Monday, June 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 119

ராகுல் காந்தி தகுதி நீக்கம் : மோடி, அமித்ஷா பாசிச கும்பலின் வெறியாட்டம் | தோழர் மருது

மோடிக்கு எதிராக கருத்து கூறுவோரை தகுதி நீக்கம் செய்து , தேர்தலில் போட்டியிட தடுத்து எதிர்க்கட்சிகள் யாருமே இல்லை என்ற நிலையை உருவாக்கி அதன் மூலம் 2024 தேர்தலில் வெற்றி பெறுவதும், இந்த ராஷ்டிரத்தை படைப்பதுமே ஆர்எஸ்எஸ் பாஜக பாச கும்பலின் நோக்கம்.

தேர்தல் முறைக்கு அப்பால் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி அதானி பாசிசக்கும்பல் வீழ்த்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காக உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் பாசிசத்திற்கெதிராக ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ராகுல் காந்தி தகுதிநீக்கம்: பாசிச முடியாட்சி நிறுவப்பட வெகுநாட்கள் இல்லை!

0

நேற்று (24.03.2023) ராகுல் காந்திக்கு குற்றவியல் அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மோடியின் நண்பரான அதானி குறித்த விவாதத்தை விரும்பாத பாசிச பாஜக அரசு, ராகுல் காந்தியின் லண்டன் உரை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கியது. ‘அதானி’ என்ற வார்த்தை மட்டும் அதன் காதுகளில் விழவில்லை.

ராகுல் காந்தியும் காங்கிரசும் அந்நிய மண்ணில் இந்தியாவை அவமானப்படுத்தி விட்டதாக பா.ஜ.க எம்‌.பி-க்கள் கொக்கரித்தனர். ராகுல் தேச விரோதமாக பேசியதாக குற்றம் சாட்டினார்.

அப்படி தேச விரோதமாக ராகுல் பேசியது என்ன தெரியுமா? லண்டன் பயணம் சென்ற ராகுல் காந்தி “ஜனநாயகத்துக்கு அடிப்படையான நிறுவன கட்டமைப்புகள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்தியாவில் பயணம் மேற்கொண்டால் தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினருக்கு என்ன நேர்ந்து வருகிறது என்பதை காண முடியும். இதுகுறித்த வாதங்களுக்கு பா.ஜ.க தயாராக இல்லை” என்று பேசினார்.


படிக்க: ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்! | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை


மேலும் சி.பி.ஜ (CBI), அமலாக்கத்துறை (ED), ரிசர்வ் வங்கி (RBI) போன்றவற்றை மோடி அரசு எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்தும், பெகாசஸ்-ஐ பயன்படுத்தி உளவு பார்த்தது குறித்தும் பேசினார். தங்கள் மீதான எதிர் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாத பாசிஸ்டுகள் தாங்கள் அம்பலப்படுவதை தேசத்தின் மீதான தாக்குதல் என்று சித்தரித்து வருகின்றனர்.

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் முடக்குவதற்காகவும், அதன் மூலம் மற்ற எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காகவும் ராகுல் காந்தியை திட்டமிட்டு தற்போது எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்துள்ளனர்.

அதற்காகத்தான் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று கர்நாடகாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பேசியதற்காக தொடுக்கப்பட்ட வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்பிரச்சாரத்தில் ராகுல் காந்தி “அனைத்துத் திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டிருக்கின்றனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிகிறது. அது ஏன்?” என்று பேசியிருந்தார்.

இதை எதிர்த்து குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது குற்றவியல் அவதூறு (criminal defamation) வழக்குத் தொடர்ந்திருந்தார். அவ்வழக்கின் தீர்ப்பு நேற்று (மார்ச் 23) வெளியானது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ராகுல் காந்தியின் ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதோடு மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கியது.


படிக்க: ராகுலின் எம்.பி பதவி பறிப்பு: நேற்று விவாத சுதந்திரம், இன்று பதவி, நாளை தேர்தல் !


ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே குற்றவியல் அவதூறு வழக்கிற்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையான இரண்டு ஆண்டு சிறை தண்டனை என்பது வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of the People Act, 1951) பிரிவு 8-இன்படி, பதவியில் இருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதிநீக்கம் செய்யப்படும்.

மேலும், தண்டனை காலம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட இயலாது. அதாவது ராகுல் காந்தி மேல் முறையீடு செய்து, இத்தீர்ப்பை முறியடிக்காவிட்டால் அவரால் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட இயலாது.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவருக்கே இந்த நிலை என்றால், மற்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-களின் நிலை என்னவாகும். பாசிஸ்டுகள் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதற்கோ மாநில அரசுகளை கலைப்பதற்கோ சிறு தயக்கத்தைக் கூட வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. பெயரளவிற்கு இருந்த ஜனநாயகமும் ஒழிக்கப்பட்டு பாசிச முடியாட்சி நிறுவப்பட்டு கொண்டிருப்பதையே இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

பொம்மி

ராகுலின் எம்.பி பதவி பறிப்பு: நேற்று விவாத சுதந்திரம், இன்று பதவி, நாளை தேர்தல் !

ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர், இனி எட்டாண்டுகள் தேர்தலிலேயே போட்டியிட முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடாவில் உரையாற்றிய ராகுல் காந்தி, மோடியின் ஆட்சியில் பொதுத்துறை வங்கிகளைச் சூறையாடிவிட்டு கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டைவிட்டே ஓடுவதைப் பற்றியும் அவர்களுக்குத்தான் மோடி சவுகித்தாராக (காவலர்) செயல்படுகிறார் என்பதையும் அம்பலப்படுத்திப் பேசினார்.

அந்த வரிசையில், நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரையும் மோடியுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பையும் மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், “அனைத்து திருடர்களுக்கும் ‘மோடி’ என்ற பின்னொட்டுப் பெயர் எவ்வாறு அமைகிறது” எனக் கேட்டிருந்தார். இவ்வாறு பேசியதன் மூலம் ஒட்டுமொத்த மோடி சமூக மக்களையும் ராகுல் இழிவுபடுத்திவிட்டார் என்று வழக்கு தொடரப்பட்டது.

படிக்க : ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்! | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

இதுதொடர்பான வழக்கு நான்கு ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். மேலும், மேல் முறையீட்டுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், 30 நாட்கள் ஜாமினும் வழங்கியிருந்தது. ஆனால் 24 மணிநேரத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.

இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட பாசிசத் தாக்குதலாகும். அந்நிய மண்ணில் ‘இந்திய ஜனநாயகத்தை’ இழிவுப்படுத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர்ந்து ஒருவார காலத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தை பா.ஜ.க. முடக்கிவந்த சூழலில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த 17ஆம் தேதியே, “ராகுலின் லண்டன் பேச்சு, மக்களவை விதிமுறை 223-ன்படி ஏற்புடையதல்ல. இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியின் எம்.பி பதவியை ஏன் பறிக்கக் கூடாது என்பது பற்றி சிறப்புக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” என அவைத்தலைவரிடம் மனு அளித்திருந்தது பா.ஜ.க. எம்.பி.க்கள் குழு.

இது ராகுலின் எம்.பி. பதவியை பறித்து, அவரை நாடாளுமன்றத்திலிருந்தே தூக்கி வீச வேண்டும் என்று காவி பாசிசக் கும்பல் முன் திட்டத்தோடு செயல்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது. அதற்காக சட்டப்பூர்வ காரணங்களை தேடிக் கொண்டிருந்த காவி பாசிஸ்டுகள், சூரத் வழக்கின் தீர்ப்புகள் மூலமாக தங்கள் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இது ராகுல் காந்தி என்ற தனிப்பட்ட எம்.பி மீதான தாக்குதல் அல்ல; இனி ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக, பா.ஜ.க.விற்கு எதிராக, அம்பானி, அதானி, நீரவ் மோடி, லலித் மோடி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு எதிராக, நரேந்திர மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் யாராவது குரல் எழுப்பினால், அவர்களையும் இதுபோல நாடாளுமன்றத்தை விட்டே தூக்கியெறிந்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறது காவிக் கும்பல்.

இது ஒரு பாசிச நடவடிக்கை. ஆனால், இதைக் கண்டித்து அறிக்கைவிடும் அரசியல் கட்சி தலைவர்கள் கூட “ராகுலின் பதவி நீக்கம், அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்” என்கின்றனர். இது அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் அல்ல தோழர்களே, “அரசமைப்புச் சட்டப்படியான தாக்குதல்”. “சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதல்”!

பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் மீது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் எப்படி ஏவப்படுகிறதோ; மக்களுக்காக போராடும் செயல்பாட்டாளர்கள், அறிவித்துறையினர் மீது எப்படி ஊ.ஃபா கொடுஞ்சட்டம் பாய்ச்சப்படுகிறதோ; சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது என்.ஐ.ஏ எப்படி ஏவிவிடப்படுகிறதோ – அதுபோல, இதுவும் சட்டப்பூர்வமான பாசிசத் தாக்குதலாகும்.

நமது நாட்டில் அமலில் இருப்பது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானிகளுக்கான ஜனநாயகம்; இந்திய மக்கள் மீதான பாசிசம்! இங்கு வைக்கப்படும் “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்ற முழக்கம் இல்லாத ஜனநாயகத்தை கட்டியழுதுகொண்டிருக்கும் முழக்கமாகும்.

படிக்க : ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு: நேற்று விவாத சுதந்திரம் – இன்று பதவி – நாளை தேர்தல்! | சுவரொட்டி

“இந்தியா எதிர்கொண்டிருக்கும் அபாயம் பா.ஜ.க. என்ற தனிப்பட்ட கட்சி அல்ல. ஒட்டுமொத்த ஜனநாயக நிறுவனங்களையும் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கைப்பற்றியிருக்கிறது. நாம் ஒரு கட்டமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிக்கிறோம்” என்று ஒவ்வொரு மேடையிலும் பேசியவர் ராகுல் காந்தி. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு ராகுலின் மீது தனிச்சிறப்பான வெறுப்புக்கு இதுவும் ஒரு காரணம்.

ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பே பாசிசமயமாகியுள்ள அபாயத்தை தேர்தலின் மூலம் முறியடித்துவிட முடியும் என்று கருதுவதும், பாசிசமயமாகிவரும் போலி ஜனநாயகத்தை மீட்டு உயிர்பித்துவிட முடியும் என்று கருதுவதும் மாயை – பாசிசக் கும்பல், தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் இதை நமக்கு உணர்த்துகிறது!

மாற்றுக் கட்சியோ, தேர்தலோ தீர்வல்ல. பெயரளவிலும் நடைபெறும் இந்த போலி ஜனநாயகத் தேர்தலும் கூட ஒரே நாடு; ஒரே தேர்தலின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்படலாம்.

மாற்றுக் கட்டமைப்பை நோக்கிப் போராடுவதே தீர்வாகும்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்
24-03-2023

ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | மக்கள் அதிகாரம்

24.03.2023

ஆருத்ரா பண மோசடி:
மக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த
பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது!

அண்ணாமலையை கைது செய்!

பத்திரிகை செய்தி

பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஏமாற்றி, ரூ.2400 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு. அந்நிறுவனத்தின் இயக்குநரில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாகி மாலதி ஆகிய இரண்டு பேரையும் நேற்றைய தினம் (23.03.2023) பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான மக்களிடம் மோசடி செய்து கைது செய்யப்பட்ட ஹரிஸ், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார். ஹரிஷ் இப்போது வரை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை.

கொலைகாரர்கள், ரவுடிகள், கொள்ளைக்காரர்கள், மோசடிக்காரர்களின் கூடாரமே பாரதிய ஜனதா கட்சி என்பது அனைவரும் அறிந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடிக்காரனான இந்த ஹரிஷ் இதுவரை கைது செய்யப்படாமல் தப்பித்ததே பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கினால் தான்.

படிக்க : ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்! | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

போதைப் பொருள் கடத்தல், பண மோசடி, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற விவகாரங்களில் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சமூக விரோதிகளை திட்டமிட்டு கட்சியில் சேர்க்கும் பாரதிய ஜனதா கட்சியும் அண்ணாமலையுமே இப்படிப்பட்ட செயல்களுக்கு பொறுப்பு. இது குறித்தும் தமிழ்நாடு அரசு விசாரணை செய்ய வேண்டும்.

இந்தப் பண மோசடி விவகாரத்தில் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின் தொடர்பு குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.

ஹரீசுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து உடனடியாக போலீஸ் விசாரணை செய்து அண்ணாமலை மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது
செய்தித்தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு: நேற்று விவாத சுதந்திரம் – இன்று பதவி – நாளை தேர்தல்! | சுவரொட்டி

சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்தை தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது!

இது சட்டபூர்வ பாசிசத் தாக்குதல்!
நேற்று விவாதம் சுதந்திரம்!
இன்று எம்.பி பதவி!
நாளை தேர்தலும் ரத்தாகும்!

இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க;
அம்பானி-அதானிகளுக்கான ‘ஜனநாயகம்’!
உழைக்கும் மக்கள் மீதான பாசிசம்!
போலி ஜனநாயக மாயையை உதறி எழுவோம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!


புதிய ஜனநாயகம்
(24.03.2023)

பகத்சிங் பார்வையில் காதல், தியாகம், மரணம் | தோழர் யுவராஜ் | வீடியோ

ன்னைப்போலவே நிறைய பேருக்கு தூக்கு தண்டனை அறிவித்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள் எப்போதாவது இங்கிருந்து தப்பித்து விட முடியாதா என்று. ஆனால், நான் அந்த புனிதமான நாளை எண்ணி மிகவும் மகிழ்ச்சியுடன் தூக்குமேடை ஏறுவதற்காக காத்துக்கொண்டிருக்கேன் என்றான் பகத்சிங்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்! | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

24.03.2023

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்!
மோடி, அமித்ஷா பாசிச கும்பலின் வெறியாட்டம்!

கண்டன அறிக்கை

பொய்யாக புனையப்பட்ட அவதூறு வழக்கில் நேற்றைய தினம்(23.03.2023) ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். அந்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு ஒரு மாத காலம் நீதிமன்றமே அவகாசம் வழங்கி இருக்கிறது.

இன்றைய தினம் திடீரென்று ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்திருக்கிறது மோடி – அமித்ஷா பாசிச கும்பல்.

இந்த பாசிச கும்பல் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எப்படி நடத்தும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்திருப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய விடாமல் செய்வது,  எதிர்க்கட்சிகளை பழி வாங்குவது என்று ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்திருக்கிறது பாசிச பாஜக.

படிக்க : பொய் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை! சேத்தன் குமார் கைது! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

மோடிக்கு எதிராக கருத்து கூறுவோரை தகுதி நீக்கம் செய்து, தேர்தலில் போட்டியிட தடுத்து எதிர்க்கட்சிகள் யாருமே இல்லை என்ற நிலையை உருவாக்கி அதன் மூலம் 2024 தேர்தலில் வெற்றி பெறுவதும், இந்து ராஷ்டிரத்தை படைப்பதுமே ஆர்.எஸ்.எஸ்-  பாஜக பாசக்கும்பலின் நோக்கம்.

இது ஒரு பாசிச நடவடிக்கையாகும். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கே இந்த நிலை என்றால் மற்ற எம்.எல்.ஏ, எம்.பி.களின் கதி என்னவாக இருக்கும்?

தேர்தல் என்றும் ஜனநாயகம் என்றும் பெருமை பீற்றிக் கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகம் புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது.

தேர்தல் முறைக்கு அப்பாலும் கூட ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி அதானி பாசிசக் கும்பல் வீழ்த்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

பொய் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை! சேத்தன் குமார் கைது! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

23.03.2023

பத்திரிகை செய்தி

பொய் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை! சேத்தன் குமார் கைது!

ஆர். எஸ். எஸ் – பாஜக பாசிச கும்பலின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

டந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என தொடரப்பட்ட பொய் வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?” என்ற ஒரு உண்மையை பேசியதால் , ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்று சூரத்தின் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தேர்தல் பிரச்சாரங்களின் போதும் பொதுவான பிரச்சாரங்களின் போது இஸ்லாமிய மக்களையும் எதிர்க்கட்சிகளையும் அவதூறாகவும் மிகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்ட ஆர். எஸ். எஸ் – பாஜக பாசிச கும்பல் , ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்வது கேலிக்குரியதாகும்.

மோடிக்கு எதிராக பேசுபவர்களுக்கு இனி சிறை தண்டனை தான் கிடைக்கும் என்பதை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.

ராகுல் காந்தி மட்டுமல்ல; அண்மையில், சேத்தன் குமார் என்ற கன்னட நடிகர் ” சாவர்க்கரின் பொய்களால் இந்து மதம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராமர் ராவணனை வீழ்த்திய பிறகு அயோத்தி திரும்பியதும் இந்தியா பிறந்தது என கூறியது பொய். 1992: பாபர் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடம் என கூறுவதும் பொய்.திப்புவை கொன்றது ஊரி கெளடா – நஞ்சேகெளடா என்பதும் பொய். பொய்யான இந்துத்துவத்தை உண்மையால் வீழ்த்த முடியும். உண்மை அனைவருக்கும் பொதுவானது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

படிக்க: தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்: கார்ப்பரேட் திட்டங்களால் கற்றல்திறன் உயரவில்லையா? || புமாஇமு

நீரவ் மோடி ,லலித் மோடி என பல்லாயிரம் கோடிகளை அரசு வங்கிகளில் கடன் வாங்கி விட்டு மோடிக்கும் அமித்ஷாவுக்கும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடவில்லை. இந்த கார்ப்பரேட் கும்பலுக்கு மட்டுமல்ல; ஹிண்டன் பார்க் அறிக்கை மூலம் பாசிஸ்ட் அதானிக்கு ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிச கும்பல் இந்த நாட்டையே தாரை வார்த்தது அம்பலமானது. இப்படிப்பட்ட சூழலில்தான்

ஆர். எஸ். எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் போராட்டங்களை ஒடுக்கவும் ராகுல் காந்தியை முடக்கவும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. சேத்தன் குமார் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

எத்தனை பொய் வழக்குகளைப் பதிவு செய்தாலும் சிறை, சித்திரவதைகள் விதிக்கப்பட்டாலும் ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக என்று முழங்குவோம்!
ஆர் எஸ் எஸ் – பாஜக பாசிச கும்பலின் பயங்கரவாதத்தை முறியடிக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம்!

தோழமையுடன்,
தோழர் சி .வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை விபத்து – முதலாளிகளின் லாபவெறியே காரணம்! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

23.03.2023

பத்திரிகை செய்தி

காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை விபத்து 10 தொழிலாளர்கள் பலி- 18 பேர் படுகாயம், கவலைக்கிடம்! முதலாளிகளின் லாபவெறியே காரணம்!

தமிழக அரசே!

லாபவெறிப்பிடித்த முதலாளியையும், துணை போன தொழிற்சாலை ஆய்வாளரையும் கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்! தண்டனை வழங்கு!

காஞ்சிபுரம் அருகில், குருவிமலை பட்டாசு ஆலையில் கொடூர விபத்து நடந்துள்ளது. அதில் 10 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 18 பேர் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் படுக்காயங்களுடனும் உறுப்புகளை இழந்தும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பலருக்கும் முற்றிலுமாக காது கேட்கவில்லை என்கின்றனர். இந்த சம்பவம் நேற்று 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நடந்துள்ளது. இந்த வெடிவிபத்து நிகழ்ந்த போது அந்த ஆலையை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையில் பெண்கள் அதிகமாக வேலை பார்த்துள்ளனர். இறந்தவர்கள் 7 பேர் பெண் தொழிலாளர்களும் ஒரு சிறுவனும் இறந்துள்ளார்கள்.

இந்த பட்டாசு ஆலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. இதே ஆலையில் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. மொத்தம் 40யில் இருந்து 45 பேர் வரை இந்த ஆலையில் வேலை செய்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு நடந்த விபத்திற்கு பிறகு மீண்டும் உரிமத்தை புதுபித்து இயக்க தொடக்கியுள்ளனர். இந்த ஆலையின் உரிமையாளர் நரேந்திரன் ஆஇஅதிமுக கட்சியில் செல்வாக்கு படைத்தவர் என்கின்றனர்.

தோழர்கள் நேரில் சென்று பார்த்த போது பட்டாசு ஆலை கட்டிடமே தரைமட்டமாகியுள்ளது. மக்கள் பலரும் தீயை அணைக்க முற்பட்ட போதும் முடியவில்லை என்றும் தொடர்ச்சியாக வெடித்து கொண்டே இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க தண்ணீரோ மண்ணோ எதுவுமே இல்லாமல் தவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி இருவர் உடல் கருகி இறந்துள்ளனர். நேரில் பார்த்தவர்கள் கை, கால்கள் துண்டு துண்டாகி தொழிலாளர்கள் இறந்ததை பார்த்து கடும் வேதனையை வெளிப்படுத்தினர். அந்த விபத்து வீடியோ காட்சிகளை பார்த்து கண் களங்காமல் இருக்க முடியாது. இதில் இருவர் எப்படி விபத்து நடந்தால் தப்பிக்க வேண்டும் என்று தெரிந்து தப்பியுள்ளனர். மேலும் ஊரில் ஒரு இறப்பு நடந்ததால் 12 பேர் வரை நேற்று வேலைக்கு செல்லவில்லை அதனால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். இல்லையென்றால் கூடுதல் உயிரழப்பு நிகழ்ந்திருக்கும் என்கின்றனர். எந்த வித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் தான் இந்த ஆலை இயங்கியுள்ளது என்பது இதிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.

படிக்க: அழகு சிறை பட்டாசு ஆலை வெடி விபத்து: வெடித்து சிதறிய ஆறு மனிதர்கள், அலட்சியமாக அரசு நிர்வாகம்!

இந்த பகுதியில் கொத்தனார், சித்தாள் வேலை கூட கிடைக்காமல், விவசாயமும், நெசவும் அழிந்த நிலையில் இந்த ஆலைக்கு வேறு வழியில்லாமல் வேலைக்கு செல்கின்றனர். அதிகப்படியாக மருந்துகள் இருந்தது இந்த விபத்திற்கு காரணம் என சிலரும், விழாக்காலங்களிலும், இறந்தால் வெடிக்கும் வீரியமிக்க பட்டாசுகள் அதிகம் இருந்ததாலும் தான் விபத்து நேர்ந்துள்ளது என்று சிலரும் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு தரப்பு ஆய்வாளரோ மின் கசிவால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். தோழர்கள் பார்த்தவரை எந்த மின் வயரும் துண்டாகி காணப்படவில்லை என்று கூறுகின்றனர். மேலும் சூரிய ஒளியில் தான் மின்சாரம் தயாரிப்பு நடந்துள்ளது.

இந்த பட்டாசு ஆலையில் எந்தவிதமாக பாதுகாப்பு விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு எந்த விபத்து காப்பீடோ, விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று முறையான பயிற்சியோ தரப்படவில்லை. மாவட்ட அளவில் இருக்கக்கூடிய தொழிற்சாலை ஆய்வாளர்கள் கண்டும் காணாமல் இருந்துள்ளதே இந்த கொடிய விபத்து நடந்ததற்கு காரணம்.

அரசுகள் தரப்பில் இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இது போன்ற தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துகள் நடந்த கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு இல்லாமல் லாபவெறிக்காக இயங்கும் பட்டாசு ஆலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா என கண்கானிக்காமல் இருந்த தொழிற்சாலை ஆய்வாளர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கொலைக் குற்றத்தின் வழக்கு போட வேண்டும். இந்த லாபவெறிப்பிடித்த முதலாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

முதலாளிகளின் லாபவெறிக்காக பட்டாசு ஆலையில் வேலை செய்த சாதாரண கூலித்தொழிலாளர்களையும், நெசவாளர் குடும்பத்தை சேந்தவர்களையும் பலி கொடுத்துள்ளனர். தொழிலாளி வர்க்கத்தின் உயிர் துச்சமாய் மாறியுள்ளதை எதிர்த்து உழைக்கும் மக்களே, உழைக்கும் வர்க்கமாய் ஒன்று திரள்வோம்! இந்த படுக்கொலைகளுக்கு எதிராக போராடுவோம்!.


தோழமையுடன்,
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
99623 66321

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்: வீரநினைவுகளை நெஞ்சிலேந்தி வீறுநடைபோடுவோம்! | வீடியோ

பகத்சிங்!
இன்று தூக்கிலிடப்பட்ட நாள்.
இல்லை!
கோடிக்கணக்கான இளைஞர்கள்
பகத்சிங்குகளாக
தட்டி எழுப்பபட்ட நாள்.

பகத்சிங் என்றால்
நமக்குத் தெரிந்தது,
இளம் வயதில்
தூக்கு மேடை ஏறியவன்.
தேச விடுதலைக்காக போராடியவன்
தியாகம் செய்தவன்.
அவ்வளுவுதானே!

வணிகம் செய்ய வந்த
பிரிட்டிஷ்காரன்
சொந்த நாட்டு மக்களை
அடிமைப்படுத்தியதையும்,
அதிகாரம் செலுத்தியதையும்,
அனைத்து வளங்களையும் சுரண்டி
தன்னுடைய நாட்டிற்கு
எடுத்துச் சென்றதையும் கண்டு
கோபம் கொண்டவன்தான்
பகத்சிங்.

தன்னுடைய
விடுதலைக்காகப் போராடிய
இந்திய மக்களை
ஜாலியன் வாலாபாக் எனும் இடத்தில்
படுகொலை செய்த
பிரிட்டிஷ் அதிகாரிகளை கண்டு
சினம் கொண்ட சிறுவன் அவன்.

அந்தப் படுகொலையின்
ரத்தம் தோய்ந்த மண்ணை
உற்று நோக்கி
உணர்வேற்றிக் கொண்டவன்.

இனி நம்முடைய வேலை
கோடானுக்கோடி உழைக்கும் மக்களின்
விடுதலைதான் என
சிந்தனை தெளிவுடன்
மனப்பூர்வமாக
பொறுப்புகளை
தன் தோள்களில் சுமந்தவன்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி

மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

ந்த நாட்டுக்கு மலையக தமிழ் மக்கள் கொண்டுவரப்பட்டு இருநூறு வருடங்கள் ஆகின்ற நிலையில் மலையக மக்களின் தேசிய இன உரிமைகளை மறுக்கும் விதமாக அவர்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என்று அழைப்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

யாழ் நண்பர்கள் அமைப்பு இந்திய தூதரகத்துடன் இணைந்து மலையக தேசிய இனத்தை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என்று குறிப்பிட்டிருப்பது ஒரு வரலாற்றுத் மோசடியாகும். இந்திய மேலாதிக்கத்தின் விஸ்தரிப்பிற்காக யாழ் நண்பர்கள் அமைப்பு மலையக தேசிய இனத்தை கொச்சைப்படுத்தி அவர்களின் தேசிய இன அடையாளத்தை மறுத்துச் சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியதாகும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா. செந்திவேல் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, மலையக மக்கள் 1823 ம் ஆண்டு தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் தென் இந்தியாவிலிருந்து கொலனித்துவ கூலி அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இருநூறு ஆண்டுகள் இவ்வருடத்துடன் நிறைவடைகிறது. தொழிற்சங்கங்கள், முற்போக்கு அமைப்புகள், இடதுசாரி சக்திகள், புத்திஜீவிகள் எனப் பலரும் மலையக மக்களின் தீர்க்கப்படாமல் இன்றும் தொடரும் பிரச்சனைகள் பற்றி குரல் கொடுத்து வருகிறார்கள். மலையக மக்களின் தனித்துவத்தை வலியுறுத்தி வருகிறார்கள், இச்சூழலில் இலங்கை வாழ் இந்திய தமிழர் என அடையாளப்படுத்துவது பல்வேறு உள்நோக்கங்களை கொண்டதாகும்.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி மலையக மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தை நெடுங்காலமாக முன்னெடுத்துவருகிறது. மலையக மக்களை நான்கு தேசிய இனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கும் படி அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. 1990கள் தொடக்கம் இந்தக் கோரிக்கைக்காகப் போராடும் நாம் நல்லாட்சி என சொல்லப்பட்ட அரசாங்க காலத்தில் கட்சி சமர்பித்த யாப்பு சீர்த்திருத்தத்திற்கான முன்மொழிவுகளிலும் இவ்விடயத்தை ஆணித்தரமாக சுட்டிக்காட்டியிருந்தோம்.

குடியுரிமை மறுக்கப்பட்டு, காணி, வீடு, கல்விபுலம் உட்பட ஏனைய சிவில் சமூகங்களுக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட தேசிய இனமான மலையக மக்களை இப்போது இந்திய வம்சாவளி தமிழர் என்று விழிப்பது கண்டனத்துக்குரியது.

யாழ் முற்போக்கு அமைப்புகளும், பொதுமக்களும் மலையக மக்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த புதிய ஒடுக்குமுறைக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும். மலையக மக்கள் மீது அக்கறையுள்ள அனைவரும் இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதோடு அனைவரும் இலங்கை மக்களாகிய மலையக தேசிய இனத்தின் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

மத்திய குழு சார்பாக,
சி.கா. செந்திவேல்
பொதுச்செயலாளர்.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி.

‘இலவச’ எதிர்ப்பும் சமூக நலத்திட்ட ஒழிப்பும்!

ரசியல் கட்சிகள் தேர்தலில் இலவசங்களை அறிவிப்பதற்குத் தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, இலவசங்களுக்கு எதிராக வாதாடிக் கொண்டே, டிசம்பரில் நடக்கவிருக்கும் குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத் தேர்தல்களையொட்டி இலவச திட்டங்களை அறிவித்திருக்கிறது பாஜக. இதன்மூலம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது மட்டுமல்ல, சொல்லொன்றும் செயலொன்றுமாக இருப்பதே பார்ப்பனியத்தின் சிறப்பியல்பு என்பதை பா.ஜ.க நிரூபித்து வருகிறது.

“நாட்டின் பொருளாதாரத்தை இலவசங்கள் அழிக்கின்றன” என்றும்; “தேர்தலின்போது சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளைத் தடுக்கும்” என்றும்; “இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகின்றனர்” என்றும் அண்மைக்காலமாக திருவாளர் மோடி பல கூட்டங்களில் பேசிவருகிறார்.

மாநில அரசுகள் – கட்சிகள் தமது வாக்கு வங்கிக்காக இலவசத் திட்டங்களை அறிவித்து நாட்டை நாசம் செய்கின்றன என்ற வகையிலான விவாதங்களுக்கு இவை மீண்டும் தூண்டுகோலாக அமைந்துள்ளன.

டெல்லி பா.ஜ.க.வின் நிர்வாகியான அஸ்வினிகுமார் உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், “தேர்தலின் போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி கொடுக்கிற கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தாலும் கூட, “இலவசங்கள் நாட்டின் மிக முக்கியமான பிரச்சினை என்றும், இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கின்றன” என்றும் தன் பங்கிற்கு பா.ஜ.க சார்பாக பேசிவிட்டு,  “இலவசங்கள் குறித்து ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும்” என்று உத்தரவிட்டுள்ளது. 2013 எஸ்.சுப்பிரமணியம் பாலாஜி வழக்கில், இலவசங்களை சட்டவிரோத நடவடிக்கையாக அறிவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்தது; அத்தீர்ப்பையும் மறுபரீசிலனை செய்யக்கோரி மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு இவ்வழக்கை மாற்றியது.

படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | காணொலி

இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, “பெரும்பாலான நிதிகள் இலவசங்களுக்கு செலவிடப்படுவதால் மக்களுக்கு குறைந்த செலவில் கல்வி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தித்தர முடிவதில்லை” எனக் கூறியிருக்கிறார் ரிசர்வ் வங்கியின் நிதிக்குழு உறுப்பினர் அசீமா கோயல்.

உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி மட்டுமல்ல தானும்கூட பா.ஜ.க.வின் கிளைப்பிரிவுதான் என்பதை நிரூபிக்கும் விதமாக தேர்தல் ஆணையமும் இந்தக் கோதாவில் இறங்கியது. “தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதும் ஆட்சிக்கு வந்தபிறகு அதனை செயல்படுத்துவதும் அந்தந்தக் கட்சிகளின் கொள்கை முடிவு. அதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது” என ஏப்ரல் மாதத்தில் கூறியிருந்த உச்ச நீதிமன்றம், அடுத்த ஒரு மாதத்திலேயே தன்னுடைய முடிவை பரிசீலிப்பதாகக் கூறியது.

அக்டோபரில், “இலவச வாக்குறுதிகளால் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தை தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இனி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கும் இலவசங்களுக்கான நிதி ஆதார விவரங்களை அளிக்க வேண்டும்” எனக் கூறியது.

அடுத்த நாளே ஒன்றிய சட்டத்துறை அமைச்சர், தேர்தல் சட்டங்களை மாற்றியமைக்க தேர்தல் ஆணையத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார். இதன் மூலம் மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து தங்களுக்குச் சாதகமான வகையில் தேர்தல் சட்டங்களை மாற்றியமைக்க முயற்சித்து வருவதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இலவசங்கள், நலத்திட்டங்களுக்கு எதிராக இவ்வளவு மூர்க்கமாக பாரதிய ஜனதா கட்சி ஓலமிட என்ன காரணம்? உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் என வரிசை கட்டி நிற்க வேண்டிய அவசியம் என்ன?

இலவசங்கள் எனப்படும் கவர்ச்சிவாதத் திட்டங்கள் இருவகைகளில் காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலை எரிச்சலூட்டிக் கொண்டிருக்கின்றன.

படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | துண்டறிக்கை!

முதலாவது, சட்டப்பூர்வ வழிகளில் ஒற்றையாட்சியை நோக்கி நகர்ந்து வரும் பா.ஜ.க.வுக்கு மாற்றாக, அகில இந்திய அளவில் போட்டிபோடும் அளவுக்கு காங்கிரஸ் வலிமையுடன் இல்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக, மே.வங்கத்தில் திரிணாமுல், தெலுங்கானாவில் பாரதிய (தெலுங்கானா) ராஷ்ட்ரிய சமிதி, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் கேரளத்தில் சி.பி.எம் போன்று மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ளன. அக்கட்சிகளின் வாக்குவங்கிக்கும் மக்கள் செல்வாக்கிற்கும் அவர்கள் செயல்படுத்திவரும் கவர்ச்சிவாத மற்றும் சமூகநலத்திட்டங்களே அடிப்படையாக இருக்கின்றன.

இரண்டாவதாக, இந்தத் திட்டங்களுக்கு ஒன்றிய – மாநில அரசுகள் சார்பில் சில லட்சம் கோடிகள் செலவிடப்பட்டு வருகின்றன. அம்பானி – அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளி வர்க்கமானது இந்தச் செலவை வெட்டிச்செலவு எனக் கருதுகிறது. சேவைகளை எல்லாம் காசாக்கிக் கொள்ளையிடுவதற்குத் தடையாக இருப்பதால் சமூக நலத்திட்டங்களை எதிர்க்கின்றனர். இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்களுக்கு அரசு செலவிடும் தொகையை நிறுத்தி, அவற்றை நேரடியாக தமக்கே கொடுத்து, தமது சொத்துக்களைப் பெருக்க உதவ வேண்டும் எனக் கருதுகின்றனர். எனவே தான், தமது அடியாட்படையைக் களமிறக்கி விட்டு இலவச எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

மாநிலக் கட்சிகளின் செல்வாக்கைக் குறைக்க வேண்டுமானால், அவர்கள் அறிவித்து நடைமுறைப்படுத்தி வரும் இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்களையும், சமூக நலத்திட்டங்களையும் முடக்க வேண்டும் என்பதை பா.ஜ.க முன்பே புரிந்துகொண்டு விட்டது. ஜி.எஸ்.டி மூலமும், எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் பங்கிடப்படாத வரியை அதிகரிப்பதன் மூலமும் மாநில அரசுகளின் வருவாயைக் குறைத்து வருகிறது. இதன் காரணமாக, தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற கவர்ச்சிவாத திட்டங்களையோ, சமூக நலத்திட்டங்களையோ நடைமுறைப்படுத்தும் அளவுக்குத் தங்களுக்கு வருவாய் இல்லை என்று மாநில அரசுகள் புலம்புவதும், மக்கள் மீதான வரிகளை அதிகரிப்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடுகளே இதற்குச் சிறந்த சான்று.

வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோதும், மக்கள் மீது வரிச்சுமை ஏறும்போதும் ஆட்சியில் இருக்கும் மாநிலக் கட்சிகள் மீதான வெறுப்பு மக்களிடையே அதிகரிப்பது தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது. மாநில அரசு அறிவித்த திட்டங்களை எல்லாம் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை, இவர்கள் மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதற்காக மட்டுமே இப்படி வாக்குறுதி கொடுத்தனர் என அவ்வப்போது பா.ஜ.க.வினர் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இவர்களை சமாளிக்க மாநில அரசு ஏதேனும் இலவச அல்லது நலத்திட்டத்தை அறிவித்தாலும்கூட, மக்களிடம் கூடுதலாக வரி விதித்தே அதற்கான செலவை சமாளிக்க வேண்டியுள்ளது. இந்த நச்சுச்சுழலில் இருந்து வெளிவர முடியாதபடி மாநிலக் கட்சிகள் சிக்கியுள்ளன.

அதே நேரத்தில், இக்கட்சிகளோடு போட்டியிட்டு வெற்றிபெற வேண்டுமானால், தாங்களும் இதுபோன்ற இலவச – கவர்ச்சிவாத அறிவிப்புகளை வெளியிடுவதும், சிலவற்றைச் செய்து கொடுப்பதும் அவசியம் என்பதையும் பா.ஜ.க.வினர் உணர்ந்தே இருக்கின்றனர். எனவே தான், இலவசங்கள் நாட்டை அழிக்கின்றன என்று மோடி ஓரிடத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே, குஜராத்தில் ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசம் என்று அறிவிக்கின்றனர். குஜராத் மட்டுமின்றி உத்தரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இலவசத் திட்டங்களை அறிவித்தும், நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். அவ்வளவு ஏன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் செலுத்தும் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது மோடி அரசு. இன்னொரு வாக்குறுதியான, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, குறைந்தபட்ச ஆதார விலையை இருமடங்காக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க: மதுரை: மே 1 மாநாடு ஆலோசனை கூட்டம்

தமது ஒற்றைச் சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டுமானால், இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்களையும், மக்கள் நலத் திட்டங்களையும் முற்றாக ஒழிப்பது அவசியமான தாயாரிப்புகளில் ஒன்று என்று பா.ஜ.க. கருதுகிறது; அவர்களது தற்போதைய வழிமுறை சட்டப்பூர்வ வாய்ப்புகளைப் பயன்படுத்துவதாக இருப்பதால், இந்த வாய்ப்பின் ஊடாக மாநிலக் கட்சிகளுடனான போட்டியில் வெல்வதற்கு, தாமும் இத்தகைய திட்டங்களை – தற்காலிகமானது என்றாலும்கூட – அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மற்றபடி அவர்களது இயல்பே, கவர்ச்சிவாத திட்டங்களை வழங்கி வெல்லும் ஆம் ஆத்மியின் டெல்லி மாடல் அல்ல. சாதி – மத மோதல்களால் மக்களைப் பிளவுபடுத்தி வெல்லும் குஜராத் – உ.பி மாடலே.

தாங்கள் நடைமுறைப்படுத்துபவை இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்கள் அல்ல, அவையெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நலத்திட்டங்கள் தான் என்கிறது பா.ஜ.க,. இதையே தான் திமுகவும், ஆம் ஆத்மியும் சொல்கின்றன. இலவசங்களையும் நலத்திட்டங்களையும் தங்களால் பிரித்துப் பார்க்க முடியுமென உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

ஆனால், உண்மையில் இக்கட்சிகளுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் துளியேனும் அக்கறை இருக்கிறதா? அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி – மருத்துவம் – குடிநீர், மிகக்குறைந்த செலவில் தங்குமிடம் – போக்குவரத்து – தகவல் தொடர்பை உத்தரவாதம் செய்ய, அனைவருக்கும் வேலை கொடுக்க எந்தக் கட்சிக்கும் திட்டமும் விருப்பமும் இல்லை என்பதே உண்மை.

ஏனெனில், இத்திட்டங்கள் அனைத்துமே கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானவை. இந்தப் புள்ளியில் தான் எல்லாக் கட்சிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒன்றுபட்டுள்ளன. இதற்காகவே ஆட்சி செய்து வருகின்றன. மக்கள் நலத்திட்டங்களை ஒழித்துக்கட்டுவதையும், சேவைத்துறையிலிருந்து அரசு விலகிக் கொண்டு, தனியாருக்குத் தாரை வார்ப்பதுமே தனியார்மயத்தின் இலக்கு. இந்த வரம்பை மீறும் எவரும் தேர்தல் அரசியலில், அதிகாரத்தில் நீடித்திருக்க முடியாது.

அதனால் தான், சேவைத்துறைகளைக் கார்ப்பரேட் கொள்ளைக்குத் திறந்துவிடும் திட்டங்களை ஒன்றிய அரசு நடைமுறைக்குக் கொண்டுவரும்போது, மாநில அரசுகள் முணுமுணுப்புடன் ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றன. புதிய கல்விக்கொள்கை, தொழிலாளர் நலச் சட்டத்திருத்தங்கள், மின்சார மசோதா போன்றவற்றை இதற்கு சான்றாகக் குறிப்பிடலாம்.

இலவசங்களை எதிர்த்த அஸ்வினி உபாத்யாயாவின் வழக்கில் தன்னை இணைத்துகொண்ட திமுக-வின் மனுவில், சாதாரண மக்களுக்குச் செய்வதை இலவசம் என கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.வானது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மானியமாகவும், கடன் தள்ளுபடியாகவும் பல இலட்சம் கோடிகளை வாரிவழங்கியதை அம்பலப்படுத்தியது. இதனால், தானும் அதே பாதையில் செல்வதை தி.மு.க. கைவிடுகிறது என்று அர்த்தமில்லை. இது பா.ஜ.க.வை அரசியல் அரங்கில் அம்பலப்படுத்தி, அதன் வேகத்தை மட்டுப்படுத்துவற்கான ஓர் உத்தி மட்டுமே.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி நாட்டையே கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது; இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் சூறையாடத் திறந்து விடுவது; சேவைத்துறைகளைத் தனியார்மயமாக்குவது; நலத்திட்டங்கள் அனைத்தையும் முற்றாக நிறுத்துவது என்ற போக்கில் நாட்டை மறுகாலனியாக்குவதே ஆளும் வர்க்கங்களின் திட்டமாகும்.

இதற்கு இசைவாகத்தான் கார்ப்பரேட்டுகள், காவி கும்பலோடு இணைந்து அரசையும் சமூகத்தையும் பாசிசமயமாக்கி வருகின்றனர். தமது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றத் தடையாக இருப்பவற்றை, சட்டப்பூர்வ வழிகள் மூலமாகவே தகர்த்து வருகின்றன காவி – கார்ப்பரேட் பாசிச சக்திகள். இதன் ஒரு பகுதியாகவே இலவச – கவர்ச்சித் திட்டங்களை எதிர்த்து வழக்காடுவது, எதிர்ப்பிரச்சாரம் நடத்துவது, மாநிலக் கட்சிகளை அம்பலப்படுத்துவது ஆகியவற்றைச் செய்து வருகின்றன. அவர்களது இலக்கு, இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்களை ஒழிக்கும் பெயரில் மக்கள்நலத் திட்டங்களையும் ஒழித்து மக்களை ஓட்டாண்டிகளாக்குவதே என்பதைத் அம்பலப்படுத்தி முறியடிப்பது நமது கடமை. பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் – தேர்தல் அரசியல் கட்சிகள், மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக செயல்திட்டத்தை முன்வைப்பதன் மூலமே மக்களை அணிதிரட்ட முடியும், பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த முடியும்.

(புதிய ஜனநாயகம் நவம்பர் 2022 இதழ்)

அமீர்

தேர்தலே நடத்தக்கூடாது என்பதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம்! | சந்தோஷ் – திவிக

பிரதமர் ஒரு அறிக்கையை வாசிக்கிறார்; நாடு முழுக்க ஒரே கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று கூறுகிறார். மாநாலங்களின் எலும்புகள் உடைந்தெறிந்து நரம்புகளை அறித்தெறிந்திருக்கிறார்கள்.தேர்தல் என்றால் அது ஒரே தேர்தலாகத்தான் இருக்க வேண்டும் அதன்பின் தேர்தல் நடத்த தேவையில்லை என்பதுதான் பாசிஸ்ட்டுகளின் ஒரே நோக்கம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

‘Freebie’ Antagonism and Abolition of Social Welfare Schemes!

The BJP has filed a case in the Supreme Court seeking a ban on political parties from announcing freebies in elections, even though it had announced freebies ahead of the Gujarat and Himachal Pradesh elections held on December 2022. By this, the BJP is proving its Brahministic character of words differing from its actions.

“Freebies are destroying the country’s economy”; “Selfish announcements of freebies will prevent the country from becoming self-reliant, increase burden on honest taxpayers and prevent investment in new technologies”, PM Modi said. “Today, in our country, attempts are being made to collect votes by distributing free revdis (freebies)”, Modi said at several meetings in the recent past.

These are triggers for discussions that the state governments and the state parties are destroying the country by announcing freebies for their vote bank.

A PIL was filed in the Supreme Court by Ashwini Kumar Upadhyay, an office bearer of the Delhi BJP, seeking a direction to the Election Commission of India (ECI) to freeze the election symbol or cancel the registration of a political party that promises or distributes “irrational freebies” from public funds before elections.

Even though the court refused to revoke the recognition of the parties, it said that “ debate on freebie issue important for country’s welfare”; the Court spoke for its part on behalf of the BJP and ordered that a committee would be set up to look into the freebies. In the 2013 S Subramaniam Balaji vs Government of Tamil Nadu case, the Supreme Court had earlier ruled that promises made by political parties, including the promise of free gifts, cannot be called bribery or corruption; but the case was referred to a three-judge bench seeking re-examination of the verdict.

Also Read: Saffron-Corporate coalition regime looting the country!

While these discussions are going on, RBI Monetary Policy Committee member Ashima Goyal said, “Freebies are never free… specially harmful are subsidies that distort prices. Freebies come at the cost of low quality health, education, air and water that hurt poor the most”.

Not only the Supreme Court and the Reserve Bank, but the Election Commission also stepped in to prove that it was also a wing of the BJP. “Offering/distribution of any freebies either before or after the election is a policy decision of the party concerned. The Election Commission cannot regulate state policies and decisions”, the Election Commission of India (ECI) told the Supreme Court in April. In the very next month the ECI said that it would re-consider its decision.

In October, the ECI said, “Empty poll promises have far-reaching ramifications. We cannot overlook the undesirable impact inadequate disclosures on election promises have on financial sustainability”. Further, it  proposed to amend the model code and require political parties to provide the financial viability of their electoral promises.

The very next day, the Union Law Minister said that the government was in talks with the Election Commission to amend the election laws. From this, we can understand that the Central Government and the Election Commission are working together to change the electoral laws in their favour.

Why is the BJP shouting so ferociously against freebies and welfare schemes? What is the need for the Supreme Court, the Reserve Bank of India and the Election Commission to line up?

Also Read: Thalavadi forest: Tribals threatened by Tiger Reserve and Corporate Interest!

The charismatic schemes known as freebies are irritating the saffron-corporate fascist clique in two ways.

First, the Congress is not strong enough to compete at the all-India level as an alternative to the BJP, which is moving towards unitary rule through legal means. At the same time, regional parties like the DMK in Tamil Nadu, the Trinamool in West Bengal, the Bharatiya (Telangana) Rashtra Samithi in Telangana, the Biju Janata Dal in Odisha, the Janata Dal (United) in Bihar and the CPI(M) in Kerala are strong at state levels. The vote bank and popularity of these parties is based on the charismatic and social welfare schemes that they are implementing.

Secondly, a few lakh crore rupees is being spent on behalf of the Union and state governments on these schemes. The corporate bourgeoisie, including the Ambani-Adani, regards this expenditure as useless. They are opposed to social welfare schemes because they are an obstacle to their looting in service sector. They want the government to stop spending on free – charismatic schemes and give it directly to them to help increasing their assets. That is why they have fielded their henchmen and are staging a anti-freebie protest drama.

The BJP had already understood that if it has to reduce the influence of the regional parties, it will have to stall the free-charismatic schemes and social welfare schemes that they are announcing and implementing. The BJP has been reducing the revenue of the state governments through GST and by increasing the non-shared tax levied on fuels. Because of this, state governments are constantly lamenting that they do not have enough revenue to implement either the charismatic schemes or social welfare schemes mentioned in their election promises; and as a result they increase taxes on the people. The performance of the DMK-led government in Tamil Nadu is a good example of this.

Fulfilling the election promises require mounting of the tax burden on the people. So, it is inevitable that the hatred towards the state parties in power will increase among the people. From time to time, the BJP has been asking why all the schemes announced by the state government have not been implemented. The BJP further says that the state governments have made such promises only to deceive the people and get votes. Even if the state government announces any free or welfare scheme to deal with them, the cost has to be met by levying additional taxes on the people. The state parties are trapped in this vicious cycle.

At the same time, the BJP is also aware that if they have to compete with these parties and win, they too have to make such free – charismatic announcements. That is why, while Modi is talking at one place that freebies are destroying the country, they are announcing that two cylinders a year will be provided free of cost in Gujarat. Apart from Gujarat, states like Uttar Pradesh and Himachal Pradesh are also announcing and implementing freebies. During the last Lok Sabha elections, the Modi government had announced and implemented a scheme to deposit Rs. 6,000 annually into the bank accounts of farmers. It is to be noted that their another promise of doubling the minimum support price (MSP) to double the income of farmers has not been implemented.

Also Read: Kavuthi – Vediyappan twin hills : Continuing protests against corporate plundering !

The BJP considers that the complete abolition of free-charismatic schemes and welfare schemes is one of the vital preparations if its single-party dictatorship is to be established; since their current method involves making use of legal means to win the competition with the state parties, they themselves are forced to announce such schemes – even if they are temporary. Otherwise, their very nature is not the Aam Aadmi Party’s Delhi model of winning with charismatic schemes. Their model is the Gujarat-UP model of dividing the people over caste-religious conflicts and winning.

The BJP says that what it is implementing is not free – charismatic schemes, they are welfare schemes that meet the basic needs of the people. This is what the DMK and the Aam Aadmi Party are saying. The Supreme Court says that it can distinguish between freebies and welfare schemes.

But, do these parties and the Supreme Court have the slightest interest in implementing social welfare schemes that meet the basic needs of the people? The fact is that no party has the plan or willingness to provide jobs to all, to ensure quality and free education – healthcare – drinking water for all,  provide shelter – transportation – communication at a very low cost.

This is because all these schemes are totally against the interest of the corporates. It is at this point that all the parties unite directly and indirectly. This is why they are ruling; the goal of privatization is to abolish welfare schemes of the people and to ensure that the government withdraws from the service sector and hand it over to the private sector. Anyone who crosses this limit cannot remain in power or in electoral politics.

That is why, when the Union government implements schemes that open up the service sector to corporate loot, the state governments are grumblingly accepting and implementing them. The new education policy, the labour laws, the Electricity Bill, etc., can be cited as examples of this.

The DMK’s plea of implicating itself in Ashwini Upadhyay’s case against freebies, exposed the fact that the BJP, which demeans what is done to the common man as freebie, has given lakhs of crores of rupees to the corporate capitalists as subsidies and loan waivers. This does not mean that the DMK has decided not to go along the path of serving the corporates. This is only a strategy to expose the BJP on the political stage and limit its pace.

Implementing the policies of privatization – liberalization – globalization and turning the country into a hunting ground for corporate capitalists; opening up the natural resources and human labour to the plundering; privatization of the services sector; completely halting all welfare schemes: this is the plan of the ruling classes to recolonize the country.

It is in line with this that the corporates, along with the saffron clique, are fascistizing the state and society. The saffron-corporate fascist forces are smashing the hurdles which prevent them from fully implementing their plans through legal means. As a part of this, they are fighting against free – charismatic schemes, counter-campaigning and exposing regional parties. Their aim is to abolish the welfare schemes in the name of eradicating the freebies and turn the people into paupers. Only by presenting an anti-fascist democratic agenda that includes welfare schemes, anti-fascist democratic forces – electoral political parties can mobilize the people, and also expose the hypocrisy of the BJP.

Ameer

நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி – அதானிகளுக்கு அமிர்தகாலம், உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!

டப்பு ஆண்டில் உலகின் பல நாடுகள் பொருளாதார மந்தநிலையை சந்திக்க நேரிடும் என முதலாளித்துவ அறிஞர்கள் கூறிவருகின்றனர். அதை முன்னறிவிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடி வருகிறது. இந்திய பொருளாதாரமோ வெகுவிரைவாக நெருக்கடியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து ஆட்டம் கண்டு வருகிறது. அதிகரிக்கும் பணவீக்கம், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற காரணங்களால் சாதாரண உழைக்கும் மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்; வறுமை, பசி, பட்டினி மற்றும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில்தான், 2023-24 ஆம் ஆண்டுகான நிதிநிலை அறிக்கை ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில், மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவினங்களை வெட்டிச் சுருக்கி, கார்ப்பரேட் கும்பல்களுக்கு சலுகைகளை வாரியிறைத்துள்ளதன் மூலம் மோடி அரசு தனது வர்க்க பாசத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

படிக்க : ஏகாதிபத்திய சுரண்டலுக்கு துணைபுரியும் இந்திய பார் கவுன்சில்!

இதன் காரணமாக, இந்த நிதிநிலை அறிக்கையை கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்றிப்போற்றி வரவேற்கின்றனர். கவின்கேர் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன், “இந்த பட்ஜெட்டை நான் பாசிட்டிவ் பட்ஜெட்டாகவும், அனைவருக்கும் சாதகமான பட்ஜெட்டாகவும் பார்க்கிறேன்” என்று கூறியிருப்பது அதற்கு ஓர் சான்றாகும்.

நடுத்தர வர்க்கத்தை ஏய்க்கும் கவர்ச்சி அறிவிப்பு

பா.ஜ.க அரசும் அதன் எடுபிடிகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதை, நடுத்தர வர்க்கத்தினருக்கு அளித்த மிகப்பெரும் சலுகையாக பீற்றிக் கொள்கிறார்கள்.

பழைய வரிமுறையில் வருமான வரி செலுத்துவோருக்கான உச்சவரம்பை இரண்டரை லட்சத்திலிருந்து மூன்று லட்சமாகவும், புதிய வரிமுறையில் வருமான வரி செலுத்துவோருக்கான உச்சவரம்பை ஐந்து லட்சத்திலிருந்து ஏழு லட்சமாகவும் அதிகரித்து உள்ளது மோடி அரசு.

புதிய வரிமுறையில் வருமான வரி செலுத்துவோருக்கான உச்சவரம்பை ஏழு லட்சமாக உயர்த்தியதன் மூலம், பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரை இவ்வரிமுறையை நோக்கி ஈர்க்கிறது மோடி அரசு. பழைய வரிமுறையில் வருமான வரி செலுத்துவோருக்கு சேமிப்புகள் மற்றும் காப்பீடுகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன.

புதிய வரிமுறையில் இச்சலுகைகள் கிடையாது. இதன்மூலம் நடுத்தர வர்க்கத்திடம் சேரும் நிதி உபரியை சேமிக்க ஊக்கப்படுத்தாமல், செலவு செய்யத் தூண்டுவதுதான் இச்சலுகையின் நோக்கம். இது கார்ப்பரேட்டுகளின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சியாகும்.

உழைக்கும் வர்க்க விரோத நிதிநிலை அறிக்கை

வரிச்சலுகையின் மூலம் நடுத்தர வர்க்கத்தைக் கவர்ந்துள்ள பா.ஜ.க, ஏழை – அடித்தட்டு உழைக்கும் மக்களை வறுமைக்கும் பட்டினிச் சாவுக்கும் தள்ளும் வகையில், இந்த நிதிநிலை அறிக்கையை வடிவமைத்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு; உணவு, உரம், பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் ஆகியவற்றைக் கணிசமாக வெட்டியுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதியை விட ரூ.29,400 கோடி குறைவாகும். உணவு மானியத்திற்காக ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இது மூன்றில் ஒரு பங்கு வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையிலேயே கிட்டதட்ட பாதி அளவுக்குத்தான் செலவழிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்படும் அற்ப நிதியும் நடைமுறையில் முழுமையாக பயன்படுத்தப்படாது என்பதே உண்மை.

2022-23 நிதிநிலை அறிக்கையில், விவசாயப் பொருட்களுக்கு சந்தையில் ஆதார விலை குறையும்போது, நட்டமடையும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தொகை சகிக்க முடியாத அளவுக்கு வெட்டிச் சுருக்கப்பட்டு வெறும் ரூ.1 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் உர மானியமும் குறைக்கப்பட்டுள்ளது. பி.எம் கிசான் (PM Kisan) போன்ற விவசாயிகளுக்கான பெயரளவிலான கவர்ச்சித் திட்டங்களும் படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகின்றன.

அடிப்படையிலேயே இது விவசாயி விரோத நிதிநிலை அறிக்கையாக இருக்கையில், வேளாண் துறையினருக்கு கடன் வழங்குவதற்காக 20 லட்சம் கோடி இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று தம்பட்டம் அடிக்கிறார் நிர்மலா சீதாராமன். விவசாயிகளுக்கு கடன் வழங்குவதையே மாபெரும் சாதனையாக, சலுகையாகக் காட்டுகிறார். ஆனால், இந்த விளம்பரம் கூட உண்மையில்லை, ‘வேளாண் துறையினருக்கு கடன்’ என்ற பெயரில் இவையெல்லாம், வேளாண் துறையில் கால்பதித்துள்ள கார்ப்பரேட்டுகளுக்கே வழங்கப்பட போகின்றன.

சிறுபான்மை மக்களை ஒதுக்கும் பாசிசத் திட்டம்

சிறுபான்மையின மக்களை நான்காந்தரக் குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களின் கல்வி மீது பெரும் தாக்குதல் தொடுத்துள்ளது பாசிசக் கும்பல். சிறுபான்மை நல அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, கடந்த ஆண்டை விட 38 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகைக்கான நிதி ரூ.1,425 கோடியிலிருந்து, ரூ.433 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மதரஸாக்களுக்கான கல்வித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி சென்ற ஆண்டை விட 93 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மேலும் பல சிறுபான்மையினர் நலத் திட்டங்களுக்கான நிதிகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

மாநில அரசுகள் ஒன்றியத்தின் காலனிகளாக…

மாநில அரசுகளுக்கு பிரித்து ஒதுக்க வேண்டிய நிதி அளவையும் படிப்படியாகக் குறைத்து வருகிறது மோடி அரசு. இதன்மூலம் மாநில அரசுகள் என்பவை, சுயேட்சையான அதிகாரமற்ற, ஒன்றியத்தின் நிர்வாக அலகுகளாக மாற்றப்பட்டுள்ளன.

14-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, ஒன்றிய அரசானது தனது மொத்த வரி வருவாயில் 42 சதவிகிதத்தை தர வேண்டும். மோடி அரசோ, இப்பரிந்துரைகளைக் கழிவறைக் காகிதமாகக் கூட மதிக்கவில்லை.

2021-22 நிதியாண்டில் ரூ.4.6 லட்சம் கோடி (31.2 சதவிகிதம்) ஒதுக்கிய மோடி அரசு, 2022-23 நிதியாண்டில் அதை ரூ.3.07 லட்சம் கோடியாக குறைத்தது. தற்போது அச்சொற்ப நிதியை மேலும் குறைத்துள்ளது.

அமிர்தகாலமும் ஆலகாலமும்!

சாதாரண உழைக்கும் மக்கள், விவசாயிகள், சிறுபான்மையினர் மற்றும் மாநில அரசுகள் மீது தாக்குதல் தொடுத்துள்ள மோடி அரசானது, கார்ப்பரேட் கும்பல்களுக்கு சலுகைகளை வாரியிறைத்துள்ளது.

தங்களுடைய எட்டு ஆண்டுகால ஆட்சியில், 10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி, வரிச்சலுகை, பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தூக்கிக் கொடுத்தல், காடு – மலை – கனிம வளங்களைக் கொள்ளையிட திறந்து விடுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கார்ப்பரேட்டுகளைக் குளிர்வித்த மோடி அரசு, இந்த நிதி அறிக்கையிலும் தனது சேவையைத் தொடர்ந்திருக்கிறது.

குறிப்பாக, ஆண்டுக்கு ஐந்து கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி சதவிகிதத்தை 37 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக குறைத்துள்ளது மோடி அரசு. இதன் மூலம் இப்பிரிவினரின் வருமான வரி விகிதமானது 42.7 சதவிகிதத்திலிருத்து 39 சதவிகிதமாக குறையும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சாதாரண உழைக்கும் மக்களுக்கு வரிச்சுமை, பணக்காரர்களுக்கு வரிச்சலுகை; இதுதான் காவி பாசிஸ்டுகளின் புதிய நீதி!

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களைப் புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதன் மூலம், வாகன விற்பனையை அதிகரிக்க வைப்பதுதான் இக்கும்பலின் நோக்கம். மேலும், மின்சார வாகன பேட்டரிகளுக்கான சுங்கவரியை 13 சதவிகிதமாகக் குறைத்துள்ளது; பேட்டரிகளில் லித்தியத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் ஐந்து எம்.எம்.டி (MMT – Million Metric Tons) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயித்து, அதற்காக ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை முழுவதும், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் கால்பதித்துள்ள அதானி குழுமத்தின் கைகளுக்குத்தான் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

***

மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்து கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரியிறைக்கும் இந்த நிதிநிலை அறிக்கையை முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களே கூட கடுமையாக விமர்சிக்கின்றனர்.

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், “நடுத்தர வர்க்கத்திற்கு எதிரான, பணக்கார சார்பு பட்ஜெட்” (Anti Middle class pro rich Budget) என்று விமர்சித்துள்ளார். பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, “பட்ஜெட் அற்ற பட்ஜெட்” (Non Budget) என்று வருணித்துள்ளார்.

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து சந்தைப் புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இப்பொருளாதார அறிஞர்களின் வாதம். ஆனால், ‘மோடினாமிக்ஸ்’ என்பது மக்களின் இரத்தத்தை உறிஞ்சி, கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுப்பது என்பதால், இவர்களின் வாதங்களை மோடி – நிம்மி கும்பல் கண்டுகொள்வதில்லை.

1990-களில் மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பெயரளவிலான மக்கள் நல அரசு கொள்கையும் ஒழித்துக்கட்டப்பட்டு வருகின்றன.

படிக்க : பாரிஸ் கம்யூனின் புரட்சிப்பாதையில் பீடுநடைபோடுவோம்!

கல்வி, குடிநீர், மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் பணியல்ல; மக்கள் நலத் திட்டங்களுக்கான மானியங்கள் படிப்படியாக வெட்டப்பட வேண்டும்; ஆறுகள், மலைகள், காடுகள் போன்றவை கார்ப்பரேட் கொள்கைக்காக திறந்துவிடப்பட வேண்டும்; அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும்; உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் கொள்ளைக்கான புரோக்கர்களாக மட்டும் அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதுதான் மறுகாலனியாக்கக் கொள்கை. இக்கொள்கையை மூர்க்கமாக அமல்படுத்துகிறது மோடி அரசு.

ஆக்ஸ்பார்ம் அறிக்கை மற்றும் உலகப் பட்டினிக் குறியீடு போன்ற ஆய்வு அறிக்கைகள் வெளியாகி மக்களின் அவலநிலையையும், வரலாறு காணாத சமூக – பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அம்பலப்படுத்திய பிறகும், இப்படிப்பட்ட மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள மோடி அரசின் செயல்பாடு, மறுகாலனியாக்கக் கொள்கையை எவ்வித ஒளிவுமறைவுமின்றி தீவிரமாக அமல்படுத்துவதுதான்.

‘சுதந்திர இந்தியா’வின் நூறாம் ஆண்டை (2047) நோக்கிப் பயணிக்கும் 25 ஆண்டுகளை (2023-2047), “அமிர்த காலம்” என்று குறிப்பிடுகிறது பா.ஜ.க. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தனது நிதிநிலை அறிக்கை தாக்கல் உரையில், “அமிர்த காலத்தின் முதல் நிதிநிலை அறிக்கை” என்று பெருமையாகக் கூறியுள்ளார். மோடியோ, “புதிய இந்தியாவிற்கான வலுவான அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கை” என்று கூறியுள்ளார்.

அமிர்த காலமும், புதிய இந்தியாவும் யாருக்கானது என்பதை, அமிர்த காலத்திற்கான முதல் பட்ஜெட் மூலமே கூறிவிட்டார்கள் காவி பாசிஸ்டுகள்.


புதிய ஜனநாயகம்
தலையங்கம்
மார்ச், 2023