Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 136

நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய அல்வா!

வணிகப்பயன்பாட்டுக்கு நிலத்தை கையகப்படுத்தினால் நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் லாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய அல்வா!

சிப்காட் போன்ற வணிகப் பயன்பாட்டுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது நில உரிமையாளர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் லாபத்தில் குறிப்பிட்ட பங்குபெறும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு திட்டக்குழுவுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இழப்பீடை முழுவதும் தந்துவிட்டால் பணத்தை கையாள்வது தெரியாமல் வீணாக மக்கள் செலவு செய்து விடுவார்கள் என்றும் அக்கறைப்பட்டிருக்கிறது ஆணையம்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம்:

நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு சட்டம் 2013 என்ன சொல்கிறது என்றால், அரசானது மக்களின் நிலத்தை கையகப்படுத்தும்போது கருத்து கேட்பு நடத்த வேண்டும், சமூக பாதுகாப்பை கணக்கிட வேண்டும், போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், மறுவாழ்வு திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால் அச்சட்டத்தின் 105-வது பிரிவானது 13 விசயங்களை பட்டியலிட்டு அவற்றுக்காக நிலங்களை கையகப்படுத்தினால் கருத்து கேட்பு கூட்டத்தையோ சமூக பாதிப்பு கணக்கிட்டையோ செய்ய வேண்டியதில்லை என்று கூறுகிறது.

படிக்க : மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!

இந்த பைத்தியக்கார சட்டத்தை 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்து திருத்தம் செய்தது. இந்தச் சட்டத்தின் படி பெரும் முதலாளிகள் கொழுத்து திரிய, சாதாரண உழைக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த மக்களே சாட்சி:

தற்போது ஒன்றிய அரசின் என்.எல்.சி நிர்வாகம் சுரங்கம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றிற்காக நிலங்களை கையகப்படுத்துவது என்று திட்டமிட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். நிர்வாகம் தரும் இழப்பீடுகளை மற்றும் உத்தரவாதங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து இருக்கின்றனர். மக்களின் எதிர்ப்புக்கு காரணம் கடந்த காலங்களில் மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்துக் கொண்ட என்.எல்.சி நிர்வாகம் வாக்களித்தபடி இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்காமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது என்பதுதான்.

இதேபோல் கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்கு திமுக அரசும், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைத்திட நிலங்களை கையகப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர்.

மக்களின் இதுபோன்ற எதிர்ப்புகளை காயடித்து போராட்டத்தை திசை திருப்பவே லாபத்தில் பங்கு என்கிற புதிய சரக்கை ஆளும் வர்க்கம் இப்போது இறக்கியிருக்கிறது.

கருத்து கேட்பு, உரிய இழப்பீடு, மறுவாழ்வு, வேலைக்கு உத்தரவாதம் என்று தான் சொல்லிய எந்த வாக்குறுதியையும் தானே நிறைவேற்றாத இந்த அரசுதான் தற்போது நிறுவனங்களுக்கு நிலத்தை பறிகொடுக்கும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு  நிறுவனத்திடம் இருந்து லாபத்தில் பங்கு வாங்கி தருவதாக கதை அளக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இந்தியா வளர்கிறது என்ற கோஷம் நம் செவியை கிழித்து கொண்டிருந்த போதுதான் நோக்கியா நிறுவனம் ஆலையை மூடிவிட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை தெருவில் நிறுத்தி விட்டு, சத்தமின்றி கடையை காலி செய்து ஓடியது.

படிக்க : வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் ! மறுத்தால் நாணயமற்றவன் !!

கார்ப்பரேட் முதலாளிகள் கடல் கடந்து முதலீடு செய்வது இயற்கை வளங்களையும், உழைப்பையும் சுரண்டத்தானே அன்றி உழைக்கும் மக்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்க அல்ல! கேட்பவன் கேனையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிற கதை தான் இது! லாபத்தில் பங்கு என்பது முதலாளித்துவம் கண்டுபிடித்த அயோக்கியத்தனம். அதை வாங்கித் தருகிறோம் என அரசு சொல்வது அதனினும் மாபெரும் அயோக்கியத்தனம்.

சிப்காட் போன்ற வணிக நிறுவனங்களுக்காக நிலத்தை பறிக்கும்போது இழப்பீடாக அரசு தருகின்ற பணம் மக்களின் பணம். அதையும் அந்த நிறுவனத்திடமே கொடுத்துவிட்டு அவர்கள் லாபமீட்டி அதில் ஒரு பங்கு மக்களுக்கு கொடுப்பார்கள் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று.

மக்களை தெரிந்தே முட்டாளாக்குவது, கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை கூறு போட்டுக் கொடுப்பது என்பது எப்போதும் அரசுக்கு கைவந்த கலைதான். ஆனால் அதை முறியடிக்க  மக்களும் ஒரு கலையை கற்றுணர்ந்து வைத்திருக்கிறார்கள். அதன் பெயர் போராட்டம்!

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்

திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி | வீடியோ

பாதிக்கப்பட்ட ஆண்ட்ரியாவை, குற்றவாளிகள் இருக்கும் போலீஸ் ஸ்டேசனிலேயே அந்த நள்ளிரவில் பெண் காவல் ஆய்வாளர் அனுபமா குமார் விட்டுச் செல்வது, பின்னர் தேடாமலே இருப்பது, அவர் பேசிய வசனத்திற்கும் காட்சிக்கும் துளியும் பொருந்தவில்லை. பெண் காவலர்கள் நல்லவர்கள் என்பது போலும், பெண் நீதிபதிகள் நல்லவர்கள் என்பது போலும் காட்சிகள் படத்தில் வருகிறது. இந்த அரசு கட்டமைப்பில் ஆண், பெண் என்று பார்க்க முடியாது. அதிகாரத்தில் இருக்க கூடிய பெண்கள் அந்த சட்ட வரம்பிற்குள் நின்று தான் வேலை செய்ய முடியும். ஒட்டுமொத்த சமூகமே பெண்களுக்கு எதிரானதாக, பெண்கள் வாழ தகுதியிழந்த சமூகமாக மாறிவரும் சூழலில் மேல் அதிகாரி பெண்ணாக இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும் என்பது ஒரு ஹம்பக்.

தமிழகத்தில் வாச்சாத்தி சம்பவம், சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, ரீட்டா மேரி என நிறைய வழக்குகளே இதற்கு சாட்சி. போலீசு நிலையத்திலும், அரசு அதிகாரிகளாலும் நடந்த குற்றங்களுக்கு சாட்சி. மக்கள் போராட்டங்களே அரிதிலும் அரிதான வழக்குகளில் குறைந்த பட்ச தண்டனையை வாங்கி தந்திருக்கிறது என்பதே நிதர்சனம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

29.11.2022

ஆன்லைன் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி!
ஆண்டுக்கு பல கோடி தண்டச்செலவு!
இனியும் வேண்டாத தசைப் பிண்டத்தை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

பத்திரிகை செய்தி

மிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி,  பணத்தை இழந்ததால் 30-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து அக்டோபர் 1-ம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

27 நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்ட மசோதா பற்றி வாயை திறக்காத ஆளுநர் ரவி, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) கடிதம் அனுப்பினார். இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

படிக்க : ஆன்லைன் சூதாட்டம்: இதுவும் ஒரு போதையே!

இதனிடையே, தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் பகுதியில் வசித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சடத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் நேற்று (நவம்பர் 28) காலாவதியிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நன்றாக உண்டு, உறங்கி சொகுசாக வாழ்க்கையை கழிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் எதிரான எல்லா விதமான உளவாளி மற்றும் மக்கள் விரோத வேலைகளை திறம்பட செய்து வருகின்ற ஆர்.என்.ரவி, வேண்டுமென்றே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுக்கிறார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கக்கூடிய, எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்னும் கும்பலாக இருக்கக்கூடிய மோடி, நிர்மலா சீதாராமனின் நோக்கத்துக்கு தமிழ்நாடு அரசு இந்த தடைச் சட்டம் தடையாக இருக்கும் என்பதாலேயே ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களால் பலமுறை வலியுறுத்தப்பட்ட, தமிழ்நாட்டு அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு இந்த ஆளுநர் ஒப்புதலளிக்கவில்லை என்றால், இப்படிப்பட்ட ஆளுநர் தமிழ்நாட்டுக்கு எதற்கு என்ற கேள்வியை நாம் உரக்க எழுப்ப வேண்டும்?

இதுவரை ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு அரசின் 36 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். எந்த வேலையை செய்ய ஒருவர் நியமிக்கப்பட்டாரோ, அந்தப் பணியை செய்ய மறுக்கும் பொழுது அவரை அப்பணியில் இருந்து வெளியேற்றுவதே நலம். அதன்படி மக்கள் நலன் வேலையை செய்யாமல் மக்கள் விரோதி வேலைகளை செய்யும் இந்த ஆளுநர் வெளியேற்றப்படுவதே சரியானதாக இருக்கும்.

சென்னையில் உள்ள ராஜ்பவன் 156.14 ஏக்கர் பரப்பிலும், உதகை ராஜ்பவன் 86.72 ஏக்கர் பரப்பிலும் அமைந்துள்ளன. இந்தக் கட்டடங்களைப் பராமரிக்க ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

ஆளுநருக்கான உணவு, சுற்றுப்பயணம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், இதரச் செலவுகள் இதில் செய்துகொள்ள வேண்டும். இதுதவிர ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புக்கு ஃபர்னிச்சர் பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம்.

தமிழக ஆளுநர் மாளிகைக்கான ஆண்டுச்செலவு கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய். இப்படி எல்லாம் சல்லாபமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆளுநர் தன் விருப்பம்போல ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவக் கொள்கைகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்.

படிக்க : ‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார், விவசாய சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து மனுவை பெற மாட்டார், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்க மாட்டார் என்றால், இப்படிப்பட்ட ஆளுநருக்கு இனியும் தமிழ்நாடு அரசு எவ்வித நிதியும் வழங்கக்கூடாது.

ஆளுநர் மாளிகை தொடர்பான செலவுகள் உள்ளிட்ட எதற்கும் தமிழ்நாடு அரசு நிதி அளிக்கக்கூடாது.

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைப் போல மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் இந்த ஆளுநருடைய அடிப்படை வசதிகள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

ஆளுநருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் வேலை செய்யக்கூடிய அனைத்து பணியாளர்களையும் தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.

ஆளுநரை வெளியேற்றுவற்காக அனைத்து கட்சிகளுடனும் மக்களோடும் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம் 
தமிழ்நாடு – புதுவை
9962366321.

திருப்பூர்: நம்பியாம்பாளையம் பஞ்சாயத்து – அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் !

ம்பியாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை வசதிகள் வேண்டி 20 ஆண்டுகாலமாக மனு கொடுத்துவரும் மக்கள்; கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் நம்பியாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட சுண்டக்காம்பாளையம், கரையப்பாளையம், ஆலங்காட்டுப்பாளையம் மற்றும் மாரங்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரே வீட்டில் நான்கு குடும்பங்கள் வசிப்பது, மழை காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகுவது, எப்போது வேண்டுமானாலும் வீடு இடிந்து விழும் நிலை, பெண்களுக்கான கழிப்பிட வசதி இல்லாதது என மக்களின் அடிப்படை தேவைகளே கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மாரங்காடு கிராமத்தில் 18 வீடுகள், 28 குடும்பங்கள், மொத்தமாக 135 பேரும், சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் 82 வீடுகள், 130 குடும்பங்கள், 400க்கும் மேற்பட்ட மக்களும், கரையப்பாளையம் கிராமத்தில் 12 வீடுகள், 30 குடும்பங்கள், 150 பேரும் வசிக்கின்றனர். குறிப்பாக, சி. முருகன் என்பவரின் குடும்பத்தில் மட்டும் ஒரே வீட்டில் 4 குடும்பங்கள் என 16 பேர் வசிக்கும் அவலநிலை உள்ளது.

படிக்க : மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுக! | மக்கள் அதிகாரம்

பெண்கள் இயற்கை உபாதை கழிப்பதற்குக்கூட சிரமப்பட்டு தான் வாழ்ந்து வருகின்றனர். சுடுகாட்டை ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

அனைத்து கிராமங்களுக்கும் முன்னும் பல ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் இருக்கின்றன. ஆனால் வீடுகள் இடிந்து விழும் நிலையிலும், ஒரு வீட்டில் 10க்கும் மேற்பட்ட நபர்களும், ஒரு வீட்டில் 3, 4 குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து, பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரிகள், தாசில்தார், கலெக்டர் ஆகியோர்களிடம் 20 ஆண்டுகளாக மனு கொடுத்தும், பல்வேறு மறியல் போராட்டக்கள் செய்தும் வந்துள்ளனர். ஆனால் இன்றுவரை எந்தவொரு அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்கப்படவில்லை.

இங்கு சாதிய பாகுபாடு நிலவுவதால் ஆதிக்க சாதியினர் மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டு சேர்ந்து பட்டியலின மக்களுக்கு சேர வேண்டிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது, அரசு சலுகைகளை கிடைக்காமல் இழுத்தடிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். சுடுகாட்டையும் ஆக்கிரமிப்பு செய்து ஆதிக்க சாதியினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்

பட்டியலின மக்களுக்கான உரிமைகளைக் கேட்க குரல் கொடுப்பவர்களை கைது செய்வது, வீடுகளில் புகுந்து மிரட்டுவது என போலிசு அதிகாரிகள் அடாவடிதனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

***

இலவச வீட்டுமனை பட்டா வேண்டி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். கலெக்டரிடம் மனு தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டும் கண்டுக்கொள்ளவில்லை. அதனால் 15.11.2022 அன்று ஊர்மக்கள் ஒன்றுகூடி புறம்போக்கு நிலத்தில் சாலை அமைத்தும், அம்பேத்கர் நற்பணி மன்றம் கூலி தொழிலாளர் சங்கம் என்ற பதாகைகளை வைத்தும் அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதே கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களின் அடிபடை வசதிகளுக்காக தொடர்ந்து மக்களோடு போராடி வந்திருக்கின்றனர்.

அப்பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்திருந்த கலெக்டரை சந்தித்து புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது, கலெக்டர் “மக்கள் அதிகாரம் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்” என்று கூறினார். கலெக்டரின் இந்த அவதூறுக்கு மக்கள் ஒன்றுக்கூடி “அவர் எங்களுக்காக தான் நிற்கின்றார், நீங்கள் தான் எங்களை கண்டுகொள்வதில்லை, எத்தனை முறை தான் நாங்கள் மனு கொடுப்பது” என்று வாதிட்டனர். மக்களின் வார்த்தைகளுக்கு பதில் சொல்லாமல் “உங்களிடமெல்லாம் பேச முடியாது” என்று அதிகார திமிரோடு நடந்து கொண்டுள்ளார் கலெக்டர்.

கலெக்டர் வந்து நிலத்தை ஆய்வு செய்வார் என்று கூறிச்சென்ற அரசு அதிகாரிகள், அடுத்த நாள் போலிசுடன் வந்தனர். “இது குட்டைக்கான புறம்போக்கு நிலம்” என்றும், “57 பெண்கள் மீது வழக்கு போட்டுள்ளோம், அவர்களை கைது செய்கிறோம்” என்று போலிசு அதிகாரிகள் மிரட்டினர். பின்னர், தோழர் கார்த்திகேயனை கைது செய்து வண்டியில் ஏற்றியபோது மக்கள் கோசமிட்டனர், அங்கிருந்த 60 நபர்களையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

மேலும், வாடகைக்கு எடுத்துவந்த 40 சேர்களையும் கிராம நிர்வாக அதிகாரிகள் தூக்கிச் சென்றனர். வாடகை சேர்களை பெற வேண்டி செல்லும் போதெல்லாம் கிராம நிர்வாக அதிகாரி 5 நாட்களாக அலைக்கழித்து வந்துள்ளனர். பின்பு சேர்களை கொடுத்துள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தில் தின்று கொழுப்பது மட்டுமல்லாமல் மக்களிடம் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் லஞ்சம் பெற்று வரும் இந்த அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் மக்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர்.

படிக்க : கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை

மக்களின்  அடிப்படை கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அரசு அதிகாரிகளும், தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்காக காலில் விழும் அரசியல்வாதிகளும், சாதிய கொடுமைகளை அரங்கேற்றும் ஆதிக்க சாதியினரும் என்றும் மாறப்போவதில்லை. உழைக்கும் மக்களின் போர்க்குணமான தொடர் போராட்டங்களே அவர்களை பணியவைக்கின்றன.

இலவச வீட்டுமனை பட்டா வேண்டிய 20 ஆண்டுகால மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடு!

ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள சுடுகாட்டை மீட்டுக்கொடு!

பெண்களுக்கான கழிப்பிட வசதியை செய்துகொடு!

போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மக்கள் அதிகாரம் தலைமையில் ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம், மக்கள் பாதுகாப்பு அமைப்பு, திராவிடர் தமிழர் கட்சி, தமிழ் சிறுத்தைகள் கட்சி, சமூக விடுதலை கட்சி ஆகிய அமைப்புகள் சார்பாக 28.11.2022 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

RSS Terrorism emerging as an International threat!

Riots that took place for weeks in Leicester of England, where Indians live in huge numbers, have propagated shock waves among the locals and the community leaders. The hindutva mob started the riots after a cricket match between India and Pakistan that took place at the end of August. The people were feared to come out of their houses. Though this part of England is home to people belonging to different religions and races, it has not seen any violence or hostility for the past 50 years.

On last August 28, India played against Pakistan in an Asia Cup cricket match in Dubai. India defeated Pakistan in that match. In the aftermath, a hindutva mob that rallied in the streets of Leicester chanted “Pakistan Murdabad” (death to Pakistan), a slogan chanted during 1947 partition of India and Pakistan. Soon the rally turned into a violent clash.

On September 17, almost 3 weeks after this incident, riots broke out again in Leicester’s Green Lane Road area, where there are a number of Muslim-owned businesses and a Hindu temple. 200 hindutva terrorists with masks rallied from the temple with weapons including cricket bats and shouted the slogan “Jai Shri Ram”. The hindutva mob threw glass bottles to instigate riots, taunted the Muslim community when they came past the mosques and physically beat up the people randomly. As the angered Muslims retaliated, it turned into a bigger riot.

The people of Leicester, who haven’t seen riots like this, were horrified. Leaders of Hindu and Muslim communities of Leicester representing the Iskcon Hindu temple and Jame Masjid read out a joint statement to declare peace. The statement said, “We are from one family. We settled here in this city together, we fought the racists together, we built it up together. We, the family of Leicester, stand in front of you not only as Hindus and Muslims but as brothers and sisters. There is no place for any foreign extremist ideology that causes division.”

Moreover, the statement said “We together call upon the immediate cessation of provocation and violence, both in thought and behaviour. We together, call upon the inciters of hatred to leave our city alone”.

The police in its statement on September 17 riots said that it was an ‘unplanned protest’. Likewise, the majority of the media also depicted that this incident happened only because of a cricket match.

But, videos linked to the riots and the recent attacks on the Muslims in England reveals us that this riot was a pre-planned one.

When we look into the crowd that got out of the temple during the day of the riot, it can be blatantly seen that the crowd was not an accidently gathered crowd. Everything, from their attires to their slogans, looked perfect and organized.

Leicester’s Muslim and Hindu leaders issuing joint statement against communal hatred

The Guardian, in its report, said that eight out of the 18 people arrested on the aftermath of the riots did not belong to Leicester. Of these, five came from Birmingham, while one came from Solihull, one from Luton and one gave an address in Hounslow. This exposes us that the hindutva terrorists were made to infiltrate into Leicester to instigate the riot.

A professor belonging to the London School of Economics said about these riots that, “The incidents that happened in Leicester are not separate or spontaneous incidents or a clash between the locals of the society. These are pre-planned attacks on the Muslims orchestrated by groups of Hindu men with a particular motive”.

He further said, “Rallying on the streets with flags and sticks is an importation from the Hindu supremacist government and is an extract from the hindutva book of drama”

Professor Neil Chakraborti of the Leicester University also opined almost the same. He said that “There is no doubt in my mind that the religious tensions in India, and the actions of a hardline, violent, nationalist government there, have had a direct influence on what we have seen”. From this, we can clearly understand that the riot was not a spontaneous one which got started because of a cricket match.

The attacks against Muslims have been increasing in Leicester in recent times. A new trend that never existed before has been created in Leicester. August 15, the so called ‘Independence Day’, was celebrated by shouting outside the mosque. A video that went viral recently showed that torn pages of Quran was lying on the streets near Melton road, which is populated with Hindus. And Muslims were picking it up.

Moreover, similar to what’s happening in India, Muslims in Leicester are being attacked after enquiring whether they are Muslims or not. A Muslim youth was attacked last May in this fashion, and in September, a Sikh youth doubted to be a Muslim was attacked by the hindutva mob. But Leicester police have not taken any proper action against these incidents, according to a media.

Almost 40% of Leicester’s residents are of South Asian origin. Only a few parts of England including Leicester are populated with Hindus, Muslims and Sikhs. Though people belonging to different religions live, the city remained as a successful model of integration.

The hindutva mob has instigated riots in such a city. They selected Leicester because of its pluralism. In India, RSS instigate riots by targeting the places which are populated with both Muslims and Hindus. They do so, because those places will be the apt choice for them to create division and clashes.

This is how Leicester has been targeted. Raising “Jai Shri Ram” slogan in the streets of Muslim-owned businesses and attacking them and then trying to turn it into a riot; asking “Are you a Muslim?” and then attacking – are all tactics of the Sangh parivar that they follow in India. The RSS is now implementing it in England.

Almost 50 persons were arrested in links with this riot. Moreover, the report released by the Leicester police said, “Serious disorder on Saturday when a large crowd formed after groups of young men began an unplanned protest. Officers attempted to engage with the group and remain with them whilst additional officers were called in. They sought to keep actions lawful but, regrettably, the situation led to disorder.”

But, many media exposed that the police not any action to control the riot. Videos that got released on the day of the riot revealed that the hindutva goons roaming freely on the streets with weapons and that the police just stood on the sidelines and watched.

This pro-hindutva trend of the Leicester police is not only limited to them. The British government itself is not paying any heed to the growth of hindutva and in contrast, it can be seen that the government is encouraging the growth of hindutva.

Hindu Swayamsevak Sangh (HSS), an affiliate of RSS, was started in England in 1966. Though it was active from its establishment, its activity has peaked after Modi’s 2014 election victory in India. Modi, who was denied entry into England after the 2002 Gujarat riots, was welcomed after assuming power in 2014. After that, HSS directly and indirectly partnered with the Conservative Party, which is the ruling party. Because of this, the hindutva mob had gained a free hand there in England. Hence, the communal riots that are taking place in England should be viewed as a part of the terrorist activities carried out by the HSS with the aid of the government.

The British government is not trying to stop these attacks on the Muslims. The reason for this is that both the Conservative Party and the HSS converge at the point called ‘Islamophobia’. Moreover, the HSS needs the Conservative Party for its unhindered growth and the Conservative Party, in turn, needs the HSS for harvesting Hindu votes. They arrived at a compromise because of these mutual benefits.

For example, during the 2019 general elections, Kuldeep Singh Shekhawat, the president of Overseas Friends of BJP UK, campaigned for the Conservative Party through social media individually.

At the same time, members of the Conservative Party openly projected themselves as HSS sympathizers. In 2014, Priti Patel, former Home Secretary, congratulated the HSS for the event “RSS: A Vision in Action – A New Dawn” by writing a letter. Moreover, she said that the HSS should be proud about what they did for the Hindu society in Britain.

RSS’s Hindutva terrorism had spread not only to England, but also to other countries such as the United States and Australia. The RSS is joining hands with the regressive neo-Nazi groups and expanding their base for fascism.

The riots that took place in England and the Independence Day celebrations with bulldozer in the US show us only the presence and growth of the RSS and not its full strength. The truth is that the strength of the RSS is colossal. Now, the RSS is an armed Hindu-fanatic fascist organization with an international base.

The RSS, with its Hindutva terrorism base and Hindu identity, is now engaged in creating split among the working people of the West. Therefore, the obligation of defeating the RSS lies not only in the hands of the Indian proletariat alone. It lies in the hands of the world proletariat.

Thulipa

நவம்பர் 28: பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | வீடியோ

தோழர் எங்கல்ஸ்-இன் 203வது பிறந்த தினம் இன்று. நாம் பல்வேறு காரணங்களுக்காக எங்கெல்ஸை நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறோம். மார்க்சியத்தை விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உருவாக்கியவர்கள் தோழர் மார்க்சும் எங்கெல்சும். அப்படி உருவாக்கியதால்தான், இன்று வரை, எந்த முதலாளித்துவ பொருளாதார அறிஞராலும் தத்துவவாதியாலும் மார்க்சிய தத்துவத்தை தொட்டு கூட பார்க்க முடியவில்லை.

மார்க்சுடன் இணைந்து மார்க்சியத்தை நிறுவியதிலும், இயற்கையை இயக்கவியல் பொருள் முதல்வாத அடிப்படையில் ஆராய்ந்ததிலும், மார்க்சுக்கு பின்னர் தனது இறுதி காலம் வரை மார்க்சியத்தை செழுமைப்படுத்தியதிலும் எங்கெல்சின் பங்கு அளவிடற்கரியது. மார்க்சின் பங்களிப்பு என்று கூறும்போதே அதில் எங்கெல்சின் பங்களிப்பும் உடன் கலந்திருக்கிறது. அந்த இரட்டையர்கள் பாட்டாளி வர்க்கத்துக்கு அளித்த கொடை தான் மார்க்சியம்!

நவம்பர் 28, 2022 பிரெடெரிக் எங்கெல்ஸின் 203-வது பிறந்த நாளில் அவரது நினைவை நெஞ்சிலேந்துவோம்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி

சென்னையில் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை ஒன்றில் மேலாளராக இருக்கும் கதாநாயகி மதி. தன்னுடன்  வேலைப் பார்க்கும் பெண் ஒருவரின் திருமணத்திற்காக கொடைக்கானல் செல்கிறார். அங்கே மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார். ஏற்கெனவே மதியைப் பழிவாங்கக் காத்திருக்கும் சில ஆண்கள்தான் குற்றவாளிகள் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறது போலீசுத்துறை. ஆனால், அந்த போலீசுதுதுறையை சேர்ந்த மூன்று பேரால்தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது அவளுக்கு தெரிய வருகிறது. குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா என்பதே படத்தின் கதை.

பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதும், கொடூரமான தாக்குதலுக்குள்ளாக்கப்படுவதும் தற்போது அதிகரித்து வருகின்றன. இச்சூழ்நிலையில் டெல்லியில் “living together” உறவு முறையில் வாழ்ந்த ஷ்ரதா என்ற 27 வயது பெண்ணை, அவனுடைய காதலன் கொலை செய்து 30 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஆணவ கொலைகள், காதலிக்க மறுத்ததால் கொலை, குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் இலக்காகியிருக்கும் இந்த சம கால சூழலில், பெண்ணை தன்னுடைய உடைமையாக பார்க்கும் கேடுக்கெட்ட கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இத்தருணத்தில் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.

படிக்க : திரை விமர்சனம்: பொன்னியின் செல்வனை குப்பையில் வீச வேண்டும் | மருது வீடியோ

பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் பெண்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள், உளச்சிக்கல்கள் போன்ற விசயங்களை இந்த படம் பேசுகிறது. மேலும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக மாற்றும் இந்த சமூக உளவியலை இந்த படம் கேள்வி கேட்கிறது. தவறு செய்தவன் தான் குற்றவாளி, எந்த வகையில் பாதிக்கப்பட்டவள் தவறானவள் என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் இந்த படம் கேட்கிறது. மிகவும் சரியான பார்வை.

அவளின் உடலே எப்படி அவளுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்படுகிறது. ‘‘உசுரு பெருசா, மானம் பெருசான்னா, மானம்தான் பெருசு. ஆனா, அந்த மானம் எதுல இருக்கு, என் உடம்புலயா? நான் வாழற வாழ்க்கையிலதானே?’’ என கதாநாயகி ஆண்ட்ரியா பேசும் வசனங்களும், தன் உறவினர்களிடம் கால மாற்றம் குறித்து கதாநாயகன் ஆதவ் கண்ணதாசன் பேசும் வசனங்களும் சமூகத்தின் பார்வை மாற வேண்டும் என்கின்ற முற்போக்கான வசனங்களும் வரவேற்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட ஆண்ட்ரியாவை, குற்றவாளிகள் இருக்கும் போலீஸ் ஸ்டேசனிலேயே அந்த நள்ளிரவில் பெண் காவல் ஆய்வாளர் அனுபமா குமார் விட்டுச் செல்வது, பின்னர் தேடாமலே இருப்பது, அவர் பேசிய வசனத்திற்கும் காட்சிக்கும் துளியும் பொருந்தவில்லை. பெண் காவலர்கள் நல்லவர்கள் என்பது போலும், பெண் நீதிபதிகள் நல்லவர்கள் என்பது போலும் காட்சிகள் படத்தில் வருகிறது. இந்த அரசு கட்டமைப்பில் ஆண், பெண் என்று பார்க்க முடியாது. அதிகாரத்தில் இருக்க கூடிய பெண்கள் அந்த சட்ட வரம்பிற்குள் நின்று தான் வேலை செய்ய முடியும். ஒட்டுமொத்த சமூகமே பெண்களுக்கு எதிரானதாக, பெண்கள் வாழ தகுதியிழந்த சமூகமாக மாறிவரும் சூழலில் மேல் அதிகாரி பெண்ணாக இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும் என்பது ஒரு ஹம்பக்.

தமிழகத்தில் வாச்சாத்தி சம்பவம், சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, ரீட்டா மேரி என நிறைய வழக்குகளே இதற்கு சாட்சி. போலீசு நிலையத்திலும், அரசு அதிகாரிகளாலும் நடந்த குற்றங்களுக்கு சாட்சி. மக்கள் போராட்டங்களே அரிதிலும் அரிதான வழக்குகளில் குறைந்த பட்ச தண்டனையை வாங்கி தந்திருக்கிறது என்பதே நிதர்சனம்.

இன்று பெண்களை சக மனிதராக கருதாமல், வெறும் நுகர்வு பண்டமாக கருதும் மறுகாலனியாக்க சூழலில், பெண்ணின் உடல் குறித்தும், பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்கள் தான் குற்றவாளிகள் பெண்கள் அல்ல என்று ஆணித்தரமாக பேசுவதும். அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள்(போலீசு) மேலும் ஆபத்தானவர்கள் என்று விளக்குவதும் மிகவும் சரியான பார்வை.

ஆனால் அது மட்டுமே போதுமானது இல்லை. சட்ட ரீதியாக போராட வேண்டும் என்பதை இந்த படம் வலியுறுத்துகிறது. பெண்கள் மீதான வன்கொடுமைகளை போலீசு நிலையங்களில் பதிவு செய்ய முடியவில்லை என்பதே இந்தியா முழுவதும் இருக்கும் ஒரு யதார்த்த நிலைமை. பெண்கள் அமைப்புகள் சென்று போராடிதான் வழக்குகளை பதிவு செய்ய முடிகிறது. வழக்கு பதிந்தற்காக குடும்பத்தையே வெட்டி சாய்க்கும் சம்பவங்கள் உ.பி போன்ற மாநிலங்களில் நடக்கிறது. இதையும் இயக்குநர் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

படிக்க : விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?

நாம் போராட வேண்டும் என்று பெண்களுக்கு சொல்வது, அதை மீறி வர வேண்டும் என்று நாம் சொல்வது உபதேசமாக இருக்குமே ஒழிய.. அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே, சமூகத்தை மாற்றுவதே தீர்வாக இருக்கும். கதாநாயகன் இந்த படத்தில் சரியான நபராக வருகிறார். ”உன்னுடைய போராட்டத்திற்கு துணை நிற்பேன்” என்று சொல்கிறார். வரவேற்கத்தக்கது. இப்படி சமூகமே சொல்ல வேண்டும். ”நீ போராடு நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்” என்று அத்தகைய மாற்றங்களை நோக்கி பயணிப்போம்.

பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரத்திற்கான சமூக காரணிகளை ஆழமாக நாம் பேச வேண்டும். இன்று தனியார்மய, தாராளமய, உலகமய சூழலில் பெண் ஒரு விற்பனை சரக்காக விளம்பரங்களில், திரைப்படங்களில், ஆபாச படங்களில், விளையாட்டுகளில், காட்டப்படுகிறாள். இளம் தலைமுறையினரை சீரழிக்கும், நுகர்வு வெறியை ஊட்டி வளர்க்கும் முதலாளித்துவ சீர்கேட்டை, பண்பாட்டை நாம் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் முதலாளித்துவ கலாச்சாரம் என்பது லாப வெறிக்காக எதையும் பண்டமாக மாற்றுகிறது. பெண்ணின் உடலும் பண்டமாக மாற்றப்படும் சூழலை எதிர்த்து போராடி முறியடிக்காமல், இந்த குற்றங்களை தடுக்க முடியாது என்பதை நாம் பேச வேண்டும்.

அமிர்தா

உத்தரப் பிரதேசம்: மீண்டுமொரு தில்லி போராட்டம் – மோடியை எச்சரிக்கும் விவசாயிகள்!

0

வம்பர் 26 அன்று அதிகாலை முதலே கையில் கொடிகளுடன் டிராக்டர்கள் மூலமாகவும் பேருந்துகள் மூலமாகவும் விவசாயிகள் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிற்கு வந்தடையத் தொடங்கினர். இரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் விதமாக நடைபெற்ற மஸ்தூர் – கிஷான் மகாபஞ்சாயத்தில் (Mazdoor – Kisan Mahapanchayat) கலந்து கொள்ள அவர்கள் அங்கு வந்தனர்.

மோடி அரசு விவசாயிகளுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக அங்கு திரண்ட விவசாயிகள் குற்றம் சாட்டினார். பஹ்ரைச், லக்கிம்பூர் கேரி, தியோரியா, பாலியா, அசம்கார், ஹர்தோய், பைசாபாத், ஷாஜஹான்பூர், பிலிபிட், மீரட், பிஜ்னோர் மற்றும் முசாபர்நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகா பஞ்சாயத்தில் கலந்து கொண்டனர்.

சம்யுக்தா கிஷான் மோச்சா (SKM) அழைப்பு விடுத்ததை ஏற்று பாரதிய கிசான் சங்கம் (BKU), அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள் இதில் கலந்து கொண்டன.


படிக்க: மோடி அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் சங்கம்!


எஸ்.கே.எம் தலைவர் ஹன்னன் மொல்லா மோடி அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும், விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் “மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்தபோது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு (MSP) சட்டம் இயற்றுவதாகவும், விவசாயிகள் மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெறுவதாகவும், போராட்டத்தின் போது பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் திருப்பி அளிப்பதாகவும், லக்கிம்பூர் கேரி படுகொலையின் குற்றவாளிகளை தண்டிப்பதாகவும் மோடி அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றும் நோக்கம் தமக்கில்லை என்பதை மோடி அரசு தற்போது வெளிப்படுத்தியுள்ளது. கார்ப்பரேட்டுகளை பாதுகாப்பது தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது” என்று கூறினார். இந்தமுறை தில்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் வீரியமான விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று மோடி அரசை எச்சரித்தார்.

கரும்பின் விலையை குவின்டாலுக்கு ரூ.500 உயர்த்துவது, பயிர் எச்சங்களை எரிப்பதற்காக விவசாயிகள் மீது நடவடிக்கை எடுப்பது, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவது, தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்துவது, பருவம் மாறிய மழையால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது போன்றவையும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்து வருகின்றன.


படிக்க: இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!


பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் “விவசாயிகள் டிராக்டரையும் டுவிட்டரையும் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அவை மோடி அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு உதவும்” என்று பேசினார்.

மேலும் அவர் “2047 இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்று மோடி கூறுகிறார். ஆனால் அதற்குள் விவசாயிகளாகிய நாம் நிலமற்றவர்களாக மாற்றப்படுவோம். சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தை விட மோசமான ஒரு சூழலில் தற்போது இருக்கிறோம். நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் துப்பாக்கி முனையின் கீழ் பிரகடனப்படுத்தப்படாத அவசர நிலையில் வாழ வேண்டி வரும்” என்று கூறினார்.

உதான் (UDAN) திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தின் அசம்காரில் உள்ள விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற அங்குள்ள எட்டு கிராமங்களைச் சேர்ந்த 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். இத்திட்டத்தை எதிர்க்கும் அப்பகுதி மக்களும் “வீட்டையும் விவசாய நிலத்தையும் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் விவசாயிகளின் மகா பஞ்சாயத்தில் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் போராட்ட இயக்கத்தை அடுத்த கட்டமாக எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக டிசம்பர் 8 அன்று பொதுக்கூட்டம் ஒன்றை எஸ்.கே.எம் நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொம்மி
நன்றி: நியூஸ் கிளிக்

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் எங்கெல்ஸ்-ன் 203-வது ஆண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்வோம்!

பேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் ! – மீள்பதிவு

மார்க்சிய பேராசான் எங்கெல்ஸ் பிறந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர்.

மார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் பங்களிப்புகளும் ஒன்றுக்கொன்று பிரிக்கவொன்னாதவை !

மார்க்சின் மேதைமை, விசயங்களை ஆழமாகவும் இலக்கியச் செறிவுடனும் ஆய்ந்தறியும் திறன் ஆகியவற்றோடு, எங்கெல்சின் கூருணர்வும், அறிவியலின் அனைத்துத் துறைகளிலும் அகழ்ந்து ஆய்ந்தறியும் அவரது அறிவுத்திறனும் இணைந்ததன் விளைபொருள்தான் மார்க்சியத் தத்துவம். இதில் எந்த ஒரு அம்சம் குறைந்திருந்தாலும், மார்க்சியம் ஆழமானதாகவும் செறிவுமிக்கதாகவும் இருந்திருக்காது என்பதை உறுதிபடக் கூறமுடியும்.

“மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால், தாங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை‘களில்தான் அதை உருவாக்குகிறார்கள்” என்றார் மார்க்ஸ்.

படிக்க : என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !

இது மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருக்குமே பொருந்தும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் இருவரும் ஐரோப்பாவில் எதிர்கொண்ட மற்றும் அவர்களது கடந்த காலத்திலிருந்து அவர்களுக்குக் கைமாற்றிக் கொடுக்கபட்ட சமூகச் சூழலிலிருந்துதான் அவர்கள் இருவருமே “மார்க்சியவாதிகளாக” பரிணமிக்கிறார்கள்.

“மார்க்ஸ் பிறந்தார்” எனும் நூலில் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் வளர்ந்த ஜெர்மானிய சூழல் குறித்த தெளிவான சித்திரத்தைக் கொடுக்கிறார் அதன் ஆசிரியர் ஹென்றி வால்கோவ்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் பிறந்த ரைன் பிரதேசத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அங்கு சில அரசு அதிகாரிகள் கூட மிதவாத மற்று தீவிரவாதக் கருத்துக்களை இயல்பாகப் பேசுவது குறித்துக் குறிப்பிடுகிறார் அவர். அண்டை நாடான பிரான்சை உலுக்கிய புரட்சிப் புயல்களின் தாக்கம், ரைன் பிரதேசத்திலும் இருந்தது. பிரெஞ்சு பொருள்முதல்வாத, அறிவியக்கக் கருத்துக்கள் ஜெர்மனிக்குள் நுழையும் நுழைவாயிலாக ரைன் பிரதேசம் இருந்தது. மேலும் ரைன் பிரதேசம் ஜெர்மனியிலேயே தொழிற்துறையில் முன்னேறிய பிரதேசமாகவும் இருந்தது.

இத்தகைய சூழலில் வளர்ந்த எங்கெல்ஸ், தனது தந்தையின் நெருக்குதல் காரணமாக 17 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, பிரெமென் நகரில் ஒரு வர்த்தக நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். பிரெமென் நகரம் எங்கெல்சுக்கு ஹெகலின் தத்துவத்தை அறிமுகம் செய்தது. அங்கு பல்வேறு தத்துவவியல் மாணவர்களுடனும் ஹெகலியவாதிகளுடனும் விவாதிக்கிறார் எங்கெல்ஸ்.

ஹெகலிய தத்துவங்களை நடைமுறையோடு பொருத்திப் பார்த்து படிப்படியாக பொருள்முதல்வாதக் கருத்துக்களை முன்னெடுக்கிறார். கடவுள் மறுப்பு உள்ளிட்ட சமூகத்திற்கு ‘அன்னியப்பட்ட’ கொள்கைகளைப் பேசும் எங்கெல்சைக் கண்டு அஞ்சியது அவரது குடும்பம்.

1842-ம் ஆண்டில் 22 வயதான எங்கெல்சை மான்செஸ்டருக்கு அனுப்புகிறது அவரது குடும்பம். தங்களது மகன், தொழிற்சாலைகள் நிரம்பிய மான்செஸ்டர் நகருக்குச் சென்றால் ‘வழி’க்கு வந்துவிடுவார் என்று எண்ணினார்கள். ஆனால் நேரெதிராக மான்செஸ்டர் எங்கெல்சை ஒரு மார்க்சியவாதியாக வளர்த்தெடுத்தது.

தொழிற்துறை வளர்ச்சியடைந்த இங்கிலாந்தில் எங்கெல்ஸ் தங்கியிருந்தபோது அவர் மீது அங்கிருந்த தொழிலாளர்களின் இயக்கமான சார்ட்டிஸ்ட் இயக்கம் பெரும் செல்வாக்கு செலுத்தியது. அதில் உத்வேகத்துடன், பகிரங்கமாகவே செயல்பட்ட எங்கெல்ஸ், அந்த இயக்கத்தின் பலவீனங்களைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. சட்டப்பூர்வமாக புரட்சியைக் கொண்டுவர விரும்புகின்றனர் என்று அவர்களை விமர்சித்தார்.

1843-ம் ஆண்டில் “அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனத்தின் உருவரை” என்ற தனது முதல் பொருளாதாரக் கட்டுரையை வெளியிடுகிறார் எங்கெல்ஸ். தனது மூலதனம் நூலில் பல இடங்களில் இதிலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் மார்க்ஸ்.

தனது தந்தை பங்குதாரராக இருந்த ஆலையில் பொறுப்புமிக்கப் பணியில் இருந்தாலும் தனது ஓய்வு நேரங்களை ”வியர்வைக் கூடங்கள்” என்றழைக்கப்பட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளில் செலவிடுகிறார் எங்கெல்ஸ். தொழிலாளர்களின் வாழ்நிலைமை, குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மார்க்ஸ் நடத்தி வந்த பத்திரிகைக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி அனுப்பினார் எங்கெல்ஸ்.

“சமூக ஒழுங்கின் எந்த ஒரு நலனும் கிடைக்கப் பெறாது, அனைத்துக் கேடுகளையும் தாங்கிக் கொள்ளும் ஒரு வர்க்கம்” என தொழிலாளர் வர்க்கத்தை விளிக்கும் எங்கெல்ஸ், “அத்தகைய ஒரு வர்க்கம் சமூக ஒழுங்கை மதிக்க வேண்டும் என யாரால் கோர முடியும் ?” என்று தனது பாட்டாளிவர்க்க நிலைப்பாட்டில் இருந்து முதலாளிவர்க்கத்தை நோக்கிக் கலகக் குரலை எழுப்பினார்.

1844-ம் ஆண்டில் மார்க்சை இரண்டாம் முறை சென்று சந்திக்கும் முன்னரே, எங்கெல்ஸ் ஒரு முழுமையான பொருள்முதல்வாதியாக, விஞ்ஞான சோசலிஸ்டாக மாறியிருந்தார். தனது அயராத உழைப்பின் மூலம், “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை” என்ற நூலை 1845-ம் ஆண்டில் வெளியிட்டார். தொழிலாளர்களின் வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் அற்புதமான படைப்பு என அதனைப் புகழ்ந்தார் மார்க்ஸ்.

அந்த சந்திப்பிலேயே மார்க்சும் எங்கெல்சும் இணைபிரியா நண்பர்களாகினர். ஒருவரை மற்றொருவர் கலந்தாலோசித்துவிட்டுதான் தங்களது படைப்புகளைக் கொண்டு வருகின்றனர். ஜெர்மன் தத்துவஞானம், புனித குடும்பம் உள்ளிட்ட படைப்புகளை இருவரும் இணைந்து படைத்தனர்.

மார்க்சின் எழுத்துக்களின் முதல் விமர்சகராக எங்கெல்ஸ் இருந்தார். அதாவது மார்க்ஸ் எனும் மாமேதையின் எழுத்துக்கள் அனைத்துமே எங்கெல்சின் கரங்களால் செழுமைப்படுத்தப்பட்ட பின்னர்தான் நூலாக வெளிவந்திருக்கிறது. அந்த அளவிற்கு மார்க்சிய சிந்தனையில் மார்க்சுடன் ஒன்றியவராக இருந்தார் எங்கெல்ஸ். ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.

எங்கெல்ஸ் பல்வேறு தனித்திறன்களை தன்னகத்தே கொண்டவராக இருந்தார். தத்துவத்தில் மட்டுமல்ல, வரலாறு, மொழி, இலக்கிய விமர்சனம், அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் வல்லுனராக இருந்தார்.

அறிவியலின் மீது தீராக் காதல் கொண்டவராக இருந்தார் எங்கெல்ஸ். இயற்பியல், இரசாயனவியல், உயிரியல், இயற்கை விஞ்ஞானம், வானவியல், மருத்துவம், புவியியல், மானுடவியல் என அனைத்துத் துறைகளிலும் பேரார்வம் கொண்டவராகவும், அறிவியலுலகின் கண்டுபிடிப்புகளைப் பொருத்திப் பார்த்து தனது தத்துவ அறிவை செழுமைப்படுத்துபவராகவும் இருந்தார்.

அறிவியலின் துணை கொண்டு கிடைக்கும் எதார்த்த உலகின் பருண்மையான, நுண்ணியமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கியல் பொருள்முதல்வாதத்தை செழுமைப்படுத்தினார் எங்கெல்ஸ்.

படிக்க : பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

மார்க்சும் எங்கெல்சும் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை சமூகத்திற்குப் பொருத்தியதும் அறிவியலின் துணை கொண்டுதானே அன்றி, தங்களது மூளையில் தோன்றிய கற்பனைகளைக் கொண்டு அல்ல. மார்க்சும் எங்கெல்சும் மானுடவியலாளர் மார்கன் மற்றும் இயற்கை அறிவியலாளர் டார்வின் உள்ளிட்டவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் இருந்துதான் தனது தத்துவத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.

1849-ம் ஆண்டு மார்க்சும் ஜென்னியும் ஜெர்மனிலிருந்து வெளியேறி இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தனர். அங்கு அவர்களது வாழ்க்கைக்கு உதவி புரிவதற்காகவே, தனது தந்தையின் மான்செஸ்டர் ஆலையில் எழுத்தராக பணிக்கு சேர்கிறார்.

மார்க்சின் சமூக ஆய்வுக்கு உதவி செய்யும் நோக்கிற்காகவே தனது வாழ்வின் 20 ஆண்டுகாலத்தை எழுத்தராகவே கடந்தார். இந்தக் காலகட்டங்களில் தொடர்ச்சியாக மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிந்ததோடு, பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். களத்தில் தொழிலாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியையும் மேற்கொள்கிறார் எங்கெல்ஸ்.

இந்தக் காலகட்டத்தில் தான் முதலாளித்துவ மூலதனத்தின் சுரண்டலையும், குரூரத்தையும், கயமைத்தனத்தையும் அம்பலப்படுத்தும் மாபெரும் படைப்பான மூலதனத்தை மார்க்ஸ் எழுதிக் கொண்டிருக்கிறார். பிற்போக்குத் தத்துவங்களைத் தோலுரித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த மார்க்சின் பார்வையை, அரசியல் பொருளாதாரத்தின் பக்கம் மடைமாற்றிவிட்டவர் எங்கெல்ஸ். மார்க்ஸ் தனது நூலுக்கான தயாரிப்பின் போது சந்தித்த அனைத்து கடுமையான பிரச்சினைகளையும் எங்கெல்சுடன் விவாதித்தார். மார்க்சின் மனசாட்சியாக, மார்க்சின் எழுத்துக்களுக்கு கூரிய விமர்சகனாகத் திகழ்ந்தார் எங்கெல்ஸ்.

மார்க்சின் ஆய்வுக்காக தனது சொந்த ஆய்வுகளின் மீதான அக்கறைகளை ஒதுக்கி வைத்தார் எங்கெல்ஸ். மார்க்ஸ் இதை நினைத்து பலமுறை வருத்தமடைந்தார். 1867-ம் ஆண்டில் தனது மூலதனம் நூலின் முதல் தொகுதியின் அச்சுப்படிகளை திருத்திய பின்னர், மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடித்ததில், “ இந்தத் தொகுதியின் வேலை முடிந்துவிட்டது. உங்கள் உதவியினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உங்களுடைய தியாகம் இல்லையென்றால் மூன்று தொகுதிகளையும் எழுதுவதற்கு அவசியமான ஏராளமான வேலையை என்னால் ஒருபோதும் செய்து முடித்திருக்க இயலாது. நன்றிப் பெருக்குடன் உங்களை நெஞ்சாரத் தழுவுகிறேன்.” என்று எழுதுகிறார்.

சுமார் இருபதாண்டுகள் மான்செஸ்டரில் தனது தந்தையின் ஆலைச் “சிறையில்” பணியாற்றிய பிறகு அங்கிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட எங்கெல்ஸ், லண்டனுக்குச் சென்று மார்க்ஸ் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே குடியேறினார்.

இதற்குப் பின்னான காலகட்டத்தில் எங்கெல்ஸ் தமது இயற்கை குறித்த தமது அறிவியல் ஆய்வையும், மானுடவியல் குறித்த ஆய்வையும் தொடர்ந்தார். இயற்கையின் இயக்கவியல் என்ற நூலை எழுதும் பணியில் ஈடுபட்டார். அப்போதும் மார்க்சின் படைப்புகளுக்கு உதவி புரிவது குறையவில்லை. மாறாக அதிகரித்தது.

மார்க்சியத்தைத் திரித்தும், அதனை முழுமையாகப் படிக்காமல் அதன் மீது விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியை அள்ளி வீசிய சமகாலத்தவர்களுக்கு எங்கெல்ஸ் மார்க்சியத்தின் உச்சிமுகட்டில் நின்று சம்மட்டியடி கொடுத்தார். அவரது அத்தகையதோர் ஆகச் சிறந்த படைப்புதான் “டூரிங்குக்கு மறுப்பு” எனும் நூல். மார்க்சியத் தத்துவத்தை சகல துறைகளுக்கும் பொருத்தி, அதனை விரிவாக விளக்கினார். மார்க்ஸ் கூறியபடி அவரது “Alter Ego” தான் எங்கெல்ஸ் என்பதை அந்த நூல் நிரூபிக்கிறது.

மார்க்சுக்கு சற்றும் குறையாத அளவிற்கு மார்க்சியத்திற்கு பங்களிப்பு செய்துள்ள எங்கெல்ஸ், மார்க்ஸ் இருக்கும்போதும் சரி , மறைந்த பின்னும் சரி எப்போதும் தன்னடக்கத்துடனேயே இருந்துவந்தார் என்பது அவரது எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கும்.

எங்கெல்ஸ் மீதும் அவரது மேதைமை மீதும் மார்க்ஸ் பெருமதிப்புக் கொண்டிருந்தார். ஒருமுறை மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில், “முதலாவதாக எல்லாமே எனக்குத் தாமதமாகத்தான் தெரிகிறது, இரண்டாவதாக, நான் எப்பொழுதும் உங்களுடைய காலடிகளைப் பின்தொடர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.” என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார் வால்கோவ். அந்த அளவிற்கு எங்கெல்சின் அறிவுக்கூர்மையை மதித்திருக்கிறார் மார்க்ஸ்.

”அறிவின் படைப்புச் சக்தியில், மென்மேலும் புதியனவற்றைத் தேடுகின்ற ஆராய்ச்சி சிந்தனையின் தகுதி மற்றும் ஆழத்தில், மேலான இயக்கவியல் ரீதியான நடையழகில், பொதுமைப்படுத்தல்களின் மணிச் சுருக்கச் செறிவில்” எங்கெல்சை மார்க்சுடன் ஒப்பிட முடியாது என்றாலும் வேறு சில விசயங்களில் எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் தகுதி மிக்கவராக இருந்தார். புதியனவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டு திருத்தியமைப்பது, விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய மிகப் பல்வேறான துறைகளின் விவரங்களை மிகச் சுதந்திரமான முறையில் ஒருங்கிணைக்கக் கூடிய ஆற்றல்களில் தனிச்சிறப்பானவர் எங்கெல்ஸ்.

மார்க்ஸ் மரணமடையும் முன்னர், மூலதனம் நூலின் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டிருந்தார். மீதமுள்ள பகுதிகள் வெறும் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தன. மார்க்சின் மரணத்திற்குப் பின்னர் அவற்றை நூலாகக் கொண்டுவரும் மாபெரும் பொறுப்பு எங்கெல்ஸின் தோள்களின் மீது இறங்கியது. ‘மூலதனம்’ எனும் மனிதகுலத்தின் விடிவெள்ளியை நூல் வடிவில் வெளிக் கொண்டு வருவதற்காக தனது இறுதிக்காலம் வரை உழைத்தார் எங்கெல்ஸ்.

இதற்காக தனது இயற்கையின் இயக்கவியல் குறித்த ஆய்வைக் கைவிட்டார். தனது நண்பருக்காக அல்ல. மனித குலத்திற்கு மார்க்சியத்தின் மிகப்பெரும் கொடையான ‘மூலதனம்’ நூலை கொண்டு வருதற்காகவே தனது தனிப்பட்ட ஆய்வைக் கைவிட்டார் எங்கெல்ஸ்.

படிக்க : மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !

மார்க்ஸ் மரணமடைந்த பிறகு சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எங்கெல்ஸ். மார்சியத்தைத் திரித்து பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை மழுங்கடிக்கத் துடித்த பல்வேறு முதாலாளித்துவ – ’சோசலிச’ காளான்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் தொடுத்தார் எங்கெல்ஸ்.

சர்வதேச தொழிலாளிவர்க்க இயக்கத்தில், அவரே முழுப் பொறுப்பையும் வகித்தபோதிலும் அவர் முன்பிருந்த மாதிரியே அடக்கமானவராகவும், ஆர்ப்பாட்டமில்லாதவராக இருந்தார். “என்னுடைய காலஞ்சென்ற சமகாலத்தவர்களுக்கு, எல்லோரைக் காட்டிலும் மார்க்சுக்குக் கிடைக்க வேண்டிய கெளரவம் கடைசியாக எஞ்சியவன் என்ற முறையில் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விதி முடிவு செய்திருக்கிறது” என்றார் அடக்கத்துடன்.

மார்க்சும், எங்கெல்சும் சுட்டிக்காட்டிய, சமூகத்தின் மீதான, இயற்கையின் மீதான முதலாளித்துவ சுரண்டல்கள் இன்றும் நீடிக்கின்றன. அவ்விருவரும் படைத்துத் தந்த மார்க்சியம் எனும் ஆய்வுமுறையை சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தவல்லவர்களால் மட்டுமே இந்தச் சுரண்டலை ஒழிக்க ஒரு புரட்சியை நடத்த முடியும். அத்தகையதோர் பொன்னான கடமையை செய்துமுடிப்போமென தோழர் எங்கெல்ஸின் 200-ம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில் உறுதியேற்போம்.

வினவு

The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s power Press release

09.11.2022

The Supreme Court’s decision confirmed the 10% reservation!
Next move of RSS-BJP; Ambani-Adani fascist gang!

Press release

A 5-judge bench of the Supreme Court upheld the 103rd Amendment and upheld the 10% reservation for the economically weaker sections (EWS10%) of the upper castes.

For some years now, 10 percent reservation has been given to the economically weaker sections in all sectors including education and employment. For example, if a person belonging to a lower caste needs 60 points in education and employment, it is 28 points for an economically backward person.

Reservation is the economic upliftment of the lives of the caste-backward in the society by giving them quota.

The non-Brahmin castes fought for their right to reservation only during the time when the Brahmins were in power in all sectors. Because of that, many people who now claim to be the ruling caste started getting education and getting job opportunities.

Also Read : NIA raids Popular Front of India (PFI) and SDPI offices! – People’s Power Press Release

Those who have acquired educational knowledge and job opportunities have strengthened the government structure especially the public sector to a certain extent.

The RSS-BJP fascist gang whose ambition is to turn the entire country over to the Ambani-Adani fascist gang cannot accept that they are still talking about reservation, democracy and rights. The corporate cabal is trying to fulfill its mission by filling all the employment education and government departments with people who are inherently with the parochial fascist thought.

The Indian ruling class was forced to give reservation because of the situation where it had to present itself as a democratic country in earlier period.

If they continue to talk about democratic rights till now, there will be obstacles in selling the country to the Adani-Ambani fascist gang.

Right now reservation is also being taken away as a part of how all the rights of the people and all the rights of the workers are being gradually taken away.

The parochial mob, which begged for reservation when the whites ruled India and got it, now aims to turn the majority of the working people into slaves and uneducated laymen by abolishing reservation for corporate needs.

Due to privatization, liberalization and globalization, all government departments are being outsourced. Already purpose of reservation is being questioned.

What can be done now is that government jobs and free education are legal reservations in the context of decolonization in name only.

Also Read : Let’s get on the field against saffron fascist bulldozers! Let’s give a shoulder to the Islamic people! | People power

Abolition of reservation is the demand of RSS-BJP fascist gang and Adani-Ambani fascist gang. That is why 10 percent reservation for economically backward sections was introduced during this period. The Supreme Court also affirmed.

Raising the tax limit to Rs.8 lakhs only for those who can claim to be economically weaker sections, when the maximum income tax limit in India is Rs.2.5 lakhs, proves once again that this government is only for parochials.

Appeals and revisions against this unjust judgment of the Supreme Court will not create any changes. Because all the departments are under the control of the RSS, the judicial department is also under its control. It was only through mass protests that RSS-BJP; Ambani-Adani fascism can be defeated; the struggle for the rights of the people including reservation should be made as a part of this anti-fascist struggle.

People’s power requests that leading the struggles for this should be our main task against this fascist.

With Comradeship,
Comrade Vetrivel Chezhian,
State Secretary,
People’s Power.
Contact : 99623 66321

கிருஷ்ணகிரி: 25 ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி தவிக்கும் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் – ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை – 25 ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பீமாண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓட்டூர், பாறையூர், கொல்லப்பள்ளி, மாரிகவுண்டனூர், சோமநாதபுரம், கங்கசந்திரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டவை. பெரும்பாலானோர் சிறு, குறு விவசாயிகள் ஆவர். இப்பகுதிகளில் சுமார் 800 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர்.

இங்கு விளையும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை குருபரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி, சூளகிரி, ஒசூர் பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் விவசாயம் அல்லாத நேரங்களிலும், நிலமற்றவர்களும் மேற்சொன்ன பகுதிகளுக்கு கட்டட வேலைகளுக்கு செல்கின்றனர்.

மேலும் இக்கிராமங்களுக்கு பாறையூரில் ஒரு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு 8.கி.மீ தொலைவிலுள்ள குருபரபள்ளிக்கு நடந்து சென்று வரவேண்டிய நிலை உள்ளது. சாலைகள் இருந்தும் இக்கிராமங்களுக்கு இதுவரை பேருந்து வசதி இல்லை.

சுமார் 200 மாணவர்கள் வரை இக்கிராமங்களிலிருந்து உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு செல்கின்றனர். பெரும்பாலானோர் தினமும் நடந்து செல்கின்ற நிலைமைதான் உள்ளது.

படிக்க : கிருஷ்ணகிரி மாவட்டம் KATERRA  நிறுவனம் – தொழிலாளிகள் மீதான  கொடூரச் சுரண்டல் – தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்!

இக்கிராமங்களுக்கு அருகில் ஓடும் மார்க்கண்டேயா நதி  (இது கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் கலக்கிறது) கே.ஆர்.பி அணையில் சென்று கலக்கிறது. தண்ணீர் ஓடாத காலங்களில் ஆற்றின் குறுக்கே நடந்து சென்றால் குருபரபள்ளிக்கு செல்வதற்கு 4.கி.மீ குறையும். தண்ணீர் ஓடும் காலங்களில் ஆற்றைக் கடப்பது ஆபத்தானது என்பதால் 8.கி.மீ சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும்.

பேருந்து வசதி இல்லாததால் மாணவர்களுக்கும், பகுதி மக்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகள் :

மாணவர்கள் குருபரபள்ளிக்கு ஊரிலிருந்து வந்து நெடுஞ்சாலையின் வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் நெடுஞ்சாலையில் நடக்க வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் ஓட்டுரைச் சேர்ந்த பள்ளி மாணவனுக்கு விபத்து ஏற்பட்டதில் கால் முறிந்துள்ளது.

புத்தகப்பையை வெகுதூரம் சுமந்து செல்வதால் உடல்ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது. நடந்து செல்வதன் காரணமாக பள்ளிக்கு தாமதமாக செல்லும் சூழல் இருப்பதால், பள்ளியில் அதுகுறித்து கேள்விகள் எழும் நிலையில் மாணவர்கள் அன்றாடம் மன அழுத்தத்தில் இருந்தே கல்வி கற்கும் சூழல் உள்ளது. இதனால் கல்வி கற்கும் திறன் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சிறு தடங்கல் என்றாலும் பள்ளிக்கு தினசரி வருகை குறையும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

சிறப்பு வகுப்புகள் இருக்கும்பொழுது இரவு 7 மணிக்கு வீட்டுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவிகள் அச்சத்துடனே செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாக மாணவிகளின் படிப்பை நிறுத்தும் ஆபத்தும் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களும் தினமும் அச்சத்துடன்தான் வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நிலை உள்ளது.

இவ்வூரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு இடமாற்றம் செய்தால் பெரும்பாலான ஆசிரியர்கள் இங்கு வருவதற்கு யோசிக்கும் நிலைதான் உள்ளது.

நடக்கும் தூரம் சற்றுக் குறையும் என்பதற்காக ஆற்றில் தண்ணீர் சற்று குறைவாக ஓடும்பொழுது ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து செல்லும்போது தண்ணீரில் இழுத்துச் சென்ற நிகழ்வும் நடந்துள்ளது.

விவசாயிகளுக்கு காய்கறிகளை கிருஷ்ணகிரி, சூளகிரி, ஒசூர் ஆகிய நகரங்களுக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்தவும் கடுமையான சிரமங்கள் ஏற்படுகின்றன.

தீர்விற்கான மக்களின் முயற்சிகளும், அரசின் அணுகுமுறையும் :

மாணவர்களுக்கு பேருந்து வசதி காலை, மாலையில் வேண்டும். அது மட்டும் நடந்தாலே போதும் என்றே மக்கள் கூறுகின்றனர்.

பேருந்து வசதி கோரி தொடர்ந்து எடுத்த முயற்சிகளால் போக்குவரத்துத் துறை சார்பாக டிப்போவில் இருந்து இதுவரை 10 முறை வந்துள்ளார்கள். GM வந்து பார்த்துள்ளார். அதேபோல் வேப்பனப்பள்ளி தொகுதியின் தற்போதைய MLA கே.பி.முனுசாமியிடமும் பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி கலெக்டரிடமும் மனு அளித்துள்ளனர்.

மாணவர்களுக்கு பேருந்து வசதி காலை, மாலையில் வேண்டும். அது மட்டும் நடந்தாலே போதும் என்றே மக்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து முயற்சிகள் எடுத்தும் மக்களின் அடிப்படையான இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் கடந்த 25 ஆண்டுகளாக நீடிப்பதாக இப்பகுதி மக்கள் ஆதங்கத்தோடு கூறுகின்றனர். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதே பெரும்பான்மையான மக்களின் குமுறலாக உள்ளது. தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகளும், மனு கொடுக்கும்போது அதிகாரிகளும் வந்து பார்த்துவிட்டு பேருந்து வசதி செய்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுக்கின்றனர். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தொடர்கதையாக உள்ளது. மக்கள் நம்பி நம்பி ஏமாந்ததுதான் மிச்சம் என்றே சொல்ல வேண்டும்.

ஏறக்குறைய பேருந்து வசதி இல்லாததால் ஏற்படும் கஷ்டங்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் நிலையில் மக்கள் இதை சகித்துக் கொள்ளப் பழகிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கிற்கு ஒரு காரணம் என்றும் கூற முடியும்.

பேருந்து வசதி செய்து தருவதில் போக்குவரத்துத் துறை சார்ந்த பிரச்சினை:

இது குறித்து போக்குவரத்து துறை தொழிலாளிகளிடம் கேட்டபொழுது அவர்கள் கூறியது என்னவெனில்,

தங்கள் பகுதிக்கு பேருந்து வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தால், அந்த வழித்தடத்தை ஆய்வு செய்து புதிய பேருந்துகள் விடுவது என்பதை அதிகாரிகள் செய்வதில்லை. அதற்கு பதிலாக ஏற்கனவே வேறு வழித்தடத்தில் ஓடும்  பேருந்தையே திருப்பி விடுவது என்பதே நடக்கிறது.

கூடுதல் பணிச்சுமை மற்றும் கூடுதல் தொலைவு செல்ல வேண்டியதாகிறது. ஆனால் சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஏற்கனவே ஓட்டிய அதே நேரத்தில் (ட்ரிப் டைம்) ஓட்ட வேண்டும் என்று பேருந்து ஓட்டுநர்கள் மீது அதிகாரிகள் சுமையைத் திணிக்கின்றனர்.

புதிய ஊர்களுக்கு செல்வதால் ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் உள்ள உழைக்கும் மக்கள் வேலைக்கு செல்வதற்கான நேரத்தில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த சுமைகள் அனைத்தும் போக்குவரத்து தொழிலாளிகளின் மீது திணிக்கப்படுகிறது.

இது எதற்கும் வாய்ப்பில்லாவிட்டால் திட்டமிட்டே மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது என்பதே நடக்கின்றது.

புதிய வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளை விடுவதும், அதற்காக புதிதாக ஓட்டுநர்களை வேலைகளில் நியமிப்பதும்தான் இதற்கு தீர்வு என்று கூறுகின்றனர்.

மேற்கண்ட விசயங்கள் நமக்கு எதை உணர்த்துகின்றன?

உழைக்கும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு தேவையானவற்றில் மிக முக்கியமானது பேருந்து வசதி. பள்ளி செல்லவும், வேலைக்கு செல்லவும், தங்களின் அன்றாட அலுவலகளுக்கும் உழைக்கும் மக்களுக்கு பேருந்து போக்குவரத்து மிக முக்கியமானதாக உள்ளது. இப்படிப்பட்ட சேவைகளுக்காகத்தான் வரி வாங்குகிறோம் என்று அரசு கூறிக்கொள்கிறது. இன்னும் சொல்லப்போனால் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய மாநிலம், எல்லாக் கிராமங்களுக்கும் சாலை வசதி, பேருந்து வசதிகள் இங்குதான் அதிகம் என்று கூறிக்கொள்ளும் தமிழகத்தில்தான் இப்படிப்பட்ட அவலநிலை தொடர்கிறது.

ஏன் இந்த அவலநிலை தொடர்கிறது? இந்த அளவுக்கு இழுத்தடிப்பதற்கான காரணம் என்ன? சரியாகச் சொன்னால் அரசு மக்களுக்கு செய்வதாக ஏற்றுக் கொண்ட கடமைகளில் இருந்து ஒதுங்குகிறது என்பதே ஆகும். முக்கியமான விசயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காலையிலும், மாலையிலும் பேருந்து வசதி செய்து தர முடியாத  மிகப்பெரும் பிரச்சினை அல்ல.  உழைக்கும் மக்களுக்கு அவ்வாறு செய்து தரக் கூடாதென்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது.

அதற்கு அடிப்படையான காரணம் அரசின் தனியார்மயக் கொள்கை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டும்தான் சலுகைகள் கொடுக்க வேண்டும். உழைக்கும் மக்களுக்கு கொடுக்கும் சேவைகளையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பதுதான் தனியார்மயக் கொள்கையின் அடிப்படை.

போக்குவரத்துத் துறையை படிப்படியாக தனியார்மயமாக்குவதுதான் அரசின் நோக்கம். அதனால்தான் புதிய பேருந்துகளை இயக்குவதையும், போக்குவரத்துக்கு புதிதாக ஆட்களை நியமிப்பதையும் செய்யாமல் ஏற்கனவே உள்ள தொழிலாளிகளை வாட்டி வதைக்கிறது அரசு. அதற்கு ’விடியல் அரசு’ உள்ளிட்ட எந்த ஆட்சியாளர்களும் விதிவிலக்கல்ல. அவர்களால் கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகளை மட்டுமே வாரி வழங்க முடியும். உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. அதற்கு அவர்களின் கார்ப்பரேட் எஜமானர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

இதே கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஐபோன் நிறுவனத்தின் ஆலை வரப்போகிறது என்றும் அதில் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்றும் நமது இளம் தொழிலாளர்களை அத்துக் கூலிகளாக  ஐபோன் நிறுவனம் சுரண்டப்படப்போவதையே  பெருமையாகப் பேசிக் கொள்கிறது தமிழக அரசு. ஆனால் அதற்கு சில பத்து கிலோமீட்டர்  அருகில் உள்ள இக்கிராமப் பகுதிகளில்தான் நமது உழைக்கும் மக்களுக்கு பேருந்து வசதியின்றி அன்றாடம் நமது பிள்ளைகள் கால்கடுக்க துயரத்தோடு பல ஆண்டுகளாக பள்ளி சென்று வருகிறார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். வளர்ச்சி என்று கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் மக்களின் பிரச்சினைகளை மறைப்பதுதான் நடக்கிறது.

படிக்க : தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !

மக்களின் வரிப்பணத்தில் இருந்து கடனாகக் கொடுத்த பல லட்சம் கோடி ரூபாயை வாராக்கடன் என்ற பெயரில் முதலாளிகளுக்கு அரசால் தள்ளுபடி செய்ய முடிகிறபோது, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரும் நிறுவனங்களுக்கு நிலம், நீர், மின்சாரம், சாலை வசதி என அனைத்தையும் மிக மிக சலுகையில் அரசால் கொடுக்க முடிகிறபோது, காலையும், மாலையும் உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க முடியவில்லை என்பது எப்படிப்பட்ட அநியாயம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

எந்த முதலாளியின் வீட்டுப் பிள்ளைகளும், பணக்கார அரசியல்வாதிகளின் வீட்டுப் பிள்ளைகளும், நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளின் வீட்டுப் பிள்ளைகளும் எக்காலத்திலும் நமது பிள்ளைகளைப் போல் கால்கடுக்க நடந்து சென்று படிக்கப் போவதில்லை. அவர்களுக்கெல்லாம் அரசுப் பள்ளிகள் ஒரு பொருட்டல்ல. அரசுப் பேருந்துகளும் பொருட்டல்ல.

காசிருந்தால் வாழு, இல்லாவிட்டால் எக்கேடோ கெட்டுப் போ என்பதுதான் அரசின் கொள்கையாக உள்ளது. இதுதான் தனியார்மயம். ஒட்டுமொத்த நாட்டையே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எழுதிக் கொடுக்க தீர்மானித்த பிறகு, உழைக்கும் மக்களின் பேருந்து வசதியும், நமது பிள்ளைகளின் துயரங்களும் இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கவா போகிறது?

நமது அடிப்படைத் தேவைகளுக்கே நாம் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் மட்டும்தான் தீர்வு கிடைக்கும் என்பதே கோடான கோடி உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

வினவு செய்தியாளர் – கிருஷ்ணகிரி

சர்வதேச  அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!

ங்கிலாந்தில் இந்திய மக்கள் அதிகமாக வாழும் லெய்ஸ்டர் பகுதியில் கடந்த சில வாரங்களாக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடந்து வரும் கலவரம் அப்பகுதி மக்களையும், அங்கிருக்கும் மதத் தலைவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை முகாந்திரமாகக் கொண்டு இந்துத்துவ கும்பல் தொடங்கி வைத்த இக்கலவரம், பலரை வெளியில் வர முடியாதவாறு வீட்டிற்குள்ளேயே முடக்கியது. இங்கிலாந்தின் இப்பகுதியில், பல்வேறு வகைப்பட்ட மதம், இனத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்தாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதுபோன்ற எந்தக் கலவரத்தையும் பிரிவினையையும் இந்நகரம் கண்டதில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி துபாயில் இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, லெய்ஸ்டர் நகர தெருக்களில் குவிந்த இந்துத்துவ கும்பல் ஒன்று, 1947-இல் பாகிஸ்தான் பிரிவினையின் போது எழுப்பப்பட்ட “பாகிஸ்தான் முர்தாபாத்” (பாகிஸ்தானுக்கு மரணம்) என்ற முழக்கத்தை எழுப்பியது. பின்னர் இந்த பேரணி வன்முறையாக மாறியது.

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி முஸ்லிம்களின் வணிகத் தெருவான கிழக்கு லெய்ஸ்டரின் கிரீன் லேன் ரோட்டில் மீண்டும் கலவரம் தொடங்கியது. ஒரே மாதிரி முகமூடி அணிந்த சுமார் 200 இந்துத்துவ பயங்கரவாதிகள், அந்த தெருவிற்குள் இருக்கும் ஒரு கோயிலிலிருந்து மட்டைப்பந்து உள்ளிட்ட ஆயுதங்களுடன் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்டபடி அணிவகுத்துச் சென்றனர். அப்போது பாட்டில்களை வீசி வன்முறையைத் தூண்டுவது, மசூதியைக் கடந்து செல்லும் போது முஸ்லிம் மக்களை இழிவாகப் பேசுவது, அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களிலும் இந்துத்துவ கும்பல் ஈடுபட்டது. இதனால், ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இது பின்னர் பெரிய கலவரமாக வெடித்தது.

இது போன்ற கலவரங்களை இதற்கு முன்பு பார்த்திடாத லெய்ஸ்டர் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக லெய்ஸ்டர் நகரைச் சேர்ந்த ஜேம் மசூதி மற்றும் இஸ்கான் இந்து கோயில் மத தலைவர்கள் இணைந்துக் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், “இரு மதத்தைச் சேர்ந்த நாங்கள், ஒன்றாகதான் இந்நகரத்திற்கு வந்தோம். இங்குள்ள இனவெறி உள்ளிட்ட சவால்களை ஒன்றாகதான் எதிர்கொண்டோம். லெய்ஸ்டர் குடும்பமாகிய நாங்கள் இந்து, இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்று. நாங்கள் சகோதர சகோதரிகளும் கூட. எனவே, பிரிவினையை ஏற்படுத்தும் சித்தாந்தத்திற்கு இங்கு இடமில்லை” என்று கூறியுள்ளனர்.

லெஸ்டர் மதவெறிக் கலவரத்திற்கு பிறகு, பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக மதநல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேணுமாறு அலைக்கூவல் விடும் இஸ்லாமிய தலைவர்

மேலும், “எந்த மதத்திற்கும் எதிரான இழிவான கோஷங்கள், வழிபாட்டிற்கு எதிரான தாக்குதல்கள் என எதையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மக்களும் இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு இடமளிக்க வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

***

செப்டம்பர் 17-ஆம் தேதி நடந்த முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து தெரிவித்த போலீஸ், அத்தாக்குதலைத் ‘திட்டமிடப்படாதப் போராட்டம்’ என்றே குறிப்பிடுகிறது. அதைபோல, பெரும்பாலான பத்திரிகைகளும் இக்கலவரம் கிரிக்கெட் போட்டியை ஒட்டி நடந்ததாகவே சித்தரித்தன.

ஆனால், கலவரம் தொடர்பான காணொளிகளும் சமீப காலமாக இங்கிலாந்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் சம்பவங்களும் இது ஒரு திட்டமிடப்பட்ட கலவரம் என்பதையே அம்பலப்படுத்துகின்றன.

கலவரம் நடந்த அன்று, இந்து கோயிலுக்குள் இருந்து வெளியேறிய கூட்டத்தைப் பார்க்கும் போது, அது தற்செயலாகக் கூடிய கூட்டம் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்த கும்பல் அணிந்திருந்த ஆடைகள் முதல் முழங்கிய முழக்கங்கள் வரை அனைத்தும் கனகச்சிதமாகவும் ஒருங்கமைக்கப்பட்டதாகவும் இருந்தன.

கார்டியன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், “கலவரத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்ட 18 பேரில் 8 பேர் லெய்ஸ்டர் நகரைச் சாராதவர்கள். அதில் 5 பேர் பிர்மிங்காம் நகரையும், 3 பேர் சோலிஹஸ், லூடன் மற்றும் ஹவுன்ஸ்லோ நகரங்களையும் சேர்ந்தவர்கள்” என்று குறிப்பிடுகிறது. இதன்மூலம், இந்தக் கலவரத்தில் பங்கேற்பதற்காகவும் இக்கலவரத்தைத் தூண்டுவதற்காகவும் பல இந்துபயங்கரவாதிகள் திட்டமிட்டே லெய்ஸ்டர் நகரினுள் நுழைந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

கலவரம் குறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-இன் பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “லெய்ஸ்டரில் நடந்த நிகழ்வுகள் தனிமைப்படுத்தப்பட்டவையோ, தன்னிச்சையானவையோ  அல்லது உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான மோதல்களோ அல்ல. லெய்ஸ்டரில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக நகரத்திற்கு வந்த இந்து ஆண்களின் குழுக்களால் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் இவை” என்று குறிப்பிட்டார்.

மேலும், “கொடிகள் மற்றும் தடிகளுடன் தெருக்களில் அவர்கள் அணிவகுத்துச் செல்வது இந்தியாவிலிருந்தும் அதன் இந்துப் பேரினவாத அரசாங்கத்திலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட இந்துத்துவா நாடகப் புத்தகத்திலிருந்து நேராக வெளிப்பட்டது” என்றும் கூறினார்.

லெய்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் நீல் சக்ரோபர்தி என்பவரும் ஏறக்குறைய இதே கருத்தை வெளிப்படுத்தினார். “இந்தியாவின் மதப் பதட்டங்களும், அங்குள்ள ஒரு கடுமையான, வன்முறை, தேசியவாத அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் நாம் [லெஸ்டரில்] பார்த்தவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார். இதன் மூலம் இக்கலவரம் கிரிக்கெட் போட்டியை ஒட்டி நடந்த தன்னெழுச்சியான நிகழ்வு அல்ல என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

சமீப காலமாகவே லெய்ஸ்டர் பகுதியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆகஸ்டு 15, ‘சுதந்திர தினத்தில்’ அங்குள்ள மசூதிக்கு வெளியில் சத்தமிட்டுக் கொண்டாடும் வழக்கம் லெய்ஸ்டரில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இணையத்தில் பரவிய ஒரு காணொளியில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் மெல்டன் சாலை அருகில் உள்ள தெருக்களில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்கள் கிழிந்து கிடப்பதையும், அதை இஸ்லாமியர்கள் பொறுக்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.

மேலும், இந்தியாவில் நடப்பதைப் போல லெய்ஸ்டர் நகரிலும், “நீ இஸ்லாமியனா” என்று கேட்டு தாக்கும் பழக்கமும் உருவாகியுள்ளது. கடந்த மே மாதம் ஒரு இஸ்லாமிய இளைஞரும், செப்டம்பர் மாதம் இஸ்லாமியர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு சீக்கிய இளைஞரும் இந்துத்துவ கும்பல்களால் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், இவை தொடர்பான எந்த புகார்களுக்கும் லெய்ஸ்டர் காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது ஒரு இஸ்லாமிய பத்திரிகை.

இங்கிலாந்தின் லெய்ஸ்டர் நகரத்தில் வாழ்பவர்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தினர் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள். இங்கிலாந்தில் லெய்ஸ்டர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும்தான் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் இத்துணை அதிகமாக வாழ்கின்றனர். பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வந்தாலும், பிரிவினைகள் ஏதுமின்றி பன்முகக் கலாச்சாரத்திற்கு ஓர் அடையாளமாகவே இதுநாள்வரை அந்த நகரம் இருந்து வந்துள்ளது.

அத்தகைய நகரில்தான் தற்போது மதவெறிக் கலவரத்தைத் தூண்டிவிட்டுள்ளது இந்துத்துவ கும்பல். சொல்லப்போனால் லெய்ஸ்டர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கே அந்த நகரின் பன்முகத்தன்மையே காரணம். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ், இந்துக்களும் இஸ்லாமியர்களும் அதிகம் வாழும் பகுதியைக் குறிவைத்துதான் கலவரங்களைத் தூண்டும். ஏனெனில், அத்தகைய பகுதிகள்தான் அவர்கள் நினைத்த அளவிற்கு பிளவையும் வன்முறையையும் ஏற்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு கலவரத்திற்கு லெய்ஸ்டர் நகரம் குறிவைக்கப்பட்டது, இஸ்லாமிய வணிக தெருவில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டு முதல் தாக்குதல்களை இவர்கள் நடத்தி பின்னர் அதை கலவரமாக மாற்றுவது, “நீ இஸ்லாமியனா?”  என்று கேட்டு தாக்குவது போன்றவை எல்லாம் சங்கப் பரிவாரக் கும்பல் முஸ்லீம்களுக்கு எதிராக இந்தியாவில் பின்பற்றிய தாக்குதல் வடிவங்களாகும். அவற்றை தற்போது ஆர்.எஸ்.எஸ் இங்கிலாந்திலும் அமல்படுத்திப் பார்த்துள்ளது.

***

இந்த கலவரம் தொடர்பாக லெய்ஸ்டர் போலீஸ் கிட்டதட்ட ஐம்பது நபர்களைக் கைது செய்துள்ளது. மேலும், போலீஸ் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலவரம் நடந்த சனிக்கிழமை அன்று திரளப் போகும் மக்களின் எண்ணிக்கை தொடர்பான நேரடி உளவுத்துறை தகவல் எதுவும் வரவில்லை என்றும் அந்த சூழலில் அதிகாரிகள் வரும் வரை அங்கிருந்த குறைந்த எண்ணிக்கையிலான போலீஸ் கலவரக்காரர்களை எதிர்கொண்டு கலவரத்தைத் தடுக்கும் வகையில் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள்” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பல பத்திரிகைகள், போலீஸ் இக்கலவரத்தைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளன. கலவரம் நடந்த அன்று வெளியான பல காணொளிகளில், இந்து குண்டர்கள் கையில் ஆயுதங்களோடு தெருவில் திரிவதையும், போலீஸ் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்ப்பதையும் காண முடிகிறது.

லெய்ஸ்டர் போலீசின், இந்த இந்துத்துவ-சார்பு போக்கு என்பது அந்நாட்டு போலீஸ் மத்தியில் மட்டும் இருக்கும் போக்கல்ல. அந்நாட்டு அரசே இந்துத்துவ கும்பல்களின் வளர்ச்சியைக் கண்டும் காணாமல் இருப்பதோடு, அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேலையை செய்து வருவதாக அறிய முடிகிறது.

1966-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-இன்  வெளிநாட்டு அமைப்பான ஹெச்.எஸ்.எஸ் (இந்து ஸ்வயம்சேவக் சங்) இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஹெச்.எஸ்.எஸ் இங்கிலாந்தில் ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2002-இல் குஜராத் படுகொலையின் போது பிரிட்டனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட மோடி, 2014-இல் ஆட்சியைப் பிடித்த பிறகு வரவேற்கப்பட்டார். அதன்பின், அந்நாட்டு ஆளும் கட்சியான  பழமைவாத கட்சியுடன் ஹெச்.எஸ்.எஸ் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஓர் நெருங்கிய கூட்டை ஏற்படுத்திக்கொண்டது. இதன் காரணமாக சமீப காலங்களில் இந்துத்துவ கும்பல்கள் அங்கு சுதந்திரமாகக் கொட்டம் அடித்து வருகின்றன. எனவே, இங்கிலாந்து நகரங்களில் நடந்து கொண்டிருக்கும் மதவெறிக் கலவரங்களை அரசின் ஆதரவுடன் ஹெச்.எஸ்.எஸ் மேற்கொள்ளும் பயங்கரவாத நடவடிக்கைகளின் அங்கமாகவேப் பார்க்க வேண்டியுள்ளது.

***

முஸ்லீம்கள் மீதான இந்து வெறியர்களின் தாக்குதல்களை இங்கிலாந்து அரசு தடுக்காததற்குக் காரணம், இயல்பாகவே முஸ்லிம் வெறுப்பு என்ற புள்ளியில் ஆட்சியில் இருக்கும் பழமைவாதக் கட்சியும் ஹெச்.எஸ்.எஸ்-உம் ஒன்றிணைவதுதான். மேலும், இங்கிலாந்தில் தடையின்றி வளர்வதற்காக ஹெச்.எஸ்.எஸ்-க்கு பழமைவாதக் கட்சியின் ஆதரவும், இந்துக்களின் வாக்கை அறுவடை செய்வதற்காக பழமைவாதக் கட்சிக்கு ஹெச்.எஸ்.எஸ்-ம் தேவைப்படுகின்றன. இந்த நலன்களுக்காக இரண்டும் ஒன்றோடு ஒன்று சமரசம் செய்து கொள்கின்றன.

சான்றாக, 2019 பொதுத் தேர்தலில் பாஜகவுடன் தொடர்பு கொண்ட தேசிய இந்து சமய அறநிலையக் குழுவின் பொதுச் செயலாளர், சமூக ஊடகங்களில் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களைத் தனிப்பட்ட முறையில் வற்புறுத்தினார்.

அதேபோல, பழமைவாதக் கட்சியில் இருந்தவர்களும் பகிரங்கமாகவே ஹெச்.எஸ்.எஸ் ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக் கொண்டுள்ளனர். முன்னாள் உள்துறை செயலாளர் பிரிதி படேல் 2014-ஆம் ஆண்டில் “ஆர்.எஸ்.எஸ்- எ விஷன் இன் ஆக்சன் – எ நியூ டான்” என்ற தலைப்பில் ஹெச்.எஸ்.எஸ் நடத்திய நிகழ்வுக்காக வாழ்த்துக் கடிதம் எழுதினார். மேலும் “பிரிட்டனின் இந்து சமூகத்திற்காக அவர்கள் சாதித்ததைப் பற்றி மிகவும் பெருமைப்பட வேண்டும்” என்று கூறினார்.

***

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவ பயங்கரவாதம், இங்கிலாந்தில் மட்டுமல்ல அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இம்மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆகமிகப் பிற்போக்கு சக்திகளான நவ நாஜி கும்பல்களோடு கைகோர்த்துக் கொண்டு தனது பாசிச அடித்தளத்தை விரிவுபடுத்தி வருகிறது.

தற்போது இங்கிலாந்தில் நடந்த கலவரமும் அமெரிக்காவில் ‘சுதந்திர தினத்தில்’ புல்டோசரை நிறுத்திக் கொண்டாடியது போன்ற நிகழ்வுகளும் ஆர்.எஸ்.எஸ்-இன் இருப்பையும் வளர்ச்சியையும் காட்டுகின்றதே ஒழிய அதன் முழு பலத்தையும் காட்டவில்லை. உண்மையில்,  அதன் பலம் பிரம்மாண்டமானது. தற்போது ஆர்.எஸ்.எஸ் ஓர் ஆயுதபாணியாக்கப்பட்ட சர்வதேச அடித்தளம் கொண்ட இந்து மதவெறி பாசிச அமைப்பு.

இந்துத்துவ பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்துமத அடையாளங்களைப் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகளில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பிளக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துவது என்பது இனியும் இந்திய பாட்டாளி வர்க்கத்தின் கடமை மட்டுமல்ல. அது உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமையுமாகும்.

துலிபா

Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists!

It has been 75 years since India’s pseudo-independence. Since last year, the Modi government has been conducting various cultural programmes and competitions across the country in the name of ‘Azadi Ka Amrit Mahotsav’. Following this, Modi announced the “Har Ghar Tiranga” (Tricolour in every house). The aim of this project was to hoist the national flag in 20 crore households.

Every citizen of the country has to hoist the national flag in their homes for three days from August 13 to 15; they should take selfies with the national flag and upload them on the internet; Modi urged the people that the national flag’s picture should be put up on their profile pictures on social media pages.

In his address, Modi noted that these measures will further strengthen our relationship with the Tricolour.

Amendments were made to the Flag Code to allow the flag to be hoisted at all times, day and night, in individual homes and commercial establishments, in accordance to the flag hoisting event.

Also Read: The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!

The objective of the house-to-house flag hoisting programme is to inculcate patriotism in the minds of citizens and to create awareness about the national flag, according to the Ministry of Culture.

Lit up of ‘Patriotic torch’
Many celebrities including Amitabh Bachchan, Shah Rukh Khan, Rajinikanth, Vijay Devarakonda, Mammootty, Mohanlal, Tendulkar and many others promoted this event by uploading selfie videos of them hoisting the flag. Around 6 crore selfies were uploaded on the harghartiranga.com website, which was launched to upload selfies.

The BJP also held campaign rallies across the country demanding flag hoisting at homes. The project has been celebrated grandly in Yogi’s Uttar Pradesh. UP Chief Minister Yogi Adityanath participated in the national flag rally along with school children and also held a bike rally.

Chief Ministers of other BJP-ruled states like Gujarat, Himachal Pradesh and Haryana have also held national flag rallies in their respective states. BJP leaders, including Smriti Irani and Piyush Goyal, have held campaign rallies in Delhi. The national flag has been hoisted after a gap of 52 years in Nagpur, the headquarters of the RSS.

Apart from the BJP, parties like he Congress, Trinamool Congress and Aam Aadmi Party have also held national flag rallies.

Thus people were flooded with ‘patriotism’ due to series of campaigns carried out by the RSS-BJP, well-known celebrities and the ruling class media.

There were reports that a large number of people hoisted the national flag in their homes beyond the announced target of 20 crore. Modi said he was happy and proud that the scheme has received such a great response from the people.

But was it true that the working people of this country were able to celebrate this day with the same joy? Or is it only an exaggeration by the ruling class media? Is freedom flying high in our country to the extent of celebrating Independence Day? We have to ask such questions. We will look for answers by looking through this day of celebration.

Does freedom and swadeshi exist?
The Flag Code was amended before the scheme of hoisting the national flag at homes was announced. Before the amendment, only hand-woven and hand-spun flags made of cotton, silk, wool or Khadi were allowed. But now, flag made of polyester or machine-made flags have been allowed.

With this amendment, the Modi government has destroyed the subsistence of our country’s weavers. Instead of giving the tenders for making the flag to the handloom companies, it has given to major powerloom companies in Gujarat and to the Chinese companies.

Flags imported from China have also been used in flags sold on the occasion of ‘Independence Day’. Patel’s statue worth Rs 3,000 crore is already China-made. Now, the national flag is also made in China, as per Modi’s choice. This has exposed what is the ‘swadeshi’ of the Modi government, which we often hear in his speeches saying “buy domestic goods”.

On the occasion of pseudo-Independence Day, the market value of flags sold in the country’s capital alone is Rs 4-5 crore. Across the country, 2.36 crore national flags were sold between July 1 and August 15. Their market value is Rs 60 crore.

This has not at all benefited the handloom weavers. They did not even receive the orders that they received last year.

The Karnataka Khadi Gramodyog Samyukta Sangha, which made the national flag out of Khadi cloth, has suffered huge losses due to Modi’s amendment to the Flag Code. The company is an ISO-certified company that prepares and supplies the national flag for government events. It is to be noted that most of the workers in the company are women.

“Every year, by the end of July, the Samyukta Sangha would have despatched national flags worth ₹2.5 crore. But thanks to the Centre’s amendment to the National Flag Code allowing flags made of polyester cloth, the Sangha has not even received half the usual orders. So far, it has orders for flags worth just around ₹ 1.2 crore, but the Sangha has raw material stock to supply flags worth ₹5 core. The Samyukta Sangha had set its target high this year in anticipation of a vibrant ‘Amrit Mahotsav’ celebration and procured more raw material”, said Shivanand Mathapathi of the Samyukta Sangha in an interview to the Hindu.

At the end of July, a protest was held on behalf of the association against the amendment to the Flag Code.

“Symbol of Swadeshi and the Ratnam (Charka) on the earlier flag represents handloom weavers. Today, we celebrate Azadi Ka Amrit Mahotsav in a grand manner, but why do we forget the weavers? Why do we forget the reason for the Swadeshi Movement, which was one of the most important parts of our freedom struggle?” questions Pillalamarri Nageswara Rao, vice-president of Andhra Pradesh Chenetha Karmika Sangham.

***

In Haryana, people who had come to buy rations were threatened that they will get rations only if they pay Rs 20 for the flag. A video of the flag being sold went viral on the social media.

The Uttarakhand BJP chief had threatened by asking photographs of houses that do not hoist the national flag. In some states, education department officials and educational institutions have urged school children to compulsorily hoist the national flag. The parents were agitated that some private schools had sold the flags to the children and made a profit out of it.

BJP’s Sudhir Mungantiwar, Minister of Forest and Culture in Maharashtra, has directed that government officials, while accepting their calls, should say “Vande Mataram” instead of “hello” and observe it till January 26 next year.

A deduction of Rs 38 has been made from the salary of each railway employee for the Har Ghar Tiranga campaign. Government school teachers have been directed to hoist the flag at their homes and take photographs of it and send it on WhatsApp.

The BJP and the media were thrilled – this time we have hoisted the national flag in Kashmir without any untoward incident; the tricolour had also been hoisted at the homes of persons arrested for their alleged links with terrorists. Mehbooba Mufti, however, revealed the fact that people were forced to hoist the flags in their homes and that the celebrations were staged by unleashing repression across Kashmir.

What other name could be used to call these activities instead of calling them ‘violence perpetrated on the people in the name of patriotism’?

***

Yogi Adityanath waving Tricolour with school children on pseudo-Independence Day as a part of celebrating Azadi ka Amrit Mahotsav

Modi, who had announced that he would build houses for all in the country by the end of 2022, is now vacating the existing huts.

In recent times, the trend of the underprivileged people, who have built the country’s metropolises, being driven out of their homes in the name of smart cities has intensified.

The Delhi Development Authority (DDA) has issued notices to demolish houses in Gyaspur Basti and Kasturba Nagar, where the downtrodden people live in Delhi. The people of the area have also staged a protest on August 12 against the demolition of their houses. “How can we hoist the flag when our houses are being demolished?” they reasonably questioned.

On one hand, the smart city project is evacuating the residential areas of the downtrodden. On the other hand, the homes of Muslims fighting against the fascistic oppression of the RSS-BJP are being razed to the ground by bulldozers. Is this the smell of freedom?

A nine-year-old school boy had been killed for drinking water from a pot in Surana village of Jalore district of Rajasthan. Chail Singh, a teacher, beat up the dalit boy after he drank water from a pot kept for drinking by the dominant castes. The boy, who battled for his life, died on August 14.

On one hand, when people were drowned in the Independence Day celebrations, the dalits and democratic forces were posting comments on social media condemning the casteist brutality.

Across the country, casteist honour killings and attacks on dalits are on the rise under the rule of the saffron mobs. Does freedom exists in a society where caste attacks and killings are a daily occurrence? The day of freedom from caste oppression will be the day of independence for the oppressed!

***

The BJP-led Gujarat government has released the perpetrators of the gang-rape of a Muslim woman, Bilkis Bano, during the Gujarat riots, on the grounds of ‘good conduct’ on the eve of Independence Day.

Isn’t it a challenge for women to live in a country that is providing freedom to rapists and fascist terrorists? How can this day be a day of celebration for us?

Why this patriotic makeover

Nationalism is the haven of the fascists, and in that sense, the 75th pseudo-Independence Day celebration has given the RSS-BJP an opportunity to cover up their anti-people activities by smearing the people with patriotism.

Also Read: Let’s uphold the day of Russian Socialist Revolution! Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism! | Pamphlet

What kind of nationalism do the fascists propagate among the masses? People love and celebrate our country and the revolutionary history of our country. Therefore, the fascists who hold on to it as it exists give fascistic context to the patriotism of the people. They are putting the interests of crores of working people at odds with the nation.

Rising prices, unemployment, deprivation of livelihoods by pro-corporate schemes, fascists’ attacks on minorities are not national tragedies; beyond that, there is nationalism and national pride – This is the nationalism propounded by the fascists. The ‘Nation First’ campaign put forward by the RSS-BJP belongs to that category.

This philosophy can be understood very vividly if one recalls that when the green fields of the Tanjore delta were burning with hydrocarbons, L. Ganesan said, “A village has to be sacrificed for the nation.”

Through the various activities that it undertakes among the people, the BJP creates an impression among the people that it is the party for the nation and its leader the strongest leader of the nation; Afterwards, the people should accept whatever the party and its leader say without any questions under the name of national interest.

The Azadi Ka Amrit Mahotsav celebrations and the Har Ghar Tiranga were planned in that way. It is the main task of the revolutionary-democratic forces to immediately expose and defeat these attempts of the fascists.

Appu

2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!

0

குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசுகையில், “2002-ல் வன்முறையில் ஈடுபடவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

கேடா மாவட்டத்தின் மஹுதா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில், ஷாவின் பிரச்சார உரையில், 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் வகுப்புவாத மற்றும் சாதி கலவரங்களை காங்கிரஸ் தூண்டிவிட்டதாக ஷா குற்றம் சாட்டினார்.

“குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது, ​​வகுப்புவாத கலவரங்கள் தலைதூக்கியது. பல்வேறு சமூகங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்தவர்களை ஒருவருக்கொருவர் எதிர்த்த வன்முறையை காங்கிரஸ் தூண்டிவிட்டது. இதுபோன்ற கலவரங்கள் மூலம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டதுடன், சமூகத்தின் பெரும் பகுதியினருக்கு அநீதி இழைத்துள்ளது” என்றார்.

படிக்க : 2002 குஜராத் படுகொலை வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதி(காவி)மன்றம்!

“2002-இல் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்த பிறகு, அவர்கள் 2002 முதல் 2022 வரை வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்த்தனர். வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குஜராத்தில் பாஜக நிரந்தர அமைதியை நிலைநாட்டியுள்ளது” என்று மத்திய அமைச்சர் கூறினார்.

000

யாருக்கு “பாடம் கற்பிக்கப்பட்டது” என்பதை அமித் ஷா விவரிக்கவில்லை. முன்னரே குறிப்பிட்டதுபோல, குஜராத் கலவரத்தில் 2000-க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.

2002 குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார். இந்தப் படுகொலையில் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறி அமெரிக்கா உட்பட பல நாடுகள் முன்னதாகவே அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி நரேந்திர மோடிக்கு எதிராகவும், கலவரத்தில் ஈடுபட்ட காவி பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழங்கு விசாரணையில் தற்போது 2022 ஆம் ஆண்டும் ஜூன் மாதம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஜாஃப்ரியால் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டனர். குஜராத் கலவரத்தின் போது முதலமைச்சராக இருந்த மோடியை சிறப்பு புலனாய்வு முகமை இந்த வழக்கில் இருந்து விடுவித்துவிட்டது.

அதேபோல், 2002 ஆம் ஆண்டு கலவரத்தின்போது காவி பயங்கரவாதிகளால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் பில்கிஸ் பானோ, அவரது குடும்பத்தினர் 14 பேரை கொலை செய்தார்கள் காவிகள். இது தொடர்பாக பில்கிஸ் பானோ தொடுத்த வழக்கில் 11 காவி குண்டர்கள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை தற்போது 2022 அக்டோபரில் உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

படிக்க : குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது! | மக்கள் அதிகாரம் கண்டனம்

குஜராத்தில் காவி பயங்கரவாதிகள் கலவரங்களை அரங்கேற்றினார்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள், நேரில் கண்ட சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள், கொலைசெய்யப்பட்ட முஸ்லிம் சிறுபான்மை மக்களின் பிணங்களே ரத்த சாட்சியங்களாக இருந்தது என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

யாருக்கு பாடம் கற்பிக்கப்பட்டதாக அமித்ஷா பிதற்றுகிறாரோ, அவர்களுடன் இணைந்து இந்திய உழைக்கும் மக்கள் காவிக் கும்பலுக்கு பாடம் கற்பிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சந்துரு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுக! | மக்கள் அதிகாரம்

25.11.2022

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது
கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுக !

பத்திரிகை செய்தி

மின்முறைகேடுகளை தடுப்பதற்கான வழிமுறை என்று கூறிக்கொண்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. 100 யூனிட் மின்சாரம் மானியமாக இதுவரை வழங்கப்பட்டுக்கொண்டு வருகிறது. மானியம் தேவை இல்லாதவர்கள் விட்டுக்கொடுக்கலாம் என்ற வழிகாட்டுதல் அரசால் முதலில் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி இணைப்புகள் உள்ளன. அவற்றை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு மிகக்குறுகிய நாட்கள் காலாவகாசம் கொடுக்க வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது? இந்த அவசரகதியிலான நடவடிக்கை உழைக்கும் மக்களை கண்டிப்பாக பெரும் இடரில் தள்ளி இருக்கிறது. மானியம் வேண்டாம் என்பவர்கள்  ஆதார் எண்ணை இணைக்கத் தேவையில்லை என்ற அறிவிப்பையும்  அரசு தெரிவித்து இருக்கிறது. ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் இனி கிடைக்காது.  இதே போலத்தான் எரிவாயு உருளைக்கான மானியம் படிப்படியாக நீக்கப்பட்டு, அதன் விலையோ உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

படிக்க : கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடிகளை வரிச்சலுகையாகவும் கடன் தள்ளுபடியாகவும் அறிவிக்கும் அரசு, மக்களுக்கு 100 யூனிட் மானியம் அளிப்பதற்கு கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதற்காகத் தான் உற்பத்தி, பராமரிப்பு, விநியோகம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அனல் மின்நிலையங்களும், நீர் மின் நிலையங்களும் படிப்படியாக தனியாருக்கு அக்குவேறு ஆணிவேறாக ஒப்பந்த முறையில் விற்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

திட்டமிட்டே அரசு மின் உற்பத்தி நிறுவனங்களை ஒழித்துக்கட்டி, தனியார் மின் நிறுவனங்களிடம் மிக அதிக விலைக்கு வாங்கி தனியார் நிறுவனங்களுக்கு மிகக் குறைவான விலைக்கு விற்பது, நிலக்கரியை தரம் குறைந்ததாக வாங்குவதும் அதில் ஊழல்கள் புரிவது என்பதுமே மின்வாரியம் பெருந்த நட்டத்தில் இயங்குவதற்கும் மின்வாரிய முறைகேடுகளுக்கும் முக்கியக் காரணமாகும்.

மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு மானிய விலையின் மின்சாரம் வழங்கப்பட்டும் வருகிறது. இவற்றையெல்லாம் தடுக்காமல் ஆதார் எண்ணை இணைத்தால் மின் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்பது ஏமாற்றுக் காரியமே. மின் முறைகேடுகள் அனைத்தும் மின்வாரியத்தின் உதவியா நடக்கிறதே ஒழிய மக்களால் அல்ல.

ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு என்பது தமிழ்நாட்டு மக்களின் தலையில் இடியாய் விழுந்திருக்கும் நிலையில் மின் முறைகேடுகளை தடுப்பது என்ற பெயரில் ஆதார் எண் இணைக்க சொல்வது பெட்ரோல் – டீசல் – எரிபொருள் போல மின்சாரத்தையும் தினமும் விலையேற்றுவதற்கான முன்னேற்பாடாகவே இருக்கிறது.

படிக்க : ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

மின்சாரம் தனியார்மயக்குவதே எல்லாவிதமான முறைகேடுகளுக்கும் அடிப்படையாகும். அதை ஒழித்துக்கட்டாமல் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது போன்ற எவ்வித திட்டமும் மின்வாரியத்துக்கு பலன் தராது. மாறாக மின்சாரத்தை தரவேண்டியது அரசின் கடமை என்ற நிலையிலிருந்து 100 யூனிட் மானிய மின்சாரத்தை ஒழித்து, காசிருந்தால் மின்சாரம் என்ற நிலைக்கே தள்ளும்.

ஆகவே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற முடிவை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321