Monday, June 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 118

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல்– 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

தலையங்கம் : ராகுல் தகுதி நீக்கம் : நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!

♦ சர்வதேச சட்டங்கள் அனுமதி : பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலுக்கான திறவுகோல்!

♦ இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!

♦ கார்ப்பரேட்மயம் : நேற்று பள்ளிக்கல்வித்துறை! இன்று போக்குவரத்துத்துறை! நாளை?

♦ “ஈரோடு பட்டி ஃபார்முலா” : புழுத்து நாறிக்கொண்டிருக்கும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மற்றொரு பரிணாமம்!

♦ தொடர்ந்து திவாலாகிவரும் அமெரிக்க வங்கிகள் : வெடிக்கக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம்!

♦ “ஸ்டிங் ஆப்பரேஷன்” : ஊடக புரோக்கர்களும் ஊடுருவும் பாசிசமும்!

♦ திரிபுரா, நாகலாந்து, மேகாலாயா தேர்தல் முடிவுகள் : எச்சரிக்கை, பரவிவருகிறது பாசிசம்!

♦ ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!

♦ மீண்டும் மண்டைக்காடு கலவர அபாயம் : தமிழ்நாடே விழித்துக்கொள்!

♦ ஏப்ரல் 2, 2023. பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 2

♦ பரந்தூர் முதல் ஓசூர் சிப்காட் வரை : கார்ப்பரேட் சேவையில் தி.மு.க!


புதிய ஜனநாயகம்

ஆளுநர்கள் நியமனம்: அடிவருடிகளுக்கு பரிசு! அடியாள் வேலைக்கு பதவி!

ந்துராஷ்டிரத்தை நிறுவத்துடித்துக் கொண்டிருக்கும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு, எதிர்க்கட்சிகளையும் தங்களுக்கு எதிரான போராட்டங்களையும் ஒழித்துக்கட்டுவது இன்று முக்கியப் பணியாக உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு ஆளுநர்கள் கருவியாகப் பயன்பட்டுவருகின்றனர். இந்த ஆளுநர்கள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் இந்துராஷ்டிர லட்சியத்தை சாதிப்பதற்கு, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் காவிக் கும்பலின் அடியாட்களாக செயல்பட்டுவருகின்றனர். அந்தவகையில், தற்போது புதிய அடியாட்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த மாதம் 12 ஆம் தேதி, 13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்துள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏழு ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் பல முக்கியமான மாநிலங்களில் பொருத்தமான உளவாளிகளை நியமித்துள்ளது பா.ஜ.க. அரசு.

கரசேவைக்கு தரப்பட்ட வெகுமதி

தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு செய்த கரசேவையின் பலனாய், தற்போது சன்மானம் பெற்றிருக்கிறார் மேனாள் நீதிபதி அப்துல் நசீர். கடந்த ஜனவரி நான்காம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வுப் பெற்ற இவர், ஓய்வுப் பெற்று 40 நாட்கள் கூட ஆகாத நிலையில், தற்போது ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


படிக்க : ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்? | தோழர் மருது வீடியோ


குஜராத் போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து மோடியைக் காப்பாற்றிய நீதிபதி சதாசிவத்திற்கு, 2014 ஆம் ஆண்டு கேரள ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. இப்போது, அப்துல் நசீருக்கு பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-விற்கு ஆதரவாக, அயோத்தி நிலம் ராமர் கோயிலுக்கே சொந்தம் என்ற அயோக்கியத்தனமான தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பை வழங்கிய அமர்வில் அங்கம் வகித்த அசோக் பூஷன், ரஞ்சன் கோகாய் ஆகியோருக்கு ஏற்கெனவே பதவிகள் வழங்கி ‘கவுரவிக்கப்பட்டு’ விட்டது. இப்போது அப்துல் நசீருக்கு கிடைத்திருக்கிறது.

அசோக் பூஷன் ஓய்வுப் பெற்ற இரண்டு மாதங்களில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) தலைவராக நியமிக்கப்பட்டார். அயோத்தி மட்டுமல்லாமல், ரபேல் ஊழல், அசாமில் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவதற்கான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் மோடி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய மற்றொரு நீதிபதியான ரஞ்சன் கோகாய், ஓய்வுபெற்றப் பிறகு பா.ஜ.க.வால் நியமன எம்.பி.யாக பதவியில் அமர்த்தப்பட்டார்.

அப்துல் நசீர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதே பெரும் சர்ச்சைக் குறியதாகும். 2017-ஆம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய இவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றாத நிலையிலேயே உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். இது பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அப்துல் நசீர் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கிறோம் என்றது மோடி அரசு. பாசிச மோடி அரசுக்கு சிறுபான்மையினர் மீது அத்துணை அக்கறையாம்! ஆனால், தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள கே.எம்.ஜோசப் என்ற நீதிபதி ஒரு கிறித்தவர் என்பதனால் கொலிஜியம் பரிந்துரைத்து பல மாதங்கள் வரையிலும் ஒப்புதல் அளிக்கப்படாமல் வஞ்சிக்கபட்டார்.

மோடி அரசின் பூரண ஆசியுடன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அப்துல் நசீர், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் பொழுதே ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான அகில பாரதிய ஆதிவக்த பரிஷத்தின் (ஏபிஏபி) 16-வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். “இந்திய நீதித்துறை மனு, சாணக்கியர், காத்யாயனர், பிரஹஸ்பதி, நாரதர், யாக்யவல்க்கியர் போன்றோர் உருவாக்கிய சட்ட மரபைப் புறக்கணித்து வருகிறது. காலனிய நீதி அமைப்பைப் பின்பற்றுகிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், தேச நலனுக்கும் எதிரானது” என்று வெளிப்படையான சங்கியாகப் பேசினார். உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரே இவ்வாறு பேசியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இஸ்லாமியர்களை நான்காந்தரக் குடிமக்களாக நடத்தும், அம்மக்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்துராஷ்டிரத்தை அறிவிக்க வேண்டும் வெறிக்கூச்சலிடும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலுக்கு, தானும் ஒரு இஸ்லாமியன் என்ற பெயரில் சங்கியாக செயல்படும் அப்துல் நசீர், சொந்த மக்களுக்கே எதிரான துரோகி. அவரது விலைமதிப்பில்லாத துரோகத்தின் பரிசாகக் கிடைத்திருப்பதுதான் ஆளுநர் பதவி.

மேலும், அப்துல் நசீர் ஆந்திராவுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில், தென்னிந்தியாவைக் குறிவைத்து வேலைசெய்யும் பா.ஜ.க.வின் மிஷன் சவுத் திட்டமும் இணைந்திருக்கிறது.

மாநிலங்களின் மீது பாசிச உளவாளிகளின் படையெடுப்பு

மஹாராஷ்டிரா ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி கடந்த ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றார். இந்நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு ரமேஷ் பயஸ் என்பவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க உத்தரவின் பேரில் ‘வெற்றிகரமாக’ சிவசேனாவை உடைக்கும் பணியை நிறைவேற்றிவிட்டதால் இதன்பிறகு பகத்சிங் கோஷ்யாரிக்கு மஹாராஷ்டிராவில் வேலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லடாக் துணைநிலை ஆளுநர் ராதா கிருஷ்ணன் மாத்தூரின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அருணாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த பி.டி.மிஸ்ரா லடாக்கின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரியில் இந்த அறிவிப்பு வருவதற்கு முதல்நாளே எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி, ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளார் ராதா கிருஷ்ணன். இதற்கு லடாக்கின் கொந்தளிப்பான போராட்டச் சூழலே காரணமாகும்.

2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக உடைக்கப்பட்டபோது, அதை லடாக்கின் லே பிராந்திய மக்கள் வரவேற்றனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போது லடாக்கில் ஒன்றிய அரசுக்கு எதிராக, மாநில உரிமைக்காகவும் ஆறாவது அட்டவணைப்படி சிறப்பு உரிமை கோரியும் தீவிரமாக போராடி வருகின்றனர் லே பிராந்திய மக்கள். கார்கில் ஜனநாயகக் கூட்டணி (KDA), லே அபெக்ஸ் பாடி (LAB) ஆகிய கட்சிகள் மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

லடாக்கில் தீவிரமாக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்தான், பழைய ஆளுநர் மாற்றப்பட்டு, பி.டி.மிஸ்ரா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்திலேயே முன்னாள் இராணுவ அதிகாரியான அவர், லடாக்கிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மொத்தமுள்ள 8 வடகிழக்கு மாநிலங்களில் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்டு 5 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


படிக்க : ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை மக்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் ஆட்சிக்கு வருவது என்னமோ பா.ஜ.க.தான். கடந்த காலங்களில் சிக்கிம், மேகாலயா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறாதபோதும், பிற கட்சி ஆட்களை பேரம்பேசுவதன் மூலமும் ஆளும் கட்சியை மிரட்டி கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வைப்பதன் மூலமும் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. இந்த நிழல் பேரங்களை எல்லாம் ஆளுநர்களின் துணைக்கொண்டே நடத்திவருகிறது பா.ஜ.க. மேகாலயா தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.விற்கு பாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது ஆளுநர் மாற்றம் நடைபெற்றிருக்கிறது.

0-0-0

மதவெறி செல்வாக்கு, சந்தர்ப்பவாதக் கூட்டணி, குதிரை பேரம் போன்றவற்றின் மூலம் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் இணையாட்சியை நடத்திவருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் முறைகேடு என பல்வேறு காரணங்களைச் சொல்லி எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும்; ஆட்சிக்கவிழ்ப்பு சதிவேலைகளில் ஈடுபடுவதற்கும் ஆளுநர்களை அடியாட்களாகப் பயன்படுத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தமிழ்நாடு, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களின் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.

இன்னொருபக்கம், தனது பாசிசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அடிமைச்சேவகம் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசாகவும் ஆளுநர் பதவி உள்ளது. தற்போதைய ஆளுநர்கள் நியமனமும் அதற்கொரு சாட்சியாக உள்ளது.


துலிபா

‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!

0

பாசிச பா.ஜ.க ஆளும் ஹரியானாவில் பசு குண்டர்களால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்கள் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன.

கடந்த ஜனவரி 28-அன்று நூஹ் மாவட்டத்தில் வாரிஸ் (Waris) என்ற 22 வயது இளைஞர் பஜ்ரங் தள் அமைப்பினர் உள்ளிட்ட பசு குண்டர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். வாரிஸ்-இன் மனைவியும், 3 வயது மகளும் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், டெம்போ மீது அவரது கார் மோதி விபத்திற்கு உள்ளானதால் வாரிஸ் உயிரிழந்ததாக போலீசு கூறுகிறது. உண்மை என்னவென்றால், பசு குண்டர்கள் விரட்டிச் சென்றதால்தான் வாரிஸ்-இன் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக, வாரிஸ் மற்றும் இரண்டு இஸ்லாமியர்களை பசு குண்டர்கள் தாக்கி, அதை வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த தாக்குதலானது ஹரியானா போலீசின் முன்னிலையில்தான் நடைபெற்றிருக்கிறது. ஆனால் போலீசு பசு குண்டர்களை கண்டுகொள்ளக்கூட இல்லை.

அதேபோல, ஹரியானாவின் பல்வாலில் (Palwal) மார்ச் 5-ஆம் தேதியன்று மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லிம் லாரி டிரைவர் பசு குண்டர்களால் தாக்கப்பட்டார்.

இவை சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் பசுவதை – மாட்டிறைச்சியை வைத்து சங்க பரிவார கும்பல்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை தாக்குதல்கள். 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் நாடு முழுவதும், அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், வன்முறை சம்பவங்கள் அதீத அளவில் நடைபெற தொடங்கியுள்ளன. பாசிஸ்டுகள் ‘பசு பாதுகாப்பு’ என்பதை தங்களுக்கான இந்துத்துவ அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான விரிவுபடுத்திக் கொள்வதற்கான கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அரசு எந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளும் பாசிஸ்டுகள்!

சங்க பரிவார் கும்பல் அரசு எந்திரத்தில் ஊடுருவி தனது பாசிச நோக்கங்களுக்கு ஏதுவாக அதைப் பயன்படுத்திக் கொள்கிறது. கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் பரத்பூர் (Bharatpur) மாவட்டம் காட்மிக்கா (Ghatmeeka) கிராமத்தைச் சேர்ந்த நசீர் மற்றும் ஜுனைத் எனும் இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பசு குண்டர்களால் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட அவர்கள் இரண்டு நாட்கள் கழித்து ஹரியானாவின் பிவானி (Bhiwani) மாவட்டம் லோஹரு (Loharu) கிராமத்தில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலங்களாகத்தான் மீட்கப்பட்டனர்.

முன்னதாக, பசுக்களை கடத்தியதாக‌க் கூறப்பட்டு தாக்கப்பட்ட நசீர் மற்றும் ஜுனைத் ஆகிய இருவரும்  படுகாயங்களுடன் ‘பசு பாதுகாவலர்’களால் (gau rakshak) ஹரியானா பெரோஸ்பூர் ஜிர்கா (Firozpur Jhirka) போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  தாக்கப்பட்ட இருவரின் நிலையைக் கண்ட போலீசோ, அவர்களை திரும்ப அழைத்துச் செல்லும்படி அந்தக் கும்பலிடமே கூறிவிட்டது. அக்கும்பல் காரில் வைத்தே 20 மணிநேரம் அவர்களை அலைக்கழித்தது. பிறகு அவர்களை பிப்ரவரி 16-ஆம் தேதி இரவில் காரில் வைத்தே பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டது.


படிக்க: அரியானா : பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை தாக்கும் காவி குண்டர்கள் !


பிவானியின் பஜ்ரங் தள் உறுப்பினரான மோனு மானேசர் (Monu Manesar) தலைமையிலான கும்பல்தான் இந்தப் படுகொலையை செய்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 2019-ஆம் ஆண்டில் ஹரியானாவின் பாஜக அரசு பசுவதை தடுப்புச் சட்டத்தில் பசுக்களை கடத்தினால் பத்து ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தத்தை மேற்கொண்டது.

மேலும் 2021-ஆம் ஆண்டு ஜூலையில், பசுக்களைக் கடத்துவதையும் கொல்வதையும் தடுக்க, பல மூத்த அதிகாரிகளைக் கொண்ட மாநில அளவிலான சிறப்பு பசு பாதுகாப்பு பணிக்குழுவை (Special Cow Protection Task Force Committee) அமைப்பதாக அறிவித்தது. இந்த குழுவின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு பசு பாதுகாப்பு பணிக்குழுக்கள் (SCPTF) அமைக்கப்பட்டன. இக்குழுக்களில் பசு பாதுகாவலர்கள் (குண்டர்கள்) தங்களை இணைத்துக் கொண்டனர்.

கொலைகார கும்பலின் தலைவனான இந்த மோனு மானேசர் குருகிராம் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட பணிக்குழுவின் உறுப்பினர். இவ்வாறு ஹரியானாவில் அரசே பசு குண்டர்களை சட்டரீதியாக அங்கீகரிக்கிறது. இந்த சட்ட ரீதியிலான பசு குண்டர்களுடன் சட்ட விரோதமாக இயங்கும் பசு குண்டர்களும் இணைந்து செயல்படுகிறார்கள். இம்மாநிலத்தில் 15,000-க்கும் மேற்பட்ட பசு குண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.  இதில் கௌ ரக்ஷா தள் (Gau Raksha Dal), பஜ்ரங் தள் மற்றும் கௌபுத்ர சேனா (Gauputra Sena) ஆகிய இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

இஸ்லாமியர்களையும் தலித்துகளையும் ‘பசு கடத்தல்காரர்கள்’ என்று கூறி தாக்கி வருகின்றனர். குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டத்தின் மூலம் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது காவி பாசிச குண்டர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஏதுவாக உள்ளது.

அப்பாவி இஸ்லாமியர்களும் தலித்துகளும் பசு குண்டர்களால் தாக்கப்படுவது ஒரு புறமிருக்க, மறுபுறம் அரசோ பாதிக்கப்படும் இஸ்லாமியர்கள் மீதுதான் பசுவதை தடை சட்டத்தின் கீழ் பொய் வழக்குகளை புனைகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், ஹரியானாவின் நூஹ் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட 69 ‘பசுவதை’ தொடர்பான வழக்குகளில், 4 வழக்குகளில் மட்டுமே ‘பசுவதை’ நடந்ததாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றமும் பசுவதையும்

குஜராத்தில் பசு கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த தாபி (Tapi) மாவட்ட நீதிமன்ற நீதிபதி சமீர் வினோத்சந்திரா வியாஸ் குற்றம்சாட்டப்பட்ட முகமது அமீன் என்ற 22 வயது முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும் ₹ 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் வழங்கப்பட்டது.  தீர்ப்பின் முழுவிவரம் தற்போது தான் வெளியானது. மகாராஷ்ட்ராவில் இருந்து 16 பசு மாடுகளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் அமீன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த தீர்ப்பில் நீதிபதி “பசு நமது தாய் போன்றது; பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். வீட்டில் பசு சாணம் பூசியிருந்தால் கதிர்வீச்சு பாதிப்பு கூட அண்டாது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுவின் கோமியம் பல தீரா நோய்களை தீர்க்க வல்லது. பசு பாதுகாப்பு பற்றி நாம் நிறைய பேசுகிறோம்; ஆனால் அது முழுவீச்சில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை” என்று கூறியுள்ளார்.


படிக்க: கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !


சட்டவாதிகள் திகைத்துவிட வேண்டாம். சுகாதார வல்லுநர்கள் பலரால் நிராகரிக்கப்பட்ட இக்கூற்றுகளைக் கூறியிருப்பது பாசிச காவி குண்டர்கள் அல்ல; குஜராத் மாநிலத்தில் உள்ள மாவட்ட நீதிபதி ஒருவர்‌தான்.

உத்தரபிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 14-அன்று நீதிபதி ஷமிம் அகமது (Justice Shamim Ahmed) பசு வதையை தடை செய்து, பசுவை ‘பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்கு’ என அறிவிக்க வேண்டும்‌ என்று கருத்து தெரிவித்துள்ளார். பாராபங்கி கிராமத்தை சேர்ந்த முகமது அப்துல் காலிக் (Mohd. Abdul Khaliq) என்பவர் தன்மீது பசுவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பசுவைப் பற்றி ஒரு ஆன்மீக சொற்பொழிவையே ஆற்றியுள்ளார்.

இந்து மத கடவுள்களான சிவன், விஷ்ணு, இந்திரன் போன்றோருடன் தொடர்புடைய பசு தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்றும்,

பசுவின் 4 கால்களும் 4 வேதங்களை குறிக்கிறது என்றும்‌ கூறியுள்ளார். மேலும், பசுக்களை கொலை செய்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்றும், இந்தியாவில் வேத காலத்திலேயே பசுவதை தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும், மகாபாரதம் உள்ளிட்ட புராணங்களில் பசுவதை தடை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே, 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி பாராளுமன்றத்திற்கு அறிவுரை வழங்கி இருந்தது. அதற்கும் முன்னதாக, 2017-ஆம் ஆண்டிலேயே ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இதே கருத்தை வெளிப்படுத்தி இருந்தது.

நீதிபதிகள் நியமனம் முழுமையாக பாசிச பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத போதே இந்துத்துவா சித்தாந்தத்தின் குரல் நீதிமன்றங்களில் இவ்வாறு உரக்க ஒலிக்கிறது.

பசுவதையும் சட்ட வழிமுறைகளும்!

சமீபத்தில், மார்ச் 17 அன்று, மகாராஷ்டிரா அமைச்சரவை பசுவதை தடுப்புச் சட்டத்தை கராராக அமல்படுத்துவதற்காக பசு சேவை ஆணையம் (Maharashtra commission for Cow Services) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ₹ 10 கோடி நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. இதில் ஏக்நாத் ஷிண்டே அரசு பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாதிரியை பின்பற்றியுள்ளது.

இஸ்லாமியர்களையும் தலித்துகளையும் ஒடுக்குவதற்காக திட்டமிட்டே பல்வேறு மாநிலங்களில் இயற்றப்படும் பசுவதை தடைச் சட்டத்தின் அச்சாணி இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் உள்ளது. அரசியலமைப்பின் பகுதி IV-ஆக உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) சரத்து 48 பசுவதையை (மாட்டிறைச்சியை) தடை செய்ய அரசுக்கு அதிகாரத்தை அளிக்கிறது.

எனவே, நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதன் மூலம் சட்ட ரீதியாக இந்த வன்முறை வெறியாட்டங்களை ஒழித்துக்கட்ட இயலாது. பசுவதை தடை சட்டத்திற்கு எதிராகவும், பசு குண்டர்களை பின்னணியில் இருந்து இயக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு எதிராகவும் களத்தில் மக்கள் திரள் போராட்டங்களை கட்டமைப்பதன் மூலமே தீர்வு காண முடியும்.

பொம்மி

நேரலை..! வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சி!

சுற்றி வளைக்குது பாசிசப் படை!
வீழாது தமிழ்நாடு! எங்களின் கோட்டை!

நேரலை – வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சி!

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”சிவப்பு அலை” (RED WAVE) புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் – இசை நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் வினவு யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும்..

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாத தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், வாசகர்கள் நேரலை வீடியோவை காணலாம்… பாருங்கள்! பகிருங்கள்!

நேரலை வீடியோவை காண :

பாருங்கள் பகிருங்கள்!

பாசிசத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் தொடக்கம்!

ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் புரட்சிகர – ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் தொடக்கத்தின் ஊடகச் செய்தியை வாசகர்களுக்காக இங்கே பதிவிடுகிறோம்!

– வினவு

0-0-0

25.03.2023

பங்குச் சந்தை சூதாடி அதானியின் கூட்டாளி மோடியே பதவி விலகு!
அதானி அலுவலகம் முற்றுகை

ஊடகச் செய்தி

(மார்ச்  23) பகத்சிங் தூக்கிலடப்பட்ட ஈக நாளையொட்டி இன்று மார்ச் 25 ஆம் நாள் முற்பகல் 11 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள கதீட்ரல் கார்டன் சாலையில் ஒன்றுகூடி ”பங்குச் சந்தை சூதாடி அதானியின் கூட்டாளி மோடியே பதவி விலகு!” என்ற முழக்கத்தோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள அதானி போர்ட் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் என்ற அதானியின் நிறுவன அலுவலகத்தை  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 300 பேர் இந்த போராட்டத்தில் அணிதிரண்டிருந்தனர்.

எழுச்சிப் பறை முழக்கத்துடன் முற்றுகைப் போராட்டம் தொடங்கியது. பின்னர், மாவீரன் பகத் சிங் நினைவைப் போற்றிப் பாடலொன்று பாடப்பட்டது. பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தைச் சேர்ந்த தோழர் சேல்முருகன் இவ்வார்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.


படிக்க : வீழாது தமிழ்நாடு – துவளாது போராடு | பாடல் தொகுப்பு டீசர் – Teaser | ம.க.இ.க- இசை வெளியீட்டு விழா!


இவ்வார்ப்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாசிச பாஜக அரசே!
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அதானியைக் கைது செய்!
அதானி குழுமத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்!
அதானிக்கு துணைபோன செபி, ரிசர்வ் வங்கி, எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைக் கைது செய்!
அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்து!
சிறுகுறு தொழில்களுக்கு, உழவர்களுக்கு, மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி வழங்கு!
அதானி குழுமப் பங்குசந்தை மோசடிக்கு காரணமான உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளைக் கைவிடு!
திமுக அரசே!
அதானி குழுமத்துடன் போட்டுக் கொண்டுள்ள மக்கள் விரோத ஒப்பந்தங்களைத் திரும்பப் பெறு!

தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர்  அரங்க குணசேகரன், பாட்டாளி வர்க்க சமரன் அணியின் மாநில அமைப்பாளர் மணி, மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் உரையாற்றினர். அதானி அலுவலகத்தை முற்றுகையிட முனைந்த போராட்டக்காரர்களில் சுமார் 150 பேரை காவல்துறை கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தது.

This slideshow requires JavaScript.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொறுப்பாளருமான பாலன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, சிபிஐ(எம்-எல்) செந்தாரகையின் மாநிலச் செயலாளர் மனோகரன், மக்கள் சனநாயக குடியரசு கட்சியின் பொறுப்பாளர் துரை சிங்கவேல், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியின் மாநிலப் பொறுப்பாளர் ஞானம், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் செயலாளர் செல்வமணி, தமிழ்த்தேச இறையாண்மையின் செயலாளர் பாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( எம்-எல்) இன் மாநிலச் செயலாளர் குணாளன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் பார்த்திபன், புரட்சிகர மக்கள் பாசறையின் செயலாளர் காளான்துரை, தமிழக மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் பாவேந்தன், ஐந்திணை மக்கள் கட்சியின் செயலாளர் ஸ்டீபன் ராஜ், தமிழர் முன்னணியின் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகத்தைச் சேர்ந்த ரவி, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தினேஷ்குமார், தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா, திராவிடர் ஒன்றிய சமத்துவக் கழகத்தின் செயலாளர் தகடூர் சம்பத், தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த சேகர், தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பத்மநாபன், சுய ஆட்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் லில்லி மேரி பாய், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநிலக் குழு உறுப்பினர் சாலமன், தமிழரசுக் கழகம்(கட்சி)யின் செயலாளர் தமிழ்ச்செல்வன், அம்பேத்கர் மக்கள் படையின் தலைவர் மதிபறையனார்,  தலித் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பில் பொய்யாமொழி உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் பங்குபெற்றனர்.

இப்படிக்கு,
செந்தில்,
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி
9941931499

TAMILNADU WON’T FALL! FIGHT RELENTLESSLY! MUSIC LAUNCH PROGRAMME || PALA

ART AND LITERATURE FOR THE PEOPLE!      LONG LIVE NEW DEMOCRATIC REVOLUTION!

PEOPLE’S ART AND LITERARY ASSOCIATION’S REVOLUTIONARY BAND
RED WAVE
PRESENTS

TAMILNADU WON’T FALL!
FIGHT RELENTLESSLY!

MUSIC LAUNCH PROGRAMME

CHENNAI REPORTERS GUILD
30-03-2023 5:00PM

RELEASED BY
COMRADE THIYAGU
GENERAL SECRETARY OF TAMIL DHESIYA VIDUTHALAI IYAKKAM

RECIEVED BY
COMRADE BHARATHI NATHAN
WRITER AND SCREENPLAY WRITER

PEOPLE’S ART AND LITERARY ASSOCIATION
REVOLUTIONARY STUDENTS – YOUTH FRONT
NEW DEMOCRATIC LABOUR FRONT
(STATE CO-ORDINATION COMMITTEE)
PEOPLE’S POWER, TAMILNADU-PUDUCHERRY

9791653200, 9444836642
7397404242, 9962366321

மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!

தீண்டாமை ஒரு பாவச்செயல்; பெருங்குற்றம்; மனிதத் தன்மையற்ற செயல்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறது அரசு. ஆனால், சாதி ஆதிக்கம் தலைவிரித்தாடிவரும் சமூகத்தில், இச்சொற்களுக்கெல்லாம் நடைமுறையில் எந்த மதிப்பும் இல்லை என்பதை, மீண்டுமொரு முறை நமக்கு உணர்த்தி இருக்கிறது வேங்கைவயல் நிகழ்வு.

புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் – வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற குடிநீர் தேக்கத் தொட்டியில், ஆதிக்க சாதிவெறியர்கள் மனித மலத்தைக் கலந்த நிகழ்வானது, இதயமுள்ள ஒவ்வொரு மனிதரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதைவிட அதிர்ச்சிக்கு உரியது, இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்ட சாதிவெறி நாய்கள் இன்றுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதும், ஒட்டுமொத்த அரசமைப்பும் சேர்ந்து பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்க சதி செய்வதும்தான்.

அன்று திண்ணியம், இன்று வேங்கைவயல்!

இறையூர் கிராமத்தில், பட்டியலின மக்கள் (பறையர்), முத்தரையர், அகமுடையார், கள்ளர் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இக்கிராமத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் என்றழைக்கப்படும் பகுதியில், 32 குடும்பங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

கடந்த டிசம்பர் 24, 25-ஆம் தேதிகளில், வேங்கைவயலைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் அடுத்தடுத்து கடுமையான காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, ஒரே பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், ஒத்த தன்மை கொண்ட பாதிப்புகள் காரணமாக அனுமதிக்கப்படுவதால், குடிநீரில் ஏதேனும் பிரச்சினை இருக்கலாம்; பரிசோதித்துப் பாருங்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அதேநேரம் டிசம்பர் 26 அன்று குடிநீர் அதிக துர்நாற்றத்துடனும், கலங்கலாகவும் வருகிறது.

இதனால் சந்தேகமடைந்த மக்கள், காலை ஏழு மணிக்கு மூன்று இளைஞர்களை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அனுப்பிப் பரிசோதிக்கின்றனர். அப்போதுதான், தொட்டியில், திட்டு திட்டாகக் கரைந்தும், கரையாமலும் குவியலாக மலம் கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியுறுகின்றனர். சில நிமிடங்களில் மக்கள் மத்தியில் குடிநீரில் மலம் கலந்த செய்தி தீயாகப் பரவுகிறது; இந்த தண்ணீரைத்தான் குடித்து வந்தோமா? சமையலுக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தோமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் விவாதமாக மாறி, உளவியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.

படிக்க: மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!

“சோத்துல கைய வச்சா பீ ஞாபகம்; தண்ணீ குடிச்சாலும் பீ ஞாபகம்; எங்க குடிநீர் தொட்டியில் பீயைக் கரைச்சு ஊத்துனதுக்கு பதிலா, பால்டாயில கரைச்சு ஊத்தியிருந்தால் கூட எல்லோரும் நிம்மதியாக போய் இருப்போம்”, “மலம் கலந்த தண்ணீய என் குழந்தைக்கு நானே கொடுத்திருக்கேன். என் கையால் நானே விஷம் கொடுத்தது போல கொடுத்திருக்கேன்” என்று வேங்கைவயல் மக்கள் கதருவதைப் பார்த்து, நம் ரத்தம் கொப்பளிக்கிறது.

2002-ஆம் ஆண்டு, திருச்சி மாவட்டம் திண்ணியம் கிராமத்தில், கருப்பையா என்ற தாழ்த்தப்பட்ட இளைஞரின் வாயில் மலத்தைத் திணித்தார்கள் கள்ளர் சாதிவெறியர்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது, குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்திருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள். சமூகநீதி பேசும் தமிழ்நாட்டில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் அடைந்திருக்கின்ற ‘முன்னேற்றம்’ இது.

சாதிவெறியன் முத்தையாவை குற்றஞ்சாட்டும் மக்கள்!

இறையூர் என்பது சிறிய கிராமம், குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தக் குற்றவாளி யார் என்று கண்டுபிடிப்பது ஒன்றும் குதிரைக் கொம்பு அல்ல. ஆனால், போலீசு இன்றுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை; மாறாக, குற்றவாளி யாரெனத் தெரிந்தே பாதுகாத்துவருகிறது.

போலீசு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், சமூக அக்கறைகொண்ட சுதந்திர பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் சிலர் தங்கள் கள ஆய்வுகள் மூலம், யார் இதைச் செய்திருக்கக் கூடும் என்பதை அடையாளப்படுத்தி உள்ளனர்; தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுள்ள சாதிய வன்மம் காரணமாக, முத்தரையர் சாதியைச் சேர்ந்த முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாதான் இதைச் செய்திருக்கக் கூடும் என்று கள ஆய்வில் வெளிக்கொண்டு வந்துள்ளார்கள்.

வேங்கைவயல் பகுதியில், தற்போது மலம் கலக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி என்பது காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காக, கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த தொட்டியாகும். இத்தொட்டியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, இறையூரில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்துதான் வேங்கைவயலுக்கு நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் வேங்கைவயல் பகுதி மேடான இடமாக இருப்பதாலும், இறையூரில் வசிக்கின்ற ஆதிக்கசாதியினர் மோட்டார் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாலும், தண்ணீர் சரிவர வராமல் இருந்துள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு முறையான தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அம்மக்கள் தொடர்ந்து ஊராட்சியிடம் முறையிட்டு வந்துள்ளனர். அதன்பிறகுதான், புதிதாக நிலத்தில் போர் போட்டு, தற்போதுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில், நீரேற்றம் செய்துள்ளனர். அந்த நீரும் உப்புத் தண்ணீராக இருப்பதால், தங்களுக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டுமென முத்தையாவிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஊராட்சி மன்றத் தேர்தலில் தன் மனைவியை தலைவர் பதவிக்கு (பெண்கள் ஒதுக்கீடு தொகுதி என்பதால்) நிறுத்திய முத்தையா, வேங்கைவயல் குடிநீர் பிரச்சினையை சரிசெய்துதருவதாக வாக்குறுதி கொடுத்தார்; ஆனால் பதவியேற்ற பிறகு, அம்மக்களது கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் சாதிய வன்மத்தோடு நடந்துவந்துள்ளார்.

படிக்க: குடிநீர் தேக்க தொட்டியில் மலம் – ஆதிக்கசாதி திமிர்! | மருது வீடியோ

ஆகஸ்டு 15, 2022 அன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் வசதி, சுடுகாட்டுக்குப் பாதை போன்ற பிரச்சினைகளை எழுப்பியபோது, முத்தையா (இவர்தான் நடைமுறைத் தலைவர்), “உங்களுக்கு எவ்வளவு செஞ்சாலும் ஆகாது டா, நீங்க எனக்கு ஓட்டு போடல, அதனால உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது” என்று சாதித்திமிரை வெளிப்படுத்தியோடு, சபையையும் கலைத்துவிட்டுள்ளார்.

இதற்கிடையில், நீர்தேக்கத் தொட்டிக்கு ஆப்பரேட்டராக இருந்த சண்முகம் என்பவர், முத்தரையர் சாதியாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, முத்தையாவிடம் பேசிவந்துள்ளார். எனவே, சண்முகத்தை ஆப்பரேட் வேலையைவிட்டு நீக்கிவிட்டு, காசி என்பவரை நியமித்துள்ளார் முத்தையா. சண்முகம் சி.ஐ.டி.யூ (CITU) அமைப்பில் இருந்ததால், தற்காலிகப் பணியாளராக இருந்த அவருக்கு ஆதரவாக, சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம் அறிவிக்கிறது. சண்முகத்தின் வேலையை மீட்டெடுப்பதற்கு வேங்கைவயல் மக்களும் ஆதரவாக நின்றுள்ளனர்.

ஆகவே, சண்முகத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒருசேர பழிவாங்குவதற்காக முத்தையாவே ஆட்களை வைத்து மலத்தைக் கலந்துவிட்டு, வேலை பறிபோனதால் சண்முகம்தான் செய்துள்ளார் என கதைகட்ட நினைத்திருக்கலாம் என்று வேங்கைவயல் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்; மேலும் முத்தையாவால் புதிதாக நியமிக்கப்பட்ட காசி என்பவருக்கும் சண்முகத்திற்கும் ஏற்கெனவே தனிப்பட்ட முரண்பாடு நிலவியதால், இதை எளிதாக நம்பவைத்துவிட முயன்றதாகவும் அம்மக்கள் கூறுகின்றனர்.

இரட்டை நீர்த்தேக்கத் தொட்டி: தீண்டாமையின் நவீன வடிவம்!

வேங்கைவயல் பிரச்சினை செய்தியான மறுநாள் (27-12-22), புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரான கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் கள ஆய்வுக்காகச் செல்கின்றனர். அப்போது பகுதி மக்களிடம் விசாரணை நடத்தும்போது, வெள்ளனூர் தேநீர் கடையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனிக்குவளை முறை கடைப்பிடிக்கப்படுதாகவும், அங்குள்ள அய்யனார் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரியவருகிறது. பின்னர், குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து மைய ஊடகங்கள் அனைத்திலும் பிரபலமாகப் பேசப்பட்டதால், அவை அனைவருக்கும் தெரியும்.

இரட்டைக் குவளை முறையைக் கடைப்பிடித்த தேநீர் கடை உரிமையாளர் மூக்கையா (57), தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, சாமி வந்தது போல் நடித்து, தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்கு விடக்கூடாது என்று ஆபாசமாக பேசிய பூசாரி மனைவி சிங்கம்மாள் (35) ஆகியோர் ஆட்சியர் கவிதா ராமுவால் கைது செய்யப்படுகின்றனர். “சாதித் தீண்டாமை கடைபிடித்தவர்கள் தண்டிக்கப் பட்டார்கள்”, “சமூகநீதி நிலைநாட்டப் பட்டது” என்று ஊடகச் செய்திகள் இந்நிகழ்வை ஊதிப் பெருக்கினாலும், 21-ஆம் நூற்றாண்டிலும் இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட சாதித் தீண்டாமை நிலவுகிறது என்ற உண்மை, நம்மை வெட்கித் தலைகுனியத்தான் வைக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட எம்.எல்.ஏ.வாக உள்ள சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த சின்னத்துரை அவர்கள், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அடுத்து, புதுக்கோட்டை பகுதியே தீண்டாமைக் கொடுமை தீவிரமாகத் தாண்டவமாடியப் பகுதி என்கிறார். நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த பிரச்சினையின் மூலம், இப்பகுதியின் இதர சாதியக் கொடூரங்களும் வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. மலம் கலந்த பிரச்சினையிலும் கூட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி நீர்த்தேக்கத் தொட்டி பராமரித்ததே நவீனத் தீண்டாமையின் வடிவம் என அம்பலமாகியுள்ளது.

படிக்க: சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

ஏற்கெனவே உள்ள தொட்டியில் மலம் கலக்கப்பட்டதால், தற்காலிக ஏற்பாடாக வேங்கைவயலின் 32 குடும்பங்களுக்கும் இறையூர் நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்தே குடிநீர் இணைப்பு செய்துதரப்பட்டுள்ளது. ஆனால், இது தற்காலிகமாகத்தான். அம்மக்களுக்காக, ஏழு லட்ச ரூபாய் செலவில், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. பொதுத் தொட்டியிலிருந்தே நீரைப் பகிர்ந்துவிட வாய்ப்பிருந்தும், மீண்டும் தனித் தொட்டி கட்டுகிறது சமூகநீதி அரசு. “இரட்டைக் குவளை போல் இரட்டை தண்ணீர் தொட்டியும் தீண்டாமைதான்” என இம்முயற்சியை விமர்சித்துள்ளார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்.

தனித் தொட்டி இருந்ததால்தானே தலித் மக்களைப் பழிவாங்க சாதிவெறியர்கள், மலத்தைக் கொட்ட முடிந்தது, தற்போது மீண்டும் தனித்தொட்டி. வேங்கைவயல் மட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் இதுபோல, 4,200 தனித் தொட்டிகள் இருப்பதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. சமத்துவபுரங்களைத் தீண்டாமை ஒழிப்பின் பெருமுயற்சியாகப் பீற்றிக் கொள்ளும் தி.மு.க. அரசு, நவீன தீண்டாமையான தனித்தொட்டியை ஆதரிக்கிறது.

சாதி ஆதிக்கம்: ஆர்.எஸ்.ஸ்-உம் அரசு நிறுவனங்களும் ஒன்று!

வேங்கைவயல் பிரச்சினையை விசாரிப்பதற்காக, பா.ஜ.க. சார்பில் உண்மைக் கண்டறியும் குழு அமைத்ததாகச் சொல்லப்பட்டது. அக்குழுவில் அங்கம் வகித்த, பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம், அக்கட்சியின் எஸ்.சி அணித் தலைவர் தடா பெரியசாமி ஆகியோர், “வேங்கைவயல் சம்பவம் பூதாகரமாவதற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்தான் காரணம்; அங்கு தீண்டாமைக் கொடுமை நிலவவே இல்லை; அப்பகுதி அய்யனார் கோயிலில் சென்று வழிபடுவதைக் காலப்போக்கில் தாழ்த்தப்பட்ட மக்களே நிறுத்திக் கொண்டார்கள்” என்று அருவருப்பூட்டும் வகையில் பேசினர்.

குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று தனிப்படை நாடகமாடிக் கொண்டிருக்கும்போதே, ஜனவரி 12 அன்று, பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான சி.டி.நிர்மல் குமார், “தவறு செய்தவர்களின் காணொளி” என்று ஒரு காணொளியை டிவிட்டரில் பதிவிடுகிறார்; அது சமூக வலைதளங்களிலும் பரவுகிறது. அக்காணொளி, டிசம்பர் 26-ஆம் தேதி, நீர்த்தேக்கத் தொட்டியைச் சோதனையிடுவதற்காகச் சென்ற தலித் இளைஞர்கள் பதிவுசெய்த காணொளியாகும். தங்களுக்கு இடையிலான வாட்சப் குழுவில் அதைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். தொட்டியில் இறங்கி கொட்டிக் கிடந்த மலத்தைப் பையில் அள்ளி வைத்திருக்கும் காட்சியோடு, அந்த காணொளியைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

தனது சங்கப்பரிவார வலைப்பின்னல் மூலம் இக்காணொளியை எப்படியோ கிடைக்கப் பெற்ற நிர்மல்குமார், தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கி, ஆதிக்க சாதி வெறியர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்காக அதைப் பயன்படுத்தியுள்ளார். முத்தரையர் சாதிச் சங்கமானது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நெருக்கமானதாகும். ஆகவே, முத்தரையர் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. இருக்கிறது என்று சமிக்ஞை (Signal) செய்யவே அந்தக் காணொளி. லாவண்யா தற்கொலை, ஸ்ரீமதி மர்ம மரணம் ஆகிய விவகாரங்களில் ஒட்டி வெட்டப்பட்ட காணொளியைப் பரப்பியதும் இதே நிர்மல் குமார்தான்.

000

போலிச் செய்தியைப் பரப்பி, விசாரணையைச் சீர்குலைக்கும்விதமாக நடந்துகொண்ட நிர்மல் குமாரின் மீது, ‘திராவிட மாடல்’ அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தி.மு.க. அரசைப் பற்றி போலிச் செய்தியைப் பரப்பினார் என்று இதே நிர்மல் குமார் மீது பலமுறை வழக்கு போட்டுள்ளது.

சமூகநீதிதான் தங்கள் உயிர்மூச்சு என்று சித்தரிக்கும் தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டு முதல்வருமான மு.க.ஸ்டாலின், வேங்கைவயல் பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கே தயங்கினார். குற்றவாளிகளைத் தண்டிக்க வலியுறுத்தி பல்வேறு புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களும் பல போராட்டங்களை நடத்திய பிறகே, சட்டமன்றத்தில் ஒப்புக்கென்று பேசினார். 32 குடும்பங்களே உள்ள வேங்கைவயலுக்காகப் பேசினால், புதுக்கோட்டையில் பெருவாரியான ஓட்டுவங்கிகளை உடைய ஆதிக்க சாதிகளின் மனம் ‘புண்பட்டுவிடும்’ என்பதே, மு.க.ஸ்டாலினின் பாராமுகத்துக்கு காரணம்.

000

குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை, அப்பட்டமான சாதிவெறியோடு, தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லி பல்வேறு வடிவங்களில் மிரட்டியுள்ளது.

இவ்வழக்கில், பெயரளவிற்கு ஆதிக்க சாதி தரப்பிலிருந்து ஒன்றிரண்டு பேரை விசாரித்துவிட்டு, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் எட்டுபேரை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியுள்ளது போலீசு; காலையில் 9 மணிக்கு வரச்சொல்லிவிட்டு, இரவு ஒன்பது மணிக்கு விசாரணையைத் தொடங்குவது; நள்ளிரவு 12 மணி வரை, சிலநேரங்களில் 3 மணி வரை கூட விசாரணை நடத்திவிட்டு அனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

“அரசு வேலை வாங்கித் தருகிறோம், வீடு வாங்கித் தருகிறோம், குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள்” என்று தலித் இளைஞர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நைச்சியமாக பேரம்பேசிய போலீசு, “இல்லையென்றால், மனநலம் பாதிக்கப்பட்ட யாரையாவது வைத்துதான் வழக்கை முடிப்போம்” என்று கூறியுள்ளனர்.

விசாரணையில், மலம் எப்படியிருந்தது என்று வரைந்துகாட்டச் சொல்லி சித்திரவதை செய்துள்ளனர். “நீங்களே மலத்தைக் கொட்டிவிட்டு, அடுத்தவர்கள் மீது பழிபோடுகிறீர்களா” என்று கேட்டு, ஆபாசமாகப் பேசியுள்ளனர்.

விசாரணைக்கு வந்த முத்துகிருஷ்ணன் என்ற தலித் இளைஞரது, வங்கி வரவு செலவை எடுத்துவைத்துக் கொண்டு, “ஏன் உனக்கு இவ்வளவு பணம் வந்துள்ளது; மலம் கலக்கத் தூண்டியவர்கள்தான் உனக்கு பணம் அனுப்பியுள்ளார்களா” என போலீசார் கேட்டுள்ளனர். ஆனால், அவர் தனியார் கடன் வசூலிக்கும் நிறுவனத்தில் வேலைசெய்வதால், அவரது வங்கிக் கணக்கிற்கு கடன் வாங்கிய பலர் பணம் செலுத்தியுள்ளனர்; அதன் ஒட்டுமொத்த விவரங்களையும் காட்டிய பிறகே, அந்தக் கோணத்தில் விசாரிப்பதை நிறுத்தியது போலீசு. ஒருவேளை சரிவர ஆவணத்தைப் பராமரிக்காமல் வைத்திருந்தால், அதை வைத்தே அவரை குற்றஞ்சாட்டலாம் என்பதுதான் போலீசின் சதித்திட்டம்.

பெண் போலீசார்களிடம் திருநீறு கொடுத்து அனுப்பி, “உங்கள் குலசாமி கொடுத்தது, உங்கள் தெருவில்தான் குற்றவாளிகள் இருப்பதாக சாமி சொல்கிறது; திருநீறை எடுத்துக் கொண்டு உண்மையைச் சொல்லிவிடுங்கள்” என தலித் பெண்களை மிரட்டியுள்ளார்கள்.

மலம் கலந்த நீரையும் குடித்துவிட்டு, அதையும் தாங்களே கரைத்துக் கொண்டோம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென மிரட்டப்படுவது, சொற்களால் வருணிக்க முடியாத சித்திரவதையாகும்.

000

இரட்டைக் குவளை, தாழ்த்தப்பட்ட மக்களை ஆபாசமாகப் பேசியது ஆகிய வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளான மூக்கையா, சிங்கம்மாள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டதை மாபெரும் சமூகநீதிப் புரட்சியாகவும், ஆட்சியர் கவிதா ராமுவை நாயகியாகவும் தண்டோரா போட்ட மைய ஊடகங்கள் அனைத்தும், இந்த ஜாமீன் குறித்து நவ துவாரங்களிலும் அமைதி காக்கின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதைப் பற்றி முடிவுசெய்வதற்காக, இரண்டு வழக்கறிஞர்களைக் கொண்ட குழு அமைத்து, அக்குழு சம்மந்தப்பட்ட பகுதியை ஆய்வுசெய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் என்று முடிவெடுக்கிறார் சிறப்பு நீதிபதி; வன்கொடுமைச் சட்டத்தில் ஜாமீன் வழங்குவதற்கு எந்த நீதிமன்றமும், இதுபோன்ற கேலிக்கூத்தான முறைகளைக் கையாண்டதில்லை.

எதற்கு இந்த ஆய்வு? அப்பகுதியில் தீண்டாமைக் கொடுமை இருக்கிறதா, இல்லையா என்று கண்டுபிடிக்கவாம். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரே களத்தில் நேரடியாக விசாரணை செய்து, அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு மீது, “உண்மை கண்டறிய ஆய்வு” என்பது எத்தகைய அயோக்கியத்தனம்.

படிக்க: கோவை: அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதிகார வெறியும் சாதிய வன்மமும்!

நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையில், மேற்கண்ட குற்றவாளிகள் மீது, தீண்டாமையைக் கடைப்பிடித்ததாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்த வட்டாட்சியரே, அப்பகுதியில் தீண்டாமைக் கொடுமை நிலவவில்லை என்று சாட்சியளிக்கிறார்; இதையே அக்குழுவின் முடிவும் தெரிவிக்கிறது. அதனடிப்படையில், 15 நாட்களில் குற்றவாளிகளுக்கு ஜாமீன். சாதிவெறியர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்காகவே, நீதிமன்றமும் அதிகார வர்க்கமும் சேர்ந்து நிகழ்த்திய சதி இது.

பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கி, ஆதிக்க சாதிவெறியர்களைப் பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வும், போலீசு – அதிகார வர்க்கம் – நீதிமன்றம் என அரசின் அனைத்து நிறுவனங்களும் ஒரே புள்ளியில் இணைகின்றன என்பதைத்தான் மேற்சொன்ன சம்பவங்கள் தெளிவாக விளக்குகிறது!

சாதி-தீண்டாமை ஒழிப்பை சமூக இயக்கமாக்குவோம்!

சட்டப்படி தீண்டாமை என்பது குற்றம், சாதிவெறி தண்டனைக்கு உரியது – ஆனால், திண்ணியம் முதல் வேங்கைவயல் வரை சாதி-தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது; என்ன காரணம்? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியர்கள் நடத்தும் சாதிவெறியாட்டங்களை இந்த அரசமைப்பே பாதுகாப்பதுதான். அவ்வளவு சுலபமாக எந்த வழக்கிலும் சாதிவெறியர்கள் தண்டிக்கப்பட்டதில்லை. அரிதாக கைதுசெய்யப்பட்டாலும், வெகுசீக்கிரத்தில் ஜாமீனில் வெளியே வந்துவிடலாம். போலீசு, அதிகார வர்க்கம், நீதிமன்றம் என அனைத்துமே பார்ப்பனிய-சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும், பாதுகாக்கும் கருவிகளாக இருக்கின்றன.

எனினும், சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் அரசியல் சக்திகளும் செயல்பாட்டாளர்களும், இந்த அரசமைப்பின் சட்டங்களில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரணாக புதுப்புது சட்டங்களை இயற்றவும், சாதிவெறியர்களைக் கடுமையாக தண்டிக்கும் பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்கள்.

வேங்கைவயல் கொடூரத்தைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், “சாதி மற்றும் மதத்தின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளை முன்னெச்சரிக்கையாக தடுப்பதற்கு ஏதுவாக தனி உளவுப்பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார். ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களும் அமைப்புகளுமே சாதிவெறியர்களைத் தண்டிக்காதபோது, புதியவைகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

களத்திற்குச் சென்று வேங்கைவயல் கொடூரங்களை அம்பலப்படுத்திய, அம்மக்களுக்கு பல்வேறு சட்ட உதவிகளைச் செய்துவரும் எவிடன்ஸ் அமைப்பின் வின்சென்ட் ராஜ் (எவிடன்ஸ் கதிர்), “வேங்கைவயல் கிராமம் இருக்கும் முட்டுக்காடு பஞ்சாயத்தினை பட்டியல் சாதி பெண்கள் மட்டுமே போட்டியிட கூடிய ரிசர்வ் பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும்” என்கிறார். பஞ்சாயத்து தலைவராகியும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாமல், சாதிவெறியர்களால் முடக்கிவைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வழக்குகளை நாம் எத்தனை முறை சந்தித்திருக்கிறோம்!

வேங்கைவயல் பிரச்சினையில்கூட, தாழ்த்தப்பட்ட மக்களைக் குற்றவாளிகளாக்கும் தனிப்படை போலீசார்களின் அக்கிரமங்கள் அம்பலமாகி, அதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற பிறகுதான், வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி இருக்கிறார்கள். சி.பி.சி.ஐ.டி ஆவது குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடுமா என்றால், இதுவரை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குச் சென்ற வழக்குகள் எல்லாம் காணாமல் ஆக்கப்பட்டதுதான் நடைமுறை உண்மை.

மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தையும், தொடர்ச்சியான களப் போராட்டங்களையும் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே சாதிவெறியர்களைத் தண்டிக்கவும், சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டவும் முடியும்!

இரட்டைக் குவளைக் கடைப்பிடிக்கப்படும் இடங்களில், அவைகளை அடித்துநொறுக்கி களத்திலேயே அதற்கு முடிவுகட்ட வேண்டும்; வழிபாட்டு உரிமை தடுக்கப்பட்டால், தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி, கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்த வேண்டும்; சாதி மறுப்பு திருமணங்களைப் புரட்சிகர-ஜனநாயக இயக்கங்கள் ஊர்தோறும் அரசியல் விழாவாக நடத்த வேண்டும். ஆக, சாதி-தீண்டாமை ஒழிப்பை நாம் ஒரு சமூக இயக்கமாக மாற்ற வேண்டும்!

இதுதான் சாதி ஒழிப்பை நோக்கிய முதல் அடியாகவும் இருக்கும். இத்தகைய நமது போராட்டங்களின் மூலமே நிலவுகின்ற சட்டங்களைக்கூட நம்மால் நடைமுறையில் செயல்படுத்த முடியும்!

அமீர்

(பிப்ரவரி 2023 இதழ்)

Rahul stripped of his MP seat: Yesterday it was Freedom of Speech! Today it’s MP post! Tomorrow Election itself!

Rahul Gandhi was stripped of his MP seat as per the Representation of the People Act after being sentenced for two years by the Surat district court. As a result of this, Rahul will not be able to contest elections for 8 years.

While addressing a rally during the 2019 parliament elections, Rahul Gandhi had exposed the corporate capitalists are running away from the country after looting public sector banks under the Modi regime, and that Modi is acting as their Chowkidaar.

In an indirect reference to Nirav Modi and Lalit Modi and their connection to Modi, Rahul had asked, “How come all the thieves have Modi as the common surname?” A case was filed against Rahul Gandhi by saying that he had insulted the entire ‘Modi’ community by making such a statement.

This case was being heard for four years by the Surat district court and Rahul Gandhi was sentenced to two years in jail. The court had also granted him 30 days bail to give an opportunity to appeal. But within 24 hours, his MP post has been stripped of under the Representation of the People Act.

It was a planned fascist attack by the RSS-BJP mob. For more than a week, the BJP has been demanding an apology from Rahul Gandhi for insulting ‘Indian democracy’ on foreign soil. Under such circumstance, the arrest has been made.


Also Read: Saffron Fascism oppressing the Minorities!


In a letter to the Lok Sabha Speaker, a group of BJP MPs demanded that “Rahul Gandhi’s London speech is not acceptable. Therefore, under Rule 223 of Rules of Procedure and Conduct of Business in Lok Sabha, a special parliamentary committee should be constituted to consider if Rahul Gandhi should be expelled from the House for his remarks detrimental to the unity, integrity and sovereignty of India”.

This exposes the pre-planned conspiracy of the saffron fascist mob to strip of Rahul’s MP post and expel him from the Parliament. The saffron fascists, who were looking for legal reasons for the same, have fulfilled their motives through the judgments of the Surat court.

This is not an attack on an individual MP named Rahul Gandhi; Hereafter, if anyone raises their voice in the Parliament against the RSS, the BJP or against corporate dacoits like Ambani, Adani, Nirav Modi, Lalit Modi, or against Narendra Modi, they too will be thrown out of the Parliament in the same manner.

This is a fascist action. But even the leaders of political parties who make statements condemning this say that Rahul’s removal is an attack on the Constitution. This is not an attack on the Constitution, comrades, “This attack is in accordance with the Constitution”. “A legal fascist attack!”.

This is also a legal fascistic attack, similar to the using of investigating agencies like the CBI and the Enforcement Directorate against parties opposed to the BJP; like the using of UAPA against activists and intellectuals who fight for the people; just like the NIA being unleashed on the minority Muslim population.


Also Read: Parliamentary Fascism


What is in force in our country is democracy for RSS-BJP; Ambani-Adani. And fascism for the people of India! The slogan “Save Constitution” is just embracing the non-existing democracy.

“The danger that India is facing is not from an individual party called BJP. Toady, the entire democratic institutions are being taken over by the RSS. We are fighting the system” Rahul Gandhi spoke on every platform. This is also one of the reasons for the RSS – BJP mob’s unique hatred for Rahul.

It is illusory to think that the danger of the entire state structure becoming fascistic can be defeated through elections, and that the pseudo-democracy which is becoming fascistic can be revived – every act of the fascist mob makes us realize this!

Neither an alternative electoral party nor the elections is the solution. Even this pseudo-democratic election, which is being held nominally, will be brought to an end by ‘one nation; one election’.

The solution is to fight for an alternate system! Let’s fight for an Anti-Fascist Democratic Republic!

Editorial Team,
Puthiya Jananayakam,
24-03-2023.

வீழாது தமிழ்நாடு – துவளாது போராடு | பாடல் தொகுப்பு டீசர் – Teaser | ம.க.இ.க- இசை வெளியீட்டு விழா!

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு துவளாது போராடு பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சி

சென்னை நிருபர்கள் சங்கம்
(Chennai Reporters Guild)
நாள்: 30.03.2023 (வியாழன்)
நேரம் : மாலை 5.00

வெளியிடுபவர்:
தோழர் தியாகு,
பொதுச்செயலாளர்,
தமிழ் தேசிய விடுதலை இயக்கம்

பெறுபவர்:
தோழர் பாரதிநாதன்,
எழுத்தாளர் மற்றும் திரைப்பட கதையாசிரியர்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை

தொடர்புக்கு:-
9791653200, 9444836642
7397404242, 9962366321

இவர்கள் அண்ணாமலையின் கைக்கூலிகள்! | தோழர் மருது | வீடியோ

மாதேஷ்-க்கு பிரச்சினை என்ற உடனேயே மீண்டுவாருங்கள் சகோதரா என்று அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலை தான் பணம் கொடுத்து இத்தனை பேரையும் இயக்கியுள்ளார்.

ஐயப்பன் என்பதவர் டிடிஎஃப் வாசனியம் பணம்வாங்கியது நமக்கு தெரியவருகிறது. டிடிஎஃப் வாசம் யோக்கியம் என்று பேசிக்கொண்டிருக்கிறார். எனவே ஏதே ஒருவகையில் இவர்கள் தன்னை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

Mentioning of the Malayaha Tamils as Indian Tamils of Sri Lanka has planned motives | NDMLP, Sri Lanka

It has been 200 years since Malayaha Tamils were brought to Sri Lanka. Calling them as ‘Indian Tamils of Sri Lanka’ is refusing to recognise their ethnic rights. The New-Democratic Marxist-Leninist Party strongly condemns this.

The mentioning of Malayaha Tamils as Indian Tamils of Sri Lanka by ‘Yazh Nanbargal’ (Friends of Jaffna) along with the Indian embassy is a historical fraud. SK Senthivel, General Secretary of the New-Democratic Marxist-Leninist Party, in his press release condemned this, and said that this is belittling and maligning the identity of Malayaha Tamils by Yazh Nanbargal in order to extend the hegemony of India.

Also Read: A Revolutionary Party with a mass base: The need of the hour for Sri Lankan Liberation

This year marks the completion of 200 years since the Malayaha Tamils were first brought by the British to colonial Ceylon as indentured workers from South India in many phases beginning in 2023. Labour Unions, Progressive Organisations, Left forces and the intelligentsia are continuously voicing for the unresolved issues of the Malayaha Tamils and are emphasizing on their uniqueness. Identifying them as Indian Tamils of Sri Lanka at this juncture has many motives.

The New-Democratic Marxist-Leninist Party has been waging the struggle for long for the recognition of the Malayaha Tamils as a separate nationality. It has made a series of demands to the government to recognise the Malayaha Tamils as one of the four nationalities. We have been struggling for this demand since the 1990s. We have pointed this out emphatically in the proposals for constitutional reform submitted by the party during the so called Good Governance regime (United National Front for Good Governance).

It is condemnable to call the Malayaha Tamils, an oppressed nationality who have been denied citizenship and the rights of civil societies, including land, housing, education, etc., as Indian Tamils of Sri Lanka.

Progressive organizations and the public in Jaffna should register their protest over this new oppression of the Malayaha Tamils. The New-Democratic Marxist-Leninist Party emphasizes the necessity to raise their voices by all those who care about the Malayaha Tamils against this, and calls upon the people of Sri Lanka to fight for the rights of the Malayaha Tamils.

On behalf of the Central Committee,
SK Senthivel,
General Secretary,
New-Democratic Marxist-Leninist Party.

நெல்லை: பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் – தெருமுனைக்கூட்டம்

கத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை இழந்த நாள் மார்ச் 23.

இந்த நாளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் 92வது நினைவு நாள் தெருமுனை கூட்டம், நெல்லை மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்றது.  23-03-23 அன்று மாலை 6:15 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

மக்கள் அதிகாரம் நெல்லை மண்டல செயலாளர் தோழர் செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இணைச் செயலாளர் தோழர் கின்ஷன் தலைமை தாங்கினார். தலைமை உரையில் தோழர் கின்ஷன் பேசுகையில், “ஏகாதிபத்தியம் அன்று எப்படி மக்களை சுரண்டியது, இன்று அது எப்படி பல கார்ப்பரேட் கம்பெனிகளாக ஒன்றிணைந்து நாட்டை சுரண்டுகிறது என்பதையும், அதற்கு ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி கும்பல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் அதை வீழ்த்த வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.

படிக்க : பகத்சிங் பார்வையில் காதல், தியாகம், மரணம் | தோழர் யுவராஜ் | வீடியோ

விடுதலை சிறுத்தை கட்சியின்  மாவட்ட செய்தி தொடர்பாளர் தோழர் முத்து வளவன் தனது உரையில், சாதியின் பெயரால் நம்மை ஒடுக்கப்பட்டு உழைக்கும் மக்கள் உள்நாட்டுக்குள்ளேயே எப்படி அகதியாக்கப்படுகிறோம், ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி எவ்வாறு வேலை செய்து நம்மை பிரிக்கிறது என்பதையும், அனைவரும் ஒன்றிணைந்து அதை முறியடிக்க வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார்.

சி.பி.ஐ (எம்.எல்) மாவட்ட செயலாளர், தோழர் மா.சுந்தர்ராஜன் தனது உரையில், கல்வி, வேலை வாய்ப்பு எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பதையும், அதில் காவி – கார்ப்பரேட் கூட்டு எப்படி நிறைந்துள்ளது என்பது குறித்தும் பேசினார்.

புரட்சிகர இளைஞர் முன்னணி, தோழர் சுஜித் தனது உரையில், பாசிச கும்பல்களை வீழ்த்த கருப்பு, சிவப்பு, நீலம் இவை இணைய வேண்டும், பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய சிந்தனைகள் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து பாசிச கும்பல்களை இந்த மண்ணில் முறியடிக்க வேண்டும் என்று தனது உரையில் கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் காஜா பேசுகையில்,  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான  போராட்டத்தில் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் பாதிப்புக்குள்ளான, போராடிய  மக்களின் பக்கம் நின்று போராடியதால் தான் அச்சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதையும், ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ் ரவியாக மாறி தமிழக மக்களுக்கு எதிராக வேலை செய்வது பற்றியும் எடுத்துரைத்து இக்கும்பல்களை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் பேசினார்.

தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தமிழரசு தனது உரையில், பகத்சிங்கின் சிறை வாழ்க்கையை நினைவுகூர்ந்தும், தமிழ் தேசியம் என்று பேசி உழைக்கும் மக்களை சாதி, இன ரீதியாக பிரிக்கின்ற வேலையை செய்கின்ற சீமானை கண்டித்தும் பேசினார்.

ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் இரா.ச. இராமமூர்த்தி எனது உரையில், அன்று பகத்சிங் களத்திற்கு வந்ததைப் போல இன்று நாமும் பாசிசத்தை வீழ்த்த களத்தில் இறங்க வேண்டும் என்று உரையாற்றினார்.

திராவிட தமிழர் கட்சி மாவட்ட நிதி பொறுப்பாளர் தோழர் முத்துராஜ் தனது உரையில், அனைவரும் புத்தகம் படித்து அதன் மூலம் நமது வரலாற்றை புரிந்து கொண்டு,  போராட்டக் களத்தில் இறங்கி ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பேசினார்.

மக்கள அதிகாரம் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தனது சிறப்புரையில், “அரசியலுக்கும், மக்களுக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும்,  மக்களின் ஒவ்வொரு செயலுக்கும், நடைமுறைக்கும் பின்னாலும் அரசியல் இருக்கிறது. அதுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அது இன்று பாசிசத்தின் கையில் சிக்கி இருக்கிறது. இன்று பாசிசம் அரசு கட்டமைப்பிலும், அதற்கு வெளியிலும் பரவி மக்களை ஒடுக்குகிறது. நீதிமன்றம், தேர்தல் அமைப்புகள் என்று பல வழிகளில் பாசிசம் வளர்ந்து மக்களை ஒடுக்குகிறது. ராகுல் காந்திக்கு மோடியை விமர்சனம் செய்து பேசினார் என்று இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.

இது பாசிசம் எந்தளவுக்கு நீதித்துறையிலும் கோலோச்சுகிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக உள்ளது. அதுபோல மே 1 மதுரையில்  நடைபெறவிருக்கும், மக்கள் அதிகாரம் அமைப்பின்  ஆர் எஸ் எஸ்- பாஜக; அம்பானி அதானி பாசிசம் ஒழிக  என்ற முழக்கத்தில் ஒழிக என்று இருப்பது குறித்து வாட்ஸ் அப்பில் சங்கீகள் புகார்  அனுப்பினார்கள் என்று போலீசு வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சுவர் எழுத்துக்களை போலிசு அழித்துள்ளது. மோகன் பகவத்  வந்தபோது வட்டாட்சியர்  அவருக்கு புதியதாக சட்டத்தை மீறி  வரவேற்பு அளித்தார்.

இப்படி பல்வேறு வழிகளில் பாசிசம் வளர்வதற்கு இங்கே அரசு உறுப்புகள் வேலை செய்கின்றன. மாநில அரசுகளின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றன. கல்வி, வேலை வாய்ப்பு, ஜிஎஸ்டி இப்படி ஒவ்வொன்றிலும் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு மத்தியில் ஒருமுகப்படுத்தப்படுகின்றன. அரசு கட்டமைப்புக்கு வெளியிலும் பாசிச குப்பல்கள் தொடர்ந்து வேலைகள் செய்கின்றன. குறிப்பாக சாதிய அமைப்புகளை கூர் தீட்டி அவற்றை களத்தில் இறக்கும் வேலையை செய்கின்றது.

படிக்க : ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | தோழர் மருது

சீமான்  போன்றவர்களை பயன்படுத்தி உழைக்கும் மக்களை பிளவு படுத்தி சாதியை வளர்த்து ஆதாயம் அடைகிறது. இவற்றை முறியடிக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. கடந்த காலங்களில் கருவறை நுழைவு போராட்டம், தமிழ் மக்கள் இசை விழா போன்ற எண்ணற்ற போராட்டங்களை மக்கள் கலை இலக்கிய கழகம் எடுத்துள்ளது. நமது தமிழ் மரபு பண்பாடு உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும். அதை சீர்குலைக்கும் சக்திகளை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். பகத்சிங்கிற்கு எப்படி ஒரு போராட்ட மரபு இருந்ததோ, அதேபோல் கட்டபொம்மன், சுந்தரலிங்கனார், ஒண்டிவீரன், சின்ன மருது இப்படி நமக்கும் ஒரு மிகப்பெரிய நீண்ட நெடிய போராட்ட மரபு உள்ளது. அதனை நாம் வரித்துக் கொண்டு இந்த அரசு கட்டமைப்புக்கு வெளியில் மக்களை ஒன்றிணைந்து இந்த பாசிச கும்பல்களை வீழ்த்த வேண்டும் என்று அறைகூவி தனது உரையை முடித்தார்.

இறுதியாக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தோழர் முத்து நன்றி உரை சொல்லி கூட்டத்தை நிறைவு செய்தார்.

தெருமுனைக் கூட்டத்தில் புத்தகம் அரங்கு போடப்பட்டது அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தகத்தை ஆர்வமாக வாங்கினார்கள்.அதில் ஒரு சிறுவன் ஒரு புதிய ஜனநாயக புத்தகத்தை வாங்கியது மட்டுமில்லாமல் அவனது நண்பனை கூப்பிட்டு வாங்க செய்தான்.

பூர்விக தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பாலமுருகன் தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கூறியாவது இன்றைய பாசிச சூழ்நிலையில் இந்த தெருமுனை கூட்டம்  திருநெல்வேலி மாவட்டத்திற்கு முன்னுதாரணமாக இருக்கிறது. இதை அடுத்த பல்வேறு கிராமங்களில் கொண்டு நாம் சேர்க்க வேண்டும் என்று தனது கருத்தை தோழர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | தோழர் மருது

கொலைகாரர்கள், ரவுடிகள், கொள்ளைக்காரர்கள், மோசடிக்காரர்களின் கூடாரமே பாரதிய ஜனதா கட்சி என்பது அனைவரும் அறிந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடிக்காரனான இந்த ஹரிஷ் இதுவரை கைது செய்யப்படாமல் தப்பித்ததே பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கினால் தான்.

போதைப் பொருள் கடத்தல், பண மோசடி, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற விவகாரங்களில் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சமூக விரோதிகளை திட்டமிட்டு கட்சியில் சேர்க்கும் பாரதிய ஜனதா கட்சியும் அண்ணாமலையுமே இப்படிப்பட்ட செயல்களுக்கு பொறுப்பு. இது குறித்தும் தமிழ்நாடு அரசு விசாரணை செய்ய வேண்டும்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஐ.ஐ.டி முதல் ஜே.என்.யூ வரை: பாசிசமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள்!

மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக் முதலாமாண்டு படித்துவந்த தர்ஷன் சோலங்கி என்ற மாணவர், பிப்ரவரி 12 ஆம் தேதி, ஐ.ஐ.டி வளாக விடுதியின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பிளம்பர் வேலை செய்யும் தந்தையும், வீட்டு வேலை செய்யும் தாயையும் கொண்ட சோலங்கி, ஏழை – தலித் சமூக பின்னணியில் இருந்து வந்தவர். மேலும் அவரது குடும்பத்தில் சோலங்கி முதல் பட்டதாரி. வர்க்கரீதியாகவும் சாதிரீதியாகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து, பல்வேறு தடைகளைத் தாண்டி, ஆசைகளோடும் கனவுகளோடும் உயர்கல்வியில் நுழைந்த சோலங்கி, மூன்றே மாதங்களில் தற்கொலை செய்துகொண்டார்.

சோலங்கி தற்கொலை செய்து கொண்ட அடுத்த நாள் நண்பகல் (பிப்ரவரி 13 ஆம் தேதி) சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இரண்டாமாண்டு படித்து வந்த ஸ்டீபன் சன்னி என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஸ்டீபன் இறந்த அன்றைய தினமே சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதே நாளில் ஆந்திரா ஐ.ஐ.டியில் இறுதியாண்டு பயின்று வந்த அகிலா என்ற மாணவி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

இரண்டே நாட்களில் நான்கு ஐ.ஐ.டி மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருப்பது என்பது பார்ப்பன சாதிவெறியர்களின் கோட்டையாகத் திகழும் ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் மீதான சாதி மத ரீதியான தாக்குதல்கள் மேலும் உச்சநிலையை எட்டியிருப்பதைக் காட்டுகின்றன.


படிக்க : ஜே.என்.யூ மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள்


இறந்த மாணவர்களில் சோலங்கி, அகிலா ஆகியோர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் சோலங்கி என்ற மாணவர் பார்ப்பன ஆதிக்க மனோபாவம் கொண்ட பிற மாணவர்களால் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார். கட்டணமில்லாமல் ‘ஓசி’யில் படிப்பதாகவும் இடஒதுக்கீட்டால் தகுதியும் திறமையும் இல்லாமல் ஐ.ஐ.டி.க்குள் நுழைந்ததாகவும் அவமதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியான இந்த அவமானங்களால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், இறுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

“சோலங்கி மரணத்திற்கு காரணம், ஐ.ஐ.டி வளாகத்தில் நிலவும் சாதியப் பாகுபாடு, ஒடுக்குமுறைகள்தான். இது தற்கொலை அல்ல, நிறுவனப் படுகொலை” என்று குற்றம்சாட்டுகிறது மும்பை ஐ.ஐ.டி.யில் இயங்கிவரும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் (ஏபிபிஎஸ்சி). மேலும், “இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலை கொண்டவர்களால் முதலாமாண்டு மாணவர்கள் மிகப்பெரிய மன உளைச்சலை எதிர்கொண்டு வருகின்றனர்” என்றும் கூறியுள்ளது.

இதனை மறுத்த பல்கலைக்கழக நிர்வாகம், “சாதியப் பாகுபாடு காரணமல்ல, சொந்த பிரச்சினையால்தான் சோலங்கி தற்கொலை செய்து கொண்டார்” என திமிராக பதிலளித்திருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி-யும் ஸ்டீபன் மரணத்தில் இதே பதிலை கூறிவருகிறது.

சோலங்கியின் மரணத்திற்கு நீதிகேட்டு மும்பை ஐ.ஐ.டி மாணவர்களும்; நிறுவனத்தில் நிலவும் சாதிய பாகுபாடு பிரச்சினையை தீர்க்க குழு ஒன்றை அமைத்திட வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்ட பிறகே, தற்கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சோலங்கி, ஸ்டீபன் இருவரின் மரணம் தொடர்பாக, ஐ.ஐ.டி நிறுவனம் விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளபோதும், விசாரணைகளின் முடிவுகள் என்னவாக இருக்கும், யாருக்கு சாதகமாக இருக்கும் என்று முந்தைய பல நிகழ்வுகளின் ஊடாக நாம் எளிதாக ஊகிக்க முடியும்.

ஒருவரை அடித்துக் கொலைசெய்யும் சாதிவெறித் தாக்குதல்களைவிட உளவியல் சித்தரவதைக்குள்ளாக்கி தற்கொலைக்கு தள்ளுவது மிகக் கொடியதாகும். ஐ.ஐ.டி.களில் தாழ்த்தப்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்படுத்தப்பட்ட, சிறுபான்மை மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இத்தகைய கொடுமைகள்தான் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.

இது இன்று நேற்றல்ல. ஐ.ஐ.டி. என்பதே ‘ஐயர் ஐயங்கார் டெக்னாலஜி’யாகத்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாணவர்களையும் பேராசிரியர்களையும் சாதிய, மத ரீதியாக துன்புறுத்தி நிறுவனத்தைவிட்டே வெளியேற்றுவதும், தற்கொலைக்கு தள்ளுவதும் தங்களது சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக பார்ப்பனக் கும்பல் தொடர்ந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கையாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஃபாத்திமா லத்தீஃப் என்ற மாணவி மதவெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ் கயவனான சுதர்ஷன் பத்மனாபன் என்ற பேராசிரியரால், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால் தற்கொலை செய்துக் கொண்டார். “எனது பெயரே எனக்கு பிரச்சினை” என்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். முஸ்லிம் என்ற ஒரே காரணத்தாலேயே அவர் கொல்லப்பட்டார் என்பதே உண்மை.

மாணவர்களை மட்டுமல்ல பல பேராசிரியர்களையும் சாதிய ரீதியாக இழிவுப்படுத்தி வெளியேற்றியிருக்கிறது ஐ.ஐ.டி நிர்வாகம். சென்னை ஐ.ஐ.டியில் மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறை உதவி பேராசிரியராக 2019 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த விபின், பணியில் இணைந்த நாள் முதலே தான் சாதிய ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இவரைப்போல, தகுதியிருந்தும் பதவி உயர்வு மறுக்கப்பட்ட பேராசிரியை வசந்தா கந்தசாமி உள்ளிட்ட பலரும் சாதி, மத ரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாடுமுழுவதும் பல மாநிலங்களில் இயங்கிவரும் ஐ.ஐ.டிகளில் இருந்து வெளியேறிய அல்லது இடைநிறுத்திக் கொண்ட மாணவர்களில் 63 சதவிகிதம் பேர் இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தவர்கள். அவற்றுள் 40 சதவிகிதம் மாணவர்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்கள். மேலும், 2014 முதல் 2021 வரை பா.ஜ.க ஆட்சிக்கு வந்த ஏழாண்டுகளில் மட்டும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் பயின்றுவந்த 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்; இதில் 24 பேர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள், 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்திருக்கிறார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

0-0-0

குறிப்பாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தற்கொலைகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருவது தனித்த நிகழ்வல்ல. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, நாடு முழுவதும் காவிக் கும்பலால் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது; ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மட்டுமல்ல, பெரும்பான்மையான உயர்கல்வி நிலையங்கள் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாசிசக் கும்பலின் ஆதிக்கத்திற்குச் சென்றுவருகின்றன. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக திட்டமிட்டே ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமிப்பது; பல்கலைக்கழகங்களில் இடது, முற்போக்கு, ஜனநாயக சிந்தனை கொண்ட மாணவர்கள் – பேராசிரியர்களை ஒடுக்குவது போன்றவை துரிதமாக செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் நடபெற்ற பல நிகழ்வுகள் அதற்கு சான்றுகளாக உள்ளன.

ஜே.என்.யு.வில் இயங்கிவரும் மாணவர் குழு ஒன்று ஐ.ஐ.டி-இல் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் சோலங்கிற்காக மெழுகுவர்த்தி பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த பேரணி முடிந்த பிறகு ஏ.பி.வி.பி கும்பல் அங்கிருந்த பெரியார், காரல் மார்க்ஸ் படங்களை உடைத்து நாசம் செய்தது. அதனைத் தடுக்கச் சென்ற தமிழ்நாட்டு மாணவர்களின் மண்டையைப் பிளந்தது. இதுகுறித்து “சாதி வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்க ஏபி.வி.பி இந்த தாக்குதலை தொடுத்துள்ளது” என்கிறார்கள் ஜே.என்.யு. மாணவர்கள். இத்தகைய தாக்குதல்களை நடத்துவதன் மூலம் முற்போக்கு அரசியல் பேசும் மாணவர்களிடம் கூட்டம் நடத்தினால்கூட தாக்கப்படுவோம் என்ற அச்ச உணர்வை விதைக்க முயல்கிறது பாசிசக் கும்பல்.

கடந்த ஜனவரி மாதம்கூட ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மோடியின் கோர முகத்தை அம்பலப்படுத்திய குஜராத் படுகொலை குறித்தான பி.பி.சி-இன் ஆவணப்படத்தை திரையிட முயன்றதற்காக ஏ.பி.வி.பி வானரப் படையினரால் மாணவர்கள் சரமாரியாக தாக்கப்பட்டார்கள். இதற்கு முன்னர் ஜே.என்.யு-வில் அசைவ உணவு சாப்பிட்டார்கள் என்று கூறி மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.


படிக்க : ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்!


இதேபோல, சென்ற ஜனவரி மாதம் காவிக் கும்பலுக்கு எதிராக போராடியதால் தற்கொலை தள்ளப்பட்ட  ரோகித் வெமுலா நினைவு தினத்தன்று, லக்னோ பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் நினைவேந்தல் பேரணி நடத்தினர். பல்வேறு தடைகளை மீறி மாணவர்கள் நடத்திய பேரணியில் புகுந்த ஏபி.வி.பி குண்டர் படை “ஜெய் ஸ்ரீ ராம்” என முழக்கமிட்டு மாணவர்களை கடுமையாகத் தாக்கியது. தாக்குதல் நடத்திய ஏபி.வி.பி கும்பல் “இந்த பல்கலைக்கழகத்தை ஜே.என்.யு.வாக மாற்ற விட மாட்டோம்” என மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட, ஜெயின் பல்கலைக்கழகத்தில் சாதி வன்மம் மிக்க ஒரு நாடகம் நடைபெற்றிருந்தது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி இருந்தது. அந்த நாடகத்தில் அம்பேத்கரை ‘பீர் அம்பேத்கர்’ எனவும், இட ஒதுக்கீடு மற்றும் தலித்துகளை பற்றி இழிவான கருத்துகளை ‘நகைச்சுவை’ என்ற பெயரில் அரங்கேற்றியிருந்தார்கள். பலர் இதற்கு எதிராக புகார் செய்ததால் நாடகம் நடித்த மாணவர்களும், துறைத் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்களை கல்வியில் இருந்து விரட்டுவது, முற்போக்கு ஜனநாயக அரசியல் பேசுகின்ற மாணவர் அமைப்புகளை ஒழித்துக்கட்டுவது, சமூக சிந்தனை கொண்ட மாணவர்களை உருவாக்கும் இடமாக இருக்கும் பல்கலைக்கழகங்களை சாதி-மதவெறி பிடித்த மிருகங்களை உருவாக்கும் இடமாக மாற்றுவது என்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத் திட்டத்தின் அங்கமாகும். இதைத் தடுக்காமல், இப்பாசிசக் கும்பலுக்கு எதிராக நாம் எதிர்வினையாற்றாமல் போனால், நாளை கல்வி நிறுவனங்கள் அனைத்தும் காவி நாஜிகளின் கூடாரமாவது நிச்சயம்.


ஆனந்தி