Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 132

இந்தியாவின் பாசிஸ்டுகளை தோழர் ஸ்டாலின் வழியில் வெல்லவேண்டும்! | நாகை திருவள்ளுவன் | வீடியோ

துரை மாட்டுத்தாவணி அருகில் ராமசுப்பு அரங்கத்தில், டிசம்பர் 21 பட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளன்று “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆவணப்படம் உருவாக்கிய எழுச்சியில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், “மோடியை பிரதமர் ஆக்கியது அம்பானி அதானி தான் ஆதலால் இது அம்பானி அதானிகளின் தேசம்.

எப்படி பெரியாரின் பெயர் கேட்டால் சங்கிகள் அலறுகிறார்களோ அதேபோல்தான் ஸ்டாலின் பெயர் கேட்டால் உலக முதலாளித்துவம் அலறுகிறது. செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைவர் ஆனார். சிறுவயதிலேயே மார்க்சியம் படித்ததற்காக தண்டிக்கப்பட்டார். பாசிசத்தை வீழ்த்தி சோசியலிசத்தை நிருவிக்காட்டினார்.

அதேபோல் இந்தியவின் பாசிஸ்டுகளை நாம் வீழ்த்த வேண்டும். ஹிட்லரின் படுகொலைகளை நேரடியாக ஆதரித்தன இந்த ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல். பல்வேறு பாசிச படைகளையும் வைத்துக்கொண்டு கார்ப்பரேட்டுகளுக்கு தரவு ஏஜென்ட் வேலை பார்ப்பதுதான் இவர்களின் வேலை. ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல் இந்தியாவை சூறையாடிக் கொண்டுள்ளார்கள்; இவர்கள் அனைவரையும் நாம் ஒன்றுபட்டு வீழ்த்துவோம்” என பேசி முடித்தார்.

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் நாகை திருவள்ளுவன் அவர்கள் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

‘அவுட் சோர்சிங்’ எனும் நவீன கொத்தடிமை முறை!

னிதனின் இன்றைய அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது கல்வி, மருத்துவம் சுகாதாரம், வேலை வாய்ப்பு ஆகும். இவை அனைத்தும் காசு உள்ளவனுக்கே என்ற படுமோசமான நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். குறிப்பாக, சுகாதாரக் கட்டமைப்பை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு மனிதவள மேம்பாட்டுத்துறை அக்டோபர் 18-ந்தேதி புதிய அரசாணை 115-இன் அடிப்படையில் 5 பேர் அடங்கிய மனிதவள சீர்த்திருத்தக்குழு அமைப்பதை எதிர்த்த பிறகு, அதன் வரம்பு ரத்து செய்து புதிய வரம்பு வெளியிடப்படும் என கூறினார் முதல்வர். ஆனால் அதன் தொடர்ச்சியாக அரசு அலுவகங்களில் ஆணையர்கள், பொறியாளர், மேலாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மட்டுமே தமிழக அரசிடம் இருக்கும். மீதமுள்ள பணியிடங்கள் அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கும் வகையில் அரசாணை எண் 152-ஐ கொண்டு வந்துள்ளது.

இதனை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை பார்த்து 115, 152  ஆகிய அரசாணைப்படி தான் நாங்கள் நடந்து கொள்வோம். கொரோனா காலங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை இருந்ததால் பணியில் சேர்த்தோம். தற்போது அவசியம் இல்லை என்பதால் வெளியேற்றுவோம் என மிரட்டுகின்றனர் ஆட்சியாளர்கள். தங்கள் நியாமான கோரிக்கைகாகப் போராடினால் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு வரவில்லை என்றால் அடுத்த நாளில் இருந்து வேலைக்கு வரவேண்டாம் எனவும் அச்சுறுத்தும் அயோக்கியத்தனங்கள் பல இடங்களில் அரங்கேறுகிறது.

படிக்க : BYJU’S செயலியும், பகற்கொள்ளையும் | தோழர் ரவி வீடியோ

இந்த அரசாணையின் மூலம் மாநகராட்சி பணிகள் தனியாரிடம் ஒப்படைப்பது, நிரந்தர பணியிடங்கள் குறைப்பு, காலி பணியிடங்கள் நிரப்பத்தடை, அவுட் சோர்சிங் முறையில் பணி நியமனம் ஆகியவற்றை செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணையை கொண்டு வந்துள்ளது. இந்த அரசாணையின் மூலம் துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் ஆகிய அனைவரையும் மேன் பவர் ஏஜென்சிகள் மூலம் தனியார் முதலாளிகளிடம் நவீனக் கொத்தடிமைகளாக்கும் வேலையை அரசே செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் 20 மாநாகராட்சிகளில் மறுசீரமைப்பு எனச்சொல்லி சுமார் 10 ஆண்டுகாலம் வேலை செய்த 32,500 பேரில் சுமார் 28 ஆயிரம் பேர் வேலையை விட்டு துரத்தி அடிக்கும் சதி வேலைகளை செய்கிறது திமுக அரசு.

மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையை ஒழித்துக்கட்டும் இந்த நடவடிக்கையை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் என அனைவரும் பலக் கோரிக்கைகளை வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போரட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என திட்டம் போடும் தமிழக அரசோ, இவர்களின் கோரிக்கைகளை தீர்க்க எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

சுகாதாரத்துறையின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வேலைசெய்து வந்தாலும் இவர்கள் அனைவருக்கும் உள்ள பிரச்சினை ஒன்றுதான். அதாவது உரிமை மறுப்பு, பணிப் பாதுகாப்பின்மை, வேலை உத்தரவாதம் இல்லாத நிலையாகும்.

கொரோனா காலத்தில் அவுட் சோர்சிங் முறையில் (அயல் பணி முறையில், வெளி முகமை முறையில்) இவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். கொரோனா, புயல் வெள்ளம் போன்ற நெருக்கடியான, பேரிடர் காலங்களில் இவர்களின் சேவை என்பது மிக மகத்தானது. குறிப்பாக செலிவியர்கள்தான் கொரோனா பெருந்தொற்று காலங்களில் இருந்து மனித உயிர்களை மீட்டெடுத்ததில் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பணிபுரிந்தனர். அதில் பலர் இறந்துபோனார்கள்.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்ட இவர்களை நிரந்தரமாக்குவோம் என  நாடகமாடியது எடப்பாடி அரசு. அதை எதிர்த்து போராடிய தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அதே நாடகத்தை அரங்கேறுகிறது.

இவர்கள் நோக்கம் என்னவெனில் அனைவரையும் தனியார் முதலாளிகளுக்கு அவுட் சோர்சிங் முறை மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக்கி கொத்தடிமையாக்குவதே. சேவைத் துறையில் வேலை செய்யும் இந்தத் தொழிலாளார்களுக்கு சீருடை, குடிநீர், கழிவறை, பாதுகாப்பு உபகரணங்கள், உணவு சாப்பிடும் இடம் போன்ற அத்தியாவசிய தேவைகளை செய்யாத அவல நிலையை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுகின்றனர்.

செவிலியர், துப்புரவு தொழிலாளர்களைப் போற்றி மாலை அணிவித்து, பூ தூவி ஒருநாள் மரியாதை செய்தார்களே தவிர, இவர்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

“அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையின் மூலம் வேலையில் சேர்ந்தவர்களை எல்லாம் உடனடியாக நிரந்தரமெல்லாம் செய்ய முடியாது. அன்றைய தேவைக்கு அவர்களை பயன்படுத்தினோம் தற்போது தேவையை கருதிதான் வேலை கொடுக்க முடியும். போதிய நிதியில்லை. அதனால் அனைவருக்கும் வேலை எல்லாம் கொடுக்க முடியாது” என கூறுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

நிதியில்லை என்று கூறும் இவர்கள்தான் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை உதவி பணிகளை மேற்கொள்ளும் கிறிஸ்டல் ஸ்மித் குவாலிட்டி போன்ற தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு மாதம் ரூ.3,200 கோடி கொடுத்து கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

படிக்க : பொள்ளாச்சி: ‘இங்கே வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சா’ – மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது பா.ஜ.க அடாவடித்தனம்!

மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் புகுத்தப்படும் காண்டிட்ராக் மற்றும் அவுட் சோர்சிங் முறையால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட போவதில்லை. ஒட்டுமொத்த  அரசு மருத்துவ சுகாதாரக் கட்டமைப்பை ஒழித்துக்கட்டி தனியார் முதலாளிகள் கொள்ளை அடிக்கும் வகையிலான ஏற்பாட்டை செய்வதே இவர்களின் வேலை.

உலகம் முழுவதும் பொதுச் சுகாதாரத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கும் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இவ்வளவு கேடுகேட்ட நிலையில் வைத்துவிட்டு வல்லரசு வாய் சவடால் அடிப்பதை தவிர வேறு எதை செய்யவில்லை. சேவைத்துறைக்கு நிதி ஒதுக்குவது நிறுத்து என கட்டளை இடுகிறது உலக வங்கியும், உலக வர்த்தக கழகமும்; அதனை அமல்படுத்துகிறது திராவிட மாடல் தி.மு.க அரசு.

எனவே, தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தனித்தனியாக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களையும் ஒருங்கிணைத்து, அரசின் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைக்கு எதிரானப் போராட்டமாக வளர்தெடுப்பது நமது கடமையாகும்.

புவன்

BYJU’S செயலியும், பகற்கொள்ளையும் | தோழர் ரவி வீடியோ

ல்வித்துறையில் ஓர் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது இந்த BYJU’S செயலி. இந்த செயலி கல்வித்துறையில் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது, அதனால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டியது அவசியம்.

BYJU’S செயலி மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும், இச்செயலியின் கார்ப்பரேட் கொள்ளையை குறித்தும் இந்த காணொலியில் விளக்குகிறார் பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர் ரவி அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கோவை கார் வெடிப்பு சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!

கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. அதில் ஜமேஷா முபீன் என்ற முஸ்லிம் இளைஞர் உயிரிழந்தார். கார் வெடித்தது வெறும் விபத்தல்ல; இதன் பின்னணியில் பெரிய சதித்திட்டம் உள்ளது என்ற கோணத்தில் இது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த உடனேயே, விசாரணை தொடங்கப்படாத நிலையில், “கோவையில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கிவிட்டது”, “பயங்கரவாதத்தின் ஆணிவேர் அகற்றப்பட வேண்டும்”, “இவ்வழக்கை உடனடியாக என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும்” என்று பரபரப்பூட்டி முஸ்லிம் எதிர்ப்புக் கூச்சலிட்ட பாஜக, ஒன்றியத்தில் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடியும் கொடுத்தது.

பா.ஜ.க. கோரியபடி, தற்போது என்.ஐ.ஏ இவ்வழக்கை விசாரித்துவருகிறது. கோவையை பயங்கரவாத நகரம் போல காட்டி போலீசு கெடுபிடியை அதிகரிக்கச் செய்த வகையில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது; அப்பாவி இளைஞர்கள் பலரும் பா.ஜ.க.வின் பீதியூட்டும் பிரச்சாரத்தால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் கூலிப்படையைப் போல செயல்படும் என்.ஐ.ஏ. தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தி பீதியூட்டி வருகிறது.


படிக்க : கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!


ஆனால், பா.ஜ.க.வும் அதன் பார்ப்பன சங்கி ஊடகங்களும் எதிர்ப்பார்த்த வகையில் தமிழகம் பீதிக்கு உள்ளாகவில்லை; முஸ்லிம் மக்களின் மீது யாரும் வெறுப்புணர்ச்சி கொள்ளவில்லை; ‘நமது ஊரில் குண்டுவெடித்துவிடுமோ’ என்று யாரும் அச்சப்படவும் இல்லை. பா.ஜ.க. ஆளும் பசுவளைய மாநிலங்களைப் போல அல்லாமல், தமிழகத்தில் முஸ்லிம் மக்களுக்கும் இந்து மக்களுக்கும் நிலவுகிற நல்லிணக்கமே அதற்கு முக்கிய காரணமாகும். மற்றொரு பக்கம், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாத காரணத்தால், இதை விவாதிப்பதிலும் மக்கள் அக்கறை கொள்ளவில்லை.

‘முஸ்லிம் எதிர்ப்பு இந்துத்துவ வெறியை கிளறிவிட நினைக்கும் பா.ஜ.க.வின் திட்டம் தமிழகத்தில் பலிக்காது’, ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல பயங்கரவாத அமைப்பு இருக்க முடியுமா’- என்றவாறு பா.ஜ.க.வை தாக்குதல் (Offensive) நிலையிலேயே சமூக ஊடகங்களில் தமிழக மக்கள் அணுகினர்.

தினமணி, இந்து தமிழ்திசை, துக்ளக் போன்ற பா.ஜ.க. ஆதரவு பார்ப்பன ஊடகங்கள், அக்கட்சியின் எடுபிடியான சில சில்லறை அமைப்புகள் மட்டுமே தீவிரமான பீதி அரசியலைப் பரப்பின. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளான பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் கூட சில பொதுவான அறிவிப்புகளுடன் முடித்துக் கொண்டன. தி.மு.க. எதிர்ப்பரசியலைப் பேசியே காலத்தை ஓட்டிவரும் அ.தி.மு.க. தொடக்கத்தில் ஒன்றிரண்டு அறிவிப்புகளை வெளியிட்டது. அத்துடன் அதுவும் பயங்கரவாத பீதியூட்டிப் பேசுவதை நிறுத்திக் கொண்டது.

பி.எஃப்.ஐ. மீது தடை, எஸ்.டி.பி.ஐ. மீது சோதனை, பா.ஜ.க. அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு, தற்போது கோவை கார் வெடிப்பு – என தொடர்ச்சியான சம்பவங்களை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வினர் தீவிரமான முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்களைக் கட்டியமைத்த போதும் தமிழகத்தின் பொதுநிலைமை இதுதான்.

தீவிரவாதப் போக்கிற்கு பலியான யாரோ ஒரு இஸ்லாமிய இளைஞர் அவ்வாறு செய்திருக்கலாம் என்ற கருத்தே தமிழக மக்களின் பொதுமனநிலையாக இருந்தது. இதனைத் தாண்டி முஸ்லிம் தீவிரவாதிகள் தமிழகத்தில் நுழைந்துவிட்டதாக எந்த பொதுகருத்தும் தமிழக மக்களிடையே உருவாகவில்லை. அவ்வாறு உருவாக்குவதற்காக பா.ஜ.க.வும் சங்கப் பரிவாரக் கும்பலும் அடுத்தடுத்து வீசிய அம்புகளெல்லாம் புஸ்வானமாகின.

சான்றாக, 2021-ஆம் ஆண்டு வரை (அதாவது தி.மு.க. ஆட்சிக்கு முன்) தமிழக உளவுத்துறையில் சிறப்பு வாய்ந்த அதிகாரிகள் பணியில் இருந்ததாகவும்; தற்போது உளவுத்துறையில் 60 சதவிகிதம் குறிப்பிட்ட மதம் (முஸ்லிம்) சார்ந்த அதிகாரிகளே இருப்பதால், இவ்வழக்கின் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படவில்லை என்றார் அண்ணாமலை.

அதைத்தொடர்ந்து, தமிழகப் போலீசு துறையை தொடர்ச்சியாக இழிவுப்படுத்தும் வகையில் பேசிவரும் அண்ணாமலையைக் கண்டித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கண்டன அறிக்கை வெளியிட்டார். இதுவரை தமிழகத்தில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களும் இவ்வாறு ஒரு போலீசு உயரதிகாரி கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு தரந்தாழ்ந்து சென்றதில்லை என்றே தெரிகிறது.

இக்கண்டனத்திற்கு பிறகு பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டு போலீசார் திறமையானவர்கள்தான், போலீசுத்துறையை வழிநடத்தும் டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் மட்டுமே தவறான வழிகாட்டுதலில் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

“இந்துக்களின் பண்டிகை நாளான தீபாவளியன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்” என்று எச்.ராஜா, வானதி சீனிவாசன், அர்ஜூன் சம்பத் போன்ற கழிசடைகள் தொண்டையைக் கிழித்துக் கொண்டிருந்தாலும், அவையெல்லாம் இந்து மக்களாலேயே சீந்துவாரின்றி ஒதுக்கப்பட்டன.

சிறுபான்மையினருக்கு எதிராக பிரச்சாரம் செய்வதோடு, இச்சம்பவத்தைப் பயன்படுத்தி, தி.மு.க. அரசுக்கும் நெருக்கடி கொடுக்கலாம் என்று கனவு கண்டது சங்கி கும்பல். ஆனால், குண்டுவெடிப்பு சம்பவமே பீதியூட்டவில்லை என்பதை கவனிக்காத இந்த கும்பல், இதனைப் பயன்படுத்தி தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டதுதான் நகைப்புக்குரியது.

“அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு தீவிரவாதத் தாக்குதல் என்பது சில மணி நேரங்களிலேயே தெரிந்துவிட்டது. ஆனால், சம்பவம் நடந்த நான்கு நாட்கள் கழித்துதான் விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டது. இது ஏன்” என்று கேள்வி எழுப்பினார் ஆளுநர் ரவி. ஆனால், குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த உடனேயே என்.ஐ.ஏ.வே தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கிவிட்டது, தமிழக அரசும் நான்கு நாள் இடைவெளியிலேயே வழக்கை என்.ஐ.ஏ.விடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துவிட்டது. இதனையெல்லாம் அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்காட்டிப் பேசியது சங்கிகளைப் பார்த்துக் காறித்துப்புவதாக இருந்தது.

கோவையில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருந்தால் தமிழக அரசு கலைக்கப்பட்டிருக்கும் என்று வெளிப்படையாகவே மிரட்டினர் பா.ஜ.க.வினர். ஆனால், இதையெல்லாம் கேட்பதற்குக் கூட தமிழகத்தில் ஆள் இல்லாமல் போய்விட்டது என்பதுதான் குண்டுவெடிப்பு தொடர்பாக சங்கப் பரிவாரக் கும்பலின் பிரச்சாரத்தின் நிலைமை.

இஞ்சி தின்ற குரங்கு வாயெரிச்சலில் செய்வதறியாமல் குதிப்பதுபோல், இம்மதவெறிக் கும்பல் தங்கள் நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள முடியாமல், மூக்குடைபடுகிறோமே என்ற பதற்றத்தில் சகட்டு மேனிக்கு உளறிக் கொண்டிருந்தது.

000

வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது, தி.மு.க. ஆட்சியைக் கலைத்து பா.ஜ.க. ஆட்சியை நிறுவுவது ஆகியவைதான் சங்கப் பரிவாரக் கும்பலின் உடனடி நோக்கங்களாகும். இந்த நோக்கங்களை ஈடேற்ற கோவை குண்டுவெடிப்புப் பிரச்சினையைப் பயன்படுத்த இயலாமல் போனது சங்கப்பரிவாரக் கும்பலுக்கு பெருத்த அடியாகும்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மட்டும், அரியலூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை, திருவாரூரில் கருணாநிதியின் பெயரை தெருவுக்கு வைப்பதற்கு நடந்த முயற்சி, ஆ.ராசா மனுதர்மத்தை அம்பலப்படுத்தியது உள்ளிட்டு பல்வேறு நிகழ்வுகளைப் பயன்படுத்தி மதவெறி, தி.மு.க. எதிர்ப்பரசியலை மேற்கொண்டது எதுவும் பலனளிக்கவில்லை. பா.ஜ.க.வினரே பெட்ரோல் வெடிகுண்டுகளை தங்களது வீடுகளில் வீசிவிட்டு பீதியூட்ட மேற்கொண்ட கேடுகெட்ட முயற்சிகளெல்லாம் உடனுக்குடன் அம்பலப்பட்டுப் போனது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக, மாநில அரசு வரியைக் குறைக்க வேண்டும் என்றும் விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டங்களைச் செய்வது; இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே, காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் விழா நடத்துவது, ஆளுநர் மூலமாக தமிழைப் பார்ப்பனியத்துடன் முடிச்சுப் போட்டு இழிவுபடுத்துவது; பி.எஃப்.ஐ. தடை, எஸ்.டி.பி.ஐ. அலுவலங்களில் சோதனை ஆகிய அனைத்தும் அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் தோல்வியடைந்து வருகின்றன. அந்தவகையில்தான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் பா.ஜ.க.விற்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபு இதற்கு காரணமாக இருந்தாலும், இந்த நேர்மறைக் கூறை வைத்து மட்டுமே பா.ஜ.க.வால் தமிழகத்தை வெற்றிக் கொள்ள முடியாது எனக் கருதி இறுமாந்திருக்க முடியாது.

தமிழகத்தில் சித்தாந்தரீதியாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் காலூன்ற முடியவில்லை என்றபோதும், அமைப்பு ரீதியாக தங்களுடைய அடித்தளங்களை விரிவுபடுத்தி வருகின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நீதித்துறை, போலீசுத்துறை, கல்வித்துறை என அரசின் கட்டுமானங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். தனது ஆட்களை வேகமாக நுழைத்துக் கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும்கூட ஆர்.எஸ்.எஸ். ஷாகா நடத்தப்படுகின்றன. கோவையில் ஜனநாயக சக்திகள் கோட்சேவை விமர்சிக்கத் தடை, மோகன் பகவத்தின் தமிழக வருகையை ஒட்டி மதுரை துணை வட்டாட்சியர் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது, இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்ததால் உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை, கள்ளக்குறிச்சி மெட்ரிக் பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் போலீசின் செயல்பாடு உள்ளிட்டு பல்வேறு நிகழ்வுகள் அதற்குச் சான்றுகளாக உள்ளன.


படிக்க : மதக் கலவரத்தைத் தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினரை கைது செய் || ஆர்ப்பாட்டம்


இன்னொருபக்கம், ரவுடிகளையும் கிரிமினல் குற்றவாளிகளையும் தங்களது கட்சியில் இணைத்துக் கொள்வது, சாதி அமைப்புகளை வளைப்பது, செல்வாக்குள்ள மாற்றுக் கட்சி நபர்களை விலைபேசி வாங்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் சங்கப் பரிவாரக் கும்பல் தமது அமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. ஓட்டுச் சீட்டு அரசியல் உருவாக்கியுள்ள பிழைப்புவாத சிந்தனையை மூலதனமாக்கிக் கொண்டும், காசை வாரியிறைத்தும் தெருவுக்குத் தெரு பிள்ளைப் பிடிப்பதைப்போல உறுப்பினர் சேர்க்கும் பணியில் வெறித்தனமாக ஈடுபடுகிறது பா.ஜ.க.

ஆகையால், இந்த பாசிஸ்டுகளை அரசியல்ரீதியாக மட்டுமல்ல, அமைப்புரீதியாக முறியடிப்பதும் அவசியமாகும். பெரும்பான்மை மக்களை அரசியல்ரீதியாக வென்றெடுத்த பின்னர்தான் பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று கருதி நாம் அலட்சியமாக இருக்க முடியாது. அரசுக் கட்டுமானத்தில் கட்டமைத்துவரும் வலைப்பின்னலும், பிழைப்புவாத பொறுக்கி அரசியலின் மூலம் தாம் சேர்த்துவரும் குறிப்பிட்ட அளவு மக்கள் அடித்தளமுமே பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற போதுமானது.

எனவே, தமிழகத்திலுள்ள பாசிச எதிர்ப்பு சக்திகள் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலை அமைப்புரீதியாக முறியடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்-இளைஞர்கள், சிறுவணிகர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் காவி கும்பலுக்கு எதிராக அமைப்புரீதியாக அணிதிரட்டி பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராடுவதன் மூலமே பாசிசத்தை வேரடி மண்ணோடு பிடுங்கி எறிய முடியும்!


வெண்பா

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் போராட்டம்! பாராமுகம் காட்டிவரும் தமிழக அரசு!

ப்பந்த அடிப்படையில் பணி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26.12.2022 அன்று காலை 10 மணி முதல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனரகம் முன்பு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திவரும் பார்வையற்ற பட்டதாரி இளைஞர் சிங்காரவேலன் கூறுகையில், “நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வகையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். எந்த அரசும் தற்போது வரை எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற துளியும் முயற்சி எடுக்கவில்லை. இந்த சமூகநீதி பேசும் ஆட்சியில், ஏதாவது நடக்குமா என்பதும் சந்தேகத்திற்கு உரியதுதான். ஏன் என்றால், அமைச்சரை பார்த்து எங்கள் பிரச்சினையை முன்வைக்கலாம் என வந்தோம். அவரை பார்க்க முடியாது என்றனர். துறைச் செயலாளரை பார்க்க முயன்றால் ஒரு சில நபர்கள் மட்டும் வாருங்கள் என்று கூறி தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால், எங்கள் கோரிக்கையோ நாங்கள் அனைவரும் சந்திக்க வேண்டும் என்பதுதான். ஆனால், கடைசி வரை அலுவலகத்தின் வாசலிலேயே அமர்ந்து முழக்கமிட்டு சோர்ந்து நாங்களாகவே திரும்பிபோக வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் நினைப்பது. அதுதான் நடக்கவும் செய்கிறது.

படிக்க : கௌரவ விரிவுரையாளர்கள் : உயர்கல்வித் துறையின் நவீனக் கொத்தடிமைகள்!

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டாதாரிகளாகிய நாங்கள், கல்லூரி படிப்பை முடிப்பதற்கும் பட்டம் பெற்று ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கும் பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக பலகட்ட இன்னல்களை சந்தித்து வந்துள்ளோம். குறிப்பாக பார்வையற்றவர்களை பெற்றோர்கள் பராமரிப்பதே கடினமான நினைக்கும்  சூழ்நிலையில் எங்களை படிக்க வைத்து பட்டம் பெற துணை நின்ற பெற்றோர்கள் வயதுமூப்பின் காரணமாக இன்று கடுமையான பொருளாதார  இன்னல்களை சந்தித்து வருகின்றன. பல ஆயிரம் செலவு செய்து படித்து இன்று வரை ஒரு உத்தரவாதமான வேலை ஒன்றும் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை எங்களுக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அனைத்து தடைகளையும் கடந்து இன்று பி.ஏ, பி.எட், எம்.எட், பி.எச்.டி, ஆகிய படிப்புகளை படித்தும், நெட்(NET), செட்(SET), டெட் (TET) ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அதற்கு உண்டான தகுதியை வைத்திருந்தாலும், எங்களை புறக்கணிக்கவே செய்கின்றனர்.

அதன்படி தேர்ச்சி பெற்று ஆசிரியராக இருக்கும் நாங்கள். தனியார் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்துவந்தோம். அதன்பின் கொரோனா பெருந்தொற்றை காரணம்காட்டி  அவர்களும் எங்களை நீக்கிவீட்டனர். இந்த பொருளாதார நெருக்கடி சூழலில்தான் அரசு அறிவித்துள்ள கௌரவிரிவுரையாளர்கள் காலிபணியிடத்தில் பார்வையற்ற பட்டாதாரியாகிய எங்களுக்கு முன்னுரிமை மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறோம்” என்றனர்.

அரசு ஏற்கெனவே நடைமுறைபடுத்தி கொண்டிருக்கும் நூறு பேருக்கு ஒருவர் என காலிபணியிடத்தை ஒதுக்குவது என்பது எந்த வகையில் சரியானது தமிழ் பாடத்தை மெஜராக முடித்த பார்வையற்ற பட்டதாரிகளே இருநூறு பேர் இருக்கிறோம் என்று நிலைமையை எடுத்து முன்வைக்கிறார் பட்டதாரி ஒருவர்.

இப்படி அரசும் தனியார் கல்வி நிறுவனங்களும் எங்களை பணி அமர்த்தாமல் புறக்கணிப்பதால் உயர்படிப்பு படித்த பல பார்வையற்ற பட்டதாரிகள் பேருந்துகள் மற்றும் இரயில்களில் கடலை மிடாய், பர்பி, மிட்டாய் விற்பது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். தற்போதைய சூழ்நிலையில் நாங்களும் அந்நிலைக்கே தள்ளப்படுவோம் என கவலையோடு அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறோம் என்றார்.

“பி.ஏ முடிச்சோம் சார், ஏம்.ஏ முடிச்சோம் சார், பி.ஏட் முடிச்சோம் சார், எம்.ஏட் முடிச்சோம் சார்”; “வேலை மட்டும் இல்ல சார்” என்று முழக்கமிட்டது சுற்றி நின்றவர்களை திகைக்க செய்தது. நன்றாக கண் தெரியும் நாமே ஒரு பட்டபடிப்பு மட்டுமே முடித்துள்ளோம். ஆனால் பார்வையற்ற இவர்களோ தகுதித் தேர்வு வரை முடித்துள்ளார்களே என்று.

படிக்க : கூலி அடிமைகளாக மாற்றப்படும் ஆசிரியர்கள்! நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் அரசு கல்வி கட்டமைப்பு!

அப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பார்வையற்ற பட்டதாரிகள் இருவர் ஏன் நம்மைவிட போலீஸ்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று ஒருவர் கேட்க மற்றொரு கண்பார்வையற்ற நாம் குண்டு போட்டு விடுவோம் என்றுதான் என்று கூறினார். மேலும் ஏன் அமைச்சர், துறைச் செயலாளர் கீழ் இறங்கி நம்மிடம் பேச்சுவார்தை நடத்த வரவில்லை என்று ஒருவர் கேட்க, வந்து நின்று பேசினால் கால்கள் வழிக்கும் அல்லவா என்று அதிகாரிகளை கடிந்துகொண்டனர். இறுதி வரை யாரையும் சந்திக்க முடியாத நிலையில் மூன்றுபேர் மட்டும் அதிகாரியை சந்தித்து கோரிக்கையை வைத்தனர். வழக்கம்போல், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பார்வையற்றவர்களை ஊமையாக்கிவிட்டனர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும்.

அனைத்து அரசுத்துறை பணிகளும் தனியார்மயமாக்கப்படுவது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் இவர்கள் நடைமுறைப்படுத்தி கொண்டுவரும் கான்ட்ரக்ட் வகையிலான ஒப்பந்த வேலையையாவது கொடுங்கள் என்று நம்மை இந்த நிலையை மறைமுகமாக ஏற்றுக்கொள்ள வைக்கின்றனர். அதுதான் இனி இயல்புநிலையாக மாறும் என்பதிலும் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை.

வினவு செய்தியாளர்கள்

இளைஞர் மத்தியில் டிடிஎஃப் வாசனை டிரண்டிங்காக ஆக்கியது எது? | மருது வீடியோ

டிடிஎஃப் வாசன், இந்த நம்பர் இளைஞர் மத்தியில் டிரண்டிங்காக ஆக்கியது எது? இன்று லட்டிசார்ஜ் செய்த போலீசு நாளை நம்மை வரவேற்கும் என்கிறான் டிடிஎஃப் வாசன். இதையெல்லாம் எப்படி திமிராக அவனால் கூறமுடிகிறது. அவன் செய்தது சமூக குற்றம். ஏன் டிடிஎஃப் வாசனின் பெற்றோர்கள் அவனை அடித்து துவைக்கவில்லை. அவன் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவனை சமூகப் புறக்கணிப்பு செய்யவில்லை.

டிடிஎஃப் வாசன் பற்றிய பல்வேறு விமர்சனங்களையும், விளக்கங்களையும் RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!

2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒக்கிப் புயல் ஏற்படுத்திய பேரழிவினால் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலிலேயே மாண்டு போயினர். குடும்ப உறுப்பினர்களை இழந்த துயரத்தில் வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர், நீரோடை உள்ளிட்ட குமரி மாவட்ட கிராமங்கள் கண்ணீர் கடலில் மூழ்கின. மிகப்பெரிய கடற்படையை வைத்திருப்பதாக பெருமை பீற்றிக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றிய அரசோ, மீனவர்களைக் காப்பாற்ற எவ்வித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

புயல் அடிக்கத் தொடங்கிய அடுத்தநாள்தான், வானிலை மையத்தால் புயல் எச்சரிக்கை அறிவிப்பே கொடுக்கப்பட்டது. ஒருநாள் முன்பாக சொல்லியிருந்தால்கூட சிலரையாவது காப்பாற்றியிருக்கலாம். புயலின்போதும், புயலுக்குப் பிறகும்கூட கடலில் சிக்கியிருந்தவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் இருந்து எடுக்கப்படவில்லை. மீனவர்கள்தான் தங்கள் சொந்த முயற்சியில் குறிப்பிட்ட பேரை மீட்டு வந்தார்கள். புயலில் சிக்கிய பெரும்பான்மையினர் மடிந்துவிட்டார்கள். அத்துயர நிகழ்வின் ஐந்தாம் ஆண்டு இது!

ஒக்கிப் புயலில் மீனவர்கள் சந்தித்த துயருக்கான காரணங்களையும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்டு ஒட்டுமொத்த அரசும் மீனவர்களை பாராமுகமாக நடத்தியது குறித்தும் தனது கருத்துக்களை நம்முடன் இந்நேர்காணலில் பகிர்ந்துகொள்கிறார், மீனவர்கள் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசிவரும் வழக்கறிஞர் திரு.லிங்கன் அவர்கள்.

000

படிக்க : ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து !

புதிய ஜனநாயகம்: குமரியைப் புரட்டிப்போட்ட ஒக்கிப் புயல் பேரிடர் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்பேரிடரின்போது கடலில் சிக்கி 218 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்; 243 பேர் காணவில்லை என்று அரசு புள்ளிவிவரமே கூறுகிறது. புயலின்போது கடலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணிகளில் அரசு அலட்சியம் காட்டியது. மீனவ மக்கள், பிணங்களையாவது மீட்டுத் தாருங்கள் என்று கோரிக்கை வைத்த போதும், அரசு மீட்டுவரவில்லை. கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மீனவர்களையும் கடலில் செத்து மிதந்துகொண்டிருந்த மீனவ உடல்களையும் மீனவ மக்கள்தான் மீட்டுவந்தனர்.

ஒக்கிப் புயலானது, மீனவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குமரி மீனவ சமுதாயத்தையும் பாதித்துள்ளது. பல குடும்பங்கள் தங்களது உறவினர்களை இழந்திருக்கிறார்கள். அரசு அறிவித்த நிவாரணங்களால், தங்களது இழப்பை ஈடுசெய்ய முடியாத அளவிற்கு பேரிழப்பைச் சந்தித்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்களின் இறப்பிற்கும் வாழ்வாதாரத்தை இழந்த மீனவ சமூகத்தின் நிலைமைக்கும் அரசின் பாராமுகம் எப்படி காரணமாக இருந்தது?

திரு.லிங்கன்: முக்கியமான விசயம் என்னவென்றால், அரசுத்துறைகளில் குறிப்பாக மீன்வளத்துறையிலும் பேரிடர் மீட்புத் துறையிலும் மீனவ சமூகத்தினர் இல்லை; கடலைப் பற்றியோ, கடலோர மக்களைப் பற்றியோ தெரிந்த அதிகாரிகள் இல்லை. அரசு அதிகாரிகள் நிலத்தில் வாழ்பவர்கள்; நிலம் சார்ந்த சிந்தனையாளர்கள். கடல் சார்ந்த சிந்தனை என்பது வேறு; கடலில் இருந்து உலகத்தைப் பார்ப்பதும், சமவெளியில் இருந்து கடலைப் பார்ப்பதும் வேறு!

புயல், சுனாமி போன்ற பேரிடர்களைக் கையாள்வதற்கான முழுமையான கொள்கை – திட்டமே அரசிடம் இருந்ததில்லை. 2004 சுனாமி தாக்குதலுக்குப் பிறகுதான் பேரிடர் மேலாண்மைச் சட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கான தனித்துறை அமைக்கப்படுகிறது. சுனாமிக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட புயல் நிவாரணக் கொள்கையிலும்கூட, கரையில் புயல் வருவதற்கு முன், வரும்போது, வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்றுதான் இருக்கிறதே தவிர, கடலுக்குள் புயல் அடிக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் இல்லை. இப்படிப்பட்ட பாராமுகமான திட்டத்தால்தான் மீனவ மக்களுக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்ட மீனவர்களில் ஆழ்கடல் மீன்பிடிப்பவர்கள் உள்ளனர். அவர்கள் 45 முதல் 50 நாட்கள்வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கக் கூடியவர்கள். இம்மீனவர்களைப் பற்றி அரசு சிந்திக்கவே இல்லை. நவம்பர் 29-ஆம் தேதி மதியவேளையில்தான் புயல் அபாய அறிவிப்பை அரசு கொடுத்தது. அந்த அறிவிப்புக்கு பிறகு, கரையில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் போகவில்லை. ஆனால் அதற்கு முன்பே கடலுக்குள் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரியாது. அவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதற்கான எந்த திட்டமும் சாதனமும் அரசிடம் இல்லை. கடற்கரையில் நின்றுகொண்டு ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு கொடுத்தார்கள்; கடலில் 200 மைல்கல்லுக்கு அப்பால் இருக்கும் மீனவர்களுக்கு அது எப்படி கேட்கும்?

இப்புயலினால் இத்தனை மீனவர்கள் உயிரிழந்ததற்கு மீட்புப் பணியில் அரசு காட்டிய அலட்சியம்தான் காரணம். தன்னால் 60 கி.மீ. தூரம்தான் தேடமுடியும் என்றது கடலோர காவல்படை. கப்பற்படையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தூரத்தில் மீனவர்களைத் தேடும்படி மக்கள் கோரிக்கை வைத்த பிறகும், அரசானது கப்பற்படையை முறையாக மீட்புப் பணியில் ஈடுபடுத்தவில்லை. செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி கடலில் மீனவர்கள் எங்கு சிக்கியுள்ளார்கள் என்பதை அடையாளம் காணவும் முயற்சிக்கவில்லை. கடலையும் கடல் நீரோட்டத்தையும் அறிந்த தங்களை மீட்புப் பணியில் இணைத்துக்கொள்ளுமாறு மீனவர்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அரசானது உடனடியாக அவர்களை இணைத்துக் கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடவில்லை.

புதிய ஜனநாயகம்: நீங்கள் சொன்னதுபோல் அரசானது மீட்பு நடவடிக்கைகளைச் செய்ய வாய்ப்பிருந்தும், அலட்சியத்தால் செய்யவில்லை. மீனவக் குடும்பங்களுக்கான நிவாரணம் கூட பல போராட்டங்களுக்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது. மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் முழுமையாக சென்றடைந்ததா?

திரு.லிங்கன்: சென்னை உள்ளிட்டு பல மாவட்டங்களில் நடந்த போராட்டங்களுக்குப் பிறகுதான் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, மீனவ மக்களுக்கு நிவாரணம் அறிவித்தார். இதற்கு முன்னால் கடலில் காணாமல் போனவர்களை 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் இறந்தவர்களாக அறிவிப்பார்கள். இப்போராட்டத்தின் விளைவால் ஒக்கிப் புயல் பேரிடர் நிகழ்ந்து ஒரு மாதத்துக்குள்ளே கரைக்குத் திரும்பாத மீனவர்களை இறந்தவர்களாக அறிவித்து அரசு நிவாரணம் வழங்கியது. உயிரிழந்த மீனவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சத்துணவு கூடங்களில் வேலைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தருவதாகக் கூறினார்கள்; எந்த வீடும் கட்டித்தரவில்லை. பேரிடர்களின்போது கடலில் இருக்கும் மீனவர்கள் கடற்கரையில் இருப்பவர்களிடம் தொடர்பு கொள்வதற்காக உலக வங்கியின் உதவியுடன் நவீனக் கருவிகளை வாங்கித்தருவதாகக் கூறினார்கள்; அதுவும் நிறைவேற்றப்படவில்லை. கன்னியாகுமரி அல்லது குளைச்சலில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்போவதாக அறிவித்தார்கள்; நிறைவேற்றவில்லை.

புதிய ஜனநாயகம்: ஒக்கிப் புயலின் போதுதான் கடலுக்குள் புயல் அடித்தால் இத்தகைய பேரிடரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அரசு முதன்முறையாக உணர்ந்ததா? அல்லது இதற்கு முன்பு நடந்த பேரிடர்களில் இருந்து அரசு படிப்பினைகளைப் பெறாமல் செயல்பட்டுள்ளதா?

திரு.லிங்கன்: ஒக்கி புயலுக்கு முன்பும் புயல்கள் தாக்கியுள்ளன. ஆனால் அப்புயல்களைவிட ஒக்கிப் புயலின் பாதிப்பு அதிகம். முன்பே குறிப்பிட்டதைப் போல, புயலினால் கடலுக்குள் சிக்கிக்கொண்ட மீனவர்களைக் காப்பாற்றுவதற்கான திட்டமோ, கொள்கையோ சுனாமிக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்திலும், மத்திய அரசின் பேரிடர் மீட்புத் திட்டத்திலும் கூட இல்லை. புயல் வரும் போது கரையோர மக்களை அப்புறப்படுத்தி மீட்பதற்கான திட்டம் மட்டுமே அரசிடம் உள்ளது. சான்றாக, நான்கு வருடத்திற்கு முன் ஒடிசாவில் ஒரே நாளில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட கரையோர மக்களை புயல் வருவதற்கு முன்பே அப்புறப்படுத்தியது அரசு.

ஆனால் இன்றுவரை புயலின்போது கடலுக்குள் சிக்கிக்கொண்ட மீனவர்களை மீட்பதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை. திட்டமே இல்லாதபோது, எப்படி செயல்பட முடியும்?

புதிய ஜனநாயகம்: மீனவ மக்களைப் பாதிக்கும் வகையில் அணு உலை, சாகர்மாலா திட்டம், துறைமுகங்கள், சுற்றுலா விடுதிகள் என கார்ப்பரேட் திட்டங்களைக் கடற்கரைப் பகுதிகளில் கொண்டு வருகிறது ஒன்றிய அரசு. மேலும் கடல் மீன்வள மசோதா மூலம் மீனவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன்பிடிக்கவேண்டும் என வரம்பிடுகிறது. ஆனால் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ராட்சச கப்பல்களையும் வலைகளையும் கொண்டு மீன்பிடிக்க அனுமதி கொடுக்கிறது.

கடல்வளத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தூக்கிக் கொடுக்கும் வேலையை செய்து வரும் அரசு ஒக்கி புயல், சுனாமி போன்று எதிர்பாராமல் நிகழும் பேரிடர்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு மீனவர்களை பாராமுகமாக நடத்துவதன் மூலம் அவர்களை கடற்கரையிலிருந்தே விரட்டியடிக்கும் வேலையைச் செய்து வருகிறதா?

திரு.லிங்கன்: கடற்கரைச் சார்ந்த மீன்பிடித்தலை துறைமுகம் சார்ந்த மீன்பிடித்தலுக்கு மாற்றுவதுதான் ஒன்றிய அரசின் திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்த மீனவப் பகுதிகளில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்த வேண்டும். மீனவர்களை நேரடியாக அப்புறப்படுத்த முடியாது என்பதால் மீன்பிடித் தொழிலில் நெருக்கடியை ஏற்படுத்தி விரட்டியடிக்கிறது.

கடல் மீன்வள மசோதாவானது, கடலில் 12 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு மேல் சென்று மீன்பிடிக்க ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்கிறது. மேலும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் ஒவ்வொரு முறையும் என்ன வலை பயன்படுத்துகிறோம், எவ்வளவு மீன் பிடிக்கிறோம், எந்த வகை மீன் பிடிக்கிறோம் என்று முன் அனுமதி பெறவேண்டும். அனுமதி பெற்ற அளவுக்கு மீறி மீன்பிடித்தாலோ அல்லது வேறு வகை மீன் பிடித்தாலோ அபராதம் விதிக்கப்படும். இவை நடைமுறையில் கடைப்பிடிக்க முடியாத, சாத்தியமில்லாத ஒன்று. நெருக்கடி கொடுப்பதற்காகவே இவ்வாறான விதிகள் வகுக்கப்படுகிறது.

மேலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டால், எந்த படகையும் யாருடைய அனுமதியுமின்றி, எப்போது வேண்டுமானாலும் இந்திய கப்பற்படையால் சோதனையிட முடியும். சோதனையை நடத்தவிடாமல் தடுத்தால் சிறை தண்டனை வழங்கப்படும். சுருக்கமாகச் சொன்னால், இச்சட்ட மசோதாவின்மூலம் கடல் பரப்பை இராணுவமயமாக்குகிறார்கள், தங்களது கண்காணிப்புக்குள் கொண்டுவருகிறார்கள்.

இம்மசோதா மட்டுமல்ல, மரக்காணம் முதல் இராமேஸ்வரம் வரை கடலுக்குள் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த விழைகிறது அரசு. கடலை மீனவர்களிடமிருந்து பிடுங்கி அதானி-அம்பானிக்கு தாரைவார்க்கிறது.

புதிய ஜனநாயகம்: பேரிடர் பாதிப்புகளை தாண்டி, பொதுவாக மீனவ மக்களுக்கு என்னென்ன வாழ்வாதாரக் கோரிக்கைகள் இருக்கிறது? தங்களது கோரிக்கைகளை அவர்கள் வென்றெடுப்பதற்கான வழி என்னவாக இருக்க வேண்டும் என்று தாங்கள் கருதுகிறீர்கள்?

திரு.லிங்கன்:  பேரிடர்காலமின்றி, சாதாரண காலங்களிலேயே வாரத்திற்கு இரண்டு மீனவர்கள் கடலில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். இதனால் மீனவப் பகுதிகளில் இளம் வயது விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவர்களின் வாழ்வாதாரத்திற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை.

விவசாயிகளுக்கு உழவர் சந்தை இருப்பதைப் போல, மீனவர்கள் தங்களுடைய மீன்களை விற்பதற்கான சந்தை எதுவும் கிடையாது. பேரிடர்களின்போது வலை, வள்ளம், படகுகள் சேதமடைந்தால் அதற்கு இழப்பீடு ஏதும் வழங்கப்படுவதில்லை.

மீன்பிடி தடைக்காலத்திற்கு அரசால், குறிப்பிட்டத் தொகை நிவாரணமாக வழங்கப்படுகிறது. ஆனால், புயல் போன்ற காரணங்களுக்காகவும் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருக்கிறார்கள். மொத்தமாக ஆண்டுக்கு 100 – 150 நாட்கள் மட்டுமே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கிறார்கள். புயல் உள்ளிட்ட இதர காரணங்களால் மீன்பிடித்தல் தடைப்படும்போது, அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்குவதில்லை.

படிக்க : ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

உயிருக்கு ஆபத்தான, வாழ்க்கை உத்திரவாதமில்லாத மீன்பிடித் தொழிலில் தங்கள் பிள்ளைகள் ஈடுபடுவதை மூத்த மீனவ சமுதாயம் விரும்பவில்லை. ஆனால், இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும் மீன்பிடிக்க வராமல் இல்லை. பொறியியல், முதுகலை பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு வேலை கிடைக்காததால், வேறு வழியின்றி கடலுக்கு மீன்பிடிக்க இளைஞர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்த சுயதொழில் இதுதான்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முக்கியமான காரணம் மீனவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை என்பதுதான். முன்பே சொன்னதுபோல, கடலோரப்படையிலோ, பேரிடர் மீட்பு துறையிலோ மீனவர்களே இல்லை, கப்பற்படையில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இத்துறைகளில் எல்லாம் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சென்றால்தான் அவர்களது பிரச்சினை ஓரளவு அடையாளப்படுத்தப்படும்.

தேசியக் கட்சிகளும், மாநில அரசியல் கட்சிகளும்கூட மீனவர்களை ஒரு சமூகமாகவே கருதுவதில்லை, அவர்களது கோரிக்கைகளுக்காக குரல் எழுப்புவதில்லை. ஏனெனில், அக்கட்சிகளில் மீனவர்களின் பிரதிநிதித்துவம் ஏறத்தாழ இல்லை என்பதுதான். மீனவப் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக மாற்றுவதற்கான முயற்சிகள் தேவைப்படுகிறது; சமூக இயக்கங்கள் மீனவர்கள் பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக மாற்றப் போராட வேண்டும்.

பொள்ளாச்சி: ‘இங்கே வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சா’ – மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது பா.ஜ.க அடாவடித்தனம்!

மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது பா.ஜ.க கும்பல் அடாவடித்தனம்!
தோழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்த ஜனநாயக சக்திகள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இன்று (25-12-2022) மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! என்ற துண்டறிக்கையை கொடுத்து தோழர்கள் ராஜன், குமார் பிரச்சாரம் செய்தனர். அப்போது அருகில் இருந்த பா.ஜ.க-வை சேர்ந்த இரண்டு பேர் கொண்ட கும்பல் பேருந்து நிலையத்தில் தோழர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

அப்போது, “என்ன வேணாலும் பண்ணிட்டு போ! மோடியை பற்றி மட்டும் பேசக் கூடாது! இங்கே வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சா? பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் போய் பேசு. இங்கே வந்து பேசக் கூடாது” என அடாவடித்தனமாக வாக்குவாதம் செய்தது அக்கும்பல். மேலும், “மார்க்ஸ், லெனின் பற்றி ஆப்கானிஸ்தானில் போய் பேச முடியுமா? இப்படி நீ எல்லாம் இங்க வந்து பேசுவது மோடி கொடுத்த ‘ஜனநாயகம்’ தான்” என்று பேசும்போதே போன் செய்து பலரை வரவழைத்தது அக்கும்பல். அதனை தொடர்ந்து, பா.ஜ.க.வை சேர்ந்த 30 பேர் கொண்ட கும்பல் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை சூழ்ந்துகொண்டு அடாவடித்தனத்தில் ஈடுபட்டது.

படிக்க : கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!

அப்போது தோழர்கள் கையில் இருந்த சில துண்டறிக்கைகளையும், புதிய ஜனநாயக இதழையும் பறித்துக் கொண்ட அக்கும்பல் தோழர்களை தாக்கும் நோக்கில் வாக்குவாதம் செய்தது. அப்போது அங்கிருந்த போலீஸ் தோழர்கள் இருவரையும் போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்றது.

“கோவையில் அமைப்புக்கு எங்கு அலுவலகம் உள்ளது. நோட்டீசை வைத்து இதுவரை எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தீர்கள்? எவ்வளவு தொகை பெற்றீர்கள்?” என தோழர்களை கேட்கிறது போலீசுத்துறை. இதே கேள்விகள் இந்துத்துவா நிகழ்ச்சிகளை நடத்தும் நபர்கள் மீது எழுப்புமா?

பொள்ளாச்சியில் இருந்த வி.சி.க, த.பெ.தி.க, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த ஜனநாயக சக்திகள் பலர் போலீசு நிலையத்திற்கு வந்து கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவுசெய்யக் கூடாது, சி.எஸ்.ஆர் பதிவுசெய்யக் கூடாது என பேசினார்கள்.

பா.ஜ.க-க்காரர்கள், தோழர்கள் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்ய கூறியுள்ளனர். மேலும் சி.எஸ்.ஆர்.ஐ போடுங்கள் என கூறியுள்ளனர். அப்போது, அங்கிருந்த தோழர்கள் நாங்களும் நான்கு பேர் மீது வழக்கு போட சொன்னால் அவர்கள் மீதும் போலீசார் எஃப்.ஐ.ஆர் போடத் தயாரா? என விவாதித்தனர்.

போலீஸ் செய்ய வேண்டிய கண்காணிப்பு வேலைகளை பா.ஜ.க.காரர்கள் செய்யலாமா? தோழர்களிடம் துண்டறிக்கையை பறிக்க என்ன உரிமை உள்ளது? அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று விவாதித்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு போலீசு நிலையத்தில் இருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பிரசுரம் கொடுப்பதை தடுக்கவும், கேள்வி கேட்கவும், பொது வெளியில் அதிகாரத்தை கையிலெடுக்கிறது பா.ஜ.க. அந்த அதிகாரத்தை கையிலெடுக்க பா.ஜ.க.விற்கு அனுமதி கொடுத்தது யார்? நாங்கள் எதிர் கருத்தை கொண்டவர்களை பற்றி தகவல் சொல்லி தானே நடவடிக்கை எடுக்க சொல்கிறோம். வன்முறையில் இறங்குவதில்லையே. ஆனால் பா.ஜ.க நேரடியாக வன்முறையை கையாண்டு வருகிறது.

வி.சி.க, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், த.பெ.தி.க பகுதி தோழர்கள் போலீசு நிலையத்தின் வெளியே இருப்பதை பார்த்தவுடன் பா.ஜ.க நபர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.

படிக்க : கோவை மலுமிச்சம்பட்டி : 15 வருட கால மனு கொடுக்கும் போராட்டம் ! கற்றுக்கொடுத்தது களப்போராட்டமே !

மேலும் தோழர்கள் கூறுகையில் நீங்கள் பிரச்சாரங்களை தொடர்ச்சியாக இப்பகுதியில் செய்யுங்கள், நீங்கள் பிரச்சாரம் செய்ய நாங்கள் தொடர்ந்து ஆதரவு தருகிறோம். எப்பொழுது வந்தாலும் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று கூறினார்கள்.

மோடியை விமர்சிக்கக் கூடாது என்ற அதிகார திமிருடன் அடக்குமுறை செய்து வருகிறது பாசிச பா.ஜ.க கும்பல். பெயரளவிலான கருத்து உரிமையைக் கூட இருக்கக் கூடாது என்கிறது இப்பாசிச கும்பல்.

கோவையில் தொடர்ந்து ஜனநாயக சக்திகளை ஒடுக்குதல் மற்றும் அவர்கள் மீது அடக்குமுறைகளை செலுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே, பாசிச கும்பலின் வளர்ச்சி மையமாக பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் பகுதிகள் மாற்றப்பட்டு வருகிறது என்பது நிதர்சனம். இந்த அபாயத்தை உணர்ந்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசக் கும்பலின் நடவடிக்கைகளை களத்தில் நின்று முறியடிக்க ஒன்றிணைவோம்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்,
9488902202

“கோழைகளுக்கு வாழ்வில்லை; வீரர்களுக்கு சாவில்லை” | தோழர் மருது | வீடியோ

துரை மாட்டுத்தாவணி அருகில் ராமசுப்பு அரங்கத்தில், டிசம்பர் 21 பட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளன்று “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆவணப்படம் உருவாக்கிய எழுச்சியில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள், “ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிச சக்திகள் எப்படி எல்லாம் மக்களையும், ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒடுக்குகிறது என்பதை பற்றியும், இஸ்லாமியர்கள் தாக்கப்படும்போது நாம் என்ன செய்தோம் என அனைவரிடமும் கேள்வி எழுப்பினார்.

இனிமேல் நாம் இப்படி அமர்ந்து பேச முடியுமா? ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி சங் பரிவாரக் கும்பலுக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து களத்தில் நிற்க வேண்டும்.


படிக்க : ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – Documentary


அதை போன்ற ஒரு நிகழ்வுதான் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அம்பேத்கர் சிலைக்கு மாலைபோட வந்த அர்ஜுன் சம்பத் தலைமையிலான சங்கி கும்பலை விரட்டி அடித்தார்கள் ஜனநாயக சக்திகள். இதேபோல் மற்ற மாநிலங்களில் நடப்பதில்லை, ஆதலால் தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இதேபோல் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி உள்ளிட்ட காவிக் கும்பலுக்கு எதிரான நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும், உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக உலகம் முழுவதும் பாசிசம் தோன்றுகிறது. அது இந்தியாவிலும் காவி-கார்ப்பரேட் பாசிசமாக வளர்ந்துள்ளது என்பது பற்றியும், ஏன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம் என்பதைப் பற்றியும், “கோழைகளுக்கு வாழ்வில்லை; வீரர்களுக்கு சாவில்லை” என பேசி முடித்தார்.

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தோழர் மருது அவர்கள் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ரிஷி சுனக்: பாசிசத்தின் வீரிய ஒட்டுரகம்!

ந்தியாவை அடிமைப்படுத்திய இங்கிலாந்தின் வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகியிருப்பது ஒரு ‘வரலாற்று மைல்கல்’ என்று பெருமை கொண்டன பார்ப்பன, கார்ப்பரேட் இந்திய ஊடகங்கள். “சுனக் ஒரு வெள்ளையரல்லாத முதல் நபர், முதல் இந்து, இளமையானவர்” என்று புகழ்ந்தது ஹிந்துஸ்தான் டைம்ஸ். ஆர்.எஸ்.எஸ்-இன் பத்திரிக்கையான ஆர்கனைசர் “பெருமை மிகு மற்றும் நடைமுறை இந்துவான சுனக் தீபாவளி நாளில் இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமராகியிருக்கிறார்” என்று பெருமை கொள்கிறது. காவி கும்பல்களோ, சுனக்கை மையப்படுத்தி “இந்து சிங்கம்” என்று வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரப்பின.

ஒன்றிய பிரதமர் மோடியோ, “சுனக் பிரதமராகி இருப்பதன் மூலம் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்குமான உறவிற்கு சுனக் பாலமாக இருப்பார்” என்று பூரித்து டீவிட் செய்திருந்தார்.

இந்திய வம்சாவளி என்பதற்காக சுனக்கைக் கொண்டாடுவதென்றால் சுனக்கிற்கு முன்பாகவே கனடா, பிஜி, மலேசியா, அமெரிக்கா, போர்ச்சுக்கல் என பல்வேறு நாடுகளில் அதிகாரமிக்க பதவிகளில் இந்திய வம்சாவளியினர் இருக்கின்றனர். உலக அளவில் உயர் பதவி வகிக்கின்ற 200 இந்திய வம்சாவளியினரில் 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு நாடுகளில் அதிகாரமிக்க பதவிகளில் இருக்கின்றனர். சுனக்கைக் கொண்டாடுகின்ற இவர்கள் உலகின் பிற நாடுகளில் அதிகாரமிக்க பதவிகளில் உள்ள பிற இந்திய வம்சாவளியினரைக் கொண்டாடுவதில்லை.


படிக்க : புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | அச்சு இதழ்


இங்கிலாந்தின் பிரதமர் என்பது முக்கியமான பதவி என்பதால் ரிஷி சுனக்கைக் கொண்டாடுவதாக கருதிக் கொண்டால், அதைவிட முக்கியமான பதவிதான் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பதவி. ஆனால், அவர் கிருத்தவ மதத்தைச் சேர்ந்தவர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால்தான் இந்திய ஊடகங்கள் சுனக் அளவிற்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

கமலா ஹாரிஸைப் போல இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால். கடந்த 2019-ஆம் ஆண்டு, காஷ்மீரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், இந்திய அரசு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் பிரமிளா தீர்மானம் கொண்டுவந்தார். காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும், என்.ஆர்.சி. மற்றும் குடியுரிமைச் சட்டத்திருத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்த பிரமிளாவை இந்திய ஊடகங்களோ, காவி கும்பல்களோ கொண்டாடவில்லை. மாறாக, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதற்காக அவருடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பையே நிராகரித்துவிட்டார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

இந்தியாவை இரு நூற்றாண்டு காலம் அடிமைப்படுத்திய இங்கிலாந்தை ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆட்சி செய்கிறார் என்பதற்காக கொண்டாடுகின்றனர் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கப்பட வேண்டும்.

மீட்பரல்ல, ‘ஜாமீன்’!

அரசாங்கத்தின் ‘சிக்கன’ நடவடிக்கைகளாலும் விலையேற்றம் மற்றும் ஊதிய குறைப்பினாலும் துன்பப்படுகின்ற இங்கிலாந்தின் உழைக்கும் மக்களை ரிஷி சுனக் ரட்சிக்கப் போகிறாரா? அல்லது சரிந்து விழும் பிரிட்டன் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தப் போகிறாரா? இது எதுவும் நடக்கப் போவதில்லை.

இங்கிலாந்து மட்டுமல்ல உலக நாடுகள் சந்திக்கின்ற இந்த நெருக்கடி என்பது ஏகாதிபத்தியத்தின் உள் இயல்பால் ஏற்பட்டதாகும், ஏகாதிபத்தியத்தை ஒழிக்காமல் இந்தப் பொருளாதார நெருக்கடியை தீர்க்கமுடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தெரியாமல்தான், இவருக்கு முன்பு பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் ஆகியோரும் பதவி விலகினர்; அதனைத் தொடர்ந்துதான் ரிஷி சுனக் பிரதமர் பதவியைக் கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடிக்கு ரிஷி சுனக் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை என்பது 1980-களில் வலதுசாரி பழமைவாதியான மார்க்கரெட் தாட்சர் முன்வைத்தவைதான். இந்த வழியில்தான் இவருக்கு முன்னதாக இருந்த இரண்டு பிரதமர்களும் ஆட்சி செய்தனர். அப்படியென்றால், சுனக் செய்யப்போவது என்ன?

தாட்சரிசம் என்பது பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, தொழிற்துறை உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயப்படுத்துவது, தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வேட்டைக்கு மொத்த நாட்டைத் திறந்துவிடுவதாகும். அதாவது, இந்தியாவில் மோடியைப் போல இங்கிலாந்தில் சுனக் இவற்றை மேலும் தீவிரப்படுத்தப் போகிறார். சுனக்கின் இந்த கொள்கை ஏற்கெனவே நெருக்கடிப் புதைகுழியில் சிக்கியிருக்கும் இங்கிலாந்தை மேலும் உள்ளிழுக்க செய்யுமே தவிர, மீட்கப் போவதில்லை. ஆனாலும், சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

’ரிஷிமூலம்’?

2019-இல் பழமைவாத-வலதுசாரி கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைத்ததிலிருந்து இதுவரை போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் என இரண்டு பிரதமர்கள் பதவி விலகிவிட்டனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும், இங்கிலாந்தின் இஸ்லாமிய அமைப்புகளும் பொதுத்தேர்தல் கோரிக்கையை முன்வைக்கின்ற இச்சூழலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, வேறு வழியில்லாமல் கட்சியில் உள்ள ஒரு கும்பலின் ஆதரவால் முதலாளித்துவ நெருக்கடிக்கு ‘ஜாமீனாக’ முன்னிறுத்தப்பட்டவர்தான் சுனக்.

எனினும்கூட, கன்சர்வேட்டிவ் கட்சியில் இருக்கும் பலரில் ரிஷி ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், ஏனெனில் ரிஷி இங்கிலாந்தின் பழமைவாதமும் இந்திய சனாதனமும் கலந்த ஒட்டுரக பாசிச அவதாரம்; எனவேதான் ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுனக் இங்கிலாந்தில் பிறந்தவர், கோடிஸ்வரர் என்பதால் இங்கிலாந்தின் பழமைவாத கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கைகளை இயல்பாக ஏற்றுக் கொண்டவராக இருக்கிறார். தனக்கு தொழிலாளர்கள் மத்தியில் எந்த நண்பர்களும் இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு முதலாளித்துவ திமிர் இவரது இரத்தம் முழுவதும் ஓடுகிறது.

கட்டற்ற சந்தை,  சந்தையில் அரசு தலையீடுக் கூடாது, இஸ்லாமிய வெறுப்பு, ஒரே நாடு போன்றவைதான் கன்சர்வேட்டிவ் கட்சியின் கொள்கைகள். அதாவது, இந்தியாவின் பா.ஜ.க.வைப் போன்ற ஒரு பிற்போக்குக் கட்சிதான் கன்சர்வேட்டிவ் கட்சி.

நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாதங்களில், நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, “அரசு செலவினங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 37 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது” என்று மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை எதிர்த்தவர்தான் சுனக். பல மொழிகளும் தேசிய இனங்களும் கூடி வாழ்கின்ற இங்கிலாந்திற்குள் புலம்பெயர்ந்தவர்கள் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் ஏழை மக்களுக்கு எதிராகப் பேசுபவர்.

இன்னொரு பக்கம், ரிஷி சுனக்கை இந்திய வம்சாவளியினர் என்று சொல்வதைவிட, இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்கிற கர்நாடக பார்ப்பன கார்ப்பரேட் முதலாளியின் மருமகன் என்று சொல்வதுதான் பொருத்தமானதாகும்.

இந்திய சனாதனத்தை மரபு வழியாகக் கொண்டதோடு, அதை பின்பற்றுபவராகவும், தன்னை ஒரு சனாதனியாக, இந்துவாக வெளிக்காட்டிக் கொள்வதில் பெருமை கொள்பவராகவும் இருக்கிறார் சுனக்.

2015-இல் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தனது பதவி பிரமாணத்தில் பகவத் கீதையை வைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.  கடந்த ஜூலையில், லிஸ் ட்ரஸ் உடனான பிரதமர் பதவி போட்டியின்போது, தான் வெற்றி பெறுவதற்காக பசு பூஜை செய்தார். இங்கிலாந்தின் பிரதமரான பிறகு, “ஒரு பிரதமராக தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார். பிரதமரான பிறகு தனது முதல் உரையில், “இந்து நம்பிக்கையாளன் என்றும், இந்து கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டவன்” என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

பொதுவாகவே, அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது மதத்தை வெளிப்படையாக அறிவிப்பது, அதில் பெருமை கொள்வது என்பது ஜனநாயகக் குடியரசு மரபிற்கு நேர் எதிரானதும், பாசிஸ்ட்டுக்கு உரியதுமாகும்.

காவி பாசிஸ்டுகளின் பங்காளி!

இங்கிலாந்தில் இந்துக்கள் அதிகம் வாழும் லெஸ்டர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான எச்.எஸ்.எஸ். ஊடுருவி வேர்பிடித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இப்பகுதியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டமிட்ட கலவரத்தை அரங்கேற்றியிருக்கிறது இப்பாசிசக் கும்பல். இக்கும்பலுக்கு ஆதரவாக கன்சர்வேட்டிவ் கட்சி இருக்கிறது. இக்கட்சியின் உதவியுடனே இந்துத்துவக் கும்பல் இங்கிலாந்தில் வளர்ந்து வருகிறது. மேலும், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவாக இங்கிலாந்தில் உள்ள ஆதிக்கசாதி மேட்டுக்குடி இந்துக்கள் பிரச்சாரம் செய்தனர். இவையெல்லாம், இந்து சனாதனத்துடன் இங்கிலாந்தின் பழமைவாதம் இணைந்திருப்பதை நமக்கு உணர்த்துகின்றன.


படிக்க : ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர்


இந்தக்கூட்டின் பிரதிநிதிதான் சுனக். அதனால்தான், இங்கிலாந்தின் மீட்பராக சுனக் முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். நெருக்கடி தருணங்களில் பாசிஸ்ட்டுகளை மீட்பராக முன்நிறுத்துவதுதான் வரலாறு! முசோலினியும், ஹிட்லரும் அவ்வாறுதான் மீட்பராக முன்நிறுத்தப்பட்டனர்.

இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி சூழலில், சுனக் பிரதமராகி இருப்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் இங்கிலாந்தின் உழைக்கும் மக்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகும். 2014-இல் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு காவி கும்பல் உலகளவில் வளர்ச்சியடைந்ததைப் போல, சுனக் ஆட்சியும் இங்கிலாந்தில் காவி கும்பல் வளர்வதற்கான வளமான அடித்தளமாக அமையும் என்பதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லை.

ஆகையால்தான், இந்திய காவி பாசிஸ்ட்டுகள் சுனக்கை ஆதரிக்கின்றனரே தவிர, இந்திய வம்சாவளி என்பதனால் அல்ல. எனவே, ஒரு பாசிச ஆதரவாளனை இந்திய வம்சாவளி என்பதற்காக இந்திய உழைக்கும் மக்களாகிய நாமும் கொண்டாடுவதற்கோ, பெருமை கொள்வதற்கோ ஏதுமில்லை. பாசிசத்தின் இந்த சர்வதேசக் கூட்டுக்கு எதிராக பாசிச எதிர்ப்பு சர்வதேச ஒற்றுமையைக் கட்டியமைப்பது நம்முன் நிற்கிற அவசியமான கடமையாகும்!

அப்பு

நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம் | அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு அறிக்கை!

நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை அரசு கைவிடும் மற்றும் அதிரடியாக தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம்,  உடனடியாகத் திரும்பப் பெற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு வலியுறுத்தல்

தமிழக அரசாங்கம்  நம்ம ஸ்கூல் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்த கையோடு அதை அதிரடியாக நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக தனியார் தொழில் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை நேரடியாகத் தத்தெடுக்கலாம் அல்லது பல்வேறு கட்டுமான அமைப்புகளை ஏற்படுத்தித் தரலாம் அல்லது முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு உதவலாம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தனியார் நிதிப் பங்களிப்பபைப் பெற்று அரசுப் பள்ளிகளையும் அதன் கட்டுமானத்தையும் பலப்படுத்தப் போவதாகவும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கப் போவதாகவும் காண்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளுக்கு நிதி அளிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கே உள்ளது என்பது ஒருபுறமிருக்க, தனியார் நிதிப் பங்களிப்பை அரசாங்கம் கோருவதை ஒரு வாதத்திற்காக நாம் ஏற்றுக் கொண்டாலும் கூட, அந்நிதிப் பங்களிப்பை பெற்று அதை அரசாங்கமே நிர்வாகம் செய்யும் இடத்தில் நிலைமை வேறு. ஆனால் நம்ம ஸ்கூல் திட்டத்தில் தனியார் நிதிப் பங்களிப்பை நிருவகிக்கக்கூடிய பொறுப்பையும் தனியார் கையில் கொடுத்திருப்பதானது அரசுப் பள்ளிகளை நிச்சயமாக தனியார்மயத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்பது கேள்விக்கு அப்பாற்பட்ட வகையில் இருக்கிறது.

படிக்க : அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி

மேலும், பல ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வகுப்பறைகள் கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளி கட்டுமான அமைப்புகள் சிதைவுற்றிருக்கும் நிலையில், தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிகப் பணியில் ஆசிரியர்கள் பணியாற்றிவரும் நிலையில், நிரந்தர அடிப்படையில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்யாத நிலையில், அவற்றையெல்லாம் சரி செய்ய அரசு போதுமான நிதி ஒதுக்கி ஆவண செய்யும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்திருந்த வேளையில்… அரசுப் பள்ளிகளைக் கைகழுவி படிப்படியாகத் தனியார்வசம் ஒப்படைக்கக் கூடிய விதத்தில் நம்ம ஸ்கூல் திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

1990 களில் கொண்டுவரப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் (SSA) உள்ளிட்டவை பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership – PPP) என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்க பல்வேறு செயல்முறை நடவடிக்கைகளை ஏற்கனவே தொடர்ந்து எடுத்து வந்தன.

அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 இல் கூறப்பட்டுள்ளது போல், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தனியார் சமூக பங்களிப்பு (Corporate Social Responsibility) என்ற வகையில் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கலாம் என்றும் முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிக்குப் போதுமான நிதி உதவி செய்யலாம் என்று அதே அம்சங்களைப் பின்தொடர்ந்து நம்ம ஸ்கூல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

இந்த நம்ம ஸ்கூல் திட்டம், மக்கள் வரிப்பணத்தில் இதுநாள் வரை செயல்பட்டு வந்த அரசுப் பள்ளிகள் மீதான இறுதி தாக்குதல் ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் ஒரே நம்பிக்கை ஆதாரமாகத் திகழ்ந்துவரும் அரசுப் பள்ளிகளைப் படுவேகமாகத் தனியார்மயமாக்கும்  இந்த முயற்சியை அகில இந்திய கல்விப் பாதுகாப்பு குழுவின் தமிழ்நாடு பிரிவு வன்மையாகக் கண்டிக்கிறது. இத்திட்டத்தைத் தமிழக அரசாங்கம் உடனடியாகத் திரும்பப்பெறவும் வலியுறுத்துகிறது.

தமிழகத்தை ஆளும் திமுக அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கை 2020 எதிர்ப்பதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தது. அதற்கு மாற்றாக, பொதுமக்களின் நிர்ப்பந்தத்தால், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு உயர்மட்டக் குழுவையும் நிறுவியது. அந்த உயர்மட்டக் கல்விக் குழு ஒரு மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கித் தருவதற்கு முன்பாகவே தேசிய கல்விக் கொள்கை 2020 இன் பல்வேறு அம்சங்களான இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், திறன் மேம்பாடு என்ற நான் முதல்வன் திட்டம் போன்றவற்றைப் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடையில் தமிழக அரசாங்கம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு மத்திய பாஜக அரசாங்கம் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை 2020ஐ இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலத்தை விடவும் தமிழகத்தில் படுவேகமாகத் திமுக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

படிக்க : தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மக்களின் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காகப் போராடிய மாபெரும் மனிதர்களான பாரதியார், வ உ சிதம்பரனார், நேதாஜி, பகத்சிங் போன்றோர் தமது இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தின் பலனாகவே நாடு முழுவதும் பொதுமக்கள் வரிப்பணத்தில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. மக்கள் வரிப்பணத்தில் உருவான அரசுக் கல்வி நிறுவனங்களை, பொது சொத்துக்களைப் பாதுகாத்து அவற்றைச் செழித்தோங்கச் செய்யப் போதுமான நிதியை மாநில அரசாங்கம் ஒதுக்குவதே நியாயமாகும்.

அதை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு மக்களின் பொதுச் சொத்தாகத் திகழும் அரசுப் பள்ளிகளைப் படிப்படியாகத் தாரை வார்க்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் திட்டம் ஒரு அபாயகரமான வஞ்சகத் திட்டமாகும். கல்வியை நேசிப்போர், நல்லெண்ணம் கொண்டோர் நம்ம ஸ்கூல் திட்டத்தை எதிர்க்க முன் வர வேண்டும். இந்தத் திட்டத்தை திரும்பப்பெறும் வகையிலும் கோடானு கோடி ஏழை எளிய மக்களுக்குக் கல்வியை உத்திரவாதப்படுத்த அரசுப் பள்ளிகளுக்கு அரசே போதுமான நிதி ஒதுக்குவதை உறுதி செய்து அரசு கல்வி நிறுவனங்களைப் பாதுகாத்திடும் வண்ணம் ஒரு ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்க முன்வருமாறு சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும், குறிப்பாக ஆசிரியர் சங்கங்கள், மாணவர் சங்கங்களையும் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு அறைகூவி அழைக்கிறது.

இப்படிக்கு,
வெ.சுதாகர், மாநில குழு உறுப்பினர்,
அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, தமிழ்நாடு.

நன்றி: ஆசிரியர் உமா மகேஷ்வரி

disclaimer

டிடிஎஃப் வாசன் ‘இளைஞர்களின் தலைவன்’ ஆனது எப்படி?

ண்மையில் கடலூருக்கு வந்திருந்த டிடிஎஃப் வாசனை வரவேற்கவும் ஆராதிக்கவும் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்தனர். திரைப்பட இயக்குனர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக டிடிஎஃப் வாசனை அழைத்து இருந்தார்.

டிடிஎஃப் வாசனை காண்பதற்காக நூற்றுக்குமேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்திருந்தனர். அலுவலக திறப்பு நிகழ்ச்சி முடியும் வரை தங்களுடைய வாகனத்தை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஊளையிட்டு கொண்டிருந்தனர்.

படிக்க: போபால்: பள்ளி வேனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வெறிப்பிடித்த மனிதர்களை உருவாக்கி வரும் சமூகம்!

போலீஸ் பலமுறை எச்சரித்தும் வாகனங்களை எடுக்க யாரும் தயாராக இல்லை. டிடிஎஃப் வாசன் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகுதான் கிளம்புவோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். சாலையின் நடுவில் இருக்கக்கூடிய வாகனங்களை போலீஸ் பறிமுதல் செய்ய நேரிடும் என்று கூறிய பிறகும் யாரும் மசியவில்லை. போலீஸ் இரண்டுமுறை தடியடி நடத்தியும் இளைஞர்கள் கலைந்து போகவில்லை. நிகழ்ச்சி முடிந்து காரில் திரும்பி சென்ற டிடிஃப் வாசனின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் பல இளைஞர்கள் தங்களுடைய இருசக்க வாகனத்தை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றனர்.  ஒரு சில வாகனங்கள் மிக வேகமாக ஓட்டியதால் விபத்துக்குள்ளாகின. பல வாகனங்களையும் போலீசார் மடக்கி ரூ.1000, ரூ.2000 என அபராதங்கள் விதித்தனர்.

அபராதங்களுக்கும் அடிதடிக்கும் அஞ்சி அடுத்தமுறை டிடிஎஃப் வாசன் கடலூருக்கு வரும் பொழுது யாரும் வராமல் இருக்கப்போவதில்லை.

யார் இந்த டிடிஎஃப் வாசன்?

அதிவேகமாக  இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதை தனது யூடியூப் (youtube) சேனல் மூலம் காட்டுபவர். மிக வேகமாக பைக் ஓட்டுவதை ட்ரெண்டிங் ஆக்கி அதை வைத்து இளைஞர்களை கவர்ந்திழுத்து வைத்திருப்பவர்.  மிக வேகமாக வாகனம் ஓட்டுவது தவறா? இல்லை. அது ஒரு மக்கள் விரோத செயல். மிக அதிவேகமாக வண்டி ஓட்டுவதால் பாதிக்கப்படுவது மக்கள். ஆனால், அச்செயலையே ஃபேஷனாக்கி செய்ய தூண்டுவதுதான் சமூக விரோத செயல்.

டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டுவது  தவறு என்று யாருக்கும் தெரியாதா? பிறகு எப்படி இத்தனை பேர் அவனை தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். அவன் தனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஓடுகின்ற கார் ஜன்னலில் தலையை கொடுக்கிறார்கள். அவன் முகத்தை பார்ப்பதற்கு காத்திருக்கிறார்கள். போலீசிடும் அடி, உதை வாங்கி அபராதங்களைக் கட்டி டிடிஎஃப் வாசனின் பேச்சுக்காக ஏன் காத்து கிடக்கிறார்கள்?

தலைவனாக இருக்க வேண்டும் என்றால் சமூகப் பொறுப்போ, விழுமியமோ எதுவும் தேவையில்லை ஏன் அப்படி நடிக்கக் கூட வேண்டிய அவசியம் தேவையில்லை என்பதைத்தான்  டிடிஎஃப் வாசன்கள் நிரூபிக்கின்றார்கள்.

டிடிஎஃப் வாசன், ஜிபி முத்து, சவுக்கு சங்கர், சீமான் போன்றவர்கள்தான் வருங்கால இளைஞர்களின் தலைவர்களாக இருக்கிறார்கள் .

‘ஏ நார பயலே’,  ‘செத்த பயலே’ இப்படி வாய்க்கு வந்ததையும் நா கூசும் வார்த்தைகளையும் பைத்தியக்காரன் போல பேசிக்கொண்டு திரியும் ஜிபி முத்து ஒரு ட்ரெண்டிங் ஆன நபர். அவருக்கு பல லட்சம் ஃபாலோயர்ஸ்.

பெண்களை ஏமாற்றி அவர்களை  அபலைகளாக தவிக்க விட்ட சவுக்கு சங்கரும் சீமானும் இவ்வித கூச்சம் நாச்சமும் இன்றி திரிவது ஒருபுறம் இருக்கட்டும்; இவர்களையெல்லாம் தலைவர்களாகவும், நாயகனாகவும் எப்படி ஏற்றுக்கொண்டிருக்கிறது பழம் பெருமைமிக்க’, அறிவுமிக்க’ தமிழ் சமூகம்’?

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் கொள்கைகள் நுகர் – தூக்கி எறி என்பதையே இளைஞர்களின் இதய கீதம் ஆக்கிவிட்டனர். மனிதநேயம், மனித மாண்பு, தன்மானம், அன்பு, இரக்கம், காதல், பாசம் என மனிதனுக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் அடித்து நொறுக்கி, யாரைக் கொன்றும் எப்படியும் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற சிந்தனையை உருவாக்குகிறது.  அதுதான் அஜித் படத்தில்வரும் வசனம் “நாம வாழனும்னா யார வேணும்னாலும் எத்தனை பேரை வேணும்னாலும் கொல்லலாம் தப்பு இல்ல.”

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்துக்குப் பின்னர் அரசு தன்னுடைய அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கழன்றுகொண்டு அனைத்து உற்பத்தி மற்றும் சேவை துறைகளையும் தனியாருக்கு தாரை வார்த்தது, அதையும் உலகமயமாக்கியது. ஏற்கனவே மிகவும் பிற்போக்கான சமுதாய அமைப்பைக் கொண்டிருந்த இந்த நாட்டில் உலகமயத்தின் வழியாக ஊடுருவும் டாலர்களின் வழியே  மேற்கத்திய நுகர்வுக் கலாச்சாரமும் ஊடுருவி பாய்ந்தது.

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நிரந்தரமான வேலைமுறை என்பது காணாமல்போய் நிரந்தரமற்ற, அடித்தளமற்ற உதிரி வர்க்கத் தொழிலாளிகளே எங்கும் நிறைந்திருக்கின்றனர்.

மெத்தப் படித்தவர்களுக்கு வேலை இல்லை. கிடைக்கும் வேலையும் போதுமானதாக இல்லை. ஆக எம்.பி.ஏ படித்தவர்கள் கூட ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் வேலை பார்த்து மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிப்பதை விட, மாதம் 15 நாட்கள் தூங்காமல் வேலை செய்வதன் மூலம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று ola, uber, zomatto, swiggy-க்கு வேலைக்குச் செல்கிறார்கள்.

தான் விருப்பப்பட்ட நேரம்,  விருப்பப்பட்ட வேலைக்கு செல்லலாம். அதுவும் தான் எதிர்பார்த்த சம்பாத்தியத்தை பெறலாம். யாருக்கும் கட்டுப்பட்டு முறையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பப்பட்டால் வேலைக்கு செல்லலாம் இல்லையென்றால் வீட்டில் தூங்கலாம். இல்லையெனில் ஊர் சுற்றலாம் யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்த உதிரித்தனமான வாழ்க்கைமுறை, உதிரித்தனமான சிந்தனை – பண்பாட்டையும் உருவாக்கி இருக்கிறது.

ஏற்கனவே, பெண்ணை அடிமையாக வைத்திருந்த இந்த அரை நிலவுடமை சமூகமானது மறுகாலனியாக்கத்தின் விளைவாக உருவான  நுகர்வு பண்பாட்டுடன் இணைந்து விஸ்வரூபம் எடுக்கிறது. அதனால்தான் திருமணம் என்ற பெயரில் யாரும் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை. எதற்கும் கட்டுப்படாத, எதற்கும் பொறுப்பற்ற லிவிங் டூ கெதர் முறையை ஏற்றிப் போற்றுகிறது. ஆணாதிக்கமும், நுகர்வு பயன்பாடும் இணைந்து வீரிய ஒட்டு ரகமாகி ஷ்ரத்தாக்களை கொன்று எவ்வித குற்ற உணர்வு இல்லாமல் இருக்க வைக்கிறது.

தனக்கு விருப்பப்பட்டதை அடைவதற்கு எப்படிப்பட்ட பாதகச் செயலையும் செய்யலாம் அது தவறல்ல. அது எவ்வளவு மக்கள் விரோத செயலாக இருந்தாலும் சரி. அதை உயர்த்தி பிடிக்கிறது.

படிக்க : பெண்ணை தனிச்சொத்தாகவும் நுகர்வுப் பொருளாகவும் கருதும் இச்சமூகத்தில் நாம் இனியும் வாழமுடியுமா என்ன? 

அதுதான் இன்றைய சமூகத்தில் கருவாகி, உருவாகி வளர்ந்துவரும் புதியதொரு தலைமுறையின் அடி நாதமாக இருக்கிறது. அதனால்தான் ஷ்ரத்தாவின் படுகொலை இச்சமூகத்தில் எவ்வித பேரலையையும், ஏன்சிறு எதிர்விளைவைக் கூட  உருவாக்கவில்லை.

மொழி, இனம், நிலம், நேர்மை, தன்மானம், வர்க்கம்  என எந்த ஒரு அடிப்படையும் தேவையில்லை தலைவன் ஆவதற்கு. இவைதான் ஆக மிகவும் கீழ்த்தரமான லவ் டுடே என்ற படம் பல கோடி ரூபாய்களை வசூல் செய்ததற்கு காரணம்.

எதைப் பற்றியும் கவலைப்படாத, பொறுப்பற்ற ஆளும் வர்க்கத்தால் திட்டமிடப்பட்டு மடைமாற்றப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தால் வெறியூட்டப்பட்ட  புதியதொரு தலைமுறைக்கு பொறுப்பேற்க தலைமை தாங்க டிடிஎஃப் வாசன், சவுக்கு சங்கர், சீமான், ஜிபி முத்து தயாராக இருக்கிறார்கள். வடநாட்டில் அந்த வெற்றிடத்தை ஏற்கனவே யோகி ஆதித்யநாத் போன்ற காட்டுமிராண்டிகள் மூலம் நிரப்பி விட்டார்கள்.

இந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு முறையை உருவாக்கும் மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு மாற்றான -எதிரான- புரட்சிகர அரசியலை எந்த அளவுக்கு கொண்டு செல்கின்றோமோ, அந்த அளவுக்குதான்,  டிடிஎஃப் வாசன்களின் வருகையை மட்டுமல்ல, ஏற்கனவே வீற்றிருக்கும் மோடியின் இந்துராஷ் கனவையும் தகர்த்தெறிய முடியும்

மருது

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை உயர்த்திப்பிடிப்போம்! | கவிதை – ஓவியம்

ஹிட்லர் – முசோலினி பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை உயர்த்திப்பிடிப்போம்!

1917 நவம்பர் 7 ரஷ்ய புரட்சிக்கு லெனினுடன் கைக்கோர்த்தாய்!

சோசலிச குழந்தையைக் கருவிலே கொல்ல வந்த, இரத்தவெறிபிடித்த முதலாளித்துவ ஓநாய்களை விரட்ட செம்படைக்கு தலைமையேற்றாய்!

தோழர் லெனினிக்கு பின் ரஷ்யப் போல்ஷ்விக் கட்சியை வழிநடத்தினாய்!

உலகத்திற்கு புதிய சமூகமான சோசலித்திற்க்கு அடித்தளமிட்டாய்!

டிராஸ்கியவாதிகளை சித்தாந்த ரீதியாக அம்பலப்படுத்திவிட்டாய்!

கூட்டுப்பண்ணை, இயந்திரத் தொழில் அமைக்க நீ வகுத்த வியூகம் உலகையே வியப்பில் வைத்திருக்கிறது…

தனிச்சொத்துடைமை ஒழித்து பொதுவுடைமையை நிலைநாட்டினாய்!

உலக பொருளாதாரமே சரிந்தப்பொழுது ரஷ்யாவைப் பொருளாதரத்தில் எழுந்து நிற்க வைத்தாய்!

இதோ மீண்டும் ஓர் அச்சுறுத்தல்,

உலகை பாசிச இருளிலிருந்து காப்பாற்ற வேண்டிய கடமை உனது தலைமையிலான ரஷ்ய செம்படையிடம்!

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின்

ஆம், சோசலிச குழந்தை வளர்ந்து வரும்போது, இரத்தவெறிபிடித்த ஹிட்லரை உலக முதலாளித்துவ ஓநாய்கள் அனுப்புகிறது…

இதோ, வெறிபிடித்த ஹிட்லரை வீழ்த்த செம்படை தயார் என அறிவித்தாய்!

ஹிட்லரின் படையை குலைநடுங்க செய்து, செங்கொடியை அவன் கோட்டையிலே பறக்கவிட்டாய்!

ஹிட்லரை குலைநடுக்கத்தில் தற்கொலை செய்ய வைத்தாய்!

உனது செம்படை இன்னும் உலக முதலாளித்துவ ஓநாய்களுக்கு அச்சுறுத்துலாகவே இருக்கிறது…

ஏனென்றால், நீ ஒரு சர்வாதிகாரி அல்லவா!

ஆம், முதலாளித்துவத்தைக் கொல்லவந்த பாட்டாளி வர்க்க பிரதிநிதியின் சர்வாதிகாரி!

80 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஸ்டாலின் என்ற பெயர் முதலாளித்துவத்துக்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறது…

உலக நாடுகளில் பாசிச இருள் சூழ்ந்துக்கொண்டிருக்கிறது…

இதோ, இந்தியாவிலும் பாசிசம்…

ஆம், ஹிட்லரின் SS படையின் வாரிசான RSS படை நாட்டை சூழ்ந்துள்ளது!

விரைவில் இந்துராஷ்டிரத்தை அறிவிக்க நுழைவாயில் காத்துக்கொண்டிருக்கிறது…

ஹிட்லர் – முசோலினி பாசிச கும்பலை கதறவைத்து, வீழ்த்திய உனது வர்க்க உணர்வை வரித்துக்கொண்டு…

இதோ, உனது மாணவனாக நடைபோட துவங்கிவிட்டோம்!

காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளே எச்சரிக்கை…

மண்ணோடு மண் வைத்து புதைக்க தோழர் ஸ்டாலினை நெஞ்சிலேந்தி வீறு நடையோடு வந்துக்கொண்டிருக்கிறோம்!!!

ஓவியம்: தோழர் பாலா

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்
94889 02202

அரசு வேலைகளும் அரசு துறைகளும் அனைத்தும் தனியாருக்கே! “நம்ம ஸ்கூல் திட்டம்” திராவிட மாடலின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்!

நீண்ட காலமாக அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் உதவியைப் பெற்று சிறு சிறு உதவிகளை பெற்று வந்தன. தற்போது, ஒட்டுமொத்தமாக அரசு இலவசக்கல்வி சேவையை கைக்கழுவி தனியாருக்கு விட்டுவிட்டு செல்வதற்கான உச்சக்கட்ட நடவடிக்கையே “நம்ம ஸ்கூல் திட்டம்”.

பள்ளிக்கல்வித் துறையின் நம்ம ஸ்கூல் திட்டத்தின்படி, அரசு பள்ளிகளில் படித்து பட்டம் பெற்று உயர்ந்த நிலைக்கு வந்த மாணவ – மாணவியர், தொழில் அதிபர்களாக உயர்ந்தவர்கள், தொழிற்சாலைகளை நிறுவியவர்கள், சமூக அக்கறைகொண்ட முன்னாள் மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இணைத்துக் கொள்ளப்படும். சமூக பொறுப்புணர்வு நிதி என்னும்  சி.எஸ்.ஆர் நிதியை கொண்டு அரசு பள்ளிகளை மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட, நபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் பள்ளி சுற்றுச்சுசுவர், பள்ளிகளுக்கு சுண்ணாம்பு அடித்தல், கணினிகள், சுகாதரமான கழிப்பறைகள் கட்டுதல், ஆய்வகங்கள் உருவாக்குதல், நூலகங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க : நம்ம ஸ்கூல் திட்டம்! நமக்கல்ல; கார்ப்பரேட்டுக்கு கல்வியை தாரை வார்க்கவே! | மக்கள் அதிகாரம்

இத்திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர், “நம்முடைய குழந்தைகள் வளர்ந்து உங்கள் நிறுவனங்களையும், பெரு நிறுவனங்களையும், தமிழ்நாட்டின் கிராமங்களையும், நகரங்களையும் முன்னேற்றுவார்கள்; தமிழ்நாட்டின் தொழில்துறையில் முன்னிலையில் இருக்கும் வேணு சீனிவாசன் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் தலைவராகவும், தூதுவராக விஸ்வநாதன் ஆனந்த் இருப்பது நமக்கு கிடைத்த பெருமை” என்று கூறியுள்ளார்.

பள்ளிக்கூடங்கள் மட்டும் அரசு பெயரில் இயங்கும். பள்ளிக் கட்டிடம், குழந்தகளைத் தவிர அனைத்தும் தனியாருக்கே தாரைவார்த்துள்ளது. சமீப காலமாக பள்ளி ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையிலே நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அறிவித்துள்ள திட்டத்தின்படி, பள்ளி மேம்பாட்டு பணிகளும் முழுமையாக முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு விட்டுவிட்டால் கல்வித்துறை எதற்கு? கல்வித்துறை அதிகாரிகள் எதற்கு?, கல்வித்துறை அமைச்சர் எதற்கு?, இவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் எதற்கு?.

தொழிலாளிகளின் ரத்தத்தை உறிஞ்சிய கார்ப்பரேட் முதலாளியை தலைவராக நியமித்து இத்திட்டத்தை அமல்படுத்துவதன் நோக்கம் கல்வி சேவையாக வழங்குமா? இல்லை, கல்வி வியாபரமாக வழங்குமா? என்ற கேள்வியே எழுகிறது. இத்திட்டத்திற்கு தலைவராக இருக்கக்கூட தகுதியில்லாத ஆசிரியர்கள், அதிகாரிகள் தான் தமிழக அரசிடம் உள்ளனரா?.

டி.வி.எஸ் நிறுவனம் அதன் தொடக்கக் காலம் முதலாக தொழிலாளி விரோத, தொழிற்சங்க விரோத போக்கோடு தான் நடந்துக்கொண்டிருக்கிறது. டி.வி.எஸ் குழுமத்தின் கிளையான ஆக்சில்ஸ் நிறுவனத்தில் வேலைநீக்கம் போன்ற நடவடிக்கைக்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வந்துள்ளன. டி.வி.எஸ் ஐய்யங்கார் குழுமத்தின் நடைமுறை தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவது தான்.

இந்த உழைப்பு சுரண்டலின் அடையாளமான வேனு சீனிவாசனுக்கு தான் நம்ம ஸ்கூல் திட்டத்தை நடத்த சொல்லியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

***

தமிழகத்தில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசும் மாநில அரசும் நிதியை ஒதுக்கி பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்தி வருவது தான் நடைமுறை. 1990ம் ஆண்டிற்கு முன்னால் கல்வி, குடிநீர், போக்குவரத்து, மருத்துவம் போன்றவை முழுமையாக அரசு நடத்தி வந்தது. அது, 1990ம் ஆண்டிற்கு பின்னால் கொண்டுவரப்பட்ட தனியார்மயமாக்கும் மறுகாலனியாக்க கொள்கையை படிப்படியாக அமல்படுத்த தொடங்கியது. அதன் தொடக்கக் கட்டத்தில் அரசு + தனியார் கூட்டு நடவடிக்கையில் தொடங்கி, இறுதியாக முழுமையாக தனியாரிடம் ஒப்படைப்பதே இலக்கு.

இந்நிலையில் தான் அரசின்  பங்களிப்பு மட்டுமல்லாமல் தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்பட கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது ஏதோ ஒரு நாளில் வந்த முடிவல்ல அரசு பள்ளிகளை முழுமையாக தனியாருக்கு கொடுப்பது தான் அரசின் நோக்கமே.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் சிலர் மட்டுமே இல்லம்தேடி கல்வி, வானவில் மன்றம், நம்ம ஸ்கூல் திட்டம் போன்ற கவர்ச்சித் திட்டங்களை அம்பலப்படுத்தி பேசி வருகின்றனர். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் “என்ன திட்டம் வந்தா நமக்கென்ன, நான் அரசு ஊழியர் அரசுக்கு எதிராக பேச முடியாது, கூடாது” என்று மெளனம் சாதிக்கவே செய்கின்றனர்.

இவை, எதிர்காலத்தில் அரசு பள்ளிகளின் குழந்தைகளுக்கு மட்டும் ஆபத்தல்ல அரசு வேலைகளுக்கும் ஆபத்து என உணர்ந்தவர்களே குரல் கொடுக்கின்றனர். நிரந்த ஆசிரியர் பணியை ஒழித்து ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் பணிக்கான நடவடிக்கையையும் தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகிறது இந்த அரசு. இனி “அரசு வேலைகளோ அரசு துறைகளோ அனைத்தும் தனியாருக்கே” என்ற நிலையே எதார்த்தமாகிவிட்டது.

இதுபோன்ற திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்பது மட்டுமே ஒரே வழி. ஆசிரியர்கள் + மாணவர்கள் + பெற்றோர்கள் இணைந்து இத்திட்டங்களை அம்பலபடுத்தும் விதமாக பொதுவில் விவாதத்தை எழுப்புவதே அவசியமாக உள்ளது. கவர்ச்சித் திட்டங்கள் மூலம் தனியாரை கமுக்கமாக நுழைக்கும் வேலையை கனகச்சிதமாக திறம்பட திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

***

திராவிட மாடல் என்ற பெயரில் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் திட்டத்தை உள்ளடக்கியே வருகின்றன. அதை வெளிப்படையான பெயரில் கொண்டுவந்தால் திமுக ஆட்சிக்கு கலங்கம் வந்துவிடும் அல்லவா. அதனால், கவர்ச்சிக்கரமான பெயரில் திராவிட மாடல் என்ற பெயரால் கொண்டுவரப்படுகின்றன. தேர்தலுக்கு முன்னாலிருந்த கவர்ச்சி திட்ட மயக்கத்திலே இன்னும் பல முற்போக்காளர்களும் ஜனநாயகவாதிகளும் மீளாமல் உள்ளனர்.

இத்திட்டங்களை விமர்சிக்கக் கூடிய எதிர்கட்சிகளுக்கு தெரியும் ஒன்றிய அரசின் திட்டத்தையே இந்த அரசு அமல்படுத்துமென்று, சிறு அளவில் எதிர்ப்பைக் காண்பித்துவிட்டு கலைந்துவிடுவோம் என்ற மனநிலையே பாஜக’விற்க்கும் அதிமுக’விற்க்கும்.

ஒருவேளை, இந்தத் திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். முக ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகளும் எதிர்த்துக் களத்தில் நின்றிருக்கும். ஆனால் இன்றைய நிலை என்ன? எந்த எதிர்ப்பும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் தனியாரை ஊக்குவிக்கும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளை நிறுவி வருகின்றன.

சரி, கூட்டணிக்கட்சிகள் கேள்விக்கேட்டால் கூட்டணி தர்மம் சீர்குலைந்துவிடும், சீட்டு பறிபோய்விடும் என்று அச்சத்தில் அமைதிக் காக்கின்றன. மக்களுக்கு எதிரான திட்டத்தை எதிர்க்கும் ஜனநாயக, முற்போக்கு அமைப்புகளோ திராவிட மாடல் திட்டம் என்று எதை கொண்டுவந்தாலும் ஆதரவு கொடுத்தாக வேண்டும் என்ற மனநிலையிலே உள்ளனவே அது ஏன்?.

படிக்க : அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி

திராவிட மாடல் ஆட்சிக்கு முன் புரட்சிகர அரசியலை பேசியவர்கள் இன்றோ திராவிட மாடல் ஆட்சிக்கு கலங்கம் வராமல் இருக்க ஆலோசகராக செயல்படுகின்றனர். இன்றோ திமுக திராவிட மாடல் ஆட்சியின் சரி, தவறை விமர்சிக்கும் அமைப்புகளோ சொர்பமாகிவிட்டன. இது தான் மிகுந்த அச்சத்திற்குறியதாக உள்ளது. பாசிஸ்டுகள் வளர்வதற்கும் வெற்றிப்பெறுவதற்கும் இவர்களின் மெளனம் சாதகமாகவே அமையும்.

***

மற்ற நாடுகளில் அரசு துறைகளைத் தனியாருக்கு கூவிக்கூவி வித்ததன் விளைவே பொருளாதர நெருக்கடியை சந்தித்து போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. தனியார்மய – தாராளமய – உலகமய மறுகாலனியாக்க திட்டத்தை மூர்க்கமாக அமல்படுத்தியவர்கள் யார்? மதவாதம், இனவாதம் பேசும் பாசிஸ்டுகளே. அவர்களுக்கு இன, மத கோட்பாட்டுக்கு கலங்கம் விளைவிக்காத எதையும் செய்வார்கள், ஆக, கார்ப்பரேட் கொள்ளைக்கும் துணை போகிறார்கள்.

நமது நாட்டிலோ வெறும் காவி பாசிஸ்டுகளை மட்டும் எதிர்ப்பதாக ஆளுங்கட்சியுடன் இணைந்துள்ளவர்களின் கவனத்திற்கு; காவி எதிர்ப்பு தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு மட்டுமே தவிர, இந்த பாசிச கும்பலிடமிருந்து மக்களை காப்பாற்ற அல்ல.

நீங்களும் மக்கள் நலனை தூக்கி எறிந்துவிட்டு ஓட்டுக்காக அரசியல் பேசுவதென்றால் திராவிட மாடல் கார்ப்பரேட் கொள்ளையை தற்போது ஆதரிப்பது போலவே ஆதரியுங்கள். பாசிசம் என்பது வெறும் காவி மட்டுமல்ல, கார்ப்பரேட் சுரண்டலையும் உள்ளடக்கியது தான்.

குழலி

ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – Documentary

தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான டிசம்பர் 21 அன்று அவரை நினைவு கூர்வோம்.

சான் லெனினுக்கு பிறகு பாட்டாளி வர்க்க ரஷ்யாவை வழி நடத்தினார் தோழர் ஸ்டாலின். சோசலிச கட்டுமானத்தை கட்டியெழுப்பினார். 1945 ரஷ்யாவை சூழ்ந்த இட்லரின் பாசிச இருளை, உழைக்கும் மக்கள் உட்பட சிகப்பு படையை (Red Army) கொண்டு கிழித்தெரிந்தார். அவரது வாழ்கை வரலாற்றை ”ஸ்டாலின் சகாப்தம்” என்ற ஆவணப்படமாக என்பது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த ஆவணப்படத்தை உள்ளடக்கம் மாறாமல் புதுப்பித்து தற்போது வெளியிடுகிறோம்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் நாடு முழுவதும் பரவி வரும் இத்தருணத்தில் மீண்டும் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.

ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம்

ஆவணப்படத்தை பாருங்கள்! பகிருங்கள்!!