Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 133

ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – Documentary

தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான டிசம்பர் 21 அன்று அவரை நினைவு கூர்வோம்.

சான் லெனினுக்கு பிறகு பாட்டாளி வர்க்க ரஷ்யாவை வழி நடத்தினார் தோழர் ஸ்டாலின். சோசலிச கட்டுமானத்தை கட்டியெழுப்பினார். 1945 ரஷ்யாவை சூழ்ந்த இட்லரின் பாசிச இருளை, உழைக்கும் மக்கள் உட்பட சிகப்பு படையை (Red Army) கொண்டு கிழித்தெரிந்தார். அவரது வாழ்கை வரலாற்றை ”ஸ்டாலின் சகாப்தம்” என்ற ஆவணப்படமாக என்பது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த ஆவணப்படத்தை உள்ளடக்கம் மாறாமல் புதுப்பித்து தற்போது வெளியிடுகிறோம்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் நாடு முழுவதும் பரவி வரும் இத்தருணத்தில் மீண்டும் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.

ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம்

ஆவணப்படத்தை பாருங்கள்! பகிருங்கள்!!

தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!

டிசம்பர் 21, உலகில் வேறு எந்தத் தலைவர்களையும் விட முதலாளித்துவத்தால் மிக அதிகமாக தூற்றப்பட்டவரும், அதேபோது உலகம் முழுக்க சுரண்டப்படும் கோடிக்கணக்கான மக்களால் இன்றைக்கும் நேசிக்கப்படுபவருமான தோழர் ஸ்டாலினுடைய 144வது பிறந்த தினம்.

லெனின் தலைமையில் நடத்தி முடிக்கப்பட்ட புரட்சியைக் காப்பாற்றுவது மற்றும் சோசலிசத்தைக் கட்டியமைப்பது ஆகிய மிகப்பெரிய பொறுப்புகள் லெனினுக்குப் பிறகு சோவியத் யூனியனின் இரண்டாவது தலைவரான தோழர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் சோவியத் யூனியனின் தலைவராக தோழர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதல் உலகப்போரினாலும், உள்நாட்டுப் போரினாலும் நொறுங்கிக் கிடந்த நாட்டை தோழர் லெனின் உருவாக்கிய புதிய பொருளாதாரக் கொள்கை மீண்டும் உயிர்ப்பித்தது. அதன் பிறகு தோழர் ஸ்டாலின் பாட்டாளி வர்க்கம் மற்றும் உழவர் வர்க்கத்தின் துணையோடு உலகின் முதலாவது சோசலிச சமுதாயத்தைக் கட்டமைக்கும் போராட்டத்தைத் தொடங்கினார்.


படிக்க : ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – டீசர்


தோழர் ஸ்டாலினின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் சோவியத் மக்களின் முழுமையான ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டன. முதலாளித்துவ நாடுகளில் 1930-களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம் உலகநாடுகளில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு நேர்மாறாக சோசலிச சோவியத் யூனியன் இயந்திரத் தொழில் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. தொழிலாளர்கள் தங்களது சோசலிசத் தாய்நாட்டிற்காக விருப்பப்பூர்வமாக உழைத்தனர். இன்னொரு பக்கம் கிராமப்புறங்களில் கூட்டுப்பண்ணை அமைப்பு உறுதிப்படுத்தப்பட்டு வறுமையும், பாதுகாப்பு இன்மையும் பரிபூரணமாக ஒழித்துக்கட்டப்பட்டது.

ஏகாதிபத்திய முதலாளித்துவ நெருக்கடிகளால் ஜெர்மனியிலும், இத்தாலியிலும் உருவான பாசிசம் மிகப்பெரும் அபாயமாக உலகை அச்சுறுத்தியது. ஹிட்லரும், முசோலினியும் ஐரோப்பாவை விழுங்கிவிட்டு உலகையே விழுங்குவதற்காக களமிறங்கினர். பாசிச ஓநாய்கள் சோவியத் யூனியன் மீது பாய்ந்தன.

பாசிசத்தை வீழ்த்தி உலகைக் காப்பதுதான் முதற்கடமை என்ற நிலையில், அந்தப் பொறுப்பை தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் எடுத்துக் கொண்டது. சோவியத் யூனியனை ஹிட்லர் வீழ்த்தி விடுவான், கம்யூனிசத்தை ஒழித்துவிடலாம் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் கண்ட கனவு சுக்குநூறானது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தலைமையில் இரண்டு கோடி சோவியத் மக்கள் தங்களது இன்னுயிரைக் கொடுத்து பாசிச ஹிட்லரை வீழ்த்தி உலகைக் காத்தனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகெங்கும் எழுந்த தேசிய விடுதலைப் போராட்டங்கள், சோசலிசப் புரட்சிகளுக்கு தோழர் ஸ்டாலின் செய்த உதவிகள் மகத்தானவை. உலகின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் விடுதலைக்கு நேசக்கரம் நீட்டினார்.

இரண்டாம் உலகப் போரினால் நாடு மிகக் கடுமையாக சிதிலமடைந்திருந்தது. கிராமங்கள், நகரங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் நாஜிகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மக்களின் துணைகொண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பினார்.

தோழர் ஸ்டாலின் காலத்தில் சோசலிசம் எவ்வாறு கட்டியமைக்கப்பட்டது என்பதைப் பற்றி சோவியத் யூனியன் சென்று நேரில் பார்த்து ஆய்வு செய்த அமெரிக்க எழுத்தாளர் அன்னா லூயிஸ்ட்ராங் பின்வருமாறு கூறுகிறார். “கடந்த சகாப்தத்தைத் திரும்பிப் பார்க்கும்போது மக்கள் அதனை ஸ்டாலின் சகாப்தம் என்று சொல்லக்கூடும். கோடிக்கணக்கான மக்கள் உலகத்தின் முதல் சோசலிச நாட்டைக் கட்டமைத்தனர். ஆனால் அந்த வேலைக்குப் பொறியாளராக இருந்தவர் அவர்தான். அந்தக் காலம் முதற்கொண்டு எல்லாவற்றின் மீதும் அவர் முத்திரை பதிந்து இருந்தது.

எனது மேற்குலக நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்வேன்: அது வரலாற்றின் மிகவும் செயலூக்கமுள்ள சகாப்தங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஒருக்கால் அவற்றிலேயே ஆகச் சிறந்ததாக அது இருக்கக்கூடும். ருஷ்யாவின் வாழ்க்கையை மட்டுமல்ல, உலகத்தின் வாழ்க்கையையே அது மாற்றியது”.

சோசலிச பொருளாதாரத்தில் மட்டுமல்ல, விஞ்ஞானம், கலை இலக்கியம் யாவற்றின் வளர்ச்சியிலும் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தார், தோழர் ஸ்டாலின் அறிவியல் வளர்ச்சியை சோசலிசத்தை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பது என்ற அம்சத்துடன் இணைத்தார். இதன் மூலம் தனது ஆழமான தத்துவார்த்தப் புரிதலை நடைமுறையில் இணைத்தார்.

முதலாளித்துவச் சுரண்டலை மீண்டும் நிலைநாட்டும் நோக்கில் கட்சிக்குள் திரிபுவாதம் தலைதூக்கிய காலத்தில் அதனை எதிர்த்து தீவிரமான தாக்குதலைத் தொடுத்தார். திரிபுவாதத்தை எதிர்த்த தோழர் ஸ்டாலினின் விடாப்பிடியான போராட்டம் என்பது உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு அவர் அளித்த மிகப்பெரும் கொடையாகும்.

தோழர் ஸ்டாலினுக்குப் பின்னர் வந்த ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான குருசேவ் தலைமையிலான திரிபுவாதக் கும்பல் அவரை இருட்டடிப்பு செய்வதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. அவரது நினைவுச் சின்னங்களை அழித்தனர். கிரெம்ளினில் லெனின் நினைவகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை அங்கிருந்து அகற்றி வளாகத்திற்கு வெளியில் புதைத்தனர். இன்னொரு பக்கம் முதலாளித்துவம் அவரைப் பற்றி ‘கொடுங்கோலர்’, ‘சர்வாதிகாரி’ என்று அவதூறு பரப்புவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடானகோடி உழைக்கும் மக்களின் மனங்களில் இருந்து அகற்றி விடலாம், கம்யூனிசத்தை ஒழித்துவிடலாம் என்று பகற்கனவு காண்கிறது.

இதையெல்லாம் தாண்டி கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் உள்ளங்களில் தோழர் ஸ்டாலின் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் என்றைக்கும் விட இப்போது தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார். முதலாளித்துவம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கி உலகெங்கும் பாசிசத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அழிவுப்பாதையில் இவ்வுலகைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை, பாசிச அடக்குமுறைகள், போர்கள் என உலகம் செல்வதை நாம் கண்ணுறுகிறோம்.


படிக்க : இன்றைய பாசிச சூழலில் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார்! | தோழர் அமிர்தா | வீடியோ


பாசிசத்தை வீழ்த்தியதிலும், சோசலிசத்தைக் கட்டமைத்ததிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு திரிபுவாதத்தை எதிர்த்த உறுதியான போராட்டத்திலும் மாபெரும் வரலாற்றுப் பங்களிப்பை தோழர் ஸ்டாலின் நமக்கு வழங்கியுள்ளார். அதனால், பாட்டாளி வர்க்க ஆசான்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

உலகம் பாசிசத்தை எதிர்நோக்கியுள்ள இன்றைய நெருக்கடியான சூழலில் தடைக்கல்லாக திரிபுவாதம் உழைக்கும் மக்களைக் கவ்விக் கொண்டுள்ளது. ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தேவையில்லை’ என்று கூறி பாசிசத்திற்கு பாதந்தாங்கும் போக்கு மேலோங்கியுள்ளது.

மக்கள் அடித்தளம் கொண்ட போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்பதன் மூலம் திரிபுவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பாதையில் உறுதியோடு பயணிக்க தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதியேற்போம்!

(ஆண்டு குறித்த விவரப் பிழை திருத்தப்பட்டுள்ளது – 21.12.2024)

இன்றைய பாசிச சூழலில் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார்! | தோழர் அமிர்தா | வீடியோ

டிசம்பர் 21, 2022 தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வது மிகவும் அவசியமாகிறது.

ஏனெனில் அன்றைய முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக உலகம் முழுவதும் அச்சுருத்தி வந்த பாசிச ஹிட்லர்-முசோலினியை வீழ்த்திய பெருமை தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவையே சேரும்… பாசிசத்திற்கு எதிரான வெற்றி வெரும் ரஷ்யாவிற்கு மட்டும் பயனுள்ளதாக அமையவில்லை ஒட்டுமொத்த உலகையுமே பாசிசத்தில் கோரப்பிடியில் இருந்து காப்பாற்றியுள்ளது சோவியத் யூனியன்.

இன்று மீண்டும் உலக அளவிலும், குறிப்பாக இந்திய அளவிலும் வளர்ந்துவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த, தோழர் ஸ்டாலின் வழியில் பயணிப்போம் என்று இக்காணொலியில் அறைகூவல் விடுக்கிறார் தோழர் அமிர்தா அவர்கள்…

இன்றைய பாசிச சூழலில் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார்! | தோழர் அமிர்தா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

கர்நாடக சட்டசபையில் சாவர்க்கர் படம் திறப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

20.12.2022

கர்நாடக சட்டசபையில் சாவர்க்கர் படம் திறப்பு!
தென்னிந்தியாவில் இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையானது கர்நாடகா !

கண்டன அறிக்கை

ர்நாடக சட்டசபையில் நேற்றைய தினம் (19.12.2022) இந்து மகா சபா பயங்கரவாதி சாவர்க்கரின் படம் திறக்கப்பட்டு இருக்கிறது.  இதற்கு எதிராக அம் மாநில காங்கிரசு மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர் கட்சிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம் துளியும் மதிக்காத மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் சாவர்க்கரின் படத்தை வைக்காமல் தாவூத் இப்ராஹிம் படத்தையா வைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், பெண்கள், இந்த நாட்டின் உழைக்கும் மக்கள், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சித்தாந்தத்தை  கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ், இந்துமகா சபா ஆகியவை  பயங்கரவாத அமைப்புகளே.

காந்தியை கொன்றது முதல் மாலேகான், சம்ஜவ்தா உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளிலும்  இந்துமகா சபா, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நேரடியாக பங்கு பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்பின்  தலைவரான சாவர்க்கரின் படம்தான் கர்நாடக சட்டசபையில் இடம்பெற்று இருக்கிறது.


படிக்க : நம்ம ஸ்கூல் திட்டம்! நமக்கல்ல; கார்ப்பரேட்டுக்கு கல்வியை தாரை வார்க்கவே! | மக்கள் அதிகாரம் 


ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு அது தொடர்பான திட்டமிட்ட கலவரங்கள் உருவாக்கப்பட்டது கர்நாடகாவில் தான்,  சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு கலவரங்கள் இந்து மத வெறியர்களால் உருவாக்கப்படுவதும் கர்நாடகாவில் தான். ஹலால் இறைச்சிக்கு தடை விதிப்பதற்கான மசோதாவை கர்நாடக சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் உற்று நோக்கும்போது வடஇந்தியாவைப் போலவே தென்னிந்தியாவில் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக கர்நாடகாவை மாற்றுவதற்கான முயற்சிகள் வெகு வேகமாக நடந்தேறி வருகின்றன என்பதே அறிய முடிகிறது. அதற்கு ஒரு முன்னோட்டமாகத்தான் சாவர்க்கரின் படம் சட்டசபையில் வைக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களையும் தலித்துக்களையும் பெண்களையும் ஒடுக்க வேண்டும், நாயகத்தை சிதைத்து மதச்சார்பின்மையை ஒழிக்க வேண்டும் என்ற பார்ப்பன – இந்து பாசிச  சித்தாந்தத்தின் தலைவனான சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டிருக்கிறது, இனியும் இந்த சட்ட மன்றத்தை ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று கூறுவதில் ஏதாவது துளியளவாவது நியாயம் இருக்கிறதா?

சட்டமன்ற நாடாளுமன்ற மாண்புகளை’ எல்லாம் தூக்கி குப்பைத் தொட்டில் வீசிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநில அரசாங்கங்களை சீர்குலைத்து ஆட்சிகளை கவிழ்ப்பதும், இன்னொரு புறம் ஆளுநர்கள் மூலம் ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பதையும் மிகவும் சிறப்பாக செய்து வருகின்ற இந்த மோடி அமித்ஷா பாசிச கும்பலிடம் சாவர்க்கர் படம் குறித்து முறையிட முடியுமா?

இனியும் இந்த சட்டமன்ற, நாடாளுமன்றம்  மூலமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க  பாசிசத்தை வீழ்த்த முடியும் என்றும் நாம் நினைத்தால் அதைவிட மூடநம்பிக்கை எதுவும் இருக்க போவதில்லை.


படிக்க : குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !


ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் மக்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் மக்களையும் தலித்துகளையும் பெண்களையும் மீனவர்களையும் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் அடுத்தடுத்து தன்னுடைய காவி- கார்ப்பரேட் பாசிச ஆட்சிக்காக பலி கொடுக்க தயாராக வைத்திருக்கிறது மோடி – அமித்ஷா பாசிச கும்பல். அடுத்த ஆட்சி வந்தால் இந்த நிலைமை மாறிவிடும் என்று இனியும் நினைப்பதற்கு துளியும் இடமில்லை.

இந்து ராஷ்டிரத்தை அறிவிப்பதற்கான தேதியை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பாசிஸ்டுகள். தேர்தல் பாதைக்கு வெளியே மாபெரும் பாசிச எதிர்ப்பு மக்கள் போராட்டங்களை கட்டி அமைத்து, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை உருவாக்கி இந்து மதவெறி பாசிஸ்டுகளை களத்தில் – தெருவில் எதிர்கொள்ள வேண்டும்.

அம்பானி-அதானி பாசிசம் வீழ்த்தப்படுவதே நம்முடைய முதல் இலக்காக இருக்க வேண்டும் என்றும் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9963266321

ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – டீசர்

தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான டிசம்பர் 21 அன்று அவரை நினைவு கூர்வது இந்த சூழ்நிலையில் மிகவும் அவசியமாகிறது.

1945 ரஷ்யாவை சூழ்ந்த இட்லரின் பாசிச இருளை, உழைக்கும் மக்களை கொண்டு சிகப்பு படையை(Red Army) கொண்டு கிழித்தெரிந்தவர் தோழர் ஸ்டாலின். அவரது வாழ்கை வரலாற்றை ”ஸ்டாலின் சகாப்தம்” என்ற ஆவணப்படமாக என்பது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த ஆவணப்படத்தை புதுப்பித்து, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் நாம் நாடுமுழுவதும் பரவி வரும் இத்தருணத்தில் மீண்டும் டிசம்பர் 21, 2022 அன்று வெளியிடவிருக்கிறோம். அந்த ஆவணப்படத்தில் டீசரை தற்போது வெளியிடுகிறோம்.

ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – டீசர்

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள்!!

நம்ம ஸ்கூல் திட்டம்! நமக்கல்ல; கார்ப்பரேட்டுக்கு கல்வியை தாரை வார்க்கவே! | மக்கள் அதிகாரம்

20.12.2022

நம்ம ஸ்கூல் திட்டம்!
நமக்கல்ல; கார்ப்பரேட்டுக்கு கல்வியை தாரை வார்க்கவே!

பத்திரிகைச் செய்தி

முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது என்று கூறி ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்ற திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி ஆகியவற்றின் மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


படிக்க : அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!


இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசினால் மட்டுமே அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்தி விட முடியாது என்று கூறியுள்ளார். நாம் வாங்குகின்ற ஒவ்வொரு பொருளிலும் பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கு செஸ் வரி என்று தனியாக விதிக்கப்படுகிறது. அவ்வாறு விதிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட நிதி அனைத்துமே பள்ளிக் கல்விக்கு என்று முழுமையாக செலவிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பான வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

எவ்வளவு செலவானாலும் சரி, எவ்வளவு கடன் ஆனாலும் சரி ஒரு அரசு என்பது கல்வியை இலவசமாக எந்த அளவுக்கு தருகிறதோ அந்த அளவுக்குத்தான் ஒரு நாடு முன்னேறும். அதை விட்டுவிட்டு மக்களை பார்த்து நீங்கள் பணம் கொடுங்கள் எங்களால் மட்டும் எதுவும் செய்ய முடியாது என்று கேட்பதெல்லாம், மொத்தமாக பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி துறையையும் தனியாரின் கீழ் கொண்டுவந்து அதனை பணம் கொடுக்கக்கூடிய லாபமான தொழிலாக மாற்றுவதே. அதுதான் கல்வி தனியார்மயத்தின் நோக்கம்.

அதற்கு தனியார்மய, தாரளமய, உலகமயக் கொள்கைகளை ஏற்ற செயல்படும் ஒன்றிய  அரசும் தமிழ்நாடு அரசும் கொஞ்சமும் சளைத்தது அல்ல.

ஒரு சமூகம் என்ற வகையில் அரசு பள்ளிக்கு தேவையான உதவியை செய்வது என்பது வேறு; பள்ளிக் கல்வித் துறையை காப்பாற்ற வேண்டிய கடமையிலிருந்து அரசு விலகிச் செல்வது என்பது வேறு. இப்போது நடந்து கொண்டிருப்பது கல்வித்துறையை காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து அரசு கழன்றுக் கொண்டு அதன் வழியாக கார்ப்பரேட்டுக்கு பள்ளிக் கல்வியை தாரை வார்ப்பதுதான்.


படிக்க : கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்! | மக்கள் அதிகாரம்


எல்லாவற்றுக்கும் மக்கள்தான் படி அளக்க வேண்டும் என்றால் எதற்கு அரசு? எதற்கு வரி?

வார்த்தை ஜாலங்களுக்கு முடிவு கட்டுவோம். அரசுப் பள்ளியை காப்பாற்ற வேண்டுமென்றால் கல்வி தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு அடிப்படையாக இருக்க கூடிய மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை ஒழித்து கட்ட வேண்டும் என்பதை நோக்கி நம்முடைய அனைத்துப் போராட்டங்களும் இருக்க வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

திருநெல்வேலி: மருத்துவமனை பணியார்களுக்கு ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் 88 பேர் டிசம்பர் 19, 2022 காலை 7 மணி அளவில் ஊதியம் முறையாக வழங்காததை கண்டித்தும், ஊதியம் முறையாக வழங்கக் கோரியும் மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலியில் ரூ.150 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி, 2019-ல் மதுரையில் நடைபெற்ற விழாவில் இருந்து திறந்து வைத்தார். பிரதமரின் சுவஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டம்-3 இன் கீழ் மத்திய அரசு சார்பில் ரூ.120 கோடி, மாநில அரசு சார்பில் ரூ.30 கோடி என மொத்தம் ரூ.150 கோடியில் இம்மருத்துவமனை தொடங்கப்பட்டது.

8 தளங்களுடன் 20 ஆயிரத்து 64 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாரத் மேன்பவர் எனும் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டனர். நான்கு வருடமாக முறையான சம்பளம் எதுவும் அவர்களுக்கு தரப்படுவதில்லை என்று பணியாளர்கள் கூறுகின்றனர். 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் வழங்குவது, ஈ.எஸ்.ஐ, பி.எஃப் போன்றவை பிடித்தாலும் அது எந்த கணக்கிலும் காட்டப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர்.

படிக்க : சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!

கடந்த அக்டோபர், நவம்பர் இருமாதங்களும் சம்பளம் போடவில்லை. இந்த மாதமும் 20-ஆம் தேதி நெருங்குகிறது இன்னமும் சம்பளம் ஏறியபாடில்லை. ஒருநாளைக்கு சம்பளம் ரூ.250 தரப்படுகிறது. ஆனால் ஒருநாள் விடுப்பு எடுத்தாலோ ரூ.400 பிடித்தம் செய்கிறார்கள். இதற்குமுன் முறையான சம்பளம் கேட்டு சென்ற 4 தொழிலாளர்களை மிரட்டி அனுப்பி உள்ளது ஒப்பந்த நிறுவனம். அதன்பின் 7 பேர் வேலையை விட்டு நின்றுவிட்டனர். தொடர்ந்து சம்பளப் பிரச்சினை நீடிக்கவே பொறுத்துப் பார்த்த 3 ஷிப்ட்-ல் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.

செய்தியறிந்து சென்ற மக்கள் அதிகாரம் இணைச் செயலாளர் கின்ஷன் தனியார்மயத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் நிலை பற்றியும், இம்மாதிரியான போராட்டங்களால் மட்டுமே நம்முடைய உரிமைகளை நாம் மீட்க முடியும் என்று போராடும் தூய்மைப்பணியாளர்களிடம் பேசினார்.

போராட்டத்தை கண்டு ஆடிப்போன மருத்துவமனை நிர்வாகம் முதலில் நான்கு பேரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், பணியாளர்கள் அனைவர் முன்னிலையிலும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர். வேறுவழியின்றி நிர்வாகம் ரோட்டுக்கு வந்தது. பேச்சுவார்த்தையின் போது பணியாளர்களை வேலைக்கு எடுத்த பாரத் மேன்பவர் நிர்வாகத்தை சார்ந்த யாரும்வரவில்லை. விசாரித்தால் அந்த நிறுவனம் தற்போது ஒப்பந்தத்தில் கிடையாது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது பணியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படியானால் தாங்கள் யாருக்கு கீழ்தான் வேலை செய்கிறோம் என்று கேட்டனர் பணியாளர்கள். மருத்துவமனை நிர்வாகமோ மலுப்பலாகவே பதில் கூறியது. பின்னர் வரும் வெள்ளிக்கிழமை சம்பளம் அக்கவுண்ட்டில் ஏற்றப்படும் என்று உறுதி அளித்தது. வெள்ளிக்கிழமை சம்பளம் ஏறவில்லையானால் திங்கள்கிழமை மறுபடி போராட்டம் தொடரும் என்ற எச்சரிக்கையுடன் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் மருத்துவமனை கட்ட ரூ.150 கோடி ஒதுக்கிய மத்திய, மாநில அரசுகள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை ஏன் ஒப்பத்த முறையில் பணிக்கு அமர்த்துகிறது? இதன் காரணம் என்ன? இவர்களை நிரந்தரமாக பணியிலமர்த்தி மாதம் முறையான சம்பளம் தருவதில் அரசுக்கு என்ன பிரச்சினை வந்துவிடும்? என்ன பிரச்சினை என்றால் இங்குதான் அரசின் கொள்கை தலையிடுகிறது. அதுதான் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான தனியார்மயக் கொள்கை!

பணியாளர்களில் ஆரம்பித்து செவிலியர்கள், மருத்துவக் காப்பீடு என்று ஒவ்வொரு பிரிவும் தனியார்மயப்படுத்தி இறுதியில் மொத்த மருத்துவத்துறையும் தனியாருக்கு தாரை வார்க்கப்படப்போகும் கொடுமை நம்மை எட்டுவதற்கு நாம் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதன் ஆரம்ப புள்ளிதான் இது. நாளை முழுவதும் தனியாருக்கு என்றானபின் இன்று உழைத்த காசையே தர மறுக்கும் முதலாளிகள், நாளை நம்மை பார்த்து ஓசியில் உனக்கு நான் மருத்துவம் பார்க்க வேண்டுமா என கண்டிப்பாக கேட்பார்கள். அப்போது அரசு மருத்துவமனையை மட்டும் நம்பியிருக்கும் ஏழை, எளிய மக்கள் மருத்துவம் பார்க்க வழியின்றி தவிப்பார்கள். அந்த நாள் வராதிருக்க வேண்டுமானால் இந்த நாளில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

படிக்க : மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

தனியார் வசம் ஒப்படைத்தால்தான் நிர்வாகம் நன்றாக நடக்கும் என்கிற சில தனியார்மய ஆதரவாளர்களின் எண்ணங்களுக்கு இப்போராட்டம் ஒரு சாட்டையடி. தன் நிறுவனத்தின் கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் தரக் கூட துப்பில்லாமல், அவர்களின் உழைப்பை சுரண்டிதான் இந்நிறுவனங்களும் அதன் முதலாளிகளும் வயிறு வளர்க்கின்றனர். அரசு நிர்வாகமும் தனியார்மயத்திற்கு ஆதரவான கொள்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

கொரோனா சமயத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பூ போட்டு வணங்கி ஏமாற்று நாடகம் நடத்திய மோடியின் பா.ஜ.க கட்சியினர் ஒருவர் கூட இந்த போராட்டத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை.

மருத்துவமனை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவர்கள், பொதுமக்கள் அனைவரும் இணைந்திருக்க வேண்டிய நேரமிது. புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இம்மாதிரியான பொருளாதார போராட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதன் மூலமே ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்குமான தீர்வை நோக்கி நகர முடியும் என்பதை உணர்ந்து போராட்டக்களத்தில் இறங்க வேண்டிய தருணமிது!

தகவல்:
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605.

பாஜக மோடி ஆட்சியின் எட்டாண்டுகால கார்ப்பரேட் கரசேவை: வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடி!

டந்த 5 வருடத்தில் வங்கியில் வழங்கப்பட்ட கடன்தொகையில் வசூலிக்க முடியாத 10.09 லட்சம் கோடி வாராக்கடனை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். மேலும், இந்த வாராக்கடன்களுக்கு காரணமான 3,312 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேசி மழுப்பியிருக்கிறார். கார்ப்பரேட் சேவகர் மோடியின் எட்டாண்டுக்கால ஆட்சியில் மட்டும் 12 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2008-2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் வாராக்கடன் தள்ளுபடி 32 ஆயிரம் கோடி, 2014-2022 வரையிலான பாஜக ஆட்சியியில் வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடியாகும். சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வாராக்கடன் 365 சதவிதம் அதிகரித்துள்ளது எனவும், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியை ஒப்பிடுகையில் 5 லட்சம் கோடியிலிருந்து 18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும்” குற்றம்சாட்டினார்.

மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடிக்கும்மேல் வங்கி மோசடி நடந்துள்ளது. 2015-2019 வரை மட்டும் வங்கிக்கடன் மோசடி செய்த 38 பெருமுதலாளிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதில் மெகுல் சோக்சி, நீரவ் மோடி போன்ற மோடிக்கு நெருக்கமான குஜராத்திகளும் அடங்குவர்.

படிக்க : ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

பொதுத்துறை வங்கிகளில் 2019-2020-ஆம் ஆண்டில் 4,410 கடன் மோசடிகளும், 2020-2021-ஆம் ஆண்டில் 2,903 மோசடிகளும் நடைபெற்றுள்ளன. தனியார் வங்கிகளில் 2019-2020-ஆம் ஆண்டில் 3,065, 2020-2021-ஆம் ஆண்டில் 3,710 மோசடிகளும் நடந்துள்ளன. இந்த லட்சனத்தில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன.

கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்க வங்கிகள் கடன் கொடுப்பதும் பின்னர் வசூலிக்க முடியவில்லை எனக்கூறி வாராக்கடனாக அறிவித்து தள்ளுபடி செய்வதும் பல வருடங்களாக நடக்கும் கேலிக்கூத்துதான். அது, மோடி ஆட்சியின் தீவிர கார்ப்பரேட் சேவையின் விளைவுதான் வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடி. உலக அளவில் வாராக்கடன் விகிதத்தில் இந்தியா இரண்டாவது இடம்.

மறுகாலனியாக்க கொள்கை அமல்படுத்திய கடந்த 30 ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. உலகப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ் அறிக்கையின்படி, 1990-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் யாருமில்லை, 2000-ஆம் ஆண்டில் எண்ணிக்கை 9 பேர், 2015-ஆம் ஆண்டில் 90 பேர், 2022-ஆம் ஆண்டில் 166 பேர் என இந்திய பணக்காரர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

குறிப்பாக, கோவிட் நெருக்கடி காலங்களில் உயர்மட்டத்தினர் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது (2020 மார்ச் முதல் 2021 நவம்பர் வரையுள்ள 20 மாதங்களில் இந்தியாவில் கோடிஸ்வரர்களின் சொத்து 23.14 லட்சம் கோடி) என ஆக்ஸ்பார்ம் அறிக்கை கூறுகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி, “இந்தியாவில் அமைப்பு சார்ந்த துறையில் தொழிலாளர்களில் ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது” என கூறுகிறது. சில நிறுவனங்களில் சி.இ.ஓ.க்கள் கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் நிலையில், மாதம் ரூ.15,000 குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களும் உள்ளனர். சில தனியார் நிறுவனங்களில் ஊதிய இடைவெளி 1000 சதவிதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஊதிய இடைவெளியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இவை, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருவதன் விளைவே.

***

இன்று உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அதானியும், மோடி அரசும் கூட்டணி அமைத்து நாட்டை கொள்ளையிட்டு வருகின்றனர். கிராமத்தில் இருக்கும் சாமானியர் ஒருவர் கூட “அதானிக்கே எல்லாம் டெண்டரும் கொடுக்கிறாங்க” என்று கூறுவது மோடி அரசு அம்பலப்பட்டு நிற்பதற்கு மிக சிறந்த உதாரணம்.

2001-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த காலத்திலிருந்து மோடிக்கும் அதானிக்குமான உறவு தொடங்கிவிட்டது. 2009-ஆம் ஆண்டில் தனித்தனியான 11 நிறுவனத்தை மட்டுமே வைத்திருந்த அதானி, கடந்த 10 வருடத்தில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதிலும், கடந்த 5 வருடத்தில் மட்டும் 35 நிறுவனங்களை வாங்கப்பட்டுள்ளார்.

வங்கியில் உள்ள மக்கள் பணத்தை கார்ப்பரேட் முதலைகளுக்கு கடனாக மோடி அரசு வாரியிரைத்து வருகிறது. அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது போலவே கடனும் உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் அதிக கடன் சுமை கொண்டதாக அதானி குழுமமே உள்ளது. 2022 மே மாத கணக்கின்படி, அதானிக்கு இருக்கும் கடன் 2 லட்சத்து 22 ஆயிரம் கோடி.

ஒருபக்கம் அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க கடுமையாக உழைக்கும் மோடி அரசு, மறுபக்கம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு என்ற பெயரில் சிறு, குறு தொழிலை அழிப்பதும், சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் மீது வரி விதிப்பது மூலமாக சட்டப்பூர்வமாக பகற்கொள்ளையை அரங்கேற்றி வருகிறது.

படிக்க : கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!

தமிழகத்திலும் திராவிட மாடல் அரசும் பள்ளி கல்வியில் தனியாரை நுழைக்க இல்லம் தேடிக் கல்வி, வானவில் மன்றம் போன்ற கவர்ச்சித் திட்டங்களை கொண்டுவருவது, குடிநீர் வழங்குவதில் சூயஸ் என்ற தனியார் கொள்ளைக்கு ஆதரவு கொடுப்பது, மாநகராட்சி நிரந்தர ஊழியர்களின் பணியை ஒழித்து ஒப்பந்த ஊழியர் முறைக்கு மாற்றுவது, பள்ளி, கல்லூரி நிரந்தர ஆசிரியர்கள் பணியை ஒழித்து தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என ஒவ்வொரு துறையிலும் தனியாருக்கு தாரைவார்த்து கொண்டிருக்கிறது.

ஒன்றிய அரசும், மாநில அரசும் அனைத்து துறைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து கொண்டிருக்கும் அதேவேலையில், நாட்டை அடிமையாக்கும் தனியார்மய – தாராளமய –உலகமய – மறுகாலனியாக்க கொள்கைக்கெதிரான போராட்டங்கள் அன்றாடம் நடப்பதும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இவை கட்டாயம் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக்கு கொண்டுசெல்லும் என்பது யாவரும் அறிந்ததே.

இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று யாரும் கனவுக்கான முடியாது. சமீபத்தில் பொருளாதர நெருக்கடியால் இலங்கை மக்களின் எழுச்சி, மங்கோலியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டம், ஈரானில் மத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என உலகெங்கும் அரசுக்கு எதிராக நடக்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் நமக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுக்கின்றன.

காவி – கார்ப்பரேட் கும்பல் மக்களிடம் அம்பலப்பட்டு வருகின்றனர். உழைக்கும் மக்களின் போராட்டங்களை கட்டியமைத்து வளர்த்தெடுப்பதே அடுத்தக்கட்ட நகர்வாக இருக்க முடியும்.

குழலி

பெண்ணை தனிச்சொத்தாகவும் நுகர்வுப் பொருளாகவும் கருதும் இச்சமூகத்தில் நாம் இனியும் வாழமுடியுமா என்ன? 

நம்முள் ஊறியிருக்கும் ஆணாதிக்கத்தைக் கொஞ்சம் உரசிப் பார்ப்போமா?

யிலில் ஒரு பெண்ணின் மீது குடிகாரன் ஒருவன் எச்சிலைத் துப்புகிறான், எதிர்த்து கேள்வி கேட்ட அப்பெண்ணைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறான். அப்பெண்ணுக்கு ஆதரவாகச் சிலர் வருகிறார்கள். அப்படிவந்த ஒருவர் அந்த குடிகாரனை அடித்துப் புரட்டி எடுக்கிறார். அப்பெண்ணும் அவரது குடும்பமும் அவருக்கு நன்றி சொல்கிறது.

பெண்ணை காப்பாற்றியவர் அமர்ந்து நடந்தவற்றை நிதானமாக யோசிக்கும் போதுதான் ஒரு விஷயம் புரியவருகிறது. குடிகாரன் அப்பெண்ணை தகாத முறையில் திட்டினான்; அப்பெண்ணைக் காப்பாற்ற வந்தவரோ, “குடிகாரன் முறைதவறிப் பிறந்ததால்தான் இப்படி நடந்துகொள்கிறான்” என்று இவரும் அவனது தாயான பெண்ணை இழிவுபடுத்துகிறார். குடிகாரன் அப்பெண்ணைத் தகாத வார்த்தைகளால் பேசியதைவிட, இன்னமும் மோசமான, பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பெண்ணை காப்பாற்றியவர் பயன்படுத்தியிருக்கிறார்.

குடிகாரனுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்? எச்சிலைத் துப்புவதற்கும் திட்டுவதற்கும் இப்பெண் ஏற்றவள் என்பது குடிகாரனின் கருத்து. தவறு இவன் செய்யவில்லை, அது அவன் தாயின் குற்றம் என்பது காப்பாற்ற வந்தவரின் கருத்து. இப்படி எல்லாம் யோசித்துத்தான் அவர் இவ்வார்த்தைகளைப் பேசினாரா? யோசிக்காமல் ஒருவர் இவ்வார்த்தைகளைப் பேசியிருக்கிறார் என்றால் பரிசீலிக்க வேண்டியது அதைத்தான். யோசிக்காமல், திட்டமிடாமல், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வருகின்ற வார்த்தைகள்தான் உண்மையாக ஒரு மனிதனை சமூகத்திற்கு அறிமுகப்படுத்துபவை.

சந்திரமுகி படம் பார்த்திருக்கிறீர்களா? மனைவியைச் சந்தேகப்படும் கணவன், அதைப் பயன்படுத்திக் கொண்டு இரட்டை அர்த்த வசனங்களுடன் விளையாடும் நாயகன். இந்தக்காட்சிகளை எல்லாம் புன்முறுவலின்றி பார்க்க முடிகிறதா? அதெப்படி இருக்க முடியும்? வடிவேலுவின் உடல்மொழியை பார்க்கும்போது சிரிப்பு வராதா என்ன?


படிக்க : ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!


பெண்ணை பாலியல் நுகர்வுப்பொருளாகக் கருதும் நகைச்சுவையை நம்மால் எப்படி ரசிக்கவும் மகிழவும் முடிகிறது? இப்படி ஒரு கேள்வியை யாராவது வைத்துக்கேட்டால் என்ன பதில் கூறுவோம்? கேட்டது பொதுவெளியாக இருப்பின் சற்று தடுமாறுவோம். அதுவே சமூகவலைத்தளமாக இருப்பின், “உனக்கென்ன? எல்லாத்தையும் அரசியலாக பார்க்க முடியுமா? நீ என்ன யோக்கியமா?…” இப்படி ஏதாவது பதிலளித்துவிடலாம். பதில்கள் எவ்வாறு இருப்பினும் சரி, வெளியில் தவறென்று கூறி மீண்டும் மீண்டும் அதையே ரசிக்கும், ஆழ்மனதில் அதை நியாயப்படுத்தும் உணர்வுக்குப் பெயர்தான் என்ன?

பத்து முதல் பதினான்கு வயதுள்ள இளைஞர்கள், தனக்கு முன்னே சென்று கொண்டிருந்த ஐம்பது வயதுடைய பெண்ணின் பாலுறுப்புகளை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். தன் தாயின் வயதையொத்த பெண் என்பது தெரியாமலா இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்? எல்லாம் தெரியும், இது தவறில்லை என்பது அவர்களின் எண்ணம். பெண், அவர் எந்த வயது பெண்ணாக இருந்தாலும் சரி, அவர் தனக்காக தன்னுடைய நுகர்வுக்காகவே படைக்கப்பட்டவர் என்பதுதான் ஆணாதிக்கம்.

ஆதித்யா தொலைக்காட்சி என்று நினைக்கிறேன். அது ஒரு நேரலை நிகழ்ச்சி, இளம் வயது ஆண், பெண் என இருவர் தொகுத்து வழங்குகின்றனர். எதிர்முனையில் ஒரு ஆண் நிகழ்ச்சி தொகுப்பாளரான பெண்ணின் ரசிகர் என்றும் அப்பெண்ணை தங்கள் குடும்பம் அனைவருக்குமே  பிடிக்கும் என்று கூறி, அப்பெண் தொகுப்பாளரைத் தனது வீட்டுக்கு அழைக்கிறார். அப்பெண்ணும் “கண்டிப்பாக” என்கிறார். உடனே ஆண் தொகுப்பாளர், “என்ன நீ ஹனிமூன் ட்ரிப்புக்கு பிளான் செஞ்சுட்டியா?” என்கிறார். உடனே சுதாரித்துக்கொண்டு தெரியாமல் செய்த தவறு என்று சிரித்துக் கொண்டே அவ்விஷயத்தை கடந்துசென்றார். அப்பெண்ணும் ஏற்றுக்கொள்கிறார். ஒரு தவறு செய்துவிட்டு எவ்வித குற்ற உணர்வு இல்லாமல் அதைச் சிரித்துக்கொண்டே செல்ல முடிகிறது? அதை எப்படி அப்பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது? ஏனெனில் இதுதான் விதி.

சாதியை, மதத்தை, ஒரு நபரைப்பற்றி இழிவாகப் பேசினால் அடிவிழும் என்ற பயம் பெண்ணைப் பற்றிப்பேசும் போது ஏன் வரவில்லை? தன்னைப் பற்றி எப்படி இழிவாகப் பேசினாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்பது அந்த விதியினுள் இருக்கும் உள் விதி.

கணவன் தன் மனைவியைத் தேவடியா என்றழைக்கலாம் அது தவறில்லை, மற்றொருவர் அவ்வாறு கூறக்கூடாது என்பதுதானே இன்னொரு விதி விதி’ . அந்த விதி அவ்வப்போது விதிவிலக்காகிறது. விதிவிலக்குகள் பின்னாளில் விதிகளாகின்றன.

அறியாமல், தெரியாமல் எப்படி ஒரு பெண்ணைப் பார்த்து இவ்வாறு கூற முடியும்? ஏனென்றால் அவ்வாறு கூறுவதற்கு எந்த ஒரு பெண்ணும் தகுதியானவர்தான் என்பதுதான் ஒரு ஆணின் கருத்து. அதைப் பொது வெளியில் கூறும் நபர் சாதாரண காலங்களில் எப்படி நடந்து கொள்வார்? நாம் எப்படி நடந்து கொள்கிறோம்? அந்த நிகழ்ச்சியை பார்த்து அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டவர்களை விட அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்போர்தான் அதிகமாக இருப்போர்.

ஒருவர் முகநூலில் தோழிகள் இல்லையே என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைகிறார். அவருக்கு ஏகப்பட்ட லைக்குகள், நக்கலும் நையாண்டியுமான கமெண்ட்டுகள். இன்னொருவர் தனது முன்னாள் காதலியின் பிரிவைப்பற்றி பினாத்துக்கிறார். பதிவைப்போடுவோர்களும் லைக் போட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல; எப்போதும் உலகை தன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு திரிபவர்கள்; எல்லாவற்றுக்கும் கருத்துக்களும் ஆலோசனைகளும் கூறுபவர்கள் அவர்கள்.

பெண் பற்றிய இக்கருத்தைப் புறக்கணித்துவிட்டு அவர்களின் பொதுக் கருத்துக்களை எங்ங்னம் பரிசீலிப்பது?

ஜெயலலிதாவையும் காயத்ரி ரகுராமையும் அரசியல் ரீதியில் விமர்சிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் அவர்களை பாலியல் ரீதியாக விமர்சிப்பதில்தான் பலருக்கும் அளவற்ற, மட்டற்ற மகிழ்ச்சி; அதில் ஒரு இன்பம்.  பெண்ணை வீழ்த்திவிட்ட நினைப்பு. காரில் தொங்கியபடி சென்ற மேயர் பிரியா, கீழே விழுந்தால் எப்படி இருக்கும் தெரியுமா என்று ஆபாசமாக, இழிவாகப் பேசும் சங்கிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

முகநூலில் பெண்கள் விதவிதமாக தங்களின் படங்களைப் பதிவிடுகிறார்கள் என்று அங்கலாய்ப்பவர்கள் சுயமோகி ஆண்களின் புகைப்படங்களைப் பார்த்து என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? கேட்டால் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டாமா என்பார்கள். ஆக, உலகில் உள்ள எல்லா பெண்களையும் காப்பாற்றுவதுதான் ஆண்களின் வேலை. யார் அந்த பணியை ஆண்களுக்கு வழங்கியது? நாங்களாகவே அதை எடுத்துக்கொண்டோம்.

பிறப்பின் அடிப்படையில் ஆண்களாகவே எடுத்துக்கொண்ட உரிமை அதுவல்லவா? பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களுக்கு மற்ற சாதியினர் கட்டுப்பட்டதை எதிர்ப்போர் இதை  எதிர்ப்பதில்லை.

பல்வேறு அமைப்புகளிலிருந்து பாலியல் மற்றும் சீரழிவு நடவடிக்கைகளுக்காக வெளியேற்றப்பட்டவர்களுள் பெரும்பாலோர் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று கவனியுங்கள். தாங்கள் செய்த தவறைப்பற்றி எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், தாங்கள் ஏதோ சிந்தாந்த ரீதியிலான போராட்டம் நடத்தியதைப்போலவும் அதற்கு ஜனநாயகம் இல்லாமல் போனதால் வெளியேற்றப்பட்டோம் போன்ற தோற்றத்தை அல்லவா காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்? நான் செய்ததெல்லாம் தவறே இல்லை, தவறாகப் பழிவாங்கப்பட்டுவிட்டேன், ஜஸ்ட் எச்சரித்துவிட்டு அனுப்ப வேண்டிய விசயம் அல்லவா? யார்தான் சரியாக இருக்கிறார்கள் என்று அடுத்த கணைகளைத் தயாராக வைத்திருப்பார்கள். செய்த தவறுகளைப்பற்றி கொஞ்சமும் வருந்தாத இவர்களைப்பற்றி என்ன முடிவுக்கு வர முடியும்?

தன்னுடைய மனைவியைத் தெருவில் வைத்து தகாத வார்த்தைகளால் வசை பாடி அடித்துத் துவைத்து பிறகு அந்தச் சுவடே இல்லாமல் ஊருக்கு, உபதேசம் செய்பவர்களை என்ன சொல்வது? அதெல்லாம் அப்படித்தான் இருக்கும், அவர் அரசியலில் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று மட்டும் நாம் ஒதுங்க முடியுமா?

சவுக்கு சங்கர் ஒரு பாலியல் குற்றவாளி என்பது ஊரறிந்த செய்தி. அது தொடர்பாக பொது மன்னிப்போ குற்ற உணர்வோ துளியும் இல்லாதவர். சவுக்கு சங்கர் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு, அப்பெண்ணுக்கும் குழந்தைக்கும் இதுவரை எவ்வித பராமரிப்பு நிதி கூட கொடுக்க மறுப்பவர், என்றாலும் அவரின் ஆணாதிக்க வக்கிர செயல்பாடு விவாதத்திற்கு வரவில்லை. ஆனாலும் இன்றைக்கு மிகப்பெரிய ‘போராளியாக’ வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சவுக்கு சங்கரின் ரசிகர்களிடம் இது குறித்துக் கேட்டுப்பாருங்கள். இதெல்லாம் ஒரு விசயமே கிடையாது என்பார்கள். ஒரு பெண்ணை ஏமாற்றி தெருவில் விட்டுவிட்டு வந்த அயோக்கியனை எப்படி உங்களால் ஏற்றிப்போற்ற முடிகின்றது? அதுதான் உள்ளுக்குள் இருக்கும் ஆணாதிக்க – நுகர்வு பண்பாடு. இப்படி பெண் பித்தர்களாக இருப்பதையே பெருமையாகவும் சாதனையாகவும் கருதும் இச்சமூகத்தில் இன்னமும் பல சவுக்கு சங்கர்களுக்கு நிச்சயம் இடம் இருக்கும்.

0-0-0

அரசியல் என்றால் என்ன? மோடியை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் மட்டும்தானா? பாலியல் சீரழிவை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அரசியல் இல்லையா என்ன? இதையெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, பலரும் வேற என்ன செய்ய முடியும் என்று விலகிப்போகிறார்கள் அல்லது மௌனத்தை முன்வைத்து விட்டுப்போவார்கள்?

அனல் மேலே பனித்துளி திரைப்படத்தில் பல காட்சிகள் எதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கும். ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டால் அதன் மீதான அரசின் பார்வை என்ன?  சமூகத்தின் பார்வை என்ன அதை எப்படித் தீர்ப்பது? என்ற கேள்விக்கு அப்படத்தில் பதில் ஏதும் இல்லை.  ஒரு பெண்ணின் அந்தரங்கப் படங்களைப் பார்ப்பதும் பலருக்கும் பகிர்வதுமான இச்சமூகம் இனியும் நீடித்திருக்கத் தகுதியுடையதுதானா? இந்தக் கேள்வியைத்தான் நாம் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்.

ஆணாதிக்கத்தையும் நுகர்வுப் பண்பாட்டையும் எப்படி ஒழிப்பது?

பெண்ணை தன்னுடைய உடமையாக – சொத்தாகக் கருதும் இந்த நிலப்பிரபுத்துவ பண்பாட்டையும்; எல்லாவற்றையும் அனுபவித்து விட்டுத் தூக்கியெறி என்ற மறுகாலனியாக்கப் பண்பாட்டையும் ஒழித்துக்கட்டாமல் அனல் மேலே பனித்துளி நாயகி போல கவுன்சிலிங் கொடுப்பதன் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? பேசாமல் இருப்பதற்கு கொஞ்சம் பேசுவதே மேல் என்பதுதான் பிரச்சினை.

ஆணாதிக்கம் அதற்கு அடிப்படையான நிலப்பிரபுத்துவம், நுகர்வுப்பண்பாடு அதற்கு அடிப்படையான மறுகாலனியாக்கம் இவற்றை எப்படி மாற்றுவது? ஆணாதிக்க மற்றும் நுகர்வுப்பண்பாட்டில் இருந்து பெண் விடுதலை என்பது, உலகில் உள்ள அத்தனை கோடி ஆண்களிடமும் சென்று நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்வதன்மூலம் நடைபெறுவதல்ல; தனிநபர் மாறினால் எல்லாம் மாறும் என்ற மூடநம்பிக்கை நமக்கு எதையும் தரப்போவதில்லை.

ஆணாதிக்கத்துடனும் நுகர்வுப் பண்பாட்டுடனும் சமரம் செய்து அல்லது பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் சலுகை பெற்று வாழ முடியுமா என்ன?

பக்கத்து வீட்டுப்பையன் தானே என்று நம்பி அனுப்பிய 3 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து சூட்கேசில் அடைத்து துண்டாக்கி வீசினான் தஷ்வந்த். அவன் குற்றவாளி என்றால், அவனை அவ்வழக்கிலிருந்து விடுவிக்கச் சொத்துக்களை விற்ற அவனின் தாய் தந்தையரை என்ன செய்வது? இறுதியில் அவன் தன் தாயையே கொன்று போட்டான்.


படிக்க : ஆணாதிக்க சமூகத்தால் பொருளாதாரம் மற்றும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் !


இப்படிப்பட்ட தாய் தந்தையர் நிறைந்த உலகல்லவா இது? கார்கி படத்தில் வருவது போல எத்தனை பேர் பாலியல் குற்றவாளி என்று தெரிந்தும் தன் தந்தையைப் போலீசில் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள்? பொள்ளாச்சியில் பெண்களை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டோர்க்கு ஆதரவாக அவர்களின் குடும்பத்தினர் வழக்காடு மன்றத்தில் வந்து சண்டையிடவில்லையா?

ஆணாதிக்க வெறியனிடம் – பொறுக்கியிடம் சொல்லிப் புரிய வையுங்கள் அது உங்கள் திறமை. இருக்கட்டும், அவனின் தாயிடம் என்ன சொல்லி புரிய வைக்கப்போகிறீர்கள்?

பெண்ணை தனிச்சொத்தாகவும் நுகர்வுப் பொருளாகவும் கருதும் இச்சமூகத்தில் நாம் இனியும் வாழமுடியுமா என்ன? முடியாது என்ற முடிவுக்கு வராத வரையில் மூட நம்பிக்கைகளை நம்பிப்பயணம் செய்து படுகுழியில்தான் விழவேண்டும். மனிதரை சகமனிதராக மதிக்காத இந்த சமூகம் அழித்து, ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அது புரட்சியைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? தனிச் சொத்துடமையை ஒழிக்காமல் பிற்போக்கு விழுமியங்களை அறுத்தெறியாமல் சுரண்டலை அடித்து நொறுக்காமல் பெண்விடுதலை மட்டும் எப்படி சாத்தியம்?

புரட்சிதான் தீர்வு என்று பேசும்போது பலரும் கிண்டல் செய்வார்கள். எல்லாவற்றுக்கும் புரட்சி தீர்வு என்கிறீர்கள், இப்போதைக்கு என்ன ஆக வேண்டுமோ அதைப் பேசமாட்டீர்கள் என்பார்கள். மக்களுக்குச் சாத்தியமானதைப் பேசுங்கள் என்பார்கள்? பார்ப்பனிய – ஆணாதிக்க – நுகர்வுப் பண்பாட்டில் திளைத்திருக்கும் இச்சமூகத்தில் சாத்தியமான மாற்று என்ன என்பதைச் சாத்தியமானவர்கள்தான் கூற வேண்டும்.

தமிழ்

விட்னஸ் (Witness): திரை விமர்சனம் (Movie Review) | தோழர் அமிர்தா | வீடியோ

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் சாதியக்கொடுமை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இந்த நவீன காலத்திலும் பல்வேறு தூமைப்பணியாளர்கள் – கழிவுஅகற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பில்லாத காரணத்தினாலும், விஷவாயு தாக்கியதாலும் இறந்திருக்கிறார்கள். அவர்களின் உயிருக்கே பாதுக்கப்பில்லாத இந்த வேலையில் கூட அவர்களுக்கு மிகவும் சொற்பமான சம்பளமே வழங்கப்படுகிறது. இதுபோன்று சமூக அவலங்களை பற்றி கூறும் படங்கள் சமகாலங்களில் வருகின்றன. படம் வந்ததும் பேசு பொருள் ஆகிறது. அதையும் தாண்டி அந்த அவலங்களுக்கு எதிரான போராட்டங்கள் சமூகத்தில் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

லக்குழி மரணம் தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் விட்னஸ் திரைப்படத்தை பற்றிய திரை விமர்சனத்தை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சிற்பி திட்டம்-வானவில் மன்றம்: கல்வித்துறையில் கார்ப்பரேட்-ஐ நுழைக்கும் திராவிட மாடல் அரசு!

சிற்பி திட்டம் என்ற பெயரில் ஒட்டு மொத்த மாணவர்களையும் குற்றவாளிகளாக்குகிறது திமுக அரசு. கல்வி நிலையங்களுக்குள் போலீசை நுழைக்கிறது. சமூக குற்றங்கள் பெருகுவதற்கு முதன்மை காரணமே போலீசுதான் இவர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த போகிறார்களாம்!

வானவில் திட்டம் என்ற பெயரில் மாணவர்களுக்கு கலை அறிவியில் பயிற்சி எடுக்க கார்ப்பரேட்-என்.ஜி.ஓக்களை பள்ளிக்குள் நுழைக்க திட்டமிடுகிறது திராவிட மாடல் அரசு.

சிற்பி திட்டம் மற்றும் வானவில் திட்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

டந்த சில நாட்களாகவே பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் கொலைகார வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்தின் விளம்பரங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

“போராட்டம் என்பது அழிவை நோக்கி, தூத்துக்குடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, பசுமையான தூத்துக்குடி – 1.25 லட்சம் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன” என விளம்பரப்படுத்தப் பட்டிருக்கின்றன.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசும் சதி செய்து வருகிறது என்பதை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

உலகளவில் அதிகரித்து வரும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!

0

த்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்ததற்காக சிறையில் அடைக்கப்படுவது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டிசம்பர் 1, 2022 நிலவரப்படி உலகம் முழுவதிலும் 363 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது சென்ற ஆண்டை விட 20 சதவிகிதம் அதிகமாகும்.

இந்த தகவல் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to protect Journalists – CPJ) டிசம்பர் 14 அன்று வெளியிட்ட “2022 சிறை கணக்கு” அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எதேச்சாதிகார அரசுகள் ஊடக சுதந்திரத்தின் குரல்வலையை தொடர்ந்து நசுக்கி வருகின்றன. ‘பொய் செய்தி’-யை தடுக்க சட்டம் இயற்றுகிறோம் என்ற பெயரிலும், கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடுப்பதன் மூலமும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை உளவு பார்ப்பதன் மூலமும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது” என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) மேலும் கூறுகிறது.

பத்திரிகையாளர்களை கைது செய்வதில் உலக அளவில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 62 பத்திரிகையாளர்கள் தற்போது சிறையில் இருக்கின்றனர். மாசா அமினி என்ற இளம்பெண் ‘ஒழுக்கநெறி’ போலீசால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வெடித்தது. அங்கு போராட்டம் துவங்கப்பட்ட பின்பு மட்டும், 22 பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 49 பத்திரிகையாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்நிகழ்வாகி வரும் பத்திரிகையாளர் படுகொலைகள்!


இந்தியாவில் 7 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1992 ஆம் ஆண்டு முதல் சி.பி.ஜே சிறை கணக்கெடுப்பு நடத்த தொடங்கியதிலிருந்து இதுதான் புதிய உச்சம். அந்த எழுவர்: ஆசிப் சுல்தான் (Aasif Sultan), சித்திக் கப்பன் (Siddique Kappan), கவுதம் நவ்லகா (Gautam Navlakha), மனன் தர் (Manan Dar), சஜாத் குல் (Sajad Gul), ஃபஹத் ஷா (Fahad Shah) and ரூபேஷ் குமார் சிங் (Rupesh Kumar Singh). இந்த எழுவரில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் நான்கு பேர்.

ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டம் (Jammu and Kashmir Public Safety Act) என்ற ஆள்தூக்கி சட்டத்தின் கீழ் ஆசிப் சுல்தான், ஃபஹத் ஷா மற்றும் சஜாத் குல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சில தனி வழக்குகளில் பிணை கிடைத்தும் சிறையிலேயே இருக்கிறார்கள்.

தற்போது சிறையில் இருக்கும் எழுவரில் 6 பேர் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மூவர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிப் சுல்தான் – காஷ்மீர் நரேட்டர் (Kashmir Narrator) என்ற பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார். அவர் ஆகஸ்டு 27, 2018 என்று கைது செய்யப்பட்டார். அவர் 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களாக சிறையில் இருக்கிறார். ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் பிணை கிடைத்தது. ஆனால் பிணை வழங்கப்பட்ட மறுகணமே அவர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (PSA) கைது செய்யப்பட்டார்.

சித்திக் கப்பன் என்ற சுதந்திர ஊடகவியலாளர் அக்டோபர் 5, 2020 இல் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்களாக சிறையில் உள்ளார். ஹத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிரான போராட்டங்களில் இவருக்கு பங்கு இருப்பதாக கூறி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. ஆனால், பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் பதியப்பட்டுள்ள வழக்கின் காரணமாக அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார்.

கவுதம் நவ்லகா – சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான இவர் ஏப்ரல் 14, 2020 அன்று புனே போலீசால் எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர், 30 மாதங்கள் சிறையில் இருந்தார்.

மனன் தர் என்ற சுதந்திர ஊடகவியலாளர் அக்டோபர் 10, 2021 அன்று கைது செய்யப்பட்டு 1 வருடம் மற்றும் 2 மாதங்களாக சிறையில் உள்ளார்.


படிக்க: சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !


சஜாத் குல் – காஷ்மீர் வாலா (Kashmir Walla) பத்திரிகையில் பணிபுரியும் இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் சிறையில் இருக்கிறார். போராட்டம் ஒன்றைப் பற்றி ட்வீட் செய்த காரணத்திற்காக இவர் முதலில் கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் இவருக்கு பிணை கிடைத்தது; ஆனால் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (PSA ) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஃபஹத் ஷா – காஷ்மீர் வாலா (Kashmir Walla) பத்திரிகையில் பணிபுரிந்து வந்த இவர் “பொய் செய்தி” பரப்பினார் என்று ராணுவம் குற்றம்சாட்டியைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் கைது செய்யப்பட்டார். இவர் மீது வேறு இரண்டு வழக்குகளும் பதியப்பட்டன. இரண்டு வழக்குகளில் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது; ஆனால் மூன்றாவது வழக்கின் காரணமாக இன்னும் சிறையிலேயே இருக்கிறார்.

ரூபேஷ் குமார் சிங் – ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரான இவர், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது; கூடுதலாக இரண்டு வழக்கங்களும் பதியப்பட்டுள்ளன.

உலக அளவில் பத்திரிகையாளர்கள் அரசு எந்திரத்தால் ஒடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது என்பதையே இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. குறிப்பாக பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கிறது காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு. ஊபா போன்ற கொடுமையான சட்டத்தை பத்திரிகையாளர்கள்-முற்போக்கு எழுத்தாளர்கள்-ஊடகவியளாளர்கள்-ஜனநாயக சக்திகள் மீது பயன்படுத்தி அவர்களை செயல்படவிடாமல் முடக்குவதே இவர்களின் நோக்கம்.

பொம்மி

அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!

அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு !
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி,  அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் !
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் !

திருவள்ளுவர், பெரியாரைத் தொடர்ந்து அம்பேத்கரை காவிமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளுக்கு எதிராக களத்தில் நின்று அவர்களை ஓடஓட விரட்டியடித்து இருக்கிறது தமிழ்நாடு. 2009-ல் ஈழத்தமிழர்களுக்கு எதிராக வன்மத்தைக்கக்கிய சுப்பிரமணியசாமியை முட்டையால் அடித்து ஓடவிட்ட தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள்தான் இப்போதும் களத்தில் அர்ஜுன் சம்பத்தை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறார்கள்.

அம்பேத்கரின் சிலைக்கு காவி அணிவிக்க மாட்டேன் என்று உயர்நீதிமன்றத்தில் உறுதி மொழி அளித்துவிட்டு அதற்கு மாறாக, கும்பகோணத்தில் அம்பேத்கர் காவியும் பட்டையுடன் இருப்பது போன்ற சுவரொட்டியை ஒட்டியிருக்கிறார் அர்ஜூன் சம்பத். அப்படிப்பட்ட அயோக்கியனைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மற்ற அமைப்பினரும்  அம்பேத்கர் மணிமண்டபத்தினுள் நுழையவிடாமல் தடுத்தனர்.


படிக்க : அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜுன் சம்பத்: ஓட ஓட விரட்டியடித்த தமிழ்நாடு!


அம்பேத்கரை இழிவுபடுத்துவதை எதிர்த்த அனைவரையும் கடுமையாகத்தாக்கி கைது செய்த போலீசு, பலநூறு போலீசை கொண்டுவந்து பத்திரமாக அர்ஜூன் சம்பத் அம்பேத்கரை இழிவுபடுத்த உதவி புரிந்திருக்கிறது. வெற்றி, தோல்வி என்பதல்ல பிரச்சினை, எதிரிக்கு எதிராக, இந்துமதவெறி பாசிசத்துக்கு எதிராக களத்தில் நின்றோமா என்பதுதான் முக்கியம்.

ஓரண்டுக்கு முன்னர் வி.சி.க.வின் தலைவர் திருமாவளவன் பெண்கள் குறித்து மனுநூலில் உள்ளதை விளக்கியதை திரித்து, “திருமாவளவன் பெண்களை தவறாகப்பேசுகிறார்” என்றார்கள். பிறப்பின் அடிப்படையில் யாரும் உயர்வு தாழ்வு இல்லை என்றுரைத்த திருவள்ளுவருக்கு, பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கிய சாதியையும் வர்ணத்தையும் காப்பாற்றும் இந்துமத வெறியர்கள் காவி உடையை அணிவித்து அவரை இந்து சாமியாராக்க முயன்றனர். மனுதர்மத்தை மேற்கோள் காட்டிப்பேசிய ஆ.ராசாவை குறிவைத்தார்கள். மேற்கண்ட அத்தனைப் பிரச்சினையிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளை புறந்தள்ளியதுடன் காறி உமிழ்ந்தது. பார்ப்பனியத்தை எதிர்த்தவர்களுடன் இணைந்து நின்றது தமிழ்நாடு.

யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இல்லாத ஆளுநர் அம்பேத்கரை சீர்திருத்தவாதி என்று கூறிக் கொண்டே இழிவுபடுத்துகிறார். அர்ஜுன் சம்பத்தும் ஜெய்பீம் என்று கூறிக் கொண்டே அம்பேத்கருக்கு காவி உடை போடுகிறார். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வைச் சேர்ந்த பலரும் அம்பேத்கர் இந்துமதத்தலைவர் என்கிறார்கள். காசி தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் தமிழ் பண்பாட்டின் உயிர் நாடியான வேத, பார்ப்பன எதிர்ப்பு என்பதை திட்டமிட்டு நீக்கம் செய்கிறார்கள்.

 

தமிழ்நாட்டிலிருந்து 2000-க்கும் மேற்பட்டவர்களை மக்களின் வரிப்பணத்தில் காசிக்கு அழைத்துச் சென்று காவிச் சாயம் பூசுகிறார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய திருக்குறளுக்கு, நானே நான்கு வர்ணத்தையும் உருவாக்கினேன் என்று கூறிய கீதையின் சாயத்தை பூசுகிறார்கள். தமிழுக்கு நாங்கள் தொண்டாற்றுகிறோம் என்ற பெயரில் தமிழினத்தையும் தமிழ் பண்பாட்டையும் அழிக்க, வாளேந்திய காலம் முடிந்து போனதால் தற்போது நூல்” ஏந்தி வருகிறார்கள்.

நாம் அமைதியாக இருந்தோம் என்றால், அம்பேத்கர் நூலுக்கும் பார்ப்பன பொழிப்புரை எழுதுவார்கள். நான் கொல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டால் அது மனுஸ்மிருதியை எழுதிய மனுவாகத்தான் இருக்க முடியும் என்ற அம்பேத்கரின் கருத்துக்களைக்கூட மனுஸ்மிருதியின் கருத்துக்களாக திரிப்பார்கள்.

திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தொடர்ந்து இழிவுபடுத்தப்படும் பாசிச போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிஸ்டுகளுக்கு எதிராக களத்தில் நின்று விரட்டியடிக்க வேண்டும். அதைத்தான் தமிழ்நாடு செய்திருக்கிறது, இனியும் செய்ய வேண்டும். நம்முடைய எதிர்ப்பு வேத – சனாதன – பார்ப்பனிய, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்புடன் நின்று விடுவதாக இருக்கக் கூடாது.


படிக்க : மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !


அம்பானி – அதானி பாசிச கும்பலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலும் இணைந்து மறுகாலனியாக்க கொள்கைகளுக்காக நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர்,  பெண்கள்,  தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரின் உரிமையை மறுத்து கொத்தடிமைகளாக்கி பார்ப்பன, பனியா – கார்ப்பரேட்டுகளின் பாசிச ஆட்சியை நிலை நிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிஸ்டுகளின் நோக்கம்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிஸ்டுகளை வீழ்த்த வேண்டும் என்றால் ஒவ்வொரு தெருவிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொழிற்சாலைகளிலும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைத்து அவர்களை களத்தில் சந்திக்க வேண்டும். அதுவே நம்முடைய தலையாய கடமையாகவும் இருக்க வேண்டும்.

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு – 99623 66321.

அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி

மிழக அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்காக வானவில் மன்றம் என்ற புதிய முயற்சியை தமிழக அரசு இந்த ஆண்டு உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் 13,210 அரசுப்பள்ளிகளில் இத்திட்டத்தைத் தொடங்கிவைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் அரசு ஆதி திராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது.

வானவில் மன்றம் என்பது அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின்மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு வரும்படியாக அவர்களைத் தயார்படுத்தும் ஒரு புதிய முயற்சி என்ற செய்தி நிலவிவருகின்றது. அதனை நாம் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுவது கல்விதருவதன் ஒரு பகுதியே. ஆனால் இந்தத் திட்டம் புதிது அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இது ஒன்றிய அரசுத் திட்டத்தின் வழியாக நிதி ஒதுக்கப்படக்கூடிய ஒரு  திட்டம்தான். பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள STEM (Science Technology Engineering and Mathematics) என்ற திட்டமே புதிய பெயரில் மீண்டும் வருகிறது. இதே திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு பள்ளிகளுக்கும் அதற்கான கருவிப்பெட்டிகள் (KIT) வழங்கிய நடைமுறை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது. அப்போது தன்னார்வலர்கள் என்றோ தொண்டு நிறுவனங்கள் என்றோ பள்ளிக்குள் எவரும் ஊடுருவவில்லை.

படிக்க : தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !

ஆனால் தற்போதைய வானவில் மன்றம் திட்டத்தில், வெளியிலிருந்து கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துவந்து நுழைக்கும் வேலையை பிராதானமாகச் செய்கின்றனர் அதிகாரிகள்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனரான சுதன் ஐஏஎஸ் அவர்கள் இதற்கான சுற்றறிக்கையை மாநிலம் முழுவதிலும் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அரசுப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம்  செயல்படுத்தப்படப் போவதாகவும் இதற்காக சிறந்த நிபுணர்கள் வந்து செயல்முறைகளைச் செய்துகாட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். யார் அந்தச் சிறந்த நிபுணர்கள்?

பள்ளிக்குள் அறிவியலைக் கற்று உயர்கல்வி பயின்று தேர்வு எழுதி ஆசிரியராக வருபவர்களிடம் இந்தத் திறன் இல்லையா என்று நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சிறந்த நிபுணர்கள் என்ற அடையாளத்துடன் பள்ளிகளுக்கு உள்ளே நுழைபவர்கள் கார்ப்பரேட்டுகள் என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த நிறுவனங்கள் அனைத்துமே நிதி பெற்றுக்கொண்டு பணியாற்றும் கார்ப்பரேட் அமைப்புகள். இந்த அமைப்புகளில் பயிற்சி பெற்றுள்ள ஊழியர்கள்தான் (தன்னார்வலர்கள் என்பது தவறு) சிறப்புப் கருத்தாளர்களாம்.

இந்த அமைப்புகளின் லோகோக்களைத் தாங்கித்தான் வானவில் மன்றங்களின் செயல்பாடுகளை வடிவமைத்துள்ளனர். இவர்களைத் தேர்வுசெய்ய கல்வித்துறையினருக்கு வழிகாட்டுவது யார் என்ற கேள்வியை நாம் எழுப்புவதே எழுவதேயில்லை. திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு, கார்ப்பரேட்டுகளை பள்ளிக்கல்வியில் நுழைக்கும் முறைக்குப் பெயர் என்ன?

கல்வித்துறையில் பணியாற்றும் இளங்கலை முதுகலை பயின்ற திறமையான ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அறிவியல் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களைக் கொண்டதுதான் தமிழக பள்ளிக் கல்வித்துறை. 12,000 ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து இத்திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியதாகவும் செய்திக்குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. அப்படியிருக்க ஆசிரியர்களைத் தயார்படுத்தும் பணியைச் செய்யாமல் அவர்களிடம் உள்ள திறமையை மாணவர்களுக்குக் கடத்த நினைக்காமல், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத ஏராளமான பணிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மறுபுறம் தன்னார்வலர்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்களைக் கொண்டு பள்ளிகளுக்குள் மாணவர்களிடையே பரிசோதனைகள் நடக்கும் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ளன. அங்கு ஆராய்ச்சிப் படிப்பு முடித்த பேராசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி மாவட்டந்தோறும் ஒன்றிய அளவில் அறிவியல் கணக்கு படித்த ஆசிரியர் பயிற்றுனர்கள் (BRT) ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை எல்லாம் புள்ளிவிவரக் கணக்குகளை எடுக்கவைத்துவிட்டு, பள்ளி ஆசிரியர்களையும் தகவல் சேகரிப்பு, புள்ளி விவரங்கள் சேகரிப்பு என திசைமாற்றி அனுப்பிவிட்டு கார்ப்பரேட்டுகளைப் பள்ளிக்குள் திட்டமிட்டு நுழைப்பதன் பின்னணி என்ன?

அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் ஏற்படுத்துவதுதானே அறிவியல் ஆசிரியர்களின் பணி? அதை அவர்கள் செய்யட்டுமே? கணக்குப் பாடத்தைக் கற்பிப்பதுதானே கணக்கு ஆசிரியர்களின் வேலை? அதையெல்லாம் அவர்கள் செய்யட்டுமே? அதைவிடுத்து தன்னார்வலர்கள் ஏன் இந்த இடங்களுக்கு வரவேண்டும்? இதற்காக வருபவர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட தொகை நிச்சயமாக வழங்கப்படும். இதற்காக 1.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு பள்ளிக்கும் முதல்கட்டமாக ரூபாய் 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் சோதனைகள் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து வாரந்தோறும் அந்தப் பாடத்தில் உள்ள தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கான உபகரணங்களை வாங்குவதாகவும் அவற்றைப் பயன்படுத்தி சோதனைகளை விளக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கற்பித்தல் பணியை ஆசிரியர்களிடம் விட்டுவிட்டு, எழுத்தர், கணக்கர், புள்ளிவிவரங்கள் சேகரிப்பவர், ஆதார் எண் இணைப்பவர் போன்ற பணிகளுக்கு இவர்களைப் போன்ற கார்ப்பரேட் நிறுவங்களை அரசு பயன்படுத்தலாமே?

நமக்கு எழக்கூடிய சில ஐயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

♦ ஆகா குரு (Aha Guru) என்பது எந்த அமைப்பு? (நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் அமைப்பு இது என்பது வெளிப்படை)

♦ Parikshan, AID INDIA மற்றும் சுடர் அமைப்பு இவர்களெல்லாம் யார்?

♦ எல்லோருமே கார்ப்பரேட் அமைப்புகள். கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் இவை. இந்தக் குறிப்பிட்ட அமைப்புகளை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்த அரசு யாரிடம் ஆலோசனை கேட்டது? எந்த அடிப்படையில் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது? இந்த நிறுவனங்கள் பள்ளிகளுக்கு அனுப்புகின்றவர்கள் அறிவியல் மற்றும் கணக்குத் துறையில் பெற்றுள்ள நிபுணத்துவம் என்ன?

♦ தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் (Tamilnadu Science and Technology Centres), ‌‌‌கோளரங்குகள் போன்ற அரசு  அறிவியல் நிறுவனங்கள் இருக்கின்றனவே! அவர்களை ஏன் இந்தத் திட்டங்களில் ஈடுபடுத்தவில்லை? சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், கோவை, திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அறிவியல் மையங்கள் இந்த வானவில் திட்டச்செயல்பாட்டில் ஈடுபடுத்தப்படாதது ஏன்?

♦ இந்த அரசு நிறுவனங்களின் லோகோக்கள் இல்லை வானவில் மன்றத் திட்ட அறிவிப்புகளில் இல்லை. ஆனால் கல்வி வியாபாரக் கார்ப்பரேட்டுகளின் லோகோக்கள்தான் வானவில் மன்றம் செயல்திட்டங்களின் முகப்பில் இடம்பெற்றுள்ளன.

♦ அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அறிவியல் இயக்கம் என்ற அமைப்பு அரசுப் பள்ளிகளுடன் நல்ல புரிதலையும் இணக்கத்தையும் பின்பற்றி அறிவியல் மனப்பான்மையைக் கொண்டுசேர்க்கும் விதமாகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. அதில் ஆயிரக்கணக்கான உண்மைத் தன்னார்வலர்கள் இயங்கி வருகின்றனர். நூற்றுக்கணக்கான பரிசோதனை முயற்சிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பல பத்தாண்டுகளாக அந்த அமைப்பினர் செய்துவருகின்றனர். அதைப்போன்ற அமைப்புடன் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்சிபெற்று வானவில் மன்றங்களை நிதிச்சுமையின்றிச் செயல்படுத்தலாம். இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கும் நிதியைப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம்.

படிக்க : ஆதார் எண் இணைக்கும் பணி ஆசிரியருக்கு தேவையா? | ஆசிரியர் உமா மகேஸ்வரி | வீடியோ

♦ இத்திட்டம் மாநில அரசால் மேற்கொள்ளப்படுகிறது எனில் இதற்கான நிதி மாநில அரசால் வழங்கப்படுகிறதா? முதல்வர் உருவாக்கிய திட்டம் எனில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுமா? அல்லது அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டமா?

♦ அரசுப்பள்ளிகளில் கல்வி வியாபார நிறுவங்களை உள்ளே நுழைத்து, அந்த நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை இழுக்கத் தூண்டில் போடவும் அதற்கான புள்ளிவிவரங்களை அந்த நிறுவனங்களுக்கு வழங்கவும் அரசே வாசல் திறந்து வைக்கிறதா? இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்ற கேள்விகளையும் முன்வைக்கிறோம்.

♦ ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

உமா, கல்விச் செயல்பாட்டாளர்
நன்றி: சுவடு இணையதளம்

disclaimer