Tuesday, June 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 460

2017-ம் ஆண்டின் புத்தக வாசிப்பு – கருத்துக் கணிப்பு

5

சென்னை புத்தகக் காட்சியில் விற்பனை குறைவு என்று கடந்த சில ஆண்டுகளாக பல பதிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி, சினிமா காரணமாக பொதுவில் புத்தக வாசிப்பு குறைந்திருப்பதாகவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

இணையத்தில் புழங்கும் மக்கள் புத்தக வாசிப்பு குறித்து என்ன கருதுகின்றனர்? 2017 ஆண்டில் நீங்கள் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை குறித்து ஒரு சர்வே – வாக்களியுங்கள். நாளிதழ், வார இதழ்கள், இணைய கட்டுரைகள் குறித்து இந்த சர்வே இல்லை. தனிப் புத்தகமாக எத்தனை நூல்களை படித்துள்ளீர்கள்? அதை அச்சுப் புத்தகமாகவோ இல்லை இணைய புத்தகமாகவோ (இ-புக்) படித்திருக்கலாம். அது குறித்து தெரிவியுங்கள்! நன்றி.

கேள்வி : கடந்த 2017 ஆண்டில் எத்தனை புத்தகங்கள் வாசித்தீர்கள்?

  • ஒன்று கூட இல்லை
  • ஒரு புத்தகம்
  • இரண்டு புத்தகம் முதல் ஐந்து வரை
  • ஆறு புத்தகம் முதல் பத்து வரை
  • பத்திற்கும் மேல்

 

பேருந்து கட்டணத்தை செலுத்தாதே ! கலகம் செய் !

0

 

பத்திரிகைச் செய்தி

மிழக அரசு அறிவித்துள்ள பேருந்துக் கட்டண உயர்வு அநீதியானது, எவ்வகையிலும் ஏற்கமுடியாதது. ஜி எஸ் டி, பணமதிப்பழிப்பு ஆகியவற்றால் வருமானமிழந்து வேலை வாய்ப்பையிழந்து நிற்கும் சாதாரண மக்கள் மீது மிகப்பெரும் தாக்குதலை அ.தி.மு.க அரசு தொடுத்துள்ளது. இதனை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக  திரும்பப்பெறுமாறு வலியுறுத்துகிறது.

கட்டண உயர்விற்கு அரசு கூறும் காரணங்கள் உண்மையல்ல.போக்குவரத்துக் கழகங்களின் நலிவுக்கும், நட்டத்திற்கும் ஊழலும் பொருப்பற்ற நிர்வாகமுமே காரணம் என்பது ஊரறிந்த உண்மை. இந்தக் கட்டண உயர்வின் மூலம் ஊழல் அதிகரிக்குமேயன்றி போக்குவரத்துக் கழகங்கள் சீர்படப்போவதில்லை. மலிவான பரவலான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. எனவே கட்டண உயர்வு என்ற இந்தத் தாக்குதலை முறியடிக்க அனைவரும் ஒன்று திரள அழைக்கிறோம்.

காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தஞ்சாவூர் – 94431 88285

*****

பேருந்து கட்டணத்தை செலுத்தாதே ! கலகம் செய் ! – கண்டன ஆர்ப்பாட்டம் !

நாள் : 22.01.2018, திங்கள் மாலை 4:00 மணிக்கு.
இடம் : BSNL அலுவலகம் எதிரில்.

தகவல் :
மக்கள் அதிகராம்,
தருமபுரி.
தொடர்புக்கு – 81485 73417, 80152 69381.

*****

*****

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 20.01.2018 அன்று கும்முடிப்பூண்டியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தோழர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தது போலீசு. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அப்பகுதி புஜதொமு செயலாளர் தோழர் விகேந்தர் தலைமை தாங்கினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.

 

சங்கிகளுக்கு ஃபேஸ்புக் மண்டகப்படி தொடர்கிறது !

7

முகநூலில் ஆண்டாள் விவகாரம் குறித்து சங்கிகளுக்கு பதிலடி கொடுக்கும் தமிழ் ஃபேஸ்புக் – பாகம் 2

**********

Rk Rudhran

வைரமுத்து மீது பெரிய மரியாதை இல்லாதபோதும் ஆண்டாளுக்காகப் பேசுவதாய் அநாகரிகமும் ஆணவமும் ஆபாசமும் கொப்பளிக்கப் பேசிய அந்தப்பெண்ணை சிறுமி என்று கடந்து போய்விடமுடியவில்லை.

இது ஓர் அபாய வருங்காலத்துக்கான அறிகுறி.
இந்து முஸ்லிம் சண்டை மூட்டி குளிர் காய முடியாமல் இந்துக்களுக்குள்ளேயே ஒரு சண்டை உருவாக்கும் குயுக்தி.
ஆண்டாள் மீது பக்தியோ மரியாதையோ அவள் கவிதையின் மீது ரசனையோ இல்லாத கூட்டம் ஒரு தீவிர கலக விளைவிற்காக பாசாங்கு பக்தியோடும் பொய்யான தன்மான ஒப்பனையுடனும் கிளம்பியிருக்கிறது.

து பல இளைஞர்களின் ரகசிய குரலாக இருப்பதே இதன் பேராபத்து.
அவள் நித்தி சிஷ்யை என்பதை மீறி அடுத்த தலைமுறையின் அரைவேக்காட்டு புரிதல் இதில் எச்சரிக்கை மணி அடிக்கிறது.

Athisha Vino

சாமியார்களின் பூசாரிகளின் கெட்டவார்த்தைகளைக் கேட்டு ரொம்பவெல்லாம் அதிர்ச்சி அடையத் தேவையில்லை.

காலங்காலமாக வேத மந்திரங்கள் என்ற பெயரில் நம்மிடமே துட்டு பெற்று நம்மையே நமக்குத்தெரியாமல் திட்டிக்கொண்டிருந்ததை
உலகவரலாற்றிலேயே முதல்முறையாக நேரடியாக தமிழிலேயே ஓதுகிறார்கள். இது முன்னேற்றம்தான்.

இந்து மதம் எப்படிப்பட்ட கழிசடைகளால் முட்டாள்களால் ஏமாற்றுக்காரர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, அது எப்படியெல்லாம் மோசமான காரியங்களுக்கு துணைபோகிறது, எப்படிப்பட்ட மனிதர்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது என்பதையெல்லாம் அம்பலப்படுத்துவதில் நாத்திகர்களை விடவும் நித்தி, ஜக்கி, எச்ராஜா, ஜெயேந்திரா மாதிரி ஆட்கள்தான் திறம்பட உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Raj Dev

கவிஞர் வைரமுத்துவிடம் பேசியிருக்கும் கல்யாணராமன் தன்னை பிஜெபி – விவாதங்களில் வருபவன் என்று அறிமுகம் செய்து கொள்கிறான். ஒரு பொறுக்கிக்கு பரிவட்டம் கட்டி பெரிய மனிதனாக்கி விட்டிருப்பதற்கு இந்த தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் வெட்கப்பட வேண்டும்.

ஆண்டாள் பற்றிய கவிஞர் வைரமுத்துவின் கட்டுரைக்கு வரும் இந்துத்துவ கும்பலின் நெருக்கடிக்கு பணிதல் கூடாது. இந்தியாவில் நிலவி வந்த பழம் விவாத மரபின் கழுத்தை இந்துத்துவ கும்பல் நெரிக்கிறது. Argumentative Indian என்ற நூலில் அமெர்த்தியா சென் இந்தியாவின் விவாத மரபை கவனப்படுத்துகிறார். அசோகரும், அக்பரும் செழுமைப்படுத்திய மரபு அது. இராமாயணத்தில் ஜபாலி சார்வாகக் கொள்கையில் ஊன்றி நின்று ராமன் காட்டுக்கு போவதை விமர்சித்ததை குறிப்பிடுகிறார். தமிழ் சூழலில் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் நவீன சமூக வளர்ச்சியின் ஒளியில் பழந்தமிழ் இலக்கியங்களை அணுகும் முறைமையை வளர்த்தனர்.

கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்தது தேவையற்றது. மிகவும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளது அவரது கட்டுரை. அவர் வைணவத்துக்குள் நின்றும், வெளியில் நின்றும் ஆண்டாளை, அவளது பாசுரத்தை மற்றும் அந்த காலகட்டத்தை அணுகி இருக்கிறார். அவற்றை உயர்ந்த மொழியில் முன்வைத்து இருக்கிறார். எந்த ஓர் எழுத்தாளனுக்கும் அகநிலை சார்பொன்றிருக்கும். அது தான் அவனை இயக்கும். வைரமுத்துவின் அகநிலையை வடித்தெடுத்தது திராவிட இயக்கம். விருதுகளுக்காவும், அங்கீகாரங்களுக்காகவும் எவ்வளவு சமரசமாக போக நினைத்தாலும் அதனை மீறி திமிறிக்கொண்டு திராவிட இயக்க அகநிலை சார்பு வெளிப்படுவதே இக்கட்டுரை. கடந்த ஆண்டு வள்ளலார் எப்படி வைதீக மரபிலிருந்து வேறுபட்டு சிந்தித்து இயங்கினார் என்பதை குறித்து நீள் கட்டுரை ஒன்றை இதே தினமணியில் எழுதினார். அதனை இந்துத்துவ கும்பல் கண்டுகொள்ளாமல் விட்டது ஒரு சதிக்கண்ணோட்டத்துக்கு இடம் தருகிறது.

வைரமுத்து தொட்ட உயரங்களை எளிதில் எவரும் தொட்டு விட முடியாது. எவ்வளவு தான் தீவிர இலக்கிய வேசம் போட்டாலும் சரி ஜெயமோகனால் நெருங்க கூட முடியாது. ஜெயமோகன் சினிமாவில் கதை வசனம் எழுத எத்தனித்த ஆரம்ப காலகட்டத்தில் சிவாஜியையும், எம்.ஜி.ஆரையும் ஜாலியாக தனது வலைதளத்தில் விமர்சித்தார். ஆனந்த விகடன் அதை பிரசுரித்தது. அதனால் அவரது சினிமா வாய்ப்புகள் தாமதமானது. பின்னர் தங்கர் பச்சான் பாணியில் கமுக்கமாக மன்னிப்பு கேட்டார் என்றறிய முடிகிறது. சில காலம் விகடனை எதிர்ப்பதை பேரறமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அரற்றி கொண்டு திரிந்தார் ஜெயமோகன்.

மோடியின் ஆட்சியில் ஒரு விருதாவது பெற நினைத்த வேளையில் வைரமுத்து காட்டி கொடுக்கப்பட்டிருப்பது போன்று தெரிகிறது. மோடியின் ஆட்சியில் ஜெயமோகன் விருது பெறுவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை கணக்கு. எனவே விருது பெற விரும்பவில்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். வைரமுத்து சில சரிகட்டல்களுக்கு தயாராக இருப்பதை ஜெயமோ உணர்ந்திருக்கக்கூடும். அதனால் எச்ச ராஜா மூலம் காரியம் கெடுக்கப்பட்டிருக்கிறது. எது எப்படியோ விருதுகளுக்கு ஏங்காத வைரமுத்து கிடைத்தால் நல்லது.

கி. நடராசன்

“பாஜக வெறும் அரசியல் லட்சியங்களைக் கொண்ட கட்சியல்ல. அது இந்து சங் பரிவாரத்தின் பகுதி. சங் பரிவாரம் இந்த தேசத்தை தாம் நம்பும் இந்து தர்மம், சித்தாந்தம் அடிப்படையில் கட்டியமைக்க எண்ணுகிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு நபரும் ‘நான்’ என்பதை இந்து அடுக்கின் பகுதியாக வரையறுத்துக் கொள்ளவேண்டும். இந்துத்துவம் எனப்படும் சமூக பண்பாடு அனைவரின் சிந்தனைகளையும் ஆளுமைகளையும் திருத்தி அமைக்கவேண்டும். இது எதற்கோ சாதனம் அல்ல. இதுவே அவர்களின் லட்சியம். இதற்கு அவர்கள் கல்வித் துறையை, பண்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு துறைகளை முக்கிய சாதனங்களாக தேர்வு செய்கின்றனர்……

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக என்றுமே வாய்திறக்காத கும்பல், இன்று வீதியில் இறங்கியிருக்கிறது !

சங்பரிவார் நிலை நிறுத்த நினைக்கும் உலகக் கண்ணோட்டம் இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய கண்ணோட்டம் .அதனை நம்புவோர் இந்து ஆதிக்க சாதிகளிலும் ஒரளவிற்கு பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும் இருக்கிறார்கள் .அது அன்றாடம் வாழ்க்கையின் ஒரு பகுதி – அவர்கள் ஆளுமையின் ஒரு பகுதி .அரசியலில் அவர்கள் அனைவரும் பிஜேபி வாக்காளார்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை .காங்கிரஸ் வாக்காளர்களாக இருக்கலாம் .தெலுங்கு தேசம் வாக்காளர்களாக இருக்கலாம் ,சில பேர் கம்யூனிஸ்ட் வாக்காளராகவும் இருக்கலாம் . இவர்களில் பலபேர் சமூகரீதியாக அறிவுஜீவி வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இந்த உலகக் கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்யும் கருவிகளாக அன்றாடம் பணியாற்றுகிறார்கள் .எழுத்தாளர்களானாலும் கலைஞர்களானாலும் இவர்கள் இந்தக் கருத்துப் பிரச்சாரத் தளங்களில் உதவிக்கொண்டே இருப்பர்.”

மனித உரிமைப் போராளி – பாலகோபால்

ஆனால் நாம பார்க்க வேண்டிய பிழைப்பு இதுவல்ல..
இந்த மோடி இந்துத்துவா கும்பலில் மக்கள் விரோத- கார்ப்பரேட் தேச துரோக திட்டங்கள்… என்று அதிகாலை ஆண்டாள் அனுப்பிய காகங்கள் காலை 6 மணிக்கு கரைந்து சொன்னது

…………………………

உண்மையில் விவாதிக்க வேண்டிய இந்த விசயங்கள்தான்.. ஆனால் நம்மை, மக்களைதிரளை திசை மாற்றும் இந்துத்துவ வெறுப்பு-பிளவு சதிகளில் ஒன்று தான் ஆண்டாள் பிரச்சனை

Thanks to Mr. Lakshmikanthankutty

பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி.

1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி – பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி – ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் – மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 2000 கோடி
55-பிரான்ஸ் – பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் – மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் – JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் – மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் – நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் – 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் – அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு – பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை குழா்படிகள்-

Rajagopal Subramaniam

நீங்க ஏன் இலக்கிய கூமுட்டைகள்ன்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துறீங்க..? அது தீவிர இலக்கிய வாசகனாக என் மனதை புண்படுத்துகிறது, நீங்களும் ஒரு இலக்கிய வாசகர் தானே. பொறுப்பான இடத்தில் இருக்கும் நீங்களே இப்படி பேசலாமா என இன்பாக்சில் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

நண்பரே. எனக்கும் ‘அன்பின் இலக்கிய வாசகரே’ என்று ஆரம்பித்து உங்கள் மனம் புண்படாவண்ணம் பதிலளிக்க ஆசை தான். ஆனால், எனக்கு சில எழுத்தாளர்களை போல மனதில் தீரா வன்மத்தை வைத்துக் கொண்டு நயத்தகு நாகரிக வார்த்தைகளால் வன்மத்தை மறைத்து எழுத கூடிய திறமை இன்னமும் வாய்க்கப் பெறவில்லை. மேலும் நம் நாட்டில் குரங்கை குரங்கு என்று சொன்னால் கூட சில பக்தர்கள் புண்பட வாய்ப்பிருக்கிறது. பக்தர்கள் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை, அது குரங்கு தான் என்றாலும் குரங்கை குரங்கு என்று சொல்வது பக்தர்கள் மனம் புண்பட வாய்ப்பிருப்பதால் சொல்ல கூடாது என்று சொல்லும் தீவிர ஜனநாயகவாதிகள் இருக்கிறார்கள். எனவே, யார் மனமும் புண்படா வண்ணம் எழுத வேண்டும் என்றால் நான் என் வீட்டு டைரியில் தான் எழுத வேண்டும். மேலும் நீங்கள் நினைப்பது போல நான் பொறுப்பான பதவியில் எல்லாம் இல்லை. பளிங்கு மாளிகையில் கல்லுடைத்துக் கொண்டிருக்கும் சராசரி ஈ எம் ஐ அடிமை தான். சரி, இலக்கிய கூமுட்டைகள் என்று ஏன் சொல்கிறேன் என்பதற்கு பதிலளிக்க வேண்டுமானால் பதிவு நீளமாகிவிடும். உங்களுக்காக தற்போதைய நாட்டு நடப்பிலிருந்து ஒரே ஒரு உதாரணம் மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். நித்தியானந்த பரமஹம்சர் (நித்தி என்று எழுதினால் அவர் மனம் புண்பட வாய்ப்பிருக்கிறது) எனும் இந்து மத வீர துறவியின் சிஷ்யைகளுள் பால் மணம் மாறா பச்சிளம் சிறுமிகள் சிலர் வைரமுத்துவை பழித்து பேசிய வீடியோவை பார்த்திருப்பீர்கள். அதையொட்டி சமூக வலைத்தளம் எங்கும் கேலிகள், கிண்டல்கள் என உற்சாகம் கரை புரண்டு ஓடியது. நவீன பெண்ணியம் பேசும் எழுத்தாளர்களும் ஜனநாயகவாதிகள்அச்சிறுமிகளை மீட்டு மனநல காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டதையும் அறிவீர்கள். இதில் நமக்கு மாற்று கருத்து இல்லை என்றாலும் அவர்கள் நித்தியானந்த பரமஹம்சரின் ப்ளோ ஜாப் லீலைகள் குறித்தும் பேசி அந்த பச்சிளம் சிறுமிகளை இழித்து பேசி தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்தி கொண்டார்கள். பிரச்சினை என்னவென்றால் நித்தியானந்த பரமஹம்சர் யாரையும் வன்புணர்வு செய்யவில்லை. அவர் யாரையும் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்திருப்பதாக புகார் செய்யவில்லை.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதே நித்தியானந்த பரமஹம்சரை தனது குருவாக வரித்துக் கொண்ட எழுத்தாளர், ப்ளோ ஜாப் வீடியோ மட்டும் வெளியாகவில்லை என்றால் இன்று யோகி ராம்சுரத்குமாருக்கு எப்படி ஒரு பாலகுமாரனோ அதே போல நித்தியானந்த சுவாமிகளுக்கு இந்த எழுத்தாளர் வரலாற்றில் நிலை பெற்றிருப்பார். ப்ளோ ஜாப் வீடியோ தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால் உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட வாசகி புகார் செய்ய விரும்பாததால் மட்டுமே ‘அலியா நீ’ என்று கேவலமாக வசை பாடிய வெட் சாட் விவகாரத்தில் தன்னை புனிதப்படுத்திக் கொண்ட எழுத்தாளனை ஒரு புறம் கொண்டாடிக் கொண்டே மறுபுறம் நித்தியானந்தாவின் பால்மணம் மாறாத சிஷ்யைகளை பழிப்பதற்கு ஒரு இரும்பு மனம் வேண்டுமல்லவா..? அவர்களை போன்றவர்களை விளிப்பதற்கு எனக்கு வேறு வார்த்தைகள் கிடைக்காததால் தான் இலக்கிய கூமுட்டைகள் என்று சொல்கிறேன். ஆனாலும், நீங்கள் இன்பாக்ஸ் வரை வந்து கோரிக்கை விடுத்ததால் இன்று இரவு நன்றாக யோசித்து இலக்கிய வாசகர்கள் மனம் புண்படாதவண்ணம் ஒரு வார்த்தையை காயின் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

ஜெய் இலக்கியம்!

Yuva Krishna

எது எப்படியோ வைரமுத்துவால் மீண்டும் தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு, 1960களை போல தீவிரமடைந்திருக்கிறது. ரொம்ப பாதிக்கப்படப் போகிறவர் ரஜினி. சாதாரண மக்கள், ரஜினியை சோ மாதிரி பார்ப்பனப் பிரதிநிதியாகதான் கருதுகிறார்கள்.

குறிஞ்சி நாதன்

பாரதி ராஜா ஒருத்தர் பேசலாம்…
கள்ளர் முரசு இப்போதுதான் ஆர்ப்பாட்டமே செய்யலாம்
ஆனால் தோழர் சொல்வதுதான் தமிழகத்தின் உளவியல்
இது மாறாத வரை எச்சைகள் குலைத்துக்கொண்டேதான் இருக்கும்…

நல்லா திட்டு சாமி. நீங்க எங்கள விட உயர்ந்தவ‘ர்’

‘வேசி மகன், உங்க அம்மா வேசி, தலையை வெட்டணும்’ இப்படி எல்லாம் கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராகப் பண்பாடோடு பேசுபவர்கள் மற்ற எல்லா ஜாதிக்கார்களையும் ரவுடிகளாகப் பொறுக்கிகளாகச் சித்திரிக்கிற பார்ப்பனர்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பேசுகிறார்கள்.
இப்படிக் கெட்ட வார்த்தைகளோடு ‘இந்து’ என்கிற பெயரில் அதிகமாக அய்யங்கார்களே வெகுண்டெழுகிறார்கள், பதிலுக்கு வைரமுத்து ஜாதிக்காரர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக வரவில்லை. வரவும் மாட்டார்கள்.
இதையே தாழ்த்தப்பட்டவர்கள் ஒன்றுகூடி ‘இந்து’ என்ற அடையாளத்தோடே இப்படிப் பேசியிருந்தால், இந்நேரம் ஊரையே கொளுத்தி இருப்பார்கள்.
ஏனென்றால் ஜாதி சிஸ்டம் இயங்கும் நிலை அப்படி.
தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்கள் அதிலும் பார்ப்பனர்கள் தன் ஜாதியையோ தன் ஜாதிக்காரரையோ எவ்வளவு இழிவாகப் பேசினாலும் கோபம் வராது.
மாறாக, தனக்குக் கீழ் உள்ள ஜாதிக்காரர்கள் தன் ஜாதிக்காரரிடம் மரியாதையாகவே உரிமை கோரினாலே கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
இதுபோல் 90 வயதான அய்யா ஆறுமுகசாமியை ‘சூத்திரன்’ என்று 500 பேர் கூட இல்லாத தீட்சதப் பார்ப்பனர்கள் சிதம்பரம் கோயிலில் அடித்து வீதியில் வீசியபோது, ‘வீரமிக்க வன்னியக்குல சத்திரியர்’கள் யாரும் ‘என் ஜாதிக்காரர் மீது கை வைத்த உங்கள சும்மா விடாமாட்டோம்’ என்ற பொங்கவில்லை. மாறாகச் சும்மாதான் இருந்தார்கள்.

இவ்வளவுதான் ஜாதி இயங்கும் தன்மை.

தன் ஜாதி பெண்ணைத் தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்கள் திருமணம் முடித்தால் பணிவோடு சம்பந்தம் செய்து கொள்வதும்; தலித் இளைஞன் மணம் முடித்தால் தலையை வெட்டுகிற ஜாதி உளவியல்தான் இதிலும் வினையாற்றுகிறது.

அன்று ஆறுமுகசாமிக்கு ஆதரவாக வந்தது மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய தொண்டர்கள். இன்றும் வைரமுத்துவிற்கு ஆதரவாக இவர்கள்தான் தீவிரமாக இயங்குகிறார்கள்.

பார்ப்பனியத்தை எதிர்க்கிற துணிச்சல் பெரியார் தொண்டர்களுக்குதான் உண்டு. ஜாதிய வீரர்களோ நினைத்துக்கூட பார்ப்பதற்கு நடுங்குவார்கள். வீரத்தின் அடையாளமாக மீசை எல்லாம் பெருசா வைச்சுப்பாங்க. ஆனால், மீசை இல்லாத ஜாதிக்காரர்களைப் பார்த்தால் பம்முவார்கள்.

தட்டிஸ் ஜாதி சைக்காலஜி.

தோழர் மதிமாறன்

Prakash JP

அய்யர் நல்லவர், மென்மையானவர், சாந்தமானவர், இனிய ஆன்மீக வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துவார் என்கிற பொதுப்பிம்பத்தை, டேய் வைரமுத்து .ண்டா மவனே.. என்ற வார்த்தையுடன் துவங்கும் வீடியோ மூலம் சுக்கு நூறாக உடைத்து தகர்த்த அந்த அய்யருக்கு வாழ்த்துக்கள்.

சமஸ்கிருதம் உச்சரிக்கும் வாய்களில் இப்படி சரளமாக​ கெட்டவார்த்தை தாண்டவமாடுகிறதே? கேட்டாலே கூசும் கருமங்களை இப்படி கூச்சமே இல்லாமல் பேசுகிறார்களே?

அவர்கள் தமிழில் கெட்டவார்த்தைகள் போடுவதை கேட்கும் போது உங்களுக்கு அதிர்ச்சியாக​ இருக்கிறது. ஆனால் அவர்களோ சம்ஸ்கிருத சுலோகம் என்கிற​ பெயரில் காலம் காலமாக​ சரளமாக​ கெட்டவார்த்தைளை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் அவர்களால் கெட்டவார்த்தைகளை கூச்சமே இல்லாமல் சரளமாக​ பேச முடிகிறது.

Sivasankaran Saravanan

பார்ப்பதற்கு நவநாகரிக பெண் போலவும் ,சதா பகவானின் பெருமைகளை பேசக்கூடிய ஒரு பார்ப்பன பெண்மணி, இட ஒதுக்கீடு பற்றி பேசும்போது தலித்கள் பெயரை குறிப்பிட்டு வன்மத்தோடு திட்டுகிறார்.

என்னடா இது பார்க்க Ultra modern யுவதிகளாக இருக்கிற இந்த பெண்கள் கூடவா இப்படி வெளிப்படையாக சாதிய வன்மத்தை கக்குவார்கள் என பலர் ஆச்சரியப்படுகிறார்கள். பார்ப்பனிய கூறுகள் தெரிந்தவர்கள் ஆச்சரியப்படமாட்டார்கள்.

நாம் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இட ஒதுக்கீடு என்று வந்தாலே அதை தலித்களுக்கு எதிராக மட்டும் திருப்பிவிடுவது பார்ப்பனிய உத்திகளுள் ஒன்று. SC/ST மட்டுமா இட ஒதுக்கீடு பெறுகிறார்? அவராவது 18% தான். ஆனால் BC/MBC பிரிவினர் 50% இடஒதுக்கீடு பெறுகிறார்கள். எனில் இட ஒதுக்கீடு என வந்தாலே தலித் மட்டும் பயனடைவது போல காட்டுவது எதனால்? MBC/BC மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பிவிடுவது தான் அதன் நோக்கம்!

இதே பார்ப்பனியம் தான், தலித்களிடம் BC, MBC தான் உங்களின் எதிரிகள், நாங்க எப்பவாச்சும் உங்ககிட்ட வன்முறை காட்டியிருக்கோமா சொல்லுங்க என அரவணைப்பது போல நடிக்கும். ஒரு தலித் நாளைக்கே பெரியாரை திட்டி ஒரு புத்தகம் எழுதுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே பார்ப்பனிய லாபி அவரை, “வாடா கண்ணா, நீ எழுதுடா, நான் Publish பண்றேன் ” என முழு ஆதரவு தருவார்கள்..!

தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது, BC MBC SC ST எல்லாருமே நமக்கு கீழேயுள்ள பயலுவ தானே என நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள்..!

Saravana Kanth

பொய்பிம்பங்கள் :

முத்துலெட்சுமி ரெட்டி. மருத்துவம் படித்த முதல் இந்திய பெண். அதுவும் சும்மா கிடைத்துவிடவில்லை. இப்போதே நீட் என சொல்லி ஏழைகள் மருத்துவபடிப்பை கானல் நீராக்கும் மூளைகள் 1900- களில் விட்டுவிடுமா ? வழக்கு போட்டார்கள். தடை செய்தார்கள். எல்லாவற்றையும் வென்றே அவர் மருத்துவம் படித்தார். தொடர் போராட்டங்களில் விளைவாக அப்போதைய சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் முதல் பெண் உறுப்பினராகவும் இடம்பெற்றார்.

இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சிலவற்றை முதலில் அரசின் குறிப்புகளில் இடம்பெற செய்து பலவற்றை சட்டங்களாக்கவும் செய்தார். இதில் முக்கியமான ஒன்று தேவதாசி ஒழிப்பு சட்டமும் ஒன்று. அவர் அன்று பேசியது தமிழகத்தில் உடனே நிறைவேறியது. மிக சமீபத்தில தான் பல மாநிலங்கள் அதில் இணைந்துகொண்டன. அவ்வளவு சிந்தனை கோளாறு.

இன்று தேவதாசி என்பதற்காக குதிக்கும் அதே கூட்டம் அன்று தேவதாசி இறைவனுக்கு பணி செய்யும் புனிதபணி… என்று கூக்குரலிட்டது. இறைவனின் பாதத்தை அடையும் வழி என்றும் அது ஓலமிட்டது. மென்மையாக சொன்னார் முத்துலெட்சுமி.. இத்தனை புனிதமெனில் உங்கள் வீட்டு பிள்ளைகளை அதில் ஈடுபடுத்துகொள்ளுங்கள் என சொன்னார். வாய்மூடியது அந்த புளூகு மூட்டை கூட்டம்.

1927 ஆம் ஆண்டு வந்த தீர்மானத்தில் புனிதமாக இருந்த தேவதாசி.. இப்போது 2017 அவச்சொல்லாக மாறிவிட்டது. வரலாற்றில் இது ஒன்றும் பெருந்தூரமில்லை. 90 ஆண்டுகள் தான். அதற்குள் எப்படி மாறிவிட்டு தங்களை புனிதர்களாக்குகிறார்கள் பாருங்கள். மிக சமீபத்தில் கூட சொர்ணம்லாய என்ற நடிகை தேவதாசி என்பது இறைத்தொண்டு என சொல்லியிருந்தார். தேவதாசி என்பது அப்போது நிலவிய காலகட்டம் என்பதாலும் அந்த ஆங்கில கட்டுரையாளர் இதை குறிப்பிட்டு அந்தளவு இந்த பெண்மணி ஆண்டாள் பக்தியில் மூழ்கியிருக்கிறார் என சொல்கிறார். வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் இவர்கள் இப்படி பேசுவது என்பது திட்டமிட்ட செயல்.

இன்றைய முகநூல் வைரமுத்து சொன்ன அடுத்த நொடியே ஆண்டாள் பற்றிய வரலாறு வெளிவந்துவிட்டது. ஆண்டாள் யார் ? அது பக்தி வரலாறா ? இல்லை பக்தி இலக்கியமா ? ஆண்டாள் மார்கழி திங்கள் பற்றி மட்டும் பாடியிருக்கிறாரா ? இல்லை தன்னை ஆணாக மாற்றி கிருஷ்ணனை பெண்ணாக மாற்றி காமம் பாடியிருக்கிராரா ? என்பதையெல்லாம் அது பேச வைத்துவிட்டது. இது அவர்களின் பிழைப்பிற்கு விடப்பட்ட சவால். அதான் இன்று வீதியில் நிற்கிறார்கள்.

முருகன் விநாயகரின் தம்பி, சிவனின் மகன் எனில் ஏன் விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது? தைப்பூசம் ஏன் தமிழர்கள் இருக்கும் பகுதியில் மட்டும் கொண்டாடப்படுகிறது என நீங்கள் கேட்கபோவதில்லை. இந்த அடிப்படையிலேயே அவர்கள் தங்கள் பொய் கட்டுமானங்களை உருவாகி இருக்கிறார்கள். இந்து என இவர்கள் சொல்லும் நல்லவை எல்லாமே பெளத்தம், சமணத்தில் இருந்து திருடப்பட்டவை. மற்றவை எல்லாமே பிராமணியம் என உளறும் மனுக்களுக்கு சொந்தமனாது. 1850களில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட இரண்டு மதங்கள். ஒன்று பெளத்தம் இன்னொன்று பிராமணியம்… ? இதில் எங்கே இந்து ? 1850க்குள் 2017 எத்தனை தூரங்கள்.. அந்த தூரங்களில் அவர்கள் ஒட்டுமொத்த மக்களை வீழ்த்தியிருக்கிறார்கள்..? அவர்கள் பொய்யர்கள்.. அவர்கள் கையில் இருக்கும் மனுதர்மம் முதல் ஆண்டாள் வரை எல்லாமே பொய்களே. தன்னை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தும் வர்ணாசிரம முயற்சிகளே.

பா. சரவண காந்த்.

Barathi Thambi

ஆண்டாள் சர்ச்சையில் ஒரு காந்தியரின் பார்வை

 Raattai

வைத்தியநாதய்யர் திருவல்லிபுத்தூர் கோவிலுக்கு பட்டியல் இனத்தவரை அழைத்துக் கொண்டு சென்றபோது சனாதனப் பெண்மணிகள், விதவைகள் வாசலில் குறுக்க படுத்து நுழையவிடாமல் செய்தார்களாம். ஐயர் ஏறிமிதித்துச் செல்வோம் என்றாராம். கல்லெறிந்து ஐயரின் மண்டையை உடைத்தார்கள். பின் காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தபின் கோவில் நுழைவு நிகழ்ந்தது.

திருவரங்கம் கோவிலுக்கு TSS ராஜன் பட்டியல் இனத்தவரை அழைத்துக் கொண்டு சென்றாராம். சனாதனப் பெண்மணிகள் தலைவிரி கோலத்தில் வாசலில் படுத்துருண்டார்களாம். தடியடி நடத்தி கோவிலுக்குள் நுழைந்தனர்.

காலங்காலமாக பெண்களையும் சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் சாஸ்திரத்தின் பெயரால் அரங்கனை தரிசிக்க விடாமல் செய்த கூட்டம் தான் இப்போது ஆண்டாள் பிரச்சனையில் வீதிக்கு வருகிறது. உண்ணாவிரதம் இருக்கிறது.

தமிழ்தேசிய , திராவிட அரசியல் விழித்தெழுமா ?
இந்துத்துவம் காலூன்றுமா ?

 

ஆண்டாள் பிரச்சினை : விழித்தெழும் தமிழகம் ! ஃபேஸ்புக் பதிவுகள் !!

5

வைரமுத்து பேசிய ஆண்டாள் உரையை வைத்து ”வைரமுத்து ஒரு இந்து மத விரோதி”, “வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும்” என எச்.ராஜா தனது குலையைஆரம்பித்து வக்கிரத்துடன் வைரமுத்துவை ‘தாசி மகன்’ என்றும் ஏசினார்.

தமிழகத்தில் இந்துமதவெறியை எப்படியாவது வளர்த்துவிட வேண்டும், அதை வைத்து கட்சி செல்வாக்கை வளர்க்க வேண்டுமென இப்பிரச்சினையை முன்வைத்து கடும் வெறிப் பிரச்சாரத்தை செய்கிறது பார்ப்பனிய இந்துமதவெறிக் கும்பல்.

நெல்லையில் ஜீயர்களை உட்காரவைத்து, முன்னாள் அதிமுக அடிமை மற்றும் இந்நாள் பாஜக அடிமையுமான நயினார் நாகேந்திரன், வைரமுத்து நாக்கை அறுக்க வேண்டும், ஹிந்துமதத்தை எதிர்ப்பவனைக் கொல்லவேண்டும் என கூவினார். இந்நேரம் பல இலட்சம் பேர் திரண்டிருக்க வேண்டாமா எனக் குமுறினார்.

ஆனால் இதுவரை இந்து எழுச்சி என்பது பார்ப்பனர்களின் அக்ரகாரத்தைத் தாண்டி வேறு எங்கும் செல்ஃப் எடுக்கவில்லை. மாறாக, ஆண்டாளின் பாடல் விளக்கமும், தேவதாசி முறையின் வரலாற்றுப் பின்னணியும் மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது.

பொங்கி எழும் சங்கிகளை முகநூலில் ’வைத்துச்’ செய்திருக்கிறார்கள், தமிழர்கள் ! அதனை தொகுத்து தருகிறோம். இது முதல் பாகம்.

Villavan Ramadoss

வைரமுத்து நாக்கை அறுத்தா 10 கோடி கொடுப்பானாம்…
ஏன் நாயே உனக்கு அறுக்க தெரியாதா? அதென்ன பேசுற எல்லா சங்கி நாயும் காசுகொடுக்குறேன்னு மட்டும் சொல்லுது!!
வீரத்தை வாடகைக்கு வாங்குற சொம்பைப் பயலுங்களா.

******

இந்திரா பார்த்தசாரதி

ஆண்டாளும், அசிங்க அரசியலும்

ஆங்கிலத்தில் ‘missing the wood for the trees’ என்ற சொல்வழக்கு உண்டு. அதாவது, ஒரு செய்தியில், எது முக்கியமோ அதை விட்டு விட்டு, தேவையில்லாததை மிகைப் படுத்துதல் என்று பொருள். அது போல்தான், இப்பொழுது ஆண்டாளைப் பற்றி நடந்து வரும் விவாதங்கள்.

ஆண்டாளைப் பற்றிக் கவிஞர் வைரமுத்து கூறிய தகவல் தவறானது என்று அவர் கூறியதை எதிர்த்து வாதாடலாமே தவிர, அவர் ஆண்டாளை எப்படி அவமானப்படுத்தினார் என்பது எனக்குப் புரியவில்லை. ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளர், ஆண்டாள் திருவரங்கத்தைச் சேர்ந்த ஒரு தேவதாசி என்று சொன்ன கருத்தை எடுத்துக் கூறியது எப்படி ஆண்டாளை இழிவுப் படுத்திப் பேசியதாகும் என்பது எனக்கு விளங்கவே யில்லை. அக்கருத்து தவறு என்று சொல்வதற்கு இடமிருக்கிறதே தவிர,அவர் அவமானப் படுத்தினார் என்று சொல்வதற்கு இடமேயில்லை.

பல்லவர், சோழர் காலத்தில் தேவதாசிகளுக்குக் கோயிலில், அர்ச்சகர்களுக்கு ஈடான அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது என்பதற்குக் கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றது.

சங்க காலத்தில், பாணர், விறலியர்,கூத்தர் ஆகியோருக்கு சமூகத்தில் உயர்ந்த இடம் தரப்பட்டிருந்தது என்பதைச் சங்கப் பாடல்கள் மூலம் அறியலாம். ஆனால் பிற்காலத்தில், அவர்கள் தகுதி குறைந்தது என்பது, சமூகச் சீரழிவை சுட்டுகின்றதே தவிர,இது எந்த விதத்திலும் அவர்களைப் பற்றிய விமர்சனம் அன்று.. இவ்வாறு கூறுவது சீரழிந்த நம் முகத்தை நமக்கே எடுத்துக் காட்டும் கண்ணாடி.அது போல்தான், ஆண்டாளை ஒருவர் தேவதாசி என்று கூறி அவமானப் படுத்தினார் என்று கூறும் விமர்சனம்.

ஆண்டாள் ஓர் அற்புதமான கவிஞர், சொல்லேர் உழத்தி. பன்னிரு ஆழ்வார்களிலே நம்மாழ்வருக்கு ஈடான தகுதியில் வைத்து, வைணவ சம்பிரதாயத்திலே போற்றப்பட்டு வரும் கவிஞர். அவரைத் தற்கால அசிங்கமான அரசியல் ஆதாயங்களுக்காகக் கொச்சைப் படுத்த வேண்டாம்.

******

Divya Bharathi

ஆண்டாள் சர்ச்சைக்கு பின் வைரமுத்துவிற்கு H.ராஜா, நைனா நாகேந்திரன் போன்றோர்களின் வெளிப்படையான மிரட்டல், பிராமணர்களின் தொடர் போராட்டம், நித்தி சிஸ்யைகளின் வீடியோ, கருப்பு கருணா மற்றும் Venpura Saravanan தோழர்களை குறிவைத்த நித்தி சீடர்களின் வீடியோ, எல்லார் பேச்சிலும் தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் கீழ்மை, திக தலைவர் வீரமணி அவர்களை மிரட்டும் தொடர் போக்கு, இவைகளினூடாக “மாதா” மதராசாக்களை இழுக்கும் சூழ்ச்சி இவைகள் அனைத்தும் தனித்தனியாக நடப்பது போல் தோன்றினாலும், இவையனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றன் பின் ஒன்றாக இயக்குவது Rss தான் என்பது தெளிவாகிறது.

Bjpன் அரசியலே Polarization உத்தி மட்டும் தான். அதை இம்முறை மிக சிறப்பாக Bjp தமிழகத்தில் செய்து வருகிறது. மற்ற சில நண்பர்களை போல் இவைகளை எல்லாம் குறைத்து மதிப்பிட்டு கலாய்த்து விட்டு மட்டும் செல்ல என்னால் முடியவில்லை. இந்த காவி பயங்கரவாதத்திற்கு எதிராக முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து சிறுபான்மையினரையும் இணைத்து கொண்டு ஒரு பரந்த மேடையை உருவாக்க வேண்டியது நம்முன்னுள்ள உடனடி அரசியல் கடமையென கருதுகிறேன்.

நாம் குறைத்து மதிப்பிடும் இந்த கும்பல் தான் கல்புர்கி, தபோல்கர், பன்சாரே மற்றும் கௌரி லங்கேஷ் போன்ற நம் தோழர்களை சுட்டு கொன்றார்கள் என்பது நம் நினைவில் எப்போதும் இருக்கட்டும் தோழர்களே.

******

Rajarajan RJ

அந்த பெண்ணுக்கு 16 வயசு தான் என்று சொல்கிறார்கள். எனக்கு தெரியவில்லை. நித்யானந்தா மடத்தில் இருந்து இந்த மாதிரி பெண்கள் பேசும் வீடியோக்கள் சமீபமாக வந்த வண்ணம் இருக்கிறது. இந்துத்துவம் நித்யானந்தா போன்ற சூத்திர சாமியார்களை இதற்காக பயன்படுத்திக்கொள்கிறது போல. உண்மையை சொல்லப்போனால் நான் அந்த பெண் பேசியதை கேட்கவே இல்லை. அந்த பெண் வைரமுத்துவை கன்னாபின்னாவென்று திட்டுகிறார் என்றார்கள். அந்தப்பெண் பார்க்க நன்றாக இருந்தார். நான் ஷேர் செய்தேன்.

தோழர் டான் அசோக், நேற்று இந்த பெண்களை எல்லாம் ஆசிரமத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு மனநிலை சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும் என்றார். எனக்கு அவர் சொன்னது 100% சரி என்று தோன்றியது. நான் பெண்கள் தான் சாதியையும்/ மதத்தையும் கடத்திக்கொண்டு போக உதவுகிறார்கள் என்று எழுதினேன். தோழர்கள் வந்து.. சமூகம் தான் அதற்கு காரணம் என்றார்கள். மாற்றுக்கருத்தில்லை.

அடுத்ததாக இவ்வகை சாமியார்களிடம் சிக்கி இருக்கும் ஆண்கள், பெண்கள், குடும்பங்களின் எண்ணிக்கை மிக அதிகம். நித்யானந்தா மட்டும் அல்ல.. ஜக்கியில் இருந்து பாபாக்கள் வரை நிறைய சாமியார்கள் இப்படி இருக்கிறார்கள். எனக்கு நெருக்கமான ஒருவரின் குழந்தைகள் ஈஷா யோகாவில் சிறு வயதில் இருந்தே சேர்க்கப்பட்டார்கள். பின்பு போராடி அந்த குழந்தைகளை மீட்டார்கள்.

கடந்த வருடம் கூட இரண்டு மொட்டை போட்ட சாமியாரிணிகள் ஜக்கி மடத்தில் இருந்து பேட்டிக்கொடுத்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்!

ஆன்மீக போதைக்கும், இந்துத்துவ போதைக்கும் நூலளவு தான் வித்தியாசம்! அந்த போதை எப்போதுவேண்டுமானால் வெறியாக மாறும்! அப்படியான வெறியை தான் நாம் தமிழ்நாட்டில் பார்க்க துவங்கியுள்ளோம்!

******

வைரமுத்து வாசலில் வந்து மன்னிப்பு கேளுடா – பாரதிராஜா சரவெடி

 

******

Shivani Sivakumar

வத்தக்குழம்பும், சுட்ட அப்பளமும் ரெடி..!
♦ உண்ணாவிரதத்தை முடித்து கொள்கிறேன் – ஜீயர்

******

கி. நடராசன்

ஈறை பேனாக்கி..பேனை பெருமாளுக்கு சதி கும்பல் கூச்சல் எரிச்சல் தாங்க முடியாமல்.. அதிகாலை 3 மணிக்கு ஆண்டாள் அனுப்பிய கரிச்சான் குருவிகள் பனியில் நனைந்து வந்து சன்னலை தட்டியது. அது இசைத்து அருளிய.. சொல்லிய  நல் முத்துகளில் இன்று காலை உங்கள் மேலான பார்வைக்கு! தூக்க கலக்கத்தில் சிலது விட்டு விட்டது.. அவை நாளைக்கு சொல்வதாக சொல்லிவிட்டு பறந்து விட்டது

ஆண்டாள் ஆய்வு கூடாது

இந்து மன்னர்களை –
இந்திய வரலாற்றை ஆய்வு செய்யாதே!
கல்வி கூடங்களை பஜனை மடங்களாக்கு!

பக்தியை, தெய்வ நம்பிக்கையும் மதிப்போம்!
தெய்வத்தை அரசியலாக்கும் 0.1% நாதாரி கும்பலை நாசம் செய்வோம்!
……………………………………..

சீதையை பூமா தேவி விழுங்கி சொர்க்கத்திற்கு தங்க ரதத்தில் அழைத்துக் கொண்டார்.
ஆண்டாளை பெரியாழ்வார் பெருமாளுடன் அய்க்கியமானார்’
நந்தன் நெருப்பில் இறங்கி கடவுளுடன் கலந்து விட்டார்
இராமலிங்க அடிகளார் ஜோதி மயமாகி விட்டார்..

இதெல்லாவற்றும் ஒரு லிங்க் இருக்கும் போல..

ஒன்றும் மில்லாத, குப்பை பெறாத விஷயத்தில் வெறுப்பு அரசியலை தூண்ட பொக்கிரிகளை பேச விட்டு சும்மா இருந்தது நமது முட்டாள்தனம்

இந்து மத குப்பைகளை, இந்து கடவுளின் யோக்கியதைகளை விரிவாக பல நல்ல பார்ப்பன அறிவாளிகள் அம்பலபடுத்தி உள்ளனர். அவர்கள் லிஸ்ட் வேணும்
……………………………………………

நாம் 99.9 % ( 97 % சூத்திரர்கள் + 2.99 பார்ப்பனர்) நல்லவர்கள் சேர்ந்து 0.1% சாமியார்களை, மோடி கும்பலை தனிமை படுத்த முடியாதா?
…………………………………..

ஆண்டாள் சர்ச்சை இந்த அளவுக்கு பரவ- மீடியாகாரர்கள், படைப்பாளிகள், ஆய்வாளர்களின் கையாளாகத சூடு சுரணயற்ற சரணாகதி மழுப்பல்தான்
……………………………..

தீண்டாமை சட்டப்படி குற்றம்! தீண்டாமையை போதிக்கும் கடவுள் நாக்கை அறு! சனாதனதர்ம குப்பைகளை கொளுத்து!
…………………………………..

மீடியாகாரர்கள், படைப்பாளிகள், ஆய்வாளர்கள் ஏன் 0.1% இந்துத்துவா வெறிநாய்கள் குரைப்பத்தை சதாரணமாக கடக்கிறார்கள்?
………………………………….

99.9 % மக்கள்(பார்ப்பனர்கள் உட்பட்) நல்லவர்கள் நம்பக்கம்! 0.1% நாதரி சாமியார்கள், வெள்ளத்தோல் சீஷ்யைகள் கீழமை குண சாக்கடைகள்
…………………………

கணவன் இல்லாத நேரத்தில் மனைவி மகிழ்ச்சியாக பொழுது போக்க கூடாது. அலங்கரித்து கொள்ள கூடாது -விஷ்ணு ஸ்மிருதி .இதை விமர்சிக்க கூடாதா
……………………………

நால்வர்ண வேதங்கள் இந்து சனாதான தர்மமா( மாற்ற முடியாதாம்) புனிதமானதா? இவை
இந்திய சட்டப்படி குற்ற பதிவுகள்
…………………………..

சாதிகளை புகழும், 98 % மக்களை இழிவு செய்யும் சனதான நாதரி நாய்களை பேசவிட்டு வாயடைத்து கிடக்கும் நம்ம அறிவாளிகளைதான் உதைக்கனும்
……………………..

பெண்கள் பேச்சை நம்ப முடியாது. அதனால் நீதிமன்றங்களில் பெண்களின் சாட்சியம் செல்லாது எனும் நாரத ஸ்மிருதி பக்தியா -அயோக்கித்தனமா?
………………………

பெண்ணுக்கு சுதந்திரமாக வாழும் தகுதி இல்லை எனும் மனுஸ்மிருதி. பெளதாயன், யாக்ஜ்வல்கியன், வசிஷ்டன், விஷ்ணு, நாரதன்
இவனுங்கள் கடவுளா?
**********

Prakash JP

பார்ப்பனீயர்களின் நரித்தனம்..

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple (ஆண்டாள் ஸ்ரீரங்க கோவிலில் வாழ்ந்து மறைந்த தேவ தாசி) என்ற வரிகள் உள்ள கட்டுரையை Bhakti movements in south india (தென்னிந்தியாவில் பக்தி இயக்கம்) எழுதியவர்கள், எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். நூலின் பெயர், Indian movements: Some Aspects of dissent protest and reform.

அதற்கு அவர்கள் ஆதாரமாக காண்பிப்பது History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு), அந்த நூலை எழுதியவர் டி.ஏ. கோபிநாத் ராவ்.. இந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் அதற்கான ஆதாரம் இருப்பதாக எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டாள் என்பதே கற்பனையான ஒரு பாத்திரம் என எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி… வைரமுத்து குறிப்பிட்ட அந்த கருத்தைவிட மிக அதிகமா தன்னுடைய நாவலில் ஆண்டாளை விமர்சிச்ச எழுத்தாளர் பா. ராகவன், அதை வெளியிட்ட கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி..

“நீங்க.. என்ன, ஆம்படையாள இன்னும் ஒத்துக்கல, ஆண்டாளாவாவது ஏத்துக்கோங்கோ….” என்று ஹேராம் படத்தில் வசனம் வைத்தவர்கள் கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா

எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன், டி.ஏ. கோபிநாத் ராவ், ராஜாஜி, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி, கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா.. இவர்கள் எல்லாம் பிராமணர்கள்.. அதிலும் ஆண்டாள் சார்ந்த வைணவ பிரிவு பார்பனர்கள்.. இவர்களை எல்லாம் யாரும் கண்டிக்கவில்லை… எந்த பூணூலும் போராராடவிலையே… ஏன்??

ஆனால், பார்பனர் அல்லாத கவிஞர் வைரமுத்து இவர்கள் எழுதியதை மேற்கோள் காட்டியதைத்தான் தாங்க முடியவில்லையாம்.. ஏனென்றால், அவர்கள் பிராமணர்கள், வைரமுத்து சூத்திர வகுப்பை சேர்ந்த தமிழர்… இது தான் ஆரிய – திராவிட மோதல் என்பது…

மேலும், “எல்லா ஹிந்து கடவுள்களும் கிரிமினல்கள்” என்று ஹிந்து மத தலைவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சொன்னபோது ஒரு பயல் வாயை திறக்கவில்லை… பூணூல் பார்டிகள் வீதிக்கு வந்து போராடவில்லை… எச்.ராஜா போன்ற எச்சைகள் வாய் திறக்கவில்லை… இங்கே இப்போது குதிக்கும் பார்ப்பனீய அடிமைகள் வாய்மூடி இருந்தார்கள்..

**********

Sundaram Chinnusamy

நாங்க அருவா தூக்கிய ஜாதி… மறுபடியும் தூக்க வச்சுடாதீங்க என்ற ரீதியில் மிரட்டுகிறார் பாரதிராஜா….
எச்.ராஜா வைரமுத்துவுக்கு பொங்கின மாதிரி பொங்கக் காணோம்.
The use of caste system is amazing!!!

**********

Chandran Veerasamy

இன்றைய சன் நியூஸ் விவாதத்தில் ஒரு காவி ‘ வைரமுத்துவின் தலையை நான் வெட்டுவேன் ‘ என்று திரும்பத்திரும்ப கூறுகிறான் . அந்த நிகழ்ச்சியை நடத்துபவன் இது சரியா என்று கேட்கிறான் . மீண்டும் அந்தக் காவி நாய் , சொன்னததையே சொல்லுகிறான். இறுதிவரை .
அந்தக் காவி நாயைக் குறைந்த பட்சம் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றி இருக்க வேண்டும் .

#வைரமுத்து மேல் அப்படி என்ன ‘ காண்டு ‘ கேடிப்பய தொலைக்காட்சிக்கு ?

**********

Thiru Yo

“ஆன்மீக அரசியல்” என்றால் என்னவென்று இப்போது புரிந்திருக்கும்.

**********

Samsu Deen Heera

ஷாகும் வரை உண்ணாவிரதம்னு ஷொன்ன ஜீயர் லஞ்ச்சுக்கே ஓடிண்டார்..

நான் பாப்பாத்திடா.. இட ஒதுக்கீடு நாங்க கொடுத்த பிச்சைடான்னு காலைல வீரமா ஷொன்ன மாமியும் மதியமே டீ ஆக்டிவேட் பன்னிண்டு போயிண்டார்..
இந்த பாரதிராஜா வேற ஆயிதத்த எடுக்க வெச்சிறாதேள்னு சவுண்டு கொடுக்கறா..
இந்த வைரமுத்து.. ஆண்டாள் வந்து ஷொல்லட்டும் மன்னிப்பு கேக்குறேங்கிறா..
இந்த அம்பி பிரசன்னா.. என்னமோ டீ குடிக்க வான்னு ஷொல்றமாதிரி தீக்குளிக்க வான்னு கூப்பிடறான்..

நம்ம நித்தியோட புள்ளைங்க ஏதோ நமக்கு சப்போர்ட்டா பேசிண்டு இருக்கா.. இவனுக என்னடான்னா அவாளையே சைட் அடிக்கிறா..
சூத்திரவா சப்போர்ட் இல்லைன்னா நம்ம பெர்பார்மன்ஸ் படு கேவலமா போயிடும்னு நேக்கு நல்லா புரிஞ்சிடுத்துடா அம்பி…
நோகாம நெய்யும் பருப்பும் தின்னு வளந்த ஒடம்பு வெய்யில்ல காஞ்சதுதான் மிச்சம்..
பஹவானே…!!

**********

Chelliah Muthusamy

சொன்னபடி தீக்குளிக்க எச்.ராஜாவுக்கு துப்பில்ல.
ஜீயருக்கு ஒருநாள் பட்டினி கிடக்க வக்கில்ல.
புரோகிதம் பண்ணி, கடவுள் பெயரால் ஏச்சுப்பிழைச்சு வயிறு வளர்க்கும் பார்ப்பன கூட்டமே இத்தோடு நிறுத்திக்கொள்வது உங்களுக்கு நல்லது.
இத்தனை நாளாக நீங்க பறிச்ச குழி உங்க காலடியில்தான் என்பதையாவது உணர்ந்து பிழைக்கிற வழியைப் பாருங்கள்.

பெரியாரைப் பற்றி இந்தப் பசங்க புரிந்து வைத்திருப்பதில் தெரிகிறது இவர்களது அறிவுநாணயமற்ற தன்மையும் அறிவும்.
சீதை சிரித்திருந்தால் ராமாயணம் இல்லை; திரவுபதி சிரிக்காதிருந்திருந்தால் மகாபாரதம் இல்லை என்று சொல்லி வைரமுத்து கொச்சைப்படுத்திவிட்டாராம். எச்.ராஜா வகையறா பக்தி இலக்கியம் படிக்கிற லட்சணம் இதுதான். ஏண்டா, சீதை சிரித்திருந்தால் பிரச்சனை இல்லை; ஆனால், சிரிக்கவில்லையே என்று கவிஞர் பெருமைப்படுத்துவதாக தோன்றவில்லையா.

இப்படிப்பட்ட மங்குனிகளால் இந்துத்துவம் வளர்க்கப்படும்போது மதவாதம் வெறியூட்டப்படும்போது கமுக்கமாக இருந்துவிட்டு வைரமுத்துவின் பார்வையில் குறைகாண வந்துவிட்டார்கள் ஜெயமோகன், செயபிரகாசம், லக்‌ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட யோக்கியர்கள்.

உங்கள் எழுத்துக்களை புதைத்தால் நிலம் பழுதாகும். உங்கள் எழுத்துக்களை எரித்தால் காற்று நஞ்சாகும்.

**********

அமீர் அப்பாஸ்

இது வைரமுத்து மீது எறியப்படும் கல் அல்ல. பார்ப்பனர்கள் தங்களின் வரலாற்றின் மீது தாங்களே கல்லெறிந்து கொள்கிறார்கள். தேவதாசி முறையை உருவாக்கியவர்கள் யார்? அதன் வழியாக பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கியது யார்? பக்தியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இந்த ஆபாசங்களுக்கும் வக்கிரங்களுக்கும் காரணமான பார்ப்பனர்களே
அந்த சொல்லுக்கு எதிராக போராட்டம் நடத்துவது வரலாற்று முரண் அல்லவா?

திருடனே போலீஸ் வேடத்தில் இருப்பது போல் உள்ளது உங்களின் போராட்ட வடிவம்.

**********

Viruthagiri A

சற்று முன் சுப வீ அய்யா ஒன்றே சொல் நன்றே சொல் உரையில் நியாயமான ஒரு கேள்வி கேட்டுள்ளார் –

“ஒரு கருத்து சொன்னால் அதற்கு தலையை வெட்டுவோம்… நாக்கை வெட்டி வந்தால் இத்தனை லட்சம் பரிசு என்று சொல்பவர்கள் மீது அரசும் காவல் துறையும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்ன தேசீய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது”

– நியாயமான கேள்வி…

தமிழர்கள்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று சொல்கிறோம்… தமிழர்கள் பேடிகளாக ஆண்டால் என்ன செய்வது?

 

சிறப்புக் கட்டுரை : தில்லிக்கு கொடுக்க வேண்டிய பிரசாதம் – நீதிபதிகள் ஊழல் அம்பலம் !

1
அலகாபாத் உயர் நீதிமன்றம், பிரசாத் கல்வி அறக்கட்டளை, உச்ச நீதிமன்றம் மற்றும் சிபிஐ அலுவலகம் (கடிகாரச் சுற்றுப்படி )

புது தில்லி, சர்ச்சைக்குரிய மருத்துவ கல்லூரி லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஓய்வு பெற்ற ஒதிசா உயர்நீதிமன்ற நீதிபதி ஐ.எம். குதூஸி, இடைத்தரகர் விஷ்வநாத் அகர்வாலா மற்றும் பிரசாத் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த பி.பி யாதவ் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த உரையாடல்களில், கல்லூரி நிர்வாகிகள் தமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளோடு லஞ்ச பேரம் நடத்திய விசயம் அம்பலமாகியுள்ளது.

வழக்கை நடத்தி வரும் மத்திய புலனாய்வுத் துறையின் வசமுள்ள தொலைபேசி உரையாடல்கள் ‘தி வயர்’ இணைய பத்திரிகைக்கும் கிடைத்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் அதே நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளுக்கும் இடையே சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இவ்விவகாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. கடந்த ஜனவரி 12 -ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “நீதிமன்றத்தின் மரபுகளை மீறி எந்த ஒரு நேர்மையான அடிப்படையும் இன்றி தமக்கு விருப்பமான நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதாக” தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மேல் நான்கு மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

பொதுவாக ‘நீதித்துறை ஊழல்’ எனும் பேசாப் பொருள், பிரசாத் கல்வி அறக்கட்டளை மூத்த நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவாகரத்தின் மூலம் தற்போது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறியுள்ளது.

தனது அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் குலோக்கல் மருத்துவ கல்லூரி, பல்நோக்கு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய மருத்துவ கவுன்சிலால் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அத்தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தையும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தையும் நாடியது பிரசாத் கல்விக் குழுமம். இந்நிலையில் கடந்த 2017 -ம் ஆண்டு செப்டம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் தான் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தொலைபேசியில் லஞ்சம் கொடுப்பது குறித்து உரையாடி உள்ளனர்.

ஆகஸ்ட் 2017 -ல் இருந்து செப்டெம்பர் 2017 வரையில் நடந்த நீதிமன்ற விசாரணைகளில் பிரசாத் அறக்கட்டளைக்கு சாதகமான பல்வேறு உத்தரவுகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய உச்சநீதிமன்ற பென்ச் வழங்கியது.

மருத்துவக் கல்லூரி லஞ்ச ஊழல் வழக்கின் நதிமூலம் :

குலோக்கல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்டு மொத்தம் 46 கல்வி நிறுவனங்களுக்கு கடந்த 2017 -ம் ஆண்டு முதல் அடுத்த இரண்டு கல்வியாண்டுகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலும் இந்தக் கல்வி நிறுவனங்கள் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்கிற அறிக்கையையும் சமர்ப்பித்தது.

ஐ.எம். குதூஸி

எனினும், கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் துவங்கி உச்சநீதிமன்றமும் அலகாபாத் உயர்நீதிமன்றமும் பிரசாத் அறக்கட்டளைக்கு சார்பான பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருந்தது.

ஆகஸ்ட் 1, 2017 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய பென்ச், மருத்துவ கவுன்சில் வழங்கிய பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து குலோக்கல் கல்லூரி தரப்பு விளக்கங்களை மத்திய அரசின் மேல்முறையீட்டுக் கமிட்டி மறுபரிசீலனை செய்தது. எனினும், இப்பரிசீலனைக்குப் பின் தடை நடவடிக்கை சரி என முடிவு செய்த மேல்முறையீட்டுக் கமிட்டி, பிரசாத் அறக்கட்டளை சார்பாக நட்டஈட்டிற்காக பிணைத் தொகையாக செலுத்தப்பட்டிருந்த 2 கோடி வங்கி உத்திரவாத தொகையை இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அனுமதியளித்தது.

ஆகஸ்ட் 24, 2017 மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய பிரசாத் கல்வி அறக்கட்டளை, பின்னர் தனது மனுவைத் திரும்ப பெற்றுக் கொண்டது. தலைமை நீதிபதி அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், பிரசாத் அறக்கட்டளை தாக்கல் செய்த ரிட் மனுவைத் திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதியளித்ததுடன், மேற்படி அறக்கட்டளை ஏற்கனவே இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியதற்கும் ஒப்புதல் அளித்தது. இதே காலகட்டத்தில் மருத்துவ கவுன்சிலால் தடைசெய்யப்பட்டிருந்த பிற கல்லூரிகளின் வழக்கில் மாணவர் சேர்க்கையைத் துவங்க கூடாது என்று உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்த அதே தலைமை நீதிபதி, பிரசாத் அறக்கட்டளையின் வழக்கில் அதற்குச் சாதகமான உத்தரவுகளை வழங்கியது அப்போதே வழக்கத்திற்கு மாறானதாக பார்க்கப்பட்டது.

ஆகஸ்ட் 25, 2017 அதற்கு மறுநாளே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாராயண் சுக்லா தலைமையிலான பென்ச், பிரசாத் கல்வி அறக்கட்டளை மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை நடத்தலாம் எனவும், மேற்படி அறக்கட்டளை வழங்கியிருந்த வங்கி உத்தரவாதமான 2 கோடியை இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 29, 2017 அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில் உச்சநீதிமன்றத்தை நாடுகிறது. உயர்நீதிமன்றத்தில் பிரசாத் அறக்கட்டளை தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் பென்ச், மேற்படி அறக்கட்டளை அரசியல் சட்டப்பிரிவு 32 -ன் கீழ் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுக அனுமதியளித்தது.

இந்த விசாரணையின் போது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தனது வங்கி உத்திரவாத தொகையை மருத்துவ கவுன்சில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதைத் தவிர தாம் வேறு எந்த அனுகூலத்தையும் கோரப் போவதில்லை என பிரசாத் அறக்கட்டளை தெரிவித்திருந்தது. அறக்கட்டளையின் உயர்நீதிமன்ற ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல்களை நடத்த உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த இடைக்கால அனுமதியைத் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 4, 2017 அறக்கட்டளை சார்பாக புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவிப்பு வெளியிடுகிறார்.

நீதிபதி நாராயன் சுக்லா

செப்டம்பர் 18, 2017  (செப்டம்பர் 21, 2017 -ல் உத்தரவு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது) : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய பென்ச், 2017 – 18 கல்வியாண்டிற்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க மறுத்து உத்தரவிடுகிறது. எனினும் இதே உத்தரவில், பிரசாத் அறக்கட்டளை வழங்கியிருந்த வங்கி உத்திரவாத தொகையை மருத்துவ கவுன்சில் எடுக்க கூடாது என்றும் தெரிவித்தது.

மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் தனது ஆய்வுக் குழுவை மீண்டும் குலோக்கல் கல்லூரிக்கு அனுப்பி 2018 – 19 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடுகிறது. மத்திய அரசு ஏற்கனவே வழங்கிய தடை 2017 – 18 மற்றும் 2018 – 19 ஆகிய கல்வியாண்டுகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய குற்றப் புலனாய்வுத் துறை குதூசி, யாதவ் மற்றும் அகர்வாலா உள்ளிட்டவர்கள் மேல் மூத்த நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததற்கு இரண்டு நாள் கழித்து, செப்டம்பர் 18 -ம் தேதி வழங்கிய உத்தரவு உச்சநீதிமன்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. குதூசி உள்ளிட்டவர்களை சி.பி.ஐ கைது செய்ததோடு மேலும் இரண்டு நீதிபதிகளான நாராயண் சுக்லா மற்றும் விரேந்திரா குமார் ஆகியோருக்கு இவ்விவகாரத்தில் உள்ள தொடர்புகளையும் விசாரிக்கத் துவங்கியது. அதைத் தொடர்ந்து நடந்த சோதனைகளில் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தையும் முக்கியமான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களையும் கைப்பற்றுகிறது சி.பி.ஐ.

*****

தொலைபேசி உரையாடல்களில் இருப்பது என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே செப்டம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் நடந்த உரையாடல்கள் சி.பி.ஐ வசமுள்ளது. இந்த உரையாடல்களின் மூலம் அறக்கட்டளையின் இடைத்தரகர் யாதவ் நீதிபதிகள் குதூசி மற்றும் அகர்வாலா ஆகியோருடன் கல்லூரியின் அங்கீகாரத்தை மீட்பதற்காக லஞ்ச பேரத்தில் ஈடுபட்டதும் கல்லூரி வழங்கியிருந்த 2 கோடிக்கான வங்கி உத்திரவாத பத்திரத்தை மருத்துவ கவுன்சில் எடுப்பதைத் தடுப்பது தொடர்பாகவும் பேசியது தெளிவாகத் தெரிகிறது.

செப்டம்பர் 3 -ம் தேதி விஸ்வநாத் அகர்வாலா மற்றும் குதூசி ஆகியோரிடையே நடந்த உரையாடல் கீழே தரப்பட்டுள்ளது :

அகர்வாலா : ஆமாம் என்று நினைக்கிறேன். எந்தக் கோவிலாம்? அலகாபாத் கோவிலா, தில்லி கோவிலா?

குதூசி : இல்லை இல்லை.. கோவிலுக்கு என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் இப்போது முடிவு செய்யப்பட வேண்டும்.

அகர்வாலா : ஆமாம் ஆமாம்.. இப்போது நீங்கள் பேசலாம், அவர் செய்வார். அதைப் பற்றி நானும் அங்கே பேசி விட்டேன்.

குதூசி : அவரும் உறுதியாகச் சொல்லி விட்டாரா ?

அகர்வாலா : ஆமாம் ஆமாம். இதுல ஒரு விசயம் பாருங்க… நம்ம தலைவர் நம்மாளுதான். இதெல்லாம் 100 சதவீதம் நம்ம தலைவரின் மூலமே நடக்கிறது. என்ன பிரச்சினை வந்துவிடும்? சொல்லுங்க?

*****

செப்டம்பர் 3 -ம் தேதி நடந்ததாகச் சொல்லப்படும் இந்த உரையாடலுக்குப் பின் செப்டம்பர் 4 -ம் தேதி அறக்கட்டளை சார்பாக மனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மனுவின் மேல் உச்சநீதிமன்ற பெஞ்ச் அரசியல் சட்டப் பிரிவு 32 -ன் கீழ் உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறது.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

நீதிமன்றத்தில் இருந்து சாதகமான உத்தரவைப் பெற்றுத் தருவதற்குப் பொறுப்பானவராக குறிப்பிடப்படும் பெயரற்ற நபரை “தலைவர்” (Captain) என்று உரையாடல்களில் குறிப்பிடுகிறார்கள். “டீக்கடைக்காரனின் அரசாங்கம் எல்லோரையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. அது தான் பிரச்சினையே” நீதிபதிகள் குதூசி மற்றும் விஸ்வநாத் அகர்வாலா ஆகியோர் இடையே செப்டெம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் நடந்த தொலைபேசி உரையாடல்களின் மூலம் அவர்கள் அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைப் பற்றியும், யாதவிடம் அதிகப் பணத்திற்கு பேரம் பேசுவது பற்றியும் பேசியது தெரிகிறது.

லஞ்சம் கொடுப்பவர்களும் வாங்க முயற்சித்தவர்களும் “டீக்கடைக்காரனின் அரசாங்கம்” “எல்லோரையும் கவனித்துக் கொண்டிருப்பது ஒரு பிரச்சினை” என்பதால் அச்சமடைந்திருந்தனர் என்பதும் தெரிய வருகிறது.

யாதவ் : அண்ணே, அன்றைக்கு நான் ஏன் உச்சநீதிமன்றத்திற்கு சென்றேன் என்றால், அந்த சமயத்தில் பணம் மாட்டிக் கொண்டிருந்தது. நான் அதைப் பற்றி தெளிவாக சொல்லி விட்டேன். அதனால் தான் அங்கே சென்றேன். அங்கே அவர்கள் ஒரு உத்தரவைக் கொடுத்தார்கள். இங்கே வந்த பின் அவர்கள் அதை தள்ளுபடி செய்து விட்டார்கள். அவர்கள் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்யச் சொல்லி விட்டார்கள். சட்டப்பிரிவு 32ன் கீழ் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் ஒரு தேதி குறிப்பிட்டிருந்தது. அவர்கள் அதை (தேதியை) 11 -ம் தேதியாக தள்ளி வைத்து விட்டனர். அந்த தவறுக்கு பரிகாரமாக நாளைக்கு உங்களுக்கான சீட்டை கொடுத்து விடுகிறோம். உங்களிடம் கொடுக்கிறோம் விஸ்வநாத்ஜி.. இப்போ எங்க வேலையை மட்டும் முடித்துக் கொடுத்து விடுங்கள்.

விஸ்வநாத் அகர்வாலா : வேலையைப் பொறுத்தவரை 100 சதவீதம் இல்லை, 500 சதவீதம் முடிவது உறுதி. ஆனால், பெட்டி அதற்கு முன்பே கொடுக்கப்பட்டு விட வேண்டும். ஏனென்றால், நடந்து கொண்டிருக்கும் டீக்கடைக்காரனின் அரசாங்கம் எல்லாரையும் கவனித்துக் கொண்டிருக்கிறது.. இது ஒரு பிரச்சினை.

யாதவ் : அவர் என்னைச் சந்திக்கும் படி செய்ய மாட்டேன். நானும் அவரை நேரில் பார்க்கத் தேவையில்லை.

அகர்வாலா : சந்திப்புக்காக இல்லை.. அவர் வீட்டுக்குப் போய்விடுவார்; அவர்கள் கவனிப்பதாக இவர் நம்பவில்லை அதே போல் அவர்கள் பார்க்கும் எல்லாவற்றையும் நம்பிவிடுவார்கள் என்றும் இவர் கருதவில்லை. வேலையைப் பொறுத்தவரை முன்பே பேசியபடி 100 சதவீதம் முடிந்து விடும். அதற்குத் தான் நான் அவசர அவசரமாக அங்கே போய்விட்டு வருகிறேன்.

யாதவ் : இல்லை… பரவாயில்லை. சார், உங்கள் சீட்டை அனுப்பி வைக்கிறோம் அகர்வால்ஜி. நாளைக்கு நீங்கள் வாருங்கள்.. இல்லையென்றால் நாளைக்கு நீங்கள் எங்களிடம் சொல்லுங்கள்.

யாதவ் : அட… எனக்கு முதலில் உத்திரவாதம் வேண்டும். எல்லோரும் பைத்தியக்காரப் பசங்க. அதனால.. முதலில் நமக்கு நீதிபதியோடு நல்ல உறவு இருக்க வேண்டும். அப்போது தான் நீதிபதியின் வார்த்தைக்கு நாம் மதிப்புக் கொடுப்போம்.

அகர்வாலா : இல்லை.. நான்(நாங்கள்) உறுதியளிக்கிறேன். அப்படியில்லை என்றால் நான் சொல்லவே மாட்டேன். ஏன்னா நாங்க இந்த வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது (உறுதி) வியாபாரத்தில் ரொம்ப முக்கியம். மருத்துவத் துறை ஆட்கள் தேவை தான்… அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், அங்கே இருப்பவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கவில்லை என்றால் ஒரு வேலையும் நடக்காது.

யாதவ் : பிரசாதம் தேவை தான். நாங்கள் பிரசாதம் கொடுத்து விடுகிறோம். கொடுக்கத் தானே வேண்டும்.

அகர்வாலா : வேலை 100 சதவீதம் நடந்து விடும். ஆனால், நான் நாளைக்கோ நாளை மறுநாளோ பேச மாட்டேன். நீங்க பெட்டிய தயாராக வைத்துக் கொள்ளுங்கள். கொடுத்த உடனே வேலையை 100 சதவீதம் முடித்துக் கொடுத்து விடுகிறோம்.

*****

நீதிபதிகள் விஸ்வநாத் அகர்வாலாவுக்கும் குதூசிக்கும் இடையே நடந்த உரையாடல்

குதூசி : அவர்கள் மனுவைத் தாக்கல் செய்து விட்டதாக சொன்னார்கள். திங்கள் கிழமை என இன்றைக்கு தேதி சொல்லி விட்டார்கள். எப்போது, எப்படி எவ்வளவு என்பதை அவர்கள் கேட்கிறார்கள். இரண்டாவது., தங்களோட வேலை எப்படி கட்டாயம் நடக்கும் என்பதையும் கேட்கிறார்கள்.

அகர்வாலா : யார், மருத்துவ ஆட்களா?

குதூசி : ஆமாம் ஆமாம்.

அகர்வாலா : சரி அப்படி என்றால் திங்கட் கிழமைக்கு தேதி குறிக்கப்பட்டுள்ளதா?
அகர்வாலா : அப்படியென்றால் அது பரிசீலனை தானே?

குதூசி : இல்லை.. அது சட்டப்பிரிவு 32 -ன் கீழான மனு.

அகர்வாலா : ஆமாமா…. இப்போதைக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அவர்கள் விசயத்தைக் கொடுத்து விட்டால் வேலையை 100 சதவீதம் முடித்து விடலாம்.

குதூசி : இல்லை.. பணம் அங்கே இருக்கிறது என்று அவர் சொன்னார். யாராவது அந்த வீட்டுக்குள்ளே போய் பேசனும்.

அகர்வாலா : அது சரி தான்.. ஆனால், அவர் நம்மை நம்பாமல் இருப்பது சரியில்லையே.

குதூசி : இல்லை அவர்கள் நம்மை நம்புகிறார்கள். ஆனால், விசயம் மூன்றாவது நபரின் கையில் இருந்தால் எப்படி முடிக்க முடியும் எனக் கேட்கிறார்கள். நம்முடைய வேலையை அவர்கள் முடிக்கவில்லை என்றால், நமது நிலைமை மோசமாகி விடும் என்று சொல்கிறார்கள்.

அகர்வாலா : இல்லை, வேலை முடிந்து விடும். இல்லையென்றால் நாம் ஏன் நெருப்புக்குள் குதிக்க வேண்டும்? அவர்களிடம் வேலை 100 சதவீதம் முடிந்து விடும் என்று சொல்லுங்கள்.

குதூசி : சரி, இந்த விசயத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்.. ஹா ஹா

அகர்வாலா : சரி.. வேலை 100 சதவீதம் முடித்துக் கொடுக்கப்படும். நாங்கள் அங்கே பேசினோம் என்பதால் தான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இல்லையென்றால் இதையெல்லாம் சொல்ல மாட்டோமே.

இவர்கள் இருவரும் செப்டம்பர் 4 -ம் தேதிக்குப் பின் வரும் திங்கட்கிழமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் (அதாவது செப்டம்பர் 11). அன்றைக்குத் தான் அறக்கட்டளை வழக்கு பட்டிலிடப்பட்டது. செப்டம்பர் 11 -ம் தேதியன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் வழக்கு விசாரணையை செப்டம்பர் 18 -ம் தேதிக்கு ஒத்தி வைத்து அன்றைக்கே (18 -ம் தேதி) இறுதி தீர்ப்பையும் வழங்கினார்.

லஞ்சப் பணத்திற்கான கடுமையான பேரம் :

இந்த உரையாடல் நெடுக குற்றம்சாட்டப்பட்ட மூவரும் கைமாறப் போகும் தொகைக்கான பேரத்தை நடத்துகின்றனர். உதாரணமாக, யாதவ், விஸ்வநாத் அகர்வாலா மற்றும் குதூசி ஆகியோரிடையே நடந்த இந்த உரையாடலில், “நீதிபதிக்கு” எப்படி பணம் அனுப்ப வேண்டும், எங்கே செலுத்த வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். பணத்தைப் பற்றிப் பேசும் போது அதை (பணத்தை) புத்தகம், சட்டி மற்றும் பிரசாதம் போன்ற குறியீட்டு வார்த்தைகளில் சுட்டிப் பேசுகின்றனர்.

யாதவ் : என்ன தர வேண்டும் என்று சொல்லுங்கள். என்னிடம் ஒரு கல்லூரி உள்ளது, மற்றவர்களை நம்ப முடியாது.

அகர்வாலா : ஒன்றுக்கு முடித்து விடலாம்.

யாதவ் : நான் என்ன கொடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். எங்களிடம் அதிகம் இல்லை. தலைவர் இருந்தால் அவரிடம் எங்களைப் பேச வையுங்கள். நான் தலைவரிடம் பேசிக் கொள்கிறேன்.

அகர்வாலா : ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் வேலையை முடித்துக் கொடுக்கிறேன்.

*****

கீழே உள்ளது அகர்வாலாவுக்கும் குதூசிக்கும் இடையேயான உரையாடல்

அகர்வாலா : இல்லை.. அவர் ஒன்று என சொல்லி இருக்கிறார். நானும் ஒன்றுக்குத் தான் பேசினேன். அவர் மூன்று என்றார். அதில் இரண்டரை அங்கே கொடுக்க வேண்டும் என்றும், ஐம்பதை நாம் வைத்துக் கொள்ளவும் சொன்னார்.

குதூசி : எவ்வளது முன்பணமாக கொடுக்க வேண்டும்?

அகர்வாலா : இப்போதைக்கு முன்பணம்…. மறுபரிசீலனை மனு தக்கல் செய்யும் போது மற்றது.. மறுபரிசீலனை அனுமதிக்கப்பட்டால் உங்களுக்கே கூட தெரியும்… அப்போது…

குதூசி : அப்படியென்றால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். அவரது மனு திங்கட் கிழமைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதை மூன்று நான்கு நாட்கள் தள்ளிப் போடுங்கள்.

அகர்வாலா : நாம் சில ஆட்களை அனுப்பி வைப்போம். மூன்று நான்கு நாட்கள் என்றால்…. நீங்கள் இரண்டு ஆட்களைத் தாருங்கள் நாம் மூன்று நான்கு நாட்களுக்குத் தள்ளி வைப்போம்.

அகர்வாலா : திங்கட் கிழமை நாம் முடிவு செய்து விடலாம். அவர்கள் பெட்டியைக் கொடுத்து விடுவார்கள்.. இரண்டோ இரண்டரையோ இருக்கும்.. ஒன்றும் பிரச்சினை இல்லை, ஏதாவது உத்தரவு கிடைத்து விடும். அதனால் எனக்கோ உங்களுக்கோ பிரச்சினை வராது. ஏனென்றால் அங்கே சங்கம் பேசிக் கொள்ளும். நாம் தலையிட வேண்டாம்.. இல்லையென்றால் பிரச்சினையில் சிக்கிக் கொள்வோம். நம்மால் வேலையை முடிக்க முடியவில்லை என்றால் பெட்டியைத் திருப்பிக் கொடுத்து விடுவோம். வேலை நடக்காமல் இருக்க வாய்ப்பில்லை. அங்கே நாம் தெளிவாக பேசி விட்டோம், அது (மனு) அனுமதிக்கப்பட்டு விடும்.

குதூசி : இங்கே அவர்களிடம் பேசி விடுங்கள்.

அகர்வாலா : தெளிவாக பேசி விட்டோம். மூன்றுக்கு கணக்குப் போட்டிருக்கிறோம். மூன்றுக்கு கீழே செய்து கொடுக்க மாட்டார்.

*****

கீழே உள்ளது யாதவுக்கும் அகர்வாலாவுக்கும் இடையேயான உரையாடல்

யாதவ் : ஹலோ

அகர்வாலா : நாம் கடந்த முறையே பேசினோம் அல்லவா. ஒன்று எனப் பேசினோம், அவர்கள் மூன்று கேட்கிறார்கள். மொத்தமாக மூன்று கொடுத்தால் மனுப் போட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நான் அவரிடம் சொன்ன போது அவர் ஐந்து கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் அப்போது 15 செங்கல்களை கேட்டுக் கொண்டிருந்தார்கள் – போன முறை பேசிய போது கூட அதையே தான் சொன்னார்கள்.

யாதவ் : அப்படியென்றால் மொத்த தொகையும் முன்பணத்திற்கே சரியாகி விடும்.

அகர்வாலா : சார், நான் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் இதில் 100 சதவீத உத்திரவாதம் இருக்கிறது. அப்படி இப்படியென்று எந்த உழப்பலும் இல்லை. வேலை முடிந்த பின் ஐயா 10 – 15 மாதங்கள் இருப்பார். அப்போது நீங்கள் 14 – 15 வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள்; அப்போது நீங்களே நம்புவீர்கள். அவர் 101 சதவீதம் செய்து விடுவார்.
யாதவ் : சரி, எப்போது கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.

அகர்வாலா : 11 -ம் தேதி அல்லவா.. எனவே எங்களுக்கு 6 அல்லது 7 -ம் தேதி கிடைக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் உங்கள் வேலை 11 -ம் தேதி முடிக்கப்பட்டு விடும்.

யாதவ் : இரண்டரைக்கு முடித்துக் கொடுங்கள் பாஸ்… அது தான் என்னால் முடிந்த தொகை (Capacity)

அகர்வாலா : சார்… நான் பொய் சொல்லவில்லை. முதலில் 18 -க்கு 5 என இருந்தது. அப்புறம் நாங்கள் பேசினோம். இப்போது 15 -க்கு 3 என்று வந்துள்ளது. பின்னர் இன்னும் நாலு வரும் என நாங்கள் அவரைச் சமாளித்துள்ளோம்.

யாதவ் : சரி கவனிங்க. இப்போதைக்கு 2 வாங்கிக் கொள்ளுங்கள். எங்களுக்கு உத்தரவு கிடைத்து மாணவர் சேர்க்கை துவங்கிய பின்னர் 1 கோடியை நீதிபதிக்குக் கொடுத்து விடுகிறோம். உங்கள் இடத்திலோ, குதூசி சாரின் இடத்திலோ.. இந்த மாதிரி செய்வோம்.

அகர்வாலா : சார், நான் பேசி விட்டு காலையில் உறுதிபடுத்துகிறேன்.

சிபிஐ வசமுள்ள உரையாடல்களின் படி பேரம் நடந்ததும் வழக்கின் தீர்ப்பு குறித்து பேசப்பட்டதும் தெரிகிறது. ஆனால், திட்டம் வெற்றியடைந்ததா என்பதும் அதன் (லஞ்சம் கொடுக்கும் திட்டத்தின்) பாதிப்பு என்னவென்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், என்ன தெளிவாகத் தெரிகிறது என்றால் – வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரசாத் கல்வி அறக்கட்டளை பலனடைந்துள்ளது.

சிபிஐ விசாரணையின் முதற்கட்ட அறிக்கை :

அலகாபாத் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் “சட்டவிரோதமான வெகுமதிகளைப்” பெற்றார் என சி.பி.ஐ தெளிவாக குற்றம் சாட்டுகிறது.

கடந்த 2017 -ம் ஆண்டு செப்டம்பர் 8 -ம் தேதி சிபிஐ பதிவு செய்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில் (இதன் ஒரு பகுதி தி வயர் இணையப் பத்திரிகையிடம் உள்ளது) அலகாபாத் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் குதூசியிடம் இருந்து “சட்டவிரோதமாக வெகுமானம்” பெற்றார் என்று குறிப்பிட்டுள்ளது.

“சாட்சி ஒருவர் வழங்கிய தகவலின் படி திரு ஐ.எம் குதூசி அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வைச் சேர்ந்த மேதகு நீதியரசர் நாராயண் சுக்லா அவர்களை இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும் என அணுகியுள்ளார். சாட்சி மேலும் தெரிவித்த தகவலின் படி, திரு ஐ.எம் குதூசியும் திரு பி.பி யாதவும் நீதியரசர் திரு நாராயண் சுக்லா அவர்களை 25.08.2017 அன்று காலையில் லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இது தொடர்பாக சட்டவிரோத வெகுமானங்களை (illegal gratification) வழங்கியுள்ளனர்” என்கிற சி.பி.ஐயின் முதற்கட்ட விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் முதற்கட்ட அறிக்கையில் இருந்து, “சாட்சி மேலும் சொன்ன தகவல்களின் படி 25.08.2017 அன்று பிரசாத் அறக்கட்டளை தாக்கல் செய்த மனு ஒன்றின் மேல் தலைமை நீதிபதி திரு நாராயண் சுக்லா அடங்கிய அமர்வு (அமர்வு எண் 19870) உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறது. மேலும், மனுதாரரின் கல்லூரி நேர்காணலுக்கென்று குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளின் பட்டியலில் இருந்து வழக்கின் மறுவிசாரணை நடக்கும் நாள் வரை (அதாவது 31.8.2017) நீக்கப்படாது என்று மேற்படி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுவிசாரணை நாள் வரை வங்கி பிணைத்தொகை உத்திரவாதத்தை காசாக மாற்றக் கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது”

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், உயர்நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை உச்சநீதிமன்றம் அகஸ்ட் 29 -ம் தேதி தள்ளுபடி செய்ததை அடுத்து தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு குதூசியின் மூலம் நீதிபதி சுக்லாவுக்கு அழுத்தம் கொடுத்துளார் யாதவ்.

சி.பி.ஐ விசாரணை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது ; “சாட்சி அளித்த கூடுதல் தகவலின் படி முன்பு சொன்ன நிகழ்வுகளுக்குப் பின் (அதாவது உயர்நீதிமன்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டபின்) திரு ஐ.எம் குதூசியையும் திருமதி பாவனா பாண்டேவையும் நீதியரசர் திரு நாராயண் சுக்லாவிடம் கொடுக்கப்பட்ட தனது பணத்தை திரும்ப வாங்கித் தரும்படி அழுத்தம் கொடுத்துள்ளார் திரு பி.பி யாதவ். மேலும் திரு குதூசி நீதியரசர் திரு நாராயண் சுக்லாவை தொடர்பு கொண்டு அவருக்கு அளிக்கப்பட்ட லஞ்சத் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறு கோரியுள்ளார் என நமது சாட்சி தெரிவிக்கிறார். மேலும், திரு ஐ.எம் குதூசியிடம் முன்பு பெற்றுக் கொண்ட லஞ்சப் பணத்தில் ஒரு பகுதியை உடனடியாக திரும்பக் கொடுத்து விடுவதாக நீதியரசர் திரு நாராயண் சுக்லா தெரிவித்துள்ளார்”

உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான வழக்கை நடத்த சி.பி.ஐ. -க்கு அனுமதி மறுக்கிறார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.

சிபிஐ தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை கடந்தாண்டு செப்டம்பர் 8 -ம் தேதி தாக்கல் செய்ததாக ‘தி வயர்’ பத்திரிகைக்கு கிடைத்த தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த விசாரணை அறிக்கையுடன் உரையாடல் விவரங்களையும் பிற ஆவணங்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் செப்டெம்பர் 6 -ம் தேதி சமர்பித்த சிபிஐ, நீதியரசர் சுக்லாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதி கோரியுள்ளது.

எனினும், சி.பிஐக்கு முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதி மறுத்ததன் மூலம் அதற்கு மறுநாள் (அதாவது செப்டம்பர் 7 -ம் தேதி) தான் வாங்கிய லஞ்சப் பணத்தைத் திரும்பக் கொடுத்த நீதியரசர் சுக்லா கையும் களவுமாக கைது செய்யப்படுவதை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தடுத்துள்ளார்.

நீதியரசர் சுக்லாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்த மறுப்பை எழுத்துப் பூர்வமாக சிபிஐ -யின் சட்ட அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாக ‘தி வயர்’ பத்திரிகைக்குக் தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையே வேறு மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான இதே போன்ற பிற வழக்குகளில் தான் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் நீதியரசர் சுக்லாவின் மேல் துறைவாரியான விசாரணை ஒன்றுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், இதுவரை பிரசாத் கல்வி அறக்கட்டளை வழக்கு தொடர்பாக அவர் மேல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

நீதியரசர் சுக்லா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சிபிஐ கோரியது தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இருந்தோ அல்லது அவரது அலுவலகத்தில் இருந்தோ ஏதேனும் விளக்கங்கள் அளிக்கப்பட்டால் அதை தி வயர் இந்தக் கட்டுரையில் சேர்த்துக் கொள்ளும்.

சி.பி.ஐ -யின் முதற்கட்ட விசாரணை அறிக்கை முழுவதுமே “சாட்சி” தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலானதா அல்லது முழுமையான விசாரணையின் அடிப்படையிலானதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், நீதிமன்றத்தில் தமக்குச் சாதகமான உத்தரவைப் பெற குலோக்கல் மருத்துவக் கல்லூரி முறைகேடான வழிகளில் முயற்சித்துள்ளது என்பது மட்டும் தெளிவாக உள்ளது.

கடந்த 2017 -ம் ஆண்டு நவம்பர் மாதம், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியால் உருவாக்கப்பட்ட நீதிபதிகள் அமர்வு ஒன்று அதற்கு முந்தைய தினம் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஜே. செலமேஷ்வர் மற்றும் எஸ். அப்துல் நசீர் ஆகியோர் மருத்துவக் கல்லூரி லஞ்ச ஊழல் வழக்கில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் இருந்து தலைமை நீதிபதியை விலக்கி அளித்த உத்தரவை செல்லாதவை என அறிவித்ததை அடுத்து நீதிமன்றத்தில் சூடான விவாதங்கள் நடந்ததைப் பார்த்தோம்.

மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் தாக்கல் செய்த வழக்கில் அது வரை முன்னுதாரணம் இல்லாத தீர்ப்பு ஒன்றை வழங்கியது செலமேஷ்வர் மற்றும் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு. அதாவது, பிரசாத் கல்வி அறக்கட்டளை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் பங்கேற்று இருந்த காரணத்தால், தான் சம்பந்தப்பட்ட வழக்கில் அவரே நீதிபதியாக இருக்க முடியாது என இத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊழலை விசாரிக்க நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார் வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால். இடைத்தரகருக்கும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் அரசின் உயர் பொறுப்புகளில் இருந்த சிலருக்கும் இடையே நடந்த உரையாடல் விவரம் சிபிஐ -யின் முதல் தகவல் அறிக்கையில் வெளியானதைத் தொடர்ந்தே இந்த வழக்கைத் தாக்கல் செய்தார் காமினி ஜெய்ஸ்வால்.

எனினும், எந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உண்டு என தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட அமர்வு தெரிவித்திருந்தது, அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையானது. தற்போது நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமது பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமை நீதிபதியின் கீழ் உச்சநீதிமன்றம் செயல்படும் விதம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் நிலையில் சிபிஐ வசமிருந்த உரையாடல் விவரங்கள் கசிந்திருப்பது மேலும் விவாதங்களைத் தூண்டிவிட்டுள்ளது.

மொழியாக்கம் : சாக்கியன்

நன்றி : ‘தி வயர்’ (மூலக்கட்டுரை – By )

 

கும்பமேளாவுக்கு ஆயிரம் கோடி ! ஹஜ் பயண மானியம் ரத்து !!

8

ஜ் பயண மானியத்தை இந்த ஆண்டு முதல் இரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது மோடி அரசு. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இந்த அறிவிப்பை கடந்த ஜனவரி 16 அன்று வெளியிட்டார்.

மேலும், இந்தத் தொகையை சிறுபான்மையினரின் கல்விக்காக, குறிப்பாக பெண்களின் கல்விக்காக மோடி அரசு செலவளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மோடி அரசு இந்த நடவடிக்கையின் மூலம், சிறுபான்மையினரை ஆற்றுப்படுத்தும் வேலைகளில் இறங்காமல், அவர்களின் கவுரவமான வாழ்வுக்கு வழிவகை செய்து கொடுத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு ஹஜ் மானியத்தை 2022-ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைத்து மொத்தமாக நீக்கிவிட வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நக்வி கூறியுள்ளார்.

முசுலீம்களை ஆற்றுப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுவதாக சொல்லப்படும் ஹஜ் மானியத்தின் உண்மையான இலட்சணம் என்ன?

இந்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற உத்தரவைக் காரணமாக வைத்துக் கொண்டு, ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தொகையை படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக் கொண்டே வருகிறது. கடந்த 2012-2013 ஆம் நிதியாண்டு சுமார் 837 கோடியாக இருந்த மானியத் தொகை, அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே ரூ.680, ரூ.577, ரூ.530 கோடியாக குறைக்கப்பட்டு கடைசியாக கடந்த 2016-2017-ம் நிதியாண்டு ரூ.450 கோடியாக சுருக்கப்பட்டுவிட்டது.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1,36,000 பேர் ஹஜ் பயணம் சென்றிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால், ஒரு நபருக்கு சுமார் ரூ.34,000 – ரூ. 35,000 வரை மட்டுமே மானியத்தொகையாகக் கொடுக்கிறது இந்திய அரசு. ஹஜ் பயணம் செய்ய விரும்புவோர் முதலில் ஹஜ் கமிட்டியில் தனது பெயரை பதிவு செய்துவிட்டு, ரூ.2,19,000-ஐ அங்கு செலுத்த வேண்டும். இத்தொகையுடன் மானியத் தொகையும் சேர்க்கப்பட்டு அவர்களது பயணத்திற்கும், தங்குமிடத்திற்கும் ஏற்பாடு செய்துதரப்படும். இதுதான் ஹஜ் பயணத்திற்கான நடைமுறை.

இந்தியா முழுவதும் பெரும்பான்மை ஹஜ் பயண நிலையங்களில் இருந்து ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு, அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தையே ஏற்பாடு செய்கிறது ஹஜ் கமிட்டி. புனிதப் பயணக் காலகட்டங்களில் அதிகமான மக்கள் பயணம் செய்வதால், வானூர்தி பயணச்சீட்டின் விலை மிக அதிகமாகவே இருக்கும். இச்சூழலில் ஹஜ் பயணிகள் கொடுக்கும் தொகையான ரூ.2,19,000-இன் பெரும்பங்கும் அரசு கொடுத்துவரும் மானியத் தொகையும், ஏர் இந்தியா நிறுவனத்தின் வழியாக மீண்டும் அரசாங்கத்தின் கல்லாவிற்கே போய்ச் சேருகிறது.

ஒருவேளை ஒரு ஹஜ் பயணி, அரசின் இந்த ‘மானியத்தின்’ வழியாக சில மாதங்களுக்கு முன்னாலேயே விமானத்தில் முன் பதிவு செய்தால், ஹஜ் கமிட்டியிடம் அவர்கள் செலுத்தும் தொகையை விட குறைவான செலவிலேயே பயணம் மேற்கொண்டுவிடலாம். ஆகவே இதுவரை முசுலீம்களுக்கு இந்திய அரசு வழங்கி வந்த ’மானியம்’ என்பது வெறும் வெளித்தோற்றமே.

எனவே, இதற்கு முன்னால் ஹஜ் புனிதப் பயணத்திற்கான மானியம் என்ற பெயரில் வீழ்ந்து கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வாழ வைத்தது இந்திய அரசு. இந்த மானிய இரத்து அறிவிப்பின் காரணமாக, இனி ஹஜ் பயணத்தின் மூலம், ஏர் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிதி நிறுத்தப்படும். ஏர் இந்தியாவை நட்டக் கணக்கு காட்டி அடிமாட்டு விலைக்கு அதனை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் மத்திய மோடி அரசிற்கு அது பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான்.

ஆனால், சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் பெயரளவிலான மானியங்களையும் அவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக அள்ளி வீசப்படும் சில்லறைகளாக சித்தரிக்கின்றன, இந்துத்துவக் கும்பல்களும், அவற்றிற்கு சொம்பு தூக்கும் ஊடகங்களும். உண்மையில் மத்திய, மாநில அரசுகள் பார்ப்பனக் கும்பலின் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு பணத்தை வாரி இறைக்கின்றன. உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கப்படும் வரிப்பணத்தில்தான் கும்பமேளாக்களுக்கு மானியப் பிச்சைகள் வழங்கப்படுகின்றன.

அலகாபாத் கும்பமேளாவிற்கு மட்டும் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு சுமார் ரூ.1150 கோடி செலவிட்டுள்ளது. நாசிக் கும்பமேளாவிற்கு மராட்டிய அரசு ரூ.2,500 கோடி செலவிட்டுள்ளது. இமயமலையிலிருந்து திபெத்திற்குச் செல்லும் ’கைலாஸ் மானசரோவர் யாத்திரைக்கு’ம் பெரும் தொகையை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு செலவளிக்கிறது. இந்த யாத்திரைக்கு தனது மாநிலத்தில்; இருந்து செல்லும் நபர்களுக்கு ரூ.50,000-ஐ  அள்ளி வழங்கியது அன்றைய உத்திரபிரதேசத்தின் அகிலேஷ் யாதவ் அரசு. அதனைத் தொடர்ந்து வந்த யோகி ஆதித்தியநாத்தின் அரசு அதனை ரூ.1,00,000-ஆக உயர்த்தியுள்ளது.

அதே போல லடாக்கில் சிந்து தரிசனத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு தலா ரூ,10,000 மானியம் தந்தது ஆதித்யநாத் அரசு. இதே போல சட்டீஸ்கர், டெல்லி, குஜராத், கர்நாடகா, உத்தரகாண்ட், மத்திய பிரதேஷ் போன்ற மாநிலங்களும், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு தங்கள் மாநிலத்தில் இருந்து செல்பவர்களுக்கு மானியங்கள் அளித்து வருகின்றன.

மேலும் ஒவ்வொரு ஆண்டும், அமர்நாத் யாத்திரைக்கும், நவராத்திரி மற்றும் விநாயகர் சதுர்த்தியின் போது நாசமாக்கப்படும் நீர்நிலைகளை சீர் செய்வதற்கு மத்திய அரசால் செலவளிக்கப்படும் தொகை ஏராளம். ஆந்திரா, ஹரியானா, உத்திரகாண்ட் என ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலம் தழுவிய இந்துப் பண்டிகைகளுக்கு செலவிடும் தொகையும், புதியதாக கோவில்கள் கட்டவும், பழைய கோவில்களை சீர் செய்யவும் செலவிடும் தொகை ஏராளம்.

உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை உறிஞ்சி, பார்ப்பனப் பண்டிகைகளுக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மான்யம் இல்லையாம். ஆனால் ஹஜ்ஜிற்கு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும் தொகை மட்டும் மானியமாம். இப்போது அதை இரத்து செய்திருக்கிறதாம் இந்த அரசு. இதற்குப் பெயர் தான் ’இந்து’ய அரசு.

நம்மைப் பொறுத்த வரை ஒரு மதச்சார்பற்ற அரசு எப்படி செயல்பட வேண்டும்? அரசின் சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளில் மதங்களுக்கும், அவற்றின் பண்டிகைகளுக்கும் எந்த தொடர்பும இருக்க கூடாது. ஹஜ் யாத்திரைக்கும் மட்டுமல்ல, பல்வேறு பார்ப்பன பண்டிகைகளுக்கும் கொடுக்கப்படும் மானியங்களை ரத்து செய்ய வேண்டும். எந்த ஒரு மத பண்டிகைக்கும் அரசு எந்தச் செலவையும் செய்யக் கூடாது.

அதை விடுத்து ஹஜ் யாத்திரை மானியத்திற்கு நாமம், சபரி மலை, கும்பமேளா யாத்திரை, திருப்பதி யாத்திரைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு என்பது இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறவிக்கும் பாசிச நடவடிக்கையே என்றி வேறு அல்ல!

மேலும் :
Centre Cancels Haj Subsidy. But Who Was It Really For, Anyway?

 

குலைக்கும் எச்ச ராஜா ! கருத்துப்படம்

6

ஆண்டாள் அரசியல்


எப்ப பாரு… கொலச்சிகிட்டே இருக்கியே ஒரு நாளு… கையில சிக்காமலா போயிடுவ …

படம் : வேலன்

இணையுங்கள்:

 

ஜிக்னேஷ் மேவானியை ஆதரிப்போம் – அர்னாப்பின் ரிபப்ளிக் டிவியை விரட்டுவோம் !

5

 

சென்னையில் கடந்த 17-01-2018 அன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், குஜராத் சட்டமன்ற உறுப்பினரும், இளம் தலித் போராளியுமான ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த ஆங்கில ஊடகங்களில் அர்னாப் கோஷ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு மட்டும் பேட்டியளிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிற பத்திரிக்கையாளர்கள், சக ஊடகவியலாளரை (ரிபப்ளிக் டிவி செய்தியாளர்) ஜிக்னேஷ் மேவானி புறக்கணித்ததைக் கண்டித்து அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணிப்பதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஜிக்னேஷ் மேவானி வெளியேறினார்.

தங்களை நடுநிலையாளர்களாகவும், ஜனநாயகவாதிகளாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளும் சில பத்திரிக்கையாளர்கள் இந்த புறக்கணிப்பை ஆதரித்து எழுதியிருக்கின்றனர். இதை பத்திரிக்கையாளர்களின் ஒற்றுமை என உச்சி முகர்கின்றனர்.

ஹிட்லரின் கோயாபல்சை ஒரு ஊடகம் என ஆதரிப்பவர்கள் மட்டுமே அர்னாப்பின் ரிபப்ளிக் டிவியை ஆதரிக்க முடியும். இதில் பத்திரிகையாளர் ஒற்றுமை எங்கே வந்தது. சொல்லப்போனால் பத்திரிகையளார்களை பிரித்து ஆதாயம் அடையும் இந்துத்துவாவின் சதியே அரங்கேறியிருக்கிறது.

இதை புரிந்து கொண்டு பத்திரிகையாளர்களின் புறக்கணிப்பை கண்டிக்கும் பதிவுகளை இங்கே தொகுத்து வெளியிடுகிறோம். இவற்றில் பல பத்திரிகையாளர்களின் கருத்துக்கள் என்பது நமக்கு உற்சாகமளிப்பவை.

******

Rajathi Salma

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பிற்காக ஜிக்னேஷ் மேவானி அறைக்குள் நுழைந்த போது நானும் அங்கே இருந்தேன். ரிபப்ளிக் இடம் பேச இயலாது மற்றவர்கள் மட்டும் கேள்வி கேளுங்கள் என்றார் . அதற்கு தம்பி சபீர் அதெல்லாம் இயலாது என்று பத்திரிகையாளர்களது ஒற்றுமை உரிமை என்று சொல்ல ஜிக்னேஷ் வேறொரு அறைக்குள் சென்று விட்டார்.

தன்னை எந்த நேரமும் படு மோசமாக வன்மமாக சித்தரிக்கும் ஒரு ஊடகத்தை புறக்கணிப்பதில் உள்ள நியாயம் எனக்குப்புரிந்தது.
ஆனால் ஆப்டர் ஆல் எம் எல் ஏ வுக்கு இவ்வளவு அகங்காரமா ஜெயலலிதாவோ கலைஞரோ இந்த மாதிரி சொன்னதில்லை என்று சொல்லி வாதாடினார்கள்.

ஒரு தனி மனிதனாக எந்த ஊடகத்தோடு பேச வேண்டும் என்கிற உரிமை ஜிக்னேசிற்கு உண்டு தன்னை தொடச்சியாக டார்கெட் செய்கிற அசிங்கம் பிடித்த ஒரு ஊடகத்திடம் அவர் பேச மறுப்பதில் என்ன தவறு?
ஜெயல்லிதாவிடம் பிரஸ் மீட் கேட்கவே தைரியம் இல்லாத ஊடகங்கள் விசயகாந்திடம் காறி உமிழும்போது அமைதிகாத்த ஊடகங்கள் எச் ராஜாவினால் ஒரு பத்திரிகையாளர் தேசதுரோகி ஆக அடையாளம் காட்டப்பட்ட போது அமைதி காத்த ஊடகங்கள்
இன்று பத்திரிகையாளர்களது ஒற்றுமை என்கிற வித்த்தில் நேற்று நடந்து கொண்டது வேடிக்கையின்உச்சம்.

ஜிக்னேசைப்போல கலைஞரையோ்ஜெயல்லிதாவையோ ஒரு முறை அசிங்கப்படுத்தி விட முடியுமா ரீப ப்ளிக்கோ அர்னாப்போ?
இந்த கேள்விகள் கடும் வாக்குவாதமாக எனக்கும் சபீருக்கு இடையில் பத்து நிமிட நேரம் அந்த இடத்தில் நடந்து கொண்டிருந்த போது ஊடக கேமராக்கள் அவற்றை பதிவு செய்து கொண்டிருந்ததை இறுதியாகத்தான் கவனித்தேன். அது ஊடக தர்மமா என்ன?

காட்ட வேண்டிய இடத்தில் காட்டாமல் காட்ட முடிகிற இடத்தில் காட்டுவது நிச்சயமாக சுதந்திரம் கிடையாது.

ஜிகரனேசிற்கு ரிப ப்ளிக் செய்வதைப்போல இங்குள்ள ஏதேனும் ஒரு அரசியல் தலைவரை செய்து பார்த்து விட்டு பிறகு வாருங்கள் பார்ப்போம். உங்கள் தைரியத்தை.

இறுதியாக ஒன்று ஜிக்னேஷ் மோடியைப்போல காலி பெருங்காய டப்பா கிடையாது ஊடகங்கள் வீழ்த்திவிட.

******

Kavitha Muralidharan

நேற்று ஜிக்னேஷ் மேவானி-பத்திரிக்கையாளர்கள் பிரச்னையில் இதுவரை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தாத நரேந்திர மோடியை எதிர்த்து இவர்கள் இப்படி செய்வார்களா என்று பல பதிவுகளை பார்த்தேன்.
மோடி வரையில் ஏன் போக வேண்டும்? எச்.ராஜாவுக்கு எதிராக என்ன செய்து கிழித்துவிட்டோம்?

அசௌகர்யமாக கேள்வி கேட்ட பல ஊடகவியலாளர்களை சமூக விரோதி என்று அந்த சந்திப்புகளின் போதே திட்டியிருக்கிறார் ராஜா. நாம் சும்மாதானே இருந்தோம்?

கடந்த வருடம் மார்ச் மாதம் தஞ்சாவூரில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிக்கையாளர் விவசாய நெருக்கடி பற்றி ராஜாவிடம் கேள்வி எழுப்பினார். அவரை தேசத் துரோகி, மோடி எதிரி என்று வசை பாடியதோடு “எவ்வளவு வரி கட்டியிருக்கிறீர்கள், அதை திருப்பித் தந்து விடுகிறேன்” என்று மிரட்டினார் ராஜா. அதன் பிறகு தமிழக ஊடக சூழலில் ஒரு சிறு அதிர்வு கூட ஏற்படவில்லை.

தஞ்சாவூரில் (அநேகமாக) ஒரு தமிழ் பத்திரிக்கையாளருக்கு அவமானம் நேர்ந்தால் அது எச்.ராஜாவின் சுதந்திரம். சென்னையில் தன்னை வன்மத்தோடு தொடர்ந்து வரும் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி தரமாட்டேன் என்று சொன்னால் அது ஜிக்னேஷ் மேவானியின் திமிர். எவ்வளவு மேட்டிமைத்தனம் நம்மிடம்?

நம் அதிகாரம், சுதந்திரம் எல்லாம் ஜிக்னேஷ் மேவானியை மட்டுமே புறக்கணிக்க உதவும். எச்.ராஜாவின் நிழலை கூட தொடாது.

******

Arul Ezhilan

ஊடக உலகின் குப்பை வண்டி.. #Republic_TV

சில இடதுசாரி சிந்தனையாளர்களும்,சில ஊடகவியலாளர்களிடம் ஜிக்னேஷ் மேவானி தொடர்பாக ஒரு நடுக்கம் காணப்படுகிறது.
எங்கே இதை கண்டிக்கா விட்டால் ….ஊடகங்களை, ஊடகவியலாளர்களை பகைத்துக் கொண்டால் நம்மை தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைக்காமல் விட்டு விடுவார்களோ என்ற பதட்டம். அந்த பதட்டத்தில் ரிபப்ளிக் சானலை புறக்கணித்த ஜிக்னேஷ் மேவானிக்கு அட்வைஸ் அளிக்கும் நோக்கில் வழக்கமான தங்கள் இட்லி, வடாம் தோசை மாவை அட்வைஸுகளாக ஊற்றத் தொடங்கி விட்டார்கள்.
ஜிக்னேஷ் மேவானி புறக்கணித்தது ஒரு கலாச்சார பாசிச ஊடகத்தை, அது தலித் மக்களை,பெண்களை, கம்யூனிஸ்டுகளை, முற்போக்காளர்களை, இடது ஆதரவாளர்களை தொடர்ந்து கருத்தியல் படுகொலை செய்து வந்ததது, தொலைக்காட்சி விவாதங்கள் நாய் குரைக்கும் விவாதங்களைப் போல உருமாற்றம் அடைந்தது அர்னாப் என்ற ஆஃபாயிலிடம் இருந்து உருவான மரபுதான்.

நாய்க்கு ரேபிஸ் இருக்கிறது என்று தெரிந்த பிறகு அருகில் செல்வது சரியல்ல. அதனிடம் கடிபட்டால் நாமும் நாய் மாதிரி குரைத்தே சாக வேண்டியிருக்கும். இதை புரிந்து கொண்ட ஜிக்னேஷ் மேவானி ரேபிஸ் வைரஸான ரிபப்ளிக் சானல் இருந்தால் நான் பேச மாட்டேன் என்றிருக்கிறார். தமிழகத்தில் வைத்து ரிபப்ளிக் சானலுக்கு சரியான உதை கொடுத்திருக்கிறார். இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்.

வேண்டாம் என்று சொல்லி பழக்கமில்லாத நமக்கு ஒருவர் வேண்டாம் என்று சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ரிபப்ளிக் சானலை வேண்டாம் என்று சொனன் அந்த புறக்கணிப்பை நாம் கொண்டாடி தீர்த்திருக்க வேண்டும். மிகச்சிறந்த அரசியல் கலகம் அது. காரணம் ரிபப்ளிக் ஒரு சானலே அல்ல…
அது, இந்திய ஊடக உலகின்… இந்துத்துவ கலாச்சார பாசிசத்தின் ஒரு நேரடியான குப்பை வண்டிதான் ரிபப்ளிக் அதை எந்த வடிவத்திலும் நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடக நண்பர்கள் நமக்கிருக்கும் முற்போக்கான அடையாளங்களை தொலைத்து விடக்கூடாது…!

******

Mathava Raj

இன்று ஜிக்னேஷ் மேவானி ரிபப்ளிக் டிவியை வெளியேறச் சொல்லியதும், மற்ற ஊடகங்களும் வெளியேறி இருக்கின்றன.

இவர்களின் ஊடக தர்மம், அறம் சர்ந்தது. இல்லை என்பது தெரியும். ஆனால் தொழில் சார்ந்து கூட இல்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

காவிக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷும் ஒரு பத்திரிகையாளர்தான். அந்தக் கொலையை ரிபப்ளிக் டிவி எப்படி சித்தரித்தது என்பதை நாடே பார்த்தது. அதனைக் கண்டித்து ரிபப்ளிக் டிவியில் பணிபுரிந்த இளம் பெண் ஊடகவியலாளர் சுமந்தா நந்தி கோபம் கொண்டு அந்த நிறுவனத்தை விட்டு மனசாட்சியுடன் வெளியேறினார், எந்த ஊடகமும் குரல் கொடுக்கவில்லை. தார்மீக கோபத்தை வெளிப்படுத்தவில்லை,

அதிகாரத்தின் குரலுக்கு அடங்கிப் போகிறவர்கள், உண்மையை உரக்க பேச முடியாதவர்கள், மக்களின் நாயகன் ஜிக்னேஷ் மேவானியை புறக்கணித்தது அவர்களின் அடிமைத்தனத்தையே காட்டுகிறது.

சென்ற வருடம் ஜே.என்.யூ போராட்டத்தின் போது செய்தியாக்க வந்த ரிபப்ளிக் டிவி குழுவினரை மாணவர் தலைவர் ஷீலா ரஷித் வெளியேறுங்கள் என்று சொன்னபோது, அதனை முற்போக்காளர்களும், நல்ல சிந்தனையாளர்களும் கொண்டாடினர்.

இன்றும் கொண்டாடுவோம் ஜிக்னேஷ் மேவானி உடன் இருந்து!

******

Arul Ezhilan

இந்துத்துவ எதிர்ப்பு பழைய அணுகல் முறையை கைவிடுவோம்..!

ஊடக எதிர்ப்பு என்ற ஒன்றையும் உங்கள் அரசியல் பண்பாக்கிக் கொள்ளுங்கள்.காரணம் சரி பாதி ஊடகங்களுக்கு காவி பெயிண்ட் அடித்து விட்டார்கள். அவர்களை நீங்கள் குண்டு மணி அளவுக்குக் கூட பயன்படுத்திக் கொள்ள முடியாது.ஆனால் உங்களை அவர்களின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.இந்துத்துவத்தை எதிர்க்க 20 ஆண்டுகள் பழைய அணுகல் முறைகளை குறைத்துக் கொண்டு மேவானி உருவாக்கியுள்ள புதிய அணுகுமுறைக்கும்.உங்களை பழக்கிக் கொள்ளுங்கள்

******

Vijayasankar Ramachandran

எதிர்வினையாற்றுபவர்களை எதிரிகளாக்காதீர்கள்

இரு வாரங்களுக்கு முன் டெல்லி பிரஸ் கிளப்பிற்கு எங்களுடைய டெல்லி சகாக்களுடன் சென்றிருந்தேன். மேவானியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்த பிறகு கூட பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சி கேமராக்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். பிரஸ் கிளப்பிற்குள் இருக்கும் அறைக்கு அவர் சென்றபோதும் விடவில்லை. எல்லா கேமராக்களும் மேவானியை நோக்கியிருக்க அங்கு ஏதோ ஒரு கலவரச் சூழல் நிலவுவது போல் காட்டும் நோக்கில் ரிபப்ளிக் டிவி கேமரா மட்டும் கூட்டத்தை நோக்கியே இருந்தது. அப்போதே எங்கள் குழுவின் இளம் பத்திரிக்கையாளர் இதை எனக்குச் சுட்டிக் காட்டினார். அந்த நேரத்தில் தோழர் த ஜீவலட்சுமி ரிபப்ளிக் டிவியில் அந்த நிகழ்வினைத் தவறாக சித்தரிக்கும் முயற்சி நடப்பதாக முகநூலில் தெரிவித்தார்.
அது மட்டுமல்ல. ரிபப்ளிக் டிவி மேலும் இரண்டு பொய்களை பரப்பிக் கொண்டிருந்தது.
1. காங்கிரஸ் காரர் ஒருவர்தான் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார் என்று சொல்லி அந்த நேரத்தில் அங்கு வந்திருந்த காங்கிரஸ் பிரமுகரை ரிபப்ளிக் டிவி கேமராமேன் துரத்திச் செல்வது போன்ற காட்சியைக் காட்டியது. இது தவறான தகவல் என பிறகு நிரூபிக்கப்பட்டது. அதற்கான இணைப்பை கமெண்டில் தருகிறேன்.
2. மேவானியின் கூட வந்திருந்த ‘குண்டர்கள்’ ரிபப்ளிக் டிவி பெண் நிருபரைச் சீண்டியதாகக் கூறி கூட்டத்தில் இருந்த சிலரை வட்டமிட்டுக் காட்டியிருந்தது.அதில் ஒருவர் ஏபிபி செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிக்கையாளர். அந்நிறுவனம் மேதகு அர்னாபிடம் புகார் செய்தது. ரிபப்ளிக் டிவி பகிரங்க மன்னிப்புக் கேட்டது.

பிரஸ் கிளப்பிற்கு வெளியிலும் தேவைக்கு அதிகமாக போலீஸ் படை குவிக்கப் பட்டிருந்தது. வேண்டுமென்றே போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. ஒரு கட்டத்தில் பிரஸ் கிளப்பிற்குள்ளும் போலீஸ் வந்தது. மான ரோஷம் நிறைந்த பிரஸ் கிளப் செயலாளர் இங்கு உறுப்பினர்கள் மட்டுமே வரலாம். வெளியேறுங்கள் என்று ஆக்ரோஷமாகச் சொன்னார். சிறிது நேரம் அவருடன் காரசாரமாகப் பேசிய போலீசார் கோபமாக வெளியேறினர்.
இதற்கிடையில் அமைதியாக பத்திரிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் மேவானி. நானும் அவருடன் சில நிமிடங்கள் பேசினேன்.

நியாயம்மாரே எதிர்வினையாற்றுபவர்களை எதிரிகளாக்காதீர்கள்.

******

Arul Ezhilan

அந்த ரிபப்ளிக் ஊழியர் வெறும் ஊதியம் பெறும் ஊழியர் மட்டுமே தானா?

ஜிக்னேஷின் பத்திரிகைச் சந்திப்பில் எந்த ஊடகம் கலந்துக் கொள்ளக் கூடாது என்பதை முடிவு செய்யும் உரிமை ஜிக்னேஷ் மேவானியின் தனி நபர் சுதந்திரம் தொடர்பானது. அவர்தான் ரிபப்ளிக் சானலுக்கு நோ சொல்லியிருக்கிறார். அது ரிபப்ளிக் சானலின் ஊழியர்களுக்கு எதிரானது அல்ல ஒரு பாசிச குப்பைத் தொட்டிக்கு எதிரான மிகச்சிறந்த எதிர்ப்பு நடவடிக்கை.

சரி ரிபப்ளிக் ஊழியருக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவே வைத்துக் கொள்வோம். இந்த மாதிரி சம்பளம் பெறும் நபர்கள்தானே அணு உலை போராளி உதயகுமார் வீட்டில் போய் கேமிரா வைத்தார்கள். ரிபப்ளிக் சானலின் அடியாட்களைப் போல தொழிற்படும் இந்த நபர்கள் வெறும் அப்பாவி பத்திரிகையாளர்களா?

ஒரு வேளை ரிபப்ளிக் சானலை அவர் அனுமதித்திருந்தார். இந்த சந்திப்புக்கு வந்த அந்த அப்பாவி ஊடகவியலாளர் மேவானியின் சந்திப்பு தொடர்பாக நேர்மையான செய்தி தொகுப்பை வழங்கியிருப்பாரா? அப்படியே வழங்கினாலும் அதை ரிபப்ளிக் சானல்தான் வெளியிட்டிருக்குமா?

ஊடக நிறுவனங்களில் ஊதியத்திற்கு பயிற்று விக்கப்படும் மூளை சுதந்திரமாக செயல்படுமா? செயல்பட முடியுமா?

எச்.ராஜாவின் நிழலைக் கூட நெருங்க முடியாதவர்கள், இந்துத்துவ கும்பலின் டிபன் பாக்ஸ் குண்டுகளுக்கு அஞ்சி நடுங்குகிறவர்கள். எத்தனையோ ஊடகவியலாளர்கள் ஜெயலலிதாவின் அநாகரீக தாக்குதலுக்கு உள்ளான போது அதை மவுனமாக சகித்துக் கொண்டவர்கள் ஜிக்னேஷ் மேவானிக்கு எதிர்ப்பை பதிவு செய்கிறேன் என்று பேசுவது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது?

******

இர.இரா. தமிழ்க்கனல்

நெறிப்படி செயல்படாத ஊடகத்தைக் கண்டிக்கத் துப்பில்லாமல், அதைப் புறக்கணிக்கும் மக்கள்தலைவரது முடிவை விமர்சிக்க எந்த ஊடகத்தவனு/ளுக்கும் அருகதை இல்லை! …………. எம்மைப் போன்ற ஊடகத்தவரையும் சேர்த்து, ‘மேவானி புறக்கணிப்பு’ என மோசடி செய்வதைக் காறி உமிழ்கிறேன்.

******

Shehla_Rashid

We respect journalists. We let them into our homes. We take their calls even at midnight. That’s because there are ground rules. You can’t demand all these privileges while disrespecting all ethics of journalism. If you work only for TRP, expect to be treated as salesmen.

******

Mahalingam Ponnusamy‏ @mahajournalist

சன் டிவி, தினகரன், நக்கீரன் நாட் அலோவ்டு. கெட்டவுட் அப்படீன்னு சொல்லும் போது ஏன் புறக்கணிக்கவில்லை?

******

noushad ksk‏ @noushadksk

மேவானி செய்தது வரவேற்கத்தக்கது. ஆட்சியாளர்களுக்கு ஊதுகுழலாய் இருப்பதல்ல ஜனநாயகத்தின் 4 வது தூணான ஊடகங்களின் பணி. மேவானியை புறக்கணித்த பத்திரிக்கையாளர்கள் ஊடகங்களை விபச்சாரிகள் என்று சொன்ன பாஜக தலைவர்களை என்றைக்காவது புறக்கணித்ததுண்டா..?

******

Kural

ஜிக்னேஷ் மேவானி -ரிபப்ளிக் டி.வி: நெறிபிறழ் இதழியலை நிராகரிப்போம் -பத்திரிகையாளர்களின் குரல்!

ஜிக்னேஷ் மேவானி- ரிபப்ளிக் டி.வி. பிரச்னை, அதைத் தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர்களின் எதிர்ப்பு, இதைத் தொடர்ந்து வரும் எதிர்வினைகள்… என கடந்த ஓரிரு நாட்களாக பத்திரிகையாளர்களை முன்வைத்து தமிழ் சமூக ஊடக வெளியில் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு வகையில் இது நன்மைகே. இதுவரை பேசாப்பொருளாக இருக்கும் ஊடக ஜனநாயகத்தின் உள்ளடக்கம் குறித்து பேசுவதற்கு இது ஒரு பொருத்தமான தருணம். பத்திரிகையாளர்களின் உரிமை என்பது எது, செய்தியாளர்கள் ஒற்றுமை என்பது என்ன… என்பது போன்ற அடிப்படையான அம்சங்களை பேசுவதற்கு இது ஒரு நல்வாய்ப்பு.

ஜிக்னேஷின் எதிர்ப்பு தனிப்பட்ட பகையால் வருவதல்ல. அதேபோல ரிபப்ளிக் டி.வி.யின் வன்மமும் தனிப்பட்ட பகை அல்ல. ரிபப்ளிக் டி.வி. நேரடியாக மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கை பரப்பும் குரலாக இருக்கிறது. அதனாலேயே பல சதிவேலைகள், பொய் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அது ஒரு தரப்பில் தெளிவாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. அதேபோல, அதன் எதிர்தரப்பாக, இந்துத்துவ கும்பலின் பாசிஸ செயல்பாடுகளை துல்லியமாக அம்பலப்படுத்தும் நபராக மேவானி இருக்கிறார். மேவானி என்ற தனிநபரை அவர்கள் எதிர்க்கவில்லை. மேவானி முன்வைக்கும் அரசியலைதான் எதிர்க்கிறார்கள். அதுவும் பிரதமர் மோடியின் பெருமைக்குரிய குஜராத்தில் இருந்து துணிச்சலாக கிளம்பியிருக்கிறது மேவானியின் குரல். இந்த அடிப்படை வேறுபாட்டை பத்திரிகையாளர்கள் புரிந்துகொள்ளாமல் கருத்து சுதந்திரம், பத்திரிகையாளர்களின் உரிமை என பேசுவது அபத்தம்; திசைதிருப்பும் முயற்சி.

ஜிக்னேஷ் மேவானி, ரிபப்ளிக் டி.வி.யின் மைக்கைதான் எடுக்கச் சொல்கிறார். அந்தத் தொலைக்காட்சியின் செய்தியாளரை வெளியேறச் சொல்லவில்லை. ‘ரிபப்ளிக் டி.வி. மைக்கை எடுங்கள்’ என்று சொல்வது ரிபப்ளிக் டி.வி.க்கு எதிரானதே தவிர, அந்த தொலைக்காட்சியின் செய்தியாளருக்கு எதிரானது அல்ல. இது ஒரு எளிய புரிதல். ஆனால் அதை எதிர்த்த செய்தியாளர்களுக்கும், அதை அங்கீகரிக்கும்; வழிமொழியும் மற்றவர்களுக்கும் இது புரியவில்லை. அவர்கள், இதை செய்தியாளருக்கு நேர்ந்த அவமானமாகப் பார்க்கிறார்கள். ஒருவேளை அவர் மட்டும் வெளியேற நேர்ந்தால், அவர் தனித்து விடப்பட்டதாக உணர்வாரோ என அச்சம் கொள்கின்றனர். சக பத்திரிகையாளர் மீதான இந்த நேசம் புரிந்துகொள்ளக்கூடியது என்றாலும் இந்த இடத்தில் பொருத்தமற்றது.

நெடுவாசல் அல்லது கதிராமங்கலம் போராட்ட களத்துக்கு உள்ளூர் தாசில்தார் போகிறார் எனக்கொள்வோம். மக்கள், அவரை ஊருக்குள் நுழையவிடாமல் வெளியேறச் சொல்கின்றனர் என்றால், அவர்களுக்கு தாசில்தார் மீது தனிப்பட்ட பகை என்று பொருள் அல்ல. அது அரசின் மீதான கோபம். அதை அரசின் பிரதிநிதி மீது காட்டுகின்றனர். ரிபப்ளிக் டி.வி.யின் மைக்கை வெளியே எடுங்கள் என்றால், அது அந்த தொலைக்காட்சியின் மீதான கோபம். இதை இந்தக் கோணத்தில் புரிந்துகொள்ள நாம் தவறுவது ஏன்?

பத்திரிகையாளர்கள் பல சந்தர்ப்பங்களில், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கும், நிலைபாடுகளுக்கும் பொறுப்பேற்று பதில் சொல்லும் நிலை உருவாகிறது. ஒரு கட்சி உறுப்பினர் தன் கட்சியின் தவறுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று பதில் சொல்லலாம். அதன் கொள்கையை ஏற்றவர் என்ற அடிப்படையில் அது அவருடைய கடமை. ஆனால், ஒரு நிறுவனத்தின் ஊழியரை அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்கச் சொல்ல முடியுமா?

முடியாது என பொதுவில் சொல்லலாம். ஆனால் அது நிபந்தனைக்குட்பட்டது. ஏனெனில் பத்திரிகையாளர் என்பவர் வெறும் அஃறிணைப் பொருட்களை உற்பத்தி செய்யவில்லை. அவர் கருத்துக்களை, கண்ணோட்டங்களை, செய்திகளின் மூலம் தருகிறார். ஒரு பத்திரிகையாளரின் செய்தியை வைத்து இத்தகைய வலதுசாரி ஊடக நிறுவனங்கள் மதவெறியை தூண்டி விடுகிறது என்றால் அதற்கு நிறுவனம் முதன்மையான பொறுப்பு என்றாலும், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் தனது கைகளை வெறுமனே கழுவிக் கொள்ள முடியுமா? சொல்லப் போனால் ஒரு ஊடகவியலாளரின் அறத்திற்கான போராட்டம் இங்கேதான் விதை கொள்கிறது.

ஊடக நெறி என்பதை காலில் போடும் செருப்பாக மதிப்பவரும், இந்திய ஊடகத் தரத்தை சீரழிக்கும் ஊடக மாஃபியாவாக வலம் வரும் அர்னாப்கோஸ்வாமியையும், அவருடைய ரிபப்ளிக் டி.வி.யையும் ஏன் செய்தியாளர்கள் தாங்கிப் பிடிக்க வேண்டும்? சொல்லப்போனால் அந்த அர்னாப்பின் ஊடக அவதாரத்தை கலைப்பதல்லவா நமது கடமை? இனி, இத்தகைய நெறிபிறழ் இதழியலுக்கு துணைபோகாமல் நிராகரிக்கும்படி கோருகிறோம்; விமர்சிக்குமாறு வேண்டுகிறோம். அப்படி நிராகரிப்பதும், விமர்சிப்பதும் நமது கடமை. இதழியல் துறையை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்ய வேண்டிய அடிப்படை பணி.

இது பத்திரிகையாளர் ஒற்றுமை என்பது இன்னொரு அபத்தமான வாதம். பத்திரிகையாளர்களின் சுதந்திரத்துக்கு ஜிக்னேஷ் மேவானி எந்த கேடும் விளைவித்துவிடவில்லை. இது ரிபப்ளிக் டி.வி.க்கு ஆதரவான ஒற்றுமை என்பதே சரியானது. ’சிறுமை கண்டு பொங்குவோம்’ என்றால், அப்படி பொங்குவதற்கு உரிய சந்தர்ப்பங்களை வரலாறு நெடுக ஜெயலலிதா வழங்கிக்கொண்டே இருந்தார். ஹெச்.ராஜா வரை அந்த லெகசி தொடர்கிறது. இதற்கு எதிராக இதுவரை பத்திரிகையாளர் ஒற்றுமை ஏற்பட்டது இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்வோம். அது ஏன் ஏற்படவில்லை என்பதை பரிசீலிப்போம்.

ஊடக நிறுவனங்களின் சுதந்திரம் என்பது அவற்றின் வர்த்தகத்திற்கு கட்டுப்பட்ட விசயம். ஊடகவியலாளர்களின் சுதந்திரம் என்பது அவர்களின் மக்கள் சார்பில் இருந்து வருவது. இந்தியாவில் சுதந்திர ஊடகங்கள் இல்லை என்ற பிரச்சினை இந்திய ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக இல்லை என்பதிலிருந்தே வெடிக்க வேண்டும். சுதந்திரம் என்பது யாரோ ஒரு சூப்பர்மேன் தடைகளை தாண்டிவந்து தருவது அல்ல. அது தன்மானம், சுயமரியாதை, மக்கள் நலனிலிருந்து முகிழ்ந்து வரும் உரிமைக்கான போராட்டம்.

ஒக்கி புயலின் போது குமரி மீனவர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனிடம், அவர் கூறிய விவரங்கள் தவறானவை என்று ஒரு மீனவ இளைஞர் தைரியமாகக் கேட்கிறார். பத்திரிகையாளர்களாகிய நாமோ ஒக்கி புயல் குறித்து அரசு தரும் புள்ளி விவரங்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் தொகுத்து தரும் பணியை மட்டும் செய்கிறோம். மனசாட்சியுள்ள ஊடகவியலாளர்கள் அவர்களது ஃபேஸ்புக் பக்கங்களில் மட்டும் ஒக்கியின் உண்மைகளை முன்வைக்கின்றனர். இந்த உண்மை வலிமையாய் நமது ஊடகப் பணிகளில் இடம்பெற வேண்டாமா?

இவையெல்லாம் சாத்தியமா? ஜனநாயகத்தின் பெயரால் நமக்கு மறுக்கப்படும் ஊடக ஜனநாயகத்தை மீட்க முடியுமா? தொடர்ந்து பேசுவோம். நம்மிடமிருந்து மறைந்து போன அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இதழியல் அறத்தை தேடி எடுப்போம்.

– குரல்
Journo’s voice for the masses
For contact: journosvoice@gmail.com

ஒக்கி பேரிடர் : ஜனவரி 21 ஞாயிறு நாகர்கோவிலில் கருத்தரங்கம் – அனைவரும் வருக !

0

ஒக்கிப்புயல் பேரிடர்: மீனவர்கள் – விவசாயிகள் வாழ்வுரிமை கருத்தரங்கம்

நாள் : 21.01.2018, ஞாயிறு
இடம் : ஈடன் ஹால், கேசரி தெரு, (டெரிக் சந்திப்பில் இருந்து வாட்டர் டேங்க் செல்லும் சாலை) நாகர்கோவில்.

தலைமை:

தோழர் சிவராஜ பூபதி, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், நாகர்கோவில்

விளக்கவுரை:

  • திரு த.மனோதங்கராஜ், திமுக (சட்டமன்ற உறுப்பினர், பத்மநாபபுரம்)
  • திரு A.வின்ஸ் ஆன்றோ குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர்
  • திரு N.சுவாமிநாதன் ஊடகவியலாளர், தி இந்து தமிழ்

சிறப்புரை:

  • தோழர் காளியப்பன், மாநில பொருளாளர் மக்கள் அதிகாரம்

திரையிடல் :

  • கண்ணீர்க் கடல் – ஆவணப்படம் மற்றும் நேருரைகள்

***

  • வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களை நம் கடலில் மீன்பிடிக்க அனுமதிக்காதே!
  • இந்தியக் கடலோரங்களை கார்ப்பரேட்களின் கொள்ளைக்காக மீனவர்களிடமிருந்து பறிக்காதே!
  • விசைப்படகுகளுக்கு சேட்டிலைட் போன் வசதியை உடனே வழங்கு!
  • கடற்கரை, கடலோரக் காவற்படை, தேசியப் பேரிடர் மீட்புப் படையில் மீனவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பினை வழங்கு!
  • குமரியில் வானிலை ஆராய்ச்சி மையத்தின் கிளையையும், ஹெலிபேடையும் அமைத்துக் கொடு!
  • புயல் எச்சரிக்கை, மீட்புப் பணிகளை செய்யத் தவறிய அதிகாரிகளை விசாரணைக் கமிசன் அமைத்துத் தண்டி!

உழைக்கும் மக்களே!

  • நம்மைக் காக்க வக்கற்ற அரசின் பல்வேறு துறைகளையும் நம்பிக் கெட்டது போதும்!
  • அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!
    படுகொலைகளுக்கு முடிவு கட்டுவோம்!
    வாழ்வுரிமையைத் தக்க வைப்போம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்.
நாகர்கோவில் – நெல்லை மண்டலம்

தொடர்புக்கு – 75989 87316.

 

அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு : பல்லிளிக்கிறது பார்ப்பன சதி !

0

2ஜி வழக்கில் ‘தாழ்த்தப்பட்ட’ ஆ.ராசாவையும், ‘சூத்திர’ கனிமொழியையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பா.ஜ.க.வின் தலையில் இடியைப் போல இறங்கியிருக்கிறது. இந்தக் ‘குற்றத்திற்காக’ நீதிபதி சைனியை மட்டுமின்றி, அவ்வழக்கை நடத்திய சி.பி.ஐ., அரசு தரப்பு வழக்குரைஞர்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வருகிறது, பார்ப்பனக் கும்பல். இன்னொருபுறம், படித்த நடுத்தர வர்க்கம் என்று கூறப்படுகிற, ஆனால், எதையும் படிக்காத நடுத்தர வர்க்கத்தினர் இதனை விலைக்கு வாங்கப்பட்ட தீர்ப்பு எனக் கரைகண்டவர்கள் போலப் பேசிவருகிறார்கள்.

அலைக்கற்றை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள ஆ. ராசா, கனிமொழி

அலைக்கற்றை வழக்கு குறித்து சாமானிய மக்கள் அறியாத உண்மை என்ன தெரியுமா? அலைக்கற்றை விற்பனையால் நாட்டிற்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டதே, அக்குற்றச்சாட்டை மையப்படுத்தி இந்த வழக்கு நடைபெறவேயில்லை. சொல்லப்போனால், அரசு தரப்பு, தனது குற்றப் பத்திரிகையில் அமைச்சர் ஆ.ராசா மீது அந்தக் குற்றச்சாட்டை சுமத்தவேயில்லை. சி.பி.ஐ. தரப்பு முன்வைத்த முப்பதாயிரத்து சொச்சம் கோடி நட்டம் என்ற கண்டுபிடிப்பையும் நீதிமன்றம் குற்றச்சாட்டாகப் பதியவில்லை.

“யுனிடெக், ஸ்வான் டெலிகாம் ஆகிய இரு உப்புமா கம்பெனிகளுக்கு அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யும் தீய நோக்கத்தில், அந்த இரண்டு நிறுவனங்களோடு சேர்ந்து சதி செய்து, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் தேதியைத் தன்னிச்சையாக மாற்றினார். பிரதம மந்திரி, நிதியமைச்சர், சட்டத்துறை அமைச்சர், மைய அரசின் தலைமை வழக்குரைஞர் ஆகியோரையெல்லாம் ஏமாற்றிவிட்டு, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அந்நிறுவனங்களுக்குச் சாதகமாக வளைத்தார்.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன பிறகும் அலைக்கற்றை விலையை உயர்த்த மறுத்து, அந்த இரண்டு நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் அலைக்கற்றைகளைத் தூக்கிக் கொடுத்தார். பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியும் அலைக்கற்றைகளை ஏலத்தில் விட மறுத்தார். இதில் பலனடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுத்தது” என்பவைதான் ஆ.ராசா மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள்.

“இக்குற்றச்சாட்டுகள் எதற்கும் ஒரு ஆதாரம்கூடக் கிடைக்கவில்லை” எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி சைனி, குற்றமே நடக்கவில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.

“நுழைவுக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்ததாகக் கூறப்படுவதற்கு எந்தவிதமான எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும் இல்லை. மாறாக, நுழைவுக் கட்டணத்தை அதிகரிக்கத் தேவையில்லை எனத் துறைரீதியாக முடிவெடுத்ததற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.”

“விண்ணப்பத் தேதியை அக்.1, 2007 -லிருந்து செப்.25, 2007 -க்கு மாற்றியது ஆ.ராசா எடுத்த தன்னிச்சையான முடிவும் இல்லை. அம்முடிவில் எந்தச் சதியும் நடைபெறவில்லை. மாறாக, இந்த முடிவு தொலைத்தொடர்பு அதிகாரிகளோடு விவாதித்து எடுத்த முடிவாகும்.”

“2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தனது துறை செய்யப் போகும் மாற்றங்கள் குறித்த தகவல்களை 26.12.2007 அன்று பிரதம மந்திரி அலுவலகத்துக்கு எழுதிய கடிதத்தில் ஆ.ராசா குறிப்பிட்டிருக்கிறார். அக்கடிதத்தைப் பிரதமரின் முதன்மைச் செயலர் புலோக் சக்கரவர்த்தி படித்துவிட்டு, தொலைத்தொடர்புத் துறை செயலரிடம் பேசியிருக்கிறார்.”

அலைக்கற்றை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி..சைனி

“கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுத்தது தொடர்பான குற்றச்சாட்டுக்கு விசாரணை அதிகாரியின் வாய்வழி சாட்சியத்தைத் தவிர, வேறு எந்த ஆதாரத்தையும் தரவில்லை” எனத் தக்க ஆதாரங்களோடு அரசு தரப்பின் குற்றச்சாட்டுகளை ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கும் நீதிபதி சைனி, “இந்தக் குற்றப் பத்திரிகை ஜோடிக்கப்பட்ட ஒன்று” என்றும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

“ஒரு சில உண்மைகளைத் தந்திரமாகத் திரித்து, இனங்காணமுடியாதபடி அவற்றை இமாலய அளவுக்கு ஊதிப்பெருக்கி உருவாக்கப்பட்டதுதான் இந்த ஊழல் புகார்” எனக் குறிப்பிட்டு வழக்கின் அடிப்படையையே தகர்த்துவிட்டார் சைனி.

சாமானியர்களைப் போலவே நீதிபதி சைனியும் வழக்கின் தொடக்கத்தில் 1,76,000 கோடி ரூபாய் ஊழல் என்ற பொய்ப் பிரச்சாரத்திற்குப் பலியாகி இருந்தவர்தான். அதனாலேயே, பெண் என்பதால் கருணையெல்லாம் காட்ட முடியாது எனக் காட்டமாகக் கூறி, கனிமொழிக்குப் பிணை வழங்க மறுத்தார். மேலும், கடந்த ஆறு ஆண்டுகளாக ஆதாரங்களுக்காகக் காத்திருந்திருக்கிறார். சட்டப்படி செல்லத்தக்க ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்ற நிலையில்தான் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்திருக்கிறாரேயொழிய, அவர் நீதிபதி குமாரசாமியைப் போலக் குத்து மதிப்பாக இத்தீர்ப்பை எழுதவில்லை.

* * *

1,76,000 கோடி ரூபாய் ஊழல் என்ற கட்டுக்கதை வழக்கிற்குள் வராமலேயே அடிபட்டுப் போய்விட்டதால், பா.ஜ.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும்; சு.சாமி, பிரசாந்த் பூஷண் உள்ளிட்டவர்களும் சைனியின் தீர்ப்பை மறுப்பதற்கு விநோதமான காரணங்களை, குதர்க்கமான வாதங்களை, அவதூறுகளை ஜோடித்து வருகிறார்கள்.

ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் அதிபர்கள் ( மேலிருந்து – கடிகாரச் சுற்றுப்படி ) ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, சஞ்சய் சந்திரா மற்றும் கரீம் மொரானி.

2ஜி வழக்கிலிருந்து குற்றவாளிகள் விடுதலையாவதற்கு பா.ஜ.க.வினரே உள்ளடி வேலை செய்திருக்கிறார்கள் எனப் பரபரப்பாக பேட்டியளிக்கிறார், சு.சாமி.

சொராபுதீன் கொலை வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுதலை செய்த போது சி.பி.ஐ அமைப்பை நம்பிய குருமூர்த்தி, இப்பொழுது சி.பி.ஐ. அமைப்பை நம்ப முடியாது என அன்றே சோ சொல்லிவிட்டார் என நினைவூட்டுகிறார்.

குற்றப் பத்திரிகையில் அடிப்படை முகாந்திரம் இருப்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலே குற்றம் நிரூபிக்கப்பட்டதற்குச் சமம் என்று வாதிடுகிறது துக்ளக். இந்தக் குதர்க்க வாதப்படி எந்த குற்றவழக்கிலும் யாரையும் விடுதலை செய்யவே முடியாது, கூடாது.

உச்சநீதி மன்றம் 122 உரிமங்களை ரத்து செய்து தீர்ப்பளித்த வழக்கு சிவில் வழக்கு. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்ததோ கிரிமினல் வழக்கு. இரண்டும் அடிப்படையிலேயே வேறுபட்ட வழக்குகள் என்றபோதும், அந்த சிவில் வழக்கிலேயே குற்றம் நிரூபிக்கப்பட்டது போல பச்சைப் பொய்யைத் துணிந்து கூறிவருகிறது, பா.ஜ.க.

உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புதான் இறுதியானது என்றால், அந்நீதிமன்றம் ஆ.ராசா உள்ளிட்டவர்களை அப்பொழுதே ஏன் சிறைக்கு அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக நடந்துவந்த விசாரணையை ஏன் கண்காணித்து வந்தது? என்ற கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலில்லை.

ஜெயா – சசி கும்பலை விடுதலை செய்யும் உள்நோக்கத்தோடு நீதிபதி குமாரசாமி எழுதிய அடிமுட்டாள்தனமான தீர்ப்பைக் கேள்விக்குள்ளாக்காத இப்பார்ப்பனக் கும்பல், ராசா விடுதலை என்றவுடன், அடிப்படை அறிவுக்கும் நியாயத்துக்கும் பொருந்தாத கேள்விகளோடு வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதிக்கிறது.

* * *

1,76,000 கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் என்பது மாபெரும் கட்டுக்கதை மட்டுமல்ல. அது பல்வேறு நோக்கங்களைக் கொண்ட அரண்மனைச் சதி. பா.ஜ.க., அ.தி.மு.க., மத்திய தணிக்கைத் துறை, உச்சநீதி மன்றம், வட இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள், தமிழகத்துப் பார்ப்பன பத்திரிகைகள், அர்னாப் கோஸ்வாமி, பர்கா தத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், ஆசிர்வாதம் ஆச்சாரி, சுப்பிரமணிய சுவாமி, அன்னா ஹசாரே, ராம்தேவ், கிரண் பேடி ஆகிய பா.ஜ.க.வின் அடியாட்படை, ஏர்டெல், ஏர்செல், டாடா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் என ஒவ்வொருவரும் இந்தச் சதியில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக குறிப்பிட்ட பாத்திரத்தை ஏற்றுச் செயல்பட்டனர்.

1,76,000 கோடி ரூபாய் ஊழல் என ஊதிப் பெருக்கிய மத்திய கணக்காளர் விநோத் ராய்

தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இயக்குநராகக் கொண்ட விவேகானந்தா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் என்ற சிந்தனைக் குழாம் ஆர்.எஸ்.எஸ்.-இன் துணை அமைப்பு. இந்த சிந்தனைக் குழாமால் இயக்கப்பட்ட அன்னா ஹசாரேவை சோளக்கொல்லை பொம்மையாக முன்நிறுத்தி நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம், பா.ஜ.க.-வை ஆட்சியில் அமர்த்துவதை இலக்கு வைத்து நடத்தப்பட்டது.

ஏர்டெல், ஏர்செல் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் புதிதாக நுழைந்த ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஆகிய நிறுவனங்களை வீழ்த்த இந்தச் சதியைத் தீட்டி அரங்கேற்றின என்றால், பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க இந்தச் சதியைப் பயன்படுத்தியது. கைபேசி சேவையில் ஏகபோகக் கொள்ளை நடத்தி வந்த ஒரு கார்ட்டெல், இந்தத் துறையில் போட்டியை அறிமுகப்படுத்தியதால், தன்னைப் பழிவாங்கிவிட்டதாக ஆ.ராசா கூறியிருப்பதில் உண்மை இல்லாமலில்லை.

காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நடந்த இந்த அதிகாரப் போட்டியில் தி.மு.க.வும், ஆ.ராசாவும் பலிகிடா ஆக்கப்பட்டதை, அ.தி.மு.க. ஜெயாவும் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பலும் பயன்படுத்திக் கொண்டனர். கார்ப்பரேட் தொலைக்காட்சிகளும் தினமணி, துக்ளக், தந்தி டி.வி. உள்ளிட்ட ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவதாரமெடுத்தன. மத்திய தணிக்கைத் துறையும், உச்சநீதி மன்றமும் இந்தச் சதிக்கு ஒரு சட்டபூர்வத் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தன.

அடைமழை போல நாலாபுறமும் இருந்து பொழிந்த இந்த அவதூறு பிரச்சாரம் படித்தவன், படிக்காதவன் என்ற பேதமின்றி, பெரும்பாலான மக்களை மூளைச் சலவை செய்து இதனைப் பிரம்மாண்டமான ஊழலாக நம்ப வைத்தது. புதிய ஜனநாயகமும் தொடக்க காலத்தில் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தில் சிக்கிக் கொண்டது. எனினும், ஆ.ராசா பதவி விலகியதையடுத்து வெளியான ஆவணங்களின் அடிப்படையில் இதன் பின்னுள்ள கார்ப்பரேட்–பா.ஜ.க. கூட்டுச் சதியை பு.ஜ.-வில் அம்பலப்படுத்தத் தொடங்கினோம்.

கூட்டுச் சதி, அதிகார அத்துமீறல், பாரபட்சமான நீதி பரிபாலணம் என விதவிதமான அயோக்கியத்தனங்களை இந்த 2ஜி வழக்கு விசாரணை நெடுகிலும் காணமுடியும். 3ஜி அலைக்கற்றை விலையில் 2ஜி அலைக்கற்றைகளை விற்காததால், அரசிற்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் மத்திய கணக்காளராக இருந்த விநோத் ராயின் கண்டுபிடிப்பு. மேற்சொன்ன கார்ப்பரேட் – ஆர்.எஸ்.எஸ் கூட்டுச்சதி வலையின் முக்கியமான கையாள்தான் வினோத் ராய். அவருக்கு மோடி அரசில் கிடைத்த பரிசு, வங்கி சீர்திருத்த கமிட்டியில் பதவி.

இந்த நாடகத்தில் உச்ச நீதிமன்றத்தின் பாத்திரமும் மிக முக்கியமானது. ஆ.ராசாவிற்கு முன்பிருந்த அமைச்சர்களால் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட எந்தவொரு அலைக்கற்றை உரிமத்தையும் ரத்து செய்ய மறுத்தது, உச்சநீதி மன்றம்.

2ஜி அலைக்கற்றை விற்பனையில் சம்பந்தப்பட்டிருந்த மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மைய அரசின் தலைமை வழக்குரைஞர் வாகன்வாதி, ரத்தன் டாடா, அனில் அம்பானி ஆகிய மேட்டுக்குடி கனவான்களை அவ்வழக்கில் சேர்க்காமல் விடுவித்த உச்சநீதி மன்றம், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசாவை உள்நோக்கத்தோடு குற்றவாளியாக்கியது.

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஒரு தலைப்பட்சமாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி

2ஜி அலைக்கற்றை விற்பனையில் ஆ.ராசாவும் தி.மு.க.வும் புறங்கையை நக்கவேயில்லையா? எனக் கேள்வி எழுப்புகிறது பார்ப்பனக் கும்பல். ஆனால், இவர்களோ, 1,76,000 கோடி ரூபாய் ஊழல் என்ற கட்டுக்கதையைப் பயன்படுத்தி முழு தேனடையையும் அல்லவா விழுங்கி நிற்கிறார்கள். இந்து மதவெறி கொலைகாரனாக அம்பலமாகியிருந்த மோடி, ஊழல் எதிர்ப்புப் போராளியாகி பிரதமர் நாற்காலியைப் பிடித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் வசமாகச் சிக்கியிருந்த ஜெயா, 2ஜி ஊழல் என சவுண்டு விட்டு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியைக் குவித்தார். துக்ளக், தினமணி, தந்தி டி.வி. உள்ளிட்ட தமிழக ஊடகங்கள், 2 ஜி ஊழலைப் பெரிதுபடுத்தி, தமிழகத்தில் ஜெயா கும்பல் நடத்திவந்த கொள்ளையை இருட்டடிப்பு செய்தன.

ஊழல், கருப்புப் பணத்திற்கு எதிராக சவுண்டுவிட்ட பதஞ்சலி ராம்தேவ், ஒரே நாள் இரவில் மாபெரும் கார்ப்பரேட் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டினார். ஓய்வுபெற்று பொழுதுபோக்கிக் கொண்டிருந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி பாண்டிச்சேரி ஆளுநர் பதவியில் அமர்ந்துவிட்டார். ஆசிர்வாதம் ஆச்சாரியும், சுப்பிரமணிய சுவாமியும் பா.ஜ.க.வில் இணைந்துகொண்டனர். அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அர்னாப் கோஸ்வாமி புதிய செய்தி தொலைக்காட்சியைத் தொடங்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தார். இவையெல்லாம், கலைஞர் டி.வி. பெற்றதாகக் கூறப்பட்ட 200 கோடி ரூபாயைவிடப் பல மடங்கு அதிகமானது மட்டுமல்ல, கண்ணுக்குத் தெரிந்து நடக்கும் உண்மையும்கூட!

அம்பானியும் அதானியும் கொடுத்த பணத்தில்தான் மோடி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தார், பிரதமர் பதவியைப் பிடித்தார் என்பது ஊரே அறிந்த உண்மை. மோடி பிரதமர் ஆன மறுநிமிடமே, அதானி ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத்தை வாங்குவதற்கு புரோக்கர் வேலை செய்தது பத்திரிகைகளில் படத்தோடு வெளிவந்தது. அந்நிலக்கரிச் சுரங்கத்தை வாங்க அதானிக்குக் கடன் கொடுக்க மறுத்த ஸ்டேட் பாங்க் நிர்வாகத்தைப் பணிய வைத்தார். ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ கைபேசி சேவையைத் தொடங்கியபோது, அதற்கு விளம்பரத் தூதராக பிரதமர் மோடி படத்தையே பயன்படுத்திக் கொண்டது. மோடியின் ஆட்சி இந்தியத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் குத்தகைக்கு எடுத்த ஆட்சி என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரியும்போது, ஆ.ராசா இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டார் என இந்து மதவெறிக் கும்பல் குற்றஞ்சாட்டுவது ஈயத்தைப் பார்த்து பித்தனள இளித்த கதையைத்தான் நினைவுபடுத்துகிறது.

2ஜி அலைக்கற்றைகளை 1 மெகாஹெர்ட்ஸ் 276 ரூபாய் என்ற விலைக்கு ஒதுக்கீடு செய்தார் ஆ.ராசா. இதனை ரூ.3,350 விற்றிருக்க வேண்டும் எனக் கணக்குப் போட்டுத்தான் 1,76,000 கோடி ரூபாய் நட்டம் எனக் குற்றஞ்சுமத்தியது, சி.ஏ.ஜி. இதோ மோடியின் ஆட்சியில் 350 மெகாஹெர்ட்ஸ் கொண்ட அலைக்கற்றைகளை ரூ.297-க்கு விற்றிருக்கிறார்கள். சி.ஏ.ஜி.யின் கணக்குப்படி பார்த்தால் இந்த ஒதுக்கீடில் ஏற்பட்ட நட்டம் 11 இலட்சம் கோடி ரூபாய். ஆனால், இந்த அனுமான நட்டம் குறித்து இப்பொழுது யாரும் வாய்திறக்கவில்லை.

மேலும், ஆ.ராசாவிற்கு முன்னதாக இருந்த அமைச்சர்கள் அனைவரும், விதிவிலக்கின்றி வாஜ்பாயி ஆட்சியிலும், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்டிருக்கும் இழப்பு ஐந்து இலட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் அறிவுரைப்படி, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை வகுத்து அமலுக்குக் கொண்டுவந்தவர்களே மோடியின் மூதாதையர்கள்தான். அலைக்கற்றைகளை ஏலம் எடுத்த நிறுவனங்கள் தமது பங்குகளை விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதும் வாஜ்பாயி ஆட்சியில்தான்.

இவ்வளவு உண்மைகளையும் மூடிமறைத்துவிட்டு, ஏதோ ஆ.ராசாதான் அலைக்கற்றைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்து நாட்டிற்கு நட்டம் ஏற்படுத்திவிட்டதாகக் குறிவைத்து குற்றஞ்சுமத்தப்பட்டதற்குக் காரணம், பார்ப்பன பாசிச கும்பலின் திராவிட எதிர்ப்பு அரசியல்தான்.

அப்படியானால் ஒரு பைசாகூட ஊழலே நடக்கவில்லையா என்று நரித்தனமான கேள்வியொன்றை பார்ப்பனக் கும்பல் எழுப்பக்கூடும். பொதுச்சொத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் தனியார்மயம்-தாராளமயம் என்ற கொள்கையே ஊழல்தான். இந்த அரசு எந்திரத்தின் அன்றாட இயக்கத்துக்கும், தேர்தல் அரசியலுக்குமான எரிபொருளே ஊழல்தான் என்பது பாமரனும் அறிந்த உண்மை. இதற்கு எந்தத் தேர்தல் அரசியல் கட்சியும் விதிவிலக்கில்லை. ஆனால், பிரச்சினை அதுவல்ல. 1,76,000 கோடி ரூபாய் ஊழல் என்ற பொய்க்குற்றச்சாட்டின் நோக்கம் என்ன என்பதே கேள்வி.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடை முன்வைத்துப் பார்ப்பன பாசிசக் கும்பல் முன்னெடுத்த பிரச்சாரம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதோடு, ஊழல்தான் இந்தப் பிரச்சினைகளுக்கான காரணம் என்பது போல ஒரு மோசடியான சித்திரத்தைப் பொதுமக்களின் புத்தியில் பதிய வைத்திருக்கிறது. ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் எத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளையும் துணிந்து எடுக்கலாம், கொடிய பொருளாதாரத் தாக்குதலையும் மக்கள் மீது தொடுக்கலாம் என்ற துணிவைப் பார்ப்பன பாசிசக் கும்பலுக்குக் கொடுத்திருக்கிறதே, அதுதான் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தின் வழியாக உருவாகிவிட்ட மாபெரும் அபாயம்.

-செல்வம்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

தொழிலாளர் உரிமை பறிக்கும் வேலை வரம்பு ஒப்பந்தம் – மோடி அரசின் புத்தாண்டு பரிசு !

1

வருகிறது வேலை வரம்பு ஒப்பந்தம்! தொழிலாளிகளின் இரத்தம் உறிஞ்சும் ஏகாதிபத்தியம் மோடி கும்பலின் கூட்டுச் சதி!

துவரை ஓர் ஒப்பந்த தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவதாக இருந்தாலும் கூட தொழிற்தகராறு சட்டத்தின் படி, பன்னாட்டு கம்பெனிகளும் தரகு முதலாளிகளும் தொழிலாளிக்கு முன்கூட்டியே நோட்டீசு வழங்க வேண்டும்; உரிய இழப்பீடு தர வேண்டும்; வேலையை விட்டு நீக்கியதை அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

தொழிலாளிகளின் உரிமைகள் என்று பெயரளவு அம்சங்கள் கூட இனி இல்லை. ஆம். மோடியின் மத்திய அமைச்சரவை சத்தமேயில்லாமல் அனைத்து துறைகளிலும் கால-வரம்பு வேலை ஒப்பந்தத்தை  அமல்படுத்துவதற்கு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இசைவு தெரிவித்திருக்கிறது.

வேலை வரம்பு (Fixed Term Employment) ஒப்பந்தம் என்றால் என்ன?

வேலை வரம்பு ஒப்பந்தம் என்பது முதலாளிகளின் விருப்பப்படி வேலை வாய்ப்பு வழங்கும் ஒப்பந்தமாகும். அதாவது ஆலையிலும் கம்பெனியிலும் இனி வேலை இருந்தால் மட்டுமே தொழிலாளி பணிக்கு அமர்த்தப்படுவார். பணிபாதுகாப்பு, வேலை உத்தரவாதம் என்ற எதுவும் இனி கிடையாது.

வேலை உத்தரவாதம் என்பதில் ஆறுமாதம் கால வேலை, ஒரு வருட வேலை என்ற கணக்கு வழக்கு எல்லாம் இனி இல்லை. குறிப்பிட்ட புராஜெக்ட் முடிந்தவுடன் தொழிலாளி அப்புறப்படுத்தப்படுவார். பணிபாதுகாப்பு என்பதில் தொழிற்தகராறு சட்டம் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு இனி பொருந்தாது. அதாவது முதலாளி தொழிலாளியை வேலையை விட்டு நீக்க நோட்டீசு கொடுக்க தேவையில்லை; இழப்பீடு கொடுக்கத் தேவையில்லை; அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டிய அவசியமுமில்லை.

இந்தியத் தொழிற்துறையில் வேலை வரம்பு ஒப்பந்தம் கொண்டுவரப்போகும் மையமான மாற்றம் என்ன?

நிரந்தரத் தொழிலாளி என்று யாரும் இனி வருங்காலத்தில் கிடையாது.

பன்னாட்டு கம்பெனிகள் குறைந்த கூலி கொடுத்து கொள்ளை இலாபம் அடிப்பதற்கு ஏதுவான வகையில் தான் இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்யும்படி ஒப்பந்தத் தொழிலாளர் முறை, தொழிற்சங்க உரிமை இரத்து, தொழிலாளர் சட்ட விதிகள் பொருந்தாத சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று பல அடுக்குச் சுரண்டல் முறை இந்தியத் தொழிலாளிகள் மீது தொடுக்கப்பட்டு வந்தது. இதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக ஒப்பந்தத் தொழிலாளிக்கும் கீழாக நிரந்தர தொழிலாளிகளை ஒழிக்கும் விதத்தில் வேலை வரம்பு ஒப்பந்தம் கொண்டுவரப்படுகிறது. இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீதான ஆகக் கேடான சுரண்டல் முறை இது.

இந்தியாவில் வேலை வரம்பு ஒப்பந்தம் இப்பொழுதுதான் கொண்டு வரப்படுகிறதா?

இல்லை. வேலை வரம்பு ஒப்பந்தம் இதுவரை ஆடை (Apparel) உற்பத்தித் துறையில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுவந்தது. இனி இந்த இந்த ஒப்பந்தம் இந்தியாவின் அனைத்து தொழிற்துறைகளிலும் அமல்படுத்தப்படவிருக்கிறது.

வேலை வரம்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் கூறும் காரணம் என்ன?

அந்நிய நேரடி முதலீட்டைக் கவருவதற்கு வேலை வரம்பு ஒப்பந்தம் அவசியம் என்கிறது மோடி அரசாங்கம்.

வேலை வரம்பு ஒப்பந்தத்தால் பலன்பெறப் போகிறவர்கள் யார்?

முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக பார்த்தால், இந்த ஒப்பந்தம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்திய தொழிற்துறையை முற்றாக அடகு வைக்கும் திட்டமாகும். அரசாங்கத்தின் அறிக்கைப்படி சீசன் முதலீடு செய்பவர்களுக்கு இது பேருதவியாக இருக்குமாம். அதாவது கணநேரத்தில் அந்நியமுதலீடு உள்ளே வந்து முதலாளிகளுக்கு இந்திய சட்டங்களால் எந்தப்பங்கமும் நேராமல் குறைந்த கூலியுழைப்பைப் பயன்படுத்தி கொள்ளை இலாபத்தை இனி சுரண்டிக் கொள்ளலாம் என்பதே இதன் சாரம்.

வேலை வரம்பு ஒப்பந்தத்திற்கு மோடியின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது எப்பொழுது?

இக்கேள்வியின் முக்கியத்துவத்தையும் மோடி நாட்டை விற்கும் வேகத்தையும் தொழிலாளிகள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். எப்பொழுதும் தும்பை விட்டு வாலைப் பிடிப்பது, விசயங்களை அறியாமல் இருப்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு ஊறுவிளைவிக்கிற செயலாகும்!

வேலை வரம்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள் ‘தொழிற்துறை பணிகளுக்கான (நிலை ஆணைகள்) மைய விதிகள் (சட்டதிருத்தம்) -2018’ இல் வரைவு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆங்கிலப் பெயர் Industrial Employment (Standing orders) Central (Amendment) Rules -2018.  இந்த வரைவு அறிக்கைக்கு மோடியின் மத்திய அமைச்சரவை டிசம்பர்-15-2017 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

வேலை வரம்பு ஒப்பந்தம் பற்றிய செய்திகளை எங்கு தெரிந்து கொண்டீர்கள்?

இனி உரிமைகள் ஏதும் கிடையாது என்பதை மகிழ்ச்சியுடன் செய்தியாக வெளியிடுகிரது பிசினஸ் ஸ்டேண்டர்ட் பத்திரிக்கை.

இது பற்றிய செய்தி தொடர்ச்சியாக பிசினஸ் ஸ்டேண்டர்டு இதழில் டிசம்பர் 27 – 2017 அன்றும் 09 – ஜனவரி – 2018 அன்றும் வந்துள்ளது. பிசினஸ்ஸ் ஸ்டேண்டர்டு இதழ் முதலாளிகளுக்கானது! ஆகவே தொழிலாளிகள் மீதான இந்தச் சுரண்டல் அறிவிப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதத்தில் தனது எசமானர்களுக்கு பிசினஸ் ஸ்டேண்டர்டு இதழ் வழங்கியுள்ளது. ஆளும் வர்க்க ஊடகங்கள் தொழிலாளிகளுக்கானதல்ல என்பதைச் சொல்வதற்காக இந்தக் கேள்வி.

தொழிற்சங்கங்கள் இதை எதிர்த்து போராடவில்லையா?

உண்மையை சொல்லப் போனால் 1991இல் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கைகள் இந்தியாவில் புகுத்தப்பட்ட காலத்திலிருந்தே ஏகாதிபத்தியங்கள், வேலை வரம்பு ஒப்பந்தத்தைக் கொண்டு வரத்துடித்தன. அப்போதைய தொழிற்சங்கங்களின் ஓரளவு எதிர்ப்பால் தான் இந்த ஒப்பந்தம் இத்துணைகாலம் காங்கிரசாக இருந்தாலும் பிஜேபியாக இருந்தாலும் தள்ளிப்போடப்பட்டு வந்தது.

2003 -இல் கால-வரம்பு ஒப்பந்தத்தைத் திணிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதாவைக் முதலில் கொண்டுவந்தது பிஜேபி அரசாங்கம் தான். தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால் அது பின்வாங்கப்பட்டது. அதற்குப் பிற்பாடான காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததால் அப்பொழுதும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால் பின்வாங்கப்பட்டது. மோடி அரசாங்கம் 2015-இல் இதை மீண்டும் தூசிதட்டி எடுத்தது. அப்பொழுது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த பண்டாரு தத்தாரேயா தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால் மாசோதாவை பின்வாங்கினார். இப்பொழுது 2017 -இல் எந்த சந்தடியுமின்றி மத்திய அமைச்சரவை தொழிலாளிகளின் சுரண்டலுக்கு இசைவு தெரிவித்துள்ளது.

இந்தக் காலகோட்டில் நாம் புரிந்துகொள்வது என்னவெனில் தொழிற்சங்கங்கள் 1990 -களிலிருந்து தற்போதுவரை மறுகாலனியாதிக்கத்தின் தீவிரத்தை எதிர்த்து போராடாமல் நீர்த்து போயிருக்கின்றன. தற்பொழுது கேள்வி கேட்கவும் திராணியின்றி தொழிற்சங்கத் தலைமைகள் சுணங்கியும் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாகவும் ஏகாதிபத்தியம் பேசுவது வெட்டி அரசியல் என்றும் தொழிலாளர் போராட்டங்களை காயடித்திருக்கின்றனர். இப்பொழுது தலைக்கு மேல் வெள்ளம் போய்க் கொண்டிருப்பது அவலமான உண்மையாகும்.

வேலை வரம்பு ஒப்பந்தத்தின் உலகளாவிய பின்னணி என்ன?

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டிக்கு அடுத்தபடியாக மோடி கும்பல் இந்தியாவில் செய்திருக்கும் மிகப்பெரும் சூறையாடல் கால-வரம்பு ஒப்பந்தமாகும். நான்காவது தொழிற்புரட்சி (Fourth Industrial Revolution) மற்றும் தானியங்கு (Automation) தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு ஏகாதிபத்தியங்கள் தன்னை தகவமைத்துக்கொள்வதற்கு இந்தியத் தொழிலாளிகளின் கூலியுழைப்பு மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. 2008 -க்குப்பிற்பாடான பொருளாதார நெருக்கடியிலிருந்தே முதலாளித்துவம் இன்னும் மீளவில்லை. மாறாக இரட்டைச் சரிவில் போய்க்கொண்டிருக்கிறது.

மூலதனக் குவியலற்கும் கூலியுழைப்பிற்குமான முரண்பாடு முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு கூர்மையடைந்திருக்கிறது. அதாவது குறைந்த கூலிக்காக இந்தியா, வங்கதேசம் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தொழிலாளி வர்க்கம் மூர்க்கமான தாக்குதலுக்கு இதுவரை உள்ளாகியிருந்த நிலையில் புதிய தாக்குதலாக தொழிலாளிகள் மீதான முற்றுரிமையை இறையாண்மை கடந்து பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துக் கொள்ளும் முயற்சியில் முதல் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

புல்லுருவி மோடி அரசின் கோரப்பற்கள் வெளியில் துருத்திக்கொண்டு நிற்பது தெரிந்துவிட்டது. முழு அம்மணமாக நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறது இந்தக் கும்பல். ஏகாதிபத்திய-மோடி கும்பலின் கூட்டுச் சதியை தொழிலாளிகள் வேரறுக்க ஒன்றிணைய வேண்டும். மறுகாலனியாதிக்கத்தை எதிர்த்தால் அன்றி தொழிலாளிகளுக்கு விடிவில்லை!

பாட்டாளிகள் ஒன்றிணைந்து மோடி கும்பலையும் அந்நிய மூலதனத்திற்கு சேவை செய்யும் தரகுமுதலாளிகள், ஊடகம் போன்றவற்றையும் அம்பலப்படுத்த வேண்டும். இந்தக் கோணத்தில் தொழிற்சங்கத் தலைமையை கேள்விக்குள்ளாக்க வேண்டும். தொழிற்சங்கமாக ஒன்றிணைய வேண்டும். இதில் ஒன்றுபடும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்.

இருப்பதிலேயே மிக மோசமான போர்க்களம் போராடாமல் விடப்படுவதுதான்!

– இளங்கோ

மேலும் :

பார்ப்பனர் சொல்வதுதான் ஆகமம் – அதை ஏற்கிறது நீதிமன்றம் ! உரை வீடியோ

1

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா? தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் 02.12.2017 அன்று சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்  ஆற்றிய தலைமை உரை:

னைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை திமுகவின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 6 அர்ச்சகர் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. அதில் படித்து பல மாணவர்கள் வேலை கிடைக்கும் எனக் காத்திருந்தனர். இந்நிலையில் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலைச் சேர்ந்த சிவாச்சாரியர்கள் வழக்குப் போட்டு மாணவர்களை அர்ச்சகர் பணிக்கு எடுப்பதை நிறுத்தி வைத்தார்கள்.

இந்நிலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களைச் சந்தித்து சங்கமாக ஒருங்கிணைந்து போராடினால் தான் தீர்வு கிடைக்கும் எனக் கூறி அவர்களை ஒருங்கிணைத்தனர்.

இந்த விவகாரத்தில் திமுக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைக்குப் பதில் அதனை சட்டமாகக் கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனெனில் ஒரு அரசாணையை இன்னொரு அரசாணையைக் கொண்டு நிறுத்திவிடலாம்.

வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும், வழக்கில் தீர்ப்பு வந்த போதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. வழக்கை வெற்றிகரமாக கொண்டு செல்ல திமுக மற்றும் தி.க.-வை தொடர்பு கொண்ட போது அவர்கள் முன்வரவில்லை. வழக்கில் அர்ச்சகர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்த போதும் அவர்கள் யாரும் வாய்திறக்கவில்லை.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு தேவையற்ற, குழப்பம் மிக்க தீர்ப்பு. இந்த வழக்கில் சிவாசாரியார்கள் முன்வைத்த வாதம், “இது காலங்காலமாக பின்பற்றப்படும் ஆகம விதிகளுக்கு எதிரானது” என்பதே. பல பிற்போக்கான வழக்கங்கள் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருபவைதான். ஆனால் அவை அனைத்தும் இன்று சட்டவிரோதமானவை, குழந்தைத் திருமணம், சாதிய தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல், பாலியல் வேறுபாடு பாராட்டுவது போன்றவை அதற்கு சில உதாரணங்கள்.

இந்த வழக்கைப் பொறுத்த வரையில், இந்த வழக்கில் சில பழைய  வழக்குகளில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஆதார அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பெழுதியுள்ளது. 1908-கமுதி, சங்காலிங்கம் வழக்கையும், அதன் பின்னர் நடைபெற்ற இளை வாணியர்கள் வழக்கையும் குறிப்பிட்டு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

கமுதி கோவிலிலே நுழைவதற்கு நாடார்கள் போராட்டம். 1908-ல் தீர்ப்பு – மனுதர்மத்தின் படி உள்ளே நுழையக் கூடாது. இளை வாணியர் – பனகுடி கிராமத்தில் இராமலிங்கர் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி கேட்டு வழக்கு போடுகிறார்கள். பிராமனர், முதலியார், மற்றும் பிள்ளைமார் சாதியினர் தடுக்கிறார்கள்.

மனுதர்ம வழக்கப்படி பிராமணர்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே வரை செல்லலாம். சூத்திரர்கள், கொடிமரம் வரைக்கும் வரலாம். ஈன ஜாதியினர் கோபுர தரிசனம் தான் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு சொல்கிறது.

அந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்புகளும், இந்திய அரசியல் சாசன சட்டம் உருவாவதற்கு முன்னரே வழங்கப்பட்ட தீர்ப்புகள். அத்தீர்ப்பை மனுதர்மத்தின் அடிப்படையில் வழங்குவதாகவே அந்நீதிபதிகள் அன்று கூறியுள்ளனர். அதனை இன்று அரசியல் சாசன சட்டத்தின் படி செயல்படுகின்ற நீதிமன்றம் ஆதார அடிப்படையாக எடுத்துக் கொள்ளமுடியுமா?

அதே போல நீதிபதி மகாராஜன் குழு அறிக்கையில், “சேஷம்மாள் வழக்குத் தீர்ப்பிற்குப் பிறகும் வாரிசுகள் தான் அர்ச்சகராக இருக்கிறார்கள். 1,144 பேரில் 83 பேர் மட்டும் தான் கோர்ஸ் படித்தவர்கள். மற்றவர்கள், வாரிசுரிமையில் வந்திருக்கிறார்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது. எந்தக் கோவிலும் ஆகமத்தை பின்பற்றவில்லை.. ஆகமத்தில் சம்பளம் இல்லை. இன்று அர்ச்சகர்களுக்கு அரசு சம்பளம் கொடுக்கிறது . இது ஆகம மீறல் அல்லவா ?

அரசாங்கம் அர்ச்சகர் பக்கம் இல்லை. ஆனால் நீதிமன்றம் பார்ப்பனர்களின் கோட்டையாக இருக்கிறது. ஒரு அரசுப் பணியில் என் பங்காளிக்கு தான் வேலை கொடுக்கமுடியுமென்று கூற முடியுமா?. படித்து தகுதி வாய்ந்தவர்களை மட்டுமே போடவேண்டும். அர்ச்சகர் விவகாரமும் அப்படித்தான்.

தமிழகத்தில் அத்தகைய சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். அதற்கு சமூகத்தில் இருந்து அழுத்தம் வரவேண்டும்.

***

பத்திரிக்கையாளர் சுருதிசாகர் யமுனன் உரை – வீடியோ

தீர்ப்பு சொல்லவரும் விசயம் என்ன ?. அடுத்து என்ன செய்ய முடியும் ? இதற்கு மதம் சார்ந்த வரலாற்றைப் புரிந்துகொள்ளவேண்டும். கடவுளின் ரூபமாக அரசனை மக்கள் மத்தியில் நிலைநாட்ட, அதிகாரத்தை கட்டுப்படுத்த சமூகத்தில் பூசாரி என்ற ஒரு மதகுரு தான் தோற்றத்தின் அடிப்படை. அன்று பூசாரிக்கு இருந்தது அதிகாரம், இன்று அதிகாரமும் பணமும். காலங்காலமாக அவர்களுக்கு இருக்கும் அதிகாரம், அதனை அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எகிப்து தொடங்கி இன்று வரை இது தான் நிலைமை.

பல்லவர்கள் காலத்தில் தான் கோவில்கள் அதிகமாக கட்ட ஆரம்பித்தனர். வேதங்களில் பலி கொடுக்கும் விசயம் தான் அதிகம். ஆடு, மாடு என அனைத்தையும் பலி கொடுத்த பிராமண மதத்திற்கு எதிராக புத்தமதமும், ஜைனமதமும் உருவாகிறது, புத்தருக்கு பிறகு பெரும் பகுதி மக்கள் புத்தரை பின்பற்ற ஆரம்பித்தனர், பின்னர் பார்ப்பனர்கள் பௌத்தர்களைப் பின்பற்றினர்.

அதனைப் பின்பற்றி தான் சிலை வழிபாடு, கோவில், ஆகமம் ஆகியவை எல்லாம் வந்தன. கோவில் குளம், கடவுள் சிலை, கோவில் கட்டிடம் குறித்த ஒழுங்குமுறையே ஆகமங்கள். அனைத்து ஆகமங்களும் யாருக்கும் முழுமையாகத் தெரியாது.  108 வைணவ ஆகமங்கள், 28 சைவ ஆகமங்கள். முழுமையாகப் படித்தவன் யாருமில்லை.

ஆகவே ஆகமம் என்பது யாருக்கும் முழுமையாகத் தெரியாத ஒரு விசயம். அதில் இது இருக்கிறது என பார்ப்பனர்கள் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது தான் இன்றைய நிலையாக இருக்கிறது. ஆர்ட்டிகிள் 14-ன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம்.  ஆர்டிக்கிள் 25,26 – மதம் சார்ந்த உரிமையைப் பாதுகாப்பது. ஆனால் ஹதியா வழக்கில் இச்சட்டங்கள் நட்டாற்றில் விடப்பட்டன.

இவ்வழக்கில் அவர்கள் வைக்கும் வாதம் என்ன? எல்லா பிராமணர்களாலும் கர்ப்பகிரகத்துக்குள் போக முடியாது. குறிப்பிட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தான் போக முடியும். ஆகவே இது தீண்டாமைச் செயல் கிடையாது என எதிர்வாதம் வைக்கின்றனர்.

இந்திய அரசியல் சட்டமும் ஹிந்து தத்துவத்தைப் போலவே இருகிறது. ஹிந்துமதத்தின் அத்வைத தத்துவத்தின் படி அனைத்துக்கும் சமமான ஆத்மா. ஆனால் நடைமுறையில் அது வேறுபாடுகளுக்குள் இருக்கும். அதே போல தான் இந்திய அரசியல் சட்டமும். சட்டப்படி அனைவரும் சமம்தான். ஆனால் நடைமுறையில் அப்படி அல்ல.

பழைய ரிஷிகளின் வம்சத்தில் வந்தவர்கள், அந்தந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டில் பெரும்பான்மையினருக்கு தங்கள் கோத்திரம் என்னவென்று தெரியாது. இதனை அடிப்படையாக வைத்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . யாராவது , தான் இந்த கோத்திரத்தின் வழியில் தான் இருக்கிறேன் என்று போய் சொன்னால், உடனே அந்த நியமனத்த்கை எதிர்த்து வழக்கு போடுவார்கள். பலபல வித்தைகள் செய்து பிராமணர்கள் அல்லாதவர் அர்ச்சகர் ஆக முடியாது என்று கூறுகின்றனர்.

இது போல தனித் தனியாக பல வழக்குகள் போட்டால், ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்துக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தால் போதும், பல ஆண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிக்கலாம். அடி வேரே அறுந்து கிடக்கிறது. இந்நிலையில் மேலே சிறிது பச்சை இருக்கிறது என்பதால் அது துளிர்க்கும் என்று நம்பக் கூடாது. ”ஆகமங்களில் இருக்கும் விசயங்கள் அரசியல் சட்டத்தை மீறாத வகையில் அர்ச்சகர்களை நியமிக்கலாம். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட கோத்திரத்தில் தான் பிறந்து இருக்க வேண்டும்” என்பதுதான் தீர்ப்பு.

அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?

திமுக 2006இல் வெறும் அரசாணைதான் கொண்டு வந்தது. அதனை எப்போது வேண்டுமானாலும் இன்னொரு அரசாணை கொண்டு மாற்றலாம். சட்டமாகக் கொண்டு வரவில்லை. இவ்வழக்கை எடுத்து வாதாடியவர், மூத்த வழக்கறிஞர் ராவ். கடைசி வாதங்களை முன்வைத்த பிறகு சென்னை வந்தவரிடம் பேசிய போது, தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஒவ்வொரு செங்கலாக உருவினால் தான் பெரிய சுவரை உடைக்க முடியும். இடைநிலை சாதியினரிடம் பரந்துபட்ட மக்களிடம் இதனைக் கொண்டு செல்லவேண்டும். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இதனை மாற்ற வேண்டும். இதுதான் தீர்வு.

 

சென்னையில் அரங்கக் கூட்டம் : ஜனநாயகத்துக்கு பேராபத்து – எச்சரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் !

6

“ஜனநாயகத்துக்கு பேராபத்து” நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் !

யாரால் ஆபத்து ? என்ன ஆபத்து ? வாங்க… பேசலாம்…

அரங்கக்கூட்டம்

நாள் : 21.01.2018, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : மாலை 5:00 மணி.
இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை
(நேருபூங்கா சிக்னல் அருகில்) சென்னை.

அரங்கக்கூட்ட நிகழ்வு வினவு இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும்…

தலைமை :

வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கருத்துரை :

  • திரு.து.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
  • திரு என்.ஜி.ஆர்.பிரசாத், மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
  • திரு. எஸ்.பாலன், வழக்கறிஞர், பெங்களூரு,
  • பேராசிரியர் அ.கருணானந்தம், வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு), விவேகானந்தா கல்லூரி, சென்னை.

நன்றியுரை :

திரு. சி. வெற்றிவேல் செழியன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

*****

அன்புடையீர், வணக்கம்.

ந்திய வரலாற்றிலும், நீதித்துறை வரலாற்றிலும், ஜனவரி 12 அன்று தலைமை நீதிபதிக்கு எதிராக, பணியிலிருக்கும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் பிலோகுர் ஆகியோர் டெல்லியில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு ஓர் அசாதாரண நிகழ்வு நீதித்துறையில் ஏற்பட்ட நிலநடுக்கம் என ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

பத்தரிக்கையாளர் சந்திப்பில், “உச்சநீதிமன்ற மரபுகள் மீறப்படுகின்றன, நிர்வாகம் சரிவர நடப்பதில்லை. முக்கிய வழக்குள் ஒதுக்கப்படுவதில் மூத்த நீதிபதிகள் புறக் கணிக்கப்படுகிறார்கள். விரும்பத்தகாத பல நிகழ்வுகள் சமீப காலங்களில் நடந்து விட்டன. சமரச முயற்சியில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்யவில்லை. நீதிபதிகள் தங்கள் ஆன்மாவை விலை பேசிவிட்டார்கள், நீதித்துறையையும் இந்த நாட்டையும் பாதுகாக்கத் தவறிவிட்டார் கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாங்கள் ஆளாகக் கூடாது என்று கருதுகின்றோம். நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம், இனி நாடு முடிவு செய்யட்டும். இந்த நாட்டுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை இது. அதனை செய்து விட்டோம்” என்கிறார்கள்.

நீதித்துறையின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாட்டு மக்களை கோருகிறார்கள்.

  • இதன் மூலம் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?
  • நீதித்துறை சுதந்திரம் நெருக்கடியான நிலையில் வழக்கறிஞர்கள் சமூகம் அமைதி காக்கலாமா?
  • ஜனநாயகத்திற்கு பேராபத்து என்றால் மீண்டும் நெருக்கடிநிலை திரும்புகிறதா? அல்லது அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை அமுலில் இருக்கிறதா?
  • மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும், கடைசி நம்பிக்கை,
    நீதித்துறை என கருதப்படுகிறது. மத்திய அரசின் கைப்பாவையாக நீதிபதிகள் மாறும் சூழலில் வழங்கப்படும் தீர்ப்புகளின் விளைவுகள் என்ன?
  • கொலை குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித்ஷா வழக்கை விசாரித்த சி.பி.ஐ நீதிபதி லோயா மரணம் மட்டும்தான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு உடனடி காரணமா?
  • உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அவர்கள் கடமையை செய்து விட்டார்கள், மக்கள் செய்ய வேண்டியது என்ன?

தெரிந்து கொள்ள, விவாதிக்க, அனைவரும் வாரீர் !

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளைத் தெரியப்படுத்துங்கள் !
கைபேசி : 91768 01656,
E-mail: ppchennaimu@gmail.com

 

தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !

0

பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது.  தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். படியுங்கள், பகிருங்கள்.

  வினவு

ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்று வரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரிஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப் படும் நாபகலிபார் என்ற திரு விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.

இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993 -ல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசி மணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்தும் விலகி வாழ்கின்றனர்.

இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய கோவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட் டியது. 1988 -ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட் டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.

செப்டம்பர் 11 நேர்காணலுக்கு வந்த பெண்களும், கோவில் நிர்வாகமும் அங்கு குவிந்திருந்த பத்திரிகையாளர்களை எதிர்பார்க்கவில்லை. அவர்களது கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு வார காலமாக பல்வேறு பெண்கள் அமைப்புகள், பத்திரிக்கைகள், சில அரசியல் கட்சிகள் என வெளி உலகின் கண்டனங்களை சந்திக்க நேர்ந்த பூரி கோவில் நிர்வாகம் வேறு வழியின்றி முடிவெதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது.

***

ந்த நூற்றாண்டின் (20-ம் நூற்றாண்டு) தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரியவருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட் டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது ஏன்?

“ஏனென்றால் தமிழ்நாட்டி லும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது போல் பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது” என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் தேவதாசி பரஸ்மணி

எது உண்மை? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்து விட்டனர். மேலும் 1954 , 55 -ல் பூரி கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் போது 30 -க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லா உண்மை.

ஒடிஸி நடனத்தைப் பயிலுவதற்காக பூரிக்கு வந்த பிரடரிக் ஏ. மார்க்லின் என்ற பெண் (மனிதவியல் ஆய்வாளர்) அறிஞர், “கடவுளரின் மனைவியர்” என்ற தமது புத்தகத்தில் தேவதாசிகளது வாழ்க்கையை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். பெற்றோர் தமது பெண்களை தேவதாசிகளாக அனுப்புவதற்குக் காரணம் அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்க இயலாத வறுமையே என்கிறார் மார்க்லின்.

“தேவதாசி சேவைக்காக பெண்களை நாங்கள் அழைத்ததாகக் கூறப்படுவது தவறு. இந்தப் பெண்கள் தாங்களாகவே சேவை செய்ய முன் வந்ததினால்தான் அதைப்பற்றி விவாதிக்க அவர்களை அழைத்தோம். தேவதாசிமுறை தலைமுறை தலைமுறையாக பூரி கோவிலில் இருந்து வரும் முறைதான்” என்கிறார் பூரியின் மாவட்டஆட்சித் தலைவரும், கோவில் நிர்வாக கமிட்டியின் உதவித் தலைவருமான கே.கே. பட்நாயக்.

“இந்து தர்மம்” காக்க பெண்களை ‘சமர்ப்பணம்’ செய்வது அல்லது பலியிடுவது என்பது புதிதல்ல. 1987 -ல் இராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற பெண்ணை உடன் கட்டை ஏற்றிக் கொன்ற இந்துத்துவ வெறியர்களின் செயலைக் கண்டு நாடே அதிர்ந்த போது, “சதி”யைப் நியாயப்படுத்தினார் பாரதீய ஜனதாவின் அகில இந்திய துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா. பூரியின் ராஜகுடும்ப புரோகிதர் ரமேஷ் சந்ர ராஜகுரு, “நேர்காணலுக்கு வந்த பெண்களிடம் முன்பு ஆடச் சொன்னதாகக் கூறப்படுவது சிலரின் வளமான கற்பனை. 50 ஆண் டுகளுக்கு முன்பே நடனத்தை நிறுத்தி விட்டோம். எவ்வித காரண மும் இல்லாமல் தேவதாசி முறை என்றாலே உடனே விபச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று குமுறுகிறார்.

ராஜகுருவின் கோபத்தை பரிசீலிப்பதற்கு நாம் மன்னர்கள் காலத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாக, முன்னாள் தேவதாசியான                     பரஸ்மணியிடம் ஒரு கேள்வி – ஆண்டவன் முன் நடனம் ஆடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்? “நான் ஜகன்னாதருக்கு மணமுடிக்கப்பட்டவள். தன் கணவனுடன் இரவு என்ன செய்தாள் என்பதை மணமான பெண் ஒருத்தி உலகத்திற்கு எப்படிக் கூற முடியும்?” என்று புன் சிரிப்புடன் மறுக்கிறார். இப்படி நடனம் ஆடுவது தொடருவது மட்டுமல்ல, ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது திறந்த புத்தகமல்ல.

தேவதாசிகளாவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் வேறெந்த ஆடவருடனும் உறவு வைத்திராத தூய்மை வாய்ந்தவளாக இருத்தல் வேண்டும். பின்னர் அவளுக்கு ஆடல், பாடல், அலங்காரம் உட்பட பல்வேறு கலைகளில் வளர்ப்புத் தாயாரால் (தேவதாசி) பயிற்சி அளிக்கப்படுகிறது. தக்க காலம் வந்த பிறகு அவள் ஜெகன்னாதருக்கு மணமுடிக்கப்படுகிறாள். மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு “பொட்டுக் கட்டுதல்” என்றழைக்கப் படும் இந்நிகழ்ச்சி தேவதாசியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. அவள் இறக்கும் போதும் மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டே எரியூட்டப்படுகிறாள். இப்படி ஏனைய இந்துப் பெண்களுக்குள்ள ‘விதவை அபாயம்’ தேவதாசிகளுக்கு இல்லையென்றாலும், ஏனைய இந்துப் பெண்களின் மண வாழ்க்கை தேவதாசிகளுக்குக் கிடையாது.

ஒடிஸி நடனக் கலைஞர் சஞ்ஜுக்தா பானிகிரஹி

சனாதனிகளின் பார்வையில் மன்னன் என்பவன் யார்? விஷ்ணுவின் அவதாரம், உயிருள்ள ஜெகன்னாதர்களான மன்னர்களுக்கு செய்யும் அந்தப்புரச் சேவை தேவதாசிகளின் கடமையாகும். ராசராச சோழன் காலத்து தேவதாசிகள் “அரசனின் திருமேனிப் பணியாளராக” அந்தப்புரத்தில் சேவை செய்து வந்தனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

தேவதாசிகளுக்கு பொட்டுக் கட்டும் சடங்கு முதல் அவளது கோவில் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற பண்டா என்றழைக்கப்படும் பார்ப்பன புரோகிதனுக்கு செய்யும் சேவை ஜெகன்னாதருக்குச் செய்யும் சேவையைப் போலவே முக்கியத்துவம் உடையது. இதையெல்லாம் சகித்துக் கொள்ளும் தேவதாசி, இவர்களுக்கு அப்பாற்பட்டு வெளி ஆடவருடன் தொடர்பு கொண் டால், மன்னனும், பண்டாவும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

மன்னர்கள், பார்ப்பனர்கள், பின்னாளில் ஜமீன்தார்கள் என்று உயர்ரக மேட்டுக் குடியினரோடு உறவு கொண்டாக வேண்டிய தேவதாசி அவர்களுடன் பகிரங்கமாக வாழ முடியாது. தேவதாசியின் வாழ்க்கை பட்டு சரிகையைப் போல மின்னினாலும் அதன் பின்னே உள்ள அவலமும், துயரமும், அழுகுரலும் – ஜெகன்னாதர் கோவிலில் நெடிதுயர்ந்து நிற்கும் கருங்கற்களுக்கு மட்டும் தான் தெரியும்.

“அரசாங்கம்; சாராயம், கள் இவைகளை எப்படி வருவாயாகக் கருதி நடத்த வேண்டுமோ அது போலவே பெரும் கோவில்களையும் உண்டாக்கி அரசு வருவாய்க்கு வழி தேட வேண்டும்.” என்று சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் வலியுறுத்துகின்றார்.

பூரியின் முன்னாள் ராஜா திவ்ய சிங் தேவ்

பெருமளவு மக்களின் வாழ்க்கையும், அரசின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற நிறுவனங்களாகவே கோவில்கள் இருந்தன. இன்றைய ஐந்து நட்சத்திர விடுதிகளின் சகல வசதிகளும் அன்றைய கோவில்களில் இருந்தன. இதில் ஆடல், பாடல் மூலம் மன்னனை மகிழ்விக்க பார்ப்பனர்களால் நியமிக்கப்பட்டவர்களே தேவதாசிகள்.

பண்டைய கதைகளை இங்கு கிசுகிசுக்க வேண்டாம், தேவதாசி சேவைக்கு நாங்கள் விண்ணப்பத்திருக்கும் காரணங்களை சற்றுக் கவனியுங்கள் எனும் கஜால் ஜெனா என்ன கூறுகின்றார்? “ஐந்து வயதிலேயே கண்ணன் என்னுள் வியாபித் திருப்பதை உணர்ந்தேன். 19 வயதில் தீட்சை பெற்றுக் கொண்டேன். நின்று போன தேவதாசி சேவையை உயிர்ப்பிப்பது கடமை என்று கருதி என் சிஷ்யைகளுடன் விவாதித்தேன். ஏதோ ஒரு வகையில் ஜெகன்னாதருக்கு சேவை செய்ய விரும்பும் எங்கள் பக்தி தனிப்பட்ட விசயம். இவ்வளவு இருந்தும் கடவுளின் முன்பு அநீதியான செய்கைகளைச் செய்வது போல எங்களை ஏன் கோரமாக மதிப்பிடுகிறீர்கள்?”

இல்லை புனிதமாகவே மதிப் பிட முயலுவோம். காலையில் திருப்பள்ளி எழுச்சி, இரவிலே பள்ளியறைப்பாட்டு, மாலையில் கால் வலிக்க நடனம் எதுவானாலும், திரைச்சீலையிட்ட ஜெகன்னாதரின் கருவறைக்கு வெளியே, வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தான் நடத்த முடியும், தேவதாசி ‘அபவித்ரா’ (தூய்மை இல்லாதவள்) வாகக் கரு தப்படுவதால், பூஜைகள் செய்யும் போது ‘பண்டா’ (பார்ப்பனப் புரோகிதன்) அவள் கையால் குடிநீர் கூடக் குடிக்க மாட்டான், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டான். உள்ளம் உருக, பக்தி பெருக கீத கோவிந்தம் பாடும் தேவதாசிகளுடைய புனிதத்தின் கதி இதுதான்.

முன்னாள் ராஜாக்கள், ராணிகள், பாரதீய ஜனதாவில் உலாவரும் இந்நாளில் ஜெகன்னாதபூரியின் ராஜா திவ்ய சிங் தேவ் இந்து முன்னணிக் குரலில் ஒரு கேள்வி கேட்கிறார். “கடவுளின் சேவைக்காக வாழ்க்கையைத் துறந்து, தங்களது சொந்த முடிவில் பொருளியல் உலகை மறந்து, பெண்கள் துறவிகளாகவும், சகோதரிகளாகவும் மாறுவது அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தேவதாசி முறையும் அத்தகையதுதான்”.

உண்மையில தேவதாசி முறை அத்தகையதல்ல. தேவதாசிகளாவதற்கு நீங்கள் வைத்திருக்கும் தகுதி என்ன? ஆடல், பாடல், அழகுக் கலை, அலங்காரம் இவைதானே? பிறமதத்துப் பெண்கள் துறவறத்தின் மூலம் சமூகத்தின் பாதுகாப்பையும், மதிப்பையும் பெறும்போது, தேவதாசியாக மாறும் பெண்ணோ – பாதுகாப்பின்மையையும், அவமதிப்பையும் பெறுகிறாளே அது ஏன்?

ஆக மன்னர்கள், பார்ப்பனர்கள், அதிகாரிகள் என அனைவரும் தேவதாசிகளுக்காக பேச முற்படும் போது “கலைஞர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?

இன்று தமிழ்நாட்டு பார்ப்பனப் பெண்களால் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பரதக் கலை தேவதாசிகளால் தான் வளர்த்து உருவாக்கப்பட் டது என்பதில் உவகை அடைகிறார் இந்தியா டுடே வாஸந்தி. ஒடிசி நட னக் கலைஞர் சன்ஜூக்தா பாணிக்கிரஹியும் இக்கருத்தை ஆதரித்து, தேவதாசி முறையில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தானே பகுதி நேர தாசி சேவை செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.

அமெரிக்காவை பூலோக சொர்க்கமாக மாற்றியமைப்பதற்கு ஆப்ரிக்க கருப்பர்களைக் கடத்தி வந்த அடிமை முறை உதவி செய்திருக்கிறது என்பதாக நாகரீக உலகின் எந்த ஒரு மனிதனும் கொண்டாட மாட்டான். தேவதாசிகள் காற்சலங்கை கட்டிக் கொண்டு நடனம் ஆடும் போது பாதம்படுகின்ற இடங்களில் உறைந்திருக்கும் ரத்தம் நம்மை உலுக்குகிறது. அதே சமயம் பாதத்தின் பதத்தையும், ஆட்டத்தின் அபிநயத்தையும் மெய்சிலிர்த்து ரசிக்கிறார்கள் வாஸந்தியும், பாணிகிரஹியும்.

***

1930 -களில் தேவதாசி முறையை எதிர்த்துக் கிளம்பிய இயக்கத்தை அறியும்போது வாழையடி வாழையாக சனாதனிகளின் குரல் இன்றைக்கிருப்பது போல் ஒலிப்பதைக் கேட்க முடியும். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், காங்கிரசாரும் – இந்தியப் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான                    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை ஒழிக்க போராடி வந்தார்கள்.

1930 -ல் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவந்தபோது, இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார் என்பதை முத்துலட்சமி கூறுகிறார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், “இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்” என்று வாதிட்டார்.

“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள் ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?” என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.

இந்துத்துவ முகங்களில் மிதவாதத்தை காங்கிரசும், தீவிரவாதத்தை பாரதீய ஜனதாவும் இன்றைக்கு பிரதிநித்துவம் செய்வது போன்று அன்றைக்கு ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் விளங்கினார்கள்.

இச்சூழலில்தான் 1883-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலி யுறுத்தி “தாசிகள் மோசவலை” எனும் நாவலை மிகுந்த சிரமத்துக்கிடையில் 1936 -இல் வெளியிட்டார்.

***

20 -ம் நூற்றாண்டிலும் இந்துத்துவம் தனது வருணாசிரம நெறியை இருத்திக் கொள்ள மூர்க்கமாக முயலுகிறது. பாபர் மசூதி இடிப்பு, பிள்ளையார் பால் குடித்த புரளி, என ஒவ்வொன்றிலும் “ஹிந்து எழுச்சி ஆரம்பித்து விட்டது” எனக் கும்மாளமிடும் இந்தக் கும்பல்தான் தேவதாசி முறையை நியாயப்படுத்தும் நபர்களின்-கருத்துக்களின் அடித்தளம்.

அந்த அடித்தளத்தை தகர்க்க 60 ஆண்டுகளுக்கு முன்பு “தாசிகள் மோசவலை” என்ற தனது நாவல் மூலம் வழி காட்டுகிறார் இராமமிர்தம் அம்மையார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு சுரணையூட்டும்.

நாவலில் இருந்து, “ஒரு குறிப்பிட்ட பெண் சமூகத்தை விபசாரத்துக்குத் தயார் செய்துவைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குதக்க சான்றாக இருக்கிறது. பகுத்தறிவும் நாகரீகமும் வளர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தேவதாசி முறையை ஒழிப்பது சாஸ்திர விரோதம், சட்ட விரோதம், கலை விரோதம் என்று கூக்குரல் கிளப்பும் சாஸ்திரிகளும், தலைவர்களும் இருப்பது மானக்கேடாகும். தேவதாசி முறைக்கு அடிப்படையாக இருக்கும் கடவுள், மதம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் ஆகியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழித்து விட்டால் தேவதாசிக் கூட்டம் இருப்பதற்கே நியாயமிருக்காது.”

-இளநம்பி

( புதிய கலாச்சாரம், பிப்ரவரி – 1996 )

 

மொறம் பூசும் பாப்பாத்தியின் பொங்கல் !

4

ந்த  பொங்கலுக்கு எதுவும் வாங்கப் போவதில்லை என்று சபதம். டிவியில் ஜொலிக்கும் விளம்பரங்களைப் பார்த்தால், வாங்காமல் விட்டால், நாம வாழறதே வேஸ்ட் என்ற ரேஞ்சுக்கு  ஒரே கூச்சல்……, புடவை ஒண்ணு வாங்கினா இரண்டு புடவை இலவசம், ஒரு சவரனுக்கு 1000 ரூபா….. தள்ளுபடியாம்!, வீட்டு உபயோக சாமான்களும் எல்லாத்துக்கும் ஆஃபர்….  நம்ம  கஷ்டத்த தீர்க்க முதலாளிங்க கங்கணம் கட்டிக்கிட்டு இருப்பது தெரிந்தது டிவியில்.

அப்போது தெருவுல ஒரு குரல், மொறம் பூசுறதே….. மொறம்……மொறம் பூசு… றதே… மொறம் ….

வெளிய எட்டிப் பார்க்கும் போது நினைச்சேன்… 50 வயதுக்குமேல இருப்பாங்கனு…. ஆனா, 25 வயசுக்குள்ள இளம் பெண். கூடையை  சுமந்து, இரண்டரை வயது மகனை இடுப்பில் அணைத்துக் கொண்டு வந்தார்.

மேல என்ன கேக்கிறதுனு எனக்கு தெரியல… எதாவது பேசியாகுனமேன்னு, கூலி, 10 ரூபா குறைக்கச்சிக்கோ என்றேன்.

பொங்கலு வேலைக்கா….., வருசத்துல 10 நாளைக்குத்தான்க்கா வேலை…. வேலையில குறை இருக்காதுக்கா சரி 60 ரூபாத்தான் கொடு  போ, மொறத்தை எடுத்துட்டு வா…. என்றார்.

பழைய மொறத்தைப் பார்த்ததும், வேலையில் இறங்கினார்.  குழந்தையை கீழே இறக்கிவிட்டுவிட்டு,  உடைந்த பகுதியை, மூங்கிலால் முடைந்துக் கொண்டே பேசத் துவங்கினார்….

உங்க பேரு என்னாக்கா ? இதே ஊரா ? நீங்க வேலைக்கி ஏதும் போறீங்களா ?  சிம்பிளா இருங்கீங்க ? என்றார்.

….நானும் ஆரம்பித்தேன்.

பேரு என்னம்மா? ”பாப்பாத்தி”
ஏன் இந்த பேரு வைச்சாங்க?
குழந்தையில நல்லா குண்டா, வெளுப்பா இருப்பேணாம். அதனால…. !
ஊரு?
விருத்தாசலத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் போற ரூட்டுல கிராமம்.

சொந்த வேலையே இதுதானா?

இல்லக்கா… இது எங்களுக்கு கைத்தொழில் மாதிரி தினமும் கூலிக்கு  எல்லா வேலையும் செய்வோம். கிராமத்துல விவசாயம்தான் முக்கியம், நெல்லு, கரும்பு, மெல்லாட்டை(வேர்கடலை)  போடுவாங்க. கழனி வேலைக்குப் போவோம். இப்ப கழனிக்காரங்களே வேல இல்லாம இருங்காங்க. எதையும் பயிர் வைக்கல….…… எங்களுக்கு  வேலை ஊர்ல இல்ல. அதான் ஆளுக்கு ஒரு மூலையா கூலி வேலை செய்துட்டு இருக்கோம்.

பத்து நாளைக்கி இந்த வேலை பிறகு இன்னா செய்வீங்க….

கிடைக்கற வேலைய செய்வோம்க்கா….. கொளுத்து வேல, கூட முடையறதுன்னு எதோ ஒண்ணு செய்தாகனுமே.

அக்கா, கொஞ்சம் போன் தர்றீங்களா, எம்புள்ள அவங்க அப்பாகிட்ட பேசுவான்…. காலையிலயே ஒருந்தவங்கக்கிட்ட கேட்டு போன் போட்டேன், அப்ப நைட்டெல்லாம் கண் முழிச்சி வேலை செய்துட்டு, இப்பத்தான் முடிவெட்ட கடைக்கி போய்கிறார்னு  சொன்னாரு என்றார்.

போன் நெம்பர் கேட்டு போட்டுக் கொடுத்ததும், அவரது குழந்தை சிவாவிடம் போனைக் கொடுத்து, பாட்டிலு, கீட்டிலு அடிக்காதனுச் சொல்லு என்றார் சிரித்துக்கொண்டே .

மழலை அப்பாவிடம் போனில், ” அம்மா ஊசிப் போட்டீச்சி, பொங்கலுக்கு வா, வண்டி வாங்கினு வா…. அண்ணா அழுவுது, சாப்பிட்டியா, பொங்கலுக்கு வா. வண்டி வாங்கினு வா….ன்னு பேசிக்கொண்டே அப்பா குரலைக் கேட்டு அழ ஆரம்பித்துவிட்டான்… அம்மாவை அடித்தான்.

….புரியாமல், ஏன் அடிக்கிறான்? என்றேன்.

அப்பாவை….. அவனிடமிருந்து பிரிச்சது நான்தான்னு கோவம் என்றார்.

போனை வாங்கிய பாப்பாத்தி,  போன்ல காசு இருக்கா நானும் கொஞ்ச நேரம் பேசிக்கிடவா  என்று கேட்டு பேசினார்.

குழந்தைக்கு சளிப் பிடிச்சிருக்கு, தண்ணி மாறுதுல்ல அதான் வர வழியில.  கவர்மெண்ட் ஆஸ்பத்திலியில காட்டி மருந்து, குழத்தைக்கு வாங்கினேன்…. ஊசி போட்டாங்க. அத சொல்லுறான் அவன். நாங்க வெள்ளிக்கிழமை இங்க கெளம்பிடுவோம்  நீயும் வந்துடு, பெரியவன் அங்க… அழறனாம்.  நாங்க சாப்பிட்டோம். வேலை செஞ்சவங்கக் கிட்டவே கேட்டு சாப்பிட்டேன். ரெண்டு இடத்துல  சேலையும் கேட்டு வாங்கிட்டேன். எனக்கு எதுவும் துணிமணி வேணாம். நீ நல்லா சாப்பிட்டுட்டு குழந்தைகளுக்கு மட்டும் துணி எடுத்துக்க. சின்னது சைக்கிள் வேணும்னு அழுவுது. எங்கனா செகண்டுல கிடைக்குமா பாரு…. இல்ல வேலை செய்யறவங்கக் கிட்ட கேளு…..  நாளைக்கு எங்கனா வேலை செய்யும்போது போன் கேட்டு பேசறேன். வைக்கிட்டுமா….என்றார். குழந்தை மறுபடியும் போனை பிடுங்கி சிரித்து, அழ தொடங்கினான்.

…. அப்பா மேல அவனுக்கு உசிரு….. எல்லா இடத்துக்கும் தூக்கிட்டுப்போய் ….. திங்க வாங்கிக் கொடுப்பாரு, பாசமா பாத்துக்குவாரு… குரல கேட்டால அழறான் என்ன பண்ணுறது.

அழுத  குழந்தைக்கு … பக்கத்துவீட்டு அம்மா, கரும்பு  துண்டு கொடுத்தார். குழந்தை சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டது.

பாப்பாத்தி, ”சிவா…., பொங்கல், உனக்கு வந்துடுச்சிடா” என்று கரும்பை தோலுரித்து அவனிடம் தந்தார்.

…..எங்க வீட்டுக்காரு மெட்றாசுல கொளுத்து வேலைக்கு போயி இருக்காரு…. வர்ற வருமானம்  சாப்பாட்டுக்குத்தான் சரியா இருக்கு…  பத்தாம… பிராந்தி குடிப்பாரு. கேட்டா… உடம்பு வலி, வீட்ட பிரிஞ்ச  துக்கம் னுவாரு. பெரியவன் கவர்மெண்டு ஸ்கூல்ல 2 வது படிக்கிறான். கவர்மெண்ட் சட்டை, சாப்பாடுதான்.  மாமியார் மாமனார் வயசானவங்க.  அலைஞ்சி வேல செய்ய முடியாது. வீட்டுல குழந்தைய பாத்துக்கிறாங்க. என்னயவாது எங்க வீட்டுல படிக்க வைச்சிருந்தா எதாவது கட கண்ணிக்குப் போயாவது வீட்டோட இருந்திருப்பேன், வெளியில இப்படி சுத்த வேண்டியதில்ல எல்லாம் என் தலையெழுத்து என்றார்.

எங்க தங்கறீங்க… நீங்களும் மெட்ராஸ் பக்காமாவே போய் வீட்டுக்காரரோட, இந்த வேலை பாக்கலாமே ஏன் பிரிஞ்சி வேலை செய்யணும் என்றேன்.

மெட்றாசுல….. எல்லாம் டீசன்டா இருப்பாங்க. அங்க, மொறம் பூசறது எல்லாம் கிடையாது. பிளாஸ்டிக் மொறம், சில்வர் மொறம்னு  வைச்சிருப்பாங்க.

அவங்கள மாதிரி டீசன்டா எல்லாம் எனக்கு இருக்க தெரியாது. இங்க காஞ்சிபுரத்துல கோயில் மடத்தாண்ட தங்கிக்குவேன். பக்கதுல கிராமங்கள்ள  மொறம் பூச தருவாங்க சோறுக் கேட்டாலும் போடுவாங்க, துணிமணி கேட்டாலும் கொடுப்பாங்க, நம்ம வீட்ல இருக்கற மாதிரி இருக்கும் என்றார்.

நான் அந்தப் பெண்ணிடம் பல விசயங்கள் பேசினேன். கடைசியாக, ரஜினி அரசியலுக்கு வர்றாரே தெரியுமா? என்றேன்.

நடிப்பாரு தெரியும்…. அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போறாரு? யாரு வந்தாலும் நான் கஷ்டப்பட்டாத்தான் என் புள்ளங்கள  காப்பத்த முடியும் என்று குழந்தையை இடுப்பில் அணைத்துக் கொண்டு கிளம்பினார்.

பக்கத்துல பஸ் ஸ்டாப்பு எங்க இருக்குக்கா? என்றார்.

இந்த தெரு கோடி  பஸ் ஸ்டாப்புத்தான். ஷேர் ஆட்டோவும் வரும். பொழுதோட போய்டலாம், என்றேன்.

அக்கா…மணி நால்ரைதான் ஆகுது. அடுத்த ஸ்டாப்புல போய் ஏறிக்கிறேன். அதுக்குள்ள யாரவது மொறம் பூச தருவாங்க  அதுக்கு அடுத்த ஸ்டாப்புக்கு வழி சொல்லு, என்றார்.  அடுத்த, பஸ் ஸ்டாப்புக்கு வழி சொன்னேன்.

…அந்தப் பெண் கிளம்பிவிட்டார்.  அவரது பையன் அப்பாவிடம் மழலையில் பேசிய பொங்கல் அழைப்பு வார்த்தைகள் நெடுநேரம் மனதைக் குழைந்தவாறு இருந்தது.

அனுபவம், படங்கள் : லட்சுமி