உயிரியல் பாடம் படிக்காதவர்களுக்கு நீட்! | தோழர் ரவி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
உயிரியல் பாடம் படிக்காதவர்களுக்கு நீட்! | தோழர் ரவி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆ) செய்யாறு சிப்காட் அலகு – 3 வரவுள்ள கிராம மக்களின் நேர்காணல்கள்:-
1. திரு. ஜெயராமன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர், குறும்பூர்
நான் திமுகவைச்சேர்ந்தவன். நாங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றோம். நிலம் எடுக்கப்பட உள்ள பத்து கிராமங்களில் சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர். நெல்,மணிலா, கரும்பு என விவசாயம் நடைபெற்று வருகின்றது. சிப்காட் அலகு 3 அமைய உள்ளதாக கூறப்பட்டுள்ள 3,174 ஏக்கரில் சுமார் 2,500 ஏக்கர் முப்போகம் விளைகின்ற பூமியாகும். இங்கு இருப்பவர்கள் அனைவருமே சிறு – குறு விவசாயிகளாவர். இங்கே இருக்கக்கூடிய மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். ஆகவே ஒருபோதும் மக்கள் விவசாய நிலத்தை கொடுக்க மாட்டார்கள். அரசு இதுவரை மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
2. பெயர் கூறவிரும்பாத விவசாயி
எங்களது நிலங்கள் கையகப்படுத்துவது தொடர்பான எவ்வித அறிக்கையும் வரவில்லை, பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. இவ்வூரைச்சேர்ந்தவர் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போதுதான் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பினைப் பார்த்து எங்களிடம் கூறினார். அதன் பின்னர் நாங்கள் பதிவாளர் அலுவலகத்தில் சென்று விசாரித்த போது, எங்களுடைய நிலத்தை இனி யாருக்கும் விற்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். 22.07.2023 அன்று இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் கையெழுத்துப் பெற்று செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் ஒ.ஜோதி அவர்களிடம் தெரிவித்தோம். எங்களின் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை இல்லாததால்தான் வேறு வழி இன்றி தொடர் போராட்டத்தில் ஈடு பட்டோம். எங்களுக்கு வேறு என்ன வழி உள்ளது?
3. பெயர் கூறவிரும்பாத மாணவர்
என்னுடைய அப்பாவைத்தேடி இரவு 11.45 மணிக்கு சுமார் 20 போலீசுக்காரர்கள் வந்தனர். என்னுடைய அப்பா வீட்டில் இல்லை என்று கூறிய பின்னரும் வீட்டில் நுழைந்து சோதனை செய்தனர். என் அப்பாவைப்போல சுமார் 25 பேர் தலைமறைவாக 18 நாட்களாக உள்ளனர் (20.11.2023 தேதி நிலவரப்படி). அரசு ஒரு திட்டம் கொண்டு வந்தால் அதற்கு நிலம் கொடுக்கமாட்டோம் என்று கூறிய விவசாயிகளை சமூக விரோதிகள் போல போலீசு அணுகியுள்ளது.
4. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ள குறும்பூரைச் சேர்ந்த திரு. பாக்கியராஜ் அவர்களின் அம்மா
நவம்பர் 4ம் தேதி அதிகாலை 2 மணிக்கு சுமார் 20 போலீசுக்காரர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். என்ன என்று நான் விசாரித்துக்கொண்டு இருக்கும் போதே என்னுடைய வீட்டின் கதவை உடைத்து என்னுடைய மகனை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். என் மகனை கைது செய்யும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் என்னுடைய மருமகளின் புடவை கிழிந்துவிட்டது. இச்சம்பவத்தை 2 செல்போன்களில் படம் பிடித்தோம். அந்த இரண்டு செல்போன்களையும் போலீசு பறித்துக்கொண்டு சென்று விட்டது.
5. பெயர் குறிப்பிட விரும்பாத விவசாயி
சிப்காட் அலகு – 3 அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு வேனில் செல்ல திட்டமிட்டோம். அதற்கு கூட எங்களைச் செல்ல போலீசு அனுமதிக்கவில்லை. பிறகு எப்படி எங்களால் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்? குண்டர் தடுப்புச்சட்டம் போட்டால்தான் மக்கள் பயந்து நிலத்தை கொடுத்துவிடுவார்கள் என்று அரசு நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது. தமிழ்நாடு முழுவதும் மு.கஸ்டாலின் ஆட்சி செய்கிறார் என்றால் இங்கு மட்டும் அமைச்சர் வேலு ஆட்சி செய்கிறார்.
6. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட திரு. தேவன் அவர்களின் மனைவி திருமதி கலைச்செல்வி
நவம்பர் மூன்றாம் தேதி இரவு 11.00 மணிக்கு 5 போலீசுக்காரர்கள் வந்து எனது வீட்டை சோதனையிட்டு சென்றனர். பிறகு என்னுடைய கணவர் மீது குணடர் தடுப்புச்சட்டம் போட்டப் பிறகு போலீசுக்காரர்கள், வி.ஏ.ஒ ஆகியோர் காரில் என்னுடைய வீட்டிற்கு வந்து ஆதார் கார்டு கொண்டு கொண்டு வா என்று கூறினர். எனக்கு சந்தேகமாக இருந்ததால் நான் செல்லவில்லை. பின்னர் அவர்கள் என்னுடைய மாமியாரிடம் “நீங்கள் வந்தால் தான் உங்கள் மகனை வெளியே விடுவோம்” என்று கூறியதால் அவர் என்னுடைய மாமனாரை அனுப்பி வைத்தார். என்னுடைய மாமனாரை காரில் அழைத்துச்செல்லும் போது நாங்கள் சொல்கிறபடி பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லவில்லை என்றால் உங்கள் மகனை வெளியே கொண்டு வர பல லட்சம் செலவாகும் என்று கூறி மிரட்டியுள்ளனர். அதனால்தான் என்னுடைய மாமனார் அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் முன்னிலையில் திருவண்ணாமலையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்போராட்டம் அருள் ஆறுமுகம் சொல்லி தூண்டிவிடப்பட்டது என்றார். என்னுடைய மாமனார் இவ்விசயத்தை என்னிடம் தெரிவித்த பிறகு உண்மை நிலையை அவரையே பேச வைத்து நான் முகநூலில் பதிவு செய்தேன். கடந்த 20ம் தேதிகூட யாரென்றே தெரியாத சிலர் என்னுடைய வீட்டை படம் பிடித்தனர். நான் ஏதுவென்று விசாரிப்பதற்குள் சென்றுவிட்டனர். இப்படி தொடர்ந்து அச்சுறுத்தலிலேயே உள்ளோம். எங்களுக்கு ஒரு செண்ட் நிலம் கூட இல்லை என்று அமைச்சர் கூறுகிறார். நிலம் இல்லாதவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடக்கூடாதா?
7. திரு.கிருணன், தேத்துறை கிராமம்
நீங்க போலீசா பயமா இருக்கு, எங்க ஊர் ஆளுங்க நேற்றுதான் விடுதலை ஆகியிருக்காங்க. எங்களுடைய நிலத்தை அரசு அடாவடியாக பறிக்கப்பார்க்கிறது. கடந்த 4ம் தேதி முதல் போலீசுக்காரர்கள் கிராமங்களில் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு வெள்ளைக்காரன் ஆட்சியே மேல் என்பது போல் உள்ளது.
8. திரு.குமார், தேத்துறை கிராமம்
நான் சிப்காட் வரவேண்டும் என்று சொல்கிறேன். நான் லோட்டஸ் கம்பெனியில் வேலை செய்கிறேன். எங்களுடைய குடும்பமே விவசாயம் செய்கிறது.விவசாயம் கட்டுப்படியாகவில்லை. சந்தைவிலைக்கு நிலத்திற்கு இழப்பீடு கொடுத்தால் மக்கள் போராட மாட்டார்கள். மக்கள் போராட்டத்தை ஒடுக்கக்கூடாது, அச்சுறுத்தக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காணவேண்டும்.
9. திரு.தினேஷ், மேல்மா
கஷ்டப்பட்டு சேர்த்த நிலத்தை காப்பாற்றக்கூடாதா? பொய்வழக்குகளைப்போட்டு அரசு எங்களின் நிலங்களைப் பறிக்கப்பார்க்கிறது. போலீசை வைத்து கிராமங்களில் பயத்தை உருவாக்கிவிட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எங்களுக்கு மரியாதை கொடுத்தார்கள். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எங்களுக்கு பயம் இன்னமும் போகவில்லை. தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும்.
(தொடரும்..)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

போராட காசு கொடுத்த திமுக! | விவசாயிகளை அச்சுறுத்தும் போலீசு! | உண்மை அறியும் குழு அறிக்கை!
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | மக்கள் அதிகாரம்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம்,
மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்க்கும்
போராட்டங்களும்
விவசாயிகள் மீதான திமுக அரசின் அடக்குமுறைகளும்
உண்மை அறியும் குழுவின் அறிக்கை
உண்மை அறியும் குழுவில் பங்கு பெற்றவர்கள் :-
1. வழக்குரைஞர் இராமு.நா @ மருது, செய்தித்தொடர்பாளர்,மக்கள் அதிகாரம்
2. வழக்குரைஞர் மு.வித்யா
3. கு.ஏழுமலை, காஞ்சிபுரம் பகுதி செயலாளர், மக்கள் அதிகாரம்
4. சே.சரவணன், காஞ்சிபுரம் பகுதி இணைச்செயலாளர், மக்கள் அதிகாரம்
5. மோகன், காஞ்சிபுரம் பகுதி பொருளாளர், மக்கள் அதிகாரம்
6. திலகவதி, மக்கள் அதிகாரம்
7. செளந்தரராஜன், பு.ஜ.தொ.மு. (மா.ஒ.கு)
8. வ.சங்கர், பு.ஜ.தொ.மு. (மா.ஒ.கு)
9. அ.பழனிவேல், தலைவர், ஆக்சில்ஸ் இந்தியா கிளை தொழிற்சங்கம், பு.ஜ.தொ.மு. (மா.ஒ.கு)
10. செ.செல்வக்குமார், நெல்லை மண்டலச்செயலாளர், மக்கள் அதிகாரம்.
வெளியீடு :-
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
பேச : 9962366321
Fb: Makkal Athikaram
Youtube: Makkal Athikaram
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்திலுள்ள மேல்மா, குறும்பூர், நர்மாபள்ளம், வீரம்பாக்கம், தேத்துறை, நெடுங்கல், வட ஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், அய்யவாடி, காட்டுக்குடி, அத்தி ஆகிய 11 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் நிலத்தை செய்யார் சிப்காட் அலகு 3 திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு கையகப்படுத்தும் என்று அறிவித்தது. அரசின் இத்திட்டத்தை எதிர்த்து 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் 128 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் காலை, மாலை என மக்கள் ஷிப்ட் முறையில் தொடர்ந்து கலந்து கொண்டனர். நவம்பர் மாதம் 2ம் தேதி செய்யாறு சிப்காட் அலகு 3 திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணியாக நூற்றுக்கணக்கான மக்கள் சென்றுள்ளனர். பேரணியை மறித்த போலீசு, அவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. மாலை 7 மணி வரை கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படாததால் கிராம மக்கள் மேல்மா கூட்டுச்சாலையினை மறித்தனர். இதன் பிறகு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். மண்டபத்தில் இருந்த மக்கள் ஆர்.டி.ஓ.வை வரச்சொல்லி மனுவை அளித்துள்ளனர். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி சமூக செயற்பாட்டாளர் அருள், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான செய்யாறு வட்டம், தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன், எருமை வெட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவன், மணிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சோழன், மேல்மா கிராமத்தைச் சேர்ந்த திருமால், நர்மா பள்ளத்தைச் சேர்ந்த மாசிலாமணி, குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் ஆகிய எழுவரையும் கைது செய்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைத்தது திருவண்ணாமலை மாவட்டப் போலீசு. இவர்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதே நவம்பர் 4-ஆம் தேதி மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குண்டர் தடுப்புச்சட்டத்தில் அடைக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அருள் ஆறுமுகம் தவிர மீதமுள்ள அறுவரின் குண்டர் தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு முதல்வர் இரத்து செய்ததாக தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு வெளியானது. மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் அவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பான உண்மையை அறியும் வகையில் இந்த உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு நவம்பர் 20-ஆம் தேதி முதல் நவம்பர் 24-ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட கிராம மக்கள், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தின் முன்னணியாளர்கள் மீது புகார் அளித்தவர்கள், கைது செய்யப்பட்ட மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தின் முன்னணியாளர்கள், ஆர்.டி.ஓ (மாவட்டத் துணை ஆட்சியர்) உள்ளிட்டோரை சந்திக்க உண்மை அறியும் குழுவானது திட்டமிட்டது.
அ)
1. விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்து
தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி:
‘திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் முதற்கட்டமாக 645 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்பட்டது. தற்போது, இதில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 27,432 நபர்கள் நேரடியாகவும், 75,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதே பகுதியில் இரண்டாம் கட்டமாக 2300 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டது. தற்போது, இதில் 55 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 31,645 நபர்கள் நேரடியாகவும், 1,00,000 நபர்கள் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் ஏதுமில்லாத நிலையில், மேற்குறிப்பிட்ட சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டதன் விளைவாக, செய்யார் மற்றும் வெம்பாக்கம் ஆகிய வட்டங்களை சேர்ந்த அதிக அளவிலான மக்கள் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். குறிப்பாக, பல கிராமங்களைச் சார்ந்த அடித்தட்டு மக்களுக்கும், மகளிருக்கும் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இத்தொழிற்பூங்கா அமைக்கப்பட்டதன் காரணமாக, இப்பகுதியைச் சேர்ந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட சிப்காட் தொழிற்பூங்கா வெற்றிகரமாக செயல்பட்டதன் விளைவாகவும், இப்பகுதியில் சிப்காட் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பெருமளவிலான பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், சிப்காட் பகுதி-3 தொழிற்பூங்காவினை அமைக்கும்பொருட்டு, உரிய ஆணைகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டன. இதில் செய்யார் வட்டத்தில், மேல்மா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள 3,174 ஏக்கர் பரப்பில், 7 ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலமாகும்.
தற்போது, 1,200 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பிற்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதில் நஞ்சை நிலம் ஏதுமில்லை. மேலும், அறிவிப்பு கடிதம் அளிக்கப்பட்டதில், நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள, 1881 நில உரிமையாளர்களில், 239 நில உரிமையாளர்கள் மட்டுமே ஆட்சேபணை மனுக்களை அளித்துள்ளனர். சிப்காட் விரிவாக்கத்தின் மூலம் இப்பகுதியில் தொழில் வளர்ச்சி பெருகுவதோடு, அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தில், தேத்துறை கிராமத்தை சேர்ந்த மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் என்பவர் தலைமையில், தென்னங்கீற்று கொட்டகை அமைத்து, கடந்த 02.07.2023-ஆம் தேதி முதல் தினசரி சுமார் 15 முதல் 20 நபர்களை கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, அடிக்கடி சாலை மறியலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, நில எடுப்பு செய்ய தானாக முன்வந்து சம்மதம் தெரிவித்த பொதுமக்களைத் தடுத்து நிறுத்தியது, பணி செய்த காவலர்களை தாக்கியது, பொது உடமைகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டதன் காரணமாக, கடந்த 04.11.2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மற்றும் 19 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
இதில் ஏற்கெனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய, அருள் மற்றும் 6 நபர்களை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். செய்யார்சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு இந்த நில எடுப்பு வருவதால், குண்டர் சட்டத்தின் கீழ் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் செய்யார் சட்டமன்ற உறுப்பினரை இன்று (17-11-2023) நேரில் சந்தித்து, மேற்படி நபர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தனர். இன்று மாலை, கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்யார் சட்டமன்ற உறுப்பினருடன் வந்து, பொதுப்பணித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
இவர்கள் அளித்த மனுக்களில், வருங்காலங்களில் இது போன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், இத்தகைய தவறுகளை வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் செய்துவிட்டோம் என்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகளைச் செய்யமாட்டோம் என்றும் தெரிவித்து, தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விடுவிக்குமாறும் கோரிக்கை வைத்தனர். பொதுப்பணித் துறை அமைச்சர், கோரிக்கை மனுக்களை முதல்வர் கனிவான கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர், செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு, சட்டம் – ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்து, பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்ததன் காரணமாக, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் குடும்பத்தினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, அவர்களை குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையிலிருந்து விடுவிக்க ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், மேற்குறிப்பிட்டுள்ள 6 நபர்களின் மேல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் தடுப்புச் சட்ட ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
2. அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் பேட்டி (ஊடகங்களில் வெளியானது)
மேல்மா சிப்காட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் குறித்து பத்திரிகையை படித்தபிறகுதான் தெரியவந்தது” என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓர் ஆணி தொழிற்சாலைக் கூட கிடையாது. விவசாயம் நிறைந்த மாவட்டம். நமது கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில், செய்யாறு அருகே சிப்காட் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 622 ஏக்கரில் 13 தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டது. 30 ஆயிரம் இளைஞர்க, பட்டதாரிகள் பணியாற்றி வருகின்றனர். 2-வது கட்டமாக 1,860 ஏக்கரில் 55 நிறுவனங்கள் வர உள்ளது. 1 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி தொழிற்சாலைகளை கொண்டு வர 3-ம் கட்டமாக 1,200 ஏக்கரில் சிப்காட் அமைய உள்ளன. இதில் மேல்மா, தேத்துறை உட்பட 9 கிராமங்கள் உள்ளன. இதையொட்டி அரசின் சார்பில் கருத்து கேட்பு கூட்டம், திட்ட விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டன. 1,881 விவசாயிகளின் நிலம் எடுக்க உள்ளோம். இவர்களில் 239 பேர் மட்டுமே எதிர்க்கின்றனர். சந்தை மதிப்பை விடஇரண்டரை மடங்கு கொடுக்க அரசு முன் வந்துள்ளது.
தொழற்சாலைகள் உருவாக்கினால்தான், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களின் வேலையில்லா திண்டாடத்தை குறைக்க முடியும். வானத்தில், கடலில் தொழிற்சாலைகளை கட்ட முடியாது. மண்ணில்தான் கட்ட முடியும். வெளியூரில் இருந்து வந்தவர்கள், போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த அருள் என்பவர், செய்யாறு சென்று போராட்டம் நடத்துகிறார். 124 நாட்களுக்கு போராட்டம் நடத்தி உள்ளனர். தேவன் என்பவருக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சிப்காட் தொழிற்சாலையில், மேல்மா உட்பட 9 கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரம்பேர் பணி செய்கின்றனர். அரசு, எந்த பணியையும் செய்யக்கூடாது, பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடாது என திட்டமிட்டு அரசுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அனைத்தும் தரிசு நிலம்.
விவசாயிகளை வஞ்சிப்பது அரசின் நோக்கம் இல்லை. குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது செய்திருப்பதை, பத்திரிகையை படித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அமைச்சருக்கு எப்படி தெரியாது என கேட்கலாம். பெரியார் நூற்றாண்டு விழாவுக்காக 2 நாள் சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளேன். குண்டர் சட்டத்தில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும்.
(தொடரும்..)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாலஸ்தீன மக்களை யூத மதவெறி இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்து வருகிறது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தனது இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்கான மூடுதிரையாகப் பயன்படுத்தி வருகிறது. ஹமாஸின் தாக்குதலில் 1,200 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அரசு கூறி வருகிறது.
ஆனால் இந்த தாக்குதலின் போது கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் பலர் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவைச் சுற்றியுள்ள பல குடியிருப்புகளில் இஸ்ரேலியர்களை கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஹமாஸ் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, இஸ்ரேலியப் படைகள் டாங்கிகளைப் பயன்படுத்தி வீடுகளையே மொத்தமாக அழித்தன. அதில் வீடுகளுக்குள் இருந்த ஹமாஸ் போராளிகளோடு சேர்த்து இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் போராளிகள் காசா எல்லையைக் கடந்து கார்களிலும் நடந்தும் இஸ்ரேலிய கைதிகளை அழைத்துச் சென்றபோது, இஸ்ரேலியப் படைகள் அப்பாச்சி (Apache) ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி அவர்களை மொத்தமாகச் சுட்டுக் கொன்றன.
யெடியோத் அஹ்ரோனோத் (Yedioth Ahronoth) என்ற எபிரேய (Hebrew) பத்திரிகை அக்டோபர் 15 அன்று “ஹமாஸ் போராளிகள், பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களை வேறுபடுத்திப் பார்க்க அப்பாச்சி விமானிகளுக்கு எந்த வழியும் இல்லை. எனவே காசா எல்லையில் உள்ள அனைத்து கார்கள் மற்றும் மக்கள் மீதும் பாகுபாடின்றி துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
படிக்க: காசாவை இன அழிப்பு செய்யும் இஸ்ரேல்!
நவம்பர் 18 அன்று இஸ்ரேலிய ஊடகமான ஹாரெட்ஸ் (Haaretz) வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றின் வாயிலாக இது மேலும் உறுதியாகிறது. இஸ்ரேலிய போலீசாரின் விசாரணையின்படி, நோவா திருவிழாவில் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலியர்கள் மீது அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஹாரெட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இசை விழாவை குறிவைத்துத் தாக்கின என்பதை மறைப்பதற்காக ஹாரெட்ஸ் தளத்தில் இச்செய்தி தற்போது திருத்தப்பட்டுள்ளது.
பின்வரும் பகுதிகள் அச்செய்தியில் தற்போது நீக்கப்பட்டுவிட்டன:
“பயங்கரவாதிகள் கிபுட்ஸ் ரீம் (Kibbutz Reim) மற்றும் அதன் அருகாமை பகுதிகளை அடைய திட்டமிட்டனர். இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ரமத் டேவிட் தளத்திலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐ.டி.எஃப் (Israel Defence Forces) போர் ஹெலிகாப்டர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலரும் தாக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விழாவில் 364 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.”
இருப்பினும், நவம்பர் 18 அன்று காப்பகப்படுத்தப்பட்ட (archived) கட்டுரையின் அசல் பதிப்பு நீக்கப்பட்ட பகுதியைக் காட்டுகிறது.
இஸ்ரேலிய சட்டத்தின் படி, நாட்டின் ‘பாதுகாப்பு’ பிரச்சினைகள் குறித்து வெளியிடப்படும் எந்தவொரு கட்டுரையையும் ஊடகவியலாளர்கள் வெளியிடுவதற்கு முன்பு இராணுவ தணிக்கையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த கெடுபிடியின் காரணமாக இஸ்ரேலிய பத்திரிகையாளர்களும் செய்தி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவு சுய தணிக்கை செய்து செய்திகளை வெளியிடுகின்றனர்.
“+972 இதழ்” (+972 Magazine), தகவல் அறியும் சுதந்திரத்தின் (freedom of information) கீழ் பெற்ற தகவலின் படி, இஸ்ரேலிய இராணுவம் 2022-ஆம் ஆண்டில் பல்வேறு இஸ்ரேலிய ஊடகங்களில் மொத்தம் 159 கட்டுரைகள் வெளியிடப்படுவதைத் தடுத்துள்ளது; 990 கட்டுரைகளில் சில பகுதிகளைத் தணிக்கை செய்து நீக்கியுள்ளது.
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நோவா இசை நிகழ்ச்சியை குறிவைத்துத் தாக்கியதை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது. மாறாக, அக்டோபர் 7 அதிகாலையில் ஹமாஸ் போராளிகள் திட்டமிட்டு நோவா இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தைத் தாக்கியதில் 260 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
”ஹமாஸ் போராளிகள் ‘ஐ.எஸ்.ஐ.எஸ் பாணி’யில் பெண்களையும் அவர்களின் இறந்த சடலங்களையும் கற்பழித்தனர், குழந்தைகளின் தலையைத் துண்டித்தனர், ஒரு குழந்தையை உயிருடன் அடுப்பில் சுட்டனர்” போன்ற பொய்யான கட்டுக்கதைகளைக் கொண்டு காசா மீது நடந்தி வரும் இனப்படுகொலை இஸ்ரேல் நியாயப்படுத்தி வருகிறது.
ஆனால், உண்மையில் ஹமாஸ் அமைப்பால் எத்தனை இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டனர், இஸ்ரேலின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டால் எத்தனை இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டனர் எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
படிக்க: காசா மருத்துவமனைகளில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளைக் கொலை செய்யும் இஸ்ரேல்!
இஸ்ரேலியப் படைகள் தங்கள் சொந்தப் படைகளையும் மக்களையும் குறிவைத்துத் தாக்கியது குறித்து, அக்டோபர் 7 அன்று காசாவுக்கு அருகிலுள்ள பெயேரி கிபுட்ஸ் (Be’eri kibbutz) மீதான ஹமாஸ் தாக்குதலில் இருந்து தப்பிய மூன்று குழந்தைகளின் தாயான 44 வயது யாஸ்மின் போரட் (Yasmin Porat) என்ற இஸ்ரேலிய பெண்தான் முதலில் கூறினார்.
கிபுட்ஸ் பகுதியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது அங்கு வசித்த 112 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், “கான்” (Kan) என்று அழைக்கப்படும் இஸ்ரேலிய அரசு வானொலிக்கு அக்டோபர் 15 அன்று அளித்த நேர்காணலில் போரட், “பெயேரியில் இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டனர்; ஹமாஸ் போராளிகளால் அல்ல” என்று கூறினார். இது குறித்த செய்தியை “தி எலக்ட்ரானிக் இன்டிபாடா” (The Electronic Intifada) வெளியிட்டது.
அந்த பேட்டியில், “கிபுட்ஸ் பகுதியில் வசிப்பவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஹமாஸ் போராளிகளுடன் இஸ்ரேலியப் படைகள் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டபோது பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போராளிகள் மற்றும் அவர்களின் இஸ்ரேலிய கைதிகள் மீது இஸ்ரேலியப் படைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்று போரட் மேலும் கூறினார்.
“நானும் மற்ற 11 பணயக் கைதிகளும் 40 ஹமாஸ் போராளிகளால் பல மணி நேரம் ஒரு வீட்டில் பிடித்து வைக்கப்பட்டிருந்தோம். அப்போது ஹமாஸ் போராளிகள் எங்களை மனிதாபிமானத்துடன் நடத்தினர். எங்களை காசாவுக்கு கடத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது; கொலை செய்வது அல்ல” என்று போரட் கூறினார்.
“சில மணி நேரம் கழித்து இஸ்ரேலியப் படைகள் வந்தனர். அவர்கள் வீட்டைச் சுற்றி வளைத்து ஹமாஸ் போராளிகளுடன் துப்பாக்கிச் சண்டையைத் தொடங்கினர், அதில் நான்கைந்து பணயக் கைதிகள் கொல்லப்பட்டனர். வீட்டிற்கு வெளியே புல்வெளியில் அவர்களின் உடல்கள் கிடந்ததை நான் கண்டேன். சந்தேகத்திற்கு இடமின்றி இஸ்ரேலிய படையினர் தான் அவர்களைக் கொன்றனர். பணயக்கைதிகள் உட்பட அனைவரையும் அவர்கள் அழித்தனர்” என்று போரட் கூறினார்.
அப்போது சரணடைய முயன்ற ஹமாஸ் போராளி ஒருவர் போரட்டை மனித கேடயமாக பயன்படுத்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் போராளி கைது செய்யப்பட்டு, போரத் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு மீதமுள்ள 11 பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் இஸ்ரேலிய இராணுவம் டாங்கியை வைத்து இரண்டு குண்டுகளை வீசியதாகவும் போரட் மேலும் கூறினார். பணயக்கைதிகளில் இருவரைத் தவிர மற்ற அனைவரும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
இஸ்ரேலிய அரசு வானொலியான கான்-னுக்கு போராட் அளித்த மேற்குறிப்பிட்ட நேர்காணலும் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது.
கான் வானொலியில் ஒளிபரப்பப்பட்ட அவரது நேர்காணல், அக்டோபர் 15-ஆம் தேதிக்கான ஹபோக்கர் ஹசே (”This Morning”) வானொலி நிகழ்ச்சியின் ஆன்லைன் பதிப்பில் இடம்பெறவில்லை.
படிக்க: பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேலிய செய்தித்தாளான மாரிவ் (Maariv) பத்திரிகைக்கும் போரட் பேட்டியளித்தார். இருப்பினும், அக்டோபர் 9 அன்று வெளியிடப்பட்ட மாரிவ் செய்தியில் இஸ்ரேலியப் படைகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சி.என்.என் தொலைக்காட்சிக்கு போரட் அளித்த மற்றொரு பேட்டியில், தன்னைப் பிடித்து வைத்திருந்த ஹமாஸ் அமைப்பினரும் சக பணயக்கைதிகளும் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால் பணயக்கைதிகளை கொன்றது யார் என்பது பற்றி எந்த குறிப்பும் அந்த பேட்டியில் குறிப்பிடப்படவில்லை.
போரட்டின் சாட்சியத்தை இஸ்ரேல் அரசு முற்றிலுமாக தணிக்கை செய்துள்ளதை மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
இது குறித்து இஸ்ரேல் போலீசுத்துறையின் உளவுப் பிரிவின் தலைவரான துணை கண்காணிப்பாளர் டிரோர் அஸ்ரப் (Dror Asraf), “இதுபோன்ற செய்திகள், சதி கோட்பாடுகளை வெளியிடுவதன் மூலம் பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலியப் படைகள் தங்கள் சொந்த குடிமக்களையும் படை வீரர்களையும் கொன்றன என்பதை வெளிப்படுத்தினால் சதி கோட்பாடாகப் பார்க்கப்படுகிறது. அம்பலப்படுத்துபவர்கள் ஹமாஸ் ஆதரவாளர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
நன்றி: தி கிரேடில்
![]()
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

காவித்துண்டும் கல்வித்துறையும் | சு.உமா மகேஸ்வரி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கோபிசெட்டிபாளையத்தில் அருந்ததியர் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதல் குறித்தும் அதிகரித்து வரும் என்கவுண்டர்களின் பின்னணி குறித்தும் மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் அளித்த விரிவான நேர்காணல்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

சுரங்கத்திற்குள் அமைதி!
ஆன்மிக நகரங்களை இணைக்க மலையின் இடையே சுரங்கம்
இதுதான் இந்துராஷ்டிர சதித்திட்டம்!
சுரங்கத்தின் உள்ளே அமைதி
சுற்றிலும் மண் புழுதி
மூச்சுவிட முடியாமல் அவதி
முடிந்தால் இவர்களுக்கும் அரசு தரும் இழப்பு நிதி
பதினான்கு நாளாகியும் பலனில்லை
நிலவிற்கு விண்கலம் அனுப்பும் உங்களின் விஞ்ஞானம்
நிலத்தின் நடுவே உள்ளவர்களை மீட்கவில்லை
இது யாருக்கான விஞ்ஞானம்?
இரவு பகலாக வேலை பார்த்து
இருட்டினில் இருதயத் துடிப்பை கேட்டுக் கொண்டிருக்ககிறோம்
இனியும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை
இறந்த பிறகாவது வெளியே எடுப்பார்களா என்ற கேள்வி மட்டும் எங்களின் கண்முன்னே!
ஆளும்வர்க்க அதிகாரிகள் உள்ளே இருந்தால்
உடனடியாக வேலைகள் நடக்கும், இந்திய ராணுவம் ஓடிவரும்
இரவு பகலாக வேலை நடக்கும்
உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளே இருந்தால்
உடைக்க முடியவில்லை;
கல்லை தோண்ட முடியவில்லை; இயந்திரமும் ரிப்பேர்
இதுபோன்ற செய்திகள்தான் வரும்
சுரங்கத்தின் உள்ளே அமைதி
சுருங்கத் தொடங்கும்
தொழிலாளர்களின் வாழ்க்கை
எண்ணிக் கொண்டிருக்கிறோம் நாட்களை
எங்களுக்கும் இவ்வுலகில் வாழ சிறிது காலம் கிடைக்கும் என்று
முதலாளித்துவம் முட்டுச் சந்தில் நிற்கிறது
முதலைகளின் லாபத்திற்கு தொழிலாளர்களின் குரல்வலையை நெரிக்கிறது
ஆளும் வர்க்கத்தினைத் தகர்த்து!
அரசியல் அதிகாரத்தைப் பறித்து!
தொழிலாளர்களின் கையில் எடுத்து!
தொடங்கப்பட வேண்டும் புதிய அரசு!
அதுதான் புதிய ஜனநாயக மாற்று!
(குறிப்பு: நவம்பர் 12 அன்று உத்தரகாசியில் பணியின் போது சுரங்கம் ஒன்றில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17-ஆம் நாளான இன்று (நவம்பர் 28) தான் மீட்கப்பட்டனர். இக்கவிதை தொழிலாளர்கள் மீட்கப்படுவதற்கு முன்னரே எழுதப்பட்டது.)
![]()
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஹமாஸ் பிணைய கைதியாக இருந்து விடுதலை பெற்ற டானியல் என்ற யூதப் பெண் ஹமாசின் படை வீரர்களுக்கு எழுதிய கடிதம்
சமீபத்திய வாரங்களில் என்னுடன் வந்த தளபதிகளுக்கு… நாம் நாளை பிரிந்து விடுவோம் என்று தோன்றுகிறது. ஆனால் என் மகள் எமிலியாவிடம் நீங்கள் காட்டிய அசாதாரண மனிதாபிமானத்திற்கு என் இதயத்தின் அடியாளத்திலிருந்து நன்றி கூறுகிறேன்.
”நீங்கள் அவளுக்கு பெற்றோரைப் போல இருந்தீர்கள், அவள் விரும்பும் போதெல்லாம் அவளை உங்கள் அறைகளுக்கு அழைத்தீர்கள். நீங்கள் அனைவரும் அவளுடைய நண்பர்கள், நண்பர்கள் மட்டுமல்ல, உண்மையிலேயே அன்பானவர்கள் மற்றும் நல்லவர்கள்” என்று அவள் உணர்கிறாள்.
“நன்றி, நன்றி, அவளுடைய பராமரிப்பாளர்களாக நீங்கள் செலவிட்ட பல மணிநேரங்களுக்கு நன்றி. அவளிடம் பொறுமையாக இருந்ததற்கும், இங்குள்ள சூழலில் கிடைத்தற்கரிய இனிப்புகள், பழங்கள் மற்றும் கிடைக்கும் அனைத்தையும் அவள் மீது பொழிந்ததற்கும் நன்றி.
“குழந்தைகள் சிறைபிடிக்கப்படக்கூடாது. ஆனால் , என் மகள் காசாவில் ஒரு ராணியைப் போல் உணர்ந்ததற்கு உங்களுக்கும், வழியில் நாங்கள் சந்தித்த பிற மக்களுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். பொதுவாக, அவள் தான் உலகின் மையமாக இருந்ததாக உணர்ந்தாள். எங்கள் நீண்ட பயணத்தில் மென்மையையும் அன்பையும் நேசத்தையும் காட்டாத எவரையும், (அடிமட்ட ஊழியர் முதல் தலைமை வரை) அவள் சந்திக்கவில்லை என்று அவள் உணர்கிறாள்.
“வாழ்நாள் முழுவதும் உளவியல் அதிர்ச்சியுடன் வாழ வேண்டிய நிலையில் அவள் இங்கிருந்து வெளியேறவில்லை. இதற்காக நான் என்றென்றும் உங்களுக்கு நன்றியின் கைதியாக இருப்பேன். காசாவில் நீங்கள் சந்தித்த கடினமான சூழ்நிலையிலும், நீங்கள் சந்தித்த கடுமையான இழப்புகளின் போதும், இங்கு எனக்கு வழங்கப்பட்ட உங்கள் பரிவான நடத்தையை நான் நினைவில் கொள்வேன்.
“இந்த உலகில் நாம் உண்மையிலேயே நல்ல நண்பர்களாக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.
“உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நான் விரும்புகிறேன்… உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் மற்றும் அன்பு. மிக்க நன்றி.
டேனியல் மற்றும் எமிலியா
Danielle and Emilia
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பொலங்காளிப்பாளையம் இந்திரா நகரில் குடியிருக்கும் நவீன்குமார் (வயது 17) என்பவர் JKKM பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நவீன்குமாரின் உறவினரான கிருபாகரன் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கடுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த கவுண்டர் சாதியை சேர்ந்த கார் மெக்கானிக், அருந்ததியர் கூலித்தொழிலாளி கிருபாகரனை பார்த்து அடிக்கடி “என்னடா சக்கிலி பயலே?” என்று கூறி மிரட்டி தனது சாதித் திமிரை வெளிபடுத்தி வந்துள்ளான்.
20.11.2023 அன்று இரவு நவீன்குமாரும், கிருபாகரனும் வெங்கமேடு என்னுமிடத்தில் உட்கார்ந்து மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். அதே நேரத்தில், அந்தப் பக்கமாக வந்த அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 4 பேர், கிருபாகரனை பார்த்து “என்னடா சக்கிலி பயலே எங்க உட்கார்ந்து தண்னி அடிக்கிற?” என சாதிப் பெயரை சொல்லி இழிவாக பேசியுள்ளனர். போதையில் இருந்த கிருபாகரன் திருப்பி கேள்விகேட்க இருதரப்பினருக்கிடையே அடிதடி சண்டையாக மாறியுள்ளது. நவீன்குமார், கிருபாகரன் இருவரையும் கொடூரமாக தாக்கிவிட்டு ஸ்கூட்டரையும், செல்போன்களையும் எடுத்து சென்றுள்ளனர். இரவு ஊருக்கு செல்ல முடியாமால் டேங்க் அடியில் படுத்து உறங்கியுள்ளனர்.
21.11.2023 அன்று அதிகாலையில் தனது பொருட்களை பறித்துச் சென்ற நபரைப் பார்த்து “அண்ணே ஸ்கூட்டரையும், செல்போன்களையும் தாங்க” என இரண்டு இளைஞர்களும் கேட்டுள்ளனர். இங்கேயே இரு என சொல்லிவிட்டு ஊருக்குள் சென்ற அந்த நபர் தன்னோடு 7 பேரை அழைத்து வந்துள்ளார். அந்த 7 பேரில் இருந்த ஒருவருக்கும் கிருபாகரனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. “ஏண்டா சக்கிலி தாயோலி எங்கள் ஊரில் படுத்ததும் இல்லாம எங்கள எதிர்த்து பேசுவியா” என பிளாஸ்டிக் பைப்பில் இரும்புக் கம்பியை சொருகி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ”உன்னையும் அவனையும் கொன்று விடுவேன்” என்று சொல்லி அடித்துக் கொண்டிருக்கும் போதே, பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடிவிட்டனர். பஞ்சாயத்து தலைவரின் கணவர் கண்ணுசாமி (கடுக்காம்பாளையம்) அவரின் மகன் மற்றும் பலர் சேர்ந்து மயக்கம் வரும்வரை அடித்துள்ளனர். மயங்கிய நிலையில் தண்ணீர் கேட்கும் போது “இந்தாட சக்கிலி நாயே” என்று திட்டியவாறு வாயில் சிறுநீரை கழித்துள்ளனர்.
படிக்க: கிடாரிபட்டி ஆதிக்க சாதி வெறியாட்டம்! சாதி வெறியர்களை வாழ்நாள் சிறையில் அடை! | தோழர் ரவி
இச்சம்பவத்தைக் கடுக்கம்பாளையம் கவுண்டர் சாதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இருவரையும் தாக்கும்போதே “இவனுங்க மீது ஏற்கனவே கோழி திருட்டு வழக்கு இருக்கிறது” என்று கூற, அப்பகுதி மக்கள் “சக்கிலி பயலுக திருட தான் வந்திருக்காங்க” என பேச ஆரம்பித்துள்ளனர். அதில் ஒருவர் “ஏண்டா சக்கிலி பயலுகளை இப்படி போட்டு அடிக்கிறீங்க செத்து போயிடுவான், நீங்க எல்லாம் ஜெயிலுக்கு போகனும்” என்று சொன்ன பிறகு போலீசு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசு அதிகாரி ஒருவர் அந்த இருவரையும் அதே இடத்தில் மயக்க நிலையில் இருக்கும் போது விசாரணை என்ற பெயரில் கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டார். இந்தக் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. பலரும் அந்த போலிசு அதிகாரியின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்துள்ளனர். அந்த அதிகாரியும் தனது பங்கிற்கு சாதித் திமிரைக் காட்டியுள்ளார் என்பதைக் காண முடிகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரின் வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக திருடர்கள் வந்த சம்பவத்தையும், ஏற்கெனவே கிருபாகரன் மீது போடப்பட்ட கோழி திருட்டு பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததையும் இணைத்து 379 IPC பிரிவில் தற்போது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், செட்டிப்பட்டி, கவுண்டம்பாளையம் அருகிலுள்ள பகுதியை சேர்ந்த கவுண்டர் சாதியினர் தினகரன் செய்தியாளரான கவுண்டர் சாதி ரமெஷ்-யை அழைத்து “நள்ளிரவில் கோழிகளை திருட வந்து கரும்புக் காட்டில் பதுங்கிய 2 வாலிபர்கள், விடிய விடிய காத்திருந்து பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்” என போலிசின் பொய் வழக்கையும் இணைத்து செய்தியை கொடுத்து தினகரன் செய்தித்தாளில் வெளியிட வைத்துள்ளனர். கவுண்டர் சாதிவெறியினருக்கு ஆதரவாக பிற ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
படிக்க: ஏலே இங்க வாங்கலே! நீங்க என்ன சாதிலே! தென்மாவட்டங்களின் ஆதிக்க சாதிய குரல்
மாணவர் நவீன்குமாரையும், கிருபாகரனையும் வி.சி.க மற்றும் சில அமைப்பினர் நேரில் விசாரித்து, அருந்ததியர் இளைஞர்கள் மீது கவுண்டர் ஆதிக்க சாதிவெறிக் கும்பல் நடத்திய தாக்குதலை வெளிக்கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட கவுண்டர் சாதிவெறியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனையறிந்த கவுண்டர் சாதி சங்கங்கள், இந்து முன்னனி, தி.மு.க, காங்கிரஸ், கொங்கு பேரவை போன்ற கட்சிகளைச் சேர்ந்த கவுண்டர் சாதிவெறி நிர்வாகிகள் குற்றவாளிகளை வன்கொடுமை வழக்கிலிருந்து தப்பவைக்க 500க்-கும் மேற்பட்ட நபர்களைத் திரட்டி சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அருந்ததியர் இளைஞர்கள் கொடுத்த தீண்டாமை வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு போலீசு அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரிடம் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறச் சொல்லியுள்ளனர் போலீசு அதிகாரிகள். மேலும், மருத்துவரை வைத்து கிருபாகரன் கையில் கட்டு போட வைத்துள்ளனர்.
இந்து முன்னணி, கவுண்டர் சாதி சங்கங்கள், ஆளுங்கட்சியான தி.மு.க, காங்கிரஸ் நிர்வாகிகளும் அருந்ததியர் இளைஞர்களை தாக்கிய கவுண்டர் சாதியினருக்கு ஆதரவாக நிற்கின்றனர். கவுண்டர் சாதிவெறியர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் வேலை செய்து வந்துள்ளது அம்பலப்படுத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பல் சாதிவெறி, இனவெறி, மதவெறி கலவரங்களை நடத்தும் வாய்ப்புக்காகத் துடித்துக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் வளர சாதி கலவரங்களை நடத்த முயற்சித்து வரும் வேலையில் பாசிசக் கும்பலை எதிர்ப்பதாக வீழ்த்துவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் கவுண்டர் சாதிவெறி தாக்குதலுக்கு உடந்தையாக இருப்பது பாசிஸ்டுகள் வளர்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசியல் கட்சி நிர்வாகிகள் மீதும், ஆதிக்க சாதிவெறியர்களை ஊக்குவிக்கும் விதமாக நடந்துக்கொண்ட போலீசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கபட வேண்டும். அப்பகுதியில் இயங்கும் சாதி சங்ககளை உடனடியாக தடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது அதிகரித்து வரும் சாதிவெறித் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டுமானால் அனைத்து பகுதியிலுள்ள சாதி சங்ககளைத் தடை செய்வதற்கான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
![]()
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


27.11.2023
பெறுதல்: தொலைக்காட்சி , பத்திரிக்கை ஆசிரியர் / தலைமைச் செய்தியாளர்
ஊடகவியலாளர் அழைப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம்,
மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்க்கும் போராட்டங்களும்
விவசாயிகள் மீதான திமுக அரசின் அடக்குமுறைகளும்
உண்மை அறியும் குழுவின் அறிக்கை
29.11.2023 – புதன் கிழமை பகல்12 மணி –
சென்னை பத்திரிகையாளர் மன்றம் – பத்திரிக்கையாளர் சந்திப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா சுற்றியுள்ள 11 கிராமப்பகுதிகளில் உள்ள 3,175 ஏக்கர் நிலத்தை செய்யாறு சிப்காட் அலகு -3 திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு கையப்படுத்த அறிவித்த நாள் முதல் தற்போது வரையிலான நிகழ்வுகள் தொடர்பாக மக்கள் அதிகாரம் சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, பாதிக்கப்பட்ட மக்கள், கைது செய்யப்பட்டவர்கள், எதிர்த்தரப்பினர் உள்ளிட்ட பலரையும் சந்திக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது பொய்வழக்குகள் பதிவிட்டது, பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி மன்னிப்பு கடிதங்கள் பெற்றது உள்ளிட்ட மேலும் அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை உண்மை அறியும் குழு அறிந்துள்ளது. உண்மை அறியும் குழுவின் அறிக்கை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பினை 29.11.2023 அன்று புதன்கிழமை 12 மணி அளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. இச் சந்திப்பில் பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே தங்களின் ஊடகவியலாளர் மற்றும் புகைப்பட கலைஞரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
![]()
தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை,
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

இந்துமதவெறி பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தனது நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதுவரை பாசிச அமைப்பால் செரிக்க முடியாததாகவும், தொண்டைக்குள் சிக்கிய முள்ளாகவும், சிம்மசொப்பனமாகவும் இருக்கிறது பார்ப்பன எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாடு. அரை நூற்றாண்டுக்கு மேலாக வேலை செய்தும், இப்பாசிச கும்பலால் தமிழ்நாட்டு மண்ணில் வேரூன்ற முடியவில்லை. எனினும் எப்படியாவது தமிழ்நாட்டை தனது இந்துராஷ்டிரப் பிடிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டை நெருக்கி, சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். எனும் நச்சுப் பாம்பு.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்; 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியில் அரசியல் தளத்தில், “தி.மு.க எதிர் பா.ஜ.க” என்ற நிலையை உருவாக்க தமிழ்நாடு பா.ஜ.க. தீவிரமாக முயற்சித்து வருகிறது.
“தி.மு.க. இந்துவிரோத கட்சி” என்ற பொய்ப் பிரச்சாரம்; உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சுக்கு எதிரான பார்ப்பன வெறிப் பிரச்சாரம்; “தி.மு.க. பைல்ஸ் வெளியீடு” என்ற சதித் திட்டம்; அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைப்பயணம்; பெரியாரின் பெயரை சொன்னதற்காகவே அடையார் ஆனந்தபவனை புறக்கணிப்போம் என்ற சமூக வலைத்தளப் பிரச்சாரம்; அராஜகமாகக் கொடிக்கம்பம் நட முயற்சித்து தி.மு.க.வை சீண்டுவது; ஆளுநர் மாளிகைக்கு எதிரே உள்ள சாலையில் பெட்ரோல் குண்டு வீச்சு என்ற நாடகம்; தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக வெற்றுக் கூச்சல் போடுவது; அமலாக்கத்துறை மூலமாக செந்தில்பாலாஜி, பொன்முடி கைது; துரைமுருகனுக்கு எதிராக மணல் கொள்ளை விவகார விசாரணை – போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுப்பது, தி.மு.க.வை ‘மக்கள் விரோதக் கட்சி’ என்று சித்தரிக்க முயற்சிப்பது, தி.மு.க.விற்கு எதிரான கட்சியாக பா.ஜ.க.வை முன்னிறுத்துவது எனத் தனது அரசியல் நடவடிக்கைகளை வகுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது, தமிழ்நாடு பா.ஜ.க.
எனினும், இத்தகைய அரசியல் சதித்திட்டங்களால் மட்டுமே தமிழ்நாட்டில் வேரூன்றிவிட முடியாது என்பது காவி கும்பலுக்கு நன்கு தெரியும். எனவே, தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு, “இந்து மதம் எதிர் சிறுபான்மையினர்” மற்றும் “ஆதிக்கச் சாதி எதிர் தலித் மக்கள்” என்று நிறுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் இந்து மத – சாதிய முனைவாக்கத்திற்கான கீழ்மட்ட வேலைகளைத் தீவிரமாக செய்து வருகிறது.
படிக்க: “வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!
இதற்காக, ஆளுநர் ரவி போன்று அரசின் அதிகாரக் கட்டமைப்புகளில் ஊடுருவி நேரடியாகப் பார்ப்பனிய – சனாதன சித்தாந்தத்தை விதைப்பது; இந்து முன்னணி, சேவா பாரதி, விஷ்வ இந்து பரிசத் போன்ற பல பெயர்களில் நேரடியாக பார்ப்பன இந்துமதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபடுவது; வன்னியர், தேவர், கவுண்டர் போன்ற ஆதிக்கச் சாதிச் சங்கங்களில் ஊடுருவிச் சாதிக் கலவரங்களைத் தூண்டுவது; அருந்ததியர், பள்ளர் போன்ற ஒடுக்கப்பட்ட சாதிகளின் சில பிழைப்புவாத சாதிச் சங்கங்களை தனது அடித்தளமாக மாற்றுவது; கோயில் நிர்வாகங்களில் ஊடுருவி சமய வகுப்புகள், குத்து விளக்கு பூஜைகள் என்ற பெயரில் மக்களின் பக்தி உணர்வைப் பயன்படுத்தி மதவெறிப் பிரச்சாரம் செய்வது; இஸ்லாமிய பயங்கரவாதம், கட்டாய மதமாற்றம் என பீதியூட்டி சிறுபான்மையினரை எதிரிகளாக சித்தரிப்பது; திராவிட இயக்க எதிர்ப்பு, சமத்துவ எதிர்ப்பு என பல வழிகளில் தமிழ்நாட்டில் ஊடுருவி வருகிறது இக்காவி பாசிச கும்பல்.
குறிப்பாக, ஆதிக்கச் சாதிவெறி அமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகின்ற, திராவிட -கம்யூனிச இயக்கங்களின் செல்வாக்கு குறைவாக உள்ள தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாகவே, அண்மைக் காலங்களாக தமிழ்நாட்டில் சாதிவெறித் தாக்குதல்களும் மதவெறிப் பிரச்சாரங்களும் அதிகரித்து வருகின்றன.
2021-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது, மாணவி லாவண்யா மரணத்தைத் துருப்புச் சீட்டாகக் கொண்டு தஞ்சாவூர் மைக்கேல்பட்டி கிராமத்தில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தது; தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்ய முயற்சித்தது; மண்டைக்காடு, திருச்செங்கோடு சம்பவம் என கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல் தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றுவதற்கான வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதையே அண்மைக் கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஆர்.எஸ்.எஸ் கையிலெடுக்கும் “கன்னியாகுமரி மாடல்”
கடந்த ஜூலை மாதம் ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களின் ஆண்டுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியாவுடனே ஒன்றிணையாத வடகிழக்கு மாநிலங்களை இந்து நீரோட்டத்தில் கலக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட ஏழு சகோதரிகள் திட்டத்தை (Seven-Sisters model) ஒத்த ஒரு புதிய திட்டத்தை தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ். தீட்டியிருப்பதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது, “தி நியூஸ்மினிட்” என்ற இணையதளம்.
வடகிழக்கு மாநிலங்களில் பல ஆண்டுகளாக, ஓராசியர் பள்ளிகள் நடத்துவது, பழங்குடிகளின் பண்பாட்டை இந்துப் பண்பாடாகத் திரித்து கதைகட்டுவது, பழங்குடியின கடவுள்களை இந்துக் கடவுள்களாக, இராமாயண, மகாபாரத அவதாரங்களாக மறுகட்டமைப்பு செய்வது, கிறித்துவ எதிர்ப்புப் பிரச்சாரம் ஆகியவற்றின் மூலமாகத்தான் அம்மக்களிடம் ஆர்.எஸ்.எஸ் வேரூன்றியது. இதன்விளைவுதான் ஆறு மாதங்களாகியும் அணையாமல் பற்றி எரிகிறது மணிப்பூர்.
இந்த ஏழு சகோதரிகள் மாடலுடன், ஆர்.எஸ்.எஸ். காவி கும்பலுக்கு தமிழ்நாட்டில் வேலை செய்த அனுபவத்தையும் இணைத்து ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியிருப்பதுதான், கன்னியாகுமரி மாடல்!
தமிழ்நாட்டில் இந்து முன்னணி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றுவதற்கு முன்புவரை மதக்கலவரங்கள் ஏற்பட்டதாக வரலாறு இல்லை. ஆனால், 1960-களிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து முன்னணி ஊடுருவியதிலிருந்துதான் 1982- ஆம் ஆண்டு முதன்முதலில் மண்டைக்காடு கலவரம் நடந்தது. இக்கலவரமானது தமிழ்நாட்டு வரலாற்றில் நீங்காத கரும்புள்ளியாக இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் இந்து நாடார்களும், கிறித்துவ மீனவர்களும் ஏறக்குறைய சம அளவில் வசிக்கின்ற பகுதியாகும். தமிழ்நாட்டில் இருந்தாலும், குமரி மாவட்டமானது அரசியல் ரீதியில் பெரியளவிற்கு திராவிட, கம்யூனிச இயக்க செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதியல்ல. அப்பகுதியில் காங்கிரசு கட்சிதான் செல்வாக்கு செலுத்தியது, இன்றளவிலும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.
அப்பகுதியில், ஆர்.எஸ்.எஸ் வேலை செய்வதற்கு முன்பு வரை இந்து நாடார்கள், கிறித்துவ மீனவர்களுக்கிடையில் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தாலும் எந்த பிரச்சினையுமின்றிதான் வாழ்ந்து வந்தனர். இந்துக்களுக்கும், கிறித்துவர்களுக்கும் இடையே இருந்த விவேகானந்தர் பாறை (தற்பொழுது) தொடர்பான பிரச்சினையை ஊதிப் பெருக்கியது ஆர்.எஸ்.எஸ். அதுமட்டுமின்றி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில், கிறித்துவ இளைஞர்கள் இந்துப் பெண்களை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று புரளியைக் கிளப்பிவிட்டு கிறித்துவர்களுக்கு எதிரான மதக் கலவரத்தை அரங்கேற்றியது ஆர்.எஸ்.எஸ். இக்கலவரத்தை அடக்க நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மூன்று மாதங்களுக்கும் மேலாகக் கலவரம் நீடித்தது. கிறித்துவர்கள் சமூக ரீதியாக விலக்கி வைக்கப்பட்டனர். இந்து நாடார்கள், கிறித்துவர்களுக்கிடையிலான வணிக உறவும் துண்டிக்கப்பட்டது. கிறித்துவர்களுக்கு இந்து நாடார்கள் பொருட்களை ஏதும் விற்பதில்லை என்ற கொடூரம் அரங்கேறியது. மூன்று மாதங்களுக்குப் பிறகு கலவரம் அடங்கினாலும், இயல்புநிலை திரும்பப் பல மாதங்கள் ஆகின. தற்பொழுது, எப்படி மணிப்பூரில் குக்கிகளும், மெய்திக்களும் இணைந்து வாழ முடியாது என்ற நிலையைக் காவி கும்பல் உருவாக்கியிருக்கிறதோ, அதே போல, மண்டைக்காடு கலவரத்திற்கு பிறகு இன்று வரை இந்து-கிறித்துவ பிரிவினை நீடிக்கிறது.
இந்து-கிறித்துவ பிரிவினையைத் தக்க வைப்பதற்காக மதமாற்றப் பிரச்சினையைக் கையிலெடுப்பது, “தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு உரிமையில்லை” என்ற பொய்ப் பிரச்சாரம் செய்வது, கிறித்துவர்களைப் படுகொலை செய்வது என கன்னியாகுமரியைக் கலவர பூமியாக்கியிருக்கிறது இந்த நச்சுக் காவி கும்பல்.
இவ்வாறு, கலவரத்தின் மூலம் மத முனைவாக்கம் செய்ததால்தான் இன்றுவரை குமரியில் வலுவாக ஆர்.எஸ்.எஸ் காலூன்றியிருக்கிறது. காங்கிரசு செல்வாக்கு மிக்க அப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு செலுத்துகிறது. அதனால்தான், நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் பா.ஜ.க-வால் வெற்றி பெற முடிந்தது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிகபட்ச வாக்குகளைப் பெற முடிகிறது. 2014-இல் நாடாளுமன்றத்தேர்தலில் பொன். ராதா கிருஷ்ணன் குமரியில்தான் வெற்றிப் பெற்றார்.
படிக்க: அதானியின் ஊழல் முறைகேடுகள் மீண்டும் அம்பலம்!
மேலும், மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகு, பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் மாசி கொடை விழாவின் போது நடத்தப்படும் மாநாட்டை 85 ஆண்டுகளாக ஹைந்தவ சேவா சங்கம் என்ற ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் நடத்தி வருகிறது. தற்போது, இந்த மாநாட்டை தமிழ்நாடு அறநிலையத்துறை எடுத்து நடத்தும் என்று தி.மு.க. அரசு தலையிட்டாலும், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் எதிர்ப்பின் காரணமாக அச்சங்கத்துடன் அறநிலையத்துறை இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இம்மாநாடு மட்டுமின்றி, அம்மாவட்டத்தின் கோவில் நிர்வாகக் குழுக்களில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவியிருக்கிறது. இதனால், கோவில் நிகழ்ச்சிகள் இந்துத்துவ பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. கோவில் வளாகங்களும், மக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளும் ஆர்.எஸ். எஸ். நிகழ்ச்சிகளுக்குத்தான் பயன்படுகின்றன. இவற்றை எதிர்க்கின்ற அறநிலையத்துறை ஊழியர்களைத் தனது செல்வாக்கின் மூலம் இடமாற்றம் செய்கிறது இக்காவி கும்பல். இதிலிருந்து தமிழ்நாடுக் கோவில்களை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும், கோவில் நிர்வாகங்களில் அரசு தலையிடக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் ஓலமிடுவதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
இவைமட்டுமின்றி, சமய வகுப்புகள், சேவா பாரதி போன்றவற்றின் மூலம் மாணவர்கள், இளைஞர்களிடம் இந்துத்துவ அரசியலை விதைத்து வருகிறது. குறிப்பாக, இந்த சேவா பாரதி அமைப்பில் இருக்கும் இளைஞர்கள், கடந்த அ.தி.மு.க அரசாங்கத்தின் ஆசியுடன் “போலீசு நண்பர்கள் குழு”க்களிலும் (ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசு) இணைக்கப்பட்டனர். சாத்தான்குளம் கிறித்தவ சிறு வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலையின் போது, “போலீசு நண்பர்கள் குழு”வினருக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையில் சேவா பாரதியின் பெயர் இருந்த விசயமும், அவர்கள்தான் சாத்தான்குளம் லாக்-அப் படுகொலையில் போலீசுடன் இணைந்து செயல்பட்டனர் என்பதும் அம்பலமானது.
கன்னியாகுமரியில் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளைத்தான், நாடாளுமன்ற தேர்தலுக்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க குறி வைத்திருக்கும் கோவை, ஈரோடு, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தென் சென்னை, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய ஒன்பது தொகுதிகளில் செயல்படுத்த இருக்கின்றது. அதை நிரூபிக்கின்ற விதமாகவே சமீபத்திய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
‘கட்டாய மதமாற்றம்’ எனும் பொய்ப் பிரச்சாரமும் இந்து முனைவாக்கமும்
அண்மையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ‘கட்டாய மதமாற்றப்’ பிரச்சினையைக் கையிலெடுத்தது இந்து முன்னணி கும்பல். கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, கத்தக்கொடிக்காடு பகுதியில் ஜான் பீட்டர் என்பவர் வீட்டில் பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையறிந்த காவி கும்பல், ‘கட்டாய மதமாற்றம்’ செய்கிறார்கள் என்று அவரது வீட்டிற்குச் சென்று தகராறு செய்து, அவரது குடும்பத்தினரைத் தாக்கியிருக்கிறது.
இதனைக் கண்டித்து, கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று “கிறித்துவ முன்னணி” என்ற அமைப்பின் சார்பில் சென்னிமலையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், “சென்னிமலையைக் கல்வாரி மலையாக்குவோம்” என்று சரவணன் என்கிற ஜோசப் பேசியிருக்கிறார். உடனே, “முருகன் இருக்கும் சென்னிமலையைக் கல்வாரி மலையாக்கப் போகிறார்கள்” என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது இந்து முன்னணி. “முருகன் கோயிலுக்கு ஆபத்து” என்று பீதியைக் கிளப்பி, மக்களின் பக்தி உணர்வை மதவெறியாக்க முயற்சித்தது.
அதுமட்டுமின்றி கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி அன்று மாலை “சென்னிமலை ஆண்டவர் குழு” என்ற பெயரில் காவிக் கொடிகளுடன் இந்து முன்னணி சென்னிமலையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்து 10,000-க்கும் அதிகமானோரை திரட்டியிருப்பதாக ஆர்.எஸ்.எஸ்.யின் “ஆர்கனைசர்” இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆனால், “சென்னிமலையைக் கல்வாரி மலையாக மாற்றுவோம்” என்று பேசிய சரவணன் என்கிற ஜோசப், “இந்து முன்னணி ”அமைப்பைச் சார்ந்தவர்தான் என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. போலீசும் இவரை கைது செய்திருக்கிறது. ‘கட்டாய மதமாற்றம்’ செய்கிறார்கள் என்று கிறித்தவக் குடும்பத்தைத் தாக்கியதோடு, “கல்வாரி மலையாக்குவோம்” என்று தன்னுடைய அமைப்பைச் சேர்ந்தவரைப் பேச வைத்து கிறித்துவர்களை எதிரிகளாக்கி சென்னிமலை மக்களின் இந்து உணர்வை அறுவடை செய்திருக்கிறது, இந்து முன்னணி.
சென்னிமலையில் நடைபெற்றது போலவே, தென்காசி மாவட்டம் அச்சங்குட்டத்திலும் ‘கட்டாய மதமாற்றம்’ செய்கிறார்கள் என்றும், அரசு புறம்போக்கு நிலத்தில் தேவாலயம் கட்டுகிறார்கள் என்றும் புரளியைக் கிளப்பிவிட்டு, அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இந்து முன்னணி கும்பல்.
அச்சங்குட்டத்தில் 700 இந்துக் குடும்பங்களும், 100 கிறித்துவக் குடும்பங்களும் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள், திருமண உறவுகளையும் கொண்டுள்ளவர்கள் என்ற வகையில் ஒன்றாகப் பழகி வருகின்றனர். இவர்களிடம் தற்போது பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது காவி கும்பல்.
இப்பகுதியில் 1941 முதல் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மறைமாவட்ட அறக்கட்டளை சார்பில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளி இருந்த இடத்திலேயே ஒரு தேவாலயமும் இருக்கிறது. 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின் அடிப்படையில் வேறு விசாலமான இடத்திற்குப் பள்ளி மாற்றப்பட்டது. பள்ளியில் ஏற்கனவே இருந்த தேவாலயத்தையும் புதுப்பிக்கும் பணியும் தொடங்கப்பட்டது.
இந்த சூழலில்தான், 177 மாணவர்கள் படித்து வந்த பள்ளியில் ‘கட்டாய மதமாற்றம்’ நடைபெறுவதாகவும், பள்ளிக் குழந்தைகள் தங்கள் வீட்டில் ஜெபம் செய்ய சொல்லுவதாகவும் காவி கும்பலால் வதந்தி பரப்பப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதமே, பள்ளியிலிருந்து மாணவர்களது மாற்றுச் சான்றிதழ்களை பெற பெற்றோர்களை வற்புறுத்தியிருக்கிறது காவி கும்பல். இக்கும்பலின் வற்புறுத்தலாலும், மிரட்டலாலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழைப் பள்ளியிலிருந்து திரும்பப் பெற்றனர். மாற்றுச் சான்றிதழ்கள் பெற்ற மாணவர்களின் கல்வி பாதித்துவிடக்கூடாது என்று அருகிலுள்ள வீராணம் கிராமத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எழுத கல்வித்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
படிக்க: பா.ஜ.க. எதிர்ப்பில் தி.மு.க.வின் சந்தர்ப்பவாதம்
தற்பொழுது புதியக் கட்டிடத்தில் இயங்கி வரும் பள்ளியில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க நினைத்தாலும், அக்குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை தங்கள் வசம் வைத்திருக்கும் இந்து முன்னணி குண்டர்கள் மாற்றுச் சான்றிதழைத் தரமறுக்கின்றனர். இதனால் இக்குழந்தைகள் பள்ளி செல்ல முடியவில்லை. இக்குழந்தைகளுக்குத் திருமண மண்டபத்தில், படித்த இளைஞர்களைக் கொண்டு பாடம் நடத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த வகுப்புகளும் இந்து முன்னணி சேர்ந்தவர்களே எடுக்கவே வாய்ப்பிருக்கிறது. பள்ளியைத் கிறித்துவர்கள் நடத்தக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இந்து முன்னணி கும்பல் இத்தகைய சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழைக் கைப்பற்றி வைத்துள்ள 12 இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குழந்தைகளிடம் மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயற்சித்தது, குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழைக் கைப்பற்றி வைத்திருப்பதால் அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியிருக்கிறது. எனவே முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட இக்குண்டர்களின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், புதிய தேவாலயமும் பதிவுசெய்யப்பட்ட நிலத்தில் (சர்வே எண் 248/41) கட்டப்படும் சூழலில், புறம்போக்கில் கட்டப்படுவதாக மக்களிடம் பொய்யைப் பரப்பி தென்காசி மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்திருக்கிறது இந்து முன்னணி. உண்மையில், இந்த தேவாலயமானது பள்ளி வளாகத்தில்தான் 1941 முதல் செயல்பட்டு வந்துள்ளது. மேலும், 1978 முதல் மின் இணைப்பு பெற்றுள்ளதோடு, அச்சங்குட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குக் குடிநீர் கட்டணமும் செலுத்திவந்துள்ளது.
மொத்தத்தில், சென்னிமலை, அச்சங்குட்டம் மற்றும் தஞ்சாவூர் மைக்கேல்பட்டி ஆகிய இடங்களில் ‘கட்டாய மதமாற்றம்’ என்ற பெயரில், இந்து-கிறித்துவ மக்களிடம் பிளவை ஏற்படுத்தி, இந்துக்களிடம் செல்வாக்கு பெறவும், தமிழ்நாட்டில் ஒரு மதக்கலவரத்தை நடத்தவும் எத்தனித்து வருகிறது காவி கும்பல். மேற்கூறிய பகுதிகள் மட்டுமின்றி சிறுபான்மை மக்கள் செறிவாக வாழக்கூடிய பகுதிகளில் மதவெறிக் கலவரத்தையும், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ள பகுதிகளில் சாதிவெறிக் கலவரத்தையும் ஏற்படுத்தத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.
சமூக ஊடகங்களில் இந்துத்துவ நச்சுப் பிரச்சாரம்
இந்து முன்னணி, பா.ஜ.க., சங்க பரிவார அமைப்புகள் வடமாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் தமது சொந்தப் பெயர்களில் வெளிப்படையாக வேலை செய்வதில்லை. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுவது போல கீழ்மட்ட அளவில் பல பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, சமூக ஊடகங்களில் இந்துத்துவக் கருத்துகளையும் தி.மு.க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு, அவதூறு கருத்துகளையும் வாட்ஸ்-அப் குழுக்களிலும், முகநூல் பக்கங்களிலும் பரப்பி வருகின்றன.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, அதற்கு அடிமைச் சேவகம் செய்த, விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்த வரலாறு கொண்ட இந்த ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க காவி கும்பல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வ.உ.சிதம்பரனாரையும், மருது சகோதரர்களையும், பகத்சிங்கையும் ‘இந்து சான்றோர்கள்’ என இழிவுப்படுத்துகிறது, காவிமயப்படுத்துகிறது. அறிவியலுக்கு எதிரான இந்த பிற்போக்கு பாசிச கும்பல், அறிவியல் அறிஞர் சந்திர சேகரையும், அறிவியலாளரும், பார்ப்பனிய எதிர்ப்பாளரும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும், சோசலிசவாதியுமான மேக்நாட் சாகாவையும் காவியமப்படுத்துகிறது. இவையெல்லாம் சில சான்றுகள் மட்டுமே.
மேலும், திராவிட மற்றும் கம்யூனிச இயக்கத்தால், கோவில்கள் இடிக்கப்படுகின்றன; நமது பண்பாடு அழிக்கப்பட்டு மேற்கத்தியப் பண்பாடு புகுத்தப்படுகிறது என சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்கிறது.
அதுமட்டுமின்றி, பல்வேறு மக்கள் பிரிவுக்கான புதிய புதிய அமைப்புகள் தொடங்கப்படுகின்றன. “இந்து அன்னையர் முன்னணி”, “இந்து ஆட்டோ ஓட்டுநர் முன்னணி”, “இந்து வியாபாரிகள் நலச் சங்கம்”, “இந்து இளைஞர் முன்னணி’, “இந்து வழக்கறிஞர் முன்னணி” என நேரடியாகவும், கவுண்டர், வன்னியர் சாதி வெறிச் சங்கங்களில் ஊடுருவியும் வேலை செய்து வருகிறது. சாதிவெறி அமைப்புகளில் உள்ள இளைஞர்களைக் குறிவைத்து, அவர்களை வாட்ஸ்-அப் குழுக்களில் ஒருங்கிணைத்து மேற்கூறிய வகையில் செய்திகள் போடப்படுகின்றன. இதனால், சாதிவெறி அமைப்புகளில் இருப்பவர்கள், இயல்பாகவே இந்துத்துவ கருத்தியலுக்கு ஆட்படுகின்றனர்.
இக்காரணத்தால்தான், “தமிழ்நாடு முழுக்க 2,000 சாகாக்கள் நடைபெறுகின்றன. 5,000 -க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். இதில் 80 சதவீதத்தினர் 15 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாவர். தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்புக்கு வராத மாணவர்கள், இளைஞர்களே இருக்க முடியாது” என்று உறுதியாகக் கூறுகிறார், ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியர்.
கடந்த அக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக, 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை நடத்த முயற்சித்த போது, தமிழ்நாடு காட்டிய எதிர்ப்பு தற்பொழுது இல்லை என்பதுதான் எதார்த்தமாகும்.
களநிலைமை இவ்வாறிருக்க தமிழ்நாட்டில், தேர்தல்களில் பா.ஜ.க பெறுகின்ற வாக்குகளை மட்டும் வைத்துக்கொண்டு “ஒத்த ஓட்டு பா.ஜ.க.” என்றும், “நோட்டாவுடன் போட்டிப் போடும் கட்சி” என்றும் கிண்டலடித்துக் கொண்டிருப்பது மட்டும் போதாது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவுக்கு எதிரான செயல்பாடுகள், போராட்டங்கள் என்பவை வெறும் சமூக வலைத்தளங்களிலும் தேர்தல் களத்திலும் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டியவை அல்ல. அவை, மக்கள் மத்தியிலும் மேற்கொள்ளப் படவேண்டிய கருத்து நிலைப் போராட்டங்களும் நடவடிக்கைகளுமாகும்.
மேலும், தமிழ்நாட்டில் திராவிட மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களின் செல்வாக்கு இன்னும் நீடிப்பதால்தான் ஆர்.எஸ்.எஸ்.-ஆல், தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை. அதேசமயம், இந்த முற்போக்கு சித்தாந்தங்கள் இல்லாத தமிழ்நாட்டுப் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுகிறது. சென்னிமலை மற்றும் அச்சங்குட்டம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளானது பார்ப்பனிய எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டிற்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும். பார்ப்பனிய எதிர்ப்பு, முற்போக்கு, ஜனநாயக சித்தாந்தங்களை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கீழ்மட்ட அளவில் கொண்டு சேர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை முற்போக்கு, ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகள் தோளில் சுமத்தப்பட்டிருக்கிறது. விரைந்து செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
![]()
அப்பு
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாலஸ்தீனத்தில் நடந்து வரும் இனப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 25 அன்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யூத பயங்கரவாத இஸ்ரேல் அரசைக் கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
இஸ்ரேலே காசா மீதான போரை உடனே நிறுத்து! | பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சென்னையில் மக்கள் போராட்டம்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஊழல், முறைகேடுகள், பங்குச்சந்தை மோசடிகள் மூலம் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வளர்த்தெடுக்கப்பட்ட நிறுவனம்தான் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு சொந்தமான “அதானி குழுமம்”. ஹிண்டன்பர்க் அறிக்கை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (OCCRP) என்ற சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் வலைப்பின்னல் வெளியிட்ட அறிக்கை ஆகியவற்றை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள “பைனான்சியல் டைம்ஸ்” பத்திரிகையின் ஆய்வு செய்தியும் இந்த உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.
இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நிலக்கரி வர்த்தக நடவடிக்கைகளிலும், நிலக்கரி விலையை உயர்த்திக் காட்டி மோசடி நடந்துள்ளதாக அதானி நிறுவனத்தின் ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி இருக்கிறது, இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை. மேலும், அதானி நிறுவனத்தின் ஊழல் முறைகேடுகள் தற்போதுவரை தங்குதடையின்றி தொடர்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
2019-ஆம் ஆண்டிலிருந்து 32 மாதங்களுக்குள் “அதானி எண்டர்பிரைசஸ்” நிறுவனம், இந்தோனேசியாவிலிருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்த 30 வர்த்தக நடவடிக்கைகளை ஆய்வு செய்துள்ளது, பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை. அனைத்து வர்த்தக நடவடிக்கைகளிலும் நிலக்கரி விலைகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் அதானி நிறுவனம் 582 கோடி ரூபாய் (70 மில்லியன் டாலர்) அளவுக்கு மோசடி செய்துள்ளதாக தன்னுடைய ஆய்வில் கண்டறிந்துள்ளது, பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை.
சான்றாக, 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தனில் உள்ள கலியோராங் துறைமுகத்திலிருந்து 74 ஆயிரத்து 820 டன் அனல் நிலக்கரி, டி.எல். அகாசியா என்ற கப்பலில் இந்தியாவிற்கு வந்தது. இந்த நிலக்கரியின் மதிப்பு 15 கோடி ரூபாய் (1.9 மில்லியன் டாலர்). ஆனால், அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுகத்தில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி மதிப்பு 35 கோடி ரூபாய் (4.3 மில்லியன் டாலர்).
படிக்க: “வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!
மேலும், தன்னுடைய பினாமி நிறுவனங்கள் மூலமும் இந்தோனேசியாவிலிருந்து இந்தியாவிற்கு நிலக்கரியை இறக்குமதி செய்து அதானி நிறுவனம் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதையும் பைனான்சியல் டைம்ஸ் அம்பலப்படுத்தி இருக்கிறது. கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானியின் நெருங்கிய கூட்டாளியும் தைவான் தொழிலதிபருமான சாங் சுங்- லிங்கிற்குச் சொந்தமான “ஹை லிங்கோஸ்” நிறுவனம்; சாங் சுங் – லிங்கின் கூட்டாளியான நாசர் அலி ஷாபன் அஹ்லி என்ற தொழிலதிபருக்கு உறவினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற முகமது அலி ஷபான் அஹ்லியின் நிறுவனமான “டாரஸ்”; அதானி குழுமத்தின் முன்னாள் ஊழியரால் நடத்தப்படும் “பான் ஏசியா டிரேட்லிங்க்” – ஆகிய நிறுவனங்கள் அதானி நிறுவனத்தின் பினாமி நிறுவனங்களாக செயல்பட்டுள்ளன.
இந்த பினாமி நிறுவனங்களின் மூலம் மட்டும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 42 ஆயிரம் கோடி ரூபாய் (5 பில்லியன் டாலர்) மதிப்புள்ள நிலக்கரியை, உண்மையான விலையைவிட இரு மடங்கு அதிகமாக்க காட்டி, அதானி நிறுவனம் இறக்குமதி செய்துள்ளதாக தன்னுடைய ஆய்வில் கண்டறிந்துள்ளது, பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை.
அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளை சில குறிப்பிட்ட ஆண்டுகளில் மட்டும் ஆய்வு செய்ததன் மூலம் ஏறக்குறைய 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் முறைகேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது, பைனான்சியல் டைம்ஸ். உண்மையில், அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடிகளின் மூலம் கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு இதைவிடப் பலமடங்கு அதிகமாக இருக்கும்.
நிலக்கரி இறக்குமதி மோசடிகள் மூலம் பல்லாயிரம் கோடிக் கணக்கில் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்துவரும் அதானி, விலையுயர்த்தி காட்டப்பட்ட நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை மாநில அரசுகளிடம் அதிக விலைக்கு விற்பதன் மூலமும் பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகிறார்.
படிக்க: பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், குஜராத் மாநிலத்தில் நிலக்கரி விலையுடன் இணைக்கப்பட்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளில் “அதானி பவர்” நிறுவனத்திற்கு குஜராத் மாநில அரசு கிட்டத்தட்ட 4,162 கோடி ரூபாய் (500 மில்லியன் டாலர்) அதிகமாக செலுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதே அதற்குச் சான்றாகும்.
அதானி நிறுவனத்தின் ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி ஹிண்டன்பர்க் அறிக்கை, ஓ.சி.சி.ஆர்.பி அமைப்பின் அறிக்கை, பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் ஆய்வறிக்கை போன்று எத்தனை அறிக்கைகள், ஆய்வு செய்திகள் வெளியே வந்தாலும், மோடியின் ஆட்சியில் அதானி தண்டிக்கப்படப் போவதில்லை. ஏனென்றால், பிரதமர் மோடியே அதானியின் ஏவலாளாகத்தான் இருக்கிறார். மேலும், மோடி அரசின் துணையில்லாமல் அதானியால் இந்த ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டிருக்க முடியாது என்பது ஊரறிந்த உண்மை.
மோடியின் ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், நிலக்கரி உற்பத்தி போன்ற துறைகளில் அதானியின் ஆதிக்கம் நிறுவப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் கனவான இந்துராஷ்டிரம் என்பதே அதானி போன்ற பார்ப்பன, பனியா, மார்வாடி, பார்சி கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தைப் பொருளாதாரத்தில் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதுதான் என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.
மக்களின் வரிப்பணத்தையும் சேமிப்பையும் கொள்ளையடிப்பது போன்ற தேசவிரோத நடவடிக்கைகளுக்காக அதானி போன்றவர்களை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நிறுவனங்களை முடக்க வேண்டும், சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களை பொருளாதாரத்தில் அதானிகளின் ஆதிக்கத்தை அறுத்தெறியும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டியது பாசிசத்திற்கு எதிராகப் போராட நினைக்கும் ஒவ்வொருவரின் கடமையாகும்.
![]()
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
