Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 113

ஆளுநர் மாளிகை மீது குண்டு வீச்சாம்! | கவிதை

வர் ஆளுநராம்..
அவர் இருப்பது மாளிகையாம்..
அதன் மீதாம்..
குண்டாம்..
வீசப்பட்டதாம்.. (ஆளுநர் கூறுகிறார்)

ரவுடி காணவில்லையாம்..
போலீஸ் தேடுகிறதாம்..
அவர் ஏற்கெனவே கமலாலயத்தில் குண்டு வீசியவராம்..
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லையாம்..

தமிழ்நாட்டில் உள்ள சின்ன குழந்தைகூட
இந்த கிள்ளைக் கதையை கேட்டு சிரிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்! | கவிதை

மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்!

ம்புத்தீவு
பிரகடனம் மீண்டும் உயிர்த்தெழுகிறது

வரலாறு
மருது
உயிர்த்தெழக் கோருகிறது

மருது உயிர்த்தெழும்போது கூடவே
தொண்டைமான்களும் உயிர்த்தெழுகிறார்கள்

இப்போது சற்று அமைதியாக இருப்போம்

ஊமைத்துரைக்கு அடைக்கலம்
கொடுக்க வேண்டாம்

அன்றும் சாத்தியமானவைகளை பற்றி
பேசாமலா இருப்பர்?

மருதிருவர் சாத்தியமானவையை அல்ல;
சரியைப் பேச வேண்டும் என்றார்கள்

ஈன ஐரோப்பியரை அழித்து ஒழிக்காமல் வாழ்வில்லை என்றான் சின்ன மருது

அதிகாரப் பீடத்தை நத்திப் பிழைப்போர் தலையில் இடியாய்
இறங்கியது மருதுவின் குரல்

இரத்த சொந்தங்கள் 500 பேருடன்
திருப்பத்தூர் கோட்டையில் குரல்வளை நொறுங்கும்போதும்
மரணம் நெருங்கும் போதும்
மருதுவின்
விடுதலைக் குரல் ஒருபோதும்
இறங்கவும் இல்லை இரங்கவுமில்லை

அன்று பரங்கியரின் வேட்டைக்காடு
இன்று அதானி அம்பானிகளுக்கு
நாடே சுடுகாடு

அன்று ஒரு தொண்டைமான்
இன்று பல்லாயிரம் தொண்டைமான்கள்
அத்தனை பேரும் ஒரே கட்சி – பிஜேபி

வரலாறு
மருதிருவரை
கோருகிறது
கூடவே
திப்பு சுல்தானையும் கட்டபொம்மனையும் ஊமைத்துரையையும் வேலு நாச்சியாரையும் குயிலியையும் தான்

நாம் தயாரா?

ஐயோ படிப்பு என்னாவது?
குடும்பம் என்ன ஆவது? குழந்தைகள் என்னாவது?

இப்படி யோசிக்கும் யாருக்கும்
மருதுவைப் பற்றி நினைக்கவும் தகுதி இல்லை

வரலாறு
எப்போதும்
இப்போதும்
மருதுவை தேடிக் கொண்டிருக்கிறது

முடிவு நம் கையில்!


தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல் | காணொளி

துவரை இஸ்ரேலின் தாக்குதலால் 2,360 குழந்தைகள் உட்பட குறைந்தது 5,791 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் அக்டோபர் 24 அன்று அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேர் கொல்லப்பட்டுள்ளனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலையை நிகழ்த்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இஸ்ரேலின் தாக்குதலால் தனது தாய் கொல்லப்பட்டதை அறிந்து கதறி அழுத பாலஸ்தீன குழந்தை

இஸ்ரேலின் குண்டு வீச்சில் தனது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் பறிகொடுத்த பாலஸ்தீன சிறுவன்

அதிர்ச்சியில் உறைந்து போன – இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட – சிறுவன்

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தனது மகன்களைக் கண்ட தந்தை

காசாவின் பழைமையான பள்ளிவாசலின் மீது இஸ்ரேல் குண்டு வீசியதில் தனது மூன்று பிள்ளைகளை இழந்து கண்ணீர் விட்ட தந்தை


படிக்க: காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: இஸ்ரேலின் இனப்படுகொலை!


வடக்கு காசாவின் அல் அலாமி (Al-Alami) பகுதியில் உள்ள குடியிருப்புகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது

அக்டோபர் 22 இரவில் இஸ்ரேலால் தாக்கி அழிக்கப்பட்ட நுசெய்ரத் (Nuseirat) அகதிகள் முகாம்

இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெறும் காசாவின் டெயிர் அல்-பாலா (Deir Al-Balah) பகுதி

இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசுவதால் வேறு வழியின்றி இடம் பெயர்ந்து தெற்கு காசாவின் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள்

வடக்கு காசா பகுதியில் மின்சாரம் இல்லாத நிலையில் இருளில் பணிபுரியும் மருத்துவர்கள்

காசா பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டு மருந்துகள் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் செய்வதாலும், தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதாலும் குழந்தைகளின் உயிர் ஆபத்தில் இருப்பதாக காசா மருத்துவர்கள் கூறுகின்றனர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பி.எம். விஸ்வகர்மா பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான சதித்திட்டம்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மக்களின் (OBC) வாக்குகளைக் கவர்வதற்காகவும் குலத்தொழிலைப் புதுப்பித்து பிற்படுத்தப்பட்ட மக்கள்மீது சுமத்தப்பட்ட பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பிப்பதற்காகவும் “பி.எம் விஸ்வகர்மா” என்ற திட்டத்தை தன்னுடைய பிறந்தநாளில் தொடங்கிவைத்துள்ளார், பிரதமர் மோடி.

“விஸ்வகர்மா ஜெயந்தி அன்று பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு வேலை செய்யும் கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கைவினைத் தொழிலாளர்களுக்கு சுமார் 13,000 முதல் 15,000 கோடி ரூபாய் வரை வழங்கவிருக்கிறோம்” என நாட்டின் 77-வது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார், மோடி. அடுத்த நாளே, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Economic Affairs) விஸ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டது.

இத்திட்ட பயனாளிகளுக்கு முதல் தவணையில் ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்றும், இரண்டாவது தவணையில் இரண்டு லட்சம் ரூபாய் ஐந்து சதவிகித வட்டியுடன் கடனாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது மோடி அரசு.

மேலும், பயனாளிகளுக்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் அடிப்படை பயிற்சியும், 15 நாட்கள் மேம்பட்ட திறன் பயிற்சியும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. பயிற்சிகளின் போது உதவித்தொகையாக நாள் ஒன்றுக்கு 500 ரூபாயும், உபகரணங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு ஊக்கத்தொகையாக 15,000 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது மோடி அரசு.

முடி திருத்துபவர்கள், பூமாலை கட்டுபவர்கள், சலவைத் தொழிலாளர்கள், தையல்காரர்கள், காலணி தைப்பவர்கள், குயவர்கள், சிற்பிகள் போன்ற 18 வகை தொழில்கள் செய்பவர்கள் இத்திட்டத்தின் பயனாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொழில்கள் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட மக்கள் செய்யும் தொழில்களாகும்.

குலத்தொழிலைத் திணிக்கும் மோடி அரசு

ஆர்வமுள்ளவர்களுக்கு திறனை வளர்த்தெடுப்பது (Skill development) என்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே தொழில் தெரிந்தவர்களுக்கு திறனை மேம்படுத்துவது (skill upgradation) என்பதை இத்திட்டத்தின் நோக்கமாகக் குறிப்பிட்டுள்ளது மோடி அரசு. அதாவது முடி திருத்துபவர்களுக்கு முடி திருத்தும் திறன் பரம்பரை பரம்பரையாக உள்ளதென்றும், அந்தத் திறனை மேம்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம், வெளிப்படையாக குலத்தொழில் முறையை ஊக்குவிப்பதை அறிவித்துள்ளது.

“அவர்கள் விருப்பப்பட்டு செய்யும் போது நாங்கள் கடன் வழங்குகிறோம். நீங்கள் இந்தத் தொழில்தான் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியா அவர்களை கட்டாயப்படுத்துகிறார்” என்று தினமலர் சேனலுக்கு அளித்த பேட்டியில் கேள்வியெழுப்புகிறார், தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை. ஆம், பரம்பரை பரம்பரையாக செய்துக்கொண்டிருக்கும் குலத்தொழிலைதான் செய்ய வேண்டும் என்று மோடி அரசு கட்டாயப்படுத்ததான் செய்கிறது.


படிக்க: இந்துராஷ்டிர தர்பார்!


சான்றாக, இத்திட்டத்தின் கீழ் முடி திருத்தும் தொழிலை செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு எல்லாம் கடன் கொடுப்பதற்கு பதிலாக, முடி திருத்துவதையே பரம்பரை பரம்பரையாக செய்து வருபவர்களுக்குத் தான் கடன் கொடுக்கிறது, மோடி அரசு.

விஸ்வகர்மா திட்டத்தில் விருப்பப்பட்டவர்கள் சேர்ந்துக்கொள்ளலாம் என்றுதானே கூறப்பட்டுள்ளது. கட்டாயம் என்று கூறவில்லையே? அப்படியிருக்க, இத்திட்டம் குலத்தொழிலை திணிப்பதாக எப்படி கூற முடியும் என்று சங்கிகள் கேள்வி எழுப்பலாம்.

இத்திட்டத்தின் மூலம் நேரடியாக குலத்தொழிலை திணிக்காமல், மக்களின் வறிய பொருளாதார நிலைமைகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மறைமுகமாக திணிக்கிறது மோடி அரசு.

இந்தியாவில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை வறுமையும், விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும் பேயைப் போல பிடித்தாட்டுகின்றன. பல குடும்பங்கள் இருவேளை உணவு சாப்பிடும் நிலைமையில்தான் உள்ளன. இந்த நிலைமை தமிழ்நாடு போன்ற ஓரளவுக்கு முன்னேறிய மாநிலங்களை விட, வட இந்திய மாநிலங்களில் மிகவும் மோசமாக உள்ளது. எனவே, வட இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள், விஸ்வகர்மா திட்டத்தை தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகத்தான் பார்ப்பார்கள்.

இத்திட்டத்தால், சாதிக் கொடுமைகளால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் குடும்பங்கள், மீண்டும் கிராமங்களுக்கு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்படும்; பழைய நிலைமைக்கு அதாவது தங்களுடைய குலத்தொழிலை செய்ய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படும் போது, கிராமங்களில் உள்ள சாதி ஆதிக்கத்தையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, இத்திட்டத்தால் கிராமப்புறங்களில் சாதி அடக்குமுறைகள் தற்போது உள்ளதை விட மேலும் வலுவாகும்.

இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் (ஓ.பி.சி.) சேர்ந்த ஏழை மக்களின் பிள்ளைகள் மட்டும்தான் இத்திட்டத்தில் இணைய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் 17 வயதில் 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு, மேல்படிப்புக்கு கல்லூரிகளுக்குச் செல்லவேண்டும். ஆனால், இத்திட்டமானது ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஒழித்துக்கட்டி, அவர்களை முற்றிலுமாக குலத்தொழிலுக்குள்ளேயே அமுக்குகிறது.


படிக்க: நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!


பெரியார், அம்பேத்கர் போன்ற பார்ப்பனிய எதிர்ப்பு போராளிகள், கம்யூனிஸ்டுகள் குலத்தொழிலுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாகத்தான், தீண்டத்தகாத சாதிகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த, முடி திருத்துதல், சலவைத் தொழில் போன்ற தொழில் செய்துவந்த குடும்பங்களில் இருந்து பட்டம் பெற்றவர்களும் பொறியாளர்களும் மருத்துவர்களும் உருவாகியுள்ளார்கள்.

ஆனால், மோடி அரசோ இந்நிலைமைகளை எல்லாம் ஒழித்துக்கட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாதிக்கட்டமைப்பை மீட்டுருவாக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விஸ்வகர்மா திட்டமும் அதில் ஒரு அங்கம்தான்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக…

விஸ்வகர்மா திட்டத்தின் மூலம், ஓ.பி.சி. மக்கள் மத்தியில் குலத்தொழிலை திணித்து சாதிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் காவிகளிடம் இருந்தாலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி.சி. மக்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காகத்தான் இத்திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்திற்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் உள்ளதைப் போல வட மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை. அதன் மூலம் ஓ.பி.சி. மக்களை தன் பக்கம் திரட்டிக்கொள்ள விழைகிறது பா.ஜ.க. கும்பல்.

மோடி – அமித்ஷா கும்பல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஓ.பி.சி. மக்களின் வாக்குகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஒன்றிய அரசின் புள்ளிவிவரப்படி, இந்திய மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்ட அளவில் ஓ.பி.சி. மக்கள் உள்ளனர். மோடி அரசு, பீகார் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதும், இந்தியா முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை புறக்கணித்து வருவதும் ஓ.பி.சி. மக்களின் வாக்குகளை கவர்வதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை தடுப்பதற்காகத்தான்.

மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஒன்றிய அமைச்சகத்திலும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுத்தது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தை அமைத்தது; கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா நிறுவனங்களில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியது போன்ற செயல்பாடுகள் மூலம் ஓ.பி.சி. மக்கள் மத்தியில் தனது அடித்தளத்தை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது, பா.ஜ.க கும்பல்.

இதன்விளைவாக, பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள ஓ.பி.சி. மக்கள் மத்தியில், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 22 சதவிகிதமாக இருந்த பா.ஜ.க.விற்கான ஆதரவு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 44 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகிலேஷ் யாதவ், நிதிஷ்குமார் யாதவ், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களின் கட்சிகளுக்கு ஓ.பி.சி. பிரிவில் வேளாண் தொழிலை பூர்விகமாக செய்து வரும் சாதி மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. எனவே, பா.ஜ.க. கும்பலானது ஓ.பி.சி. பிரிவில் முடி திருத்துதல், சலவைத் தொழில் போன்ற தொழில்களை பூர்வீகமாக செய்துவரும் சாதி மக்களை தன் பக்கம் கவர்வதற்காக விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவிற்கு ஓ.பி.சி. பிரிவைச் சார்ந்த யாதவர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதால், யாதவர்களை தவிர பிற ஓ.பி.சி. பிரிவினர் மத்தியில் வேலை செய்த அனுபவமும் பா.ஜ.க. கும்பலிடம் உள்ளது. இதைப்போல பல மாநிலங்களில் பா.ஜ.க. கும்பல் வேலை செய்துள்ளது.

ஒடிசாவில் எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க, விஸ்வகர்மா திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் ஓ.பி.சி. மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பேரை பயனாளர்களாக மாற்ற வேண்டும் என்று இலக்கு வைத்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. இதைப்போல பல மாநிலங்களில் பா.ஜ.க. கும்பல் வேலை செய்யும் என்று நாம் உறுதியாக கூற முடியும்.

எனவே, விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் குலத்தொழிலைத் திணித்து சாதிக் கட்டமைப்பை வலுப்படுத்த விழையும் பா.ஜ.க. கும்பலின் நோக்கத்தை அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓ.பி.சி. மக்களை தன் பக்கம் திரட்டிக்கொள்ள முயலும் சதித்திட்டத்தையும் முறியடிக்கும் வகையில் பிரச்சாரங்களை கட்டியமைக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மதுரை: விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்க வரும் மூன்று கிரானைட் குவாரிகள்!

துரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள மலையை வரும் அக்டோபர் 31 அன்று கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது தமிழ்நாடு அரசு. இம்மலை அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக உள்ளது. இம்மலையின் அடிவாரத்தில் வருடம் 365 நாட்களிலும் தண்ணீர் தேங்கி குளம் போன்று இருக்கும். இதுதான் அவ்வூர் மக்களின் தண்ணீர் தேவையையும் விவசாய பாசனத்திற்கும் உயிராதமாக திகழ்கிறது. ஒருமுறை மழை பெய்தாலும் அப்பகுதி சற்றிலும் உள்ள விவசாயத்திற்கு போதுமானதாக தண்ணீரை சேமித்து வைக்கும் கொள்கலனாக இருக்கிறது. மலையை சுற்றி விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு என்று இம்மலையினை நாடியே இக்கிராம மக்களின் வாழ்வதாதரம் அமைந்துள்ளது.

இம்மலை சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால் அரசு, ஐந்து ஏக்கருக்கும் குறைவான பரப்பளவு கொண்டதாக இருந்தால் கருத்துக் கூட்டம் நடத்தாமலேயே, மக்களிடம் கருத்து கேட்காமலேயே டெண்டர் விடலாம் என்று கூறுகிறது. இதற்காகவே மலையின் மொத்தப்பரப்பளவை இரண்டு சர்வேயாக பிரித்து மூன்று ஏக்கருக்குள் கொண்டு வந்து கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக மக்களின் வாழ்வாதரத்தை அழித்து படுகுழியில் தள்ளும் கிரிமினல் வேலையை செய்கிறது தமிழ்நாடு அரசு.

இக்கேடுகெட்ட செயலைக் கண்டித்து டெண்டர் விடுவதை ரத்து செய்யும் வரை விடாப்பிடியாக போராட உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதனையொட்டி நாளை (26/10/23) முதல் தொடர் போராட்டம் நடைபெறவுள்ளது.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மணிப்பூர்: ஐந்து மாதங்களாகியும் அணையாத நெருப்பு! | நேர்காணல்

டந்த மே மாதம் 3-ஆம் தேதி மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் (குக்கிகள், குக்கி மக்கள்) மீது தொடங்கிய மெய்தி மக்களின் வன்முறைத் தாக்குதல்கள், பெரும் கலவரமாக மாறியது. தொடக்கத்தில், மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து கோரும் போராட்டமாகத் தொடங்கி, நாட்கள் செல்லச்செல்ல குக்கி மக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களாக வளர்ந்தது.

இதுவரை நடந்த கலவரங்கள், வன்முறைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 175-க்கும் மேற்பட்டவர்களிலும் படுகாயமுற்ற 1,100-க்கும் மேற்பட்டவர்களிலும் ஆகப் பெரும்பான்மையினர் குக்கி மக்களே. மேலும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். 70 ஆயிரம் குக்கி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 4,786 வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. 386 வழிபாட்டு தளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பத்தாயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் இன்றுவரை கொடூரமான பாலியல் வல்லுறவுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதே வெளியில் தெரியாத அளவிற்கு, அரசு ஆதரவுடன் கூடிய கலவரமாக குக்கி மக்கள் மீதான வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. அங்குள்ள ஊடகங்கள் அனைத்தும் மெய்தி ஆதரவு ஊடகங்களாக மாறியுள்ளன. இணையச் சேவை தடை இந்நிலையை இன்னும் மோசமாக்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள பல்வேறு முற்போக்கு-ஜனநாயக சக்திகளும் ஊடகங்களும் நேரடியாக மணிப்பூருக்குச் சென்று அங்கு நடக்கும் கொடூரங்களை அம்பலப்படுத்தி வருகின்றனர். அவர்களின் நேரடி அனுபவங்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன.

அந்த வகையில், சமீபத்தில் “சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய மருத்துவர்கள் சங்கத்தைச்” சேர்ந்த மருத்துவக் குழுவினரும் மணிப்பூருக்கு சென்று திரும்பியுள்ளனர். அக்குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த மருத்துவர் ரவீந்திரநாத்-ஐ சந்தித்து நேர்காணல் நடத்தினோம். அவை பின்வருமாறு:

மணிப்பூர் கலவரத்தின் பாதிப்புகளை நேரடியாக கள ஆய்வு செய்ய மேற்கொண்ட இப்பயணத்தில் யாரெல்லாம் சென்றீர்கள்? என்ன நோக்கத்திற்காக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது?

கடந்த செப்டம்பர் மாதம் 1-3 ஆகிய தேதிகளில், “சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய மருத்துவர்கள் சங்கம்” சார்பாக டாக்டர் அருண் மித்ரா அவர்களின் தலைமையில், நான் உள்ளிட்ட ஐந்து பேர் ஒரு குழுவாக மணிப்பூருக்கு சென்றிருந்தோம். அங்குள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்பயணம் திட்டமிடப்பட்டது. நாங்கள் செல்லும் போதும், நிலைமை சீரடையவில்லை. நாங்கள் சென்றதற்கு முந்தைய தினம் கூட கலவரம் நடந்து கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர்.

இப்பயணத்தில் நாங்கள் மெய்தி மக்களையும் சந்தித்தோம், குக்கி பழங்குடியின மக்களையும் சந்தித்துப் பேசினோம். இரு தரப்பு மக்களின் முகாம்களையும் பார்வையிட்டோம். எங்களுக்கு பெரிதாக எந்த தடையும் விதிக்கப்படவில்லை. நாங்கள் நோபல் பரிசு பெற்ற சர்வதேச அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பதால், எங்களைத் தடுத்தால் அது மனித உரிமை பிரச்சினையாக மாறும் என்பதும் நாங்கள் மருத்துவர்கள், எங்களது உதவி அரசுக்குத் தேவைப்படும் என்பதும் எங்களை தடுக்காததற்கான காரணங்களாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு நேரம் இல்லாததால் அனைத்து முகாம்களுக்கும் செல்ல முடியவில்லை.

முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமை என்னவாக இருக்கிறது? பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கிடைக்கின்றதா?

அரசின் புள்ளிவிவரப்படி 344-க்கு மேலான முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர் அதைவிட கூடுதலான முகாம்கள் இருக்கும் என்று சொல்கின்றனர். பல முகாம்களை அரசு ஒன்றிணைத்துள்ளதால் முகாம்களின் எண்ணிக்கை குறைவாக காட்சியளிக்கிறது. கிட்டத்தட்ட 54 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இன்றைக்கும் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குக்கி இனத்தைச் சார்ந்தவர்கள்.

இரண்டு இன மக்கள் தங்கியிருக்கும் முகாம்களிலும் மோசமான நிலைமையே நிலவுகிறது. அங்கு அடிப்படை வசதி கிடையாது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், சத்தான உணவு, கழிப்பறை வசதி, குளிப்பதற்கான வசதி என எதுவுமே இல்லை. மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டுதலின் அடிப்படையில் இவ்வாறு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, கொரோனாவை விட வேகமாக பரவக்கூடிய தட்டம்மை தடுப்பூசி போடப்பட வேண்டும். தட்டம்மையால் அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும். ஆனால், அந்த நடவடிக்கைகள் முகாம்களில் கடைப்பிடிக்கப்படவில்லை. கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகள் என யாருக்குமே தடுப்பூசி போடப்படவில்லை.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்து மாத்திரை இரும்பு சத்து மாத்திரைகள் கிடைக்கவில்லை. குக்கி பகுதி முகாம்களில், முகாமிற்கு வந்த பிறகு நான்கு தாய்மார்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. நல்லவேளையாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ளது. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ அவர்களை காப்பாற்ற வழியில்லை.

குக்கி மக்கள் வாழும் முகாம்களுக்கு அனுப்பப்படும் தடுப்பூசிகளை மெய்தி இன மக்கள் தடுத்து நிறுத்துகின்றனர். வேறு பகுதிகளிலிருந்து வரும் மருந்துப் பொருட்களையும் குக்கி மக்களின் பகுதிக்குள் கொண்டு செல்ல முடிவதில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். மணிப்பூரில் அரசு செயலிழந்து போயுள்ளது.

மணிப்பூரில் டெங்கு காய்ச்சல், டைஃபாய்ட், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் பரவிக்கொண்டிருக்கின்றன. சிலருக்கு மூளைக் காய்ச்சல் உள்ளது. காச நோயாளிகளுக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை வழங்கப்படவில்லை. இறுதிக்கட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தரப்படவில்லை.

முகாம்களில் உள்ளவர்களுக்கு சத்தான சரிவிகித உணவு கிடைக்கப்பட வேண்டும். முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு, இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே முட்டை வழங்கப்படுகிறது. பால், இறைச்சி போன்ற எந்தவித புரதச்சத்து உணவுகளும் கிடைக்கவில்லை. அரிசி சோறு மற்றும் உருளைக்கிழங்கை வைத்து மக்கள் ஓட்டிகொண்டிருக்கின்றனர். முகாம்களுக்கு வெளியில் உள்ள மக்களுக்கும் அரசு தரப்பில் எவ்வித உதவிகளும் செய்யப்படுவதில்லை.


படிக்க: மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!


கடந்த மாதம் மணிப்பூரில் குக்கி-பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டபோது மாநில முதல்வர் பைரன் சிங்கே இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் தினந்தோறும் நடைபெறுகிறது என்று கூறினார். தற்போது மணிப்பூரில் பெண்களின் நிலைமை எவ்வாறு உள்ளது?

ஒரு சில சம்பவங்களில் மெய்தி இன பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குக்கி பழங்குடியின பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிர்வாணப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது என குக்கி பெண்கள் கொடூரமாக நடத்தப்படுகின்றனர்.

குக்கி பெண்களை நிர்வாணப்படுத்தவும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யவும் சொல்லும் அளவிற்கு மெய்தி இனத்தை சேர்ந்த பெண்கள் மத்தியில் சங்கப் பரிவார அமைப்புகள் வெறுப்புணர்ச்சியை உருவாக்கியுள்ளன. இச்சம்பவங்கள் இப்போதும் கூட தொடர்வதாகவே கருதுகிறேன். ஆனால், மணிப்பூரில் நடக்கும் எந்தவித சம்பவங்களும் வெளியில் வருவதில்லை.

மணிப்பூரில் கலவரத்தை தொடங்குவதற்கு முன்பே, கலவரம் நடத்துவதற்கு ஏதுவாக துணை இராணுவப் படையை (AFSPA) திரும்பப்பெறுவது, குக்கிகளின் ஆயுதங்களை பறிப்பது, மெய்திகளுக்கு அதிக அளவில் ஆயுதம் ஏந்துவதற்கான உரிமம் வழங்குவது, ஆயுதக் கிடங்குகளை மெய்திகளுக்குத் திறந்துவிட்டது என தொடக்கத்திலிருந்தே அரசு தான் இக்கலவரத்தை முன்னின்று நடத்தி வருகிறது. இது குறித்து அம்மக்கள் என்ன கருதுகின்றனர்?

மக்களிடம் கடுமையான கோபம் உள்ளது. மணிப்பூரில் அரசும் இல்லை ஆட்சியும் இல்லை என்று இரண்டு தரப்பு மக்களும் சொல்கின்றனர். குக்கி மக்களுக்கு அங்குள்ள போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் மெய்தி பகுதி ராணுவ வீரர்களையும் ஏற்றுகொள்ளவில்லை. இன்று, இரண்டு இனங்களுக்கும் இடையில் முஸ்லிம்கள் தான் நம்பகமான தூதுவர்களாக உள்ளனர்.

போலீஸ்துறையும் பாதுகாப்பு படையும் குக்கி மக்களுக்கு எதிராக உள்ளது. மணிப்பூரில் சுமூகமான நிலைமையை கொண்டு வருகிறோம் என்று சொல்லி ராணுவத்தை குவித்துக் கொண்டிருக்கின்றனர். செல்லும் வழியெங்கும் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அங்குள்ள சில போலீஸ் அதிகாரிகள் பேசும்போது ”G20-க்காக காத்துக் கொண்டிருக்கிறோம். G20 முடிந்த பிறகு மிகப்பெரிய ராணுவ ரீதியான நடவடிக்கை எடுப்போம். யார் யாரெல்லாம் கலவரத்தை உருவாக்குகின்றனர் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை எல்லாம் என்கவுண்டர் செய்வோம்” என்று சொல்கின்றனர்.

மணிப்பூர் பற்றி எரிவதன் பின்னணி என்ன?

குக்கிகளை பொறுத்தவரை அவர்கள் பழங்குடியினர் என்பதால் இழிவாக கருதும் போக்குள்ளது. மேலும், அவர்கள் கிறித்தவர்கள் என்ற வெறுப்பு அரசியலும் செய்யப்படுகிறது. குக்கிகள் மலைப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். இங்கு பிற மக்களால் நிலம் வாங்க முடியாது.

மெய்திகளில் பல்வேறு சாதி-மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பாலும் இந்துக்கள், அவர்களில் பிராமணர்களும் உள்ளனர். பலர் பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர். மெய்தி இன மக்கள் மத்தியில் சிறு முதலாளிகளும் உருவாகியுள்ளனர். அவர்கள் மத்தியில் இவ்வளவு பணமிருந்தும் இம்பாலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மலைப்பகுதியில் நிலம் வாங்க முடியவில்லையே என்ற உணர்வு உள்ளது. இதனை பா.ஜ.க. தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. வசதி படைத்தவர்களின் நலனும் அம்பானி-அதானி கார்ப்பரேட் நலனும் ஒன்றாக பொருந்திப்போகும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

பார்ப்பதற்கு வளமிக்க பூமியாகவும் தாது வளங்கள் மிக்கதாகவும் உள்ள மணிப்பூரை அதானி-அம்பானி கார்ப்பரேட் போன்ற நிறுவனங்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் நோக்கம். அதை நேரடியாக மக்களிடம் சொல்ல முடியாது என்பதால் மெய்தி இன மக்கள் மத்தியில், “மொத்த இடமும் குக்கிகளிடம் உள்ளது, உங்களால் அங்கு இடம் வாங்க முடியாது” என்று பொறாமை-வெறுப்புணர்வை உருவாக்கியுள்ளது.

இந்துராஷ்டிரா என்றால் எல்லா பகுதிகளிலும் பிராமணர்கள் குடியேற வேண்டும். அதேபோல் கார்ப்பரேட்டுகள் அங்குள்ள செல்வாதாரங்களை தங்கள் நோக்கிற்கு பயன்படுத்த வேண்டும். மக்களை பிளவுப்படுத்துவது – கார்ப்பரேட் நலன் என்ற இவ்விரண்டு முக்கிய  நோக்கங்களும் இதில் உள்ளன. இது தான் தற்போது மணிப்பூரில் பிரச்சினை உருவாகக் காரணம்.

நீண்ட காலமாகவே ஆர்.எஸ்.எஸ் கும்பலும் மெய்தி லீபன், அரம்பை தெங்கால் போன்ற மெய்தி இனவெறி அமைப்புகளும் மெய்தி மக்கள் மத்தியில் தொடர் நச்சு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின். இப்பிரச்சாரம் எந்த அளவிற்கு அங்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

நாங்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது தட்பவெப்பம் மிகவும் சூடாக இருந்தது. “என்ன மணிப்பூரில் இவ்வளவு சூடாக உள்ளதே” என்று கேட்டோம். அண்மை காலங்களில்தான் இவ்வளவு சூடாக உள்ளது என்று எங்களை அழைத்துச் சென்றவர்கள் (மெய்திகள்) கூறினர். நான், “இது புவி வெப்பமயமாதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படுகிறதா” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “இது குளோபல் வார்மிங் அல்ல, லோக்கல் வார்மிங்” என்றனர். “அது என்ன லோக்கல் வார்மிங்” என்று கேட்டேன். அதற்கு, அவர்கள் “குக்கி மக்கள் காட்டில் உள்ள மரங்களை அழித்துவிட்டு, பாப்பி விதைகளை (போதைப் பொருளுக்கான விதை) விதைப்பதால் குளோபல் வார்மிங்கோடு சேர்த்து லோக்கல் வார்மிங்-கும் வந்துள்ளது, அதனால் மணிப்பூர் சூடாகி வருகிறது” என்றனர்.

இதனைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இவ்வாறு எங்களிடம் கூறியவர்கள் மருத்துவர்கள். இத்தகைய கருத்துகள் அப்பட்டமாக அவர்கள் மத்தியில் பரவியுள்ளது. எப்படி ஜெர்மனியில் எல்லாவற்றிற்கும் யூதர்கள் தான் காரணம் என்று ஹிட்லர், யூதர்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தினாரோ அதே போன்ற வெறுப்புணர்வை மணிப்பூரிலும் உருவாக்கியுள்ளனர்.

குக்கிகள் மோசமானவர்கள், கொள்ளைக்காரர்கள், திருடர்கள், மாஃபியா கும்பல், பாப்பி தீவிரவாதிகள் என்ற கருத்து மெய்திகள் மத்தியில் பரவியுள்ளது. இந்த கருத்தை நீண்டகாலமாக பா.ஜ.க அரசு பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால், அது உண்மையில்லை. மணிப்பூரில் பாப்பி விதைகள் வளர்க்கப்படுகின்றன. அதனை அனைத்து சாதி மற்றும் மதத்தில் உள்ள சமூக விரோதிகளும் செய்கின்றனர். ஆனால், பா.ஜ.க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ட்ரோனை வைத்து கண்டுபிடிக்க வேண்டிய தானே? ஆகையால், அதை குக்கிகள் மட்டும் தான் தொழிலாக செய்கின்றனர் என்று சொல்வது சரியில்லை.

இந்த போதைப் பொருள் கடத்தலில் முதல்வரின் மகனும் ஈடுபட்டுள்ளான் என்பது அம்பலமாகியிருப்பது உங்களுக்கு தெரியும், அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் ஐநூறு கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணிப்பூரில் நடக்கும் போதை மருந்து கடத்தலில் சர்வதேச அளவிலான மாபியா கும்பல்கள் செய்கின்றன.

அதேபோல், மெய்தி மக்களிடம் தவறான வரலாற்றைக் கூறி அவர்களும் பழங்குடிகள் என்று தூண்டிவிட்டு, இட ஒதுக்கீடு பிரச்சினையை கிளப்புகின்றனர். எல்லா விதமான வளங்களையும் வசதிகளையும் அனுபவிக்கும் மெய்திகளை பழங்குடி அந்தஸ்து கேட்கச் செய்கின்றனர்.

மேலும், குக்கி மக்களை வந்தேறிகள் என்று பா.ஜ.க. குற்றஞ்சாட்டுகிறது. இந்நச்சுக் கருத்தை  அவர்கள் மெய்தி மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்துள்ளனர். அங்குள்ள அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என அனைத்து ஊடகங்களும் மெய்தி இன மக்கள் கட்டுப்பாட்டிலும் அரசு கட்டுப்பாட்டிலும் உள்ளது. அவையும் இத்தகைய கருத்துகளை மக்களிடம் பரப்புகின்றன. இதனால், குக்கி மக்கள் மீது மெய்தி மக்களுக்கு கடுமையான வெறுப்பு ஏற்பட்டுள்ளது.


படிக்க: மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!


“வந்தேறிகள்” என்ற குற்றச்சாட்டு குறித்து குக்கி மக்கள் என்ன கருதுகின்றனர்?

2019-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தேசிய குடியுரிமை பதிவேட்டை கொண்டுவந்து குக்கி மக்களை வந்தேறிகள் என குற்றஞ்சாட்டியது. இதற்கு எதிராக அவர்கள் அப்போது ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். அப்போதே இந்த பிரச்சினை தொடங்கியது.

ஆனால், குக்கி மக்கள் இந்தியாவை நேசிக்கின்றனர். அம்மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் உள்ள சிறு சிறு பெட்டிக் கடைகளில் கூட தேசியக்கொடி பறக்கிறது. அவர்கள் யாரும் தனிநாடு கோரவில்லை. “நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் எப்போது இணைந்ததோ நாங்களும் இணைந்தோம். நாங்கள் பழங்குடியின மக்கள். இந்த மலைப்பகுதிகளில் நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, எங்களை மியன்மார் வந்தேறிகள் என்று சொல்வது சரியில்லை” என்று தான் சொல்கின்றனர்.

குக்கி மக்கள் சிலர் தமிழ்நாட்டில் வசித்த தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாட்டு மக்கள் மீது மிகுந்த நேசத்துடன் உள்ளனர்.

நடந்து கொண்டிருக்கும் கலவரத்தில் இரண்டு இனங்களும் மிகப்பெரிய அளவில் பிளவுப்பட்டுள்ளன. சிலர் இந்த பிளவு சரியாக சில தலைமுறைகள் ஆகலாம் என்று கூறுகின்றனர். இது குறித்து உங்களது கருத்து என்ன?

மக்கள் நூறு சதவிகிதம் பிளவுப்பட்டுள்ளனர். குக்கி மக்களும் மெய்தி மக்களும் ஒருவருக்கொருவர் பகையாகப் பார்க்கின்றனர். “குக்கிகள் சமூகவிரோதிகள், போதைபொருள் கடத்துகின்றனர், பாப்பி வளர்க்கின்றனர்” என்ற வெறியுணர்வை தூண்டி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மிகப்பெரிய கலவரம் நடத்தப்பட்டுள்ளது. இம்பாலில் தற்போது ஒரு குக்கி மக்கள் கூட கிடையாது. எல்லோரும் காடுகளுக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இம்பாலில் படித்த மாணவர்கள், ஊடகவியலாளர்கள், தலைமைச் செயலகப் பணியாளர்கள் என யாருமே சமவெளி பகுதியில் இல்லை.

எப்படி குஜராத்தை இந்துராஷ்டிரா ஆய்வுகூடமாக மாற்றினார்களோ அதேபோல் மணிப்பூரையும் மாற்றியுள்ளனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தும் உள்ளனர். தோல்வியடைந்தது மதச்சார்பின்மை, ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை தான்.

இருப்பினும், வரக்கூடிய ஒன்றிய அரசுகள் நினைத்தால் இந்நிலையை சரிசெய்ய முடியும். நல்லிணக்கத்தை உருவாக்க இரண்டு தரப்பு மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அது ஒரு ஆக்கப்பூர்வமான அரசியல் தீர்வு காணும்.

ஆனால், மோடி அரசு அதையெல்லாம் செய்யாது. அதனால் தான் இன்றுவரை மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து பேசினாரேயொழிய மணிப்பூர் மக்களைச் சந்திக்கவில்லை. ஒருவேளை, மணிப்பூருக்குச் செல்ல மோடிக்கு அச்சமாக இருந்தால் அங்குள்ள மக்களை டெல்லிக்கு வரவழைத்துப் பேசலாம் அல்லவா? மோடி அரசு ஆட்சியில் இருந்தால் இந்த நிலை அப்படியே தொடரும். இந்தியா பல பகுதிகளாக சின்னாபின்னமாகும்.


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பி.ஜே.பி – ஆர். எஸ். எஸ் சங்கி கும்பலுக்கான மற்றுமொரு களம்

பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் சாம்பாதித்து கொழுப்பதற்காக நடத்தப்படும் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை பாசிஸ்டுகள் தங்களின் மத வெறியை பரப்புவதற்கான ஒரு களமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐ.சி.சி ஒரு நாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. சுழற்சிமுறையில் ஒவ்வொரு நாட்டின் தலைமையிலும் நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டி உலகளவில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. சூதாட்டம், கார்ப்பரேட் கம்பெனிகளின் கலர்கலரான விளம்பரங்கள், நேரடி ஒளிபரப்பு, 30-க்கும் மேற்ப்பட்ட கேமராக்கள், ரசிகர்களை பரபரப்பாக வைத்துக் கொள்ள தொகுப்பாளர்கள், எல்லா டிவி விற்பனை கடைகளிலும் கிரிக்கெட் ஒளிபரப்பு, நாட்டின் கொடிகள் பொறித்த ஆடைகள், நாட்டுப் பற்று, தேச பெருமை, கிரிக்கெட் வீரர்களின் டிவி விளம்பரங்கள் என ஊதி பெருக்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்கு தீனி போடுவதற்காவே உருவாக்கப்பட்ட ஒன்று.

2023-ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 தொடங்கி நவம்பர் 19 வரை இந்தியாவில் 8 இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 10 அணிகள் பங்குபெறும் இந்த ஒரு நாள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 48 ஆட்டங்கள் என ஒவ்வொரு அணியும் தலா 9 ஆட்டங்கள் விளையாட வேண்டும் அதிக புள்ளிகளை பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். அந்த வகையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் உலககோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 14 அன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. வழக்கம் போல கார்ப்பரேட் லாபத்திற்காக தேசப் பெருமை என ஊதிபெருக்கப்பட்ட இந்த போட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே தேச வெறியோடு பலத்த எதிர்பார்ப்பையும் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி தொடங்கிய உடனேயே முதல் ஓவரிலேயே 1 கோடிற்கும் அதிகமான ரசிகர்கள் இணையவழியில் மட்டும் பார்க்க தொடங்கினர். பரபரப்பும் ஆர்வமும் கொண்ட வகையில் உருவாக்கப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியில் தேச வெறியும் இணைந்திருந்தது.


படிக்க: உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் போட்டியும் திட்டமிட்ட தேசவெறியும்


பாகிஸ்தான் அணி விளையாடிக் கொண்டிருக்கும் போதே சங்கி கும்பல் பாகிஸ்தானுக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் இடதொடங்கினர். அதற்கு ஏற்றவாறு ரசிகர்களைத் தூண்டும் வகையில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “ராம் சீதா ராம்” என்ற பாடல் மைதானத்தில் ஒலிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகிவிட்டு வெளியே செல்லும் போது அவரை நோக்கி ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் இட்ட வண்ணமே தங்களின் தேச வெறியையும் இஸ்லாமிய வெறுப்பையும் காட்ட தொடங்கினர். தான் நினைத்தது எல்லம் நடந்துக் கொண்டிருக்கிறது என எல்லாவற்றையும் மைதானத்தின் மேல் அமர்ந்து கொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார் அமிஷ்தா.

மற்ற நாடுகளுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் போதும் இயல்பாக பார்த்துவிட்டு கடந்து செல்லும் ரசிகர்களை இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது மட்டும் இயல்பாகக் கடந்து செல்ல விடாமல், இரண்டு நாட்டிற்கும் இடையே நடக்கும் போர் போல தேச வெறியைத் தூண்டிவிடும் வகையில் கார்ப்பரேட் ஊடங்களும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் திட்டமிட்டே செயல்படுகின்றன. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றால் இந்தியா என்ற தேசப்பற்றும் சென்னை – மும்பை ஐ.பி.எல் போட்டி என்றால் தமிழ் நாடு என்ற வெறியையும் உருவாக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காக அதிகப்படியான மக்கள் கிரிக்கெட் பக்கம் இழுக்கப்படுகிறார்கள்.

இதுவரை இந்தியா பாகிஸ்தான் இடையே ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி எட்டு முறை நடந்துள்ளது. அதில் எட்டு முறையும் இந்திய அணி பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்துள்ளது. ஆளும் வர்க்கம் இவற்றையெல்லாம் தேசப் பெருமை என்று கூறி, தேச வெறியை ஊட்டுவதன் மூலம் வேலையின்மை, பொருட்களின் விலைவாசி உயர்வு, கல்வி தனியார்மயம், நீட் தற்கொலைகள், மதக் கலவரங்கள், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் என எதைப் பற்றியும் மக்களைச் சிந்திக்க விடாமல் செய்து வருகிறது.

இஸ்லாமியர்களை இந்தியாவின் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றுவதற்கு லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு, மதக் கலவரங்கள் என இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வேலைகளை தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கி கும்பல் செய்துவருகிறது. அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் கிரிக்கெட் போட்டியில் தங்களின் மத வெறியை சங்கி கும்பல் காட்டியுள்ளனர். இப்படி தொடர்ச்சியாக சிறுபான்மையினர் உள்ளிட்ட இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலைத் தடை செய்ய வேண்டும்.


கதிர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் போட்டியும் திட்டமிட்ட தேசவெறியும்

2023-கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பொதுவாக கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பனிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதும், தேச வெறியைக் கிளப்பிவிட்டு அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கங்கள் தங்களை நோக்கி எழும் மக்களின் எதிர்ப்பை, குறிப்பாக இளைஞர்களின் எதிர்ப்பை மழுக்கடிக்கச் செய்வதும் வழக்கமான ஒன்று.

ஆனால் தற்போது இந்தியாவில் நடந்துவரும் உலக கோப்பை மூலம் மோடி கும்பல் கிளப்பிவரும் தேசவெறியும், மதவெறியும் புதிய வகை உச்சத்தை அடைந்துள்ளது. சரிந்துவரும் மோடியின் பிம்பத்தை தூக்கி நிறுத்த G20 மாநாடு, சந்திராயன் உள்ளிட்ட விஷயங்களில் தேச வெறியைக் கிளப்பிவந்த சங்கிகும்பல், இந்த உலகக்கோப்பைத் தொடரையும் அதற்காக பயன்படுத்தி வருகிறது.

மேலும், இதர கிரிக்கெட் விளையாடும் நாடுகளை விட இந்தியாவில்தான் கிரிக்கெட் மோகத்தினால் மக்களும் பெரும்பகுதி இளைஞர்களும் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்காக, சினிமா போதையை போல் கிரிக்கெட் போதையிலும் இளைஞர்கள் திட்டமிட்டே மூழ்கடிக்கப்படுகின்றனர். இளைஞர்கள் தங்களுக்கும் கோடானகோடி உழைக்கும் மக்களுக்கும் இந்த ஆளும் வர்க்கம் இழைக்கும் துயரங்களைக் காண முடியாதவாறு திரையிடப்படுகின்றனர்.


படிக்க: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: “ஜெய் ஶ்ரீ ராம்” கோஷம் உணர்த்துவது என்ன?


இன்று நம் நாட்டில் நடப்பதோ ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி சங்கி‌ கும்பலின் பாசிச ஆட்சி. மோடி கும்பலின் ஆட்சியின் கீழ் மக்கள் சொல்லொனாத் துயரங்களில் ஆழ்த்தப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் மீதான வரிக்கொள்ளை, வேலையின்மை, GST வரிக்கொள்ளை என மோடி கும்பலால் உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு பொருளாதார பயங்கரவாத தாக்குதல்களால் மக்கள் மத்தியில் இன்று பாசிச கும்பல் அம்பலப்பட்டுப் போயுள்ளது. மோடி ’வளர்ச்சியின் நாயகன்’ என்று கட்டமைக்கப்பட்ட பிம்பம் எல்லாம் உடைந்துவிட்டது.

இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தனது சரிந்துப்போன பிம்பத்தை தூக்கி நிறுத்த மோடிக்கும்பல் முயற்சித்து வருகிறது. அதற்கு மோடி கும்பலிடம் இருக்கும் முக்கியமான ஆயுதங்களுள் ஒன்று தேசவெறியைக் கிளப்பிவிடுவதாகும்.

அதனால்தான், அக்டோபர் 14-ஆம் தேதியன்று இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி திட்டமிட்டே அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. குஜராத் என்பது இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலை என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட இந்து மதவெறிக் கூடாரத்தில் இப்போட்டியை நடத்தி ஏற்கனவே அங்கே விதைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு மூலம் இந்து மதவெறியையும் தேச வெறியையும் சங்கி கும்பல் ஒருங்கே கிளப்பி விட்டுள்ளது.

ஒருவேளை இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் அந்த மைதானத்திலேயே கலவரம் வெடித்திருக்கலாம். அதற்கும் சங்கி கும்பல் தயாராகவே இருந்திருக்கிறது என்பதுதான் பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து சங்கிகள் ஜெய்ஸ்ரீராம் கோசமிட்டது நமக்கு உணர்த்துகிறது. இந்த மதவெறி காட்டுமிராண்டித் தனத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். சங்கிகளின் இந்த ஈத்தர செயலுக்கு எதிராக Sorry Pakistan என்கிற ஹாஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டானது.

2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலைப் போல், 2024 தேர்தலுக்கு முன் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி சங்கி கும்பல் திட்டமிட்டு  தேச வெறியைக் கிளப்பி விட முயன்று வருகிறது. அதற்கு மக்களும் இளைஞர்களும் பலியாகாமல் தடுக்க வேண்டிய நிலையில் நாம் தற்போது உள்ளோம். இந்த இந்து மதவெறி பாசிஸ்ட்டுகளை அம்பலப்படுத்தி இவர்களுக்கான மக்கள் செல்வாக்கை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இவர்களை வீழ்த்த முடியும். “வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம்” என்று தேசமெங்கும் முழங்குவோம்.


ஓவியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இந்துராஷ்டிர தர்பார்!

புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டட திறப்பு விழாவின் போது இந்தியாவின் ஜனாதிபதி அழைக்கப்படாதது; பிரதமருக்கு செங்கோல் வழங்கப்பட்டது; புதிய கட்டடத்தின் வளாகத்தில் புராணச் சின்னங்கள் வைக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட பார்ப்பனிய சனாதன தர்மத்தின்படி கடைப்பிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்போதே அம்பலப்படுத்தப்பட்டன.

பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தில் ஆடம்பரமாக கட்டப்பட்ட புதிய கட்டடம் திறக்கப்பட்ட பின்னரும், சென்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடக்காமல், பழைய கட்டடத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது. புதிய கட்டடத்தில் எப்போதிருந்து கூட்டங்கள் நடக்கத் தொடங்கும் என்பதையும் மோடி கும்பல் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், ஆகஸ்டு 31-ஆம் தேதி, எதிர்க்கட்சிகளின் “இந்தியா”கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடக்கும் வேளையில், அதனை திசைத்திருப்பும் வகையில், திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சிநிரல் அறிவிக்கப்படவில்லை.

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுமா, ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்படுமா என ஊகங்களை ஊடக விவாதங்களுக்கு இழுத்துவிட்டதன் மூலம், தன்னைச் சுற்றி விவாதங்களை அமைத்துக் கொண்டது பாசிச மோடி-அமித்ஷா கும்பல்.


படிக்க: நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!


பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாமை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், வேலையின்மை, மோடி அரசின் 7.5 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் குறித்த சி.ஏ.ஜி. அறிக்கை, மணிப்பூர் கலவரம், சீனாவின் ஊடுருவல் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாத பாசிச மோடி அரசு, தனது திட்டங்கள், நடவடிக்கைகளை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. ஆனால், மேற்கண்ட மக்கள் பிரச்சினைகள் எவை குறித்தும் இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரிலும் விவாதிக்கத் தயாராக இல்லை.

மாறாக, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே கருத்து சொல்லும் நிலைக்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்ட சோகம்தான் நடந்தேறியது.

திடீரென அறிவிக்கப்பட்ட இந்த சிறப்புக் கூட்டத்தொடர் விநாயகர் சதுர்த்தி என்ற பார்ப்பன ‘நன்நாளில்’ தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சி நிரல் இந்தியில் மட்டும் கொடுத்திருந்ததைப் பார்த்து, திருச்சி சிவா, ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த நிகழ்ச்சிநிரல் பிரசுரத்தை அங்கேயே கிழித்துப் போட்டார்.

நாடாளுமன்றத்தின் இந்த சிறப்புக் கூட்டத்தொடரின் முதல்நாள் அவைத்தலைவரும் தலைமைச் செயலாளரும் (செக்ரட்டரி ஜெனரல்) வராத நிலையில், மோடி வந்ததும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதன் பின்னர், இருவரும் அவைக்குள் வந்த பின்னர் மீண்டும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.

அதாவது, பார்ப்பன தர்மப்படி, முதலில் தொடங்கியதுதான் கூட்டத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படும் என்பதால், அவைத்தலைவரும், தலைமைச் செயலாளரும் இல்லாமல் புதிய கட்டடத்தின் முதல் கூட்டம் தொடங்கியிருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டங்களில் பேசும் போது, இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்துப் பேசாமல், இசுலாமியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த வரலாறு என்பதைக் குறிக்கும் வகையில் பேசி, எதிர்க்கட்சிகளை சாட்சியாக வைத்துக் கொண்டே மோடியும் பா.ஜ.க.வினரும் வரலாற்றை அப்பட்டமாக திரித்தனர். எதிர்க்கட்சிகளோ ஆங்கிலேயரிடம் இருந்து ‘விடுதலைப்’ பெற்ற கதைகளைக் கூறி விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

முதல் நாள் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூட்டத்தை நடத்தி, அதனை மூடுவதை அறிவித்தார்கள். இதில் எதிர்க்கட்சிகள் எல்லாம் கலந்து கொண்டு கருத்துகளைக் கூறினர். அடுத்த நாள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தைத் தொடங்கினார்கள்.

இக்கூட்டத்தொடருக்கான அறிவிப்பின்போது, இது சிறப்புக் கூட்டத்தொடர் என்று அறிவித்தனர். நாடாளுமன்றத்திலோ, இது வழக்கமான கூட்டத்தொடர்தான் என்று அமைச்சர் கூறினார். இவ்வாறெல்லாம் விளக்கமளிப்பதற்கு விதிமுறைகள் இடமளிக்கின்றனவா என்பதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படவில்லை.


படிக்க: சரிந்துவரும் மோடியின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்தவே மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு!


பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து வெளியேறும் போது எம்.பி.க்களின் குழு புகைப்படம் (குரூப் ஃபோட்டோ) நிகழ்ச்சியை அறிவித்தனர். கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, இவ்வாறு செய்வது மரபு மீறிய செயல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்வதாகும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சித்தனர்.

அத்துடன் புதிய கட்டடத்தில் நுழையும் போது எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் சாசனம் நூல் ஒன்று வழங்கப்பட்டது. அந்த நூலின் முகப்புரையில், “சோசலிசம்”, “மதசார்பின்மை” போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருந்தன. இப்படி அரசியல் சாசனத்தில் தாங்கள் விரும்பிய வகையில் திருத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை அறிமுகப் படுத்தியதன் மூலம், பெண் உரிமைகளுக்காக பா.ஜ.க.தான் முன்முயற்சி எடுத்தது போன்ற தோற்றத்தை பா.ஜ.க.வினர் உருவாக்கினர். இதனால், எதிர்க்கட்சிகள் இந்த விசயத்தில் பா.ஜ.க.விற்கு முன்னரே தங்களது கட்சியினரும் மகளிருக்கு உரிமைகளை வழங்குவதில் முன்னோடிகளாக இருந்தோம் என்று தங்களது நிலையை விளக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். விவாதம் முழுவதும் இதனைச் சுற்றியே அமைந்தது. பா.ஜ.க.வின் 7.5 லட்சம் கோடி ரூபாய்  ஊழல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.

ஆனால், நிகழ்ச்சிநிரலில் அறிவித்தபடி பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் அறிவித்த தேர்தல் கமிசன் ஆணையர்களை நியமிக்கும் சட்ட மசோதா 2023 தாக்கல் செய்யப்படாமலேயே நான்காவது நாளில் கூட்டத்தை நிறைவு செய்வதாக கடைசி நேரத்தில் அறிவித்தனர். கூட்டத்திற்கான நேரம், நிகழ்ச்சி நிரலை அவர்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டே இருந்தனர். எந்த நிகழ்ச்சியும் உரிய வகையில் விவாதிக்கப்படவில்லை.

வழக்கமாக இரவு 7 மணியுடன் முடிக்க வேண்டிய கூட்டத்தை இரவு வரை தொடர்வது என, நான்காவது நாள் அன்று, சில மணி நேரங்களுக்கு முன்னதாக அறிவித்து கூட்டத்தை இரவு 11.30 மணி வரை நடத்தினர். இவ்வாறு தங்கள் விருப்பம் போல நேரம் எடுத்துக் கொண்டு, சந்திரயான் குறித்து புராணக் கதைகளுடன் இணைத்துப் பேசுவது, மோடியைப் புகழ்ந்து கொண்டே இருப்பது என நாடாளுமன்றத்தை பஜனைக் கூடமாக மாற்றிவிட்டனர்.

ஆளும் கட்சியின் ரமேஷ் பிதூரி, பி.எஸ்.பி.யைச் சேர்ந்த டேனிஸ் அலியை, “மாமா பயல்”, “சுன்னத் செய்தவனே”, “பயங்கரவாதி”, பயங்கரவாதி”, “முசுலீம் பயங்கரவாதி” என்று கூச்சலிட்டு கத்தினான். இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பல நிமிடங்கள் அவனைக் கண்டித்து குரல் எழுப்பினர். அதுவரை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த ராஜ்நாத் சிங் எழுந்து வருத்தம் தெரிவிப்பது போல நாடகமாடினார். ஆனால், இந்த ரமேஷ் பிதூரியோ திமிராகவே நடந்து கொண்டான். கடைசிவரை தான் பேசியது தவறு என்றே சொல்லவில்லை.

இதுமட்டுமல்ல, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது கருத்துரை வழங்க எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பேசத் தொடங்குவதற்குள்ளேயே ஆளுங்கட்சியினர் கத்தத் தொடங்கினர். அவர்கள் கத்துவதை அடக்குவதற்கு கூட அவைத்தலைவர் அக்கறைக் காட்டவில்லை.

பெண்களுக்கு ஆன்மா இல்லை என்று கூறி அவர்களை அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தும் சித்தாந்தத்தைக் கொண்டதுதான் மோடி-அமித்ஷா கும்பல். மணிப்பூரில் குக்கி இனப் பெண்களை கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொண்டும், நாடாளுமன்றத்தில் பிரிஜ் பூஷன் போன்ற பொறுக்கிகளை வைத்துக் கொண்டும்தான் இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதில் இருந்து, மோடி அரசுக்கு மகளிர் உரிமையில் இருக்கும் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும். தங்களது தேர்தல் புகழுக்காக மோடி அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளை சாட்சியாக வைத்துக் கொண்டனர்.

000

எதிர்க்கட்சிகள் கருதிக் கொண்டிருக்கலாம், நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளைப் பேசினால், அது நாட்டு மக்களுக்குத் தெரியவரும் என்று. இப்போதே, எதிர்க்கட்சியினர் பேசுவது, நாடாளுமன்றத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன. எதிர்க்கட்சிகள் பேசும் போது, அவர்களது உரையை வெளியிடும் மிச்சமிருக்கும் ‘ஜனநாயகம்’ கூட இன்னும் சில கூட்டங்களுக்குப் பின்னர் பறிக்கப்படலாம் என்பதை எதிர்ப்பார்ப்பதே அறிவுடைமை.

மொத்தத்தில், பா.ஜ.க. முன்வைக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே எதிர்க்கட்சிகளை விவாதிக்க வைப்பது, எதிர்க்கட்சிகளைப் பேசவைத்து அவமானப்படுத்துவது, இழிவுப்படுத்துவது; அப்பட்டமாக வரலாற்றைத் திரித்துப் பேசுவது; சம்பந்தமே இல்லாமல் மோடியைப் புகழ்வது; புராணக் கதைகளை அள்ளி விடுவது; ஏற்கெனவே இருந்த நாடாளுமன்ற மரபுகள் எல்லாவற்றையும் குழி தோண்டி புதைப்பது; அப்பட்டமாக விதிமுறைகளை மீறிக்கொண்டே இருப்பது; இவை குறித்தெல்லாம் விவாதிக்க வழியில்லாத அளவிற்கு பிரச்சினையை சிக்கலாக்குவது; பிரதமர் மோடி எந்த நிகழ்ச்சிகள் மீதும் கருத்து சொல்லாமல் வெளியேறுவது; பார்ப்பன புராண ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற நடைமுறைகளை வகுத்துக் கொள்வது; நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரல்கள் குறித்து முறையாக அறிவிக்காமல் எல்லாவற்றையும் இரகசியமாக வைத்துக் கொள்வது; எப்போது என்ன நடக்கும், எப்போது என்ன பேசுவார்கள் என்றே சொல்லாமல், செல்லப் பிராணிகளை எஜமானர்கள் இழுத்துச் செல்வது போல எதிர்க்கட்சி எம்.பி.க்களை இழுத்துச் செல்வதுதான் மோடியின் புதிய நாடாளுமன்ற நடைமுறைகள்.

இதுதான், ‘ஜனநாயகம், விவாதச் சுதந்திரம், சட்ட திட்டங்களை வகுக்கும் நாடாளுமன்றத்தில் நமது நாட்டின்  “மாண்புமிக்க” மக்கள் பிரதிநிதிகளுக்கு’ பாசிச பா.ஜ.க.-வால் வழங்கப்படும் மரியாதையாகும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களில் சுமார் 10 பேர் மட்டுமே இறுதி நாள் கூட்டத்தில் இருந்தனர். நாடாளுமன்ற ஜனநாகத்திற்குள் நின்று ‘போராடும்’ வலிமை இப்போதே இந்த அளவிற்கு குறைந்து போனால், அடுத்து வரப்போகின்ற காலங்களில், எதிர்க்கட்சிகள் தாங்களாகவே நாடாளுமன்றக் கூட்டங்களைப் புறக்கணித்துவிட்டு வீட்டிலேயே அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாலும் வியப்படைய ஏதுமில்லை!

நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகமல்ல, இந்துராஷ்டிர தர்பார்.

பேரரசரைப் புகழ்ந்து பாடுபவர்களுக்கும் இரந்துண்டு வாழ்பவர்களுக்கும் மட்டுமே இங்கு அனுமதி. இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லி, மக்களுக்கான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான மக்கள் எழுச்சியைக் கட்டியமைக்க வீதியில் இறங்கி அறைகூவுவதே தீர்வு.


தங்கம்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



என் நண்பர்களின் பட்டியல் சுருங்கி வருகிறது | கவிதை

க்டோபர் 20-ஆம் தேதியன்று தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் (Khan Yunis) இஸ்ரேலின் குண்டுவீச்சில் “ஆக்சிஜன் இஸ் நாட் ஃபார் தி டெட்” (Oxygen is Not for the Dead) என்ற நாவலின் ஆசிரியரும் கவிஞருமான ஹெபா அபு நாடா (Heba Abu Nada) கொல்லப்பட்டார். பாலஸ்தீன கலாச்சார அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டது.

கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் (அக்டோபர் 19) ஹெபா அபு நாடா எழுதிய கவிதை

என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
நண்பர்கள்
சின்னச் சின்ன
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்
ஏவுகணைகளைவிட
வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை
என்னால்
மீட்க முடியவில்லை
காக்க முடியவில்லை
எனக்கு அழ முடியவில்லை
எனக்கு
என்ன செய்வதென்றும் தெரியவில்லை

ஒவ்வொரு நாளும்
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
இது வெறும் பெயர்கள் அல்ல
வேறு பெயர்களிலும் முகங்களிலும் இருந்த
அவர்களும் நானே
நானும் அவர்களே

அல்லாவே
மாபெரும் இச் “சா” விருந்தில்
நான் என்ன செய்யமுடியும்

எந்தக் கொம்பனாலும்
கனவிலுங் கூட
என் நண்பர்களை மீட்டுத் தரமுடியாது.

– ஹெபா அபு நாடா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகள்: சீழ்ப்பிடித்து நாறும் முதலாளித்துவக் கட்டமைப்பு!

ன்மைக் காலமாக பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் கொடூரமாக நடைப்பெற்று வருகின்றன. அச்சம்பவங்கள் நம்மிடம்  மூன்று விதமான மனநிலையை உருவாக்கச் செய்கின்றன. முதலாவது, இது எப்பவும் நடப்பது தான், இரண்டாவது,  எப்போதும் நடப்பதுதான் நம் வீட்டு குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக இருக்கனும், மூன்றாவது, பல வடிவங்களில் நடப்பதை கண்டு அச்சத்துடன் இதற்கு என்ன செய்ய போகிறோம் என பதறுவது என்ற மனநிலை வெளிப்படுகின்றன. இச்சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கெதிரான குற்றங்களை இவ்வாறே கடந்து செல்கிறோம்.

“மகள்களை மிரட்டி ஓராண்டாக பாலியல் தொல்லை செய்த அப்பா”

கோவை ரத்தினபுரியை சேர்ந்த 36 வயது தொழிலாளிக்கு 15 வருடத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி பிரிந்து சென்றபின், இளம்பெண் ஒருவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில்  9-ஆம் வகுப்பு மற்றும் 5-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

அப்பள்ளியில், மாவட்ட குழந்தைகள் உதவி மையம் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் இரு சிறுமிகளும் அழுதுக்கொண்டே தங்களது தந்தை ஓராண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வதாகவும், வெளியே சொன்னால் தாய் மற்றும் எங்கள் இருவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மனைவி வீட்டு வேலைக்கு செல்பவர் என்பதால், அந்த நேரத்தில் சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

செய்தி ஆதாரம்: விகடன்

“இளம்பெண்ணை வீட்டில் அடைத்துக் கூட்டு பலாத்காரம்”

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். அதேப்பகுதியில் உள்ள சிவனேஷ் பாபு (39) என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவன் இளம்பெண்ணிடம் “நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம், என்னுடன் வந்துவிடு” என்று தெரிவித்துள்ளான். பின்னர், தனியாக வீடு எடுத்து இளம்பெண்ணை தங்க வைத்துள்ளான். தொடர்ந்து வெளியே செல்வதாகக் கூறி வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு சென்றுள்ளான். மெக்கானிக்காக வேலை செய்யும் தனது நண்பன் ராகுல் (38) என்பவனுடன் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி, அடித்துக் கட்டாயப்படுத்தி வீட்டிற்குள் அடைத்து வைத்துப் பலமுறைப் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். ராகுலின் நண்பனான பாலியல் புரோக்கர் செந்தில்குமார் (35) மூலம் இளம்பெண்ணை வெளியே அழைத்துச் சென்று “தாங்கள் கூறும் நபர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் கொன்று விடுவோம்” என மிரட்டி, அடித்து துன்புறுத்தி பல்வேறு நபர்களின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளனர். இளம்பெண்ணை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வீட்டிற்குள் அடைத்து வைத்தும், வெளியில் அழைத்து சென்றும் பல நபர்களின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

செய்தி ஆதாரம் : தினகரன்

***

இரண்டு செய்திகளும் வெவ்வேறு தளங்களில் நடந்தவை. இச்செய்திகள் கூறுவது என்ன, அப்பாவையும் நம்பியிருக்க முடியாது, அன்பாக பேசும் நபர்களையும் நம்ப முடியாது என்பதைத் தான். இச்சமூகத்தில் பெண்கள் யாரைத் தான் நம்புவது? என்ற கேள்வியே எழுகிறது.

மறுகாலனியாக்க நுகர்வுவெறியூட்டப்பட்ட சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். மறுகாலனியாக்கம் பல வேலையற்றவர்களையும், பணத்திற்காக எதையும் செய்பவர்களையும் உற்பத்தி செய்து வருகிறது. பயணத்தின் போது, சொந்த வீட்டில், உறவினர் வீட்டில், ஆண் மற்றும் பெண் நண்பர்கள் மத்தியில், கல்வி நிலையங்கள், போலீசு நிலையங்கள், ஐ.டி நிறுவனங்கள்,  அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என பல வடிவங்களில் பரந்துவிரிந்த வகையில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இதுபோன்ற குற்றங்கள் நடக்குபோது உடனே கடுமையான சட்டங்கள் கொண்டுவந்து தீர்த்து விடலாம் என தோன்றலாம். இதுவரை போடப்பட்ட சட்டங்களை பயன்படுத்தி குற்றங்களை ஒழித்தது இருக்கட்டும், குறைந்தபட்சம் குற்றங்கள் குறைந்திருக்கிறதா? இல்லை.  இன்னும், வீரியமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் பார்ப்பனிய – ஆணாதிக்க சிந்தனையையும், மறுகாலனியாக்க நுகர்வுவெறி பண்பாட்டையும் அரசு கட்டமைப்பே பாதுகாத்து வருகிறது. இதனால், பெண்கள் மீது கொடூரமான பாலியல் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. இதை எப்படி முற்றாக ஒழித்துக்கட்டப் போகிறோம் என்பதே மையமானக் கேள்வி.

***

நம்மை காப்பாற்றுவதாக கூறப்படும் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் ஊழலில் மிதந்து கொண்டிருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கு இதுவரை கொண்டுவந்தக் கடுமையான சட்டங்கள் சட்டப் புத்தகத்தில் தூங்குகின்றன.

அன்மைக் காலமாக மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி கைது செய்ததாக செய்தி வருகிறது. பெண்களை வைத்து மசாஜ் சென்டர் நடத்த அரசு அனுமதித்தால் அங்கு வேறு என்ன நடக்கும். மசாஜ் சென்டர் விபச்சாரத்தின் முன்னேறிய வடிவம் என்பது அரசுக்கு தெரியாதா என்ன. இன்னொருபுறம், கஞ்சா, கூலிப் போன்ற விதவிதமான போதை பொருட்கள் மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியில் சகஜமாகப் புழங்குகிறது. இவையெல்லாம், அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசுத்துறை, அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன? தெரியும். ஊழல் பெருச்சாளிகள் எப்போதும் சாக்கடையை சுத்தம் செய்யாது. அதிலேயே சுற்றித்திரியவே செய்யும். இவ்வாறு சீரழிந்துக் கொண்டிருக்கும் அரசு கட்டமைப்பு நமது பிரச்சனையை ஒருபோதும் தீர்க்கப் போவதில்லை.

ஒன்று, இவற்றையெல்லாம், சகித்துக்கொண்டும், அனுபவித்துக்கொண்டும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், பார்ப்பனிய – ஆணாதிக்க வெறிக்கும், மறுகாலனியாக்க நுகர்வுவெறி பண்பாட்டிற்கும் சவக்குழி தோண்ட மாணவர்கள் – இளைஞர்கள் – உழைக்கும் மக்கள் கொண்ட ஓர் எழுச்சி நடத்துவதை நோக்கி முன்னேற வேண்டும்.


குழலி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!

க்களை எப்போதும் பரபரப்பிலேயே வைத்துக் கொள்வது; நிகழ்ச்சி நிரலை எப்போதும் தான் தீர்மானிக்கும் வகையில் பார்த்துக் கொள்வது; எதிரணியினரிடம் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு, எதிராளிகளை எப்போதும் தற்காப்பு நிலைக்குத் தள்ளுவது போன்ற உத்திகள்தான் பா.ஜ.க.வை அரசியல் அரங்கில் பலம்வாய்ந்த கட்சியாக வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பல்வேறு சதித்தனமான அணுகுமுறைகளை கவனத்தில் கொள்ளவில்லை என்றால், அக்கும்பல் திட்டமிட்டுப் பின்னிவைத்திருக்கும் சிலந்திவலைக்குள் நாம் சிக்கிக் கொள்வோம். இன்று, நமது நாட்டில் நடந்துகொண்டிருப்பது அதுதான்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சரியாக இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. இந்த ஏழு மாதங்களில் ஒவ்வொரு நாளும், கடந்துசெல்லும் ஒவ்வொரு மணிநேரங்களும் நாம் எதைப் பேச வேண்டும், எது பொது விவாதமாக இருக்க வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் முன்பே தீர்மானித்துச் செயல்படுத்துகிறது; எதுவும் தங்களது கட்டுப்பாட்டுக்கு அப்பால் செல்லாமல், அனைத்தும் தாங்கள் தீர்மானித்தபடி நடப்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்கிறது.

கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக நாம் எதையெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தோம்; எதையெல்லாம் பேச மறந்து போயுள்ளோம் என்று எண்ணிப் பார்த்தால் பாசிசக் கும்பலின் இந்த சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இன்று அரசியல் ரீதியாக தோல்வி முகத்தை அடைந்துள்ளது என்று நாம் அடையாளப்படுத்தியுள்ளோம். இந்த தருணத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாசிசக் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்றால், அக்கும்பலின் சதித்தனமான அணுகுமுறைகளையும் உத்திகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டத்தை சரியான திசையில் உறுதியாக நடத்திச் செல்ல முடியும்.

சந்திரயான் – சி.ஏ.ஜி. அறிக்கை: ஊடகங்களின் கரசேவைக்கு ஒரு வகைமாதிரி!

பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்டுகள் எப்போதுமே தங்களுக்குச் சாதகமாக பொது உளவியலைக் கட்டமைப்பதில் வல்லவர்கள். குறிப்பாக, தேர்தல் நேரத்தில் இதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பாரதூரமானவை. ஏனெனில், தேர்தல் நெருக்கத்தில் ஏற்படுத்தப்படும் பொது உளவியல்தான், பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது. அந்தவகையில், ஊடகங்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு தங்களுக்கு சாதகமான கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது பாசிசக் கும்பல்.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வுசெய்யும் இஸ்ரோவின் “சந்திரயான்-3” திட்டத்தின் வெற்றியை, மோடி அரசின் தனிப்பட்ட சாதனையாக காட்டும் முயற்சிகள் அப்படித்தான் உருவாக்கப்பட்டன.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் நிலவின் தென் துருவத்திற்குச் சென்று ஆய்வு செய்யும் முயற்சியில் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்தியா உலகின் முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. ஆகவே, இஸ்ரோவின் இந்த வெற்றி, நாட்டு மக்கள் அனைவராலும் தேசத்தின் பெருமிதமாகக் கருதிக் கொண்டாடப்பட்டது.


படிக்க: யூதர்கள் சொல்கிறோம் காசா மீதான போரை நிறுத்து!


வாஜ்பாய் காலத்தில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது; அதன்பிறகு, சந்திரயான்-3 திட்டத்தின் சாதனைகள், மோடி அரசில்தான் நிகழ்த்தப்பட்டுள்ளன; எனவே, பா.ஜ.க.தான் ‘தேசத்தை வலுப்படுத்தக் கூடிய கட்சி’ என்பது போன்ற பிரச்சாரங்களை ஊதுகுழல் ஊடகங்கள் முன்னெடுத்தன.

பா.ஜ.க.வின் அடிவருடியான முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், “காங்கிரசுக்கு என்றுமே இஸ்ரோவின் மீது நம்பிக்கை இருந்ததில்லை, இதன் காரணமாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இஸ்ரோ அமைப்புக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை” என்று விமர்சித்தார். இவரை கதாநாயகனாக சித்தரித்து, நடிகர் மாதவன் நடித்துள்ள “ராக்கெட்ரி” திரைப்படத்திற்குதான், ஒன்றிய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், இந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்கியுள்ளது.

விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு, சர்வதேச விதிகள் எதையும் மதிக்காமல் “சிவசக்தி” என பெயரிட்டார் மோடி. இது, பெண் சக்தியை கௌரவப்படுத்தும் வகையில் சூட்டப்பட்டதாகவும் கூறினார். சங்கிகள் ஒருபடி மேலேபோய், நிலவின் அந்தப் பகுதியை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் அலும்பல் செய்தார்கள்.

மொத்தத்தில், சந்திரயானின் வெற்றி, பச்சையாக மோடியின் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. அடுத்தது, சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் ஆதித்யா விண்கலமும் ஏவப்பட்டுள்ளது. அதுபற்றிய பரபரப்புகளும் தொடங்கிவிட்டன.

இந்த தேசப் பெருமிதக் கூச்சல்களின் நடுவே இஸ்ரோவையே தனியார்மயமாக்கும் மோடி அரசின் சதித்திட்டத்தைப் பற்றி யாரும் பேசவில்லை.

ஜூலை 14 அன்று சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்டு 23-ஆம் தேதி, விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான் விண்கலம் ஏவப்படுவதற்கு முன்பும், நிலவில் தரையிறங்கியதற்கு பின்பும் என ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் முழுக்க நாட்டு மக்களை தேசப் பெருமிதத்திலேயே மூழ்கடித்தது மோடி அரசு. இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான், மோடி அரசின் உலக மகா ஊழலை சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியது.

ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களில் சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதை சி.ஏ.ஜி அறிக்கை வெளிக்கொண்டுவந்தது. மோடி அரசு மிகவும் பெருமையாகப் பேசிவந்த ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில், ஒரே செல்போன் எண்ணின் கீழ் 7.5 லட்சம் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், இறந்துபோன பலருக்கு சிகிச்சை நடைபெற்றதாக மோசடி செய்திருப்பதையும் சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது. துவாரகா விரைவுச் சாலை கட்டுமானத்தில், ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு திட்ட மதிப்பான 18 கோடியிலிருந்து 250 கோடி வரை செலவழிக்கப்பட்டதும் அம்பலப்படுத்தப்பட்டது.

1.75 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கருதப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரம் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதைவிட ஐந்து மடங்கு ஊழலை அம்பலப்படுத்திய தற்போதைய சி.ஏ.ஜி. அறிக்கை எந்த ஊடகங்களிலும் நீடித்த விவாதப் பொருளாக இல்லை. சந்திரயான்-3 விண்கலம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் நிரம்பி வழிந்ததன் மூலம் சி.ஏ.ஜி. அறிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இதை ஊடகங்கள் திட்டமிட்டே செய்தன.

மோடி அலையை எழுப்ப மேலும் பல முயற்சிகள்!

சந்திரயானுக்கு முன்பாக, பைடனின் அழைப்பின் பேரில், மோடி மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் குறித்தும் சங்கிகளால் பெருமிதமாகப் பேசப்பட்டது. அதற்கடுத்து, இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு வளர்ச்சியில் (ஜி.டி.பி), அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்தது என்ற செய்தி வெளியானது (கொரோனா பெருந்தொற்று, ரஷ்ய-உக்ரைன் போர் ஆகியவற்றால் மேற்கண்ட நாடுகளின் பொருளாதாரம் சரிந்திருப்பதே, இந்தியாவின் உற்பத்தி மதிப்பு ஒப்பீட்டளவில் ‘முன்னேறி’ இருப்பதற்கு காரணம் என்பது தனிக்கதை). இதுவும் மோடி ஆட்சியில் இந்தியா அடைந்துவரும் ‘வளர்ச்சி’க்கு அடையாளமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இதுவரை எந்த நாட்டு ஆளுங்கட்சியும் செய்யாதவகையில், ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்ற நிகழ்வை நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய கவர்ச்சி விளம்பரமாக மாற்றியுள்ளது மோடி அரசு. ”பாரத் மண்டபம்” என்ற பெயரில் மாநாட்டு அரங்கு, மண்டபத்தின் முகப்பில் நடராஜர் சிலை, விருந்தினர்களுக்கு தங்கத் தட்டில் உணவு என ஒவ்வொரு சிறு நிகழ்வும் ஊதுகுழல் ஊடகங்களிலும் ‘நடுநிலை’ ஊடகங்களிலும் மெய்சிலிர்க்க விவாதிக்கப்பட்டன. ஆனால், மாநாட்டின் ஏற்பாட்டுக்காக, டெல்லியின் குடிசைப் பகுதிகளை திரைகட்டி மறைத்து, அங்கு வாழும் மக்களை சிறை வைத்ததை ஊதுகுழல் ஊடகங்கள் முற்றிலுமாக இருட்டடிப்பு செய்தன.

இப்போதே 2024-ஆம் ஆண்டு தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. மோடி தான் மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெறுவார்; எதிர்க்கட்சிகள் மிகப் பரிதாபமாக தோல்வியுறுவார்கள் என்று கருத்துருவாக்கும் வகையில், திட்டமிட்டே கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன, பா.ஜ.க.வின் கைக்கூலி ஊடகங்களான இந்தியா டிவி – சி.என்.எஸ். கூட்டணி.

இதுபோன்ற போலியான ஊடகக் கருத்துக்கணிப்புகளின் மூலம் மோடியின் பிம்பம் ஊதிப் பெருக்கப்படுகிறது. மறுபக்கம், மணிப்பூரில் தொடர்ந்துகொண்டிருக்கும் இனவெறிக் கலவரங்கள் மூடிமறைக்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளை சிதறடிக்கும் உத்தி!

தனக்கு எதிராக திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் அணிவரிசையில் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட வேண்டும் என்று முயற்சிக்கிறது பா.ஜ.க. அதற்காக எல்லா கேடுகெட்ட வழிமுறைகளையும் கையாளுகிறது. தாங்கள் தீர்மானிக்கும் நிகழ்ச்சிநிரலுக்கு உள்ளேயே எதிர்க்கட்சிகளை சுற்றவிடுவதும், திட்டமிட்ட வகையில் தனக்கு எதிரான பிரச்சாரங்களைக் கட்டமைக்கவிடாமல் பார்த்துக் கொள்வதிலும் கவனமாக உள்ளது.

கடந்த ஜுலை 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஒற்றுமைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் விளைவாக, எதிர்க்கட்சிகளின் மேல் கவனம் குவிவதைத் தடுப்பதற்காக, திடீரென்று அதே தேதியில் (ஜூலை 18) தனது கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் ஏற்பாடு செய்து நடத்தியது பா.ஜ.க.

அடுத்தது, எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம், ஆகஸ்ட் 31, செப்டம்பர் 01 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டம், பா.ஜ.க.விற்கு எதிராக குறைந்தபட்ச செயல்திட்டம் வகுப்பதற்கான கூட்டமாக அறிவிக்கப்பட்டது.

இதற்காகவே காத்திருந்ததுபோல, ஆகஸ்ட் 31-ஆம் தேதி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவித்தார்.

எவ்வித முன்னறிவிப்புமின்றி, திடீரென அறிவிக்கப்பட்ட இந்த ஐந்து நாள் கூட்டத்தொடரில் என்ன விவாதிக்கப்படப் போகிறது என்பதற்கான நிகழ்ச்சிநிரல்கூட முன்பே வெளியிடப்படவில்லை; கூட்டத்தொடர் நெருங்கியபோதுதான் வெளியிடப்பட்டது. ஆகையால், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், நாடாளுமன்ற இருக்கைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து சட்டம் கொண்டுவர வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டன.

அடுத்தநாள், ஒரே நாடு ஒரே தேர்தலை அமலுக்கு கொண்டுவருவதைப் பற்றி பரிசீலிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அவசர அவசரமாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அனைத்து எதிர்க்கட்சிகளும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்த்தும், பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும் பேசத்தொடங்கிவிட்டன.

இச்சம்பவங்களுக்கு சில நாட்கள் முன்புதான் சீனா தனது புதிய வரைபடத்தில், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்த்து வெளியிட்டிருந்தது. ஏற்கெனவே, சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் ஊடுருவி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், வரைபட விவகாரத்தில் ’56 இன்ச்’ மோடி வாய்திறக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டன. ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதப் பொருளான பின்பு, மோடியின் பராக்கிரமத்தை கேள்விக்குள்ளாக்கும் சீன வரைபடம் கவனம் பெறவில்லை.

இன்னொருபக்கம், அதானி குடும்பத்திற்கு நெருக்கமான இரண்டுபேர் மொரீசியஸ் நாடு வழியாக அதானி நிறுவனங்களின் பங்குகளில் ரகசியமாக பல மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மூலம் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் மோசடியாக உயர்த்தப்பட்டதாகவும் அம்பலப்படுத்தி “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம்” (OCCRP) என்ற சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்களின் வலைப்பின்னல் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை “மோதானி” என்ற பெயர் எதிர்க்கட்சிகளால் உச்சரிக்கப்பட்டது. ஆனால், சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அறிவிப்பின் மூலமாக இவை எல்லாம் அமுக்கப்பட்டுவிட்டன.


படிக்க: தனியார்மய ஆதிபராசக்தி பெற்றெடுத்த பங்காரு!


உண்மையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவருவது பற்றி மோடி அரசு கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் பேசியது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டுவர, அரசியலமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை திருத்த வேண்டும்; இந்த திருத்த மசோதாக்களை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மூன்றுக்கு இரண்டு என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த முடியும். மக்களவையில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இருந்தாலும், மாநிலங்களவையில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து, எதிர்த்து வாக்களித்தால் இம்மசோதாவை முறியடித்துவிட முடியும். இவையெல்லாம் தெரிந்தாலும், எதிர்க்கட்சிகளை தனது நிகழ்ச்சி நிரலுக்குள் சுற்றவைப்பதற்காகவே இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது பா.ஜ.க.

அதைப்போல், பொது சிவில் சட்டம் பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்பட்டாலும், அதைக் கொண்டுவரப்போவதாக செய்தியைக் கிளப்பியதற்கு பின் எதிர்க்கட்சிகளை சிதறடிக்கும் நோக்கத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. ஏனெனில், ஆம் ஆத்மி, சிவசேனா ஆகிய கட்சிகள் பொது சிவில் சட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றன. இதன்மூலம் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதே பா.ஜ.க.வின் திட்டமாக இருந்தது.

000

ஒரே நாடு ஒரே தேர்தலைப் போல, இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றுவதற்கான சட்டமும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படலாம் என்ற கிசுகிசுவை காவிக் கும்பல் ஊடகங்கள் மூலம் கிளப்பிவிட்டது. ஜி20 மாநாட்டில், மோடி பேசிய ஒலிபெருக்கி அமைப்புக்குக் கீழிருந்த பெயர் பலகையில் “இந்தியா” என்பதற்கு பதில், “பாரத்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் வெளியிட்ட விருந்துக்கான அழைப்பிதழிலும், “பாரதத்தின் குடியரசுத் தலைவர்” (President of Bharath) என்று எழுதப்பட்டிருந்தது.

பாரத் என்ற பெயருக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதை முதன்மைப்படுத்தி தாக்கத்தொடங்கினர் சங்கிகள். “பாரத் எதிர் இந்தியா என்ற விவாதத்திலிருந்து விலகியிருங்கள், சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை எதிர்கொள்ளுங்கள்” என்று தனது அமைச்சர்களுக்கு மோடி நேரடியாக கட்டளையிட்டார்.

உ.பி.யை சேர்ந்த பரமஹன்ஸ ஆச்சார்யா என்ற ஒரு ரவுடி சாமியார், சனாதன தர்மத்தைப் பற்றி பேசிய உதயநிதியின் தலையை வெட்டினால், 10 கோடி பரிசு என்று அறிவித்தார். வழக்கம்போல, தமிழ்நாட்டில் காவிக் கும்பலின் எத்தனிப்பு எடுபடவில்லை. “என் தலையை சீவுவதற்கு எதற்கு 10 கோடி ரூபாய், 10 ரூபாய் சீப்பு போதுமே” என்று நக்கலடித்தார் உதயநிதி. ஆனால், வட மாநிலங்களிலும், இந்தியா கூட்டணிக்குள்ளும் காவிக் கும்பலின் பிரச்சாரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்த கண்ணிவெடிகள்!

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அறிவிப்பதற்கு முந்தைய நாளான ஆகஸ்டு 30-ஆம் தேதி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்தது மோடி அரசு. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இந்த விலை 400 ரூபாய் வரை குறையும் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில், தான் வெற்றிபெற்றால் சிலிண்டருக்கு 500 ரூபாய் வரை மானியம் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இப்போது காங்கிரசை முந்திக் கொண்டு, ஏழை-நடுத்தர மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காக, திட்டமிட்டே தேர்தல் நெருங்கும் வேளையில் இச்சலுகைகளை அறிவித்துள்ளது பா.ஜ.க.

ஓணம் மற்றும் ரக்ஷாபந்தன் நாட்களுக்கான பரிசாக இச்சலுகையை அறிவித்துள்ளதாகக் கூறி, இந்நடவடிக்கையை ஒருசேர இந்துத்துவப் பிரச்சாரமாகவும் மாற்றியுள்ளது.

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர்தான் இப்போது முடிந்திருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் நெருங்கும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதில், அடுத்த சுற்று சலுகைகளை பா.ஜ.க. அறிவிக்கலாம்.

டிசம்பர் முடிந்து ஜனவரி தொடங்கினால், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும். ஜனவரி 14 அன்று ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் என்று மோடி அரசு முன்பே அறிவித்திருந்தது.

“தேர்தல் நெருங்கும்போது, புல்வாமா சர்ஜிகல் ஸ்டிரைக் போல, இன்னொரு தீவிரவாதத் தாக்குதல்களைக் கூட மோடி கும்பல் உருவாக்கலாம்” என்று எச்சரிக்கிறார், காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்.

இப்படியாக, 2024 தேர்தல் நெருங்கும்வரை, ஒவ்வொரு நாளும் மோடி அலையை மேலெழுப்பும் பிரச்சாரங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படக் காத்திருக்கின்றன. ஊதுகுழல் ஊடகங்களோ பாசிஸ்டுகளுக்கு கரசேவை செய்வதில் மிக நேர்த்தியாக செயலாற்றுகின்றன. நாம் கால் வைத்திருக்கும் ஒவ்வொரு அடியிலும் சிலந்தி வலைகள் பின்னி வைக்கப்பட்டிருக்கின்றன.

சிலந்திவலைகளை அறுத்தெறிவோம்!

எதிர்க்கட்சிகளோ, தமது சொந்தத் திட்டத்தின் கீழ் மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, மோடி-அமித்ஷா கும்பல் அடுத்தடுத்து முன்நகர்த்தும் திட்டங்கள், நடவடிக்கைகள், செய்கைகளுக்கு பதில் சொல்வது, அவற்றை அம்பலப்படுத்துவது என்பதிலேயே நாட்களைக் கடத்துகின்றன.

மேலே விவரித்துவரும் இதே காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை அம்பலப்படுத்துவதற்கு எவ்வளவோ வாய்ப்பிருந்தும் அதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. குறிப்பாக, இன்றுவரை அமைதி திரும்பாமல் இனவெறிக் கலவரங்களால் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர்; அம்மாநிலத்தின் செய்திகள் வெளியே வராமல் தடுக்கப்படுகின்றன. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததைத் தவிர மணிப்பூர் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் மறந்துவிட்டன. பாசிசக் கும்பலின் அடுத்தடுத்த திசைதிருப்பல்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு வரம்பும்தான் அதற்கு முக்கியக் காரணம்.

மணிப்பூர் கலவரத்தீ, சி.ஏ.ஜி. அறிக்கை, ஓ.சி.சி.ஆர்.பி. அறிக்கை என அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை அம்பலப்படுத்துவதற்கும், அக்கும்பலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்குமான வாய்ப்புகள் உருவாகின்றன. இந்த ஒன்பதரை ஆண்டுகாலத்தில் நீட், புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி, மறைமுகமாக அமல்படுத்தப்படும் புதிய வேளாண் சட்டங்கள், தொழிலாளர் நல திருத்தச் சட்டம் போன்று மக்கள் மீது ஏவப்பட்ட, ஏவப்பட்டுக் கொண்டிருக்கிற பாசிச சட்டங்கள் பல இருக்கின்றன.

இவற்றையெல்லாம், மக்களிடம் பிரச்சாரம் செய்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு எதிரான அலையை தட்டி எழுப்ப வேண்டுமென்றால், நமக்கு சொந்தத் திட்டம் இருக்க வேண்டும்; இரண்டாவதாக, தேர்தல் நலனுக்கு அப்பாற்பட்டும் போராடத் தயாராக இருக்க வேண்டும். இவை இரண்டையும் ஒருசேரப்பெற்றிருக்கும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளால் மட்டுமே பாசிஸ்டுகளின் சிலந்திவலைகளை அறுத்தெறிய முடியும்.


செவ்வந்தி

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஹோமோஃபோன்ஸ்-உம் கூலிப் கதைகளும் | ஆசிரியர் உமா மகேஷ்வரி

Homophonesஉம் கூலிப் கதைகளும்

ழாம் வகுப்பு குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடத்தில் Homophones என்ற பகுதி இருக்கிறது. அதை அன்று விளக்கிக் கொண்டு உதாரணங்கள் சொல்லிக்கொண்டிருந்தோம்.

அங்கே வகுப்பு மாணவர்கள் 59 பேரில் சிலர் மட்டுமே விடுப்பு மற்ற அனைவரும் இருந்தனர். அவர்களில் ஒரு சில மாணவர்கள் எப்போதும் கலாட்டா செய்யும் மனோபாவத்திலேயே வகுப்பிலிருப்பது மிக இயல்பாக இருந்து வருகிறது.

புத்தகத்தில் இருக்கும் சொற்களுக்கு விளக்கம் கூறிவிட்டு வேறு உதாரணங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். அந்த வகையில் மாணவன் வைஷந்த் கூடவே எதையோ சொல்ல… மீண்டும் நான் , திரும்ப சொல்லக்கேட்டேன்.

மிஸ்….ஹான்ஸ் – ஹேன்ட்ஸ் என்றான். அது சரியான உதாரணம் இல்லை, அது இங்கு பிரச்சனை இல்லை.‌

“ஹான்ஸ் ன்னா என்னடா?” எனக் கேட்டேன்.‌ (எனக்குத் தெரிந்த பொருள் தான் …அது பல வருடங்களாக மாணவர் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் அதை சாப்பிடும் பழக்கம் வைத்து  ஆரோக்கியம் அழிக்கும் ஒன்று தானே.)

உடனே குறும்புக் கொப்பளிக்கும் இன்னொரு மாணவன் ஜஸ்வந்த்…

“மிஸ் அவன் பாருங்க, ஹான்ஸ் பத்தி பேசறான்.”…

மீண்டும் நான்… “ஹான்ஸ் ன்னா என்னடா?”…

“மிஸ் .. உங்களுக்குத் தெரியாதா…அது பாக்கு…சாப்பிட்டா போதை வரும். “…

நிறைய குரல்கள்…

“உங்களுக்கு எப்படிடா தெரியும்?

மிஸ்…பெரியவங்க எல்லாரும் (அவங்க பார்க்கும் எல்லோரும்) அதை சாப்பிடுவாங்க ..”…

பெண் குழந்தைகள் பக்கம் திரும்பி…அப்படியாம்மா…?

மிஸ்… எங்களுக்குத் தெரியாது என்றனர்.

உடனே ஜஸ்வந்த்….மிஸ்…வைஷந்த் போய் அதை சாப்பிட்டு இருக்கான் மிஸ்…

டேய்…நிஜமாவா…

அவனிடமிருந்து கள்ளச்சிரிப்பு..

மிஸ்…இல்லமிஸ்…சத்தியமா மோந்து தான் வாசம் மட்டும் பாத்திருக்கேன்.

மீண்டும் நான்…

“ஏண்டா…கூலிப் பத்தி தெரியுமா டா?”

“மிஸ் …வைஷந்த் தான் அதற்கும் பதில் தருகிறான்…

“மிஸ் ..நல்லாத் தெரியும்”..

“எப்பிடிடா? அது மிட்டாயா?” இது நான்.

வகுப்பில் நிறைய பேருக்கு ஒரே சிரிப்பு…”இல்ல மிஸ். குட்டித்தலகாணி அது.”

“தலகாணியா? அப்படின்னா?”

“தலவாணி மாதிரி உப்பிக்கிட்டு இருக்கும்.‌ அது வாயில இப்படி வச்சுக்குவாங்க”. (செய்து காமிக்கின்றனர்)

“நீங்க யாராச்சும் வச்சு பாத்து இருக்கீங்களா?”

“மிஸ்..இவன்…இவன்…என சிலரை சிலர் சுட்டுகின்றனர்.”

“இல்ல மிஸ்…இப்பல்லாம் சாப்பிடறதில்லை..”

மிஸ்… மீண்டும் ஜஸ்வந்த்…

“நம்ம ஸ்கூல்ல அண்ணாங்க எல்லா…ம் போடுவாங்க.அதான் கிரவுண்டில் காலி பாக்கெட்டுங்க நெறயக் கிடக்குது.”

“வைஷாந்த்து அதை எடுத்து வாயில போடறான் மிஸ்…அவன உடாதீங்க…”

“டேய் … அதெல்லாம் சாப்பிடக்கூடாது டா”…

“அசோக் எழுந்து மிஸ்…எங்கூர்ல அல்லாக் கடையிலுமே தருவாங்க. ஊருக்குள்ள பெரிய ஆம்பளைங்க எல்லாம் அது வாயில போட்டு அடக்கிக்குவாங்க…”

“எல்லாருமா…?”

“மிஸ்.. ஆம்பளைங்க எல்லாரும் போடுவாங்க”..

“டேய்…அது எப்படி டா… நம்ம ஸ்கூல்ல கூட ஆசிரியர்கள் லாம் இருக்காங்களே…அவங்களுமா போடறாங்க..”

“மிஸ்..நான் அப்படி சொல்லல..நம்ம சாருங்க மாதிரி டீசன்ட்டானவங்கள்லாம் போட மாட்டாங்க.”

அதற்குள் ஜஸ்வந்த்…”மிஸ்… எங்கூர்ல” அந்தப் பாக்கெட்டப்  பிரிச்சு ஒரு எலைல போட்டு சுருட்டி பீடி பத்த வப்பாங்க…”

“அது ஏண்டா நீ பாக்குற…?!” அப்படி பண்றவங்கள விட்டு தூரமா போயிடு. (குழந்தைகளிடம் வேறு என்ன சொல்ல)

இதற்கு மேல் என்ன விளக்கம் கேட்பது அந்தக் குழந்தைகளிடம்?!

அது தவறான பழக்கம், புற்றுநோய் வரும் , இறந்து விடுவார்கள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளைக் கூறி அந்தக் குழந்தைகளைக் கவலையுடன் அனுப்பினேன்.

மூன்று பெண் குழந்தைகள் தனியாக வந்து, மிஸ் இவங்க எல்லாம் இந்த கூலிப்பை சாப்பிடறாங்க மிஸ்.. நாங்க சொன்னா அவங்க அக்கா வந்து என் தம்பியை ஏன் மாட்டி உடுறன்னு திட்றாங்க மிஸ். நாங்க சொன்னோம்னு சொல்லிடாதீங்க மிஸ்…என்று பெயருடன் சொல்லிவிட்டுப் போனார்கள்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவர் சிலருடன் இது குறித்து பேசிய போது சிலருக்கு இது மிகப் பெரிய பழக்கமாகி விட்டது எனவும் , பெற்றோருக்கே தெரிந்து பயன்படுத்துபவர்கள் இருப்பதாகவும் கூறி வருந்தினர்.

எப்படி இது கிடைக்கிறது என்று கேட்ட போது , மிஸ் …கொரோனா வந்தப்ப தான் மிஸ் இந்தப் பழக்கம் பழகினான் இவன். நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். கொஞ்சம் மாறி வுட்டுட்டான். அவங்க அம்மாக்கிட்ட சொன்னா , புரிஞ்சுக்கவே மாட்டாங்க.உங்களால தான் என் பையன் கெடறான்னு சொல்வாங்க.பயமா இருக்கு மிஸ்…உண்மையாகக் கவலைப் பட்டனர்.

அதோடு ,   இன்னும் சிலரைப் பற்றியும் சொன்னார்கள். மிஸ் சின்னப் பசங்களுக்கும் தான் போடறாங்க…

உங்களுக்கு நான் அந்தப் பாக்கெட்டை எடுத்துட்டு வந்து காமிக்கிறேன் என்று கூறி, கொண்டு வந்து காமிக்கின்றனர்.

“எங்கேயிருந்து வாங்குறாங்க?”

“மிஸ்…இங்க சில பேக்கரியில் கிடைக்குது மிஸ்”. அது எப்படி டா குழந்தைகளுக்குத் தராங்க?”

“மிஸ்…என்னா மிஸ் பேசறீங்க… அவுங்களுக்கு காசு அதுதான் முக்கியம்.” எல்லாத்துக்கும் சப்ளை பண்றாங்க…

“சின்னப் பசங்க தானடா…இவனுங்களுக்கு காசு எப்படிடா கிடைக்குது?”….

ஒருவன் சொல்றான்…மிஸ் ஒரு குரூப்பா சேர்ந்துடுவாங்க… ஆளாளுக்கு பத்து ரூபா அஞ்சு ரூபா…. இப்படி காசு சேர்த்து வாங்குவாங்க மிஸ்.‌‌

எல்லாத்துக்கும் வழி கண்டு புடிச்சு வச்சு இருக்காங்க..

“ஸ்கூல்ல டீச்சர்ஸ்க்கு தெரியுமா டா?”

ஆங்… எல்லாத்துக்கும் தெரியும்.எப்படி மிஸ் தெரியாம இருக்கும்..? நீங்க தான் புதுசு. அதான் உங்களுக்கு  தெரியலை.

சொன்னது சில …சொல்லாதது பல.

ஆனால் பள்ளிகளில் உறுதிமொழியை எடுக்கக் கூறி வழங்கப்படுத்தி வைத்துள்ளது கல்வித்துறை.

எல்லா குக்கிராமங்களிலும் கூட இப்படி போதைப்பொருள் கலாச்சாரம் ஊடுருவி குழந்தைகளது வாழ்க்கையை நாசமாக்கும் செயல்பாடுகளைத் தடுக்க அரசு என்ன முயற்சி எடுக்கிறது?

காவல் துறையினருக்கு தெரியாமல் பள்ளி‌க்குள் கல்வி பயிலும் மாணவர் வரை இந்த போதைப் பொருள் வருவது எப்படி?

எங்கள் பள்ளியில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் அத்தனை பள்ளிகளிலும்  இந்தப் பழக்கம் பரவியிருப்பது கண்கூடு. இல்லை என்றால் அரசாங்கம் ஏன் சுற்றறிக்கை விடச் சொல்கிறது?

சுற்றறிக்கை

இதெல்லாம் கல்வித்துறைக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. நாங்க எமிஸ்ல தான் அப்டேட் பண்ணினா போதும். தலைமை ஆசிரியர்களுக்கும் அவங்க எமிஸ் ஆப்ல (EMIS APP) ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவதை அப்சர்வ்(observation) பண்ணினா போதும்.

விளையாட்டு ஆசிரியர்கள் இது பற்றியெல்லாம் மாற்றங்கள் கொண்டு வர முயற்சி எடுக்கிறார்களா என்று ஆய்வு செய்து பார்க்க எவருமில்லை. இருபாலரும் படிக்கும் பள்ளிக்கு இரண்டு விளையாட்டு ஆசிரியர்களாவது அதுவும் ஆண் ஆசிரியர் ஒருவராவது இருந்தால் தானே இவற்றைக் கண்காணிக்க இயலும்.

எந்தப் பாதுகாப்பும் வழிகாட்டலும் பள்ளிகளில் இல்லை என்பதுதான் நிஜம்.  ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள்  கேட்கணும்னா…கொஞ்சம் அதிகமாகவே பயப்படுகிறார்கள்.

இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வெறும் கூட்டம் போடுவதற்காக மட்டுமே போல.

இந்த ஆசிரியர்கள் சங்கத்தினர் இதையெல்லாம் எதிர்த்து அரசைக் கண்டிக்க வேண்டுமா? நம்ம குழந்தைகள் நம்ம கண்ணு முன்னாலேயே அழியறதப் பார்க்க முடியல.

கல்வி அமைச்சருக்கு இதெல்லாம் தெரியுமா? இல்ல தெரிஞ்சும் பாலிஸ்டா (polished) போறாரான்னு எனக்குப் புரியலை.

நம்ம மாண்புமிகு முதல்வர் இது பத்தி போதைப் பொருள் ஒழிப்பு பத்தி பேசறாரேன்னு  மட்டும் நினைச்சு சந்தோஷப்படறதா அல்லது பள்ளி நிலவரம் தெரியாம இருக்காறேன்னு வேதனைப்படறதா?

இந்த மரியாதைக்குரிய கலெக்டர்கூட்டம்  மத்ததுக்கு ஆர்டர் போடறாங்களே…. ஊருக்குள்ள வர்ற போதைப் பொருளத் தடுக்க என்ன செய்யறாங்கன்னு தெரில.

சரி அரசாங்கம் தான் கண்டுக்கல, ஆசிரியர்களுக்கும் பொறுப்பில்லை , பெத்தவங்களுக்கும்  பெரிசா தெரியல…. இதெல்லாம் தாண்டி மாணவர் அமைப்புகளுக்கு இது தெரியாதா? தெரியும்னா அவங்க ஏன் இதுக்கு குரல் கொடுக்கல? தெரியாதுன்னா இது கூட தெரியாம என்ன அமைப்பு வச்சு இருக்காங்க?

குழந்தைகளுக்காக வேலை செய்யும் பலரும் ரொம்ப பாதுகாப்பா இதையெல்லாம் குறித்து கவனமா கடந்து போறது வருத்தமாக இருக்கு.

எல்லாம் தாண்டி இந்த ஊடகங்கள் இருக்கே.‌‌அப்பப்பா….நயவஞ்சகர்கள். எதை செய்தியாக்கணுமோ அதைக் கண்டு கொள்வதே இல்லை.

முக்கியமாக அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு கல்வி திட்டமிட்டு மறுக்கப்படுவதன் பல வழிகளில் இது இப்போதைய_டிரெண்ட்.

பள்ளிகளும் அமைதியாக இது போன்ற மாணவர்களின் கல்விக்கு கல்லறை கட்டி வருகின்றன.

(குழந்தைகள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)


முகநூலில் : ஆசிரியர் உமா மகேஷ்வரி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

disclaimer



இஸ்ரேலே, காசா மீதான போரை உடனே நிறுத்து | தோழர் வெற்றிவேல்செழியன்

இஸ்ரேலே, காசா மீதான போரை உடனே நிறுத்து | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உசிலம்பட்டி பேருந்து நிலையம் இடிப்பு: பாதிக்கப்படும் வியாபாரிகள்

உசிலம்பட்டி பேருந்து நிலையம் இடிப்பு: பாதிக்கப்படும் வியாபாரிகள்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube