Saturday, June 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 111

பிரெஞ்சு ‌புரட்சி‌ தின விழாவில் பாசிஸ்டு மோடி!

மகத்தான‌‌ பிரெஞ்சு ‌புரட்சி‌ தின விழாவில், பாசிஸ்டு மோடி!
அழுகி நாறும்‌ முதலாளித்துவ ஜனநாயகம்!!

ஜூலை 14, 1789-ஆம் ஆண்டு நடந்தேறிய மகத்தான பிரெஞ்சு புரட்சி, பிரபுத்துவ கோமான்களை வீழ்த்தி நாடாளுமன்ற அமைப்பையும், தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை, பத்திரிகை சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை போன்ற உரிமைகளையும் பெற்றுத்தந்தது. அந்த பெருமை மிக்க புரட்சி நாளை, பிரான்ஸ் அரசு தேசிய தினமாக கொண்டாடி வருகிறது.

மேற்கண்ட நாளில் இந்தாண்டு சிறப்பு விருந்தினராக பாசிஸ்ட், கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி மோடி பங்கேற்பார் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைக் கேட்கும்போது அரசியல் – சமூக வரலாறு அறிந்தவர்கள் அதிர்ச்சியடையலாம். உண்மையில் இப்படி அதிர்ச்சியடைய வேண்டியதில்லை என்பதைத்தான் உலகின் அரசியல் போக்கு நமக்கு உணர்த்துகிறது.

உலக நாடுகளில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது கொள்ளையை தங்கு தடையின்றி நடத்துவதற்கும், உலகமயமாக்கப்பட்ட இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளுற்பத்தியை பேணி பாதுகாப்பதற்கும் ஏதுவான பாசிச அரசுகளும் கருத்துகளும் உலகம் முழுவதும் வலுப்பெற்று வருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இந்த போக்கு உள்ளது. இந்தியாவிலும் நாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தின் அடக்குமுறையை எதிர் கொண்டு வருகிறோம்.

தேசிய விடுதலை இயக்கங்கள், பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கங்கள், சீர்த்திருத்த இயக்கங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு நாடுகளிலும் உணர்வுப் பூர்வமான பங்களிப்பால் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து வாழும்  தலைவர்கள், கருத்துக்களை வெற்று  அடையாளமாக   மாற்றி அதன் அடிப்படை  கருத்துக்களை  இருட்டடிப்புச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது ஆளும் வர்க்கம்.


படிக்க: பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’


இப்படித்தான், இந்தியாவில் காலனியாதிக்க காலத்தில் ரத்தம் தோய்ந்த அநீதியும் அடக்குமுறையும் ஏவப்பட்ட பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தை கண் கவரும் சுற்றுலா தளமாகவும், பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை, வெறும் அடையாளமாகவும் மாற்றியுள்ளது பாசிச கும்பல். அதன் தொடர்ச்சியாக தற்போது அம்பேத்கரை உள் இழுக்க பார்க்கின்றனர் பாசிசஸ்டுகள். இந்த வரிசையில் பிரான்சின் தேசிய தினமும் அடங்கும்.

பதினேழாம் நூற்றாண்டின் அன்றைய பிரான்ஸ் பிரபுத்துவ கோமான்களின் அடக்குமுறை-அநீதி நாணயத்தின் இரண்டு பக்கங்களாக மக்களின் வாழ்வை பறித்து வந்தது. இதற்கெதிராக ரூசோ-வின் சமுதாய ஒப்பந்தம் மற்றும் பிரான்சின் அறிவொளி இயக்கத்தின் பிரதிநிதிகளான தீதரே உள்ளிட்ட மாபெரும் சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்கள், மேற்கண்ட சமூக அவலத்தின் மீது வினையாற்றி மக்களின் சிந்தனையை  பற்றிக்கொண்டதன் தொடர்ச்சியாக பாஸ்டில் சிறை மக்களால் தகர்க்கப்பட்டு புரட்சி வெற்றி வாகை சூடியது. பிரபுத்துவ கோமான்கள், மதகுருமார்கள், மன்னர்கள் ஆகியோரின் தலைகள் கில்லெட்டில் துண்டிக்கப்பட்டு ரத்தத்தில் வெற்றி பொறிக்கப்பட்டது.

இது பற்றி மார்க்சிய மூலவர்களில் ஒருவரான, எங்கெல்ஸ் கூறுகையில், “பிரெஞ்சு புரட்சி பதினெட்டாம் நூற்றாண்டின் குடிமகனது உணர்வின் கருத்துருவாக்கமே அன்றி வேறல்ல” என்றார்.

மேலும், “அறிவின் வெற்றியால் உருவாகிய சமுதாய அரசியல் நிறுவன அமைப்புகள், தத்துவவியலாளர்களது மகோன்னத வாக்குறுதிகளுடன் ஒப்பிடுகையில் கொடிய ஏமாற்றத்துக்குரிய கேலிக்கூத்துகளாகிவிட்டன. லட்சிய முழக்கமான சகோதரத்துவம், போட்டாபோட்டியின் சூழ்ச்சியிலும், சூதிலும் மெய்யாக்கம் கண்டது. சுதந்திரம் என்ற முழக்கமானது, உண்மையில் வெட்கங்கெட்ட வாணிப சுதந்திரத்தையே, நோக்கமாகக் கொண்டிருந்தது. மொத்தத்தில் பதினேழாம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களால் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பைத்தான் யோசிக்க முடிந்தது” என்றார்.


படிக்க: இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!


மேற்கண்ட பிரெஞ்சு புரட்சியின் தத்துவவியலாளர்கள் கருத்துக்கள் அன்றைய சமூக அமைப்பை முன்னோக்கி நகர்த்துவதை இலக்காக கொண்டிருந்தது. அவர்கள் முதலாளித்துவம் குறித்து அறிய இயலாதது காலம் இட்ட வரம்பு. உண்மையில் ரூசோ உள்ளிட்ட தத்துவியலாளர்கள் இன்னும் சில பத்தாண்டுகள் வாழ்ந்திருந்தால் அவர்களே கூட முதலாளித்துவ உற்பத்தி முறையை காரி உமிழ்ந்திருப்பார்கள். அந்த காலத்தில் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையும் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையேயான முரணும் பிரான்சில் அறை குறையாகவே வளர்ந்திருந்தது.

இந்த பிரெஞ்சு புரட்சிக்கு பின்பு ஆளும் வர்க்கமாக தன்னை அமர்த்திக் கொண்ட முதலாளி வர்க்கம் மேலே விவரித்த அநீதி – அடக்குமுறைகளை தொடர்ந்து வருகிறது. வேலையின்மை, ஓய்வூதிய வயது வரம்பு உயர்வு, விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமை பறிப்பு ஆகிய காரணங்களால் மக்கள் வாழ முடியவில்லை. ஆகப் பெரும்பான்மையான மக்களின் நல வாழ்விற்கு தொடர்பு இல்லாத நாடாளுமன்றமும் இதர அதிகார வர்க்க அமைப்புக்களும் யாருக்கு வேண்டும்?

மேற்படி, மக்களை ஏய்க்கவும் பாசிச அடக்குமுறையை கொண்டு வருவதற்கும் வாய்ப்பாக இருக்கும் இந்நிறுவனங்களை பயன்படுத்துவதில் தான் இந்தியாவின் மோடியும் பிரான்சின் இமானுவேல் மேக்கரனும் ஒன்றுபடுகின்றனர். எனவே, புரட்சி தின விழாவை கொண்டாட்ட நாளாக அனுசரிப்பதின் மூலம் தங்களது கொலை முகத்தை மறைத்துக் கொள்கின்றனர்.

நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் பேச்சு உரிமை, கூட்டம் கூடும் உரிமைகளை பெற்றெடுத்த புரட்சி தின விழாவை கொண்டாடும் நேரத்தில் ஆகப்பெரும்பான்மையான நாடுகளில் அவர்கள் கூறிய ‘ஜனநாயக’ உரிமைகள் காகிதத்தில் இருப்பதைத்தான் பார்க்கிறோம்.

தங்களின் போலித்தனங்களை மறைத்துக் கொள்ள காலாவதியான நாடாளுமன்ற அமைப்பு முறையை தேசிய தினமாக கொண்டாடும் இவர்களை பிரான்ஸ் – இந்திய பாட்டாளி வர்க்கம் புயலுக்கு முன் அமைதியைப்போல பார்த்துக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தை அப்புறப்படுத்துவதுதான் உண்மையான மக்களுக்குரிய தேசிய தினமாக இருக்கும். அதற்கான வேலையை நாம் செய்து முடிப்போம்.

ஆ.கா.சிவா

என் பெயரும் ராமன் தான்! || கவிதை

ன் பெயரும் ராமன் தான்!

மலக்குழியில்
இறங்கப் போகிறேன்
எந்த சாமியை வேண்டுவது
அயோத்தி ஸ்ரீ ராமனை வேண்டுவதா?

என்னைப் பீயள்ளப்
படைத்தவனை அழைக்கிறேன்
என்னை காப்பாற்ற வருவானா?

மலக்குழியில்
மூச்சு அடைக்கையில்
எப்படி அழைக்கலாம் ராமனை?

ராமன் என்றாலே
கண் முன்னால் சம்பூகன் வந்து போகிறானே
சீதை சிதையில் எரிகிறாளே !

ஐயோ காப்பாத்துடா ராமா என்று
கதறியபடி நான் செத்துப் போனால் என்னவாகும்?
ஸ்ரீ ராமனை அவதூறு செய்தான் என்றல்லவா ஆகும்

செத்துப் போன என்மீது
தேசத் துரோக வழக்கு பாயும்
ஸ்லீப்பர் செல்களாக
என் குடும்பம் அடுத்த நாள் செய்தியில் வரும்

வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
ராமனை அழைத்து
செத்து செத்து வாழ்வதைவிட
மலத் தொட்டியில் மாண்டு போவதே மேல்

இன்னும் கொஞ்ச நேரத்தில்
மூச்சடைத்து விடும்
மலத் தொட்டியின் ஒரு மூலையில் இருப்பேன்

என் தாயிடம் சொல்லிவிடுங்கள்
என் பெயரைச் சொல்லி அழ வேண்டாம் என்று
ஏனென்றால் என் பெயரும் ராமன் தான்.

மருது

வீரமரபு பாடல் | ம.க.இ.க | சிவப்பு அலை | Veera marabu Video Song

ர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மாநாடை ஒட்டி ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் தயாரித்து வெளியிட்ட வீரமரபு பாடல் இன்று 11 மணியளவில் வினவு யூடியூபில் வெளியிடப்படும்.

Veera marabu Song | வீரமரபு பாடல் | Red wave | ம.க.இ.க

பாருங்கள்! பகிருங்கள்!!

எமது பல்வேறு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தாரீர்… எமது வளர்ச்சிக்கு நன்கொடை தாரீர்!


நீங்கள் நன்கொடை செலுத்துவது எங்கள் பணியை மேலும் வளரச் செய்யும். நன்றி!

NAME : S.MAHALAKSHMI
ACCOUNT NO : 6938161028
IFSC CODE : IDIB000M246
Branch : MOGAPPAIR (2147)

Account Type: Savings

Mobile – (91) 93 8465 9191
Email – vinavu@gmail.com

வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 15 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! | பகுதி 2

மதுரையில் மே 15, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி – மாநாட்டை வாழ்த்தி வரவேற்றும் ஜனநாயக அமைப்புகள்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்! மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.

000

தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கிறது காவிப்படை! || மே 15 மாநாட்டிற்கு வாரீர்! || மா.முத்துக்குமார்

000

மே 15 மதுரை மாநாட்டை வெற்றிபெற செய்வோம்! || வழக்கறிஞர் இன்குலாப்

000

தமிழ்நாட்டை சுற்றி வளைக்குது பாசிச கும்பல்! | ச.விஜயன்
(குறிப்பு: மே 15 என தேதி மாற்றத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட காணொலி)

000

பாசிசத்திற்கு எதிராக இதுபோன்ற மாநாடுகள் தேவை | முருகானந்தம்
(குறிப்பு: மே 15 என தேதி மாற்றத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட காணொலி)

காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள்!!


அறிவிப்பு: மே 10 இன்று காலை 11 மணிக்கு மிகவும் வரைவேற்பை பெற்ற விடுதலைப்போரின் வீரமரபு – கானா பாடல் வினவு தளத்தில் வெளியிடப்படும் பாருங்கள்! பகிருங்கள்!!


‘எப்படியேனும்’ பா.ஜ.க.வை வீழ்த்த, இதோ நிதிஷ் ஃபார்முலா!

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து வலுத்துவருகிறது. காங்கிரஸை ஒழித்துக்கட்டுவதே நோக்கம் என்று செயல்பட்டுவந்த கெஜ்ரிவால், மம்தா கட்சியினரும் கூட, எதிர்க்கட்சிகளை குறிவைத்து சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் வேட்டை தீவிரமானது, ராகுலின் பதவி நீக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டுப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதாகக் கூறி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார். நிதிஷ் குமாரின் இந்த முயற்சிக்கு மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி பீகாரிலிருந்து தொடங்கட்டும்” என்று மம்தாவும் கருத்து தெரிவித்திருந்தார். ஊடகங்களிலும் “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு நிதிஷ்தான் சரியான ஆள்” என்பது போன்ற விவாதங்கள் எழுந்தன.

ஒருவேளை எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைந்து, அது பா.ஜ.க.வை வீழ்த்துமளவிற்கு செல்வாக்கு பெறும் என்று வைத்துக் கொண்டாலும், புழுத்து நாறிக்கிடக்கும் போலி ஜனநாயகத் தேர்தல் அமைப்பில் பாசிச பா.ஜ.க.வை வீழ்த்தும் ‘ஜனநாயகத்துக்கான போர்’ எப்பேற்பட்டதாக இருக்கும் என்பதற்கு, நிதிஷ் பீகாரிலேயே ஒரு முன்னோட்டத்தைக் காட்டியிருக்கிறார்.


படிக்க : தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி | தோழர் மருது வீடியோ


அண்மையில் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு, சிறை குற்றவாளிகளில் மன்னிப்புக்கு தகுதியான 27 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பிரபல தாதாவும் முன்னாள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.வுமான ஆனந்த் மோகன் என்பவரது பெயர் வெளியாகியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1994 ஆம் ஆண்டு கோபால்கஞ்ச் மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருந்த ஜி.கிருஷ்ணய்யா என்பவரை அடியாட்படையை ஏவி படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டவர்தான் இந்த ஆனந்த் மோகன். 2007ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருஷ்ணய்யாவை கொலைசெய்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைக் குறைப்பு செய்யச் சொல்லி ஆனந்த் மோகன் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், அவரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர் தற்போது மன்னிப்புக்கு தகுதியானோர் பட்டியலில் இடம்பெற்றதன் மூலம் விடுதலையாகக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பீகார் சிறைச் சட்டம் 2012-ன் படி, பணியில் இருந்த அரசு அதிகாரியைக் கொலைசெய்த குற்றவாளிகள் மன்னிப்புக்கு தகுதியானோர் கிடையாது. ஆனால், 24-04-2023 அன்று நிதிஷ் அரசு இச்சட்டத்தை தளர்த்தியது. மறுநாளே மன்னிப்புக்கு தகுதியானோர் பட்டியலில் ஆனந்த் மோகனின் பெயர் வெளிவந்துள்ளது.

ஆனந்த் மோகன் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். அச்சமூகத்தின் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கும் உள்ளது. ஆகவே, அவருக்காகவே ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து அவர் விடுதலை செய்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்ததன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குவங்கியை கவரலாம் என்பது நிதிஷ் குமாரின் திட்டமாக உள்ளது.

ஆனந்த் மோகன் விடுதலைக்குப் பிறகு சிறையில் இருக்கும் மேலும் சில ஆதிக்க சாதி கிரிமினல்களையும் விடுவிக்கக் கோரி சாதி வெறியர்கள் போஸ்டர்

இந்நிலையில்தான் இச்சட்ட திருத்தத்திற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குவங்கியை பாதிக்கும் என்பதால் நேரடியாக ஆனந்த் மோகனின் விடுதலையை எதிர்க்க முடியாவிட்டாலும், நிதிஷ் குமாரின் சட்ட திருத்த நடவடிக்கையை குற்றஞ்சாட்டி வருகிறது.

பீகாரின் முன்னாள் துணை முதல்வரும் பா.ஜ.க. தலைவருமான சுஷில் குமார், “எந்த அடிப்படையில் சிறைச் சட்டம் திருத்தப்பட்டது” என்று கேள்வியெழுப்பியுள்ளார். பா.ஜ.க.வின் ஐ.டி பிரிவு பொறுப்பாளரான அமித் மாளவியா, “ஆர்.ஜே.டி.யின் மோசமான சூழ்ச்சிகளுக்கு சரணடைந்ததற்காக நிதிஷ் குமார் வெட்கப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் ஆட்சியைப் பிடிப்பதற்காக கிரிமினல் கூடாரத்தின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் ஒருவர் எப்படி இந்தியாவின் முகமாக முடியும்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அமைச்சரான கிரிராஜ் சிங், “ஆனந்த் மோகன் நிதிஷ் அரசுக்கான பலிகடா” என்று தெரிவித்திருந்தார்.

தன் மீது விமர்சனங்களை முன்வைக்கும் பா.ஜ.க.வின் போலி வேடத்தை நிதிஷ் குமாரும் அம்பலப்படுத்தியுள்ளார். “இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஒரு சமூகத்தின் மத்தியில் செல்வாக்கு பெற்ற நபராக விளங்கும் ஆனந்த் மோகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிவந்த கட்சி இன்று எதிர்க்கிறது” என்று பா.ஜ.க.வின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.

மேலும், ஆனந்த் மோகனின் மகனும் ஆர்.ஜே.டி (ராஷ்டிர ஜனதா தளம்) கட்சியின் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள சேத்தனின் நிச்சயதார்த்தத்திற்கு ஆனந்த் மோகன் பரோலில் வெளிவந்திருந்தபோது, பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் காட்டி அம்பலப்படுத்தியுள்ளார்.

2016-இல் ஒன்றிய அரசு கொண்டுவந்த “மாதிரி சிறைக் கையேட்டை” (model prison manual) முன்மாதிரியாகக் கொண்டுதான் பீகார் மாநில சிறைச் சட்டம் 2012-யும் திருத்தியிருக்கிறோம் என்றும் பா.ஜ.க. தேவையில்லாமல் அரசியல் செய்வதாகவும் நிதிஷ் குமார் சாடியுள்ளார்.

ஆனந்த் மோகன் விசயத்தில், நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக ஏறியடித்துப் பேசவும் முடியாமல், கண்டிக்காமல் அமைதியாக இருக்கவும் முடியாமல் தவித்துவருகிறது பா.ஜ.க. ஏற்கெனவே மகனின் திருமணத்திற்காக பரோலில் வந்திருந்த ஆனந்த மோகன், “தான் நன்னடத்தை அடிப்படையிலேயே விடுதலைக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும், என் விடுதலைக்கு நிதிஷ் குமார் அரசு அழுத்தம் கொடுத்தது என்றெல்லாம் பேசுபவர்கள், பேசுவார்கள்; அவர்கள் எல்லோரும் குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டதற்கும் நிதிஷின் அழுத்தம்தான் காரணம் என்றுகூட பேசுவார்கள்” என்று மறைமுகமாக பா.ஜ.க.வை விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க.வின் எதிர்ப்பைத் தாண்டி, கொலைசெய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ணய்யா ஒரு தலித் என்பதால் தலித் அமைப்புகள் மற்றும் பிற அரசியல் கட்சிகளாலும் நிதிஷ்குமார் அரசின் நடவடிக்கை கண்டிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு நிதிஷ்குமார்தான் பொருத்தமானவர் என அவருடன் கூடிக் குலாவிய மம்தா, ஆனந்த் மோகனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். “பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சிறைத்துறை சட்டங்களில் திருத்தம் செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது. பீகார் அரசின் முடிவு நாடு முழுவதும் தலித் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. கிருஷ்ணய்யா ஒரு நேர்மையான அதிகாரி. பட்டியலினத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரியை கொலைசெய்த ஆனந்த் மோகனின் விடுதலை அதிர்ச்சியளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

என்னதான் நிதிஷூடன் உறவைப் பேண விரும்பினாலும், ஆனந்த் மோகனின் விடுதலையை கண்டிக்காவிட்டால், தலித்துகள் மத்தியில் தனக்குள்ள வாக்கு வங்கியை இழக்க நேரிடுமே என்பது மம்தாவுக்கு உள்ள தர்மசங்கடம். ஆக மொத்தம் கண்டனமும் ஆதரவும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தில் இருந்தே பிறக்கிறது.

பீகாரின் மஹாபந்தன் கூட்டணியைப் பொறுத்தவரை, அதற்கு ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் கணிசமான வாக்குவங்கி உள்ளது. ஆனால் ராஜ்புத் போன்ற முன்னேறிய ஆதிக்க சாதியினரின் வாக்குவங்கியைப் பொறுத்தவரை பா.ஜ.க.விடமே உள்ளது.


படிக்க : பீகார் : பத்திரிகையாளர் புத்திநாத் ஜா படுகொலை


அரசியல் தரவுகளுக்கான திரிவேதி மையத்தின் கூற்றுப்படி, 2020 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் சீட்டுகளில் 24.5 சதவிகிதம் (110) ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு கொடுத்துள்ளது. 11.8 சதவிகிதம் பார்ப்பனர்களுக்கு கொடுத்துள்ளது மற்றும் 7.3 சதவிகிதம் பூமிஹாரிகளுக்கு கொடுத்துள்ளது.

தற்போது ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குகளை மஹாபந்தன் கூட்டணியே வேட்டையாடுவதற்கு ஆனந்த் மோகன் விடுதலை வழியேற்படுத்தியிருக்கிறது. 90களில், லாலு பிரசாத் யாதவ் மண்டல் கமிஷனை ஆதரித்து பிற்படுத்தப்பட்டோரிடையே செல்வாக்குமிக்க தலைவராக உருவெடுத்தபோது, மண்டல் கமிஷனை எதிர்த்து அரசியல்செய்து ராஜ்புத் உள்ளிட்ட முற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகளிடையே செல்வாக்குமிக்க தலைவராக உயர்ந்தவர் ஆனந்த் மோகன். பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு சமூகநீதி அரசியலை முன்னெடுப்பதாக வேடமிடும் நிதிஷ்குமாரின் லட்சணம் இது.

ஏற்கெனவே பார்ப்பன-உயர்சாதியினரின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரித்தவர்தான் நிதிஷ்குமார். நாளை ஓட்டுவங்கிக்காக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. பறித்தெடுப்பதையும் அவர் ஆதரிக்கக் கூடும். பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமல்லவா!

தலையங்கம்
புதிய ஜனநாயகம் – மே 2023

ஆர்.என்.ரவி மீது வழக்குப்பதிவு எப்போது? தீட்சிதர்களின் அட்டூழியம் || தோழர் மருது

ல்லாத பிரச்சினை ஒன்றை உருவாக்கி, தமிழ்நாட்டை அதன் பின்னேயே சுற்றவைக்கிறார் ஆர்.என்.ரவி. இது எல்லாம் நம்புற மாதிரி இருக்கா. தீட்சதர்கள் வீட்டுகளுக்குள் யாராவது போக முடியுமா? வீட்டிற்குள் புகுந்து பார்ப்பன சிறுமிகளை இழுத்துக்கொண்டு வந்து கன்னித்தன்மை பரிசோதனை எல்லாம் நடத்தமுடியுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் – நாங்கள் இருவிரல் பரிசோதனை முறையே எப்போதோ விட்டுவிட்டோம்.. இப்போது அப்படி ஒரு பரிசோதனை முறையே கிடையாது என்கிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’

“குஜராத் ஸ்டோரி” பெண்கள் மீது காவி கும்பலின் ‘அக்கறை’யின் உண்மை முகம் இது!

கேரளத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தைத் தூண்டிவிட “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் பயங்கரவாதத்தின் உண்மையை வெளிகொண்டுவந்துள்ளது என ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக் கும்பல் பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு பாதுக்காப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என அண்மையில் வெளியான தரவுகள் கூறுகின்றன.

வடஇந்தியாவை போல, தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எளிதில் கால்பதிக்க முடியாத நிலையே நீடித்துவருகிறது. கேரளத்தில் ஊடுருவ தற்போது பாசிசக் கும்பல் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை கையிலெடுத்திருக்கிறது. இப்படத்தை வைத்து மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி காலூன்றிவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறது. ஆனால் மதங்கள் கடந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் கேரள மக்களிடம் காவிகளின் இம்முயற்சி மண்ணை கவ்வியுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து-கிறித்துவ பெண்கள், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டு, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக இப்படத்தில் சித்தரிக்கப்படுகிறது.

படிக்க : மல்யுத்த வீரர்களுக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை! || தோழர் மருது

ஆனால், இத்தனை ஆயிரம் பெண்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்ததற்கான எந்த அடிப்படை ஆதாரமும் அரசாங்கத்திடமில்லை என்பதிலேயே காவிகளின் பொய் மூட்டை அவிழ்ந்துவிட்டது. இவையன்றி, கல்வி அறிவில் முன்னேற்றம் அடைந்திருக்கும் கேரளத்தில், பெண்களை எளிதில் மூளைசலவை செய்யமுடியாது போன்ற கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவி காவிகளின் நச்சுப்பிரச்சாரம் பொதுவெளியில் முறியடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்த வேலை செய்துவரும் காவிகள், இதற்கு முன்னரும் முஸ்லிம் ஆண்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நீலிக்கண்ணீர் வடித்தது. லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து வருவதாக பிரச்சாரத்தை செய்தது. காவிக் கும்பலின் இப்பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் இதேநேரத்தில், காவிகள் கொண்டாடும் குஜராத் மாநிலத்தின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2022-இல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி, குஜராத்தில் மட்டும் 41,621 பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள். 2016-இல் 7,105 பெண்களும்; 2017-இல் 7712 பெண்களும்; 2018-இல் 9246 பெண்களும்; 2019-இல் 9268 பெண்களும்; 2020-இல் 8290 பெண்களும் காணவில்லை என தரவுகள் கூறுகிறது.

பணத்துக்காக கடத்தப்படும் பெண்கள் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்படுகிறார்கள்; பல பெண்கள் கூலி அடிமைகளாக்கி, பிற மாநிலங்களில் விற்றுவிடும் கோர சம்பவங்களும் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.

படிக்க : ஜி.எஸ்.டி வரி சாதனை அல்ல வேதனை | மக்கள் நேர்காணல்

இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் குஜராத் மாநில மனித உரிமை குழுவின் உறுப்பினருமான சுதிர் சின்ஹா, “காணாமல் போனவர்கள் குறித்த வழக்கு, கொலை வழக்கைப்போல பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒரு குழந்தை காணாமல்போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக ஆண்டுக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற வழக்குகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் போலீசு அலட்சியம் காட்டுகிறது” என குஜராத் மாநிலத்தின் உண்மை முகத்தைத் தோலுரித்து காட்டுகிறார்.

தற்போது கேரளத்தில் மதப் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த தி கேரளா ஸ்டோரியை கையில் எடுத்திருக்கும் காவிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு மேற்கண்ட தரவே(குஜராத் ஸ்டோரி) துலக்கமான சான்று.

ஆதினி

மல்யுத்த வீரர்களுக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை! || தோழர் மருது

பா.ஜ.க எம்.பியின் பாலியல் வன்முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடும் இந்திய நாட்டின் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை.. போராட்டத்தின் தீவிரத்தால் பாஜக எம்.பி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஜி.எஸ்.டி வரி சாதனை அல்ல வேதனை | மக்கள் நேர்காணல்

ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாகவும், அதனால் தாங்கள் அடைந்த பாதிப்பை பற்றியும் இந்த காணொலியில் பதிவுசெய்கிறார்கள் உழைக்கும் மக்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

புதிய ஜனநாயகம் – மே 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

மே – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி.பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம் : ‘எப்படியேனும்’ பா.ஜ.க.வை வீழ்த்த, இதோ நிதிஷ் ஃபார்முலா!

♦ பாசிசத்திற்கு எதிரான கலகக் குரல்கள்!

♦ ஸ்டெர்லைடை திறக்கச் சதி: மீண்டும் ‘வேதாந்தாவின் தோட்டாக்கள்’!

♦ மலியானா படுகொலை குற்றவாளிகள் விடுதலை: தொடரும் இந்துராஷ்டிர (அ)நீதி!

♦ பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!

♦ தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க.வின் வழியில் தி.மு.க!

♦ பாசிசக் கும்பலின் கனவு பலிக்காது! இது தமிழ்நாடு!

♦ பாசிஸ்டுகளை வீழ்த்த சந்தர்ப்பவாத வழிமுறை: எங்கு போய் முடியும்!

♦ ‘சிங்காரச் சென்னை’ மேட்டுக்குடிகளுக்கே!

♦ நூல் அறிமுகம்: கார்ப்பரேட் பாசிசக் கொடூரத்தின் நேரடி சாட்சியம்: மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்டக் கதை!

♦ பகுதி 3: புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்!

புதிய ஜனநாயகம்

கால்டுவெல்-ஐ நினைவுகூர்வோம்!

காவி – கார்ப்பரேட் பாசிச ஆட்சி நடைபெறும் இச்சூழலில் தமிழ் மொழியை வைத்து தமிழ்நாட்டை பிடிக்கமுற்படுகிறது பா.ஜ.க. மறுபுறம் தமிழ் அவமதிப்புக்குள்ளாகிறது. ஜீயர் துவங்கி அண்ணாமலை வரை தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து வருகின்றார்கள். தமிழ்நாட்டையும், திராவிட இனத்தையும், தமிழ் மொழியையும் தொடர்ந்து ஏளனம் செய்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில் தமிழின் பெருமையையும், அதன் தனித்துவத்தையும் உலகுக்கு உரக்கச் சொன்ன ராபர்ட் கால்டுவெல்லின் 200-ஆவது பிறந்த தினத்தை நாம் நினைவு கூர்கிறோம்.

1814-இல் அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் கிறித்தவ சமயப் பரப்புரைக்காக  தமிழகத்திற்கு வந்தார்.  சென்னைக்கு வந்ததும் ”துருவ்” எனும் தமிழ் கற்ற அறிஞரோடும் அந்நாளில் தமிழுக்குத் தொண்டாற்றிய வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்களோடும் நட்புப் பூண்டார். சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல், தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக ஏறத்தாழ நானூறு கல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார். அப்பயணத்தின்போது ‘மிலேச்சரான’ கால்டுவெல்லுக்குப் பல சத்திரங்களில் இடம் மறுக்கப்பட்டதால், மாட்டுத்தொழுவங்களில்தான் அவர் தங்க நேர்ந்தது. இறுதியில் திருநெல்வேலி (இன்று தூத்துக்குடி மாவட்டம்) மாவட்டத்தில் தேரிப்பகுதியில் உள்ள இடையன்குடியைத் தேர்ந்தெடுத்து செயல்படத் தொடங்கினார்.

படிக்க : கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் ?

அவரின் நோக்கம் சமயப் பரப்புரையாக இருந்தபோதும், தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழி ஆராய்ச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. அவர் 18 மொழிகளைக் கற்றார். அதுவரை அச்சேறாமல் இருந்த பல பண்டைத் தமிழிலக்கியங்களை (தொல்காப்பியம் உட்பட) பயின்றார். இலக்கிய வேலைகளுக்கிடையே, அந்நாளில் ஒடுக்கப்பட்ட சாதியாக அறியப்பட்ட சாணார்கள் (நாடார்கள்) கல்வி கற்றிடவும், அவர்களின் மீதான சாதி இழிவுகளை அகற்றவும் பாடுபட்டார். அவர் கற்றறிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியை  ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்து சேர்ந்தார். அதனை ஆய்வுநூலாக அவர் ஆங்கிலத்தில் ”திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலாக இலண்டன் பதிப்பகம் மூலம் 1856 – இல் வெளியிட்டார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை நூல் என்று சொல்லலாம். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேன்மையை அது உடைத்து நொறுக்கியது.  அதுவரை,  இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும்,  அம்மொழியின் இலக்கணமே இதர மொழிகளுக்கு இலக்கணங்களாக ஏற்கப்பட்டன என்றும், தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமஸ்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்ற கருத்தும்தான் மேலாண்மையில் இருந்து வந்தது.

ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் நிலம் மற்றும் மக்களின் இனம் சார்ந்த வாழ்நிலையை அறிந்துகொள்ள இலண்டனில் அமைக்கப்பட்ட ஆசியவியல் கழகத்தின் கிளை 1784-ஆம் ஆண்டு கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. இதன் சார்பாக இந்தியாவில் செயல்பட்ட பலரும் சமஸ்கிருத மூல மொழியிலிருந்தே இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் கிளைத்திருக்க வேண்டும் என்னும் கருதுகோளை முன்னிறுத்தியே ஆய்வு செய்தனர்.

ஆனால், சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்ட எல்லீசு உள்ளிட்டோர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகள் அல்ல என்பதை கால்டுவெல்லுக்கு முன்பே கண்டறிந்து இம்மொழிகளுக்கான திராவிடச் சான்றுகளை அகழ்ந்தெடுத்திருந்தனர். அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மிக வலுவான ஆதாரங்களுடன் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் பின்வரும் உண்மைகளை தெள்ளத் தெளிவாக நிரூபித்தது. 1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை 2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்து விட்டாலும் தமிழ் தானாகவே இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி 3. இதுவரை கருதி வந்தது போல், தமிழ் மரபு என்பது வேத-பார்ப்பன-இந்து மரபின் தொடர்ச்சி அல்ல 4. அதற்கு சமண, பவுத்த, பார்ப்பன எதிர்ப்பு மரபு உள்ளது.

வெறுமனே மொழி ஆராய்ச்சி எனும் எல்லைக்குள் நிறுத்தி விடாமல் தமிழ் மொழி பேசும் இனத்தவர்களின் ஆன்மிகம், பண்பாடு, சாதி மேலாதிக்கம் என அனைத்தும் தழுவிய ஆய்வாக கால்டுவெல் மேற்கொண்டார். அன்று பார்ப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட சற்சூத்திர தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுக்கும் சாதிவெறியில்தான் இருந்தனர். ஆனால், கால்டுவெல்லின் ஆய்வு ”பறையர்களே பூர்வீகத் தமிழர்கள்” என்பதை நிறுவியது.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. தமிழ் உயர் தனிச் செம்மொழி என்ற ஆய்வு முடிவு தமிழர்களுக்குத்  தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் அழிந்துகொண்டிருந்த 2000 ஆண்டு கால தமிழ் இலக்கியக் கருவூலங்களெல்லாம் சி.வை.தாமோதரம் பிள்ளையாலும் உ.வே.சா. வாலும் அச்சு வாகனம் ஏறின. இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவெடுக்க கால்டுவெல்லின் கோட்பாடுகள் அடித்தளமாயின.

படிக்க : வீரமரபு பாடல் – டீசர் | ம.க.இ.க | சிவப்பு அலை | Veera marabu – Teaser

திராவிட இயக்கம் பின்னாளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஊழல் சாக்கடையில் ஊறிச் சீரழிந்தது.  அதன் ஊழல்களையும் வெற்று முழக்கங்களையும் பித்தலாட்டங்களையும் மட்டும் முன்வைத்து பார்ப்பன ஊடகங்களும் அறிவுத் துறையினரும், திராவிடம் என்பதே மோசடி, இவர்கள் கூறும் வரலாறே கிறித்துவ பாதிரியின் சதியால் உருவாக்கப்பட்டது என்பதைத் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்கின்றனர். தமிழ் மரபென்பது வேதத்தை முன்னிலைப்படுத்திய மரபென்றும், கால்டுவெல்லும் திராவிட இயக்கமும் கூறுவது போல பார்ப்பன எதிர்ப்பு மரபென்பது தமிழ்ப் பண்பாட்டிலேயே கிடையாது என்றும் நிலைநாட்டிட ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ எனக் கத்தும் தமிழ் இனவாதிகளும், பார்ப்பனர்களின் சதியோடு கைகோர்த்து, தமிழ் ஆர்.எஸ்.எஸ்.ஐ வளர்க்கின்றனர்.

வளர்ந்து வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள்கண்டுபிடுப்பு செய்த ”உயர்தனிச் செம்மொழியே நம் மொழி” என்பதும், “பார்ப்பன எதிர்ப்பு மரபே தமிழ் மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கைகளில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவுகூர்வதாகும்.

புதிய ஜனநாயகம், ஜூன் 2014 (சிறு திருத்தங்களுடன்)

ஆர்.என்.ரவி கைது செய்யப்படுவாரா? || தோழர் மருது

சில தினங்களுக்கு முன்பு ஆங்கில செய்தித்தாளில் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறியுள்ளார் ஆர்.என்.ரவி.. ஆளுநரின் இதுபோன்ற புனைசுருட்டுக்களை தொடர்ந்து தமிழ்நாடு அம்பலப்படுத்தி வருகிறது. வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என முழங்குவோம்.. பொய் புனைசுருட்டுகளை பேசிவரும் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டே விரட்டியடிப்போம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காசி தெலுங்கு சங்கமம் – தென்னிந்தியாவை சுற்றிவளைக்கும் பாசிசப்படை!

0

டந்த ஏப்ரல் 29ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கங்கை நதியின் மானசரோவர் படித்துறையில் காசி தெலுங்கு சங்கமம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீகாசி தெலுங்கு சமிதி ஒரு நாள் மட்டும் நடத்தியுள்ளது. வாரணாசிக்கு தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வரும், 12 நாட்கள் நடைபெறும் கங்கா புஷ்கரலு திருவிழாவின் போது நடத்தப்பட்டுள்ளது.

இது, காசிக்கும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையே உள்ள பண்டைய நாகரிக சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை எடுத்துக்காட்டும் விதத்தில் நடத்தப்படுவதாக சங்கிக் கும்பலால் கூறப்பட்டது. இது ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்களின் மீது பார்ப்பனிய ஆதிக்கத்தை நிறுவுகின்ற சதியாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இத்தகைய பன்முகத்தன்மைகளின் சங்கமம், நாட்டின் எதிர்காலத்துக்கான முழு ஆற்றலையும் உறுதி செய்யும்; தேசியவாத உணர்வையும் மேலோங்க செய்யும்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தெலுங்குமொழி, தெலுங்கு இன மக்கள், ஆந்திரா, தெலுங்கானா என்ற மாநில உணர்வுகளை மட்டுப்படுத்தி ‘இந்து இந்தி இந்தியா’ என்ற இந்துராஷ்டிர நீரோட்டத்தில் கலக்கச் செய்வதே இதன் நோக்கம் என்பதை அவரே உறுதிபடுத்தியுள்ளார்.

படிக்க : காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்துராஷ்டிரத்திற்கான கரசேவை!

இதே யுக்தியைதான் தமிழ்நாட்டிலும் கையாண்டது காவிக் கும்பல். காசி தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகிய பெயர்களில் நிகழ்ச்சியை நடத்தியது. தற்போது காசி தெலுங்கு சங்கமம் மூலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்களை குறிவைத்துள்ளது. இவையெல்லாம் காவிக்கும்பலின் தென்னிந்தியாவை சுற்றிவளைக்கும் நயவஞ்சகத் திட்டமான ‘மிஷன் சவுத்’ திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

வடமாநிலங்களில் பெரும்பாலானவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள காவிக்கும்பல், தங்களுக்கு கட்டுப்பட மறுக்கும் தென்மாநிலங்களை (தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா) எப்படியாவது கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு வேலை செய்கிறது. மிஷன் சவுத் அமித்ஷாவால் உருவாக்கப்பட்டது. மோடி, அமித்ஷா, நட்டா ஆகிய மூவரின் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம் கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்துவது ஆகும்.

பா.ஜ.க தலைவர்களை பிற மாநிலங்களில் இருந்து தென்னிந்திய மாநிலங்களில் வேலை செய்ய இறக்குவது; பிற அரசியல் கட்சி பிரமுகர்களை பேரத்தின் மூலம் தன் கட்சிக்குள் இழுத்துக்கொள்வது; சினிமா பிரபலங்களை முன்னிறுத்துவது போன்ற பல வழிமுறைகளில் செயல்பட்டு வருகிறது காவிக் கும்பல்.

கர்நாடகாவில் போலீசு அதிகாரியாக இருந்த அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டதும், அ.தி.மு.க கட்சியானது பா.ஜ.க-வின் ஒரு பிரிவாகவே மாறியிருப்பதும், ரஜினிகாந்தை பா.ஜ.க கட்சிக்குள் இழுக்க முயன்றதும், இளையராஜா போன்ற பல சினிமா பிரபலங்கள் சங்கிகளாக தங்களை வெளிக்காட்டிக் கொள்வதும் இத்திட்டத்தின் அடிப்படையில்தான்.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே ஆண்டனியின் மகனான அனில் ஆண்டனி கேரள பா.ஜ.க-வில் இணைத்துக் கொள்ளப்பட்டதும், பிரிக்கப்படாத ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான கிரண் குமார் ரெட்டி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவரான சி.கேசவன் பா.ஜ.க-வில் இணைத்துக் கொள்ளப்பட்டதும் இத்திட்டத்தின் அங்கங்களாகும்.

மேற்கூறிய வழிமுறைகளைத் தாண்டி, கலாச்சார, பண்பாட்டு ரீதியாகவும் செயல்பட்டு வருகிறது காவிக் கும்பல். “ஒரே பாரதம்; உன்னத பாரதம்” என்ற பெயரில் நடத்தப்படும் காசி, சௌராஷ்டிரா சங்கம நிகழ்ச்சிகள் அதன் வெளிப்பாடுதான். ஆனால் தமிழ்நாட்டில் காசி மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமங்கள் தமிழக மக்கள்  மத்தியில் எடுபடவில்லை.

காசி தமிழ் சங்கமத்தை ஓட்டி பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பிரச்சாரம் செய்தன. ஆனால், அவை மக்கள் மத்தியில் பேசுபொருளாக கூட ஆகவில்லை.

சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி என்றும், மதப்பிரச்சார நிகழ்ச்சியை போன்று இருப்பதாகவும் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான கருத்தரங்கமோ, தமிழ் அறிஞர்களோ அங்கு யாரும் கலந்து கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

படிக்க : வாரணாசியில் தமிழ் சங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் சதித் திட்டம்!

வரவேற்பு பதாகைகளில் தமிழ் பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததை பலரும் விமர்சித்ததோடு, இதுதான் இவர்கள் தமிழை வளர்க்கும் இலட்சணமா என்று பலரும் கலாய்த்து தள்ளினர்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழ்நாட்டில் உள்ள 24 இலட்சம் சௌராஷ்டிரா மக்களை கவர்வதற்காக நடத்தப்பட்டது. காசி தமிழ் சங்கமம் அளவுக்கு கூட, இது மக்கள் மத்தியில் பேசப்படவில்லை. இந்நிகழ்ச்சிகள் மூலம் தமிழர் நலனுக்காக பாடுபடுகின்ற கட்சி பா.ஜ.க என்ற போலிப்பிம்பத்தை ஏற்படுத்த முயன்றது காவிக்கும்பல்.

மேற்கூறியவை மட்டுமல்ல, தமிழ்நாட்டை கைப்பற்றுவதற்காக பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் முயற்சிகளையும் தமிழ்நாட்டு மக்கள் முறியடித்து வருகின்றனர். தமிழ்நாட்டு மக்களைப் போல, தென்னிந்தியாவை கைப்பற்ற பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மக்களும் விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும்.

பிரவீன்

மே 1 மாநாடு – மே 15-க்கு மாற்றப்பட்டது ஏன்? || தோழர் வெற்றிவேல்செழியன் || வீடியோ

”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சென்னை – மதுரை மே தின பேரணி – ஆர்ப்பாட்டம் || 138வது மே தினம்

“சுற்றி வளைக்குது பாசிசப் படை! வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரைசை கட்டியமைப்போம்!” என்ற தலைப்பின் கீழ்  மே தின பேரணி ஆர்ப்பாட்டம்  ஆவடியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வடக்கு மண்டலம் சார்பாக நடத்தப்பட்டது. மாலை 5 மணி அளவில் பேரணி தொடங்கியது. பறை இசையுடன் தொடங்கியது பேரணி,  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்  ஆ.கா சிவா தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி  வடக்கு மண்டல செயலாளர் தோழர் மா சரவணன் அவர்கள் உரையை தொடங்கினார், அடுத்ததாக மக்கள் அதிகாரம் தோழர் அமிர்தா அவர்கள் இன்றைய சூழலில் பாசிசம் மக்களை எப்படி பாதிக்கின்றது என்று விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர்  தோழர் துணைவேந்தன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள்  தங்களுடைய சமுதாய பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்  என்பதை விளக்கிப் பேசினார்.

அடுத்ததாக புதிய  ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முன்னாள் மாநில பொருளாளர் தோழர் பா விஜயகுமார் தனது உரையில் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் இன்று இழந்து வருகிறோம், அதை மீட்டெடுக்க தொழிலாளர் வர்க்கமாக ஓரணியில் திரள வேண்டும் என்று தனது உரையை நிறைவு செய்தார். இடையிடையே விண்ணதிர முழக்கங்கள் முழங்கப்பட்டன. இறுதியாக  வடகு மண்டல பொருளாளர் தோழர் ப.சக்தி வேல் நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டனர்.

தகவல்
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

***

”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக; சுற்றி வளைக்குது பாசிசப் படை! வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” என்ற தலைப்பில் ம.க.இ.க – பு.மா.இ.மு – மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம் சார்பாக உசிலம்பட்டியில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.