Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 135

டிச.6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் : அயோத்தியில் அராஜக வெறியாட்டம் போட்ட காவி பயங்கரவாதிகள்!

1992 டிசம்பரில் இந்து மதவெறியர்களால் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த சட்டவிரோத கரசேவை-க்கு இன்று வரை யாரும் தண்டிக்கப்படவில்லை. 2019-ஆம் ஆண்டில் ‘பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கே நிலம் சொந்தம்’ என்ற ஓர் அநீதி தீர்ப்பை வழங்கி கரசேவை புரிந்த அனைவரையும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். அதை தொடர்ந்து தற்போது ராமர் கோயிலை கட்டுவதற்கு களமிறங்கிவிட்டது இந்துமதவெறி கும்பல். அதை தொடர்ந்து காசி மதுரா, கியான்வாபி, தாஜ்மஹால் என அவர்களின் அடுத்தக்கட்ட இலக்குகள் கரசேவைக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நாடுமுழுவதும் பல்வேறு கலவரங்களை அரங்கேற்றினார்கள் இந்து மதவெறி பாசிஸ்டுகள். 2002-ல் குஜராத் கலவரத்தை அறங்கேற்றி குஜராத் மாடல் தான் இந்துராஷ்டிரம் என்று கொக்கரித்தார்கள். 2014-ல் மோடி தலைமையிலான பாஜக கட்சி மத்திய ஆட்சியை பிடித்த பிறகு, வட இந்தியாவில் உ.பி; தென்னிந்தியாவில் கர்நாடக உட்பட ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி உள்ளிட்ட சங் பரிவார கும்பல் நாடுமுழுவதும் தனது அடிதளத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, இந்துமதவெறியர்களின் கரசேவையை அம்பலப்படுத்தி எமது புதிய ஜனநாயகம் இதழில் கட்டுரை வெளியிடப்பட்டது. அதனை தற்போது பதிவிடுகிறோம்.

– வினவு

0-0-0

அயோத்தி நாசகார கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!

அயோத்தி பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியதோடு நாடு முழுவதும் மதவெறிப்படுகொலைக் கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் தங்களது நயவஞ்சகச் சதித் திட்டத்தை வெற்றிகரமாகத் துவக்கி விட்டார்கள், இந்துமதவெறி பார்ப்ன-பனியா பாசிசக் கூட்டத்தினர்.

பாபர் மசூதியை இடித்ததானது, “இந்துமத-வகுப்புவாதத் தீவிரவாதிகளது வெறிச்செயல்” “வக்கிரமான கோழைத்தனம்” “மத்திய கால மதவெறிக் குரூரம்” “தேசிய அவமானம்-துரோகம்” “மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றம்” – என்று சித்தரிப்பது எல்லாம் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நாசகரமான கடப்பாரைச் சேவையை மட்டும் குறிக்கின்றன.

ஆனால், இந்த இழிசெயல், இந்துமதவெறி பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவுவது என்கிற மிகவும் அபாயகரமான, நயவஞ்சகமான, கொடிய சதித்திட்டத்தைப் பகிரங்கமாக அரங்கேற்றுவதைத்தான் குறிக்கிறது.

பாபர் மசூதியின் கவிகைகளை உடைத்து நொறுக்கி வீழ்த்தியவுடன் இந்து மத “சந்நியாசினிகள்” என்று பட்டஞ் சூட்டிக் கொண்டுள்ள உமா பாரதியும், ரிதம்பராவும் ஒலிபெருக்கி மூலம் அலறினார்கள், “இதோ, இந்து ராஷ்டிரம் பிறக்கிறது!” – இதுதான் அவர்கள் இலட்சியம். இந்து மதவெறி பாசிச பயங்கரவாதம் – இதுதான் அவர்களின் இராம ராஜ்ஜியம்!

படிக்க : சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !

இந்து மதவெறியின் குருபீடமாகிய ஆர்.எஸ்.எஸ்ஸோ அதன் கள்ளக் குழந்தைகளான பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, பஜ்ரங்க தள், இந்து முன்னணி முதல் தமிழ்நாடு பிராமணம் சங்கம் வரை அவர்கள் யாருமோ, “இந்துராஷ்டிரம்”தான் தமது இலட்சியம் என்பதை மறைக்கவில்லை.

பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டுவது ஒரு மத நம்பிக்கையை நிறைவேற்றுவது என்பதெல்லாம் பாமர ராம பக்தர்களைத் திரட்டுவதற்க்காகச் செய்த பிரச்சாரம்தான்! “இசுலாமிய ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களால் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்; இந்துமதத் துறவிகள் கொல்லப்பட்டனர்; இந்த தேசிய அவமானத்தின் சின்னமாக விளங்குவதுதான் பாபர் மசூதி; அதை அகற்றி ராமன் பிறந்த பூமியில் ராமனுக்குக் கோவில் கட்டுவது அன்று நேர்ந்த அவமானங்களுக்குப் பழிவாங்குவது, இந்துக்களின் கௌரவத்தை நிலை நாட்டுவது” என்கிற விளக்கங்கள் கூட இந்துமதவெறி பாசிஸ்டுகள் தமது “இந்து ராஷ்டிரம்” என்கிற அரசியல்பேராசைக்கு மதச் சாயம் பூசுபவைதான்.

“இராமன் ஒரு மதத்தின் கடவுள் மட்டுமல்ல; தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். போலியான மதச்சார்பின்மை, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இந்துத்துவம், இராமராஜ்ஜியம், இந்து ராஷ்டிரம் அடிப்படையிலான தேசியத்தை நிர்மானிப்பது எங்கள் நோக்கம்” என்று இந்து மதவெறி பாசிஸ்டுகள் அனைவரும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.

ஆகவே, பாபர் மசூதியை இடித்த சம்பவம் உண்மையில் அரசியல் அதிகார ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையைப் போன்றது. பாரதீய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் ஆதாயம் மட்டும் அதன் குறிக்கோள் அல்ல. ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேர்தல்களையும் ஒரு வழியாக இந்துமதவெறி பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நாட்டின் நீதி-நிர்வாக-அரசியல் அமைப்புமுறை எதன் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது என்பதை நிரூபித்துவிட்டார்கள். மதவெறி பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இரத்த ஆறில் நீந்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்டுள்ள வழி. அதன் ஒரு பகுதிதான் அயோத்தியில் அவர்கள் புரிந்த அராஜக வெறியாட்டம்.

இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அயோத்தி நாசவேலையைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டுள்ள அராஜக வெறியாட்டத்தில் இப்போதைய, உடனடித் தாக்குதல் இலக்கு என்னவோ இசுலாமிய சமுதாயத்தினர்தான்! ஆனால், நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகளுக்கெதிராக அவர்கள் தமது தாக்குதலைத் திருப்பிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை. இன்றைய சம்பவங்கள் அதற்கான எச்சரிக்கை – முன்னறிவிப்புதான்!

ஜெர்மனியின் ஆரிய – நாஜிக்கள் ஆட்சியைப் பிடிப்பதற்குப் பின்பற்றிய தந்திரங்கள் பலவும் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளில் காணமுடிகிறது. தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது; தேசிய கௌரவத்தை நிலைநாட்டுவது; தேசிய ஒருமைப்பாட்டை காப்பது; நாட்டின் இழிநிலைக்குக் காரணமானவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட (யூத) சமுதாயத்தினர் மீது பழிபோட்டு அவர்களைக் கொன்று குவிப்பது; நாட்டின் வரலாற்றையே திரித்துப் புரட்டி மத-இன ரீதியில் நாட்டையே பிளவுபடுத்துவது – ஆகிய அதே தந்திரங்களை இந்துமதவெறி பாசிஸ்டுகளும் பின்பற்றுகிறார்கள்.

இப்போது பாபர் மசூதியை இடித்து ராமன் கோவிலைக் கட்டியதைப் போல காசியில் உள்ள மசூதியை இடித்துக் காசி விசுவநாதன் கோவிலையும், மதுரா மசூதியை இடித்து கிருஷ்ணன் கோவிலையும் கட்டும் திட்டத்தை நிறைவேற்றி அடுத்தடுத்து இசுலாமிய மதத்தினருக்கு ஆத்திரமூட்டுவது; சொல்லப்படும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து இசுலாமிய மதவாத – தீவிரவாத அமைப்புகளில் தஞ்சமடையும்படியும் எதிர் தாக்குதல் தொடுக்கும் படியும் இசுலாமியர்களைத் தள்ளுவது; அதற்கு எதிராக இந்து மதவெறியை நியாயப்படுத்துவதுடன் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாகத் தம்மை முன்னிறுத்தி மதவெறி – வகுப்புவாதக் கலவரங்களை மூட்டி இரத்த ஆறு ஓடச் செய்து பார்ப்பன-பனியா சாதிய ஆதிக்க அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் அமைப்பது – இதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அரசியல் பாதையாக உள்ளது.

முதலாவதாக, இவர்கள் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் பிரதிநிதிகளும் அல்ல; இரண்டாவதாக, தேசிய நலன்கள் எதுவும் இவர்களது குறிக்கோளாக இல்லை.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி, பஜரங் தள், சிவசேனா, இந்து முன்னணி போன்ற இந்த இந்து மதவெறி பாசிச அமைப்புகள் அனைத்திற்கும் தலைமையேற்று வழி நடத்துபவர்கள் பெரும் தரகு அதிகார முதலாளிகளின் குடும்பத்தினர். தொழில்முறை அரசியல்வாதிகளாகவும், சாமியார்களாகவும், முன்னாள் அதிகாரிகளாகவும் உள்ள பார்ப்பன – பனியா சாதியக் கும்பலைச் சேர்ந்தவர்கள். இந்தச் சாதிகளும் அமைப்புகளும் நாட்டின் பெரும்பான்மையான இந்துக்கள் எனச்சொல்லப்படும் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை ஒரு போதும் இந்துக்களாகவும் சமமான சமூக – மத உரிமை உடையவர்களாவும் நடத்தியதே கிடையாது. சதி முதலிய பெண்ண்டிமைத்தனமும், பார்ப்பனிய சநாதன வருணாசிரம – சாதிய தர்மமுமே இந்தக் கும்பலின் கண்ணோட்டமாக உள்ளது.

இந்து ராஷ்டிரம் எத்தகையாத இருக்கும் என்பதை இந்து மதவெறி பாசிஸ்டுகள் இப்போதே நிரூபித்துவிட்டார்கள். பத்திகையாளர்கள் மீதான தாக்குதலும் நாடு முழுவதும் சிறுமான்மையினர் உயிரோடு எரிப்புதும் சான்றுகளாக விளங்குகின்றன. ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் உண்மை என்று எழுதவும் பேசவும் முடியும்; அதுதான் இராமராஜ்ஜியத்தில் கருத்துச் சுதந்திரம். சிறுபான்மையினருக்கு சமூக, மத, பண்பாட்டு உரிமைகள் மட்டுமல்ல, வாழும் உரிமையே மறுக்கப்படும் என்று காட்டி விட்டார்கள்.

அது மட்டுமல்ல, இந்து மதவெறி பாசிச ஆட்சியை நிறுவி தங்களது ஆதிக்கம், சுரண்டல் நலன்களைத் தக்க வைத்துக் கொள்ள, நீடித்துக் கொள்ள தரகு அதிகார முதலாளிகளும் ஏகாதிபத்தியங்களும் பழைய – புதிய நிலப் பிரபுக்களும் ஊட்டி வளர்த்து வருகின்ற நச்சுப் பாம்புகளே இந்த பார்ப்பன – பனியா அமைப்புகள்.

ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறு அடகு வைக்கும் நரசிம்மராவ் அரசின் புதிய பொருளாதாராக் கொள்கைகளால், உழைக்கும் மக்கள் என்றும் இல்லாத அளவு சுரண்டலுக்கும், விலையேற்றத்திற்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் ஆளாகி ஆலையில் சிக்கிய கரும்பாக அவதிப்பட்டு வருகின்றனர். மதவெறியைத் தூண்டி இப்பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பி அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிப் படுகொலை செய்து கொள்ளும் பாதையில் தள்ளிவிடுவது; இதன் மூலம் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை உறுதிப்படுத்திக் கொள்ள ஏகாதிபத்தியங்கள், தரகு அதிகாரமுதலாளிகள் பழைய – புதிய நிலப்பிரபுக்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இதுதான் இந்த இந்து மதவெறி பாசிஸ்டுகளின் உடனடி நோக்கமாகும்.

இதுவரை தேசவிரோத – பயங்கரவாத – பிரிவினைவாத பீதியூட்டி நியாயமான தேசிய இன, ஜனநாயக உணர்வுடைய சக்திகளை அடக்கி ஒடுக்கும்படி கோரி அரசியல் ஆதாயம் அடைந்து வந்தது இந்த பார்ப்பன – பனியா பாசிச கும்பல். இப்போது இந்த நாட்டின் நீதி – நிர்வாகம், அரசியல் அமைப்பு, சட்டத்திட்டங்கள், மரபு – நியதிகள் எதையுமே மதியாத தமது வெறிச் செயல்கள் மூலம் இவர்கள் தாம் உண்மையான வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள், தேசதுரோகிகள், பிரிவினைவாதிகள், சமூகவிரோதிகள், தீவிரவாதிகள், வகுப்புவாதிகள் என்று நாட்டுக்குத் தம்மை அடையாளங் காட்டிக் கொண்டு விட்டனர்.

பாபர் மசூதியை இடித்து, நாடெங்கும் மதவெறிப் படுகொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் இசுலாமிய மக்களின் மத உணர்வைப் புண்படுத்தி ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்கள். இந்து – இசுலாமிய மக்களிடையே நிலவி வந்த சகோதரத்துவ உணர்வு – ஒருமைப்பாட்டின் மீது திரிசூலத்தைப் பாய்ச்சி அவநம்பிக்கையையும், பிளவையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

படிக்க : அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வரை மசூதியை இடிக்க மாட்டார்கள்; பிரச்சினையை உயிருள்ளதாக இழுத்தடித்து அரசியல் ஆதாயம் அடைய முயலுவார்கள் என்றுதான் நாம் உட்பட அரசியல் நோக்கர்கள் கருதினோம். இந்த முறையும் மசூதியை முற்றாக இடித்துவிடக் கூடாது; தடைகளை மீறி மசூதியை இடிக்கும்போது மத்திய போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தும்; கணிசமான கரவேகர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்; அவர்களுக்குத் தியாகிப் பட்டங்கட்டி, மீண்டும் அஸ்திகலச ஊர்வலங்கள் நடத்த அனுதாப அலையைக் கிளப்பி ஆதாயம் அடையலாம் என்பதுதான் ஒரு பிரிவினரது நோக்கம். ஆனால் பா.ஜ.க ஆளும் நான்கு மாநிலங்களிலும் லஞ்ச ஊழல் பதவிச் சண்டையிலும் கோஷடித் தகராறிலும் சிக்கியதால் அதன் ‘தூய்மை’ வேடம் கலைந்து அம்பலப்பட்டுப்போனது. அதோடு சமசரப் பேச்சு, நீதிமன்ற முடிவு ஆகிய எதையாவது ஏற்கும்படியான நிர்பந்தம் அதிகரித்து வருவதைக் கண்டார்கள். எனவே முந்திக் கொண்டு தமது சதித் திட்டத்தை அமலாக்கிவிட்டார்கள்.

ஆதிக்கத்தை கைப்பற்றவும், அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் பஞ்சமா பாதகங்களைச் செய்வது குற்றமல்ல என்று இந்த இந்து மதவெறி பாசிஸ்டுகளின் மூதாதையர்களும் ஆசான்களுமான மனுவும், கௌடில்யனும் போதித்தார்கள். அதையே அவர்களின் சந்ததியினர் இப்போது கடைப்பிடித்துள்ளனர். நாட்டின் சட்டம் ஒழுங்கையும், நீதியையும் வழுவாது கடைப்படிப்போம் என்று வாக்களித்து, நாட்டையும் மக்களையும் நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள். வேறெதையும் விட இந்த நம்பிக்கைத் துரோகத்துக்காவது தண்டிக்கப்பட வேண்டிய இல்லை, இல்லை பழிவாங்கப்பட வேண்டிய கொடிய எதிரிகளாக இவர்களை நாடும் மக்களும் கருத வேண்டும்.

புதிய ஜனநாயகம், ஜனவரி – 1993

‘ஒழுங்குநெறி போலீசு’ படை கலைப்பு: ஈரான் மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

டந்த மூன்று மாதங்களாக ஈரானில் ஒழுக்கநெறி போலீஸ் படைக்கு (Morality Police) எதிராக ஈரானிய மக்கள், குறிப்பாக பெண்கள் போராடி வருகின்றனர். அதன் எதிரொலியாக நேற்று (05-12-2022) அந்நாட்டு அரசு ஒழுக்கநெறி போலீசை கலைத்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது ஜனநாயகத்திற்கான அம்மக்களின் போர்க்குணம்மிக்க போராட்டத்துக்கும் தியாகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஹிஜாப்பை சரியாக அணியாததாக கூறி ஈரானிய குண்டர் படையான ‘ஒழுக்கநெறி’ போலீசால் கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண் மாசா அமினி துன்புறுத்தி கொல்லப்பட்டத்தை தொடர்ந்து போராட்டங்கள் வெடித்ததை நாம் அனைவரும் அறிவோம். இப்போராட்டத்தில் பெண்கள் மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொண்டிருக்கும் ஈரான் அணியினர் தங்களது நாட்டு தேசிய கீதத்தை புறக்கணித்து பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். மேலும், பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்களும் ஈரான் மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

படிக்க : ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !

ஈரான் மக்களின் இப்போராட்டத்தில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் போலீசு மற்றும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இருப்பினும் அம்மக்களின் தளராத போராட்ட உறுதியின் காரணமாக தற்போது ‘ஒழுக்க நெறி’ போலீஸ் படை அந்நாட்டு அரசால் கலைக்கப்பட்டுள்ளது.

0-0-0

2006-ஆம் ஆண்டு ஈரானிய இஸ்லாமிய பிற்போக்கு அரசால், இஸ்லாமிய மத அடிப்படையில் மக்கள் உடை அணிவதைக் கண்காணிப்பதற்கு “காஸ்த் எர்ஷாத்” என்கிற ஒழுக்கநெறி போலீசு உருவாக்கப்பட்டது. இந்த ஒழுக்கநெறி போலீசு எந்நேரமும் தெருக்களில் ரோந்து சென்று கொண்டிருக்கும்; அப்போது, இஸ்லாமிய மத அடிப்படைக்கு மாறாக உடை அணிந்தவர்களைக் கைது செய்து, மத போதனை அளிக்கும் கூடங்களுக்கு அழைத்துச் சென்று கட்டாய மத போதனை வகுப்புகளில் கலந்து கொள்ளச் செய்யும்; அதன் பின்னர் இஸ்லாமிய மத அடிப்படையில் உடை அணிவதை ஏற்றுக்கொண்டு உடையை அங்கேயே மாற்றிக்கொண்டால் மட்டுமே அங்கிருந்து விடுவிக்கும்.

ஒன்பது வயது சிறுமி முதல் வயதானவர்கள் வரை அனைத்துப் பெண்களும் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்பது ஈரானிய சட்டம். ஆண் பெண் இருபாலருக்கும் உடைக் கட்டுப்பாடுகள் இருந்த போதும் இப்படை, நீண்டகாலமாக பெண்களையே கட்டுப்படுத்தி வந்தது. மேலும், உடைக் கட்டுப்பாடு என்று சொல்லப்பட்டாலும் ஹிஜாப்பை எந்த வகையில் அணிய வேண்டும் என்று தெளிவாக எந்த சட்டங்களிலும் வரையறுக்கப்படவில்லை. இதனால், ஒழுக்கநெறி போலீசாரின் ஆணாதிக்க மனோபாவத்திற்கேற்ப ஈரானிய பெண்கள் அனுதினமும் ஒடுக்குமுறைகளை சந்தித்து வந்தனர். இது ஈரானிய பெண்கள், மாணவர்கள், மாணிவிகளுக்கு கடுமையான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தி வந்தது.

மற்றொருபுறம், ஈரானில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பெட்ரோல் எரிவாயுப் பொருட்களின் விலையேற்றம், வேலையின்மை, உயர்ந்தக் கல்வி கட்டணம், வறுமை ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அந்நாட்டின் மக்கள் நடத்தி வருகின்றனர். இவ்வாறான பல போராட்டங்களை ஒடுக்கும் வகையில், ஈரானிய அரசு கடுமையான அடக்குமுறைகளை செலுத்தியுள்ளது; துப்பாக்கிச் சூடுகளை நடத்தி மக்களைக் கொன்று குவித்துள்ளது. இவையெல்லாம், இந்த அரசின் மீதான மக்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்து வந்தது.

இப்படி பல ஆண்டுகளாக ஈரானிய மக்களிடம் கனன்று கொண்டிருந்த எதிர்ப்பு உணர்வானது மாசா அமினியின் படுகொலையால் ஒடுக்குமுறையாளர்களை சுட்டெரிக்க களம் கண்டது. “எங்களின் ஹிஜாப்பிலும் முடியிலும் தான் உன் மத நம்பிக்கை புதைந்து இருக்கிறதென்றால் அதை நீயே வைத்துக் கொள்” என்று பெண்கள் மத குருமார்களின் முகத்தில் ஹிஜாபை வீசி எறிந்தனர். போலீசுக்கும் இராணுவத்திற்கும் எதிராக அச்சமின்றி போரிட்டனர். பல நூற்றுக்கணக்கானோர் தியாகியாகினர். அந்த மாபெரும் மக்கள் போராட்டமே, இன்று ஒழுக்கநெறி போலீசைக் கலைக்கப்பட்ட இந்த வெற்றியை சாதித்துள்ளது.

படிக்க : தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான மக்களின் உணர்வானது என்றைக்கும் மங்கிவிடாது. மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைத்து நீண்டகாலம் ஒடுக்க முடியாது என்பதற்கு ஈரானியப் பெண்களின் போராட்டமே சான்று. சில மாதங்களுக்கு முன்னதாக ஆப்கானிலும் பெண்கள் போராட்டத்தில் இறங்கினர்.

நமது நாட்டிலும், பசுப் பாதுகாவலர்கள், கலாச்சாரப் படை என்ற பெயரில் காவி பாசிச குண்டர் படைகள் செயல்பட்டு வருகின்றன. உ.பி., கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற காவி பயங்கரவாதிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்கள் மீது பல்வேறு கலாச்சார தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அம்பானி, அதானி, டாடா போன்ற கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு நாட்டை பட்டவர்த்தனமாக திறந்துவிட்டு, அதற்கெதிராகப் போராடும் மக்களைத் திசைதிருப்பும் நோக்கத்திலும் இந்துராஷ்டிரத்தை நிறுவும் நோக்கத்திலும் காவி பாசிஸ்டுகள் செயல்பட்டு வருகின்றனர்.

ஜனநாயத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடும் உழைக்கும் மக்களே, இதோ நம் சமகாலத்திய முன்னோடிகளாக ஈரானியப் பெண்கள் திகழ்கிறார்கள்! அவர்கள் ஏற்றிய நெருப்பை நாமும் ஏந்துவோம்! காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு எதிராக களம் காண்போம்!

இசை

தமிழ்நாடு போலீசின் இரண்டு நிமிட ஜனநாயகமும் மூச்சு விட மறந்த கதையும்!

திமுக ஏன் 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்? இப்படி ஒரு கேள்வியை கேட்டு அதற்கு பலரும் பலவாறு பதில் கூறினார்கள். பாசிசம் வரக் கூடாது என்றால் அதற்கு திமுகவை ஒரு தடுப்பரனாக பயன்படுத்த வேண்டும்.

திமுகவை வைத்துக்கொண்டு பாசிசத்தை நிறுத்த முடியாது என்றாலும் நமக்கு ஒரு மூச்சு விடக் கூடிய நேரம் அதாவது பிரீத்திங் ஸ்பேஸ் தேவை என்றார்கள். மானை துரத்திக் கொண்டு புலி ஓடுகிறது, புலிக்கு பிரீத்திங் ஸ்பேஸ் தேவை இல்லை. ஆனால் மானுக்கு பிரீத்திங் ஸ்பேஸ் தேவை. பாசிசம், பாசிசம் என்று பேசும் இவர்கள் பாசிசத்தை பற்றிய ஆழமான அறிவும் புரிதலும் அற்றவர்கள் அல்லது ஆழமான புரிதலும் அறிவும் இருந்தாலும் கூட, கடவுள் நம்பிக்கை போல ஒரு மூடநம்பிக்கையில் பாசிசத்தை தேர்தலைப் பயன்படுத்தி வீழ்த்தி விட முடியும் என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்.

எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் பிரீத்திங் ஸ்பேஸ் மிகவும் முக்கியம் என்றார்கள்.

0-0-0

சென்னை சேத்துப்பட்டில் பல ஆண்டுகளாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு நாள் மற்றும் பிறந்த நாளின் போது அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் மாலையிடுவதும் வழக்கமான செயல்தான்.

ஆனால், இந்த வருடம் அம்பேத்கர் சிலைக்கு மாலையிடுவதற்கு அனைத்து அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் போலீஸ் வழங்கி இருக்கும் ஜனநாயகத்தின் அளவு இரண்டே நிமிடம்.

படிக்க : அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் !

இதை எதிர்த்து கேள்வி கேட்பதற்கும் சீந்துவதற்கும் நாதியில்லை. அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் போலீஸ் ஒதுக்கும் இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே மாலையிட்டுவிட்டு வருகிறார்கள். மக்கள் அதிகாரம் தோழர்கள் முழக்கமிடத் தொடங்கிய உடனே போலீஸ் சூழ்ந்து கொள்கிறது. “ஒவ்வொரு கட்சிக்கும் இரண்டு நிமிடம்தான் அனைவரும் கேட்டுக் கொண்டு அமைதியாக போய்விட்டார்கள். உங்களுக்கு கூடுதல் நேரம் கொடுக்க முடியாது” என்கிறார்கள்.

சேத்துப்பட்டில் மக்கள் வைத்தது அந்த சிலை, ஒரு மனிதன் தங்கள் ஊரில் ஒரு தலைவரின் சிலைக்குதான் விருப்பப்பட்ட நேரம் போல மாலையிடவும் மரியாதை செலுத்தவும் முடியாது என்றால் இது எப்படிப்பட்ட ஜனநாயகம்?

அது என்ன ரெண்டு நிமிடம்?

ஜெயலலிதாவின் சமாதியில் ஒரு நாள் முழுக்க பலரும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். மரியாதை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு நிமிடத்தை இந்த போலீஸ் ஒதுக்குமா ?

இதுவரை அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டதிலிருந்து பி.ஜே.பி.க்கு மாலை அணிவிக்க சேத்துப்பட்டு மக்கள் அனுமதி கொடுத்தது இல்லை.

ஆனாலும் தடையை மீறி போலீஸ் பாதுகாப்புடன் கடந்த முறை மாலை அணிவித்து சென்றார்கள் பிஜேபியினர்.

அதுபோலவே இவ்வாண்டும் அம்பேத்கருக்கு மாலையிட வருகிறார்கள். அதனால்தான் மற்ற அனைத்து கட்சிகளுக்கும் இரண்டு நிமிட ஜனநாயகம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதுவரை போலீசு இப்படி இரண்டு நிமிடம் அனுமதி கொடுத்ததில்லையே என்று கேட்டால், “பழங்கதையை பேசாதே இப்போது நாங்கள் சொல்வதை செய்’ என்கிறது போலீசு.

கும்பகோணத்திலே அம்பேத்கருக்கு பட்டையிட்டு காவி உடை போட்டு சுவரொட்டி ஒட்டி இருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினர். அவர்களை யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனாலும் அம்பேத்கரின் கொள்கைகளைப் பற்றி பேசுவதற்கும் முழக்கமிடுதற்கும் இங்கே ஜனநாயகம் இல்லை. இதே நேரம் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த நேரமும் கிடைக்காமல் போயிருக்கும் என்று நம்மை நாமே தேற்றிக் கொள்வதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

0-0-0

சேத்துப்பட்டில் போலீசின் அராஜகமான நடவடிக்கைகளை கண்டு திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளும் திமுக ஆதரவு அமைப்புகளும் அமைதியாக இருக்கிறார்கள்.

இப்போது ஏதாவது நாம் பிரச்சினை செய்தால் அதை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி நுழைந்து விடுவானே என்பது அவர்களுடைய கவலை.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யும் இனியும் நுழைவதற்கு இடமில்லை. ஏற்கனவே அவர்கள் அரசுத் துறையிலும் போலீசிலும் நிரம்பி விட்டார்கள் என்பது தானே இந்த நடவடிக்கை.

தோழர்களே நீங்கள் கேட்ட பிரீத்திங் ஸ்பேஸ் வந்துவிட்டது. இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று நீங்கள் சொல்லுங்கள்.

கடந்த வருடம் மயிலாடுதுறையில் அம்பேத்கரின் போட்டோவுக்கு மாலையிட்டதால் கலவரம் ஏற்பட்டது. அதனையே காரணம் காட்டி இப்போது அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போட்டிருக்கிறது போலீசு.

இதற்கு பெயர் சமூக நீதியா? அம்பேத்கரின் போட்டோவுக்கு மாலையிட தடுப்பவர்களை தூக்கி சிறையில் வைத்து விட்டு, அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துபவர்களுக்கு அனுமதி அளிப்பதுதான் சமூக நீதி.

ஆதிக்க சாதியின் தாக்குதல் போது இரண்டு பேரும் அமைதியாக இருங்கள் என்று சொல்லக்கூடிய இந்த பிரீத்திங் ஸ்பேஸ்- ஐ வைத்துக்கொண்டு நம்மால் என்ன செய்ய முடியும் ?

பாசிசத்தை வீழ்த்துவதை கைவிட்டு எப்பாடுபட்டாவது திமுக ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவுதான் ரெண்டு நிமிட ஜனநாயகம்.

இன்று சந்தர்ப்பவாத சிந்தனை தான் தமிழ்நாட்டின் கோயில்களை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பொழுதும் வாயை மூடி அமைதியாக இருக்கவைக்கிறது.

எடுத்துக்காட்டாக வயலூர் முருகன் கோவில் பிரச்சினை எடுத்துக் கொள்வோம். இந்தக் கோயிலில் சட்ட விரோதமாக பார்ப்பனர்கள் எட்டு பேர் நுழைந்து வேலை செய்கிறார்கள் என்று பலரும் கூறுகிறார்கள். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அந்த கோயிலில் சட்டவிரோதமாக எட்டு பேர் வேலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் மீது ஏன் இன்னும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்வியை கேட்பதில்லை. இந்தக் கேள்வியைக் கூட கேட்பதற்கு நாதியில்லாமல் போவதற்கு தானா பிரீத்திங்ஸ் ஸ்பேஸ்?

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்துபோது, மூத்த வழக்குரைஞரை கூட நியமிக்காமல் சதி செய்தது அன்றைய அதிமுக அரசு. இதை அம்பலப்படுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இன்றைக்கு வயலூர் முருகன் கோவில் தொடர்பான மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற கூடிய வழக்கில், மூத்த வழக்கறிஞர் நியமிக்காமல் அதே வேலையை செய்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால் அதைப் பற்றி மூச்சு விடுவதில்லை. என்ன ஒரு முரண்பாடு பாருங்கள்? ப்ரீத்திங்ஸ் ஸ்பேஸ் என்பது மூச்சு விடுவதற்கான நேரம். திமுக செய்யக்கூடிய தவறை பற்றி பேசாமல் மூச்சு விடாமல் இருப்பதற்குமான நேரமா?

0-0-0

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை கட்டுப்பாட்டில் அடக்கு முறையின் கீழ் கொண்டுவர முடியும் என்பது பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி கோவிட்-19 முதலான எல்லா சம்பவங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

படிக்க : ஒடிசா : அம்பேத்கர் பிறந்த நாளில் தாக்குதல் தொடுத்த பஜரங் தள் !

அதுவே இப்பொழுது அரசியல் தளத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதன் சுவாசிப்பதற்கு தேவையானதற்கும் குறைவான அளவு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டால், அவனும் இறந்து தான் போவான். ஆனால் அவனது மரணம் மிகவும் கொடூரமானதாக இருக்கும். அதைப்போலவே தேவையானதற்கு மிகவும் குறைவாக கொடுக்கப்படும் ஜனநாயகம் மரணத்தை விட மிக மோசமானதாகும்.

பாசிசத்தை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியும் என்பதும் தேர்தலை பாசிசத்துக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பது போன்ற சிந்தனைகள் நம்மை அதிகார வர்க்க, பாசிசத்துக்கு அறியாமலேயே கீழ்படிய செய்து வருகின்றது.

புரட்சிக்கு குறைவான எதற்கு சம்மதித்தாலும் அது சந்தர்ப்பவாதத்தில் தொடங்கி மக்கள் பாதிக்கப்படும்போது வாயை மூடி அமைதியாக இருக்கும் சகுனித்தனத்தில் தான் போய் முடியும்.

மருது
மக்கள் அதிகாரம் 

பயிர்கள் விளைந்தாலும் அழிந்தாலும் விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசு!

ந்தியாவில் விவசாய தொழிலை நம்பி பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சொல்லி கொள்ளும் அளவிற்கு வருமானம் கிடைக்காதபோதும் தன்னுடைய நிலத்தில் வேலை செய்கிறார்கள்.

இலாபம் கிடைக்கவில்லை என்றாலும் கூட முதலீடு செய்த பணம் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படி செய்யப்படும் விவசாயம் நன்றாக விளைந்தாலும் அரசு கொள்முதல் செய்ய முன்வருவதில்லை. மழை, புயல் போன்ற இயற்கை சீற்றத்தால் அழிந்தாலும் அதற்கு இழப்பீடு தர அரசு தயாராக இல்லை. உற்பத்தி செய்த அனைத்தையும் விற்றால் கூட தாங்கள் செலவு செய்த பணம் கூட கிடைப்பதில்லை. போதாதற்கு கடன் பட்டு போன்டியாவதும் தற்கொலை செய்துகொள்வதும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

படிக்க : உத்தரப் பிரதேசம்: மீண்டுமொரு தில்லி போராட்டம் – மோடியை எச்சரிக்கும் விவசாயிகள்!

விசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதாக கூறிக்கொண்டு ஆட்சியமைத்த அரசியல் கட்சிகளும் அதற்காக ஒரு அடியை கூட எடுத்து வைக்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையை இன்று வரை உறுதி செய்யாமல் இருப்பது; விவசாயத்திற்கு தேவையான உரங்களை கூட்டுறவு மூலம் வழங்காமல் தனியார் கடைகளை நோக்கி திருப்பியடிப்பது; உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்யாதிருப்பது; இத்தனை தடைகளையும் தாண்டி பயிரிட்டாலும் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும்போது அரசு போதுமான இழப்பீடு வழங்காமல் இருப்பது; இப்படி தொடந்து கொண்டே போகிறது விவசாயிகளின் அவலநிலைமை.

வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை கொண்டாரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் சுமார் 5 ஏக்கரில் நெற்பயிர் விவசாயம் செய்து வந்தார். கடந்த  ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட போதும் பயீர் காப்பீடு நஷ்டஈடு என எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் ஐ.ஆர் 50 என்ற ரகத்தை பயிர் செய்துள்ளார். மேலும் வேளாண்மை துறை மூலம் 4 ஆயிரம் செலுத்தி பயிர் காப்பீடு செய்திருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையாலும் கடுமையான பனிப்பொழிவாலும் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காப்பீட்டு நிறுவனத்திடம் ஒருமாதமாக காப்பீடுநீதி வழங்கக்கோரி அலைந்து கொண்டு இருந்துள்ளார்.

இதற்காக நிலத்தை வேளாண்மை அதிகாரிகள் அளவீடு செய்து இழப்பீடு தர வேண்டும். ஆனால் வேளாண்மை துறையும் காப்பீட்டு நிறுவனமும் விவசாயி சிவக்குமாரை தொடர்ந்து அழைக்களித்ததாகக் கூறப்படுகிறது. அறுவடைக்கு தயாரான நெற்பயிரை பெட்ரோல் ஊற்றி எரித்த விவசாயி அப்பகுதி விவசாயிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தார். ஒரு சென்ட் அளவிற்கு நெற்பயிர்கள் நெருப்பில் கருகியது.

படிக்க : பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!

இதைப்போன்று பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் வெல்லம், ஏலம், முந்திரி, அரிசி உள்ளிட்ட 20 வகையான பொருட்களை தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சொந்த மாநில மக்களின் விவசாய பொருட்களை கொள்முதல் செய்யாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி என்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டமிட்ட சதி என்று விவசாயிகள் சங்கங்கள் குமுறுகின்றன.

விவசாயிகளை விவசாயத்தை விட்டு தூரத்த வேண்டும் அதை நேரடியாக செய்யமுடியாது. அதனால் இந்த மாதிரியான நெருக்கடி கொடுக்கும்போது ஒன்று தற்கொலை செய்து கொல்ல வேண்டும். இல்லையேல் நிலத்தை அரசிடமோ, கார்ப்ரேட் நிறுவனங்களிடமோ கொடுத்துவிட்டு அண்டை மாநிலங்களில் கூலி வேலைக்கு சென்று பிழைத்துக் கொள்ள வேண்டும். இதையே திட்டமாக செய்துவருகிறது மத்திய, மாநில அரசுகள். விவசாயத்தை பாதுகாக்கப் போராடும் விவசாயிகளுடன் கைகோர்ப்போம்!

டேவிட்
நன்றி: தினகரன் நாளிதழ்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

டிசம்பர் – 2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம்: அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!
♦ காசியில் ‘காவி தமிழ்ச்சங்கம்’?
♦ ‘சோசலிச’,‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!
♦ இந்தித் திணிப்பு: எச்சரிக்கை!
♦ ரிஷி சுனக்: பாசிசத்தின் வீரிய ஒட்டுரகம்!
♦ அரசுப் பணியிடங்களில் தனியார்மயம்!
♦ பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!
♦ டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!
♦ ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பன்முனை பயங்கரவாத தாக்குதல்கள்!
♦ தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!
♦ கோவை கார் வெடிப்புச் சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!
♦ மின் இணைப்புடன் ஆதார்: மானியத்தை வெட்டும் சதி முயற்சியே!
♦ நேர்காணல்: ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு: மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!
♦ நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ்-ஆழமும் அகலமும்

ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு: கார்ப்பரேட் கொள்ளைக்கான ஏற்பாடு!

ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பின்  தலைமை பொறுப்பு, அடுத்து ஆண்டு நவம்பர் மாதம் வரை ஏற்றுருப்பது, பெருமைக்குரிய விஷயம் எனவும், ஜனநாயகத்தின் தொட்டிலான இந்தியாவின் அனுபவங்கள் உலகை வழி நடத்த உதவும் என கார்ப்பரேட் கைக்கூலி மோடி ஆரவாரத்துடன் பேசி வருகின்றார்.

பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற முதலாளித்துவ நாடுகளும் ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும் ஜி-20-யில்  அங்கம் வகிக்கின்றன.

அடிப்படையில் மேற்கண்ட நாடுகள் ஏற்றத்தாழ்வுடன் இருக்கின்றன. பாசிச மோடியோ ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர் காலம் என தனது அகண்ட பாரத கனவை பரந்த உலகிற்கு விரிவுப்படுத்துகிறார். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் வேண்டுமானால் மகிழ்ச்சி அடையலாம் நாட்டு மக்களுக்கு ஒன்றும் ஆவப்போவதில்லை.

படிக்க : ஜி-20: கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு ! பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணமும் கொடு

இன்றைக்கு பெரும்பாலான நாடுகளில் மோடி போன்ற பாசிசஸ்டுகள் அதிகாரத்தில் இருப்பதால்தான் மேற்படி பேச்சுக்கு கண்டனங்கள் பெரிதாய் வரவில்லை. நாம் விசயத்திற்கு வருவோம். ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு ஏற்பதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சினை தீர்ந்து விடும்….?

இந்த நாடுகளின் மாநாடு யாருக்காக..? தத்தம் நாடுகளின் முதலாளித்துவ நிறுவனங்கள் பொருட்களை சந்தைப்படுத்துதல் இது தொடர்பான பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்வது நமது நாட்டின் அம்பானி, அதானி, டாடா இவர்களைப் போன்ற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் வர்த்தக அல்லது ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது, மக்களுக்காக வா..? ஏகாதிபத்தியத்தின் நாடு பிடிக்கும் நாய் சண்டைதான் முதல் உலகப்போர் என ஆசான் லெனின் அம்பலப்படுத்தினார்.

அதனை மறைக்கும் பொருட்டு பேசி தீர்த்துக் கொள்ள முயன்றாலும் ரசியா – உக்ரைன் போர் மூலம் மேலாதிக்கத்திற்கான நாய் சண்டை வெளிப்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு 1990-களுக்கு பிறகு உருவானது. இதன் நோக்கமே உலகமயமாக்கலை ஏகாதிபத்தியங்களின், கொள்ளைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த திட்டத்தோடுதான் இதுபோன்ற அலங்கார பேச்சும் சவடால் பேச்சும் பேசுகிறார் பாசிச மோடி.

ஒருபுறம் பணமதிப்பு இழப்பு, GST வரி விதிப்பு, பொதுத் துறைகள் தனியார்மயமாக்குவது தொழிலாளர் சட்டத் திருத்தம், மின்சார சட்டத்திருத்தம் உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்ளை. மறுபுறம் காவி பாசிசத்தின் தாக்குதல்கள் யாவும் ஜனநாயகத்தின் பேரில் மோடி அரங்கேற்றும் கொடுமைகளை மக்கள் சகித்துக் கொள்ள வேண்டும் அதைத்தான் ஜனநாயகத்தின் தொட்டில் என நாட்டு மக்களை இழிவு படுத்துகிறார்.

படிக்க : ஜி-20 மாநாடு: ஜெர்மனியில் துவங்கியது மக்கள் போர் !

முதலாளித்துவ கட்டமைப்பானது நொறுங்கி விழும் நிலையில் உள்ளதுதென்றால் அது மிகையில்லை. இதனை மறைக்கத்தான் மோடியின் சவடால் பேச்சுகள். எனவே இதுபோன்ற போலி பெருமிதங்களிலிருந்து நாம் விடுபட வேண்டும். இந்தியாவை போன்றே உலகின் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை விரிவுப்படுத்துவது, முன்னரே குறிப்பிட்டது போல ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பாக முடிவு செய்தல். தத்தம் நாடுகளின் உள்ள உழைக்கும் மக்களை சுரண்டுவது இயற்கை வளங்களை சூறையாடுவதையே ஜி-20 நாடுகளின் மாநாட்டின் நோக்கமாக கொண்டுருப்பதால் இதற்கெதிராக போராடுவோம். நமது போராட்டத்தின் வெளிச்சத்தில் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கத்திடமும், தொழிலாளி வர்க்கத்திடம் கைக்கோர்ப்போம். கார்ப்பரேட் கொள்ளைக்கு முடிவு கட்ட போராடுவோம்.


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு.

போபால் டிசம்பர் 2, 1984: மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…

போபால் விஷவாயு கசிவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட அந்த இரவு. சில மணிநேரங்களில் என்ன நடக்கிறது; எதனால் நாம் இறக்கிறோம் என்று தெரியாமல் அப்பாவி மக்கள் மரணித்த கடைசி நொடிகளை கண்முன்னே நிறுத்தி பாருங்கள்! அப்போதுதான் தெரியும் முதலாளித்துவத்தின் பயங்கரவாதம்.

வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள், இளம் வயதினர், பறவைகள், கால்நடைகள், செல்லப்பிராணிகள், மரம்-செடி-கொடிகள் என அனைத்தும் நிறைந்திருந்த ஒரு இடம் ஒரு நாள் இரவில் சின்னபின்னமானது. எங்கு திரும்பினாலும் மரண ஓலம், எங்கு பார்த்தாலும் பிணங்கள்.

இந்த கொலைபாதக செயலுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனம் இதுனால் வரை அரசு அதிகாரத்தின் துரோகத்தால் தண்டிக்கப்படவில்லை. இறந்த மக்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை. இந்த கொலைகார நிறுவனம் போல இன்று பல்வேறு கார்ப்பரேட் கழுக்குகள் நம்மீது வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

யூனியன் கார்பைடு என்ற கொலைகார நிறுவனத்தின் இலாபவெறியால் மாண்டுபோன மக்களை நினைவு கூர்ந்து கொலைகார பயங்கரவாத முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்ப சபதமேற்போம்!

போபால் விஷவாயு கசிவு – நீதிவேண்டுமா? புரட்சி ஒன்றுதான் தீர்வு!

– வினவு

மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…

1984-ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் நாள். நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. வரவிருக்கும் ஆபத்தை உணராத மக்கள், டிசம்பர் மாதத்துக் குளிருக்கு அஞ்சி வீட்டிற்குள் அடைபட்டு உறங்கிக் கொண்டிருந்தனர். வீடற்றவர்களோ சாலையோரம் ஒடுங்கிக் கிடந்தனர். போபாலின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில், திடீரென அபாயச் சங்கு ஒலித்தது. தொழிலாளர்கள் பரபரப்பானார்கள். நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தொழிற்சாலையின் உயரமான புகை போக்கியிலிருந்து கொடிய நச்சு வாயு கசிய ஆரம்பித்தது.

யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் பூச்சி மருந்து தயாரிக்க சேமித்து வைக்கப்பட்ட மெத்தில் ஐசோ சயனேட் (எம்.ஐ.சி) திரவம் தொட்டியைவிட்டு வெளியேறிக் காற்றில் கலக்க ஆரம்பித்து விட்டது. நிறமும், மணமும் இல்லாத இந்தக் கொடிய நஞ்சு கலந்த காற்றை சுவாசிக்கும் சிறிது நேரத்திற்குள் மரணம் நிச்சயம். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள், தமது மேலதிகாரிக்குத் தகவல் தெரிவித்தார்கள். அபாயச் சங்கை முதலில் ஒலிக்க விட்ட போது, நேரம் சரியாக நள்ளிரவு 12:30.

யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து சில அடிகள் தள்ளி வசித்துவந்த எம்.ஏ.கான் எனும் விவசாயி, பக்கத்தில் இருக்கும் பால் பண்ணையில் ஏதோ சத்தம் வருவதை அவதானித்தார். சிறிது நேரத்தில், தனது மாடுகள் கால்களைத் தரையில் ஓங்கி ஓங்கி உதைப்பதை உணர்ந்தார். வெளியே ஓடிவந்து தொழுவத்தில் கட்டியிருந்த தனது பசுமாடுகளைப் பார்த்தார். இரண்டு பசுக்கள் தரையில் செத்துக் கிடந்தன. மூன்றாவது மாடு ஓங்கிக் கத்திக் கொண்டு சாவதை நேரில் பார்க்கிறார். இனம் புரியாம ஒருவித மயக்கம் அவரைச் சுழற்றியது. அவரின் கண்களும் எரியத் தொடங்கின. ஓட ஆரம்பித்தார். அவரது கண்கள் இருளத் துவங்கின. மறுநாள், கண்கள் மூடிய நிலையில் போபாலில் ஹாமில் தியா மருத்துவமனையில் கிடந்தார். அந்தப் பயங்கர இரவில்தான் போபால் படுகொலை தொடங்கியது.


படிக்க : போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்


யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து பரவிய எம்.ஐ.சி. வாயு, வீசிக் கொண்டிருந்த காற்றினால் வழி நடத்தப்பட்டு மக்கள் நெருக்கமாய் வசிக்கும் குடியிருப்புப் பகுதியுனுள் ஊடுருவியது. அது சென்ற திசை யெங்கும் சிறியவர், பெரியவர், ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி, நாய், ஆடு, மாடு, மனிதன் என்ற பாகுபாடின்றி எதிர்ப்பட்ட அனைவரையும், அனைத்தையும் சித்திரவதை செய்து கொன்றொழித்தது.

அந்தத் தொழிற்சாலையை ஒட்டி வசித்த மக்களுக்கு இவ்வாயுகசிய நேரிடுகையில் என்னென்ன செய்ய வேண்டும் என்கிற பயிற்சி ஏதும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. குறைந்த பட்சம் இவ்வாறு நச்சு இரசாயன வாயு பரவும் போது ஈரத் துணியை முகத்தில் சுற்றிக் கொண்டு தரையில் தவழ்ந்து மெதுவாய் புகை பரவும் திசைக்கு எதிர் திசையில் நகர்ந்து சென்று விட்டாலே, மரணத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளலாம் என்கிற எளிய பயிற்சியைக் கூட அரசோ அல்லது யூனியன் கார்பைடு நிர்வாகமோ அளித்திருக்கவில்லை. தொழிற் சாலையிலிருந்து அபாயச் சங்கு ஒலிப்பதைக் கேட்ட மக்கள், தொழிற்சாலைக்குள் ஏதோ விபத்து என எண்ணி உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்ற தொழிற்சாலையை நோக்கி ஓடி வந்தனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

நச்சு வாயுவின் தாக்குதலால், தூக்கத்திலிருந்து உலுக்கியெழுப்பப்பட்ட மக்கள் முதலில் மிளகாய்ப் பொடியையை முகர்ந்தது போன்றதொரு உணர்வை அடைந்தனர். கண்ணில் நெருப்பைக் கொட்டியதைப் போன்று எரிந்தது; விழிகள் வெளியே வந்துவிடுவது போலப் பிதுங்கியது. தொடர்ந்து அவர்கள் நுரையீரலெங்கும் மிளகாய்ப் பொடியைக் கொட்டி நிறைத்ததைப் போன்ற நெஞ்செரிச்சல் ஏற்பட்டது. இரத்தமும் கோழையுமாக வாந்தியெடுத்தார்கள்.

அந்தப் படுகொலை நாளில் எப்படியோ உயிர் பிழைத்து, கண்கள் குருடாகிவிட்ட அசீசா சுல்தான், “நள்ளிரவு 12.30 மணி இருக்கும். என் குழந்தை கடுமையாக இருமத் தொடங்கியதை அடுத்து எழுந்து பார்த்தேன். எங்கள் அறை முழுக்க வெள்ளைப் புகை பரவி இருந்தது. வெளியே பல பேர் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டேன். ‘ஓடுங்க, ஒடுங்க’ என்றார்கள். எனக்கும் மூச்சு விடும்போதெல்லாம் தீயை சுவாசிப்பது போல இருந்தது. நெஞ்சுக்குலை வெளியே வந்துவிடுவதுபோல இடைவிடாமல் இருமல் என்னைத் தாக்கியது. தீயைக் கொட்டியது போல என் கண்களெல்லாம் எரிந்தது” என்று அந்த நாளின் துயரை நினைவு கூர்கிறார். போபால்வாசிகள் பலர் பார்வையை இழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பிணமானார்கள்.

வெளியே ஓடிக்கொண்டிருப்பவர்களில் பலர் எங்கே ஓடுவது என்று தெரியாமல் இலக்கின்றி ஓடினார்கள். எந்தளவுக்கு வேகமாய் ஓடினார்களோ, அந்தளவுக்கு பிராணவாயுவைக் கோருகிறது நுரையீரல். எந்தளவுக்கு ஆழ்ந்து சுவாசித்தார்களோ, அந்தளவுக்கு அதிகமான எம்.ஐ.சி. வாயு உள்ளே நுழைகிறது. அதிக துடிப்புடன் ஓடியவர்களே முதலில் பலியாயினர். ஓடிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நெரிசலில் கீழேவிழுந்து நசுங்கியும் சிலர் மாண்டனர். உயிருக்குப் பயந்து ஓட்ட மெடுக்கும் அம்மக்களில் சிலர் உடுத்தியது உடுத்திய படி, சிலர் உள்ளாடைகளுடன் ஒடிக்கொண்டிருந்தனர். ஆடு, மாடுகளும் தன்னைக் காத்துக்கொள்ள மனிதர்களுடன் சேர்ந்து இலக்கின்றி ஓடின. மாடுகள் மிதித்துக் கீழே விழுந்து நசுங்கினர் சிலர். ஓடமுடியாமல் மூச்சுத் திணறிக் கீழே விழுந்தவர்களை தூக்கி விட்டு சரிந்து விழுந்தனர் சிலர். அவர்கள் மீண்டும் எழவே இல்லை.

வீடற்றுச் சாலையில் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத்தான் இந்த விசக் காற்று முதலில் தாக்கியது. பின்னர் வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தாக்கியது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை அணைத்தபடி தெருவில் உறங்கிக் கொண்டிருந்த தாய்மார்களும் குழந்தைகளும் துடி துடிக்க கொல்லப்பட்டனர். நச்சுவாயு மக்களைக் கொன்று கொண்டிருந்த அந்த இரவில் போலீசோ ஒலி பெருக்கி மூலம் “யாரும் பீதி அடைய வேண்டாம். வீட்டுக் கதவுகளை சாத்தியபடி உள்ளேயே இருங்கள்” என அறிவித்து வீட்டுக்குள்ளேயே செத்து விழச் செய்தது.

நச்சுவாயுவின் தாக்குதலால் உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனித மூளை இழந்திருந்தது. தன்னுணர்வின்றி ஆடையிலேயே பலர் மூத்திரம் பெய்தனர். பெண்களின் கருவறைக்குள் இருந்த இரண்டு-மூன்று மாத சிசுக்கள் அழிந்து இரத்தமும் சதையுமாக கருச்சிதைவடைந்து தாய்மார்கள் மூர்ச்சையடைந்து விழுந்தனர். அந்த நாளில் வயிற்றில் சிசுக்களைச் சுமந்திருந்த தாய்மார்களில் 50 சதவீதத்தினருக்கு உடனடி கருச்சிதைவு ஏற்பட்டது.

முதலில் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் இந்த நச்சு வாயு, பின்னர் கண் பார்வை நரம்புகளையும், சதைகளை யும் செயலிழக்கச் செய்து விடும். உடனே செத்தவர்கள் பாக்கியவான்கள் என்பதைப் போல, கொஞ்சம் உயிர் உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள், கண்கள் குருடாகி, என்ன நடக்கிறது என்றே புரியாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் பித்துப் பிடித்தது போல ஓடி துடிதுடிக்க உயிரை விட்டனர். ஓடமுடியாமல் விழுந்து விட்டவர்கள் பிணக் குவியலுக்கு நடுவே அசைவற்றுக் கிடந்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் தெருவெங்கும் பிணங்கள் குவிந்து கிடந்தன.

போபால் ரயில் நிலையத்தில், நிலைய அதிகாரியான துருவே, சிக்னல்மேனை நள்ளிரவில் வரவிருக்கும் லக்னௌ – மும்பை இரயிலுக்கான தந்தி எந்திர சமிக்ஞையை சரிபார்த்து அனுப்பச் சொல்லிவிட்டு, வெறிச்சோடிக் கிடந்த நடைமேடைக்கு வந்தார். காற்றில் அன்றைக்கு ஏதோ ஒரு மாற்றம் இருந்ததை அவரால் உணர முடிந்தது. தூரத்தில் வெள்ளையாய் மேகம் போல் ஏதோவொன்று கவிந்து வந்ததை பார்த்தார். அருகில் சுருண்டு படுத்திருந்த தெரு நாய் ஊளையிட்டது. அந்த நாயின் கண்களில் மரண பீதியைக் கண்டார். மிளகாய்ப் பொடி நெடியோடு காற்று அடர்ந்து கொண்டிருந்தது. அவரால் சுவாசிக்க முடியவில்லை. நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. துருவே பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாய் சுருண்டு விழுந்து செத்துப் போனது.

துருவேயின் கண்கள் வெளியே பிதுங்கிக் கொண்டு வந்தது. எதிர் நடைமேடையில், இரவில் வழக்கமாக ஒண்டிக் கொள்ள வரும் பிச்சைக்காரர்கள் சிலரும் இதே போன்ற நிலையில் தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

துருவேயின் உடலெங்கும் வலித்தது. இன்னும் சிறிது நேரத்துக்குள் வந்து சேர்ந்து விடும் லக்னெள – மும்பை விரைவு இரயிலில் வரும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனும் உணர்வில் சிக்னல் அறைக்கு ஓடினார். ஆனால் அந்த இரயில், வெகு நேரத்துக்கு முன்பே முந்தைய இரயில் நிலையத்திலிருந்து கிளம்பி விட்டதாகவும், இன்னும் சில நிமிடங்களில் போபாலுக்கு வந்து சேரும் என்பதாகவும் முந்தைய ரயில் நிலையத்திலிருந்து பதில் வந்தது. அடுத்த சில நிமிடத்திற்குள் இரயிலின் தடதடப்பு காதில் விழவே, நடுங்கும் கால்களோடு தள்ளாடி நடை மேடைக்கு விரைந்தார், துருவே. லக்னௌ – மும்பை விரைவு வண்டி போபால் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. என்ன நடக்கிறது என் பதை அறிந்துகொள்ளவதற்குள்ளாகவே, அவசரமாக இறங்கிய பயணிகளில் சிலர் சுருண்டு விழுந்தனர். அதைக் கண்ட மற்றவர்கள் விபரீதத்தை உணர்ந்து, உடனே அந்த இடத்தை விட்டு ஓடத் துவங்கினர். சிலர் குழந்தைகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வேகமாய் ஓடித் தப்ப முயன்றனர். கீழே சரிந்த தமது உறவினர்கள் மீது தண்ணீரைத் தெளித்து எழுப்பிக் கொண்டிருந்தனர், சிலர். திரும்பிய திசையெல்லாம் உடல்கள் கிடக்க, உறவினர்களின் ஒப்பாரிச் சத்தம் ரயில் நிலையம் முழுக்க எதிரொலித்தது.

அடுத்த ரயிலுக்காகக் காத்திருந்தவர்களும் இரவில் படுத்துறங்க அங்கு வந்திருந்த பிச்சைக்காரர்களும் சேர்த்து 191 பேர் அநாதைப் பிணங்களாக போபால் இரயில் நிலையத்தில் சிதறிக் கிடந்தனர். நெருங்கி விட்ட தனது மரணத்தை அறிந்த துருவே-வுக்கு மனைவியின் குழந்தைகளின் நினைவும் வந்து போனது. நேரத்தை வீணாக்காது அடுத்தடுத்து வரும் இரயில்களை எப்பாடுபட்டாவது நிறுத்தி விட வேண்டும் எனும் எண்ணத் தோடு அவர் சிக்னல் அறைக்கு விரைந்தார்.

அங்கே சிக்னல் மேன் வாயோரம் இரத்தமும் கோழையுமாக சரிந்திருந்தார். கண்கள், அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியது. கடும் வலியோடும், இருமலோடும் சிக்னல் மேனின் உடலை சுவரோரம் நகர்த்தி வைத்தார், துருவே. நடுங்கும் கரங்களால் தந்தி இயந்திரத்திலிருந்து போபால் இரயில் நிலையத்தோடு இணைந்திருந்த எல்லா இரயில் நிலையங்களுக்கும் செய்தி அனுப்பினார். அந்த இரவு முழுவதும் விழித்திருந்து தொடர்ந்து செய்தியை அனுப்பிக் கொண்டேயிருந்தார்.

அதைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்த எல்லா இரயில் நிலையங்களும் தங்கள் பாதை வழியே எந்த இரயிலும் போபாலுக்குச் செல்லாதவாறு தடுத்து நிறுத்தின. செய்தி கிடைக்காமல் கடந்து வந்துவிட்ட இரயில்களின் சன்னல்களை இழுத்து மூடியபடியே போபாலில் நிறுத்தாமல், வேகமாய்க் கடந்து போகு மாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார், துருவே. கடை நிலை ஊழியர்களைத் திரட்டி பின்னே வேகமாய் வரும் எந்த இரயிலும் ஏற்கெனவே நிற்கும் இரயிலோடு மோதிவிடாமல் தடுக்க, அதன் தண்டவாளத்தைத் திசை மாற்றும்படி கேட்டுக் கொண்டார்.

மறுநாள் காலை இரயில் நிலையத்துக்குள் வந்த போலீசு மீட்புப் படை, சிக்னல் அறையில் சுவரோர மாய் சிக்னல் மேனின் பிணத்தையும், மோர்ஸ் கோட் இயந்திரத்தை ஒரு கையால் விடாமல் இறுகப் பற்றிக் கொண்டு மேசை மேல் கவிழ்ந்தபடியே கிடந்த துருவேயின் உயிரற்ற உடலையும் கண்டனர். இரயில் பாதையை கடைசி நேரத்தில் மாற்ற முயன்ற கடை நிலை ஊழியர்களின் உயிரற்ற உடல்கள் தண்டவாளத்தின் ஓரத்தில் அந்த லீவரைப் பிடித்திருந்த வாக்கிலேயே சரிந்திருந்தன.

இவ்வாறு சாதாரண அரசு ஊழியர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து மக்களைக் காத்தபோது, அதிகாரிகளோ ஊரைவிட்டே ஓடிப் போயிருந்தனர். மக்கள் சொந்த முயற்சியிலேயே இப்பேரிடரை எதிர்கொண்டனர். அன்றைய ம.பி. முதல்வர் அர்ஜுன்சிங் (காங்கிரஸ்) போபால் நகரத்திலிருந்து தப்பித்து 14 கி.மீ. தொலைவில் உள்ள மாளிகையில் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொண்டார்.

மறுநாள் 1000 பேருந்துகளை அரசு இயக்கியது. அதில் எஞ்சி இருந்த மக்களை நகரிலிருந்து வெளியேற்றியது. கிடைத்த வாகனங்களில் ஏறி மக்கள் நகரைக் காலி செய்து கொண்டிருந்தனர். போபால் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் ரயில்களில் ஏறித் தப்பிச் செல்ல மக்கள் காத்து நின்றனர். ஆனால், நச்சு வாயுவுக்குப் பயந்து ரயிலுக்குள் இருக்கும் பயணிகள் கதவுகளையும் ஜன்னல்களையும் அவர்களுக்குத் திறக்கவே இல்லை. ஓங்கி ஓங்கிக் கதவைத் தட்டும் போபால் மக்களின் கையறு நிலை கல்லையும் கரைய வைப்பதாக இருந்தது. வலுவானவர்கள் ரயில்களின் கூரைகள் மீதேறி அகதிகளாக ஏதாவதொரு ஊருக்குப் போய்ச் சேர்ந்தனர். இன்னும் சில தொட்டிகளிலும் நச்சு வாயு வெடித்துப் பரவி விட்டது என வதந்திகள் உருவாகி, பல நாட்கள் மக்கள் பீதியில் ஒடுவதும் திரும்புவதுமாக இருந்தனர்.

போபாலின் மருத்துவமனைகள் அனைத்தும் பாதிக் கப்பட்டோரால் நிரம்பி விடவே, அவற்றின் தாழ்வாரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள வெட்டவெளிகளிலும் மக்கள் அடுத்தடுத்துக் கிடத்தப்பட்டனர். இரசாயனப் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க பயிற்றுவிக்கப்பட்டிராத மருத்துவர்கள் தம்மால் முடிந்த வரையில் போராடிக் கொண்டிருந்தனர். மக்களுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று வழிகாட்டுதல் தரப்படவில்லை. கண்களுக்கு சொட்டு மருந்தும், இருமல் மருந்தும் கொடுத்து ஆறுதல் கூறினர். நஞ்சை முறிக்க என்ன மருந்து கொடுப்பது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. யூனியன் கார்பைடு நிறுவனமும் சொல்லவே இல்லை. மிகவும் தாமதமாகத்தான் நஞ்சு முறிவுக்கு சோடியம் தயோ சல்பேட் தரப்பட்டது. பிறகு, அதனையும் தரக்கூடாது என்று ம.பி. அரசு கட்டளையிட்டது. மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கொத்துக் கொத்தாகச் செத்துக் கொண்டேயிருந்தனர்.

தப்பியவர்கள், பிரிந்து போன தமது சொந்தங்களை உயிரோடு எஞ்சிய மனிதர்களிடையே தேடிக் கொண்டிருந்தனர். பிணங்களையும் புரட்டிப் பார்த்தனர். மருத்துவமனை முழுக்க ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் பிணங்கள்தான் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பல பிணங்கள் இன்னாருடையதுதான் எனக் கண்டறிய முடியவில்லை.

ஏனென்றால், பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக மாண்டுபோயிருந்தன. பிணங்களின் மதங்களைக் கண்டறிய முடியாததால் புதைப்பதா, எரிப்பதா என்று தெரியவில்லை. பிணங்களுக்கு வெறுமனே எண்கள் மட்டும் கொடுக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டன. பல ஏக்கர் பரப்பளவுள்ள பொட்டலில் ஒட்டுமொத்த மாக எரியூட்டப்பட்டன. அல்லது பெரிய குழிகளாய்த் தோண்டி மொத்தமாய்ப் புதைத்தனர். அதற்கும் வாய்ப் பில்லாதவர்கள் தமது உறவினர்களின் சடலங்களை கனக்கும் இதயத்தோடு நர்மதை நதி வெள்ளத்தில் விட்டனர்.

மெத்தில் ஐசோ சயனேட் படிந்ததால் போபால் நகரில் மரங்களின் இலைகள் எல்லாம் பச்சை நிறத்திலிருந்து அடர் மஞ்சள் நிறத்துக்கும் கருநிறத்துக்கும் மாறியிருந்தன. பறவைகளெல்லாம் செத்து விழுந்திருந்தன.


படிக்க : போபால் – இராணிப்பேட்டை : முதலாளித்துவ கொலைகள் !


மக்களோடு கால்நடைகளும் தெருநாய்களும் மாண்டு போய் கவனிப்பாரின்றி சில நாட்களில் சிதைந்து அழுகத் தொடங்கின. தொற்று நோய் பரவிடும் நிலை வந்ததும் கிரேன்கள், புல்டோசர்கள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தி பிரம்மாண்டமான குழியொன்றில் ஒட்டுமொத்தமாகப் போட்டு அவற்றின் மீது டன் கணக்கிலான பிளீச்சிங் பவுடர் கொட்டி மூடினார்கள்.

இதற்கிடையில் தெருவெங்கும் வெட்டவெளியில் சிதறிக் கிடந்த மனிதர்களின் பிணங்களும் அழுகி நாறத் தொடங்கின. காலரா பரவும் அபாயம் வெகு அருகில் இருந்தது. அழுகிய பிணங்களைக் குதறிக் கொண்டிருந்த எலிகளால் ப்ளேக் நோய் பரவும் அபாயத்தில் போபால் இருந்தது. பல நாட்களாக வல்லூறுகளும் கழுகுகளும் நகரில் பிணங்களைக் குறிவைத்து வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

ஒரே இரவில் பத்தாயிரத்துக்கும் மேல் மரணங்கள். தொடர்ந்த மாதங்களில் முப்பதாயிரத்துக்கும் மேல் மரணங்கள். ஐந்து லட்சம் பேர்கள் வரை பாதிப்புக் குள்ளானதில், ஒன்றரை லட்சம் பேர்கள் பதினைந்து வயதுக்குட்பட்டோர். வெறும் எண்களாகக் கடந்து செல்லப்பார்க்கும் இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கிடையிலும், எழுத்துகளுக்கிடையிலும் வழிந்தோடும் வேதனையை, துரோகத்தை உங்களால் உணர முடிகிறதா? எத்தனை கனவுகள் கருகியிருக்குமோ? குழந்தைகள், செத்துப்போன தங்கள் பெற்றோரைத் தேடித் தேடி அலைந்து திரிந்த சோகத்தை உங்களால் உணர முடிகிறதா?

தப்பிப் பிழைத்த அந்நகரப் பெண்களின் கருவறையைக் கூட விட்டு வைக்காமல் நஞ்சூட்டியிருக்கும் அந்த கருணையற்ற முதலாளிகளின் இலாபவெறி, இந்த நிமிடம் வரை கேட்பாரில்லாமல் ஆணவமாய் எக்காளமிடுகிறது. இலாபத்தின் கொடூரத்தை விஞ்சுகின்ற துரோகத்தின் கொடூரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கதிர்
(புதிய ஜனநாயகம் தொகுதி:25 இதழ்:9 ஜூலை 2010)

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் டிசம்பர் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

தலையங்கம்: அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!
♦ காசியில் ‘காவி தமிழ்ச்சங்கம்’?
♦ ‘சோசலிச’,‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!
♦ இந்தித் திணிப்பு: எச்சரிக்கை!
♦ ரிஷி சுனக்: பாசிசத்தின் வீரிய ஒட்டுரகம்!
♦ அரசுப் பணியிடங்களில் தனியார்மயம்!
♦ பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!
♦ டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!
♦ ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பன்முனை பயங்கரவாத தாக்குதல்கள்!
♦ தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!
♦ கோவை கார் வெடிப்புச் சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!
♦ மின் இணைப்புடன் ஆதார்: மானியத்தை வெட்டும் சதி முயற்சியே!
நேர்காணல்: ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு: மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!
♦ நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ்-ஆழமும் அகலமும்

சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்றால் என்ன? | சு.விஜயபாஸ்கர்

வ்வளவு விளக்கமாகக் சொன்னாலும், அல்லது எவ்வளவு சுருக்கமாகக் சொன்னாலும், நம் அனைவருடைய நல்வாழ்வுக்கான வழியே சோசலிசம்.

நமது குடும்பத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். உங்கள் குடும்பத்தை எப்படி நிர்வகிப்பது என்று உங்களுக்கு ஒரு திட்டமிருக்கும் அல்லவா? அதைப்போல இந்த உலகை நிர்வகிக்கும் திட்டமே சோசலிசம்.

ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, இரு மகன்கள், இரு மகள்கள், வயதான தாத்தா, பாட்டி என மொத்தம் 8 நபர்களும், இரண்டு பூனைகளும் ஒரு நாயும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். மேற்சொன்ன குடும்பத்தை உதாரணமாக வைத்துக்கொண்டு சோசலிசத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

உழைப்பும் தேவையும்:

ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் திறனுக்கு ஏற்ப உழைப்பை பெற்றுக் கொள்வதும் அவரவர் தேவைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் வளங்களை தருவதும் வளர்ந்த சோசலிச சமுகத்தில் சாத்தியப்படும்.

நமது குடும்பத்தில் அப்பா பேராசிரியராக வேலை செய்கிறார். 1 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார். அம்மா வழக்கறிஞர் பணிபுரிகிறார். ஊதியமாக 1.5 லட்சம் பெறுகிறார். பாட்டியும் தாத்தாவும் பணி மூப்பு பெற்று வீட்டில் உள்ளனர். இருவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள். மூத்த மகனுக்கு வயது 25, பொறியாளராக வேலை செய்கிறார். 50 ஆயிரம் ஊதியம் பெறுகிறார். இரண்டாவது மகள் கல்லூரி படிக்கிறார். மூன்றாவது மகன் பள்ளிப்படிப்பு படிக்கிறார். கடைசி பெண் குழந்தை சிறுவயதில் ஏற்பட்ட நோய் காரணமாக ஒரு கால் செயல் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடமாடுகிறார். பள்ளிப் படிப்பு படித்து வருகிறார்.

படிக்க : சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

குடும்ப உறுப்பினர்களில் மூவர் மட்டுமே ஊதியம் பெரும் பணி புரிகிறார்கள். அவர்கள் பெறும் ஊதியத்தை வைத்து வளர்ப்பு பிராணிகளுடன் சேர்த்து 11 உயிர்களின் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அனைவரின் தேவையும் ஒன்றாக இருக்குமா? அனைவருக்கும் காலை உணவாக இரண்டு இட்லிகள் மட்டும் வழங்கப்படும் என சொல்வோமா? அப்பாவும் அம்மாவும் மூத்தமகனும் மட்டுமே ஊதியம் ஈட்டுவதால் அவர்களுக்கு இட்லிகளுடன் சேர்த்து ஒரு வடையும் ஒரு குவளை பழச்சாறும் காலை உணவாக வழங்கப்படும் எனச் சொல்வோமா?

தாத்தாவும் பாட்டியும் சம்பாதிக்கவில்லையே. எனவே அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கித் தரமாட்டோம் எனச் சொல்வோமா? நாயும் பூனைகளும் மனித இனம் இல்லையே, அவைகளுக்கு உணவிட மாட்டோம் எனச் சொல்வோமா?

சொல்ல மாட்டோம் அல்லவா. குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் நியாயமான தேவை என்னவோ அதை வழங்குவோம். அது தானே அறம்? இந்த அற உணர்ச்சியோடு உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அணுகுவதே சோஷலிச சமூகத்தின் நோக்கம். வெறும் நோக்கம் மட்டுமல்ல. சாத்தியமும் கூட.

எப்படி சாத்தியம்?

தாத்தாவும் பாட்டியும் இப்போதுதான் சம்பாதிக்கவில்லை. அவர்கள் கடந்த காலத்தில் குடும்பதிற்காக உழைத்துள்ளனர். ஊதியம் பெறும் வேலை செய்யதாபோதும், சமையல், வீட்டு வேலைகள், வீட்டுப் பிராணிகளைப் பேணிக் காப்பது என முதிய வயதிலும் தங்களால் இயன்ற வேலைகளை செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் நமக்காக உழைத்தவர்களை நிகழ்காலத்தில் பார்த்துக்கொள்வது நமது கடமை என்பதால் அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்து என அனைத்தையும் வாங்கித் தந்து அவர்களை பராமரித்துக் கொள்கிறோம்.

குழந்தைகள் தற்போது வேலை செய்யவில்லையெனினும் எதிர்காலத்தில் வேலை செய்வார்கள் அல்லவா? இளம் வயதில் கல்வி முக்கியம் என்பதால் கல்வி கற்கிற  வேலையை செய்கிறார்கள். இளம் வயதில் அவர்கள் கற்கும் கல்வி பின்னாட்களில் குடும்பத்திற்கு பயன்படும் என்பதால் எதிர்காலத்திற்கான முதலீடாகிறது.

வேலை செய்யும் அளவுக்கு நாய்க்கும் பூனைக்கும் அறிவில்லை அல்லது அவர்களுக்கு இருக்கும் அறிவுக்கு பொருந்துகிற அளவுக்கு எந்த வேலையும் இல்லை. எனவே அவர்களால் ஊதியம் பெற இயலவில்லை. இருப்பினும் நம்மைப் போன்ற இன்னொரு குடும்ப உறுப்பினர் போல் செல்லப் பிராணிகளை நாம் பார்த்துக் கொள்கிறோம். ஏனெனில், விலங்குகள் நம் உயிர் சூழல் தொகுப்பின் ஒரு அங்கம்.

ஊன்றுகோல் உதவியுடன் நடமாடும் கடைசி பெண் குழந்தையால் அதிகமான மருத்துவச் செலவுகள் ஏற்படுகின்றன. இருப்பினும் அவளுக்கு மருந்து வாங்காமல் விட்டு விடமாட்டோம். அவளுக்காக ஊன்றுகோல் வாங்கியும் தந்துள்ளோம். குடும்பத்தில் உள்ள மற்ற குழந்தைகளை ஒப்பிடும்போது, நோயுற்ற குழந்தையை கூடுதல் பரிவோடு பார்த்துக் கொள்கிறோம். ஏனெனில் அவளால் மற்றவர்களைப் போல் நடக்கவோ, ஓடவோ முடியாது. அவளுக்கு கூடுதல் உதவி தேவைப்படுகிறது. வலு அதிகம் உள்ளவர்கள் வலு குறைந்தவர்களை அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக்கொள்வது மனித நேயம் என்பதால் அவளை பாசத்தோடு கவனித்துக் கொள்கிறோம்.

நம் குடும்பத்தில் இரு குழந்தைகள் சண்டையிட்டு கொண்டால், நமக்கென்ன கவலை என பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம். தடுத்துநிறுத்துவோம். அது மட்டுமின்றி, இனி சண்டை போடக் கூடாது என அறிவுரை சொல்லுவோம்.

மகன் போதைப் பொருள், குடிப்பழக்கம் என தீய பழக்கங்களுக்கு அடிமையானால், புத்திமதி சொல்லி, நல்வழிப்படுத்துவோம். இனி தீய பழக்கங்கள் பக்கம் மகன் போய்விடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ, அவை அனைத்தையும் செய்வோம்.

சுருக்கமாகச் சொன்னால், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, விட்டு கொடுத்து, அன்பு செலுத்தி, நம்மிடம் இருப்பவற்றை பகிர்ந்து கொள்வோம்.  அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். வெறும் விருப்பத்தோடு நின்று விடாமல், அனைவரின் நலவாழ்வுக்கு நம்மால் என்ன செய்யமுடியுமோ அவை அத்தனையையும் செய்வோம்.

எங்கிருந்து கற்றோம்?

நோயுற்ற குழந்தையின் மீது நாம் காட்டிய மனிதநேயம், வயதான தாத்தா பாட்டியிடம் நாம் காட்டிய பரிவு, வழி தவறிப் போன மகனிடம்  நாம் காட்டிய அக்கறை உள்ளிட்ட அனைத்து பண்புகளையும் எங்கிருந்து கற்றோம்? அன்பு, மனித நேயம், பரிவு, சக மனிதர்கள் மீதான அக்கறை உள்ளிட்ட அனைத்து நற்பண்புகளையும் பிறந்து வளர்ந்த சமூகத்திடம் இருந்து கற்றோம்.

ஆனால், நாம் மேலே சொன்ன (உதாரண) குடும்ப உறுப்பினர்கள் போல் உலகில் உள்ள அனைவரும் நடந்து கொள்கிறார்களா? நற்பண்புகள் கொண்ட மனிதர்கள் மட்டும்தான் இவ்வுலகில் உள்ளனரா? திருட்டு, கொலை, கொள்ளை, பொய், சக மனிதர்களை ஏமாற்றுதல் உள்ளிட்ட தீய பண்புகளை கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் உள்ளனர். அத்தகையான மனிதர்கள் எங்கிருந்து தீய பண்புகளை கற்றனர்? கெடுவாய்ப்பாக, அவர்களும் நம்முடைய சமூகத்தில் இருந்தே தீய பண்புகளை கற்கின்றனர்.

அப்படியானால் நல்லதோ கெட்டதோ, அனைத்து பண்புகளையும் கற்கும் பள்ளியாக நம் சமூகமே உள்ளது. கற்றதை செயல்படுத்தும் இடமாகவும் நம் சமூகமே உள்ளது. அப்படியானால் இந்த சமூகத்தை நல்லதை மட்டும் கற்றுக் கொடுக்கும் கல்விக்கூடமாக மாற்றிவிட்டால், தீய பண்புகளுக்கு இடமிருக்காது அல்லவா?

நல்லதைச் செய், தீயதை செய்யாதே என்ற பிரச்சாரத்தை அனைவரும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் தீயதை செய்யாமல், நல்லதை மட்டும் செய்பவர்களை இவ்வுலகில் அரிதாக உள்ளது.

ஏன் பிரச்சாரம் வேலை செய்யவில்லை?

நல்லதைச் செய், தீயதை செய்யாதே என்பதை அனைவரும் கேட்டுக் கொண்டே இருந்தாலும், நல்லதையும் கெட்டதையும் வெறும் பிரச்சாரத்தின் மூலம் கற்கவில்லை. வேறு சொற்களில் சொன்னால், வெற்றுப் பிரச்ச்சாரத்தில் உலகை மாற்ற முடியவில்லை.  அதாவது நல்லதையும் கெட்டதையும் பிரச்சாரம் உருவாக்கவில்லை. மாறாக நாம் வாழும் உலகில் உள்ள சமூகப் பொருளாதார நிலைகள்தான் நல்லதையும் கெட்டதையும் உருவாக்குகின்றன.

எனவே அந்த வகையில் நமது உலகின் சமூகப் பொருளாதார நிலைகளை மாற்றிவிட்டால், நல்லதையும் கெட்டதையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் அல்லவா. நமது உலகின் சமூகப் பொருளாதார நிலைகளை மாற்றும் வழிமுறையையே சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்றைழைக்கிறோம்.

அவரவர் திறனுக்கு ஏற்ப உழைப்பை செலுத்தும் பண்பையும், அவரவர் தேவைக்கேற்ப வளங்களை நுகரும் பண்பையும் ஒவ்வொருவருக்கும் உருவாக்கிவிடும் திறனுடைய சமூகத்தை கட்டி அமைப்பதே சோஷலிசத்தின் லட்சியம். சோசலிசத்தின் லட்சியம் பெரிதாக உள்ளதே. இது சாத்தியமா?

தனி ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் அன்போடும் பரிவோடும் அக்கறையோடும் நடந்து கொள்கிறார்கள் அல்லவா? நமது குடும்பம், நம்ம அம்மா, நம்ம அப்பா, நம்ம தாத்தா, நம்ம பாட்டி, நம்ம பூனை என நினைப்பதால், பரிவோடும் அன்போடும் நடந்து கொள்கிறோம். நம்ம என்பதை குடும்பத்தை தாண்டி நாம் வாழும் இந்த உலகமனைத்திற்கும் விரிவாக்கினால், பாரடா இப்புவி மக்களை என்ற விசாலப் பார்வை கொண்ட சுரண்டலற்ற சமூகம் சாத்தியமே.

விசாலப் பார்வை கொண்ட சுரண்டலற்ற சாத்தியம் சமூகம் என்றால், இதுவரை ஏன் அது சாத்தியமாகவில்லை?

இது நம்ம குடும்பம், நம்ம அம்மா, நம்ம அப்பா, நம்ம தாத்தா, நம்ம பாட்டி, நம்ம பூனை என்ற பொதுமைப் பண்பு நாம் எடுத்துக்கொண்ட உதாரண குடும்பத்திற்குள் உருவாகி இருந்ததால், சுரண்டலற்ற குடும்பம் சாத்தியமானது. ஆனால் இப்படியான பொதுமைப் பண்பு உலகத்தில் உருவாகாததால் சுரண்டலற்ற சமூகம் தற்போதைக்கு இல்லை.

படிக்க : ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!

நமது உதாரண குடும்பத்தில் உழைக்க தேவையான தகுதியைப் பெற்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் தகுதிற்கேற்ப உழைத்தார்கள். தங்கள் தேவைக்கேற்ப வளங்களை பகிர்ந்து கொண்டார்கள். யாருக்கும் யாரிடம் இருந்து எதையும் பிடுங்க (சுரண்ட) வேண்டிய தேவையும் இல்லை. உழைப்பும் தேவையும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நமது உதாரண  குடும்பத்தில் உறுப்பினர்கள் இடையே போட்டி இல்லை. எனவே சுரண்டல் (அதாவது ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது) இல்லை. வயது, பாலினம், உழைப்பு, கல்வி, அனுபவம் உள்ளிட்ட பல காரணிகளில் அனைவரும் வேறுபட்டு இருந்தாலும், அவரவர் திறமைக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற பொதுப் பண்பு உருவாகி இருந்தது. எனவே வேறுபாடின்றி அனைவரும் அவரவர் பங்கை குடும்பத்திற்கு செய்தனர். அவரவர் தேவைக்கு ஏற்ப வளங்கள் (உணவு, பணம்) பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஏதேனும் ஒருவர் தவறு செய்தால், அதை குடும்ப உறுப்பினர்கள் விவாதித்து தவறை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மாறும் சூழல் காரணமாக சிலருக்கு தேவை (கல்லூரிப் படிப்பு செலவு, மருத்துவச் செலவு) அதிகமானால், அதற்கேற்ப வகையில் உழைப்பும் மாற்றி அமைக்கப்பட்டது. தேவைக்கு அதிகமாக நுகரும் பண்பு குடும்ப உறுப்பினர்களிடையே இல்லை.

இப்படியான சுரண்டலற்ற, தங்கள் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்த, ஒருவரை ஒருவர் ஏய்த்துப் பிழைக்கும் பண்புகள் இல்லாத குடிமக்களை உருவாக்குவதே சோசலிசத்தின் லட்சியம். அந்த லட்சியம் வெறும் கனிவின் மூலமோ, பிரச்சாரத்தின் மூலமோ, கற்பனையின் மூலமோ, தெய்வ சக்தியின் மூலமோ வந்துவிடாது. மனிதர்களுடைய உணர்வுகளும் பண்புகளும் செயல்பாடுகளும் சமூகப் பொருளாதார சூழ்நிலைமைகளில் பின்னணியில்தான் உருவாகின்றன. சுரண்டலற்ற சமூகத்தைப் படைக்கத் தேவையான  சமூகப் பொருளாதார நிலையை உருவாக்குவதே சோசலிசம்.

சு.விஜயபாஸ்கர்

போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்

டிசம்பர் 2, 1984, நள்ளிரவு: யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுவாயு பரவத் தொடங்கியது. உடனடியாக 3828 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கண் பார்வை பறிபோனது. காற்றின் எதிர்த் திசையில் ஓடிய மக்கள் ஈக்களைப் போலச் சுருண்டு விழுந்து செத்தனர். முதல்வர் அர்ஜுன் சிங் நகரை விட்டுத் தப்பிச் சென்றார்.

டிசம்பர் 3, 1984: நகரெங்கும் பிணக் குவியல். எல்லாம் முடிந்த பிறகு, முதல் வரும் அதிகாரிகளும் திரும்பிவந்தனர். கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கில் 10-வது குற்றவாளியாக யூனியன் கார்பைடு சேர்க்கப்பட்டது. அடுத்து சில நாட்களில் 20000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். 5,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

டிசம்பர் 7, 1984: தொழிற்சாலையைப் பார்வையிட வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டு, விருந்தினர் மாளிகையில் வைத்து உபசரிக்கப்படுகிறார். இந்திய அரசு வாக்களித்திருந்தபடி, ஆண்டர்சன் பிணையில் விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பாக ம.பி. முதலமைச்சர் அர்ஜுன்சிங்கின் சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைக்கப்படுகிறார்.

மார்ச் 29, 1985: பாதிக்கப்பட்டோர் சார்பில் அரசே நிவாரணம் கோர வகை செய்யும் “போபால் விஷவாயுக் கசிவு பேரழிவுச் சட்டம்-1985” நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகும் உரிமை பறிபோதல்.

படிக்க : சென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன?

ஏப்ரல் 8, 1985: நிவாரணத் தொகை கேட்டு அமெரிக்காவில் கார்பைடு நிறுனத்தின் மீது நடந்து வந்த வழக்கு விசாரணையில் இந்திய அரசும் இணைந்து கொண்டது.

மே12, 1986: அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் அனைத்து போபால் வழக்குகளையும் இந்தியாவிற்கு மாற்றுகிறது. இதன் மூலம் அற்பமான நிவாரணத் தொகை தருவதை கார்பைடு உறுதி செய்கிறது.

டிசம்பர் 1, 1987: போபால் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் 12 குற்றவாளிகளின் மீது கொலைக் குற்ற மாகாத மரணம் விளைவிக்கும் பிரிவின் கீழ் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.

பிப்ரவரி 14-15, 1989: யூனியன் கார்பைடும், ராஜீவ் அரசும் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலோடு செய்த துரோக ஒப்பந்தம்; 47 கோடி ராலர் நிவாரணத் தொகைக்கு அரசு ஒப்புதல்.

மே 4, 1989: பாதிக்கப்பட்டோர் நடத்திய போராட்டங்களையடுத்து, நிவாரணத் தொகை ஒப்பந்தம் குறித்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது.

பிப்ரவரி 1, 1992: ஆண்டர்சன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுதல்.

ஆகஸ்டு 19, 1992: நிவாரணத் தொகையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.200 இடைக்கால நிவாரணமாகக் கொடுக்கப்பட்டது.

பிப்ரவரி 14, 1994: போபால் வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்த போதிலும், யூனியன் கார்பைடின் பங்குகளை விற்க அனுமதி.

செப்டமர் 13, 1996: இந்தியக் குற்றவாளிகள் மீது போடப்பட்டிருந்த கொலைக்குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கை (Culpable homicide) குற்றமுறு கவனக்குறைவான (Criminal Negligence) வழக்காக மாற்ற் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இதற்கு எதிராக சி.பி.ஐ. மேல்முறையீடு செய்யவில்லை.

அக்டோபர் 16, 1997: தேசிய சுற்றுச்சூழல் ஆய்வுநிறுவனம் (NEERI) தனது ஆய்வறிக்கையில் நிலத்தடி நீர் மாசுபடவில்லை என்று சான்று அளித்தது.

நவம்பர் 1999: போபாலில் நீரும் நிலமும் 60 லட்சம் மடங்குக்கும் அதிகமாக நஞ்சாக்கப்பட்டுள்ளதை பசுமை அமைதி இயக்கத்தின் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

பிப்ரவரி 5, 2001: டௌ கெமிக்கல்ஸ், யூனியன் கார்பைடைக் கையகப்படுத்தியது. போபால் படுகொலைக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பேற்காது என அறிவிப்பு.

ஜனவரி 2002: நீர், நிலம் மற்றும் தாய்ப்பாலில் காரீயம், பாதரசம் போன்ற அபாயகரமான வேதிப் பொருட்கள் கலந்துள்ளதை “சிரிஸ்டி” உண்மை கண்டறியும் குழுவின் ஆய்வுகள் உறுதி செய்தன.

மே 24, 2002: ஆண்டர்சன் மீதான பிடிவாரண்டை மாற்றக் கோரி நீதிமன்றத்திடம் சி.பி.ஐ. கோரிக்கை. நச்சுக் கழிவுகளை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்.

ஆகஸ்டு 28, 2002: சி.பி.ஐ-இன் கோரிக்கை நிராகரிப்பு. படுகொலை நடந்த 18 வருடங்களுக்குப் பிறகு ஆண்டர்சனுக்குக் கைது வாரண்ட். ஆண்டர்சனைத் தேட முடியவில்லை என சி.பி.ஐ. சாதிப்பு.

நவம்பர் 2002: யூனியன் கார்பைடு நிறுவனம் 1989-இல் ஆய்வு செய்தபோதே நீர், நிலம் மோசமாக நஞ்சாவதைக் கண்டறிந்திருப்பது அமெரிக்காவில் ஒரு வழக்கு விசாரணையில் அம்பலமானது.

2003: ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிடம் கோருவதென இந்தியா முடிவு.

மார்ச் 18, 2003: கார்பைடை அமெரிக்காவில் விசாரித்து தண்டனைக் கொடுக்கக் கோரும் வழக்கு மீண்டும் ஒரு முறை அமெரிக்க நீதிமன்றத்தால் நிராகரிப்பு.

ஜூன் 2004: வாரன் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா நிராகரிப்பு.

ஜூன் 30, 2004: பாதிக்கப்பட்ட பகுதிகளில் கழிவகற்றும் பொறுப்பை டௌ கெமிக்கல்ஸ் ஏற்றுக் கொள்ள அமெரிக்க நீதிமன்றம் கோரிக்கை. இந்திய அரசும் ஒப்புக் கொள்ளுதல்.

19 ஜூலை, 2004: 5,72,029 பேருக்கு நிவாரணம் தருவதற்கு உச்சநீதிமன்றம் வற்புறுத்தல். அதாவது, 20 வருடங்களுக்குப் பிறகு தலைக்கு ரூ.25,000.

25 அக்டோபர், 2004: நிவாரணத் தொகை வழங்கப்படாததை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்.

26அக்டோபர், 2004: ஏப்ரல் 1, 2005-க்குள் நிவாரணத் தொகை முழுவதையும் வழங்க உச்ச நீதிமன்றம் கெடு.

2005: மாசுப்பட்டுப் போன போபால் ஆலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை டௌ கெமிக்கல்ஸ் தனது பொறுப்பில் சுத்தப்படுத்த வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடருதல்.

படிக்க : போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

ஏப்ரல் 17, 2006: பாதிக்கப்பட்டவர்களின் குழு தில்லி நோக்கி பாதயாத்திரை. அவர்கள் டௌ கெமிக்கல்ஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியதை மன்மோகன் சிங் ஏற்க மறுப்பு.

2006 : டௌ கெமிக்கல்ஸை போபால் ஆலையைச் சுத்தப்படுத்தும் பொறுப்பில் இருந்து தப்பிக்க வைக்கும் அரசின் சதித் திட்டத்தை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்.

ஜனவரி 10, 2007: டௌ கெமிக்கல்சின் கூட்டாளி டாட்ட அலுவலக வாயிலில் ரத்தன் டாடாவை எதிர்த்துப் போராட்டம். டாடா உப்பு முதலான நுகர் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரி இரண்டு நாட்கள் பேரணி.

மார்ச் 28, 2008: பாதிக்கப்பட்டவர்களின் குழு மீண்டும் தில்லிக்குப் பாத யாத்திரை.

2008: பா.ஜ.க, டௌ கெமிக்கல்ஸிடம் நிதி வாங்கியது அம்பலமானது.

ஜூன் 7, 2010: வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 7 நிர்வாகிகளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு. உடனடியாக பிணையில் விடுவிப்பு.

(புதிய ஜனநாயகம் தொகுதி:25 இதழ்:9 ஜூலை 2010)

தாராவி மறுசீரமைப்பு திட்டம்: அதானிக்கு டெண்டர் – உழைக்கும் மக்களை நகரைவிட்டு விரட்ட எத்தனிக்கும் மகாராஷ்டிர அரசு!

தாராவி மறுசீரமைப்பு திட்டம் என்ற பெயரில் துரத்தப்படவிருக்கும் தாராவி உழைக்கும் மக்கள்!
5,069 கோடிக்கு அதானி நிறுவனத்திற்கு டெண்டர் விட்டுள்ளது சிவசேனா-பாஜக அரசு!

சியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் சுமார் 6.5 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இப்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், ஜவுளி பொருட்கள் உற்பத்தி மற்றும் வீட்டு வேலைகள் செய்து தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கூறிய மாநில அரசு தாராவியை மறு சீரமைப்பதற்க்கான திட்டம் ஒன்றை கடந்த 1999 ஆம் ஆண்டிலேயே முன்வைத்தது. ஆனால், பலமுறை முடிவு செய்தும் டெண்டர் விடப்பட்டும் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது சிவசேனா-பா.ஜ.க கூட்டணி அரசு இத்திட்டத்தை அமல்படுத்த முன்முனைந்து பணியை தொடங்கியுள்ளது.

இந்த டெண்டரில் தென்கொரிய ஐக்கிய அமீரக நாட்டு நிறுவனங்கள் உட்பட 8 கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் இறுதி ஏலத்திற்கு அதானி குழுமத்தை சார்ந்ந அதானி பிராப்பர்ட்டீஸ், டி.எல்.எப் மற்றும் ஸ்ரிநமான் டெவலப்பர்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. 259 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஆரம்பக்கட்ட முதலீடாக அதானி நிறுவனம் ரூ.5,069 கோடி முதலீடு செய்வதாகத் தெரிவித்திருந்தது. இதையடுத்து இத்திட்டம் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

படிக்க : நவசேவா துறைமுகத்தில் ’ஹெராயின்’: அதானிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சேர்ந்து நடத்தும் கொள்ளை!

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2.5 சதுர கிலோமீட்டரில் சுமார் 58 ஆயிரம் குடும்பங்கள், 12 ஆயிரம் கடைகள் – வணிக நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக 405 சதுர அடியில் வீடு கட்டிக்கொடுக்கப்படும். அதானி நிறுவனம் இலவச வீடுகள் பெறத் தகுதியானவர்கள் தொடர்பாகப் புதிய கணக்கெடுப்பு நடத்தும். இலவச வீடு பெறத் தகுதியில்லாதவர்கள் நிலம், கட்டுமான செலவைக் கொடுத்து வீடு பெற்றுக்கொள்ள வேண்டும். குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக்கொடுத்தது போக எஞ்சி இருக்கும் நிலத்தில் அதானி நிறுவனம் வீடுகள் மற்றும் கடைகளைக் கட்டி விற்பனை செய்துகொள்ளும்.

அதானி நிறுவனம் இந்தத் திட்டத்திற்காக மாநில அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கும். அதில் மாநில அரசுக்கு 20 சதவிகிதப் பங்கும், அதானி நிறுவனத்துக்கு 80 சதவிகிதப் பங்கும் இருக்கும்.

மொத்தம் 58,000 குடும்பங்கள் என்பது அரசு கூறும் கணக்கு. ஆனால் அரசின் கணக்கில் அடங்காமல் அதற்கு சரி நிகரான அளவில் பல்லாயிரம் குடும்பங்கள் அங்கு வசிக்கின்றனர். அம்மக்களுக்கு அங்கு வீடுகள் ஒதுக்கப்பட மாட்டாது; தாராவிக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் அல்லது மும்பை பெருநகருக்கு உட்பட்ட வேறு ஏதாவது ஒரு பகுதியில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இத்திட்டத்திற்காக ஏலம் நடத்தப்படுவது இது முதல் முறை அல்ல. ஏலம் நடைபெறுவதும் திட்டம் கைவிடப்படுவதும் வாடிக்கையான விசயமாக உள்ளது. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் துபாய் நிறுவனம் ஒன்று ரூ.7500 கோடிக்கு ஏலத்தில் வெற்றி பெற்றது; அந்த ஏலம் அதானிக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசிடமிருந்து ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை ஒப்புதல் பெற தாமதமாகிறது என்பதைக் காரணம்காட்டி அத்திட்டம் கைவிடப்பட்டது.

படிக்க : மும்பை : தண்ணீரின்றி தவிக்கும் நகர உழைக்கும் மக்கள் | படக்கட்டுரை

தற்போது நடைபெற்ற ஏலத்தில் அதானி வென்றிருப்பதும் 47.3 ஹெக்டேர் ரயில்வே நிலத்தை கொடுக்கப்பதற்கான பணிகள் உடனே தொடங்கப்பட்டிருப்பதும் தற்செயலான நிகழ்வு அல்ல.

மும்பை நகரத்தை உருவாக்கிய தாராவி உழைக்கும் மக்களை அந்த நகரத்தின் அழுக்காக நவீன தீண்டப்படாதவர்களாக பார்க்கும் மகாராஷ்டிர அரசு அவர்களை துரத்தியடிப்பதற்கான வேலைகளை செய்து வருகிறது. குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணியை அரசே செய்து நிறைவேற்றாமல் அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான திட்டமாக இதை மாற்றி உள்ளது.

ஆஷிக்

புதுக்கோட்டை: ஆபத்தான (சட்டவிரோத) கல்குவாரியை மூடக்கோரி மக்கள் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம்; திருமயம் தாலுகா காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சியில், குளம் – ஓடை மற்றும் குடியிருப்புகளை ஒட்டி, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 பிரிவு 36(1) விதிமுறைகளை மீறி, இந்த ஆண்டு தொடக்கத்தில் சுப்பையா கல்குவாரிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் வருவாய் துறை, சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள்.

இதனால், இப்பகுதியில் தொன்மை சிறப்புமிக்க, பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் – பள்ளிவாசல் – தேவாலயம்  மற்றும் குடியிருப்பு வீடுகள் – கண்மாய் ஓடை ஆகியவைகளை தகர்க்கும் வகையில் சட்டவிரோதமான முறையில் வெடிவைத்து செயல்பட்டு வருகிறது மெய்யபுரம் சுப்பையா கல்குவாரி.

சுப்பையா கல்குவாரி சட்ட விரோதமாக நானல் வெடிகளை (ANEL ED), மட்புல் முறையில் வெடிக்காமல், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தக் கூடாத வெடிகளை வைத்து வெடித்தனர்.

இவ்வாறு வெடி வைத்ததன் காரணமாக ஆறுமாதங்களுக்கு முன்பு இந்த கல்குவாரியில் வெடிவைத்து பாறைகளைத் தகர்த்தபோது அருகிலுள்ள பல வீடுகள், பள்ளிவாசல், கோயில், தேவலாயம், பள்ளிக்கூடம் உட்பட பல கட்டிடங்கள் அதிர்ந்து சுவர்கள் விரிசலாகின.

படிக்க : அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

அதன் பின்னர் பாதிப்பினால் இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பாறைகளுக்குப் பதிலாக அதனை ஒட்டியுள்ள இடத்தில் கிராவல் மண் அளவுக்கு அதிகமாகத் தோண்டி எடுத்து விற்பனை செய்தனர்.

பிறகு தற்போது மீண்டும் பாறைகளைத் தோண்டி எடுக்க எண்ணி, கடந்த வாரம் விடியற்காலையில் மிகப்பெரிய வெடிகளை வெடிக்கச் செய்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடும்படிச் செயதனர்.

அதன்பின்னர் இதனைக் கண்டித்து பெண்கள் முகாமையாக முன்னெடுத்து தஞ்சாவூர் – புதுக்கோட்டை சாலையில் கிராமப் பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பொதுமக்களும் பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இதனூடாக அந்த கல் குவாரிக்கு லாரிகள் சென்றுவர ஏதுவாக கண்மாய்களுக்கு வரக்கூடிய ஒரே நீர்வரத்தான மழைநீர் வாரியின் (ஓடை) நடுவே சாலைபோல் அமைத்துக் கொடுத்து கண்மாய்களையும் விவசாய நிலங்களையும் வறட்சியுறச் செய்தனர். அதனையும் தட்டிக்கேட்ட மக்கள் மீது அதிகாரிகள் வழக்குப் போட்டதோடு அந்த வாரியை (ஓடை) திறக்க அனுமதி மறுத்தனர் அதிகாரிகள்!

தற்போது கல்குவாரி செயல்பட்டுள்ள வெறும் ஐந்தடி ஆழத்திற்கே இப்படி எண்ணற்ற பாதிப்புகள் எனில், இன்னும் அவர்கள் ஆழமாகத் தோண்டும்பொழுது பல கட்டிடங்கள் இடிந்துவிழும் நிலை உள்ளது.

மேலும் இங்கு 500 ஆண்டுகால தமிழ் கலாச்சாரபடி கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற பழமையான பள்ளிவாசலும் இருக்கிறது. ஏற்கனவே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குவாரியில் வைக்கப்பட்ட வெடியினால் இங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. இங்கே சாலையோரம் உள்ள பேக்கரியில் கட்டிடம் அதிர்ந்து கண்ணாடிகள் உடைந்த காட்சியினை இன்றும் நேரில் காணலாம்.

இப்போது வெகு அருகில் 400 மீட்டர் தொலைவில் கல்குவாரியை அமைத்து கனிமங்களை கொள்ளையடித்தால் இந்தக் கிராமங்களில் மக்கள் வாழமுடியாத அபாய நிலை உள்ளது.

கல்குவாரி முதலாளிகள் நீதிமன்ற ஆணை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் அதிகாரிகள், அதனை எதிர்த்து எவ்வகையிலும் மேல்முறையீடு செய்யாமலும், மக்களின் எதிர்ப்பு கடுமையாக ஏற்பட்ட பின்பும் கூட சட்டவிரோதமாக அனுமதி பெற்று சட்ட விரோதமாக செயல்படும் குவாரியைத் தடுக்காமலும், கல்குவாரி முதலாளிகளுக்கு ஆதரவாக விவசாயத்தினை அழிக்கக் காரணமாகவும் இருந்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களிலும் கல்குவாரி அமைத்து அங்கே உள்ள இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் சூறையாடித்தான் திடீர் அரசியல் பணக்காரர் ஆனார். இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கில் கல்குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. எப்படி பி.ஆர்.பி.பழனிச்சாமி கிரானைட்களை வெட்டி எடுக்க ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையும் வளைத்தாரோ அதேபோலதான் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் கல்குவாரி அதிபர்களால் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் வளைக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடலிலும் சட்ட விரோதமான கல்குவாரிகளின் செயல்பாடு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஒட்டுமொத்த அரசு அதிகார வர்க்கமும் லஞ்ச லாவண்யங்களில் மூழ்கி திளைக்கின்றனர். அதனால் எந்த மக்கள் போராட்டமும் இல்லாமல் கல்குவாரிகளை மூட முடியாது என்ற எதார்த்தம் நம் கண் முன்னே நிற்கிறது. இதை புரிந்து கொண்ட காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரம் பகுதி மக்கள்  தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதில் கீழ்காணும் கோரிக்கைகளை வைத்திருந்தனர்.

1.உடனடியாக காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சியில் மெய்யபுரம் ஊரில் இயங்கும் இந்த கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

2.குவாரியை மூடி, இதன் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

3.இந்தப் பகுதியில் இயங்கும் கல்குவாரிகள் அனைத்தும், திருநெல்வேலி மாவட்ட கல்குவாரிகள் – திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மொரட்டு பாளையம் கல்குவாரிகள் போல் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

4.புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கல்குவாரியினால் உருவான பல நூறு அடிகள் ஆழமான ஆயிரக்கணக்கான பெருங்குழிகள் ஆபத்துடன் வாய்பிளந்து காட்சியளிக்கக் காரணமான சட்டவிரோத கல் குவாரி உரிமையாளர்கள் மட்டுமல்லாது அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்க : விழிஞ்சம் துறைமுக திட்டம் நிறுத்தப்படும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!

காட்டுபாவா பள்ளிவாசல் மக்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதையும் சூறையாடிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த கல்குவாரிகளுக்கு எதிரானதாக மாற வேண்டும்.

பல்வேறு ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் இயற்கை பாதுகாப்பு அமைப்புகளும் கல்குவாரிக்கு எதிரான காட்டுபாவா பள்ளிவாசல் மக்கள் போராட்டங்களில் இணைந்துள்ளனர். அனைத்து பகுதி உழைக்கும் மக்களும் இதனுடன் இணையும்போதுதான் நமக்கான இயற்கை வளங்களையும் காடுகளையும் வாழ்வாதாரத்தையும் நாம் பாதுகாத்திட முடியும்.

வினவு செய்தியாளர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால் அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா? | மக்கள் அதிகாரம்

01.12.2022

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு;
கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால்
அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா?

பத்திரிகை செய்தி

தூத்துக்குடி மண்ணையும், காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய கார்ப்பரேட் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக லட்ச மக்கள் கூடி, ஸ்டெர்லைட்டை மூடினர். கார்ப்பரேட் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, அன்றைய தலைமைச் செயலாளர் மற்றும் அன்றைய டிஜிபி ஆகியோர் கூட்டு சதி செய்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை காக்கை குருவிகளைப்போல சுட்டுக் கொன்றனர்.

அடுத்து சில நாட்கள் தூத்துக்குடியில் இணையத்தை நிறுத்தி ஏறத்தாழ காஷ்மீரைப் போல தூத்துக்குடியை மாற்றி நூற்றுக்கணக்கான பேரை கைது செய்து, அவர்களை அடைத்து வைத்து சித்தரவதை செய்தது தமிழ்நாடு போலீஸ்.

கார்ப்பரேட் வேதாந்தா கம்பெனிக்கு எதிராகப் போராடிய ஸ்னோலினின் வாயில் துப்பாக்கியால் சுட்ட போதும் மே 23 ஆம் தேதி தூத்துக்குடியில் போலீசு அடக்குமுறையை கேள்வி கேட்ட காளியப்பனை மிக அருகில் இருந்து சுட்டுக்கொன்ற போதும் பின்வாங்காத தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டமே ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூடியது.

படிக்க : தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!

ஸ்டெர்லைட் கம்பெனி மூடப்பட்ட பின்னரும் பல்வேறு வகையில் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான சதி வேலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு என்ற பெயரில் தினமும் நூற்றுக்கு மேற்பட்டோர் அந்த ஆலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் சமூக விரோதிகளோடு சேர்ந்து பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்நாடு அரசும் போலீசும் எவ்வித தடையும் விதிப்பதில்லை. ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சமூக விரோத செயல்களை அம்பலப்படுத்தி பேசுவதற்கு கூட இன்றைக்கு வரை தூத்துக்குடி போலீசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் எவ்வித அனுமதியும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு – முழக்கமிடும் தூத்துக்குடி மக்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் நெருங்கும் வேளையில் அருணா ஜெகதீசனின் அறிக்கை வெளியானது. மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட, தூத்துக்குடி மக்களோ துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.

ஆனால் உயிரிழந்த குடும்பங்களுக்கு கூடுதலாக சிறிது தொகை கொடுத்து விட்டு மொத்த பிரச்சினையையும் ஊற்றி மூடி விட்டது தமிழ்நாடு அரசு.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக சதி வேலை செய்த எடப்பாடி பழனிச்சாமி, கிரிஜா வைத்தியநாதன் அன்றைய டிஜிபி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து அவர்கள் உடனே சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு 17.10.2022 அன்று வெளியிட்டுள்ள அரசாணை மூலம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த மண்ணுக்காக போராடிய தூத்துக்குடி தியாகிகளை கொன்றொழித்த சதிகாரர்கள் மீது எவ்விதமான கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்பதைத்தான் தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.

தமிழ்நாடு அரசு தனது அரசாணையில் வெளியிட்டதற்கு கூட நேர்மையாக இதுவரை நடந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்ட 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை கூட இதுவரை எடுக்கப்படவில்லை.

போலீஸ் அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் சில பேர் மீது பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் பொய்யே.

திருச்செந்தூர் அருகில் உடன்குடி என்ற பகுதியில் காட்டு மானை பிடிக்கும் பொழுது தவறுதலாக அது இறந்து போய்விட, சம்பந்தப்பட்ட வன அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு மானுக்கு இருக்கும் மதிப்பு கூட இந்த நாட்டின் மக்களுக்கு கிடையாது என்பதைத்தான் இந்த தமிழக அரசு நமக்கு  உணர்த்துகிறது. ஏனென்றால் தூத்துக்குடியின் மக்கள் கார்ப்பரேட்டுக்கு எதிராக அல்லவா போராடினார்கள்.

படிக்க : தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

தூத்துக்குடி தியாகிகளும் தூத்துக்குடி மக்களும் அவர்களுடைய சொந்த நலன் விருப்புகளுக்காகப் போராடவில்லை. மாறாக பல ஆண்டுகளாக மண்ணையும் காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடினார்கள். தூத்துக்குடி தியாகிகளின் தியாகத்தை வரித்துக் கொள்ள வேண்டும்.

வீரம் செறிந்த தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

ஆகவே, தூத்துக்குடியையும் தூத்துக்குடி மக்கள் வாழ்வையும் சீரழித்த ஸ்டெர்லைட் கார்ப்பரேட் வேதாந்தா கம்பெனிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் குற்றவாளிகள் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து கொலைகாரர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதே உடனடித் தேவை.

ஸ்டெர்லைட்டை  நிரந்தரமாக மூட சட்டம் இயற்றுவதும் இந்த மண்ணுக்காகப் போராடிய தூத்துக்குடி தியாகிகளுக்கு அரசின் சார்பில் மணிமண்டபம் அமைப்பதுமே நியாயமானதாக இருக்க முடியும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ

மிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி,  பணத்தை இழந்ததால் 30-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து அக்டோபர் 1-ம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

27 நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்ட மசோதா பற்றி வாயை திறக்காத ஆளுநர் ரவி, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) கடிதம் அனுப்பினார். இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட தமிழகத்தில் எதற்கும் உதவாத ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் மருது அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்!

1

குஜராத் சட்டமன்றத் தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8 அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அங்கு பிரதானமான கட்சிகளாக இருக்கின்றன.

வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் உள்ள விவரங்களை ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம் (Association for Democratic Reforms) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பகுப்பாய்வு செய்து நவம்பர் 24 மற்றும் நவம்பர் 28 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில் 330 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றப் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலின்போது 238-ஆக இருந்தது; அது தற்போது 330 ஆக அதிகரித்துள்ளது.


படிக்க: இந்தியா தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறிவிட்டது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம்


ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் 181 பேரில் 61 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 179 வேட்பாளர்களில் 60 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்; ஆளும் பாஜக கட்சியின் 182 வேட்பாளர்களில் 32 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.

ஆத்மி கட்சியை சேர்ந்த 40 வேட்பாளர்களின் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸில் 28 பேர் மீதும், பாஜகவில் 25 பேர் மீதும் தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கொலை, ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம், வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகள் ஆகியவை தீவிர குற்ற வழக்குகளில் அடங்கும்.

பாஞ்ச்மஹல் மாவட்டத்தின் ஷெஹ்ரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான ஜெத்தா பர்வாத் பாலியல் பலாத்காரம், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2012 ஆம் ஆண்டில் குஜராத் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, சட்டசபைக்குள் அமர்ந்து தனது கைபேசியில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தவர் தான் அவர்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்க்ராய் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் கிரண் படேல் மீது கொலை வழக்கும், பதான் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிரித் படேல் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.

உச்சநீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 13-இல் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்தால் அதற்கான காரணத்தை வெளியிட வேண்டும் என்றும், குற்றப் பின்னணி இல்லாதவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் அரசியல் கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இந்த உச்சநீதிமன்ற உத்தரவால் எந்த பயனும் ஏற்படவில்லை. 20.36 சதவிகித வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பது இதற்கு ஒரு சான்றாகும்.


படிக்க: அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !


1621 வேட்பாளர்களில் 456 பேர், அதாவது 28 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்கள். 2017 தேர்தலின் போது இவர்களின் எண்ணிக்கை 397 ஆக இருந்தது.

2022 தேர்தலில், பாஜக வேட்பாளர்கள் 154 பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் கட்சியில் 142 பேரும், ஆம் ஆத்மி கட்சியில் 62 பேரும் கோடிஸ்வரர்கள்.

தேர்தல் களம் என்பது இயல்பாகவே கிரிமினல்களுக்கும் பணபலம் படைத்தவர்களுக்கும் சாதகமான ஒன்றாகவே இருந்து வருகிறது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்ற ஓர் பாசிச நடவடிக்கையை மேற்கொண்டு போலி ஜனநாயகத்தின் இறுதி எல்லையை காட்டிய குஜராத் மாடலில் தற்போது குற்றப்பின்னணி கொண்டவர்கள் தான் வேட்பாளர்கள். வாக்களித்தாலும் பிரச்சினை வாக்களிக்காவிட்டாலும் பிரச்சினை; இதுதான் குஜராத் மக்களின் தற்போதைய நிலை!

பொம்மி