Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 153

புதிய ஜனநாயகம் – மார்ச் 2023 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

மார்ச்– 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

♦ தலையங்கம்: நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி-அதானிகளுக்கு அமிர்தகாலம்! உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!
♦ “ஒரே நாடு ஒரே தேர்தல்” இந்துராஷ்டிர மயானவாயில்!
♦ ஆளுநர்கள் நியமனம்: அடிவருடிகளுக்கு பரிசு! அடியாள் வேலைக்கு பதவி!
♦ ஐ.ஐ.டி முதல் ஜே.என்.யூ வரை: பாசிசமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள்!
♦ நிக்கோபார் தீவுகளை அழிக்கவரும் ‘வளர்ச்சி’த் திட்டங்கள்!
♦ வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம்! காரணம் என்ன? வடமாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?
♦ அமெரிக்காவில் வேர்பரப்பும் காவி பாசிசக் கும்பல்!
♦ ‘சாட் ஜி.பி.டி’ – டிஜிட்டல் ஏகபோகங்களிடையே ஒரு புதிய போட்டாபோட்டி!
♦ “உன் நெருக்கடியை என் தலையில் சுமந்தாதே!” கொதித்தெழுந்த பிரான்ஸ் – பிரிட்டன்

Let’s ban the fascist BJP which is trying to create riots | People’s Power condemnation

04.03.2023

Let’s ban the fascist BJP which is trying to create riots by spreading rumours
that the North Indians are being attacked in Tamil Nadu!

People’s Power condemns!

It has now been exposed that it was the fascist Bharatiya Janata Party (BJP) that conspired to spread rumours against Tamil Nadu through the north Indian media and social media for the last two to three days.

Prashant Umrao, spokesperson of the Uttar Pradesh BJP, has deliberately spread the fake news that 12 Bihar workers were beaten to death in Tamil Nadu for speaking in Hindi. This is a conspiracy to project the people of Tamil Nadu as enemies against other nationalities.

The fascist BJP and the north Indian media are conspiring to create a communal riot in Tamil Nadu by systematically spreading this fake news. The DGP of Tamil Nadu and the Chief Minister of Tamil Nadu have given a proper explanation regarding this. The fascist BJP has created a ruckus in the Bihar state Assembly alleging that the Biharis are being murdered in Tamil Nadu.

The history is that even during the times of the great anti-Hindi war, no Hindi-speaking person was attacked by the Tamils. The Tamils know how to distinguish between the working North Indians and the exploiting Marwari, Brahmin and Bania – Gujarati corporate capitalists.

A fascist from the BJP from Uttar Pradesh would spread rumours that Biharis are being murdered in Tamil Nadu. The north Indian media and the fascist BJP mob will spread the news all over India. The BJP will create ruckus in the Bihar Assembly and in Bihar. Annamalai will remain silent on all these and would simply say that the workers from the north are safe here in Tamil Nadu. What a drama this is!


Also Read: LPG cylinder prices hiked by the Union government!  |  New Democratic Labour Front Condemnation


This rumour is one of the tactics of the BJP – RSS to spoil Tamil Nadu, to encircle Tamil Nadu, to divide and rule the state in a conspiratorial way. The rumour that ‘Bihar workers were murdered in Tamil Nadu’ was spread to protect the Modi-Amit Shah fascist mob that has been exposed through the BBC documentary, the Hindenburg Report and the LPG cylinder price hike, and to ensure that an all India alliance against the Modi-Amit Shah fascist mob does not form.

For now, this rumour may have been refuted. But RSS-BJP fascist mob will continue to pursue this tactic. Spreading rumours and rioting and thereby capturing power and dividing the nationalities is the art of Modi – Amit Shah and the fascist mob. Seeman is a perfect tool for this Modi mob. That is why he refuses to speak about the exploitation of the working people by the North Indian and Tamil capitalists. Instead he is projecting the working North Indians as the enemies of the Tamils. So, the goals of the BJP and Seeman are the same.

Therefore, our main demand should be to ban the RSS-BJP fascist mob. People’s Power is not asking the Election Commission to ban fascist BJP-RSS organisations; we are demanding the people of Tamil Nadu to ban the RSS-BJP, which is working against Tamil Nadu, in every street and in every village. It’s time for the Tamil people to take the initiative.

With Comradeship,
Comrade Marudhu,
Spokesperson,
People’s Power.
Contact : 99623 66321

கோட்டா – நவீன வதைமுகாம்!

ராஜஸ்தான் மாநிலத்தின் சம்பல் ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது கோட்டா எனும் நகரம். நாட்டின் பல மாநிலங்களில் இருந்து ஆண்டிற்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (NEET) மற்றும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE) போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக இந்நகரத்தை நோக்கி வருகின்றனர். எனவே இந்நகரம் “இந்தியாவின் தனியார் பயிற்சித் துறையின் மையம்” (Coaching capital of india) என்று அழைக்கப்படுகிறது.

இ்ந்நகரத்தில் கிட்டதட்ட 150-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. மேலும், மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக 3,500-க்கும் மேற்பட்ட விடுதிகள் மற்றும் 22,000-க்கும் மேற்பட்ட ‘கட்டண விடுதிகள்’ (Paying guest hostels) செயல்பட்டு வருகின்றன.

இந்நகரத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்நிகழ்வாக உள்ளது. விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிலிட்டு, மாடியில் இருந்து குதித்து, நஞ்சுண்டு மற்றும் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சில நாட்களுக்கு முன், நீட் பயிற்சி வகுப்பில் இரண்டு வருடங்களாக படித்து வந்த உ.பி மாநிலம் பதாயுன் நகரை சேர்ந்த அபிஷேக் யாதவ்(17) மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

படிக்க : இணையவழி கல்வி உதவித் தொகை விண்ணப்பம்: பாதிக்கப்படும் ஆதிராவிடர்-பழங்குடி மாணவர்கள்!

கடந்த பத்து வருடங்களில் 121 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் மட்டும் 15 பேர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்து பேர். மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு, தற்கொலை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு, பயிற்சி நிறுவனங்கள் தங்கள் இலாப நோக்கத்திற்காக, மாணவர்களை மனிதத்தன்மையின்றி மற்றும் ஈவு இரக்கமின்றி நடத்துவதுதான் முக்கிய காரணம். குறுகிய காலங்களில் அதிகப்படியான பாடங்களை படிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு உள்ளாக்குவதுடன் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக தேர்வுகளையும் நடத்துகிறார்கள். இச்சுமையோடு மாணவர்கள் பள்ளிக்கூட கல்விக்காகவும் படிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் உள்ளார்கள்.

மாணவர்கள் தாங்கள் எப்போதும் ஒவ்வொரு மணி நேரமும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவதாகவும், ஒருநாள் இடைவெளி கூட ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பின்னால் தள்ளப்படலாம் என்று அச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதன் விளைவாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் படிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு உள்ளாவதாக கூறுகிறார்கள். விளையாட்டு போன்ற பொழுதுபோக்குகளில் இருந்து முற்றிலும் விலக்கப்பட்டு இயந்திரத்தை ஒத்த நிலைக்கு, அதாவது அதிகப்படியான நேரம் படிப்பது மற்றும் குறைந்த நேரம் தூங்குவது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது மாணவர்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாவதற்கு முக்கிய காரணமாகும்.

மேலும், இம்மன அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மாணவர்கள் சிறு வயதுடையவர்களாக இருக்கிறார்கள்; குடும்பத்தை விட்டும் பிரிந்து வாழ்கிறார்கள். இப்பயிற்சி நிறுவனங்களில் பெரும்பாலும் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து நான்கு முதல் ஐந்து வருடங்கள் பிரிந்து வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களும் தங்களுடைய தற்கொலைக் குறிப்பில், தற்கொலைகளுக்குக் காரணமாக பயிற்சி நிறுவனங்களை குற்றம் சாட்டியுள்ளனர். அபிஷேக் யாதவ் என்ற மாணவர், படிப்பின் காரணமாக மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியுள்ளார். மற்றொரு மாணவர் பயிற்சி நிறுவனங்களை விரைவில் மூடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள், அதிகப்படியான மாணவர்கள் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் எனக்கூறி, மின்விசிறியில் மாற்றங்களை செய்து வருகின்றன. கம்பிச்சுருள் (Metal spring) பொருத்தப்பட்ட மின்விசிறிகள் அறைகளில் பொருத்தப்பட்டுள்ளன. இது 20 கிலோ வரை மட்டும் தாங்கும் திறன் கொண்டது. எனவே மாணவர்கள் மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முடியாது எனக் கூறுகின்றன.

மாணவர்களின் தற்கொலையை தடுப்பதாகக் கூறி, மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக்கொள்ளும் மாணவர்களை இழிவுபடுத்துகின்றனர். இந்நிறுவனங்கள் மற்றும் விடுதிகளுக்கு, தற்கொலையை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. தாங்களும் தற்கொலைகளை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காகத்தான் மின்விசிறியில் மாற்றங்களை கொண்டுவருகின்றனர்.

ராஜஸ்தான் அரசாங்கமும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க சட்டம் இயற்றுவதாக கூறி, நாடகமாடி வருகிறது. பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக ராஜஸ்தான் பயிற்சி நிறுவனங்கள் மசோதா – 2023-ஐ (Rajastan Coaching insititute bill – 2023) கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, பாடத்திட்டங்கள் மற்றும் கட்டணங்களை முறைப்படுத்தப்போவதாக கூறியுள்ளது.

இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவரும் தற்கொலைகளை தங்கள் அதிகாரத்தின் மூலம் தடுக்க முடியாதவர்களா, இனிமேல் தடுக்கபோகிறார்கள்; பயிற்சி நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். இம்மசோதா இக்கூட்டுக்கொள்ளையை மேலும் அதிகரிக்குமே தவிர, தற்கொலைகளைத் தடுக்கப்போவதில்லை.

இப்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருந்தாலும், அந்நிறுவனங்களை நோக்கி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஏனென்றால், சமூகத்தில் ஒருபுறம் வேலையின்மை தீவிரமாக அதிகரித்து வருகிறது. மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, விவசாயம் அழிக்கப்படுகிறது; சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நசுக்கப்படுகின்றன; நிரந்தர தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு காண்டிராக்ட் முறை அரசுத்துறைகளில் உட்பட புகுத்தப்படுகிறது.

படிக்க : புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!

மறுபுறமோ, இந்திய அளவிலும் மாநில அளவிலும் உள்ள முன்னணி கல்வி நிலையங்களில் படித்தால் அதிகப்படியான ஊதியத்துடன் வேலை கிடைக்கும்; சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சாரம் ஆளூம் வர்க்கங்களால் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) போன்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் மருத்துவத்தை தங்கள் பிள்ளைகள் படிப்பது எல்லாம் மக்கள் மத்தியில் வரப்பிரசாதமாக கருதப்படுவதெல்லாம் இதன் விளைவுதான்.

அக்கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில, போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது. கடன் வாங்கிப் பயிற்சி நிறுவனங்களுக்கு சென்றாவது நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என மக்கள் கருதுகின்றனர். அதற்காக, தங்கள் பிள்ளைகள் பயிற்சியின் மூலம் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என நினைக்கின்றனர். எனவேதான் மக்கள், 20 முதல் 25 லட்சம் வரை செலவழித்து தங்கள் பிள்ளைகளை பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தித் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றன.

மேலும், சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அந்நிறுவனங்களுக்குள்ளேயே போட்டி நிலவுகிறது. இதன் விளைவாக, போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் அல்லது 100 இடங்களுக்குள் தங்கள் நிறுவனத்தின் மாணவர்கள் இடம்பெற வேண்டும் என நினைக்கின்றனர். போட்டி தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களை விளம்பரப்படுத்தி, தங்கள் நிறுவனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர். அதிகப்படியான கட்டணமும் விதிக்கின்றனர். மாணவர்களுக்கு அதிகப்படியான அழுத்தத்தை தரும் பயிற்சி முறையை நிறுவனமயமாக்கி இருப்பதும், அதன்வெளிப்பாடுதான்.

இப்போட்டி தேர்வுகளும், தனியார் பயிற்சி நிறுவனங்களும் புதிய தாராளவாதக் கொள்கையின் அங்கம்தான். இக்கொள்கையின் விளைவாகத்தான், கோட்டா நகரம் உருவாகியுள்ளது. எந்த விளையாட்டு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் மாணவர்கள்,  வதைமுகாமைப் போல தினந்தோறும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இக்கொடுமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், இந்நகரத்தில் வாழ்வதை விட சாவதேமேல் என முடிவெடுத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். இக்கொள்கையை ஒழித்துக்கட்டாத வரை, இதுபோன்ற வதைமுகாம்கள் உருவாவதை தடுக்க முடியாது.

ஆயிஷா

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி | தோழர் மருது வீடியோ

மிழ்நாட்டில் பீகாரை சேர்ந்தவர்களை அடிக்கிறார்கள், இந்தி பேசியதற்காக 14 பேரை கழுத்தறுத்து கொன்றுவிட்டார்கள் என்று போலியான செய்திகளை பாஜகவினர் பரப்புவது தமிழ்நாட்டில் ஒரு கலவரத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டம். இது தமிழ்நாட்டில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ பீகாரில் வெற்றி பெறும்.

இதை வைத்து வட இந்தியாவில் கலவரம் செய்யலாம் தமிழ்நாட்டிலும் கலவரம் செய்யலாம். இது பாஜகவிற்கு ஒரு கல்லில் நூறு மாங்காய் கிடைப்பதை போன்றது. இதற்கு அண்ணாமலையும் சீமானும் உறுதுணையாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு இனக் கலவரத்தை உருவாக்குவதற்காக திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர் நடக்க வாய்ப்பிருக்கிறது. அந்த போரை நடத்தப்போவது பஞ்சம் பிழைக்க வந்த வட இந்திய தொழிலாளர்கள் அல்ல; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அம்பானி – அதானி பாசிஸ்டுகள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மார்ச் 6, 1822 – தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு!

மார்ச் 6 – 1822 | தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு!

ன்றைய திருவிதாங்கூர் (கன்னியாகுமரி உள்ளிட்டு) சமஸ்தானத்தில், ஒடுக்கப்பட்ட சாதி பெண்களுக்கு, மேலாடை அணியத் தடை விதித்தது நம்பூதிரி பார்ப்பனக் கும்பல்!

உலகில் வேறு எங்கும் இல்லாத இழிவாக மார்பகங்களுக்கு ‘முலை வரி’ போட்டது மனுவாதக் கொடுங்கோன்மை!

வரி கொடுக்க மறுத்து தன் மார்பகங்களை அறுத்தெறிந்தால் தன்மான தமிழ்ப் பெண் நங்கேலி! தோள் சீலை அணிவதற்கான போராட்டம் மூண்டெழுந்தது!

பார்ப்பனியக் கொடுங்கோன்மை, இந்துத்துவ பாசிசமாக அவதாரம் எடுத்துள்ள இன்றைய சூழலில், பார்ப்பனிய எதிர்ப்பு போராட்ட வரலாற்றை நினைவு கூர்வோம்! ஆயுதமாக்குவோம்!

வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரம்: தமிழினமே, இதோ துரோகிகளை இனங்கண்டுகொள்!

டந்த மார்ச் 01 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு, பிகார் மாநிலத் துணை முதல்வரும் ராஷ்டிர ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரான ஃபரூக் அப்துல்லா ஆகியோர் வருகைப் புரிந்திருந்தனர். இப்பொதுக்கூட்டத்தில், “பா.ஜ.க.விற்கு எதிராக அனைத்து தேசிய கட்சிகளும் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை மறந்துவிட்டு ஓரணியில் திரளவேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார் மு.க.ஸ்டாலின்.

இப்பொதுக்கூட்டத்திற்கு அடுத்தநாள், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தமிழர்களால் விரட்டிவிரட்டி படுகொலை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் போலிச் செய்திகள் பரவின. குறிப்பாக, இந்தியில் பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 12 பேர் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டதாகவும் டிவிட்டர், வாட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காட்டுத் தீயாகப் பரவின. இந்தியில் வெளிவரும் பிரபல பத்திரிகைகளான தைனிக் பாஸ்கர், ஹிந்துஸ்தான், பஞ்சாப் கேசரி போன்றவையும் இப்போலிச் செய்திகளை அப்படியே வெளியிட்டன.

பிகார் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலும், பா.ஜ.க. தலைவர்களின் டுவிட்டுகளிலும் நிதிஷ் தலைமையிலான அரசை சாடுவதற்கு, இந்த போலிச் செய்திகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன. பிகார் மாநில சட்டமன்றத்தில் இதையொட்டி பா.ஜ.க. அமளியிலும் ஈடுப்பட்டது.

படிக்க : தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்! | மக்கள் அதிகாரம்

பா.ஜ.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிமாஞ்சி, “தமிழ்நாட்டில் பிகாரைச் சார்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால், லாலுவின் மகனும் பிகாரின் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கேக் சாப்பிடுகிறார்; வெட்கக்கேடு” என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

பிகார் மாநிலத்திலும், வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியிலும் கொந்தளிப்பையும் பீதியையும் ஏற்படுத்திய இப்பிரச்சாரத்தை பா.ஜ.க.வின் இணைய வானரப்படையே திட்டமிட்டு பரப்பியுள்ளது. நிதிஷ் தலைமையிலான பிகார் அரசுக்கு, மக்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் உண்டாக்கும் நோக்கத்தில் இந்த வதந்திப் பரப்பிவிடப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்கட்சிகளின் முகாமை பலவீனப்படுத்தவும்; புல்வாமா போல ஏதேனும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு தேசவெறி, மத, சாதி, இனவெறியைத் தூண்டிவிட்டு, தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளையும் பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. பிகாரில் கிளப்பிவிடப்பட்டுள்ள இப்பிரச்சாரம் அதன் ஒரு பகுதியாகும்.

தமிழ்நாட்டின் அரசியல் மரபு, வெறுப்பு பிரச்சாரமாம்!

பிகாரில் தமிழ்நாட்டிற்கு எதிராக போலிச் செய்திகளைப் பரப்பிய பா.ஜ.க., தமிழ்நாட்டில் போலிச் செய்திகள் பரப்புவோர் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகிறது. மேலும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்புவது தி.மு.க.தான் என்றும் குற்றஞ்சாட்டுகிறது.

“தி.மு.க. ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்புப் பிரச்சாரம், தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது” என்று அறிக்கை விட்டிருக்கிறார் அண்ணாமலை. மேலும், “தி.மு.க. ஆரம்பித்த காலத்திலிருந்து, தற்போதுவரை ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவை ஏதோ தி.மு.க. என்ற கட்சி மீதான விமர்சனம் அல்ல. தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலைத்தான் அண்ணாமலை ‘வெறுப்புப் பிரச்சாரம்’ என்கிறார். மாபெரும் மொழிப்போராட்ட காலத்தில் கூட இந்தி பேசும் மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்லை. எண்ணற்ற பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் போராட்டங்கள் நடைபெற்ற இம்மண்ணில், ஒரு பார்ப்பனர்கள்கூட தாக்கப்பட்டதில்லை.

அப்படியிருக்க, இந்து-இந்தி-இந்தியா என்ற பாசிச சித்தாந்தந்திற்கு எதிராக பக்குவப்பட்டு வளர்ந்த தமிழ் மண்ணை, வன்முறை – வெறுப்பரசியலின் அடிப்படையாக சித்தரிக்க அண்ணாமலைக்கு எவ்வளவு கொழுப்பு வேண்டும்!

பாபர் மசூதி இடிப்பு, ரதயாத்திரை படுகொலைகள், குஜராத் இனப்படுகொலை, சிறுபான்மையினர் – தலித்துகளுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் கும்பல் படுகொலைகள், பெண்கள் மீது பாலியல் வெறியாட்டங்கள் என அன்று முதல் இன்றுவரை நாட்டையே வன்முறைக்காடாக ஆக்கிய பாசிசக் கும்பல், தமிழ்நாட்டின் அரசியலைப் பழித்துப் பேசுகிறது.

சீமான் – பா.ஜ.க. கள்ள உறவு அம்பலமானது!

ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் வி.சி.க.வினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முருகனும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபாட்டார்களாம். இதுபோன்ற பிரச்சாரங்களும் இந்த வதந்திகளுக்கான அடிப்படை என்று அவதூறு சேற்றை அள்ளி வீசுகிறார் அண்ணாமலை. ஆனால், அண்ணாமலையின் ஆட்டுமூளைக்கு சீமானின் திருநாமம் மறந்துவிட்டது.

ஈரோடு இடைத்தேர்தலையொட்டி, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக சீமான கக்கிய இனவெறி கொஞ்சமல்ல.

“கஞ்சா வச்சிருக்கான், அபின் வச்சிருக்கான், பெண்களை கைய பிடித்து இழுத்தான், கற்பழித்தான் என்று உள்ளே தூக்கிப்போட்டு சாப்பாடு இல்லாமல் அடி வெளித்துடுவேன். அவனே பெட்டியைத் தூக்கி கிட்டு ஓடிடுவான்” என்று ஈரோட்டில் சீமான் பேசியபோது பொத்திக் கொண்டிருந்த அண்ணாமலை, இப்போது தி.மு.க.வும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு அரசியலும்தான் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான வதந்திக்கு காரணம்; திருமாவளவனும் வேல்முருகனும்தான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினர் என்கிறார்.

இன்னொருபக்கம், வடமாநிலத் தொழிலாளர்களை அடித்துவிரட்ட வேண்டும் என்று பேசிய சீமானோ, “வெளியாரை வெளியேற்று” என்று முழக்கமிட்டுத் திரியும் சீமானின் அரசியல்பிதா மணியரசனோ, இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கட்சி சார்பாக எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை.

தமிழ்தேசிய அரசியலுக்கு பின் ஒளிந்துகொண்டிருக்கும் சீமானும் மணியரசனும் பாசிச பா.ஜ.க.வின் பி டீம்கள்; காவி கும்பலுக்கு எதிராக போராடிவரும் தமிழ்நாட்டைப் பிளவுபடுத்தும் கோடாரிகள் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்.

துரோகிகள் ஆபத்தானவர்கள்!

பாசிச பா.ஜ.கவின் மதவெறி அரசியலுக்கு தமிழ்நாடு பலியாக மறுக்கிறது. மாணவி லாவண்யா தற்கொலை, கோவை சிலிண்டர் வெடிப்பு ஆகியவற்றை வைத்து பா.ஜ.க. போட்ட திட்டங்களும் ஊத்திவிட்டது. வேல்யாத்திரை, காசி தமிழ்ச் சங்கமம் என என்னென்ன அவதாரங்கள் எடுத்துவந்தாலும் தமிழ் மக்களிடம் அவை எடுபடவில்லை. இந்த வேளையில்தான் சீமான்-மணியரசன் கும்பல், காவிக் கும்பலுக்கு ஐந்தாம் படையாகச் செயல்பட்டு தமிழ்நாட்டை வீழ்த்த நினைக்கிறது.

“நான் தான் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கிறேன். எனக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜ.க. வந்துவிடும் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்” என்று சீமான் ஒவ்வொரு மேடையிலும் குமுறுகிறார். தாங்களும் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம் என்று சீமானும் மணியரசனும் பேசுபவை, “புலி பசுத் தோல் போர்த்திவருவதற்கு ஒப்பானதுதான்”.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணியைத் தடுப்பதற்காக, திருமாவளவனின் அறைகூவலை ஏற்று பல்வேறு அரசியல் கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். பேரணியை ஆதரித்து பங்கேற்பதாகச் சொன்ன சீமானோ, நாம் தமிழர் கட்சியினரோ ஒரு இடத்தில் கூட பங்கேற்கவில்லை. இதுதான் சீமானின் பா.ஜ.க. எதிர்ப்பு.

திராவிட எதிர்ப்பு அரசியலின் மூலம் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலை நீர்த்துப் போகச் செய்து, தமிழினப் பெருமிதம் என்ற பெயரில் பார்ப்பனியத்தை கடத்திக் கொண்டுவருவதும், அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு சேவைசெய்வதும்தான் சீமான்-மணியரசன் கும்பலின் இலக்கு.

படிக்க : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: செத்துப் போனது  ‘ஜனநாயகம்’! உயித்தெழுந்தது பாசிச பாஜக நரகலின் நகல் சீமான்!

“திராவிடர்கள்” என்று சொல்லக்கூடாது, “தமிழ் இந்து” என்று சொல்ல வேண்டும் என்று மணியரசன் வகுத்தளிக்கும் கோட்பாடுகளெல்லாம், காவி பாசிஸ்டுகளுக்காக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் சித்தாந்த கரசேவையாகும்.

பஞ்சம் பிழைக்கவந்த வடமாநிலத் தொழிலாளிகளால் தமிழர் வேலை பறிபோகிறது என்று காட்டுக் கூச்சலிடும் சீமான், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில், இந்திபேசுவோர் நுழைக்கப்படுவது குறித்து அவ்வளவாக அக்கறைப்படுவதில்லை.

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் சீமானுக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருக்கிறது. இத்தொகுதியில் சென்றமுறை பெற்ற வாக்குகளைவிட, இந்த வாக்கு எண்ணிக்கையில் பெரிய அளவிற்கு வீழ்ச்சி ஒன்றுமில்லை.

சீமான் தேர்தலில் வெல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், சீமானுக்கு கிடைத்த அந்த 10 ஆயிரம் வாக்குகளும், சீமானது பாசிச அரசியலுக்கு கிடைத்த வாக்குகளாகும். வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான சீமானின் இனவெறி அரசியலை ஆதரிப்பவர்களது வாக்குகளாகும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பகைவர்களால், நேரடியாக மோதி தமிழ் மண்ணை ஒருகாலும் கைப்பற்ற முடியாது. ஆனால், சீமான்-மணியரசன் போன்ற துரோகிகளின் மூலம், தமிழ் மண்ணைக் கவிழ்ப்பதற்கு பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை நாம் சாதரணமாக கடந்துசெல்ல முடியாது.

எதிரிகளை விட துரோகிகள் அபாயமானவர்கள், தமிழினம் இக்கும்பலை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்!

அம்பலப்படுத்தி தோலுரிப்போம்!


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
05.03.2023

மதுரை ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) | Madurai smart city | பாகம் 1 | documentary

மதுரை ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) | Madurai smart city | பாகம் 1

சிறுதொழிலை அழிக்கவரும் மதுரை ஸ்மார்ட் சிட்டி பற்றி மக்கள் கூறும் கருத்துக்கள்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

புதிய ஜனநாயகம் – மார்ச் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் மார்ச் – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – மார்ச் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

தலையங்கம்: நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி-அதானிகளுக்கு அமிர்தகாலம்! உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!
♦ “ஒரே நாடு ஒரே தேர்தல்” இந்துராஷ்டிர மயானவாயில்!
♦ ஆளுநர்கள் நியமனம்: அடிவருடிகளுக்கு பரிசு! அடியாள் வேலைக்கு பதவி!
♦ ஐ.ஐ.டி முதல் ஜே.என்.யூ வரை: பாசிசமயமாகும் உயர்கல்வி நிறுவனங்கள்!
♦ நிக்கோபார் தீவுகளை அழிக்கவரும் ‘வளர்ச்சி’த் திட்டங்கள்!
♦ வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம்! காரணம் என்ன? வடமாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?
♦ அமெரிக்காவில் வேர்பரப்பும் காவி பாசிசக் கும்பல்!
♦ ‘சாட் ஜி.பி.டி’ – டிஜிட்டல் ஏகபோகங்களிடையே ஒரு புதிய போட்டாபோட்டி!
♦ “உன் நெருக்கடியை என் தலையில் சுமந்தாதே!” கொதித்தெழுந்த பிரான்ஸ் – பிரிட்டன்

தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்! | மக்கள் அதிகாரம்

04.03.2023

தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி
கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை !

டந்த இரண்டு, மூன்று நாட்களாக வடஇந்திய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு எதிரான வதந்திகளை பரப்பி சதி செய்தது பாசிச பாரதிய ஜனதா கட்சி தான் என்பது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரான பிரசாந்த் உமாராவ் என்பவன், இந்தியில் பேசியதற்காகவே தமிழ்நாட்டில் 12 பிகார் தொழிலாளிகள் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற பொய் செய்தியை திட்டமிட்டு பரப்பியுள்ளான். இது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக மற்ற தேசிய இனங்களை எதிரியாக்கும் சதி வேலையாகும்.

இச்செய்தியை பாசிச பாரதிய ஜனதா கட்சியினரும் வடநாட்டு ஊடகங்களும் திட்டமிட்டு பரப்புவதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு உண்மையிலேயே இனக் கலவரத்தை உருவாக்குவதற்காக சதி செய்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு டிஜிபியும் தமிழ்நாட்டின் முதலமைச்சரும் உரிய விளக்கம் அளித்திருக்கிறார்கள். பீகார் மாநில சட்டசபையில் தமிழ்நாட்டில் பீகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று பாசிச பாரதிய ஜனதா கட்சி அமளியில் ஈடுபட்டிருக்கிறது.

மாபெரும் இந்தி எதிர்ப்பு போர் நடந்த காலகட்டத்தில் கூட, இந்தி பேசியவர்கள் யாரும் தமிழர்களால் தாக்கப்பட்டதில்லை என்பதுதான் வரலாறு. உழைக்கும் வடஇந்திய தொழிலாளியையும் சுரண்டும் மார்வாடி, பார்ப்பன, பனியா குஜராத்தி கார்ப்பரேட் முதலாளிகளையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள் தமிழர்கள்.

படிக்க : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: செத்துப் போனது  ‘ஜனநாயகம்’! உயித்தெழுந்தது பாசிச பாஜக நரகலின் நகல் சீமான்!

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒரு பாசிஸ்ட், பீகாரிகள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறார்கள் என்று வதந்தியை கிளப்பி விடுவான். அச்செய்தியை வடஇந்திய ஊடகங்களும் பாசிச பாஜக கும்பலும் இந்தியா முழுமைக்கும் பரவச் செய்யும். அதை வைத்து பீகார் சட்டசபையிலும் பீகாரிலும் கலவரம் செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்யும். இதைப் பற்றி எதுவும் பேசாத அண்ணாமலை, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறுவார். என்ன ஒரு நாடகம் இது?

தமிழ்நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியில் தமிழ்நாட்டை சுற்றி வளைக்கும் போரில் தமிழ்நாட்டில் உறவாடி கெடுக்கும் யுத்தியில் இந்த வதந்தியும் ஒன்று. பிபிசி ஆவணப்படம், ஹிண்டன்பர்க் அறிக்கை, எரிவாயு உருளை விலை ஏற்றம் என அம்பலப்பட்டு அம்மணமாகி போன இந்த மோடி-அமித்சா பாசிச கும்பலை காப்பாற்றுவதற்கும், மோடி-அமித்சா பாசிசக் கும்பலுக்கு எதிரான இந்தியா தழுவிய ஒரு கூட்டணி உருவாகக் கூடாது என்பதற்கும் நடத்தப்பட்ட முன்னோட்டமே பீகார் “தொழிலாளிகள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்டார்கள்” என்ற வதந்தி.

இந்த வதந்தி தற்பொழுது முறியடிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் இதை ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பல் தொடர்வார்கள் வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்து ஆட்சியைப் பிடிப்பதும் தேசிய இனங்களை பிரித்தாள்வதுமே மோடி அமித்ஷா, பாசிச கும்பலின் கைவந்த கலை. இந்த மோடி கும்பலுக்கு ஏற்ற ஜாடிதான் சீமான். அதனால்தான் சுரண்டும் வடஇந்திய மற்றும் தமிழ் முதலாளிகளை பற்றி பேசாமல் சுரண்டப்படும், உழைக்கும் வடஇந்திய தொழிலாளியை தமிழர்களுக்கு எதிரியாக காட்டிக் கொண்டிருக்கிறார். ஆக, பாரதிய ஜனதா கட்சியின் இலக்கும் சீமானின் இலக்கும் ஒன்றே!

ஆகவே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலை தடை செய் என்பது நம்முடைய முக்கிய கோரிக்கையாக இருக்க வேண்டும். பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை தடை செய் என தேர்தல் ஆணையத்தில் கேட்பதல்ல; தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு ஊரிலும் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை தடை செய்ய வேண்டும், அதற்கான முன்னெடுப்புகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை
99623 66321.

Morbi Bridge Collapse: A Massacre of Gujarat Model!

The collapse of Gujarat’s Morbi suspension bridge resulted in the loss of lives of at least 141 people including 53 children. This incident shocked everyone. Various media and social media had exposed the irregularities that took place.

But, we can’t just view this incident as just another accident or an expression of the negligence of the BJP ruled state governments. The Morbi bridge had exposed the real face of the Gujarat model, which is being posed as the role model for the whole country by the fascists. The collapse of the Morbi bridge is an act of terrorism. Even though it was not preplanned, it is a massacre; this incident is an outcome of unrestricted leasing of entire Gujarat to the corporates.

000

The Morbi bridge, which was built across the Machchhu River, was inaugurated by the British in 1879. Besides being used by the pedestrians, it had also emerged as a place of tourist attraction. After the 2001 earthquake, the bridge had not been renovated. The process of renovation started on March this year. The bridge had been re-opened by keeping Diwali and Chhath puja in mind. But the media reported that the bridge had collapsed as a result of overcrowding.

But, the fact is that the bridge had not been renovated. Even the rusted old cables of the bridge were left untouched; they were not even greased. The anchor pins that hold the cables on the ground were broken and the bolts on the anchor were loose. The wooden flooring was replaced with aluminum sheet and this has increased the weight of the bridge. There were no properly trained security guards. By keeping profits in mind, more tickets – capacity was 150 but reportedly 650 entry tickets were sold – and a huge crowd was allowed to enter the bridge. The bridge was opened before receiving a “fit for use” certificate. The forensic report reveals this information.


Also Read: ‘Twitter 2.0’ – Propaganda Machine of Fascists!


The maintenance and restoration work was awarded to Gujarat’s Oreva Group by the Gujarat government. This group (better known as Ajanta Quartz) is one of the leading wall clock manufacturers. This group has been carrying out the maintenance work of the bridge since 2007. Recently, the contract for maintenance of this bridge was handed over to this group for another 15 years.

This corporate group had sublet the restoration contract to two other contractors. These contractors were not qualified engineers. They only carried out welding and electrical work in the bridge. Moreover, over lacks any experience in construction business. Morbi municipality had given the contract of renovation to Oreva without a tender. It was a shock that the agreement was just one-and-a-quarter page.

This Gujarat model reveals us that the Brahminical fascists did not even take into consideration that this project is concerned with the lives of the people. Their normalcy is bribery – corruption – scam.

Not only the Morbi suspension bridge, but all the sectors of the Gujarat government had been opened for the plundering of the corporates. The word ‘Gujarat model development’ indicates the gifting of all the sectors to the corporates, i.e., establishing the rampant exploitation of the corporate bourgeoisie. The tragedy that claimed the lives of almost 150 people is an expression of this. That’s why we say that this incident is not an accident; it’s a massacre.

000

While the negligence shown in the maintenance and the importance given to the profiteering of Oreva are on one side, the actions of the BJP – Modi mob and their mouthpiece media after the Morbi bridge incident on the other side exposes us how vicious the fascists are.

Modi, on the occasion of Vallabhbhai Patel’s birth anniversary, said “I am in Ekta Nagar but my mind is with the victims of Morbi. Rarely in my life, would I have experienced such pain. On one hand, there is a pain-riddled heart and on the other hand, there is the path to duty”. He acted tactically. On the same day evening, while speaking in an event in Banaskantha district, Modi shed crocodile tears on the stage. But he did not utter a word about the reason for the accident.


Also Read: Imperialism at a dead end! It’s time for the world proletariat to take the lead!


It has been announced that Modi would visit those who were severely injured in the accident. Only then the condition of the hospital in which the injured were treated got exposed to the outside world. The hospital got a quick makeover only because of the reason that PM Modi would be visiting. The walls of the hospital were painted, new tiles were installed on the walls, and minor construction works were carried out to beautify the hospital.

That hospital did not even have the basic facilities such as drinking water, beds and bedsheets. Bedsheets had been brought from a hospital in Jamnagar, which is 160 km away from Morbi. There is no supply connection for the newly installed water cooler. In two days, 56 injured people have been discharged before the completion of treatment.

Thus many news which reached us through social media exposed the grim face of Gujarat model. The BJP – Modi mob, in order to save its vote-bank, unleashed a series of fake-news campaign. Even after all this, Modi began his election campaign with the slogan “I’ve made this Gujarat”, without any shame.

BJP is trying to win the constituency of Morbi by making the party’s ex-MLA Kantilal Amrutiya as the candidate and projecting him as ‘Morbi hero’ who saved the lives of the people during the suspension bridge accident. The Election Commission went one step further and postponed the announcement of election dates by citing the Morbi incident. The election dates were announced only after the anti-BJP sentiment had drained.


Also Read: Shraddha murder case: Recolonization Destroying Human Values!


On one side, PM Modi’s lies and dramas were broadcasted by the media. While on the other side, fake news – that the bridge got collapsed as some youths deliberately shook it – was spread.

Vivek Ranjan Agnihotri, the director of Kashmir Files said, “Probe if it’s a sabotage by urban-Naxals because they are very capable of going to any extent”. The media spread all these sorts of news but remained mute on the necessity to arrest Oreva’s managing director Jaysukh Patel.

Not only the pro-BJP media in the north, Vikatan group had also reported as if the private company was the only wrongdoer and that the relief and rescue measures were going on; and that serious investigations were going on. They did not utter a word about the blatant corruption – irregularities of the BJP-Modi mob. Instead they projected Modi’s crocodile tear drama as his care for the people.

The Morbi bridge collapse had exposed the real face of development under the Gujarat model. The Gujarat model is a paradise for the dominant caste Gujarati-Marwadi-Patel-Bania corporate bosses. But it is a graveyard for the working people. This has been proved once again.

“ஒரேநாடு”! ஒன்றுகலக்காத “தமிழ்நாடு”!

டம்தெரியாமல் மோதிக்கொண்டிருந்த’ ஆளுநர் ரவிக்கு, “தமிழ்நாடு” என்றால் என்னவென்று இந்நேரம் புரிந்திருக்கும்; புரியவைத்திருக்கிறது தமிழ்நாடு. ஆனாலும், 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு பொங்கலை போராட்டப் பொங்கலாக, அரசியல் புத்துணர்ச்சியோடு தொடங்கிவைத்த பெருமை அவரையேச் சாறும் என்பதால், நாம் அவருக்கு நன்றிசொல்லித்தான் ஆகவேண்டும்.

கிண்டி ராஜ்பவனில், கடந்த மாதம் 5ஆம் தேதி, தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் உறவாடிக் கெடுக்கும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தன்னார்வலர்களுக்கு, பாராட்டு நிகழ்ச்சி நடத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அந்நிகழ்ச்சியில், “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு” என்று தனது ‘ஆதங்கத்தை’ வெளிப்படுத்தினார். மேலும், “தமிழ்நாடு என்று சொல்வதைவிட, தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்; பாரதத்தின் ஒருபகுதியே தமிழகம்” என்று பேசியதை அனைவரும் அறிவோம்.

“திருக்குறள் ஆன்மிகத்தைப் போதிக்கிறது”, “திராவிடம் என்பது இனமல்ல, இடப்பெயர்”, “சனாதனம் தமிழகத்தில் தோன்றி, பாரதம் முழுக்க பரவியது” – என தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சீண்டும்வகையில் பேசிவந்ததன் உச்சம்தான் “தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும்” என்ற திமிரான பேச்சு!

இனியும் சகித்துக் கொள்ளமுடியாது என்ற நிலைக்கு தமிழ்நாட்டு அரசியல் சக்திகளைத் தூண்டிவிட்ட ரவி, அதற்கே உரிய எதிர்வினையையும் சந்தித்தார்.


படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | காணொலி


“தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை ஆளுநர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன; எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்” என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆளுநரை விமர்சித்திருந்தார். கி.வீரமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆளுநரின் பேச்சுக்கு பதிலடியாக, “தமிழ்நாடு” என்ற ஹாஷ்டாக், டிவிட்டரில் பிரபலமாகியது.

ஜனவரி 9-ஆம் தேதி, ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு ஆளுநர் உரை வழங்குவதற்காக வந்திருந்த ஆர்.என்.ரவியைக் கண்டித்து, வி.சி.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சி.பி.ஐ., சி.பி.எம்., காங்கிரஸ் ஆகிய தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், “வாழ்க தமிழ்நாடு”, “எங்கள் நாடு தமிழ்நாடு”, “ஆளுநர் உரையைப் புறக்கணிப்போம்” என்று முழக்கமிட்டனர். பின்னர், ஆளுநர் உரையைப் புறக்கணித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பா.ம.க.வினரும் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்.என்.ரவியின் அடாவடி!

தாம் பேசியது சட்டமன்றத்திலேயே எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தபோதும், திமிர் பிடித்த ஆர்.என்.ரவி, மேலும் அகம்பாவமாக நடந்துகொண்டார். தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமல், சில விசயங்களை வெட்டியும் ஒட்டியும் வாசித்தார். குறிப்பாக “தமிழ்நாடு அரசு” என்ற சொல்லைப் புறக்கணித்து, அச்சொல்லுக்கு பதிலாக “இந்த அரசு” என்று குறிப்பிட்டு பேசினார்.

“சமூகநீதி”, “சுயமரியாதை”, “சமத்துவம்”, “பகுத்தறிவு”, “திராவிட மாடல்” உள்ளிட்ட சொற்களையும், “தந்தை பெரியார்”, “அண்ணல் அம்பேத்கர்”, “பெருந்தலைவர் காமராசர்”, “பேரறிஞர் அண்ணா”, “முத்தமிழறிஞர் கலைஞர்” ஆகிய தலைவர்களது பெயர்களையும் வாசிக்காமல் புறக்கணித்தார்.

ஆளுநர் உரை முடிந்ததும் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தம்மால் இசைவளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரையையே ஆளுநர் முறையாகவும், முழுமையாகவும் படிக்காததால், உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். தன்னுடைய திமிருக்கு அனைத்து வகைகளிலும் பதிலடி கிடைத்துக் கொண்டே இருந்ததால், பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்.என்.ரவி தேசியகீதம் பாடப்படும் முன்பே வெளியே ஓடினார்.

தி.மு.க.விற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமானால், ஆர்.என்.ரவி வேறுவகைகளில்கூட செய்திருக்கலாம். ஆளுநர் உரை நிகழ்த்தாமல், சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்துக் கூட இருக்கலாம். ஆனால், தீர்மானிக்கப்பட்ட உரையை ஏற்றுக் கொண்டு, வாசிக்கும்போது மாற்றி வாசிப்பது – திருத்தி வாசிப்பது போன்றவை எல்லாம் தி.மு.க. என்ற தனிப்பட்ட கட்சிக்கு எதிரான நடவடிக்கை அல்ல; தமிழ்நாடு அரசுக்கு உரிய இறையாண்மையையே கேள்விக்கு உள்ளாக்குவதாகும்.


படிக்க: திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?


அடுத்து, ஜனவரி 10-ஆம் தேதி, ஆளுநர் மாளிகை சார்பில் வெளியான பொங்கல் விழா அழைப்பிதழிலும், “தமிழ்நாடு ஆளுநர்” என்ற சொல்லுக்குப் பதிலாக “தமிழக ஆளுநர்” என்ற சொல் இடம்பெற்றிருந்தது; தமிழ்நாட்டு அரசின் இலச்சினைக்குப் பதிலாக, ஒன்றிய அரசின் இலச்சினையும், திருவள்ளுவர் ஆண்டுக்குப் பதிலாக, ஆங்கில தேதியும் இடம்பெற்றிருந்தது.

தி.மு.க. அரசையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் சீண்டிப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டு, தொடர்ச்சியாக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சவாலுக்கு அழைத்தார் ரவி.

பாசிசத் திமிருக்கு செருப்படி!

பா.ஜ.க, அடிமை அ.தி.மு.க.வைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழ்நாட்டு மாணவர்கள், மக்களிடமிருந்தும் எதிர்ப்புக் குரல் ஓங்கியது.

சட்டமன்ற முதல் கூட்டம் நடந்து முடிந்த அன்றே வி.சி.க. மற்றும் சி.பி.எம். ஆகிய கட்சிகள் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தன.

ஜனவரி 12-ஆம் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மரபுகளை மீறாமல் பணியாற்ற ஆளுநருக்கு அறிவுறுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை வழங்கினர்.

சென்னையில் பல இடங்களில் ஆளுநரைக் கண்டித்து தி.மு.க-வினரால் #GetOutRavi (கெட் அவுட் ரவி) என்ற ஹாஷ்டாக் போடப்பட்ட நீளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும், ஆளுநரை பதவி விலகக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியும், “தமிழ்நாடு வாழ்க” என மக்கள் நீதி மய்யமும் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டியது. பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க. மற்றும் அதன் மாணவர் அணி சார்பாக கருப்புக்கொடி ஏந்தியும் ஆளுநர் ரவியின் புகைப்படத்தை எரித்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

திருப்பூர் மற்றும் புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பியும் ஆளுநர் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொள்ளாச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆளுநரின் உருவபொம்மையை எரித்தனர். இவையன்றி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.


படிக்க: ஜே.என்.யூ மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள்


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பு நீதிமன்றம் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் உருவப்படத்தை மிதித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநருக்கு எதிராக கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். சென்னை மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, திருத்தணி கலைக் கல்லூரி, எடப்பாடி அரசு கலை அறிவியல் கல்லூரி, சேலம் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆளுநருக்கு எதிராக “எங்கள் நாடு தமிழ்நாடு”, “ஆளுநரே வெளியேறு”, “தமிழ்நாடு வாழ்க” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பட்டாபிராமில், இந்து கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, ஆளுநரின் உருவப்படத்தைக் கிழித்து எரிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

“சட்டப்பேரவையில் மாண்பையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் காக்கின்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள அறவழியிலானப் போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால், இந்தப் பொங்கல் விழா நமக்குக் கூடுதல் இனிப்பு நிறைந்த சர்க்கரைப் பொங்கலாக அமைந்துள்ளது” என சட்டமன்ற நிகழ்வை மறைமுகமாக மேற்கோள் காட்டி, தமது பொங்கல் வாழ்த்து அறிக்கையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு வாழ்க” எனக் கோலமிட்டு தமிழர் திருநாளைக் கொண்டாடுமாறு, மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை வரவேற்று, “தமிழ்நாடு”, “தமிழ்நாடு வாழ்க”, “எங்கள் நாடு தமிழ்நாடு”, “GetOutRavi” போன்ற முழக்கங்கள், பொங்கல் அன்று பலரது வீட்டு வாசல்களையும் அலங்கரித்தன. மேலும், இரண்டு நாட்களுக்கு மேலாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #தமிழ்நாடு #GetOutRavi உள்ளிட்ட முழக்கங்களே ஆதிக்கம் செலுத்தின.

தமிழ்நாடு என்றால், காவிகளுக்கு எரிவது ஏன்?

இதற்கு முன்பு தமிழ்நாடு, தமிழகம் என இரண்டு பெயர்களையும் பொதுவாகப் பயன்படுத்திவந்த பலரும், தற்போது தன்னுணர்வோடு “தமிழ்நாடு” என்று முழங்குகின்றனர். ஏனெனில், “தமிழ்நாடு” என்பதற்கும், “தமிழகம்” என்பதற்கும் இடையிலான வேறுபாடு வெறும் சொல் அல்ல.

“நாடு” என்பதுதான் பிரச்சினை என்றால், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற பெயர்களில் உள்ள “ராஷ்டிரா”, “பிரதேசம்” என்பதும் தனிநாட்டைக் குறிப்பது போன்ற பெயர்கள்தானே, “தமிழ்நாடு” என்ற பெயர் மட்டும் அவர்களுக்கு ஏன் பிரச்சினையாக உள்ளது என்று பலர் கேள்வி எழுப்பினர்; “ஒரே நாடு”, “ஒரே தேசம்” என்ற பெயரில் பல்தேசிய இனங்களின் தன்னுரிமையை நசுக்கி, இந்துராஷ்டிரத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு இன்றுவரை சிம்மசொப்பனமாக திகழ்வது “தமிழ்நாடு” மட்டுமே என்பதுதான் அதற்கான காரணம்.

அப்படியிருக்க, “தமிழ்நாடு” என்ற பெயர் கூட தன்னை தனிநாடு போல அடையாளப்படுத்திக் கொள்வதும், அதன்மூலம் ஒரே பாரதக் கொள்கையைக் கேள்விக்கு உள்ளாக்குவதையும் காவிக் கும்பலால் செரிக்க முடியவில்லை. அந்த வயிற்றெரிச்சலின் வெளிப்பாடுதான் ஆர்.என்.ரவியின் பேச்சு.

ரவி மட்டுமல்ல, “தினமல(ர்)ம்”, “துக்ளக்” உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் ஆதரவு பத்திரிகைகள் அனைத்திலும் “தமிழ்நாடு” என்ற பெயருக்கு பதிலாக, “தமிழகம்” என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் உள்ளக் குமுறலை பகிரங்கமாகப் பேசியதன் மூலம் வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்டார் ரவி.

பாசிச உளவாளியை விரட்டியடிப்போம்!

“ஊழல்”, “இந்துவிரோதம்”, “சட்ட ஒழுங்கு சீர்குலைவு” என தி.மு.க.விற்கு எதிரான பிரச்சாரங்களில் ஏறியடித்துப்பேசும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், புலி வாயில் விரலைவிட்ட கதையாக, தமிழ் மக்களின் உணர்வை சீண்டிப் பார்த்த ரவிக்கு, முட்டு கொடுக்க முடியாமல் தவித்தது. இறுதியில் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டிடம் மண்டியிட்ட கூத்தும் அரங்கேறியது.

“காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கவே தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதே மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது தவறானது” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

ரவி அந்த பொருளில் சொல்லவில்லையாம், நாம் தவறாக புரிந்துகொள்கிறோமாம். அவ்வாறெனில், பொங்கல் நிகழ்ச்சி அழைப்பிதழில் தமிழ்நாடு பெயரும் தமிழ்நாடு அரசின் இலட்சினையும் ஏன் இல்லை என்று கேட்டால் பதில் இருக்கப் போவதில்லை. மண்டியிடுவது என்று முடிவுசெய்தபின், அதையும் ‘கவுரமாக’ச் செய்ய வேண்டுமாம்!

அதோடு விட்டாரா ரவி, இப்போதெல்லாம் எங்கே சென்றாலும், ‘ஒரு பாதுகாப்புக்கு’ தமிழ்நாடு என்று உச்சரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார். அண்மையில் புதிதாக பயிற்சியில் இணைந்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் பேசிய ஆர்.என்.ரவி, தொடர்பே இல்லாமல் அந்த இடத்தில், “தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழ் மொழியையும் மிகவும் நேசிக்கிறார்கள்” என்று பேசியுள்ளார். இன்னொரு கூட்டத்தில், உரையை முடிக்கும்போது, “வாழ்க தமிழ்நாடு”, “வாழ்க பாரதம்” என்று முழங்கியுள்ளார்.


படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | துண்டறிக்கை!


‘நாகாலாந்தில் போராளிக் குழுக்களை ஒடுக்கி, அமைதியை நிலைநாட்டிய தீரர்’ என்று சித்தரிக்கப்பட்ட ரவியை “மூச்ச்..” என்று அடக்கிப் பணிய வைத்திருக்கிறது தமிழ்நாடு. ரவி ஆளுநராக பதவியேற்ற காலந்தொட்டு, அவரது தமிழ்நாட்டு அரசு விரோதப் போக்கை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் ரவி தன்னிலை விளக்கம் கொடுத்ததில்லை. பாசிசத் திமிரோடுதான் நடந்துவந்திருக்கிறார். அப்படிப்பட்ட ரவியை மண்டியிடச் செய்திருப்பதென்பது முக்கியமான விசயமாகும்.

ஆனால், இதுவொரு தொடக்கம்தான். தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அதன்மீது அமர்ந்திருக்கிறார் ஆர்.என்.ரவி. ஏழுதமிழர் விடுதலை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதா மீது கடைசிவரை முடிவெடுக்காமல் வஞ்சகமாகச் செயல்பட்டார்; நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்காக நடந்த போராட்டங்கள்தான் எத்தனை; ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் இன்றுவரை இழுத்தடிப்பதால், உயர்ந்துகொண்டே இருக்கிறது பிணங்களின் எண்ணிக்கை.

எனவே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஏவியுள்ள இந்த உளவாளியை விரட்டியடிக்காமல், Get-out-Ravi என்ற முழக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்காமல், நமது வெற்றி முழுமையடையாது!

ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு கொடுக்கும் அடி என்பது, ‘நம்மை எதிர்க்கும் வலிமையுள்ள சக்திகள் எதுவும் அரசியல் அரங்கில் இல்லை’, ‘எவ்வித தங்குதடையும் இல்லாமல் இந்துராஷ்டிரத்தை நோக்கி முன்னேறிவிடலாம்’ என்று கருதிக் கொண்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பாசிசப் படையெடுப்பின் உளவாளிகளான ஆர்.என்.ரவிகள், கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம், டெல்லி என எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களிலும் உள்ளார்கள்; அங்கெல்லாம் ஆளுநர் என்ற பெயரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக குடைச்சல் கொடுத்துவருகிறார்கள். தமிழ்நாடு அடிக்கும் அடி, மற்ற மாநில மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்; பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு ஊக்கமளிக்கும். எனவே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை எதிர்த்து தமிழ்நாட்டில் களமாடும் அனைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கும் உளவாளி ரவியை விரட்டியடிப்பதுதான் உடனடிக் கடமையாக இருக்க வேண்டும்!

பானு

ஹிஜாப் விவகாரம்: ஈரான் அரசுக்கு எதிராக போராடும் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்! | தோழர் அமிர்தா வீடியோ

ரானில் மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்பதற்காக, ஹிஜாபை எதிர்த்து போராடினார்கள் என்பதற்காக பள்ளி மாணவிகள் பழிவாங்கப்படுகிறார்கள். 650-ம் மேற்பட்ட மாணவிகளுக்கு விசம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோம் மற்றும் போருஜெர்ட் நார்களில் உள்ள பள்ளிகளில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

ரசாயன வாயுவால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, உமிழ் நீர் அதிகமாக சுரப்பது, குடல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மாசா அமினி-இன் மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபெற்றதற்காக தற்போது மாணவிகள் பழிவாங்கப்படுகிறார்கள்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நெல்லை: சுரண்டை கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை – மாணவர்கள் போராட்டம்!

சுரண்டை கல்லூரி பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த
பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் போராட்டம்!

சுரண்டை கல்லூரியில் ஆய்வு மாணவி ஒருவருக்கு தொடர்ந்து ஆறு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த வணிகவியல் துறைத்தலைவர் அஜித் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று(02.03.23) போராட்டம் நடத்தினர்.

பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கும், அரசுக்கும் உள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதாக இல்லை.

கடந்த ஆறு மாதங்களாக பேராசிரியர் தொல்லை தந்தும் மாணவியால் அதை கல்லூரி நிர்வாகத்திடம் எடுத்துச் செல்ல முடியாத அளவுக்குதான் அந்த கல்லூரி நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டம் நடத்திய பின்னர்தான் அரசு இயந்திரமும் பெயரளவில் செயல்படுகிறது.

மாணவர்கள் என்றால் பொறுப்பு இல்லாமல் திரிபவர்கள் என்ற எண்ணத்தை இது மாதிரியான போராட்டங்கள் உடைத்தெறிகின்றன. இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் ஜல்லிக்கட்டு வரை மாணவர்கள் பங்கெடுத்து கொண்ட போராட்டம்தான் சமுதாயத்தில் குறிப்பிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் நெல்லை டவுண் ஆர்ச் பள்ளிக்கு அருகில் உள்ள இடத்தை, சமூக விரோதிகள் டாஸ்மாக் போல பயன்படுத்திக் கொண்டிருக்கையில் போலீசும், மாவட்ட நிர்வாகமும் அதை தடுக்காத போது, பள்ளி மாணவர்கள் திரண்டு வந்து டவுண் பொருட்காட்சி திடல் அருகே சாலை மறியல் செய்துதான் நடவடிக்கை எடுக்க வைத்தனர். மாணவர்களுக்கு சமூக உணர்வும், சமூக அக்கறையும் இருக்கிறது என்பதை இம்மாதிரியான போராட்டங்கள் நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் தெரிந்தே மாணவர்களை ஏமாற்றுவதை நாம் அறிய முடிகிறது. கல்லூரி முதல்வர் சின்னத்தாய் கூறுகையில், கல்லூரி முதல்வர் தலைமையில் நடந்த ஆட்சி மன்ற கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை அறிக்கையின் படி, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குரிய பேராசிரியரால் கல்லூரியின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்கிற அடிப்படையில், அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவை தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இது மாணவர்கள் திரண்டு வந்து வெளியில் போராட்டம் நடத்தியதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கிற போலீசின் அறிக்கையை மறுவாசிப்பு செய்வது போலவே உள்ளது. விசயம் என்னவோ மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை தந்தார் என்பதே.

இந்த அடிப்படையில் இருந்து விசாரணையை தொடங்குவது, இதை பாலியல் வன்முறை புகாராக பதிவு செய்வது என்று இல்லாமல், இதை வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது தெரிந்தே பிரச்சினையை மடை மாற்றுவதாக உள்ளது.

இது மாதிரியான பிரச்சினைகளுக்கு மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் அனைவரும் அமைப்பாக திரண்டால்தான் தீர்வு காண முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605

சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | காணொலி

இது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்.
சித்தர்கள், வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்த மண்.
பெரியார் தன்மான படை வளர்த்த மண்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என உலகுக்கு
உரைத்த மண்.
கீழடியும் ஆதிச்சநல்லூரும் நமது மரபு.

பூலித்தேவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன்,
வேலுநாச்சியார், மருதுசகோதரர்கள், சின்னமலை,
சுந்தரலிங்கனார், அழகுமுத்துக்கோன்,
வ.உ.சி., சிங்காரவேலர்…
உறுதிமிக்கது நமது விடுதலைப் போராட்ட உணர்வு.

தனித்தியங்கும் தமிழ்நாட்டின் இம்மரபுகள்தான்,
ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குக் கொடுங்கனவு.

தொழிலாளர் வர்க்கம் தனது வரலாற்றுக் கடமையை
நிறைவேற்றிய போராட்ட தினமான
மே தினத்தில் உறுதியேற்போம்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானி-மோடி கூட்டுக்களவானிதனம் அம்பலம் || கேலிச்சித்திரம்

ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அதானியின் கோடிக்கணக்கான கொள்ளை அம்பலமானது… மோடி அரசு நாட்டின் ஒட்டுமொத்த தொழிற்துறைகளையும் அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைத்திருக்கிறது. உழைக்கும் மக்களையும் இயற்கைவளங்களையும் சுரண்டியே உலக பணக்காரன் தரவரிசையில் முன்னிலைக்கு வந்திருக்கிறார் அதானி.

ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானி-மோடி அரசு நிறுவனங்களின் கூட்டுகளவானிதனம் அம்பலம்…

கேலிச்சித்திரம்: தோழர் அன்பு
மக்கள் அதிகாரம், கோவை மண்டலம்
9488902202