Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 208

அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்கு !! || மக்கள் அதிகாரம்

PP Letter headபத்திரிகைச் செய்தி

30.05.2021

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவமனை பணியாளர்களை நிரந்தரமாக்கு ! முன்கள பணியாளர்களாக அறிவித்திடு!

தமிழகத்தில் 48 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. மேலும் பல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் மருத்துவர், செவிலியர் தவிர மற்ற அனைவரையும் தனியார் மனிதவள முகமைகள் (Man Power Agency) மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆளெடுப்பு செய்யப்படுகிறது.

அதாவது மேனேஜர், சூப்ரவைசர், எலக்ட்ரிசியன், ப்ளம்பர், குக் அசிஸ்டென்ட், டோஃபி அசிஸ்டென்ட், தோட்ட வேலையாள், தச்சர், செக்யூரிட்டி, தூய்மை பணியாளர் என பல பணியாளர்கள் ஆளெடுக்கப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனமும், அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் ஸ்மித் என்ற தனியார் நிறுவனமும் இந்த பணியாளர்களை வேலைக்கு எடுத்துள்ளது.

படிக்க:
♦ கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!
♦ கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !

இதற்கு முன்னர் இந்தப் பணியாளர்கள் பத்மாவதி ஏஜென்சி என்ற நிறுவனத்திடம் வேலைசெய்தனர். இவ்வாறு கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்தத் பணியாளர்களாகவே இவர்கள் வேலை செய்துவருகின்றனர்.

ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ. 18000-க்கும் அதிகமான தொகையை அந்த தனியார் முகமைகளுக்கு அரசு கொடுத்து வருகிறது. ஆனால் பணியாளர்களுக்கோ,  ரூபாய் 5000 முதல் 6000 வரைதான் ஒப்பந்த கம்பெனியால் வழங்கப்படுகிறது. மேலும் தங்களின் கொள்ளைக்காக குறைவான ஆட்களை நியமித்து அதிக வேலைகளை வாங்கி கொள்ளை அடிக்கின்றனர்.

இந்த தொழிலாளர்களுக்கு மிகை நேர கூலி, விடுமுறை சம்பளம் போன்ற அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை சென்ற ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து பத்மாவதி மேன் பவர் ஏஜென்சியானது கிரிஸ்டல் ஏஜென்சிக்கு மாற்றிக்கொடுத்தது. அதே போல் 2017-ம் ஆண்டு கிரிஸ்டல் என்ற மேன் பவர் ஏஜென்சி, மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய பணியாளர்களை ஸ்மித் என்ற ஏஜென்சிக்கு கைமாற்றி கொடுத்தது. இந்த ஏஜென்சிகள் தங்களுக்குள் சுழற்சி முறையில் இவ்வாறு மாற்றி ஒப்பந்தம் போட்டுக்கொள்கின்றனர். தொழிலாளர்கள் மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களாக எப்போதும் நிரந்தரமாக இருக்கிறார்கள்.

மாதிரி படம்

தொழிலாளர்களை நிரந்தரமாக்க கூடாது என்பதற்காக இந்த ஏற்பாட்டை இந்த நிறுவனங்களும் அரசும் செய்கின்றன. இவ்வாறு தமிழகத்தில் 45,000 பேர் பணியாற்றுகின்றனர். ஸ்மித் என்ற நிறுவனம் தனது ஒப்பந்த பணியாளர்கள் சங்கம் வைக்க கூடாது என்று கையெழுத்து வாங்கிகொண்டுதான் வேலைக்கே எடுக்கிறது. பல ஆண்டுகளாக இவர்களுக்கு சம்பள உயர்வு என்பதே இல்லை.

கொரானா வந்த பிறகு இவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சுகாதாரத்தைப் பேணி பாதுகாத்து மருத்துவ மனைகளை பராமரித்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் நோய் தொற்றும் இடமாக இருந்தநிலையிலிருந்து சற்று தூய்மையாக இருக்கிறது என்றால் இதற்கு பின்னால் இவர்களின் கடும் உழைப்பு உள்ளது. இவர்களுக்கு பல அரசு மருத்துவமனைகளில் கவச உடைகள் கொடுக்கப்படுவதில்லை. இவர்கள் முன்களப்பணியாளர்களாக அரசால் அறிவிக்கப்படவும் இல்லை.

சமீபத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் ஊடகவியலாளர்களை முன்கள பணியாளராக அறிவித்து அவர்களுக்கு முன்களப்பணியாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இந்தப் பணியாளர்கள், ஊழியர்கள், காவலர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

தங்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து மருத்துவ காப்பீடு, கொரானா தொற்று ஏற்பட்டு இறந்தால் இழப்பீடு போன்ற சலுகைகளை தங்களுக்கும் தரவேண்டும் என்றும் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்றும் இந்த பணியாளர்கள், ஊழியர்கள் சமீப காலமாக போராடிவருகின்றனர்.

இவர்களுடைய போராட்டம் ஊடகங்களாலும் ஆளும்கட்சிகளாலும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இந்த பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அவர்கள் மட்டும் அல்ல, நாம் அனைவரும் போராடுவதே நமது சமூகக் கடமை. ஆகவே கீழ்கண்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் உடனே நிறைவேற்றித் தரும்படி மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது .

தமிழக அரசே !
♠ அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்திடு! அவர்களை பணிநிரந்தரம் செய்!
♠ அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசு மருத்துவ காப்பீடு வழங்கு!
♠ கொரானா கால ஊக்கத்தொகை வழங்கு!

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

பாலஸ்தீனம் : ஷேக் ஜர்ராவில் அரங்கேறும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு !

ஸ்ரேலியர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் கிழக்கு ஜெருசலேமில்’ ஒரு மூன்றடுக்கு கட்டிடத்தின் கூரையிலிருந்து நீண்டிருந்த குழாயில் இஸ்ரேலின் கொடிகள்.தனது அதிகாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக, மிதமான தென்றலிலும் அது அசைவது அச்சமூட்டும் விதமாக இருந்தது.

அதிகார எல்லையை குறிப்பதற்காகவே இஸ்ரேலியர்கள் கொடிகளை பறக்கவிட்டு பாலஸ்தீனியர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டிருந்தனர்.அந்த வீட்டின் முன்புறம் பெரிய எழுத்துகளில் ஆனால் கிறுக்கலான ஹீப்ரு மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. தங்களது எல்லைக்குள் மகன்கள் திரும்ப வருகிறார்கள்
இது பைபிள் வாசகம். மதத்திற்கான ஒரு கூட்டத்தின் குரல். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் பாலஸ்தீனத்தை தங்களுடைய புனித உரிமையாக பார்க்கிறார்கள்.

காம் அல்ஜவொனி பகுதியிலிருக்கும் 500 பாலஸ்தீனியர்களுக்கு இந்த வீடு ஒரு பயங்கரமான கடந்த காலத்தையும், எதிர்நோக்கியிருக்கும் இருண்ட எதிர்காலத்தையும் காட்டும் நினைவுசின்னமாக நிலைத்திருக்கிறது.

படிக்க:
♦ மதுரை : கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை
♦ கொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்

மூன்று தலைமுறைகளாக ஹாவி வசித்து வரும் வீட்டில் இப்போது குடியேறிய இஸ்ரேலியர்கள் அவர்கள் இருக்கக் கூடாது என தடுக்கிறார்கள் என்றால், இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கும் உண்மைகளுக்கு ஒரு அத்தாட்சியாகும்.

எட்டு குடும்பங்களை சேர்ந்த 28 சிறுவர்கள் உட்பட மொத்தம் 78 பேர், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் வசித்துவருகிறார்கள். இப்போது அவர்களது வீடு மற்றும் சொத்துக்களை, பறித்து கொண்டு விரட்டியடிக்கப் போவதாக மிரட்டி வருகிறார்கள், அங்கு குடியேறியவர்கள்.

அதில் நான்கு குடும்பங்கள், இந்த மாத ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். அந்த பகுதியில் நடந்த மரணத்தை ஒட்டி இஸ்ரேலிய உயர்நீதிமன்றம் வெளியேற்றுவதை தள்ளிபோட்டிருக்கிறது.

பாலஸ்தீன பகுதிகளில் “குடியேறியவர்களின் (இஸ்ரேலியர்கள்) அமைப்பு” அந்த பகுதியில் வாழ்ந்து வரும் ‘பதினைந்து குடும்பங்களின் உரிமையை ரத்து செய்து அவர்கள் இப்போது இருக்கின்ற வீடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த குடும்பங்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி தெரியும். ஆனால் ஒரு ஐம்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேற்றினால் எங்கே போவது? என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனக் கொடியுடன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்த இடத்தின் முன் போராடும் பாலஸ்தீனியர்

யூதர்களின் ஆதிக்கத்தை யூதர்கள் அல்லாதவர்களிடம் உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களை கொண்டு இயங்கும் நீதிமன்றங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வழக்குகளை இரக்கமறற முறையில் விசாரிக்கும் நடைமுறைகளை கொண்டது. அதிகாரமில்லாத பாலஸ்தீனிய அரசியல் தலைவர்கள், கண்முன்னே நடக்கும் அநியாயங்களை அறிந்தும் உலகநாடுகளின் அக்கறையில்லாத்தன்மை கடைசியில் ஏதோ ஒன்று முறிவதை பார்த்ததாக தெரிகிறது.

அந்த பகுதியை சேர்ந்த மற்றும் ஜெருசலேத்தில் மீதி இருக்கக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக தினமும் ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிழக்கு ஜெருசலேத்திலும் சமீப நாட்களில் மற்றும் வாரங்களில் இந்த எதிர்ப்பு பரவிவருகிறது.

அவர்கள் ஆயுதமேந்திய இஸ்ரேலிய போலீசு மற்றும் துருப்புகளின் மிருகத்தனமான தாக்குதலை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கறிஞர்கள் மற்றும் வீர்ர்கள் ஆகியோரால் கைவிடப்பட்டு சோர்ந்த மனநிலையில் இருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் தெளிவான கோபத்தை அடக்குவதில் இதுவரை தோல்விதான் கிடைத்துள்ளது.

ஜெருசலத்தில் 1967-ல் கிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்ததைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இஸ்ரேலியர்களின் வெற்றி ஊர்வலத்தின் பாதையை பாலஸ்தீனியர்களின் போராட்டம் காரணமாக இஸ்ரேலிய அதிகாரிகளே மாற்ற வேண்டியதாயிற்று. உண்மையில் இதன் மூலம் போராட்டக்கார்ர்கள் தீர்மானகரமாக தங்களை நிருபித்துள்ளார்கள்

.தினமும் முகத்திலறைவதை போல பெரிய ஹீப்ரு எழுத்துகளால் எழுதப்பட்டுள்ள தங்களது அண்மைய வரலாறை இங்கே இருக்கும் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்

2009-ல் ஹாவிஸ் ஹானொன் குடும்பத்தினரோடு (மொத்தமாக 55 பேர்) வலுக்கட்டாயமாக அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு உடமையான பொருள்கள் அனைத்தும் திறந்தவெளி மைதானத்தில் வீசியெறியப்பட்டன. பக்கத்திலிருக்கும் குடியிருப்புவாசிகளிடம் அந்த நினைவுகள் பசுமையாக பதிந்து இருக்கின்றன. ”இஸ்ரேலிய படைகள் வீட்டுக்கதவை தகர்த்து சிறுவர்களை அநியாயமாக தெருவில் வீசி எறிந்தனர்” என்று எலெக்ட்ரானிக் இன்டிஃபடாவிடம் ரஷா புடெரி என்பவர் கூறினார்..

ரஷாவின் குடும்பவீடு ஹாவி வீட்டைத் தாண்டி அமைந்துள்ளது. அங்குதான் அவளது பெற்றோர்கள் சமீரா தஜானி மற்றும் அடெல் புடெரி வாழ்கிறார்கள். குடும்ப வீட்டிலிருந்து ஆகஸ்ட் 2-ம் தேதி அவர்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.

ரஷா அந்த வீட்டில் வாழுகின்ற மூன்றாம் தலைமுறை உறுப்பினர்

தஜானி யின் முன்னோர்கள் அவர்களது ஜெருசலேம் பகுதி கிராமமான பாகா வை விட்டு 1948ல் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபின் இந்த பகுதிக்கு வந்து தற்சமயம் வாழும் வீட்டில் வசிக்க துவங்கினார்கள்.

தங்களை அகதிகளாக பதிவு செய்து கொண்டனர் ஆனால் அகதிகள் முகாமை தவிர்த்துவிட்டு முதலில் தங்களது உறவினர்களுடன் சிரியாவிலும் அதன்பிறகு ஜோர்டானிலும் கிழக்கு ஜெருசலேமுக்கு 1949-ல் திரும்ப வரும் வரை இருந்தனர்.

தங்களது மீதி காலத்தை கிழக்கு ஜெருசலேத்தில் வாழ்ந்தனர். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்து அங்கேதான் வளர்ந்தனர்.

அந்த பகுதியிலிருக்கும் மற்ற குடும்பங்களை போலவே அவர்களது குழந்தைகளும் மீண்டும் வீடற்றவர்களாக ஆகப்போகிறார்கள்.எங்களுக்கு ரொம்ப காலத்திற்கு முன்னாடியே இப்படித்தான் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்திருந்தோம்” என்கிறார் ரஷா.

போலீசுடன் வாக்குவாதம் செய்யும் போராட்டக்காரர்கள்

அங்கே வளர்ந்தபோது அவர்களது அருகாமை வீடுகளில்குடியேறிகளாக வந்தவர்கள் கண்களில் எப்போதும் இப்படியான ஒருபார்வையை பார்க்கலாம். .அந்த வீட்டை எந்த காரணகாரியமும் இன்றி சுற்றி வந்து முறைத்து பார்த்துக் கொண்டிருப்பார்கள் .ரகசியமாக முக்கியமான விசயம்போல ஒருவருக்கொருவர் பேசிக்கோள்வார்கள். சிலபேர் எங்களது வீட்டின் மீது கல்லெறிவதும் உண்டு.எங்களது அம்மா மற்றும் உறவினர்கள் எக்காரணத்தை கொண்டும் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிடாதீர்கள் என எச்சரித்துக் கொண்டேயிருந்தனர். என கொடுமையான நாட்களை நினைவு கூர்கிறார் ரஷா.

அங்கிருந்த எங்களது வீடுகள்ஐநா சபையின் பாலஸ்தீனிய அகதிகளுக்கான அமைப்பான UNRWA மற்றும் ஜோர்டான அரசின் கூட்டு முயற்சியால் 1956 –ல்’ கட்டப்பட்டன.

1948-ல் பாலஸ்தீன இனத்தையே துடைத்தெறிதலை நோக்கமாக கொண்ட நிகழ்வானநக்பா’வுக்கு பிறகு அங்கிருந்து வெளியேறியவர்களுக்காக 28 குடியிருப்பு வாரியங்கள் கட்டப்ட்டன.

அந்த வீடுகளுக்கு பிரதிபலனாக தங்களது அகதிகள் தகுதியை 28 குடும்பங்கள் விட்டுத்தந்தன. 1948-ல் இஸ்ரேல் அப்போது உருவாகியிருக்கவில்லை என்றாலும் பாலஸ்தினியர்கள் இப்போது இருக்கக்கூடிய நிலம் மற்றும சொத்துகள் ஆகியவை முன்னர் யூத குடும்பங்களுக்கு சொந்தமான இடங்கள் என குற்றம் சாட்டப்பட்டு வழக்குகள் இப்போது போடப்பட்டுள்ளன.

யூதர்கள்எங்களது சொத்துக்களக்கு உரிமை கொண்டாடுகின்றனர்’ என்றால் அதற்கான சட்ட அடிப்படைகள்குறிப்பாக இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டதே காரணம். இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களின் சொத்துக்களை தங்களின் பொறுப்புக்கு மாற்றிக்கொள்ள என்று போடப்பட்ட தனிச்சிறப்பு சட்டமாகும்

இதன் மூலம் உரிமை பாராட்டும் யூதர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதும் அதேசமயம் பாலஸ்தினியர்களுக்கு அதே உதவியை மறுப்பதும் இஸ்ரேலின் சட்டத்தில் புனிதமாக பாதுகாக்கப்படுகிறது..

இஸ்ரேல் உருவாக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 1950ல்இல்லாதவர்கள் சொத்துரிமை சட்டம்என்ற ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவந்தனர். பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக பக்கத்து நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நோக்கத்திற்கான வரைவு திட்டமாகும். அதன் மூலம் அவர்களைஇல்லாதவர்களாகஅறிவித்து அவர்களது சொத்துக்களை இஸ்ரேல் அரசு தனது சட்ட வரம்புக்குள் கொண்டுவந்து வைத்துக்கொண்டது.

வேறு நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த யூதர்களுக்கு அந்த வீடுகள் உடைமையாக்கப்பட்டன. யூதர்கள் எங்கு பிறந்திருந்த போதிலும்இஸ்ரேலுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு அன்றிலிருந்து இன்றுவரை இஸ்ரேலுக்குள் திரும்ப வருவதற்கே உரிமை மறுக்கப்பட்டது.

1967-ல் கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் ஆக்ரமித்த்து.அதை அடுத்து 1970-ல் சட்டம் மற்றும் நிர்வாக விசயங்கள் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்த்து. ஜோர்டான் கட்டுப்பாட்டில் 1948-லிருந்து வந்த சொத்துக்களை இஸ்ரேலிய யூதர்களுக்கு உரிமை கொண்டாட அனுமதித்தது. இந்த உரிமைகள் எதுவும் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஷெய்க் ஜார்ராவில் கார்ம் அல்ஜௌனி நிலங்களின் பராமரிப்பு கொஞ்ச காலத்திற்கு இஸ்ரேல் அரசாங்கத்தின் காப்பாளர் ஜெனரல் பொறுப்பிலிருந்த்து. அதன் பிறகு இரண்டு கமிட்டிகளிடம்ஷெபார்டிக் சமூகக் குழு, க்நிஸெட் இஸ்ரேல்ஆகியவற்றிடம் கைமாற்றி விடப்பட்டது.

அனைத்து 28 பாலஸ்தீனிய குடும்பங்களுக்கு எதிராக முதலில் வழக்குகள் போடப்பட்டபோது. 1970-களில் சட்ட நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தன. 2008 வரை ஒன்றுமில்லை, அதற்கு பிறகு அமெரிக்காவை பூர்விகமாக கொண்டநஹாலாட் சிமோன் இன்டர்நேஷனல்’ என்ற குடியேறிகளின் குழு அந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமைகளை வாங்கியதும், முதல் குடும்பம் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு சொந்தமான இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.

நஹாலாட் சிமோன் கார்ம் அல்ஜௌனி பகுதியிலுள்ள நிலங்களிலிருந்து அனைத்து பாலஸ்தீனியர்களையும் விரட்டுவதையே தனது பிரதான நோக்கமாக வைத்திருக்கிறது.அடுத்து தற்போதுள்ள வீடுகளை இடித்து தள்ளிவிட்டு புதிதாக குடியேறிவர்களுக்கான திட்டம் ஒன்றைசிமோன் ஹாட்சாதிக்என்ற பெயரில் 200 குடியிருப்புகளை கட்டுவதற்காக தயாரித்திருக்கிறது.

2009-ல் கர்ட் குடும்பம் வசித்து வந்த அவர்களது சொந்த வீட்டின் பாதியை இஸ்ரேல குடியேறிகள் ஆக்கிரமித்து கொண்டனர். இரண்டு அந்நிய குடும்பங்களின் தினசரி நிகழ்வுகள், கோபதாபங்கள் அவர்களது அந்தரங்கங்கள் அனைத்தையும் நடுவில் ஒரு பெட்ஷீட் மட்டுமே பிரித்தது. இதிலிருந்து அவர்களது வாழ்க்கையின் கோரத்தன்மையை உணரலாம்.

இதை என்றைக்கும் நிறுத்த மாட்டார்கள். மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவு தொல்லைகள், கேட்கக் கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்துதல் தங்களது நாயை பழக்கி நம்மை பார்த்தவுடன் குரைக்கவைத்து பயமுறுத்துவது, தேவையில்லாமல் போலீசை கூப்பிட்டுவைத்து நம்மை பற்றி ஏதாவது பொய் புகார் சொல்வது அல்லது நமது இடத்தில் அவர்கள் பார்ட்டிகளை நடத்தி, வேண்டுமென்றே இடைஞ்சல் கொடுப்பது எல்லாத்துக்கும் மேலே ஆளில்லாத நமது வீட்டுக்குள் அந்த குடியேறிகள் உட்கார்ந்து அரட்டை அடிப்பதை வீட்டுக்கு வரும் நாம் பார்க்கும் போது என்ன உணர்வு ஏற்படும்?என்று எலக்ட்ரானிக் இன்டிபாடா வுக்கு அளித்த பேட்டியில் மொஹமது எல்கர்ட் மனவேதனையுடன் சொல்கிறார்..

தங்களது சொந்த வீட்டில் வசிக்கும் உரிமைக்காக 1972-லிருந்து இஸ்ரேலிய நீதிமன்றங்களில் கர்ட் மற்றும் அவரைப் போன்றவர்கள் போராடி வருகிறார்கள்.

மொஹமது எல்கர்ட் டின் பாட்டி தனது 103 வயதில் இறக்கும்போது கூடநிச்சயமாக நமக்கு உரிமையான இந்த வீட்டில் நாம் நிலையாக வசிக்கும் காலம் வரும்என்ற நம்பிக்கை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு எனது பாட்டி உயிருடன் இருந்திருந்தால் இது அவருக்கு நான்காவது வலுக்கட்டாயமான இடமாறுதலாக இருக்கும். அல்ஹக் ஒரு சட்டஉரிமைக்கான குழு மற்றும் நிறைய பாலஸ்தீனிய அமைப்புகள் #SaveSheikJarrahக்காக சமூக ஊடகங்கள் மூலமான பேச்சரங்கம் ஏப்ரல் 14-ல் நடைபெற்றது. அதில்.எல்கர்ட் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார். ஆனால் அதன்மூலம் நம்பிக்கையான செய்திகள் வெளிவரவில்லை.

பிப்ரவரி 15-ல் ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் கொடுத்திருக்கும் ஒரு வழிகாட்டல்படி நான்கு குடும்பங்களின் அதிலிருக்கும் மொத்தம் முப்பது பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன..வீட்டை விட்டு அவர்கள் அனைவரும் மே 2 ந்தேதிக்குள் வெளியேற வேண்டுமென நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

வீட்டைவிட்டு வெளியேறுவது மட்டுமல்ல தாமதபடுத்திய இந்த இடைவெளி காலத்துக்காக அந்த குடும்பங்கள் சட்ட செலவுக்களுக்கான கட்டணமாக ஒவ்வொருவரும் 21000 டாலர்களுக்கும் மேலாக நகாலாட் ஷிமோனுக்கு கொடுக்க வேண்டியிருக்கும்.

25 பேர் கொண்ட மூன்று வேறு குடும்பங்களும் ஆகஸ்ட் மாதம் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவதை எதிர்நோக்கியிருக்கிறார்கள். அவர்களும் ஒரு குடும்பத்திற்கு 9000 டாலர் வீதம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ரஷா பதெரி குடும்பம் அவற்றில் ஒன்று.

உயிர்வாழும் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக எங்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு எங்கே தூங்குவது என்பது தான் பிரதான கவலையாக இருக்கிறது.இங்கே ஒருவருக்கும் வாழ வழி இல்லை” என்கிறார் ரஷா.

வேறு போக்கிடம் எதுவுமில்லை

கிழக்கு ஜெருசலம் முழுதும் யுத மயமாக்குவதுஇந்த ஒற்றைக் குறிக்கோளை நிறைவேற்றிட தோதாக நகரத்திலிருந்து பாலஸ்தீனியர்களை விரட்டியடிக்க தீவிர வலதுசாரி அமைப்புகளால் பணம் கொடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட கும்பல்களுடன் நடக்கும் ஒரு பரந்த போர்களத்தின் முன்னணி களமாக ஷேக் ஜாரா இருக்கிறது.

ஜெருசலத்தை அடித்தளமாக கொண்ட அல்க்யுட்ஸ் அமைப்பை சேர்ந்த .ஃபயருஸ் சார்கவியின் வாதப்படி1967 லிருந்து இஸ்ரேலின் நோக்கம் பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையை ஜெருசலத்தின் பொதுமக்கள் தொகையில் 40 சதத்திற்கு கீழே கொண்டு வந்து விடவேண்டும்என்பதுதான்.

இஸ்ரேலின்மாஸ்டர்பிளான் 2000”-ல் இது குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளது. நகரத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்குள் வேறுபாடு காட்டாத நகர அளவிலான நகர்புற மற்றும் மண்டலதிட்டம்.

மக்கள்தொகையில் ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வருவதற்காக இடமாறுதல் பற்றிய வேறுபட்ட கொள்கைகளை திட்டமிட்டு அவற்றை ஜெருசலத்தில் அமுல்படுத்தினர்என்று சார்கவி எலக்ட்ரானிக் இன்டிபாடா வுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். (Al-Quds – that is the Arabic name of the city of Jerusalem.)

க்ராஸ்ருட்ஸ் அல்குட்ஸ்” என்ற அமைப்பு ஜெருசலத்தில் இயங்கும் பல்வேறு குழுக்களை ஒன்றுபடுத்துவதைபாலஸ்தீனிய இனம் இங்கே வாழஉரிமை வேண்டும்என்பதற்கான ஒரு செயல்முறையாக வகுத்து செயல்படுகிறது. .2011 ல் இந்த அமைப்பு துவங்கப்பட்டதிலிருந்துகிழக்கு ஜெருசலத்தில் பாலஸ்தீன இனத்தில் இருக்கும் பிரிவுகள் பற்றிஆராய்ச்சி செய்து வருகிறது.

இஸ்ரேலிய நீதித்துறை குடியேறியவர்களின் அமைப்புகள் மற்றும் இஸரேலிய ஆக்ரமிப்பு சக்திகள் ஆகியவற்றுக்கிடையே தெளிவான வலைப்பின்னல் கூட்டு செயல்பாடு இருப்பதாக சார்கவி குறிப்பிடுகிறார். இம்மாதிரியான கூட்டு செயல்பாடு தான் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அமைப்புரீதியான பாகுபாட்டை எளிதாக அமுல்படுத்த உதவுகிறது.

வழக்குகள் கோர்ட்டுகள் வழியாக செல்வதற்கான வழியை துடைத்தெறியும் போது குடியேறியவர்களின் இருப்பு மற்றும் அதே போன்று போலீசு துறையில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வருவதும் அங்கு இருக்கும் பூர்வகுடிகளை நிலையான பயத்திலேயே இருத்திவைக்கிறது.

அவர்களிடம் கேமராக்கள் இருக்கின்றன. அதைக்கொண்டு ஏதோ குற்றவாளிகளை கண்காணிப்பது போல நமது எல்லா நகர்வுகளையும் அசைவுகளையும் படம் பிடிக்கிறார்கள். அந்த பகுதியை சேர்ந்திராத குடியேறிகள் கூட பக்கத்து வீடுகளுக்கு வருவது போல வருகின்றனர். அவர்கள் அனைவரது கைகளிலும் ஆயுதங்கள் இருக்கும். அவர்கள் எப்போதும் நாங்கள் ஏதோ தவறு செய்து விட்டதை போல போலீசை கூப்பிட்டு எங்களை மிரட்டுவார்கள்”. ஆரிப் ஹம்மத் 70 வயது பெரியவர் எலக்ட்ரானிக் இன்டிபாடாவிடம் புலம்புகிறார்.

ஹம்மத் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஷேய்க் ஜாரா விலுள்ள காம் அல்ஜவொனி பகுதியில்.அவரது குடும்பம் 1948-ல் ஹைஃபாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபின் இங்கு வந்து வசித்து வருகிறார்கள். எட்டு உறவினர்களுடன் வாழும் அவருக்கு பேத்தி பிறந்து 18 மாதங்களே ஆகின்றன. என்றாலும் வீட்டிலிருந்து வெளியேற்றபடும் ஆகஸ்ட் மாதத்தை எதிர்நோக்கியிருக்கிறார். ”இங்கே நம்மை சுற்றி அபாயங்கள் அழுத்தங்கள் சூழ்நிலைகள் மனஅழுத்தத்தை கொண்டு வந்து விடும்.என்றாலும் நான் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லைஹம்மத் கூறுகிறார்.

வரைமுறையில்லாமல் நீண்டகாலத்திற்கு இழுத்துச்செல்லப்படும் வழக்குகள் அதன் நடைமுறையால் ஒரு மாயையை ஏற்படுத்திவிடுகின்றனஎன்கிறார் க்ராஸ்ருட்ஸ் அல்கட்ஸ் அமைப்பைச் சேர்ந்த சார்க்வி.

நியாயமான சண்டை அல்ல :

அவர்கள் மத்தியில்குடியேறிகள்கெட்டவர்கள் என்றும்மற்றவர்கள் நல்லவர்கள்என்ற உணர்வு எப்போதும் இருக்கிறது. குறைந்தபட்சம் சட்டம் ஒழுங்கு இருக்கிறது. ஆம், சட்டம் இருக்கிறது. ஆனால் அது இனவெறி கொண்டதாக இருக்கிறதுஅவரே சொல்கிறார்.

இதை காட்டாமல் இருப்பதில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இங்கே அரசு இருக்கிறது சட்டம் இருக்கிறது சட்டம் ஒழுங்கு இருக்கிறது மற்றும் இங்கே சட்ட உதவிபெறாதவர்கள் நாடுகடத்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவரே தொடர்ந்துஇல்லை எல்லாமே இனவெறி பிடித்திருப்பவை. இந்த சட்டமியற்றும் கிளைகள் அதன் அமுலாக்கம் இங்கு இருக்கின்ற அத்தனையும் எல்லாமே

எல்லா ஏழு குடும்பங்களும் தாங்கள் வெளியேற்றபடுவதை நிறுத்தக்கோரி எந்த நீதிமன்றத்திலும் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக மெல்லியதாக இருக்கின்றன, என்கிறார் அஸீல் அலபாஜெ அல் கட்க் கின் ஒரு சட்ட ஆலோசகர்.

படிக்க:
♦ இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?
♦ போராட்டத்தில் ஓய்வறியா பாலஸ்தீனம் – படக்கட்டுரை

கிழக்கு ஜெருசலமில் இருக்கும் அனைத்து குடும்பங்களின் அனுபவம் உணர்த்துவது ஒரு மாஜிஸ்ட்ரெட் கோர்ட்டிலிருந்து வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டால் நீங்கள் வலுலுக்கட்டாயமாக வெளியேற்றபடுமுன் இது ஒரு காலபகுதி யாகும் என்பதை குறிக்கிறதுஎன்கிறார் அல்பஜே

சர்வதேச கவனத்தை கவருவதற்காக சமூக ஊடகங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது சளைக்காமல் வழக்காடுவது ஆகியவற்றில் அங்கிருக்கும் பாலஸ்தீனியர்களும் அவரகளுக்கான செயற்பாட்டாளர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஷேய்க் ஜாரா வில் வசிப்பவர்கள் 191 பாலஸ்தீனியர்கள் உட்பட 500 பேர் இஸ்ரேலி மற்றும் சர்வதேச உரிமைகள் அமைப்பு ஆகியவை ஏப்ரல் 22 அன்று சர்வதேச குற்ற நீதிமன்றத்திடம் (ICC) ஒரு முறையீடு செய்துள்ளனர்.

(ICC) சர்வதேச நீதிமன்றம் ஏற்கனவே பாலஸ்தீனத்தில் இழைக்கப்பட்ட போர்குற்றங்களை பற்றிய விசாரணையை செய்துகொண்டிருக்கிறது. அதனுடன் கிழக்கு ஜெருசலமில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் பாலஸ்தீனியர்களின் நிலைமை குறித்தும் அந்த விசாரணையில் சேர்க்ககுமாறு கோரியுள்ளனர்.

அதேசமயம் அங்கே குடியிருப்பவரகள் தங்கள் முன்னால் காத்திருக்கும் போராட்டங்களுக்கும் தாங்களே முன்னின்று வழிநடத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குழந்தையாக, இங்கே குடியேறியவர்களின் நடவடிக்கைகள் எவ்வளவு கொடூரமானவை என பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இது ஒரு சொத்து இழப்பு என்ற அளவில் தொடங்கி முடிவதல்ல. மனரீதியான தொல்லைகள், பொருளாதாரம் வறண்டு போதல் ஆகியவைகளையும் உள்ளடக்கியது. இது ஒரு வெறும் சட்டப் போராட்டம் மட்டும் அல்ல. அரசியல் போராட்டம்என்கிறார் மொகமது எல்கர்ட் ..

கட்டுரையாளர் : கெல்லி குன்ஸ்ல், அமெரிக்க சுயாதின பத்திரிக்கையாளர்
தமிழாக்கம் : மணிவேல்
நன்றி : ElectronicIntifada

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!

கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் கொடிய கொரோனா பெருந்தொற்றை ஆற்றலுடன் தடுக்கத் தவறி வரலாற்றில் தமது பெயரை அழிக்க முடியாத வகையில் இந்தத் தலைவர்கள் பதிய வைத்து விட்டனர். சிலர் உண்மையில் மக்களைக் காக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கோவிட்-19ஐக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். தொற்று நோய் மேலாண்மை என்று வரும்போது அதைக் கட்டுப்படுத்தும் பொறுப்புள்ளவர்கள் என்பதாக ஆட்சியில் உள்ள அரசியல் தலைவர்களின் பங்குள்ளது. ஆனால் சில தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள் தங்கள் நாட்டில் பெருந்தொற்று பாதிப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கு வெகு குறைவான முயற்சிகளையே எடுத்துள்ளனர். அது தொற்றுநோயின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவதன் மூலமோ, அறிவியலை புறக்கணிப்பதன் மூலமோ அல்லது சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் போன்ற முக்கியமான சுகாதார தலையீடுகளை புறக்கணிப்பதன் மூலமோ தொற்று பரவ காரணமாக இருந்துள்ளனர். இந்த பட்டியலில் உள்ள அனைத்து தலைவர்களும் இந்த தவறுகளில் ஒன்றையாவது செய்தனர். சிலர் அனைத்து தவறுகளையும் செய்தனர், அவற்றின் கொடிய விளைவுகளுடன்.

***

படிக்க :
♦ இந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக !
♦ மாதவிடாயும்  சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா

இந்தியாவின் நரேந்திர மோடி :
ஸ்மித் கங்குலி, இண்டியானா பல்கலைக் கழகம்

உலகளாவிய தொற்று நோயின் புதிய மையமாக இந்தியா உள்ளது. மே 2021 க்குள் நாளொன்றுக்கு சுமார் 400,000க்கும் மேலானவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்படும். புள்ளி விவரங்கள் எவ்வளவு தான் மோசமானதாக இருந்தாலும், இந்த புள்ளி விவரம் நாட்டில் நிலவுகின்ற கொடூரமான பயங்கரத்தை வெளிப்படுத்த இயலாது. கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் இறந்து கொண்டிருக்கின்றனர், ஏனெனில் மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன் இல்லை மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. நோயாளிகள் அளவுக்கு அதிகமாக நிரம்பி வழிவதால் புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கைகள் இன்றி மருத்துவமனைகளில் இருந்து திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

நாட்டின் இந்தப் பெருந்துயருக்கு காரணம் என மக்கள் ஒரே ஒரு நபரை சுட்டிக் காட்டுகின்றனர். அது பிரதமர் நரேந்திர மோடி.

ஜனவரி 2021-ல், மோடி ஒரு உலகளாவிய மன்றத்தில் “இந்தியா மனிதகுலத்தை காப்பாற்றியதுகொரோனாவை திறம்பட கட்டுப்படுத்துவதன் மூலம்என்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டார். மார்ச் மாதம், அவரது சுகாதார அமைச்சர் தொற்றுநோய் ஒரு ”முடிவுக்கு” வந்து விட்டதாக படாடோபமாக அறிவித்தார். அச்சமயம் கோவிட்-19 உண்மையில் இந்தியாவிலும் உலகெங்கிலும் வலுப்பெற்று வந்தது ஆனால் அவரது அரசாங்கம் ஒரு கொடிய மற்றும் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் தொற்றும் கோவிட்-19 மாறுபட்ட வடிவத்தை அடைந்து விட்டது பற்றி எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தாத நிலையில், மோடியும் அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களும் ஏப்ரல் தேர்தலுக்கு முன்னர் நெரிசல் நிறைந்த வெளிப்புற பிரச்சார பேரணிகளை நடத்தினர். வெகு சில பங்கேற்பாளர்கள் மட்டுமே முககவசங்களை அணிந்திருந்தனர். ஜனவரி முதல் மார்ச் வரை லட்சக் கணக்கானவர்களை ஈர்க்கும் ஒரு (இந்து) மத விழாவையும் மோடி அனுமதித்தார். பொது சுகாதார அதிகாரிகள் இப்போது இந்த விழா ஒரு மிகப்பெரிய அளவு நோய்த் தொற்றைப் பரப்பும் (சூப்பர்ஸ்ப்ரெட்டர்) நிகழ்வு என்றும் ஒரு மகத்தான தவறுஎன்றும் நம்புகிறார்கள்.

கடந்த ஆண்டு மோடி இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் என தற்பெருமையடித்துக் கொண்ட போது, இந்தியா ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகளை அண்டை நாடுகளுக்கு அனுப்பியது. இருப்பினும் இந்தியாவின் 130 கோடி மக்களில் வெறும் 1.9% பேருக்கு மட்டுமே மே மாத தொடக்கத்தில் கோவிட்-19 க்கு எதிரான முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் ஆகப் பெரும்பான்மையினருக்கு 2-ம் கட்ட தடுப்பூசி போட தடுப்பூசிகள் இல்லை.

***

பிரேசிலின் ஜைர் போல்சோனாரோ :
எலிஸ் மசார்ட் டா ஃபொன்ஸெகா, Fundação கெடுலியோ வர்காஸ் மற்றும் ஸ்காட் எல். கிரீர், மிச்சிகன் பல்கலைக்கழகம்

பிரேசில் ஜனாதிபதி ஜைர் போல்சோனாரோ கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது ஒரு சிறிய காய்ச்சல்என்று அவர் ஏளனம் செய்தார் அவர் பிரேசிலில் நோயின் பாதிப்புகளை மேலும் தீவிரமாக மோசமடையச் செய்தார்.

மருத்துவ நெறிமுறைகள், புள்ளி விவர தரவுகளை வெளியிடுதல் மற்றும் தடுப்பூசி கொள்முதல் போன்ற சுகாதார அமைச்சகத்தின் நிர்வாக விவகாரங்களில் தலையிட, போல்சோனாரோ தனது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தினார். அரசியல் அமைப்பு தனக்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை (வீட்டோ) கேடாகப் பயன்படுத்தினார். எடுத்துக்காட்டாக, மத வழிபாட்டிடங்களில் முகக்கவசங்களைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கியிருக்கும் சட்டத்தை அவர் ரத்து செய்தார், தொற்றுநோயால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட சுகாதார நிபுணர்களுக்கு இழப்பீடு வழங்குவதையும் ரத்து செய்தார். சமூக இடைவெளியை ஊக்குவிப்பதற்கான மாநில அரசாங்கத்தின் முயற்சிகளை அவர் தடுத்தார் மேலும் அழகு நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உட்பட பல வணிகங்கள் அத்தியாவசியமானதாகதிறந்திருக்க அனுமதிக்க தனது சிறப்பு அதிகாரத்தைப் (வீட்டோ) பயன்படுத்தினார். கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, நிரூபிக்கப்படாத மருந்துகளை, குறிப்பாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்ஐ போல்சோனாரோ தீவிரமாக ஊக்குவித்தார்.

போல்சோனாரோ ஜனாதிபதி என்ற முறையில் தனது சொந்த சுய முயற்சியில் கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சுற்றியுள்ள விவாதத்தை வடிவமைத்தார். தொற்று பாதிப்புக்கும் பொருளாதார பேரழிவுக்குமான தொடர்பை மறுத்தார். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முற்றாகப் புறக்கணித்தார். அறிவியலை கேடாக சித்தரித்தார். இதனால் மக்களில் பலர் தவறான கருத்துக்களுக்கு ஆட்பட்டு, எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி தொற்றை தீவுரமாகப் பரப்பினார்கள். ஆனால் ஜனாதிபதி போல்சோனாரோவோ கோவிட்-19 நெருக்கடிக்கு பிரேசிலிய மாநில அரசாங்கங்கள், சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றை குற்றம் சாட்டினாரே தவிர, பெருந்தொற்று பாதிப்புக்கான தனது தவறான நிர்வாகப் பொறுப்பின் காரணத்தை ஒருபோதும் ஏற்கவில்லை.

டிசம்பரில், போல்சோனாரோ பக்க விளைவுகள் காரணமாக தடுப்பூசியை எடுக்க மாட்டேன் என்று அறிவித்தார். “நீங்கள் முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சனை,” என்றார் அவர்.

போல்சோனாரோவின் தொற்றுநோய் பற்றியதான தவறான நிர்வாகம் அவரது அரசாங்கத்திற்குள் மோதலை உருவாக்கியது. பிரேசில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் நான்கு சுகாதார அமைச்சர்களைக் கண்டது. பிரேசிலின் கட்டுப்பாடற்ற நோய்த் தொற்று பல புதிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு வழிவகுத்தது, இதில் பி.1 மாறுபாடும் அடங்கும், இது மிகவும் தொற்றும் தன்மை கொண்டதாக தோன்றுகிறது. பிரேசிலின் கோவிட்-19 தொற்று பரவும் விகிதம் இறுதியாக குறையத் தொடங்கியுள்ளது, ஆனாலும் நிலைமை இன்னும் கவலையளிக்கிறது.

***

பெலாரஸின் அலெக்சாண்டர் லூக்காசென்கோ:
எலிசபெத் ஜே. கிங் மற்றும் ஸ்காட் எல். கிரீர், மிச்சிகன் பல்கலைக்கழகம்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கோவிட்-19 க்கு சில நடவடிக்கைகள் எடுத்தாலும் அவை போதுமானவையாக இல்லாததால் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாயின. ஆயினும், அப்படி அறைகுறை நடவடிக்கையை விட முழுமையான மறுப்புவாதத்தை தேர்ந்தெடுத்தவர்கள் மோசமான தொற்றுநோய் தலைவர்கள் என்று நாங்கள் முடிவுக்கு வருகிறோம்

பெலாரஸ் நாட்டின் நீண்டகால சர்வாதிகாரத் தலைவரான அலெக்சாண்டர் லூக்காசென்கோ கோவிட்-19 இன் அச்சுறுத்தலை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. தொற்றுநோயின் ஆரம்பத்தில், மற்ற நாடுகள் ஊரடங்குகளை நடைமுறைப்படுத்தியபோது, கோவிட்-19 பரவுவதைத் தடுக்க எந்த கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டாம் என்று லூக்காசென்கோ தேர்வு செய்தார். மாறாக, வோட்கா குடிப்பதன் மூலமும், ஒரு சிறிய அறையில் நீராவிக் குளியல் எடுக்கும் சௌனாவுக்கு சென்று வருவதன் மூலமும், வயல்களில் வேலை செய்வதன் மூலமும் கொரோனா வைரஸைத் தடுக்க முடியும் என்று அவர் கூறினார். இந்த மறுப்புவாதம் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடவும், தனிநபர்களாகவும் மற்றும் கொத்துக் கொத்தாகவும் தொற்றுநோய் பரவுவதற்கும், மக்கள் இறப்பதற்குமே உதவியது.

2020 கோடையில், லூக்காசென்கோ தனக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஆனால் தனக்கு அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லையென்றும், இந்த வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் அல்ல என்றும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார். முகமூடி இல்லாமல் கோவிட்-19 மருத்துவமனைகளுக்குச் சென்றதாகவும், இந்த நோயை முறியடித்து விட்டதாகவும் கூறி வந்தார். மேலும் தான் ஒரு வலுவான மனிதன் என்று தான் விரும்பிய பிம்பத்தை உருவாக்க இந்த நடவடிக்கைகள் உதவின.

தற்போது பெலாரஸ் நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்கியிருப்பினும், லூக்காசென்கோ தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் போவதில்லை என உறுதிபடக் கூறிவிட்டார். இன்றைய தேதி வரை பெலாரஸ் நாட்டு மக்கள் தொகையில் 3%க்கும் குறைவானவர்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் :
டோரதி சின், கலிபோர்னியா பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ்.

டிரம்ப் தேர்தலில் தோற்று பதவியில் இல்லாமற் போனாலும், அவர் இந்த கொரோனா தொற்றை தவறாகக் கையாண்டதன் விளைவாக அமெரிக்காவில் அதன் கொடிய பாதிப்புகள் நீண்ட காலத்திற்கு தொடர்கின்றது. குறிப்பாக வெள்ளையின மக்கள் அல்லாதவர்களின் சுகாதாரமும் நல்வாழ்வும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

துவக்கத்தில் ட்ரம்ப் இந்த கொரோனா தொற்று நோயை மறுத்தார். முகமூடி அணிவது மற்றும் சிகிச்சைகள் பற்றிய தவறான தகவல்களை தீவிரமாக பரப்பினார். இதோடு, ஆட்சியிலிருந்த தலைமைகளுக்கிடையே ஒற்றுமையின்மை நாடு முழுவதிலும் பெரும் தீங்கு விளைவித்தது ஆனால் விளைவு வெள்ளையர்களை விட வேறு சில குழுக்களுக்கு மிகவும் மோசமாக இருந்தது. நிற சமூகங்கள் சமத்துவமற்ற நோய் மற்றும் இறப்புகளால் பாதிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் லத்தீனோக்களும் அமெரிக்க மக்கள் தொகையில் 31% மட்டுமே என்றாலும், கோவிட்-19 நோயாளிகளில் 55% க்கும் அதிகமானவர்கள் இந்தப் பிரிவினர்களே. பழங்குடி அமெரிக்கர்கள் 3.5 மடங்கு அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் வெள்ளையர்களின் இறப்பு விகிதத்தை விட 2.4 மடங்கு அதிக இறப்புக்கும் ஆளாயினர்.

வேலையின்மை பாதிப்புகளும் சமத்துவமற்ற முறையிலிருந்தது. அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மோசமான போது, லத்தீன் அமெரிக்கர்களுக்கு 17.6% ஆகவும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு 16.8% ஆகவும், ஆசிய அமெரிக்கர்களுக்கு 15% ஆகவும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. இவர்களுடன் ஒப்பிடுகையில் வெள்ளையின அமெரிக்கர்களின் வேலையின்மை 12.4% தான் உயர்ந்தது.

இந்த சமத்துவமற்ற கொரோனா தாக்குதல்களின் விளைவாக, ஏற்கனவே இருக்கும் வறுமை, வீடின்மை மற்றும் பள்ளிக் கல்வியின் தரம் போன்றவற்றில் உள்ள சமத்துவமின்மைகள் மேலும் மிகுதியாக அதிகரித்தன மேலும் வரவிருக்கும் சில காலத்திற்கு தொடர்ந்து இப்படி அதிகரிக்கவே செய்யும். எடுத்துக்காட்டாக, ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த நிற பாகுபாடு சிறுபான்மைக் குழுக்கள் சமமான முன்னேற்றத்தை அடையவில்லை.

இறுதியாக, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு சீனாவை ட்ரம்ப் குற்றம் சாட்டினார் இந்த வைரஸை குங் காய்ச்சல்என்று அழைக்கும் இனரீதியான வெறுப்பை உமிழும் அடைமொழிகளும் அடங்கும். இந்த இனவெறிப் பிரச்சாரம் காரணமாக கடந்த ஆண்டில் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் மீதான தாக்குதல்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்தது. இந்த இனவெறித் தாக்குதல்கள் குறைவதற்கான அறிகுறிகள் இன்று வரை தென்படவில்லை.

தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆரம்பகட்ட முன்னேற்றத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் ஆதரவாக இருந்தது, உலகில் வேறு எந்தத் தலைவரும் செய்யாத ஒன்று. ஆயினும் கொரோனா பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியது, அறிவியல் பூர்வமற்ற பிரச்சாரத்தை காட்டுத்தனமாக மேற்கொண்டது போன்ற பாதிப்புகளினால் அமெரிக்கா இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் உள்ளது. சமீபத்திய ஒரு கருத்துக் கணிப்பின்படி மொத்த அமெரிக்கர்களில் 24% பேரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 41% பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் எனறு கூறியுள்ளனர்.

மெக்சிகோவின் ஆண்ட்ரீஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடர்
சால்வடார் வஸ்குஎஸ் டெல் மெர்காடோ, சென்ட்ரோ டி இன்வெஸ்டிகேசன் ஒய் டோசென்சியா எகனாமிகாஸ்

மெக்சிகோ நாட்டு கோவிட்-19 நோயாளிகளில் 9.2% நோயால் இறக்கும் நிலையில், மெக்சிகோ உலகிலேயே மிக உயர்ந்த இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. சமீபத்திய மதிப்பீடுகள் அது 617,000 இறப்புக்களை சந்தித்திருக்கலாம் என்று காட்டுகின்றன.

அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளான அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இணையாக, மெக்சிகோவில் நீண்ட, தீவிர கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு பல காரணங்கள் இருப்பினும், அதில் ஆற்றல் மிக்க ஒரு தேசியத் தலைமை இல்லாததும் ஒன்று.

தொற்றுநோய் காலம் முழுவதிலும், மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரீஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடர் மெக்சிகோவில் நோயின் தீவிரத்தை குறைத்துக் காட்டவே முயன்றார். ஆரம்பத்தில், அவர் நாடு தழுவிய ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கைகளை எதிர்த்தார். இறுதியில் மார்ச் 23, 2020 அன்று மெக்சிகோ இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் நாடு தழுவிய பேரணிகளை நட்த்தினார். அவர் அடிக்கடி முகக்கவசம் அணிய மறுத்தார்.

படிக்க :
♦ சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1
♦ யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !

அவர் 2018-ல் பதவியேற்றபோது சுகாதார சேவைகளுக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதையே மரபுரிமையாகப் பெற்றார். அதன் பின்னர், லோபஸ் ஒப்ராடர் தொற்றுநோயின் போது சுகாதாரம் தொடர்பான செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாமல், சற்றே அதிகரித்தார். மருத்துவமனை வரவு செலவுத் திட்டங்கள் எதிர்கொள்ளும் மகத்தான பணிக்கு இந்த நிதி உயர்வு போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

தொற்றுநோய் வெடிப்பதற்கு முன்னரே, லோபஸ் ஒப்ராடரின் தீவிர நிதி சிக்கனக் கொள்கை – 2018 ல் இருந்து நடைமுறையில் இருந்தது குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்கு கிடைக்கும் கோவிட்-19 நிதி உதவியை கணிசமாக கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு சுகாதார நெருக்கடியை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதையொட்டி, மெக்சிகோவில் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அது தீவிரப்படுத்தியது. கடந்த ஆண்டு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளை தொடர்வதற்காக தேவையானவர்களுக்கு உணவளித்தது. ஆண்டு இறுதியில் தொற்றிலிருந்து மீளும் சூழலில் மூர்க்கமான குளிர்கால இரண்டாவது அலைக்குள் நுழைந்தது.

இறுதியில், மற்றொரு முடக்கம் தவிர்க்க முடியாததாகியது. 2020 டிசம்பரில் மெக்சிகோ மீண்டும் சிறிது காலம் மூடப்பட்டது.

இன்று, முகமூடி அணிந்திருப்பது அதிகரித்துள்ளது. மெக்சிகோ அதன் மக்கள் தொகையில் 10% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது. அண்டை நாடான கௌதமாலாவில் 1% பேருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன் ஒப்பிடுகையில், விசயங்கள் மேம்பட்டு வருகின்றன. ஆனால் மெக்சிகோவின் மீட்புப் பாதை நீண்டது.

00000

கட்டுரையாளர்கள் குறித்த குறிப்பு :

1. சுமித் கங்குலி புகழ்பெற்ற அரசியல் அறிவியல் பேராசிரியர் மற்றும் இந்திய கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்களுக்கான தாகூர் இருக்கையின் தலைவர், இந்தியானா பல்கலைக்கழகம்;
2. டோரதி சின் – இணை ஆராய்ச்சி உளவியலாளர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ்;
3. எலிசபெத் ஜே கிங் – மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதார பள்ளியில் சுகாதார நடத்தை மற்றும் சுகாதார கல்வி இணை பேராசிரியர்;
4. எலிஸ் மசார்ட் டா ஃபொன்ஸெகா – உதவி பேராசிரியர், பிரேசிலிய பொது நிர்வாக பள்ளி, Fundação கெடுலியோ வர்காஸ்;
5. சால்வடார் Vázquez டெல் மெர்காடோ கோனாசைட் ஆராய்ச்சி பேராசிரியர், பொது கொள்கை தேசிய ஆய்வகம், சென்ட்ரோ டி Investigación ஒய் டோசென்சியா Económicas;
6. ஸ்காட் எல். கிரீர் பேராசிரியர், உலகளாவிய சுகாதார மேலாண்மை மற்றும் கொள்கை மற்றும் அரசியல் அறிவியல், மிச்சிகன் பல்கலைக்கழகம்.

இந்த கட்டுரை ஒரு கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் தி கான்வர்சேசன்ல் இருந்து மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

நன்றி: The Wire
தமிழாக்கம் : நாகராசு
.

சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த எம். வெற்றிச்செல்வன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாசுதேவனின் சட்டவிரோதக் கட்டுமானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போராடிவருகிறார். 2013, 2014-ம் ஆண்டுகளில் ஈஷாவுக்கு எதிராக இவரால் வழக்குகள் தொடரப்பட்டன. ஈஷா சட்டவிரோதமாக கட்டியிருக்கும் கட்டுமானங்களை இடித்துத்தள்ள வேண்டும் என நகர்ப்புற திட்டமிடல் துறை அளித்த ஆணையைச் செயல்படுத்த வேண்டும், இந்த சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராகச் செயல்படாத அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும், சன்ஸ்க்ருதி என்ற பெயரில் ஈஷா சட்டவிரோதமாக நடத்திவரும் பள்ளிக்கூடம் மூடப்பட வேண்டும், ஈஷாவுக்கு குறைந்த விலையில் தரப்படும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என தனது மனுவில் வெற்றிச் செல்வன் கோரியிருக்கிறார்.

2013 மார்ச் முதல் 2014 ஏப்ரல் வரை இந்த மனுக்கள் மீது பத்து முறை விசாரணை நடைபெற்றது. அதற்குப் பிறகு விசாரணை ஏதும் நடக்கவில்லை. “ஈஷாவில் உள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்ற எங்களுடைய மனு மீது 2013 மார்ச் 8-ம் தேதி விசாரணை நடந்தது. ஈஷா, மாவட்ட ஆட்சியர், வனத்துறை HACA, கிராமப் பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்த விசாரணை மார்ச் 25-ம் தேதி நடக்கவிருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக பதிலளிக்க தங்களுக்கு கால அவகாசம் வேண்டுமென ஈஷாவின் வழக்கறிஞர் கோரினார்.

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?
♦ கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !

ஜூன் 20-ம் தேதியன்று ஈஷா, நகர்ப்புற திட்டமிடல் துறை, மாநில அரசு ஆகியவை தங்கள் பதில்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்தன. வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2013 ஆகஸ்ட் 22-ம் தேதி மேலும் மூன்று மனுக்களைத்தாக்கல் செய்தோம். இவை எல்லா மனுக்களும் சேர்த்து அடுத்த நாள் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பும் வாதிட்டோம். ஆனால், மாநில அரசு எந்த பதிலையும் சொல்லவில்லை. ஆகவே வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

2014 மார்ச் 13-ம் தேதி நடந்த விசாரணையின்போது, பள்ளிக்கூடங்கள் எதையும் நடத்த தாங்கள் ஈஷாவுக்கு அனுமதியளிக்கவில்லையென பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது. இதற்குப் பிறகு எல்லாத் தரப்பும் தங்கள் பதில் வாதங்களை சமர்ப்பித்தால், இறுதி விசாரணை நடக்குமென நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், அதற்குப் பிறகு எந்த விசாரணையும் நடக்கவில்லை” என்கிறார் வெற்றிச்செல்வன்.

2017-ல் ஈஷாவின் மகாசிவராத்திரி விழாவை எதிர்த்து வெற்றிச்செல்வன் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். ஆனால், அவர் தாக்கல்செய்த முந்தைய மனுவே நிலுவையில் இருப்பதால் இந்த மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
“நான் உள்நோக்கத்துடன் அந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக நீதிமன்றம் சொன்னது. ஈஷாவின் சுற்றுப்புறத்தில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதல் கடந்த 15 – 20 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. யானைகள் செல்லும் வழியில் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டதுதான் இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பகுதியின் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாக்கத்தான் நாங்கள் முயற்சிசெய்தோம். அதனால்தான் ஈஷாவின் சட்டவிரோத கட்டுமானங்களை எதிர்த்துப் போராடுகிறோம். இதில் தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை” என்கிறார் வெற்றிச்செல்வன்.

கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்

தனது மனுவை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்ததற்குப் பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு அறிவுறுத்தலை வழங்கியது. அதாவது, மகாசிவராத்திரி போன்ற மிகப் பெரிய நிகழ்வுகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறியது.

வெற்றிச்செல்வனைப் போலவே The Velliangiri Hill Tribal Protection Society என்ற அமைப்பும் நீதிமன்றத்தை அணுகியது. இக்கரைப் பொலவம்பட்டியில் உள்ள முட்டாத்து ஆயல் குடியிருப்பைச் சேர்ந்த 49 வயதான பி. முத்தமாள் என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.

ஈஷாவின் சட்டவிரோத கட்டுமானங்களால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான மோதல் அதிகரித்து ஆதிவாசிகளின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகியிருப்பதாக முத்தம்மாள் வாதிட்டார். எவ்விதமான அனுமதியையும் பெறாமல் 112 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆதியோகி வடிவத்திற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்த மனுவுக்குப் பதிலளித்த நகர்ப்புற திட்டமிடல் துறையின் துணை இயக்குனர் ஆர். செல்வராஜ், அந்த ஆதியோகி வடிவம் எவ்வித ஒப்புதலும் பெறாமல் கட்டப்பட்டது என்று நீதின்றத்தில் தெரிவித்தார். ஆனால், செல்வராஜ் தனது பதிலை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே அந்த ஆதியோகி சிலை திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைத்தவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

அந்த ஆதியோகி சிலை என்பது சட்டச்சிக்கலில் இருக்கிறது என்பது தெரிந்தும் அதனைத் திறந்துவைக்க நரேந்திர மோதி தயங்கவில்லை. ஈஷா இவ்வளவு தைரியமாக சட்டமீறல்களைச் செய்வதற்குக் காரணம், அந்த அரசுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு. குறிப்பாக அப்போதைய தமிழ்நாடு அரசு அளித்த ஆதரவு.
ஈஷா ஆசிரமம் ஒன்றும் யானைகள் செல்லும் பாதையில் அமைந்திருக்கவில்லையென தனது நிலைப்பாட்டை மாற்றி நீதிமன்றத்தில் கூறியது தமிழக வனத்துறை.

படிக்க :
♦ சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!
♦ துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !

நியூஸ்லாண்டரிக்கு கிடைத்த ஆவணங்களின்படி, 2012-ல் கோயம்புத்தூர் வனத்துறை அதிகாரி மாநிலத்தின் முதன்மை வனக் காப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் யானைகள் செல்லும் வழியில் ஈஷா கட்டுமானங்களை எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தக் கட்டுமானங்களும் அங்கு வந்து குவியும் மக்களும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதலை அதிகரிப்பதாக குறிப்பிட்டார். மகாசிவராத்திரியன்று மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் அங்கு வந்து குவிகின்றனர். மிகப் பெரிய வெளிச்சத்தைத் தரும் விளக்குகள் பொறுத்தப்பட்டு, பெரிய பெரிய ஒலிபெருக்கிகளும் வைக்கப்படுகின்றன.

2013-ல் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஈஷாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இக்கரைப் பொலுவம்பட்டியின் காப்புக்காட்டுப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சட்டவிரோத கட்டடங்களால் யானைகள் செல்லும் பாதைகள் மறிக்கப்படுவதாகவும் இதனால் மனிதர்களுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுவதாகவும் கூறிய அறிவிப்பு, மின்சாரம், குடிநீர் ஆகியவை துண்டிக்கப்படும் எனக் கூறியது. HACA ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டிருப்பதால் அந்த இடம் இடித்துத்தள்ளப்படும் என்றும் அறிவிப்பு கூறியது.

ஆனால், 2020வாக்கில் வனத்துறை அதிகாரிகள் வேறு கதை சொன்னார்கள்.

***

முந்தைய பாகங்கள் :
பாகம் 1: சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி?

பாகம் 2: யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி!

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?

கான்பூர் தொழிற்சங்க இயக்கத்தினுடைய முண்ணனித் தோழரின் இளைய மகனிடமிருந்து ஏப்ரல் 27-ஆம் தேதி காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் வீட்டில் அனைவரும் கோவிட்-19 அறிகுறிகளால் பாதிக்கபட்டுள்ளனர் என்று தெரிவித்தார். அவரின் அப்பாவைத் தவிர வீட்டில் உள்ள மற்றவர்களின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அப்பாவிற்கு ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டு வருவதாகவும் கூறினார். ஆக்சிஜன் கிடைப்பதும் மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பதும் தாமதமாகிக் கொண்டே வந்தது.

உதவிக்காக நான் பணிபுரியும் கல்வி வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்காக நடத்தப்படும் சமூக ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளரை அழைத்தேன். அவரோ தன்னுடைய மாமனார் போன வருடம் இதே நாளில் இறந்ததாகக் கூறினார். ஒரு வருடமாக தொடரும் இந்த நிலை தற்போது இன்னும் கோரமான வடிவத்தில், ஆக்ஸிஜன் இல்லை, மருத்துவமனையில் படுக்கை இல்லை எனத் தொடர்கிறது. இந்த ஒரு வருடம் காலத்தில் காலையில் கிரிக்கெட் புள்ளி விவரங்களை பார்ப்பதற்கு பதில் கொரோனா விவரங்களை பார்ப்பது வழக்கமாகி உள்ளது.

படிக்க :
யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !
பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்

மாற்று ஊடகங்களில் நாம் பார்பது கூட கோவிட் பரிசோதனை, மருத்துவர் ஆலோசனைகள், மருத்துவ அவசர ஊர்தி, மருந்துகள், ஆகியவற்றை பெற முடிகிறவர்களை பற்றி செய்திகளைதான். இந்த வசதிகளையெல்லாம் பெற முடியாதவர்களின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. நான் பணிபுரியும் மேல்தட்டு வர்க்கத்திற்ககான உயர் தரமான கல்லூரிக்கு அருகாமையிலேயே சுமார் 50,000 மக்கள் தொகை கொண்ட நான்காரி என்ற பகுதி உள்ளது.

தோட்டவேலை செய்பவர்கள், விடுதிகளில் வேலைசெய்பவர்கள், பேராசிரியர் வீடுகளில் வேலை செய்பவர்கள், செக்யூரிட்டிகள் என கல்லூரியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் ஆயிரக்கனக்கானோர் நான்காரி பகுதியில் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மருத்துவச் சிகிச்சை பெற தகுதியுள்ள ஒரு மருத்துவர் இப்பகுதியில் கிடையாது. முறையாக மருத்துவம் படிக்காதவர்களே (jholawala doctors) – போலி மருத்துவர்களே – இப்பகுதியில் உள்ளனர்.

கொரோனா காலத்தில் இந்த போலி மருத்துவர்களின் வீட்டு வாசலில், தினமும் ஒரே அறிகுறிகள் உள்ள நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பதாக நண்பர்கள் கூறக் கேள்விபட்டிருக்கிறேன். பொதுவான மருந்துகளைக் கூட பெறமுடியாத காரணத்தால் இந்த போலி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதை நிறுத்தினாலும், மக்கள் கூட்டம், கூட்டமாக இவர்களின் வீட்டிற்கு வந்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த போலி மருத்துவர்கள் அதே பகுதியில் வசிப்பதனால் தங்களுடைய வீட்டுக்கு வரும் நோயாளிகளை இவர்களால் புறக்கணிக்கவும் முடிவதில்லை. தற்போதைய சுகாதார நெருக்கடியில் இந்த போலி மருத்துவர்களே நாட்டைக் காப்பாற்றுகின்றனர் என்று அப்பகுதியில் வசிக்கும் என்னுடைய பழைய நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

தகுதியுள்ள மருத்துவர்கள் நான்காரியில் பகுதியிலிருந்து திடீரென வெளிறிவிடவில்லை. உழைக்கும் வர்க்க பிரிவினரும் நடுத்தர வர்க்கத்தினரும் வசிக்கின்ற இப்பகுதியில் எனக்கு தெரிந்தவரையில், நான் 27 வருடங்களாக இக்கல்லூரியில் பணிபுரிகிறேன், இங்குள்ள பெரும்பான்மையான உழைக்கும் வர்கத்தினரால் தகுதியுள்ள மருத்துவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெற முடிந்ததில்லை. ஓரளவு வசதி படைத்தவர்கள் கூட மருத்துவ சிகிச்சை பெற மருத்துவர்கள் இப்பகுதியில் கிடையாது. மிக மோசமான பாதிப்புகளாக இருந்தால் ஜிடி சாலையிலும், வணிக பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லுவார்கள். இச்சூழலில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இப்போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பதைத் தாண்டி முறையான கொரோனா பரிசோதனைகளோ வழிகாட்டுதல்களோ எதுவும் கிடையாது.

கள நிலவரங்களை கவனிக்கும் நம்மில் பலருக்கு இந்த திடீர் மருத்துவ நெருக்கடி கொரோனாவால் ஏற்பட்டது அல்ல என்று புரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு சராசரி நபருக்கும் இது போன்ற மருத்துவ நெருக்கடிகள் மீள முடியாத ஒரு பெருந்துயரம் தான். வசதி படைத்தவர்களும் உயர்மட்ட தொடர்பு உள்ளவர்களும் தங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களையும் கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நினைத்திருந்தனர். இந்த நெருக்கடி அவர்களையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த வருடம், டிசம்பர் மாதம், பெருந்தொற்று சமயத்தில் அலகாபாத்தில் (இப்பொழுது ‘பிராயாக்ராஜ்’) உள்ள என் தந்தைக்கு திடீரென்று பக்கவாதம் ஏற்பட்டது. வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் இடையே எண்ணற்ற பயணத்தின் போது சாலைகளில் கோவிட் விதிமுறைகளான முக கவசம் அணிதல், வீட்டில் இருத்தல் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் இந்த கிருமியை ஒழித்து நமது மரியாதைக்குரிய மாநில முதல்வர் யோகி அவர்களுக்கு பலம் சேர்க்க வேண்டும் என்ற பிரச்சாரங்கள் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டே இருந்தன. ஒரு நாள் காலை ரிக்க்ஷாவில் சிக்னலில் காத்துக்கொண்டிருந்த போது பிச்சை எடுக்கும் ஒரு பெண் என்னிடம் வந்து இந்த முககவசத்தை எல்லாம் வைத்து என்ன செய்கிறீர்கள், “வீதிகளில் திரியும் எங்களை போன்றோர் இது இல்லாமலே சமாளிக்கிறோம் எங்களைப்பற்றி என்ன கருதுகிறீர்கள், உங்களுக்கெல்லாம் அசிங்கமாக இல்லையா?” என்று கேட்டார்.

இந்த பிரச்சனை கடந்த ஒரு வருடகால நெருக்கடியினால் உருவானது என்று கருதுவது பிரச்சனையை எளிமையாகப் பார்ப்பதாகும். பெருந்தொற்றால் ஏற்பட்ட இந்த ஆழமானப் பிளவுகள் உண்மையில் நமக்கு என்ன வேண்டும் என்பதை காட்டுகின்றன. அதாவது: தற்போதைய ஆஷா ஊழியர்கள்(Asha workers) போல் இல்லாமல், நாம் வசிக்கின்ற பகுதிகள் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க முறையான பயிற்ச்சி பெற்ற சமூக சுகாதார ஊழியர்கள் (உரிய சம்பளத்தோடு) பணியமர்த்த வேண்டும்; வழக்கமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் வேண்டும்; குடியிருப்பு பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதிலிருந்து; இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்கள் வரை அனைத்து வசதிகளையும் கொண்ட நன்கு செயல்படக்கூடிய கிராமத்திலிருந்து பெரிய நகரங்களுடன் இணைக்கப்பட பொது சுகாதார மையங்களை அமைக்க வேண்டும். ஆனால் மிகவும் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு வீடும் பெருந்தொற்றால் பற்றி எரியும் இந்த காலகட்டத்தில் (மே 2021) சாத்தியமான மேற்கூறிய இலக்குகள் கூட தொலைதூர கற்பனை போலவேத் தெரிகிறது.

ஒரு ஆண்டு முழுவதும் இழந்து விட்டோம் என்ற உண்மையை எண்ணி பலரும் வருந்துகின்றனர். பெருந்தொற்றை எதிர்கொள்ளுவதற்கான சிறந்த ‘திட்டமிடல்’ இருந்திருந்தால் (பரிசோதனைகள், மருந்துகள், ஆக்ஸிஜன், படுக்கைகள், பணியாளர்கள் மற்றும் பல), தற்போது இருக்கும் படுமோசமான நிலைக்கு நாம் வந்திருக்க மாட்டோம். ஆனால் நான் கூறுவது என்னவென்றால் தற்போதைய ஆட்சி, அடிப்படையில் பொது மக்களின் நலனுக்காக, அது பெருந்தொற்றோ அல்லது மற்றவையோ, சிந்திப்பது அல்லது வேலை செய்வது என்ற பொதுக் கண்ணோட்டத்திலிருந்து எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை. இவர்கள் திட்டமிட்டு இருக்கலாம், அதனை செயல்படுத்தவும் செய்திருக்கலாம். ஆனால் அந்தத் திட்டங்கள் அனைத்தும் தேசத்தைப் பற்றிய அவர்களுடைய கருத்தாக்கத்துடன் பொருந்தக்கூடியதாக பிரம்மாண்டம் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும்.

உதாரணமாக உ.பி. ல் அடுத்த தேர்தல் வருவதற்குள் ‘ஜனம் பூமியில்’, ஒரு பிரமாண்டமான ராமர் கோவிலை கட்டுவதற்கான பொறுப்பு பிரதமரின் முன்னாள் முதன்மை ஆலோசகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மிகப்பெரிய பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவது (கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் கூட பிரதமர் இல்லம் கட்டுவது ‘அத்தியாவசிய’ சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது).

பொது சுகாதாரத்திற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டால் கூட அது, இந்தியா எத்தனை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளது அதன் மூலம் இந்தியா எவ்வளவு உயர்ந்த தேசம் என்று கூறும் வடிவத்தில் திட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான பல முக்கிய மூலப்பொருட்களுக்கு நாம் முதன்மையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவையே சார்ந்து இருக்கிறோம். ஒருவேளை அந்த நாடுகள் ஏற்றுமதிக்கு தடை விதித்தால் உரிமம் பெற்ற உற்பத்தியைக் கூட நிறுத்த வேண்டியிருக்கும் என்பதே எதார்த்தமாகும்.

படிக்க :
♦ கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ போன்ற வசனங்கள் பேசினாலும் நம்மிடம் தொழில்நுட்ப வலிமை இருந்தாலும், நம்மால் சொந்தமாக எதையும் உருவாக்கமுடிவதில்லை. மருந்து உற்பத்தித் துறை இதற்கு சிறிது விதிவிலக்காக இருக்கலாம். இங்கு இரண்டு முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று, சுதந்திரத்திற்கு பின் எடுக்கப்பட்ட கூட்டு முயற்சிகளினால் உள்நாட்டு திறன்களை வளர்த்திடவும் மருந்துகளை தயாரிப்பதற்கான பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளடக்கிய வலைபின்னலை உருவாக்கியதன் மூலம் உள்நாட்டு மருந்து உற்பத்தியில் சுதந்திரமான பாதையை வடிவமைத்திருந்தனர்.

முக்கியமாக 1970-ல் கொண்டுவரப்பட்ட காப்புரிமைச் சட்டமானது உள்நாட்டு மருந்து உற்பத்தித் தொழிலை மேம்படுத்தவும் இந்தியாவை ‘உலகின் மருந்தகம்’ என்று மாறுவதற்கான வாய்ப்புகளையும் திறந்து விட்டது. 1990 களில் உலக வர்த்தக அமைப்பின் புதிய அறிவுசார் சொத்து உரிமை திட்டத்தில் காங்கிரஸ் அரசாங்கம் கையெழுத்திட்டதினால் மேற்கூறிய முயற்ச்சிகளனியத்துமே சிதைவுற ஆரம்பித்தன. தற்போது உள்நாட்டு மருந்து உற்பத்தி தொழில்கள் அனைத்தும் சர்வதேச சக்திகளை சார்ந்திருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உதாரணமாக, இந்திய மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களுக்கு (70%) சதவிகிதம் சீனாவையே சார்ந்துள்ளோம். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சீனா இந்தியாவுக்கான மூலப்பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தினால் அதன் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறோம்?

மக்களுடைய நலன் சார்ந்த விசயங்களில் நேரடியாக அரசு பங்கெடுக்க வேன்டியதில்லை அதனை சந்தையின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்பது தற்போதுள்ள அரசாங்கத்தின் கொள்கை முடிவாகும். கூடவே தனியார் மூலதனம் சுகந்திரமாக செயல்படுவதற்கான சூழல் இல்லாமல் இருப்பதே பொருளாதார மேம்பாட்டுக்கான தடையாகக் கருதுகின்றனர். உதாரணமாக, ஊரடங்கின் போது தொழிலாளர் நலன்களை பறிக்கின்ற தொழிலாளர் சட்டத்தினை (Labour Codes) நிறைவேற்றியது, விவசாயச் சந்தையில் ‘மிருக வெறியை(Animal sprit) கட்டவிழ்த்து விடுவதற்கான மூன்று விவசாய சட்ட திருத்தங்களை கொண்டுவந்தது ஆகியவற்றைக் கூறலாம்.

போராடும் விவசாயிகள் என்ன கோருகிறார்கள் அல்லது தொழிலாளர் சட்டத் திருத்தத்தைப் பற்றி தொழிலாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் முக்கியமாக இவர்கள் கருதப்படுவதில்லை. தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரை தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு எது நல்லது என்று தெரியாத கோபக்கார சிறுவர்கள் அவ்வளவுதான். மேலும் பொருளாதாரத்தின் ஒவ்வொரு முக்கியத் துறையிலும் அரசின் தலையீடு இருப்பதை(பொதுத்துற நிறுவனங்கள்) பொருளாதார வளர்ச்சிக்கான தடையாக தற்போதைய ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். எனவே பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பது, பங்குகளை விற்பது, தனியார்மயப்படுத்து போன்ற நடவடிக்கைகள் மூலம் இதனை சரிசெய்ய முடியும் எனக் கருதுகின்றனர். மேற்சொன்ன பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில் மிருகவெறியை (Animal spirit) கட்டவித்து விடுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பெருந்தொற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

தனியார்முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதுதான் ஆத்மநிர்பர்

இந்த ஆட்சியாளர்கள் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக முயற்ச்சிப்பார்கள் என்று எண்ணுவது நம்முடைய விருப்பமாக இருக்கலாம். ஆனால் கடந்த கால அனுபவத்திலிருந்து பார்த்தால் அதற்கு வாய்ப்பில்லை என்று முடிவுக்கே வரமுடியும். பாராளுமன்ற கட்சிகள் அனைத்துமே, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களை தனியாரிடம் குறிப்பாக கார்ப்பரேட்டுகளிடம் விட்டுவிட வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் மாநில அரசாங்கள் கூட மருத்துவ காப்பீட்டை பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் ஆக்ஸிஜன் சிலிண்டரை பெறுவதற்கு மருத்துவக் காப்பீடு எவ்வாறு உதவும்? ஆனால் இந்த கேள்வியை கேட்க யாரும் தயாராவே இல்லை. இங்கே முரண்பாடு என்னவெனில், டாக்டர் மன்மோகன் சிங் கொரோனா சிகிச்சைக்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபோன்ற உயர்தரமான அரசு மருத்துவமனைகளில் சலுகை பெற்ற சில நபர்கள் மட்டுமே செல்லமுடியும். மற்றவர்களுக்கான (பணக்காரர்கள் மற்றும் ஏழைகள்) மருத்துவ சேவையோ சந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் பணக்காரர்களுக்கு ஏழு நட்சத்திர அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளிலும் ஏழைகளுக்கு தெருவிலும் மருத்துவம் பார்க்கப்படும்.

சந்தையே அனைத்தையும் நிர்வகிக்கின்ற தற்போதைய நிலையில் மருந்துகளிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் இறந்தவர்களை தகனம் செய்வது வரை அனைத்தும் அதிக விலைக்கே ஏலம் விடப்படுகிறது. இந்த சந்தை கருத்தியலானது ஒருவரோ அல்லது இருவரின் முட்டாள்தனத்தினால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மேல்தட்டு வர்க்கத்தினர் கடந்த 30 வருடங்களாக இந்திய துணைக்கண்டத்தில் திட்டமிட்டு கட்டியமைத்ததாகும். இதன் விளைவுகளை அனைத்தும் தற்போது கொரோனா பெருந்தொற்று பற்றவைத்த தீயினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த அரசைப் பொறுத்தவரை அது மக்களுக்கு ஆற்றக்கூடிய ஒரே கடமையாகக் கருதுவது சந்தைக்கான சிறந்த பொருளாக மக்களை ஒழுங்குபடுத்துவதே. மக்கள் ஏதாவது குறைக்கூறினால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை திணிப்பது, ஆக்ஸிஜன் பற்றாகுறை பற்றி புகார் கூறினால் உத்திர பிரதேச அரசாங்கம் மிரட்டுவது போல, அது குடியுரிமை சட்டமாகட்டும் அல்லது விவசாய சட்டமாகட்டும் அனைத்திற்கும் இதே நிலைதான்.

இதற்கிடையில் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலண்டனில் வாரத்துக்கு யூரோ 50,000 என்ற மதிப்பில் ஒரு மாளிகையை வாடகை எடுத்து தங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டு இருக்கும் இந்நேரத்தில், திரு. முகேஷ் அம்பானியோ இலண்டன் அருகில் உள்ள மிகப் பழமையான ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை 79 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். இதில் இங்கிலாந்தின் மிக சிறந்த கோல்ஃப் ஆடுகளம், விம்பிள்டன் வீரர்களின் பயிற்சிக்கான டென்னிஸ் ஆடுகளம் ஆகியவை ஸ்டோக் பார்கில் உள்ளன.

இது தான் நம்முடைய ஆட்சியாளர்களின் பார்வையில் வளர்ச்சியெனில், நம்முடைய தற்போதைய நிலைமை கண்டு ஒருவர் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை.

கட்டுரையாளர்: ராகுல் வர்மன்
மொழிபெயர்ப்பு: வருண், CCCE-TN
மூலக் கட்டுரை :
RUPE-India

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு : பேரா. ராகுல் வர்மன், ஐ.ஐ.டி. கான்பூரில் தொழில் மற்றும் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக உள்ளார். தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் குறித்து RUPE இணையத் தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் : கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 2

2012-வாக்கில் எம்.எஸ்.பார்த்திபன் என்ற வனச்சரகர் ஈஷா ஆசிரமத்திற்குள் சென்றார். சாடிவயலுக்கும் தாணிக்கண்டிக்கும் இடையில் யானைகள் சென்று வரும் வழியில், ஈஷா பல இடங்களை வளைத்துப் போட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். யானைகள் வரும் வழியில் சட்டவிரோதமாகக் கட்டங்கள், மின் வேலிகள், சுவர்கள் எழுப்பப்பட்டிருந்ததால், யானைகள் செம்மேடு மற்றும் நர்சீபுரத்திற்கு இடைப்பட்ட வனப்பகுதி வழியாக வெளியேறி விவசாயப் பயிர்களை நாசம் செய்ததோடு, விவசாயிகளையும் தாக்கிவந்தன.

படிக்க :
♦ காடுவெட்டி சத்குரு ! நாட்டை விற்கும் மோடி !! கேலிச்சித்திரங்கள்
♦ ஜக்கி காருண்யா ஆக்கிரமிப்பை மீட்காமல் சின்னத்தம்பிக்கு விடுதலை ஏது ?

“300 சதுர மீட்டர் பரப்பிற்கு மேல் எதைக் கட்ட வேண்டுமென்றாலும் HACAவின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், ஈஷா எந்த அனுமதியும் இன்றி மிகப் பெரிய அளவுக்கு கட்டுமானங்களை உருவாக்கியிருந்தது. அவர்கள் முதலில் கட்டடங்களைக் கட்டிவிட்டு பிறகு அனுமதிக்காக விண்ணப்பித்தார்கள். அவர்கள் புதிய கட்டுமானப் பணிகளுக்காக விண்ணப்பிக்கும்போது எங்கள் அனுமதிக்காக காத்திருந்ததேயில்லை.

ஆதியோகி சிலைக்கு அருகில் மின்சாரம் தாக்கி பலியான யானை.

விண்ணப்பித்துவிட்டு கட்டடம் கட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.” என்கிறார் பார்த்திபனின் சோதனையின்போது உடன் சென்ற ஒரு அதிகாரி. இவர் தன் பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை. “ஈஷா கட்டடம் கட்டிய இடங்கள் யானைகள் நடமாடும் பகுதிகள். அதனால்தான் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்கிறார் அந்த அதிகாரி.

இக்கரை பொலுவம்பட்டியில் 33 கட்டுமானங்களை மதரீதியான பணிகளுக்கு என ஈஷா குறித்திருக்கிறது. இவை தமிழ்நாடு அரசின் கட்டுமான விதிகளின்படி இவை பொதுப் பயன்பாட்டிற்கான கட்டடங்கள்.  இம்மாதிரியான கட்டுமானங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதல் தேவை. மேலும் நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் துணை இயக்குனரின் ஒப்புதலும் தேவை.  ஆனால், இந்த அனுமதிகளைப் பெறுவது குறித்து ஈஷா அலட்டிக்கொள்ளவேயில்லை.

அதற்குப் பதிலாக அனுமதி கோரி அந்த கிராமப் பஞ்சாயத்தை அணுகினர். நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் அனுமதியின்றி அம்மாதிரி ஒப்புதலை அளிக்க அந்தப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே இல்லை.  பிறகு ஒரு வழியாக 2011ல் ஒப்புதல் கோரி திட்டமிடல் துறையை அணுகினர்.

ஈஷா வளாகத்தை ஒட்டி போடப்பட்டுள்ள மின் வேலி

ஆனால், அதற்கு முன்பாகவே சட்டவிரோதமாக பல கட்டங்கள் அங்கே கட்டப்பட்டிருந்தன.    ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளாகக் கட்டிய கட்டங்களுக்கு ஒப்புதல் கேட்டதோடு, புதிதாக 27 கட்டடங்களைக் கட்டவும் அனுமதி கோரினர். ஆனால், அந்த விண்ணப்பம் முழுமையானதாக இல்லை. 2012 பிப்ரவரிக்குள் புதிய விண்ணப்பத்தை அளிக்கும்படி நகர்ப்புற திட்டமிடல் துறை சொன்னது.

ஆனால், அதற்குள் ஈஷா விண்ணப்பத்தை தாக்கல் செய்யவில்லை. ஏழு மாதங்களுக்குப் பிறகு புதிய விண்ணப்பத்தை அனுப்பியது.  இதன் தொடர்ச்சியாக 2012 அக்டோபரில் திட்டமிடல் துறையின் அதிகாரிகள் ஈஷா வளாகத்திற்கு வந்தபோது, புதிய கட்டங்களைக் கட்டும் பணிகள் ஏற்கனவே துவங்கியிருந்தன. இந்தக் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி அவர்கள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக 2012 நவம்பரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஈஷா கண்டுகொள்ளவில்லை.

2012 டிசம்பரில் நகர்ப்புறத் திட்டமிடல் துறை மீண்டும் ஒரு நோட்டீஸை அனுப்பியது. ஒரு மாதத்திற்குள் சட்டவிரோதக் கட்டுமானங்கள் அனைத்தையும் இடித்துவிடும்படி அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் இயக்குனர் முன்பாக முறையிட்டது. இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அந்த நேரத்தில் கே. மூக்கைய்யா என்பவர் நகர்ப்புற திட்டமிடல் துறையின் துணை இயக்குனராக கோயம்புத்தூரில் பணியாற்றிவந்தார்.  நகர்ப்புறத் திட்டமிடல் துறை விதித்த ஆணைகளை ஈஷா அலட்சியப்படுத்திய நிலையில், அந்தத் துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி வடிவம்

“அந்த நோட்டீஸை அனுப்பிய ஒரு மதத்திற்குள் நான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அனுமதியைப் பெற்றார்களா இல்லையா என்பது தெரியவில்லை” என்கிறார் மூக்கைய்யா.

2012வாக்கில் ஈஷா 50 கட்டடங்களைக் கட்டியிருந்தது. மேலும் 27 கட்டடங்களைக் கட்டிவந்தது. எல்லா கட்டடங்களுமே சட்டவிரோதமானவை. ஆனால், ஈஷாவின் சட்டவிரோத செயல்பாடுகளை யாரும் எதிர்க்கத் துணியாத நிலையில், எதிர்க்கத் துணிந்த சிலர் இருந்தார்கள்.

அவர்கள் பூவுலகின் நண்பர்கள்!

(தொடரும் – 2)

பாகம் : 1

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு !

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)
முதலாவது மாநாட்டின் 51-வது ஆண்டு நிறைவு !!

திரிபுவாதத்திற்கு எதிரான போராட்ட மரபை
தொடர்ந்து உயர்த்திப் பிடிப்போம் !

1970-ஆம் ஆண்டு மே 15-16 தேதிகளில் கொல்கத்தா – கார்டன் ரீச் பகுதியின் ரயில்வே காலனியிலுள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் அந்த மாநாடு  (பேராயம்) நடந்து கொண்டிருந்தது. அது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எட்டாவது மாநாடு.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 7-வது மாநாடு மார்க்சிஸ்ட் (CPM) கட்சியாக இருந்தபோது நடத்தப்பட்டது. அதன் பின்னர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் நவீன திரிவுவாதத்தைத் திரைகிழித்த நக்சல்பாரி எழுச்சியைத் தொடர்ந்து, உண்மையான புரட்சிகரக் கட்சியாக உதயமான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்), அதன் தொடர்ச்சியாக இந்த முதலாவது மாநாட்டை – அதாவது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எட்டாவது மாநாட்டை நடத்தியது.

படிக்க :
♦ இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
♦ நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

போலீசு அடக்குமுறை நிலவிய அன்றைய சூழலில் கம்யூனிசப் புரட்சியாளர்களான நக்சல்பாரிகள், போலீசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இரகசியமாக அணிதிரண்டு அந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த வீட்டின் கீழ்த்தளப் பகுதியில் ஆண்களும் பெண்களுமாக ஏறத்தாழ 50 கட்சித் தோழர்கள் கூடி, போலியான ஒரு திருமண விழாவை நடத்திக் கொண்டிருக்க, மேல்மாடியில் கட்சியின் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலே காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, அது வெளியே கசியாதவண்ணம், கீழே ஒலிபெருக்கியில் திருமண விழாவையொட்டிய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

இந்த மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து 52 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், போலீசு அடக்குமுறைச் சூழலின் காரணமாக 35 கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்களில் மே.வங்கம், ஆந்திரா, பீகார், பஞ்சாப், உ.பி, தமிழ்நாடு, ஒரிசா, காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 21 தோழர்கள் கட்சியின் மத்தியக் கமிட்டியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

தோழர் சாரு மசும்தார் பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார். மத்தியக் கமிட்டியில் இருந்து 9 பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு அமைக்க முடிவாகியது. தோழர்கள் சுஷிதல்ராய் சவுத்திரி, சரோஜ் தத்தா, சுரேன் போஸ் (இவர்கள் அனைவரும் மே.வங்கத்தைச் சேர்ந்தவர்கள்), சத்யநாராயண் சிங் (பீகார்), சிவகுமார் மிஸ்ரா (உ.பி), ஆர்.பி.ஷராப் (காஷ்மீர்), தோழர் அப்பு (தமிழ்நாடு) ஆகிய 7 பேர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு, மற்ற இரண்டு இடங்களும் இம்மாநாட்டில் பங்கேற்க இயலாத ஆந்திரத்தைச் சேர்ந்த தோழர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

★★★

நக்சல்பாரி – இந்தச் சொல் இன்றும்கூட நாளேடுகளில், வானொலியில், தொலைக்காட்சியில், இணையதளத்தில் அன்றாடம் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

நக்சல்பாரி –- மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில், இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள், கந்துவட்டி லேவாதேவிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல், ஒடுக்குமுறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் 53 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி இருந்தது. ஆனால் இன்றோ, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது.

“உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன்வைத்து, 1967-ஆம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி விவசாயிகள் இந்தியப் புரட்சிக்கான போர்ப் பிரகடனத்தைச் செய்தார்கள். அன்று, நக்சல்பாரி உழவர்கள் மூட்டிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறி நாடு முழுவதும் பற்றிப் படர்ந்ததைக் குறிப்பதுதான் நக்சல்பாரி இயக்கம்.

இந்திய நாடாளுமன்ற அரசியலில் 1967-ஆம் ஆண்டு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஏகபோகமாக இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரசு எட்டு மாநிலங்களில் வீழ்த்தப் பட்டு, எதிர்க்கட்சி அணிகள் ஆட்சிக்கு வந்தன. அவற்றில் ஒன்று மேற்கு வங்கம். அங்கே 14 கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காளக் காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சரானார். கூட்டணி அமைச்சரவையில் போலி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீசு அமைச்சர் ஆனார். நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாகவே கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முன்னும் பின்னும் வெற்று வாக்குறுதிகளை வாரி வழங்கினர், போலி கம்யூனிஸ்டுகள்.

மார்ச்–18, 1967-இல் சிலிகுரி வட்ட ‘மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு’ கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்க மாநாடு வெற்றிகரமாகக் கூடியது. அன்று அங்கே போலி மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிராக, நாற்காலிப் புரட்சிக்கு எதிராகக் கலகக் கொடி ஏற்றப்பட்டது.

“நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பறிமுதலும் விநியோகம் செய்யும் அதிகாரமும் விவசாயிகள் கமிட்டிகளுக்கே அளிக்கப்பட வேண்டும். இதைச் செய்ய வேண்டுமெனில், நிலப்பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க நாம் ஆயுதம் ஏந்த வேண்டும்” என்று விவசாயிகளின் சங்கத்தின் சிலிகுரி வட்டச் செயலர் ஜங்கல் சந்தாலும், அன்றைய ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கனு சன்யாலும் விடுத்த அறைகூவலை எழுச்சி ஆரவாரத்தோடு வரவேற்று விவசாயிகள் அனைவரும் அங்கீகரித்தனர்.

சாரு மஜூம்தார்

‘மார்க்சிஸ்டு’ கட்சித் தலைமையும் நாற்காலிப் புரட்சிக்கு எதிராக நக்சல்பாரியில் கலகக் கொடி உயர்ந்தது ஏதோ தற்செயலாக நடந்து விட்ட சம்பவமல்ல. ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்குள் இருந்த முன்னணியாளர்களான சாரு மஜும்தார், கனு சன்யால், சுஷிதல் ராய் சவுத்திரி போன்ற தோழர்கள் தலைமையின் திருத்தல்வாதத்தை எதிர்த்து போராடி, புரட்சிகர நிலைப்பாடுகளை முன்வைத்து, அணிகளில் பலரை வளர்த்தெடுத்ததுதான் காரணம். ‘மார்க்சிஸ்டு’ கட்சித் தலைமையின் நாடாளுமன்ற சமரச சரண்டைவுப் பாதையைக் கைவிட்டு, புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் 1965-ஆம் ஆண்டு முதலே வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் அமைப்புகளையும் – இயக்கங்களையும் கட்டியமைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா ஆகிய திருத்தல்வாதத் துரோகிகள் புரட்சியாளர்களை வெளியேற்றியும், குறிப்பாக தோழர் சாரு மஜும்தாரை பைத்தியக்காரன், போலீசு உளவாளி என்றும் வசைபாடினர். ஆனால், இந்த அவதூறுகளால் நக்சல்பாரி எழுச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மூட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். எனவே, மாநாட்டு அறைகூவலை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று விவசாயிகள் முடிவு செய்தனர். ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டிகளும் தற்காப்புக்காக ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்களும் அமைக்கப்பட்டன.

மே மாதத்தில் நிலப்பிரபுக்களின் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வில்லும், அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்தின் போலீசு நிலையங்கள் செயலிழந்தன. விவசாயிகளின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தியத்தினுள் நுழையக்கூட முடியாது என்ற நிலைமை 1967 மே மாதத்தில் உருவானது.

மே-23, 1967 நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். பின்வாங்கிய போலீசு, 25-ஆம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரைச் சுட்டுக் கொன்றது; விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடுச் சம்பவம் ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பைத் தோற்றுவித்தது. கட்சித் தலைமையானது, இறந்து போனவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது. ஆனால், ‘மார்க்சிஸ்டு’ கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை இந்த முதலைக் கண்ணீரால் தடுக்க முடியவில்லை.

அஜய் முகர்ஜி

“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை!” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்!” என்ற முழக்கங்களால் கொல்கத்தா நகரச் சுவர்களை அதிர வைத்தனர், கொல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள். ‘மார்க்சிஸ்டு’ கட்சியிலிருந்த புரட்சிகர அணிகளும் கல்லூரி மாணவர்களும் “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” (நக்சல்பாரி கிருஷாக் சங்கராம் சகாயக் சமிதி) ஒன்றைக் கட்டி ஜூன் 27-ஆம் தேதியன்று சட்டசபையின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் அப்போதைய மாநிலக்குழு உறுப்பினரான சுஷிதல் ராய் சவுத்ரி உள்ளிட்ட 19 பேர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வங்காளத்தின் வடமுனையில் பற்றிய தீ, நாடெங்கும் ‘மார்க்சிஸ்டு’ கட்சியைச் சுட்டெரிக்க தொடங்கியது. நக்சல்பாரிகளையும் அதன் ஆதரவாளர்களையும் குறுங்குழுவாதிகள், வறட்டுவாதிகள், சாகசவாதிகள் என்பதாக மட்டுமின்றி, சி.ஐ.ஏ. உளவாளிகள் என்றெல்லாம்கூட போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் அவதூறு செய்தன. ஆனால், அக்கட்சிகளுக்குள் வெடிக்கத் துவங்கிய கலகத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

“சீறிவரும் இந்தியப் புரட்சிச் சிறுத்தையின் முதல் காலடி” என்று நக்சல்பாரி எழுச்சியை தனது ஜூன் 28-ஆம் தேதி ஒலிபரப்பில் சித்தரித்த சோசலிச சீனத்தின் பீகிங் வானொலி, ‘மார்க்சிஸ்டு’களின் ஐக்கிய முன்னணி சர்க்காரை “மக்களை ஏய்க்கும் எதிர்ப்புரட்சியாளர்களின் கருவி” எனச் சாடியது.

1967 ஜூலையில், நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறிய கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவைக் கட்டியமைக்கத் தீர்மானித்தது.

இதற்கிடையே கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒரு அரசியல் – சித்தாந்தப் பத்திரிகையை நடத்தி, அதன் மூலம் புரட்சிகர வழியைப் பிரச்சாரம் செய்வதெனத் தீர்மானித்தனர். ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் வங்காள மொழி வார இதழான ”தேஷ் ஹிதாஷி”யின் ஆசிரியராக இருந்த சுஷிதல்ராய் சவுத்ரி, கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து அதில் எழுதி வந்தார். அவரையும் சுனிதி குமார் கோஷ்-ஐயும் ஆசிரியர்களாகக் கொண்டு 1967 நவம்பர் 11 அன்று “லிபரேஷன்” என்ற ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது. வங்க மொழியில் “தேசப் பிரதி” என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. லிபரேஷன் இதழ் 2,500 பிரதிகளும், தேசப் பிரதி 40,000 பிரதிகளும் விற்பனையாகின. இவ்விரு இதழ்களும் ‘மார்க்சிஸ்டு’களை அரசியல் – சித்தாந்தாந்த ரீதியாகத் தோலுரிக்கத் தொடங்கின.

இதைத் தொடர்ந்து ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் காஷ்மீர், உத்திரப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநில கமிட்டிகளின் பெரும்பான்மையான தோழர்கள் வெளியேறினர். “கட்சித் தலைமைக்கெதிராக கலகக் கொடி உயர்த்துங்கள்!” என்ற அறைகூவல் எங்கும் எதிரொலித்தது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, பீகார், ஒரிசா – எனப் பல மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் கலகம் செய்து போலி மார்க்சிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினர்.

1967 நவம்பர் 12, 13 தேதிகளில் நாடு முழுவதுமுள்ள கம்யூனிசப் புரட்சியாளர்கள் கூடி, ஒருங்கிணைப்புக் குழுவை – ஒரு தற்காலிகக் கமிட்டியைக் கட்டியமைத்தனர். புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தி, அதன் தொடர்ச்சியாக ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியைக் கட்டியமைக்க வேண்டுமெனத் தீர்மானித்தனர்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
♦ கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி

இந்த கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவானது, மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையை வழிகாட்டும் சித்தாந்தமாக ஏற்றுக்கொள்வது, கம்யூனிசப் புரட்சியாளர்களை இந்தச் சித்தாந்த அடிப்படையில் ஐக்கியப்படுத்துவது, திரிபுவாதத்திற்கு எதிராக சமரசமற்றப் போராட்டத்தை நடத்துவது, புரட்சிகர போராட்டங்களை – குறிப்பாக நக்சல்பாரி பாணியிலான விவசாயிகளது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது – அத்தகைய போராட்டங்களுக்கு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிக்கான கட்சித் திட்டத்தையும் செயல்தந்திர வழியையும் தயாரிப்பது – ஆகியவற்றைத் தனது கடமைகளாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து 1968 மே மாதத்தில் அதன் இரண்டாவது கூட்டம் – அதாவது, நக்சல்பாரி எழுச்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரானது, அனைத்து இந்திய கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு (AICCCR)  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தோழர் சுஷிதல்ராய் சவுத்திரி அதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் கமிட்டியானது, நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்தெழும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும், நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்றும் தனது முதல் பிரகடனத்தில் தீர்மானித்தது.

“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழிநடத்துவதும் நமது கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்றுபட வேண்டும். மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும்” என்ற அறைகூவலை அது விடுத்தது.

இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலைப் புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது – போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.

இதற்கிடையே நக்சல்பாரி வழியிலான போராட்டங்கள் காட்டுத் தீயாக 1968-இல் பரவத் தொடங்கின. குறிப்பாக, சிறீகாகுளம் போராட்டம் மிகப் பெரிய எழுச்சியாக வளர்ந்தது. இந்நிலைமையில் அ.இ.க.பு.ஒ. குழுவானது பிப்ரவரி 8, 1969 அன்று கூடியது. அது, ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை தீர்மானமாக நிறைவேற்றியது.

அ.இ.க.பு.ஒ. குழுவின் விரிவாக்கப்பட்ட கூட்டம் 1969 ஏப்ரல் 19 முதல் 22 வரை நடந்தது. அதில், தோழர் லெனினுடைய 100-வது பிறந்த நாளில் இந்தியாவில் ஒரு புரட்சிகர கட்சியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) யைத் தொடங்குவது என முடிவாகியது. நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது. கட்சியின் அமைப்பு விதிகளை வரையறுப்பது, கட்சியின் முதலாவது மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு, இதற்கென ஒரு ஒருங்கிணைப்புக் குழு கட்டியமைக்கப்பட்டது.

1969 மே தினத்தன்று, கொல்கத்தாவில் ஷாஹித் மினார் மைதானத்தில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் மேநாள் ஊர்வலமும், அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தோழர் கனு சன்யால், இந்தியாவில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாக மா-லெ கட்சி தொடங்கப்பட்டுள்ளதை பிரகடனப்படுத்தினார்.

1969, ஜூலை 12-ஆம் தேதி மிருக பலத்துடன் மீண்டும் நக்சல்பாரிகள் மீது போலீசு படையெடுத்தது. ஜங்கல் சந்தாலும் முன்னணி போராட்ட வீர்ர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். 1969-இன் மத்தியில், துணை ராணுவப் படைகளை ஏவி போராட்டப் பகுதிகளில் தாக்குதலை நடத்தியதோடு, மா-லெ கட்சியின் தலைவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவதைத் தொடங்கியது. இதனால், கட்சியானது முழுவதுமாக தலைமறைவாகியது. ஏப்ரல் 1970-இல் லிபரேஷன், தேசப் பிரதி அச்சகங்களில் போலீசாரால் திடீர் சோதனை நடத்தப்பட்டு, அவை முடக்கப்பட்டதால், அப்பத்திரிகைகள் இரகசியமாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. தலைவர்கள் மட்டுமின்றி, நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்டு அனைவரும் போலீசாரால் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர், அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சூழலில்தான் இ.பொ.க. (மா-லெ) யின் முதலாவது மாநாடு, அதாவது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 8-வது மாநாடு நடந்தது. அம்மாநாட்டுக்குப் பின், அரசின் அடக்குமுறையால் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலர் தியாகிகளானார்கள். மற்றவர்கள் சிறையிடப்பட்டு மரணமடைந்தார்கள்; அல்லது இயற்கை விதிகளின்படி, மரணமடைந்தார்கள்.

நக்சல்பாரி எழுச்சியும் கட்சியும் நசுக்கப்பட்டாலும், அதன் அரசியலும் சித்தாந்தமும் நாடு முழுவதும் பற்றிப் பரவியது. சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு, அசாம், காஷ்மீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது. ‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகள், முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு அஞ்சி நடுநடுங்கினர். நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் நாடெங்கும் பரவின. நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.

1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக பழங்குடியின மக்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராமப்புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ள முயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆனால், போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக, துணை இராணுவமும் போலீசுப் படையின் அடக்குமுறையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு – வயல்வெளிகளிலும், கொல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் உடல்களை விசிறியடித்து, பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.

1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் இயல்பான நடைமுறையாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது 20 துப்பாக்கிச் சூடுகள் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை பாசிச ஆட்சிக் காலத்திலும் இதேநிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்திரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.

ஆனால், அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகள் எதுவும் நக்சல்பாரி இயக்கத்தை இந்த மண்ணில் இருந்து முற்றாகத் துடைத்தெறிந்து விடவில்லை. போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டமாக நக்சல்பாரி இயக்கம் தொடர்ந்து வளர்ந்து பரவுகிறது. அது, வெட்ட வெட்டத் துளிர்க்கும், வளரும். அது, நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், அடர்ந்த காடுகளில் எல்லாம் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

இன்று, இந்திய நாடாளுமன்ற போலி ஜனநாயகக் கட்டமைப்பே நொறுங்கி விழுந்து கொண்டிருக்கிறது. இன்று, ஓட்டுக்கட்சிக் கொடிகளும் சின்னங்களும் மட்டுமே வேறுவேறாக உள்ளன. ஆனால், “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” என்கிற கொள்கையில் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் கிடையாது. நாடெங்கும் கிரிமினல் குற்றக் கும்பல்கள் தோன்றி அரசியலே கிரிமினல்மயமாகிவிட்டது. இலஞ்ச – ஊழல் அதிகார முறைகேடுகளாலும், சமூக விரோத கிரிமினல் குற்றங்களாலும் அரசியல் அமைப்பு முழுவதும் புழுத்து நாறுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே, மக்கள் அணி திரள்வதற்கும், தங்கள் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே மையமாக நக்சல்பாரி இயக்கமொன்றுதான் உள்ளது. அதுமட்டுமே நாடாளுமன்றப் பாதைக்கு வெளியே, அதற்குப் புறம்பாகவும் எதிராகவும், ஆக்கபூர்வமான அரசியல், பொருளாதாரத் தீர்வு காணவும், மக்களை வழிநடத்தும் துணிவும் தெளிவும் கொண்டதாக உள்ளது.

நக்சல்பாரி என்ற சொல் இனியும் அந்தச் சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை. இப்போது நக்சல்பாரி என்ற சொல், ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது. நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் மையமாக விளங்குகிறது. நாடாளுமன்றத் தொழுவத்தில் விழுந்து புரளும் பன்றிகளாகிய அரசியல் கட்சிகளை எள்ளி நகையாடும் அரங்கமாகத் திகழ்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரவர்க்க – இராணுவ அரசு அமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது. உழைக்கும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாக நக்சல்பாரிப் பாதை திகழ்கிறது.

இந்த மே மாதத்தில், கட்சியின் 8-வது மாநாடு நடந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டில் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் உருவாகி மறைந்து போய்விட்டன. ஆனால் 51 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் நக்சல்பாரி இயக்கம் அழியாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)-யை புரட்சியாளர்கள் உருவாக்கினார்கள். இந்திய கம்யூனிச இயக்கம் புரட்சிகரப் பாதையில் அடியெடுத்து வைத்தாலும், விரைவிலேயே இடது சந்தர்ப்பவாதப் பாதையில் சறுக்கி விழுந்து பெரும் பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் மீண்டும் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவாகி 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும், நாடு தழுவிய ஐக்கியப்பட்ட கட்சியாக வளர்ந்து தனது 9-வது மாநாட்டை நடத்த வேண்டியிருக்கிறது.

படிக்க :
♦ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது?
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !

போர்க்குணம், புரட்சியைச் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம், எல்லா வகையான அடக்குமுறைகளையும் துச்சமாக மதிக்கும் எஃகுறுதி, முழுமையான அர்ப்பணிப்பு, எல்லா வண்ணத் திரிபுவாதங்களையும் எதிர்த்து முறியடிப்பதில் இடையறாத போராட்டம் – ஆகிய உயரிய பண்புகளை நக்சல்பாரி இயக்கம் தோற்றுவித்துள்ளது. சித்தாந்தப் போராட்டத்தின் மூலம் புரட்சிகர குழுக்களை ஐக்கியப்படுத்தி, நாடு தழுவிய கட்சியாக வளர்த்தெடுப்பதென்பது புரட்சியாளர்களின் அவசர, அவசியமான கடமையாக உள்ளது. இம்மகத்தான கடமையை நிறைவேற்ற, எண்ணற்ற தியாகிகளின் உதிரத்தால் சிவந்த நக்சல்பாரி புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல சூளுரை ஏற்போம்!

தங்கம்

கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !

முறிந்துகிடக்கும் இந்தியாவின் கொரோனா இறப்பு விவரங்கள் : தீர்வு காண்பது எப்படி?

கடந்த ஓராண்டு காலமாக, இந்திய ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகையாளர்களும் ஒரே ஒரு எளிமையான கேள்விக்கு பதில் சொல்ல பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை என்ன?

அரசாங்கத்தின் தரவுகளில் பெரும் முரண்பாடுகள் இருப்பதால், இந்த விவரங்களை வெளிக் கொண்டுவர ஊடகத்துறையினர் பல்வேறு வகையான, வழக்கத்திற்கு மாறான உத்திகளை பயன்படுத்துகின்றனர். அரசாங்கம் வெளியிடும் இந்த எண்ணிக்கையில் என்ன பிரச்சனை  இருக்கிறது? என்பதை பார்ப்போம்.

படிக்க :
♦ மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நிகழும் கொரோனா மரணங்கள் || மக்கள் அதிகாரம்
♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !

கோவிட்-19 இறப்பு கணக்கை தவறவிட மூன்று முக்கிய வாய்ப்புகள் உள்ளன.

  1. கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு இறந்த நபரை, தொற்று இல்லாமல் இறந்ததாக பதிவு செய்வது அல்லது தொற்று உறுதிசெய்யப்பட்டவர் வீட்டிலேயே இறந்துவிட்டால் அந்த இறப்பினைக் கணக்கில் எடுத்துக் கொள்ளமாலேயே விட்டுவிடுவது.
  2. கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ளாத நபர் நோய்த் தொற்றினால் இறந்தாலும், பரிசோதனை செய்து கொள்ளாததால் அவர் கோவிட்-19 இறப்புகளில் சேர்க்கப்படமாட்டார்.
  3. கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைவாகக் காட்டிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள்.

மேற்கூறியவற்றில் மூன்றாவது வாய்ப்பு முக்கியமானதும் பெரும்பாண்மை வகிப்பதும் என்று பலர் கருதலாம். அதேவேளையில், மற்ற இரண்டு அம்சங்களும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியுள்ளபடி, தற்போதைய தொற்று நோயின் இறப்புகளைப் பதிவு செய்ய சில நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கூறுகிறது.

ஒரு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் மரணம் கோவிட்-19 மரணமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

மேலும், ஒரு நபர் தற்போதைய நோய்த் தொற்றின் எந்தவொரு அறிகுறிகளும் இல்லாமல் இறந்தாலும், அவரை கோவிட்-19 நோய்த் தொற்றினால் இறந்ததாக எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறியீடுகளின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பின் “நோய்களின் சர்வதேச வகைப்பாடு” (INTERNATIONAL CLASSIFICATION OF DISEASES _ ICD-10) வழிகாட்டியுள்ளது.

அதன்படி,

  1. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் சுவாசக் கோளாறு காரணமாக இறந்திருப்பதாகத் தோன்றினாலும், – தனித்துவமான இறப்பு முறையாக இருப்பதால் – அவரது இறப்பை கோவிட்-19ஆல் ஏற்பட்ட இறப்பு என்றே கணக்கில் கொள்ள வேண்டும்.
  2. தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு வேறு பல நோய்கள் இருப்பின் நிச்சயமாக அவர் சுவாசக் கோளாறு ஏற்பட்டு இறக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால், மற்ற நோய்களால் ஏற்பட்ட மரணம் என்று கருத்தக் கூடாது, மாறாக இறப்பின் காரணம் கோவிட்-19 எனக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. ஒருவர் கோவிட்-19 பரிசோதனையை எடுக்காமல் அல்லது நோய்த் தொற்று இல்லாதவர் என்று பரிசோதனையில் முடிவு வந்திருந்தாலும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவரது இறப்பு, “சந்தேகத்திற்குரிய அல்லது கோவிட்-19ஆல் ஏற்பட்ட மரணம்” என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், நடைமுறையில் இந்த வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படுவதே இல்லை. பல மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் எங்களுக்கு சொன்னது என்னவென்றால், ஒருவர் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சில நாட்களில் உயிரிழந்தாலோ அல்லது அறிகுறிகள் தெளிவாக வெளிப்பட்டாலோ மட்டுமே அந்த மரணம் கொரோனாவினால் எற்பட்ட மரணம் என்று கணக்கிடப்படுகிறது.

இதுவே ஒரு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு சில வாரங்களில் தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்தாலும் வெளிப்படையான அறிகுறிகள் காணப்படலாம். இந்த நிலையில் அவர் இறந்தாலும் அவரது இறப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

பெரும்பாலான மாநிலங்கள் “சந்தேகத்திற்குரிய கொரோனா இறப்புகளை” கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக இரண்டாம் அலையின் போது பல சந்தேகத்திற்குரிய கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் மருத்துவமனை நடைபாதைகளில் மற்றும் வீடுகளில் இறந்துள்ளனர். இவர்கள்  கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் பாதிக்கும் குறைவானவைதான் மருத்துவமனைகளில் நிகழ்கின்றன என 2018-இன் அரசின் தரவுகள் கூறுகின்றன. அப்படியிருக்கும் போது, தற்போது கோவிட்-19 இறப்புகள் என அதிகாரப் பூர்வமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதில் மிகப் பெரும்பாலானவை மருத்துவமனைகளில் நிகழ்ந்ததுள்ளவை மட்டுமே.

அதே வேளையில், மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதால், மற்ற நோய்களினால் ஏற்படும் இறப்புகளின் சதவீதமும் உயர்ந்துள்ளது. உதாரணமாக, டயாலிசிஸ் (Dialysis) மற்றும் கோவிட் அல்லாத ஆக்சிஜன் தேவை காரணமாக நிகழும் இறப்புகளும் உயர்ந்து வருகின்றன. மேலும், பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு நெருக்கமான நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசால் சொல்லப்படும் தரவுக்கும் உண்மையாக இறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் பொருத்தமில்லாமல் இருப்பதைக் கேள்வி எழுப்புகின்றனர்.

பெரும் வேறுபாடுள்ள கோவிட்-19 இறப்புகளின் தரவுகளினால், இப்பத்திரிக்கையாளர்கள் இறந்தவர்களைத் தகனம் செய்யும் இடங்களுக்கும் புதைக்கும் இடங்களுக்கும் சென்று தரவுகளைச் சேமிக்கின்றனர். ஆனால், இம்மாதிரி குளறுபடியான தரவுகளை ஒருங்கிணைப்பதனால் இந்த நோய்த் தொற்றை நம்மால் ஒருபோதும் சரி செய்ய முடியாது.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று, தகனம் செய்யும் இடங்களிலும் புதைக்கும் இடங்களிலு பதிவேடுகள் முறையாகப் பாராமரிக்கப் படுவதில்லை. தகனம் செய்து முடிந்த நபர்களின் எண்ணிக்கை சரியாகப் பராமரிக்கப் படாததால் பெரும்பான்மை பத்திரிக்கையாளர்களின் தரவுகளை சரியாக கணக்கிட முடியாது. மேலும், கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறையின்படித் தகனம் செய்த நபர்களின் எண்ணிக்கையும் முறையாக இருப்பதில்லை. பெரும்பாலான இடங்களில், நோய்த் தொற்று உடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களும் நோய்த் தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் முன்னெச்சரிக்கையாக இந்த நெறிமுறையின்படியே தகனம் செய்யப்படுகின்றனர்.

இந்தியாவில், ஒரு மாநிலத்துக்குள்ளே அல்லது ஒரு நகரத்துக்குள்ளே தகனம் செய்யும் இடங்களில் சேகரிக்கப்படும் தரவுகள் முறையானதாக இருப்பதில்லை. உதாரணமாக, பெங்களுருவில், கோவிட்-19 தொற்று காரணமாக இறந்த நபரையும் கோவிட்-19 பரிசோதனை மட்டுமே எடுத்துக் கொண்ட நபரையும் ஒரே இடத்தில் தகனம் செய்கின்றனர். பரிசோதனை செய்துக் கொண்டவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதா? இல்லையா? என்ற எந்தச் சோதனையும் நடைபெறுவதில்லை. மேலும், பெங்களுருவில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு அடையாள அட்டை வழங்கப் படுகிறது. ஆனால், இந்த முறையானது வேறு எங்கும் இல்லை.

கேரளாவில், பல தகனம் செய்யும் இடங்களில் பதிவுகள் முறையாகப் பராமரிக்கப் படுவதில்லை. கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு இறந்தவர் என்பதற்கான மருத்துவரின் சான்றிதழை குடும்பத்தினர் முறையாக வைத்திருக்கும் போதிலும், தகனம் செய்யும் இடங்களில் அதைக் குறிப்பிடாமல் தவறவிடுகின்றனர். பல மருத்துவமனைகளில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதானது, வாய்வழியாக மட்டுமே உறவினர்களுக்குச் சொல்லப் படுகிறது. எனவே, அவர்கள் இறக்கும் போது முறையான ஆதாரங்கள், ஆவணங்கள் எதுவும் இல்லையென்பதால் அந்த மரணங்களும் கோவிட் அல்லாத மரணங்களாகவே தகனம் செய்யும் இடங்களில் பதிவு செய்யப் படுகின்றன.

மேலும், கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் தொற்றினை சரிசெய்து கொள்ள பெருநகரங்களுக்கு வருபவர்களில் சிலர் இறக்கின்றனர். இவர்களின் உடல்களும் அங்கேயே தகனம் செய்யப் படுகிறது. அதனாலும் பெருநகரங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

நோய்த் தொற்று காரணமாக இறப்புகளைப் பதிவு செய்வது இந்தியாவில் முழுமையற்றதாக உள்ளதால், முந்தைய ஆண்டுகளின் “எல்லா மரணங்களையும் அவற்றின் காரணங்களையும்” எடுத்து ஒப்பிட்டு பத்திரிக்கையாளர்கள் ஆய்வு செய்யலாம். 2018-இன் தரவுகளின்படி, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தில் 86 சதவீதம் இறப்புகள் மட்டுமே பதிவாகிறது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே முழுமையாக இறப்புகள் பதிவு  செய்யப்படுகிறது.

கேரளா மாநிலம் மட்டுமே அனைத்து இறப்புகளையும் அதற்கான காரணங்களையும் 2020-இல் பதிவு செய்துள்ளது. கேரள மாநிலத்தில், 2020-ல் பதிவு செய்யப்பட்ட இறப்புகள் 2019-இன் ஆண்டை விடக் குறைவு என்பதால் இதனை மரணத்தைக் குறைத்துக் காட்டும் தரவு என்றோ தவறான தரவு என்று எண்ணக் கூடாது. (2018-இல்-மொர்) குறிப்பிட்ட அளவிலான மரணங்கள் தாமதமாகவே பதிவு செய்யப்பட்டன. உதாரணமாக, 2018-இல் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் இறந்த ஒரு மாதத்திற்கு பின்பே பதிவு செய்யப்பட்டது. 2 சதவீதம் (4810) இறப்புகள் ஒரு வருடத்திற்கு பின்பு கூட பதிவு செய்யப்படவில்லை. 2020-ல் கேரளாவில் கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகள் 3,096. இதனை பதிவு செய்யாத இறப்புகளோடு ஒப்பிட்டால் குறைவுதான்.

படிக்க :
♦ “நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”
♦ ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி

மும்பை, டெல்லி, வேறு சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இந்த இறப்பு பதிவுகள் முழுமையாக உள்ளதனால் முந்தைய ஆண்டை ஒப்பிட்டு பதிவிட்ட இறப்புகளின் சதவீதத்தை அறிந்து, இந்த நோய்த் தொற்றின் வீரியத்தையும் இதனால் நேராகவோ மறைமுகமாகவோ ஏற்படும் விளைவுகளையும் புரிந்துக் கொள்ள முடியும்.

மக்கள் தொகை பதிவுகள் முழுமையாக இல்லாத வடமாநிலங்களில் “மாதிரி பதிவு அமைப்பு” (Sample registration system) உதவும். இ்ந்த மாதிரி கணக்கெடுப்பு, ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதத்தை அளிக்கிறது.

இந்த தரவுகள் வெளியிடப்பட்டால் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் மூலம் ஏற்பட்ட இறப்பு விகிதத்தை அறிந்துக் கொள்ள முடியும்.


கட்டுரையாளர்கள் : ஆஷிஷ் குப்தா, தன்யா ராஜேந்திரன், ருக்மிணி
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : மாதவன்
நன்றி : The Wire

கொரோனா : கார்ப்பரேட் – சனாதன வைரஸுக்கு எதிரான இருமுனைப் போராட்டம் தேவை !

ந்திய மக்கள் ஒவ்வொருவரையும் மரணம் துரத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா என்கின்ற கொடிய வைரஸ் பரவலின் கொடும் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வக்கற்ற மோடி அரசின் செயல்பாட்டை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்தும் நிலைக்கு கேடு கெட்டு போய் உள்ளனர் ஆட்சியாளர்கள்.

கொடிய வைரஸ் கிருமிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியைப் போடுவதற்குப் பாரதூரமான எந்த முயற்சியையும் மத்திய மோடி அரசு எடுக்கவில்லை. இந்திய துணை கண்டம் முழுவதும் மரண ஓலங்கள். உயிர் பிரிந்த மனித உடல்களை முறையாக தகனம் செய்வதற்கு கூட வழியில்லாமல் நிற்கதியாய் நிற்கின்றனர் மக்கள்.

படிக்க :
♦ கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

சுடுகாடுகள் நிரம்பி வழிந்து கங்கை நதி பிணங்களை சுமந்து செல்கிறது. “எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம்” என்பதைப் போல் பிணத்தைக் காட்டி காசு பறித்து கொள்ளை அடிக்கின்றனர் கார்ப்பரேட் மருத்துவமனைகள்.

இது ஒரு புறமிருக்க, காவி பாசிச சங்பரிவார் கும்பல் மாட்டு மூத்திரத்தை குடித்தால் கொரோனா போய்விடும் என்றும், மாட்டு சாணத்தை தடவி குளிக்க வேண்டும் என்றும் உளறி மக்களை மூட நம்பிக்கைகளில் ஊற வைக்கிறது. அறிவியல் கண்ணோட்டம் சிறிதும் இல்லாத, கிஞ்சித்தும் ஈவு இரக்கம் அற்ற, எவ்வித மனித பண்புகளும் இல்லாத, ஒரு கொடுங்கோல் வர்ணாசிரம வெறி பிடித்த கும்பல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலின் அலட்சியத்தால் இந்த நாட்டின் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர்.

கொரோனா என்ற கொடிய வைரஸ் உருவாகியுள்ள இரண்டாவது அலை தாக்குதலில் உயிர் பிழைத்து இருப்போமா? என்ற நிச்சயமற்ற சூழ்நிலையில் இந்த நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் மரணப் பயத்தில் இருத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற மரண ஓலமும் உயிரற்ற மனித உடல்களும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எந்த உத்வேகத்தையும் கொடுக்கவில்லை. கோமாதா என்ற பெயரில் மாட்டுக்கு தரும் கரிசனத்தை சகமனிதருக்கு காட்ட மறுக்கிறது காவி பாசிசக் கும்பல். தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டு தற்காப்பு நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, உண்மையான மரணத்தின் கணக்கை மூடி மறைக்கிறது மோடி அரசு.

மத்திய மாநில அரசு அறிவித்துள்ள தற்போதைய பொது முடக்கத்தினால், லட்சக்கணக்கான தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. கொடிய வைரஸை விட மிகப்பெரிய தாக்குதலை காவி – கார்ப்பரேட் பாசிச கும்பல் இந்த நாட்டின் அனைத்து பகுதி மக்கள் மீது ஏவிவிட்டுள்ளது. சாமானிய சிறு-குறு தொழிலகங்கள் மூடப்பட்டு பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கின்றனர்.

நாட்டு மக்கள் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் கூட இந்தியாவிலுள்ள 10 சதவீத கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குறுந்தொழில்கள் இழுத்து மூடப்பட்டு விட்ட அதே நேரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கு தடை இல்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி கும்பலின் நலன் காப்பது என்ற ஒரே கொள்கையை தாரக மந்திரமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி.

கார்ப்பரேட்  முதலாளித்துவ கும்பலின் சொத்து மதிப்பு 75 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர்களின் வேலை இழப்பு புதிய உயரங்களை எட்டியுள்ளது. தொழிலாளர்களின் வருமானத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. வறுமை, குறைந்தபட்ச வாழ்வாதாரத் தேவைகள் நிறைவு செய்ய இயலாமல் திண்டாடும் நிலை, சத்தான உணவு கிடைக்காமை, வீட்டு வாடகை, மின் கட்டணம், மருத்துவ செலவு உள்ளிட்ட குறைந்த பட்சத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாமல் இந்திய உழைக்கும் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்த ஆய்வின்படி 27 விழுக்காடு மக்களுக்கு எவ்வித வருமானமும் இல்லை. சம்பளம் பெறுபவர்களுக்கு, ஏற்கெனவே பெற்று வந்த சம்பளமும் குறைந்து உள்ளது.

அரசு அறிவித்த ஊரடங்கின் விளைவாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் 40.07 கோடி பேர் வேலையில் இருந்துள்ளனர். இந்த நிலைமை கடந்த மார்ச் மாதத்தில் 39.81 கோடியாக இருந்தது. மாதச் சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தாங்கள் பணியாற்றிய நிறுவனங்களிலிருந்து கணிசமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 2019-2020-ம் ஆண்டில் 85.9 மில்லியனாக இருந்த தொழிலாளர்  எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 73.3-ஆக குறைந்துவிட்டது.

புதிய வேலை வாய்ப்பு அறவே இல்லை என்கின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வேலையற்றோர் சந்தை பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. வேலை இழப்பை எதிர்கொண்டு புதிய வேலையை தேடாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 1.6 கோடியாக இருந்தது, ஏப்ரல் மாதத்தில் 1.94 கோடியாக உயர்ந்துள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு (Center for Monitoring Indian Economy) வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த நெருக்கடி இந்திய விவசாயத் துறையிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மோடி அரசின் கார்ப்பரேட் நலன் காக்கும் நடவடிக்கைகள், பெண்களின் வேலை வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 10-லிருந்து 12 வயதுச் சிறுமிகளும் பணியமர்த்தப்பட்டு கடுமையான சுரண்டல் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

நாடெங்கிலும் லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில்கள் அழிவை நோக்கி  சென்று கொண்டிருக்கின்ற நிலையில், உரிய நாளில் ஜி.எஸ்.டி.யை செலுத்தவில்லை  என்ற காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சிறு தொழில் மற்றும் குறுந்தொழில் உரிமையாளர்கள், GST அபராதத் தொகையில் விலக்கு கேட்டு அரசிடம் மன்றாடி வருகின்றனர். பல இலட்சக் கணக்கான கோடி ரூபாய்களை, கடன் தள்ளுபடியாகவும், ஆத்மநிர்பார் எனும் பெயரிலும், அம்பானி – அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்கு வாரி வழங்கிய காவி-கார்ப்பரேட் பாசிச கும்பல் சிறு மற்றும் குறுந்தொழில் உரிமையாளர்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறது. இதன் விளைவாக லட்சக்கணக்கான உதிரிப் பாட்டாளிகள் மரணத்தின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளனர். பொது முடக்கம் அவர்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.

கடந்த காலம் நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தக் கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ செலவுகள் அனைத்தையும் மத்திய மாநில அரசுகளின் பொறுப்பில் செய்ய வைக்க வேண்டும். வேலை இழந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கான நிவாரண தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

படிக்க :
♦ கொரோனா : தடுப்பூசி கொள்கையின் அரசியல் பொருளாதாரம்
♦ கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!

கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் தனியார் முதலாளிகள் தங்களுடைய ஊழியர்கள் உடைய மருத்துவச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். லட்சோப லட்சம் தொழிலாளர்கள் காவி பாசிச கும்பலின் பொருளாதாரத் தாக்குதலின் காரணமாக வேலையில் இருந்து வீசி எறியப்பட்டு உள்ளனர்.

கொரோனா  பெரும் தொற்றில் இருந்து மக்களை காக்க வக்கற்ற ஆட்சியாளர்களுக்கும், கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலுக்கும், காவி சனாதன வைரஸுக்கும் எதிராக மாபெரும் போராட்டத்தைக் கட்டி அமைக்க வேண்டியுள்ளது.


இரணியன்

 

தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !

மரணத்தின் வணிகர்கள் : கோவிட்-19 மற்றும் பெருவணிகம்

தனிமைப்படுத்தலின் தனிமை மற்றும் புதிய நோய்த் தொற்றுகளின் துயரம் மற்றும் தொற்று நோய் காரணமாக வழமையான வாழ்வில் இருந்து வேறொரு புதிய நெருக்கடியான வாழ்நிலைக்கு மாறியவர்களின் துயரம் தாங்க முடியாதது. நாமும் ஓர் ஆழமான கோபத்திற்கு உள்ளாகிறோம். ஏனெனில் முதலாளித்துவத்தின் பல தவறான சமூக மதிப்பீடுகளின் கொடூரமான அம்சங்களில் ஒன்று துருத்திக் கொண்டு வெளிவருகிறது. அது மக்களின் வாழ்வு மற்றும் மரணத்தையே தனது லாபத்திற்கான ஒரு வணிகமாக செய்து கொண்டிருக்கிறது.

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகளுக்கு காப்புரிமை பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் எதிர்த்தன. இந்த முன்மொழிவு 2020 அக்டோபரில் உலக வர்த்தக அமைப்பின் முன், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவால் சமர்ப்பிக்கப்பட்டது.

பார்க்க :
♦ கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

மேலும், இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இது அறிவுசார் சொத்து தடைகளை அகற்றுவதை உள்ளடக்கிய நகர்வு. இதனால், நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தையும் அறிவையும் மற்ற உற்பத்தி ஆலைகளுக்கு கொடுக்க முடியும். இதன் மூலம் உலக மக்களுக்கு முடிந்தவரை விரைவாக தடுப்பூசிப் போடுவதற்கு தேவையான அளவு  தடுப்பூசிகளை மிகப் பெரிய அளவில் உத்தரவாதமாக உற்பத்தி செய்ய முடியும். உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயசஸ் கருத்துப்படி, பல நாடுகளிலும் இதற்கான உற்பத்தி திறனும் ஆற்றலும் உள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (டிரிப்ஸ்) மீதான ஒப்பந்தம், பல ஆண்டுகளாக உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கலுக்கான முதலாளித்துவ உரிமையாளர்களுக்கு பிரத்யேக உரிமைகளை ஒதுக்கும் அளவிற்கு ஏகபோகங்களின் சட்டரீதியான உருவாக்கத்தை தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் பயன்படுத்தும் வாதம் என்னவென்றால், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்ய ஒரு ஊக்கத்தொகை உள்ளது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க இந்த காப்புரிமைகள் மட்டுமே ஒரே வழி.

“ஊக்கத்தொகை” அவர்களின் வலுவான வாதமாக இருப்பதால், இது பற்றிப் பரிசீலிப்போம். காப்புரிமை மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் அடைவது என்னவென்றால், இந்த உலகில் யார் வாழ்வது, யார் இறப்பது, அதே போல் நாம் எப்படி வாழ்வது, எப்படி இறப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மருந்து நிறுவனங்களுக்கு வழங்குவதாகும். மருந்து நிறுவனங்கள் தான் ஆராய்ச்சி நிகழ்ச்சி நிரல் என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். மிகவும் இலாபகரமானதாக இருக்கும் மருந்துகளை மட்டும் உற்பத்தி செய்வதாக இது இருக்கும்.

நோய்களை நாள்பட்டதாக ஆக்குவதும், தற்செயலான ஒன்று அல்ல. உண்மை என்னவென்றால், ஆராய்ச்சிக்கான நிதி தனியார் மருந்து தொழில் ஆதாரங்களில் இருந்து வரவில்லை. இது வரலாற்று ரீதியாக நிதி ஆதாரங்களை கிடைக்கச் செய்த அரசாங்கங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் முக்கியமான பொது நிறுவனங்கள் தான் ஆராய்ச்சியை உருவாக்கியுள்ளன. பின்னர், மருந்துத் தொழில் நிறுவனங்கள் இந்த தொழில் நுட்பத்தைக் கையகப்படுத்தியுள்ளன.

கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட 1390 கோடி டாலர்களில், அரசாங்கங்கள் 860 கோடி டாலர்களை வழங்கியுள்ளன; அரசு சாரா நிறுவனங்கள் 190 கோடி டாலர்களை வழங்கியுள்ளன. அதே நேரத்தில் தனியார் மருந்து நிறுவனங்கள் 340 கோடி டாலர்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது மொத்த செலவில் வெறும் 25 சதவீதம் மட்டுமே. தடுப்பூசிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சந்தை உள்ளது என்பதையும் ஒருவர் கவனிக்க வேண்டும். உண்மையில், டிசம்பர் 2020 வரை, வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படுபவை 1038 கோடி டோஸ்களை முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளன.

அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா கோவிட்-19க்கு எதிராக 100 சதவீதம் பொது நிதியுடன் 250 கோடி டாலர்களைப் பெற்று ஒரு தடுப்பூசியை உருவாக்கியது. முன் ஆர்டர்கள் ஒரு டோஸ் ஒன்றுக்கு 31 டாலர்கள் விலையில் 78 கோடி டோஸ்கள். இது சுமார் 2400 கோடி டாலர்கள் அமெரிக்க வருவாயை உருவாக்கும். இந்த வணிகத்தின் இலாபங்கள் என்னவாக இருக்கும் என்பதை சாதாரணமான மக்களே கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

ஃபைசர் / பயோஎன்டெக், மேலும் அமெரிக்க நிறுவனங்கள், அரசாங்க ஆதாரங்களில் இருந்து சுமார் 195 கோடி டாலர் பெற்றது. அவர்கள் ஆராய்ச்சிக்கு செலவழித்ததில் சுமார் 66 சதவீதம். 128 கோடி டோஸ்கள் ஒரு டோஸ் ஒன்றுக்கு சராசரியாக 18.50 டாலர் என்ற விலையில் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டன. இது சுமார் 2368 கோடி டாலர்கள் வருவாய் ஆகும். ஆங்கில மூலதனத்திற்கு சொந்தமான அஸ்ட்ராஜெனிகா / ஆக்ஸ்போர்டு, 329 கோடி டோஸ்களுக்கு முன் ஆர்டர்களைப் பெற்றது.

இது ஒவ்வொன்றும் 6 டாலருக்கு விற்கப்பட்டு, 1974 கோடி டாலர்கள் வருவாயைப் பெறும். ஆனால், ஆராய்ச்சிக்காக அது செலவழித்த 220 கோடி டாலர்களில் 67 சதவீதம் பொது ஆதாரங்களில் இருந்து வந்தது. ஜான்சன் & ஜான்சன் 127 கோடி டோஸ் தடுப்பூசிக்கான ஆர்டர்களைக் கொண்டுள்ளது. இது ஒரு டோஸ் ஒன்றுக்கு 10 டாலரில் விற்கப் படுகிறது. இதன் மூலம் 1270 கோடி டாலர்கள் வருமானத்தை உற்பத்தி செய்யும். அவர்கள் ஆராய்ச்சியில் 81.9 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளனர். இதில் 100 சதவீதம் பொது ஆதாரங்களில் இருந்து நிதியளிக்கப்பட்டது.

தடுப்பூசிகளின் விலைகள் ஒரு டோஸ் ஒன்றுக்கு 4 முதல் 37 டாலர்கள் வரை : ஸ்புட்னிக்-V $ 10 / டோஸ்; சனாபி / ஜி.எஸ்.கே ஒரு டோஸ் மருந்துக்கான விலை 10 முதல் 21 டாலர் வரை; நோவாக்ஸ் $ 16 / டோஸ்; மாடர்னா ஒரு டோஸ் மருந்துக்கான விலை 25 முதல் 37 டாலர் வரை; சினோவாக் $13 முதல் $29 வரை / டோஸ்; (ஏற்கனவே குறிப்பிடப் பட்டவற்றுக்கு கூடுதலாக.)

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் ஒரு வளர்ந்து வரும் வணிகமாக, எங்கள் காலத்தின் சிறந்த வணிக வாய்ப்பாகத் தோன்றுகிறது. ஆராய்ச்சி முதலீட்டின் பொறுப்பை அரசுகள் எடுத்துக் கொண்டு தனியார் மருந்துத் தொழில்களுக்கு நிதியளித்தன. அவர்கள் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சந்தையைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அதே அரசாங்கங்கள் அவர்கள் நிதியளித்த பெருநிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளன.

அனைத்து இலாபமும் மருந்துத் தொழில் நிறுவனங்களுக்கு செல்லும். அவற்றில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்கள். மேலும், அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (டிரிப்ஸ்) மீதான உடன்படிக்கையால் அதே அரசாங்கங்கள் வழங்கிய ஏகபோகத்தின் காரணமாக, பல ஆண்டுகளாக உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கலின் பிரத்யேக உரிமைகளைக் கொண்டுள்ளன.

இந்த காப்புரிமைகளின் விளைவாக, தடுப்பூசியைப் பெறுவதற்கான இந்த கட்டுப்பாடு, தினமும் 5,00,000 பேர் பாதிக்கப்பட்டு வரும் அதே நேரத்தில் நடைபெறுகிறது. மேலும் கோவிட்-19 காரணமாக ஒவ்வொரு நாளும் 8,000 பேர் இறக்கின்றனர்.

முதலாளித்துவத்தின் இதயமற்ற லாபவெறிக்கான எடுத்துக்காட்டு அல்லவா இது?

இன்று, அதிக வருமானம் பெறும் நாடுகள் வினாடிக்கு ஒரு நபருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் போது, பெரும்பாலான நாடுகளில் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடப்படவில்லை என்று ஆக்ஸ்பாம் கூறுகிறது. இன்று வரை தயாரிக்கப்பட்ட 12.8  கோடி தடுப்பூசி அளவுகளில், உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் 60 சதவீதத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வெறும் 10 நாடுகளில் நான்கில் மூன்று பங்குக்கும் அதிகமான தடுப்பூசிகள் குவிக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 250 கோடி மக்களைக் கொண்டுள்ள 130 நாடுகளில், தடுப்பூசி செயல்முறைக் கூட தொடங்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. நாம் 2021-க்குள் ஆறு மாதங்கள் இருக்கும் நேரத்தில், மிகக் குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகளின் மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டுமே தடுப்பூசிப் போடப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறந்த சூழ்நிலையில், இந்த மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே தடுப்பூசிப் போடப்பட்டிருப்பார்கள். (ஆக்ஸ்பாம்) இது இந்த நாடுகளின் பொருளாதார மீட்சியை தாமதப்படுத்துவது மட்டுமல்லாமல், அந்த நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதையும் தாமதப்படுத்தும். உலகில் கிடைக்கக் கூடிய அனைத்து தடுப்பூசிகளிலும் அமெரிக்கா 25 சதவீதம் பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 12.6 சதவீதம் பெற்றுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தின் திமிர்த்தனம் மிகவும் பெரியது. அவற்றின் மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக, அவர்கள் 2001-ல் உலக சுகாதார நிறுவனத்தில் உடன்பட்டாலும், பொது சுகாதார அவசரநிலை சந்தர்ப்பங்களில் அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பாக நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க காப்புரிமைகளில் இருந்து விலக்கு அளிக்க மறுத்து விட்டனர். (தற்போது அமெரிக்கா சற்று கீழிறங்கி, இந்த விலக்கு அளிப்பதற்கான பேச்சு வார்த்தைக்கு உதவுவதாக கூறியுள்ளது.) (மொ.ர்).

“… டிரிப்ஸ் ஒப்பந்தம் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுப்பதை தடுக்காது மற்றும் தடுக்கக் கூடாது. இது தொடர்பாக, தோஹா பிரகடனம், உலக சுகாதார நிறுவனம் பல ஆண்டுகளாக பகிரங்கமாக வாதிட்டு, முன்வைத்தக் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. அதாவது பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், ஏழை நாடுகள் மருந்துகளை எளிதாகப் பெறுவதை அதிகரிக்கவும் டிரிப்ஸ் ஒப்பந்தத்தின் பாதுகாப்பு விதிகளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களின் உரிமையை மீண்டும் உறுதிப்படுத்துதல்.”

படிக்க :
♦ கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!
♦ கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!

மேலே உள்ள அனைத்தும் போதாது என்பது போல், ஒரு டோஸ் ஒன்றுக்கு சராசரியாக 15 டாலர் என்ற விலையில், உலகின் 790 கோடி மக்களுக்கு தலா இரண்டு டோஸ்கள் வழங்கப் படுகின்றன என்பதை கணக்கெடுத்தால், உலக மக்களுக்கு தடுப்பூசிப் போடுவதற்கு 23100 கோடி டாலர்கள் தேவைப்படும் என்பது மிகவும் ஆத்திரமூட்டுகிறது.

ஏனெனில், இது உலகிலுள்ள 2,000 கோடீஸ்வரர்கள் தொற்று நோயின் போது அடித்த கொள்ளை லாபத்தில் 5 சதவீதம் கூட கிடையாது. இப்படி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபமடிக்க அரசாங்கங்கள் அவர்களுக்கு மக்களின் பணத்தை வாரியிறைத்த அதே நேரத்தில், 50 கோடி மக்கள் தீவிர வறுமையில் வாழ்பவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இந்த பட்டியல் இப்போது சுமார் 400 கோடி மக்கள் என உயர்துள்ளது.

[குறிப்பு : பாஸ்குவாலினா கர்சியோ வெனிசுலாவில் உள்ள Simón Bolívar பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்]

கட்டுரையாளர் : பாஸ்குவாலினா கர்சியோ
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : Frontierweekly

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் : கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1

கோயம்புத்தூரின் இக்கரை பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவுக்கு மிகப் பெரிய ஆசிரமத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இந்த சாமியாரின் ஆசிரமம் பல்வேறு முறைகேடுகள் செய்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கும் போதெல்லாம், “இவையெல்லாம் நிரூபிக்கப்பட்டவையா?” என்று கேள்வியெழுப்புவது இந்தச் சாமியாரின் வழக்கம்.

ஆகவே, இவரது ஆசிரமம் குறித்து பல்வேறு அரசு ஊழியர்கள், செயற்பாட்டாளர்கள், ஊழலை அம்பலப்படுத்துபவர்களிடம் பேசியது நியூஸ் லாண்ட்ரி. ஈஷா ஃபவுண்டேஷன் குறித்த பல்வேறு அரசு ஆவணங்களைப் பார்வையிட்டது. ஈஷாவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற வழக்குகளை ஆராய்ந்தது.

படிக்க :
♦ துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !
♦ கோவையில் போலீசு தடையை மீறி மோடி – ஜக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !

ஈஷா ஃபவுண்டேஷனின் கதை ஒரு வழக்கமான ஊழல் மற்றும் பேராசை பிடித்த சாமியாரின் கதைதான். நம் மக்களிடம் மதம் மற்றும் கலாச்சாரம் மீது இருக்கும் உணர்வைப்(sentiment) பயன்படுத்தி சட்டவிரோத காரியங்கள் செய்யப் பட்டிருக்கின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இக்கரைப் பொலுவம்பட்டி என்ற ஆதிவாசி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஈஷாவின் சாம்ராஜ்யம்.

வெள்ளையங்கிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த இக்கரைப் பொலுவம்பட்டியில் 150 ஏக்கரில் 77 கட்டுமானங்களுடன் செயல்பட்டு வருகிறது இந்த ஈஷா ஆசிரமம். இந்தக் கட்டிடங்கள் எல்லாம் சட்டங்களையும் விதிகளையும் மீறி 1994-க்கும் 2011-க்கும் இடையில் கட்டப்பட்டவை. பொலம்பட்டி காப்புக் காடுகளை ஒட்டி இந்த ஆசிரமம் அமைந்திருக்கிறது. இந்த காப்புக் காடுகள் யானைகளின் வாழிடங்கள்.

ஆகவே, இந்தப் பகுதியில் மனித நடமாட்டம் என்பது Hill Area Conservation Authority என்ற ஆணையத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது. தமிழ்நாட்டில் மலைப் பிராந்தியக் காடுகளில் வனவிலங்கு மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்காக 1990-ல் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் 300 சதுர மீட்டர் அளவுக்கு மேல் கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் இந்த ஆணையத்தின் அனுமதியில்லாமல் அதைச் செய்ய முடியாது. தமிழ்நாடு அரசின் வனத்துறை, நகர்ப்புறத் திட்டமிடல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஆவணங்களை நியூஸ் லாண்டரி ஆராய்ந்த போது, 1994-ல் இருந்து 2011 வரை 63,380 சதுர மீட்டர் அளவுக்கு கட்டடங்களைக் கட்டியிருக்கிறது ஈஷா.

1,402.62 சதுர மீட்டரில் ஒரு செயற்கை ஏரியையும் உருவாக்கியிருக்கிறது. இவற்றில் எந்தக் கட்டுமானத்திற்கும் ஒப்புதல் இல்லை. 32,855 சதுர மீட்டர் அளவுக்கு கட்டடங்களைக் கட்ட தங்களுக்கு உள்ளூர் பஞ்சாயத்தின் ஒப்புதல் இருப்பதாக வாசுதேவனும் (ஜக்கிதான்) அவரது ஈஷா ஃபவுண்டேஷனும் சொல்கிறார்கள். உண்மையில் Hill Area Conservation Authority-யின் கீழ்வரும் பகுதியில் கட்டிடம் கட்ட ஒப்புதல் அளிக்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது.

எல்லா சட்டவிரோத கட்டிடங்களையும் கட்டி முடித்த பிறகு 2011-ல் Hill Area Conservation Authorityக்கு (HACA) விண்ணப்பித்தார் வாசுதேவன். வனத்துறையில் கிடைத்த ஒரு ஆவணத்தின் படி ஜூலை 2011-ல் HACA-வுக்கு ஒரு விண்ணப்பத்தைப் போட்டார் இந்த நல்ல மனுசன். அதாவது ஏற்கனவே சட்டவிரோதமாக 63,380 சதுர மீட்டருக்குக் கட்டிங்களைக் கட்டிவிட்டோம். அதற்கு ஒப்புதல் கொடுங்கள். மேலும், 28582.52 மீட்டருக்கு கட்டுமானங்களைக் கட்டப் போகிறோம். அதற்கும் ஒப்புதல் கொடுங்கள் என்றது விண்ணப்பம்.

இந்த விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு கோயம்புத்தூரின் வனத்துறை அதிகாரி வி.திருநாவுக்கரசு 2012 பிப்ரவரியில் ஈஷா ஆசிரமத்திற்கு சென்றார். உள்ளே சென்று பார்த்தவர் அசந்துபோனார். சட்டவிரோதமாக ஏகப்பட்ட கட்டிடங்களைக் கட்டி வைத்திருந்தது ஈஷா. 28,582.52 சதுர மீட்டருக்கு புதிதாக அனுமதி கேட்டார்களே? அதிலும் கட்டிடம் கட்டி வைத்திருந்தார்கள்.

இதுபோக, ஆசிரமத்தின் சுற்றுச் சுவரும், பிரதான வாயிலும் வனத்துறையின் நிலத்தில் கட்டப்பட்டிருந்தன என்பதையும் அவர் கண்டறிந்தார். இதுபோக, ஈஷா கட்டிய கட்டிடங்களாலும் அந்த ஆசிரமத்திற்கு பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் வந்து போவதாலும் யானைகளின் நடமாட்டம் பாதிக்கப் பட்டிருந்தது. இதனால், சுற்றுப்புற கிராமங்களில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதல் அதிகரித்திருந்தது.

ஆகவே, இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி மறுத்தார் வி.திருநாவுக்கரசு. தனது விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பதாகக் கூறிய ஈஷா, தனது விண்ணப்பத்தை அந்த ஆண்டு அக்டோபரில் திரும்பப் பெற்றுக் கொண்டது. 2014 வரை மீண்டும் விண்ணப்பிக்கவில்லை.

அங்கிருந்து திருநாவுக்கரசு வேறு பணிகளுக்குப் போய்விட்டு, 2018-ல் கோயம்புத்தூரின் தலைமை வனக் காப்பாளராகப் பதவியேற்றார். ஆனால், நான்கே நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார்.

(தொடரும் – 1)

குறிப்பு : கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் எப்படி தனது ஆசிரமத்தையும் ஈஷா அமைப்பையும் சட்டவிரோதமாக உருவாக்கினார் என்பது குறித்து newslaundry இணையதளம் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதன் மொழிபெயர்ப்பு. மூன்று பாகங்களாக வாசுதேவனின் சரித்திரத்தை நியஸ் லாண்ட்ரி வெளியிடவிருக்கிறது. பகுதி பகுதியாக அதன் மொழிபெயர்ப்பை தருகிறேன்.

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு !!

சாம் மாநிலம் பிரம்மபுத்திரா நதியின் பள்ளத்தாக்கில், நவ்காங் என்னும் நகரத்தின் அருகில் அமைந்துள்ள அழகிய கிராமமே புலாகுரி. நவ்காங்கிற்கும் அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுஹாத்திக்கும் இடையில் நல்ல நீர்ப்போக்குவரத்து இருந்ததாலும் பல்வேறு பயிர்கள் செழிப்பாக அப்பகுதியில் விளைந்ததாலும் நவ்காங் நகரமானது காலனியாதிக்க காலத்தில் முக்கிய வர்த்தகத் தளமாகவும் வேளாண் உற்பத்திக்கு புகழ்பெற்ற இடமாகவும் இருந்தது. அரிசி, சோளம் மற்றும் பல்வேறு பருப்பு வகைகள் அப்பகுதியில் பயிரிடப்பட்டு வந்தன.

இந்தியா கும்பனியாட்சியின் பிடியில் இருந்தபோதே (பிரிட்டிஷின் நேரடி ஆட்சியின் கீழ் வராதபோதே) ஆங்கிலேயர்கள் திணித்த வரிச்சுமையாலும் கும்பனியாட்சியின் கொடூரத்தாலும் விவசாயிகள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வந்தனர்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி லகரி || காமராஜ்
♦ வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி

ஆட்சியாளர்கள் பராமரிக்க வேண்டிய நீர்நிலை மராமத்துப் பணியை கைகழுவிய ஆங்கிலேயர்கள், விவசாயிகளிடமிருந்து வரியைப் பிடுங்குவதில் மட்டுமே மும்மரமாக இருந்தனர். 1852-1853-ஆம் ஆண்டில் அசாமின் நவ்காங் மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ. 1,55,651 வரியாக வசூலிக்கப் பட்டிருக்கிறது என்பதிலிருந்து இதன் கொடூரத்தை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

வரியைப் பிடுங்குவதில் தீவிரம் காட்டிய அரசோ, கொள்ளை நோய்கள், பஞ்சம், வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களால் மக்கள் சாகும் போதும் விளைபொருள்கள் அழியும் போதும் அதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் மக்களைச் சுரண்டுவதில் மட்டுமே குறியாக இருந்தது.

1857-ல் வெடித்த மாபெரும் இந்திய விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கிய பின் – விக்டோரியா மகாராணியின் கீழான – பிரிட்டிஷ் அரசானது, மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியது. இதைச் சமாளிக்க அப்போதைய பிரிட்டிஷ் அரசின் கருவூலத்தின் நிதிச் செயலாளராக இருந்த ‘ஜேம்ஸ் வில்சன்’ என்பவர் சில பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதன்படி இந்திய மக்கள் மீது, குறிப்பாக  விவசாயிகள் மீது மேலும் அதிக வரிச்சுமை திணிக்கப்பட்டது. இதனால், நாடெங்கும் விவசாயிகளிடையே பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிரான கொந்தளிப்பான சூழல் அப்போது நிலவியது.

அசாமிலும் விவசாயிகள் மீது நிலவரி மற்றும் வருமான வரியையும் அதிகரித்தது பிரிட்டிஷ் அரசு. காடுகளில் எடுக்கக் கூடிய மூங்கில், கரும்பு, மரங்களுக்கும் வரி விதிக்கப்பட்டது.

ஏற்கனவே, காலனியாட்சியில் விவசாயிகளின் துணைத்தொழில் என்று சொல்லப்படும்  நெசவுத் தொழிலும் அழிக்கப்பட்டதால், வரியைக் கட்ட முடியாமல் கடன்பட்டே தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர் அசாம் விவசாயிகள். ஒரு விவசாயி “கடனிலேயே பிறந்து, கடனிலேயே வாழ்ந்து கடனிலேயே மடிகிறான்” என்ற அளவுக்கு கடனில் மூழ்கியிருந்தனர். இதற்கு மாறாக, அவர்களின் விளைபொருள்களுக்கோ அடிமாட்டு விலைதான் சந்தையில் கிடைத்தது.

நவ்காங்கில் ஒரு கிலோ அரிசியை வெறும் நான்கு முதல் ஐந்து பைசாவுக்கே விவசாயிகள் விற்றனர். அதிலும், அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் ஐந்தில் ஒரு பங்கு தொகையைத் தான் விவசாய விளைபொருள்களுக்குக் கொடுத்தனர். இவ்வாறாக ஒருபுறம் வட்டி லேவாதேவிக் கும்பலாலும் மறுபுறம் பிரிட்டிஷ் அரசாலும் ஒட்டச் சுரண்டப்பட்டனர். இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசு மேலும் வரிச் சுமையைத் திணித்தது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாய் அமைந்தது.

அசாம் மாநிலத்தின் முக்கிய விளைபொருட்களான வெற்றிலைக்கும் பாக்குக்கும் வரிபோட முற்பட்டது பிரிட்டிஷ் அரசு.

அசாமில் தேயிலைத் தோட்டங்கள் அமைப்பதற்காக “தரிசு நிலக் கொள்கை” (waste land policy) என்ற ஒன்றைக் கொண்டு வந்து விவசாயிகளின் பசுமையான விளைநிலங்களையும் அதன் பெயரில் அபகரித்தது பிரிட்டிஷ் அரசு. இதனால், அசாம் விவசாயிகள் நிலங்களிலிருந்து விரட்டப்பட்டனர்.

குறிப்பாக அசாமின் விவசாயிகள் மீது இத்தகைய கொடூரமான வரிகள் விதிக்கப்பட்டதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உள்ளது. இத்தேயிலைத் தோட்டங்களில் அப்போது மிகப்பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை நிலவியது. வெளியூரிலிருந்து வேலைக்கு வந்தவர்களோ அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இறந்து வந்தனர். உள்ளூரிலேயே குறைந்த கூலிக்கு அடிமைகளாக ஆட்கள் வேண்டும் என்ற தேவையும் பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தது. எனவே, வரிகளை உயர்த்துவதன் மூலம் விவசாயிகள் நசிந்து கூலிகளாக வருவார்கள் என்றும் கணக்குப் போட்டது பிரிட்டிஷ் அரசு.

அனைத்து வழிகளிலும் ஒட்டச் சுரண்டப்பட்ட விவசாயிகள் வேறு வழியின்றி, தங்கள் வாழ்க்கைத் தேவைக்கான இறுதி வழியாக அபினிப் பயிரிடுவதை மேற்கொண்டனர். ஆனால், 1861-ல் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த  அபினிக் கொள்கையின் படி, விவசாயிகள் தாமாக அபினியை உற்பத்தி செய்யக் கூடாது என்றும் அரசுதான் அபினியை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் என்றும் கூறியது. இப்படி அபினி உற்பத்தி செய்ததன் மூலம் ஆங்கிலேயர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது என்பது தனிக்கதை.

இவை அனைத்தாலும் பிரிட்டிஷ் அரசுக்கெதிரான அசாமியர்கள் நெஞ்சில் கனன்ற தீ 1861-இல் நவ்காங்கிலும், 1868-1869-இல் காம்ரப்பிலும் (Kamrup), 1893-1894-இல் தர்ரங்கிலும் (Darrang) விவசாயிகளின் கிளர்ச்சிகளாக வெடித்தது.

செப்டம்பர் 17, 1861 அன்று பல்வேறு பகுதிகளிலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புலாகுரிக்கு அருகில் உள்ள நாம்கர் என்னும் கோயிலின் அருகே கூடினர். நிலம், வீடு, தோட்டம், விளைபொருட்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட கொடிய வரிகளை எதிர்த்தும், தங்களது கடைசி போக்கிடமாக இருந்த அபினி சாகுபடியைத் தடை செய்ததை எதிர்த்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் அனைத்து வாழ்வாதார அடிப்படைகளையும் பறித்துவிட்டு, அவர்களை அபினி சாகுபடியை நோக்கித் தள்ளிய பிரிட்டிஷ் அரசு, விவசாயிகளின் போராட்டத்தை அபினி உண்பவர்களின் போராட்டம் என கொச்சைப் படுத்தியது.

இக்கொடிய வரிவிதிப்பு முறைகளை இரத்து செய்யுமாறு கோரி மனு அளிக்க, அங்கிருந்து நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். ஆனால், நீதிமன்றமோ போராடுபவர்களை சிறையிலடைத்தும் தண்டம் விதித்தும் அவமதித்தது. இதனால், விவசாயிகள் மேலும் ஆத்திரமடைந்தனர். போர்க்குணம் கொண்ட விவசாயிகள் இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென எண்ணினர்.

அக்டோபர் மாதம் விவசாயிகள் ஒன்றுக்கூடி கூட்டம் நடத்தி, பிரிட்டிஷ் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என முடிவெடுத்தனர். காலனியாட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் விவசாயிகளிடமிருந்துதான் தொடங்கியதே அன்று காந்தியிடமிருந்து அல்ல. தொலைதூர கிராமத்திலுள்ள விவசாயிகளும் பங்குபெற வேண்டும் என்பதற்காக இக்கூட்டம் ஐந்து நாட்களாக நடத்தப்பட்டது. இது ராய்ஜ் மெல் (மக்கள் மன்றம்) என்று அழைக்கப்பட்டது.

ராகா, ஜாகி, காய்கர் மெளசா, பிரபுஜியா, சப்பாரி, காம்பூர், ஜமுனாமுக் (Raha, Jagi, Kahighar mouza, Barpujia, Chapari, Kampur, Jamunamukh) ஆகிய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இதில் பங்கெடுத்தனர். அக்டோபர் 15-ம் தேதியன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடினர். அவர்களில் பெரும்பாலோர் (கம்பு, தடிகள் உள்ளிட்ட) ஆயுதந்தாங்கியிருந்தனர்.

அக்டோபர் 17 அன்று, பல்வேறு கிராமங்களிலிருந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடினர். இக்கூட்டத்தைக் கலைக்க பிரிட்டிஷ் அரசு ஒரு படைப்பிரிவை அனுப்பியது. ஆனால், ஆங்கிலேயர்களின் அப்படை விவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்டது.

பல உள்ளூர் மன்னர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்தக் கிளர்ச்சியில் பங்கெடுத்தனர். இப்படி மக்கள் ஒன்றிணைவதைக் கண்ட போலிசு கூட்டத்தைக் கலைக்க அதன் தலைவர்களில் சிலரை அதே நாளில் கைது செய்தது. மேலதிகாரிகளின் உத்தரவின்பேரில் அங்கு சென்ற சிங்கர் என்னும் ஆங்கிலேய அதிகாரியிடம் போராடும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆனால், அந்த அதிகாரியோ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டான். விவசாயிகளோ மிரட்டலுக்கு அடிபணியாமல் எதிர்த்து நின்றனர். சிங்கர் விவசாயிகளிடமிருந்து கம்பு, தடிகளைப் பறிமுதல் செய்ய முயற்சித்தபோது ஏற்பட்ட மோதலில் அந்த அதிகாரி கொல்லப்பட்டு கலாங் என்ற ஆற்றில் தூக்கியெறியப்பட்டான். இதைக் கண்டு பீதியடைந்த பிரிட்டிஷ் போலிசு அங்கிருந்து தப்பியோடியது.

சிங்கர் கொல்லப்பட்ட செய்தி நவ்காங் நகரெங்கும் பரவியது. சிங்கர் கொல்லப்பட்டதைச் சாக்கிட்டு, கிளர்ச்சியை நசுக்க மாவட்ட நீதிமன்றம், ஹாலந்தர் பரோவ் ஆங்கிலேய அதிகாரி தலைமையில் படையை அனுப்புகிறது. நகருக்குள் நுழைந்த படைகள் போராடும் விவசாயிகளை ஈவிரக்கமின்றிச் சுட்டதில் பலர் உயிர் துறக்கிறார்கள், சிலர் படுகாயமடைகிறார்கள். இதைக்கண்டு விவசாயிகள் அஞ்சவோ பின்வாங்கவோ இல்லை.

ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகளை எதிர்த்து தங்களின் வில், அம்பு, தடிகளுடன் வீரப்போர் புரிகிறார்கள் விவசாயிகள். எனினும், ஆங்கிலேய காலனியாதிக்க அரசை எதிர்த்து விவசாயிகள் நடத்திய இந்த மாபெரும் கிளர்ச்சி, இறுதியாக இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

அக்டோபர் 23-ம் தேதி 100 சிப்பாய்களுடன் புலாகுரிக்கு வந்த அசாம் ஆணையர் ஜெனரல் ஹென்றி ஹாப்கின்சன் ரகா, புலாகுரி பிராந்தியத்தில் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். புலாகுரி, நவ்காங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுக்க உள்ள விவசாயிகளைத் தேடித் தேடிக் கைது செய்து, உணவு – தண்ணீர் வழங்காமல் அவர்களைக் கொடிய சிறையில் அடைத்தான். அவன் செய்த கொடுமைகளால் மக்கள் படும் துயரம் கண்டு கலக்கமடைந்த எழுச்சியின் தலைவர்கள் ஆங்கிலேய அரசின் முன் சரணடைந்தனர்.

லெப்டினன்ட் சிங்கரைக் கொன்றதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். லாலங் ராஜா என்ற மன்னனின் மகன்கள் உட்பட 41 பேர் சிங்கரைக் கொன்றதற்குக் காரணம் என நவ்காங் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். மற்ற தலைவர்கள் அந்தமான் தீவுகளுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை மோடியும் அவரது பரிவாரத்தைச் சேர்ந்தவர்களும் “பஞ்சாப், ஹரியான விவசாயிகள்  மட்டும்தான் போராடுகிறார்கள்” என்று எப்படிக் கொச்சைப் படுத்தியதோ அப்படித்தான் அன்று பிரிட்டிஷ் அரசும் செய்தது.  நவ்காங் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் சேர்ந்து நடத்திய இப்போராட்டத்தை, “சில பழங்குடி இனத்தவர்கள் மட்டும் நடத்தும் போராட்டம்” என்றும் “அபினி உட்கொள்பவர்களின் கலகம்” என்றும் கொச்சைப் படுத்தியது.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 1946 – 1951
♦ நெவாலி : மராட்டியத்தில் மீண்டும் ஒரு விவசாயிகள் எழுச்சி !

ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களையும் துருப்புகளையும் எதிர்த்து வில், அம்புடன் நடத்திய இக்கலகம் அப்போது தோற்கடிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், அசாமில் காலனியாட்சிக்கு எதிராக அடுத்தடுத்து எழுந்த விவசாயிகளின் கிளர்ச்சிக்கு இது உந்து சக்தியாகத் திகழ்ந்தது.

நாம் வரலாற்றுப் புத்தகங்களில் கேள்விப்பட்டிராத இக்கலகம் நடந்து 160 ஆண்டுகள் ஆகின்றன. இன்று சிங்கர், ஹாலந்தர் பரோவ் இடத்தில் மோடி-அமித்ஷா கும்பலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தில் அமெரிக்க மேல்நிலை வல்லரசும் நிற்கின்றன. டெல்லியை முற்றுகையிட்டு நிற்கிறார்கள் புலாகுரி தியாகிகளின் வாரிசுகள். போர்  இன்னும் முடியவில்லை !

தீரன்
செய்தி ஆதாரங்கள் : அசாம் விவசாயிகள் போராட்டம், புலாகுரி உழவர் எழுச்சி

உசிலம்பட்டி தோழர் திசை கர்ணனுக்கு சிவப்பஞ்சலி || மக்கள் அதிகாரம்

PP Letter head

24.05.2021

பத்திரிகைச் செய்தி

உசிலம்பட்டி தோழர் திசை கர்ணன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது !

திசை கர்ணன் என்றொரு தோழர்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பொறுப்பு மேட்டுப்பட்டி ஊரில் நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் திசை கர்ணன். அவரது தந்தை ஊராட்சித் தலைவராக (பிரஸிடெண்ட்) இருந்தவர். ஆறு அண்ணன் தம்பிகள் என செல்வாக்காக வாழ்ந்தவர் திசை கர்ணன்.

1980 வாக்கில் அமைப்பிற்கு அறிமுகம் ஆகிறார். நக்சல்பாரி புரட்சிகர அரசியலை ஏற்றுக் கொண்டு, உழைக்கும் மக்களுக்காக செயல்படத் துவங்கினார். அதற்கு இடையூறாக இருந்த தனது அரசு வேலையை (கூட்டுறவு சொசைட்டி எழுத்தர்) இராஜினாமா செய்தார்.  மக்கள் மத்தியில் அமைப்பு வேலைகள் செய்வதற்குத்  தகுந்தவாறு சிறு விவசாயியாக தனது குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

திசை கர்ணனைப் போன்ற குடும்பப் பின்னணி கொண்ட மற்றவர்கள் எல்லாம், வட்டிக்கு விட்டு பணம் சேர்ப்பது, அந்தஸ்தை உயர்த்துவது என்பதையே வாழ்வின் லட்சியமாக கொண்டு இருந்தபோது, திசை கர்ணனோ மக்கள் விடுதலைக்காக உழைத்தார்.

உசிலை வட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பை முதன் முதலில் கட்டி எழுப்ப முன்னணியாக நின்றவர் திசை கர்ணன். கிராமம் கிராமமாக மக்களிடம் புரட்சிகர அரசியலை கொண்டு சென்றார். குறவன் குறத்தி ஆட்டம், நாடகம், பாடல்கள், உரைகள் என எல்லா வடிவங்களிலும் மக்களிடம் சென்றார் திசை கர்ணன்.

ஆதிக்க சாதிக் குடும்பத்தில் பிறந்திருந்தபோதும், சாதி உணர்வு கிஞ்சித்தும் இல்லாதவர் திசை கர்ணன். ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக செயல்பட்ட ஆதிக்கச் சாதியினருக்கு எதிராக கடுமையாகப் போராடியவர் திசை கர்ணன்.

தன்னுடன் சில இளம் தோழர்களை இணைத்துக் கொண்டு மிதிவண்டியில் அடுப்பு பாத்திரங்களை கட்டிக் கொண்டு, கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்தபடி மேற்கே கம்பம், கூடலூர் வரை, வடக்கில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி வரை என பிரச்சாரப் பயணங்கள் மேற்கொண்டார். தெற்கே விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, குமரி வரை ரயிலில் சென்று மக்கள் தரும் அரிசி பருப்பை வாங்கி ஆங்காங்கே பொங்கி உணவு உண்டு மக்களை அரசியல் படுத்தப் பாடுபட்டார் திசை கர்ணன்.

உரக் கடை முதலாளிகள் கள்ளச் சந்தையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தனர். உரம் கிடைக்காமல் தவித்த விவசாயிகளைத் திரட்டிப் போராடி யூரியா பதுக்கல் குடோன்களை திறந்து மக்களுக்கு வினியோகம் செய்தார் திசை கர்ணன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தரும் அரசின் திட்டத்தை உடன் அமல்படுத்தக் கோரியும், நிலம் கையகப்படுத்தி வீடுகளைக் கட்டக் கோரியும் மக்களை திரட்டி சாலை மறியல் செய்து தனக்கு வழக்கும் சிறையும் கிடைத்தாலும் மக்களுக்கு வீடுகள் கிடைக்க வழி செய்தார் திசை கர்ணன். ரேஷன் கார்ட் பெற்றுக் கொடுக்க ஓட்டுப் பொறுக்கிகள் வசூல் வேட்டையில் இறங்கியபோது, வெறும் இரண்டு ரூபாய் செலவில் 450-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகளை மக்களுக்கு பெற்றுத் தந்தார்.

பார்ப்பன மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்து மதவெறி ஆட்டம் போட்ட போது, “அனைவரும் இந்து என்றால், கோவில் கருவறையில் அனைவரையும் அனுமதிக்காதது ஏன்?” என்று முழங்கி சிறீரங்கம் கோவில் கருவறைக்குள் நுழைந்து ரங்கநாதனை உலுக்கினார் திசை கர்ணன்.

நாட்டை மீண்டும் காலனியாக்கும் காட் ஒப்பந்ததிற்கு எதிராக ரயில் மறியல் – சிறை !
விளை நிலங்களை பாலையாக்கும் இறால் பண்ணை அழிப்புப் போராட்டம் – சிறை !
திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான போராட்டம் – சிறை !

உள்ளூர் சாதி ஆதிக்க வெறியனுக்கு எதிரான போராட்டத்தின் போக்கில் அந்த சாதிவெறியன் கொலை செய்யப்பட்டான். அந்த கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக திசை கர்ணன் சேர்க்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஆயுள் சிறைத் தண்டனை பெற்றார்.

இப்படி எண்ணற்ற போராட்டங்கள், வழக்குகள், சிறைகள் ! காணும் போதெல்லாம் கபடமற்ற சிரிப்பு. “தோழர்..” என்று வாஞ்சையோடு அழைக்கும் பாங்கு! இளம் தோழர்களுக்கு அரசியலை கற்றுக் கொடுப்பதில் திசை கர்ணனுக்கு இருந்த உறுதி ! என எதை சொல்வது? எதை விடுவது ?

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நக்சல்பாரி புரட்சிகர அரசியலையும், புரட்சிகர அமைப்பையும், அமைப்பு முறைகளையும் உயர்த்திப் பிடித்தவர் தோழர் திசை கர்ணன் !

ஆயுள் தண்டனையில் பதினைந்து ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் விடுதலை ஆன திசை கர்ணன், தன் மரணத்திற்கு முன்பு வரை மக்கள் அதிகாரம் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களின் அதிகாரத்தை உருவாக்கப் போராடினார் திசை கர்ணன்.

துரோகிகள், சதிகாரர்களின் சீர்குலைவு நடவடிக்கைகளைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு மக்கள் விடுதலைக்காக உழைத்தார். கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலின் கேடு கெட்ட நிர்வாகத்தால் உருவான இரண்டாம் அலை கொரோனா வைரஸ், திசை கர்ணனின் வாழ்வைப் பறித்துவிட்டது.

மரணத்திற்கு சிறிது நேரம் முன்பு கூட தன்னை சந்திக்க வந்த தோழர்களிடம் அரசியல் பேசி உற்சாகப்படுத்தினார் திசை கர்ணன். திசை கர்ணன் வீட்டின் சுவற்றில் இன்றும் தொங்கிய படி வழி காட்டிக் கொண்டிருக்கிறது அவர் விட்டுச் சென்ற வாசகம்.

உடல் நோகாமல்
சாகாமல்
வாராது மாற்றம் !
இது
போராட்டக் காலம் !
புரட்சி வெற்றி கொள்ளும் !

தோழர் திசை கர்ணன் காட்டிய திசையில் பயணிப்போம் !
தோழர் திசை கர்ணனாய் வாழ முயற்சிப்போம் !

தன் வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்த தோழர் திசை கர்ணனுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக் குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது !


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி

திருவாரூர்

டந்த 2018 மே 22 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடிய மக்களை ஈவிரக்கமின்றி வேதாந்த நிறுவனமும், அரசும் கூட்டு சேர்ந்து சுட்டுக் கொன்றது. இந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகம் முழுவது மிகப்பெரிய போராட்ட அலையை உருவாக்கியது. அதன் பிறகு ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் வீரத்தின் விளைவாக தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.

ஆனால் தற்போது கொரோனா கால ஆக்சிஜன் தட்டுப்பாட்டை பயன்படுத்தி புறவாசல் வழியாக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், 2021, மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்களால் அனுசரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற பல்வேறு முழக்கங்கள் மக்களை அதிகாரம் அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.

000

திருவாரூர் :

மே-22 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக மே 22,2021 இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்டம் குளிக்கரை பகுதியில் தூத்துக்குடி மக்களின் தியாகத்தை எடுத்து சொல்லும் விதமாக

போலீசு, வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு!

என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம் மற்றும் பகுதி மக்கள் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்,
திருவாரூர்.
8220716242.

000

தருமபுரி

மே – 22 ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் இன்று பென்னாகரம் அண்ணாநகர் பகுதியில் தோழர்.சிவா பகுதி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைப்பெற்றது. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். மக்களை சுட்டு கொன்ற போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை திறந்த சதியை அம்பலபடுத்தி முழுக்கம் எழுப்பபட்டது.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்,
9790138614.
000

கோவை

மே – 22 ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி கோவை பகுதியில் தோழர் ராஜன் தலைமையில் நடைப்பெற்றது.

தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். மக்களை சுட்டு கொன்ற போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை திறந்த சதியை அம்பலபடுத்தி முழுக்கம் எழுப்பபட்டது.

This slideshow requires JavaScript.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோவை,
9488902202.

000

சென்னை

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மே 22 இன்று காலையில் சேத்துப்பட்டு பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தபட்டது மற்றும் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தபட்டது.

This slideshow requires JavaScript.

தகவல் :
சேத்துப்பட்டு பகுதி,
மக்கள் அதிகாரம்.

000

புதுச்சேரி

கடலூர் மண்டலம் புதுச்சேரி, மதகடிபட்டு ரவுண்டானா அருகில் ஸ்டெர்லைட் எதிப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும்!
பொது மக்களை கொலை செய்த போலிசு, வருவாய் துறை அதிகரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற முழக்கமிடப்பட்டது.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

000

விருதாச்சலம்

கடலூர் மண்டலம் விருத்தாசலம், விஜயமாநகரம் கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக விருதை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் அசோக் தலைமையில் ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்டெர்லைட்டை அகற்று சிறப்பு சட்டம் இயற்றுஎன்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருதாச்சம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் மூன்றாமாண்டு நினைவஞ்சலி . சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று. பொதுமக்களை கொலை செய்த போலீஸ் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு .

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.

000

உசிலை

மே 22 ஸ்டெர்லைட் போராட்ட தியாகி நாள் உசிலம்பட்டி ஆரியபட்டியில் குருசாமி தலமையில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது கொடியேற்றி மாலை அனிவித்து முழக்கம்போடப்பட்டு முடிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
உசிலை.

000

மதுரை 

This slideshow requires JavaScript.

000

உடுமலை

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் மூன்றாமாண்டு நினைவஞ்சலி . சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று. பொதுமக்களை கொலை செய்த போலீஸ் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு .

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்
உடுமலை

000

போடி
மக்கள் அதிகாரம் மதுரை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கும் போடி பகுதியில் தோழர் கணேசன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு நினைவு கூறும் வகையில் “ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம்!” என்னும் முழக்கத்தை முன்வைத்து ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

This slideshow requires JavaScript.

தகவல்:
மக்கள் அதிகாரம்
போடி.
000
உளுந்தூர்பேட்டை :
கடலூர் மண்டலம் உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தில்  தோழர் வினாயகம் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற. பொதுமக்களை கொலை செய்த போலீஸ் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தகவல் :

மக்கள் அதிகாரம்
உளுந்தூர்பேட்டை
000
காஞ்சிபுரம்

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

மே 22, 2021 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி


மக்கள் அதிகாரம்