மூடு டாஸ்மாக்கை ! – கோமளவல்லியை அச்சுறுத்தும் கலகக்குரல் !
அ.தி.மு.க. பா.ஜ.க. கும்பலின் அவதூறுகளுக்குப் பதில் அளித்து தோழர் மருதையன் அளித்துள்ள காணொளி விளக்கத்தின் சுருக்கம்.
சிவகங்கை பாலியல் வன்கொடுமை: என்கவுண்டர் எப்போது ?
தந்தை, அண்ணன், போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் வழக்கு மெத்தனமாக நடத்தப்படுகிறது.
2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.
வினவு தளம் மீது அடக்குமுறை – அஞ்சமாட்டோம் !
ஆர்.எஸ்.எஸ் – அ.தி.மு.க கும்பல்தான் வினவு தளத்தின்மீது கடும் வெறுப்பும் பகையும் கொண்டிருக்கின்றனர். வினவு இணையதளத்தின் குரல்வளையை நெறிப்பதற்கு அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
குற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு !
குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொறுப்பில் உள்ள போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளும், ஆட்சியாளர்களும் குற்றவாளிகளின் காவலர்களாகச் செயல்படுகிறார்கள்.
ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்
போலீசின் கொட்டடிக் கொலைக்கு எதிராக நடந்த முசுலீம்களின் போராட்டத்தை, இந்துக்களுக்கு எதிரானதாக, லவ்-ஜிகாத்தாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் திசை திருப்புவதற்கு பத்திரிகைகளும் சென்னை உயர்நீதி மன்றமும் துணை போயின.
அவசரநிலை ஆட்சிக்குத் தயாரிப்பு
ஓட்டுக்கட்சிகளின் அரசியல் மேலும் சீரழிந்து போயுள்ளதோடு, நீண்டகாலமாகவே நெருக்கடியையும் தேக்க நிலையையும் எட்டிவிட்டது.
எல்லா அயோக்கியரையும் விஞ்சினார் தினமணி வைத்தி
ஒரு குடிகாரனின் காலைத்தொட்டு குடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்ட அறுபது வயது சசிபொருமாளையே வன்முறையாளர் என்று வாய்கூசாமல் கூறும் வைத்தியை விட ஒரு வன்முறையாளன் உலகில் உண்டா?
அமெரிக்க ஏவுகணைகள் = அமெரிக்க பத்திரிகைகள்
அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்களால் சிதறுபட்ட அப்பாவி மக்களின் இரத்தத் துளிகள் தாம் இம்முதலாளிகளின் பத்திரிகைகளின் “எழுத்து மையாகவே” மாறுகின்றன.
மகாவிஷ்ணு, செல்ஃபி, ஜெயா பூஜை, ரூ.37 லட்ச ரூபாய் விடுதி
கர்நாடக அரசின் முக்கிய சட்ட நிபுணர்கள் தயாரித்த மனுவில் இத்தனை குறைபாடுகளா, என்று ஆசார்யா அப்டியே ஷா…க் ஆயிட்டாராம். இந்த பயங்கரமான சிக்கல் காரணமாக வழக்கு விசாரணை தாமதமாகுமாம்.
எல்லாம் ‘பத்து’ மயம், ஊழலின் உரைகல் தினமலர்
பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது போல, நான் மட்டுமா திருடனா, நீங்களெல்லாம் திருடவே மாட்டீர்களா என்று நேரடியாக எழுதாமல் இப்படி எழுதினால் தன்னையும் நீதிவானாக கருத நான்கு பேர் இல்லாமலா போவார்கள் என்று நினைக்கிறது ராமசுப்பையர் கம்பெனி.
பாக் + பா.ஜ.க கூட்டு, தினமணி புரட்டு, வறுமை
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் 03.07.2015 அன்று வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்….
நெஸ்லே : சோற்றில் விசம் வைத்தால் இதுதான் தண்டனையா ?
நமது பிள்ளைகள் மீது உண்மையான அக்கறை இருக்கிறதென்றால், அவர்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைக்கப் போராடுவதுதானே நியாயம்?
காக்கா முட்டை : விகடனின் விமரிசனத் தரம் என்ன?
அது ஏன் உலகத் தரம், எதனால் வரவேற்பு என்று கேட்டால் அது அரட்டை அரங்கின் தரத்தைத் தாண்டாது. விகடன் கருதும் தரம், உலகத்தின் அளவீடு என்ன?
இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?
ஒரு பாண்டேயிச மாணவனுக்கு இந்துத்துவ சிந்தனை ஜட்டி போன்றதென்றால் ஆளும்வர்க்க ஆதரவு வேட்டி போன்றது. வெறும் ஜட்டியோடு நீங்கள் ஒருக்காலும் பணியாற்ற முடியாது. ஆகவே தராதரம் பார்த்து வாலைக்காட்டவோ அல்லது நூலைக் காட்டவோ செய்யலாம்.
























