Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 137

அமுல் மூலம் ஆவினை அழிக்கத்துடிக்கும் மோடி அரசு – பின்னணியில் அம்பானி!

0

குஜராத் மாநில அரசின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழ்நாட்டைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாகக் கூட்டுறவு மனப்பாண்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.


படிக்க: தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்! | மக்கள் அதிகாரம்


தமிழ்நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது ஆவின். இது தமிழ்நாட்டு பால் உற்பத்தியாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனம் ஆகும். இதுவரை எந்தவொரு மாநில கூட்டுறவு நிறுவனமும் மற்ற மாநில கூட்டுறவு சங்கங்களை ஒழித்து, சந்தையை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை.

ஆனால் அமுல் தற்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அமுல் தன்னுடைய மாநில எல்லையைத் தாண்டி பிற மாநிலங்களுக்குள் ஊடுருவி, மற்ற மாநில கூட்டுறவு சங்கங்களை ஒழித்துக்கட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த ஊடுருவலை மோடி அரசின் துணையோடு தான் மேற்கொண்டு வருகிறது.

அமுலை ஆட்டுவிக்கும் மோடி அரசு!

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவின் கூட்டுறவு நிறுவனம், கிராமப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம், மாவட்ட அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், மாநில அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆகிய மூன்றடுக்கு அமைப்பின் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் 9,673 கிராமப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் 4.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் முறைகேடுகளாலும் நிர்வாக குளறுபடிகளாலும் ஆவின் நிறுவனம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கிராமப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் படிப்படியாக கலைந்து வருகின்றன. பால் கொள்முதல் திறனும் குறைந்து வருகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை பல ஒன்றியங்களில் 90 நாள்களைக் கடந்தும் வழங்கப்படாத அவலநிலையே நிலவுகிறது. மேலும் ஆரோக்கியா, ஹட்சன் போன்ற தனியார் நிறுவனங்கள், ஆவினை விட ஒரு லிட்டர் பாலுக்கு அதிக விலையையும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நிலுவைத் தொகையை ஒப்படைப்பதால் அந்நிறுவனங்களை நோக்கி பால் உற்பத்தியாளர்கள் செல்கின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான் அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்திற்குள் நுழைகிறது. அதற்கு ஏற்றாற்போல சட்டத் திருத்தங்களை மேற்கொள்கிறது மோடி அரசு. இதற்கு முன்னர் அமுல் நிறுவனம், தமிழகத்தில் ஜஸ்கீரிம் போன்ற பால் சார்ந்த பொருட்களை மட்டும் விற்பனை செய்தது; பால் கொள்முதலில் ஈடுபடவில்லை. ஆனால் மோடி அரசின் சட்டத்திருத்தற்குப் பின்னால் தான் பால் கொள்முதலில் நுழைய விழைகிறது.


படிக்க: அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !


கடந்த 2022 டிசம்பரில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் (Multi State Co-operative Society Act) ஒன்றிய அரசு, கூட்டுறவு சங்கங்களின் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் சில திருத்தங்களை செய்துள்ளது. இது மாநில அரசுகளை எந்த அதிகாரமும் அற்ற இந்துராஷ்டிரத்தின் சமஸ்தானங்களாக மாற்றும் மோடி அரசின் திட்டத்தின் ஒரு அங்கம் ஆகும்.

இரண்டு மாநில கூட்டுறவு சங்கங்களை இணைப்பதற்கு கூட்டுறவு சங்க நிர்வாகிகளில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் இணைத்துக் கொள்ளலாம் என்றும், இனிமேல் கூட்டுறவு தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு தான் கூட்டுறவு சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளை நியமிக்கும் என்றும் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அமுல் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னால் கர்நாடகா மாநிலத்தின் நந்தினி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அது கர்நாடக மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக பின்வாங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஆவின், நந்தினி போன்ற எல்லா மாநில கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்டி, பால் கொள்முதல் மற்றும் விநியோகத்தை அமுல் கூட்டுறவு நிறுவனத்தின் ஒற்றைக் குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது மோடி அரசு.

எனவே அமுல் கூட்டுறவு நிறுவனம் தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதை, ஏற்கெனவே தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளன; கூடுதலாக அமுல் நிறுவனம் வருகிறது என்று மட்டும் கருதக் கூடாது. இது எல்லா மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களை அழிக்கத் துடிக்கும் மோடி அரசின் நோக்கத்தை பார்க்க மறுப்பதாகும்.

எல்லாம் அம்பானிக்காகவே!

தேசிய பணமாக்கல் கொள்கையின் மூலம் நாட்டின் பொதுச்சொத்துகளை எல்லாம் விற்று, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து வரும் மோடி அரசு அமுல் நிறுவனத்தை ஏகபோகமாக வளர்ப்பது கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கத்தான். குறிப்பாக கூறவேண்டுமென்றால், அம்பானியின் நலனுக்காகத்தான். 13 லட்சம் கோடி மதிப்பு கொண்ட இந்திய பால் மற்றும் பால் பொருட்களின் சந்தையை அம்பானிக்கு தூக்கி கொடுக்கத்தான்.

சந்தையை கைப்பற்ற அம்பானி ஒவ்வொரு மாநில அரசுகளிடமும் போய் நிற்க வேண்டும் அல்லவா? அதனால்தான் மோடி அரசு மாநில கூட்டுறவு நிறுவனங்களை அழித்து, அமுல் என்ற ஒற்றை தேசிய கூட்டுறவு நிறுவனத்தை கட்டியெழுப்ப விழைகிறது.


படிக்க: பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !


மாநில கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் அதற்கு வலுவான கட்டமைப்பு தேவை. அத்தகைய கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதற்கு திராணியுள்ள நிறுவனம் அமுல். இந்தியாவின் பால் உற்பத்தியில் முதலிடத்திலும், உலக அளவில் எட்டாவது இடத்திலும் உள்ளது.

மோடி அரசு, ஒருபுறம் அமுல் நிறுவனத்தின் மூலம் மாநில கூட்டுறவு நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மறுபுறம் தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் சட்டதிருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் (National Dairy Development Board) மாநில கூட்டுறவு நிறுவனங்களை நிர்வாகம் செய்வதற்கான அதிகாரம் கொண்டது.

இதன் இயக்குநர்களில் ஒருவர் தனியார் நிறுவனங்களை சார்ந்தவர் இடம்பெறலாம் என்றும், கூட்டுறவு சங்க அமைப்பு முறையோடு கூடுதலாக வேறு நிறுவன அமைப்பு முறைகளை கொண்டுவரலாம் என்றும், மாட்டுத் தீவன உற்பத்தி, பால் குறித்து ஆய்வு செய்யக்கூடிய துணை நிறுவனங்களின் பங்குகளை ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் விற்கலாம் என்றும் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

இந்தியாவின் பால் மற்றும் பால் பொருட்களின் சந்தையைக் கைப்பற்றுவதற்காக பல ஆண்டுகளாக அம்பானி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி அரசு சட்டத்தை திருத்திய பிறகு, ஐஸ்கீரிம் போன்ற பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் கூட்டுறவு நிறுவனத்தின் உயர்பதவிகளில் 41 ஆண்டுகள் பணிபுரிந்த ஆர்.எஸ்.சோதி அமுல் நிறுவனத்தில் இருந்து பதவி விலகி அம்பானி நிறுவனத்தில் இணைந்துள்ளார். இவர் அமுல் நிறுவனத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இவை அம்பானி நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையை குறி வைத்து வேலை செய்வதற்கான துலக்கமான சான்றுகளாகும்.

மோடி ஆட்சியே அம்பானி, அதானி போன்ற பார்ப்பன, பனியா, குஜராத்தி, மார்வாடி, சேட்டுக்களின் ஆட்சி தான். இவர்களே எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்; ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற்றப்படுகின்றனர். எனவே இந்திய பால் மற்றும் பால் பொருட்களின் சந்தையை அம்பானி கைப்பற்றுவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வெளிநாட்டு பால் பொருட்கள் சந்தையைக் கைப்பற்றுவதற்கான நோக்கமும் அம்பானியிடம் உள்ளது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் பால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. எனவே இந்திய பால் பொருட்கள் உற்பத்தி வெளிநாட்டு சந்தையை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற திட்டத்திலும் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

000

இந்தியா முழுவதும் உள்ள மாநில கூட்டுறவு நிறுவனங்கள், அந்தந்த மாநில விவசாயிகளான பால் உற்பத்தியாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது ஆகும். தமிழகத்தில் மட்டும் ஆவின் நிறுவனத்தை 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்து உள்ளனர். மேலும் இலாபமற்ற முறையில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தியவாசிய உணவுப் பொருளான பால், பெரும்பான்மையான மக்களை சென்று சேர்வதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்திய பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் சங்கிலியை அம்பானி முழுமையாக கைப்பற்றும் போது, மாநில கூட்டுறவு நிறுவனங்கள் ஒழித்துக் கட்டப்படுவதோடு மட்டுமல்லாமல், பல ஆயிரக்கணக்கான கோடி சொத்து மதிப்பு கொண்ட தேசிய பால்வள மேம்பாட்டு ஆணையத்தின் துணை நிறுவனங்களான மதர் டெய்ரி போன்ற நிறுவனங்கள் அம்பானியால் விழுங்கப்படும்.

பால் உற்பத்தியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அடிமாட்டு விலைக்கு பாலை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். உழைக்கும் மக்கள் வாங்க முடியாத அளவுக்கு பால் விலை உயர்த்தப்படும்; பல பிஞ்சுக் குழந்தைகளின் அத்தியாவசிய ஊட்டச்சத்து பொருளான பால் பல குழந்தைகளிடம் இருந்து அப்புறப்படுத்தப்படும் நிலை உருவாகும்.

சுருக்கமாக கூறினால், இந்தியா ஒரு பேரழிவை எதிர்நோக்கி இருக்கிறது. எனவே இந்த உண்மைகளை நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மோடி அரசின் இத்தகைய பாசிச, நாசகார சதித் திட்டத்திற்கு எதிராக, மாநிலங்களைக் கடந்து விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தால் பாதிக்கப்படும் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டங்களை கட்டடியமைக்க வேண்டும்.


பிரவீன்

விஷசாராய பலிகள்: திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் | ஆர்ப்பாட்டம்

சாதாரணமான மக்கள் கள்ளச்சாராயம் காய்ச்சினால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்ச அனுமதிக்கும் அதிகாரிகளும் அதே குற்றத்தைத் தானே செய்கிறார்கள். அவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அந்தப் பகுதியில் இருக்கும் கலெக்டரை, அரசு அதிகாரிகளை, காவல்துறையினரை என்ன லஞ்சம் வாங்கிய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கூறுகின்றது.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

சாராயகடை 10 இருக்கு | மக்கள் அதிகாரம் | மூடு டாஸ்மாக்கை! | ஆர்ப்பாட்டம்

5000 கடைகளைத் திறந்து வைத்து தமிழ்நாடு அரசு ஊற்றிக் கொடுப்பதானது சீர்கேடானது கேவலமானது; இதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தப் பகுதியில் சாராயக்கடைகள் 10 இருக்கின்றன ஆனால் பள்ளிக்கூடம் ஒன்று கூட இல்லை. டாஸ்மாக் வருமானத்தில் ஒரு அரசாங்கம் இயங்குவது என்பதை விட கேவலமானது வேறு ஏதாவது இருக்க முடியுமா..

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

தோழர் லிங்கனுக்கு செவ்வணக்கம் | மக்கள் அதிகாரம் | பத்திரிகை செய்தி

10.06.2023

பத்திரிகை செய்தி

தோழர் லிங்கனுக்கு செவ்வணக்கம்!

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான தோழர் லிங்கன் (வயது 50) நேற்று உயிரிழந்தார்.

நெய்தல் நிலத்தின் பண்பாட்டையும் மீனவ மக்களுடைய பிரச்சினைகளையும் விவாதமாக்க வேண்டும் என்பதில் தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடினார் என்பதே உண்மை . மீனவர் பிரச்சினை, சிங்காரவேலரின் பங்களிப்புகள் ஆகியவை தொடர்பான விவரங்களை தொடர்ச்சியாக எமது அமைப்புக்கு அளித்து வந்தார்.

மக்கள் அதிகாரம் தோழர்களை சந்திக்கும் போதெல்லாம் தன்னிடமிருந்த பல புத்தகங்களை எப்போதும் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

மக்கள் அதிகாரம் அமைப்புக்கு மட்டுமல்ல; போராடுகின்ற அனைத்து இயக்கங்களுக்கும் உற்ற தோழராக விளங்கினார். மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும் சிங்காரவேலர் தொடர்பாகவும் நூல்களை எழுதியுள்ளார். 1985 சென்னை துப்பாக்கி சூடு, ஒக்கி புயலின் ஐந்தாம் ஆண்டு ஆகியவை தொடர்பாக பேட்டிகள் அளித்து இருக்கிறார்.

மீனவர் மக்களின் போராட்டம் மட்டுமல்ல ; உரிமைக்கான போராட்டம் எங்கே நடந்தாலும் அங்கே வழக்கறிஞர் லிங்கன் இருப்பார். தமிழகத்தின் தென்கோடியிலே கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் என்ற கிராமத்தில் பிறந்து சென்னையிலேயே கால் நூற்றாண்டு காலமாக மக்களின் போராட்டங்களில் பங்கெடுத்த, பங்காற்றிய தோழர் லிங்கனுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக செவ்வணக்கம் செலுத்திக் கொள்கிறோம்!

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர் ,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366421

நிலக்கரிச் சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவிய மோடி: அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்

2007 ஆம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலத்தின் ஹஸ்தேவ் பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அதானி குழுமம் அனுமதி பெறுகிறது. இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால், அந்த வனப்பகுதியில் உள்ள மரங்களும் எண்ணற்ற வன உயிரினங்களும் பாதிக்கப்படும் என பல்வேறு அரசுத்துறை நிறுவனங்கள் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தன. இருப்பினும் ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கி விட்டார் அதானி.

2013-இல் நிலக்கரி சுரங்கம் தோண்ட ஆரம்பிக்கிறார் அதானி. தங்கள் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் நிலக்கரி சுரங்கம் பாதிக்கும் என அச்சம் அடைந்த கிராம மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு துணையாக LIFE (Legal Initiative for Forest and Environment) என்ற சட்ட அமைப்பு உதவ அவர்களுக்கு முன் வருகிறது. சுரங்கம் தோண்டும் நடவடிக்கை எதிர்த்து நீதிமன்றம் செல்கின்றனர்.

படிக்க : ஒடிசா ரயில் விபத்து – பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவி வானரப் படைகள்!

அதே பகுதியைச் சார்ந்த அலோக் சுற்றுலா எனும் சமூக செயல்பாட்டாளர் மக்களை நிலக்கரிச் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக ஒருங்கிணைக்க முயல்கிறார். அவர் ஒரு முன்னாள் அரசு அதிகாரி. அதே காலகட்டத்தில் ஸ்ரீதர் எனும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் Environics Trust எனும் லாபநோக்கற்ற NGO நடத்தி வருகிறார். அவர் ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் உள்ள சூழலியல் அறிஞர்களுக்கு அதானியின் நிலக்கரிச் சுரங்க திட்டத்தை விவரித்து மின்னஞ்சல் அனுப்புகின்றார்.

ஜூன் 2019-இல் அதானி நிறுவனத்தின் சார்பாக புரோக்கர் ஒருவர் ஸ்ரீதரை தொடர்பு கொள்கிறார். ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா பகுதியில் அதானியின் நிலக்கரிச் சுரங்கத்தை எதிர்த்து ஸ்ரீதர் வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்வதற்காக அதானி குழுமம் சார்பில் இடைத்தரகர் ஸ்ரீதரோடு பேச முனைகிறார்.

எவ்வித சமரசத்திற்கும் சம்மதிக்க மாட்டேன் என ஸ்ரீதர் தெரிவித்து விடுகிறார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் வருமான வரித்துறையினர் ஸ்ரீதரை விசாரிக்கின்றனர். அதானிக்கு எதிராக ஸ்ரீதர் தொடங்கிய வழக்கு பின்னர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது.

2020 ஜூனில் சுக்லாவின் போனை பெகாசஸ் மென்பொருளின் உதவி கொண்டு உளவு பார்க்கிறது மோடி அரசு. வாஷிங்டன் போஸ்ட் (Washington Post), பர்பிட்டன் ஸ்டோரிஸ் ஜர்னலிஸம் (Forbidden Stories Journalism) இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரிய வருகிறது. இந்நாள் வரை பெகாசஸ் பயன்பாட்டை மோடி அரசு ஒத்துக் கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. பெகாசஸ் பயன்பாட்டை விசாரிக்க உச்சநீதிமன்றமே ஒரு குழு அமைத்தது.

2022 செப்டம்பர் 7-ஆம் தேதி, CPR (Center for Policy Research), IPSMF (Independent andPublic Spirited Media Foundation), LIFE (Legal Initiative for Forest and Environment), Environics Trust, Oxfam India ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்கின்றனர்.

ஆக்ஸ்பாம் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணம் பெற்று நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிராக போராட தொழிலாளர்களை தூண்டியதாக ஒன்றிய அரசு Environics Trust மீது குற்றம் சாட்டியது. வெளிநாட்டு செயற்பாட்டாளர்களுக்கு நிலக்கரி சுரங்கம் பற்றிய தகவல்களை தந்ததாக என்பது Environics Trust நிறுவனர் ஸ்ரீதர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்திய நிறுவனங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாகவும், அதானியின் கோட்டா நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீதர் மீது ஒன்றிய அரசு குற்றஞ்சாட்டி நோட்டீஸ் அனுப்பியது.

அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று இந்தியாவின் நிலக்கரி சுரங்க திட்டங்களை முடக்க சதி செய்ததாக LIFE நிறுவனத்தின் இணை நிறுவனர் ரித்திக் தத்தா மீது ஒன்றிய அரசு குற்றம் சாட்டியது. அவருடைய மின்னஞ்சல்களை மேற்கோள்காட்டி அமெரிக்காவைச் சார்ந்த சுற்றுச்சூழல் வழக்கறிஞர்களுக்கு இந்தியாவின் 20-க்கும் மேற்பட்ட நிலக்கரி திட்டங்களின் தகவல்களை வழங்கியதாக இந்திய அரசு அவர் மீது குற்றம் சாட்டியது.

அந்த 20 திட்டங்களில் இரண்டு திட்டங்களில் மட்டுமே அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது. இருப்பினும், அதானி குழுமத்தின் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கம் ரித்திக் தாத்தாவுக்கு இருப்பதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நாட்டு நலனுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும் ஒன்றிய அரசு அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.

போராட்டக்காரர்களை தூண்டிவிட்டு, ஹஸ்தேவ் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை தடுத்ததாக CPR நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்க நிதியை பயன்படுத்தியதாக CPR நிறுவனத்தின் மீது ஒன்றிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படவில்லை என தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

வருமான வரி சோதனை நடைபெற்ற சில வாரங்களில் ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவிழந்துவிட்டன. செப்டம்பர் 26-ஆம் தேதி ஹஸ்தேவ் நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்கில் ஈடுபட்டிருந்த LIFE நிறுவன வழக்கறிஞர்கள் வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.

படிக்க : முஸ்லீம்கள் மீது தொடர் வெறுப்பைக் கக்கும் ஹைதராபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜாசிங்!

வழக்கிலிருந்து LIFE நிறுவன வழக்கறிஞர்கள் பின்வாங்கிய அதேநாளில், ஹஸ்தேவ் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை (Phase 2) தொடங்கும் வகையில் மரங்களை வெட்டும் வேலையை வனத்துறையினர் ஆரம்பித்தனர். அதை எதிர்த்த கிராம மக்களை கைது செய்தனர். விசாரணையில் உள்ள உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்தின் (Phase 2) திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகள் நிலக்கரிச் சுரங்கத்திற்கு அழிக்கப்படும். 2023-இல் LIFE, CPR, Environics Trust நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை இந்திய அரசு முடக்கியது. அதன் விளைவாக இந்நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி அதானி குழுமம் ஹஸ்தே காடுகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

(குறிப்பு: வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) இதழில் ஜூன் 5, 2023-இல் வெளிவந்த கட்டுரையின் அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

சு. விஜயபாஸ்கர்

disclaimer

முஸ்லீம்கள் மீது தொடர் வெறுப்பைக் கக்கும் ஹைதராபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜாசிங்!

1

தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பேசிவருபவர் ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜாசிங். அவர் இம்முறை தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வெறுப்பு பேச்சு பேசியுள்ளார். கடந்த ஜூன் 4 அன்று, தெலுங்கானா மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில், ‘இந்து’ப் பெண்கள் முஸ்லீம் பெண்களுடன் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினார்.

“நெற்றியில் திலகம் இட்டிருப்பவர் எனது சகோதரர்; ஒரு இந்து. திலகம் இட்டிருப்பவரிடம் மட்டுமே நான் நட்புக்கொள்வேன். இந்து பெண்கள் புர்கா அணிந்த பெண்களிடம் நட்புக் கொள்ளக்கூடாது. அஃப்தாப்கள் மூலம் மட்டும் அச்சுறுத்தலை சந்தித்து வந்தோம். ஆனால், தற்போது ஆயிஷாக்கள் மூலமும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நமது பெண்களை அஃப்தாப்கள்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் ஆயிஷாக்கள் இவர்கள்” என்று தி கேரளா ஸ்டோரி என்ற இந்தி திரைப்படத்தோடு பொருத்திப் பேசினார்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ‘லவ்‌‌ ஜிகாத்’ எனும் முஸ்லீம் வெறுப்பு போலிப் பரப்புரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ‘இந்து’ப் பெண்களை மதம் மாற்றும் பொருட்டு முஸ்லீம் ஆண்கள் திட்டமிட்டே காதலிப்பதாக இழிவாக சித்தரிக்கும் திரைப்படம் அது. இந்த ஒரே காரணத்திற்காக அத்தத் திரைப்படம் சங்கப் பரிவார் கும்பலின் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க : ஒடிசா ரயில் விபத்து – பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவி வானரப் படைகள்!


கடந்த ஆகஸ்ட் 2022-இல், நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேசியதாக ஹைதராபாத் போலீசால் கைது செய்யப்பட்ட ராஜாசிங், சர்வதேச அழுத்தங்கள் காரணமாக பா.ஜ.க-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 75 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. எந்த மதத்திற்கு எதிராகவும் வெறுப்புப் பேச்சுகளையோ அவதூறு பேச்சுகளையோ பேசக்கூடாது என்றும், சமூக வலைதளங்களிலும் அவ்விதம் பதிவிடக்கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

ஆனால், ராஜாசிங் நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மத வெறுப்புப் பேச்சுகளை பேசி வருகிறார். கடந்த ஜனவரி – பிப்ரவரி மாதங்களில், மகாராஷ்டிராவில் இந்து தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைத்து நடத்திய பல்வேறு பேரணிகளில் கலந்து கொண்டு முஸ்லீம்களைத் தாக்க வேண்டும் புறக்கணிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். மங்கல்ஹாட் போலீசு மகாராஷ்டிராவில் அவர் பேசிய முஸ்லீம் வெறுப்பு பேச்சு குறித்து பலமுறை காரணம் கேட்கும் குறிப்பாணைகளை (show-cause notice) அனுப்பியுள்ளது. ஆனால், அவை எதுவும் அவருடைய வெறுப்பு பேச்சைத் தடுத்து நிறுத்தவில்லை.

முன்னதாக, ஹைதராபாத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற ராம நவமி ஷோபா யாத்திரையில் (Ram Navami Shoba Yatra) கலந்துகொண்ட அவர் முஸ்லீம்களை தாக்கிப் பேசியதோடு மட்டுமல்லாமல், ஒரு இந்து நாட்டை -அகண்ட பாரதத்தை- ஏற்படுத்துவதற்கான அரைகூவலையும் விடுத்தார்.


படிக்க : ‘வளர்ச்சி’யின் பெயரால் குறி வைக்கப்படும் விவசாய நிலங்கள்!


“இன்று இந்தியாவில் 100 கோடி இந்துக்கள் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது ஏன் இந்தியாவை இந்து நாடு என்று பிரகடனம் செய்யக்கூடாது? இன்று 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளன; 150-க்கும் மேற்பட்ட கிறித்துவ நாடுகள் உள்ளன. எனவே, அகண்ட இந்து ராஷ்டிரத்தை எதிர்க்கும் ஆண்மையற்ற தலைவர்களை பார்த்துக் கேட்கிறேன்: ஏன் இந்த ராஷ்டிரத்தை எதிர்க்கிறீர்கள்?” என்று அவர் பேசினார்.

மோடி அரசு குறித்தும் அதானி குறித்தும் கேள்வி எழுப்புபவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. கேள்வி கேட்டால் உ.பா சட்டம் பாய்கிறது; எம்.பி பதவி பறிக்கப்படுகிறது. ஆனால், காவி பாசிஸ்டுகளுக்கோ கட்டுப்பாடற்ற கருத்து சுதந்திரம் வழங்கப்படுகிறது. எனவே ‘இந்து ராஷ்டிர நீதி’யின்படி பாசிஸ்டுகளுக்கு மட்டுமே ஜனநாயக உரிமைகள் வழங்கப்படும்.


பொம்மி

ஒடிசா ரயில் விபத்து – பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவி வானரப் படைகள்!

டந்த ஜூன் 2 ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகா பஜார் ரயில் நிலையம் அருகே மாலை 6.30 மணி அளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. ஒன்று சரக்கு ரயில். மற்ற இரண்டும் பயணிகள் ரயில். இதுவரை அரசுத் தரவுகளின்படி 288 பேர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நூற்றாண்டில் இது ஒரு கோரமான ரயில் விபத்து ஆகும்.

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் உடல்கள் நசுங்கி, சிதறிக் கிடக்கும் கொடூரத்தை காணும் போது நம் நெஞ்சு கணக்கிறது. விபத்து ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்கள் இன்னும் மீண்டபாடில்லை. சடலங்களை மரபணு பரிசோதனை மூலம் தான் அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவலநிலையே நிலவுகிறது. இதுவரை 205 சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்து மோடி அரசின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் இரயில்வே துறை திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதும், தீவிரமாக தனியார்மயக் கொள்கை புகுத்தப்பட்டதன் விளைவே ஆகும்.

படிக்க : முசாஃபர்நகர் கலவரம்: “எனது போராட்டம் இன்னும் ஓயவில்லை!”

ரயில் விபத்துகளைத் தடுக்கக்கூடிய “கவச்” (கவசம்) தொழில்நுட்பம் இரண்டு சதவிகித ரயில் பாதைகளில் மட்டும் பொருத்தப்பட்டுள்ளதும்; சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்பு முறையில் (எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் சிஸ்டம்) உள்ள குறைபாடுகள் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே ரயில்வே தெற்கு மண்டல அதிகாரி எச்சரித்தும் அதை ரயில்வே துறை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாததும்; 3.12 இலட்சம் ஊழியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும்; ரயில்வே துறைக்கு ஒதுக்கும் நிதி படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதும் அதற்கான சான்றுகளாகும்.

ரயில்வே துறை திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதை காங்கிரஸ், சிபிஎம் போன்ற எதிர்க்கட்சிகளே பிரச்சாரம் செய்து வருகின்றன. இதன் மூலம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நாறி வருகிறது மோடி கும்பல். ஹிண்டன்பர்க் அறிக்கை, பிபிசி ஆவணப்படம், கர்நாடக தேர்தல் தோல்வி, நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து இருப்பது, மணிப்பூர் கலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த ரயில் விபத்தினாலும் மோடி பிம்பம் சரிந்து வருகிறது

ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு எதிர்வினையாக மோடி கும்பல், அரசியல் ஆதாயம் தேடுவதாக எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஜனநாயக சக்திகள் பலரும் மோடி அரசை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். துயரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என பா.ஜ.க-வை விமர்சிக்கும் ஜனநாயக சக்திகளுக்கு காவிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மோடி கும்பல் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நாறி வருவதை தடுப்பதற்காக சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது காவிக் கும்பல். “ரயில் ஜிகாத்” என்ற பெயரில் ரயில் விபத்திற்கு முஸ்லிம்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் நயவஞ்சக பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன சங்கி வானரப் படைகள்.

தி ரேண்டம் இந்தியன் (The Random Indian) என்ற டிவிட்டர் பக்கம் விபத்து நடந்து இடத்திற்கு அருகில் உள்ள வெள்ளைக் கட்டிடத்தை நோக்கி அம்புக்குறியிட்டு காட்டி “நேற்று வெள்ளிக்கிழமை” என்று பதிவிட்டு இருந்தது. அதாவது வெள்ளைக் கட்டிடத்தை மசூதி என்று கூறுகிறது; நேற்று வெள்ளிக் கிழமை என்று கூறுவதன் மூலம் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் கட்டாயம் தொழுகைக்கு வந்து இருப்பார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இதன் மூலம் இந்த ரயில் விபத்திற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று மறைமுகமாக கூறுகிறது.

இந்த பதிவு டிவிட்டரில் வைரலாகி 40 லட்சம் பார்வைகளையும் 4,500 மறுபதிவுகளையும் பெற்றது. மேலும் மற்றொரு பதிவில் விபத்து நடந்த பாலசோர் பகுதி என்பது சட்டவிரோதமாக குடியேறிய ரோங்கியா முஸ்லிம்களின் மையமாக உள்ளது என்றும் பதிவிட்டு இருந்தது. இப்பதிவும் வைரலாகியது. இந்த நச்சுப் பிரச்சாரத்தை உண்மை சரிபார்ப்பு இணைய தளமான “ஆல்ட் நீயூஸ்” அம்பலப்படுத்தியது. வெள்ளைக் கட்டிடம் கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கம் (Iskcon) நடத்தும் ஜெயின் கோயில் என்பதை கண்டறிந்து வெளியிட்டது.

ஆனால் “ரயில் ஜிகாத்”, “நாசவேலை”, “சதி” என சங்கி வானரப் படைகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ரயில்வே சிக்னலை தவறாக கொடுத்தது ஷாரிப் என்ற முஸ்லிம் இளைஞர் என்ற பொய்ச் செய்தியையும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் சங்கிக் கும்பல், ரயில் விபத்து குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்றும்; “ஸ்டாப்ரிசர்வேஷன்இன்ரயில்வே” (#Stopreservationinrailway) என்ற ஹேஷ்டேக் பெயரில் ரயில் விபத்திற்கு இடஒதுக்கீடு மூலம் ரயில்வேயில் பணிபுரியும் தகுதியற்ற நபர்கள் தான் காரணம் என்றும்; இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க வேண்டும் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்துவருகிறது.

மேற்கூறிய நச்சுப் பிரச்சாரத்தில் குறிவைத்து தாக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான். அதற்கு உதவி செய்யும் விதமாக தான் ரயில்வே அமைச்சரின் கூற்றும் அமைந்துள்ளது. ரயில் விபத்துக்கு சிக்னல் மற்றும் தடம் மாற்றும் மின்னணு அமைப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றமே காரணம் என்றும் இதன் பின்னணியில் சதி இருக்கலாம் என்று கூறியுள்ளார். அந்த கோணத்தில்தான் போலீசின் முதல் தகவல் அறிக்கையும், சிபிஐ விசாரணையும் அமைந்துள்ளது.

ஒருபுறம் முஸ்லிம் மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயலும் பிரச்சாரம் என்றால், மறுபுறம் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு எதிராக “ஸ்டாண்ட்வித்அஸ்வினிவைஷ்ணவ்” (#Standwithashwinivaishnaw) என்ற ஹேஷ்டேக்கில் ரயில்வே அமைச்சர் மற்றும் மோடி அரசாங்கத்தின் துதிபாடி வருகிறது காவிக் கும்பல்.

அந்த பதிவுகள் வைஷ்ணவின் கீழ் இரயில்வே துறையின் கடந்த கால சாதனைகளை எடுத்துக்காட்டுகின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதற்காக அவரை பாராட்டுகின்றன. விபத்தால் சேதமடைந்த ரயில் தண்டவாளங்கள் 51 மணி நேரத்திற்குள் மறுசீரமைக்கப்பட்டு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டதாக பெருமை கொள்கின்றன. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று பதவி விலகிய அமைச்சர்களை கேலி செய்கின்றன.

காலங்காலமாக பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் காட்டுவதையும், திட்டமிட்டு கலவரங்களை தூண்டுவதையும் ஒரு வழிமுறையாக கையாண்டு வருகின்றனர், காவி பாசிஸ்டுகள். இப்பிரச்சாரங்கள் பிரச்சனையின் உண்மையான காரணத்தை மூடி மறைப்பதோடு மட்டுமல்லாமல், முஸ்லிம் மதவெறியை தூண்டி இந்து மக்களை தன் பக்கம் திரட்டிக் கொள்வதற்கு காவிக் கும்பலுக்கு வழியேற்படுத்தி கொடுக்கிறது.

படிக்க : புதிய நாடாளுமன்ற கட்டடம்: இந்து ராஷ்டிரத்தின் மடம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில், கொரோனா நுண்கிருமியை தப்லீக் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள் பரப்பியதாக மேற்கொள்ளப்பட்ட காவிகளின் நச்சுப் பிரச்சாரம் அதற்கு சான்றாகும்.

இத்தகைய நச்சுப் பிரச்சாரங்கள் தமிழக மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகளால் அவை முறியடிக்கப்படுகின்றன. ஆனால், வட இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

எனவே சங்கிகளின் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது மோடி- அமித்ஷா பாசிசக் கும்பலை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒவ்வொருவரின் கடமை ஆகும். காவிகளின் கோட்டைகளான உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநில மக்களை சென்றடையும் வகையில் அப்பிரச்சாரங்கள் அமைய வேண்டும்.

குயிலி

ஆளுநர் ஆர்.என்.ரவி திமிர் பேச்சு | தோழர் அமிர்தா

ஆளுநர் ஆர்.என்.ரவி திமிர் பேச்சு | தோழர் அமிர்தா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம் வாருங்கள்! | தோழர் ஆ.கா.சிவா

பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம் வாருங்கள்! | தோழர் ஆ.கா.சிவா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

‘வளர்ச்சி’யின் பெயரால் குறி வைக்கப்படும் விவசாய நிலங்கள்!

டலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கப் பணிகளுக்காக, பாலியப்பட்டு மற்றும்  உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க என தொடர்ந்து விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தி.மு.க அரசு.  இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, நா.புதுப்பட்டி, நா.அரூர், பரளி, லத்துவாடி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2500 ஏக்கர் நிலம்,சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட இருக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. சிப்காட்டிற்காக இப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது அப்பகுதி சிறுகுறு விவசாயிகளைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

கடந்த 2021 சட்டமன்றக் கூட்டத்தொடரில், அறிவிக்கப்பட்டதுதான் இந்த சிப்காட். தொடக்கத்தில்,  மொத்த நிலத்தில் 79 சதவீதம் புறம்போக்கு நிலம் என்றும், 21 சதவீதம் பட்டா நிலங்களை எடுப்பதாகவும்  அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது, தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், 2500 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்படும் என்று எம்.பி பேசியது விவசாயிகளை உடனடியாகப் போராடத் தூண்டியிருக்கிறது.

படிக்க : விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே! || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

“சிப்காட் அமைக்கப்படும் இப்பகுதியானது தொடர்ச்சியாக பலன் தரும் விவசாயப் பகுதியாகும். வெங்காயம், காய்கறிகள், சோளம், கரும்பு, மக்காச் சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்றவை இங்கு விளைகின்றன. இங்கு விளையும் சின்ன வெங்காயத்தை பல்லடம், மைசூர் வரை விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். விவசாயம் மட்டுமல்லாது, ஆடு, மாடு வளர்ப்பதும் முக்கிய தொழிலாக இருக்கிறது. எங்கள் பகுதியை ஒட்டியியிருக்கும் கரடும், புறம்போக்கு நிலங்களும்தான் ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் பகுதியாக இருக்கிறது. மேலும், இக்கரட்டை நம்பிதான் எங்களது குடிநீர் ஆதாரமும் இருக்கிறது. ஏரி, சுனைகள்  உள்ள இப்பகுதியில்தான் சிப்காட் அமைய இருக்கிறது.  ஏரி, சுனைகள், கரட்டையும் உள்ளடக்கி சிப்காட் அமைத்துவிட்டால், பல குக்கிராமங்களின் வாழ்வாதாரமும், குடிநீர் ஆதாரமும் அழிக்கப்படும் என்பதால்தான் சிப்காட் அமைக்க வேண்டாம் என்கிறோம்” என்கிறார் சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.ராம்குமார்.

மேலும்,  “ஏற்கனவே சிப்காட்டுகள் அமைந்த எந்தப் பகுதியிலும் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. சிப்காட்டில் அமைக்கப்படும் ஆலைகள் லாப நோக்கத்திற்காக மட்டுமே இயங்கும் என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள்தான் மக்களுக்கு மிஞ்சும்.  வேலைக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களைத்தான் வேலைக்கு எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இங்கு சிப்காட் அமைப்பதால் எந்தப் பயனும் எங்களுக்கு இல்லை.  அதனால்தான் சிப்காட் அமைப்பதற்கு எதிராக தொடர்ச்சியாக  மக்களும், பல்வேறு கட்சிகளும் போராடி வருகிறோம். எங்களின் தொடர்ச்சியான, உறுதியான போராட்டத்தின் விளைவாகத்தான் வளையப்பட்டி ஊராட்சியில் சிப்காட் அமைப்பதற்கு எதிராகத் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. அதேசமயம், நா.புதுப்பட்டி ஊராட்சியில் அத்தீர்மானம் போடப்படவில்லை” என்கிறார்.

“இங்கிருக்கும் நிலத்தை, ஒவ்வொரு வரப்பாய் செதுக்கி விளைநிலங்களாக மாற்றியிருக்கிறோம். வெங்காயம், மரவள்ளி போன்றவை பயிரிடுவதால் ஓரளவு கஞ்சி குடிக்கிறோம். தற்போது அதையும் கெடுப்பதற்காக சிப்காட் வருகிறது.  எனக்கு 60 வயதாகிறது. மூன்று ஏக்கர் நிலத்தை வைத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலத்தை விட்டுட்டு போகணும்னா எங்க போவோம்? நிலத்திற்கு அரசு கொடுக்கிற காசை வைத்து என்ன செய்ய முடியும்? அந்தப் பணத்தை வைத்து வேறு நிலம் வாங்க முடியுமா? 60 வயதுக்கு மேல் என்ன செய்ய முடியும்? எங்களால் முடிந்தவரை போராடுகிறோம்” என்று வேதனையுடன் பேசுகிறார் விவசாயி  ஒருவர்.

ஏற்கனவே,  விவசாய உள்ளீட்டுப் பொருட்களின் விலையேற்றம், விளைபொருட்களுக்கு  உரிய விலை கிடைக்காமை, நீர்ப்பற்றாக்குறை ஆகியவற்றால் குற்றுயிரும், குலையுயிருமாக இருக்கும் விவசாயத்தையும், விவசாயிகளையும்,  ‘வளர்ச்சி’ என்ற பெயரில் ஒழித்துக் கட்டத் துடிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். விவசாய நிலங்களை சிப்காட் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து வருகின்றன.

தி.மு.க அரசால் கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணப்பு (சிறப்புத் திடங்களுக்கான) சட்டம் 2023, விவசாய நிலங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதற்கான ஒரு சட்டப்பூர்வ ஏற்பாடாகும். அரசின் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள அரசு நிலங்களையும், அந்நிலங்களில் உள்ள நீர்நிலைகளையும் சேர்த்து ஒருங்கிணைத்து கையகப்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கிறது இச்சட்டம். 250 ஏக்கருக்கு மேல்  தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.

இச்சட்டத்தின்படி, வளையப்பட்டி, நா. புதுப்பட்டி , பரளி, லத்துவாடி பகுதிகளில் அமையவுள்ள சிப்காட் சிறப்புத் திட்டமாக அறிவிக்கப்பட்டு விவசாய நிலங்களும், புறம்போக்கு நிலங்களும், அதில் உள்ள நீர்நிலைகளும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கப்படும் வாய்ப்பை மறுக்க முடியாது. அதேசயம், ஏற்கனவே, நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி பகுதியில், 78 நிறுவனங்களுக்கென கையகப்படுத்தப்பட்ட நிலமே புதர்மண்டிக் கிடக்கிறது. மேலும், இதே மாவட்டம் ராசாம்பாளையம் பகுதியில், கிட்டத்தட்ட 37 ஏக்கர் நிலத்தில் சிட்கோ அமைப்பதற்கான அறிவிப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு  தமிழக முதல்வர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இங்கும் எந்த முன்னேற்றமும் இல்லை.

படிக்க : ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு? | தோழர் வெற்றிவேல் செழியன்

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டநிலங்களே புதர் மண்டிக் கிடக்கின்ற சூழலில், சிப்காட்  என்ற பெயரில் என்ன நிறுவனம் அமைக்கப்படுகிறது என்று அறிவிக்காமலும், பாதிக்கப்படும் பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தாமலும் நில அளவீடு செய்யப்படுவதானது ‘சமூக நீதி’ பேசுகிற தி.மு.க அரசின் ஜனநாயக விரோதமான சர்வாதிகார நடவடிக்கையாகும். ‘வளர்ச்சி’ என்ற பெயரில், விவசாயத்தை ஒழித்துக் கட்டி, விவசாய நிலங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதை எதிர்ப்பதும், போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்பதும் நம் அனைவரின் கடமையாகும்.

அதேசமயம், மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களையும் – போராடும் மக்களையும், நாட்டிற்கு எதிரானவர்களாகவும், வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் இழிவுபடுத்துகிற பா.ஜ.க வும், அதன் அடிவருடியான அ.தி.மு.க-வும், வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காகவும், தி.மு.க எதிர்ப்பு என்ற வகையிலும், இப்பகுதி மக்களின் சிப்காட் எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கின்றன. எனவே தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்கள் இக்கார்ப்பரேட் சேவைக் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும், தங்களது நியாயமான போராட்டத்திற்காக இதர உழைக்கும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் அத்தியாவசியமானதாகும்.

வாகை சூடி

விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே! || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

08.06.2023

விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே!
தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!

தமிழ்நாடு அரசே!

தடுக்கும் ஆதிக்க சாதி வெறியர்களை கைது செய்! ஊருக்குள் நுழைய விடாதே!
தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!

பத்திரிகை செய்தி

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அடுத்த தர்மராஜா திரவுபதி அம்மன் கோயில்  1978 ஆம் ஆண்டு முதல் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலுக்கான வரியை தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட அனைத்து சாதியினரிடமும் வசூலிக்கிறது ஆதிக்க சாதியினரிடம் கட்டுப்பாட்டில் உள்ள ஊர் நிர்வாகம்.

இந்தக் கோயில் தங்களுக்கு சொந்தம் என்று வன்னியர் சாதியினர் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்தக் கோயில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.அதற்குப் பிறகும் தாழ்த்தப்பட்ட மக்கள் திரௌபதி அம்மன் கோயில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

படிக்க : மாநாட்டுத் தீர்மானங்கள் | அச்சுப் பிரதி

கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின்போது கூட்ட நெரிசல் காரணமாக தவறுதலாக  தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இருவர் கோயிலுக்குள் சென்று விட்டனர் .இதனைக் காரணமாக வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஆம்புலென்ஸில் ஏறிய போதும் , ஆம்புலன்ஸ் செல்ல விடாமல் ஆம்புலன்ஸ் – இன்உள்ளே புகுந்து அந்த மக்களை ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்கினர்.

தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கிய ஆதிக்க சாதி வெறியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இதன் தொடர்ச்சியாகவே தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய வழிபாட்டு உரிமையை இன்று வரை ஆதிக்க சாதி வெறியர்கள் மறுக்கின்றனர் .இப் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்படாததால் விழுப்புரம் மாவட்டம் நிர்வாகமானது தர்மராஜா திரௌபதி கோயிலுக்கு சீல் வைத்துள்ளது.

கோயிலுக்கு சீல் வைப்பதன் மூலம் இப் பிரச்சனையை ஒருபோதும் தீர்க்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் வழிபாட்டு உரிமையை தமிழ்நாடு அரசு முன் நின்று நடத்த வேண்டும் என்றும்  தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கக்கூடிய ஆதிக்க சாதி வெறியர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் ஊருக்கு  நுழைவும் தடை விதிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் இதேபோன்று தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கக்கூடிய அனைத்து கோயில்களும் உடனே கணக்கெடுக்கப்பட வேண்டும்.  அந்தக் கோயில்களில் தமிழ்நாடு அரசே தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை முன்நின்று நடத்த வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு? | தோழர் வெற்றிவேல் செழியன்

ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு?
தோழர் வெற்றிவேல் செழியன்

ஜூன் 5-ஆம் தேதிசென்னையில் நடைபெற்ற SKM ஆர்ப்பாட்டத்தின் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள் ஆற்றிய உரை!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

முசாஃபர்நகர் கலவரம்: “எனது போராட்டம் இன்னும் ஓயவில்லை!”

2013 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம், முசாஃபர்நகரில் இந்துத்துவக் குண்டர்களால் நடத்தப்பட்ட கலவரத்தில் 60-க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய மக்கள் பலர் உயிருக்கு அஞ்சி தங்களது பகுதிகளை விட்டே வெளியேறுமளவுக்கு இஸ்லாமிய மக்கள் கடுமையாகத் தாக்குதலுக்குள்ளானார்கள். இக்கலவரத்தின்போது இஸ்லாமியப் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள். பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகளில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டு பேருக்கு 20 ஆண்டுக்கால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்குக்காக எட்டு ஆண்டுகளாக விடாப்பிடியான போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பாலியல் வன்கொடுமைக்குள்ளான 35 வயதான அஃப்ரீன், குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்பு வழங்குவதற்கு முன்பிருந்ததைவிட தற்போது பெரும் அச்சத்திற்குள்ளாகியிருப்பதாகக் கூறுகிறார். முன்பின் தெரியாதவர்களும் வழக்கு சம்பந்தமாகத் தனது கணவருக்கு போன் செய்து “அந்த வழக்கில் உனது மனைவி இருக்கிறார் என்று ஏன் சொல்லவில்லை” எனக் கேள்வி எழுப்புவதாகக் கூறுகிறார் அஃப்ரீன். இதனால் அவரது கணவர் சில நாட்கள் போனை அணைத்து வைத்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு தான் சந்தித்த இன்னல்களையும் அதற்கெதிரான போராட்டத்தையும் விவரிக்கிறார் அஃப்ரீன்.

“செப்டம்பர் 8, 2013 ஆம் ஆண்டு, இரு மகன்களுக்கும் உடல்நிலை சரியில்லாததால் எனது கணவர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்த நேரம். நான் எனது கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்தேன். அப்போது வீட்டிற்குள் நுழைந்த இந்துத்துவ குண்டர்கள் எனது குழந்தையைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி ஒருவர் பின் ஒருவராக என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்”.


படிக்க: பாஜகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !


அஃப்ரீனை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் வேறு யாருமல்ல. அவரது கணவரின் தையல்கடைக்கு வாடிக்கையாக வருபவர்கள்; அஃப்ரீனுக்கு நன்கு தெரிந்தவர்கள்தான். அக்கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது உடைமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. வீட்டை இழந்த அவர்கள் கிட்டத்தட்ட 8 மாதங்கள் நிவார முகாமில் தஞ்சமடைந்தனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பலர் தனக்குத் தனது குடும்பத்தினருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, வழக்கைத் தொடரவில்லை. ஆனால் அஃப்ரீன் வழக்கினை தொடர்ந்தார். இச்சூழலில் அஃப்ரீனுக்கு பெரும் துணையாக இருந்தது அவரது கணவர்தான். தனது மனைவிக்கு நியாயம் வேண்டி குற்றவாளிகளுக்கு எதிராகப் புகாரளிக்க போலிஸ் நிலையத்திற்கு அஃப்ரீனின் கணவர் சென்றபோது, ஒரு மாதத்திற்குப் பிறகு புகார் அளிக்க வந்ததாகவும் புகாரில் உண்மைத் தன்மை இல்லை என்றும் கூறி புகாரை எடுக்க மறுத்தது உ.பி போலிசு.

2014 பிப்ரவரி அஃப்ரீனை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று குற்றவாளிகள் மீது வழக்குப் பதிய போலிசுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அஃப்ரீன் வழக்குத் தொடுத்ததற்குப் பிறகு பாலியல் வன்கொடுமைக்குள்ளான 6 பெண்கள் வழக்கினை தொடர்ந்தார்கள். வழக்குத் தொடுத்த பிறகு, தான் அதிகளவில் அச்சுறுதல்களைச் சந்திக்க வேண்டியதாக இருந்தது என்கிறார் அஃப்ரீன். இவருடன் வழக்குத் தொடுத்த 7 பெண்களும், கொலை மிரட்டல்களால் அப்போதே வழக்கில் இருந்து பின் வாங்கிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கணவர், நாட்டில் அமைதியை நிலைநாட்டக் குற்றவாளிகளுடன் சமரசமாகச் செல்வது அவசியம் எனக் கூறியிருக்கிறார் என்று கூறும் அஃப்ரீன், தான் சிறு வயதில் இருந்து ஒன்றுக்கொன்றாகப் பழகி வந்த அக்கம் பக்கத்தினர், இந்து நண்பர்களாலே வெறுத்தொதுக்கப்பட்டபோதும், வழக்கில் இருந்து பின்வாங்கவில்லை இனியும் பின்வாங்கப் போவதுமில்லை எனத் தெரிவிக்கிறார்.

நெருக்கடிகள் அதிகரித்த போது, அஃப்ரீன் தனது குடும்பத்துடன் 15 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று குடிபெயர்ந்துள்ளார். “அங்கும் நிம்மதி இல்லை பலரும் தொந்தரவு செய்வார்கள். அங்கு நான் சகஜமாக இருக்கப் பல வருடங்கள் பிடித்தன. ஆனால் அங்கேயும் தன்னை பின் தொடர்ந்து மிரட்டல் விடுத்தார்கள்” என்கிறார் அஃப்ரீன். இதனால் தனது கணவரின் அன்றாட வாடிக்கையாளர்களையும் இழந்ததாகக் கூறுகிறார் அஃப்ரீன்.


படிக்க: முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்


பின்னர் சமூக செயற்பாட்டாளர்களின் சிலரின் உதவியுடன் அஃப்ரீனும் அவரது கணவரும் டெல்லிக்குக் குடிபெயர்ந்தார்கள். “இங்கு யாருக்கும் என்னைத் தெரியவில்லை” என்று பெருமூச்சுவிடுகிறார் அஃப்ரீன்.

இதுகுறித்து அஃப்ரீனின் வழக்கை மேற்கொண்டுவரும் வழக்கறிஞர், “பாலியல் வழக்குத் தொடுத்த 7 பேரில் இன்றுவரை அஃப்ரீன் மட்டுமே வழக்கில் உறுதியாக நிற்கிறார். மற்றவர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு வழக்கில் இருந்து பின்வாங்கப்பட்டனர். அஃப்ரீனுக்கும்ம் கொலை மிரட்டல்களால் பல வந்தன. அப்போது ஊரைவிட்டு வெளியேறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்” என்கிறார் அவர்.

இருப்பினும் டெல்லியில் தனது குடும்பத்தினை பராமரிக்க ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பியிருக்கிறார் அஃப்ரீன். “நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது மிகுந்த நெருக்கடிக்குள்ளானோம். எனது கணவர் வழக்குக்காக நீதிமன்றத்திற்குச் சென்றபோது பல முறை தாக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிருடன் திரும்பி வருவாரா என அச்சத்தில் பல நாட்கள் இருந்திருக்கிறேன்” என்கிறார்.

இந்தியாவில் மதக் கலவரங்களின்போது நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத்தான் அஃப்ரீனின் வழக்கிலும் பிரதிபலித்திருக்கிறது என்கிறார் சமூக உரிமை ஆர்வலர் ஃபரா நக்வி. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தாக்கும் சமூகம், தாக்கப்படும் சமூகத்தின் பெண்களை (பாலியல் ரீதியாக) குறிவைக்கிறது என்கிறார்.

இத்தகைய கலவரங்களின் போது அரசாங்கம் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொள்கிறது எனக் குற்றம் சாட்டும் நக்வி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்மீது திட்டமிட்டு நடத்தப்படுகின்ற வகுப்புவாத வன்முறைகள் அனைத்தும் அரசாங்கத்தின் உதவியில்லாமல் நடந்தேறுவதில்லை; ஆகவேதான் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பதில் அத்தகைய சிரமங்கள் உள்ளன என்கிறார்.

“பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்டவர்களுக்கு விடாப்பிடியான போராட்டமே அவசியம். தற்போது என் தொடர்பாக வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுக்கால சிறைத் விதிக்கப்பட்டிருக்கிறது எனினும் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் எனக்கும் எனது குழந்தைகளுக்கு எப்போதுமே ஆபத்தானவர்கள். அவர்களுக்கு எதிரான எனது போராட்டம் இன்னும் ஓயவில்லை; தொடரும்! ” என்கிறார் அஃப்ரீன்.


ஆதிலா

புதிய நாடாளுமன்ற கட்டடம்: இந்து ராஷ்டிரத்தின் மடம்!

ர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவார கும்பல் இந்தியாவின் பல்வேறு வரலாறுகளைத் திரித்து வருகிறது. கோழைகளில் வரலாறுகளையும், புராண புரட்டுகளையும் வரலாற்றுடன் இணைந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக புதிய நாடாளுமன்ற கட்டடமே இந்து ராஷ்டிரத்தின் மடமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

விடுதலை போராட்டத்தைப் பற்றியும், தியாகிகள் பற்றியும் உருவகப்படுத்தும் எவ்வித பொருட்களும் நாடாளுமன்ற கட்டடத்தில் இல்லை. அங்கு நிறைந்திருக்கும் ஓவியங்கள் சிலைகள் முழுவதும் சங் பரிவாரத்தின் புராண புரட்டுகளாகவே இருக்கிறது. இந்த இந்து ராஷ்டிரத்தின் மடமான புதிய நாடாளுமன்றத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சி.பி.எம் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள், நாடாளுமன்ற கட்டடம் பற்றி விவரித்து சன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை வினவு வாசகர்களுக்கான பதிவிடுகிறோம்.

நன்றி : சன் நியூஸ்

ஒடிசா இரயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மோடி அரசின் கோமாளித்தனம்

ஒடிசா இரயில் விபத்து: சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது மோடி அரசு!

புல்வாமா சர்ஜிக்கல் ஸ்டைர்கை போல ஒடிசா இரயில் விபத்தை பயன்படுத்த முயற்சிக்கும் மோடியின் இந்நடவடிக்கை கோமாளித்தனமாக இருக்கிறது.

குற்றவாளியாக மோடி அரசு பகிரங்கமாக அம்பலமாகியுள்ள நிலையில் இது அவருக்கெதிரான வெறுப்பை அதிகரிக்க மட்டுமே செய்கிறது.

தன் பிம்பம் சரிந்து வருவதை உணராமல், துக்கமான இந்த நேரத்தில் இந்த கோமாளித்தனத்தைக் கண்டு சிரிக்க முடியவில்லை, அருவருப்பாக இருக்கிறது!

நன்றி : புதிய ஜனநாயகம்