சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 7
காட்சி : 10
இடம் : பாலாஜி வீடு
உறுப்பினர்கள் : பாலாஜி, பகதூர்.
(பாலாஜி ஒலைச்சுவடி புரட்ட பகதூர் தலையைச் சொறிந்து நிற்கிறான்)
பாலாஜி : பகதூர் பாடத்தைப் படிடா
பாலாஜி : ஏண்டா! நீ என்ன, சின்ன பாப்பாவா? கடாப் போல வளர்ந்திருக்க… ஏன்டா, பயத்துக்கு இடம் குடுக்கிறே?
பகதூர் : நானா இடம் கொடுத்தேன்? பயம் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டதே.
பாலாஜி : பிடிச்சுக் கொள்ளவுமில்லே; அடைச்சுக் கொள்ளவுமில்லே. வீண் பொழுது போக்காதே. ஆரம்பி, பாடத்தை.
பகதூர் : நேற்றைய பாடத்தைத்தானே?
பாலாஜி : ஆமாம்! அதுக்கு ஏண்டா அழுது தொலைக்கிறே? ஐயா! உனக்கு எத்தனை தடவை சொல்றது. முகத்தை இப்படிச் சுளிக்கக் கூடாதுண்ணு . டேய்! கொஞ்சம் புன்சிரிப்பா இருண்டா, எங்கப்பா!
(பகதூர் சிரிக்க) அப்படியில்லேடா இப்படி – (புன்சிரிப்பு)
பகதூர் : வரலியே பாலாஜி!… புன்சிரிப்பு வாண்ணா வரும்; போண்ணா போகுமோ? நான் புன்சிரிப்பா இருக்கத்தான் பார்க்கறேன்.. முடியலியே.
பாலாஜி : முடியலியா? அரை வீசை அல்வாண்ணா ஒரேயடியா விழுங்க மட்டும் தெரியுமா? (பகதூர் சிரிக்க) ம்… அதேதான். அதோன் புன்சிரிப்பு…
பாலாஜி : பாடத்தைச் சொல்லு.
பகதூர் : முக்கனியே! சக்கரையோ தேனே! பாலே!
பாலாஜி : ஏண்டா நிறுத்திட்டே?
பகதூர் : திரை இருக்கே.
பாலாஜி : திரை இன்னும் எடுக்கல்லையா?
(திரையை எடுத்ததும்)
பகதூர் : உன்னை நான் பெறாவிட்டால் என் உயிர் போகும்.
பாலாஜி : ஏண்டா உயிர் போகும்ணு சொல்லிக்கிட்டு ‘மரம் போல நிண்ணா மங்கையோட மனசு இளகுமா? உயிர் போகும்னு சொல்லும் போதே உயிர் போயிட்டா மாதிரி ஆயிட வேணாமா?
பகதூர் : எங்கே ?
பாலாஜி : தோ பார்ரா! முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இப்படியே சொல்லிக்கிட்டே அருகே போகணும். நீ போகும் போது அவ விலகுவா. வெலகுற மாதிரி பதுமையைக் கொஞ்சம் கொஞ்சம் நகத்து.
பகதூர் : சரி!
பாலாஜி : முக்கனியே! சக்கரையே! தேனே! பாலே! இது போலத்தான். இதிலே என்னடா கஷ்டம்?
பகதூர் : இது ஒண்ணும் கஷ்டமில்லே. ஆனா அதுதான்…
பாலாஜி : எதுடா?
பகதூர் : உயிர் போறது.
பாலாஜி : அது ரொம்ப சுளுவுடா.
பகதூர் : எங்கே போக்கிக் காட்டு!
பாலாஜி : உன்னைப் பெறாவிட்டால் என் உயிர் போகும்.
பகதூர் : சுத்தணுமா!
எனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா? அல்லது நான் எப்போதாவது சிவாஜியினுடைய குணம் கெட்டதுன்னு சொன்னேனா? இப்பவும் நான் சொல்வது நாடு நாசமாகப் படாதே என்ற நல்ல எண்ணத்தோடேதான்.
பாலாஜி : சரி! பதுமை பாடம் போதும். காதல் பேச்சு எப்படி இருக்கணும்னு சொல்லித் தர்றேன்.
பகதூர் : சரி! பாலாஜி என்னை ஏன் இப்படி உற்றுப் பார்க்கிறீர்? இப்படி ஒரு பொண்ணு கேட்டா நீ என்ன பதில் சொல்லுவே?
பகதூர் : அப்படி ஒரு பெண் கேட்டால் பயத்தாலே ஊமையாகிவிடுவேன், பாலாஜி.
பாலாஜி : பெண்கள் அப்படித்தான் கோபிக்கிற மாதிரிப் பேசுவாங்க. அதுக்கெல்லாம் பயந்தா பயப்படக்கூடாது. ஒரு பெண் உன்கிட்ட பேச ஆரம்பிச்சா அவளிடம் ஏதாவது காதல் கதையைப் படிச்சுக் காட்டணும்; இடையிடையே புன்சிரிப்பா இருக்கணும்.
பகதூர் : காதல் கதையென்று சொன்னாலே காதைப் பிடித்து திருகிப்புடுவாங்களே !
பாலாஜி : நீ ஏண்டா காதல் கதைன்னு சொல்றே? எந்த சாமிக் கதையாவது படிக்கிறேன்னு சொல்லேன்.
பகதூர் : சாமி கதைப் படிச்சா ?
பாலாஜி : நம்ம சாமி கதையே காதல் களஞ்சியண்டா ஒரு கதை படிக்கிறேன், கவனமாய்க் கேளு. கேக்கறியா? படிக்கட்டுமா?
பகதூர் : படி பாலாஜி
பாலாஜி : ஒ.. மாதர் திலகமே.
பகதூர் : யாரைக் கூப்பிட்டே?
பாலாஜி : டே படிக்கிறேன். ஒ, மாதர் திலகமே! இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு அழகியைக் கண்டதில்லை. டேய், கேக்கறியா?
பகதூர் : ஒ கேக்கறேனே.
பாலாஜி : என்ன சொன்னான்
பகதூர் : அவன் சொல்றான்
பாலாஜி : என்னடா சொல்றான்?
பகதூர் : என்ன சொல்றான்?
பாலாஜி : இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் உன்னைப்போல் ஒரு பெண்ணை, அழகியைக் கண்டதில்லைன்னு சொல்றான். இவன் போய்ப் பார்த்தானா ஈரேழு லோகத்தையும்…
பகதூர் : நான் என்ன, அவன் கூடவா போனேன் என்ன வந்து கேக்கறியே!
பாலாஜி : சும்மா புளுகுடா காதல் கதை படிக்கும் போது நெஜத்தைவிட புளுகுதாண்டா அதிகமா கலக்கணும்!
பகதூர் : படி பாலாஜி !
பாலாஜி : ஓ மாதர் திலகமே! காந்த சக்தியால் இழுக்கப்படும் துரும்பு போல் ஆகிவிட்டேன். காந்தாமணி உன்னை நான் பெறாவிட்டால் பாம்புப் புற்றில் கைவிட்டோ, பாஷாணம் சாப்பிட்டோ, பட்டினி கிடந்தோ உயிரைப்போக்கிக் கொள்வேன். ஆகையால் நீ என்னை ஏற்றுக்கொள் ஏந்திழையே!
(படித்துவிட்டுப் பகதூரைப் பார்க்க, அவன் தூங்குகிறான். அவன் காதைத் திருகி இழுத்துச் செல்லுதல்)
♦ ♦ ♦
காட்சி : 11
இடம் : வீதி
உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், சிட்னீஸ்.
(கேசவப்பட்டர் போய்க் கொண்டிருக்கிறார். பின்னால் சிட்னீஸ் கூப்பிடுதல்)
சிட்னீஸ் : கேசவப் பட்டரே! கேசவப்பட்டரே!
(காதில் விழாதுபோல் நழுவ சிட்னீஸ் கோபத்துடன்) ஒய், கேசவப்பட்டரே..
(கேசவப்பட்டர் திரும்புகிறார்)
கேசவப்பட்டர் : கூப்பிட்டேளா? காது கேக்கல்லே! கொஞ்சம் மந்தம்.
சிட்னீஸ் : பரவாயில்லை. பாட்டாச்சாரிஸ்வாமி, உம்ம தரிசனம் கிடைக்கிறது சாமான்யமா?
கேசவப்பட்டர் : கேலி செய்றேளா?
சிட்னீஸ் : சேச்சே! நான் என்ன பிரமாணத் துவேஷியா?
கேசவப்பட்டர் : யார் சொன்னது உம்மை அப்படி ….
சிட்னீஸ் : உண்மையாகவே உம்ம தயவுக்காகத் தான் நான் வந்திருக்கிறேன்.
கேசவப்பட்டர் : என் தயவா? என்ன சிட்னீஸ்! நான் ஒரு பஞ்சப் பிராமணன். உம்ம கீர்த்தியும் செல்வாக்கும் அமோகம்.
சிட்னீஸ் : உண்மையாகவேதான் சுவாமிகளே! உம்ம சகாயம் வேண்டும். விஷயம் உமக்குத் தெரிந்ததுதான். வீணாக நாம் விவாதிக்கணுமா? சிவாஜி பட்டாபிஷேகம் சம்மந்தமாக தாங்கள் எதிர்க்கிறீர்களாம். நல்ல காரியத்தை, நாடு முழுதும் விரும்புகிற காரியத்தைக் கெடுக்கலாமா? சிவாஜி தர்மிஷ்டர்; உமக்கே தெரியும். வீரர் அதனால்தான் நாம் வாழுகிறோம். இப்போது நம் நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. அப்படிப்பட்டவருடைய பட்டாபிஷேகத்தைத் தடுப்பது சரியா, தர்மமா, நியாயமா?
கேசவப்பட்டர் : ஏம்பா சிட்னீஸ். எனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா? அல்லது நான் எப்போதாவது சிவாஜியினுடைய குணம் கெட்டதுன்னு சொன்னேனா? இப்பவும் நான் சொல்வது நாடு நாசமாகப் படாதே என்ற நல்ல எண்ணத்தோடேதான்.
சிட்னீஸ் : சாஸ்திர விரோதம். இந்தப் பட்டாபிஷேகம் சிவாஜி சூத்திரர் என்று ஆட்சேபனை செய்கிறீராம்.
கேசவப்பட்டர் : நானா செய்கிறேன். அதென்னப்பா, அப்படிச் சொல்றே? நான் சாஸ்திரத்தைத்தான் சொல்கிறேன். வேறொன்றுமில்லை.
சிட்னீஸ் : சாஸ்திரம் இருக்கட்டும். கேசவப்பட்டரே ! இந்தக் காரியத்தில் உம்ம ஒத்தாசை கிடைத்தால், நீர் என்ன கேட்டாலும் சரி. இலட்ச வராகன் சன்மானம் வேண்டுமா? சரி! ஜாகீர் வேண்டுமா? சரி! அரண்மனைப் புரோகிதம் வேண்டுமா? சரி எது வேணுமானாலும் தருகிறேன்.
கேசவப்பட்டர் : ஆசை காட்டி என்னை அதர்மத்திலே தள்ள முடியாது சீட்னீஸ். எங்களுக்குத் தெரிந்த ஞானப்படி, சாஸ்திரப்படி இந்தப் பட்டாபிஷேகம் நிச்சயமாய்ப் பாவ காரியம்ணு தெரியுது. ஆனா , எங்களைவிட சிரேஷ்டமானவர், சாஸ்திரத்தை மேலும் ஆராய்ந்து பார்த்தவர் சம்மதம் கொடுத்தா எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
சிட்னீஸ் : கேசவப்பட்டரே! உம்மைவிட….
கேசவப்பட்டர் : நான் சாமான்யனப்பா சிட்னீஸ். என்னை விட ஞானஸ்தா பிரபஞ்சத்திலே அநேகம் பேர் இருக்கா. உதாரணமா காசி க்ஷேத்திரத்திலே (காகப்பட்டர்) ஒரு மகான் இருக்கார். அவர் வந்து சம்மதம் கொடுத்தால் நான் மட்டுமல்ல, பாரதவர்ஷத்திலே உள்ள பிராமணோத்தமர்கள் யாரும் ஒரு சொல் ஆட்சேபனை சொல்ல மாட்டா.
படிக்க:
♦ தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
சிட்னீஸ் : பட்டரே! சிவாஜி முடிசூட்டிக் கொள்ளக் கூடாதுன்னு உமக்கொன்றும் வஞ்சகமான எண்ணம் கிடையாதே?
கேசவப்பட்டர் : சத்தியமாச் சொல்றேன். நேக்குக் கிடையாது, கெட்ட எண்ணம்.
சிட்னீஸ் : எப்படியாவது காகப்பட்டரின் சம்மதம் கிடைத்து பட்டாபிஷேகம் நடைபெறுவதனால் உமக்கு ஆட்சேபனை இராதே? உம்முடைய ஒத்துழைப்பு இருக்குமல்லவா?
கேசவப்பட்டர் : நிச்சயமா சந்தேகமா அதற்கு.
சிட்னீஸ் : அப்படியானால் பட்டரே! காகப்பட்டரிடம் நீரே தூதுபோய்வர வேண்டும்.
கேசவப்பட்டர் : நானா?
சிட்னீஸ் : தாங்கள்தான் போகவேண்டும். சிவாஜியிடம் உங்களுக்குக் கெட்ட எண்ணம் கிடையாது என்கிறீர்.
கேசவப்பட்டர் : ஆமாம் சிட்னீஸ்
கேசவப்பட்டர் : ஆகவே தாங்களே சென்று எப்படியாவது காகப்பட்டருடைய சம்மதம் பெற்றுக் கொண்டுவர வேண்டும். கேசவப்பட்டரே! ஒரு பெரிய ஜாகீர் உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. துணைக்குப் பாலச்சந்திரப்பட்டர், சோமனாதப்பட்டர், யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும், தடை கூறவே கூடாது. தடை கூறினால் சிவாஜியிடம் உமக்குத் துவேஷம் இருக்கிறது கெட்ட எண்ணம் இருக்கிறது என்றுதான் பொருள். குழந்தைகூடச் சொல்லுமே, இதை.
கேசவப்பட்டர் : சரி போய் வருகிறேன்; ஆட்சேபனை என்ன?
சிட்னீஸ் : மற்ற இருவரையும் கலந்து கொண்டு தயாராய் இருங்கள் புறப்பட. நான் பல்லக்குப் பரிவாரங்கள் தயார் செய்துவிட்டு, பிறகு வந்து பார்க்கிறேன்.
(போகிறான்)
(தொடரும்)
நன்றி: Project Madurai
முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்








Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)

Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)
ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், பரோட்டா உண்டால் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும். அதேபோல் சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் மைதா உண்டால் சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதேபோல் புரோட்டா தயாரிக்கும்போது அதில் அதிகம் எண்ணெய் ஊற்றுகிறார்கள். நான் பல பேரிடம் கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணெய் கூறினார்கள். இதனால் அதில் அதிகம் “Transfats” கலந்திருக்க வாய்ப்புள்ளது. புரோட்டாவை பொறுத்தவரை இரண்டு விடைகள் ஒன்று மைதா முழுக்க முழுக்க சர்க்கரையால் ஆனது. இரண்டாவது சுகாதாரமற்ற எண்ணெய். இந்த இரண்டு காரணங்களால் புரோட்டாவை நாம் எப்போதாவது உணவாக எடுத்துக் கொள்ளலாமே அன்றி அடிக்கடி உண்பது நல்லதல்ல.
எந்த ஒரு அரசாங்க ஆய்வகமும் அல்லது சுகாதார நிறுவனமும் வெள்ளை சர்க்கரை தீங்கு என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கவில்லை. மேலும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடவும் இல்லை. இவ்வாறு இருக்கையில் வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கானது என்று நான் கூற முடியாது. ஆனால், அதேவேளையில் வெள்ளை சர்க்கரை கெடுதல், நாட்டு சக்கரை உடலுக்கு தீங்கானது இல்லை என்ற கூற்றையும் ஏற்க முடியாது.
கடந்த 40,50 ஆண்டு காலமாகத்தான் நாம் இட்லியை உண்கிறோம். அதற்கு முன்பு அது ஒரு பலகார வகைதான் இவைகளில் ஒயிட் ரைஸ்க்கு பதிலாக ரெட் ரைஸ் சாப்பிடலாமா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாக சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின்கள் உள்ளது. ஆனால், சர்க்கரையானது ஒரே அளவுதான். சிலர் கூறுவதுபோல், இந்த வகை அரிசியைக் கொண்டு வந்ததால், பழைய வகை அரிசி இல்லாமல் போய்விட்டது. இதுதான் சர்க்கரை நோய்க்கான காரணம் என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தானியங்களில் இவ்வாறு உள்ளதென்றால், சிறுதானியங்கள் உண்ணலாமா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாக உண்ணலாம் ஆனால், சர்க்கரை அளவு சிறுதானியங்களிலும் அதே அளவுதான் உள்ளது.
மெதுவாக உண்பதுபோல் உண்ண முடியாது, மேலும் பழங்கள் ஜூஸாக பருகும்போது இனிப்புச் சுவையை இழந்துவிடுகிறது. எனவே நாம் கூடுதலாக அதில் சர்க்கரையைச் சேர்க்கிறோம், இவை நம் உடலில் கலோரிகளையும் சர்க்கரையையும் அதிகம் சேர்க்கின்றன. இதுவே பழங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் மென்று சாப்பிடும்போது, அந்த சத்துக்களை முழுமையாக நாம் பெறுகிறோம் எனவே பழங்களை அப்படியே உண்பது நல்லது.
ஜப்பானைப் பொறுத்தவரை அவர்கள் உண்பது மைதா நூடுல்ஸ் கிடையாது. அரிசியால் ஆன நூடுல்ஸ்தான் அவர்கள் உண்கிறார்கள். ஜப்பானியர்களும் நம்மைப் போல் அரிசியைத்தான் உண்கிறார் ஆனால் அவர்கள் ஒல்லியாகவே உள்ளார்கள் எப்படி ஏனென்றால் அவர்கள் இரண்டு ஸ்பூன்கள் வைத்திருப்பார்கள். ஒரு சிறிய கோப்பையில் அரிசியையும், மற்றொன்றில் மட்டனையும் மற்றொன்றில் நீர் போன்ற ஒன்றையும் வைத்திருப்பார்கள். நாம் உண்பது போல் அதிக அளவு அரிசியை அவர்கள் உண்பதில்லை நாம் குறைவாக உண்கிறோம் என்று நினைத்துக்கொண்டு, அதிகமாக உண்டு வருகிறோம். முதலில் நாம் அரிசியை அதிகமாக உண்கிறோம் என்று உணர வேண்டும். அப்போதுதான் குறைப்பதற்கான வழி தேடுவோம்.







ஹஸ்னா – வயது 17 – கேத்தி பிரவுன் என்ற பயிற்சியாளருடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கேத்தி பிரவுன் ஓய்வுபெற்ற குத்துச்சண்டை பயிற்சியாளர் மட்டுமல்ல; பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மனநல சிகிச்சை தொடர்பான கல்வியும் பயிற்றுவிக்கிறார். ஹஸ்னா போன்ற பெண்களுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்து அவர்களையும் பயிற்சியாளர்களாக மாற்ற வேண்டுமென்பதே பிரவுனின் இலக்கு.
குத்துச்சண்டை சகோதரிகளுக்கு அருகாமை நகரத்திலுள்ள ஒரு குத்துச்சண்டை வீரர் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. பெண் பயிற்சியாளர் பிரவுன் மூலம் சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டு, இங்குள்ள பெண்களும் கூடிய விரைவில் குத்துச்சண்டை பயிற்சியாளர்களாக்கப்படுவர்.
ருவாங்கா அகதிகள் முகாமின் தெருக்கள் ஒன்றில் ஹஸ்னா. விளையாட்டின் மேல் அதிகக் கவனம் செலுத்தும் இவர் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராகப் போவது தன் வாழ்நாளின் மிக முக்கிய தருணமென்றும், அதோடன்றி நான் மிகவும் உறுதியான பெண்மணியாகவும் இப்போது உணர்கிறேன் என்கிறார் ஹஸ்னா
ருவாங்கா அகதிகள் முகாமில் சிறு கடைகள் சில உள்ளன. ஹஸ்னா 5 வருடமாக இங்கு வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் சில எதிர்ப்புக்கள் இருந்தாலும், மக்கள் இப்போது குத்துச்சண்டை சகோதரிகள் என்னும் இந்த முன்னெடுப்பை வெகுவாக வரவேற்கின்றனர்.
பயிற்சி முடிந்து திரும்பிவரும் ஹன்னாவை வரவேற்கிறார் அவரது பாட்டி. என் குடும்பம்தான் எனது முழு பலத்திற்கும் காரணம் என்கிறார் ஹஸ்னா.
வாழ்க்கை மிகவும் இனிமையானது; நான் யாரையும் வெறுக்க விரும்பவில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பும் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்; நானும் அதையே செய்ய விரும்புகிறேன் என்கிறார் ஹஸ்னா.
ஹஸ்னாவின் பாட்டியும், சித்தப்பாவும் அகதிகள் முகாமில் வசித்துவருகின்றனர். தன்னுடைய சொந்த கிராமத்திற்குத் திரும்ப வேண்டுமென்பது பாட்டியின் விருப்பம். ஹஸ்னாவுக்கோ எதிர்காலம் மிகவும் முக்கியமென்கிறார். உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்று என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு என் சொந்தங்களுக்கு உதவிசெய்வேன்
எங்கள் கிராமத்திலுள்ள அனைவரும் ஐ.எஸ் தாக்குதலுக்குப் பயந்து ஓட ஆரம்பித்தோம். ஐ.எஸ் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூடும், வெடிகுண்டுத் தாக்குதலும் அவர்கள் எங்களுக்கு மிக அருகாமையில் இருக்கின்றனர் என்பதை உணர்த்தியது
ஐந்து வருடங்களாக அகதிகள் முகாமில் நாங்கள் அனுபவித்த இன்னல்களை மறக்க முடியுமா என்ன? குறிப்பாக யாசிடி குலப் பெண்களுக்கெதிராக நடத்தப்பட்ட அநீதிகளை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. ஆனாலும் எதிர்த்துப் போராடும் வழிமுறை இப்போது என் கைகளில் உள்ளது – ஹஸ்னா
அகதிகள் முகாமில் நான் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை பள்ளி கல்விக்கென மிகக்குறைவான நேரமே ஒதுக்கப்படுகிறது. சிறுவயதில் கணிதப்படிப்பில் நான் தொடர்ந்து முதலிடம் வாங்கியிருக்கிறேன். இப்போது அப்படி முடியவில்லை; ஏனென்றால் முறையாகக் கற்றுக்கொடுக்க யாருமேயில்லை என்கிறார் ஹஸ்னா
சுமார் 15,000 பேர் வசித்து வரும் ருவாங்கா அகதிகள் முகாம். வடக்கு ஈராக்கின் தோஹக் மாவட்டத்தில் மட்டும் 25 அகதிகள் முகாம்கள் உள்ளன. 2014-ம் ஆண்டு முதல் அகதிகள் இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.






மார்க்சியவாதிகள் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் ஸ்தாபகர் என்று தான் பெட்டி யைப் பற்றி முதன்மையாக நினைப்பார்கள். பெட்டி ஒரு மாபெரும் மேதை, குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்டவர் என்பதை முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் அங்கீகரித்தாலும், அவரை ஸ்மித், ரிக்கார்டோ, மார்க்ஸ் ஆகியோரின் முன்னோடி என்று ஒத்துக் கொள்வதில்லை. 





இந்த குடும்பத்தின் உறவினர்கள் சிலர், இந்த இடத்தை விட்டு, முசுலீம்கள் சூழ்ந்த தங்களுடைய கிராமத்துக்கே திரும்பி விடும்படி சொல்லியிருக்கிறார்கள். அங்கே ஒரு வேலையும் இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு நின்றுவிடுவார்கள். ஆனாலும் முசுலீம்களுடன் வசிப்பது பாதுகாப்பானது என கருதுகிறது இந்த குடும்பம். இந்த வீட்டை விற்கவும் இவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.