பாஜக-வை வீழ்த்த இதை செய்திடுக! | தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாஜக-வை வீழ்த்த இதை செய்திடுக! | தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
ஏப்ரல் 2024 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மோடி ஆட்சி – உழைக்கும் மக்களுக்கு இருண்ட காலம்!
| தோழர் வெற்றிவேல் செழியன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் உனக்கு பிஞ்ச செருப்பா? |
தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அல்-குத்ஸ் தினமான இன்று (05-04-2024) உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளியன்று உலக அளவில் கடைபிடிக்கப்படும் ஒற்றுமை நாள் தான் அல்-குத்ஸ் தினம்.
அல்-குத்ஸ் தினம் பாலஸ்தீனத்திற்கான ஆதரவையும், தற்போதைய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் ஒரு சர்வதேச தினமாகும். ஈரான், மலேசியா, இந்தோனேசியா, ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்று கூடினர்.
வெள்ளிக்கிழமையான இன்று தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற பேரணிகளில் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் பதாகைகளுடன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பலர் தங்கள் கைகளில் “இஸ்ரேல் ஒழிக” என்று எழுதப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர். மற்றவர்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளை தீயிட்டு எரித்தனர்.









நன்றி: அல்-ஜசீரா
![]()
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பா.ஜ.க தான் மக்களின் முதல் எதிரி | எம்.யாகூப் | தோழர் அமிர்தா
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

“தேர்தலின் போது மட்டும் வரும் வேட்பாளர்கள் பிறகு திரும்பி கூட பார்ப்பதில்லை” என தேர்தலை புறக்கணிக்கும் கீழ மூவக்கரை மீனவ கிராம மக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழ மூவக்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களின் அடிப்படை வசதியான ரேஷன் கடை, சமுதாயக் கூடம், மீன் ஏல கூடம், மீன் வலை பின்னும் கூடம், மின் விளக்குகள், மானியத்தில் டீசல், கடலில் தூண்டில் வளைவு என அடிப்படை வசதிகளை கேட்டு 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்திடம் போராடியும் தங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் தேர்தலின் மீது அதிருப்தி அடைந்த மீனவர்கள் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி, கிராம மக்கள் அனைவரையும் கூட்டி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும், கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தப்போவதாகும், அதனைத் தொடர்ந்து தங்களின் ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டையை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி அன்று பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினரை “இத்தனை ஆண்டுகளாக எங்களை பார்க்க வராத நீங்கள் இப்போது ஏன் பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளீர்கள்” என திருப்பி அனுப்பியுள்ளனர்.
படிக்க: சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு தேர்தல் எதற்கு? தேர்தலைப் புறக்கணிக்கும் ஏர்வாடி மக்கள்
”தேர்தலின் போது மட்டுமே எங்கள் கிராமங்களுக்கு வரும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் முடிந்த பிறகு எங்களை துளியும் கண்டுகொள்ளப் போவதில்லை, பிறகு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? வாக்களித்தும் எங்களின் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை தேவைகள் இதுவரை நிறைவேற்றித் தரப்படவில்லை” என்று தங்களின் வேதனையை மீனவ மக்கள் வெளிப்படுத்தினர். “எங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தந்த பிறகே நாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம்; இல்லை என்றால் நாங்கள் தேர்தல் தேதி அன்று வாக்களிக்க போகாமல் வீட்டிலேயே இருக்கப் போகிறோம்” என்று மக்கள் தங்கள் முடிவு குறித்துக் கூறியுள்ளனர்.
வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் திசைவழியைத் தீர்மானிக்கும் தேர்தலாகக் கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்கிறார்களோ, அதேபோல் மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்காத கட்சிகளையும் தேர்தலையும் மக்கள் புறக்கணிக்கவே செய்வார்கள்.
மக்களை பாதிக்கும் பிரச்சினைகளான புதிய கல்வி கொள்கை, ஜி.எஸ்.டி., தொழிலாளர் நல சட்டம் 2022, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 என அனைத்து பாசிச சட்டங்களையும் திரும்பப்பெறுவோம் என்ற வாக்குறுதியை எதிர்க்கட்சிகள் தர வேண்டும்.
![]()
தமிழ் பிரியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஒன்றிய அரசின் 62 சதவிகித புதிய சைனிக் பள்ளிகளை (Sainik Schools) நிர்வகிக்கும் பொறுப்பு ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார அமைப்புகளையும் பா.ஜ.க-வையும் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் ஆர்.டி.ஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) மூலம் அம்பலமாகியுள்ளது.
ஒன்றிய அரசின் சைனிக் பள்ளிகள் எனப்படும் இராணுவ பள்ளிகள், இந்திய இராணுவத்தில் சேருவதற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பள்ளிகள் ஆகும். சைனிக் பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான சைனிக் பள்ளிகள் சங்கத்தால் (Sainik Schools Society) நிர்வகிக்கப்படுகின்றன. 2013 – 2014 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையின்படி, தேசிய பாதுகாப்பு அகாடமி (National Defence Academy) மற்றும் இந்திய கடற்படை அகாடமியில் (Indian Naval Academy) சேர்ந்த கேடட்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் பேர் சைனிக் பள்ளிகளின் மாணவர்கள் ஆவர்.
2022-ஆம் ஆண்டுக்கு முன்னதாக, நாடு முழுவதும் ஒன்றிய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வந்தன. இந்நிலையில், அக்டோபர் 2021-இல் ஒன்றிய பா.ஜ.க அரசு, தனியார் நிறுவனங்கள் சைனிக் பள்ளிகள் சங்கத்துடன் இணைந்து புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் மேலும் 100 சைனிக் பள்ளிகளை நிறுவ அனுமதி அளித்தது.
அதன்படி மே 05, 2022 மற்றும் டிசம்பர் 27, 2023 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 40 புதிய இராணுவப் பள்ளிகளை நிறுவ தனியார் நிறுவனங்கள் சைனிக் பள்ளிகள் சங்கத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதில் குறைந்தது 25 பள்ளிகளை (62 சதவிகித பள்ளிகளை) அமைக்கும் உரிமம் சங்கப் பரிவார கும்பல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், 11 பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பை பா.ஜ.க-வினர் பெற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் வசம் 8 சைனிக் பள்ளிகள் சென்றுள்ளன; பிற இந்துத்துவ அமைப்புகளிடம் 6 சைனிக் பள்ளிகள் சென்றுள்ளன. அதானி குழுமத்தின் கீழ் செயல்படும் அறக்கட்டளை ஒன்றும் ஒரு பள்ளியை நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.
படிக்க: உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !
ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்பின் கீழ் செயல்படும் இந்தியாவின் எந்தவொரு மத சிறுபான்மையின அமைப்புகளுக்கும் இதுவரை சைனிக் பள்ளிகளை நடத்தும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் / ஆதரவு மாநிலங்களில் மட்டுமே புதிய சைனிக் பள்ளிகளை நடத்தும் ஒப்பந்தம் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தியாவின் முதல் பெண்கள் இராணுவப் பள்ளிகளை இந்துத்துவவாதி சாத்வி ரிதம்பரா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் பிரிவான துர்கா வாஹினியின் நிறுவனர் சாத்வி ரிதம்பரா என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான ராம ஜன்மபூமி இயக்கத்தை முன்னின்று நடத்திய நபர்களில் ஒருவராக இவர் இருந்துள்ளார். ஜனவரி 2-ஆம் தேதி சைனிக் பள்ளி திறப்பு விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரிதம்பராவின் இந்த ’கரசேவை’யை அங்கீகரித்துப் பேசியுள்ளார்.
படிக்க: தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம் !
ஆர்.எஸ்.எஸ்-இன் கல்விப் பிரிவான வித்யா பாரதி அகில பாரதிய சிக்ஷா சன்ஸ்தானுக்கு (Vidya Bharati Akhil Bharatiya Shiksha Sansthan), 7 சைனிக் பள்ளி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
1937 ஆம் ஆண்டில் மூஞ்சேவால் நிறுவப்பட்டு, தற்போது மத்திய இந்து இராணுவ கல்வி சங்கத்தால் (Central Hindu Military Education Society) நடத்தப்படும் நாசிக்கின் போன்சாலா இராணுவப் பள்ளியும் சைனிக் பள்ளியாக செயல்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2006 நாந்தேட் குண்டுவெடிப்பு மற்றும் 2008 மாலேகான் குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் போன்சாலா இராணுவப் பள்ளியில் பயிற்சி பெற்றதாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti-Terror Squad) குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு கட்டமைப்பை பாசிசமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருவதையே இது நமக்கு உணர்த்துகிறது. இராணுவத்தில் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு ஆட்பட்டவர்களை உள்ளே நுழைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் காவி கும்பல் தனது இந்துராஷ்டிர இலட்சியத்தை அடைவதற்கு இராணுவத்தை நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
![]()
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஐந்து வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் குழந்தைகளில் 10-இல் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த இரண்டரை வருடங்களில் பொருளாதார நெருக்கடி, காலநிலை நெருக்கடி மற்றும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் 45 சதவீதம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் உள்ளனர்.
உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய விகிதமானது, ஆப்கானிஸ்தானில் தான் அதிகமாக உள்ளது என்று யுனிசெஃப் (UNICEF) இன் தகவல் தொடர்புத் தலைவர் டேனியல் டிம்மே கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கிடைக்கக்கூடிய உதவிகளின் வீழ்ச்சி மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ வல்லுநர்கள் போன்ற சூழல்கள் ஏற்கெனவே பலவீனமாக இருந்த சுகாதார கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.
ஐ.நாவின் வளர்ச்சித் திட்டத்தின் ஆய்வின்படி, ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை.






![]()
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (Reporters Sans Frontières) என்ற சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்பு ஆண்டுதோறும் 180 நாடுகளுக்கான உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் 2014-ஆம் ஆண்டில் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 140-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ஆம் ஆண்டில் 161-ஆவது இடத்திற்குச் சரிந்தது.
மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் இந்தியாவில் நடந்த எந்த செய்தியாளர் சந்திப்பிலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததில்லை. பத்திரிகையாளர்களைச் சந்தித்தாலும் தனது உரையை மட்டும் நிறைவு செய்துவிட்டுச் சென்றுவிடுவார். பத்திரிகையாளர்கள் என்றாலே அவருக்கு ஒவ்வாமை தான். டென்மார்க் நாட்டில் மே, 2022-இல் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பதற்காக மோடியை சூழ்ந்துகொண்ட போது “ஓ மை காட்” என்று அவர் பயந்தோடியது உலகறிந்ததே. வெளிநாடுகளில் மட்டும் இரண்டு முறை, 2015-இல் இங்கிலாந்திலும் 2023-இல் அமெரிக்காவிலும், மோடி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
Life without a Teleprompter!!#OhMyGOD pic.twitter.com/NyCF31a00U
— Srinivas BV (@srinivasiyc) May 3, 2022
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது பத்தாண்டுக்கால பதவிக்காலத்தில் 117 பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்றுள்ளதாக, 2012 மற்றும் 2014 காலகட்டத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி மோடி மீதான தனது விமர்சனத்தை முன்வைக்கும் போது கூறினார்.
பத்திரிகையாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் மத்திய அமைச்சகங்களை அணுகுவதில் தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சான்றாக, 2019 ஆம் ஆண்டில், அதிகாரிகளைச் சந்திக்க விரும்பும் பத்திரிகையாளர்களுக்கு முன் அனுமதி முறையை (system of prior appointment) நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு, ஊடகவியலாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
படிக்க: நியூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!
இந்தியாவில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் மோடி ஆட்சியில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். 2018-ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் இருந்தும், 2019-ஆம் ஆண்டு முதல் அசாமில் இருந்தும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செய்தி அறிக்கை அளிக்க வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என்று மோடி அரசு கூறியது. வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி, விசா ஆகியவை இந்திய அதிகாரிகளால் அதிகளவில் நிராகரிக்கப்படுகின்றன.
2023-ஆம் ஆண்டில், 2002 குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கை விமர்சிக்கும் பி.பி.சி ஆவணப்படத்தின் மீதான தடையும், அதனைத்தொடர்ந்து டெல்லி பி.பி.சி அலுவலகத்தில் நடந்த சோதனைகளும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது அவருடன் பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்லும் நடைமுறை இந்தியாவில் இருந்தது. அந்த நடைமுறையையும் பிரதமர் மோடி முடிவுக்குக் கொண்டுவந்து விட்டார்.
இந்தியாவின் செய்தித் துறையின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளம்பரங்கள் உள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பதவிக்காலத்துடன் ஒப்பிடும்போது, 2014 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மோடி அரசு அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் விளம்பரங்களை உயர்த்தியுள்ளதாக அரசின் தகவல்கள் காட்டுகின்றன. ஆனால் 2017 முதல், இந்த எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
விமர்சனப்பூர்வமாக செய்திகளை வெளியிட்டதற்காக, 2019 ஆம் ஆண்டில், டைம்ஸ், ஏபிபி (ABP) மற்றும் இந்து (Hindu) ஆகிய மூன்று செய்தித்தாள் குழுக்களுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்திவிட்டது.
மேலும், இணையத்தை ஒழுங்குபடுத்துதல் என்ற பெயரில் மோடி அரசு டிஜிட்டல் ஊடகங்களை தணிக்கை செய்யும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை உருவாக்கியது.
தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு உரிமங்களை வழங்குவதிலும் மோடி அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. புதிய சேனலைத் தொடங்குவதற்காக குவின்டில்லியன் மீடியா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ப்ளூம்பெர்க் மீடியா ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ”ப்ளூம்பெர்க் குயின்ட்”, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உரிமத்திற்காக மூன்று ஆண்டுகளாக காத்திருந்தது. உரிமம் கிடைக்காததால் இந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது. ஆனால், சங்கி அர்னாப் கோஸ்வாமியின் செய்தி சேனலான ”ரிபப்ளிக் டிவி” தொடங்கப்படுவதற்கு மிக விரைவாக சில மாதங்களிலேயே அரசால் உரிமம் வழங்கப்பட்டது.
அதேபோல், மலையாள செய்தி சேனலான ”மீடியா ஒன்”னின் உரிமத்தைப் புதுப்பிக்க ஜனவரி 2022-இல் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்துவிட்டது. பின்னர் ஏப்ரல் 2023-இல் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அனுமதி அளிக்குமாறு கூறியது.
மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவது நான்கு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists) சேகரித்த தரவுகளின்படி, 2014 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 36 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த எண்ணிக்கை 8 ஆக இருந்தது.
படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!
எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (Reporters Sans Frontières) நிறுவனத்தின் தரவுகளின்படி, மோடி ஆட்சியில், 2014 முதல் 2024 வரை, இந்தியாவில் 28 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கருப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் கீழ் மோடி அரசு 16 பத்திரிகையாளர்களின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களில் 7 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். 2019-ஆம் ஆண்டு திருத்தத்திற்குப் பிறகு இச்சட்டம் மிகவும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு எதிராக அரசின் கண்காணிப்பு மற்றும் ஸ்பைவேர் பயன்பாடு, செய்தி நிறுவனங்களில் வருமான வரி ’ஆய்வுகள்’, இளம் பத்திரிகையாளர்களின் வீடுகளில் அச்சுறுத்தும் வகையிலான சோதனைகள் ஆகியவை பாசிச மோடி ஆட்சியில் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.
பாசிஸ்டுகளிடம் கருத்துச் சுதந்திரத்தைக் கோரிப் பெற முடியாது. பாசிசத்தை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதன் மூலம் மட்டுமே, நமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியும்.
![]()
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழல் தந்தி டிவி | தோழர் அமிர்தா
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கடந்த மார்ச் 31 அன்று பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமின் வீதிகளில் திரண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காசாவில் சிறைக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்த பின்பு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தால் நெதன்யாகுவுக்கு உள் நாட்டிலேயே நெருக்கடி அதிகரித்துள்ளது.
“எங்களுடைய குடும்பத்தினரை மீட்டு கொண்டுவரும் வரை இந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு இரவிலும் தெருக்களில் இறங்குவோம்” என்று போராடும் மக்கள் கூறியுள்ளனர்.
நெத்தன்யாகுவின் முகத்தில் இரத்தம் இருக்கக்கூடிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். மேலும் “நீதான் பொறுப்பு, நீதான் குற்றவாளி” என்ற பதாகைகளையும் வைத்திருந்தனர். எங்களுக்கு “இப்போதே தேர்தல் வேண்டும்!” எனவும் போராட்டக்காரர்கள் முழங்கினர்.
காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பே, நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நெதன்யாகுவுக்கு எதிராக பல மாதங்களாக இஸ்ரேல் தெருக்களில் போராட்டங்கள் நடைபெற்றது நினைவு கொள்ளத்தக்கது.
இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 32,782-க்கும் அதிகமான பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது.
போராட்டத்தின் புகைப்படங்களை வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.








![]()
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பாடி, குருநாதபுரம், குரும்பூர், விச்சூர், சித்தம்பல், மருதாவூர், பத்தபாலூர் என ஏழு கிராம மக்கள் பல ஆண்டுகளாகப் போராடியும் தங்களுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரபடாததால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கிராமங்களில் சாலைகள் சீரமைக்கபடாமல் மண் சாலை குண்டும் குழியாகவும், மின்கம்பிகள் பழுதடைந்து சரி செய்யப்படாமலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக மழை வரும் போது சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பள்ளி மாணவர்கள் மழைக் காலங்களில் பள்ளிக்கு செல்லமுடியாத நிலையில் உள்ளனர் என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 3 கிலோமீட்டர் வரை மண் சாலையாக உள்ளதால் மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளுக்கு நகர்புறங்களுக்கு செல்வது சிரமமாக இருக்கிறது. சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்ற எங்களின் குரல்கள் கேட்கபடாமல் ஏர்வாடி ஊராட்சி மட்டும் தனித்து விடப்பட்டதாக இருக்கிறது.
இதையொட்டி பல முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை நேரடியாக சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினரும் ஒருமுறை கூட தங்கள் கிராமத்திற்கு வந்து தங்களின் அவலநிலையைப் பார்கவில்லை என வேதனைப்படுகின்றனர் கிராம மக்கள்.
படிக்க: கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம் வரவேற்கிறது
இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்த மக்கள் “எங்களுக்கான அடிப்படை வசதிகளை துளியும் செய்து தராத இந்த தேர்தல் முறையில் நாங்கள் வாக்களிக்க மாட்டோம். அடிப்படை வசதிகளை செய்து தந்தபிறகே நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்போம். இல்லையென்றால் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்” என ஏழு கிராம மக்களும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்தியா கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சினைகளைத் தங்களின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அது அவர்களுக்கு பின்னடைவாகவே அமையும்.
தேர்தல் சமயத்தில் போராடுவதன் மூலம் மட்டுமே தங்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால், தேர்தல் புறக்கணிப்பை ஒரு போராட்ட வடிவமாக மேற்கொள்ள துணிந்துவிட்டனர்.
![]()
தமிழ் பிரியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


கோவையில் பாசிச பி.ஜே.பி கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமிட்டு
இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல்!
மக்கள் அதிகாரம் கண்டனம்!
02.04.2024
கடந்த வெள்ளிகிழமை (29.3.2024) அன்று கோவை சங்கனூர் பகுதி சண்முகா நகரில் வசித்துவரும் ஜீனத் என்பவரின் மகனான நவ்ஷாத் என்பவரை 30 பேரை கொண்ட பி.ஜே.பி.யின் குண்டர்படை தாக்கியுள்ளது. இப்பகுதியில் பி.ஜே.பி தேர்தல் பிரச்சாரம் செய்த போது, ஜீனத் குடும்பத்தினர் வீட்டிற்குள் நோன்பு தொழுகை செய்துகொண்டிருந்தனர். அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக பி.ஜே.பி கும்பல் வீட்டின் கதவைத் தட்டியுள்ளது. அதன்பின் அவரது இளைய மகன் கதவைத் திறந்து என்னவென்று கேட்டுள்ளார். அதற்க்கு பி.ஜே.பி குண்டர்படையினர் “உள்ளே இருப்பவர்களை வெளியே வர சொல்” என்று மிரட்டியுள்ளனர். பேசிக்கொண்டிருந்த போது ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட்டுக்கொண்டும் ”உன் பெயர் என்னடா” என்று கேட்ட பின் ”துலுக்கனுக நீங்க எல்லாரும் இப்படி தான் இருப்பீங்களா” என்று கூறிய படி அவரை தாக்கியுள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஜீனத்தின் இளைய மகன் மீது போலீசால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து 15 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதோடு பினை கிடைக்காதபடி செய்துள்ளது கவுண்டம்பாளையம் போலீசு. இந்த விவகாரத்தில் பாசிச பி.ஜே.பி குண்டர்படையினரின் மதவெறி தாக்குதலுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ள போலீசு அதிகாரிகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகரை ஏற்க மறுத்த போலீசு அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தாக்குதலை நடத்திய பாசிச பி.ஜே.பி குண்டர்படையினரை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதோடு, அப்பகுதியை சேர்ந்த பி.ஜே.பி பிரமுகர் சங்கர் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
இதேபோல், கடந்த 27.03.2024 அன்று நேசனல் ஜனசக்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் “NO MODI, NO GUARANTEE” என்று சுவரொட்டிகள் ஒட்டிய, அக்கட்சியின் தலைவரான ரஹ்மான் கே மூப்பனார் என்பவரை பி.ஜே.பியின் குண்டர்படையினர் “யாரு டா நீ தீவிரவாதியா உன்ன எவன்டா போஸ்டர் ஒட்ட சொன்னது அவன இங்க வர சொல்லு இல்ல உனக்கு அவ்வளவு தான்” என்று மிரட்டியதோடு 30க்கும் மேற்பட்ட பி.ஜே.பி குண்டர்படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது.
படிக்க: மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்
இதுபோன்று, பாசிச பி.ஜே.பி குண்டர்படையினரின் தாக்குதல் தொடர்ந்துக்கொண்டிருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு சவால் விடுவதாகும். களத்தில் இக்கும்பலுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் எதுவும் பதிலடி கொடுக்காமல் இருப்பது இக்கும்பலுக்கு இன்னும் துணிச்சலை கொடுக்கிறது. இந்த பாசிச கும்பலுக்கு எதிராக களத்தில் இன்னும் தீவிரமாக பிரச்சாரம் செய்வதும், இக்கும்பலை எதிர்கொண்டு களத்தில் தக்க பதிலடி கொடுத்து முறியடிப்பதும் அவசியமாகும்.
பி.ஜே.பி குண்டர்படையினரால் தாக்குலுக்குள்ளான குடும்பத்தினர் பேசும் போது “இது தமிழ்நாடு தானா, இல்லை வட மாநிலமா” என்ற கேள்வியை எழுப்புயுள்ளனர். தமிழ்நாடு அரசே, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் “ஜெய் ஸ்ரீ ராம்” கோஷ்மிட்ட தாக்குதல் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளது. இதனை, உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் உத்தரபிரதேசம், குஜராத், திரிபுரா போன்ற வட மாநிலங்களின் நிலை இங்கும் வருவதை யாராலும் தடுக்க முடியாது.
![]()
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
