Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 138

ஒடிசா ரயில் விபத்து: உருக்குலைந்த உடல்கள் – மீளமுடியாத துயரம் | படக்கட்டுரை

டந்த வாரம் நிகழ்ந்த ஒடிசா இரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. மோடி – அமித்ஷா கும்பலின் இரயில்வே துறையினை தனியார்மயமாக்கும் நடவடிக்கையாலும் அலட்சியத்தாலும் எண்ணிலடங்கா உயிர்கள் காவு வாங்கப்பட்டன. மிக கோரமாக நடந்த இவ்விபத்தில் 288 மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி தங்களது கை, கால்களை இழந்தவர்கள், விபத்தில் இருந்து மீண்டாலும் அதன் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களையும் படுகாயமடைந்தவர்களையும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் தேடி அலையும் மிக மோசமான நிலை. உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களே அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் நசுங்கி போயுள்ளன.

உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்ந்தது முன்பதிவில்லாத பெட்டிகளில்தான். மொழித் தெரியாத மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி சென்றவர்களை இழந்து பல ஏழை குடும்பங்கள் மீள முடியாத பெருந்துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. பீகாரில் இருந்து சென்னைக்கு கூலி வேலைத்தேடி சென்ற தனது 17 வயதான மகனை தேடி அலைந்த பீகார் கூலித் தொழிலாளிக்கு, ஒருநாள் தேடலுக்கு பிறகு தனது மகனின் நசுங்கிய உடல்தான் கிடைத்தது. இப்படி தனது அன்பிற்குரியவர்களைப் பறிகொடுத்த பிள்ளைகளும் பெற்றோர்களும் தேடி அழையும் துயரக் காட்சிகள் நமது நெஞ்சை கனக்க வைக்கிறது.

இக்கோர சம்பவம் தொடர்பாக அல்ஜஸீரா இணையதளம் வெளியிட்ட படங்கள்:

இரயில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்கள்.

000

சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீட்புக்குழுவினர்.

000

விபத்தில் உயிரிழந்த தனது மகனின் புகைப்படத்திற்கு கனத்த இதயத்துடன் முத்தமிடும் தாய்.

000

உயிரிழந்த தனது உறவினரின் உடல் கிடைக்காததால், புகைபடங்களில் தேடும் ஒருவர்.

000

குடும்ப கஷ்டத்திற்காக சென்னைக்கு கூலி வேலை தேடி சென்ற தனது மகனின் உடலைப் பெற கையெழுத்திடுகிறார் தந்தை.

000

பிணவறையில் சிதைந்த தனது மகனின் உடலைக் கண்டு, நிலைக்குலைந்து வெளியேறும் தாய்.

தாரகை
நன்றி: அல்ஜசீரா

ஒடிசா ரயில் விபத்து: அரசே முதல் குற்றவாளி!

0

டிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட இரயில் விபத்தினால் 275 பேர் உயிரிழந்துள்ளனர் (ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி); 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நூற்றாண்டின் மாபெரும் இரயில் விபத்து இது. 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த 1981-ஆம் ஆண்டு பீகார் இரயில் விபத்திற்கு பிறகு இந்தியாவில் நடைபெற்றுள்ள பெரிய இரயில் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்தைக் கண்டு நீலிக்கண்ணீர் வடித்த பிரதமர் மோடி விபத்து குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் விபத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் கூறினார். விபத்து நடைபெற்ற உடனேயே ‘இரயில்வே துறையை மேம்படுத்த அரசு செய்த பணிகள்’ என வரிசையாகத் தரவுகளை வெளியிடத் தொடங்கியது மோடி அரசு.

ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (CAG – சி.ஏ.ஜி) இரயில்கள் தடம் புரள்வது குறித்து வெளியிட்ட அறிக்கை (Derailment in Indian Railways) மோடி அரசின் பொய்களைத் தோலுரிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அவ்வறிக்கையின்படி, ஏப்ரல் 2017 – மார்ச் 2021 காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 2017 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் 69 விழுக்காடு, அதாவது 1392 விபத்துகள், ரயில் பெட்டிகள் தடம் புரளும் விபத்துகளாகும். இன்னும் குறிப்பாக, விளைவுகளை ஏற்படுத்தும் விபத்துகளை (consequential train accidents) மட்டும் எடுத்துக்கொண்டால், 80 விழுக்காடு விபத்துகள் பெட்டிகள் தடம் புரளுதல் மற்றும் நேரடி மோதல் தொடர்பானவை ஆகும்.


படிக்க: இந்திய ரயில்வேத் துறையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்!


ஒவ்வொரு முறையும் விபத்துகள் நடைபெறும் போது தனிமனித தவறுகளால் மட்டுமே அவை நடைபெற்றதாக சித்தரிக்கப்படுகின்றன. ஆனால், சி.ஏ.ஜி அறிக்கை பெரும்பாலான விபத்துகள் இரயில்வே கட்டமைப்பின் குறைபாடுகளால் நடைபெற்றுள்ளதை வெளிப்படுத்துகிறது.

சி.ஏ.ஜி அறிக்கையின்படி இரயில் தடம் புரளும் சம்பவங்கள் பொறியியல் துறையின் குறைபாடு காரணமாக 422 முறையும், தண்டவாளத்தை முறையாகப் பராமரிக்காததால் 171 முறையும் நடந்துள்ளன. அதேபோல், மெக்கானிக்கல் துறையின் குறைபாடு காரணமாக 182 முறையும், லோகோ பைலட்களின் தவறு காரணமாக 154 முறையும் இரயில் தடம் புரளும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆபரேட்டிங் துறையின் தவறு காரணமாக 275 முறை ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளன.

விபத்துக்கள் தொடர்பான 63 விழுக்காடு சம்பவங்களில், இன்னும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. விபத்துகள் தொடர்பான முறையான ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை; பல்வேறு துறைகள் இடையேயான தொடர்பில் உள்ள கோளாறுகள் ஆகியவையும் தடம் புரளும் சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

ரயில் தண்டவாளம் புனரமைப்பு பணிக்கு 2018 – 2019ஆம் ஆண்டில் ₹9607.65 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2019- 2020ஆம் ஆண்டில் ₹7,417 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட தொகையைக் குறைக்கப்பட்டுள்ளது; அவ்வாறு குறைத்து ஒதுக்கப்பட்ட தொகையையும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


படிக்க: ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி


முக்கியமாக, சி.ஏ.ஜி அறிக்கை விபத்துகளுக்கான காரணமாகப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பணிகளில் ஆள் பற்றாக்குறை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றிற்குப் பதில் அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டிசம்பர் 1, 2023 நிலவரப்படி, மொத்தமுள்ள 18 ரயில்வே மண்டலங்களில் 3.12 லட்சம் காலிப் பணியிடங்கள் (non-gazetted posts) இருப்பதாகத் தெரிவித்தார். அதில் பல காலிப் பணியிடங்கள் பாதுகாப்பு தொடர்பான பணிகள். குறிப்பாக, மத்திய இரயில்வேயில் உள்ள 28,650 காலிப் பணியிடங்களில் 14,203 பாதுகாப்புப் பணிகள் தொடர்பானவை.

“விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்” எனத் தனி நபர்களை குற்றவாளிகள் ஆக்குவதன் மூலம், விபத்துக்கான காரணம் பாசிச பா.ஜ.க அரசாங்கமோ முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ள இரயில்வே கட்டமைப்போ அல்ல என்பதை மோடி நிறுவ முயல்கிறார். ஆனால் ரயில்வே நிர்வாகத்தில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் தான் ரயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்படுவதற்குக் காரணம் என்பதை சி.ஏ.ஜி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அதேபோல, ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம் ‘எலக்ட்ரானிக் இன்டர்லாக்’ அமைப்பில் ஏற்றப்பட்ட கோளாறு என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (ஜூன் 4, 2023) கூறியிருந்தார். ஆனால், கடந்த பிப்ரவரி மாதமே தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமை இயக்க மேலாளர் சிக்னல் அமைப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து இரயில்வே துறைக்குக் கடிதம் எழுதி எச்சரித்துள்ளார். ஆனால், பாசிசம் மோடி அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளவில்லை.


படிக்க: இந்தியாவை துயரத்தில் ஆழ்த்திய மிக மோசமான ஒடிசா ரயில் விபத்து | படக்கட்டுரை


தினமும் 2.2 கோடி மக்கள் இரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இரயில்வே துறை ஏன் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இரயில்வேவை மொத்தமாக தனியார்மயப்படுத்துவது தான் அரசின் நோக்கம் என்பதுதான் அதற்கான விடை. காலிப் பணியிடங்களை முறையாக நிரப்பாமல், குறைந்த ஊழியர்களைக் கொண்டு இயக்குவது விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகிறது. எனவே, ஒடிசா ரயில் விபத்தில் அரசே முதல் குற்றவாளி!

விபத்துகள் ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பது குறித்து பாசிச மோடி அரசிற்குக் கவலை இல்லை. இரயில்வே துறையை முறையாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டு, அரசால் பராமரிக்க முடியவில்லை; பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுகிறது; தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று கூறி தனியாருக்கு தாரைவார்ப்பதே மோடி அரசின் திட்டம்.


பொம்மி

ஒடிசா ரயில் விபத்து; இடிந்து விழுந்த பீகார் பாலம் | தோழர் மருது வீடியோ

மோடி ஒரு பேட்டியில் இந்த ரயில் விபத்திற்கு காரணமானவர்களை சும்மா விட மாட்டேன் என்று கூறுகிறார். நாங்கள் கூறுகிறோம் இந்த விபத்திற்கு காரணமானவர் பிரதமர் மோடி தான். கவாச் தொழில்நுட்பத்திற்கு செலவு செய்தது என்னவாயிற்று. இரு ரயில்கள் இனிமேல் நேருக்கு நேர் மோதவே மோதாதே என்று கூறினார்கள். அது என்ன ஆயிற்று…

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இந்திய ரயில்வேத் துறையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்!

0

ந்திய ரயில்வேவின் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் 77,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த காலிப்பணியிடங்கள் குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஷிவினி வைஷ்னாவ்-விடம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த புள்ளிவிவரங்களே இவை.

டிசம்பர் 23, 2022 நிலவரப்படி, இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 3.12 லட்சத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் (Non-Gazetted Posts) நிரப்பப்படாமல் உள்ளன. சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு, போக்குவரத்து துறை ஆகியவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதில், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் 14,815 பணியிடங்களும், போக்குவரத்துத் துறையில் 62,264 பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 87,654 பணியிடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 64,346 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் துறையில் 38,096 பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதாக அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்தார்.


படிக்க: இந்தியாவை துயரத்தில் ஆழ்த்திய மிக மோசமான ஒடிசா ரயில் விபத்து | படக்கட்டுரை


தென்கிழக்கு ரயில்வே, ஜூன் 2 மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜாரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட ஒரு மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டது. இம்மாநிலத்தில் பிப்ரவரி 3, 2023 நிலவரப்படி, 17,811 பணியிடங்களும் (Non-Gazetted Posts) 150 அதிகாரிகளுக்கான (Non-Gazetted officer) பணியிடங்களும் நிரப்பப்படாமல் மிகவும் சிரமத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வடக்கு ரயில்வே மண்டலத்தில் 39,226 பணியிடங்களும், மேற்கு ரயில்வே மண்டலத்தில் 30,785 பணியிடங்களும், கிழக்கு ரயில்வே மண்டலத்தில் 30,735 பணியிடங்களும், மத்திய ரயில்வே மண்டலத்தில் 28,876 பணியிடங்களும் மறுபுறம், தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் 6,638 பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்திய ரயில்வேத் துறையில் குரூப் ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மொத்தம் 3,15,780 காலிப்பணியிடங்கள் இருந்து வருகின்றன.

2021-22 ஆம் ஆண்டில் குரூப் ஏ மற்றும் சி ஆகிய இரண்டு காலியிடங்களுக்கும் நாடு முழுவதும் 4,625 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 2021-22ல் 4,625 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. அதே நேரத்தில் 44,847 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.


படிக்க: ஒடிசா ரயில் விபத்து: ரயில்வேத் துறையை ஒழித்த பாசிச மோடி கும்பலே முதல் குற்றவாளி! | தோழர் மருது


மத்திய ரயில்வே மண்டலத்தில் மட்டும் காலியாக உள்ள குரூப் சி (Non-Gazetted Posts) பணியிடங்களின் எண்ணிக்கை 28,650. இதில், 14,203 பாதுகாப்புப் பிரிவு பணிகள் மற்றும் 14,447 இதர பணியிடங்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

2020–21 காலகட்டத்தில், 1,923 காலியிடங்களுக்கு 440,000 பேர் விண்ணப்பித்தனர். தொழில்நுட்பம் அல்லாத 35,281 காலியிடங்களுக்கு 1.26 கோடி பேர் விண்ணப்பித்தனர். எத்தனை பணியிடங்கள் காலியாக இருந்தாலும் இந்த மோடி அரசு காலிப்பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்பது உறுதி. ஏனெனில் பணமாக்கல் திட்டம், தனியார்மய கொள்கையின் விளைவாக ரயில்வே துறையைத் திட்டமிட்டே சிதிலமடையச் செய்து அதானி-அம்பானிகளுக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம்.


கல்பனா

மதுரை: திருமோகூர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதல் | நேரடி ரிப்போர்ட்

மதுரை: திருமோகூர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதல்
– நேரடி ரிப்போர்ட்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வேத் துறையை ஒழித்த பாசிச மோடி கும்பலே முதல் குற்றவாளி! | தோழர் மருது

ஒடிசா ரயில் விபத்து: ரயில்வேத் துறையை ஒழித்த பாசிச மோடி கும்பலே முதல் குற்றவாளி!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மதுரை: தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களின் கொலைவெறி தாக்குதல்! | புரட்சிகர அமைப்புகள் கண்டன அறிக்கை

05.06.2023

மதுரை திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் ஆதிக்க சாதி வெறியர்களின் கொலைவெறி தாக்குதல்! பொருட்கள் சூறையாடல்!

புரட்சிகர அமைப்புகள் கண்டன அறிக்கை

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே திருமோகூர் கிராமத்தில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி அன்று கோவில் திருவிழா என்பதால் இரவு ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்வில் தாழ்த்தப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். வருடா வருடம் நடக்கும் திருவிழாவின்போதும் இதுபோன்ற நிகழ்வுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்து கொள்வது வழக்கம்தான். இந்த முறை வெளியூரிலிருந்து வருகை தந்திருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உறவினர் ஒருவரை ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி நடக்கும்போது தாக்கியுள்ளனர். “மொறைச்சு பாக்குறியா, நீ எதுக்கு இங்க எல்லாம் வர்ற டா” என்ற கேள்விகளுடன் சட்டையைக் கசக்கித் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.

போலீசு வந்ததால் தற்காலிகமாக பிரச்சினையை முடித்துக் கொண்டதுபோல் சென்றுவிட்டனர். அதன் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் கிளம்பி தங்களின் வீடுகளுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவு 11:30 மணிக்குமேல் மின்விளக்குகள் அனைத்தையும் நிறுத்தி விட்டு 50 பேர் கொண்ட ஆதிக்க சாதிவெறி கும்பல் திடீரென தாக்குதல் தொடுத்து பெரிய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளில் நிற்கும் ஒவ்வொரு இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி தங்களின் சாதிய வன்மத்தை கக்கியுள்ளனர். இப்படி 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஒரு நான்கு சக்கர வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

படிக்க : மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் சாதி வெறியர்களின் தாக்குதல்! || சுவரொட்டி

வாகனங்களை தாக்கிக் கொண்டு வரும்போது ஒரு வீட்டில் இருந்த தாழ்த்தப்பட்ட இளைஞரை கொலை வெறியோடு 50 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். தலையில் அறிவாளால் இரண்டு இடத்தில் பலமான வெட்டுகள் வெட்டப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோக இவர்களை தட்டிக் கேட்க சென்ற இரண்டு நடுத்தரவயதினரையும் ஒரு ஊனமுற்ற இளைஞரையும் கொடூரமாக தாக்கி அறிவாளால் வெட்டியுள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு நடைபெறும் திருவிழா 10 நாள் நடைபெறும் திருவிழா என்பதால் எப்போதுமே பாதுகாப்புக்கு போலீஸ் இருப்பது வழக்கம். அதுபோக, ஏற்கனவே இங்கு தொடர்ந்து சாதிய முரண்பாடுகள் ஒவ்வொரு திருவிழாவின்போதும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும். இது எல்லாம் போலீசுக்கு நன்றாகவே தெரியும். தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி வெறி கும்பலின் முக்கியமான குற்றவாளி பிரபாகரனை தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பிடித்து வைத்துள்ளனர்.

அப்போதுதான் போலீஸ் ஊருக்குள் வந்துள்ளது. போலீஸ் துணை ஆய்வாளர் சேது என்பவரிடம் அந்த குற்றவாளியை ஒப்படைத்துள்ளனர். அந்த குற்றவாளியையும் சற்று தொலைவு கொண்டுபோய் தப்பித்து ஓட வைத்துள்ளனர். கேட்டால் என்னை அறிவாளால் கையை கிழித்துவிட்டு ஓடிப்போய் விட்டான் என போலீசு தரப்பு விளக்கம் கொடுக்கிறது.

ஆனால், இதுவரை போலீசின் கை அறுக்கப்பட்டதாக அந்த பிரபாகரன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில்தான் குற்றவாளிகளை தப்பிக்க வைத்துள்ளனர். இதுபற்றி பேசும்போது தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள், “இதுவரை நான்கு பேரை மட்டுமே பிடித்துள்ளதாக சொல்கின்றனர். அதுவும் தாக்குதலில் ஈடுபட்ட 50 பேரில் வருவார்களா என தெரியவில்லை” என்று போலீசின் முகத்திரையை கிழித்தார்.

ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி நடக்கும்போதே ஏற்பட்ட பிரச்சினை, போலீசுக்கும் தெரியும் உளவுத்துறைக்கும் தெரியும். இப்படி ஒரு மோதல் நடக்கப்போகிறது என்பது உளவுத்துறைக்கு தெரியாதா? அதன் பின்பும் இவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றால் இவர்கள் தெரிந்தே தான் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்கள் எனவும் அம்பலப்படுத்தினார்.

ஜூன் நான்காம் தேதி காலையிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அந்த பகுதியில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், பல்வேறு ஜனநாயக சக்திகளும் முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் சென்று மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ் தேசிய குடியரசு இயக்கம் தோழர்கள் பாதிக்கப்பட்ட பகுதியை சென்று பார்வையிட்டோம்.

அதில், மக்கள் தங்கள் பாதிப்புகளையும் தங்கள் தரப்பு நியாயங்களையும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினர்.

ஒரு வயதான அம்மா என்னையையும் என் குடும்பத்தையும் விட்டுருங்கப்பா ஒன்னும் செய்யாதீங்கப்பா என கெஞ்சிய போதும் அவர் கண் முன்னே இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர் ஆதிக்கச் சாதி வெறியர்கள்.

வீடுகளுக்குள் இருந்த பெண்களை வெளிய வாங்கடி என சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி வன்முறை வெறியாட்டம் போட்டுள்ளனர்.

ஒரு பெண் தன்னுடைய கருத்தை சொல்லும்போது “இனிமேல் எந்த வேலைக்கும் எங்களை கூப்பிடாதீர்கள், சாவுக்கு வர சொல்வது அடிமை வேலைக்கு வர சொல்வது என அனைத்தையும் நிறுத்திக் கொள்ளுங்கள், நாங்க எங்க சொந்த உழைப்பில் ஏதோ கொத்தனார் வேலையோ சித்தாள் வேலையோ பார்த்து பிழைத்துக் கொண்டுதான் உள்ளோம். உங்களைப் போலவா தாத்தன் விட்டு சொத்தில் உட்கார்ந்து தின்று கொண்டு உள்ளோம், எங்கள் சொந்த உழைப்பில் நாங்கள் வண்டி வாங்குகிறோம் அது ஏன் உங்களுக்கு எரியுது” என ஆதிக்கச் சாதி வன்மத்தை தோலுரித்தார்.

சாதி ஒழிக்கப்பட வேண்டும். நாங்க என்ன மனுசங்க இல்லையா? சாதினு ஒன்னு இருக்கவேக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

இந்த பகுதியில் உள்ள ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு இன்னும் அந்த பண்ணையார் மனோபாவம் மாறவில்லை. சாதி ஒழிப்பிற்கு எதிரான பாடல்களையும் அம்பேத்கர் பெரியார் பாடல்களையும் போட்டால் கூட சண்டைக்கு வருவார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் உழைத்து குறைந்தபட்சம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதைக் கூட இந்த கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்ற எதார்த்தம் கண் முன்னால் விரிகிறது.

ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷன் கீழ் தான் காயாம்பட்டி கிராமமும் வருகிறது. அங்கும் கடந்த பொங்கல் தினத்தில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்தபோதும், தாழ்த்தப்பட்ட மக்கள் தொடுத்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக -ஆதிக்கச் சாதி வெறியினருக்கு ஆதரவாக- இதே ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனும் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் தான் நின்றார்கள்.

படிக்க : பாலியல் குற்றவாளிக்கு ஜாதகம் பார்க்க சொன்ன ‘கூமுட்டை’ நீதிமன்றம்!

போலீஸ் ஸ்டேஷன் என்பது ஆதிக்கச் சாதி வெறியர்களின் கூடாரமாகவே உள்ளது என்பதை திருமோகூர் சம்பவமும் நமக்கு பொட்டில் அறைந்தார்போல் உணர்த்துகிறது.

இத்தகைய ஜனநாயக விரோத கூடாரத்தை கலைக்காமல் சாதி ஒழிப்பு ஏது என்ற கேள்வி தான் எழுகிறது.

அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக, முக்கிய குற்றவாளியான பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும். பிரபாகரனுக்கு ஆதரவாக உள்ள போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.

இதுபோக, ஆதிக்கச் சாதி வெறியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்! அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கு! ஆதிக்கச் சாதி சங்கங்களையும் மதவெறி சங்கங்களையும் தடை செய்! என்ற முழக்கங்களுடன் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு ஆதிக்கச் சாதி வெறியையும், மதவெறியையும் ஒழித்துக் கட்ட போராட வேண்டிய கடமை நம் அனைவரின் முன் உள்ளது.

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
தொடர்புக்கு :- 97916 53200, 78268 47268

மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் சாதி வெறியர்களின் தாக்குதல்! || சுவரொட்டி

மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் சாதி வெறியர்களின் தாக்குதல்!

நான்கு பேர் மீது கொலை வெறித்தாக்குதல், 50 இருசக்கர வாகனங்கள் மற்றும் பல வீடுகள் அடித்து நொறுக்கி சூறை! சாதி வெறியர்களைப் பாதுகாக்கும் போலீசு!

தமிழ்நாடு அரசே!

  • தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி வெறியர்கள் அனைவரையும் கைது செய்! கடுமையான தண்டனை வழங்கு!
  • சாதி வெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் போலீசு துறையினர் மீது நடவடிக்கை எடு!
  • தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி வெறியர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்! அதைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக வழங்கு! பாதுகாப்பு வழங்கு!

உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

  • ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்!
  • சாதி – மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் ஆதிக்கச் சாதி – மதவெறியை ஒழித்துக் கட்ட களமிறங்குவோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
தொடர்புக்கு :- 97916 53200, 78268 47268

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க.வின் வழியில் தி.மு.க!

டந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சட்டமன்றத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது தி.மு.க அரசு. இச்சட்டத் திருத்தத்திற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், சட்டமன்றத்தில் தனக்கிருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி விவாதமே இல்லாமல் குரல் வாக்கெடுப்பின் மூலம் சில வினாடிகளில் மசோதாவினை நிறைவேற்றியது தி.மு.க.

வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க, த.வா.க உள்ளிட்டு தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் இம்மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனக் கண்டனக் குரல் எழுப்பியதாலும், மசோதாவைக் கண்டித்து பல்வேறு இடங்களில் தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டதாலும், வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதாலும் வேறுவழியின்றி இம்மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

நிச்சயம் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிந்துதான், சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளது தி.மு.க. வழக்கமாக எல்லா சட்டமன்றக் கூட்டங்களிலும் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், அன்று மட்டும் பங்கேற்காமல் தவிர்த்தார். ஆனால், தி.மு.க. எதிர்பார்த்ததைவிட எதிர்ப்புகள் மிகக் கடுமையாக இருந்தது. திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகளிடமிருந்தும், தி.மு.க.வின் தொழிற்சங்க அமைப்பிடமிருந்தும்கூட இம்மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

தற்போதும் இம்மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெறும் எண்ணத்தோடு தி.மு.க. இல்லை; இந்த எதிர்ப்புகளை எல்லாம் எப்படியாவது சரிக்கட்டி, அச்சட்டமசோதாவை அமலாக்கிவிட வேண்டும் என்று கருதுகின்றது. அதனால்தான், இன்றுவரை எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை துளியும் பொருட்படுத்தாமல், “வேலைநேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்ததான் அச்சட்டம்”, “தொழிலாளர்கள் விரும்பினால்தான் கூடுதல்நேரம் வேலை செய்யலாம்” என்று கூசாமல் புளுகிவருகின்றனர் தி.மு.க. அமைச்சர்கள். தி.மு.க.வின் கார்ப்பரேட் சேவைக்கு இது தெளிவானதொரு சாட்சியாகும்.

ஒரே மசோதா; மொத்த உரிமைகளும் காவு!

நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி, தன்னுடைய பெரும்பான்மையைப் பயன்படுத்தி அனைத்து மசோதாக்களையுமே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் பா.ஜ.க.வின் நடவடிக்கையை நாம் எப்படி பாசிச நடவடிக்கை என்று வரையறுக்கிறோமா, அதேபோலத்தான் தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை தி.மு.க. நிறைவேற்றிய விதத்தையும் வரையறுக்க வேண்டும். ஜனநாயக விரோதமான பாசிசச் சட்டங்கள் இத்தகைய ஜனநாயக விரோதமான வழிமுறைகளில்தான் நிறைவேற்றப்படுகின்றன.

அந்தவகையில், தி.மு.க. கொண்டுவந்துள்ள இந்த சட்ட திருத்த மசோதா தொழிலாளி வர்க்கம் பல ஆண்டுகாலம் போராடிப் பெற்ற உரிமைகளை ஒருநொடியில் முடிவுக்கு கொண்டுவருவதோடு, தொழிலாளி வர்க்கத்தின் மீது கார்ப்பரேட்டுகளின் பாசிசத் தாக்குதலை சட்டப்பூர்வமாக்குவதும் ஆகும்.

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023 என்பது 1948 தொழிற்சாலை சட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டும் சில விதிகளை தளர்த்திக் கொள்வதாகும். இச்சட்டத்திருத்தத்தின் மூலம் தொழிற்சாலை சட்டம் 1948-இல் உள்ள பிரிவு 65-ன் கீழ் 65ஏ என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 65ஏ சட்டப்பிரிவானது, சட்டப்பிரிவுகள் 51, 52, 54, 56, 59 ஆகிய அம்சங்களில் உள்ள விதிகளை தமிழ்நாடு அரசு தளர்த்திக் கொள்வதற்கு அனுமதிக்கிறது. இதுதான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகள்தான் தொழிலாளர்களுக்கான பல அடிப்படை உரிமைகளை உத்திரவாதம் செய்கின்றன.


படிக்க: ஒப்பந்த செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு!


சான்றாக, எந்த ஒரு பணியாளரும் வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக்கூடாது என்கிறது 51வது பிரிவு; ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிப்பதை வலியுறுத்துகிறது 52வது பிரிவு; எந்த ஒரு ஊழியரும் ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கப்படக்கூடாது என்கிறது 54வது பிரிவு; இடைவெளி நேரம் எல்லாவற்றையும் சேர்த்தாலும்கூட, ஒரு நாளில் பத்தரை மணி நேரத்திற்கு மேல் வேலைநேரம் இருக்கக்கூடாது என்கிறது 56வது பிரிவு; 59வது பிரிவானது, ஒரு தொழிலாளி ஒரு நாளில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால், அவருக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டிப்புச் சம்பளம் தர வேண்டும் என்கிறது.

“நெகிழ்வுத்தன்மை” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் இந்த எல்லா விதிகளையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது தி.மு.க. அரசு.

இதே சட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகாவிலும் நிறைவேற்றியது பா.ஜ.க அரசு. பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் இத்தொழிலாளர் விரோத சட்டத்தை நிறைவேற்றியுள்ளது தி.மு.க. அரசு.

பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கொத்தடிமைகளாக்கும் திட்டம்!

இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்கிறார்.

இதை கேட்க ஏதோ தொழிற்துறை அறிவாளிகள் பேசுவதைப் போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில் “தொழிலாளர் உரிமை, தொழிலாளர் நலன் என்றெல்லாம் பேசக்கூடாது. பன்னாட்டு மூலதனம் தமிழ்நாட்டில் பாய வேண்டும் என்று சொன்னால் நீங்களெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு கொத்தடிமைகளாக வேலைசெய்ய வேண்டும்” என்பதை ‘நாகரிகமாகச் சொல்கிறார் தென்னரசு.

ஆப்பிள், ஃபாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவை தனது முதன்மையான உற்பத்தித் தளமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் நிலையில், அந்நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டில் முதன்மையாக ஈர்த்துக் கொள்வதற்காகத்தான் இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சீனாவை தனது முதன்மை உற்பத்தி நாடாக கொண்ட அமெரிக்க கைப்பேசி நிறுவனமான ஆப்பிள் தற்போது தனது உற்பத்தியை மெல்லமெல்ல இந்தியாவை நோக்கியும் வியட்நாமை நோக்கியும் மாற்றி வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது கால் பங்கு உற்பத்தியையாவது இந்தியாவிற்கு மாற்ற வேண்டும் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கோடு ஆப்பிள் நிறுவனம் செயல்பட தொடங்கியுள்ளது. அண்மையில் மும்பையிலும் டெல்லியிலும் இந்தியாவின் முதல் ஆப்பிள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.


படிக்க: தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!


ஐஃபோன் உதிரி பாகங்களை தயாரிக்கும் முக்கிய நிறுவனமான ஃபாக்ஸ்கானும் இந்தியாவில் மும்முரமாக வேலைசெய்யத் தொடங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் அதன் பணியாளர்களை நான்கு மடங்காக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆறாயிரம் பேர் தங்கக் கூடிய மிகப்பெரிய தொழிலாளர் விடுதி ஒன்றைக்கட்டி வருகிறது. மேலும் கர்நாடகாவிலும் பல கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கவுள்ளது.

இப்படி திடீரென்று ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியின் பெரும் பங்கை இந்தியாவிற்கு மாற்றியுள்ளதற்கு முக்கியக் காரணம் உள்ளது. சில ஆண்டுகளாக சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்குக்கு எதிராகவும் கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும் தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு ஒப்பான சீன சமூக ஏகாதிபத்திய அரசின்கீழ் தொழிலாளர்கள் இவ்விதமான போராட்டங்களை நடத்தியுள்ளது மிகப்பெரிய விசயமாகும். அந்த அளவிற்கு ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் லாபவெறிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

இவையன்றி சீன அரசின் பூஜிய விகித கோவிட் கட்டுப்பாட்டு முறைக்கு எதிராக சீனாவில் நடந்த மிகப்பெரிய மக்கள் போராட்டங்களும், அண்மை ஆண்டுகளாக தீவிரமடைந்து வரும் சீன அமெரிக்க முரண்பாடும், ஆப்பிள் நிறுவனம் தனது தொழிலை சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு மாற்றிக் கொள்வதற்கு காரணங்களாக உள்ளன.

ஆப்பிள், ஃபாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் லாப வேட்டைக்காக தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்தெடுப்பதற்கு இந்தியாவிலுள்ள ஒன்றிய, மாநில அரசுகள் தயாராக உள்ளன.

சீனாவோடு ஒப்பிடும்போது இந்தியாவில் மக்கள்தொகையின் பெரும்பான்மையினர் இளைஞர்கள், எனவே அடிமாட்டுக் கூலிக்கு வேலை செய்ய இங்கு ஆட்கள் கிடைப்பார்கள். மேலும் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை நீக்கிவிட்டு இன்னும் குறைந்த சம்பளத்திற்கு புது ஆட்களை நியமிக்க முடியும்; பொதிமாட்டைக் காட்டிலும் கொடூரமாக தொழிலாளர்களை வேலை வாங்க முடியும்; தங்களின் வாழ்நிலை காரணமாக தொழிலாளர்களும் அதை ஏற்றுகொள்வார்கள். ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்திக்கு இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு இப்படி பல புல்லுருவித்தனமான கரணங்கள் உள்ளன.

இதன்மூலம் தொழிலாளர்கள் கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட உள்ளனர். ஏற்கெனவே ஃபாக்ஸ்கானில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கொடூரமாக சுரண்டப்பட்டுகொண்டிருக்கும் நிலையில் இச்சட்டத்தின் மூலம் சுரண்டல் மேலும் தீவிரமடையும்.

கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க வழியில் தி.மு.க!

இத்தகைய சுரண்டலைத்தான் “வளர்ச்சி” என்று மார்த்தட்டுகிறது தி.மு.க. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நோக்கியா வந்தபோதும் இப்படித்தான் பேசப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டிவிட்டு மூட்டையைக் கட்டிக்கொண்டு ஓடியது. அங்கு வேலைபார்த்த பல தொழிலாளர்கள் வேலையிழந்து நிர்கதியாய் நின்றனர்.

இவ்வளவு ஏன்? தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஃபாக்ஸ்கானின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள் பெண் தொழிலாளர்கள். அந்த போராட்டத்தை ஒழித்துகட்டவே மும்முரமாக வேலை பார்த்தது ஃபாக்ஸ்கான். அப்போது ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சாதமாக நடந்துகொண்ட தி.மு.க, இச்சட்டத்தை அமல்படுத்துவதில் ஆச்சரியமில்லை.


படிக்க: சொத்துவரி உயர்வு : தி.மு.க. பேசும் மாநில உரிமையும் வெங்காயமும்!


பா.ஜ.க-வை எதிர்ப்பதில் தி.மு.க. காவி அம்சங்களை குறிப்பிட்ட அளவிற்கு எதிர்க்கும் அளவுக்கு கார்ப்பரேட் அம்சங்களை எதிர்ப்பதில்லை. ஏனெனில் இந்துத்துவ பாசிசக் கொள்கையில் தி.மு.க. உள்ளிட்டக் கட்சிகள், பா.ஜ.க.விடமிருந்து வேறுபட்டாலும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதிலும் கார்ப்பரேட் சேவையிலும் பா.ஜ.க.வுடன் இக்கட்சிகளுக்கு எந்த பேதமும் இல்லை.

ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கார்ப்பரேட் நலத் திட்டங்களை மூர்க்கமாக அமல்படுத்தி வருகிறது தி.மு.க. மக்களின் எதிர்ப்புகளையும் மீறி கொண்டுவரும் பரந்தூர் விமான நிலையம், நான்குவழி சாலைத் திட்டம், போக்குவரத்துத்துறை தனியார்மயமாக்கம், சிங்கார சென்னை திட்டம், பாலியப்பட்டு சிப்காட், ஓசூர் உத்தனப்பள்ளி சிப்காட்,  வெவ்வேறு கவர்ச்சிகர பெயர்களில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை என பலவும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட அதே நாளில், நிலத்தோடு சேர்த்து நீர்நிலைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக்கொடுக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டமசோதாவும் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிற்துறைத் திட்டங்கள் அமலாகவிருக்கும் 100 ஹெக்டேருக்கு குறையாத நிலத்தில், நீர்நிலைகள் ஏதேனும் இருந்தாலும் அதை அரசின் சிறப்பு அனுமதிபெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இம்மசோதா அனுமதிக்கிறது. இதன் மூலம் கார்ப்பரேட் திட்டங்களுக்கு சட்டப்பூர்வமாக இருந்த சிறு தடையும் கில்லி எறியப்பட்டுள்ளது.

அண்மையில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றில் மதுபானம் பரிமாற அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தி.மு.க. அரசு. கடும் எதிர்ப்புக்குப் பிறகு, திருமண மண்டபங்களில் மது பரிமாறுவதற்கு அனுமதி வழங்கும் அரசாணையைத் திரும்பப்பெற்றாலும், வணிக நோக்கங்களுக்காக நடத்தப்படும் சர்வதேச நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்று மறுஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்னென்ன வகையில் புரோக்கர் வேலைகள் செய்ய முடியுமோ அவை எல்லாவற்றையும் திறம்படச் செய்துவருகிறது தி.மு.க. இதற்காகத்தான் கார்ப்பரேட்டுகளும் தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளிடம் அதிகமாக நிதி பெற்ற பிராந்திய கட்சிகளில் தி.மு.க முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் வெளியான செய்தி, இதனை மெய்ப்பிக்கிறது. பா.ஜ.க-விற்கு ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு என்றால், தி.மு.க-வுக்கு ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கு. சுருக்கமாகச் சொல்வதெனில் கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க. எவ்வழியோ தி.மு.க-வும் அவ்வழியே பயணிக்கிறது.


துலிபா

வேங்கைவயலைப் பற்றி பேசாதே! திமுக அரசை விமர்சனம் செய்யாதே! என்கிறார் மருதையன் | தோழர் மருது | பகுதி 4

வேங்கைவயலைப் பற்றி பேசாதே! திமுக அரசை விமர்சனம் செய்யாதே! என்கிறார் மருதையன் | தோழர் மருது | பகுதி 4

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இந்தியாவை துயரத்தில் ஆழ்த்திய மிக மோசமான ஒடிசா ரயில் விபத்து | படக்கட்டுரை

0

ந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது. கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் மிகவும் மோசமான ரயில் விபத்து இதுவாகும். இவ்விபத்தில் 288 பேர் கொல்லப்பட்டனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தியாவின் ரயில்வேத்துறை மிகவும் மோசமாக சிதிலமடைந்திருக்கிறது என்பதையே இந்த ரயில் விபத்து நமக்கு உணர்த்துகிறது. ரயில் கழிவறை முதல் தண்டவாளங்கள் வரை அனைத்து முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைய செய்திருக்கிறது அரசு. தனியார்மய – தாராளமய- உலகமய கொள்கையின் விளைவாக அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்தின் விளைவாகவே பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்ட சிதிலமடைய வைக்கப்படுகின்றன. அதன் விளைவாக ரயில்வே சிக்னல் முதல் தண்டவாளம் வரை அனைத்தும் பராமரிக்கப்படவில்லை என்பதே உண்மை.

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது. கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் மிகவும் மோசமான ரயில் விபத்து இதுவாகும். இவ்விபத்தில் 288 பேர் கொல்லப்பட்டனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 200 கிமீ (125 மைல்) தொலைவில் நடந்துள்ளது இந்த விபத்து. ஒடிசாவின் தீயணைப்புத் துறையின் இயக்குநர் சுதன்ஷு சாரங்கி கூறுகையில், “உடைந்த ரயில் பேட்டிகளுக்கு அடியில் மக்கள் சிக்கியிருக்கலாம், ஆனால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.” என்றார்.
“இரவு 10 மணிக்கு எங்களால் உயிர் பிழைத்தவர்களை மீட்க முடிந்தது. அதன் பிறகு இறந்த உடல்களை எடுத்தோம், இது மிக மிக துயரமானது. என் பணியில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை” என்றார்.
உருகுலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகள். மீட்புப்பணியில் தொழிலாளர்கள்
வெள்ளைத் துணிகளால் மூடப்பட்டிருக்கும் பல உடல்கள் ரயில் தண்டவாளத்தில் இருக்கின்றன. உள்ளூர் மருத்துவமனையில் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய வந்தனர்.
இரும்பு பொருட்களே சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில் உடல்கள் எப்படி சிதைந்திருக்கும் என்று நினைத்தாலே கொடூர மரண ஓலம் நம் மனதை உலுக்கும்

கல்பனா
நன்றி: அல்ஜசீரா

பாசிச எதிர்ப்பு இயக்கங்களை ஒழித்து கட்டுவதுதான் மருதையனின் வேலை | தோழர் மருது | பகுதி 3

பாசிச எதிர்ப்பு இயக்கங்களை ஒழித்து கட்டுவதுதான் மருதையனின் வேலை | தோழர் மருது | பகுதி 3

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

03.06.2023

ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி!

பலியான மற்றும் படுகாயம் அடைந்த மக்களின் துயரத்தில்
மக்கள் அதிகாரம் பங்கு கொள்கிறது!

பத்திரிகை செய்தி

வுராவிலிருந்து ஒரிசா வழியாக சென்னை நோக்கி வந்த ரயில் ஒரிசாவில் தடம் புரண்டும் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகியும் இருக்கின்றன.

ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணம் செய்த இந்த ரயிலில் இப்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் 900-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான காட்சிகளைத் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் பார்க்கும் பொழுதே நெஞ்சமெல்லாம் பதைபதைக்கிறது.

இந்த விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

இந்த விபத்து நடந்த உடனேயே தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளுக்காக அமைச்சர்கள் தலைமையில் குழுவை அமைத்துள்ளது. அக்குழுவானது ஒரிசாவுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள உள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

படிக்க : ‘சிங்காரச் சென்னை’ மேட்டுக்குடிகளுக்கே!

இவ்விபத்து தொடர்பாகக் கட்டுப்பாட்டு அறையையும் தமிழ்நாடு அரசு துவக்கி உள்ளது. இது போன்ற தமிழ்நாடு அரசின் செயல்கள் வரவேற்புக்குரியன. விபத்துக்குள்ளான இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தானாக முன்வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது நெகிழ்ச்சியானது.

முன்பதிவு செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முன்பதிவு செய்யப்படாத மக்களின் நிலையை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த மக்களின் துயரத்தில் மக்கள் அதிகாரம் பங்கு கொள்வதுடன் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா இருபது லட்ச ரூபாய் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உங்கள் பாதிப்புக்கு ஏற்ப நிதி வழங்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
99623 66321.

ராஜஸ்தான்: ஹஜ் யாத்திரிகர்களைத் தாக்கிய இந்துத்துவ கும்பல்!

0

ராஜஸ்தானின் கோட்டா நகரில் கடந்த மே 24 இரவு ஹஜ் யாத்திரிகர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது இந்துத்துவ கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. பேருந்து ஜெய்ப்பூர் விமான நிலையம் நோக்கி கோட்டா – பூண்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது இந்துத்துவ கும்பலால் இடைமறிக்கப்பட்டது.

குடிபோதையிலிருந்த இந்துத்துவ கும்பல் தங்களைக் கடந்து சென்ற பேருந்தை வழிமறித்து கற்களை வீசித் தாக்கியதில் பேருந்து ஓட்டுநர், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் காயமுற்றனர். இத்தாக்குதல் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கும் காணொளி அச்சமூட்டுவதாக உள்ளது.

மே 25 அதிகாலையில் சவுதி அரேபியா செல்லவிருக்கும் விமானத்தைப் பிடிக்கச் சென்ற பேருந்தை இந்துத்துவ கும்பல் பின் தொடர்ந்து வழிமறித்தது. சுமார் 40 யாத்திரிகர்கள் பயணித்த இப்பேருந்தில் அத்துமீறி நுழைந்த இக்கும்பல் உள்ளே இருந்த இளம் பெண்களின் பெயர்களை விசாரித்தது. அனைவரும் இஸ்லாமியர்கள் என்று அறிந்தவுடன் அக்கும்பல் அவர்களை தாக்கத் தொடங்கிவிட்டது. ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குமாறு மிரட்டியுள்ளது. பேருந்தினுள் இருந்த பெண்களைக் கடத்தி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளது. பேருந்திற்குப் பலத்த சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


படிக்க: ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !


முதலில் பெண்களை இழிவாகப் பேசியது அந்த இந்துத்துவ கும்பல். அதை மற்றவர்கள் தட்டிக் கேட்கத் தொடங்கியதும் இரும்பு கம்பி உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளது. கேள்வி கேட்ட அப்துல் கலாம் என்ற யாத்திரிகர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஆறு தையல் போடும் அளவிற்கு இரும்புக் கம்பியைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளது இக்கும்பல்.

இத்தாக்குதலால் தனது இடது காலில் கடுமையாகக் காயமுற்ற முகமது பர்தீன் (Mohammad Fardeen) என்ற 18 வயது இளைஞர் கூறியதாவது: இந்துத்துவ பயங்கரவாதிகள் குழந்தைகள் பெண்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை; அனைவரையும் தாக்கினர். எனது 60 வயது பாட்டியின் துப்பட்டாவைப் பிடுங்கினர். அவர் வைத்திருந்த ₹30,000 பணத்தையும் பறித்துக் கொண்டனர்.

இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசு வழக்குப் பதிவு செய்து 6 பேரைக் கைது செய்துள்ளது. சுமார் 25 – 30 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகப் போலீசின் முதல் தகவல் அறிக்கையே கூறுகிறது.

கடந்த சில மாதங்களாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவ வெறியர்கள், இந்து சாமியார்கள் ஆகியோர் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுகளை பேசி வருகின்றனர். இஸ்லாமியர்கள் மீது வன்முறையை ஏவும் வகையில் அவர்களது பேச்சுகள் அமைந்துள்ளன. சில இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.


படிக்க: ‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!


இவ்வாறு தொடர் இந்து மதவெறி ஊட்டப்பட்டதன் விளைவாகத்தான் இத்தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்மையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் துர்கா வாகினி அமைப்புகள் இணைந்து 7 நாள் ஆயுதப் பயிற்சி வகுப்புகளை நடத்தின.

அரசு எந்திரத்தில் சங்கப் பரிவார் கும்பலின் ஊடுருவல் காரணமாக ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசாங்கம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. இந்த காவி பாசிச கும்பலை எதிர்கொள்வதற்கு ஒரே வழி, மக்களை அமைப்பாக்கி அணி திரட்டுவது மட்டும்தான் என்பதை ராஜஸ்தானில் நடைபெற்று வரும் தொடர் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


பொம்மி

‘சிங்காரச் சென்னை’ மேட்டுக்குடிகளுக்கே!

டந்த 12-04-2023 ஆம் தேதி பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள லூப் சாலையை மறித்து நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற உத்தரவிட்டதே அதற்கு காரணம். லூப் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு தீர்ப்பும் வழங்கியது.

லூப் சாலையில் மீனவர்களின் கடைகள் இருப்பது குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, “இந்த மீனவர்களை பொதுச் சாலையில் குத்த வைத்து உட்கார ஏன் அனுமதிக்கிறீர்கள்? அவர்கள் அழகான இடத்தைக் கெடுக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு என்ன வேலை? அவர்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு அனுப்புங்கள்” என்று ஆண்டை மனப்பான்மையுடன் கட்டளையிட்டார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலாஜி மற்றும் சுந்தர் தலைமையிலான அமர்வு, “பொதுச் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை ஏற்க முடியாது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை இலக்கை மாநகராட்சி எப்படி அடைய முடியும்?” “சிங்கார சென்னை என்று பேசுகிறீர்கள். ஆனால் கடற்கரை அருகே உள்ள சென்னையின் மிக அழகிய சாலை வேறு விதமாக இருக்கிறது” என்று கூறினர்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீர்ப்பு வந்த அடுத்த நாளே துரிதமாக செயல்பட ஆரம்பித்துவிட்டனர். லூப் சாலையோரத்தில் உள்ள மீன் கடைகள், ஐஸ் பெட்டிகள், வலைகள் மற்றும் மேசைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.


படிக்க: 1985 சென்னை துப்பாக்கிச்சூடு | வழக்குரைஞர் லிங்கன் நேர்காணல்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விற்பனைக்காக வைத்திருந்த மீன்கள், நண்டுகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுநாள் மக்களின் போராட்டம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்தது. படகுகளை வைத்து சாலைகளை மறித்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையின் நடுவே கூடாரம் அமைத்து முழக்கமிட்டு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி ஒருவர் “மெரினாவை அழகுபடுத்துறோம்னு கட்டுமரங்களை அங்கே நிறுத்தக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இப்போ நொச்சிக்குப்பம் பகுதியை ஆக்கிரமிக்கிறோம்ன்னு எங்க பொழப்புல மண்ணள்ளிப் போடுறாங்க. இன்னையோட அஞ்சு நாள் ஆச்சு. கடை போடவிடலை. தினக்கூலி நாங்க. இப்படியே போச்சுன்னா பட்டினியாகத்தான் கிடக்கனும்” என வருந்தினார்.

மக்களின் போராட்டங்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் போலீஸ் உதவியுடன் கடைகளை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். “தனியாரின் பெரிய பெரிய ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இதே வேகத்தில் இடிக்குமா அரசு?” என மிக எளிதான கேள்விகளால் மக்கள் அதிகாரவர்க்கத்தை எதிர்கொண்டனர். மேலும், லூப் சாலைதான் மீனவர்களின் பாரம்பரிய இடத்தை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தினர். சாலையை விரிவாக்கம் செய்யக்கூடாது, நடைபாதைகள் அமைக்கக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை மீறி போக்குவரத்து வசதிக்காக என்ற பெயரில் மாநகராட்சி சாலையை விரிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்தனர்.

லூப் சாலை போடப்பட்டுள்ள இடம் மீனவர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த இடமாகும். சாலை அமைக்கும்போதே மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஆனால் நீங்கள் நடைபாதைகளில் கடைகளை அமைத்துக்கொள்ளலாம் என நயவஞ்சமாக மீனவ மக்களை ஏமாற்றி இடங்களை பறித்துதான் அரசு அப்போது சாலை அமைத்தது. மேலும் லூப் சாலை என்பது  பொதுப் போக்குவரத்திற்கான சாலை அல்ல. மீனவர்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சாலைதான். சாந்தோம் சாலையில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக லூப் சாலையில் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அம்மக்களின் வாழ்வாதாரத்திற்கான கடைகளை ‘ஆக்கிரமிப்பு’ என்று கூறி அப்புறப்படுத்துகின்றனர்.

மீனவ மக்களின் தொடர் போராட்டங்களாலும், ஜனநாயக சக்திகளின் ஆதரவாலும் மீன் சந்தை கட்டப்படும் வரை, லூப் சாலையின் மேற்கு பக்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்குப் பிறகு மீனவ மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டமும் பின்வாங்கப்பட்டுள்ளது.


படிக்க: மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !


“சிங்காரச் சென்னை” என்ற பெயரில் உழைக்கும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும்போது, இதுபோன்ற மக்கள் போராட்டங்கள் வெடித்துக்கொண்டுதான் இருக்கும்.

நீதிபதிகள், அதிகாரிகள் போன்ற மேட்டுக்குடி வர்க்கத்தின் பார்வையில் உழைக்கும் மீனவ மக்கள் சென்னையை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்களாகத் தெரிகிறார்கள். அம்மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சாலையோரத்தில் வைத்திருக்கும் கடைகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சலானவையாகத் தெரிகிறது. மீன் மற்றும் கருவாடுகளின் வாசனை கூட அவர்களுக்கு அறுவருக்கத்தக்கதாகத் தெரிகிறது.

இது தீண்டாமையின் நவீன வடிவமாகும். அதிகார வர்க்கத்திற்கே உள்ள வர்க்கத் திமிராகும். “சிங்காரச் சென்னை” என்ற அரசின் திட்டமும் சரி, அதிகாரவர்க்கம் மற்றும் நீதிபதிகளின் பார்வையும் சரி, இந்நகரம் உழைக்கும் மக்களுக்கானதல்ல, மேட்டுக்குடிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குமானது என்பதில் ஒன்றாக உள்ளது.

இவர்கள் கூறும் சிங்காரச் சென்னையில், நகரத்தை அழகுப்படுத்துவது என்ற பெயரில் பூங்காக்கள், நீரூற்றுகள், அருங்காட்சியங்களுக்கு இடம் உண்டு. உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்ற பெயரில் பாலங்கள், சுரங்கப் பாதைகள், மெட்ரோ ரயில்களுக்கு இடம் உண்டு. ஆனால், இக்கட்டுமானங்களை எல்லாம் இரத்தத்தை வியர்வையாக சிந்தி கட்டியெழுப்பும் உழைக்கும் மக்களுக்கு இடமில்லை.

கூவம், அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் உழைக்கும் மக்கள் ‘ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் அகற்றப்பட்டு, கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற புறநகர் பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்படுவதும் இதன் காரணமாகத்தான்.

ஆற்றின் பாதைகள், கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிற்கும் கட்டிடங்கள் இவர்களின் கண்களுக்கு ஆக்கிரமிப்பாக தெரிவதில்லை. மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் முதல் ராமாபுரம் மியாட் மருத்துவமனை வரை பல தனியார் கல்லூரிகளும், மருத்துவமனைகளும், ஷாப்பிங் மால்களும் ஆற்றின் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டவைதான். ஆனால் இவைகளை அகற்றக்கோரி நீதிபதிகள் யாரும் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடுப்பதில்லை. இதுதான் அவர்களுடைய வர்க்கப் பாசத்தின் வெளிப்பாடு!


குப்பு