Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 134

அரசுக்கு எதிராக மங்கோலிய மக்கள் போராட்டம்!

டந்த டிசம்பர் 4–ஆம் தேதி முதல் மங்கோலிய நாட்டில், நிலக்கரி துறையில் பில்லியன் கணக்கில் நடந்த ஊழலைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசுக்கெதிராக மக்கள் போர்க்குணமிக்க முறையில் போராடி வருகின்றனர். குறிப்பாக, பாராளுமன்றத்தை கலைக்கக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் (-30 °C) உறையவைக்கும் பணியிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே, உள்ளூர் சிறு வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டக்காரர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கும் வகையில் உணவு, தேநீர் முதலானவற்றை வழங்கி வருகின்றனர்.

அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க நிறுவனமான எர்டெனெஸ் டவன் டோல்கோயிலில் (Ertenes Tavan Tolgoi-ETT) ஊழல் நடந்து இருப்பதுதான் இப்போராட்டம் தொடங்குவதற்கு அடிப்படைக் காரணமாகும்.

படிக்க : உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !

இந்நிறுவனமானது 2011 முதல் 2017 வரை நிலக்கரி ஏற்றுமதி செய்ததற்கான எந்த தரவுகளையும் சமர்ப்பிக்கவில்லை. கடந்த அக்டோபர் மாதம் கிட்டத்தட்ட நான்கு லட்சம் டன் நிலக்கரி கணக்கில் வரவில்லை என மங்கோலிய அரசே தெரிவித்துள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பட்டுல்கா கால்ட்மாவும் ஈடுபட்டுள்ளார். அவர்மட்டுமன்றி பல்வேறு முக்கிய தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஊழல் குற்றவாளிகளின் முழுமையான பட்டியலை வெளியிடக்கோரியும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் மங்கோலிய மக்கள் போராட்டத்தை துவங்கினர். ஆனால், தற்போது போராட்டம் அரசைக் கலைக்கக் கோரி முன்னேறி வருகிறது. கடந்த வாரம் போராட்டகாரர்கள் அரச மாளிகையை கைப்பற்ற முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

000

சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் அமைந்திருக்கும் நாடுதான் மங்கோலியா. அங்கு சுரங்கத் தொழில் மிக முக்கிய தொழில் ஆதாரமாகும். மேலும், உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்ற தொழிலாகவும் அது இருக்கிறது. தாமிரம், தங்கம், நிலக்கரி உள்ளிட்ட கனிமங்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் அந்நாட்டு அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருவதைப் போல, மங்கோலியாவிலும் மக்கள் போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் நடந்து வருகின்றன.

சான்றாக, கடந்த 2015-ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கத்தின் ஏகபோக உரிமையை மங்கோலிய அரசு சீனாவை சார்ந்த நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுத்ததை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் போராட்டங்களைக் கட்டியமைத்ததைக் குறிப்பிடலாம். அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தீக்குளித்ததன் மூலம் இப்போராட்டத்தின் தீவிரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்தாலும், மங்கோலியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நிலக்கரி ஏற்றுமதியில் மங்கோலியா வளர்ச்சியடைந்து இருந்தாலும், சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கைநிலைமையானது நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்தே வந்தது. கொரோனா பெருந்தொற்றானது மக்களின் இந்நிலைமையை மேலும் மோசமாக்கியது.

கொரோனா ஊரடங்கில் புதிதாக குழந்தை பெற்ற தாய் ஒருவர், கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததால், அரசாங்கத்தால் உடலை உறைய வைக்கும் கடுங்குளிரில் எவ்வித பாதுகாப்பு சாதனமும் இன்றி தனிமைப்படுத்தும் அறைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவத்தை ஒட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே  நாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது.

அப்போராட்டமானது அந்நிகழ்வை மட்டும் கண்டிப்பதோடு நில்லாமல், கொரோனா பெருந்தொற்றை மங்கோலிய அரசு முறையாக கையாளதை எதிர்த்த போராட்டமாக மாறியது. மக்கள் போராட்டத்தின் தீவிரத்தால், அப்போதைய பிரதமர் உக்நாகின் அரசின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆள்பவர்கள் மாறினாலும், மக்களின் வாழ்நிலைமைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது வரை மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் எவ்வித நடவடிக்கைகளையும் மங்கோலிய அரசு மேற்கொள்ளவில்லை; ஏற்றத்தாழ்வுகள் சற்றும் குறைந்தபாடில்லை; பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக, தற்போது பணவீக்கமானது 15.2% -ஆக உயர்ந்துள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதன் விளைவாக ஒருபுறம் வறுமை, வேலையின்மை முதலானவற்றால் மக்கள் அவதிக்குள்ளாவதுடன், மறுபுறம் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களுடைய இலாபவெறிக்காக கனிமவளங்களை வரைமுறையின்றி வெட்டி எடுப்பதால் நாட்டின் சுற்றுச்சுழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் வாழ முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காற்று மாசுபாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

படிக்க : ஐரோப்பிய உணவு வங்கிகள்: ஏகாதிபத்திய உலகின் அவலம்

இந்நிலைமைகளை தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் – ரஷ்யா போரானது மேலும் தீவிரப்படுத்தியது. இந்த நிலைமைதான், -மக்களால் இனிமேல் வாழவே முடியாது என்கிற நிலைமைதான்- அரசுக்கு எதிரான இம்மாபெரும் போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் இணைத்துக்கொள்ள தூண்டியது. இதுதான் வெறும் ஊழல்வாதிகளுக்கெதிராக ஆரம்பித்த போராட்டத்தை அரசுக்கெதிரான போராட்டமாக மாற்றியது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை போன்ற உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுவரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, மங்கோலியாவில் நடைபெற்றுவரும் இந்த போராட்டமானது, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தோல்வியையும், என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அதன் நெருக்கடியின் தீவிரத்தையும் உணர்த்தும் மற்றுமொரு வெளிப்பாடாகும்.

இசை

சிற்பி திட்டம் – சீர்திருத்துவதற்கா? ஒடுக்குவதற்கா?

மீபகாலமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. போதை பொருள் விற்கும் மாஃபியா கும்பல்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இக்கும்பல்களை ஒழிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் டாஸ்மாக் கடைகளை நடத்தி தமிழகத்தை சீரழித்து வரும் தமிழக அரசு, தற்போது கண் துடைப்பிற்காக சில நடவடிக்கைகளை அரங்கேற்றி நாடகமாடி வருகிறது தமிழக அரசு.

கடந்த 14.09.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் போதை பழக்க வழக்கங்களில் இருந்து பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர போலீசுத்துறை சார்பில் ‘சிற்பி’ (Students in Responsible Police Initiatives (SIRPI)) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “சிறுவர்களை சமூக ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது நம் கடமை” என்று வலியுறுத்தியுள்ளார். இதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சீருடைகளையும், பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

படிக்க : இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!

இதில் முதல்வர்  ஸ்டாலின் பேசியதாவது: “போலீசுத்துறையை மக்களின் நண்பன் என்கிறோம். அதற்கேற்ப, மக்கள் அனைவரும் போலீசுத்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். போலீசுத்துறையும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றங்களே நிகழாமல் தடுக்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருவாய் இல்லாமை, ஆதரவின்றி வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவையே சிறுவர்கள் குற்றச்செயலில் ஈடுபட காரணமாக உள்ளன. இவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுக்க முடியும்.

போதைப்பொருள் ஒழிப்பு, குடிப் பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த, அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்துதல், சுய ஆளுமைத் திறனை மேம்படுத்துதல், பெற்றோர் பேச்சை மதித்து நடத்தல், பொதுமக்களுடன் தொடர்பு, இளம் வயதிலிருந்தே போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கச் செய்தல், மாநிலத்தின் செழுமை, வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் ஆகிய பண்புகளை சிறார்களிடம் உருவாக்க வேண்டும்.

இத்திட்டத்துக்கு 100 பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ, மாணவிகள் இந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் முன்னிலையில் கூடுவார்கள். அவர்களுக்கான வகுப்புகளை போலீசு அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் நடத்துவார்கள்” என்று இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை முதல்வர் விளக்கியுள்ளார்.

மேலே முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ள படி பள்ளி மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகவும், சமூக பற்றுள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டியதும், சிறார் குற்றங்கள் நிகழாதபடியும், மாணவர்களை மதுபழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதும் அவசியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. கட்டாயம் செய்தாக வேண்டும்.

ஆனால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சிற்பி திட்டம் இந்த வேலையை  நிறைவேற்றுமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த போவது போலீசுத்துறை ஆகும்.

போலீசுதான் மாணவர்களுக்கு முதல்வர் குறிப்பிடுகின்ற நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்க போகிறார்கள் என்றால், மாணவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களால் செய்ய முடியாததை போலீசால் மட்டும் எப்படி செய்ய முடியும்? இந்த நற்பண்புகளை கற்றுக் கொடுக்கத்தான் பாடத்திட்டங்கள், பயிற்றுவிக்கும் முறைகள், அவற்றிற்கான ஆசிரியர்கள், பள்ளிகள் ஆகிய கட்டமைப்புகள் உள்ளன. இந்தக் கட்டமைப்பு சரியாக செயல்படவில்லை என்கிறபோது கட்டமைப்பை சரிசெய்யாமல், போலீசை வைத்து கற்றுக் கொடுப்பது எப்படி தீர்வாகும்?

மாணவர்களுக்கு போதை பொருள், மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் நாம் அனைவரும் அறிந்ததே. போதை பொருள் விற்கும் மாஃபியா கிரிமினல் கும்பல்களும், மதுவை விற்கும் அரசும் இதன் மூலம் கல்லாகட்டி வருகிறது. அவற்றை ஒழித்து கட்டாமல் மாணவர்களை குற்றவாளிகளாக்கி போலீசு மூலம் கண்காணிக்க வழி செய்வதே ’சிற்பி’ திட்டமாகும்.

மேலும், குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருவாய் இல்லாமை, ஆதரவின்றி வளர்வது, வேலையின்மையே குற்ற செயல்களில் ஈடுபட காரணம் என கூறிவிட்டு அதை தீர்ப்பதற்கான வேலையை செய்வதை புறந்தள்ளிவிட்டு, பள்ளி மாணவர்களை  கண்காணிப்பதால் மட்டும் இவை எல்லாம் தீர்ந்து விடுமா?

கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலர் வெ.இறையன்பு, “இத்திட்டத்தில் மாணவர்களுக்கு போலீசுத்துறையினரால் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். போதை ஒழிப்பில் இருந்து பல்வேறு நன்னடத்தைகளை கற்பார்கள். தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்வார்கள். இது மற்ற மாணவர்களிடம் நாமும் தூய்மையானவர்களாக திகழ வேண்டும், திறன் பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதன்மூலம் அவர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வர். 100 பள்ளிகளிலும் இப்பழக்கம் ஏற்படும்போது, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாற்றம் ஏற்படும். எதிர்காலத்தில் நாட்டுக்கு பங்களிப்பவர்களாகவும், சட்ட திட்டத்தை மதிப்பவர்களாகவும் திகழ்வார்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த சிற்பி திட்டம் விதைக்கிறது” என்றார்.

பார்க்க : அரசுப் பள்ளி ஆசிரியர்களை வதைக்கும் மத்திய, மாநில அரசுகள்!

இதிலிருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்ன வென்றால் இனி பள்ளியில் பாடம் நடத்தபோவது கட்டாயம் ஆசிரியர்கள் இல்லை போலீசுதான் என்பதாகும். இவ்வாறு போலீசு வழங்கும் பயிற்சியின் மூலம் தங்களை தாங்களே ஒழுங்குப்படுத்திக் கொள்வதோடு, இதை பார்க்கும் மற்ற மாணவர்களுக்கும் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என்றால், அந்த பயிற்சியை ஆசிரியர்களால் ஏன் கொடுக்க முடியாது.

போலீசு மூலம் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் வேலையை அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் தமிழக அரசு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது போலீசு கண்காணிப்புக்குள் அரசுப் பள்ளிகளை கொண்டு வரும் தமிழக அரசு, தனியார் பள்ளிகளில் நடக்கும் கிரிமினல் குற்றங்கள் மற்றும் சீரழிவுகளுக்கு எந்த கண்காணிப்பையும்  போடுவதில்லையே அது ஏன் என்ற கேள்விக்கு எந்த விளக்கமில்லை. அதாவது தனியார் பள்ளி மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கும், ஒழுக்க சீர்கேட்டிற்கும் பலியாகவில்லை என்றாகிவிடுமா?

ஆகையால் தமிழக அரசு மேற்கொள்ளும் ’சிற்பி’ திட்டத்தை கல்வியை தனியார்மயமாக்கும் அரசின் முன்தயாரிப்பாகப் பார்க்க வேண்டும். புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதாகும்.

போதைப் பொருட்கள், விபச்சாரம் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களின் பிறப்பிடம் போலீசுதான். போலீசுத்துறையை ஒழித்தாலே குற்றங்கள் குறைந்துவிடும் என்பதுதான் எதார்த்தம். அதனைவிடுத்து போலீசை வைத்து குற்றங்களைக் குறைக்கப்போவதாக சொல்வது மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, தமிழக அரசின் சிற்பி திட்டத்தை எதிர்த்துப் போராடுவது நமது அனைவரின் கடமையாகும்.

அபுபக்கர்

நிகோபாரை அழிக்க படையெடுக்கும் காவி-கார்ப்பரேட் வெட்டுக்கிளிகள்!

0

’வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் அழிக்கப்படும் நிகோபார் தீவுகள்!

மோடி அரசாங்கம் கிரேட் நிகோபார் தீவுகளில் ₹ 72,000 கோடி செலவில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாகக் கூறியிருக்கிறது. இத்திட்டத்திற்காக 8 இலட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டில் துவங்க உள்ளன.

‘அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள கிரேட் நிகோபார் தீவுகளின் முழுமையான வளர்ச்சி’ (Holistic Development of Great Nicobar Island in Andaman & Nicobar Islands) என்று இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டமானது நான்கு இணை திட்டங்களைக் கொண்டுள்ளது:

  • 1.42 கோடி 20 அடி கொள்கலன்களை (Twenty-foot Equivalent Unit – TEU) கையாளும் அளவிலான சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் (International Container Transhipment Terminal – ICTT) அமைப்பதற்கான திட்டம்
  • போகும் வழி வரும் வழி என இரு வழிகளிலும் தலா 4,000 பயணிகளை கையாளும் வகையிலான பசுமை விமான நிலையம்
  • ஒரு புதிய நகரம்
  • 16,610 ஹெக்டேர் பரப்பளவில் 450 மெகாவாட் (MVA) எரிவாயு மற்றும் சூரிய மின் நிலையம்

கடந்த நவம்பர் மாதத்தில் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் (MoEFCC) சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தற்போது 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளன. 2 தேசிய பூங்காக்களும், 1 உயிர்க்கோளக் காப்பகமும் (biosphere reserve) பாதிக்கப்படும். 910 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கிரேட் நிகோபார் தீவுகளில் 161 சதுர கிலோமீட்டர் இத்திட்டத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும்; இதில் 130 சதுர கிலோமீட்டர் முதன்மை வனப்பகுதியாகும்.


படிக்க: மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!


வன பாதுகாப்பு சட்டம் 1980-யின் படி, வளர்ச்சி திட்டம் என்று கூறப்படும் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டால், எவ்வளவு பரப்பளவு காடுகள் அழிக்கப்படுகிறதோ அதே அளவிளான ஈடுசெய் காடு வளர்ப்பை (compensatory afforestation) காடுகள் அல்லாத பகுதிகளில் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், 2019 ஆம் ஆண்டில், மோடி அரசு இச்சட்டத்தின் விதிகளை 75 சதவிகிதத்திற்கு மேல் வனப் பரப்பளவு கொண்ட மாநிலங்கள் ஈடுசெய் காடு வளர்ப்பை வேறு மாநிலங்களில் மேற்கொள்ள வழிவகை செய்துகொள்ளலாம் என்று திருத்தி விட்டது.

அந்தமான் நிகோபார் தீவுகள் 80 சதவிகிதம் வனப் பரப்பளவு கொண்டுள்ளதால், (திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி) அங்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக மத்திய பிரதேசம் ஹரியானா ஆகிய மாநிலங்களில் மரம்நடப் போகிறார்களாம். இந்தியாவிலேயே ஹரியானா மாநிலம் தான் வனப் பரப்பளவு மிகவும் குறைவாக உள்ள மாநிலம் (3.63 சதவிகிதம்) என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால், டெல்லிக்கு அருகாமையில் உள்ள ஹரியானா மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கதை அளக்கிறார்கள்.

நவம்பர் 11 அன்று சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அனுமதியில் மெகாபோட் பறவை (megapode), கடலாமைகள் மற்றும் பிற உயிரினங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இவ்வாறு சுற்றுச்சூழல் அனுமதி அளித்துவிட்டு ஆய்வு நடத்துவதானது பாசிச மோடி அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

கிரேட் நிகோபார் தீவானது 648 தாவர இனங்களுக்கும் 330 விலங்கு இனங்களுக்கும் புகலிடமாகும். இத்திட்டத்தால் கடல் ஆமைகள் முட்டையிடும் தளங்களும், அழிவாய்ப்பு இனமான (vulnerable species) நிகோபார் மெகாபோட் பறவை முட்டையிடும் தளங்களில் குறைந்தது 30 தளங்களும் பாதிக்கப்படும். எந்த இடத்தில் எவ்வளவு மரங்கள் நடப்பட்டாலும் அவை மழைக்காடுகள் மற்றும் சதுப்பு நில காடுகளுக்கு ஒருபோதும் ஈடாகாது.


படிக்க: அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!


இயற்கை அழிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் கிரேட் நிகோபார் தீவுகளின் பூர்வக் குடிகள் ஒழித்துக் கட்டப்படுகிறார்கள்‌. 1960-களில் ஷோம்பென் (Shompen) மற்றும் நிகோபாரி (Nicobarese) மக்களுக்குச் சொந்தமானதாக இத்தீவு இருந்தது. பின்னர் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து மக்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். அத்தீவின் மக்கள் தொகை தற்போது 8,067; சுமார் 200 ஷோம்பென் மக்களும், 1000 நிகோபாரி மக்களும் உள்ளனர். இத்திட்டத்தை நிறைவேற்றிய பின்னர், அடுத்த 30 ஆண்டுகளில் சுமார் 3.5 இலட்சம் பேர் கிரேட் நிகோபார் தீவில் குடியேறப் போகிறார்கள். இது பூர்வக் குடிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும்.

ஷோம்பென் பழங்குடியின பெண்மணி

விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்காக ‘வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதற்கு சட்ட விதிகள் தடையாக இருந்தால் அவை மாற்றப்படுகின்றன; 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன; நிலச்சூழல் மண்டலங்களும் (terrestrial ecosystems)கடல் சூழல் மண்டலங்களும் (marine ecosystems) அழிக்கப்படுகின்றன; பூர்வக்குடி மக்களும் அடையாளம் சிதைக்கப்பட்டு தமது சொந்த நிலத்திலேயே அகதிகளாக்கப் படுகின்றனர். காவி-கார்ப்பரேட் பாசிசம் கோரத்தாண்டவம் ஆடுகிறது.

பொம்மி

பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதா 2021: பல்லுயிரிகள் மீதான பாசிசத்தாக்குதல்!

ந்தியாவின் பல்லுயிர்த்தன்மையைப் பெயரளாவிற்காவது பாதுகாக்க நகோயா நெறிமுறைகளின்படி 1992-ல், ரியோ டி ஜெனிரொவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் உயிரினப் பன்மயம் குறித்த மாநாட்டில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில்தான் பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 2002 கொண்டுவரப்பட்டது. இச்சட்டமானது ஒரு நாடு அதன் எல்லைக்குள் உள்ள இயற்கை செல்வம் மற்றும் வளங்களின் மீது முழு இறையாண்மை செலுத்துவதை உறுதி செய்கிறது. இந்தச் சட்டத்தைதான் திருத்துவதற்காக பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா 2021-ஐ அக்டோபர் 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது மோடி அரசு.

இச்சட்டத் திருத்தத்தில் முதலாவதாக, உயிரி வளங்கள் மற்றும் உயிரி வளங்களின் மரபு சார்ந்த அறிவை பயன்படுத்தும் போதும் கிடைக்கும் பலன்களை சம்மந்தப்பட்ட உள்ளூர் மக்கள் மற்றும் சமுதாயத்தினருக்கு சமமாக பகிர்ந்து கொடுப்பதை உறுதி செய்கிற அம்சத்தைத் திருத்தியுள்ளது. அதன்படி, பயன்பாட்டுப் பலன்களை உள்ளூர் மக்களுக்கன்றி, தேசிய பல்லுயிர் ஆணையத்திற்கு பகிர்ந்தளிக்கும் வகையில் மாற்றியளித்துள்ளது.

படிக்க : காட்டில் மாடு மேய்க்க மக்களுக்குத் தடை, நாட்டையே ஏய்க்க முதலாளிகளுக்கு தடை இல்லை !

இரண்டாவதாக, இத்தகைய உயிரி வளப் பயன்பாட்டுப் பலன்களைப் பகிர்ந்தளிப்பதலிருந்து சில நிறுவனங்களுக்கு விலக்கும் அளித்துள்ளது. குறிப்பாக ஆயுஷ் எனப்படும் ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, இந்தியாவின் மரபு உயிரிவளங்களைப் பயன்படுத்துவதற்கு இந்திய நிறுவனங்கள் மாநில பல்லுயிர் வாரியத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை, இந்தியாவைச் சாராத இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தேசியப் பல்லுயிரி வாரியத்திடம் (இந்திய அரசு) அனுமதி பெறத்தேவையில்லை. உயிரிவளங்கள் பயன்பாடு என்ற பெயரில் சிற்றினங்கள், துணை சிற்றினங்கள் என்ற எந்த பாகுபாடின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திருத்தங்களானது இந்திய உயிரிவளங்களின் மீதான இறையாண்மையை பன்னாட்டு – உள்நாட்டு ஏகபோகங்களுக்கு விட்டுக் கொடுப்பதாகும். அதுமட்டுமின்றி காலங்காலமாக பாதுகாத்து வரும் இம்மண்ணின் இயற்கை உயிரிவளங்களை டாபர், பதஞ்சலி, ஹிமாலயா, யூனிலிவர் போன்ற பான்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சூறையாடலுக்குக் கொடுக்கப்பட்ட சட்ட அங்கீகாரமாகும்.

மேலும், மஞ்சள், வேம்பு ஆகியவை பற்றிய மரபு சார்ந்த அறிவை பன்னாட்டு ஏகபோகங்கள் கொள்ளையிடும் முயற்சியை போராடித்தான் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நம்மண்ணின் வளத்தை, இவ்வளம் பற்றிய மரபு சார்ந்த நம்மக்களின் அறிவை கொள்ளையடித்து உள்நாட்டு-வெளிநாட்டு ஏகபோகங்கள் அறிவுசார் சொத்துடைமையாக தனதாக்கிக் கொள்வதற்கான ஏற்பாடே இச்சட்டத்திருத்தம்.

தங்கம்

தோழர்களுக்கு பத்து கேள்விகள்!

தானியின் துறைமுகத் திட்டத்திற்கு எதிராக கேரளாவில் மீனவர்கள் போராடிவருவதை நாம் அனைவரும் அறிவோம்.

அதானியின் துறைமுகத் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் விழிஞ்சம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட மீனவர்கள், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டோம், ஏராளமான உயிர்களை காப்பாற்றினோம், அதற்கு அரசு எங்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதானா?” எனக் கேட்கின்றனர்.

அதானி குழுமத்திற்கும், கேரள அரசுக்குமிடையே 2015-ல் ஒப்பந்தமாகி கட்டப்பட்டுவரும் விழிஞ்சம் சர்வதேச பல்நோக்கு துறைமுகத் திட்டத்தால் ஏற்படும் கடலரிப்பால் 56,000 மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படும் என்கிறார்கள் போராட்டக்குழுவினர். விழிஞ்சம் அருகிலுள்ள கோட்டூர்புரத்தில் மட்டும் 5,000 குடும்பங்களின்  வாழ்வாதாரம் அழிவுக்குள்ளாகும்.

திட்டத்தை அமல்படுத்த தொடங்கிய நாள் முதலே கடலரிப்பும், பாதிப்பும் அதிகமாகி பல குடும்பங்கள் வீடுகளை இழந்துவிட்டனர். இத்திட்டத்திற்கு எதிராக மீனவர்கள் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராடி வந்த நிலையில் போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக 3000 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளது போலீசு. இதனிடையில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டக்குழுவினர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

படிக்க : கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !

அதானி விழிஞ்சம் துறைமுகத்திட்டம் அறிவியலடிப்படையிலானது அல்ல என்கின்றனர் போராட்டக்குழுவினர். கேரள சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைக் கணக்காளரின் அறிக்கையும் 2015-ல் போடப்பட்ட ஒப்பந்தம் கேரளத்தின் நலனை பாதுகாப்பதாக இல்லை என்கிறது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது அதானி குழுமத்துடனான துறைமுக ஒப்பந்தத்தை வழிப்பறிக்கொள்ளை, இதில் ஊழல் நடந்துள்ளது என்று எதிர்த்த சி.பி.எம் கட்சி, ஆட்சியை கைப்பற்றிய பிறகு, “துறைமுக கட்டுமானப் பணிகளை நிறுத்த முடியாது, போராடுபவர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்கிறது. இதற்கும் மேலேபோய் அதானி குழுமம் துறைமுகத் திட்டப்பணியை பாதுகாக்க நடத்தப்பட்ட பேரணியில் சி.பி.எம் மாவட்ட செயலரும், பி.ஜே.பி மாவட்ட செயலாளரும் ஒன்றாக அணிவகுக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தலைமைக் கணக்காளரின் அறிக்கையிலுள்ள ஒப்பந்த விபரங்கள், கருத்துகளிலிருந்து இத்திட்டத்தால் அதானி குழுமத்திற்கே லாபம், அதானி குழுமம் நலன் காக்கவே இந்த துறைமுகத்திட்டம் என்பது தெளிவாக தெரிகிறது். திட்டத்தை அமல்படுத்த தொடங்கிய 2015 முதல் அதிகரிக்கும் கடலரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் ஏற்படப்போகும் மோசமான அழிவுகள் பற்றி கண்முன்னே உணர்த்துகின்றன.

இருந்தும் மக்கள்நலன், தேச நலன் என்று பேசும் கட்சிகள் தாம் நேசிப்பதாகக் கூறும் மக்களின் வாழ்க்கை தம் கண்முன்னே அழிவதைப்பற்றி கவலைகொள்ளாமல், கார்ப்பரேட் கொள்ளைக்கு துணைபோவதை நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதாக கூறுவதெப்படி? – வாழ்க்கையை பாதுகாக்க போராடும் மீனவர்களை ஒடுக்குவதும், வளர்ச்சித் திட்டத்தை சீர்குலைக்கும் சதிகாரர்களாக அவர்களை சித்தரிப்பதும் எப்படி? – இது தேச நலன், மக்கள் நலன் என்று பேசிக்கொண்டு, இந்த போர்வையால் தங்களை மறைத்துக்கொண்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வது என்பதுதான்.

நாட்டையும், மக்களையும், கம்யூனிசத்தையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் தம் கண்முன்னே நடைபெறும் நிகழ்வுகளை விருப்பு, வெறுப்பின்றி பரிசீலித்து உணர்வதன் மூலமே உண்மையின் பக்கம் நிற்பதையும், தாம் சரியான இடத்தில் நிற்பதையும் உறுதிப்படுத்த முடியும். இதன் மூலமே மக்களின் போராட்டங்கள் மேலும் வலுப்பெற முடியும். மக்களின் எதிரிகளான காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளை வீழ்த்த முடியும்.

பிஜேபியுடன் இணைந்து அதானியின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு ஆதரவாகவும், போராடும் மக்களுக்கு எதிராகவும் பேரணி நடத்திய கேரள சி.பி.ஐ(எம்) கட்சி

சி.பி.ஐ(எம்) தோழர்களுக்கு பத்து கேள்விகள்!

01.ஆர்.எஸ்எஸ்-பி.ஜே.பி.யினர் பாசிஸ்டுகள், மக்கள் நலனுக்கு எதிரானவர்கள், அவர்களுக்கெதிரான சக்திகள் ஒன்று திரள வேண்டும் என்று கூறிவிட்டு, விழிஞ்சம் மக்களின் போராட்டத்திற்கெதிராக பா.ஜ.க பாசிஸ்டுகளுடன் கைகோர்த்து நிற்பது ஏன்?

02.விழிஞ்சம் மக்கள் போராட்டம் போலவே, கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக, தங்கள் நிலம், வாழ்வாதாரத்திற்காக, போராடிய நந்திகிராம் மக்களின் போராட்டத்தை கடுமையாக அடக்கியதால்தான் மேற்குவங்க மக்களிடம் செல்வாக்கிழந்து முப்பது ஆண்டுக்கு மேல் ஆட்சியில் இருந்த சி.பி.ஐ(எம்) கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது என்பதை யாராவது மறுக்க முடியுமா?

03.தங்கள் வாழ்வுரிமைக்காக விழிஞ்சம் துறைமுகத்திட்டத்தை எதிர்த்த மீனவர்களின் போராட்டத்தை “வெளிநாட்டு சதி”, “வளர்ச்சிக்கெதிராக திட்டமிட்டு சதி செய்பவர்கள்” என்றெல்லாம் இழிவுபடுத்துவது – அதானி, அம்பானியே எங்கள் கூட்டாளி, மீனவப் பாட்டாளிகள் எங்கள் பகையாளிகள் என்று முழங்குவதற்கு சமமல்லவா!

04.உம்மன் சாண்டி ஆட்சியின்போது போடப்பட்ட அதானியின் விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை வழிப்பறிக்கொள்ளை, அநீதியானது என எதிர்த்த சி.பி.எம் கட்சி, தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒப்பந்தத்தை இரத்து செய்யாமல், ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என உறுதியாக அமல்படுத்துவதன் காரணம் என்ன?

05.அதானியின் துறைமுகத்திட்டத்தை கைவிடமுடியாது. கைவிட்டால் கேரளாவின் நம்பகத்தன்மை போய்விடும் என்கிறார் முதல்வர் பினராயி விஜயன். அப்படியானால் அதானி, அம்பானியின் நம்பிக்கைதான் முக்கியம். மீனவர்கள், கடலோர மக்களின் நம்பிக்கை, வாழ்க்கை பற்றி கவலையில்லை என்பது தானே!

06.சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்காளரின் அறிக்கையின்படி இத்திட்டம் கேரளத்தின் நலனை பாதுகாக்கவில்லை, இழப்பையே தரும் என்றால் உண்மையில் இத்திட்டத்தால் யார் லாபமடைவது, அதானியா? கேரள மக்களா?

07.கேரளாவில் நூற்றுக்கணக்கில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் ஆர்.எஸ்,எஸ்-பி.ஜே.பி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் தொண்டர்களின் உணர்வு, வலியை அலட்சியமாக புறக்கணித்து, கடந்த நவம்பர் 1-ம் தேதி அதானி துறைமுகத் திட்டத்திற்கு ஆதரவாக பி.ஜே.பி-யினருடன் பேரணியில் கைகோர்க்க வைத்தது, சொந்த அணிகளுக்கு இழைத்த பச்சை துரோகமல்லவா?

படிக்க : உச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை !

08.எதிர் கட்சியாக இருந்தால் கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பது ஆட்சியில் இருந்தால் கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களை அமல்படுத்தி மக்களை ஒடுக்குவது – இது உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகமில்லையா?

09.போராடும் மக்களின் கோரிக்கைகளில் ஒன்றான நிபுணர்கள், மீனவர்கள் அடங்கிய குழுவின் மூலம் திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற நியாயமான மக்களின் கோரிக்கையை உடனே அமல்படுத்தாதது ஏன்? மக்கள் வாழ்க்கை, சுற்றுச்சூழல் அழிவெல்லாம் பெரிதல்ல என்பதைத்தவிர இதற்கு வேறென்ன பொருள்?

கேரள சி.பி.ஐ(எம்) அலுவலகத்தில் அதானி

10.அதானி துறைமுகத் திட்டத்திற்கான செலவில் வெறும் 33 சதவீதமே அதானியின் பங்கு, மீதம் 67 சதவீதம் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது. ஆனாலும் துறைமுக நிர்வாகமும், 40 வருட லாபமும் அதானிக்கு! மக்களின் வாழ்வாதாரம், வரிப்பணத்தை அதானிக்கு தாரைவார்த்துக் கொண்டு பொதுத்துறையை தனியார்மயமாக்காதே என முழங்குவது எதற்காக?

அம்பானியும் அதானியும் மோடியின் நண்பர்கள் என்கிறார் யெச்சூரி! அதே அதானியை கொண்டு கம்பெனியை தொடங்குகிறது சி.பி.ஐ(எம்). இந்த துரோகத்திற்கு எதிராக சி.பி.ஐ(எம்) தோழர்கள் போராட வேண்டும்.

ராஜன்

Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s power

11.12.2022

Conspiracy to reopen the murderous Sterlite!
Let’s support the struggling Tuticorin people!

Press release

Advertisements of the murderous Vedanta Sterlite Corporation have been appearing for the past few days in newspapers and television.

“Strike is towards Destruction, Scholarships awarded to Tuticorin children, Green Tuticorin – 1.25 lakh trees planted” are advertised.

Sterlite Vedanta Corporation has been involved in various crimes like operating without permission, direct burial of hazardous waste in the soil and not creating a green belt for many years. This was revealed during the hearing of the case against the Sterlite plant by the Madras High Court.

Sterlite company and Tamil Nadu police jointly fired and severely suppressed the people in Tuticorin who protested against Sterlite issue.


Also Read: The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s power Press release


Close to five years after the firing, anti-people campaign in support of the Sterlite plant has been continuing till now, justifying the firing and insisting on reopening the sterlite plant.

But till now, the Tuticorin District Police has banned anyone from speaking against the Sterlite plant. The Tuticorin police had also told them that not to talk about Aruna Jagadeesan’s statement in the recent protest held by the Indian Democratic Youth Association. Thus, the police have made it a condition that no one should speak against Sterlite during the demonstrations and protests in Tuticorin.

But in Tuticorin, continuous campaigns are going on in favor of Sterlite. The police never stopped it. Instead the police encourages them.

In this situation, “we will act according to the final report of the CBI investigation”, says Tuticorin District Collector. In the CBI’s chargesheet, it has been recorded that the martyrs who fought were erroneous. The people of Tuticorin tore up the CBI’s chargesheet demanding that the CBI’s investigation should be discarded.

On behalf of United Anti-Sterlite People’s Federation, a special law should be enacted to remove Sterlite permanently, the murderers should be arrested and criminal action should be taken against them.It is in this situation that the people are constantly fighting to take criminal action, and advertisements are being given by Sterlite in the media.

The People’s Power strongly condemns the anti-people media for publishing advertisements of Vedanta Sterlite Corporate Company, which has been doing injustice to the people and the land of Tuticorin.

Also, a protest insisting that a special law should be passed to remove Sterlite permanently, and the murderers of the shooting should be arrested and prosecuted is to be held on December 12. In order to disrupt this, a person claiming to be Vijayakumar from People’s Power spoke inappropriately to Prof. Fatima Babu. In that conversation, he falsely claimed that People’s Power was working with the Maoist organization.

Sterlite Vedanta itself has planned and organized such a person to disrupt the people’s protest.


Also Read: The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!


A few years ago Sterlite stooges published a fake press report criticizing Fatima Babu in the name of people’s power. No action has been taken so far on the complaint filed against this by the police.

All the above incidents are an attempt to disrupt the people’s protests and re-establish the Sterlite plant. It is a well-known fact that the government and Tamilnadu police are helping this effort of Vedanta Sterlite Corporation. People’s power strongly condemns this.

The People’s power requests the government for immediate action against the Sterlite Vedanta Company and its supporters who are continuously disrupting law and order.

Let the struggle against Vedanta Sterlite Company, which destroyed Tuticorin soil and people’s livelihood, win!

With Comradeship,
Comrade Vetrivel Chezhian,
State Secretary,
People’s Power.
Contact : 99623 66321

கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்! | மக்கள் அதிகாரம்

11.12.2022

கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி!
போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்!

பத்திரிகைச் செய்தி

டந்த சில நாட்களாகவே பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் கொலைகார வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்தின் விளம்பரங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

“போராட்டம் என்பது அழிவை நோக்கி, தூத்துக்குடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, பசுமையான தூத்துக்குடி – 1.25 லட்சம் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன” என விளம்பரப்படுத்தப் பட்டிருக்கின்றன.

ஸ்டெர்லைட் வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனம் பல ஆண்டுகளாக அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது, அபாயகரமான கழிவுகளை நேரடியாக மண்ணில் புதைத்தது, பசுமை வளையத்தை குறிப்பிட்ட அளவில் உருவாக்காமல் இருந்தது என்பது போன்ற பல்வேறு குற்றங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டது ஆகியவை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் நடந்த வழக்கு விசாரணையின்போது வெளிவந்தன.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் லட்சம் பேர் திரண்டு நடத்திய போராட்டத்தில், ஸ்டெர்லைட் நிறுவனமும் தமிழ்நாடு போலீசும் இணைந்துதான் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கடும் அடக்குமுறையை நிகழ்த்தின.


படிக்க : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால் அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா? | மக்கள் அதிகாரம்


துப்பாக்கிச் சூடு நடந்து ஐந்து ஆண்டுகள் நெருங்கிய நிலையிலும், இப்போது வரை துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியும் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் விரோதிகள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆனால், இன்று வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று தடை விதித்து இருக்கிறது தூத்துக்குடி மாவட்ட போலீஸ். அண்மையில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து எதுவும் பேசக்கூடாது என்று தூத்துக்குடி போலீசு தெரிவித்திருந்தது. இவ்வாறு தூத்துக்குடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்பதை ஒரு நிபந்தனையாக வைத்திருக்கிறது போலீசு.

ஆனால், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தொடர் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. அதை போலீஸ் ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக அதை ஊக்குவிக்கிறது.

இந்த நிலையில் சிபிஐ விசாரணை இறுதி அறிக்கையின் முடிவின் படி செயல்படுவோம் என்கிறார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர். சிபிஐயின் குற்றப்பத்திரிகையில் போராடிய தியாகிகள் தான் தவறிழைத்தார்கள் என பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சிபிஐ-ன் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றுகூறி சிபிஐ-ன் குற்றப்பத்திரிகை கிழித்தெறிந்தனர் தூத்துக்குடி மக்கள்.

ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்திய கொலைகாரர்களை கைதுசெய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மக்கள் போராடி வருகின்ற இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் தொடர்ந்து விளம்பரங்கள் ஊடகங்களிலும் கொடுக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மக்களுக்கும் மண்ணிற்கும் தொடர்ந்து அநீதி இழைத்து வந்த வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் கம்பெனி விளம்பரத்தை பதிப்பித்து காசு பார்க்கும் மக்கள் விரோத ஊடகங்களை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்திய கொலைகாரர்களை கைது செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற 12-ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த விஜயக்குமார் என்று ஒருவர் கூறிக்கொண்டு பேராசிரியர் பாத்திமா பாபுவிடம் தகாத முறையில் பேசியுள்ளார். அந்தப் பேச்சில் மக்கள் அதிகாரம் மாவோயிஸ்ட் அமைப்புடன் இணைந்து வேலை செய்வதாகவும் பொய்யாக தெரிவித்திருக்கிறார்.

மக்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில்  இப்படி ஒரு நபரை ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனமே திட்டமிட்டு ஏற்பாடு செய்திருக்கிறது.


படிக்க : தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!


சில ஆண்டுகளுக்கு முன்பு பாத்திமா பாபுவை விமர்சிக்கும் வகையில் மக்கள் அதிகாரம் பெயரிலேயே ஸ்டெர்லைட் கைக்கூலிகள் போலியான பத்திரிகை செய்தி வெளியிட்டனர் வெளியிட்டனர். இதற்கு எதிராக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்மீது இப்போது வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் மக்களின் போராட்டங்களை சீர்குலைத்து மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவுவதற்கான முயற்சியே ஆகும். வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட்டின் இந்த முயற்சிக்கு அரசும் தமிழ்நாடு போலீசும் உதவி புரிகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் மீதும் அதன் ஆதரவாளர்கள் மீதும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தூத்துக்குடி மண்ணையும் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்த  வேதாந்தா  ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்!

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்நிகழ்வாகி வரும் பத்திரிகையாளர் படுகொலைகள்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்நிகழ்வாகி வருகிறது. தற்போது, பெர்சிவல் மபாசா என்ற பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தன்னுடைய காரில் வானொலி நிலையத்திற்கு செல்லும் போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவருக்கு வயது 63; பெர்சி லாபிட் என்ற பெயரில் வானொலியில் தன்னுடைய நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இவரை சமூக வலைதளங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பின்தொடர்கின்றனர்; அந்தளவுக்கு இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

மபாசா பிலிப்பைன்ஸில் கடந்த ஜூன் மாதம் ஃபெர்டினாண்ட் போங்பாங் மார்கோஸ் ஜூனியர் ஆட்சிக்குவந்த பிறகு, படுகொலை செய்யப்படும் இரண்டாவது பத்திரிகையாளர் ஆவார். கடந்த செப்டம்பர் மாதம் மத்திய பிலிப்பைன்ஸில் ரெனாடோ ரே பிளாங்கோ என்ற வானொலி ஒளிபரப்பாளர், மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தற்போது மபாசா படுகொலையில் இருந்து, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களை ஆளும் வர்க்க நபர்களே கூலிப்படைகளை வைத்து படுகொலை செய்வது அம்பலமாகி உள்ளது.

படிக்க: காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !

பிலிப்பைன்ஸ் சிறைத்தலைவரான ஜெரால்ட் பான்டாக், மபாசாவை சிறைக்கைதிகள் மூலம் கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளார். இதனால் ஜெரால்ட் பான்டாக் மற்றும் அவரது துணை பாதுகாப்பு அதிகாரி ரிக்கார்ட்டோ ஜூலியேட்டா ஆகியோர் மீது போலீசுத்துறை கொலைப்புகார்களை பதிவு செய்துள்ளது. கொலை உத்தரவை பான்டாக், சிறைக் கைதிகளில் ஒருவரான கிறிஸ்டிடோ வில்லமோர் பலனா மூலம், கொலையாளியான ஜோயல் எஸ்கோரியலுக்கு அனுப்பியுள்ளார். அவர் கொலையை 5,50,000 பெசோக்கள், அதாவது 9,900 டாலருக்கு செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்சதியானது போலீசுத்துறையில் ஜோயல் எஸ்கோரியல் சரணடைந்த பிறகுதான், உலகின் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசுத்துறையானது கொலை நடக்கும்போது தங்களுடைய கண்காணிப்பு புகைப்படக் கருவியில் பதிவான கொலையாளியான எஸ்கோரியலின் முகத்தை வெளியிட்டது; எனவே எஸ்கோரியல் தன் உயிருக்கு பான்டாக்-கால் ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்து போலீசில் சரணடைந்தார்.

அதன்பிறகு, பான்டாக் மற்றும் ஜூலியேட்டா, தாங்கள் இவ்வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கொலை உத்தரவை அனுப்பிய சிறைக்கைதியான வில்லமோர் பலனாவை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இவர்களின் தூண்டுதலால், அக்கொலை முயற்சியானது பலனா கும்பலைச் சேர்ந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது; ஆனால் வில்லமோர் பலனா அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பித்துவிட்டார்.

***

மேற்கூறியவாறு அரசாங்க செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்கள் தான், பான்டாக் போன்ற ஆளும் வர்க்க நபர்களால் கொலை செய்யப்படுகின்றனர். மபாசா அவருடைய வானொலி நிகழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளை தொடர்ச்சியாக விமர்சித்து வந்துள்ளார்.

குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே மற்றும் தற்போதைய ஜனாதிபதியான ஃபெர்டினாண்ட் போங்பாங் மார்கோஸ் ஜூனியரின் கொள்கைகள் மற்றும் அவருடைய உதவியாளர்களை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை கம்யூனிஸ்ட் அனுதாபி என்று குற்றம் சாட்டுகின்ற பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் “ரெட்–டேக்கிங்” முறையையும், ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் இராணுவச் சட்டத்தை ஆதரித்து மார்கோஸ் ஜூனியர் உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்ததையும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்துள்ளார்.

மபாசா சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, தனது இரவு நேர வானொலி நிகழ்ச்சியில் பான்டாக் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தினார். மபாசா அவருடைய வானொலி நிகழ்ச்சியில் பான்டாக்–ஐ தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததால் மபாசாவைக் பான்டாக் கொலை செய்ததாக தேசிய புலனாய்வுப் பணியகத்தின் யூஜின் ஜேவியர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

***

தற்போது இவ்விரு பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, காலங்காலமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்நிகழ்வாகி வருகிறது. 1986 ஆம் ஆண்டில் இருந்து மட்டும், இதுவரை 197 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டேவின் 2016 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய ஜூன் வரையிலான ஆட்சிக் காலத்தில் மட்டும் 26 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவருடைய ஆட்சியில் போதைப் பொருட்களை ஒழிப்பதாக கூறி சட்டவிரோத முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்தான் பான்டாக்-ஐ 2019-ல் சிறைத்தலைவராக நியமித்தார்.

படிக்க : உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!

2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எல்லைகளற்ற செய்தியாளர்களின் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின் பதிப்பில் பட்டியலிடப்பட்ட 180 நாடுகளில் 147-வது இடத்தைப் பிலிப்பைன்ஸ் பிடித்துள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு (cpj) வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, பத்திரிகையாளர்களை கொலை செய்யும் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.

இப்படுகொலைகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. குறிப்பாக, பான்டாக் படுகொலை செய்யப்பட்ட அடுத்த நாளே, பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைமையில், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன; இதில் மக்களும் கலந்துக்கொண்டனர். இப்போராட்டங்களை வளர்த்தெடுப்பதன் மூலமே, தொடர்ந்து அதிகரித்துவரும் படுகொலைகளை தடுக்க முடியும்; மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட முடியும்.

ஆயிஷா

தமிழ்நாடு போலீசின் தீவிரவாதத் தடுப்பு பிரிவு; பாசிஸ்டுகளின் இன்னொரு ஆயுதம்!

0

மிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு நகரங்களில் சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்குவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த அக்டோபர் மாதம் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படவேண்டும் என்று போலீசுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு போலீசுத்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உட்பட உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஏடிஸ் (Anti-Terrorism Squad) மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஆக்டோபஸ் (Organisation for Counter-Terrorist Operations) ஆகிய சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவுகளின் அலுவலகங்களை பார்வையிடச்சென்றது.

அம்மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்படும் விதம், அவா்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள், அவர்களுக்கான பயிற்சிமுறை, தேவையான கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்த தகவல்களை சேகரித்துள்ளதாகவும், அது குறித்த விரிவான அறிக்கையை மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் சைலேந்திரபாபு கூறினார்.

“அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்த பின்பு இந்த சிறப்பு பிரிவிற்கான பணிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே பணியில் இருக்கும் அதிகாரிகள் இப்பணியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். மத்திய அரசின் கீழ் செயல்படும் புலனாய்வு அமைப்புகளுடன் இந்த சிறப்பு பிரிவு ஒத்திசைவாக செயல்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) உடன் இணைந்து செயல்படப்போகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த தீவிரவாத தடுப்பு பிரிவு என்.ஐ.ஏ-வுடன்டன் இணைந்து சமூக ஆர்வலர்களையும் அரசை கேள்வி கேட்கும் அறிவுத் துறையினரையும் வேட்டையாடப் போகிறது. கடந்த செப்டம்பர் மாதம், குஜராத் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களை என்.ஐ.ஏ மற்றும் ஏ.டி.எஸ் ஆகியவை இணைந்து கைது செய்ததானது தமிழ்நாட்டில் என்ன நடக்கப் போகிறது என்பதற்கு ஒரு சான்று.


படிக்க: அம்பானி ஆலையில் தயாராகும் சிஎன்என் ஐபிஎன் செய்தி அறிக்கைகள்


இந்த சிறப்பு பிரிவுக்கு 18 முதல் 21 வயதிலான இளைஞர்களை தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு நவீன ஆயுதங்களை கையாளும் வகையில் இரண்டு ஆண்டுகள் ஆயுதப்பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கான பயிற்சி, பிற மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளாலும் இந்திய ராணுவ அதிகாரிகளாலும் அளிக்கப்படும். இதற்கென பிரத்தியேகமாக ஒரு பயிற்சி பள்ளியும் உருவாக்கப்படும். இப்படையை உருவாக்க அரசு முனைப்பாக இருக்கிறது; 2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இப்படைக்கான ஆட்சேர்ப்பு துவங்கப்பட உள்ளது” என்று போலீசு உயர் அதிகாரி தெரிவித்ததாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களில் இந்த சிறப்பு தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்படும். இது ஒவ்வொரு நகரிலும் 40 – 50 பேரை கொண்டதாக இருக்கும். ஒட்டு மொத்தமாக இந்த பிரிவுக்கு ஏடிஜிபி அல்லது ஐஜி நிலையில் உள்ள ஒரு அதிகாரி தலைமை வகிப்பார். மற்ற நகரங்களில் தேவை ஏற்பட்டால் இவர்கள் அங்கேயும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சிறப்பு பிரிவு – சிஐடி-யில் (Special Branch-CID) புதியதொரு உளவுப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்டுகளை கண்காணிக்க சிறப்பு பிரிவு II – சிஐடி (SB II-CID) என்ற உளவுப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, பின்னர் ‘க்யூ’ பிரிவு (Q Branch) என்று பெயர் மாற்றம் இயங்கி வருகிறது. இந்த வரிசையில், தற்போது கோவை கார் வெடிப்பு சம்பவத்தை காரணம் காட்டி, தீவிரவாத தடுப்பு பிரிவு (Counter-Terrorism Squad) என்ற மேலும் ஒரு சிறப்பு போலீசுப்படையை உருவாக்கவுள்ளது தமிழக அரசு.


படிக்க: மோடியை பகடி செய்து பாடியதால் பிணை கிடையாதாம் || என்.ஐ.ஏ. அடாவடி !


இப்படி பல்வேறு காரணங்களைக்காட்டி உருவாக்கப்படும் போலீசு படைப்பிரிவுகள் அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்கவே பயன்படுத்தப்படும். மேலும், முஸ்லீம் மக்களின் மீதான வெறுப்பை தூண்டிவிட்டு கலவரம் செய்ய முயற்சிக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு பெரிதும் உதவக்கூடியதாக இவை அமையக்கூடும். அதாவது, அரசு எந்திரத்தின் அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் – சங் பரிவாரக் கும்பல் ஊடுருவி இருப்பதால், இந்த சிறப்பு பிரிவையும் பாசிஸ்ட்டுகள் பயன்படுத்திக் கொள்வது மிக எளிதாகிறது. எனவே, திமுக அரசு கொண்டுவரும் இந்த சிறப்பு காவல்படை பிரிவு போன்ற நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.

பொம்மி

செய்தி ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜுன் சம்பத்: ஓட ஓட விரட்டியடித்த தமிழ்நாடு!

டிசம்பர் 6, அம்பேத்கரின் சிலைக்கு மாலையிட வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை விரட்டியடித்ததன் மூலம் முன்னுதாரணமிக்க போராட்டத்தை நடத்திக்காட்டியிருக்கிறார்கள் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள். அதேநாளில் சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு மாலையிட வந்த அர்ஜுன் சம்பதுக்கு பலநூறு பேர் திரண்டு காட்டிய எதிர்ப்பு என்பது, அண்மைக்கால தமிழக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியதும், முன்னுதாரணமிக்க நடவடிக்கையுமாகும்.

0-0-0

டிசம்பர் 6, அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயில் அருகில், அனைத்து வழக்குரைஞர்கள் சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவி பாசிச இருளை கிழிக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி முடிவுற்ற அரை மணிநேரத்தில், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் கும்பல், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட வந்தது. அப்போது அங்கிருந்த வி.சி.க. சார்பு மற்றும் ஜனநாயக உணர்வு கொண்ட வழக்குரைஞர்கள் அர்ஜுன் சம்பத்தை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி அம்பேத்கருக்கு மாலையிட முயன்ற அர்ஜுன் சம்பத்தை மாலையணிவிக்கவிடாமல் துரத்தியடித்தனர்.

இந்துமதவெறி பயங்கரவாதியான அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி, அம்பேத்கர் நினைவுநாளுக்கு கும்பகோணத்தில் ஒட்டிய சுவரொட்டியில், அம்பேத்கரின் கொள்கைக்கு எதிராக, அவரது நெற்றியில் பட்டையும், காவி உடையும் அணிவித்து இழிவுபடுத்தியது. இந்து மக்கள் கட்சியின் இத்தகைய காலித்தனமான செயல்பாடுகள் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது.


படிக்க : மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !


இதற்காக, அர்ஜுன் சம்பத்தின் மீது போடப்பட்ட வழக்குகளின் விளைவாக, “அம்பேத்கர் சிலைக்கு பட்டை, காவித்துண்டு ஆகியவற்றை போடமாட்டேன்” என்று நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்து இக்காவி கும்பல்.

0-0-0

கும்பகோணத்தில் காவி உடை அணிவிக்கப்பட்ட அம்பேத்கரின் சுவரொட்டி; உயர் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் விரட்டியடிக்கப்பட்ட இந்நிகழ்வு; தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐனநாயக அமைப்புகளின் எதிர்ப்பை மீறி பா.ஜ.க.யினர் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டது போன்ற இந்துமதவெறி பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது.

இந்நிலையில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு அர்ஜுன் சம்பத் கும்பல் வரப்போகிறது என்ற செய்தி ஜனநாயக சக்திகள் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. அதனைத் தொடர்ந்து, அம்பேத்கர் மணிமண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மற்ற ஜனநாயக அமைப்பினர் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள் மிகக்குறுகிய நேரத்தில் குவியத் தொடங்கினர்.

இந்நிலையில், அர்ஜுன் சம்பத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் பொருட்டு அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசு குவிக்கப்பட்டனர். இருப்பினும் அங்கு குவிந்திருந்த மக்கள், அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் செல்லும் போது இந்துமத அடையாளங்களுடன் செல்லக் கூடாது எனவும் மாலை 5.45-6.00 மணிக்குள் சென்று மாலை அணிவிக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனையை மீறி, இந்து மத அடையாளங்களுடன் மாலை 6 மணிக்குப் பின்னர்தான் மணிமண்டபத்திற்கு இந்த கும்பல் வந்தது.

அர்ஜுன் சம்பத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போடப்பட்ட போராட்ட முழக்கங்கள் விண்ணைக் கிழித்தன. இதனைத் தொடர்ந்து, மக்களைத் தாக்க வேண்டும் என்று நன்கு திட்டமிட்டு வந்திருந்த போலீசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை அரங்கேற்றியது.

பல போலீசார் தமது பெயர் பட்டைகளை எடுத்து வைத்துக் கொண்டு போராடியவர்களைத் தாக்கினர். “பறையனே” என்று சாதி சொல்லி இழிவுப்படுத்தியும், ஆபாச வார்த்தைகளால் திட்டியும் தாக்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலரை குண்டுக்கட்டாகத் தூக்கி எறிவது, அவர்களின் பிறப்புறுப்பை நசுக்கி உதைப்பது போன்ற கேடுகெட்ட வன்முறைச் செயலில் ஈடுபட்டது போலீசு. வி.சி.க.வின் மாநில நிர்வாகிகளான வன்னியரசு, ரஜினிகாந்த், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மோகன், த.பெ.தி.க.வின் மாவட்டச் செயலாளர் குமரன் உள்ளிட்ட பலரை போலீசு கடுமையாகத்தாக்கி கைது செய்தது. பலத்த தடியடி நடத்தியதை அடுத்து பலரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பிறகே, போலீசின் பயங்கர பாதுகாப்புடன் அர்ஜுன் சம்பத் கும்பல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துள்ளது.

இதே காவி பாசிச கும்பல் சென்ற ஆண்டுகூட அம்பேத்கர் மணிமண்டப்பத்திற்கு வந்து மாலை அணிவித்துள்ளது. அப்போது எதிர்ப்புக் காட்டப்பட்டிருந்தாலும் இப்போது காட்டப்பட்ட எதிர்ப்பு என்பது முன்னுதாரணமிக்கதாகும். குறிப்பாக, அம்பேத்கரை காவியாக்கக்காட்டி தனது இந்துப் பரிவாரத்தில் அவரையும் ஒருவராகத் திரிக்கும் அயோக்கியத்தனத்தை செய்துவிட்டு, அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதாக நாடகமாடுவதை தமிழகம் சகித்துக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

இந்த அர்ஜுன் சம்பத் கும்பல் ஒருபக்கம், அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து சுவரொட்டி ஒட்டிவிட்டுது, மற்றொருபக்கம், உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுத்து, அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த  அனுமதியும் கோரி நாடகமாடுவது தெரிந்தாலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை என்று நீதிமன்றம் அனுமதி அளிப்பது, போலீசு பாதுகாப்புக் கொடுப்பது, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது போன்றவை எல்லாம் தமிழக போலீசும் காவிமயாகியிருப்பதை நமக்கு நன்கு உணர்த்துகின்றன.

0-0-0

ஆயிரத்திற்கும் அதிகமான போலீசு குவிக்கப்பட்டிருந்தும், போராடியவர்களை போலீசு தாக்கி கைது செய்த பின்னரும் அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதை போலீசால் தடுக்க இயலவில்லை. இரவு பயங்கர போலீசு பாதுகாப்புடன் மணிமண்டபத்திற்கு வந்திருந்த அர்ஜுன் சம்பத் மீது செருப்பை வீசி எதிர்ப்பைக் காட்டினர் தமிழக மக்கள்.

அர்ஜுன் சம்பத் உண்மையில் ஒரு கோழை. அதிகார வர்க்கத்தின் ஆதரவு, போலீசு புடைசூழ பாதுகாப்புடன்தான் இந்த கும்பல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தது.

சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசை எதிர்த்து ஒற்றை பெண்ணாக ஒரு கல்லூரி மாணவி எதிர்ப்புக் காட்டியதும், கர்நாடாகாவில் ஹுஜாப் அணிவிந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து காலிகள் சூழ்ந்து கொண்டு எதிர்ப்புக் காட்டிய போது அதனைக் கண்டு அஞ்சாமல், அல்லாஹு அக்பர் என்று மாணவி ஒருவர் தனித்து நின்று முழக்கமிட்டதும் வீரத்தின் அடையாளங்கள்!

அதைப் போன்று அம்பேத்கரை இழிவுப்படுத்திய அர்ஜுன் சம்பத்திற்கு காட்டிய இந்த எதிர்ப்பானது, தமிழகம் பார்ப்பனிய எதிர்ப்பை மரபுரிமையாகக் கொண்டிருப்பதை நமக்கு மீண்டும் உணர்த்துகிறது.


படிக்க : திரௌபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!


அன்று, ஈழ மக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசியும் செயல்பட்டும் வந்த சுப்ரமணிய சாமியை முட்டையால் அடித்து விரட்டிய தமிழக வழக்குரைஞர்கள் இன்று அர்ஜுன் சம்பத்தை ஓட ஒட விரட்டியடித்திருக்கின்றனர். வழக்கறிஞர் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் முன்மாதிரியான போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்பொழுது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் அர்ஜுன் சம்பத்தை ஓட ஓட விரட்டியடித்து முன்மாதிரியாக செயல்பட்டுள்ளனர்.

0-0-0

கடந்த செப்டம்ர் 5-ஆம் தேதி வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் அன்று, அவரது மணிமண்டபத்துக்கு வந்த பா.ஜ.க.வினர் வ.உ.சி.யின் சிலைக்கு காவித்துண்டு அணிவித்திருக்கின்றனர். சுதந்திரப் போராட்டவீரராக இருந்த வ.உ.சி. பார்ப்பனிய எதிர்ப்பாளராகவும் செயல்பட்டவர். இதைப்போலவே, மருது மாண்டியர், வேலுநாச்சியார், ஒண்டி வீரன், இமானுவேல் சேகரன், திருப்பூர் குமரன், சிங்காரவேலர் என பல தலைவர்கள், போராளிகள் மீதும் காவியைப்பூசியும், அவர்களது வரலாற்றைத் திரித்தும் வருகிறது காவி பாசிச கும்பல். அம்பேத்கரை காவிமயமாக்கும் முயற்சிக்கு எதிர்வினையாற்றிய நாம் மேற்சொன்ன தலைவர்களை காவிமயமாக்கும் முயற்சியையும் முறியடித்தாக வேண்டும்.

அண்மையில், மனுநீதியை அம்பலப்படுத்திய ஆ.ராசாவுக்கு ஆதரவாக நின்று காவி கும்பலுக்கு பதிலடி கொடுத்தது; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போராடி முறியடித்தது, இன்று அர்ஜுன் சம்பத்திற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்கள் தொடரும், தொடர வேண்டும்.

மருது

ஐரோப்பிய உணவு வங்கிகள்: ஏகாதிபத்திய உலகின் அவலம்

டந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (5-12-2022) Financial Times என்கிற ஆங்கில நாளிதழ், “ஐரோப்பிய மக்கள், வறுமையின் காரணமாக உணவு வங்கிகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது” (EU residents flock to food banks as poverty soars) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட ஐரோப்பாவில் உணவு வங்கிகளுக்கான தேவை 20 – 30% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக ஜெர்மனியில் 50% அதிகரித்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உணவு வங்கிகள் என்கிற முறை நமக்கு புதிதல்ல. தமிழ்நாட்டில், சென்னை, திருச்சி, மதுரை போன்ற ‘ஸ்மார்ட் சிட்டி’களில் (Helping Wall) என்ற பெயரில் நகரத்திற்கு ஒதுக்குப் புறமாக நகரத்தார் பயன்படுத்திய பழைய துணிகளைக் கொண்டு வந்து வைப்பதும் அதனை ஏழை எளிய மக்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்வதையும் நாம் பார்த்திருப்போம். அதன் அடுத்தகட்ட வடிவம்தான் இந்த உணவு வங்கிகள்.

உணவு வங்கிகள் என்பவை, வீடுகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் மீதமாகும் காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் ரொட்டிகள் ஆகியவற்றை சேகரித்து இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யும் இலாப நோக்கற்ற தனியார் தொண்டு நிறுவனங்களாகும். ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 1100 உணவு வங்கிகள் செயல்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தங்களுக்கு கீழ் பல்வேறு கிளைகளைக் கொண்டு இயங்குகின்றன. இவை தேவைப்படும் குடும்பங்களுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு அல்லது ஒரு வாரத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன.

படிக்க : ஆரோக்கியமற்ற உணவு – ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் இந்திய உழைக்கும் மக்கள் !

உதாரணமாக, ஜெர்மனியில் உள்ள ஒரு உணவு வங்கி டாஃபெல் (TAFEL). இது ஜெர்மனி முழுவதும் 962 கிளைகளைக் கொண்டுள்ளது. 8.9 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில் உணவு வங்கிகளுக்கு சுமார் 20 இலட்சம் மக்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களாவர். மேலும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கப்போவதில்லை என்று ஒரு உணவு வங்கி நிர்வாகி தெரிவித்துள்ளார். ‘புதிதாக கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதென்றால் எங்கள் சேவையை இரட்டிப்பாக்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் விலைவாசி உயர்வுவானது விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வீட்டு வாடகை, எரிபொருள் செலவுகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஐரோப்பாவில் ஐந்தில் ஒரு பங்கு குடும்பங்கள் தங்கள் வீடுகளை சூடேற்றிக் கொள்ள முடியாமல் குளிர்காலத்தை எதிர்கொண்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. கொரோனா நெருக்கடி, உக்ரைன் ரஷ்யா போர், அதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் மீது ஐரோப்பா விதித்த பொருளாதாரத் தடைகள் இந்த நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நெருக்கடியால் அன்றாடம் வறுமை, வேலையின்மை, பசி, பஞ்சம், பட்டினியால் மாண்டு வரும் உழைக்கும் மக்களுக்கு முதலாளித்துவம் ‘கருணையுள்ளத்தோடு’ வழங்கியிருக்கும் தீர்வுகளில் ஒன்றுதான் இந்த உணவு வங்கிகள். இதற்கு ‘உணவு உதவி: ஒன்று சேர்ப்பதற்கான நுழைவாயில்’ (Food Aid, a gateway to inclusion) என்று முழக்கங்களை வைத்துள்ளது பிரான்சில் உள்ள ஒரு உணவு வங்கி. இந்த ஒன்று சேர்த்தல் எப்படி நடக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டியது. அதாவது, முதலாளித்துவ மேட்டுக் குடிகள், தங்களின் தேவைபோக வீசியெறியும் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து, சேகரித்து, பொட்டலம் போட்டு அதனை உழைக்கும் மக்களுக்கு விநியோகிக்கின்றனர். இதன் மூலமே இந்த ஒன்று சேர்ப்பு அதாவது, இந்த மாபெரும் ஏற்றத்தாழ்வு சீரமைக்கப்படுகிறது. இதற்கு ஐரோப்பா முழுவதும் மிகப்பெரிய வலைப்பின்னல் உருவாகி இருக்கிறது. அந்த அளவிற்கு உணவுப் பஞ்சமும் நெருக்கடியும் தீவிரமாகியுள்ளது. இந்த சேவையையும் ஏதோ முதலாளித்துவம் வேண்டி விரும்பி செய்வதல்ல. இதனையும் தடுத்துவிட்டால் முதலாளித்துவத்திற்கு எதிரான கிளர்ச்சிகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், தவிர்க்க முடியாமல் தனது குப்பைகளை கொண்டு இந்தக் ‘கீழ் மக்கள்’ உயிர்வாழ்வதை அனுமதிக்க வேண்டியிருக்கிறது.

முதலாளித்துவத்தை மீட்பதற்கான இத்தகைய நடவடிக்கைகள், அழுகி நாறிவரும் முதலாளித்துவத்தின் முடை நாற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. இதுதான் இந்த ஏகாதிபத்திய சொர்க்கபுரியின் அவலம்; ஏகாதிபத்திய மனிதாபிமானத்தின் கோர முகம். முதலாளித்துவம் தான் மனித நாகரீகத்தின் உச்சம் என்று கூச்சமின்றி மார்தட்டிக் கொள்ளும் முதலாளித்துவ அறிவுஜீவிகளோ இதைப் பற்றி பேசுவதும் இல்லை, பேச விரும்புவதும் இல்லை.

படிக்க: உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!

தற்போது முதலாளித்துவத்தின் இந்த கட்டாய காருண்ய நடவடிக்கைக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம், வணிக வளாகங்களும் பல்பொருள் அங்காடிகளும் உரிய தேதிக்குள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதில் மும்முரமாக ஈடுபடுவதால் உணவு வங்கிகளுக்கு உணவு பொருட்களின் வரத்துகள் குறைந்துள்ளது. இதனால், தற்போதைய வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கூட அவர்களால் பூர்த்தி செய்ய முடிவதில்லை. இன்னொருபுறம், விலைவாசி உயர்வு, பசி பட்டினியால் உணவு வங்கிகளுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

முதலாளித்துவ மேட்டுக் குடிகளின் குப்பைகளால் இவ்வளவு மக்களை உயிர் வாழவைக்க முடியும் என்றால், அவர்கள் சாப்பிட்டு போடும் எச்சில் சோற்றில் இன்னும் பல கோடி பேரை உயிர் வாழ வைக்க முடியும் என்றுகூட முதலாளித்துவவாதிகளின் ‘கருணையுள்ளம்’ விரிவடையக் கூடும். இதன் அடுத்தகட்டமாக, அதற்கும் ஏதாவது மாற்றுவழி கண்டுபிடித்து இந்த மேட்டுக் குடியினர் தின்று போட்ட எச்சில் சோற்றையும் நவீன முறையில் பேக்கிங் செய்து நம்மை சாப்பிடவும் பழக்கி அதனை நாகரீகமாகவும் மாற்றி விடுவார்கள். அத்தகைய கேடு கெட்ட நிலையை நாம் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

இசை

குஜராத்: பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!

1

குஜராத் தேர்தலில் யார் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற போகிறார்கள் என்பதை நாடே எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலால் இந்தியாவிற்கு முன்மாதிரியாக முன்நிறுத்தப்பட்ட குஜராத்தில், பாசிஸ்டுகள் தங்கள் 27 ஆண்டுகால ஆட்சியை தக்கவைப்பார்களா? அல்லது ஆட்சி மாற்றம் நிகழுமா? என்பதுதான் விவாதப் பொருளின் மையம்; அதற்கு இத்தேர்தலில் புதிதாக களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் அதற்கெதிரான பாஜகவின் நடவடிக்கைகள்தான் காரணம்.

டெல்லி மற்றும் பஞ்சாப்பில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியானது, தற்போது குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கவர்ச்சிவாத மற்றும் மிதவாத இந்துத்துவா அரசியலை தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது. இதற்கு எதிர்வினையாக பா.ஜ.க-வானது வேறுவழியில்லாமல் கவர்ச்சிவாத திட்டங்களை அறிவிக்கிறது; மக்கள் மத்தியில் சாதி அரசியலையும், இந்துமுனைவாக்கத்தையும் தீவிரப்படுத்துகிறது; அதிகார வர்க்கத்தின் உதவியுடன் தேர்தல் விதிகளை தனக்கு சாதகமாக மாற்றுவது என எல்லா வழிகளிலும் மூர்க்கமாக வேலை செய்கிறது.

மேலும் இத்தேர்தலின் வெற்றியானது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பாசிசக் கும்பல் உள்ளது. ஆம் ஆத்மியும் குஜராத்தில் பா.ஜ.க.வை தோற்கடித்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை தனது தலைமையில் திரட்ட முடியும்; தேசியக் கட்சியாக உருவாக முடியும் என்பதைக் கணக்கிட்டே, ஹிமாச்சலப்பிரதேசத்தை விட குஜராத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்து வருகிறது.

படிக்க : 2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்!

இரு கட்சிகளுக்கும் குஜராத் தேர்தல் வெற்றியானது இந்தளவுக்கு முக்கியமானது என்பதால்தான், தங்கள் ஒட்டுமொத்த சக்திகளையும் குவித்து வேலை செய்கிறார்கள். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நாய்ச்சண்டையை தவிர வேறொன்றுமில்லை.

மற்றபடி, யார் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

கவர்ச்சிவாத அரசியல் – பாசிஸ்டுகளின் பிரம்மாஸ்திரம்!

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான கெஜ்ரிவால் ஏப்ரல் மாதத்தில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்; வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை குஜராத்திற்கு சென்று பல்வேறு மக்கள் பிரிவினர் மற்றும் தொண்டர்களைச் சந்தித்தார்; இலவச – கவர்ச்சிவாத திட்டங்களை மையப்படுத்தியே அவருடைய தேர்தல் பிரச்சார உரைகள் பெரும்பாலும் இருந்தது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் மாதந்தோறும் 300 யூனிட் இலவசம்; விவசாயிகளுக்கு ஒரு நாளுக்கு 12 மணி நேரம் இலவச மின்சாரம்; வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் 3000 ரூபாய் ஊக்கத்தொகை; 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை; பசுக்களை பராமரிப்பதற்காக ஒவ்வொரு பசுவுக்கும் ஒரு நாளைக்கு 40 ரூபாய் ஊக்கத்தொகை; மாவட்டந்தோறும் பசு பாதுகாப்பு இல்லம்; பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாதம் 10000 ரூபாய்; வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதத்தில் (ஜனவரி 31 ஆம் தேதிக்குள்) பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் ஆகியவை கெஜ்ரிவாலின் இலவச – கவர்ச்சிவாத திட்டங்களில் முக்கியமானவை.

அதுமட்டுமில்லாமல் ஆம் ஆத்மி கட்சியானது மக்கள் மத்தியில் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியலை மேற்கொண்டது. தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வானது  “ஸ்டாலின் தான் வாராரு; விடியல் தரப் போறாரு” என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதேபோல, “கெஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு; மாற்றம் சாத்தியம்” (one chance to kejriwal; change is possible) என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 7.30 ரூபாய் ஆக இருப்பது; கிராமங்களில் பள்ளிக்கூடம், சாலைகள் மற்றும் சுகாதார வசதிகள் முறையாக இல்லாமல் இருப்பது; தொடர்ந்து அதிகரிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம்; பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றின் காரணமாக மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அதை அறுவடை செய்யும் விதமாகவே, ஆம் ஆத்மியானது இம்முழக்கத்தை முன்னிறுத்தியது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் இலவச – கவர்ச்சிவாத திட்டங்களுக்கு எதிராக மோடி, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னாலேயே தன்னுடைய உரைகளில் இலவசங்களுக்கு எதிரான கருத்துகளை சேர்த்துக்கொண்டார். “நாட்டின் பொருளாதாரத்தை இலவசங்கள் அழிக்கின்றன” என்ற அவர் கூற்று அதற்கு சிறந்த சான்று. மோடி மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாசிசக் கும்பலும், அதிகார வர்க்கமும் இணைந்து இலவச – கவர்ச்சிவாத திட்டங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டன. மாநிலக் கட்சிகளான தி.மு.க, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் இலவச – கவர்ச்சிவாத திட்டங்கள் மூலம், மக்களின் வாக்குகளைக் கவருவதே அதற்கு முக்கிய காரணம்.

இப்படி இலவச – கவர்ச்சிவாத திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்ட பா.ஜ.க கும்பலானது, வேறுவழியில்லாமல் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக இலவச – கவர்ச்சிவாத திட்டங்களை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆம் ஆத்மிக்கு நிகராக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் இலவச – கவர்ச்சிவாத திட்டங்களை வாரி வழங்கி  இருப்பது அதன் விளைவுதான்.

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்; பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்; குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு இலவச எரிவாயு சிலிண்டர்; குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 4 முறை சமையல் எண்ணெய் மற்றும் மாதந்தோறும் ஒரு கிலோ கொண்டைக்கடலை இலவசம்; உயர்சாதி ஏழைக் குடும்ப கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் இலவச ஊட்டச்சத்து உணவுப்பொருள்; உயர்சாதி ஏழை குடும்பங்களுக்காக 110 கோடி செலவில் நோயறிதல் திட்டம்; பேருந்துகளில் வயதான பெண்களுக்கு இலவச பயணம் போன்றவை பா.ஜ.க கும்பலின் இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்களாகும்.

இலவச – கவர்ச்சிவாத திட்டங்கள் மட்டுமல்லாமல், பா.ஜ.க கும்பலானது தங்களுடைய முக்கியமான தலைவர்களை எல்லாம் மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ள செய்தது. இப்பிரச்சாரங்கள் அனைத்தும் மோடி, அமித்ஷா, நட்டா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரை சுற்றியே இருந்தது. குறிப்பாக, மோடிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

இத்தேர்தலுக்காக மோடி மட்டும் 31 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி உள்ளார். கிட்டதட்ட 160 உத்திரப்பிரதேச பா.ஜ.க தலைவர்கள் இத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அமித்ஷா மற்றும் நட்டா பொதுக்கூட்டங்களில் பேசியது மட்டுமல்லாமல், பா.ஜ.க ஆதரவு ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதன் மூலமும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.

சமூக வலைதளங்களிலும் பா.ஜ.க கும்பல் தீவிரமாக பிரச்சாரம் செய்தது. இதற்காக குஜராத் நான்காக பிரிக்கப்பட்டு நான்கு பகுதிகளிலும் மையக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த  மையக் குழுக்களுக்கு கீழ் உள்ள சமூக ஊடகக் பிரிவின் குழுக்களில் கிட்டதட்ட 10,000 கட்சித் தொண்டர்கள், பா.ஜ.க.வின் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் பணியில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க-வின் மேற்கூறிய நடவடிக்கைகளை விட முக்கியமானது, தங்களுடைய கவர்ச்சிவாத அரசியலைப் பயன்படுத்தி மோர்பி தொங்கு பால விபத்தை கையாண்ட விதம்தான். பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடித்தது மற்றும் வாழ்க்கையில் அரிதாகவே இப்படி ஒரு வேதனையை அனுபவித்து இருக்கிறேன் என்று கூறி நடித்தது ஒருபுறம் என்றால், மறுபுறம் தொங்கு பால விபத்தில்  மக்களைக் காப்பாற்றினார் என்று கூறி, பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான கந்திலால் அம்ருதியாவை மோர்பி தொகுதி வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது.

எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் மோர்பி தொங்கு பால விபத்தை பிரச்சாரம் செய்து வாக்குகளைக் கவரலாம் என்று கருதி இருந்த சமயத்தில், தங்கள் கவர்ச்சிவாத அரசியலின் மூலம் ஒட்டுமொத்த நிகழ்ச்சிப்போக்கையும் தலைகீழாக மாற்றியது பா.ஜ.க. கும்பல்.

சாதி அரசியலும் இந்துமுனைவாக்கமும்

சமீபத்தில் உச்சநீதிமன்றமானது கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பானது குஜராத் தேர்தலுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. 10 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குள் படிதார் சமுதாயத்தை சேர்ந்த மக்களும் வருகின்றனர். குஜராத்தில் இச்சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டங்களைக் கட்டியமைத்து வந்துள்ளனர்.

ஹர்திக் படேலும் இச்சமுதாயத்தை சேர்ந்தவரே ஆவார். இம்மக்கள் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். இம்மக்களின் போராட்டத்தின் காரணமாக பா.ஜ.க. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சௌராஷ்டிரா பகுதியில் தோல்வியைத் தழுவியது.

தற்போது இச்சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது மற்றும் ஹர்திக் படேலும் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து இருப்பது, பா.ஜ.க.வுக்கு இம்மக்களின் வாக்குகளைக் கவர வாய்ப்பாகவே அமையும். அதுமட்டுமில்லாமல் பா.ஜ.க.வால் இச்சமுதாயத்தை சேர்ந்த பூபேந்திர படேலே முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதும் பாசிஸ்டுகளுக்கு கூடுதல் பலம். மாநிலம் முழுவதும் இச்சமுதாயத்தை சேர்ந்த மக்கள் 15 சதவிகிதம் உள்ளதால், வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிப்பர்.

அதேபோல, கோலி சமூகத்தின் ஆதரவை பெறுவதற்காக “ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்டு” என்ற தனது கொள்கையை பா.ஜ.க. தளர்த்தியிருக்கிறது. கோலி சமூகத்தைச் சேர்ந்த பர்ஷோத்தம் சோலாங்கிக்கு பாவ் நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அவரது தம்பி ஹைரா சோலாங்கிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அச்சமுதாயத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சமுதாயத்தை சேர்ந்த மக்கள் 32 தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர். எனவே பா.ஜ.க. தனதுகொள்கையை தளர்த்தி அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது.

எல்லா தொகுதிகளிலும் யாரை வேட்பாளராக முன்னிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்பதைக் கணித்தே, பா.ஜ.க.வானது வேட்பாளர்களை நிறுத்துகிறது. அவ்வேட்பாளர்கள் பெரும்பாலும் சாதி அரசியலின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு பா.ஜ.க. சார்பாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதும் இதனடிப்படையில்தான்.

இதனால் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 6 பேர் உட்பட 30-க்கும் அதிகமானவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் விளைவாக, வாய்ப்பு வழங்கப்படாத பா.ஜ.க.வினர் அதிருப்தியாளர்களாக மாறி, சிலர் காங்கிரஸில் இணைந்துள்ளனர்; சிலர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். எனவே அவர்களை பா.ஜ.க.வானது கட்சியை விட்டு நீக்கியுள்ளது. இதுவரை 19 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுள்ளனர். அதில் 6 எம்.எல்.ஏ.க்களும் அடங்குவர்.

மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவர்களை பா.ஜ.க.வானது பேரம் பேசி தன் கட்சியில் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே பழங்குடி மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.க.வானது தன்னுடைய ஆதிக்கத்தை மேலும் விரிவுப்படுத்திக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பதற்கு, இந்து – முஸ்லிம் கலவரம் ஏற்பட்டால் பா.ஜ.க. கும்பலே தங்களை பாதுகாக்கும் என்ற மக்களின் மூடநம்பிக்கையே காரணமாக உள்ளது. “அடிக்கடி மதக்கலவரம் நடக்கும் பகுதிகளிலும் கூட பாஜக அமைதியை நிலைநாட்டி உள்ளது” என்று அமித்ஷா கூறியிருப்பதே அதற்கு சிறந்த சான்று. இவர்களே கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி, தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக மக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இதில்தான் பாசிஸ்டுகளின் யுக்தி அடங்கியுள்ளது.

மேலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியுள்ளார்கள். இதுவும் மக்கள் மத்தியில் இந்துமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி, இந்துக்களின் வாக்குகள் அனைத்தையும் கவர்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது தேர்தலுக்காக மட்டும் அறிவிக்கப்படவில்லை. பாசிஸ்டுகளின் இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலில் இத்திட்டம் ஓர் அங்கம். இதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகள் மேலும் பறிக்கப்படும்.

ஆம் ஆத்மி கட்சியும் சாதி அரசியலை முன்னிறுத்தி வேட்பாளர்களை களம் இறக்குகிறது. குறிப்பாக, படிதார் சமுதாயத்தை சேர்ந்தவர்களை முன்னிறுத்துகிறது. அதேபோல, கெஜ்ரிவால் பொதுக்கூட்ட மேடையில் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிடுவது, “குஜராத்தில் இருந்து அனைத்து மக்களுக்கும் அயோத்தி ராமர் கோவிலுக்கு இலவச பயண வசதி செய்யப்படும்” எனக் கூறுவதன் மூலம் தன்னையும் மக்கள் மத்தியில் இந்துவாக முன்னிறுத்திக் கொண்டாலும், பா.ஜ.க. அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அதிகார வர்க்கத்தின் துணை

ஹிமாச்சலப்பிரதேசத்துடன் சேர்ந்து நடத்தப்பட வேண்டிய குஜராத் தேர்தலானது, தேர்தல் ஆனையத்தால் திட்டமிட்டு தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்டது. பா.ஜ.க. கும்பல் இலவச – கவர்ச்சிவாத திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் தங்கள் ஆதரவை பெருக்கி கொள்வதற்காகவே இக்கால அவகாசம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. கும்பலின் செயல்பாடுகளே அதை நிருபிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தால் ஹிமாச்சலப்பிரதேசத்துடன் சேர்த்து குஜராத் தேர்தல் தேதி இரண்டு நாள் கழித்து, சிஎன்ஜி (Compressed Natural Gas) மீதான வாட் வரியை 10 சதவிகிதம் குறைப்பதாக குஜராத் அமைச்சர் ஜிது வாகஹ்னி அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம் எனவும் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து குஜராத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 15,670 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பிறகு நவம்பர் ஒன்றாம் தேதி பழங்குடி மக்களுக்கான 860 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

குறிப்பாக பழங்குடி மக்கள் மத்தியில், பழங்குடியினர் பகுதிகளில் பத்தாயிரம் புதிய பள்ளிகள், ஏகலைவா பள்ளிகள், ஆசிரமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பேசினார். பழங்குடியினருக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது பா.ஜ.க.தான்; ஆங்கிலேயர் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்த மூங்கில் வளர்ப்பு மற்றும் விற்பனையை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்ததும் பா.ஜ.க.தான்; பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடியின கவுரவ தினமாக அறிவித்ததும் பா.ஜ.க.தான் என பிரச்சாரம் செய்தார்.

இப்படி பா.ஜ.க கும்பல் தங்கள் கவர்ச்சிவாத திட்டங்களை செயல்படுத்திய பிறகே, தேர்தல் ஆணையம் குஜராத் தேர்தல் தேதியை அறிவித்தது. அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேரணியாக சென்று பிரதமர் மோடி வாக்குச்சாவடியில் வாக்களித்ததை, மக்கள் தானாக சேர்ந்து விட்டதாக கூறி, மோடிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியது.

பாசிசக் கும்பலானது ஒருபுறம் தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் விதிகளை தளர்த்தியது என்றால், மறுபுறம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற தன்னுடைய அதிகார வர்க்க அடியாட்படைகளைக் கொண்டு ஆம் ஆத்மி கட்சியை மிரட்டியது எல்லாம் நாம் அனைவரும் அறிந்தததுதான்.

ஒவைசி கட்சி பா.ஜ.க.வின் பீ டீமா?

குஜராத்தில் மொத்த மக்கள் தொகையான 6.4 கோடியில் 10 சதவிகிதம் இஸ்லாமியர்கள் ஆவர். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் கிட்டதட்ட 42 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளனர்.

இதற்கு முன்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் மட்டும் இருந்ததால் அவர்களுக்கு மட்டுமே முஸ்லிம் வாக்குகள் சென்றன. ஆனால் தற்போது ஆம் ஆத்மி மற்றும் ஒவைசி நிற்பதால் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிய வாய்ப்புகள் உள்ளன. ஒவைசி கட்சியானது 13 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

மஜ்லீஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில் விருப்பமில்லை. அவர்களே ஒவைசியை பா.ஜ.க.வின் பீ டீம் என விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.  அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஷம்ஷாத் கான்,  “இப்போது குஜராத்தில் எங்கும் மஜ்லீஸ் கட்சியால் வெல்ல முடியாது. இது நன்கு தெரிந்தே ஓவைசி வேட்பாளர்களை இறக்கியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குப் பாதகமாகவும், பா.ஜ.க.வுக்கு சாதகமாகவும் அமையும். இதில் இருந்தே அவர் பா.ஜ.க.வின் பீ டீமாக செயல்பட முயல்வது தெளிவாக தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

ஒவைசி பா.ஜ.க.வின் பீ டீமா செயல்படுகிறார் என்று நாம் கூறினால், அவரை பா.ஜ.க. மறைமுகமாக இயக்குவதாகவே பொருள்படுகிறது. அவர் பா.ஜ.க.வால்தான் இயக்கப்படுகிறாரா? இல்லையா? என்ற விவாதித்திற்குள் நாம் செல்லவில்லை. ஆனால் அவரின், குஜராத் தேர்தலில் போட்டியிடுவது போன்ற முடிவுகள், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே அமைகின்றன.

பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!

மேற்கூறியவற்றை நாம் தொகுத்துப் பார்க்கும் போது, குஜராத்தில் மீண்டும் பாசிசக் கும்பலே ஆட்சிக்கு வரும் என்பதை நம்மால் எளிமையாக புரிந்துக்கொள்ள முடியும். அதற்கு முக்கிய காரணம், பா.ஜ.க.வுக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகள், பா.ஜ.க.வின் இந்துத்துவா மற்றும் கவர்ச்சிவாத அரசியலை எதிர்த்து, வர்க்க அரசியலை முன்வைத்து மக்களை அணிதிரட்டாமல் அதற்கு அடிபணிந்ததே ஆகும்.

பா.ஜ.க. ஆட்சியில் குஜராத் மக்களின் வாழ்க்கைதரமானது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு தினமும், ஒவ்வொரு மணி நேரமும் வாழ்க்கையை நடத்துவதே பெரும் போராட்டமாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் என மக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதற்கெதிராக மக்களின் போராட்டங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

குஜராத்தில் 3.64 லட்சம் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளது; சமீபத்தில் 3,400 கிராம பஞ்சாயத்து செயலாளர் பணிக்கு நடந்த தேர்விற்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தது ஆகிய இரு நிகழ்வுகளின் மூலமே நாம் வேலைவாய்ப்பின்மையின் கொடூரத்தை புரிந்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக, குஜராத் வைர தொழிலாளர்கள் சங்கம் (Diamond Workers Union Gujarat) இத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடக்கூடாது என தன் சங்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. சங்கத்தில் 30 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். வைர தொழிலாளர்களின் நலன்களை காக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் மற்றும் தொழில்முறை வரியைக் குறைக்க வேண்டும் என இச்சங்கத்தின் கோரிக்கையானது 12 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசால் நிறைவேற்றப்படாததே அதற்கு காரணமாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்காதது; நெடுஞ்சாலை திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது ஆகியவற்றுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல பழங்குடி மக்களும் பர்-தாபி- நர்மதா நதி இணைப்பு திட்டம் மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் உருக்கு ஆலையை அமைப்பதற்கு எதிராகவும் போராடி வருகின்றனர்.

படிக்க : அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!

இப்போராட்டங்களை எல்லாம் அடுத்த கட்டத்திற்கு வளர்த்து மக்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை பூர்த்தி செய்து மக்கள் நல அரசை அமைக்க வேண்டும் என்ற சிந்தனை எதிர்க்கட்சிகளுக்கு கனவில் கூட இல்லை. அதற்கு மாறாக, மிதவாத இந்துத்துவா மற்றும் கவர்ச்சிவாத அரசியலையே முன்வைத்து மக்களின் வாக்குகளைக் கவர முயற்சி செய்கின்றன. எனவேதான் இவர்களால் பா.ஜ.க.வுக்கு மாற்றாக அமைய முடியவில்லை.

இதன் விளைவாகவே, காங்கிரஸ் கட்சியானது மக்கள் மத்தியில் இருந்து படிப்படியாக துடைத்தொழிக்கப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியானது மக்களுக்கு புதிய கட்சியாகவும், கார்ப்பரேட் பாணியில் கவர்ச்சிவாத அரசியலை மூர்க்கத்தனமாக செயல்படுத்துவதாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றுள்ளது.

எனவே குஜராத்தில் ஆம் ஆத்மியானது, காங்கிரஸ் கட்சியின் இடத்தை அதாவது எதிர்க்கட்சியின் இடத்தைக் கைப்பற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தேர்தலானது பாசிஸ்டுகளுக்கு எதிராக, இத்தேர்தல் கட்டமைப்புக்குள் சாத்தியமான மாற்று இல்லை என்பதை மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

பிரவீன்

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அவலநிலை!

கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முக்கியமான ஒன்றுதான் பச்சையப்பன் கல்லூரி. மேலும் மாநில கல்லூரி, சட்ட கல்லூரி, நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரி, தியாகராய கல்லூரி என பல அரசு கல்லூரிகளும் அரசே எடுத்து நடத்தும் கல்லூரிகளும் பெரும்பான்மையாக உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளாக உள்ளன.

இக்கல்லூரிகளுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. 1800-களில் இருந்தே இதன் வரலாறு தொடங்குகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய காலத்தில் கட்டப்பட்டவை இவை. இதில் பச்சையப்பன் கல்லூரிக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட முதல் கல்வி அறக்கட்டளை  பச்சையப்பன் அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளைக்கு கீழ் பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் பச்சையப்பன் கல்லூரி ஆகும்.

எண்ணற்ற தலைவர்களை, கல்வியாளர்களை, விஞ்ஞானிகளை அரசு உயரதிகாரிகளை உருவாக்கிய பெருமை இப்பச்சையப்பன் கல்லூரிக்கு உண்டு. இந்திய விடுதலை போராட்டத்திலும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்திலும் இக்கல்லூரி மாணவர்களின் பங்கு முக்கியமானது.

மேலும், விவசாயிகள் வாழ்வுரிமை காக்கும் போராட்டம், தொழிலாளர்கள் நலன் காக்கும் போராட்டம், கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம், டாஸ்மாக்கை மூடும் போராட்டம் என உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் இவர்கள் போர்க்குணத்தோடு முன் நின்றுள்ளனர். இக்கல்லூரி மாணவர்களை போலவே பேராசிரியர்களும் பல்வேறு போராட்டங்களில் முன் நின்று போராடியுள்ளனர்.

படிக்க : பச்சையப்பன் கல்லூரி காக்க பேராசிரியர் – மாணவர் போராட்டம்

இத்தகைய பாரம்பரியத்திற்கு சொந்தமான கல்லூரி அறக்கட்டளை தான் சமீப ஆண்டுகளாக தி.மு.க – அ.தி.மு.க-வை சார்ந்த பிழைப்புவாத ஓட்டு பொறுக்கிகளின் பிடிக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கல்வியாளர்களைக் கொண்டு கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்பட வேண்டிய இந்த கல்லூரி அறக்கட்டளையின் சொத்துகள் இன்று ஓட்டுக் பொறுக்கி அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. பல புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கிய பள்ளி, கல்லூரிகள் இன்று பாழடைந்த பேய் பங்களாக்களை போல் உள்ளன. இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளோ கல்விப் பணியை செய்வதற்கு பதில் பிற அனைத்து ‘சட்டவிரோத’ கேடுகெட்ட வேலைகளையும் செய்கிறார்கள்.

பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு; கல்விக்கூடத்தை பராமரித்து இயக்குவதற்கு பதில் தனிப்பட்ட நலனுக்காக சொத்துக்களை விற்பது; கல்வியின் தரத்தை உயர்த்தி சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கு பதில் தனியாருக்கு இணையாக அதிக கட்டணத்திற்கான வகுப்புகள் உருவாக்கி கொள்ளையடிப்பது, கல்லூரி மைதானத்தை தனியாருக்கு வாடகைக்கு விட்டு நிர்வாகிகள் தங்கள் சொத்தை உயர்த்தி கொள்வது என லஞ்ச லாவண்யங்களும் முறைகேடுகளும் இவ்வறக்கட்டளையில் மண்டிக்கிடக்கின்றன.

கடந்த 2013-2015-ஆம் ஆண்டுகளில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆறு கல்லூரிகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் உரிய தகுதியுடையவர்கள் இல்லை எனக் கூறி அறக்கட்டளையை நிர்வகித்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், உதவிப் பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் “முறையாகத் தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது’’ என தீர்ப்பு வழங்கியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சொல்லப்போனால் இந்த ஊழலின் ஊற்றுகண்ணாக செயல்பட்டதே பச்சைப்பன் அறக்கட்டளை நிர்வாகியும் தற்போது திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் தான். அவருக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படவில்லை. ஆனால், நூற்றுக்கணக்கான பேராசியர்கள் வாழ்வாதாரமும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமும் தற்போது கேள்விகுறியாகி உள்ளது.

இதனை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நவம்பர் 18 அன்று கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 254 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்ததை கண்டித்தும் சரியான விசாரணை குழு அமைத்து ஊழலில் ஈடுபட்ட பேராசிரியர்களை மட்டும் வகை பிரித்து (spot out) பணி நீக்கம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும், ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருந்த பச்சையப்பன் கல்லூரி நிர்வாகி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் போராடினர்.

ஒருபுறம், சிங்கார சென்னை, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சென்னையின் உழைக்கும் மக்கள் நகரத்தை விட்டு வெளியே தூக்கியடிக்கப்படுகின்றனர். சென்னையை அழகுபடுத்துதல் என்ற பெயரில் சென்னை நகரத்தை உருவாக்கிய உழைக்கும் மக்கள் நகரத்தின் அழுக்குகளாக பார்க்க படுகின்றனர். இன்னொருபுறமோ அந்த உழைக்கும் மக்களின் பிள்ளைகள் கல்வி பறிக்கப்பட்டு அவர்களும் சமூகத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

அதனோடு இணைந்த நடவடிக்கைதான் இந்த பச்சையப்பன் அறக்கட்டளை கீழ் இயங்கும் பேராசிரியர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டதும். மொத்தம் 254 பேராசிரியர்களின் நியமனத்தில் 152 பேராசிரியர்களின் நியமனம் முறைகேடாக நடந்துள்ளது என்று தொடுக்கப்பட்ட வழக்கில், மொத்தமாக 254 பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது என்று தீர்ப்பு வழங்கவேண்டிய அவசியம் என்ன?

ஏனெனில் எப்படி உழைக்கும் மக்கள் ‘சிங்கார சென்னை’யின் அழுக்காக பார்க்கப்படுகின்றனரோ அப்படி தான் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நந்தனம் கல்லூரி, தியாகராய கல்லூரி உள்ளிட்ட அனைத்து அரசு கல்லூரி மாணவர்களும் பார்க்கப்படுகின்றனர்.

படிக்க : போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

அப்படிப்பட்டவர்களின் கல்லூரிகள் பெரிய முக்கியமான நிலபரப்பில் அமைந்திருப்பதையும் மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ள கல்வி இன்னும் இலவசமாக வழங்கப்படுவதையும் ஆளும் வரக்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது போதாதென்று, இந்த மாணவர்கள் ஒவ்வொரு சமூக அநீதிக்கு எதிராகவும் சாலையில் அமர்ந்து போராடுவதை ஆளும் வரக்கத்தால் கனவில் கூட சகித்துக்கொள்ள முடியாது.

இதனால்தான் இதற்கு முன்பே மெட்ரோ ரயில் போட உள்ளோம் என்று பச்சையப்பன் கல்லூரியை ஒழித்துகட்ட பார்த்தனர். மாணவர்களின் போராட்டத்தினால் அந்த திட்டம் கை விடப்பட்டது. அதே போல் தலைமை செயலகம் அருகில் இருந்த சட்டக் கல்லூரியும் மூலையில் வீசப்பட்டது. மாநிலக் கல்லூரி முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ரூட் பிரச்சினையை காரணம் காட்டி இக்கல்லூரி மாணவர்கள் சமூக விரோதிகளாக காட்டப்படுகின்றனர்.

எனவே ஏழை எளிய மக்களை கல்வியை விட்டு துரத்தியடிக்கும் ஆளும் வர்க்கங்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டுமானால், தனி தனியாக போராடி கொண்டிருக்கும் கௌரவ விரிவுரையாளர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக இந்த பிரச்சினையை மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கொண்டு சென்று அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு கட்டி போராட்டத்தை முன்னெடுப்போம்.

ஊமத்துரை

அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!

குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததன் மூலம் 53 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்தது. இந்த தொங்கு பாலத்தின் யோக்கியதையையும் இதில் நடந்துள்ள முறைகேடுகளையும் பல்வேறு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தியிருப்பதைப் பலரும் அறிவோம்.

ஆனால், இதனை வழமையான பெரிய விபத்து என்ற வகையிலோ, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் அலட்சியமான செயல்பாட்டின் வெளிப்பாடாகவோ பார்க்க முடியாது. நாட்டிற்கே முன்மாதிரியாக பாசிசக் கும்பலால் முன்னிறுத்தப்பட்ட குஜராத் மாடலின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது மோர்பி பாலம். மோர்பி பாலம் அறுந்து விழுந்த நிகழ்வானது அப்பட்டமான பயங்கரவாதச் செயலாகும். திட்டமிட்டு நிகழ்த்தப்படவில்லை என்றாலும் இது ஒரு படுகொலை குற்றமாகும்; எவ்வித வரைமுறையுமின்றி மொத்த குஜராத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருப்பதன் விளைவாகும்!

0-0-0

1879-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மச்சு நதியின் குறுக்கே திறக்கப்பட்ட தொங்கு பாலமானது மிகவும் பழமையானது. தற்போது மக்களின் போக்குவரத்திற்கு என்பதைத் தாண்டி, சுற்றுலாத் தளமாகவே ஆக்கப்பட்டுள்ளது. 2001 பூகம்பத்திற்குப் பின்னர் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத இந்த பாலமானது வலுவிழந்து இருந்ததால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீபாவளி மற்றும் சாத் பூஜையை ஒட்டி இந்தப் பாலம் மீண்டும் திறக்கப்பட்டபோது, பாலத்தைக் கடக்கும் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்ததால் பாலமானது அறுந்து விழுந்தது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

படிக்க: குஜராத்: அரசின் அலட்சியத்தால் மோர்பி தொங்கு பாலம் விபத்து ! 141 பேர் மரணம் !

ஆனால், பாலம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை; பல கம்பிகள் பழையவை; துருப்பிடித்தக் கம்பிகள் சரி செய்யப்படவில்லை; அவற்றிற்கு கிரீஸ் கூட பூசப்படவில்லை; தொங்குபாலத்தைத் தாங்கும் பிடிமானங்கள் இரண்டு பழுதடைந்திருந்தன; இரண்டு முக்கியமான ஆணிகள் (போல்டுகள்) கழன்று இருந்தன; இந்தப் பாலத்தில் இருந்த மரப்பலகைகள் நீக்கப்பட்டு அதனிடத்தில் அலுமினியத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பாலத்தின் எடை அதிகரித்துள்ளது. வழக்கமாக கட்டணம் வசூலித்து மக்கள் அனுப்பப்படும் இந்தப் பாலத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை; அதிக இலாபத்தைக் கணக்கில் கொண்டு நான்கு மடங்கு அதிகமான மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; பழுது பார்த்த பின்னர் அதன் உறுதித்தன்மையை சோதிக்காமல், அரசின் அனுமதியில்லாமல் திறந்துள்ளனர் – என்று தடயவியல் நிபுணர்களும், இப்பணி குறித்து விசாரிக்கும் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

பாலத்தைப் பராமரிப்பது மற்றும் சீரமைப்பது ஆகிய இரண்டு பணிகளை குஜராத்தைச் சேர்ந்த ஒரேவா (Oreva Group) என்ற கார்ப்பரேட் குழுமத்திற்கு வழங்கியிருந்தது குஜராத் அரசு. இக்குழுமம் உலகின் மிகப்பெரிய கடிகார உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். 2007-ஆம் ஆண்டு முதல் இக்குழுமமே பாலத்தைப் பராமரித்து வருகிறது; தற்போது மேலும் 15 ஆண்டுகளுக்கு இப்பாலத்தைப் பராமரிக்கும் பணியும் அண்மையில் ஒரேவா குழுமத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி நிறுவனமான ஒரேவா-வோ, பாலத்தைச் சீரமைக்கும் பணியை வேறு இரண்டு ஒப்பந்ததாரர்களிடம் கொடுத்துள்ளது. அந்த ஒப்பந்ததாரர்கள் யாரும் பாலம் குறித்த அறிவு பெற்ற பொறியாளர்கள் அல்ல; இந்த ஒப்பந்ததாரர்கள் பாலத்தில் வெல்டிங் மற்றும் மின் இணைப்பு வேலைகளை மட்டுமே செய்துள்ளனர். மேலும் ஒரேவா-உம் கட்டுமானப்பணிகளில் முன்அனுபவம் இல்லாத நிறுவனமாகும். அதுமட்டுமல்ல, பாலத்தை பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை, நகராட்சி அதிகாரிகள் ஏல அறிவிப்புக் கூட கொடுக்காமல் இந்த நிறுவனத்திற்கு நேரடியாக வழங்கியுள்ளனர் என்பதும், அந்த ஒப்பந்தப் படிவம் இரண்டு பக்கங்களை மட்டுமே கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் அதிர்ச்சியளிக்கின்றன.

மக்கள் உயிருடன் தொடர்புடைய முக்கியமான ஒப்பந்தம் என்ற கருத்துகூட இல்லாமல், இலஞ்ச-ஊழல்-முறைகேடுகளை பார்ப்பன பாசிஸ்டுகள் இயல்பாகக் கொண்டிருப்பதைத்தான் இந்த குஜராத் மாடல் நமக்கு உணர்த்துகின்றன.

முக்கியமாக, பாலத்தில் செல்வதற்கான கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தியது; சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ரூபாய் நிதியில், வெறும் 12 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்தது; மறுசீரமைப்புப் பணிகள் முடிக்காத நிலையில், பண்டிகையை ஒட்டி அவசர அவசரமாக பாலத்தைத் திறந்தது; 125 பேர் மட்டுமே தாங்கும் பாலத்தில் 500-க்கும் மேற்பட்டோரை அனுமதித்து கொள்ளையடித்தது போன்றவை இந்த ஒரேவா நிறுவனம் ஈவிரக்கமில்லாமல் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனம் என்பதையே காட்டுகின்றன.

இந்த மோர்பி தொங்கு பாலம் மட்டுமல்ல, குஜராத் அரசின் எல்லா துறைகளும் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன. குஜராத் மாடல் வளர்ச்சி என்றாலே எல்லா துறைகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதுதான்; அதாவது மக்கள் மீதான கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை நீக்கமற நிறுவுவதுதான். அவ்வாறு நிறுவப்பட்டிருப்பதன் விளைவும் வெளிப்பாடும்தான் ஏறத்தாழ 150 பேரை பலிகொண்ட கோர நிகழ்வு. எனவேதான் மோர்பி பாலம் அறுந்து விழுந்த நிகழ்வு ஒரு விபத்தல்ல, படுகொலை என்கிறோம்.

0-0-0

தொங்குபாலம் பராமரிப்பில் காட்டிய அலட்சியம், ஒரேவா-வின் இலாபவெறிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தொங்குபால விபத்து நடந்த பின்னர், பா.ஜ.க. மோடி கும்பலும் அவர்களது ஆதரவு ஊடகங்களும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாசிஸ்டுகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு பேசிய மோடி, “ஒரு பக்கம் இதயம் வலியால் கனக்கிறது; இன்னொரு பக்கம் கடமையின் பாதை அழைக்கிறது. நான் ஏக்தா நகரில் இருக்கிறேன். ஆனால் எனது எண்ணம் எல்லாம் மோர்பியில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே உள்ளது. எனது வாழ்க்கையில் அரிதாகவே இப்படி ஒரு வேதனையை அனுபவித்து இருப்பேன்” என்று மிகவும் தந்திரமாக நடித்தார். அன்று மாலையே, பனஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும்போது மேடையிலேயே முதலைக் கண்ணீர் வடித்தார். ஆனால், விபத்து ஏன் நடந்தது, விபத்துக்கான காரணம் என்ன என்று ஒருவார்த்தைக் கூட பேசவில்லை.

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெறுபவர்களை மருத்துவமனைக்குச் சென்று மோடி சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் விபத்துக்குள்ளானவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் யோக்கியதை வெளி உலகிற்குத் தெரியவந்தது. பிரதமர் மோடி மருத்துவமனைக்கு வருகிறார் என்பதால், பாழடைந்த மருத்துவமனையை அவசர அவசரமாகப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனையில் சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், உடைந்த தரைக்கற்களை மாற்றுதல், மேற்கூரையைப் புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அம்மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி மற்றும் போதிய அளவு படுக்கைகள், போர்வைகள் கூட இல்லை. மோடி வருகைக்காக 105 கி.மீ. தொலைவில் உள்ள ஜாம்நகர் அரசு மருத்துவமனையில் இருந்து போர்வைகள் கொண்டுவரப்பட்டன. குடிநீர் இணைப்பு இல்லாமலே தண்ணீர் குளிர்விப்பான் அமைக்கப்பட்டிருந்தது. மோடி வருகை காரணமாக, தொங்கு பால விபத்தினால் படுகாயமுற்ற 56 பேர் சிகிச்சை முடிவடையாத நிலையில் இரண்டே நாட்களில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் செய்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து குஜராத் மாடலின் கோர முகத்தைக் காட்டின. குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் இச்சூழலில், தனது வாக்கு வங்கி சரிவதைத் தடுப்பதற்காக பா.ஜ.க. மோடி கும்பல் பொய் பிரச்சாரங்களைத் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிட்டது. இத்தனைக்கும் பிறகு, கொஞ்சமும் வெட்கமில்லாமல் “நான் உருவாக்கிய குஜராத்” என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் மோடி.

தொங்கு பால விபத்தில் மக்களைக் காப்பாற்றினார் என்று கூறி, பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான கந்திலால் அம்ருதியாவை இத்தொகுதியில் நிறுத்தி பா.ஜ.க. வெற்றிபெற முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையமோ ஒருபடி மேலே போய், மோர்பி சம்பவத்துக்கு அடுத்து குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் ஒருவாரத்திற்கு நிறுத்தி வைத்தது. பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலை வடிந்த பின்னர்தான் குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தது.

ஒருபுறம் பிரதமர் மோடியின் புளுகுகளையும் நாடகத்தையும் ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போதே, இளைஞர்கள் பாலத்தை ஆட்டியதால்தான் பாலம் அறுந்து விழுந்தது என்று பொய்ச் செய்திகளைப் பரப்பின.

படிக்க: மோர்பி நகர் தொங்கு பாலம் விபத்து – அழுகி நாறுகிறது குஜராத் மாடல்!

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி, “மோர்பி பால விபத்து என்பது அர்பன் நக்சல்களின் திட்டமிட்ட சதியாக இருக்கும்” என்ற பொய்ப் பிரச்சாரத்தையும் பரப்பின. ஆனால், ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேல், இன்னும் கைது செய்யப்படாததைப் பற்றி இந்த ஊடகங்கள் மூச்சுக்கூட விடவில்லை.

வடநாட்டு பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் மட்டுமல்ல, விகடன் குழும நிறுவனங்கள் கூட, விபத்தில் தனியார் நிறுவனம்தான் தவறு செய்துவிட்டது போல சில விவரங்களைச் சொல்லிவிட்டு, நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தீவிர விசாரணைகள் நடப்பதாகவும் ‘புலனாய்வு’ச் செய்திகளை வெளியிட்டன. பா.ஜ.க. மோடி கும்பலின் அப்பட்டமான ஊழல்-முறைகேடுகள் குறித்து ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. மாறாக, மோடியின் நீலிக்கண்ணீர் நாடகத்தை மக்கள் மீதான அக்கறையைப் போல சித்தரித்தன.

மொத்தத்தில், மோர்பி பாலம் அறுந்து விழுந்ததானது, குஜராத் மாடல் வளர்ச்சியின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. குஜராத் மாடலானது குஜராத்தி-மார்வாடி-படேல்-பனியா போன்ற வடநாட்டு ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொர்க்கம், உழைக்கும் மக்களுக்கோ சவக்குழி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது.

டிச.6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் : அயோத்தியில் அராஜக வெறியாட்டம் போட்ட காவி பயங்கரவாதிகள்!

1992 டிசம்பரில் இந்து மதவெறியர்களால் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த சட்டவிரோத கரசேவை-க்கு இன்று வரை யாரும் தண்டிக்கப்படவில்லை. 2019-ஆம் ஆண்டில் ‘பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கே நிலம் சொந்தம்’ என்ற ஓர் அநீதி தீர்ப்பை வழங்கி கரசேவை புரிந்த அனைவரையும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். அதை தொடர்ந்து தற்போது ராமர் கோயிலை கட்டுவதற்கு களமிறங்கிவிட்டது இந்துமதவெறி கும்பல். அதை தொடர்ந்து காசி மதுரா, கியான்வாபி, தாஜ்மஹால் என அவர்களின் அடுத்தக்கட்ட இலக்குகள் கரசேவைக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நாடுமுழுவதும் பல்வேறு கலவரங்களை அரங்கேற்றினார்கள் இந்து மதவெறி பாசிஸ்டுகள். 2002-ல் குஜராத் கலவரத்தை அறங்கேற்றி குஜராத் மாடல் தான் இந்துராஷ்டிரம் என்று கொக்கரித்தார்கள். 2014-ல் மோடி தலைமையிலான பாஜக கட்சி மத்திய ஆட்சியை பிடித்த பிறகு, வட இந்தியாவில் உ.பி; தென்னிந்தியாவில் கர்நாடக உட்பட ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி உள்ளிட்ட சங் பரிவார கும்பல் நாடுமுழுவதும் தனது அடிதளத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, இந்துமதவெறியர்களின் கரசேவையை அம்பலப்படுத்தி எமது புதிய ஜனநாயகம் இதழில் கட்டுரை வெளியிடப்பட்டது. அதனை தற்போது பதிவிடுகிறோம்.

– வினவு

0-0-0

அயோத்தி நாசகார கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!

அயோத்தி பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியதோடு நாடு முழுவதும் மதவெறிப்படுகொலைக் கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் தங்களது நயவஞ்சகச் சதித் திட்டத்தை வெற்றிகரமாகத் துவக்கி விட்டார்கள், இந்துமதவெறி பார்ப்ன-பனியா பாசிசக் கூட்டத்தினர்.

பாபர் மசூதியை இடித்ததானது, “இந்துமத-வகுப்புவாதத் தீவிரவாதிகளது வெறிச்செயல்” “வக்கிரமான கோழைத்தனம்” “மத்திய கால மதவெறிக் குரூரம்” “தேசிய அவமானம்-துரோகம்” “மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றம்” – என்று சித்தரிப்பது எல்லாம் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நாசகரமான கடப்பாரைச் சேவையை மட்டும் குறிக்கின்றன.

ஆனால், இந்த இழிசெயல், இந்துமதவெறி பாசிச பயங்கரவாத ஆட்சியை நிறுவுவது என்கிற மிகவும் அபாயகரமான, நயவஞ்சகமான, கொடிய சதித்திட்டத்தைப் பகிரங்கமாக அரங்கேற்றுவதைத்தான் குறிக்கிறது.

பாபர் மசூதியின் கவிகைகளை உடைத்து நொறுக்கி வீழ்த்தியவுடன் இந்து மத “சந்நியாசினிகள்” என்று பட்டஞ் சூட்டிக் கொண்டுள்ள உமா பாரதியும், ரிதம்பராவும் ஒலிபெருக்கி மூலம் அலறினார்கள், “இதோ, இந்து ராஷ்டிரம் பிறக்கிறது!” – இதுதான் அவர்கள் இலட்சியம். இந்து மதவெறி பாசிச பயங்கரவாதம் – இதுதான் அவர்களின் இராம ராஜ்ஜியம்!

படிக்க : சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !

இந்து மதவெறியின் குருபீடமாகிய ஆர்.எஸ்.எஸ்ஸோ அதன் கள்ளக் குழந்தைகளான பாரதீய ஜனதா, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, பஜ்ரங்க தள், இந்து முன்னணி முதல் தமிழ்நாடு பிராமணம் சங்கம் வரை அவர்கள் யாருமோ, “இந்துராஷ்டிரம்”தான் தமது இலட்சியம் என்பதை மறைக்கவில்லை.

பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டுவது ஒரு மத நம்பிக்கையை நிறைவேற்றுவது என்பதெல்லாம் பாமர ராம பக்தர்களைத் திரட்டுவதற்க்காகச் செய்த பிரச்சாரம்தான்! “இசுலாமிய ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களால் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்; இந்துமதத் துறவிகள் கொல்லப்பட்டனர்; இந்த தேசிய அவமானத்தின் சின்னமாக விளங்குவதுதான் பாபர் மசூதி; அதை அகற்றி ராமன் பிறந்த பூமியில் ராமனுக்குக் கோவில் கட்டுவது அன்று நேர்ந்த அவமானங்களுக்குப் பழிவாங்குவது, இந்துக்களின் கௌரவத்தை நிலை நாட்டுவது” என்கிற விளக்கங்கள் கூட இந்துமதவெறி பாசிஸ்டுகள் தமது “இந்து ராஷ்டிரம்” என்கிற அரசியல்பேராசைக்கு மதச் சாயம் பூசுபவைதான்.

“இராமன் ஒரு மதத்தின் கடவுள் மட்டுமல்ல; தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். போலியான மதச்சார்பின்மை, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இந்துத்துவம், இராமராஜ்ஜியம், இந்து ராஷ்டிரம் அடிப்படையிலான தேசியத்தை நிர்மானிப்பது எங்கள் நோக்கம்” என்று இந்து மதவெறி பாசிஸ்டுகள் அனைவரும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.

ஆகவே, பாபர் மசூதியை இடித்த சம்பவம் உண்மையில் அரசியல் அதிகார ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையைப் போன்றது. பாரதீய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் ஆதாயம் மட்டும் அதன் குறிக்கோள் அல்ல. ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேர்தல்களையும் ஒரு வழியாக இந்துமதவெறி பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நாட்டின் நீதி-நிர்வாக-அரசியல் அமைப்புமுறை எதன் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது என்பதை நிரூபித்துவிட்டார்கள். மதவெறி பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இரத்த ஆறில் நீந்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்டுள்ள வழி. அதன் ஒரு பகுதிதான் அயோத்தியில் அவர்கள் புரிந்த அராஜக வெறியாட்டம்.

இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அயோத்தி நாசவேலையைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டுள்ள அராஜக வெறியாட்டத்தில் இப்போதைய, உடனடித் தாக்குதல் இலக்கு என்னவோ இசுலாமிய சமுதாயத்தினர்தான்! ஆனால், நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, தேசபக்த சக்திகளுக்கெதிராக அவர்கள் தமது தாக்குதலைத் திருப்பிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை. இன்றைய சம்பவங்கள் அதற்கான எச்சரிக்கை – முன்னறிவிப்புதான்!

ஜெர்மனியின் ஆரிய – நாஜிக்கள் ஆட்சியைப் பிடிப்பதற்குப் பின்பற்றிய தந்திரங்கள் பலவும் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளில் காணமுடிகிறது. தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது; தேசிய கௌரவத்தை நிலைநாட்டுவது; தேசிய ஒருமைப்பாட்டை காப்பது; நாட்டின் இழிநிலைக்குக் காரணமானவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட (யூத) சமுதாயத்தினர் மீது பழிபோட்டு அவர்களைக் கொன்று குவிப்பது; நாட்டின் வரலாற்றையே திரித்துப் புரட்டி மத-இன ரீதியில் நாட்டையே பிளவுபடுத்துவது – ஆகிய அதே தந்திரங்களை இந்துமதவெறி பாசிஸ்டுகளும் பின்பற்றுகிறார்கள்.

இப்போது பாபர் மசூதியை இடித்து ராமன் கோவிலைக் கட்டியதைப் போல காசியில் உள்ள மசூதியை இடித்துக் காசி விசுவநாதன் கோவிலையும், மதுரா மசூதியை இடித்து கிருஷ்ணன் கோவிலையும் கட்டும் திட்டத்தை நிறைவேற்றி அடுத்தடுத்து இசுலாமிய மதத்தினருக்கு ஆத்திரமூட்டுவது; சொல்லப்படும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து இசுலாமிய மதவாத – தீவிரவாத அமைப்புகளில் தஞ்சமடையும்படியும் எதிர் தாக்குதல் தொடுக்கும் படியும் இசுலாமியர்களைத் தள்ளுவது; அதற்கு எதிராக இந்து மதவெறியை நியாயப்படுத்துவதுடன் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாகத் தம்மை முன்னிறுத்தி மதவெறி – வகுப்புவாதக் கலவரங்களை மூட்டி இரத்த ஆறு ஓடச் செய்து பார்ப்பன-பனியா சாதிய ஆதிக்க அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் அமைப்பது – இதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் அரசியல் பாதையாக உள்ளது.

முதலாவதாக, இவர்கள் நாட்டின் பெரும்பான்மையினரான இந்துக்களின் பிரதிநிதிகளும் அல்ல; இரண்டாவதாக, தேசிய நலன்கள் எதுவும் இவர்களது குறிக்கோளாக இல்லை.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி, பஜரங் தள், சிவசேனா, இந்து முன்னணி போன்ற இந்த இந்து மதவெறி பாசிச அமைப்புகள் அனைத்திற்கும் தலைமையேற்று வழி நடத்துபவர்கள் பெரும் தரகு அதிகார முதலாளிகளின் குடும்பத்தினர். தொழில்முறை அரசியல்வாதிகளாகவும், சாமியார்களாகவும், முன்னாள் அதிகாரிகளாகவும் உள்ள பார்ப்பன – பனியா சாதியக் கும்பலைச் சேர்ந்தவர்கள். இந்தச் சாதிகளும் அமைப்புகளும் நாட்டின் பெரும்பான்மையான இந்துக்கள் எனச்சொல்லப்படும் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை ஒரு போதும் இந்துக்களாகவும் சமமான சமூக – மத உரிமை உடையவர்களாவும் நடத்தியதே கிடையாது. சதி முதலிய பெண்ண்டிமைத்தனமும், பார்ப்பனிய சநாதன வருணாசிரம – சாதிய தர்மமுமே இந்தக் கும்பலின் கண்ணோட்டமாக உள்ளது.

இந்து ராஷ்டிரம் எத்தகையாத இருக்கும் என்பதை இந்து மதவெறி பாசிஸ்டுகள் இப்போதே நிரூபித்துவிட்டார்கள். பத்திகையாளர்கள் மீதான தாக்குதலும் நாடு முழுவதும் சிறுமான்மையினர் உயிரோடு எரிப்புதும் சான்றுகளாக விளங்குகின்றன. ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் உண்மை என்று எழுதவும் பேசவும் முடியும்; அதுதான் இராமராஜ்ஜியத்தில் கருத்துச் சுதந்திரம். சிறுபான்மையினருக்கு சமூக, மத, பண்பாட்டு உரிமைகள் மட்டுமல்ல, வாழும் உரிமையே மறுக்கப்படும் என்று காட்டி விட்டார்கள்.

அது மட்டுமல்ல, இந்து மதவெறி பாசிச ஆட்சியை நிறுவி தங்களது ஆதிக்கம், சுரண்டல் நலன்களைத் தக்க வைத்துக் கொள்ள, நீடித்துக் கொள்ள தரகு அதிகார முதலாளிகளும் ஏகாதிபத்தியங்களும் பழைய – புதிய நிலப் பிரபுக்களும் ஊட்டி வளர்த்து வருகின்ற நச்சுப் பாம்புகளே இந்த பார்ப்பன – பனியா அமைப்புகள்.

ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறு அடகு வைக்கும் நரசிம்மராவ் அரசின் புதிய பொருளாதாராக் கொள்கைகளால், உழைக்கும் மக்கள் என்றும் இல்லாத அளவு சுரண்டலுக்கும், விலையேற்றத்திற்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் ஆளாகி ஆலையில் சிக்கிய கரும்பாக அவதிப்பட்டு வருகின்றனர். மதவெறியைத் தூண்டி இப்பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பி அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிப் படுகொலை செய்து கொள்ளும் பாதையில் தள்ளிவிடுவது; இதன் மூலம் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை உறுதிப்படுத்திக் கொள்ள ஏகாதிபத்தியங்கள், தரகு அதிகாரமுதலாளிகள் பழைய – புதிய நிலப்பிரபுக்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இதுதான் இந்த இந்து மதவெறி பாசிஸ்டுகளின் உடனடி நோக்கமாகும்.

இதுவரை தேசவிரோத – பயங்கரவாத – பிரிவினைவாத பீதியூட்டி நியாயமான தேசிய இன, ஜனநாயக உணர்வுடைய சக்திகளை அடக்கி ஒடுக்கும்படி கோரி அரசியல் ஆதாயம் அடைந்து வந்தது இந்த பார்ப்பன – பனியா பாசிச கும்பல். இப்போது இந்த நாட்டின் நீதி – நிர்வாகம், அரசியல் அமைப்பு, சட்டத்திட்டங்கள், மரபு – நியதிகள் எதையுமே மதியாத தமது வெறிச் செயல்கள் மூலம் இவர்கள் தாம் உண்மையான வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள், தேசதுரோகிகள், பிரிவினைவாதிகள், சமூகவிரோதிகள், தீவிரவாதிகள், வகுப்புவாதிகள் என்று நாட்டுக்குத் தம்மை அடையாளங் காட்டிக் கொண்டு விட்டனர்.

பாபர் மசூதியை இடித்து, நாடெங்கும் மதவெறிப் படுகொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் இசுலாமிய மக்களின் மத உணர்வைப் புண்படுத்தி ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்கள். இந்து – இசுலாமிய மக்களிடையே நிலவி வந்த சகோதரத்துவ உணர்வு – ஒருமைப்பாட்டின் மீது திரிசூலத்தைப் பாய்ச்சி அவநம்பிக்கையையும், பிளவையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

படிக்க : அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வரை மசூதியை இடிக்க மாட்டார்கள்; பிரச்சினையை உயிருள்ளதாக இழுத்தடித்து அரசியல் ஆதாயம் அடைய முயலுவார்கள் என்றுதான் நாம் உட்பட அரசியல் நோக்கர்கள் கருதினோம். இந்த முறையும் மசூதியை முற்றாக இடித்துவிடக் கூடாது; தடைகளை மீறி மசூதியை இடிக்கும்போது மத்திய போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தும்; கணிசமான கரவேகர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்; அவர்களுக்குத் தியாகிப் பட்டங்கட்டி, மீண்டும் அஸ்திகலச ஊர்வலங்கள் நடத்த அனுதாப அலையைக் கிளப்பி ஆதாயம் அடையலாம் என்பதுதான் ஒரு பிரிவினரது நோக்கம். ஆனால் பா.ஜ.க ஆளும் நான்கு மாநிலங்களிலும் லஞ்ச ஊழல் பதவிச் சண்டையிலும் கோஷடித் தகராறிலும் சிக்கியதால் அதன் ‘தூய்மை’ வேடம் கலைந்து அம்பலப்பட்டுப்போனது. அதோடு சமசரப் பேச்சு, நீதிமன்ற முடிவு ஆகிய எதையாவது ஏற்கும்படியான நிர்பந்தம் அதிகரித்து வருவதைக் கண்டார்கள். எனவே முந்திக் கொண்டு தமது சதித் திட்டத்தை அமலாக்கிவிட்டார்கள்.

ஆதிக்கத்தை கைப்பற்றவும், அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் பஞ்சமா பாதகங்களைச் செய்வது குற்றமல்ல என்று இந்த இந்து மதவெறி பாசிஸ்டுகளின் மூதாதையர்களும் ஆசான்களுமான மனுவும், கௌடில்யனும் போதித்தார்கள். அதையே அவர்களின் சந்ததியினர் இப்போது கடைப்பிடித்துள்ளனர். நாட்டின் சட்டம் ஒழுங்கையும், நீதியையும் வழுவாது கடைப்படிப்போம் என்று வாக்களித்து, நாட்டையும் மக்களையும் நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள். வேறெதையும் விட இந்த நம்பிக்கைத் துரோகத்துக்காவது தண்டிக்கப்பட வேண்டிய இல்லை, இல்லை பழிவாங்கப்பட வேண்டிய கொடிய எதிரிகளாக இவர்களை நாடும் மக்களும் கருத வேண்டும்.

புதிய ஜனநாயகம், ஜனவரி – 1993