Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 459

விஜயேந்திரனுக்கு என்ன தண்டனை ? மாணவர்களின் எச்சரிக்கை வீடியோ !

13

விஜயேந்திரனுக்கு மாணவர்கள் எச்சரிக்கை !

தமிழை அழித்து, இந்தியை திணித்து, செத்த மொழி சம்ஸ்கிருதத்திற்கு சிங்காரம் செய்து இப்படியாக இந்தியாவில் பார்ப்பனியம் தலைவிரித்தாடுகிறது. அப்படித்தான் எச்ச ராஜாவின் ‘பிதாஜி’ வெளியிட்ட தமிழ் – சமஸ்கிருத அகராதி வெளியிடும் விழாவில், தமிழ்த் தாய் வாழ்த்தின் போது சின்ன சங்கரன் தெனாவட்டாக உட்காந்திருந்தார். இதை ஒட்டு மொத்த தமிழகமும் கண்டித்து வருகிறது.

இந்த வீடியோவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் சங்கராச்சாரிகளையும், பார்ப்பனக் கூட்டத்தையும் நேருக்கு நேர் குற்றம் சாட்டுகிறார்கள்.

உரை:

மிழ்னா அவ்ளோ இளக்காரம்!
ம்……
தமிழ்த்தாய் வாழ்த்துன்னா உனக்கு உடம்பே எரியுது,

***********

ராஜாஜி ரெண்டு வாட்டி இந்தியை திணிக்க பாத்தாரு.
மொத வாட்டி தாளமுத்து, நடராஜன்னு ரெண்டு பேர் தியாகியானாங்க!
விருகம்பாக்கத்துல அந்த தியாகிங்க வீட்டுக்கு
போன வருசந்தான் நாங்க போனோம்!
அவரு வாரிசுங்க உன்னமாதிரி மாட மாளிகையில வாழலடா

அவங்கள ஏண்டா கொன்னீங்கன்னு அன்னைக்கு ராஜாஜிகிட்ட கேட்டா சட்டசபையில எகத்தாளமா சிரிச்சாரு

அந்த எகத்தாளம்தானே உனக்கும்?

அன்னைக்கு இந்தி திணிப்பை எதிர்த்து ஜீயரா போராடினான்?
தமிழுக்காக போராடுன தலைவருங்கள்ள ஒருத்தரு யாரு தெரியுமாடா?
எங்க மூவலூர் ராமாமிர்தம் அம்மாடா!
தேவதாசி குலத்தில் பொறந்து அதை ஒழிக்க பாடுபட்ட எங்க அம்மாடா!

எங்க பொம்பளைங்களை தேவதாசியாக்கினது யாரு? நீங்கதான்.

தாசிகங்க எங்க வீட்டு பெண்ணுங்கண்ணா தேவருங்க யாரு?
நீங்கதானே பூதேவர்கள்?
கோயில்ல உடைக்கிற தேங்காயும் உனக்குத்தான்,
தேவதாசியும் உனக்குத்தான்.

சத்தியமூர்த்தி அய்யரு அன்னைக்கு என்ன சொன்னாரு?
தேவசாசிய ஒழிச்சுட்டா
அப்புறம் கடவுளுக்கு யார் சேவை செய்வாங்கன்னு குதிச்சாரு!
ஏன் நாங்கதான் சேவை செய்யணுமா
உங்க அய்யரு குடும்பத்து பொண்ணுங்கள சேவை செய்ய அனுப்புன்னு
உங்க பூணூலைக் கோத்துப் புடிச்சி கேட்டது
எங்க முத்துலட்சுமி அம்மாடா!

தேவதாசி முறை வேணும்னு சொன்னவன் உங்களுக்கு பெரியவாளா?
ச்சீ த்தூ, வெக்கமாயில்ல?

தமிழ்நாட்டு பெண் குலத்தை உங்க கிட்டேயிருந்து காப்பாத்துனது
பெரியாரும், திராவிட இயக்கமும்தான், தெரியுமாடா?

ரெண்டாவது வாட்டி இந்தி திணிப்பு கொண்டு வந்தப்போ
கவர்ண்மென்டு கணக்குப்படியே 70 பேரைக் கொன்னீங்க!

இப்டியே செத்துகிட்டே இருப்போம்னு நெனச்சியா?
அதனாலதான நீயும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுன போது உக்காந்திருக்க!

“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
ஏன் எந்திரிச்சு நிக்கலை” ன்னு கேட்டா – தியானமாம்

அதென்னடா தியானம்?
ஆ ஊன்னா தியானம் கிறாங்க
ஊரைக் கொள்ளையடிச்ச ஜெயலலிதா சமாதியில
மிச்சரு பன்னீரு குந்திக்கிணு தியானம்ங்குறாரு
சசிகலா பெங்களூரு ஜெயில்ல மவுன விரதமாம்! தியானமாம்!

உங்க ஜீயரு, பருப்புச் சோறை நெய்யில முக்கித் துண்ணுட்டு
பெருமாள் கோயில் வவ்வாலைப் பாத்துகினே குசு விட்டா
அதுக்குப் பேரு உண்ணாவிரதப் போராட்டமா?

இன்னாடா காமெடி பண்றீங்க?

*********

துல கதவத் தொற காத்து வரட்டும்னு தத்துவம் பேசுறான் ஒரு பாடு!
கதவைத் தொறந்தா காத்தா வருது? நாத்தமுல்ல வருது?
அவன் பேரு நித்தியானந்தாவாம்.

அவன் கம்பெனி பேரு சங்கர மடம்.
இவன் கம்பெனி பேரு நித்தியானந்தா தியான பீடமாம்!

நடிகையோட சாமியாருக்கு தனியா இன்னாடா வேலைன்னு கேட்டா,
அவனும் தியானம்கிறான்.

நித்தியானந்தா பெட்ரூம்ல தியானம் பண்றான்
விஜயேந்திரன் மேடையில தியானம் பண்றாராம்

ரஞ்சிதா மேட்டர்ல சிக்கினப்போ
நித்தியானந்தா என்ன சொன்னான் தெரியுமா?
ஆன்மீகவாதியை ஆன்மீகவாதிதான் விசாரிக்கணும்னான்

அதாவது இவரு பெட்ரூம்ல தியானம் பண்ணுனத
மடத்துல தியானம் செஞ்ச
தொழில் தெரிஞ்ச சாமியாருதான்
விசாரிக்கணுகுறான்.

ஒரு விதத்துல இதுவும் கரெக்டுதான்
பொம்பளை பொறுக்கிங்க, 420 ஃபிராடுங்க, கூலிக்கு கொல்றவங்கள
விசாரிக்கணும்மானா இன்னொரு ரவுடிதான செய்ய முடியும்?

பண்றதெல்லாம் பண்ணிபுட்டு சிக்காம தப்பிக்க தெரிஞ்சவன்தானே
பாஸ் ஆக  முடியும்.
அதுனாலதான் சங்கராச்சாரி பாஸ்.
அதுவும் லோகத்துக்கே கைடு பண்ற சூப்பர் பாஸ்

*********

நித்தியானந்தாவ பாரு

அந்தப்புரம் மாதிரி பொம்பள புள்ளைங்களா புடிச்சி போட்டிருக்கான்
எல்லாருக்கும் ஒரு காவித்துணியை சுத்தி விட்டு
சாமியாருங்கிறான்.
அவங்க வாயைத் தொறந்த வண்டை வண்டையா வருது
இதென்னடா புது டிரென்டா?

இனிமே பிராத்தல் நடத்துறவன் கூட
கஸ்டமருக்கெல்லாம் காவித்துணிய கட்டிவுட்டு
தியான பீடம்பான்.

கேள்வி கேட்டா,

எங்க இந்து மத உணர்வை புண்படுத்திட்டீங்க
பிராத்தல் வாசல்ல மண்டியிட்டு மன்னிப்பு கேள்னு
கேட்டாலும் கேப்பான்.

ஏன்னா, இது ஆன்மீக ஆட்சியாச்சே!

*******

க்தி, தியானம், சாமின்னா
இவங்களுக்கு அஜால், குஜால், கசமுசான்னு ஆயிப் போச்சு

சிவனடியார் ஆறுமுகசாமிய தெரியுமாடா?
அந்தத் தாத்தா முகம் இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குது

சிதம்ரம் நடராஜர் கோவில்ல
உள்ள மேடையில ஏறி நின்னு தேவாரம், திருவாசகத்த பாடினாரு

உனக்கு பக்தி இருந்தா நீ இன்னா பண்ணியிருக்கணும்!

ஒரு வயசான சாமியாரு பாடுறார்னு, அவர மரியாதை செஞ்சிருக்கணும்
என்னடா பண்ணீங்க!

ஒரு நாயை இழுத்துப் போட்டு அடிக்கிற மாறி அடிச்சீங்க.
இன்னக்கி ஆண்டாளு நோண்டாளுன்னு குதிக்கிறீங்க

அன்னக்கி ஏண்டா எந்த நாயும் கேக்கல?
ஏன்னா ஆறுமுகசாமி சூத்திரன்.
கருவறைக்குள்ளே சூத்திரனும் நுழையக் கூடாது
சூத்திரனோட தமிழும் நுழையக் கூடாது

விஜயேந்திரன் பேசுறான் பாரு

நடராசப்பெருமான் உடுக்கு அடிச்சாராம்
அதிலேருந்து சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் வந்திச்சாம்
வரும் வரும்.

உடுக்கடிச்சா இலக்கணம் வரும்
தவில் அடிச்சா  தத்துவம் வரும்
சொம்படிச்சா பதவி வரும்.

ஆனா உனக்கு ஆப்படிச்சிச்சிதுல்ல தமிழ்த்தாய் வாழ்த்து?

**********

விஜயேந்திரன் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
எழுந்திரிச்சி நிக்கல தெரியுமா?

அந்தப் பாட்டிலயே இவனுக்கு இருக்குது ஆப்பு.
உங்க தேவ பாடை மாதிரி பாடையில போகாம
உயிரோட இருக்குற மொழிடா எங்க தமிழ்னு
ஒரு ஆப்பு வச்சிருக்காரு மனோன்மணியம் சுந்தரனார்

“ஆரியம்போல் உலக வழக்கொழிந்து சிதையா உன் சீரிளமைத்திறம் வியந்து”
-அந்த ஆப்பு சங்கராச்சாரி ஆசனவாய்ல ஏறிடிச்சி

அதான் அந்தாளால எந்திருக்க முடியல.
ரெண்டாவது ஆப்பு – திராவிடம்

“எக்கணமும் அதிற்சிறந்த திராவிட நற் திருநாடும்” –
இந்த வரி எச்சை ராசாவின் வாயிலயே வச்ச ஆப்பு.

சங்கராச்சாரி ஏன் எழுந்து நிக்கிலேன்றது
அவன் பேச்சிலய தெரியுது பாருங்க

தென்னாட்டுக்கு தமிழாம்
என்னாட்டுக்கும் சமஸ்கிருதமாம்

எந்த நாட்டில எவன்டா பேசுறான் சமஸ்கிருதம்?

வயசுப் பொண்ணை எவனாவது பொணத்துக்கு கட்டி வைப்பானாடா?
செத்த மொழிக்கு எதுக்குடா உயிருள்ள மொழியில அகராதி?
அத எவனாவது பேச முடியுமா?

மொழி மட்டுமா செத்த மொழி ?

“யமஹா, நமஹா, ஸ்வாகா” ன்னு அந்த மொழிய எவனாவது பேசினா
பேசுறவன் சீக்கிரமே ஆஸ்துமா வந்து இருமி
ரத்தம் கக்கியே செத்துருவான்!

தயவு செஞ்சு பிஜேபி காரனெல்லாம் சமஸ்கிருதம் கத்துகிட்டு  – அதுலயே பேசுங்க
எங்களுக்கு வேலை மிச்சம்.

மர்டர் கேசுல உள்ளே போன ஒரு அக்யூஸ்டை
மேடை போட்டு உட்கார வைக்கிறியே
ஏண்டா ஒங்களுக்கெல்லாம் வெக்கமானமே கிடையாதா?

அதென்னடா தனி மேடை? சாதித்திமிர்தானே?
தட்டுல காசு, பெட்டுல பொம்பள –
இது ரெண்டுக்கும் மட்டும் தீட்டு பாக்க மாட்டீங்க அப்படித்தானே?

“சாமியார்னு சொல்லிக்கிட்டு பொம்பளை பொறுக்காதீங்கடா”ன்னு
சங்கரராமன்னு ஒரு யோக்கியன் சொன்னாரு

சொன்னவரு அய்யருன்னாலும், லோககுருவ நாறடிச்சிட்டாருன்னு
அவரை வரதராஜ பெருமாள் கோயிலுக்குள்ளயே வச்சி கொன்னீங்க
இன்னக்கி ஆண்டாளு ஆண்டாளுன்னு அலப்பறை பண்றீங்க

இந்த ஸ்டாண்டு வச்ச நாமம், வெக்காத நாமமெல்லாம்
அன்னக்கி எங்கடா போனீங்க?

ஆண்டாளுக்கு குதிக்கிறியே
பெருமாள் கோயில்ல கொலையே பண்ணினானே
அங்கே செத்தவனும் ஐயிருதானடா
நீங்க கொலைகார ஐயிருக்குத்தான்டா சப்போர்ட் பண்ணினீங்க?

காசைக் கொடுத்து கோல்மால் பண்ணி
மொத்தப் பேரும் வெளியே வந்துட்டா
நீங்களெல்லாம் யோக்கியனாயிருவீங்களா?

அப்போ சங்கரராமனை கொலையை யாரு பண்ணுணா?
வரதராஜப் பெருமாளா?

கேட்டா ஜெகத்குருங்கிறான்
எப்புடி?  உலகத்துக்கே… குருவாம்
அதாவது அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா
டிரம்ப், புடின், எல்லாருக்கும் சேத்து
இவனுங்க ரெண்டு பேரும்தான் குருவாம்.

ஏண்டா, காஞ்சிபுரத்துல இருக்கிறது என்ன ஐ.நா சபையா?

டேய்….. நண்டு கொழுத்தா வளையில தங்காதுங்கிறது
எங்களுக்கும் தெரியும்

நேத்து டிவி விவாதத்துல ஒரு பாப்பான் கேக்குறான்
தேசிய கீதத்துக்கு எழுந்து நிக்கலைன்னா தண்டனைன்னு சட்டம் இருக்கு
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிக்கலைன்னா தண்டனைன்னு சட்டமா இருக்குன்னு கேக்குறான்

ஐயிரு கேக்குறாருல்ல சொல்லுங்கப்பா

சின்னவாளு, பெரியவாளு, எச்ச ராஜா
இவங்க ரவுடித்தனத்துக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்?

செருப்பால அடிக்கலாமா?
சிறையில போடலாமா?
நாடு கடத்தலாமா?

சீக்கிரம் சொல்லுங்க!

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com

ஓட்டு கேட்டு வா துடப்பக் கட்டையாலே அடிப்பேன் ! வீடியோ

1

பேருந்து கட்டணக் கொள்ளை : கொந்தளிக்கும் கோயம்பேடு மார்க்கெட் தரைக்கடை வியாபாரிகள் ! வீடியோ

பேருந்து கட்டணத்தை அக்கியூஸ்டு அம்மா வழியில் அடிமை எடப்பாடி அரசு உயர்த்தி மக்களை வதைக்கிறது. இன்னொரு அடிமையான ‘தெர்மாகோல் விஞ்ஞானியோ’ மக்கள் கட்டண உயர்வை ஏற்றுக் கொண்டனர் என திமிராக கூறுகிறார்.

தங்கள் குமுறல்களையும், கோபங்களையும் கொட்டுகிறார்கள், சென்னை கோயம்பேடு காய் – கனி – பூ சந்தையில் உள்ள எளிய மனிதர்கள். பாருங்கள்… பகிருங்கள்…

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தொடரும் போராட்டங்கள் !

0
“பேருந்து கட்டண உயர்வு , நீ அடித்த கொள்ளைக்கு நாங்க ஏன் தாலி அறுக்கனும்!” என்ற முழுக்கத்தின் கீழ்  மக்கள் அதிகாரம் சார்பாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் 25-01-2018 மாலை 4 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் போலீசார் தடையை மீறி நடைபெற்றது.
இதில் திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இதில் தோழர் . மாயாண்டி தலைமை தாங்கினார். தோழர் கோபிநாத் கண்டன உறையாற்றினார். நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்தனர். “கூலி வேலை செய்து நாம பொழைக்கிறோம், இனி என்ன எந்த அமைச்சராவது வந்தால் ஊர் பக்கம் வரமல்  விரட்டியடிக்கனும். எவனுக்குமே ஓட்டே போடக் கூடாது” என்று மக்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினர். வெகு விரைவிலேயே வீதிக்கு வந்து போராடுவது தான் தீர்வு என்பதனை உணர்த்தும் வகையில் ஆர்ப்பாட்டம் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 தகவல் :
மக்கள் அதிகாரம் 
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு: 81485 73417.
________

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ தமிழகமெங்கும் பற்றி பரவட்டும்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாசலம். தொடர்புக்கு : 97888 08110.

__________

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கரூர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். அப்போராட்டம் மீண்டும் தொடரக்கூடாது என்பதால் கல்லூரியின் முதல்வர் பாண்டியம்மாள் மாணவர்களை மிரட்டும் தொனியிலும், மரியாதைக் குறைவாகவும் பேசியுள்ளார்.

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூாி முதல்வா் பாண்டியம்மாளின் அடாவடித்தனத்தை முறியடிப்போம்!

மிழக அரசே!

  • பேருந்து கட்டண உயா்வை எதித்து போராடிய மாணவா்களை மயிா், மட்டை, புடுங்கிறிவீங்களாடா, என பேசி மிரட்டிய பாண்டியம்மாள் பதவியை பறி!

ளைஞா்களே மாணவா்களே !

  • லட்சகணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரத் திமிரை அடக்குவோம் !
  • ஏழை எளிய மக்களை பாதிக்கும் பேருந்து கட்டண உயா்வை கட்டமறுப்போம்!

தகவல் :
புரட்சிகர மாணவா்- இளைஞா் முன்னணி.
கரூா்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து புமாஇமு கோயம்பேடு முற்றுகை !

0

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 25.01.2018 (இன்று) காலை 11:00 மணியளவில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் கோயம்பேடு பேருந்து நிறுத்த வாயிலில் போராட்டம் நடத்தப்பட்டது.

 

“போக்குவரத்துத்துறையின் நட்டத்திற்கு காரணம் அதிகாரிகள் அமைச்சர்களின் ஊழல் கொள்ளையே! ஆகவே நட்டத்தை ஈடுகட்ட அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம்!” என முழக்கங்களை எழுப்பினர்.

கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் கட்டண உயர்வை எதிர்த்து போராடும் நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைய வேண்டும். அரசு ஊழியர்கள், செவிலியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து போராட்டங்களையும் ஒருங்கிணைப்போம். இந்த கட்டண உயர்வை மாற்றும் வரை போராடுவோம் எனக் கூறினர்.

இந்த போராட்டத்தில் பள்ளி – கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். சரியாக பேருந்து வாயிலில் இப்போராட்டம் நடைபெற்றதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இப்போராட்டத்தை கவனித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போராட்ட முழக்கங்கள் :

  • போக்குவரத்துத்துறை நட்டத்திற்கு காரணம் அதிகாரிகள் – அமைச்சர்கள் ! அவர்களை ஏன் கைது செய்யவில்லை ?
  • போக்குவரத்துத் துரையை ஊழல் முரைகேடுகளால் கொள்ளையடித்த அமைச்சர்கல் – அதிகாரிகள் சொத்துக்களை பறிமுதல் செய் ! நட்டத்தை ஈடுகட்டு !
  • சீட்டு கிழிஞ்சி போச்சு… டாப்பு ஒடஞ்சி போச்சு… வெயிலில காயுறோம் ! மழையில நனையிறோம் என்ன மையி…க்கு கட்டண உயர்வு !
  • பேருந்து காட்டன உயர்வை ஏற்க மறுப்போம் ! கட்டணம் கொடுக்காமல் பயணம் செய்வோம் !
  • போக்குவரத்துத்துறையில் நட்டம் – நடத்தமுடியவில்லை என்றால் அரசு எதற்கு ? ஒதுங்கிக் கொள் ! மக்கள் பார்த்துக் கொள்கிறோம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை, தொடர்புக்கு – 94451 12675.

 

திருச்சியில் சின்ன சங்கரனுக்கு ம.க.இ.க-வின் செருப்படி பூஜை – வீடியோ

10

மிழை அவமதித்த சங்கராச்சாரி விஜயேந்திரனை எதிர்த்து திருச்சி பேருந்து நிலைய சந்திதிப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விஜயேந்திரனுக்கு செருப்படியுடன் பூஜை நடந்தது. இன்று (25.1.18 வியாழன்) நடந்த இந்தப் போராட்டத்தில் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போலீசு அவர்களை கைது செய்தது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

 

 

நினைவலைகளில் 2017 மெரினா போராட்டம் ஒரு தொகுப்பு – வீடியோ

0

நினைவலைகளில் 2017 மெரினா போராட்டம் ஒரு தொகுப்பு – வீடியோ

டந்த 2017 ஜனவரி மெரினா போராட்டமானது நமது நினைவுகளில் இருந்து நீங்கியிருக்காது. மோடி அரசுக்கும், பார்ப்பனியத்திற்கும் தமிழ் மக்கள் போர்க்குணத்துடன் பாடம் புகட்டிய போராட்டமது. அந்த போராட்டத்தின் சிறு கீற்றினை தொகுத்து தருகிறது, இந்த வீடியோ தொகுப்பு. இந்தக் காட்சிகள் பல வினவு செய்தியாளர்கள் எடுத்தவை. பாருங்கள்… பகிருங்கள்…

 


 

பேருந்து கட்டணம் : மக்களின் இரத்தத்தை அட்டையாக உறிஞ்சும் அரசு !

0

பேருந்து கட்டணம் மட்டுமல்ல – அனைத்திலும் மக்களின் இரத்தத்தை அட்டையாக உறிஞ்சும் இந்த அரசு இனியும் நீடிக்கலாமா ?

பொதுமக்களே, மாணவ சமூகமே !

விடாதே. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்து “நீ அடிச்சகொள்ளைக்கு நாங்க ஏன் தாலி அறுக்கணும்?” என்று கேள்வி எழுப்பு !

லாப நட்டம் பார்ப்பதற்கு அரசு என்ன அம்பானியின் கிளை நிறுவனமா? போக்குவரத்துத் துறை நட்டத்திற்கு காரணமானவர்களை ஜெயிலில் ஏன் போடவில்லை? கொள்ளையடிச்ச அமைச்சர்கள் – அதிகரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து நட்டத்தை ஈடுகட்டு.

கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய வற்றை அனைவருக்கும் வழங்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள் உன்னை யார் ஆளச்சொன்னது?

150 ரூபா விவசாயக்கூலியில், தினமும் காலேஜுக்கு செல்லும் மாணவருக்கு எப்படி 50 ரூபாய் கொடுக்க முடியும்? ஒரு நாளைக்கு 100 ரூபா செலவு செஞ்சு 2 பிள்ளைகளை படிக்கவைக்க முடியுமா? 250 ரூபாய் சம்பளத்தில் 80 ரூபாய் பஸ் கட்டணம் என்றால் நாங்க வாழ்வதா இல்லை சாவதா?

விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு வேலை கொடுக்க துப்பில்லை. உத்திரவாதமான சம்பளம் இல்லை. விக்கிற விலை வாசியில் வாழ முடியல, கட்டண உயர்வை அறிவிக்க அரசுக்கு என்ன அரு கதை இருக்கு?

தனியார் பேருந்து லாபத்தில் ஓடும்போது, அரசுப் பேருந்து எப்படி நட்ட மாகும்? டீசல் வரி, டோல்கேட் வரியை தள்ளுபடி செய்! அதிமுக அமைச்சர்கள் சிலரது ஊழல் பணத்தை பறிமுதல் செய்தாலே பல ஆண்டுகால நட்டத்தை ஒரேநாளில் சரிசெய்ய முடியும்,

நட்டத்தை மக்கள்தான் ஏற்க வேண்டுமாம்? பேருந்துக் கட்டணத்தை குறைக்கமுடியாதாம்? மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்களாம்,தெர்மக்கோல் முட்டாள் சொல்கிறார். தமிழகத்தில் மாணவர்கள் என்ற போராட்ட வெள்ளம் இந்த கிருமிகளை நிரந்தரமாக அழிக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்கள் தமிழகமெங்கும் போராடி வருகிறார்கள், பள்ளி மாணவர்கள்கூட போராடுகிறார்கள். “பழைய கட்டணம்தான் தருவோம், புதிய கட்டணம் கொடுக்க முடியாது: யாரை கேட்டு இவ்வளவு கட்டணத்தை உயர்த்தினாய், திரும்பப்பெறு” என தமிழகம் முழுவதும் அனைத்து பஸ்களி லும் மக்கள் புதிய கட்டணம் செலுத்த முடியாது என மறுத்தால், அரசு என்ன செய்ய முடியும்?

எதிரி அடித்தால் தடுக்க வேண்டும் அல்லது திருப்பி அடிக்க வேண்டும் ஓடிக்கொண்டே இருந்தால் விரட்டி விரட்டி அடிப்பான். அதுபோல் மக்களுக்கு எதிரான இந்த அரசின் தாக்குதல்களை நாம் எதிர்த்து போராடா மல் சகித்து கொண்டு போவதால்தான் நள்ளிரவில் இரு மடங்கு அரசுப் பேருந்து கட்டண உயர்வை அமுல்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து மத்திய – மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரங்களை – வாழ்வுரிமைகளைப் பறித்து அகதிகளாக, அடிமைகளாக மாற்றி வருகிறன்றன. நமக்கு பயன்படாத அரசை நாம் ஏன் மதிக்க வேண்டும். நம் வரிப்பணத்தை வாரிக்கொடுத்து ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

மக்களுக்கு எதிரான இந்த அரசின் அதிகாரத்தை அமுல்படுத்த விடாமல் கீழிருந்து மக்களை பயிற்றுவிக்கும் போராட்டமாக மாற்ற வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம் – 91768 01656

 

சின்ன சங்கரனை குண்டர் சட்டத்தில் கைது செய் ! கொதிக்கிறது ஃபேஸ்புக் !

123

ச்ச ராஜாவின் தந்தையார் “தமிழ் – சமஸ்கிருதம்” அகராதி தயாரித்து, அதை வெளியிடும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த போது சபை நாகரீகத்துக்காகக் கூட எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தார் சின்ன‘வாளு’. அதனை பல முகநூல் பதிவர்களும் கண்டித்துள்ளனர். இதே விஜயேந்திரன், தேசிய கீதம் பாடும் போது மட்டும் எழுந்திருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏன் எழுந்திருக்கவில்லை என்றால் அப்போது அவர் தியானம் செய்தாராம். இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறது, காஞ்சி சங்கர மடம். அவாளின் கொழுப்புத் திமிரை ஆக்ரோசமாக கேள்வி கேட்கிறார்கள் நமது தமிழ் ஃபேஸ்புக் பதிவர்கள்.

– வினவு

*****

 Arul Doss Borntowin

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் , மதக் கலவரத்தை தூண்டும் எச்.ராஜா , மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து பேசி வரும் நித்தியானந்தா பெண் சீடர்கள் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவானதே .

__________

__________

KR Athiyaman

அந்த நிகழ்ச்சியில் எதுக்கு தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பனும் ? அருமை தெரியாதவர்கள், அடிப்படை சபை நாகரீகம் தெரியாதவர்கள் chief guestஆ இருக்கும் நிகழ்ச்சியில் இதை இசைத்தது தான் தவறு.

_______________

Nelson Xavier

கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்ல திருமண விழாவில் வீட்டார் அன்போடு தந்த குங்குமத்தை நெற்றிப் பட்டையில் இட்டும், திருச்சியில் இராமசாமி அய்யர் கட்டிய மகளிர் கல்லூரி திறப்பு விழாவில் சமஸ்கிருதத்தில் ஒலித்த இறை வாழ்த்துப் பாடலுக்கு சபை மரியாதைக்காக எழுந்து நின்ற பெரியாரின் அணுகுமுறைதான் இந்த மண்ணின் பெருமிதம்.

யாருக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்பதல்ல, யாரிடமிருந்து பாடம் கற்கப் போகிறோம் என்பதே எப்போதும் முக்கியம்

_________

“தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர்,
மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்”

-தந்தை பெரியார் திராவிடர் கழகம் .

_______________

Thiru Yo

செத்துப்போன தனது தாய்மொழிக்காக ‘தியானமிருந்த’ விஜயேந்திரனை இப்படி வறுத்தெடுக்கலாமா?

_______________

Panuval Mugund

இனி தேசிய கீதம் பாடும் போது தியானம் செய்வோம் என்று உறுதி ஏற்ப்போம்

-காஞ்சி பாறைகள்

_______________

_______________

Poornachandran Ganesan

ஓர் ஆள், மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்கவில்லை. தேசியகீதம் பாடுமபோது மட்டும் எழுந்து நிற்கிறார். தமிழ அவருக்குத் தாய்மொழியாக இல்லாமல் போனால் போகிறது. மேடை மரபைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லையா? எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்தந்த நாட்டின் மரபுகளுக்கு மரியாதை கொடுத்து எழுந்து நிற்பதுதான் நல்லொழுக்கம். அதெல்லாம் இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

நேற்று (23.1.2018) சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூனியர் காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திரர், ஆளுநர் மற்ற சிலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நேரத்தில் எழுந்து நிற்காமல், இறுதியில் தேசியகீதம் என்ற ஜன கன மண பாட்டுப் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார் என்ற செய்தி இன்றைய (24.1.2018) டெக்கான் கிரானிக்கள் ஆங்கில நாளேட்டில் வந்துள்ளது!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு!

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்து, பிறழ் சாட்சிகள் 83 பேர்களின் தயவால் கொலைக் குற்றத்திலிருந்து, புதுவை செஷன்ஸ் கோர்ட்டில் விடுதலை பெற்று, மேல்முறையீடு செய்யாது தப்பித்துக் கொண்டதால், வெளியில் நடமாடும் இவர், அந்த சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அதுவும் ஆளுநர் போன்றவர்கள் எழுந்து நின்ற நிலையில்கூட, எழுந்து நிற்க மறுத்து, அடாவடித்தனமாக அப்படியே அமர்ந்திருப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இது அவை நாகரிகத்திற்கேகூட அவமரியாதை அல்லவா?
தமிழ் நீஷ பாஷை – சமஸ்கிருதம் தேவ பாஷை என்று கருதும் – கூறும் புத்திதானே இதற்கு மூலகாரணம்?

தந்தை பெரியார் கட்டிக் காத்த தனிப் பண்பாடு

தள்ளாத வயதில்கூட, கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில், கடவுள் வாழ்த்து பாடப்பட்ட நேரத்திலும், நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பாற்றிய வரலாறு நாடறிந்த ஒன்று அல்லவா!

இன்னமும் மொழியிலும் உயர்வு- தாழ்வு மனப்பான்மை, பேதத்தன்மை, பார்ப்பனர்களிடம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்!

மன்னிப்புக் கேட்கவேண்டும் சங்கராச்சாரியார்!

தமிழ்நாட்டிலிருந்து கொண்டு, தமிழர்களிடம் காணிக்கை கணிசமாகப் பெற்றுக்கொண்டு பிழைக்கும் பார்ப்பன மடாதிபதியின் தமிழ் அவமதிப்பை – தமிழர்கள் புரிந்துகொள்வார்களா – அம்மேடையில் அமர்ந்திருந்த பட்டிமன்றப் புலவர் சாலமன் பாப்பையா உள்பட?

தமிழர்களே அடையாளம் காண்பீர்! சங்கர மடம் இதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்!

-கி.வீரமணி, தலைவர்
திராவிடர் கழகம்.

_______________

Karthik Meka

வள்ளலாரை ஏற்று கொள்வதும் தமிழ் அய்யா வழியை ஏற்று கொள்வதும் தமிழ். காஞ்சி மடத்தை விரட்டுவதும் தமிழ். நித்தியானந்தாவை விரட்டுவதும் தமிழ்.

தமிழுக்கு ஆக்கவும் தெரியும் அழிக்கவும் தெரியும்.

_______________

Shankar A

இப்படி தமிழர்களையும் தமிழையும் தொடர்ந்து அவமதிப்பீர்கள். நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா ? உங்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை ? வெளியேறுங்கள்.

_______________

_______________

Mathava Raj

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எல்லோரும் எழுந்து நிற்கும்போது நீ ஏன் எழுந்து நிற்கவில்லை என்று கேட்டால், அந்த நேரம் அவாள் தியானத்தில் இருந்ததாகவும், கடவுள் வாழ்த்தின் போது பெரியவாள், சிறியவாள் எல்லாம் தியானத்தில் இருப்பதுதான் வழக்கம் என்றும் ஒரு விளக்கம் மடத்திலிருந்து தரப்பட்டு இருக்கிறது.

தமிழ் மொழியை, தமிழர்களை துச்சமாக மதித்து விட்டு அதற்கு இப்படியொரு திமிரான விளக்கம் அளிக்க பார்ப்பனிய பீடங்களுக்கு மட்டுமே இங்கு சாத்தியமாகும்.

அந்த எழவு தியானத்தை எழுந்து நின்று செய்தால் என்ன, மடத்தின் குடி முழுகியாப் போய்விடும்?

_______________

Keetru Nandhan

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி விஜயேந்திரனால் தமிழர்களின் மனம் புண்பட்டு விட்டது. எனவே மனோன்மணியம் சுந்தரனார் சமாதிக்குச் சென்று அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது…

அவர் மன்னிப்பு கேட்கும்வரை, இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் காஞ்சி மடத்தின் முன்பு தொடர் போராட்டங்களை அறிவிக்க வேண்டும்.

_______________

ராஜா ஜி

தமிழ்த்தாய் வாழ்த்தை முழுவதும் பாடினால் மட்டுமே ஆரியம் நடுநடுங்கும், 1970-இல் கலைஞரின் பெருந்தன்மையால் விடுபட்ட இந்த வரிகளை பாடி மனோன்மணியம் சுந்தரம்பிள்ளைக்கு நன்றி சொல்லுவோம்;
இதோ பாடல் வரிகள்…..?

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.
இதை இணைத்தே பாடுவோம், ஆரிய கூட்டம் நடுங்கட்டும்…..

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.

_______________

Kasi Krishna Raja

கல்வி அறிவற்ற ஒரு தற்குரி பிராமணன் ஒரு அடி மேலே…உயர் தமிழறிவு பெற்ற பேராசான் பாப்பையா ஓரடி கீழே…இது தான் பிராமண ஹிந்தியா…நீ பண்ணிய செயலுக்கு பாப்பையாவும் இந்நேரம் தீவிர தமிழ் தேசியவாதியாகியிருப்பார். தமிழன் மதமற்றவன். உன் அஸ்திவார செங்கல்லை ஓவ்வொன்றாக உருவுவோம்.

_______________

R T Muthu

விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவின் பொழுது தேசிய கீதமும் இசைப்பது என்பது தமிழ்நாட்டில் யாவரும் பின்பற்றும் நடைமுறை என்று , சின்னசங்கரனுக்கு அந்த காமாட்சி கூட, அசரீரி சொல்லவில்லையா?

_______________

மலையமான் தே.கி.

ஆண்டாள் டிஸ்சார்ஜ்ட்; சங்கராச்சாரி சின்னது அட்மிட்டட்..(பெருசும் அட்மிட்டட் தான்)

_______________

Villavan Ramadoss

ஐ திங்க்,

நாம ஈக்வலா ஓட்ட வேண்டியது சாலமன் பாப்பையாவையும்தான். சோறு திங்கிறது இங்க, பில்லை கட்டுறது அங்கயா?? ஜயேந்திரா, என்னை வாழ்த்தும்போது ஏண்டா ஏந்திரிக்கல?

_______________

ராஜா ஜி

ஏற்கனவே வைரமுத்து – ஆண்டாள் பிரச்சினையில் மாட்டிக்கிட்டோம்,
இப்போ விஜயேந்திரன் பிரச்சினை வேறு வந்துவிட்டதே!
– புலம்புறது யாரு தெரியுமா?

வைரமுத்துவை அழைத்து, விழா ஏற்பாடு செய்த தினமணி வைத்தியநாதய்யர் செய்யாத தப்புக்கு அய்யங்கார் ஜீயரிடம் மன்னிப்பு கேட்டுட்டார்.

எச்.ராஜா சர்மா முன்னிலையில் தமிழை அவமதித்த சங்கரரை , சர்மாஜி என்ன சொல்லி திட்டப்போகிறார்?
சர்மாஜியை நித்தியானந்த சீ.டிகள் என்ன அர்ச்சனை செய்யப் போகிறார்கள்?
நைனார் நாகேந்திரன் யாருக்கு என்ன விலை வைக்கப்போகிறார்?
தலை உருளப்போகிறதா?
நாக்கை வெட்ட வேண்டுமா?
மாமிகள் தலைமையில் போராட்டம் தொடங்கிய ஜீயர் என்ன செய்யப்போகிறார்?
2000 சிப்ஸ் விஞ்ஞானி எஸ்.வி.சேகரின் வாய்மூலம் என்ன?

_______________

Sivasankaran Saravanan

தேசியகீதம் பாடினால் எழுந்து நில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தலை வணங்கு, தேசிய கொடியை கண்டால் வணக்கம் செலுத்து என்றெல்லாம் நிர்ப்பந்தப்படுத்துவதற்கு நாம் நீதிமன்றம் போல கொடுங்கோலர்கள் அல்ல.

ஆனால் தேசியகீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க தெரிந்த விஜயேந்திரருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது தெனாவட்டாக உட்கார்ந்திருந்தார் என்றால் அது நிச்சயமாக தமிழர்களையும் தமிழையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான்.

என்னதான் அவர்கள் தமிழ்நாட்டில் உண்டு, தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி கொழுத்தாலும் ஆரியக்கூட்டம் தங்களை தமிழர்களாக உணரமாட்டார்கள் என்பதற்கு இதுவே சான்று!

தமிழ்த்தாயை அவமானப்படுத்தி ஒட்டுமொத்த தமிழர்கள் மனதையும் புண்படுத்திய சங்கராச்சாரி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்!

_______________

வினோத் களிகை

செய்யாத தவறுக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்க சொன்னார்கள்

இப்போ (இந்து) தமிழரால் பிழைப்பு நடத்தும் காஞ்சி சின்னவா தமிழ்த்தாயை அவமரியாதை செய்துட்டா

மன்னிப்பு கேட்பாரா? மன்னிப்பு கேட்க செல்வார்களா?

_______________

இரவிக்குமார்

“ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ”
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே…

என்றிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏன், கலைஞர் 1970-ல் ” ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ” என்ற வரிகளைக் கலைஞர் ஏன் உருவினார்?

அங்கிருந்து துவங்குகிறது திராவிடத்தின் வாயடைத்தது…

அத்தகைய திருத்தம் செய்தவர், “செயல் மறந்து வாழ்ததுதுமே” என்பதைச் “செயல் புரிந்து வாழ்த்துதுமே” என்று திருத்தியிருந்தால் அது வரவேற்கத் தக்கதாயிருந்திருக்கும்…

அன்றிலிருந்தே தமிழை வளர்க்கும் செயல் மறந்துதான் போனார்கள் திராவிடக் கட்சியினர்…

அதன் நீட்சிதான், இன்றும் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாகவில்லை, கல்வி மொழியாகவில்லை, வழக்கு மொழியாகவில்லை, மருத்துவ மொழியாகவில்லை, பொறியியல் மொழியாகவில்லை…

திராவிடக் கட்சியின் தலைகள் பலரும், தமிழ்ப்பள்ளி துவங்கவில்லை… ஆங்கிலப் பள்ளிகளைத் திறந்து, அங்கே தமிழில் பேசினால், பேசுகிற மாணவருக்குத் தண்டனை வழங்கும் வழக்கத்தை இயல்பாக நிறுவினர்…

தமிழ் கற்காமலேயே மிக்குயர் கல்வி வரை ஒருவர் தமிழ்நாட்டில் மட்டுமே கற்க முடியும்…

உலகத் தமிழ் மாநாடுகளைப் படாடோபமாய் நடத்தி என்ன பயன்?

தமிழர் நாவுகளிலிருந்து தமிழை அறுத்தெறியும் கொடுமையை இவர்களின் புற்றீசல் ஆங்கிலப் பள்ளிகள் செவ்வனே செய்கின்றன…

அதோடு ஏற்கெனவே உள்ள வடக்கு அபாயங்களான இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு…

தமிழ் இத்தனை இடிகளையும், துரோகங்களையும் தாண்டித்தான் மக்கள் நாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது…

_______________

பெருமாள்சாமி சுப்புராஜ்

தமிழ் மொழியை அவமரியாதை செய்த விஜயேந்திரன் காஞ்சிபுரம் மடத்தின் வாசலில் நின்று கொண்டு அங்கு வருவோர் போவோர் காலில் எல்லாம் ஒரு நாள் விழ வேண்டும் அப்போதுதான் செய்த தவறுக்கு தமிழகம் ஓரளவுக்கு அமைதியாகும் . தமிழுக்காகவே ஆண்டாள் பிரச்சினையில் குரல் கொடுத்த ராஜா இதை வலியுறுத்துவார்

 

கட்டணம் இல்லா பேருந்து பயணம் – சென்னையில் துவங்கியது மக்கள் அதிகாரத்தின் போராட்டம் !

2

நள்ளிரவில் பேருந்துக் கட்டண உயர்வை அறிவித்து மக்களிடம் வழிப்பறி செய்து வருகிறது எடப்பாடியின் தலைமையிலான பாஜகவின் அடிமை அரசு. இந்த அநீதியான கட்டண உயர்வு மக்களிடம் ஏற்படுத்திய கொந்தளிப்பைப் போராட்டமாக மாற்றுவதற்கு மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்து வருகிறது. மக்களோடு போராடியும் வருகிறது. சென்னையில் மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்களான ஐந்து மாணவிகள் பாரிமுனை பேருந்து நிலையத்தில் 21.1.2018 அன்று நடத்திய பிரச்சாரத்தின் அனுபவத்தை அவர்கள் மொழியிலேயே தருகிறோம்.

*****

காலை 10 மணியளவில் பாரிமுனை பணிமனைக்குள் நுழைந்தோம். முதலில் பேருந்து கட்டண வழிப்பறியை கண்டிக்கும் சுவரொட்டிகளை பணிமனை முழுவதும் ஒட்டினோம். அதைப் படித்த மக்கள் மோடியின் பினாமி எடப்பாடி கும்பல் மீது கோபத்தைக் கொட்டினார்கள். சரியாக சொன்னால் கழுவி ஊற்றினார்கள்.

பாரிமுனை பேருந்து நிலையம் மாதிரிப்படம்

பின் பேருந்துகளில் ஏறி பிரச்சாரத்தைத் தொடங்கினோம். போராட்ட முழக்கம் எழுதப்பட்ட அட்டையை உயர்த்திப் பிடித்தோம். இந்த சின்னப் பொண்ணுங்க என்ன செய்யப் போகுதுங்க என கேள்வி மக்களின் கண்களில் தெரிந்தது.

  • போக்குவரத்து துறையை மொட்டை அடிக்குது அதிகாரிகள் கும்பல்!
  • பி.ஜே.பி பினாமி அதிமுக அரசின் ஊதாரி செலவை ஈடுகட்டவே கட்டணக் கொள்ளை!
  • ஊழல் கும்பலை சந்தியில் விட்டு செருப்பால் அடிப்போம்!
  • கட்டண உயர்வை செலுத்த மறுப்போம்!

என நாங்கள் முழக்கம் எழுப்பியதும் அனைவரும் ஆர்வமுடன் கவனித்தனர். ஒரு தோழர் மக்களிடம் பேச ஆரம்பித்தார் “போக்குவரத்து துறை நஷ்டத்துக்கு காரணம் நிர்வாகத்தோட ஊழல்தான். நாம கொடுக்கிற காசையும், தொழிலாளிங்க காசையும் அள்ளித் தின்ன அதிகாரிகளும், அமைச்சர்களும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள். இப்போ நஷ்டம்ங்கிற பேருல திரும்பவும் நம்ம கிட்ட கொள்ளையடிக்க வர்ராங்க. இந்த ஊழல் கும்பல் திருடி சேர்த்த சொத்தை பறிமுதல் செஞ்சா நஷ்டத்தை ஈடுகட்டலாம். அதனால, பேருந்து கட்டண உயர்வை செலுத்த மறுப்போம்.” –என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து, மக்கள் துண்டறிக்கைகளை கேட்டுவாங்கி படிக்க ஆரம்பித்தனர். இக்கருத்துக்கள் சரியென அனைவரும் பேசினார்கள். பழைய கட்டணம்தான் கொடுப்பேன்னு சொல்லுங்க, இல்லைன்னா டிக்கெட் எடுக்க மாட்டேன்னு சொல்லுங்க என்ற போது தயங்கினார்கள். மற்றவர்களை ஏமாற்றி வாழக் கூடாது என்ற உழைக்கும் வர்க்கத்தின்நேர்மை உணர்வு அந்த தயக்கத்தின் பின்னே இருந்தது. நாம் யாரையும் ஏமாற்றவில்லை. இந்த அரசுதான் நம்மளை ஏமாத்துது. பழைய கட்டணத்தை செலுத்த தயாராகத்தான் இருக்கிறோம். ஈவு இரக்கமில்லாத இந்த அரசை பணிய வைக்க வேறு என்ன வழி இருக்கிறது என பேசினோம்.

இதே போல மதியம் வரை பிரச்சாரம் செய்தோம். எல்லா பேருந்துகளிலும் மக்கள் நம் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், பேருந்துகள் கிளம்பும் போது டிக்கெட் வாங்கினார்கள். மக்களின் தயக்கத்தை எப்படி உடைப்பது என விவாதித்தோம். மக்களின் தயக்கத்தை வெறும் வார்த்தைகளால் உடைக்க முடியாது. அதற்கு செயல் வேண்டுமென புரிந்து கொண்டோம். அதன் பின்னர் பேருந்தில் பிரச்சாரம் செய்வதோடு நின்று கொள்ளாமல் மக்களோடு பயணம் செய்து டிக்கெட் எடுக்காமல் இருந்து நம்பிக்கையூட்டுவது என முடிவு செய்தோம்.

பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய 15G பேருந்தில் ஏறினோம். அதே போல முழக்கம், பிரச்சாரம். பேசி முடித்ததும் மக்களின் குமுறல் வெளிப்பட்டது. ஒரு பெரியவர் சொன்னார் “ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடிக்கணும்னு சரியா சொல்றேம்மா. அந்த நோட்டீசை கொடும்மா. எங்க ஊருல மத்தவங்க கிட்ட கொடுக்கிறேன்” என்று சொல்லி ஒரு கட்டு துண்டறிக்கைகளை வாங்கினார்.

இன்னொரு அம்மா நடத்துனரைப் பார்த்து, “நீங்க போராடுனதால தான் டிக்கெட் வெலைய ஏத்திடாங்க” என்றார். உடனே அவர், “அந்த பிள்ளைங்க சொன்னத கேட்டுட்டு பேசும்மா” என்றார். நாம் அந்த அம்மாவிடம் அதிகாரிகளின் ஊழலை எடுத்து சொல்லி, அவர்கள் அடித்த கொள்ளையை ஈடுகட்ட தொழிலாளிகளோட பி.எஃப் பணம் 7000 கோடியை சுருட்டிக்கிட்ட கொடுமையை விளக்கினோம். மக்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னோம். நமக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஓட்டுநர் மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

இந்த சூழலில் நடத்துநர் டிக்கெட் கொடுக்க எழுந்தார். மக்களிடம் நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட தயக்கம் வெளிப்பட்டது.

எங்களைத் தவிர எல்லோரும் டிக்கெட் எடுத்தார்கள். ஆனால், 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி டிக்கெட் எடுக்க மறுத்தார். “இந்த பிள்ளைங்க சொல்றதுதான் சரி. டிக்கெட் விலையை குறைக்கிற வரை நான் டிக்கெட் எடுக்க மாட்டேன்.” என ஓங்கிய குரலில் அறிவித்தார். அந்த அறிவிப்பு ஒரு போராட்ட விதையின் துவக்கமாக இருக்குமா? என்ற யோசனையுடன் சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம்.

இறங்கும் போது ஓட்டுநர் , “பார்த்து பத்திரமா இறங்குங்கம்மா”, என்று அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து 15B பேருந்தில் ஏறினோம். அங்கும் இதே போல முழக்கத்தோடு, பிரச்சாரத்தோடு ஆரம்பித்தோம். முதல் பேருந்தை விட இங்கு நிறைய ஆதரவு இருந்தது. ஒரு மாணவர் “இவங்க சொல்றதுதான் சரி. அவனுங்க கொள்ளையடிக்க நான் காசு தர மாட்டேன். நீங்களும் யாரும் டிக்கெட் எடுக்காதீங்க” என்றார். இதே போல பலர் டிக்கெட் எடுக்க மறுத்தார்கள். அரசைக் கிழித்து தொங்க விட்டார்கள்.

எழும்பூரில் நாம் இறங்கிய போது ஒருவர் சொன்னார், “மக்கள் அதிகாரம் கீழே இறங்கிட்டாங்க இனி அவ்வளவுதான்”. இதைக் கேட்டதும் மீண்டும் பேருந்தில் ஏறிக் கொண்டோம். மக்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னோம். பலர் அமைப்பின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்கள். அவர்களது எண்ணைக் கொடுத்தார்கள். தங்கள் பகுதிகளில் நம் பிரசுரத்தை விநியோகிக்கப் போவதாக சிலர் கூறினார்கள்.

ஒரு பாட்டி நம்மிடம் 100 ரூபாயை நீட்டி, “பசியோட இருப்பீங்க ஏதாவது சாப்பிடுங்கம்மா” என்றார். அவருடைய பாசத்தை ஏற்றுக் கொண்டு சொன்னோம், “பாட்டி, நாங்க இந்த காசுல இந்த நோட்டீசை ஜெராக்ஸ் எடுத்து மக்களுக்கு கொடுப்போம். ” என்றோம். அவர் மகிழ்ச்சியுடன் தலையாட்டினார். அரை மணி நேர பயணத்தில் கிடைத்த புதிய சொந்தங்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறங்கினோம்.

அடுத்து கோயம்பேட்டிற்கு சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் ஏறினோம். நாம் முழக்கம் போட ஆரம்பித்ததும் நடத்துனர் தடுத்தார். நாம் அவருக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்த போதே ஓட்டுநர் நாம் யாரென விசாரித்தார். நமது முழக்க அட்டையைப் பார்த்ததும் சொன்னார், “மக்கள் அதிகாரம் நமக்காக போராடுனவங்களாச்சே. எல்லா இடத்திலேயும் உங்க போஸ்டரை பார்த்து இருக்கேன்மா” என நம்மை அடையாளம் காட்டினார். நம் பேச்சைக் கேட்டு இங்கும் பலர் டிக்கெட் எடுக்கவில்லை.

இந்தப் பேருந்தில் ஒரு வயதான அம்மா நம்முடன் சேர்ந்து கொண்டார். உற்சாகமாக முழக்கம் போட்டார். பிரச்சனைக்கு அவர் சொன்ன தீர்வு முக்கியமானது. “மக்களைக் கொள்ளையடிச்சி ஜெயலலிதா சேர்த்த எல்லா சொத்தையும் எடுத்து போட்டு நஷ்டத்தை ஈடுகட்ட சொல்லு அவனை….”. நாம் வண்டியை விட்டு கீழே இறங்கும் போது மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார், “எனக்கும் உங்களோட வரணும்னுதான்மா ஆசையா இருக்கு. ஆனா இன்னைக்கு அடகு கடைக்கு போகணும். கடையை மூடிடுவான். அதான் …”

அன்று முழுவதும் பயணங்களைப் பிரச்சாரம் ஆக்கினோம். நாம் எதை செய்தாலும் மக்கள் வாய் மூடி மவுனியாக இருப்பார்கள் என மக்களைப் புழுவாகப் பார்க்கும் இந்த அரசுக்கு எதிராக மக்களால் பேச முடியும், போராட முடியும் என்பதை நேரடியாக அறிந்து கொண்டோம்.

எங்களைப் போன்ற நூற்றுக் கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மக்கள் அதிகாரத்தின் தலைமையில் பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் நடத்தி வருகிறோம். இந்த எண்ணிக்கை லட்சக்கணக்காக மாறினால் அரசின் எல்லா வழிப்பறிகளையும் ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியுமே என்ற ஏக்கம் நெஞ்சை வாட்டுகிறது.

அதனால்…

வாருங்கள், எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாம் இணைந்தால் மெரினா தூரமில்லை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.

 

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் !

0

மிழக மக்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது பேருந்து கட்டண உயர்வு. போக்குவரத்துத் துறையை அதிகாரிகள் அமைச்சர்கள் ஊழலால் சூறையாடி, கழகத்தின் சொத்துக்களை அடமானம் வைத்து திவாலாக்கிவிட்டு அந்த சுமையை மக்களின் தலையில் இறக்கியுள்ளது.

இன்றைய சூழலில் அனைத்துபக்கங்களில் இருந்தும் மக்களின் எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத்தொடங்கியுள்ளன. மாணவர்கள் 22.01.2018 அன்றே பல இடங்களில் தன்னிச்சையாக போராட ஆரம்பித்தனர். தமிழகம் முழுக்க பல்வேறு கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு, சாலை மறியல் என 23.01.2018 அன்றும் போராட்டம் தொடர்ந்தது. அந்த போராட்டங்களில் சிலவற்றை இங்கு தொகுத்துத் தருகிறோம்.

*****

திருச்சி ஈ.வெ.ரா அரசுக் கல்லூரியில் பேருந்து கட்டண உயர்வை  கண்டித்து போராட்டம்.

டுபிடி எடப்பாடி அரசின் பேருந்து கட்டண உயா்வை கண்டித்து ஈ.வெ.ரா அரசுக் கல்லூரியில் மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்புடன்  போராட்டம் நடைபெற்றது. இன்று காலை, மதியம் கல்லூரி வாயில் முன்பாக மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மாணவா்கள் அனைவரும்  பேருந்து கட்டண உயா்வை வாபஸ் பெறுமாறும், கையாலாகாத இந்த அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். இதில் நிரோஷா என்ற மாணவி,

“தான் மணப்பாறையில் இருந்து வருவதாகவும்  பழைய கட்டணமாக 15 ரூபாயிலிருந்து இப்போது 35 ஆக ஊயா்த்தப்பட்டுள்ளது. நான் பகுதி நேரமாக வேலைபார்த்து தான் என்னுடைய பேருந்து செலவை ஈடுசெய்து படித்தும்  வருகிறேன். இப்போது புதிய பேருந்து கட்டண உயா்வால் என்னால் கல்லூரிக்கு வருவதே சிரமமாகியுள்ளது. இதனால் என் வீட்டில் நீ படித்தது போதும் படிக்க வேண்டாம்  என்றும் கல்யாணம் பற்றிய பேச்சையும் எடுக்கின்றனா்.  இந்த பேருந்து கட்டண உயா்வால் என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது” என்றும் மிகவும் வேதனையுடன் கூறினார்.

பல மாணவிகளுக்கும் , மாணவா்களுக்கும் தங்களுடைய படிப்பே கேள்விக்குறியாகிறது. அதனால் புதிய  கட்டணத்தை திரும்பப் பெறும் வரையிலும் போராட்டம் செய்ய வேண்டும்,மெரினா போன்று மீண்டும் ஒரு மாணவா் போராட்டம் தான்  இந்த அரசின் கொட்டத்தை அடக்க முடியும் என்றும் கூறினா்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

***

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் அரசின் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் அனைவரும் கல்லூரி வகுப்பை புறக்கணித்து கல்லூரி வாயிலில் காஞ்சிபுரம் – தாம்பரம் சாலையில் நின்று தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.

மாணவர்கள் அனைவரும் முதலில் கல்லூரிக்கு வரும் பொழுதே இன்று பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்ற முடிவுடன் வந்தனர். அப்போது தலைமை பேராசிரியர், மற்ற சில பேராசிரியர்கள் நிற்க்காதே கிளம்பு கிளம்பு என்று மாணவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவர்கள் முதல் வகுப்பு முடிந்தது நாம் அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து திட்டமிட்டபடி வெளியில் வந்தனர்.

மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தி விடுவார்களோ என்று பேராசிரியர்கள் மாணவர்கள் கையில் வைத்திருந்த முழக்கங்கள் எழுதிய அட்டைகளை வாங்கிக் கொண்டு மிரட்டி அனுப்பப் பார்த்தார்கள்.

ஆனால் மாணவர்கள் பேராசிரியர்களிடம் “1 லட்ச ரூபாய்கு மேல சம்பளம் வாங்குற நீங்களே போராடறீங்க… எங்க வீட்டில எங்கப்பா கூலி வேலைக்கு போய் என்ன படிக்க வைக்குராறு, பஸ் டிக்கட் ஏத்துனா நான் எப்படி காலேஜ்க்கு வருவேன்…? நீங்க வேணும்னா எங்களுக்கு பஸ்க்கு காசு கொடுங்க, நாங்க போராடாம போயிடுறோம்” எனக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம்.

***

குடந்தை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து அனைத்து பள்ளி − கல்லூரி மாணவர் போராட்டக் குழு தலைமையில், 23.01.2018 அன்று மதியம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை.

***

னவரி 23, 2018 அன்று காலை சென்னை கந்தசாமி நாயுடு கலை – அறிவியல் கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் மாணவர்கள் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இப்போராட்டத்தில் எடப்பாடி அரசைக் கண்டித்து “எடப்பாடி கும்பலின் வழிப்பறியே கட்டணக் கொள்ளைக்குக் காரணம்”  என முழக்கங்களை எழுப்பினர்.​​

சென்னை வேலப்பன் சாவடி அருகில் உள்ள சிந்தி கல்லூரி மாணவர்கள், பேருந்து கட்டண கொள்ளையை கண்டித்து பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து, அதனை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக செய்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

***

கரூர் அரசு கல்லூரியில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் இன்று (23-01-2018) போராட்டம் நடந்தது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர்.

 

காசு மிச்சம் பண்ண கலெக்டர் வேலையா செய்யுறேன் ? படங்கள்

4

மிழகத்தையே கொள்ளையடித்த A1 குற்றவாளி ஜெயலலிதா கடந்த 2011 -ல் ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்து, பால் மற்றும் மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். இந்த உயர்வுக்கு காரணம் அரசு நட்டத்தில் இயங்குகிறது. அதனை மக்கள் பொறுத்துத் தான் ஆக வேண்டும் என்று நாடகமாடினார். இதற்கு முன் ஆட்சி செய்த திமுக -வே இதற்கு காரணம் என்றும் ‘நியாயம்’ பேசினார்.

கட்டணத்தை உயர்த்திய பின்னரும் எந்த முன்னேற்றமும் இல்லை. குறிப்பாக போக்குவரத்துறை மேலதிகமாக நட்டத்தை சந்தித்தன என்பதை போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டம் அம்பலப்படுத்தியது. ஜெயாவின் வழி தோன்றிய அவரின் அடிமைகள் இன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி பேருந்து கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தியிருக்கின்றது. இதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கனவே போக்குவரத்துத்துறை ஒன்பது கோடி நட்டத்திற்கு இயங்கியது. தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்குப் பிறகு அது பன்னிரண்டு கோடியாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க வேண்டும் என்றால் கட்டண உயர்வைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள்.

தொழிலாளர்கள் போராட்டம் என்பது வெறும் சம்பள உயர்வுக்கானது மட்டுமல்ல.. எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதும் தான். அந்த பணம் எங்கே போனது, என்ன செய்தார்கள் என்பதே இதுவரை தெரியவில்லை. மொத்த பணத்தையும் ஏப்பம் விட்டுள்ளது போக்குவரத்து கழகமும் அடிமை அரசும். இந்த கயவாளிகள் தின்று கொழுத்ததற்கு நம் தலையில் பாரத்தை ஏற்றியிருக்கிறார்கள்.

இந்த உயர்வு குறித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களிடம் கேட்டதற்கு வருடா வருடம் உயர்த்தி இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. மொத்தமாக உயர்த்தியது தான் பெரும் பிரச்சனை என்றார்கள். சரி மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று அங்கேயே உள்ள பயணிகளிடம் கேட்டோம். முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தாமாக முன்வந்து அடிமை அரசின் மீதான கோபக்கனலை கொட்டித்தீர்த்தார்கள். நீங்களும் கேளுங்கள்!

பாபு, திரைப்பட  செட் அசிஸ்டெண்ட், திருவொற்றியூர்.

பேருக்கு தான் சினிமாவுல இருக்கேன். மாசத்துல நாலுநாள் கூட வேலை கிடைக்காது. இப்படி திடீர்னு கட்டணத்தை உயர்த்திடானுங்க. ஏன்டான்னு கேட்டா தரத்தை உயர்த்தறேன்னு சொல்றானுவ… இப்ப இவனுங்க என்ன தனியார் பஸ் மதிரியா விடப்போறானுங்க. அதே ஓட்ட பஸு தான். அவன் (மோடி) தான் ரெண்டாயிரபா நோட்ட ராவோட ராவா கொண்டு வந்து எல்லாத்தையும் அழிச்சான். இவனும் அதே வழியில தான் போறான். ராவோட ராவா வண்டி சார்ஜ ஏத்திட்டான். ஊருக்கு போன என்னோட பிரண்டுங்க எல்லாம் காசு இல்லாம போன் பண்ணி காசு போடுடா’ன்னு சொல்லுறானுங்க. இந்த கொடுமைய எல்லாம் எங்க போயி சொல்றது…!

எங்ககிட்ட இருந்து வாங்கி அவங்களுக்கு (தொழிலாளிகளுக்கு) கொடுக்க நீ எதுக்குடா? நீ என்ன இடைத்தரகரா? அவங்க என்கிட்டே கேட்டா நாங்களே கொடுத்திருப்போம்ல..எங்களுக்காக வண்டி ஓட்டுரவங்களுக்கு நாங்களே செய்வோம். நாங்க ஒருத்தவங்களுக்கு ஓட்டுப்போட்டா அம்பது பேர் வந்து ஆளுரானுங்க. பெரும்பான்மை இல்லாதவனா வச்சி ஆட்சி நடத்தினு கீறான்… சட்டம், ஜனநாயகம் ஏதும் இங்க இல்ல……இதுல ரஜினி, கமல் எல்லாம் வந்து இன்னா பண்ண போறாங்க. வரதுக்கும் சான்ஸ் கிடையாது.

இளையராஜா, திருச்சியைச் சேர்ந்த கார் ஓட்டுனர்.

வேளச்சேரியில் தங்கி தனியார் நிறுவனத்துல கார் ஓட்டிட்டு இருக்கேன். இப்ப நான் வேளச்சேரியிலிருந்து பள்ளிக்கரணை வழியா கோயம்பேட்டுக்கு வந்திருக்கேன். வேளச்சேரி டூ பள்ளிக்கரணை வரைக்கும் பத்து ரூபாயிலிருந்து பதினைந்து ரூபாயாக மாத்திட்டாங்க. பள்ளிகரணை டூ கோயம்பேடு இருபத்தி ஏழு ரூபாயாக மாத்திட்டாங்க. இப்ப இங்கிருந்து நான் மதுரவாயிலுக்கு வேற போவனும். இதை எல்லாம் மொத்தம் கணக்கு போட்டு பாருங்க. ஏறக்குறையை நூரு ரூபா இதுக்கு செலவழிக்கனும். சம்பாரிக்கிறது முழுசா முன்னூறு ரூபா கிடையாது. எல்லாத்தையும் டிக்கெட்டுக்கே கொட்டனும். இப்ப ஒயிட் போர்டு கூட கிடையாது. டெய்லி கொடுக்கிற ஐம்பது ரூபா சீட்டும் இல்ல. மாதாந்திர பயண சீட்டும் இல்லை. மூணு விதமா நாலு விதமா ஏத்தியிருக்கிறதா சொல்லுறானுங்க. ஆனா ஒரே வண்டி தான் ஓடுது. சார்ஜ் எல்லாம் இரண்டு மடங்கா இருக்கு!

ராணி,வந்தவாசி கூலி விவசாயி.

எங்க ஊர்ல எந்த வேலையும் இல்ல. கூலிக்கு வேலைக்கு போவோம். காலைல போனா மூனு மணிக்கு தான் வீட்டுக்கு வருவோம். மதியம் சாப்பாடு கூட இல்ல. சிலர் தருவாங்க. சிலர் தரமாட்டாங்க. இதுக்கு வெறும் நூறு ரூபா தான் கூலி. நா ஒரு ஆளு தான் சம்பாதிக்கிறேன். இந்த கூலிய வச்சிக்கினு நா எப்படி கரையேறது? எம்பொண்ண இங்க கட்டிக் கொடுத்திருக்கேன். ஏதாவதுன்னா நா தான் வரணும்.. முன்னாடி வந்தவாசில இருந்து காஞ்சிபுரம்,அப்பறம் அங்கிருந்து கோயம்பேடு வருவோம். இதுக்கு மொத்தமா 60 ரூபா தான் ஆகும். ஆனா இப்ப 85 ரூபா புடுங்கிட்டானுங்க .

பிரேமா. போளூர், திருவண்ணாமலை மாவட்டம்.

கூலி விவசாயி… காலு வலி நடக்க முடில. நடந்தா முட்டி நோவுதுன்னு அடிக்கடி ஆஸ்பித்திரிக்கு வருவேன். நான் வரும்போது ஒன்னும் இல்ல. இப்ப சார்ஜ் ஏத்திட்டானுங்கன்னு சொல்றிங்க. நா…. எங்க போறது….எப்படி போறது தெரிலையே…. நூறு நாள் வேல கூட இப்ப இல்ல. மூணு நாலு மாசமா நிறுத்திட்டானுங்க. நா எப்படி பொழப்பேன்…

பானு, வீட்டு வேலை செய்பவர்.

ஆட்சி செய்யிறனுவ எல்லாம் வாயிலேயே முழம் போடுறானுங்க. நம்ம சம்பளத்த எல்லாம் புடுங்கி டிரைவருங்களுக்கு கொடுக்க போறானுவ…அப்புறம் எதுக்கு அரசாங்கம்? இத எதிர்த்து நூறு இருநூறு பேரு போராடுனா பத்தாது. ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி மொத்தமா எல்லோரும் போராடனும். டிரைவர் எல்லாம் ஒரு வாரமா போராடுனாங்க. நாம டிக்கெட் வெலைய கொறைக்கிற வரைக்கும் விடக்கூடாது. இவனுங்க எல்லாம் மோடிக்கு அடிமையாகிட்டானுங்க. முன்னாடி எல்லாம் கோவளத்துல இருந்து பிராட்வே வரதுக்கு 23 ரூபா ஆகும். இப்ப 43 மூணு ரூபா வாங்குறானுங்க. நா..வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வரதுக்கு 100 ரூபா ஆகிடுது. ஒவ்வவொரு வீடா பத்து பாத்திரம் தேச்சி குடும்பத்த நடத்துறேன்… சம்பாரிக்கிறத எல்லாம் இவனுங்க கிட்ட கொடுத்துட்டு போக நா என்ன கலக்டர் வேலையா செய்யுறேன் சொல்லுங்க… காச மிச்சம் பன்னா கொஞ்சம் சும குறையுமேன்னு ஒயிட் போர்டா பாத்து வரேன்…. இவனுங்க டீலக்ஸ் பஸ் மாதிரி கட்டணத்த ஏத்திடானுங்க….

துரைராஜ், திருநெல்வேலி.

நான் மூட்ட தூக்குற வேலை செய்யிறேன். எங்க குடோன்லையே தங்கிகிறேன். பொண்டாட்டி புள்ள எல்லாம் ஊருல தான் இருக்காங்க. அவங்கள பாக்குறதுக்காக ஊருக்கு போவேன். போறதுக்கும் வரதுக்கும் தொள்ளாயிரபா ஆகும். இப்ப ஆயிரத்தி முன்னூறு ஆகுது. எல்லா விலைவாசியும் ஏறிடுது.ஆனா என் கூலி மட்டும் ஏறல. ஒரு மூட்டைய ஏத்துறதுக்கு பத்து ரூபா. இறக்கு கூலி ஆறு ரூபா. ஒரு நாளைக்கு நானூறு ரூபா சம்பாரிக்கிறதே பெரிய விஷயம். இது என்னோட சாப்பாட்டுக்கே சரியா போயிடும். மூட்ட தூக்குற நானு இரண்டு இட்லி, மூணு இட்லி சாப்பிட முடியுமா? நல்லா சாப்பிட்டா தான் வேலைய செய்ய முடியும். முகூர்த்த நாள், விஷேச நாளா இருந்தா இருநூறு, முன்னூறு கூட கிடைக்கும். இதை வச்சிக்கிட்டு வேலை இல்லாத நாள்ல சாப்பிடனும். வீட்டுக்கும் கொடுக்கணும். முன்னாடி பொண்டாட்டி புள்ளைய பார்க்க மாசம் ஒரு முறை போறதுக்கே யோசிப்பேன். இனிமே எப்படி போறதுன்னு தெரியல. அது தடப்படும்னு தான் நெனக்கிறேன்.

மாலதி, ஜூனியர் ஆர்டிஸ்ட் மற்றும் புடவை வியாபாரம் செய்பவர்.

நான் அம்மா கட்சி தான். எம்ஜியார் நகர்ல இருந்து கோயம்பேடு வரதுக்கு 15 ரூபா ஆக்கிடானுங்க. இன்னா அநியாயம் இதெல்லாம். நஷ்டத்துல ஓடுதுன்னா வருசத்துக்கு ஒரு ரூபா ரெண்டு ரூபா ஏத்திக்கலாம். அத வுட்டுட்டு ஒரேடியா இப்படி ஏத்துனா ஜனங்களால இன்னா பண்ண முடியும். இவனுங்கள சும்மா விடக்கூடாது. அங்கங்க பஸ்ஸ ஒடக்கிறதா கேள்வி பட்டேன். இது தமிழ்நாடு முழுக்க பத்திகிறதுக்குள்ள இவனுங்க முழிச்சிக்கணும். நாமளும் இனிமே இந்த பஸ்ல போவக்கூடாது. அதான் நான் எல்லார்கிட்டயும் ஷேர் ஆட்டோவுல போக சொல்லுறேன். பஸ்ல ஏறாம போனாதான் இவனுங்க திமுரு அடங்கும்.!

தாரிக் அசிஸ், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்.

பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சிருக்கேன். குடும்பத்துல கொஞ்சம் பிரச்சனை. அதனால வேலை தேடி வந்தேன். எங்க ஊர் பக்கம் இருக்க கார்பரேட் விளம்பரங்களை நம்பி வந்தேன். வந்த பிறகு தான் தெரியுது எல்லாம் ஃபிராடு கம்பனியா இருக்கு. நேர்ல போயிட்டு கேட்டதுக்கு எட்டாயிரம் கட்டு மூணுமாசம் ட்ரைனிங் கொடுப்போம்னு சொல்றான். இதே மாதிரி தான் போற இடம் பூரா சொல்லி ஏமாத்துறானுங்க. தங்கறதுக்கு கூட இடமில்ல. இங்க யாரையும் எனக்கு தெரியாது. ஆனா வந்துட்டேன். சரி,ஏதாவது லாட்ஜில தங்கலாமேன்னு போயிட்டு கேட்டா 300, 400ன்னு கேக்குறானுங்க. கையில காசும் இல்ல. அதனால இரண்டு நாளா இந்த பஸ் ஸ்டாண்டுலயே தூங்குறேன். பகல்ல வேலை தேடி போனா டிக்கெட் கட்டணமும் ஏத்திடாங்க. இருக்க காச இதுக்கே செலவு பண்ணிட்டா சாப்பாட்டுக்கு என்ன பணன்றது. அதனால தான் வேற வழி இல்லாமா சரவணா ஸ்டோர்ல வேலை கேட்டேன். .6000 ரூபா தரேன்னு சொன்னாங்க. போகலாம்னு இருக்கேன். இப்போதைக்கு அங்க தான் சோறும் தங்க இடமும் கொடுக்கிறாங்க…என்று கூறிகொண்டே தலையை தாழ்த்திக் கொண்டார்.

ராஜேந்திரன்… தலைவாசல். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சேலம் தலைவாசல் ஒன்றியத் தலைவர்.

நாங்க எங்க சங்கம் சார்பா ஆத்தூர் பேருந்து நிலையத்துல மறுநாளே போராட்டம் நடத்தினோம். ஊருக்கு போனதும் மீண்டும் போராட்டத்த தொடங்கனும். இந்த டிக்கெட் வெல தாறுமாறா ஏத்துனதால ரயில்ல வந்தேன். நிக்க கூட இடம் இல்ல. அவ்ளோ கூட்டத்துல மூச்சுகூட விட முடியாம வந்தோம்…. என்று சொல்லிக்கொண்டே ரயில் டிக்கெட்டை எடுத்து காண்பிக்கிறார்.

ஆறுமுகம் மனைவி மற்றும் குழந்தைகளுடன்…..

சுங்காசத்திரத்துல இருந்து கோயம்பேடு வந்தா எங்க நாலு பேருக்கும் தொண்ணூறு ரூபா ஆவும். இப்ப நூத்தி முப்பத்தாறு ரூபா குடுத்திருக்கேன். இப்ப நா இங்கிருந்து ஓட்டேரிக்கு எங்க அம்மா வீட்டுக்கு போவனும். குழந்தைங்க ஆயாவா பாக்கனும்னு சொல்லுதுங்க. அதான் கூட்டிட்டு போறோம். எங்க வீட்டுக்காரு பூ வேலை செய்யிராரு. இருநூறு ரூபா சம்பளம். இந்த சம்பளத்துல ஆயிரம் ரூபா வாடகைக்கு போயிடும். மீதிய வச்சி தான் குடும்பம் நடத்துறேன். இப்படியே திரும்ப திரும்ப ஏழைங்க கிட்ட தான் புடுங்குறானுங்க… இதுல எப்படி ஊரு நாட்டுக்கு போயிட்டு சொந்தபந்தங்கள பாக்குறது சொல்லுங்க….என்கிறார் பரிதாபமாக….

சகுந்தலா…

கோயில்ல பெருக்குற வேலை செய்யுறேன். மாசம் ஐநூறு ரூபா தராங்க….வியாசர்பாடி பேரன் வூட்டுக்கு வந்தேன்… டிக்கெட் வேலைய ஏத்திடானுங்க…அத கேட்டு கம்முனு ஒக்கந்துட்டேன். நீ வேற கேள்வி கேட்டுகுனு…. வயித்தெரிச்சல கேளப்பாத….

ஜெகநாதன்…மேடைக் கச்சேரி பாடகர்.

ஒரு புரோகிராம்னா ஆயிரத்து ஐநூருல இருந்து ரெண்டாயிரம் கொடுப்பாங்க. இந்த கோடிக்கும் அந்த கோடிக்கும் போனா தான் ஏதோ வேலை கெடைக்கும். ஒரு மாசத்துக்கு நாலு புரோகிராம் கிடைக்கிறதே கஷ்டம். இதுல டிக்கெட் வேற ஏத்திட்டாங்க. இந்த செலவ எப்படி ஈடுகட்டுறதுன்னு தெரியல. இனிமே தான் அவங்க கிட்ட கேக்கணும். பத்து வருசமா இந்த வேலை செய்யுறேன். ஆனா கூலி எதுவும் இரண்டு மடங்கா ஏறல. இந்த வேலை சரியா கெடைக்கலன்னு கொருக்குபேட்டையில சில்வர் பாலிஸ் குடிசை தொழில் வேலை செய்யுறேன். இன்னும் என்ன வேலை செய்யுரதுன்னு தெரியல….என்று விரக்தியாக சொல்கிறார்.

-வினவு செய்தியாளர்கள்

 

தமிழ் இலக்கியம் : பொது அறிவு வினாடி வினா 9

ந்த வினாடி வினாவில் தமிழ் இலக்கியம் குறித்த கேள்விகள். முயன்று பாருங்கள்!

  1. சங்க இலக்கியத்தின் காலம் எது?
  2. கிபி 700 முதல் கிபி 900 வரை நிலவிய இலக்கியம் எது?
  3. கீழ்க்கண்டவற்றில் எது சங்க இலக்கியத்தில் இடம் பெறாது?
  4. மணிப்பிரவாள நடை என்றால் என்ன?
  5. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார்?
  6. கிபி 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பரின் சமகாலப் புலவர் யார்?
  7. கீழ்க்கண்டவற்றில் எட்டுத்தொகையில் இல்லாத நூல் எது?
  8. எட்டுத்தொகை நூல்களில் “அகப்பொருள் நூல்களில்” வராத நூல் எது?
  9. சங்ககாலப் புலவர்கள் கையாண்ட உள்ளுறை உவமை எனும் இலக்கிய உத்தியின் பொருள் என்ன?
  10. தமிழ்மீது பற்று கொண்ட வெளிநாட்டு அறிஞர் ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாடல்கள் எதில் இருக்கிறது?
  11. அகநானூறு நூலில் முல்லைத் திணைப் பாடல் ஒன்றில் இடம்பெறும் “மாச்சிறைப் பறவை”-இன் பொருள் என்ன?
  12. மலையும் மலை சார்ந்த இடத்தையம் நிலமாகக் கொண்டிருக்கும் குறிஞ்சித் திணையின் சிறு பொழுது என்ன?
  13. காடும் காடு சார்ந்த இடத்தையும் நிலமாகக் கொண்டிருக்கும் முல்லைத் திணையின் பெரும்பொழுது என்ன? இக்காலம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் வரும்.
  14. திருக்குறளின் பொருட்பால் பிரிவில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
  15. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது – இந்தக் குறளில் வரும் ஞாலம் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
  16. கவுந்தியடிகள் பாத்திரம் எந்த நூலில் வருகிறது?
  17. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு எப்படி அழைக்கப்படுகிறது?
  18. இத்தாலி நாட்டிலிருந்து வந்த வீரமாமுனிவர் இயற்றிய பெருங்காப்பியம் எது?
  19. பாண்டியன் பரிசு இயற்றியவர் யார்?

 

பாரதிதாசன் பாடலில் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் – வீடியோ

2

பாரடா உனது மானிடப்பரப்பை… பாரதிதாசன் பாடலில் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் !

“புவியை நடத்து பொதுவில் நடத்து” என்ற புரட்சிக்கவிஞரின் வரிகள் உயிர் பெற்றதை, கடந்த 2017-ம் ஆண்டின் துவக்கத்தில்  மெரினாவில் நாம் கண்டோம். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இசையில் பாரதிதாசன் பாடல் குறுந்தகட்டில் இடம் பெற்ற “பாரடா உனது மானிடப் பரப்பை ” பாடலுக்கு மெரினா காட்சிகளை இணைத்திருக்கிறோம். பாருங்கள்… பகிருங்கள்…

இராஜஸ்தான் : பெண்களின் உரிமைகளை மறுக்கும் மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா !

0

பொதுச்சேவைகளை வழங்கும் போது பா.ஜ.க அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மேலோட்டமாக தான் செயல்படுகிறது. மேகாசபீன் கதையை எடுத்துக் கொள்வோம். ஆதார், பமாஷா, பிறப்புச் சான்றிதழ் மற்றும் வங்கிக்கணக்கு பரிமாற்ற தகவல்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களும் இருந்த போதிலும் ஜனனா மருத்துவமனையில் 2015, ஆகஸ்ட் 5 -ம் தேதி அவருக்கு பெண்குழந்தை பிறந்ததை உறுதிப்படுத்த இயலவில்லை. இதனால் மாநில அரசின் “சுபலட்சுமி யோஜனா” திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய உதவித்தொகை இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை.

மேகாசபீன்

நடந்தது இதுதான். மேகாசபீனுடைய மகப்பேறு தகவல்களை இராஜஸ்தான் அரசின் ஒஜாஸ் (OJAS) இணைய கட்டண மென்பொருளில் பதிவிடும் போது குழந்தையின் பாலினம் தவறுதலாக ஆண் என்று மருத்துவமனையால் பதியப்பட்டது. தனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்று 2017 -ம் ஆண்டில் முறையிட்ட பின்னர் தான் குழந்தையின் பாலினம் பெண் என்று மாற்றப்பட்டது. ஆயினும் முதல் தவணைக்கான கால அவகாசம் 2016 -ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டதால் பண உதவியை அவரால் பெற முடியவில்லை.

“அவர் பெரும் எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு முறையும் வருகிறார். ஆனால் பின்னர் சோர்ந்து திரும்பி விடுகிறார். முதல் தவணைத் தொகையை அவர் பெறவில்லை என்பதால் இரண்டாவது தவணைப் பெறுவதை மென்பொருளால் செயல்படுத்த முடியாது” என்று ஜனனா மருத்துவமனையில் தகவல் பதிவேற்றம் செய்யும் அசோக் தாத்ரியா கூறினார்.

பார்சானாவுடையதும் கிட்டத்தட்ட அதே கதைதான். அவர் 2015 -ம் ஆண்டில் சுபலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் முதல் தவணை உதவித் தொகையைப் பெற்றார். ஆனால் இரண்டாவது தவணைக்காக சென்றபோது பமாஷா அடையாள அட்டை அவரிடம் கேட்கப்பட்டது.

முதல் தவணையை 2015 -ம் ஆண்டில் பெரும் போது எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஓராண்டுக்குப் பிறகு இரண்டாவது தவணைக்காக சென்ற போது பமாஷா அட்டையை பெரும் வரை பணம் கிடையாது என்று கூறப்பட்டதாக பார்சானா கூறினார்.

பமாஷா அட்டையை வாங்கும் போது ஏற்கனவே இரண்டாவது தவணைக்கான கால அவகாசமும் முடிந்து விட்டதாக அவரிடம் கூறப்பட்டது.

“கடந்த ஓராண்டாக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்து கடைசியாக பமாஷா அட்டையை வாங்கிய பிறகு கடைசியில் திட்டம் முடிந்து விட்டதாக கூறுகிறார்கள்” என்று பார்சானா கூறினார்.

பார்சானா

இராஜஸ்தானின் மருத்துவ, சுகாதார மற்றும் குடும்பநலத் துறையின் தரவுப்படி 2016 – 17 ஆண்டு வரை கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் (15,54,374) பயனாளிகளுக்கு முதல் தவணை உதவித் தொகை கிடைத்திருக்கிறது. ஆனால் அது தற்போது முடிந்துவிட்டது. இரண்டாவது தவணை ஏழு லட்சத்து 64 ஆயிரம் (7,64,896) நபர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையில் உதவித்தொகை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 89 ஆயிரம் (7,89,478).

இலட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கையில், “சுபலட்சுமி யோஜனா” -க்கான இரண்டாவது தவணையை 2018, பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இராஜஸ்தான் அரசு நிறுத்த முடிவு செய்துள்ளது. சுபலட்சுமி யோஜனா திட்டமானது 2013 முதல் 2016 வரை பெண்குழந்தையைப் பெற்ற தாய்மார்களுக்காக 7,300 ரூபாய் உதவித்தொகையை மூன்று தவணைகளில் கொடுக்க தொடங்கப்பட்டது.

அரசு மருத்துமனைகளிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துமனைகளிலோ குழந்தையை பெறும் போது மட்டுமே முதல் தவணை வழங்கப்படும். குழந்தைக்கு ஓராண்டு முடியும் போது இரண்டாவது தவணையும் ஐந்து வயது முடிந்து பள்ளியில் சேர்க்கப்படும் போது மூன்றாவது தவணையும் வழங்கப்படும்.

ஆனால் பணத்தை பெற முயற்சிக்கவில்லை என்று பயனாளிகள் மீது மருத்துவ, சுகாதார மற்றும் குடும்பநலத் துறை குற்றம் சுமத்துகிறது.

சுபலட்சுமி திட்டம் 2013 -ல் தொடங்கப்பட்டது. 2018 -ம் ஆண்டு ஆகியும் இன்னும் வரவில்லை எனில் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருப்பது? 2018 -ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கோப்புகளை மூடலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் பிப்ரவரி முதல் தேதியிலேயே மூடச்சொல்லி எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது என்று மருத்துவ, சுகாதார மற்றும் குடும்பநலத் துறையின் திட்ட இயக்குனர் தருண் சௌத்ரி கூறினார்.

PCTS மென்பொருளில் உள்ள பிரச்சினைகள்:

எனில் பிரச்சினை மென்பொருளில் உள்ளதா? கருவுறுதல், குழந்தை கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவைகள் மேலாண்மை அமைப்பு (PCTS) என்பது இராஜஸ்தானின் மருத்துவ, சுகாதார மற்றும் குடும்பநலத்துறை பயன்படுத்தும் இணைய மென்பொருளாகும். மகப்பேறு மற்றும் நோய்த்தடுப்புகளை PCTS அடையாள எண் மூலம் கண்காணிக்க இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

மகப்பேறு பராமரிப்பு சோதனைகள் மற்றும் குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பூசிகள் தவிர மேலும் மூன்று திட்டங்களை செயல்படுத்த இராஜஸ்தானில் இந்த அடையாள எண் பயன்படுத்தப்படுகிறது – ஜனனி சுரக்க்ஷா (அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மகப்பேறு மேற்கொண்டால் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் தாய்மாருக்கு கிராமமாக இருந்தால் 1400 ரூபாயும் நகரமாக இருந்தால் 1000 ரூபாயும் கொடுக்கப்படும்), சுபலட்சுமி யோஜனா, முக்யமந்திரி ராஜ்ஸ்ரீ யோஜனா (அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பமாஷா அட்டை, மற்றும் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் தாய்மார்கள் மகப்பேறு பார்த்தால் ஆறு தவணைகளில் அவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்).

ஆதார் அட்டை, பமாஷா அட்டை மற்றும் வங்கிக்கணக்கு இல்லையென்றால் பயனாளிகள் உதவித்தொகை பெற முடியாது. ஆயினும் பெரும்பான்மையானோர் ஆவணங்கள் கொடுத்த போதிலும் மென்பொருள் ஏற்படுத்தும் அற்பமான பிரச்சினைகளால் உதவித்தொகையைப் பெற முடியாமல் போராடுகின்றனர்.

கருவுற்ற மூன்றே மாதங்களில் கட்டாயப் பதிவீடு :

மகப்பேறு பராமரிப்பு பதிவீடு (ANC) செய்த தேதிக்கும் மகப்பேறு தேதிக்கும் இடைவெளி 5 மாதத்தை விட குறைவாக இருந்தால் மகப்பேறு தேதியை PCTS மென்பொருள் ஏற்றுக்கொள்ளாது.

“பொதுவாக பெண்கள் மகபேறுக்காக வேறு நகரங்கள் அல்லது கிராமங்களில் இருக்கும் தங்களது தாய்வீட்டிற்குச் செல்லுகிறார்கள். எனவே PSRS மென்பொருள் கேட்கும் அந்த ஐந்து மாத இடைவெளி என்பது அரிதாகவே இருக்கும்” என்கிறார் தாத்ரியா.

கருவுற்ற சமயத்தில் போடப்படும் டெட்டானஸ் டாக்ஸிட் (Tetanus Toxid) தடுப்பூசி தகவல்களை உள்ளீடு செய்த பிறகு அடையாள அட்டையின் பதிவீட்டுத் தேதியை மாற்ற முடியாது.

“கருவுற்ற பெண்ணுடைய PCTS அடையாள தகவலில் மகப்பேறு தேதி இடம் பெறவில்லையெனில் உதவித்தொகையை எந்தவொரு மகப்பேறுத் திட்டத்தின் கீழும் பெற முடியாது” என்கிறார் தகவல் பதிவாளரான யோகேஷ்.

ஆயினும் மகப்பேறு பராமரிப்பு பதிவீட்டிற்கும் மகப்பேறு தேதிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்கிறது நிர்வாகம்.

“கடைசி மாதவிலக்கு நாளுக்கும்(LMP) மகப்பேறு நாளுக்கும் இடையே 154 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பது மென்பொருளில் உள்ளீடு செய்ய அடிப்படைத் தேவையாகும். மகப்பேறு பராமரிப்பு பதிவீட்டிற்கும் மகப்பேறு தேதிக்கும் சம்மந்தம் ஒன்றுமில்லை” என்கிறார் சௌத்ரி.

ஆயினும் நடைமுறை வேறுவிதமாக இருக்கிறது. ஆம்பரை சேர்ந்த பூஜா, 2017, நவம்பர் 1 –ம் தேதி பெண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அவர் 8 -வது மாதத்தில் அதாவது 2017, அக்டோபர் மாதம் 10 –ம் தேதி பதிவு செய்யப்பட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஒவ்வொரு முறை அவரது மகப்பேறு தேதியை மென்பொருளில் உள்ளீடு செய்யும் போதும் “மகப்பேறு பராமரிப்பு பதிவீட்டு தேதியை விட மகப்பேறு தேதி குறைவாக இருக்கக்கூடாது” என்கிறது மென்பொருள்.

“அனைத்து ஆவணங்களையும் நாங்கள் கொடுத்து விட்டோம். ஆனால் உதவித்தொகை எதுவும் கைக்கு வந்து சேரவில்லை” என்கிறார் பூஜாவின் கணவர் பாபுலால்.

மருத்துவமனையில் சேர்த்த அதே நாளில் மகப்பேறு நடக்கக் கூடாது :

PCTS அடையாளம் என்பது ஒரு பெண்ணிற்கு எப்பொழுதுமே மாறாது. எனவே மகப்பேறு வெற்றிகரமாக முடிந்தவுடன் அவருக்கு மறுபதிவு செய்ய வேண்டும். ஆனால் மென்பொருளைப் பொறுத்தவரை மறுப்பதிவு நாளுக்கும் மகப்பேறு நடந்த நாளுக்கும் இடையே ஒருநாளுக்கும் அதிகமாக இடைவெளி இருக்க வேண்டும்.

“மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலேயே பெரும்பாலான பெண்களுக்கு மகப்பேறு நடப்பதால் அந்த நாளிலேயே மறு பதிவு செய்யப்படுகிறார்கள். எனவே மறு பதிவீட்டு தேதியும் மகப்பேறு தேதியும் ஒன்றாகவே இருப்பதால் முடிவில் மென்பொருள் அதை நிராகரித்து விடுகிறது” என்கிறார் தகவல் உள்ளீடு செய்யும் தாத்ரியா .

எடுத்துக்காட்டாக, பாரதாப்பூரைச் சேர்ந்த மம்தாவுக்கு ஏப்ரல் 4 -ம் தேதி ஜனனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்றே மகப்பேறு நடந்தது. மருத்துவமனை நிர்வாகம் அவரை மறு பதிவு செய்த பிறகு மகப்பேறு தேதியை உதவித்தொகை பெறுவதற்காக உள்ளீடு செய்த போது ”மறு பதிவு நாளுக்கும்(re-registration date) மகப்பேறு அல்லது கருச்சிதைவு ஏற்பட்ட நாளுக்கும் இடையே ஒருநாளுக்கும் மேல் இடைவெளி இருக்க வேண்டும்” என்று மென்பொருள் கூறியது.

“எங்களது பெண்குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. ஆனால் உதவித்தொகை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் பல தடவை ஜெய்ப்பூருக்கு சென்று முறையிட்டு விட்டோம். எதாச்சும் இப்ப வாய்ப்பு இருக்கிறதா?” என்று மம்தா கேட்டார்.

பயனாளர்களுக்கு உதவித்தொகை கொடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிக்கு பன்முறை ஜனனா மருத்துவமனை நிர்வாகம் முறையிட்டு விட்டது. ஆயினும் பதிலொன்றும் கிடைக்கவில்லை. ஜனனா மருத்துவமனையில் மட்டும் உதவித்தொகை கிடைக்காமல் கிட்டத்தட்ட 32,042 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

ஆனால் அதிகாரிகள் இக்குற்றச்சாட்டை மறுக்கின்றனர். “அதுபோன்ற ஒரு வழக்கு கூட எங்களுக்கு வரவில்லை. இது சாத்தியமில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை யார் உங்களுக்கு தருகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை” என்று சௌத்ரி கூறினார்.

தவறான தகவல்களை தரும் மென்பொருள் :

உதவித்தொகைக்கான இணையப் பரிமாற்றம் பல சமயங்களில் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக மென்பொருள் காட்டினாலும் தங்களது வங்கிக்கணக்குகளுக்கு உதவித்தொகை வந்து சேரவில்லை என்று சில பயனாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

உதவித்தொகை வங்கி கணக்கிற்கு செலுத்தப்படாமலே செலுத்தப்பட்டதாக காட்டும் மென்பொருள்

எடுத்துக்காட்டாக, ஜனனி சுரக்ஸா யோஜனா திட்டத்தின் கீழ் மோனு கண்வருக்கு 1,400 ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக OJAS மென்பொருள் கூறியது. ஆனால் பணம் தன்னுடைய வங்கிக்கணக்கிற்கு வந்து சேரவில்லை என்று அவர் கூறினார்.

“ஒரு வாரத்திற்கு முன்பு அவரது கணவர் மருத்துவமனைக்கு வந்து வங்கியிருப்பு கையேட்டைக் காட்டினார். எந்த பணமும் வந்து சேரவில்லை என்று வங்கியும் கூட கூறியது. ஆனால் மென்பொருள் வெற்றிகரமான பரிமாற்றமாக காட்டிவிட்டதால் எழுத்து வடிவில் கட்டளைகள் எதுவும் கிடைக்காதவரை எங்களால் உதவி எதுவும் செய்ய முடியாது” என்று தாத்ரி கூறினார்.

போலி அடையாளங்கள் :

மாநில மருத்துவ, சுகாதார மற்றும் குடும்பநலத் துறை 2016 -ம் ஆண்டில் 2,07,420 PCTS அடையாளங்களில் மகப்பேறு தகவல்கள் இல்லை (அதாவது தகவல்கள் பதியப்படவில்லை) என்று கூறியது. இதற்கு போலி அடையாளங்களே ஒரு இன்றியமையாத காரணமாக இருக்கிறது.

“ஒரு தனிப்பட்ட PCTS அடையாளம் என்பது 16 இலக்க எண்களை கொண்டிருப்பதால் கைப்பேசியில் இருந்து கூட எளிதாக இதை பதிய முடியும். கருவுற்ற பெண்களை பதிவு செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள அவர்களது மகப்பேறு பராமரிப்பு அடையாள எண்ணைத் தேட முயற்சிக்காமல் புதிய எண்ணைப் பதிவு செய்கிறார்கள்” என்கிறார் யோகேஷ்.

“கருவுற்றப் பெண்ணுக்கு புதிய PCTS அடையாளத்தைப் பதியும் போது ஆதார், பமாஷா மற்றும் வங்கிக்கணக்கு உள்ளிட்ட தகவல்களை கொடுக்காவிட்டால் மென்பொருள் எச்சரிக்கை எதுவும் செய்வதில்லை” என்கிறார் ஜெய்பூரைச் சேர்ந்த மாவட்ட நர்சிங் அதிகாரியான தர்மேந்திரா சௌத்ரி.

வேறுபட்ட திட்டங்கள் ஆனால் சிக்கல் ஒன்று :

இலட்சக்கணக்கான பயனாளர்களுக்கு பணம் வந்து சேரவில்லை என்றாலும் கூட 2016, ஜூன் முதல் தேதியில் சுபலட்சுமி யோஜனா திட்டத்தை எடுத்து விட்டு அந்த இடத்தில் 50,000 ரூபாய் உதவித்தொகை கொண்ட முக்யமந்திரி ராஜ்ஸ்ரீ யோஜனா திட்டத்தை இராஜஸ்தான் மாநில அரசு அறிமுகப்படுத்தியது. ஆயினும் திட்டத்தை மாற்றினாலும் மென்பொருளின் அடிப்படையை பெரிதாக எதுவும் மாற்றவில்லை.

பூனம் கண்வரின் மகளுக்கு தற்போது ஒரு வயதிற்கு மேலாகிறது. ஆயினும் மென்பொருள் அவளை இன்னும் ஒரு பையனாகவே அடையாளப்படுத்துகிறது.

“இராஜ்ஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் பூனத்திற்கு உதவித்தொகை கிடைப்பதற்காக குழந்தையின் பாலினத்தை மாற்றச் சொல்லி மருத்துவமனை நிர்வாகத்திடம் நான் பலதடவைக் கெஞ்சி விட்டேன். ஆயினும் ஒருவரும் கேட்பதில்லை. உதவித்தொகை கிடைக்காவிட்டால் சரியாக உதவி செய்யவில்லை என்று ஆஷா மீது குற்றம் சுமத்துகிறார்களே ஒழிய இணைய மென்பொருளை அல்ல” என்கிறார் முர்ளிபூராவைச் சேர்ந்த ஆஷா பணியாளரான பிரேம்.

– தமிழாக்கம்: சுந்தரம்

நன்றி – THE WIRE

https://thewire.in/214738/software-glitches-leave-many-mothers-lurch-rajasthan/