Wednesday, July 1, 2026

“எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”: மலக்குழி மரணங்களுக்கு எதிரான போராட்டம்

0
புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் கூடிய தூய்மைப் பணியாளர்கள், “எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”, “சாக்கடைகளிலும், மலக்குழிகளிலும் ஏற்படுகின்ற மரணங்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்”, “பிரதமரே, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்” போன்ற முழக்கங்களை முன்வைத்துப் போராடினர்.

சிலிண்டர் தட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

0
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு கிடைக்காமலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்பப்பட்டு வருகின்றனர். ஆனால் பாசிச மோடி அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை மறைத்து வருகிறது; தேவையான கையிருப்பு உள்ளதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மக்களைப் பட்டினி போட்டும் வறுமைக்குள் தள்ளியும் வருகிறது.

யா.ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்து! | தெருமுனைக் கூட்டம்

நாள்: 06.04.2026 திங்கள் | நேரம்: மாலை 5 மணி | இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் சாலை

பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம், 2025: மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாசிச நடவடிக்கை!

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நிதிச்சுமையைக் காரணம் காட்டிப் பொறுப்பைத் தட்டிக்கழித்த மோடி அரசு, தற்போது சட்டத்தை வளைத்து நீதிமன்றத்தை மக்கள் நாடுவதற்கான வழியை அடைத்துள்ளது.இந்தப் புதிய சட்டத்திருத்தம் ‘நிவாரணம்’ என்பதை மக்களின் அடிப்படை “உரிமை” என்ற உயர்ந்த இடத்திலிருந்து, “பிச்சை” என்ற இழிநிலைக்குக் கீழிறக்குகிறது.

‘டிஜிட்டல் இந்தியா’வில் தொடரும் மலக்குழி மரணங்கள்!

0
2017 ஆம் ஆண்டு முதல் ஒன்பது ஆண்டுகளில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளில் சுத்தம் செய்யும் போது 622 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 25 பேரின் குடும்பங்களுக்கு பாதி இழப்பீடும், 52 பேரின் குடும்பங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை.

கிக் தொழிலாளர்களின் போராட்டம்: அல்காரிதச் சுரண்டலுக்கு எதிரான முதல் வெற்றி!

உழைப்பு, முதலீடு, விபத்து அபாயம் என அனைத்தும் அடித்தளத்திலிருக்கும் தொழிலாளியுடையது; ஆனால் லாபம் மட்டும் எவ்விதப் பொறுப்பும் ஏற்காத உச்சத்திலிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கானது. இதுதான் “அல்காரித முதலாளித்துவத்தின்” அப்பட்டமான சுரண்டல் வடிவம்!

தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்!

இச்சட்டத் தொகுப்புகள் கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள் மற்றும் போலீசு கும்பலின் சர்வாதிகாரத்தின் கீழ் ஒரு காட்டாட்சியை நிறுவி தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாய் மாற்றுகின்றன.

மக்கள் எதிர்ப்பை மீறி கல்லாங்காடு சிப்காட்டிற்கு சாலை அமைக்கும் திட்டம்

மக்களின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையால், இப்பகுதி  மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, இம்மக்கள் சொந்த நாட்டின் அகதிகளாக மாற்றப்படுவர்.

பறிக்கப்படும் பெண் கல்வியும் சாவித்ரிபாய் பூலேவின் இன்றைய தேவையும்

0
சாவித்ரிபாய் பூலே இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கி ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மாணவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை அணுக முடியாத பிரச்சினை என்பது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் இந்த அவலநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஓசூர் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்கள்!

ஏற்கெனவே, பல கார்ப்பரேட் திட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இழந்து தற்போது மீதமுள்ள 30 சதவிகித நிலங்களில் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், ஓசூர் சுற்றுவட்ட பகுதியில் சர்வதேச விமான நிலையம் மற்றும் அறிவுசார் வழித்தடம் அமைக்கப்பட்டால் மீதமுள்ள விளைநிலங்களையும் இழக்க நேரிடும்.

மார்ச் 8: ஆட்சியிலும் அதிகாரத்திலும் பெண்களுக்குச் சம உரிமை எப்போது?

கடந்த 11 ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் போராடிப் பெற்ற சிறு உரிமைகளும் நடைமுறையில் பறிக்கப்பட்டு வருகின்றன. பெண்களை வீட்டிலேயே இருத்துவதற்கான கருவியாக பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் போன்றவை பாசிச கும்பலால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திரா: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கருகிய 21 உயிர்கள்!

0
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போன்றதொரு விபத்து ஏற்பட்டபோது, இரண்டு நபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. எனவே, 21 பேரைப் படுகொலை செய்த ஆலை நிர்வாகமும் அரசும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஆரவல்லி: உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் கரசேவை

உச்சநீதிமன்றத்தின் அறிவியலுக்குப் புறம்பான இந்த வரையறையினால், இராஜஸ்தானில் உள்ள சுமார் 12,081 குன்றுகளில், வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே “பாதுகாக்கப்பட்ட மலைகள்" என்கிற பட்டியலில் இடம்பெறும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, இப்பகுதியில்தான் ஆரவல்லியின் பெரும்பாலான "நீர்ப்பிடிப்புப் பகுதிகள்" உள்ளன. இவற்றை அழிப்பது என்பது ஒரு தலைமுறையின் நீர் ஆதாரத்தையே அழிப்பதற்குச் சமம்.

ஏ.ஐ துறையில் அதானி முதலீடும் பாசிச கும்பலின் கார்ப்பரேட் சேவையும்!

0
தரவு மையங்களை அமைப்பதற்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் கையகப்படுத்தப்படும். அவற்றை இயக்க அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இதனால் மக்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. இதுதவிர தரவு மையத்தின் சர்வர்களை குளிர்விப்பதற்காகத் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!

0
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அண்மை பதிவுகள்