Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 588

விருத்தாச்சலம் : 5-வது கல்வி உரிமை மாநாடு – செய்தி, படங்கள்

0

டந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் மத்தியில் ”கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு” குறித்து தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கொள்ளையடிக்கும் தனியார்பள்ளிகளை தவிர்க்கவும், மக்கள் பணத்தில் நடத்தப்படும் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க கோரியும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஜூன் 13, 2015 (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் விருத்தாச்சலம் திரு. கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியிலிருந்து தப்பாட்டம் முழங்க, பள்ளி மாணவர்கள் முன்வரிசையில் “ஆகா அரசுப்பள்ளி! அய்யோ தனியார்பள்ளி!” என முழக்கமிட்டு செல்ல, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க உறுப்பினர்களும், பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய உறுப்பினர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர்களும் முழக்க அட்டைகளை கையில் உயர்த்தி பிடிக்க, ஒரு பிரமாண்டமான பேரணி துவங்கியது!

பேரணி துவங்கியது

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஓங்கி ஒலித்த தப்பாட்டமும், தப்பாட்ட கலைஞர்களின் ஆட்டமும், கல்வி தனியார்மயத்தை கண்டித்து ஒலித்த முழக்கங்களும் பொதுமக்களை நின்று கவனிக்க வைத்தன. விருத்தாச்சலத்தின் முக்கிய வீதிகளில் பேரணி பயணித்தது. மணி முக்தா ஆற்று பாலத்தை கடந்து இறுதியில் மாநாடு நடக்கும் வானொலித்திடலை அடைந்தது!

ஓங்கி ஒலித்த தப்பாட்டமும், தப்பாட்ட கலைஞர்களின் ஆட்டமும், கல்வி தனியார்மயத்தை கண்டித்து ஒலித்த முழக்கங்களும்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் மத்தியில் திறந்தவெளியில் போடப்பட்டிருந்த மேடையில் “கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு” துவங்கியது!

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான திரு வெங்கடேசன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

திரு வெங்கடேசன்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான திரு வெங்கடேசன்

“தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த மாநாட்டை விருத்தாச்சலத்தில் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறோம்.

விருத்தாச்சலத்தை சுற்றி உள்ள அரசுப் பள்ளிகளில் செஸ் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி என விளையாட்டு போட்டிகளை நடத்தினோம். மாணவர்கள் தங்கள் திறமையை உற்சாகத்துடனும், நுட்பமாகவும் வெளிப்படுத்தினார்கள். இவர்களுக்கு இன்னும் முறையாக சொல்லிக்கொடுத்தால், மாநில அளவில் இடம்பிடிப்பார்கள் என்பதை அறிந்தோம். அந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.

கல்வி உரிமைக்கான பெற்றோர் மாணவர் சங்கம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் முயற்சியால் 2010-ம் ஆண்டு துவங்கப்பட்டு, ம.உ.பா. மையத்தின் ஒரு துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 2011-ல் சமச்சீர் பாடத்திட்டத்தை ஆட்சியில் அமர்ந்ததும் ஜெயலலிதா ரத்து செய்தார். அதை எதிர்த்து விருத்தாச்சலத்தில் பல போராட்டங்களை முன்னெடுத்தோம்.

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையை எதிர்த்து பல போராட்டங்களை முன்நின்று நடத்தினோம். அரசு நியமித்த கட்டணத்தை பல பள்ளிகளில் வாங்க வைத்திருக்கிறோம். இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசோ மெளனமாக வேடிக்கை பார்க்கிறது. அரசு திட்டமிட்டு அரசுப் பள்ளிகளை புறக்கணிக்கிறது. பெற்றோர்கள் சங்கமாக இணைந்து போராடும் பொழுது தான் நமது உரிமைகளை வெல்லமுடியும். அதனால், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள்!”

மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சார்ந்த தோழர் துரை சண்முகம் துவக்க உரை நிகழ்த்தினார்.

துரை சண்முகம்
மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சார்ந்த தோழர் துரை சண்முகம்.

“பிரேசில் கல்வியாளர் ஒருவர் கூறியதை போல ‘கல்வியை பற்றி பேசுகிறோம் என்றாலே இந்த சமூகத்தைப் பற்றி பேசுகிறோம்’ என்று அர்த்தம். பணியில் இருக்கும் பொழுது ஊரைக் கெடுத்தது மட்டுமில்லாமல், ஓய்வு பெற்ற பிறகும் கோயில் கும்பாபிசேகம் என ஊரைக் கெடுப்பவர்கள் மத்தியில், மேடையில் இருக்கும் பல ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணி அழகானது. சிறப்பானது. இந்த வட்டாரத்தையே கல்வி காசாவதை தடுக்க தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு தொழிலாளிக்கு நாம்தாம் படிக்கவில்லை. நமது பிள்ளையாவது படிக்கட்டுமே என்ற சிந்தனை இருந்தது. ஆனால், இன்று நாம்தாம் தொழிலாளி. நமது பிள்ளையாவது முதலாளியாகட்டுமே என்ற அளவில் சிந்தனை மாறியுள்ளது. பலரும் தன் பிள்ளையை கலெக்டருக்கு படிக்க வைக்கணும்னு சிந்திக்கிறான். ஆனால் கலெக்டருக்கு வேலை என்னவென்றால், டாஸ்மாக் சரக்கு எப்படி அதிகம் விற்கிறது என ஓயாமல் சிந்திப்பது தான்!

ஆங்கிலம் படிப்பதால், நம் பிள்ளைகளுக்கு அந்தஸ்து கிடைக்குமென ஊடகங்களில் திட்டமிட்டே கல்வி முதலாளிகள் பரப்புகிறார்கள். கல்வி தனியார்மயம் என்பது ஒரு மிகப்பெரிய ஆபத்து.

அரசு பள்ளிகளில் வசதியில்லை என்றால் போராடி பெறுவது தான் சரி. அதற்காக தனியார் பள்ளிகளில் சேர்ப்பது எந்தவிதத்தில் சரி? அப்பா சரியில்லையென்றால் எதிர் வீட்டுக்காரை அப்பா என சொல்லமுடியுமா? அப்பாவை சரி செய்யவேண்டியது நமது கடமை.

மோடி அரசு 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் குலத் தொழிலை செய்யலாம் என சட்டமாக மாற்றுகிறான். இந்த சூழ்நிலையில் விவசாயம், தொழிற்துறை, கல்வி, மருத்துவம், அனைத்து பிரிவு மக்களையும் பாதிக்கும் தனியார்மயத்தை எதிர்ப்பது அவசியம்.”

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சார்ந்த திரு. . குணசேகரன், தஞ்சாவூர் “ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அரசுப் பள்ளிகளை முன்னேற்றும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

குணசேகரன்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சார்ந்த திரு. ந. குணசேகரன், தஞ்சாவூர்

“விருத்தாச்சலம் தமிழ்நாட்டிற்கே முன்மாதிரியான வேலையை செய்கிறது. குறிப்பாக ஓய்வு பெற்ற தொடக்க கல்வி அலுவலர், கல்வித்துறை சார்ந்தவர்கள் எல்லாம் தனியார் பள்ளிக்கு வேலைக்கு போய்விடுகிறார்கள். விருத்தாச்சலத்தில் மட்டும் தான் ஓய்வு பெற்ற பல ஆசிரியர்கள் கல்வி தனியார்மயமாவதை எதிர்த்து சமூக தொண்டு செய்கிறார்கள். இவர்கள் தான் சுயமரியாதைமிக்கவர்கள்.

ஆசிரியர்களை குறை சொல்லுகின்றன சில ஊடகங்கள். அரசு பள்ளியில் அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்களை பட்டியலிட்டால் அது மிக நீண்டு செல்லும். கல்பனா என்ற ஆசிரியர் ஒரு அரசு பள்ளியில் சேரும் பொழுது மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 10 பேர். அவர் வில்லுப்பாட்டு மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, 150 மாணவர்கள் இப்பொழுது பள்ளியில் படிக்கிறார்கள்.

கல்வி அதிகாரிகளை அவ்வப்பொழுது மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கெல்லாம் மக்கள் எந்த ரியாக்சனும் காட்டுவதில்லை. தாராபுரத்தில் ஒரு அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியரை மாற்றல் செய்த பொழுது, ஊர் மக்களே ஒன்றாக கூடி, ஆசிரியரின் பணி மாற்றலை தடுத்து நிறுத்தினார்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள் சங்கம் கையில் முழு அதிகாரமும் இருந்தால் கல்வி சமூகத்திற்கான கல்வியாக இருக்கும்.

தனியார் பள்ளிகளுக்கு சேவை செய்வதே அரசின் வேலை. 10ம் வகுப்பில் 400 மதிப்பெண்கள் எடுத்தால் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க அரசே ரூ.30,000 தருவதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் அரசு திட்டமிட்டே அரசு பள்ளிகள் தரமற்றது என்ற பிரச்சாரத்தை செய்கிறது.

ஒவ்வொரு தனியார் பள்ளியையும் நடத்துபவர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் தான். அதனால் தான் அரசோடு இணைந்து திட்டமிட்டு அரசு பள்ளிகளை முடக்க எல்லா காரியங்களையும் செய்கிறார்கள்.

தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு முன்னுரிமை என மிகப்பெரிய போராட்டம் செய்யவேண்டும்.”

திரு. கோ. சீனுவாசன், உதவித் தொடக்க அலுவலர் (ஓய்வு), விருத்தாச்சலம்

சீனுவாசன்
திரு. கோ. சீனுவாசன், உதவித் தொடக்க அலுவலர் (ஓய்வு), விருத்தாச்சலம்

“நான் உதவி தொடக்க கல்வி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவன். அரசுப் பள்ளிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகளையும் கண்காணிப்பவர்கள் உதவி தொடக்க அலுவலர்களும், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களும் தான். பள்ளிகளில் மாணவர்களை கல்வித்தரத்தை சோதிப்பது இவர்கள் தான். ஆனால், சோதிக்காமல் கையூட்டு வாங்கிக்கொண்டு வந்துவிடுகின்றனர். என் பணிக்காலம் முழுவதும் நேர்மையாக பணியாற்றினேன்.

இன்றைக்கு 2500 பள்ளிகளை மூடப்போவதாக சொல்கிறார்கள். 2 லட்சம் மாணவர்களை பள்ளிகளில் போலியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். அரசுப் பள்ளிகளையாவது கண்காணிக்க நாங்கள் இருக்கிறோம். தனியார் பள்ளிகளை கண்காணிப்பதற்கு ஆளே கிடையாது. இவற்றையெல்லாம் தடுக்கவேண்டுமென்றால், தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும். அதற்கு பெற்றோர்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும்.

ஆசிரியர் கோ. செல்வராஜ், மாநில சிறப்புத்தலைவர், இடைநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம்.

ஆசிரியர் கோ. செல்வராஜ்
ஆசிரியர் கோ. செல்வராஜ், மாநில சிறப்புத்தலைவர், இடைநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம்.

” நான் வேலை செய்த பள்ளியில் வரலாற்றாசிரியர் இல்லை. தலைமையாசிரியர் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து எடுக்கச் சொல்லும் பொழுது, யாரும் முன்வரவில்லை. இடைநிலை ஆசிரியரான நான் எடுக்க முன்வந்தேன். ஏற்றுக்கொண்டார். இவர் தமிழாசிரியர். எப்படி வரலாற்று பாடம் எடுப்பார் என சில ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். என்மீது நம்பிக்கை வைத்து தலைமையாசிரியர் பாடம் எடுக்கசொன்னார். அந்த ஆண்டு வரலாற்று பாடத்தில் மாணவர்கள் 100% தேர்ச்சிபெற்றார்கள். அடுத்த ஆண்டு மாநில அளவில் வந்தவர்களில் என் மாணவனும் ஒருவன். தொடர்ந்து பாடம் எடுத்த சில ஆண்டுகள் வரை மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றார்கள். சில மாணவர்கள் இந்த மாநாட்டிற்கு கூட வந்திருக்கிறார்கள்.

நான் ஒரு கிராமத்து பள்ளியில் பணிபுரிந்த பொழுது, அதன் தலைமையாசிரியருடன் வேலை செய்வதில் போட்டிப்போடுவேன். அவரைவிட காலையில் சீக்கிரம் வரவேண்டும். மாலையில் அவருக்கு பிறகே கிளம்பவேண்டும் என நினைப்பேன். ஒருநாளும் நடந்ததில்லை. பள்ளிக்கு எல்லோரும் வருவதற்கு முன்பே வந்துவிடுவார். எல்லோரும் கிளம்பியபிறகு தான் பள்ளியை விட்டு கிளம்புவார்.

அவர் அறையில் அமர்ந்து பார்த்ததேயில்லை. எப்பொழுதும் பள்ளியைச் சுற்றி சுறுசுறுப்பாக கண்காணித்துக்கொண்டே இருப்பார். ஆசிரியர் யாராவது வரவில்லையென்றால் அவரே பாடமும் எடுப்பார். சில ஆண்டுகளில் அவர் மாற்றலாகி வேறு ஊருக்கு போகும் பொழுது, 57 வயதான நான், சிறந்த தலைமையாசிரியரை பள்ளி இழக்கிறதே என தேம்பி தேம்பி அழுதேன். நான் அழுவதைப் பார்த்து அவரும் கலங்கினார்.

இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்கள் இருப்பதால் தான் அரசுப் பள்ளிகள் இன்னும் உயிர் வாழ்கின்றன.”

மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கலை நிகழ்ச்சிகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பேச்சாளர்கள்

மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் பலத்த கைத்தட்டலுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
நாள் 13-6-2015 இடம் : விருத்தாசலம்

அமைப்பு :
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

தீர்மானங்கள் :

  1. மாணவர்களிடையே சமத்துவத்தைப் பேணும் வகையிலான ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி முறை, ஒரே தேர்வு முறை கொண்ட பொதுப்பள்ளி- அருகமைப்பள்ளி முறைக்காக அனைவரும் போராட வேண்டுமென இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.
  2. அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் ஆரம்பிக்கவும், அனைத்து அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்க தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும், அரசு மாணவர் விடுதிகளில் சுத்திகரிக்கபட்ட குடிநீர், சுகாதாரமான உணவு என்பதை கண்காணித்து உத்திரவாதபடுத்தவும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு மாநில அரசு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களை நிர்ப்பந்திக்கும் வண்ணம் போராட வேண்டுமென்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் பெற்றோரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
  3. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென இம்மாநாடு ஒரு மனதாக வலியுறுத்துகிறது.
  4. கல்வியை மட்டுமின்றி மாணவர்களையும் பண்டமாக்கும் கல்வி வியாபாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்குவதற்கு அரசைப் பொறுப்பாக்கு வதற்கும் போராட வேண்டுமென மாநாடு அறை கூவுகிறது.
  5. ஆசிரியர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் தனியார்பள்ளிகளை புறக்கணித்து அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக்கொள்கிறது.
  6. அனைவருக்கும் கல்வியளிப்பதாக தானே ஏற்றுக்கொண்ட பொறுப்பைக் கைகழுவியது மட்டுமின்றி, தாய்மொழிக் கல்வியையும், அரசுப் பள்ளிகளையும் ஒழித்துக்கட்டுவதற்கும், தனியார் கல்விக் கொள்ளையை பாதுகாத்து ஊக்குவிப்பதற்கும் இந்த அரசாங்கம், அதிகாரிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட மொத்த அரசமைப்பும் முன்நின்று வேலை செய்கின்றன. இந்தஅரசு, ஆளும் தகுதியிழந்து விட்டதால், இதனிடம் மனுக்கொடுப்பதும் மன்றாடுவதும், பயனற்றது என்றும், மக்கள் தமது கல்வி உரிமையை நிலை நாட்டிக்கொள்ளும் வகையிலான போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும், பள்ளிகள் அனைத்தையும் ஆசிரியர், மாணவர், பெற்றோர் தமது கண்காணிப்பின் கீழ்கொண்டு வரவேண்டும் என்றும் இம்மாநாடு அறைகூவுகிறது.
  7. ஆசிரியர்களை கற்றல், கற்பித்தல் அல்லாத டி.என்.பி.சி, யு.பி.எஸ்.சி,தேர்வு பணி, தேர்தல் பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி, மதுவின் தீமை விளக்க பேரணி, மழை நீர் சேகரிப்பு ஊர்வலம், இது போன்ற எண்ணற்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று இம்மாநாடு ஒரு மனதாக தமிழக அரசை வலியுறுத்துகிறது.
  8. அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களை அரசு நிதி உதவி கொடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி தரகு வேலை பார்க்கும் கல்வி துறையை, மாவட்ட நிர்வாகத்தை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

மாநாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள்

வை.வெங்கடேசன்
மாநாட்டுக் குழுத் தலைவர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
தொடர்பு : 93450 67646

லலித் மோடியை குற்றம் சொல்பவன் எவனடா?

0

“அடிச்சும் பாத்தாச்சு, அவுத்தும் ஓட வெச்சாச்சு” என கட்டதுரை சலித்துக் கொண்டாலும் கைப்பிள்ளைகள் அயர்வதில்லை. அடிவாங்கினால் பயப்படுவதற்கும் ஒரு நேர்மை குறைந்த பட்சமாக இருந்தாக வேண்டும். தொழில் முறை மாமாக்களிடம் அதை எதிர்பார்க்க கூடாது.

தினமணி வைத்தி
பா.ஜ.க.வின்ன் ஊடகப் பாதுகாவலர் தினமணி வைத்தி… விருது வழங்கும் விழா ஒன்றில்.

தினமணி வைத்தி-க்கு இந்த முறை நெறிகட்டியிருப்பது, சுஸ்மா ஸ்வராஜ் செய்த ஒரு மனிதாபிமான செய்கையால்.

வெறும் வாய்; மெல்ல அவல்!” என்று தலைப்பில் சதிகார நரி எல்லாம் விதி என்று ஓதிய கதையாக லலித் மோடியின் மனிதாபிமானத்தையும், அதை ஆதரிக்கும் நரேந்திர மோடி கோஷ்டி மனிதாபிமானத்தையும் காப்பற்ற துடிக்கிறார் தினமணி ஆசிரியர்.

முதலில் வைத்தி அவர்கள் ஊதுபத்தி, சாம்பிராணி போட்டு ஆன்மீக சூழலை உருவாக்குகிறார். “ஊழல், முறைகேடு இல்லாமல் ஆட்சி நடத்தும் மோடி அரசு மீது களங்கம் கற்பிக்க” இந்த பிரச்சினை எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்திருக்கிறதாம். ஆக, “மோடின்னா ஹாமம் சோப்பு” என்று கச்சேரியை ஆரம்பிக்கிறார். நிதின் கட்காரி, எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள், அதானி என்று ஏகப்பட்ட சான்றோர்கள் இந்த வரியைப் பார்த்து வெளிப்படுத்திய வெட்கத்தை படம்பிடிக்க இந்த உலகில் கேமராவே இல்லையே, என்ன செய்வது?

அடுத்து வைத்தி அவர்கள் சுருதி சுத்தமாக பல்லவியை பாடுகிறார். ஐ.பி.எல் சூதாட்டத்தைக் கண்டுபிடித்த லலித் மோடியின் மூளை, வீரர்கள் ஏலம், பெரும் பணம் போன்ற பிரமிப்புகளை நினைவுபடுத்துகிறார். “பல கோடி ரூபாய் இருந்தால் முறைகேடு இருக்கும் என்பதால் லலித் மோடி ஒன்றும் யோக்கியமானவர் இல்லை” என்று நடுநிலைமையாகவே எழுதுகிறார் வைத்தி. “பல கோடி ரூபாய் வருமானம் இருக்கும்பட்சத்தில் அவர்கள் அம்பானியாகவோ இல்லை அதானியாகவோ இல்லை கோயங்காவாகோ இருந்தால் கூட முறைகேடு இருக்கும்” என்று வைத்தி அவர்கள் சொல்லியிருப்பது ஒரு சேம்சைடு கோலென்றாலும் நேர்மையான சேம்சைடு கோல்!

சுஷ்மா சுவராஜ் - லலித் மோடி
சுஷ்மாவின் மனிதாபிமானத்தை புரிந்து கொண்டால் லலித் மோடி தப்பியதையும் மனிதாபிமானத்தோடு ஏற்றுக் கொள்ளலாமாம்.

லலித் மோடி அயோக்கியனாக இருந்தாலும் பல கோடி புழங்கிய காரணத்தால் அவருக்கு தாவுத் இப்ராஹிம் போன்ற தாதாக்களிடமிருந்து அச்சுறுத்தல் இருந்ததாம். இந்நிலையில் முந்தைய காங்கிரசு அரசு பாதுகாப்பை விலக்கிக் கொள்ள லலித் மோடி வேறுவழியின்றி லண்டனுக்கு தப்பினாராம். இதை ஊடகங்கள் வசதியாக மறந்து விட்டதாம். சுஷ்மாவின் மனிதாபிமானத்தை புரிந்து கொண்டால் லலித் மோடி தப்பியதையும் மனிதாபிமானத்தோடு ஏற்றுக் கொள்ளலாமாம்.

அதானே, குஜராத்தில் 2000 முசுலீம்களின் படுகொலைக்கு காரணமான மோடி ஒரு அயோக்கியர் என்றாலும் அவருக்கும் பயங்கரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் வந்தபடியால், குஜராத் போலீசு என்கவுண்டர் செய்த போது போலி மோதல் கொலை என்று கத்தியவர்கள் காட்டுமிராண்டிகள்தானே? 20-ஆம் நூற்றாண்டு இந்தியாவை கலவரங்களால் நிரப்பி சாதனை படைத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் போது எதிர்ப்பவர்களும் பயங்கரவாதிகள்தானே? இந்து ஞான மரபின் மனிதாபிமானத்தை புரிந்து கொள்ளாத அற்பர்களுக்காக காந்தியவாதி லலித் மோடி உயிர் துறக்கலாமா?

என்ன செய்வது, திருவாளர் தாவுத் இப்ராஹிம் மட்டும் இந்துவாக பிறந்திருந்தால் இப்படி ஓடி ஒளிந்து கராச்சியிலோ, காட்டுக்குள்ளோ பயந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. இனி தொழில் முறை தாதாக்கள் தமது ஆபரேஷன்களுக்கு முன்னால் தாம் ஒரு சுத்தமான இந்துவாக இருப்பதை உறுதி செய்து கொண்டால் அவர்கள் மனிதாபிமானத்தோடு புரிந்து கொள்ளப்படுவார்கள். அதற்கு வைத்தி மாமா உறுதி அளிக்கிறார்.

லலித் மோடி - ராஜே
(லலித் மோடி – பா.ஜ.க வின் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே வுடன்)

அடுத்தபடியாக திருவாளர் வைத்தி அவர்கள் லலித் மோடியின் காவிய ஒழுக்கத்திற்கு ஆதரவாக சில லா பாயிண்டுகளை முக்கி முக்கி எழுதப்படும் கவிதைகள் போல முன்வைக்கிறார். கவிதையோ இல்லை களவாணித்தனமோ அது வெளிப்படும் போது முக்கல் ஏற்பாட்டால்தான் கவித்துவத்திற்கோ இல்லை களவாணித்தனத்திற்கோ கேரண்டி. அதன்படிலலித் மோடி பல வழக்குகளில் விசாரிக்கப்பட வேண்டியவரே அன்றி, தேடப்படும் குற்றவாளி அல்லவாம். அதன்படி தலைமறைவாக வாழ்பவர் இல்லையாம். அவரது இலண்டன் முகவரி இந்திய அரசுக்கு தெரியுமாம்.

அப்படி பார்த்தால் நீங்கள் தேடப்படும் குற்றவாளியாக இல்லாமல் விசாரிக்கப்பட வேண்டியவராக மட்டும் இருந்தால் நீங்களும் நல்லவரே. இதை தாவுத் இப்ராஹிமும் பல வழக்குகளின் நிலையை வைத்து கேட்கலாம். அதைப் போல பிக்பாக்கெட் திருடர்கள் முதல் ஷேர் மார்கெட் முதலைகள் வரை பலரும் கேட்டாலும் அதற்கும் கருட புராணம் வழி வைத்திருக்கிறது.

லலித் மோடியே ஒரு குற்றவாளி என்று நீதிமன்றம் கூறிவிட்டாலும், போடப்பட்ட வழக்கு அரசியல் பழிவாங்கும் உள்நோக்கமுடையது, உயர் நீதிமன்றத்தில் விடுதலை கிடைக்கும் என்று புரட்சித் தலைவிக்கு எழுதிய படி பார்த்தால் இந்த உலகில் மோடிகளை மட்டுமல்ல, கேடிகளையும் குற்றம் சொல்ல முடியாது. அடித்தவனுக்கு அடுத்த கன்னத்தைத்தான் காட்டச் சொன்னார் ஏசுநாதர். வைத்தி நாதரோ அடுத்தவனுக்கு ஒட்டு மொத்த ஊரையே காட்டச் சொல்கிறார்.

வாறியா என்று கூப்பிடும் மாமா, வருபவன் சொறியா, எய்ட்ஸா, குடிகாரனா என்றா பார்ப்பான்? அவனது தொழில் தர்மத்தின் படி வாடிக்கையாளர்களே கடவுள்கள். இதுதானே கடவுள்களின் மனிதாபிமானம்?

“லலித் மோடியின் கடவுச் சீட்டு வழக்கில் சுஷ்மா ஸ்வராஜின் மகள் வழக்கறிஞராக வாதாடினாரே” என்று கேட்பவர்களை வைத்தி அவர்கள் சிம்பிள் சிரிப்புடன் மடக்குகிறார். என்னவென்றால் சாரதா நிதி மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆலோசகராக இருந்தார், தடை செய்யப்பட்ட ‘சிமிக்கு’ ஆதரவாக காங்கிரசின் சல்மான் குர்ஷித் வாதாடினார் என்று வரலாற்றை விரிக்கிறார்.

ப.சி மேட்டர் படி நீங்களும் திருடர்கள்தானே என்று நினைவுபடுத்துகிறார். சிமி மேட்டர் படி நாங்களாவது பொருளாதார விடயங்களில் பொறாமையால் குற்றம் சாட்டப்பட்டவர்களைத்தான் ஆதரித்தோம், நீங்கள் இசுலாமிய பயங்கரவாதிகளை அப்பட்டமாக ஆதரித்திருக்கிறீர்கள் என்று உண்மையை பயங்கரமாக எடுத்து வைக்கிறார்.

அசீமானந்தா, பிரக்யா சிங், கோட்சே போன்ற முன்கள சாதனையாளர்களும், சாவர்க்கர், கோல்வால்கர், மோடி போன்ற பின்கள சாதனையாளர்களும் பயங்கரவாதிகளில்லையா என்று கேட்டால் என்ன பதில்? ஐயா இவர்களெல்லாம் தருமத்திற்காக ஆயுதம் எடுத்து அப்பாவிகளை கொன்றவர்கள் என்பது கூட தெரியவில்லை என்றால் நீங்களும் பயங்கரவாதிகளே!

அடுத்து ராஜ்ஜிய உறவு சார்ந்த விசயத்தை சிம்பிளாக எடுத்து வைத்து அதற்கு மோடி அரசு காரணமில்லை என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் வைத்தி. போர்ச்சுகல் போவதற்கு தற்காலிக விசா வழங்க இந்தியாவின் அனுமதியே தேவையில்லையாம். என்றாலும் இந்தியாவின் உறவு பாதிக்க கூடாது என்று பிரிட்டன் தயங்குகிறதாம். அப்படி தயங்க வேண்டாம், உங்கள் நாட்டு சட்டப்படி அனுமதிக்கலாம் என்று சுஷ்மா கூறுகிறாராம். இதெல்லாம் பிரச்சினையா என்று அறச்சீற்றத்துடன் பொங்குகிறார் வைத்தி.

அதாவது ஒரு குற்றவாளிக்கு அனுமதி அளித்தால் அது இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படும் என்று பிரிட்டன் தயங்குகிறது. இல்லையில்லை அந்த குற்றவாளியை அனுமதியுங்கள், நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று சுஷ்மாவும், வைத்தியும் பேசுகிறார்கள். இதன்படி இங்கிலாந்திற்கு இருக்கும் குற்றவாளி குறித்த உணர்வு கூட இந்தியாவுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, அது தவறில்லை என்று வைத்தி வாதிடுகிறார். எனினும் இதன் பின்னே உள்ள நோக்கம் மனிதாபிமானமின்றி வேறு அல்ல! இதே மனிதாபிமானம் பிரிட்டன் என்ற நாட்டிற்கு இல்லை என்பதற்கு காரணம் அது மாட்டுக்கறி சாப்பிடும் தேசம் என்பதறிக.

இறுதியாக லலித் மோடியை கைது செய்யாமல் தப்ப விட்டு, குவாத்ரோச்சி, போபால் விசவாயு ஆண்டர்சன், தாவுத் இப்ராஹிம், மேமன் சகோதரர்கள் இப்படி பல தீவிரவாத, சமூக விரோதிகளை தப்பி விட்ட காங்கிரசு இப்போது சவுண்டு விடலாமா என்று வெகுண்டெழுகிறார் வைத்தி.

காங்கிரசு மீதான குற்றத்தை அப்படியே ஏற்போம். சரி, இடையில் வாஜ்பாயி ஐந்தாண்டுகள் ஆண்டார், மோடி கூட அமெரிக்கா, அண்டார்டிகா என்று உலகை சுற்றி சுற்றி வருகிறார், ஏன் மேற்கண்ட நபர்களை கைது செய்யவில்லை? அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் படி கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டாலும் அதன் இழப்பை இந்திய அரசுதான் சுமக்க வேண்டும். இதைத்தானே போபாலிலும் காட்டினார்கள். இந்தக் கேள்விகளுக்கு வைத்தி ஐயா அளிக்கப் போகும் பதில் என்ன? நாட்டு நலனுக்காக வீட்டு நலனை தியாகம் செய்ய வேண்டும் என்று விவேகானந்தரே சொல்லியிருக்கிறாரே!

அவுத்து அடிப்பதை ஒத்துக் கொண்டு எனது உள்ளாடையை திருடி விட்டான் என்று கூப்பாடு போடுவதில் கூட ஒரு நயம் வேண்டும், அது வைத்தி சாரிடம் நிறையவே இருக்கிறது.

எப்போதோ மனிதாபிமான அடிப்படையில் சுஷ்மா ஸ்வராஜ் உதவியதற்கு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொன்னால் அதை மோடி கேட்கமாட்டாராம். கேட்டால் பிறகு அடிக்கடி இதை எழுப்புவார்களாம். இதெல்லாம் மோடிக்கு கரெக்டாக தெரியும் என்று அகமதாபாத் ஐஐஎம் அறிஞர் போல பட்டையைக் கிளப்புகிறார் வைத்தி.

இறுதியில் லலித் மோடியைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை நரேந்திர மோடிக்கு இருக்கிறது என்று தலையங்கத்தை முடிக்கிறார் வைத்தி. என்னடா இதுவரை எழுதிய கீதை வரிகளின் முதலுக்கே மோசமா என்று திகைக்கிறீர்களா? எந்த லலித் மோடியை காப்பாற்ற சுஷ்மாவும், பா.ஜ.கவும் பாடுபடுகின்றதோ அந்த மோடியை தில்லி மோடி கைது செய்வார் என்று எப்படி எழுத முடியும்? என்று லாஜிக் பார்க்கிறார்களா? மாஜிக்கல் ரியலிசத்தின் அழகை மல்லாக்கொட்டை பறிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியாது ஐயா!

அல்லது இப்படியும் சொல்லலாம்.

குடிகாரர்களிடம் நிதானத்தையும், சதிகாரர்களிடம் நேர்மையையும் எதிர்பார்க்கலாமா? அது உங்களது மனிதாபிமானத்தை பொறுத்தது. அப்படியானால் மனிதாபிமானம் என்றால் என்ன? அது வைத்தி சாரிடம் கேட்க வேண்டிய கேள்வி! – கையில் கோமாதா அருளிய சாணியுடன்!

Sushma-Support-To-Lalith-Modi

செம்மரக் கடத்தல் டி.எஸ்.பியைக் காப்பாற்றத் துடிக்கும் போலீசு !

0

வேலூர் மாவட்ட கலால் துறை டி.எஸ்.பி தங்கவேலு, செம்மரக்கடத்தல் கும்பலுடன் கூட்டு சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டது தற்செயலாக தெரிய வந்ததும் தலைமறைவானார். ‘ஸ்காட்லாந்து போலீசுக்கு போட்டியாக துப்பறிவதில் உலகப்புகழ் பெற்ற’ தமிழ்நாட்டு போலீசு பல தனிப்படைகள் போட்டு 12 நாட்கள் கழித்து காட்பாடியில் வைத்து கைது செய்தது.

டி.எஸ்.பி தங்கவேலு செம்மரக் கடத்தல்
வேலூர் மாவட்டத்திலேயே ‘பதுங்கியிருந்த’ தங்கவேலை கைது செய்ய 12 நாட்கள் தேவைப்பட்ட மர்மம் என்ன?

இவ்வழக்கில் தொடர்புடைய பலர் சில நாட்களிலேயே கைது செய்யப்பட்டாலும், வேலூர் மாவட்டத்திலேயே ‘பதுங்கியிருந்த’ தங்கவேலை கைது செய்ய 12 நாட்கள் தேவைப்பட்ட மர்மம் என்ன? போலிசே அவரைக் காப்பாற்றவும், அதனூடாக பேரங்கள் பேசவும் முயன்றதாக போலீசு வட்டாரமே கூறுகிறது. இந்த வட்டாரம் போட்டி வட்டாரம் என்பதறிக.

கடத்தல் கும்பலுக்கு செம்மரங்களை பதுக்க உதவிய பா.ம.க.வைச் சேர்ந்த சின்னபையனை, வெங்கடேசன் கோஷ்டி கொலை செய்ததையும், அந்த கொலைக் குற்றவாளிகளோடு தங்கவேலு கூட்டணி வைத்ததையும் முந்தைய பதிவில் எழுதியிருந்தோம். தற்போது, “கைது செய்யப்பட்டுள்ள பிற குற்றவாளிகளையும், டி.எஸ்.பியையும் போலீசு காவலில் எடுத்து விசாரிக்கிறோம்” என்கிற பெயரில் முதன்மைக் குற்றவாளியான தங்கவேலை காப்பாற்றும் வேலையில் இறங்கியிருக்கிறது போலீசு.

தங்கவேலை தப்பிக்க வைப்பதற்கான பேரங்களை, அவரை தேடிக்கொண்டிருந்த 12 நாட்களில் போலீஸ் வட்டாரத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் பேசி முடித்துவிட்டதா ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இதை போலீசே மறுக்காது என்பதற்கு அந்த 12 நாட்களே பகிரங்கமான சான்று.

கைது செய்யப்பட்டவர்களில் தங்கவேலுடன் நெருக்கமாக இருந்த நாகேந்திரன், ஜோதிலட்சுமி தம்பதிகளை முதலில் காவலில் எடுத்து விசாரிக்க நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் அனுமதியளிக்க, கணவன் மனைவி இருவரையும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

டி.எஸ்.பி தங்கவேலு செம்மரக் கடத்தல்
“தங்கவேலு கூறியபடி தான் செயல்பட்டோம், மரங்கள் எப்போது வரும், அவற்றை எங்கே எப்போது அனுப்ப வேண்டும் என்பதையும் அவர் கூறுவார் நாங்கள் அதை செய்து முடிப்போம்”

விசாரணையில் நாகேந்திரனும், ஜோதிலட்சுமியும், “தங்கவேலு கூறியபடி தான் செயல்பட்டோம், மரங்கள் எப்போது வரும், அவற்றை எங்கே எப்போது அனுப்ப வேண்டும் என்பதையும் அவர் கூறுவார் நாங்கள் அதை செய்து முடிப்போம்” என்றும், “இந்த வழக்கில் முதல் குற்றவாளி தங்கவேலு தான்” என்பதற்கு போதுமான ஆதாரங்களையும் தமது வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இது உண்மை என்றாலும் பேரத்திற்கான முன் எச்சரிக்கையும் என்பதை நாம் சேர்த்து பார்க்க வேண்டும்.

தங்கவேலு கடந்த 10 -ம் தேதி காட்பாடியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரை பத்திரிகையாளர்கள் படம் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக, கடத்தல் கும்பல் போதைப் பொருட்களை இடம் மாற்றி இடம் மாற்றி எடுத்துச் செல்வதை போல போலீசார் தங்கவேலை ஒவ்வொரு இடமாக மாற்றி மாற்றி அழைத்துச் சென்றனர். காட்பாடியில் கைது செய்யப்பட்டவரை முதலில் பொன்னை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். செய்தியறிந்த பத்திரிகையாளர்கள் அங்கே குவிந்து நிற்கவும் அங்கிருந்து குடியாத்தத்திற்கு அருகில் உள்ள பரதராமி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர், அங்கும் பத்திரிகையாளர்கள் வந்துவிடவே அங்கிருந்து ஆம்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பத்திரிகையாளர்கள் அங்கும் வரவே, அங்கிருந்து மூன்று ஆட்டோக்களை வரவழைத்து ஒரு ஆட்டோவில் தங்கவேலுவையும் மற்ற இரு ஆட்டோக்களில் போலீசாரையும் ஏறிக்கொண்டு அங்கிருந்து நீதிபதி வீட்டிற்கு சென்றனர்.

ஆட்டோ எங்கே போகும் என்பதை அறிந்திருந்த பத்திரிகையாளர்கள் போலீசாருக்கு முன்பே அங்கு வந்துவிட்டனர். பத்திரிகையாளர்களை திசை திருப்புவதற்காக முதலில் இரண்டு ஆட்டோக்கள் நீதிபதியின் வீட்டுக்கு முன்பாக வந்து நின்றன. தங்கவேலு வந்த மூன்றாவது ஆட்டோ நீதிபதியின் வீட்டிற்கு பின்புறம் சென்றது.

டி.எஸ்.பி தங்கவேலு செம்மரக் கடத்தல்
டி.எஸ்.பி தங்கவேலு கண்ணிமைப்பதற்குள் நீதிபதியின் வீட்டிற்குள் புகுந்தார். உடனே வாசலில் எரிந்துகொண்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன.

ஆனால் இப்படி ஏதாவது நடக்கும் என்பதை அறிந்திருந்த பத்திரிகையாளர்கள் இரண்டு பக்கமும் பிரிந்து நின்றனர். ஆட்டோவிலிருந்து இறங்கிய டி.எஸ்.பி தங்கவேலு கண்ணிமைப்பதற்குள் நீதிபதியின் வீட்டிற்குள் புகுந்தார். உடனே வாசலில் எரிந்துகொண்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன.

வீட்டிற்குள்ளிருந்து திரும்பி வரும் போது, சுற்றுச்சுவர் அருகே ஒரு கான்ஸ்டபிளை குனிய வைத்து அவர் முதுகில் ஏறி சாலையில் குதித்த தங்கவேலு அங்கு தயாராக நின்றுகொண்டிருந்த போலீஸ் பைக்கில் ஏறினார். பாதி வழியில் காருக்கு மாற்றப்பட்டு சொகுசாக வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாருங்கள், ஒரு குற்றவாளியை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை படம் பிடிக்கக் கூடாது என்று போலீசு எத்தனை மெனக்கெட்டிருக்கிறது.

நாகேந்திரன் ஜோதிலட்சுமியை அடுத்து தங்கவேலையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதற்காக தங்கவேலு வேலூர் சிறையிலிருந்து ஆம்பூர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். நீதி மன்றத்திற்கு வந்த போது, குற்றம் செய்த குற்றவாளியை போல அல்லாமல் கைதிகளை அழைத்து வரும் போலீஸ் அதிகாரியை போல தோரணையுடன் நடந்து வந்தார். கைது செய்யப்பட்ட போது பத்திரிகையாளர்களுக்கு பயந்து இருட்டில் தப்பி ஓடியவர், நீதி மன்றத்திற்கு வந்த போது எப்படி வேணும்னா போட்டோ எடுத்துக்கங்க என்று பத்திரிகையாளர்களிடம் கோபத்தோடு முகத்தை காட்டினார், வேறு வழியின்றி.

போலிசு காவலில் வந்த பிறகு தங்கவேலிடம் ‘விசாரணை’ நடத்தப்பட்டது. என்ன விசாரணை நடந்திருக்கும்? ஏதாவது படம், பாட்டு போட்டு கேட்டு விட்டு டீலை முடித்திருப்பார்கள்.

செம்மரக்கடத்தல் மற்றும் சின்னபையன் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர் தங்கவேலு. ஆனால் தங்கவேலிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு அவரை மூன்றாவது குற்றவாளியாக்கிவிட்டனர். ‘”தங்கவேலு கூறி தான் நாங்கள் அனைத்தையும் செய்தோம்” என்று வாக்குமூலம் அளித்திருக்கும் நாகேந்திரனும், ஜோதிலட்சுமியும் முதல் மற்றும் இரண்டாம். குற்றவாளிகளாம், அவர்களுக்கு உத்தரவிட்டு வேலை வாங்கிய தங்கவேலு மூன்றாவது குற்றவாளியாம்’. இதில் மற்ற குற்றவாளிகளின் தர வரிசை பற்றி நமக்கு தெரியாது. அது தங்கவேலுக்கும், போலீசுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.

டி.எஸ்.பி தங்கவேலு செம்மரக் கடத்தல்
போலீசு துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளும், ஆளுங்கட்சியில் உள்ள பெரும் முதலைகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

வழக்கு இப்படி திசை மாறி பயணிப்பதற்கு காரணம், தங்கவேலு என்கிற ஒரு டி.எஸ்.பி மட்டும் இதில் சம்பந்தப்படவில்லை. போலீசு துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளும், ஆளுங்கட்சியில் உள்ள பெரும் முதலைகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அவர்களின் பெயர்களையும், விவரங்களையும் மூடி மறைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

இதை நாம் சொல்லவில்லை. வேலூரில் செய்தியாளர்களிடையே பேசிய ஒரு ஆந்திர போலீசு அதிகாரியே கூறுகிறார், கேளுங்கள்:

“டி.ஸ்.பி. தங்கவேலுவை காப்பாற்ற வேலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டிய தங்கவேலுவை மூன்றாவது குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இன்னும் 30 நாட்களில் தங்கவேலு ஜாமீனில் வெளியே வர வாய்ப்புள்ளது. அதன் பிறகு இவ்வழக்கு ‘குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என தள்ளுபடி செய்யப்படும். அந்த வகையில், வழக்கு விசாரணை மோசமாக நடந்து வருகிறது.

தங்கவேலுடன் ஒரே பேட்ச்சில் பயிற்சி பெற்ற டி.எஸ்.பி.க்கள் தான் இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப்படையில் இருக்கின்றனர். இந்த வழக்கில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கைமாறி இருப்பதால், அவர்கள் தங்கவேலுவைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். முதல் குற்றவாளியும், இரண்டாம் குற்றவாளியும் தங்கவேலு குறித்து விசாரணையில் கூறிய முக்கிய தகவல்களைப் பதிவு செய்யவே இல்லை. தங்கவேலு ஜாமீனில் வெளியே வந்துவிட்டால், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் கொல்கத்தாவுக்கு கடத்தப்படுவது நிச்சயம். இதுகுறித்து, ஆந்திர மாநில அரசுக்கும், ஆந்திர முதல்வருக்கும் விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.”

என்கிறார், ஆந்திர மாநில செம்மரக் கட்டைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவைச் சேர்ந்த டி.எஸ்.பி., வெங்கடேஸ்வரன்.

டி.எஸ்.பி தங்கவேலு செம்மரக் கடத்தல்
போலீசுக்குள்ளே இப்படி முரண்பாடு வரும்போது சில பல உண்மைகள் வெளியே வந்தே தீரும்.

என்னடா ஆந்திர போலீசு இவ்வளவு பகிரங்கமாக பேசுகிறதே என்று வியக்கிறீர்களா? தமிழக தொழிலாளிகள் 20 பேரைக் கொன்ற குற்றத்தை தணிக்க ஆந்திர போலீசு இதை பயன்படுத்திக் கொள்கிறது. மேலும் செம்மரக் கடத்தலில் தமிழக கடத்தல் கோஷ்டிகளின் பங்கை குறைப்பதன் மூலம் ஆந்திர அல்லது போட்டி கோஷ்டிகளின் செல்வாக்கை அதிகரிக்கலாம். அல்லது மீட்கப்படும் செம்மரங்கள் ஆந்திர அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானத்தை தரலாம். இப்படி பல்வேறு ஆதாயங்கள் ஆந்திர போலீசு அதிகாரியின் கூற்றில் இருக்கின்றன. மேலும் போலீசுக்குள்ளே இப்படி முரண்பாடு வரும்போது சில பல உண்மைகள் வெளியே வந்தே தீரும் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

சொத்துக் குவிப்பு வழக்கின் மூலம் பலருக்கு நீதி மன்றத்தின் மீதிருந்த மாயையை தகர்த்தார் ஜெயலலிதா. போலீசு என்றாலே பெரும்பாலான மக்கள் காறித்தான் துப்புவார்கள். எனினும், காக்க காக்க, சாமி, சிங்கம், காக்கிச்சட்டை போன்ற போலீஸ் உதார் படங்களைப் பார்த்துவிட்டு போலீசு மீது சில பல அப்பாவிகளுக்கு மதிப்பும் மரியாதையும் வந்தது.

தொப்பை இல்லாத போலிசு அதிகாரிகளெல்லாம் விகடன், குமுதம் இதழ்களில் முன்னுதாரணமான நட்சத்திரங்களாக உலா வந்தார்கள். ஆனால் இந்த ஜரிகையின் மினுக்கு சொற்ப காலம் வரைக்கும் நீடிக்காது என்பதற்கு பல சான்றுகள் உண்டு.

ஆனால் இந்த சம்பவம் வேறு மாதிரி. இதில் ஒரு போலிசு அதிகாரியே கடத்தல் கூட்டத்தின் பாஸ்-ஆக இருக்கிறார். செய்தியாளர்களிடையே கோபப்பட்ட தங்கவேலு தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு பொய் என்றும் இதை சுலபமாக உதறிவிட்டு வந்துவிடுவேன் என்று சவால் விட்டிருக்கிறார்.

போலிசிடம் அதிகாரத்தை விட்டுவைத்திருந்தால் என்ன நடக்கும் என்று இதற்கு மேல் சந்தேகம் இருக்கிறதா?

–    வையவன்

“மேடம் 45 பர்சென்ட்!”

0

சொத்துக்குவிப்பு வழக்கில் ‘நிரபராதி’ என்று ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் விடுதலையாகும் நேரத்தில்தான் தமிழகப் பொதுப்பணித்துறையில் நடந்துவரும் ஊழல்-கொள்ளை வெளிவந்து, தமிழகத்தில் நடப்பது அரசாங்கமல்ல, ஜெ. கும்பலின் தீவட்டிக் கொள்ளைதான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

பொதுப்பணித்துறை பேனர்
அம்மா ஆட்சியின் மகிமை : சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட பேனர்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டைக் கொண்டிருப்பது பொதுப்பணித்துறை. இப்போது ஊழல்தான் அத்துறையின் பொதுப்பணியாகிவிட்டது. அந்தத் துறையில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 35 முதல் 45 சதவீதம் வரை கமிசனாக ஆளுங்கட்சியினரால் வசூலிக்கப்பட்டு உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பங்கு பிரிக்கப்படுவதை அம்பலப்படுத்தும் வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் 5 இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். திருச்சி மண்டலத்திலும் இவ்வாறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் தொடங்கி உதவிப் பொறியாளர் வரையிலான 10 பேரின் பெயர்ப்பட்டியலைப் பகிரங்கமாக வெளியிட்ட அச்சங்கத்தினர், கடந்த மே 9 அன்று இலஞ்ச ஒழிப்புத்துறையிடம் இப்பட்டியலுடன் புகார் கொடுத்துள்ளனர். இது மட்டுமின்றி, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஒருவரும் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரியும் கொடுக்கல்-வாங்கல் பற்றி தொலைபேசியில் நடத்திய உரையாடலும் “வாட்ஸ்-அப்” மூலம் அப்படியே வெளிவந்து இத்தீவட்டிக் கொள்ளையை தமிழகமெங்கும் நாறடித்துள்ளது. இந்த இலஞ்சப் பணத்தில் சில அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

“பொதுப்பணித்துறையில் இலஞ்சம் கொடுக்காத ஒப்பந்ததாரர்களுக்கு எந்தப் பணிகளும் வழங்கப்படுவதில்லை. முன்பு 10 முதல் 30 சதவீதம் வரை இலஞ்சமாகப் பணத்தைக் கொடுத்துத் தொலைத்தோம். இப்போது 45 சதவீத அளவுக்குக் கேட்பதால் எங்களால் கொடுக்க முடியவில்லை. எனவேதான் இந்த அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே எங்களிடம் இலஞ்சம் கேட்ட 10 பொறியாளர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டோம். ஒரு பணியில் 45 சதவீதம் இலஞ்சமாகக் கொடுத்துவிட்டு மீதமுள்ள 55 சதவீத பணத்தைக் கொண்டுதான் பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனில், பணிகள் எந்த அளவுக்கு செய்யப்பட்டிருக்கும் என்பதை நீங்களே ஊகிக்க முடியும்” என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் குணமணி.

பராமரிப்புச் செலவுக்காக அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை செலவிடப்பட்டதாக அதிகாரிகள் கூறிய போதிலும், அந்தப் பணிகள் முறையாகவோ, முழுமையாகவோ எங்குமே நடக்கவில்லை என்று ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினரே கூறுகின்றனர் என்றால், மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் ஜெ.கும்பலின் ஆட்சியில் சூறையாடப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கம்
45 சதவீத அளவுக்குக் கமிசன் கொடுக்கப்பட்டதையும், இதற்காக வசூல் வேட்டை நடத்திய 10 பொறியாளர்களின் பெயர்ப்பட்டியலையும் பகிரங்கமாக வெளியிட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள்.

“பொதுப்பணித்துறை அமைச்சருக்கு 5 சதவீதம், மற்ற துறையில் பணிகள் நடந்தால் அந்தத் துறை அமைச்சருக்கு 5 சதவீதம், கண்காணிப்புப் பொறியாளருக்கு 2 சதவீதம், செயற்பொறியாளருக்கு 7 சதவீதம், உதவிப் பொறியாளருக்கு 7 சதவீதம், பணி ஆய்வாளருக்கு (ஒர்க்கிங் இன்ஸ்பெக்டர்) 3 சதவீதம், அலுவலக ஊழியர்களுக்கு 5 சதவீதம் – என சதவீதப் பங்கு அடிப்படையில் பணம் கொடுக்க வேண்டும் என்பது இந்தத் துறையில் எழுதப்படாத விதியாக உள்ளது” என்கிறார் குணமணி. இதோடு மேலிடத்துக்கு அதாவது, எம்-க்கு (மேடத்துக்கு) தனியாக 5 சதவீதம் கொடுக்க வேண்டுமென வசூலிக்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளனர். ஓய்வு பெற்ற பிறகும் ஆலோசகர் என்ற பதவியில் இருந்த பொறியாளர் ஒருவர், மேலிடத்துக்குப் பணத்தை வசூலித்துக் கொடுப்பதில் கில்லாடி என்று கிசுகிசு ஏடுகளே அம்பலப்படுத்துகின்றன.

இந்தச் செய்திகள் தவறாக இருந்தால் அரசு சார்பில் அப்போதே மறுத்து, இவற்றை வெளியிட்ட பத்திரிகைகள் மீது மான நட்ட வழக்கும் தொடுத்திருப்பார்கள். ஆனால், இன்றளவும் மறுக்கவில்லை. மாறாக, இந்த ஊழல் கொள்ளை ஆதாரங்களுடன் சந்தி சிரித்ததும், ஒப்பந்ததாரர்கள் வைத்த டிஜிட்டல் பேனர்கள்தான் ஊழல் கொள்ளையர்களால் உடனடியாகக் கிழித்தெறியப்பட்டன.

“இன்றைக்கு வேண்டுமானால் இந்த ஊழல் அதிகாரிகள் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், வருங்காலத்தில் இவர்கள் எல்லாம் விசாரணைக் கமிசன் முன்னால் நின்று பதில் சொல்ல வேண்டிய நிலைமை நிச்சயம் உருவாகும்” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்தார். “கடந்த 4 ஆண்டுகளில் 36 ஆயிரம் கோடி அளவுக்கு பொதுப்பணித்துறையில் ஊழல் நடந்துள்ளது” என்றும், “ஆளுநர் அனுமதிக்காக காத்திருக்காமல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அப்போதைய முதல்வரான ஓ.பி.எஸ். மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டார் பா.ம.க.வின் ராமதாஸ். காங்கிரசு கட்சியினர் பேரணி நடத்தி, தமிழக அரசின் 25 துறைகளில் நடந்துவரும் ஊழல்கள் அடங்கிய பட்டியலை மாநில ஆளுநரிடம் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

இத்தனைக்கும் பிறகும் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராகவும் முதல்வர் பொறுப்பிலுமிருந்த ஓ.பி.யோ, ‘மக்கள் முதல்வர்’ ஜெயாவோ இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஊழல் கொள்ளையர்களின் பட்டியலைப் பகிரங்கமாக வெளியிட்டதோடு, ஒப்பந்ததாரர் சங்கத்தினர் முறைப்படி புகாராகக் கொடுத்த போதிலும் இலஞ்ச ஒழிப்புத் துறை அசைந்து கொடுக்கவில்லை. வருமான வரித்துறையினர் சோதனை நடத்த முன்வரவில்லை. தானே முன்வந்து இந்த ஊழல் கொள்ளையை பொதுநல வழக்காக எடுத்து நடத்த நீதித்துறையும் முன்வரவில்லை.

மாறாக, ஊழலை அம்பலப்படுத்தியவர்கள்தான் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தரப்பிலேயே ஒரு முக்கிய அதிகாரி சமரசப் பேச்சுவார்த்தை மூலம் நடத்திய பேரத்துக்கு ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள் இசையாததால் அடுத்த கட்டமாக, ஒப்பந்ததாரர் சங்கத்தை உடைக்கும் திருப்பணியில் ஜெ.கும்பலின் பினாமி அரசு இறங்கியது. ஜெ.கும்பலின் ஏற்பாட்டின்படி, இச்சங்கத்தின் ஒரு பிரிவினர் போட்டி பொதுக்குழுவைக் கூட்டி புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளைத் தெரிவு செய்து, ஏற்கெனவே சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதுவும் போதாதென்று, இதைப்பற்றி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் எவரும் வாய் திறக்கக் கூடாது என்று எச்சரிக்கும் வகையில் அரசுப் பணியாளர் விதியைக் காரணம் காட்டி வாய்ப்பூட்டு போடும் புதியதொரு மிரட்டலை ஜெ. கும்பல் ஏவியுள்ளது. பொதுப்பணித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி ஒப்பந்ததாரர் சங்கத்தினர் கூறும் குற்றச்சாட்டுகள் நியாயமானதென்றும், இதனால் பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்குக் கெட்டபெயர் ஏற்பட்டுள்ளதென்றும் கருத்து தெரிவித்த குற்றத்துக்காக தேவராஜ் என்ற பொதுப்பணித்துறை நீர் ஆய்வு நிறுவன செயற்பொறியாளருக்கு அந்நிறுவனத் தலைமைப் பொறியாளர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

கொலைகார அரசு
கொலைகார அரசு : ஜெ. கும்பலின் ஊழல் கொள்ளைக்கு உடன்பட மறுத்து தற்கொலை செய்து கொண்ட திருவாரூர் மாவட்ட அரசு ஊழியர் முத்துக்கிருஷ்ணன், தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்த கோவையைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் சக்திவேல்.

இத்தனைக்கும் பிறகும் நடுநிலை நாடகமாடும் ஊடகங்களோ இந்த ஊழல் கொள்ளை பற்றி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முன்வரவில்லை. பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கத்தினர் டிஜிட்டல் பேனர் வைத்து ஊழலை அம்பலப்படுத்தியபோது பரபரப்பூட்டிய ஊடகங்கள், அதன் பிறகு இந்த விவகாரத்தைக் கைகழுவி விட்டன. ஊழல் அதிகாரிகள் – அமைச்சர்களுக்கு எதிராக அம்மா சாட்டையை சுழற்றி வருவதாகவும், சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக அம்மா, முதல்வர் பொறுப்பில் இல்லாத நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு நிர்வாகத் திறமை மிக்க அம்மாவை ஒரு கும்பல் ஏமாற்றுவதாகவும், அதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், நிர்வாகத்தைச் சீரமைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஒரு பொயை பார்ப்பன ஊடகங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன.

ஆனால், பாசிச-கிரிமினல் ஜெ. கும்பலின் தலைமையிலான கிரிமினல் கொள்ளைக் கூட்டம், என்றைக்குமே ஒரு அரசாங்கமாக இருந்ததில்லை. அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை அடங்கிய அரசு கட்டமைவின் துணையோடு கொள்ளையடிக்கும் அமைப்பு ரீதியில் திரண்ட கிரிமினல் குற்றக் கும்பல்தான் அது. எந்தெந்த துறைகளில் எத்தனை கோடி தேறும் என்று கணக்கு போட்டுக் கொடுப்பதுதான் அம்மாவின் அருள் பெற்ற ஆலோசகர்களின் வேலை. அதை முறைப்படி வசூலித்து கொடுப்பதுதான் அமைச்சர்களின் கடமை. அவர்கள் இட்ட பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பதுதான் ஊழல் அதிகாரிகளின் அன்றாடப் பணி. எல்லாம் ஒழுங்காக நடந்தால் அவரவர்களுக்குரிய எலும்புத்துண்டு கிடைக்கும். இல்லையானால் நடப்பதே வேறு. ஜெ. கும்பலால் நிர்வகிக்கப்படும் இந்த ஆட்சியானது, மிகப்பெரிய கொள்ளைக்கூட்ட கம்பெனியாகத்தான் இயங்கி வருகிறது.

உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஊழல்கள், போக்குவரத்துத் துறை பணி நியமன ஊழல், டாஸ்மாக் ஊழல், நெல் மூட்டைகளில் கலப்பட ஊழல், மின் வாரிய ஊழல், பத்திரப்பதிவுத்துறை ஊழல், மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலில் ஊழல், பொதுவிநியோகத்துறை ஊழல், சத்துணவுத் திட்டத்தில் முட்டை-காய்கறி -பருப்பில் ஊழல், கனிமவளக் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை – என்று ஏற்கெனவே ஊழல்கள் அம்பலமாகி ஜெ. கும்பலின் கிரிமினல் கொள்ளைக் கூட்ட ஆட்சியின் மகிமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

அம்மா ஆட்சியில் பல நூறு கோடிக்கு ஆவின் பால் கலப்படக் கொள்ளை அம்பலமானதும், பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்து, ஜெ. கும்பல் அவரைப் பாதுகாத்தது. ஜெ. கும்பலுக்கு முறையாகக் கப்பம் கட்டிவந்த மாதவரம் மூர்த்தியின் பினாமியாகச் செயல்பட்ட ஆவின் பால் கலப்படக் கொள்ளையன் வைத்தி-க்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று அவனுக்குப் பிணை வாங்கிக் கொடுத்து தப்பிக்க வைத்துள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் சுருட்டப்பட்டுள்ள தாது மணற்கொள்ளை விவகாரம் அம்பலமாகத் தொடங்கியதும், இது குறித்து விசாரணை நடத்துவதாக நாடகமாடிய ஜெ.கும்பல், ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி அளித்துள்ள விசாரணை அறிக்கையை இதுவரை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளது. பல்லாயிரம் கோடி கிரானைட் கொள்ளை குறித்து விசாரித்துவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொலைமிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

“இப்படித்தான் செய்வோம்; எங்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது” என்று கொக்கரிக்கும் ஜெ.கும்பலின் ஆட்சியில், நெல்லை வேளாண் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலை மட்டுமின்றி, ஜெ. கும்பலின் ஊழல் கொள்ளைக்கு உடன்பட மறுத்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய அரசு ஊழியர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதே போல சென்னை மற்றும் திருவாரூர் மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தற்கொலை, திருச்சி மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி -என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

1991-96-ம் ஆண்டுகளில் நடந்த ஜெயாவின் ஆட்சி “10 சதவீத கமிசன் ஆட்சி” என்றே அழைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் ஜெயா-சசி கும்பல் வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவிற்கு (இதுவும்கூட அடித்த கொள்ளையில் சிறுதுளிதான்) சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இப்பொழுது இந்த கமிசன் 45 சதவீதமாக உயர்ந்துவிட்டதென்றால், ஜெயா-சசி கும்பலிடம் வருமானத்திற்கு அதிகமாக குவிந்துள்ள சொத்து மதிப்பு எத்தனை ஆயிரம் கோடியைத் தொட்டிருக்கும்? சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயா-சசி கும்பல் உச்சநீதி மன்றத்தில் பிணையைப் பெறுவதற்காக தலைமை நீதிபதி தத்துவிற்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு இலஞ்சம் கொடுத்திருக்கிறது என அம்பலமாகியிருக்கும் செய்தி, தமிழகத்தில் ஜெயா-சசி கும்பல் நடத்திவரும் ஊழல் கொள்ளையை உறுதிப்படுத்துகிறது. இந்த இலட்சணத்தில் ஜெயாவும் அவரது பினாமிகளும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடகா உயர்நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பது மாபெரும் கேலிக்கூத்து தவிர வேறென்ன?

– குமார்
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

ஊரறிந்த கொள்ளைக் கும்பலை உத்தமனாக்கும் ஊடகங்கள்

1

னநாயகத்தின் நான்காவது தூண் என்று ஊடகங்களை இன்னமும் நம்பிக் கொண்டிருப்போரின் முகத்தில் காறித்துப்பியுள்ளன, நடுநிலை நாடகமாடும் தமிழக ஊடகங்கள். பாரம்பரியமிக்க தேசிய நாளேடாகவும், உண்மைகளை உரைப்பதாகவும், நடுநிலையுடன் செய்தி வெளியிடுவதாகவும் கூறிக்கொள்ளும் இந்த ஊடகங்கள், நேற்று ஜெயா தண்டிக்கப்பட்டபோது ஒப்பாரி வைத்தன; இப்போது ஜெயா கும்பல் விடுதலையானதும் தமது சொந்த விடுதலையாகக் கருதிக் கூத்தாடுகின்றன.

ஜெயாவின் ஊடக விசுவாசிகள்
ஜெயாவின் ஊடக விசுவாசிகள்: (கடிகாரச் சுற்றுப்படி) தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தி இந்து ஆசிரியர் அசோகன், எழுத்தாளர் சமஸ், புதிய தலைமுறை ஆசிரியர் மாலன்.

தனது நீண்டகால வாசகர்களேகூட முகம் சுளிக்கும் அளவுக்கு, “இது ஜெயாவின் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி” என்று குதூகலிக்கும் தினமணி, “நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு அ.தி.மு.க.வினருக்கு மகிழ்ச்சியையும், அரசியல்சாரா சாமானிய தமிழ் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சையும் அளித்திருக்கிறது… ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு, மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், அதைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை” என்று பார்ப்பன பாசத்துடன் துதிபாடி, “ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று சரித்திரம் படைக்க வந்துள்ளதாக” புளகாங்கிதமடைகிறது. நீதிபதி குமாரசாமி விரிவாக அலசி ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளார் என்று அ.தி.மு.க. வழக்குரைஞர்களையே விஞ்சும் வகையில் தலையங்கம் தீட்டி, தனது விசுவாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார், தினமணி ஆசிரியர் வைத்தி.

தினமணிக்குப் போட்டியாக அறிவார்ந்த முறையில் காவடி தூக்கிய “தி இந்து”வோ, குமாரசாமி தீர்ப்பு குதூகலத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, ஜெயலலிதாவின் மறுவருகை நல்லதாக அமையட்டும் என்று தலையங்கம் தீட்டியது. அதில் ஜெயாவின் நல்லாட்சியை மாநிலமே எதிர்பார்த்து ஏங்கி நிற்பதாக ஆரூடம் கூறும் ஆசிரியர் அசோகன், “சுணங்கி நிற்கும் நிர்வாக வண்டியின் சுக்கானை இறுக்கிப் பிடித்து அடித்து ஓட்டுவது எவருக்கும் சவாலான காரியம். ஆனால், ஜெயலலிதாவிடம் மாநிலம் அதைத்தான் எதிர்பார்க்கிறது” என்கிறார்.

ஜோதிகா, மீண்டும் சினிமாவில் நடித்துள்ள 36 வயதினிலே படத்தில் வரும் “வாடி ராசாத்தி” பாடலானது எழுத்தாளர் மாலனுக்கு ஜெயாவை அழைப்பது போலத் தெரிகிறதாம். குன்ஹாவின் தீர்ப்பு அப்போதே தவறு என்று தான் தொலைநோக்குடன் கூறியது, இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் பூரித்துப் போகிறார்.

“ஜெயலலிதா வழக்கு அ.தி.மு.க.வுக்கு உயிராதாரப் பிரச்சினையாக இருப்பதன் நியாயம் புரிந்து கொள்ளக் கூடியது. ஏனைய கட்சிகளும் அதையே வரிந்து கட்டிக் கொண்டு அழுவது அருவெறுக்கத்தக்கது. அரசியல் நடத்த மக்களை அணி சேர்க்க இவர்களுக்குத் தமிழகத்தில் பிரச்சினைகளே இல்லையா என்ன?” என்று எதிர்க்கட்சிகளைச் சாடி, ஜெ.கும்பலின் ஊழல் கொள்ளை மட்டும்தான் பிரச்சினையா, வேறு பிரச்சினைகளே இல்லையா என்று தி இந்துவில் எழுதுகிறார் சமஸ். அந்த வேறு பிரச்சினைகள் என்ன என்பதைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. ஜெ. கும்பலின் ஊழல் கொள்ளை தமிழகத்தின் தலையாய பிரச்சினை அல்ல என்று மடைமாற்றும் திருப்பணியைத் திறமையாகச் செய்கிறார் சமஸ்.

நீதிபதி குமாரசாமி கணக்கில் செய்துள்ள மோசடி அம்பலமாகி நாறிக் கொண்டிருக்கும்போது, நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் சந்தாதொகையைக் கூட்டினால் இந்தக் கணக்கு நேராகிவிடும் என்று ஜெ. கும்பலுக்கு ஆறுதல் கூறும் தி இந்து, ஜெ. கும்பல் வாரியிறைத்த பல கோடி பணத்தில் நீதித்துறையின் ஒவ்வொரு படிக்கட்டையும் உரிய முறையில் கவனித்துப் பச்சையான அயோக்கியத்தனங்கள் மூலம் ஜெ. கும்பலை இந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ள அ.தி.மு.க. வக்கீல்களை, சொத்துக்குவிப்பு வழக்கில் தடம்பதித்தவர்கள், “ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்” என்று தலைப்பிட்டு ஏதோ மாபெரும் சாதனையாளர்களாகக் காட்டுகிறது. இப்போது சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அம்மா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதும், சொத்துக் குவிப்பு வழக்கு என்ற பெரிய தடையைத் தாண்டியுள்ள அம்மா, இடைத்தேர்தல் என்ற சிறிய தடையை அலட்சியமாகத் தாண்ட ஓடோடி வருவதைப் போல கருத்துப்படம் போட்டு தனது விசுவாசத்தைப் பறைசாற்றுகிறது.

தி இந்து கருத்துப்படம்
நமது எம்.ஜி.ஆர் நாளேட்டுக்குப் போட்டியாக ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடிக் குதூகலிக்கும் தி இந்து கருத்துப்படம்.

ஊழல் கிரிமினல் பேர்வழியான ஜெயலலிதா விடுதலையானதும், இந்தத் தீர்ப்பு எவ்வளவு அயோக்கியத்தனமானது என்று ஊரே காறித் துப்பிக் கொண்டிருக்கும்போது, அனைத்து தளங்களிலும் இனி ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை பிரபலங்களிடம் கேட்டு, அதன் மூலம் மக்களின் வெறுப்பை மடைமாற்றும் வேலையைத் திறமையாகச் செய்கிறது ஆனந்த விகடன். இதில் டிராபிக் ராமசாமி மட்டுமே இந்த அயோக்கியத்தனமான தீர்ப்பையும் அதன் விளைவுகளையும் பற்றி கூறியிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியான சந்துரு, பேரா. அ.மார்க்ஸ், பேரா. சரசுவதி, முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், வழக்குரைஞர் அருள்மொழி, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிஃபேன் – என இந்தப் பிரபலங்கள் எல்லாம் மலத்தைத் தின்னும் பன்றி, சாக்கடையைவிட்டு வெளியே வந்துவிட்டால் நன்றாக இருக்கும், அதன் மூக்கை கொஞ்சம் சரிசெய்து கொண்டால் அழகாக இருக்கும் என்றெல்லாம் கருத்து கூறுகிறார்கள்.

இத்தீர்ப்பைப் பற்றி இணையத்தின் வாயிலாகக் கருத்து கேட்டதில் பெரும்பான்மையினர் ஜெயாவை ஆதரிப்பதாகப் புள்ளிவிவர சதவீதக் கணக்குக் காட்டி சதிராடியும், ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்பதை நேரடி வர்ணனையுடன் ஒளிபரப்பு செய்தும் இந்த ஊடகங்கள் தமது விசுவாசத்தைப் பறைசாற்றின. அதிக முறை ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, பின்னர் நீதித்துறையை விலைக்கு வாங்கி விடுதலையாகி முதல்வராகியுள்ள ஜெயலலிதா, 5-வது முறையாக முதல்வராகப் பதவியேற்று கருணாநிதியைச் சமன் செய்துவிட்டார் என்று பூரித்துப் போகும் இந்த ஊடகங்கள், இந்துத்துவ அபாயத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றியவர், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் ஈழப் பிரச்சினையில் மைய அரசைத் துணிவுடன் எதிர்த்து நின்றவர் என்றெல்லாம் வாதங்களை அடுக்கி, ஜெ கும்பலை வெட்கமின்றி ஆதரித்து நின்றன.

துக்ளக் சோ கூட அன்றைய ஜெ. கும்பலின் ஆட்சியை ஊழல் ஆட்சியாகத்தான் இருந்தது என்று அப்போது அவரது ஏட்டிலும் பேச்சிலும் குறிப்பிட்டிருக்கிறார். இன்று ஜெ கும்பலுக்குக் காவடி தூக்கும் இந்த ஊடகங்களிடம் கடந்த கால வரலாறுகள் அனைத்தும் ஆதாரங்களுடன் ஆவணக் காப்பகம் போலக் கையில் உள்ளன. அதை ஒருமுறை புரட்டிப் பார்த்தாலே 1991-96-ல் ஜெயாவின் ஆட்சி எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கான ஆதாரங்களையும், அது எப்படிப்பட்டதொரு கிரிமினல் கொள்ளைக் கூட்டமாக இருந்தது என்பதையும், என்ன வழிகளில் அக்கும்பல் தமிழகத்தைச் சூறையாடியது என்பதையும், அடுத்து வந்த தேர்தலில் அக்கும்பல் மக்களால் அடித்து விரட்டப்பட்டதையும் அவர்களால் தொகுத்துக் கூற முடியும். ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு ஏதோ தி.மு.க.வினர் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்கு தொடுத்ததைப் போலவும், நிரபராதிகளான ஜெ. கும்பல் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டதைப் போலவும் இப்போது இந்த ஊடகங்கள் கதையளக்கின்றன என்றால், இவர்களது நேர்மையின் யோக்கியதைதான் என்ன?

2ஜி ஊழல் விவகாரத்திலும், ஆதர்ஷ், காமன்வெல்த் ஊழல் விவகாரங்களிலும் ஊழலுக்கு எதிராக கம்பு சுழற்றியவைதான் இந்த ஊடகங்கள். அன்னாஹசாராவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வரவேற்று ஆதரித்து, ஊழலற்ற இந்தியாவைப் படைக்க அறைகூவியதும் இந்த ஊடகங்கள்தான். இப்போது ஊழல் கிரிமினல் ஜெ. கும்பலை நிரபராதிகளாகச் சித்தரிப்பதும் இந்த ஊடகங்கள்தான். ஓட்டுக்கட்சிகளுக்கு எவ்வாறு அருகதையில்லாமல் போவிட்டதோ, அதேபோல ஊழலை எதிர்த்துப் பேச தகுதியிழந்து கிடப்பதும் இந்த ஊடகங்கள்தான்.

– தனபால்
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

4+3=8 விடுதலை !

5

“நாலும் மூணும் எட்டு” என்ற புதியதொரு கணிதச் சூத்திரத்தின் அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகளே அல்ல என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து விட்டார் குமாரசாமி. சட்டம் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, கூட்டல் கணக்கு தெரிந்தவர்களும் இந்தத் தீர்ப்பைக் கண்டு கதி கலங்கிப் போயிருக்கிறார்கள். நான்கையும் மூன்றையும் கூட்டினால் கிடைப்பது ஏழு என்பது ஆரம்பப் பள்ளி மாணவனுக்குக் கூடத் தெரிந்த விசயமாக இருக்கலாம். இருந்தபோதிலும், கூட்டுத்தொகை எட்டு என ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பதால், அதனைப் பரிசீலித்து, இறுதித் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் உச்ச நீதி மன்றத்துக்குத்தான் இருக்கிறதாம். ஆகவே, முயலுக்கு மூணு கால் என்ற இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதி மன்றம் என்ன சொல்கிறது என்பதைப் பொருத்துதான், முயலுக்கு மூணு காலா, நாலு காலா என்ற புதிருக்கும், ஜெயலலிதா குற்றவாளியா இல்லையா என்பற்கும் விடை கிடைக்குமாம். இதுதான் சட்டத்தின் நிலை.

நாலும் மூணும் எட்டு என்ற குமாரசாமியின் கணக்கு தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் யார் வேண்டுமானாலும் மேல் முறையீடு செய்துவிட முடியாதாம். அதைக் கேட்பதற்குக் கூட கர்நாடக அரசுக்குத்தான் உரிமை உண்டாம். சு.சாமிக்கும் அன்பழகனுக்கும் உரிமை உண்டா என்பதை உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும். அதிலும் ஒரு நீதிபதி உண்டு என்று சொன்னால், இன்னொரு ஆள் இல்லையென்று சொல்லலாம்.

சிறப்பு அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா மற்றும் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞர் ரவிவர்மா குமார்
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதன் அவசியத்தையும், நியாயத்தையும் வலியுறுத்தி வரும் சிறப்பு அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா மற்றும் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞர் ரவிவர்மா குமார்

அம்மாவின் சூட்கேசுகள் விதிக்கும் தடைகளைத் தாண்டி கர்நாடக அரசை மேல் முறையீடு செய்ய வைத்தாலும், அதனை உச்சநீதி மன்ற நீதிபதிகள் உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. முதலில் நாலும் மூணும் எட்டு என்ற குமாரசாமியின் கணக்கு அப்பீலுக்குத் தகுதியானதுதான் என்று ஆச்சார்யா நிரூபிக்க வேண்டும். மாட்சிமை தங்கிய உச்சநீதி மன்ற நீதிபதிகள், இது மேல் முறையீட்டுக்குத் தகுதியானதுதான் என்று திருப்தியடைந்தால் மட்டும்தான் அப்பீலையே அனுமதிப்பார்கள்.

அப்புறம் வாய்தா ராணியின் சவாலை எதிர்கொண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கை விசாரணைக்குக் கொண்டுவர வேண்டும். அதுவரை ஆச்சார்யாவின் ஆயுள் கெட்டியாக இருக்க வேண்டும். பிறகு மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி “நாலும் மூணும் எட்டு அல்ல” என்பதை அவர்களுடைய வாதத் திறமையால் உச்சநீதி மன்றத்தில் நிறுவ வேண்டும். அதன்பிறகுதான் உச்சநீதி மன்றம் இறுதித் தீர்ப்பு அளிக்கும். அதுவரை ஜெயலலிதா நிரபராதிதான். இதுதான் சட்டத்தின் நிலை.

குமாரசாமி அளித்த தீர்ப்பு ஜெயலலிதாவின் வருமானத்தை 14 கோடி ரூபாய் அதிகப்படுத்திக் காட்டியிருக்கிறது என்பதும், அந்தக் கூட்டல் பிழை சரி செய்யப்பட்டாலே ஜெயலலிதா உள்ளே போக வேண்டியிருக்கும் என்பதும் சட்ட அறிவற்ற பாமரனுக்கும் தெரிந்திருக்கும் உண்மை. பளிச்சென்று தெரியும் இந்த விசயத்தை கர்நாடக உயர்நீதி மன்றமோ, உச்சநீதி மன்றமோ தானே தலையிட்டு திருத்தாதாம். இதற்கு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துதான் ‘சரி’ செய்ய வேண்டுமாம். அதற்குள் உச்ச நீதிமன்றத்தை ஜெயலலிதா ‘சரி’ செய்து விடுவார். இதுவரை இப்படித்தான் நடந்திருக்கிறது. 18 ஆண்டு காலம் ஜெயலலிதாவால் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கின் வரலாறு முழுதும் ஜெ.வுக்கு சாதகமான பாரபட்சங்கள் நிரம்பிக் கிடப்பதைத் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறோம்.

பார்ப்பானுக்கு வளையும் நீதித்துறைசட்டமும் சரி, நீதிமன்றங்களும் சரி பணத்துக்கும் பார்ப்பானுக்கும் வளையக்கூடியவைதான் என்பதை ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகள் நிரூபித்திருக்கின்றன. நீதிபதிகளோ, தாங்கள் சொல்வதுதான் சட்டமேயன்றி, சட்டம் என்ற ஒன்றே உண்மையில் இல்லை என்று ஜெயாவுக்கு ஆதரவாக அளித்த பல தீர்ப்புகளின் வாயிலாக நிரூபித்திருக்கிறார்கள். இந்த நாட்டின் நீதித்துறையே தோற்று விட்டது என்ற உண்மையை ஜெயலலிதா பல கோணங்களில் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டி வருகிறார்.

***

சொத்துக் குவிப்பு வழக்கையே எடுத்துக் கொள்வோம். வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்து ரூ 66 கோடி என்பது வழக்கு. உண்மையில் ஜெ-சசி கும்பல் அடித்த கொள்ளையின் அளவு இதைப்போல பல நூறு மடங்கு என்பதை நாடறியும். இருந்த போதிலும், இண்டு இடுக்குகளில் புகுந்து குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகத்தான், மறுக்க முடியாத ஆவணங்களின் அடிப்படையிலான சொத்துக்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, நுணுகி ஆராய்ந்து போடப்பட்டிருக்கிறது இவ்வழக்கு. இதில் வாதிட்டு தப்பிக்க இயலாது என்ற காரணத்தினால்தான் இந்த வழக்கையே இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் இதனை இழுத்தடித்தார் ஜெயலலிதா. இறுதியில் அரிதாக வந்த ஒரு தீர்ப்புதான் குன்ஹாவினுடையது. மொத்தத்தில் சட்டபூர்வமான முறையில் ஒரு ஊழல் குற்றவாளியைத் தண்டிப்பதெப்படி என்பதற்கான ஒரு வகைமாதிரி என்று இந்த வழக்கைக் கூறலாம்.

இந்த வகைமாதிரியின் மீது காலைத் தூக்கி ஒன்னுக்கடித்திருக்கிறது குமாரசாமியின் தீர்ப்பு. குமாரசாமியின் தீர்ப்பு மட்டரகமானதொரு நீலப் படம் என்றால், அதற்குப் பொருத்தமான கிளைமாக்ஸ் காட்சிதான் 14 கோடி ரூபாய் கூட்டல் பிழை. ஆனால், கூட்டல் பிழையைக் காட்டிலும் கொச்சையான பல காட்சிகள் இந்த நீலப்படத்தில் உள்ளன.

“அரசு ஊழியர்கள் தமது சட்டபூர்வமான வருவாக்கு மேல் பத்து சதவீதம் வரை சொத்து சேர்க்கலாம்” என்று அனுமதித்திருப்பதன் மூலம், ‘இலஞ்சத்தொகை எவ்வளவு’ என்று பார்க்க வேண்டுமேயொழிய, ‘இலஞ்சமே குற்றம்’ என்று பார்க்கக்கூடாது எனத் தனது தீர்ப்பில் வழிகாட்டியிருக்கிறார் குமாரசாமி.

அதோடு நிற்கவில்லை; ஜெயலலிதாவுக்கு அமைச்சர் பெருமக்கள் கட்டியிருக்கும் கப்பத்தை, ‘பிறந்தநாள் அன்பளிப்பு’ என்றும், அது ‘சட்டபூர்வ வருமானமே’ என்றும் அங்கீகரித்து, எதிர்கால லஞ்ச வசூலுக்கு வழியும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இனி, இத்தீர்ப்பின்படி ஓட்டுநர், நடத்துனர் வேலை நியமனங்கள், மாற்றல்கள் முதல் பொதுப்பணித்துறை காண்டிராக்டுகள் வரையிலான அனைத்துக்கும் அம்மாவுக்குரிய ‘தசம பாகத்தை’ அன்பளிப்பாக போயஸ் தோட்ட உண்டியலில் நேரடியாகப் போட்டு ரசீதும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

அது மட்டுமல்ல, “எந்தவொரு வருமானத்துக்கும் வருமானவரி கட்டிவிட்டால் அது சட்டபூர்வ வருமானமே” என்று அங்கீகரித்திருப்பதன் மூலம் வங்கிக் கொள்ளையர்கள் முதல் கஞ்சா வியாபாரிகள் வரையிலான அனைவரும் தங்கள் வருமானத்தையும் தொழிலையும் சட்டபூர்வமானதாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார் குமாரசாமி.

அமித் ஷா, சதாசிவம்
பிரஜாபதி துளசிராம் கொலை வழக்கில் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியதில்லை என்று அமித் ஷாவிற்கு (இடது) ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி சதாசிவத்திற்குக் கிடைத்த வெகுமதி – கேரள மாநில ஆளுநர் பதவி.

இப்படி சட்டவிரோத வருமானத்தையெல்லாம் சட்டபூர்வ வருமானமாக அங்கீகரித்தும், திருப்பி அடைக்கப்பட்ட வங்கிக் கடன்களையெல்லாம் வருமானமாக வரவு வைத்தும், திராட்சைத் தோட்ட வருவாயைக் கூட்டிக் காட்டி, கட்டுமானச் செலவுகளைக் குறைத்துக் காட்டி, வளர்ப்பு மகன் திருமணச் செலவை சிவாஜி கணேசன் தலையில் கட்டி… இப்படிப் பலவிதமான தகிடுதத்தங்களைக் கவனமாகச் செய்தும், கணக்கை நேர் செய்ய முடியாத சூழ்நிலையில்தான், ‘கூட்டல் பிழை’ என்ற கவனக் குறைவு குமாரசாமிக்குக் கை கொடுத்திருக்கிறது.

இந்த வழக்கைப் பொருத்தவரை, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஒவ்வொருவர் மீதும், தனித்தனியே வழக்கு போடப்படவில்லை. கூட்டாகத்தான் போடப்பட்டிருக்கிறது. வழக்கில் காட்டப்பட்டுள்ள பணப் பரிவர்த்தனைகளும், உப்புமா கம்பெனிகளின் முகவரியான போயஸ் தோட்டமும் இவர்களைக் கூட்டுக் குற்றவாளிகள் என்று தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

எனினும், “ஜெயலலிதாவுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள்” என்ற குற்றத்துக்காக மற்ற மூவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டார்களென்று எப்படிக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பி, அவர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலச் சித்தரித்து, ‘கூட்டுச்சதி’ என்ற குற்றப் பிரிவிலிருந்து அவர்களை விடுவிக்கிறார் குமாரசாமி. மற்ற குற்றப் பிரிவுகளைப் பொருத்தவரை, “முதல் குற்றவாளியாகிய ஜெயலலிதாவையே விடுவிக்கின்ற காரணத்தினால் மற்ற மூவரும் விடுவிக்கப் படுகிறார்கள்” என்று கூறி, விடுதலை செய்வதற்கு மட்டும் அவர்களைக் கூட்டு சேர்த்துக் கொள்கிறார் குமாரசாமி.

இந்த வழக்கில் கர்நாடக அரசுதான் எதிர் மனுதாரர். எனினும் கர்நாடக அரசை எதிர் மனுதாரராகச் சேர்க்காமலேயே இந்த வழக்கு நடத்தப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, “இந்த மேல் முறையீட்டு விசாரணையே செல்லாது” என்று உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பித்த தனது வாதுரையில் குறிப்பிட்டிருந்தார் ஆச்சார்யா. முறைகேடான இந்த மேல் முறையீட்டு விசாரணையை நடத்தியதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டியவர் குமாரசாமி. கர்நாடக அரசு முதலிலேயே இதனைக் கேட்காமல் ஏன் அக்கறையில்லாமல் இருந்தது என்று தனது தீர்ப்பில் இதற்கு எதிர்க்கேள்வி எழுப்பியிருக்கிறார். “நீ கவனக்குறைவாக இருந்தால் நான் திருடத்தான் செய்வேன்” என்று பேசும் பிக்பாக்கெட் திருடனின் வாதமுறை இது.

கவனக்குறைவினால் விளைந்த கணிதப்பிழையை முட்டாள்தனம் என்று சொல்லலாம். தீர்ப்பில் கவனமாக எழுதப்பட்டுள்ள பகுதிகளோ கிரிமினல்தனமானவை.

***

அப்சல் குரு
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு எதிராகப் போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில், தேசத்தின் மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காக அவரது மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதி மன்றம்.

குமாரசாமியுடைய தீர்ப்பு எள்ளி நகையாடப்பட்டு, அதன் ஒவ்வொரு அம்சமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தலைமை நீதிபதி தத்துவின் யோக்கியதையோ சந்தி சிரிக்கிறது. தீர்ப்பு வழங்குவதற்கு சில நாட்கள் முன்பு தலைமை நீதிபதி தத்து நேரடியாகவே பெங்களூரு வந்து, ஜெயலலிதாவை விடுவிப்பதாக தீர்ப்பு இருக்கவேண்டுமென்பதை உத்திரவாதம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதில் தொடங்கி, இடையிடையே வரும் சிக்கல்களைச் சமாளித்து, கடைசியில் வழக்கைச் சாதகமாக முடித்துக் கொடுப்பது வரை ஒரு பேக்கேஜ் ஆக பேசி முடிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் இது என்று தெரிகிறது.

தலைமை நீதிபதி தத்து, எதிர்த்தரப்பான கர்நாடக அரசுக்குத் தகவல் கூடத் தெரிவிக்காமல் ஜெயலலிதாவுக்குப் பிணை கொடுத்தது, நாரிமன் கேட்காமலேயே உயர்நீதி மன்ற அப்பீல் விசாரணைக்கு தானே முன்வந்து ஏற்பாடு செய்தது, பிணை மனு விசாரணை வேறு நீதிபதியிடம் செல்லாமல் தன்னிடமே பிடித்து வைத்துக் கொண்டது, பவானி சிங் நியமனம் செல்லாது என்று நீதிபதி லோகூர் தீர்ப்பளித்தவுடனே, அதன் மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான 3 நீதிபதிகள் அமர்வை அவசரம் அவசரமாக செட்டப் செய்தது, ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களே உள்ள கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வகேலாவை அவசரம் அவசரமாக இடமாற்றம் செய்தது – போன்ற நடவடிக்கைகளில் தத்துவின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. ஆனால், அவர் கவலைப்படவில்லை. ஐயாயிரம் பேரோடு மொட்டை போட்டுக்கொண்டு கூச்சமே இல்லாமல் பத்திரிகைக்கு போஸ் கொடுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தத்துவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

முன்னாள் நிதிபதி கட்ஜு, தத்து மீது குறிப்பான ஊழல் புகார்களைக் கூறியிருக்கிறார். “நீங்கள் ஜெயலலிதாவிடம் இலஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால், இந்தப் பிணை வழக்கை நீங்கள் விசாரிக்க கூடாது” என்று டிராபிக் ராமசாமி தத்துவிடமே மனு கொடுத்திருக்கிறார். தத்துவுக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அரசுத்தலைவரிடம் குற்றச்சாட்டு மனு தரப்பட்டிருக்கிறது. இவை எதற்கும் தத்து அசைந்து கொடுக்கவில்லை.

இது, தத்து என்ற ஒரு நீதிபதியின் தனிப்பட்ட குணாதிசயம் மட்டுமல்ல, உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் பலரின் யோக்கியதை இதுதான். எப்படிப்பட்ட கிரிமினல் குற்றத்தை இழைத்தாலும் தங்களை யாரும் தண்டிக்க முடியாத வண்ணம், ஒரு உரிமையை அவர்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தண்டனையிலிருந்து சட்டம் எனும் இரும்புச் சுவரால் பாதுகாக்கப்பட்டிருப்பதால், நீதிபதிகள்தான் தைரியமான குற்றவாளிகள்.

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து.
ஜெயாவின் ஏஜெண்ட் : உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி ஊழல் என்பது பிடியாணையின்றி, கைது செய்யத்தக்க ஒரு குற்றம். இருந்த போதிலும், உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் பகிரங்கமாக பெட்டி வாங்கி கையும் களவுமாக, கைரேகை ஆதாரத்துடன் பிடிபட்டிருந்தாலும், அவர்களைக் கைது செய்ய முடியாது. அதற்கு, தலைமை நீதிபதியின் அனுமதி வேண்டும் என்று 1991-ல் தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

எட்டு தலைமை நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய பிரசாந்த் பூஷணின் வழக்கு ஆண்டுக் கணக்கில் கிடப்பில் இருக்கிறது. ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள். அடுத்த தலைமை நீதிபதியான சதாசிவம், அம்மாவின் அருளாசி பெற்றவர். கொலைகாரன் அமித் ஷாவை விடுதலை செய்ததற்காக கேரள கவர்னர் பதவியைப் பரிசாகப் பெற்றவர். தற்போதைய தலைமை நீதிபதியோ அம்மாவின் அமைச்சரவையில் இடம்பெறும் தகுதியுள்ளவர்.

"பண்ணையார் சொல்வதும் பார்ப்பான் சொல்வதும்தான் சட்டம்"இதுதான் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் யோக்கியதை. சல்மான் கான், சத்யம் ராஜு, மோடி, அமித் ஷா, வன்சாரா, மாயா கோத்னானி போன்ற பல வழக்குகளில் பார்ப்பன மதவெறியர்களுக்கும், பணக்காரர்களுக்கும் தெண்டனிட்டு சேவகம் செய்யும் தீர்ப்புகளை வழங்கியிருக்கும் உச்சநீதி மன்றம், ஆதாரமே இல்லாமல் அப்சல் குருவைத் தூக்கில் ஏற்றியிருக்கிறது. டான்சி வழக்கில் பொதுச்சொத்தைத் திருடிய ஜெயலலிதாவின் தண்டனையை ரத்து செய்து விட்டு, அவரது மனச்சாட்சிக்கு வேண்டுகோள் விடுத்த நீதிமன்றம், சாட்சியமே இல்லாத நிலையிலும், ‘தேசத்தின் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக’ என்று கூறிக்கொண்டு அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. இத்தகைய அநீதிகள், முறைகேடுகள், ஊழல்கள் ஆகிய அனைத்தையும் நீதிபதிகள் நியாயப்படுத்திக் கொள்ள ஏற்ற வகையில்தான் சட்டம் இருக்கிறது.

“பண்ணையார் சொல்வதும், பார்ப்பான் சொல்வதும்தான் சட்டம்” என்றொரு காலம் இருந்தது. தங்களது தீர்ப்பு குறித்தும், அதன் நியாயம் குறித்தும், அவர்கள் எந்த விதத்திலும் மக்களுக்கு விளக்கம் சொல்லக் கடமைப் பட்டவர்களாக இல்லை. நீதிபதிகளும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள்.

சாதிச்சார்பு, மதச்சார்பு முதல் இலஞ்சம் வரை என்ன விதமான காரணத்துக்காகவும் முறைகேடான தீர்ப்பை ஒரு நீதிபதி வழங்கலாம். அவரை ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிலைமை.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் மட்டுமல்ல, பன்னாட்டு முதலாளிகள், தரகுமுதலாளிகளுக்கு எதிரான வழக்குகளிலும், பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிரான வழக்குகளிலும் இதுதான் நடந்தது. இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

குமாரசாமி தீர்ப்பின் பித்தலாட்டங்களை, திரைமறைவுச் சதிகளை விவரித்துவிட்டு, இதற்கு எதிராக தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதாக உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியிருக்கும் கருணாநிதி, “நீதியின் ராஜபாட்டையில் எத்தனை தடைக்கற்களைக் குவித்தாலும் அவற்றைப் படிக்கற்களாக்கிக் கொண்டு இறுதியில் நீதி விண்ணுயர எழுந்து நிற்கும்! வெற்றி முரசும் ஒலிக்கும்!” என்று நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு குறிப்பிடுகிறார்.

இதனைப் படிக்கின்ற ஜெயலலிதா, “அம்பாள் என்றைக்கடா பேசினாள்? அறிவு கெட்டவனே!” என்ற பராசக்தி வசனத்தையே தனது பதிலாக கருணாநிதியிடம் சொல்லக்கூடும்.

– தொரட்டி
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

ஆர்.கே நகரில் அம்மாவின் அலப்பறைகள் !

22

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி ஜெயா, நீதிமன்றத்தை வளைத்து நெளித்து வெளியில் வந்து முதல்வராகி தற்போது ஆர்.கே நகரில் செயற்கையாக ஒரு தேர்தலை உருவாக்கி போட்டியிடுகிறார்.

ஜெயா வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்வதில் ஒரு ‘புரட்சி’

வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஜெயலலிதா ஆர்.கே நகருக்கு வந்த போது போக்குவரத்து நெருக்கடியை மட்டும் ஏற்படுத்தவில்லை, புரட்சித்தலைவி என்கிற பெயருக்கு ஏற்றாற் போல வேட்புமனு தாக்கல் செய்வதில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார்.

இதற்கு முன்பு நடந்த இடைத்தேர்தல்களை விட ஆர்.கே நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் அ.தி.மு.க வின் துணை அமைப்பு போலவே செயல்பட்டு வருகிறது. ஜெயா வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது நடந்த கூத்துகளை பத்திரிகைகளே கிண்டல் செய்கின்றன. ‘வேட்பாளராக ஜெயலலிதா நிற்பதால் தேர்தல் விதிகள் அனைத்தும் காற்றில் பறந்துகொண்டிருக்க.. அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போதோ அவை விண்ணில் பறந்தன’ என்று எழுதுகிறது ஜீனியர் விகடன்.

தேர்தல் நடக்க இருக்கும் வட சென்னையின் குண்டும் குழியுமான சாலைகள் எல்லாம் இரவோடு இரவாக பளிச் என்று புத்தம் புது சாலைகளாக மாறின; மின்னி மின்னி சோகமாக எரியும் தெரு விளக்குகள் எல்லாம் கூச்சமின்றி வெளிச்சம் வீசின; கழிவு நீர் கலந்து வரும் குழாய்களில் எல்லாம் திடீரென்று அமுதம் போல நல்ல நீர் வந்தது; தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இரவு அமைச்சர்களும், அதிகாரிகளும் விடிய விடிய தூங்கவில்லை. புதிதாக போட்ட சாலைகளை கூட்டிப் பெருக்குவது முதல், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை புனரமைப்பது வரை அனைத்து வேலைகளையும் முன் நின்று செய்தது அமைச்சர்களும் அதிகாரிகளும் தான்.

அ.தி.மு.க அமைச்சர்கள்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இரவு அமைச்சர்களும், அதிகாரிகளும் விடிய விடிய தூங்கவில்லை. (படம் : நன்றி ஜூனியர் விகடன்)

வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும் ஜெயலலிதா புதிய சாலையில் சர் என்று சறுக்கிக் கொண்டு செல்வதற்காக நாற்பது சாலை போடும் இயந்திரங்கள் இரவோடு இரவாக கொண்டு வந்து இறக்கப்பட்டன. பாரிமுனை ரிசர்வ் வங்கி கட்டிடத்திலிருந்து தண்டையார்பேட்டை வரை புதிதாக சாலை போடப்பட்டது. அதே போல திரும்பிப் போவதற்கு மகாராணி தியேட்டரிலிருந்து கடற்கரை சாலை வரை புதிய சாலை போடப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட இந்தச் சாலைகளில் எங்கும் வேகத்தடை இல்லை. பழைய சாலையில் இருந்த வேகத் தடைகளும் அகற்றப்பட்டன.

எழும்பூர் ஆணையர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், தியாகராயர் கல்லூரி அருகே நின்று கொண்டு மேஸ்திரி போல சாலை போடும் வேலைகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்ததாகவும், அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும் சாலை போடுவதற்கான பொருட்களை எடுத்துக் கொடுத்து வேலை வேகமாக நடக்க உதவி செய்ததாகவும் எழுதுகின்றன பத்திரிகைகள்.

தண்டையார்பேட்டையில் உள்ள பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் மாநகராடசி அலுவலகம் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடம். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் இங்கே தான் அமைய வேண்டும் என்று முடிவு செய்தது தேர்தல் ஆணையம் அல்ல, ஜெயலலிதா தான். மேலும், அதை மற்றுமொரு அ.தி.மு.க அலுவலகமாகவே மாற்றிவிட்டிருந்தனர்.

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயாவின் தனி அறை எப்படி இருக்குமோ அப்படியே அலங்காரம் செய்யப்பட்டு எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று போயஸ் தோட்டத்தைப் போலவும் மாற்றப்பட்டிருந்தது. அந்தச் சின்ன அறைக்கு மூன்று ஏ.சி.க்கள் பொருத்தப்பட்டன. அதுவரை பாழடைந்து கிடந்த இடத்தில் ஃபால்ஸ் சீலிங், வால் பேப்பர், மின் விளக்குகள், ஸ்விட்சுகள், டேபிள் நாற்காலிகள், கடிகாரம், திரைசீலை, தரை விரிப்புகள், அலுமினிய கதவுகள் என்று அனைத்தும் புத்தம் புதிதாக வாங்கி மாட்டப்பட்டன.

அந்த குட்டி அறைக்குள் ஒரு குளியலறை வேறு கட்டப்பட்டிருந்தது. குளியலறை உள்ளே போவதற்கு மரத்தால் செய்யப்பட்ட தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அலுவலகத்திற்கு உள்ளே எப்படியோ அப்படி தான் முழுக் கட்டிடத்திற்கும் பச்சை வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. அலுவலக வாசற்படிக்கட்டுக்குக் கீழே பிளாட்பாரம், அதற்குக் கீழே சாலையிலிருந்து அரையடி உயரத்தில் இருக்கிறது பிளாட்பாரம்.

அ.தி.மு.க அடிமை அமைச்சர்கள்
ஜெயலலிதாவை வரவேற்பதற்காக பிரியாணியும், சரக்கும், துட்டும் கொடுத்து பெருங்கூட்டத்தை கூட்டி சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்திருந்தார்கள் அமைச்சர்கள் (படம் : நன்றி ஜூனியர் விகடன்)

கப்பல் மாதிரி சாலையை அளந்து கொண்டு செல்லும் ரோடோ காரில் வந்து இறங்கும் ஜெயலலிதா, அங்கிருந்து அலுவலக படிக்கட்டில் ஏறி நடந்து வர முடியாதாம். எனவே சாலையிலிருந்து நேராக அலுவலகத்திற்குள் வருவதற்கு ஒரு படிக்கட்டு மேடை அமைக்கப்பட்டது. காலில் மிதிபடப்போகும் அந்த படிக்கட்டுக்கு ஒரு தனி விரிப்பு. அந்த விரிப்பின் மீது மண் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அதற்கு மேல் ஒரு வெள்ளைத்துணி விரிப்பு. அவ்வப்போது அந்த வெள்ளைத்துணியில் விழும் துகள்களை அப்புறப்படுத்துவதற்கு தனி ஆட்கள். இந்த பகட்டான படிக்கட்டில் ஏறும் போது பிடிப்பதற்கு வசதியாக இரு புறமும் சில்வர் கம்பிகள் என்று காரிலிருந்து இறங்கி சில நொடிகள் நடந்து வருவதற்காக இத்தனை ஆடம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மறு நாள் காலை. ஜூன் 5-ம் தேதி மதியம் 2 மணிக்கு தான் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தார். ஆனால் காலை 8 மணிக்கே கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் 2,000 போலீசார் சாலை எங்கும் குவிக்கப்பட்டிருந்தனர். காலையிலிருந்து மதியம் நெருங்க நெருங்க போக்குவரத்து நெருக்கடி துவங்கியது. 12 மணிக்குள் தமது வேலைகளுக்குச் சென்று விட்டவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள். செயற்கையான இந்த இடைத்தேர்தலை போலவே செயற்கையான போக்குவரத்து நெருக்கடியையும் ஏற்படுத்தினர். ஆடம்பரமான வரவேற்பு நிகழ்ச்சிகளாலும், சாலைகளை முழுமையாக மூடியதாலுமே இந்த நெருக்கடி ஏற்பட்டது. சென்னை நகரின் முக்கிய சிக்னல்களில் போடப்பட்டிருந்த தடையரண்களை எல்லாம் கொண்டு வந்து இந்த சாலைகளில் குவித்து விட்டனர்.

12 மணி முதல் 3 மணி வரை கொளுத்தும் வெயிலில் மூடப்பட்டிருந்த பல்வேறு சாலைகளில் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், கார்களும், துறைமுகத்திற்கு சரக்குப் பெட்டிகளை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரிகளும், பல்லாயிரக்கணக்கானோரை சுமந்து கொண்டிருந்த மாநகரப் பேருந்துகளும் செல்வதற்கு வழியில்லாமல் திணறிக் கொண்டிருந்தன. அவசர வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தவர்கள், மருத்துவமனைகளுக்குச் சென்றவர்கள், முன்பதிவு செய்துவிட்டு வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்று அனைவரும் இந்த நெருக்கடியில் மாட்டிக்கொண்டனர். இந்தப் போக்குவரத்து நெருக்கடியிலிருந்து தப்பிக்க பலர் குறுக்கு வழிகளிலும், பிற வாகனங்களை முந்திக்கொண்டும் செல்ல முயன்றதாலும் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்யப்போகும் அதிசயம் நடக்க இருந்ததால் சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டவை இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்ல, ரயிலே நின்றுவிட்டது. அன்று நிற்காமல் இயங்கியது இருந்த கடலில் மிதக்கும் கப்பல்களும், விண்ணில் பறக்கும் விமானமும் தான். “வேட்புமனுத்தாக்கல் முடிந்து அம்மா திரும்பும் வரை எந்த கூட்ஸ் வண்டியும் இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் மோகன், ரயில்வே அமைச்சகத்திடம் நேரடியாக பேசியிருக்கிறார். அதன்படி ஜெயலலிதா சென்று திரும்பும் வரை எந்த சரக்கு ரயிலும் அந்தத் தடத்தில் இயக்கப்படவில்லை.

சி. மகேந்திரன்
ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்று இரண்டு சீட்டுகளையும், சொற்ப ஓட்டுக்களையும் வாங்கி எவ்வளவு கேவலமாக அவமானப்பட்டாலும் சற்றும் சளைக்காத போலிக்கம்யூனிஸ்டுகள் போலி ஜனநாயக தேர்தல் முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் காமடியில் முன்னணியில் இருக்கின்றனர். (போலி கம்யூனிஸ்டுகளின் வேட்பாளர் சி. மகேந்திரன்)

ஜெயலலிதாவை வரவேற்பதற்காக பிரியாணியும், சரக்கும், துட்டும் கொடுத்து பெருங்கூட்டத்தைக் கூட்டி சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்திருந்தார்கள் அமைச்சர்கள். அனைத்தையும் நேரங்காலம் பார்த்து சரியாகச் செய்யும் ஜெயா சசி கும்பல் போயஸ் தோட்டத்திலிருந்து சரியாக 1.30 மணிக்கு கிளம்பியது. ஆனால் அம்மாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் கார் நடுவழியில் கோளாறாகி நின்றது. இதனால் சில நிமிடங்கள் தாமதமானது. ரிப்பேரான காரிலிருந்து இறங்கி பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு காருக்கு மாற வேண்டும். ஜெயலலிதா இறங்கி ஏறினார். இதை மாபெரும் உலக அதிசயம் போலவும், தியாகமாகவும் அமைச்சர்கள் கருதினர்.

வேட்புமனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு சரியாக 2 மணிக்கு வந்து இறங்கினார் ஜெயலலிதா. நாலடி நடப்பதற்குள் வெயில் பட்டுவிடுமாம், உடனே ஜெயலலிதாவை விட ஒரு பெரிய சைஸ் குடையை விரித்து பிடித்தனர் பாதுகாப்பு படையினர். அம்மா அமர்வதற்கு ஒரு ஸ்பெஷல் சேரை போட்டனர். சரியாக 2.01 மணிக்கு (நல்ல நேரம்) கடிகாரத்தை பார்த்தபடி தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் வேட்புமனுவை கொடுத்தார் ஜெயா. அவர் அதை எழுந்து நின்று வாங்கிக் கொண்டார். சவுரிராஜன் ஜெயலலிதாவிடம் மட்டும் எழுந்து நின்று வாங்கவில்லை, ஜெயாவிடம் மட்டும் எழுந்து நின்று வாங்கினால் பிரச்சினையாகிவிடும் என்பதால் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த அனைவரிடமும் எழுந்து நின்றே வாங்கினார்.

முந்தைய தேர்தல்களில் அனைவரிடமும் உட்கார்ந்து வாங்கியதை வைத்து இங்கே ஜனநாயகம் ஆல் போல தழைத்துவிட்டதாக உருகியவர்கள் இப்போது எங்கே அறை எடுத்து அழுகிறார்கள், தெரியவில்லை.

ஜெயலலிதாவுக்கு பிடித்த எண் 11 என்பதால் அவர் 11-வது ஆளாக வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். டிராபிக் ராமசாமி, பதமராஜன், அகமது ஷாஜகான், ரவி பறையனார், ஆபிரகாம் ராஜ்மோகன் ஆகியோர் 3-ம் தேதியும், ராமதாஸ், மனோகரன், வெங்கடேஷ், வசந்தகுமார், குமாரசாமி ஆகியோர் 5-ம் தேதியும் அதாவது ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாகவும் வரவழைக்கப்பட்டு மனுக்கள் அளிக்க வைத்திருக்கிறார்கள். 11-வது ஆளாக ஜெயலலலிதா வந்தார்.

வேட்புமனுத்தாக்கல் செய்யும் இரண்டு நிமிடத்திற்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து எத்தனை லட்சங்களை கொட்டி இறைத்தார்கள், தெரியவில்லை. வடசென்னை என்பது வறுமை நிறைந்த மக்களின் பகுதி. அந்தப் பகுதியில் கழிவறையில் ஏறுவதற்கு கூட மேடை அமைத்து பகட்டு காட்டி இழிவுபடுத்துகிறது ஜெயா சசி கும்பல்.

இந்த இடைத்தேர்தலில் பிரதான ஓட்டுக்கட்சிகள் எல்லாம் போட்டியிடாமல் பின் வாங்கிக்கொண்ட நிலையில், கூத்தில் கோமாளிகள் இல்லாத குறையை தீர்த்து வைக்கின்றனர் போலிக்கம்யூனிஸ்டுகள். ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்று இரண்டு சீட்டுகளையும், சொற்ப ஓட்டுக்களையும் வாங்கி எவ்வளவு கேவலமாக அவமானப்பட்டாலும் சற்றும் சளைக்காத போலிக்கம்யூனிஸ்டுகள் போலி ஜனநாயக தேர்தல் முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் காமடியில் முன்னணியில் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் மகேந்திரனை காமடியாக்கி ஊடகங்கள் கேள்விகள் கேட்கின்றன. அவரும் ஏதோ இலட்சிய பயணத்தில் இருக்கும் சாகச வீரர் போல வெட்கமின்றி வாழ்வே மாயம் என தத்துவம் பேசுகிறார். தொலைக்காட்சி விவாதங்களில் இவரை அ.தி.மு.க சில்லுண்டிகள் கதறக் கதற போட்டுத் தாக்குகின்றனர். கம்யூனிஸ்டுகள் பேசுவார்கள், அம்மா அதை களத்தில் செய்வார் என ‘தோழர்களை’ பப்பி ஷேமாக்கி முடக்கிவிட்டனர்.

தேர்தல் ஆணையம் என்கிற அமைப்பு தனக்கென்று விதிக்கப்பட்ட குறைந்தப்பட்ச பணியைக் கூட நிறைவேற்ற முடியாத செயலற்ற உறுப்பாகிவிட்டது என்பதை இந்த இடைத்தேர்தலில் நன்கு காண முடிகிறது. எதிர்க்கட்சிகளோ நடப்பவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்து புலம்பிக் கொண்டிருக்கின்றனவே தவிர எதையும் செய்யத் திராணியற்றவையாக இருக்கின்றன. ஆளும்கட்சி நடத்தும் தேர்தல் இது, இங்கே ஜனநாயகமில்லை என்று அழுகிறார்களே தவிர ஜனநாயகமில்லாத அமைப்பில் தங்களுக்கு என்ன வேலை என்று அவர்கள் வெட்கப்படுவதில்லை.

ஜெயா கும்பலோ எதற்கும், யாருக்கும் கட்டுப்படாமல் ரெக்கார்டு டான்ஸை நடத்தி வருகிறது. இவ்வளவு கேலிக்கூத்துகளுக்கு பிறகும் இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா ? இன்னமும் இது உண்மையான ஜனநாயகம் தான் என்று நம்புகிறீர்களா ?

–    வையவன்

ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?

2

லக நிகழ்வுகளை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டுவரும் காட்சி ஊடகங்கள், அதிலும் குறிப்பாக செய்தித் தொலைக்காட்சிகள், எந்தவொரு விசயம் குறித்தும் மக்களிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மக்களின் பிரச்சனைகளைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் பேசுகின்ற, சமூக அக்கறை கொண்டவர்களாக, பெண்ணுரிமைப் போராளிகளாக இந்தத் தொலைக்காட்சிகள் தங்களை எப்போதும் விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.

ஆனால், மேற்பார்வைக்கு முற்போக்கானது போலத் தோன்றும் இந்தச் செய்தித் தொலைக்காட்சிகளின் உண்மை முகமோ வேறு மாதிரி உள்ளது. குறிப்பாக, பெண் ஊழியர்களுக்கு இத்தொலைக்காட்சி நிறுவனங்கள் இழைத்துவரும் வக்கிரமான பல பாலியல் தொல்லைகள் அண்மையில் அம்பலமாகியுள்ளன.

செய்தி வாசிப்பாளர் தனு சர்மா
இந்தியா – டி.வி நிர்வாகத்தின் விபச்சார தரகு வேலைக்கு இணங்க மறுத்து, அத்தொலைக்காட்சி அலுவலக வாயிலிலேயே விசம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த செய்தி வாசிப்பாளர் தனு சர்மா.

வட இந்தியாவில் பிரபலமான செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான “ஜி-நியூஸ்” தொலைக்காட்சி நிறுவனம், தனது பெண் ஊழியர் ஒருவர் கருவுற்ற காரணத்திற்காக அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதுபற்றிக் கூறும் அந்த ஊழியர், தான் திருமணம் செய்து கொள்ளப்போவதை நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தும் முன்பு வரை தனது வேலையிலும் செயல்திறனிலும் குறையேதும் காணாத நிர்வாகம், திருமணம் செய்து கொள்ள விடுமுறைக்கு விண்ணப்பித்தது முதல் தன்னைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியதையும், தனது திருமணத்திற்கான விடுமுறையைக்கூட மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் வாங்க முடிந்ததையும் வேதனையுடன் கூறுகிறார்.

பின்னர், அவர் கருவுற்றிருப்பதை நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியதும், அடுத்த இரு நாட்களில் அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டு, அதற்குக் காரணமாக, அவரது செயல்திறன் தாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை எனக் கூறி ஒரு கடிதத்தை முப்பது நாட்களுக்கு முன்னரே கொடுத்தது போல் முன்தேதியிட்டுக் கொடுத்துள்ளது, ஜி நியூஸ் தொலைக்காட்சி நிறுவனம். கர்ப்பிணிப் பெண்ணை வேலையை விட்டு நீக்கும் சட்டவிரோதச் செயலை மறைக்கவே இப்படியொரு மோசடிக் கடிதத்தை ஜி-நியூஸ் நிர்வாகம் தயாரித்துள்ளது. “சொல்வதெல்லாம் உண்மை” புகழ் ஜி-நியூஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது, தொழிலாளர் நலச் சட்டத்திற்கு எதிரானது எனத் தொழிலாளர் தீர்ப்பாயமும், மும்பை தொழில்துறை நீதிமன்றமும் உத்தரவிட்ட பின்னரும், அதனை ஏற்றுக் கொள்ளாத ஜி-நியூஸ் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

இதைவிட வக்கிரமான சம்பவம் டெல்லியிலுள்ள “இந்தியா-டி.வி.”யில் செய்தி வாசிப்பாளரான தனு சர்மா என்ற பெண் ஊழியருக்கு நேர்ந்துள்ளது. அது குறித்துத் தனது முகநூலில் எழுதியுள்ள தனுசர்மா, இந்தியா-டிவியில் தான் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே தன் மீதான பாலியல் சுரண்டலை உணர முடிந்ததாகக் கூறுகிறார். வேலைக்குச் சேர்ந்த முதலிரண்டு வாரங்களில் கனிவாக நடந்து கொண்டு நெருக்கமாகப் பழகிய தனது மேலாளரான அனிதா சர்மா, பின்னர் கட்டுப்பெட்டியாக இருக்காமல் வெளி உலகத்தைப் புரிந்துகொண்டு, கார்ப்பரேட் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தனிமையில் சந்திக்கும்படியும், தான் கூறியதை ஏற்றுக் கொண்டால் கை நிறைய சம்பளமும், பெயரும், புகழும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி இணங்கவைக்க முயற்சித்ததையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

இது குறித்து துறைத்தலைவரான எம்.என்.பிரசாத்திடம் தனு சர்மா முறையிட்ட போது, இதில் தவறேதும் இல்லை எனக் கூறிய அவர், மேலாளரான அனிதா சர்மா கூறுவதைக் கேட்டு நடக்குமாறு தனு சர்மாவை வற்புறுத்தியுள்ளார். ஆனால், தனு சர்மா அதற்கும் இணங்கவில்லை. அதன் பின்னர், துறைத் தலைவரான எம்.என்.பிரசாத்தைச் சந்தித்த போதெல்லாம், அவர் தனு சர்மாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவர் அணிந்துவரும் உடை, சிகை அலங்காரம், பேச்சு வழக்கு – என அனைத்திலும் குற்றம் கண்டுபிடித்து, அவரைச் சாடியதுடன் இந்நிறுவனத்தினர் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு அதிகாலை 4 மணி ஷிப்டில் அவரைப் போட்டுள்ளனர். அத்துடன் அவரது சிறுசிறு தவறுகளுக்கும் கூட மிகக் கேவலமான வார்த்தைகளைக் கொண்டு அனைவரது முன்னிலையிலும் அவரைத் திட்டி அவமானப்படுத்தியிருக்கிறது.

சன் நியூஸ் ராஜா
சன் நியூஸ் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பெண்களைப் பாலியல் தொந்தரவு செய்த அந்நிறுவனத்தின் தலைமைச் செய்தி ஆசிரியரான ராஜாவைக் கைது செய்து பணிநீக்கம் செய்யக் கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் ஏப்ரல் 17, 2013-ல் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இந்தியா-டி.வி.யில் வேலைக்குச் சேர்ந்தபோது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, நிர்வாகம் நினைத்தால் தனு சர்மாவை எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கிவிட முடியும். ஆனால், அவராகவே விலகினால், அவர் நிர்வாகத்துக்கு 6 மாத சம்பளத்தைத் தந்துவிட்டுத்தான் வெளியேற முடியும். இதனால் தனு சர்மாவால் வேலையை விட்டு வெளியேறவும் முடியவில்லை. நிர்வாகத்தின் தொடர் தாக்குதலால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியா-டி.வி.யின் அலுவலக வாயிலிலேயே விசம் குடித்துள்ளார். தொலைக்காட்சி நிர்வாகம் தன்னைத் தற்கொலைக்குத் தூண்டியதாக தனு சர்மா கொடுத்த புகார் குப்பையில் போடப்பட்டு, அவர் மீது இந்தியா-டி.வி தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கு தற்போது நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறது.

முதலாளிகள், அதிகார வர்க்கம் – நீதித்துறையுடன் ஊடகத்துறையினருக்கு இணக்கமான உறவு இழையோடி நிற்பதால், பணத்துக்குச் செய்திகளை வெளியிட்டுக் கருத்தை உருவாக்கும் தரகு வேலையைச் சில பத்திரிகையாளர்கள் செய்வதைப் போல, இன்று சில தொலைக்காட்சி நிறுவனங்கள் இன்னும் ஒருபடி மேலே போய் விபச்சாரத் தரகர்களாக மாறி தங்களுக்குத் தேவையானதைச் சாதித்துக் கொள்கின்றனர். “வீக் என்ட் பார்ட்டி”கள், ‘சோஷியலைசிங்’ முதலான கழிசடைக் கலாச்சாரத்தைத் தங்களது ஊழியர்கள் மத்தியில் பரப்பி விபச்சாரத்தை நிறுவனமயமாக்கி வருகின்றனர். இது பிடிக்காதவர்கள் அங்கிருந்து அவ்வளவு எளிதில் வெளியேற முடியாதபடிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தங்கள் அவர்கள் வேலைக்குச் சேரும் போதே போடப்படுகின்றன. “உங்களை ஒரு பிராண்டாக ஆக்க பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம்; எனவே, நீங்கள் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினால் அதற்கு ஈடான பணத்தைக் கொடுக்க வேண்டும்” என தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனை நியாயப்படுத்துகின்றன.

இத்தகைய சூழலில் தனது மேலாளர் பாலியல் வக்கிரப் பேர்வழியாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களால் அதை எதிர்த்துப் போராட இயலாத நிலைமைதான் உள்ளது. இதையும் தாண்டி ஒரு பெண் ஊழியர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக ஒருவர் மீது புகார் கூறினால், “நீங்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். அவர் ரொம்ப நல்லவர்” என்று நைச்சியமாகவும், “நீ எந்த வகையிலும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாத போது, பிரச்சினையை ஏன் பெரிது படுத்துகிறா? இது உனக்குத்தான் அவமானத்தைத் தேடித்தரும்” என்று அச்சுறுத்தியும் இந்த விவகாரம் நிர்வாகத்தால் அமுக்கப்படுகிறது.

செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களில் உள்ள நியூஸ் ரூம் எனப்படும் செய்தி அறைகள் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைக் கூடங்களாக உள்ளன என்று பத்திரிகையாளர் அமிர்த தத்தா கூறுகிறார். தொலைக்காட்சி நிறுவனங்கள், பெண்களை வெறும் அழகுப் பொருட்களாக மட்டுமே பார்ப்பதாகக் கூறும் அவர், பாலியல் தொந்தரவு குறித்த அவர்களது புகார்கள் எப்போதும் நிர்வாகத்தால் ஒதுக்கித் தள்ளப்படுவதாகக் கூறுகிறார்.

தமிழகத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பெண்களைப் பாலியல் தொந்தரவு செய்த அந்நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியரான ராஜா, மற்றுமொரு அதிகாரி வெற்றிவேந்தன் ஆகிய இருவர் குறித்தும் அந்நிறுவனத்தில் வேலை பார்த்த அகிலா என்ற பெண் ஊழியர் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து ராஜா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அண்மையில் மற்றொரு பெண் ஊழியர் கொடுத்த புகாரின்படி சன் டி.வியின் தலைமை அதிகாரி பிரவீன் கைது செய்யப்பட்டார். 2012 டிசம்பரில் டெல்லியில் நடந்த துணை மருத்துவ மாணவி மீது நடந்த கொடூரமான கும்பல் பாலியல் வன்முறையும், அந்த இளம்பெண்ணின் மரணமும் இந்தியாவை உலுக்கியபோது, பெண்ணுரிமைப் போராளிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் இத்தகைய சம்பவங்கள் அம்பலமாகும்போது கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஒரு திருடன் சக திருடனைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதுதான் இவர்கள் கடைப்பிடிக்கும் அறம்.

இந்தச் செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலைக்குச் சேர்வதற்கு ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதியே அழகும் இளமையும் கவர்ச்சியும்தான். செய்தி வாசிப்பதற்குக்கூட தோற்றப்பொலிவான பெண்களைத்தான் இவர்கள் தேர்வு செய்கிறார்கள். இங்கே வேலை பார்க்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் இதற்குத் தகுந்தாற்போலத் தயாரிக்கப்படுகிறார்கள். கதைக்குத் தேவைப்படுவதால் கவர்ச்சியாக நடிப்பதாகக் கூறும் நடிகைகளைப் போல, தான் ஒரு பண்டமாக விற்கப்படுவதை ஒப்புக்கொள்ளும் வகையில் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இந்தச் சீரழிவுக் கலாச்சாரத்தின் நீட்சிதான், இங்கே பணிபுரியும் பெண்கள் மீதான பாலியல் வன்முறையாக வெளிப்படுகிறது.

– அழகு
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

ஜெயா விடுதலை : மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு

6

ருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தது மற்றும் கூட்டுச் சதி ஆகிய கிரிமினல் குற்றங்களுக்காக ஜெயாவிற்கும் அவரது பினாமிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை முற்றிலுமாக ரத்து செய்து குற்றவாளிகள் நால்வரையும், அவர்களது பெயரில் இருக்கும் சொத்துக்களையும் விடுவித்து தீர்ப்பளித்திருக்கிறது, கர்நாடகா உயர்நீதி மன்றம்.

நீதிபதி குமாரசாமி
நீதிபதி குமாரசாமி : கத்துக்குட்டியா, ஜெயாவின் கைக்கூலியா?

நீதிபதி குமாரசாமி அளித்துள்ள இத்தீர்ப்பு பிழையானது, மோசடியானது எனக் கூறுவதற்கு பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை, சாதாரண கூட்டல் கழித்தல் தெரிந்திருந்தாலே போதும். ஜெயாவும் அவரது பினாமிகளும், அக்கும்பல் உருவாக்கி வைத்திருந்த லெட்டர் பேடு கம்பெனிகளும் அரசு வங்கிகளில் வாங்கிய கடன்களின் கூட்டுத் தொகையை 10,67,31,274 ரூபாய் எனக் காட்டுவதற்குப் பதிலாக, அதனை 24,17,31,274 ரூபாயாகத் தனது தீர்ப்பில் (பக்.852) காட்டி, அதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஜெயா-சசி கும்பலை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்திருக்கிறார்.

வரியைக் கட்டாமல் ஏய்க்கும் பண முதலைகள் அனைவரும் அதற்காக வருமானத்தைக் குறைத்து, செலவுகளைக் கூட்டிக் காட்டும் உள்குத்து வேலைகளைச் செய்வது வாடிக்கையான ஒன்று. அதனையொத்த உள்குத்து வேலையைத் தலைகீழாகச் செய்துதான் – ஜெயாவின் செலவுகளைக் குறைத்து, வருமானத்தை அதிகரித்துக் காட்டியும்தான் நீதிபதி குமாரசாமி ஜெயா-சசி கும்பலை விடுவித்திருக்கிறார். ஜெயாவின் வருமானத்தை அதிகரித்துக் காட்டுவதற்கு குமாரசாமி நம்பியிருந்த முக்கியமான துருப்புச் சீட்டு, அக்கும்பல் பெற்ற கடன்கள்தான். அந்த இடத்தில்தான், ஜெயா-சசி கும்பல் பெற்ற மொத்தக் கடன் 10,67,31,274 கோடி ரூபாய் என்பதற்குப் பதிலாக 24,17,31,274 கோடி ரூபாய் என மாற்றிப் போட்டு தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறார், குமாரசாமி.

ஜெயா-சசி கும்பல் வாங்கிய கடன்களைக் கூட்டிப் போடுவதில் மட்டும் மோசடி நடைபெறவில்லை. அதனையும் தாண்டி கடன்களை வருமானமாகக் காட்டும் விசயத்தில் ஏகப்பட்ட தகிடுதத்தங்களைத் தெரிந்தே செய்திருக்கிறார், குமாரசாமி. மூன்றாவது குற்றவாளியான சுதாகரன் தனக்கு 1.57 கோடி ரூபாய் கடன் அளிக்குமாறு இந்தியன் வங்கி, அபிராமபுரம் கிளைக்கு விண்ணப்பம் செய்ததில், அவருக்கு 1.33 கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டது. ஆனால், நீதிபதி குமாரசாமியோ வங்கி அளித்த கடன் தொகைக்கு மாறாக, சுதாகரன் கடனாகக் கோரியிருந்த 1.57 கோடி ரூபாயை வருமானமாகக் காட்டியிருக்கிறார்.

முதல் குற்றவாளியான ஜெயா, அதே இந்தியன் வங்கிக் கிளையிடமிருந்து ஆகஸ்டு 1996-இல் 90 இலட்ச ரூபாய் கடன் பெற்றார். வழக்கு காலத்திற்கு பிறகு பெறப்பட்ட கடனை வழக்கு காலத்தில் கிடைத்த கடனாகக் காட்டி, அதனை வருமானத்தில் சேர்த்திருக்கிறார் குமாரசாமி. இவ்வளவு கேவலமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் கணக்குப் போட்டு ஜெயா-சசி கும்பலை விடுவித்திருக்கும் இந்தத் தீர்ப்பில், இந்தக் கணிதப் பிழைகளைத் தாண்டியும் அதிர்ச்சி அளிக்கும் அம்சங்கள் பல உள்ளன.

குமாரசாமி: நீதிபதியா, ஜெயா விசுவாசியா?

“சொத்துக் குவிப்பு வழக்கு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு தி.மு.க.வால் போடப்பட்ட வழக்கு” என்பதுதான் ஜெயா-சசி கும்பலின் வாதம். இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்றியபொழுதே அ.தி.மு.க. கும்பலின் இந்த வாதத்தை உச்சநீதி மன்றம் புறக்கணித்துவிட்டது. ஆனால், நீதிபதி குமாரசாமி குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளப்பட்ட இந்த வாதத்தை மீண்டும் கிளறி, “சட்டப் போராட்டம் என்ற போர்வையில் அரசியல் இலாபங்களுக்காக வழக்குத் தொடுப்பதை ஊக்குவிக்கக் கூடாது” எனக் (பக்.739) குறிப்பிட்டு, ஜெயா கும்பலின் அவதூறுகளுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்.

ஜெயா மற்றும் அவரது பினாமிகள் சசிகலா, சுதாகரன், இளவரசி.
பிரம்மஸ்ரீ கிரிமினல் ஜெயா மற்றும் அவரது பினாமிகள் சசிகலா, சுதாகரன், இளவரசி.

2001-ல் தமிழக முதல்வராக ஜெயா பதவியேற்றவுடனேயே, சென்னையில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் இறங்கினார். அதன் ஒரு பகுதியாக, அவ்வழக்கு விசாரணையில் ஜெயாவுக்கு எதிராகச் சாட்சியம் அளித்தவர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு பிறழ்சாட்சியாக மாற்றப்பட்டனர். இந்த நிலையில்தான் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென அன்பழகன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்சநீதி மன்றம் இவ்வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியபொழுதே பிறழ் சாட்சியங்களை மீண்டும் விசாரிக்குமாறு அறிவுறுத்தியது. இந்த அடிப்படையில் பிறழ் சாட்சியங்கள் மீண்டும் விசாரிக்கப்பட்டு, ஜெயா-சசி கும்பலின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

நீதிபதி குமாரசாமி இது குறித்து தனது தீர்ப்பில், “சாட்சிகளைப் பிறழ் சாட்சிகளாகக் கருதாமல், அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள். அந்த சாட்சிகளிடம் தங்களுக்குச் சாதகமான முறையில் அரசுத் தரப்பு கேள்வி கேட்டுள்ளது. சாட்சிகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு விதமாக சாட்சி அளித்தால் அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்லதல்ல. இப்பிறழ் சாட்சியங்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமான அம்சங்களில் ஒன்றாகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிடுகிறார்.

தங்க, வைர நகைகள்
தங்க, வைர நகைகளாக மாறிய ஊழல் பணம்.

இப்படிச் சுற்றிவளைத்து சொல்வதற்குப் பதிலாக வழக்கை பெங்களூருக்கு மாற்றியதே தவறு என்று குமாரசாமி கூறியிருக்கலாம். ஏனென்றால், அவரது தீர்ப்பின் இந்த அம்சம் வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதன் அடிப்படையையே தகர்க்கிறது. இதன் மூலம், “நான் பத்து பவானி சிங்கிற்குச் சமம்” எனக் காட்டியிருக்கிறார், நீதிபதி குமாரசாமி.

கட்டிடச் செலவு

நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் 1991-96 காலக் கட்டத்தில் ஜெயா-சசி கும்பலின் ஒட்டுமொத்த செலவு – புதிய பங்களாக்களைக் கட்டியது, பழைய பங்களாக்களை நவீனப்படுத்தியது, வளர்ப்பு மகனின் திருமணச் செலவு, தமிழகமெங்கும் நிலங்களை வாங்கிக் குவித்தது என்ற வகையில் 55,02,48,215 ரூபாயாக மதிப்பிட்டிருந்தார். இதில் சரிபாதி வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணத்திற்கும், தோழிகள் உல்லாசமாக ஓய்வெடுப்பதற்கு பையனூர், கோடநாடு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் பங்களாக்களைக் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வீடு, கடைகள் எனப் பல்வேறு வகையான கட்டிடங்களைக் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் செலவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை தனது குற்றப் பத்திரிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களைக் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் ஜெயா-சசி கும்பல் அந்த ஐந்தாண்டுகளில் கிட்டதட்ட 27,79,88,945 ரூபாய் செலவழித்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருந்தது. முதல் குற்றவாளியான ஜெயா இக்கட்டிடச் செலவுகளுக்கு 3,62,47,700 ரூபாய் மட்டுமே தான் செலவழித்ததாக வாதாடினார். இரண்டு தரப்பு சாட்சியங்களையும் பரிசீலித்த நீதிபதி குன்ஹா அரசுத் தரப்பு அக்கட்டிடங்களில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை 1999-ம் ஆண்டு விலையில் மதிப்பீடு செய்திருந்ததைத் தள்ளுபடி செய்து, இந்தச் செலவை 22,53,92,344 ரூபாய் என நிர்ணயம் செய்தார்.

ஆனால், நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் கட்டிடச் செலவை வெறும் 5,10,54,060 ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார். நீதிபதி குன்ஹாவின் மதிப்பீட்டை வெட்டுவதற்கு அவர் குறிப்பிட்டுள்ள காரணம் வேடிக்கையானது மட்டுமல்ல, குதர்க்கமானதுமாகும். “அரசுத் தரப்பு பொதுப்பணித்துறையின் மதிப்பீட்டின்படி கட்டிடச் செலவை நிர்ணயித்திருக்கிறது. பொதுவாகவே, பொதுப்பணித்துறை, ஒப்பந்ததாரர்களுக்குக் காலம் தாழ்த்தி பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, தனது மதிப்பீட்டை அதிகமாகவே நிர்ணயிக்கும்” எனக் கூறியிருக்கும் குமாரசாமி தனது மதிப்பீட்டை எப்படி நிர்ணயித்தார் என்பதைத் தீர்ப்பில் சொல்லவில்லை. அவர் சொல்லாவிட்டாலும், ஜெயா காண்பித்த செலவும், குமாரசாமி நிர்ணயித்துள்ள செலவும் நெருக்கமாக இருப்பது மட்டும் பளிச்செனத் தெரிகிறது.

திருமணச் செலவு

சுதாகரன் திருமணம்
சுதாகரன் திருமணம் : ஜெயா-சசி கும்பல் அடித்த கொள்ளையின் பகிரங்க சாட்சி

ஜெயா, மூன்றாவது குற்றவாளியான சுதாகரனின் திருமணத்தை நடத்துவதற்கு 6,45,04,222 ரூபாய் செலவழித்ததாகப் பல்வேறு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றஞ்சுமத்தியது, தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை. ஆனால், ஜெயாவோ இத்திருமணத்திற்கு 28,67,520 ரூபாய் மட்டுமே தான் செலவழித்ததாகவும், மற்ற செலவுகளை மணமகள் வீட்டாரான சிவாஜி குடும்பத்தாரும், தனது கட்சிக்காரர்களும் கவனித்துக் கொண்டதாக ஒரு பச்சைப் பொயைத் துணிந்து சொன்னார்.

நீதிபதி குன்ஹா, தனது தீர்ப்பில் மணமகள் வீட்டார் மணமகனுக்கான 22 கோட்-சூட்டுகள் தைப்பதற்கு 1,41,025 ரூபாய் செலவழித்ததைத் தாண்டி வேறெந்த செலவையும் செயவில்லை என்பதைத் தக்க ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறார். குறிப்பாக, சிவாஜியின் மூத்த மகனும், மணமகளின் தாய் மாமனுமான ராம்குமார், “இந்தத் திருமணத்திற்காகத் தனி வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் வழியாக 90 இலட்ச ரூபாய்க்கு மேல் தான் செலவழித்ததாக”ச் சாட்சியம் அளித்தார். ஆனால், ராம்குமார் அந்த வங்கிக் கணக்கின் ஒரிஜினல் பாஸ்புக்கைக்கூட நீதிமன்றத்திடம் சாட்சியமாக அளிக்கவில்லை. மாறாக, வங்கிக் கணக்கு எண்கூடத் தெரியாத அளவிற்கு ஏதோவொரு பாஸ்புக்கின் ஜெராக்ஸ் காப்பியை சாட்சியமாக அளித்து, நீதிமன்றத்தை ஏமாற்ற முனைந்தது, ஜெயா கும்பல். ஜெயா கும்பலின் இந்த தகிடுதத்தங்களையெல்லாம் அம்பலப்படுத்தி ஒதுக்கித் தள்ளிய நீதிபதி குன்ஹா, தனது தீர்ப்பில் இத்திருமணத்திற்கு முதல் குற்றவாளியான ஜெயா செலவழித்த தொகை மூன்று கோடி ரூபாய் என நிர்ணயம் செய்தார்.

ஆனால், நீதிபதி குமாரசாமியோ வருமான வரித்துறையிடம் ஜெயா திருமணச் செலவாகக் காட்டிய இருபத்தெட்டு இலட்ச ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்ற கோடிக்கணக்கான ரூபாய் பெறுமான செலவுகள் அனைத்தையும் மணமகள் வீட்டாரும், அ.தி.மு.க. தொண்டர்களும்தான் செய்ததாகத் தீர்ப்பு எழுதியிருக்கிறார். திருமணச் செலவுகளை மணமகள் வீட்டார்தான் செய்தனர் என்பதற்கு அவர் எவ்வித ஆதாரத்தையும் காட்டவில்லை; கேட்கவுமில்லை. மாறாக, இந்து மத கலாச்சராம், பழக்கவழக்கங்களின்படி மணமகள் வீட்டார்தான் திருமணச் செலவுகளைச் செய்வார்கள் என மட்டை அடியாக அடித்து ஜெயா கும்பலைக் காப்பாற்றிவிட்டார்.

ஜெயா கும்பல், ராம்குமாரை முன்னிறுத்தி சிறப்பு நீதிமன்றத்தை ஏமாற்ற முனைந்ததைப் பற்றிப் பேசாத நீதிபதி குமாரசாமி, பந்தல் அலங்காரச் செலவுகளை அரசுத் தரப்பு அளவுக்கு மீறி மிகைப்படுத்திக் காட்டியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். “அரசுத் தரப்பு திருமணப் பந்தல்களை நேரடியாகப் பார்த்து மதிப்பீடு செய்யவில்லை. பந்தல்களின் வரைபடங்களை வைத்துக்கொண்டு செலவு கணக்கை மதிப்பீடு செய்துள்ளனர். வரைபடங்களின்படிதான் பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கும் என நிச்சயமாகக் கூறமுடியுமா?” எனத் தனது தீர்ப்பில் குமாரசாமி பாயிண்டுகளை அடுக்கியிருக்கிறார்.

சுதாகரன் திருமணம் 1995-ல் நடந்தது. சொத்துக்குவிப்பு வழக்கு 1996-ல் பதியப்பட்டு அதன் பிறகுதான் விசாரணை தொடங்கியது. இந்த நிலையில் பந்தலை நேரடியாகப் பார்த்து மதிப்பீடு செய்யவில்லை என ஒரு நீதிபதி கூறினால், அவருடைய தர்க்க அறிவு நம்மைத் திடுக்கிடத்தான் வைக்கிறது.

பரிசுப்பொருள்

கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா
ஜெயா-சசி கும்பலால் வளைத்துப் போடப்பட்ட கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா

இலஞ்சத்தின் இன்னொரு பெயர்தான் அன்பளிப்பு என்பது ஊரறிந்த உண்மை. அப்படிபட்ட அன்பளிப்புகளை வருமானமாக எடுத்துக் கொள்ளலாம் எனத் தனது தீர்ப்பில் கூச்சமின்றிக் கூறியிருக்கிறார், நீதிபதி குமாரசாமி.

1992-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் நாள் தனது 44-வது பிறந்த நாளைக் கொண்டாடியபொழுது, தனது கட்சியின் தொண்டர்கள் பணமாகவும் பொருட்களாகவும் ஏராளமான அன்பளிப்புகளைத் தனக்கு வழங்கிய வகையில் 2,15,00,012 ரூபாய் வருமானம் வந்தது. மேலும், வெளிநாட்டில் வசித்த ஒருவர் தனக்கு 77,52,059 ரூபாயை வங்கி வரைவுக் காசோலை மூலம் அன்பளிப்பாக அளித்தார். இந்த அன்பளிப்புகளுக்கு உரிய வருமான வரியைச் செலுத்தியிருக்கிறேன்.எனவே, இந்த அன்பளிப்புகளை வருமானமாகக் கருத வேண்டும் என்பது குற்றவாளி ஜெயா தரப்பு வாதம்.

“பொது ஊழியராக இருப்பவர் அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால், இலஞ்சம் வாங்குவதற்கு சட்டம் உருவாக்கி வைத்துள்ள தடைகளை அன்பளிப்பு என்ற வழியில் எளிமையாகக் கடந்துவிடுவார்கள்” என்ற வாதத்தைத் தனது தீர்ப்பில் முன்வைத்து ஜெயா-சசி கும்பலின் இந்த ‘வருமானத்தை’ ஒதுக்கித் தள்ளிய நீதிபதி குன்ஹா, ஜெயா பெற்ற அன்பளிப்புகள் குறித்து பலத்த சந்தேகத்தையும் தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.

“1987-88 முதல் 1992-93 வரையிலான ஆண்டுகளுக்கான தனது வருமான வரிக் கணக்கை, 1992 நவம்பரில் ஜெயா தாக்கல் செய்தபொழுது, அதில் தனது 44-வது பிறந்தநாளில் பரிசாகக் கிடைத்த ரொக்கம், நகைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சில ஆண்டுகள் கழித்துதான், தனக்குப் பிறந்த நாள் பரிசுகள் கிடைத்த விவரத்தைக் குறிப்பிட்டு வருமான வரித்துறைக்குக் கடிதம் எழுதி தெரியப்படுத்தி இருக்கிறார். அந்த சமயத்திலும்கூட எந்த பிறந்த நாளில் எவ்வளவு பரிசுகள் கிடைத்தன என்பது பற்றிய விவரங்களைக் குறிப்பிடவில்லை. ‘இந்த வருமானங்களை எந்த வழியில் வந்தது என்று தெரியாத வருமானங்கள்’ என வருமானவரித் துறை பதிவு செய்திருக்கிறது. மேலும், ஜெயாவிற்கு வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறப்படும் 77 இலட்ச ரூபாய்க்கான காசோலை குறித்து வழக்கும் நடந்து வருகிறது” எனத் தனது தீர்ப்பில் விவரித்துள்ள நீதிபதி குன்ஹா, இவற்றின் அடிப்படையில், “பரிசுப் பொருட்களாக வந்திருந்தாலும், அவற்றுக்குச் சரியான ஆதாரங்கள் இருந்தாலும்கூட, அவற்றை ஜெயலலிதா பெற்று தனது உடமையாக்கிக் கொண்டது ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றம்தான்” என அறிவித்தார்.

சுதாகரன் திருமணப் பந்தல்நீதிபதி குன்ஹாவின் வாதங்களில் ஒன்றுக்குக்கூட நீதிபதி குமாரசாமி பதில் அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, பரிசுப் பொருட்கள் பற்றித் தாமதமாக வருமான வரித் துறைக்குத் தெரிவித்திருப்பதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்ற முறையில் இந்த அன்பளிப்பு விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்டுள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்து 77 இலட்ச ரூபாய் பரிசாக வந்தது தொடர்பாக சி.பி.ஐ. தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதையும் அலட்சியப்படுத்திவிட்டு, ஜெயாவுக்கு 44-ஆவது பிறந்த நாளுக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களில் இருந்து ஒன்றரைக் கோடி ரூபாயை வருமானமாகக் கணக்குக் காட்டியிருக்கிறார்.

நமது எம்.ஜி.ஆர்.

பரிசுப் பொருள் விவகாரத்தைவிடப் பலமடங்கு மோசடிகள் கொண்டது நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை டெபாசிட் திட்டம். சொத்துக் குவிப்பு வழக்கு தம் மீது பாய்ந்த பிறகு, அதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தோடுதான் இப்படியொரு டெபாசிட் திட்டத்தை உருவாக்கியது, ஜெயா- சசி கும்பல். இதன் மூலம் தமக்கு 14 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் வந்ததாக ஜெயா-சசி கும்பல் வாதாடி வந்தது. இதற்குரிய ஆதாரங்கள் எதையும் காட்டாமல், துணிந்து வருமான வரித் துறைக்கு இந்த வசூல் தொடர்பான கணக்கினைக் கொடுத்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் உரிய ஆதாரங்களைக் கேட்டபொழுது, அதற்குரிய ரசீதுகளை காரில் கொண்டுவரும்பொழுது தொலைந்து போவிட்டதாக ஒரு அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டதோடு, இது தொடர்பாக புகாரும் பதியப்பட்டிருப்பதாக கதையளந்தது. பின்னர், மோசடிக்கு மேல் மோசடியாக, காணாமல் போன ரசீதுகள் திரும்பக் கிடைத்துவிட்டதைப் போல போலியான ரசீதுகளைத் தயாரித்து வருமான வரித் துறையிடம் அளித்தது.

இந்த மோசடிகள் ஒவ்வொன்றையும் ஆதாரங்களோடு நிரூபித்த நீதிபதி குன்ஹா, இந்த டெபாசிட் திட்டமே போலியானது எனத் தீர்ப்பில் உறுதிப்படுத்தினார். மேலும், 1991-96 கால கட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மூலம் தமக்கு 4.19 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைத்தது என ஜெயா-சசி தரப்பு வாதாடியது. இந்த வருமானத்தை நிரூபிப்பதற்குத் தரப்பட்ட வரவு-செலவு அறிக்கையும் போலியானது என விசாரணையின் போது நிரூபணமானதால், இந்த வருமானத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்தார் நீதிபதி குன்ஹா.

நீதிபதி குமாரசாமி நமது எம்.ஜி.ஆர். டெபாசிட் திட்டத்தின் மூலம் கிடைத்ததாகச் சொல்லப்பட்ட 14 கோடி வருமானத்தைக் கணக்கில் கொள்ளவில்லையென்றாலும், இது தொடர்பான குற்றவாளிகள் தரப்பு சாட்சியங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும் என ஜெயா கும்பலுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார். மேலும், ஜெயா பப்ளிகேஷன்ஸ் மூலம் 4 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்ற குற்றவாளிகளின் தரப்பு வாதத்தை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார்.

“வருமான வரித் துறைக்குக் கணக்கு தாக்கல் செய்து, வரியைக் கட்டிவிட்டார்கள்” என்ற ஒற்றை வாதத்தை முன்வைத்தே, ஜெயா-சசி கும்பலின் தில்லுமுல்லு கணக்குகள் அனைத்தையும் தனது தீர்ப்பில் வெள்ளையாக்கிவிட்டார், நீதிபதி குமாரசாமி. சுதாகரன் பெயரில் தொடங்கப்பட்ட சூப்பர் டூப்பர் நிறுவனம் ஆறே மாதத்தில் கடையைக் காலிசெய்துவிட்டது. ஆனாலும், அந்த நிறுவனம் தனது சந்தாதாரர்களிடமிருந்து வசூலித்ததாகச் சொல்லப்பட்ட ஒரு கோடி ரூபாயையும்; ஜெயாவும் சசியும் பங்குதாரர்களாக இருந்து நடத்தி வந்த ஜெராக்ஸ் கடையான சசி எண்டர்பிரைசஸ் மூலம் 25 இலட்ச ரூபாயும்; ஹைதராபாத் திராட்சை தோட்டத்திலிருந்து 52,50,000 ரூபாயும் வருமானமாக வந்ததாகக் கணக்குக் காட்டியிருக்கிறார், அவர்.

லெட்டர் பேடு கம்பெனிகள்

நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
ஜெயா-சசி கும்பலின் மோசடி வரவு-செலவு கணக்குகளை அம்பலப்படுத்தி, அவர்களை ஊழல் குற்றவாளிகள்தான் என நிறுவி தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

1991-ம் ஆண்டில் தமிழக முதல்வராக ஜெயா பதவியேற்றபொழுது, ஜெயா-சசிகலா இருவரும் சேர்ந்து இரண்டு நிறுவனங்களை – ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் – மட்டும்தான் நடத்திவந்தனர். அதன் பிறகு கம்பெனிகளின் எண்ணிக்கை தடாலடியாக 32 ஆக அதிகரித்தது. புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் திட்டமிட்டே ஜெயாவைத் தவிர்த்த மற்ற மூன்று குற்றவாளிகளைப் பங்குதாரர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்களின் பெயரில் 52 வங்கிக் கணக்குகளும் தொடங்கப்பட்டன.

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான காலகட்டத்தில் (1991-96) ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர். மற்றும் புதிதாகத் தொடங்கப்பட்ட கம்பெனிகளுள் குறிப்பிட்ட ஆறு நிறுவனங்களுக்கு இடையே இலட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் குறுக்குநெடுக்குமாக நடந்தன. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் ஏதோ மிகப்பெரிய வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததைப் போலத் தோற்றம் உருவாக்கப்பட்டது.

நமது எம்.ஜி.ஆர்., ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், வினோத் வீடியோ விஷன், மஹாசுப்புலெட்சுமி கல்யாண மண்டபம் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளில் நடந்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவு அறிக்கைகள், இலாப நட்டக் கணக்குகள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது ஆடிட்டர்கள் அளித்த வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டது.

சசிகலாவுக்கும் இளவரசிக்கும் ஆடிட்டராக இருந்த பாலாஜி, “இந்த நிறுவனங்கள் எந்தக் காலகட்டத்திலும் எதையும் உற்பத்தி செய்யவுமில்லை. பொருட்களை வாங்கி விற்கவுமில்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில் மட்டும் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன” எனச் சாட்சியம் அளித்தார்.

போயசு தோட்டத்து வீட்டிலிருந்துதான் ஒவ்வொரு முறையும் இலட்சக்கணக்கான ரூபாய் பணம் பைகளிலும் சூட்கேஸ்களிலும் அடைக்கப்பட்டு வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதும், போயஸ் தோட்டத்தில் டிரைவராக வேலை பார்த்த ஜெயராமன்தான் வங்கிக்குச் சென்று இந்தப் பணத்தைப் போட்டிருப்பதும், சசிகலாதான் ஜெயராமனிடம் இந்த வேலைகளை ஒப்படைத்தார் என்பதும் சிறப்பு நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.

03-caption-2இவற்றுக்கெல்லாம் அப்பால், வடக்குக் கடற்கரை துணை பத்திரப் பதிவாளரும், தோட்டக்கலைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணனும் அளித்துள்ள சாட்சியத்தில், போயஸ் தோட்டத்து வீட்டில் வைத்து பதிவு செய்யப்பட்ட ஆறு பத்திரங்கள் யார் வாங்குகிறார் என்ற விவரம் இல்லாமல், விதிமுறைகளை மீறிப் பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர்.

இவற்றின் அடிப்படையில்தான், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று குற்றவாளிகளும் முதல் குற்றவாளியான ஜெயாவின் பினாமிகளாகச் செயல்பட்டனர்; குற்றவாளிகள் நால்வரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டனர் என நிரூபித்தார், நீதிபதி குன்ஹா. “குற்றவாளிகள் நால்வரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர் எனக் கூறுவதற்கு இடமில்லை. ஜெயா மற்ற மூவரையும் தனது வீட்டில் மனிதாபிமான அடிப்படையில் தங்க அனுமதித்தார் என எடுத்துக் கொள்ளவும் முடியாது. மாறாக, ஜெயாவின் சொத்துக்களுக்கு பினாமியாகச் செயல்படுவது என்ற சதித் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்தின் அடிப்படையில் மட்டும்தான் குற்றவாளிகள் மூவரும் முதல் குற்றவாளி வீட்டில் தங்கி வந்தனர்” என்ற முடிவுக்கு வருகிறார், நீதிபதி குன்ஹா.

குன்ஹாவின் இந்த தர்க்க நியாயத்திற்குப் பதில் அளிக்காத நீதிபதி குமாரசாமி, “சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் தனித்தனியாகத் தேசிய வங்கிகளிடமிருந்தும் தனியாரிடமிருந்தும் கடன்களை வாங்கியுள்ளனர். இந்தக் கடன்கள் வழியாகத்தான் தங்களது பெயர்களில் சொத்துக்களை வாங்கியுள்ளனர். அவர்களுக்குப் பணம் வந்த வழியும் சட்டபூர்வமானது, அவர்களது நோக்கமும் சட்டபூர்வமானது. எனவே, இவர்கள் மூவரும் ஜெயாவிற்கு பினாமியாகச் செயல்படவுமில்லை; கூட்டுச் சதியிலும் ஈடுபடவுமில்லை. குற்றவாளிகள் மூவரும் முதல் குற்றவாளியுடன் ஒரே வீட்டில் வசித்தனர் என்பதைக் கொண்டு கூட்டுச் சதியில் ஈடுபட்டனர் என முடிவு செய்ய முடியாது” எனக் குறிப்பிட்டு குற்றவாளிகள் நால்வரையும் விடுவித்துள்ளார்.

கருப்புப் பண முதலைகள் அனைவரும் சட்டத்திற்குப் புறம்பாகத் தாம் சம்பாதித்த சொத்துக்களை வெள்ளையாக்குவதற்குக் கடன் என்ற வழியைப் பயன்படுத்திக் கொள்வது இன்று சர்வசாதாரணமாக நடந்துவரும் நிலையில், நீதிபதி குமாரசாமி குருட்டுத்தனமாக சசிகலாவும், சுதாகரனும், இளவரசியும் வாங்கிய கடன்களைக் காட்டி, அவர்கள் ஜெயாவின் பினாமிகள் அல்ல என வாதிடுகிறார்.

அரசு அதிகாரிகளை போயசு தோட்டத்துக்கு வர உத்தரவிட்டு, பெயர் குறிப்பிடாமல் ஆறு பத்திரங்களைப் பதிவு செய்ததை நீதிபதி குன்ஹா பினாமி குற்றத்துக்கும், கூட்டுச் சதிக்கும் ஆதாரமாகக் காட்டுகிறார். ஆனால், நீதிபதி குமாரசாமியோ, “யார் வாங்குகிறார்கள் என்ற விவரம் இல்லாமல் பத்திரப் பதிவு நடந்திருப்பதை, சொத்துக்கள் குறைந்த மதிப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பதை”க் குற்றங்களாக, சதியாகக் கருதாமல், அவை குறித்து சம்மந்தப்பட்ட துறைதான் விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு நழுவிக் கொள்கிறார்.

1970-களில் உச்சநீதி மன்றம் கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி என்பவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் “ஒரு பொது ஊழியருக்கு 10 சதவீதம் வரை கணக்கில் வராத வருமானம் இருக்கலாம்” என வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பொருந்தும் வகையில் தனது தீர்ப்பை எழுதியிருக்கும் நீதிபதி நீதிபதி குமாரசாமி, அதற்காகவே ஜெயாவின் வருமானத்தையும் செலவுகளையும் தன்னிச்சையாக மாற்றி அமைத்திருக்கிறார்.

தேசிய வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட 10 கோடி ரூபாய் கடன்களைப் பட்டியல் போட்டுவிட்டு, அதனை மிகவும் அலட்சியமாக 24 கோடி ரூபாய் எனப் பிழையாகக் கூட்டிப் போடுகிறார். இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பு தமது வருமானத்திற்கு வரி கட்டிவிட்டோம் என வாதிடுவதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை எனப் பல முன்னுதாரணமான தீர்ப்புகள் இருந்தும், நீதிபதி குமாரசாமி அவற்றையெல்லாம் குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஜெயா-சசி கும்பலுக்குத் தனிச் சலுகை அளித்து, அவர்களது இலஞ்சப் பணத்தை வருமானங்களாகச் சேர்த்துக் கொள்கிறார்.

ஜெயா-சசி கும்பல் தம் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டவுடன், தமது வருமானத்தை அதிகரித்துக் காட்ட நமது எம்.ஜி.ஆர். டெபாசிட் திட்டம் உள்ளிட்டுப் பலவகையான போலியான, மோசடியான வரவு-செலவு அறிக்கைகளைத் தயார் செய்தது போலத்தான் இந்தத் தீர்ப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது. நாலும் மூனும் எட்டு என்ற கூட்டுப் பிழை நீதிபதி குமாரசாமியைக் கத்துக்குட்டித்தனமான கணக்குப் பிள்ளை எனக் காட்டிவிட்ட போதும், அப்பிழை ஒரு நீதிபதியின் பேனாவிலிருந்து வந்துவிட்டதால் சட்டபூர்வ தகுதியைப் பெற்றுவிட்டது.

– செல்வம்
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

மோடியின் ஓராண்டு ஆட்சி : ஒப்பனை கலைந்தது !

3

டகங்களாலும் இந்துத்துவப் பரிவாரங்களாலும் ஊதிப்பெருக்கப்பட்ட மோடி அலை இப்போது புஸ்வாணமாகிவிட்டது. கடந்த மே 26 அன்று இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்த மோடியின் ஆட்சியானது, நாடு முழுவதும் கடும் அதிருப்தியையும் வெறுப்பையும்தான் எதிர் கொண்டிருக்கிறது.

ஜெர்மானிய ஏகபோக முதலாளிகள் பாசிச இட்லரை விளம்பரப்படுத்தி அதிபராக்கியதைப் போலவே, இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் மோடி என்ற பிம்பத்தை ஊதிப்பெருக்கி ‘வளர்ச்சியின் நாயகனாக’ விளம்பரப்படுத்தினர். முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியின் பிரதமரான மன்மோகன் வளர்ச்சியைச் சாதிக்கத் தெரியாதவர், திறமையில்லாதவர் என்று குற்றம் சாட்டி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சியைக் கொண்டுவருவோம் என்ற பொய்களின் ஒளிவெள்ளத்தில் நாட்டு மக்களின் கண்களைக் குருடாக்கி மோடி கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியது. அவர் பதவியேற்றதும் நல்ல காலம் பொறக்குது என்று பா.ஜ.க.வும் அதன் கூலிப்படையாக வேலை செய்யும் ஊடகங்களும் கோயபல்சு பாணியில் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டன.

மோடியின் ஓராண்டு ஆட்சி : ஒப்பனை கலைந்தது!கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து பொருளாதார மந்தத்திலும் நெருக்கடியிலும் அமெரிக்க – ஐரோப்பிய பொருளாதாரங்கள் சிக்கிக் கொண்டிருப்பதோடு, சந்தை வற்றிப்போய் அந்நாடுகளின் ஆளும் கும்பலே எதை உற்பத்தி செய்வது, எங்கே சந்தையைத் தேடுவது, யாரிடம் விற்பது என்று புரியாமல் தடுமாறும் போது, அந்நாட்டின் ஏகபோக முதலாளிகள் இந்தியாவில் வந்து முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது கேழ்வரகில் நெய்வடிந்த கதைதான். இந்தியாவைவிட பெருமளவு மனித வளத்தையும் அடிக்கட்டுமான வலிமையையும் ஏற்றுமதிக்கான சந்தையையும் பெற்றுள்ள சீனா, ஏற்கெனவே இத்திசையில் பயணப்பட்டு நெருக்கடிகள் முற்றி நகர முடியாமல் தவிக்கும்போது, நான் வானத்தை வளைக்கப் போகிறேன், மணலைக் கயிறாகத் திரிக்கப் போகிறேன் என்று கோமாளித்தனமாக வெற்றுச் சவடால் அடித்து ஆரவாரம் செய்தது மோடி கும்பல்.

முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியை விஞ்சும் வகையில் நாட்டை மீண்டும் காலனியாக்குவதைத் தீவிரப்படுத்தினால், ஏகாதிபத்தியவாதிகளின் நம்பிக்கையைப் பெற்று முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சியைச் சாதித்துவிடலாம் என்று மனப்பால் குடித்தது.

தொழிலாளர் போராட்டங்கள், தொழிற்சங்கச் சட்டங்கள் முதலான சிக்கல்கள் இருப்பதால்தான், அந்நிய முதலீடு வரவில்லை என்று கூறி, தொழிலாளர் உரிமைகளைப் பறித்து தொழிலாளர் சட்டத் திருத்தம்; சாதகமான இடத்தில் தொழில் தொடங்க நிலம் இல்லாததால்தான் முதலீடுகள் வரவில்லை என்று கூறிக் கொண்டு விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்க நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம், காடுகளையும் கனிம வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாடுவதற்கேற்ப சுற்றுச்சூழல் சட்டவிதிகள் திருத்தம், வங்கி- காப்பீடு துறை மற்றும் இராணுவத் துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தாராள அனுமதி, கோடிகோடியாய் வரிச்சலுகைகள் – என இந்தியாவை பட்டாபோட்டுக் கொடுப்பதாக உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் மோடி கும்பல் சத்தியம் செய்து கொடுத்தது. ஆனாலும் முதலீடுகள் வரவில்லை.

ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைக்காக மலிவு விலையில் பொருளுற்பத்தியையும் அயல்பணிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்து, உலக நாடுகளெங்கும் மோடி சுற்றுப்பயணம் செய்து கார்ப்பரேட் முதலாளிகளை அழைத்த போதிலும் குறிப்பிடும்படியாக எந்த அந்நிய முதலீடும் வரவில்லை. எல்லா வகையிலும் கரணம் அடித்துப் பார்த்தாலும் இந்தியப் பொருளாதாரம் ஒரு அங்குலம் கூட நகராமல் முடங்கி நிற்கிறது. புதிய நகரங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலைப்பணிகள் உள்ளிட்ட அடிக்கட்டுமானத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ 2.5 லட்சம் கோடி நிதிஒதுக்கீடு செய்தும், தனிநபர் வருமான வரி, சுங்கவரி, கலால்வரி ஆகியற்றில் மேலும் பல்லாயிரம் கோடிக்கு வரி விலக்குகள் அளித்தும், அதன் மூலம் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொடுத்த போதிலும் குறிப்பிடும்படியான எந்த வளர்ச்சியும் இல்லை. மோடி கும்பல் அறிவித்த எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது புஸ்வாணமாகிவிட்டது.

ஏற்கெனவே, பல ஆசிய நாடுகள் சூடுபட்டுள்ள நிலையில், இது நடைமுறைக்கு ஆகாத திட்டம் என்றும், ஏற்கெனவே இது இந்தியாவில் வேறு பெயரில் செயல்படுத்தப்பட்டு பயனளிக்காத கொள்கை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வெளிப்படையாகவே மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை விமர்சித்துள்ளார். ஆளும் வர்க்கத்தின் ஒருபிரிவு, மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்படாமல், அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

நிலம் கையகப்படுத்தல சட்ட எதிர்ப்பு
மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி மோடி கும்பலின் நிலம் கையகப்படுத்தல் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

திவாலாகி நிற்கும் இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில் என்ன செய்வது என்று ஏகாதிபத்தியவாதிகளே தத்தளிக்கும்போது, அந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத அடிமுட்டாள்களான மோடி கும்பல், அந்த யதார்த்த நிலையை மீறி எதுவும் செய்ய முடியாமல் இப்போது கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது. தனது தோல்வியை மறைக்கவும், பொருளாதாரத் தாக்குதல்களால் குமுறிக் கொண்டிருக்கும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் இந்துவெறித் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டும், போராடும் மக்களின் மீது அரசு பயங்கரவாத அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

தனது தோல்விகளை மறைத்து, ஒரு மந்திரவாதியைப் போல எல்லோருடைய கவனமும் தன்பக்கம் இருக்க வேண்டுமென்பதற்காக ஓயாமல் தன்னைப் பற்றியும் தன்னுடைய பராக்கிரமங்களைப் பற்றியும் தேர்ந்த நடிகரைப் போல பஞ்ச் டயலாக்குகளை அவிழ்த்துவிட்டு நாட்டு மக்களின் காதில் பூச்சுற்றுவதுதான் மோடி கும்பலின் முதன்மை வேலையாகிப் போனது. சினிமாவுக்கு கவர்ச்சியாக டைட்டில் வைப்பதைப் போல, புதுப்புது திட்டங்களை மோடி கும்பல் ஆரவாரமாக அறிவித்த போதிலும், அது எந்த வகையிலும் மக்களை ஈர்க்கவில்லை.

அப்புறம் வேறு எதைத்தான் மோடியின் சாதனையாகக் காட்டுவது?

மோடியின் ஆட்சியில் கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) அதிகரித்துள்ளதாகவும், அதில் செலவுகளின் அளவு குறைந்துள்ளதாகவும் பா.ஜ.க. பெருமையுடன் கூறுகிறது. ஆனால், மொ.உ.உற்பத்தி தொடர்பான மதிப்பீட்டு முறையில் தில்லுமுல்லு செய்துள்ளதால்தான் இந்த உயர்வு என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களே உண்மையைப் போட்டு உடைத்துள்ளனர். மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைச் சரிவால்தான் செலவுகள் குறைந்துள்ளதாகக் காட்ட முடிந்துள்ளதேயன்றி, மோடியின் நிர்வாகத் திறமையால் செலவுகள் குறையவில்லை என்பதும் அம்பலமாகிவிட்டது.

கடந்த ஓராண்டில் ஊழலற்ற ஆட்சியை அளித்துள்ளதாக மார்தட்டிக் கொள்ளும் மோடி, நாடறிந்த ஊழல் கிரிமினலான ஜெயா மீண்டும் முதல்வராகியுள்ளதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார். ஜெ.கும்பலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று தமிழக வளர்ச்சிக்கு துணிச்சலும் திறமையும் உள்ள ஜெ.முதல்வராக வேண்டுமென்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். நிதியமைச்சரான அருண் ஜெட்லி ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு ஜெ. கும்பலின் வருமான வரி வழக்கை ஊத்திமூடிவிட்டு, ஜெ. கும்பலுடன் சமாதான சகவாழ்வு நடத்திக் கொண்டே ஊழல் எதிர்ப்பு சவடால் அடிக்கும் மோடி கும்பலின் பித்தலாட்டம் நாறிப்போயுள்ளது.

எல்லா வகையிலும் தோல்வியடைந்து அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப் போயுள்ள நிலையில், ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் வளர்ச்சியைச் சாதிக்கத் துடிக்கும் மோடியை அவசரக் குடுக்கைத்தனமாக விமர்சிப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று பார்ப்பன ஊடகங்களின் உபதேசத்தை ஏற்று இன்னமும் மோடி கும்பலை சகித்துக் கொண்டிருப்பதா, அல்லது என்னென்ன துறைகளில் மோடியின் ஆட்சி சாதித்துள்ளது, எதில் சாதிக்கவில்லை என்று மதிப்பெண் போட்டுக் கொண்டிருப்பதா, அல்லது இக்கும்பலை தூக்கியெறிந்து மக்கள் அதிகாரத்தை நிறுவுவதற்கான போராட்டப் பாதையில் செல்வதா என்பதே நாட்டு மக்கள் முன்நிற்கும் மையமான கேள்வி.

– மனோகரன்
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

சி.ஆர்.ஐ முதலாளி திருமண விழா – தொழிலாளிகள் முற்றுகை

0

சி‌.ஆர்‌.ஐ நிறுவனத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி துளிர்த்ததும் அதையொட்டிய வளர்ச்சியும் ஒரு சிறப்பான வரலாறு.

சி.ஆர்.ஐ கிளைச்செயலர் குமாரவேல்
சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் தொழிலாளி வர்க்கத்தின் இயல்பான குணங்களான தன்மானமும் சுயமரியாதையும் நிரம்பப் பெற்றவர்கள் (சி.ஆர்.ஐ கிளைச்செயலர் குமாரவேல்)

சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் தொழிலாளி வர்க்கத்தின் இயல்பான குணங்களான தன்மானமும் சுயமரியாதையும் நிரம்பப் பெற்றவர்கள். சௌந்திரராஜனின் முதலாளித்துவ கொடுங்கோன்மையின் முன்பு தமது உரிமைகளை மீட்டுக் கொள்ள வழி தேடி தவித்துக் கொண்டிருந்த போதுதான் அவர்களுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறிமுகம்.

இப்போது கிளை நிர்வாகிகளாக இருக்கும் தோழர்கள் அப்போது முன்னணியாளர்களாக வந்து, நமது சங்கத்துக்கு ஒரு நேர்காணல் வைக்க விரும்பினர். அந்த நேர்காணலில் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களின் எதிர்பார்ப்புகளையும் மீறிய நமது பதிலில்தான் அவர்கள் கண்டு கொண்டனர் இது தான் நமது தாய் மடி என. அப்படி ஒரு இணைவு தான் இத்துணை நாள் போராட்டத்துக்கும் அடியுரமாக இருக்கிறது.

துவக்கம் தான் அப்படி என்றால் அதையொட்டிய வளர்ச்சியும் மிகவும் கடுமையான போராட்டங்களின் ஊடாகவே இருந்தது.

சி.ஆர்.ஐ தொழிலாளர்கள்
தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்க உணர்வால் உந்தப்பட்டிருக்கிறார்கள்.

சங்கம் துவங்கிய காரணத்தினாலேயே தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை நிறுத்தம் செய்தது; சங்கம் துவங்கிய ஆண்டிலிருந்து சி‌.ஆர்‌.ஐ யின் இதர யூனிட் தொழிலாளர்களுக்கு 30% போனஸ். சங்கம் இருக்கும் சின்னவேடம்பட்டி கிளைக்கு மட்டும் 8.33% போனஸ்.

“ஏன் இங்கு மட்டும் குறைந்த போனஸ்” எனக் கேட்டால் “நட்டம்” என்கிறார்கள் வாய் கூசாமல்.

“எங்கே காட்டுங்கள் உங்கள் வரவு செலவு கணக்கை” என கேட்டால், ஒரு வெள்ளைத் தாளில் மளிகைக் கடை கணக்கை போல நான்கு எண்களை போட்டு, நட்டம் என்கின்றனர்.

சி.ஆர்.ஐ முதலாளித்துவ பயங்கரவாதம்
சங்கம் துவங்கிய காரணத்தினாலேயே தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை நிறுத்தம் செய்தது; சங்கம் துவங்கிய ஆண்டிலிருந்து சி‌.ஆர்‌.ஐ யின் இதர யூனிட் தொழிலாளர்களுக்கு 30% போனஸ். சங்கம் இருக்கும் சின்னவேடம்பட்டி கிளைக்கு மட்டும் 8.33% போனஸ்.

உடனே நமது சங்கத்தின் சார்பில் சி‌.ஆர்‌.ஐ பேலன்ஸ் சீட்டை எடுத்து தாக்கல் செய்தோம். எரிச்சலடைந்த நிர்வாகமும் தர்ம சங்கடமான நிலைமைக்கு உள்ளான தொழிலாளர் நல அதிகாரிகளும் பூசி மெழுகினர். அப்போதும், “போனஸ் தர முடியாது” என்றே சாதித்தது நிர்வாகம்.

இதையொட்டி ஏ‌.சி‌.எல் இல் தொழிற்தாவா எழுப்பினால் அங்கு வருவதே கிடையாது. ஏ‌.சி‌.எல் டி‌.சி‌.எல் போன்ற அமைப்புகளே முதலாளிகளுக்காக தொழிலாளிகளிடம் பஞ்சாயத்து செய்யும் அலுவலகம் என்ற உண்மை ஒரு புறமிருக்க அப்படி ஒரு இடத்துக்கு வந்து நம்மிடம் கேள்வி கேட்பதே கூடாது என்ற எண்ணத்தில், இருக்கிறார் சி‌.ஆர்‌.ஐ முதலாளி சௌந்திரராஜன்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காலணி கிடையாது, சீருடை கிடையாது, 480 நாள் அல்ல பல வருடங்கள் வேலை செய்தாலும் நிரந்தரம் கிடையாது. இவ்வளவையும் விட, சங்கம் துவங்கியதன் அடையாளமாய் கொடிக்கம்பமும் அறிவிப்பு பலகையும் வைக்க அனுமதி கேட்டால் சரவணம்பட்டி காவல் துறை மூலம் அனுமதி மறுக்கிறார். அதையும் மீறி நாம் வைத்த கொடிக்கம்பத்தையும் அறிவிப்பு பலகையையும் இரண்டு முறை ஆள் வைத்து திருடிக் கொண்டு போகும் அளவுக்கு மகா மட்டரகமான மன நிலையில் இருக்கிறார் சி‌.ஆர்‌.ஐ முதலாளி சௌந்திரராஜன். மூன்றாவது முறை கொடிக் கம்பத்தை நட்டு காவலுக்கு ஆள் வைத்த பின்பு தான் அடங்கினார்.

இதற்கிடையில், “சங்கத்தை கலைத்து விடுங்கள் கல்வி உதவித் தொகை கிடைக்கும்”, “சங்கத்தை கலைத்து விடுங்கள் போனஸ் கிடைக்கும்” என்கிற ரீதியில் அல்லக்கைகள் மூலம் பிரச்சாரமும் வீரியமாக செய்கிறார். என்ன செய்தும் தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைக்க அவரால் முடியவில்லை.

இப்படி தெள்ளவாரிகள் மன நிலையில் சிந்தித்து முடிவெடுக்கும் சௌந்திரராஜன் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்குவது, H1N1 வைரசுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் என பரோபகாரி நாடகமும் ஆடுகிறார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

26-03-2015 அன்று கதவடைப்பு என அறிவித்த போது எண்ணிப் பார்த்திருக்க மாட்டார் இந்த நிகழ்வு இப்படி விஸ்வரூபம் எடுக்குமென்று. “இது சட்டவிரோதமான கதவடைப்பு” என ஏ‌.சி‌.எல் சொல்லியும் கதவை திறக்கவில்லை, சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சொல்லியும் திறக்கவில்லை, தாசில்தார் ரவி சொல்லியும் கதவை திறக்கவில்லை. அதனால்தான், தொழிலாளிகள் போராட்டம் என்று துவங்குகிறார்கள்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
“இது சட்டவிரோதமான கதவடைப்பு” என ஏ‌.சி‌.எல் சொல்லியும் கதவை திறக்கவில்லை, சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சொல்லியும் திறக்கவில்லை, தாசில்தார் ரவி சொல்லியும் கதவை திறக்கவில்லை. அதனால்தான், தொழிலாளிகள் போராட்டம் என்று துவங்குகிறார்கள்.

முதலில் பதினைந்து நாட்கள் கதவடைப்பு என்று கூறிய நிர்வாகம் பின்னர் கால வரையற்ற கதவடைப்பு என மாற்றியது. இதற்கிடையில் காண்ட்ராக்ட் மூலம் தரமற்ற பம்ப்புகளை உற்பத்தி செய்து சி‌.ஆர்‌.ஐ என முத்திரை குத்தி விற்கும் வேலையையும் செய்தது.

இருபது வருடம் அனுபவமுள்ள தொழிலாளிகளை வெளியில் தள்ளி விட்டு தரமில்லாத பம்புகளை உற்பத்தி செய்து விற்பதை அம்பலப்படுத்தும் நோக்கில் “போலி சி‌.ஆர்‌.ஐ பம்ப்புகளை புறக்கணியுங்கள்” என பிரச்சாரம் மேற்கொண்டனர் தொழிலாளிகள். சின்னவேடம்பட்டியை சுற்றியுள்ள சுமார் 25 கிராமங்களை இலக்கு வைத்து தினசரி மக்களிடம் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பது, ஏ‌.சி‌.எல், டி‌.சி‌.எல் இலும் விடாமல் போராடுவது, உயர் நீதி மன்றத்தில் வழக்கு என சட்டப் பூர்வமான சகல வழிமுறைகளையும் செய்தாயிற்று. உப்பு சப்பில்லாத விசயங்களுக்கெல்லாம் முன்னிலை வகிக்கும் கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கலெக்டர் அலுவலக முற்றுகையின் போது தொழிலாளர்தம் துணைவியார்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். மாவட்ட ஆட்சியரின் முதலாளி வர்க்க பாசமே அதற்கு காரணம்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
முதலில் கதவடைப்பு என்று கூறிய சௌந்திரராஜன் இப்போது உற்பத்தி நிறுத்தம் என்ற புதுக் கதையை கிளப்புகிறார்.

முதலில் கதவடைப்பு என்று கூறிய சௌந்திரராஜன் இப்போது உற்பத்தி நிறுத்தம் என்ற புதுக் கதையை கிளப்புகிறார். “இது சட்டவிரோதமான கதவடைப்பு” என உயர்நீதி மன்றத்தில் நாம் நிலை நாட்டிய பின்பு, இதையும் பிரச்சாரமாக கொண்டு சென்ற போது தான் சௌந்திரராஜன் மகள் திருமணம் என்ற தகவல் கிடைத்தது.

சௌந்திரராஜனின் குடியிருக்கும் பகுதிக்கே சென்று அவர் வீடு உள்பட அந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்திலும் பிரச்சாரம் செய்யும் போதுதான் நமது ஆதரவாளர் ஒருவர் அந்தத் திருமண வரவேற்பு அழைப்பிதழை நமக்கு கொடுத்தார். முகூர்த்தம் அவரது பூர்வீக கிராமத்தில் நடைபெறும் தகவலையும் தெரிவித்தார்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
அந்தக் கிராமத்துக்கும் சென்று அந்த சிறிய கிராமம் முழுவதையும் நமக்கு ஆதரவாக மாற்றி விட்டு வந்தோம். திருமணத்தன்று அங்கு அந்தப் பகுதி முழுக்க சுவரொட்டிகள் ஒட்டிவிட்டும் வந்தோம்.

அந்தக் கிராமத்துக்கும் சென்று அந்த சிறிய கிராமம் முழுவதையும் நமக்கு ஆதரவாக மாற்றி விட்டு வந்தோம். திருமணத்தன்று அங்கு அந்தப் பகுதி முழுக்க சுவரொட்டிகள் ஒட்டிவிட்டும் வந்தோம். சூலூர் அருகே உள்ள அந்த பட்டணம் கிராம மக்கள் பெருவாரியாக நமக்கு ஆதரவு தந்தனர்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
“சௌந்திரராஜனால் கொலை செய்யப்பட்ட சி‌.ஆர்‌.ஐ கம்பெனியை பாடை கட்டி, சங்கு ஊதி சேகண்டி அடித்து தூக்கும் போராட்டம்”

அடுத்து, திருமண வரவேற்பு மிக பிரமாண்டமாக கோவை கொடிசியாவில் 12-06-2015 நடைபெற இருப்பதை அறிந்து அங்கு சென்று,  “சௌந்திரராஜனால் கொலை செய்யப்பட்ட சி‌.ஆர்‌.ஐ கம்பெனியை பாடை கட்டி, சங்கு ஊதி சேகண்டி அடித்து தூக்கும் போராட்டம்” என அறிவித்து போஸ்டர் ஒட்டினோம். அது வரை இரட்டை வேடம் பூண்டு நயவஞ்சக நாடகம் ஆடி வந்த கோவை காவல் துறை தனது உண்மையான சுயரூபத்தை ஆளும் வர்க்க அடியாள் என்பதை அப்பட்டமாக காட்ட துவங்கியது.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்இந்த போஸ்டருக்கு மறு நாள் பேச்சு வார்த்தைக்கு என்று தோழர் குமாரவேல் உட்பட சி‌.ஆர்‌.ஐ நிர்வாகிகள் ஐந்து பேரை அழைத்த பீளமேடு காவல்துறை யாருக்குமே தகவல் தெரிவிக்காமல் நயவஞ்சகமாக இரவோடு இரவாக அவர்களை சிறையில் தள்ளியது.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
தோழர் குமாரவேல்

அதற்கு அடுத்த நாள் சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் மணிவர்மன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமியை அவரது வீட்டுக்கே காலை எட்டு மணிக்கு வந்து கைது செய்தார். காரணம் என்னவெனில், கடந்த மாதம் (22-05-2015) ஜெயலலிதா பதவியேற்பை கண்டித்தும் பார்ப்பன உச்சிக் குடுமி மன்றத்தை விமர்சித்தும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரினால் இந்த மாதம் 11 -ம் தேதி சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுகிறதாம். இப்படி சட்ட ஒழுங்கு பாதிப்பை தடுக்கும் பொருட்டு புகார் கொடுத்தது அதே ஸ்டேசனின் சப் இன்ஸ்பெக்டர் வாசுகியாம். அந்த போஸ்டரில் இருக்கும் எண் தோழர் விளவை இராமசாமியினுடையது அதனால் அவரை கைது செய்கிறோம் என விளக்கமளித்தனர்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி.

காலை எட்டு மணிக்கு இவர் கைதான அடுத்த அரை மணி நேரத்தில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சோதி சி‌.ஆர்‌.ஐ போராட்டப் பந்தலுக்கு சென்று “12ஆம் தேதி போராட்டம் நடத்த மாட்டோம்னு உத்திரவாதம் கொடுங்க. உங்களை யாரையும் கைது செய்ய மாட்டேன். இல்லையென்றால் கைது செய்வேன்” என வெளிப்படையாக மிரட்டியுள்ளார்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
தொழிலாளர்களின் உறுதி உணவால் அல்ல உணர்வால்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் வந்து இரு தோழர்களை கைதும் செய்துவிட்டார். அவர்கள் மீதான வழக்கு, “சி‌.ஆர்‌.ஐ கம்பெனிக்குள் வேலைக்கு செல்வோரை தடுத்தார்கள்” என்று.

தோழர் விளவை இராமசாமி மற்றும் சி‌.ஆர்‌.ஐ நிர்வாகிகள் கைதை கண்டித்து ஒட்டப்பட்ட நூற்றுக்கணக்கான போஸ்டர்களை 30 பேரை அமர்த்தி உளவுத் துறை போலீசின் தலைமையில் விடியற்காலையிலேயே கிழித்தது போலீஸ்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
நூற்றுக்கணக்கான போஸ்டர்களை 30 பேரை அமர்த்தி உளவுத் துறை போலீசின் தலைமையில் விடியற்காலையிலேயே கிழித்தது போலீஸ்.

அந்த போஸ்டரில் உள்ள மாவட்ட செயலர் தோழர் திலீப்பின் எண்ணை எடுத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு அவரை கைது செய்ய பல முறை ஆள் அனுப்பிக் கொண்டிருக்கிறது காவல் துறை. இது போக சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் பலரையும் வீடு வீடாக சென்று மிரட்டிக் கொண்டிருக்கிறது.

100 சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் உட்பட இந்த மாவட்ட மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிரான முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சேவகம் புரிகிறது இந்த காவல் துறை.

10-ம் தேதி காலை கைது செய்யப்பட்ட தோழர் விளவை இராமசாமிக்கும் 12-ம் தேதி மாலை ஜாமீன் கிடைத்து விட்டது. ஆனால் இதற்கு தயாராக இருந்த காவல் துறை சிறைக்குள்ளேயே பிடிவாரண்ட் போட்டு தோழர் விளவை இராமசாமி மீது மேலும் 10 பிரிவுகளிலும் சி‌.ஆர்‌.ஐ நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்து வெளியே வரவிடாமல் நேரடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறைக்குள் அனுப்பியது.

இதற்கிடையில் 12-ம் தேதி மாலையில் நூற்றுக்கணக்கான போலீசாருடன் 3 அடுக்கு பாதுகாப்பில் சௌந்திரராஜனின் மகள் திருமண வரவேற்பு பயத்துடனும் பாதுகாப்புடனும் நடந்தேறியது. அங்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்தால் துவங்கும் முன்பே கைது செய்யப்படுவோம் என்பதை உணர்ந்த, பெருவாரியான மக்கள் பார்வையில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சி.ஆர்.ஐ கிளை துணைத்தலைவர் தோழர் ராமசாமி தலைமையில் சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் குடும்பத்தோடு சுமார் 85 பேர் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் உள்ள பெரும்பான்மை போலீசு கொடிசியாவில் குவிந்திருக்க ஆர்ப்பாட்டம் இடத்துக்கு வருவதற்கு அரை மணிநேரம் ஆகி இருகிறது.

போலீசு உடன் தொழிலாளர்களும் பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆண்கள் 48 பேரும், பெண்கள் 28, குழந்தைகள் 8 பேர் கைது செய்யப்பட்டு அண்ணாமலை அரங்கத்தில் அடைக்கப்பட்டனர்.

“யாரும் பெயர் கொடுக்க மாட்டோம், டீ உணவு அருந்த மாட்டோம். தாசில்தாரை வரச் சொல்லுங்கள்” என கட்டளையிட்ட பிறகு இரவு ஒன்பது மணிக்கு அவசர அவசரமாக வந்தார் தாசில்தார். பெண்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திக்கித் திணறி, “வருகிற 22-ம் தேதி பேச்சு வார்த்தையில் கண்டிப்பாக ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறேன்” என உத்திரவாதம் கூறிச் சென்றுள்ளார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

‘ரெண்டு மாதம் பட்டினி போட்டால் நம்ம வழிக்கு வந்துருவானுக… அப்புறம் 1 லட்சமோ ரெண்டு லட்சமோ கொடுத்து அனுப்பிரலாம்’ என்று எண்ணிக் கொண்டிருந்த சௌந்திரராஜனின் எண்ணத்திற்கு தொழிலாளர்கள் செருப்படி கொடுத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா விடுதலை எப்படி நீதித்துறையை அம்மணமாக்கியாதோ அது போல கோவை மாவட்ட மக்களையும் தொழிலாளி வர்க்கத்தையும் அரசு முதலாளி போலீசு என்ற மாயையிலிருந்து மீட்டெடுக்கும் பணியை இந்த சி‌ஆர்‌ஐ போராட்டம் நிச்சயம் செய்யும்; செய்து கொண்டும் இருக்கிறது..

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.

நடந்தாய் வாழி கல்லூரி !

1

நடந்தாய் வாழி கல்லூரி!
( குடந்தை அரசுக்கல்லூரியின் கவின்மிகு நாட்கள்…)

கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி
வேப்பமரம், வேங்கை மரம் அரசமரம், செம்பருத்தி- என அங்கீகரிக்கப்பட்ட வகுப்புகள் தாண்டியும் எங்களுக்கு அங்கங்கே வகுப்புகள் உண்டு.

ன்று நினைத்தாலும் புத்துணர்ச்சி
எங்கள் அரசுக் கல்லூரி – அதனோடு
தொன்று தொட்ட உறவாய்
தொட்டு உரசி விளையாடும் காவிரி!

மேட்டூர் இதழ் விரிய
கல்லணை சொற் கூட்டும்
கல்லூரி பாலம் வந்து
காவிரி கவி பாடும்.

அரசினர் ஆடவர் கல்லூரியின்
அரும்பு மீசையாய்
எழும்பியிருக்கும் பாலம்- அது
வேறு மாதிரியும் தோன்றும்,
விருப்பமில்லா தடுப்புகளையும்
வேண்டாத குப்பைகளையும்
தாண்டி வந்த பொன்னி நதியின்
போராட்ட நெளிவு சுளிவு
புன்னகையின் நீர் நிழலாய்
நீண்டிருக்கும் அந்தப் பாலம்

காற்று கன்னம் கிள்ள
வரிவரியாய் கூசும் நதி முகம்
நேற்றுப் பார்த்ததுதான் என்றில்லை
நித்தம் கரைப்பூக்களில் பல புதுமுகம்

கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி
“மேட்டூர் இதழ் விரிய கல்லணை சொற் கூட்டும் கல்லூரி பாலம் வந்து காவிரி கவி பாடும்.”

துணி துவைக்கும் பெண்ணின்
தூரத்து மூச்சொலியில் வல்லோசை
வாங்கிப்பாடுவது போல் நீரலையில் மிதந்து வரும்
தனிக் குயிலின் மெல்லோசை…
இடை இடையே நீர்ச்சுழியில் பார்வை அலசி
துள்ளிக் குதிக்கும் மாணவரின் இடையோசை..
மொழி இலக்கணத்தை
வழியிலேயே கற்றுத்தரும் ஆறு … எங்கள்
அரசுக் கல்லுரி அன்றி
யாருக்கு வாய்க்கும் இந்தப் பேறு!

நூறு ஆண்டுகளுக்கு முன்பு
இந்த இயற்கையை சுவாசித்தவரின்
நுரையீரல் போல்,
பாலம் கடந்து அடி வைத்தால்
நுழைவாயில் கூடம்
ஈர நினைவுகளின்
காலக் குளிர்ச்சியாய்.

வேப்பமரம், வேங்கை மரம்
அரசமரம், செம்பருத்தி- என
அங்கீகரிக்கப்பட்ட வகுப்புகள் தாண்டியும்
எங்களுக்கு
அங்கங்கே வகுப்புகள் உண்டு.
சேர்க்கை உத்திரவு இல்லாமலே
எல்லா வகுப்பறையிலும்
புகுந்து வரும் பொன் வண்டு.

கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி
இன்று நினைத்தாலும்…எங்கள் உணர்வுடன் பிணைந்தது கல்லூரி எங்கள் உயிருடன் பாய்ந்தது காவிரி அனைத்துக்கும் இனிமை அரசுக் கல்லூரி!

பல்லுயிரும் பயிலும்
எங்கள் அரசுக்கல்லூரி
செத்துப்போன உணர்ச்சி – அங்கே
சிற்றெறும்புக்கும் இல்லை!
பாடம் நடத்தையில் பாடம் ஆகாமல்
கூடகூட கேள்வி கேட்கும் பச்சைக்கிளி
சாமி தியாகராஜன்
சங்க இலக்கியம் நடத்துகையில்
ஜன்னலோரம்
எட்டிப்பார்க்கும் வெட்டுக்கிளி

ஷேக்ஸ்பியர் பாடத்தை
நடத்தும் அழகில்
ஆங்கிலத்துறை பக்கம்
ஓடும் அணிலும்
சிலிர்த்து தலையாட்டி ரசிக்கும்

கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி
“ஆற்றின் அழகு ஊரை அழகாக்கும் உன் அகத்தின் அழகு உலகை அழகாக்கும்”

எங்கள் தாவரவியல் பேராசிரி்யரின்
தெளிவான விளக்கத்தில்
திறமான விவரணையில்
காம்பை மறந்து
வகுப்பறைக்கு பறந்துவரும் அரச இலை.

“பணவேட்டைக்காக படிக்காதே
பகுத்தறிவுக்காக படி – முழு
சமுதாயத்துக்காகவும் துடி…
பார் பெரியார்.. அம்பேத்கர்..
பகத்சிங்… ” என்று

பேராசிரியர் செல்வராஜ்
பேசிய கனீர் குரல்
காற்று வெளியிடை
இன்றும் ஒலிக்குது!

நிமிர்ந்துநில்.. நேர்பட பேசு
ஆற்றின் அழகு ஊரை அழகாக்கும்
உன் அகத்தின் அழகு உலகை அழகாக்கும்
அழகை ரசித்து வாழ்.. இன்னும்
பாடங்கள் தாண்டி வகுப்பறையில்
மதிப்புக்குரிய மது. ச. விமலானந்தம்
வழங்கிய வாழ்க்கை கண்ணோட்டம்
அரசுக் கல்லூரியின் அழகியல் தோட்டம்.

“படித்தால் மட்டும்
போதுமா?
வா.. வாரம் ஒரு முறை
ஊரைச்சுற்றுவோம்” என
மிதிவண்டி பயணம் தூண்டி
எங்களுக்கு
வெளி உலகில் வகுப்பெடுத்த
பேராசிரியர் பொன்.முத்தையன்
அழியா ஒவியம்…

கலை, அறிவியல்
விளையாட்டு மட்டுமா – சமூக
நிலை பற்றியும் நெஞ்சில் தைக்க
பேசிய பேராசிரியர்கள் பலர்,
“இதோ.. எவர்சில்வர் பட்டறை
தொழிலாளியின் மகன்..
இதோ.. நெசவாளி வீட்டுப்
பையன் இவன்…
இதோ.. கூலி விவசாயின்
மகன்…
பல வழி வந்த
சிறு நதி நீங்கள்
ஒரு வழி ஆனால் கடலின் பலம் “.. என
பாடத்தின் ஊடே
ஒன்றுபடுத்திய உணர்ச்சிகள்
அரசுக்கலூரியின் பயிற்சிகள்

சாதிய மனம் அசிங்கம்
சமத்துவ மனமே அழகு என
பாடத்திற்கு வெளியேயும்
ஊட்டி வளர்த்த குரல்கள்
சம்பளத்தில் கரையாத உயிர்கள்!

அதனால்தான்.. அங்கே
எங்கள் ஆசிரியர்கள்
நடக்கும் பாதையில்
நதிக்கரையோரம்
நாகரீகம் கற்றதற்காய்
நாணல்கள் வணங்கும்
காவிரிக் கெண்டையும்
எங்களுடன் கலந்து மகிழும்
அவர் கண்களில் உலவ விரும்பும்.

அனைத்தும் தந்தது
அரசுக் கல்லூரி…
மறுமுனை ஓட முடியாமல்
ஓணான் மூச்சிரைக்கும்
எதிர்முனை இழுக்கும்…
மலர் தெரியாமல்
வண்ணத்துப் பூச்சி
வழி மயங்கும்..
அவ்வளவு பெரிய
விளையாட்டுத் திடல்
எங்கள் அரசுக்கல்லூரியிலேயே
உண்டு

எங்கள்
கால்கள் விளையாடாத போது
காற்று விளையாடும்
வாரி இறைக்கும்
சிறு மண் தூசியில்
பூக்களின் மணம் கூடும்

கல்லூரிக்குள்ளேயே
பொய்கை ஒன்று
அல்லியும், தாமரையும்
அருகருகே உண்டு
குளத்தருகே புன்னைமரம்
காணும் மனங்களில்
கற்பனை பல ஊறும்.

மதிய உணவு
வாய்க்காத வயிறுக்கு
இலந்தை மரம்
சோறு போடும்.
மாநிலத்தே சமூக நிகழ்வுகள்
மரம் போல் நிற்காதே போராடு
என தேக்கு மரம் ஆணையிடும்!

தாவரவியலின்
செய்முறை ஏட்டுக்கு
ஊர் உலகெங்கும் அலையவிடாமல்
தன்னையே தரும்
கல்லூரி வளாகத் தாவரங்கள்
உயிரியலின் செய்முறைக்கு
உயிரையே தரும்
விடுதி எலிகள்.

இயற்பியல் சமன்பாட்டை
இயல்பாக கற்றுத்தந்த
கல்லூரிக்கு அருகேயிருக்கும்
பாலக்கரை காய் கனிச் சந்தையின்
படிக்காத சுமை தூக்கும் தொழிலாளிகள்.

கல்வி மறுக்கப்பட்ட
ஒரு தலைமுறையிருந்து
கூட்டம் கூட்டமாக படிக்கப்போகும்
மாணவர் குழாமின் மகிழ்ச்சி பார்த்து
பக்தபுரி அக்கிரகாரத்து
பார்வையில் சுரக்கும் அமிலம்
எங்கள் வேதியியல் ஆய்வுக்கு உதவும்

கல்வியாண்டு முடியும் தருணம்
மெல்ல மெல்ல சிறகுள் முறியும்
திசைகள் வேறாய் பிரியும் வேளை
ஆற்றுப்படுத்த முடியாமல்
ஊற்றுக்கண்ணால்
காவிரியும் அழும்
எங்கள்
அந்த கால உயிரோட்டம்
அரசுக் கல்லூரியின்
புதிய தலைமுறையில் எழும்!

இன்று நினைத்தாலும்…
எங்கள் உணர்வுடன்
பிணைந்தது கல்லூரி
எங்கள் உயிருடன்
பாய்ந்தது காவிரி
அனைத்துக்கும் இனிமை
அரசுக் கல்லூரி!

பல் வகைப் பூக்கள்
அரசுக் கல்லூரிகள் – வெறும்
பாப்கார்ன் தெறிப்புகள்
தனியார் கல்லூரிகள்.

செல்லக்கிளிகளின்
இயல் மொழி அரசுக்கல்லூரி
செதுக்கிய உதடுகளின்
மரப்பாச்சி தனியார் கல்லூரி

அரசுக் கல்லூரிச் சூழலே
அனைத்தையும் வாழவைக்கும் பல கலைகள்..
தனியார் கல்லூரியோ
தாங்க முடியாத தற்கொலைகள்..

சுடு காட்டில் படிப்பெதற்கு?
வாழும் இனிமை வேண்டுமா
வா.. அரசுக்கல்லூரி இருக்கு
இந்தச் சூழலை அமைக்காத
அரசாங்கத்தை ‘இறுக்கு’!

– துரை. சண்முகம்

( கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியின் காலப்பதிவு இக்கவிதை. உங்கள் அரசுக்கல்லூரியின் நினைவுகளையும் தேவைகளையும் எழுதத் தூண்டினால் {கட்டுரைகளாய் – வினவு} மகிழ்ச்சி!)

ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க வழங்கும் வியாபம் – ஒரு மெகா ஊழலின் கதை

1

நீங்கள் ஒரு மருத்துவராக, பொறியியலாளராக அல்லது அரசு ஊழியராக என்ன செய்ய வேண்டும்?

வியாபம் மெகா ஊழல்
வியாபம் மெகா ஊழல்

பதில்: உங்கள் ஏரியா ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் அல்லது பாரதிய ஜனதா தலைவர் எவருக்காவது ‘காணிக்கை’ கொடுத்தால் போதுமானது.

என்ன குழப்பமா? பாரதிய ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தில் உள்ள நிலைமையைத் தான் சொல்கிறோம். விளக்கமாகவே சொல்கிறோம்.

எட்டாம் வகுப்பிலிருந்தே மருத்துவம் போன்ற துறைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு பிள்ளைகளை தயாரிக்கும் வேலைகள் நடக்கிறது. நீங்கள் விரும்பும் துறைக்கான படிப்புகளுக்கு அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் தான் சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்தில் இடம் கிடைக்கும்.

மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்பக் கல்வி மற்றும் அரசுத் துறை வேலைகளுக்கான போட்டித் தேர்வை நடத்துவது ’மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம்’ (Madhya Pradesh Professional Examination Board – MPPEB) அதன் இந்தி மொழி பெயர்ப்பு– வ்யாவ்சாயிக் பரிக்ஷா மண்டல் (சுருக்கமாக – வியாபம்).

வியாபம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடந்த மாபெரும் ஊழல் தற்போது வட இந்திய ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. வியாபம் ஊழல் என்பதைச் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், தகுதியற்றவர்கள் பணம் கொடுத்தோ அல்லது வேறு குறுக்கு வழிகளிலோ அரசு வேலை அல்லது மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் இடம் பிடிப்பது என்று சொல்லலாம்.

இந்த எளிய விளக்கத்தைத் தாண்டி வேறு சிக்கலான பரிமாணங்களும் இதற்கு உண்டு. அவற்றைப் பார்க்கும் முன், கீழ்மட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளின் செயல்பாட்டு முறை (Modus Operandi) என்னவென்பதைப் புரிந்து கொள்வோம்.

வியாபம் மெகா ஊழல்
தேர்வுகளை குறுக்குவழியில் வெல்ல வியாபம் வடித்துக் கொடுத்திருக்கும் வழிமுறைகள்.

தேர்வுகளை குறுக்குவழியில் வெல்ல வியாபம் வடித்துக் கொடுத்திருக்கும் வழிமுறைகள் :

1)   ஆள்மாறாட்டம் : தேர்வு எழுத வேண்டியவருக்கு பதிலாக, தேர்வு எழுதுவதையே தொழிலாக கொண்ட வேறு ஒரு ‘திறமைசாலி’ தேர்வை எழுதுவது. தேர்வு மைய நுழைவுச் சீட்டை போர்ஜரி செய்வது, மேற்பார்வையாளருக்கு காந்தி தாள் சப்ளை செய்வது மற்றும் மேல் மட்ட ‘கைகளை’ கவனித்துக் கொள்வது மூலம் இது நிகழ்த்தப்படுகிறது.

2)   ரயில் இன்ஜின் / ரயில் பெட்டி (Engine Bogie System): தேர்வு மையத்தில் உண்மையாகவே தேர்வு எழுத வந்திருப்பவர்களுக்கு இடையில் சம்பந்தமில்லாத (ஆனால், அந்த துறை பற்றி நன்கு அறிந்த ஒருவரை)  நுழைத்து அவர் எழுத (இன்ஜின்) மற்றவர்கள் காப்பி அடிக்க (இன்ஜினைத் தொடரும் பெட்டிகள்) செய்வது. – உதாரணமாக, ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வு என்றால், தேர்வு எழுத வந்த ஒருவர் 4 அல்லது 5 லட்சம் கொடுத்து இன்னொருவரை இன்ஜினாக அமர்த்திக் கொள்ளலாம்

3)   காலி விடைத்தாள்கள் : அதாவது தேர்வு எழுத வந்தவர் விடைத்தாளை காலியாக வைத்து விட வேண்டும். தேர்வு நேரம் முடிந்து தேவையான மதிப்பெண்களை முதலில் வழங்கி விடுவார்கள் – பின்னர் அரசின் பாதுகாப்பில் உள்ள அந்த காலித் தாள்களில் கிடைத்த மதிப்பெண்களுக்கு ஏற்றாற் போல் விடை எழுதி, அதைத் திருத்துவது போல் திருத்தி, மதிப்பெண் போடுவது போல் போட்டு – தலைசுற்றுகிறதல்லவா? ஆனால், இப்படித் தான் நடந்துள்ளது.

மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் ஒரு உயர் கல்விப் பிரிவு அல்லது அரசுத் துறை ஒன்றில் வேலைக்கான போட்டித் தேர்வுகள் எழுதும் ஒருவர், அதற்காக சிரமப்பட்டு படிக்கத் தேவையில்லை – அதாவது காசு இருக்கும் பட்சத்தில். பையில் தயாராக பணக்கட்டுகளோடு இருப்பவரைத் தேடி இடைத் தரகர்கள் வருவார்கள். நீங்களே தேர்வை எழுதுவதானால், உங்களுக்கு முன்னோ பின்னோ ஒருவர் அமர்ந்து உங்களுக்குத் தேவையான பதில்களைத் தருவார்கள்.

வியாபம் ஊழல்
வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன.

இல்லையென்றால், உங்கள் பெயரில் வேறு ஒருவர் தேர்வை எழுதிக் கொடுப்பார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட துறையின் தேர்வாணையத்தை சரிக்கட்டுவது, தேர்வு நிலைய கண்காணிப்பாளர்களைச் சரிகட்டுவது, விடைத்தாள் திருத்துபவர்களைச் சரிகட்டுவது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அரசுத் துறை அல்லது கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் வரை விட்டமின் ‘ப’ பாய்ச்சும் வேலையை இடைத்தரகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. வியாபம் ஒரு பிரம்மாண்டமான ஊழல் – ஆனால், இங்கே பிரம்மாண்டம் என்பது இந்த ஊழலில் புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.

முன்னெப்போதும் இல்லாத வகையில் வியாபம் ஊழல் புகாரில் இதுவரை சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது பட்டியலில் உள்ள சுமார் 300 பேர் தலைமறைவாக உள்ளனர். மத்திய பிரதேச ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி சுதர்ஷன், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா உள்ளிட்டோர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள பெரும் புள்ளிகளில் சிலர். தமக்கு வேண்டியவர்கள், தாம் கைநீட்டி லஞ்சம் பெற்றுக் கொண்டவர்களை இந்த ‘பெரும்’ புள்ளிகள் தேர்வுகளில் வெற்றி பெற இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே ஷிவாரே, புகழ்பெற்ற மருத்துவர் வினோத் பண்டாரி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சுரங்க முதலை சுதீர் ஷர்மா ஆகியோர் அடங்குவர்.

முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா
கைது செய்யப்பட்ட 1800 பேரில் பாரதிய ஜனதாவின் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா

வேறெந்த வழக்கிலும் நடந்திராத வகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் வழக்கின் சாட்சிகள் உள்ளிட்ட 40 பேர் மர்மமான முறைகளில் இறந்துள்ளனர் – அதாவது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவும் அடங்குவார்.

வியாபம் பாணி முறைகேடு – அதாவது மத்திய பிரதேச ஊழல் மாடல் – தற்போது பிற வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்திர பிரதேசம், குஜராத், தில்லி, ஹரியானா மற்றும் பீகாருக்கும் மிக வேகமாக பரவியுள்ளது என்கிறார் காங்கிரசு தலைவரான திக்விஜய் சிங். கூடுதலாக இந்த ஊழலில் கீழ்மட்ட காங்கிரசு தலைவர்களும் சிலர் இருக்கிறார்கள்.

2009-ம் ஆண்டு வியாபம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை விசாரிக்க கோரி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மருத்துவ வினோத் ராய் பொது நல வழக்கொன்றை ம.பி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அதிலிருந்து 2013-ம் ஆண்டு வரை சுமார் 45 பொது நல வழக்குகள் இது குறித்து விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒருபக்கம் ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் இருக்க, இன்னொரு பக்கம் மாநில அரசாங்கம் மேலும் 64 அரசுத் துறைகளில் பணி நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை வியாபத்திடம் அளித்துள்ளது.

2009-ம் ஆண்டு வியாபம் முறைகேடுகள் குறித்து முதன் முறையாக பொது நல வழக்கைத் தொடர்ந்த வினோத் ராய், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 40,000 கோடியை இருக்கை ஒதுக்கீடுகளின் மூலம் குவிக்கிறது என்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட 42 சதவீத இடங்களுக்கும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 43 சதவீத இடங்களுக்கு ஏராளமான தொகை கணக்கில் காட்டாமல் வசூலிக்கப்படுகிறது. 15 சதவீத இடங்கள் (அதாவது 300) தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றது – ஆக மொத்தம் மத்திய பிரதேசத்தில் மருத்துவப் படிப்பில் 100 சதவீத இடங்களும் காசு கொடுப்பவர்களுக்கே என்று நிலைநாட்டியுள்ளனர்.

வியாபம் ஊழல்
மோடியின் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஆளும் மாநிலத்தில், ’நல்லவர்களை’ பிரசவிப்பதற்காகவே (Man making) செயல்படுவதாக பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கேற்போடும், ஆசியோடும் வியாபம் ஊழல்.

இது மருத்துவத்துறையில் மட்டும் தான். இன்னும் பிற உயர் கல்வி நிலையங்களில் செய்யப்படும் இருக்கை ஒதுக்கீடுகள், போட்டித் தேர்வுகள் மூலம் அரசு வேலைகளுக்கு செய்யப்படும் பணி நியமனங்கள் என்று தொகுப்பாக பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கோடி கொள்ளையடிக்கப்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.

அவ்வளவும் கருப்புப் பணம். யாருடைய ஆட்சியில்? கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ள மோடியின் ஆட்சியில், மோடியின் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஆளும் மாநிலத்தில், ’நல்லவர்களை’ பிரசவிப்பதற்காகவே (Man making) செயல்படுவதாக பீற்றிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கேற்போடும், ஆசியோடும்!

இது தொடரும் பட்சத்தில் நாடெங்கும் உள்ள அரசுத் துறைகளில் காசுள்ளவர்கள் அமர்வார்கள் – காசுள்ளவனுக்கே உயர் கல்வி என்பது நிலைநாட்டப்படும். உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மருத்துவமனைக்கு ஓடினால், அங்கே பல லட்சங்கள் லஞ்சம் கொடுத்து குறுக்குவழியில் கல்லூரியில் இடம் பிடித்த மேட்டுக்குடி குலக்கொழுந்து அமர்ந்திருப்பார். தான் கொடுத்த லஞ்சத்தையும் தனது பிள்ளைக்கு எதிர்காலத்தில் கொடுக்கவுள்ள லஞ்சத்தையும் உங்களிடமிருந்து வசூலிப்பது எப்படி என்பதே அவரது அக்கறைக்குரியதாக இருக்குமே ஒழிய உங்கள் உடல் நலனாக இருக்காது.

வியாபம் ஊழல்
வியாபம் ஊழல் பல்வேறு அரசுத் துறைகளையும் இணைத்துக் கொண்டு ஒரு தொழிற்சாலையின் உற்பத்தியில் இருக்கும் ஒழுங்கமைப்பு நேர்த்தியோடு நடந்துள்ளது.

கல்வி என்பதோ உழைக்கும் மக்கள் அணுக முடியாத இடத்திற்கு ஏற்கனவே சென்று விட்டது. எல்.கே.ஜி வகுப்பில் மூன்று வயது குழந்தையைச் சேர்ப்பதற்கே சாதாரணமாக முப்பதாயிரத்திலிருந்து இரண்டு லட்சம் வரை விலை பேசப்படுகிறது. அதற்கு மேல் மருத்துவமோ தொழில்நுட்பக் கல்வியோ அல்லது பிற கல்விப் பிரிவுகளிலோ தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க நடுத்தர வர்க்க மற்றும் அடித்தட்டு வர்க்கப் பிரிவு மக்கள் அண்டா குண்டா தொடங்கி தங்கள் சேமிப்பு, உழைப்பு, எதிர்காலம் என்று சகலத்தையும் அடகு வைக்கிறார்கள். கல்வித் துறைக்கென விதிக்கப்பட்டதாக சொல்லிக் கொள்ளப்படும் அற மதிப்பீடுகள் அனைத்தும் காற்றில் பறந்து அந்தத் துறையே முக்கால் நிர்வாணமாக நிற்கிறது.

மேற்படி அரை மற்றும் முக்கால் நிர்வாணத்தை மறைத்து சுற்றிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச கந்தல் துணிகளையும் உருவியெறிந்துள்ள வியாபம் ஊழல், அவற்றை முழு நிர்வாணப்படுத்தியுள்ளது.

வியாபம் ஊழல் பல்வேறு அரசுத் துறைகளையும் இணைத்துக் கொண்டு ஒரு தொழிற்சாலையின் உற்பத்தியில் இருக்கும் ஒழுங்கமைப்பு நேர்த்தியோடு நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தனி நபரையும் இணைத்து, அவர்களின் செயல்பாடுகளின் ஒத்திசைவையும் தொழில் நேர்த்தியையும் கவனித்தால் இந்த கும்பல் – அதாவது, அரசியல் வாதிகள், ஆர்.எஸ்.எஸ் காரர்கள், அரசு அதிகாரிகள் – மொத்தமும் ஒரு நிழல் அரசாங்கம் போல் செயல்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ராம் நரேஷ் யாதவ்
வியாபம் ஊழலில் சிக்கிய ம.பி ஆளுனர் ராம் நரேஷ் யாத்வ், சிவ்ராஜ் சிங் சவுகானுடன்

எனவே தான் தவிர்க்கவே இயலாத வகையில் பல்வேறு பொதுநல வழக்குகளுக்கும், எதிர்கட்சிகளின் அழுத்தங்களுக்கும், நீதி மன்றங்களின் உத்தரவுகளுக்கும் பின் மத்திய பிரதேசத்தின் சிறப்புக் காவல் துறையின் விசாரணைக்கு உள்ளாகியுள்ள இந்த ஊழல் மிகத் தெளிவாக தவறான திசையை நோக்கிச் செல்கிறது. குற்றம் இழைத்த ஒரு சிலரோடு சேர்த்து குற்றத்தால் பாதிக்கப்பட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக உடகங்கள் சில தெரிவிக்கின்றன. மேற்கொண்டு மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் ஏதும் எழாமலிருக்க, அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே கைதுகள் செய்யப்படுகின்றன.

இது ஒருபக்கமென்றால், ஊழல் குறித்த விவரங்களை அம்பலப்படுத்திய  பிரஷாந்த் பாண்டே என்ற முன்னாள் காவல்துறை அதிகாரியின் (பாரன்சிக் பிரிவு) மேலும் முதல் பொதுநல வழக்கைத் தொடர்ந்த மருத்துவர் வினோத் ராயின் மேலும் பல கொலை முயற்சிகள் நடந்துள்ளன. கைது செய்யப்பட்ட முன்னாள் கல்வியமைச்சர் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்படாமல் சிறையில் ஐந்து நட்சத்திர வசதிகளை அனுபவித்து வருகிறார். வழக்கின் முக்கிய சாட்சியங்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள்.

வியாபம் மெகா ஊழல்
இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது “இட ஒதுக்கீடு என்றால் தகுதியின்மை – போட்டித் தேர்வு முறை என்பது திறமை” என்று கூரையேறி கூவிக் கொண்டிருந்த பார்ப்பனக் குஞ்சுகளும் பார்ப்பன பத்திரிகைகளும் சாதிக்கும் ஆழமான கள்ள மௌனம்.

இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது “இட ஒதுக்கீடு என்றால் தகுதியின்மை – போட்டித் தேர்வு முறை என்பது திறமை” என்று கூரையேறி கூவிக் கொண்டிருந்த பார்ப்பனக் குஞ்சுகளும் பார்ப்பன பத்திரிகைகளும் சாதிக்கும் ஆழமான கள்ள மௌனம் ஒருபக்கமென்றால் – மோடியின் கருப்புப் பண சாகசத்தை விதந்தோதியவர்களின் ஆழ்ந்த மௌனம் இன்னொரு பக்கம். இந்த இரண்டிலும் எது பெரியது என்பதை கண்டுணர முடியாத வகையில் ஒன்றை ஒன்று விஞ்சுகிறது.

மோடியின் தலைமையில் குஜராத் காவல்துறை மொத்தமும் மாஃபியா கும்பலின் ஒழுங்கமைவை அடைந்தது என்றால், அவரது வழிகாட்டுதலில் அவரது கட்சியைச் சேர்ந்தவர் ஆளும் மாநிலத்தில் அரசு நிர்வாகத்தில் ஊழல் நிறுவனமயமாகியுள்ளது. குருவுக்குத் தப்பாத சிஷ்யன்.

அவர்கள் தங்கள் வேடத்தை எப்போதோ கலைத்து விட்டார்கள் – அவர்களை நம்பியவர்கள் எப்போது தமது நம்பிக்கையைக் கலைக்கப் போகிறார்கள்?

–    தமிழரசன்

செம்மரம் கடத்தும் டி.எஸ்.பி – இதுதாண்டா போலீசு

1

ங்கவேலுக்கு சொந்த ஊர் முதுகுளத்தூர். முதுகுளத்தூர் என்றதும் நினைவுக்கு வருவது என்ன ? கொம்பன் மீசை, தேவர் மகன் பாட்டு, தேவர் குருபூஜை இத்யாதிகள்தானே. அப்பேற்பட்ட மண்ணிலிருந்துதான் இந்த தங்கவேல் ஆளாகி போலீஸ் வேலையில் சேருகிறார்.  வேலை கிடைத்ததும் சென்னையில் வீடு கட்டி குடியேறுகிறார். துவக்க ஆண்டுகளில் ஆயுதப்படையில் துணை ஆய்வாளராக பணிபுரிந்தவர் பிறகு காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையப் பணிக்கு மாறுகிறார்.

இன்ஸ்பெக்டர் தங்கவேலு
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து மணல் மாஃபியாக்களும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களும், பிற சமூக விரோதிகளும் ஐயாவுக்கு மிகவும் நெருக்கம் – இன்ஸ்பெக்டர் தங்கவேலு

பட்டாளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த போது மாவட்டம் முழுவதும் நடந்த மணல் கொள்ளையர்களுக்கு உற்ற துணையாக இருந்து அவர்களை பாதுகாத்து, மணல் கொள்ளையர்கள் அடித்த கொள்ளையில் பங்கை பெற்றுக்கொண்டு சொத்துக்களை குவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து மணல் மாஃபியாக்களும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களும், பிற சமூக விரோதிகளும் ஐயாவுக்கு மிகவும் நெருக்கம். அந்த நட்பு கொடுத்த பணத்தில் மாவட்டம் முழுவதும் வீட்டு மனைகளை வாங்கி குவித்தார்.

அதன் பிறகு 2015 ஜனவரி மாதம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று வேலூருக்குச் சென்றார். செம்மரக்கடத்தல் கும்பலின் மையமாக இருக்கும் வேலூருக்கு வந்த பிறகு, தான் மணல் கொள்ளையில் பார்த்த பணம் எல்லாம் கொசுறு என்பதை அறிகிறார்.

பிறகு தனது தொழிலை ரியல் எஸ்டேட்டிலிருந்து செம்மர கடத்தலுக்கு மாற்றுகிறார். லோக்கல் ரியஸ் எஸ்டேட்டிலேயே இலட்சங்களை சுருட்டியவர் இன்டர்நேஷ்னல் செம்மர பிசினசில் எத்தனை கோடிகளை சுருட்டினார் என்று யாருக்கும் தெரியாது. செம்மரம் கடத்துகின்ற கும்பலுக்கு தங்கவேலு ஐயா துணை போகவில்லை, அவர்களோடு நேரடியாக ஒப்பந்தம் போட்டு பார்ட்னராகவே இருந்திருக்கிறார்.

இந்நிலையில் மே 27-ம் தேதி இரு கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பா.ம.க.வைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட சின்னப்பையன் அப்போது பா.ம.க பொறுப்பில் இல்லை. கடத்தல் தொழிலுக்கு வருவதற்கு முன்பு வரை பா.ம.க.வின் ஒன்றியச் செயலாளராக இருந்திருக்கிறார். தொழிலில் பிசியானதும் கட்சி வேலைகளுக்கு முழுக்கு போட்டு விட்டார். ஆனால் கட்சிக்கு முழுக்கு போடவில்லை.

சின்னப்பையன் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த பா.ம.கவினர் இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு ஏதாவது ஆதாயம் அடையலாம் என்கிற நோக்கத்துடன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு சின்னப்பையன் வீட்டுக்கு வந்தனர்.

அரசியல் காழ்ப்புணர்வு, பின்னணியால் தான் இந்த கொலை நடந்திருக்கிறது என்று பா.ம.கவினர் சாவுக்கு காரணம் தேடிக் கொண்டிருந்தனர். இடைமறித்த போலீசார் செம்மரக்கடத்தல் தொடர்பான பிரச்சினையில் தான் கொலை நடந்திருக்கிறது உங்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்றதும் வீராதி வீர பா.ம.கவினர் முதலுக்கே மோசமாகிவிடுமென்று ஓட்டம் பிடித்தனர்.

செம்மரக் கடத்தல்
ஆந்திராவிலிருந்து செம்மரங்களை கடத்தி வரும் கடத்தல் கும்பல், அவற்றை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள சில மறைவான இடங்களில் பதுக்கி வைத்து இரவோடு இரவாக வெட்டி சிறு துண்டுகளாக்கி அதன் பிறகு கடத்துகிறது.

அடுத்த சில நாட்களில் கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரும் போலீசில் சரணடைந்தனர். அவர்களை விசாரித்த போது கடத்தல் கும்பலோடு சேர்ந்து டி.எஸ்.பி தங்கவேலும் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது ஏதோ போலீசுக்கு இப்போதுதான் முதன்முறையாக தெரிய வந்ததாக பொருள் இல்லை. ஐயா சம்பாதிப்பதில் போதுமான அளவு சக போலீசாருக்கு வரவில்லை என்றான பிறகே போலிசுக்குள் பங்காளிச் சண்டை வரும் உலகமறிந்த உண்மை.

சின்னப்பையனுக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டம் மாதனூர் அருகே உள்ள பாலூர். இவர் ஐந்து கோழிப்பண்ணைகளை நடத்தி வந்திருக்கிறார். ஆந்திராவிலிருந்து செம்மரங்களை கடத்தி வரும் கடத்தல் கும்பல், அவற்றை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள சில மறைவான இடங்களில் பதுக்கி வைத்து இரவோடு இரவாக வெட்டி சிறு துண்டுகளாக்கி அதன் பிறகு கடத்துகிறது.

சின்னப்பையனின் கோழிப்பண்ணைகள் மறைவான இடத்தில் அமைந்திருந்ததால் கடத்தல்காரர்கள் அவரை கூட்டாளியாக்கி தொழிலில் ஒத்துழைக்க வைத்தனர். அதன் பிறகு மரம் பதுக்குவது முதன்மையானது, கோழிப்பண்ணை அந்த தொழிலை செய்வதற்கான இடமாக மாறியது.

சின்னபையன் பதுக்கல் தொழிலில் இறங்கிய பிறகு பல்வேறு ஏஜெண்டுகளின் கடத்தல் மரங்களோடு தேடி வந்தார்கள். நள்ளிரவு நேரங்களில் பண்ணைக்குள் வைத்து மரங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அடுக்கி, மறுநாள் காலை வெட்டிய மரங்களை கோழிகளோடு கோழியாக வைத்து சேர வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியது சின்னப்பையனின் வேலை. இதன் மூலம் லட்சம் லட்சமாக காசு பார்த்திருக்கிறார்.

இவ்வாறு கோழிப்பண்ணைகளில் செம்மரங்களை பதுக்கி வைக்கும் கடத்தல்காரர்களில் வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த நாகேந்திரனும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த வெங்கடேசனும் அடங்குவர். மரங்களை பதுக்கி வைப்பதற்கே லட்சங்கள் வருமானம் வந்தது சின்னபையனுக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது,

டி.எஸ்.எபி தங்கவேலு
இந்த மாதிரி கேஸ் என்றால் நீதியை நிலைநாட்டும் சாக்கில் நிதியை கபகளீரம் செய்ய தங்கவேலு உடனடியாக ஸ்பாட்டில் ஆஜராகி விடுவார்.

பிறகு தொழில் அத்துப்படியான பிறகு கமிஷனில் பணம் பார்ப்பதை விட தானே நேரடியாக செம்மரங்களை விற்று லம்பாக பணம் பார்த்தால் என்ன என்கிற ஆசை பிறந்தது. ஆசையை நிறைவேற்ற வழியும் வந்தது. நாகேந்திரன் ஒரு முறை மூன்று டன் மரங்களை கொண்டு வந்து பதுக்கினார். அதை அவருக்குத் தெரியாமல் இரவோடு இரவாக வெளிமாநில புரோக்கர்களுக்கு விற்றுவிட்டார் சின்னபையன்.

நாகேந்திரன் தனது மரத்தை எடுக்க வந்த போது, பண்ணையில் போலீஸ்காரர்கள் ரெய்டு வந்து எல்லா மரங்களையும் எடுத்துச்சென்று விட்டனர் என்று கூறியிருக்கிறார், சின்னப்பையன். இந்தக் கதையை நம்புவதற்கு நாகேந்திரன் தயாராக இல்லை. அவரைப் போன்ற ஒரிஜினல் கடத்தல்காரர்கள்தான் போலிசாரோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள். தனக்கே தெரியாமல் போலீசு எப்படி வரும் என்பது அவரது சந்தேகம்.

இதனால் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதமும் சண்டையும் நடந்திருக்கிறது. இறுதியில் எச்சரித்துவிட்டுச் சென்ற நாகேந்திரன் சின்னபையனை கொலை செய்ய திட்டமிட்டார்.

மேற்கண்ட சம்பவம் நடந்த சில நாட்களில் நாகேந்திரனின் வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கப்பட்டிருப்பதாக டி.எஸ்.பி தங்கவேலுக்கு ஒரு ‘ரகசிய’ தகவல் வருகிறது. இந்த மாதிரி கேஸ் என்றால் நீதியை நிலைநாட்டும் சாக்கில் நிதியை கபகளீரம் செய்ய தங்கவேலு உடனடியாக ஸ்பாட்டில் ஆஜராகி விடுவார். அதன்படி நான்கு போலீசாரை அழைத்துக் கொண்டு நாகேந்திரன் வீட்டுக்கு சென்று சோதனையிடுகிறார். சோதனையில் கள்ளச்சாராயத்திற்கு பதிலாக டன் கணக்கில் செம்மரங்கள் சிக்குகின்றன.

அனைத்தையும் பறிமுதல் செய்த தங்கவேலு நாகேந்திரனை கைது செய்து ஜீப்பில் ஏற்றவில்லை. மாறாக, “நான் கைது செய்து வழக்கு போடமாட்டேன், என்ன தருவாய்” என்று நாகேந்திரனிடம் பேரம் பேசுகிறார். ஏதோ சில ஆயிரங்கள் என்று காத்திருந்த தங்கவேலுக்கு சுளையாக ஐந்து லட்சத்தை எடுத்து வைத்தார், நாகேந்திரன். அதிர்ந்து போன தங்கவேலு அதன் பிறகு நாகேந்திரனோடு நண்பராகிறார். கடத்தல் தொழிலுக்கு துணையாக இருந்தார் இந்த டி.எஸ்.பி ஐயா.

சின்னப்பையன் தன்னை ஏமாற்றி 7 டன் செம்மரங்களை விற்றுவிட்டதையும், அவை திருவண்ணாமலை வெங்கடேசனின் பண்ணையில் தற்போது இருப்பதையும் தங்கவேலிடம் கூறுகிறார் நாகேந்திரன். என்ன செய்யலாம் என்று இருவரும் சதி திட்டம் தீட்டுகின்றனர். இறுதியில் சின்னபையனை அவருடைய வழியிலேயே பழி வாங்கி ஏழு டன் மரங்களையும் மொத்தமாக தூக்குவது என்று முடிவு செய்தனர்.

திட்டப்படி தங்கவேலு நான்கு போலீசாரை அழைத்துக் கொண்டு நேராக சின்னப்பையனின் பண்ணைக்கு சென்று சோதனையிட வேண்டும் என்கிறார். போலீசைக் கண்டு பீதியான சின்னபையன் வேறு வழியின்றி பண்ணையை திறக்கிறார். செம்மரங்களை கண்டுபிடித்த தங்கவேலு அனைத்தையும் பறிமுதல் செய்வதாக கூறி லாரியில் ஏற்றுகிறார். சின்னபையனை எதுவும் செய்யவில்லை. சின்னப்பையனை கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதும் பணம் பெற்றுக்கொண்டாரா, இல்லை எடுத்த செம்மரங்களில் பல கோடிகளை வரப்போகிறது என்பதால் விட்டுவிட்டாரா தெரியவில்லை. எதாக இருந்தாலும் சின்னப்பையனும் இதை லீகலாக போலீசுக்கு கொண்டு செல்ல முடியாது.

பறிமுதல் செய்த மரங்களை நாகேந்திரன், தங்கவேலு இருவரும் சரிபாதியாக பிரித்துக்கொண்டனர். தங்கவேலு தனது பங்கை ஏஜெண்டுகள் மூலம் கர்நாடகாவில் விற்று 32 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

நாகேந்திரன், ஜோதி லட்சுமி
செம்மரக் கடத்தல்காரன் நாகேந்திரனின் வீடு, உள்படத்தில் வெங்கடேசன், அவனது மனைவி ஜோதி லட்சுமி. (படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்)

இதற்கிடையில் வெங்கடேசன் தனது செம்மரங்களை எடுப்பதற்காக சின்னப்பையன் பண்ணைக்கு வந்திருக்கிறார். போலீசு பறிமுதல் செய்துவிட்டது என்கிற உண்மையை சின்னபையன் கூறினார். ஆனால் வெங்கடேசன் அதை ஏற்கவில்லை டென்ஷனாகி கத்தியிருக்கிறார். ஏனெனில் வெங்கடேசனுக்கு தெரியாமல் எந்த போலீசும் இங்கே வரமுடியாது என்று அவருக்குத் தெரியும். வந்தது உண்மையான போலீசு என்றாலும் கடத்தலுக்காக வந்த கள்ளப் போலீசு என்பது சின்னைப்பையனுக்கு தெரியாது.

இறுதியில் அடியாட்களை வைத்து சின்னபையனை தூக்கிய வெங்கடேசன் அவரை தனி இடத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி உண்மையை கூறுமாறு மிரட்டியிருக்கிறார். சின்னப்பையன் திரும்ப திரும்ப கூறியதையே கூற அவரை கொலை செய்து சாலை ஓரமாக வீசிவிட்டனர்.

மறுநாளே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வெங்கடேசன் உள்ளிட்ட நான்கு பேரும் ஆம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த நான்கு பேரை அடுத்து நாகேந்திரனும் அவருடைய மனைவி ஜோதிலட்சுமியும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வழக்கமான கொலைகளில் இந்த சரண்டர் நடந்து வழக்கு நீர்த்து போய் உண்மையான குற்றவாளிகள் வெளியே வருவார்கள்.

எனினும் இந்த விவகாரத்தில் புரளும் பணம் அதிகம், அந்தப் பணத்தை கைப்பற்ற போட்டியும் அதிகம் என்பதால் டி.எஸ்.பி ஐயா இதில் இருக்கும் உண்மை தவிர்க்க முடியாமல் வெளியே வந்துவிட்டது. தங்கவேலுடன் சென்ற கலால் துறை ஏட்டுகள் சவுந்தர் ராஜன், சாமுவேல், ராஜேஸ், சீனிவாசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தங்கவேலு தலைமறைவாகி அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் தங்கியிருக்கிறார் என்றும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது என்றும் இரு வேறு தகவல்கள் முதலில் கூறப்பட்டது.

இதை நாம் பேரத்திற்கான பேச்சு வார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக பண்ணையிலிருந்து ஏழு டன் மரங்களை கடத்திச் செல்ல உதவியாக இருந்த மாமண்டூர் மாரியப்பன், லாரி உரிமையாளர் கோபு, டிரைவர் லோகநாதன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்கவேலு காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் இன்ஸ்பெக்டராக இருந்த போது இந்த மூன்று பேரும் பழக்கமாகியிருக்கின்றனர். அப்போது அவர் கூறிய வேலைகளை எல்லாம் செய்து கொடுத்திருக்கின்றனர்.

தங்கவேலு சின்னப்பையனின் பண்ணையில் மரங்களை கைப்பற்ற  போகும் போது வீடு மாற வேண்டும் என்று கூறி தான் இவர்களை அழைத்துச் சென்றதாக கூறுகின்றனர். பண்ணையில் செம்மரங்களை ஏற்றும் போது தான் இவர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அப்போது தங்கவேலு மூன்று பேரின் செல்போன்களையும் பிடுங்கி வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் எனவே வேறுவழியின்றி மரங்களை ஏற்றிக்கொண்டு நாகேந்திரன் வீட்டில் இறக்கியதாகவும் கூறியுள்ளனர்.

28-ம் தேதி, சின்னப்பையனின் உறவினர் விஸ்வநாதன் என்பவர் ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள இருமுடிபுலியூரைச் சேர்ந்த பெருமாள், தங்கராஜ்,  சத்தியமூர்த்தி, வெங்கடேசன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அளித்த வாக்குமூலத்தின்படி, “நாங்கள் ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தோம். செம்மரக்கட்டைகளை கடத்தி வர ஆட்களை அனுப்பி வைக்கும் ஏஜண்டுகளாகவும் செயல்பட்டோம். எங்கள் கூட்டாளியான நாகேந்திரன் லாரி உரிமையாளர் என்பதால், கடத்தல் தொழில் பிரச்சினை இல்லாமல் நடந்து வந்தது. சின்னப் பையன் செய்த பிரச்சினையால் இந்த விவகாரம் டி.எஸ்.பி, தங்கவேலுக்கும் தெரிய வந்து பிறகு அவரும் எங்களோடு கூட்டு சேர்ந்து கொண்டார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு போலீசு துணையுடன் ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து, சின்னப்பையனின் கோழிப் பண்ணையில் பதுக்கி வைத்தோம். ஆனால், சின்னப்பையன் எங்களுக்குத் தெரியாமல் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை விற்று விட்டார். அதைப் பற்றி கேட்டபோது, போலீசு கைப்பற்றியதாக கூறினார். எனவே அவரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினோம்.

எனவே, சின்னப்பையனை கடத்தி பண்ணையில் இருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் நாகேந்திரன் வீட்டில் பதுக்கினோம். மரங்களை லாரியில் ஏற்றியபோது, டி.எஸ்.பி யும் போலீசாரும் வந்திருந்தனர்” என்று கூறியுள்ளனர்.

தற்போது தங்கவேலுவும் போலிசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அல்லது போலிசாருக்கிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்து இந்தக் கைது அறிவிக்கப்பட்டிருக்கலாம். இவ்வளவிற்கு அவர் வாணியம்பாடியில் இருந்ததாக போலீசு கூறுகிறது. இதைக் கண்டுபிடிக்க இவர்கள் போட்ட தனிப்படைகள், அதற்கான தீவன செலவுகள் எல்லாம் நமது வரிப்பணம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் தங்கவேலு பத்துக்கு மேற்பட்ட வீட்டுமனைகளை வாங்கிப்போட்டிருக்கிறார். ஒவ்வொன்றும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய இடங்கள். செங்கல்பட்டு பகுதியில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றையும் கட்டியுள்ளார்.

பணிபுரிந்த மாவட்டங்களிலும், சொந்த ஊரிலும் வீட்டுமனைகள், விவசாய நிலங்கள், சொகுசு பங்களாக்கள் என்று வாங்கி குவித்திருக்கிறார். இந்த இடங்களைத் தவிர 10 டிப்பர் லாரிகளையும் சொந்தமாக வைத்திருந்திருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த போது இந்த லாரிகளை தான் மணல் கொள்ளைக்கு பயன்படுத்தியிருக்கிறார்.

தங்கவேலு மாட்டிக்கொண்டது ஒரு தற்செயல் நிகழ்வு தான். செம்மரக்கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருக்கும் இவரைப்போன்ற போலீசு அதிகாரிகள் இன்னும் பல பேர் இருக்கலாம் அவர்கள் அந்த துறையாலேயே பாதுகாக்கப்படலாம். செம்மரக்கடத்தலில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடந்து வரும் மணல் கொள்ளையில், மணல் கொள்ளையர்களுக்கு முழு பாதுகாப்பளித்து இயற்கை வளத்தை சூறையாட உதவியாக இருப்பது போலீசு தான்.

போலீசின் பிடியில் இருக்கும் டி.எஸ்.பி., தங்கவேலு, தற்போது வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். செம்மரம் கடத்தலில், அ.தி.மு.க., பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் உட்பட, 37 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ள 37 பேர் விவரம்;

* கடத்தல்காரர்கள் – 10 பேர்

* அ.தி.மு.க., பிரமுகர்கள் – 4 பேர்

* வனத்துறையினர் – 12 பேர்

* போலீஸ் அதிகாரிகள் – 11 பேர்

ஆக ஆந்திராவில் தமிழக தொழிலாளிகள் 20 பேரைக் கொன்ற போலீசு இங்கே தங்கவேலால் பட்டியலிடப்பட்டிருக்கும் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யுமா? செம்மரக்கடத்தலில் அரசின் அனைத்து துறைகளும், ஒரு டி.எஸ்.பியும் இருக்கின்றனர் என்றால் இந்த அரசுக் கட்டமைப்பு என்பது மக்களுக்கானது அல்ல என்று விளக்க வேண்டுமா? இங்கே யார் யாரை தண்டிக்க முடியும்? இல்லை மக்கள்தான் யாரிடம் சென்று புகார் கொடுக்க முடியும்?

மணற்கடத்தல், செம்மரக் கடத்தல் மூலம் ஒரு சப் இன்ஸ்பெக்டரே இத்தனை கோடிகள் சம்பாதிக்க முடியுமென்றால் நாட்டில் நடக்கும் மற்ற கனிம வளக் கொள்ளையினை நினைத்து பாருங்கள்!

இந்த அரசு, போலீசு அனைத்தையும் தூக்கி எறிய வேண்டுமா என்பது இப்போது நமது தெரிவல்ல. அதுதான் ஒரே வழி என்பதை டி.எஸ்.பி தங்கவேலுவிவின் குற்றக்கதை கூறுகிறது.

–    வையவன்.

(நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், ஜூனியர் விகடன்)

வரலாற்றுப் பார்வையில் தாலி – சிறப்புக் கட்டுரை

21

‘ஆமா..நல்லா வேலை செஞ்சு தாலியத்தே…போவியா” –

கரிசல் வட்டாரங்களில் ஆத்திரத்தில் மக்களிடம் புழங்கும் வசவு, இது. தாலியின் மதிப்பு ‘மயிர்’ என ஏசுவதன் ‘இடக்கரடக்கலாக’வோ, இளக்காரமாகப் பேசும்போது, ‘ஆமா..ஒன் தாலி’ என்றோதான் இருக்கிறது. ஆனால் பேனைப் பெருமாளாக்கி, பெருமாளைப் பெத்த பெருமாளாக்கும் இந்துவெறிக்கும்பலோ ‘தாலி’ பற்றிப் பேச நினைத்த புதியதலைமுறைத் தொலைக்காட்சியின் மீது ‘வீரமாக’க் குண்டு வீசி, பெரியார் திடலில் உருட்டுக்கட்டையால் அடிவாங்கிச் சுருண்டிருக்கிறது.

தாலி - இந்து கலாச்சாரமா?
இந்துவெறிக்கும்பலோ பெரியார் திடலில் உருட்டுக்கட்டையால் அடிவாங்கிச் சுருண்டிருக்கிறது.

இந்து வானரப்படைகள் வெளியிட்டிருக்கும் வெளியீடுகளில் “எது இந்துக்கலாச்சாரம்” எனப் பார்த்தால் நெற்றியில் பொட்டுவைப்பதில் தொடங்கி கோலம் போடுவது, பூவைப்பது என அப்பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. ஒன்றை நன்றாகக் கவனியுங்கள். இந்தப் பட்டியலை முழுக்கப் பெண்களுக்காகவே ஒதுக்கி இருப்பது தெரியும். அப்பட்டியலில் தாலியும் இருக்கின்றது.

உண்மையில் தாலி புனிதமானதா? அடிமைச் சின்னமா? தமிழர்களின் கலாச்சாரமா? கற்பின் சின்னமா? என்பதைப் போன்ற பல கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டியுள்ளது.

இதனை அலசுவதற்கு முன், கால தேச வர்த்தமானத்தைக் கணக்கில் எடுத்தபடி, திருமணம் காலந்தோறும் மாறி வருவதையும் மனதில் கொள்வது நல்லது. உதாரணமாக, 1990-களின் கடைசி வரை, ‘தாலிகட்டிய பின்னர்தான் திருமண வரவேற்பு’ என்று இருந்த நிலை மாறி, தாலிகட்டு சடங்குக்கு முந்தைய நாளே பெண்ணும் மாப்பிள்ளையும் வீடியோ ஒளிவெளிச்சத்தில் நனைந்தபடி நிற்பது என்ற மாற்றம் நடந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் திருமணங்களோ பல நாட்களாக நடந்திருக்கின்றன.

தாலி இந்து கலாச்சாரமா?
“சங்க காலத்தில் தாலிகட்டு இல்லை, 11-ம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வழக்கம் அது”

இதில் தாலி கட்டுவது தமிழர் திருமணத்தில் எப்போது ஆரம்பித்தது என்பதைப் பற்றி ஒரு விவாதத்தை பேரா.ராசமாணிக்கனார் 1954-ல் நடத்தியுள்ளார். “சங்க காலத்தில் தாலிகட்டு இல்லை” என்பதும், 11-ம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வழக்கம் அது” என்பதும் அவரின் வாதம். பல்வேறு இலக்கியச் சான்றுகளை வைத்து அதனை நிறுவினார்.

ம.பொ.சி. இதனை மறுத்து, “சிலப்பதிகாரத்தில் வரும் மங்கல அணி என்பது தாலிதான், எனவே சிலப்பதிகார காலத்திலேயே தாலி இருந்தது” என்றும் அடித்துப் பேசிக் கொண்டிருந்தார். பெரும்பாலான தமிழறிஞர்கள் ராசமாணிக்கனாரின் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

விவாதம், “எப்போது தாலி நுழைந்தது” என்பதோடு முடிந்துபோனது. யாரும், “தாலி ஏன் திருமணத்தில் நுழைந்தது” என்பதை விளக்கவில்லை. இதனைப் பின்னர் பார்ப்போம். அதற்கு முன், திருமண முறைகளையும், தாலியைப் பற்றி பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளையும் பார்த்து விடுவோம்.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கருநாடகம் ஆகிய நான்கு மாநிலங்களில் வாழும் மக்களின் பண்பாடுகளுக்கிடையே பல ஒற்றுமைகள் இருப்பதால், இந்த ஆய்வுக்கு இம்மாநில மக்களிடையே நிலவிய, நிலவுகின்ற திருமண முறைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வோம்.

‘பொய்யும் வழுவும் தோன்றிய’ பின் ‘ஐயர் யாத்தனர் கரணமென்ப’ எனத் தொல்காப்பியர் உரைத்த திருமணம், பெரும்பான்மை மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. பார்ப்பனர், வேளாளர் போன்ற ஆதிக்கத்தின் உச்சியில் இருந்தவர்களுக்கே உரித்தது ‘விவாகம்’. மந்திரச்சடங்குகள் இடம்பெறும் விவாகத்தை சூத்திரத் தமிழர்களும், நாயர் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத மலையாளிகளும் செய்திட அனுமதி இல்லை.

தாலி நமது கலாச்சாரமா?
பார்ப்பனர், வேளாளர் போன்ற ஆதிக்கத்தின் உச்சியில் இருந்தவர்களுக்கே உரித்தது ‘விவாகம்’.

பின்னர் எந்த மணமுறை அனுமதிக்கப்பட்டது? “சம்பந்தம்” அனுமதிக்கப்பட்டது.

‘சம்பந்தம்’ என்பது என்னவென்றால் மணமகன் சார்பில் புதுச்சேலை ஒன்று தரப்படும். அதைப் பெண்வீட்டார் பெற்றுக்கொண்டு பெண் அணிந்து கொள்வது, இதுதான் சம்பந்தம். இதுதான் மொத்தமாகவே திருமணம்.

பல்வேறு சாதிகளிடையே இதற்குள் சில சில வேறுபாடுகள், உதாரணமாக மாப்பிள்ளையே பெண்ணிடம் சேலையை அளிப்பது போன்ற வழக்கங்கள், இருக்கலாம்.

இன்னமும் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ‘சம்பந்தி’ என்றே அழைக்கின்றனர். சம்பந்த திருமணம் மறைந்து விடாமல் நிச்சயதார்த்தம் எனப்பெயர் மாறி அதன் பின்னொட்டாக அய்யர் வைத்து சடங்கு செய்வதும் சென்ற நூற்றாண்டில் சேர்ந்து கொண்டது.

தற்போது நடப்பிலுள்ள பெரும்பாலான திருமண வகைகளில் தாலி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தாலியைப்பற்றிப் பொதுப்புத்தியில் சொல்லப்பட்டுள்ளவைகளைப் பார்ப்போம்.

1. தாலிகற்பின் அடையாளம்.

தாலி அகற்றும் நிகழ்ச்சியை கி.வீரமணி அறிவித்த நாளிலிருந்தே தினமணியில் தொடங்கி சரத்குமார் வரைக்கும் சவுண்ட் விடாத ஆட்களே இல்லை.

தாலி - நமது கலாச்சாரமா?
தாலி அகற்றும் நிகழ்ச்சியை கி.வீரமணி அறிவித்த நாளிலிருந்தே தினமணியில் தொடங்கி சரத்குமார் வரைக்கும் சவுண்ட் விடாத ஆட்களே இல்லை.

”தாலி இல்லைன்னா ‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்கிற கற்பு என்னாகுறது” என்றெல்லாம் பேசினார்கள். தாலி என்பது கற்பின் சின்னம் என்று மக்களும் நம்புகின்றனர். கற்புக்கும் தாலிக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. சான்றாகச் சில சாதிகளில் 100 ஆண்டுகளுக்கு முன் நடப்பில் இருந்த திருமண முறைகளைப் பார்ப்போம். (அவற்றில் சில மாற்றங்கள் வந்திருந்தபோதும் சில மரபுகள் தொடர்வதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.)

மலையாளக் கம்மாளர், கணக்கன், பணிக்கன், தோல்கொல்லன், மண்ணான் போன்ற சாதிகளில் வீட்டில் மூத்த அண்ணன் மட்டுமே ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுவான். அவனின் தம்பிகளும் அப்பெண்ணோடுதான் (அதாவது அண்ணியோடு) உறவு வைத்துக்கொண்டு வாழ்வார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளிடையே எவ்வித பேதமும் பார்ப்பதில்லை.

தாலி நமது கலாச்சாரமா?
ஆக கற்புக்கும் தாலிக்கும் தொடர்பு இல்லை. கற்பின் வரையறை கூட சாதியைப் பொறுத்து மாறுபடுகிறது.

அனுப்பர், கம்மா, காப்பிலியர், வல்லம்பன் ஆகிய சாதிகளில் உறவு விட்டுப்போகக் கூடாது (நிலம் போய் விடக் கூடாது என்பதன் வேற்றுவடிவம்) என்பதற்காக பருவ வயதை அடையாத சிறுவன் குமரிப்பெண்ணுக்குத் தாலி கட்ட வைக்கப்படுகிறான். அச்சிறுவன் வயதுக்கு வரும் வரை அவனுடைய சித்தப்பனோ, தந்தையோ, அல்லது நெருங்கிய உறவினரோ அப்பெண்ணோடு உறவுகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். அக்குழந்தைகள், தாலி கட்டிய சிறுவனுக்குப் பிறந்தவர்களாகக் கருதப்படுவர். (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் – 7 தொகுதிகள் – எட்கர் தர்ஸ்டன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வெளியீடு )

ஆக கற்புக்கும் தாலிக்கும் தொடர்பு இல்லை. கற்பின் வரையறை கூட சாதியைப் பொறுத்து மாறுபடுகிறது.

2. கட்டிய புருஷனின் உயிருக்கு ஆதாரம்தாலி என்பதைப் போன்ற புனிதபிம்பங்கள் தொடர்ச்சியாகப் போதிக்கப்பட்டு வருவதால் சமூகத்தில் பலரும் ‘தொட்டுத் தாலிகட்டிய புருஷனையே எதிர்த்துப் பேசலாமா?’ என்பதைப் போன்ற அடிமைச் சிந்தனைகளைப் பரப்பி வருகின்றனர். மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதை மட்டுமே திருமணம் என்பதான பாவனையை சினிமாவும் சீரியலும் முன்னிறுத்துகின்றன. ஆனால் பல சாதிகளின் திருமணச் சடங்கில் மாப்பிள்ளை தாலி கட்டுவது கூட இல்லை. யார் தாலி கட்டுவார்கள்?

  1. கோமட்டி, கப்பேரர், குருபர், யாடர் ஆகிய சாதிகளில் புரோகிதன் தாலியைக் கட்டுவான்.
  2. படகர் சாதியில் நான்கைந்து மனைவியை உடைய பெரிய மனிதர் வந்து பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவார்.
  3. காடர், காட்டுப்பட்டர், கோட்டை வெள்ளாளர், தொட்டியர், ஊராளி, வலையன் ஆகிய சாதிகளில் மணமகனின் உடன்பிறந்தவளோ, தாயோ தாலியைக் கட்டுவர்.
  4. புலையன் சாதியில் மணமகனும் அவன் தோழனும் சேர்ந்து பெண்ணுக்கு தாலி கட்டுவர்.
  5. உப்பரர் சாதியில் பெண்ணின் ஊரைச் சேர்ந்த சீர்க்காரி என்பார் தாலி கட்டுவாள்.
  6. நாட்டுக்கோட்டைச் செட்டிகளில் தாலியை மண நாளன்று மணமகளின் கோவிலைச் சேராத பெரியவர் ஒருவரும், பெண்ணின் நாத்தனாரும் கட்டுவர்.

ஆக தாலி கட்டும் முறை கூட சாதிக்கு சாதி மாறுபடுகிறது. புருஷனுக்கும் தாலிக்கும் சம்பந்தமும் இல்லை.

3. தாலிஇந்துக்களின் கலாச்சாரமா?

தாலி இந்து கலாச்சாரமா?
தாலி கட்டும் முறை கூட சாதிக்கு சாதி மாறுபடுகிறது. புருஷனுக்கும் தாலிக்கும் சம்பந்தமும் இல்லை.

தாலி கட்டும் வழக்கம், இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது அர்த்தமற்றது. வேண்டுமானால் தென்னிந்தியாவிலுள்ள பல சாதிகளிலும் பல மதப்பிரிவைப் பின்பற்றுவோரிடமும், சுருக்கமாகச் சொன்னால் திராவிட மக்களின் ஒரு பகுதியினர் தாலிகட்டலை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று கூறலாம்.

தக்ணி இசுலாமியர் பிரிவில் தாலிக்கு மாற்றாக கருப்புப் பாசிமணிமாலை அணிவிக்கின்றனர். தூதே குலர், மாப்ளா, மரக்காயர், கொடிக்கால் லெப்பை பிரிவு இசுலாமியர்களும் தாலி கட்டுகின்றனர். வெள்ளை யூதர்கள் தாலி கட்டுகின்றனர். மின்னுகெட்டு எனும் மின்னு (தாலி) கட்டும் வழக்கம் சிரியன் கத்தோலிக்க மதப் பிரிவினரிடம் உள்ளது.

தாலி கட்டுதல் என்பது தென்னிந்தியாவின் பரவலான பழக்கம் எனச் சொல்லலாமே தவிர இந்துக்களின் பழக்கம் என்பது பச்சைப் பொய்.

4. தாலிஎல்லா இந்துக்களும் கட்டுகின்றனரா?

திருமணத்தன்று தாலி கட்டுவது என்பது 2 நூற்றாண்டுகளாகத்தான் வழக்கத்துக்கு வந்துள்ளது. பல சாதிகளில் பெண் வயதுக்கு வரும் முன்னரே பெண் வீட்டாரோ, அல்லது உறவினரின் மகன்,மகள் இவர்களை வைத்தோ கட்டுத்தாலி கட்டுவது என்பது வழக்கம். தாலி என்பதன் பொருள் தொங்குதல் என்பதே. காத்து கருப்பு அண்டாமல் இருக்கட்டும் என நரிப்பல் போன்றவற்றை சிறுவர் கழுத்திலோ இடையிலோ கட்டித் தொங்கவிடுவது போன்ற வழக்கம்தான் இது. கோலாயன் சாதியில் தந்தையே தன் மகளின் கழுத்தில் கெட்டுத்தாலியைக் கட்டுவார்.

தாலி நமது கலாச்சாரமா?
திருமணத்தன்று தாலி கட்டுவது என்பது 2 நூற்றாண்டுகளாகத்தான் வழக்கத்துக்கு வந்துள்ளது.

இவ்வாறு கட்டுத்தாலி கட்டும் மரபினர் திருமணத்தின்போது தாலி கட்டுவதில்லை. அதற்கு மாற்றான சடங்குகளைச் செய்த உடன் திருமணம் முடிந்துவிடுகின்றது. கீழ்க்கண்ட திருமண முறைகளை 100 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியர்கள் பின்பற்றியுள்ளனர்.

  1. விரும்பிய பெண்ணின் சேலையைக் கிழித்து அவளின் கழுத்தைச் சுற்றிக் கட்டிவிட்டு அவள் ஓடாமல் இருந்தால் அவனுக்கு சொந்தம் எனக் கைக்கோளர்களும், மணமக்களின் கைகளை அல்லது சில இடங்களில் சிறுவிரல்களை இணைத்து வைப்பது சில சாதிகளிலும், மணமகளின் கழுத்தில் குதிரையின் மயிர் ஒன்றினைக் கட்டி விடுவது பிரான்மலைக் கள்ளரிடத்திலும் வழக்கத்தில் இருந்தன.
  1. இருவருக்கும் பால்,சர்க்கரை,பழம் கலந்த இனிப்பு வழங்கப்படுதல்தான் பணிக்கரின் திருமணம்.
  1. இருவரின் கைகளை ஒன்றாகக் கோர்த்து அந்தக்கைகளின் மீது தண்ணீரை வார்ப்பர், கெலசியர்.
  1. மணமக்கள் தலையில் அரிசி தூவப்படுதல்தான் கொரகர் திருமணத்தில் முக்கிய சடங்கு.
  1. கோண்ட் சாதியில் பெண்ணின் இரு கரங்களிலும் 20 முதல் 30 பவுண்ட் எடையுள்ள 2 பித்தளை வளையல்கள் அணிவிக்கப்படும். திருமணம் முடிவடையும்போது வளையல்கள் கழற்றப்படும்.
  1. லம்பாடிகளில் கன்னிகள் மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வளையல் அணிவதும், மணமானோர் முழங்கை முதல் தோள் வரை வளையல் அணிவதும் திருமண வழக்கம்.
  1. தோம்பர்களில் சாதிக்காய், அரிசி, செப்பு நாணயங்கள் முடியப்பட்ட துணி மணமக்கள் மீது போர்த்தப்படும்; இருவரின் சிறுவிரல்கள் இணைக்கப்பட்டு வீட்டுக்குள் நுழைவர்.
  1. கொல்லிமலை மலையாளி சாதியில் மணமகன் மரத்தாலான சீப்பை செதுக்கி வைத்திருப்பான். அதைப் பெண்ணின் கூந்தலில் செருகுவதுதான் திருமணம்.
  1. பைராகி சாதிக்கு திருமணமே கிடையாது. விரும்பியவர்கள் சேர்ந்து வாழலாம். காட்டுக்குறும்பரில் வெற்றிலை பாக்கு மாற்றினாலே அதுதான் திருமணம். இருளரிடத்தில் கறிவிருந்து மட்டுமே திருமணம்.
  1. முதுவர் சாதியில் திருமணம் செய்ய உள்ள இருவரையும் குகைக்கு அனுப்பி சிலகாலம் இருக்க செய்வர்.. அதன்பின் இருவருக்கும் பிடித்திருப்பின் திருமணம். இல்லாவிட்டால் வேறு ஜோடியைத் தேடவேண்டும்.

இவை சில உதாரணங்கள் மட்டுமே. தாலி இல்லாத திருமண முறைகளைப் பின்பற்றும் சாதிகளின் எண்ணிக்கை மட்டும் 70 க்கும் மேற்பட்டதாகும்.

தாலியின் வரலாறு என்ன?

தாலி நமது கலாச்சாரமா?
பொட்டு கட்டுதல் எனும் சடங்கின் மூலம் கோவிலுக்கு சேவை செய்ய பெண்களை நேர்ந்துவிடும் சடங்கில் தேவதாசிப் பெண்டிருக்கு தாலி கட்டப்பட்டது.

“தென்னிந்தியாவில் ஆரம்பம் முதலே தாலி திருமணத்தின் முக்கியமான அம்சமாக இருந்தது கிடையாது. இவ்வழக்கம் முதன்முதலில் 11-ம் நூற்றாண்டில் முதலாம் ராசராசன் காலத்தில் இருந்து ஆரம்பித்தது” என்று கூறுகிறார், வரலாற்று அறிஞர் கே.கே.பிள்ளை.

பொட்டு கட்டுதல் எனும் சடங்கின் மூலம் கோவிலுக்கு சேவை செய்ய பெண்களை நேர்ந்துவிடும் சடங்கில் தேவதாசிப் பெண்டிருக்கு தாலி கட்டப்பட்டது. கோவில் நிலமெல்லாம் பார்ப்பன, வேளாளர்கள் அனுபவித்த காலத்தில் தேவதாசிகள் பொட்டு (பொட்டு – தாலி) கட்டியபோது அவர்களுக்கு மானியமாக நிலம் எழுதிவைக்கப்பட்டது. நிலத்தோடு தொடர்புக்குள்ளானது, பொட்டு எனும் தாலி.

தமிழ்ச் சமூகத்தின் இயக்கத்தில் ஒரு விசயத்தை உற்று நோக்கினால் பெண்களுக்கு விதிக்கப்பட்ட பல விசயங்கள் முதலில் தேவடியார்களிடத்தில் இருந்தே ஆரம்பமாவது தெரிய வரும்.

தாலியை முதலில் அணிந்தது அவர்களே..

அதே போல முகத்தில் மஞ்சள் பூசுவது அவர்களுக்கு மட்டுமான ஒன்றாக இருந்த்து.

முகத்தில் பவுடர் பூசுவதும் அலங்கரித்துக்கொள்வதும் அவர்களுக்கானதாக இருந்தது.

சமூகத்தின் அசைவியக்கத்தில் மெல்ல அது இல்ல மகளிரையும் வந்தடைந்துள்ளது. சான்றாக முகத்துக்குப் பூசும் மஞ்சளை விரலி மஞ்சள் என்பர். விரலி எனப்படுவது பொதுமகளிரைக் குறிக்கும்.

சமூகத்தில் தாலி வழக்கத்தில் இருந்திருக்குமேயானால் கம்பரின் ராமாயணத்தில் ராமன் சீதைக்கு தாலி கட்டி இருப்பான். ஆனால் அவன் கட்டவில்லையே!

கல்வெட்டு, செப்பேடுகளை உற்று நோக்கினால் விஜய நகரப் பேரரசுக்காலத்தின்போது மறவர் சீமைகளை ஆதிக்கம் புரிந்த சேதுபதிகளுக்கு ‘தாலிக்கு வேலி’ என்ற பட்டம் வருவது தெரியும். அதற்கு முன்பு இருந்த சோழர்கள் யாருக்கும் இப்பட்டம் இல்லை.

சோழர்களின் காலத்தில் இருந்துதான் சாதிகள் இறுக்கமாகி அவற்றுக்கிடையே வலங்கை, இடங்கை பூசல்கள் ஆரம்பித்து கிழக்கிந்தியக் கம்பெனியின் காலம் வரை அவை தொடர்ந்தன. பார்ப்பனர், வேளாளர்கள் தவிர்த்த ஏனைய விவசாயம் சார்ந்த சாதிகள் எல்லாம் வலங்கை எனவும், வணிகம், கைவினைத்தொழிலில் ஈடுபட்ட சாதிகள் எல்லாம் இடங்கை எனவும் பிரிந்தன.

தாலி நமது கலாச்சாரமா?
தாலி கட்டும் வழக்கமுடைய பின்வரும் சாதிகள், விவசாயத்தில் நில உடைமையாளராகவும், விவசாயத் தொழிலாளராகவும் இருந்துள்ளனர்.

வலங்கை இடங்கைகளின் தோற்றத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டிருப்பினும், மறைந்த மார்க்சிய லெனினியப் போராளி அனுராதா காண்டி சொல்லியிருக்கும் காரணம் பொருத்தமானதாகும். அவர், “11-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட உழைப்புப்பிரிவினை கைவினைஞர்கள், வணிகர்களை நகரங்களை நோக்கி நகர்த்தி இடங்கைகளாகவும், விவசாயம் நில உடைமை சார்ந்த ஆதிக்க சாதிகளை வலங்கைகளாகவும் பிரித்தன, ஒரு நூற்றாண்டுக்குப் பின் இதே உழைப்புப் பிரிவினை வட இந்தியாவில் ஏற்பட்டு கைவினைஞர்கள், வணிகர்கள் எல்லாம் இசுலாமுக்கு மாறியதும் ஏற்பட்டன” என்று கூறியுள்ளார்.

இடங்கைச் சாதிகள் பொருளாதார ரீதியில் கை ஓங்கும்போது சில புதிய பழக்கங்களை, உதாரணமாக தங்களது திருமணத்தில் பல்லக்கு வைத்தல், தோரணம் கட்டுதல் ஆகியவற்றை கொண்டுவர முற்படும்போது வலங்கையினர் தாக்கிக் கலகம் செய்வதும், இவர்கள் திருப்பித் தாக்குவதும் பல நூற்றாண்டுகளாக நடந்துள்ளன. இந்த சர்ச்சைகள் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை கவர்னரிடம் ஒரு முறை வழக்காக வந்துள்ளது. புதுச்சேரி கவர்னரிடமும் ஒரு பிராது வந்துள்ளது. தஞ்சாவூரை ஆண்ட சரபோஜியின் மகன் சிவாஜி காலத்தில் ஒரு சர்ச்சை பைசல் செய்யப்பட்டுள்ளது. சிவாஜி காலத்திய பஞ்சாயத்திலும் திருமணத்தில் என்னென்ன உரிமைகள் உள்ளன என்பது பேசித் தீர்க்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து : “பேரி செட்டி கலியாணத்துக்கு பந்தலுக்கு வெள்ளை செவப்பு கலந்து கட்டி கொள்ளுகிறதும் அல்லாமல் வாழை கூந்தல் நெட்டிமாலை இதுகளும் கட்டி ஆனை அறசாணி வைத்துகொம்பு..தப்பு மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் அபேக்சிச்ச தூயது தரித்துக்கொண்டு கொம்பு தப்பு சங்கீதமேளம் யிதுகளுடன் கல்யாணம் செயிது ஊர்கோலத்துக்கு செகப்பு துதி நா பல்லாக்கு கட்டி இதுகளில் உள்கார்ந்து செகப்பு பாவாடை பிடிச்சு கொண்டு தீவட்டி மத்தாப்பு வாணவித்தையுடன் என்று சாதிவாரியாக திருமண விழாவில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்துப் பேசப்படுகின்றன. ஆனால் தாலி பற்றி இந்தப் பஞ்சாயத்து ஏதும் பேசவில்லை. தாலிக்குப் பெரிதாக முக்கியத்துவம் ஏதும் இல்லை அப்போது.

எந்தெந்த சாதிகளுக்கெல்லாம் தாலி கட்டுதல் வழக்கத்தில் இருந்தன என்பதற்கு இப்போது நமக்குக் கிடைக்கும் ஆவணம், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் எட்கர் தர்ஸ்டன் தொகுத்த ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ – 7 தொகுதிகள் ஆகும். அத்தொகுப்பில் ஒவ்வொரு சாதியிலும் திருமண முறை எவ்வாறு இருந்தன என்பதை ஆவணப்படுத்தியுள்ளார், தர்ஸ்டன்.

இச்சாதிகளை தாலி கட்டுவோர், கட்டாதோர் எனப் பட்டியலிட்டு அச்சாதிகளின் குலத்தொழிலை ஆராயும்போது ஓருண்மை புலப்படுகின்றது.

தாலி கட்டும் வழக்கமுடைய பின்வரும் சாதிகள், விவசாயத்தில் நில உடைமையாளராகவும், விவசாயத் தொழிலாளராகவும் இருந்துள்ளனர்.

தேவதாசி, உடையார், கொடிக்கால் லெப்பை முஸ்லிம், மாப்ளா, கம்மா, ஒக்கிலியர், பள்ளர், அகமுடையோர், பைதி, தொரெயர், கொங்கு வேளாளர், கன்னடியர்

தாலி கட்டாத பின்வரும் சாதிகள் வேட்டை, வணிகம், கைவினைத் தொழில் போன்றவற்றைத்தான் செய்து வந்தனரே தவிர விவசாயம் சார்ந்த சாதியாக இருக்கவில்லை.

கைக்கோளர், மலையாளக் கம்மாளர், பணிக்கன், ஒட்டர், கெலசியர், கோத்தர் , குறிச்சன், லம்பாடியர், செஞ்சு, செறுமான், சித்தூர் வட்ட ஈழவர்கள், கூடகுலம், தோல்கொல்லன், பளியன்

இந்த ஆவணத்திலிருந்து திருமணத்தில் தாலி கட்டும் உரிமைக்கும், விவசாயத்துக்கும் தொடர்பு உள்ளது என்பதும் அது வலங்கை சாதியின் வழக்கம் என்பதும் புலனாகின்றது.

இவற்றில் சில விதிவிலக்குகளும் உள்ளன. அவற்றுக்குப் பிரத்யேகக் காரணங்கள் உள்ளன. இடங்கை வலங்கைப் பட்டியல் பிறபகுதிகளிலிருந்து குடியேற்றங்கள் இப்பகுதிக்குள் வந்தபோது அச்சாதிகளை எப்பட்டியலில் வைப்பது என்ற சர்ச்சைகள் தலை தூக்கியதுண்டு. புதியதாக வந்தவர்களை இடங்கையில் சேர்ப்போம் எனச்செய்தனர். ஆனால் தாங்கள் வலங்கையர்தான் என்று நிறுவும் முயற்சியில் பல புராணங்களை எழுதி அவற்றை நிலை நாட்டிட முயன்றனர் புதியவர்கள். அதனை ஆதிக்க சாதிகள் ஏற்காமல் கலவரம் செய்துள்ளனர்.

உதாரணம் சிவகாசி கலவரம். ஈழத்திலிருந்து தென்னகத்தில் குடியேறிய சாதிகளில் ஒன்று சாணார் சாதி. அச்சாதியினர் இடங்கையில் வைக்கப்பட்டு கடுமையாக ஒடுக்கப்பட்டனர். ஓலை முடியப்பட்ட தாலியே அவர்களின் வழக்கம். சிறுதெய்வ வழிபாடே பிரதானம். ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில் பருத்தி ஏற்றுமதியில் அவர்கள் இறங்கியபின் பொருளாதார வலிமையை அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக, பெருங்கோவில்கள் கட்டுவதும் அவற்றுக்கு பார்ப்பன பூசாரிகளை நியமிப்பதும் தொடங்கியது. பழைய வலங்கை இடங்கை பூசல் தலைதூக்க, மறவர்கள் ஏனைய வலங்கை சாதிகளைத் திரட்டி வந்து சிவகாசி சாணார்கள் மீது தாக்குதல் நடத்தியதே 1899-ல் நடந்த சிவகாசிக் கலகம்.

வலங்கை சாதிக்கு உரித்தானதாக இருந்த தாலி அனைவருக்கும் பொதுவானது எவ்வாறு?

கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவைக் கைப்பற்றியபின்னர்தான் இந்த நாட்டுக்கு இந்தியா என்றும் இங்குள்ள மக்களுக்கு இந்து என்றும் நாமகரணம் சூட்டப்பட்டது. இந்து சட்டத் தொகுப்பு எழுதப்பட்டது. மையப்படுத்தப்பட்ட அரசை உருவாக்கினர். இதையொட்டி உருவாகிக் கொண்டிருந்த இந்து தேசியத்துக்குள் பல்வேறு குழுக்களையும் பழக்க வழக்கங்களையும் பார்ப்பனியம் உட்செரித்து ‘எல்லாமே இந்துக் கலாச்சாரம்தான்’ எனச் சாதித்தது.

புதிய வழிபாடுகள், புதுப்பழக்கங்கள் எல்லாம் புகுந்து திருமண முறையில் இருந்து கோவில் வழிபாடுகள் வரை பல கலாச்சார மாற்றங்கள் நடந்தன. அவற்றில் ஒன்றுதான் தாலி பொதுக்கலாச்சாரமாக மாற்றப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு. வணிக, கைவினை சாதிகளிலும் தாலி 19-ம் நூற்றாண்டில் புகத் தொடங்கியது. இதனால்தான் இன்னமும் பா.ஜ.க கோரும் பொது சிவில் சட்டத்தைப் போல ஒரே வடிவிலான தாலி என்பது இந்துக்கள் அனைவருக்கும் இல்லை. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தாலி உள்ளது. (தமிழ் சினிமாவில் குளோஸ் அப்பில் காட்டப்படும் தாலி ஆந்திர மாநில சாதிகளில் ஒன்றான ரெட்டி சாதித் தாலியை ஒத்திருக்கிறது)

தாலி என்பது மாப்ளா முஸ்லீமிடமும், சிரியன் கிறித்துவரிடமும், ஏனைய இந்து சாதிகளிடமும் காணக் கிடைக்கும் தென்னிந்திய வழக்கம் என்பதும், இது நில உடைமையின் அடையாளம் என்பதும் தெரிய வருகின்றது.

இதனை வேறு வழியிலும் புரிந்து கொள்ளலாம். தென்னிந்தியாவிலுள்ள பெரும்பாலான சாதிகள் ஒரு காலத்தில் தாய்வழி சமூகமாக இருந்து மெல்ல மெல்ல தந்தைவழிக்கு மாறி வந்துள்ளன. இம்மாற்றமும் சாதிக்கு சாதி வேறுபடக்கூடியது. திருமணத்தில் தாய்மாமனுக்குத் தரப்படும் முக்கியத்துவமும், ‘முதல் பிரசவம் தாய் வீட்டில்தான்’ என்பதும் தாய்வழி சமுதாயத்தின் மிச்ச சொச்சங்களாகும். ஆனால் சில சமூகங்கள் இறுக்கமான தந்தை வழி சமூகங்களாகி விட்டன. அதற்கு சான்று அச்சாதிகளில் நடப்பில் இருக்கும் மதினி மண முறையாகும்.

அஃதென்னவென்றால் ஒரு வீட்டில் சகோதரர்கள் பலரிருக்க, மூத்தவர் இறந்து போனால் அவரின் மனைவியை (மதினியை) கொழுந்தன் மறுமணம் செய்தாக வேண்டும். அதாவது சொத்துடைமை தந்தைவழி இரத்த வாரிசுகள் வழியே செல்வதை இம்மணம் உறுதிப்படுத்துகின்றது. இங்கே சொத்தின் அடையாளமான தாலி கணவனின் மரணத்தின் பிறகும் பெண்ணின் கழுத்தில் ஏறி, சொத்தைக் காப்பாற்றுகிறது. சொத்துடைமையின் அடையாளமே தாலி.

இதில் இந்துக் கலாச்சாரம், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என ‘ஒரு தாலியும் கிடையாது’ (கரிசல் வட்டார வழக்கில் ‘ஒரு இழவும் கிடையாது’ என்பதை இவ்வாறும் குறிப்பிடுவர்).

இப்புரிதலோடு செல்லும்போது ஒரு கேள்வி எழுகிறது. பெண்ணடிமைச் சின்னமல்லவா, தாலி? ஆம், நிச்சயமாக அது அப்படித்தான். நிலவுடைமைச் சின்னத்தில் ஜனநாயகமா இருக்க முடியும்? அச்சமூகம் பெண்ணையே சொத்தாகத்தான் கருதுகின்றது எனும்போது, சொத்துடைமையை ஒழிக்கும் இலட்சியத்தில் உள்ள நாம் தாலியை எவ்வாறு ஆதரிக்க முடியும்?

இன்னொரு வரலாற்றுக் கடமையாகவும் தாலி அகற்றலைக் காணவேண்டும்.

ராசராசன் ஆரம்பித்து வைத்ததுதான் தேவதாசி முறை. அவன் காலத்தில் இருந்துதான் தாலியும் ஆரம்பிக்கிறது. சென்ற நூற்றாண்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் செய்த தீவிரமான பிரச்சாரத்தாலும் அரசின் சட்டத்தாலும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு விட்டது. ராசராசன் காலத்தில் இருந்து இன்னமும் ஒழிக்கப்படாமல் நீடிக்கிறது, தாலி. அதை ‘அகற்றி’ ஒழித்திடும் கடமையும் நமக்கு உள்ளது.

ஆதாரங்கள்:

  1. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் – 7 தொகுதிகள் – எட்கர் தர்ஸ்டன்
  2. மராட்டிய மன்னர்களின் மோடி ஆவணங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு
  3. ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்புகள்
  4. தமிழர் மானுடவியல் – பக்தவத்சல பாரதி

– கற்பக விநாயகம், வசந்தன்.