Wednesday, July 1, 2026

உத்தரப்பிரதேசம்: 18 பேரின் கண் பார்வையைப் பறித்த தனியார் மருத்துவமனை!

0
கண் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய கருவிகளில் உள்ள நுண்ணுயிரிகளை முற்றிலுமாக நீக்காமல் அலட்சியமான முறையில் பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் 18 பேர் கண்களையும் பார்வையையும் இழந்து கடும் வேதனையிலும் கடும் பொருளாதார நெருக்கடியிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

விதைகள் மசோதா: விதை, கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம் கல்லறையில்!

விதை-விவசாயம்-உணவு என்ற சங்கலியை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் பிடியில் கொண்டுசெல்வதற்கான அடித்தளமாகவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்கொண்டுள்ள பேரபாயமாக முன்னெழுந்துள்ளது.

விவசாயிக்கும் விதைக்குமான உறவை முறித்துவைக்கும் வரைவு விதைகள் மசோதா 2025

ஒவ்வொரு பகுதியின் மண் வளம், நீர் வளம், காற்று போன்ற சூழலியல் காரணிகளுக்குத் தகுந்தாற்போல் தாக்குப்பிடித்து வளரும் வகையில் உள்ள பாரம்பரிய விதைகளைத் தரமற்றவை என்று கூறி அதை நிராகரித்து ஒரே மாதிரியான விதை வடிவங்களை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வருகிறது இந்த சட்டம்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்: வஞ்சிக்கப்படும் தலித் மாணவர்கள்!

0
மாணவர்களின் சாதியை அடையாளப்படுத்தி பாகுபாட்டோடு நடத்தும் வகையில், வகுப்பறைகளில் வருகைப் பதிவேட்டில் பெயர் இல்லாத தலித் மாணவர்களை எழுந்து நிற்க வைப்பது, தினமும் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று முறையிட வைப்பது என பார்ப்பனிய கொழுப்புடனும், சாதிய வன்மத்துடனும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை நடத்தி வருகிறது.

மேற்குவங்கம்: பூட்டிய உணவுக்கிடங்கில் கருகிய தொழிலாளர்கள்

0
தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ் உள்பட இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனை நடத்தி தொழிலாளர்களின் பாதுகாப்பு  உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

பிப். 12: மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான நிரந்தர வேலை, பணப் பயன்கள், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை,பேரம் பேசும் உரிமை இப்படி தொழிலாளி வர்க்கம் இது நாள் வரை போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் பாசிச மோடி அரசு பறித்துள்ளது.

தொழிலாளர்களைப் பழிவாங்கும் சாம்சங் நிறுவனம்! வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு!

0
தென்கொரியத் துணை தூதரகத்தில் மனு அளிக்கச் சென்ற சங்க நிர்வாகிகளைக் கைது செய்தது மட்டுமின்றி, தொழிற்சங்கத்தின் 27 நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்த சாம்சங் நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கிறது தி.மு.க அரசு.

பிப். 12: அமெரிக்க-இந்திய ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்!

0
இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து SKM, AIKS உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் பிப்ரவரி 12-ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் பகுதியாக, கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.

கிக் தொழிலாளர்களின் அவல வாழ்வு: கணக்கெடுப்பு எடுத்துக் காட்டும் உண்மைகள்

கிக் தொழிலாளர்கள் 25 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கின்றனர். எனினும் அவர்கள் பெறுகின்ற ஊதியமோ மிகச் சொற்பம். 62 சதவிகித தொழிலாளர்கள் பெரும் விபத்துகளிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கின்றனர். 27 சதவிகித தொழிலாளர்கள் வேலை நேரத்தில் சாலை விபத்துகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்

அரசு மருத்துவமனைகளில் கட்டணம்: மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசின் பாசிசம்

0
உழைக்கும் ஏழை மக்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்குக் கட்டணம் விதித்து அவர்களின் வயிற்றில் அடித்துள்ள இந்த அரசு, எம்.எல்.ஏ., எம்.பி-க்கள், அரசு ஊழியர்கள், நீதிபதிகள் போன்ற உயர் வகுப்பினருக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்! மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்!

‘விஸ்வகுரு’, ‘தூய பிரம்மச்சாரி’ என இதுவரை கட்டமைத்துவந்த தனது பிம்பம் நொறுங்கிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம்; அமெரிக்காவால் சூறையாடப்பட இருக்கும் வெனிசுலா எண்ணெய் அம்பானியின் இலாபத்திற்குத் தரப்போகும் உத்தரவாதம் மறுபக்கம் என ‘சமயோசிதமாக’ சிந்தித்த மோடி, உடனடியாகச் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை.

சமத்துவக் கல்விக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தோழர் ச.சீ.ராஜகோபாலனுக்கு அஞ்சலி!

0
தோழர் ச.சீ.ராஜகோபாலன் எமது அமைப்பின் போராட்டக்களங்களோடு மிக நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தவர். 2010-களில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC) மற்றும் பு.மா.இ.மு நடத்திய பல்வேறு அரங்கக் கூட்டங்களில் பங்கேற்று கல்வி தனியார்மயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

ஊடகக் குழுவினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.!

0
நியூஸ் தமிழ் செய்திக் குழுவை மிரட்டி காரில் கடத்திக் கொண்டுபோய் குவாரி அறையில் அடைத்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அந்த கும்பலிடமிருந்து தப்பித்த சமூக ஆர்வலர் சுடலைக்கன்னு செய்திக் குழு தாக்கப்பட்டது குறித்து தெரிவித்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!

2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகத்தில் சாதிவெறி – நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு | தோழர் மருது

பல்கலைக்கழகத்தில் சாதிவெறி - நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு | தோழர் மருது https://youtu.be/7PgpN4-2Rks காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்