவான தேவையை கோவை பஞ்சாலைகள் பயன்படுத்திக் கொண்டன.

    இதற்கு முன்பாகவே மில் அதிபர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இங்கிலாந்தில் ஜவுளித் தொழில்நுட்பம் கற்க அனுப்பப்பட்டனர். தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து சுரண்டும் கல்வியை – மேலாண்மைத் திறனை, வணிக நுட்பங்களை – அவர்கள் கற்று வந்து கோவையில் அமல்படுத்தினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக 1940களில், ஆங்கிலேய அரசு, நேசநாடுகளின் இராணுவத்துக்குத் தேவையான ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்கவும், உறுதி செய்யவும் இந்திய தரகு முதலாளிகளை உருவாக்கி அதிகாரங்களை வழங்கியது.

    இந்தக் காலகட்டத்தில்தான், கோவையிலிருந்து ஏறக்குறைய 8 கி.மீ தொலைவிலுள்ள சின்னியம்பாளையம் ரங்கவிலாஸ் மில்லில் வேலைப் பார்த்து வந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காகவும், பணி நேரங்களை ஒழுங்குப்படுத்தவும் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய 4 தொழிலாளர்களையும் கைது செய்த ஆங்கிலேய காவல்துறை, ஒருவருக்கு தூக்கு மற்ற மூவருக்கு ஆயுள்தண்டனை என தீர்ப்பு வழங்கியது. ஆனால், நெஞ்சுரம் மிக்க அத்தொழிலாளர்கள், எங்கள் நால்வருக்கும் ஒரே தண்டனைதான் வழங்க வேண்டும் என்று அழுத்தமாக சொல்லி தூக்குக் கயிறை ஒன்றாக முத்தமிட்டார்கள். வீரம் செறிந்த இந்த சின்னியம்பாளைய தியாகிகளின் போராட்டத்தை இன்றளவும் கோவை பஞ்சாலை தொழிலாளர்கள் மறக்கவில்லை.

    அதேபோல் கோவையில் தொடங்கப்பட்ட முதல் பஞ்சாலை நிறுவனமான ஸ்டேன்ஸ் மில்லில் ஊதிய உயர்வுக்காகப் போராடிய பெண் தொழிலாளர்கள், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான சம்பவத்தையும் கோவை பஞ்சாலை தொழிலாளர்கள் மறக்கவில்லை. இந்த இரு ஆலைகளிலும் நடைபெற்ற போராட்டங்கள் ஒட்டுமொத்தமான அனைத்து கோவை பஞ்சாலைகளுக்கும் சேர்த்துத்தான் என்பது தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    இப்படியாக நீளும் கோவை பஞ்சாலைகளின் வரலாற்றில், அடுத்தகட்டமாக 1974ம் ஆண்டு வந்து சேர்ந்தது. இந்திரா காந்தி தலைமையிலான அரசு, இக்காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான பஞ்சாலைகளை நாடு முழுவதும் நாட்டுடைமையாக்கியது. அதில், தமிழகம், புதுச்சேரியில் இருந்த 15 பஞ்சாலைகளும் அடக்கம். இப்படித் தோன்றிய தேசிய பஞ்சாலைக் கழகத்தில் இன்று கோவையில் 5ம், சிவகங்கை மற்றும் இராமநாதபுர மாவட்டங்களில் தலா ஒன்றுமாக சேர்த்து மொத்தம் 7 பஞ்சாலைகளே இயங்கி வருகின்றன. மீதமுள்ளவை அனைத்தும் ‘நஷ்டத்தில் இயங்குவதாகக்’ கூறி மூடப்பட்டு விட்டன. அதற்காக இயங்கி வரும் மற்ற 7ம் லாபத்தில் இயங்குவதாக அர்த்தமில்லை. இவையும் நஷ்டத்தில்தான் இயங்கி வருவதாக அரசு கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறது.

    ஆனால் இந்த ஆலைகள் எதுவும் நஷ்டத்தில் இயங்கவில்லை என்பதும், செயற்கையாக அப்படியான தோற்றத்தைத் தருகிறது என்பதும் தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியும். சான்றாக, இன்றையதினத்தில் இந்திய அளவில் ஜவுளி ஆலைகளுக்கு தேவைப்படும் பஞ்சின் அளவு 246 இலட்சம் பேல்கள். (ஒரு பேல் என்பது 176 கிலோவைக் கொண்டது). ஆனால், இந்தாண்டு இந்திய அளவில் விளைந்துள்ள பஞ்சின் அளவு 295 இலட்சம் பேல்கள். அதாவது தேவையைவிட, 50 இலட்சம் பேல்கள் அதிகம் விளைந்துள்ளது. இதுதவிர, சென்ற ஆண்டு கூடுதலாக விளைந்த 55 இலட்சம் பேல்களும் கையிருப்பில் உள்ளன. இப்படி கிட்டத்தட்ட 105 இலட்சம் பேல்கள் கையிருப்பில் இருக்கும்போதும், பஞ்சின் விலை ஏன் உயர்கிறது? ஏன் பஞ்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு கணக்குக் காட்டுகிறது? எதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்காமல் இருக்கிறது?

    இந்தக் கேள்விகளை முன்னிறுத்தி எந்த ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை அணிதிரட்டவில்லை. அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி நியாயமாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை பெற்றுத் தரவில்லை.

    இதை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், குரல் கொடுத்தது. 30 ஆண்டுகளாக தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது. தேர்தலை நடத்த வழிவகை செய்தது.

    ஆனால், ஒரேநாளில் ஏதோ ‘ஜீ பூம்பா’ கதையாக இது நடந்துவிடவில்லை. இந்தத் தேர்தலை நடத்துவதற்காகவே கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கம், மிக நீண்ட போராட்டத்தை சந்தித்திருக்கிறது.

    பொதுவாக ஓர் ஆலை அல்லது நிறுவனத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை (புஜாதொமு) தொடங்க வேண்டும் என அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் விரும்பினால், உடனே சங்கம் தோன்றிவிடாது. அதே ஆலை அல்லது நிறுவனத்தில் இருக்கும் மற்ற தொழிற்சங்கங்களில் – அது ஓட்டுக்கட்சிகளின் தலைமையிலான தொழிற்சங்கமாக இருந்தாலும் – இணைந்து செயலாற்றும்படியாகவே அறிவுறுத்தப்படுவார்கள். காரணம், தொழிலாளர்களின் ஒற்றுமையை ஒவ்வொரு விநாடியும் வலியுறுத்தும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தானாகவே ஒரு பிளவை உருவாக்க ஒருபோதும் விரும்பியதுமில்லை; செயல்படுத்தியதும் இல்லை.

    அந்தவகையிலேயே கோவை என்.டி.சி. ஆலைகளில் பணிபுரிந்த விளவை இராமசாமி உட்பட பல தோழர்கள், புஜாதொமு-வை தொடர்பு கொண்டபோது, ஏற்கனவே அங்கு செயல்பட்டு வந்த ஏஐடியுசி (சி.பி.ஐ), சிஐடியு (மார்க்சிஸ்ட்) தொழிற்சங்கங்களில் ஒன்றில் இணைந்து செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். தோழர்களும் அதன்படியே ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களில் இணைந்து நியாயமான கோரிக்கைகளை பெற்றுத் தரும்படி தொழிற்சங்க தலைமையை வலியுறுத்த ஆரம்பித்தார்கள்.

    இயங்கி வரும் 7 என்.டி.சி. மில்களிலும் 2,500 ஆண் – பெண் நிரந்தரத் தொழிலாளர்களும், இதே எண்ணிக்கையிலான தினக்கூலி ஆண் – பெண் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களான இந்த மில்கள் அனைத்திலும் அரசாங்க சட்டங்கள் எதுவும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. 240 நாட்கள் தொடர்ச்சியாக வேலைப் பார்க்கும் தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டுமென சட்டம் சொல்கிறது. ஆனால், 15 முதல் 20 ஆண்டுகளாக என்.டி.சி. ஆலைகளில் தினக்கூலிகளாகவே அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தோழர்கள் குரல் கொடுத்தபோது ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்க தலைமை ஏதேதோ காரணங்களைச் சொல்லி தட்டிக் கழித்தது.

    அதேபோல் ஒரு வருடத்தில் ஒரு நாள் பணிபுரிந்தாலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை வழங்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்து ஓட்டுக் கட்சிகளின் தொழிற்சங்கத் தலைமை அதை வருடத்துக்கு 240 நாட்களுக்கு பணிபுரிந்தால்தான் பணிக்கொடை என மாற்றியிருக்கிறது. அத்துடன் 215 நாட்களுக்கு குறைவாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இன்சென்டிவ் இல்லை என்றும் அறிவித்துவிட்டார்கள்.

    இவையனைத்துக்கும் மேலாக இன்னொரு கொடுமை என்.டி.சி. ஆலைகளில் நடக்கிறது. இங்குள்ள அதிகாரிகள் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை பெறுகிறார்கள். ஆனால், தொழிலாளர்கள் – அவர்கள் நிரந்தர தொழிலாளர்களாக இருந்தாலும் சரி – மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை பெறவில்லை. ஒரே மில்லுக்குள், ஒரே காம்பவுண்ட்டுக்குள் நிலவும் இந்த ஏற்றத் தாழ்வு இந்தியாவிலுள்ள எந்த பொதுத்துறையிலும் கிடையாது என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

    என்.டி.சி. நலிவடைந்துவிட்டது என்று சொல்லி 20 ஆண்டுகளாக எந்தத் தொழிலாளிக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால், நிர்வாகிகளுக்கு மட்டும் மற்ற மத்திய அரசு நிறுவனங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படும் போதெல்லாம் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்? என்.டி.சி. நஷ்டத்தில் இயங்குகிறது என்றால், அதற்கு நிர்வாகிகளும்தானே பொறுப்பு? அவர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் அரசு, ஏன் தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்காமல் இருக்கிறது?

    அதேபோல் பிற மாநிலங்களில் இயங்கும் என்.டி.சி. ஆலைத் தொழிலாளர்களுக்கும் தமிழக என்.டி.சி. ஆலைத் தொழிலாளர்களுக்கும் கேண்டீன் முதற்கொண்டு மருத்துவ இழப்பீடு, மானியவிலையில் பொருட்கள் வாங்குவது வரை அனைத்து சலுகைகளிலும் வித்தியாசம் காணப்படுகிறது. ஏன் இந்த ஏற்றத் தாழ்வு? இதை ஏன் அகற்றக் கூடாது? இருக்கும் உரிமைகளை எல்லாம் நிர்வாகத்துடனும், அரசுடனும் போராடி ஏன் பெற்றுத் தரக் கூடாது? 30 ஆண்டுகளாக ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்… என ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்க தலைமையிடம் தோழர்கள் கேட்டார்கள். கேட்டவர்களை அத்தலைமை அலட்சியப்படுத்தியது.

    பதிலாக, தொழிலாளர்களிடம் வி.ஆர்.எஸ். வாங்கித் தருகிறோம் என நைச்சியமாக பேசி லஞ்சம் வாங்க ஆரம்பித்தார்கள். என்.டி.சி. குவார்ட்டர்ஸ் பெற்றுத் தருகிறோம் என கமிஷன் பெற தொடங்கினார்கள். தினக்கூலி தொழிலாளர்களிடம், உங்களை பணி நிரந்தரம் செய்ய குரல் கொடுக்கிறோம் என்று சொல்லாமல், நாளொன்றுக்கு ரூபாய் 250 பெற்றுத் தருகிறோம்… அதற்கு இவ்வளவு ஆயிரம் லஞ்சமாக கொடுங்கள் என பிச்சை கேட்க ஆரம்பித்தார்கள்.

    இதற்கு மேலும் ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களை நம்பிப் பயனில்லை என்ற நிலை உருவான பிறகே சென்ற ஆண்டு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் உதயமானது. பெரும்பான்மையான தொழிலாளர்கள் இச்சங்கத்தில் ஆர்வத்துடன் வந்து இணைந்தார்கள்.

    காரணம், பிற ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்களை பொறுத்தவரை ஒரு மாவட்டம் முழுக்க இருக்கும் ஆலைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் செயல்படும் அவர்களது தொழிற்சங்கங்கள் அனைத்துக்கும் ஒருவரே தலைவராக இருப்பார். ஒருவரே செயலாளராக இருப்பார். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இதுதான் நிலமை. அதுமட்டுமல்ல, மாவட்ட தொழிற்சங்க தலைமையில் இருப்பவர்கள், சொந்தமாக ஆலைகளையும் வைத்திருக்கிறார்கள். அதாவது தொழிற்சங்க தலைமையே முதலாளியாகவும் இருக்கிறது. இவர்களால் எப்படி இன்னொரு முதலாளியிடம் தொழிலாளர்களுக்கு சாதகமாக பேச முடியும்? உரிய உரிமைகளை பெற்றுத் தர முடியும்?

    ஆனால், புதிய ஜனநாயக தொழிலாளார் முன்னணி ஒருபோதும் இப்படி செயல்படுவதில்லை. எந்த ஆலை அல்லது தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் சங்கம் ஆரம்பிக்கப்படுகிறதோ அந்த ஆலை அல்லது தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் பணிபுரிபவர்களே அந்தந்த சங்கத்துக்கு தலைவர், செயலாளராக இருப்பார்கள். கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளார் சங்கமும் இப்படித்தான் இயங்கி வருகிறது. தொழிலாளர்கள் மனமுவந்து இச்சங்கத்தில் இணைய இதுதான் காரணம். தங்களில் ஒருவர் அரசுடனும், நிர்வாகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தந்திருக்கிறது.

    ஆக, டிசம்பர் 18 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் எந்த தொழிற்சங்கம் அங்கீகாரம் பெறப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது. அதுவேதான் ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நாடி நரம்புகளில் ஜன்னி கண்டு பிதற்றவும் காரணமாக அமைந்துவிட்டது.

    ‘புஜதொமு-க்கு எம்.எல்.ஏ., எம்.பி. இல்லை. எனவே இவர்களது இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தால் உங்களுக்கான உரிமையை பெற்றுத் தர முடியாது…’ என என்.டி.சி. தொழிலாளர்கள் மத்தியில்  தீவிரமாக பிற ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், இதைக் கேட்டு தொழிலாளர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இவர்கள் இதுவரை என்ன உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறார்கள்? 20 ஆண்டுகளாக ஒருமுறைக் கூட நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை பெற்றுத் தரவில்லையே? அதுமட்டுமா… 30 ஆண்டுகளாக தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலைக் கூட நடத்த அனுமதி பெறவில்லையே..? எம்.எல்.ஏ., எம்.பி. இல்லாத கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்தானே நீதிமன்றம் சென்று, தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலை நடத்த வழிவகை செய்திருக்கிறது… என்று கேட்கிறார்கள்.

    இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல திராணியற்ற ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள், புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து பிரச்சாரத்தில் அடுத்த கேள்வியை கேட்கின்றன.

    ‘சட்டமன்ற – நாடாளுமன்ற தேர்தலை போலி ஜனநாயகத் தேர்தல் என்று சொல்லி புறக்கணிக்கும் படி சொல்லும் இவர்கள், தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் மட்டும் பங்கேற்ப்பது ஏன்? இதிலிருந்தே இவர்களது இரட்டை வேடம் புரியவில்லையா? என தொண்டைத் தண்ணீர் வற்ற கூக்குரல் இடுகிறார்கள். ஆனால், இப்படி கூக்குரல் இடுபவர்கள்தான் இரட்டை வேடம் பூண்டிருக்கிறார்கள் என்பது என்.டி.சி. தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

    சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ ஒரு தொகுதியில் தேர்தல் நடந்தால், அத்தொகுதியில் இருக்கும் அனைவரும் ஓட்டுப் போடுவதில்லை. 40% ஓட்டு பதிவானாலே அதிகம். இந்த 40% வாக்கிலும் 20 முதல் 30 சதவிகித வாக்கு பெறுபவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். இந்தவகையில் மொத்தமாகப் பார்த்தால், வெற்றி பெற்றவரை எதிர்த்து வாக்களித்தவர்களே அதிக சதவிகிதமாக இருப்பார்கள். அப்படி வெற்றி பெற்றவரும் அடுத்த தேர்தல் வரும்வரை தொகுதி பக்கம் எட்டிப் பார்ப்பதுமில்லை. தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக குரல் கொடுப்பதுமில்லை.

    ஆனால், தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் என்பது அப்படியில்லை. அனைத்து தொழிலாளர்களும் சேர்ந்துதான் எந்தத் தொழிற்சங்கம் தங்கள் சார்பாக நிர்வாகத்துடனும் அரசுடனும் பேச வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தேர்தலில் பங்கேற்கும் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தை பொறுத்தவரை – இவர்கள் வெற்றி பெற்றால் அரசுடனும், நிர்வாகத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறவர்கள், அதே தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள்தான். அதாவது வெளியிலிருந்து வரும் மூன்றாவது நபரல்ல. தினமும் தொழிற்சாலைக்கு வந்து தங்களைப் போலவே பணிபுரியப் போகிறவர்தான் சங்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் இருக்கிறார். தாங்கள் அனுபவிக்கும் அதே சிரமங்களைத்தான் அவரும் அனுபவிக்கிறார். எனவே தொழிலாளர்களின் நிலை – கஷ்டம் – அவருக்கும் தெரியும்.

    ஒருவேளை அவர் விலைபோய் விட்டாலும் அவரை நேருக்கு நேர் கேள்வி கேட்கலாம். பெரும்பான்மை பலத்துடன் பதவியிலிருந்து அவரை நீக்கவும் செய்யலாம்… என்ற உண்மை என்.டி.சி. தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    இதே உண்மையின் காரணமாகத்தான் புஜாதொமு தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் பங்கேற்கிறது. இதன் வழியாக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அவர்களுக்குள்ளேயே பிரச்னைகளை களைய கற்றுத் தருகிறது. சுருக்கமாக சொல்வதென்றால், சோஷலிசத்துக்கான பயிற்சியாகவே தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலை புஜாதொமு கருதுகிறது.

    இப்படி மிக வலுவாக ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நினைத்த இரு அஸ்திரங்களும் வலுவிழந்த நிலையில் மூன்றாவதாக ஒரு அஸ்திரத்தை எடுத்திருக்கிறது. ‘இவர்கள் தீவிரவாதிகள். இவர்கள் வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த என்.டி.சி. ஆலைகளையும் மூடிவிடுவார்கள். உங்களை குடும்பத்துடன் நடுத்தெருவில் நிறுத்துவார்கள்…’

    இதை வேறு யாரிடமாவது சொன்னால் ஒருவேளை நம்பலாம். ஆனால், என்.டி.சி. தொழிலாளர்களிடமே சொல்வதுதான் மிகப்பெரிய நகைச்சுவையாக அமைந்துவிட்டது. காரணம், என்.டி.சி.ஆலைகளில் ஓர் அங்கமான முருகன் மில்லில் வலுவாக கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் இருப்பதால்தான் 2009 – 2010ல் 100 சதவிகித இலாபத்தை அந்த மில் அடைந்திருக்கிறது. இதை தொழிலாளர்கள் சொல்லவில்லை. தன் கைப்பட மேலிடத்துக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில் அந்த மில்லின் நிர்வாகியே இதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஆக, ஆலைகளை மூடுவது ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கத்தின் வேலைதான் என்பது என்.டி.சி. தொழிலாளர்களுக்கு அனுபவப்பூர்வமாக தெரியும். சமீபகாலத்தில் ஏறக்குறைய 50 நிறுவனங்களை கோவையில் மூடியது இவர்கள்தானே!

    ஆனால், இதற்கு நேர்மாறாக புதிய ஜனநாயக தொழிலாளார் முன்னணி செயல்பட்டிருக்கிறது என்பது என்.டி.சி. தொழிலாளர்களுக்கு நன்றாகத் தெரியும். உதாரணமாக ஓசூர் கமாஸ் பெக்ட்ரா தொழிற்சாலையில் புஜாதொமு இயங்க ஆரம்பித்தப் பிறகுதான் சட்டவிரோதமாக அத்தொழிற்சாலை புரிந்து வந்த பல காரியங்களை தடுத்து நிறுத்தியது. பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு கிடைக்காமல் இருந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் ஊதிய உயர்வை பெற்றுத் தந்திருக்கிறது.

    அதேபோல் புதுச்சேரியில் இயங்கி வரும் குட்நைட் ஆலையில் இதுவரை இருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. காரணம், புஜாதொமு.

    சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் அய்யப்பன் இண்டஸ்டிரீஸில் இதுவரை 6 முறை ஊதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக போடப்பட்டு, 6 முறையும் அமலுக்கு வந்திருக்கிறது. காரணம், புஜாதொமு.

    இவையனைத்தையும் கவனித்தபடி டிசம்பர் 18 அன்று தன் மீது எழுதப்படும் வாசகங்கள் என்னவாக இருக்கும் என்று உணர்ந்தபடி காத்திருக்கின்றன வாக்குச்சீட்டுகள்.

    அனைத்து பொய்ப் பிரச்சாரங்களும் வலுவிழந்த நிலையில் இறுதியாக ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள், ‘படித்தவர்கள் தலைமைக்கு வந்தால்தான் நல்லது நடக்கும்’ என ஒவ்வொரு தொழிலாளியின் செவியிலும் ஓதி வருகின்றன.

    அப்படி ஓதப்படும் செவிகளுக்கு சொந்தமான தொழிலாளர்களின் இதயத்துக்கு மிகப்பெரிய வரலாற்று உண்மை ஒன்று தெரியும் என்பது பாவம் ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்களை சேர்ந்த மெத்த படித்தவர்களுக்கு தெரியவில்லை.

    பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம்தான். அதுமட்டுமல்ல, ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்றும் உணர்த்தியது லெனின் உருவாக்கிய ரசிய கம்யூனிஸ்ட் கட்சிதான்.

    அப்படி செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாக 1878ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று பிறந்த ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் என்கிற ஜோசப் ஸ்டாலினின் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையும், புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களாலும்தான் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது. மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை 15 ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும், பத்து சதவீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும், உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930களில் ரசியா மட்டும் முன்னேறியதும், இட்லரிடம் இருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய தொழிலாளர் வர்க்கம் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.

    இவையனைத்தையும் சாதித்தது, மெத்தப் படித்த அறிவாளிகள் அல்ல. விவசாயிகளை உள்ளடக்கிய ரசிய தொழிலாளர் வர்க்கம்தான். அதை தலைமையேற்று வழிநடத்திய செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஜோசப் ஸ்டாலின்தான்.

    அவர் பிறந்த அதே டிசம்பர் 18 அன்றுதான், என்.டி.சி.க்கு சொந்தமான 7 ஆலைகளிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் நடக்கப் போகிறது. அன்றைய தினம் தன் மீது எழுதப்படும் வாசகங்கள் என்னவாக இருக்கும் என்று அச்சடிக்கப்பட்ட அந்த வாக்குச் சீட்டுகளுக்கு மட்டுமல்ல, எழுதப்போகும் என்.டி.சி. தொழிலாளார்களுக்கும் நன்றாகத் தெரியும்.

    சின்னியம்பாளைய தியாகிகளைக் கண்ட ரங்கவிலாஸ் மில்லும், துப்பாக்கிச் சூட்டில் பலியான தோழர்களின் நினைவை ஏந்தியபடி வலம் வரும் ஸ்டேன்ஸ் மில்லும், என்.டி.சி.யின் அங்கமாகத்தான் இன்று இருக்கின்றன என்பது தொழிலாளர்களுக்குத் தெரியாதா என்ன?

    கோவை மாவட்டத்தில் புதிய விடியலுக்கான அத்தியாயத்தை எழுதப் போகும் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளார் சங்கத்துக்கு புரட்சிகர வாழ்த்துகள்.

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்


    போஸ்கோ ஒப்பந்தம்: காங்கிரசின் கபடத்தனம்

    போஸ்கோ ஒப்பந்தம் : காங்கிரசின் கபடத்தனம்

    தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்பு உருக்காலைக்கு எதிராக கடந்த ஐந்தாண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது.  ஒரிசா மாநில அரசு பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவிவிட்ட பின்னும், அப்போராட்டம் பின்னடைவுக்கு உள்ளாகவில்லை.  போஸ்கோவின் திட்டங்களுக்கு உறுதுணையாய் நிற்பதாக நவின் பட்நாயக்கிற்கு உறுதியளித்திருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங்.  இப்படிபட்ட நிலையில் இப்பிரச்சினையில் மைய அரசு திடீர் உத்தமர் வேடம் போடக் கிளம்பியிருக்கிறது.

    தென்கொரியாவின் தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இரும்புச் சுரங்கம், இரும்பு உருக்காலை மற்றும் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்வதற்கான துறைமுகம் ஆகியவற்றுக்கு விதிமுறைகளின்படி சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்றுள்ளதா?  அந்நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டபொழுது இந்திய வனச் சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா? இத்திட்டத்தால் தங்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதா?  அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் உள்ளனவா? – ஆகியவை குறித்து ஆராய மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் நான்கு பேர் கொண்ட கமிட்டியொன்றை அமைத்தது.

    பழங்குடியின விவகாரங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் ஊர்மிளா பிங்க்ளே, முன்னாள் இந்திய வன அளவை இயக்குநர் ஜெனரல் தேவேந்திர பாண்டே, சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞரும் மனித உரிமை ஆர்வலருமான வீ.சுரேஷ் ஆகிய மூவரும் இக்கமிட்டியின் உறுப்பினர்களாகவும், மீனா குப்தா என்பவர் இக்கமிட்டியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.

    மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் போஸ்கோ திட்டத்திற்குத் தேவைப்பட்ட அனுமதிகளை வாரிவழங்கியபொழுது, மீனா குப்தா அத்துறையில் செயலராக இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  இப்படிபட்ட பின்னணி கொண்டவரை கமிட்டியின் உறுப்பினராக மட்டுமின்றி, தலைவராகவும் நியமித்ததில் இருந்தே மைய அரசின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.

    மீனா குப்தாவும் மைய அரசை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கவில்லை.  அவர் இது தொடர்பாக அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், “போஸ்கோவிற்கு சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனச் சட்டங்களை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை.  இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க போஸ்கோவிற்கு கால அவகாசம் அளிப்பதன் மூலமும், சுற்றுப்புறச் சுழல் பாதிப்பு தொடர்பாக இன்னும் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுமாறு போஸ்கோவிற்கு உத்திரவிடுவதன் மூலமும் இத்திட்டத்தைத் தொடர அனுமதிக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  அதேபொழுதில் மற்ற மூன்று உறுப்பினர்கள், “உண்மைகளை மூடிமறைத்தும் சட்ட விரோதமான முறையிலும் போஸ்கோ திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக’’த் தமது அறிக்கையில் நிரூபித்துள்ளதோடு, போஸ்கோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

    * போஸ்கோ ஒரிசாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ள உருக்காலை ஆண்டொன்றுக்கு 1.2 கோடி டன் இரும்பை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.  ஆனால், இத்திட்டம் தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் ஆய்வறிக்கையோ, போஸ்கோ ஆலையின் முதல் கட்டத்தின் உற்பத்தி இலக்கான 40 இலட்சம் டன் இரும்பு உற்பத்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.  அதாவது, 1.2 கோடி டன் இரும்பை உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யாமல், 40 இலட்சம் டன் இரும்பை உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதன்படி இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    * போஸ்கோவின் இரும்பாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,620 ஹெக்டேர் நிலப்பரப்பில் 1,253 ஹெக்டேர் நிலப்பரப்பு பல்லுயிர்களும், விதவிதமான தாவர வகைகளும் நிறைந்த வனப்பகுதியாகும்.  இத்திட்டத்தால் ஏறத்தாழ 8 கிராமங்கள் அழிந்துபோகும் வாய்ப்புண்டு.  இப்படிபட்ட நிலையில் இத்திட்டம் குறித்து முழுமையான சுற்றுப்புறச் சூழல் ஆய்வு நடத்தியிருக்க வேண்டும்.  ஆனால், இத்திட்டத்தால் மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  மேலும், போஸ்கோ அமைக்கவுள்ள இரும்பு உருக்காலை, மின் உற்பத்தி நிலையம், துறைமுகம் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேரத்து, அவை சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆராயாமல், தனித்தனியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  இப்படி ஆய்வு நடத்துவது சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு குறித்த விதிகளுக்குப் புறம்பானது.

    * கடற்கரை ஒழுங்குமுறை விதிகளின்படி,  பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ள கடற்கரைப் பகுதிகளில் இரும்பு உருக்காலைகளை அமைக்க முடியாது.  போஸ்கோவின் இரும்பு உருக்காலை இப்படிபட்ட கடற்கரைப் பகுதியில்தான் அமையவுள்ளது என நன்கு தெரிந்திருந்தும், விதிமுறைகளுக்கு முரணாக அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    * போஸ்கோ இரும்பாலை அமையவுள்ள பகுதி பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களையும் உள்ளடக்கியிருப்பதால், ஆலை அமைவதற்கான தடையில்லாச் சான்றிதழை கிராமப் பஞ்சாயத்திடமிருந்துதான் பெற வேண்டும்.  ஆனால், ஒரிசா மாநில அரசோ இப்பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருவதை மறைத்துவிட்டதோடு, தடையில்லாச் சான்றிதழையும் கிராமப் பஞ்சாயத்திற்குப் பதிலாக ஜகத்சிங்பூர் மாவட்ட நீதிபதியிடமிருந்து பெற்றுள்ளது.

    * இத்திட்டத்தால் தமது வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும் பழங்குடியின மக்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தட்டு மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து எந்தவொரு திட்டமும் போஸ்கோவிடமும் இல்லை என்பது மட்டுமல்ல, மறுவாழ்வு அளிப்பது குறித்த சிந்தனையே போஸ்கோவிடம் இல்லை.

    மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை உள்ளிட்டு பல்வேறு  முறைகேடுகளைச் சுட்டி காட்டியுள்ள அம்மூவரும், “சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் போஸ்கோவிற்கு அனுமதி அளித்துள்ள விவகாரத்தில் தனது விதிகளைத் தானே பின்பற்றவில்லை” என்றும் அம்பலப்படுத்தியுள்ளனர்.  “வளர்ச்சி என்ற பெயரில் சட்டம் ஓரங்கட்டப்படுவதற்கு போஸ்கோ நல்ல உதாரணமாகும்; இத்தகைய முயற்சிகள் வெற்றி அடையுமானால், அதனால் கொள்ளை இலாபப் பேர்வழிகள்தான் பலனடைவார்களே தவிர, நாட்டின் வளர்ச்சியையும் சாதிக்க முடியாது; சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க முடியாது” என இம்மூவரும் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

    போஸ்கோ ஒப்பந்தம் : காங்கிரசின் கபடத்தனம்

    இந்த மூவர் அளித்த அறிக்கை ஒருபுறமிருக்க, வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் நடத்தப்படும் சுரங்கப் பகுதி மக்கள் ஒற்றுமை இயக்கம் போஸ்கோ திட்டத்தால் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள், வரி வருமானம் ஆகியவற்றை ஆராய்ந்து, இத்திட்டத்தால் இந்தியாவுக்குக் கிடைக்கும் இலாபங்களைவிட நட்டமே அதிகம் என அம்பலப்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

    போஸ்கோ திட்டத்தால் கிடைக்கும் சமூக நலன்களை ஆராய்ந்த பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் என்ற அமைப்பு, இது தொடர்பாக 2007-ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில், “இத்திட்டத்தால் 8,70,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் 2017 ஆம் ஆண்டில் ஒரிசா மாநிலத்தின் மொத்த வருவாயில் போஸ்கோவின் பங்கு 11.5 சதவீதமாக இருக்கும் என்றும்” கூறி, இத்திட்டத்தைப் புகழ்ந்து தள்ளியது.  ஒரிசா மாநில அரசும் இப்புள்ளிவிவரங்களைக் காட்டிதான் இந்தத் திட்டத்தின் அவசியத்தைத் தூக்கிப் பிடித்து வந்தது.

    ‘‘இந்த அறிக்கை சுதந்திரமாகத் தயாரிக்கப்பட்டதல்ல; போஸ்கோ நிறுவனத்திடம் காசு வாங்கிக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை” என்ற உண்மையை சுரங்கப் பகுதி மக்கள் ஒற்றுமை இயக்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது.  பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் போஸ்கோ குறித்த அறிக்கையைத் தயாரிப்பதில் அரசனை விஞ்சிய விசுவாசியாக நடந்து கொண்டுள்ளது.  போஸ்கோ நிறுவனம் தனது இணைய தளத்தில் ஒரிசாவில் அமையவுள்ள தனது ஆலைகளின் மூலம் அடுத்த 30 ஆண்டுகளில் 4,67,000 பேருக்கு வேலை கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருக்கும்பொழுது, பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலின் அறிக்கையோ போஸ்கோ திட்டத்தின் மூலம் 8,70,000 பேருக்கு வேலை கிடைக்கும் என ஊதிப் பெருக்கியுள்ளது.

    இவ்விரண்டு புள்ளிவிவரங்களுமே மோசடியானவை எனக் குறிப்பிட்டுள்ள சுரங்கப் பகுதி மக்கள் ஒற்றுமை இயக்கம், “போஸ்கோ திட்டத்தின் மூலம் 48,000 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்; அதுவும் கட்டுமான வேலைகள் நடக்கும்பொழுது மட்டும்தான் இவ்வளவு பேருக்கும் வேலை கிடைக்கும்; போஸ்கோ திட்டத்தால் ஜகத்சிங்பூர் பகுதியில் நடந்து வரும் பணப் பயிர் விவசாயம் உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை போஸ்கோ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட  அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை; போஸ்கோ திட்டத்தின் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் எனக் காட்டுவதற்காக, உற்பத்திச் செலவு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது” எனத் தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியிருக்கிறது.

    போஸ்கோ திட்டம் நமது நாட்டின் இரும்புக் கனிம வளத்தைக் கொள்ளையடிப்பதற்கான திட்டம்தான் என்பது மேலும்மேலும் அம்பலமாகி வருகிறது.  இப்படிபட்ட நிலையில் இத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்து, போஸ்கோவை நாட்டைவிட்டுத் துரத்துவதுதான் நாணயமிக்க செயலாக இருக்க முடியும்.  ஆனால், சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமோ இப்பிரச்சினையில் பாம்பும் சாகக் கூடாது, தடியும் நோகக்கூடாது என்ற நிலையில் உள்ளது.  இதற்கு, போஸ்கோ திட்டம் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட கமிட்டியின் நான்காவது உறுப்பினர் அளித்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொள்ள முயலுகிறார், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

    போஸ்கோ ஒப்பந்தம் : காங்கிரசின் கபடத்தனம்

    போஸ்கோ திட்டம் குறித்து சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்திடம் எதிரும் புதிருமான இரண்டு அறிக்கைகள் உள்ள நிலையில், அத்துறையின் அமைச்சர் ஜய்ெராம் ரமேஷ், “இந்த இரண்டு அறிக்கைகளும் அடிப்படையில் வேறுபடவில்லை; விளக்கம் அளிப்பதில்தான் வேறுபட்டுள்ளன” எனப் புளுகியிருப்பதோடு, போஸ்கோவிற்கு அளிக்கப்பட்ட அனுமதியை, கிழக்காசிய நாடுகளோடு பொருளாதார உறவு கொள்ளும் இந்திய அரசின் கொள்கையோடு இணைத்துப் பார்க்க வேண்டும் எனக் கூறி இந்த சட்டவிரோதமான அனுமதியை நியாயப்படுத்த முயன்றுள்ளார்.  இந்த இரண்டு அறிக்கைகள் பற்றியும் ஒரிசா மாநில அரசிடமும் கலந்து ஆலோசித்துவிட்டுத்தான் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்திருப்பதன் மூலம் போஸ்கோ திட்டம் பற்றி அரசின் உள்ளக்கிடக்கையைச் சூசகமாக விளங்க வைத்துவிட்டார், அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

    பி.டி. கத்திரிக்காய்க்கு அனுமதி அளிப்பதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபொழுது, கருத்துக் கேட்பு நாடகங்களை நடத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,  போஸ்கோ பிரச்சினையிலும் அதே தந்திரத்தைக் கையாளுகிறார்.  போஸ்கோவிற்கு எதிராகப் போராடிவரும் மக்கள் மத்தியில் அத்திட்டத்திற்கு எதிராக ஏதோ செய்யப்போவது போலக் காட்டிக் கொள்ளவும், அதேசமயம், நைச்சியமான வழியில் போஸ்கோவிற்கு வழங்கப்பட்டுள்ள சட்டவிரோதமான அனுமதியைத் தொடரவும்தான் இந்தக் கமிட்டியை அமைத்திருக்கிறது சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம்.

    நியம்கிரி மலையில் பாக்சைட்டைத் தோண்டுவதற்கு மட்டும் வேதாந்தாவிற்குத் தடை விதித்து கோந்த் பழங்குடி இன மக்களின் சிப்பாயாக ராகுலுக்கு முடிசுட்டியதைப் போல, போஸ்கோ பிரச்சினையையும் தனது ஓட்டு வேட்டைக்குப் பயன்படுத்திக் கொள்ள முயலுகிறது, காங்கிரசு கும்பல்.  போஸ்கோவிற்கு எதிராகப் போராடி வரும் ஒரிசா மாநில மக்கள் காங்கிரசின் இந்த நயவஞ்சகத்திற்கு எதிராகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

    __________________________________

    – புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
    __________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்:

    சந்தி சிரிக்குது இராணுவத்தின் தேசபக்தி !

    ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !

    ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!

    பல நூறு இந்தியச் சிப்பாய்களைப் பலிகொண்ட கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது வெறும் தேசபக்தியை மட்டும்தான். ஆனால் இப்போர் வீரர்களுக்குக் காலணிகள் வாங்கியதிலும், செத்துப்போன வீரர்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதிலும், பல கோடிகளை சுருட்டிக்கொள்ள  ஆளும் கட்சிக்குப் பயன்பட்டது. எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களை அரங்கேற்ற இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல்.

    மும்பை-கொலாபா பகுதியில் இருக்கும் இராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி கார்கில் போர்வீரர்களுக்கும், அப்போரில் மாண்டவர்களின் மனைவிகளுக்கும் தரப்போவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டியை உருவாக்கியது மகாராட்டிர அரசு.  இது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் விவகாரத்தில், நாளுக்கு ஒரு மோசடி குறித்த விவரம் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.

    மகாராட்டிர முதல்வர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியிருப்பது அம்பலமாகவே, சவானைப் பதவி விலக வைத்து அதைக் காட்டியே உத்தம வேடம் போட முனைந்தது, காங்கிரசு. ஆனால் உள்ளே செல்லச்செல்ல, காங்கிரசு, பாரதிய ஜனதா, சிவசேனா, அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள் என்று மிகப் பிரம்மாண்டமானதொரு ஊழல் வலைப்பின்னல் அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது.

    முதலில் 6 மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக 31 மாடிகள், 103 வீடுகள் என்று அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டபின், 60% வீடுகளை கார்கில் தியாகிகளுக்கும் மீதமுள்ள 40% வீடுகளைப் பொதுமக்களுக்கும் ஒதுக்குவது என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 34 பேர் மட்டும்தான் இராணுவத்தை சேர்ந்தவர்கள். அதிலும் வெறும் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர் முனையில் இருந்தவர்கள்.

    முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு (சிவசேனா), முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷின்டே (தற்போது மத்திய அமைச்சர்), பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போன்ற சர்வகட்சிப் பிரமுகர்களும் ஆதர்ஷில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது.

    ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !

    ஓட்டுப்பொறுக்கிகளின் மோசடியைக் காட்டிலும், செத்துப்போன சிப்பாய்களின் உடலைக் காட்டி இராணுவ உயர் அதிகாரிகள் இதில் நடத்தியிருக்கும் கொள்ளைதான் மிகவும் கீழ்த்தரமானது.  தரைப்படை முன்னாள் தலைமை தளபதிகள் என்.சி.விஜ், தீபக் கபூர், முன்னாள் கடற்படை தளபதி  மாதவேந்திர சிங், வைஸ் அட்மிரல் மதன்ஜித் சிங், மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா ஆகிய அதி உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இக்குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    குடியிருப்பில் இடம் ஒதுக்க வேண்டுமானால், மும்பையில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். ஏற்கெனவே சொந்த வீடு இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் இருந்த போதிலும், குர்கானில் 6 பிளாட்டுகளும் மும்பையில் லோகன்ட்வாலாவில் ஒரு வீடும் வைத்திருக்கும் முன்னாள் தலைமைத் தளபதி தீபக் கபூர், அவை அனைத்தையும் மறைத்துப் பொச்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் வீடு ஒதுக்கப்படும் என்று விதிமுறை இருந்ததால், எல்லா இராணுவத் தளபதிகளும் தங்களது சம்பளச் சான்றிதழை மறைத்து, போர்ஜரி வேலை செய்து சம்பளத்தைக் குறைத்துக் காட்டிச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

    பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நாக்பூரைச் சேர்ந்த பெரும் தொழிலதிபருமான அஜய் சஞ்சேதியின் மகன், மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோரது பெயர்களிலும் ஆதர்ஷ் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. “மாதச்சம்பளம் ரூ.8000 என்று குறிப்பிட்டுள்ள கார் டிரைவர் சுதாகர் மட்கே, 60 இலட்சம் மதிப்புள்ள ஆதர்ஷ் வீட்டை எப்படி வாங்க முடியும்? இந்த நபர் கட்காரியுடைய பினாமி” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் காங்கிரசின் மனிஷ் திவாரி.

    விதிமுறைகளை மீறி இந்தக் குடியிருப்புக்கு அனுமதி அளித்த, 2004-இல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதிப் வியாஸின் மனைவி நீனா வியாஸ், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் துணைச் செயலர் பி.வி. தேஷ்முக் என ஒரு பெரிய அதிகார வர்க்கக் கும்பலும் இக்குடியிருப்பில் தமக்கு இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளது.

    கடலிலிருந்து 500 மீட்டர் தூரம் வரையில் கடலோர ஒழுங்குமுறைப் பிராந்தியம் என்றும் அந்த இடத்தில் வீடுகளோ கட்டிடங்களோ கட்டுவது சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறி மீனவர் குடியிருப்புகள் மற்றும் சேரிப்பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் வீடுகள் மும்பையில் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், தடை செய்யப்பட்ட இந்தப் பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் எவற்றின் மீதும் அரசு கைவைக்கவில்லை.

    மேற்கு கடற்கரை ஓரம் மும்பை முதல் கோவா வரையிலான இயற்கை எழில் கொஞ்சும் கடலோரப் பகுதி, உலகிலேயே ரியல் எஸ்டேட் விலை உச்சத்திலிருக்கும் பகுதிகளில் ஒன்று. இந்தக் கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புதான் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு.

    ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் : இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது !

    கடற்படை துணை அட்மிரல் சஞ்சீவ் பாசின், “இக்குடியிருப்பு கட்டப்பட்டுள்ள இடம், கப்பல்தளத்துக்கு வெகு அருகில் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதால், கடற்படைத் தளத்தை உளவு பார்ப்பது எளிதென்றும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும்” இராணுவ அமைச்சகத்துக்கு எழுதியதால்தான் இத்திட்டம் விசாரிக்கப்பட்டு,  தளபதிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. சஞ்சீவ் பாசின், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும் அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை என்றும் குறிப்பு எழுதியிருந்தார்.

    ஆதர்ஷ் மோசடிகள் பற்றி அறிவதற்காக பூனாவைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்கு இரண்டுமுறை தகவல் மறுக்கப்பட்டது. காரணம், மராட்டிய அரசின் தகவல்  கமிஷனர் ரமானந்த் திவாரியின் மகனுக்கும் ஆதர்சில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பின்னர் தெரியவந்தது.

    தற்போது முதலமைச்சர் மாற்றம், சி.பி.ஐ விசாரணை என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கொலாபாவில் உள்ள இராணுவ எஸ்டேட் அலுவலகத்தின் கோப்புகளில் முக்கியமான ஆவணங்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இராணுவத்துக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டுவதற்கு மார்ச் 2000-இல் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழைக் காணவில்லை. முதன்முதலில் எந்தெந்த சிப்பாய்களுக்கு வீடு ஒதுக்குவதாகச் சொல்லி இந்தத் திட்ட முன்வரைவு முன்வைக்கப்பட்டதோ, அதனையும் காணவில்லை.

    மகாராட்டிர அரசின் நகர்ப்புற வளர்ச்சிச் துறையில் ஆதர்ஷ் சொசைட்டி தொடர்பான கோப்புகளிலும் முக்கியமான காகிதங்களைக் காணவில்லை என்று சி.பி.ஐ. கூறியிருக்கிறது.

    இரண்டு முன்னாள் முதல்வர்களும், மூத்த அதிகாரிகளும் கையொப்பமிட்ட ஆணைகள், சுற்றுச்சூழல் விதிகளைத் தளர்த்தி நகர்ப்புற வளர்ச்சி இலாகா கொடுத்த தடையில்லாச் சான்றிதழ், சாலையின் அகலத்தை 60 மீட்டரிலிருந்து   18 மீட்டராக குறைத்துக் கொண்டு, மீதியுள்ள 42 மீட்டர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கு ஆதர்ஷ் சொசைட்டிக்கு அரசால் வழங்கப்பட்ட அனுமதி, 6 மாடிகளை 31 மாடிகளாக உயர்த்தி கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி – இவை தொடர்பான ஆவணங்கள் காணவில்லை என்று சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.

    ஆதர்ஷ் ஊழலைத் தொடர்ந்து, இதைவிடப் பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் ஊழலான லவாசா ஊழல் அம்பலமாகியிருக்கிறது. விவசாய நிலங்கள், பழங்குடி மக்களின் நிலங்கள் அடங்கிய சுமார் 12,316 ஏக்கர் மலைப்பிராந்தியத்தை மகாராட்டிர அரசு 2001-இல் தாரை வார்த்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.

    “சிறு கடை வியாபாரிகளையும், குடிசை வாசிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களுடைய கடைகளையும் வீடுகளையும் இடித்துத் தள்ளும் அரசு, ஆதர்ஷ் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார், மேதா பட்கர். தனக்குச் சொந்தமான நிலத்தையே காப்பாற்றிக் கொள்ளமுடியாத இராணுவம், தேசத்தை எப்படிக் காப்பாற்றும் என்று எள்ளி நகையாடுகிறார். மும்பை சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு அருகிலேயே இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விலை பேசப்பட்டு கட்டிடங்களாக மாறியிருப்பதையும் அம்பலமாக்கியிருக்கிறார்.

    நாடு முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமாக இருக்கும் பல இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் விலை பேசப்பட்டவை எத்தனை, எத்தனை ஆயிரம் கோடிகளை இராணுவ அதிகாரிகள் விழுங்கியுள்ளார்கள் என்ற விவரங்கள் ஒருக்காலும் வெளியே வரப்போவதில்லை.

    ஆதர்ஷ் ஊழல் அம்பலமானவுடன்  தலைமைத் தளபதிகள் கபூர், விஜ் ஆகியோர் “இந்த வீடுகள் சிப்பாய்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று எங்களுக்குத் தெரியாது” என்று பச்சையாகப் புளுகியிருக்கின்றனர். வீடுகளைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அறிவித்திருக்கின்றனர். தற்போதைய இராணுவத் தலைமைத் தளபதியோ, “இந்த சிறிய விசயத்தை வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது” என்று பேசியிருக்கிறார்.

    நேர்மை, கட்டுப்பாடு, தியாகம், ஒழுக்கம் என்றெல்லாம் கதை சொல்லித்தான், சிவில் சமூகத்துக்கு மேம்பட்ட கேட்பாரற்ற அதிகாரமாக இராணுவம் பாதுகாக்கப்படுகிறது. பச்சைப் படுகொலைகள் பல அம்பலமாகி, காஷ்மீரே பற்றி எரியும் சூழ்நிலையிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் இரத்து செய்யக்கூடாது என்றும், தாங்கள் செய்யும் சட்டவிரோதப் படுகொலைகளுக்காக எல்லோரையும்போல நீதிமன்றத்தில் நின்று இராணுவம் பதில் சொல்ல முடியாது என்றும் திமிர்த்தனமாகப் பேசி வருகிறது இராணுவத்தின் அதிகார வர்க்கம்.

    ஆனால், கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதப்பசுவாகச் சித்தரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் இராணுவத்தின் யோக்கியதை ஆதர்ஷ் ஊழலில் சந்தி சிரிக்கிறது. போர் முனையில் உயிர் விட்ட தனது சிப்பாய்களுடைய பிணத்தைக் காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டியிருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகளைக் காட்டிலும் தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

    பொதுச்சொத்தை கொள்ளையிடுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் இராணுவத்தின் உடுப்பையும் களைந்து நிர்வாணமாக்கியிருக்கின்றன. ஆயுதம் முதல் சிப்பாய்களுக்கான அன்றாட ரேசன் வரையில் இராணுவத்துக்காக செய்யப்படும் அனைத்துச் செலவுகளிலும், 10% கமிஷன் என்பது இந்திய இராணுவத்தில் அமல்படுத்தப்படும் எழுதப்படாத விதி.  ஆதர்ஷ் ஊழலில் இந்த சதவீதக் கணக்கு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. 103-க்கு 100 ஊழல். அதாவது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர்முனையில் இருந்தவர்கள்.

    ஆதர்ஷ் என்ற இந்திச் சொல்லுக்கு முன்மாதிரி என்று பொருள். தேசத்துக்கே இராணுவம்தான் முன்மாதிரி எனும்போது, இராணுவம் சம்பந்தப்பட்ட ஊழலும் முன்மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?

    __________________________________

    – புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
    __________________________________

    வினவுடன் இணையுங்கள்

    தொடர்புடைய பதிவுகள்: