Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 235

விவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு! சிதம்பரத்தில் சாலை மறியல் !

விவசாய விரோத சட்டத்தை திரும்பப் பெறு ! சிதம்பரத்தில் விவசாய சங்கங்கள் சாலை மறியல் போராட்டம் !

த்தியில் அமைந்துள்ள பாசிச மோடி அரசு ஒட்டுமொத்த மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான அவசர சட்டங்களை அமல்படுத்தி கொண்டு வருகிறது.
இதில் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லக்கூடிய, பெரும்பாலான மக்கள் உழைப்பில் ஈடுபடுகின்ற விவசாயத்தை கார்ப்பரேட் கையில் ஒப்படைக்க கூடிய வகையிலும், கார்ப்பரேட்டுகளின் அடிமையாக விவசாயிகளை மாற்றக்கூடிய வகையிலும் புதிய மூன்று சட்ட மசோதாக்களை பாராளுமன்ற விதிகளுக்கு எதிராக குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றி இருக்கிறது, பாசிச மோடி அரசு.

இச்சட்டத்தை அமல்படுத்த, பாராளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டதில் இருந்து இந்தியா முழுமைக்கும் உள்ள விவசாய சங்கங்கள், விவசாயிகள் கொதித்தெழுந்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று (25/9/2020) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுக்க பல்வேறு விவசாயிகள் கைதாகியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சிதம்பரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI),விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள், கட்சியைச் சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பாசிச மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பியும், பெருந்திரளாக கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம் கடலூர்

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

0

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)
பாகம் – 3

முந்தைய பாகங்கள் >>  1 2

ஐந்தாவதாக, சீர்செய் இயக்கம் :

சீர்செய் இயக்கம் என்பது ஒருவருடைய சிந்தனாமுறையைச் சீர்செய்வது, வேலை நடையைச் சீர்செய்வது என்று அர்த்தப்படும். ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போதும், விடுதலை யுத்தத்தின் போதும், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட ஆரம்ப நாட்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய் இயக்கங்கள் நடத்தப்பட்டன.2 இன்று கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி இன்னொரு சீர்செய் இயக்கத்தைக் கட்சிக்குள் இவ்வாண்டு முதல் நடத்துவதாகத் தீர்மானித்துள்ளது. கட்சிக்கு வெளியிலுள்ள மக்கள் இதில் கலந்து கொள்ளலாம்; அல்லது விரும்பாவிட்டால் கலந்து கொள்ளாமல் விடலாம். இந்தச் சீர்செய் இயக்கத்தில் பிரதான விசயம் ஒருவருடைய சிந்தனாமுறையிலும் வேலைநடையிலும் காணும் மூன்று தவறுகளை, அதாவது, மானசீகவாதம், அதிகாரத்துவம், கோஷ்டிவாதம் ஆகியவற்றை விமர்சனம் செய்வதாகும்.

ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போது நடந்தது போல இன்றைய முறை யாதெனில் முதலில் ஒருசில தஸ்தாவேஜுகளைப் படித்து, பின்னர் இத்தகைய படிப்பின் அடிப்படையில் ஒருவர் தனது சிந்தனையையும் வேலையையும் பரிசீலனை செய்து, விமர்சனம், சுயவிமர்சனம் செய்வதன் மூலம் குறைபாடுகளையும் தவறுகளையும் அம்பலப்படுத்திச் சரியானவற்றையும் சிறந்தவற்றையும் வளர்க்க வேண்டும் என்பதாகும்.

சீர்செய் இயக்கத்தில் ஒருபுறம், நாம் கண்டிப்பாக இருந்து, நமது தவறுகளையும் குறைபாடுகளையும் மேலோட்டமாக இல்லாமல் பாரதூரமாக விமர்சனம், சுயவிமர்சனம் செய்து, அவற்றைத் திருத்த வேண்டும்; மறுபுறம், நாம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளாமல், கடந்த காலத் தவறுகளிலிருந்து படிப்பினை பெற்று எதிர்காலத்தில் தவறுகளைத் தவிர்ப்பது, நோயாளியைக் காப்பாற்ற நோய்க்குச் சிகிச்சை அளிப்பது” என்ற கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும். ஒரே அடியில் ஆட்களை முடித்துவிடுவது” என்ற முறையை நாம் எதிர்க்க வேண்டும்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

நமது கட்சி ஒரு மகத்தான கட்சி, புகழ்மிக்க கட்சி, பிசகற்ற கட்சி. இது அங்கீகரிக்கப்படவேண்டிய ஒரு உண்மை. ஆனால் நம்மிடம் இன்னும் குறைபாடுகள் உண்டு. இதுவும் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு உண்மையாகும். நாம் எல்லாவற்றையும் அங்கீகரிக்கக் கூடாது; சரியானவற்றை மாத்திரம் அங்கீகரிக்க வேண்டும். அதே வேளையில் நாம் எல்லாவற்றையும் நிராகரிக்கக் கூடாது; பிழையானவற்றை மாத்திரம் நிராகரிக்க வேண்டும். நமது வேலையில் பிரதான அம்சம் நமது சாதனைகள். ஆனால் அதில் இன்னும் பல குறைபாடுகளும் தவறுகளும் இருக்கின்றன. எனவேதான் நாம் ஒரு சீர்செய் இயக்கத்தை நடத்த வேண்டியிருக்கின்றது.

நமது சொந்த மானசீகவாதம், அதிகாரத்துவம், கோஷ்டிவாதம் ஆகியவற்றை நாம் விமர்சனம் செய்தால் நமது கட்சியின் புகழுக்கு மாசு ஏற்படுமா?

இல்லை என்று நான் எண்ணுகின்றேன். மாறாக, அது நமது கட்சியின் புகழை அதிகரிக்கச் செய்வதற்குத் துணை செய்யும். ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போது நடந்த சீர்செய் இயக்கம் இதை நிரூபித்துள்ளது. அது நமது கட்சியின் புகழை, நமது கட்சி உறுப்பினர்களின் புகழை, நமது அனுபவமிக்க முதிய ஊழியர்களின் புகழை வளர்த்தது. புதிய ஊழியர்கள் பெரும் முன்னேற்றம் அடைவதற்கும் அது துணை செய்தது.

கம்யூனிஸ்ட் கட்சி, கோமிந்தாங் இரண்டில் விமர்சனத்துக்கு அஞ்சுவது யாது? கோமிந்தாங் ஆகும். அது விமர்சனத்தைத் தடைசெய்தது. ஆனால் அது இறுதித் தோல்வியிலிருந்து கோமிந்தாங்கைக் காப்பாற்றவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனத்துக்கு அஞ்சுவதில்லை. காரணம், நாம் மார்க்சிஸ்டுகள்; உண்மை நம் பக்கத்தில் இருக்கின்றது; அடிப்படை மக்கள், தொழிலாளரும் விவசாயிகளும் நம் பக்கத்தில் இருக்கின்றனர்.

நாம் வழக்கமாகக் கூறுவது போல், சீர்செய் இயக்கம் என்பது “சர்வவியாபகமான ஒரு மார்க்சியக் கல்வி இயக்கம்”.3 சீர்செய்வது என்றால் கட்சி முழுவதும் விமர்சனம், சுயவிமர்சனம் இவற்றின் மூலம் மார்க்சியத்தைக் கற்பது என்று அர்த்தம். இந்தச் சீர்செய் இயக்கத்தின் போக்கில், நாம் மார்க்சியம் பற்றிக் கூடுதலாகப் படிப்பது நிச்சயம்.

தலைமையைப் பொறுத்தவரையில், சீனாவின் மாற்றமும் நிர்மாணமும் நம்மைச் சார்ந்திருக்கின்றன. நமது சிந்தனாமுறையையும் வேலை நடையையும் நாம் சீர்செய்ததும், நமது வேலையில் நாம் மேலும் முன்முயற்சி உடையவர்களாய் மேலும் ஆற்றல் பெற்று, மேலும் நன்றாக வேலை செய்வோம். பரந்துபட்ட மக்களுக்கும் சோசலிச லட்சியத்துக்கும் முழுமனதோடு சேவை செய்கின்ற, மாற்றங்களைக் கொண்டுவர உறுதி பூண்டுள்ள மக்கள் பலர் நமது நாட்டுக்குத் தேவை.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் எல்லாரும் இத்தகையவர்களாக இருக்க வேண்டும். பழைய சீனாவில் சீர்திருத்தம் பற்றிப் பேசுவதே ஒரு குற்றம்; இது பற்றிப் பேசுவோர் சிரச்சேதம் செய்யப்படலாம்; அல்லது சிறையில் அடைக்கப்படலாம். இருந்தும் பலவிதமான கஷ்டங்கள் மத்தியிலும் ஒன்றுக்கும் அஞ்சாது நூல்களும், பத்திரிகைகளும் வெளி யிட்டு மக்களுக்குப் போதித்து அவர்களை ஸ்தாபனரீதியாக அணிதிரட்டி விட்டுக் கொடுக்காது போராட்டங்களை நடத்திய திடசித்தம் வாய்ந்த சீர்திருத்தவாதிகளும் அன்று இருந்தார்கள்.

மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் நமது நாட்டுப் பொருளாதார, கலாச்சாரத் துறைகளின் துரித வளர்ச்சிக்கு வழிகோலியுள்ளது. நமது அரசு ஸ்தாபிக்கப்பட்டு ஒருசில ஆண்டுகளே சென்றுள்ளன. இருந்தும் பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, விஞ்ஞானம் ஆகியவை முன் காணாத அளவில் செழித்து வளர்வதை மக்கள் ஏற்கனவே காண முடிகின்றது. நவ சீனாவைக் கட்டி வளர்ப்பதில் கம்யூனிஸ்டுகளாகிய நாம் எந்தவிதமான கஷ்டத்துக்கும் அஞ்ச மாட்டோம். ஆனால் இதை நாம் நாமாகவே நிறைவேற்ற முடியாது. சோசலிச கம்யூனிஸத் திசையில் நமது சமுதாயத்தின் மாற்றத்துக்கும் நிர்மாணத்துக்குமாக நம்முடன் சேர்ந்து அஞ்சாது போரிடக் கூடிய, உன்னத லட்சியங்களை உடைய, கட்சிக்கு வெளியில் உள்ள மக்கள் பெரும் தொகையில் நமக்குத் தேவை.

பல பத்துக் கோடிச் சீன மக்களுக்கும் சிறந்த ஒரு வாழ்வை உத்தரவாதம் செய்வதும், பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும் பின்தங்கிய நமது நாட்டைச் சுபிட்சமும், பலமும், உயர்ந்த கலாச்சாரத் தரமும் உடைய ஒரு நாடாக மாற்றுவதும் ஒரு கடினமான கடமையாகும். இந்தக் கடமைக்கு மேலும் திறமையாகத் தோள் கொடுத்து, உன்னத லட்சியங்களால் உந்தப்பட்டு, சீர்திருத்தங்களை நிறைவேற்றும் திடசித்தமுடைய, கட்சிக்கு வெளியேயுள்ள எல்லாருடனும் நன்றாய் வேலை செய்யக் கூடியவர்கள் ஆக வேண்டுமானால், நாம் இன்று மாத்திரமல்ல, எதிர்காலத்திலும் சீர்செய் இயக்கங்களை நடத்த வேண்டும்; இடைவிடாது தவறானவை எல்லாவற்றையும் நம்மிடமிருந்து நீக்க வேண்டும்.

பூரணமான பொருள்முதல்வாதிகள் அச்சமற்றவர்கள். நமது சகபோராளிகள் எல்லாரும் துணிகரமாகத் தமது பொறுப்புகளுக்குத் தோள் கொடுப்பர்; கஷ்டங்கள் எல்லாவற்றையும் வெற்றி கொள்வர்; பின்னடைவுகளுக்கோ அல்லது ஏளனங்களுக்கோ அஞ்ச மாட்டார்கள்; கம்யூனிஸ்டுகளாகிய எங்களை விமர்சனம் செய்வதற்கும், தமது ஆலோசனைகளைக் கொடுப்பதற்கும் அஞ்ச மாட்டார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஆயிரம் வெட்டுகளுக்கும் அஞ்சாத ஒருவன்தான் சக்கரவர்த்தியைக் குதிரையிலிருந்து இழுத்து வீழ்த்தும் துணிவுடையவன்” — இதுவே சோசலிசத்தையும் கம்யூனிஸத்தையும் கட்டிவளர்க்கும் நமது போராட்டத்திற்குத் தேவையான தளராத உணர்வு. கம்யூனிஸ்டுகளாகிய நம்மைப் பொறுத்தவரையில், ஒத்துழைப்பவர்களுக்கு உதவியான சூழ்நிலைகளை நாம் சிருஷ்டிக்க வேண்டும். நமது பொதுவேலையில் அவர்களுடன் தோழமையான நல்ல உறவுகளை ஸ்தாபிக்க வேண்டும். நமது பொதுப் போராட்டத்தில் அவர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.

(தொடரும்)

குறிப்புகள் :

2. ஜப்பானிய-எதிர்ப்பு யுத்தத்தின் போது நடந்த சீர்செய் இயக்கம் என்பது, 1942-ம் ஆண்டு, யென்ஆனிலும் இதர ஜப்பானிய-எதிர்ப்புத் தளப்பிரதேசங்களிலும் உள்ள கட்சி ஸ்தாபனங்களில் மானசீகவாதம், கோஷ்டிவாதம், கட்சியின் புளித்துப்போன எழுத்துமுறை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக நடத்தப்பட்ட பெரும் சீர்செய் இயக்கமாகும். விடுதலை யுத்தத்தின் போது நடந்த சீர்செய் இயக்கம் என்பது, 1948-ம் ஆண்டு, விடுதலைப் பிரதேசங்களின் கட்சி ஸ்தாபனங்களில் நிலச் சீர்திருத்த இயக்கத்துடன் இணைத்து, பரந்த அளவில் நடத்தப்பட்ட கட்சிச் சீர்செய்தலாகும். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட ஆரம்ப நாட்களில் நடந்த சீர்செய் இயக்கம் என்பது, தேசவிசால வெற்றி பெற்ற பின், 1950-ம் ஆண்டில் கட்சி முழுவதிலும் நடத்தப்பட்ட சீர்செய் இயக்கமாகும். அதன் நோக்கம் பெருந்தொகையான புதிய கட்சி உறுப்பினர்களுக்குப் போதனையளித்து, அவர்களது தூய்மையற்ற சித்தாந்தங்களை மாற்றுவதும், முதிர்ந்த கட்சி உறுப்பினர் மத்தியில் வெற்றியினால் வளரத் தொடங்கிய இறுமாப்பு, சுயதிருப்தி ஆகியவற்றையும் ஆணையிடும் வேலை நடையையும் சமாளிப்பதும் ஆகும்.

3. “தேர்ந்தெடுக்கப்பட்ட மாஒ சேதுங் படைப்புகள்” பகுதி 3-ல் ”ராணுவத்தில் சுய தேவைக்கான உற்பத்தி பற்றியும், மாபெரும் சீர்செய் இயக்கம், உற்பத்தி இயக்கம் இவற்றின் முக்கியத்துவம் பற்றியும்” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

வேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் ! நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை கண்டித்து இன்று (25.9.20) இந்தியா முழுவதும் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பங்களிப்போடு எழுச்சிகரமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தோழர்கள் பேரணியாக அங்கிருந்து பிரதான சாலைக்கு வந்து விவசாய மசோதாக்களைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

படிக்க :
♦ அறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன ? | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ

விவசாய சீர்திருத்தச் சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு, மக்களின் அத்தியாவசியத் தேவையான உணவு தானியங்களை கார்ப்பரேட்டுகளின் பிடியில் சிக்க வைத்திருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான கட்டுப்பாடு அரசாங்கத்தின் கையில் இருக்கும் போதே, பட்டினிச் சாவுகள் தலைவிரித்தாடிடும் சூழலில் இனி கார்ப்பரேட்டுகளின் கைக்குச் சென்றால், கொத்துக் கொத்தாக பட்டினிச் சாவுகள்தான் இந்தியாவெங்கும்  நடக்கும்.

விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்துவந்த குறைந்த பட்ச விலை முறையை கை கழுவும் விதமாக விவசாயிகள் கார்பரேட்டுகளுடன் நேரடியாக பேரம் நடத்திக் கொள்ளும் வகையில் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

இத்தகைய மக்கள் விரோத சட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் கின்ஷன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் உரிமை மீட்பு களம் தோழர் லெனின் கென்னடி, திராவிடத் தமிழர் கட்சி தோழர்கள் தோழர் கதிரவன், தோழர் ஒண்டி வீரன் முருகேசன், தோழர் திருக்குமரன், தோழர் வேல்ராஜ், தோழர் இளமாறன் கோபால், பூர்வீகத் தமிழர் கட்சி தோழர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. வேளாண் திருத்தச் சட்டத்தை வீழ்த்தும் வரை விவசாயிகளைத் திரட்டி போராட்டம் தொடரும் என்பதை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் :
மக்கள் அதிகாரம், நெல்லை – தூத்துக்குடி

இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ரு நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிந்தால் இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை விளங்க முடியும்.

நீரிழிவு என்பது நோய் என்ற நிலையில் இருந்து அது ஒரு பன்முக காரணிகள் கொண்ட குறைபாடு என்ற நிலையில் வைத்துப்பார்க்கப்படுகிறது. it’s a deficiency.

அதாவது நம் உடல் ஊட்டச்சத்துகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையில் ஏற்படும் குளறுபடி அல்லது குறைபாட்டை நாம் பொதுப்பெயராக “நீரிழிவு” என்று அழைக்கிறோம். Diabetes is a complex disorder with which our body becomes deficient in handling nutrients from food in a right way.

ஒரு நார்மல் மனிதன் அவன் உண்ணும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் இருந்தால் அது ரத்தத்தில் க்ளூகோசை கலக்கும். ரத்தத்தில் இருக்கும் க்ளூகோசை கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் உணரும். உணர்ந்த அடுத்த சில நாழிகைகளில் “இன்சுலினை” ரத்தத்தில் கலக்கும்.

இன்சுலினின் வேலை க்ளூகோசை உடலில் இருக்கும் செல்கள் அனைத்திற்கும் சென்று பசித்திருக்கும் சேய்களுக்கு அன்னை உணவு புகட்டுவது போல பசித்திருக்கும் செல்களுக்கு உணவு ஊட்டும்.

படிக்க :
♦ டைப் – 1 நீரிழிவும் அதற்கான அருமருந்தும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ கருக்கலைப்பு – குடும்பக் கட்டுப்பாடு : ஆண்கள் மனநிலை என்ன ? | மருத்துவர் அனுரத்னா

மிஞ்சிய உணவை ( க்ளூகோசை) கல்லீரலில் க்ளைகோஜெனாகவும்  தோலுக்கு அடியே ட்ரைகிளிசரைட் எனும் கொழுப்பாகவும் சேமிக்க உதவும். இது பஞ்ச காலத்தில் ஏற்படும் பட்டினிகளின் போது உதவும் என்பதற்காக நமது உடலின் ஏற்பாடு.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு( Fat ) மற்றும் புரதம் (protein) போன்றவை ரத்தத்தில் கலக்கும் போது முறையே ஃபேட்டி அமிலங்களாகவும் அமினோ அமிலங்களாகவும் மாறும். அப்போதும் இன்சுலின் சுரக்கும்.

ஃபேட்டி அமிலங்களையும் அமினோ அமிலங்களையும் நமது உடலின் கட்டுமானப்பணிகளுக்கு உபயோகிக்கும் முக்கிய வேலை இன்சுலினுடையது. அதனால் அதை “கட்டுமான மீளுருவாக்க ஹார்மோன்” என்று அழைக்கிறோம். Anabolic harmone.

மேலும் நமது உடலில் புரதத்தை சேமித்து வைத்திருக்கும் தசைகளும், கொழுப்பும் கரையாமல் இருக்க இன்சுலின் அவசியமாகிறது. இன்சுலின் கொழுப்பு கரைவதை தடுக்கிறது. இதில் இருந்து நமக்கு புரிந்திருக்கும் “இன்சுலின்” என்பது நமக்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான ஹார்மோன் என்று.

இந்த ஹார்மோன் பிறப்பில் இருந்தே சிலருக்கு முற்றிலுமாக அல்லது  போதுமான அளவு சுரக்காது . இவர்கள் டைப் ஒன்று நீரிழிவு (TYPE I)  உள்ளவர்கள் என்று அறியப்படுகிறார்கள். இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு சுத்தமாக இல்லாததால் நாம் கட்டாயம் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் யார் கூறினாலும் இன்சுலின் ஊசியை டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள் நிறுத்திவிடக்கூடாது. அவ்வாறு நிறுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அபாயகரமான நிலைக்கு ஏறிவிடும். மேலும் இன்சுலின் இல்லாததால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தில் கீடோன்கள்  ஏறிவிடும்.

நமது செல்களுக்கு க்ளூகோசை ஊட்டவும் இன்சுலின் இல்லை. புதிதாக உருவாகும் கீடோன்களை சாப்பிட்டும் பழக்கமில்லை. ஆதலால் ஒரே சமயத்தில் க்ளூகோசும் கீடோன்களும் அபாய அளவை தாண்டி கோமா நிலைக்கு அழைத்துச்செல்லும். இதை Diabetic Ketoacidotic coma என்கிறோம். பல நேரங்களில் மரணம் சம்பவிக்கும். எனவே டைப் ஒன்று நீரிழிவு நோயாளிக்கு கட்டாயம் இன்சுலினை மறுக்கக் கூடாது.

இப்போது பெரும்பான்மையான டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கதைக்கு வருவோம்.

டைப் டூ (2) நீரிழிவு எப்படி வருகிறது ?

பொதுவாக முப்பது வயது முதல் ஐம்பது வயதிற்குட்பட்ட காலத்தில் தான் அதிகபட்சமான டைப் டூ நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகின்றன. எனவே என்னைப் பொறுத்த வரை நான் டைப் டூ நீரிழிவை “இயந்திர தேய்மான நோயாகவே பார்க்கிறேன்”

நமது உடல் ஒரு இயந்திரம் என்றால் அது இயங்க தேவையான எரிபொருளை விடுத்து வேறொரு எரிபொருளில் இயக்குவதால் ஏற்படும் தேய்மானம் தான் நீரிழிவு நோய் என்பது எனது கருத்து.

படிக்க :
♦ சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !

மருத்துவ விஞ்ஞானம் டைப் டூ டயாபடிஸ்க்கு முதல் காரணமாக “ஜீன்கள்” எனும் பிறவிக்குறைபாட்டை குறிக்கிறது. அடுத்த காரணங்களாக, அதிக கலோரி உணவு, அதிக உடல்  எடை, குறைந்த உடல் பயிற்சி, அதீத மன அழுத்தம் / உளைச்சல் போன்றவற்றை கூறுகிறது.

நிச்சயம் ஜீன்களின் தாக்கத்தை மறுப்பதற்கில்லை. நம்மால் பெரிதாக மாற்ற இயலாத ஒரு காரணியாக ஜீன்கள் இருக்கின்றன. இதை Non modifiable risk factor என்கிறோம். ஆனால் நம்மால் மாற்ற முடிந்த Modifiable risk factorகளில் முதன்மையாக நான் கருதுவது “உணவு”.

டைப் டூ நீரிழிவு நோயாளிக்கு ஏன் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாகின்றன?

  1. அவரது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சரிவர ரத்த க்ளூகோஸ் அளவுகளை கிரகிக்க முடியாமல் போவது. இதனால் உணவு சாப்பிட்டபின் ஏறும் சர்க்கரைக்கு ஏற்றாற் போல் இன்சுலின் சுரப்பு இருக்காது.
  2. நமது உடலில் உள்ள அத்தனை செல்களிலும் இன்சுலினை இணங்கண்டு கொள்ள ஏதுவாக Insulin receptor கள் இருக்கும். இவற்றின் அளவுகள் செயல்களில் குறைவதால் கணையத்தால் சுரக்கப்பட்ட இன்சுலின் செல்களில் சரியாக வேலை செய்யாது இதை Insulin resistance என்போம்.

எனவே ஒரு சமயத்தில் இன்சுலினும் குறைவாக சுரந்து , சுரக்கப்பட்ட கொஞ்சூண்டு இன்சுலினும் சரியாக வேலை செய்யாமல் போவதால் ஏற்படுவதே டைப் டூ டயாபடிஸ்.

இப்போது இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரை செய்யப்படுகிறது? என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம்

ஒரு சராசரி தமிழருக்கு 40 வயதில் நீரிழிவு கண்டறியப்படுகிறது. அவருக்கு பீட்டா செல்கள் நன்றாக வேலை செய்கின்றன. இன்சுலின் சுரப்பு அளவும் நன்றாக இருக்கிறது. ஆனால் சுரக்கப்பட்ட இன்சுலின் மட்டும் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது. ஆகவே முதலில் இன்சுலினை முறையாக வேலை செய்ய வைக்கும் மாத்திரை மட்டும் தரப்படும்.

ஆனால் நம்மவர் அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளை தினமும் சாப்பிடுகிறார். டீயில் சீனியை நிறுத்தவில்லை. ஆகவே சுகர் கண்ட்ரோல் ஆகவில்லை.

காரணம், இப்போது பீட்டா செல்கள் வேலை செய்வதில் சுணக்கம் காட்டுவதால் உணவு சாப்பிட்டவுடனேயே சுரக்க வேண்டிய இன்சுலின் அளவுகள் குறைகின்றன. இதை சரி செய்ய பீட்டா செல்களை தூண்டி இன்சுலினை சுரக்கச்செய்யும் மாத்திரைகள் சேர்க்கப்படுகின்றன. கொஞ்ச காலம் சுகர் கண்ட்ரோல் ஆகிறது.

ஆனால் சில வருடங்கள் கழித்து மீண்டும் ரத்த சர்க்கரை அளவுகள் சரியாக இல்லை. காரணம் இப்போது பீட்டா செல்கள் கிட்டத்தட்ட தங்களது இன்சுலின் சுரப்பை நிறுத்தி விட்டன. பீட்டா செல்கள் முழுவதும் அழிந்தும் போய் விடும் நிலையும் உண்டு. இதை Type 2 ->TYPE 1 என்று அழைக்கிறோம்.

அதாவது டைப் டூ நீரிழிவில் இருந்து டைப் ஒன்று நோயாளியாக மாறிவிட்டார் என்று அர்த்தம் . இப்போது இவருக்கு கணையத்தில் இருந்து இன்சுலினே சுரக்காது. ஆகவே இன்சுலினை வேலை செய்ய வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது. இன்சுலினை சுரக்க வைக்கும் மாத்திரைகளும் வேலைக்கு ஆகாது.

இந்த நிலையில் தான் நம் அருமருந்தான இன்சுலின் ஊசிகள் போடப்படுகின்றன. இன்சுலின் ஏன் மாத்திரையாக இல்லாமல் ஊசியாக இருக்கிறது?

இன்சுலின் என்பது புரதமாக இருப்பதால் மாத்திரையாக போட்டால் நமது ஜீரண மண்டலம் அதை செரிமானம் செய்து  விடும். பலன் இருக்காது. ஆகவே தான் தோலுக்கு அடியில் போடும்  ஊசியாக இன்சுலின் கிடைக்கிறது. ஆகவே, இன்சுலின் ஒருவருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்றால் இனிமேல் அவருக்கு உடலில் சுரக்க இன்சுலின் இல்லை  என்று அர்த்தம்.

நமது வீட்டு சூழலையே எடுத்துக்கொள்வோம். முப்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட பல வீடுகளில் கிணறுகள் இருந்தன. அதில் சில அடிகளில் தண்ணீர் கிடைத்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடுகள் அதிகமாகவே தண்ணீர் தேவையும் அதிகமாக அதிகமாக ஆள்துளை கிணறுகள் போட்டு உறிஞ்சி எடுத்தோம்.  இப்போது ஆள்துளை கிணறுகளிலேயே காற்று தான் வருகிறது. உடனே நாம் தண்ணீரை கேன்களிலும் வண்டிகளிலும் வாங்குகிறோம் .

இதே நிலை தான் இன்சுலினுக்கும். மாவுச்சத்து அதிகமாக உண்டதால் நீரிழிவு வந்தது. உடனே மாவுச்சத்தை குறைக்கவில்லை. மாறாக அதிக மாவுச்சத்து உண்ணும் பழக்கத்திலேயே இருந்தோம். நாளாக நாளாக மாத்திரைகள் வேலை செய்யாமல் இன்சுலின் தேவைப்படும் சூழலுக்கு ஆளாகிறோம். இதுவன்றியும் சில அசாதாரண சூழ்நிலைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படும்.

அவை,
♠ கடும் நோய் தொற்று
♠ விபத்தில் மோசமான காயம்
♠ அறுவை சிகிச்சை
♠ ஸ்டிராய்டு மருந்து உபயோகிக்கும் போது
♠ கர்ப்பிணிகள்

மேற்சொன்ன இடங்களில் நீரிழிவு மாத்திரைகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசி உபயோகிக்கப்படும். மேற்சொன்ன இடங்கள் அனைத்திலும் நம் உடலால் முறையாக இன்சுலின் சுரந்து சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க இயலாது அல்லது உடல் கட்டுமானப் பணிகளை சரிவர செய்ய இயலாது. எனவே இன்சுலின் கட்டாயம் தேவைப்படுகிறது.

படிக்க:
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
♦ நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்

இப்போது இந்த கட்டுரையின் கடைசி மற்றும் முக்கிய பகுதிக்கு வருவோம். ஒருமுறை போட ஆரம்பித்த இன்சுலின் ஊசியை  டைப் டூ டயாபடிஸ் நோயாளி வாழ்நாள் முழுவதும் நிறுத்த முடியாதா???

இன்சுலின் உங்களுக்கு எதனால் பரிந்துரை செய்யப்பட்டது என்பதை அறிந்துமா இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.

நீங்கள் உங்கள் உணவில் மாவுச்சத்தின் அளவை தினமும் 40 கிராமிற்கு உள்ளாக குறைத்தால் உங்கள் கணையம் சுரக்கும் குறைந்த இன்சுலினே போதுமானதாக இருக்கும் நிலை ஏற்படலாம்.

சில நேரங்களில் முற்றிலும் பீட்டா செல்கள் இறந்து விட்டிருந்தால், ஏற்கனவே போடப்பட்டு வந்த இன்சுலின் அளவுகளை விடவும் குறைந்த அளவே போதும் என்ற நிலை வரலாம்.

எனது அனுபவத்தில் பல டைப் டூ நீரிழிவு  நோயாளிகள், குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறி இன்சுலினை நிறுத்தி மாத்திரைகளுக்கு மாறிய கதைகளை கண்டுள்ளேன். பலருக்கு பேலியோ உணவு முறைக்கு மாறியும் கூட இன்சுலின் தொடர்ந்து தேவைப்படுகிறது அதையும் காண்கிறோம்.

தேவைக்கு ஏற்ப இன்சுலின் வழங்கப்படும். குறைக்கப்படும். நிறுத்தப்படும். அந்த முடிவை மருத்துவரிடம் விட்டு விடுங்கள். இன்சுலின் ஊசி நல்லதா ? கெட்டதா ? என்ற கேள்விக்கான பதில் – நிச்சயம் அது நன்மை செய்வது தான்.

அதிக மாவுச்சத்து அதனால் டைப் டூ நீரிழிவை பெற்று   இன்சுலின் சுரக்காத நிலைக்கு சென்ற மக்களுக்கும், பிறவி குறைபாடாக டைப் ஒன்று நீரிழிவை பெற்ற மக்களுக்கும் இன்சுலின் நிச்சயம் அமிர்தம் தான்.

இன்சுலினால் தினமும் பல கோடி உயிர்கள் காக்கப்படுகின்றன.

நன்றி : ஃபேஸ்புக்கில்Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

0

வெங்காயம், உருளைக் கிழங்கு, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்க வகை செய்யும், “அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்ட மசோதா – 2020″-ஐ மோடி அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது.

கடந்த வாரத்தில் இரண்டு விவசாய திருத்தச் சட்ட மசோதாக்களைக் கண்டித்து எதிர்ப்புத் தெரிவித்த 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கடந்த செவ்வாய்க் கிழமை (22-09-2020) அன்று காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர். அந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்ட மசோதா – 2020-ஐ மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிக் கொண்டது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

கோடிக்கணக்கான மக்களின் உணவிலும், விவசாயிகளின் வாழ்விலும் மண்ணள்ளிப் போடும் இத்தகைய சட்டத்தை எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் கமுக்கமாக நிறைவேற்றியிருக்கிறது பாஜக. மறைந்திருந்து தாக்குவதையே அறமாகக் கொண்ட ராமனை உயர்த்திப் பிடிக்கும் பாஜக கும்பலிடம் இதை விட வேறு என்ன நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்?

படிக்க :
♦ கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !
♦ ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவை அனைத்தும் இந்திய அரசினால் அத்தியாவசியப் பொருட்களாக பட்டியலிடப்பட்டிருந்தன. மக்களின் அடிப்படை உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இந்த அடிப்படை உணவு வகைகள் அத்தியாவசிய பொருட்களாக 1955 முதல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகத்தான் இந்தப் பொருட்கள் பெருமளவில் பதுக்கப்படாமலும், இவற்றின் விலை வரம்புமீறிப் போகாமலும் இருந்து வந்தது. பஞ்சம், விளைச்சல் குறைவு போன்ற காலகட்டங்களில் மட்டுமே இவற்றின் விலை உயர்ந்தது. மற்றபடி பதுக்கலின் காரணமாக விலை உயர்வு ஏற்படாமல் தடுக்க ஏற்கெனவே இருந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் வழிவகை செய்தது. இதன் மூலம் இந்தப் பொருட்களை பதுக்கும் வியாபாரிகளைக் கடுமையாக தண்டிக்க வழிவகை செய்தது.

இந்தச் சட்ட மசோதா குறித்துப் பேசிய மத்திய நுகர்வோர் விவகார, உணவு மற்றும் பொது விநியோக துணை இணை அமைச்சர் தன்வே ராவ்சாஹிப் தாதாராவ் குறிப்பிடுகையில், தற்போது நாடு உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து இவற்றை தற்போது நீக்கியுள்ளதாகவும், தேசியப் பேரிடர்கள், போர், விலைவாசி உயர்வுடன் கூடிய பஞ்சம், போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்க வரம்பு விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது உற்பத்தியில் தன்னிறைவு பெறாததால் ஒரு பொருளை அத்தியாவசியப் பொருள் பட்டியலில் இவ்வளவு நாட்கள் வைத்திருந்ததாக புதியதொரு விளக்கத்தை அளிக்கிறார். அத்தியாவசியப் பொருட்கள் என்பவை ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு உறுதி செய்தளிக்கப்பட வேண்டிய – உயிர்வாழ அவசியமான பொருட்களே ஆகும். மக்கள் வாழ அவசியமான உணவுப் பொருட்களை எவ்வித பதுக்கலும் இல்லாமல் தங்குதடையின்றி குறைந்த விலையில் கிடைக்கச் செய்யவே உணவு தானியப் பொருட்களும், எண்ணெய் வித்துக்களும் அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டன. ஆகவே உற்பத்தி தன்னிறைவு பெறுவதற்கும் ஒரு பொருள் அத்தியாவசியப் பொருளா இல்லையா எனத் தீர்மானிப்பதற்கும் எந்த  ஒரு சம்பந்தமும் இல்லை.

எனில் இந்தச் சட்ட திருத்தத்தின் உண்மையான நோக்கம் என்ன ? அதையும் மத்திய இணை அமைச்சரே மேற்பூச்சாக விளக்குகிறார். ‘‘இதுவரை இருப்பு வைக்க தடை இருந்ததால், அவை விவசாய உள்கட்டமைப்பில் முதலீடுகளை தடுத்தன. இந்த தடை நீக்கப்படுவதன் மூலம், விவசாய துறையில் தனியார் துறைகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும்.” என்கிறார்.

விவசாய உட்கட்டமைப்பில் தனியார், வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்த அத்தியாவசிய பொருட்கள் சட்டம் தடையாக இருந்துள்ளது. உதாரணத்திற்கு, வட இந்தியாவின் பெருவாரியான உழைக்கும் மக்கள் உருளைக் கிழங்கை அதிகமான அளவில் உட்கொள்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இவ்வளவு நாள் உருளைக் கிழங்கு இருப்பதால், இதன் விலை பெருமளவில் ஏறவில்லை. அதற்கு முக்கியக் காரணம், பெரும் நிறுவனங்களோ, வியாபாரிகளோ உருளைக் கிழங்கை வாங்கி பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை ஏற்றி விற்பனை செய்ய முடியாது. தற்போது அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக் கிழங்கு நீக்கப்படும் சூழலில், கார்ப்பரேட்டுகளின் பதுக்கல் காரணமாக இதன் விலை கடுமையாக உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆனால் அமைச்சரோ, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தின் மூலம் இவற்றை கார்ப்பரேட் வேளாண் வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் வாங்குவதற்கான வாய்ப்பு இருப்பதால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் உறுதிமொழி இலக்கை எட்ட உதவுவதுடன், எளிதாக வர்த்தகம் புரிய வழி வகுக்கும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர்.

படிக்க :
♦ லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்

இந்தச் சட்ட திருத்த மசோதாவோடு, மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகளில் விவசாயிகளுக்களுக்கான (அதிகாரமளித்தல் & பாதுகாப்பு)  ஒப்பந்த மசோதா மூலம் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதில் இனி அரசு தலையிடாத பட்சத்தில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோரும் அடிமாட்டு விலைக்கு விளை பொருட்களை விற்பதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. இந்நிலையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கம் நிறைவேறும் என்று அமைச்சர் கூறுவது வக்கிரத்தின் உச்சம். இந்த விவசாய மசோதாக்கள் சட்டமாக்கப்பட்ட பிறகு விவசாயிகளின் தற்கொலைகள் இரட்டிப்பாவதற்கான அபாயம்தான் இருக்கிறதே ஒழிய வருமானம் இரட்டிபாகப் போவதில்லை.

பல ஆண்டுகளாகவே, வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அரசு நிர்ணயிக்கும் முறையை மாற்றுமாறு உலக வர்த்தகக் கழகம் தொடர்ந்து நிர்பந்தித்து வந்ததையும், கடந்த ஜனவரி மாதம் முதல் முகேஷ் அம்பானியும், கவுதம் அதானியும் விவசாய மற்றும் உணவுப் பொருள் விற்பனைத்துறையில் நுழைந்திருப்பதையும் இணைத்தே தற்போது கொண்டுவந்திருக்கும் மூன்று விவசாய மசோதாக்களைப் பார்க்க வேண்டும்.

நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தங்களது சுரண்டலை தங்குதடையின்றி நடைமுறைப்படுத்தி வரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், அந்நிய நிதியாதிக்க நிறுவனங்களுக்கும் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த விவசாயத்துறையையும், உணவுப் பொருள் மொத்த மற்றும் சில்லரை விற்பனைத் துறையையும் இந்த மசோதாக்கள் மூலம்  அள்ளிக் கொடுத்திருக்கிறது இந்த மசோதா. உணவுப் பொருள் விற்பனையில் அனுமதிக்கப்படும் இத்தகைய கார்ப்பரேட் கொள்ளையை இன்றே தடுக்கத் தவறினால், இதன் விளைவாக ஏற்படவிருக்கும் விலைவாசி உயர்வின் காரணமாக பசியாலும் பட்டினியாலும் பெருவாரியான மக்கள் சாகும் நிலையை விரைவில் கண்கூடாகக் காணவிருக்கிறோம் என்பது திண்ணம் !


சரண்

 

அறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன ? | தோழர் மாவோ

2

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)
பாகம் – 2

முதல்பாகம் >>

மூன்றாவதாக, அறிவுஜீவிகளைப் புனருருவாக்கும் பிரச்சினை :

மது நாடு கலாச்சாரரீதியில் வளர்ச்சியடையாத ஒரு நாடு. எம்முடைய நாடு போன்ற ஒரு விசாலமான நாட்டுக்கு ஐம்பது லட்சம் அறிவுஜீவிகள் மிகச் சிலரே ஆவர். அறிவுஜீவிகள் இல்லாவிட்டால் நமது வேலைகளை நன்றாகச் செய்ய முடியாது. எனவே அவர்களுடன் ஐக்கியப்படுவதற்கு நாம் நன்றாக உழைக்க வேண்டும். சோசலிசச் சமுதாயம் பிரதானமாகத் தொழிலாளர், விவசாயிகள், அறிவுஜீவிகள் என்ற மூன்று பகுதியினரைக் கொண்ட சமுதாயம்.

அறிவுஜீவிகள் என்போர் மூளை உழைப்பாளர்கள். அவர்களுடைய வேலை மக்களுக்கு, அதாவது தொழிலாளர், விவசாயிகளுக்குச் சேவை செய்வதாகும். பெரும்பான்மையான அறிவுஜீவிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் பழைய சீனாவுக்குச் சேவை செய்தது போல் நவ சீனாவுக்கும், பூர்ஷுவா வர்க்கத்துக்குச் சேவை செய்தது போல் பாட்டாளி வர்க்கத்துக்கும் சேவை செய்ய முடியும்.

அறிவுஜீவிகள் பழைய சீனாவுக்குச் சேவை செய்த காலத்தில் இடதுசாரிகள் எதிர்த்தனர்; மத்திய பகுதியினர் ஊசலாடினர்; வலதுசாரிகள் மட்டும் உறுதியாக நின்றனர். இன்று நவ சீனாவுக்குச் சேவை செய்யும் போது இந்த நிலைமை எதிர்மாறாக உள்ளது. இடதுசாரிகள் உறுதியாக நிற்கின்றனர்; மத்திய பகுதியினர் ஊசலாடுகின்றனர் (புதிய சமுதாயத்தில் இந்த ஊசலாட்டம் பழைய சீனாவில் கண்டதிலும் பார்க்க வேறுபட்டது); வலதுசாரிகள் எதிர்க்கின்றனர். இன்னும் அறிவுஜீவிகள் போதகாசிரியர்கள் ஆவர். நமது பத்திரிகைகள் மக்களுக்குத் தினம் தினம் போதிக்கின்றன. நமது எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப ஊழியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் மாணவர்களுக்குப் போதிக்கின்றனர், மக்களுக்குப் போதிக்கின்றனர்.

படிக்க :
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
♦ சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !

போதனையாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் உள்ள அவர்கள் முதலில் போதிக்கப்பட வேண்டும். சமுதாய அமைப்பில் பெரும் மாற்றம் நிகழும் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இது மேலும் உண்மையாகும். கடந்த சில ஆண்டுகளில் அவர்கள் ஓரளவு மார்க்சியக் கல்வி பெற்றிருக்கின்றார்கள். சிலர் மிகக் கஷ்டப்பட்டுப் படித்துப் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் பெரும்பான்மையினர் தமது பூர்ஷுவா வர்க்க உலகநோக்கை முற்றாக நீக்கி, பாட்டாளி வர்க்க உலகநோக்கைப் பெறுவதற்கு இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டும். சில நபர்கள் ஒருசில மார்க்சிய நூல்களைப் படித்ததும், தம்மைப் பெரும் படிப்பாளிகளாக எண்ணிக் கொள்கின்றனர்.

ஆனால் அவர்கள் வாசித்தது ஆழமாகப் புகுந்து, அவர்களுடைய உள்ளங்களில் பதியவில்லை; அதை எப்படி உபயோகிப்பது என்று அவர்கள் அறியாது இருக்கின்றனர். அவர்களுடைய வர்க்க உணர்வுகளும் பழைய உணர்வுகளாகவே இருக்கின்றன. வேறு சிலர் மிகத் தற்பெருமை பிடித்து, சில சொற்றொடர்களைப் படித்துவிட்டு, தம்மைப் பயங்கரமானவர்களாகக் கருதி, பெரும் இறுமாப்பு அடைகின்றனர். ஆனால் புயல் ஒன்று அடிக்கும் போதெல்லாம் அவர்கள் தொழிலாளர்கள் பெரும்பான்மையான விவசாயிகள் ஆகியோரின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் உறுதியாக நிற்கும் அதே வேளையில் அவர்கள் ஈடாடுகின்றனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் நேர்மையாக இருக்கும் அதேவேளையில் அவர்கள் தெளிவின்றி நிற்கின்றனர். எனவே பிறருக்குப் போதனை அளிப்பவர்கள் இனிமேல் போதனை பெறத் தேவையில்லை, படிக்கத் தேவையில்லை, அல்லது சோசலிசப் புனருருவாக்கம் என்பது பிறரை – நிலப்பிரபுக்கள், முதலாளிகள், தனி உற்பத்தியாளர்கள் ஆகியோரை – புனருருவாக்குவது அன்றி அறிவுஜீவிகளை அல்ல என்று எண்ணுவது பிழையாகும்.

அறிவுஜீவிகளுக்கும் புனருருவாக்கம் அவசியம். தமது அடிப்படை நிலைப்பாட்டை மாற்றாதவர்கள் மாத்திரமல்ல, எல்லோரும் படித்துத் தம்மைத் தாமே புனருருவாக்கிக் கொள்ள வேண்டும். நான் ‘‘எல்லோரும்” என்று குறிப்பிடுவது இங்குள்ள எங்களையும் உள்ளடக்கியதாகும்.

நிலைமைகள் சர்வசதாவும் மாறிக்கொண்டிருக்கின்றன. நமது சிந்தனையைப் புதிய நிலைமைகளுக்கு இசைவாக்க வேண்டுமானால், நாம் படிக்கவேண்டும். மார்க்சியத்தை ஒப்பீட்டு வகையில் நன்கு கிரகித்து, தமது பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் கூட படித்துக் கொண்டே இருக்க வேண்டும்; புதியவற்றைக் கிரகித்துக் கொள்ள வேண்டும்; புதிய பிரச்சினைகளை ஆராய வேண்டும். தமது மனங்களிலுள்ள அசுத்தமானவற்றை நீக்கிக் கொண்டாலொழிய, அறிவுஜீவிகள் பிறருக்குப் போதனையளிக்கும் கடமையை மேற்கொள்ள முடியாது.

உண்மையில் போதிக்கும் அதே வேளையில் நாம் படிக்க வேண்டும். ஆசிரியர்களாக இருக்கும் அதே வேளையில் மாணவர்களாக இருக்க வேண்டும். சிறந்த ஆசிரியனாக இருக்க வேண்டுமென்றால் முதலில் சிறந்த மாணவனாக இருக்க வேண்டும். புத்தகங்களிலிருந்து மட்டும் படிக்க முடியாத பல விசயங்கள் இருக்கின்றன. அவற்றை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து, தொழிலாளர்களிடமிருந்து, வறிய கீழ் மத்திய விவசாயிகளிடமிருந்து, பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து, தாம் படிப்பிப்பவர்களிடமிருந்து ஒருவர் படிக்க வேண்டும்.

நமது அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினர் படிக்க விரும்புகின்றனர் என்று நான் கருதுகின்றேன். அவர்கள் சுயமாக விரும்பிப் படிக்கும் அடிப்படையில் அவர்களுக்கு மனப்பூர்வமாகவும் தகுதியான முறையிலும் உதவி அளிப்பது நமது கடமை. அவர்களைப் படிக்கும்படி நாம் நிர்ப்பந்திக்கவோ பலவந்தப்படுத்தவோ கூடாது.

நான்காவதாக, பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் அறிவுஜீவிகள் ஒன்றிணையும் பிரச்சினை.

பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுக்குத் தொண்டு செய்வது அறிவுஜீவிகளின் கடமையாக இருப்பதால், அவர்கள் முதன் முதலாகத் தொழிலாளர் விவசாயிகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய வாழ்வு, வேலை, கருத்துகளுக்குப் பரிச்சயப்பட வேண்டும். பொதுமக்கள் மத்தியில் செல்லுமாறு, தொழிற்சாலைகளுக்கும் கிராமங்களுக்கும் செல்லுமாறு நாம் அறிவுஜீவிகளுக்கு ஊக்கமளிக்கிறோம். உங்களுடைய வாழ்வு பூராவும் நீங்கள் ஒரு தொழிலாளியை அல்லது ஒரு விவசாயியைச் சந்திக்காமல் இருந்தால் அது நல்லதல்ல. நமது அரசாங்க இயக்குனர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞான ஆராய்ச்சி ஊழியர்கள் எல்லாரும் கிடைக்கும் சந்தர்ப்பம் ஒவ்வொன்றையும் பயன்படுத்தி, தொழிலாளர் விவசாயிகளுடன் நெருங்கிப் பழக வேண்டும்.

சிலருக்குச் சுற்றிப் பார்வையிட மாத்திரம் தொழிற்சாலைகளுக்கு அல்லது கிராமங்களுக்குச் செல்ல முடியும். இதை “குதிரையில் இருந்தவாறே மலர்களைப் பார்ப்பது” என்று சொல்லலாம். ஒன்றும் செய்யாமல் இருப்பதிலும் பார்க்க இது சிறந்தது. வேறு சிலர் அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து, பரிசீலனைகள் நடத்தி, நண்பர்களைத் தேடிக்கொள்ள முடியும். இதை “குதிரையிலிருந்து இறங்கி மலர்களைப் பார்ப்பது” என்று சொல்லலாம். இன்னும் சிலர் ஒரு நீண்ட காலம், அதாவது, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குக் கூடிய காலம் அங்கு தங்கி வாழ முடியும். இதை “குடியேறுவது” என்று கூறலாம்.

படிக்க:
♦ தொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் !
♦ நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !

அறிவுஜீவிகள் சிலர், உதாரணமாகத் தொழிற்சாலைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்களும் நாட்டுப் புறத்திலுள்ள விவசாய நுட்ப ஊழியர்களும் கிராமியக் கல்லூரி ஆசிரியர்களும் தொழிலாளர் விவசாயிகள் மத்தியிலேயே வாழ்கின்றனர். அவர்கள் தமது வேலையை நன்றாகச் செய்து தொழிலாளர் விவசாயிகளுடன் தம்மை இணைக்க வேண்டும். தொழிலாளர் விவசாயிகளுடன் நெருக்கமாக இணைவதை உண்மையில் ஒரு பழக்கமாக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை நாம் சிருஷ்டிக்க வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொன்னால் அப்படிச் செய்யும் பெருந்தொகையான அறிவுஜீவிகள் நம்மிடம் இருக்க வேண்டும். அறிவுஜீவிகள் எல்லாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள். ஏதோ ஒரு காரணத்தால் சிலர் தொழிலாளர் விவசாயிகள் மத்தியில் செல்ல முடியாமல் இருக்கின்றனர். ஆனால் இயன்ற அளவு கூடுதலான அறிவுஜீவிகள் அங்கு செல்வர் என நம்புகின்றோம். அவர்கள் எல்லாரும் ஒரே காலத்தில் செல்லமுடியாது. ஆனால் வெவ்வேறு காலங்களில் குழுக்களாகப் பிரிந்து செல்ல முடியும்.

நாம் யென்ஆனில் இருந்த பழைய நாட்களில் தொழிலாளர் விவசாயிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளப் அறிவுஜீவிகளுக்கு உதவியளிக்கப்பட்டது. அப்போது யென்ஆனில் இருந்த அறிவுஜீவிகளில் பலர் குழம்பிய சிந்தையுடையவர்களாக இருந்ததோடு பலவிதமான விந்தையான நியாயங்களுடன் வெளிப்பட்டார்கள். நாம் ஒரு கருத்தரங்கு கூட்டி, மக்கள் மத்தியில் செல்லும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினோம். பின்னர் பலர் சென்றனர். விளைவுகளும் மிக நன்றாக இருந்தன.

ஒரு அறிவுஜீவியின் புத்தக அறிவு அனுஷ்டானத்துடன் (நடைமுறையுடன்) இணைக்கப்பட்டால் ஒழிய அது பூரண அறிவு ஆகாது; அல்லது சிறிதும் பூரணமற்றதாக இருக்கும். பிரதானமாகப் புத்தகங்களை வாசிப்பதன் மூலம்தான் அறிவுஜீவிகள் நமது முன்னோரின் அனுபவத்தைப் பெறுகின்றனர். புத்தகங்களை வாசிப்பது உண்மையில் தேவையானது; ஆனால் அதனால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடமாட்டா. அவர்கள் உண்மையான நிலையை ஆராய வேண்டும். அனுஷ்டான அனுபவத்தையும் ஸ்தூலமான மூலப் பொருட்களையும் ஆராய வேண்டும். தொழிலாளர் விவசாயிகளுடன் நட்புறவு கொள்ள வேண்டும்.

தொழிலாளர் விவசாயிகளுடன் நட்புக் கொள்வது லேசான காரியமல்ல. இன்று பலர் தொழிற்சாலைகளுக்கு அல்லது கிராமங்களுக்கு சென்றபோதிலுங்கூட, சிலரில்தான் நல்ல விளைவுகள் காணப்பட்டன; ஏனையோரில் அப்படி அல்ல. இங்குள்ள பிரச்சினை யாதெனில், ஒருவருடைய நிலைப்பாடு அல்லது மனோபாவம், அதாவது ஒருவருடைய உலகநோக்கு ஆகும்.

”நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்” என்று நாம் கூறுகின்றோம். ஒவ்வொரு அறிவுத்துறையிலும் பலவிதமான கருத்துகளும் போக்குகளும் இருக்கலாம். இருந்தும், உலகநோக்கைப் பொறுத்தவரையில் அடிப்படையில் இன்று பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் பூர்ஷுவா வர்க்கக் கண்ணோட்டம் என இரண்டு கருத்துக்கள் மாத்திரமே இருக்கின்றன. அக்கண்ணோட்டம் ஒன்றில் இது அல்லது அதாக, பாட்டாளி வர்க்க உலகநோக்கு அல்லது பூர்ஷுவா வர்க்க உலகநோக்காகவே இருக்கும். கம்யூனிஸ உலக நோக்கென்பது பாட்டாளி வர்க்கத்தின் உலக நோக்கேயன்றி வேறு எந்த வர்க்கத்தினது உலகநோக்கும் அல்ல.

எமது இன்றைய அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் பழைய சமுதாயத்திலிருந்து, உழைப்பாளி மக்களல்லாதவர்களின் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். தொழிலாளர் விவசாயிகள் குடும்பங்களிலிருந்து வந்தவர்களில் சிலர்கூட இன்னும் பூர்ஷுவா வர்க்கப் அறிவுஜீவிகளாகவே இருக்கின்றனர். காரணம் விடுதலைக்கு முன் அவர்கள் பெற்ற கல்வி பூர்ஷுவா வர்க்கக் கல்வியாயிருப்பதும் அவர்களுடைய உலகநோக்கு அடிப்படையில் பூர்ஷுவா வர்க்க உலகநோக்காயிருப்பதுமாகும். அவர்கள் பழைய உலக நோக்கை ஒழித்துப் பாட்டாளி வர்க்க உலகநோக்கை ஸ்தாபிக்காவிட்டால் தமது கண்ணோட்டம், நிலைப்பாடு, உணர்வு ஆகியவற்றில் அவர்கள் தொழிலாளர் விவசாயிகளிலிருந்து வேறுபட்டவர்களாக, அவர்களுடன் ஒன்றிணைய முடியாதவர்களாகவே இருப்பார்கள்.

தொழிலாளர் விவசாயிகள் தமது இதயங்களை அவர்களுக்குத் திறந்து காட்ட மாட்டார்கள். அறிவுஜீவிகள் தொழிலாளர் விவசாயிகளுடன் இரண்டறக் கலந்து, அவர்களுடன் நட்புக்கொண்டால்தான், நூல்களிலிருந்து அவர்கள் படித்த மார்க்சியம் உண்மையில் அவர்களுக்குரிய ஒன்றாக மாறமுடியும்.

மார்க்சியத்தை ஒருவர் உண்மையில் கிரகித்துக் கொள்ள வேண்டுமானால், அவர் அதை நூல்களிலிருந்து மாத்திரமல்ல, பிரதானமாக வர்க்கப் போராட்டத்தின் மூலமும், அனுஷ்டான (நடைமுறை) வேலை, பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் படிக்க வேண்டும்.

மார்க்சிய நூல்கள் சிலவற்றைப்  படிப்பதோடு, நமது அறிவுஜீவிகள் பரந்துபட்ட தொழிலாளர் விவசாயிகளுடன் கொள்ளும் நெருங்கிய தொடர்புகள் மூலமும், தமது சொந்த அனுஷ்டான வேலை மூலமும் சிறிது விளக்கம் பெறும்போது, நாம் எல்லாரும் ஒரே பாஷையைப் பேசுவது சாத்தியம்; தேசபக்தி என்ற பொதுப் பாஷையையும், சோசலிச அமைப்பு என்ற பொதுப் பாஷையையும் பேசுவது மாத்திரமல்ல, கம்யூனிஸ உலகநோக்கு என்ற பொதுப் பாஷையைக் கூடப் பேசுவது சாத்தியம். இப்படி ஏற்பட்டால், நாம் எல்லாரும் இன்னும் நன்றாக வேலை செய்வது நிச்சயம்.

(தொடரும்)

மக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் !

கோடானுகோடி விவசாயிகளின் வாழ்க்கையை அழித்து கார்ப்பரேட் கொள்ளைக் கும்பலை கொழிக்க வைக்கும் வேளாண் திருத்த சட்டங்களை கிழித்தெறிவோம் !

ன்பார்ந்த விவசாயிகளே ! உழைக்கும் மக்களே !

நாம் மிகப்பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். பாசிச பி.ஜே.பி அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள விவசாயம் தொடர்பான சட்டத்திருத்தங்கள், நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் அடியோடு அழிப்பதற்கு, அவர்களை ஓட்டாண்டிகளாக ஆக்குவதற்கு திட்டமிட்டு கொண்டு வரப்பட்டுள்ளன.

♠ அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்தம்
♠ வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம்
♠ விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம்

மேற்கண்ட சட்டத்திருத்தங்களின் பெயர்களை பார்க்கும் போது, தேனொழுகுவது போல் இருக்கும். கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்தான் இது விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் நஞ்சு என்பது தெரியும்.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் :

இது 1955-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மீதான திருத்தம் ஆகும். அதாவது உணவு பொருட்களை பதுக்குதல் மற்றும் செயற்கையாக விலை உயர்த்துவதை தடுக்கும் அந்தச் சட்டத்தில்தான் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

இதனடிப்படையில் வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், பயிறு வகைகளுக்கு இச்சட்டத்திருத்தம் விலக்களிக்கிறது.

இதனால் மேற்கண்ட பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இனி இவையனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளின் குடோன்களில்தான் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.

இவையனைத்துமே அன்றாட உணவு சார்ந்த பொருட்கள் ஆகும். நாடு முழுவதும் பலகோடி மக்கள் வறுமையிலும், வாங்கும் சக்தி இல்லாமலும் வாடுகின்றனர். இச்சட்டத் திருத்தத்தின் மூலம் இந்தியா முழுவதும் கொத்து கொத்தாக பட்டினியால் சாகும் அபாயம் ஏற்படும்.

படிக்க:
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் :

இது மாநில அரசுகளின் அதிகாரத்தை அடியோடு பறிக்கிறது. தமிழக விவசாயிகள் காஷ்மீர் வரை சென்று நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற்றுக் கொள்ளலாமாம். அங்கு உரிய விலை கிடைப்பதை கண்காணித்து அரசு உத்திவாதப் படுத்துமாம். யாரிடம் கதை சொல்கிறார்கள்?

தற்போது அரசே உள்ளூரில் கொள்முதல் செய்து உரிய விலை கொடுப்பது என்ற நிர்வாக முறையுள்ள போதே அதை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், வியாபார மாஃபியாக்களும் தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொண்டு கொள்ளையடித்து வருகின்றனர்.

இனி அடிமாட்டு விலைக்குத்தான் விவசாயிகளின் விலை பொருட்களை முதலாளிகள் வாங்குவார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதையை நம்மிடம் சொல்கிறார்கள்.

இனி வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்வதிலிருந்து இந்திய அரசு, மாநில அரசுகள் ஒதுங்கிக் கொள்ளும். கார்ப்பரேட் கொள்ளையர்கள் மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வார்கள். இந்திய உணவு கழகம் மூடப்படும். அப்புறம் ரேசன் கடைகளுக்கு என்ன வேலை ? இழுத்துப்பூட்டி திண்டுக்கல் பூட்டை போட்டுவிடுவார்கள்.

கார்ப்பரேட் முதலாளிகள் சந்தையில் வைப்பதுதான் விலை. அதன்பிறகு எந்தக் கொம்பனாலும் கொத்துக் கொத்தான பட்டினிச் சாவுகளை தடுத்து நிறுத்த முடியாது. இது கற்பனை அல்ல. ஆப்பிரிக்க நாடுகளைப் பாருங்கள்.

விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப்பாதுகாப்பு அவசரச் சட்டம் :

ஏற்கனவே 24 வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மைய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சேமிப்பில் இருப்பது அரிசி, கோதுமை மட்டுமே. அதுவும் அதானி போன்ற முதலாளிகளிடம் இருப்பதை விட குறைவாகவே உள்ளது.

காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயிக்காத அரசைக் கண்டித்து விவசயிகள் நடத்திய போராட்டம் !

எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான கமிட்டி, 50% இலாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் அரசு செய்ய வேண்டும் என்று கூறியது. உண்மையில் நடப்பது என்ன ? தமிழக விவசாயிகள் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2400 தர வேண்டும் என்று கோரிவரும் நிலையில் அரசோ ரூ.1888 நிர்ணயித்துள்ளது. வெளிச் சந்தையிலும் ஆதார விலைக்கெல்லாம் யாரும் எடுப்பதில்லை.

அரசே நேரடியாக அதிகாரம் செலுத்தும் போதே ஆயிரம் குளறுபடிகளும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது எனும் போது, இச்சட்டத்திருத்தமானது தனியார் முதலாளிகள் விலையை நிர்ணயிப்பதற்கு முழுச் சுதந்திரம் வழங்குகிறது. அரசு இனி குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்காது. சந்தையில் முதலாளிகள் தீர்மானிக்கும் விலைக்கு விவசாயிகள் இனி விற்றாக வேண்டும். இது விவசாயத்தை விட்டு விவசாயிகளை பிடுங்கி எறிவதன்றி வேறென்ன?

இனி கார்ப்பரேட் கொள்ளையர்களே ஒட்டுமொத்த இந்திய விவசாயத்தையும் தீர்மானிப்பார்கள். சிறு, குறு நடுத்தர விவசாயிகள் சுயசார்பை இழந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் குத்தகை விவசாயிகளாக மாறுவார்கள். மத்திய காலப் பண்ணையார்களின் இடத்தில் இனி கார்ப்பரேட் முதலாளிகளும், பன்னாட்டு உணவு கழகங்களும் ஓட்டுமொத்த விவசாயிகளையும் சுரண்டிக் கொழுப்பார்கள்.

படிக்க :
♦ விவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் ! மக்கள் அதிகாரம் அறைகூவல் !
♦ 144 தடை உத்தரவை நீக்கு ! விருதையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் !!

தீர்வு என்ன?

இது விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல, உணவு உண்ணும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பிரச்சனை. வாழ்விழந்து வீதிக்கு வந்துவிட்ட விவசாயிகளும், வறுமையால் வாடும் கோடானுகோடி உழைக்கும் மக்களும் போராட்டக்களத்தில் இறங்கினால் அவர்களை ஒடுக்குவதற்கான வேலையை மட்டுமே இனி பாசிஸ்டுகள் செய்வார்கள். கார்ப்பரேட் – காவி பாசிசம் தலைவிரித்தாடும்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கும்பலின் இலாபவெறிக்கான கொள்கைகள்தான் விவசாயிகளுக்கு மட்டுமல்ல நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. கார்ப்பரேட் காவி பாசிசமானது தனியார்மயம் – தாராளமயம் – உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது.

தேர்தல் அரசியலுக்கு வெளியே இந்த மறுகாலனியாதிக்க பொருளாதார கொள்கைகளை ஒழித்துக்கட்டுவதற்கான, கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கான மாபெரும் போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைப்பதுதான் நாட்டைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு!

அதுவே உண்மையான தேசப்பற்று! அமைப்பாய் ஒன்றிணைவோம்! வீதியில் இறங்குவோம்!

இவண்

மக்கள் அதிகாரம்
திருநெல்வேலி-தூத்துக்குடி
தொடர்புக்கு : 93853 53605

பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?

1

செப்டம்பர் 21, 1995 அன்று, சரியாக கால் நூற்றாண்டுக்கு முன்னர், உலகம் முழுவதும் உள்ள பிள்ளையார் சிலைகள் தங்கள் பக்தர்கள் வழங்கிய பாலைக் குடிக்கத் தொடங்கின.

நேபாளத்தில், மன்னர் பிரேந்திரா பிள்ளையார் பால் குடித்ததைப் பார்த்த அனுபவத்தால் சிலிர்த்தார். இந்தியாவில், விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) தலைவர்களும் மக்களும் தங்கள் ஆசிரமங்களிலும் கோயில்களிலும் சிவசக்தி (தெய்வீக ஆற்றல்) வருகையை விதந்தோதினர். பல இடங்களில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அலுவலகங்களில் குறைந்த வருகையே பதிவானது. சந்தைகள் மூடப்பட்டன. பஞ்சாபில் வீரர்கள் இராணுவப் பயிற்சியை நிறுத்தியதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டது. டெல்லி மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் மூடப்பட்டன. திடீரென பால் பற்றாக்குறை ஏற்பட்டது, இதன் காரணமாக பல இடங்களில் உள்ள சிலைகள் பால் பவுடரிலிருந்து தயாரிக்கப்பட்ட பாலை குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெகுமக்களிடையே ஒருவித மயக்கம் இருந்தது.

இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் அடுத்த நாள் தலைப்புச் செய்திகள் இவ்வாறு இருந்தன: “பால் அதிசயம்” இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்தது (பிபிசி); இந்து உலகம் 24 மணி நேர அதிசயத்தால் பிரிக்கப்பட்டுள்ளது (இண்டிபென்டன்ட் இங்கிலாந்து);  கற்றலுக்கான கடவுள் பால் குடிக்கிறாரா? (நியூயார்க் டைம்ஸ்); இந்தியாவின் கடவுளர்கள் தங்கள் விசுவாசிகளை சிறு அதிசயத்தைக் கொண்டு கறக்கின்றன (கார்டியன்);  இந்து கடவுளின் மர்ம தாகத்தை மேரிலாண்ட் கண்டது (வாஷிங்டன் போஸ்ட்); உலகளாவிய இந்துக்களை ஒரு அதிசயம் வியக்கச் செய்கிறது; சிலைகள் பால் குடிப்பதை கடவுளின் செயல் என்று பலர் நம்புகிறார்கள் (லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்); சிவசக்தி இந்தியாவை திகைக்க வைக்கிறது (தி ஏசியன் ஏஜ்); சிலைகள் பால் குடிப்பது தூய அறிவியல் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்).

இந்தியாவின் மிகச்சிறந்த அதிசய செய்தி தனது தடத்தைப் பதித்தது.

படிக்க:
♦ பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !
♦ இந்து முன்னணி பிள்ளையார்களுடன் நேருக்கு நேர் !

நம்பிக்கை vs  பொறுப்பு

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் (செப். 21, 1995), நகர்ப்புற இந்தியா முழுவதிலும் உள்ள நடுத்தர வர்க்க குடியிருப்புகளில் உள்ள குடும்பங்கள் அதிகாலையில் இருந்து அருகிலுள்ள பிள்ளையார் கோயில்களுக்கு விரைந்து செல்லத் தொடங்கின. மறுநாள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய ஒரு ஆய்வில், மும்பை மக்கள்தொகையில் 55%, டெல்லியின் மக்கள் தொகையில் 63% மற்றும் கல்கத்தாவின் 67% மக்கள் (கொல்கத்தா கணக்கு அதிகாரப்பூர்வமானதல்ல) பால் குடிக்கும் அதிசயத்தை நம்புவதாகக் கூறினர். காலை நடைப்பயிற்சி செல்பவர்களும் பாலகங்களிலிருந்து திரும்பி வருபவர்களும் இந்த செய்தியை வீட்டிற்கு கொண்டு வந்தனர். பிள்ளையார் சிலைகளுக்கு பாலுடன் உணவளித்தவர்கள் நிறைவுபெற்ற உணர்வுடன் திரும்பி வந்தனர். ‘நீங்கள் கரண்டியை கடவுளின் வாய்க்கு நகர்த்தி மெதுவாக சாய்த்து விடுங்கள். பால் மெதுவாக மறைந்துவிடும்’ என்றார்கள். பக்தருக்கு இது உண்மையின் தருணம். கடவுள் இருக்கிறார், உங்களுக்கு முன்னால் இருக்கிறார். இது தெய்வீக ஆனந்தத்தை அனுபவிக்கவும் முயற்சிக்கவும் மற்றவர்களைத் தூண்டியது. சடங்கு செய்ய வயதானவர்களும் நோயுற்றவர்களும் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனாலும், கொண்டாடும் மனநிலை இல்லை. மாய உணர்வூட்டும் மனநிலையே இருந்தது. படபடப்பு மற்றும் அமைதியின்மையின் உணர்வு இருந்தது. இந்த அசாதாரண நிகழ்வு ஒரு பெரிய தெய்வீக தலையீட்டின் அடையாளம் என்று விசுவாசிகள் நம்பினர். ஆனால், அது எவ்வளவு காலம் நீடிக்கும்? வி.எச்.பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் ஊடக அலுவலகங்களுக்கு தொலைநகல்களை அனுப்பினார்; அது இந்து மதத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை அறிவித்ததாகக் கூறியது. சிலை வழிபாட்டை இழிவுபடுத்துபவர்களை சிவசக்தி அடிபணிய வைக்கும் என்று கோயில் பண்டிதர்கள் எச்சரித்தனர். தர்மத்தை மறு ஒழுங்குபடுத்த புதிய அவதாரத்தின் வருகையின் தொடக்கத்தைக் குறிக்கும் என்று சிலர் கணித்தனர். பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரபலமான ‘சாமியார்’ சிவசக்தி மிகவும் சக்திவாய்ந்ததாக மாறக்கூடும் என்று எச்சரித்தார். நாள் முன்னேற, உணர்ச்சிவசப்பட்ட விசுவாசிகள் கூட்டு பிரார்த்தனை பாராயணங்களை நடத்தி, வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

பால் குடித்த பிள்ளையார்கள்

இருப்பினும், மாலை நெருங்க நெருங்க சூழல் மாறத் தொடங்கியது. அறிவியலாளர்களிடமும் பகுத்தறிவாளர்களிடமும் இந்த அதிசயத்திற்கு விளக்கங்கள் இருந்தன. இதை முதலில் மதிப்பிட்டது கணித ஆய்வு நிறுவனத்தின் டி.ஜெயராமன். இந்த நிகழ்வு பரப்பிழுவிசை (Surface tension) மற்றும் நுண்துளை விளைவு (Capillary Action) நடவடிக்கையால் நிகழ்ந்தது என அவர் காட்டினார். சிபான் கோட்பாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்சிகள் மூலம் விளக்க அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு கவுன்சிலின் அறிவியலாளர்கள் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களால் அழைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் மத்திய தொழில்நுட்ப அமைச்சர் ஒரு மூத்த அறிவியலாளரை இந்த நிகழ்வை ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். சிலை மீது வைக்கப்படும் பால் எவ்வாறு பீடத்தில் சேகரிக்கப்பட்டு, பள்ளத்தில் பாய்கிறது என்பதை இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் சனல் எடமருகு சிலைகளை நெருக்கமாகக்  காண்பித்தார்; மற்றொரு அறிவியலாளர் கூறுகையில், ஒரிசா கல்லால் செய்யப்பட்டதை விட மகாபலிபுரம் கல்லால் செய்யப்பட்ட சிலைகள் பாலை எளிதில் ஏற்றுக்கொண்டன என்றார். இந்தியா டுடே உளவியலாளர் உதயன் படேலை மேற்கோள் காட்டி: “பால் காணாமல் போன அந்த கணத்தில் மனம் செயல்படுவதை நிறுத்தியது” என்றது.

இருப்பினும், சிலை பாலை இழுத்துக்கொள்வதைப் பக்தர்கள் பார்க்கவில்லை; அது மாலைகள் மற்றும் பூக்களுக்கு அடியில் மறைந்திருந்தது.

பால் அதிசயத்திற்கு மற்றொரு விதை பொருள் இருந்தது. சமகால ஊடகங்கள் முக்கியமான சூழ்நிலையைக் கையாண்ட முன்மாதிரியான முறையை இது எடுத்துக்காட்டுகிறது. சமநிலை உணர்வு மற்றும் மிகவும் சமூக பொறுப்பு இருந்தது. ஜீ நியூஸ் கூட இந்த நிகழ்வின் பின்னால் உள்ள அறிவியலை வலியுறுத்தியது. இன்று போலல்லாமல், துறைசார் அறிவியலாளர்கள் கல்வி சுதந்திரத்தை அனுபவித்தனர், மேலும் ஊடகங்கள் கட்டுப்பாடும் காரணமும் நல்லொழுக்கங்கள் என்று நம்பின. ஊடக உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமலாக்க இயக்குநரக சோதனைகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தால் நிர்பந்திக்கப்படுவதில் இருந்து விடுபட்டனர். அலுவல்பூர்வ விவரிப்பு இல்லாததால் சமகால ஊடகங்கள் அதிசயத்தின் மாறுபட்ட பரிமாணங்களை முன்வைக்க உதவின.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

இதற்கிடையில், இந்துத்துவ திட்டம் அதன் சொந்த அணிகளில் இருந்து சவால்களை எதிர்கொண்டது. புகழ்பெற்ற மும்பை கணபதி கோயிலில் 20 ஆண்டுகளாக அர்ச்சகராக உள்ள உமேஷ் பட் என்பவரை இந்தியா டுடே மேற்கோளிட்டுள்ளது: “இது என் கோயிலின் சிலையுடன் நடக்கவில்லை. ஆனால் மக்கள் வந்தபோது, ​​என்னால் கோயிலைப் பூட்ட முடியவில்லை.”

மத்திய மும்பையின் சித்திவிநாயகக் கோயிலின் அறங்காவலர் மோகன்தாஸ் மல்யா கூறினார்: “மதியம் 12.30 மணிக்குப் பிறகு தெய்வம் பால் எடுக்க மறுத்துவிட்டது.” மும்பையிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள தில்வாடாவில் உள்ள பிரபலமான கணபதி கோயிலில் உள்ள சிலை இன்னும் குறைவாகவே ஒத்துழைத்தது.

இதற்காக, வி.எச்.பியின் சாமியார்களின் ஒரு விளக்கம் இருந்தது: தெய்வங்கள் உள்ளூர் நாஸ்திக்குகள் (நாத்திகர்கள்; இந்த விஷயத்தில், அவிசுவாசிகள்) மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.

டெல்லி பங்குச் சந்தையில் ஒரு பிள்ளையார் படம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் வாடிக்கையாளர்கள் வழங்கும் பாலை குடிக்க மறுத்துவிட்டது. பகதூர் ஷா ஜாபர் மார்க்கில் இருந்த பீரே லால் பவனுக்குப் பின்னால் அமைந்த சன்னதியில் உள்ள பிள்ளையார் சிலை பழம் மற்றும் கரும்புச் சாற்றை பால் போல எளிதில் குடித்தது. ஒரு வாரம் கழித்து, செப்டம்பர் 27 அன்று, தி ஸ்டேட்ஸ்மேன் சிங்கப்பூரில் உள்ள கன்னி மேரியின் சிலையும் பாலை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது. செப்டம்பர் 28 ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸில் மும்பையில் இருந்து வந்த ஒரு செய்தியில், காந்தி சிலைக்கு உள்ளூர்வாசிகள் மது கொடுத்தபோது, அது உடனடியாக அருந்தியதாகக் கூறியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.  உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தொழிலாளர்கள் அம்பேத்கர் மற்றும் புத்தரின் சிலைகளுக்கு பால் கொடுக்கத் தொடங்கிய நேரத்தில், எதிர் கதைகளும் செயல்பாட்டில் இருந்தன என்பது தெளிவாகத் தெரிந்தது. இவ்வாறு ஒரு வாரத்திற்குள், ஒரு தெய்வீக அதிசயமாகத் தொடங்கியது நகைச்சுவையாக முடிந்தது.

சங்க பரிவார் உள்ளே புகுதல்

அப்போது, சிபிஐ வழக்குகளில் சிக்கியிருந்த ‘சாமியார்’ சந்திரசாமி, பால் அதிசயம் குறித்து உரிமை கோர முயன்றார். தனது டெல்லி ஆசிரமத்திலிருந்து, அவர் UNI-டம்   “இது தெய்வீக அற்புதங்களின் ஆரம்பம் மட்டுமே.” என்றார். ஆனால் சிலர் அவரை தீவிரமாக எடுத்துக் கொண்டனர். “எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல்” வார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மினா சுவாமிநாதன், ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் மட்டுமே அத்தகைய நடவடிக்கையை துல்லியமாக மேற்கொள்ளும் திறன் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஜான்டேவலன் பூங்காவில் உள்ள ஒரு கோயில் இந்த அதிசயத்தின் மையமாக இருந்தது என்று அப்போதைய நரசிம்மராவ் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சீதாராம் கேசரி உளவு அறிக்கைகளை மேற்கோள் காட்டினார்.  மக்களவைத் தேர்தலில் தவறான வதந்திகளை பரப்புவதன் மூலம் வாக்குகளைப் பெறுவதற்கான பாஜக-வின் சூழ்ச்சி இது என அவர் கூறினார்.

“இந்து மதம் இன்று” இதழ் விவரித்துள்ளபடியான இந்துத்துவ பார்வையின் படி, டெல்லியைச் சேர்ந்த ஒருவரின் கனவில் விநாயகருக்கு தாகம் எடுத்தது. அவர் ஜாண்டேவலன் கோயிலின் பூசாரியை எழுப்பியதைத் தொடர்ந்து அதிசயம் நடந்தது. அருகிலுள்ள பிர்லா மந்திர் பூசாரி, நள்ளிரவில் கோயில் மணிகள் ஒலிப்பது கேட்டதும் அண்டை வீட்டாரிடம் தெரிவித்தார்.

இப்போது பிரபலமான பரிவார் வலைபின்னல்கள் செயல்பாடுகளைக் கையில் எடுத்துக் கொள்ளத் தொடங்கின. தொலைபேசி அழைப்புகள் உலகின் குறுக்கும் நெடுக்குமாகப் போகத் தொடங்கின. அக்டோபர் 1-ம் தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு என்.ஆர்.ஐ, அந்த நாளில் மட்டும் இந்தியாவிலிருந்து தொடர்ச்சியாக ஆறு அழைப்புகளைப் பெற்றதாகக் கூறியது.

அனுமன் கண்களில் வடிந்த கண்ணீர்

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள கோயில்கள்தான் பால் குடிக்கும் அதிசயத்தை முதன் முதலில் அனுபவித்தது என்றால் அது அப்படி இருக்கும்? பல இந்தியர்கள் தங்கள் என்.ஆர்.ஐ நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து இதை முதலில் கேள்விப்பட்டதாகக் கூறினர்.  ஏனென்றால், இந்திய நேரப்படி அதிகாலை 3 மணியளவில், அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள அவர்களது உறவினர் மாலை சடங்குகளுக்காக தங்கள் கோயில்களைத் திறக்கவிருந்தனர். அந்த வகையில் என்.ஆர்.ஐ பக்தர்கள் தங்கள் இந்திய சகோதரர்கள் செய்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே பாலூட்டத் தொடங்கினர். ஆர்.எஸ்.எஸ் பரிவார், தங்களுடன் தொடர்புடைய பதிவுசெய்த அமைப்பான ‘பிஜேபியின் வெளிநாட்டு நண்பர்கள்’ என்ற வலையமைப்பைப் பயன்படுத்தியது. ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆசிரமங்கள் பல வி.எச்.பி. உடன் தொடர்புடையவை, வெளிநாடுகளில் ஏராளமான பக்தர்களைக் கொண்டுள்ளன. உலகெங்கிலும் இந்த ‘அற்புதத்தை’ விரைவாக பரப்புவதில் அவை முக்கிய பங்கு வகித்தன.

கெடுவாய்ப்பாக பரிவாரைப் பொறுத்தவரை, பால் குடிக்கும் வித்தை ஒரு தோல்வியாக முடிந்தது. 1980-களின் நடுப்பகுதியில் ராமாயணம் மற்றும் மகாபாரத தொலைக்காட்சி சீரியல்கள், அயோத்தி கிளர்ச்சி மற்றும் ஷா பானோ வழக்கு போன்று, இந்து நம்பிக்கையை பலப்படுத்துவதற்கான ஒரு அடித்தளமாக இது வடிவமைக்கப்பட்டது. இந்த அதிசயம் இந்து ஆன்மாவின் மீது நீடித்த முத்திரையை பதிக்கும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். வி.எச்.பி தலைவர்கள் வி.எச். டால்மியா மற்றும் கிரிராஜ் கிஷோர் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆண்டு சடங்காக இருக்க விரும்பினர். செப்டம்பர் 21-ம் தேதி கோயில்களிலும் வீடுகளிலும் விளக்கு ஏற்றி விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் இருந்தது. இருப்பினும், மற்ற சிலைகளும் பால் குடிப்பதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, சிவசக்தியின் ஒளிவட்டம் அதன் பிரகாசத்தை இழந்தது.

பாஜக தலைவர்களும் வி.எச்.பி திட்டத்தை சாதாரணமானதாகவே எடுத்துக்கொண்டனர். அவர்கள் அதை ஒரு பயனுள்ள தேர்தல் தளமாக எடுத்துக்கொள்ளவில்லை. நரசிம்மராவ் அரசாங்கத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தூண்டிவிட்டு பாஜக ஏற்கெனவே வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஆனால் 1996 தேர்தலுக்குப் பிறகு பாஜக பெரும்பான்மை குறைந்ததால், மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை திரட்ட வாஜ்பாய் நினைத்தார். இது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை மென்மையாக முன்னெடுக்க வைத்தது. அதனால்தான் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் பால் அதிசயம் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்தனர். முரளி மனோகர் ஜோஷி ஒரு இயற்பியலாளராக, நுண்துளை வினையே காரணம் என்று கூறினார். பால் தாக்கரே இதை ஒரு ‘ஏமாற்று’ என்று அழைத்தார்.

இவ்வகையில் தான் பெரும் இந்துத்துவத் திட்டம் ஒன்றுமில்லாமல் போனது. 1995-க்குப் பிறகு,  ஆகஸ்ட் 2006, ஜனவரி 2008 மற்றும் செப்டம்பர் 2010-ல் என மேலும் மூன்று பால் அற்புதங்கள் பதிவாகியுள்ளன. மார்ச் 2017-ல், அலகாபாத்தில் மீர்கஞ்சில் ஒரு அனுமன் சிலை கண்ணீர் சிந்தியது, அச்சுறுத்தும் முன் அனுமானங்களுக்கு அடிகோலியது. ஆனால் பின்னர் சிலைக்கு பயன்படுத்தப்பட்ட செந்நிற வர்ணத்தில் மெர்குரியல் அமிலம் கலந்திருந்ததால்தான் கண்ணீர் வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டுரையாளர் : பி.ராமன் , அரசியல் ஆய்வாளர்.
தமிழாக்கம் : அனிதா
நன்றி: த வயர்

 

கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ

0

உட்கட்சி ஒற்றுமையில் ஓர் இயங்கியல் அணுகும் முறை
தோழர் மாவோ
(நவம்பர் 18, 1957)


1957-ல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் கூட்டத்தில் தோழர் மாவோ நிகழ்த்திய சிறப்புரை. மா சேதுங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 5-ம் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.


 

அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் !

ற்றுமை என்ற பிரச்சினையைப் பொறுத்தவரையில், அணுகும் முறையைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு தோழரிடமும் அவர் பாதகமான ஒருவராக இல்லாமலிருந்தால், அல்லது நாச வேலைக்காரராக இல்லாமலிருந்தால், அவரோடு ஒன்றுபடுவது என்பதுதான் நமது அணுகும் முறையாக இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். நிலையியல் (இயக்க மறுப்பியல்) அணுகும் முறையை அல்ல; ஓர் இயங்கியல் அணுகும் முறையை நாம் அவர்பால் கடைப்பிடிக்க வேண்டும்.

இயங்கியல் அணுகும் முறை என்றால் என்ன?

எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்ப்பது, தவறு செய்து விட்டார் என்ற காரணத்தினால் மட்டும் ஒருவரை முற்றாகப் புறக்கணிக்காமல், எல்லா மனிதர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வது என்பதுதான் இதன் பொருள். “தவறு செய்யாத தனி ஒரு மனிதர்கூட இவ்வுலகில் இல்லை” என்று லெனின் ஒருமுறை கூறினார். ஒவ்வொருவருக்கும் ஆதரவு தேவை. தகுதியுள்ள ஒருவருக்கும் மற்ற மூன்று பேர்களுடைய உதவி தேவை. ஒரு வேலிக்கு மூன்று கால்களின் ஆதரவு தேவை. மிக மிக அழகாக இருக்கும் தாமரை மலர் எழுந்து தன் அழகை எடுத்துக்காட்ட அதன் இலைகளில் பசுமை தேவை. இவைகள் சீனப் பழமொழிகள்.

மற்றொரு சீனப் பழமொழி கூறுவது என்னவெனில், மூன்று செருப்புத் தைப்பவர்கள், அவர்களின் அறிவை ஒன்றிணைத்தபோது பேராற்றல் மிக்க பெருந்திறமைசாலியான ‘சுக்கேலி’யானுக்குச் சமமாகிவிடுகிறார்கள். ‘சுக்கேலியான்’ ஒருபோதும் முழுமையானவராகி விடமுடியாது. அவருக்கு அவருக்கே உரிய எல்லைகள் உண்டு. நம்முடைய பன்னிரெண்டு நாடுகளின் இந்தப் பிரகடனத்தைப் பாருங்கள். நாம் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்று ஒவ்வொரு நகலாகப் பரிசீலித்தோம். இன்னும் அதை மெருகுக் கூட்டிப் பூர்த்தி செய்யவில்லை. கடவுளைப் போன்று எங்கும் நிறைந்தவனாகவும் எல்லாம் வல்லவனாகவும் இருக்கிறேன் என்று யார் ஒருவர் தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டாலும் அது வெறும் இறுமாப்பென்றே நான் நினைக்கிறேன்.

எனவே தவறு செய்த ஒரு தோழரின்பால் எத்தகைய அணுகும் முறையை நாம் மேற்கொள்ள வேண்டும்? நாம் ஒரு நிலையியல் (இயக்க மறுப்பியல்) அணுகும் முறையைக் கடைப்பிடிக்காமல் இயங்கியல் அணுகும் முறையைக் கடைப்பிடித்து ஆராய்ந்து அறிபவர்களாக இருக்க வேண்டும்.

எங்களுடைய கட்சி ஒருமுறை நிலையியல், வறட்டுத் தத்துவவாதத்தில் புதைந்தது. அதற்குப் பிடிக்காதவர்கள் யார் இருந்தாலும் அவர்களை முழுமையாக ஒழித்துக்கட்டியது. பிறகு நாங்கள் வறட்டு தத்துவவாதத்தைத் துடைத்தெறிந்தோம். இயங்கியலை மேலும் சிறிது கற்றுக் கொள்ளத் தொடங்கினோம்.

எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது இயங்கியலின் அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி தவறுகள் செய்த ஒரு தோழரை நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் முதலில் அவரிடமுள்ள தவறுகளை அவரிடமிருந்து களைந்தெறிய ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும். இரண்டாவதாக அவருக்கு உதவியும் செய்ய வேண்டும். முதல்நிலை போராட்டம்; இரண்டாவது நிலை உதவி, அவருடைய தவறுகளைத் திருத்துவதற்கு அவருக்கு உதவி செய்வது. இதனால் அவருக்கு ஒரு வழி கிடைக்கும் என்ற நல்லெண்ணத்திலிருந்து நாம் தொடங்க வேண்டும்.

இருப்பினும் வேறு வகையான நபர்களைச் சந்திக்கும் முறை வேறானது. ரஷ்யாவைச் சேர்ந்த டிராட்ஸ்கி, சீனாவைச் சேர்ந்த சென்டு ஷியூ, செங் கோ-டோ, காவோ – காங் போன்ற நபர்களிடம் உதவி செய்யும் அணுகும் முறையைக் கடைபிடிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் திருத்தப்பட முடியாதவர்கள்.

இத்தோடு ஹிட்லர், சியாங் கே ஷேக், ஜார் போன்ற தனி நபர்களும் இருக்கிறார்கள். அவர்களும் அதேபோன்று திருத்தப்பட முடியாதவர்கள். அவர்களைத் தூக்கியெறிய வேண்டும். ஏனென்றால் அவர்களும் நாமும் ஒருவருக்கொருவர் முற்றாக வெவ்வேறானவர்கள். இந்த அர்த்தத்தில் அவர்களுடைய இயல்பில் ஒரு அம்சம் மட்டும்தான் இருக்கிறது. இரண்டு அம்சங்கள் இல்லை.

இறுதியாக ஆராய்ந்தால் ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் பொறுத்தவரையில் கூட இதுதான் உண்மை. இவைகள் இறுதியில் சோசலிச அமைப்பால் மாற்றியமைக்கப்படுவது நிச்சயம். இதே வரையறை தத்துவத்திற்கும் பொருந்தும். கருத்துமுதல்வாதத்தை நீக்கி பொருள்முதல்வாதம் நிலைபெறுவதும், ஆத்திகத்தை நீக்கி நாத்திகம் நிலைபெறுவதும் நடந்தே தீரும். இங்கு நாம் யுத்த தந்திரரீதியான, முழுமையான கண்ணோட்டத்திலான குறிக்கோளைப் பற்றித்தான் பேசுகிறோம். ஆனால், செயல்தந்திர ரீதியான (பகுதி நிலையிலான) கட்டங்களின் பிரச்சினை வேறுபட்டது. இந்தக் கட்டங்களில் சமரசங்கள் செய்து கொள்ளலாம்.

கொரியாவில் 38-வது அட்சரேகையின் மீது அமெரிக்கர்களுடன் நாம் சமரசம் செய்து கொள்ளவில்லையா? வியட்நாமில் ஃபிரான்சுடன் சமரசம் நிகழவில்லையா? ஒவ்வொரு செயல்தந்திரக் கட்டத்திலும் சமரசங்கள் செய்து கொள்வதிலும் போராட்டங்கள் நடத்துவதிலும் சிறந்தவர்களாக விளங்குவது அவசியம்.

நாம் இப்பொழுது தோழர்களுக்கிடையிலான உறவுகளைப் பார்ப்போம். தங்களுக்கிடையில் தப்பபிப்பிராயங்கள் உள்ள இடங்களில் தோழர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் ஆலோசனை கூறுவேன். ஒருக்கால் கம்யூனிஸ்ட் கட்சியில் வந்து விட்டாலே அவர்கள் எல்லாம் வேறுபாடுகளும், தப்பபிப்பிராயங்களும் இல்லாத முனிவர்களாகி விடுகிறார்கள்; கட்சி என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்றல்ல; அதாவது, அது ஒன்றேயானதாகவும் சீரானதாகவும் இருக்கிறது. எனவே பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவையில்லை என்றெல்லாம் சிலர் நினைப்பதாகத் தெரிகிறது.

கட்சிக்குள் உள்ளவர்கள் 100 சதவீதம் மார்க்சியவாதிகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். உண்மையில் எல்லா அளவுகளிலுமான மார்க்சியவாதிகளும் இருக்கிறார்கள். 100 சதவிகிதம், 90, 80, 70, 60 அல்லது 50 சதவிகித மார்க்சியவாதிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் 10 அல்லது 20 சதவிகிதம் மட்டுமே மார்க்சியவாதிகளாக இருக்கிறார்கள்.

நாம் இரண்டு பேர்களோ அல்லது அதற்கு மேற்பட்டோ ஒரு சிறிய அறையில் ஒன்றுசேர்ந்து பேச முடியாதா? ஒற்றுமைக்கான விருப்பத்திலிருந்து துவங்கி ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்ற உணர்வோடு நாம் பேச்சுவார்த்தை நடத்த முடியாதா?

கம்யூனிஸ்ட் அணிகளுக்குள்ளான பேச்சுவார்த்தையைத்தான் நான் குறிப்பிடுகிறேன், ஏகாதிபத்தியங்களோடு உள்ள பேச்சுவார்த்தையை அல்ல. (அவர்களோடும் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று இருப்பினும்கூட) நான் ஒரு எடுத்துக்காட்டைத் தருகிறேன். நமது பன்னிரெண்டு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கவில்லையா?

60-க்கு மேற்பட்ட கட்சிகளும்கூட பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளுக்குச் சேதம் ஏற்படாமல் இருந்தால், மற்றவர்களிடமிருந்து நாம் ஏற்றுக் கொள்ளத்தக்க சில கருத்துக்களை ஏற்றுக் கொண்டு கைவிடத்தக்க நமது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றைக் கைவிடுகிறோம்.

எனவே தவறுகள் செய்த ஒரு தோழரைக் கையாள்வதற்கு நமக்கு இரண்டு கரங்கள் இருக்கின்றன. ஒருகரம் அவரோடு போராடுவதற்கு; மற்றொரு கரம் அவரோடு ஒன்றுபடுவதற்கு. போராட்டத்தின் நோக்கம் மார்க்சியக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவது. இதன் பொருள் கோட்பாடு தழுவியவராக இருப்பது; இது ஒரு கரம், மற்றொரு கரம் அவருடன் ஒன்றுபடுவதற்கானது. ஒற்றுமையின் நோக்கம், அவருக்கு ஒரு வழியைத் தருவது; அவரோடு சமரசம் செய்து கொள்வது; இதன் பொருள் நெளிவு சுளிவானவராக இருப்பது. கோட்பாட்டோடு நெளிவு சுளிவை ஒன்றிணைப்பது என்பது ஒரு மார்க்சிய லெனினியக் கோட்பாடு; இது எதிர்மறையின் ஒற்றுமையாகும்.

எத்தகைய உலகத்திலும் குறிப்பாக வர்க்க சமுதாயத்தில் முரண்பாடுகள் மிகுந்திருக்கின்றன. சோசலிச சமுதாயத்தில் முரண்பாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது பிரச்சினையைத் தவறான வழியில் முன்வைப்பதாகும் என்று நான் கருதுகிறேன். முரண்பாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதல்ல பிரச்சினை. அங்கு முரண்பாடுகள் மிகுந்திருக்கின்றன என்பதுதான் பிரச்சினை. முரண்பாடுகள் இல்லாத இடமே இல்லை; ஆராய்ந்து அறியப்பட முடியாத எந்த நபருமே இல்லை. அவரை ஆராய்ந்து அறிய முடியாது என நினைப்பது நிலையியல் பார்வையைக் கொண்டது. பாருங்கள்! ஒரு அணு என்பது சிக்கலான எதிர்மறைகளின் ஒற்றுமைகளைக் கொண்டது. இதில் இரண்டு எதிர்மறைகளின் ஒற்றுமை இருக்கின்றது.

அவை மூலக்கருவும் எலெக்ட்ரான்களும் ஆகும். ஒரு மூலக்கருவில் மேலும் ஒரு எதிர்மறைகளின் ஒற்றுமை இருக்கின்றது. அது புரோட்டான்களும் நியூட்ரான்களும் ஆகும். புரோட்டானைப் பற்றிக் கூறினால் புரோட்டான்களும் எதிர் புரோட்டான்களும் இருக்கின்றன. நியூட்ரானைப் பொருத்தவரையில் நியூட்ரான்களும் எதிர் நியூட்ரான்களும் உள்ளன. சுருங்கக் கூறினால் எதிர்மறைகளின் ஒற்றுமை எங்கும் நிலவுகிறது. எதிர்மறைகளின் ஒற்றுமையைப் பற்றிய கோட்பாட்டை அதாவது இயங்கியலை, பரவலாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இயங்கியல், தத்துவஞானிகளின் குறுகிய வட்டத்திலிருந்து வெளியேறி பரந்துபட்ட மக்களிடம் செல்ல வேண்டும் என்று நான் கூறுவேன். கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் குழுக்களிலும் மையக்குழுக்களின் விரிவுபடுத்தப்பட்ட கூட்டங்களிலும் கட்சிக் கமிட்டிகளின் எல்லா மட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூறுகிறேன்.

படிக்க:
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

நமது கட்சிக் கிளைச் செயலாளர்கள் கிளைக் கூட்டங்களுக்கான அறிக்கைகளைத் தயார் செய்யும் பொழுது அவர்கள் தங்களுடைய குறிப்புப் புத்தகங்களில் இரண்டு விஷயங்களை எழுதியிருக்க வேண்டும்; முதலாவது சாதனைகள், இரண்டாவது குறைபாடுகள். அப்படிச் செய்யும் பொழுதுதான் அவர்கள் இயங்கியலை அறிந்திருக்கிறார்கள் என்பது உண்மையாகும்.

ஒன்று இரண்டாகப் பிரிகிறது – இதுவே சர்வ வியாபகமான (எங்கும், எதிலும், எப்பொழுதும் நிகழும்) நிகழ்ச்சி. இதுவே இயங்கியல்.

 

திருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் !

செப்டம்பர் 17 அன்று, தந்தைப் பெரியாரின் 142 -வது பிறந்தநாளை “பாசிச எதிர்ப்பு நாளாக” முன்னிறுத்தி திருவாரூரை சேர்ந்த மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி, பகுஜன் சமாஜ், மாற்றத்திற்கான மக்கள் களம், அனைத்து மக்கள் நீதிக்கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி, மே 17 இயக்கம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய “ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு” சார்பாக இருசக்கரப் பேரணி நடத்தப்பட்டது.

பெரியார் முதலில் கடவுள் மறுப்பு இயக்கத்தை தொடங்கிய ஊரான கண்கொடுத்தவனிதம் என்ற கிராமத்தில் இருந்து பேரணி தொடங்கியது. அப்பகுதியில் திராவிட கழகம் சார்பாக பெரியார் பிறந்தநாளுக்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வேண்டுமென்ற  திமிர்த்தனமாக மறைத்து ‘மோடியின் பிறந்த நாள்’ சுவரொட்டியை ஒட்டியிருந்தனர்.

இதை கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் தி.க-வினருடன், பாஜக தவிர்த்த அனைத்து ஓட்டுக் கட்சியினரும் பொதுமக்களும் என நூற்றுக்கணக்கில் திரண்டனர். பா.ஜ.க.-வின் ஒன்றிய துணை செயலாளரை வரவழைத்து மக்கள் முன்னால் மோடியின் சுவரொட்டியை தன் கையாலேயே கிழிக்க வைத்து, “இனிமேல் இப்படி தவறு செய்ய மாட்டோம்” என்று மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார். பேரணி குளிக்கரை, தேவர்கண்ட நல்லூர், வேலங்குடி, புலிவலம், கிடாரங்கொண்டான், அடியக்கமங்கலம், திருவாரூர் நகரம், பவித்தர மாணிக்கம், காட்டூர், நன்னிலம், சன்னாநல்லூர் வழியாக முடிகொண்டான் ஊரில் முடிவுற்றது.

தந்தை பெரியாரின் சிலைக்கு மாலையிட்டு பெரியாருக்கு மரியாதை செலுத்தி முழக்கமிடப்பட்டது. பாசிச கும்பலின் வெறியாட்டத்தை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் ஒன்றிணைந்தால் முறியடிக்க முடியும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியதாக இந்த நிகழ்வு அமைந்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம், திருவாரூர்.
தொடர்புக்கு : 8220716242.

சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

0

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)

தோழர்களே !

நமது மாநாடு1 நன்றாக நடைபெற்று வருகின்றது. மாநாட்டின்போது பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. நாம் பல விசயங்களைப் பற்றிப் படித்துள்ளோம். தோழர்கள் இங்கு விவாதித்த பிரச்சினைகள் பற்றி நான் இப்பொழுது சில குறிப்புகள் கூற விரும்புகின்றேன்.

பெரும் சமுதாய மாற்றம் ஒன்று நிகழும் காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். சீன சமுதாயம் நீண்டகாலமாகப் பெரும் மாற்றங்களுக்கூடாகச் சென்று கொண்டிருக்கின்றது. ஜப்பானிய எதிர்ப்பு யுத்தம் இப்பெரும் மாற்றத்தின் ஒரு காலகட்டம், விடுதலை யுத்தம் இன்னொன்று. ஆனால் இன்றைய மாற்றம் முந்தியவற்றிலும் பார்க்க இயல்பில் மேலும் ஆழமான ஒன்றாகும். இன்று நாம் சோசலிசத்தை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றோம். சோசலிச மாற்றத்துக்கான இந்த இயக்கத்தில் பல பத்துக் கோடி மக்கள் பங்குபற்றுகின்றார்கள். நாடு முழுவதும் வர்க்க உறவுகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

தோழர் மாவோ

விவசாயத்திலும் கைத்தொழிற்துறையிலும் உள்ள குட்டி பூர்ஷுவா வர்க்கமும் தொழில் வர்த்தகத் துறைகளிலுள்ள பூர்ஷுவா வர்க்கமும் ஒரு மாற்றத்துக்கூடாகச் சென்றுள்ளன. சமுதாய பொருளாதார அமைப்பு முறை மாற்றம் அடைந்துவிட்டது. தனியார் பொருளாதாரம் கூட்டுப் பொருளாதாரமாக மாற்றப்பட்டு விட்டது. முதலாளித்துவத் தனியுடைமை முறை சோசலிசப் பொது உடைமையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பெரும் மாற்றங்கள் மக்களின் மனதில் பிரதிபலிப்பது இயற்கையே. மனிதனின் சமுதாய வாழ்வு அவனுடைய உணர்வு நிலையை நிர்ணயிக்கின்றது.

நமது சமுதாய அமைப்பில் காணும் இந்தப் பெரும் மாற்றங்கள் பற்றி வெவ்வேறு வர்க்கங்கள், வர்க்கத் தட்டுகள், சமுதாயக் குழுக்கள் மத்தியில் வெவ்வேறு பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன. சீனாவைப் பொறுத்தவரையில் சோசலிசமே அதற்குரிய ஒரேயொரு வழி என்பதை யதார்த்த வாழ்வு ஊர்ஜிதம் செய்ததன் காரணமாகப் பரந்துபட்ட மக்கள் இந்த மாற்றங்களை ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர். பழைய சமுதாய அமைப்பைத் தூக்கி எறிந்து ஒரு புதிய சமுதாய அமைப்பை அதாவது சோசலிச அமைப்பை ஸ்தாபிப்பது ஒரு பெரும் போராட்டம், சமுதாய அமைப்பிலும் மக்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் உறவுகளிலும் ஒரு பெரும் மாற்றம் ஆகும்.

நிலைமை அடிப்படையில் சிறப்பாக இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இருப்பினும் புதிய சமுதாய அமைப்பு மிக அண்மையில்தான் ஸ்தாபிக்கப்பட்டது. அது ஸ்திரப்படுவதற்கு இன்னும் காலம் தேவை. ஒரு புதிய அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட அதே கணத்தில் பூரணமாக ஸ்திரப்படுத்தப்பட முடியும் என்று ஒருபோதும் எண்ணிவிடக் கூடாது. ஏனென்றால், அது அசாத்தியம். அது படிப்படியாகத்தான் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும். இறுதியில் அதை ஸ்திரப்படுத்த வேண்டுமானால், நாட்டின் சோசலிசத் தொழில்மயமாக்கத்தை நிறைவேற்ற வேண்டும்; பொருளாதாரத் துறையில் சோசலிசப் புரட்சியை உறுதியாக நடத்த வேண்டும்; இன்னும் அரசியல், சித்தாந்த முன்னணிகளில் இடைவிடாது கடினமான சோசலிசப் புரட்சிப் போராட்டங்களையும், சோசலிசக் கல்வியையும் நடத்த வேண்டும்.

இவை தவிர, பல்வேறு சர்வதேசியச் சூழ்நிலைகளும் இதற்கு இசைவாக இருக்க வேண்டும். சீனாவில் சோசலிச அமைப்பை ஸ்திரப்படுத்தும் போராட்டம், சோசலிசமா, முதலாளித்துவமா ‘எது வெல்லும்’ என்பதைத் தீர்மானிக்கும் போராட்டம், இன்னும் ஒரு நீண்ட வரலாற்றுக் காலகட்டம் வரை நடந்து கொண்டே இருக்கும். ஆனால் புதிய சோசலிச அமைப்பு முறை ஸ்திரப்படுத்தப்படுவது நிச்சயம் என்பதை நாம் எல்லாரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நவீன தொழில் துறை, நவீன விவசாயம், நவீன விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவற்றை உடைய ஒரு சோசலிச நாட்டை நாம் நிச்சயம் கட்டியமைப்போம். இது நான் குறிப்பிட விரும்பும் முதலாவது விசயமாகும்.

படிக்க:
♦ பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

இரண்டாவதாக, நமது நாட்டின் அறிவுஜீவிகள் சம்பந்தப்பட்ட நிலைமையை ஆராய்வோம்.

சீனாவிலுள்ள அறிவுஜீவிகளின் தொகை பற்றி ஒரு சரியான புள்ளி விபரம் கிடையாது. உயர்தர அறிவுஜீவிகள் சாதாரண அறிவுஜீவிகள் உட்பட, பல்வேறு வகைப்பட்ட அறிவுஜீவிகளும் சுமார் ஐம்பது லட்சம் பேர் இருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது. இந்த ஐம்பது லட்சம் பேரில் ஏகப் பெரும்பான்மையானவர்கள் தேசபக்தியுடையவர்கள்; நமது மக்கள் குடியரசை நேசிக்கின்றனர்; மக்களுக்கும் சோசலிச நாட்டுக்கும் சேவை செய்ய விரும்புகின்றனர். ஒரு சிறு தொகையினர் சோசலிச அமைப்பை அவ்வளவு விரும்பவில்லை; சந்தோசப்படவுமில்லை.

சோசலிசம் பற்றி அவர்கள் இன்னும் சந்தேகம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஏகாதிபத்தியத்தை எதிர்நோக்கும் நிலையில் அவர்கள் தேசபக்தர்களாக விளங்குகின்றனர். நமது நாட்டின் மீது பகைமை பாராட்டும் அறிவுஜீவிகளின் தொகை மிகச் சிறியது. அவர்கள் நமது பாட்டாளி வர்க்க சர்வாதிகார நாட்டை விரும்பாமல், பழைய சமுதாயத்துக்காக ஏங்கித் துடிக்கின்றனர். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவர்கள் தொல்லைகளைத் தூண்டி, கம்யூனிஸ்ட் கட்சியைத் தூக்கியெறிந்து, பழைய சீனாவை மீட்க எத்தனிக்கின்றனர். பாட்டாளி வர்க்க, பூர்ஷுவா வர்க்க மார்க்கங்களிலும், சோசலிச, முதலாளித்துவ பாதைகளிலும் அவர்கள் பின்னையவற்றிலேயே பிடிவாதமாக நிற்கின்றனர். உண்மையில் இந்தப் பாதை சாத்தியமானதல்ல. எனவே அவர்கள் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், அதிகார முதலாளித்துவம் ஆகியவற்றிடம் சரணடையத் தயாராய் இருக்கின்றனர்.

அரசியல் வட்டாரங்கள், தொழில், வர்த்தகத்துறைகள், கலாச்சார, கல்வித்துறைகள், விஞ்ஞான, தொழில் நுட்பத்துறைகள், மத வட்டாரங்கள் எல்லாவற்றிலும் இத்தகைய நபர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் கடைகோடி பிற்போக்குவாதிகளாவர். ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளில் அவர்களின் தொகை 1 அல்லது 2 அல்லது 3 வீதம் மாத்திரமே. மொத்தம் ஐம்பது லட்சத்தில் ஏகப்பெரும்பான்மையானவர்கள், அல்லது 90 வீதத்துக்கு மேலானவர்கள் சோசலிச அமைப்பைப் பல்வேறு அளவில் ஆதரிக்கின்றனர். அவர்களில் பலர் சோசலிசத்தின் கீழ் வேலை செய்வது எப்படி, பல புதிய பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது, கையாள்வது, தீர்ப்பது எப்படி என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை.

மார்க்சியம் பற்றி இந்த ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளும் கொள்ளும் மனோபாவத்தைப் பொறுத்தவரையில், கம்யூனிஸ்டுகளும் கட்சிக்கு வெளியிலுள்ள ஆதரவாளர்களும் அடங்கிய சுமார் 10 வீதத்துக்கு மேலானவர்கள் மார்க்சிசத்துடன் ஓரளவு பரிச்சயம் உடையவர்கள், ஒரு உறுதியான நிலைப்பாட்டில் – பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் – நிற்கின்றனர் என்று கூறலாம். மொத்தம் ஐம்பது லட்சம் பேர் மத்தியில் அவர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். ஆனால் மையக்கருவாக, ஒரு பலம் வாய்ந்த சக்தியாக விளங்குகின்றனர்.

பெரும்பான்மையானவர்கள் மார்க்சியத்தைப்  படிக்க விரும்புகின்றனர். ஏற்கெனவே சிறிது படித்தும் உள்ளனர். ஆனால் அவர்கள் அதனுடன் இன்னும் பரிச்சயம் பெறவில்லை. அவர்களில் சிலருக்கு இன்னும் சந்தேகங்கள் இருக்கின்றன. அவர்களுடைய நிலைப்பாடு இன்னும் உறுதியானதாகவில்லை. அவர்கள் நெருக்கடிக் காலங்களில் ஊசலாடுகின்றனர். ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளில் பெரும்பான்மையாக விளங்கும் இந்தப் பகுதியினர் ஒரு இடைநிலைக் கட்டத்தில் இன்னும் இருக்கின்றனர். மார்க்சியத்தைப் பலமாக எதிர்ப்பவர்கள் அல்லது அதன்மீது பகைமை பாராட்டுபவர்கள் மிகச் சிறிய தொகையினரே ஆவர். சிலர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், உண்மையில் மார்க்சியத்துக்கு உடன்பாடானவர்கள் அல்லர். இத்தகைய நபர்கள் நீண்ட காலம் இருக்கவே செய்வர். உடன்பாடின்றி இருப்பதற்கு அவர்களை நாம் அனுமதிக்க வேண்டும்.

படிக்க :
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

உதாரணத்திற்கு, கருத்துமுதல்வாதிகள் சிலரை எடுப்போம். அவர்கள் சோசலிசத்தின் அரசியல், பொருளாதார அமைப்பை ஆதரிக்கலாம். ஆனால் மார்க்சிய உலகநோக்கை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மத வட்டாரங்களிலுள்ள தேச பக்தர்களைப் பொறுத்தவரையிலும் இது உண்மையாகும். அவர்கள் ஈசுரவாதிகள். நாம் நாஸ்திகர்கள். மார்க்சிய உலகநோக்கை ஏற்றுக் கொள்ளும்படி நாம் அவர்களை நிர்ப்பந்திக்க முடியாது. சுருங்கச் சொன்னால், மார்க்சியம் பற்றி ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளும் கொள்ளும் மனோபாவத்தைப்  பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்: மார்க்சியத்தை ஆதரிப்பவர்கள், அதனுடன் ஓரளவு பரிச்சயம் உடையவர்கள் சிறுபான்மையினரே ஆவர். மார்க்சியத்தை எதிர்ப்பவர்களும் ஒரு சிறுபான்மையினரே ஆவர். பெரும்பான்மையினர் மார்க்சியத்தை ஆதரிக்கின்றனர், ஆனால் அதனுடன் பரிச்சயம் பெறவில்லை. அதைப் பல்வேறு அளவில் ஆதரிக்கின்றனர். இங்கு அவர்கள் எடுக்கும் நிலைப்பாடுகளும் உறுதியானது, ஊசலாட்டமானது, பகைமையானது என மூன்று வகையாக இருக்கின்றன. இந்த நிலைமை நீண்ட காலம் தொடர்ந்து இருக்கும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்த உண்மையை நாம் அங்கீகரிக்கத் தவறினால், நாம் பிறருக்குப் பெரும் கோரிக்கையை முன்வைக்கும் அதேவேளையில், நமக்குச் சிறு கடமைகளை மாத்திரமே முன்வைத்தவர்கள் ஆவோம்.

பிரச்சார வேலையிலுள்ள நமது தோழர்கள் மார்க்சியத்தைப் பரப்பும் கடமை உடையவர்கள். இது சுயமாக மக்கள் அங்கீகரிக்கும் முறையில் படிப்படியாகவும் நன்றாகவும் செய்யப்பட வேண்டும். மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளும்படி நாம் மக்களை நிர்ப்பந்திக்க முடியாது. அவர்களுக்கு அறிவுறுத்த மாத்திரம் நம்மால் முடியும். சில ஐந்தாண்டுத் திட்டக் காலகட்டங்களின் போக்கில் நமது அறிவுஜீவிகளில் கணிசமான தொகையினர் மார்க்சியத்தை அங்கீகரித்துத் தமது வேலை வாழ்வு ஆகியவற்றின் நடைமுறை மூலம், வர்க்கப் போராட்டம், உற்பத்தி, விஞ்ஞான நடவடிக்கை ஆகியவற்றின் நடைமுறை மூலம் அதை ஓரளவு நன்கு கிரகித்துக் கொண்டால் அது உண்மையில் சிறப்பானது. இதுதான் நடக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

(தொடரும்)

குறிப்புகள் :

  1. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாடு, கட்சி மத்திய கமிட்டியால் 1957, மார்ச் 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பீக்கிங்கில் நடத்தப்பட்டது. மத்திய, மாகாண (அல்லது மாநகர) மட்டங்களிலுள்ள கட்சியின் பிரச்சார, கலாச்சார, கல்வி பகுதிகளின் 380-க்கு மேலான தலைமை ஊழியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். அதோடு, விஞ்ஞானம், கல்வி, இலக்கியம், கலை, பத்திரிகை, பிரசுரம் முதலிய பல்வேறு பகுதிகளிலும் நிறுவனங்களிலுமிருந்து வந்த கட்சிக்கு வெளியிலுள்ள 100-க்கு மேலானோரும் இம்மாநாட்டுக்கு வரவழைக்கப்பட்டனர்.

ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !

1

தை நினைத்துப் பாருங்கள்.

ஒரு நாள், உங்கள் வீட்டு வாசலில் அழைப்பு மணி ஒலிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு உங்கள் நகரம்  அல்லது கிராமத்தில் ஏற்பட்ட சில போராட்டம் குறித்து உங்களுடன் பேச வேண்டும் என்று கூறும் ஒரு சில காவல்துறை அதிகாரிகளை வாசலில் நிற்கிறார்கள். சட்டத்தை மதிக்கும் குடிமகனாக இருப்பதால், நீங்கள் காவல்துறையினருடன் உள்ளூர் காவல் நிலையத்துக்குச் செல்கிறீர்கள்.

நிகழ்வின்போது, நீங்கள் இருந்த இடத்தைப் பற்றிய அவர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கிறீர்கள், ஒரு கடுமையான சட்டம் என நீங்கள் நம்புவதற்கு எதிரான போராட்டங்களில் நீங்கள் எவ்வாறு பங்கேற்றீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கிறீர்கள் அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் செய்யும் வேலையை விளக்குகிறீர்கள். உங்களிடம் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் காணப்படவில்லை, உங்கள் வங்கி மற்றும் தொலைபேசி பதிவுகள் எந்தவொரு தவறான நடவடிக்கையிலும் உங்களுடைய தொடர்பை காட்டவில்லை.

ஆனபோதும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் கீழ் நீங்கள் ஒரு குற்றத்தைச் செய்துள்ளீர்கள் என நம்புவதாகக் கூறும் காவல்துறையினரால் நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள் என்றும், அதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆதாரம் உங்களுக்கு வழங்கப்படவில்லை.

படிக்க:
♦ பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்
♦ கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்

காவல்துறையினர் உங்களை காவலில் வைத்த பிறகு, நீங்கள் பிணைக்கு விண்ணப்பிக்கிறீர்கள். இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த விவகாரம் வரும்போது, நீங்கள் பாகிஸ்தான் உயர் ஆணையகம் மற்றும் சீனாவைச் சேர்ந்த உளவாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தீர்கள் என்பதையும், நீங்கள் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதியளிக்கும் ஹவாலாவின் மையமாக இருந்தீர்கள் என்பதையும் காட்டும் ஒரு குற்றச்சாட்டு ஆவணம் இருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.

‘குற்றச்சாட்டு ஆவணம்’ என்பது தட்டச்சு செய்யப்பட்ட (கையால் எழுதப்படாத) தகவலுடன் கூடிய ஒரு தாள், இது பெயர் அல்லது உங்கள் வங்கிக் கணக்கு, அல்லது நீங்கள் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் உளவாளிகள் எவரையும் குறிப்பிடவில்லை, ஆனால் ஒரு சீரற்ற எழுத்துக்களில் இருந்த ஒருவர் ஹவாலா நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறது.

முழு சதித்திட்டத்திலும் உங்கள் பங்கை வெளிப்படுத்தும் சாட்சிகள் வழங்கிய வாக்குமூல ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகல்களை நீங்கள் கேட்கிறீர்கள்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 161 ன் கீழ் காவல்துறையினர் சில வாக்குமூல அறிக்கைகளை வழங்குகிறார்கள், அவை அனைத்தும் ஒரே விதமாக எழுதப்பட்டும் எழுத்துப் பிழைகளும்கூட ஒரே விதமாக இருக்கிறது. மேலும் உங்களுக்கு எதிராக எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையும் அது கொண்டிருக்கவில்லை, அல்லது உங்களுக்கு எதிராக என்ன ஆதாரங்கள் மீட்கப்பட்டன என்பதையும் கூறவில்லை. இந்த அறிக்கைகள் அனுமதிக்க முடியாத சான்றுகள் என்று நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள், மேலும் நீங்கள் எந்த விதத்திலும் குற்றவாளி என்பதைக் கூட அவை காட்டவில்லை என சுட்டிக்காட்டுகிறீர்கள்.

சிஆர்பிசி-யின் பிரிவு 164-ன் கீழ் குற்றவியல் நடுவர் முன் சாட்சிகளால் பதிவு செய்யப்பட்ட அறிக்கைகள் தங்களிடம் உள்ளன, அவை ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகள் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த சாட்சி வாக்குமூலங்களை நீங்கள் அணுக முடியாது, ஏனெனில் அவர்கள் சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும். சாட்சிகளை அடையாளம் காண முடியாது என்பதை உறுதி செய்வதற்காக காவல்துறையினர் அறிக்கைகளைத் திருத்தியதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று கூறுகிறீர்கள். அவர்கள் மறுக்கிறார்கள், பின்னர் அவற்றை நீதிபதியிடம் கூட வழங்க வேண்டாம் அல்லது உங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் இந்த வாக்குமூலங்களை குறிப்பிட வேண்டாம் என அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவல்துறையினரைக் கேட்கிறார், அவர்கள் அவருக்கு வழங்கியதைப் பார்க்கிறார், உங்கள் பிணை விண்ணப்பத்தை மறுக்கிறார், உங்களுக்கு பிணை வழங்க சட்டம் அனுமதிக்காது என்று கூறுகிறார். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையீடுகள் நிராகரிக்கப்படுகின்றன.

காவல்துறையினர் புதிதாக ஒருவரைக் கைதுசெய்த ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதிய துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்வதால், உங்கள் வழக்கு விசாரணை தொடங்கப்படாமலேயே நீங்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. குற்றச்சாட்டுக்குரிய ஆவணம் பொருத்தமற்றதாக தெரிய வருகிறது. பிரிவு 161-ன் கீழ் உள்ள அறிக்கைகள் அனுமதிக்க முடியாத சான்றுகள். பிரிவு 164 வாக்குமூல அறிக்கை அளித்தவர்கள் உங்களை ஒருபோதும் குறிப்பிடவில்லை என்பதும் தெரிய வருகிறது.

ஒரு இந்திய சிறைச்சாலையின் புகழ்பெற்ற விருந்தோம்பலில் ஐந்து ஆண்டுகள் (விசாரணை முடிந்தவுடன்) கழித்த பிறகு, நீங்கள் வெளியே வருகிறீர்கள். உங்கள் வேலை பாழாகிவிட்டது, உங்கள் உறவுகள் முறிந்தன.

மேலும், உங்களுக்கு எதிரான வழக்கு தவறானதாகவும் உங்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துக்காக போடப்பட்டதாக தெரிய வந்தாலும், நீங்கள் எதிர்க்கொண்ட எந்தவொரு துன்பத்துக்கும் இழப்பீட்டை நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது.

அருமையானதாக தோன்றுகிறது, இல்லையா?

இவை அனைத்தும் மேலே சற்று மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், ஆனால் இந்தியாவில் தொடுக்கப்படும் உபா (UAPA) தொடர்புடைய வழக்குகளின் முகத்தில் அறையும் உண்மை நிலவரம் இது.

காலவரிசையை  நம்பவில்லையா? பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேளுங்கள், அவர்கள் மீது நடந்து வரும் வழக்கில் இதுபோன்ற ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள்(அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்). அது மட்டுமல்லாமல், இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு பலர் விடுவிக்கப்பட்டனர் அல்லது கடந்த காலத்தில்  (நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அதற்கு மேற்பட்டு சிறைகம்பிகளுக்கு உள்ளே இருந்த பிறகு) வெளியேற்றப்பட்டனர்.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!
♦ பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் !

ஆதாரங்களைப் பற்றிய காஃப்காதனமான விஷயங்களை நம்பவில்லையா? நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடாத ஒரு பெயரான ஜாபூர் அஹ்மத் ஷா வட்டாலியிடம் கேளுங்கள், ஆனால் இது சட்டத்தின் கல்லில் எழுதப்பட்டுள்ளதால், இது அனைத்தையும் சாத்தியமாக்குகிறது.

UAPA வழக்குகள், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொருந்தக்கூடிய அனைத்து தீவிரத்தன்மையுடனும், ஜோடிக்கப்பட்டவையாக இருப்பதை நம்பவில்லையா? விடுவிக்கப்பட்ட அல்லது வழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட 67 விழுக்காடு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவரிடம் கேளுங்கள்.

எனவே, கற்பனையானதாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கலாம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறிய கற்பனையானது உண்மையில் UAPA சட்டம் மக்களை விசாரணையில்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்க அனுமதித்த விதத்தை அடித்தளமாகக் கொண்டது. தீர்வு எதுவாக இருந்தாலும் இது அவர்களுக்கு தண்டனை தரும் செயல்முறையாக இருந்தது.

ஒருவேளை மிகவும் நம்பமுடியாத வகையில், UAPA வழக்குகளின் உண்மைதன்மை என்பது காவல்துறையினர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதன் விளைவாகவோ அல்லது கீழ் நீதிமன்றங்கள் அதை தவறாகப் புரிந்துகொள்வதன் விளைவாகவோ இல்லை.

ஒரு நபருக்கு எதிராக நியாயமான ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோது கூட பிணை மறுக்கும் இந்த திறன் UAPA க்கு உள்ளது. மேலும் இது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் இந்திய உச்சநீதிமன்றத்தால் சட்டத்தின் சரியான விளக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.

உமர் காலித்தை இது என்ன செய்யும்?

சரி, சட்டத்திற்கு உமர் காலித் உடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நீங்கள் அவரை நேசிக்கிறீர்களோ அல்லது அவரை வெறுக்கிறீர்களோ அல்லது அவரைப் பற்றி அலட்சியமாக இருந்தாலும், டெல்லி கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறி உமர் காலித் UAPA வழக்கின் கீழ் டெல்லி காவல்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் வழக்கின் பார்வை உள்ளது.

அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் அல்லது அவர்கள் இறுதியில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டாலும், உமர் காலித்தின் வழக்கு, அவரைப் போன்ற ஒரு முழு அரசியல் போராட்டக்காரர்களை வரவிருக்கும் ஆண்டுகளில் சிறையில் அடைக்க உபா எவ்வாறு பயன்படும் என்பதைப் பார்க்க ஒரு பயனுள்ள ஆய்வாக இருக்கும் .

செப்டம்பர் 16, புதன்கிழமை, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தனது 17,000 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த மிகப்பெரிய குற்றப்பத்திரிகை உமர் காலித் உட்பட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. அதற்காக, அடுத்தடுத்த மாதங்களில் துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும்.

நவம்பர் 2018-ல் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பீமா கோரேகான் வழக்கைப் போலவே, இந்த வழக்கில் விசாரணையை நாம் நீண்ட காலத்துக்குப் பார்க்கப் போவதில்லை என்பதை இது தெளிவுபடுத்தும். ஆனால் விசாரணை இன்னும் தொலைதூர கனவுதான் . அந்த வழக்கில் ஒவ்வொரு முறையும் அதிகமான செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படும்போது, செப்டம்பர் மாதத்தில் நடந்ததைப் போலவே, காவல்துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய அதிக நேரம் பெறுகிறார்கள், விசாரணை தொடங்குவதை தாமதப்படுத்துகிறார்கள்.

எஃப்.ஐ.ஆர் 59  பதிவுசெய்யப்பட்ட பல மாதங்களுக்குப் பின் உமர் காலித் கைது செய்யப்பட்டிருக்கிறார், இது இங்கேயும் அதேபோன்ற அணுகுமுறை பின்பற்றப்படுவதைக் குறிக்கிறது. காவல்துறையினரால் உமர் காலித்திற்கு எதிரான சான்றுகள் பற்றி நமக்குத் தெரிந்தவை, வாக்குமூலம் மற்றும் சாட்சி அறிக்கைகள், அமெரிக்க அதிபர் வருகை தருவதை யாரும் அறிவதற்கு முன்பே அவர் டொனால்ட் டிரம்ப்பின் வருகையை சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என கூறுவதும், மக்கள் வன்முறைக்கு இலக்காகிவிடக்கூடாது என அவர் வெளிப்படையாக பேசியதும்தான்.

ஒருவேளை இறுதியில் துணை குற்றப்பத்திரிகைகள் இன்னும் ஏதையாவது சேர்க்கலாம்.

அப்படியிருக்க  – எஃப்.ஐ.ஆர் 59-ல் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரையும் போல உமர் காலித் (மனிதாபிமான அடிப்படையில் பிணை பெற்ற சஃபூரா சர்கரைத் தவிர) – பல ஆண்டுகளாக சிறையில் சிக்கித் தவிக்கப்போவது ஏன்?

பதில் UAPA-ன் பிரிவு 43D (5) இல் பொதிந்துள்ளது.

வழக்கமான கிரிமினல் வழக்குகளில், பிணை விதிமுறையாக உள்ளது. விசாரணைக்கு முந்தைய சிறை விதிவிலக்காக இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் ஒத்துழைக்கிறார்கள் என்பதைக் காட்ட முடியுமானால், குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தை மீண்டும் செய்ய வாய்ப்பில்லை,  தப்பிக்கவோ அல்லது சாட்சிகளை அச்சுறுத்தவோ போவதில்லை அல்லது சாட்சியங்களை சேதப்படுத்தவோ முடியாது என தெரிய வரும்போது- பிணை வழங்க முடியாத குற்றங்கள் என்று அழைக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்க முடியும்.

எவ்வாறாயினும், உபாவின் பிரிவு 43 டி (5), உபா(பயங்கரவாதம் மற்றும் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தது)வின் அத்தியாயங்கள் IV மற்றும் VI இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, வழக்கு நாட்குறிப்பு மற்றும் போலீசு அறிக்கையை ஆராய்ந்த பின்னர், ‘அத்தகைய நபருக்கு எதிரான குற்றச்சாட்டு முதன்மையானது என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்று கருதும்பட்சத்தில்’ பிணையில் நீதிமன்றம் விடுவிக்காது.

உபாவின் கீழ் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான உண்மையான ஆதாரங்களைப் பொருட்படுத்தாமல், பிணை பெறுவதற்கான தடையாக காவல்துறையும் என்ஐஏவும் பல ஆண்டுகளாக கருதுகின்றன. 2008 ஆம் ஆண்டில் உபாவில் இந்த விதி சேர்க்கப்பட்டதிலிருந்து பல ஆண்டுகளாக, விசாரணை நீதிமன்றங்களும், ‘குற்றச்சாட்டின் முகாந்திரம்’ என்ற வார்த்தையின் பயன்பாட்டின் காரணமாக இதை விதிமுறையாகப் பார்க்கின்றன.

படிக்க :
♦ சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !
♦ 101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?

எவ்வாறாயினும், 2018-ம் ஆண்டில், என்ஐஏ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜாகூர் அஹ்மத் ஷா வட்டாலி, அவருக்கு எதிரான மேலோட்டமான ஆதாரங்களால் பிணை பெற முயன்ற வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது .

உபாவின் பிரிவு 43 டி (5)-ன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு பிணை மறுத்துவிட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம், ஆதாரங்களின் தன்மையைப் பொறுத்தவரை, வட்டாலிக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் முகாந்திரத்தில் “நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை” என்று கண்டறிந்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும், இது அத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட அதிக சுமையை ஒப்புக் கொண்டது, மேலும் உபாவில் எப்படி பிணை பெற இயலாது என்பதையும் ஒப்புக் கொண்டது. ஒருவரை சிறையில் தள்ளுவதை விட, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கின் நியாயத்தை மதிப்பீடு செய்ய நீதிமன்றங்கள் கோருவதன் மூலம் இது ஒரு நியாயமான உணர்வை ஊக்குவித்தது, ஏனெனில் காவல்துறை அவர்களை குற்றவாளிகள் என்று கூறி சில சீரற்ற ஆவணங்களின் மூலம்  சிறையில் அடைத்தது.

பின்னர் ஏப்ரல் 2019-ல், உச்ச நீதிமன்றம் அவற்றையெல்லாம் நீக்கியது. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர், டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிணை வழங்கும் அணுகுமுறையை  ’பொருத்தமற்றதாக’ பார்த்தார். விசாரணையால் வழங்கப்பட்ட பொருளை முழுவதுமாக நீதிமன்றம் பார்ப்பதைவிட, வழக்கில் முகாந்திரம் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

எனவே உச்சநீதிமன்றம் உங்களுக்கு எதிராக காவல்துறையிடம் என்ன இருக்கிறது என்பது முக்கியமல்ல, உபா பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆளானால் நீங்கள் பிணை பெற முடியாது. ஆதாரங்கள் புனையப்பட்டதாகத் தோன்றினால் அதற்கு ஒரு பொருட்டல்ல (பீமா கோரேகான் வழக்கில் சில விஷயங்கள் குறித்து நீதிபதி டி.ஒய் சந்திரசூட் கண்டுபிடித்தது போல). உங்களுக்கு எதிராக ஆதாரங்களை உண்மையில் பயன்படுத்த முடியாவிட்டாலும் அது ஒரு பொருட்டல்ல. சான்றுகள் முற்றிலும் பொருத்தமற்றவை என்றால் அது ஒரு பொருட்டல்ல.

நீங்கள் குற்றத்துடன் இணைந்திருப்பதைக் காட்டுகிறது என்று காவல்துறை சொன்னால்,  நீங்கள் சிறையில் சிக்கிக் கொண்டாலும், என்ன நடக்கிறது என்பதை நீதிமன்றத்தால் தெளிவாகக் காண முடிந்தாலும்..

அதனால்தான், டெல்லி கலவரங்கள் குறித்து டெல்லி காவல்துறை விசாரணையை பொருட்படுத்தாமல், சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமே வன்முறையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்ற உண்மையைப் பொருட்படுத்தாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான மிகவும் சந்தேகத்திற்குரிய ஆதாரங்களைப் பொருட்படுத்தாமல், உமர் காலித் உள்ளிட்டோர் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் ஒரு நீண்ட காலத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் எந்தக் குற்றமும் செய்யவில்லை எனத் தெரிந்தாலும் டெல்லி காவல்துறையின் விசாரணை பக்கச்சார்பானது என்றும் தெரிந்தாலும்கூட அவர்கள் நீண்ட காலம் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.

அதில் இங்குள்ள உயர்ந்த  நீதிமன்றத்தின் ஒப்புதல் முத்திரை இருக்கும்.

கட்டுரை: வகாசா சச்தேவ்
தமிழாக்கம் : அனிதா
நன்றி:
த க்விண்ட்

144 தடை உத்தரவை நீக்கு ! விருதையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் !!

க்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற வகையில்  144 தடை உத்தரவு இருக்கிறது. இதனை முழுமையாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 19/09/2020 அன்று விருத்தாசலம், பாலக்கரையில் தோழர்.முருகானந்தம் ( விருதை மக்கள் அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளர்) அவர்களின் தலைமையில் அனைத்துக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கண்டன உரை :

தோழர். கோகுல கிரிஸ்டீபன், (மாவட்ட செயலாளர் -இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி) ஆற்றிய கண்டன உரையில், மோடி அரசு கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க இந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை பிஜேபியின் ஆதரவு சட்டங்களை நடைமுறைப்படுத்த 144 தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுமைக்கும் அனைத்து  உத்தரவுகளும் தளர்வு  செய்யப்பட்டாலும் 144 இன்றும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் மக்களுடைய உரிமையை மீட்கக் கூடிய வகையில் இல்லாத சூழலை நீடிக்கிறது என்றார்.

படிக்க :
♦ விவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் ! மக்கள் அதிகாரம் அறைகூவல் !
♦ ஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தோழர். ராஜசேகர், (வட்ட செயலாளர் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.) பேசுகையில், பாசிச மோடி அரசு மக்கள் மீது துளியளவும் அக்கறை இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளை பாதுகாக்க வேண்டும் அவர்களின் சொத்து மதிப்பை உயர்த்த வேண்டும் என்று பாசிச வெறியோடு உழைக்கும் மக்கள் மீது அதிகாரத்தை கட்டமைக்கிறது. இதனை அனைவரும் எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும் என்றார்.

தோழர்.மணியரசன், (மாவட்ட செயலாளர், புரட்சிகர மாணவர்-  இளைஞர் முன்னணி) பேசுகையில், நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கவே பொது முடக்கம் என்பதை உலக நாடுகள் அனைத்தும் அறிவித்து மக்களை பெரும் நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என தனியார் மருத்துவமனைகள் கூட அரசுடமையாக்கி மருத்துவ எமர்ஜென்சியை அறிவித்தனர்.

ஆனால் இந்தியாவிலோ அதற்குத் தலைகீழான நிலை எந்த தனியார் மருத்துவமனையும் அரசுடமையாக்க படவில்லை ஆனால் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக இந்த 144 தடை உத்தரவை பயன்படுத்திக்கொண்டு மின்சார சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், புதிய கல்விக் கொள்கை, தொழிலாளர் நலச் சட்டம், கார்ப்பரேட் முதலாளிகளின் கடன் தள்ளுபடி என்று இந்திய மக்களுக்கு எதிரான பல்வேறு நாசகார திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து நிற்க பாசிசத்தை முறியடிக்க முற்போக்கு, ஜனநாயக சக்திகள் புரட்சிகர பாதையிலே ஒன்றுபட வேண்டும் என்று பேசினார்.

தோழர்.மணிவாசகம் (ஆய்வு மாணவர், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்) பேசுகையில், கொரோனா பெரும் நோய்த் தொற்றினால் காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை ஆகிய நிறுவனங்களில் உள்ள அரசு அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். சாதாரண உழைக்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளார். இதில் இருந்து மக்களை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பாசிச மோடி அரசு முதலாளிகளை பாதுகாக்கக் கூடிய வகையில் பல்வேறு நாசகார சட்டங்களை கொண்டு வருகிறது இதனை நாம் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள்,அனைத்து கட்சியினர் ஒன்று பட்டு போராடவேண்டும் என்று பேசினார்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்.பாலாஜி (மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர், கோ.பூவனூர்), தோழர். அருள் (பகுதி ஒருங்கிணைப்பாளர், கம்மாபுரம்), தோழர். தனசேகர் (பகுதி ஒருங்கிணைப்பாளர், விஜயமாநகரம்), தோழர்.ஆடியபாதம், (பகுதி ஒருங்கிணைப்பாளர், ஊமங்கலம்), தோழர்.அருள்முருகன் (பகுதி ஒருங்கிணைப்பாளர், ஆலிச்சிகுடி) மற்றும் தோழர்கள் மணிகண்டன், பூங்குழலி, முருகன், அர்ஜுன், அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம் – விருத்தாச்சலம்

தொடர்புக்கு:
97912 86994

விவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் ! மக்கள் அதிகாரம் அறைகூவல் !

21.09.2020

பத்திரிகை செய்தி

கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் பாஜக மோடியின் சட்டங்களை முறியடிப்போம் !
விவசாயிகளை காக்க செப்.25 அன்று தமிழக வீதிகளை போராட்டக் களமாக்குவோம் !

பா.ஜ.க மோடி அரசு செப்டம்பர்.17 அன்று மக்களைவையில் விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா {Farmer’s Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020}, விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகளில் விவசாயிகளுக்களுக்கான (அதிகாரமளித்தல் & பாதுகாப்பு)  ஒப்பந்த மசோதா {Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Bill, 2020}, அத்தியாவசிய  பொருட்கள் (திருத்த) மசோதா 2020 {Essential Commodities (Amendment) Bill, 2020} என மூன்று சட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. இவ்வாரத்தில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றி உடனே நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் தீவிரம் காட்டுகின்றது.

இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் என்ன பயிர் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன விலை என்பதை சட்டப்படியே தனியார் கொள்முதல் நிறுவனங்கள் முடிவு செய்யும். விவசாயிகளிடம் அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து விளைப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டியதில்லை. அரிசி, பருப்பு எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களின் மீதான அரசின் விலைக் கண்காணிப்பு மற்றும் கட்டுபாடு நடைமுறையில் விலக்கப்பட்டு, தனியார் நிறுவனங்கள் எந்த அளவிலும் பதுக்கி  விலையேற்றி மக்களை கொள்ளையடிக்க வழி செய்யும். அரசு கொள்முதல்  நிறுத்தப்படுவதால் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்படும்.

படிக்க :
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!

இந்தியாவின் விவசாயம், உணவு உற்பத்தி, விநியோகம் என அனைத்திலும் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களாகிய கார்கில், மாண்சான்டோ, வால்மார்ட், பெப்சி, அய்டிசி மற்றும் இந்திய கார்ப்பரேட்களான ரிலையன்ஸ், நெஸ்லே, பார்லி போன்றவற்றின் ஏகபோக ஆதிக்கத்தின் கீழ் கொண்டு போகும் நோக்கத்தில் இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தத்தில் விவசாயிகளை அவர்களின் நிலங்களோடு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் அக்கிரமமானச் சட்டங்கள் இவை.

விற்பனை சந்தையில் கூட்டு பேர வலிமையற்ற சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், பகாசூர நிறுவனங்களுடன் விலை பேரம் பேசச் சொல்லும் மாபெரும் உரிமைகளை வழங்குவதாக இச்சட்டங்களை போற்றுகிறார்கள் சங்கிகள். தமிழகத்தின் கடைக்கோடி விவசாயியும் காஸ்மீரம் வரை சென்று தான் விளைவித்த பொருட்களை விற்கும் அளப்பெறும் வாய்ப்பினை ‘ஒரே தேசம், ஒரே சந்தை’ என்பதன் மூலம் பெற முடியும் என்கிறார்கள்.

ஆனால் பாஜ.க அரசுக்கு எதிராக பஞ்சாப், அரியானா விவசாயிகள்  வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்தியாவெங்கும் விவசாயிகள் போராட்டம் பரவுகிறது. மக்களின் எதிர்ப்பை கண்டு அஞ்சி பாஜகவின் கூட்டணி கட்சியான அகாலிதளத்தின் சார்பாக மத்திய அமைச்சரைவையில் பதவி வகித்த கவுர் பாதல், இந்த சட்டங்களை கண்டித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவின் அடிமை அதிமுக கட்சியினரோ சட்டங்களை ஆதரித்து வெற்றி பெற செய்ததோடு, அவை விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என கதைவிடுகின்றனர். விவசாயத் துறையில், உணவு பாதுகாப்பில் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு அப்பட்டமாக சேவகமும் செய்கின்றனர்.

மின்சார சட்டத் திருத்தத்தின் மூலமாக மின்சாரத்தை முழுமையான விற்பனைப் பொருளாக மாற்றி விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட போகின்றது. தொழிலாளர் உரிமைகளை பறிக்கின்ற சட்டங்கள் அடுத்து நிறைவேற்றப்பட உள்ளன. சுற்றுச்சூழல் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. தனித்தனி சட்டங்களை எதிர்ப்பதை தாண்டி இவற்றின் மூலமான தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், நாட்டை மறுகாலனியாக்கும் காட் ஒப்பந்தம், பன்னாட்டு விவசாய ஒப்பந்தங்கள், உலக வர்த்தக கழகம் ஆகியவற்றில் இருந்து இந்தியா வெளியேறவும் போராட வேண்டியுள்ளது. கார்ப்பரேட் சுரண்டலுக்கான நடவடிக்கைகளை மூர்க்கமாக செயல்படுத்தும் காவி பாசிச ஆட்சி அதிகாரத்தை வீழ்த்த வேண்டும். உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது என்பார்கள்; ஏழை குடியானவனின் வயிற்றில் அடிக்க சட்டங்கள் போடுகிறார்கள். இனியும் அனுமதிக்கக் கூடாது.

விவசாயிகளுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் வருகிற செப்.25 அன்று நாடு தழுவிய பந்த் நடத்த அனைவருக்கும் அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகத்திலும் பல்வேறு கட்சிகள் பந்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மக்கள் அதிகாரம் இதனை ஆதரிப்பதுடன், செப்டம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்பது என முடிவு செய்துள்ளது. இச்சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வகையில் போராட்டங்கள் நடைபெற, விவசாயிகளும், தமிழக மக்களும் செப்.25 வெள்ளிக்கிழமை அன்று பெருமளவில் வீதிக்கு வந்து போராடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை

கருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு ? | வா. ரங்கநாதன்

பெரியார் சாதித் தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து போராடினார். கோவில்கள் இருக்கும் தெருவுக்குள் கூட பார்ப்பனரல்லாதவர்கள் போக அனுமதி இல்லாத சூழலில் அனைத்து சாதியினரும் கருவறை வரை செல்ல உரிமை உண்டு எனப் போராடியவர் பெரியார்.

பெரியாரின் 70 ஆண்டுகால சமூக சீர்திருத்தப் பணியின் பலன் தான் இன்று தமிழகம் வட இந்தியா அளவிற்கு மதவெறியிலும், சாதிய ஒடுக்குமுறையிலும் இழிநிலையை அடையவில்லை. பெரியாரின் தொடர்ச்சியாக அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சட்டரீதியாக தீண்டாமையின் பல்வேறு வடிவங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

படிக்க:
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
♦ இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !

ஆனால் அப்படி இயற்றப்பட்ட சட்டங்களையும், நடைமுறையில் செயல்படுத்த விடாமல் தடுக்கும் பணியை பார்ப்பனியம் இன்றுவரை செய்து வருகிறது. அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான். பார்ப்பனர் அல்லாதவர்கள் கோவில் கருவறைக்குள் சென்றால் தீட்டுபட்டுவிடும் என அர்ச்சகர் பணியை பிற சாதியினருக்குக் கொடுக்க மறுக்கப்படுவது. பல ஆண்டுகளாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் போராடி வருகின்ற்னர். ஆனாலும் இன்று வரை அவர்களுக்கு எந்தப் பணி நியமனமும் செய்யப்படவில்லை.

பெரியாரின் பாரம்பரியத்தில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுத்தருமா ? வினவுகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார்பாக, பின்வரும் கோரிக்கைகளை இந்தக் காணொலியில் முன்வைக்கிறார்.

  • பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அதிமுக அரசு அகற்றுமா?
  • கருவறை தீண்டாமை ஒழிக்கப்படுமா?
  • தமிழகத்தில் பெரிய கோவில்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் எங்களுக்கு பணிநியமனம் வழங்கு!
  • தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் சைவ, வைணவ பயிற்சி நிலையங்களை உடனே திற !

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!