Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 139

இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!

0

ஸ்ரேலில் சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளின் படி பென்ஜமின் நெத்தன்யாஹூ (Benjamin Netanyahu) மீண்டும் பிரதமர் ஆகிறார். மதவாத சியோனிச கட்சியுடன் (Religious Zionism) கூட்டணி அமைப்பதன் மூலம் தற்போது மீண்டும் ஆட்சியமைக்க உள்ளார். இந்த சியோனிச கட்சி என்பது ஒரு பாசிச கட்சியாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலில் நடைபெற்ற ஐந்தாவது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு அந்நாட்டில் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழல் நிலவுகிறது. கடந்த முறை, ஆட்சியிலிருந்த கூட்டணியில் ஒரு இடதுசாரி கட்சி இடம்பெற்றிருந்ததால் இந்திய இடதுசாரிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், அது வெறும் கானல்நீர் என்பது விரைவில் தெளிவாகிவிட்டது.

குறிப்பாக, தொடர்ந்து பாலஸ்தீனத்தின் இறையாண்மையைப் பறித்து அதனை ஒரு காலனியாக நடத்தி வரும் பிராந்திய மேலாதிக்க வல்லரசாகிய இஸ்ரேலில் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் இருந்தாலும், இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஜனநாயகமான அரசியல் கட்சிகள் இல்லை என்பதே எதார்த்தம். இதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு மீண்டும் உணர்த்துகின்றன.

நெத்தன்யாஹூ 1996 இல் இஸ்ரேலின் இளம் பிரதமரானார். 1996 – 1999 மற்றும் 2009 – 2021 என நீண்ட காலம் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 17 மாதங்களாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த அவர் தற்போது மீண்டும் பிரதமராகவுள்ளார்.

நெத்தன்யாஹூவின் லிகுட் கட்சி (Likud Party) 32 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது கடந்தாண்டு தேர்தலை விட இரண்டு இடங்கள் அதிகமாகும். பாசிச கட்சியான மதவாத சியோனிசம் 14 இடங்களைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. கடந்தாண்டுத் தேர்தலைவிட எட்டு இடங்கள் அதிகம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. லிகுட் கட்சியும் பாசிச மதவாத சியோனிச கட்சியும் அமைக்கும் கூட்டணியில் மற்ற மதவாதக் கட்சிகளான யுனைடெட் டோரா ஜூடாயிசம் (United Torah Judaism UTJ) — 7 இடங்கள் — மற்றும் ஷாஸ் (Shas) — 11 இடங்கள் —ஆகியவை இணையவுள்ளன. 120 இடங்கள் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசட்டில் (Knesset) இதன்மூலம் இவர்களுக்குப் பெரும்பான்மை (64 இடங்கள்) கிடைக்கும்.

படிக்க: காசா: “பிள்ளைக்கறி திங்கும் யூத இனவெறி பிடித்த இசுரேல்”

இஸ்ரேலின் ‘இடதுசாரிகள்’ படுதோல்வி அடைந்துள்ளனர். 1968 முதல் 1977 வரை ஆட்சியில் இருந்த தொழிற்கட்சி (Israeli Labor Party — “HaAvoda”) வெறும் நான்கு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

காபந்து பிரதமரும் எதிர் அணியின் தலைமையில் உள்ள யெஷ் அடிட் கட்சியின் (Yesh Atid) தலைவருமான யெயர் லாபிட்-ஆல் (Yair Lapid) ஒரு வலுவான கூட்டணி அமைக்க இயலவில்லை. அவரது கட்சி, கடந்தாண்டு தேர்தலை விட ஏழு இடங்கள் அதிகமாகப் பெற்று 24 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

மதவாத சியோனிச கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் ஜூயுஸ் பவர் (Jewish Power) கட்சியின் தலைவரான இடாமர் பென்-க்விரின் (Itamar Ben-Gvir), அரபுகள் மீதான வெறுப்புப் பேச்சுக்கு இழிபுகழ் பெற்றவர். பாலஸ்தீனியர்கள்மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, “அரபுகளுக்கு மரணம்” (Death to the Arabs) என்று முழங்கியது என அவரது யூத மதவெறிக்கு பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். பாருச் கோல்ட்ஸ்டைன்-ஐ (Baruch Goldstein) முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுபவர். 1994 ஆம் ஆண்டில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த பாலஸ்தீனியர்களை கண்மூடித்தனமாக சுட்டு 29 பேரை படுகொலை செய்து, 125 பேரை காயமடையச் செய்த இஸ்ரேலிய-அமெரிக்க பயங்கரவாதிதான் அந்த பாருச் கோல்ட்ஸ்டைன்.

நெத்தன்யாஹூ ஆட்சியிலும் சரி யெயர் லாபிட் ஆட்சியிலும் சரி பாலஸ்தீனியர்கள் கடுமையாகவே ஒடுக்கப்பட்டனர். 2005 – 2009 காலகட்டத்தில், லாபிட்டின் கூட்டணி ஆட்சியின் போதுதான், பாலஸ்தீனியர்களை கொலை செய்வது அவர்களின் வீடுகளை இடிப்பது அவர்களை கைது செய்வது போன்ற ஒடுக்குமுறைகள் அதிகமாக நடைபெற்றன. ஆகவே, இஸ்ரேலில் யார் ஆட்சி அமைந்தாலும் பாலஸ்தீனியர்களுக்கு விடிவு இல்லை என்பது மட்டும் உறுதி. பாசிஸ்டுகளின் கூட்டணியோடு ஆட்சியமைவதால், தற்போது ஒடுக்குமுறை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

படிக்க: இலங்கையில் ‘சீன உளவுக் கப்பல்’: மக்களைத் திசைதிருப்பிய ஆளும் வர்க்க ஊடகங்கள்!!

ஐரோப்பாவில் வளர்ந்து வரும் பாசிசம்!

நவ-பாசிசம் ஐரோப்பாவில் அதிதீவிரமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில் நடைபெற்ற தேர்தல்களில், பாசிச சக்திகள் பெருமளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. குறிப்பாக இத்தாலி, ஹங்கேரி, போலந்து, பிரான்ஸ், ஸ்வீடன், செக் குடியரசு, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் அதி தீவிரமாக வளர்ந்துள்ளன.

இத்தாலி நாட்டில், கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரதர்ஸ் ஆப் இத்தாலி (Brothers of Italy) என்ற பாசிச கட்சியைச் சேர்ந்த ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni) வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆகியுள்ளார். தான் ஒரு பாசிஸ்ட் அல்ல என்று அவர் கூறிக் கொள்கிறார். ஆனால், அவரது கட்சியானது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு முசோலினியின் பாசிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளால் தொடங்கப்பட்ட இத்தாலிய சமூக இயக்கம் (Italian Social Movement – MSI) என்ற கட்சியில் தனது வேர்களைக் கொண்டுள்ளது.

மெலோனியின் கட்சியின்கீழ் முசோலினியின் பேத்தியான ராச்செல் (Rachele) மற்றும் கொள்ளுப்பேரனான சீசெர் (Caio Giulio Cesare) ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்கள். முசோலினியின் பாசிஸ்ட் கட்சியின் கொடியில் இருக்கும் ‘மூவர்ண சுடர்’ பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சிக் கொடியிலும் இடம்பெற்றுள்ளது. மெலோனியிடம் முசோலினி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது “முசோலினி தான்செய்த அனைத்தையும் இத்தாலிக்காகவே செய்தார்” என்று பதில் அளித்தார். மேலும், ‘கடவுள், தேசபக்திமிக்க நாடு மற்றும் குடும்பம்’ என்ற பழமையான பாசிச முழக்கம்தான் அவரது முழக்கமாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் அதிதீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.

2010 ஆம் ஆண்டிலிருந்து ஹங்கேரியன் பிரதமராக இருக்கும் விக்டர் ஆர்பன் (Viktor Orban), கடந்த ஜூலை மாதத்தில் நாசிகளின் கொள்கையான இனத் தூய்மைவாதம் பற்றிப் பேசியுள்ளார். அவரது பேச்சு மிகுந்த கண்டனங்களுக்கு ஆளானது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹங்கேரியில் மட்டும் 75,000 – 1,00,000 யூதர்கள் நாசிகளால் படுகொலை (Holocaust) செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நவ-பாசிச அதிபர் வேட்பாளர் மரின் லு பென்(Marine Le Pen), 2017 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது தான் பெற்ற வாக்குகளை விட கிட்டத்தட்ட முப்பது லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.

சிறந்த ஜனநாயக நாடுகள் என்று கருதப்படும் ஸ்காண்டிநேவியா நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில், ஸ்வீடன் டெமாக்ரட்ஸ் (Sweden Democrats – SD) என்ற நவ-பாசிச கட்சி 20.5 சதவிகித வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது. அக்கட்சியின் ஆதரவுடன் தான் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வலதுசாரிகள் ஆட்சி புரியும் செக் குடியரசு நாட்டில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், பாசிச சக்திகள் கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளன. போர்ச்சுகல் நாட்டில், வென்டூரா (André Ventura) தலைமையிலான அதி தீவிர வலதுசாரி கட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. போலந்து நாட்டின் பிரதமர் தீவிர வலது சரியாகவும், நாசி ஆதரவு மற்றும் யூத வெறுப்பு கொண்டவராகவும் உள்ளார்.

படிக்க: பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !

பாசிசத்தின் வளர்ச்சிக்கான கூறுகள்

அன்று, அதாவது நூறாண்டுகளுக்கு முன்பு ஹிட்லர் – முசோலினி காலத்தில் இருந்த பாசிசத்திற்கும், இன்று இருக்கும் நவ-பாசிசத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இன்றைய சூழலுக்கு ஏற்ப பாசிசம் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது என்று கூறலாம்.

அன்று, ஐரோப்பிய கம்யூனிஸ்டு கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதைத் தடுப்பதற்காக தொழிலதிபர்களாலும் வங்கியாளர்களாலும் பாசிசம் வளர்த்தெடுக்கப்பட்டது. இன்று, மீளமுடியாத நெருக்கடியில் சிக்கியுள்ள ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக, நிதி மூலதனத்தால் நவ-பாசிசம் வளர்த்தெடுக்கப்படுகிறது. வாரி இறைக்கப்படும் நிதியைக் கொண்டும் கார்ப்பரேட்டுகளால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்களின் துணை வேண்டும் நவ-பாசிசம் வளர்த்தெடுக்கப்படுகிறது.

அன்றும் சரி இன்றும் சரி, அதிதீவிர தேசியவாதம், கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்பு, புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு போன்றவற்றை பரப்புவதன் மூலம் பாசிசம் வளர்கிறது. அன்று யூதர்கள் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர்; இன்று யூதர்களுக்கு பதிலாக முஸ்லிம்கள் எதிரிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். மூன்றாம் பாலினத்தவர்களை (LGBTQIA+) இழிவாக சித்தரித்து, அவர்களின் உரிமைகளை மறுக்கும் போக்கும் காணப்படுகிறது.

அன்றும் கம்யூனிசம் தான் — சோவியத் ரஷ்யா தான் — பாசிசத்தைக் களத்தில் நின்று மோதி வீழ்த்தியது. இன்றும் பாசிஸ்டுகளை வீழ்த்த வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளின் தோள்கள் மீதுதான் இருக்கிறது!

பொம்மி

ஊடகத்துறையில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரம் | மருது வீடியோ

மிழ்நாட்டில் ஆக்டோபஸ் போல எல்லா துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் நுழைந்து விட்டது. இங்கு இருக்க கூடிய பாலிமர், நியூஸ் தமிழ் சேனல்கள் ஆர்.எஸ்.எஸ் கருத்தையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். எதை சொல்ல வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்று ஊடகத்துறையை, ஊடகமுதலாளிகளின்  கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டனர்.

பத்திரிகையாளர்ளுக்கு சோறா? தன்மானமா? என்றால் தன்மானம்தான் முக்கியம்.

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பின் யூடியூப் சேனல் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டது. இதை போட்டால் தடை செய்து விடுவார்களா என்று சிந்திக்கும் அளவில் பாசிச நெருக்கடியை ஆர்.எஸ்.ஏஸ் உருவாக்கி இருக்கிறது.

உலகம் முழுவதும் பாசிசம் நெருங்கி வருகிறது. எலான் மாஸ்க் டிவிட்டரை வாங்கியவுடன் டிரம்ப் வாழ்த்து சொன்னார். இனி டிவிட்டரில் அமித்ஷா, அண்ணாமலை, அம்பானி, மோடி பேசலாம்? ஆனால் நம்மை போன்றவர்கள் பேச முடியுமா?

போராட்டங்கள் தனியாகவும் கட்சிகள் தனியாகவும் இருக்கிறோம். ஆகையால் நாம் ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு நிறுவனம். அரசு என்பது ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு எதிரான பாசிச எதிர்ப்பையே நாம் ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் ஊடகத்துறையில் ஊடுருவி இருப்பதை குறித்து RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!

0

மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் புனிதமாகக் கருதும் ஒரு நிலத்தை ஜார்க்கண்ட் மாநில அரசு சில கார்ப்பரேட் குழுமங்களுக்கு கையகப்படுத்தித் தர முடிவு செய்தது. அரசின் இந்த நடவடிக்கையை மக்கள் கடுமையாக எதிர்த்தனர். ஹேமந்த் சோரன் (Hemant Soren) அரசாங்கம் அப்பகுதி கிராம சபைகளின் ஒப்புதலைப் பெறாமலேயே, அந்த அரசு நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவாக்க முடிவு செய்தது. இதை எதிர்த்து, கடந்த அக்டோபர் மாதத்தில், பெரும் அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.

அக்டோபர் 16 அன்று ஆயிரக்கணக்கான பழங்குடிகள் குந்தபானி வட்டத்தில் (Khuntpani block) உள்ள லோஹர்டா (Loharda) பஞ்சாயத்தில் ஆயுதமேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசு மற்றும் நிர்வாகத்தின் உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல், தேசிய நெடுஞ்சாலை NH-75 ஐ மறித்து, போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். அக்டோபர் 10-ம் தேதி அன்றே மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையை மறிக்கக் கூடாது என்று கடிதம் எழுதியிருந்தது. மக்கள் அதைக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துவிட்டுப் போராட்டத்தில் இறங்கினர்.

தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கவிருந்த அந்த நிலமானது, ஹோ (Ho) என்ற பழங்குடியின மக்களுக்குப் புனிதமான ஒரு இடமாகும். இந்தப் பகுதியில் அமைந்துள்ள ஜாத்ராபாரு குன்று (Jatrabaru hillock) ஹோ சமூகத்தினரின் வழிபாட்டுத் தலமாகும். வருடா வருடம் மாகே திருவிழாவைத் (Maghe festival) தொடர்ந்து இந்தக் குன்றின் மீது ஜாத்ரா வழிபாடு (Jatra worship) நடத்தப்படும்.

தனியாருக்கு இந்த நிலங்களைக் கொடுத்து, மானியங்கள் வழங்கி, தொழில் பூங்காக்கள் அமைத்து உட்கட்டமைப்பை மேம்படுத்தப் போவதாக ஜார்க்கண்ட் அரசாங்கம் கூறுகிறது.  அதற்கான திட்ட வரைவுக்கு  செப்டம்பர் மாதத்தில் ஜார்க்கண்ட் அமைச்சரவை ஒப்புதலும் அளித்துவிட்டது. இத்திட்டத்திற்குத் தேவையான நிலத்தை ஜார்க்கண்ட் தொழில்துறை பகுதி மேம்பாட்டு ஆணையம் (Jharkhand Industrial Area Development Authority) கையகப்படுத்தி வழங்கும்.

இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள குந்தபானி வட்டத்தைச் சேர்ந்த பகுதிகள் ’புனித தலம்’ என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பங்களிப்பு செலுத்தும் முக்கியமான பகுதியாகும். மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு அவ்விடத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள்; காலங்காலமாக பயன்படுத்தி வரும் இடுகாடும் அந்த புனித மலைக்கு அருகாமையில்தான் அமைந்துள்ளது; மேலும் அங்கு பல மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளும் இருக்கின்றன.

நிலத்தை கையகப்படுத்த அரசு முயல்வதானது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்று அங்குள்ள பழங்குடி மக்கள் கூறுகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ, தற்போது கையகப்படுத்துவதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம் ஏற்கனவே அரசுக்குச் சொந்தமானது என்றும், 189.63 ஹெக்டேர் கொண்ட ஒரு பார்சல் நவம்பர் 2017-லேயே தொழில்துறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறுகிறது.

2011 – 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், பாஜகவின் அர்ஜுன் முண்டா முதல்வராக இருந்தபோது, மாவோயிஸ்ட் நடவடிக்கைகளைத் தடுப்பது என்ற பெயரில் நரவேட்டையாடும் நோக்கில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் (Indian Reserve Battalion) என்ற சிறப்பு ஆயுதப்படையை உருவாக்கத் திட்டமிட்டனர். அதற்காக, குந்தபானி வட்டத்தில் உள்ள இந்தப் பகுதியில்தான் 70.82 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தி இந்த சிறப்புப் படைக்கான தலைமையிடத்தை அமைக்க முடிவு செய்தனர். மக்களின் வீரியமிக்க போராட்டங்களைத் தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

சூழ்ச்சி செய்து பழங்குடி மக்களை ஏமாற்றி நிலங்களைக் கையகப்படுத்துவதை மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மட்டும் அரசு செய்யவில்லை. ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதுமே மக்களை ஏமாற்றி அரசும் நில மோசடிக்காரர்களும் நிலங்களை கையகப்படுத்துவதானது அதிக அளவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பழங்குடிகளை ஏமாற்றுவதானது எந்த அளவிற்கு நடக்கிறது என்றால், 2015-ல் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கும் அளவிற்கு நடக்கிறது.

2017 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த பாஜகவைச் சேர்ந்த ரகுபர் தாஸ் (Raghubar Das) குந்தபானி வட்டத்தில் தொழில் பூங்கா அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்த முயன்றார். மக்கள் தீவிரமாக போராட்டங்களில் இறங்கி சாலைகளை மறித்ததன் மூலம் இத்திட்டத்தை முறியடித்தனர்.

இந்திய அரசால் வெளியிடப்பட்ட 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் வசிப்பவர்களில் 26.68 சதவீதத்தினர் பழங்குடியினர் ஆவர். இந்த மாவட்டம் அரசியலமைப்பு சாசனத்தின் அட்டவணை 5-ன் (Schedule 5) கீழ் வருவதால், அங்குள்ள மக்களுக்கு நிலத்தின் மீது சிறப்பு உரிமைகள் உள்ளன.

பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம்) சட்டம் 1996-ன் படி, அட்டவணை 5 இன் கீழ் வரும் நிலத்தை கையகப்படுத்த வேண்டுமானால், அங்குள்ள கிராம சபைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த சட்டத்தைப் பின்பற்றவில்லை; அந்த நிலம் அரசிற்குச் சொந்தமான நிலம் என்பதால் கிராம சபைகளின் ஒப்புதல் தேவை இல்லை என்று கூறுவிட்டது. என்னவொரு பித்தலாட்டம்!

படிக்க: தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !

ஜார்க்கண்ட்-ஒடிசா எல்லையில் உள்ள மேற்கு சிங்பூம், இரும்புத்தாது சுண்ணாம்புக்கல், மாங்கனீசு மற்றும் தங்கம் போன்ற கனிம வளங்களைக் கொண்ட பகுதியாகும். தற்போது போராட்டம் நடந்த இந்தப் பகுதி இந்தியாவின் முதல் பழங்குடி ஜனாதிபதியான திரௌபதி முர்முவின் சொந்த கிராமத்திலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. நிச்சயமாக அவர் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளப் போவதில்லை. இந்தப் பகுதி, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வரும் தற்போதைய பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ள அர்ஜுன் முண்டாவின் மக்களவைத் தொகுதியாகும். கார்ப்பரேட் கைக்கூலியான பாஜகவை சேர்ந்த இவரும் இம்மக்களின் பிரச்சினை குறித்து வாய்திறக்கப் போவதில்லை.

பொம்மி

நவம்பர் 7 – ஆவணப்படம் | November 7 – Documentary

சோசலிச ரசியாவே நமது வழிகாட்டி!

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர். உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டினர். அதைபோல, நாஜி ஹிட்லர் – பாசிச முசோலினி தலைமையில் மீண்டுமொரு கொள்ளைக்கார போரை – இரண்டாம் உலகப்போரை ஏகாதிபத்தியங்கள் கட்டவிழ்த்து விட்டபோது, தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோசலிச ரசியாவின் 200 இலட்சம் பாட்டாளிகள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து பாசிசத்திடமிருந்து உலக மக்களைக் காத்தனர்.

இத்தகைய, உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களும் தியாகங்களுமே இந்தியாவைச் சூழ்ந்துவரும் பாசிசத்தையும் கிள்ளியெறியும்.

***

Socialist Russia is our guide!

At the time of First World War, which was fought by the imperialisms on who should plunder, the Russian working class under the leadership of Comrade Lenin defeated capitalism and orchestrated the Socialist Revolution and established people’s power. Likewise, during the Second World War, which again fought for plundering by the imperialisms, 2 crore Russian people under the leadership of Comrade Stalin sacrificed their lives and saved the people of the world.

Such united struggles and sacrifices of the working people alone can throw away the fascism that is surrounding India.

***

நவம்பர் புரட்சியை மீண்டும் இவ்வுலகம் எதிர்நோக்கி இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் நடைபெரும் பல்வேறு போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதனை உணர்த்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த ஆவணப்படம்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

  • காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
  • போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் மீதுள்ள மாயையை உதறியெறிவோம்!
  • பாசிச எதிர்ப்பு ஜனநாயக் குடியரசைக் கட்டியமைப்போம்!
  • ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!
  • பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாக ஒன்றிணைவோம்!
  • பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

தொடர்புக்கு :- 9791653200, 9444836642, 7397404242, 9962366321

  • Let’s smash Saffron-Corporate fascism!
  • Let’s throw away the illusions on the pseudo-democratic State structure!
  • Let’s establish an anti-Fascist Democratic Republic!
  • Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism!
  • Let’s unite as anti-Fascist People’s Front!
  • Let’s build an anti-Fascist people’s uprising!

People’s Art and Literary Association
Revolutionary Students – Youth Front
New Democratic Labour Front
(State Co-ordination Committee)
Makkal Athikaram, Tamilnadu – Puducherry

Contact:- 9791653200, 9444836642, 7397404242, 9962366321

Let’s uphold the day of Russian Socialist Revolution! Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism! | Pamphlet

November 7: Let’s uphold the day of Russian Socialist Revolution!

December 21: Let’s remember the birth anniversary of our mentor Comrade Stalin, who defeated Hitler-Mussolini fascism!

Collapse of small scale businesses – unemployment – Price rise – Fascist repressions:

Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism!
Let’s uphold the day of Russian Socialist Revolution!

November – December 2022

Hall meetings | Street Corner Meetings | Cultural events

Dear working people!

We should learn from the Great October Socialist Revolution that took place in Russia on November 7, 1917. We are shouldering the obligation of defeating the saffron-corporate fascism that is intimidating the country on the birth anniversary of our mentor Comrade Stalin, who defeated the Hitler-Mussolini fascism that intimidated the entire world.

Eight years of fascist devilish rule:

The Modi government plundered Rs 20 lakh crore – through digitalization of the economy, the GST which destroyed the MSME sector, Cess, Excise duty on petrol-diesel, etc., – by exploiting the livelihoods of the working people and bestowed it to the corporates. It made the state governments subservient and collects tributes from them.

The Modi government is preventing its own people from doing small-scale businesses, preventing people from agriculture, depriving the tribes their land rights, preventing the use of underground water and is amending the laws to benefit the corporates such as Ambani, Adani, Vedanta and Mittal. The farm laws, Environmental Impact Assessment notification, the new Labour Codes, the New Education Policy, the Electricity (Amendment) Bill, and National Monetization Pipeline which gifts public sector enterprises to the corporates – are only a few droplets among Modi’s fascist schemes.

Yes, Modi’s rule has brought the country to the brink of disaster!

Is Modi creating a heaven or a Somalia?

For the last eight years, MSME and handcrafts, which generated majority of the employment, were being crushed by corporate plundering. As a result of this, there is unprecedented rise in unemployment. Modi regime promised to create a heaven. But, scarcity and hunger deaths are on the rise and the country is in the danger of turning into a Somalia. Even the tyrannical RSS mob has come to a stage that this truth can’t be hidden anymore. That’s why, it is shedding crocodile tears that more than 20 crore people are reeling under poverty and 4 crore youth are unemployed.

In this situation, the US imperialism is increasing the value of dollar. And because of this, there is rise in inflation worldwide. The RBI governor, who did not have the guts to condemn the dishonest practices of the United States, is saying that the global economy is in the eye of a new storm. As a result of this, India is going to face a food scarcity. The Modi-Nirmala Sitharaman mob is trying to avert from its responsibility by citing this as a reason.

Modi is boasting that India had become the 5th largest economy in the world. But the truth is that, India has turned into just another Sri Lanka.

RSS-BJP; Ambani-Adani Fascism

The recolonizational policies of privatization-liberalization-globalization are being imposed in India from the 1990s by the imperialist countries including the US with the intent to loot the backward and growing economies like India. The BJP regime is in the forefront in distributing this loot to the corporate bosses like Ambani, Adani, Vedanta, Mittal and Tata with Marwari, Parsi, Brahmin, Bania and Sindhi backgrounds.

The RSS’s ideology is caste-based varnashrama – Brahminical terrorism which is based on inequality and is anti-democratic in nature. The Hindu Rashtra policy which is a manifestation of this forms the base for their pro-corporate stance. That’s why, in order to protect the corporate plundering, Brahminical fascism and corporate fascism are acting conjointly.

The RSS has infiltrated in the Sate machinery and in all sectors of the society through constitutional means; the Constitution itself is intended to protect private property and exploitation. The fascist mob is destroying even the democratic features which existed for at least namesake, in order to carry out corporate plundering and its Hindu Rashtra intent without any hurdle.

Projecting Muslims as enemies and dividing the people, indulging in pre-planned riots against them; beating up and killing minorities, tribes and dalits; raping and killing of girls and women – these incidents have become day-to-day events in the BJP-ruled states and the entire society is being kept in a tensed state by the RSS sangh parivar mob.

This country is only for the dominant castes including the Brahmins and the upper class. For others, i.e., the working people it’s a burial ground. This is the Hindu Rashtra that the saffrons are trying to establish.

Socialist Russia is our guide!

At the time of First World War, which was fought by the imperialisms on who should plunder, the Russian working class under the leadership of Comrade Lenin defeated capitalism and orchestrated the Socialist Revolution and established people’s power. Likewise, during the Second World War, which again fought for plundering by the imperialisms, 2 crore Russian people under the leadership of Comrade Stalin sacrificed their lives and saved the people of the world.

Such united struggles and sacrifices of the working people alone can throw away the fascism that is surrounding India.

Let the protests rise into uprisings!

The protests against RSS-BJP; Ambani-Adani fascism across the country are growing. In Tamilnadu also people from all walks – farmers, labourers, fishermen, sanitation workers, students, nurses and professors – are protesting in many places including Kallakurichi, Ulundurpet, Parandur, Puducherry and Coimbatore. The anti-fascist forces are protesting against the fascistic actions of the RSS-BJP. It is imperative of the time that those who fight fascism should come together and form anti-fascist united fronts and anti-fascist people’s front to fight fascism. It is important to cultivate these protests into uprisings to achieve our goal of defeating fascism.

The RSS-BJP mob has intensely indulged in conspiracies to lay its base in Tamilnadu. Let’s make it clear to them again that Tamilnadu will never surrender! Let’s cultivate people’s protests into big uprisings! Let’s uproot RSS-BJP; Ambani-Adani fascism!

  • Let’s smash Saffron-Corporate fascism!
  • Let’s throw away the illusions on the pseudo-democratic State structure!
  • Let’s establish an anti-Fascist Democratic Republic!
  • Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism!
  • Let’s unite as anti-Fascist People’s Front!
  • Let’s build an anti-Fascist people’s uprising!

People’s Art and Literary Association
Revolutionary Students – Youth Front
New Democratic Labour Front
(State Co-ordination Committee)
Makkal Athikaram, Tamilnadu – Puducherry

Contact:- 9791653200, 9444836642, 7397404242, 9962366321

ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!

0

த்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாட்டு நெல் விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். தமிழ்நாட்டு விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் விதைப்பு – அறுவடை மற்றும் கொள்முதல் நடக்கும் காலங்களில் பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்படுகின்றனர். நேரடி கொள்முதல் நிலையத்தில் (Direct Procurement Centre DPC) போதுமான சேமிப்பு வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் நனைந்து போகின்றன. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் (PMFBY) கீழ் கிடைக்கும் பற்றாக்குறையான தாமதமான பயிர் சேதத்திற்கான இழப்பீடு விவசாயிகளை மேலும் கடனுக்குள் தள்ளுவதாக உள்ளது.

அரசு நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் கொள்முதலை நோக்கி உந்தித் தள்ளுவதானது திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

நெல் கொள்முதல் செய்யப்படும் முறையே விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாகத்தான் உள்ளது. கொள்முதல் செய்வதற்கான போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது, கொள்முதல் செய்வதை தாமதமாக்குவது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குக்கு அனுப்புவது என அனைத்தும் விவசாயிகளை பதட்டத்திற்கு ஆளாக்குவதாகவே உள்ளது.

கடந்த அக்டோபர் இரண்டாவது வாரத்தின் போது திடீரென கொட்டி தீர்த்த மழையானது, நேரடி கொள்முதல் நிலையத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை நினைத்துவிட்டது. பருவ மழையும் தொடங்கி விட்டதால், ஈரப்பதம் அனுமதிக்கப்பட்ட அளவிற்க்குள் இருப்பதை உறுதி செய்வதற்காக நெல்லை உலர்த்த வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

அனுமதிக்கப்பட்ட ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மத்திய அரசோ அதிகபட்ச ஈரப்பதம் 19 சதவீதம்தான் என முடிவு செய்தது. ஈரப்பதம் 17 சதவீதமாக இருந்தால் சாதாரண ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,040 எனவும், சன்ன ரகத்துக்கு ரூ.2,060 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரப்பதம் 17-18 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.2,019.60 எனவும், சன்ன ரகத்துக்கு ரூ. 2,039.40 எனவும், ஈரப்பதம்18-19 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.1,999.20 எனவும், சன்ன ரகத்துக்கு ரூ.2,018.80 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

படிக்க: மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் சதி எனக்கூறி எம்.எஸ்.பி(MSP) குழுவை நிராகரித்த எஸ்.கே.எம்!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, மோடி அரசால் மிகவும் மெச்சப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், 2020-21 சம்பா அறுவடை பருவத்தில் பயிர்கள் சேதமடைந்ததற்கே இன்னும் இழப்பீடு வழங்கவில்லை.

“இழப்பீட்டுத் தொகை விநியோகம் அக்டோபர் 11, 2021 அன்று தொடங்கியது. ஆனால் ஒரு வருடம் கடந்தும் இன்னும் கொடுத்து முடிக்கப்படவில்லை. இந்த வகையான தாமதத்தை விவசாயிகளால் எப்படித் தாக்குப்பிடிக்க முடியும்?” என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் கூறுகிறார். சேதமடைந்த நெல் நாற்றுகளுக்கான இடுபொருள் செலவுக்கு ஏக்கருக்கு ரூ.6,038 மட்டுமே மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், AIKS-ன் கோரிக்கையோ ஏக்கருக்கு ரூ.25,000 ஆகும்.

“இடுபொருள் மற்றும் விவசாய கூலிக்கான செலவினங்கள் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, நாங்கள் மானியம் கோரினோம். ஆனால் அரசாங்கம் கோரிய தொகையில் 25 சதவீதத்தை மட்டுமே மானியமாக அறிவித்தது; அந்தத் தொகை கூட இன்னும் வழங்கப்படவில்லை. சேத மதிப்பீட்டிற்கான மத்திய அரசின் குழு பார்வையிட்ட பகுதிகளுக்குக் கூட இழப்பீடு சென்றடையவில்லை” என்று குமார் மேலும் கூறினார்.

“விவசாயிகள் செலுத்திய பிரீமியத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் உறிஞ்சிக்கொண்டு நல்ல இலாபம் ஈட்டுகின்றன. பல பயிர்களுக்கான பிரீமியங்களை கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மையும் இல்லை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1.33 லட்சம் விவசாயிகள் 856 வருவாய் கிராமங்களில் இருந்து சுமார் ரூ. 17.94 கோடியை பிரீமியமாக செலுத்தியிருக்கும் நிலையில், ஏழு கிராமங்களுக்கு மட்டும் ரூ. 36 லட்சம் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் கணக்கிடப்பட்டால், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தை மதிப்பிட்டுக் கொள்ளலாம்” என்றார் அவர்.

படிக்க: வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!

இந்திய உணவுக் கழக செயலாளர் அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கத்தில் பேசிய போது, தனியார் திறம்பட கொள்முதல் செய்யும் போது அரசு ஏன் தலையிட வேண்டும் என்று பேசினார்.

அறுவடை செய்யப்பட்ட 1,22,22,463 டன் நெல்லில் சுமார் 42,55,135 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது; மேலும் 70 லட்சம் நெல் விவசாயிகளில், 6,72,791 பேர் மட்டுமே நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்றுள்ளனர் என்றும், பெரும்பாலான விவசாயிகள் இன்னும் அரசாங்க கொள்முதல் செயல்முறைக்கு வெளியே உள்ளனர் என்றும் AIKS குற்றம் சாட்டுகிறது.

கொள்முதலைக் குறைத்துக் கொள்ளும் அரசின் இத்தகைய நடவடிக்கைகள் விவசாயத் துறையில் இருந்து அரசு விலகிச் செல்வதையே காட்டுகிறது. இது ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களை மறைமுகமாக மாற்று வழிகளில் நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறில்லை.


பொம்மி

செய்தி ஆதாரம்: நியூஸ் கிளிக்

பொய், பித்தலாட்டம், கலவரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அரசியல் ! | ரவி வீடியோ

த வயர் இணையதளம் பா.ஜ.க.வின் அமித் மாள்வியாவை அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டது என்பதற்காக அதன் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவியுள்ளது மோடி அரசு. இது இந்தியாவின் சுதந்திர ஊடகங்களுக்கு ஓர் எச்சரிக்கை.

மேலும் தமிழகத்தில் பொய், பித்தலாட்டங்களை செய்து கலவரத்தை தூண்டி காலூன்றத்துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி சங்க பரிவார கும்பல். ஒரு பக்கம் ஆர்.என்.ரவி மறுபக்கம் அண்ணாமலை என தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் சூழலை மாற்ற முயற்சிக்கிறார்கள். இவ்விதம் பாசிச சக்திகள் வளர்ச்சியடைந்தால் ஜனநயாகம் கருத்துரிமை, அடிப்படை உரிமைகள் என அமைத்து போகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இந்த காவி – கார்ப்பரேட் பாசிச சக்திகளுக்கு எதிராக தமிழகத்தின் ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் ஒன்றினைய வேண்டியது அவசியம் என்று இந்த காணொலியில் எச்சரிக்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

New Democracy – November 2022 | Magazine

New Democracy November – 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

New Democracy (Puthiya Jananayagam) November – 2022

List of Articles Present in this Issue :

  • Tamilnadu upholding its anti-brahministic heritage! The safforn mob getting humiliated!
  • Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists!
  • Identity Politics acting as Axe hafts in the hands of the Fascists!
  • RSS Terrorism emerging as an International threat!
  • Saffron Fascism ruling the country!
  • Is Traitor Savarkar a Freedom Fighter?
  • Bilkis Bano Case: Convicts released! Let’s rise against ‘Hindu Rashtra justice’!
  • Farmers on the rise after defeating a series of conspiracies of the saffron mob!
  • Electricity Amendment Bill 2022: Engulfing of Power sector by the Corporates!
  • Let’s unconditionally support the Kallakurichi struggle model! Let’s stand by the students and youth of Tamil Nadu!

To get Free e-magazine, mail us : puthiyajananayagam@gmail.com

To Get the Magazine by Post :
Contribution : Rs. 25
Pay through G-Pay : 94446 32561

Make Payment and send your address details along with Payment receipt to our email : puthiyajananayagam@gmail.com

சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !

0

ட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) ‘பயங்கரவாதம்’ தொடர்பான பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டால் பிணையில் வெளிவருவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கியது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் பணிபுரிந்து வந்த சித்திக் கப்பன், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க உத்தரப்பிரதேசம் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் தடுத்த போலீசுத்துறையினர், “பொது அமைதிக்கு குந்தகம்” விளைவித்ததாகக் கூறி அவரைக் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) பின்னணியில் சித்திக் செயல்பட்டதாகக் கூறி, மதுரா போலீசுத்துறை அவர்மீது தேசத்துரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழும் வழக்குப் பதிவு செய்தது.

கடந்து செப்டம்பர் 2022-ல் உச்சநீதிமன்றம் அவருக்குப் ஜாமீன் வழங்கிய போது, அவர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலத்தை சிறையில் கழித்திருந்தார். அந்த இரண்டாண்டு காலத்தில், அவர் தனது தாயாரை இழந்திருந்தார்; கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்; சிகிச்சையின் போது ஒரு தனியார் மருத்துவமனையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார்; அவருடைய மனைவி மற்றும் வழக்கறிஞரின் தொடர் போராட்டத்தால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றமும் மதுரா கீழமை நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தன.

உச்சநீதிமன்றம் இந்த UAPA வழக்கைக் கையாண்ட விதம், ஊடக சுதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றியாக பத்திரிகையாளர்களால் பார்க்கப்பட்டது. ஜாமீன் வழங்கியதோடு, உச்ச நீதிமன்றம் “சித்திக் கப்பன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உ.பி போலீசுத்துறையால் நிரூபிக்க முடியவில்லை. ஒவ்வொரு நபருக்கும் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்க உரிமை உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதற்காக பொதுக் குரல் எழுப்ப முயன்றது சட்டத்தின் பார்வையில் குற்றமா?” என்று கேள்வியும் எழுப்பியது.

படிக்க: உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சித்திக்கின் மனைவி ரைஹானா கப்பன் “அவருக்கு ஜாமீன் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இரண்டு ஆண்டு கால போராட்டம். அவர் சிறையில் இருந்தது, எங்களின் இரண்டாண்டு வாழ்க்கை, நாங்கள் சந்தித்த துயரங்கள் – உடல், மன, பொருளாதார ரீதியிலான துயரங்கள் – எதுவுமே எளிதில் மறக்கக் கூடியது அல்ல. உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதானது, இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்பதைக் குறிக்கிறது; இது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது” என்று கூறினார்.

ஆனால் ரைஹானாவின் மகிழ்ச்சி குறுகிய காலத்திற்கே நீடித்தது. 760 நாட்கள் சிறை; கூடுதலாக உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி இரண்டு மாதங்களைக் கடந்தும் சித்திக் இன்னும் சிறையிலேயே வாடிக் கொண்டிருக்கிறார்.

எதனால் சித்திக் கப்பன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்?

சித்திக் கப்பன் 2020-ல் உத்தர பிரதேச போலீசுத்துறையால் கைது செய்யப்பட்ட போதே அமலாக்கத்துறையும் உள்ளே நுழைந்து கொண்டது. 2018-ல் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் சித்திக்கை குற்றஞ்சாட்டப்பட்டவராக சேர்த்து, பிப்ரவரி 6, 2021-ல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.

பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) பிரிவுகள் 3 மற்றும் 4-ன் கீழ் சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உத்தர பிரதேச போலீசுத்துறை தொடுத்த UAPA வழக்கிலிருந்து செப்டம்பர் 9 அன்று உச்சநீதிமன்றம் சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது; ஆனால், அமலாக்கத்துறை தொடுத்த PMLA வழக்கில் ஜாமீன் வழங்க கருப்புப்பண மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 31 அன்று மறுத்துவிட்டது.

அமலாக்கத்துறை 2018-இல் பதிவு செய்த வழக்கு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த 22 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் சித்திக் கப்பன் பெயர் இடம் பெறவில்லை. இந்த 2018 ஆம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கு, 2013 ஆம் ஆண்டு பதியப்பட்ட ஒரு வழக்கோடு தொடர்புடையது. ஆனால் அந்த வழக்கிலும் சித்திக் கப்பன் பெயர் இடம் பெறவில்லை. 2018-ல் அமலாக்கத்துறை தொடுத்த வழக்கிற்கும் 2020-ல் உத்தரப்பிரதேச போலீசுத்துறை தொடுத்த UAPA வழக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், அமலாக்கத் துறை கூறும் PFI-தொடர்பான வழக்கின் முக்கிய சதிகாரரான ராஃப் ஷெரீப் (KA Rauf Sherif) என்பவருக்கு, பிப்ரவரி 2021-லேயே எர்ணாகுளம் பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது ஷெரீபோ உத்தரப்பிரதேச போலீசுத்துறையால் UAPA சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு லக்னோ மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

படிக்க: பத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு!

திட்டமிட்டே மறுக்கப்படும் நீதி!

சித்திக் கப்பனுக்கு PFI-யுடன் தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையிலேயே அமலாக்கத்துறையின் வழங்கும் உத்தரப்பிரதேச போலீசுத்துறையின் UAPA வழக்கும் அமைந்துள்ளன. (சித்திக் அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்).

UAPA வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமோ அவருக்கு ஜாமீன் வழங்கிவிட்டது. சித்திக்கின் வழக்கறிஞருக்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவரை தேடிப் பிடித்து பிணையமாக (surety) நிறுத்துவதற்கே பத்து நாட்கள் ஆகிவிட்டது. ஜாமீன் வழங்கப்பட்டு 50 நாட்களைக் கடந்தும் (நவம்பர் 1 வரை) சுயூரிட்டிக்களை சரி பார்க்காமல் வேண்டுமென்றே காலத்தைக் கடத்தினர்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பிறகே அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு வந்தது. சித்திக்கின் PFI-தொடர்பு தொடர்பான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்ததை அறிந்திருந்தும், பண மோசடி தடுப்பு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது.

நீதிமன்றங்களின் இந்த இரட்டை நிலைப்பாடுகள் எதை வெளிப்படுத்துகிறது என்றால், சித்திக் கப்பனை திட்டமிட்டே இந்த அரசு வதைக்கிறது என்பதைத்தான். ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஒரே நாளில் அதிவிரைவாக ஜாமீன் கிடைத்தது. காலம் தாழ்த்தினால் அவரது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடுமாம்!

ஊடகவியலாளராக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி, பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு ஒத்திசைவாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் அல்லது UAPA போன்ற ஆள்தூக்கி சட்டங்களால் கைது செய்யப்பட்டு ஜாமீன் கூட வழங்கப்படாமல் சிறையிலேயே வைத்து வதைக்கப்படுவார்கள். இதுதான் இப்போதைய புது இந்தியா!


பொம்மி
மூலக்கட்டுரை: thequint

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்பை தடை செய்வது தான் முதல் தேவை! | மருது வீடியோ

மிழக போலீசுத்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடை செய்யமுடியாத நிலையில்தான் இருக்கிறார்கள். அதனால்தான் மூன்று இடங்களில் பேரணி, இருப்பத்து மூன்று  இடத்தில் ஹால் மீட்டிங் நடத்திக் கொள்ளலாம் என்றும் மற்ற இடங்களில் நடத்த முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறினார்..

உண்மையில் ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது ஊரறிந்த உண்மை. ஜனநாயக நாட்டில் ஆர்.எஸ்.எஸ் கொடுக்கிற உரிமையை ஏன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கோ கொடுக்கலாமே என்றால் கொடுத்து விடுவார்களா?

எப்படிப்பட்ட பயங்கரவாத செயல்களை செய்துகொண்டு இருக்கின்றது என்று தமிழக அரசு ஒரு ஆவணப்படத்தை தயார் செய்து அந்த அமைப்பை தடைச் செய்வதுதான் முதல் தேவை.

அரசு அனுமதி கொடுக்கவில்லையென்றாலும் அவர்கள் ஷாகா போன்ற பயிற்சிகளை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.பொது வெளியில் சரியான அமைப்புபோல தோற்றத்தை ஏற்படுத்துவது தமிழகத்துக்கு ஒர் எச்சரிக்கை.

ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாச்சார அமைப்பா என்றால் இல்லை. நம் பண்பாட்டுக்கு எதிர் பண்பாடு தான் அவர்களுடைய பண்பாடு. நான்கு வர்ண கோட்பாட்டையும், சனதான தர்மத்தையும் ஆதரிக்கிற ஒரு அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.

மக்கள் மத்தியில் கலவரங்களை உருவாக்கி பயங்கரவாத சதி செயல்களை செய்து, கலவரங்களை உருவாக்கி திமுகவை மக்கள் மத்தியில் பலவீனப்படுத்துவதுதான் அவர்களுடைய திட்டம்.

தமிழ்நாட்டில் திருமாவளவன் வைத்த  தடை முழக்கம் முக்கிய பங்கு வகித்தது. ஆர்.எஸ்.எஸ் எதிராக இந்த பேரணியை அறிவிக்கமால் இருந்திருந்தால் என்னவாயிருக்கும்.

ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்தும், சங் பரிவார கும்பலின் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மோர்பி நகர் தொங்கு பாலம் விபத்து – அழுகி நாறுகிறது குஜராத் மாடல்!

0

கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி குஜராத்தின் மோர்பிநகர் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயுள்ளனர். இதில் ஒன்று முதல் பத்து வயதிற்குட்பட்ட 33 குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

143 ஆண்டு பழமையான, 230 மீட்டர் நீளமுள்ள, இந்த தொங்கு பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. பாலம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் ஒரு தனியார் ஒப்பந்ததாரரிடம் அதைப் புதுப்பிக்கும் பணி வழங்கப்பட்டது. டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்குமாறு அந்நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால், திட்டமிட்டதற்கு முன்னதாகவே பாலம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியில் குஜராத்தி புத்தாண்டன்று பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் மிகவும் வருத்தமுற்றதாகக் கூறும் பிரதமர் மோடி, சூறாவளியாய் சுழன்று தேர்தல் பிரச்சாரங்களிலும் திட்டங்களைத் தொடங்கி வைப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். குஜராத்தில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ஆடம்பரமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. மோடியை பிரமோட் செய்யும் வேலையும் சிறப்பாக நடந்தேறி வருகிறது.

படிக்க : குஜராத்: அரசின் அலட்சியத்தால் மோர்பி தொங்கு பாலம் விபத்து ! 141 பேர் மரணம் !

அதற்கேற்ற வகையில் ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன. ஆஜ் தக் (Aaj Tak) செய்தித் தொலைக்காட்சியை சேர்ந்த சுதீர் சௌதுரி (Sudhir Chaudhary) என்ற தொகுப்பாளர், பாலம் இடிந்து விழுந்ததற்கு மக்கள்தான் காரணம் என்று வாய் கூசாமல் பேசுகிறார். இதற்கு முன்னதாக இவர் மோடியின் எதிராளிகளை துவம்சம் செய்து, மோடியின் படுமோசமான முடிவுகளுக்கும்கூட சப்பைக்கட்டு கட்டி, மோடியை பிரமோஷன் செய்யும் வேலையை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோர்பிநகர் பாலத்தைப் புதுப்பிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனத்தைப் பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வது அவசியம். ஓரேவா (Oreva) என்ற நிறுவனத்திடம் இந்தப் பணி மோர்பி நகராட்சியால் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் கடிகாரம் மற்றும் பைக்கு தயாரிக்கும் நிறுவனமாகும். எள்ளளவும் பாதுகாப்புத் துறைக்கு சம்பந்தமில்லாத அனில் அம்பானிக்கு ரஃபேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டதைப் போலவே, ஓரேவா நிறுவனத்திற்கு இந்த பாலத்தைப் புதுப்பிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ஓரேவா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் பிரைவேட் லிமிடெட் (Ajanta Manufacturing Private Limited) கையொப்பமிட்ட சமீபத்திய ஒப்பந்தத்தின்படி, பாலத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு, பாதுகாப்பு, டிக்கெட் வழங்குதல், சுத்தம் செய்தல் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தல் உள்ளிட்டவற்றை நிர்வகிப்பதற்கான முழுப் பொறுப்பையும் 15 ஆண்டுகளுக்கு அந்நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தப் பாலத்தை புனரமைக்க செலவிட்ட தொகையை பயணிகளிடமிருந்து கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என்றும், 2037 வரை இந்த பாலத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.

ஆனால், ஓரேவா நிறுவனம் பாலத்தின் தரைப்பகுதியை மட்டுமே சீரமைத்திருந்தது. கேபிளை சரி செய்யவில்லை. புதிய தரைப்பகுதியின் எடை தாங்காமல் கேபிள் அறுந்து விழுந்துள்ளது. 2008-ல் இருந்தே ஓரேவா நிறுவனத்தால் இந்தப் பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

ஓரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஜெய்சுக் படேல் (Jayasukh Bhai Patel), இந்த பாலத்தை புதுப்பிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ரூ.20 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் 15-20 ஆண்டுகள் வரை எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் கூறியிருந்தார். ஆனால், இந்த நிறுவனம் வெறும் ரூ.28 லட்சத்தை மட்டுமே செலவழித்துள்ளது என்பதை குஜராத் அரசாங்கமே தற்போது கூறுகிறது. கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் ஓரேவா நிறுவன முதலாளியோ நகராட்சி அதிகாரிகளோ யாருமில்லை.

பாலம் இடிந்ததற்கு முழுமுதற் காரணம் அந்த ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல்தான். இதைப் பற்றி மோடி வாய்கூடத் திறக்கவில்லை. இந்த விபத்து நடந்த அடுத்த நாளே பிரதமர் மோடி ஆறுதல் தெரிவிப்பதற்காக மோர்பி மருத்துவமனைக்குச் சென்றார். அவரது மனம் கோணாமல் இருப்பதற்காக மருத்துவமனைக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருந்தது.

படிக்க : ‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள், அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்! | புமாஇமு

ஏப்ரல் 2016-ல் கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்தபோது பேசிய பிரதமர் மோடி “தேர்தல் நேரத்தில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் மூலம் கடவுள் மக்களுக்கு சேதி அனுப்பியிருக்கிறார். இந்த பாலம் இடிந்து விழுந்ததை போல், மேற்குவங்கமும் நாளை இடிந்து விழும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்று பாலம் விபத்தின் மூலம் கடவுள் சேதி அனுப்பியிருக்கிறார்” என்று கூறினார். மேலும், “இது கடவுள் செயல் அல்ல; ஊழலின் விளைவு” என்றும் கூறினார். தற்போது மோர்பிநகர் பாலம் இடிந்து விழுந்துள்ளதற்கு இது பொருந்தாது போலும்!

குஜராத்தின் பாஜக அரசாங்கமும் மோடியும் அம்பலப்பட்டுப் போயுள்ளனர். குஜராத் மாடல் அழுகி நாறுகிறது என்பதை இந்த சம்பவம் நமக்குத் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது.

பொம்மி

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்புக்கு அடிப்படை உரிமை கொடுக்கக் கூடாது! | மருது வீடியோ

வம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் அனுமதி அளித்துள்ளது போலீசு. தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு ஒரு நெருக்கடியை கொடுக்கிறதா?

ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு பேரணி நடந்த உரிமை இருக்கிறதா என்று கேட்டால் உரிமை இல்லை என்று பொதுவாக கூறிவிடுவார்கள். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு, அந்த அமைப்பிற்கு அடிப்படை உரிமைகளை பற்றி பேசமுடியாது.

எனவே ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு அடிப்படை உரிமைகளை காரணம் காட்டி அவர்களுக்கு இந்த அனுமதி கொடுத்தது என்பதே முதல் தவறு.

இதை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி ; அம்பானி – அதானி பாசிசம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். இது தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங் பரிவார கும்பலுக்கு எங்கேயும் அடிப்படை உரிமைகள் கொடுக்கப்படக்கூடாது என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

துப்பாக்கியை எடுத்து கொண்டு அவர்கள் பேரணி நடத்துகிறார்கள். கத்தையை சுத்துக்கொண்டு பேரணி நடத்துகிறார்கள். இது ஒன்று போதும் இந்த கட்சியை – இந்த அமைப்பை – தடைசெய்வதற்கு!

தற்போது அண்ணாமலை, கோவை எரிவாயு உருளை வெடிப்பு பிரச்சினையில் போலீசு கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார், எதுவுமே செய்யமுடியவில்லை. பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் இன்றைக்கு தமிழ்நாட்டை மிரட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் வெற்றிப்பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்தும், சங் பரிவார கும்பலின் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள், அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்! | புமாஇமு

0

03.11.2022

‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள் மற்றும்
ஆசிரியர்கள் மீதான அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்!

கண்டன அறிக்கை !

‘தி வயர்’ இணையதளத்தின் ஆசிரியர்களின் வீடுகளில் டெல்லி போலீஸ் சோதனை நடத்தி லேப்டாப், மொபைல் போன் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளார்கள். பாஜக ஐடி விங் பொறுப்பாளர்  அமித் மாளவியா  கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இது நடந்துள்ளது.

பாஜக ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாளவியா பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவுடன் வைத்திருந்த தொடர்பு, அதில் அவர் பெற்றிருந்த சிறப்பு சலுகை பற்றியும் அதன் மூலம் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்துகளை நீக்கி வந்தது பற்றியும் தொடர் கட்டுரைகளை வெளியிட்டு வந்தது தி வயர் இணையதளம்.

இந்த நிலையில் தி வயர் இணையதளத்தின் கருத்துக்கள் தவறானது என மெட்டா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் பிறகு தி வயர் இணையதளம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது. மேலும் அது சம்பந்தப்பட்ட கட்டுரைகளை இணைய பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளது. தவறான செய்திகளை வழங்கிய தேவேஷ்குமார் என்ற தனது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் மீதும் புகார் கொடுத்திருந்தது.

படிக்க : மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை? | புமாஇமு பத்திரிகை செய்தி

இதை ஏற்றுக்கொள்ளாத அமித் மாளவியா டெல்லி போலீசுத்துறையில் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனை சட்டத்தின் 420 (மோசடி), 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்), 120பி (குற்ற சதி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் டெல்லி குற்றப் பிரிவு போலீசு, தி வயர் நிறுவனர் – ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், எம்.கே.வேணு, சித்தார்த் பாட்டியா மற்றும் துணை செய்தி ஆசிரியர் ஜான்வி சென் ஆகியோரின் வீடுகள் மற்றும் தி வயர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கையகப்படுத்தி சென்றுள்ளனர்.

தவறான செய்தி வெளியிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிறகும் தி வயர் இணையதளம் மீது பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வன்மம் அடங்கவில்லை. ஏனென்றால் தொடர்ச்சியாக மோடி அரசின் தோல்விகள் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பித்தலாட்டங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வரும் ஒரு இணையதளம் என்பதால்தான் இந்த நடவடிக்கை.

அன்றாட நிகழ்வுகளில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் பல்வேறு பொய் பித்தலாட்டங்களையும் பரப்பி அது எல்லாம் தவறு என தெரிந்தாலும் எந்த வகையிலும் அதற்காக பகிரங்க மன்னிப்பு கூறியதில்லை. தமிழகத்தில் தஞ்சாவூர் மைக்கேல் பட்டி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பி.ஜே.பி கும்பல் அது மதமாற்றத்தால்தான் தற்கொலை நிகழ்ந்தது என பல்வேறு பொய் செய்திகளையும் பரப்பினார்கள். அது தவறான செய்தி என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகும், ஏதாவது பகிரங்க மன்னிப்பு கேட்டார்களா? இன்று வரை இல்லை.

டெல்லி ஜே.என்.யு-வில் கன்னையாகுமார் போன்ற மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்டார்கள் என பொய் செய்தி பரப்பினார்கள்.

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் அதிகமான தொகுதிகளை வெற்றி பெறுவதற்காக இந்து முஸ்லிம் கலவரத்தை திட்டமிட்டு நடத்தினார்கள். அதுவும் போலி செய்தியின் அடிப்படையில்தான்.

இதுபோல, அடுக்கிக்கொண்டே போகலாம் அவ்வளவு கிரிமினல் பித்தலாட்டத்தனங்களை செய்துள்ளார்கள். இந்த பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பல். இதற்கெல்லாம் எங்கும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

ஏன் இவர்களின் முன்னோடி கோட்சே காந்தியை சுட்டுக்கொன்றுவிட்டுதான் ஒரு முஸ்லிம் என்பதை கையில் பச்சை குத்திக் கொண்டு பொய் பிரச்சாரத்தில் இறங்கினார்.

பொய் பித்தலாட்டம் கலவரத்தில் கட்சியை வளர்த்தவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

படிக்க : இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!

தி வயர் இணையதள சோதனையின்போது கைப்பற்றப்பட்ட லேப்டாப்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றில் கூட பல்வேறு கபடத்தனங்களை செய்து வயர் இணையதளத்தின் மீதும் ஆசிரியர்களின் மீதும் அடக்குமுறையை தீவிர படுத்துவார்கள்.

இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மக்களின் பிரச்சினைகளை பேசும் சமூக ஊடகங்களை ஒட்டுமொத்தமாக முடக்கும் வேலையை கூட துணிந்து இவர்கள் செய்வார்கள்.

இதைத்தான் இன்றைய ஆளும் வர்க்கமும் அரசு எந்திரமும் விரும்புகிறது. தங்களுடைய இந்துராஷ்டிர கனவுத் திட்டத்திற்கு  இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்களும் அதை எதிர்த்து பேசுபவரை ஒடுக்குவதும் அவசியமாக உள்ளதால் இன்னும் மூர்க்கமாக அடக்குமுறையை ஏவுவார்கள்.

ஜனநாயக பாசிச எதிர்ப்பு முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு தி வயர் இணையதளத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக களத்தில் இறங்குவோம். வதந்திகளையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை அம்பலப்படுத்தி தோலுரித்துக் காட்டுவோம்.

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 94448 36642.

நவ.13 : MASA குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! | பு.ஜ.தொ.மு தமிழகம் முழுவதும் பிரச்சாரம்

தொழிலாளி வர்க்கத்தின் மீது கார்ப்பரேட்டுகளும், அரசும் நடத்தி வருகின்ற தாக்குதல்கள், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களது வாழ்வாதாரத்தை பறிக்கும் அவலம் ஆகியவற்றை எதிர்த்து புரட்சிகர எழுச்சியின் தலைமை சக்தியாக திகழும் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதும், போராட்டங்களை கட்டியமைப்பதும் முக்கிய தேவையாக இருக்கிறது.

இதை இலக்காக வைத்து அகில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இயங்கி வருகின்ற 16 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் (Mazdoor Adhikar sankarsh Abhiyan – MASA) என்கிற கூட்டமைப்பு கட்டியமைக்கப்பட்டுள்ளது. பு.ஜ.தொ.மு, மாநில ஒருங்கிணைப்புக்குழுவும் இந்த கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக உள்ளது.

படிக்க : நவ.13 : நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி!

MASA சார்பில் எதிர்வரும் நவம்பர் 13 அன்று 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தை நோக்கி மாபெரும் தொழிலாளர் பேரணி நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்திலிருந்து புறப்படும் இந்த பேரணி கீழ்க்காணும் 7 கோரிக்கைகளை ஏந்திச் செல்கிறது.

This slideshow requires JavaScript.

1) தொழிலாளருக்கு எதிரான சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறு!

2) பொதுத்துறைகளையும் வளங்களையும் தனியார்மயமாக்குவதை நிறுத்திடு!

3) தொழிற்சங்க உரிமை,போராடும் உரிமை,வேலை நிறுத்த உரிமை ஆகியவற்றை நிபந்தனையற்ற, அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமை என அறிவித்து உத்திரவாதம் செய்!

4) காண்டிராக்ட், நீம், FTE உள்ளிட்ட அனைத்து வேலைமுறைகளையும் ஒழித்திடு.

60 வயது வரை நிரந்தர வேலை, பணி ஓய்வுக்குப் பின்னர் பென்சன் பெறும் உரிமை ,மகப்பேறு விடுப்புரிமை, அனைத்து வகை சமூகப் பாதுகாப்பு மற்றும் பணியிடப் பாதுகாப்பு ஆகியவற்றை உத்திரவாதப்படுத்து!

5) சம வேலைக்கு சம ஊதியம், நாள் ஒன்றுக்கு  குறைந்தபட்ச  ஊதியம் ரூ.1000/  வேலையின்மைக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.15000,  ஊரகப் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புரிமை, பணிப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, குடியிருப்பு, கல்வி, நலவாழ்வு ஆகியவற்றை உறுதிசெய்!

மேலும் அலைந்து திரியும் பணித்தன்மை கொண்ட ஜிக் ஊழியர்கள், அங்கன்வாடி, கிராம நலச் சேவகர்கள், சத்துணவு ஊழியர்கள், IT & ITES ஊழியர்கள், வீட்டு வேலைப்பணியாளர்கள் ஆகியோரை ” தொழிலாளர் ” என்கிற வரையறைக்குட்படுத்தி அனைத்து உரிமைகளையும் உத்திரவாதப்படுத்து!

6) உழைக்கும் மக்களிடையே வெறுப்பு, பிளவுப்படுத்தும் அரசியலை நிறுத்திடு!

7) பணவீக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்து

மேற்படி  கோரிக்கைகளை முன்வைத்து  MASA நாடு முழுவதும் மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் முன்னெடுத்து செல்கிறது. அதனடிப்படையில் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதி, ஆலை வாயில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
தொடர்பு எண் : 7397404242

அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!

0

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) தரவுகளின் படி, வடகிழக்கு இந்தியாவானது கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்தாவது ஆள் கடத்தலின் மையமாக விளங்கி வருகிறது. 2015-ல், இந்தியாவின் ஒட்டுமொத்த ஆள் கடத்தல் வழக்குகளில் அசாமின் பங்கு மட்டும் 22 சதவீதம். தற்போது வரை அசாமில் இந்த நிலைமையே நீடித்து வருகிறது.

ஆள் கடத்தல் அங்கு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கான காரணம் வேலைவாய்ப்பின்மையே. வேலைதேடும் இளம்பெண்களையும் இளைஞர்களையும் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றி, பாலியல் தொழிலிலும் வீட்டு வேலை மற்றும் கட்டுமான தொழில்களிலும் அடிமைகளாக ஈடுபடுத்துகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை அருணாச்சலப்பிரதேசம் பொருளாதார ரீதியாக மேம்பட்ட மாநிலமாக இருக்கிறது. அதனால் அங்கு வீட்டு வேலை மற்றும் கட்டுமானத் தொழிலுக்கான வேலையாட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இதன் காரணமாக அசாமிலிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்கு அதிகமான அளவில் ஆள் கடத்தல் நடைபெறுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளில் (2014-ல் இருந்து) பதிவு செய்யப்பட்டிருக்கும் அதிக அளவிலான ஆள் கடத்தல் வழக்குகள் உண்மையை பிரதிபலிக்கவில்லை. பெரும்பாலான வழக்குகள் ஆட்களை காணவில்லை என்ற அடிப்படையிலேயே பதிவு செய்யப்படுகிறது; ஆள் கடத்தல் என்ற பிரிவில் அல்ல. ஆனால், அவர்கள் நிரந்தரமாக காணாமல் போகிறார்கள் என்பதே கள யதார்த்தமாக உள்ளது.

படிக்க: ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

அசாமில் சக்மா (Chakma) என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் அருணாச்சலப்பிரதேசத்துக்கு கடத்தப்படுகிறார்கள்; குறிப்பாக அம்மாநிலத்தின் தலைநகரான இட்டாநகருக்கு (Itanagar) கடத்தப்படுகிறார்கள். சக்மா சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தலைவர்களைக் கேட்டபோது, ஏராளமான குழந்தைகள் கடத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சக்மா சமூக மக்களுக்கு அசாமில் குடியுரிமை இல்லாமல் இருப்பதாலும், அவர்கள் அங்கு மிகவும் பின்தங்கிய சமூகமாக இருப்பதாலும் பெரும்பாலான புகார்கள் பதிவு செய்யப்படுவதே இல்லை.

சமீபத்தில் பேசிய அருணாச்சலப்பிரதேச முதல்வர் பேமா காண்டு (Pema Khandu), தனது மாநிலத்தைச் சேர்ந்த சக்மா அகதிகளை இந்தியாவின் மற்ற பாகங்களுக்கு இடம் மாற்றுவது குறித்துப் பேசினார். இது அம்மக்களிடையே பெரிய கோபத்தை ஏற்படுத்தியது.

வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பெளத்த இனக்குழுவான சக்மாக்கள், சிட்டகாங் மலைப்பகுதிகளிலிருந்து திரிபுரா மற்றும் மிசோரம் வழியாக 1964-இல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கர்னாபுலி (Karnaphuli) ஆற்றின் மீது கப்தாய் அணையை (Kaptai Dam) அமைத்ததால் அவர்கள் இடம்பெயர்ந்தனர். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக இந்த சமூகம் அப்போதைய பாகிஸ்தான் அதிகாரிகளால் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது.

1964 ஆம் ஆண்டில், கப்தாய் அணை கட்டியதன் காரணமாக இடம்பெயர்ந்த சக்மா அகதிகள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது, இந்திய அரசாங்கம் அவர்களில் ஒரு குழுவை அப்போதைய வடகிழக்கு எல்லைப்புற முகமையின் (North East Frontier Agency – NEFA) திராப் பள்ளத்தாக்கில் (Tirap valley) குடியமர்த்தியது; அந்த NEFA-தான் இன்றைய அருணாச்சலப்பிரதேசம்.

1987 ஆம் ஆண்டில் அருணாச்சலப்பிரதேசம் மாநில அந்தஸ்தைப் பெற்றதிலிருந்தே உள்ளூர் பழங்குடிகளால் சக்மா மக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

1972-இல் இந்திய அரசாங்கம் சக்மா மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக முடிவெடுத்தது. உச்சநீதிமன்றமும் 2015-இல் அம்மக்களுக்கு குடிமக்களுக்கான உரிமைகளை வழங்குமாறு அம்மாநில அரசிற்கு உத்தரவிட்டது. ஆனால் அம்மாநில அரசோ அனைத்து உத்தரவுகளையும் குப்பைத் தொட்டியில் போட்டது.

இந்தியாவில் சக்மா மக்களுக்கு எந்த உரிமையும் இல்லாததால், கடத்தப்பட்ட சக்மா குழந்தைகளைப் பற்றிய எந்த ஆவணங்களும் போலீசுத்துறையிடம் இல்லை. சங்லாங் (Changlang), நம்சாய் (Namsai) மற்றும் பப்பும் பரே (Papum Pare) ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சக்மா குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

சாங்லாங் மாவட்டத்தின் தியான் வட்டத்தில் (Diyon Circle) உள்ள ஆரண்யப்பூர் (Aranyapur), உதய்பூர் (Udaipur), தர்மாபூர் (Dharmapur), முடோய் டுவீப் (Mudoi Dweep) மற்றும் தும்பனி (Dumpani) ஆகிய கிராமங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பமும் ஆள் கடத்தலுக்கு குழந்தைகளை இழந்துள்ளன. இந்தக் குழந்தைகளில் சிலர் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அடிமைத்தனம் மற்றும் மிருகத்தனமான துன்புறுத்தல்களிலிருந்து மீட்கப்பட்டாலும், பலர் காணாமல் போனவாரே உள்ளனர்.

படிக்க: ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !

சுமார் ஒரு ஆண்டிற்கு முன்பு, நம்பர் 2 ஜோதிபூர் கிராமத்தைச் (No. 2 Jyotipur village) சேர்ந்த 13 வயதான ரிது சக்மா (Ritu Chakma) நம்சாய்க்கு (Namsai) சென்றார். அவர் ஒரு நல்ல வாழ்க்கையைப் பெறுவார் என்று அவரது பெற்றோருக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஒரு அறியப்படாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண் குழந்தை, ஒவ்வொரு இரவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசு மற்றும் குழந்தைகள் நல மையத்தால் மீட்கப்பட்ட அவர் இப்போது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அந்தப் பெண் குழந்தையின் தந்தையான அருண் குமார் சக்மா, நிலமற்ற ஒரு கூலித் தொழிலாளி. அவருக்கு ஆறு குழந்தைகள் இருப்பதால் தினக்கூலியை மட்டும் வைத்து குடும்பம் நடத்த இயலவில்லை. தனக்குத் தெரிந்த ஒரு நபரின் மூலமே தன் மகளை நம்சாய்க்கு வேலைக்கு அனுப்பி இருக்கிறார். இப்படி நடக்கும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

குடியுரிமை இல்லாததால் அருண் குமார் சக்மாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ரேசன் கிடையாது; அரசின் மருத்துவக் காப்பீடு (Atal Amrit Abhiyan), பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் போன்ற எந்த திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ளவும் இயலாது.

சக்மா மக்கள் குடியிருக்கும் கிராமங்கள் இன்னும் மின்சார வசதியோ குடிநீர் வசதியோ கூட இல்லாமல்தான் இருக்கின்றன. அவர்களுக்கு ஓட்டுரிமையும் இல்லை. ஆரண்யப்பூர் கிராமத்தில் 200 வீடுகளுக்கு ஒரு கிணறு மட்டுமே உள்ளது. அங்குள்ள பெண்கள் தண்ணீருக்காக தினமும் ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் வரை நடக்க வேண்டி உள்ளது. 1994-இல் பரவிய மலேரியா கொள்ளை நோய், அப்பகுதி மக்களை சராசரியாக வீட்டிற்கு ஒருவர் என்ற அளவில் கொன்றொழித்தது. அரசாங்கம் அவர்கள்மீது எந்த அளவிற்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று.

குடியுரிமை இல்லாததாலும் இருப்பிடச் சான்றிதழ் இல்லாததாலும் சக்மா மக்கள், வேலை வாங்கித் தருவதாக கூறி ஆள் கடத்தலில் ஈடுபடும் கடத்தல்காரர்களை நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. அரசாங்கத்திற்கோ அவர்களைக் கண்டு கொள்ள நேரமும் இல்லை. அம்மக்களுக்கு வாக்குரிமையும் இல்லை. ‘ஜனநாயக’ இந்தியாவின் தனிச்சிறப்பிற்கு புறக்கணிக்கப்பட்ட சக்மா பழங்குடி மக்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!


பொம்மி