Tuesday, June 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 461

பாபர் மசூதி வழக்கு : மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன் !

0

உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கு: மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன்!

“இசுலாமியக் குடியரசான ஆப்கானிஸ்தானில், தலிபான் மதவெறியர்களால் இடிக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகளை மீண்டும் எழுப்ப வேண்டும் என்று அங்குள்ள அரசு விரும்புகிறது. பொதுமக்களும் அவ்வாறே விரும்புகிறார்கள். ஆனால் மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் பாபர் மசூதியை மீண்டும் கட்டிக் கொடுக்கவேண்டும் என்ற கருத்து யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் இல்லை” என்று வயர்-இன் இணையதளத்தில் தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார் அதன் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.

உண்மைதான். இடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் இருந்த இடத்தில், இன்று அவற்றின் முழு உருவம் முப்பரிமாண ஒளியில் எழுப்பப்பட்டு அதனை ஆப்கன் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் திரள் திரளாக வந்து பார்க்கிறார்கள். தலிபான் ஆட்சிக்காலம் என்ற அந்த அருவெறுக்கத்தக்க வரலாற்றை இடிக்கப்பட்ட புத்தர் சிலைகளின் வழியாக வெறுப்புடன் நினைவு கூர்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் இருந்த இடத்தில் முப்பரிமாண வடிவில் ஒளிப்பரப்பப்படும் புத்தரின் திருஉருவம்.

இந்தியாவில் என்ன நடக்கிறது? இடிக்கப்பட்ட மசூதியின் கற்குவியல்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் ராமன் சிலைக்கு அயோத்தியில் வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. மசூதி இடிப்பைத் தலைமை தாங்கி நடத்திய அத்வானி உள்ளிட்ட தலைவர்களை இக்குற்றத்திலிருந்தே அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவிக்கிறது.

வழக்கிலிருந்து திட்டமிட்டே இவர்களைத் தப்பவிட்ட மத்திய உளவுத்துறையைக் கண்டித்ததுடன், அடுத்த இரண்டாண்டுகளுக்குள் இவ்வழக்குகளை விசாரித்து முடிக்கவேண்டுமென்று இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 2017 ஏப்ரல் மாதம் சி.பி.ஐ க்கு உத்தரவிட்டது. அதன் பின்னரும், வழக்கு விசாரணையை இழுத்தடித்து வருகிறது சி.பி.ஐ.

உலகமே சாட்சியாகப் பார்த்து நிற்க, பகிரங்கமாக நிகழ்த்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு என்ற குற்றத்துக்கு விசாரணையே நடக்காத நிலையில், எவ்வித சாட்சியமோ ஆதாரமோ இல்லாத இராம ஜென்மபூமி விவகாரத்தில், பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்று இந்துக்கள் நம்புவதால், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 இல் தீர்ப்பளிக்கிறது.

400 ஆண்டுகளாக முஸ்லிம்களின் வழிபாட்டிடமாக இருந்து வந்த மசூதி இடிக்கப்பட்ட குற்றத்தின் விசாரணையே இன்னும் முடியாதபோது, மசூதிக்கு கீழே இருக்கின்ற நிலம் யாருக்கு சொந்தம் என்ற சிவில் வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

முஸ்லிம் மக்களின் காயத்தில் உப்பைத் தேய்ப்பது போல, இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான தேதியாக, மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளுக்கு முந்தைய நாளான டிசம்பர்-5 ஆம் தேதியை தீர்மானிக்கிறது  உச்ச நீதி மன்றம்.

வழக்கு விசாரணையை 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது அரசியல் ஆதாயத்துக்கு மோடி அரசு பயன்படுத்துமென்பதால், விசாரணையை 2019 ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்குமாறும், 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்குமாறும், ராஜீவ் தவான், துஷ்யந்த் தவே, கபில் சிபல் ஆகிய வழக்கறிஞர்கள் முன்வைத்த கோரிக்கையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நிராகரிக்கிறார்.

அந்த வழக்கறிஞர்கள் கூறியது உண்மையென மறுநாளே நிரூபிக்கிறார் மோடி. கபில் சிபல் காங்கிரசு கட்சியை  சேர்ந்தவர் என்பதால், முஸ்லிம்கள் தரப்பில் அவர் வழக்கறிஞராக ஆஜராவதைக் காட்டி, காங்கிரசு கட்சி கோயிலை ஆதரிக்கிறதா, மசூதியை ஆதரிக்கிறதா என்று கேட்டு குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்துவெறியை பகிரங்கமாகத் தூண்டுகிறார்.

பாபர் மசூதி இடிப்புக்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, மீரட், மலியானா, ஹசிம்புரா முதல் மும்பை, குஜராத் வரை இந்தியா முழுவதும் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் துயரமான நாள் என்று அத்வானியும் வாஜ்பாயியும் அன்று நடிப்புக்காகவேனும் பேசவேண்டியிருந்தது. இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குகின்ற தருணத்தில், நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் மோடி, நீ மசூதியை ஆதரிக்கிறாயா, கோயிலை ஆதரிக்கிறாயா என்று எதிர்க்கட்சியை மிரட்டுகிறார். இந்த மிரட்டல், வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்துக்கும் உரியது என்பதை நீதிபதிகள் அறியமாட்டார்களா என்ன?

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி என்பன போன்ற பீற்றல்களும், சொல்லிக்கொள்ளப்படும் இந்த உன்னதங்களைப் பாதுகாத்து நிற்கும் தூண்களான நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் போன்றவையும் உளுத்துப்போய் உதிர்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இந்தத் தூண்கள் மீது இந்துத்துவம் ஒரு சங்கேத மொழியாய் ஒளிந்திருக்கிறது.

பார்ப்பன பாசிசத்தின் அதிகாரத்தைக் காத்து நிற்கும் சக்திகளில் முதன்மையானவை இந்தத் தூண்களா, மக்களின் வாக்குகளா என்று கேட்டால், இந்தத் தூண்கள்தான் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். வாக்குகளைப் பற்றி மட்டும்தான் அவர்கள் கவலைப்பட வேண்டும்.

எல்லா முனைகளிலும் தோல்வியடைந்து மக்களின் வெறுப்பை ஈட்டியிருக்கிறது மோடி அரசு. இடிக்கப்பட்ட மசூதி, கொல்லப்பட்ட அக்லக்குகளைப் போலவே, பண மதிப்பழிப்பு, நீட், ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்தையும் பழகிப்போன எதார்த்தங்களாக மக்கள் அங்கீகரிக்க வேண்டும். அல்லது அவை மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்கப்பட வேண்டும். இன்னொரு முறை இராமனைத் தெருவுக்கு இழுத்து வருவதொன்றுதான் மக்களை வீழ்த்துவதற்கு மோடியின் முன் உள்ள வழி.

1992-இல் பாபர் மசூதியை இடிப்பதற்குத் தோதாக டிசம்பர் 6 அன்று கரசேவைக்கு அனுமதியளித்தது உச்ச நீதிமன்றம். 25 ஆண்டுகளுக்குப் பின் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வருவதன் மூலம் மோடிக்கு உதவியிருக்கிறது.

விசாரணைக்கூண்டில் உச்சநீதிமன்றம் என்ற தலைப்பில் ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழில் பாபர் மசூதி வழக்கின் வரலாறு குறித்து விரிவான கட்டுரையொன்றை எழுதியிருக்கும் ஏ.ஜி.நூரானி, முன்னாள் அமெரிக்க நீதிபதி பெஞ்சமின் கார்டோசோவின் கீழ்க்கண்ட மேற்கோளுடன் தனது கட்டுரையை முடிக்கிறார். “நீதிபதி எத்தகையவர் என்பதற்கு மேல் நீதிக்கு வேறு உத்திரவாதம் ஏதுமில்லை”.

நீதி முட்டுச்சந்துக்கு வந்துவிட்டது. கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கலாம் என்று கருதுபவர்கள், 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் வெண்ணெய் உருகவில்லை என்ற உண்மையை இனிமேலாவது உணரவேண்டும். பார்ப்பன பாசிசத்தை நேருக்கு நேர் எதிர்கொண்டுதான் தீரவேண்டும்.

-சூரியன்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

ஆன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல !

1

ன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல. அது திராவிட இயக்கத்திற்கு எதிரானதும் அல்ல. ஆன்மிகத்தை எப்படி கையாளவேண்டும் என்பதை அரசியல் களத்தில் ஆயுதமாக ஏந்திய வரலாறு அதற்கு உண்டு. சரியாக சொல்லவேண்டும் என்றால், திராவிடத்தின் முதல் அரசியல் இயக்கமான நீதிக்கட்சி தோன்றியதே ஆன்மிக உரிமையினால் தான்.

100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பவுன் தங்கம் 10 ரூபாய்க்கும் குறைவாக விற்ற காலத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருப்பணிக்கு 10ஆயிரம் ரூபாய் நிதியளித்தார் சென்னை மாநகராட்சித் தலைவராக (முதல் மேயர்) இருந்த பிட்டி. தியாகராயர். குடமுழுக்கு நாளில் பிராமணர்கள் பலர் கோபுரத்தின் மீது நின்றனர். ஆனால், 10ஆயிரம் கொடுத்த தியாகராயர் பிராமணரல்லர். ஒரு சூத்திரர் என்பதால் அவரை கோவில் கோபுரத்தின் மீது ஏற விடவில்லை. பிறப்பின் காரணமாக அவருக்கு அந்த உரிமையில்லை என்று தடுத்தவர், சென்னை (மா)நகராட்சியில் அவரிடம் வேலை பார்த்த பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு குமாஸ்தா. அந்த குமாஸ்தா பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.

நீதிக்கட்சி

திருப்பணிக்கு பணம் வாங்கும்போது பிறப்பில் பேதம் தெரியாத நிலையில், கோபுரத்தில் ஏறவும், கருவறையில் நுழையவும் பிறப்பின் அடிப்படையில் பேதம் காட்டப்படுவதால் விரக்தியும் கோபமும் அடைந்த தியாகராயர் அங்கிருந்து வெளியேறி, டி.எம்.நாயரையும் நடேசனாரையும் சந்தித்ததன் விளைவுதான், மூவரும் இணைந்து 1916 -ல் உருவாக்கிய நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். ஆன்மிக உரிமையின் காரணமாக தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் கல்வி – வேலை வாய்ப்பு என அனைத்து நிலையிலும் சமூக நீதியை நிலைநாட்டி, இந்தியாவுக்கே வழிகாட்டியானது.

1920 -ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடைபெற்ற சென்னை மாகாணத்திற்கான தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சமூக நீதி அடிப்படையிலான அதன் செயல்பாடுகளில் ஆன்மிக உரிமையும் அடங்கியிருந்தது. அதன் விளைவுதான் 1925 -ல் பனகல் அரசர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலைய பாதுகாப்பு மசோதா. இதனைக் கொண்டு வருவதற்கு முன்பாக சங்கராச்சாரியார் உள்ளிட்ட “இந்துமத மேலோர்”களிடமும் “நூலோர்”களிடமும் ஆலோசனை பெற்று அதன் பின்னரே, 1925 -ல் சட்டமாக நிறைவேற்றினார் பனகல் அரசர் ராமராய நிங்கர். அதுபோலவே, குறிப்பிட்ட சமூகத்து பெண்களை கோவில் பணி என்னும் பெயரில் இழிவாக நடத்தும் தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டமும் நீதிக்கட்சி ஆட்சியில் 1929 -ல் நிறைவேற்றப்பட்டது.

அதனைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் சட்டமன்றத்திலேயே, “தாசிகள் கோவில் பணிகளுக்கெனப் படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்பந்தமானது. அதை ஒழிப்பதென்பது கடவுள் கட்டளையை மீறும் அடாத செயலாகும்” என்றார். அதற்கு பதிலளித்த தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, “இது கடவுள் தொண்டு என்றால் அந்த தொண்டினை ஒரு குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்யவேண்டுமா? உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது?” என்று சத்தியமூர்த்தியைப் பார்த்துக்கேட்டு “ஷட் அப்’ செய்தார்.

நாத்திகரான பெரியாரின் பங்கேற்புக்குப் பிறகு நீதிக்கட்சி வேகம் பெற்று, திராவிட இயக்கத்தின் அரசியல் புதிய பரிணாமத்தை அடைந்தபோதும், ஆன்மிக உரிமைகளில் சமூக நீதி என்பது மேலும் தீவிரமான போராட்டமாக மாறியது. பெரியாருடன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் உள்ளிட்ட சமய அறிஞர்கள் ஆரியத்திடமிருந்து தமிழை மீட்பதில் இணைந்திருந்தனர். தமிழகத்திலும் மலேயாவிலும் (மலேசியா-சிங்கப்பூர்) சுயமரியாதை பிரச்சாரத்தை பெரியார் மேற்கொண்டபோது, அவருக்கு போட்டியாக ஆன்மிக பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டவர்தான் குன்றக்குடி அடிகளார். பின்னர் இருவரும் சந்தித்தபோது, ஆரியத்தின் பிடியிலிருந்து ஆன்மிகத்தை விடுவித்து, சமூக நீதியை நிலைநாட்டுவதில் பெரியாருடன் இணைந்து செயல்பட்டார் குன்றக்குடி அடிகளார்.

ஆன்மிகத்திலும் “சமூகநீதி’ என்கிற அரசியல் ஆயுதத்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உறுதியாகக் கையாண்டது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோவிலில் நாடார் சமூகத்தினர் உள்ளிட்ட பலரை அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து 1926 -ல் கோவில் நுழைவுக் கிளர்ச்சி நடந்தது. 1927 -ல் “திராவிடன்” இதழ் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர் திருவண்ணாமலை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததற்காக அவர்களை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய கொடுமையும் நடந்தது. இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டு பின்னர் விடுதலையடைந்தனர்.

1927 -ல் திருச்சி – மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு சென்ற சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த இராமநாதனை தடுத்துத் தாக்கிய அடியாட்கள், கோவிலில் நுழைய முயன்றவர்களைப் படிக்கட்டுகளில் உருட்டிவிட்டார்கள். அதே ஆண்டில், மயிலாடுதுறை மயூரநாதசாமி கோவிலுக்குள் அனைத்துச் சாதியினரையும் அழைத்துச் செல்லும் போராட்டம் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் தலைமையில் நடந்தது.

1929 -ல் ஈரோடு – கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஆதி திராவிடர் சமூகத்தினரை அழைத்துக் கொண்டு பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும் குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் போன்றோரும் நுழைந்தனர். அவர்களை உள்ளே வைத்துப் பூட்டிய கும்பல், இரண்டு நாட்களுக்கு கதவைத் திறக்கவில்லை. திராவிட இயக்கம் மேற்கொண்ட இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு, 1939 -ம் ஆண்டில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருடன் ஆலயப் பிரவேசம் செய்தார் காங்கிரஸ் தலைவர் வைத்தியநாத அய்யர். அந்தப் போராட்டத்திற்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உறுதுணையாக இருந்தார்.

கோவிலுக்குச் சென்று வழிபடுகிற உரிமை மட்டுமல்ல, கருவறையில் வழிபாட்டை நடத்துகின்ற உரிமையும் அனைத்து சமூகத்தினருக்கும் வழங்கவேண்டும் என்பதற்கான போராட்டக் களத்திற்குப் பெரியார் தயாரானார். இதனையடுத்து, 1970 -ல் தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் சட்டத்தை கலைஞர் அரசு கொண்டு வந்தது. அதற்கு நீதிமன்றம் மூலம் நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தியபோது, அந்த உரிமைப் பறிப்பை, “தன் நெஞ்சில் தைத்த முள்’ என்று பெரியார் குறிப்பிட்டார். 2006 -ல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆகமப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற பல சமூகத்து அர்ச்சக மாணவர்களும் தங்கள் உரிமைக்கான சட்டப் போராட்டத்தை ஆரியச் சதியை எதிர்த்து இன்றளவும் நடத்தி வருகிறார்கள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழகத்தின் தனிப்பட்ட ஆன்மிக முறையை ஆரியம் அழிக்க முற்படுவதும் அதனை எதிர்த்து தமிழகம் போராடி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் வள்ளுவர் காலத்திலிருந்து வள்ளலார் காலம்வரை தொடர்ந்து, தற்போதும் நீடிக்கிறது.

இந்து மதத்தை அமெரிக்காவரை பரப்பி புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தரிடமே, “நாங்கள் இந்துக்களல்ல, திராவிடர்கள். எங்கள் சமய நெறிமுறை மாறுபட்டது” என்று விளக்கம் சொன்ன மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்ற திராவிட அரசியல் இயக்கத்துக்கு முற்பட்டவர்களும் உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிற்றம்பலத்தில் தமிழ் மந்திரமான தேவாரம் ஒலிப்பதற்கு தடை போட்ட ஆரியத்தை எதிர்த்து முழங்கிய ஓதுவார் ஆறுமுகசாமி பக்கம் நின்று போராடிய மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற திராவிட இயக்க அரசியலுக்குப் பின்னர் தோன்றிய முற்போக்கு அமைப்புகளும் உண்டு.

தமிழ்ப் பண்பாட்டின் மீதான படையெடுப்பை ஆரியம் நேரடியாகவும் மேற்கொள்ளும், தனது கைக்கூலிகள் வழியாகவும் கையாளும். தமிழையே ஆயுதமாக ஏந்தி ஆரியத்தின் பிடியிலிருந்து இம்மண்ணில் ஆன்மிகத்தைக் காத்த அரசர்களும் புலவர்களும் உண்டு. அதற்காக உயிர்நீத்தவர்களும் உண்டு. கொலை செய்யப்பட்டவர்கள் உண்டு. கழுவில் ஏற்றப்பட்டவர்கள் ஏராளம்.

வருணாசிரமக் கோட்பாட்டின் அடிப்படையில் பகவத்கீதையில் சொல்லப்படும் நான்கு வருணங்களைக் கொண்டு பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் – தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம்.

வள்ளுவர் வகுத்த ‘”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம். இதனைத்தான் தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்கள், சமூகநீதி சக்திகள், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான அமைப்புகள் உள்ளிட்டவையும் முன்னிறுத்துகின்றன.

ஆன்மிக அரசியலை ஆதரிப்பவர்கள் சமஸ்கிருத பகவத் கீதை வழியைக் கையாளப் போகிறார்களா? தமிழ்மறையான திருக்குறள் பாதையில் நடக்கப் போகிறார்களா? தேர்ந்தெடுக்கும் முறையில் அடங்கியிருக்கிறது ஆன்மிக அரசியலின் உண்மை முகம்.

-மாவலி ( நன்றி : நக்கீரன்)

 

மோடியின் 2018 கரசேவை ! புதிய ஜனநாயகம் ஜனவரி 2018 மின்னூல்

0

 

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1.ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் !
“தேர்தலில் நிற்பவன் பதவியை டெண்டர் எடுக்கிறான்” என்பதுதான் இன்றைய எதார்த்தம். “பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டாலும் எம்.எல்.ஏ. வைத் தட்டிக் கேட்க முடியாது” என்பது மக்களுக்குத் தெரிகிறது.

2.அன்று பாபர் மசூதி இடிப்பு! இன்று பொதுத்துறை வங்கி அழிப்பு!! மோடியின் கரசேவை
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. என்ற வரிசையில் சாமானிய மக்களின் கையிருப்பைத் திருடிக் கொள்ளும் திட்டத்தோடு நிதிமீட்பு மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது.

3.ஒக்கி புயல்: ‘’இயற்கையின் பெயரால் இனப்படுகொலை
குமரிக் கரையில் அரபிக் கடலோரத்தில் உள்ள வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர், நீரோடி உள்ளிட்ட எட்டு கிராமங்கள் பாரம்பரிய ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பெயர்பெற்றவை. ஒக்கி புயலால் நூற்றுக்கணக்கான மீனவர்களை இழந்திருப்பதும் இந்த கிராமங்கள்தான்.

4. அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு: பல்லிளிக்கிறது பார்ப்பன சதி!
ஒரு சில உண்மைகளைத் தந்திரமாகத் திரித்து, அவற்றை இமாலய அளவுக்கு ஊதிப் பெருக்கி உருவாக்கப்பட்டதுதான் இந்த ஊழல் புகார் எனத் தீர்ப்பு அம்பலப்படுத்துகிறது.

5. குஜராத் தேர்தல் முடிவு : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் ?
புலிக்குப் பயந்தவர்கள் என்மீது படுத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் நிலையில் இருக்கும் ஓட்டு கட்சிகளால் இந்துத்துவா பாசிசத்தை வீழ்த்த முடியாது.

6. இந்துத்துவ சதிகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு!
1949 டிசம்பர் 22-ஆம் தேதி நள்ளிரவில் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமன் சிலை வைக்கப்பட்டதுதான் இந்த உரிமை மூல வழக்கின் தொடக்கம்.

7. பாபர் மசூதி இடிப்பு: என் பெயரைத் துறந்த நாள்!
– எஸ்.என்.எம். அப்தி, பத்திரிக்கையாளர்.

8. அலகாபாத் உயர்நீதி மன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு!
பாபர் மசூதி விவகாரத்தில்,  வரலாறு, மதநம்பிக்கை, அரசியல், சட்டம் ஆகியவற்றை தனது நோக்கத்துக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் ஏற்ப ஒன்றை மற்றொன்றோடு சேர்த்துக் குழப்பும் வேலையை சங்க பரிவாரம் தொடக்கம் முதலே செய்து வருகிறது.

9. உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கு: மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன்!
“இசுலாமியக் குடியரசான ஆப்கானிஸ்தானில், தலிபான் மதவெறியர்களால் இடிக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகளை மீண்டும் எழுப்ப வேண்டும் என்று அங்குள்ள அரசு விரும்புகிறது. பொதுமக்களும் அவ்வாறே விரும்புகிறார்கள். ஆனால் மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் பாபர் மசூதியை மீண்டும் கட்டிக் கொடுக்கவேண்டும் என்ற கருத்து யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் இல்லை”

10.  பத்திரிக்கை செய்தி : திருடர்கள் பதவியில் ! பறிக்கொடுத்தவர்கள் தெருவில் !!

11. நெல் கொள்முதல் விலை: மீண்டும் வஞ்சனை!
விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ஆட்சியாளர்களிடமிருந்து விவசாயிகள் தம்மிடம் எடுத்துக்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart


 

நூலறிமுகம் : பன்றித் தீனி – பிக் பாஸ் – கொலைகார கோக் – செயற்கை நுண்ணறிவு

0

க்கள் உண்ணும் உணவு, உடை, பருகும் நீர் வரை அனைத்தையும் தீர்மானிக்கும் முதலாளித்துவம் அதன்வழி நமது சிந்தனையையும் கட்டுப்படுத்துகிறது.

இன்று நமது இளைய தலைமுறையை மட்டுமல்ல, பெரியவர்களையும் அடிமைப்படுத்தி விட்டது துரித உணவுப் பழக்கம். அறுசுவைகளின் அதீத பயன்பாடும் அது உருவாக்கும் சுவை வெறியும் நம்மை எப்படி உருவாக்கும்? பதிலளிக்கிறது “பன்றித்தீனி” புத்தகம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியா இராணுவம் மட்டும் பிரச்சினையல்ல. சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் ஓவியாமயமாக்கம் எப்படி நடைபெறுகிறது என்பதை விரிவாகவும், ஆழமாகவும் முன்வைக்கும் நூல் – ஒரு பிக்பாஸ் – ஒரு கோடி அடிமைகள்

இரண்டு அமெரிக்க் குளிர்பானங்கள் முழு உலகிலும் நடத்திய வேட்டையின் வரலாறு இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது – கோக், பெப்சி- கொலைகார பானங்கள்.

சமூகவலைத்தளங்களில் கடிவாளம் உங்களிடமில்லை. நம்மை எந்திரங்கள் போல பயிற்றுவிக்கும் நவீன தொழில் நுட்பத்தின் ஆன்மா இந்த செயற்கை நுண்ணறிவில் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு – நவீன அடிமை யுகம்.

இருபது ரூபாய் விலையில் அழகிய கட்டமைப்பில் ஆழமான பொருளில் புதிய கலாச்சாரம் வெளியிடும் மாத நூல்களை வாங்கிப் படியுங்கள்.

***

41வது சென்னைப் புத்தகக் காட்சியில் நூல்கள் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் 297, 298

நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை

நேரம் :வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம் 
                ( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30

முகவரி :

கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367


 

பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !

7

பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !

டக உலகில் மூத்த பத்திரிக்கையாளரான, ஞாநி (சங்கரன்) மறைந்துவிட்டார். உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, அவருடைய மரணம் வாயிலில் நின்ற நிலையிலும் வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்தவர். இறுதிநாட்கள் வரை தனது அரசியல் விமர்சனங்களைப் பேசியும் எழுதியும் வந்தவர்.

பத்திரிக்கையாளர் ஞாநி

தமிழ் ஊடகச் சூழலில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், ஜனநாயகப் பண்புடன் உரையாடக் கூடியவர்களும், ஊடக முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கக் கூடியவர்களும் மிகக் குறைவு. அந்த வகையில் ஞாநியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு, சங்கராச்சாரியை அம்பலப்படுத்தியது, அரசின் அதிகார முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தது ஆகியவற்றில் ஒரு தொடர்ச்சியும், நேர்மையும் அவரிடம் இருந்தது. பெரியாரின் பாத்திரத்தை உயர்த்திப்பிடித்த அதே நேரத்தில் பாரதியையும் தனது ஆதர்சமாகக் கொண்டிருந்தார். அரசியல், திரையுலகம் தொடர்பான கருத்துக்களில் அவருடன், பல சந்தர்ப்பங்களில் வேறுபட்டு விவாதித்திருக்கிறோம் என்ற போதிலும், நட்புக்கோ, உரையாடலுக்கோ அது ஒரு தடையாக இருந்ததில்லை. அநேகமாக ஞாநியுடன் பழகி இருக்கக் கூடிய அனைவரது அனுபவமும் இத்தகையதாகவே இருக்கும் என்று கருதுகிறோம்.

தற்போது நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் “வழக்கம் போல எனது கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உண்டு” என ஞாநி குறிப்பிட்டிருந்தார், இந்தப் புத்தகக் காட்சியில் ஞாநி இல்லை. அவரது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

நெல் கொள்முதல் விலை : மீண்டும் வஞ்சனை !

0

ன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,590/-, மோட்டா ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,550/- என நிர்ணயித்து, 2017 – 18 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது, மைய அரசு. இந்த விலையோடு ஊக்கத் தொகையையும் சேர்த்து, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,660/-, மோட்டா ரக நெல்லுக்கு ரூ.1,600/- என நிர்ணயித்து கொள்முதல் விலையை அறிவித்திருக்கிறது, தமிழக அரசு.

தமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் டெல்லியில் அணிதிரண்டு கடந்த நவம்பரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, இந்தியாவெங்கும் விவசாயிகள் தமது விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையை நிர்ணயிக்கக் கோரிப் போராடி வருகிறார்கள். அக்கோரிக்கையை அடைவதற்காகத் தடியடி தொடங்கி துப்பாக்கிச் சூடு வரை அரசின் கொடிய அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் மைய அரசும் தமிழக அரசும் அறிவித்திருக்கும் இந்த ஆதார விலைகள் நெல் உற்பத்திச் செலவை ஈடுகட்டுவதற்குக்கூடப் பயன்படப் போவதில்லை. ஆதார விலை, அதற்கும் மேலே ஊக்கத் தொகை என ஆட்சியாளர்கள் காட்டும் ஜிகினாவெல்லாம் விவசாயிகளை மீண்டும் ஏமாற்றி, அவர்களின் வயிற்றில் அடிக்கும் பொருளாதாரத் தாக்குதலாகவே உருவெடுத்து நிற்கின்றன.

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் 2014 -ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்வதற்கு ரூ.1,424 செலவாகும் எனக் கணக்கிட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இடுபொருட்களின் விலையும் பிற வாழ்க்கைச் செலவுகளும் ஏறியிருப்பதைக் கணக்கில் கொண்டால், நெல் உற்பத்திச் செலவு இருநூறு, முன்னூறு என மேலும் அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்க வாய்ப்பில்லை. பிற மாநிலங்களிலும் நெல் உற்பத்திச் செலவு தமிழகத்தைவிடப் பெருமளவு குறைவாக இருக்க வாய்ப்பேயில்லை.

காங்கிரசு கூட்டணி ஆட்சியின்போது எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட விவசாய கமிசன், உற்பத்திச் செலவோடு 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. சுவாமிநாதன் கமிசனின் பரிந்துரை விவசாயிகளின் அத்தியாவசியமான வாழ்க்கைச் செலவுகளைக் கணக்கில் கொள்ளவில்லை என்றபோதும், இந்தக் குறைந்தபட்ச, கட்டுப்படியாகக்கூடிய விலையைத் தருவதற்குக்கூட மைய அரசு தயாராக இல்லை.

சுவாமிநாதன் கமிசனின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டால், 2014 -ஆம் ஆண்டே நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,100 -க்கு மேல் நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட நெல் கொள்முதல் விலை உற்பத்திச் செலவைக்கூட ஈடு கட்டவில்லை. 2015 – 16 ஆம் ஆண்டில் மோட்டா ரகத்துக்கு ரூ.1,410, சன்ன ரகத்துக்கு ரூ.1,450; 2016 – 17 ஆம் ஆண்டில் ரூ.1,470 மற்றும் ரூ.1,510; 2017 – 18 ஆம் ஆண்டில் ரூ.1,550 மற்றும் ரூ.1,590.

ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகள் ஆயிரம், இரண்டாயிரம் என அதிகரித்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவை ஈடுகட்டும் விலை கொடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களிடமிருந்து, அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய இலாபத் தொகையும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிவரும் வேளையில், அதனைவிட ஆயிரம் ரூபாய் குறைவாக நிர்ணயித்து, போராடிவரும் விவசாயிகளை எள்ளி நகையாடியிருக்கிறார்கள், மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.

எந்தவொரு உற்பத்தியாளராவது தனது உற்பத்திப் பொருளை, உற்பத்திச் செலவைவிடக் குறைவான விலைக்கு விற்பதற்குச் சம்மதிப்பானா? ஆனால், அரசோ, விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாயிகளிடமிருந்து பறித்துவிட்டு, கொள்முதல் விலை என்ற பெயரில் அவர்களின் அடிவயிற்றில் அடித்துவருகிறது. தமது உற்பத்திப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பெரு முதலாளிகளுக்கு அளித்திருப்பதோடு, அவர்களுக்கு மானியங்கள், கடன் தள்ளுபடி, வரித் தள்ளுபடி உள்ளிட்டுப் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வரும் அரசு, விவசாயிகளுக்கோ உர மானியம் வழங்குவதற்குக்கூட ஆதார் அட்டை கட்டாயம் என உத்தரவிடுகிறது.

டிராக்டரை வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படும் வாகனமாகப் பட்டியல் இடுகிறது. கடன் தள்ளுபடி கேட்டுப் போராடினால், போலீசை இறக்கிவிட்டு அடித்து அவமானப்படுத்துகிறது, துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலையும் செய்யத் துணிகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை, குறுவை அறுவடை தொடங்கும் வேளையில், அதாவது அக்டோபர் 1 -ஆம் தேதியே நெல் கொள்முதல் விலையை அறிவித்து, நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்திருக்க வேண்டும். ஆனால், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலும், ஊழல், கொள்ளையடிப்பதிலும் மட்டுமே அக்கறையும் கவனமும் கொண்டிருக்கும் எடப்பாடி அரசு, மிகச் சாவகாசமாக மூன்று மாதங்கள் கழித்து, சனவரி முதல் வாரத்தில்தான் கொள்முதல் விலையை அறிவிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வளவு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்ததோ, அதில் ஒருபைசாகூட கூட்டி வழங்கப்படவில்லை.

இவ்வளவு அலட்சியமாக கொள்முதல் விலையைத் தாமதமாகவும் குறைவாகவும் அறிவித்து, கொள்முதல் நிலையங்களையும் இனிதான் திறக்க வேண்டும் என்ற நிலையில், குறுவை அறுவடை செய்த விவசாயிகள் தமது விளைச்சலைத் தனியாரிடம் வந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுவிட்டனர். விவசாயிகளின் இந்த இக்கட்டைப் பயன்படுத்திக் கொண்டுள்ள தனியார் கமிசன் மண்டி ஏஜெண்டுகள், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலைக்கும் கீழாக விவசாயிகளிடமிருந்து குறுவை நெல்லைக் கொள்முதல் செய்திருப்பதாகக் குற்றஞ்சுமத்துகிறார், பா.ம.க. நிறுவனர் ராமதாசு.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி, அதற்காக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையும் காப்பீட்டுத் தொகையும் இன்னமும் பெருமளவு விவசாயிகளுக்குக் கிடைக்காத அவலம், இந்த ஆண்டு பருவ மழை பரவலாகப் பெய்தாலும், பெய்த மழை விளைச்சலுக்குப் போதாது என்ற இக்கட்டான நிலை – இப்படித் தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து இன்னல்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டுவரும் நிலையில், எரிகிற கொள்ளியில் எண்ணெயை எடுத்து ஊற்றியது போல, விவசாயிகள் கோரியதையும்விட ஆயிரம் ரூபாய் குறைவாக கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் வழியாக, ஒன்று விவசாயத்தை விட்டு வெளியேறு, இல்லையா, வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு ஒழிந்து போ எனத் திமிராக அறிவித்திருக்கிறார்கள், மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.

விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையைத் தர மறுக்கும் மோடி அரசுதான், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என சவுண்டுவிட்டு வருகிறது. நூறு ரூபாய்கூட ஊக்கத் தொகையாகத் தர மறுக்கும் எடப்பாடி அரசுதான், கால்வாய்களை, கண்மாய்களைத் தூர்வாரும் குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் 300 கோடி ரூபாய்க்கும் மேலாகக் கொள்ளையடித்திருக்கிறது.

பா.ஜ.க.வும், அதனின் அடியாள் படையான எடப்பாடியும் விவசாயிகளை ஏமாற்றிவரும் மோசடிப் பேர்வழிகள் மட்டுமல்ல. அவர்கள் விவசாயிகளின் எதிரிகள். அவர்களிடம் கெஞ்சிப் பயனில்லை என்பதைக் காலம் உணர்த்தி விட்டது. இனி, விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அந்த எதிரிகளிடமிருந்து பிடுங்கிக்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

-குப்பன்

-புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

 

ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் !

2

ர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்றிருக்கும் வெற்றியைத் தொடர்ந்து தேர்தல் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்துப் பலரும் கவலைப்படுகின்றனர். முந்தைய இரு தேர்தல்களில் ஆர்.கே. நகரில் ஜெயலலிதா பெற்ற வெற்றியை ஒப்பிடும்போது, தினகரனின் வெற்றி இழிவானதென்று கருதுவோர், இரண்டு இழிவுகளுக்கும் இடையிலான வேறுபாடு எத்தனை ரூபாய் என்பதைச் சொல்லவேண்டும்.

குமாரசாமி தீர்ப்பைத் தொடர்ந்து 2015 -இல் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஏன் புறக்கணித்தன? போலி வாக்காளர்கள், ஓட்டுக்குப் பணம் என்று எல்லாவிதமான முறைகேடுகளும் அன்று தலைவிரித்தாடின. அ.தி.மு.க. மட்டும் பணம் விநியோகிக்கத் தோதாக 144 தடை உத்தரவு, இரவு பத்து மணிக்கு மேல் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்ய அனுமதி, தேர்தல் முடிவு அறிவிப்பிலேயே தில்லுமுல்லுகள் எனத் தேர்தல் ஆணையம் செய்த முறைகேடுகள்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றியைச் சாத்தியமாக்கின.

உண்மையைச் சொன்னால், ஜெயாவை ஒப்பிடும்போது தினகரனால் செய்ய முடிந்த தில்லுமுல்லுகள் குறைவானவையே. அரசு எந்திரத்தின் ஆதரவும் தினகரனுக்கு இல்லை. திகார் சிறை, ரெய்டுகளுக்குப் பின்னரும், தி.மு.க. அளித்த புகாரின் பேரில் சுமார் 45,000 போலி வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கிய பின்னரும், சின்னம் இல்லாத நிலையிலும் மன்னார்குடி மாஃபியா, பார்ப்பன மாஃபியாவின் சூழ்ச்சிகளை வென்றுவிட்டது. இதன் விளைவுதான் குருமூர்த்தியிடமிருந்து வெடித்தெழுந்த வசவு.

தினகரனின் வெற்றிக்குப் பணத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என்ற மதிப்பீட்டை அ.தி.மு.க., தி.மு.க. வினரே ஏற்கமாட்டார்கள். அந்தத் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் மீது மக்கள் கொண்டிருக்கும் கட்டுக்கடங்காத வெறுப்பு, எண்ணெய்க் கப்பல் கசிவு தோற்றுவித்த பாதிப்பு, குடிதண்ணீர், பொது சுகாதாரம் தொடர்பாக நடந்த மக்கள் போராட்டங்களில் போலீசின் அடக்குமுறை போன்ற பல காரணிகள் அ.தி.மு.க.வுக்கு எதிரான மக்களின் கோபத்தைக் கூட்டியிருக்கின்றன.

“அம்மா இருந்தபோதும் இதுதான் நிலை” என்ற போதிலும், வாக்காளர்களின் அடிமை மனோபாவம் அம்மாவுக்கு வழங்கிய சலுகையை அடிமைகளுக்கு வழங்கத் தயாராக இல்லை. அ.தி.மு.க. வாக்குவங்கியின் இந்தக் கோபம், “அம்மா இறந்த பின் தறி கெட்டு ஆடும் இந்த திருடர்களை அடக்கத் தகுதியான திருடன் தினகரனே” என்று கருதியிருக்கின்றன. “ஒரு குட்டையில் ஊறிய மட்டை” என்று தினகரனை நிராகரிக்கவில்லை. இது நம் கவனத்துக்குரியது.

“ஓட்டுக்குப் பணம்” என்பது இன்று ஆர்.டி.ஓ. ஆபீஸ் இலஞ்சம் போல அங்கீகரிக்கப்பட்ட எதார்த்தம். இந்நிலையை உருவாக்கிய குற்றவாளிகளில் முதலிடத்தைப் பிடித்தவர் ஜெயலலிதா. “சுயமரியாதையும் கவுரவமும் இழந்த கையேந்திகளாகவும் அடிமைகளாகவும் தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிப்பது என்கிற பார்ப்பனப் பாசிசக் கும்பலின் கனவுத் திட்டத்தையே, தனது தனிப்பட்ட இலட்சியமாகக் கொண்டிருக்கும் சதிகாரி” என்று ஜெயா வைப்பற்றி முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

குன்ஹா தீர்ப்பைத் தொடர்ந்து ஜெ. சிறையில் அடைக்கப்பட்டபோது, “தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா” என்று சினிமா நட்சத்திர அசிங்கங்கள் போராட்டம் நடத்தினார்கள். குன்ஹாவை இழிவுபடுத்தி அ.தி.மு.க. காலிகள் நாடு முழுவதும் ரவுடித்தனம் செய்தபோது நவ துவாரங்களையும் மூடிக்கொண்டிருந்தார்கள் நீதிபதிகள்.

குற்றவாளி ஜெயா பிணையில் வெளிவந்தபோது தொலைக்காட்சிகள் அவர் வருகையை “லைவ் டெலிகாஸ்ட்” செய்தார்கள். இன்று அந்த கிரிமினலுக்கு மணி மண்டபம் கட்டுவதை ஆட்சேபிக்கக் கூட திராணியற்றவர்களாக இருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். இவற்றையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது தினகரன் வெற்றியைப் பற்றி மட்டும் அதிர்ச்சி வெளியிடுவது பாசாங்கு.

“தேர்தலில் நிற்பவன் பதவியை டெண்டர் எடுக்கிறான்” என்பதுதான் இன்றைய எதார்த்தம். “பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டாலும் எம்.எல்.ஏ. வைத் தட்டிக் கேட்க முடியாது” என்பது மக்களுக்குத் தெரிகிறது. “காசை வாங்கிக்கொண்டு எனக்கு ஏன் ஓட்டுப்போடவில்லை” என்று வாக்காளர்களைக் கேட்க முடியாத நிலை உருவாகி வருவது வேட்பாளர்களுக்கும் புரிந்து வருகிறது. இதுதான் தேர்தல் ஜனநாயகம் கண்டிருக்கும் முன்னேற்றம்.

ஆர்.கே. நகர் வாக்காளர்களில் ஆகப்பெரும்பான்மையினர் நிச்சயமற்ற வருவாயில் வாழ்க்கையைத் தள்ளுகின்ற கூலித் தொழிலாளர்கள் மற்றும் சுய தொழில் செய்து வாழும் ஏழை மக்கள். இன்று மொத்த சமூகமும் அந்நிலையை நோக்கித் தள்ளப்பட்டு வருகிறது. “இன்று விவசாயி, நாளை செக்யூரிட்டி, மறுநாள் சிறு வியாபாரி..” எனப் புயலில் சிக்கிய சருகு போல அலைக்கழிக்கப்படும் உழைக்கும் வர்க்கங்களைப் பொருத்தவரை, “எதிர்காலம்” என்பது அடுத்த ஐந்தாண்டோ பத்து ஆண்டோ கூட இல்லை. “நாளைய சோறு, இன்றைய கடன்பாக்கி” – அவர்களின் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கும் “எதிர்காலம்” இதுதான்.

ஜெயலலிதாவின் இலவச அரிசிக்கும், அம்மா உணவகத்துக்கும், ஓட்டுக்குத் தரப்படும் பணத்துக்கும் இந்த வர்க்கத்தினர்தான் இலக்கு. இம்மக்களைப் பொருத்தவரை, கொள்கை, இலட்சியம் போன்றவற்றையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத தொலைவுக்குத் தள்ளிவிட்டது அவர்களது வாழ்க்கை. கொள்கைகளைக் காட்டிலும், தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிலும் அவர்களுக்கு நம்பிக்கைக்குரியதாகத் தெரிவது தினகரனின் இருபது ரூபாய் நோட்டு.

“கொளுகை என்னான்னு மீடியாக்காரங்க கேட்டாங்க. எனக்குத் தலை சுத்திடுச்சி” என்று ரஜினி பேசுவதைக் கேட்டு அவரது ரசிகர்கள் வெட்கப்படவில்லை. ஆரவாரிக்கிறார்கள். இத்தகைய வர்க்கங்களை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் ரஜினியை முன்தள்ளுகிறது பா.ஜ.க. திராவிட இயக்கம், தமிழ் உணர்வு, கம்யூனிச அரசியல் ஆகியவற்றை வீழ்த்துவதற்கு வட இந்திய பாணியிலான இந்துத்துவ பொறுக்கித்தனம் உதவாது. பொறுக்கி அரசியல் என்ற இனிப்புக்குள்ளே இந்துத்துவத்தை மறைத்துத்தான் ஊட்ட வேண்டும் என்ற வழிமுறைக்கு ஜெயலலிதா கோடு போட்டிருக்கிறார். அதன் மீது ரோடு போடத்தான் ரஜினியை அழைத்து வருகிறார்கள்.

இம்மக்கள் ஒரு பகுதி தமிழ்நாடு – மென்மேலும் உதிரிகளாக மாற்றப்படும் தமிழ்நாடு. இன்னொன்று – ஜல்லிக்கட்டு, நீட் எதிர்ப்பு, கதிராமங்கலம், நெடுவாசல், செவிலியர், மீனவர், விவசாயிகள், அரசு ஊழியர், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டங்கள் என்று தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும் தமிழ்நாடு. முதற் பிரிவு மக்கள் மீது “ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது” என்ற ஜனநாயக விழுமியத்தை தனியே நிலைநாட்ட முடியாது.

“பணம் வாங்காமல் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு எம்.எல்.ஏ. -க்களுக்கு முறையாக அதிகாரத்தை வழங்குவது எப்படி” என்று மக்களைப் பயிற்றுவித்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது. ஏனென்றால், ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் நிறுவனங்கள் என்று கூறப்படுபவைதான் அதன் உண்மையான எதிரிகளாக இருக்கின்றன.

தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வது எப்படி என்று மக்களைப் பயிற்றுவித்துவிட்டால், இந்த நிறுவனங்களையும், தினகரனின் இருபது ரூபாய் நோட்டையும், “கொளுகை இல்லாத ரஜனியையும்” மக்கள் தாமே எதிர்கொள்வார்கள். செக்கு மீது ஏறி சிங்கப்பூர் போக முடியாது. தேர்தல் அரசியலின் வரம்பில் சிந்தித்து இதனைச் சாதிக்கவியலாது.

-புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

 

சென்னை புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள் – தோழர் துரை சண்முகம்

0

டிப்பது என்ற ஆர்வம் நம்மில் பலருக்கு உருவாகியதும் எதைப் படிப்பது, எப்படிப் படிப்பது ? என்ற வினா எழுகிறது.

வாசிப்பு என்பது ஒரு கலை, நூல்களைக் காட்டிலும் நம்முடைய ஆயுள் குறைவுதான். ஆகவே நாம் படிப்பவற்றை தெரிவு செய்து தான் படிக்க வேண்டும். அந்த வகையில் சில நூல்களை அறிமுகம் செய்கிறது இந்த காணொளி. பாருங்கள்… பகிருங்கள்…

நூலறிமுகம் : நறுமணம், வேர்கள், முதல் மதிப்பென் எடுக்கவேண்டாம் மகளே !, மஞ்சள் பிசாசு.

எழுத்தாளர் இமையம் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு ” நறுமணம்” க்ரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அலெக்ஸ் ஹேலி எழுதிய “ரூட்ஸ்” என்ற ஆங்கில நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வேர்கள் என்ற தலைப்பில் எதிர் பதிப்பகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்றைய கல்வி சூழலை விளக்கும் வகையில் நா. முத்து நிலவன் அவர்கள் எழுதிய நூல் முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே! என்ற நூல் இந்நூலை அன்னம் – அகரம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். தங்கம் எப்படி உலகை ஒரு பிசாசு போல ஆட்டிப்படைக்கிறது என்பதை விளக்குகிறது ருஷ்ய எழுத்தாளர் அ.வி. அனிக்கின் எழுதிய நூல் மஞ்சள் பிசாசு (அடையாளம் வெளியீடு).

***

நூலறிமுகம் : மூலதனம், ஹைட்ரோ கார்பன் அபாயம், நீதிமன்றங்களில் தந்தை பெரியார், புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள்

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு இது. இக்காலத்தில் நாம் மூலதனம் நூலைப் பயில வேண்டியுள்ளது. தமிழில் மூன்று பாகங்களாகவும், ஐந்து நூல்களாகவும் கிடைக்கிறது. மேலும் இந்த வீடியோவில் ஹைட்ரோ கார்பன் அபாயம், நீதிமன்றங்களில் தந்தை பெரியார், புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் ஆகிய நூல்களை தோழர் துரை சண்முகம் அறிமுகப்படுத்துகிறார்.

பல்வேறு பதிப்பங்களால் வெளியிடப்பட்ட  இந்த நூல்களைஒரே கூரையின் கீழ் திரட்டித் தருகிறது கீழைக்காற்று விற்பனையகம்…

 

***

41வது சென்னைப் புத்தகக் காட்சியில் முற்போக்கு நூல்கள் அனைத்தும் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் 297, 298

நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை

நேரம் :
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம்
( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30

முகவரி : கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

 

41வது புத்தகக் காட்சி : அலைகள் – பாரதி புத்தகாலயம் – சிந்தன் புக்ஸ் – வீடியோ

1

புத்தகக் காட்சியின் பிரம்மாண்டத்துக்குள் நுழைந்து எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் பலருக்கும் வரலாம். அதிலும் கண்கவர் வண்ணங்களும், வழுவழு தாள்களும், கவர்ந்திழுக்கும் தலைப்புகளும் சூழ உள்ள அரங்கில் சில செறிவான புத்தகங்களைத் தெரிவு செய்ய உதவும் வகையில், சில பதிப்பகங்களையும் நூல்களையும் அறிமுகம் செய்கிறது இந்த காணொளி.

பாருங்கள்… பகிருங்கள்…

41வது புத்தகக் காட்சியில் அலைகள் வெளியீட்டகம் !

லைகள் வெளியீட்டகம் சார்பில் புத்தகக் காட்சியையொட்டி வெளிவந்துள்ளன நூல்களில் சில:

  • அறியப்படாத கலாச்சாரப் புரட்சி
  • அழிந்து வரும் கலாச்சாரம் ஓர் ஆய்வு
  • அழிந்துவரும் கலாச்சாரம் மேலும் ஓர் ஆய்வு
  • தமிழக மரபில் வேத கல்வி
  • தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடிவரை…

மேலும் பல நூல்கள்… வங்கிப் படியுங்கள்…

பதிப்பக முகவரி :

அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/1ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர்,
இராமாபுரம், சென்னை – 600089,
கைபேசி – 98417 75112.

***

41வது புத்தகக் காட்சியில் சிந்தன் புக்ஸ் – பாரதி புத்தகாலயம் !

ந்த ஆண்டு சிந்தன் புக்ஸ் சார்பில் வெளியான நூல்கள் :

  • சூரியனைத் தொடரும் காற்று
  • போர் தொடங்கியது
  • இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
  • அகிலங்களின் வரலாறு…

இந்த ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நூல்களில் சில:

  • குழந்தைகளுக்கான நூல் : கண்டேன் புதையலை
  • வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்
  • சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்.

பதிப்பக முகவரி :

சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
கைபேசி – 94451 23164.

பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 18.

இந்த நூல்கள் கீழைக்காற்று விற்பனையகத்திலும் கிடைக்கும்.

***

41வது சென்னைப் புத்தகக் காட்சியில் முற்போக்கு நூல்கள் அனைத்தும் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் 297, 298

நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை

நேரம் :
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம் 
                ( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30

முகவரி : கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

 

41வது புத்தகக் காட்சி | தமிழகத்தில் தேவதாசிகள் – அம்பேத்கர் இன்றும் என்றும் | வீடியோ

0

சென்னையின் அடையாளமாகிப் போன புத்தகக் காட்சியில் பல நூறு அரங்குகள், பல ஆயிரம் தலைப்புகளில் நூல்கள்… என்ன பிரமிப்பை ஏற்படுத்துகிறதா ?

நம்மில் பலரும் புத்தகங்களை படிக்க விரும்புகிறோம். ஆனால் நேரமில்லை, வாய்ப்பில்லை என தவிர்க்கிறோம். வாழ்க்கை போராட்டம் போல கற்பதையும் ஒரு போராட்டமாக இன்று செய்ய வேண்டியுள்ளது.

பல தலைப்புகள் இருந்தும் இன்றும் மக்கள் சமூக பிரச்சினைகள் சார்ந்த நூல்களை தேடி வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் சமூக அக்கறையுள்ள நூல்கள் மற்றும் நூல் வெளியீட்டாளர்களை அறிமுகம் செய்கிறது இந்த காணொளி. இதனை பாருங்கள்… பகிருங்கள்…

நூல்களை வாங்கிப் படியுங்கள்… பயன் பெறுங்கள்…

41வது புத்தகக் காட்சியில் புதிய கலாச்சாரம் வெளியீடுகள் ! | வீடியோ

தமிழகத்தில் தேவதாசிகள், அம்பேதகர் – இன்றும் என்றும் – நூல் அறிமுகம் | வீடியோ

சூடிக் கொடுத்த சுடரை தேவதாசி என சொன்னதற்காக வைரமுத்துவை வசைபாடுகிறது ஆர்.எஸ்.எஸ். கூட்டம். ஆண்டாளைச் சொன்னால் மட்டும் தான் உங்களுக்கு வலிக்கிறது. ஆண்டாண்டு காலமாய் கோவிலுக்கு நேர்ந்துவிட்டு அவர்களைச் சூறையாடியதை அந்த அவலத்தை அடக்கமாக விளக்குகிறது இந்த நூல்.

வரலாறு தெரியாதவன் வரலாற்றைப் படைக்க முடியாது ! என்றார் அம்பேத்கர் அவரின் வரலாற்றை, அவரது இன்றைய தேவையை விவரிக்கும் வகையில் இந்நூலை வெளியிட்டுள்ளது விடியல் பதிப்பகம்.

இந்த நூல்களை வாங்கிப் படியுங்கள்… பயன் பெறுங்கள்…

 ***

41வது சென்னைப் புத்தகக் காட்சியில் நூல்கள் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் 297, 298

நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை

நேரம் :
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம் 
                ( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30

முகவரி :

கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

 

சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது ! பாசிச அபாயம் நெருங்குகிறது !

13

ந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கின்றனர். இந்திய நீதித்துறையின் வரலாற்றில் இது மிகப்பெரிய நெருக்கடி என்று கூறுகிறது “லைவ் லா” இணையதளம்.

தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் பேசியதன் சுருக்கம் கீழ் வருமாறு :

“இந்த நாட்டின் வரலாற்றிலும் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றிலும் இது ஒரு அசாதாரணமான நிகழ்வு. இப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதில் எங்களுக்கு சிறிதும் மகிழ்ச்சியில்லை என்றபோதிலும் இதைத்தவிர இனி எங்களுக்கு வேறு வழியில்லை.”

“சமீப காலமாகவே உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நாட்டின் மூத்த நீதிபதிகள் என்ற முறையில் தலைமை நீதிபதியை சந்தித்து சில விசயங்கள் சரியாக இல்லை என்று நாங்கள் நால்வரும் சுட்டிக்காட்டினோம். ஆனால் பயனில்லை.”

“நாங்கள் நான்கு பேருமே சொல்கிறோம். நீதித்துறை என்ற இந்த நிறுவனத்தை பாதுகாக்கத் தவறினால் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் போய்விடும்… இன்று காலை கூட ஒரு குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியை சந்தித்து நாங்கள் நான்கு பேரும் சில கருத்துகளைக் கூறினோம். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் அதனை ஏற்கவில்லை. எனவேதான் நீதித்துறையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று இந்த நாட்டு மக்களிடம் கூறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.”

“ஏனென்றால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடமை தவறியது பற்றி இந்த நாட்டின் சான்றோர் பலர் முன்னர் விமரிசித்திருக்கிறார்கள். அதுபோல செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் லோகுர் ஆகிய நீதிபதிகள் தங்கள் ஆன்மாவை விலை பேசிவிட்டார்கள், நீதித்துறையையும் இந்த நாட்டையும் பாதுகாக்க தவறிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடாது என்று கருதுகின்றோம். எனவேதான் இந்த நிலைமையை நாட்டுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.”

“என்ன வழக்கு தொடர்பான பிரச்சினை?” என்று நிருபர்கள் கேட்டதற்கு “இரண்டு மாதங்கள் முன் நாங்கள் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகலை உங்களுக்குத் தருகிறோம். அதில் விவரங்கள் உள்ளன” என்றார் ரஞ்சன் கோகோய்.

“நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு பற்றிய பிரச்சினையா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஆம் என்று பதிலளித்தார் ரஞ்சன் கோகோய்.

“தலைமை நீதிபதிக்கு எதிராக இம்பீச்மென்ட் கொண்டு வரப்படவேண்டும் என்று விரும்புகிறீர்களா” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம். இனி நாடு முடிவு செய்யட்டும்” என்றார் செல்லமேஸ்வர்.

“இந்த நாட்டுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை இது. அதனை செய்து விட்டோம். அவ்வளவுதான்” என்றார் கோகோய்.

***

அன்பார்ந்த வாசகர்களே,

சோரப்தீன் கொலை வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுவிப்பதற்கு லஞ்சம் வாங்க மறுத்து நீதிபதி லோயோ மர்மமான முறையில் இறந்து போனது பற்றி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, அதில் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது. மும்பை வழக்கறிஞர்களின் எதிர்ப்பை மீறி இது நடக்கிறது

பாபர் மசூதி வழக்கு மோடியின் அரசியல் நோக்கத்துக்கு பயன்படும் விதத்தில் தீபக் மிஸ்ராவால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் லஞ்சக் குற்றச்சாட்டுக்கு இலக்கான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அந்த வழக்கை மூத்த நீதிபதிகள் அமர்விலிருந்து மாற்றி, தனக்கு தோதான நீதிபதிகளை விசாரிக்க சொல்கிறார். இது தொடர்பாக வழக்கு தொடுத்து பிரசாந்த் பூஷணுக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறது உச்ச நீதிமன்றம். ( பார்க்க டிசம்பர் இதழ் பு.ஜ )

நீட் வழக்கில் மெயின் வழக்கு விசாரணை முடியாத போதே, தேர்வு திணிக்கப்படுகிறது. அந்த முறைகேட்டின் தொடர்ச்சிதான் மேற்படி போலி மருத்துவக் கல்லூரி வழக்கு.

இதற்கு முன் தற்கொலை செய்து கொண்ட அருணாசல பிரதேச முதல்வர் கலிகோ புல் தற்கொலைக் கடிதத்தில் முன்னாள் தலைமை நீதிபதி கேஹர் முதல் இந்நாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரையிலானோர் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டு இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களே அந்த வழக்கை விசாரித்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.

– இப்படி எண்ணிலடங்கா முறைகேடுகள். நீதிபதிகள் நியமனத்திலிருந்து அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் வரையில் அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மோடி பிரதமரானபின் நீதித்துறையை ஆர்.எஸ்.எஸ் கையாள்களைக் கொண்டு நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதனைக் கேள்விக்குள்ளாக்கிய காரணத்தினால்தான் தமிழக வழக்கறிஞர்கள் பழிவாங்கப்பட்டார்கள்.

பார்ப்பன பாசிசமும் ஊழலும் கைகோர்த்துக் கொண்டு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களில் கோலோச்சுகின்றன.

அக்லக் என்ற பரிதாபத்துக்குரிய முஸ்லிம், உனாவின் தலித்துகள், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் ஆகியோர் மட்டுமல்ல, தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு மரணம்தான் என்று மிரட்டுகிறது பார்ப்பன பாசிசக்கும்பல்

தற்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கும் நீதிபதிகள் புரட்சிக்காரர்கள் அல்ல. அவர்கள் பெரிதும் மதிக்கின்ற மரபுகளையெல்லாம் மீறி பிரச்சினையை சந்திக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரம் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திராவின் ஆட்சிக்காலத்தில் அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதற்கு தலையாட்டிய நீதிபதிகளை நினைவு படுத்தி, அத்தகைய நிலைமை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்கள் இந்த நான்கு நீதிபதிகளும்.

எல்லா முனைகளிலும் தோல்வியடைந்து, மக்களின் வெறுப்பை ஈட்டி வரும் மோடி தலைமையிலான பார்ப்பன பாசிசக் கும்பல், பெயரளவிலான ஜனநாயகத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்து ராஷ்டிரக் கொடுங்கோன்மை சமீபிக்கிறது. எச்சரிக்கை.. எச்சரிக்கை!

 

எச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !

68
திரைப்படக் கவிஞர் வைரமுத்து, தினமணி கூட்டம் ஒன்றில் ஆண்டாள் பற்றி பாராட்டிப் பேசிய உரை ஒன்றை இந்துமதவெறி வானரங்கள் எடுத்துக் கொண்டு வெறிப் பேச்சுக்களை எறிந்து வருகின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் பல நூற்றாண்டுகள் நீடித்த தேவதாசி முறை என்பது பெண்களை இழிவுபடுத்தும் ஒரு பார்ப்பனிய ஒடுக்கு முறையாகும். இதை திராவிட இயககம்தான் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒழித்தது. அப்போது இந்துமதவெறியர்கள் தேவதாசி முறைக்கு ஆதரவாக கூக்குரலிட்டனர். அப்போது மட்டுமல்ல, 90-களின் இறுதி வரையிலும் கூட பல்வேறு நடனக்கலைஞர்கள், இந்துமத அறிஞர்கள் தேவாசி முறையை ஆதரித்து பேசியிருக்கின்றனர். இப்போதும் கூட இந்த பேச்சுக்களை பார்க்கலாம்.
அது குறித்து90-களின் மத்தியில் வெளிவந்த புதிய கலாச்சாரம் கட்டுரையை விரைவில் வெளியிடுகிறோம். ஆண்டாளை தேவதாசி என்று ஒரு அமெரிக்க ஆய்வாளர் குறிப்பிட்டதை வைரமுத்து மேற்கோள் காட்டியதை வைத்து எச்ச ராஜா துள்ளுகிறார். வைரமுத்துவிற்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கிறார். எனில் பார்ப்பனியத்தால் பாதுகாக்கப்பட்ட தேவதாசி இழிவு முறையை திராவிட இயக்கம் ஒழித்ததை எச்ச ஏற்கிறார் என்று பொருள். இப்படி வரலாற்றையே மாற்றி பேசும் இந்த கயவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள், செய்வார்கள் என்பதை இந்த அவதூறுப் பிரச்சாரம் நிலைநாட்டியிருக்கிறது.
எச்ச ராஜா-விற்கு வரலாற்று ரீதியாக பதிலளித்த சில பேஸ்புக் நண்பர்களின் பதிவையும், இயக்குநர் பாரதிராஜாவின் வீடியோவையும் இங்கு நன்றியுடன் வெளியிடுகிறோம். இந்த தொகுப்பில் எச்சயை ஆவேசமாக திட்டும் அண்ணன் சீமான் வீடியோ இடம்பெறவில்லை. காரணம் அவர் அப்படி பேசவில்லை. பேசியது எல்லாம் ஐயா ராஜா அப்படித்தான் பேசுவார், அதே மாதிரி நாம் பேச முடியுமா என்று பம்மிப் பேசுவதுதான். பொதுவில் எச் ராஜா குறித்து அண்ணன் சீமானிடம் நிறைய பயம் இருக்கிறது. கூடவே ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழர்கள்தான் இந்துக்களல்ல என்று விவாதிக்க தயாரா? எனும் தமிழ் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமும் இருக்கிறது.
– வினவு

எச்ச ராஜாவை எச்சரிக்கும் இயக்குநர் பாரதிராஜாவின் வீடியோ

‘தீரர்’ சத்தியமூர்த்தி அய்யரின் வாரிசுதாரர்களான தினமணி வைத்தியநாதய்யர்களின் அனுக்ரகத்தில் பெருமை தேட நினைக்கும் வைரமுத்துகளுக்கு ஹெச்.ராஜா சர்மாக்களிடமிருந்து வசவுகள்தான் மிஞ்சும். என்னதான் வெள்ளை வெளேரென ‘ஆம்பளை’ சுடிதாரும், பக்தி இலக்கிய ஃபேர் அண்ட் லவ்லியும் போட்டு மேடையேறினாலும், பிறப்பிலேயே அமைந்த இயல்பான கறுப்பு நிறம்தான் அவாள்களின் கண்களுக்குத் தெரியும். எத்தனை யுகங்களானாலும் பிறப்பின் அடிப்படையிலேயே மனிதர்களைப் பார்க்கும் மைக்ராஸ்கோப் கண்கள் கொண்டவர்களாயிற்றே!

ஆண்டாளையா தேவதாசி குலத்தில் பிறந்ததாகச் சொன்னாய் என கவிப்பேரரசு மீது பாய்ந்து பிறாண்டுகின்றன ஒரிஜினல் ஆன்மிக அரசியல் ஓநாய்கள். பேரரசின் பரம்பரைக்கே டி.என்.ஏ. டெஸ்ட் நடத்துகிறார்கள். எதிரில் நிற்கும் படைக்கு முன்னால், இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி போல ‘வெள்ளைக் கொடி’ உயர்த்துவது தவிர வேறு வழியில்லை கவிப்பேரரசுக்கு.

வின்னர் வடிவேலு பாணியில், ‘உன் தாய் பத்தினின்னு ஒத்துக்குறேன்’ என வருத்தம் தெரிவித்து, எவர் மனமும் புண்பட்டிருந்தால் அதற்கு புணுகு தடவத் தயார் எனச் சொல்லி, அடுத்தடுத்த விருதுகளுக்கு ஆபத்தில்லாதபடி காத்துக் கொண்டது கவிப்பேரரசின் சாமர்த்தியம். நம்மாளு ஒருத்தர் இத்தனை சாமர்த்தியத்துடன் இருக்கிறார். அத்துடன் எப்போதும் கலைஞரின் நண்பர் என்பதை உரக்க உரைக்கிறார் என்பதில் நமக்கும் பெருமகிழ்ச்சிதான்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் யாருக்குப் பிறந்தார் என்பது நமக்குப் பிரச்சினையல்ல. ஆண்டாளை தேவதாசி என்று யாரோ எழுதியதை மேற்கோள்காட்டிப் பேசிய கவிஞர் குற்றவாளி என்றால், தேவதாசி என்ற முறையை கோவில்களில் புகுத்தி, பெண்களை இழிவும் அடிமையும்படுத்தி, ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அதனைக் குலத்தொழிலாக மாற்றி வைத்த பெருங்குற்றவாளிகளை யார் அடையாளப்படுத்துவது? பேசியவரைத் தண்டிப்போம் என்பவர்கள், ஆயிரங்காலத்து அவமானத்திலிருந்து மீளமுடியாத சமூகங்களையும் பிறப்பின் அடிப்படையிலான பேதங்களையும் உருவாக்கியவர்களுக்கும் அதனைக் கட்டிக்காத்து அரசியல் செய்பவர்களுக்கும் என்ன தண்டனைத் தரப்போகிறார்கள்? ஆண்டாளை விட்டுவிடுவோம். அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆண்டு கொண்டிருப்போரை என்ன செய்யப் போகிறோம்?

வைரமுத்துவை நோக்கி ஹெச்.ராஜா வகையறாக்காளல் வீசப்பட்ட வார்த்தைகள் என்பவை சூத்திரனாக்கப்பட்ட-அதற்கும் கீழான நிலைக்குத் தள்ளப்பட்ட அனைவரின் மீதும் காலங்காலமாக வீசப்படும் வார்த்தைகள். சூத்திரன் என்றால் வேசி மகன் என எழுதி வைக்கப்பட்டிருப்பதை எடுத்துச் சொன்ன பெரியாரும், இந்து என்றால் திருடன் என அகராதியில் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டிய கலைஞரும் மதஉணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக அவாள்களைவிட இவாள்கள் போடும் பெருங்கூச்சல்களும் காலந்தோறும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

புண்படுத்தலாமா எனக் கேட்டபடி அவர்களுக்கு, நமது பின்புறத்தை வசதியாக காட்டிக் கொண்டே இருக்கும்வரை வைரமுத்துகளின் நிலைமைதான் எல்லோருக்கும்.

– Govi Lenin

__________

எச்ச ராஜாவை எச்சரிக்கும் தமிழன் பிரசன்னா

ண்டாள் பாடல்கள் அனைத்தும் அடல்ட்ஸ் ஒன்லி என்ற விதத்தில் இருக்கும் என்பது திருப்பாவை படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த அளவிற்கு, அதிலும் ஒரு பெண் எழுதியிருக்கும்போது ஆணாதிக்கம் நிரம்பி வழிந்த அக்காலத்தில் அப்பெண்ணை எப்படி பார்த்திருப்பார்கள்… அவர் தாசியாக்கப்பட்டிருப்பார் என்ற ஒரு ஆய்வு கண்ணோட்டத்தில் சொன்னால், அதற்கு திரு. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை இவ்வளவு இழிவாக பேசுகிறார் என்றால் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி… இதை தானே பார்ப்பனத் திமிர் என்று சொல்கிறோம். !

உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சொன்னதற்கே இப்படி ஆத்திரம் வருகிறதே… ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, எங்கள் இன பெண்களை சொல்லவில்லையா…தாசிகள் என்று, சூத்திரன் என்பவன் ‘ தாசியின் மகன்’ என்று எழுதி வைக்கவில்லையா… உங்கள் வேதங்கள்.!

உங்கள் பூணூல் சாஸ்திரப்படி, இந்து மதத்தை கடைப்பிடிக்கும் சூத்திரர்கள் அனைவரும் தாசியின் மகன்கள் தானே… திரு. வைரமுத்து அவர்களை தாசி மகன் என்று ஒவ்வொரு தடவையும் சொல்லும் ராஜா, அனைவரையும் சேர்த்து, இது தான் சமயம் என்று தாசிமகன்கள் என்று வேறு கொக்கரிக்கிறார்.!

மற்ற மாநிலங்கள் போன்றா தமிழ்நாடு? உங்கள் வண்டவாளங்களை, தண்டவாளங்களில் ஏற்றிய எங்கள் தந்தை பெரியார் அறிவுறுத்திய, உணர்த்திய திராவிட உணர்வும், பார்ப்பனீய தந்திரமும் நாங்கள் முழுதும் அறிந்ததே…இந்த அளவிற்கு பார்ப்பனீயம் என்ற பாம்பு , தன்னுடைய நஞ்சை கக்கிக்கொண்டிருக்கிறது …!

இதையும் கூட, இவர்களின் பக்தி என்ற பெயரில் நடத்திய, நடத்திக் கொண்டிருக்கும் அசிங்கங்களையும், ஆபாசங்களையும், வேதங்களின் உண்மை முகத்திரையையும் கிழித்தெறிய மற்றுமொரு வாய்ப்பாக தான் பெரியாரியவாதிகள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை ராஜாவிற்கு சொல்லிக்கொள்கிறோம்.!

– சுசிலா

____________

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் & டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் – செய்த மாபெரும் புரட்சி.. தேவதாசி முறை ஒழிப்பு..

ண்டாளை தேவதாசி என வைரமுத்து சொன்னது மகா தவறு, ஆண்டாளுக்கு மிகபெரிய இழுக்கு என்றால், அந்த “தேவதாசி” என்னும் சொல் ஹெச். ராஜாவை எந்தளவுக்கு கொந்தளிக்க வைத்துள்ளது என்பது புரிகிறதா? அப்படியென்றால், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை, பெரிய ஹிந்து கோயில்களில், இந்த தேவதாசி முறை நடைமுறையில் இருந்து வந்ததே.. அதை நிறுத்தக்கூடாது என அப்போதைய ஹிந்து வகுப்புவாதிகளும், ஹெச்.ராஜா போன்றோரின் முன்னோர்களும் கடுமையாக எதிர்த்து ஏன்?

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கோவில்களுக்கு பொட்டுக்கட்டி “தேவதாசிகளாக”, பார்ப்பன் புரோகிதர்கள், கோயில் முக்கியஸ்தர்கள், ஊர் பணக்காரர்களுக்கு தாசிகளாக மாற்றும் முறையை ஒழிக்க “தேவதாசி ஒழிப்பு” மசோதாவை, 1930 -ஆம் ஆண்டில் கொண்டு வந்து அம்முறையை முற்றிலும் ஒழித்தது திராவிட இயக்கத்தின் முன்னோடியான அப்போதைய நீதிக்கட்சி அரசு. தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டுவந்து, அதை சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பெரிய பார்ப்பனத் தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்டமாக மாற்ற பெரும்பாடுபட்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இன்றைய காலகட்டத்திலும் தேவதாசி முறை ஒரிசா, வட கர்நாடகா, தெலுங்கானா போன்ற சில இடங்களில் நடைமுறையில் உள்ளது..

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் – இவர் சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். 1936 -ல் வெளியான இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. முதலில் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராக இருந்த இவர் 1925 -ல் பெரியார் காங்கிரசிலிருந்து விலகியபோது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். 1930 -ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார்.

ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். நவம்பர் 1938 -ல் அதற்காக ஆறு வாரங்கள் சிறையிலடைக்கப்பட்டார். அவரது புதினம் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் தேவதாசி முறையை ஒழிக்க அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சாரங்களும் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற வழிவகுத்தன. அச்சட்டம் 1947 -லிருந்து தேவதாசி முறையை ஒழித்தது.

தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மேலவையில் கொண்டு வந்தபோது, திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.

“கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு – இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் – தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது”, என்று கூச்சல் போட்டார்.

தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி – மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார். அப்போது நடந்த விவாதம்…

சத்திய மூர்த்தி அய்யர் : தாசிகள் கலைஞர்கள், அவர்களை ஒழிப்பது, கலையை ஒழிப்பதற்குச் சமம். அதோடு இது இறைவனுக்கு உகந்த விசயமா??

முத்துலட்சுமி : நான் கலையை ஒழிக்க சொல்லவில்லை, கலையின் பெயரால் விபச்சாரம், ஒழுங்கீனம் நடப்பதையே எதிர்க்கிறோம்..

சத்திய மூர்த்தி அய்யர் : இறைவனுக்கு பொட்டு கட்டிக்கொள்வது புண்ணியம், இந்த புண்ணியம் முத்துலட்சுமிக்கு வேண்டாமா ?

முத்துலட்சுமி : மதிப்பிற்குறிய சத்திய மூர்த்தி சொல்வது சம்மதிக்க தகுந்த கருத்து மாதிரி தெரியலாம் ஆனால் தேவதாசி முறையில் எங்கள் சமூகத்தினர், அலுத்து போய்விட்டார்கள்.. அந்த புண்ணியத்தை நிறையைவே திகட்டும் அளவுக்கு நாங்கள் அனுபவித்துவிட்டோம்.. எனவே தாங்கள் தங்கள் சமூகத்தினரை தேவதாசி முறைக்கு கட்டுப்பட சொல்லி கொஞ்ச காலம் அந்த புண்ணியத்தை அனுபவிக்கச் சொல்ல தயாரா ?

சத்திய மூர்த்தி அய்யர் : (கப் சிப்)

இப்போது சொல்லுங்கள், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை பார்ப்பன கும்பல் காப்பாற்ற போராடிய “தேவாதாசி” என்னும் சொல், இப்போது எச்ச.ராஜா அய்யர்வாள்களுக்கு எட்டிகாயாய் கசக்க தந்தை பெரியாரும், திராவிட முன்னோடியான நீதி கட்சியும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் & டாக்டர் முத்துலட்சுமி அமையாரும் தானே காரணம்.

வாழ்க தந்தை பெரியார்.. வளர்க அவர் தொண்டு.. திராவிடம் மறவேல்..

– Prakash JP

__________

__________

தேவதாசி குலம் குறித்து 1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கொடுக்கும் விளக்கம் என்னவென்றால், “வேறு வேறு சாதிகளை சேர்ந்த ஆண் – பெண் இருவரின் தவறான நடத்தையால் பிறக்கும் பெண்களே கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். கோயில்களில் பாட்டு, நடனம் என்பது இவர்களது தொழில்” என்கிறது.

தேவதாசிமுறை ஒழிப்பு தொடர்பான மசோதா, 1920 -களின் இறுதியில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரால் கொண்டு வரப்படுகிறது. அதை எதிர்த்துப் பேசிய அன்றைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர், “தேவதாசிகள், ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள். புனிதத்தன்மை பெற்றவர்கள். இந்த மசோதா மூலமாக சமூக ஒழுங்கு கெடக்கூடும். சமூகத்துக்கு தாசிகள் தேவை. இவர்கள் இல்லாவிட்டால் சங்கீதம் மற்றும் பரதக்கலை அழிந்துவிடும்” என்றெல்லாம் எதிர்த்துப் பேசினார். முத்து லட்சுமி ரெட்டி கொடுத்த பதிலடி மிகவும் பிரபலம்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் ஒரு மகளிர் கல்லூரியில் பரதநாட்டியம் தொடர்பான ஒரு கருத்தரங்கம் நடந்தது. அப்போது பரதநாட்டிய மங்கையான சொர்ணமால்யா விழாவில் கலந்துக்கொண்டு தேவதாசி முறையை ஆதரித்துப் பேசினார். என் நினைவு சரியாக இருக்குமேயானால் “தாசிகள் என்போர் கடவுளர்களின் துணைவியர்” என்று சொல்லியிருந்தார். திராவிட இயக்கம் தேவையில்லாமல் அரசியல் செய்து அந்த புனித முறையை ஒழித்தது என்று பேசி, கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்தார்.

தினமணி விழாவில் கவிஞர் வைரமுத்து, அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த ‘Indian movement : some aspects of dissent, protest and reform’ என்கிற நூலில், “Aandal was herself a devadasi” என்று குறிப்பிடப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இப்போது வைரமுத்துவை யார் எதிர்க்கிறார்கள், எதற்கு எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள மேற்கண்ட பத்திகள் உதவலாம்.

 – Yuva Krishna

__________

__________

மனுஷ்யபுத்திரனின் புதிய தலைமுறை விவாதம்:

கடவுளை விமர்சித்ததால்தான் கலைஞரின் பேச்சை கடவுள் புடுங்கிட்டார்.
– எச்ச. ராஜா

அட வெண்ண, நீ முதல்ல 90 வயசுவரைக்கும் தாங்குறையான்னு பாரு… அப்புறம் பேசலாம்..

“வாழ்நாள் முழுவதும் கடவுளை வணங்கிய வாஜ்பாயிக்கு அதை புடுங்கியது யார்? வெளியே கூட காட்டமுடியாம “மம்மி” கணக்கா வெச்சிட்டு இருக்கீங்க..

விதவிதமான பூஜை புனஸ்காரங்கள், ஏராளமான யாகங்கள், மந்திரங்கள், கோயில் வழிபாடுகள் என வாழ்ந்த ஜெயலிதாவின் பீசை சீக்கிரமாகவே பிடுங்கியது யார்??

அதைவிடக் கொடுமை. ராமனுக்காக கோயில் கட்டப்போகிறேன் என்று நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்திய அத்வானி இன்று ஆளும் பா.ஜ.கவின் உதிர்ந்த ரோமமாக, அரசியல் அனாதையாக ஆகிவிட்டது எதனால்?”

என்று நாங்களும் கேட்கலாம். ஆனால் கேட்கமாட்டோம் 🙂

– Prakash JP With Ganesh Babu

__________

டுமையாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை தங்கள் கட்சியின் தேசியச் செயலர்களில் ஒருவராக வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பெருந்தன்மை உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

– Yuva Krishna

__________

காவிங்க கூட சகவாசம் வச்சி எவ்வளவுதான் (தருண் விஜயின் திருக்குறள் காமடி & மோடியின் புத்தக மொழிப்பெயர்ப்பு) ஒட்டி உறவாடினாலும், “பூநூல்” இல்லைன்னா ரொம்ப கீழிறிங்கி அவமானப்படுத்தி செருப்பால் அடிப்பாங்கன்னு இப்போ வைரமுத்துவுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!

– Srinivasan J

___________

___________

விப்பேரரசு வைரமுத்துவை நாங்கள் விமர்சிக்க பல காரணங்கள் இருக்கலாம். எவரும் கூட விமர்சிக்கலாம் – பொருளோடு!

ஆனால், வேசி மகன் என்றெல்லாம் பேசுகிற நாக்கொழுப்பை, பூணூல் கொழுப்பை ஒருபோதும் ஏற்க முடியாது. காலம் காலமாக தேவடியாள் மகன்- சூத்திரன் என்று இழிவுபடுத்தப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வெளிவந்து, போராடி வென்ற ஒருவரைப் பொது மேடையில் ‘வேசி மகன், தாசி மகன்’ என்றெல்லாம் பேசுகிற திமிர்த்தனத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

அது எந்த பூணூல் பொறுக்கியாக இருந்தாலும் சரி, பூணூலுக்கு வால் பிடிக்கும் எந்தப் பொறுக்கி ராமனாக இருந்தால் சரி, உரிய பதிலைத் தந்தே ஆக வேண்டும்.

தேவதாசி என்று காலம்காலமாக எங்கள் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டதாக நாம் கொதித்தபோது, அப்படியெல்லாம் இல்லையென்று குதித்த இந்த ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிகள், இப்போ எந்த வாயை வைத்துக் கொண்டு வைரமுத்துவை திட்டுகிறார்கள்.

ஆட்டம் அதிகமாகிறதென்றால் அஸ்திவாரம் கோளாறு என்று பொருள். உங்கள் அஸ்திவாரத்தோடு சாயும் காலமடா இது! சாய்ப்போம் சனாதனத்தை… வேரோடு!

– Prince Ennares Periyar

__________

எச்.ராஜா என்னும் பார்ப்பனன், “ஆண்டாளை தேவதாசி என்று வைரமுத்து சொல்லியதற்காக, இந்துவின் இதயத்தை ஈட்டியால் வைரமுத்து குத்திவிட்டதாக கூறி, வைரமுத்துவின் அநாகரிக பேச்சுக்கு இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” அதர்ம யுத்தம் நடத்துகிறார்.

பாவம்….எச்.ராஜா வடக்கே இருந்து தமிழ்நாட்டுக்குள் நுழைந்ததால் அவருக்கு திராவிடர்கள் எதிர்த்த புராணம், இதிகாச யுத்தங்களின் வரலாறுகள் தெரியாமல் போய்விட்டன.

திராவிடர் இயக்கத்தினர் ஆண்டாளின் காமக் கவிதைகள் குறித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது அதற்கு எதிர் விளக்கம் அளிக்க முடியாமல்… ‘ஆண்டாள் என்ற ஒரு பெண் இல்லவே இல்லை’ என்று சொன்னதும் ஒரு பார்ப்பனன் தான். அந்த பார்ப்பானை எச்.ராஜா எப்படி தண்டிக்கப் போகிறார்?

வைரமுத்துவின் பேச்சு ஆபாசம் என்றால் ஆண்டாள் எழுதிய காமத்தின் உச்ச உளறல்களை நாச்சியார் திருமொழி பாடல்கள், திருப்பாவை, பாசுரங்கள் என்று பார்ப்பனர்கள் ஏன் போற்றிப் புகழவேண்டும் என்று மக்களை வற்புறுத்துகிறார்கள்?

“கடவுளோடு புணர்வதோர் ஆசையால் கொங்கை கிளர்ந்து குமைந்துக் குதூகலிக்கிறது” என்று எழுதுகிறாள் ஸ்ரீ ஆண்டாள்.

நாச்சியார் திரு மொழியில் இந்த பாடல் உள்ளது. திராவிடர் இயக்க பிரச்சாரத்தின் போது ஆண்டாள் கவிதைகள் குறித்த விமர்சனங்களுக்கு அஞ்சிய பார்ப்பனக் கூட்டம் விமர்சனத்தை எதிர் கொள்ளத் தயங்கி திணறிய போது, ராஜகோபாலாச்சாரியார் என்னும் பார்ப்பனன் எழுதினார்:

“ஆண்டாள் என்னும் ஸ்திரீ இருந்ததேயில்லை. நாலாயிரப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார். ” (திரிவேணி செப்டம்பர் 1946)

ஆச்சாரியார் என்ன புராண மறுப்பாளரா? இந்து மத எதிர்ப்பாளரா? அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.

பிறகு ஏன் இப்படி எழுதுகிறார்? இவ்வளவு ஆபாசமாக ஒரு பெண் எழுதி இருப்பதாக இருக்கிறதே, மானம் போகிறதே! விரக தாபம் எடுத்து கடவுளோடு புணர வேண்டும் என்று துடிப்பதாகப் பாடல் எழுதினால் படிப்பவர்கள் காரித் துப்பமாட்டார்களா என்ற எண்ணத்தில் இப்படி கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஆச்சாரியார் சொன்னதை ஏற்றுக் கொண்டால் வெங்கடாசலபதிக்குச் சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலையை எடுத்துச் செல்வதாகக் கூறும் இந்தக் கதைகளைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிய வேண்டும்.

இல்லை, இல்லை. ஆச்சாரியார் சொல்லுவது அபவாதம்! புராண விஷயத்தில் ஒன்றைத் தப்பு என்று ஒப்புக் கொண்டால் அடுத்தடுத்து ஒவ்வொன்றையும் பொய்யென்று சொல்லக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என்று சொல்லுவார்களேயானால்,

தகப்பனைக் கல்யாணம் செய்து கொண்டதையும் தந்தையோடு புணர மகள் ஆசைப்பட்ட அசிங்கத்தையும், ஆபாசத்தையும், அருவருப்பையும், அநாகரித்தையும் ஒப்புக் கொண்டு, எங்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் பெருமையே இது தான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

* ஆண்டாள் சர்ச்சை. மற்றொரு பதிவு: http://bit.ly/2CMciEd

– ©Yuma JAHARO [தமிழச்சி]

 

பேருந்து தொழிலாளிகளை ஆதரித்தால் போலீசு சுட்டுத் தள்ளுமாம் !

0

தருமபுரி

“போக்குவரத்து தொழிலாளிகளின் போராட்டத்திற்கு கரம் கோர்ப்போம் ! தொழிலாளியிடம் திருடிய 7000 கோடியை உடனே வழங்கு !” என்ற தலைப்பின் கீழ் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாக ரீதியாகவும், திவாலாகிப் போன மத்திய மாநில அரசுகள் ஆள அருகதை இல்லை என்பதை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக தருமபுரி பேருந்து நிலையத்தில் தடையை மீறி போக்குவரத்து தொழிலாளிக்கு ஆதரவாக 11.01.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் சொத்தை பாதுகாப்போம் என்று முழங்கியவாறு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில் மூன்று பெண்கள் குழந்தை உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் கைதான மக்கள் அதிகாரம் தோழர்களை தருமபுரி B1 காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் “இன்னொரு நாளக்கி பர்மிஷன் கொடுக்காம ஆர்ப்பாட்டம் செஞ்சிங்கன்னா அள்ளிக்கிட்டு வந்து உள்ளத்தள்ளிருவன், சுட்டுத் தள்ளிருவேன்.” என்று வழக்கறிஞரையும், தோழர்களையும் மிரட்டியுள்ளார்.

மக்கள் போராட்டங்களையும், மக்களுக்காகப் போராடுபவர்களையும் சுட்டுக் கொல்ல விரும்புவது இன்ஸ்பெக்டர் மட்டுமல்ல இந்த மொத்த அரசுக்கட்டமைப்பும் தான். மக்களைக் கொல்லத் துடிக்கும் இந்த அரசு மக்களைப் பார்த்து பயப்படும் நாளை உருவாககுவோம். நாம் தூக்கியெறிவோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம், தொடர்புக்கு – 81485 73417.

***

திருச்சி

“அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாக ரீதியாகவும், திவாலாகிப் போன மத்திய மாநில அரசுகள் ஆள அருகதை இல்லை ! தொழிலாளியிடம் திருடிய 7000 கோடியை உடனே வழங்கு !”
என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருச்சி பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பினர் 11.01.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள், போக்குவரத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மாற்றுக் கட்சி அமைப்பினர், ஜனநாயக சக்திகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள், மாணவர்கள் இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

***

தஞ்சாவூர்

“போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் ! அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் திவாலாகிப் போன அரசமைப்பை தூக்கியெறிவோம் !” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் 11.01.2018 அன்று தஞ்சைப் பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

 

அமெரிக்காவின் NSA உலகிற்கு செய்த துரோகம் ! வீடியோ

0

மிக்கோ ஹைப்போனென் உரை
at TEDxBrussels
NSA எப்படி உலக நம்பிக்கைக்கு துரோகம் செய்தது — இது செயல்படவேண்டிய நேரம்

மீபத்திய நிகழ்வுகள் அமெரிக்கா, வெளிநாட்டினர் மீது செய்யும் பொதுப்படையான கண்காணிப்புகளை அடிகோடிட்டு காண்பித்தது. எந்த வெளிநாட்டவர் குறித்த தரவும் அமெரிக்கா வழியாக செல்லுமானால், அவர் மேல் தவறு இழைத்ததற்கான சந்தேகம் இருந்தாலும் இல்லாவிடினும் கண்காணிக்கபடுவார் . Miko Hypponen சொல்கிறார் இதன் பொருள் என்னெவென்றால் உலகளவில் இணையத்தளம் பயன்படுத்துபவர்கள் எல்லோரையும் கண்காணிக்கிறார்கள் என்பது தான். உலகின் தகவல் பரிமாற்ற தேவைகளுக்கு அமெரிக்காவை தவிர்த்து ஒரு மாற்று தேவை என்பது தான்.

அமெரிக்காவின் NSA உலகிற்கு எப்படி துரோகம் செய்தது ? வீடியோ

மேற்கண்ட வீடியோவில் ஆங்கில உரையின் வரிகள் தமிழ் சப் டைட்டிலாக இடம்பெறுகிறது. அந்த அடிக்குறிப்புகளின் தொகுப்பு கீழே:

மது காலத்தில் இரண்டு மிக பெரிய கண்டுபிடிப்புகள் என்று எடுத்து கொண்டால் அவை இணையதளமும், கைபேசியும் தான். அவை உலகத்தையே மாற்றி விட்டது ஆனால் இதில் மிகவும் வியக்க வைப்பது என்னவென்றால் அவை நாட்டிற்கு ஒரு சிறந்த கண்காணிப்பு கருவியாகவும் பயன்படுகிறது.

இதன் திறன் என்னவென்றால் தரவுகள், தகவல்கள், தொடர்புகள் இவைகளை திரட்டுவது அடிப்படையில் நம்மில் ஒருவரை பற்றி அல்லது நம் எல்லோரையும் பற்றி இதை தான் நாம் கேள்விப்பட்டு கொண்டிருக்கிறோம். கடந்த கோடை காலம் முழுவதும் கசிந்த வெளிப்பாடுகள் மூலம் மேலை நாட்டு புலனாய்வு முகமையகங்கள், முக்கியமாக அமெரிக்க முகமையகங்கள் உலகத்தின் பிற பகுதிகளை கண்காணிப்பது தெரிந்தது.

முதலில் நாம் கேள்விபட்டது ஜூன் 6 ஆம் தேதி வந்த வெளிப்பாடுகள் தான். எட்வர்ட் ஸ்னோடென் முதலில் தகவல்களை கசிய விட்டார், உச்ச ரகசியங்கள் அடங்கிய வகைப்படுத்தபட்ட தகவல்கள், அமெரிக்க புலனாய்வு முகவையகத்திலிருந்து, அப்பொழுது தான் நமக்கு PRISM (கண்காணிப்பு திட்டம்) XKeyscore (வெளிநாட்டவர் கண்காணிப்பு திட்டம்) மற்றும் பல திட்டங்கள் குறித்து தெரிய வந்தது. எடுத்துகாட்டாக இது போன்ற திட்டங்களை உலகின் பிற நாடுகளுக்கு எதிராக தற்பொழுது அமெரிக்க புலனாய்வுத் துறை செயல்படுத்தி வருகிறது.

கண்காணிப்பு குறித்த முன் கணிப்புகளை ஜார்ஜ் ஓர்வெல் செய்திருந்தார், அவற்றை இப்பொழுது திரும்பி பார்த்தால் ஜார்ஜ் ஓர்வெல் ஒரு நன்னம்பிக்கையாளர் என்று தோன்றும் (சிரிப்பொலி) உண்மை, இப்பொழுது இன்னும் அதிக அளவில் தனிமனிதனான ஒரு குடிமகன் பின் தொடரப்படுகிறான் இது போன்ற ஒரு நிலையை நாம் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது.

இங்கு தான் இகழ்ச்சிக்குரிய உதாவில் உள்ள NSA யின் தகவல் மையம். வெகு விரைவில் ஆரம்பிக்க உள்ளார்கள் இங்கு தான் அதி உன்னத கணினி மையமும் தகவல் சேமிப்பகமும் இயங்கவுள்ளது. அடிப்படையில் அது ஒரு மிக பெரிய அறை என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம் அங்கு நிறைந்திருக்கும் வன் தட்டுகளில் தான் இவர்கள் சேகரிக்கும் தகவல்கள் சேமிக்கப்படும்.

அது ஒரு மிக பெரிய கட்டிடம் எவ்வளவு பெரியது? என்னால் அதன் பரப்பளவை கூற முடியும் – 1,40,000 சதுர மீட்டர்கள் – இதை வைத்து அதன் பிரம்மாண்டத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது, ஒப்பீடு மூலம் பாவிப்பது இன்னும் நன்கு என்று நினைக்கிறேன். IKEA போன்ற ஒரு மிக பெரிய அறைகலன் அங்காடி பார்த்ததிலேயே மிக பெரியது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அதை போன்று 5 மடங்கு பெரியது இது. IKEA போன்ற ஒரு அங்காடியில் எத்தனை வன் தட்டுகள் நிரப்ப முடியும்? புரிந்ததா? அந்த அளவுக்கு பெரியது. இந்த தரவு மையத்தை நடத்துவதற்கு வெறும் மின்சாரத்திற்கான செலவு மதிப்பீடு மட்டும் வருடத்திற்கு கோடி கணக்கில் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும்.

இது போன்ற ஒட்டுமொத்த கண்காணிப்பு என்றால் நமது தரவுகளை சேகரித்து அடிப்படையில் எல்லா காலத்திற்கும் வைத்திருக்கலாம், கால நீடிப்பு செய்யலாம் வருட கணக்கில் வைத்திருக்கலாம். இதனால் புது விதமான அபாயங்கள் நம் எல்லோருக்கும் ஏற்படலாம். இது போன்ற ஒட்டுமொத்தமான எல்லோர் மேலும் ஒரு பொதுவான கண்காணிப்பு.

எல்லோர் மேலும் என்று சொல்ல முடியாது, ஏன் என்றால் அமெரிக்க புலனாய்வு துறைக்கு, சட்டப்படி வெளி நாட்டவர்களை மட்டுமே கண்காணிக்க முடியும். வெளி நாட்டவர்களை கண்காணிக்க அவர்களது தரவு தொடர்புகள் அமெரிக்காவில் முடிய வேண்டும் அல்லது அமெரிக்கா ஊடாக கடந்து செல்ல வேண்டும். வெளிநாட்டினரை கண்காணிப்பது மோசம் என்று தோன்றாது எப்பொழுது வரை என்றால் நானோ நீங்களோ ஒரு வெளிநாட்டினராக இல்லாதவரை. சொல்ல போனால் உலகின் 96 விழுக்காடு மக்கள் வெளிநாட்டினர் தான்

(சிரிப்பொலி)

சரி தானே?

அதனால் இது நம் மேல் நடத்தப்படும் ஒட்டுமொத்தமான பொதுவான ஒரு கண்காணிப்பு, தொலை தொடர்பையும் இணையதளத்தையும் பயன்படுத்தும் நம் எல்லோர் மேலும் உள்ளது இந்த கண்காணிப்பு.

என்னை தவறாக எண்ண வேண்டாம்; சில முறையான கண்காணிப்புகளும் உண்டு. நான் ஒரு சுதந்திர விரும்பி, அப்படி இருந்தும் கூட சில கண்காணிப்புகள் முறையானது என்றே நினைக்கிறேன். சட்ட அமலாக்க பிரிவினர் ஒரு கொலையாளியை பிடிக்க முயலும் பொழுதோ அல்லது ஒரு போதை பொருள் வியாபாரியை பிடிப்பதற்கோ, அல்லது பள்ளி மாணவர்கள் கலவரத்தை தடுப்பதற்கோ. துப்புகள் இருந்தாலோ அல்லது சந்தேகம் இருந்தாலோ, சந்தேகப்படுபவரின் தொலைபேசியை ஒட்டு கேட்பது மிகவும் சரியான செயல் தான் அவர்களின் இணையதள தொடர்புகளை இடைமறிப்பதும் சரியே இவைகளை பற்றி அல்ல எனது விவாதம், PRISM போன்ற திட்டங்கள் இவை போன்றது அல்ல. அது அவர்கள் சந்தேகப்படும் பொது மக்களை கண்காணிப்பதற்கானது அல்ல, தவறு செய்யும் பொது மக்களை கண்காணிப்பதற்கானது அல்ல இந்த கண்காணிப்பு என்பது அப்பாவிகள் என்று தெரிந்தும் மக்கள் மேல் ஏவப்படுகிறது.

முக்கியமான 4 வாதங்கள் இதுபோன்ற கண்காணிப்புகளுக்கு சாதகமாக உள்ளது என்னவென்றால், முதலாவதாக எப்பொழுதெல்லாம் இந்த வெளிப்பாடுகள் குறித்த விவாதங்களை ஆரம்பிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் அதை மறுத்து பேசி அதன் தாக்கத்தை குறைக்க நினைப்பவர்கள் எங்களுக்கு இதை பற்றி முன்னமே தெரியும் என்று சொல்வார்கள் இது நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும். இது ஒன்றும் புதிதல்ல ஆனால் அது உண்மையல்ல.

யாரையும் அப்படி பேச அனுமதிக்காதீர்கள் ஏனெனில் இது நமக்கு முன்னமே தெரியாது. இது மிகவும் மோசமான நமது அச்சங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் இப்படி ஒன்று நடப்பது நமக்குத் தெரியாது இப்பொழுது இப்படி ஒன்று நடப்பது நமக்கு உறுதியாக தெரிந்துவிட்டது. இதற்கு முன் தெரியாது PRISM பற்றி கேள்விப்பட்டதில்லை, XKeyscore பற்றி தெரியாது, Cybertrans பற்றி தெரியாது, Double Arrow பற்றி தெரியாது, Skywriter பற்றி தெரியாது – இவையெல்லாம் இது போன்ற வெவ்வேறு திட்டங்கள் அமெரிக்க புலனாய்வு முகமையத்தால் நடத்தபடுபவை ஆனால் இப்பொழுது நமக்கு தெரியும்.

நமக்கு இன்னொன்றும் தெரியவில்லை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் எந்த எல்லைக்கும் செல்ல கூடியவை என்று எந்த நிலையான அமைப்பையும் கூட ஊடுருவ கூடியவை எந்த மறைகுறியீட்டு படிமுறையையும் வேண்டுமென்றே அழிக்க வல்லது. இதன் பொருள் என்னவெனில் நாம் பாதுகாப்பான முறை ஒன்றை ஏற்கவேண்டும், பாதுகாப்பான ஒரு மறைகுறியீட்டு படிமுறை அதை பயன்படுத்தி நாம் ஒரு மறைகுறியீட்டை எழுதினால் யாராலும் மறைவிலக்கம் செய்ய முடியாது அந்த கோப்பை. அந்த ஒரு கோப்பை மறைவிலக்கம் செய்ய உலகில் உள்ள அணைத்து கணினிகளையும் பயன்படுத்தினாலும் பல கோடி ஆண்டுகள் தேவைப்படும். பாதுகாப்பானதாகவும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவையாகவும் இருக்க வேண்டும் இருப்பதிலேயே மிக சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து அதை வேண்டுமென்றே பலவீனபடுத்துகிறார்கள், அதனால் முடிவில் நாம் எல்லோரும் பாதுகாப்பற்றவராகிறோம்.

நிஜ வாழ்க்கையில் இதற்கு சமமான ஒன்றை சொல்ல வேண்டுமென்றால் இந்த புலனாய்வு அமைப்புகள் வேண்டுமென்றே வீடுகளின் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகளில் ரகசிய குறியீடுகளை புகுத்தி அதன் மூலம் எல்லா வீடுகளிலும் புகும் முயற்சியை போன்றது. ஒரு சில மோசமான மனிதர்கள் வீடுகளில் எச்சரிக்கை ஒலி கருவி வைத்திருப்பார்கள் ஆனால் இதனால் நாம் எல்லோரும் முடிவில் பாதுகாப்பற்றவராக ஆக்க படுகிறோம். பின் வாசல் வழியாக மறைகுறியீட்டு படிமுறை புகுத்தபடுவது திடுக்கிட வைக்கிறது. ஆனால் ஒன்று புலனாய்வு அமைப்புகள் அவர்களது வேலையை தான் செய்கிறார்கள் அவர்களை இவைகளை செய்ய சொல்கிறார்கள்: குறிகை புலனாய்வு, தொலைதொடர்பு கண்காணிப்பு , இணையத்தள போக்குவரத்து கண்காணிப்பு இவைகளை தான் அவர்கள் செய்ய முயல்கிறார்கள், இணையதள போக்குவரத்தின் ஒரு பெரும்பகுதி மறைகுறியீடு செய்யப்பட்டுள்ளதால், மறைகுறியீட்டை சுற்றியே அவர்களது பணிகள் உள்ளது.

மறைகுறியீட்டு படிமுறைகளை அழிப்பது, என்பது ஒரு சிறந்த எடுத்துகாட்டு எப்படியெல்லாம் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரம் அவர்கள் முற்றிலுமாக கட்டுபாடற்று செயல்படுகிறார்கள் அவர்களை மீண்டும் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்

புலனாய்வு கசிவுகளை பற்றி நமக்கு என்ன தான் தெரியும் ? இவற்றிற்கு எல்லாம் அடிப்படை திரு. ஸ்னோடன் கசிய விட்ட கோப்புகள் தான். முதன் முதலில் வெளிவந்த PRISM காட்சி வில்லை ஜூன் மாதம் வெளிவந்தது தரவுகள் சேகரிக்கும் திட்டத்தில், எப்படி அந்த சேவை வழங்குவோர் தரவுகள் தருகிறார்கள் என்பதை விளக்குகிறது. அப்படி அவர்கள் தொடர்பு வைத்திருக்கும் சேவை வழங்குவோர் பெயர்களை கூட சொல்லுகிறார்கள். அதில் தேதிகளை கூட குறிப்பிடுகிறார்கள் அந்தந்த தேதிகளில் தான் அந்த சேவை வழங்குவோர் தரவுகள் சேகரிக்கும் வேலையை தொடங்கினார்களாம். எடுத்துகாட்டாக மைக்ரோசாப்ட் நிறுவனம் செப்டம்பர் 17, 2007 ஆம் தேதி தொடங்கியதாம் யாஹூ மார்ச் 12, 2008 இல் தொடங்கியதாம் இதே போன்று மற்றவர்களும் : கூகிள், முகநூல், skype , Apple மற்றும் பலர்.

ஆனால் எல்லா நிறுவனங்களும் இதை மறுக்கின்றன இதில் உண்மை இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள், தரவுகளுக்கு பின் வாசல் நுழைவுரிமை யாருக்கும் அளிப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நம்மிடம் இந்த கோப்புகள் இருக்கிறது, அதனால் இதில் யாரோ ஒருவர் சொல்வது பொய், அல்லது இதற்கு ஏதாவது மாற்று விளக்கம் இருக்கிறதா?

ஒரு விளக்கம் என்னவாக இருக்கும் என்றால் இந்த சேவை வழங்குவோர் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதாக இருக்கும். மாறாக அவை கொந்துதல் செய்யப்பட்டவை. அவர்கள் ஒத்துழைக்கவில்லை. நாங்கள் கொந்துதல் செய்தோம் என்று விளக்குவார்கள்.

இங்கு ஒரு அரசே தம் மக்களை கொந்துதல் செய்கிறது இது இயல்புக்கு முரணானதாகத் தோன்றலாம். ஆனால் நமக்கு தெரிந்து இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது எடுத்துகாட்டாக Flame தீங்குநிரலை எடுத்து கொள்ளுங்கள் நாம் ஆணித்தரமாக நம்புகிறோம். அமெரிக்க அரசு தான் இதன் காரணகர்த்தா என்று விண்டோசின் கணினி கட்டமைப்பு புதுபித்தல் பாதுகாப்பை சீர்குலைய செய்து பரவ விட்டது, அதாவது அந்த நிறுவனம் கொந்துதலுக்கு உள்ளானது அவர்களது அரசினாலேயே. இந்த புனைவிற்கு ஆதரவாக மேலும் சான்றுகள் உள்ளது.

ஜெர்மனியின் Der Spiegel மேலும் தகவல்களை கசிய விட்டார், சிட்டர் குழாம்கள் நடத்தும் கொந்துதல் செயல்பாடுகள் குறித்து அவைகள் இந்த புலனாய்வு முகவையகங்களுக்கு உள்ளேயே செயல்படுகிறது. NSA -ல் அதற்கு பெயர் TAO Tailored Access Operations, GCHQ -இல் அதாவது இங்கிலாந்தின் ஒத்த நிறுவனம், இதன் பெயர் NAC, Network Analysis Centre சமீபத்தில் வெளியான 3 காட்சி வில்லைகள் அவர்களது செயல்பாடுகளை விளக்குகிறது இவைகள் GCHQ புலனாய்வு முகவயைகத்தால் நடத்தபடுகிறது.

இங்கிலாந்தில் இருந்து பெல்ஜியமில் உள்ள ஒரு தொலை தொடர்பு நிறுவனம் தான் இவர்கள் இலக்கு இதன் பொருள் என்ன? ஒரு ஐரோப்பிய ஒன்றிய தேசத்தின் புலனாய்வு முகவையகம் பாதுகாப்பு அம்சங்களை மீறுகிறது வேண்டுமென்றே மற்றொரு ஐ.ஒ. ( ஐரோப்பிய ஒன்றியம் ) நாட்டின் தொலை தொடர்பு நிறுவனத்தைக் குறிவைக்கிறது இந்த காட்சி வில்லைகளில் போகிற போக்கில் விவாதம் செய்கிறார்கள் வழக்கம் போல வணிகம் தான் இங்கு பிரதான இலக்கு, இரண்டாவது இலக்கு என்னவென்றால், ஒரு குழுவை உருவாக்குவது.

அனேகமாக ஒரு மதுக்கடையில் வியாழக்கிழமை மாலை இவர்கள் ஒரு குழுவை உருவாக்கலாம். அவர்கள் பவர் பாயிண்ட் காட்சி விளக்கம் கூட அளிக்கலாம் அதற்கு ‘வெற்றி’ என்று கூட அவர்கள் பெயரிடலாம் இதை போன்ற சேவைக்கு அவர்களுக்கு நுழைவுரிமை கிடைக்கும் பொழுது இது என்ன அநியாயம் ?

இன்னொரு வாதம் கூட செய்யலாம் சரி, இது போன்று நடந்து கொண்டிருக்கலாம் ஆனால் இதை போன்று மற்ற நாடுகளும் செய்கிறதே எல்லா நாடுகளும் வேவு பார்க்கின்றது. அது உண்மையாக கூட இருக்கலாம் பல நாடுகள் செய்கின்றது, எல்லா நாடுகளும் அல்ல.

எடுத்துகாட்டாக ; ஸ்வீடன். ஏன் ஸ்வீடன் என்றால் அமெரிக்காவிற்கு இணையான சட்டங்கள் அங்கு உள்ளது. உங்களது தரவு போக்குவரத்து ஸ்வீடன் நாடு வழியாக சென்றால் அவர்களது புலனாய்வு முகவையகங்களுக்கு சட்டப்படி அவைகளை மறிக்க உரிமை உள்ளது. சரி, முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ள எத்தனை ஸ்வீடன் அதிகாரிகள் அரசியல்வாதிகள் , வியாபார தலைவர்கள் அமெரிக்க சேவையை பயன் படுத்துகிறார்கள்; எடுத்துகாட்டாக விண்டோஸ் அல்லது OSX , முகநூல் அல்லது linkedin அல்லது அவர்களது தரவுகளை i-Cloud இல் சேமிக்கிறார்கள் அல்லது skydrive, Dropbox இல் சேமிக்கிறார்கள் அல்லது கணினி நேரடி தொடர்பு மூலம் அமேசான் சேவை அல்லது விற்பனை சேவைகளை பெறலாம் இதற்கான பதில் ஒவ்வொரு ஸ்வீடன் வியாபார தலைவரும் இதை நாள் தோறும் செய்கிறார்கள் இப்பொழுது இதன் மறுபுறத்தை நாம் பார்ப்போம் எத்தனை அமெரிக்கத் தலைவர்கள் ஸ்வீடன் மின்னஞ்சல்களையும் இணையதள சேவைகளையும் பயன்படுத்துகிறார்கள்? இதற்க்கான பதில் ஒன்றும் இல்லை என்பது தான். அதனால் இது சமநிலையில் இல்லை சமநிலையை விடுங்கள், அருகில் கூட இல்லை.

எப்போதாவது ஐரோப்பிய வெற்றி கதைகளையும் கேட்பதுண்டு, ஆனால் அவைகளும் இறுதியில் அமெரிக்காவிற்கு விற்கப்படும் எடுத்துகாட்டாக skype பாதுகாப்பானதாக இருந்தது ஆரம்பம் முதல் முடிவு வரை மறைகுறியீடு செய்யபட்டிருந்தது. அப்புறம் அமெரிக்காவிற்கு விற்கப்பட்டது, ஆனால் இப்பொழுது அது பாதுகாப்பானது அல்ல. மீண்டும் நம் பாதுகாப்பான ஒன்றை வேண்டுமென்றே பாதுகாப்பற்றதாக மாற்றி விடுகிறோம், அதன் விளைவு நாம் எல்லோரும் பாதுகாப்பு அற்றவராக ஆக்க படுகிறோம்.

மற்றொரு வாதம் என்னவென்றால் அமெரிக்கா மட்டும் தான் தீவிரவாதிளை எதிர்த்து போரிடுகிறார்கள். இது தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு போர் என்பதாகும், அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் தீவரவாதத்திற்கு எதிரான போரை சொல்லவில்லை. ஆம் இதன் ஒரு பகுதி தீவரவாததிற்கு எதிரான போர் தான். அவர்கள் மக்களை கொல்கிறார்கள், முடமாக்கிரார்கள் அவர்களுக்கு எதிராக போர் தொடுக்க தான் வேண்டும். இந்த கசிவுகள் மூலம் இதை நாம் தெரிந்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் இதே நுட்பத்தை ஐரோப்பிய தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்பதற்கும் மெக்சிகோ மற்றும் பிரேசில் நாட்டு வாசிகளின் மின்னஞ்சல்களை துப்பு துலக்கவும் ஐ,நா., ஐ.ஒ நாட்டு பாராளுமன்ற மின்னஞ்சல் போக்குவரத்தை படிக்கவும் பயன்படுத்தினார்கள் கண்டிப்பாக அவர்கள் தீவிரவாதிகளை ஐ.ஒ .பாராளுமன்றத்தில் தேடியிருக்க முடியாது தானே?

இது தீவிரவாதத்திற்கு எதிரான போர் அல்ல ஒரு பகுதி வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் ஆனால் நாம் உண்மையாகவே தீவிரவாதிகளை இருத்தலியல் போன்ற ஒரு அச்சுறுத்தலாக பார்க்கிறோமா ? அவர்களை எதிர்த்து போராட நமக்கு விருப்பம் இருக்கிறதா ? அமெரிக்கர்கள் அவர்களது அரசியலமைப்பை தூக்கி எறிய தயாரா ? தீவிரவாதிகள் இருப்பதால் குப்பையில் எறிய தயாரா ? இவை உரிமை சட்டத்திற்கும் மற்ற சட்ட திருத்தங்களுக்கும் பொருந்தும். மேலும் உலகளாவிய மனித உரிமை பிரகடனத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை, அடிப்படை உரிமை மற்றும் பத்திரிகை உரிமை குறித்த மரபுகளையும் எறிவார்களா ? தீவிரவாதத்தை இருத்தலியல் போன்ற ஒரு அச்சுறுத்தலாக பார்க்கிறோமா அதற்காக எதுவும் செய்ய தயாராக இருக்கிறோமா ?

ஆனால் மக்கள் தீவிரவாதிகளை பார்த்து பீதியடைகிறார்கள் அதனால் அவர்கள் கண்காணிப்பு சரிதான் என்று நினைக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை உதவுமென்றால் என்னை சுதந்திரமாக கண்காணியுங்கள் என்று சொல்கிறார்கள். எனக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கள் இதை பற்றி சரியாக சிந்திக்கவில்லை என்று தான் பொருள்…

(கைதட்டல்)

ஏனெனில் நமக்கு அந்தரங்கம் என்றுறொன்று இருக்கிறது. உங்களுக்கு உண்மையாகவே மறைக்க ஒன்றுமில்லை எனில் அதை முதலில் என்னிடம் தெரிவிக்கவும், ஏனெனில் அப்பொழுது எனக்கு ஒரு விடயம் புலப்படுகிறது உங்களிடம் எந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொள்ளகூடாது. ஏனெனில் உங்களால் எந்த ரகசியத்தையும் பாதுகாக்க முடியாது. ஆனால் இணையத்தில் மக்கள் நேர்மையாக தகவல்களை பகிர்கிறார்கள், ஆனால் இந்த கசிவுகள் தொடங்கியபொழுது, நிறைய மக்கள் இந்த கேள்வியை எழுப்பினார்கள் எனக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை நான் மோசமான அல்லது சட்ட விரோதமானது ஒன்றும் செய்வதில்லை.

ஆம் குறிப்பாக புலனாய்வு முகைவயகத்துடன் பகிர கூடிய தகவல்கள் ஏதும் என்னிடம் இல்லை. குறிப்பாக ஒரு வெளிநாட்டு புலனாய்வு முகமையகத்துடன். அப்படியே ஒருகால் ஒரு நாட்டாண்மைகாரர் நமக்கு தேவைபட்டால் நான் ஒரு உள்ளூர் நாட்டாமையையே விரும்புவேன், வெளிநாட்டு நாட்டாண்மையை அல்ல. இந்த கசிவுகள் முதலில் வெளிவந்த பொழுது நான் Twitter இல் இப்படி என் கருத்தை வெளியிட்டிருந்தேன் நீங்கள் தேடல் இயந்திரத்தை பயன்படுத்தும் பொழுது அமெரிக்க புலனாய்வு துறைக்கு நீங்கள் தானாகவே எல்லாவற்றையும் கசிய விடுகிறீர்கள் இரண்டு நிமிடங்களில் எனக்கு ஒரு பதில் வந்தது அமெரிக்காவில் உள்ள யாரோ ஒரு கிம்பெர்ல்யிடம் இருந்து நீங்கள் இதை பற்றி ஏன் கவலைபடுகிறீர்கள் என்று எனக்கு சவால் விட்டிருந்தார்.

நான் கவலைபடுவதற்கு என்ன இருக்கிறது ? நான் என்ன நிர்வாண படங்களையா அனுப்புகிறேன் ? கிம்பெர்லேய்க்கு எனது பதில் இதுவாக இருந்தது நான் என்ன அனுப்புகிறேன் என்பது உங்களுடயதோ அல்லது உங்களது அரசாங்கத்துடையதோ பிரச்சனை அல்ல, ஏனெனில் அது எனது அந்தரங்கத்தை பற்றியது. அந்தரங்கங்கள் இசைவிணக்கமுறைக்கு அப்பாற்பட்டது நாம் பயன்படுத்தும் எல்லா ஒழுங்கு முறைகளிலும் இயற்கையாகவே அது இருத்தல் வேண்டும்.

(கைதட்டல்)

நாம் இன்னொன்றையும் புரிந்து கொள்ளவேண்டும். நாம் தேடல் இயந்திரங்களுடன் அநியாயத்திற்கு நேர்மையாக நடந்து கொள்கிறோம், உங்களது இணைய உலாவி சரித்திரத்தை எனக்கு காட்டுங்கள் குற்றதிற்கு உட்படுத்தகூடிய செயல்களை என்னால் காட்ட முடியும். அல்லது உங்களை கூச்சமடையவைக்கும் ஏதாவது ஒன்றை 5 நிமிடங்களில் என்னால் காட்டமுடியும். தேடி இயந்திரங்களுடன் அதிக அளவில் நேர்மையாக நடந்து கொள்கிறோம் நமது குடும்பத்தினருடன் நடந்து கொள்வதை விடவும். தேடி இயந்திரங்களுக்கு உங்களை பற்றி உங்கள் குடும்ப அங்கத்தினர்களைவிட அதிகம் தெரியும் இது போன்ற தகவல்களை தான் நாம் அள்ளி கொடுக்கிறோம் நாம் இவைகளை அமெரிக்கர்களுக்கு கொடுக்கிறோம்.

நம் மேல் உள்ள கண்காணிப்பு நம் சரித்திரத்தையே மாற்றி விடும் எடுத்துகாட்டாக ஊழல் ஜனாதிபதி நிக்சனையே எடுத்துகொள்ளுங்கள், நினைத்து பாருங்கள் இதே போன்ற கண்காணிப்பு வசதிகள் அவர் காலத்தில் இருந்திருந்தால் நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன் பிரேசில் நாட்டு ஜனாதிபதி திருமதி Dilma Rousseff. ஐ அவர் NSA வின் கண்காணிப்புக்கு இலக்கான ஒருவர் அவரது மின்னஞ்சல்கள் படிக்கப்பட்டது , அவர் சொன்னார் ஐ.நா வின் தலைமையகத்தில் வைத்து சொன்னார் “ஒருவருக்கு அந்தரங்கத்தை பாதுகாக்கும் உரிமை இல்லையெனில் உண்மையான பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இருக்க முடியாது ஆகையால் பயனுள்ள ஜனநாயகமும் இருக்கமுடியாது ”

அது தான் இதன் சாரம். அந்தரங்கம் தான் நமது ஜனநாயகத்தின் அடிப்படை எனது தோழர், மற்றொரு பாதுகாப்பு ஆய்வாளர் Marcus Ranum -ஐ மேற்கோள் காட்டினால் , அமெரிக்கா இணையதளத்தை, தற்பொழுது தனது கீழ் இயங்கும் ஒரு குடியேற்ற நாட்டை போல நடத்துகிறது. அதனால் நாம் மீண்டும் காலனி ஆதிக்கத்திற்கு அடிபணிய நேருகிறது அதுவும் நம்மை போன்ற வெளிநாட்டு இணையதள உபயோகிப்பாளர்கள் அமெரிக்கர்களை நமது எஜமானர்களாக நினைக்க வேண்டி இருக்கிறது.

திரு ஸ்னோடன் மேல் பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது சிலர் அவர் பிரச்சனைகளை உருவாக்கியதாக சொல்கிறார்கள். அதாவது இந்த கசிவுகளால் அமெரிக்க மேக கணிமை பிரிவுக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஸ்நோடேன் பிரச்சனைகளை உருவாக்கியுள்ளதாக சொல்வது உலகம் வெப்பமயம் ஆவதற்கு Al Gore தான் காரணம் என்று சொல்வது போன்றது.

(சிரிப்பொலி)

(கைதட்டல்)

சரி, இப்பொழுது நாம் என்ன செய்வது ? நாம் கவலைப்பட வேண்டுமா, இல்லை கூடாது. நாம் கோபப்பட வேண்டும் ஏனெனில் இது தவறு, கொடூரமானதும் கூட. இது போல் செய்யக்கூடாது ஆனால் அது இந்த சூழலை மாற்றாது உலகின் பிற நாடுகளுக்கு எது தான் இது போன்ற சூழலை மாற்ற உதவும் ? ஒதுங்கி போக முயற்சிப்பதே சிறந்தது அதாவது அமெரிக்காவில் உருவாக்கப்படும் ஒருங்கியங்களில் இருந்து செயற்படுத்துவதை விட இதை சொல்வது மிகவும் எளிமையானது எப்படி இதை செயல்படுத்துவது ?

ஏதாவது ஒரு நாடு, ஐரோப்பாவில் உள்ள ஏதாவது ஒரு நாடு மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியாது அமெரிக்க இயங்கு தளங்களுக்கும், மேக கணிமைகளுக்கும் இவைகளை ஒருவர் தனியாக செய்ய வேண்டுமென்பதில்லை, பிற நாடுகளுடன் சேர்ந்து செய்யலாம். இதற்கு வழி திறந்த மூல நிரல்கள் மட்டுமே அனைவரும் சேர்ந்து திறந்த, இலவசமான, பாதுகாப்பான ஒழுங்கு முறைகளை உருவாக்குவதே. அது போன்ற கண்காணிப்புகளை ஏற்றுக்கொள்ளலாம், அப்பொழுது ஒரு நாடு அதன் பிரச்சனைகளுக்கு தனியாக தீர்வு காண வேண்டிவராது சிறிய பிரச்சனைகளுக்கு மட்டும் தீர்வு கண்டால் போதுமானதாக் இருக்கும்.

எனது சக பாதுகாப்பு ஆய்வாளர் ஹாரூன் மீரின் கூற்றை சொல்வதானால் ஒரு நாடு ஒரு சிறு அலையை ஏற்படுத்தினால் போதும் எல்லா சிறு அலைகளும் சேர்ந்து ஒரு பேரலை உருவாகி விடும் அந்த பேரலை ஏனைய எல்லா படகுகளையும் ஒரே நேரத்தில் தூக்கிவிடும் நாம் உருவாக்கும் அந்த பேரலை பாதுகாப்பானதாக, இலவசமானதாக, திறந்த நிரல்களை கொண்டதாக இருக்கும் நம்மை எல்லாம் தூக்கிவிடும் பேரலையாக அது இருக்கும் நம்மை கண்காணிக்கும் நாடுகளுக்கெல்லாம் மேலே…

மிக்க நன்றி.

***

This talk was presented to a local audience at TEDxBrussels, an independent event. TED editors featured it among our selections on the home page.

About the speaker : Mikko Hypponen · Cybersecurity expert As computer access expands, Mikko Hypponen asks: What’s the next killer virus, and will the world be able to cope with it? And also: How can we protect digital privacy in the age of government surveillance?

Tamil translation by Kalyanasundar Subramanyam. Reviewed by Vijaya Sankar N.

நன்றி : TED

 

சென்னை புத்தகக்காட்சியில் வினவு – புதிய கலாச்சாரம் நூல்கள் !

0

41வது சென்னைப் புத்தகக் காட்சியில் கீழைக்காற்று !

நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை

நேரம்
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.

கடை எண் 297, 298

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம்
                ( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30

கீழைக்காற்று அரங்கில் கீழ்க்கண்ட வினவு – புதிய கலாச்சாரத்தின் மலிவுப் பதிப்பு நூல்கள் அனைத்தும் கிடைக்கும் !

 

ஊடகங்களை நம்பலாமா ?
புதிய கலாச்சாரம்
நவம்பர் 2015

விலை: ரூ.20

 

 

ஹாலிவுட் : கவர்ச்சி ஆக்கிரமிப்பு
புதிய கலாச்சாரம்
டிசம்பர் 2015

விலை: ரூ.20

 

 

அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ?
புதிய கலாச்சாரம்
ஜுலை 2016

விலை: ரூ.20

 

 

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா…
ஹீரோவா ஜீரோவா…?

புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2016

விலை: ரூ.20

 

 

காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2016

விலை: ரூ.20

 

 

எதிர்த்து நில் !
புதிய கலாச்சாரம்
மார்ச் 2017
விலை: ரூ.20

 

கோக் – பெப்சி : கொலைகார கோலாக்கள் !
புதிய கலாச்சாரம்
ஏப்ரல் 2017

விலை: ரூ.20

 

 

கல்வி வியாபாரம் வாங்க சார் வாங்க…!
புதிய கலாச்சாரம்
ஜூன் 2017
விலை: ரூ.20

 

மோடி அரசின் தாக்குதல்கள் !
புதிய கலாச்சாரம்
ஆகஸ்ட்2017

விலை: ரூ.20

 

 

ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள்
புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2017
விலை: ரூ.20

 

நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி !
புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2017

விலை: ரூ.20

 

 

ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி !
புதிய கலாச்சாரம்
நவம்பர் 2017
விலை: ரூ.20

 

போர்னோ : இருளில் சிக்கும் இளமை
புதிய கலாச்சாரம்
டிசம்பர் 2017

விலை: ரூ.20

 

 

பேரிடர் : புயலா – அரசா ?
புதிய கலாச்சாரம்
ஜனவரி 2018
விலை: ரூ.20