Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 138

அரிய நாயகிபுரத்தில் ஏழாம் வகுப்பு பயின்ற சிறுவனின் சந்தேக மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை!

அரிய நாயகிபுரத்தில் ஏழாம் வகுப்பு பயின்ற சிறுவனின் சந்தேக மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை.

தென்காசிக்கு அருகில் உள்ள அரியநாயகிபுரம் எனும் கிராமத்தில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த எழாம் வகுப்பு பயிலும் 12 வயதாகிய சிறுவன், அவர் வீட்டிலே கடந்த 14-10-22 ஆம் தேதி காலை பத்துமணி வாக்கில் மர்மமான வகையில் தூக்கில் மரணமடைந்து கிடந்தார். இது தற்கொலைதானா அல்லது வேறுவகையில் நிகழ்ந்த மரணமா என்பது பற்றி சந்தேகம் எழுந்த நிலையில், இது குறித்து சிறப்பு விசாரணை வேண்டும் என்று கோரி அப்பகுதியினர் போராட்டம் நிகழ்த்தினர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து உண்மையை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலர் பேரா. இரா.முரளி, தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் முத்துக்குமார்,மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் வழக்கறிஞர் ஆ.ஜான்வின்சென்ட், வழக்கறிஞர் ச.மனோகரன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்(CPCL), வழக்கறிஞர் முனைவர் கரு.சித்தார்த்தன், மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் இரா.சங்கர் ஆகியோர் அடங்கியக் குழு 11-11-22 அன்று அக்கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது.

இறந்த சீனுவின் தந்தை ஆறுமுகம், கட்டுமானக் கூலிவேலை செய்துவருகின்றார். தாய் மாரியம்மாள் திருவேட்ட நல்லூரில் தூய்மைக் காவலராகப் பணிபுரிகின்றார். முன்பு அரியநாயகிபுரம் பஞ்சாயத்தில் அவர் ஐந்து ஆண்டுகள் வார்டு உறுப்பினராகவும் சேவை செய்திருக்கின்றார். மேலும் சீனு படித்து வந்த இந்து நாடார் உறவின் முறை மேல்நிலைப்பள்ளியில் சிறிது காலம் உதவியாளராகவும் பணிபுரிந்திருக்கின்றார். இறந்த சீனுவின் அண்ணன் கணேஷ்குமார் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயில்கின்றார்.

சம்பவத்தன்று பிள்ளைகளைப் பள்ளிக்கு காலை 9:30 மணிக்கு அனுப்பி விட்டு பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட்டனர்.  தாய் மாரியம்மாள் வழக்கம்போல காலை 11.30 மணிக்கு பணி இடைவேளையில் வீடு திரும்பியிருக்கின்றார். அச்சமயம் வீடு திறந்திருந்தது. உள்ளே பார்த்தால் சிறுவன் சீனு அறையில் உள்ள மின் விசிறியில் தன் தாயின் வெள்ளை நிறச் சேலையில் கட்டி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டிருக்கின்றார்.


படிக்க : சாதிவெறி : தாழ்த்தப்பட்ட பெண் சமைத்த உணவை புறக்கணிக்கும் பள்ளி மாணவர்கள்


  • கழுத்தைச் சுற்றி புடவை சுற்றப்பட்டும், சுருக்கிடப்பட்ட இடத்தில் ஐந்து முடிச்சுக்களும் காணப்பட்டதாக மாரியம்மாள் தெரிவிக்கின்றார். மேலும் ஒரு இரும்புக் கட்டிலின் மேல் நின்று சீனு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கின்றார். கால்கள் கட்டிலில் ஊன்றியிருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் மலம் கழிந்த நிலையிலும், நாக்கு பக்கவாட்டில் கடித்தபடி வாயில் நுரையும் வடிந்த நிலையிலும் சீனுவின் உடல் காணப்பட்டத்தையும் அவர் தெரிவித்தார்.
  • மகனுக்கு ஒருவேளை உயிர் இருக்குமோ என்ற ஆசையில் உடலை இறக்கி, அதை அருகில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்திற்கு எடுத்துச் சென்று அங்கு இறந்துவிட்டான் என சொல்ல, மேலும் உறுதிபடுத்த வீர சிகமணி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். அவர்கள் இறப்பை உறுதி செய்தபின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர்.
  • இதற்கிடையில் தகவலறிந்த காவலர்கள் வீட்டிற்கு வந்து சிறுவனின் சடலத்தை சடல உடல்கூறாய்விற்காகப் பாளையம்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
  • படித்த பள்ளியில் சிறுவன் மரணத்திற்கு காரணமான சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும் என்று பெற்றோரும் அவர்கள் உறவினர்களும், நண்பர்களும் கருதுகின்றனர். சீனுவின் தந்தை இதன் விளைவாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்படவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்து டி.எஸ்.பி. தலைமையிலான விசாரணைக்குழு அமைக்க ஆணை பெற்றார். அது வரை சீனுவின் உடல் கூறாய்வு செய்யப்பட்ட சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது.
  • இம்மரணத்தில் பள்ளியில்தான் காரணம் இருக்கின்றது என வலுவாக சீனுவின் பெற்றோர்கள் நம்புகின்றனர். அதற்குரிய காரணங்களையும் அவர்கள் முன்வைத்தனர்.
  • அரிய நாயகிபுரம் இந்து நாடர் உறவின் முறை மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம் ஆகும்.
  • சம்பவம் நிகழ்ந்த அன்று பள்ளிக்கு சீனுவின் மரணத்தை ஒட்டி விடுமுறை விடப்படவில்லை.
  • சீனுவின் இல்லம் பள்ளியில் மதில் சுவரை ஒட்டியே உள்ளது.
  • சீனுவின் வக்குப்பறையில் ஜன்னல்கள் கூட சீனு வீட்டை ஒட்டியே உள்ளது.
  • விடுமுறை விடாதது மட்டுமல்ல, இன்று வரை பள்ளி தரப்பிலிருந்து எந்தப் பொறுப்பாளரும் இறந்த மாணவரின் இறப்பிற்கு வருத்தம் தெரிவிக்ககூட வரவில்லை.
  • சம்பவம் நடந்த அன்று வழக்கத்திற்கு மாறாக பள்ளி மாணவர்கள் மாலை ஆறு மணி வரை பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
  • சீனுவுடன் பயிலும் சக மாணவர்கள் சிவமுகுந்தன் மற்றும் கதிர்வேல் எனும் இருவரை (இருவரும் அருந்ததியர் இனத்தைச் சார்ந்தவர்கள்) மட்டும் பள்ளி நிரிவாகத்தைச் சார்ந்தவர்கள் தனியாக மாடிக்கு அழைத்துச்சென்று, சீனுவுக்கு வயிற்று வலி அதிகம் இருந்தது என்றும், அதனால் அவன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் எழுதித் தர கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு சரிவர எழுதத் தெரியாதாகையினால் அலுவலக உதவியாளர் பால முருகனும், பள்ளிக் காவலர் ஒருவரும் வெவ்வேறு தாள்களில் எழுதிக்கொடுத்து அதைப்போல எழுதித் தரச்சொல்லி எழுதி வாங்கியுள்ளனர். பொழுதாகியும் மாணவர்கள் வராததால் பள்ளிக்கு சென்ற இவர்களின் பெற்றோர் உள்ளே சென்று மாடியில் சத்தம் கேட்டு அங்கே சென்று உதவியாளர் எழுதிக் கொடுத்த கடிதங்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்த நிகழ்வு பள்ளியின் மீது பெருத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
  • இப்பள்ளியைப் பெறுத்தவரை தலைமை ஆசிரியர் திரு.செல்லையா மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சக்திமுருகன் ஆகியோர் பட்டியலின மாணவர்களைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் ” சக்கிலியப் பயல்களா, செத்த மாட்டைத் திங்கிறவங்க, பீ அள்ளுகின்ற பயலுங்க” போன்ற வசவுகளை வீசி அவமானப்படுத்துவது நடைபெற்று வருவதாகத் தெரிகின்றது.
  • பள்ளியில் பெற்றோர் சந்திப்பு கூட்டங்களில் பிற பெற்றோர்கள் அமரவைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலும் தாங்கள் பின் வரிசையில் நிற்கவே வைக்கப்பட்டதாகவும், தான் பணி செய்த நாட்களிலும் சாதியப் பாகுபாடு காட்டப்பட்டதாகவும் மாரியம்மாள் கூறுகின்றார்.
  • மூன்று மாதங்களுக்கு முன் தன் மூத்த மகனை ஆசிரியர் ஒருவர் சாதி பற்றி இழிவாக குறிப்பிட்டு திட்டியதிற்கு புகார் கொடுத்தபோது தலைமை ஆசிரியர் இங்கு இப்படித்தான் இருக்கும் உங்களுக்கு வேண்டுமானல் சக்கிலியர் நடத்தும் பள்ளியில் போய் பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று என்று கூறினாராம்.
  • தலித் மாணவர்கள் எப்போதுமே வகுப்பறையில் கடைசி வரிசையில்தான் அமரவைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
  • பொதுவாக சிறுவன் சீனு வீட்டிற்கு வெளியில் உள்ள இடத்தில் தான் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருப்பது வழக்கமாம். வெளியில் எங்கும் போகமாட்டான் என்றும் தெரிந்தது.
  • சம்பவம் நடந்த அன்று பள்ளியின் கண்காணிப்பு கேமிரா அகற்றப்பட்டுள்ளது. பின்னர் புது கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
  • சீனு குடும்பத்தினர் மற்றும் மூன்று அருந்ததியின குடும்பத்தினர் ஒன்றாக வீடு கட்டி வசிக்கும் பகுதி நாடார்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். இருபதிற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இவர்கள் தங்களுக்கான மின்சார வசதி கேட்டும் கொடுக்காத மின்துறை, சீனு இறந்த ஒரு சில நாட்களுக்குள் மின்சார இணைப்பைக் கொடுத்துள்ளது. அதுவரை அவர்கள் “வாடகை மின்சாரம்” பெற்றே பயன்படுத்தி வந்தனர்.
  • அதைப்போலவே அவர்கள் சென்று வருவதற்கான பாதை திறக்கப்பட்டு சிமெண்ட் சாலை உடனடியாகப் போடப்பட்டுள்ளது.
  • கல்வித் துறை அதிகாரிகளும் இவர்களை விசாரிக்கவில்லை. உள்ளூர் காவல் துறையும் தீர விசாரிக்கவில்லை.
  • தந்தை ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில்தான் சேர்ந்தமரம் காவல் நிலையம் குற்ற எண் 310/2022 என்ற எண்ணில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளனர்.
  • இப்பள்ளியில் 105 தலித் மாணவர்கள் பயில்வதாகவும் அதில் 45 பேர் அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள். அருகில் வேறு பள்ளிகள் இல்லாத நிலையில் இவர்கள் எல்லோரும் இப்பள்ளியிலேய படிக்கவேண்டிய நிலை உள்ளது. முன்பு இல்லாத வகையில் சமீப கலங்களாகத்தான், அதுவும் புதிய இளம் நிர்வாகத்தினர் பொறுப்பேற்ற பிந்தான் இந்த சாதியப் பாகுபாடு அதிகரித்துள்ளதாக சொல்லப்பட்டது.
  • இப்பள்ளியில் சத்துணவுப் பணியாளராக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் செல்வி என்பவர். இவர் இந்த சம்பவத்தை ஒட்டி நடந்த போராட்டத்திற்கு பிறகு சாதிப் பாகுப்பாட்டினால் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் பணியை விட்டுவிட்டு பெரியசாமிபுரம் எனும் ஊரில் உள்ள பள்ளியில் பணிக்குச் சென்றுவிட்டாராம்.
  • சி.பி.சி.ஐ.டி விசாரணைக் கோரி சீனுவின் தந்தை ஆறுமுகம் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். (W.P No.24274/2022) இதன் விளைவாக காவல் துறைத் துணைத்தலைவர் மேற்பார்வையில், துணைக் கண்காணிப்பாளர் திரு. சுப்பையா வழக்கை விசாரிக்க உத்திரவிடப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்பாக அக்டோபர் 20 ஆம் தேதி காலை சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. போராடிய உறவினர்கள், பெண்கள், தமிழ்புலிகள் அமைப்பினர் சிலர் என பலர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை சிறையிலடைத்து உள்ளது. இதில் கொலை முயற்சி வழக்கும் அடங்கும். நவம்பர் 11 அன்று அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
  • பள்ளித் தலைமை ஆசிரியரையும், சில ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்திக்கப் பள்ளிக்குச் சென்றபோது அங்கே குழுமியிருந்த காவல்துறையினர். உள்ளே செல்லவே அனுமதி மறுத்தனர். பாதுகாப்புப் பணியிலிருந்த சார்பு ஆய்வாளர் உயர்நீதி மன்ற உத்திரவுப் படி விசாரணை நடந்து வருவதால் யாரையும் அனுமதிக்க முடியாது என்றார்.
  • இதற்கு முன்பாகவே உண்மையறியும் குழுவின் உறுப்பினர் தலைமை ஆசிரியரை வழியில் சந்தித்து இது குறித்து விசாரித்தபோது, சீனு இறப்பதற்கு முதல் நாள் வரையில் பள்ளிக்கு வந்ததாகக் கூறினார். சம்பவம் நடந்த அன்று சீனு வந்தது பற்றி அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில் டிஜிட்டல் வருகைப் பட்டியல் காலை பத்துமணி அளவில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.டிஜிட்டல் வருகை என்பது மாவட்ட கல்வி அதிகாரியின் அலுவலகத்திற்கு உடனடியாக, தானியங்கியாக பகிரப்பட்டுவிடும். இருப்பினும் மேலும் விபரங்களுக்கு காவல்துறை அனுமதி தேவை என்று சொல்லிவிட்டார்.
  • இப்பள்ளியில் பயின்ற மறவர் இனம் மற்றும் புதிரை வண்ணார் இனத்தை சேர்ந்த வேறு இரு மாணவர்கள் சில மாதங்களுக்கு முன் இம்மாதிரியே தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளதை அறிந்து உண்மையறிய முற்பட்ட குழுவினர் அதில் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மரணமடைந்த பாறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இன்பராஜ் எனும் பதினோராம் வகுப்பு மாணவர் இல்லத்திற்கு சென்று விசாரித்தனர். இம்மாணவனின் தாயாரும் அவன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என்பதைம் மிகவும் வருத்தத்துடன் கூறினார். இம்மாணவரும் காலை பள்ளிக்குச் சென்றவர், முற்பகலிலே வீடு திறந்த நிலையிலேயே தூக்கில் மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
  • இப்பள்ளியில் பயின்ற மற்றொரு பட்டியலின மாணவர் குமரேசன் என்பவர் புன்னைவனம் கிராமத்தைச் சார்ந்தவர் இம்மாதிரியே மரணமடைந்துள்ளார்.

உண்மையறியும் குழுவின் புரிதல்கள்

அரிய நாயகிபுரத்தில் உள்ள இந்து உறவின்முறை மேல் நிலைப் பள்ளியில் சாதியப் பாகுபாடு சமீப காலமாக சில ஆசிரியர்களால் பார்க்கப்படுவதுடன் தலித் மாணவர்கள் இழிவுபடுத்தப்பட்டு வருவதும் தெரிகின்றது. வேறு பள்ளி வசதிகள் இல்லாத நிலையில் இங்கு தலித் மாணவர்கள் பயிலும் நிலை நிலவுகின்றது.

இந்த சூழலில், சிறுவன் சீனு தானாகவே அதுவும் மின்விசிறியில் சேலையைக்கட்டி தூக்கிடுக்கொள்ள முடியுமா என்பது பலத்த சந்தேகத்தைத் தருகின்றது. ஆனால் மலம் கழித்துள்ளான் மற்றும் வாயில் எச்சில் நுரை காணப்பட்டது என்றாலும் யாரேனும் சிறுவனை தாக்கி உயிர் போகும் நிலையில் வீட்டில் கொண்டு வந்து தொங்க விட்டிருக்கலாம் என்ற ஐயம் வலுவாக எழுகின்றது. அவனே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதற்கு அச்சிறுவனுக்கு வலுவான காரணம் குடும்ப அளவில் இல்லை என்றும் தெரிகின்றது. அவனுக்கான வேறு வெளி என்பது பள்ளியாகவே உள்ளதால் சீனுவின் மரணத்திற்கு பள்ளியில் காரணம் உள்ளது என கணிக்கின்றோம்.

ஆனால் பள்ளி தரப்பிலிருந்து தகவல் பெற முடியாமல் தடை செய்யப்பட்டது மட்டும் அல்ல, அவர்கள் சீனுவின் நண்பர்கள் இருவரை வலுக்கட்டாயமாக வயிற்று வலி காரணமாக சீனு தற்கொலை செய்துகொண்டான் என்று எழுதித்தரச் சொன்னது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது.

மேலும் கண்காணிப்பு கேமிரா அதுவும் சீனு வீட்டிற்கு நெருக்கமாக இருந்த கேமிரா ஏன் அன்று நீக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.

ஏற்கனவே இயங்கிய கேமரா அகற்றபட்டு மீண்டும் புதிய கேமராக்கள் தற்போது வைக்கபட்டுள்ளது ஏன்?

ஏன் மாலை ஆறுமணிவரை மாணவர்கள் பள்ளியிலே இருக்கவைக்கப்பட்டார்கள்?

ஏன் உள்ளூர் காவல்துறை பெற்றோரைத் தீவிரமாக விசாரிக்கவில்லை?

வழக்கில் பள்ளி சம்பந்தப்பட்டவர்கள் குற்றப்பத்திரிக்கையில் ஏன் இணைக்கப்படவில்லை?

ஏன் துக்கம் தெரிவிக்ககூட பள்ளி நிர்வாகமோ,ஆசிரியர்களோ வரவில்லை?

ஏன் இருபது ஆண்டுகளாக கொடுக்கப்படாத மின்இணைப்பு உடனடியாகக் கொடுக்கப்பட்டது?

ஏன் உடனடியாக சீனு வீட்டிற்கு சிமெண்ட் சாலை போடப்பட்டது?

சமீபத்தில் சீனுவைப் போன்றே மரணமடைந்த தலித் சிறுவர்கள் மரணத்தின் காரணங்கள் என்ன?

தொடர்ந்து சாதியப் பாகுபாடை உருவாக்கும் வசவுகளைப் பொழியும் உடற்பயிற்சி ஆசிரியர் ஏன் கண்டிக்கவோ தண்டிக்கப்படவோ இல்லை?

போன்ற பல பதிலில்லா கேள்விகள் பள்ளியின் மீது வலுவாக சந்தேகப்படவே வைக்கின்றன.

அப்படி பள்ளி இதற்கான காரணமாக இல்லை என்றால் வெளியிலே உள்ள ஆபத்தான நபர்கள் யார் என்பதையும் காவல் துறை கண்டுபிடிக்கவேண்டும்.

டிஜிட்டல் வருகைப் பதிவை சோதனை செய்வதுடன், சீனுவுடன் பயிலும் மாணவர்களையும் விசாரிக்கக் கோருகின்றோம்.

எது எப்படியாயினும் சாதி பாகுபாட்டை ஒழிக்க கல்வியை பயிற்றுவிக்க வேண்டிய கல்வி நிலையத்தில் தொடர்ந்து சாதி பாகுப்பட்டை வலுபடுத்தும் நிகழ்வுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.

போராட்டத்தில் முன்னணீயாக செயல்பட்ட குற்றாலம் குமார்,சந்திரசேகர் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆய்வாளரை கொலை செய்ய முயற்சி செய்தனர் என்ற குற்றம் சாட்டி கைது செய்தது என்பதும் காவல்துறை உள்நோக்கத்தோடே செயல்பட்டுள்ளது போல உள்ளது.


படிக்க : திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம் – அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!


பரிந்துரைகள்:

1.தமிழகத்தில் குறிப்பகத் தென் தமிழகப் பள்ளிகளில் சாதிப் பாகுபாடு காணப்படுவதை தடுக்க, அது இல்லாமல் ஆக்க தமிழக அரசு அதற்கான கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குவதுடன். புகார்கள் மேலிடத்திற்கு உடனடியாக அனுப்பும் வகை செய்யவேண்டும். மேலும் கல்வி அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டங்களையும், சாதிப் பாகுபாடு அற்ற நல்லுறவு உண்டாக்கும் கல்வி சூழலையும் உருவாக்க தீவிரமாக செயல் படவேண்டும்.

2.தலித் மாணவர்களை இழிவாக நடத்தும் ஆசிரியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுக்க ஆவன செய்யவேண்டும்.

3.சீனுவின் மரணம் என்பது மிகவும் சந்தேகத்துக்குரியது. அப்படியே தற்கொலை செய்துகொண்டாரெனில் அதற்குத் தூண்டியது யார் என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4.தமிழகத்தில் பள்ளியில் பயிலும் தலித் மாணவர்களிடம், பள்ளியில் சாதியப் பாகுபாடு எந்த அளவில் நிலவுகின்றது  என்பது பற்றி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாயரிக்க தக்க மனித உரிமை ஆர்வலர்களையும், ஒய்வு பெற்ற நீதிபதியையும் கொண்ட குழுவை அமைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகின்றோம்..

5.மேலும் பள்ளி நிர்வாகத்தில் ஏற்படும் பிரிவினைகளும், மோதல்களும் மாணவர்களையும், கல்விச் சூழலையும் பாதிக்காத நிலை உருவக்கப்படவேண்டும்.

6.கிராமப்பகுதிகளில் சாதிய கட்டுமானங்களோடு மக்கள் வாழ்வதால் கிரமப்புறப் பள்ளிகளுக்கு நகரப்பகுதி ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டுகிறோம்.

7.பள்ளி ஆசிரியர்களுக்கு சாதிக் கண்ணோட்டம், பாகுபாடு அற்ற கல்வி சூழலை பள்ளியில் வழங்க சிறப்பு பயிற்சி தேவை.

8.இறந்த சிறுவன் சீனுவின் மரணத்தில் புற சக்திகளுக்குத் தொடர்ப்பிருக்க வாய்ப்புள்ளது என கருதுவதால் இளம் மாணவர்களை உயிர் பலியாக்கும் சக்திகள் இருக்கின்றனவா என்பதையும் விசாரணை அதிகாரி அறியவேண்டும் என வேண்டுகின்றோம்.

9.சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மரணமடைந்துள்ள சிறுவன் சீனுவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 25,00,000 இழப்பீடாக வழங்கக் கோருகின்றோம்.

10.குற்றாலம் குமார்,சந்திரசேகர் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது வன்மமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டுகிறோம்.

9.இந்த வழக்கு குறித்து SC/ST ஆணையம் கள ஆய்வு மேற்கொள்ளவும் கோருகின்றோம்.

உண்மையறியும் குழுவினர்:

1.பேரா.இரா.முரளி, (தேசிய செயலர்,மக்கள் சிவில் உரிமைக் கழகம்- PUCL)

2.வழக்கறிஞர் ஆ. ஜான்வின்சென்ட் (மாநிலப் பொதுசெயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் – தமிழ்நாடு & புதுவை- PUCL)

3.வழக்கறிஞர் ச. மனோகரன், (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்( CPCL) ராஜபாளையம்

4.வழக்கறிஞர் முனைவர்.கரு.சித்தார்த்தன்,

5.இரா.சங்கர் (மக்கள் கலை இலக்கியக் கழக மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்)

6.திரு.முத்துக்குமார் (தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர்)

நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | காஞ்சிபுரம்-கடலூர் அரங்கக் கூட்டம்!

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்!

காஞ்சிபுரத்தில் அரங்கக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு குழு) மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள் இணைந்து நடத்திய நவம்பர் விழாவிற்கு மக்கள் அதிகாரம், காஞ்சிபுரம் மாவட்ட இணைச் செயலாளர், தோழர் சரவணன் தலைமை ஏற்று நடத்தினார்.

முதல் நிகழ்ச்சியாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தலைமை உரையில் இன்றைய பாசிச நெருக்கடியில் ஏகபோகமாக வளர்ந்துள்ள கார்ப்பரேட் பாசிசத்தின் நெருக்கடியை சமாளிக்க ரஷ்ய புரட்சி அவசியம் என்பதை எளிமையாக விளக்கினார். அதில் சீனாவில் நடந்த சுகாதாரத் துறையில் ஏற்பட்ட மிகப் பெரும் புரட்சியை எடுத்துரைத்துப் பேசினார். அடுத்த நிகழ்ச்சியாக “வந்திடும் வந்திடும் நவம்பர் 7 வந்திடும்” என்ற பாடல் கலைக்குழுச் சார்பாக பாடப்பட்டது.

பாலாறு கூட்டியக்கத்தை சார்ந்த காஞ்சி அமுதன் அவர்கள், சுற்றுச்சூழல் பிரச்சினை என்று நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி உள்ள தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என வளர்ந்து இன்று கால்வாய்கள் ஏரி குளங்கள் அழிக்கப்பட்டு  இயற்கை வளங்களை சின்னாபின்னம் ஆக்கியுள்ளது. மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் இடம்  சென்னைக்கு செல்லும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் இடமாகவும் மீனம்பாக்கம் விமான நிலைய அமைந்துள்ள இடமும் நீர் நிலைகள்  இருந்ததையும் சுட்டிக்காட்டி, இதனால் இந்த பகுதி முழுக்க இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இது எதிர்கால சங்கதிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்” என உரையை நிறைவுசெய்தார்.

“போராட்டம் வேண்டாமா போலீஸ் வேண்டாமா” என்ற பாடலை பாடினார்கள். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (மாநில ஒருங்கிணைப்பு குழு) தோழர் ஆகா சிவா அவர்கள் விலைவாசி ஏற்றம், வேலை இழப்பு, வரி விதிப்பு, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் கீழ் தனது உரையை தொடங்கினார். எப்படி சோசலிசம் என்பது மக்களுக்கானது என்பதையும் மக்களுக்கான அரசு எப்படி பாசிசத்தை வீழ்த்தும் என்பதையும் ஆணித்தனமாக அழுத்தத்துடன் பேசினார்.

வரி எதற்காக விதிக்கப்படுகிறது? ஒரு பக்கம் இந்தியாவினுடைய வளர்ச்சி பற்றி கூறிவிட்டு இன்னொரு பக்கம் வாராக்கடனை தள்ளுபடி செய்து கார்ப்பரேட்டின் நலனுக்காக மோடி மாடல் வளர்ச்சி என்ற பெயரில் சாமானிய மக்களையும் உழைக்கும் மக்களையும் விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் இந்த அரசமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்றால் ஒரு பாசிசை எதிர்ப்பு கூட்டமைப்பு தேவை. அது ரஷ்ய புரட்சி போல ஒரு சோசலிசப் புரட்சி. இங்கு, நாம் இந்த ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் என்பதையும் அழுத்தமாக விளக்கிப் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் “கம்யூனிசம் வெல்லும்” என்ற பாடல் பாடப்பட்டது. மழலைகள் யுகேஷ், கபிலன், கஷ்மிதா, கலை ஆகியோர் உலகப் பொதுமறையான திருக்குறள் மற்றும் அம்பேத்கரின் பொன்மொழிகள் குறித்துப் பேசினார்கள்.

கலைக்குழு சார்பாக தோழர் திலகவதி அவர்கள் தலைமையில் நாடகத்தில், செல்வகுமார்(கட்டபொம்மன்), சரண்(ஊமைத்துரை), ஜிவிதா(வேலுநாச்சியார்), மகா(குயிலி), பவித்ரா (நெறியாளர்) ஆகியோர்  இணைந்து இன்று நவீன பாசிசத்தில் இவர்களுடைய பங்கு இன்றைய காலகட்டத்தில் எப்படியிருக்கும் என்பதை விவாதமாக நடத்தி உணர்வுபூர்வமாக நடத்தினார்கள்.

வேலூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (மாநில ஒருங்கிணைப்புக் குழு) தோழர் சுந்தர் அவர்கள் நன்றி உரையாற்றினார். இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி முடித்து வைக்கப்பட்டது. நமது மக்கள் அதிகார அமைப்பின் ஆதரவாளர், இந்த நவம்பர் விழாவிற்கு வருகை தந்து அனைத்து தோழர்களுக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்து கொடுத்தார்.

தகவல்:
பு.ஜ.தொ.மு(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்.

0-0-0

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்!

கடலூரில் அரங்கக் கூட்டம்

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளை உயர்த்தி பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி;அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் நவம்பர் 7 நிகழ்ச்சி தீன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தோழர் ஜெயக்குமார் (மக்கள் அதிகாரம் பகுதி பொருளாளர்) தலைமை உரையில், “நாம் நம் வாழ்வில் பல பண்டிகைகளை கொண்டாடிக் கொண்டு வருகிறோம். முக்கியமான ஒரு மகத்தான விழா எதுவென்றால் நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள்தான். ஏனென்றால், அன்றுதான் உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த நாள். தனிவுடைமை சுரண்டலை ஒழிக்காத வரையில் பொதுவுடமை சமூகம் மலராது என்றும் பேசினார். உழைக்கும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் பாட்டாளி வர்க்க நலனை எடுத்துக் கூறி, வர்க்க அரசியலை பயிற்றுவிப்பதன் மூலமாகதான், ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி;அம்பானி-அதானி பாசத்தை முறியடிக்க முடியும்” என்று கூறி நிறைவு செய்தார்.

உத்தரவேல் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு விசிக) அவர்கள் தமது உரையில், “பாசிச பாஜக அரசு மனுதர்மத்தின் அடிப்படையில் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த மனுதர்மத்தின் கட்டமைப்பை அடித்து நொறுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை அழித்தொழிக்க வேண்டும்” என்று பேசினார்.

ஜே.அப்துல் காதர் (SDPI­) அவர்கள் தனது உரையில், “பார்ப்பனப்பாசிசம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி உள்ளது. காலில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது தோளில் துண்டு போடக்கூடாது. குறிப்பிட்ட சமூகப் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது போன்ற கொடுமைகள் நடந்துள்ளன. அது எதிர்த்து அன்று போராடினார்கள் இன்று மீண்டும் இந்துராஷ்டத்தை அமைக்கும் நோக்கில் பாசிச மோடி அரசு செய்து வருகிறது. தன்னை எதிர்த்து போராடும் அனைவரையும் இன்று கைது செய்து சிறையில் அடைகிறது. இஸ்லாமியர்களை முதன்மை எதிரியாக காட்டி வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அதானி-அம்பானி பாசிசத்தை புரிந்து கொண்டவர்கள் ஓரணியில் திரண்டு எதிர்த்து போராட வேண்டும்” என்று பேசினார்.

தோழர் முருகானந்தம் (மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலச் செயலாளர்) அவர்கள், “நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளின் ரஷ்யாவில் நடைபெற்ற சாதனங்களைப் பற்றி விளக்கு பேசினார். பால்காரப் பெண்மணி பாராளுமன்ற உறுப்பினர் ஆனது ஐந்தே ஆண்டில் ரஷ்யாவை மின்சாரமயம் ஆக்கியது. மருத்துவம் கல்வி பயின்று முடித்த பின் உத்தரவாதமான வேலை உள்ளிட்டவை அடிப்படை சட்டமாக்கப்பட்டதை முதியோர் உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை இன்னும் பல்வேறு ரஷ்ய புரட்சியின் சாதனைகளை” விளக்கி பேசினார்.

திருவரசு (அனைத்து பொதுநல சங்கம், கடலூர்) அவர்கள், “மோடி  டீ  வித்தவர்  என்று சொல்லி அன்றைக்கு அனைவரும் பெருமையாக பேசினார்கள் ஆனால் மோடி டி வித்தவர் என்பதை தாண்டி இன்றைக்கு இந்தியாவே விற்கும் நிலைமைக்கு வந்துட்டாரு, இன்னைக்கு ரயில்வே, மின்சாரம், வங்கி, மருத்துவம், கல்வி என பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துமே தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது. பாசிச மோடி அரசு மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட்டுக்களுக்கான அரசு” என்று கூறினார்.

தோழர் மருது (செய்தி தொடர்பாளர் மக்கள் அதிகாரம்) அவர்கள், “கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் முஸ்லீம் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் உயிர் வாழலாமே தவிர அவர்களுக்கு ஓட்டு உரிமை வழங்கக் கூடாது; இரண்டாம் தர குடிமக்களாக இங்கே அவர்களை நடத்த வேண்டும் என்பதை நோக்கி ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்ட வேலையாக செய்து வருகிறது.

இன்றைக்கு ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட் பிடியில் சிக்கி உள்ளது. ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் ஜனநாயகம் மற்றும் முற்போக்காளர்கள் வேலை செய்வார்கள் என்ற நிலைமை இப்போது இல்லை. எந்த ஊடகம் எந்த பத்திரிகை மோடி எதிர்த்துப் பேசினாலும் அதை தடை செய்வது; அந்த ஊழியர்களை தாக்குவது பணியை விட்டு நீக்குவது போன்ற பல்வேறு வேலைகளை செய்து வருகிறது; எனவே அன்றைக்கு எப்படி ஹிட்லர் முசோலினி பாசிசத்தை மக்கள் கம்யூனிஸ்டுகள் தலைமையில் உயிரைக் கொடுத்து தியாகம் செய்து வீழ்த்தினார்களோ அதுபோல இன்று நமக்குத் தேவைப்படுவது அற்பணிப்பும் தியாக உணர்வும்தான். எனவே இந்த ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி அம்பானி அதானி பாசிசத்தை முறியடிக்க அனைவரும் ஓணியில் திரண்ட போராட வேண்டும்” என்று தனது உரையை நிறைவுசெய்தார்.

தோழர் பஞ்சாட்சரம்( மக்கள் அதிகாரம் கடலூர்) நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம் பாடப்பட்டது. இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

தகவல்: மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்.

தஞ்சை பெரிய கோவிலும் உழைக்கும் மக்களின் உதிரமும்!

தமிழகத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் 02.11.2022 மற்றும் 03.11.2022 அன்று ராஜராஜ சோழனின் 1037-வது பிறந்த நாளை சதய விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை அரசு சார்பில் நடத்தப்பட்டது. விழாவை துவக்கி வைக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் கலந்து கொண்டார் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் “ராஜராஜ சோழன்” குறித்த கருத்தரங்கை தொடக்கி வைத்தார். மேலும் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி ‘ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாடு ஆன்மீக மற்றும் பண்பாட்டு எழுச்சி பெற்றதாக இருந்தது’ என்று 23-ஆம் புலிக்கேசி படத்தில் மன்னனை ஏற்றி போற்றி பாடி தங்க நாணயம் பெற்றுச்செல்லும் அடிவருடி கூட்டத்தின் மரபை உயர்த்திப் பிடித்துள்ளனர்.

இந்த விழாவின்போது அங்கிருந்த சிலைகளுக்கு, மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட  பொருட்களால் அபிஷேகம் செய்பட்டது. நவம்பர் 2 அன்று ராஜராஜ சோழனின் பிறந்த நாளையொட்டி கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மீக சொற்பொழிவு, பரிசளிப்பு விழாக்கள் போன்ற பல கூத்துகள் நடத்தப்பட்டது. நவம்பர் 3 அன்று ‘சோழர்’ கட்டிய பெரிய கோவிலுக்கு அருகே உள்ள அவனது சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு சாதிய அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கபட்டது.

மேலும் இரவு நேரத்தில் சோழனின் சிலைக்கும் மற்றும் உலோகமாதேவி என்ற சிலைக்கும்  அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடத்தினார்கள். இதுபோன்று சிறப்பாய் கொண்டாடுகின்ற சோழரை பற்றி. நாம் படிக்கும் பாட புத்தகங்களில் சோழரின் ஆட்சி ‘பொற்கால ஆட்சி’ என்று சொல்கிறார்கள். சோழனின் ஆட்சி எப்படிபட்டது என்று நாம் வரலாற்றை பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.


படிக்க : இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?


தஞ்சை பெரிய கோவிலும் உழைக்கும் மக்களின் உதிரமும்!

தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கைப்பற்றி வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தயே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்தது. அதனடிபடையில் கட்டியதுதான் பெரிய கோவில்.

கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டுவந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்த காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?

ஆயிரத்து பன்னிரெண்டு ஆண்டுகளை கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன், போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோவிலை கட்டினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைவென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற்கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த போன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ  வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக [நிவந்தம்] விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்து பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.

இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக்கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான்.

பெரிய கோவிலின் பொருளாதாரம்:

சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியல் [பண்டாரம்] இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைக்கும் பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கொவில் கணக்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக [பணமாகவோ பொருளாகவோ] வசூலிக்கப்பட்டது.

சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிக்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.

பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம் ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன் 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.

அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பு மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்களுக்கு ‘சாவா மூவாப்பேராடுகள் எனும் பெயரில் ஆடு, மாடு எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகல்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழைக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்ததுபோக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ [ஊதியம் இல்லா வேலையாட்கள்]களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


படிக்க : இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?


வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால் பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.

வரிகளின் மூலம் மக்களை சூரையாடிய பார்ப்பனர்களும் ராஜராஜ சோழனும்!

பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் “பாடி காவல் வரியை செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி [இறை]செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ‘தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ‘செக்கு இறை’யும் தட்டாரப்பாட்டத்தையும், தச்சர்,’தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து  புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டது.

விவசாயிகள், விளைச்சலின் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வெண்டியிருந்தது. அந்த வரிக்குக் ‘கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக [இறை]க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமைமுறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கோண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ல ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடம்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டுள்ளனர். இதேபோல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டிருக்கின்றனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.

பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில ஊரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.

தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ [’குடி நீக்கியா’], குத்தகையாளராக மாற்றியோ [’குடி நீக்காமலோ’] அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன. மேலும் சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி விதிப்பு இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தங்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பரிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

சாதி தீண்டாமையையும் தேவதாசி முறையையும் உருவக்கிய ராஜராஜன்:

ராஜராஜன், 400-க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு, தேவரடியார்களாக’ மற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான். கோவில் அடிமைகலென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப்பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929-இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களின் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.


படிக்க : பொன்னியின் செல்வன்: தமிழர்களின் அடையாளமா? அடிமைத்தனமா?


தழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழுவதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

ராஜராஜனின் பொற்காலம்:

ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சியை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்துவந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீர்ப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றைதான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.

பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுபாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்திய சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே, குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய மங்கலங்களின் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

குடவோலை முறை எனும் ஜனநாகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு அப்பட்டமான பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்பட்டு. பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்கு தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளாரக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.

வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோல முறையின் யோக்கிதை. அதுமட்டுமல்ல, நிலவுடமையாளர்களான பிரமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக [பண்டாரி] இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்தான்.

பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை [துலாபாரம்] தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தங்கை குந்தவையும் தமது பிறவி இழிவு நீங்கி சொர்க்கம் செல்வதற்காக தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வைற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்களுக்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.

மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது”  என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்டான்.

சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும் அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் [காராட்சி] கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் [மீயாட்சி] வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.

வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’ மீயாட்சிப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காத்தால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக்கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.

இதுபோன்று மக்கள் விரோத ஒரு கேவலமான ஆட்சி செய்த ராஜராஜ சோழனின் பிறந்த நாளைதான் வருடம் வருடம் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

அண்மையில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தை தமிழகமே கொண்டாடியது இதுதான் தமிழர்களின் வரலாறு என்று. இப்படத்தை இந்த பாசிச சூழலின் போது வெளியிடுவதற்க்கு வரலாற்று ரீதியான தொடர்பு உள்ளது.


படிக்க : சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !


1950-காலகட்டத்தில் இருந்து 1954 காலகட்டத்தில் தெலுங்கான விவசாயிகள் போராட்டம் பெரியார் பார்ப்பனர் எதிர்ப்பு போரட்டம், நக்சல்பாரி உழவர் பேரெழுச்சி என வர்க்கப் போராட்டம் தீவிரமாக நடந்த காலகட்டமாகும். இந்த எழுச்சிகரமான நிலைமை மழுங்கடிப்பதற்காக தான் அக்காலகட்டத்தில் மன்னர்களின் பெருமையை பேசும்படி பொன்னியின் செல்வன் நாவலை அன்றைக்கு கல்கி எழுதினார்.

இன்றைய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அதானி – அம்பானி பாசிச சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான இந்திய உழைக்கும் மக்களும் மாணவர்களும் இளைஞர்களும் என அனைத்து தரப்பட்டு வர்க்கங்களும் இந்த பாசிச பேய்யாட்சியை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த நேரத்தில் மன்னர்களின் பெருமையை பேசும்படி 1950-முதல் 1954 கால கட்டத்தில் கல்கி மக்களுக்கு துரோகம் செய்ததுபோல் இன்றைக்கு அம்பானியின் ஆசிப்பெற்ற மணிரத்தினமும் மன்னர்களின் பெருமையை பேசும்படி பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து மக்களுக்கு துரோகம் செய்து இருகிறார். மேலும் மக்களின் சிந்தையை திசைத்திருப்பி இருக்கிறார். அதில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே நம் சொல்லலாம்.

ஏனென்றால் இன்றைக்கு விலைவாசி உயர்வினால் மக்கள் ஒரு வேலை சாப்பாட்டை நிறுத்தி கொண்டு வருகிறார்கள், இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் போராடுகிறார்கள், ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள், செவிலியர்கள் போராடி வருகிறர்கள், தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள், இப்படி அனைத்து தரப்பட்ட மக்களும் வாழவழியின்றி போரடிவரும் நிலமையில் இதையெல்லாம் மறக்க செய்து மன்னர்களின் பெருமைகள்தான் நம்முடைய பெருமை என்று பேச வைத்து அதை கொண்டாடவும் வைத்துள்ளார்.

ஆனால், நம்மை அடிமைகளாக நடத்திய மன்னர்களையும் பார்ப்பனர்களையும் கொண்டாடுவதுதான் நம் பெருமையா? இல்லை, பார்ப்பன மரபை எதிர்ப்பதுதான் நம்முடைய பெருமை.

பார்ப்பனிய எதிர்ப்பு, வேத எதிர்ப்பு என்பது தமிழகத்தின் மரபாகும். தமிழகத்தில் பெரியார் மட்டுமல்ல சித்தர்கள், வள்ளுவர் முதல் வள்ளலார் வரை அனைவரும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை கொண்டவர்கள். அம்மரபை உயர்த்தி பிடித்து பார்ப்பனியத்தின் கொடுமை கனவான இந்திராஷ்டத்தை முறியடிக்க ஆயுதங்களாக எழுதுவோம்.

செழியன்
தரவுகள்: 2010 புதிய கலாச்சாரம்

ராஜீவ் காந்தி ஒரு பாசிசவாதி! | மருது வீடியோ

காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு நபரை தண்டனையை குறைத்து விடுதலை செய்கிறது மாகாராஷ்ரா அரசு.

ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தமே இல்லாதவர்கள் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு அநியாயமான விசயம்.

ராஜீவ் காந்தியை பற்றியும் தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலைமை பற்றியும் தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்

0

விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுமார் 650 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவுக்கு வருகை தரவிருக்கும் நாளில், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை (விஎஸ்பி) தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஆலையின் ஊழியர்கள், VUPPC-வின்கீழ், நவம்பர் 11 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொத்தத்தில், 13,000 தொழிலாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டனர். அவர்களின் குடும்பங்கள், கூர்மன்னபாலம் சந்திப்பிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !

செய்தியாளர்களிடம் பேசிய VUPPC தலைவர் டி ஆதிநாராயணா, “நாங்கள் கிட்டத்தட்ட 650 நாட்கள் போராட்டத்தை நிறைவு செய்துள்ளோம். ஆலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். உற்பத்தி 50% குறைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.” என்றார்.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி வட்டாரங்களின்படி, நடந்து வரும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்க அரசு முடிவு செய்துள்ளது. விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் போராட்டங்களில் இருந்து விலகி இருக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

சிபிஐ(எம்) உறுப்பினர்களும், விஎஸ்பி தனியார்மயமாக்கல் மற்றும் மாநிலம், குறிப்பாக வட ஆந்திரா தொடர்பான நிலுவையில் உள்ள பிற பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசவில்லை என்று விமர்சித்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணா கல்லூரி சாலை அருகே சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மட்டிலப்பாலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

VUPPC உறுப்பினர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் VSP மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் இரும்பு ஆலை அருகே தர்ணாவில் ஈடுபட்டனர் மற்றும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆலைக்குள் வாகனங்கள் செல்லாமல் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தினர்.

சந்துரு

அழகு சிறை பட்டாசு ஆலை வெடி விபத்து: வெடித்து சிதறிய ஆறு மனிதர்கள், அலட்சியமாக அரசு நிர்வாகம்!

சிலம்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் திருவிழாக்களுக்கு வெடிக்கும் சக்தி வாய்ந்த வானவெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலைகள் பல செயல்பட்டு வருகின்றன. அழகுசிறை கிராமத்தில் வெள்ளையப்பன் என்பவர் நடத்தி வந்த ஆலையில் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்ததில் ஆறு தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்து போயினர். 13 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு ஆலை நடத்தி வந்த வெள்ளையப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் என்ற அறிவிப்பு, அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் களத்தில் சென்று பார்வையிட்டனர். விதிமுறைகளின் படிதான் பட்டாசு ஆலை இயங்கியதா என சோதனை செய்ய சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அமைச்சர் பேட்டியளிக்கிறார். உயிர்களை பறிகொடுத்த பிறகு சோதனை என்கிறார்கள். அதற்கு முன்பு சோதிக்கக் கூடிய அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.

பட்டாசு ஆலையில் வெடி வெடிப்பதும் உயிர் போவதும் சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. வருடத்திற்கு இரண்டு, மூன்று இடங்களிலாவது வெடி வெடிக்கின்றது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இறந்து போகின்றனர். இதுதொடர் கதை யாகிவிட்டது. நிவாரணம் கொடுப்பது, வழக்கு போடுவது என்பதைத் தாண்டி இந்த அரசு என்ன செய்துவிட்டது?

படிக்க : மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி

இதே ஆலையில் 2009-இல் நடந்த வெடிவிபத்தில் 18 பேர் இறந்து போயுள்ளனர். இதுபோக கடந்த தீபாவளி நாளுக்கு முன்பாகவும் ஐந்து வருடங்களுக்கு முன் என இரு முறை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை இந்த விஷயம் கூட வெளியில் தெரியாமல் மூடி மறைத்து விட்டார்கள் என அந்த பகுதிவாழ் உழைக்கும் மக்கள் ஆலையில் நடந்த வெடி விபத்துகளை பட்டியலிடுகின்றனர்.

மேற்கண்ட மக்கள் கூறும் விஷயங்கள் படி பார்த்தால், தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய ஆலையை ஏன் கண்காணிக்காமல் வைத்திருந்தார்கள் என்பது அந்த பட்டாசு ஆலை முதலாளிக்கும் அதிகார வர்க்கத்துக்குமே வெளிச்சம். இந்த கூட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா?

பெரும்பாலான பட்டாசு ஆலைகள் கிராமப்புறங்களில்தான் வைத்துக் கொள்கிறார்கள். அங்குதான் விவசாயம் அழிக்கப்பட்டு வருமானத்திற்கு வழியில்லாத கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் தத்தளிக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் பட்டாசு ஆலை அதிபர்கள் மிகவும் அபாயகரமான இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தி கோடிகளில் புரள்கின்றனர். வேலை செய்யும் தொழிலாளர்கள் தினக்கூலியின் அடிப்படையில் காண்ட்ராக்ட் அடிப்படையில் எந்த உரிமைகளும் அற்ற அடிமைகளாக வைத்து சுரண்டப்படுகின்றன.

இந்த பட்டாசு ஆலை வெடித்ததை ஒட்டி அந்தப் பகுதிக்கு சென்றிருந்த தோழர்கள் அங்கு வேலை செய்த சற்று வயதான ஒரு அம்மாவை பார்த்து பேசி உள்ளனர். அந்த அம்மா உடன் வேலை செய்தவர்கள் மிகவும் கொடூரமாக உடல் அங்கங்கள் தனித்தனியாக சிதறிய அந்த விஷயங்களை மிகவும் பதட்டத்துடன் பகிர்ந்து கொண்டு, மேலும் அவர் கூறுகிறார் வேறுவழியில்லை நாங்கள் இங்குதான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று.

அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற விவசாயம், வேறுவழியில்லாமல் வாழ்க்கை பிழைப்பை தேடிக் கொள்வது இவைதான் இந்த அபாயகரமான தொழிலில் மக்களை தள்ளுகின்றது.

விவசாயத்தை விவசாயிகளிடமிருந்து கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முனைந்து செயல்படும் அரசு எப்படி விவசாயத்தை மேம்படுத்தும்?

படிக்க : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா ?

முதலாளிகளுக்கோ பாதுகாப்பை மேம்படுத்துவது, தனது லாபத்தில் பாதிக்கு மேல் இழக்க நேரிடும் என்பதால் அதைப்பற்றி எந்த அக்கறையும் கொள்வதில்லை. இவர்களிடம் நக்கிப்பிழைக்கும் அதிகார வர்க்கமோ மக்களைப் பற்றி துளியும் அக்கறை கொள்வதில்லை.

தெரியாமல் நடந்த விபத்து, விதி வேற என்ன செய்வது என நொந்து கொள்வது நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் நிலைதான் உழைக்கும் மக்களுக்கு ஏற்படும்.

ஆகவே இந்த வெடிவிபத்தில் சம்பந்தப்பட்ட முதலாளியை மட்டுமல்ல கண்காணிக்க தவறிய அதிகார வர்க்கம் உட்பட அனைவரையும் கைது செய்யக் கோரிய போராட்டங்களை முன்னெடுப்போம். நமது உரிமையையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்க சங்கமாக இணைந்து களத்தில் இறங்குவோம். சமரசம் இல்லாத போராட்டங்களில் ஊன்றி நிற்போம்.

தகவல் : மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்

கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிராக 100 நாட்களை கடந்து மீனவர்கள் துறைமுக பணிகளை நிறுத்த வேண்டும், கடலோர பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் முதலிய ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மீனவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக பாஜகவும் சி.பி.எம் கைகோர்த்துக் கொண்டு ஒரு பேரணியை கலந்துக்கொண்டுள்ளனர்.

‘save vizhinjam port action council’ சார்பாக நடத்தப்பட்ட இந்த பேரணியில் சி.பி.ஐ(எம்) கட்சியின் மாவட்டச் செயலர் அனவூர் நாகப்பன் மற்றும் பா.ஜ.க-வின் மாவட்டத் தலைவர் வி.வி.ராஜேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு இந்த திட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் சி.பி.ஐ(எம்)-யைச் சேர்ந்த நாகப்பன் என்பவர் ‘பெயரிடப்படாத குழுக்களின் உள்நோக்கங்களால் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது’ என கூறியுள்ளார்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!

ஆனால் உழைக்கும் மக்கள் உண்மையில் எதற்காக போராடுகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம். கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உம்மன் சாண்டியின் தலைமையிலான அரசு, திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதியில் சுமார் ரூ.7525 கோடி மதிப்பீட்டில் சர்வதேச துறைமுகத்தை அமைக்கும் பணியை தொடங்கியது.

கேரள அரசின் இத்திட்டமானது அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு (Public Private Partnership – PPP) என்ற அடிப்படையில் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த துறைமுக திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.7525 கோடியில் அதானி நிறுவனமானது வெறும் ரூ.2454 கோடி மட்டுமே முதலீடு செய்யும் என்றும், மீதமுள்ள தொகையானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பாக இருக்கும் என்றும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டமானது அரசுக்கு பெரும் இழப்பை தரும் என்று 2017 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் தக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்காளரின் அறிக்கை கூறியுள்ளது.

மேலும் இந்த துறைமுகத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியதிலிருந்தே மீனவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக துறைமுக கட்டுமானப் பணிகளால் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பினால் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது தங்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வாடகை வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அது மட்டுமில்லாமல் மீனவர்கள் தாங்கள் வழக்கமாக மீன் பிடிக்கும் எல்லைப் பகுதிகளில் மீன்கள் கிடைக்காததால் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் அவர்களுக்கு படகுகளுக்கான எரிபொருளின் தேவையும் பெருமளவு அதிகரித்துள்ளது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, தாங்கள் வாழுமிடத்தை விட்டும் விரட்டியடிக்கப்படுவதை உணர்ந்த மக்கள் துறைமுக திட்டத்தை நிறுத்தக் கோரியும் படகுகளுக்கான எரிபொருளுக்கு மானியம் வழங்க கோரியும், கேரள அரசுக்கு எதிராகவும் துறைமுக பணிகளுக்கெதிராகவும் போர்க்கொடி ஏந்தியுள்ளனர். இந்த போராட்டங்களினால் துறைமுக பணி பாதிக்கப்பட கூடாது என உயர்நீதிமன்றமும் மீனவர்களின் போராட்டத்திற்கு எதிராக உத்தரவிட்டுள்ளது.

ஒருபுறம் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் அரசானது, அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு (Public Private Partnership – PPP) திட்டங்கள் என்ற பெயரில் மக்கள் பணத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அதே வேளையில் மக்களை வாழ கூட வழியின்றி நிர்மூலமாக்கியும் வருகிறது.

இத்தகைய மக்கள் விரோத திட்டத்தை, தற்போது உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசும் துறைமுக திட்டத்தால் பொருளாதாரம் பெருகும் என கூறி மக்களை ஏய்த்துக் கொண்டு எவ்வித தயக்கமோ, கூச்சமோ இன்றி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. உண்மையில் இவர்கள் கூறும் பொருளாதார முன்னேற்றம் என்பது மக்களுக்கானது அல்ல கார்ப்பரேட்டுகளுக்கானது. அதனால் தான் அரசுக்கு பெரும் இழப்பைத் தரும் திட்டம் என்றாலும் இதை நடைமுறைப்படுத்த இவ்வளவு மும்முரமாக செயல்படுகிறார்கள்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !

தற்போது எல்லவாற்றிக்கும் மேலாக ஒரு படி போய் இத்துறைமுக திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டங்களிலும், துறைமுக திட்டத்திற்கான ஆதரவு பிரச்சாரங்களிலும் சி.பி.ஐ(எம்) கட்சியினர், பா.ஜா.க-வினருடன் கூட்டாக பங்கேற்பது மட்டுமல்லாமல் போராடும் மக்களை கலவரக்காரர்கள் என்றும், இவர்கள் விழிஞ்சம் பகுதில் பெரும் வன்முறையை உண்டாக்க சதி செய்கின்றனர் எனவும் உளறிக் கொட்டுகின்றனர்.

சி.பி.ஐ(எம்) தங்களின் அரசியல் பிழைப்பும், அவர்களது எஜமானர்களான கார்ப்பரேட்களின் நலனுமே முக்கியமே தவிர மக்கள் நலன் அல்ல அதற்காக நாங்கள் பாசிசிட்டுகளான பா.ஜ.க-வுடன் கூட கூட்டு வைப்போம் என தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

இன்னும் எத்தனை முறை இவர்களின் மக்கள் விரோத கொள்கைகளை-செயல்களை அம்பலப்படுத்தினாலும், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக் கொள்வார்கள் இவர்கள்.

அரசு, நீதிமன்றம், போலிசு போன்ற அளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் எந்த நிறுவனங்களும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதாரவாக செயல்படாது என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் ஆளும் வர்க்கங்களை எதிர்த்து போரடும் மீனவ மக்கள் போராட்டத்தில் அனைத்து உழக்கும் மக்களையும் இணைத்து, உண்மையான மக்கள் போராட்டம் இந்த ஆளும் வர்க்கங்களை என்ன செய்யும் என்பதை அவர்களுக்கு காட்டுவது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு தரக்கூடியதாக இருக்கும். அவ்வாறில்லாமல் கார்ப்ரேட் நல அரசின் ஒடுக்குமுறையிலும், கார்ப்ரேட்டுகளின் சுரண்டல்களில் இருந்தும் நம் மீள்வது என்பது சாத்தியமற்றதே.

கதிர்

ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

11.11.2022

ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை!

தவறேதும் செய்யாமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்!

தமிழின விரோத ஆளுநர் விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

பத்திரிகை செய்தி!

இன்றைய தினம்(11.11.2022) உச்ச நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, நளினி, ராபர்ட் பயாஸ், முருகன் ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனை மக்கள் அதிகாரம் வரவேற்பதுடன், கோவை குண்டுவெடிப்பு வழக்கு என்ற பெயரில் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறிதும் குற்றமற்ற இஸ்லாமிய கைதிகள் அனைவரையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

வழக்கம்போல ஆறு தமிழர்கள் விடுதலையை தமிழின விரோத காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இதையெல்லாம் பொருட்டாக கருத வேண்டியது இல்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே குற்றவாளியாக்கப்பட்டது. இதை காரணமாக வைத்துக் கொண்டு அன்றைய காங்கிரஸ் அரசும் ஜெயலலிதாவும் சேர்ந்து கொண்டு திமுகவை ஒழித்துக் கட்டுவதற்கு எல்லா விதமான வன்முறையையும் சதி செயலையும் செய்தார்கள். தமிழ்நாடு முழுவதும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் உள்ளிட்ட தமிழின ஆதரவாளர்கள், கம்யூனிஸ்டுகள் என பலரும் கைது செய்யப்பட்டார்கள்,
தொடர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஏழு தமிழர்களும் விடுதலை ஆக வேண்டியது என்பது அரசியல் உரிமையே தவிர கருணையின் பாற்பட்டதல்ல.

படிக்க : பேரறிவாளன் விடுதலை: “சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியா”?

இதனை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக போராடியும் வந்திருக்கின்றன.

மேலும் ஈழத்தில் அமைதியை உண்டாக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இந்திய அமைதிப்படையை அனுப்பியதற்கு எதிராகவே ராஜீவ் காந்தி கொலை நடந்தது என்பதை எமது தோழமை அமைப்புகள் மற்றும் புதிய ஜனநாயகம் இதழ் அக்காலக்கட்டத்திலேயே பதிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் பெரியாரிய அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள், தமிழின அமைப்புகள் என அனைவருமே ஏழு தமிழர் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடி வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஏழு தமிழரின் விடுதலைக்காக துணை நின்றார்கள் என்பதே உண்மை.

ஏழு தமிழர்கள் விடுதலைக்காக, அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் தோழர் செங்கொடி தன் உயிரை ஈந்தார். அதற்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய எழுச்சியே அவர்களின் தூக்கு தண்டனையை நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதற்கிடையில் பலமுறை பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற பொழுதும் அவர்களின் விடுதலை மறுக்கப்பட்டே வந்தது. எனினும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டுமுறை ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தான் தமிழர்களுக்கு எதிரானவர்தான் என்பதை ஆர்.என்.ரவி மீண்டும் நிரூபித்தார்.

படிக்க : பேரறிவாளன் விடுதலை ; நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய் ! | மக்கள் அதிகாரம்

குறிப்பாக பேரறிவாளன் வழக்கில் அவரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம், மாநில அரசின் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஆளுநருக்கு உரிமை இல்லை என்று குட்டு வைத்த போதும் திருந்தாத ஜென்மமாக நடந்து கொண்டதுடன் தமிழ் இனத்துக்கும் தமிழர்களுக்கும் எதிரான எல்லா விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் ஆளுநர்.

ஆகவே தற்போது தமிழர் அறுவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் அநியாயமாக தமிழர் எழுவரும் சிறையில் இருப்பதற்கு ஆளுநரும் முக்கியமான காரணமாகிறார். தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கக் கூடிய வரவேற்கக் கூடிய இந்த எழுவரின் விடுதலையை ஆளுநர் எதிர்க்கிறார் என்றால் அவருக்கு எதற்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சொகுசு உல்லாச வாழ்க்கை?

ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய வேலையை உச்சநீதிமன்றம் செய்கிறது என்றால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஆளுநருக்கு ஏன் ஊதியம் அளிக்க வேண்டும்? இனியும் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக ரவி நீடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதுடன் அது தொடர்பாக மக்கள் மன்றத்தில் பரந்துபட்ட பிரச்சாரத்தையும் தமிழ்நாடு அரசு கொண்டு செல்ல வேண்டும். நாகலாந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டது போல தமிழ்நாட்டு மக்களால் இந்த ஆளுநர் விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தூரம் இல்லை என்பது மட்டும் உண்மை.

தோழமையுடன்
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி

துரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த  கோர வெடி  விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே  வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில்  தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.  இந்த ஆலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைசெய்து வந்தனர். நவம்பர் 10 வியாழனன்று வழக்கம்போல் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் உள்ள இரண்டு கட்டிடங்களில் வேலைசெய்து வந்தனர். பகல் 12.30 மணி யளவில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்தக் கட்டடம் முழுவதும் சிதறி தரைமட்டமானது. இந்த விபத்தில் வடக்கம்பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி (50), வல்லரசு (18), கோபி (19) மற்றும் புளிய கவுண்டன்பட்டி மகாலட்சுமி (50),  அழகு சிறையைச் சேர்ந்த பிரேமா (50), விக்னேஷ் (19) ஆகிய 6 தொழிலாளர்கள்  பலியாகினர்.

மேலும் அழகுசிறையைச் சேர்ந்த அங்கம்மாள், கருப்பசாமி, நாகலட்சுமி, மகாலெட்சுமி, ஜெயப்பாண்டி, பச்சையக்காள், கருப்பசாமி, அன்னலட்சுமி, மாயத்தேவர், பாண்டியம்மாள், பேச்சியம்மாள் உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்த நிலையில் மதுரை  ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர  சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி, திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் மற்றும் திருமங்கலம், சிந்துபட்டி காவல்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

நன்றி: தீக்கதிர்

10% இடஒதுக்கீடு செல்லும்: காவிகளின் ஊதுகுழலாக ஒலிக்கும் உச்சநீதிமன்றம்!

0

ல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு (EWS) செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 7 அன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி. பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை (basic structure of Constitution) மீறவில்லை என்று தீர்ப்பளித்துள்ளார். நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தனர். ஆகவே 3:2 என்ற விகிதத்தில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பினால், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த 103ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.

நீதிபதி ரவீந்திர பட் தனது மாறுபட்ட தீர்ப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சினோ கமிஷன் அறிக்கையை சுட்டிக் காட்டி இருக்கிறார். அவ்வறிக்கையின்படி, நாடு முழுவதும் 31.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்.

இதில் தாழ்த்தப்பட்டோரின் (SC) எண்ணிக்கை 7.74 சதவீதம் ஆகும்; அதாவது அந்த சமுதாய மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் வறுமையில் உள்ளனர். பழங்குடிகளில் (ST) 48 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளனர்; அதாவது அந்த சமுதாயத்தின் மக்கள் தொகையில் 4.25 கோடி பேர். பிற்படுத்தப்பட்டோரில் (OBC) 33.1 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்; அதாவது அந்த சமுதாயத்தின் மக்கள் தொகையில் 13.86 கோடி பேர். பொது பிரிவினரில் (உயர் சாதிகளில்) 5.5 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்; அதாவது அந்த சமுதாய மக்களில் 18.2 சதவீதத்தினர். இந்தப் புள்ளிவிவரங்களை அவர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், நீதிபதி ரவீந்திர பட் “பொருளாதார ரீதியான பின்னடைவு தான் இந்த குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டின் முதுகெலும்பாக இருக்கும் போது இதில் பட்டியலினம், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விடுத்து மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அரசியல் சாசனத்திற்கு ஏற்புடையதல்ல; அனுமதிக்கதக்கதும் அல்ல” என்றும் “சமூகத்தில் அனைத்துப் பிரிவினரும் முன்னேற வேண்டும். அதுதான் உண்மையான சமத்துவம் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி யு.யு. லலித் தனது தீர்ப்பினை வெளியிடாமல் நீதிபதி ரவீந்திர பட்டின் அவர்களின் தீர்ப்பை தான் முழுமையாக ஆமோதிப்பதாகக் கூறிவிட்டார்.

படிக்க: இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?

மோடி அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியிலேயே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. ஆனால், தீர்ப்பு வருவதற்கு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில், அதாவது உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போதே, மத்திய பல்கலைக்கழகங்களிலும் சில மாநில பல்கலைக்கழகங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படி நடைமுறைப்படுத்துவதற்கு தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் அப்போது கூறியிருந்தது. தற்போது மோடி அரசின் முடிவு சரி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் “இந்தத் தீர்ப்பு சமூக நீதித் தத்துவத்திற்கு நேர் முரணானது” என்று கூறியுள்ளார். விசிக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாகக் கூறியிருக்கின்றன. சிபிஐ கட்சியும் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், இட ஒதுக்கீட்டு பிரச்சினைகளை நீதிமன்றத்தில் தீர்த்து விட முடியாது என்றும் அரசியல் களத்தில் வைத்துத் தான் தீர்க்க முடியும் என்றும் கூறினார். காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தங்கள் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

பாஜக அரசு தனியார்மயக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருவதால், பொதுத்துறை நிறுவனங்கள் இருக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சுருங்கி விட்டது. இதில் பார்ப்பன, உயர்சாதியை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துக் கட்டி, அனைத்து துறைகளிலும் பாசிச சக்திகளை நிரப்பும் செயலாகும்.

பொம்மி

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

நவம்பர் – 2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம் : தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!

♦ கார்ப்பரேட் கொள்ளை எதிர்ப்பையும் உள்ளடக்கையதே பாசிச எதிர்ப்பு!

♦ இலவச எதிர்ப்பும் சமூக நலத்திட்ட ஒழிப்பும்!

♦ மீண்டும் முட்டுச்சந்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவம்! இது உலகப் பாட்டாளிகள் முன்கை எடுக்கும் தருணம்!

♦ சமூக ஊடகங்களின் மீது பாசிச ஒடுக்குமுறையை ஏவும் ஆண்டை நீதிபதிகள்!

♦ அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்கத்தின் எதிரி!

♦ பார்ப்பன – பனியாக்கள் பிடியில் இந்திய ஊடகங்கள்!

♦ கட்டாய வாக்களிப்பு: போலி ஜனநாயகத்தின் இறுதி எல்லையில் பாசிசம்!

♦ ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: மதவாத கும்பலுக்கு எதிரான ஜனநாயகப் போர்!

♦ சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

♦ ஐ.டி.ஊழியர்களை மிரட்டும் மூன்லைட்டிங்!

தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!

டந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு விசாரணை அறிக்கைகள் விவாதிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு வெளியாகி இருக்கின்றன. ஒன்று, கார்ப்பரேட் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை. இன்னொன்று, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவியும் பாசிஸ்டுமான ஜெயலலிதாவின் ‘மர்ம’ மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி  ஆணையத்தின் அறிக்கை.

ஜெயா எப்படி செத்தால் நமக்கென்ன என்று கடந்து செல்லாமல், அவரது மரணத்திலுள்ள மர்மத்தைக் கண்டறிய வேண்டுமென்று பலரும் கூப்பாடு போட்டதன் விளைவாகவும், அதிமுகவில் ஒருவரையொருவர் எப்போதும் காலை வாரி விடுவதற்காகவும், மக்களைப் பரபரப்பாக எப்போதும் வைத்திருப்பதே சுரண்டலின் தேவை என்பதற்காகவும் மட்டுமே அமைக்கப்பட்டது ஆறுமுகசாமி ஆணையம்.

ஆனால், அருணா ஜெகதீசன் ஆணையம் அப்படி பரபரப்புக்காக அமைக்கப்பட்டதல்ல. தூத்துக்குடியின் நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி மக்களுக்கு புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களைத் திணித்து வந்தது அனில் அகர்வால்-ன் வேதாந்தா ஸ்டெர்லைட் கம்பெனி. ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் நடத்தி வந்த போராட்டங்களின் ஒரு கட்டமே, “லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மே 22, 2018 அன்று நடத்திய ஆட்சியர் அலுவலக முற்றுகை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இனி யாரும் போராடக்கூடாது என்பதற்காக, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி, டிஐஜி, ஐஜி, தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி உள்ளிட்டோர் திட்டமிட்டு, மே 22 அன்றும் அதைத்தொடர்ந்த நாட்களிலும் கொடும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை ஏவினர். அதையே தூத்துக்குடி மாடல் என்று சொல்லுமளவுக்கு கொடூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.

படிக்க : தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

அமைதியாகப் போராடிய மக்கள் மீது பூங்காவில் மறைந்திருந்தும், வாகனங்கள் மீதேறியும், மிக அருகில் இருந்தும்,  துப்பாக்கியால் சுட்டும், அடித்தும் கொன்றது கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டின் கூலிப்படையான போலீசு. ஸ்டெர்லைட்டை மூட வேண்டும், அரசு பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி, கொல்லப்பட்ட தியாகிகளின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர் தூத்துக்குடி மக்கள். அவர்களுக்கு ஆதரவாக மொத்த தமிழ்நாடும் திரண்டிருந்தது. இதனால் வேறு வழியின்றி அமைக்கப்பட்டதுதான் அருணா ஜெகதீசன் ஆணையம்.

ஆறுமுகசாமி ஆணையமும் அருணா ஜெகதீசன் ஆணையமும் அடிப்படையில் வெவ்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டவை. முன்னது அரசியல் சதுரங்கத்துக்காகவும் பின்னது மக்கள் போராட்டங்களின் நிர்ப்பந்தங்களால் அமைக்கப்பட்டதுமாகும். அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மே 18, 2022 அன்றும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஆகஸ்ட் 27, 2022 அன்றும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் இரு அறிக்கைகளையும் ஒரே நேரத்தில் வெளியிட்டதன் மூலம், கார்ப்பரேட்டுக்காக அரசு நடத்திய பயங்கரவாத நடவடிக்கைகள் – அதன் பரிமாணங்கள் – சதிகள் அனைத்தும் மக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டன. பாசிச ஜெயாவின் மரணம் குறித்த கிசுகிசுக்களால் தூத்துக்குடி தியாகிகளின் மரண ஓலம் அடக்கப்பட்டு விட்டது.

***

அரசால் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள், பொதுவாகவே ஒரு பிரச்சினையை மூடி மறைப்பதற்கும் தள்ளிப்போட்டு மக்களின் நினைவிலிருந்து மறக்கடிப்பதற்குமானவையே. இதுவரை பல விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டிருப்பினும், அனைத்து ஆணைய அறிக்கைகளும் அரசால் வெளியிடப்படவுமில்லை; அவ்வாறு வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் அரசு நிறைவேற்றிடவுமில்லை; வெளியிட்டே தீர வேண்டிய அவசியமும் இல்லை என்பதால்தான் விசாரணை ஆணையங்களே அமைக்கப்படுகின்றன.

நான்காண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும்கூட தானாக வெளியாகிவிடவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த விசாரணை அறிக்கையை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் சில பகுதிகளை ஊடகவியலாளர் இளங்கோவன் ராஜசேகரன் வெளிக்கொணர்ந்தார். ஆகையால், வேறு வழியின்றியே அந்த விசாரணை அறிக்கை சட்ட மன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறது.

அருணா ஜெகதீசன் அறிக்கையிலும், அந்த அறிக்கை வெளிவந்த பின்னர் நடத்தப்பட்ட விவாதங்களிலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தனிப்பட்ட சில போலீசு உயரதிகாரிகளின் பொறுப்பற்ற அல்லது குரூரமான நடவடிக்கையாக மட்டுமே சித்தரிக்கப்படுகின்றது.  ஆனால், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக இனி தமிழ்நாட்டில் எவ்விதப் போராட்டமும் நடைபெறக்கூடாது என்பதற்காக, ஒட்டுமொத்த அரசு எந்திரமே மேற்கொண்ட அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் தொடக்கம்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பதை அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன. தூத்துக்குடியை போலீசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நூற்றுக்கணக்கானோரை வீடு புகுந்து கைது – சித்திரவதை செய்தது; கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரின் மீதும் நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்தது; இப்போதுவரை ஸ்டெர்லைட் ஆதரவு பிரச்சாரத்துக்கு அனுமதி; ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு ஆகிய தொடர் நடவடிக்கைகள் வெறும் வன்முறை மட்டுமல்ல, இது அரசு பயங்கரவாதம் என்பதற்கான சாட்சிகளே.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் மூலம், போலீசின் திட்டமிட்ட துப்பாக்கிச்சூடு, எடப்பாடி பழனிச்சாமி, ரஜினி உள்ளிட்டோரின் பொய்கள் ஆகியவை அம்பலத்துக்கு வந்திருக்கின்றன. அன்றைய ஐஜி, டிஐஜி உள்ளிட்ட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கை பரிந்துரை செய்திருக்கிறது. 4 போலீசுக்காரர்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அன்றைக்கு டிஐஜி, ஐஜி, எஸ்.பி ஆக இருந்து தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளவர்களிடம் கருத்துக் கேட்கப்படும் என்றும் அரசு கூறியிருக்கிறது.

திடீரென்று நடைபெற்ற போலீசின் தாக்குதலாக இருப்பின், அதைக் கையாளும் வழிமுறை வேறு. ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடோ அரசு பயங்கரவாத நடவடிக்கையாகும்.

2009 தமிழீழப் படுகொலை தொடர்பாக யாரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க முடியும்? மஹிந்த ராஜபக்சே போய் ரணில் ஆட்சிக்கு வந்தாலும்கூட சிங்கள இனவெறி அரசு, அப்படுகொலைகளுக்காக யாரையும் பலி கொடுக்காது. ஏனெனில் அது சிங்கள இனவெறி அரசு, ஏகாதிபத்திய நாடுகளுடன் இணைந்து தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலை. அது போலத்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடும். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக அரசே முன்னின்று நடத்திய பயங்கரவாதப் படுகொலைக்கு அந்த அரசால் எப்படி நீதி வழங்க முடியும்?

***

“போலீசை தாக்கிய பின்னர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர்” என்று கூறிய ரஜினி; “13 பேர் சுட்டுக் கொல்லப்படவில்லை என்றால் ஆயிரம் பேர் இறந்திருப்பார்கள்” என்று கூறிய அன்றைய பிஜேபியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்; “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்” என்று அண்மையில் பேசிய அர்ஜுன் சம்பத், இந்து முன்னணி உள்ளிட்ட அனைவருமே இந்த அரசு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களே.

ஸ்டெர்லைட் கார்ப்பரேட் ஆலைக்காக மக்கள் மீது அரசு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டம் இயற்றப்பட வேண்டும். போலீசால் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு அரசால் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும். இவைகளெல்லாம் சாதாரணமாக கோரிக்கை வைத்து பெற்றுவிடக்கூடிய விசயங்கள் அல்ல. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வெளிவந்த போது தமிழ்நாட்டில் மாபெரும் போராட்டங்கள் கிளர்ந்து வெடித்திருக்க வேண்டும். அப்போராட்டத் தீயின் சூட்டில் அதிகாரவர்க்கம் குலைநடுங்கி  தூத்துக்குடி அரச பயங்கரவாத குற்றவாளிகளைத் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டிலோ ஜெயலலிதாவின் மர்ம மரண கிசுகிசுக்கள் அல்லவா விதந்தோதப்பட்டுக் கொண்டிருந்தன. மயான அமைதியைக் கூட சிறு ஒலிக்கீறல் தகர்த்துவிடும். ஆனால் மர்மம் – பரபரப்பு என்ற சாக்கடைச் சகதிக்குள் நம்மை மூழ்கடிக்கும் ஆளும்வர்க்க ஊடகங்களை என்ன செய்வது? செவிட்டில் அறைவதைத் தவிர..

படிக்க : மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !

தூத்துக்குடியில் நடைபெற்றது வன்முறை மட்டுமல்ல; அது ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட்டுக்காக இந்த அரசு நடத்திய பயங்கரவாதப் படுகொலை. இதைத்தான் நாம் தமிழ்நாட்டு மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

தூத்துக்குடி தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்தும், தூத்துக்குடி மக்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டும் நமக்கு பலவற்றை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

பற்றிப்படரும் பாசிசச் சூழலில் நம்பிக்கை ஏதுமற்ற தருணத்தில்தான், “லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து மே 22 துப்பாக்கிச்சூட்டையும், அதற்கு பின்னாலான அனைத்து அடக்குமுறைகளையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

கார்ப்பரேட் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு அஞ்சாமல் வாயிலும் மார்பிலும் குண்டுகள் தாங்கிய தூத்துக்குடி தியாகிகளே நம்முடைய தியாகச்சுடர்கள். சொல்லொணா துயரங்களோடு, உறுதியாக அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொண்ட தூத்துக்குடி மக்களே நம்முடைய நாயகர்கள். அவர்கள் கற்றுத்தந்த மக்கள் ஒற்றுமையை, கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்ட வழியை நெஞ்சிலேந்தி, காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதே தற்போதைய தேவை.

10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

09.11.2022

10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு!
ஆர்.எஸ்.எஸ்-பாஜக; அம்பானி-அதானி பாசிசக் கும்பலின் அடுத்த கட்ட நகர்வு !

பத்திரிகை செய்தி

யர்சாதியினரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை (Economically Weaker Sections -EWS10%) உறுதிசெய்து, 103-வது சட்ட திருத்தத்தையும் ஆதரித்து தீர்ப்பளித்திருக்கிறது, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு.

ஏற்கனவே சில ஆண்டுகளாகவே பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்று கூறப்படும் நபர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 60 புள்ளிகள் தேவை என்றால் அதுவே பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 28 புள்ளிகளாக இருக்கின்றது.

இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் சாதிரீதியாக பின் தங்கியவருக்கு ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதுதான்.

எல்லாத் துறைகளிலும் பார்ப்பனர்கள் வீற்றிருந்த காலத்தில்தான் பார்ப்பனரல்லாத சாதியினர் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்ற உரிமைக்காக போராடி பெற்றனர். அதன் காரணமாக தற்பொழுது தங்களை ஆண்ட சாதி என்று கூறிக் கொள்ளும் பலரும் கல்வி அறிவு பெறவும் வேலை வாய்ப்பு பெறவும் தொடங்கினர்.

படிக்க : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்பை தடை செய்வது தான் முதல் தேவை! | மருது வீடியோ

அவ்வாறு கல்வி அறிவும் வேலை வாய்ப்பும் பெற்றவர்கள் அரசு கட்டமைப்பை குறிப்பாக பொதுத் துறையை குறிப்பிட்ட அளவில் பலப்படுத்தினர்.

ஒட்டுமொத்த நாட்டையும் அம்பானி-அதானி பாசிச கும்பலுக்கு தாரை வளர்ப்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு இனியும் இடஒதுக்கீடு, ஜனநாயகம், உரிமைகள் என்று பேசிக் கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேலைவாய்ப்பு கல்வி மற்றும் அரசு துறைகள் அனைத்திலும் இயல்பிலேயே பார்ப்பன பாசிச சிந்தனை உள்ளவர்களை நிரப்புவதன் மூலம் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது கார்ப்பரேட் கும்பல்.

முன்பு தன்னை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்த காரணத்தினாலேயே  வேறுவழியின்றி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய ஆளும் வர்க்கம் தள்ளப்பட்டது.

இனியும் ஜனநாயக உரிமைகள் என்று பேசிக் கொண்டிருந்தால் அதானி-அம்பானி பாசிச கும்பலுக்கு நாட்டை விற்பதில் தடங்கல்கள் ஏற்படும்.

மக்களின் அனைத்து உரிமைகளும் தொழிலாளிகளின் அனைத்து உரிமைகளும் படிப்படியாக எவ்வாறு  பறிக்கப்பட்டு வருகின்றதோ அதன் ஒரு பகுதியாகவே தற்பொழுது இடஒதுக்கீட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டபோது தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று பிச்சை எடுத்து அதனை சாதித்துக் காட்டிய பார்ப்பன கும்பல், கார்ப்பரேட்டின் தேவைக்காக தற்பொழுது இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதன் மூலம் ஒட்டுமொத்த பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அத்துக் கூலிகளாகவும் கல்வியறிவற்ற பாமரர்களாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் காரணமாக அனைத்து அரசு துறைகளும் அவுட்சோர்சிங் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இடஒதுக்கீட்டு நோக்கமே கேள்விக்குள்ளாக்கப்பட்டு தான் கொண்டிருக்கிறது.

அரசு வேலை, இலவச கல்வி என்பது மறுகாலனியாக்கச் சூழலில் சட்டரீதியான இடஒதுக்கீடு என்பதை பெயரளவில் வைத்து கொண்டு மட்டும் என்ன செய்ய முடியும் என்ற நிலைதான் தற்போது இருக்கிறது.

படிக்க: ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அம்பானி- அதானி பாசிசம் ஒழிக! அக்டோபர்- 11 சமூக நல்லிணக்கப் பேரணி வெல்க!

இடஒதுக்கீட்டை ஒழிப்பதே ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிச கும்பலுக்கும் அதானி-அம்பானி பாசிச கும்பலுக்கும் தேவையாக இருக்கிறது. அதனால்தான் இந்த காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. உறுதி செய்தும் இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்திய நாட்டின் வருமான உச்ச வரிவரம்பே ரூ2.5 லட்சமாக இருக்கும் பொழுது பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்று கூறிக்கொள்ள கூடியவர்களுக்கு மட்டும் வரிவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்தி இருப்பது என்பது ஒன்றே இந்த அரசு பார்ப்பனர்களுக்காக மட்டுமே இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அநீதியான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதும் மறுசீராய்வு செய்வதும் எவ்விதத்திலும் பலனளிக்க போவதில்லை. ஏனெனில் அனைத்து துறைகளும் ஆர்.எஸ்.எஸ் மயமாக்கப்பட்டு இருப்பதுபோல நீதித்துறையும் அதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மாறாக பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் வழியாகத்தான் அதுவும் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துகின்ற போராட்டத்தின் பகுதியாகத்தான் மக்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும்  பெறமுடியும்.

அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது நம்முடைய தலையாயப்பணியாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை
9962366321.

கலவரத்தைத் தூண்டும் பயங்கரவாத அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்! | தோழர் அமிர்தா வீடியோ

ங்கு இருக்கக்கூடிய நிர்வாகத் துறையை – அரசுத் துறையாக இருக்கட்டும், போலீசுத் துறையாக இருக்கட்டும், நீதிமன்றமாக இருக்கட்டும் – ஒட்டுமொத்தமாக ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றிக் கொண்டு அவர்கள் நினைத்ததை சாதித்துக்கொள்கிறார்கள். என்.ஐ.ஏ என்பதே மத்திய அரசின் கைப்பாவையாகத் தான் செயல்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதன் மூலம் பெட்ரோல் விலை அதிகரிப்பு, சிலிண்டர் விலை அதிகரிப்பு பற்றி மக்களுக்கு சொல்லப்போகிறார்களா? இல்லை. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எப்பொழுதும் மக்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது.

ஜனநாயக சக்திகளாகிய நாங்கள் அரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அனுமதி கேட்டால் கிடையாது; ஜனநாயகமாக பேசுவதற்கு அனுமதி கிடையாது; ஆனால் மூன்று தடவை தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி கொடுத்துள்ளனர். கலவரத்தை தூண்டும் பயங்கரவாத அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்!

2000 ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தக் கருத்துகளை பேசிக்கொண்டிருக்கும் மாநிலம் தான் தமிழ்நாடு. ஆனால் ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை   என்ன? இவர்களுடைய கொள்கை சிறுபான்மையினர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், உழைக்கும்  மக்களுக்கும்,  கம்யூனிஸ்டுகளுக்கும், பழங்குடியின மக்களுக்கும் எதிரானது.

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிர திட்டத்தை முறியடிக்க ஜனநாயக சக்திகள் முன்னின்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைக்க வேண்டி இருக்கிறது என்பதை தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள் பதிவு செய்துள்ளார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | மதுரை-சென்னை அரங்கக் கூட்டம்!

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்!

மதுரையில் அரங்கக் கூட்டம்

தோழர்கள் வரைந்த ஓவியங்கள், காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தக்கூடிய காட்சிப்படங்கள், ஆசான்களின் மேற்கோள்கள், தோழர் லெனின் ஸ்டாலின் உருவப்படங்கள் வைத்து அரங்கம் தயாரானது.

காலை 11:00 மணிக்கு துவங்கிய அரங்கக் கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம், மதுரை மண்டல இணைச் செயலாளர், தோழர் சிவகாமு அவர்கள் தலைமை தாங்கினார்.

ரசிய சோசலிச புரட்சி நாளை நினைவு கூர்ந்து, நமது நாட்டில் நிலவக் கூடிய காவி-கார்ப்பரேட் பாசிச சக்திகளின் நடவடிக்கையும், உலக அளவில் நிலவக்கூடிய பொருளாதார நெருக்கடிகளையும் எப்படி முதலாளித்துவம் தோற்றுப்போய் அழுகி நாறுகிறது என்பதை அம்பலப்படுத்தி சோசலிச சமுதாயத்தை நோக்கி முன்னேறுவதே மாற்று என பேசி முடித்தார்.

அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் சங்கர் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி பேசினார். அதில் வேலை இல்லாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் 2018-2020 வரை மட்டும் 9,170 பேர்; கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டவர்கள் 16,019 பேர், பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி போன்றவற்றால் சிறுதொழில்கள் அழிந்து ஏராளமானோர் வேலையை இழந்துள்ளனர்.

இதுபோக அசோக் லேலண்ட், பார்லே ஜி போன்ற நிறுவனங்களில் தொழிலாளர்கள் வேலையைவிட்டு துரத்தப்பட்டுள்ளனர். அதானி போன்றவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்து உலகப் பணக்காரர்களாக மாற்றியிருக்கும் அரசு, கார்ப்பரேட்டுக்கானது என அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்கத் அவர்கள், “இளைய சமுதாயம் கல்வியின் பக்கம் செல்கிறதா? போதையின் பக்கம் செல்கிறதா? என்ற கேள்வியுடன் ஆரம்பித்து, தமிழகம் கேரளாவில் அதிகமான போதைப் பொருட்கள் விற்கப்படுவதை அம்பலப்படுத்தினார். தமிழகத்தில்தான் 18 வயது இளைஞன் போதையில் 11 வயது சிறுவனை அடித்தே கொன்றுள்ளான். 128 பள்ளிகளில் நடத்திய ஆய்வில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் போதைப்பொருள் பழக்கம் உள்ளது. பல்வேறு சமூக சீரழிவுகளையும் அதற்கு காரணமான போதையையும் அம்பலப்படுத்தினார். மேலும் அதிகாரபோதை இந்த நாட்டை பிடித்து ஆட்டுவதைப் பற்றியும் விரிவாகப் பேசி இந்த நாட்டிற்கு புரட்சிகள் தேவைப்படுகிறது, அதை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும் என்பதை விளக்கி பேசினார்.

அடுத்ததாக பேசிய பெரியவர் பூபாலன் அவர்கள், அறிவியலின் தேவை பற்றியும் அது முதலில் குழந்தைகளிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது பற்றியும் கேள்வி பதில் உடன் உரையாடினார். இப்படிப்பட்ட அறிவியல் பூர்வமான கல்வியை குழந்தைகளுக்கு ஊட்டுவதன் மூலமாகத்தான் காவிக் கும்பலின் பொய்களையும் புரட்டுகளையும் மாணவர்கள் எதிர்த்து கேள்வி கேட்பார்கள். இதுவே மார்க்சியம் கற்றுக் கொள்வதற்கும் உலகை மாற்றுவதற்கும் அவசியமானது, இந்த அறிவியல் பூர்வமான பார்வையை நாம் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என உற்சாகமூட்டும் விதத்தில் பேசி முடித்தார்.

அடுத்ததாக தமிழ் புலிகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் முத்துக்குமார் அவர்கள், “ஆரிய பார்ப்பன புரட்டுகளை அம்பலப்படுத்தி பேசினார். உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்ற பெயரில் நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை அம்பலப்படுத்தி பேசினார். மேலும், பார்ப்பனியம் என்பது சமத்துவத்திற்கு எதிரானது ஒவ்வொரு சாதிக்கு கீழும் இன்னொரு சாதி என்ற படிநிலை அமைப்பை கொண்டது. அது எதார்த்தத்தில் அனைத்து இடங்களிலும் நிலவுகிறது என்பதை பல்வேறு நடைமுறை சம்பவங்களுடன் எடுத்துக்காட்டினார். அனைத்து விதமான சமத்துவத்திற்கு எதிரான பொய்களையும் புரட்டுகளையும் கொண்டது பார்ப்பனியம், சாதி அமைப்பு அதை ஒழித்துக்கட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பேசி முடித்தார்.

ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சந்தானம் அவர்கள், “அன்றைக்கு பாசிசத்தை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த ரசிய சோசலிசப் புரட்சியைபோல், ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க நாம் இந்த அரங்க கூட்டத்தில் உறுதி ஏற்போம். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு மாநில மக்களும் அங்குபோய் விவசாயிகளை பார்த்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால், மோடி அவர்கள் விவசாயிகளை ஒருமுறைக்கூட சந்திக்கவில்லை. அதனால்தான் சொல்கிறோம் இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. பாசிச மோடியை பணிய வைத்த விவசாயிகளின் போராட்டத்தைப்போல் ஓர் போராட்டத்தை கட்டியமைப்போம் என அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக இளம் தோழர் ஜான்சி அவர்கள், அதிக அளவு காடுகள் அழிக்கப்படுகிறது; மணல் உருவாக லட்சம் ஆண்டுகள் ஆகிறது ஆனால் அதை கொள்ளையடித்து கொண்டு போகிறார்கள். தொழிற்சாலை கழிவுகள் கடல்களில் கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் மக்களின் வாழும் காலத்தை குறைத்து நோயாளிகளாக மாற்றுகிறது; இதற்கு இந்த முதலாளித்துவ சமுதாய அமைப்பின் லாபவெறிதான் முக்கியமான காரணம் என பேசி முடித்தார்.

தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு பற்றி தோழர் கதிர் பேசினார். அவர் உரையில், “சித்தர்கள், வைகுந்தர், வள்ளலார், பெரியார் என பலரும் தொடர்ச்சியாக பார்ப்பனிய எதிர்ப்பு மரபை, அவர்கள் செய்து காட்டியதை தொகுத்து பேசினார். காவி பாசிசக் கும்பலுக்கு எதிராக  உழைக்கும் மக்களிடம் இதைக்கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் பேசி முடித்தார்.

தோழர் சே, ரசிய புரட்சியையும் அதன் சாதனைகளைப் பற்றியும் இன்று நாம் செய்ய வேண்டியதை பற்றியும் மிகவும் உற்சாகமாக கவிதை வாசித்தார்.

அடுத்ததாக தோழர் மருது, சினிமா போதை நுகர்வு கலாச்சாரம் பற்றி பேசினார். ஒரு ஹீரோ பண்ணக்கூடிய சாகசத்தை நாமும் பண்ண தோன்றுகிறது. சரக்கு அடிக்கிறார்கள் ஓப்பன் தி டாஸ்மார்க் என பாட்டு போடுகிறார்கள் இப்படி வெளிப்படையாகவே போதையையும் நுகர்வு கலாச்சாரத்தையும் திணிக்கிறார்கள். போதையும் நுகர்வு கலாச்சாரமும் ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கிறது. இதை தீர்ப்பதற்கு வழி சோசலிசம் தான் என பேசி முடித்தார்.

அடுத்ததாக பேசிய போடி, மக்கள் அதிகாரம் தோழர் ஏ.டி.கணேசன் அவர்கள் ரசிய புரட்சி ஏன் நடந்தது? தோழர் லெனின் ஸ்டாலின் வழியில் நாமும் பயணிக்க வேண்டும் என்பதையும் தன் சொந்த வாழ்வில் சிபிஐ,சிபிஎம் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து செயல்பட்டு  பிறகு வெளியேவந்து அமைப்பில் சேர்ந்து செயல்பட்ட அனுபவத்தையும் பேசினார்.

அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் அவர்கள், “ஒரு லட்சம் மனுஸ்மிருதியை விநியோகித்ததை பற்றியும் அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரானது என்பதை அம்பலப்படுத்தினார். 10% உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு நீதிபதிகளுக்கும் பொருந்துமா என்று கேட்டால் இல்லை என்கிறார்கள். ஏனென்றால் அது அறிவு சார்ந்தவர்கள் இருக்கும் இடமாம் அப்படி என்றால் நமக்கெல்லாம் அறிவு இல்லையா? என்பதை கேள்வியாக எழுப்பினார். 1925-ல் தோன்றிய கம்யூனிச இயக்கம் இந்தியாவில் ஆட்சியைப் பிடித்து இருக்க வேண்டும், என்று கம்யூனிச இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். அந்த காலகட்டங்களில் அசுரகானம் தான் சேரிகளில் தேசிய கீதமாக இருந்தது. மக்கள் அதிகாரம் முன்னெடுக்கும் அனைத்து விஷயங்களிலும் துணை நிற்போம் என உறுதி கூறினார்.

அடுத்ததாக தோழர் செந்தில், அன்ன வயல் நாவல் குறித்து பேசும்போது இந்த புத்தகம் பாசிசத்திற்கு எதிராக முன்னிறுத்தப்பட வேண்டியது அன்றைய ரசியாவில் ஒரு கிராமத்தில் கூட்டுப் பண்ணை விவசாயத்தை எப்படி நிறுவினார்கள். அதன் மூலமாக பாசிஸ்டுகளுக்கு எதிராக எப்படி போராடினார்கள் என்பதைப் பற்றியும் விரிவாக பேசுகிறது.

ரசிய புரட்சி முடிந்த பிறகு நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுத்தது அடுத்த கட்டமாக கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியது. அங்கு டிராக்டர்கள் கொண்டு வந்தது பற்றி எல்லாம் நேரடி காட்சிபோல் இந்த புத்தகத்தில் காண்பித்துள்ளார்கள்.

சோசலிச ரசியாவில் என்ன மாற்றத்தை நிகழ்த்தினார்கள் என கேட்பவர்கள், இந்த புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும். பனிக்காலத்தில் அறுவடை செய்ய முடியாது என்பதை உணர்ந்து தீவிரமாக வேலைசெய்து கொண்டிருப்பார்கள், அதைத் தொடர்ந்து யுத்தம் வந்துவிடும் மக்களிடம்தான் ஆயுதங்கள் இருக்கும்; மக்கள் அனைவரும் போர்க்களத்திற்கு செல்வார்கள். யாரும் பின்வாங்கவில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என பேசி பல்வேறு ரஷ்ய நாவல்களையும் படிக்க வேண்டும் என்ற கூறினார்.

அடுத்ததாக தோழர் ரகு, பகத்சிங்கின் மொத்த வாழ்வையும் தொகுத்து பேசினார். இன்றைய ஏகாதிபத்திய சூழலில் நாமும் பகத்சிங்-ஆக மாற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.

அடுத்ததாக தோழர் ராம், பிரியாணி என்ற சிறுகதையை அனைவரும் கவனிக்கும் விதத்தில் சிறப்பாக பேசினார். இது உழைக்கும் மக்களின் கடின வாழ்வையும் இழப்புகளையும் அழுத்தமாக பதிவு செய்யும் விதமாக இருந்தது.

அடுத்ததாக பேசிய தோழர் அன்பு, கல்வியில் திணிக்கப்படும் காவிமயம் ஒட்டுமொத்த மாணவர்களையும் சிந்திக்கவிடாமல் தடுப்பதற்கான ஏற்பாடு. அதனால்தான் சாவர்க்கர் புல் புல் பறவை மீது பறந்ததாக பாடத்திட்டத்தில் கொண்டு வருகிறார்கள். பகத்சிங் பெரியார் போன்றவர்களின் பாடங்களை கர்நாடக பாடப்புத்தகத்திலிருந்து நீக்குகிறார்கள். இதை முறியடிக்க நாமும் மக்களை திரட்ட வேண்டும் என்பதை பேசி முடித்தார்.

அடுத்ததாக எரிகாற்றுக் குழாய் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் கதிரேசன் செல்வராஜ் பேசும்போது, எரிவாயு குழாய் பதிப்பை தங்கள் கிராமத்தில் எப்படி திட்டமிட்டு கொண்டு வந்தார்கள் விவசாய நிலங்களை அழித்தார்கள் அதற்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் அதிகாரம் தோழர்களுடன் எப்படி பயணித்தோம் என்ற அனுபவத்தை பேசினார். மக்களிடம் அனைத்து உலக அரசியல் விஷயங்களையும் நாம் கொண்டு செல்ல வேண்டிய தேவையும் அதை கிராமங்களிலும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார். நம்மிடம் கருத்து ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் களத்தில் முதலில் இறங்கி செயல்பட வேண்டும், அங்கு பேசிக் கொள்வோம் என ஒரு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்புக்கு முன்மாதிரியாக பேசி முடித்தார்.

அடுத்ததாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி பேசும்போது உலகப் பொருளாதார நெருக்கடியை பற்றியும் அது ஏற்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய விளைவுகளைப் பற்றியும், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கி எறிய வேண்டும். அதன் இடத்தில் சோசலிசத்தை நிறுவ வேண்டும் அதற்கு புரட்சி செய்ய வேண்டும் என்பதை பேசி முடித்தார்.

இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம், மாநில இணைச் செயலாளர் தோழர்.குருசாமி அவர்கள் பேசும்போது, ரஷ்யா – சீனா போன்ற நாடுகள் மீண்டும் முதலாளித்துவமாக மாறியபோது ஏகாதிபத்தியங்கள் நாடுபிடிக்கும் கொள்கையில் மீண்டும் இறங்கியது. அன்றைக்கு ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகளை சவக்குழிக்கு அனுப்பியது சோசலிச முகாம்தான். இன்று முதலாளித்துவத்தை ஜெயிக்க முடியாது என்பதை இப்போது ஓடிப்போனவர்கள் சொல்கிறார்கள். இதனை நம் தோழர்கள் சொல்வது கிடையாது. இதுபோல தோழர் லெனினுடன் கூட கடைசி வரை காட்டிக் கொடுப்பவர்கள் இருந்தார்கள். ரஷ்யா சீனாவைப்போல் இங்கு புரட்சி நடக்கவில்லை என பேசினார், புரட்சிகர கட்சிகளும் தலைவர்களும் அங்கு இருந்ததுபோல் இங்கு இல்லை என்பதுதான் எதார்த்தம். அப்படி என்றால் நாம் போல்ஷ்விக் கட்சியைப் போன்று முன்மாதிரியான தலைவர்களாக இருக்க வேண்டும். புரட்சி நடக்க வேண்டும் என்றால் சிறந்த கம்யூனிஸ்டுகள் தேவை புரட்சியாளனுக்கு ஓய்வு இல்லை சிந்தனை என்பது இளமையானது. உலகம் முழுவதிலும் ஸ்டாலினை சர்வாதிகாரி என்றார்கள்; ஸ்டாலின் மீது கோபம் கொண்டார்கள் ஆனால் உழைக்கும் மக்கள் என்றும் ஸ்டாலின் மீது கோபம் கொண்டதில்லை. ஏனென்றால் அவர்தான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். உலகம் முழுவதும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியபோது, அதையெல்லாம் இல்லாமல் சோசலிச ரஷ்யா கடந்தது சென்றது. அப்படி இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் தீர்வு இல்லை. அதற்கு வெளியில் நாம் அனைவரும் களத்தில் இறங்க வேண்டும். காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளை விரட்டி அடிக்க வேண்டும் அதை நம்மால் தான் செய்ய முடியும் என்பதை உறுதியாக பேசினார்.

பெண் தோழர்களின் குழு பாடல்களும், இளம் தோழர்களின் பாடல்களும் அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மதியம் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் நாகராஜ் மிகவும் எழுச்சிகரமாக ஆசான்களின் மேற்கோள்களை குறிப்பிட்டு நன்றி கூறினார்.

பேச்சு, கவிதை, பாடல், கதை, ஓவியம், அனுபவங்கள் என பல்வேறு வகைகளிலும் தோழர்கள் உற்சாகத்துடனும் முன்னேற்றியுடனும் கலந்து கொண்டது அனைவரையும் உற்சாகப்படுத்தி நிகழ்ச்சி முடிவடைந்தது.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.

***

சென்னையில் அரங்கக் கூட்டம்!

ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற தலைப்பின் கீழ் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக பட்டாபிராம் பகுதியில் ரசிய புரட்சி நாள் விழா நடைபெற்றது.

விழா பறை இசையுடன் துவங்கியது, விழாவிற்கு பு.ஜ.தொ.மு-வின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் து.லெட்சுமணன் தலைமையேற்று நடத்தினார். பு.மா.இ.மு-வின் மாநில செயலாளர் தோழர் துணைவேந்தன் அவர்கள் உரையாற்றினார். அடுத்ததாக மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள் தனது உரையில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு போராட்ட சூழல்கள் அதன் காரணம் என்ன என்பதையும் விளக்கி பேசினார்.

குழந்தைகள் கவிதை வாசிப்பு, ஓவியம் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துரைத்து பேசியது சிறப்பாக அமைந்தது. விழாவிற்கு வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சென்னை மாவட்ட மக்கள் அதிகாரம் இணைச் செயலாளர் தோழர் புவனேஸ்வரன் நன்றி உரையுடன் கூட்டம் முடிவுற்றது.

This slideshow requires JavaScript.

தகவல்: பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு)